தமிழியக்கம் பாவேந்தர் பாரதிதாசன்





















©









தமிழியக்கம் பாவேந்தர் பாரதிதாசன்
நெஞ்சு பதைக்கும் நிலைகரும்புதந்த தீஞ்சாறே கனிதந்த
நறுஞ்சுளையே கவின்செய் முல்லைஅரும்புதந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே அன்பே
கட்டிஇரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை ஈட ழித்துவரும்புதுமை
நினைக்கையிலே நெஞ்சுபதை கும்சொல்ல வாய்ப தைக்கும் எடுத்துமகிழ்
இளங்குழந்தாய் இசைத்துமகிழ் நல்யாழே இங்குள் ளோர்வாய்மடுத்துமகிழ் நறுந்தேனே
வரைந்துமகிழ் ஓவியமே அன்பே வன்புதொடுத்துமகிழ் நெஞ்சுடையார் துறைதோறும்
நின்னெழிலை தோன்றா வண்ணம்தடுத்துவரல் நினைக்கையிலே நெஞ்சுபதை கும்சாற்ற
வாய்ப தைக்கும் பண்டுவந்த செழும்பொருளே பார்அடர்ந்த இருட்கடலில் படிந்த
மக்கள்கண்டுவந்த திருவிளக்கே களிப்பருளும் செந்தமிழே அன்பே
வாழ்வில்தொண்டுவந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை துளிர்க்கா
வண்ணம்உண்டுவரல் நினைக்கையிலே உளம்பதைக்கும் சொல்வதெனில் வாய்ப தைக்கும்
உடலியக்கும் நல்லுயிரே உயிரியக்கும் நுண்கலையே மக்கள்
வாழ்வாம்கடலியக்கும் சுவைப்பாட்டே கண்ணான செந்தமிழே அன்பே
நாட்டில்கெடலியக்கும் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை கெடுக்க
பாடுபடல்தன்னை நினைக்கையிலே நெஞ்சுபதை கும்பகர வாய்ப தைக்கும்
வையத்தின் பழநிலவே வாழ்வுக்கோர் புத்துணர்வே மயிலே மேலோர்ஐயத்திற்
கறிவொளியே ஆடல்தரும் செந்தமிழே அன்பே தீமைசெய்யத்தான் நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலை தீர்க்க எண்ணும் மெய்யைத்தான் நினைக்கையிலே
நெஞ்சுபதை கும்விளக்க வாய்ப தைக்கும் இருப்பதைவிட இறப்பது நன்று
வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ அரசியல்சீர் வாய்க்க
பெற்றோர்ஆணிகர்த்த பேடிகளோ அரும்புலவர் ஊமைகளோ இல்ல றத்தைப்பேணுமற்ற
யாவருமே உணர்வற்று போனாரோ பெருவாழ் வுக்கோர்ஏணிபெற்றும் ஏறாத தமிழர்உயிர்
வாழ்வதிலும் இறத்தல் நன்றே மிகுகோவில் அறத்தலைவர் அறநிலை காப்பாளர்
விழாவெ டுப்போர்தகுமாறு மணம்புரிவோர் கல்விதரும் கணக்காயர் தம்மா
ணாக்கர்நகுமாறு நந்தமிழை நலிவுசெய்யும் தீயர்களோ நல்வாழ்
வுக்கோர்புகும்ஆறு புறக்கணித்தும் தமிழர்உயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே
மகிழ்ச்சிசெய வருங்கூத்தர் மாத்தமிழை மாய்ப்பதுண்டோ வாய்ப்பா
டாளர்இகழ்ச்சியுற நடப்பதுண்டோ இசைப்பாடல் ஆக்குபவர் இழிவேன்
ஏற்றார்நகச்சிலசொற் பொழிவாளர் நாணற்று போயினரோ வாழ்வு
கானபுகழ்ச்சியினை போக்கடித்தும் தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே
கூற்றமென வாழ்வதுவோ தமிழுக்கே ஏடெழுதும் கூட்டம் தீமைமாற்றவரும்
அச்சகத்தார் வகைமறந்து போனாரோ சொல்லா கத்தார்தூற்றுமொழி ஏன்சுமந்தார்
துண்டறிக்கை யாளருமோ தீயர் வாழ்வில் ஏற்றமுற எண்ணாத தமிழருயிர் வாழ்வதினும்
இறத்தல் நன்றே நல்லஅரும் பொருளுடையார் நந்தமிழ்க்கோ பகையாவார் நாட்டில்
ஆணைசொல்லவரும் அரசியலார் செந்தமிழ்நா டிதுவென்றும் தெரியார்
போலும்வல்லவரும் பெரியநிலை வாய்த்தவரும் என்செய்தார் இன்ப
வாழ்வின்எல்லையறி தும்திருந்தா தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே
வரிப்புலியே தமிழ்காக்க எழுந்திருஒண்டமிழ்த்தாய்
சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்கண்டறிவாய் எழுந்திரு
நீ இளந்தமிழா கண்விழிப்பாய் இறந்தொ ழிந்தபண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை
அனைத்தையும்நீ படைப்பாய் இந்நாள்தொண்டுசெய்வாய் தமிழுக்கு துறைதோறும்
துறைதோறும் துடித்தெ ழுந்தே உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற
வெற்றியெலாம் உன்றன் வெற்றிஅயராதே எழுந்திரு நீ இளந்தமிழா அறஞ்செய்வாய்
நாம டைந்ததுயரத்தை பழிதன்னை வாழ்வினிலோர் தாழ்மையினை துடைப்பாய்
இந்நாள்செயல்செய்வாய் தமிழுக்கு துறைதோறும் சீறி வந்தே
வாழியநீ தமிழ்த்தாய்க்கு வரும்பெருமை உன்பெருமை வயிற்று
கூற்றக்கூழின்றி வாடுகின்றார் எழுந்திருநீ இளந்தமிழா குறைத
விர்க்கஆழிநிகர் படைசேர்ப்பாய் பொருள்சேர்ப்பாய் இன்பத்தை ஆக்கு
விப்பாய்ஊழியம்செய் தமிழுக்கு துறைதோறும் உணர்ச்சி கொண்டே
உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு வரும்தீமை உனக்குவரும் தீமை
அன்றோபிணிநீக்க எழுந்திரு நீ இளந்தமிழா வரிப்புலியே பிற்றை
நாளுக்கணிசெய்யும் இலக்கியம்செய் அறத்தைச்செய் விடுதலைகொள் அழகு
