திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
ஆறாம் திருமுறை முதற் பகுதி
பாடல்கள்
உள்ளுறை
கோயில் மின்பதிப்பு
கோயில் மின்பதிப்பு
திருவீரட்டானம் மின்பதிப்பு
திருவதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருவீரட்டானம் மின்பதிப்பு
திருவதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருவீரட்டானம் மின்பதிப்பு
திருக்காளத்தி மின்பதிப்பு
திருஆமாத்தூர் மின்பதிப்பு
திருப்பந்தணைநல்லூர் மின்பதிப்பு
திருப்புன்கூர் திருநீடூர் மின்பதிப்பு
திருக்கழிப்பாலை மின்பதிப்பு
திருப்புறம்பயம் மின்பதிப்பு
திருநல்லூர் மின்பதிப்பு
திருக்கருகாவூர் மின்பதிப்பு
திருவிடைமருது மின்பதிப்பு
திருவிடைமருது மின்பதிப்பு
திருப்பூவணம் மின்பதிப்பு
திருவாலவாய் மின்பதிப்பு
திருநள்ளாறு மின்பதிப்பு
திருவாக்கூர் மின்பதிப்பு
திருநாகைக்காரோணம் மின்பதிப்பு
திருமறைக்காடு மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவெண்காடு மின்பதிப்பு
திருப்பழனம் மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருமழபாடி மின்பதிப்பு
திருமழபாடி மின்பதிப்பு
திருநெய்த்தானம் மின்பதிப்பு
திருநெய்த்தானம் மின்பதிப்பு
திருப்பூந்துருத்தி மின்பதிப்பு
திருச்சோற்றுத்துறை மின்பதிப்பு
திருவொற்றியூர் மின்பதிப்பு
திருஆவடுதுறை மின்பதிப்பு
திருஆவடுதுறை மின்பதிப்பு
திருவலிவலம் மின்பதிப்பு
திருக்கோகரணம் மின்பதிப்பு
திருவீழிமிழலை மின்பதிப்பு

கோயில் பெரியதிருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை
அருமறையி னகத்தானை அணுவை யார்க்கு
தெரியாத தத்துவனை தேனை பாலை
திகழொளியை தேவர்கள்தங் கோனை மற்றை
கரியானை நான்முகனை கனலை காற்றை
கனைகடலை குலவரையை கலந்து நின்ற
பெரியானை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
கற்றானை கங்கைவார் சடையான் றன்னை
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாரு தன்னொப்பா ரில்லா தானை
வானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்த
பெற்றானை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
கருமானின் உரியதளே உடையா வீக்கி
கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்தி
வருமான திரள்தோள்கள் மட்டி தாட
வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் றன்னை
அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர கருள்புரிந்த மைந்தன் றன்னை
மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணு
திருந்தொளிய தாரகையு திசைக ளெட்டு
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகல்ஞால தகத்துள் தோன்றி
வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனை போக மாற்றி
பொதுநீக்கி தனைநினைய வல்லோர கென்றும்
பெருந்துணையை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னை
கனவயிர குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றை தாரான் றன்னை
அருமறையோ டாறங்க மாயி னானை
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர
சுடர்க்கொழுந்தை துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
வரும்பயனை எழுநரம்பி னோசை யானை
வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயஞ்செ யவுணர்புர மெரி கோத்த
அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் றன்னை
சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கிற்
துளங்காத சிந்தையரா துறந்தோ ருள்ள
பெரும்பயனை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
காரானை ஈருரிவை போர்வை யானை
காமருபூங் கச்சியே கம்பன் றன்னை
ஆரேனு மடியவர்க கணியான் றன்னை
அமரர்களு கறிவரிய அளவி லானை
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண்ணில்
பேரானை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
முற்றாத பால்மதியஞ் சூடினானை
மூவுலகு தானாய முதல்வன் றன்னை
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றன்னை
திகழொளியை மரகதத்தை தேனை பாலை
குற்றால தமர்ந்துறையுங் குழகன் றன்னை
கூத்தாட வல்லானை கோனை ஞானம்
பெற்றானை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
காரொளிய திருமேனி செங்கண் மாலுங்
கடிக்கமல திருந்தயனுங் காணா வண்ணஞ்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லை
திகழொளியை சிந்தைதனை மயக்க தீர்க்கும்
ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகுங் கடந்தண்ட தப்பால் நின்ற
பேரொளியை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

கோயில் புக்கதிருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
மங்குல் மதிதவழும் மாட வீதி
மயிலாப்பி லுள்ளார் மருக
கொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார்
குடமூக்கி லுள்ளார்போ கொள்ளம் பூதூர
தங்கு மிடமறியார் சால நாளார்
தரும புரத்துள்ளார் தக்க ளூரார்
பொங்குவெண் ணீறணிந்து பூதஞ் சூழ
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
நாக மரைக்கசைத்த நம்ப ரிந்நாள்
நனிபள்ளி யுள்ளார்போய் நல்லூர தங்கி
பாக பொழுதெல்லாம் பாசூர தங்கி
பரிதி நியமத்தார் பன்னி ருநாள்
வேதமும் வேள்வி புகையு மோவா
விரிநீர் மிழலை எழுநாள் தங்கி
போகமும் பொய்யா பொருளு மானார்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
துறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலு
தூமதியும் பாம்பு முடையார் போலும்
மறங்காட்டி மும்மதிலு மெய்தார் போலும்
மந்திரமு தந்திரமு தாமே போலும்
அறங்காட்டி அந்தணர்க்கன் றால நீழல்
அறமருளி செய்த அரனா ரிந்நாள்
புறங்கா டெரியாடி பூதஞ் சூழ
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
வாரேறு வனமுலையாள் பாக மாக
மழுவாள்கை யேந்தி மயான தாடி
சீரேறு தண்வயல்சூழ் ஓத வேலி
திருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார்
காரேறு கண்டத்தார் காமற் காய்ந்த
கண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார்
போரேறு தாமேறி பூதஞ் சூழ
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
காரார் கமழ்கொன்றை கண்ணி சூடி
கபாலங்கை யேந்தி கணங்கள் பாட
ஊரா ரிடும்பிச்சை கொண்டு ழலும்
உத்தம ராய்நின்ற ஒருவ னார்தாஞ்
சீரார் கழல்வணங்கு தேவ தேவர்
திருவாரூர திருமூல தான மேயார்
போரார் விடையேறி பூதஞ் சூழ
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
காதார் குழையினர் கட்டங் கத்தார்
கயிலாய மாமலையார் காரோ ணத்தார்
மூதாயர் மூதாதை யில்லார் போலும்
முதலு மிறுதியு தாமே போலும்
மாதாய மாதர் மகிழ வன்று
மன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நா
போதார் சடைதாழ பூதஞ் சூழ
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
இறந்தார்க்கு மென்றும் இறவா தார்க்கும்
இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று
பிறந்தார்க்கு மென்றும் பிறவா தார்க்கும்
பெரியான்றன் பெருமையே பேச நின்று
மறந்தார் மனத்தென்றும் மருவார் போலும்
மறைக்கா டுறையும் மழுவா செல்வர்
புறந்தாழ் சடைதாழ பூதஞ் சூழ
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
குலாவெண் டலைமாலை யென்பு பூண்டு
குளிர்கொன்றை தாரணிந்து கொல்லே றேறி
கலாவெங் களிற்றுரிவை போர்வை மூடி
கையோ டனலேந்தி காடு றைவார்
நிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம்
நிறைவயல்சூழ் நெய்த்தான மேய செல்வர்
புலால்வெண் டலையேந்தி பூதஞ் சூழ
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்
சங்கரனை கண்டீரோ கண்டோ மிந்நாள்
பந்தித்த வெள்விடையை பாய வேறி
படுதலையி லென்கொலோ ஏந்தி கொண்டு
வந்திங்கென் வெள்வளையு தாமு மெல்லாம்
மணியாரூர் நின்றந்தி கொள்ள கொள்ள
பொன்றி மணிவிளக்கு பூதம் பற்ற
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
பாதங்கள் நல்லார் பரவி யேத்த
பத்திமையாற் பணிசெய்யு தொண்டர் தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும்
எழுபிறப்பும் ஆளுடைய ஈச னார்தாம்
வேதங்க ளோதியோர் வீணை யேந்தி
விடையொன்று தாமேறி வேத கீதர்
பூதங்கள் சூழ புலித்தோல் வீக்கி
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
பட்டுடுத்து தோல்போர்த்து பாம்பொன் றார்த்து
பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்
சிட்டரா தீயேந்தி செல்வார் தம்மை
தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்
விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே
ஓதுவதும் வேதமே வீணை யுண்டே
கட்டங்கங் கையதே சென்று காணீர்
கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவீரட்டானம் ஏழைத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
வெறிவிரவு கூவிளநற் றொங்க லானை
வீரட்ட தானைவெள் ளேற்றி னானை
பொறியரவி னானைப்புள் ளூர்தி யானை
பொன்னிறத்தி னானை புகழ்த கானை
அறிதற் கரியசீ ரம்மான் றன்னை
அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னை
எறிகெடில தானை இறைவன் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
வெள்ளிக்குன் றன்ன விடையான் றன்னை
வில்வலான் வில்வட்டங் காய்ந்தான் றன்னை
புள்ளி வரிநாகம் பூண்டான் றன்னை
பொன்பிதிர தன்ன சடையான் றன்னை
வள்ளி வளைத்தோள் முதல்வன் றன்னை
வாரா வுலகருள வல்லான் றன்னை
எள்க இடுபிச்சை ஏற்பான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
முந்தி யுலகம் படைத்தான் றன்னை
மூவா முதலாய மூர்த்தி தன்னை
சந்தவெண் டிங்கள் அணிந்தான் றன்னை
தவநெறிகள் சாதிக்க வல்லான் றன்னை
சிந்தையில் தீர்வினையை தேனை பாலை
செழுங்கெடில வீரட்ட மேவி னானை
எந்தை பெருமானை ஈசன் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை
மதியமும் ஞாயிறுங் காற்று தீயும்
அந்தரமு மலைகடலு மானான் றன்னை
அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னை
கந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பி
கடிமலர்கள் பலதூவி காலை மாலை
இந்திரனும் வானவரு தொழச்செல் வானை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
ஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார்
உயர்கதிக்கு வழிதேடி போக மாட்டார்
வருபிறப்பொன் றுணராது மாசு பூசி
வழிகாணா தவர்போல்வார் மனத்த னாகி
அருபிறப்பை அறுப்பிக்கும் அதிகை யூரன்
அம்மான்றன் அடியிணையே அணைந்து வாழா
திருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொற்கே
டேழையே னான்பண் டிகழ்ந்த வாறே
ஆறேற்க வல்ல சடையான் றன்னை
அஞ்சனம் போலு மிடற்றான் றன்னை
கூறேற கூறமர வல்லான் றன்னை
கோல்வளைக்கை மாதராள் பாகன் றன்னை
நீறேற்க பூசும் அகல தானை
நின்மலன் றன்னை நிமலன்
ஏறேற்க ஏறுமா வல்லான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
குண்டாக்க னாயுழன்று கையி லுண்டு
குவிமுலையார் தம்முன்னே நாண மின்றி
உண்டி யுகந்தமணே நின்றார் சொற்கே
டுடனாகி யுழிதந்தேன் உணர்வொன் றின்றி
வண்டுலவு கொன்றையங் கண்ணி யானை
வானவர்க ளேத்த படுவான் றன்னை
எண்டிசைக்கு மூர்த்தியாய் நின்றான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
உறிமுடித்த குண்டிகைதங் கையிற் றூக்கி
ஊத்தைவா சமணர்க்கோர் குண்டா கனா
கறிவிரவு நெய்சோறு கையி லுண்டு
கண்டார்க்கு பொல்லாத காட்சி யானேன்
மறிதிரைநீர பவ்வநஞ் சுண்டான் றன்னை
மறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன்
எறிகெடில நாடர் பெருமான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் றன்னை
நெற்றிமேற் கண்ணொன் றுடையான் றன்னை
மறையானை மாசொன் றிலாதான் றன்னை
வானவர்மேல் மலரடியை வைத்தான் றன்னை
கறையானை காதார் குழையான் றன்னை
கட்டங்க மேந்திய கையி னானை
இறையானை எந்தை பெருமான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
தொல்லைவான் சூழ்வினைகள் சூழ போந்து
தூற்றியே னாற்றியேன் சுடராய் நின்று
வல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்ட
வானவர்க்கு தானவர்க்கும் பெருமான் றன்னை
கொல்லைவா குருந்தொசித்து குழலு மூதுங்
கோவலனும் நான்முகனுங் கூடி யெங்கும்
எல்லைகாண் பரியானை எம்மான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
முலைமறைக்க பட்டுநீ ராட பெண்கள்
முறைமுறையால் நந்தெய்வ மென்று தீண்டி
தலைபறிக்கு தன்மையர்க ளாகி நின்று
தவமேயென் றவஞ்செய்து தக்க தோரார்
மலைமறிக்க சென்ற இலங்கை கோனை
மதனழி செற்றசே வடியி னானை
இலைமறித்த கொன்றை தாரான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவதிகைவீரட்டானம் அடையாளத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
சந்திரனை மாகங்கை திரையால் மோத
சடாமகுட திருத்துமே சாம வேத
கந்தருவம் விரும்புமே கபால மேந்து
கையனே மெய்யனே கனக மேனி
பந்தணவு மெல்விரலாள் பாக னாமே
பசுவேறு மேபரம யோகி யாமே
ஐந்தலைய மாசுணங்கொண் டரையார கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
ஏறேறி யேழுலகும் உழிதர் வானே
இமையவர்கள் தொழுதேத்த இருக்கின் றானே
பாறேறு படுதலையிற் பலிகொள் வானே
படவரவ தடமார்பிற் பயில்வி தானே
நீறேறு செழும்பவள குன்றொ பானே
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவி தானே
ஆறேறு சடைமுடிமேற் பிறைவை தானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே
முதலாகி நடுவாகி முடிவா னானே
கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே
கதநாகங் கொண்டாடுங் காட்சி யானே
பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானே
பெருநிலநீர் தீவளிஆ காச மாகி
அண்டத்து கப்பாலாய் இப்பா லானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
செய்யனே கரியனே கண்டம் பைங்கண்
வெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக
வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னி
சடையனே விளங்குமழு சூல மேந்துங்
கையனே காலங்கள் மூன்றா னானே
கருப்புவிற் றனிக்கொடும்பூண் காமற் காய்ந்த
ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே
அவனாகி லதிகைவீ ரட்ட னாமே
பாடுமே யொழியாமே நால்வே தமும்
படர்சடைமேல் ஒளிதிகழ பனிவெண் டிங்கள்
சூடுமே அரைதிகழ தோலும் பாம்புஞ்
சுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங்
கூடுமே குடமுழவம் வீணை தாளங்
குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூ
தாடுமே அந்தடக்கை அனலே தும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
ஒழித்திடுமே உள்குவார் உள்ள துள்ள
உறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றை கண்ணால்
விழித்திடுமே காமனையும் பொடியா வீழ
வெள்ள புனற்கங்கை செஞ்சடைமேல்
இழித்திடுமே ஏழுலகு தானா கும்மே
இயங்கு திரிபுரங்க ளோரம் பினால்
அழித்திடுமே ஆதிமா தவத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
குழலோடு கொக்கரைகை தாளம் மொந்தை
குறட்பூதம் முன்பாட தானா டும்மே
கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து
கனவின்கண் திருவுருவ தான்கா டும்மே
எழிலாரு தோள்வீசி நடமா டும்மே
புறங்காட்டில் தோறும்
அழலாடு மேயட்ட மூர்த்தி யாமே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
மாலாகி மதமிக்க களிறு தன்னை
வதைசெய்து மற்றதனின் உரிவை கொண்டு
மேலாலுங் கீழாலு தோன்றா வண்ணம்
வெம்புலால் கைகலக்க மெய்போர தானே
கோலாலம் படவரைந டரவு சுற்றி
குரைகடலை திரையலற கடைந்து கொண்ட
ஆலால முண்டிருண்ட கண்ட தானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
செஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும்
வம்பினார் மலர்க்கூந்த லுமையாள் காதல்
மணவாள னேவலங்கை மழுவா ளனே
நம்பனே நான்மறைகள் தொழநின் றானே
நடுங்காதார் புரமூன்றும் நடுங்க செற்ற
அம்பனே அண்டகோ சரத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
எழுந்ததிரை நதித்துவலை நனைந்த திங்கள்
இளநிலா திகழ்கின்ற வளர்ச டையனே
கொழும்பவள செங்கனிவா கா கோட்டி
கொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட
தழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டே
சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்தியசெ திருவுருவில் வெண்ணீற் றானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
நெடியானும் நான்முகனும் நேடி காணா
நீண்டானே நேரொருவ ரில்லா தானே
கொடியேறு கோலமா மணிகண் டனே
கொல்வேங்கை அதளனே கோவ ணவனே
பொடியேறு மேனியனே ஐயம் வேண்டி
புவலோக திரியுமே புரிநூ லானே
அடியாரை அமருலகம் ஆள்வி கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவீரட்டானம் போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவா படையாய் போற்றி
கொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சி கரியாய் போற்றி
கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி
பல்லூழி யாய படைத்தாய் போற்றி
ஓட்டகத்தே யூணா உகந்தாய் போற்றி
உள்குவார் உள்ள துறைவாய் போற்றி
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி
ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி
அலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி
முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
சில்லை சிரைத்தலையில் ஊணா போற்றி
சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லைச்சிற் றம்பல மேயாய் போற்றி
திருவீர டானத்தெஞ் செல்வா போற்றி
சாம்பர் அகல தணிந்தாய் போற்றி
தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
கூம்பி தொழுவார்தங் குற்றே வலை
குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி
பாம்பும் மதியும் புனலு தம்மிற்
பகைதீர துடன்வைத்த பண்பா போற்றி
ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி
அலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி
நீறேறு நீல மிடற்றாய் போற்றி
நிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி
கூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றி
கோளரவம் ஆட்டுங் குழகா போற்றி
ஆறேறு சென்னி யுடையாய் போற்றி
அடியார்க காரமுத மானாய் போற்றி
ஏறேற என்றும் உகப்பாய் போற்றி
இருங்கெடில வீரட்ட தெந்தாய் போற்றி
பாடுவார் பாட லுகப்பாய் போற்றி
பழையாற்று பட்டீ சுரத்தாய் போற்றி
வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
வேழ துரிவெருவ போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற் கரியாய் போற்றி
நாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி
ஆடுமா னைந்தும் உகப்பாய் போற்றி
அலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி
மண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
மால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி
விண்டுளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
வேழ துரிமூடும் விகிர்தா போற்றி
பண்டுளங்க பாடல் பயின்றாய் போற்றி
பார்முழுது மாய பரமா போற்றி
கண்டுளங காமனைமுன் காய்ந்தாய் போற்றி
கார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி
வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சா பலிதேரு தோன்றால் போற்றி
தொழுதகை துன்ப துடைப்பாய் போற்றி
நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி
அலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி
சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
சீபர்ப்ப தஞ்சிந்தை செய்தாய் போற்றி
புந்தியா புண்டரிக துள்ளாய் போற்றி
புண்ணியனே போற்றி புனிதா
சந்தியாய் நின்ற சதுரா போற்றி
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி
அலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி
முக்கணா போற்றி முதல்வா
முருகவேள் தன்னை பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்ப
துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி
எறிகெடில வீரட்ட தீசா போற்றி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவதிகைவீரட்டானம் திருவடித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
அரவணையான் சிந்தி தரற்றும்மடி
அருமறையான் சென்னி கணியாமடி
சரவணத்தான் கைதொழுது சாரும்மடி
சார்ந்தார்க கெல்லாஞ் சரணாமடி
பரவுவார் பாவம் பறைக்கும்மடி
பதினெண் கணங்களும் பாடும்மடி
திரைவிரவு தென்கெடில நாடன்னடி
திருவீர டானத்தெஞ் செல்வனடி
கொடுவினையா ரென்றுங் குறுகாவடி
குறைந்தடைந்தார் ஆழாமை காக்கும்மடி
படுமுழவம் பாணி பயிற்றும்மடி
பதைத்தெழுந்த வெங்கூற்றை பாய்ந்தவடி
கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி
கடல்வையங் காப்பான் கருதும்மடி
நெடுமதியங் கண்ணி யணிந்தானடி
நிறைகெடில வீரட்டம் நீங்காவடி
வைதெழுவார் காமம்பொய் போகாவடி
வஞ்சவலை பாடொன் றில்லாவடி
கைதொழுது நாமேத்தி காணும்மடி
கணக்கு வழக்கை கடந்தவடி
நெய்தொழுது நாமேத்தி யாட்டும்மடி
நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி
தெய்வ புனற்கெடில நாடன்னடி
திருவீர டானத்தெஞ் செல்வனடி
அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி
அழகெழுத லாகா அருட்சேவடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி
சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி
பெரும்பித்தர் கூடி பிதற்றும்மடி
பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி
திருந்துநீர தென்கெடில நாடன்னடி
திருவீர டானத்தெஞ் செல்வனடி
ஒருகால தொன்றாகி நின்றவடி
ஊழிதோ றூழி உயர்ந்தவடி
பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்மடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி
இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி
திருவதிகை தென்கெடில நாடன்னடி
திருவீர டானத்தெஞ் செல்வனடி
திருமகட்கு செந்தா மரையாமடி
சிறந்தவர்க்கு தேனாய் விளைக்கும்மடி
பொருளவர்க்கு பொன்னுரையாய் நின்றவடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி
உருவென் றுணர படாதவடி
திருவதிகை தென்கெடில நாடன்னடி
திருவீர டானத்தெஞ் செல்வனடி
உரைமாலை யெல்லா முடையவடி
உரையால் உணர படாதவடி
வரைமாதை வாடாமை வைக்கும்மடி
வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி
அரைமா திரையில் லடங்கும்மடி
அகலம் அளக்கிற்பார் இல்லாவடி
கரைமாங் கலிக்கெடில நாடன்னடி
கமழ்வீர டான காபாலியடி
நறுமலராய் நாறு மலர்ச்சேவடி
நடுவாய் உலகநா டாயவடி
செறிகதிரு திங்களுமாய் நின்றவடி
தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி
மறுமதியை மாசு கழுவும்மடி
மந்திரமு தந்திரமு மாயவடி
செறிகெடில நாடர் பெருமானடி
திருவீர டானத்தெஞ் செல்வனடி
அணியனவுஞ் சேயனவு மல்லாவடி
அடியார்க காரமுத மாயவடி
பணிபவர்க்கு பாங்காக வல்லவடி
பற்றற்றார் பற்றும் பவளவடி
மணியடி பொன்னடி மாண்பாமடி
மருந்தா பிணிதீர்க்க வல்லவடி
தணிபாடு தண்கெடில நாடன்னடி
தகைசார் வீரட்ட தலைவனடி
அந்தாம ரைப்போ தலர்ந்தவடி
அரக்கனையும் ஆற்றல் அழித்தவடி
முந்தாகி முன்னே முளைத்தவடி
முழங்கழலாய் நீண்டவெம் மூர்த்தியடி
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி
பவள தடவரையே போல்வானடி
வெந்தார் சுடலைநீ றாடும்மடி
வீரட்டங் காதல் விமலனடி
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் திருவீரட்டேசுவரர்
தேவியார் திருவதிகைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவீரட்டானம் காப்புத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
செல்வ புனற்கெடில வீரட்டமுஞ்
சிற்றேம மும்பெருந்தண் குற்றாலமு
தில்லைச்சிற் றம்பலமு தென்கூடலு
தென்னானை காவுஞ் சிராப்பள்ளியும்
நல்லூரு தேவன் குடிமருகலும்
நல்லவர்கள் தொழுதேத்து நாரையூருங்
கல்லலகு நெடும்புருவ கபாலமேந்தி
கட்டங்க தோடுறைவார் காப்புக்களே
தீர்த்த புனற்கெடில வீரட்டமு
திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர்
ஆர்த்தருவி வீழ்சுனைநீர் அண்ணாமலை
அறையணி நல்லூரும் அரநெறியும்
ஏத்துமின்கள் நீரேத்த நின்றஈசன்
இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்
கார்த்தயங்கு சோலை கயிலாயமுங்
கண்ணுதலான் தன்னுடைய காப்புக்களே
சிறையார் புனற்கெடில வீரட்டமு
திருப்பா திரிப்புலியூர் திருவாமாத்தூர்
துறையார் வனமுனிக ளேத்தநின்ற
சோற்று துறைதுருத்தி நெய்த்தானமும்
அறையார் புனலொழுகு காவிரிசூழ்
ஐயாற் றமுதன் பழனம்நல்ல
கறையார் பொழில்புடைசூழ் கானப்பேருங்
கழுக்குன்று தம்முடைய காப்புக்களே
திரையார் புனற்கெடில வீரட்டமு
திருவாரூர் தேவூர் திருநெல்லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றியூரும்
ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும்
வரையா ரருவிசூழ் மாநதியும்
மாகாளங் கேதாரம் மாமேருவுங்
கரையார் புனலொழுகு காவிரிசூழ்
கடம்ப துறையுறைவார் காப்புக்களே
செழுநீர புனற்கெடில வீரட்டமு
திரிபுரா தகந்தென்னார் தேவீச்சரங்
கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக்காவுங்
குடமூக்குங் கோகரணங் கோலக்காவும்
பழிநீர்மை யில்லா பனங்காட்டூரும்
பனையூர் பயற்றூர் பராய்த்துறையுங்
கழுநீர் மதுவிரியுங் காளிங்கமுங்
கணபதீ சரத்தார்தங் காப்புக்களே
தெய்வ புனற்கெடில வீரட்டமுஞ்
செழுந்தண் பிடவூருஞ் சென்றுநின்று
பவ்வ திரியும் பருப்பதமும்
பறியலூர் வீரட்டம் பாவநாசம்
மவ்வ திரையும் மணிமுத்தமும்
மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியுங்
கவ்வை வரிவண்டு பண்ணேபாடுங்
கழிப்பாலை தம்முடைய காப்புக்களே
தெண்ணீர புனற்கெடில வீரட்டமுஞ்
சிக்காலி வல்ல திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல்அம்பர்
உறையூர் நறையூர் அரணநல்லூர்
விண்ணார் விடையான் விளமர்வெண்ணி
மீயச்சூர் வீழி மிழலைமிக்க
கண்ணார் நுதலார் கரபுரமுங்
காபாலி யாரவர்தங் காப்புக்களே
தெள்ளும் புனற்கெடில வீரட்டமு
திண்டீ சரமு திருப்புகலூர்
எள்ளும் படையான் இடைத்தானமும்
ஏயீ சரமுநல் லேமங்கூடல்
கொள்ளு மிலயத்தார் கோடிகாவுங்
குரங்கணில் முட்டமுங் குறும்பலாவுங்
கள்ளருந தெள்ளியா ருள்கியேத்துங்
காரோண தம்முடைய காப்புக்களே
சீரார் புனற்கெடில வீரட்டமு
திருக்காட்டு பள்ளி திருவெண்காடும்
பாரார் பரவுஞ்சீர பைஞ்ஞீலியும்
பந்தணை நல்லூரும் பாசூர்நல்லம்
நீரார் நிறைவயல்சூழ் நின்றியூரும்
நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலுங்
காரார் கமழ்கொன்றை தாரார்க்கென்றுங்
கடவூரில் வீரட்டங் காப்புக்களே
சிந்தும் புனற்கெடில வீரட்டமு
திருவாஞ் சியமு திருநள்ளாறும்
அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்
ஆக்கூரு மாவூரு மான்பட்டியும்
எந்தம் பெருமாற் கிடமாவது
இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடுங்
கந்தங் கமழுங் கரவீரமுங்
கடம்பூர கரக்கோயில் காப்புக்களே
தேனார் புனற்கெடில வீரட்டமு
திருச்செம்பொன் பள்ளிதிரு பூவணமும்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும்
மதிலுஞ்சை மாகாளம் வாரணாசி
ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம்
இலங்கார் பருப்பதத்தோ டேணார்சோலை
கானார் மயிலார் கருமாரியுங்
கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே
திருநீர புனற்கெடில வீரட்டமு
திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்
வருநீர் வளம்பெருகு மானிருபமும்
மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற
பிரமபுரஞ் சுழியல் பெண்ணாகடங்
கருநீல வண்டரற்றுங் காளத்தியுங்
கயிலா தம்முடைய காப்புக்களே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்காளத்தி திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
விற்றூணொன் றில்லாத நல்கூர தான்காண்
வியன்கச்சி கம்பன்காண் பிச்சை யல்லால்
மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்
மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லா
பொற்றூண்காண் மாமணிநற் குன்றொ பான்காண்
பொய்யாது பொழிலேழு தாங்கி நின்ற
கற்றூண்காண் காளத்தி காண பட்ட
கணநாதன் காணவனென் கண்ணு ளானே
இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண்
எலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே
முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்
முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலையறுத்த பாசு பதன்காண்
பராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண்
கடித்தார் கமழ்கொன்றை கண்ணி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே
நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்
ஞான பெருங்கடற்கோர் நாவா யன்ன
பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் றான்காண்
புரிசடைமேற் புனலேற்ற புனிதன் றான்காண்
சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் றான்காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர கெல்லாங்
காரணன்காண் காளத்தி காண பட்ட
கணநாதன் காணவனென் கண்ணு ளானே
செற்றான்காண் என்வினையை தீயா டிகாண்
திருவொற்றி யூரான்காண் சிந்தை செய்வார
குற்றான்காண் ஏகம்பம் மேவி னான்காண்
உமையாள்நற் கொழுநன்காண் இமையோ ரேத்துஞ்
சொற்றான்காண் சோற்று துறையு ளான்காண்
சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோ
கற்றான்காண் காளத்தி காண பட்ட
கணநாதன் காணவனென் கண்ணு ளானே
மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
வாயார தன்னடியே பாடு தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
ஏழண்ட தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றை போதி னுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலா துச்சி யுள்ளான்
காளத்தி யானவனென் கண்ணு ளானே
எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண்
ஏகம்ப மேயான்காண் இமையோ ரேத்த
பொல்லா புலனைந்தும் போக்கி னான்காண்
புரிசடைமேற் பாய்கங்கை பூரி தான்காண்
நல்லவிடை மேற்கொண்டு நாகம் பூண்டு
நளிர்சிரமொன் றேந்தியோர் நாணா யற்ற
கல்லாடை மேற்கொண்ட காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே
கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்
எண்டிசையு தானாய குணத்தி னான்காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்
தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்
கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே
இல்லாடி சில்பலிசென் றேற்கின் றான்காண்
இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின் றான்காண்
வில்லாடி வேடனா யோடி னான்காண்
வெண்ணூ லுஞ்சேர்ந்த அகல தான்காண்
மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்
மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்
கல்லாலின் கீழிருந்த காபா லிகான்
காளத்தி யானவனென் கண்ணு ளானே
தேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண்
திருவேகம் பத்தான்காண் தேனார துக்க
ஞானப்பூங் கோதையாள் பாக தான்காண்
நம்பன்காண் ஞான தொளியா னான்காண்
வானப்பே ரூரு மறிய வோடி
மட்டித்து நின்றான்காண் வண்டார் சோலை
கானப்பே ரூரான்காண் கறைக்கண் டன்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே
இறையவன்காண் ஏழுலகு மாயி னான்காண்
ஏழ்கடலுஞ் சூழ்மலையு மாயி னான்காண்
குறையுடையார் குற்றேவல் கொள்வான் றான்காண்
குடமூக்கிற் கீழ்க்கோட்டம் மேவி னான்காண்
மறையுடைய வானோர் பெருமான் றான்காண்
மறைக்கா டுறையும் மணிகண் டன்காண்
கறையுடைய கண்டத்தெங் காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே
உண்ணா வருநஞ்ச முண்டான் றான்காண்
ஊழித்தீ யன்னான்காண் உகப்பார் காண
பண்ணார பல்லியம் பாடி னான்காண்
பயின்றநால் வேதத்தின் பண்பி னான்காண்
அண்ணா மலையான்காண் அடியா ரீட்டம்
அடியிணைகள் தொழுதேத்த அருளு வான்காண்
கண்ணார காண்பார்க்கோர் காட்சி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் காளத்திநாதர்
தேவியார் ஞானப்பூங்கோதையாரம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஆமாத்தூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று
வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மை
கண்ணம்பால் நின்றெய்து கனல பேசி
கடியதோர் விடையேறி காபா லியார்
சுண்ணங்கள் தாங்கொண்டு துதை பூசி
தோலுடுத்து நூல்பூண்டு தோன்ற தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை
விரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்தி
கந்தார தாமுரலா போகா நிற
கறைசேர் மணிமிடாற்றீ ரூரே தென்றேன்
நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு
நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்
அந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்செய்
ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே
கட்டங்க தாமொன்று கையி லேந்தி
கடிய விடையேறி காபா லியார்
இட்டங்கள் தாம்பேசி இல்லே புக்கு
இடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர்
பட்டிமையும் படிறுமே பேசா நின்றார்
பார்ப்பாரை பரிசழிப்பார் போல்கின் றார்தாம்
அட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
பசைந்தபல பூதத்தர் பாட லாடல்
படநா கச்சையர் பிச்சை கென்றங்
கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி
இமையாமு கண்ணினர் நால்வே தத்தர்
பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம்
பிரிவறியா பிஞ்ஞகனார் தெண்ணீர கங்கை
அசைந்த திருமுடியர் அங்கை தீயர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
உருளுடைய தேர்புரவி யோடும் யானை
ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
றிருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர்
இமையவர்கள் தொழுதேத்தும் இறைவ னார்தாம்
பொருளுடைய ரல்லர் இலரு மல்லர்
புலித்தோ லுடையாக பூதஞ் சூழ
அருளுடைய அங்கோதை மாலை மார்பர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
வீறுடைய ஏறேறி நீறு பூசி
வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தி
கூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு
குழையாட கொடுகொட்டி கொட்டா வந்து
பாறுடைய படுதலையோர் கையி லேந்தி
பலிகொள்வா ரல்லர் படிறே பேசி
ஆறுடைய சடைமுடியெம் மடிகள் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
கையோர் கபாலத்தர் மானின் றோலர்
கருத்துடையர் நிருத்தரா காண்பார் முன்னே
செய்ய திருமேனி வெண்ணீ றாடி
திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடி
மெய்யொரு பாக துமையை வைத்து
மேவார் திரிபுரங்கள் வேவ செய்து
ஐயனார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
றொற்றியூர் உம்மூரே உணர கூறீர்
நின்றுதான் என்செய்வீர் போவீ ராகில்
நெற்றிமேற் கண்காட்டி நிறையுங் கொண்டீர்
என்றுந்தான் இவ்வகையே இடர்செய் கின்றீர்
இருக்குமூர் இனியறிந்தோம் ஏகம் பமோ
அன்றித்தான் போகின்றீர் அடிக ளெம்மோ
டழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
கல்லலகு தாங்கொண்டு காள தியார்
கடியவிடை யேறி காண காண
இல்லமே தாம்புகுதா இடுமின் பிச்சை
என்றாரு கெதிரெழுந்தேன் எங்குங் காணேன்
சொல்லாதே போகின்றீர் உம்மூ ரேது
துருத்தி பழனமோ நெய்த்தானமோ
அல்லலே செய்தடிகள் போகின் றார்தாம்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
மழுங்கலா நீறாடும் மார்பர் போலும்
மணிமிழலை மேய மணாளர் போலுங்
கொழுங்குவளை கோதை கிறைவர் போலுங்
கொடுகொட்டி தாள முடையார் போலுஞ்
செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலு
தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஆமாத்தீசுவரர்
தேவியார் அழகியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பந்தணைநல்லூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார்
நூல்பூண்டார் நூல்மேலோ ராமை பூண்டார்
பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடி
பிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி
ஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார்
அனல்கொண்டார் அந்திவாய் வண்ணங் கொண்டார்
பாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார்
களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக
ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார்
உறுபிணியுஞ் செறுபகையு மொற்றை கண்ணாற்
பீடுலா தனைசெய்வார் பிடவ மொந்தை
குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்க
பாடலா ராடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
பூத படையுடையார் பொங்கு நூலார்
புலித்தோ லுடையினார் போரேற் றினார்
வே தொழிலார் விரும்ப நின்றார்
விரிசடைமேல் வெண்திங்க கண்ணி சூடி
தொலிகடல்வாய் நஞ்ச முண்டார்
உம்பரோ டம்பொன் னுலக மாண்டு
பா தொடுகழலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார்
நெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார்
ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார்
ஒலிகடல் வாய்நஞ்சம் மிடற்றி லேற்றார்
வாருலா முலைமடவாள் பாக மேற்றார்
மழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார்
பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
இண்டை சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த
இடுபிணக்கா டாடலா ரே தோறும்
அண்டத்து கப்புறத்தார் ஆதி யானார்
அருக்கனா யாரழலாய் அடியார் மேலை
பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
கடமன்னு களியானை யுரிவை போர்த்தார்
கானப்பேர் காதலார் காதல் செய்து
மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார்
மானுரிதோள் மிசைத்தோளார் மங்கை காண
நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
முற்றா மதிச்சடையார் மூவ ரானார்
மூவுலகு மேத்தும் முதல்வ ரானார்
கற்றார் பரவுங் கழலார் திங்கள்
கங்கையாள் காதலார் காம்பேய் தோளி
பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார்
பான்மையா லூழி உலக மானார்
பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
கண்ணமரும் நெற்றியார் காட்டார் நாட்டார்
கனமழுவா கொண்டதோர் கையார் சென்னி
பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார்
பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார்
மண்ணவரும் வானவரும் மற்றை யோரும்
மறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்த
பண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
ஏறேறி யேழுலகு மேத்த நின்றார்
இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார்
நீறேறு மேனியார் நீல முண்டார்
நெருப்புண்டார் அங்கை யனலு முண்டார்
ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி
அனலுமிழும் ஐவா யரவு மார்த்தார்
பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்
காரோணங் காதலார் காதல் செய்து
நல்லூரார் ஞானத்தார் ஞான மானார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
மல்லூர் மணிமலையின் மேலி ருந்து
வாளரக்கர் கோன்றலையை மாள செற்று
பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பசுபதீசுவரர்
தேவியார் காம்பன்னதோளியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புன்கூர் திருநீடூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னை
பேணாதார் அவர்தம்மை பேணா தானை
துறவாதே கட்டறுத்த சோதி யானை
தூநெறிக்கு தூநெறியாய் நின்றான் றன்னை
திறமாய எத்திசையு தானே யாகி
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிறமா மொளியானை நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
பின்றானும் முன்றானு மானான் றன்னை
பித்தர்க்கு பித்தனாய் நின்றான் றன்னை
நன்றாங் கறிந்தவர்க்கு தானே யாகி
நல்வினையு தீவினையு மானான் றன்னை
சென்றோங்கி விண்ணளவு தீயா னானை
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நின்றாய நீடூர் நிலாவி னானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
இல்லானை எவ்விடத்தும் உள்ளான் றன்னை
இனியநினை யாதார கின்னா தானை
வல்லானை வல்லடைந்தார கருளும் வண்ணம்
மாட்டாதார கெத்திறத்தும் மாட்டா தானை
செல்லாத செந்நெறிக்கே செல்வி பானை
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நெல்லால் விளைகழனி நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
கலைஞானங் கல்லாமே கற்பி தானை
கடுநரகஞ் சாராமே காப்பான் றன்னை
பலவாய வேடங்கள் தானே யாகி
பணிவார்க கங்கங்கே பற்றா னானை
சிலையாற் புரமெரித்த தீயா டியை
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிலையார் மணிமாட நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை
நுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை
ஆக்காதே யாதொன்று மாக்கி னானை
அணுகாதா ரவர்தம்மை அணுகா தானை
தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் றன்னை
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீக்காத பேரொளிசேர் நீடு ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
பூணலா பூணானை பூசா சாந்த
முடையானை முடைநாறும் புன்க லத்தில்
ஊணலா வூணானை யொருவர் காணா
உத்தமனை யொளிதிகழும் மேனி யானை
சேணுலாஞ் செழும்பவள குன்றொ பானை
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீணுலா மலர்க்கழனி நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
உரையார் பொருளு குலப்பி லானை
ஒழியாமே எவ்வுயிரு மானான் றன்னை
புரையா கனமாயாழ தாழா தானை
புதியனவு மாய்மிகவும் பழையான் றன்னை
திரையார் புனல்சேர் மகுட தானை
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிரையார் மணிமாட நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
கூரரவ தணையானுங் குளிர்தண் பொய்கை
மலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார்
ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர்
அறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகா
சீரரவ கழலானை நிழலார் சோலை
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீரரவ தண்கழனி நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
கையெலாம் நெய்பா கழுத்தே கிட்ட
கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன
பொய்யெலாம் மெய்யென்று கருதி புக்கு
புள்ளுவரா லகப்படா து போந்தேன்
செய்யெலாஞ் செழுங்கமல பழன வேலி
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நெய்தல்வா புனற்படப்பை நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
இகழுமா றெங்ஙனே ஏழை நெஞ்சே
இகழாது பரந்தொன்றாய் நின்றான் றன்னை
நகழமால் வரைக்கீழி டரக்கர் கோனை
நலனழித்து நன்கருளி செய்தான் றன்னை
திகழுமா மதகரியி னுரிபோர தானை
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிகழுமா வல்லானை நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
இத்தலங்கள் சோழநாட்டிலுள்ளன திருப்புன்கூரில்
சுவாமிபெயர் சிவலோகநாதர்
தேவியார் சொக்கநாயகியம்மை
திருநீடூரில்
சுவாமிபெயர் சோமநாதேசுவரர்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கழிப்பாலை திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து
ஒள்ளெலும்பு தூணா வுரோம மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிர போவார்
தயக்கம் பலபடைத்தார் தாம ரையினார்
கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலை
கழிப்பாலை மேய கபால பனார்
வானிடத்தை யூடறுத்து வல்லை செல்லும்
