ம் திருமறை
திருமந்திரம்
திருமூலர் அருளியது
விநாயகர் காப்பு
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞான கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே
பாயிரம்
கடவுள் வாழ்த்து

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர
சென்றனன் தானிரு தான்உணர தெட்டே

போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசை கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசை குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதை தானையான் கூறுகின் றேனே

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனை
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே

அகலிட தார்மெய்யை அண்டத்து வித்தை
புகலிடத்து என்றனை போதவி டானை
பகலிட தும்இர வும்பணி தேத்தி
இகலிட தேஇருள் நீங்கிநின் றேனே

சிவனொடுஒ கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒ பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவன சடைமுடி தாமரை யானே

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே

முன்னைஒ பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒ பாய்ஒன்றும் இல்லா தலைமகன்
தன்னைஅ பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒ பாகின்ற போதக தானே

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்கு
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்ன
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே

கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே

மண்ணள தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணள தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணள தாந்தன்னை மேலள தாரில்லை
கண்ணள தெங்குங் கடந்துநின் றானே

கடந்துநினின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇரு தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே

கோது குலாவிய கொன்றை குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவி குணம்பயில் வாரே

காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவு கெதிரில்லை தானே

அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே

இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர குன்ற மலையது தானே

வான பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊன பிறவி ஒழிக்கும் ஒருவனை
கான களிறு கதற பிளந்தனம்
கோனை புகழுமின் கூடலு மாமே

மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே

வல்லவன் வன்னிககு இறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே

போற்றிசை தும்புகழ தும்புனி தன்அடி
தேற்றுமின் என்றும் சிவனடி கேசெல்வம்
ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னை தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே

தொடர்ந்துனின் றானை தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றாம்கம லம்மலர் மேலே
உடந்திரு தான்அடி புண்ணிய மாமே

சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்ந கேயென்று
நந்தியை நாளும் வணங்க படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே

இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே

காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொள
கோணநில் லாத குணத்தடி யார்மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே

வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தானினறு அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே

மண்ணக தான்ஒக்கும் வானக
விண்ணக தான்ஒக்கும் வேதக
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணக தேநின்று காதலி தேனே

தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருலகேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அரு பாடலு மாமே

பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே

சாந்து கமழுங் கவா஢யின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே

ஆற்றுகி லாவழி யாகும் இறைவனை
போற்றுமின் போற்றி புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசை கும்கிழ குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே

நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியை
தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்
வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து
ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே

பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானை
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானை
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னை
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே

வாழ்த்தவல் லார்மன துள்ளுறு சோதியை
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்
ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே

குறைந்துஅடை தீசன் குரைகழல் நாடும்
நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்
மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்கு
புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே

சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானை
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்கு
கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே

போய்அரன் தன்னை புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்துநின் றானே

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவை தேனே

விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதி பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே

அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
புந்தி வண்ணன்எம் மனம்புகு தானே

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நின்இன்ப தானே

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னி
படியால் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே

நரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசததுஒருங்கவல் லார்க்கு
திரைபசு பாவ செழுங்கடல் நீந்தி
கரைபசு பாசம் கடநது எய்த லாமே

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவி பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்ப்பி ரான்என்று
நாடுவன் நான்இன் றறிவது தானே

வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்
தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்க்களே

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே

இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்
கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே

திருநெறி யாவது சித்தசி தன்றி
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே

ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியை
கூறங்க மா குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்
பேறங்க மாக பெருக்குகின் றாரே

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே
ஆக சிறப்பு

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே

பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டு பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே

அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே

பரனாய் பராபரம் காட்டி உலகில்
தரனா சிவதன தானேசொல் கால
தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே

பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தர
துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழும்உட னேசொலி
காரிகை யார்க்கு கருணைசெய் தானே

அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலை பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே
குரு பாரம்பரியம்

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிரு தேனே

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துரு காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையை காட்டகி லானே

எழுந்துநீர் பெய்யினும் எட்டு திசையுஞ்
செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல்
கொழுந்தண் பவள குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரி தானே
திருமூலர் வரலாறு

நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்
தந்தி மதிபுனை அரனடி நாள்தொறும்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே

செப்புஞ் சிவாகமம் என்னும்அ பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்று
தப்பிலா மன்றில் தனிக்கூத்து கண்டபின்
ஒப்பிலா எழுகோடி யுகமிரு தேனே

இருந்தஅ காரணம் கேள்இ திரனே
பொருந்திய செல்வ புவனா பதியாம்
அருந்தவ செல்வியை சேவித்து அடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே

சதாசிவ தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிரு தேன்இன்ற காலம்
இதாசனி யாதிரு தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுடனே உணர தோமால்

மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நோ஢ழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தை செப்பவ தேனே

நோ஢ழை யாவாள் நிரதிச யானந்த
பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திரு தேனே

சேர்ந்திரு தேன்சிவ மங்கைதன் பங்கனை
சேர்ந்திரு தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திரு தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திரு தேன்சிவன் நாமங்கள் ஓதியே

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடி கீழே

பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாக தமிழ்செய்யு மாறே

ஞான தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கேள் முனிவரா
பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவ தானே

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே

யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்ற பற்ற தலைப்படு தானே

பிறப்பிலி நாதனை பேர்நந்தி தன்னை
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே

அங்கிமி காமைவை தானுடல் வைத்தான்
எங்குமி காமைவை தான்உலகு ஏழையும்
தங்குமி காமைவை தான் தமிழ சாத்திரம்
பொங்கிமி காமைவை தான்பொருள் தானுமே

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசை கூடி
அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழி தானே

பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத முமளி தானெங்கள் நந்தியே

நேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர
வீயத்தை முற்றும் விளக்கியி டேனே

விளக்கி பரமாகும் மெய்ஞ்ஞான சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்த கூத்தன்சொற் போந்து
வளப்பில் கயிலை வழியில்வ தேனே

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்
நந்தி அருளால்மெய்ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நானிரு தேனே

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடு தானே

பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனு மாமே
அவையடக்கம்

ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே

பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனை
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலு மாமே

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
இத்துடன் வேறா இருந்து துதிசெயும்
பத்திமை யால் பயனறி யாரே
திருமந்திர தொகை சிறப்பு

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறி தோதிடின்
ஞால தலைவனை நண்ணுவர் அன்றே

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்பு தருமிவை தானே
குரு மட வரலாறு

வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரை
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆக சொல்மொழி தானே

கலந்தருள் காலாங்கர் தம்பால்அ கோரர்
நலந்தரு மாளிகை தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமான தர்போக தேவர்
நிலந்திகழ் மூவர் நிரா தோரே
திரு மும்மூர்த்திகளின் முறைமை

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணா஢ல்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரியயற் காமே

ஆதி பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதி கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதி துலகம் பிணங்குகின் றார்களே

ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்
பீசம் உலகல் பெருந்தெய்வம் ஆனது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறி தார்களே

சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்க
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே

பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமககு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர் அவ் வானவ ராலே

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன் தொழ
மாலுக்கும் ஆதி பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றானே

வானவர் என்றும் மனிதர் இவர்
தேனமர் கொன்றை சிவனருள் அல்லது
தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர தோரை உணர்வது தானே

சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதி தவரை பிதற்றுகின் றாரே

பரத்திலே ஒன்றாய் உள் ளாய்ப்புற மாகி
வரத்தினுள் மாயவ னாய்அய னாகி
தரத்தினுள் தான்பல தன்மைய னாகி
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே

தானொரு கூறு சதாசிவன் எம்மிறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே
பாயிரம் முற்றிற்று

திருமந்திரம்
திருமூலர் அருளியது
முதல் தந்திரம்
உபதேசம்

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளை தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்த
கண்ணின்று காட்டி களிம்பறு தானே

களிம்பறு தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறு தான்அருள் கண்விழி பித்து
களிம்பணு காத கதிரொளி காட்டி
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினை போற்பசு பாசம் அனாதி
பதியினை சென்றணு காப்பசு பாசம்
பதியணு கிற்பசு பாசம் நில் லாவே

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றி தயாஎன்னும்
தோயம தாய் எழுஞ் சூரிய னாமே

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சை சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே

மலங்கள்ஐ தாமென மாற்றி அருளி
தலங்கள்ஐ தானற் சதாசிவ மான
புலங்களை தான்அ பொதுவினுள் நந்தி
நலங்களை தான்உள் நயந்தான் அறிந்தே

அறிவுஐம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போல
குறியறி விப்பான் குருபர னாமே

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்ன தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவி தாமே

வித்தை கெடுத்து வியாக்கிர தேமிக
சு துரியம் பிறந்து துடக்கற
ஒத்து புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்தி டிருப்பார் சிவயோகி யார்களே

சிவயோக மாவது சித்தசி தென்று
தவயோக துள்புக்கு தன்னொளி தானாய்
அவயோகஞ் சாராது அவன்பதி போக
நவயோக நந்தி நமக்களி தானே

அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடு திருத்தாள்
அளித்தான் போ஢ன்பத்து அருள்வெளி தானே

வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவ சித்தர் தாமே

சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோ ர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்ப தாறே

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந துள்ளொளி புக்கு
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து
அப்பரி சாக அமர்ந்திரு தாரே

இருந்தார் சிவமாகி எங்கு தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பை குறித்தங்கு
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர் கண் டார்அ சுருதிக்கண் தூக்கமே

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே

மாணிக்க துள்ளே மரகத சோதியாய்
மாணிக்க துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றில் ஆடு திருக்கூத்தை
பேணி தொழுதென்ன பேறுபெற் றாரே

பெற்றார் உலகிற் பிரியா பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவா பெரும்பயன்
பெற்றார் அம்மன்றில் பிரியா பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசா பெருமையே

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையுங் கேட்டிரு தார்புரை அற்றே

புரைஅற்ற பாலினுள் நெய்கல தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தச தாமே

சத்த முதல் ஐந்து தன்வழி தான்சாரில்
சித்துக்கு சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடா஢ற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறி தாண்டுகொள் அப்பிலே

அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பென பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே

அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்கு
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே

திருவடி யேசிவ மாவது தோ஢ல்
திருவடி யேசிவ லோகஞ்சி திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

தானே புலன்ஐந்து தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்து தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்து தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனை சந்தித்தே

சந்தி பதுநந்தி தன்திரு தாளிணை
சிந்தி பதுநந்தி செய்ய திருமேனி
வந்தி பதுநந்தி நாமம்இன் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் பாதமே

போத தரும்எங்கள் புண்ணிய நந்தியை
போத தனில்வைத்து புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேத துதித்திட போயடைந்தார் விண்ணே
யாக்கை நிலையாமை

மண்ணொன்று கண்டீர் இருவகை பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானார்ப்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே

பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
போ஢னை நீக்கி பிணமென்று போ஢ட்டு
சூரையங் காட்டிடை கொண்டுபோ சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழி தார்களே

காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள
பாலுள் பருங்கழி முப்ப திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீள புக அறி யாதே

சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டு கொண்டுபோ
காக்கை குப்பலி காட்டிய வாறே

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்க படுத்தார் கிடந்தொழி தாரே

மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்றத்தா என்ன திரிந்திலன் தானே

வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதி
நேச தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டு
பாசந்தீ சுட்டு பலியட்டி னார்களே

கைவிட்டு நாடி கருத்தழி தச்சற
நெய்யட்டி சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டு போக விடைகொள்ளு மாறே

பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு கால துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே

நாட்டுக்கு நாயகன் நம்மூர தலைமகன்
காட்டு சிவிகையொன்று ஏறி கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே

முப்பதும் முப்ப
செப்ப மதிளுடை கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிலுடை கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடு தார்களே

மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம் தேறி
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே

வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்
எச்சக லாநின் றிளைக்கின்ற வாறே

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறை காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட்கு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடை தால் அவை ஓடென்று வைப்பர்
உடலுடை தால்இறை போதும் வையாரே

ஐந்து தலைப்பறி ஆறு சடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டு
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே

அத்தி பழமும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைபெய்து கூழட்டு வைத்தனர்
அத்தி பழத்தை அறைக்கீரை வித்துண்ண
கத்தி எடுத்தவர் காடுபு காரே

மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டல கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வா஢யாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளி தளிகையே

கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலையமும் அற்றது அறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டு
தேடிய தீயினில் தீயவை தார்க்களே

முட்டை பிறந்தது முந்று நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண்டி ஆண்டினில்
கெட்டது எழுபதில் கேடறி யீரே

இடிஞ்சில் இருக்க விளக்கொ஢ கொண்டான்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே

மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவ தொழாமல்
இடர்ப்படந்து ஏழா நரகிற் கிடப்பர்
குடர்ப்பட வெந்தமர் கூப்பிடு மாறே

குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டு
இடையும்அ காலம் இருந்தது நடுவே
புடையு மனிதனார் போக்கும்அ போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே

காக்கை கவா஢லென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலற செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டு போன இக்கூட்டையே
செல்வம் நிலையாமை

அருளும் அரசனும் ஆனையம் தேரும்
பொருளும் பிறர்கொள்ள போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனை சோ஢ன்
மருளும் பினையவன் மாதவ மன்றே

இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும்
துயக்குறு செல்வத்தை சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனை
பெயற்கொண்டல் போல பெருஞ்செல்வ மாமே

தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்க பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டி கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டி துரந்திட்டு அதுவலி யார்கொள
காட்டி கொடுத்தது கைவிட்ட வாறே

தேற்ற தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்று பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றி களைவீர் மறுத்துங்கள் செல்வத்தை
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசை செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாக
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே

வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிற
தாரும் அளவு ஏது எமக்கென்பர் ஒண்பொருள்
மேவும் அதனை விரிவுசெய் வார்கட்கு
கூவும் துணையொன்று கூடலு மாமே

வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டு தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டி கொடுத்தவர் கைவிட்ட வாறே

உடம்போடு உயிரிடை விட்டோ டும் போது
அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர்
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே
இளமை நிலையாமை

கிழக்கெழுந தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனை
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கை படர்சடை நந்தியை
ஓர்ந்துற்று கொள்ளும் உயிருள்ள போதே

விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர்
கரும்பு தகர்த்து கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும்
கரும்பொத்து காஞ்சிரங் காயுமொ தேனே

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம்கடந்து அண்டம் ஊடறு தான்அடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே

காலை ஏழுந்தவர் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதும்
சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்ககு இன்பம்செய் தானே

பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலை பட்டால்
பருவூசி பையும் பறக்கின்ற வாறே

கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழி தாரே

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ து அறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே
உயிர் நிலையாமை

தழைக்கின்ற செந்தளிர தண்மலர கொம்பில்
இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யை காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யை காவல் விட்டாரே

மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
அத்துள்ளெ வாழும் அரசன் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே

வேங்கட நாதனை வேதாந்த கூத்தனை
வேங்கட துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே

சென்றுணர் வாந்திசை பத்து திவாகரன்
அன்றுணர் வால் அள கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இ நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே

மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனை பெரிதுணர தாரிலை
கூறும் கருமயிர் வெண்மயி ராவது
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே

துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்சொ஢ கொள்ளி
அடுத்தொ஢ யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே

இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி
கண்புற நின்ற கருத்துள்நில் லானே

ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடி புனிதனை போற்றுமின்
நாம்விதி வேண்டும் அதென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகி பிறர்ப்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகி சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுண்மின் தலைப்பட்ட போதே
கொல்லாமை

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களை கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடி காரர் வலிக்கயிற் றாற்கட்டி
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே
புலால் மறுத்தல்

பொல்லா புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
செல்லாக பற்றி தீவாய் நரகத்தில்
மல்லாக்க தள்ளி முறித்துவை பாரே

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதகமாம் அவை நீக்கி
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந திருத்தலே
பிறன்மனை நயவாமை

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளை காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்து
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறி
கருத்தறி யாதவர் காலற்ற வாறே

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொணட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே
மகளிர் இழிவு

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே

மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவது போல கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும்
மயலுறும் வானவர் சாரஇரும் என்பார்
அயலுற பேசி அகன்றொழி தாரே

வையக தேமட வாரொடும் கூடியென்
மெய்யக தோடும் வைத்த விதியது
கையக தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யக தேபெரு வேம்பது வாமே

கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில்
ஆழ நடுவர் அளப்புறு வார்களை
தாழ துடக்கி தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே
நல்குரவு

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்ப டார்களும் அன்பில ராயினார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே

பொய்க்குழி தூர்ப்பான் புலா஢ புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே

கற்குழி தூர கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே

தொடர்ந்தெழு சுற்றம் வினையினு தீய
கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றி
தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலு ம் ஆமே

அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே
அக்கினி காரியம்

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையும் பெருகிய வேத முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடி புறங்கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டி தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே

அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே

போதிரண் டோ தி புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கு
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே

நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின்று எரியும் வகையறி வார்க்கட்கு
மைநின்று அவிழ்தரும் அத்தின மாம் என்றும்
செய்நின்ற செல்வம் தீயது வாமே

பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு
ஊழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே

பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த
வருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வதது இன்பம் வரஇரு தெண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற
கண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த
தண்சுடர் தலைவனு மாமே

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து
தங்கி இருக்கும் வகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளை பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே
அந்தண ரொழுக்கம்

அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமு போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டு
சந்தியும் ஓதி சடங்கறு போர்களே

வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பத
போதாந்த மான பிரணவ துள்புக்கு
நாதந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்க்களே

கா திரியே கருதுசா வித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நே தேரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே

பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வே
திருநெறி யான கிரியை யிருந்து
சொரூபமது ஆனோர் துகளில்பார பாரே

சத்திய மும்தவம் தானவன் ஆதலும்
எய்த்தரும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்று
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே

வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே

நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே

சத்தியம் இன்றி தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்வி டோ டும் உணர்வின்றி
பத்தியும் இன்றி பரன் உண்மை யின்றி
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே

திருநெறி யாகிய சித்தசி தின்றி
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டு காணும்
துரிய சமாதியா தூய்மறை யோர்க்கே

மறையோர் அவரே மறையவர் ஆனால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையினால் தூய்மை
குறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்று
அறிவோர் மறைதொ஢ந்து அந்தண ராமே

அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்து
சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே

வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கதுபோதாந்த மாம்பரன் பாற்புக புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்கு திருவுடை யோரே

தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓர்ஆ குதிஅவி உண்ணவே
அரசாட்சி முறை இராச தோடம்

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான் கொல்லென்பான்
நல்லாரை காலன் நணுகநில் லானே

நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே

வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாமே

மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடுஒன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்து
ஆடம் பரநூல் சிகையறு தால்நன்றே

ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர் தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே

ஆவையும் பாவையும் மற்றுஅற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேட தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே

திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுககு ஆறில் ஒன் றாமே

வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
போந்திவ் வுலகை பிறர்க்கொள்ள தாங்கொள்ள
பாய்ந்த புலியன்ன பாவக தானே

கால்கொண்டு கட்டி கனல்கொண்டு மேலேற்றி
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே

தத்தம்ச தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே
வான சிறப்பு

அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே

வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ள தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே
தான சிறப்பு

ஆர்க்கும் இடுமின் அவா஢வர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே
அறஞ்செய்வான் திறம்

தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்
தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்
தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்
தாமறி வார்க்கு தமர்பர னாமே

யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே

அற்றுநின் றார்உண்ணும் ஊணே அறன்என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில்
பற்றிவ துண்ணும் பயனறி யாரே

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே

தன்னை அறியாது தான்நலன் என்னாதுஇங்கு
இன்மை அறியாது இளையர்என்று ஓராது
வன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம்
தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே

துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே

தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே

திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் கேடில் புகழோன்
விளைக்கும் தவமறம் மேற்றுணை யாமே

பற்றது வாய்நின்ற பற்றினை பார்மிசை
அற்றம் உரையான் அறநெறி கல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே
அறஞ்செயான் திறம்

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்
வட்டிகொணடு ஈட்டியே மண்ணில் முகந்திடும்
பட்டி பதகர் பயன்அறி யாரே

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகி
பிழிந்தன போலத்தம் போ஢டர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே

அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையு
திறம்அறி யார்சிவ லோக நகர்க்கு
புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே

இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்
உருமிடி நாகம் உரோணி கழலை
தருமம்செய் வார்பக்கல் தாழகி லாவே

பரவ படுவான் பரமனை ஏத்தார்
இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயார்
கரகத்தால் நீராட்டி காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே

வழிநட பாரின்றி வானோர் உலகம்
கழிநட பார்நட தார்கரு பாரும்
மழிநட கும்வினை மாசற ஓட்டிட்டு
வழிநட பார்வினை ஓங்கிநின் றாரே

கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும்ஒன் றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழி தாரே

இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலா பேதைகள்
அன்பிலார் சிந்தை அறமறி யாரே

கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யின் பசுவது வாமே

செல்வம் கருதி சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரை போற்றி புலராமல்
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே
அன்புடைமை

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திரு தாரே

பொன்னை கடந்திலங் கும்புலி தோலினன்
மின்னி கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னி கிடந்த சுடுபொடி யாடிக்கு
பின்னி கிடந்ததென் பேரன்பு தானே

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டு
பொன்போற் கனலிற் பெரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தஒண் ணாதே

ஆர்வம் உடையவர் காண்பார் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னை
கோர நெறிகொடு கொங்குபு காரே

என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன் புருக்கி பெருந்தகை நந்தியும்
தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே

தானொரு காலம் சயம்பு என் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே

முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை
அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார்
வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில்
அன்புஅடை தான்தன் அகலிட தானே

கருத்துறு செம்பொன்செய் காய்கதிர சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே

நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறி தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று
நச்சியே அண்ணலை நாடுகி லாரே

அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே
அன்பு செய்வாரை அறியும் சிவன்

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே

இன பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன பிறவி தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய்து ஆதி பிரான்வைத்த
முன்பி பிறவி முடிவது தானே

அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணி தாடும் துடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே

புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு
உணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே

உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியை
சித்தர்கள் என்றும் தொ஢ந்தறி வாரில்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே

கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி கழலதென் அன்பினுள்

நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று
உம்பரில் வானவர் ஓது தலைவனை
இன்பனை இன்ப திடைநின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன பிறப்பும் இறப்பும் இலான்நந்தி
அன்பில் அவனை அறியகி லாரே

ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னை
பாசத்துள் வைத்து பரிவுசெய் வார்களை
தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில்
ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே

விட்டு பிடிப்பதென் மேதகு சோதியை
தொட்டு தொடர்வன் தொலையா பெருமையை
எட்டும் என் ஆருயி ராய்நின்ற ஈசனை
மட்டு கலப்பது மஞ்சனம் ஆமே
கல்வி

குறிப்பறி தேன்உடல் உயிரது கூடி
செறிப்பறி தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந்துஉள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே

கற்றறி வாளர் கருதிய காலத்து
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்ட கயல்உள வாக்குமே

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றி தொழுமின் தொழுதபின்
மற்றொன்று இலாத மணிவிள காமே

கல்வி யுடையார் கழிந்தோடி போகின்றார்
பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார்
எல்லியுன் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே

துணையது வாய்வரும் தூயநற் சோதி
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வரும் தூயநற் கந்தம்
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே

நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும்
கோலொன்று பற்றினால் கூடா பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்க்களே

ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே

வழித்துணை யாய்மரு தாயிரு தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெரு தன்மைவல் லானே

பற்றது பற்றில் பரமனை பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் போ஢ன்பம் உற்றுநின் றாரே

கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து
உடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்ச தில்லிரு தானே
கேள்வி கேட்டமைதல்

அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே

தேவர் பிரானை திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே

மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்பது அரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே

பெருமான் இவனென்று பேசி இருக்கும்
திருமானிடர் பின்னை தேவரும் ஆவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதி பிரானே

ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி
நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே

விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே

சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாதது ஒன்றை குறியாதார் தம்மை
அறியாது இருந்தார் அவராவார் அன்றே

உறுதுணை யாவது உயிரும் உடம்பும்
உறுதுணை யாவது உலகுறு கேள்வி
செறிதுணை யாவது சிவனடி சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம்
மகிழநின் றாதியை ஓதி உணரா
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே

வைத்துணர தான்மன தொடும்வாய் பேசி
ஒத்துணர தான்உரு ஒன்றொடொன்று ஒவ்வாது
அச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சு உணர தார்க்கே நணுகலு மாமே
கல்லாமை

கல்லா தவரும் கருத்தறி காட்சியை
வல்லார் எனில்அரு கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணுகி லாரே

வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம் இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லா குரம்பை நிலையென்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்து காணஒண் ணாதே

கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்
கல்லேன் அரநெறி அறியா தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே

நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவி டாரே

கணக்கறி தார்க்கு அன்றி காணஒண் ணாதது
கணக்கறி தார்க்கு அன்றி கைகூடா காட்சி
கணக்கறிந்து உண்மையை கண்டுஅண்ட நிற்கும்
கணக்கறி தார்கல்வி கற்றறி தாரே

கல்லாத மூடரை காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட கடன்அன்று
கல்லாத மூடர்க்கு கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே

கற்றும் சிவஞானம் இல்லா கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறி தார்களே

ஆதி பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்தும் தொடர்வறி யாரே
நடுவு நிலைமை

நடுவுநின் றார்க்கு அன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
நடுவுநின் றார்ச்சிலர் ஞானிகள் ஆவோர்
நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே

நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவார்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவார்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே
கள்ளுண்ணாமை

கழுநீர பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தம் காயம்சுருக்கும்
முழுநீர கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர சிவன்தன் சிவானந தேறலே
கா

சித்தம் உருக்கி சிவமாம் சமாதியில்
ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலை
சுத்த மதுவுண்ண சிவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ காலே

காமமும் கள்ளும் கலதிக கேயாகும்
மாமல மும்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந தேறல் உணர்வுண்டே

வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளி குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே

உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞான சிவயோகம் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே

மயக்கும் சமய மலமன்னு மூடர்
மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே

மயங்கு தியங்கும் கள்வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே

இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இணையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிட தேனே

சத்தியை வேண்டி சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டு
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே

சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம்
சத்தி அருள்தரின் சத்தன் அருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டும் தன் உள்வைக்க
சத்தியம் எண்சித்தி தன்மையு மாமே

தத்துவம் நீக்கி மருள்நீக்கி தானாகி
பொய்த்தவம் நீக்கிமெ போகத்து போகியே
மெய்த்த சகமுண்டு விட்டு பரானந்த
சித்திய தாக்கும் சிவானந தேறலே

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்த
போத அமுதை பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று
ஆகும் மதத்தால் அறிவழி தாரே

உண்ணீர் அமுத முறும் ஊறலைத்திறந்து
எண்ணீர் குரவன் இணையடி தாமரை
நண்ணீர் சமாதியின் நாடிநீ ரால்நலம்
கண்ணாற் றொடேசென்று கால்வழி காணுமே
முதல் தந்திரம் முற்றிற்று

இரண்டா தந்திரம்
அகத்தியம்

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சா஢ந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே
பதிவலியில் வீரட்டம் எட்டு

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலக துயிர்க்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்ட
குருத்துயர் சூலங்கை கொண்டுகொன் றானே

கொலையிற் பிழைத்த பிரசா பதியை
தலையை தடிந்திட்டு தானங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணி
தலையை யா஢ந்திட்டு சந்திசெய் தானே

எங்கும் பரந்தும் இருநில தாங்கியு
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்குஅ சுதனை உதிரங்கொண் டானே

எங்குங் கலந்துமென் உள்ள தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபாற்
பொங்குன்ய் சலந்தரன் போர்ச்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறி தாழிசெய் தானே
யோகிபாற்

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்க்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே

முத்தீ கொளுவி முழங்கொ஢ வேள்வியுள்
அத்தி யுரியர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயின் உள்ளெழு தன்று கொலையே

மூல துவாரத்து மூளும் ஒருவனை
மேலை துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்று காலனை காய்ந்தங்கி யோகமாய்
ஞால கடவூர் நலமாய் இருந்ததே

இருந்த மனத்தை இசைய இருத்தி
பொருந்தி இலிங்க வழியது போக்கி
திருந்திய காமன் செயலழி தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே
இலிங்க புராணம்

அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகி
திடமார் தவஞ்செய்து தேவர் அறி
படியார அர்ச்சித்து பத்திசெய் தாளே

திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்கு பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே

ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற கவ்வழி
வாழி பிரமற்கும் வாள்கொடு தானே
வாழி பிரமற்கும்

தாங்கி இருபது தோளு தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நொ஢த்தம ராவென் றழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே

உறுவது அறிதண்டி ஒண்மணற் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே

ஓடிவ தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்து தாஞ்சென்று
நாடி இறைவா நமேன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே
தக்கன் வேள்வி

தந்தைபி ரான்வெகுண் டாந்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டு
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே

சந்தி செயக்கண் டெழுகின் றா஢தானும்
எந்தை யிவனல்ல யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லானும் அருள்புரி தானே

அப்பரி சேயய நார்ப்பதி வேள்வியுள்
அப்பரி சேயங்கி அதிசய மாகிலும்
அப்பரி சேயது நீர்மையை யுள்கல
தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே

அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேயவ ராகிய காரணம்
அப்பரி சங்கி யுளநாளும் உள்ளி
டப்பரி சாகி அலர்ந்திரு தானே
அலந்திரு
அமர்ந்திரு

அலர்ந்திரு தானென் றமரர் துதிப்ப
குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கி
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடி வந்தானே
அலந்திரு

அரிபிர மந்தக்கன் அருக்க னுடனே
வருமதி வாலை வன்னிநல் இந்திரன்
சிரமுக நாசி சிறந்தகை தோள்தான்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே
சிந்தைகை

செவி திரஞ்சொல்லுஞ் செய்தவ தேவர்
அவி திரத்தின் அடுக்களை கோலி
செவி திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவி திரங்கொல் கொடியது வாமே

நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புற
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லாற் புரத்தை விளங்கொ஢ கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே

தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளித்தாங் கடைவதெம் ஆதி பிரானை
விளிந்தா னது தக்கன் வேள்வியை வீ
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே
விளிந்தான தக்கனவ் வேள்வியை
பிரளயம்

கருவரை மூடி கலந்தெழும் வெள்ள
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள் புரி தானே

அலைகடல் ஊடறு தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு
உலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே

தண்கடல் விட்ட தமரரு தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழு தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே

சமைக்கவல் லானை சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை
மிகைக்கொள அங்கி மிகாமைவை தானே

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமல திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே
சக்கரப்பேறு

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதகங் கையினோ டந்தர சக்கர
மேல்போக வெள்ளி மலைஅம ராபதி
பார்ப்போக மேழும் படைத்துடை யானே

சக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும்
சக்கர தன்னை தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்க
தக்கநற் சக்தியை தாங்கூறு செய்ததே
திரிக்கவொண்

கூறது வா குறித்துநற் சக்கரங்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்கு
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்கு
கூறது செய்து தரித்தனன் கோலமே
கொடுத்தனன்

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரந்தானுஞ்
சக்கர தன்னை சசிமுடி மேல்விட
அக்கி உமிழ்ந்தது வாயு கரத்திலே
எலும்பும் கபாலமும்

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில நாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே
அடிமுடி தேடல்

பிரமனும் மாலும் பிரானேநான் என்ன
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலா பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றுகின் றாரே

ஆமே ழுலகுற நின்றேம் அண்ணலு
தாமே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
வானே ழுலகுறும் மாமணி கண்டனை
நானே அறிந்தேன் அவனாண்மை யாலே
நானே அறிந்தேனென் ஆண்மையி னாலே

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
சேணாய்வா னோரங்கி திருவுரு வாய் அண்ட
தாணுவும் ஞாயிறு தண்மதி யுங்கட
தாண்முழு தண்டமு மாகிநின் றானே

நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றாங் கழலடி நாடவொண் ணாதே

சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றானும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனு
தாவடி யிட்டு தலைப்பெய்து மாறே

தான கமல திருந்த சதுமுகன்
தான கருங்கடல் வாழி தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தான பெரும்பொருள் தன்மைய தாமே
கடலூழி

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முங்கண்
டாலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்
கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே

வாள்கொடு தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடு தெம்போல் அரனை அறிகிலர்
ஆள்கொடு தின்பங் கொடுத்து கோளாக
தாள்கொடு தானடி சாரகி லாரே

ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழி தலைநீர் விதித்தது தாவென
ஊழி கதிரோன் ஒளியைவென் றானே
படைத்தல்
சிருஷ்டி
சர்வ சிருஷ்டி

ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாக புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்ற தோன்றுமா
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே
பராபரன்

நாதத்தில் விந்துவும் நாதவி துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகி
கல்லொளி போல கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே

தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவா
பார சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே

மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமா
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமா
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்கு புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்
புவனம் படைப்பான புண்ணியன் தானே

புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ்
கண்ணியல் பா கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே

நீரக தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்திற் சோதி பிறக்கும்அ காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைபிற பாமே
காய்கதிர

உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்ட தமரர் தலைவனும் ஆதியுங்
கண்ட சதுர்மு காரணன் தன்னொடும்
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
பாங்கார் கயிலை பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர தானே

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்
பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாஉல காயமர தானே

பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு
அயஓளி யாயிரு தங்கே படைக்கும்
பயனெளி தாம்வய ணந்தெளி தேனே

போக்கும் வரவும் புனிதன் அருள்புரி
தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டு திசையொடு
தாக்குங் கலக்கு தயாபரன் தானே

நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்துய ராக்கும் உடற்கு துணையதா
நன்றுயிர பானே நடுவுநின் றானே

ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே

புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கர தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடி காகிநின் றாரே

ஆணவ சத்தியும் ஆம்அதில் ஐவருங்
காரிய காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்து
ஆணவம் நீங்கா தவரென லாகுமே

உற்றமு பாலொன்று மாயாள் உதயமா
மற்றைய மூன்று மாயோ தயம்விந்து
பெற்றவன் நாதம் பரையிற் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே
பெற்றவள்

ஆகாய மாதி சதாசிவ ராதியென்
போகாத சத்தியு போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
ஆகாயம் பூமி காண அளித்தலே
அளித்ததே

அளியார் முக்கோணம் வயிந்தவ தன்னில்
அளியார் திரிபுரை யாமவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே

வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரிய மா கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே
பூதாதி

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரந்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திரு தானே

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழு துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே
மேஉடலோடுயிர்

செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம் இறை
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்
அந்தார் பிறவி அறுத்துநின் றானே
ஐந்தார் பிறவி அமைத்து நின்றானே

தேடு திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
கூடும் பிறவி குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம் துள்ளத்துள் ளேநின்று
நாடும் வழக்கமும் நான்அறி தேனே

ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழு துடைப்பதும்
ஓராய மேஉல கோடுயிர் தானே
உடலோடுயிர் தானே

நாதன் ஒருவனும் நல்ல இருவருங்
கோது குலத்தொடுங் கூட்டி குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவரு
காதி இவனே அருளுகின் றானே

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்தி புகலும் மனிதர்க
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே

ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
போதித்த வானொலி பொங்கிய நீர்ப்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே
காத்தல்
திதி

புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகி
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகி
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகி
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே

தானே திசையொடு தேவரு மாய்நிற்கு
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கு
தானே கடல்மலை யாதியு மாய்நிற்கு
தானே உலகில் தலைவனு மாமே

உடலாய் உயிராய் உலகம தாகி
கடலாய் கார்முகில் நீர்ப்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையார் பெருவழி அண்ணல் நின்றானே
பெருவெளி

தேடு திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
கூடு மரபிற் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்து ளேநின்று
நாடும் வழக்கமும் நான்அறி தேனே
கூடும்பிறவி

தானொரு கால தனிச்சுட ராய்நிற்கு
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கு
தானொரு கால தண்மழை யாய்நிற்கு
தானொரு காலந்தண் மாயனு மாமே

அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்ப கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே

உற்று வனைவான் அவனே உலகினை
பெற்று வனைவான் அவனே பிறவியை
சுற்றிய சாலுங் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே

உள்ளுயிர பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியான் நிலங்கொளி
உள்ளுயிர கும்உணர் வேயுட லுட்பர
தள்ளுயி ராவண்ண தாங்கிநின் றானே

தாங்கரு தன்மையு தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி
தாங்கிநின் றானும்அ தாரணி தானே

அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞான கொழுந்தொன்று நல்கும்
பணுகினும் பார்மிசை பல்லுயி ராகி
தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே
அழித்தல்
சங்காரம்

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது
அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது
அங்கிசெய் தீசன் அசுரரை சுட்டது
அங்கியவ் வீசற்கு கைஅம்பு தானே

இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த
நிலையன் றழிந்தமை நின்றுணர தேனால்
உலைதந்த மெல்லா஢ போலும் உலகம்
மலைதந்த மானில தான்வெ ததுவே

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம்
விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிசையாதி
ஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புற
குண்டத்தின் மேலங்கி கோலி கொண்டானே

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாஞ்
சுத்தசங் கார தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன் அருள் உண்மையே

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாஞ்
சுத்தசங் காரம் மனாதீத தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன் அருள் உண்மையே

நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல்
சுத்தசங் காரம் அதீதத்து டோ ய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே
வைத்தசங் காரங் கேவலம் ஆன்மாவு
குய்த்தசங் காரம் சிவமாகும் உண்மையே

நித்தசங் காரமும் நீடிளை பாற்றலின்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்
சுத்தசங் காரமு தோயா பரன்அருள்
உய்த்தசங் காரமும் நாலா மதிக்கிலே

பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அ பாழிலே

தீயவை தார்மிங்கள் சேரும் வினைதனை
மாயவை தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வை தாங்கல தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வை தானுணர் வாரவை தானே
மறைத்தல்
திரோபவம்

உள்ள தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்வி டோ ரடி நீங்கா ஒருவனை
உள்ளமு தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே
நீங்கா தொருவனை
உள்ளமும் அவனும் உறவா யிருந்தும்

இன பிறவி படைத்த இறைவனு
துன்பஞ்செய் பாச துயருள் அடைத்தனன்
என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே
அடைந்தனன்

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசறி யாதே
பரிசறி யாரே

காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டு
சேண்படு பொய்கை செயலணை யாரே

தெருளும் உலகிற்கு தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதி பிரானுஞ்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே

அரைகின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வா
பரக்கும் உருவமும் பாரக தானா
கரகின் றவைசெய்த காண்டகை யானே

ஒளித்துவை தேனுள் ளுறவுணர தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்ப டிறைஞ்சினும் வேட்சியு மாமே

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரந்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராகி இசைந்திரு தானே
கியங்கி யயந்திரு

ஒருங்கிய பாசத்துள் உத்த சித்தன்
இருங்கரை மேலிரு தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்கற லாமே
சித்தின்

மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிக கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணு தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே
அருளல்
அநுக்கிரகம்

எட்டு திசையும் எறிகின்ற காற்றொடு
வட்ட திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னுமி காயப்பை
கட்டி அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே
அவிழ்க்கின்ற

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்கு
தச்சு மவனே சமைக்கவல் லானே

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணை
குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
குசவனை போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
அசைவில் உலகம் அதுயிது வாமே
குயவன்
குயவனை
அயைவில்

விரியுடை யான்விகிர் தன்மிகு பூத
படையுடை யான்பரி சேஉல காக்குங்
கொடையுடை யாங்குணம் எண்குண மாகுஞ்
சடையுடை யாஞ்சிந்தை சார்ந்துநின் றானே

உகந்துநின் றேபடை தான்உல கேழும்
உகந்துநின் றேபடை தான்பல ஊழி
உகந்துநின் றேபடை தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படை தானே

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே

ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கிநின் றானே
அனாதி
பூதங்கள்
ஆயபல் ஊழிகள்

அகன்றான் அகலிடம் ஏழுமொன் றாகி
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனு மாமே
கடலிடம்
சீவரும்

உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோத மாமே
மாபோதகமே

ஆரும் அறியாத அண்ட திருவுரு
பார்முத லாக பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையை
சோராமற் காணுஞ் சுகம்அறி தேனே
கரு உற்பத்தி
கர்ப்பக்கிரியை

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்ப கோளகை யுள்ளிரு
தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே

அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்பு
செறிகின்ற ஞானத்து செந்தாள் கொளுவி
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடி
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே

இன்புறு கால திருவர்முன் பூறிய
துன்புறு பாச துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு கால தமைத்தொழி தானே

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருக்குழி தேடி புகுந்த
உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறி
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே

பூவின் மணத்தை பொருந்திய வாயுவு
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே
ஆகிப்படைத்தன
விடாவிடிற்
பந்தியு

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்ப்போ தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே
அரியயன்

ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்து
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காண பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே

கர்ப்பத்து கேவல மாயாள் கிளைகூட்ட
நிற்கு துரியமும் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே
கிளைக்கூட்ட

என்பால் மிடைந்து நரம்பு வா஢க்கட்டி
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே
நண்பால்

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனி பகலோன்
இதஞ்செய்யு மொத்துடல் எங்கும் புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோப தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழி தானே

ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கி
பழிபல செய்கின்ற பாச கருவை
சுழிபல வாங்கி சுடாமல்வை தானே

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங்
கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத்தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே
கோகத்துள்

பிண்டத்தில் உள்ளுறு பேதை புலன்ஐந்தும்
பிண்டத்தி னூடே பிறந்து மா஢த்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நா தமர்ந்திரு தானே

இலைபொறி யேற்றி யெனதுடல் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி
நிலைபொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்ப கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே

அறியீ ருடம்பினி லாகிய வாறும்
பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்
செறியீ ரவற்றினு சித்திகள் இட்ட
தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே

உடல்வைத்த வாறும் உயிர்வைத்த
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்து
திடம்வைத்த தாமரை சென்னியுள் அங்கி
கடைவைத்த ஈசனை கைகல தேனே

கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு
நீட்டுநின் றாகத்து நேர்ப்பட்ட வாறே

பூவுடன் மொட்டு பொருந்த அலர்ந்தபின்
காவுடை தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதா
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே

எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பை
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடை
பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாக வகுத்துவை தானே

அருளல்ல தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலி னவ்வோர் உயிரை
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடு தானே

வகுத்த பிறவியை மாதுநல் லாளு
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே

மாண்பது வாக வளர்கின்ற வன்னியுங்
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தான சோதிதன் ஆண்மையே
வன்னியை

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்து பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே

பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயு பகுத்தறி திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்கு பாய்ச்சலு மாமே

பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே

மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில்
குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடுங்
கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில்
கொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே
ஒத்தேறில்

கோள்வளை உந்தியிற் கொண்ட குழவியு
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர துள்ளே பகலவன் பொன்னுரு
போல்வளர துள்ளே பொருந்துரு வாமே

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
பருவம தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம தாவதிங் காரறி வாரே

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே

இன்புற நாடி இருவருஞ் சந்தித்து
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின் றோதலு மாமே
சிந்தித்து

குயிற்குஞ்சு முட்டையை காக்கை கூட்டிட்டால்
அயிர்ப்பின்றி காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே

முதற்கிழங் காய்முளை யாயம் முளைப்பின்
அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாயின்ப மாவதுபோல
அதற்கது வாய்நிற்கும் ஆதி பிரானே

ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
ஊனே சிறுமையுள் உட்கல தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியு தவத்தினி னுள்ளே

பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரி திவ்வுடல் ஓங்கிட வேண்டி
திரைக்கடல் உப்பு திரண்டது போல
திரித்து பிறக்கு திருவரு ளாலே
மூவகைச்சீவ வர்க்கம்

சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி
ஒத்த இருமாயா கூட்ட திடைப்பூட்டி
சுத்தம தாகு துரியம் புரிவித்து
சித்தம் புகுந்து சிவமய மாக்குமே

விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகல
தஞ்ஞானர் மூவரு தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே

விஞ்ஞானர் கேவல தாரது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவி தேசராஞ் சார்ந்துளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே

இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மல தாரே

பெத்தெத்த சித்தொடு பேண்முத்த சித்தது
ஒத்தி டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
தமிழ்ந்து சகலத்து ளாரே

சிவமாகி ஐவகை திண்மலஞ் செற்றோர்
அவமாகார் சித்தர்மு தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக்கண் டோ ரே
நாடிக்கொண் டாரே

விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே

விஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடிய
அனையான கன்மத்தி நால்சுவர் யோனிபு
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்
மெய்ஞ்ஞான ராகி சிவமேவல் உண்மையே

ஆணவ துற்ற வவித்தா நனவற்றோர்
காணிய விந்துவா நாத சகலாதி
ஆணவ மாதி யடைந்தோ ரவரன்றே
சேணுயர் சத்தி சிவ துவமாமே
வரன்றே
சேணுயர் சத்தி சிவ துவமாமே
பாத்திரம்

தில தனைபொன் சிவஞானிக்கு ஈந்தால்
பலமுத்தி சித்தி பரபோக மும்
தரும்நில தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்
பலமும்அற் றெபர போகமும் குன்றுமே

கண்டிரு தாருயிர் உண்டிடுங் காலனை
கொண்டிரு தாருயிர் கொள்ளும் குணத்தனை
நன்றுணர தார்க்கருள் செய்திடு நாதனை
சென்றுணர தார்சிலர் தேவரு மாமே

கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து
மெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்வி டிலாத விடிஞ்சிலு மாமே

ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்து கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளை யோனே
அபாத்திரம்

கோல வறட்டை குனிந்து குளகிட்டு
பாலை கறந்து பருகுவதே ஒக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே

ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்க்களுக்கு
ஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே

ஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசற்கு தூய குரவற்கும்
காமாதி விட்டோ ர்க்கு தரல்தந்து கற்பிப்போன்
போமா நரகில் புகான்போதங் கற்கவே

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்றே அஞ்சலி அத்தனாய்
எண்ணி இறைஞ்சாதார்ககு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நர குழியிலே
தீர்த்தம்

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ள குடைந்துநின் றாடார் வினைகெட
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடை கல்வியி லோரே

தளியறி வாளர்க்கு தண்ணிதா தோன்றும்
குளியறி வாளர்க்கு கூடவும் ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை
கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினை
பள்ளத்தல் இட்டதோர் பத்துள் ளாமே

அறிவார் அமரர்கள் ஆதி பிரானை
செறிவான் உறைபதம் சென்று வலங்கொள்
மறியார் வளைக்கை வருபுனல் கங்கை
பொறியார் புனல்மூழ்க புண்ணிய ராமே

கடலில் கெடுத்து குளத்தினில் காண்டல்
உடலுற்று தேடுவார் தம்மைஒ பாரிலர்
திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்று
உடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே
உடலுற

கலந்தது நீரது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீரது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்அனல் காற்றது வாமே
திருக்கோயில்
திருக்கோயிலிழிவு

தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரை தானே

கட்டுவி தார்மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவி கும்அபி டேகத்து அரசரை
முட்டுவி கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவி தேவிடும் விண்ணவன் ஆணையே

ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றி
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதை தான்திரு கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே

முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்கு தீங்குள வாரி வளம்குன்றும்
கன்னம் களவு மிகுத்திடும் காசினி
என்னரு நந்தி எடுத்துரை தானே
மாரி

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்கு பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்கு பஞ்சமு மாம்என்றே
சீர்க்கொண்ட நந்தி தொ஢ந்துரை தானே
அதோமுக தொ஢சனம்

எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவள மேனி அறுமுகன் போயவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே

அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே

செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்து
பொய்யே யுரைத்து புகழும் மனிதர்கள்
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்தீ கலந்துள் சிவனென நிற்கும்
முந்தி கலந்தங்கு உலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுகம் ஆமே

அதோமுகம் கீழண்ட மான புராணன்
அதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுக து ஒண்மலர கண்ணி பிரானும்
அதோமுகன் ஊழி தலைவனு மாமே

அதோமுகம் மாமல ராயது கேளும்
அதோமுக தால் ஒரு நூறாய் விரிந்து
அதோமுகம் ஆகிய அந்தமில் சத்தி
அதோமுகம் ஆகி அமர்ந்திரு தானே
சிவ நிந்தை
தெளிவுறு ஞானத்து சிந்தையின் உள்ளே
அளிவுறு வார்அம ராபதி நாடி
எளியனென்று ஈசனை நீசர் இகழில்
கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமுது ஊறிய ஆதி பிரானை
தளிந்தவர்ககு அல்லது தாங்கஒண் ணாதே

அப்பகை யாலே அசுரரும் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனை
பொய்ப்பகை செய்யினும் ஒன்றுப தாமே

போகமும் மாதர் புலவி அதுநினைந்து
ஆகமும் உள்கலந்து அங்குஉள ராதலில்
வேதிய ராயும் விகிர்தன்நாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே
குரு நிந்தை

பெற்றிரு தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிரு தாரை உளைவன சொல்லுவர்
கற்றிரு தார்வழி உற்றிரு தாரவர்
பெற்றிரு தார்அன்றி யார்பெறும் பேறே

ஓரெழுத்து ஒருபொருள் உணர கூறிய
சீரெழு தாளரை சிதை செப்பினோர்
ஊரிடை சுணங்கனா பிறந்தங் கு ஓர்உகம்
வாரிடை கிருமியாய் மாய்வர் மண்ணிலே
பாரிடை
படிகுவர் பழகுவர்

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்க சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே
மாய்ந்திடுஞ்
சொன்னோம்

மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திட தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனா பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே

ஈசன் அடியார் இதயம் கலங்கிட
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர்
நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே

சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய்வா஢ன்
நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டு
பன்மார்க்க மும்கெட்டு பஞ்சமும் ஆமே

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லை சுமப்போன் விதிபோன்றும்
கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்க தானற
கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானி கொப்பே
மயேசுர நிந்தை

ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர்
தாம்தாம் விழுவது தாழ்நர காமே
றுண்பார்

ஞானியை நிந்தி பவனும் நலன் என்றே
ஞானியை வந்தி பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வார் அவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே
பொறையுடைமை

பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றி கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றி கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே
நாவியும்

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன்
ஞால திவன்மிக நல்லன்என் றாரே
மேனி பணிந்தடியேன் தொழ
ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடென்றாலே

ஞானம் விளைந்தவர் நம்மிடம் மன்னவர்
சேனை வளைந்து திசைதொரும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே
வளைந்தருள்

வல்வகை யானும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும்
கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு
எல்லையி லாத இலயம்உண் டாமே
பெரியாரை துணைகோடல்

ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்
கூடவல் லாரடி கூடுவன் யானே

தாமிடர பட்டு தளிர்போல் தயங்கினும்
மாமனதது அங்குஅன்பு வைத்தது இலையாகும்
நீஇடர பட்டிருநது என்செய்வாய் நெஞ்சமே
போமிட து என்னொடும் போதுகண் டாயே

அறிவார் அமரர் தலைவனை நாடி
செறிவார் பெறுவர் சிலர துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியார் உடன்கூடல் போ஢ன்ப மாமே
சிவதத்துவத்தை

தார்சடை யான்தன் தமராய் உலகினில்
போர புகழா எந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளம் தேர்வார்ககு அருள்செய்யும்
கோவந்தடை து அந்நெறி கூடலு மாமே

உடையான் அடியார் அடியா ருடன்போ
படையார் அழல்மேனி பதிசென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலம் என் றாரே

அருமைவல் லோன்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே
ஞாலத்துள்
இரண்டாம் தந்திரம் முற்றிற்று









திருமந்திரம்
திருமூலர்
மூன்றா தந்திரம்
அட்டாங்க யோகம்

உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணி
பிரச்சதம் எட்டும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே
உரைத்த நவாக்கிரி
பிரைச்சதம்

செய்த இயம நியமஞ் சமாதிசென்
று பராசக்தி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே

அந்நெறி இந்நெறி என்னாத டாங்க
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்
புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே
யாக்கத்திற்

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே
நண்பிரத்தி
இயமம்

எழுந்துநீர் பெய்யினும் எட்டு திசையுஞ்
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவள குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர கருள்புரி தானே

கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் திடையில்நின் றானே
நியமம்

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானை
சோதியை ஆங்கே சுடுகின்ற அங்கியை
பாதியுள் மன்னும் பரசக்தி யோடுடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே
யுணர்ந்த

தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமங் களவு கொலையென காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே
அருளுண்

தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திக தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்த கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே
ஆதனம்

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாக சுவத்திக மெனமிக
தங்க இருப்ப தலைவனு மாமே

ஓரணை யப்பத மூருவின் மேலேறி
டார வலித்ததன் மேல்வை தழகுற
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்க
பார்திகழ் பத்மா சனமென லாகுமே

துரிசில் வலக்காலை தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளி லங்கையை நீட்டி
உருசி யொடுமுடல் செவ்வே யிருத்தி
பரிசு பெறுமது பத்திரா சனமே

ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றி
தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்
குக்குட ஆசனங் கொள்ளலு மாமே

பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்கா தழகுற
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுற
சீர்திகழ் சிங்கா தனமென செப்புமே

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழு
முத்தம மாமுது ஆசனம் எட்டெட்டு
பத்தொடு நூறு பலஆ சனமே
முத்த மயூரமுது
பிராணாயாமம்

ஐவர்க்கு நாயகன் அவ்வூர தலைமகன்
உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப்பற்றுக்கொடுக்குங் கொடாதுபோ
பொய்யரை துள்ளி விழுத்திடு தானே

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசி பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரி பிடிக்க வசப்படு தானே

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
கள்ளுண்ண வேண்டா தானே களிதரு
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே

பிராணன் மனத்தொடும் பேரா தடங்கி
பிராண னிருக்கிற் பிறப்பிற பில்லை
பிராணன் மடைமாறி பேச்சறி வித்து
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே
தடக்கி

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்ப திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே
கும்பகம்

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்து காயம் பழுக்கினும் பிஞ்சா
தௌ குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே
வயிற்றில்

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே யதுசெய்ய ஆக்கை கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்ல
சங்கே குறிக்க தலைவனு மாமே

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றை பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றை பிடிக்குங் கணக்கறி வாளர்க்கு
கூற்றை யுதைக்குங் குறியது வாமே

மேல்கீழ் நடுப்பக்க மிக்குற பூரித்து
பாலாம் இரேசக தாலு பதிவித்து
மாலாகி யுந்தியு கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்ப திரண்டும் இரேசித்து
காமுற்ற பிங்கலை கண்ணாக இவ்விரண்
டோ மத்தால் எட்டெட்டு கும்பிக்க உண்மையே

இட்ட தவ்வீ டிளகா திரேசித்து
புட்டி படத்தச நாடியும் பூரித்து
கொட்டி பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டம் இருக்க நமனில்லை நமக்கே

புறப்பட்டு புக்கு திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டு போகான் புரிசடை யோனே

கூடம் எடுத்து குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடி கொளிற்கோல அஞ்செழு தாமே

பன்னிரண் டானை பகலஇர வுள்ளது
பன்னிரண் டானையை பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையை பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்கு பகல்இர வில்லையே
டானைக்கு
பிரத்தியாகாரம்

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுக தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே

நாபிக்கு கீழே பன்னிரெண் டங்குல
தாபிக்கு மந்திர தன்னை அறிகிலர்
தாபிக்கு மந்திர தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் குடியிரு தானே
நாலிரண்டண்குலம்
குடிபுகுந்தானே

மூல திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனி கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளேழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே

நாசி கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்து
தேகத்து கென்றுஞ் சிதைவில்லை யாமே
யாகுமே
தானே

சோதி இரேகை சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே

மூல துவாரத்தை மொக்கர மிட்டிரு
மேலை துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வௌயில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே

எருவிடும் வாசற் கிருவிரன் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்கு
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே

ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னை
பிரித்துணர் வந்த உபாதி பிரிவை
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா கார பெருமைய தாமே

புறப்பட்ட வாயு புகவிடா வண்ண
திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே
புறப்பட்டு போகான் பெருந்தகை யானே

குறிப்பினின் உள்ளே குவல தோன்றும்
வெறுப்பிருள் நங்கி விகிர்தனை நாடுங்
சிறப்புறு சிந்தையை சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரரு மாமே
தாரணை

கோணா மனத்தை குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வௌயுற தானோக்கி
காணாக்கண் கேளா செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே

மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையார பாயும் நெடுநாடி யூடே
சிலையார் பொதுவில் திருநட மாடு
தொலையாத ஆனந்த சோதிகண் டேனே

மேலை நிலத்தினாள் வேதக பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்க
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே
பார்நந்தி

கடைவாச லைக்கட்டி காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல் வந்தி திருப்பார
குடையாமல் ஊழி இருக்கலு மாமே

கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கங்
கலந்த உயிரது காலது கட்டிற்
கலந்த உயிருடல் காலமும் நிற்குமே

வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திற பாரே வளியிட்டு பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையுமாமே

வாழலு மாம்பல காலும் மனத்திடை
போழ்கின்ற வாயு புறம்படா பாய்ச்சுறில்
எழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியதோர் பள்ளி அறையே

நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திரு தென்செய்வை பேதாய்
வரம்பினை கோலி வழிசெய்கு வார்க்கு
குரங்கினை கொட்டை பொதியலு மாமே
கோட்டை

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர கென்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே

அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்து
பொருத்தஐம் பூதஞ்ச தாதியிற் போந்து
தெரித்த மனாதிச தாதியிற் செல்ல
தரித்தது தாரணை தற்பர தோடே
தியானம்

வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னுங்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே

கண்ணாக்கு மூக்கு செவஞான கூட்டத்து
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஔகாட்டி
புண்ணாக்கி நம்மை பிழைப்பித்த வாறே
பிண்ணாக்கி

ஒண்ணா நயனத்தில் உற்ற ஔதன்னை
கண்ணார பார்த்து கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வௌகண் டிடவோடி
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே

ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிரு சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திர பூவே
பூவையே

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றி
சினத்து விளக்கினை செல்ல நெருக்கி
அனைத்து விளக்கு திரியொக்க தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினை கண்டறி வாரில்லை
உண்ணாடி குள்ளே ஔயுற நோக்கினால்
கண்ணாடி போல கலந்துநின் றானே
நோக்கிற்
நோக்கிடிற்
கலந்திருந்தானே

நாட்டமும் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனவ நாமே
வேட்டமும்

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்தி
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கி
துயரற நாடியே தூங்கவல் லார்க்கு
பயனிது காயம் பயமில்லை தானே

மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர கல்லது பார்க்கஒண் ணாதே
வளர்க்குழல்

கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்து
சுடர்மன்னு வேணு சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெறி யாதே
சுடர்மனு
சுடர்மணி

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துய ராய்நிற்கும்
ஓசை யதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே

உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்து
துதிக்கின்ற தேசுடை தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே
ஐவர் அருள்நாதமோடும்

பள்ளி அறையிற் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்
ஔளி தறியிலோ ரோசனை நீளிது
வௌளி அறையில் விடிவில்லை தானே

கொண்ட விரதங் குறையாமற் றானொன்றி
தண்டுடன் ஓடி தலைப்பட்ட யோகிக்கு
மண்டல மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே

அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
அவ்வவர் மண்டல தவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர கேவரில்
அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே

இளைக்கின்ற நெஞ்ச திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றி
துளைப்பெரும் பாச துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்க்கழி ஏற்றம தாமே

முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடி திரித்து பிடித்திட்டு
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயர்நிலை வானவர் கோனே

நடலித்த நாபிக்கு நால்விரன் மேலே
மடலித்த வாணி கிருவிரல் உள்ளே
கடலி திருந்து கருதவல் லார்கள்
சடல தலைவனை தாமறி தாரே

அறிவாய சத்தென்னு மாறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறி தாரே
அறியா யசந்தென்னு
சமாதி

சமாதி யமாதியிற் றான்செல்ல கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டு சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர கன்றே
சமாதி யமாதி தலைப்படு தானே

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருள்
சுந்தர சோதியு தோன்றிடு தானே

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மன துள்ளே மகிழ்ந்திரு பார்க்கு
மன்மன துள்ளே மனோலய மாமே

விண்டலர் கூபமும் விஞ்ச தடவியுங்
கண்டுணர் வா கருதி யிருப்பர்கள்
செண்டு வௌயிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறு தாரே

மூல நாடி முகட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்
மேலை வாசல் வௌயுற கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே
முக்கடல்

மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே

பூட்டொத்து மெய்யிற் பொறிபட்ட வாயுவை
தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயன திருப்பார்க்கு
தோட்டத்து மாம்பழ தூங்கலு மாமே

உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றி கடைந்தமு துண்டார்
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாமன தீர்ந்தற்ற வாறே

நம்பனை யாதியை நான்மறை ஓதியை
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போ
கொம்பேறி கும்பிட்டு கூட்டமி டாரே

மூலத்து மேலது முச்சது ரத்தது
கால திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலை பிறையினில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே

கற்பனை யற்று கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளி
பொற்பினை நாடி புணர்மதி யோடுற்று
தற்பர மாக தகுந்தண் சமாதியே

தலைப்ப டிருந்திட தத்துவங் கூடும்
வலைப்ப டிருந்திடும் மாதுநல் லாளுங்
குலைப்ப டிருந்திடுங் கோபம் அகலு
துலைப்ப டிருந்திடு தூங்கவல் லார்க்கே

சோதி தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதி பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணி தன்புறு வாரே
முன்நின்ற

சமாதிசெய் வார்க்கு தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டு சித்தியும் எய்துமே
அட்டாங்கயோக பேறு
இயமம்

போதுக தேறும் புரிசடை யானடி
யாதுக தாரம ராபதி கேசெல்வர்
ஏதுக தானிவன் என்றருள் செய்திடு
மாதுக தாடிடு மால்விடை யோனே
நியமம்

பற்றி பதத்தன்பு வைத்து பரன்புகழ்
கற்றிரு தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழு தாங்கே முனிவர் எதிர்வர
தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே
ஆதனம்

வந்தி தவஞ்செய்து வானவர் கோவா
திருந்தம ராபதி செல்வன் இவனென
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே
பிராணாயாமம்

செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்து
கும்ப தமரர் குழாம்வ தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்ப கலவி இருக்கலு மாமே
பிரத்தியாகாரம்

சேருறு கால திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ள
காருறு கண்டனை மெய்கண்ட வாறே
தாரணை

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்கா பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசை
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே
தியானம்

தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடு
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதமு
தாங்கவல் லார்க்கு தன்னிட மாமே
வல்லார்க்கு
நின்றிட்டு
வல்லார்க்கு
சமாதி

காரிய மான உபாதியை தாங்கட
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
ஆரிய காரண மாய தவத்திடை
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே
அட்டமா சித்தி
பரகா பிரவேசம்

பணிந்தெண் திசையும் பரமனை நாடி
துணிந்தெண் திசையு தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே

பரிசறி வானவர் பண்பன் அடியென
துரிசற நாடியே தூவௌ கண்டேன்
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறு தானே

குரவன் அருளிற் குறிவழி மூலன்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்து
தெரிதரு சாம்பவி கேசரி சேர
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே
மனமிகு சக்கட்ட மார்த்து

காயாதி பூதங் கலைகால மாயையில்
ஆயா தகல அறிவொன் றனாதியே
ஓயா பதியதன் உண்மையை கூடினால்
வீயா பரகாயம் மேவலு மாமே

இருபதி நாயிர தெண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாமந்த யோக
தருமிவை காய உழைப்பாகு தானே
அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே
அருமிரு

மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்
உதய மதுநா லொழியவோ ரெட்டு
பதியுமஈ ராறாண்டு பற்றற பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே

நாடும் பிணியாகு நஞ்சனஞ் சூழ்ந்தக்கால்
நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடொன்றி னால்வாயா சித்திபே தத்தின்
நீடுங் துரங்கேட்டல் நீண்முடி வீராறே

ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியா
தாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ்
சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதிற் றான்பர காயமே

ஈரைந்திற் பூரித்து தியான உருத்திரன்
ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி
சீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று
ஏருன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே
நேரொன்று
ஓரொன்று
ஏரொன்று

தானே அணுவுஞ் சகத்துத்தன் நொய்ம்மையும்
மானா கனமும் பரகா தேகமு
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே
நோன்மையும்
ககனமும்
வியாப்பிய

தாங்கிய தன்மையு தானணு பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை
யாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமி
கோங்கி வரமுத்தி முந்திய வாறே
கோண்கிய வாமுத்தி

முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிட
சிந்தை செயச்செய மண்முதல் தேர்ந்தறி
துந்தியில் நின்று உதித்தெழு மாறே
செய் மண் முதல் தேர்ந்தறி வார்வல முந்தியுள்
துந்தியுள்

சித்த திரிந்து சிவமய மாகியே
முத்த தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திருநட தோரே

ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த வுடலும் உயிரும் இருந்ததே

இருக்கு தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற் றிருபத்து மூன்றாய்
இருக்கு முடலி லிருந்தில வாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே
முடலீ திருந்தில

வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனு முடமதாய்
வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே
முடமதாம்

கண்ணில் வியாதி யுரோக தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில நாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே

நாடியின் ஓசை நயனம் இருத
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியை
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திரு தாரே
தார்க்களே

ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கடகு
ஒன்பது காட்சி யிலைபல வாமே
வாசல் உலைநலமாமே

ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிட
தாங்கி உலகங்கள் ஏழு தரித்திட
ஆங்கது சொன்னோம் அருவழி யோர்க்கே
அறிவுடை

தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியை தூவழி செய்தால்
விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே

ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரை கட்டுமே

கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
கட்டிட்டு நின்று களங்கனி யூடுபோ
பொட்டிட்டு நின்று பூரண மானதே
கண்ணியர்
தட்டிட்டு நின்று தளண்களி \டுபோ

பூரண சத்தி ஏழுமூன் றறையாக
ஏரணி கன்னியர் எழுநூற்றஞ் சாக்கினார்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண மாகி கலந்து விரிந்ததே

விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்
பரந்து குவிந்தது பார்முதற் பூதம்
இரைந்தெழு வாயு விடத்தினில் ஒடுங்கே
ஓண்கே

இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடைபடு வாயுவு மாறியே நிற்கு
தடையவை யாறேழு தண்சுட ருள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே
யாறெழு

ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கில்
மடங்கி அடங்கிடும் வாயு வதனுள்
மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே
நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே
கூத்தனை நாடுகின் றேனே

நாடியின் உள்ளே நா தொனியுடன்
தேடி யுடன்சென்ற திருவினை கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரை கட்டிட்டு
மாடி ஒருகை மணிவிள கானதே

அணுமாதி சித்திக ளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவ தனையெங்கு தானாத லென்றெட்டே
அணுமை
தானாக

எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்
கிட்டா பிராணனே செய்தாற் கிடைத்திடும்
ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு
விட்டான் மதியுண்ண வும்வரு மேலதே

சித்திக ளெட்டன்றி சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்
சித்திகள் எண்சித்தி தானா திரிபுரை
சத்தி அருள்தர தானுள வாகுமே
அணிமா

எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூட
பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்
இட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சி
எட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே
இருக்கல்

மந்தர மேறு மதிபானு வைமாற்றி
கந்தா குழியிற் கசடற வல்லார்க்கு
தந்தின்றி நற்கா மியலோகஞ் சார்வாகும்
அந்த வுலகம் அணிமாதி யாமே
காய மிய

முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனு
தணிந்தவ பஞ்சினு தானொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே
லகிமா

ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகல தா
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே

மாலகு வாகிய மாயனை கண்டபின்
தானொளி யாகி தழைத்தங் கிருந்திடும்
பாலொளி யாகி பரந்தெங்கு நின்றது
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே
மகிமா

மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிட
கைப்பொரு ளா கலந்திடு மோராண்டின்
மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே

ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வௌயுற நின்றன
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே
நின்றபின்
தாழ்கின்ற

தன்வழி யாக தழைத்திடு ஞ்னமு
தன்வழி யாக தழைத்திடும் வையக
தன்வழி யாக தழைத்த பொருளெல்லா
தன்வழி தன்னரு ளாகிநின் றானே
மீதாக
பிராத்தி

நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூத படையவை யெல்லாங்
கொண்டவை யோராண்டு கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்தி யதாகுமே
படையானவையெலாண்
கரிமா

ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின்ற பூவிற் பரப்பவை காணலா
மேகின்ற காலம் வௌயுற நின்றது
போகின்ற காலங்கள் போவது மில்லையே
மேனின்ற

போவதொன் றில்லை வருவது தானில்லை
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை
தாமத மில்லை தமரக தின்னொளி
யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே

அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூத படையவை யெல்லாங்
குவிந்தவை யோராண்டு கூட இருக்கில்
விரிந்தது பரகாய மேவலு மாமே
விரிந்த
பிராகாமியம்

ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
மூல விளக்கொளி முன்னே யுடையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடௌ தாநின்றே
ஈசத்துவம்

நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூத படையவை எல்லாங்
கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற்
பண்டையவ் வீசன் தத்துவ மாகுமே

ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன்
ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவ நாமே
தண்ணளி

தானே படைத்திட வல்லவ னாயிடு
தானே யளித்திட வல்லவ னாயிடு
தானே சங்கார தலைவனு மாயிடு
தானே யிவனெனு தன்மைய னாமே

தன்மைய தாக தழைத்த கலையினுள்
பன்மைய தாக பரந்தஐம் பூதத்தை
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்பொருள் காணுமே
வசித்துவம்

மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங்
கைப்பொரு ளா கலந்த உயிர்க்கெல்லா
தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே

தன்மைய தாக தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
பொன்மைய தாக புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே

நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டு
பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே

காமரு தத்துவ மானது வந்தபின்
பூமரு கந்தம் புவனம தாயிடும்
மாமரு வுன்னிடை மெய்த்திடு மானனாய்
நாமரு வுமஔ நாயக மானதே
வுன்னிடம் எய்திடு

நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாக தழைத்தங் கிருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டபின்
பேயக மாகிய பேரொளி காணுமே

பேரொளி யாகிய பெரியஅவ் வேட்டையும்
பாரொளி யாக பதைப்புற கண்டவன்
தாரொளி யாக தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே
வெட்டையும்

காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது அக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்நூற் றொருபத்து மூன்றையங்
காலது வேண்டி கொண்டஇவ் வாறே
பெண்மண்டி

ஆறது வாகும் அமிர தலையினுள்
ஆறது ஆயிர முந்நூற் றொடைஞ்சுள
ஆறது வாயிர மாகு மருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே

இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றா
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே

அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே

ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே

முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் ஐம்ப தொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே
ஐம்பதொ டொன்றுடன்

ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்நூற்று முப்பதொ டொன்பது
மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே

இருநிதி யாகிய எந்தை யிடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே

எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற் றிருப தொன்பா னதுநாலாய்
எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே

ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்
ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட
எட்டது கால்கொண் டிடவகை யொத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே
ஏற்றபின்

சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானு தலைப்படு தன்மையை
சந்தியி லேகண்டு தானாஞ் சகமுக
துந்தி சமாதி யுடையொளி யோகியே

அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்
வணங்குற்ற கல்விமா ஞான மிகுத்தல்
சுணங்குற்ற வாயர் சித்திதூரங் கேட்டல்
நுணங்கற் றிரோதல்கால் வேகத்து நுந்தலே
சிணண்குற்ற வாயர் சித்திதாண் கேட்டல்

மரணஞ் சரைவிடல் வண்பர காயம்
இரணஞ் சேர்பூமி இறந்தோர களித்தல்
அரணன் திருவுற வாதன்மூ வேழாங்
கரனுறு கேள்வி கணக்கறி தோனே
சிறைவிடல்
திருவுரு
கரணுறு

ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலை காண இனியவர்
நாதன் இருந்த நகரறி வாரே

மூல முதல்வேதா மாலரன் முன்னிற
கோலிய ஐம்முகன் கூற பரவிந்து
சால பரநாதம் விந்து தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே

ஆதார யோக ததிதே வொடுஞ்சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தமீ தானந்த யோகமே

மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடி
துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்கு
பதியது காட்டும் பரமன்நின் றானே

பொட்டெழ குத்தி பொறியெழ தண்டிட்டு
நட்டறி வார்க்கு நமனில்லை தானே
கட்டவல் லார்கள் கரந்தெங்கு தானாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
கலந்தெண்கு
நட்டிடு
கலை நிலை

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலை
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதருங்
காதல் வழிசெய்து காக்கலு மாமே

காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங்
காக்கலு மாகுங் கலைபதி நாறையுங்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங்
காக்கலு மாகுங் கருத்துற நில்லே

நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்து
கலைவழி நின்ற கலப்பை அறியில்
அலைவற வாகும் வழியிது வாமே
மலைவறி

புடையொன்றி நின்றிடும் பூத பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ்
சடையொன்றி நின்றஅ சங்கர நாதன்
விடையொன்றி லேறியே வீற்றிரு தானே

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற கால பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு வொளிப்பெற நிற்க
தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே

சாதக மானஅ தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாக புகலுற பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே

கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கி
படர்ந்தது தானே பங்கய மாக
தொடர்ந்தது தானேஅ சோதியுள் நின்றே

தனே எழுந்தஅ தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திட
தேனே பருகி சிவாலய மாகுமே

திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகில ராரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவை சேர்தலு மாமே

சோதனை தன்னில் துரிசறி காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியுநாள்
சாதன மாகுங் குருவை வழிபட்டு
மாதன மாக மதித்துக்கொள் ளீரே
சாதக மாகுண் குருவழி பட்டு

ஈராறு கால்கொண் டெழுந்த புரவியை
பேராமற் கட்டி பெரிதுண்ண வல்லீரேல்
நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே

ஓசையில் ஏழும் ஔயிங்கண் ஐந்தும்
நாசியில் மூன்றும் நாவில் இரண்டு
தேசியு தேசனு தன்னிற் பிரியுநாள்
மாசறு சோதி வகுத்துவை தானே
காயசித்தி உபாயம்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர தேனே

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினு குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று
உடம்பினை யானிரு தோம்புகின் றேனே

சுழற்றி கொடுக்கவே சுத்தி கழியுங்
கழற்றி மலத்தை கமலத்து பூரித்து
உழற்றி கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
அழற்றி தவிர்ந்துடல் அஞ்சன மாமே
சுழித்து

அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில்
வஞ்சக வாத மறுமத்தி யானத்திற்
செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும்
நஞ்சற சொன்னோம் நரைதிரை நாசமே

மூன்று மடக்குடை பாம்பிரண் டெட்டுள
வேன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றவிம் முட்டை யிரண்டையங் கட்டியிட்டு
ஊன்றி யிருக்க உடம்பழி யாதே
நான்றவிழ்

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபது மாறும் புகுவரே

சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான்
மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலா
தித்தித்த கூத்துஞ் சிவனும் வௌப்படுஞ்
சத்தியஞ் சொன்னோஞ் சதாநந்தி ஆணையே
வாக்கியண்
சொன்னேன்

திறத்திறம் விந்து திகழு மகார
முறப்பெற வேநினை தோதுஞ் சகார
மறிப்பது மந்திர மன்னிய நாத
மறப்பெற யோகி கறநெறி யாமே

உந்தி சுழியி னுடனேர் பிராணனை
சிந்தி தெழுப்பி சிவமந திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனை
சிந்தி தெழுப்ப சிவனவ நாமே
டனே

மாறா மலக்குத தன்மே லிருவிரற்
கூறா இலங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே

நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லி சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே

அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடு தேகிடில்
வண்டி சிக்கு மலர்க்குழல் மாதரார்
கண்டி சிக்குநற் காயமு மாமே

சுழலும் பெருங்கூற்று தொல்லைமுன் சீறி
அழலும் இரத்ததுள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளு தெற்றுளும் நிற்றலு மாமே

நான்கண்ட வன்னியும் நாலு கலையேழு
தான்கண்ட வாயு சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாக
மாங்கன்று நின்று வளர்க்கின்ற வாறே
வாயுவுன்ய் சரீர

ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையை
பாகு படுத்தி பல்கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திர தன்னால் ஒடுங்கே
நீர்க்கொள நெல்லின்
கால சக்கரம்

மதிவட்ட மாக வரையைந்து நாடி
இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற்
பதிவட்ட துள்நின்று பாலிக்கு மாறு
மதுவிட்டு போமாறு மாயலுற் றேனே

உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங்
கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்ற தறியா தழிகின்ற வாறே
அற்றறியா

அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங்
கழிகின்ற காலறு பத்திரண் டென்ப
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே

திருந்து தின தினத்தி நொடுநின்
றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்கறி தோங்கி
வருந்துத லின்றி மனைபுக லாமே

மனைபுகு வீரும் மகத்திடை நீராடி
எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறி தேறட்டு தற்குறி யாறு
வினையறி யாறு விளங்கிய நாலே

நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்து
பாலங் கடந்தது பத்து பதினைந்து
கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்
டாலங் கடந்ததொன் றாரறி வாரே

ஆறும் இருபது கையஞ்சு மூன்றுக்கு
தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை
கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு
வேறு பதியங்க ணாள்விதி தானே

விதித்த இருபத்தெ டொடுமூன் றறையாக
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தறி பத்தெட்டும் பாரா திகணால்
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே
பத்தெட்டு

முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்
இறையிறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரண மற்றொன்று மில்லை
பறையறை யாது பணிந்து முடியே

முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்
இட்ஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு
கடிந்தனன் மூள கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே

நண்ணு சிறுவிர னாணாக மூன்றுக்கும்
பின்னிய மார்பிடை பேராமல் ஒத்திடுஞ்
சென்னியின் மூன்றுக்குன்ய் சேரவே நின்றிடும்
உன்னி யுணர்ந்திடும் ஓவி தானே
நின்றிடில்
அணைந்திடும்

ஓவிய மான வுணர்வை அறிமின்கள்
பாவிக ளித்தின் பயனறி வாரில்லை
தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணி தண்டே

தண்டுடன் ஓடி தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்று மகிழ்ந்துடல் ஒத்திடுங்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரி பிணங்குகின் றாரே
மகிழ்ந்துடன்

பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குட னாதித்த னாறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனு காக சுழல்கின்ற வாறே

சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான்
தழலிடை புக்கிடு தன்னு ளிலாமற்
கழல்கண்ட போம்வழி காணவல் லார்க்கு
குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே

கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்
சாத்திர தன்னை தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திரு துள்ளே அனுபோக நோக்கிடில்
ஆத்தனு மாகி யலர்ந்திரு மொன்றே

ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடுஞ்
சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற்
குன்றிடை பொன்திகழ் கூத்தனு மாமே

கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே
ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிட
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்
சாத்திடு நூறு தலைப்பெய்ய லாமே

சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரங் கட்டுற காண்பர்கள்
சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்
மூத்துடன் கோடி யுகமது வாமே
கூடி

உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று
அகங்கோடி கண்டு ளயலற காண்பர்கள்
சிவங்கோடி விட்டு செறிய இருந்தங்
குகங்கோடி கண்டல் குயருறு வாரே
கண்டு ளயர்வற

உயருறு வாருல கத்தொடுங் கூடி
பயனுறு வார்பலர் தாமறி யாமற்
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமற்
கயலுறு கண்ணியை காணகி லாரே

காணகி லாதார் கழிந்தோடி போவர்கள்
நாணகி லாதார் நயம்பேசி விடுவர்கள்
காணகி லாதார் கழிந்த பொருளெலாங்
காணகி லாமற் கழிகின்ற வாறே

கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங்
கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்
கழியாத அப்பொருள் காணலு மாமே

கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளே
எண்ணு திசையுடன் ஏகாந்த னாயிடு
திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாநிற்கும்
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே
யாய்நிற்கும்

நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கட்கு கூறலு மாமே

கூறும் பொருளி தகார வுகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிட
கூறு மகாரங் குழல்வழி யோடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே

அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களு
கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலை காணில் அவனிவ வாகுமே

அவனிவ நாகும் பரிசறி வாரில்லை
அவனிவ நாகும் பரிசது கேள்நீ
அவனிவ நோசை ஔயினுள் ஒன்றிடும்
அவனிவன் வட்டம தாகிநின் றானே

வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்
ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திட
கட்டி இருப்பிடங் காணலு மாகுமே

காணலு மாகும் பிரமன் அரியென்று
காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனை
காணலு மாகுஞ் சதாசிவ சத்தியங்
காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே
ஆயுள் பரிட்சை

வைத்தகை சென்னியில் நேரிதா தோன்றிடில்
உத்தம மிக்கிடில் ஓராறு தங்களா
மத்த மிகுத்தி டிரட்டிய தாயிடில்
நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை யிறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை யுணர்ந்த உணர்விது வாமே
பிறந்தவர்

ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே உறைகின்ற நன்மை யளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடு
தாமே யுலகில் தலைவனு மாமே

தலைவ னிடம்வலஞ் சாதிப்பார் இல்லை
தலைவ னிடம்வல மாயிடில் தையல்
தலைவ னிடம்வல தன்வழி யஞ்சில்
தலைவ நிடம்வல தன்வழி நூறே

ஏறிய வாறினில் எண்பது சென்றிடு
தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்
ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையு
தேறியே நின்று தௌயிவ் வகையே

இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அவ்வகை ஐம்பதே யென்ன அறியலாஞ்
செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின்
முவ்வகை யாமது முப்பத்து மூன்றே
யையொன்பதே
யொன்பதே
யன்பதே

மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடிற்
எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்
பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே
எண்முன் றினாலும்

பார்க்கலு மாகும் பகல்மு பதுமாகில்
ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டு
போக்கலு மாகும் புகலற ஒன்றெனில்
தேக்கலு மாகு திருந்திய பத்தே

ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற்
பாயிரு நாலும் பகையற நின்றிடும்
தேய்வுற மூன்று திகழவே நின்றிடில்
ஆயுரு வாறென் றளக்கலு மாமே

அளக்கும் வகைநாலும் அவ்வழியே ஓடில்
விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகையைந்து தூய்நெறி ஓடில்
களக்க மறமூன்றிற் காணலு மாமே
ஓடிடில்

காணலு மாகுங் கருதிய பத்தோடிற்
காணலு மாகுங் கலந்த இரண்டையும்
காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற்
காணலு மாகுங் கருத்துற ஒன்றே
கலப்புற மூவைந்தேழ்

கருதும் இருபதிற் காண ஆறாகும்
கருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடனாறு காணிற்
கருதும் இரண்டென காட்டலு மாமே
ஈராறாகும்
ஐந்திற்

காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்
காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றென
காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்
காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே

ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்
வாரஞ்செய் கின்ற வகையாறஞ் சாமாகில்
ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்று நாளே
வகையான்ய் சமாதியில்

ஒன்றிய நாள்கள் ஒருமுப்ப தொன்றாகிற்
கன்றிய நாலுங் கருத்துற மூன்றாகுஞ்
சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்
மன்றியல் பாகு மனையில் இரண்டே

மனையிலஒன் றாகும் மாதமு மூன்றுஞ்
சுனையில்ஒன் றாக தொனித்தனன் நந்தி
வினையற வோங்கி வௌச்செய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே

ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரு மறியார் அறிவறி தேனே

அறிவது வாயுவொ டைந்தறி வாய
அறிவா வதுதான் உலகுயி ரத்தின்
பிறிவுசெய் யாவகை பேணியுள் நாடிற்
செறிவது நின்று திகழு மதுவே

அதுவரு ளும்மரு ளான துலகம்
பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளு
மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி
இதுவருள் செய்யும் இறையவ னாமே

பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோல குரம்பை
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார ககலு மதியே
வாரசரம்

வௌளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம்
ஔளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிட
தௌளிய தேய்பிறை தான்வல மாமே

வௌளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்று
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஔளிய காயத்து கூன மிலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரை தானே

செவ்வாய் வியாழஞ் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்து புரியவி
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே

மாறி வருமிரு பான்மதி வெய்யவன்
ஏறி இழியு இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிர
தேறி அறிமின் தெரிந்து தௌந்தே

உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்
உதித்தது வேமிக வோடிடு மாகில்
உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே
அதிற்கஞ்சி
அதிற்றுஞ்சி

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே

ஆயும் பொருளும் அணிமலர் மேலது
வாயு விதமும் பதினா றுளவலி
போய மனத்தை பொருகின்ற வாதாரம்
ஆயவு நாளு முகுர்த்தமு மாமே
முகுத்தமு
வாரசூலம்

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழ கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வௌளி குடக்காக நிற்குமே

தெக்கண மாகும் வியாழத்து சேர்த்திசை
அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே
கேசரி யோகம்

கட்ட கழன்று கீழ்நான்று வீழாமல்
அட்டத்தை கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தை பூட்டி மேற்பையை தாட்கோத்து
நட்ட மிருக்க நமனில்லை தானே

வண்ணான் ஒலிக்குஞ் சதுர பலகைமேற்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
விண்ணாறு பாய்ச்சி குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே
விண்ணாற்றை தேக்கி
நிரப்பிட்டு

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி
துதிக்கையால் உண்பார்க்கு சோரவும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்க்க
கிறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே

ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமதா
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே

நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரு முப்பத்து மூவரு தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி யூனே

ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வானூறல் பாயும் வகையறி வாரில்லை
வானூறல் பாயும் வகையறி வாளர்க்கு
தேனூறல் உண்டு தௌயலு மாமே

மேலையண் ணவில் விரைந்திரு காலிடிற்
காலனும் இல்லை கதவு திறந்திடும்
ந்யாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவான் பராநந்தி ஆணையே

நந்தி முதலாக நாமேலே யேறிட்டு
சந்தி திருக்கில் தரணி முழுதாளும்
பந்தி திருக்கும் பகலோன் வௌயாக
சிந்தி திருப்பவர் தீவினை யாளரே

தீவினை யாட திகைத்தங் கிருந்தவர்
நாவினை நாடின் நமனு கிடமில்லை
பாவினை நாடி பயனற கண்டவர்
தேவினை யாடிய தீங்கரும் பாமே

தங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர்
ஆங்கரும் பாக அடையநா வேறிட்டு
கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட
ஊங்கரும் பாகியே ஊனீர் வருமே

ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டு
தேனீர் பருகி சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே

வாய்ந்தறி துள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வா கருணை பொழிந்திடும்
பாய்ந்தறி துள்ளே படிக்கத வொன்றிட்டு
கூய்ந்தறி துள்ளுறை கோயிலு மாமே
கோய்ந்தறி

கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளு
தீயினு தீயர தீவினை யாளர்க்கே

தீவினை யாளர்த்தஞ் சென்னியி லுள்ளவன்
பூவினை யாளர்த்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்த்தம் பாகவ துள்ளவன்
மாவினை யாளர்த்தம் மதியிலுள் ளானே

மதியி நெழுங்கதிர் போல பதினாறா
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலா
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே
\ற்றைம்பதோ டொன்றா கதிமன வுள்ளே

இருந்தனள் சத்தியு மக்கலை சூழ
இருந்தனள் கன்னியு மந்நடு வாக
இருந்தனள் மானேர் முகநில வார
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே

பொழிந்த இருவௌளி பொன்மண் ணடையில்
வழிந்துள் ளிருந்தது வான்முத லங்கு
கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்கு
கொழுந்தது வாகுண் குணமது தனே

குணமது வாகிய கோமள வல்லி
மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்
தனமது வாகிய தத்துவ ஞானம்
இனமது வாக இருந்தனன் தானே

இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
பரிந்தஇ தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅ பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே

மண்டல துள்ளே மனவொட்டி யாணத்தை
கண்டக தங்கே கருதியே கீழ்க்கட்டி
பண்டக துள்ளே பகலே ஔயா
குண்டல காதனுங் கூத்தொழி தானே

ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங்
கழிகின்ற வாயுவுங் காக்கலு மாகும்
வழிகின்ற காலத்து வட்ட கழலை
பழிக்கின்ற காலத்து பையகற் றீரே

பையினி நுள்ளே படிக்கத வொன்றிடின்
மெய்யினி நூளே விளங்கும் ஔயதாங்
கையினுள் வாயு கதித்தங் கெழுந்திடின்
மையணி கோயில் மணிவிள காமே

விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி
நலங்கிடுங் கண்டத்து நாபியி நுள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்த்திட கும்பி
சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே
நலண்கிடுண் காமத்து நாடியி ள்ளே

சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்
சொல்லலு மாகு மண்ணீர கடினமுஞ்
சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற்
சொல்லலு மாந்தூர தெரிசன தானே

தூர தெரிசனஞ் சொல்லுவன் காணலாங்
காராருங் கண்ணி கடைன்யான முட்பெய்தி
ஏராரு தீப தெழிற்சிந்தை வைத்திடிற்
பாரா ருலகம் பகன்முன்ன தாமே

முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே
பன்னெழு வேத பகலொளி யுண்டென்னும்
நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திட
தன்னெழு கோயில் தலைவனு மாமே
பரியண்க யோகம்
பரியண்கி யோகம்

பூசு வனவெல்லாம் பூசி புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்தி
கா குழலி கலவி யொடுங்கல
தூசி துளையுற தூங்காது போகமே
தூச துணையற
யோகமே
போதமே
மோகமே

போகத்தை யுன்னவே போகாது வாயுவு
மோகத்தை வௌளியு மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலை யாளுநற் சூதனு
தாதிற் குழைந்து தலைகண்ட வாறே

கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மாண்டலங் கொண்டிரு பாலும் வௌநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிட
தண்டொரு காலு தளராது அங்கமே

அங்க புணர்ச்சியு மாகின்ற தத்துவ
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்து
பங்க படாமற் பரிகரி துத்தம்மை
தங்கி கொடுக்க தலைவனு மாமே

தலைவனு மாயிடு தன்வழி ஞான
தலைவனு மாயிடு தன்வழி போக
தலைவனு மாயிடு தன்வழி யுள்ளே
தலைவனு மாயிடு தன்வழி அஞ்சே

அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவ தொன்ற துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே
கடிகையில் ஆறாண் கடிகைமேற்

பரியங்க யோகத்து பஞ்ச கடிகை
அரியஇவ் வியோகம் அடைந்தவர கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தன கொங்கை
உருவி தழுவ ஒருவற்கொண் ணாதே

ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில்
விண்ணந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினை பஞ்ச கடிகையில்
எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்தே

ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்
வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கு மானந்தம்
வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திட
சோர்ந்தன சித்தமுன்ய் சோர்வில்லை வௌளிக்கே

வௌளி யுருகி பொன்வழி ஓடாமே
கள்ளத்த டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறி குழல்வழி யேசென்று
வள்ளியுண் ணாவில் அடக்கிவை தாரே

வைத்த இருவரு தம்மின் மகிழ்ந்துடன்
சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
வித்தக நாய்நிற்கும் வெங்கதி ரோனே

வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்ற
நங்கையை புல்லிய நம்பிக்கோ ரானந்த
தங்களிற் பொன்னிடை வௌளிதா ழாமுன
தங்களிற் செவ்வாய் புதைத்திரு தாரே
புதனிரு தானே

திருத்தி புதனை திருத்தல்செய் வார்க்கு
கருத்தழ காலே கலந்தங் கிருக்கில்
வருத்தமு மில்லையா மங்கை பங்கற்கு
துருத்தியுள் வௌளியஞ் சோரா தெழுமே

எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்றிட்டால்
மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே
உழுகின்ற தில்லை ஔயை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வௌயறி வார்க்கே

வௌயை அறிந்து வௌயி னடுவே
ஔயை அறியி நுளிமுறி யாமே
தௌவை அறிந்து செழுநந்தி யாலே
வௌயை அறிந்தனன் மேலறி யேனே
உளியை

மேலா தலத்தில் விரிந்தவ ராரெனின்
மாலா திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலா நிலத்தி நடுவான வப்பொருள்
மேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே

மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்து
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னை தலைப்பெய்ய வல்லாரேன்
மண்ணிடை பல்லூழி வாழலு மாமே
வல்லீரே

வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளரும்
ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே

உதமறி தங்கே ஒருசுழி பட்டாற்
கதமறி தங்கே கபாலங் கறுக்கும்
இதமறி தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறி தும்முளே பார்க்கடி தாளே

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஔயது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே
ஒன்றில்லை
அமுரிதாரணை

உடலிற் கிடந்த வுறுதி குடிநீர
கடலிற் சிறுகிணற் றேற்றமி டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்று கிறைக்கில்
நடலை படாதுயிர் நாடலு மாமே

தௌதரும் இந்த சிவநீர் பருகில்
ஔதரு மோராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங்
களிதருங் காயங் கனகம தாமே

நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனை தௌயுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே

கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறு நமனுமங் கில்லையே

அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇ நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளுங் கபாலமே
இளகிடு

வீர மருந்தென்றும் விண்ணோர்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே
சந்திர யோகம்

எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியே
எய்துவ தூலம் இருவகை பக்கத்துள்
எய்துங் கலைபோல ஏறி இறங்குமா
துய்யது சூக்கத்து தூலத்த காயமே
மதிநிலை

ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈரெட்டா டாறிரண் டீரைந்துள்
ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே

ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலங்கினார் ஞாலங் கவர்க்கொள
பேறாங் கலைமுற்றும் பெருங்கால் ஈரெட்டு
மாறா கதிர்க்கொள்ளு மற்றங்கி கூடவே

பத்தும் இரண்டும் பகலோன் உயர்க்கலை
பத்தினொ டாறும் உயர்க்கலை பான்மதி
ஒத்தநல் அங்கிய தெட்டெ டுயர்க்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே

எட்டெ டனிலின் கலையாகும் ஈராறு
சுட்ட படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை
கட்ட படுமீ ரெட்டா மதிக்கலை
ஒட்ட படாஇவை ஒன்றோடொன் றாவே

எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டு தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையென
கட்ட படுந்தார கைகதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே
ஈரெட்டு

எல்லா கலையும் இடைபிங் கலைநடு
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ்
செல்லா எழுப்பி சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணிநிற் போரே

அங்கியிற் சின்ன கதிரிரண் டாட்டத்து
தங்கிய தாரகை யாகுஞ் சசிபானு
வங்கிய தாரகை யாகும் பரையொளி
தங்கு நவசக்ர மாகு தரணிக்கே

தரணி சலங்கனல் கால்தக்க வானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே

தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்து
தாரகை மின்னா சசிவளர் பக்கத்து
தாரகை பூவிற் சகலத்தி யோனிகள்
தாரகை தாரகை தானான்ய் சொரூபமே

முற்பதி னைஞ்சின் முளைத்து பெருத்திடும்
பிற்பதி னைஞ்சிற் பெருத்து சிறுத்திடும்
அப்பதி னைஞ்சும் அறியவல் லார்க்கட்கு
செப்பரி யாங்கழல் சேர்தலு மாமே

அங்கி எழுப்பி யருங்கதிர் ஊட்டத்து
தங்குஞ் சசியால் தாமம்ஐ தைந்தாகி
பொங்கிய தாரகை யாம்புலன் போக்கற
திங்கள் கதிரங்கி சேர்க்கின்ற யோகமே

ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள்
கன்றிய காலன் கருத்துழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே
கருக்குழி
கழுக்குறி

அங்கி மதிகூட வாகும் கதிரொளி
அங்கி கதிர்க்கூட வாகு மதியொளி
அங்கி சசிகதிர் கூடவ தாரகை
தங்கி யதுவே சகலமு மாமே
சிவத்தினிற்

ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை
பேராமற் புக்கு பிடித்து கொடுவந்து
நேராக தோன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே

காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் காலை வலத்திட்டு
பேணியே யிவ்வாறு பிழையாமற் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிர தாண்டே

பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங்
காலைக்கு சங்கு கதிரவன் தானே
பரையோசை

கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவ னண்ட புறஞ்சென் றடர்ப்ப
எதிரவ நீச நிடமது தானே

உந்தி கமல துதித்தெழுஞ் சோதியை
அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்
அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிற தானே
அந்தித்த வண்ணம் அறிவா லறிந்திலர்
அந்தித்த வண்ணம் அறிவா லறிந்தபின்
மகனிரு தானே

ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல்
வேதியன் அங்கே வௌப்படு தானே

பாம்பு மதியை தினலுறும் பாம்பினை
தங்கு கதிரையஞ் சோதி தனலுறும்
பாம்பு மதியும் பகைதீர துடங்கொளீஇ
நீண்கல் கொடானே நெடுந்தகை யானே
தினலுறு மப்பாம்பு
சேர தினலுறும்
துடங்கொளின்
கொடானெம்

அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றி
பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று
நயந்தரு பூரணை உள்ள நடத்தி
வியந்தரு பூரணை மேவுன்ய் சசியே

சசியுதி குமஅள வுந்துயி இன்றி
சசியுதி தானேல் தனதூண் அருந்தி
சசிசரி கின்றள வுந்துயி லாமற்
சசிசரி பிங்கட்டன் கண்டுயில் கொண்டதே
பிங்க டன்றுயில்

ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பர்க்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழவல் லார்க்இ சசிவன்ன ராமே
இன் வழிச்சைவ ராமே

தண்மதி பானு சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண்மதி வீழ்வள விற்கண மின்றே

வளர்க்கின்ற ஆதித்தன் தங்கலை யாறு
தளர்க்கின்ற சந்திரன் தங்கலை யாறு
மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே
மலர்ந்தேறு பன்னிரண்டோ டெட்டு நாலாம்

ஆமுயிர தேய்மதி நாளே யெனல்விந்து
போம்வழி எங்கணும் போகாது யோகிக்கு
காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில்
ஓமதி யத்துள்வி டுரையுணர் வாலே

வேறுற செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ்
சூறுற நாங்கு தொடர்ந்துற வேநிற்கும்
ஈறிலி நங்கலை யீரைந்தொ டேமதி
தாறு கலையுள் அகலுவா வாமே

உணர்விந்து சோணி உறவினன் வீசும்
புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில்
உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே

விடாத மனம்பவ நத்தொடு மேவி
நடாவு சிவசங்கின் நாதங் கொளுவி
கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே

அமுத புனல்வரு மாற்றங் கரைமேற்
குமிழி குட்சுட ரைந்தையுங் கூட்டி
சமையத்தண் டோ ட்டி தரிக்கவல் லார்க்கு
நமன்இகில்லை நற்கலை நாளனஇல்லை தானே

உண்ணீ ரமுத முறுமூ றலைத்திற
தெண்ணீர் இணையடி தாமரை கேசெல
தெண்ணீர சமாதி யமர்ந்துதீ ராநலங்
கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே

மாறு மதியும் மதித்திரு மாறின்றி
தாறு படாமல் தண்டோ டே தலைப்படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்
பாறு படாஇன்பம் பார்மிசை பொங்குமே
மதியுமா தித்தனு மாறின்றி
ஆதித்தனு
மதித்திடு


திருமந்திரம்
நான்காம் தந்திரம்
சித்த ஆகமம்
அசபை

போற்றுகின் றேன்புகழ தும்புகல் ஞானத்தை
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே

ஓரெழு தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழு தாலே இசைந்துஅங்கு இருவராய்
மூவெழு தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழு தாலே மயக்கமே உற்றதே

தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்று
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்று
தேவர் உறைகின்ற திருஅம் பலமென்று
தேவர் உறைகின்ற தென்பொது வாமே

ஆமே பொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத்து அனவர தாண்டவம்
ஆமே பிரளயம் ஆகும்அ தாண்டவம்
ஆமேசங் காரத்து அருந்தாண் டவங்களே

தாண்டவ மான தனியெழுத்து ஓரெழுத்து
தாண்டவ மானது அனுக்கிரக தொழில்
தாண்டவ கூத்துததனிநின்ற தற்பரம்
தாண்டவ கூத்து தமனி தானே

தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவ கூத்துக்கு
தானே தனக்கு தராதலம்

தராதல மூலைக்கு தற்பர மாபரன்
தராதலம் வெப்பு நமசி வா
தராதலம் சொல்லில் தான்வா சியவாகும்
தராதல யோகம் தயாவாசி யாமே

ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா இடம்என்ப
ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்த மாமே

ஆனந்த மூன்றும் அறிவுஇரண்டு ஒன்றாகும்
ஆனந்தம் சிவாய அறிவார் பலரில்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்கட்டு
ஆனந்த கூத்தாய் அகப்படும் தானே

படுவது இரண்டும் பலகலை வல்லார்
படுவது ஓங்காரம் பஞ்சா கரங்கள்
படுவது சங்கார தாண்டவ பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே

வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்டுறை புன்னையும்
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள்
வாறே பொதுவாகும் மன்றின் அமலமே

அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
அமலம் திரோதாயி யாகுமா னந்தமாம்
அமலம் சொல் ஆணவம் மாயை காமியம்
அமலம் திருக்கூத்து ஆமிடம் தானே

தானே தனக்கு தலைவனு மாய்நிற்கும்
தானே தனக்கு தன்மலை யாய்நிற்கும்
தானே தனக்கு தன்மய மாய்நிற்கும்
தானே தனக்கு தலைவனும் ஆமே

தலைவனு மாய்நின்ற தற்பர கூத்தனை
தலைவனு மாய்நின்ற சற்பா திரத்தை
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞான
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே

இணையார் திருவடி எட்டெழு தாகும்
இணையார் கழலிணை ஈர்ஐஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்ப தொன்றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே

ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழா யிரத்தும் ஏழுகோடி தானாகி
ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே

இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணம் தானே

தானே தனக்கு தகுநட்டம் தானாகும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே ரீங்கார தத்துவ கூத்துக்கு
தானே உலகில் தனிநட

நடம்இரண்டு ஒன்றே நளினம தாகும்
நடம்இரண்டு ஒன்றே நமன்செய்யும் கூத்துலயம்
நடம்இரண்டு ஒன்றே நகைசெயா மந்திரம்
நடம்சிவ லிங்கம் நலஞ்செம்பு பொன்னே

செம்பொன் ஆகும் சிவாய நமஎன்னில்
செம்பொன் ஆக திரண்டது சிற்பரம்
செம்பொன் ஆகும் ஸ்ரீயும் கிரீயுமென
செம்பொன் ஆன திருஅம் பலமே

திருஅம் பலமாக சீர்ச்ச கரத்தை
திருஅம் பலமாக ஈராறு கீறி
திருஅம் பலமாக இருபத்தைஞ் சாக்கி
திருஅம் பலமாக செபிக்கின்ற வாறே

வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்து காணலாம்
வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே

பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும்
பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற்
பொன்னாகும் வல்லோர்க்கு உடம்பு பொற் பாதமே

பொற்பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும்
பொற்பாதத்து ஆணையே செம்புபொன் ஆயிடும்
பொற்பாதம் காண திருமேனி ஆயிடும்
பொற்பாத நன்னடம் சிந்தனை சொல்லுமே

சொல்லும் ஒருகூட்டில் புக்கு சுகிக்கலாம்
நல்ல மடவார் நயத்துட னேவரும்
சொல்லினும் பா சுடர்ப்பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே

சூக்குமம் எண்ணா யிரஞ்செபி தாலும்மேல்
சூக்கும மான வழியிடை காணலாம்
சூக்கும மான வினையை கெடுக்கலாம்
சூக்கும மான சிவனதுஆ னந்தமே

ஆனந்தம் ஒன்றென்று
ஆனந்தம் ஆஈஊஏஓம் என்று
ஆனந்தம் அஞ்சுமது
ஆனந்தம் அம்ஹ்ரீம்அம் க்ஷம்

மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ள
மேனி இரண்டும் மிகார விகாரியாம்
மேனி இரண்டும் ஊஆஈஏஓ என்று
மேனி இரண்டும் ஈஓஊஆஏ கூத்தாமே

கூத்தே சிவாய நமமசி வாயிடும்
கூத்தே ஈஊஆஏஓம் சிவாய நம வாயிடும்
கூத்தே ஈஊஆஏஓம் சிவயநம வாயிடும்
கூத்தே இஊஆஏஓம் நமசிவாய கோளொன்று மாறே

ஒன்றிரண்டு ஆடவோர் ஒன்றும் உடனாட
ஒன்றிரண்டு மூன்றாட ஓரேழும் ஒத்தாட
ஒன்றினில் ஆடவோர் ஒன்பதும் உடனாட
மன்றினில் ஆடனான் மாணி கூத்தே

திருஅம்பல சக்கரம்

இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை
இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று
இருந்த மனையொன்றில் எய்துவன் தானே

தான்ஒன்றி வாழிடம் தன்எழு தேயாகும்
தான்ஒன்றும் அந்நான்கும் தன்பே ரெழுத்தாகும்
தான்ஒன்று நாற்கோணம் தன்ஐ தெழுத்தாகும்
தான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே

அரகர என்ன அரியதொன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப்பு அன்றே

எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிட
பட்டது மந்திரம் பான்மொழி யாலே

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவில் லாருயிர் காக்கவல் லாரே

ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தஇ தூலம்போய்
ஆலய மாக அறிகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்திரு தானே

இருந்த இவ்வட்டம் இருமூன்றுஇ ரேகை
இருந்த அதனுள் இரேகை ஐந்தாக
இருந்த அறைகள் இருபத்துஐஞ் சாக
இருந்த அறையொன்றில் எய்தும் அகாரமே

மகார நடுவே வளைத்திடும் சத்தியை
ஓகாரம் வளைத்திட்டு உம்பிளந்து ஏற்றி
அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்
நகார வகாரநற் காலது நாடுமே

நாடும் பிரணவம் நடுஇரு பக்கமும்
ஆடும் அவர்வாய் அமர்ந்தங்கு நின்றது
நாடும் நடுவண் முகம்நம சிவாய
ஆடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே

ஆயும் சிவாய நமமசி வாயந
ஆயும் நமசிவா யயநம சிவா
வாயுமே வாய நமசியெனும் மந்திரம்
ஆயும் சிகாரம் தொட்டந தடைவிலே

அடைவினில் ஐம்பதும் ஐஐந்து அறையின்
அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே

அமர்ந்த அரகர வாம்புற வட்டம்
அமர்ந்த அரிகரி யாம் அதனுள் வட்டம்
அமர்ந்த அசபை யாம் அதனுள்வட்டம்
அமர்ந்தஇ ரேகையும் ஆகின்ற சூலமே

சூல தலையினில் தோற்றிடும் சத்தியும்
சூல தலையினில் சூழும்ஓங் காரத்தால்
சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து
ஆல பதிக்கும் அடைவதும் ஆமே

அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகாரம் ஓகாரமது ஐந்தாம்
அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம்
பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே

பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின்
நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே

இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின்
செயலும் அறி தெளிவிக்கு நாதன்
புயலும் புனலும் பொருந்துஅங்கி மண்விண்
முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே

ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும்
ஏறிட்டு அதன்மேல் விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாய நமவென்ன
கூறிட்டு மும்மலம் கூப்பிட்டு போமே

அண்ணல் இருப்பது அவள்அ கரத்துளே
பெண்ணின்நல் லாளும் பிரான கரத்துளே
எண்ணி இருவர் இசைந்துஅங்கு இருந்திட
புண்ணிய வாளர் பொருளறி வார்களே

அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டு பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுற கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே

அவ்வுண்டு சவ்வு



யீ டீயீ டுயீ டியீசூ டீயீசூ டியீ க்ஷ்
யு யுசூ யுதீஆசுவ்வுண்டு நிற்கும் கருத்தறி வார்இல்லை
கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வாளர்க்கு
சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே

அஞ்செழு தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழு தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழு தாகிய வக்கர சக்கரம்
அஞ்செழு துள்ளே அமர்ந்திரு தானே

கூத்தனை காணுங் குறிபல பேசிடில்
கூத்தன் எழுத்தின் முதலெழுத்து ஓதினார்
கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனை காணும் குறியது வாமே

அத்திசை குள்நின்ற அனலை எழுப்பிய
அத்திசை குள்நின்ற நவ்எழுத்து ஓதினால்
அத்திசை குள்நின்ற அந்த மறையனை
அத்திசை குள்ளுற வாக்கினன் தானே

தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேலுற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதிட
தானே அளித்ததோர் கல்லொளி யாகுமே

கல்லொளி யேயென நின்ற வடதிசை
கல்லொளி யேயென நின்ற னன் இந்திரன்
கல்லொளி யேயென நின்ற சிகாரத்தை
கல்லொளி யேயென காட்டிநின் றானே

தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்
தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவன் ஆமே

மறைய வனாக மதித்த பிறவி
மறையவ னாக மதித்தி காண்பர்
மறையவன் அஞ்செழுத்து உள்நிற்க பெற்ற
மறையவன் அஞ்செழுத்து தாம்அது வாகுமே

ஆகின்ற பாதமும் அந்நாவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்
ஆகின்ற சீயுரு தோள்வவ்வா கண்டபின்
ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே

அவ்வியல் பாய இருமூன்று எழுத்தையும்
செவ்வியல் பாக சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடில்
பவ்வியல் பாக பரந்துநின் றானே

பரந்தது மந்திரம் பல்லுயிர கெல்லாம்
வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கி
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓமென்று எழுப்பே

ஓமென்று எழுப்பிதன் உத்தம நந்தியை
நாமென்று எழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென்று எழுப்பிஅவ் வாறுஅறி வார்கள்
மாமன்று கண்டு மகிழ்ந்திரு தாரே

ஆகின்ற சக்கர துள்ளே எழுத்துஐந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வார்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத்து ஓரெழுத்து உள்நிற்க
யாகொன்றி நிற்கும் பராபரன் தானே

பரமாய அஞ்செழுத்து உள்நடு வாக
பரமாய நவசிவ பார்க்கில் மவயரசி
பரமாய சியநம வாம்பரத்து ஓதில்
பரமாய வாசி மயநமாய் நின்றே

நின்ற எழுத்துகள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துகள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துகள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே

நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வாய்நின்ற மாயநன் னாடனை
கன்றது வா கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே

கொண்டஇ சக்கர துள்ளே குணம்பல
கொண்டஇ சக்கர துள்ளே குறிஐந்து
கொண்டஇ சக்கரங் கூத்தன் எழுத்துஐந்தும்
கொண்டஇ சக்கர துள்நின்ற கூத்தே

வெளியில் இரேகை இரேகையி லத்தலை
சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி
நெளிதரும் கால்கொம்பு நோவிந்து நாதம்
தெளியும் பிரகாரம் சிவ திரமே

அகார உகார சிகார நடுவாய்
வகாரமோடு ஆறும் வளியுடன் கூடி
சிகார முடனே சிவன்சிந்தை செய்ய
ஓகார முதல்வன் உவந்துநின் றானே

அற்ற இடத்தே அகாரமது ஆவது
உற்ற இடத்தே உறுபொருள் கண்டிட
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்த பொன்போலும் குளிகையே

அவ்வென்ற போதினில் உவ்வெழு தாலித்தால்
உவ்வென்ற முத்தி உருகி கலந்திடும்
மவ்வென்று என்னுள்ளே வழிப்பட்ட நந்தியை
எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே

நீரில் எழுத்துஇவ் வுலகர் அறிவது
வானில் எழுத்தொன்று கண்டறிவார் இல்லை
யாரிவ் வெழுத்தை அறிவார் அவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே

காலை நடுவுற காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலம் நடுவுற முத்தித தானே

நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியவொண் ணாத\து
தேவியும் தானும் திகழ்ந்திரு தானே

அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே

மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியின் உள்ளே உதயம்பண் ணாநிற்குஞ்
சந்திசெய் யாநிற்பர் தாமது அறிகிலர்
அந்தி தொழுதுபோய் ஆர்த்துஅகன் றார்களே

சேவிக்கு மந்திரம் செல்லும் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவிக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே

அருவினில் அம்பரம் அங்கெழு நாதம்
பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி யகார சிகார நடுவாய்
உருவிட ஊறும் உறு திரமே

விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடி
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
அந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாமே

ஆறெழுத்து ஓதும் அறிவார் அறிகிலர்
ஆறெழுத்து ஒன்றாக ஓதி உணரார்கள்
வேறெழுத்து இன்றி விளம்பவல் லார்கட்கு
ஓரெழுத்தாலே உயிர்பெற லாமே

ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே

விந்துவி லும்சுழி நாதம் எழுந்திட
பந தலைவி பதினாறு கலையதாம்
சுந்தர வாகரங் கால்உடம்பு ஆயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே

ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்
ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழு தாமே

அஞ்செழு தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழு தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழு தால்இவ் அகலிடம் தாங்கினன்
அஞ்செழு தாலே அமர்ந்து நின்றானே

வீழ்ந்தெழு லாம்விகிர் தன்திரு நாமத்தை
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்கு
சார்ந்த வினைத்துயர் போக தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே

உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்
விண்ணின்று அமரர் விரும்பி அடிதொழ
எண்ணின்று எழுத்துஅஞ்சும் ஆகிநின் றானே

ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும்
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெ பாலனும் ஆமே

வேரெழ தாய்விண்ணாய் அப்புறமாய் நிற்கும்
நீரெழு தாய்நில தாங்கியும் அங்குளன்
சீரெழு தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்து
ஓரெழுத்து ஈசனும் ஓண்சுட ராமே

நாலாம் எழுத்துஓசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கியது
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்டு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே

இயைந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயந்தனை யோரும் பதமது பற்றும்
பெயர்ந்தனன் மற்றும் பிதற்றுஅறு தேனே

ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினை
ஓமத்தி லேயுதம் பண்ணும் ஒருத்திதன்
நாம நமசிவ என்றிரு பாருக்கு
நே தலைவி நிலவிநின் றாளே

பட்ட பரிசே பரமஞ் செழுத்ததின்
இட்டம் அறிந்திட்டு இரவு பகல்வர
நட்டமது ஆடும் நடுவே நிலையங்கொண்டு
அட்டதே சப்பொருள் ஆகிநின் றாளே

அகாரம் உயிரே உகாரம் பரமே
மகார மலமாய் வருமு பதத்தில்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்
யகாரம் உயிரென்று அறையலும் ஆமே

நகார மகார சிகார நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஓகார முதற்கொண்டு ஒருக்கால் உரைக்க
மகார முதல்வன் மனத்தக தானே

அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூட தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி ஆதி அகம்புக லாமே

ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற்றி மகராதி
நந்தியை மூலத்தே நாடி பரையொடும்
சந்திசெய் வார்க்கு சடங்கில்லை தானே

மருவும் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த போகமும் ஞானமும் ஆகும்
தெருள்வந்த சீவனார் சென்றுஇவற் றாலே
அருள்தங்கி அச்சிவமம் ஆவது வீடே

அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்
நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே

சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓத
சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்
சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்திரு தாரே

சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுற நாடி
ஓகார முடனே ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்துநின் றானே

நம்முதல் ஓர்ஐந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்கு
தம்முதல் ஆகும் சதாசிவ தானே

நவமும் சிவமும் உயிர்பர மாகும்
தவமொன்று இலாதன தத்துவம் ஆகும்
சிவம்ஒன்றி ஆய்பவர்ஆதர வால்அ
சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே

கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குஉறவு ஆவார்கள்
தேடி அதனை தெளிந்தறி யீரே

எட்டும் இரண்டும் இனிதுஅறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கென
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே

எட்டு வரையின்மேல்
இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேயறை நாற்பத்தெ டும்இட்டு
சிட்டஞ் செழுத்தும் செபிசீ கிரமே

தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆனஇம் மூவரோடு ஆற்றவர் ஆதிகள்
ஏனை பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் செய்சிவ சக்கர தானே

பட்டனம் மாதவம் ஆறும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே

சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றொடுஒன்று ஆன
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்க
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே

வித்தாம் செகமய மாக வரைகீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்
உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலைதொரும்
பத்தாம் பிரம சடங்குபார்த்து ஓதிடே

கண்டெடு தேன்கம லம்மலர் உள்ளிடை
கொண்டெழு தேன்உடன் கூடிய காலத்து
பண்டழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமவென வாமே

புண்ணிய வானவர் பூமழை தூவிநின்று
எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தை
கண்ணென உன்னி கலந்துநின் றாரே

ஆறெழுத்தாவது ஆறு மந்திரங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவி திரியில் தலையெழுத்து ஒன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே
சமயங்கள்

எட்டினில் எட்டறை யிட்டு அறையிலே
கூட்டிய ஒன்றெட்டா காண நிறையிட்டு
சுட்டி இவற்றை பிரணவம் சூழ்ந்திட்டு
மட்டும் உயிர்கட்டு உமாபதி யானுண்டே

நம்முதல் அவ்வொடு நாவினர் ஆகியே
அம்முதல் ஆகிய எட்டிடை யுற்றிட்டு
உம்முதல் ஆகவே உணர்பவர் உச்சிமேல்
உம்முதல் ஆயவன் உற்றுநின் றானே
தம்பனம்
நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகம்
துன்று மெழுகையு



யீ டீயீ டுயீ டியீசூ டீயீசூ டியீ க்ஷ்
யு யுசூ யுதீஆதன்ற வெதுப்பிட தம்பனங் காணுமே
மோகனம்
கரண இரளி பலகை யமன்திசை
மரணம் இட்டு எட்டின் மகார எழுத்திட்டு
வரணமில் ஐங்காயம் பூசி அடுப்பிடை
முரணிற் புதைத்திட மோகன மாகுமே
உச்சாடனம்
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாச பலகையில்
காங்கரு மேட்டில் கடுப்பூசி விந்துவிட்டு
ஓங்காமல் வைத்திடும் உச்சாட னத்துக்கே
மாரணம்
உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச்சோலை யில் பஞ்ச காயத்தை பாரித்து
முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட
அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே

ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி
ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்கு
ஏய்ந்தவைத்து எண்பதி னாயிரம் வேண்டிலே
ஆகர்ஷணம்
எண்ணா கருடனை ஏட்டில் உகாரமிட்டு
எண்ணா பொனனாளி எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி
எண்ணா எழுத்தோடுஎண்ணாயிரம் வேண்டிலே

அருச்சனை

அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுனனை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே

சாங்கம தாகவே சந்தொடு சந்தனம்
தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்
பாங்கு படப்பனி நீரால் குழைத்துவைத்து
ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே

அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும்
துன்பம் அகற்றி தொழுவோர் நினையுங்கால்
இன்புட னேவந்து எய்திடும் முத்தியே

எய்தி வழிப்படில் எய்தா தனஇல்லை
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமுன்
எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே

நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்
மண்ணிய நைவே தியம்அனு சந்தான
நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபமென்னும்
மன்னும் மனம்பவ னத்தோடு வைகுமே

வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோ ர்
வேண்டார்கள் கன்மம் அதில்இச்சை அற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே

அறிவரு ஞானத்து எவரும் அறியார்
பொறிவழி தேடி புலம்புகின்றார்கள்
நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்
எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே

இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம்
மருளறி யாமையும் மன்னும் அறிவு
மருளிவை விட்டெறி யாமை மயங்கும்
மருளும் சிதைத்தோர் அவர்களாம் அன்றே

தான்அவ னாக அவனேதான் ஆயிட
ஆன இரண்டில் அறிவன் சிவமாக
போனவன் அன்பிது நாலாம் மரபுற
தான்அவன் ஆகும்ஓ ராசித்த தேவரே

ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள்கண்டத்து ஆயிடும்
பாங்கார் நகாரம் பயில்நெற்றி உற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே

நமவது ஆசனம் ஆன பசுவே
சிவமது சித்தி சிவமாம் பதியே
நமவற ஆதி நாடுவது அன்றாம்
சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே

தெளிவரு நாளில் சிவஅமுது ஊறும்
ஒளிவரு நாளில் ஓர்ஏட்டில் உகளும்
ஒளிவரும் அப்பதத்து ஓர் இரண்டு ஆகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே

நவகுண்டம்

நவகுண்டம் ஆனவை நான்உரை செய்யின்
நவகுண்டத்து உள்ளெழும் நற்றீபம் தானும்
நவகுண்டத்து உள்ளெழும் நன்மைகள் எல்லாம்
நவகுண்டம் ஆனவை நான்உரை பேனே

உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும்
நகைத்தெழு நாற்கோணம் நன்மை கள்ஐந்தும்
பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே
மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே

மேலெறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள்
கால்அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பார்அறிந்து அண்டம் சிறகற நின்றது
நான்அறிந்து உள்ளே நாடிக்கொண் டேனே

கொண்டஇ குண்டத்தின் உள்ளெழு சோதியாய்
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்
இன்றுசொல் நூலாய் எடுத்துரை தேனே

எடுத்தஅ குண்ட திடம்பதி னாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்தனல் உள்ளெழ கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழும் வல்லினை கூடகி லாவே

கூடமு கூடத்தின் உள்ளெழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும்
பாடிய பன்னீர் இராசியும் அங்குஎழ
நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே

நற்சுட ராகும் சிரமுக வட்டமாம்
கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளிற்
பைச்சுடர் மேனி பதைப்பற்று இலிங்கமும்
நற்சுட ராய்எழு நல்லதென் றாளே

நல்லதென் றாளே நமக்குற்ற நாயகம்
சொல்லதென் றாளே சுடர்முடி பாதமோ
மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
கல்லதென் றாளையும் கற்றும் வின் வாளே

வின்னா விளம்பிறை மேவிய குண்டத்து
சொன்னால் இரண்டும் சுடர்நாகம் திக்கென்று
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்ஆக துள்ளே இடங்கொண்ட வாறே

இடங்கொண்ட பாதம் எழிற்சுடர் ஏக
நடங்கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்கு
சுகங்கொண்ட கையிரண்டு ஆறும் தழைப்ப
முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே

முக்கணன் தானே முழுச்சுடர் ஆயவன்
அக்கணன் தானே அகிலமும் உண்டவன்
திக்கணன் ஆகி திகைஎட்டும் கண்டவன்
எக்கணன் தானுக்கும் எந்தை பிரானே

எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமா
தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான்
மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே

மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள்
ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண்டு ஒன்று பதைத்தெழு
நாட்டும் சுரரிவர் நல்லொளி தானே

நல்லொளி யாக நடந்துல கெங்கும்
கல்லொளி யா கலந்துள் இருந்திடும்
சொல்லொளி யாக தொடர்ந்த உயிர்க்கெலாம்
கல்லொளி கண்ணுள மாகிநின் றாளே

நின்றஇ குண்டம் நிலையாது கோணமா
பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறும்
கொண்டஇ தத்துவம் உள்ளே கலந்தெழ
விண்ணுளம் என்ன எடுக்கலு மாமே

எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தை
கடுத்த முகம்இரண்டு ஆறுகண் ஆக
படித்துஎண்ணும் நாவெழு கொம்பொரு நாலும்
அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே

அந்தமில் லானுக்கு அகலிடம் தானில்லை
அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை
அந்தமில் லானுக்கு அடுத்தசொல் தானில்லை
அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே

பத்திட்டுஅங்கு எட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகவும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே

பார்ப்பதி பாகன் பரந்தகை நால்ஐஞ்சு
காற்பதி பத்து முகம்பத்து கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே

அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐஐந்தம்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங்கு இருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியை கூடுதல் முத்தியே

முத்திநற் சோதி முழுச்சுடர் ஆயவன்
கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்றற நாடி பரந்தொளி யூடு போ
செற்றற்து இருந்தவர் சேர்ந்திரு தாரே

சேர்ந்த கலையஞ்சும் சேரும்இ குண்டமும்
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியை
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே

மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும்
உய்கண்டம் செய்த ஒருவனை சேருமின்
செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
பொய்கண்டம் இல்லா பொருள்கல தாரே

கலந்திரு பாதம் இருகர மாகும்
மலர்ந்திரு குண்ட மகாரத்தார் மூக்கு
மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி
உணர்ந்திரு குஞ்சி அங்கு உத்தம னார்க்கே

உத்தமன் சோதி உளனொரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங்கு இருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாக தழைத்த கொடியே

கொடியாறு சென்று குலாவிய குண்டம்
அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படிஏழ் உலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே

மாதன மாக வளர்கின்ற வன்னியை
சாதன மாக சமைந்த குருவென்று
போதன மாக பொருந்த உலகாளும்
பாதன மாக பரிந்தது பார்த்தே

பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார் இல்லை
காத்துடல் உள்ளே கருதி இருந்தவர்
மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே

உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும்
பகங்கண்டு கொண்டஇ பாய்கரு வொப்ப
சகங்கண்டு கொண்டது சாதன மாமே

சாதனை நாலு தழல்மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளையாறு பூநிலை
போதனை போதுஐஞ்சு பொய்கய வாரணம்
நாதனை நாடு நவகோடி தானே

சத்தி பேதம் திரிபுரை சக்கரம்

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவா திரிபுரை யாங்கே

திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துர
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமது தானே

தானா அமைந்தஅம் முப்புரம் தன்னிடை
தானான மூவுரு ஓருரு தன்மையுள்
தானான பொன்செம்மை வெண்ணிற தாள்கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே

நல்கு திரிபுரை நாதநா தாந்தங்கள்
பல்கும் பரவிந்து பாரண்ட மானவை
நல்கும் பரைஅபி ராமி அகோசரி
புல்கும் அருளும்அ போதந்த தாளுமே

தாளணி நூபுரம் செம்பட்டு தானுடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணி குண்டல காதிக்கே

குண்டல காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறமன்னு கோலத்தன்
கண்டிகை ஆரம் கதிர்



யீ டீயீ டுயீ டியீசூ டீயீசூ டியீ க்ஷ்
யு யுசூ யுஆசண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே

நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிரு கும்சிகை
நன்றறி கண்டிகை நாற்கால் கரீடணி
துன்றிய நற்சுத்த தாமரை சுத்தையே

சுத்தவம் ச஑குஒ ஊச்ஒஎ டஇ஍஑ஊழழூ



யீ டீயீ டுயீ டியீசூ டீயீசூ டியீ க்ஷ்
யு யுசூ யு\ஆவத்துவம் ஆய்ஆ ளும்மாசத்தி மாபரை
அத்தகை யாவும் அணோரணி தானுமாய்
வைத்தஅ கோல மதியவள் ஆகுமே

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவா ரருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிட தானே

தான்எங்கு உளன்அங்கு உளதுதையல் மாதேவி
ஊன்எங் குள அங்கு உள்ளுயிர காலவன்
வான் எங் குளஅங் குளேவந்தும் அப்பாலாம்
கோன் எங்கும் நின்ற குறிபல பாரே

பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனே
பராசத்தி புண்ணிய மாகிய போகமே

போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகஞ்செய்து ஆங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகஞ்செய்து ஆங்கே அடியவர் நாள்தொறும்
பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே

கொம்புஅனை யாளை குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவிர் நாடியை
செம்பவ ளத்திரு மேனி சிறுமியை
நம்பி என் உள்ளே நயந்துவை தேனே

வைத்த பொருளும் மருவுயிர பன்மையும்
பத்து முகமும் பரையும் பராபரை
சித்த கரண செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தை தலையவ ளாமே

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறி தோகை
கலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந்து ஏழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றெனொடு ஒன்றிநின்று ஒத்துஅடைத்தாளே

ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடை கும்வழி தேர்ந்துண ரார்களே

உணர்ந்துட னேநிறகும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையும் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலை
கணிந்தெழு வார்க்கு கதியளி பாளே

அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு பு



யீ டீயீ டுயீ டியீசூ டீயீசூ டியீ க்ஷ்
யு யுசூ யுஆதெளியுறு வித்து சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே

உண்டில்லை என்றது உருச்செய்து நின்றது
வண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தம்மொடு
மண்டல முன்றுற மன்னிநின் றாளே

நின்றாள் அவன்தன் உடலும் உயிருமா
சென்றான் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுள் புகுந்துணர் வாகியே
நின்றான் பரஞ்சுடர் ஏடங்கை யாளே

ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவா தோத்திரம் சொல்லுமே

தோத்திரம் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிடும்
பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும்
பார்த்திடும் பூம்பிள்ளை ஆருமாம் ஆதிக்கே

ஆதி விதமிகு தண்தந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தை
பாதியில் வைத்து பல்காற் பயில்விரல்
சோதி மிகுந்துமு காலமும் தோன்றுமே

மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆயந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே

அருள்பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தை பு



யீ டீயீ டுயீ டியீசூ டீயீசூ டியீ க்ஷ்
யு யுசூ யுஆமருளுற்ற சிந்தையை மாற்றி யருமை
பொருளுற்ற சேவடி போற்றுவன் நானே

ஆன வராக முகத்தி பதத்தினள்
ஈன வராகம் இடிக்கும் முசலத்தோடு
ஏனை உழுபடை ஏந்திய வெண்ணகை
ஊன மறஉணர தாரஉளத்து ஓங்குமே

ஓங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரை பெற்றிட்டு
ரீங்கார துள்ளே இனிதிரு தாளே

தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயிர்வித்து தந்த பதினாலும்
வானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே

வயிரவி மந்திரம்

பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி
தன்னில் ஆகாரமும் மாயையும் கற்பித்து
பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும்
சொல்நிலை சோடம் அந்தம் என்று ஓதிடே

அந்தம் பதினாலும் அதுவே வயிரவி
முந்து நடுவும் முடிவும் முதலாக
சிந்தை கமலத்து எழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகின்றாளே

ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சாரவு



யீ டீயீ டுயீ டியீசூ டீயீசூ டியீ க்ஷ்
யு யுசூ யுஆபோகு திரிபுரை புண்ணி தோரே

புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தைதன் தென்னனும் ஆமே

தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும்
பொன்னங் கிரியில் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு
உன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே

ஓதிய நந்தி உணரும் திருவருள்
நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும்
போதம் இருபத்து எழுநாள் புணர்மதி
சோதி வயிரவி சூலம்வந்து ஆளுமே

சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு
நாலாங் கரமுள நாகபா சாங்குச
மாலங் லயனறி யாத வடிவுக்கு
மேல்அங்க மாய்நின்ற மெல்லிய லாளே

மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை
கல்லியல் ஒப்பது காணும் திருமேனி
பல்லியல் ஆடையும் பன்மணி தானே

பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக்காதி உழைக்கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே

பூரித்த பூவிதழ் எட்டினுக்கு உள்ளேயோர்
ஆரி தாள்உண்டுஅங்கு எண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
சாரித்து சத்தியை தாங்கள் கண்டாரே

கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசக்தி
அண்டமோடு எண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுள் பூசனை யாளே

பூசனை கெந்தம் பு



யீ டீயீ டுயீ டியீசூ டீயீசூ டியீ க்ஷ்
யு யுசூ யுள்ஆயோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும்
வாசம்இ லாத மணி திரயோகம்
தேசம் திகழும் திரிபுரை காணே

காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போல தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணும் தலைவிநற் காரணி காணே

காரணி மந்திரம் ஓதுங் கமலத்து
பூரண கும்ப விரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடுஅங்கு உரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமும் ஆமே

அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரை செய்யும்
செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு
நந்தி இதனை நவம் உரைத்தானே

உரைத்த நவசத்தி ஒன்று முடிய
நிரைத்த இராசி நெடுமுறை எண்ணி
பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம்செய் தானே

தா குழலி தயைக்கண்ணி உள்நின்ற
ஏமத்து இருளற வீசும் இளங்கொடி
பெருஞ்சுடர் உள்எழு நுண்புகை
மேவித்து அழுதொடு மீண்டது காணே

காணும் இருதய மந்திர முங்கண்டு
பேணும் நமஎன்று பேசும் தலைமேலே
வேணு நடுவு மிகநின்ற ஆகுதி
பூணு நடுஎன்ற அந்தம் சிகையே

சிகைநின்ற அந்த கவசங்கொண்டு ஆதி
பகைநின்ற அங்கத்தை பாரென்று மாறி
தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வகுத்தலும் ஆமே

வருத்தம் இரண்டும் சிறுவிரன் மாறி
பொருந்தி அணிவிரல் சுட்டி பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரல்இரண்டு உள்புக்கு பேசே

பேசிய மந்திரம் இராகம் பிரித்துரை
கூசமி லாத சகாரத்தை முன்கொண்டு
வாசி பிராணன் உபதேசம் ஆகைக்கு
கூசியவிந்து வுடன் கொண்டு கூவே

கூவிய சீவன் பிராணன் முதலாக
பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே

நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்து
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே

சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்
நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொடு ஆய்நிற்கும் ஆதி முதல்வியே

ஆதி வயிரவி கன்னி துறைமன்னி
ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகிற் பிறவிகள் நாசமாம்
ஓத உலவா கோலம் ஒன்று ஆகுமே

கோல குழவி குலாய புருவத்துள்
நீல குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமுது ஆனந்த சுந்தரி
மேலை சிவத்தை வெளிப்படு தாளே

வெளிப்படு வித்து விளைவுஅறி வித்து
தெளிப்படு வித்துஎன் சிந்தையின் உள்ளே
களிப்படு வித்து கதிர்ப்படு சோதி
ஒளிப்படு வித்துஎன்னை உய்ய்க்கொண்டாளே

கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள்
கண்டனள் எண்ணென் கலையின் கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல்நின்ற தையல் நல் லாளே

தையல் நல் லாளை தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையை
பையநின் றேத்தி பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே

வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய கடைமுடி சூலினி சுந்தரி
ஏயெனது உள்ளத்து இனிதுஇரு தாளே

இனியதென் மூலை இருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனள் சார்வு படுத்து
நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே

நாடிகள் மூன்று நடுஎழ ஞானத்து
கூடி யிருந்த குமரி குலக்கன்னி
பாடக சீறடி பைம்பொற் சிலம்பொலி
ஊடக மேவி உறங்குகின் றாளே

உறங்கும் அளவில் மனோன்மணி வந்து
கறங்கும் வளைக்கை கழுத்தார புல்லி
பிறங்கொளி தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
உறங்கல்ஐ யாஎன்று உபாயம்செய் தாளே

உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்து
அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்து
சுவாவை விளக்கும் சுழியாக துள்ளே
அவாவை அடக்கிவைத்து அஞ்சல்என் றாளே

அஞ்சொல் மொழியாள் அருந்தவ பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடை சேயிழை
தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே

ஆருயி ராயும் அருந்தவ பெண்பிள்ளை
காரியல் கோதையுள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரியென் உள்ளம் குலாவிநின் றாளே

குலாவிய கோல குமரியென் னுள்ளம்
நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி இருந்துணர்ந்து உச்சியின் உள்ளே
கலாவி இருந்த கலைத்தலை யாளே

கலைத்தலை நெற்றியோர் கண்ணுடை கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும்
சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் அங்கிரு தாளே

இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவி
பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லி
திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே

ஆதி அனாதி அகாரணி காரணி
சோதிய சோதி சுகபர சந்தரி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதிஎன் உள்ளத்து உடன்இயை தாளே

இயைந்தனள் ஏந்திழை என்உள்ளம் மேலி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
அயன்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றும் பிதற்றுஅறு தாளே

பிதற்றி கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முற்றி அருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலை செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே

உள்ளத்து இதயத்து நெஞ்சத்தொரு மூன்றுள்
பிள்ளை தடம்உள்ளே பேச பிறந்தது
வள்ளல் திருவின் வயிற்றுனுள் மாமாயை
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே

கன்னியுங் கன்னி அழிந்தனள் காதலி
துன்னியங கைவரை பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குள
என்னேஇம் மாயை இருளது தானே

இருளது சத்தி வெளியதுஎம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையை தெய்வம்என்று எண்ணில்
அருளது செய்யும்எம் ஆதி பிரானே

ஆதி அனாதியும் ஆய பராசக்தி
பாதிபராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதும்என் உள்ளத்து உடன்முகிழ தாளே

ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதியில் வேதமே யாம்என்று அறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பன்
ஆதியென்று ஓதினள் ஆவின் கிழத்தியே

ஆவின் கிழத்திநல் ஆவடு தண்துறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந்து ஏத்திடும்
தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை
மேவும் கிழத்தி வினைகடி தாளே

வினைகடி தார்உள்ளத்து உள்ளொளி மேவி
தனைஅடை தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
எனைஅடிமை கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனை காண அனாதியும் ஆமே

ஆதி அனாதி அகாரணி காரணி
வேதமது ஆய்ந்தனள் வேதியர காய்நின்ற
சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும்
பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே

பூரண சக்தி

அளந்தேன் அகலிடத்து அந்தமும் ஈறும்
அளந்தேன் அகலிடத்து ஆதி பிரானை
அளந்தேன் அகலிடத்து ஆணொடு பெண்ணும்
அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர தேனே

உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சக்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களை தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பகமாமே

கும்ப களிறுஐந்தும் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும்
இன்ப கலவி இனிதுறை தையலும்
அன்பிற் கலவியுள் ஆயொழி தாரே

இன்ப கலவியில் இட்டொழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும்
துன்ப குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பாரசக்தி என்னம்மை தானே

என்னம்மை என்னப்பன் என்னும் செருக்கற்று
உன்னம்மை ஊழி தலைவனும் அங்குளன்
மன்னம்மை யாகி மருவி உரைசெய்யும்
பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே

தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மேல் இருப்பதொரு நூறு தானுள
பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள்
நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே

ஆணையமாய்வரு தாதுள் இருந்தவர்
மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை அறிந்தபின்
தாணைய மாய தானதனன் தானே

தானே எழுந்தஇ தத்துவ நாயகி
வானோர் எழுந்து மதியை விளக்கினள்
தேனார் எழகின்ற தீபத்து ஒளியுடன்
மானே நடமுடை மன்றறி யீரே

அறிவான மாயையும் ஐம்புல கூட்டத்து
அறிவான மங்கை அருளது சேரில்
பிரியா அறிவறி வார்உளம் பேணும்
நெறியாய சித்த நிறைந்திரு தாளே

இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை நாடி
அரவம்செய் யாமல் அருளுடன் தூங்க
பருவம்செய் யாததோர் பாலனும் ஆமே

பாலனும் ஆகும் பராசத்தி தன்னோடு
மேலனு காவிந்து நாதங்கள் விட்டிட
மூலம தாமெனும் முத்திக்கு நேர்பட
சாலவு மாய்நின்ற தற்பர தானே

நின்ற பராசக்தி நீள்பரன் தன்னோடு
நின்றறி ஞானமும் இச்சையு மாய் நிற்கும்
நன்றறி யும்கிரி யாசக்தி நண்ணவே
மற்றன வற்றுள் மருவிடு தானே

மருவொத்த மங்கையும் தானும் உடனே
உருவொத்துநின்றமை ஒன்றும் உணரார்
கருவொத்து நின்று கலக்கின போது
திருவொத்த சிந்தைவைத்து எந்தைநின் றானே

சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்தி
விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமொடு ஆதிய தாம்வண் ணத்தாளே

ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழியறி வாரில்லை
தேறி யிருந்துநல் தீபத்து ஒளியுடன்
ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே

உடையவன் அங்கி உருத்திர சோதி
விடையவன் ஏறி விளங்கி இருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து
அடையது வாகிய சாதகர் தாமே

தாமேல் உறைவிடம் ஆறிதழ் ஆனது
பார்மேல் இதழ்பழி னெட்டிரு நூறுன
பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே

பைந்தொடி யாளும் பரமன் இருந்திட
திண்கொடி யாக திகழ்திரு சோதியாம்
விண்கொடி யாகி விளங்கி வருதலால்
பெண்கொடி யாக நடந்தது உலகே

நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றா
படர்ந்தது தன்வழி பங்க துள்ளே
தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே

அடுக்கு தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்கும் தாமரை இல்லகத்து உள்ளது
மடுக்கும் தாமரை மத்தக தேசெல
முடுக்கும் தாமரை முச்சது ரத்தே

முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்தும் இடம்பெற ஓடிட
கைச்சது ரத்து கடந்துள் ஒளிபெற
எச்சது ரத்தும் இருந்தனள் தானே

இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலா
பரந்தன வாயு திசை தோறும்
குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி
நடந்தது தேறல் அதோமுகம் அம்பே

அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மணி
கொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவிய
செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றா\ளே

நவிலும் பெருந்தெய்வம் நான்மறை சத்தி
துகிலுடை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமும் அண்ட முழுதும் செம்மாந்தும்
புகலும்மு சோதி புனையநிற் பாளே

புனையவல் லாள் புவனத்துஇறை எங்கள்
வனையவல் லாள் அண்டகோடிகள் உள்ளே
புனையவல் லாள்மண் லடத்தொளி தன்னை
புனையவல் லாளையும் போற்றியென் பேனே

போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென்
ஆற்றலுள் நிற்கும் அருந்தவ பெண்பிள்ளை
சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை
கூற்றம் துரக்கின்ற கொள்பை தொடியே

தொடியார் தடக்கை சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை யாமங்கை கங்கை
செடியார் வினைகெட சேர்வரை என்றென்
அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே

மெல்லிசை பாவை வியோமத்தின் மென்கொடி
பல்லிசை பாவை பயன்தரு பைங்கொடி
புல்லிசை பாவை யை போக துரந்திட்டு
வல்லிசை பாவை மனம்புகு தானே

தாவித தவப்பொருள் தான்அவன் எம்இறை
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து
மேவி பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்து
ஆவிக்கும் அப்பொருள் தானது தானே

அதுஇது என்பர் அவனை அறியார்
கதிவர நின்றதோர் காரணம் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே

திருமந்திரம்
ஏழாம் தந்திரம்
ஆறு ஆதாரம்

நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்
காலங்கண் டான்அடி காணலும் ஆமே

ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
மேதாதி நாதாந்த மீதாம் பாராசக்தி
போதா லயத்துஅ விகாரந்தனிற்போத
மேதாதி ஆதார மீதான உண்மையே

மேல்என்றும் கீழ்என்று இரண்டற் காணுங்கால்
தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும்
பார்எங்கும் ஆகி பரந்த பராபரம்
கார்ஒன்று கற்பகம் ஆகிநின்றானே

ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் காலந்தத்து விண்ணொளி
போதா லயத்து புலன்கர ணம் புத்தி
சாதா ரணங்கெட்டான் தான்சக மார்க்கமே

மேதாதி யாலே விடாதுஓம் எனத்தூண்டி
ஆதார சோதனை அத்துவ
தாதுஆர மாசுவே தானெழ சாதித்தால்
ஆதாரஞ் செய்போக மாவது காயமே

ஆறந்த மும்கூடி யாரும் உடம்பினில்
கூறிய ஆதார மற்றும் குறிக்கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத்து ஓரெழுத்து ஆமே

ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல்
போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே

ஆயு மலரின் அணிமலர் மேலது
ஆய இதழும் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
மேய அறிவாய் விளைந்தது தானே
அண்டலிங்கம் உலக சிவம்

இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம் தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே

உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவாய்
உலகில் எடுத்தது சத்தி குணமாய்
உலகில் எடுத்த சதாசிவன் தானே

போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம்
ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம்
ஆகம அத்துவா ஆறும் சிவமே

ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் ஈசனை
வாழ்த்தினர் வாச பசுந்தென்றல் வள்ளலென்று
ஆர்த்தினர் அண்டங் கடந்து புறநின்று
காத்தனன் என்னும் கருத்தறி யாரே

ஒண்சுட ரோன் அயன் மால்பிர சாபதி
ஒண்சுட ரான இரவியோடு இந்திரன்
கண்சுட ராகி கலந்தெங்கும் தேவர்கள்
தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே

தாபர துள்நின்று அருளவல் லான்சிவன்
மாபர துண்மை வழிபடு வாரில்லை
மாபர துண்மை வழிபடு வாளர்க்கும்
பூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே

தூவிய விமானமும் தூலமது ஆகுமால்
ஆய சதாசிவம் ஆகுநற் சூக்குமம்
ஆய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே

முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும்அக்கொம்பு சிலைநீறு கோமளம்
அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்த்தின் சாதனம் பூமண லிங்கமே

துன்றும் தயிர்நெய் பால்துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல்இர தம்சலம்
வன்திறல் செங்கல் வடிவுடை வில்வம்பொன்
தென்தியங்கு ஒன்றை தெளிசிவ லிங்கமே

மறையவர் அர்ச்சனை வண்படி கந்தான்
இறையவர் அர்ச்சனை யேயபொன் னாகும்
குறைவிலா வசியர்க்கு கோமள மாகும்
துறையடை சூத்திரர் தொல்வாண லிங்கமே

அது வுணர தோன்ஒரு தன்மையை நாடி
எதுஉண ராவகை நின்றனன் ஈசன்
புதுஉணர் வான புவனங்கள் எட்டும்
இது உணர்ந்து என்னுடல் கோயில்கொண்டானே

அகலிட மாய்அறி யாமல் அடங்கும்
உகலிட மாய்நின்ற ஊனதன் உள்ளே
பகலிட மாம்முனம் பாவ வினாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் தானே

போது புனைசூழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும்
ஆதியுற நின்றது அப்பரி சாமே

தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரைபொரு நீரது மஞ்சன சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை
கரையற்ற நந்தி கலையும்திக்காமே
பிண்டலிங்கம் உடற் சிவம்

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே

உலந்திலர் பின்னும் உளரென நிற்பர்
நிலந்திரு நீர்தெளி யூனவை செ
புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக
வலந்தரு தேவரை வந்திசெய் யீரே

கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக
வாயில்கொண் டு ஈசனும் ஆளவ தானே

கோயில்கொண் டான்அடி கொல்லை பெருமறை
வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள
பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில்கொண் டான் எங்கள் மாநந்தி தானே
சதாசிவ லிங்கம் உலக முதற் சிவம்

கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண்டு எட்டு பரந்தெழும்
தேடு முகம்ஐந்து செங்கையின் மூவைந்து
நாடும் சதாசிவம் நல்லொளி முத்தே

வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்த சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவ தானே

ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்
ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே

அத்திசை குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசை குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசை குள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசை குள்ளே அமர்ந்த சமயமே

சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துள
சமயத்து எழுந்த இராசி ஈராறுள
சமயத்து எழுந்த சரீரம்ஆ றெட்டுள
சமயத்து எழுந்த சதாசிவ தானே

நடுவு கிழக்கு தெற்குஉ தரமேற்கு
நடுவு படிகநற் குங்குமவன்னம்
அடைவுள அஞ்சனம் செவ்வர தம்பால்
அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே

அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள
அஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுள
அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே

சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவமிக்க தாபர சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவதத்துவ முப்ப தாறே

தத்துவ மாவது அருவம் சராசரம்
தத்துவ மாவது உருவம் சுகோதயம்
தத்துவம் எல்லாம் சகலமு மாய்நிற்கும்
தத்துவம் ஆகும் சதாசிவம் தானே

கூறுமின் ஊறு சதாசிவன் எம்இறை
வேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய்நிற்கும்
ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடு
மாறுசெய் வான் என் மனம்புகு தானே

இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருளார்ந்த செஞ்சடை சோதி பிறையும்
அருளார்ந்த சிந்தையெம் ஆதி பிரானை
தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திரு தேனே

சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் காற்றிடில்
உத்தமம் வாமம் உரையத்து இருந்திடும்
தத்துவம் பூருவம் தற்புரு டன்சிரம்
அத்தரு கோரம் மருடத்துஈ சானனே

நாணுநல் ஈசானன் நடுவுச்சி தானாகும்
தாணுவின் தன்முகம் தற்புருட மாகும்
காணும் அகோரம் இருதயம் குய்யமாம்
மாணுற வாமம்ஆம் சத்திநற் பாதமே

நெஞ்சு சிரம்சிகை நீள்கவ சம்கண்ணாம்
வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம்
செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும்
செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே

எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
விண்ணிற் பரைசிரம் மிக்க சிகையாதி
வண்ணங் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணுங் கிரியை பரநே திரத்திலே

சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும்
சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும்
சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவன் தானே

மான் நந்தி எத்தனை காலம் அழைக்கினும்
தான் நந்தி அஞ்கின் தனிச்சுடை ராய்நிற்கும்
கால் நந்தி உந்தி கடந்து கமலத்தில்
மேல் நந்தி ஒன்பதின் மேவிநின் றானே

ஒன்றிய வாறும் உடலின் உடன்கிடந்து
என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது
தென்தலைக்கு ஏற திருந்து சிவனடி
நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே

உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானை
கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே

ஆங்கவை மூன்றினும் ஆரழல் வீசிட
தாங்கிடும் ஈரேழு தான்நடு வானதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆமென
ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே

தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாய்
தன்மேனி தானாகும் தற்பரம் தானே

ஆரும் அறியார் அகாரம் அவனென்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
மாறி எழுந்திடும் ஓசையதாமே

இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே
ஆத்மலிங்கம் உயிர்ச்சிவம்

அகார முதலா அனைத்துமாய் நிற்கும்
உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம் தாமே

ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து ஆதிபீட நாமே
போதாஇ லிங்க புணர்ச்சிய தாமே

சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவமாகும் தாபரம் தானே

தானேர் எழுகின்ற சோதியை காணலாம்
வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம்
பூரேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
தானேர் எழுகின்ற அகாரமது ஆமே

விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
விந்துவ தேபீட நாதம் இலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்து கருஐந்தம் செய்யும் அவைஐந்தே

சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மா
சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்
சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்
சத்திநல் ஆன்மா சதாசிவம் தானே

மனம்புகுந்து என்னுயிர் மன்னிய வாழ்க்கை
மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது
நலம்புகுந்து என்னொடு நாதனை நாடும்
இனம்புகுந்து ஆதியும் மேற்கொண்டவாறே

பராபரன் எந்தை பனிமதி சூடி
தராபரன் தன்னடி யார்மன கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும்
அராபரன் மன்னி மனத்துஉறை தானே

பிரான்அல்ல நாம்எனில் பேதை உலகம்
குரால்என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்
அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
பொராநின் றவர்செய்அ புண்ணியன் தானே

அன்று நின் றான்கிட தான்அவன் என்று
சென்றுநின்று எண்டிசை ஏத்துவர் தேவர்கள்
என்றுநின்று ஏத்துவன் எம்பெரு மான்தன்னை
ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிரு தானே
ஞான லிங்கம் உணர்வு சிவம்

உருவும் அருவும் உருவோடு
மருவு பரசிவன் மன்பல் உயிர்க்கும்
குருவு மெனநிற்கும் கொள்கையன் ஆகும்
தருவென நல்கும் சதாசிவன் தானே

நாலான கீழது உருவம் நடுநிற்க
மேலான நான்கும் அருவம் மிகுநாப்பண்
நாலான ஒன்றும் அருவுரு நண்ணலால்
பாலாம் இவையாம் பரசிவன் தானே

தேவர் பிரானை திசைமுக நாதனை
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
ஏவர் பிரான்என்று இறைஞ்சுவர் அவ்வழி
யாவர் பிரானடி அண்ணலும் ஆமே

வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற
ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்டகை யானொடும் கன்னி உணரினும்
மூண்டகை மாறினும் ஒன்றது வாமே

ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாதெய்வம் நின்மலர் எம்இறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே

சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
சுத்த சிவபதம் தோயாத தூவொளி
அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்
ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே

கொழுந்தினை காணில் குவலயம் தோன்றும்
எழுந்திடம் காணில் இருக்கலும் ஆகும்
பரந்திடம் காணில் பார்ப்பதி மேலே
திரண்டெழ கண்டவன் சிந்தையு ளானே

எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறைசொல்லின் ஞானமாம்
சந்தித்து இருந்த இடம்பெருங் கண்ணியை
உந்தியின் மேல்வைத்து உகந்து இருந்தானே

சத்தி சிவன்விளை யாட்டாம் உயிராகி
ஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டி
சுத்தம தாகும் துரியம் பிறிவித்து
சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே

சத்தி சிவன்தன் விளையாட்டு தாரணி
சத்தி சிவமுமாம் சிவன்ச தியுமாகும்
சத்தி சிவமன்றி தாபரம் வேறில்லை
சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே
சிவலிங்கம் சிவகுரு

குரைக்கின்ற வாரி குவலய நீரும்
பரக்கின்ற காற்று பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே

வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்கு
புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே

ஒன்றென கண்டோ ம் ஈசன் ஒருவனை
நன்றென்று அடியிணை நான்அவனைத்தொழ
வென்றுஐம் புலமும் மிகக்கிடந்து இன்புற
அன்றுஎன்று அருள்செய்யும் ஆதி பிரானே

மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரும் சத்தி சிவன்வடி வாகி
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே

மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
ஆவி எழும்அள வன்றே உடலுற
மேவ படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கிற் பரகதி தானே
சம்பிரதாயம் பண்டை முறை

உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு
படர்வினை பற்றற பார்த்துக்கை வைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி
கடி பிறப்பற காட்டினன் நந்தியே

உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான
வியவார் பரமும்பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே
உயலார் குருபரன் கொண்டானே

பச்சிம திக்கலே வைத்தஆ சாரியன்
நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள்
உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே

பிட்டடித்து எங்கும் பிதற்றி திரிவோனை
ஒட்டடித்து உள்ளமர் மாசெலாம் வாங்கி
தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே

தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்து பிணக்கறுத்து எல்லாம்
கருக்கொண்ட ஈசனை கண்டுகொண்டேனே

கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு
நாடி அடிவைத்து அருள்ஞான சத்தியால்
பாடல் உடலினில் பற்றற நீக்கியே
கூடிய தானவ னாம்குளி கொண்டே

கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ள
கொண்டான் உயிர்பொருள் கா குழாத்தினை
கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் எனஒன்றும் கூறகி லானே

குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தை பற்றியநேர்மை
பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே

உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்தஅ காலம்
உணர்வுடை யார்கண் உணர்ந்துகண் டாரே

கா பரப்பில் அலைந்து துரியத்து
சால விரிந்து குவிந்து சகலத்தில்
ஆயஅவ் ஆறாறு அடைந்து திரிந்தோர்க்கு
தூய அருள்தந்த நந்திக்கு என் சொல்வதே

நானென நீயென வேறில்லை நண்ணுதல்
ஊனென ஊனுயிர் என்ன உடனின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென இன்பம் திளைக்கின்ற வாறே

அவனும் அவனை
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனை
அவனும் அவனிவன்

நானிது தானென நின்றவன் நாடோ றும்
ஊனிது தானுயிர் போலுணர் வானுளன்
வானிரு மாமுகில் போற்பொழி வானுளன்
நானிது அம்பர நாதனும் ஆமே

பெருந்தன்மை தானென யானென வேறாய்
இருந்ததும் இல்லைஅது ஈசன் அறியும்
பொருந்தும் உடல்உயிர் போல்உமை மெய்யே
திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே
திருவருள் வைப்பு

இருபத மாவது இரவும் பகலும்
உருவது ஆவது உயிரும் உடலும்
அருளது ஆவது அறமும் தவமும்
பொருவது உள்நின்ற போகமது ஆமே

காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனா தோன்றிடும்
வேண்டி கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்
ஈண்டி கிடந்தங்கு இருளறும் ஆமே

குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்புறு சிந்தையை சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே

தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறை
ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமென
சார்ந்தறி வான்பெரு தன்மைவல் லானே

தானே அறியும் வினைகள் அழிந்தபின்
நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல்
ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின்
தேனே யனையன் நம் தேவர் பிரானே

நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
வான்அறி தார் அறி யாது மயங்கினர்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறி யான்பின்னை யார்அறி வாரே

அருள்எங்கு மான அளவை அறியார்
அருளை நுகர்அமு தானதும் தேரார்
அருள்ஐங் கருமத்து அதிசூக்கம் உன்னார்
அருள்எங்கும் கண்ணானது ஆர்அறி வாரே

அறிவில் அணுக அறிவது நல்கி
பொறிவழி யாசை புகுத்தி புணர்ந்திட்டு
அறிவது ஆக்கி அடியருள் நல்கும்
செறிவொடு நின்றார் சிவம்ஆயி னாரே

அருளில் பிறந்திட்டு
அருளில் அழிந்துஇளை பாறி மறைந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என்நந்தி அகம்புகு தானே

அருளால் அமுத பெருங்கடல் ஆட்டி
அருளால் அடிபுணைந்து ஆர்வமும் தந்திட்டு
அருளானஆனந்தந்து ஆரமுது ஊட்டி
அருளால் என்நந்தி அதும்புகு தானே

பாசத்தில் இட்டது அருள்அந்த பாசத்தின்
நேசத்தை விட்டது அருள்அந்தநேசத்தில்
கூசற்ற முத்தி அருள்அந்த கூட்டத்தின்
நேசத்து தோன்றா நிலையரு ளாமே

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள் தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப்பராபரன்
உறவாகி வந்துஎன் உளம்புகு தானே

அகம்புகு தான்அடி யேற்குஅரு ளாலே
அகம்புகு தும்தெரி யான்அருள் இல்லோர்க்கு
அகம்புகுந்து ஆனந்த மாக்கி சிவமாய்
அகம்புகு தான்நந்தி ஆனந்தி யாமே

ஆயும் அறிவோடு அறியாத மாமாயை
ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும்
ஆய பலஇ திரியம் அவற்றுடன்
ஆய அருள்ஐந்து மாம் அரு செய்கையே

அருளே சகலமும் ஆய பவுதிகம்
அருளே சராசர மாய அமலமே
இருளே வெளியே யெனும்எங்கும் ஈசன்
அருளே சகளத்தின் அன்றிஇன் றாமே

சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
தவமான ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறா
நவம்அவை யாகி நடிப்பவன் தானே

அருட்கண்இ லாதார்க்கு அரும்பொருள் தோன்றா
அருட்கண்உ ளோர்க்குஎதிர் தோன்றும் அரனே
இருட்கண்ணி னோர்க்குஅங்கு இரவியும் தோன்றா
தெருட்கண்ணி னோர்க்குஎங்கும் சீரொளி யாமே

தானே படைத்திடும்
தானே துடைத்திடும்
தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்
தானே வியாபி தலைவனும் ஆமே

தலையான நான்கும் தனதுஅரு வாகும்
அலையா அருவுரு வாகும் சதாசிவம்
நிலையான கீழ்நான்கு நீடுரு வாகும்
துலையா இறைமுற்று மாய் அல்லது ஒன்றே

ஒன்றது வாலே உலப்பிலி தானாகி
நின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலை
துன்றி அவைஅல்ல வாகும் துணையென்ன
நின்றது தான்விளை யாட்டென்னுள் நேயமே

நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு
குடிலைகள் நாதம் அடைந்திட்டு
போ கலைபல வாக புணர்ந்திட்டு
வீ தகாவிந்து வாக விளையுமே

விளையும் பரவிந்து தானே வியாபி
விளையும் தனிமாயை மிக்கமா மாயை
கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்
அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே
அருள் ஒளி

அருளில் தலைநின்று அறிந்துஅழு தாதார்
அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளின் பெருமை அறியார் செறியார்
அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே

வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
ஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்தி
பேரா யிரமுடை பெம்மான்பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுகென் றானே

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையை
கூடிய வாறே குறியா குறிதந்தென்
ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே

உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும்
பற்றிய மாயா படலம் என பண்ணி
அத்தனை நீயென்று அடிவைத்தேன் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழல்பணி தேனே

விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினை முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே

ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
ஒளியு ளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும்
ஒளியுருள் கண்டகண் போலவே றாயுள
ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே

புறமே திரிந்தேனை பொற்கழல் சூட்டி
நிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கி
அறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்த
திறம்ஏதென்று எண்ணி திகைத்திரு தேனே

அருளது என்ற அகலிடம் ஒன்றும்
பொருளது என்ற புகலிடம் ஒன்றும்
மருளது நீங்க மனம்புகு தானை
தெருளுறும் பின்னை சிவகதி தாமே

கூறுமின் நீர்முன் பிறந்திங்கு இறந்தமை
வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும்
பாறணி யும்உடல் வீழலிட்டு ஆருயிர்
தேறுஅணிவோம்இது செப்பவல் லீரே
சிவபூசை

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ள புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்கு
காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே

பான்மொழி பாகன் பராபரன் தானாகும்
ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து
மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
சீன்முகம் செ சிவனவன் ஆகுமே

நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனைகழல் ஈசனை காண அரிதாம்
கனைகழல் ஈசனை காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே

மஞ்சன மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டோ டும்
அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சி தார்களே

புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே

அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்
ஒத்தமெய்ஞ் ஞானத்து உயர்ந்தார் பதத்தை
சுத்தம தாக விளக்கி தெளிக்கவே
முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே

மறப்புற்று இவ்வழி மன்னிநின் றாலும்
சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி
மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே

ஆரா தனையும் அமரர் குழாங்களும்
தீரா கடலும் நிலத்துஉம தாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான்திரு நாமமும்
ஆரா வழியெங்கள் ஆதி பிரானே

ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணம்தொழ
தான்அந்த மில்லா தலைவன் அருளது
தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர்
பார்ஐங் குணமும் படைத்துநின் றானே

உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி
மழைக்கொண்ட மாமுகில் மேற்சென்று வானோர்
தழைக்கொண்ட பாசம் தயங்கிநின்று ஏத்த
பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே

வெள்ள கடலுள் விரிசடை நந்திக்கு
உள்ள கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு
கள்ள கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார்
அள்ள கடலுள் அழுந்துகின் றாரே

கழிப்படு தண்கடற் கௌவை யுடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள்
பழிப்படு வார்பல ரும்பழி வீழ
வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே

பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவி
பயனறி வார்க்குஅரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர
வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே

ஏத்துவர் மாமலர் தூவி தொழுதுநின்று
ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன்
மூர்த்தியை மூவா முதலுறு வாய்நின்ற
தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே

தேவர்க ளோடுஇசை வந்துமண் ணோடுறும்
பூவொடு நீர்சுமந்து ஏத்தி புனிதனை
மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே

உழைக்கவல் லோர்நடு நீர்மலர் ஏந்தி
பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி
இழைக்கொண்ட பாதத்து இனமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே

வென்று விரைந்து விரைப்பணி என்றனர்
நின்று பொருந்த இறைபணி நேர்பட
துன்று சலமலர் தூவி தொழுதிடில்
கொண்டிடும் நித்தலும் கூறியஅன்றே

சாத்தியும் வைத்தும் சயம்புஎன்று ஏத்தியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலக்கிட்டு அகத்துஇழுக்கு அற்றக்கான்
மாத்திக்கே செல்லும் வழியது வாமே

ஆவி கமலத்தில் அப்புறத்து இன்புற
மேவி திரியும் விரிசடை நந்தியை
கூவி கருதி கொடுபோ சிவத்திடை
தாவிக்கு மந்திரம் தாமறி யாரே

காண்ஆக துள்ளேஅழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்தறி வாரில்லை
பேணி பெருக்கி பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகு தானே

பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ள
வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனை தாங்கிநின் றாரே

சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் ஆன திரசுத்தி
சமையநிர் வாணம் கலாசுத்தி யாகும்
அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே

ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லது
ஊழில் உயிரை உணரவும் தான்ஒட்டா
ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்
ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே
குருபூசை

ஆகின்ற நந்தி அடித்தா மரைபற்றி
போகின்றுபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல்
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது
தேனமர் புங்குழல் சேரஒண் ணாதே

மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை
ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயலறல் தானே

உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை
விச்சிமின் விச்சு விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே

புண்ணிய மண்டலம் பூசைநா றாகுமாம்
பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம்
எண்ணிலிக்கு ஐயம் இடில்கோடி யாகுமால்
பண்ணிடில் ஞானிஊண் பார்க்கில் விசேடமே

இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை
வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவும் இலங்கா தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே

இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர்
விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியை பூசிக்க நற்பூசை யாமே

மனபவ னங்களை மூலத்தான் மாற்றி
அனித உடல்பூத மாக்கி அகற்றி
புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்ப
தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே

பகலும் இரவும் பயில்கின்ற பூசை
இயல்புடை ஈசர்க்கு இணைமல ராக
பகலும் இரவும் பயிலாத பூசை
சகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே

இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்குஅற ஆனந தேறல் பருகி
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டுஇட தேனே
மகேசுவர பூசை

படமாட கோயில் பகவற்குஒன்று ஈயில்
நடமாட கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாட கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாட கோயில் பகவற்கு அது ஆமே

தண்டுஅறு சிந்தை தபோதனார் தாம்மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும்
கொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்று
எண்திசை நந்தி எடுத்துரை தானே

மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே

அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என்
பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்கு
நிகரில்லை என்பது நிச்சயம் தானே

ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்
கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்
நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே

ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே

சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
நான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்ல
பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே

அழிதகவு இல்லா அரன்அடி யாரை
தொழுகை ஞாலத்து தூங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடி
தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே

பகவற்குஏதா கிலும் பண்பில ராகி
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழி
அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழி தா ரே

வித்தக மாகிய வேடத்தர் உண்டஊன்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே

தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ்வினை தீர்க்கும் பொன்னுலகு ஆமே
அடியார் பெருமை

திகைக்குரி யானொரு தேவனை நாடும்
வகைக்குரி யானொரு வாது இருக்கில்
பகைக்குரி யாரில்லை பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே

அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலோணடும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே

கொண்ட குறியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந்து என்கை தலத்தினுள்
உண்டெனில் நாம்இனி உய்ந்தொழி தோமே

அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்
கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே

பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்
உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணா
கண்ணின்றி காணும் செவியின்றி கேட்டிரும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே

இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிசெல்வர் வானுலகு ஆள்வர்
புயங்களும் எண்டிசை போதுபா தாள
மயங்கா பகிரண்ட மாமுடி தானே

அகம்படி கின்றநம் ஐயனை ஒரும்
அகம்படி கண்டவர் அல்லலில் சேரார்
அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம்
அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே

கழிவும் முதலும் காதல் துணையும்
அழிவும் தாய்நின்ற ஆதி பிரானை
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியும்என் ஆவி உழவுகொண் டானே

என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேர்எழு தாமே

துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதி பிரானை
கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே

தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செ
புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும்
பலமிசை செய்யும் படர்சடை யோனே

அறியா பருவத்து அரன்அடி யாரை
குறியால் அறிந்தின்பம் கொண்டது அடிமை
குறியார் சடைமுடி கட்டி நடப்பார்
மறியார் புனல்மூழ்க மாதவம் ஆமே

அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பால் பெருமை இலயமது ஆமே

முன்னிரு தார்முழுது எண்கண தேவர்கள்
எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்து
எண்இரு நாலு திசைஅ தரம் ஒக்க
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே

சிவயோகி ஞானி செறிந்தஅ தேசம்
அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும்
நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்
பவயோகம் இன்றி பரலோகம் ஆமே

மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன்
மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன்
மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள்
மேலுணுர் வார்சிவன் மெய்யடி யார்களே
போசன விதி

எட்டு திசையும் இறைவன் அடியவர்க்கு
கட்ட அடிசில் அழுதென்று எதிர்கொள்வர்
ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்
விட்டு கிடக்கில் விருப்பறி யாரே

அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர்
உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்கு
பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து
இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே
பிட்சா விதி

விச்சு கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார்
இச்சைக்கு பிச்சை இரக்கின்ற வாறே

பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில்
பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செ
பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டி
பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே

பரந்துலகு ஏழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும்
நிரந்தக மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே

வரஇரு தான்வழி நின்றிடும் ஈசன்
தரஇரு தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொரஇரு தான்புக லேபுக லாக
வரஇரு தால்அறி யான்என்ப தாமே

அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
தங்கார் சிவனடி யார்சரீரத்திடை
பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்
தங்கார் சிவனை தலைப்படு வாரே

மெய்யக ஞானம் மிகத்தெளி தார்களும்
கையதும் நீண்டார் கடைத்தலை கேசெல்வர்
ஐயம் புகாமல் இருந்த தவசியார்
வையகம் எல்லாம் வரஇருந்தாரே
முத்திரை பேதம்
நாலேழு மாறவே நண்ணிய முத்திரை
பாலான மோன மொழியில் பதிவித்து
மேலான நந்தி திருவடி மீது
கோலா கலங்கெட்டு கூடுநன் முத்தியே

துரியங்கள் மூன்று சொருகுஇட னாகி
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி கேசரி உண்மை
பெருகிய ஞானம் பிறழ்மு திரையே

சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம்
ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை
ஓம்பயில் ஒங்கிய உண்மைய கேசரி
நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமு திரையே

தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்
ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால்
ஏனை சிவமாம் சொரூபம் மறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே

வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே
ஆக்கும் சுத்த்ததை யார்அறி வார்களே

யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம்
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
ஆக தகும்வேத கேசரி சாம்பவி
யோகத்து கேசரி யோகமு திரையே

யோகிஎண் சித்தி அருளொலி வாதனை
போகி தன் புத்தி புருடார்த்த நன்னெறி
ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை
ஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே

துவாதச மார்க்கமென் கோடச மார்க்கமாம்
அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும்
தவாஅறு வேதாந்த சித்தாந தன்மை
நவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே

மோனத்து முத்திரை முத்தர்க்கு
ஞானத்து முத்திரை நாதர்க்கு
தேனிக்கும் முத்திரை சித்தாந்த
கானிக்கும் முத்திரை கண்ட சமயமே

தூநெறி கண்ட சுவடு நடுவுஎழும்
பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும்
மேல்நெறி கண்டது வெண்மதி மேதினி
நீல்நெறி கண்டுள நின்மலன் ஆமே
பூரண குகை நெறி சமாதி

வளர்பிறை யில்தேவர் தம்பாலின் முன்னி
உளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கி
தளர்வில் பிதிர்பதம் தங்கி சசியுள்
உளதுறும் யோகி உடல்விட்டால் தானே

தான்இவை ஒக்கும் சமாதிக கூடாது
போன வியோகி புகலிடம் போந்துபின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே

தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கி
ஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்து
தானதில் அந்த சிவயோகி ஆகுமுன்
ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே

சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்
தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடி
சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர்
புவலோகம் போற்றும்நற் புண்ணியத்தோரே

ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்
தானற மோன சமாதியுள் தங்கியே
தானவன் ஆகும் பரகாயம் சாராதே
ஊனமில் முத்தராய் மீளார் உணர்வுற்றே

செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்
செத்துநீர் சேர்வது சித்தினை கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே

உன்ன கருவிட்டு உரவோன் அரன்அருள்
பன்ன பரமே அருட்குலம் பாலிப்பன்
என்ன புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானி
தன்இச்சைக்கு ஈசன் உருச்செய்யும் தானே

எங்கும் சிவமாய் அருளாம் இதயத்து
தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம்
அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல்
இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே
சமாதி கிரியை

அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெப்பு தீயினில்
நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு
வந்துநாய் நரிக்கு உணவாகும் வையகமே

எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்
அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே

புண்ணிய மாம்அவர் தம்மை புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே

அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே

நவமிகு சாணாலே நல்லாழம் செய்து
குவைமிகு சூழஐஞ் சாணா கோட்டி
தவமிகு குகைமு கோணமு சாணாக்கி
பவமறு நற்குகை பத்மா சனமே

தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
நன்மலர சோலை நகரின்நற் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்களே

நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழ
பொற்பமா ஓசமும் மூன்றுக்கு மூன்றுஅணி
நிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே

பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
விஞ்ச படுத்துஅதன் மேல்ஆ சனம்இட்டு
முஞ்சி படுத்துவெண் ணீறு இட்ட தன்மேலே
பொன்செய் நற்சுண்ணம் பொதியலும் ஆமே

நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சார
கள்ளவிழ தாமம் களபம்க தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே

ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்து
போதறு கண்ணமும் நறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடு வீரே

விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம் இள நீரும்
குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே

மீது சொரிந்திடும் வெண்ணீறும் கண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே

ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றை தாபித்து
மேதரு சந்நிதி மேவு தரம்பூர்வம்
காதலில் சோடசம் காண்உப சாரமே
விந்துற்பனம்

உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும்
உத குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியில் பிரமாதி கள்மிகு சத்தி
கதியில் கரணம் கலைவை கரியே

செய்திடும் விந்துபே தத்திறன் ஐந்தும்
செய்திடும் நாதபேதத்திற னால் ஆறும்
செய்திடும் மற்றவை ஈர்இரண்டில்திறம்
செய்திடும் ஆறுஆறு சேர துவங்களே

வந்திடு பேத மெலாம்பர விந்துமேல்
தந்திடு மாமாயை வாகேசி தற்பரை
உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி
விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே

விளங்கு நிவர்த்தாதி மேலக ராதி
வளங்கொள் உகாரம் மகார துள்விந்து
களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே

அந்தமும் ஆதியும் ஆகி பராபரன்
வந்த வியாபி எனலாய அந்நெறி
கந்தம தாகிய காரண காரியம்
தந்துஐங் கருமமும் தான்செய்யும் வீயமே

வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்ப
காயஐம் பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே

புறம்அகம் எங்கும் புகுந்துஒளிர் விந்து
நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை
உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்
திறனொடு வீடுஅளி கும்செயல் கொண்டே

கொண்டஇவ் விந்து பரமம்போல் கோதற
நின்ற படம்கட மாய்நிலை நிற்றலின்
கண்டக லாதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே

அதுவித்தி லேநின்று அங்கு அண்ணிக்கும் நந்தி
இதுவித்தி லேஉள வாற்றை உணரார்
மதுவித்தி லேமலர் அன்னம தாகி
பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே

வித்தினில் அன்றி முளையில்லை அம்முளை
வித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறில்லை
அத்தன்மை யாரும் அரன்நெறி காணுமே

அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்ன
திருந்தும் உடன்மன மாம் கூறு சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதமது ஆகுமே

இரதம் முதலான ஏழ்தாது மூன்றில்
உரிய தினத்தில் ஒருபுல் பனிபோல்
அரிய துளிவிந்து வாகும்ஏழ் மூன்றின்
மருவிய விந்து வளரும்கா யத்திலே

காயத்தி லேமூன்று நாளில் கலந்திட்டு
காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே

அழிகின்ற விந்து அளவை அறியார்
கழிகின்ற தன்னையு காக்கலும் தேரார்
அழிகின்ற காயத்து அழிந்துஅயர் உற்றோர்
அழிகின்ற தன்மை அறிந்தொழி யாரே
விந்து ஜயம் போக சரவோட்டம்

பார்க்கின்ற மாதரை பாராது அகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டி
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே

தானே அருளால் சிவயோகம் தங்காது
தானேஅ காமாதி தங்குவோ னும் உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடங்கெடும்
ஊனே அவற்றுள் உயிர்ஒம்பா மாயுமே

மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில்
ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள்
ஏயாஎண் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டு
ஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே

ஆறுஐந்து பன்னொன்றும் அன்றி சகமார்க்கம்
வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடு
ஏறும் இருப தொருநாள் இடைத்தோங்கும்
ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே

செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமே
எய்யும் கலைகாலம் இந்து பருதிகால்
நையுமிடத்து ஓடி நன்கா நூல்நெறி
செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே

விடுங்காண் முனைந்துஇ திரியங்க ளை போல்
நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ண
படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டு
கடுங்காற் கரணம் கருத்துற கொண்டே

கொண்ட குணனே நலமேநற் கோமளம்
பண்டை உருவே பகர்வாய் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும் போதில்
கண்ட கரணம் செல்லக்கண் டேவிடே

விட்டபின் கர்ப்பஉற் பத்தி விதியிலே
தொட்டுறுங் காலங்கள் தோன்ற கருதிய
கட்டிய வாழ்நாள் சாம்நாள் குணம் கீழ்மைசீர
பட்ட நெறியிதுஎன்று எண்ணியும் பார்க்கவே

பார்த்திட்டு வையத்து பரப்பற்று உருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும்
மூப்புற்றே பின்னாளில் ஆம்எல்லாம் உள்ளவே

வித்திடு வோர்க்கு அன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்கு அன்றி மிக்கோர் அறிவில்லை
வித்தினில் வித்தை விதற உணர்வரேல்
மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே

கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்துளன் ஈசன் கருஉயிரோடும்
கருத்தது வித்தா காரண காரியம்
கருத்தறு மாறுஇவை கற்பனை தானே

ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும்
அழியா பிராணன் அதிபலஞ் சத்தி
ஒழியாத புத்தி தபஞ்செப மோனம்
அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே

வற்ற அனலை கொளுவி மறித்தேற்றி
துற்ற சுழியனல் சொருகி சுடருற்று
முற்று மதியத்து அமுதை முறைமுறை
செற்றுண் பவரே சிவயோகி யாரே

யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே

அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணும் கனலிடை கட்டி கலந்தெரித்து
உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே

அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்
பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரி
செறிவாய் இருந்து சேரவே வாயுமே

மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்ன
காதலது ஆகிய காமம் கழிந்திடும்
சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும்
சோதியின் உள்ளே துரிசறும் காலமே

காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலம் கடந்தழி தான்விந்து செற்றவன்
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பறி யாரே

கலக்கு நாள் முன்னாள் தன்னிடை காதல்
நலத்தக வேண்டில் நாரி யுதர
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தை பித்தை
விலக்கு வனசெய்து மேலணை வீரே

மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும்
கோலால் நடத்தி குறிவழி யேசென்று
பாலாம் அமிர்துண்டு பற்றற பற்றினால்
மாலா னதுமான மாளும் அவ்விந்துவே

விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாசமும் நாதத்தால் பேதமும்
தந்துணர் வோர்க்கு சயமாகும் விந்துவே

விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கிய னாலே நயந்தெரிந்து
அந்தமில் பானுஅதிகண்ட மேலேற்றி
சந்திரன் சார்புற தண்ணமு தாமே

அமுத சசிவிந்து வாம்விந்து மாள
அமுத புனலோடி அங்கியின் மான
அமுத சிவயோகம் ஆதலால் சித்தி
அமுத பலாவனம் ஆங்குறும் யோகிக்கே

யோகம் அவ் விந்து ஒழியா வகையுணர்ந்து
ஆகம்இரண்டும் கலந்தாலும் ஆங்குறா
போகம் சிவபோகம் போகிநற் போகமா
மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே

மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து
காதலி னால்விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிராசை கைக்கொண்ட வாடுவர்
காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே

சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்
ஏற்றிய மூல தழலை எழமூட்டி
நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடு
ஆற்றி அமுதம்அருந்தவி தாமே

விந்துவும் நாதமும் மேல கனல்மூல
வந்த அனல் மயிர கால்தோறும் மன்னிட
சிந்தனை மாற சிவம்அக மாகவே
விந்துவும் மாளும்மெ காயத்தில் வித்திலே

வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்து சுட்டு உண்பான்
வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே

அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு
மன்ன பிராணனாம் விந்து மறித்திட்டு
மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட
வன்ன திருவிந்து மாயும் கா யத்திலே

அன்னம் பிராணன்என் றார்க்கும் இருவிந்து
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்கு
சொன்ன மாம்உரு தோன்றும்எண் சித்தியாம்
அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே

நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவை
சென்று பராசக்தி விந்து சயந்தன்னை
ஒன்ற உரைக்க உபதேசம் தானே

தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லை
வானே உயர்விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே

விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்தஇ பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
அந்தமும் ஆதியும் திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே

வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறும் நீள்வரை ஒட்டி
பொறிக்கின்ற வாறும்அ பொல்லா வினையை
அறுக்கின்ற வாறும்அ பொல்லா வினையை
அறுக்கின்ற நாள்வரும் அத்தி பழமே

விந்துவும் நாதமும் மேவியுடன் கூடி
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
சுந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்
அங்குஉதி மந்திரம் ஆகுதி யாகுமே

மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம் காமத்தை நாடிலே

சத்தமும் சத்த மனமும் மனக்கருத்து
ஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர்
மெய்த்து அறிகின்ற இடம்அறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே

உரம்அடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய தன்முலை மேவிய கீழ்அங்கி
கருமலை மீமிசை கைக்கீழிற் காலாம்
விரவிய சுந்தரம் மேல்வெளி யாமே
ஆதித்த நிலை அண்டாதித்தன்

செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்கும் தவமே

பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம்
புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன்
இகலற ஏழுல கும்உற வோங்கும்
பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே

ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும்
சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே

தானே உலகுக்கு தத்துவனாய் நிற்கும்
தானே உலகுக்கு தையலு மாய்நிற்கும்
தானே உலகுக்கு சம்புவு மாய்நிற்கும்
தானே உலகுக்கு தண்சுட ராகுமே

வவையமு கோணம் வட்டம் அறுகோணம்
துலையிரு வட்டம் துய்ய விதம்எட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம்
மலைவுற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே

ஆதித்தன் உள்ளி லானமு கோணத்தில்
சோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம்
கேத முறுங்கேணி சூரியன் எட்டில்
சோதிதன் நீட்டில் சோடசம் தானே

ஆதித்த னோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றி கழிந்தது
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
வேத பொருளை விளங்குகி லீரே

பாருக்கு கீழே பகலோன் வரும்வழி
யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே

மண்ணை இடந்துஅதின் கீழொடும்
விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்
கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே

பாரை இடந்து பகலோன் வரும்வழி
யாரும் அறியார் அருங்கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழ்என்பர்
ஊரை உணர்ந்தார் உணர்ந்திரு தாரே
பிண்டாதித்தன்

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றாய நந்தி கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கன் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே

ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்த
னோடே அடங்குகின் றாரே

உருவி புறப்பட்டு உலகை வலம்வந்து
சொருகி கிடக்கும் துறையறி வார்இல்லை
சொருகி கிடக்கும் துறையறி வாளர்க்கு
உருகி கிடக்கும்என் உள்ளன்பு தானே
மன ஆதித்தன்

எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்
எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப
விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி
ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே

சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே

ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி
ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர்
ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்ற
ஆகும்அ பூரணை யாம்என்று அறியுமே

ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி
ஓர் அண்ட தார்க்கும் உணரா உணர்வது
பேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்று
ஆர் அண்ட தக்கார் அறியத்த காரே

ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்
ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லை
முன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார்
இன்பம் இலார்இருள் சூழநின் றாரே
ஞானாதித்தன்

விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்து
அந்த அபரம் பரநாத மாகியே
வந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்து
உந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே

உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்
தெள்ளும் பரநா தின்செயல் என்பதால்
வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்கு
உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே

தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும்
மூவர் பிரான்என முன்னொரு காலத்து
நால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும்
மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே

பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை
மையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறு
செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்
கையிருள் நீங கலந்தெழு தானே

தனிச்சுடர் ஏற்றி தயங்கிருள் நீங்க
அனித்திடும் மேலை அருங்கனி ஊறல்
கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்
நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே

நேரறி வாக நிரம்பிய பேரொளி
போரறி யாது புவனங்கள் போய்வரும்
தேரறி யாத திசையொளி யாயிடும்
ஆரறி வாரிது நாயக மாமே

மண்டல துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்
கண்டி துள்ளே கதிரொளி ஆயிடும்
சென்றிடத்து எட்டு திசையெங்கும் போய்வரும்
நின்றிட தேநிலை நேரறி வார்க்கே

நாபிக்கண் நாசிநயன நடுவினும்
தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியை
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரு மாக உணர்ந்திரு தாரே
சிவாதித்தன்

அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்
சென்றிடு ஞான சிவப்பர காசத்தால்
ஒன்றும் இருசட ராம்அரு ணோதயம்
துன்றிருள் நீங்குதல் போல தொலைந்ததே

கடம் தோறும் கதிரவன்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே

தானே விரிசுடர் மூன்றும்ஒன்றாய் நிற்கும்
தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்
தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன்
தானே வெளியொளி தானிரு டாமே

தெய்வ சுடர்அங்கி ஞாயிறும் திங்களும்
வையம் புனல்அனல் மாருதம் வானகம்
சைவ பெரும்பதி தாங்கிய பல்லுயிர்
ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே
பசு இலக்கணம்

உன்னும் அளவில் உணரும் ஒருவனை
பன்னு மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே

அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில்
துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம்
தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால்
பின்ன மடஅன்னம் பேறணு காதே
புருடன்

வைகரி யாதியும் மாயா மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்து
செய்கரி ஈசன் அனாதியே செய்ததே

அணுவில் அணுவினை ஆதி பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே

படர்கொண்ட ஆலதின் வித்தது போல
சுடர்கொண்டு அணுவினை தூவழி செய்ய
இடர்கொண்ட பாச இருளற ஒட்டி
நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகி
தணிவற நின்றான் சராசரம் தானே
சீவன்

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே

ஏனோர் பெருமையின் ஆயினும் எம்மிறை
ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே

உண்டு தெளிவன் உரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணமில்லை யாயினும்
பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னை
கண்டு சிவனுரு கொள்வர் கருத்துளே

மாயா உபாதி வசத்ததாகும் சேதனத்து
ஆய குருஅரு ளாலே அதில்தூண்ட
ஓயும் உபாதியோடு ஒன்றின் ஒன் றாது உயிர்
ஆய துரியம் புகுந்தறி வாகவே
பசு

கற்ற பசுக்கள் கதறி திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போலும்
மற்றை பசுக்கள் வறள்பசு தானே

கொல்லையின் மேயும் பசுக்களை செய்வதென்
எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி
வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே
போதன் அறிஞன்

சீவன் எனச்சிவன் என்னவே றில்லை
சீவ னார்சிவ னாரை அறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே

குணவிள காகிய கூத்த பிரானும்
மனவிள காகிய மன்னுயிர கெல்லாம்
பணவிள காகிய பல்தலை நாகம்
கணவிள காகிய கண்காணி யாகுமே

அறிவாய் அறியாமை நீங்கி யவனே
பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன்
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்
செறிவாகி நின்றஅ சீவனும் ஆகுமே

ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்
ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே

சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார்
அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார்
தவமான செய்து தலைப்பறி கின்றார்
நவமான தத்துவம் நாடாகி லாரே

நாடோ றும் ஈசன் நடத்தும் தொழில்உள்ளார்
நாடோ றும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடோ றும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்
நாடோ றும் நாடார்கள் நாள்வினை யாளரே
ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை

ஆக மதத்தன ஐந்து களிறுள
ஆக மதத்தறி யோடுஅணை கின்றில
பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றிஅறி யோமே

கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்தி பாகன்
திருத்தலும் பாய்மா திகைத்தன்றி பாயா
எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழிநட வாதே

புலம் ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்
நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து
குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம்வந்து போம்வழி ஒன்பது தானே

அஞ்சுள சிங்கம் அடவியல் வாழ்வன
அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும்
அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே

ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்
ஐவரும் மைந்தரும் ஆள கருதுவர்
ஐவரும் ஐந்த சினத்தொட நின்றிடில்
ஐவர்க்கு சிறைஇறுத்து ஆற்றகி லோமே

சொல்லகில் லேன்சுடர சோதியை நாடொறும்
சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள
வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்லநின் றோடும் குதிரைஒ தேனே

எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறை
எண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும்
எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்
எண்ணிலி இல்லதோடு இன்பமது ஆமே

விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
துதியின் பெருவலி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே
ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை

குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே

கிடக்கும் உடலின் கிளர்இ திரியம்
அடக்க லுறும் அவன்தானே அமரன்
விடக்கிண்டு இன்புற மேவுறு சிந்தை
நடக்கின் நடக்கும்

அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே

முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்றும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடி பெருங்கேடு மண்டி
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே

ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே

பெருக்க பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம்
பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம்
அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே

இளைக்கின்ற வாறுஅறிந்து இன்னுயிர் வைத்த
கிளைக்குஒன்றும் ஈசனை கேடில் புகழோன்
தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்க
துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே

பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி
சார்ந்திடும் ஞான தறியினில் பூட்டிட்டு
வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில்
வேய்ந்துகொள் மேலை விதியது தானே

நடக்கின்ற நந்தியை நாடோ றும் உன்னில்
படர்க்கின்ற சிந்தை பைய ஒடுக்கி
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே

சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழவதில் தாங்கலும் ஆமே

போற்றிசை துப்புனி தன்திரு மேனியை
போற்றிசெய் மீட்டே புலன்ஐந்தும் புத்தியால்
நாற்றிசை கும்பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுக உள்ளத்து ஒருங்கலும் ஆமே

தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே

கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள்
எய்தி அவனை இசையினால் ஏத்துமின்
ஐவருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே
அசற்குரு நெறி

உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஒ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே

மந்திர தந்திர மாயோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்து பார்ப்பவர்
சிந்தனை செய்யா தெளிவியாது ஊண்பொருட்டு
அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே

ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்கா கலதி கலதிகட்கு
ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன்அச தாகும் குரவனே

கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால்
தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும்
நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றே
முற்பால நந்தி மொழிந்துவை தானே

குருடர்க்கு கோல்காட்டி செல்லும் குருடர்
முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்
குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே
சற்குரு நெறி

தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறி தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்து சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே

தவிரவை தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவை தான்சிர தோடுதன் பாதம்
தவிரவை தான்நமன் தூதுவர் கூட்டம்
தவிரவை தான் பிற வித்துயர் தானே

கறுத்த இரும்பே கனகமது ஆனால்
மறித்துஇரும் பாகா வகையது போல
குறித்தஅ போதே குருவருள் பெற்றான்
மறித்து பிறவியல் வந்தணு கானே

பாசத்தை நீக்கி பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலமற நீக்குவோர்
ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்று
பூசற்கு இரங்குவோர் போத குருவன்றே

நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்ற
நேயத்தை நல்கவல் லோன்நித்தன் சுத்தனே
ஆயத்த வர துவம் உணர தாங்குஅற்ற
நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே

பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே

தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்படில்
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற
ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே

வரும்வழி போம்வழி மாயா வழியை
கருவழி கண்டவர் காணா வழியை
பெரும்வழி யாநந்தி பேசும் வழியை
குருவழியே சென்று கூடலும் ஆமே

குருஎன் பவனே வேதாக மங்கூறும்
பரஇன்ப னாகி சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை யின்றி உயிர்பாசம் நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டி
சித்தும் அசித்தும் சிவபர தேசேர்த்து
சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்
அத்தன் அருட்குரு வாம்அவன் கூறிலே

ஊற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினை
பற்றறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம் மூன் றால்வாட்டி
தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே

எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம்
வலலார் புலனும் வருங்கால் உயிர்தோன்றி
சொல்லா மலம்ஐந்து அடங்கிட்டு ஓங்கியே
செலலா சிவகதி சேர்தல்விளை யாட்டே

ஈன பிறவியில் இட்டது மீட்டுட்டி
தானத்துள் இட்டு தனையூட்டி தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே

அத்தன் அருளின் விளையா டிடம்சடம்
சித்தொடு அசித்துஅற தெளிவித்த சீவனை
சுத்தனும் ஆக்கி துடைத்து மலத்தினை
சத்துடன் ஐங்கரு மத்திடும் தன்மையே

ஈசத்து வங்கடந்து இல்லையென்று அப்புறம்
பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
தேசத்தை எல்லாம் தெளியவை தானே

மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்
ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்தது
பேணிக்கொண்டு உண்டார் பிறப்பற்று இருந்த
ஊனுக்கு இருந்தார் உணராத மாக்களே

அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க
இசைத்திடு பாசப்பற்று ஈங்குஅறு மாறே
அசைத்துஇரு மாயை அனுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்றறி விப்போன் இறையே

ஏறு நெறியே மலத்தை எரித்தலால்
ஈறில் உரையால் இருளை அறுத்தலான்
மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குருவாம் இயம்பிலே
கூடா ஒழுக்கம்

கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யா கலந்தெங்கும் நின்றானை
கண்காணி கண்டார் களஒழி தாரே

செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்து
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர் தொழ செய்வான்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே

பத்துவிற் றுண்டு பகலை கழிவிடும்
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே

வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லை
நடக்க உறுவரே ஞானமி ல்லாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே

கா குழப்பனை காயநன் னாடனை
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியை
தேயத்து ளேஎங்கும் தேடி திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே

கண்காணி யாகவே கையக தேயெழும்
கண்காணி யா கருத்துள் இருந்திடும்
கண்காணி யா கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் தானே

கன்னி ஒருசிறை கற்றோர்
மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை
தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை
என்னிது ஈசன் இயல்புஅறி யாரே

காணாத கண்ணில் படலமே கண்ணொளி
காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி
காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணை
காணாது கண்டார் களவொழி தாரே

பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியும் தன் கண்ணொளி
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தர
சித்தம் தெளிந்தோன் செயல் ஒழிந்தேனே

பிரான்பல மாக பெயர்ந்தன எட்டும்
பராமயம் என்றெண்ணி பள்ளி யுணரார்
சுராமயம் முன்னிய சூழ்வினை யாளர்
நிராமய மாக நினை பொழி தாரே

ஒன்றுஇரண் டாகிநின்று ஒன்றிஒன் றாயினோர்க்கு
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்றுஇரண்டு என்றே உரைதரு வோர்க்கெலாம்
ஒன்றுஇரண் டாய் நிற்கும் ஒன்றோடுஒன் றானதே

உயிரது நின்றால் உணர்வுஎங்கு நிற்கும்
அயர்அறி வில்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உணலும் ஒருங்கி கிடக்கும்
பயிரும் கிடந்துள்ள பாங்கு அறி யாரே

உயிரது வேறாய் உணர்வுஎங்கும் ஆகும்
உயிரை அறியில் உணர்வுஅறி வாகும்
உயிர்அன்று உடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே

உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நிலவாணி ஐந்தினுள் தேருற நிற்கும்
சிலவாணி யாகிய தேவர் பிரானை
தலைவாணி செய்வது தன்னை அறிவதே

தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர்
ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
தேன்அந்த மாய்நின்று சிற்றின்பம் நீஒழி
கோன்அந்தம் இல்லா குணத்தரு ளாமே

உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை
நல்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே

இந்தியம் அந்த கரணம் இவைஉயிர்
வந்தன சூக்க உடலன்று மானது
தந்திடும் ஐவி தால்தற் புருடனும்
முந்துளம் மன்னும் ஆறாறு முடிவிலே
கேடு கண்டு இரங்கல்

வித்து பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாணாள் அறிகிலா பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி தீயின் முனிகின்ற வாறே

போது சடக்கென போகின் றதுகண்டும்
வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து
ஆதியை அன்பில் அறியகில் லார்களே

கடன்கொண்டு நெற்குத்து கையரை
உடம்பினை ஓம்பி உயிரா திரிவார்
தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே

விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை ஓரா பழிமொழி யாளர்
உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே

நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும்
என்றுஎம் ஈசன் அடியவர கேநல்கும்
அன்றி உலகம் அதுஇது தேவுஎன்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே

இன்பத்து ளேபிறந்து
இன்பத்து ளேநினை கின்றது இதுமறந்து
துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே

பெறுதற்கு அரிய பிறவியை பெற்றும்
பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறுஇழ தாரே

ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்து
தீர வருவதோர் கா தொழில்நின்று
மாதவன் இன்பம் மறந்தொழி தார்களே

இப்பரி சேஇள ஞாயிறு போலுரு
அப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானை
இப்பரி சேகம லத்துறை ஈசனை
மெய்ப்பரி சேவினை வாதுஇரு தோமே

கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசி திரிவர்கள்
பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்து
ஆடவல் லார்அவர் பேறெது வாமே

நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர்
நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும்
துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில்
அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே

மிருக மனிதர் மிக்கோர் பறவை
ஒருவர்செய்து அன்புவைத்து உன்னாதது இல்லை
பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்
திருமருவு மாதவம் சேர்ந்துஉணர தோரே

நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனை
சோதியி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லை
ஆதி பயனென்று அமரர் பிரான்என்ற
நாதியே வைத்தது நாடுகின் றேனே

இருந்தேன் மலர்அளைந்து இன்புற வண்டு
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வருந்தேன் நுகராது வாய்புகு தேனை
அருந்தேனை யாரும் அறியகி லாரே

கருத்தறி யாது கழிந்தன காலம்
அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
ஒருத்தன்உள் ளான் உல கத்துயிர்க்கு எல்லாம்
வருத்திநில் லாது வழுக்கின் றாரே

குதித்தோடி போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தென நாள்களும் வீழ்ந்து கழிந்த
விதிர்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில்
கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே

கரைஅருகு ஆறா கழனி வளைந்த
திரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின்
நரைஉரு வாச்செல்லும் நாள்கில வாமே

வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து
இரவுஅறி வானை எழுஞ்சுடர சோதியை
அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று
விரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே
இதோபதேசம்

மறந்தொழி மண்மிசை மன்னா பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே

செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை
நல்ல அரநெறி நாடுமின் நீரே

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே

போற்றிசெய் அந்தண் கயிலை பொருப்பனை
நாற்றிசை கும்நடு வாய்கின்ற நம்பனை
காற்றிசை கும் கமழ்ஆக்கையை கைக்கொண்டு
கூற்றுதை தான்தன்மை கூறிநின்று உய்ம்மினே

இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்
எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று
அக்காலம் உன்ன அருள்பெற லாமே

போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன்அறிவான்உளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே

பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னை
பிறப்பொன்றும் இலாமையும் பேருல காமே

கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனை
பாடியுளே நின்று பாதம் பணிமின்கள்
ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்று பசுவது ஆமே

விடுகின்ற சிவனார் மேல்எழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவ ரோடே

ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சுடை அண்ணல் திருவடி
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே

இன்புறு வீர்அறி தேஎம் இறைவனை
அன்புறு விர்தவம் செய்யும்மெய்ஞ் ஞானத்து
பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்று
துன்புறு பாசத்து உழைத்துஒழி தீரே

மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே

சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன்
பேர்ந்தவர்க்கு இன்னா பிறவி கொடுத்திடும்
கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல்காட்டிடும்
சேர்ந்தவர் தேவரை சென்றுணர் வாரே

முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்த்தலை பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி அதுவிரும் பாரே

நியமத்த னாகிய நின்மலன் வைத்த
உகம்எ தனையென்று ஒருவரும் தேறார்
பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால்
சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே

இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்
துஞ்சொத்த காலத்து தூய்மணி வண்ணனை
விஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னை
நஞ்சுஅற் றவர்க்குஅன்றி நாடஒண் ணாதே

பஞ்சமும் ஆம்புவி சற்குறுபால்முன்னி
வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மை
அஞ்சுவன் நாதன் அருநர கத்துஇடும்
செஞ்சநிற் போரை தெரிசிக்க சித்தியே

சிவனை வழிபட்டார் எண்ணிலா தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே

நரரும் சுரரும் பசுபாசம்நண்ணி
கருமங்க ளாலே கழிதலில் கண்டு
குருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால்
பரம்என்றல் அன்றி பகர்ஒன்றும் இன்றே

ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண்டவர்வினை போயற நாடொறும்
நீர்க்கின்ற செஞ்சுடை நீளன் உருவத்தின்
மேற்கொண்ட வாறுஅல்லை வீவித்து ளானே
ஏழாம் தந்திரம் முற்றிற்று


திருமந்திரம்
எட்டாம் தந்திரம் சுப்பிராமேம்
உடலிற் பஞ்சபேதம்

காயப்பை ஒன்று சரக்கு பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே

அத்தன் அமைத்த உடல்இரு கூறினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே

எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்
ஒட்டிய பாசம் உணர்வுஅது வாகவே
கட்டி அவிழ்ந்திடும் கண்ணுதல் காணுமே

இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவ மலால்உடல் ஒன்றென லாமே

ஆரே அறிவார் அடியின் பெருமையை
யாரே அறிவார் அங்கவர் நின்றது
யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை
யாரே அறிவார் அடிக்காவல் ஆனதே

எண்சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்
கண்கால் உடலில் சுரக்கின்ற கைகளில்
புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்கின்ற
நண்பால் உடம்பு தன் னால் உடம் பாமே

உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியாக பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றது ஆரறி வாறே

ஆறுஅந்த மாகி நடுவுடன் கூடினால்
தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்
கூறுங் கலைகள் பதினெட்டும் கூடியே
ஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே

மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும்
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே

காயும் கடும்பரி கால்வைத்து வாங்கல் போல்
சேய இடம்அண்மை செல்லவும் வல்லது
கா துகிர் போர்வை ஒன்றுவிட்டு ஆங்குஒன்றிட்டு
ஏயும் அவரென்ன ஏய்ந்திடும் காயமே

நாகம் உடல்உரி போலும்நல் அண்டச
மாக நனாவில் கானாமற தல்லது
போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்று
ஏகும் இடம்சென்று இருபயன் உண்ணுமே

உண்டு நரக சுவர்கத்தில் உள்ளன
கண்டு விடும்சூக்கம் காரண மாச்செல
பண்டு தொடர பரகாய யோகிபோல்
பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே

தான்அவ னாகிய தற்பரம் தாங்கினோன்
ஆனவை மாற்றி பரமத்து அடைந்திடும்
ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே

ஞானிக்கு காயம் சிவமாகும் நாட்டிடில்
ஞானிக்கு காயம் உடம்பே அதுவாகும்
மேனிக்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும்
மோனிக்கு காயம்மு பாழ்கெட்ட முத்தியே

விஞ்ஞான தோர்க்குஆ ணவமே மிகுதனு
எஞ்ஞான தோர்க்கு தனுமாயை தான்என்ப
அஞ்ஞான தோர்க்கு கன்மம் தனுவாகும்
மெஞ்ஞான தோர்க்கு சிவதனு மேவுமே

மலமென்று உடம்பை மதியாத ஊமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென்று இதனையே நாடி இருக்கில்
பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் அண்டத்தே

நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே
அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே
உடல்விடல்

பண்ணாக்கும் காமம் பயிலும் வசனமும்
விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்
புண்ணாம் உடலில் பொருந்தும் மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே

அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகள்
கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே

இலையாம் இடையில் எழுகின்ற காமம்
முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்து
தலையாய மின்னுடல் தாங்கி திரியும்
சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே
அவத்தை பேதம் கீழால்

ஐஐந்து மத்திமை யானது சாக்கிரம்
கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண் டிலாத புருடன்இத யம் சுழுனை
மெய்கண் டவன் உந்தி ஆகும் துரியமே

முப்பதோடு ஆறின் முதல்நனா ஐந்தாக
செப்புஅதில் நான்கா திகழ்ந்திரண்டு ஒன்றாகி
அப்பதி யாகும் நியதி முதலாக
செப்பும் சிவம்ஈறா தேர்ந்துகொள் ளீரே

இந்தியம் ஈரைந்து
மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும் அந்த
கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
பந்தஅ சாக்கர பாலது ஆகுமே

பாரது பொன்மை பசுமை உடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கறுப்பை உடையது
வானகம் தூமம் மறைந்துநின் றாரே

பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை
ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு
ஆதி அவத்தை கருவிதொண் ணூற்றாறே

இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை
படுபர சேனையும் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறும் நால்வர்
அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே

உடம்பும் உடம்பை
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே

இருக்கின்ற வாறுஒன்று அறிகிலர் ஏழைகள்
மருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்து
உருக்கொண்டு தொக்க உடல்ஒழி யாதே

ஒளித்திட்ட டிருக்கும் ஒருபதி னாலை
அளித்தவன் என்னுள்ளே ஆரியன் வந்து
அளிக்கும் கலைகளி னால்அறு பத்து
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே

மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும்
பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓர்ஒன்றாய்
உன்னின் முடிந்தது ஒருபூத சயமே

முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள்இல்லை
கன்னியை கன்னியே காதலி தானே

கண்டன ஐந்தும் கலந்தனதான் ஐந்தும்சென்று
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டைய தாகி பரந்து வியாக்கிரத்து
அண்டமும் தானாய் அமர்ந்துநின்றானே

நின்றவன் நிற்க பதினாலில் பத்துநீத்து
ஒன்றிய அங்த கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே

தானம் இழந்து தனிபுக்கு இதயத்து
மானம் அழிந்து மதிகெட்டு மாலாகி
ஆன விரிவுஅறி யாஅவ் வியத்தத்தில்
மேனி அழிந்து கழுத்தியது ஆமே

கழுமுனையை சேர்ந்துள மூன்றுடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழு கமலத்தின் உள்ளே யிருந்து
விழு பொருளுடன் மேவிநின் றானே

தானத்து எழுந்து தருக்கு துரியத்தின்
வானத்து எழுந்துபோய் வையம் பிறகிட்டு
கானத்து எழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்து அவித்தைவிட்டு ஊமன்நின் றானே

ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை அகத்தினில் அஞ்சம் அடங்கிடும்
ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது
நாமயம் அற்றது நாம்அறி யோமே

துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே
நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன
பரிய புரவியும் பாறி பறந்தது
துரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே

மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையில்
வேறாய மாயா தநுகர ணாதிக்குஇங்கு
ஈறாகா தேஎவ்வுயிரும் பிறந்துஇறந்து
ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே

உண்ணும்தன் ஊடாடது ஊட்டிடு மாயையும்
அண்ணல் அருள்பெற்ற முத்தியது ஆவது
நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்து
எண்னுறு ஞானத்தின் நேர்முத்தி எய்துமே

அதிமூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
நிதமான கேவலம் இத்திறம் சென்று
பரமாகா ஐஅவ தைப்படு வானே

ஆசான்முன் னேதுயில் மாண வகரை
தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
நேசாய ஈசனும் நீடுஆண வத்தரை
ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே

மஞ்சொடு மந்தா கினிகுட மாம்என
விஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதி
எஞ்சலில் ஒன்றெனு மாறுஎன இவ்வுடல்
அஞ்சணும் மன்னன்அன் றேபோம் அளவே

படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடிவுடை மாநகர் தான்வரும் போது
அடியுடை ஐவரும் அங்குஉறை வோரும்
துடியில்லம் பற்றி துயின்றனர் தாமே

நேரா மலத்தை நீடுஐந்து அவத்தையின்
நேரான வாறுஉன்னி நீடு நனவினில்
நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே
மத்திய சாக்கிர அவத்தை

சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி
சாக்கிர சொப்பனம் தன்னிடை மாமாயை
சாக்கிரம் தன்னில் அழுத்திதற் காமியம்
சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே

மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்
நேய இராகாதி ஏய்ந்த துரியத்து
தோயும் கழுமுனை கனாநனா வும்துன்னி
ஆயினன் அந்த சகலத்துஉ ளானே

மேவிய அந்த கண் விழிகண் குருடனாம்
ஆவயின் முன்அடி காணு மதுகண்டு
மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற
மூவயின் ஆன்மா முயலும் கருமமே

மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள்
ஒத்துஅங் கிருந்து உயிருண்ணு மாறுபோல்
அத்தனும் ஐம்பொறி ஆடகத்துள் நின்று
சத்த முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே

வைச்சன வச்சு வகையிரு பத்தஞ்சும்
உச்சம் உடன்அணை வான்ஒரு வன்உளன்
பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று
நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே

நாலா றுடன்புருடன் நல துவமுடன்
வேறான ஐந்து மெய்ப்புரு டன்பரன்
கூறா வியோமம் பரம்என கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்த தத்துவமே

ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை
கோலங்கொண்டு ஆங்கே குணத்துடன் புக்கு
மூலங்கொண்டு ஆங்கே முறுக்கிமு கோணிலும்
காலங்கொண் டான்அடி காணலும் ஆமே

நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடும்
கூடிய காமம் குளிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே

ஆவன ஆக அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்து கண்டவன்
ஏவன செய்யும் இலங்கிழை யோனே

பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேலை துரியமும்
தத்துவ நாலேழ் எனஉன்ன தக்கதே

விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒருபான்
தளங்கொள் இரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே

நாலொரு கோடியே நாற்பத்தொண் ணாயிரம்
மேலுமோர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்
பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவை
கோலிய ஐந்துள் ஆகும் குறிக்கிலே

ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர்
ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே

தத்துவ மானது தன்வழி நின்றிடில்
வித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
பொய்த்துவ மாம்அவை போயிடும் அவ்வழி
தத்துவம் ஆவது அகார எழுத்தே

அறிவொன் றிலாதன ஐஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீஎன்று அருள்செய்தார் நந்தி
அறிகின்ற நானென்று அறிந்து கொண்டேனே

சாக்கிர மாதி
ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி
போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறு
நீக்கி நெறிநின்றுஒன்று ஆகியே நிற்குமே

ஆணவ மாதி மலம்ஐந்து அவரோனுக்கு
ஆணவ மாதிநான் காம்மாற்கு அரனுக்கு
ஆணவ மாதிமூன்று ஈசர்க்கு இரண்டென்ப
ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே
அத்துவாக்கள்

தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடி
மெய்த்தரு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினி
ஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்று
வைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே

நாடிய மண்டலம் மூன்றும் நலந்தெரிந்து
ஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும்
கூடுவர் கூடி குறிவழி யேசென்று
தேடிய பின்னர திகைத்திரு தார்களே

சாக்கிர மாதி
ஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்து
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்துஅது
தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயவே
சுத்த நனவாதி பருவம்

நானவாதி தூலமே சூக்க பகுதி
அனதான ஐஐந்தும் விந்துவின் சத்தி
தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து
கனவா நனவில் கலந்ததுஇவ் வாறே

நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவுஓட நன்செய்தி யானதே

செறியுங் கிரியை சிவ துவமாம்
பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி
குறிதல் திருமேனி குணம்பல வாகும்
அறிவில் சராசரம் அண்ட தளவே

ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம்
ஏதம்இல் ஈசன்நல் வித்தியா தத்துவம்
போதம் கலைகாலம் நியதிமா மாயை
நீதிஈ றாக நிறுத்தினன் என்னே

தேச திகழ்சிவம் சத்தி சதாசிவம்
ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம்
மாசகல் வித்தை நியதி மகாமாயை
ஆசில் புருடாதி ஆன்மாஈ றாறே

ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைக்கு தவிடுஉமி ஆன்மாவும்
தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே

பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்
பசுக்கள் தலைவனை பற்றி விடாவே

உடல்இ தியம்மனம் ஒண்புத்தி சித்தம்
அடலொன்று அகந்தை அறியாமை மன்னி
கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே

தன்தெரியாத அதீதம்தற்கு ஆணவம்
சொல்தெரி கின்ற துரியம்சொல் காமியம்
பெற்ற சுழுத்திப்பின் பேசுறும் காதலாம்
மற்றது உண்டி கனவுநன வாதலே