நாட்டில்பணிசெய்வாய் தமிழுக்கு துறைதோறும் பழநா டானே
எதுசெய்ய நாட்டுக்கே எனத்துடித்த சிங்கமே இன்றே இன்னேபுதுநாளை
உண்டாக்கி தமிழ்காப்பாய் புத்துணர்வை கொணர்வாய் இங்கேஅதிர்ந்தெழுக
தமிழுக்கு துறைதோறும் அழகு காப்பாய்இதுதான்நீ செயத்தக்க
எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே மங்கையர் முதியோர்
எழுகஒருவானில் பன்னிலவாய் உயர்தமிழப்பெண்களெலாம் எழுக
உங்கள்திருவான செந்தமிழின் சிறுமையினை தீர்ப்பதென எழுக நீவிர்பெருமானம்
காப்பதற்கு வாரீரேல் உங்கள்நுதற் பிறையே நாணும்மறுமலர்வா தாமரையும்
கனியுதடும் நன்னெஞ்சும் வாட்டம் எய்தும் நகர்நோக்கி பசுந்தோகை
நாடகத்து மாமயில்கள் நண்ணி யாங்குப்பகர்கின்ற செந்தமிழின் பழிநீக்க
பெண்களெலாம் பறந்து வாரீர்மிகுமானம் காப்பதற்கு வாரீரேல் வெண்ணிலவு முகஞ்
சுருங்கும்மகிழ்வான மலர்க்கண்ணம் வாய்மையுளம் வாட்டமுறும் மலர்க்கண் நாணும்
தண்டூன்றும் முதியோரே தமிழ்த்தொண்டென் றால்இளமை தனை எய்
தீரோவண்டூன்றும் சிற்றடியால் மண்டுநறும் பொடிசிதறும் பொதிகை
தன்னில்பண்டூன்றும் திருவடியால் பச்சைமயில் போல்வந்து தமிழர
காவிகொண்டூன்றி வருந்தமிழ்த்தாய் கொண்டகுறை தவிர்ப்பதற்கு குதித்து வாரீர்
பிரம்புவளை மெய்யுடையீர் ஆருயிரில் வாரியிட்டு பிசைந்த
தானஉரம்பெய்த செந்தமிழு கொன்றிங்கு நேர்ந்ததென உரை
கேட்டால்நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி நண்ணி டீரோஇரங்குநிலை
கொண்டதமிழ் ஏற்றகுறை தவிர்த்திடநீர் எழுச்சி கொள்வீர் அன்னையினை
எதிர்த்தார்க்கும் அவள்மேன்மை மறந்தார்க்கும் அயர்ந்த வர்க்கும்மின்னைவிழி
உயர்ந்ததுபோல் மெய்யுயிரை பெற்றதுபோல் தமிழ்ச்சா பாடுதன்னையுணர்
விப்பதற்கு சாரைச்சிற் றெறும்பென்ன தமிழ் நாட்டீரேமுன்னைவைத்த காலைப்பின்
வையாமே வரிசையுற முடுகு வீரே வாணிகர்வாணிகர்தம்
முகவரியை வரைகின்ற பலகையில்ஆங் கிலமா வேண்டும்மாணுயர்ந்த செந்தமிழால் வரைக
என அன்னவர்க்கு சொல்ல வேண்டும் ஆணிவிற்போன் முதலாக அணிவிற்போன் ஈராக அனைவர்
போக்கும்நாணமற்ற தல்லாமல் நந்தமிழின் நலம்காக்கும் செய்கையாமோ
உணவுதரு விடுதிதனை கிளப்பெனவேண் டும்போலும் உயர்ந்த
பட்டுத்துணிக்கடைக்கு சில்குஷா எனும்பலகை தொங்குவதால் சிறப்பு
போலும்மணக்கவ ரும் தென்றலிலே குளிராஇல்லை தோப்பில் நிழலா
இல்லைதணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தா னில்லை
பவன் மண்டல் முதலியன இனியேனும் தமிழகத்தில் பயிலா
வண்ணம்அவண்சென்று முழங்கிடுவீர் ஆங்கிலச்சொல் இந்திமொழி வடசொல்
யாவும்இவண்தமிழிற் கலப்பதுண்டோ பிராம்மணர் கள்உண்ணும் இடம்
பேச்சில்உவப்புண்டோ தமிழ்மானம் ஒழிந்திடுதே ஐயகோ உணர்வீர் நன்றே
அறிவிப்பு பலகையெல்லாம் அருந்தமிழ்ச்சொல் ஆக்குவதே அன்றி
அச்சொல்குறைவற்ற தொடரா குற்றமற்ற சொல்லாக அமையு மாயின்மறுவற்று
திகழாளோ செந்தமிழ்த்தாய் தமிழ்மக்கள் மகிழ்ந்தி டாரோ குறியுற்ற மறவர்களே
இப்பணியை முடிப்பதற்கோர் கூட்டம் வேண்டும் பேச்சாலும் எழுத்தாலும்
பாட்டாலும் கூத்தாலும் பிறர் உவக்கஓச்சுகவே மணிமுரசு வீதியெல்லாம் வரிசையுற
உலவா நிற்பீர்ஏச்சாலும் எதிர்ப்பாலும் வருகின்ற இன்னலுக்குள் இன்ப
வெள்ளம்பாய்ச்சாதோ பொதுத்தொண்டு பைந்தமிழ்க்கு செயும்தொண்டு பருக வாரீர்
அரசியல்சீர் வாய்ந்தார் கல்லூரித்தலைவரை நான்
கேட்கின்றேன் கனிதமிழின் பேரை சொன்னால்சொல்லூறி போகாதோ வாயூறி
தூய் தமிழ்க்குவல்லூறாய் வாய்த்தீரோ வளம்செய்யும் எண்ணமெனில் நீர்
பிறந்தநல்லூரின் நன்மொழியால் அல்லாது நடந்திடுமோ நவில்வீர் இன்றே
வரிப்பணத்தை வழங்கிடுவோர் வாய்ப்பளிக்க முந்திடுவோர் தமிழர்
அன்றோஇருப்புறுநும் அலுவலுக்கும் யாரையா வேர் தமிழை மறப்ப
துண்டோநரிப்பிணத்தை நரியுந்தின் னாதென்ப தறியீரோ நம்மா
னத்தைஎரிப்பதற்கு திருவுளமோ எழிற்பள்ளி கணக்காயர் தலைமையோரே
தமிழ்நாட்டின் உப்பைத்தின் றீரன்றோ கணக்காயர் தந்தை
மாரேதமிழ்நாட்டில் தமிழர்களின் தன்னுணர்வு நாட்டுவதை தவிர்ப்பீ
ராயின்உமிழாதோ வருத்தாதோ உம்மையே உம்மருமை உள்ள சான்றேஅமுதூட்ட
நஞ்சூட்டி அகமகிழும் தாயுண்டோ அருமை சேய்க்கே படிப்பாரின்
தமிழ்ச்சுவடி பரிந்தாயும் அரசியலார் குழுவி னோரேதடிப்பாகி போவதுண்டோ
உம்முள்ளம் தமிழென்றும் வடசொல் என்றும்வடிப்பாக்கி நோக்கிடவும் மாட்டீரோ
செந்தமிழின் பகைவரின் வால்பிடிப்பாரின் துணையில்இனும் பிழைப்பீரோ மறவர்தமிழ
பெரிய நாட்டில் தமிழ்நடையில் நயம்வேண்டின் தமிழ்நாட்டின் நடைமுறையை