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
முறையார்ந்த மும்மதிலும் பொடியா செற்று
முன்னுமா பின்னுமாய் முக்க ணெந்தை
பிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கை
பிணக்கந்தீர துடன்வைத்தார் பெரிய நஞ்சு
கறையார்ந்த மிடற்றடங கண்ட எந்தை
கழிப்பாலை மேய கபால பனார்
மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
நெளிவுண்டா கருதாதே நிமலன் றன்னை
நினைமின்கள் நித்தலும்நே ரிழையா ளாய
ஒளிவண்டார் கருங்குழலி யுமையாள் தன்னை
ஒருபாக தமர்ந்தடியா ருள்கி யேத்த
களிவண்டார் கரும்பொழில்சூழ் கண்டல் வேலி
கழிப்பாலை மேய கபால பனார்
வளியுண்டார் மா குரம்பை நீங்க
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
பொடிநாறு மேனியர் பூதி பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
அடிநாறு கமலத்தர் ஆரூ ராதி
ஆனஞ்சு மாடுமா திரையி னார்தாங்
கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங்
கழிப்பாலை மேய கபால பனார்
மடிநாறு மேனியிம் மாயம் நீங்க
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து
வேதத்தாய் கீதத்தாய் விரவி யெங்கும்
எண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய்
இறையானாய் எம்மிறையே யென்று நிற்குங்
கண்ணானாய் காரானாய் பாரு மானாய்
கழிப்பாலை யுள்ளுறையுங் கபால பனார்
மண்ணானாய் மா குரம்பை நீங்க
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த
விரிகதிரோன் எரிசுடரான் விண்ணு மாகி
பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும்
பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
கண்ணப்பன் கண்ணப்ப கண்டு கந்தார்
கழிப்பாலை மேய கபால பனார்
வண்ண பிணிமாய யாக்கை நீங்க
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யா
பேத படுகின்ற பேதை மீர்காள்
இணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்
எண்டோ ளர் எண்ணிறைந்த குணத்தி னாலே
கணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார்
கழிப்பாலை மேய கபால பனார்
மணம்புல்கு மா குரம்பை நீங்க
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
இயல்பாய ஈசனை எந்தை தந்தை
என்சிந்தை மேவி யுறைகின் றானை
முயல்வானை மூர்த்தியை தீர்த்த மான
தியம்பகன் திரிசூல தன்ன கையன்
கயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலி
கழிப்பாலை மேய கபால பனார்
மயலாய மா குரம்பை நீங்க
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து
சிவமூர்த்தி யென்றெழுவார் சிந்தை யுள்ளால்
உற்றதோர் நோய்களைந்திவ் வுலக மெல்லாங்
காட்டுவான் உத்தமன்றா னோதா தெல்லாங்
கற்றதோர் நூலினன் களிறு செற்றான்
கழிப்பாலை மேய கபால பனார்
மற்றிதோர் மா குரம்பை நீங்க
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
பொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன்
புட்பகந்தான் பொருப்பின்மீ தோடா தாக
இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்தி டுதலும்
ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கி
கரதலங்கள் கதிர்முடியா றஞ்சி னோடு
கால்விரலா லூன்று கழிப்பா லையார்
வருதலங்க மா குரம்பை நீங்க
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பால்வண்ணநாதர்
தேவியார் வேதநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புறம்பயம் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
கொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர்
கொடுங்கோளூர் தண்வளவி கண்டி யூரும்
நடமாடு நன்மருகல் வைகி நாளும்
நலமாகு மொற்றியூ ரொற்றி யாக
படுமாலை வண்டறையும் பழனம் பாசூர்
பழையாறும் பாற்குளமுங் கைவி டிந்நாள்
பொடியேறு மேனியரா பூதஞ் சூழ
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
முற்றொருவர் போல முழுநீ றாடி
முளைத்திங்கள் சூடிமு நூலும் பூண்டு
ஒற்றொருவர் போல வுறங்கு வேன்கை
ஒளிவளையை யொன்றொன்றா எண்ணு கின்றார்
மற்றொருவ ரில்லை துணை யெனக்கு
மால்கொண்டாற் போல மயங்கு வேற்கு
புற்றரவ கச்சார்த்து பூதஞ் சூழ
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்
ஏகாச மாவிட்டோ டொன்றே திவ
திடுதிருவே பலியென்றார கில்லே புக்கேன்
பாகேதுங் கொள்ளார் பலியுங்
பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி
போகாத வேடத்தர் பூதஞ் சூழ
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
பன்மலிந்த வெண்டலை கையி லேந்தி
பனிமுகில் போல்மேனி பவந்த நாதர்
நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்று துறை
நி துருத்தியும் நீடூர் பாச்சில்
கன்மலி தோங்கு கழுநீர குன்றங்
கடனாகை காரோணங் கைவி டிந்நாள்
பொன்மலிந்த கோதையரு தாமு மெல்லாம்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
செத்தவர்த தலைமாலை கையி லேந்தி
சிரமாலை சூடி சிவந்த மேனி
மத்தகத்த யானை யுரிவை மூடி
மடவா ளவளோடு மானொன் றேந்தி
அத்தவத்த தேவர் அறுப தின்மர்
ஆறுநூ றாயிரவர காடல் காட்டி
புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கி
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி
நல்ல புலியதள்மேல் நாகங் கட்டி
பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாக
பராய்த்துறை யேனென்றோர் பவள வண்ணர்
துஞ்சிடையே வந்து துடியுங் கொட்ட
துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்
புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடி
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி
மறைக்காட்டே னென்றோர் மழலை பேசி
செறியிலங்கு திண்டோ ள்மேல் நீறு கொண்டு
திருமுண்ட மாவிட்ட திலக நெற்றி
நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று
நெடுங்கண் பனிசோர நின்று நோக்கி
பொறியிலங்கு பாம்பார்த்து பூதஞ் சூழ
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி
நிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு
கொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொ டியுங்
குடமூக்கி லங்கொழி குளிர்தண் பொய்கை
நல்லாலை நல்லூரே தவிரே னென்று
நறையூரிற் றாமு தவிர்வார் போல
பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழ
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு
வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தி
திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னை
திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்
அரையேறு மேகலையாள் பாக மாக
ஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன்
புரையேறு தாமேறி பூதஞ் சூழ
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
கோவாய இந்திரனுள் ளிட்டா ரா
குமரனும் விக்கின விநாய கனும்
பூவாய பீடத்து மேல யனும்
பூமி யளந்தானும் போற்றி சை
பாவாய இன்னிசைகள் பாடி யாடி
பாரிடமு தாமும் பரந்து பற்றி
பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்க
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சாட்சிவரதநாதர்
தேவியார் கரும்பன்னசொல்லம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநல்லூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவை போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுட தேற துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவா பில்கி
நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே
பொன்னலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்
புலியுரியின் அதள்வைத்தார் புனலும் வைத்தார்
மன்னலத்த திரள்தோள்மேல் மழுவாள் வைத்தார்
வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார்
மின்னலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்
வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார்
நன்னலத்த திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே
தோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்த
பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்
பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடேறு திருநுதன்மேல் நாட்டம் வைத்தார்
சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே
வில்லருளி வருபுருவ தொருத்தி பாகம்
பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார்
கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊரா
கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார்
சொல்லருளி யறநால்வர கறிய வைத்தார்
சுடுசுடலை பொடிவைத்தார் துறவி வைத்தார்
நல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே
விண்ணிரியு திரிபுரங்க ளெரிய வைத்தார்
வினைதொழுவார கறவைத்தார் துறவி வைத்தார்
கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார்
கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார்
திண்ணெரியு தண்புனலு முடனே வைத்தார்
திசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ணரிய திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே
உற்றுலவு பிணியுலக தெழுமை வைத்தார்
உயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார்
மற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணா
மறைவைத்தார் குறைமதியம் வளர வைத்தார்
செற்றமலி யார்வமொடு காம லோபஞ்
சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார்
நற்றவர்சேர் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே
மாறுமலை தாரரண மெரிய வைத்தார்
மணிமுடிமே லரவைத்தா ரணிகொள் மேனி
நீறுமலி தெரியாடல் நிலவ வைத்தார்
நெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார்
ஆறுமலை தறுதிரைக ளெறிய வைத்தார்
ஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார்
நாறுமலர திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே
குலங்கள்மிகும் அலைகடல்கள் ஞாலம் வைத்தார்
குருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார்
உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்
உண்டருளி விடம்வைத்தார் எண்டோ ள் வைத்தார்
நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார்
நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தா ரிந்நாள்
நலங்கிளரு திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே
சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்
திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்
நின்றருளி யடியமரர் வணங்க வைத்தார்
நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்
கொன்றருளி கொடுங்கூற்றம் நடுங்கி யோட
குரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார்
நன்றருளு திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே
பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்க
பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர்
ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
அடுசுடலை பொடிவைத்தார் அழகும் வைத்தார்
ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார்
உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர்
நாம்பரவு திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே
குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார்
குருமணிசேர் மலைவைத்தார் மலையை கையால்
உலங்கிளர எடுத்தவன்றோள் முடியும் நோவ
ஒருவிரலா லுறவைத்தார் இறைவா வென்று
புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்
புகழ்வைத்தார் புரிந்தாளா கொள்ள வைத்தார்
நலங்கிளரு திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பெரியாண்டேசுவரர்
தேவியார் திரிபுரசுந்தரியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கருகாவூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
குருகாம் வயிரமாங் கூறு நாளாங்
கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகா லுமையாளோர் பாக னுமாம்
உள்நின்ற நாவிற் குரையா டியாங்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே
வித்தாம் முளையாகும் வேரே தானாம்
வேண்டு முருவமாம் விரும்பி நின்ற
பத்தா மடியார்க்கோர் பாங்க னுமாம்
பால்நிறமு மாம்பரஞ் சோதி தானா
தொத்தா மமரர்கணஞ் சூழ்ந்து போற்ற
தோன்றாதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
கத்தாம் அடியேற்கு காணா காட்டுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே
பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம்
பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங்
கொண்ட சமயத்தார் தேவ னாகி
ஏத்தாதார கென்று மிடரே துன்பம்
ஈவானா மென்னெஞ்ச துள்ளே நின்று
காத்தானாங் காலன் அடையா வண்ணங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே
இரவனாம் எல்லி நடமா டியாம்
எண்டிசைக்கு தேவனாம் என்னு ளானாம்
அரவனாம் அல்லல் அறுப்பா னுமாம்
ஆகாச மூர்த்தியாம் ஆனே றேறுங்
குரவனாங் கூற்றை யுதைத்தான் றானாங்
கூறாத வஞ்ச குயலர கென்றுங்
கரவனாங் காட்சி கெளியா னுமாங்
கண்ணாங் கருவூ ரெந்தை தானே
படைத்தானாம் பாரை யிடந்தா னாகும்
பரிசொன் றறியாமை நின்றான் றானாம்
உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று
அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாகம்
அசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகுங்
கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே
மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்
மூவாத மேனிமு கண்ணி னானாஞ்
சீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ்
செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்
மாலனாம் மங்கையோர் பங்க னாகும்
மன்றாடி யாம்வானோர் தங்க கெல்லாங்
காலனாங் காலனை காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே
அரைசே ரரவனாம் ஆல தானாம்
ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
திரைசேர் திருமுடி திங்க ளானா
தீவினை நாசனென் சிந்தை யானாம்
உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம்
உமையாளோர் பாகனாம் ஓத வேலி
கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே
துடியா துடியின் முழக்க தானாஞ்
சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதி பானாம்
படிதானாம் பாவ மறுப்பா னாகும்
பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாங்
கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங்
கூறாத வஞ்ச குயலர கென்றுங்
கடியானாங் காட்சி கரியா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே
விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்
விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்
பட்டுருவ மால்யானை தோல்கீண் டானாம்
பலபலவும் பாணி பயின்றான் றானாம்
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்
என்னுச்சி மேலானாம் எம்பி ரானாங்
கட்டுருவங் கடியானை காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே
பொறுத்திருந்த புள்ளூர்வான் உள்ளா னாகி
உள்ளிருந்தங் குள்நோய் களைவான் றானா
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ
சிலைகுனி தீமூட்டு திண்மை யானாம்
அறுத்திருந்த கையானாம் அந்தார் அல்லி
இருந்தானை ஒருதலையை தெரிய நோக்கி
கறுத்திருந்த கண்ட முடையான் போலுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே
ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து
இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்
அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே
ஆகாய மந்திரமு மானா னாகுங்
கறுத்தானாங் காலனை காலால் வீழ
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் முல்லைவனேசுவரர்
தேவியார் கரும்பனையாளம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவிடைமருது திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
சூல படையுடையார் தாமே போலுஞ்
சுடர்த்திங்க கண்ணி யுடையார் போலும்
மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்
மந்திரமு தந்திரமு மானார் போலும்
வேலை கடல்நஞ்ச முண்டார் போலும்
மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
ஏல கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே
காரார் கமழ்கொன்றை கண்ணி போலுங்
காரானை ஈருரிவை போர்த்தார் போலும்
பாரார் பரவ படுவார் போலும்
பத்து பல்லூழி பரந்தார் போலுஞ்
சீரால் வணங்க படுவார் போலு
திசையனைத்து மாய்மற்று மானார் போலும்
ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்
விண்ணுலகு மண்ணுலகு மானார் போலும்
பூதங்க ளாய புராணர் போலும்
புகழ வளரொளியாய் நின்றார் போலும்
பாதம் பரவ படுவார் போலும்
பத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும்
ஏதங்க ளான கடிவார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே
திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தி
திசைவணங்க சேவடியை வைத்தார் போலும்
விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி
வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்
பண்குணத்தார் பாடலோ டாட லோவா
பரங்குன்ற மேய பரமர் போலும்
எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே
ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
உயர்பொழி லண்ணாவி லுறைகின் றாரும்
பாகம் பணிமொழியாள் பாங்க ராகி
படுவெண் டலையிற் பலிகொள் வாரும்
மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு
மணிபொழில் சூழாரூர் உறைகின் றாரும்
ஏகம்ப மேயாரு மெல்லா மாவார்
இடைமருது மேவிய ஈச னாரே
ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்
அறுமூன்றும் நான்மூன்று மானார் போலுஞ்
செய்வினைகள் நல்வினைக ளானார் போலு
திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலுங்
கொய்மலரங் கொன்றை சடையார் போலுங்
கூத்தாட வல்ல குழகர் போலும்
எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே
பிரியாத குணமுயிர்க கஞ்சோ டஞ்சா
பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்
விரியாத குணமொருகால் நான்கே யென்பர்
விரிவிலா குணநாட்ட தாறே யென்பர்
தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்
பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்
எரியாய தாமரைமே லியங்கி னாரும்
இடைமருது மேவிய ஈச னாரே
தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ்
சுடர்வா யரவசைத்த சோதி போலும்
ஆல மமுதாக வுண்டார் போலும்
அடியார்க காரமுத மானார் போலுங்
காலனையுங் காய்ந்த கழலார் போலுங்
கயிலா தம்மிடமா கொண்டார் போலும்
ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே
பைந்தளிர கொன்றை தாரார் போலும்
படைக்கணாள் பாக முடையார் போலும்
அந்திவாய் வண்ண தழகர் போலும்
மணிநீல கண்ட முடையார் போலும்
வந்த வரவுஞ் செலவு மாகி
மாறாதென் னுள்ள திருந்தார் போலும்
எந்த மிடர்தீர்க்க வல்லார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே
கொன்றையங் கூவிள மாலை தன்னை
குளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும்
நின்ற அனங்கனை நீறா நோக்கி
நெருப்புருவ மாய்நின்ற நிமல னாரும்
அன்றவ் வரக்கன் அலறி வீழ
அருவரையை காலா லழுத்தி னாரும்
என்று மிடுபிச்சை ஏற்றுண் பாரும்
இடைமருது மேவிய ஈச னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மருதீசர்
தேவியார் நலமுலைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவிடைமருது திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
ஆறு சடைக்கணிவர் அங்கை தீயர்
அழகர் படையுடையர் அம்பொற் றோள்மேல்
நீறு தடவ திடப மேறி
நித்தம் பலிகொள்வர் மொய்த்த பூதங்
கூறுங் குணமுடையர் கோவ ணத்தர்
கோடால வேடத்தர் கொள்கை சொல்லின்
ஈறு நடுவு முதலு மாவார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே
மங்குல் மதிவைப்பர் வான நாடர்
மடமா னிடமுடையர் மாத ராளை
பங்கில் மிகவைப்பர் பால்போல் நீற்றர்
பளிக்கு வடம்புனைவர் பாவ நாசர்
சங்கு திரையுகளுஞ் சாய்க்கா டாள்வர்
சரிதை பலவுடையர் தன்மை சொல்லின்
எங்கும் பலிதிரிவர் என்னுள் நீங்கார்
இடைமருது மேவி யிடங் கொண்டாரே
ஆல நிழலிருப்பர் ஆகா யத்தர்
அருவரையி னுச்சியர் ஆணர் பெண்ணர்
காலம் பலகழித்தார் கறைசேர் கண்டர்
கருத்துக்கு சேயார்தாங் காணா தார்க்கு
கோலம் பலவுடையர் கொல்லை யேற்றர்
கொடுமழுவர் கோழம்ப மேய ஈசர்
ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே
தேசர் திறம்நினைவார் சிந்தை சேருஞ்
செல்வர் திருவாரூ ரென்றும் உள்ளார்
வாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர்
மருவுங் கரியுரியர் வஞ்ச கள்வர்
நேசர் அடைந்தார கடையா தார்க்கு
நிட்டுரவர் கட்டங்கர் நினைவார கென்றும்
ஈசர் புனற்பொன்னி தீர்த்தர் வாய்த்த
இடைமருது மேவி யிடங்கொண் டாரே
கரப்பர் கரியமன கள்வர குள்ளங்
கரவாதே தந்நினைய கிற்பார் பாவ
துரப்பர் தொடுகடலின் நஞ்ச முண்பர்
தூய மறைமொழியர் தீயா லொட்டி
நிரப்பர் புரமூன்றும் நீறு செய்வர்
நீள்சடையர் பாய்விடைகொண் டெங்கும் ஐயம்
இரப்பர் எமையாள்வர் என்னுள் நீங்கார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே
கொடியா ரிடபத்தர் கூத்து மாடி
குளிர்கொன்றை மேல்வைப்பர் கோல மார்ந்த
பொடியாரு மேனியர் பூதி பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
அடியார் குடியாவர் அந்த ணாளர்
ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற
இடியார் களிற்றுரியார் எவரும் போற்ற
இடைமருது மேவி யிடங்கொண் டாரே
பச்சை நிறமுடையர் பாலர் சால
பழையர் பிழையெலாம் நீக்கி யாள்வர்
கச்சை கதநாகம் பூண்ட தோளர்
கலனொன்று கையேந்தி இல்ல தோறும்
பிச்சை கொளநுகர்வர் பெரியர் சால
பிறங்கு சடைமுடியர் பேணு தொண்டர்
இச்சை மிகஅறிவர் என்று முள்ளார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே
காவார் சடைமுடியர் காரோ ணத்தர்
கயிலாய மன்னினார் பன்னு மின்சொற்
பாவார் பொருளாளர் வாளார் கண்ணி
பயிலு திருவுருவம் பாக மேயார்
பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர்
புரமூன்று மொள்ளழலா கா தொட்ட
ஏவார் சிலைமலையர் எங்கு தாமே
இடைமருது மேவி யிடங்கொண் டாரே
புரிந்தார் நடத்தின்கண் பூத நாதர்
பொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மிற்
பிரிந்தா ரகல்வாய பேயு தாமும்
பிரியா ரொருநாளும் பேணு காட்டில்
எரிந்தா ரனலுகப்பர் ஏழிலோசை
எவ்விடத்து தாமேயென் றேத்து வார்பால்
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே
விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர்
விடங்கர் விரிபுனல்சூழ் வெண்கா டுள்ளார்
மட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர்
மழபாடி யுள்ளுறைவர் மாகா ளத்தர்
சிட்டிலங்கு வல்லரக்கர் கோனை யன்று
செழுமுடியு தோளைந்நான் கடர காலால்
இட்டிரங்கி மற்றவனு கீந்தார் வென்றி
இடைமருது மேவி யிடங்கொண் டாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பூவணம் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
வடிவேறு திரிசூல தோன்று தோன்றும்
வளர்சடைமேல் இளமதி தோன்று தோன்றுங்
கடியேறு கமழ்கொன்றை கண்ணி தோன்றுங்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவை போர்வை தோன்றும்
எழில்திகழு திருமுடியு மிலங்கி தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
ஆணாகி பெண்ணாய வடிவு தோன்றும்
அடியவர்க காரமுத மாகி தோன்றும்
ஊணாகி ஊர்திரிவா னாகி தோன்றும்
ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேற்
சேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ்
செத்தவர்தம் எலும்பினாற் செறி செய்த
பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
கல்லாலின் நீழலிற் கலந்து தோன்றுங்
கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று
சொல்லாக சொல்லியவா தோன்று தோன்றுஞ்
சூழரவு மான்மறியு தோன்று தோன்றும்
அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்
ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
பொல்லாத புலாலெலும்பு பூணா தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
படைமலிந்த மழுவாளு மானு தோன்றும்
பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்
நடைமலிந்த விடையோடு கொடியு தோன்றும்
நான்மறையின் ஒலிதோன்றும் நயன தோன்றும்
உடைமலிந்த கோவணமுங் கீளு தோன்று
மூரல்வெண் சிரமாலை உலாவி தோன்றும்
புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
மயலாகு தன்னடியார கருளு தோன்றும்
மாசிலா புன்சடைமேல் மதி தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்
இருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்ட தோன்றுங்
கயல்பா கடுங்கலுழி கங்கை நங்கை
ஆயிரமா முகத்தினொடு வானிற் றோன்றும்
புயல்பா சடைவிரித்த பொற்பு தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
பாராழி வட்டத்தார் பரவி யிட்ட
பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றுஞ்
சீராழி தாமரையின் மலர்க ளன்ன
திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்
ஓராழி தேருடைய இலங்கை வேந்தன்
உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பி தன்று
போராழி முன்னீந்த பொற்பு தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
தன்னடியார கருள்புரிந்த தகவு தோன்றுஞ்
சதுர்முகனை தலையரிந்த தன்மை தோன்றும்
மின்னனைய நுண்ணிடையாள் பாக தோன்றும்
வேழத்தி னுரிவிரும்பி போர்த்தல் தோன்று
துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்பு
தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்
பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
செறிகழலு திருவடியு தோன்று தோன்றும்
திரிபுரத்தை எரிசெய்த சிலையு தோன்றும்
நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்
நெற்றிமேல் கண்தோன்றும் பெற்ற தோன்றும்
மறுபிறவி யறுத்தருளும் வகையு தோன்றும்
மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்
பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
அருப்போட்டு முலைமடவாள் பாக தோன்றும்
அணிகிளரும் உருமென்ன அடர்க்குங் கேழல்
மருப்போட்டு மணிவயிர கோவை தோன்றும்
மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகை
திருக்கோட்டில் நின்றதோர் திறமு தோன்றுஞ்
செக்கர்வான் ஒளிமிக்கு திகழ்ந்த சோதி
பொருப்போட்டி நின்றதிண் புயமு தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
ஆங்கணைந்த சண்டிக்கு மருளி யன்று
தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணிசெய்வார கருளி யன்று
பலபிறவி அறுத்தருளும் பரிசு தோன்றுங்
கோங்கணைந்த கூவிளமும் தமுங்
குழற்கணிந்த கொள்கையொடு கோல தோன்றும்
பூங்கணைவேள் உருவழித்த பொற்பு தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
ஆரொருவர் உள்குவார் உள்ள துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளு தோன்றும்
வாருருவ பூண்முலைநன் மங்கை தன்னை
மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவு தோன்றும்
நீருருவ கடலிலங்கை அரக்கர் கோனை
நெறுநெறென அடர்த்திட்ட நிலையு தோன்றும்
போருருவ கூற்றுதைத்த பொற்பு தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பூவணநாதர்
தேவியார் மின்னாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாலவாய் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணா கோத்து
துளைத்தானை சுடுசரத்தாற் றுவள நீறா
தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடி
திளைத்தானை தென்கூடற் றிருவா லவா
சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே
விண்ணுலகின் மேலார்கள் மேலான் றன்னை
மேலாடு புரமூன்றும் பொடிசெய் தானை
பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழன தானை
பசும்பொன்னின் நிறத்தானை பால்நீற் றானை
உண்ணிலவு சடைக்கற்றை கங்கை யாளை
கரந்துமையோ டுடனாகி யிருந்தான் றன்னை
தெண்ணிலவு தென்கூடற் றிருவா லவா
சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே
நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவி தானை
நிலமருவி நீரோட கண்டான் றன்னை
பாற்றிரளை பயின்றாட வல்லான் றன்னை
பகைத்தெழுந்த வெங்கூற்றை பாய்ந்தான் றன்னை
காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று
கடுங்குரலாய் இடிப்பானை கண்ணோர் நெற்றி
தீத்திரளை தென்கூடற் றிருவா லவா
சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே
வானமிது வெல்லா முடையான் றன்னை
வரியரவ கச்சானை வன்பேய் சூழ
கானமதில் நடமாட வல்லான் றன்னை
கடைக்கண்ணால் மங்கையுமை நோக்கா வென்மேல்
ஊனமது வெல்லா மொழித்தான் றன்னை
உணர்வாகி அடியேன துள்ளே நின்ற
தேனமுதை தென்கூடற் றிருவா லவா
சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே
ஊரானை உலகேழாய் நின்றான் றன்னை
ஒற்றைவெண் பிறையானை உமையோ டென்றும்
பேரானை பிறர்க்கென்று மரியான் றன்னை
பிணக்காட்டில் நடமாடல் பேயோ டென்றும்
ஆரானை அமரர்களு கமுதீ தானை
அருமறையான் நான்முகனு மாலும் போற்றுஞ்
சீரானை தென்கூடற் றிருவா லவா
சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே
மூவனை மூர்த்தியை மூவா மேனி
உடையானை மூவுலகு தானே யெங்கும்
பாவனை பாவ மறுப்பான் றன்னை
படியெழுத லாகாத மங்கை யோடும்
மேவனை விண்ணோர் நடுங கண்டு
விரிகடலின் நஞ்சுண் டமுத மீந்த
தேவனை தென்கூடற் றிருவா லவா
சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே
துறந்தார்க்கு தூநெறியாய் நின்றான் றன்னை
துன்ப துடைத்தாள வல்லான் றன்னை
இறந்தார்க ளென்பே அணிந்தான் றன்னை
எல்லி நடமாட வல்லான் றன்னை
மறந்தார் மதின்மூன்று மாய்த்தான் றன்னை
மற்றொரு பற்றில்லா அடியேற் கென்றுஞ்
சிறந்தானை தென்கூடற் றிருவா லவா
சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானை கருத்தறிந்து முடிப்பான் றன்னை
தூயானை தூவெள்ளை ஏற்றான் றன்னை
சுடர்த்திங்க சடையானை தொடர்ந்து நின்றென்
தாயானை தவமாய தன்மை யானை
தலையாய தேவாதி தேவர கென்றுஞ்
சேயானை தென்கூடற் றிருவா லவா
சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே
பகைச்சுடரா பாவ மறுப்பான் றன்னை
பழியிலியாய் நஞ்சமுண் டமுதீ தானை
வகைச்சுடராய் வல்லசுரர் புர டானை
வளைவிலியா யெல்லார்க்கு மருள்செய் வானை
மிகைச்சுடரை விண்ணவர்கண் மேல பாலை
மேலாய தேவாதி தேவர கென்று
திகைச்சுடரை தென்கூடற் றிருவா லவா
சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே
மலையானை மாமேறு மன்னி னானை
வளர்புன் சடையானை வானோர் தங்கள்
தலையானை என்றலையின் உச்சி யென்று
தாபி திருந்தானை தானே யெங்கு
துலையாக ஒருவரையு மில்லா தானை
தோன்றாதார் மதின்மூன்று துவள வெய்த
சிலையானை தென்கூடற் றிருவா லவா
சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே
தூர்த்தனை தோள்முடிப திறுத்தான் றன்னை
தொன்னரம்பின் இன்னிசைகே டருள்செய் தானை
பார்த்தனை பணிகண்டு பரிந்தான் றன்னை
பரிந்தவற்கு பாசுபத மீந்தான் றன்னை
ஆத்தனை அடியேனு கன்பன் றன்னை
அளவிலா பல்லூழி கண்டு நின்ற
தீர்த்தனை தென்கூடற் றிருவா லவா
சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநள்ளாறு திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
ஆதிக்கண் ணான்முகத்தி லொன்று சென்று
அல்லாத சொல்லுரைக்க தன்கை வாளாற்
சேதித்த திருவடியை செல்ல நல்ல
சிவலோக நெறிவகுத்து காட்டு வானை
மாதிமைய மாதோர்கூ றாயி னானை
மாமலர்மே லயனோடு மாலுங் காணா
நாதியை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே
படையானை பாசுபத வேட தானை
பண்டனங்கற் பார்த்தானை பாவ மெல்லாம்
அடையாமை காப்பானை அடியார் தங்கள்
அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானை
சடையானை சந்திரனை தரித்தான் றன்னை
சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்
நடையானை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே
படவரவ மொன்றுகொண் டரையி லார்த்த
பராபரனை பைஞ்ஞீலி மேவி னானை
அடலரவம் பற்றி கடைந்த நஞ்சை
அமுதாக உண்டானை ஆதி யானை
மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை
மாமணியை மாணிக்கா காலன் றன்னை
நடலரவஞ் செய்தானை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே
கட்டங்க மொன்றுதங் கையி லேந்தி
கங்கணமுங் காதில்விடு தோடு மிட்டு
சுட்டங்கங் கொண்டு துதை பூசி
சுந்தரனா சூலங்கை யேந்தி னானை
பட்டங்க மாலை நிறை சூடி
பல்கணமு தாமும் பரந்த காட்டில்
நட்டங்க மாடியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே
உலர்ந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம்
ஒருநொடியில் உழல்வானை உலப்பில் செல்வஞ்
சிலந்திதன கருள்செய்த தேவ தேவை
திருச்சிரா பள்ளியெஞ் சிவலோ கனை
கலந்தார்தம் மனத்தென்றுங் காதலானை
கச்சியே கம்பனை கமழ்பூங் கொன்றை
நலந்தாங்கு நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே
குலங்கெடுத்து கோள்நீக்க வல்லான் றன்னை
குலவரையன் மடப்பாவை இடப்பா லானை
மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டி கொண்ட
மறையவனை பிறைதவழ்செஞ் சடையி னானை
சலங்கெடுத்து தயாமூல தன்ம மென்னு
தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர கெல்லாம்
நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே
பூவிரியும் மலர்க்கொன்றை சடையி னானை
புறம்பயத்தெம் பெருமானை புகலூ ரானை
மாவிரி களிறுரித்த மைந்தன் றன்னை
மறைக்காடும் வலிவலமும் மன்னி னானை
தேவிரி திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ்
சிதைத்தானை உதைத்தவன்றன் சிரங்கொண் டானை
நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே
சொல்லானை சுடர்ப்பவள சோதி யானை
தொல்லவுணர் புரமூன்று மெரி செற்ற
வில்லானை எல்லார்க்கு மேலா னானை
மெல்லியலாள் பாகனை வேதம் நான்குங்
கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானை
காளத்தி யானை கயிலை மேய
நல்லானை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே
குன்றாத மாமுனிவன் சாபம் நீங
குரைகழலாற் கூற்றுவனை குமைத்த கோனை
அன்றாக அவுணர்புர மூன்றும் வேவ
ஆரழல்வா யோட்டி யடர்வி தானை
சென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னை
சிவனேயெம் பெருமானென் றிருப்பார கென்றும்
நன்றாகும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே
இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க
இராவணனை இருபதுதோள் நெரிய வூன்றி
உறவாகி இன்னிசைகே டிரங்கி மீண்டே
உற்றபிணி தவிர்த்தருள வல்லான் றன்னை
மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை
மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்
நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாக்கூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்
மூவுலகு தாமாகி நின்றார் போலுங்
கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலுங்
கல்லலகு பாணி பயின்றார் போலுங்
கொடித்தா மரைக்காடே நாடு தொண்டர்
குற்றேவல் தாமகிழ்ந்த குழகர்போலும்
அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே
ஓதிற் றொருநூலு மில்லை போலும்
உணர படாதொன் றில்லை போலுங்
காதிற்குழை யிலங்க பெய்தார் போலுங்
கவலை பிறப்பிடும்பை காப்பார் போலும்
வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும்
விடஞ்சூழ திருண்ட மிடற்றார் போலும்
ஆதி களவாகி நின்றார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே
மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும்
மணிநீல கண்ட முடையார் போலும்
நெய்யார் திரிசூலங் கையார் போலும்
நீறேறு தோளெ டுடையார் போலும்
வையார் மழுவா படையார் போலும்
வளர்ஞாயி றன்ன ஒளியார் போலும்
ஐவா யரவமொன் றார்த்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே
வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும்
வஞ்ச கருங்கடல்நஞ் சுண்டார் போலும்
பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும்
பூங்கங்கை தோய்ந்த சடையார் போலுங்
கடிவிளங்கு கொன்றை தாரார் போலுங்
கட்டங்க மேந்திய கையார் போலும்
அடிவிளங்கு செம்பொற் கழலார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே
ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ
இடுவெண் டலைகலனா ஏந்தி நாளும்
மேகாசங் கட்டழித்த வெள்ளி மாலை
புனலார் சடைமுடிமேற் புனைந்தார் போலும்
மாகாச மாயவெண் ணீரு தீயும்
மதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும்
ஆகாச மென்றிவையு மானார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே
மாதூரும் வாணெடுங்கண் செவ்வாய் மென்றோள்
மலைமகளை மார்ப தணைத்தார் போலும்
மூதூர் முதுதிரைக ளானார் போலும்
முதலு மிறுதியு மில்லார் போலு
தீதூர நல்வினையாய் நின்றார் போலு
திசையெட்டு தாமேயாஞ் செல்வர் போலும்
ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே
மால்யானை மத்தகத்தை கீண்டார் போலும்
மான்றோ லுடையா மகிழ்ந்தார் போலுங்
கோலானை கோளழலாற் காய்ந்தார் போலுங்
குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலுங்
காலனை காலாற் கடந்தார் போலுங்
கயிலா தம்மிடமா கொண்டார் போலும்
ஆலானை தாட லுகப்பார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே
கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங்
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்
உண்ணா அருநஞ்ச முண்டார் போலும்
ஊழித்தீ யன்ன ஒளியார் போலும்
எண்ணா யிரங்கோடி பேரார் போலும்
ஏறேறி செல்லு மிறைவர் போலும்
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே
கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை
கதிர்போது தாதணிந்த கண்ணி போலும்
நெடியானுஞ் சதுர்முகனு நேட நின்ற
நீலநற் கண்ட திறையார் போலும்
படியேல் அழல்வண்ணஞ் செம்பொன் மேனி
மணிவண்ண தம்வண்ண மாவார் போலும்
அடியார் புகலிடம தானார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே
திரையானுஞ் செந்தா மரைமே லானு
தேர்ந்தவர்கள் தாந்தேடி காணார் நாணும்
புரையா னெனப்படுவார் தாமே போலும்
போரேறு தாமேறி செல்வார் போலுங்
கரையா வரைவில்லே நாகம் நாணா
காலத்தீ யன்ன கனலார் போலும்
வரையார் மதிலெய்த வண்ணர் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சுயம்புநாதவீசுவரர்
தேவியார் கட்கநேத்திராம்பிகை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநாகைக்காரோணம் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பாரார் பரவும் பழன தானை
பருப்ப தானை பைஞ்ஞீலி யானை
சீரார் செழும்பவள குன்றொ பானை
திகழு திருமுடிமேற் றிங்கள் சூடி
பேரா யிரமுடைய பெம்மான் றன்னை
பிறர்தன்னை காட்சி கரியான் றன்னை
காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகை
காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே
விண்ணோர் பெருமானை வீர டானை
வெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானை
பெண்ணானை ஆணானை பேடி யானை
பெரும்பெற்ற தண்புலியூர் பேணி னானை
அண்ணா மலையானை ஆனை தாடும்
அணியாரூர் வீற்றிருந்த அம்மான் றன்னை
கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகை
காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே
சிறையார் வரிவண்டு தேனே பாடு
திருமறைக்கா டெந்தை சிவலோ கனை
மறையான்றன் வாய்மூருங் கீழ்வே ளூரும்
வலிவலமு தேவூரும் மன்னி யங்கே
உறைவானை உத்தமனை ஒற்றி யூரிற்
பற்றியாள் கின்ற பரமன் றன்னை
கறையார் கடல்புடைசூழ் அந்தண் நாகை
காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே
அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை
ஆச்சிரா மன்னகரு மானை காவும்
முன்னமே கோயிலா கொண்டான் றன்னை
மூவுலகு தானாய மூர்த்தி தன்னை
சின்னமாம் பன்மலர்க ளன்றே சூடி
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானை
கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகை
காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே
நடையுடைய நல்லெருதொன் றூர்வான் றன்னை
ஞான பெருங்கடலை நல்லூர் மேய
படையுடைய மழுவாளொன் றேந்தி னானை
பன்மையே பேசும் படிறன் றன்னை
மடையிடையே வாளை யுகளும் பொய்கை
மருகல்வா சோதி மணிகண் டனை
கடையுடைய நெடுமாட மோங்கு நாகை
காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே
புலங்கொள்பூ தேறல்வா புகலி கோனை
பூம்புகார கற்பகத்தை புன்கூர் மேய
அலங்கலங் கழனிசூழ் அணிநீர கங்கை
அவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் றன்னை
இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே
ஏகாச மிட்டியங்கும் ஈசன் றன்னை
கலங்கற் கடல்புடைசூழ் அந்தண் நாகை
காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே
பொன்மணியம் பூங்கொன்றை மாலை யானை
புண்ணியனை வெண்ணீறு பூசி னானை
சின்மணிய மூவிலைய சூல தானை
தென்சிரா பள்ளி சிவலோ கனை
மன்மணியை வான்சுடலை யூரா பேணி
வல்லெருதொன் றேறும் மறைவல் லானை
கன்மணிகள் வெண்டிரைசூழ் அந்தண் நாகை
காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே
வெண்டலையும் வெண்மழுவு மேந்தி னானை
விரிகோ வணமசைத்த வெண்ணீற் றானை
புண்டலைய மால்யானை யுரிபோர தானை
புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை
எண்டிசையு மெரியாட வல்லான் றன்னை
ஏகம்ப மேயானை எம்மான் றன்னை
கண்டலங் கழனிசூழ் அந்தண் நாகை
காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே
சொல்லார்ந்த சோற்று துறையான் றன்னை
தொன்னரக நன்னெறியாற் றூர்ப்பான் றன்னை
வில்லானை மீயச்சூர் மேவி னானை
வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லி
பொல்லாதார் தம்மரண மூன்றும் பொன்ற
பொறியரவம் மார்பார பூண்டான் றன்னை
கல்லாலின் கீழானை கழிசூழ் நாகை
காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே
மனைதுறந்த வல்லமணர் தங்கள் பொய்யும்
மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யுஞ்
சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்
மெய்யென்று கருதாதே போத நெஞ்சே
பனையுரியை தன்னுடலிற் போர்த்த எந்தை
அவன்பற்றே பற்றா காணி னல்லாற்
கனைகடலின் றென்கழிசூழ் அந்தண் நாகை
காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே
நெடியானும் மலரவனும் நேடி யாங்கே
நேருருவங் காணாமே சென்று நின்ற
படியானை பாம்புரமே காத லானை
பாம்பரையோ டார்த்த படிறன் றன்னை
செடிநாறும் வெண்டலையிற் பிச்சை கென்று
சென்றானை நின்றியூர் மேயான் றன்னை
கடிநாறு பூஞ்சோலை அந்தண் நாகை
காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமறைக்காடு திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்கா டுறையும் மணாளன் றானே
கைகிளரும் வீணை வலவன் கண்டாய்
காபாலி கண்டாய் திகழுஞ் சோதி
மெய்கிளரும் ஞான விளக்கு கண்டாய்
மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய்
பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய்
பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய்
வைகிளருங் கூர்வா படையான் கண்டாய்
மறைக்கா டுறையும் மணாளன் றானே
சிலந்தி கருள்முன்னஞ் செய்தான் கண்டாய்
திரிபுரங்கள் தீவா படுத்தான் கண்டாய்
நிலந்துக்க நீர்வளிதீ யானான் கண்டாய்
நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
சலந்துக்க சென்னி சடையான் கண்டாய்
தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்
மலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய்
மறைக்கா டுறையும் மணாளன் றானே
கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய்
காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய்
புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய்
புலியுரிசே ராடை புனிதன் கண்டாய்
வெள்ளி மிளிர்பிறைமேற் சூடி கண்டாய்
வெண்ணீற்றான் கண்டாய்நஞ் செந்தின் மேய
வள்ளி மணாளற்கு தாதை கண்டாய்
மறைக்கா டுறையும் மணாளன் றானே
மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன்
அண்ணா மலையுறையு மண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்கா டுறையும் மணாளன் றானே
ஆடல் மால்யானை யுரித்தான் கண்டாய்
அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன்
குளிராரூர் கோயிலா கொண்டான் கண்டாய்
நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய்
நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம்
வாடிய வாட்ட தவிர்ப்பான் கண்டாய்
மறைக்கா டுறையும் மணாளன் றானே
வேலைசேர் நஞ்ச மிடற்றான் கண்டாய்
விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய்
அமரர்கள் தாமேத்து மண்ணல் கண்டாய்
பால்நெய்சே ரானஞ்சு மாடி கண்டாய்
பருப்ப தான்கண்டாய் பரவை மேனி
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய்
மறைக்கா டுறையும் மணாளன் றானே
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்
அந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்தி
டிம்மை பயக்கு மிறைவன் கண்டாய்
என்னெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்
மெய்ம்மையே ஞான விளக்கு கண்டாய்
வெண்காடன் கண்டாய் வினைகள் போக
மம்ம ரறுக்கு மருந்து கண்டாய்
மறைக்கா டுறையும் மணாளன் றானே
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்
முத்தமிழும் நான்மறையு மானான் கண்டாய்
ஆலின்கீழ் நால்வர கறத்தான் கண்டாய்
ஆதியு மந்தமு மானான் கண்டாய்
பால விருத்தனு மானான் கண்டாய்
பவள தடவரையே போல்வான் கண்டாய்
மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய்
மறைக்கா டுறையும் மணாளன் றானே
அயனவனும் மாலவனு மறியா வண்ணம்
ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய்
துயரிலங்கை வேந்தன் துளங்க வன்று
சோதிவிர லாலுற வைத்தான் கண்டாய்
பெயரவற்கு பேரருள்கள் செய்தான் கண்டாய்
பேரும் பெரும்படையோ டீந்தான் கண்டாய்
மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய்
மறைக்கா டுறையும் மணாலன் றானே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண்
கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
அம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண்
அனலாடி காண்அயில்வா சூல தான்காண்
எம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண்
எரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண்
செம்மான தொளியன்ன மேனி யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே
ஊனேறு படுதலையில் உண்டி யான்காண்
ஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண்
ஆனேறொன் றூர்ந்துழலும் ஐயா றன்காண்
அண்டன்காண் அண்டத்து கப்பா லான்காண்
மானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண்
மாதவன்காண் மாதவத்தின் விளைவா னான்காண்
தேனேறு மலர்க்கொன்றை கண்ணி யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே
ஏவணத்த சிலையான்மு புரமெய் தான்காண்
இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
தூவணத்த சுடர்ச்சூல படையி னான்காண்
சுடர்மூன்றுங் கண்மூன்றா கொண்டான் றான்காண்
ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண்
அனலாடி காண்அடியார கமிர்தா னான்காண்
தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே
கொங்குவார் மலர்க்கண்ணி குற்றா லன்காண்
கொடுமழுவன் காண்கொல்லை வெள்ளேற் றான்காண்
எங்கள்பாற் றுயர்கெடுக்கு மெம்பி ரான்காண்
ஏழ்கடலும் ஏழ்மலையு மாயி னான்காண்
பொங்குமா கருங்கடல்நஞ் சுண்டான் றான்காண்
பொற்றூண்காண் செம்பவள திரள்போல் வான்காண்
செங்கண்வா ளராமதியோ டுடன்வை தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே
காரேறு நெடுங்குடுமி கயிலா யன்காண்
கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
போரேறு நெடுங்கொடிமே லுயர்த்தி னான்காண்
புண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தி னான்காண்
நீரேறு சுடர்ச்சூல படையி னான்காண்
நின்மலன்காண் நிகரேது மில்லா தான்காண்
சீரேறு திருமாலோர் பாக தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே
பிறையரவ குறுங்கண்ணி சடையி னான்காண்
பிறப்பிலிகாண் பெண்ணோடா ணாயி னான்காண்
கறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண்
கழல்தொழுவார் பிறப்பறுக்குங் காபா லிகாண்
இறையுருவ கனவளையாள் இடப்பா கன்காண்
இருநிலன்காண் இருநிலத்து கியல்பா னான்காண்
சிறையுருவ களிவண்டார் செம்மை யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே
தலையுருவ சிரமாலை சூடி னான்காண்
தமருலக தலைகலனா பலிகொள் வான்காண்
அலையுருவ சுடராழி ஆக்கி னான்காண்
அவ்வாழி நெடுமாலு கருளி னான்காண்
கொலையுருவ கூற்றுதைத்த கொள்கை யான்காண்
கூரெரிநீர் மண்ணொடுகாற் றாயி னான்காண்
சிலையுருவ சரந்துரந்த திறத்தி னான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே
ஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண்
அடல்மழுவாள் தானொன்று பியன்மே லேந்து
கையன்காண் கடற்பூத படையி னான்காண்
கண்ணெரியால் ஐங்கணையோ னுடல்கா தான்காண்
வெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண்
வெண்ணீற்றான் காண்விசயற் கருள்செய் தான்காண்
செய்யன்காண் கரியன்காண் வெளியோன் றான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே
மலைவளர்த்த மடமங்கை பாக தான்காண்
மயானத்தான் காண்மதியஞ் சூடி னான்காண்
இலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண்
இறையவன்காண் எறிதிரைநீர் நஞ்சுண் டான்காண்
கொலைவளர்த்த மூவிலைய சூல தான்காண்
கொடுங்குன்றன் காண்கொல்லை யேற்றி னான்காண்
சிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே
பொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண்
புரிநூலன் காண்பொடியார் மேனி யான்காண்
மற்றாரு தன்னொப்பா ரில்லா தான்காண்
மறையோதி காண்எறிநீர் நஞ்சுண் டான்காண்
எற்றாலுங் குறைவொன்று மில்லா தான்காண்
இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
உயிரா வணமிரு துற்று நோக்கி
உள்ள கிழியி னுரு வெழுதி
உயிரா வணஞ்செய்தி டுன்கை தந்தால்
உணர படுவாரோ டொட்டி வாழ்தி
அயிரா வணமேறா தானே றேறி
அமரர்நா டாளாதே ஆரூ ராண்ட
அயிரா வணமேயென் னம்மா னேநின்
அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே
எழுது கொடியிடையார் ஏழை மென்றோள்
இளையார்கள் நம்மை இகழா முன்னம்
பழுது படநினையேல் பாவி நெஞ்சே
பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ
முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி
முடியா லுறவணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய
இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே
தேரூரார் மாவூரார் திங்க ளூரார்
திகழ்புன் சடைமுடிமேற் றிங்கள் சூடி
காரூரா நின்ற கழனி சாயற்
கண்ணார்ந்த மாடங் கலந்து தோன்றும்
ஓரூரா உலகெலா மொப்ப கூடி
உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா என்கின்
அமரர்கள்தம் பெருமானே எங்குற் றாயே
கோவணமோ தோலோ உடை யாவது
கொல்லேறோ வேழமோ ஊர்வ துதான்
பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்
பொருந்தாதார் வாழ்க்கை திருந்தா மையோ
தீவணத்த செஞ்சடைமேற் றிங்கள் சூடி
திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்
ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்
அறியேன்மற் றூராமா றாரூர் தானே
ஏந்து மழுவாளர் இன்னம் பரார்
எரிபவள வண்ணர் குடமூ கிலார்
வாய்ந்த வளைக்கையாள் பாக மாக
வார்சடையார் வந்து வலஞ்சு ழியார்
போந்தா ரடிகள் புறம்ப யத்தே
புகலூர்க்கே போயினார் போரே றேறி
ஆய்ந்தே யிருப்பார்போய் ஆரூர் புக்கார்
அண்ணலார் செய்கின்ற கண்மா யமே
கருவாகி குழம்பிருந்து கலித்து மூளை
கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி
உருவாகி புறப்பட்டிங் கொருத்தி தன்னால்
வளர்க்கப்ப டுயிராருங் கடைபோ காரால்
மருவாகி நின்னடியே மறவே னம்மான்
மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ண
திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்
செம்பொனே கம்பனே திகைத்தி டேனே
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே
ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா
அவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னை
பாடுவார் தும்புருவும் நார தாதி
பரவுவார் அமரர்களு மமரர் கோனு
தேடுவார் திருமாலும் நான்மு கனு
தீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளுங்
கூடுமே நாயடியேன் செய்குற் றேவல்
குறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே
நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றி கண்ணாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி
ஓரூரு மொழியாமே ஒற்றி தெங்கும்
உலகமெலா திரிதந்து நின்னை காண்பான்
தேரூரும் நெடுவீதி பற்றி நின்று
திருமாலும் நான்முகனு தேர்ந்துங் காணா
தாரூரா ஆரூரா என்கின் றார்கள்
அமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே
நல்லூரே நன்றாக நட்ட மிட்டு
நரையேற்றை பழையாறே பாய ஏறி
பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே
பலர்காண தலையாலங் காட்டி னூடே
இல்லார்ந்த பெருவேளூர தளியே பேணி
இராப்பட்டீ சரங்கடந்து மணற்கால் புக்கு
எல்லாரு தளிச்சாத்தங் குடியிற் காண
இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே
கருத்துத்தி கதநாகங் கையி லேந்தி
கருவரைபோற் களியானை கதற கையால்
உரித்தெடுத்து சிவந்ததன்றோல் பொருந்த மூடி
உமையவளை அச்சுறுத்தும் ஒளிகொள் மேனி
திருத்துருத்தி திருப்பழன திருநெய்த்தானம்
திருவையா றிடங்கொண்ட செல்வர் இந்நாள்
அரிப்பெருத்த வெள்ளேற்றை அடர ஏறி
அப்பனார் இப்பருவ மாரூ ராரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானை
பண்டொருகால் தசமுகனை அழுவி தானை
வாதித்து தடமலரான் சிரங்கொண் டானை
வன்கருப்பு சிலைக்காமன் உடல டானை
சோதிச்ச திரன்மேனி மறுச்செய்தானை
சுடரங்கி தேவனையோர் கைக்கொண் டானை
ஆதித்தன் பற்கொண்ட அம்மான் றன்னை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே
வெற்புறுத்த திருவடியாற் கூற்ற டானை
விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி
ஒப்புறுத்த திருவுருவ தொருவன் றன்னை
ஓதாதே வேத முணர்ந்தான் றன்னை
அப்புறுத்த கடல்நஞ்ச முண்டான் றன்னை
அமுதுண்டார் உலந்தாலு முலவா தானை
அப்புறுத்த நீரகத்தே அழலா னானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே
ஒருகால தொருதேவர் கண்கொண் டானை
ஊழிதோ றூழி உயர்ந்தான் றன்னை
வருகாலஞ் செல்கால மாயி னானை
வன்கருப்பு சிலைக்காமன் உடல டானை
பொருவேழ களிற்றுரிவை போர்வை யானை
புள்ளரைய னுடல்தன்னை பொடிசெய் தானை
அருவேள்வி தகர்த்தெச்சன் றலைகொண் டானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே
மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை
வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை
ஒப்பானை ஒப்பிலா ஒருவன் றன்னை
உத்தமனை நித்திலத்தை உலக மெல்லாம்
வைப்பானை களைவானை வருவி பானை
வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை
அப்பாலை கப்பாலை கப்பா லானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே
பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை மற்றை
பிண்டத்தை படைத்ததனை பெரிய வே
துண்டத்தின் துணிபொருளை சுடுதீ யாகி
சுழல்காலாய் நீராகி பாரா யிற்றை
கண்டத்தில் தீதினஞ் சமுது செய்து
கண்மூன்று படைத்ததொரு கரும்பை பாலை
அண்டத்து கப்புறத்தார் தமக்கு வித்தை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே
நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய்
நிறைகாலாய் இவையிற்றின் நியம மாகி
பாதியாய் ஒன்றாகி இரண்டாய் மூன்றாய்
பரமாணு வாய்ப்பழுத்த பண்க ளாகி
சோதியாய் இருளாகி சுவைக ளாகி
சுவைகலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின்
ஆதியாய் அந்தமாய் நின்றான் றன்னை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பொய்ம்மா பெருங்கடலிற் புலம்பா நின்ற
புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இம்மா பெருங்கடலை அரித்து தின்பீர
கில்லையே கிடந்துதான் யானேல் வானோர்
தம்மானை தலைமகனை தண்ண லாரூர
தடங்கடலை தொடர்ந்தோரை யடங்க செய்யும்
எம்மான்ற னடித்தொடர்வான் உழிதர் கின்றேன்
இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே
ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற்
றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்
உம்பரமே உம்வசமே ஆக்க வல்லீர
கில்லையே னுகர்போகம் யானேல் வானோர்
உம்பருமாய் ஊழியுமாய் உலகே ழாகி
ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்
தம்பெருமா னார்நின்ற அரனை காண்பேன்
தடைப்படுவே னாக்கருதி தருக்கேன் மின்னே
சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றி
செழுங்கணால் நோக்குமிது வூக்க மன்று
பல்லுருவிற் றொழில்பூண்ட பஞ்ச பூத
பளகீரும் வசமன்றே பாரே லெல்லாஞ்
சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றா
தூநயன மூன்றாகி ஆண்ட ஆரூர்
நல்லுருவிற் சிவனடியே அடைவேன் நும்மால்
நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின் களே
உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்ற
துறுப்பினது குறிப்பாகும் ஐவீர் நுங்கள்
மன்னுருவ தியற்கைளால் வைப்பீர கையோ
வையகமே போதாதே யானேல் வானோர்
பொன்னுருவை தென்னாரூர் மன்னு குன்றை
புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தை புகுந்தென் சிந்தை
தன்னுருவை தந்தவனை எந்தை தன்னை
தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே
துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க
சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்
ஒப்பினையை பாவித்திவ் வுலக மெல்லாம்
உழறுமிது குறைமுடிப்பீர கரிதே என்றன்
வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்
மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்
அப்பனைச்செ பிடவடைவேன் நும்மால் நானும்
ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே
பொங்குமத மானமே ஆர்வ செற்ற
குரோதமே உலோபமே பொறையே நீங்கள்
உங்கள்பெரு மாநிலத்தின் எல்லை யெல்லாம்
உழறுமிது குறைமுடிப்பீர கரிதே யானேல்
அங்கமல தயனொடுமா லாகி மற்றும்
அதற்கப்பா லொன்றாகி அறிய வொண்ணா
செங்கனக தனிக்குன்றை சிவனை ஆரூர
செல்வனைச்சேர் வேனும்மாற் செலுத்து ணேனே
இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை
வெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடி
குடைகின்றீர குலகங்கள் குலுங்கி நுங்கள்
குறிநின்ற தமையாதே யானேல் வானோர்
அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை
அமரர்கள்தம் பெருமானை அரனை ஆரூர்
உடையானை கடுகச்சென் றடைவேன் நும்மால்
ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே
விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா
வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
நிரந்தோடி மாநிலத்தை அரித்து தின்பீர
கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
கரைந்தோட வருநஞ்சை அமுது செய்த
கற்பகத்தை தற்பரத்தை திருவா ரூரிற்
பரஞ்சோதி தனைக்காண்பேன் படேனும் பண்பிற்
பரிந்தோடி யோட்டந்து பகட்டேன் மின்னே
மூள்வாய தொழிற்பஞ்சே திரிய வஞ்ச
முகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடி
நாள்வாயு நும்முடைய மம்ம ராணை
நடாத்துகின்றீர கமையாதே யானேல் வானோர்
நீள்வான முகடதனை தாங்கி நின்ற
நெடுந்தூணை பாதாள கருவை ஆரூர்
ஆள்வானை கடுகச்சென் றடைவேன் நும்மால்
ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே
சுருக்கமொடு பெருக்கநிலை நீத்தல் பற்றி
துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடி
செருக்கிமிகை செலுத்தியும் செய்கை வைகல்
செய்கின்றீர கமையாதே யானேல் மிக்க
தருக்கிமிக வரையெடுத்த அரக்க னாக
தளரவடி எடுத்தவன்றன் பாடல் கேட்டு
இரக்கமெழு தருளியவெம் பெருமான் பா
திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும்
நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலுங்
காற்றினையுங் கடிதாக நடந்தார் போலுங்
கண்ணின்மேற் கண்ணொன் றுடையார் போலுங்
கூற்றினையுங் குரைகழலா லுதைத்தார் போலுங்
கொல்புலித்தோ லாடை குழகர் போலும்
ஆற்றினையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும்
அணியாரூர திருமூல தான னாரே
பரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும்
பாசுபதம் பார்த்தற் களித்தார் போலுங்
கரியதோர் களிற்றுரிவை போர்த்தார் போலுங்
காபாலங் கட்டங கொடியார் போலும்
பெரியதோர் மலைவில்லா எய்தார் போலும்
பேர்நந்தி யென்னும் பெயரார் போலும்
அரியதோர் அரணங்க ளட்டார் போலும்
அணியாரூர திருமூல தான னாரே
துணியுடையர் தோலுடைய ரென்பார் போலு
தூய திருமேனி செல்வர் போலும்
பிணியுடைய அடியாரை தீர்ப்பார் போலும்
பேசுவார கெல்லாம் பெரியார் போலும்
மணியுடைய மாநாக மார்ப்பார் போலும்
வாசுகிமா நாணாக வைத்தார் போலும்
அணியுடைய நெடுவீதி நடப்பார் போலும்
அணியாரூர திருமூல தான னாரே
ஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும்
ஓருருவா தோன்றி உயர்ந்தார் போலும்
நாட்டகத்தே நடைபலவும் நவின்றார் போலும்
ஞான பெருங்கடற்கோர் நாதர் போலுங்
காட்டகத்தே ஆட லுடையார் போலுங்
காமரங்கள் பாடி திரிவார் போலும்
ஆட்டகத்தில் ஆனை துகந்தார் போலும்
அணியாரூர திருமூல தான னாரே
ஏன திளமருப்பு பூண்டார் போலும்
இமையவர்க ளேத்த இருந்தார் போலுங்
கானக்கல் லாற்கீழ் நிழலார் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
வான திளமதிசேர் சடையார் போலும்
வான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும்
ஆனத்து முன்னெழுந்தாய் நின்றார் போலும்
அணியாரூர திருமூல தான னாரே
காமனையுங் கரியா காய்ந்தார் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலுஞ்
சோமனையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலுஞ்
சொல்லாகி சொற்பொருளாய் நின்றார் போலும்
நாமனையும் வேதத்தார் தாமே போலும்
நங்கையோர் பால்மகிழ்ந்த நம்பர் போலும்
ஆமனையு திருமுடியார் தாமே போலும்
அணியாரூர திருமூல தான னாரே
முடியார் மதியரவம் வைத்தார் போலும்
மூவுலகு தாமேயாய் நின்றார் போலுஞ்
செடியார் தலைப்பலிகொண் டுழல்வார் போலுஞ்
செல்கதி தான்கண்ட சிவனார் போலுங்
கடியார்நஞ் சுண்டிருண்ட கண்டர் போலுங்
கங்காள வேட கருத்தர் போலும்
அடியார் அடிமை உகப்பார் போலும்
அணியாரூர திருமூல தான னாரே
இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும்
இமையவர்கள் வந்திறைஞ்சு மிறைவர் போலுஞ்
சுந்தரத்த பொடிதன்னை துதைந்தார் போலு
தூத்தூய திருமேனி தோன்றல் போலும்
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும்
மாநாகம் நாணாக வளைத்தார் போலும்
அந்திரத்தே அணியாநஞ் சுண்டார் போலும்
அணியாரூர திருமூல தான னாரே
பிண்டத்தை காக்கும் பிரானார் போலும்
பிறவி யிறவி இலாதார் போலும்
முண்டத்து முக்கண் ணுடையார் போலும்
முழுநீறு பூசு முதல்வர் போலுங்
கண்ட திறையே கறுத்தார் போலுங்
காளத்தி காரோணம் மேயார் போலும்
அண்டத்து கப்புறமாய் நின்றார் போலும்
அணியாரூர திருமூல தான னாரே
ஒருகால தொன்றாகி நின்றார் போலும்
ஊழி பலகண் டிருந்தார் போலும்
பெருகாமே வெள்ள தவிர்த்தார் போலும்
பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும்
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்
உகப்பார்தம் மனத்தென்றும் நீங்கார் போலும்
அருகாக வந்தென்னை அஞ்ச லென்பார்
அணியாரூர திருமூல தான னாரே
நன்றாக நடைபலவும் நவின்றார் போலும்
ஞான பெருங்கடற்கோர் நாதர் போலுங்
கொன்றாகி கொன்றதொன் றுண்டார் போலுங்
கோளரக்கர் கோன்றலைகள் குறைத்தார் போலுஞ்
சென்றார் திரிபுரங்க ளெய்தார் போலு
திசையனைத்து மாயனைத்து மானார் போலும்
அன்றாகில் ஆயிரம் பேரார் போலும்
அணியாரூர திருமூல தான னாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருமணியை தித்திக்கு தேனை பாலை
தீங்கரும்பின் இன்சுவையை தெளிந்த தேறற்
குருமணியை குழல்மொந்தை தாளம் வீணை
கொக்கரையின் சச்சரியின் பாணி யானை
பருமணியை பவளத்தை பசும்பொன் முத்தை
பருப்பதத்தி லருங்கலத்தை பாவ தீர்க்கும்
அருமணியை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே
பொன்னேபோற் றிருமேனி உடையான் றன்னை
பொங்குவெண் ணூலானை புனிதன் றன்னை
மின்னானை மின்னிடையாள் பாகன் றன்னை
வேழத்தி னுரிவிரும்பி போர்த்தான் றன்னை
தன்னானை தன்னொப்பா ரில்லா தானை
தத்துவனை உத்தமனை தழல்போல் மேனி
அன்னானை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே
ஏற்றானை ஏழுலகு மானான் றன்னை
ஏழ்கடலு மேழ்மலையு மானான் றன்னை
கூற்றானை கூற்ற முதைத்தான் றன்னை
கொடுமழுவாள் கொண்டதோர் கையான் றன்னை
காற்றானை தீயானை நீரு மாகி
கடிகமழும் புன்சடைமேற் கங்கை வெள்ள
ஆற்றானை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே
முந்திய வல்வினைகள் தீர்ப்பான் றன்னை
மூவாத மேனிமு கண்ணி னானை
சந்திரனும் வெங்கதிரு மாயி னானை
சங்கரனை சங குழையான் றன்னை
மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை
மறுமையு மிம்மையு மானான் றன்னை
அந்திரனை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே
பிறநெறியா பீடாகி பிஞ்ஞ கனுமா
பித்தனா பத்தர் மனத்தி னுள்ளே
உறநெறியாய் ஓமமாய் காட்டில்
ஓரிபல விடநட்ட மாடி னானை
துறநெறியா தூபமா தோற்ற மாகி
நாற்றமாய் நன்மலர்மே லுறையா நின்ற
அறநெறியை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே
பழகிய வல்வினைகள் பாற்று வானை
பசுபதியை பாவகனை பாவ தீர்க்குங்
குழகனை கோளரவொன் றாட்டு வானை
கொடுகொட்டி கொண்டதோர் கையான் றன்னை
விழவனை வீரட்ட மேவி னானை
விண்ணவர்க ளேத்தி விரும்பு வானை
அழகனை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே
சூளா மணிசேர் முடியான் றன்னை
சுண்ணவெண் ணீறணிந்த சோதி யானை
கோள்வா யரவ மசைத்தான் றன்னை
கொல்புலித்தோ லாடை குழகன் றன்னை
நாள்வாயும் பத்தர் மனத்து ளானை
நம்பனை நக்கனை முக்க ணானை
ஆள்வானை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே
முத்தினை மணிதன்னை மாணி கத்தை
மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னை
கொத்தினை வயிரத்தை கொல்லே றூர்ந்து
கோளரவொன் றாட்டுங் குழகன் றன்னை
பத்தனை பத்தர் மனத்து ளானை
பரிதிபோற் றிருமேனி உடையான் றன்னை
அத்தனை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே
பையா டரவங்கை யேந்தி னானை
பரிதிபோற் றிருமேனி பால்நீற் றானை
நெய்யாடு திருமேனி நிமலன் றன்னை
நெற்றிமேல் மற்றொருகண் நிறைவி தானை
செய்யானை செழும்பவள திரளொ பானை
செஞ்சடைமேல் வெண்டிங்கள் சேர்த்தி னானை
ஐயாறு மேயானை ஆரூ ரானை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே
சீரார் முடிப துடையான் றன்னை
தேசழி திருவிரலாற் சிதைய நூக்கி
பேரார் பெருமை கொடுத்தான் றன்னை
பெண்ணிரண்டு மாணுமாய் நின்றான் றன்னை
போரார் புரங்கள் புரள நூறும்
புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை
ஆரானை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
எம்பந்த வல்வினைநோய் தீர்த்தி டான்காண்
ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்
வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண்
வளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்ட
அம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண்
அனலாடி யானஞ்சு மாடி னான்காண்
செம்பொன்செய் மணிமாட திருவா ரூரிற்
றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே
அக்குலாம் அரையினன்காண் அடியார கென்றும்
ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண்
கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை
குளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னி
தொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் சொல்லு
தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்து
திக்கெலாம் நிறைந்தபுகழ திருவா ரூரிற்
றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே
நீரேறு சடைமுடியெ நிமலன் றான்காண்
நெற்றிமே லொற்றைக்கண் நிறைவி தான்காண்
வாரேறு வனமுலையாள் பாக தான்காண்
வளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண்
காரேறு முகிலனைய கண்ட தான்காண்
கல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண்
சீரேறு மணிமாட திருவா ரூரிற்
றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே
கானேறு களிற்றுரிவை போர்வை யான்காண்
கற்பகங்காண் காலனையன் றுதைசெய் தான்காண்
ஊனேறு முடைதலையிற் பலிகொள் வான்காண்
உத்தமன்காண் ஒற்றியூர் மேவி னான்காண்
ஆனேறொன் றதுவேறும் அண்ணல் தான்காண்
ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான்காண்
தேனேறு மலர்ச்சோலை திருவா ரூரிற்
றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே
பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண்
பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண்
மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண்
வானவரு மறியாத நெறித தான்காண்
நறப்படுபூ மலர்தூப தீப நல்ல
நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்
சிறப்போடு பூசிக்கு திருவா ரூரிற்
றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே
சங்கரன்காண் சக்கரமாற் கருள்செய் தான்காண்
தருணேந்து சேகரன்காண் தலைவன் றான்காண்
அங்கமல தயன்சிரங்கள் ஐந்தி லொன்றை
அறுத்தவன்காண் அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண்
எங்கள்பெரு மான்காணென் னிடர்கள் போக
அருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ்
செங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரிற்
றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே
நன்றருளி தீதகற்றும் நம்பி ரான்காண்
நான்மறையோ டாறங்க மாயி னான்காண்
மின்றிகழுஞ் சோதியன்காண் ஆதி தான்காண்
வெள்ளேறு நின்றுலவு கொடியி னான்காண்
துன்றுபொழிற் கச்சியே கம்பன் றான்காண்
சோற்று துறையான்காண் சோலை சூழ்ந்த
தென்றலார் மணங்கமழு திருவா ரூரிற்
றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே
பொன்னலத்த நறுங்கொன்றை சடையி னான்காண்
புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண்
மின்னலத்த நுண்ணிடையாள் பாக தான்காண்
வேதியன்காண் வெண்புரிநூல் மார்பி னான்காண்
கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண்
கோலமா நீறணிந்த மேனி யான்காண்
செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரிற்
றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே
விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
வேலைவிட முண்டிருண்ட கண்ட தான்காண்
மண்டலத்தி லொளிவளர விளங்கி னான்காண்
வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண்
புண்டரி கண்ணானும் பூவின் மேலை
புத்தேளுங் காண்பரிய புராணன் றான்காண்
தெண்டிரைநீர் வயற்புடைசூழ் திருவா ரூரிற்
றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே
செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண்
தென்னானை காவன்காண் தீயில் வீழ
மருவலர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
வஞ்சகர்பா லணுகாத மைந்தன் றான்காண்
அருவரையை எடுத்தவன்றன் சிரங்கள் பத்தும்
ஐந்நான்கு தோளுநெரி தலற வன்று
திருவிரலா லடர்த்தவன்காண் திருவா ரூரிற்
றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
ஈண்டொளிசேர் கங்கை சடையா யென்றுஞ்
சுடரொளியா யுள்விளங்கு சோதி யென்று
தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றுங்
கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங்
கலைமான் மறியேந்து கையா வென்றும்
அடல்விடையாய் ஆரமுதே ஆதி யென்றும்
ஆரூரா வென்றென்றே அலறா நில்லே
செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ்
சிந்தித்தே நெஞ்சமே திண்ண மாக
பொடியேறு திருமேனி யுடையா யென்றும்
புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும்
அடியேனை யாளா கொண்டா யென்றும்
அம்மானே ஆரூரெம் மரசே யென்றுங்
கடிநாறு பொழிற்கச்சி கம்பா வென்றுங்
கற்பகமே யென்றென்றே கதறா நில்லே
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டு
பூமாலை புனைந்தேத்தி புகழ்ந்து பாடி
தலையார கும்பிட்டு கூத்து மாடி
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
ஆரூரா வென்றென்றே அலறா நில்லே
புண்ணியமும் நன்னெறியு மாவ தெல்லாம்
நெஞ்சமே இதுகண்டாய் பொருந்த கேள்நீ
நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா வென்றும்
நுந்தாத வொண்சுடரே யென்று நாளும்
விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும்
விரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி
எண்ணரிய திருநாம முடையா யென்றும்
எழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே
இழைத்தநாள் எல்லை கடப்ப தென்றால்
இரவினொடு நண்பகலு மேத்தி வாழ்த்தி
பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோ யென்றும்
பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா வென்றும்
அழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய்
அணியாரூர் இடங்கொண்ட அழகா வென்றுங்
குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே
குற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே
நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம்
நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாக
சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றுஞ்
சிவலோக நெறிதந்த சிவனே யென்றும்
பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலை
புண்டரி கண்ணானும் போற்றி யென்ன
தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்கு
திருவாரூ ராவென்றே சிந்தி நெஞ்சே
பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டிற்
பரகதிக்கு செல்வதொரு பரிசு வேண்டிற்
சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டிற்
சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்
உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்
உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும்
புற்றரவ கச்சார்த்த புனிதா வென்றும்
பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே
மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக
வழியாவ திதுகண்டாய் வானோர கெல்லாம்
அதிபதியே ஆரமுதே ஆதி யென்றும்
அம்மானே ஆரூரெம் மையா வென்று
துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவி
சூழும் வலஞ்செய்து தொண்டு பாடி
கதிர்மதிசேர் சென்னியனே கால காலா
கற்பகமே யென்றென்றே கதறா நில்லே
பாசத்தை பற்றறுக்க லாகு நெஞ்சே
பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா
தேச தொளிவிளக்கே தேவ தேவே
திருவாரூர திருமூல தானா வென்றும்
நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி
நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று
ஏசற்று நின்றிமையோ ரேறே வென்றும்
எம்பெருமா னென்றென்றே ஏத்தா நில்லே
புலன்களைந்தால் ஆட்டுண்டு போது போக்கி
புறம்புறமே திரியாதே போது நெஞ்சே
சலங்கொள்சடை முடியுடைய தலைவா வென்று
தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தா யென்றும்
இலங்கையர்கோன் சிரநெரித்த இறைவா வென்றும்
எழிலாரூ ரிடங்கொண்ட எந்தா யென்றும்
நலங்கொளடி என்றலைமேல் வைத்தா யென்றும்
நாடோ றும் நவின்றேத்தாய் நன்மை யாமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்க காரமுத மானாய் போற்றி
அல்லலறு தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூல தானனே போற்றி
வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றை தாராய் போற்றி
கொல்புலித்தோ லாடை குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனக தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூல தானனே போற்றி
மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவே லேந்தி போற்றி
ஏழ்கடலு மேழ்பொழிலு மானாய் போற்றி
சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி
திருமூல தானனே போற்றி
பொன்னியலும் மேனியனே போற்றி
பூத படையுடையாய் போற்றி
மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி
உன்னுமவர குண்மையனே போற்றி
உலகு கொருவனே போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி
திருமூல தானனே போற்றி
நஞ்சுடைய கண்டனே போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி
திருமூல தானனே போற்றி
சங்கரனே நின்பாதம் போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி
அங்கமல தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி
செங்கமல திருப்பாதம் போற்றி
திருமூல தானனே போற்றி
வம்புலவு கொன்றை சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர கரும்பொருளே போற்றி
நால்வேத மாறங்க மானாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூல தானனே போற்றி
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கு மேலாய்
தெள்ளுநீர கங்கை சடையாய் போற்றி
திருமூல தானனே போற்றி
பூவார்ந்த சென்னி புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்கு தேவே போற்றி
திருமாலு காழி யளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி
திருமூல தானனே போற்றி
பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணு முடையாய் போற்றி
காதலிப்பார காற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர கரசே போற்றி
அன்றரக்கன் ஐந்நான்கு தோளு தாளுஞ்
சிரம்நெரித்த சேவடியாய் போற்றி
திருமூல தானனே போற்றி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் அரநெறிதிருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பொருங்கைமத கரியுரிவை போர்வை யானை
பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானை
கரும்புதரு கட்டியையின் னமிர்தை தேனை
காண்பரிய செழுஞ்சுடரை கன குன்றை
இருங்கனக மதிலாரூர் மூல தான
தெழுந்தருளி யிருந்தானை இமையோ ரேத்தும்
அருந்தவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே
கற்பகமும் இருசுடரு மாயி னானை
காளத்தி கயிலாய மலையு ளானை
விற்பயிலும் மதனழிய விழித்தான் றன்னை
விசயனுக்கு வேடுவனாய் நின்றான் றன்னை
பொற்பமரும் பொழிலாரூர் மூல தானம்
பொருந்தியவெம் பெருமானை பொருந்தார் சிந்தை
அற்புதனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே
பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானை
பாசூரும் பரங்குன்றும் மேயான் றன்னை
வேதியனை தன்னடியார கெளியான் றன்னை
மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்
போதியலும் பொழிலாரூர் மூல தானம்
புற்றிடங்கொண் டிருந்தானை போற்றுவார்கள்
ஆதியனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே
நந்திபணி கொண்டருளும் நம்பன் றன்னை
நாகே சரமிடமா நண்ணி னானை
சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்து
தத்துவனை சக்கரமாற் கீந்தான் றன்னை
இந்துநுழை பொழிலாரூர் மூல தானம்
இடங்கொண்ட பெருமானை இமையோர் போற்றும்
அந்தணனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே
சுடர்ப்பவள திருமேனி வெண்ணீற் றானை
சோதிலிங்க தூங்கானை மாட தானை
விடக்கிடுகா டிடமாக உடையான் றன்னை
மிக்கரண மெரியூட்ட வல்லான் றன்னை
மடற்குலவு பொழிலாரூர் மூல தானம்
மன்னியவெம் பெருமானை மதியார் வேள்வி
அடர்த்தவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே
தாயவனை எவ்வுயிர்க்கு தன்னொ பில்லா
தகுதில்லை நடம்பயிலு தலைவன் றன்னை
மாயவனும் மலரவனும் வானோ ரேத்த
மறிகடல்நஞ் சுண்டுகந்த மைந்தன் றன்னை
மேயவனை பொழிலாரூர் மூல தானம்
விரும்பியஎம் பெருமானை யெல்லாம் முன்னே
ஆயவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே
பொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானை
புகலூரும் புறம்பயமும் மேயான் றன்னை
மருளியலுஞ் சிந்தையர்க்கு மருந்து தன்னை
மறைக்காடுஞ் சாய்க்காடும் மன்னி னானை
இருளியல்நற் பொழிலாரூர் மூல தான
தினிதமரும் பெருமானை இமையோ ரேத்த
அருளியனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே
காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னை
காரோணங் கழிப்பாலை மேயான் றன்னை
பாலனுக்கு பாற்கடலன் றீந்தான் றன்னை
பணியுகந்த அடியார்க கினியான் றன்னை
சேலுகளும் வயலாரூர் மூல தானஞ்
சேர்ந்திருந்த பெருமானை பவள மீன்ற
ஆலவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே
ஒப்பொருவ ரில்லாத ஒருவன் றன்னை
ஓத்தூரும் உறையூரும் மேவி னானை
வைப்பவனை மாணிக்க சோதி யானை
மாருதமு தீவெளிநீர் மண்ணா னானை
மெய்ப்பொருளாய் அடியேன துள்ளே நின்ற
வினையிலியை திருமூல தானம் மேய
அப்பொன்னை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே
இச்செய்யுளின் பின்னிரு அடிகள் பிற பதிப்புகளில்
காணப்படவில்லை
பகலவன்றன் பல்லுகுத்த படிறன் றன்னை
பராய்த்துறைபைஞ் ஞீலியிடம் பாவி தானை
இகலவனை இராவணனை இடர்செய் தானை
ஏத்தாதார் மனத்தகத்துள் இருளா னானை
புகழ்நிலவு பொழிலாரூர் மூல தானம்
பொருந்தியவெம் பெருமானை போற்றார் சிந்தை
அகலவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவ மான நாளோ
கருவனா காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும்விண்ணு தெரித்த நாளோ
மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாக
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலா கொண்ட நாளே
மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ
வானவரை வலியமுத மூட்டி யந்நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ
நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ
அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ
அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ
சிலையால்மு புரமெரித்த முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலா கொண்ட நாளே
பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்
நீயும்போ பார்த்தனது பலத்தை காண்பான்
வேடனாய் வில்வாங்கி யெய்த நாளோ
விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
மணிதிகழும் அம்பலத்தே மன்னி கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலா கொண்ட நாளே
ஓங்கி யுயர்ந்தெழுந்து நின்ற நாளோ
ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ
தாங்கியசீர தலையான வானோர் செய்த
தக்கன்றன் பெருவேள்வி தகர்த்த நாளோ
நீங்கியநீர தாமரையான் நெடுமா லோடு
நில்லாயெம் பெருமானே யென்றங் கேத்தி
வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ
வளராரூர் கோயிலா கொண்ட நாளே
பாலனாய் வளர்ந்திலா பான்மை யானே
பணிவார்க கங்கங்கே பற்றா னானே
நீலமா மணிகண்ட தெண்டோ ளானே
நெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ்
சீலமே சிவலோக நெறியே யாகுஞ்
சீர்மையே கூர்மையே குணமே நல்ல
கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ
குளிராரூர் கோயிலா கொண்ட நாளே
திறம்பலவும் வழிகாட்டி செய்கை காட்டி
சிறியையா பெரியையாய் நின்ற நாளோ
மறம்பலவு முடையாரை மயக்க தீர்த்து
மாமுனிவர கருள்செய்தங் கிருந்த நாளோ
பிறங்கியசீர பிரமன்றன் தலைகை யேந்தி
பிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ
அறம்பலவு முரைப்பதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலா கொண்ட நாளே
நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ
நிற்பனவும் நடப்பனவும் நீயே யாகி
கலந்துரை கற்பகமாய் நின்ற நாளோ
காரணத்தால் நாரணனை கற்பி தன்று
வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ
வாசுகியை வாய்மடுத்து வானோ ரு
சலந்தரனை கொல்வதற்கு முன்னோ பின்னோ
தண்ணாரூர் கோயிலா கொண்ட நாளே
பாதத்தால் முயலகனை பாது காத்து
பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
கீதத்தை மிகப்பாடும் அடியார கென்றுங்
கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ
பூதத்தான் பொருநீலி புனிதன் மேவி
பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர கென்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ
விழவாரூர் கோயிலா கொண்ட நாளே
புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்
பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டுங்
கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்
கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்
நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்
நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டு
திகையெட்டு தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலா கொண்ட நாளே
ஈசனா யுலகேழும் மலையு மாகி
இராவணனை ஈடழித்தி டிருந்த நாளோ
வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ
மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ
தாதுமலர் சண்டிக்கு கொடுத்த நாளோ
சகரர்களை மறித்திட்டா கொண்ட நாளோ
தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலா கொண்ட நாளே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவெண்காடு திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
தூண்டு சுடர்மேனி தூநீ றாடி
சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
பொற்சடைக ளவைதாழ புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே
பாத தனிப்பார்மேல் வைத்த பாதர்
பாதாள மேழுருவ பாய்ந்த பாதர்
ஏதம் படாவண்ணம் நின்ற பாதர்
ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்
தொலிமடங்கி யூருண் டேறி
ஒத்துலக மெல்லா மொடுங்கி யபின்
வே தொலிகொண்டு வீணை கேட்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே
நென்னலையோர் ஓடேத்தி பிச்சை கென்று
வந்தார்க்கு வந்தேனென் றில்லே புக்கேன்
அந்நிலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார்
அருகே வருவார்போல் நோக்கு கின்றார்
நுந்நிலைமை யேதோநும் மூர்தா னேதோ
என்றேனு கொன்றாக சொல்ல மாட்டார்
மென்முலையார் கூடி விரும்பி யாடும்
வெண்காடு மேவிய விகிர்த னாரே
ஆக துமையடக்கி ஆறு சூடி
ஐவா யரவசைத்தங் கானே றேறி
போகம் பலவுடைத்தா பூதஞ் சூழ
புலித்தோ லுடையா புகுந்து நின்றார்