நனவில் கனவுஇல்லை ஐந்து
கனவிலா சூக்குமம் காணும் சுழுத்தி
தனலுண் பகுதியே தற்கூட்டும் மாயை
நனவில் துரியம் அதீதம் தலைவந்தே

ஆறாறில் ஐஐந்து அகல நனாநனா
ஆறாம் அவைவிட ஆகும் நனாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இதில்மாயை தானே

மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகி
சேயதே வலவி துடன் செல்ல சென்றக்கால்
ஆய தனுவின் பயனில்லை யாமே

அதீ துரியத்து அறிவனாம் ஆன்மா
அதீ துரியம் அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே

ஐஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஐஐந்தில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையின்
மெய்கண்டவன்உந்தி மேவல் இருவரே

புரி டகமே பொருந்தல் நனவு
புரி டகந்தன்னில் மூன்று கனவு
புரி டகத்தில் இரண்டு கழுத்தி
புரி டகத்தொன்று புக்கல் துரியமே

நனவில் நனவு புனலில் வழக்கம்
நனவிற் கனவு நினைத்தல் மறத்தல்
நனவிற் சுழுத்திஉள் நாடல் இலாமை
நனவில் துரியம் அதீதத்து நந்தியே

கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்
கனவினில் கண்டு மறத்தல் கனவாம்
கனவில் சுழுத்தியும் காணாமை காணல்
அனுமாதி செய்தலில் ஆன துரியமே

சுழுத்தி நனவுஒன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்தி கனவுஅதன் உண்மை சுழுத்தியில்
சுழுத்தி அறிவுஅறி வாலே அழிகை
சுழுத்தி துரியமாம் சொல்லறும் பாழே

துரிய நனவாம் இதமுணர் போதம்
துரி கனவாம் அகமுணர் போதம்
துரி சுழுத்தி வியோமம் துரியம்
துரியம் பரமென கோன்றிடும் தானே

அறிவுஅறி கின்ற அறிவு நனவாம்
அறிவுஅறி யாமை அடை கனவாம்
அறிவுஅறி அவ்அறி யாமை சுழுத்தி
அறிவுஅறி வாகும் ஆன துரியமே

தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு
ஞானம் தனதுரு வாகி நயந்தபின்
தான்எங்கு மாய்நெறி நின்றது தான்விட்டு
மேல்நந்த சூக்கம் அவைவண்ணம் மேலிட்டே

ஐஐந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுழுத்தியாம்
மெய்யும்பின் சூக்கமும் மெய்ப்பகுதி மாயை
ஐயமும் தான்அவன் அத்துரி யத்தனே

ஈதென்று அறிந்திலன் இத்தனை காலமும்
ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின்
ஈதென்று அறியும் இயல்புடை யோனே

உயிர்க்குஉயி ராகி உருவாய் அருவாய்
அயல்புணர் வாகி அறிவா செறிவாய்
நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி
இயற்பின்றி எல்லாம் இருண்மூட மாமே

சத்தி இராகத்தில் தான்நல் உயிராகி
ஒத்துறி பாச மலம்ஐந்தோடு ஆறாறு
தத்துவ பேதம் சமைத்து கருவியும்
வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே

சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை
சாக்கிரா தீதம் துரியத்தில் தானுற
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான்விடா
சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே

மலக்கல பாலே மறைந்தது சத்தி
மலக்கல பாலே மறைந்தது ஞானம்
மலக்கல பாலே மறைந்தனன் தாணு
மலக்கலப்பு அற்றால் மதியொளி யாமே

திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்கு பாலிரண் டாமே

கதறு பதினெட்டு கண்களும் போக
சிதறி எழுந்திடுஞ் சிந்தையை நீரும்
விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால்
அதிர வருவதோர் ஆனையும் ஆமே

நனவக தேயொரு நாலைந்தும் வீட
கனவக தேஉள் கரணங்க ளோடு
முனவக தேநின்று உதறியு புக்கு
நினைவகத்து இன்றி சுழுத்திநின் றானே

நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்
ஒன்றி உலகின் நியமாதிகள் உற்று
சென்று துரியாதீ தத்தே சிலகாலம்
நின்று பரனாய் நின்மல னாமே

ஆனஅவ் ஈசன் அதீதத்தில் வித்தையா
தான்உலகு உண்டு சதாசிவ மாசத்தி
மேனிகள் ஐந்தும்போல் விட்டு சிவமாகி
மோனம் அடைந்தொளி மூல னாமே

மண்டலம் மூன்றினுள் மாயநன் நாடனை
கண்டுகொண்டு உள்ளே கருதி கழிகின்ற
விண்டவர் தாமரை மேலொன்றும் கீழாக
அண்டமும் தானாய் அகத்தினுள் ஆமே

போதறி யாது புலம்பின புள்ளினம்
மாது அறி யாவகை நின்று மயங்கின
வேதுஅறி யாவணம் நின்றனன் எம்இறை
சூதறி வாருச்சி சூடிநின் றாரே

கருத்தறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே
பொருந்தறி தேன்புவ னாபதி நாடி
திருத்தறி தேன்மிகு தேவர் பிரானை
பருத்தறி தேன்மனம் மன்னிநின் றேனே

ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்ன
தான விளக்கொளி யாம்மூல சாதனத்து
ஆன விதிமூல தானத்தில் அவ்விளக்கு
ஏனை மதிமண்ட லம்கொண்டு எரியுமே

உள்நாடும் ஐவர்க்கு மண்டை ஓதுங்கிய
விண்நாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்துஐவர் கூடிய சந்தியில்
கண்நாடி காணும் கருத்ததுஎன் றானே

அறியாத வற்றை அறிவான்
அறிவான் அறியாதான் தன்னறிவு ஆகான்
அறியா தவத்தை அறிவானை கூட்டி
அறியாது அறிவானை யார்அறிவாரே

துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
அரியன தூடணம் அந்தண வாதி
பெரியன கால பரம்பின் துரியம்
அரிய அதீதம் அதீதத்த தாமே

மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன்
மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்
கேவல மாகும் சகலமா யோனியுள்
தோயும் மனிதர் துரியத்துள் சீவனே
கேவல சகல சுத்தம்

தன்னை அறிசுத்தன் தற்கேவ லன்தானும்
பின்னம் உறநின்ற பேத சகலனும்
மன்னிய சத்தச துச்சத சத்துடன்
துன்னவர் தத்தம் தொழில்கள் வாகவே

தானே தனக்கு பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்கு தலைவனும் ஆமே

ஆமுயிர் கேவலம் மாமாயை யின்நடந்து
ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்று
காமியம் மாமேய மும்கல வாநிற்ப
தாம்உறு பாசம் சகலத்து ஆமே

சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர்
நிகரில் மலரோன்மால் நீடுபல் தேவர்கள்
நிகழ்நரர் சீடம் அந்தமும் ஆமே

தாவிய மாயையில் தங்கும் பிரளயம்
மேவிய மற்றது உடம்பாய்மி குள்ளன
ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட்டு உருத்திர ராமே

ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர்
ஆகின்ற வித்தேச ராம்அன தாதியர்
ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே

ஆம்அவ ரில்சிவ னார்அருள் பெற்றுளோர்
போம்மல தன்னால் புகழ்விந்து நாதம்விட்டு
ஒம்மய மாகி ஒடுங்கலின் நின்மலம்
தோம்அறும் சுத்த அவத்தை தொழிலே

ஒரினும் மூவகை நால்வகை யும்உள
தேரில் இவைகே வலம்மாயை சேர்இச்சை
சார்இய லாயவை தாமே தணப்பவை
வாரிவைத்து ஈசன் மலம்அறு தானே

பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டகன்று
எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி
மெய்யாம் சராசர மாய்வெளி தன்னுட்புக்கு
எய்தாமல் எய்தும்சு தாவத்தை என்பதே

அனாதி பசுவியாத்தி யாகும் இவனை
அனாதியில் வந்த மலம்ஐந்தால் ஆட்டி
அனாதியில் கேவலம் அச்சக லத்திட்டு
அனாதி பிறப்புற சுத்தத்துள் ஆகுமே

அந்தரம் சுத்தாவ தைகே வலத்தாறு
தந்தோர்தம் சுத்தகே வலத்தற்ற தற்பர
தின்பால் துரி திடையே அறிவுற
தன்பால் தனையறி தத்துவ தானே

ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்
மெய்கண்டு சுத்த அவத்தையில் வீடாகும்
துய்யஅவ் வித்தை முதன்மூன்றும் தொல்சத்தி
ஐயன் சிவன்சத்தி யாம்தோற்றம் அவ்வாறே

ஐஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கியும்
மெய்கண்ட மேல்மூன்றும் மேவுமெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபாக தேகாண
எய்யும் படியடங்கும் நாலேழ் எய்தியே

ஆணவ தார்ஒன்று அறியாத கேவலர்
பேணிய மாயை பிரளயா கலராகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலர்மு பாசமும் புக்கோரே

ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்கு
பேணிய மாயை பிரளயா கலருக்கே
ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே
காணும் சகலர்க்கு காட்டும் மலங்களே

கேவலம் தன்னில் கிளர்ந்தவிஞ் ஞாகலர்
கேவலம் தன்னில் கிளர்விந்து சத்தியால்
பூவயின் கேவலத்து அச்சக லத்தையும்
மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே

மாயையில் மன்னும் பிரளயா கலர்வந்து
மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவ
மாய சகலத்து காமிய மாமாயை
ஏயமன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே

மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர்
அம்மெ சகலத்தர் தேவர் சுரர்நரர்
மெய்ம்மையில் வேதா விரிமிகு கீடாந்தத்து
அம்முறை யோனிபுக்கு ஆர்க்கும் சகலரே

சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மல
சத்துஅசத்து ஓட தனித்தனி பாசமும்
மத்த இருள்சிவ னான கதிராலே
தொத்தற விட்டிட சுத்தஆ வார்களே

தற்கே வலம்முத்தி தானே தனிமையாம்
பிற்பால் சகலம் கலாதி பிறிவதாம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே

அறிவின்றி முத்தன் அராகாதி சேரான்
குறியொன்றி லாநித்தன் கூடான் காலதி
செறியும் செயலிலான் தினங்கற்ற வல்லோன்
கிறியன் மலவியாபி கேவலம் தானே

விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்தத ஞான பரையும் தனுச்சுத்தி
விந்துவின் மெய்ஞ்ஞான மேவும் பிரளயர்
வந்த சகலசு தான்மாக்கள் வையத்தே

கேவல மாதியின் பேதம் கிளக்குறில்
கேவல மூன்றும் கிளரும் சகலத்துள்
ஆவயின் மூன்று மதிசுத்த மூடவே
ஓவலில் லாஒன்பான் ஒற்றுணர் வோர்கட்கே

கேவலத்தில் கேவலம் அதீதா தீதம்
கேவல தில்சகலங்கள் வயிந்தவம்
கேவ திறசுத்தம் கேடில்விஞ் ஞாகலர்க்கு
ஆவயின் நாதன் அருண்மூர்த்தி தானே

சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம்
சகல சகலமே சாக்கிர சாக்கிரம்
சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை
சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே

சுத்தத்தில் சுத்தமே தொல்சிவ மாகுதல்
சுத்தத்தில் கேவலம் தொல்லுப சாந்தமாம்
சுத்த சகலம் துரிய விலாசமாம்
சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே

சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடுஞ்
சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே
சாக்கிரா தீதம் தனிற்சுகா னந்தமே
ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே

சாக்கிரா தீதத்தில் தானறும் ஆணவம்
சாக்கிரா தீதம் பிராவத்தை தங்காது
ஆக்கு பரோபதி யாஉப சாந்தத்தை
நோக்கும் மலங்குணம் நோக்குதல் ஆகுமே

பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
சுத்த அதீதமும் தோன்றாமல் தானுணும்
அத்தன் அருள்என்று அருளால் அறிந்தபின்
சித்தமும் இல்லை செயல்இல்லை தானே

எய்திய பெத்தமும் முத்தமும் என்பன
எய்தும் அரன்அரு ளேவிளை யாட்டோ டு
எய்திடு உயிர்சு திடுநெறி என்னவே
எய்தும் உயிர்இறை பால்அறி வாமே

ஐம்மல தாரும் மதித்த சகலத்தர்
ஐம்மல தாரும் அருவினை பாசத்தார்
ஐம்மல தார்சுவர கந்நெறி யான்பவர்
ஐம்மல தார்அர னார்க்குஅறி வோரே

கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதிலுண்ணும் ஆசையும்
உரிய கழுனை முதல்எட்டும் சூக்கத்து
அரிய கனாத்துலம் அந்தன வாமே

ஆணவம் ஆகும் அதிதம்மேல் மாயையும்
பூணும் துரியம் சுழுத்திபொ காமியம்
பேணும் கனவும் மாமாயை திரோதாயி
காணும் நனவில் மலக்கலப்பு ஆகுமே

அரன்முத லாக அறிவோன் அதீதத்தன்
அரன்முத லாமாயை தங்கி சுழுனை
கருமம் உணர்ந்து மாமாயை கைகொண்டோ ர்
அருளும் அறைவார் சகலத்துற் றாரே

உருவுற்று போகமே போக்கியம் துற்று
மருவுற்று பூதம னாதியான் மன்னி
வரும்அ செயல்பற்றி சத்தாதி வைகி
கருவுற் றிடுஞ் சீவன் காணும் சகலத்தே

இருவிடை ஒத்திட இன்னருள் சத்தி
மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னி
குருவினைக்கொண்டருள் சத்திமுன் கூட்டி
பெருமலம் நீங்கி பிறவாமை சுத்தமே

ஆறாறும் ஆறதின் ஐந்து அவத்தையோடு
ஈறாம் அதீ துரியத்து இவன்எய்த
பேறான ஐவரும் போம்பிர காசத்து
நீறார் பரம்சிவம் ஆதேய மாகுமே

தன்னை அறியாது உடலைமுன் தான்என்றான்
தன்னைமுன் கண்டான் துரியம் தனைக்கண்டான்
உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடும் தானே

சாக்கிர தன்னில் அதீதம் தலைப்படில்
ஆக்கிய அந்த வயிந்தவம் ஆனந்தம்
நோக்கும் பிறப்புஅறும் நோன்முத்தி சித்தியாம்
வாக்கும் மனமும் மருவல்செய் யாவே

அப்பும் அனலும் அகலத்து ளேவரும்
அப்பும் அனலும் அகலத்து ளேவாரா
அப்பும் அனலும் அகலத்துள் ஏதெனில்
அப்பும் அனலும் கலந்ததுஅவ் வாறே

அறுநான்கு அசுத்தம் அதிசுத்தா சுத்தம்
உறும்ஏழு மாயை உடன்ஐந்தே சுத்தம்
பெறுமாறு இவைமூன்றும் கண்டத்தால் பேதித்து
உறும்மாயை மாமாயை ஆன்மாவி னோடே

மாயைகை தாயாக மாமாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏயும் உயிர்க்கே வலசகலத்து எய்தி
ஆய்தரு சுத்தமும் தான்வந்து அடையுமே
பராவத்தை

அஞ்சும் கடந்த அனாதி பரன்தெய்வம்
நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
வஞ்ச திருந்த வகையறி தேனே

சத்தி பராபரம் சாந்தி தனிலான
சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து
சத்திய மாயை தனுச்சத்தி ஐந்துடன்
சத்தி பெறுமுயிர் தான்அங்கத்து ஆறுமே

ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்
ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்
ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக்கு அப்பால் அரன்இனி தாமே

அஞ்சொடு நான்கும் கடந்துஅக மேபுக்கு
பஞ்சணி காலத்து பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு
நஞ்சுற நாடி நயம்செய்யு மாறே

உரிய நனாத்துரி யத்தில் இவளாம்
அரிய துரிய நனவாதி மூன்றில்
பரிய பரதுரி யத்தில் பரனாம்
திரிய வரும்துரி யத்தில் சிவமே

பரமாம் அதீதமே பற்றற பற்ற
பரமாம் அதீதம் பயில
பரமாம் அதீதம் பயிலா தபோதனார்
பரமாகார் பாசமும் பற்றொன்றுஅ றாதே

ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும்
வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின்
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே

துரி பரியில் இருந்தஅ சீவனை
பெரிய வியாக்கிர துள்ளே புகவிட்டு
நரிகளை ஓட துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள் நின்று ஓலமி டன்றே

நின்றஇ சாக்கிர நீள்துரி யத்தினின்
மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன்வடி வாமே

விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை ஈடான மாயை
பொருந்தும் துரியம் புரியல்தா னாகும்
தெரிந்த துரியத்து தீதுஅக லாதே

உன்னை அறியாது உடலைமுன் நான்ஒன்றாய்
உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய்
தன்னை அறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே

கருவரம்பு ஆகிய காயம் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்புஇறப்பு உற்றார்
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
இருவரும் இன்றிஒன் றாகி நின் றாரே

அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆனகனவும்
அணுஅசை வில்பரா தீதம் கழுத்தி
பணியில் பரதுரி யம்பர மாமே

பரதுரி யத்து நனவும் பரந்து
விரிசகம் உண்ட கனவும்மெ சாந்தி
உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவ
தெரியும் சிவதுரி யத்தனு மாமே

பரமா நனவின்பின் பால்சக முண்ட
திரமார் கனவும் சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே
தரனாம் சிவதுரி யத்தனும் ஆமே

சீவன் துரியம் முதலாக சீரான
ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்தும்
ஓவும் பராநந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுவித்துநின் றானே

பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்
பரம்சிவன் மேலாம் பரநனவாக
விரிந்த கனாவிடர் வீட்டும் கழுமுனை
உரந்தரும் மாநந்தி யாம்உண்மை தானே

சார்வாம் பரம்சிவன் சத்தி பரநாதம்
மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கி
பாலா பிரமன் அரிஅம ராபதி
தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே

கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும்
உலப்புஅறி யார்உட லோடுஉயிர் தன்மை
அலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார்
குறிப்பது கோலம் அடலது வாமே

பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்
தன்னை அறியில் தயாபரன் எம்இறை
முன்னை அறிவு முடிகின்ற காலமும்
என்னை அறியலுற்று இன்புற்ற வாறே

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
தன்னின் மறைந்தது தன்கர ணங்களே

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே

ஆறாறு ஆகன்று நமவிட்டு அறிவாகி
வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே

துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதி
விரி பரையில் மிகும்நாதம் அந்தம்
புரி பரையில் பராவத்தா போதம்
திரிய பரமம் துரியம் தெரியவே

ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்று
பந்திடும் சுத்த அவத்தை பதைப்பினில்
நந்தி பராவத்தை நாட சுடர்முனம்
அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே

ஐஐந்து மட்டு பகுதியும் மாயையும்
பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே

நின்றான் அருளும் பரமும்முன் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத்து ஆங்கி செல்லாமையும்
நன்றான ஞானத்தின் நாத பிரானே
முக்குண நிர்க்குணம்

சாத்திகம் எய்தும் நனவென சாற்றுங்கால்
வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப
ஒய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே
அண்டாதி பேதம்

பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல்அள வாக
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கி
செறியும் அண் டாசன தேவர் பிரானே

ஆனந்த தத்துவம் அண்டா சலத்தின்மேல்
மேனிஐந்தாக வியாத்தம்மு பத்தாறா
தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை
ஈனமி லா அண்டத்து எண்மடங்கு ஆமே
பதினோராம் தானமும் அவத்தையென காணல்

அஞ்சில் அமுதும்ஓர் ஏழின்கண் ஆனந்தம்
முஞ்சில்ஓங் காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம்
கிஞ்சு செவ்வா கிளிமொழி கேளே

புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீ துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே

காட்டும் பதினொன்றும் கைகல தால்உடல்
நாட்டி அழுத்திடின் நந்திஅல்லால் இல்லை
ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே
கலவு செலவு

கேவலம் தன்னில் கலவ சகலத்தின்
மேவும் செலவு விடவரு நீக்கத்து
பாவும் தனைக்கண்டால் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே

வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை
செல்லும் அளவும் செலுத்துமிஹ் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே
நின்மல அவத்தை

ஊமை கிணற்றக துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்
ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே

காலங்கி நீர்பூ கலந்தஆ காயம்
மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்கு
காலனும் இல்லை கருத்தில்லை தானே

ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது
தான்மா மறையறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால்
ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே

உதயம் அழுங்கில் ஒடுங்கல்இம் மூன்றின்
கதிசா கிரங்கன வாதி சுழுத்தி
பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து
அதிசுப னாய்அன தான் அந்தி யாகுமே

எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுள் போகாது போதமா
செல்லா சிவகதி சென்றுஎய்தும் அன்றே

காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்து
தோய்ந்த கரு துரிசுஅக லாதே

ஆன மறையாதி யாம் உரு நந்திவந்து
ஏனை அருள்செய் தெரிநனா அவத்தையில்
ஆன வகையை விடும்அடை தாய்விட
ஆன மாலதீதம் அப்பர தானே

சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாக
சித்த சுகத்தை தீண்டா சமாதிசெய்து
அத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே

வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாஅருள் கேவல தேவிட்டு
வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே

கறங்குஓலை கொள்ளிவ டம்கட லில்திரை
நிறஞ்சேர் ததிமத்தன் மலத்தே நின்றங்கு
அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்த்து
கிரங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே

தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும்அ பாச பேதமும்
ஆன குணமும் பரான்மா உபாதியும்
பானுவின் முன்மதி போல்பலராவே

நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்
உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே

ஆனைகள் ஐந்தம் அடங்கி அறிவென்னும்
ஞான திரியை கொளுவி அதனுட்புக்கு
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாமே

ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்
தாடி தெழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேதாக மங்களும்
நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே

முன்னை அறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினை பெற்றால் அறியலாம்
தன்னை அறிவது அறிவாம் அஃ தன்றி
பின்னை அறிவது பேயறி வாகுமே

செயலற் றிருக்க சிவானந்த மாகும்
செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே

தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
ஆன மலம்அறும் அப்பசு தன்மைபோம்
ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்து
ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே

தொலையா அரனடி தோன்றும் அம் சத்தி
தொலையா இருளொளி தோற்ற அணுவும்
தொலையா தொழின்ஞானம் தொன்மையில் நண்ணி
தொலையாத பெத்தம்மு திக்கிடை தோயுமே

தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
தான்தரு ஞானம் தன் சத்திக்கு சாதனாம்
ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கு ஒளி யாமே

அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்தி
அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே

தான்அவ னாகிய ஞான தலைவனை
வானவ ராதியை மாமணி சோதியை
ஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியை
ஊனமிலாள்தன்னை ஊனிடை கண்டதே

ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளியது எனலாகும் ஆன்மாவை யன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிய அருளே சிவானந்த மாமே

ஆனந்த மாகும் அரனரு சத்தியில்
தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்து
ஊன்அந்த மாய் உணர் வாய்உள் உணர்வுறில்
கோன்அந்தம் வாய்க்கும் மகாவா கியமாமே

அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்
அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்க தம்அறி வார்அறி வோரே

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடி
சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்து
சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே

தானே அறியான் அறிவிலோன் தானல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்தென்று
ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்க
தானே அறிந்து சிவத்துடன் தங்குமே

தத்துவ ஞானம் தலைப்ப டவர்க்கே
தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
தத்துவ ஞானத்து தான்அவ னாகவே
தத்துவ ஞானான தந்தான் தொடங்குமே

தன்னை அறிந்து சிவனுடன் தானாக
மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்
பின்அது சன்முத்தி சன்மார்க்க பேரொளி
நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே

ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராக தற்பரன்
மேனிகொண்டு ஐங்கரு மத்தவி தாதலான்
மோனிகள் ஞானத்து முத்திரை பெற் றார்களே

உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம்
உயிர்க்கு கிரியை உயிர்மாயை சூக்கம்
உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே
உயிர்ச்சொல் அன்றி அவ்வுளத்து ளானே

தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர்
கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு
அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே

இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லதம் உள்ளது மாய்அன்றாம் அண்ணலை
சொல்வது சொல்லிடில் தூராகி தூரமென்று
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே

உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி
உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே
உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே

சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆருங்கண் டோ ரார் அவையருள் என்றே

எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறையருள் தானே

திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே

அவமும் சிவமும் அறியார்
அவமும் சிவமும் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவனரு ளாமே

அருளான சத்தி அனல் வெம்மை போல
பொருள் அவனாகத்தான் போதம் புணரும்
இருள் ஒளியாய் மீண்டு மும்மல மாகும்
திருவருள் ஆனந்தி செம்பொருளாமே

ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்
பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டி
பேதித்த பேதியா வாறுஅரு பேதமே

பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் புணர்போதம் போதமும் நாதமும்
நாத முடன்நாக நாதாதி நாதமும்
ஆதன் அருளின் அருள்இச்சை யாமே

மேவிய பொய்க்கரி யாட்டும் வினையென
பாவிய பூதம்கொண்டு ஆட்டி படைப்பாதி
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே

ஆறாது அகன்று தனையறி தானவன்
ஈறாகி யாவினும் இயலாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
தேறா தெளிவுற்று தீண்ட சிவமாமே

தீண்டற்குரிய அரிய திருவடி நேயத்தை
மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று
தூண்டி சிவஞான மாவினை தானேறி
தாண்டி சிவனுடன் சாரலும் ஆமே

சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நே தலைப்ட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே

தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்
தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மை
தான்என்று இரண்டுஉன்னார் கேவல தானவர்
தான்இன்றி தானாக தத்துவ சுத்தமே

தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன் அறி தலைப்படும்
தன்னினில் தன்னை சார்கிலன் ஆகில்
தன்னினில் தன்ஐயும் சார்தற்கு அரியவே

அறியகி லேன்என்று அரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்ற நேர்பட்ட பின்னை
இருசுட ராகி இயற்றவல் லானும்
ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே

மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உள்கின்ற யோனிகட்டு எல்லாம் ஒருவனே
கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின்றானே

ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்று
கூம்புகின் றார்குண தின்னொடும் கூறுவர்
தேம்புகின்றார்சிவன் சிந்தைசெய் யாதவர்
கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே

குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார்
குறிஅறி யார்கடம் கூடல் பெரிது
குறிஅறி யாவகை கூடுமின் கூடி
அறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே

ஊனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம்
வானோர் தலைவி மயக்கத்து உறநிற்க
தானோ பெரிதுஅறி வோம் என்னும் மானுடர்
தானே பிறப்போடு இறப்பறி யாரே
அறிவுதயம்

தன்னை அறி தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்க தானிரு தானே

அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழ
சிங்கா தனத்தே சிவன்இரு தானென்று
சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலென
பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே

அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே
அறிவு வடிவென்று அருந்திரு தானே

அறிவுக்கு அழிவில்ல ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு
அறைகின் றனமறை ஈறுகள் தாமே

ஆயு மலரின் அணிமலர் தன்மேலே
பாய இதழ்கள் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகியே
போய அறிவா புணர்ந்திரு தானே

மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின் றாமை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வ தானோர் புகழ்திரு மேனியை
பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே

அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின்
அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம்
அறிவுஅறி வாக அணிமாதி சித்தி
அறிவுஅறி வாக அறிந்தணன் நந்தியே

அறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம்
அறிவுஅறி யாமை யாரும் அறியார்
அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால்
அறிவுஅறி யாமை அழகிய வாறே

அறிவுஅறி யாமையை நீவி யவனே
பொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின்
செறிவாகி நின்றவன் சிவனும் ஆமே

அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது
அறிவுடை யார்நெஞ்ச அருந்தவம் ஆவது
அறிவுடை யார்நெஞ்சொடு ஆதி பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே

மாயனும் ஆகி மலரோன் இறையுமா
காயநன் னாட்டு கருமுதல் ஆனவன்
சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்
பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே

என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது
என்னையிட்டு என்னை உசாவுகின் றானே

மாய விளக்கது நின்று மறைந்திடும்
தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனன்றிடும்
சேய விளக்கினை தேடுகின் றேனை

தேடுகின் றேன்திசை எட்டோ டு இரண்டையும்
நாடுகின் றேன்நல மேஉடை யானடி
பாடுகின் றேன்பர மேதுணை யாமென
கூடுகின் றேன்குறை யாமனை தாலே

முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டு
தன்னை தெரிந்துதன் பண்டை தலைவன்தன்
மன்னி சிவமாக வாரா பிறப்பே
ஆறு அந்தம்

வேதத்தின் அந்தமும் மிக்கசி தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத
தகும்எட்டு யோகாநந்த அந்தமும்
ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே

அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்
அந்தம்ஒர் ஆறும் அறிவார் அமலத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு
அந்தமோடு ஆதி அறியஒண் ணாதே

தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்
ஆனா துரியத்து அணுவன் தனைக்கண்டு
தேனார் பராபரம் சேர்சிவ யோகமாய்
ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே

நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம்
சத்தம் முதல்ஐந்தும் தத்துவ தால்நீங்க
சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து
அத்தன் பரன்பால் அடைதல்சி தாந்தமே

மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால்
மேவும் பரவிந்து நாதம் விடாஆறாறு
ஓவும் பொழுதுஅணு ஒன்றுஉள தாமே

உள்ள உயிர்ஆறாற தாகும் உபாதியை
தெள்ளி அகன்றுநா தாந்தத்தை செற்றுமேல்
உள்ள இருள்நீங்க ஓர்உணர் வாகுமேல்
எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே

தேடும் இயம நியமாதி சென்றகன்று
ஊடும் சமாதியில் உற்று படர்சிவன்
பாடுற சீவன் பரமாக பற்றற
கூடும் உபசாந்தம் யோகாந்த கொள்கையே

கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு
உள்ளன வாம்விந்து உள்ளே ஓடுங்கலும்
தெள்ளி அதனை தெளிதலும் ஆமே

தெளியும் இவையன்றி தேர்ஐங் கலைவேறு
ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு
அளியவ னாகிய மந்திரம் தந்திரம்
தெளிஉப தேசஞா னத்தொடுஐ தாமே

ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
ஆகும்அ தந்திரம் அந்நூல் வழிநிற்றல்
ஆகும் அனாதி உடல்அல்லா மந்திரம்
ஆகும் சிவபோ தகம்உப தேசமே

தேசார் சிவமாகும் தன்ஞான தின்கலை
ஆசார நேய மறையும் கலாந்தத்து
பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானே

தான்அவ னாகும் சமாதி தலைப்படில்
ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது
ஞான மென்ஞேய ஞாதுரு வாகுமே

ஆறந்த மும்சென்று அடங்கும்அ நேயத்தே
ஆறந்த ஞேயம் அடங்கிடும் ஞாதுரு
கூறிய ஞான குறியுடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த மாமே

உண்மை கலைஆறுஓர் ஐந்தான் அடங்கிடும்
உண்மை கலாந்தம் இரண்டுஐந்தோடு ஏழ்அந்தம்
உண்மை கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்து
உண்மை கலைசொல்ல ஓர்அந்தம் ஆமே

ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையை
கூளி யருளிய கோனை கருதுமே

கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப
அரனுரை செய்தருள் ஆக தன்னில்
வருச புற மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே

வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை
போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய
நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே

வேதாந்தம் தன்னில் உபாதிமே வேழ்விட
நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம்
மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன்
போதாந்த தற்பதம் போமசி என்பவே

அண்டங்கள் ஏழும் கடந்துஅகன்று அப்பாலும்
உண்டென்ற பேரொளி குள்ளாம் உளஒளி
பண்டுறு நின்ற பராசக்தி என்னவே
கொண்டவன் அன்றிநின் றான்தங்கள் கோவே

கோஉணர தும்சத்தி யாலே குறிவைத்து
தேவுணர துங்கரு மஞ்செய்தி செய்யவே
பாவனை தும்படை தர்ச்சனை பாரிப்ப
ஓஅனை துண்டுஒழி யாத ஒருவனே

ஒருவனை உன்னார் உயிர்தனை
இருவினை உன்னார் இருமாயை
ஒருவனு மேயுள் உணர்ந்திநின் றூட்டி
அருவனு மாகிய ஆதர தானே

அரன்அன்பர் தானம தாகி சிவத்து
வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு
உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரனுறு தோயா சிவாநந்தி யாமே

வேதாந்த தொம்பதம் மேவும் பசுஎன்ப
நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி
போதாந்த தற்பதம் போய்இரண்டு ஐக்கியம்
சாதா ரணம்சிவ சாயு சிய மாமே

சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும்
சிவமாம் சதாசிவன் செய்துஒன்றான் ஆனால்
நவமான வேதாந்தம் ஞானசி தாந்தமே

சித்தாந்த தேசீவன் முத்திசி தித்திலால்
சித்தாந தேநிற்போர் முத்திசி தித்திவர்
சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே

சிவனை பரமனுள் சீவனுள் காட்டும்
அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால்
நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம்
தவமிக்கு உணர்ந்தவர் தத்துவ தாரே

தத்துவம் ஆகும் சகள அகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம்
தத்துவ மாம்சிவ சாயு சியமே

வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன
நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே

பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்
பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம்
விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே

ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம்
ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில்
ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற
ஆகும் மறைஆ கமம்மொழி தான்அன்றே

அன்றாகும் என்னாதுஐ வகைஅந்தம் அன்னை
ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு
நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்றாடி பாதம் மருவலும் ஆமே

அனாதி சீவன்ஐம் மலமற்றுஅ பாலாய்
அனாதி அடக்கி தனைக்கண்டு அரனா
தன்ஆதி மலம்கெட தத்துவா தீதம்
வினாவுநீர் பாலாதல் வேதாந்த உண்மையே

உயிரை பரனை உயிர்சிவன் தன்னை
அயர்வற்று அறிதொ தத்தசி அதனால்
செயலற்று அறிவாகி யும்சென்று அடங்கி
அயர்வற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே

மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
சென்னிய தான சிவயோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்
துன்னிய ஆகம நூலென தோன்றுமே

முதலாகும் வேத முழுதுஆ கமம்அக
பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு
முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து
அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே
பதி பசு பாசம் வேறின்மை

அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினை கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியில் பிறப்பறு தானே

பசுப்பல கோடி பிரமன் முதலா
பசுக்களை கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கிஅ பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனை பற்றி விடாவே

கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாடோ றும் நோக்கி
தொடக்குஒன்றும் இன்றி தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே

பாசம்செய் தானை படர்சடை நந்தியை
நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும்
கூசம் செய்து உன்னி குறிக்கொள்வது எவ்வண்ணம்
வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே

விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டோ ன் மேவுறான்
சுட்டிய கேவலம் காணும் சகலத்தை
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே

நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே

ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்
ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே

பதிபசு பாசம் பயில்வியா நித்தம்
பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கி
பதிபசு பாசத்தை பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில நிலாவே

பதியும் பசுவொடு பாசமும் மேலை
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சத்தசை வத்திலே

அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆகும்
அறிந்தணு மூன்றுமெ யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதிபடை பான்அங்கு அவற்றையே

படைப்புஆதி யாவது பரம்சிவம் சத்தி
இடைப்பால உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல்
படைப்பாதி சூக்கத்தை தற்பரன் செய்ய
படைப்பாதி தூய மலம்அ பரத்திலே

ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவபர மேம்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மம்செய்வோன்
ஆகிய தூயஈ சானனும் ஆமே

மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன்
மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி
ஆகும் படிபடை போன்அர னாமே

படைப்பும் அளிப்பும் பயில்இளை பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்து
அடைத்த அனாதியை ஐந்தென லாமே

ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாகு மாயைல் முப்பால் மிகுத்திட்டுஅங்கு
ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு
வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே

வீட்கும் பதிபசு பாசமும் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால் உணர்ந்து
ஆட்கு நரசு சுவர்க்கத்தில் தானிட்டு
நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே

நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே

ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோசு மறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்
ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே

பாசம் பயிலுயிர் தானே பரமுதல்
பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப
பாசம் பயில பதிபர மாதலால்
பாசம் பயில பதிபசு வாகுமே

அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி
அத்தத்தி னாலே அணை பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே
அடிதலை அறியும் திறங்கூறல்

காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்த சத்தி அருள்என்பர் காரணம்
பாலொன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்கை காட்டவீ டாகுமே

தலைஅடி யாவது அறியார் காயத்தில்
தலைஅடி உச்சியில் உள்ளது மூலம்
தலைஅடி யான அறிவை அறிந்தோர்
தலைஅடி யாகவே தான்இரு தாரே

நின்றான் நிலமுழுது அண்டமும் மேலுற
வன்தாள் அசுரர் அமரரும் உய்ந்திட
பின்தான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்தாள் இணைஎன் தலைமிசை ஆனதே

சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
சிந்தையின் எந்தை திருவடி கீழது
எந்தையும் என்னை அறியகி லான்ஆகில்
எந்தையை யானும் அறியகி லேனே

பன்னாத பாரொளிக்கு அப்புறத்து அப்பால்
என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம்
உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம்
சொன்னான்கழலினை சூடிநின் றேனே

பதியது தோற்றும் பதமது வைம்மின்
மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்
நதிபொதி யும்சடை நாரியோர் பாகன்
கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே

தரித்துநின்றானடி தன்னிட நெஞ்சில்
தரித்து நின்றான் அமராபதி நாதன்
கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
பரித்துநின் றான்அ பரிபாக தானே

ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள
தன்தாதை தாளும் இரண்டுள காயத்துள்
நன்றா காய்ச்சி பதஞ்செய வல்லார்கட்கு
இன்றேசென்று ஈசனை எய்தலும் ஆமே

கால்கொண்டுஎன் சென்னியிற் கட்டற கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கிற் றுயக்கற
பால்கொண்ட என்ணை பரன்கொள்ள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்ப ஒண்ணாதே

பெற்ற புதல்வர்போல் பேணிய நாற்றமும்
குற்றமுங் கண்டு குணங்குறை செய்யவோர்
பற்றைய ஈசன் உயிரது பான்மைக்கு
செற்றமி லா செய்கைக்கு எய்தின செய்யுமே
முக்குற்றம்

மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மான்றுஇருள் தூங்கி மயங்கி கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து
ஏமம் பிடித்திரு தேனுக்கு எறிமணி
ஓமெனும் ஓசையின் உள்ளே உறைவதோர்
தாமம் அதனை தலைப்பட்ட வாறே
முப்பதம்

தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தனோன்
ஆகின்ற பராபர மாகும் பிறப்பற
ஏன்றனன் மாள சிவமாய் இருக்குமே

போத தனையுன்னி பூதாதி பேதமும்
ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு
பேதமும் நாதாந்த பெற்றியில் கைவிட்டு
வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே

தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம்
சொற்ப தாலும் தொடரஒண் ணாச்சிவன்
கற்பனை யின்றி கலந்துநின் றானே

அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்த
கணுஒன் றிலாத சிவமும் கலந்தால்
இணையறு பால்தேன் அமுதென இன்ப
துணையது வாயுரை யற்றிட தோன்றுமே

தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும்
அம்பத மேலை சொரூபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே

ஐம்பது அறியா தவரும் அவர்சிலர்
உம்பனை நாடி உரைமுப்ப தத்திடை
செம்பர மாகிய வாசி செலுத்திட
தம்பரயோகமா தான்அவன் ஆகுமே

நந்தி அறிவும் நழுவில் அதீதமாம்
இந்தியும் சத்தாதி விடவிய னாகும்
நந்திய மூன்றுஇரண்டு ஒன்று நலம்ஐந்து
நந்தி நனவாதி மூட்டும் அனாதியே

பரதுரி யத்து நனவு படியுண்ட
விரிவிற் கனவும் இதன்உப சாந்தத்து
துரிய கழுமுனையும் ஓவும் சிவன்பால்
அரிய துரியம் அசிபதம் ஆமே
முப்பரம்

தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர்
மூன்று படிமண் டலத்து முதல்வனை
ஏன்றெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி
நான்று நலம்செய் நலந்தரு மாறே

மன்று நிறைந்தது மாபர மாயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்று நினைந்தெழு தாயென வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே

ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்புரம்
கூறா உபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேத பசுவனார்
பேறாக ஆனந்தம் பேறும் பெருகவே

பற்றற பற்றில் பரம்பதி யாவது
பற்றற பற்றில் பரனறி வேபரம்
பற்றற பற்றினில் பற்றவல் லோர்கட்கே
பற்றற பற்றில் பரம்பர மாமே

பரம்பர மான பதிபாசம் பற்றா
பரம்பர மாகும் பரஞ்சிவ மேவ
பரம்பர மான பரசிவா னந்தம்
பரம்பர மாக படைப்பது அறிவே

நனவில் கலாதியாம் நாலொன்று அகன்று
தனியுற்ற கேவலம் தன்னில் தானாகி
நினைவுற்று அகன்ற அதீதத்துள் நே
தனையுற்று இடத்தானே தற்பர மாமே

தற்கண்ட தூயமும் தன்னில் விசாலமும்
பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்று
தற்பரன் கால பரமும் கலந்தற்ற
நற்பரா தீதமும் நாடுஅக ராதியே
பரலட்சணம்

அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மா
மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதி பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
போதம் உணர்ந்தவர் புண்ணி தோரே

துரியங் கடங்கு துரியா தீதத்தே
அரிய வியோகங்கொண்டு அம்பல தாடும்
பெரிய பிரானை பிரணவ கூபத்தே
துரியவல் லார்க்கு துரிசில்லை தானே

செம்மைமுன் னிற்ப சுவேதம் திரிவபோல்
அம்மெ பரத்தோடு அணுவன்உள் ளாயிட
பொய்மை சகமுண்ட போத வெறும்பாழில்
செம்மை சிவமேரு சேர்கொடி யாகுமே

வைச்ச கலாதி வருதத்து வங்கெட
வெச்ச இருமாயை வேறாக வேரறுத்து
உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்தென்னை ஆண்டவன் நந்தியே

என்னை அறிய இசைவித்த என்நந்தி
என்னை அறிந்து அறி யாத இடத்துய்த்து
பின்னை ஒளியிற் சொரூபம் புறப்பட்டு
தன்னை அளித்தான் தற்பர மாகவே

பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயு
நிரந்தர வளியொடு ஞாயிறு திங்கள்
அரந்த அறநெறி யாயது வாகி
தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே

சத்தின் நிலையினில் தானான சத்தியும்
தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல்
உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய்
நித்தம் நடத்தும் நடிக்கும்மா நேயத்தே

மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள்
பாலிய விந்து பரையுள் பரையா
கோலிய நான்சுவை ஞானம் கொணர் விந்து
சீலமி லாஅணு செய்திய தாமே

வேறாம் அதன்தன்மை போலும்இ காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய்
ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே

தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி
சிற்பரம் தானே செகமுண்ணும் போதமும்
தொற்பதம் தீர்பாழில் சுந்தர சோதிபுக்கு
அப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே

பண்டை மறைகள் பரவான் உடலென்னும்
துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னை
கண்டு பரனும்அ காரணோ பாதிக்கே
மிண்டின் அவன்சுத்தம் ஆகான் வினவிலே

வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
தனியா இயதற் பரங்காண் அவன்தான்
வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
வெளியாய சத்தி அவன்வடி வாமே

மேருவி னோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்கு
சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே
முத்திரியம்

நனவாதி மூன்றினில் சீவ துரியம்
தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான்
நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம்
இனதாகும் தொந தசிப துஈடே

தானாம் நனவில் துரியம்தன் தொம்பதம்
தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில்
ஆனா பரபதம் அற்றது அருநனா
வானான மேல்மூன்றில் துரியம் அணுகுமே

அணுவின் துரியத்து நான்கும துஆகி
பணியும் பரதுரி யம்பயில் நான்கும்
தணிவில் பரமாகி சாரமு துரி
கணுவில் நான்கும் கலந்தார் ஐந்தே

ஈர்ஐந்து அவத்தை இசைமு துரியத்துள்
நேர்அந்த மாகநெறிவழி யேசென்று
பார்அந்த மான பராபத்து அயிக்கியத்து
ஓர்அந்த மாம்இரு பாதியை சேர்த்திடே

தொட்டே இருமின் துரிய நிலத்தினை
எட்டாது எனின்நின்று எட்டும் இறைவனை
பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள்
தட்டாது ஒழிவதோர் தத்துவ தானே

அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்று
செறிவாய மாயை சிதைத்துஅரு ளாலே
பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறி தாரே

நனவின் நனவாகி நாலாம் துரியம்
தனதுயிர் தெம்பதம் ஆமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாக
தனைய பரதுரி யந்தற் பதமே

தொம்பதம் தற்பதம் சொன்மு துரியம்பொல்
நம்பிய மூன்றாம் துரியத்து நல்நாமம்
அம்புலி யுன்னா அதிசூக்கம் அப்பாலை
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே
மும்முத்தி

சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓய்உப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
மூவயின் முச்சொரூப முத்திமு பாலதாய்
ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே

ஆவது அறியார் உயிர்பிற பாலுறும்
ஆவது அறியும் உயிர்அரு பாலுறும்
ஆவது ஒன்றில்லை அகம்புற தென்றுஅகன்று
ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே

சிவமாகி மும்மலம் முக்குணம் செற்று
தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கி
துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்கு
சிவமாம் அமலன் சிறந்தனன் தானே

சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலை சமாதியும் ஆயிடும்
பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே
முச்சொரூபம்

ஏறிய வாறே மலம்ஐ திடைஅடைந்து
ஆறிய ஞான சிவோகம் அடைந்திட்டு
வேறும் எனமு சொரூபத்து வீடுற்று அங்கு
ஈறதில் பண்டை பரன்உண்மை செய்யுமே

மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்ப தாறும் உதிப்புள
மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியை
காண்டலும் கா கணக்கற்ற வாறே

உலகம் புடைபெயர்ந்து ஊழியம் போன
நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆரறி வாரே

பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து
அருவாய் உருவாய் அருவுரு வாகி
குருவாய் வரும்சத்தி கோன்உயிர பன்மை
உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே

மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து
மணிஎன வாய்நின்ற வாறுஅது போல
தணிமு சொருபாதி சத்தியாதி சார
பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே

கல்லொளி மாநிறம் சோபை கதிர்தட்ட
நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதும்
சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து
அல்அறும் முத்திரா தத்துஅனு பூதியே

உடந்தசெ தாமரை உள்ளுறு சோதி
நடந்தசெ தாமரை நாதம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ்
விடம்தரு வாசலை மேல்திற வீரே
முக்கரணம்

இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும்
திடமது போல சிவபர சீவர்
உடனுரை பேதமும் ஒன்றென லாமே

ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேலெழ வைத்து
தெளி தெளியும் சிவபதம் தானே

முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅ
கைக்கா ரணம் என்ன தந்தனன் காண்நந்தி
மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக
ஒக்குமது உன்மணி ஓதுஉள் சமாதியே
முச்சூனிய தொந்தத்தசி

தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம்
தொல்பதம் மூன்றும் துரியத்து தோற்றலே
நிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின்
சொற்பத மாகும் தொந தசியே

தொந தசிமூன்றில் தொல்கா மியமாதி
தொந தசிமூன்றில் தொல்கா மதமாதி
வந்த மலம்குணம் மாள சிவம்தோன்றின்
இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே

தொந தசியைஅவ் வாசியில் தோற்றியே
அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு
அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து
உந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே

வைத்து சிவத்தை மதிசொரு பானந்தத்து
உய்த்து பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து
அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே

தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
அம்புரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம்
உம்பர் உரைதொந தசிவாசி யாமே

ஆகிய அச்சோயம் தேவ தன்இடத்து
ஆகிய வைவிட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொந தசியென்ப மெய்யறிவு
ஆகிய சீவன் பரசிவன் ஆமே

தாமதம் காமியம் ஆசி தகுணம்
மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடு
ஆம்அறும் மவ்வும் அவ் வாய்உடல் மூன்றில்
தாமாம் துரியமும் தொந தசியதே
முப்பாழ்

காரியம் ஏழ்கண் டறும்மா பாழ்விட
காரணம் ஏழ்கண் டறும்போத பாழ்விட
காரிய காரண வாதனை கண்டறும்
சீர்உப சாந்தமு பாழ்விட தீருமே

மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமு பாழென சிவசத்தி யில் சீவன்
ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே

எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும்
பதியெனும் நந்தி பதமது கூட
கதியென பாழை கடந்து அந்த கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே

துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் என்றே துதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே

ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு
வேறா கயபரை யாவென்று மெய்ப்பரன்
ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ
தேறா சிவாய நமவென தேறிலே

உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்
உள்ள பரிசறி தோரும் அவர்கட்கு
பள்ளமும் இல்லை திடர்இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே
காரிய காரண உபாதி

செற்றிடும் சீவ உபாதி திறன்ஏழும்
பற்றும் பரோபதி ஏழும் பகருரை
உற்றிடும் காரிய காரண தோடற
அற்றிட அச்சிவ மாகும் அணுவனே

ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறாய் நனவு மிகுந்த கனாநனா
ஆறாறு அகன்ற கழுத்தி அதில் எய்தா
பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே

அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் சிவமாய் வருமு பதத்து
சிகாரம் சிவமே வகாரம் பரமே
யகாரம் உயிரென்று அறையலும் ஆமே

உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று
அயிர்ப்புஅறும் காரணோ பாதி விதிரேகத்து
உயிர்ப்புறும் ஈசன் உபமி தால்அன்றி
வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே

காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு
காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொற்பத
பாரறும் பாழில் பராபர தானே
உபசாந்தம்

முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்து பணிந்துற்ற பற்றலே
சித்திக்கு வித்து சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்து தனதுப சாந்தமே

காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனை பற்றற
பாரண வும் உப சாந்த பரிசிதே

அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீ துறுபுரி
மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்று
தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே

ஆறாதுஅமைந்துஆண வத்தையுள் நீக்குதல்
பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே

வாய்ந்த உபசாந்த வாதனை உள்ள போய்
ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்து
தோய்ந்தறல் மோன சுகானுபவ தோடே
ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே

பரையின் பரவ பரத்துடன் ஏகமா
திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று
உரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன்
கரைகண் டானுரை அற்ற கணக்கிலே
புறங்கூறாமை

பிறையுள் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாள்கொண் டவர்தமை போல
கறைமணி கண்டன காண்குற மாட்டார்
நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே

கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்ப
கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க
பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே
அருந்தர அலைகடல் ஆறசென் றாலே

கருதலர் மாள கருவாயில் நின்ற
பொருதலை செய்வது புல்லறி வாண்மை
மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்
தருவலர் கேட்ட தனியும்ப ராமே

பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும்
இணங்கிஎம் ஈசனே ஈசன்என்று உன்னில்
கணம்பதி னெட்டும் கழலடி காண
வணங்ககெழு நாடி அங்கு அன்புற லாமே

என்னிலும் என்னுயி ராய இறைவனை
பொன்னிலும் மாமணி யாய புனிதனை
மின்னிய எவ்வுய ராய விகிர் தனை
உன்னிலும் உன்னும் உறும்வகை யாலே

நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும்
வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுவந்து
ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே

நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும்
எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னை
பண்அறி வாளனை பாவித்த மாந்தரை
விண்அறி வாளர் விரும்புகின் றாரே

விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னை
கண்ணற வுள்ளே கருதிடின் காலையில்
எண்உற வாசமு போதும் இயற்றிநீ
பண்ணிடில் தன்மை பராபர னாமே

ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்
பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன்
கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத போது புனைபுக ழானே

போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடி
ஏற்றியே தென்றும் எறிமணி தான்அ
காற்றின் விளக்கது காயம் மயக்குறும்
அற்றலும் கேட்டது மன்றுகண் டேனே

நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை
ஊடுபு காரும் உணர்ந்தறி வாரில்லை
கூடுபு கேறலுற் றேனவன் கோலங்கண்
மூடிக்கண் டேனுல கேழுங்க்ண் டேனே

ஆன புகழும் அமைந்த தோர் ஞானமு
தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுடண்
டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு
வானகஞ் செய்யு மறவனு மாமே

மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்
தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்த
தாமதி யாக சகமுண சாந்திபு
காமல மற்றார் அமைவுபெற் றாரே

பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவி
டிதமுற்ற பாச இருளை துரந்து
மதமற் றெனதியான் மாற்றிவி டாங்கே
திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே

சித்தர் சிவத்தை கண்டவர் சீருடன்
சுத்தாசு தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்து
சத்தர் சதாசிவ தன்மையர் தாமே
எட்டிதழ கமல முக்குண அவத்தை

உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு
மதிக்கும் குபேரன் வடதிசை யீசன்
நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே

ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும்
மருங்கிய மாயா புரியத னுள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே

மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர்
எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற்
பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே

ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலை கொண்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுபொருள் தானே

திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும்
வகையெட்டு மாய்நின்ற ஆதி பிரானை
வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து
முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே

ஏழுஞ் சகளம் இயம்பு கடந்தெட்டில்
வாழும் பரமென் றதுகட தொன்பதில்
ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில்
தாழ்வது வான தனித்தன்மை தானே

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள்
செல்லூழி அண்டத்து சென்றவவ் வூழியுள்
அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே

புரியும் உலகினிற் பூண்டவெ டானை
திரியுங் களிற்றொடு தேவர் குழாமும்
எரியு மழையும் இயங்கும் வெளியும்
பரியுமா காசத்திற் பற்றது தானே

ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல்
ஆறின்றி பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
சேறின்றி பூத்த செழுங்கொடி தாமரை
பூவின்றி சூடான் புரிசடை யோனே

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வென்று மிருந்து விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திருவடை யோரே
ஒன்பான் அவத்தை

தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன்
நற்பத விராட்டன்பொன் கர்ப்பனவ் யாகிர்தன்
பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன்
பொற்புவி சாந்தன் பொருதபி மானியே

நவமாம் அவத்தை நன்வாதி பற்றிற்
பவமா மலங்குணம் பற்றற்று பற்றா
தவமான சத்திய ஞான பொதுவிற்
றுவமார் துரியஞ் சொருபம தாமே

சிவமான சிந்தையிற் சீவன் சிதைய
பவமான மும்மலம் பாறி பறிய
நவமான அந்தத்தின் நற்சிவ போத
தவமான மவையாகி தானல்ல வாகுமே

முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவ
தன்சொல்லில் எண்ணத்தகாவொன்பான் வேறுள
பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டு
தன்செயத வாண்டவன் றான்சிற தானே

உகந்த ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி
அகந்தெம் பிரானென்பன் அல்லும் பகலும்
இகந்தன வல்வினை யோடறு தானே

நலம்பல கால தொகுத்தன நீளங்
குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும்
பலம்பல பன்னிரு கால நினையும்
நிலம்பல வாறின் நீர்மையன் றானே

ஆதி பராபர மாகும் பராபரை
சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்
ஓதுங் கமைமாயே யோரிரண் டோ ரமுத்தி
நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே

தேராத சிந்தை தெளி தெளிவித்து
வேறாத நரக சுவர்க்கமும் மேதினி
ஆறா பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்
வேறா தெளியார் வினையுயிர் பெற்றதே

ஒன்பான் அவத்தையுள்
நன்பாற் பயிலு நவ துவமாதி
ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துற
செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே
சுத்தாஅசுத்தம்

நாசி நுனியினின் நான்குமூ விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை யம்மறை
கூசி யிருக்குங் குணமது வாமே

கருமங்கள் ஒன்று கருதுங் கரு
துரிமையுங் கன்மமும் முன்னும் பிறவி
கருவினை யாவது கண்டகன் றன்பின்
புரிவன கன கயத்து புகுமே

மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லார்கட்கு
காயமும் இல்லை கருத்தில்லை தானே

மோழை யடைந்து முழைதிற துள்புக்கு
கோழை யடைகின்ற தண்ணற் குறிப்பினில்
ஆழ அடைந்தங் கனலிற் புறஞ்செய்து
தாழ அடைப்பது தன்வலி யாமே

கா குழப்பனை காயநன் னாடனை
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியை
தேயத்து ளேயெங்கு தேடி திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே

ஆசூசம் என்பார்
ஆசூச மாமிடம் ஆரும் அறிகிலார்
ஆசூச மாமிடம் ஆரும் அறிந்தபின்
ஆசூச மானிடம்

ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு
ஆசூச மில்லை அரனை அர சிப்பவர்க்கு
ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு
ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே

வழிபட்டு நின்று வணங்கு மவர்ககு
சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிப டவர்க்கன்றி காணவொண் ணாதே

தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும்
தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை
தூய்மணி தூயனல் தூரறி வார்கட்கு
தூய்மணி தூயனல் தூயவு மாமே

தூயது வாளா வைத்தது தூநெறி
தூயது வாளா நாதன் திருநாமம்
தூயது வாளா அட்டமா சித்தியும்
தூயது வாளா தூயடி சொல்லே

பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவ ரன்றி
சுருளது வாய்நின்ற துன்ப சுழியின்
மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே

வினையா மசத்து விளைவ துணரார்
வினைஞான தன்னில் வீடலு தேரார்
வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார்
வினையாளார் மிக்க விளைவறி யாரே
முத்திநிந்தை

பரகதி யுண்டென இல்லையென் போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடு வார்கடை தோறும்
துரகதி யுண்ண தொடங்குவர் தாமே

கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசி திரிவர்கள்
பாடகில் லாரவன் செய்த பரிசறி
தாடவல் லாரவர் பேறெது வாமே

புறப்பட்டு போகும் புகுதுமென் னெஞ்சில்
திறப்பட்ட சிந்தையை தெய்வமென் றெண்ணி
அறப்பட்ட மற்ற பதியென் றழைத்தேன்
இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் றானே

திடரடை நில்லாத நீர்போல் ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டி
கடலிடை நில்லா கலஞ்சேரு மாபோல்
அடலிடை வண்ணனும் அங்குநின் றானே

தாமரை நூல்போல் தடுப்பார் பரந்தொடும்
போம்வழி வேண்டி புறமே யுழிதர்வர்
காண்வழி காட்டக்கண் காணா கலதிகள்
தீநெறி செல்வான் திரிகின்ற வாறே

மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி யவனை குறித்துடன்
காடும் மலையுங் கழனி கடந்தோறும்
ஊடும் உருவினை யுன்னிகி லாரே

ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவார் குடக்கும் குணக்கும் குறுவழி
நாவினின் மந்திர மென்று நடுவங்கி
வேவது செய்து விளங்கிடு வீரே

மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்யார்
தமக்குற பேசின தாரணை கொள்ளார்
சினக்குற பேசின தீவினை யாளர்
தமக்குற வல்லினை தாங்கிநின் றாரே
இலக்கணா திரயம்

விட்ட விலக்கணைதான்போம் வியோமத்து
தொட்டு விடாத துபசாந தேதொகும்
விட்டு விடாதது மேவுஞ்ச தாதியிற்
சுட்டு மிலக்கணா தீதஞ் சொருபமே

வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின்
கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன
வில்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்கு
கல்கலன் என்ன கதிரெதி யாமே
தத்துவமசி வாக்கியம்

சீவ துரியத்து தொம்பதஞ் சீவனார்
தாவு பரதுரி யத்தனில் தற்பதம்
மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத
மோவி விடும் துவமசி உண்மையே

ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம்
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்து
பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
வீறான தொந தசிதத்வ மசியே

ஆகிய வச்சோயம் தேவக தன்னிடத்து
ஆகிய விட்டு விடாத விலக்கணைத்து
ஆருப சாந்தமே தொந தசியென்ப
ஆகிய சீவன் பரன்சிவ னாமே

துவந தசியே தொந தசியும்
அவைமன்னா வந்து வயத்தேகமான
தவமுறு தத்துவ மசிவே தாந்த
சிவமா மதுஞ்சி தாந்தவே தாந்தமே

துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரமென்ப ராகாரி தன்றென்னார்
உரிய பரம்பர மாமொன் றுதிக்கும்
அருநிலம் என்பதை யாரறி வாரே

தொம்பத தற்பதஞ் சொல்லும் அசிபதம்
நம்பிய முத்துரி யத்துமே னாடவே
யும்பத மும்பத மாகும் உயிர்பரன்
செம்பொரு ளான சிவமென லாமே

வைத்த துரிய மதிற்சொரு பானந
துய்த்த பிரணவ மாமுப தேசத்தை
மெய்த்த விதயத்து விட்டிடு மெய்யுணர்
வைத்த படியே யடைந்து நின்றானே

நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்து
பினமா மலத்தை பின்வைத்து பின்சு
தனதாஞ் சிவகதி சத்தாதி சாந்தி
மனவா சகங்கெட்ட மன்னனை நாடே

பூரணி யாது புறம்பொன்றி லாமையின்
பேரணி யாதது பேச்சொன்றி லாமையின்
ஓரணை யாததுவொன்றுமி லாமையிற்
காரண மின்றியே காட்டு தகைமைத்தே

நீயது வானா யெனநின்ற பேருரை
ஆயது நானானேன் என்ன சமைந்தற
சேய சிவமாக்குஞ் சீர்நந்தி பேரருள்
ஆயது வாயன தானந்தி யாகுமே

உயிர்பர மாக உயர்பர சீவன்
அரிய சிவமாக அச்சிவ வேதத்து
இரியிலுஞ் சீராம் பராபரன் என்ன
உரிய உரையற்ற வோமய மாமே

வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்கும்
தாய்நாடி யாதிவா காதி சகலாதி
சேய்நா டொளியென சிவகதி யைந்துமே

அறிவறி யாமை இரண்டும் அகற்றி
செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனை
பிறிவறி யாது பிரானென்று பேணுங்
குறியறி யாதவர் கொள்ளறி யாரே

அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்புங் கலப்பும்
அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால்
அறிவான் அறிந்த அறிவறி யோமே

அதீதத்துள் ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மா
மதிபெற் றுருள்விட்ட மன்னுயி ரொன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே

அடிதொழ முன்னின் றமரர்க ளத்தன்
முடிதொழ ஈசனும் முன்னின் றருளி
படிதொழ நீபண்டு பாவித்த தெல்லாங்
கடிதொழ காணன்னுங் கண்ணுத லானே

நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
என்னுளம் வந்திவன் என்னடி யானென்று
பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மல மாகென்று நீக்கவல் லானே

துறந்துபு கொள்ளொளி சோதியை கண்டு
பறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தே
மறந்தறி யாவென்னை வான்வர் கோனும்
இறந்து பிறவாமல் ஈங்குவை தானே

மெய்வாய் கண்மூக்கு செவியென்னும் மெ தோற்ற
தவ்வாய அந்த கரணம் அகில்மும்
எவ்வா யியுரும் இறையாட்ட ஆடலாற்
கைவா யிலாநிறை எங்குமெய் கண்டதே
விசுவ கிராசம்

அழிகின்ற சாயா புருடனை போல
கழிகின்ற நீரிற் குமிழியை காணில்
எழுகின்ற தீயிற்கர பூரத்தை யொக்க
பொழிகின்ற இவ்வுடற் போ பரத்தே

உடலும் உயிரும் ஒழிவற ஒன்றிற்
படருஞ் சிவசத்தி தாமே பரமாம்
உடலைவி டிந்த உயிரெங்கு மாகி
கடையு தலையுங் கரக்குஞ் சிவத்தே

செவிமெய்வாய் கண்மூக்கு சேரி திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்துங்
குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து
தவிர்வொன் றிலாத சராசர தானே

பரனெங்கு மார பரந்துற்று நிற்கும்
திரனெங்கு மாகி செறிவெங்கு மெய்தும்
உரனெங்கு மாயுல குண்டு உமிழ்க்கும்
வரமிங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே

அளந்து துரி தறிவினை வாங்கி
உளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்து
கிளர்ந்த பரஞ்சிவஞ்சேர கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனு மாமே

இரும்பிடை நீரென என்னையுள் வாங்கி
பரம்பர மான பரமது விட்டே
உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
இருந்தஎன் நந்தி இதயத்து ளானே

கரியுண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமுமுன் னோதுஞ் சிவமும்
அரிய துரியமேல் அகிலமும் எல்லாம்
திரிய விழுங்குஞ் சிவபெரு மானே

அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன்
தந்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன்
நந்தமை யுண்டுமெய்ஞ் ஞானநே யாந்தத்தே
நந்தி யிருந்தனன் நாமறி யோமே
வாய்மை

அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள்
குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை
அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே

எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு
எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை
எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில்
எல்லாம் அறிந்த இறையென லாமே

தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லா பிறவி கடந்து
கலைநின்ற கள்வனை கண்டுகொண் டேனே

தானே யுலகில் தலைவ னெனத்தகும்
தானே யுலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்
வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும்
ஊனே யுருகிய வுள்ளமொன் றாமே

அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்
இருளற்ற சிந்தை இறைவனை நாடி
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமை
பொருளுற்ற சேவடி போற்றுவோர் தாமே

மெய்கல தாரொடு
பொய்கல தார்முன் புகுதா ஒருவனை
உய்கல தூழி தலைவனுமாய் நிற்கும்
மெய்கல தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே

மெய்கல தாரொடு
பொய்கல தாரு புகுதா புனிதனை
கைகல தாவி எழும்பொழு தண்ணலை
கைகல தார்க்கே கருத்துற லாமே

எய்திய கால திருபொழு துஞ்சிவன்
மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும்
பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில்
ஐயனும் அவ்வழி யாகிநின் றானே

எய்துவ தெய்தா தொழிவ திதுவருள்
உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி
பொய்செய்புலன் நெறியொன்பதுந்தாட்கொளின்
மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே

கைகல தானை கருத்தினுள் நந்தியை
மெய்கல தான்தன்னை வேத முதல்வனை
பொய்கல தார்முன் புகுதா புனிதனை
பொய்யொழி தார்க்கே புகலிட மாமே

மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியை
கைத்தாள் கொண்டாரு திறந்தறி வாரில்லை
பொய்த்தாள் இடும்பையை பொய்யற நீவிட்டாம்
கத்தாள் திறக்கில் அரும் பேற தாமே

உய்யும் வகையால் உணர்வில் ஏத்துமின்
மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணென
பொய்யொன்று மின்றி புறம்பொலி வார்நடு
ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே

வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
தம்பாற் பறவை புகுந்துண தானொட்டா
தம்புகொண் டெய்தி டகல துரத்திடிற்
செம்பொற் சிவகதி சென்றெய்த லாமே

மயக்கிய ஐம்புல பாசம் அறுத்து
துயக்கறுத்தானை தொடர்மின்தொடர்ந்தால்
தியக்கஞ் செய்யாதே சிவனெம் பெருமான்
உயப்போ எனமனம் ஒன்றுவி தானே

மனமது தானே நினையவல் லாருக்கு
கினமென கூறு மிருங்காய மேவற்
றனிவினி னாதன்பால் தக்கன செய்யில்
புனிதன் செயலாகும் போத புவிக்கே
ஞானி செயல்

முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர்
பின்னை வினைக்கணார் பேர்ந்தற பார்ப்பர்கள்
தன்னை யறிந்திடு தததுவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே

தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்
பின்னை வினையை பிடித்து பிசைவர்கள்
சென்னியின் வைத்த சிவனரு ளாலே

மனவாக்கு காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்கு கெட்டவர் வாதனை தன்னால்
தனைமாற்றி யாற்ற தகுஞானி தானே
அவா அறுத்தல்

வாசியு மூசியும் பேசி வகையினால்
பேசி இருந்து பிதற்றி பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம் எளிதாமே

மாடத்து ளானலன் மண்டப தானலன்
கூடத்து ளானலன் கோயிலுள்
வேடத்து ளானலன் வேட்கைவி டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்தித தானே

ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரு துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே

அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்றற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மை தொடர்தலு மாமே

உவாக்கடல் ஒக்கின்ற வூழியும் போன
துவாக்கட லுட்பட்டு துஞ்சினர் வானோர்
அவாக்கட லுட்ப டழுந்தினர் மண்ணோர்
தவாக்கடல் ஈசன் தரித்து நின்றானே

நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துந்தொழி லற்று சுத்தம தாகலும்
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்று
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே

உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம்
பெண்மயற் கெட்டற பேறட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
வண்மை யருள்தான் அடைந்தபின் ஆறுமே

அவனிவன் ஈசனென் றன்புற நாடி
சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார்
பவனிவன் பல்வகை யாமி பிறவி
புவனிவன் போவது பொய்கண்ட போதே

கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறிந்த பாரக முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியை
சிந்தையில் வைத்து தெளிவுற சேர்த்திட்டால்
முந்தை பிறவிக்கு மூலவி தாமே
பக்தியுடைமை

முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான்தனை
சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியை
பத்தர் பரசும் பசுபதி தானென்றே

அடியார் அடியார
கடியவனாய் நல்கி டடினையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட
அடியா னிவனென் றடிமைகொண் டானே

நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
ஆரி கடனந்தி யாமா ரறிபவர்
பாரிற் பயனாரை பார்க்கிலும் நேரியர்
ஊரில் உமாபதி யாகிநின் றானே

ஒத்துல கேழும் அறியா ஒருவனென்
ற்த்தன் இருந்திடம் ஆரறிவார்சொல்ல
பத்தர்தம் பத்தியிற் பாற்படில் அல்லது
முத்தினை யார்சொல்ல முந்துநின் றாரே

ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல்
நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனை
வான்கன்று கப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன்கன்றா னாடிவ துள்புகு தானே

பெத்தத்து தன்பணி இல்லை பிறத்தலான்
முத்தத்து தன்பணி இல்லை முறைமையால்
அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற்
பத்திப்ப டோ ர்க்கு பணியொன்றும் இல்லையே

பறவையிற் கற்பமும் பாம்புமெய் யாக
குறவஞ் சிலம்ப குளிர்வரை யேறி
நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்
இறைவனென் றென்மனம் ஏத்தகி லாவே

உறுதுணை நந்தியை உம்பர் பிரானை
பெறுதுணை செய்து பிறப்பறு துய்மின்
செறிதுணை செய்து சிவனடி சிந்தி
துறுதுணை யாயங்கி யாகிநின் றானே

வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற
தானவர் முப்புரஞ் செற்ற தலைவனை
கானவன் என்றுங் கருவரை யானென்றும்
ஊனத னுள்நினை தொன்றுப டாரே

நிலைபெறு கேடென்று முன்னே படைத்த
தலைவனை நாடி தயங்குமென் உள்ளம்
மலையுளும் வானக துள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்து மூழ்கிநின் றேனே
முத்தியுடைமை

முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்று
தத்துவ சுத்தி தலைப்பட்டு தன்பணி
மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மை
பத்தியி லுற்றோர் பரானந்த போதரே

வளங்கனி தேடிய வன்றா பறவை
உளங்கனி தேடி யுழிதரும் போது
களங்கனி யங்கியிற் கைவிள கேற்றி
நலங் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே
சோதனை

பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து
அம்மா நடித தருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடு தெம்மை கரந்திட்டு
சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே

அறிவுடை யானரு மாமறை யுள்ளே
செறிவுடை யான்மிகு தேவர்க்கு தேவன்
பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த
குறியுடை யானொடுங் கூடுவன் நானே

அறிவறி வென்றங் கரற்றும் உலகம்
அறிவறி யாமையை யாரும் அறியார்
அறிவறி யாமை கடந்தறி வானால்
அறிவறி யாமை யழகிய வாறே

குறியா குறியினிற் கூடாத கூட்ட
தறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றுஞ்
செறியா செறிவே சிவமென லாமே

காலினில் ஊருங் கரும்பினில் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை
காவலன் எங்குங் கலந்துநின் றானே

விருப்பொடு கூடி விகிர்த்னை நாடி
பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே

நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ள
எந்தைவ தானென் றெழுந்தேன் எழுதலுஞ்
சிந்தையி லுள்ளே சிவனிரு தானே

தன்மைவல் லோனை தவத்துள் நலத்தினை
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியை
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் உம்மை பரிசுசெய் வானே

தொடர்ந்துநின் றானென்னை சோதிக்கும் போது
தொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கே
படர்ந்துநின் றாதி பராபரன் எந்தை
கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே

அவ்வழி காட்டும் அமரர கரும்பொருள்
இவ்வழி தந்தை தாய் கேளியான் ஒக்குஞ்
செவ்வழி சேர்சிவ லோக திருந்திடும்
இவ்வழி நந்தி இயல்பது தானே

எறிவது ஞான துறைவாள் உருவி
அறிவது னோடேயவ் வாண்டகை யானை
செறிவது தேவர்க்கு தேவர் பிரானை
பறிவது பல்கண பற்றுவி டாரே

ஆதி பிரான்தந்த வாள்ங்கைக்கொண்டபின்
வேதித்து என்னை விலக்கவல் லாரில்லை
சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம்
ஆதிக்க டெய்வ மவனிவ னாமே

அந்த கருவை யருவை வினைசெய்தற்
பந்தம் பணியச்சம் பல்பிற பும்வாட்டி
சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தார சோதனை
சந்திக்க தற்பர மாகுஞ் சதுரர்க்கே

உரையற்ற தொன்றை யுரைத்தான் எனக்கு
கரையற் றெழுந்த கலைவே டறுத்து
திரையொத்த என்னுடல் நீங்கா திருத்தி
புரையற்ற என்னு புகுந்தற் பரனே
எட்டாம் தந்திரம் முடிவு பெற்றது

திருமந்திரம்
ஒன்பதாம் தந்திரம்
குருமட தரிசனம்

பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும் ஈசன் தனக்கென்ற உள்கி
குவியும் குருமடம் கண்டவர் தாம்போ
தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே

இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை
அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்
அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும்
அவனை புறம்புஎன்று அரற்றுகின் றாரே

நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய்மலர சேவடி
தேட அரியன் சிறப்பிலி எம்இறை
ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே

இயம்புவன் ஆசன தோடு மலையும்
இயம்புவன் சித்த குகையும் இடமும்
இயம்புவன் ஆதார தோடு வனமும்
இயம்புவன் ஈராறு இருநில தோர்க்கே

முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்
அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி
அகம்பர மாதனம் எண்எண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே

அகமுக மாம்பீடம் ஆதார மாகும்
சகமுக மாம்சத்தி யாதன மாகும்
செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும்
அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே

மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்
காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியே
தூய பரஞ்சுடர் தோன்ற சொரூபத்துள்
ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே
ஞானகுரு தரிசனம்

ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூற குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய பரசிவம் யாவையும் ஆகி
விரிவு குவிவுஅற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேசஒண் ணாதே

ஆயன நந்தி அடிக்குஎன்தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்
காயன நந்தியை காணஎன் கண்பெற்றேன்
சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே

கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல்
குருவின் உருவம் குறித்த போதே
திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே

அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு
அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலை காணில் அவன்இவன் ஆமே

தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்
மான்ற அறிவு மறிநன வாதிகள்
மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற
ஊன்றிய நந்தி உயர்மோன தானே

சந்திர பூமி குள்தன்புரு வத்திடை
கந்த மலரில் இரண்டிதழ கன்னியும்
பந்தம் இலாத பளிங்கின் உருவினள்
பந்தம் அறுத்த பரம்குரு பற்றே

மனம்புகு தான்உலகு ஏழும் மகிழ
நிலம்புகு தான்நெடு வானிலம் தாங்கி
சினம்புகு தான்திசை எட்டும்நடுங்க
வனம்புகு தான்ஊர் வடக்கென்பது ஆமே

தானான வண்ணமும் கோசமும் சார்தரும்
தானாம் பறவை வனமென தக்கன
தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில்
தாமாம் தசாங்கமும் வேறுள்ள தானே

மருவி பிரிவுஅறி யாஎங்கள் மாநந்தி
உருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும்
கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்கு
அருவினை கண்சோரும் அழிவார் அகத்தே

தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னை
பலப்படு பாசம் அறுத்துஅறு திட்டு
நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்
தலைப்பட லாகும் தருமமும் தானே

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மை
சுனைக்குள் விளைமலர சோதியி னானை
தினைப்பிள தன்ன சிறுமைய ரேனும்
கனத்த மனத்தடை தால்உயர தாரே

தலைப்படும் காலத்து தத்துவம் தன்னை
விலக்குறின் மேவை விதியென்றும் கொள்க
அனைத்துஉல காய் நின்ற ஆதி பிரானை
நினைப்புறு வார்பத்தி தேடி கொள்வாரே

நகழ்வுஒழி தார்அவர் நாதனை யுள்கி
நிகழ்வுஒழி தார்எம் பிரானொடும் கூடி
திகழ்வொழி தார்தங்கள் சிந்தையின் உள்ளே
புகழ்வழி காட்டி புகுந்துநின் றானே

வந்த மரகத மாணிக்க ரேகைபோல்
சந்திடு மாமொழி சற்குரு சன்மார்க்கம்
இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தர சோதியுள் சோதியும் ஆமே

உண்ணும் வாயும் உடலும் உயிருமா
கண்ணுமா யோ கடவுள் இருப்பது
மண்ணு நீரனல் காலொடு வானுமாய்
விண்ணு மின்றி வெளியானோர் மேனியே

பரசு பதியென்று பார்முழு தெல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்
பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு
உரிய பதியும்பா ராக்கி நின்றானே

அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில்
தம்பர மல்லது தாமறியோம் என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெரு மான்அருள் பெற்றிரு தாரே

கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோம்இனி சித்தம் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ளாயிரு தோமே
பிரணவ சமாதி

தூல பிரணவம் சொரூபானந்த பேருரை
பாலித்த சூக்கும மேலை சொரூபப்பெண்
சூலித்த முத்திரை ஆங்கதிற்காரணம்
மேலை பிரணவம் வேதாந்த வீதியே

ஓம்எனும் ஓங்கார துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்கார துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்கார துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே

ஓங்கார துள்ளே உதித்தஐம் பூதங்கள்
ஓங்கார துள்ளே உதித்த சராசரம்
ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே

வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்
அருக்கம் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனி
சுருக்கம்இல் ஞானம் தொகு துணர தோரே

மலையும் மனோபவம் மருள்வன ஆவன
நிலையில் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம்சித்த மாகும்
நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே

சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்கு
ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்
கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்து
ஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே
ஒளி

ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடனிரு தானே

புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்
அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்
பகல்ஒளி செய்தும் அத்தா மரையிலே
இகல்ஒளி செய்துஎம் பிரான்இரு தானே

விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி யருள
வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்து நின்றானே

இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே

மேல்ஒளி கீழ்அதன் மேவிய மாருதம்
பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும்
மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே

மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி
பன்னிய ஞானம் பரந்து பரத்தொளி
துன்னிய ஆறுஒளி தூய்மொழி நாடொறும்
உன்னிய வாறுஒளி ஒத்தது தானே

விளங்கொளி மின்னொளி யாகி கரந்து
துளங்கொளி ஈசனை சொல்லும்எ போதும்
உளங்கொளி ஊனிடை நின்றுயிர கின்ற
வளங்கொளி எங்கும் மருவிநின் றானே

விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும்
களங்கொளி ஈசன் கருத்தது தானே

இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன்
துலங்கொளி போல்வது தூங்கரு சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே ஒருங்கிகின் றானே

உலங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன்
வளங்கொளி யாய்நின்ற மாமணி சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே

விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த
துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேரா
களங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆட
விளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே

போது கருங்குழற் போனவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்துஅ பாலுற்ற தூவொளி
நீதியின் நல்லிருள் நீக்கிய வாறே

உண்டில்லை என்னும் உலகத்து இயல்பிது
பண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே

சுடருற ஒங்கிய ஒள்ளொளி ஆங்கே
படருறு காட்சி பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசில்
உடலுறு ஞால துறவியின் ஆமே

ஒளி பவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ளச்சொம்பொன் ஆதி பிரானும்
களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி
ஒளிபவ ளத்தென்னோடு ஈசன் நின் றானே

ஈசன்நின் றான்இமை யோர்கள் நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றி திகைத்துஇழை கின்றனர்
பாசம்ஒன் றாக பழவினை பற்றற
வாசம்ஒன் றாமலர் போன்றது தானே

தானே யிருக்கும் அவற்றில் தலைவனும்
தானே யிருக்கும் அவனென நண்ணிடும்
வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்து
பானாய் இருக்க பரவலும் ஆமே
தூல பஞ்சாக்கரம்

ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்பது எழுத்தே அஞ்செழு தாமே

அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி
உகார முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி
நகார முதலாகும் நந்திதன் நாமமே

அகராதி ஈரெண் கலந்த பரையும்
உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன்
சிகராதி தான்சிவ வேதமே கோணம்
நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே

வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி
ஆய இலிங்கம் அவற்றின்மேல் அவ்வா
தூயதோர் துண்டம் இரு தகம்செல்லல்
ஆயதுஈ றாம்ஐந்தோடு ஆம்எழுத்து அஞ்சுமே

கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கி
கரணங்கள் விட்டுயிர் தானெழும் போது
மரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும்
அரணம்கை கூட்டுவது அஞ்செழு தாமே

ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலார்
சேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும்
வாயுறு ஓதி வழுத்தலும் ஆமே

தெள்ளமுது ஊற சிவாய நமஎன்று
உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர்
துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே

குருவழி யாய குணங்களில் நின்று
கருவழி யாய கணக்கை அறுக்க
வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு
அருள்வழி காட்டுவது அஞ்செழு தாமே

வெறிக்க வினைத்துயிர் வந்திடும் போது
செறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும்
குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்
குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே

நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுரை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே

பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராது
இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்
பராமுற்றும் கீழோடு பல்வகை யாலும்
அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே
சூக்கும பஞ்சாக்கரம்

எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தரா
தெளிய ஒதிச்சிவாயநம என்னும்
குளிகை யிட்டு பொன் னாக்குவன் கூட்டையே

சிவன்சத்தி சீவன் செறுமல மாயை
அவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகல
சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே

சிவன்அரு ளாய சிவன்திரு நாமம்
சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை
சிவன்முத லாக சிறந்து நிரோதம்
பவமது அகன்று பரசிவன் ஆமே

ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ்
ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால்
தீதில் சிவஞான யோகமே சித்திக்கும்
ஓதும் சிவாயமலமற்ற உண்மையே

நமாதி நனாதி திரோதாயி யாகி
தம்ஆதிய தாய்நிற்க தான்அந துற்று
சமாதி துரியம் தமதுஆகம் ஆகவே
நமாதி சமாதி சிவமாதல் எண்ணவே

அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவர் உள்ளுறும் மாயை
திரிமலம் நீங்கி சிவாயஎன்று ஓதும்
அருவினை தீர்ப்பதும் அவ்வெழு தாமே

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்க
சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள்
சிவசிவ ஆகும் திருவருள் ஆமே

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்ன சிவகதி தானே

நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கி
சிவமென்னும் நாமத்தை சிந்தையுள் ஏற்ற
பவமது தீரும் பரிசும்அது அற்றால்
அவதி தீரும் அறும்பிறப்பு அன்றோ
அதிசூக்கும பஞ்சாக்கரம்

சிவாய நமவென சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமைய தாக்கி
சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை
அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே

செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம்
அஞ்சண வும்முறை ஏறிவழி கொண்டு
துஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனை
நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே

அங்கமும் ஆகம வேதமது ஓதினும்
எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது
சங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே

பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே
விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை
எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே
திருக்கூத்து தரிசனம்

எங்கும் திருமேனி
எங்கும் சிதம்பரம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே

சிற்பரஞ் சோதி சிவானந்த கூத்தனை
சொற்பத மாம்அந்த சுந்தர கூத்தனை
பொற்பதி கூத்தனை பொன்தில்லை கூத்தனை
அற்புத கூத்தனை யார்அறி வாரே
சிவானந்த கூத்து

தான்அந்தம் இல்லா சதானந்த சத்திமேல்
தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்த கூத்தாட ஆடரங்கு ஆனதே

ஆனந்தம் ஆடரங்கு
ஆனந்தம் பல்லியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்த கூத்துஉக தானுக்கே

ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும்
களியார் பரமும் கருதுறை யந்த
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே

ஆன நடம்ஐந்து அகள சகளத்தர்
ஆன நடமாடி ஐங்கரு மத்தாக
ஆன தொழில்அரு ளால்ஐ தொழில்செய்தே
தேன்மொழி பாகன் திருநட மாடுமே

பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்து
ஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே

வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆட
கீதங்கள் ஆட கிளர்அண்டம் ஏழாட
பூதங்கள் ஆட புவனம் முழுதாட
நாதம்கொண் டாடினான் ஞானாந்த கூத்தே

பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில்
ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்ட
போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே

தேவர் சுரர்நரர் சித்தர்வி தியாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து
தாபதர் சத்தர் சமயம் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே
சுந்தர கூத்து

அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல்
கண்டம் கரியான் கருணை திருவுரு
கொண்டுஅங்கு உமைகாண கூத்துஉக தானே

கொடிகட்டி பாண்டுரங் கோடுசங் காரம்
நடம் எட்டோ டு ஐந்துஆறு நாடியுள் நாடும்
திடம்உற்று ஏழும்தேவ தாருவும் தில்லை
வடம் உற்ற மாவனம் மன்னவன் தானே

பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்
பரமாண்டத்து ஊடே படரொளி ஈசன்
பரமாண்டத்து ஊடே படர்தரு நாதம்
பரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே

அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில்
தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே

ஆன்நந்தி யாடிபின் நவ கூத்தாடி
கான்நந்தி யாடி கருத்தில் தரித்தாடி
மூன சுழுனையுள் ஆடி முடிவில்லா
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே

சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம்
சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும்
சுத்திகள் எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே

மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள்
ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே
பொற்பதி கூத்து

தெற்கு வடக்கு கிழக்குமேற்கு உச்சியில்
அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே

அடிஆர் பவரே அடியவர் ஆமால்
அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே
அடியார் அரனடி ஆனந்தம் கண்டோ ர்
அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர்

அடங்காத என்னை அடக்கி அடிவைத்து
இடம்காண் பரானந தேஎன்னை இட்டு
நடந்தான் செயும்நந்தி நன்ஞான கூத்தன்
படம்தான்செய்து உள்ளுள் படிந்திரு தானே

உம்பரில் கூத்தனை உத்த கூத்தனை
செம்பொன் திருமன்றுள் சேவ கூத்தனை
சம்பந்த கூத்தனை தற்பர கூத்தனை
இன்புற நாடிஎன் அன்பில்வை தேனே

மாணி கூத்தனை வண்தில்லை கூத்தனை
பூணுற்ற மன்றுள் புரிசடை கூத்தனை
சேணுற்ற சோதி சிவானந்த கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யாருரை பாரே

விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும்
தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர பொற்பாதத்து அன்புவை பார்கட்கே

தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த
நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே

காளியோடு ஆடி கனகா சலத்துஆடி
கூளியோடு ஆடி குவல தேஆடி
நீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி
நாளுற அம்பல தேயாடும் நாதனே

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கனல்
கூரும்இவ் வானின் இலங்கை குறியுறும்
சாரும் திலைவன தண்மா மலயத்தூடு
ஏறும் கழுமுனை இவைசிவ பூமியே

பூதல மேரு புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே
பொற்றில்லைக்கூத்து

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாக
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாக
தெண்டினில் சத்தி திருஅம் பலமா
கொண்டு பரஞ்சோதி கூத்துக தானே

குரானந்த ரேகையா கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்து தென்திசை சேர்ந்து
புரானந்த போகனா பூவையும் தானும்
நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே

ஆதி பரன்ஆட அங்கை கனலாட
ஓதும் சடையாட உன்மத்த முற்றாட
பாதி மதியாட பாரண்ட மீதாட
நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே

கும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால்
உம்பரம் மோனஞா ஞானந்தத்தில் உண்மையே

மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழு
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம்
பாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே

இடைபிங் கலைஇம வானோடு இலங்கை
நடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனை
கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
படர்பொன்றி என்னும் பரமாம் பரமே

ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகம் சுத்தமே

நாதத்தினில் ஆடி நாற்ப தேயாடி
வேதத்தில் ஆடி தழல் அந்தம் மீதாடி
போதத்தில் ஆடி புவனம் முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே

தேவரோடு ஆடி திருஅம்பலத்து ஆடி
மூவரோடு ஆடி முனிசன தோடு ஆடி
பாவினுள் ஆடி பராச தியில் ஆடி
கோவினுள் ஆடிடும் கூத்த பிரானே

ஆறு முகத்தில் அதிபதி நான்என்றும்
கூறு குருபரன் நானென்றும்
தேறினர் தெற்கு திருஅம்ப லத்துளே
வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே

அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி
உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வ தருளுமே

ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாட
தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே

இருதயம் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினில் மாணி கூத்தன்
குரவனயாய் எங்கணும் கூத்துக தானே
அற்புத கூத்து

குருவுரு வன்றி குனிக்கும் உருவம்
அருவுரு வாவது அந்த அருவே
திரிபுரை யாகி திகழ்தரு வாளும்
உருவரு வாகும் உமையவள் தானே

திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வுள்ளாக்குனிக்கும் உருவே
உருஅரு வாவதும் உற்றுணர தோர்க்கு
அருள்வழி யாவதும் அவ்வழி தானே

நீரும் சிரிசிடை பன்னிரண்டு அங்குலம்
ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்து
ஆடும் இடந்திரு அம்பல தானே

வளிமேகம் மின்வில்லு வானகஓசை
தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்
களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்
ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே

தீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடஞ்செய்யும் ஆறே

கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்து
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே

இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொடு நின்றஇ பல்லுயிர கெல்லாம்
அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே

சத்தி வடிவு சகல ஆனந்தமும்
ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டு
ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுற்று பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்கு பற்றாற பரமன் இருந்திடம்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே

அண்டங்கள் தத்துவ மாகி சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே
கொண்டு பரஞ்சோதி கூத்துக தானே

மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை
சென்றுஅது தான்ஒரு பத்திரு நூறுள
நின்றது தான்நெடு மண்டல மாமே

அண்டம் எழுகோடி பிண்டம்
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
அண்ட நடஞ்செயும் ஆலயம் தானே

ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே

அம்பல மாவது அகில சராசரம்
அம்பல மாவது ஆதி பிரானடி
அம்பல மாவது அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவது அஞ்செழு தாமே

கூடிய திண்முழ வம்குழல் ஓமென்று
ஆடிய மானுடர் ஆதி பிரான் என்ன
நாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள்
பாடிய வாறுஒரு பாண்டரங் காமே

அண்டத்தில் தேவர்கள் அப்பாலை
தெண்டிசை சூழ்புவி குள்ளுள்ள தேவர்கள்
புண்டரி கப்பத பொன்னம் பலக்கூத்து
கண்டுசே வித்து கதிபெறு வார்களே

புளிக்கண்ட வர்க்கு புனலூறு மாபோல்
களிக்கும் திருக்கூத்து கண்டவர்க்கு எல்லாம்
துளிக்கும் அரு கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே

திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க்கு உணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்து
கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே

அங்கி தமருகம் அக்குமா லைபாசம்
அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம்
தங்குஉ பயந்தரு நீல மும்உடன்
மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே

ஆடல் பதினோர் உறுப்பும் அடைவா
கூடிய பாதம் சிலம்புகை கொள்துடி
நீடிய நாதம் பராற்பர நேயத்தே
ஆடிய நந்தி புறம்அக தானே

ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட
இன்புறும் ஏழினும் ஏழுஐம்ப தாறுஆட
அன்பதும் ஆடினான் ஆனந்த கூத்தே

ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழிசை நாடக தேஇசை தானே

மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
மூன்றின்இலக்கம் முடிவாகி முந்தியே
மூன்றிலும் ஆடினான் மோகாந்த கூத்தே

தாமுடி வானவர் தம்முடி மேலுறை
மாமணி ஈசன் மலரடி தாளினை
வாமணி அன்புடை யார்மன துள்ளெழுங்
காமணி ஞாலம் கடந்துநின் றானே

புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடும் அளவுஎங்கள் சிந்தை
புரிந்தவன் ஆடில்பல்பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாறே

ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர்
ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடமாட லாம் அரு சத்தியே

ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து
அன்புறு கோணம் அதிபதந்து ஆடிட
துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவே
அன்புறு எந்தை நின்று ஆடலுற் றானே

தத்துவம் ஆட சதாசிவம் தானாட
சித்தமும் ஆட சிவசத்தி தானாட
வைத்த சராசரம் ஆட மறையாட
அத்தனும் ஆடினான் ஆனந்த கூத்தே

இருவருங் காண எழில்அம் பலத்தே
உருவோடு அருவோடு ஒருபர ரூபமா
திருவருள் சத்திக்குள் சித்தன்ஆ னந்தன்
அருளுரு வாகிநின்று ஆடலுற் றானே

சிவமாட சத்தியும் ஆட சகத்தில்
அவமாட ஆடாத அம்பரம் ஆட
நவமான தத்துவம் நாதாந்தம் ஆட
சிவமாடும் வேதாந்த சித்தாந துள்ளே

நாதத்தின் அந்தமும் நாற்போத
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னாந்தமும்
தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து
நாத பிரமம் சிவநாட மாமே

சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீர
தவமார் பசுபாசம் ஆங்கே தனித்து
தவமாம் பரன்எங்கும் தானாக ஆடும்
தவமாம் சிவானந தோர் ஞான கூத்தே

கூடிநின் றானொடு காலத்து தேவர்கள்
வீடநின் றான்விகிர் தா என்னும் நாமத்தை
தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளி
ஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறே

நா துவம்கடந்து ஆதி மறைநம்பி
பூ துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நே துவமும் அவற்றோடு நேதியும்
பேத படாவண்ணம் பின்னிநின் றானே

ஆனந்தம் என்பர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே

திருந்துநல் சீஎன்று உதறிய கையும்
அருந்தவர் வாஎன்று அணைத்த மலர்க்கையும்
பொருந்த அமைப்பில் அவ்வென்ற பொற்கையும்
திருந்தநல் தீயாகும் திருநிலை மவ்வே

மருவும் துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மிதித்த கமல பதமும்
உருவில் சிவாய நமவென வோதே

அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
அரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம்
அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி
அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே

தீத்திரன் சோதி திகழ்ஒளி உள்ஒளி
கூத்தனை கண்டஅ கோமள கண்ணினள்
மூர்த்திகள் மூவர் முதல்வன் இடைசெல்ல
பார்த்தனன் வேதங்கள் பாடினள் தானே

நந்தியை எந்தையை ஞான தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்து
அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர
சுந்தர கூத்தனை என்சொல்லு மாறே

சீய குருநந்தி திருஅம்ப லத்திலே
ஆயுறு மேனியை யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மை
ஆயுறு மேனி அணைபுக லாமே

தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும்
தானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சை
ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்
ஆனால் அரனடி நேயத்த தாமே
ஆகாச பேறு

உள்ளத்துள் ஓம்என்ற ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை
உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை
உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே

பெருநில மாய் அண்ட மாய்அண்டத்து அப்பால்
குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்
பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்
அருநிலை யாய்நின்ற ஆதி பிரானே

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியை குலைத்தது தானே

பயனறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர சோதி
அயனொடு மால்அறி யாவகை நின்றிட்டு
உயர்நெறி யாய்ஒளி ஒன்றது வாமே

அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்
பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும்
அறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள்
பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே

ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து
ஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம்
ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே

உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது
குயில்கொண்ட பேதை குலாவி உலாவி
வெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே

நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்னொளி சோதி வெளியை
பணியின் அமுதம் பருகலும் ஆமே

புறத்துளா காசம் புவனம் உலகம்
அகத்துளா காசம்எம் ஆதி அறிவு
சிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதி
சகத்துளா காசம் தானம்ச மாதியே
ஞானோதயம்

மனச தியில்கண்ட மனநன வாகும்
கனவுற ஆனந்தம் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்ப
இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே

கரியட்ட கையன் கபாலம்கை யேந்தி
எரியும் இளம்பிறை சூடும்எம் மானை
அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்
கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே

மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறியே சென்று
புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
நக்கார் சுழல்வழி நாடுமின் நீரே

விளக்கை பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினு குள்ளே விளக்கினை தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே

தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்
தத்துவன் அங்கே தலைப்படு தானே

விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞான துள்ளே
அசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும்
பசும்பொன் திகழும் படர்சடை மீதே
குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே

முத்தின் வயிரத்தின் முந்நீர பவளத்தின்
கொத்தும் பசும்பொன்னின்தூவொளி மாணிக்கம்
ஒத்துஉயிர் அண்ட துள் அமர் சோதியை
எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே

நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும்
நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பது
நான்என்ற ஞான முதல்வனே நல்கினான்
நான்என்ற நானும் நினைப்பு ஒழிந்தேனே

ஞானத்தின் நன்னெறி நாதாந்த
ஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல்
ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நன்மோக நாதாந்த வேதமே

உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்
உய்யவல் லார்அறி வுள்அறி வாமே

காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்கு கடலின் அமுதொக்கும்
பேணவல் லார்க்க பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே

ஓம்என்றும் எழு துள்நின்ற ஓசைபோல்
மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி
ஆய்கின்ற தேவர் அகம்படி யாமே
சத்திய ஞானானந்தம்

எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழுள
இப்பாழும் இன்னாவாறு என்பதில்லா இன்பத்து
தற்பரஞா னானந்தர் தானது வாகுமே

தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்
அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலை
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே

மன்னும் சத்தியாதி மணியொளி மாசோயை
அன்னதோடு ஒப்பம் இடல்ஒன்றா மாறது
இன்னிய உற்பலம் ஒண்சீர் நிறமணம்
பன்னிய சோபை பகர்ஆறும் ஆனதே

சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால்
உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம்
வைத்த சொருபத்த சத்தி வருகுரு
உய்த்த உடல்இவை உற்பலம் போலுமே

உருஉற் பலநிறம் ஒண்மணம் சோபை
தரநிற்ப போல்உயிர் தற்பரன் தன்னில்
மருவ சிவம்என்ற மாமு பதத்தின்
சொரூபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே

நினையும் அளவில் நெகிழ வணங்கி
புனையில் அவனை பொதியலும் ஆகும்
எனையும் எங்கோன்நந்தி தன்னருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பி தனனே

பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபடி உள்புக
சீல மயிர்க்கால் தொறும்தே கிடுமே

அமர துவம்கடந்து அண்டம் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்தும் பனிமொழி மாதர்
துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே

மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கி
சுத்தம தாகும் துரி துரிசற்று
பெத்த மறச்சிவ மாகி பிறழ்வுற்றும்
சத்திய ஞா னானந்தம் சார்ந்தனன் ஞானியே

சிவமாய் அவமான மும்மலம் தீர
பவமான முப்பாழை பற்றற பற்ற
தவமான சத்திய ஞானான தத்தே
துவமார் துரியம் சொரூபம் தாமே
சொரூப உதயம்

பரம குரவன் பரம்எங்கு மாகி
திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்று
நிரவும் சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத்து அணைந்துநின் றானே

குலைக்கின்ற நீரின் குவலய நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம்
நிலத்திடை வானிடை நீண்டகன் றானை
வரைந்து வலம்செயு மாறுஅறி யேனே

அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்
எங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர்
தங்கிநின் றான்தனிநாயகன் எம்இறை
பொங்கிநின் றான்புவ னாபதி தானே

சுவடும் தனையறி யாமல்
சுமையற்ற காமாதி காரணம் எட்டும்
திமிர செயலும் தெளிவுடன் நின்றோர்
அமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே

மூவகை தெய்வத்து ஒருவன் முதல்உரு
வாய்அது வேறாம் அதுபோல் அணுப்பரன்
சேய சிவமு துரியத்து சீர்பெற
ஏயும் நெறியென்று இறைநூல் இயம்புமே

உருவன்றி யேநின்று உருவம் புணர்க்கும்
கருவன்றி யேநின்று தான்கரு வாகும்
அருவன்றி யேநின்ற மா பிரானை
குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே

உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே

பரஞ்சோதி யாகும் பதியினை பற்றா
பரஞ்சோதி என்னுள் படிந்துஅதன் பின்னை
பரஞ்சோதி யுள்நான் படி
பரஞ்சோதி தன்னை பறை கண்டேனே

சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆமாறு போல
மருவிய சத்தியாதி நான்கும் மதித்த
சொரூபக்குரவன் சுகோ தானே

உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தின்
கரையற்ற சத்தியாதி காணில் அகார
மருவுற்று உகாரம் மகாரம தாக
உரையற்ற காரத்தில் உள்ளொளி யாமே

தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லா பிறவி கடந்து
கலைநின்ற கள்வனில் கண்டுகொண் டேனே

ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமாறு அறிந்தேன் புகுமாறும் ஈதென்றே
ஏமாப்ப தில்லை இனியோர் இடமில்லை
நாமாம் முதல்வனும் நான்என லாமே
ஊழ்

செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியலென்
மத்தக தேயுளி நாட்டி மறிக்கிலென்
வித்தகன் நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே

தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்
வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னம் செய்ததே நன்னில மானதே

ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டு கொண்டு சுமந்தறி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியை
பேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே

வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலன்
கான்நின்ற செந்தீ கலந்துடல் வேகில்என்
தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென்
நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே

ஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென்
கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்
ஏனை பதியினில் என்பெரு மான்வைத்த
ஞானத்து உழவினை நான்உழு வேனே

கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபு கால்ஒக்கும்
பாடது நந்தி பரிசறி வார்க்கே
சிவ தரிசனம்

சிந்தையது என்ன சிவனென்ன வேறில்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளி தெளியவல் லார்கட்கு
சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே

வாக்கும் மனமும் மறைந்த மறைபொருள்
நோக்குமின் நோக்க படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
யாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே

பரனா பராபர னாகிஅ பால்சென்று
உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்
தரனாய் தனதென ஆறுஅறி வொண்ணா
அரனாய் உலகில் அருள்புரி தானே
சிவ சொரூப தரிசனம்

ஓதும் மயிரக்கால் தோறும் அமு தூரிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை
வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே

உணர்வும் அவனே உயிரும்
புணரும் அவனே புலவி
இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே

துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரும்
முன்னி அவர்தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றதோர் தேற்றத்தின் ஆமே

மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதி தலைவன் இணையிலி
பொன்னுற்ற மேனி புரிசடை நந்தியும்
என்னுற்று அறிவன்நான் என்விழி தானே

சத்திய ஞான தனிப்பொருள் ஆனந்தம்
சித்தத்தின் நில்லா சிவானந்த பேரொளி
சுத்த பிரம துரியம் துரியத்துள்
உய்த்த துரியத்து உறுபே ரொளியே

பரன்அல்ல நீடும் பராபரன் அல்ல
உரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்ல
தரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும்
அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்றோர்க்கு தத்துவங் கூடலால்
சுத்தி யகன்றொர் சுகானந்த போதரே

துரிய அதீதம் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன்
உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே
முத்தி பேதம் கரும நிருவாணம்

ஓதிய முத்தியடைவே உயிர்பர
பேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடு
ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே
ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே

பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
சுற்றற் றவர்சுற்று கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியை
பெற்றுற் றவர்கள் பிதற்றொழி தாரே
சூனிய சம்பாஷணை

காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய்
ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்
ஏய பெருமான்இருந்து பொருகின்ற
மா கவற்றின் மறைப்பறி யேனே

தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
மாறி கிடக்கும் வகையறி வாரில்லை
மாறி கிடக்கும் வகையறி வாளர்க்கு
ஊறி கிடந்ததென் உள்ளன்பு தானே

ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறுபடுவன நான்கு பனையுள
ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை
ஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே

வழுதலை வித்திட பாகன் முளைத்தது
புழுதியை தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுதுகொண்டு ஓடினோர் தோட்ட குடிகண்
முழுதும் பழுத்தது வாழை கனியே

ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன்றும் இன்றி புகஎளி தாமே

பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுள
கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு
வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே

மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாமணி கோலி தறியுற பாய்ந்திடும்
நாஅணைகோலி நடுவில் செறுஉழார்
காலணை கோலிக்களர்உழு வாரே

ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்
பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே

பட்டி பசுக்கள் இருபத்து நாலுள
குட்டி பசுக்களோர்ஏழுளு ஐந்துள
குட்டி பசுக்கள் குடப்பால் சொரியினும்
பட்டி பசுவே பனவற்கு வாய்த்ததே

ஈற்று பசுக்கள் இருபத்து நாலுள
ஊற்று பசுக்கள் ஒரு குடம் பால்போதும்
காற்று பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து
மாற்று பசுக்கள் வரவுஅறி யோமே

தட்டான் அசுத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டு
தட்டான் அதனை தகைந்துகொண் டானே

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி
திரிக்கின்ற ஒட்டம்சிக்கென கட்டி
வரிக்கின்ற நல்ஆன் கறவையை பூட்டில்
விரிக்கின்ற வெள்ளரி வித்துவி தாமே

இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்தி
கிடா கொண்டு பூட்டி கிளறி முளையை
மிடா கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே

விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது
விளைந்து கிடந்தது மேலைக்கு காதம்
விளைந்து விளைந்துகொள்
விளைந்து கிடந்தது மேவுமு காதமே

களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருதலும் இல்லை
களர்உழு வார்கள் களரின் முளைத்த
வளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே

கூப்பிடு கொள்ளா குறுநரி கொட்டகத்து
ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு
நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை
ஏற்பட இல்லத்து இனிதிருந்தானே

மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ள
குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
உலைமேல் இருந்த உறுப்பென கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவை தானே

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்து திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலா சொரியுமே

ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்
தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்
தாமா குரங்கொளில் தம்மன துள்ளன
மூவா கடாவிடின் மூட்டுகின் றாரே

எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளை
தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத
மலராத பூவின் மணத்தின் மதுவை
பிறவாத வண்டு மணமுண்ட வாறே

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் கூழை தருங்கனி
ஆநின்ற வைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே

மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்
பாம்புண்டு பாம்பை துரத்தித்தின் பார்இன்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே

பத்து பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோகர் ரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே

இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே
இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பின்
இரண்டு கடாவும் இருத்தி பிடிக்கில்
இரண்டு கடாவும் ஒருகடா வாமே

ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டி
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்பநின் றாரே

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையை கூகை நணுகல் உறுதலும்
கூகையை கண்டெலி கூப்பிடு மாறே

குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்கு புறமெனில் ஓடும் இருக்கும்
புலைக்கு பிறந்தவை போகின்ற வாறே

காடுபு கார்இனி காணார் கருவெளி
கூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும்
மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம்
மூடு புகாவிடின் மூவனை யாமே

கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர்
பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல்
ஆறை குழியில் அழுந்துகின் றாரே

துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
விருத்திகண் காணிக்க போவார்மு போதும்
வருத்திஉள் நின்ற மலையை தவிர்ப்பாள்
ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே

பருந்துங் கிளியும் படுபறை கொட்ட
திருந்திய மாதர் திருமண பட்டார்
பெருந்தவ பூதம் போலுரு வாகும்
இருந்திய பேற்றினில் இன்புறு வாரே

கூடும் பறவை இரைகொத்தி மற்றதன்
ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும்
சூடுஎறி நெய்யுண்டு மைகான்று இடுகின்ற
பாடுஅறி வார்க்கு பயன்எளி தாமே

இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை
தலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்
குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும்
தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே

அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோ
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே

கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்
காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்
காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டு
கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டி பழத்துக்கு இளைக்கின்ற வாறே

பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ண
குடைகொண்ட பாசத்து கோலம் உண் டானும்
கடைவண்டு தான் உண்ணும் கண்கல திட்ட
பெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே

கொல்லையில் மேயும் பசுக்களை செய்வதன்
எல்லை கடப்பித்து இறையடி கூட்டியே
வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது
கொல்லசெய் நெஞ்சம் குறியறி யாதே

தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்கு
குட்டத்தில் கிட்டதோர் கொம்மட்டி யாமே

ஆறு பறவைகள் ஐந்தக்து உள்ளன
நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன
ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே

கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டன பூமி மருவிவ தூறிடுங்
கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்
ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே

ஏழு வளைகடல் எட்டு குலவரை
யாழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழு மிருநில தன்மை ய்துகண்டு
வாழ நினைக்கில தாலய மாமே

ஆலிங் கனஞ்செய்து அகம்சுட சூலத்து
சால்இங்கு அமைத்து தலைமை தவிர்த்தனர்
கோல்இங்கு அமைத்தபின் கூ பறவைகள்
மால்இங்கன் வைத்துஅது முன்பின் வழியே

கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே

கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம் போ லாமே

கோரை எழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படுக்கின்றாற் போலல்ல நாதனார்
பாரை கிடக்க படிகின்ற வாறே

கொல்லைமு காதமும் காடுஅரை
எல்லை மயங்கி கிடந்த இருநெறி
எல்லை மயங்காது இயங்க வல் லார்கட்கு
ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே

உழவொன்று வித்து ஒருங்கின காலத்து
எழுமழை பெய்யாது இருநில செல்வி
தழுவி வினைசெய்து தான்பய வாது
வழுவாது போவன் வளர்சடை யோனே

பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார்களி ஆரமுது ஊற
பொதுங்கிய ஐவரை போய்வளை தானே

தோணியொன்று ஏறி தொடர்ந்து கடல்புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்
நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து
ஆலி பழம்போல் அளிக்கின்ற அப்பே

முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள்
செக்கு பழுத்த திரிமலம் காய்த்தன
பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்கு மலருண்டு நடுவுநின் றாரே

அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி
முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்து
மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே

பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்
தென்றி கிடந்த சிறுநரி கூட்டத்து
குன்றாமை கூடி தராசின் நிறுத்தபின்
குன்றி நிறையை குறைக்கின்ற வாறே

மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினை
கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்
பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவி டார்க்கு அன்றி காணஒண் ணாதே

நீரின்றி பாயும் நிலத்தினிற் பச்சையாம்
யாவரும் என்றும் அறியவல் லார்இல்லை
கூரும் மழைபொழி யாது பொழிபுனல்
தேரின் நீர்மை திடரின்நில் லாதே

கூகை குருந்தமது ஏறி குணம் பயில்
மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே

வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன
வாழைக்கு சூரை வலிது வலிதென்பர்
வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு
வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே

நிலத்தை பிளந்து நெடுங்கடல் ஓட்டி
புனத்து குறவன் புணர்ந்த கொழுமீன்
விளக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே

தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தணை நாடி
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே

குடைவிட்டு போந்தது கோயில் எருமை
படைகண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையா நெடுங்கடை ஐந்தொடு நான்கே

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகி படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே

பாசி பாடர்ந்து கிடந்த குளத்திடை
கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும்
தூசி மறவன் துணைவழி எய்திட
பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே

கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு
வம்பாய் மலர்ந்ததோர் பூவுடை பூவக்குள்
வண்டா கிடந்து மணங்கொள்வன் ஈசனே

வீணையும் தண்டும் விரவி இசைமுரல்
தாணுவும் மேவி தருதலை பெய்தது
வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே

கொங்குபு காரொடு வாணிபம் செய்தது
வங்குபு காலன்றி ஆய்ந்தறி வாரில்லை
திங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்
தங்குபு கார்சிலர் தாபதர் தாமே

போதும் புலர்ந்தது பொன்னிறங் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை
ஏதமில் ஈசன்இயங்கு நெறியிது
மாதர் இருந்ததோர் மண்டலம் தானே

கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே
காமுற்று அகத்தி இடுவர் கடைபொறும்
வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி
யாமுற்ற அதட்டினால் ஐந்துண்ண லாமே

தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும்
மூட்டி கொடுத்து முதல்வனை முன்னிட்டு
காட்டி கொடுத்தவர் கைவிட்ட வாறே

புலர்ந்தது போதென்று புட்கள் சில
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லி
புலம்பின் அவளொடும் போகம் நுகரும்
புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே

தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது
வாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை
ஆணி கலங்கில் அதுஇது வாமே
மோன சமாதி

நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை
சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம்
மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு
சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே

காட்டும் குறியும் கடந்த காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன்
கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லது
ஆட்டின் கழுத்தில் அதர்கிட தற்றே

உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே

மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன்
பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன்
சிறப்பிடை யான்திரு மங்கையும் தானும்
உறக்கமில் போகத்து உறங்கிடு தானே

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதன்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரையில் அநுபூ திகத்தினுள் ளானே

உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூத படையுடை யாளி
மருவிலி வந்துஎன் மனம்புகு தானே

கண்டறி வார்இல்லை காயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் இறைவன் என்று ஏத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந
தொண்டர் முகந்த துறையறி யோமே

தற்பரம் அல்ல சதாசிவன் தான்அல்ல
நிட்களம் அல்ல சகள நிலையல்ல
அற்புத மாகி அனுபோ காமம்போல்
கற்பனை இன்றி கலந்துநின் றானே

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்கு தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தை சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே

அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டு
செப்பு பராபரம் சேர்பர மும்விட்டு
கப்புறு சொற்பதம் மா கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே

கண்டார்க்கு அழகிது காஞ்சிர தின்பழம்
தின்றார்க்கு அறியலாம் அப்பழ தின்சுவை
பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே

நந்தி யிருந்தான் நடுவு தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியின் உள்ளே உதித்தெழும் சோதியை
புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே

விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்து
கதறிய பாழை கடந்தத கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றானே

வாடா மலர்புனை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறும் இன்புற
சேடார் கமல செழுஞ்சுடர் உட்சென்று
நாடார் அமுதுற

அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும்
பொதுக்கென காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறே சமைந்தாரை காண
மதுக்கொன்றை தாரான் வளந்தரும் அன்றே

தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை நானறி யேனே

இருளும் வெளியும் இரண்டையும் மாற்றி
பொருளிற் பொருளா பொருந்தவுள் ளாகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கன்மனம் உற்றுநின் றேனே

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே
வரையுரை மாட்சி

தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது
தான்அவ னானபின் ஆரை நினைவது
காமனை வென்றகண் ஆரை உகப்பது
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே

உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றை கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்கு
புரையற்று இருந்தான் புரிசடை யோனே

மனமாயை மாயைஇம் மாயை மயக்கம்
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந்து இருப்பது தத்துவ தானே
அணைந்தோர் தன்மை

மலமில்லை மாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலமன்னி அன்பில் பதித்துவை போர்க்கே

ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்
அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனை கண் டேனே

ஆலை கரும்பும் அமுதும்அ காரமும்
சோலை தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடை
பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்கு குறை யொன்றும் இல்லையே

ஆராலும் என்னை அமட்டஒண் ணாதிதினி
சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவதால் லால் இனி
யார்படுஞ் சாரா அறிவறி தேனே

பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே

ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டீர்உல குக்குஉயி ராவது
நன்றுகண் டீர்இனி நமசிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே

சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்
வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவி தியக்கு அறு தானே

பண்டுஎங்குள் ஈசன் நெடுமால் பிரமனை
கண்டுஅங்கு இருக்கும் கருத்தறி வாரில்லை
விண்டு அங்கே தோன்றி வெறுமனம் ஆயிடில்
துண்டு அங்கு இருந்ததோர் தூறுஅது வாமே

அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது
அன்னையும் அத்தனும் ஆரறி வார்என்னை
அன்னையும் அத்தனும் யானும் உடனிருந்து
அன்னையும் அத்தனை யான்புரி தேனே

கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்ட தலைவரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந்து என்கை தலத்துளே
உண்டனர் நானினி உய்ந்தொழி தேனே

தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே வடவரை ஆதியுமாய நிற்கும்
தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே

நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்
தவம்வரும் சிந்தை தான்எதிராரே

சித்தம் சிவமாய் மலமூன்றும் செற்றவர்
சுத்த சிவமாவர் தோயார் மலபந்தம்
சுத்தும் சிலகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாம்என்று எண்ணியே

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற்று அறுக்கும் விமலனை தேடி
நினைக்க பெறில்அவன் நீளியன் ஆமே

சிவபெரு மான்என்று நான்அழைத்து
தவப்பெரு மான்என்று தான்வந்து நின்றான்
அவபெரு மான்என்னை யாளுடை நாதன்
பவபெரு மானை பணிந்துநின் றேனே

பணிந்துநின் றேன்பர மாதி பதியை
துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டேன்
அணிந்துநின் றேன்உடல் ஆதி பிரானை
தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே

என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்து
முன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்
தன்நெஞ்சம் இல்லா தலைவன் தலைவிதி
பின்னம்செய்து என்னை பிணக்கறு தானே

பிணக்கறு தான்பிணி மூப்பறுத்து எண்ணும்
கணக்கறு தாண்டவன் காண்நந்தி என்னை
பிணக்கறுத்து என்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவன் வந்தது தானே

சிவன்வந்து தேவர் குழாமுடன் கூட
பவம்வ திடநின்ற பாசம் அறுத்திட்டு
அவன்எந்தை ஆண்டருள் ஆதி பெருமான்
அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே

கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுற கண்டபின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே

உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடி
செய்வன எல்லாம் சிவமா காண்டலால்
கைவளம் இன்றி கருக்கட தேனே

மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கி தகளிசெய் சேர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி
மாண்டான் ஒருவன்கை வந்தது தானே

ஆறே அருவி அகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலை கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனை
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே

மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்
மனம்வி ரிந்து குவிந்தது வாயு
மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்
மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே
தோத்திரம்

மாயனை நாடி மனநெடும் தேரெறி
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனை
காயம்மின் நாட்டிடை கண்டுகொண் டேனே

மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில்
முன்னியல் கால முதல்வனார் நாமத்தை
பன்னினர் என்றே பாடறி வீரே

முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனனை
அத்தனை காணாது அரற்றுகின் றேனையோர்
பித்தன் இவனென்று பேசுகின் றாரே

புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்
புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம்
புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே

பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு
நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே

நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனை
ஏமம் ஓர் ஆயிர துள்ளே இசைவீர்கள்
ஓமம்ஓர் ஆயிரம் ஓதவல் லார்அவர்
காமம் ஆயிரம் கண்டொழி தாரே

போற்றுகின் றேன்புகழ தும்புகழ் ஞானத்தை
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை
போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே

நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டபின்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே

வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர் துழனியொன்று அல்லது
அந்தர வானத்தின் அப்புறம் ஆமே

மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்து
தெண்ணீர படுத்த சிவன்அவன் ஆமே

மெய்த்தவ தானை விரும்பும் ஒருவர்க்கு
கைத்தலம் சேர்தரு நெல்லி கனியொக்கும்
சுத்தனை தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமை தொழி தேனே

அமைந்தொழி தேன்அள வில்புகழ் ஞானம்
சமை தொழி தேன்தடு மாற்றம்ஒன் றில்லை
புகை தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே

வள்ளல் தலைவனை வானநன் னாடனை
வெள்ள புனற்சடை வேதமுதல்வனை
கள்ள பெருமக்கள் காண்பர்கொலோஎன்று
உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருந்து ஆளுமே

ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடும் வைத்தொழி தேனே

விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்
திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்
வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே

வானகம் ஊடறு தான்இவ் வுலகினில்
தானகம் இல்லா தனியாகும் போதகன்
கானக வாழை கனிநுகர்ந்து உள்ளுறும்
பானக சோதியை பற்றிநின் றேனே

விதியது மேலை அமரர் உறையும்
பதியது பாய்புனல் கங்கையும் உண்டு
துதியது தொல்வினை பற்றறு விக்கும்
பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே

மேலது வானவர் கீழது மாதவர்
தானிடர் மானுடர் கீழது மாதுஅனங்
கானது கூவிள மாலை கமழ்சடை
ஆனது செய்யும்என் ஆருயிர் தானே

சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி
யாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்
வாழும் எழுந்தைந்து மன்னனும் ஆமே

உலகமது ஒத்துமண் ஒத்ததஉயர் காற்றை
அலர்கதிர் அங்கிஓத்து ஆதி பிரானும்
நிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅ
செலவுஒத்து அமர்திகை தேவர் பி ரானே

பரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன்
பரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன்
பரிசறிந்து அங்குளன் மாமதி ஞான
பரிசறிந்து அந்நிலம் பாரிக்கும் ஆறே

அந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும்
பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள்
தந்த உலகெங்கும் தானே பாராபரன்
வந்து படைக்கின்ற மாண்பது வாமே

முத்தண்ண ஈரண்ட மேமுடி ஆயினும்
அத்தன் உருவம் உலகுஏ ழெனப்படும்
அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்துஉண ராரே

ஆதி பிரான்நம் பிரான்அவ் அகலிட
சோதி பிரான்சுடர் மூன்றுஒளி யாய்நிற்கும்
ஆதி பிரான்அண்டத்து அப்புறம் கீழவன்
ஆதி பிரான்நடு வாகிநின் றானே

அண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன்
பிண்டம் கடந்த பிறவி சிறுமையன்
தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும்
தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே

உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ
நிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன்
பலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னே
புலம்முழு பொன்னிற மாகிநின் றானே

பராபர னாகி பல்லூழிகள் தோறும்
பராபர னாய்இவ் அகலிடம் தாங்கி
தராபர னாய்நின்ற தன்மை யுணரார்
நிராபர னாகி நிறைந்துநின் றானே

போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்றுடல் தானென்றும் அதுபெரு தெய்வமாம்
காற்றது ஈசன் கலந்து நின்றானே

திகையனை தும்சிவ னேஅவ னாகின்
மிகையனை தும்சொல்ல வேண்டா மனிதரே
புகையனை தும்புறம் அங்கியிற் கூடு
முகையனை தும்எங்கள் ஆதி பிரானே

அகன்றான் அகலிடம் ஏழும்ஒன்றாகி
இவன்தான் எனநின்று எளயனும் அல்லன்
சிவன்தான் பலபல சீவனு மாகி
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே

கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற
தலைவனனை நாடுமின் தத்துவ நாதன்
விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப
உரையில்லை உள்ளுறும் உள்ளவன் தானே

படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து
நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்து
செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே

ஈசனென்று எட்டு திசையும் இயங்கின
ஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலி
தேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்
வாச மலர்போல் மருவி நின் றானே

இல்லனும் அல்லன் உளன்
நல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி
சொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே

உள்ள தொடுங்கும் புறத்துளும் நானெனும்
கள்ள தலைவன் கமழ்சடை நந்தியும்
வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்
அள்ளற் கடலை அறுத்துநின் றானே

மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்
கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்
வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே

விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்
கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்
பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்
எண்ணில் னந்தமும் எங்கள் பிரானே

உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல்
நித்தில சோதியன் நீல கருமையன்
எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனை
சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே

நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்
மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்
புறம்பல காணினும் போற்றகி லாரே

இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு
எங்குநின் றான்மழை போல்இறை தானே

உணர்வது வாயுவே உத்தம மாயும்
உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானை
புணர்வது வாயும் புல்லிய தாயும்
உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே

தன்வலி யால்உல கேழும் தரித்தவன்
தன்வலி யாலே அணுவினும் தான்நொய்யன்
தன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான்
தன்வலி யாலே தடம்கட லாமே

ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை
ஊனே சிறுமையும் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே

பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளை
குண்டாலம் காயத்து குதிரை பழுத்தது
உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்
பிண்டத்துஉ பட்டு பிணங்குகின்றார்களே
சர்வ வியாபி

ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியும் தனதுஎய்தும்
சாயும் தனது வியாபகம் தானே

நான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லை
நான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறிந்து அங்கும் தலைப்பட லாமே

கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து
உடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடி
உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனை
கடலின் மலிதிரை காணலும் ஆமே

பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகி
தெரிந்துட லாய் நிற்கும் தேவர் பிரானும்
இருஞ்சுடர் விட்டிட்டு இகலிடம் எல்லாம்
பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே

உறுதியின் உள்வந்த உள்வினை பட்டு
இறுதியின் வீழ்ந்தார் இரணமது ஆகும்
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெருஞ்சுட ராமே

பற்றி னுள்ளே பரமாய பரஞ்சுடர்
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி
நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரு
மற்றவ னாய்னி ன்ற மாதவன் தானே

தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும்
ஏவனும் ஆம்விரி நீருலகு ஏழையும்
ஆவனு மாம் அமர்ந்து எங்கும் உலகினும்
நாவனும் ஆகி நவிற்றுகின் றானே

நோக்கும் கருடன் நொடிஏழ் உலகையும்
காக்கும் அவனி தலைவனும் அங்குள
நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி
போக்கும் வரவும் புணரல் லானே

செழுஞ்சடை யன் செம்பொ னேயொக்கும் மேனி
ஒழிந்தன னாயும் ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்
ஒழிந்திலகு ஏழுலகு ஒத்துநின் றானே

உணர்வும் அவனே உயிரும்
புணர்வும் அவனே புலனும்
இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே

புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை
நலமையின் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள் வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் றானே

விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன்
மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்
தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்
கண்ணவ னாகி கலந்துநின் றானே

நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலம் கீழொடு மேலென
நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்
நின்றனன் தானே வளங்கனி யாயே

புவனா பதிமிகு புண்ணியன் எந்தை
அவனே உலகில் அடர்பெரும் பாகன்
அவனே அரும்பல சீவனும் ஆகும்
அவனே இறையென மாலுற்ற வாறே

உண்ணின்று ஒளிரும் உலவா பிராணனும்
விண்ணின்று இயங்கும் விரிகதிர செல்வனும்
மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும்
கண்ணின்று இயங்கும் கருத்தவன் தானே

எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழி
பண்ணும் திறனும் படைத்த பரமனை
கண்ணிற் கவரும் கருத்தில் அதுஇது
உண்ணின்று உருக்கியோர் ஆயமும் ஆமே

இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம்
உருக்கொடு தன்னடு ஒங்கஇவ்வண்ணம்
கருக்கொடு எங்கும் கலந்திரு தானே
திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே

பலவுடன் சென்றஅ பார்முழுது ஈசன்
செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன்
அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி
பலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே

அதுஅறி வானவன் ஆதி புராணன்
எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்
பொதுஅது வான புவனங்கள் எட்டும்
இதுஅறி வானநந்தி எங்கள் பிரானே

நீரும் நிலனும் விசும்புஅங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியு மாய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை
ஊரும் சகலன் உலப்பிலி தானே

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்
மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே
வாழ்த்து

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறு தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞான தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே
ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று
திருமூலர் திருமந்திரம் முற்றிற்று
திருச்சிற்றம்பலம்