தமிழ்நா டாரைஅமையவரை தல்வேண்டும் அவ்வாற்றால் அமைவுற்ற சுவடி
தன்னைஉமைமறந்து மறுக்காதீர் உமியைப்போய் ஒப்பாதீர் இன்னும்
கேளீர்தமிழ்தழுவா சுவடிதனை தணல்தழுவா திராதினிமேல் தமிழ்நா டெங்கும்
அரசியல்சீர் வாய்ந்தார் தெலுங்குதமிழ்
நாட்டினிலேன் செத்தவட மொழிக்கிங்கே என்ன ஆக்கம்இலங்கும் இசை பாட்டுக்கள்
பிறமொழியில் ஏற்படுத்த இசைய லாமோநலங்கண்டீர் தமிழ்மொழியால் நற்றமிழை ஈடழித்தல்
நன்றோ சின்னவிலங்கதுதான் சோறிட்டான் மேற்காட்டும் நன்றியைநீர் மேற்கொள் ளீரோ
பொதுமையிலே கிடைத்திட்ட செல்வாக்கை இனநலத்து காக்கு வோரை
இதுவரைக்கும் மன்னித்த எழில்தமிழர் இனிப்பொறுப்பார் என்ப தில்லைகுதிகாலும்
மேற்செல்லும் அடுத்தபடி கீழேதான் வந்து சேரும்அதுவியற்கை மலைக்காதீர்
அறிவுநாள் இது கொடுமை அழிந்தே தீரும் அரசியலார் அறிக்கையிலும்
சுவடியிலும் தமிழ்ப்பெருமை அழித்தி டக்கைவரிசையெல்லாம் காட்டுவதோ வடமொழியும்
பிழைத்தமிழும் பெருகி விட்டால்வருநாளில் தமிழழியும் வடமொழிமே லோங்குமெனும்
கருத்தோ நாட்டில்திருடர்களை வளரவிடும் ஏற்பாடோசெல்லுபடி ஆகா திங்கே
திருடர்கள் ஜாக்கிரதைஇதை திருடருண்டு விழிப்போடி ருங்கள்
என்றால்வருந்தீமை என்னநியா யஸ்தலத்தை அறமன்றம் எனில்வா
காதோஅருவருக்கும் நெஞ்சுடையார் அருவருக்கும் செயலுடையார் அன்றோ
இந்தக்கருவறுக்கும் வினைசெய்வார் கலப்பாலில் துளிநஞ்சும் கலத்தல் வேண்டாம்
அரசியலார் அலுவலகம் அறமன்றம் இங்கெல்லாம் அலுவல்
பெற்றீர்உரையனைத்தும் ஆங்கிலமோ உணர்விலையோ ஒழுக்கந்தான் இதுவென்
பீரோவரும்நாட்டு புறத்தவரின் தமிழ்ப்பேச்சும் பிடிப்பதில்லை வண்ட மிழ்சேர்
திருநாட்டிற் பிறந்தோமென் றெண்ணுவதும் இல்லைஇனி திருந்து வீரே
அரசியல்சீர் வாய்ந்தார் தமிழாய்ந்த தமிழன்தான்
தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்தமிழ்ப்பகைவன் முதலமைச்சா
தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும்நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம்
தமிழ்அல்லால் நம்முன் னேற்றம்அமையாது சிறிதும்இதில் ஐயமில்லை
அறிந்து கொண்டோம் தமிழெங்கே தமிழன்நிலை என்னஎன தாமறியா தமிழர்
என்பார்தமிழர்நலம் காப்பவராய் அரசியலின் சார்பாக வரமு யன்றால் இமைப்போதும்
தாழ்க்காமல் எவ்வகையும் கிளர்ந்தெழுதல் வேண்டும் நம்மில்அமைவாக ஆயிரம்பேர்
அறிஞர்உள்ளார் எனமுரசம் ஆர்த்து சொல்வோம் நகராட்சி சிற்றூரின்
நல்லாட்சி மாவட்ட ஆட்சி என்றுபுகல்கின்ற பலஆட்சி கழகங்கள் எவற்றினுமே புகநி
னைப்பார்தகுபுலமை குறிக்கின்ற சான்றுதர வேண்டுமென சட்டம்
செய்தால்அகலுமன்றோ தமிழ்நாட்டின் அல்லலெலாம் அல்லாக்கால் அமைதி யுண்டோ
தமிழறியான் தமிழர்நிலை தமிழர்நெறி தமிழர்களின் தேவை வாழ்வுதமையறிதல்
உண்டோஎ நாளுமில்லை தமிழறியான் சுவையே காணான்சுமைசுமையாய் அரசியல்சீர்
சுமந்தவர்கள் இதுவரைக்கும் சொன்ன துண்டோ தமிழ்க்கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம்
என்பதொரு சட்டம் செய்ய ஆங்கிலநூல் அறிவுக்கு சான்றிருந்தால் அதுபோதும்
அலுவல் பார்க்கஈங்குள்ள தமிழர்நெறி அவர்க்கென்ன தெரிந்திருக்கும் இதுவு
மன்றிமாங்காட்டு செவிடனெதிர் வடிகட்டி ஊமையரை வைத்த தைப்போல்தீங்கற்ற
தமிழறியான் செந்தமிழ்நா டலுவலின்மேற் செல்ல லாமோ புலவர்
தமிழ்ப்புலவர் ஒன்றுபடும் நன்னாளே தமிழர்க்கு பொன்னா
ளாகும்தமிழ்ப்பெருநூல் ஒன்றேனும் ஒற்றுமையை தடைசெ கண்ட
துண்டோதமிழ்ப்புலவர் தமக்குள்ளே மாறுபட்ட தன்மையினால் இந்நாள்
மட்டும்தமிழ்ப்பெருநா டடைந்துள்ள தீமையினை தமிழறிஞர் அறிகி லாரோ
ஒல்காதபெரும் புகழ்த்தொல் காப்பியமும் நன்னூலும் தமிழர
கெல்லாம்நல்கரிய நன்மையெலாம் நல்கினஎன் றால்நாமும் நன்றி
சொல்வோம்செல்பலநூற் றாண்டுசெல அவ்விருநூல் திருவடியில் புதிய
நூற்கள்பல்காவேல் இருநூற்கும் பழியேநம் புலவர்க்கும் பழியே யன்றோ
தனித்தியங்க தக்கதென தமிழ்பற்றி தமிழ்ப்புலவர் சாற்று
கின்றார்இனித்திடும்அவ் விருநூலில் வடமொழிஏன் வடஎழுத்து கொழுங்கு
தான்ஏன்தனித்தமிழில் இந்நாட்டு தக்கபுது காப்பியம்நன் னூல்இ
யற்றநினைப்பாரேல் நம்புலவர் நிலவாவோ ஆயிரம்நூல் தமிழ கத்தே
முதுமைபெறு சமயமெனும் களர்நிலத்தில் நட்டதமிழ பெருநூல்
எல்லாம்இதுவரைக்கும் என்னபயன் தந்ததென எண்ணுகையில் நான்கு கோடிப்பொதுவான
தமிழரிலே பொன்னான தமிழ்வெறுத்தார் பெரும்பா லோராம்புதுநூற்கள் புதுக்கருத்தால்
பொதுவகையால் தரவேண்டும் புலவ ரெல்லாம் சோற்றுக்கென் றொறுபுலவர்