பாகிடுவான் சென்றேனை பற்றி நோக்கி
பரிசழித்தென் வளைகவர்ந்தார் பாவி யேனை
மேக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
வெண்காடு மேவிய விகிர்த னாரே
கொள்ளை குழைக்காதிற் குண்டை பூதங்
கொடுகொட்டி கொட்டி குனித்து பாட
உள்ளங் கவர்ந்திட்டு போவார் போல
உழிதருவர் நான்தெரிய மாட்டேன் மீண்டேன்
கள்ள விழிவிழிப்பார் காணா கண்ணாற்
கண்ணுளார் போலே கரந்து நிற்பர்
வெள்ள சடைமுடியர் வேத நாவர்
வெண்காடு மேவிய விகிர்த னாரே
தொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்தி
சுடர்க்கொன்றை தாரணிந்து சுவைகள் பேசி
பட்டிவெள் ளேறேறி பலியுங் கொள்ளார்
பார்ப்பாரை பரிசழிப்பா ரொக்கின் றாராற்
கட்டிலங்கு வெண்ணீற்றர் கனல பேசி
கருத்தழித்து வளைகவர்ந்தார் காலை மாலை
விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர்
வெண்காடு மேவிய விகிர்த னாரே
பெண்பா லொருபாகம் பேணா வாழ்க்கை
கோள்நாகம் பூண்பனவும் நாணாஞ் சொல்லார்
உண்பா ருறங்குவார் ஒவ்வா நங்காய்
உண்பதுவும் நஞ்சன்றே லோபி யுண்ணார்
பண்பா லவிர்சடையர் பற்றி நோக்கி
பாலை பரிசழி பேசு கின்றார்
விண்பால் மதிசூடி வேத மோதி
வெண்காடு மேவிய விகிர்த னாரே
மருதங்க ளாமொழிவர் மங்கை யோடு
வானவரும் மாலயனுங் கூடி தங்கள்
சுருதங்க ளாற்றுதித்து தூநீ ராட்டி
தோத்திரங்கள் பலசொல்லி தூபங் காட்டி
கருதுங்கொல் எம்பெருமான் செய்குற் றேவல்
என்பார்க்கு வேண்டும் வரங் கொடுத்து
விகிர்தங்க ளாநடப்பர் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங்
காணார் பொறியழலாய் நின்றான் றன்னை
உள்ளானை யொன்றலா உருவி னானை
உலகு கொருவிளக்காய் நின்றான் றன்னை
கள்ளேந்து கொன்றைதூ காலை மூன்றும்
ஓவாமே நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரங் கொடுப்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே
மாக்குன் றெடுத்தோன்றன் மைந்த னாகி
மாவேழம் வில்லா மதித்தான் றன்னை
நோக்கு துணைத்தேவ ரெல்லாம் நிற்க
நொடிவரையில் நோவ விழித்தான் றன்னை
காக்குங் கடலிலங்கை கோமான் றன்னை
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி
வீக்க தவிர்த்த விரலார் போலும்
வெண்காடு மேவிய விகிர்த னாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பழனம் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே
அமரர்களு கருள்செய்யு மாதி தாமே
கொலையாய கூற்ற முதைத்தார் தாமே
கொல்வேங்கை தோலொன் றசைத்தார் தாமே
சிலையாற் புரமூன் றெரித்தார் தாமே
தீநோய் களைந்தென்னை யாண்டார் தாமே
பலிதேர தழகாய பண்பர் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே
வெள்ள மொருசடைமே லேற்றார் தாமே
மேலார்கண் மேலார்
கள்ளங் கடிந்தென்னை யாண்டார் தாமே
கருத்துடைய பூத படையார் தாமே
உள்ள துவகை தருவார் தாமே
உறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பார் தாமே
பள்ள பரவைநஞ் சுண்டார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே
இரவும் பகலுமாய் நின்றார் தாமே
எப்போது மென்னெஞ்ச துள்ளார் தாமே
அரவ மரையி லசைத்தார் தாமே
அனலாடி யங்கை மறித்தார் தாமே
குரவங் கமழுங்குற் றாலர் தாமே
கோலங்கள் மேன்மே லுகப்பார் தாமே
பரவு மடியார்க்கு பாங்கர் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே
மாறின் மதின்மூன்று மெய்தார் தாமே
வரியரவங் கச்சாக ஆர்த்தார் தாமே
நீறுசேர் திருமேனி நிமலர் தாமே
நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே
ஏறு கொடுஞ்சூல கையார் தாமே
என்பா பரண மணிந்தார் தாமே
பாறுண் தலையிற் பலியார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே
சீரால் வணங்க படுவார் தாமே
திசைக்கெல்லா தேவாகி நின்றார் தாமே
ஆரா வமுதமு மானார் தாமே
அளவில் பெருமை யுடையார் தாமே
நீரார் நியம முடையார் தாமே
நீள்வரை வில்லாக வளைத்தார் தாமே
பாரார் பரவ படுவார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே
கால னுயிர்வௌவ வல்லார் தாமே
கடிதோடும் வெள்ளை விடையார் தாமே
கோலம் பலவு முகப்பார் தாமே
கோள்நாக நாணாக பூண்டார் தாமே
நீலம் பொலிந்த மிடற்றார் தாமே
நீள்வரையி னுச்சி யிருப்பார் தாமே
பால விருத்தரு மானார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே
ஏய்ந்த வுமைநங்கை பங்கர் தாமே
ஏழூழி கப்புறமாய் நின்றார் தாமே
ஆய்ந்து மலர்தூவ நின்றார் தாமே
அளவில் பெருமை யுடையார் தாமே
தேய்ந்த பிறைசடைமேல் வைத்தார் தாமே
தீவா யரவதனை யார்த்தார் தாமே
பாய்ந்த படர்கங்கை யேற்றார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே
ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே
உள்ளூறு மன்பர் மனத்தார் தாமே
பேராதென் சிந்தை யிருந்தார் தாமே
பிறர்க்கென்றுங் காட்சி கரியார் தாமே
ஊராரு மூவுலக துள்ளார் தாமே
உலகை நடுங்காமற் காப்பார் தாமே
பாரார் முழவ திடையார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே
நீண்டவர்க்கோர் நெருப்புருவ மானார் தாமே
நேரிழையை யொருபாகம் வைத்தார் தாமே
பூண்டரவை புலித்தோல்மே லார்த்தார் தாமே
பொன்னிறத்த வெள்ள சடையார் தாமே
ஆண்டுலகே ழனைத்தினையும் வைத்தார் தாமே
அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே
பாண்டவரிற் பார்த்தனுக்கு பரிந்தார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே
விடையேறி வேண்டுலக திருப்பார் தாமே
விரிகதிரோன் சோற்று துறையார் தாமே
புடைசூழ தேவர் குழாத்தார் தாமே
பூந்துருத்தி நெய்த்தான மேயார் தாமே
அடைவே புனல்சூழ்ஐ யாற்றார் தாமே
அரக்கனையு மாற்ற லழித்தார் தாமே
படையா பல்பூத முடையார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவா படையொன் றேந்தி
குறட்பூத பல்படையா யென்றேன் நானே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா வமுதேயென் ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே
தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்கு
தீர்த்தா புராணனே யென்றேன் நானே
மூவா மதிசூடி யென்றேன் நானே
முதல்வாமு கண்ணனே யென்றேன் நானே
ஏவார் சிலையானே யென்றேன் நானே
இடும்பை கடல்நின்று மேற வாங்கி
ஆவாவென் றருள்புரியும் ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே
அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே
அடியார்க காரமுதே யென்றேன் நானே
நஞ்சணி கண்டனே யென்றேன் நானே
நாவலர்கள் நான்மறையே யென்றேன் நானே
நெஞ்சுணர வுள்பு கிருந்த போது
நிறையு மமுதமே யென்றேன் நானே
அஞ்சாதே ஆள்வானே ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே
தொல்லை தொடுகடலே யென்றேன் நானே
துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எல்லை நிறைந்தானே யென்றேன் நானே
ஏழ்நரம்பி னின்னிசையா யென்றேன் நானே
அல்லற் கடல்பு கழுந்து வேனை
வாங்கி யருள்செய்தா யென்றேன் நானே
எல்லையாம் ஐயாறா வென்றேன் நானே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே
இண்டை சடைமுடியா யென்றேன் நானே
இருசுடர் வானத்தா யென்றேன் நானே
தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே
துருத்திநெ தானத்தா யென்றேன் நானே
கண்டங் கறுத்தானே யென்றேன் நானே
கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே
அண்டத்து கப்பாலாம் ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே
பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே
பசுபதி பண்டரங்கா வென்றேன் நானே
கற்றார்கள் நாவினா யென்றேன் நானே
கடுவிடையொன் றூர்தியா யென்றேன் நானே
பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே
பார்த்தற் கருள்செய்தா யென்றேன் நானே
அற்றார கருள்செய்யும் ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே
விண்ணோர் தலைவனே யென்றேன் நானே
விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே
ஏகம்பம் மேயானே யென்றேன் நானே
பண்ணார் மறைபாடி யென்றேன் நானே
பசுபதி பால்நீற்றா யென்றேன் நானே
அண்ணாஐ யாறனே யென்றேன் நானே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே
அவனென்று நானுன்னை அஞ்சா தேனை
அல்ல லறுப்பானே யென்றேன் நானே
சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்ல
செல்வ தருவானே யென்றேன் நானே
பவனாகி யென்னுள்ள துள்ளே நின்று
பண்டை வினையறுப்பா யென்றேன் நானே
அவனென்றே யாதியே ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே
கச்சியே கம்பனே யென்றேன் நானே
கயிலாயா காரோணா வென்றேன் நானே
நிச்சன் மணாளனே யென்றேன் நானே
நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே
உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே
உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே
அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே
வில்லாடி வேடனே யென்றேன் நானே
வெண்ணீறு மெய்க்கணிந்தா யென்றேன் நானே
சொல்லாய சூழலா யென்றேன் நானே
சுலாவாய தொன்னெறியே யென்றேன் நானே
எல்லாமா யென்னுயிரே யென்றேன் நானே
இலங்கையர்கோன் தோளிறுத்தா யென்றேன் நானே
அல்லா வினைதீர்க்கும் ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
ஓசை ஒலியெலா மானாய் நீயே
உலகு கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேச பெரிது மினியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ
நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே
நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ
கனத்தகத்து கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே
தனத்தகத்து தலைகலனா கொண்டாய் நீயே
சார்ந்தாரை தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ
வானுற்ற மாமலைக ளானாய் நீயே
வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
ஊனுற்ற ஒளிமழுவா படையாய் நீயே
ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்து மமர்ந்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொன்மடவாள் பங்கன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ
பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
பெரியார்க கெல்லாம் பெரியாய் நீயே
உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே
ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே
கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவா படையாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ
உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே
உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே
கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ
எல்லா வுலகமு மானாய் நீயே
ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞான சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வ தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ
ஆவினில் ஐந்து மமர்ந்தாய் நீயே
அளவில் பெருமை யுடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே
தேவ ரறியாத தேவன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ
எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே
ஏகம்ப மேய இறைவன் நீயே
வண்டிசைக்கும் நறுங்கொன்றை தாராய் நீயே
வாரா வுலகருள வல்லாய் நீயே
தொண்டிசைத்துன் னடிபரவ நின்றாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ
விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
விண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயே
கண்டாரை கொல்லும்நஞ் சுண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்டோ ள்வி டெரியாட லுகந்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ
ஆரு மறியா இடத்தாய் நீயே
ஆகா தேரூர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை வேந்தன்
பெரிய முடிப திறுத்தாய் நீயே
ஊரும் புரமூன்று மட்டாய் நீயே
ஒண்டா மரையானும் மாலுங் கூடி
தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமழபாடி திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்
கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி யெங்கு திரிவான் கண்டாய்
ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்
மாறானார் தம்மரண மட்டான் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே
கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்
கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்
அக்கரைமே லாட லுடையான் கண்டாய்
அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்
அக்கோ டரவ மணிந்தான் கண்டாய்
அடியார்க காரமுத மானான் கண்டாய்
மற்றிருந்த கங்கை சடையான் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே
நெற்றி தனிக்கண் ணுடையான் கண்டாய்
நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்
பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே
அலையார்ந்த புனற்கங்கை சடையான் கண்டாய்
அண்டத்து கப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்
கொல்வேங்கை தோலொன் றுடுத்தான் கண்டாய்
சிலையாற் றிரிபுரங்கள் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே
உலந்தார்தம் அங்க மணிந்தான் கண்டாய்
உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழுங் கொன்றை சடையான் கண்டாய்
நால்வேத மாறங்க மானான் கண்டாய்
உலந்தார் தலைகலனா கொண்டான் கண்டாய்
உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த
மழபாடி மன்னும் மணாளன் றானே
தாமரையான் தன்றலையை சாய்த்தான் கண்டாய்
தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்
பூமலரா னேத்தும் புனிதன் கண்டாய்
புணர்ச்சி பொருளாகி நின்றான் கண்டாய்
ஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய்
இருளார்ந்த கண்ட திறைவன் கண்டாய்
மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே
நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகி பௌவமே ழானான் கண்டாய்
பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனு தன்னடியார கன்பன் கண்டாய்
அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே
பொன்னியலு திருமேனி யுடையான் கண்டாய்
பூங்கொன்றை தாரொன் றணிந்தான் கண்டாய்
மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்
வேழத்தி னுரிவிரும்பி போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்
தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே
ஆலால முண்டுகந்த ஆதி கண்டாய்
அடையலர்தம் புரமூன்று மெய்தான் கண்டாய்
காலால காலனையுங் காய்ந்தான் கண்டாய்
கண்ணப்பர கருள்செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
பசுவேறி பலிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலு மறிவரிய மைந்தன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே
ஒருசுடரா யுலகேழு மானான் கண்டாய்
ஓங்கார துட்பொருளாய் நின்றான் கண்டாய்
விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்
விழவொலியும் வேள்வொலியு மானான் கண்டாய்
இருசுடர் மீதோடா இலங்கை கோனை
ஈடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய்
மருசுடரின் மாணி குன்று கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வச்சிரத்தம்பேசுவரர்
தேவியார் அழகாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமழபாடி திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு
அமரர்கள்த தலைகாத்த ஐயர் செம்பொற்
சிலையெடுத்து மாநாக நெருப்பு கோத்து
திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்
நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட
நிரைவயிர பலகையாற் குவையார துற்ற
மலையடுத்த மழபாடி வயிர தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே
அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும்
அந்தரத்திற் கந்தருவர் அமர ரேத்த
மறைகலந்த மந்திரமும் நீருங் கொண்டு
வழிபட்டார் வானாள கொடுத்தி யன்றே
கறைகலந்த பொழிற்கச்சி கம்ப மே
கனவயிர திரள்தூணே கலிசூழ் மாடம்
மறைகலந்த மழபாடி வயிர தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே
உரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா
ஊத்தைவா சமணர்தமை யுறவா கொண்ட
பரங்கெடுத்திங் கடியேனை ஆண்டு கொண்ட
பவளத்தின் திரள்தூணே பசும்பொன் முத்தே
புரங்கெடுத்து பொல்லாத காம னாகம்
பொடியாக விழித்தருளி புவியோர கென்றும்
வரங்கொடுக்கும் மழபாடி வயிர தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே
ஊனிகந்தூ ணுறிகையர் குண்டர் பொல்லா
ஊத்தைவா சமணருற வா கொண்டு
ஞானகஞ்சேர துள்ளவயி ரத்தை நண்ணா
நாயேனை பொருளாக ஆண்டு கொண்ட
மீனகஞ்சேர் வெள்ளநீர் விதியாற் சூடும்
வேந்தனே விண்ணவர்தம் பெருமான் மேக
வானகஞ்சேர் மழபாடி வயிர தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே
சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றை
திருமால்தன் செழுந்தலையும் பொன்ற சிந்தி
உரமேற்ற இரவிபல் தகர்த்து சோமன்
ஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கி
நரையேற்ற விடையேறி நாகம் பூண்ட
நம்பியையே மறைநான்கும் ஓல மிட்டு
வரமேற்கும் மழபாடி வயிர தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே
சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்
செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி
புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்
பொறியிலியேன் றனைப்பொருளா வாண்டு கொண்டு
தனந்திருத்து மவர்திறத்தை யொழி பாற்றி
தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி
மனந்திருத்தும் மழபாடி வயிர தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே
சுழித்துணையாம் பிறவிவழி துக்கம் நீக்குஞ்
சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர்
இழிப்பரிய பசுபாச பிறப்பை நீக்கும்
என்றுணையே என்னுடைய பெம்மான் தம்மான்
பழிப்பரிய திருமாலும் அயனுங் காணா
பரிதியே சுருதிமுடி கணியாய் வாய்த்த
வழித்துணையாம் மழபாடி வயிர தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள்
சிதைந்து போயின
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநெய்த்தானம் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
வகையெலா முடையாயும் நீயே யென்றும்
வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்
மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும்
வெண்காடு மேவினாய் நீயே யென்றும்
பகையெலா தீர்த்தாண்டாய் நீயே யென்றும்
பாசூர் அமர்ந்தாயும் நீயே யென்றும்
திகையெலா தொழச்செல்வாய் நீயே யென்றும்
நின்றநெ தானாவென் னெஞ்சு ளாயே
ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும்
ஆதி கயிலாயன் நீயே யென்றுங்
கூர்த்த நடமாடி நீயே யென்றுங்
கோடிகா மேய குழகா வென்றும்
பார்த்தற் கருள்செய்தாய் நீயே யென்றும்
பழையனூர் மேவிய பண்பா வென்று
தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும்





திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த ௿
தேவார பதிகங்கள்௿
ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி௿
பாடல்கள் ௿


































திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த ௿
தேவார பதிகங்கள்௿
ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி௿
பாடல்கள் ௿
உள்ளுறை
௿
திருவீழிமிழலை மின்பதிப்பு
திருவீழிமிழலை மின்பதிப்பு
திருவீழிமிழலை மின்பதிப்பு
திருப்புள்ளிருக்குவேளூர் மின்பதிப்பு
திருக்கயிலாயம் மின்பதிப்பு
திருக்கயிலாயம் மின்பதிப்பு
திருக்கயிலாயத்திருமலை மின்பதிப்பு
திருவலம்புரம் மின்பதிப்பு
திருவெண்ணி மின்பதிப்பு
திருக்கற்குடி மின்பதிப்பு
திருக்கன்றாப்பூர் மின்பதிப்பு
திருவானைக்கா மின்பதிப்பு
திருவானைக்கா மின்பதிப்பு
திருவேகம்பம் மின்பதிப்பு
திருவேகம்பம் மின்பதிப்பு
திருநாகேச்சரம் மின்பதிப்பு
திருக்கீழ்வேளூர் மின்பதிப்பு
திருமுதுகுன்றம் மின்பதிப்பு
திருப்பள்ளியின்முக்கூடல் மின்பதிப்பு
க்ஷேத்திரக்கோவை மின்பதிப்பு
திருஅடைவு மின்பதிப்பு
திருவலஞ்சுழி மின்பதிப்பு
திருவலஞ்சுழிதிருக்கொட்டையூர் மின்பதிப்பு

திருநாரையூர் மின்பதிப்பு
திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் மின்பதிப்பு
திருப்புத்தூர் மின்பதிப்பு
திருவாய்மூர் மின்பதிப்பு
திருவாலங்காடு மின்பதிப்பு
திருத்தலையாலங்காடு மின்பதிப்பு
திருமாற்பேறு மின்பதிப்பு
திருக்கோடிகா மின்பதிப்பு
திருச்சாய்க்காடு மின்பதிப்பு
திருப்பாசூர் மின்பதிப்பு
திருச்செங்காட்டங்குடி மின்பதிப்பு
திருமுண்டீச்சரம் மின்பதிப்பு
திருவாலம்பொழில் மின்பதிப்பு
திருச்சிவபுரம் மின்பதிப்பு
திருவோமாம்புலியூர் மின்பதிப்பு
திருவின்னம்பர் மின்பதிப்பு
திருக்கஞ்சனூர் மின்பதிப்பு
திருவெறும்பியூர் மின்பதிப்பு
திருக்கழுக்குன்றம் மின்பதிப்பு
பலவகை திருத்தாண்டகம் மின்பதிப்பு
நின்ற திருத்தாண்டகம் மின்பதிப்பு
தனி திருத்தாண்டகம் மின்பதிப்பு
தனி திருத்தாண்டகம் மின்பதிப்பு
திருவினா திருத்தாண்டகம் மின்பதிப்பு
திருமறுமாற்றத்திருத்தாண்டகம் மின்பதிப்பு
திருப்புகலூர் மின்பதிப்பு

திருவீழிமிழலை திருத்தாண்டகம்௿ ௿
திருச்சிற்றம்பலம்
கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார் ௿
கந்தமா தனத்துளார் காள தியார்௿
மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்௿
வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்த௿
அயில்வாய சூலமுங் காபா லமும்௿
அமரு திருக்கரத்தார் ஆனே றேறி௿
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்௿
வீழி மிழலையே மேவி னாரே
பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்௿
பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்௿
கேதிசர மேவினார் கேதா ரத்தார்௿
கெடில வடவதிகை வீர டத்தார்௿
மாதுயர தீர்த்தென்னை கொண்டார்௿
மழபாடி மேய மழுவா ளனார்௿
வேதி குடியுளார் மீ சூரார்௿
வீழி மிழலையே மேவி னாரே
அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார்௿
அளப்பூரார் அந்தணர்கள் மாட கோயில்௿
உண்ணாழி கையார் உமையா ளோடும்௿
இமையோர் பெருமானார் ஒற்றி யூரார்௿
பெண்ணா கடத்து பெருந்தூங் கானை௿
மாடத்தார் கூடத்தார் பேரா வூரார்௿
விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த ௿
வீழி மிழலையே மேவி னாரே
வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி ௿
நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்௿
பண்காட்டும் வண்டார் பழன துள்ளார்௿
பராய்த்துறையார் சிராப்பள்ளி யுள்ளார் பண்டோ ர்௿
வெண்கோட்டு கருங்களிற்றை பிளிற பற்றி ௿
உரித்துரிவை போர்த்த விடலை வேடம்௿
விண்காட்டும் பிறைநுதலி யஞ்ச காட்டி௿
வீழி மிழலையே மேவி னாரே
புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாட ௿
புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார்௿
உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்க சிமேற் ௿
றளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார்௿
கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார்௿
கழுமலத்தார் செழுமலர்த்தார குழலி யோடும்௿
விடைசூழ்ந்த வெல்கொடியர் மல்கு செல்வ ௿
வீழி மிழலையே மேவி னாரே
பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழியார்௿
பெரும்பற்ற புலியூர்மூ லட்டா னத்தார்௿
இரும்புதலார் இரும்பூளை யுள்ளா ரேரார் ௿
இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்௿
கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்௿
கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்௿
விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த ௿
வீழி மிழலையே மேவி னாரே
மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்௿
வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்௿
கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்௿
கற்குடியார் விற்குடியார் கான பேரார்௿
பறைக்காட்டுங் குழிவிழிக பல்பேய் சூழ ௿
பழையனூர் ஆலங்கா டடிகள் பண்டோ ர்௿
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீட பாய்ந்தார்௿
வீழி மிழலையே மேவி னாரே
அஞ்சை களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்௿
ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்௿
தஞ்சை தளிக்குளத்தார் தக்க ளூரார்௿
சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்௿
நஞ்சை தமக்கமுதா உண்ட நம்பர்௿
நாகே சரத்துள்ளார் நாரை யூரார்௿
வெஞ்சொ சமண்சிறையி லென்னை மீட்டார்௿
வீழி மிழலையே மேவி னாரே
கொண்டலுள்ளார் கொண்டீ சரத்தி னுள்ளார்௿
கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார்௿
தண்டலையார் தலையாலங் காட்டி னுள்ளார்௿
தலைச்சங்கை பெருங்கோயில் தங்கி னார்தாம்௿
வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர் ௿
வலஞ்சுழியார் வைகலின்மேன் மாட துள்ளார்௿
வெண்டலைமான் கைக்கொண்ட விகிர்த வேடர்௿
வீழி மிழலையே மேவி னாரே
அரிச்ச திரத்துள்ளார் அம்ப ருள்ளார்௿
அரிபிரமர் இந்திரர்க்கு மரிய ரானார்௿
புரிச்ச திரத்துள்ளார் போக துள்ளார்௿
பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகி௿
எரிச்சந்தி வேட்கு மிடத்தா ரேமக்௿
கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர்௿
விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர்௿
வீழி மிழலையே மேவி னாரே
புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்௿
பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க௿
தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான் ௿
தலைகளொடு மலைகளன தாளு தோளும்௿
பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்௿
பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்௿
மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்௿
வீழி மிழலையே மேவி னாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவீழிமிழலை திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண்௿
கந்திருவம் பாட்டிசையிற் காட்டு கின்ற௿
பண்ணவன்காண் பண்ணவற்றின் றிறலா னான்காண்௿
பழமாகி சுவையாகி பயக்கின் றான்காண்௿
மண்ணவன்காண் தீயவன்காண் நீரா னான்காண்௿
வந்தலைக்கும் மாருதன்காண் மழைமே கஞ்சேர்௿
விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே
ஆலை படுகரும்பின் சாறு போல ௿
அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நா தான்காண்௿
சீல முடையடியார் சிந்தை யான்காண்௿
திரிபுரமூன் றெரிபடுத்த சிலையி னான்காண்௿
பாலினொடு தயிர்நறுநெய் யாடி னான்காண்௿
பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண்௿
வேலை விடமுண்ட மிடற்றி னான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே
தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண்௿
சக்கரம் புட்பாகற் கருள்செய் தான்காண்௿
கண்ணுமொரு மூன்றுடைய காபா லிகாண்௿
காமனுடல் வேவித்த கண்ணி னான்காண்௿
எண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண்௿
இருவர கெரியா யருளி னான்காண்௿
விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே
காதிசைந்த சங குழையி னான்காண்௿
கனக மலையனைய காட்சி யான்காண்௿
மாதிசைந்த மாதவமுஞ் சோதி தான்காண்௿
வல்லேன வெள்ளெயிற்றா பரண தான்காண்௿
ஆதியன்காண் அண்டத்து கப்பா லான்காண்௿
ஐந்தலைமா நாகம்நா ணாக்கி னான்காண்௿
வேதியன்காண் வேதவிதி காட்டி னான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே
நெய்யினொடு பாலிளநீ ராடி னான்காண்௿
நித்தமண வாளனென நிற்கின் றான்காண்௿
கையின்மழு வாளொடுமான் ஏந்தி னான்காண்௿
காலனுயிர் காலாற் கழிவி தான்காண்௿
செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண்௿
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னான்காண்௿
வெய்ய கனல்விளையா டாடி னான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே
கண்டுஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக்௿
கண்ணிடந்து சூட்டக்கண் டருளு வான்காண்௿
வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்௿
வான்கங்கை சடைக்கரந்த மாதே வன்காண்௿
பண்டங்கு மொழிமடவாள் பாக தான்காண்௿
பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்௿
வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவை தான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே
கற்பொலிதோள் சலந்தரனை பிளந்த ஆழி௿
கருமாலு கருள்செய்த கருணை யான்காண்௿
விற்பொலிதோள் விசயன்வலி தேய்வி தான்காண்௿
வேடுவனா போர்பொருது காட்டி னான்காண்௿
தற்பரமா தற்பரமாய் நிற்கின் றான்காண்௿
சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண்௿
வெற்பரையன் பாவை விருப்பு ளான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே
மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார கெல்லாம்௿
விருப்பிலா இருப்புமன வினையர கென்றும்௿
பொய்த்தவன்காண் புத்தன் மறவா தோடி ௿
எறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்௿
உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரை௿
உலகனைத்தும் ஒளித்தளித்தி டு செய்யும்௿
வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும் ௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே
சந்திரனை திருவடியாற் தளர்வி தான்காண்௿
தக்கனையும் முனிந்தெச்சன் தலைகொண் டான்காண்௿
இந்திரனை தோள்முறிவி தருள்செய் தான்காண்௿
ஈசன்காண் நேசன்காண் நினைவோர கெல்லாம்௿
மந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண்௿
மாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்௿
வெந்தழலின் விரிசுடரா யோங்கி னான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே
ஈங்கைப்பேர் ஈமவன திருக்கின் றான்காண்௿
எம்மான்காண் கைம்மாவி னுரிபோர தான்காண்௿
ஓங்குமலை கரையன்றன் பாவை யோடும் ௿
ஓருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண்௿
கோங்குமலர கொன்றையந்தார கண்ணி யான்காண்௿
கொல்லேறு வெல்கொடிமேற் கூட்டி னான்காண்௿
வேங்கைவரி புலித்தோல்மே லாடை யான்காண்௿
விண்ணிழிதண்வீழி மிழலை யானே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவீழிமிழலை திருத்தாண்டகம்
௿
திருச்சிற்றம்பலம்
மானேறு கரமுடைய வரதர் போலும்௿
மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்௿
கானேறு கரிகதற வுரித்தார் போலுங்௿
கட்டங்கங் கொடிதுடிகை கொண்டார் போலுந்௿
தேனேறு திருஇதழி தாரார் போலுந்௿
திருவீழி மிழலையமர் செல்வர் போலும்௿
ஆனேற தேறும் அழகர் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
சமரமிகு சலந்தரன்போர் வேண்டி னானை ௿
சக்கரத்தாற் பிளப்பித்த சதுரர் போலும்௿
நமனையொரு கால்குறைத்த நாதர் போலும்௿
நாரணனை இடப்பாக தடைத்தார் போலுங்௿
குமரனையும் மகனாக வுடையார் போலுங்௿
குளிர்வீழி மிழலையமர் குழகர் போலும்௿
அமரர்கள்பின் அமுதுணநஞ் சுண்டார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
நீறணிந்த திருமேனி நிமலர் போலும்௿
நேமிநெடு மாற்கருளி செய்தார் போலும்௿
ஏறணிந்த கொடியுடையெம் மிறைவர் போலும்௿
எயில்மூன்று மெரிசரத்தா லெய்தார் போலும்௿
வேறணிந்த கோலமுடை வேடர் போலும்௿
வியன்வீழி மிழலையுறை விகிர்தர் போலும்௿
ஆறணிந்த சடாமகுட தழகர் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
கைவேழ முகத்தவனை படைத்தார் போலுங்௿
கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலுஞ்௿
செய்வேள்வி தக்கனைமுன் சிதைத்தார் போலுந்௿
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்௿
மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்௿
வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்௿
ஐவேள்வி ஆறங்க மானார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
துன்னத்தின் கோவணமொன் றுடையார் போலுஞ்௿
சுடர்மூன்றுஞ் சோதியுமா தூயார் போலும்௿
பொன்னொத்த திருமேனி புனிதர் போலும்௿
பூதகணம் புடைசூழ வருவார் போலும்௿
மின்னொத்த செஞ்சடைவெண் பிறையார் போலும்௿
வியன்வீழி மிழலைசேர் விமலர் போலும்௿
அன்னத்தேர் அயன்முடிசேர் அடிகள் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
மாலாலும் அறிவரிய வரதர் போலும்௿
மறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும்௿
நாலாய மறைக்கிறைவ ரானார் போலும்௿
நாமவெழு தஞ்சாய நம்பர் போலும்௿
வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும்௿
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்௿
ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்௿
பைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும்௿
மஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும்௿
வடகயிலை மலையுடைய மணாளர் போலுஞ்௿
செஞ்சடைக்கண் வெண்பிறைகொண் டணிந்தார் போலுந்௿
திருவீழி மிழலையமர் சிவனார் போலும்௿
அஞ்சடக்கும் அடியவர்க கணியார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
குண்டரொடு பிரித்தெனையா கொண்டார் போலுங்௿
குடமூக்கி லிடமாக்கி கொண்டார் போலும்௿
புண்டரிக புதுமலரா தனத்தார் போலும்௿
புள்ளரசை கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும்௿
வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும்௿
வியன்வீழி மிழலைநக ருடையார் போலும்௿
அண்டத்து புறத்தப்பா லானார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும்௿
மொய்பவள கொடியனைய சடையார் போலும்௿
எத்தனையும் பத்திசெய்வார கினியார் போலும்௿
இருநான்கு மூர்த்திகளு மானார் போலும்௿
மித்திரவ சிரவணற்கு விருப்பர் போலும்௿
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்௿
அத்தனொடும் அம்மையென கானார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
கரியுரிசெய் துமைவெருவ கண்டார் போலுங்௿
கங்கையையுஞ் செஞ்சடைமேற் கரந்தார் போலும்௿
எரியதொரு கைதரித்த இறைவர் போலும்௿
ஏனத்தின் கூனெயிறு பூண்டார் போலும்௿
விரிகதிரோ ரிருவரைமுன் வெகுண்டார் போலும்௿
வியன்வீழி மிழலையமர் விமலர் போலும்௿
அரிபிரமர் துதிசெயநின் றளித்தார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
கயிலாய மலையெடுத்தான் கதறி வீழ ௿
கால்விரலால் அடர்த்தருளி செய்தார் போலுங்௿
குயிலாய மென்மொழியாள் குளிர்ந்து நோ ௿
கூத்தாட வல்ல குழகர் போலும்௿
வெயிலாய சோதிவிள கானார் போலும்௿
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்௿
அயிலாய மூவிலைவேற் படையார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புள்ளிருக்குவேளூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
ஆண்டானை அடியேனை ஆளா கொண்டு௿
அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்௿
நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னை௿
நேமிவான் படையால்நீ ளுரவோ னாகங்௿
கீண்டானை கேதாரம் மேவி னானைக்௿
கேடிலியை கிளர்பொறிவாள் அரவோ டென்பு௿
பூண்டானை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே
சீர்த்தானை சிறந்தடியேன் சிந்தை யுள்ளே ௿
திகழ்ந்தானை சிவன்றன்னை தேவ தேவைக்௿
கூர்த்தானை கொடுநெடுவேற் கூற்ற தன்னை ௿
குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்௿
பேர்த்தானை பிறப்பிலியை இறப்பொன் றில்லா ௿
பெம்மானை கைம்மாவி னுரிவை பேணிப்௿
போர்த்தானை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே
பத்திமையாற் பணிந்தடியேன் றன்னை பன்னாட்௿
பாமாலை பாட பயில்வி தானை௿
எத்தேவு மேத்தும் இறைவன் றன்னை௿
எம்மானை என்னுள்ள துள்ளே யூறும்௿
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை௿
அண்ணிக்கு தீங்கரும்பை அரனை ஆதிப்௿
புத்தேளை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே
இருளாய உள்ளத்தி னிருளை நீக்கி௿
இடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்௿
தெருளாத சிந்தைதனை தெருட்டி தன்போற்௿
சிவலோக நெறியறி சிந்தை தந்த௿
அருளானை ஆதிமா தவத்து ளானை௿
ஆறங்கம் நால்வே தப்பால் நின்ற௿
பொருளானை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே
மின்னுருவை விண்ணகத்தி லொன்றாய் மிக்கு ௿
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டா செந்தீத்௿
தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்௿
தரணிதல தஞ்சாகி யெஞ்சா தஞ்ச௿
மன்னுருவை வான்பவள கொழுந்தை முத்தை௿
வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்௿
பொன்னுருவை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே
அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை ௿
அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக்௿
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்௿
கடல்நாகை காரோணங் கருதி னானை௿
இறையானை என்னுள்ள துள்ளே விள்ளா ௿
திருந்தானை ஏழ்பொழிலு தாங்கி நின்ற௿
பொறையானை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே
நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை௿
நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற௿
விருப்பவனை வேதியனை வேத வித்தை௿
வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி௿
இருப்பவனை இடைமருதோ டீங்கோய் நீங்கா ௿
இறையவனை எனையாலுங் கயிலை யென்னும்௿
பொருப்பவனை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் ௿
பெம்மானை பிரிவிலா அடியார கென்றும்௿
வாராத செல்வம் வருவி பானை௿
மந்திரமு தந்திரமும் மருந்து மாகித்௿
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்௿
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகை கொண்ட௿
போரானை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே
பண்ணியனை பைங்கொடியாள் பாகன் றன்னைப்௿
படர்சடைமேற் புனல்கரந்த படிறன் றன்னை௿
நண்ணியனை யென்னாக்கி தன்னா னானை௿
நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கள்௿
கண்ணியனை கடியநடை விடையொன் றேறுங்௿
காரணனை நாரணனை கமல தோங்கும்௿
புண்ணியனை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே
இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்௿
எழுநரம்பின் இன்னிசைகே டின்புற் றானை௿
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்௿
அலைகடலில் ஆலால முண்டு கண்டங்௿
கறுத்தானை கண்ணழலாற் காம னாகங்௿
காய்ந்தானை கனன்மழுவுங் கலையு மங்கை௿
பொறுத்தானை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கயிலாயம் போற்றித்திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி௿
மீளாமே ஆளென்னை கொண்டாய் போற்றி௿
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி௿
ஓவாத தொலியே போற்றி௿
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி௿
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி௿
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி
பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி௿
பிறவி யறுக்கும் பிரானே போற்றி௿
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி௿
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி௿
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
கச்சாக நாக மசைத்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி
மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி௿
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
உருவாகி யென்னை படைத்தாய் போற்றி௿
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி௿
திருவாகி நின்ற திறமே போற்றி௿
தேசம் பரவ படுவாய் போற்றி௿
கருவாகி யோடு முகிலே போற்றி௿
கயிலை மலையானே போற்றி
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி௿
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி௿
ஊனத்தை நீக்கு முடலே போற்றி௿
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி௿
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி௿
தேவர்க்கு தேவனாய் நின்றாய் போற்றி௿
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி
ஊராகி நின்ற உலகே போற்றி௿
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி௿
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி௿
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
நீராவி யான நிழலே போற்றி௿
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி௿
காராகி நின்ற முகிலே போற்றி௿
கயிலை மலையானே போற்றி
சில்லுருவா சென்று திரண்டாய் போற்றி௿
தேவ ரறியாத தேவே போற்றி௿
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி௿
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
பல்லுயிரா பார்தோறும் நின்றாய் போற்றி௿
பற்றி உலகை விடாதாய் போற்றி௿
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி௿
கயிலை மலையானே போற்றி
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி௿
பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி௿
எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி௿
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி௿
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி௿
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி௿
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி
இமையா துயிரா திருந்தாய் போற்றி௿
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி௿
உமைபாக மாக தணைத்தாய் போற்றி௿
ஊழியே ழான ஒருவா போற்றி௿
அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி௿
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி௿
கமையாகி நின்ற கனலே போற்றி௿
கயிலை மலையானே போற்றி
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி௿
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி௿
தேவாதி தேவர்தொழு தேவே போற்றி௿
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி௿
ஆவா அடியேனு கெல்லாம் போற்றி௿
அல்லல் நலிய அலந்தேன் போற்றி௿
காவாய் கனக திரளே போற்றி௿
கயிலை மலையானே போற்றி
நெடிய விசும்போடு கண்ணே போற்றி௿
நீள அகல முடையாய் போற்றி௿
அடியும் முடியும் இகலி போற்றி௿
அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி௿
கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி௿
கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி௿
கடிய உருமொடு மின்னே போற்றி௿
கயிலை மலையானே போற்றி
உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி௿
ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி௿
எண்ணா இலங்கைக்கோன் றன்னை போற்றி௿
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி௿
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி௿
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி
௿
இத்தலம் வடநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் கைலாயநாதர்௿ தேவியார் பார்வதியம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கயிலாயம் போற்றித்திருத்தாண்டகம்
௿
திருச்சிற்றம்பலம்
பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி௿
பூத படையாள் புனிதா போற்றி௿
நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி௿
நீங்காதென் னுள்ள திருந்தாய் போற்றி௿