தமிழ்எதிர்ப்பார் அடிவீழ்வார் தொகையாம் செல்வப்பேற்றுக்கென் றொருபுலவர்
சாஸ்திரமும் தமிழ்என்றே பேசி நிற்பார்நேற்றுச்சென் றார்நெறியே நாம்செல்வோம்
எனஒருவர் நிகழ்த்தா நிற்பார்காற்றிற்போம் பதரா காட்சியளி கின்றார்கள்
புலவர் சில்லோர் சீவல்லபர் திருவள்
ளுவரானார் என்றொருவர் செப்ப லுற்றார்நாவன்மை என்பதுவும் செந்தமிழை
நலிப்பதற்கோ நாணி லாரோபாவளிக்கும் சுவைமுழுதும் பருகிவிட்ட தாயுரைக்கும்
ஒருவர் சொல்வார்கோவையிட்ட கம்பனது செய்யுலிலே முக்காலும் கோணல் என்றே
கம்பனார் பதினோரா யிரம்பாட்டில் முக்காலும் கழித்து
போட்டுநம்பினால் நம்புங்கள் இவைதாம்கம் பன்செய்யுள் எனஅ சிட்டு வெம்புமா
றளிக்கையிலும் மேவாத செயல்இதனை செய்ய இந்தக்கொம்பன்யார் எனக்கேட்க ஆளில்லையா
புலவர் கூட்ட தன்னில் வாட்டடங்கண் கற்றரையை வாள்த்தடங்கண்
கல்த்தரைஎன் றெழுதி முன்னைப்பாட்டினிலே பெரும்பிழையை பல்குவிப்பா னுக்குமணி
பண்டி தர்கள்சாட்டைகொடு தறிக்கைவிட தாள்ஒன்றும் அற்றதுவோ தமக்கு
சோறுபோட்டிடுவார் ஒப்புகிலார் எனுங்கருத்தோ மானமற்ற போக்கு தானோ
வடமொழியும் தெரியும்என பொய்கூறி வடமொழிக்கு வாய்ப்பும்
நல்கவடமொழியா னைக்கொண்டு மொழிபெயர்த்து வருவார்க்கு வண்ட
மிழ்ச்சீர்கெடுவதிலே கவலையில்லை ஆரியரை ஆதரித்து கிடப்ப
தொன்றேநடைமுறையில் நலன்விளைக்கும் என்னுமொரு மடமையினை நசுக்க வேண்டும்
அரசினரின் மொழியாக அரசியலார் அரசியல் சார்வரிசையுறு
சட்டமன்றின் மொழியாக வையம்அறி மொழிய தாகத்திருமலிந்த தமிழ்மொழிதான் ஆகும்வகை
நம்புலவர் சேர்ந்து தொண்டுபுரிகஎன வேண்டுகின்றோம் பொழிகஎன பொன்ம
ழைதான் குடும்பத்தார் அன்னைதந்த பால் ஒழுகும்
குழந்தைவாய் தேன் ஒழுக அம்மா என்றுசொன்னதுவும் தமிழன்றோ அக்குழந்தை செவியினிலே
தோய்ந்த தானபொன்மொழியும் தமிழன்றோ புதிதுபுதி தாய்க்கண்ட பொருளி
னோடுமின்னியதும் தமிழன்றோ விளையாட்டு கிளிப்பேச்சும் தமிழே யன்றோ
வானத்து வெண்ணிலவும் வையத்தின் ஓவியமும் தரும் வியப்பைத்தேனொக்க
பொழிந்ததுவும் தமிழன்றோ தெருவிலுறு மக்கள் தந்தஊனுக்குள் உணர்வேயும்
வெளியேயும் உள்ள துள்ளும்தான்நத்தும் அனைத்துமே காட்சிதரும் வாயிலெலாம்
தமிழேயன்றோ திருமிக்க தமிழகத்தின் குடும்பத்தீர் இல்லறத்தீர் செந்த
மிழ்க்கேவருமிக்க தீமையினை எதிர்த்திடுவீர் நெஞ்சாலும் வாய்மெய்
யாலும்பொருள்மிக்க தமிழ்மொழிக்கு புரிந்திடுவீர் நற்றொண்டு புரியீ
ராயின்இருள்மிக்க தாகிவிடும் தமிழ்நாடும் தமிழர்களின் இனிய வாழ்வும்
காக்கை கா என்றுதனை காப்பாற்ற சொல்லும்ஒரு கருமு
கில்தான்நோக்கியே கடமடா என்றேதன் கடனுரைக்கும் நுண்கண்
கிள்ளைவாய்க்கும்வகை அக்கா என் றழைத்ததனால் வஞ்சத்து பூனை ஞாம்
ஞாம்காக்கின்றோம் எனச்சொல்ல கழுதைஅதை என்று கடிந்து கூறும்
கூ எனவே வையத்தின் பேருரைத்து குயில் கூவும் வாழ்
என்றுநாவினிக்க நாய்வாழ்த்தும் நற்சேவல் கோ என்று வேந்தன்
பேரைப்பாவிசைத்தாற் போலிசைக்க வரும்காற்றோ ஆம் என்று பழிச்சும்
இங்குயாவினுமே தமிழல்லால் இயற்கைதரும் மொழிவேறொன் றில்லை யன்றோ
கோயிலார்உயிர்போன்ற உங்கள்தமிழ் கடவுளுக்கே உவப்பாதல்
இல்லை போலும்உயிர்போன்ற உங்கள்தமிழ் உரைத்தக்கால் கடவுளதை ஒப்பார்
போலும்பயிரழிக்கும் விட்டிலென தமிழ்மொழியை படுத்தவந்த வடம
றைதான்செயிர்தீர வாழ்த்துதற்கும் தேவையினை சொல்லுதற்கும் உதவும் போலும்
மடிகட்டி கோயிலிலே மேலுடையை இடுப்பினிலே வரிந்து கட்டிப்பொடிகட்டி
இல்லாது பூசியிரு கைகட்டி பார்ப்பா னுக்குப்படிகட்டி தமிழரென
படிக்கட்டின் கீழ்நின்று தமிழ்மா னத்தைவடிகட்டி அவன்வடசொல் மண்ணாங்க
டிக்குவப்பீர் மந்த்ரம் என்றே காற்செருப்பை பிறனொருவன் கழிவிடத்தில்
தள்ளிடினும் பொறாத உள்ளம்மேற்படுத்தும் எவற்றினுக்கும் மேற்பட்ட தன்மொழியை
தமிழை தீயோர்போற்றுவதற் குரியதொரு பொதுவினின்று நீக்கிவைத்தால் பொறுப்ப
துண்டோவேற்றுவரின் வடமொழியை வேரறுப்பீர் கோயிலிலே மேவி டாமே
சொற்கோவின் நற்போற்றி திருஅகவல் செந்தமிழில் இருக்கும்
போதுகற்கோயில் உட்புறத்தில் கால்வைத்த தெவ்வாறு சகத்ர நாமம்தெற்கோதும்
தேவாரம் திருவாய்நன் மொழியான தேனி ருக்கச்செக்காடும் இரைச்சலென வேதபா ராயணமேன்
திருக்கோ யில்பால் திருப்படியில் நின்றபடி செந்தமிழில் பெரும்படியார்
அருளி செய்தஉருப்படியை அப்படியே ஊரறியும் படியுரைத்தால் படியும்
நெஞ்சில்தெருப்படியிற் கழுதையென செல்லுபடி யாகாத வடசொற்
கூச்சல்நெருப்படியை எப்படியோ பொறுத்திடினும் நேர்ந்தபடி பொருள் கண்டீரோ
அறத்தலைவர்அறத்தலைவர் செயத்தக்க அறமிந்நாள்
தமிழ்காத்தல் அன்றோ தங்கள்நிறத்தியலை நிலைநிறுத்தி தமிழ்அழிக்க நினைப்பாரின்
செயலை நீவிர்மறத்தலினும் கேடுண்டோ மடத்திலுறு பெரும்பொருளை செந்தமிழ்
சீர்பெறச்செலவு செய்தலினும் பெறத்தக்க பெரும்பேறு பிறிது முண்டோ
கல்லாரின் நெஞ்சத்தே கடவுள்நிலான் என்னுமொழி கண்டு ளீரேநில்லாத
கடவுளைநீர் நிலைத்திருக்கும் படிச்செ தமிழர் நாட்டில்எல்லாரும் தமிழ்கற்க
என்செய்தீர் செயநினைத்தால் இயலா தேயோதொல்லையெலாம் போமாறு தூய்மையெலாம் ஆமாறு
தொண்டு செய்வீர் செந்தமிழிற் புதுப்புதுநூல் விளைப்பதற்கு செல்வத்தை
செலவு செய்தால்நந்தமிழ்நா டுயராதோ நலிவெல்லாம் தீராவோ பொருளை
அள்ளித்தந்தாரே முன்னாளில் தமிழ்நாட்டார் உம்மிடத்தில் தலைமை
யேற்றுவந்தீரே அரசியல்சீர் வாய்ந்தாரை வசப்படுத்தி வாழ்வ தற்கோ
அறநிலை காப்புக்கே அரசினர்கள் அயலாரை அமைப்பர்
அன்னோர்பிறமொழிக்கு துணைநின்றும் தமிழ்மொழியின் பீடழிக்கும் செயல்
புரிந்தும்சிறுமையுறு வடமொழிக்கு கழகங்கள் இங்கமைத்தும் தீமை
செய்வார்உறுதியுடன் தமிழரெலாம் ஒன்றுபட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும்
நாட்டிலுறும் அறநிலையம் ஒவ்வொன்றும் நற்றமிழ்க்கல் லூரி
ஒன்றும்வீட்டிலுறு கழகங்கள் நாலைந்தும் மேன்மையுறும் புலவர்
கூடித்தீட்டுநூல் வெளியீடு செய்நிலையம் ஒன்றுமா தருமேல்
நம்மைவாட்டிவரும் வறுமைநிலை மாய்க்கவரும் தாழ்மைநிலை மாய்ந்து போமே
விழா நடத்துவோர்தேர்வரும்பின் பார்ப்பனர்கள்
வரிசையுற செங்கைகள் கோத்த வண்ணம்நீர்வருங்கால் கத்துகின்ற நெடுந்தவளை
கூட்டமென கூச்ச லிட்டுநேர்வருவார் அன்னவர்கள் நிகழ்த்துவதன் பொருளென்ன இனிமை
உண்டாஊர்வருந்தும் படிஇதைஏன் விழாத்தலைவர் உடன்சேர்த்தார் ஒழிக்க வேண்டும்
பல்லிசைகள் நேர்முழங்க பகல்போலும் விளக்கெடுப்ப குதிரை
யானைநல்லசிற பளித்துவர நடுவிலொரு தேவடியாள் ஆட மக்கள்எல்லோரும்
கயிறிழுக்க இயங்குமொரு தேர்மீதில் ஆரி யத்தைச்சொல்லிடுமோர் சொறிபிடித்த
பார்ப்பானை குந்தவைத்தல் தூய்மை தானோ விவாகசுப முகூர்த்தமென
வெளிப்படுத்தும் மணஅழைப்பில் மேன்மை என்னஅவாள்இவாள் என்றுரைக்கும்
பார்ப்பனரின் அடிதொடர்தல் மடமை யன்றோஉவகைபெற தமிழர்மணம் உயிர்பெறுங்கால்
உயிரற்ற வடசொற் கூச்சல்கவலையினை ஆக்காதோ மணவிழவு காண்பவரே கழறு வீரே
மானந்தான் மறைந்ததுவோ விழாத்தலைவீர் மணமெல்லாம் வடசொல் லாலேஆனவையா
சொல்லிடுவீர் அந்நாளில் தமிழர்மணம் தமிழ்ச்சொல் லாலேஆனதென அறியீரோ
பார்ப்பான்போய் அடிவைத்த வீட்டி லெல்லாம்ஊனந்தான் அல்லாமல் உயர்வென்ன
கண்டுவிட்டீர் இந்நாள் மட்டும் மணமக்கள் தமைத்தமிழர் வாழ்கஎன
வாழ்த்துமொரு வண்ட மிழ்க்கேஇணையாக பார்ப்பான்சொல் வடமொழியா தமிழர்செவி
கின்பம் ஊட்டும்பணமிக்க தலைவர்களே பழியேற்க வேண்டாம்நீர் திரும
ணத்தில்மணமக்கள் இல்லறத்தை மாத்தமிழில் தொடங்கிடுக மல்கும் இன்பம்
கணக்காயர்கழகத்தின் கணக்காயர் தனிமுறையிற்
கல்விதரும் கணக்கா யர்கள்எழுதவல்ல பேசவல்ல கல்லூரி கணக்காயர் எவரும்
நாட்டின்முழுநலத்தில் பொறுப்புடனும் முன்னேற்ற கருத்துடனும் உழைப்பா
ராயின்அழுதிருக்கும் தமிழன்னை சிரித்தெழுவாள் அவள்மக்கள் அடிமை தீர்வார்
நற்றமிழில் தமிழகத்தில் நல்லெண்ணம் இல்லாத நரிக்கூ
டத்தைக்கற்றுவைக்க அமைப்பதினும் கடிநாயை அமைத்திடலாம் அருமை
யாகப்பெற்றெடுத்த மக்கள்தமை பெரும்பகைவர் பார்ப்பனர்பால் அனுப்போம்
என்றுகொற்றவர்க்கு கூறிடவும் அவர்ஒப்பு கொண்டிடவும் செய்தல் வேண்டும்
இகழ்ச்சியுரும் பார்ப்பனனாம் கணக்காயன் நந்தமிழர் இனத்து
சேயைஇகழ்கின்றான் நம்மவர்முன் னேறுவரோ தமிழ்மொழியை வடசொல்
லுக்குமிகத்தாழ்ந்த தென்கின்றான் வடசொற்கு மகிழ்கின்றான் கொடியவன்
தன்வகுப்பானை வியக்கின்றான் விட்டுவைத்தல் மாக்கொடிதே எழுச்சி வேண்டும்
வடசொல்இது தமிழ்ச்சொல்இது எனப்பிரித்து காட்டிடவும் மாட்டான்
நம்சேய்கெடஎதுசெய் திடவேண்டும் அதைச்செய்வான் கீழ்க்கண்ணான் கொடிய
பார்ப்பான்நொடிதோறும் வள்ர்ந்திடும்இ நோய்தன்னை நீக்காது தமிழர்
வாளாவிடுவதுதான் மிகக்கொடிது கிளர்ந்தெழுதல் வேண்டுமின்றே மேன்மை நாட்டார்
தமிழ்ப்புதுநூல் ஆதரிப்பீர் தமிழ்ப்பாட்டை தமிழர
கென்றேஅமைந்துள்ள கருத்தினையே ஆதரிப்பீர் தமிழ்தான்எம் ஆவி
என்றுநமைப்பகைப்பார் நடுங்கும்வகை நன்றுரைப்பீர் வென்றிமுர செங்கும்
நீவிர்உமக்குரியார் பிறர்க்கடிமை இல்லையென உரைத்திடுவீர் மாணவர்க்கே