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி௿
வானோர் வணங்க படுவாய் போற்றி௿
கறையுடைய கண்ட முடையாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி
முன்பாகி நின்ற முதலே போற்றி௿
மூவாத மேனிமு கண்ணா போற்றி௿
அன்பாகி நின்றார கணியாய் போற்றி௿
ஆறேறு சென்னி சடையாய் போற்றி௿
என்பாக வெங்கு மணிந்தாய் போற்றி௿
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி௿
கண்பாவி நின்ற கனலே போற்றி௿
கயிலை மலையானே போற்றி
மாலை யெழுந்த மதியே போற்றி௿
மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி௿
மேலை வினைக ளறுப்பாய் போற்றி௿
மேலாடு திங்கள் முடியாய் போற்றி௿
ஆலை கரும்பின் தெளிவே போற்றி௿
அடியார்க காரமுத மானாய் போற்றி௿
காலை முளைத்த கதிரே போற்றி௿
கயிலை மலையானே போற்றி
உடலின் வினைக ளறுப்பாய் போற்றி௿
ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி௿
படருஞ் சடைமேல் மதியாய் போற்றி௿
பல்கண கூத்த பிரானே போற்றி௿
சுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றி௿
தோன்றியென் னுள்ள திருந்தாய் போற்றி௿
கடலி லொளியாய முத்தே போற்றி௿
கயிலை மலையானே போற்றி
மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி௿
மாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றி௿
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி௿
போகாதென் னுள்ள திருந்தாய் போற்றி௿
மெய்சேர பால்வெண்ணீ றாடி போற்றி௿
மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி௿
கைசேர் அனலேந்தி யாடீ போற்றி௿
கயிலை மலையானே போற்றி
ஆறேறு சென்னி முடியாய் போற்றி௿
அடியார்க காரமுதாய் நின்றாய் போற்றி௿
நீறேறு மேனி யுடையாய் போற்றி௿
நீங்காதென் னுள்ள திருந்தாய் போற்றி௿
கூறேறு மங்கை மழுவா போற்றி௿
கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி௿
காறேறு கண்ட மிடற்றாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி
அண்டமே ழன்று கடந்தாய் போற்றி௿
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி௿
பண்டை வினைக ளறுப்பாய் போற்றி௿
பாரோர்விண் ணேத்த படுவாய் போற்றி௿
தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி௿
தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி௿
கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி
பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி௿
பேராநோய் பேர விடுப்பாய் போற்றி௿
உருகி நினைவார்தம் முள்ளாய் போற்றி௿
ஊன தவிர்க்கும் பிரானே போற்றி௿
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி௿
ஆரு மிகழ படாதாய் போற்றி௿
கருகி பொழிந்தோடு நீரே போற்றி௿
கயிலை மலையானே போற்றி
செய்ய மலர்மேலான் கண்ணன் போற்றி ௿
தேடி யுணராமை நின்றாய் போற்றி௿
பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி௿
பொருளாக என்னையா கொண்டாய் போற்றி௿
மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி௿
மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி௿
கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி
மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி௿
மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி௿
சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி ௿
சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி௿
கோலத்தாற் குறைவில்லான் றன்னை யன்று௿
கொடிதா காய்ந்த குழகா போற்றி௿
காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கயிலாயத்திருமலை போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பாட்டான நல்ல தொடையாய் போற்றி௿
பரிசை யறியாமை நின்றாய் போற்றி௿
சூட்டான திங்கள் முடியாய் போற்றி௿
தூமாலை மத்த மணிந்தாய் போற்றி௿
ஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றி௿
அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி௿
காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி
அதிரா வினைக ளறுப்பாய் போற்றி௿
ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி௿
சதுரா சதுர குழையாய் போற்றி௿
சாம்பர் மெய்பூசு தலைவா போற்றி௿
எதிரா உலக மமைப்பாய் போற்றி௿
என்றுமீ ளாவருள் செய்வாய் போற்றி௿
கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி௿
கயிலை மலையானே போற்றி
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி௿
செல்லாத செல்வ முடையாய் போற்றி௿
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி௿
ஆகாச வண்ண முடியாய் போற்றி௿
வெய்யாய் தணியா யணியாய் போற்றி௿
வேளாத வேள்வி யுடையாய் போற்றி௿
கையார் தழலார் விடங்கா போற்றி௿
கயிலை மலையானே போற்றி
ஆட்சி யுலகை யுடையாய் போற்றி௿
அடியார கமுதெலாம் ஈவாய் போற்றி௿
சூட்சி சிறிது மிலாதாய் போற்றி௿
சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி௿
மாட்சி பெரிது முடையாய் போற்றி௿
மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி௿
காட்சி பெரிது மரியாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி
முன்னியா நின்ற முதல்வா போற்றி௿
மூவாத மேனி யுடையாய் போற்றி௿
என்னியா யெந்தை பிரானே போற்றி௿
ஏழி னிசையே யுகப்பாய் போற்றி௿
மன்னிய மங்கை மணாளா போற்றி௿
மந்திரமு தந்திரமு மானாய் போற்றி௿
கன்னியார் கங்கை தலைவா போற்றி௿
கயிலை மலையானே போற்றி
உரியாய் உலகினு கெல்லாம் போற்றி௿
உணர்வென்னு மூர்வ துடையாய் போற்றி௿
எரியாய தெய்வ சுடரே போற்றி௿
ஏசுமா முண்டி யுடையாய் போற்றி௿
அரியாய் அமரர்க கெல்லாம் போற்றி௿
அறிவே அடக்க முடையாய் போற்றி௿
கரியானு காழியன் றீந்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி
எண்மேலும் எண்ண முடையாய் போற்றி௿
ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி௿
பண்மேலே பாவி திருந்தாய் போற்றி௿
பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி௿
விண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி௿
மேலார்கண் மேலாய்
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி
முடியார் சடையின் மதியாய் போற்றி௿
முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி௿
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி௿
சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி௿
அடியா ரடிமை அறிவாய் போற்றி௿
அமரர் பதியாள வைத்தாய் போற்றி௿
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி
போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி௿
புண்ணியனே நண்ண லரியாய் போற்றி௿
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி௿
எண்ணா யிரநூறு பேராய் போற்றி௿
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி௿
நான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றி௿
காற்றிசைக்கு திசைக்கெல்லாம் வித்தே போற்றி௿
கயிலை மலையானே போற்றி
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவலம்புரம் திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை ௿
மறையவனும் வானவருஞ் சூழ நின்று௿
கண்மலிந்த திருநெற்றி யுடையா ரொற்றை ௿
கதநாகங் கையுடையார் காணீ ரன்றே௿
பண்மலிந்த மொழியவரு மியானு மெல்லாம் ௿
பணிந்திறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல௿
மண்மலிந்த வயல்புடைசூழ் மாட வீதி ௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே
சிலைநவின்ற தொருகணையாற் புரமூன் றெய்த ௿
தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக்௿
கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக்௿
கூத்தாடி திரிதரு கூத்தர் நல்ல௿
கலைநவின்ற மறையவர்கள் காண காணக்௿
கடுவிடைமேற் பாரிடங்கள் சூழ காதல்௿
மலைமகளுங் கங்கையு தாமு மெல்லாம் ௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே
தீக்கூரு திருமேனி யொருபால் மற்றை ௿
யொருபாலும் அரியுருவ திகழ்ந்த செல்வர்௿
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல௿
அருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்௿
நோக்கா ரொருவிடத்து நூலு தோலுந்௿
துதைந்திலங்கு திருமேனி வெண்ணீ றாடி௿
வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி௿
வலம்புரமே புக்கிங்கே மன்னி னாரே
மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி ௿
மூவர் உருவாய முதல்வ ரிந்நாள்௿
கோவாத எரிகணையை சிலைமேற் கோத்த ௿
குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே௿
போவாரை கண்டடியேன் பின்பின் செல்லப்௿
புறக்கணித்து தம்முடைய பூதஞ் சூழ௿
வாவா வெனவுரைத்து மாயம் பேசி௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே
அனலொருகை யதுவேந்தி அதளி னோடே ௿
ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்௿
புனல்பொதிந்த சடைக்கற்றை பொன்போல் மேனி ௿
புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச்௿
சினவிடையை மேற்கொண்டு திருவா ரூருஞ்௿
சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல௿
மனமுருக வளைகழல மாயம் பேசி௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே
கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழ ௿
காலினாற் காய்ந்துகந்த காபா லியார்௿
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி௿
முனிகணங்கள் புடைசூழ முற்ற தோறுந்௿
தெறித்ததொரு வீணையரா செல்வார் தம்வா ௿
சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ௿
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே
பட்டுடுத்து பவளம்போல் மேனி யெல்லாம் ௿
பசுஞ்சாந்தங் கொண்டணிந்து பாதம் நோவ௿
இட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார ௿
கெவ்வூரீர் எம்பெருமா னென்றேன் ஆவி௿
விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி௿
வேறோர் பதிபுக போவார் போல௿
வட்டணைகள் படநடந்து மாயம் பேசி௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே
பல்லார் பயில்பழன பாசூ ரென்றும்௿
பழனம் பதிபழமை சொல்லி நின்றார்௿
நல்லார் நனிபள்ளி யின்று வைகி௿
நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார்௿
சொல்லார் ஒருவிடமா தோள்கை வீசிச்௿
சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கும்௿
மல்லார் வயல்புடைசூழ் மாடவீதி ௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே
பொங்கா டரவொன்று கையிற் கொண்டு௿
போர்வெண் மழுவேந்தி போகா நிற்பர்௿
தங்கா ரொருவிடத்து தம்மேல் ஆர்வ ௿
தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர்௿
எங்கே யிவர்செய்கை யொன்றொன் றொவ்வா௿
என்கண்ணில் நின்றகலா வேடங் காட்டி௿
மங்குல் மதிதவழும் மாட வீதி ௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே
செங்கண்மால் சிலைபிடித்து சேனை யோடுஞ் ௿
சேதுப தனஞ்செய்து சென்று புக்குப்௿
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற ௿
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ௿
அங்கொருதன் றிருவிரலால் இறையே யூன்றி௿
அடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்௿
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி ௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவெண்ணி திருத்தாண்டகம்௿ ௿
திருச்சிற்றம்பலம்
தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்௿
தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்௿
புண்டரிக தயனொடுமால் காணா வண்ணம் ௿
பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்௿
வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்௿
வானவர்க்காய் நஞ்சுண்ட மைந்த னாரும்௿
விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தாரும்௿
வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே
நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்௿
நெற்றிமே லொற்றைக்கண் நிறைவி தாரும்௿
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லாரும்௿
பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்௿
மருப்பனைய வெண்மதி கண்ணி யாரும்௿
வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்௿
விருப்புடைய அடியவர்தம் முள்ள தாரும்௿
வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே
கையுலாம் மூவிலைவே லேந்தி னாருங்௿
கரிகாட்டி லெரியாடுங் கடவு ளாரும்௿
பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்௿
பரவுவார் பாவங்கள் பாற்று வாருஞ்௿
செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த ௿
திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும்௿
மெய்யுலாம் வெண்ணீறு சண்ணி தாரும்௿
வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே
சடையேறு புனல்வைத்த சதுர னாருந்௿
தக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும்௿
உடையேறு புலியதள்மேல் நாகங் கட்டி ௿
உண்பலிக்கென் றூரூரி னுழிதர் வாரும்௿
மடையேறி கயல்பாய வயல்கள் சூழ்ந்த ௿
மயிலாடு துறையுறையும் மணாள னாரும்௿
விடையேறு வெல்கொடியெம் விமல னாரும்௿
வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே
மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி ௿
மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்௿
பண்ணிலங்கு பாடலோ டாட லாரும்௿
பருப்பதமும் பாசூரும் மன்னி னாருங்௿
கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்தி ௿
கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்௿
விண்ணிலங்கு வெண்மதி கண்ணி யாரும்௿
வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே
வீடுதனை மெய்யடியார கருள்செய் வாரும்௿
வேலைவிட முண்டிருண்ட கண்ட தாருங்௿
கூடலர்தம் மூவெயிலு மெரிசெய் தாருங்௿
குரைகழலாற் கூற்றுவனை குமைசெய் தாரும்௿
ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்௿
ஆலமர நீழலிரு தறஞ்சொன் னாரும்௿
வேடுவனாய் மேல்விசயற் கருள்செய் தாரும்௿
வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே
மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி௿
மடவா ளவளோடு மானொன் றேந்திச்௿
சிட்டிலங்கு வேடத்தா ராகி நாளுஞ்௿
சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங்௿
கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த ௿
காலன்றன் கால மறுப்பார் தாமும்௿
விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்௿
வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே
செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்௿
திருவால வாயுறையுஞ் செல்வ னாரும்௿
அஞ்சனக்கண் அரிவையொரு பாக தாரும்௿
ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்௿
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி ௿
மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்௿
வெஞ்சினத்த வேழமது வுரிசெய் தாரும்௿
வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே
வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்௿
வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்௿
களங்கொளவென் சிந்தையுள்ளே மன்னி னாருங்௿
கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்௿
உளங்குளிர அமுதூறி அண்ணி பாரும்௿
உத்தமராய் எத்திசையும் மன்னி னாரும்௿
விளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும்௿
வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே
பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி ௿
புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்௿
கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்௿
குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந்௿
தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்௿
திருவிரலா லடர்த்தவனு கருள்செய் தாரும்௿
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாக தாரும்௿
வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் வெண்ணிநாயகர்௿
தேவியார் அழகியநாயகியம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கற்குடி திருத்தாண்டகம்௿
௿
திருச்சிற்றம்பலம்
மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி ௿
முதலவனை திருவரையின் மூக்க பாம்பொன்௿
றார்த்தவனை அக்கரவம் ஆர மாக ௿
அணிந்தவனை பணிந்தடியா ரடைந்த வன்போ௿
டேத்தவனை இறுவரையிற் றேனை ஏனோர்க்௿
கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங்௿
காத்தவனை கற்குடியில் விழுமி யானை ௿
கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே
செய்யானை வெளியானை கரியான் றன்னைத்௿
திசைமுகனை திசையெட்டுஞ் செறிந்தான் றன்னை௿
ஐயானை நொய்யானை சீரி யானை௿
அணியானை சேயானை ஆனஞ் சாடும்௿
மெய்யானை பொய்யாது மில்லான் றன்னை௿
விடையானை சடையானை வெறித்த மான்கொள்௿
கையானை கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே
மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை௿
வயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டை௿
விண்ணதனி லொன்றை விரிக திரைத்௿
தண்மதியை தாரகைகள் தம்மின் மிக்க௿
எண்ணதனில் எழுத்தையே ழிசையை காமன் ௿
எழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்௿
கண்ணவனை கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே
நற்றவனை புற்றரவ நாணி னானை௿
நாணாது நகுதலையூண் நயந்தான் றன்னை௿
முற்றவனை மூவாத மேனி யானை௿
முந்நீரின் நஞ்சமுக துண்டான் றன்னைப்௿
பற்றவனை பற்றார்தம் பதிகள் செற்ற ௿
படையானை அடைவார்தம் பாவம் போக்கக்௿
கற்றவனை கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே
சங்கைதனை தவிர்த்தாண்ட தலைவன் றன்னைச்௿
சங்கரனை தழலுறுதாள் மழுவாள் தாங்கும்௿
அங்கையனை அங்கமணி ஆக தானை௿
ஆகத்தோர் பாகத்தே அமர வைத்த௿
மங்கையனை மதியொடுமா சுணமு தம்மின் ௿
மருவவிரி சடைமுடிமேல் வைத்த வானீர்க்௿
கங்கையனை கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே
பெண்ணவனை ஆணவனை பேடா னானைப்௿
பிறப்பிலியை இறப்பிலியை பேரா வாணி௿
விண்ணவனை விண்ணவர்க்கு மேலா னானை௿
வேதியனை வேதத்தின் கீதம் பாடும்௿
பண்ணவனை பண்ணில்வரு பயனா னானைப்௿
பாரவனை பாரில்வாழ் உயிர்க கெல்லாங்௿
கண்ணவனை கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே
பண்டானை பரந்தானை குவிந்தான் றன்னைப்௿
பாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம்௿
உண்டானை உமிழ்ந்தானை உடையான் றன்னை௿
ஒருவருந்தன் பெருமைதனை அறிய வொண்ணா௿
விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும் ௿
வெவ்வழலில் வெந்துபொடி யாகி வீழக்௿
கண்டானை கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே
வானவனை வானவர்க்கு மேலா னானை௿
வணங்குமடி யார்மனத்துள் மருவி புக்க௿
தேனவனை தேவர்தொழு கழலான் றன்னைச்௿
செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்௿
கோனவனை கொல்லைவிடை யேற்றி னானைக்௿
குழல்முழவம் இயம்பக்கூ தாட வல்ல௿
கானவனை கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே
கொலையானை யுரிபோர்த்த கொள்கை யானைக்௿
கோளரியை கூரம்பா வரைமேற் கோத்த௿
சிலையானை செம்மைதரு பொருளான் றன்னைத்௿
திரிபுரத்தோர் மூவர்க்கு செம்மை செய்த௿
தலையானை தத்துவங்க ளானான் றன்னைத்௿
தையலோர் பங்கினனை தன்கை யேந்து௿
கலையானை கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே
பொழிலானை பொழிலாரும் புன்கூ ரானைப்௿
புறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானை௿
எழிலானை இடைமருதி னிடங்கொண் டானை௿
ஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் றன்னை௿
அழலாடு மேனியனை அன்று சென்ற ௿
குன்றெடுத்த அரக்கன்றோள் நெரிய வூன்றுங்௿
கழலானை கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் முத்தீசர்௿
தேவியார் அஞ்சனாட்சியம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கன்றாப்பூர் திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா௿
மதிசூடி வானவர்கள் தங்க கெல்லாம்௿
நாதனே யென்றென்று பரவி நாளும் ௿
நைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து௿
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு௿
வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்௿
காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியை காண லாமே
விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி௿
வெளுத்தமைந்த கீளொடுகோ வணமு தற்றுச்௿
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ்௿
செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்௿
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்௿
சுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங்௿
கடிமலர்தூ தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியை காண லாமே
எவரேனு தாமாக விலாட திட்ட ௿
திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி௿
உவராதே அவரவரை கண்ட போது ௿
உகந்தடிமை திறநினைந்தங் குவந்து நோக்கி௿
இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி ௿
இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்௿
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியை காண லாமே
இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்ச ௿
திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு௿
விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு௿
மெய்யன்பு மிகப்பெய்து பொய்யை நீக்கித்௿
துலங்காமெய் வானவரை காத்து நஞ்சம் ௿
உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்௿
கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியை காண லாமே
விருத்தனே வேலைவிட முண்ட கண்டா௿
விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்க சூடும்௿
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தி௿
நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்௿
பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும் ௿
புலனைந்தும் அகத்தடக்கி புலம்பி நோக்கிக்௿
கருத்தினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியை காண லாமே
பொசியினால் மிடைந்துபுழு பொதிந்த போர்வை ௿
பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று௿
பசியினால் மீதூர பட்டே யீட்டிப்௿
பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்௿
வசியினா லகப்பட்டு வீழா முன்னம்௿
வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்௿
கசிவினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியை காண லாமே
ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு ௿
ஆவியார் போவதுமே அகத்தார் கூடி௿
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி௿
மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்௿
ஐயனார காளாகி அன்பு மிக்கு௿
அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்௿
கையினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியை காண லாமே
திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்௿
திகையாதே சிவாயநம என்னுஞ் சிந்தைச்௿
சுருதிதனை துயக்கறுத்து துன்ப வெள்ளக்௿
கடல்நீந்தி கரையேறுங் கருத்தே மிக்குப்௿
பருதிதனை பற்பறித்த பாவ நாசா௿
பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்௿
கருதிமிக தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியை காண லாமே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தா யென்றுங்௿
கூற்றுதைத்த குரைகழற்சே வடியா யென்றுந்௿
தனஞ்சயற்கு பாசுபத மீந்தா யென்றுந்௿
தசக்கிரிவன் மலையெடுக்க விரலா லூன்றி௿
முனிந்தவன்றன் சிரம்பத்து தாளு தோளும் ௿
முரணழித்தி டருள்கொடுத்த மூர்த்தி யென்றுங்௿
கனிந்துமிக தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியை காண லாமே
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் நடுதறிநன்னாயகர்௿
தேவியார் மாதுமைநாயகியம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவானைக்கா திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்௿
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்௿
செத்தால்வ துதவுவார் ஒருவ ரில்லை௿
சிறுவிறகால் தீமூட்டி செல்லா நிற்பர்௿
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னி ௿
திருவானை காவுடைய செல்வா என்றன்௿
அத்தாவுன் பொற்பாத மடை பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே
ஊனாகி உயிராகி யதனுள் நின்ற ௿
உணர்வாகி பிறவனைத்தும் நீயாய் நின்றாய்௿
நானேதும் அறியாமே யென்னுள் வந்து௿
நல்லனவு தீயனவுங் காட்டா நின்றாய்௿
தேனாருங் கொன்றையனே நின்றி யூராய்௿
திருவானை காவிலுறை சிவனே ஞானம்௿
ஆனாயுன் பொற்பாத மடை பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே
ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான்௿
ஒன்றலா தவத்தாரோ டுடனே நின்று௿
துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன் ௿
திறமறந்து திரிவேனை காத்து நீவந்௿
தெப்பாலும் நுண்ணுணர்வே யாக்கி யென்னை ௿
ஆண்டவனே எழிலானை காவா வானோர்௿
அப்பாவுன் பொற்பாத மடை பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே
நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா௿
நிறைமதியஞ் சடைவைத்தாய் அடையா துன்பால்௿
முனைத்தவர்கள் புரமூன்று மெரி செற்றாய்௿
முன்னானை தோல்போர்த்த முதல்வா வென்றுங்௿
கனைத்துவரும் எருதேறுங் காள கண்டா௿
கயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன்௿
அனைத்துலகும் ஆள்வானே ஆனை காவா௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே
இம்மா பிறப்பென்னுங் கடலா துன்பத்௿
திடைச்சுழிப்ப டிளைப்பேனை இளையா வண்ணங்௿
கைம்மான மனத்துதவி கருணை செய்து௿
காதலரு ளவைவைத்தாய் காண நில்லாய்௿
வெம்மான மதகரியி னுரிவை போர்த்த ௿
வேதியனே தென்னானை காவுள் மேய௿
அம்மான்நின் பொற்பாத மடை பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே
உரையாரும் புகழானே ஒற்றி யூராய்௿
கச்சியே கம்பனே காரோ ணத்தாய்௿
விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்௿
மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்௿
திரையாரும் புனற்பொன்னி தீர்த்த மல்கு ௿
திருவானை காவிலுறை தேனே வானோர்௿
அரையாவுன் பொற்பாத மடை பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே
மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்௿
மான்மறியு மாமழுவும் அனலு மேந்துங்௿
கையானே காலனுடல் மாள செற்ற ௿
கங்காளா முன்கோளும் விளைவு மானாய்௿
செய்யானே திருமேனி யரியாய் தேவர்௿
குலக்கொழுந்தே தென்னானை காவுள் மேய௿
ஐயாவுன் பொற்பாத மடை பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே
இலையாருஞ் சூலத்தாய் எண்தோ ளானே௿
எவ்விடத்தும் நீயலா தில்லை யென்று௿
தலையார கும்பிடுவார் தன்மை யானே௿
தழல்மடுத்த மாமேரு கையில் வைத்த௿
சிலையானே திருவானை காவுள் மேய ௿
தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்௿
அலையாதே நின்னடியே அடை பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே
விண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத௿
நெறியானே எறிகடலின் நஞ்ச முண்டாய்௿
எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான்௿
என்றென்றே நாவினிலெ பொழுதும் உன்னிக்௿
கண்ணார கண்டிரு களித்தெ போதுங்௿
கடிபொழில்சூழ் தென்னானை காவுள் மேய௿
அண்ணாநின் பொற்பாத மடை பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே
கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக்௿
குறட்பூதங் கூத்தாட நீயு மாடி௿
வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா௿
மதிலானை காவுளாய் மாகா ளத்தாய்௿
படியேயுங் கடலிலங்கை கோமான் றன்னை ௿
பருமுடியு திரள்தோளு மடர்த்து கந்த௿
அடியேவ தடைந்தடிமை யாக பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவானைக்கா திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
முன்னானை தோல்போர்த்த மூர்த்தி தன்னை௿
மூவாத சிந்தையே மனமே வாக்கே௿
தன்னானை யாப்பண்ணி யேறி னானைச்௿
சார்தற் கரியானை தாதை தன்னை௿
என்னானை கன்றினையென் ஈசன் றன்னை௿
எறிநீர திரையுகளுங் காவி ரிசூழ்௿
தென்னானை காவானை தேனை பாலைச்௿
செழுநீர திரளைச்சென் றாடி னேனே
மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை௿
வளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் னுள்ளத்௿
திருந்தானை இறப்பிலியை பிறப்பி லானை௿
இமையவர்தம் பெருமானை உமையா ளஞ்சக்௿
கருந்தான மதகளிற்றி னுரிபோர தானைக்௿
கனமழுவா படையானை பலிகொண் டூரூர்௿
திரிந்தானை திருவானை காவு ளானைச்௿
செழுநீர திரளைச்சென் றாடி னேனே
முற்றாத வெண்டிங்க கண்ணி யானை௿
முந்நீர்நஞ் சுண்டிமையோர கமுதம் நல்கும்௿
உற்றானை பல்லுயிர்க்கு துணையா னானை௿
ஓங்கார துட்பொருளை உலக மெல்லாம்௿
பெற்றானை பின்னிறக்கஞ் செய்வான் றன்னைப்௿
பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்௿
செற்றானை திருவானை காவு ளானைச்௿
செழுநீர திரளைச்சென் றாடி னேனே
காராரு மணிமிடற்றெம் பெருமான் றன்னைக்௿
காதில்வெண் குழையானை கமழ்பூங் கொன்றைத்௿
தாரானை புலியதளி னாடை யானைத்௿
தானன்றி வேறொன்று மில்லா ஞானப்௿
பேரானை மணியார மார்பி னானைப்௿
பிஞ்ஞகனை தெய்வநான் மறைகள் பூண்ட௿
தேரானை திருவானை காவு ளானைச்௿
செழுநீர திரளைச்சென் றாடி னேனே
பொய்யேது மில்லாத மெய்யன் றன்னைப்௿
புண்ணியனை நண்ணாதார் புரநீ றாக௿
எய்தானை செய்தவத்தின் மிக்கான் றன்னை௿
ஏறமரும் பெருமானை இடமா னேந்து௿
கையானை கங்காள வேட தானைக்௿
கட்டங கொடியானை கனல்போல் மேனிச்௿
செய்யானை திருவானை காவு ளானைச்௿
செழுநீர திரளைச்சென் றாடி னேனே
கலையானை பாசுபத பாணி யானைக்௿
கனவயிர திரளானை மணிமா ணிக்க௿
மலையானை யென்றலையி னுச்சி யானை௿
வார்தருபுன் சடையானை மயான மன்னும்௿
நிலையானை வரியரவு நாணா கோத்து ௿
நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்௿
சிலையானை திருவானை காவு ளானைச்௿
செழுநீர திரளைச்சென் றாடி னேனே
ஆதியனை எறிமணியின் ஓசை யானை௿
அண்டத்தார கறிவொண்ணா தப்பால் மிக்க௿
சோதியனை தூமறையின் பொருளான் றன்னைச்௿
சுரும்பமரும் மலர்க்கொன்றை தொன்னூல் பூண்ட௿
வேதியனை அறமுரைத்த பட்டன் றன்னை௿
விளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்௿
சேதியனை திருவானை காவு ளானைச்௿
செழுநீர திரளைச்சென் றாடி னேனே
மகிழ்ந்தானை கச்சியே கம்பன் றன்னை௿
மறவாது கழல்நினைந்து வாழ்த்தி யேத்திப்௿
புகழ்ந்தாரை பொன்னுலகம் ஆள்வி பானைப்௿
பூதகண படையானை புறங்கா டாடல்௿
உகந்தானை பிச்சையே யிச்சி பானை௿
ஒண்பவள திரளையென் னுள்ள துள்ளே௿
திகழ்ந்தானை திருவானை காவு ளானைச்௿
செழுநீர திரளைச்சென் றாடி னேனே
நசையானை நால்வே தப்பா லானை௿
நல்குரவு தீப்பிணிநோய் காப்பான் றன்னை௿
இசையானை எண்ணிறந்த குணத்தான் றன்னை௿
இடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்௿
மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும்௿
மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்௿
திசையானை திருவானை காவு ளானைச்௿
செழுநீர திரளைச்சென் றாடி னேனே
பார்த்தானை காமனுடல் பொடியாய் வீழப்௿
பண்டயன்மா லிருவர்க்கும் அறியா வண்ணஞ்௿
சீர்த்தானை செந்தழல்போ லுருவி னானைத்௿
தேவர்கள்தம் பெருமானை திறமுன் னாதே௿
ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன் ௿
ஆண்மையெலாங் கெடுத்தவன்றன் இடர போதே௿
தீர்த்தானை திருவானை காவு ளானைச்௿
செழுநீர திரளைச்சென் றாடி னேனே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவேகம்பம் திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
கூற்றுவன்காண் கூற்றுவனை குமைத்த கோன்காண்௿
குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்௿
காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்௿
கனபவள செம்மேனி கலந்த வெள்ளை௿
நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்௿
நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்௿
ஏற்றவன்காண் எழிலாறும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும்௿
பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்௿
துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண்௿
தோற்ற நிலையிறுதி பொருளாய் வந்த௿
மருந்தவன்காண் வையங்கள் பொறைதீர பான்காண்௿
மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா௿
திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
நீற்றவன்காண் நீராகி தீயா னான்காண்௿
நிறைமழுவு தமருகமும் எரியுங் கையில்௿
தோற்றவன்காண் தோற்றக்கே டில்லா தான்காண்௿
துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம்௿
போற்றவன்காண் புகழ்கள்தமை படைத்தான் றான்காண்௿
பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை௿
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
தாயவன்காண் உலகிற்கு தன்னொ பில்லா ௿
தத்துவன்காண் மலைமங்கை பங்கா வென்பார்௿
வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர பான்காண்௿
வானவர்க்கு தானவர்க்கும் மண்ணு ளோர்க்குஞ்௿
சேயவன்காண் நினைவார்க்கு சித்த மார ௿
திருவடியே உள்கிநினை தெழுவா ருள்ளம்௿
ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
அடுத்தானை யுரித்தான் காண் ௿
௿
௿
இச்செய்யுளில் எஞ்சிய பாகம் சிதைந்து போயிற்று
அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால்௿
ஐயாறும் இடைமருதும் ஆள்வான் றான்காண்௿
பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள் ௿
பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்௿
சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்று ௿
தூயமா முனிவர்க்கா பார்மேல் நிற்க௿
இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
அசைந்தவன்காண் நடமாடி பாடல் பேணி௿
அழல்வண்ண தில்லடியும் முடியு தேடப்௿
பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும் ௿
பான்மையன்காண் பரவிநினை தெழுவார் தம்பால்௿
கசிந்தவன்காண் கரியினுரி போர்த்தான் றான்காண்௿
கடலில்விட முண்டமரர கமுத மீய௿
இசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
முடித்தவன்காண் வன்கூற்றை சீற்ற தீயால் ௿
வலியார்தம் புரமூன்றும் வேவ சாபம்௿
பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேட தான்காண்௿
பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி௿
முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண்௿
முழங்கியுரு மெனத்தோன்று மழையாய் மின்னி௿
இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
வருந்தான்காண் மனமுருகி நினையா தார்க்கு ௿
வஞ்சகன்காண் அஞ்செழுத்து நினைவார கென்றும்௿
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்௿
வானகமும் மண்ணகமு மற்று மாகிப்௿
பரந்தவன்காண் படர்சடையெ டுடையான் றான்காண்௿
பங்கயத்தோன் றன்சிரத்தை யேந்தி யூரூர்௿
இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
வெம்மான உழுவையத ளுரிபோர தான்காண்௿
வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பி௿
விம்மாநின் றழுவார்க களிப்பான் றான்காண்௿
விடையேறி திரிவான்காண் நடஞ்செய் பூதத்௿
தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண்௿
அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்ற௿
எம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட௿
ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர கங்கை௿
செறுத்தான்காண் தேவர்க்கு தேவன் றான்காண்௿
திசையனைத்து தொழுதேத்த கலைமான் கையிற்௿
பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து ௿
பொருகயிலை யெடுத்தவன்றன் முடிதோள் நாலஞ்௿
சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவேகம்பம் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க௿
ஓங்கார தொருவன்காண் உணர்மெய்ஞ் ஞானம்௿
விரித்தவன்காண் விரித்தநால் வே தான்காண்௿
வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே௿
தெரித்தவன்காண் சில்லுருவா தோன்றி யெங்குந்௿
திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்௿
எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
நேசன்காண் நேசர்க்கு நேச தன்பால் ௿
இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்௿
கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே ௿
குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை௿
வாசன்காண் மலைமங்கை பங்கன் றான்காண்௿
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும்௿
ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும் ௿
புண்ணியன்காண் நண்ணியபுண் டரிக போதின்௿
மறையவன்காண் மறையவனை பயந்தோன் றான்காண்௿
வார்சடைமா சுணமணிந்து வளரும் பிள்ளைப்௿
பிறையவன்காண் பிறைதிகழும் எயிற்று பேழ்வா ௿
பேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும்௿
இறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வ தான்காண்௿
பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற௿
சீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ்௿
செறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தை செய்யும்௿
பேரவன்காண் பேராயி ரங்க ளேத்தும் ௿
பெரியவன்காண் அரியவன்காண் பெற்ற மூர்ந்த௿
ஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண்௿
பேதையேன் வாதையுறு பிணியை தீர்க்கும்௿
மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்௿
வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்௿
அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம் ௿
அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சி தேத்த௿
இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்க மாறும்௿
அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை௿
காய்ந்தவன்காண் கண்ணழலாற் காம னாகங்௿
கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்௿
பாய்ந்தவன்காண் பண்டுபல சருகாற் பந்தர் ௿
பயின்றநூற் சிலந்திக்கு பாராள் செல்வம்௿
ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
உமையவளை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்௿
உகந்தொலிநீர கங்கைசடை யொழுக்கி னான்காண்௿
இமய வடகயிலை செல்வன் றான்காண்௿
இல்பலிக்கு சென்றுழலும் நல்கூர தான்காண்௿
சமயமவை ஆறினுக்கு தலைவன் றான்காண்௿
தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய௿
இமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் றான்காண்௿
தூமலர்ச்சே வடியிணையெஞ் சோதி யான்காண்௿
உண்டுபடு விடங்கண்ட தொடுக்கி னான்காண்௿
ஒலிகடலி லமுதமரர குதவி னான்காண்௿
வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண்௿
வாண்மதியாய் நாண்மீனு மாயி னான்காண்௿
எண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
முந்தைகாண் மூவரினு முதலா னான்காண்௿
மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்௿
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்கு ௿
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்௿
சிந்தைகாண் சிந்தாத சி தார்க்கு ௿
சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்௿
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் றான்காண்௿
பூதகண நாதன்காண் புலித்தோ லாடை௿
தன்னிசைய வைத்தவெழி லரவி னான்காண்௿
சங்கவெண் குழைக்காதிற் சதுரன் றான்காண்௿
மின்னிசையும் வெள்ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை ௿
எடுக்கவடி அடர்ப்பமீண் டவன்றன் வாயில்௿
இன்னிசைகே டிலங்கொளிவாள் ஈந்தோன் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ண தானே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநாகேச்சரம் திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்௿
தலையவனை மலையவனை உலக மெல்லாம்௿
ஆயவனை சேயவனை அணியான் றன்னை௿
அழலவனை நிழலவனை அறிய வொண்ணா௿
மாயவனை மறையவனை மறையோர் தங்கள் ௿
மந்திரனை தந்திரனை வளரா நின்ற௿
தீயவனை திருநாகே சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்க சேரா தாரே
உரித்தானை மதவேழ தன்னை மின்னார் ௿
ஒளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந்௿
தரித்தானை தரியலர்தம் புரமெய் தானைத்௿
தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம்௿
அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர ௿
கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந்௿
தெரித்தானை திருநாகே சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்க சேரா தாரே
காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக்௿
காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்௿
வாரானை மதிப்பவர்தம் மனத்து ளனை௿
மற்றொருவர் தன்னொப்பா ரொப்பி லாத௿
ஏரானை இமையவர்தம் பெருமான் றன்னை௿
இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்க௿
சீரானை திருநாகே சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்க சேரா தாரே
தலையானை எவ்வுலகு தானா னானைத்௿
தன்னுருவம் யாவர்க்கு மறிய வொண்ணா௿
நிலையானை நேசர்க்கு நேசன் றன்னை௿
நீள்வான முகடதனை தாங்கி நின்ற௿
மலையானை வரியரவு நாணா கோத்து ௿
வல்லசுரர் புரமூன்று மடிய வெய்த௿
சிலையானை திருநாகே சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்க சேரா தாரே
மெய்யானை தன்பக்கல் விரும்பு வார்க்கு௿
விரும்பாத அரும்பாவி யவர்க கென்றும்௿
பொய்யானை புறங்காட்டி லாட லானைப்௿
பொன்பொலிந்த சடையானை பொடிகொள் பூதிப்௿
பையானை பையரவ மசைத்தான் றன்னைப்௿
பரந்தானை பவளமால் வரைபோல் மேனிச்௿
செய்யானை திருநாகே சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்க சேரா தாரே
துறந்தானை அறம்புரியா துரிசர் தம்மைத்௿
தோத்திரங்கள் பலசொல்லி வானோ ரேத்த௿
நிறைந்தானை நீர்நிலந்தீ வெளிகாற் றாகி௿
நிற்பனவும் நடப்பனவு மாயி னானை௿
மறந்தானை தன்னினையா வஞ்சர் தம்மை௿
அஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர கென்றுஞ்௿
சிறந்தானை திருநாகே சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்க சேரா தாரே
மறையானை மால்விடையொன் றூர்தி யானை௿
மால்கடல்நஞ் சுண்டானை வானோர் தங்கள்௿
இறையானை என்பிறவி துயர்தீர பானை௿
இன்னமுதை மன்னியசீர் ஏகம் பத்தில்௿
உறைவானை ஒருவருமீங் கறியா வண்ணம் ௿
என்னுள்ள துள்ளே யொளித்து வைத்த௿
சிறையானை திருநாகே சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்க சேரா தாரே
எய்தானை புரமூன்றும் இமைக்கும் போதில்௿
இருவிசும்பில் வருபுனலை திருவார் சென்னிப்௿
பெய்தானை பிறப்பிலியை அறத்தில் நில்லா ௿
பிரமன்றன் சிரமொன்றை கரமொன் றினாற்௿
கொய்தானை கூத்தாட வல்லான் றன்னைக்௿
குறியிலா கொடியேனை அடியே னாகச்௿
செய்தானை திருநாகே சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்க சேரா தாரே
அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை௿
வான்பயிரை அப்பயிரின் வாட்ட தீர்க்குந்௿
துளியானை அயன்மாலு தேடி காணா ௿
சுடரானை துரிசற தொண்டு பட்டார்க்௿
கெளியானை யாவர்க்கு மரியான் றன்னை௿
இன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறற்௿
தெளியானை திருநாகே சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்க சேரா தாரே