மாணவர்கற்கின்ற இருபாலீர் தமிழ்நாட்டின்
கண்ணொப்பீர் கனியி ருக்கநிற்கின்ற நெடுமரத்தில் காய்கவர நினையாதீர் மூது
ணர்வால்முற்கண்ட எவற்றினுக்கும் முதலான நந்தமிழை இகழ்த லின்றிக்கற்கண்டாய்
நினைத்தின்பம் கைக்கொண்டு வாழ்ந்திடுவீர் நன்றே என்றும் ஆங்கிலத்தை
கற்கையிலும் அயல்மொழியை எந்த நாளும்தீங்கனியை செந்தமிழை
தென்னாட்டின் பொன்னேட்டை உயிரா கொள்வீர்ஏங்கவைக்கும் வடமொழியை இந்தியினை
எதிர்த்திடுவீர் அஞ்ச வேண்டாம்தீங்குடைய பார்ப்பனரின் ஆயுதங்கள் இந்தி வட
சொல் இரண்டும் பார்ப்பான்பால் படியாதீர் சொற்குக்கீழ
உம்மை ஏய்க்கப்பார்ப்பான்தீ துறப்பார்ப்பான் கெடுத்துவிட பார்ப்பான்
போதும் பார்ப்பான்ஆர்ப்பான் நம் நன்மையிலே ஆர்வமிக உள்ளவன்போல் நம்ப
வேண்டாம்பார்ப்பானின் கையை எதிர் பார்ப்பானை யேபார்ப்பான் தின்ன பார்ப்பான்
தமிழின்பேர் சொல்லி மிகு தமிழரிடை தமிழ்நாட்டில் வாழ்ந்தி
டாலும்தமிழழித்து தமிழர்தமை தலைதூக்கா தழித்துவிட நினைப்பான்
பார்ப்பான்அமுதாக பேசிடுவான் அத்தனையும் நஞ்சென்க நம்ப
வேண்டாம்தமிழர்கடன் பார்ப்பானை தரைமட்டம் ஆக்குவதே என்று ணர்வீர்
தமிழரின்சீர் தனைக்குறைத்து தனியருசொல் சொன்னாலும் பார்ப்பான்
தன்னைஉமிழ்ந்திடுக மானத்தை ஒருசிறிதும் இழக்காதீர் தமிழை
காக்கஇமையளவும் சோம்பின்றி எவனுக்கும் அஞ்சாது தொண்டு செய்வீர்சுமைஉங்கள்
தலைமீதில் துயர்போக்கல் உங்கள்கடன் தூய்தின் வாழ்க
பாடகர்நாயும்வயிற் றைவளர்க்கும் வாய்ச்சோற்றை பெரிதென்று நாட
லாமோபோய்உங்கள் செந்தமிழின் பெருமையினை புதைப்பீரோ பாட
கர்காள்தோயுந்தேன் நிகர்தமிழாற் பாடாமே தெலுங்கிசையை சொல்லி
பிச்சைஈயுங்கள் என்பீரோ மனிதரைப்போல் இருக்கின்றீர் என்ன வாழ்வு
செந்தமிழில் இசைப்பாடல் இல்லையென செப்புகின்றீர் மான
மின்றிபைந்தமிழில் இசையின்றேல் பாழ்ங்கிணற்றில் வீழ்ந்துயிரை மாய்த்த
லன்றிஎந்தமிழில் இசையில்லை எந்தாய்க்கே உடையில்லை என்ப துண்டோஉந்தமிழை
அறிவீரோ தமிழறிவும் உள்ளதுவோ உங்க கெல்லாம் வெளியினிலே சொல்வதெனில்
உம்நிலைமை வெட்கக்கே டன்றோ நீவிர்கிளிபோல சொல்வதன்றி தமிழ்நூற்கள்
ஆராய்ந்து கிழித்தி டீரோபுளிஎன்றால் புலிஎன்றே உச்சரிக்கும் புலியீரே புளுக
வேண்டாம்துளியறிவும் தமிழ்மொழியில் உள்ளதுவோ பாடகர்க்கு சொல்வீர் மெய்யாய்
தமிழ்மகளா பிறந்தவளும் தமிழ்ப்பகைவன் தனைப்புணர்ந்து தமிழ்பா
டாமல்சுமக்கரிய தூற்றுதலை சுமப்பதுவும் நன்றேயோ பார்ப்ப னத்திநமக்குரிய
தமிழ்காக்க ஒப்பாமை நன்றறியும் இந்த நாடுதமிழ்நாட்டு பாடகரே தமிழ்பாடி
தமிழ்மானம் காப்பீர் நன்றே தமிழ்மொழியில் தமிழ்ப்பாடல் மிகவுண்டு
தமிழ்க்கவிஞர் பல்லோர் உள்ளார்உமைத்தாழ்வு படுத்தாதீர் பார்ப்பான்சொல்
கேட்டபடி உயிர்வா ழாதீர்உமைவிலக்கி பணக்காரன் உடன்சேர்ந்து நலம்கொள்ளும்
உளவன் பார்ப்பான்சிமிழ்க்காமல் விழித்திடுங்கள் பார்ப்பானை நம்பாதீர் திறமை
கொள்வீர் கூத்தர்வாய்ப்பாட்டு பாடிடுவோர்
பெரும்பாலோர் வண்டமிழ்க்கு தீமை செய்தார்போய்ப்பாரீர் படக்காட்சி
போய்ப்பாரீர் நாடகங்கள் பொன்போல் மிக்கவாய்ப்பாக தமிழ்ஒன்றே பேசுகின்றார்
பாடுகின்றார் வாழ்க அன்னார்தாய்ப்பாலில் நஞ்செனவே தமிழில்வட மொழிசேர்த்தார்
தவிர்தல் வேண்டும் தமிழ்ப்புலவர் தனித்தமிழில் நாடகங்கள் படக்கதைகள்
எழுத வேண்டும்தமிழ்ப்பகைவர் பார்ப்பனர்கள் நாடகத்தில் படக்கதையை தமிழர்
எல்லாம்இமைப்போதும் பார்த்திடுதல் இனியேனும் நீக்கிடுதல் வேண்டும்
யாவும்அமைப்பானும் செந்தமிழன் அதைக்காண்பா னுந்தமிழன் ஆதல் வேண்டும்
ஆடுகின்ற மெல்லியலாள் அங்கையினை காட்டுவது பொருள்
குறித்தேநாடிடும்அ பொருள்குறிக்கும் சொல்தமிழாய் இருப்பதுதான் நன்றா
அன்றித்தேடிடினும் பொருள்தோன்றா தெலுங்குவட சொல்லாதல் நன்றா
பின்னால்பாடுகின்றார் நட்டுவனார் பைந்தமிழா பிறமொழியா எதுநன் றாகும்
கூத்தர்பலர் தமக்குள்ள தமிழ்ப்பேரை நீக்கிவிட்டு கொள்கை
விட்டுச்சாத்திக்கொள் கின்றார்கள் வடமொழிப்பேர் இந்திப்பேர் அவற்றி
லெல்லாம்வாய்த்திருக்கும் தாழ்வறியார் புதிதென்றால் நஞ்சினையும் மகிழ்ந்துண்
பாரோதாய்த்திருநா டுயர்வெய்தும் நாள்எந்நாள் தமிழுயரும் நாள்எ நாளோ
என்னருமை தமிழ்நாட்டை எழிற்றமிழால் நுகரேனோ செவியில்
யாண்டும்கன்னல்நிகர் தமிழிசையே கேளேனோ கண்ணெதிரில் காண்ப
வெல்லாம்தன்னேரில் லாததமிழ தனிமொழியா காணேனோ இவ்வை
யத்தில்முன்னேறும் மொழிகளிலே தமிழ்மொழியும் ஒன்றெனவே மொழியே னோநான்
பாட்டியற்றுவோர்தமிழிசைப்பா டியற்றுபவர்
தமிழர்களாய் இருந்தால்தான் தமிழ்த்தென் பாங்கில்அமைவுபெறும் பார்ப்பனனும்
தமிழறிவு கயலானும் அமைக்கும் பாடல்அமுதொத்த தமிழின்மேல் எட்டியையும்
வேம்பினையும் அரைத்து பூசித்தமிழர்க்கே தமிழ்என்றால் தனிக்கசப்பென்
றாக்கிவிடும் தானும் சாகும் மனமேஈ சனின்நாமம் வாழ்த்துவாய் எனும்வேத
நாயகன் தன்இனிதான பாடலைப்போல் திருடுவதற் கில்லையெனில் இங்கோர்
பார்ப்பான்தனதாய்ஒன் றுரைப்பான்அ தமிழ்ப்பாட்டில் தமிழுண்டோ எள்ளின்
மூக்கத்தனையிருப்பின் இரவுதனை ரா என்றே சாற்றியிரு பான்அ பாட்டில்
செந்தமிழில் அன்புடையார் சிலபார்ப்பார் இருந்தாலும் அவரை
மற்றச்செந்தழற்பார பார்கெடுக்க பார்ப்பார் இத்தமிழ்வாழ பாரார்
அன்றோஅந்தமிழால் உடல்வளர்ப்பார் ஆரியந்தான் தமதென்பார் ஆரி
யத்தில்இந்தவரி என்னஎனில் யாம்அறியோம் எம்பாட்டன் அறிந்தான் என்பார்
மறைஅறியார் எனினும்அவர் மறையவராம் என்றுரைப்பார் இலக்க ணத்தின்
துறையறியார் எனினும்அவர் தூயதமிழ் எழுத்தாளர் என்று சொல்வார்குறையுடையார்
எனினும்அவர் குதித்திடுவார் யாம்மேலோர் கூட்டம் என்றேஅறையுமிவை பெருந்தமிழர்
ஆழ்ந்தநெடு தூக்கத்தின் பயனே அன்றோ இயற்கைஎழில் என்னென்ன இனியதமிழ்
நாட்டின்சீர் என்ன மற்றும்செயற்கரிய நந்தமிழர் என்னென்ன செய்தார்கள்
செந்தமிழ காம்முயற்சிஎவை நாட்டிற்கு முடிப்பதென்ன இவையனைத்தும் தனித்த
மைந்தவியத்தகுசெ தமிழாலே வெல்லத்து தென் பாங்கில் பாடல் வேண்டும்
சொற்பொழிவாளர்மற்போர்க்கே அஞ்சிடுவோம் ஆயினும்யாம்
வன்மைமிகு தமிழர் நாட்டில்சொற்போரு கஞ்சுகிலோம் என்றாராம் ஒருமுதியார்
அவர்க்கு சொல்வேன்கற்போரின் பகுத்தறிவை கவிழ்க்கின்ற ஒழுக்கமிலா கதையை
தாங்கிநிற்பாரும் நிற்பாரோ நின்றாலும் வீழாரோ நெடுங் காலின்றி
சமயமெனும் சூளையிலே தமிழ்நட்டால் முளையாதென் றறிந்தி ருந்தும்சமயநூல்
அல்லாது வழியறியா தமிழ்ப்புலவர் சமயம் பேசித்தமிழ்அழிப்பார் எனினும்அவர்
தமிழ்வளர்ப்போம் என்றுரைத்து தமை வியப்பார்தமிழ்வளர்ச்சி தடைப்பட்டால்
தம்வளர்ச்சி உண்டென்றும் நினைப்பார் சில்லோர் பணமனுப்பி வாரீர்எனில்
பயணமுறும் தமிழ்ப்புலவர் ஊரில் வந்துமொணமொணென கடவுளரின் முச்செயலில்
பொய்ப்பேச்சில் முழுக வைப்பார்கணகணென தமிழ்க்கல்வி கட்டாயம் செயத்தக்க
கருத்தும் சொல்லார்தணியாத சமயமொடு சாதியெனும் தீயில்நெய்யை சாய்த்து
செல்வார் மொழியழிப்பான் தனைப்பற்றி ஒருமொழியும் மொழிவதில்லை மொழிந்தால்
பார்ப்பான்விழிநோகும் எனநடுங்கி வெண்ணீற்று பதிகத்தை விரித்து
சொல்லிப்பழியாக தன்தாயை புணர்ந்தானை சிவன்உவந்த பாங்கும்
கூறிஒழிவார்கள் தமிழ்மொழியை ஒழிப்பாரை ஒழிப்பதன்முன் ஒழியா தின்னல்
உலகுக்கு தமிழ்மொழியின் உயர்வுதனை காட்டுவது சொற்
பெருக்காம்கலகத்தை சமயத்தை கழறுவதை காதாலும் கேட்க
வேண்டாம்சிலகற்றார் பலகற்க விரும்பும்வகை செயல்வேண்டும் கல்லார்
ஓடித்தலையுடைத்து கொளவேண்டும் தன்னலம் இல்லார் சொல்லால் எல்லாம் எய்தும்
ஏடெழுதுவோர் பார்ப்பனர்கள் ஏடெழுதும்
பாழ்நிலைமை போகுமட்டும் பைந்த மிழ்க்கோசீர்ப்பெரிய நாட்டினுக்கோ சிறிதேனும்
நன்மையில்லை திருட ரின்பால் ஊர்ப்பணத்தை ஒப்படைத்தல் சரியாமோ செய்தித்தாள்
உடையா ரன்றோ ஊர்ப்பெருமை காப்பவர்கள் அ·தில்லார் ஏதிருந்தும் ஒன்று மில்லார்
ஆங்கிலத்தில் புலவரெனில் அரசினரின் அலுவலிலே அமர்ந்தி
ருப்பார்பாங்குருசெ தமிழ்ப்புலமை படைத்தாரேல் பள்ளியிலே அமர்ந்தி ருப்பார்
தீங்குற்ற இசைப்புலமை சிறிதிருந்தால் படத்தொழிலில் சேர்ந்தி
ருப்பார்ஈங்கிவற்றில் ஏதுமிலார் தமிழினிலே ஏடெழுதி பிழைக்க வந்தார்
ஓவியத்தின் மதிப்புரையும் உயர்கவியின் இசையின்
வல்லார்நாவிலுறு பாடல்களின் நயம்ப்ற்றி மதிப்புரையும் உரை நடைக்குமேவுகின்ற
மதிப்புரையும் கூத்தர்களின் விள்வார் நாங்கள்யாவும்அறி
தோம்என்பார் பெரும்பாலோர் பிழையின்றி எழுதல் இல்லார் ஊர்திருடும்
பார்ப்பானும் உயர்வுடையான் எனக்குறிப்பார் திரவிடர் கொள் சீர்குறித்து
சீறிடுவார் சிறுமையுற வரைந்திடுவார் செய்யு தொண்டுபார்திருத்த என்றிடுவார்
பழமைக்கு மெருகிடுவார் நாட்டு கானசீர்திருத்தம் என்றாலோ சிறுநரிபோல்
சூழ்ச்சியினை செய்வார் நாளும் நடுநிலைமை இருப்பதில்லை நல்லொழுக்கம்
சிறிதுமிலை தமிழை மாய்க்கும்கெடுநினைப்பே மிகவுடையார் கீழ்மையிலே
உடல்வளர்ப்பார் பொருள் படைத்தோன்அடிநத்த நாணுகிலார் அறமொன்றும் கூறுகிலார் ஏழை
யோரின்மடிபறிக்கும் திறமுடையார் மறந்தேனும் திரவிடரை மதித்தல் இல்லார்