சீர்த்தானை உலகேழுஞ் சிறந்து போற்ற ௿
சிறந்தானை நிறைந்தோங்கு செல்வன் றன்னைப்௿
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப்௿
பனிமதியஞ் சடையானை புனிதன் றன்னை௿
ஆர்த்தோடி மலையெடுத்த அரக்க னஞ்ச ௿
அருவிரலா லடர்த்தானை அடைந்தோர் பாவந்௿
தீர்த்தானை திருநாகே சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்க சேரா தாரே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கீழ்வேளூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
ஆளான அடியவர்க கன்பன் றன்னை௿
ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க௿
தாளானை தன்னொப்பா ரில்லா தானைச்௿
சந்தனமுங் குங்குமமுஞ் சாந்து தோய்ந்த௿
தோளானை தோளாத முத்தொ பானைத்௿
தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த௿
கீளானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே
சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்௿
தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை௿
நற்பான்மை அறியாத நாயி னேனை௿
நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்௿
பற்பாவும் வாயார பாடி யாடிப்௿
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்கக்௿
கிற்பானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே
அளைவாயில் அரவசைத்த அழகன் றன்னை௿
ஆதரிக்கு மடியவர்க கன்பே யென்றும்௿
விளைவானை மெய்ஞ்ஞான பொருளா னானை௿
வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்௿
குளைவானை அல்லாதார குளையா தானை௿
உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு௿
கிளைவானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே
தாட்பாவு கமலமலர் தயங்கு வானை ௿
தலையறுத்து மாவிரத தரித்தான் றன்னைக்௿
கோட்பாவு நாளெல்லா மானான் றன்னைக்௿
கொடுவினையேன் கொடுநர குழியில் நின்றால்௿
மீட்பானை வித்துருவின் கொத்தொ பானை௿
வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை௿
கேட்பானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே
நல்லானை நரைவிடையொன் றூர்தி யானை௿
நால்வே தாறங்கம் நணுக மாட்டாச்௿
சொல்லானை சுடர்மூன்று மானான் றன்னைத்௿
தொண்டாகி பணிவார்க கணியான் றன்னை௿
வில்லானை மெல்லியலோர் பங்கன் றன்னை௿
மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க௿
கில்லானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே
சுழித்தானை கங்கைமலர் வன்னி கொன்றை௿
தூமத்தம் வாளரவஞ் சூடி னானை௿
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ௿
ஆலால நஞ்சதனை யுண்டான் றன்னை௿
விழித்தானை காமனுடல் பொடியாய் வீழ௿
மெல்லியலோர் பங்கனைமுன் வேனி லானைக்௿
கிழித்தானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே
உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற ௿
ஓங்கார துட்பொருள்தா னாயி னானை௿
விளரொளியை விடுசுடர்கள் இரண்டு மொன்றும் ௿
விண்ணொடுமண் ஆகாச மாயி னானை௿
வளரொளியை மரகதத்தி னுருவி னானை௿
வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தி யேத்துங்௿
கிளரொளியை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே
தடுத்தானை காலனை காலாற் பொன்றத்௿
தன்னடைந்த மாணிக்கன் றருள்செய் தானை௿
உடுத்தானை புலியதளோ டக்கும் பாம்பும்௿
உள்குவார் உள்ளத்தி னுள்ளான் றன்னை௿
மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க௿
வானவர்கள் கூடியஅ தக்கன் வேள்வி௿
கெடுத்தானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே
மாண்டார் எலும்பணிந்த வாழ்க்கை யானை௿
மயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்பு௿
பூண்டானை புறங்காட்டி லாட லானைப்௿
போகாதென் னுட்புகு திடங்கொண் டென்னை௿
ஆண்டானை அறிவரிய சிந்தை யானை௿
அசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங்௿
கீண்டானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே
முறிப்பான பேசிமலை யெடுத்தான் றானும் ௿
முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்து பாடப்௿
பறிப்பான்கை சிற்றரிவாள் நீட்டி னானைப்௿
பாவியேன் நெஞ்சகத்தே பாத போது௿
பொறித்தானை புரமூன்று மெரிசெய் தானைப்௿
பொய்யர்களை பொய்செய்து போது போக்கிக்௿
கிறிப்பானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் கேடிலியப்பர்௿ தேவியார் வனமுலைநாயகியம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமுதுகுன்றம் திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
கருமணியை கனகத்தின் குன்றொ பானைக்௿
கருதுவார காற்ற எளியான் றன்னைக்௿
குருமணையை கோளரவ மாட்டு வானைக்௿
கொல்வேங்கை யதளனைக்கோ வணவன் றன்னை௿
அருமணியை அடைந்தவர்க கமுதொ பானை௿
ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க௿
திருமணியை திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே
காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக்௿
காபாலி கட்டங்க மேந்தி னானைப்௿
பாரொளியை விண்ணொளியை பாதாள தானைப்௿
பான்மதியஞ் சூடியோர் பண்பன் றன்னைப்௿
பேரொளியை பெண்பாகம் வைத்தான் றன்னைப்௿
பேணுவார் தம்வினையை பேணி வாங்குஞ்௿
சீரொளியை திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே
எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை௿
ஏறூர்ந்த பெம்மானை யெம்மா னென்று௿
பத்தனா பணிந்தடியேன் றன்னை பன்னாட்௿
பாமாலை பாட பயில்வி தானை௿
முத்தினை யென்மணியை மாணி கத்தை௿
முளைத்தெழுந்த செம்பவள கொழுந்தொ பானைச்௿
சித்தனையென் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே
ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை௿
உத்தமனை பத்தர்மனம் குடிகொண் டானைக்௿
கான்றிரிந்து காண்டீப மேந்தி னானைக்௿
கார்மேக மிடற்றானை கனலை காற்றைத்௿
தான்றெரிந்தங் கடியேனை யாளா கொண்டு ௿
தன்னுடைய திருவடியென் றலைமேல் வைத்த௿
தீன்கரும்பை திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே
தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித்௿
தாமரையான் நான்முகனு தானே யாகி௿
மிக்கதொரு தீவளிநீர் ஆகா சமாய்௿
மேலுலகு கப்பாலாய் இப்பா லானை௿
அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க்௿
கங்கங்கே அறுசமய மாகி நின்ற௿
திக்கினையென் றிருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே
புகழொளியை புரமெரித்த புனிதன் றன்னைப்௿
பொன்பொதிந்த மேனியனை புராணன் றன்னை௿
விழவொலியும் விண்ணொலியு மானான் றன்னை ௿
வெண்காடு மேவிய விகிர்தன் றன்னைக்௿
கழலொலியுங் கைவளையு மார்ப்ப வார்ப்பக்௿
கடைதோறு மிடுபிச்சை கென்று செல்லுந்௿
திகழொளியை திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே
போர்த்தானை யின்னுரிதோல் பொங்க பொங்கப்௿
புலியதளே உடையாக திரிவான் றன்னைக்௿
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றுங்௿
காலனையுங் குரைகழலாற் காய்ந்தான் றன்னை௿
மாத்தாடி பத்தராய் வணங்கு தொண்டர்௿
வல்வினைவே ரறும்வண்ணம் மருந்து மாகித்௿
தீர்த்தானை திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே
துறவாதே யாக்கை துறந்தான் றன்னைச்௿
சோதி முழுமுதலாய் நின்றான் றன்னைப்௿
பிறவாதே எவ்வுயிர்க்கு தானே யாகிப்௿
பெண்ணினோ டாணுருவாய் நின்றான் றன்னை௿
மறவாதே தன்றிறமே வாழ்த்து தொண்டர்௿
மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற௿
திறலானை திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே
பொற்றூணை புலால்நாறு கபால மேந்திப்௿
புவலோக மெல்லா முழித தானை௿
முற்றாத வெண்டிங்க கண்ணி யானை௿
முழுமுதலாய் மூவுலகும் முடிவொன் றில்லாக்௿
கற்றூணை காளத்தி மலையான் றன்னைக்௿
கருதாதார் புரமூன்று மெரிய அம்பாற்௿
செற்றானை திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே
இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றி௿
எழுநரம்பின் இசைபாட லினிது கேட்டுப்௿
புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான் றன்னைப்௿
புண்ணியனை விண்ணவர்கள் நிதி தன்னை௿
மகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்து௿
வளர்மதியஞ் சடைவைத்து மாலோர் பாகந்௿
திகழ்ந்தானை திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே
௿
இத்தலம் நடுநாட்டிலுள்ளது இதுவே விருத்தாசலம்௿
சுவாமிபெயர் பழமலைநாதர்௿
தேவியார் பெரியநாயகியம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பள்ளியின்முக்கூடல் திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
ஆராத இன்னமுதை அம்மான் றன்னை௿
அயனொடுமா லறியாத ஆதி யானைத்௿
தாராரும் மலர்க்கொன்றை சடையான் றன்னைச்௿
சங்கரனை தன்னொப்பா ரில்லா தானை௿
நீரானை காற்றானை தீயா னானை௿
நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த௿
பாரானை பள்ளியின்மு கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே
விடையானை விண்ணவர்கள் எண்ண தானை௿
வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச்௿
சடையானை சாமம்போற் கண்ட தானைத்௿
தத்துவனை தன்னொப்பா ரில்லா தானை௿
அடையாதார் மும்மதிலு தீயில் மூழ்க௿
அடுகணைகோ தெய்தானை அயில்கொள் சூலப்௿
படையானை பள்ளியின்மு கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே
பூதியனை பொன்வரையே போல்வான் றன்னைப்௿
புரிசடைமேற் புனல்கரந்த புனிதன் றன்னை௿
வேதியனை வெண்காடு மேயான் றன்னை௿
வெள்ளேற்றின் மேலானை விண்ணோர கெல்லாம்௿
ஆதியனை ஆதிரைநன் னாளான் றன்னை௿
அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்௿
பாதியனை பள்ளியின்மு கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே
போர்த்தானை ஆனையின்றோல் புரங்கள் மூன்றும்௿
பொடியாக எய்தானை புனிதன் றன்னை௿
வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் றன்னை௿
மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந்௿
தீர்த்தானை தென்றிசைக்கே காமன் செல்லச்௿
சிறிதளவில் அவனுடலம் பொடியா வங்கே௿
பார்த்தானை பள்ளியின்மு கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே
அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்௿
அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங்௿
கடிந்தானை கார்முகில்போற் கண்ட தானைக்௿
கடுஞ்சினத்தோன் றன்னுடலை நேமி யாலே௿
தடிந்தானை தன்னொப்பா ரில்லா தானைத்௿
தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சிற்௿
படிந்தானை பள்ளியின்மு கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே
கரந்தானை செஞ்சடைமேற் கங்கை வெள்ளங்௿
கனலாடு திருமேனி கமல தோன்றன்௿
சிரந்தாங்கு கையானை தேவ தேவைத்௿
திகழொளியை தன்னடியே சிந்தை செய்வார்௿
வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய்௿
மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப்௿
பரந்தானை பள்ளியின்மு கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே
நதியாருஞ் சடையானை நல்லூ ரானை௿
நள்ளாற்றின் மேயானை நல்ல தானை௿
மதுவாரும் பொழிற்புடைசூழ் வாய்மூ ரானை௿
மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை௿
நிதியாளன் றோழனை நீடு ரானை௿
நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும்௿
பதியானை பள்ளியின்மு கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே
நற்றவனை நான்மறைக ளாயி னானை௿
நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்௿
செற்றவனை செஞ்சடைமேற் றிங்கள் சூடுந்௿
திருவாரூர திருமூல தான மேய௿
கொற்றவனை கூரரவம் பூண்டான் றன்னைக்௿
குறைந்தடைந்து தன்றிறமே கொண்டார கென்றும்௿
பற்றவனை பள்ளியின்மு கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே
ஊனவனை உடலவனை உயிரா னானை௿
உலகேழு மானானை உம்பர் கோவை௿
வானவனை மதிசூடும் வளவி யானை௿
மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற௿
கானவனை கயிலாய மலையு ளானைக்௿
கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே௿
பானவனை பள்ளியின்மு கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே
தடுத்தானை தான்முனிந்து தன்றோள் கொட்டித்௿
தடவரையை இருபதுதோள் தலையி னாலும்௿
எடுத்தானை தாள்விரலால் மாள வூன்றி௿
எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்௿
கொடுத்தானை பேரோடுங் கூர்வாள் தன்னைக்௿
குரை கழலாற் கூற்றுவனை மாள வன்று௿
படுத்தானை பள்ளியின்மு கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் முக்கோணவீசுவரர்௿ தேவியார் மைமேவுங்கண்ணியம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

க்ஷேத்திரக்கோவை திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
தில்லை சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி௿
தேவன் குடிசிரா பள்ளி தெங்கூர்௿
கொல்லி குளிரறை பள்ளி கோவல்௿
வீரட்டங் கோகரணங் கோடி காவும்௿
முல்லை புறவம் முருகன் பூண்டி௿
முழையூர் பழையாறை சத்தி முற்றங்௿
கல்லிற் றிகழ்சீரார் காள தியுங்௿
கயிலாய நாதனையே காண லாமே
ஆரூர்மூ லத்தானம் ஆனை காவும்௿
ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்௿
பேரூர் பிரமபுரம் பேரா வூரும்௿
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்௿
கூரார் குறுக்கைவீ ரட்டா னமுங்௿
கோட்டூர் குடமூக்கு கோழம் பமுங்௿
காரார் கழுக்குன்றுங் கான பேருங்௿
கயிலாய நாதனையே காண லாமே
இடைமரு தீங்கோ யிராமே சுரம்௿
இன்னம்பர் ஏரிடவை பேறூர்௿
சடைமுடி சாலை குடித களூர்௿
தலையாலங் காடு தலைச்சங் காடு௿
கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்௿
கோத்திட்டை கோட்டாறு கோட்டு காடு௿
கடைமுடி கானூர் கடம்ப துறை௿
கயிலாய நாதனையே காண லாமே
எச்சில் இளமர் ஏம நல்லூர்௿
இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி௿
அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர்௿
ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறைக்௿
கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக்௿
கோயில் கரவீரங் காட்டு பள்ளி௿
கச்சி பலதளியும் ஏகம் பத்துங்௿
கயிலாய நாதனையே காண லாமே
கொடுங்கோளூர் அஞ்சை களஞ்செங் குன்றூர்௿
கொங்கணங் குன்றியூர் குரக்கு காவும்௿
நெடுங்களம் நன்னிலம் நெல்லி காவும்௿
நின்றியூர் நீடூர் நியம நல்லூர்௿
இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்௿
எறும்பியூர் ஏராரும் ஏம கூடங்௿
கடம்பை யிளங்கோயில் தன்னி லுள்ளுங்௿
கயிலாய நாதனையே காண லாமே
மண்ணி படிக்கரை வாழ்கொளி புத்தூர்௿
வக்கரை மந்தாரம் வார ணாசி௿
வெண்ணி விளத்தொட்டி வேள்வி குடி௿
விளமர் விராடபுரம் வேட்க ளத்தும்௿
பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்௿
பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்௿
கண்ணை களர்க்காறை கழிப்பா லையுங்௿
கயிலாய நாதனையே காண லாமே
வீழி மிழலைவெண் காடு வேங்கூர்௿
வேதி குடிவிசய மங்கை வியலூர்௿
ஆழியக தியான்பள்ளி அண்ணா மலை௿
ஆலங் காடும் அரைதை பெரும்௿
பாழி பழனம்பன தாள்பா தாளம்௿
பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்கா டூர்தண்௿
காழி கடல்நாகை காரோ ணத்துங்௿
கயிலாய நாதனையே காண லாமே
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்௿
உரித்திர கோடி மறைக்கா டுள்ளும்௿
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்௿
வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்௿
வெஞ்சமா கூடல்மீ யச்சூர் வைகா௿
வேதிச்சுரம் வீவிசுரம் வொற்றி யூருங்௿
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சா கையுங்௿
கயிலாய நாதனையே காண லாமே
திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி௿
தேவூர் சிரபுரஞ்சிற் றேமஞ் சேறை௿
கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல்௿
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு௿
அண்டர் தொழுமதிகை வீர டானம்௿
ஐயா றசோகந்தி ஆமா தூருங்௿
கண்டியூர் வீரட்டங் கருகா வூருங்௿
கயிலாய நாதனையே காண லாமே
நறையூரிற் சித்தீ சரம்நள் ளாறு௿
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல௿
துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை௿
தோணிபுர துருத்தி சோமீ சரம்௿
உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர்௿
ஓமாம் புலியூரோர் ஏட கத்துங்௿
கறையூர் கருப்பறியல் கன்றா பூருங்௿
கயிலாய நாதனையே காண லாமே
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்௿
புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்௿
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்௿
வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி௿
நிலமலிநெ தானத்தோ டெத்தா னத்தும்௿
நிலவுபெருங் கோயில்பல கண்டாற் றொண்டீர்௿
கலிவலிமி கோனைக்கால் விரலாற் செற்ற௿
கயிலாய நாதனையே காண லாமே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஅடைவு திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
பொருப்பள்ளி வரைவில்லா புரமூன் றெய்து௿
புலந்தழிய சலந்தரனை பிளந்தான் பொற்சக்௿
கரப்பள்ளி திருக்காட்டு பள்ளி கள்ளார்௿
கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்௿
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி௿
செழுநனி பள்ளிதவ பள்ளி சீரார்௿
பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்௿
பரலோக தினிதாக பாலி பாரே
காவிரியின் கரைக்கண்டி வீர டானங்௿
கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை௿
மேவியவீ ரட்டானம் வழுவை வீரட்டம்௿
வியன்பறியல் வீரட்டம் விடையூர்தி கிடமாங்௿
கோவல்நகர் வீரட்டங் குறுக்கை வீரட்டங்௿
கோத்திட்டை குடிவீர டானமிவை கூறி௿
நாவினவின் றுரைப்பார்க்கு நணுக சென்றால்௿
நமன்றமருஞ் சிவன்றமரென் றகல்வர் நன்கே
நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்௿
குடிநல்ல குடிநளிநா டியத்தான் குடி௿
கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி௿
கருந்திட்டை குடிகடை குடிகா ணுங்கால்௿
விற்குடிவேள் விக்குடிநல் வேட்ட குடி௿
வேதிகுடி மாணிகுடி விடைவா குடி௿
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி௿
புதுக்குடியும் போற்றவிடர் போகு மன்றே
பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்௿
பெரும்பற்ற புலியூரும் பேரா வூரும்௿
நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்௿
நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்௿
உறையூரும் ஓத்தூரும் ஊற்ற தூரும்௿
அளப்பூரோ மாம்புலியூர் ஒற்றி யூருந்௿
துறையூரு துவையூரு தோழுர் தானுந்௿
துடையூரு தொழவிடர்கள் தொடரா வன்றே
பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்௿
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்௿
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்௿
கருப்பறியல் பொருப்பனைய கொகுடி கோயில்௿
இருக்கோதி மறையவர்கள் வழிப டேத்தும்௿
இளங்கோயில் மணிக்கோயில் ஆல கோயில்௿
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து௿
தாழ்ந்திறைஞ்ச தீவினைகள் தீரு மன்றே
மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்௿
மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு௿
தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்௿
சாய்க்காடு தெள்ளுபுனற் கொள்ளி காடு௿
பலர்பாடும் பழையனூர் ஆலங் காடு௿
பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க௿
விலையாடும் வளைதிளை குடையும் பொய்கை௿
வெண்காடும் அடையவினை வேறா மன்றே
கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்௿
கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல் வாயில்௿
நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்௿
நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்௿
மடுவார்தென் மதுரைநகர் ஆல வாயில்௿
மறிகடல்சூழ் புனவாயில் மாடம் நீடு௿
குடவாயில் குணவாயி லான வெல்லாம்௿
புகுவாரை கொடுவினைகள் கூடா வன்றே
நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்௿
சுரநாகே சுரநாகளே சுரநன் கான௿
கோடீச்சுரங் கொண்டீ சுரந்திண் டீச்சுரங்௿
குக்குடே சுரமக்கீ சுரங்கூ றுங்கால்௿
ஆடகே சுரமகத்தீ சுரமய னீச்சுரம்௿
அத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்௿
ஈடுதிரை இராமேச்சுர மென்றென் றேத்தி௿
இறைவனுறை சுரம்பலவும் இயம்பு வோமே
கந்தமா தனங்கயிலை மலை கேதாரங்௿
காளத்தி கழுக்குன்றங் கண்ணார் அண்ணா௿
மந்தமாம் பொழிற்சாரல் வடபர பதம்௿
மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம்௿
விந்தமா மலைவேதஞ் சைய மிக்க௿
வியன் பொதியின் மலைமேரு வுதய மத்தம்௿
இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும்௿
ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே
நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு௿
நலந்திகழும் நாலாறு திருவை யாறுந்௿
தெள்ளாறும் வளைகுளமு தளிக்கு ளமுநல்௿
இடைக்குளமு திருக்குளத்தோ டஞ்சை களம்௿
விள்ளாத நெடுங்களம்வே களம்நெல் லிக்கா௿
கோலக்கா ஆனைக்கா வியன்கோ டிகா௿
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்௿
குளங்களங்கா எனவனைத்துங் கூறு வோமே
கயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடு௿
சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்௿
பயில்வாய பராய்த்துறைதென் பாலை துறை௿
பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்௿
குயிலால துறைசோற்று துறைபூ துறை௿
பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு௿
மயிலாடு துறைகடம்ப துறையா வடு௿
துறைமற்று துறையனைத்தும் வணங்கு வோமே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவலஞ்சுழி திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
அலையார் புனற்கங்கை நங்கை காண௿
அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந்௿
தொலையாத வென்றியார் நின்றி யூரும்௿
நெடுங்களமும் மேவிவிடை யைமேற் கொண்டு௿
இலையார் படைகையி லேந்தி யெங்கும்௿
இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த௿
மலையார் திரளருவி பொன்னி சூழ்ந்த௿
வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும்
திருச்சிற்றம்பலம்
கருமணிபோற் கண்ட தழகன் கண்டாய்௿
கல்லால நிழற்கீ ழிருந்தான் கண்டாய்௿
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்௿
பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்௿
வருமணிநீர பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்௿
குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற்௿
கோடீ சரத்துறையுங் கோமான் றானே
கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்௿
கலைபயில்வோர் ஞானக்கண் ணானான் கண்டாய்௿
அலைக்கங்கை செஞ்சடைமே லேற்றான் கண்டாய்௿
அண்ட கபாலத்த பாலான் கண்டாய்௿
மலைப்பண்டங் கொண்டு வருநீர பொன்னி௿
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்௿
குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டை யூரிற்௿
கோடீச்சர துறையுங் கோமான் றானே
செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்௿
சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்௿
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்௿
பாலோடு நெய் தயிர்தே னாடி கண்டாய்௿
மந்தார முந்தி வருநீர பொன்னி௿
வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்௿
கொந்தார் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்௿
கோடீ சரத்துறையுங் கோமான் றானே
பொடியாடு மேனி புனிதன் கண்டாய்௿
புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய்௿
இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய்௿
எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்௿
மடலார் திரைபுரளுங் காவி ரிவாய்௿
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்௿
கொடியாடு நெடுமாட கொட்டை யூரிற்௿
கோடீச்சர துறையுங் கோமான் றானே
அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்௿
அருமறைக ளாறங்க மானான் கண்டாய்௿
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்௿
சதாசிவன்காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய்௿
மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர பொன்னி௿
வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்௿
கொக்கமரும் வயற்புடைசூழ் கொட்டை யூரிற்௿
கோடீ சரத்துறையுங் கோமான் றானே
சண்டனைநல் லண்டர்தொழ செய்தான் கண்டாய்௿
சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய்௿
தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்௿
சுடரொளியா தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்௿
மண்டுபுனற் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்௿
கொண்டல்தவழ் கொடிமாட கொட்டை யூரிற்௿
கோடீ சரத்துறையுங் கோமான் றானே
அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்௿
அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்௿
பணமணிமா நாக முடையான் கண்டாய்௿
பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்௿
மணல்வருநீர பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்௿
குணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற்௿
கோடீ சரத்துறையுங் கோமான் றானே
விரைகமழு மலர்க்கொன்றை தாரான் கண்டாய்௿
வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்௿
அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய்௿
அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்௿
வருதிரைநீர பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
வஞ்சமன தவர்க்கரிய மைந்தன் கண்டாய்௿
குரவமரும் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்௿
கோடீ சரத்துறையுங் கோமான் றானே
தளங்கிளரு தாமரையா தனத்தான் கண்டாய்௿
தசரதன்றன் மகனசைவு தவிர்த்தான் கண்டாய்௿
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்௿
எட்டெ டிருங்கலையு மானான் கண்டாய்௿
வளங்கிளர்நீர பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
மாமுனிகள் தொழுதெழுபொற் கழலான் கண்டாய்௿
குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரிற்௿
கோடீ சரத்துறையுங் கோமான் றானே
விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்௿
விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய்௿
தண்டா மரையானும் மாலு தேடத்௿
தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்௿
வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்௿
மாதேவன் கண்டாய் மறையோ டங்கங்௿
கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற்௿
கோடீ சரத்துறையுங் கோமான் றானே
இத்தலங்கள் சோழநாட்டிலுள்ளன௿
திருவலஞ்சுழியில்௿
சுவாமிபெயர் கபர்த்தீசுவரர்௿ தேவியார் பெரியநாயகியம்மை௿
திருக்கொட்டையூரில்௿
சுவாமிபெயர் சுந்தரகோடீசுவரர்௿ தேவியார் பந்தாடுநாயகியம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநாரையூர் திருத்தாண்டகம்௿ ௿
திருச்சிற்றம்பலம்
சொல்லானை பொருளானை சுருதி யானைச்௿
சுடராழி நெடுமாலு கருள்செய் தானை௿
அல்லானை பகலானை அரியான் றன்னை௿
அடியார்க கெளியானை அரண்மூன் றெய்த௿
வில்லானை சரம்விசயற் கருள்செய் தானை௿
வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும்௿
நல்லானை தீயாடு நம்பன் றன்னை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே
பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் றன்னைப்௿
பாரொடுநீர் சுடர்படர்காற் றாயி னானை௿
மஞ்சுண்ட வானாகி வான தன்னில்௿
மதியாகி மதிசடைமேல் வைத்தான் றன்னை௿
நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் றன்னை௿
நெடுங்கடலை கடைந்தவர்போய் நீங்க வோங்கும்௿
நஞ்சுண்டு தேவர்களு கமுதீ தானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே
மூவாதி யாவர்க்கும் மூத்தான் றன்னை௿
முடியாதே முதல்நடுவு முடிவா னானைத்௿
தேவாதி தேவர்கட்கு தேவன் றன்னைத்௿
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் றன்னை௿
ஆவாத அடலேறொன் றுடையான் றன்னை௿
அடியேற்கு நினைதோறும் அண்ணி கின்ற௿
நாவானை நாவினில்நல் லுரையா னானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே
செம்பொன்னை நன்பவள திகழு முத்தைச்௿
செழுமணியை தொழுமவர்தஞ் சி தானை௿
வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி௿
மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற௿
கம்பனையெங் கயிலாய மலையான் றன்னைக்௿
கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும்௿
நம்பனையெம் பெருமானை நாதன் றன்னை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே
புரையுடைய கரியுரிவை போர்வை யானைப்௿
புரிசடைமேற் புனலடைத்த புனிதன் றன்னை௿
விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானை௿
வெண்ணீறு செம்மேனி விரவி னானை௿
வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் றன்னை௿
வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை௿
நரைவிடைநற் கொடியுடைய நாதன் றன்னை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே
பிறவாதும் இறவாதும் பெருகி னானைப்௿
பேய்பாட நடமாடும் பித்தன் றன்னை௿
மறவாத மனத்தகத்து மன்னி னானை௿
மலையானை கடலானை வனத்து ளானை௿
உறவானை பகையானை உயிரா னானை௿
உள்ளானை புறத்தானை ஓசை யானை௿
நறவாரும் பூங்கொன்றை சூடி னானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே
தக்கனது வேள்விகெட சாடி னானைத்௿
தலைகலனா பலியேற்ற தலைவன் றன்னைக்௿
கொக்கரை சரிவீணை பாணி யானைக்௿
கோணாகம் பூணா கொண்டான் றன்னை௿
அக்கினொடும் என்பணிந்த அழகன் றன்னை௿
அறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னை௿
நக்கனைவ கரையானை நள்ளாற் றானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே
அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் றன்னை௿
அந்தகனு கந்தகனை அளக்க லாகா௿
எரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானை௿
எண்ணாகி பண்ணா ரெழுத்தா னானைத்௿
திரிபுரஞ்செற் றொருமூவர கருள்செய் தானைச்௿
சிலந்திக்கும் அரசளித்த செல்வன் றன்னை௿
நரிவிரவு காட்டகத்தி லாட லானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே
ஆலால மிடற்றணியா அடக்கி னானை௿
ஆலதன்கீழ் அறம்நால்வர கருள்செய் தானைப்௿
பாலாகி தேனாகி பழமு மாகிப்௿
பைங்கரும்பா யங்கருந்துஞ் சுவையா னானை௿
மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி௿
வேள்வியினின் பயனாய விமலன் றன்னை௿
நாலாய மறைக்கிறைவ னாயி னானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே
மீளாத ஆளென்னை உடையான் றன்னை௿
வெளிசெய்த வழிபாடு மேவி னானை௿
மாளாமை மறையவனு குயிரும் வைத்து௿
வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான் றன்னைத்௿
தோளாண்மை கருதிவரை யெடுத்த தூர்த்தன்௿
தோள்வலியு தாள்வலியு தொலைவி தாங்கே௿
நாளோடு வாள்கொடுத்த நம்பன் றன்னை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்௿
சொற்பொருளுங் கடந்தசுடர சோதி போலுங்௿
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்௿
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்௿
மன்மலிந்த மணிவரைத்திண் டோ ளர் போலும்௿
மலையரையன் மடப்பாவை மணாளர் போலுங்௿
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்௿
குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே
கானலிளங் கலிமறவ னாகி பார்த்தன்௿
கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்௿
ஆனவிளங் கடுவிடையொன் றேறி அண்டத்௿
தப்பாலும் பலிதிரியும் அழகர் போலுந்௿
தேனலிள துவலைமலி தென்றல் முன்றிற்௿
செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்௿
கூனலிளம் பிறைதடவு கொடிகொள் மாடக்௿
குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே
நீறலைத்த திருவுருவும் நெற்றி கண்ணும்௿
நிலாவலைத்த பாம்பினொடு நிறைநீர கங்கை௿
ஆறலைத்த சடைமுடியும் அம்பொற் றோளும்௿
அடியவர்க்கு காட்டியருள் புரிவார் போலும்௿
ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையார் போலும்௿
ஏழுலகு தொழுகழலெம் மீசர் போலுங்௿
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்௿
குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே
தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்௿
சந்திரனை கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்௿
செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி௿
செழுஞ்சுடர்த்தீ ஞாயிறென செய்யர் போலும்௿
மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி௿
மிகுபுகைபோய் விண்பொழி கழனி யெல்லாங்௿
கொக்கினிய கனிசிதறி தேறல் பாயுங்௿
குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே
காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங்௿
காமனெழில் அழல்விழுங கண்டார் போலும்௿
ஆலதனில் அறம்நால்வர களித்தார் போலும்௿
ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்௿
நீலவுரு வயிரநிரை பச்சை செம்பொன்௿
நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்௿
கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்௿
குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே
முடிகொண்ட வளர்மதியும் மூன்றா தோன்றும்௿
முளைஞாயி றன்னமலர கண்கள் மூன்றும்௿
அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி௿
அணிமுறுவற் செவ்வாயும் அழகா தோன்றத்௿
துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு௿
சுடர்ச்சோதி கடிச்செம்பொன் மலைபோ லிந்நாள்௿
குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங்௿
குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே
காரிலங்கு திருவுருவ தவற்கும் மற்றைக்௿
கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்௿
சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்௿
சிலைவளைவி தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்௿
பாரிலங்கு புனலனல்கால் பரமா காசம்௿
பருதிமதி சுருதியுமா பரந்தார் போலுங்௿
கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்௿
குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே
பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்௿
புறம்பயத்தார் அறம்புரிபூ துருத்தி புக்கு௿
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்௿
மாதவத்து வளர்சோற்று துறையார் நல்ல௿
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலு கீந்து௿
திருவானை காவிலோர் சிலந்தி கந்நாள்௿
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலுங்௿
குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே
பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற்௿
பொறிகிளர்வெண் பூணநூற் புனிதர் போலுஞ்௿
சங்கரவ கடன்முகடு தட்ட விட்டுச்௿
சதுரநட மாட்டுகந்த சைவர் போலும்௿
அங்கரவ திருவடிக்கா பிழைப்ப தந்தை௿
அந்தணனை அறஎறிந்தார கருள போதே௿
கொங்கரவ சடைக்கொன்றை கொடுத்தார் போலுங்௿
குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே
ஏவியிடர கடலிடைப்ப டிளைக்கின் றேனை௿
இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே௿
கூவிஅம ருலகனைத்து முருவி போகக்௿
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்௿
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை௿
சரச்வதிபொற் றாமரைப்பு கரணி தெண்ணீர்க்௿
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த௿
குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே
செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்௿
தித்திக்குஞ் சிவபுவன தமுதம் போலும்௿
நெறிகொண்ட குழலியுமை பாக மாக௿
நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்௿
மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்௿
மதிலிலங்கை கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக்௿
குறிகொண்ட இன்னிசைகே டுகந்தார் போலுங்௿
குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் மடந்தைபாகேசுவரர்௿
தேவியார் பெரியநாயகியம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புத்தூர் திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்த கோன்காண்௿
போர்விடையின் பாகன்காண் புவன மேழும்௿
விரிந்துபல உயிராகி விளங்கி னான்காண்௿
விரைக்கொன்றை கண்ணியன்காண் வேத நான்குந்௿
தெரிந்துமுதல் படைத்தோனை சிரங்கொண் டோ ன்காண்௿
தீர்த்தன்காண் திருமாலோர் பங்க தான்காண்௿
திருந்துவயல் புடைதழுவு திருப்பு தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே
வாராரும் முலைமங்கை பாக தான்காண்௿
மாமறைக ளாயவன்காண் மண்ணும் விண்ணுங்௿
கூரார்வெ தழலவனுங் காற்றும் நீருங்௿
குலவரையும் ஆயவன்காண் கொடுநஞ் சுண்ட௿
காராருங் கண்டன்காண் எண்டோ ளன்காண்௿
கயிலைமலை பொருப்பன்காண் விருப்போ டென்றுந்௿
தேராரும் நெடுவீதி திருப்பு தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே
மின்காட்டுங் கொடிமருங்குல் உமையா கென்றும்௿
விருப்பவன்காண் பொருப்புவலி சிலைக்கை யோன்காண்௿
நன்பாட்டு புலவனா சங்க மேறி௿
நற்கன கிழிதருமி கருளி னோன்காண்௿
பொன்காட்ட கடிக்கொன்றை மருங்கே நின்ற௿
புனக்காந்த கைகாட்ட கண்டு வண்டு௿
தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்பு தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே
ஏடேறு மலர்க்கமல தயனும் மாலும்௿
இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண்௿
தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந்௿
துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம்௿
மாடேறி முத்தீனுங் கானல் வேலி௿
மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி௿
சேடேறி மடுப்படியு திருப்பு தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே
கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண்௿
காமருபூங் கச்சியே கம்ப தான்காண்௿
பெருமருவு பேருலகிற் பிணிகள் தீர்க்கும்௿
பெரும்பற்ற தண்புலியூர் மன்றா டீகாண்௿
தருமருவு கொடைத்தடக்கை அளகை கோன்றன்௿
சங்காத்தி ஆரூரில் தனியா னைகாண்௿
திருமருவு பொழில்புடைசூழ் திருப்பு தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே
காம்பாடு தோளுமையாள் காண நட்டங்௿
கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்ய௿
பாம்பாட படுதலையிற் பலிகொள் வான்காண்௿
பவளத்தின் பருவரைபோற் படி தான்காண்௿
தாம்பாடு சினவிடையே பகடா கொண்ட௿
சங்கரன்காண் பொங்கரவ கச்சை யோன்காண்௿
சேம்பாடு வயல்புடைசூழ் திருப்பு தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே
வெறிவிரவு மலர்க்கொன்றை விளங்கு திங்கள்௿
வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண்௿
பொறிவிரவு கதநாகம் அக்கி னோடு௿
பூண்டவன்காண் பொருபுலித்தோ லாடை யான்காண்௿
அறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண்௿
ஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானற்௿
செறிபொழில்சூழ் மணிமாட திருப்பு தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே
புக்கடைந்த வேதியற்கா காலற் காய்ந்த௿
புண்ணியன்காண் வெண்ணகைவெள் வளையா ளஞ்ச௿
மிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன்காண்௿
வெண்மதியை கலைசேர்த்த திண்மை யோன்காண்௿
அக்கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலை௿
ஆரூரு கதிபதிகாண் அந்தண் தென்றல்௿
திக்கணைந்து வருமருங்கில் திருப்பு தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே
பற்றவன்காண் ஏனோர்க்கும் வானோ ருக்கும்௿
பராபரன்காண் தக்கன்றன் வேள்வி செற்ற௿
கொற்றவன்காண் கொடுஞ்சினத்தை யடங்க செற்று௿
ஞானத்தை மேன்மிகுத்தல் கோளா கொண்ட௿
பெற்றியன்காண் பிறங்கருவி கழுக்குன் றத்தெம்௿
பிஞ்ஞகன்காண் பேரெழிலார் காம வேளைச்௿
செற்றவன்காண் சீர்மருவு திருப்பு தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே
உரமதித்த சலந்தரன்றன் ஆகங் கீண்ட௿
ஓராழி படைத்தவன்காண் உலகு சூழும்௿
வரமதித்த கதிரவனை பற்கொண் டான்காண்௿
வானவர்கோன் புயம்நெரித்த வல்லா ளன்காண்௿
அரமதித்து செம்பொன்னி னாரம் பூணா௿
அணிந்தவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்௿
சிரம்நெரித்த சேவடிகாண் திருப்பு தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே
௿
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் புத்தூரீசர்௿ தேவியார் சிவகாமியம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாய்மூர் திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
பாட வடியார் பரவ கண்டேன்௿
பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்௿
ஆடல் முழவம் அதிர கண்டேன்௿
அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்௿
கோட லரவார் சடையிற் கண்டேன்௿
கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்௿
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே
பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன்௿
பதினெண் கணமும் பயில கண்டேன்௿
நீல நிறமுண்ட கண்டங் கண்டேன்௿
நெற்றி நுதல்கண்டேன் பெற்றங் கண்டேன்௿
காலை கதிர்செய் மதியங் கண்டேன்௿
கரந்தை திருமுடிமேல் தோன்ற கண்டேன்௿
மாலை சடையும் முடியுங் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே
மண்ணை திகழ நடம தாடும்௿
வரைசிலம் பார்க்கின்ற பாதங் கண்டேன்௿
விண்ணிற் றிகழும் முடியுங் கண்டேன்௿
வேடம் பலவாஞ் சரிதை கண்டேன்௿
நண்ணி பிரியா மழுவுங் கண்டேன்௿
நாலு மறையங்க மோத கண்டேன்௿
வண்ண பொலிந்திலங்கு கோலங் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே
விளைத்த பெரும்பத்தி கூர நின்று௿
மெய்யடியார் தம்மை விரும்ப கண்டேன்௿
இளைக்குங் கதநாக மேனி கண்டேன்௿
என்பின் கலந்திகழ்ந்து தோன்ற கண்டேன்௿
திளைக்கு திருமார்பில் நீறு கண்டேன்௿
சேணார் மதின்மூன்றும் பொன்ற வன்று௿
வளைத்த வரிசிலையுங் கையிற் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே
கான்மறையும் போதகத்தி னுரிவை கண்டேன்௿
காலிற் கழல்கண்டேன் கரியின் றோல்கொண்௿
டூன்மறை போர்த்த வடிவுங் கண்டேன்௿
உள்க மனம்வைத்த உணர்வுங் கண்டேன்௿
நான்மறை யானோடு நெடிய மாலும்௿
நண்ணி வரக்கண்டேன் திண்ண மாக௿
மான்மறி தங்கையின் மருவ கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே
அடியார் சிலம்பொலிக ளார்ப்ப கண்டேன்௿
அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன்௿
முடியார் சடைமேல் அரவ மூழ்க௿
மூரி பிறைபோய் மறை கண்டேன்௿
கொடியா ரதன்மேல் இடபங் கண்டேன்௿
கோவணமுங் கீளுங் குலாவ கண்டேன்௿
வடியாரும் மூவிலைவேல் கையிற் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே
குழையார் திருத்தோடு காதிற் கண்டேன்௿
கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன்௿
இழையார் புரிநூல் வலத்தே கண்டேன்௿
ஏழிசை யாழ்வீணை முரல கண்டேன்௿
தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன்௿
தக்கையொடு தாளங் கறங கண்டேன்௿
மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே
பொருந்தாத செய்கை பொலி கண்டேன்௿
போற்றிசைத்து விண்ணோர் புகழ கண்டேன்௿
பரிந்தார கருளும் பரிசுங் கண்டேன்௿
பாராகி புனலாகி நிற்கை கண்டேன்௿