ஏடெழுதுவோர் இலக்கணமும் இலக்கியமும் தெரியாதான்
ஏடெழுதல் கேடு நல்கும்தலைக்கணையில் நெருப்பிட்டு தலைவைத்து துயில்வதுபோல்
பகைவ னைப்போய்நிலைப்புற்ற தமிழ்ஏட்டின் ஆசிரிய னாக்குவது நீங்க
வேண்டும்கலைப்பண்பும் உயர்நினைப்பும் உடையவரே ஏடெழுதும் கணக்காயர்கள்
தன்னினத்தான் வேறினத்தான் தன்பகைவன் தன்நண்பன் எவனா னாலும்அன்னவனின்
அறுஞ்செயலை பாராட்டு வோன்செய்தி அறிவி போனாம்சின்னப்பிழை ஏடெழுதும்
கணக்காயன் செய்திடினும் திருநா டார்பால்மன்னிவிடும் ஆதலினால் ஏடெழுதும்
வாழ்க்கையிலே விழிப்பு வேண்டும் ஏற்றமுற செய்வதுவும் மாற்றமுற
வைப்பதுவும் ஏடே யாகும்தோற்றுபுது நிலையுணர்ந்து தோன்றாத வழிகூறி துணை
புரிந்துசேற்றிலுயர் தாமரைபோல் திருநாட்டின் உளங்கவர்ந்து தீந்த
மிழ்த்தொண்டாற்றுந்தாள் அங்கங்கே அழகழகாய் அறிஞர்களால் அமைத்தல் வேண்டும்
தொண்டர்படை ஒன்றமைத்து தமிழ்எதிர்ப்போர் தொடர்ந்தெழுதும் ஏட்டை
யெல்லாம் கண்டறிந்தபடி அவற்றை மக்களெலாம் மறுக்கும்வணம் கழற
வேண்டும்வண்டுதொடர் மலர்போலே மக்கள்தொடர் ஏடுபல தோன்றும் வண்ணம்மண்டுதொகை
திரட்டிஅதை ஏடெழுத வல்லார்பால் நல்க வேண்டும் ஆங்கிலத்து
செய்தித்தாள் அந்தமிழின் சீர்காக்க எழுதல் வேண்டும்தீங்கற்ற திரவிடநன்
மொழிகளிலே பலதாள்கள் எழுதல் வேண்டும்ஓங்கிடநாம் உயர்முறையில் நாடோறும்
கிழமைதொறும் திங்கள் தோறும்மாங்காட்டு குயிலினம்போல் பறந்திடவேண்
டும்தமிழ்த்தாள் வண்ணம் பாடி பெருஞ்செல்வர்கோயில்பல
கட்டுகின்றீர் குளங்கள்பல வெட்டுகின்றீர் கோடை நாளில்வாயிலுற நீர்ப்பந்தல்
மாடுரிஞ்ச நெடுந்தறிகள் வாய்ப்ப செய்தீர்தாயினும்பன் மடங்கான அன்போடு
மக்கள்நலம் தாவுகின்றீர்ஆயினும்நம் தமிழ்நாட்டில் செயத்தக்க தின்னதென அறிகி
லீரே தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும் அறிவுயரும் அறமும்
ஓங்கும்இமயமலை போலுயர்ந்த ஒருநாடும் தன்மொழியில் தாழ்ந்தால்
வீழும்தமிழுக்கு பொருள்கொடுங்கள் தமிழறிஞர் கழகங்கள் நிறுவி
டுங்கள்தமிழ்ப்பள்ளி கல்லூரி தமிழ்ஏடு பலப்பலவும் நிலைப்ப செய்வீர்
நேர்மையின்றி பிறர்பொருளில் தம்பெயரால் கல்லூரி நிறுவி
பெண்ணைச்சீர்கெடுத்தும் மறைவழியா செல்வத்தை மிகவளைத்தும் குடி
கெடுத்தும்பார்அறி தாம்அடைந்த பழியனைத்தும் மறைவதற்கு பார்ப்பான்
காலில்வேர்அறுந்த நெடுமரம்போல் வீழ்ந்தும்அவன் விட்டதுவே வழியாம் என்றும்
அறத்துக்கு நிறுவியதை வருவாய்க்கென் றாக்குவதில் அறிவு
பெற்றமறப்பார்ப்பான் செந்தமிழ் மாணவரை கெடுத்தாலும் எதற்குமே
வாய்திறக்காமல் தாமிருந்தும் செந்தமிழ்க்கு பாடுபடல் போல்
நடித்தும்சிறப்பார்போல் இல்லாது செந்தமிழ்க்கு மெய்யுளத்தால் செல்வம் ஈக
சிங்கங்கள் வாழ்காட்டில் சிறுநரிநாய் குரங்கெண்கு சிறுத்தை
யாவும்தங்கிநெடுங் கூச்சலிடும் தன்மைபோல் தமிழ்நாட்டில் தமிழே
யன்றிஅங்கங்கே அவரவர்கள் தம்மொழிக்கும் பிறமொழிக்கும் ஆக்கம் தேடிமங்காத
செந்தமிழை மங்கும்வகை செய்வதற்கு வழக்கும் சொல்வார் மற்றும்
பலர்அச்சகத்து தமிழர்க்கோ அருந்தமிழில் அன்பிருந்தால் அச்சி
யற்றும்எச்சிறிய அறிக்கையிலும் நூற்களிலும் எதிர்மொழியை உடையவர்
நீக்கச்சொல்ல லாமன்றோ எண்எல்லாம் தமிழினிலே உண்டோ என்றால்மெச்சுகின்ற
ஆங்கிலஎண் அல்லாது வேறில்லை என்கின் றாரே கலைச்சொல்லா கத்தாரே
கல்வியினால் நீர்பெற்ற அறிவை யெல்லாம்தலைச்சரக்காம் தமிழ்ச்சரக்கை தலைகவிழ
வைப்பதற்கோ விற்கின் றீர்கள்மலைச்சறுக்கில் இருக்கின்றீர் மாத்தமிழர்
கண்திறந்து வாழ்வு கெல்லாம்நிலைச்சரக்கை கண்டுகொண்டார் நெடுநாளின்
விளையாட்டை நிறுத்த வேண்டும் அரசினரும் பெரியநிலை அடைந்தவரும்
அறிந்திடுக மக்கள் நெஞ்சில்முரசிருந்து முழங்கிற்று தமிழ்வாழ்க தமிழ்வெல்க
என்றே முன்னாள்அரசிருந்த தமிழன்னை ஆட்சியிலே சூழ்ச்சிசெயும் ஆட்கள்
யாரும்எரிசருகுதமிழரிடை எழுச்சியுறும் தமிழார்வம் கொழுத்த தீதீ
கடவுள்வெறி சமயவெறி கன்னல்நிகர் தமிழுக்கு நோய் நோயேஇடைவந்த
சாதியெனும் இடர்ஒழிந்தால் ஆள்பவள்நம் தாய் தாயேகடல்போலும் எழுககடல்
முழக்கம்போல் கழறிடுக தமிழ்வாழ் கென்றுகெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம்
தலையிட்டு கிளர்ச்சி செய்க விழிப்போரே நிலைகாண்பார் விதைப்போரே
அறுத்திடுவார் களைகாண் டோறும்அழிப்போரே அறஞ்செய்வார் அறிந்தோரே உயர்ந்திடுவார்
ஆதல் ஆர்வம்செழிப்போரேஇளைஞர்களே தென்னாட்டு சிங்கங்காள் எழுக
நம்தாய்மொழிப்போரே வேண்டுவது தொடக்கஞ்செய் வீர்வெல்வீர் மொழிப்போர் வெல்க