விருந்தா பரந்த தொகுதி கண்டேன்௿
மெல்லியலும் விநாயகனு தோன்ற கண்டேன்௿
மருந்தா பிணிதீர்க்கு மாறு கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே
மெய்யன்ப ரானார கருளுங் கண்டேன்௿
வேடுவனாய் நின்ற நிலையுங் கண்டேன்௿
கையம் பரனெரித்த காட்சி கண்டேன்௿
கங்கணமும் அங்கை கனலுங் கண்டேன்௿
ஐயம் பலவூர் திரி கண்டேன்௿
அன்றவன் றன்வேள்வி அழித்து கந்து௿
வையம் பரவ இருத்தல் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே
கலங்க இருவர கழலாய் நீண்ட௿
காரணமுங் கண்டேன் கருவாய் நின்று௿
பலங்கள் தரித்துகந்த பண்புங் கண்டேன்௿
பாடல் ஒலியெலாங் கூட கண்டேன்௿
இலங்கை தலைவன் சிரங்கள் பத்தும்௿
இறுத்தவனு கீந்த பெருமை கண்டேன்௿
வலங்கை தலத்துள் அனலுங் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாலங்காடு திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
ஒன்றா வுலகனைத்து மானார் தாமே௿
ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே௿
நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே௿
நீர்வளிதீ யாகாச மானார் தாமே௿
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே௿
கோல பழனை யுடையார் தாமே௿
சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
மலைமகளை பாக மமர்ந்தார் தாமே௿
வானோர் வணங்க படுவார் தாமே௿
சலமகளை செஞ்சடைமேல் வைத்தார் தாமே௿
சரணென் றிருப்பார்க கன்பர் தாமே௿
பலபலவும் வேடங்க ளானார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
ஆவுற்ற ஐந்து முகந்தார் தாமே௿
அளவில் பெருமை யுடையார் தாமே௿
பூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமே௿
புனித பொருளாகி நின்றார் தாமே௿
பாவுற்ற பாட லுகப்பார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
தேவுற் றடிபரவ நின்றார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
நாறுபூங் கொன்றை முடியார் தாமே௿
நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே௿
மாறிலா மேனி யுடையார் தாமே௿
மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே௿
பாறினார் வெண்டலையி லுண்டார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
தேறினார் சி திருந்தார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே௿
அந்தியுஞ் சந்தியு மானார் தாமே௿
சொல்லும் பொருளெலா மானார் தாமே௿
தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே௿
பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
தொண்டா பணிவார கணியார் தாமே௿
தூநீ றணியுஞ் சுவண்டர் தாமே௿
தண்டா மரையானும் மாலு தேடத்௿
தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே௿
பண்டா னிசைபாட நின்றார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
திண்டோ ள்க ளெட்டு முடையார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
மையாருங் கண்ட மிடற்றார் தாமே௿
மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே௿
ஐயாறும் ஆரூரும் ஆனை காவும்௿
அம்பலமுங் கோயிலா கொண்டார் தாமே௿
பையா டரவ மசைத்தார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
செய்யாள் வழிபட நின்றார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
விண்முழுதும் மண்முழுது மானார் தாமே௿
மிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே௿
கண்விழியாற் காமனையுங் காய்ந்தார் தாமே௿
காலங்க ளூழி கடந்தார் தாமே௿
பண்ணியலும் பாட லுகப்பார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
திண்மழுவா ளேந்து கரத்தார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே௿
கயிலை மலையை யுடையார் தாமே௿
ஊரா வேகம்பம் உகந்தார் தாமே௿
ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே௿
பாரார் புகழ படுவார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
மாலை பிறைசென்னி வைத்தார் தாமே௿
வண்கயிலை மாமலையை வந்தி யாத௿
நீல கடல்சூ ழிலங்கை கோனை௿
நெரிய விரலா லடர்த்தார் தாமே௿
பாலொத்த மேனி நிறத்தார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
சீலத்தா ரேத்து திறத்தார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
௿
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் ஊர்த்ததாண்டவேசுவரர்௿
தேவியார் வண்டார்குழலியம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருத்தலையாலங்காடு திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
தொண்டர்க்கு தூநெறியாய் நின்றான் றன்னைச்௿
சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னை௿
அண்டத்து கப்பாலை கப்பா லானை௿
ஆதிரைநா ளாதரித்த அம்மான் றன்னை௿
முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை௿
மூவுருவ தோருருவாய் முதலாய் நின்ற௿
தண்டத்திற் றலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே
அக்கிருந்த அரையானை அம்மான் றன்னை௿
அவுணர்புர மொருநொடியி லெரிசெய் தானைக்௿
கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் றன்னைக்௿
குண்டலஞ்சேர் காதானை குழைவார் சிந்தை௿
புக்கிருந்து போகாத புனிதன் றன்னைப்௿
புண்ணியனை எண்ணருஞ்சீர போக மெல்லாந்௿
தக்கிருந்த தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே
மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை௿
விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் றன்னை௿
எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை௿
இடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப்௿
பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப்௿
புனல்கரந்தி டுமையொடொரு பாகம் நின்ற௿
தத்துவனை தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே
சிவனாகி திசைமுகனா திருமா லாகிச்௿
செழுஞ்சுடரா தீயாகி நீரு மாகிப்௿
புவனாகி புவனங்க ளனைத்து மாகிப்௿
பொன்னாகி மணியாகி முத்து மாகிப்௿
பவனாகி பவனங்க ளனைத்து மாகிப்௿
பசுவேறி திரிவானோர் பவனாய் நின்ற௿
தவனாய தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே
கங்கையெனுங் கடும்புனலை கரந்தான் றன்னைக்௿
காமருபூம் பொழிற்கச்சி கம்பன் றன்னை௿
அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை௿
ஐயாறு மேயானை ஆரூ ரானைப்௿
பங்கமிலா அடியார்க்கு பரிந்தான் றன்னைப்௿
பரிதிநிய மத்தானை பாசூ ரானைச்௿
சங்கரனை தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே
விடந்திகழும் அரவரைமேல் வீக்கி னானை௿
விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை௿
அடைந்தவரை அமருலக மாள்வி பானை௿
அம்பொன்னை கம்பமா களிற டானை௿
மடந்தையொரு பாகனை மகுட தன்மேல்௿
வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த௿
தடங்கடலை தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே
விடையேறி கடைதோறும் பலிகொள் வானை௿
வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை௿
முடைநாறு முதுகாட்டி லாட லானை௿
முன்னானை பின்னானை அந்நா ளானை௿
உடையாடை யுரிதோலே உகந்தான் றன்னை௿
உமையிருந்த பாகத்து ளொருவன் றன்னைச்௿
சடையானை தலையாலங் காடன் றன்னை௿
சாராதே சாலநாள் போக்கி னேனே
கரும்பிருந்த கட்டிதனை கனியை தேனைக்௿
கன்றாப்பின் நடுதறியை காறை யானை௿
இரும்பமர்ந்த மூவிலைவே லேந்தி னானை௿
என்னானை தென்னானை காவான் றன்னைச்௿
சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்௿
தூயானை தாயாகி உலகு கெல்லாந்௿
தரும்பொருளை தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே
பண்டளவு நரம்போசை பயனை பாலைப்௿
படுபயனை கடுவெளியை கனலை காற்றைக்௿
கண்டளவிற் களிகூர்வார கெளியான் றன்னைக்௿
காரணனை நாரணனை கமல தோனை௿
எண்டளவி லென்னெஞ்ச துள்ளே நின்ற௿
எம்மானை கைம்மாவி னுரிவை பேணுந்௿
தண்டரனை தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே
கைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான்௿
கயிலைமலை அதுதன்னை கருதா தோடி௿
முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி௿
முடுகுதலு திருவிரலொன் றவன்மேல் வைப்பப்௿
பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்௿
பரிந்தவனு கிராவணனென் றீந்த நாம௿
தத்துவனை தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் ஆடவல்லவீசுவரர்௿ தேவியார் திருமடந்தையம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமாற்பேறு திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
பாரானை பாரினது பயனா னானைப்௿
படைப்பாகி பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னை௿
ஆராத இன்னமுதை அடியார் தங்கட்௿
கனைத்துலகு மானானை அமரர் கோனைக்௿
காராருங் கண்டனை கயிலை வேந்தைக்௿
கருதுவார் மனத்தானை காலற் செற்ற௿
சீரானை செல்வனை திருமாற் பேற்றெஞ்௿
செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே
விளைக்கின்ற நீராகி வித்து மாகி௿
விண்ணோடு மண்ணாகி விளங்கு செம்பொன்௿
துளைக்கின்ற துளையாகி சோதி யாகித்௿
தூண்டரிய சுடராகி துளக்கில் வான்மேல்௿
முளைக்கின்ற கதிர்மதியு மரவு மொன்றி௿
முழங்கொலிநீர கங்கையொடு மூவா தென்றுந்௿
திளைக்கின்ற சடையானை திருமாற் பேற்றெஞ்௿
செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே
மலைமகள்தங் கோனவனை மாநீர் முத்தை௿
மரகதத்தை மாமணியை மல்கு செல்வக்௿
கலைநிலவு கையானை கம்பன் றன்னைக்௿
காண்பினிய செழுஞ்சுடரை கன குன்றை௿
விலைபெரிய வெண்ணீற்று மேனி யானை௿
மெய்யடியார் வேண்டுவதே வேண்டு வானைச்௿
சிலைநிலவு கரத்தானை திருமாற் பேற்றெஞ்௿
செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே
உற்றானை உடல்தனக்கோர் உயிரா னானை௿
ஓங்கார தொருவனையங் குமையோர் பாகம்௿
பெற்றானை பிஞ்ஞகனை பிறவா தானைப்௿
பெரியனவும் அரியனவு மெல்லாம் முன்னே௿
கற்றானை கற்பனவு தானே யாய௿
கச்சியே கம்பனை காலன் வீழச்௿
செற்றானை திகழொளியை திருமாற் பேற்றெஞ்௿
செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே
நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி௿
நினைவாகி நினைவினிய மலையான் மங்கை௿
கூறாகி கூற்றாகி கோளு மாகிக்௿
குணமாகி குறையாத உவகை கண்ணீர்௿
ஆறாத ஆனந தடியார் செய்த௿
அனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றுஞ்௿
சீறாத பெருமானை திருமாற் பேற்றெஞ்௿
செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே
மருவினிய மறைப்பொருளை மறைக்கா டானை௿
மறப்பிலியை மதியேந்து சடையான் றன்னை௿
உருநிலவு மொண்சுடரை உம்ப ரானை௿
உரைப்பினிய தவத்தானை உலகின் வித்தைக்௿
கருநிலவு கண்டனை காள தியைக்௿
கருதுவார் மனத்தானை கல்வி தன்னைச்௿
செருநிலவு படையானை திருமாற் பேற்றெஞ்௿
செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே
பிறப்பானை பிறவாத பெருமை யானைப்௿
பெரியானை அரியானை பெண்ணா ணாய௿
நிறத்தானை நின்மலனை நினையா தாரை௿
நினையானை நினைவோரை நினைவோன் றன்னை௿
அறத்தானை அறவோனை ஐயன் றன்னை௿
அண்ணல்தனை நண்ணரிய அமர ரேத்துந்௿
திறத்தானை திகழொளியை திருமாற் பேற்றெஞ்௿
செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே
வானகத்தில் வளர்முகிலை மதி தன்னை௿
வணங்குவார் மனத்தானை வடிவார் பொன்னை௿
ஊனகத்தில் உறுதுணையை உலவா தானை௿
ஒற்றியூர் உத்தமனை ஊழி கன்றைக்௿
கானகத்து கருங்களிற்றை காள தியைக்௿
கருதுவார் கருத்தானை கருவை மூலத்௿
தேனகத்தி லின்சுவையை திருமாற் பேற்றெஞ்௿
செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே
முற்றாத முழுமுதலை முளையை மொட்டை௿
முழுமலரின் மூர்த்தியை முனியா தென்றும்௿
பற்றாகி பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னைப்௿
பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில்௿
உற்றானை உயர்கருப்பு சிலையோன் நீறாய்௿
ஒள்ளழல்வாய் வேவவுறு நோக்க தானைச்௿
செற்றானை திரிபுரங்கள் திருமாற் பேற்றெஞ் ௿
செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே
விரித்தானை நான்மறையோ டங்க மாறும்௿
வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றி௿
நெரித்தானை நின்மலனை அம்மான் றன்னை௿
நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர கங்கை௿
தரித்தானை சங்கரனை சம்பு தன்னைத்௿
தரியலர்கள் புரமூன்று தழல்வாய் வேவச்௿
சிரித்தானை திகழொளியை திருமாற் பேற்றெஞ்௿
செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கோடிகா திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்௿
கன்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்௿
மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய் ௿
மதிற்கச்சி யேகம்ப மேயான் கண்டாய்௿
விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய்௿
மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்௿
கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய்௿
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே
வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்௿
மறைக்கா டுறையும் மணாளன் கண்டாய்௿
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்௿
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்௿
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்௿
திருவாரூர திருமூல தானன் கண்டாய்௿
கொண்டாடு மடியவர்தம் மனத்தான் கண்டாய்௿
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே
அலையார்ந்த புனற்கங்கை சடையான் கண்டாய்௿
அடியார்க காரமுத மானான் கண்டாய்௿
மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்௿
வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய்௿
இலையார்ந்த திரிசூல படையான் கண்டாய்௿
ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய்௿
கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய்௿
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே
மற்றாரு தன்னொப்பா ரில்லான் கண்டாய்௿
மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய்௿
புற்றா டரவணிந்த புனிதன் கண்டாய்௿
பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய்௿
அற்றார்க கற்றானாய் நின்றான் கண்டாய்௿
ஐயா றகலாத ஐயன் கண்டாய்௿
குற்றால தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய்௿
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்௿
மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்௿
போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய்௿
புகலூரை யகலாத புனிதன் கண்டாய்௿
நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய்௿
நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்௿
கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய்௿
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே
கடிமலிந்த மலர்க்கொன்றை சடையான் கண்டாய்௿
கண்ணப்ப விண்ணப்பு கொடுத்தான் கண்டாய்௿
படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய்௿
பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்௿
அடிமலிந்த சிலம்பலம்ப திரிவான் கண்டாய்௿
அமரர்கண தொழுதேத்தும் அம்மான் கண்டாய்௿
கொடிமலிந்த மதில்தில்லை கூத்தன் கண்டாய்௿
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே
உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய்௿
ஒற்றியூ ரொற்றியா வுடையான் கண்டாய்௿
கழையாடு கழுக்குன்ற மமர்ந்தான் கண்டாய்௿
காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய்௿
இழையாடு மெண்புயத்த இறைவன் கண்டாய்௿
என்னெஞ்ச துள்நீங்கா எம்மான் கண்டாய்௿
குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய்௿
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே
படமாடு பன்னகக்க சசைத்தான் கண்டாய்௿
பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்௿
நடமாடி ஏழுலகு திரிவான் கண்டாய்௿
நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்௿
கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்௿
கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய்௿
குடமாடி யிடமா கொண்டான் கண்டாய்௿
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள் சிதைந்து போயின
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சாய்க்காடு திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
வான திளமதியும் பாம்பு தன்னில்௿
வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலுந்௿
தேனை திளைத்துண்டு வண்டு பாடுந்௿
தில்லை நடமாடு தேவர் போலும்௿
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்௿
நன்மையு தீமையு மானார் போலுந்௿
தேனொ தடியார கினியார் போலுந்௿
திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே
விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்௿
வியன்துருத்தி வேள்வி குடியார் போலும்௿
அண்ணா மலையுறையும் அண்ணல் போலும்௿
அதியரைய மங்கை யமர்ந்தார் போலும்௿
பண்ணார் களிவண்டு பாடி யாடும்௿
பராய்த்துறையுள் மேய பரமர் போலுந்௿
திண்ணார் புகார்மு தலைக்கு தெண்ணீர்த்௿
திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே
கானிரிய வேழ முரித்தார் போலுங்௿
காவிரிப்பூம் பட்டின துள்ளார் போலும்௿
வானிரிய வருபுரமூன் றெரித்தார் போலும்௿
வடகயிலை மலையதுதம் மிருக்கை போலும்௿
ஊனிரி தலைகலனா வுடையார் போலும்௿
உயர்தோணி புரத்துறையு மொருவர் போலுந்௿
தேனிரிய மீன்பாயு தெண்ணீர பொய்கைத்௿
திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே
ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும்௿
ஊழி பலகண் டிருந்தார் போலும்௿
மானுற்ற கரதலமொன் றுடையார் போலும்௿
மறைக்காட்டு கோடி மகிழ்ந்தார் போலுங்௿
கானுற்ற ஆட லமர்ந்தார் போலுங்௿
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலுந்௿
தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்று ௿
திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே
கார்மல்கு கொன்றை தாரார் போலுங்௿
காலனையும் ஓருதையாற் கண்டார் போலும்௿
பார்மல்கி யேத்த படுவார் போலும்௿
பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்௿
ஊர்மல்கு பிச்சை குழன்றார் போலும்௿
ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலுஞ்௿
சீர்மல்கு பாட லுகந்தார் போலுந்௿
திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே
மாவா பிளந்துகந்த மாலுஞ் செய்ய௿
மலரவனு தாமேயாய் நின்றார் போலும்௿
மூவாத மேனி முதல்வர் போலும்௿
முதுகுன்ற மூதூ ருடையார் போலுங்௿
கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்௿
குரைகழலா லன்று குமைத்தார் போலுந்௿
தேவாதி தேவர கரியார் போலுந்௿
திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே
கடுவெளியோ டோ ரைந்து மானார் போலுங்௿
காரோண தென்று மிருப்பார் போலும்௿
இடிகுரல்வா பூத படையார் போலும்௿
ஏகம்பம் மேவி யிருந்தார் போலும்௿
படியொருவ ரில்லா படியார் போலும்௿
பாண்டி கொடுமுடியு தம்மூர் போலுஞ்௿
செடிபடுநோ யடியாரை தீர்ப்பார் போலுந்௿
திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே
விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்௿
வெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தர் போலும்௿
மலையினார் மங்கை மணாளர் போலும்௿
மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலுந்௿
தொலைவிலார் புரமூன்று தொலைத்தார் போலுஞ்௿
சோற்று துறைதுருத்தி யுள்ளார் போலுஞ்௿
சிலையினார் செங்க ணரவர் போலுந்௿
திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே
அல்ல லடியார கறுப்பார் போலும்௿
அமருலக தம்மடைந்தார காட்சி போலும்௿
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்௿
நள்ளாறு நாளும் பிரியார் போலும்௿
முல்லை முகைநகையாள் பாகர் போலும்௿
முன்னமே தோன்றி முளைத்தார் போலுந்௿
தில்லை நடமாடு தேவர் போலுந்௿
திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே
உறைப்புடைய இராவணன்பொன் மலையை கையால்௿
ஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச௿
நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும்௿
நிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும்௿
பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்௿
பெண்ணா ணுருவாகி நின்றார் போலுஞ்௿
சிறப்புடைய அடியார்க கினியார் போலுந்௿
திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் சாயாவனேசுவரர்௿
தேவியார் குயிலினும்நன்மொழியம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பாசூர் திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி௿
வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற௿
எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி௿
ஏழுலகு தொழுதேத்தி காண நின்ற௿
கண்ணாகி மணியாகி காட்சி யாகிக்௿
காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற௿
பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய௿
பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே
வேதமோர் நான்காயா றங்க மாகி௿
விரிக்கின்ற பொருட்கெல்லாம் வித்து மாகிக்௿
கூதலா பொழிகின்ற மாரி யாகிக்௿
குவலயங்கள் முழுதுமா கொண்ட லாகிக்௿
காதலால் வானவர்கள் போற்றி யென்று௿
கடிமலர்க ளவைதூவி ஏத்த நின்ற௿
பாதியோர் மாதினனை பாசூர் மேய௿
பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே
தடவரைக ளேழுமா காற்றா தீயாய்த்௿
தண்விசும்பா தண்விசும்பி னுச்சி யாகிக்௿
கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞால மாகிக்௿
காண்கின்ற கதிரவனும் மதியு மாகிக்௿
குடமுழவ சதிவழியே அனல்கை யேந்திக்௿
கூத்தாட வல்ல குழக னாகிப்௿
படவரவொன் றதுவாட்டி பாசூர் மேய௿
பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே
நீராருஞ் செஞ்சடைமேல் அரவங் கொன்றை௿
நிறைமதிய முடன்சூடி நீதி யாலே௿
சீராரும் மறையோதி உலக முய்யச்௿
செழுங்கடலை கடைந்தகடல் நஞ்ச முண்ட௿
காராருங் கண்டனை கச்சி மேய௿
கண்ணுதலை கடலொற்றி கருதி னானைப்௿
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப்௿
பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே
வேடனாய் விசயன்றன் வியப்பை காண்பான்௿
விற்பிடித்து கொம்புடைய ஏன தின்பின்௿
கூடினார் உமையவளுங் கோலங் கொள்ளக்௿
கொலைப்பகழி யுடன்கோத்து கோர பூசல்௿
ஆடினார் பெருங்கூத்து காளி காண௿
அருமறையோ டாறங்கம் ஆய்ந்து கொண்டு௿
பாடினார் நால்வேதம் பாசூர் மேய௿
பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே
புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலாற்௿
பொதுப்பந்தர் அதுவிழைத்து சருகால் மேய்ந்த௿
சித்தியினால் அரசாண்டு சிறப்பு செய்யச்௿
சிவகணத்து புகப்பெய்தார் திறலான் மிக்க௿
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு௿
விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப்௿
பத்தர்களு கின்னமுதாம் பாசூர் மேய௿
பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே
இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார்௿
இடைமருதோ டேகம்ப தென்றும் நீங்கார்௿
அணைவரியர் யாவர்க்கும் ஆதி தேவர்௿
அருமந்த நன்மையெலாம் அடியார கீவர்௿
தணல்முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித்௿
தத்துவனை சாந்தகிலி னளறு தோய்ந்த௿
பணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேய௿
பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே
அண்டவர்கள் கடல்கடைய அதனு டோ ன்றி௿
அதிர்ந்தெழுந்த ஆலாலம் வேலை ஞாலம்௿
எண்டிசையுஞ் சுடுகின்ற ஆற்றை கண்டும்௿
இமைப்பளவில் உண்டிருண்ட கண்டர் தொண்டர்௿
வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று௿
வானவர்கள் தானவர்கள் வணங்கி யேத்தும்௿
பண்டரங்க வேடனையெம் பாசூர் மேய௿
பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே
ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை௿
நான்முகனு மறியாத நெறியான் கையிற்௿
சூலத்தால் அந்தகனை சுருள கோத்துத்௿
தொல்லுலகிற் பல்லுயிரை கொல்லுங் கூற்றைக்௿
காலத்தா லுதைசெய்து காதல் செய்த௿
அந்தணனை கைக்கொண்ட செவ்வான் வண்ணர்௿
பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேய௿
பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே
வேந்தன்நெடு முடியுடைய அரக்கர் கோமான்௿
மெல்லியலாள் உமைவெருவ விரைந்தி டோ டிச்௿
சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத்௿
தடக்கைகளா லெடுத்திடலு தாளா லூன்றி௿
ஏந்துதிரள் திண்டோ ளு தலைகள் பத்தும் ௿
இறுத்தவன்றன் இசைகேட்டு விரக்கங் கொண்ட௿
பாந்தளணி சடைமுடியெம் பாசூர் மேய௿
பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்செங்காட்டங்குடி திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
பெருந்தகையை பெறற்கரிய மாணி கத்தைப்௿
பேணிநினை தெழுவார்தம் மனத்தே மன்னி௿
இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்௿
எழுந்தருளி இருந்தானை எண்டோ ள் வீசி௿
அருந்திறன்மா நடமாடும் அம்மான் றன்னை௿
அங்கனக சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்௿
திருந்துமறை பொருள்நால்வர கருள்செய் தானைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே
துங்கநக தாலன்றி தொலையா வென்றித்௿
தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட௿
அங்கனக திருமாலும் அயனு தேடும்௿
ஆரழலை அனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து௿
மங்கநக தான்வல்ல மருந்து தன்னை௿
வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற௿
செங்கனக திரள்தோளெஞ் செல்வன் றன்னைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே
உருகுமன தடியவர்க கூறு தேனை௿
உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற௿
பெருகுநிலை குறியாளர் அறிவு தன்னைப்௿
பேணியஅ தணர்க்குமறை பொருளை பின்னும்௿
முருகுவிரி நறுமலர்மே லயற்கும் மாற்கும்௿
முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த௿
திருகுகுழல் உமைநங்கை பங்கன் றன்னைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே
கந்தமலர கொன்றையணி சடையான் றன்னைக்௿
கதிர்விடுமா மணிபிறங்கு கனக சோதிச்௿
சந்தமலர தெரிவையொரு பாக தானைச்௿
சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்௿
பந்தமறு தாளாக்கி பணிகொண் டாங்கே௿
பன்னியநூற் றமிழ்மாலை பாடு வித்தென்௿
சிந்தை கறுத்ததிரு வருளி னானைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே
நஞ்சடைந்த கண்டத்து நாதன் றன்னை௿
நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக௿
வெஞ்சினத்தீ விழித்ததொரு நயன தானை௿
வியன்கெடில வீரட்டம் மேவி னானை௿
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி௿
மதிலாரூ ரிடங்கொண்ட மைந்தன் றன்னைச்௿
செஞ்சினத்த திரிசூல படையான் றன்னைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே
கன்னியையங் கொருசடையிற் கரந்தான் றன்னைக்௿
கடவூரில் வீரட்டங் கருதி னானைப்௿
பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் றன்னைப்௿
பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்௿
பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் றன்னைப்௿
பரிந்திமையோர் தொழுதேத்தி பரனே யென்று௿
சென்னிமிசை கொண்டணிசே வடியி னானைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே
எத்திக்கு மாய்நின்ற இறைவன் றன்னை௿
ஏகம்பம் மேயானை இல்லா தெய்வம்௿
பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்௿
புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்௿
பத்திக்கே வழிகாட்டி பாவ தீர்த்துப்௿
பண்டைவினை பயமான எல்லாம் போக்கித்௿
தித்தித்தென் மனத்துள்ளே ஊறு தேனைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே
கல்லாதார் மனத்தணுகா கடவுள் தன்னைக்௿
கற்றார்கள் உற்றோருங் காத லானைப்௿
பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும்௿
பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொ டானை௿
நில்லாத நிணக்குரம்பை பிணக்கம் நீங்க௿
நிறைதவத்தை அடியேற்கு நிறைவி தென்றுஞ்௿
செல்லாத செந்நெறிக்கே செல்வி பானைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே
அரியபெரும் பொருளாகி நின்றான் றன்னை௿
அலைகடலில் ஆலால மமுது செய்த௿
கரியதொரு கண்டத்து செங்க ணேற்றுக்௿
கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை௿
உரியபல தொழிற்செய்யு மடியார் தங்கட்௿
குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்௿
தெரிவையொரு பாகத்து சேர்த்தி னானைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே
போரரவம் மால்விடையொன் றூர்தி யானைப்௿
புறம்பயமும் புகலூரும் மன்னி னானை௿
நீரரவ செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்௿
நீங்காமை வைத்தானை நிமலன் றன்னைப்௿
பேரரவ புட்பகத்தே ருடைய வென்றிப்௿
பிறங்கொளிவா ளரக்கன்முடி யிடி செற்ற௿
சீரரவ கழலானை செல்வன் றன்னைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் கணபதீசுவரர்௿ தேவியார் திருக்குழல்மாதம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமுண்டீச்சரம் திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா௿
அடியவர்க கன்பன்காண் ஆனை தோலைப்௿
போர்த்தான்காண் புரிசடைமேற் புனலேற் றான்காண்௿
புறங்காட்டி லாடல் புரிந்தான் றான்காண்௿
காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங்௿
கனைகடல்வாய் நஞ்சதனை கண்ட துள்ளே௿
சேர்த்தான்காண் திருமுண்டீ சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே
கருத்தன்காண் கமலத்தோன் றலையி லொன்றைக்௿
காய்ந்தான்காண் பாய்ந்தநீர் பரந்த சென்னி௿
ஒருத்தன்காண் உமையவளோர் பாக தான்காண்௿
ஓருருவின் மூவுருவா யொன்றாய் நின்ற௿
விருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்௿
மெய்யடியா ருள்ளத்தே விரும்பி நின்ற௿
திருத்தன்காண் திருமுண்டீ சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே
நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண்௿
நாதன்காண் கீதத்தை நவிற்றி னான்காண்௿
இன்பன்காண் இமையாமு கண்ணி னான்காண்௿
ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட்௿
கன்பன்காண் ஆரழல தாடி னான்காண்௿
அவனிவனென் றியாவர்க்கும் அறிய வொண்ணாச்௿
செம்பொன்காண் திருமுண்டீ சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே
மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்௿
முன்னுமா பின்னுமாய் முடிவா னான்காண்௿
காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண்௿
கங்காளன் காண்கயிலை மலையி னான்காண்௿
ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண்௿
ஆரழலாய் அயற்கரிக்கும் அறிய வொண்ணாத்௿
தேவன்காண் திருமுண்டீ சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே
கானவன்காண் கானவனா பொருதான் றான்காண்௿
கனலாட வல்லான்காண் கையி லேந்தும்௿
மானவன்காண் மறைநான்கு மாயி னான்காண்௿
வல்லேறொன் றதுவேற வல்லான் றான்காண்௿
ஊனவன்காண் உலகத்து குயிரா னான்காண்௿
உரையவன்காண் உணர்வவன்காண் உணர்ந்தார கென்றுந்௿
தேனவன்காண் திருமுண்டீ சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே
உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்௿
ஒழிவற நின்றெங்கு முலப்பி லான்காண்௿
புற்றரவே ஆடையுமா பூணு மாகிப்௿
புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்௿
நற்றவன்காண் அடியடைந்த மாணி காக௿
நணுகியதோர் பெருங்கூற்றை சேவ டியினாற்௿
செற்றவன்காண் திருமுண்டீ சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே
உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்வி௿
உருண்டோ தொடர்ந்தருக்கன் பல்லை யெல்லாந்௿
தகர்த்தவன்காண் தக்கன்றன் தலையை செற்ற௿
தலையவன்காண் மலைமகளாம் உமையை சால௿
மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் வேள்வி௿
வந்தவியுண் டவரோடு மதனை யெல்லாஞ்௿
சிதைத்தவன்காண் திருமுண்டீ சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே
உரிந்தவுடை யார்துவரா லுடம்பை மூடி௿
உழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம்௿
பரிந்தவன்காண் பனிவரைமீ பண்ட மெல்லாம்௿
பறித்துடனே நிரந்துவரு பாய்நீர பெண்ணை௿
நிரந்துவரும் இருகரையு தடவா வோடி௿
நின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித்௿
திரிந்துலவு திருமுண்டீ சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
அறுத்தவன்காண் அடியவர்கள் அல்ல லெல்லாம்௿
அரும்பொருளாய் நின்றவன்காண் அனங்க னாகம்௿
மறுத்தவன்காண் மலைதன்னை மதியா தோடி௿
மலைமகள்தன் மனம்நடுங்க வானோ ரஞ்சக்௿
கறுத்தவனா கயிலாய மெடுத்தோன் கையுங்௿
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்கி யோடச்௿
செறுத்தவன்காண் திருமுண்டீ சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே
௿
இத்தலம் நடுநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் முண்டீசுவரர்௿ தேவியார் கானார்குழலியம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாலம்பொழில் திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
கருவாகி கண்ணுதலாய் நின்றான் றன்னைக்௿
கமலத்தோன் றலையரிந்த கபா லியை௿
உருவார்ந்த மலைமகளோர் பாக தானை௿
உணர்வெலா மானானை ஓசை யாகி௿
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை௿
மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய௿
திருவானை தென்பரம்பை குடியின் மேய௿
திருவாலம் பொழிலானை சிந்தி நெஞ்சே
உரித்தானை களிறதன் றோல் போர்வை யாக௿
உடையானை உடைபுலியி னதளே யாகத்௿
தரித்தானை சடையதன்மேற் கங்கை யங்கைத்௿
தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம்௿
பரித்தானை பவளமால் வரையன் னானைப்௿
பாம்பணையான் றனக்கன்றங் காழி நல்கிச்௿
சிரித்தானை தென்பரம்பை குடியின் மேய௿
திருவாலம் பொழிலானை சிந்தி நெஞ்சே
உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானை௿
ஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளாற்௿
கருவீன்ற வெங்களவை யறிவான் றன்னைக்௿
காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக்௿
கருளீன்ற ஆரமுதை அமரர் கோனை௿
அள்ளூறி எம்பெருமா னென்பார கென்றுந்௿
திருவீன்ற தென்பரம்பை குடியின் மேய௿
திருவாலம் பொழிலானை சிந்தி நெஞ்சே
பார்முழுதாய் விசும்பாகி பாதா ளமாம்௿
பரம்பரனை சுரும்பமருங் குழலாள் பாகத்௿
தாரமுதாம் அணிதில்லை கூத்தன் றன்னை௿
வாட்போக்கி யம்மானை எம்மா னென்று௿
வாரமதா மடியார்க்கு வார மாகி௿
வஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ்௿
சீரரசை தென்பரம்பை குடியின் மேய௿
திருவாலம் பொழிலானை சிந்தி நெஞ்சே
வரையார்ந்த மடமங்கை பங்கன் றன்னை௿
வானவர்க்கும் வானவனை மணியை முத்தை௿
அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்த௿
அம்மானை தம்மானை அடியார கென்றும்௿
புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் றன்னைப்௿
பூந்துருத்தி மேயானை புகலூ ரானைத்௿
திரையார்ந்த தென்பரம்பை குடியின் மேய௿
திருவாலம் பொழிலானை சிந்தி நெஞ்சே
விரிந்தானை குவிந்தானை வேத வித்தை௿
வியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் றன்னை௿
அரிந்தானை சலந்தரன்றன் உடலம் வேறா௿
ஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப்௿
பரிந்தானை பல்லசுரர் புரங்கள் மூன்றும்௿
பாழ்படுப்பான் சிலைமலைநா ணேற்றி யம்பு௿
தெரிந்தானை தென்பரம்பை குடியின் மேய௿
திருவாலம் பொழிலானைச்சிந்தி நெஞ்சே
பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப்௿
புறம்புறமே சோதித்த புனிதன் றன்னை௿
எல்லாரு தன்னையே இகழ அந்நாள்௿
இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச்௿
சொல்லாதா ரவர்தம்மை சொல்லா தானைத்௿
தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச்௿
செல்லாத நெறிசெலுத்த வல்லான் றன்னைத்௿
திருவாலம் பொழிலானை சிந்தி நெஞ்சே
ஐந்தலைய நாகவணை கிடந்த மாலோ௿
டயன்தேடி நாடரிய அம்மான் றன்னைப்௿
பந்தணவு மெல்விரலாள் பாக தானைப்௿
பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் றன்னைப்௿
பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப்௿
பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச்௿
சிந்தியவெ தீவினைகள் தீர்ப்பான் றன்னைத்௿
திருவாலம் பொழிலானை சிந்தி நெஞ்சே
கையிலுண் டுழல்வாருஞ் சாக்கி யருங்௿
கல்லாத வன்மூடர கல்லா தானைப்௿
பொய்யிலா தவர்க்கென்றும் பொய்யி லானைப்௿
பூணாகம் நாணாக பொருப்பு வில்லாக்௿
கையினார் அம்பெரிகால் ஈர்க்கு கோலாக்௿
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த௿
செய்யினார் தென்பரம்பை குடியின் மேய௿
திருவாலம் பொழிலானை சிந்தி நெஞ்சே
இப்பதிகத்தில் ம் செய்யுள் மறைந்து போயிற்று
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் ஆத்மநாதீசுவரர்௿ தேவியார் ஞானாம்பிகையம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சிவபுரம் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண்௿
வடமொழியு தென்றமிழும் மறைகள் நான்கும்௿
ஆனவன்காண் ஆனைந்து மாடி னான்காண்௿
ஐயன்காண் கையிலன லேந்தி யாடுங்௿
கானவன்காண் கானவனு கருள்செய் தான்காண்௿
கருதுவார் இதயத்து கமல தூறுந்௿
தேனவன்காண் சென்றடையா செல்வன் றான்காண்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே
நக்கன்காண் நக்கரவ மரையி லார்த்த௿
நாதன்காண் பூதகண மாட ஆடுஞ்௿
சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்௿
துடியிடையாள் துணைமுலைக்கு சேர்வ தாகும்௿
பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற் றான்காண்௿
புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற௿
திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே
வம்பின்மலர குழலுமையாள் மணவா ளன்காண்௿
மலரவன்மால் காண்பரிய மைந்தன் றான்காண்௿
கம்பமத கரிபிளிற வுரிசெய் தோன்காண்௿
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்ட தான்காண்௿
அம்பர்நகர பெருங்கோயி லமர்கின் றான்காண்௿
அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்௿
செம்பொனென திகழ்கின்ற உருவ தான்காண்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே
பித்தன்காண் தக்கன்றன் வேள்வி யெல்லாம்௿
பீடழி சாடி யருள்கள் செய்த௿
முத்தன்காண் முத்தீயு மாயி னான்காண்௿
முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க௿
அத்தன்காண் புத்தூரி லமர்ந்தான் றான்காண்௿
அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட௿
சித்தன்காண் சித்தீ சரத்தான் றான்காண்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே
தூயவன்காண் நீறு துதைந்த மேனி௿
துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்௿
தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்௿
சிறுமான்கொள் செங்கையெம் பெருமான் றான்காண்௿
ஆயவன்காண் ஆரூரி லம்மான் றான்காண்௿
அடியார்க காரமுத மாயி னான்காண்௿
சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே
பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்௿
பயிர்வளர்க்கு துளியவன்காண் துளியில் நின்ற௿
நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வி தான்காண்௿
நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்௿
பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளை பன்றி௿
பிரியாது பலநாளும் வழிப டேத்துஞ்௿
சீரவன்காண் சீருடைய தேவர கெல்லாஞ்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே
வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்௿
வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்௿
மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்௿
வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க௿
கையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண்௿
காமரங்கம் பொடிவீழ்த்த கண்ணி னான்காண்௿
செய்யவன்காண் செய்யவளை மாலு கீந்த௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள் மறைந்து போயின
கலையாரு நூலங்க மாயி னான்காண்௿
கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி௿
மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற௿
மண்ணாகி விண்ணாகி நின்றான் றான்காண்௿
தலையாய மலையெடுத்த தகவி லோனைத்௿
தகர்ந்துவிழ ஒருவிரலாற் சாதி தாண்ட௿
சிலையாரும் மடமகளோர் கூறன் றான்காண்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் பிரமபுரிநாயகர்௿ தேவியார் பெரியநாயகியம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவோமாம்புலியூர் திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை௿
அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்௿
ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை௿
எழுபிறப்பும் எனையாளா வுடையான் றன்னை௿
ஊராரும் படநாக மாட்டு வானை௿
உயர்புகழ்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்௿
சீராரும் வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே
ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா௿
அமரர்தொழுங் கழலானை அமலன் றன்னைச்௿
சோதிமதி கலைதொலை தக்க னெச்சன்௿
சுடரிரவி அயிலெயிறு தொலைவி தானை௿
ஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும்௿
உயர்புகழார் தருமோமாம் புலியூர் மன்னுந்௿
தீதிற்றிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே
வருமிக்க மதயானை யுரித்தான் றன்னை௿
வானவர்கோன் தோளனைத்தும் மடிவி தானைத்௿
தருமிக்க குழலுமையாள் பாகன் றன்னைச்௿
சங்கரனெம் பெருமானை தரணி தன்மேல்௿
உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி௿
உத்தமர்வாழ் தருமோமாம் புலியூர் மன்னுந்௿
திருமிக்க வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே
அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ௿
அழல்விழித்த கண்ணானை அமரர் கோனை௿
வென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ௿
விளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் றன்னை௿
ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும்௿
உயர்புகழ்நான் மறையோமாம் புலியூர் நாளுந்௿
தென்றல்மலி வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே
பாங்குடைய எழிலங்கி யருச்சனைமுன் விரும்பப்௿
பரிந்தவனு கருள்செய்த பரமன் றன்னைப்௿
பாங்கிலா நரகதனிற் தொண்ட ரானார்௿
பாராத வகைபண்ண வல்லான் றன்னை௿
ஓங்குமதிற் புடைதழுவும் எழிலோமாம் புலியூர்௿
உயர்புகழ தணரேத்த வுலகர கென்றுந்௿
தீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே
அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் றன்னை௿
ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்௿
வருந்துயர தவிர்ப்பானை உமையாள் நங்கை௿
மணவாள நம்பியையென் மருந்து தன்னைப்௿
பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்௿
பொழில்கெழுவு தருமோமாம் புலியூர் நாளுந்௿
திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே
மலையானை வருமலையன் றுரிசெய் தானை௿
மறையானை மறையாலும் அறிய வொண்ணாக்௿
கலையானை கலையாருங் கையி னானைக்௿
கடிவானை அடியார்கள் துயர மெல்லாம்௿
உலையாத அந்தணர்கள் வாழு மோமாம்௿
புலியூரெம் உத்தமனை புரமூன் றெய்த௿
சிலையானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே
சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச்௿
செழுமதியும் படஅரவும் உடன்வை தானைச்௿
சார்ந்தோர்க கினியானை தன்னொ பில்லாத்௿
தழலுருவை தலைமகனை தகைநால் வேதம்௿
ஓர்ந்தோதி பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர்௿
உள்ளானை கள்ளாத அடியார் நெஞ்சிற்௿
சேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே
வார்கெழுவு முலையுமையாள் வெருவ வன்று௿
மலையெடுத்த வாளரக்கன் றோளு தாளும்௿
ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டே௿
இன்னிசைகே டிருந்தானை இமையோர் கோனைப்௿
பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப்௿
பைம்பொழில்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்௿
சீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே
இப்பதிகத்தில் ம் செய்யுள் மறைந்து போயிற்று
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் துயர்தீர்த்தசெல்வர்௿ தேவியார் பூங்கொடியம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவின்னம்பர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
அல்லி மலர்நாற்ற துள்ளார் போலும்௿
அன்புடையார் சிந்தை யகலார் போலுஞ்௿
சொல்லின் அருமறைகள் தாமே போலுந்௿
தூநெறிக்கு வழிகாட்டு தொழிலார் போலும்௿
வில்லிற் புரமூன் றெரித்தார் போலும்௿
வீங்கிருளும் நல்வெளியு மானார் போலும்௿
எல்லி நடமாட வல்லார் போலும்௿
இன்னம்பர தான்தோன்றி யீச னாரே
கோழி கொடியோன்றன் தாதை போலுங்௿
கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்௿
ஊழி முதல்வரு தாமே போலும்௿
உள்குவார் உள்ளத்தி னுள்ளார் போலும்௿
ஆழித்தேர் வித்தகரு தாமே போலும்௿
அடைந்தவர்க கன்பராய் நின்றார் போலும்௿
ஏழு பிறவிக்கு தாமே போலும்௿
இன்னம்பர தான்தோன்றி யீச னாரே
தொண்டர்கள் தந்தகவி னுள்ளார் போலுந்௿
தூநெறிக்கு தூநெறியாய் நின்றார் போலும்௿
பண்டிருவர் காணா படியார் போலும்௿
பத்தர்கள்தஞ் சி திருந்தார் போலுங்௿
கண்ட மிறையே கறுத்தார் போலுங்௿
காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும்௿
இண்டை சடைசேர் முடியார் போலும்௿
இன்னம்பர தான்தோன்றி யீச னாரே
வான திளந்திங்க கண்ணி தன்னை௿
வளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும்௿
ஊனொத்த வேலொன் றுடையார் போலும்௿
ஒளிநீறு பூசு மொருவர் போலுந்௿
தானத்தின் முப்பொழுது தாமே போலுந்௿
தம்மின் பிறர்பெரியா ரில்லை போலும்௿
ஏன தெயிறிலங்க பூண்டார் போலும்௿
இன்னம்பர தான்தோன்றி யீச னாரே
சூழு துயர மறுப்பார் போலுந்௿
தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்௿
ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும்௿
ஆட லுகந்த அழகர் போலுந்௿
தாழ்வின் மனத்தேனை யாளா கொண்டு௿
தன்மை யளித்த தலைவர் போலும்௿
ஏழு பிறப்பு மறுப்பார் போலும்௿
இன்னம்பர தான்தோன்றி யீச னாரே
பா தணையுஞ் சிலம்பர் போலும்௿
பாரூர் விடையொன் றுடையார் போலும்௿
பூத படையாள் புனிதர் போலும்௿
பூம்புகலூர் மேய புராணர் போலும்௿
வேத பொருளாய் விளைவார் போலும்௿
வேடம் பரவி திரியு தொண்டர்௿
ஏத படாவண்ணம் நின்றார் போலும்௿
இன்னம்பர தான்தோன்றி யீச னாரே
பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்௿
பத்தர்கள்தஞ் சி திருந்தார் போலுங்௿
கல்லாதார் காட்சி கரியார் போலுங்௿
கற்றவர்கள் ஏதங் களைவார் போலும்௿
பொல்லாத பூத படையார் போலும்௿
பொருகடலும் ஏழ்மலையு தாமே போலும்௿
எல்லாரு மே தகுவார் போலும்௿
இன்னம்பர தான்தோன்றி யீச னாரே
மட்டு மலியுஞ் சடையார் போலும்௿
மாதையோர் பாக முடையார் போலுங்௿
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலுங்௿
காலன்றன் வாழ்நாள் கழிப்பார் போலும்௿
நட்டம் பயின்றாடும் நம்பர் போலும்௿
ஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும்௿
எட்டு திசைகளு தாமே போலும்௿
இன்னம்பர தான்தோன்றி யீச னாரே
கருவுற்ற காலத்தே என்னை யாண்டு௿
கழற்போது தந்தளித்த கள்வர் போலுஞ்௿
செருவிற் புரமூன்று மட்டார் போலுந்௿
தேவர்க்கு தேவராஞ் செல்வர் போலும்௿
மருவி பிரியாத மைந்தர் போலும்௿
மலரடிகள் நாடி வணங்க லுற்ற௿
இருவர கொருவராய் நின்றார் போலும்௿
இன்னம்பர தான்தோன்றி யீச னாரே
அலங்கற் சடைதாழ ஐய மேற்று௿
அரவ மரையார்க்க வல்லார் போலும்௿
வலங்கை மழுவொன் றுடையார் போலும்௿
வான்றக்கன் வேள்வி சிதைத்தார் போலும்௿
விலங்கல் எடுத்துகந்த வெற்றி யானை௿
விறலழித்து மெய்ந்நரம்பாற் கீதங் கேட்டன்௿
றிலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்௿
இன்னம்பர தான்தோன்றி யீச னாரே
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் எழுத்தறிந்தவீசுவரர்௿
தேவியார் கொந்தார்பூங்குழலம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கஞ்சனூர் திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
மூவிலைவேற் சூலம்வல னேந்தி னானை௿
மூன்றுசுடர கண்ணானை மூர்த்தி தன்னை௿
நாவலனை நரைவிடையொன் றேறு வானை௿
நால்வேத மாறங்க மாயி னானை௿
ஆவினிலை துகந்தானை அமரர் கோவை௿
அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங்௿
காவலனை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டு தேனே
தலையேந்து கையானை என்பார தானைச்௿
சவந்தாங்கு தோளானை சாம்ப லானைக்௿
குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக்௿
கோணாக மசைத்தானை குலமாங் கைலை௿
மலையானை மற்றொப்பா ரில்லா தானை௿
மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங்௿
கலையானை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டு தேனே
தொண்டர்குழா தொழுதேத்த அருள்செய் வானைச்௿
சுடர்மழுவா படையானை சுழிவான் கங்கைத்௿
தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச்௿
செக்கர்வா னொளியானை சேரா தெண்ணிப்௿
பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம்௿
பாழ்படுத்து தலையறுத்து பற்கண் கொண்ட௿
கண்டகனை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டு தேனே
விண்ணவனை மேருவில்லா வுடையான் றன்னை௿
மெய்யாகி பொய்யாகி விதியா னானைப்௿
பெண்ணவனை ஆணவனை பித்தன் றன்னைப்௿
பிணமிடுகா டுடையானை பெருந்த கோனை௿
எண்ணவனை எண்டிசையுங் கீழு மேலும்௿
இருவிசும்பு மிருநிலமு மாகி தோன்றுங்௿
கண்ணவனை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டு தேனே
உருத்திரனை உமாபதியை உலகா னானை௿
உத்தமனை நித்திலத்தை ஒருவன் றன்னைப்௿
பருப்பதத்தை பஞ்சவடி மார்பி னானைப்௿
பகலிரவாய் நீர்வெளியா பரந்து நின்ற௿
நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொ பானை௿
நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்௿
கருத்தவனை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டு தேனே
ஏடேறு மலர்க்கொன்றை அரவு தும்பை௿
இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கைச்௿
சேடெறிந்த சடையானை தேவர் கோவைச்௿
செம்பொன்மால் வரையானை சேர்ந்தார் சிந்தைக்௿
கேடிலியை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங்௿
காடவனை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டு தேனே
நாரணனும் நான்முகனு மறியா தானை௿
நால்வே துருவானை நம்பி தன்னைப்௿
பாரிடங்கள் பணிசெ பலிகொண் டுண்ணும்௿
பால்வணனை தீவணனை பகலா னானை௿
வார்பொதியும் முலையாளோர் கூறன் றன்னை௿
மானிடங்கை யுடையானை மலிவார் கண்டங்௿
கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டு தேனே
வானவனை வலிவலமும் மறைக்கா டானை௿
மதிசூடும் பெருமானை மறையோன் றன்னை௿
ஏனவனை இமவான்றன் பேதை யோடும்௿
இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத்௿
தேனவனை தித்திக்கும் பெருமான் றன்னைத்௿
தீதிலா மறையவனை தேவர் போற்றுங்௿
கானவனை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டு தேனே
நெருப்புருவு திருமேனி வெண்ணீற் றானை௿
நினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத்௿
தருக்கழிய முயலகன்மேற் றாள்வை தானைச்௿
சலந்தரனை தடிந்தோனை தக்கோர் சிந்தை௿
விருப்பவனை விதியானை வெண்ணீற் றானை௿
விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங்௿
கருத்தவனை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டு தேனே
மடலாழி தாமரையா யிரத்தி லொன்று௿
மலர்க்கணிட திடுதலுமே மலிவான் கோலச்௿
சுடராழி நெடுமாலு கருள்செய் தானைத்௿
தும்பியுரி போர்த்தானை தோழன் விட்ட௿
அடலாழி தேருடைய இலங்கை கோனை௿
அருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக்௿
கடலானை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டு தேனே
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் அக்கினீசுவரர்௿ தேவியார் கற்பகநாயகியம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவெறும்பியூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பன்னியசெ தமிழறியேன் கவியேன் மாட்டேன்௿
எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய௿
தன்னையுந்தன் றிறத்தறியா பொறியி லேனைத்௿
தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி௿
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்௿
அடைந்தேனை தொடர்ந்தென்னை யாளா கொண்ட௿
தென்னெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே
பளிங்கினிழ லுட்பதித்த சோதி யானைப்௿
பசுபதியை பாசுபத வேட தானை௿
விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை௿
வேதியனை விண்ணவனை மேவி வையம்௿
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்௿
அருமருந்தை ஆமா றறிந்தென் னுள்ளந்௿
தெளிந்தெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே
கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்௿
கடுஞ்சுடரை படிந்துகிட தமர ரேத்தும்௿
உருவையண்ட தொருமுதலை யோத வேலி௿
உலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற௿
மருவைவென்ற குழன்மடவாள் பாகம் வைத்த௿
மயானத்து மாசிலா மணியை வாசத்௿
திருவெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே
பகழிபொழி தடலரக்கர் புரங்கள் மூன்றும்௿
பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னைப்௿
புகழுமன்பர கின்பமரும் அமுதை தேனைப்௿
புண்ணியனை புவனியது முழுதும் போக௿
உமிழுமம்பொற் குன்றத்தை முத்தின் றூணை௿
உமையவள்தம் பெருமானை இமையோ ரேத்துந்௿
திகழெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே
பாரிடங்க ளுடன்பாட பயின்று நட்டம்௿
பயில்வானை அயில்வாய சூல மேந்தி௿
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் றன்னை௿
நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்௿
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்௿
பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்௿
சீரெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே
கார்முகிலா பொழிவானை பொழிந்த முந்நீர்௿
கரப்பானை கடியநடை விடையொன் றேறி௿
ஊர்பலவு திரிவானை ஊர தாக௿
ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு௿
பேரெழுத்தொன் றுடையானை பிரம னோடு௿
மாலவனும் இந்திரனும் மந்திரத்தா லேத்துஞ்௿
சீரெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே
நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை௿
நெறியிலங்கு மிகுகாலும் ஆகா சமும்௿
வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்௿
மன்னுயிரும் என்னுயிரு தானாஞ் செம்பொன்௿
ஆணியென்றும் அஞ்சனமா மலையே யென்றும்௿
அம்பவள திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ்௿
சேணெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே
அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை௿
ஆரம்ப குண்டரோ டயர்த்து நாளும்௿
மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா௿
மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்௿
பிறந்தநாள் நாளல்ல வாளா வீசன்௿
பேர்பிதற்றி சீரடிமை திறத்து ளன்பு௿
செறிந்தெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே
அறிவிலங்கு மனத்தானை அறிவார கன்றி௿
அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்௿
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட௿
புண்ணியனை பொருதிரைவாய் நஞ்ச முண்ட௿
குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்௿
சடையானை மடைதோறுங் கமல மென்பூச்௿
செறியெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே
அருந்தவத்தின் பெருவலியா லறிவ தன்றி௿
அடலரக்கன் றடவரையை யெடுத்தான் றிண்டோ ள்௿
முரிந்துநெரி தழிந்துபா தாள முற்று௿
முன்கைநரம் பினையெடுத்து கீதம் பாட௿
இருந்தவனை ஏழுலகு மாக்கி னானை௿
எம்மானை கைம்மாவி னுரிவை போர்த்த௿
திருந்தெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கழுக்குன்றம் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை௿
முதுபிணக்கா டுடையானை முதலா னானை௿
ஆவினிலை துகந்தானை அமரர் கோனை௿
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்௿
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்௿
புணர்வரிய பெருமானை புனிதன் றன்னைக்௿
காவலனை கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே
பல்லாடு தலைசடைமே லுடையான் றன்னைப்௿
பாய்புலித்தோ லுடையானை பகவன் றன்னைச்௿
சொல்லோடு பொருளனைத்து மானான் றன்னைச்௿
சுடருருவில் என்பறா கோல தானை௿
அல்லாத காலனைமுன் னடர்த்தான் றன்னை௿
ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்௿
கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்௿
கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே
இப்பதிகத்தில் முதலிரண்டு செய்யுட்கள் தவிர ௿
ஏனைய செய்யுட்கள் மறைந்து போயின
௿
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது௿
சுவாமிபெயர் வேதகிரீசுவரர்௿
தேவியார் பெண்ணினல்லாளம்மை௿
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

பலவகை திருத்தாண்டகம்
௿
திருச்சிற்றம்பலம்
நேர்ந்தொருத்தி ஒருபாக தடங கண்டு௿
நிலைதளர ஆயிரமா முகத்தி னோடு௿
பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயில கண்டு௿
படவரவும் பனிமதியும் வைத்த செல்வர்௿
தாந்திருத்தி தம்மனத்தை ஒருக்கா தொண்டர்௿
தனித்தொருதண் டூன்றிமெய் தளரா முன்னம்௿
பூந்துருத்தி என்பீ
பொல்லா புலாற்றுருத்தி போக்க லாமே
ஐத்தான தகமிடறு சுற்றி யாங்கே௿
அகத்தடைந்தால் யாதொன்று மிடுவா ரில்லை௿
மைத்தான கண்மடவார் தங்க ளோடு௿
மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்௿
பைத்தான தொண்மதியும் பாம்பும் நீரும்௿
படர்சடைமேல் வைத்துகந்த பண்பன் மேய௿
நெய்த்தானம் என்பீ
நிலாவா புலாற்றானம் நீக்க லாமே
பொய்யாறா வாறே புனைந்து பேசிப்௿
புலர்ந்தெழுந்த காலை பொருளே தேடிக்௿
கையாறா கரண முடையோ மென்று௿
களித்த மனத்தரா கருதி வாழ்வீர்௿
நெய்யாறா ஆடிய நீல கண்டர்௿
நிமிர்புன் சடைநெற்றி கண்ணர் மேய௿
ஐயாறே என்பீ
அல்லல்தீர தமருலகம் ஆள லாமே
இழவொன்று தாமொருவர கிட்டொன் றீயார்௿
ஈன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்௿
கழனங்கோ வையாதல் கண்டு தேறார்௿
களித்த மனத்தரா கருதி வாழ்வீர்௿
அழனம்மை நீக்குவிக்கும் அரைய னாக்கும்௿
அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேய௿
பழனம் பழனமே என்பீ ராகிற்௿
பயின்றெழுந்த பழவினைநோய் பாற்ற லாமே
ஊற்று துறையொன்ப துள்நின் றோரீர்௿
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டீர்௿
மாற்று துறைவழிகொண் டோ டா முன்னம்௿
மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்௿
வேற்று தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும்௿
வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய௿
சோற்றுத்துறை என்பீ
துயர்நீங்கி தூநெறிக்கண் சேர லாமே
கலஞ்சுழிக்குங் கருங்கடல்சூழ் வை தன்னிற்௿
கள்ள கடலி லழுந்தி வாளா௿
நலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில்௿
நம்பன்றன் அடியிணைக்கே நவில்வா யாகில்௿
அலஞ்சுழிக்கும் மன்னாக தன்னான் மேய௿
அருமறையோ டாறங்க மானார் கோயில்௿
வலஞ்சுழியே என்பீ
வல்வினைகள் தீர்ந்துவா னாள லாமே
தண்டி குண்டோ தரன்பிங் கிருடி௿
சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்௿
பண்டை உலகம் படைத்தான் றானும்௿
பாரை யளந்தான்பல் லாண்டி சைப்பத்௿
திண்டி வயிற்று சிறுக பூதஞ்௿
சிலபாட செங்கண் விடையொன் றூர்வான்௿
கண்டியூர் என்பீ
கடுகநும் வல்வினையை கழற்ற லாமே
விடமூக்க பாம்பேபோற் சிந்தி நெஞ்சே௿
வெள்ளேற்றான் தன்றமரை கண்ட போது௿
வடமூக்க மாமுனிவர் போல சென்று௿
மாதவத்தார் மனத்துளார் மழுவா செல்வர்௿
படமூக்க பாம்பணையிற் பள்ளி யானும்௿
பங்கயத்து மேலயனும் பரவி காணா௿
குடமூக்கே என்பீ
கொடுவினைகள் தீர்ந்தரனை குறுக லாமே
தண்காட்டா சந்தனமு தவள நீறுந்௿
தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக்௿
கண்காட்டா கருவரைபோ லனைய காஞ்சிக்௿
கார்மயிலஞ் சாயலார் கலந்து காண௿
எண்காட்டா காடங் கிடமா நின்று௿
எரிவீசி இரவாடும் இறைவர் மேய௿
வெண்காடே என்பீ
வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே
தந்தையார் தாயா ருடன் பிறந்தார்௿
தாரமார் புத்திரரார் தாந்தா மாரே௿
வந்தவா றெங்ஙனே போமா றேதோ௿
மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா௿
சிந்தையீர் உமக்கொன்று சொல்ல கேண்மின்௿
திகழ்மதியும் வாளரவு திளைக்குஞ் சென்னி௿
எந்தையார் திருநாமம் நமச்சி வாய௿
என்றெழுவார கிருவிசும்பி லிருக்க லாமே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

நின்ற திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
இருநிலனா தீயாகி நீரு மாகி௿
இயமான னாயெறியுங் காற்று மாகி௿
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி௿
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்௿
பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும்௿
பிறருருவு தம்முருவு தாமே யாகி௿
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி௿
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே
மண்ணாகி விண்ணாகி மலையு மாகி௿
வயிரமுமாய் மாணிக்க தானே யாகிக்௿
கண்ணாகி கண்ணுக்கோர் மணியு மாகிக்௿
கலையாகி கலைஞான தானே யாகிப்௿
பெண்ணாகி பெண்ணுக்கோ ராணு மாகிப்௿
பிரளயத்து கப்பாலோ ரண்ட மாகி௿
எண்ணாகி எண்ணுக்கோ ரெழுத்து மாகி௿
எழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே
கல்லாகி களறாகி கானு மாகிக்௿
காவிரியா காலாறா கழியு மாகிப்௿
புல்லாகி புதலாகி பூடு மாகிப்௿
புரமாகி புரமூன்றுங் கெடுத்தா னாகிச்௿
சொல்லாகி சொல்லுக்கோர் பொருளு மாகிச்௿
சுலாவாகி சுலாவுக்கோர் சூழ லாகி௿
நெல்லாகி நிலனாகி நீரு மாகி௿
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே
காற்றாகி கார்முகிலா காலம் மூன்றாய்க்௿
கனவாகி நனவாகி கங்கு லாகிக்௿
கூற்றாகி கூற்றுதைத்தகொல் களிறு மாகிக்௿
குரைகடலா குரைகடற்கோர் கோமா னுமாய்௿
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி௿
நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி௿
ஏற்றானாய் ஏறூர்ந்த செல்வ னாகி௿
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே
தீயாகி நீராகி திண்மை யாகித்௿
திசையாகி அத்திசைக்கோர் தெய்வ மாகித்௿
தாயாகி தந்தையா சார்வு மாகித்௿
தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்௿
காயாகி பழமாகி பழத்தில் நின்ற௿
இரதங்கள் நுகர்வானு தானே யாகி௿
நீயாகி நானாகி நேர்மை யாகி௿
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே
அங்கமா யாதியாய் வேத மாகி௿
அருமறையோ டைம்பூத தானே யாகிப்௿
பங்கமா பலசொல்லு தானே யாகிப்௿
பான்மதியோ டாதியா பான்மை யாகிக்௿
கங்கையா காவிரியா கன்னி யாகிக்௿
கடலாகி மலையாகி கழியு மாகி௿
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி௿
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே
மாதா பிதாவாகி மக்க ளாகி௿
மறிகடலும் மால்விசும்பு தானே யாகிக்௿
கோதா விரியா குமரி யாகிக்௿
கொல்புலித்தோ லாடை குழக னாகிப்௿
போதாய மலர்கொண்டு போற்றி நின்று௿
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி௿
யாதானு மெனநினைந்தார கெளிதே யாகி௿
அழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே
ஆவாகி ஆவினில் ஐந்து மாகி௿
அறிவாகி அழலாகி அவியு மாகி௿
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி௿
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்௿
பூவாகி பூவுக்கோர் நாற்ற மாகிப்௿
பூக்குளால் வாசமாய் நின்றா னாகித்௿
தேவாகி தேவர் முதலு மாகிச்௿
செழுஞ்சுடரா சென்றடிகள் நின்ற வாறே
நீராகி நீளகல தானே யாகி௿
நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்௿
பேராகி பேருக்கோர் பெருமை யாகிப்௿
பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி௿
ஆரேனு தன்னடைந்தார் தம்மை யெல்லாம்௿
ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்௿
பாராகி பண்ணாகி பாட லாகிப்௿
பரஞ்சுடரா சென்றடிகள் நின்ற வாறே
மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்௿
மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்௿
பாலாகி எண்டிசைக்கும் எல்லை யாகிப்௿
பரப்பாகி பரலோக தானே யாகிப்௿
பூலோக புவலோக சுவலோ கமாய்ப்௿
பூதங்க ளாய்ப்புராணன் றானே யாகி௿
ஏலா தனவெலாம் ஏல்வி பானாய்௿
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

தனி திருத்தாண்டகம்௿
௿
திருச்சிற்றம்பலம்
அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ௿
அன்புடைய மாமனும் மாமி யும்நீ௿
ஒப்புடைய மாதரு மொண்பொரு ளும்நீ௿
ஒருகுலமுஞ் சுற்றமும் ஓரூ ரும்நீ௿
துய்ப்பனவும் உய்ப்பனவு தோற்று வாய்நீ௿
துணையாயென் நெஞ்ச துறப்பி பாய்நீ௿
இப்பொன்நீ இம்மணிநீ இம்மு தும்நீ௿
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே
வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்௿
வெய்ய வினைப்பகையும் பைய நையும்௿
எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்௿
எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்௿
அம்பவள செஞ்சடைமேல் ஆறு சூடி௿
அனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்த௿
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்௿
செவ்வான வண்ணரென் சிந்தை யாரே
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே௿
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே௿
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே௿
உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே௿
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே௿
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே௿
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே௿
காண்பாரார் கண்ணுதலாய் காட்டா காலே
நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தி௿
நலஞ்சுடரே நால்வே தப்பால் நின்ற௿
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற௿
சொலற்கரிய சூழலாய் இதுவுன் றன்மை௿
நிற்பதொத்து நிலையிலா நெஞ்ச தன்னுள்௿
நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற௿
கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்௿
கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே
திருக்கோயி லில்லாத திருவி லூருந்௿
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்௿
பருக்கோடி பத்திமையாற் பாடா வூரும்௿
பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்௿
விருப்போடு வெண்சங்க மூதா வூரும்௿
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்௿
அருப்போடு மலர்பறித்தி டுண்ணா வூரும்௿
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே
திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற்௿
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்௿
ஒருகாலு திருக்கோயில் சூழா ராகில்௿
உண்பதன்முன் மலர்பறித்தி டுண்ணா ராகில்௿
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்௿
அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்௿
பெருநோய்கள் மிகநலி பெயர்த்துஞ் செத்துப்௿
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே
நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்௿
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்௿
மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்௿
மறைநான்கு மானாயா றங்க மானாய்௿
பொன்னானாய் மணியானாய் போக மானாய்௿
பூமிமேற் புகழ்தக்க பொருளே உன்னை௿
என்னானாய் என்னி
ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே
அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்௿
அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டி கொண்டாய்௿
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்௿
எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்௿
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்௿
பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே௿
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ௿
எம்பெருமான் றிருக்கருணை இருந்த வாறே
குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்௿
குற்றமே பெரிதுடையேன் கோல மாய௿
நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்௿
நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற௿
விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தே னல்லேன்௿
வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்௿
இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்௿
என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே
சங்கநிதி பதுமநிதி இரண்டு தத்து௿
தரணியொடு வானாள தருவ ரேனும்௿
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்௿
மாதேவர கேகாந்த ரல்லா ராகில்௿
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்௿
ஆவுரித்து தின்றுழலும் புலைய ரேனுங்௿
கங்கைவார் சடைக்கரந்தார கன்ப ராகில்௿
அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

தனி திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
ஆமயந்தீர தடியேனை ஆளா கொண்டார்௿
அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்௿
தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார்௿
தலையதனிற் பலிகொண்டார் நிறைவா தன்மை௿
வாமனனார் மாகா துதிரங் கொண்டார்௿
மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார்௿
காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக்௿
கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே
முப்புரிநூல் வரைமார்பில் முயங கொண்டார்௿
முதுகேழல் முளைமருப்புங் கொண்டார் பூணாச்௿
செப்புருவ முலைமலையாள் பாகங் கொண்டார்௿
செம்மேனி வெண்ணீறு திகழ கொண்டார்௿
துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார்௿
சுடர்முடிசூழ தடியமரர் தொழவுங் கொண்டார்௿
அப்பலிகொண் டாயிழையார் அன்புங் கொண்டார்௿
அடியேனை ஆளுடைய அடிக ளாரே
முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு௿
மூசுமிள நாகமுட னா கொண்டார்௿
அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப௿
அடங்காத முயலகனை அடிக்கீழ கொண்டார்௿
வடிகொண்டார திலங்குமழு வலங்கை கொண்டார்௿
மாலையிட பாகத்தே மருவ கொண்டார்௿
துடிகொண்டார் கங்காள தோள்மேற் கொண்டார்௿
சூலைதீர தடியேனை யாட்கொண் டாரே
பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார்௿
பூத படைகள்புடை சூழ கொண்டார்௿
அக்கினொடு படவரவம் அரைமேற் கொண்டார்௿
அனைத்துலகும் படைத்தவையும் அடங கொண்டார்௿
கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார்௿
கொடியானை அடலாழி கிரையா கொண்டார்௿
செக்கர்நிற திருமேனி திகழ கொண்டார்௿
செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே
அந்தகனை அயிற்சூல தழுத்தி கொண்டார்௿
அருமறையை தேர்க்குதிரை யாக்கி கொண்டார்௿
சுந்தரனை துணைக்கவரி வீச கொண்டார்௿
சுடுகாடு நடமாடு மிடமா கொண்டார்௿
மந்தரநற் பொருசிலையா வளைத்து கொண்டார்௿
மாகாளன் வாசற்கா பா கொண்டார்௿
தந்திர திரத்தரா யருளி கொண்டார்௿
சமண்தீர்த்தென் றன்னையா கொண்டார் தாமே
பாரிடங்கள் பலகருவி பயில கொண்டார்௿
பவள நிறங்கொண்டார் பளிங்குங் கொண்டார்௿
நீரடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார்௿
நீலநிறங் கோலநிறை மிடற்றிற் கொண்டார்௿
வாரடங்கு வனமுலையார் மைய லாகி௿
வந்திட்ட பலிகொண்டார் வளையுங் கொண்டார்௿
ஊரடங்க ஒற்றிநகர் பற்றி கொண்டார்௿
உடலுறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே
அணிதில்லை அம்பலமா டரங்கா கொண்டார்௿
ஆலால அருநஞ்சம் அமுதா கொண்டார்௿
கணிவளர்தார பொன்னிதழி கமழ்தார் கொண்டார்௿
காதலார் கோடிகல திருக்கை கொண்டார்௿
மணிபணத்த அரவந்தோள் வளையா கொண்டார்௿
மால்விடைமேல் நெடுவீதி போத கொண்டார்௿
துணிபுலித்தோ லினையாடை யுடையா கொண்டார்௿
சூலங்கை கொண்டார்தொண் டெனைக்கொண் டாரே
படமூக்க பாம்பணையா னோடு வானோன்௿
பங்கயனென் றங்கவரை படைத்து கொண்டார்௿
குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார்௿
கூற்றுதைத்தோர் வேதியனை கொண்டார்௿
நெடுமூக்கிற் கரியினுரி மூடி கொண்டார்௿
நினையாத பாவிகளை நீங கொண்டார்௿
இடமாக்கி இடைமருதுங் கொண்டார் பண்டே௿
என்னையிந்நா ளாட்கொண்ட இறைவர் தாமே
எச்சனிணை தலைகொண்டார் பகன்கண் கொண்டார்௿
இரவிகளி லொருவன்பல் லிறுத்து கொண்டார்௿
மெச்சன்வியா திரன்றலையும் வேறா கொண்டார்௿
விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்து௿
உச்சநமன் றாளறுத்தார் சந்திரனை யுதைத்தார்௿
உணர்விலா தக்கன்றன் வேள்வி யெல்லாம்௿
அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார்௿
அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே
சடையொன்றிற் கங்கையையு தரித்து கொண்டார்௿
சாமத்தின் இசைவீணை தடவி கொண்டார்௿
உடையொன்றிற் புள்ளியுழை தோலுங் கொண்டார்௿
உள்குவார் உள்ளத்தை ஒருக்கி கொண்டார்௿
கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார்௿
காபால வேடங் கருதி கொண்டார்௿
விடைவென்றி கொடியதனில் மேவ கொண்டார்௿
வெந்துயர தீர்த்தென்னை யாட்கொண் டாரே
குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார்௿
குடமுழ தீசனைவா சகனா கொண்டார்௿
சிராமலைதஞ் சேர்விடமா திருந்த கொண்டார்௿
தென்றல்நெடு தேரோனை பொன்ற கொண்டார்௿
பராபரனென் பதுதமது பேரா கொண்டார்௿
பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி௿
இராவணனென் றவனைப்பே ரியம்ப கொண்டார்௿
இடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவினா திருத்தாண்டகம்
௿
திருச்சிற்றம்பலம்
அண்டங் கடந்த சுவடு முண்டோ ௿
அனலங்கை யேந்திய ஆட லுண்டோ ௿
பண்டை யெழுவர் படியு முண்டோ ௿
பாரிடங்கள் பலசூழ போந்த துண்டோ ௿
கண்ட மிறையே கறுத்த துண்டோ ௿
கண்ணின்மேற் கண்ணொன்று கண்ட துண்டோ ௿
தொண்டர்கள் சூழ தொடர்ச்சி யுண்டோ ௿
சொல்லீரெம் பிரானாரை கண்ட வாறே
எரிகின்ற இளஞாயி றன்ன மேனி௿
இலங்கிழையோர் பாலுண்டோ வெள்ளே றுண்டோ ௿
விரிகின்ற பொறியரவ தழலு முண்டோ ௿
வேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோ ௿
வரிநின்ற பொறியரவ சடையு முண்டோ ௿
அச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோ ௿
சொரிகின்ற புனலுண்டோ சூல முண்டோ ௿
சொல்லீரெம் பிரானாரை கண்ட வாறே
நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ ௿
நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ௿
புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ ௿
பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ ௿
கலாமாலை வேற்கண்ணாள் பாக துண்டோ ௿
கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ ௿
சுலாமாலை யாடரவ தோள்மே லுண்டோ ௿
சொல்லீரெம் பிரானாரை கண்ட வாறே
பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ ௿
பாரிடங்கள் பலசூழ போந்த துண்டோ ௿
உண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ ௿
ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ ௿
கண்ணார் கழற்காலற் செற்ற துண்டோ ௿
காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ ௿
எண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ ௿
எவ்வகையெம் பிரானாரை கண்ட வாறே
நீறுடைய திருமேனி பாக முண்டோ ௿
நெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோ ௿
கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ ௿
கொல்புலித்தோ லுடையுண்டோ கொண்ட வேடம்௿
ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ ௿
அதனருகே பிறையுண்டோ அளவி லாத௿
ஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ ௿
எவ்வகையெம் பிரானாரை கண்ட வாறே
பட்டமு தோடுமோர் பாகங் கண்டேன்௿
பார்திகழ பலிதிரிந்து போத கண்டேன்௿
கொட்டிநின் றிலயங்க ளாட கண்டேன்௿
குழைகாதிற் பிறைசென்னி யிலங கண்டேன்௿
கட்டங கொடிதிண்டோ ளாட கண்டேன்௿
கனமழுவாள் வலங்கையி லிலங கண்டேன்௿
சிட்டனை திருவால வாயிற் கண்டேன்௿
தேவனை கனவில்நான் கண்ட வாறே
அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன்௿
அலர்கொன்றை தாரணிந்த வாறு கண்டேன்௿
பலிக்கோடி திரிவார்கை பாம்பு கண்டேன்௿
பழனம் புகுவாரை பகலே கண்டேன்௿
கலிக்கச்சி மேற்றளியே இரு கண்டேன்௿
கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன்௿
வலித்துடுத்த மான்றோ லரையிற் கண்டேன்௿
மறைவல்ல மாதவனை கண்ட வாறே
நீறேறு திருமேனி நிகழ கண்டேன்௿
நீள்சடைமேல் நிறைகங்கை யேற கண்டேன்௿
கூறேறு கொடுமழுவாள் கொள்ள கண்டேன்௿
கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்௿
ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன்௿
அடியார்க காரமுத மா கண்டேன்௿
ஏறேறி இந்நெறியே போத கண்டேன்௿
இவ்வகையெம் பெருமானை கண்ட வாறே
விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு௿
வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு௿
சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு௿
சூலமு தண்டுஞ் சுமந்த துண்டு௿
அரையுண்ட கோவண ஆடை யுண்டு௿
வலிக்கோலு தோலு மழகா வுண்டு௿
இரையுண் டறியாத பாம்பு முண்டு௿
இமையோர் பெருமா னிலாத தென்னே
மைப்படிந்த கண்ணாளு தானுங் கச்சி௿
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்௿
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்௿
ஓரூர னல்லனோ ருவம னில்லி௿
அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்௿
அவனருளே கண்ணா காணி னல்லால்௿
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்௿
இவனிறைவன் என்றெழுதி காட்டொ ணாதே
பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன்௿
புலித்தோ லுடைகண்டேன் புணர தன்மேல்௿
மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்௿
மிளிர்வதொரு பாம்பும் அரைமேற் கண்டேன்௿
அன்னத்தே ரூர்ந்த அரக்கன் றன்னை௿
அலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன்௿
சின்ன மலர்க்கொன்றை கண்ணி கண்டேன்௿
சிவனைநான் சிந்தையு கண்ட வாறே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமறுமாற்ற திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்௿
நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம்௿
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்௿
இன்பமே எந்நாளு துன்ப மில்லை௿
தாமார்க்குங் குடியல்லா தன்மை யான௿
சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்௿
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்௿
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே
அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்௿
அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்௿
புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி௿
உடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே௿
இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்௿
இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோந்௿
துகிலுடுத்து பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ்௿
சொற்கேட கடவோமோ துரிசற் றோமே
வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்௿
மாதேவா என்று
நீராண்ட புரோதாயம் ஆட பெற்றோம்௿
நீறணியுங் கோலமே நிகழ பெற்றோங்௿
காராண்ட மழைபோல கண்ணீர் சோரக்௿
கன்மனமே நன்மனமா கரை பெற்றோம்௿
பாராண்டு பகடேறி திரிவார் சொல்லும்௿
பணிகேட கடவோமோ பற்றற் றோமே
உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்௿
உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே௿
செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்௿
நன்மையா சிறப்பதே பிறப்பிற் செல்லோம்௿
நறவார்பொன் னிதழிநறு தாரோன் சீரார்௿
நமச்சிவா யஞ்சொல்ல வல்லோம் நாவாற்௿
சுறவாருங் கொடியானை பொடியா கண்ட௿
சுடர்நயன சோதியையே தொடர்வுற் றோமே
என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்௿
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை௿
சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோஞ்௿
சிவபெருமான் திருவடியே சேர பெற்றோம்௿
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே௿
உறுபிணியார் செறலொழிந்தி டோ டி போனார்௿
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்௿
புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே
மூவுருவின் முதலுருவாய் இருநான் கான௿
மூர்த்தியே யென்றுமு பத்து மூவர்௿
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ்௿
செம்பவள திருமேனி சிவனே யென்னும்௿
நாவுடையார் நமையாள வுடையா ரன்றே௿
நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான௿
காவலரே யேவி விடுத்தா ரேனுங்௿
கடவமலோங் கடுமையொடு களவற் றோமே
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்௿
நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி௿
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி௿
அன்புடையார கெளிமையதாய் அளக்க லாகாத்௿
தற்பரமா சதாசிவமா தானும் யானும்௿
ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்௿
பொற்புடைய பேச கடவோம் பேயர்௿
பேசுவன பேசுதுமோ பிழையற் றோமே
ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் றன்னை௿
இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க௿
தேசனை செம்மேனி வெண்ணீற் றானைச்௿
சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற௿
நேசனை நித்தலும் நினை பெற்றோம்௿
நின்றுண்பா ரெம்மை நினை சொன்ன௿
வாசக மெல்லாம் மறந்தோ மன்றே௿
வந்தீரார் மன்னவனா வான்றா னாரே
சடையுடையான் சங குழையோர் காதன்௿
சாம்பலும் பாம்பு மணிந்த மேனி௿
விடையுடையான் வேங்கை யதள்மே லாடை௿
வெள்ளிபோற் புள்ளியுழை மான்றோல் சார்ந்த௿
உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்௿
உம்மோடு மற்று முளராய் நின்ற௿
படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்௿
பாசமற வீசும் படியோம் நாமே
நாவார நம்பனையே பாட பெற்றோம்௿
நாணற்றார் நள்ளாமே விள்ள பெற்றோம்௿
ஆவாவென் றெமையாள்வான் அமரர் நாதன்௿
அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட௿
தேவாதி தேவன் சிவனென் சிந்தை௿
சேர்ந்திருந்தான் தென்றிசைக்கோன் றானே வந்து௿
கோவாடி குற்றேவல் செய்கென் றாலுங்௿
குணமா கொள்ளோமெண் குணத்து ளோமே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புகலூர் திருத்தாண்டகம்௿
திருச்சிற்றம்பலம்
எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ௿
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்௿
கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்௿
கழலடியே கைதொழுது காணி னல்லால்௿
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்௿
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்௿
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே
அங்கமே பூண்டாய் அனலா டினாய்௿
ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்௿
பங்கமொன் றில்லாத படர்ச டையினாய்௿
பாம்பொடு திங்கள் பகைதீர தாண்டாய்௿
சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்௿
சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்௿
சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்௿
திருப்புகலூர் மேவிய தேவ தேவே
பையரவ கச்சையாய் பால்வெண் ணீற்றாய்௿
பளிக்கு குழையினாய் பண்ணார் இன்சொல்௿
மைவிரவு கண்ணாளை பாகங் கொண்டாய்௿
மான்மறிகை யேந்தினாய் வஞ்ச கள்வர்௿
ஐவரையும் என்மேற் றரவ றுத்தாய்௿
அவர்வேண்டுங் காரியமிங் காவ தில்லை௿
பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே
தெருளாதார் மூவெயிலு தீயில் வேவச்௿
சிலைவளைத்து செங்கணையாற் செற்ற தேவே௿
மருளாதார் தம்மனத்தில் வாட்ட தீர்ப்பாய்௿
மருந்தா பிணிதீர்ப்பாய் வானோர கென்றும்௿
அருளாகி ஆதியாய் வேத மாகி௿
அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்௿
பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே
நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்௿
நீங்காமை வைத்துகந்த நீதி யானே௿
பாரேறு படுதலையிற் பலிகொள் வானே௿
பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா௿
காரேறு முகிலனைய கண்ட தானே௿
கருங்கை களிற்றுரிவை கதற போர்த்த௿
போரேறே உன்னடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே
விரிசடையாய் வேதியனே வேத கீதா௿
விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீ சூராய்௿
திரிபுரங்க ளெரிசெய்த தேவ தேவே௿
திருவாரூர திருமூல தான மேயாய்௿
மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய்௿
வலஞ்சுழியாய் மாமறைக்கா டெந்தா யென்றும்௿
புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே
தேவார்ந்த தேவனை தேவ ரெல்லாந்௿
திருவடிமேல் அலரிட்டு தேடி நின்று௿
நாவார்ந்த மறைபாடி நட்ட மாடி௿
நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்௿
காவார்ந்த பொழிற்சோலை கான பேராய்௿
கழுக்குன்ற துச்சியாய் கடவு ளேநின்௿
பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே
நெய்யாடி நின்மலனே நீல கண்டா௿
நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே௿
மையாடு கண்மடவாள் பாக தானே௿
மான்றோ லுடையாய் மகிழ்ந்து நின்றாய்௿
கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை௿
கொண்டடியேன் நானிட்டு கூறி நின்று௿
பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே
துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்௿
துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்௿
தன்னணையு தண்மதியும் பாம்பும் நீருஞ்௿
சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே௿
அன்ன நடைமடவாள் பாக தானே௿
அக்காரம் பூண்டானே ஆதி யானே௿
பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே
ஒருவனையு மல்லா துணரா துள்ளம்௿
உணர்ச்சி தடுமாற்ற துள்ளே நின்ற௿
இருவரையும் மூவரையும் என்மே லேவி௿
இல்லாத தரவறுத்தா கில்லேன் ஏலக்௿
கருவரை சூழ்கானல் இலங்கை வேந்தன்௿
கடுந்தேர்மீ தோடாமை காலாற் செற்ற௿
பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே
௿
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த ௿
தேவாரப்பதிகங்கள்௿ ஆறாம் திருமுறை முற்றும்