திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
ஐந்தாம் திருமுறை முதற் பகுதி
பாடல்கள்
உள்ளுறை
கோயில் மின்பதிப்பு
கோயில் மின்பதிப்பு
திருவரத்துறை மின்பதிப்பு
திருவண்ணாமலை மின்பதிப்பு
திருவண்ணாமலை மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருஅன்னியூர் மின்பதிப்பு
திருமறைக்காடு மின்பதிப்பு
திருமறைக்காடு மின்பதிப்பு
திருமீயச்சூர் மின்பதிப்பு
திருவீழிமிழலை மின்பதிப்பு
திருவீழிமிழலை மின்பதிப்பு
திருவிடைமருதூர் மின்பதிப்பு
திருவிடைமருதூர் மின்பதிப்பு
திருப்பேரெயில் மின்பதிப்பு
திருவெண்ணியூர் மின்பதிப்பு
திருக்கடம்பந்துறை மின்பதிப்பு
திருக்கடம்பூர் மின்பதிப்பு
திருக்கடம்பூர் மின்பதிப்பு
திருவின்னம்பர் மின்பதிப்பு
திருக்குடமூக்கு மின்பதிப்பு
திருநின்றியூர் மின்பதிப்பு
திருவொற்றியூர் மின்பதிப்பு
திருப்பாசூர் மின்பதிப்பு
திருவன்னியூர் மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருவாவடுதுறை மின்பதிப்பு
திருப்பராய்த்துறை மின்பதிப்பு
திருவானைக்கா மின்பதிப்பு
திருப்பூந்துருத்தி மின்பதிப்பு
திருச்சோற்றுத்துறை மின்பதிப்பு
திருநெய்த்தானம் மின்பதிப்பு
திருப்பழனம் மின்பதிப்பு
திருச்செம்பொன்பள்ளி மின்பதிப்பு
திருக்கடவூர்வீரட்டம் மின்பதிப்பு
திருக்கடவூர்மயானம் மின்பதிப்பு
திருமயிலாடுதுறை மின்பதிப்பு
திருக்கழிப்பாலை மின்பதிப்பு
திருப்பைஞ்ஞீலி மின்பதிப்பு
திருவேட்களம் மின்பதிப்பு
திருநல்லம் மின்பதிப்பு
திருவாமாத்தூர் மின்பதிப்பு
திருத்தோணிபுரம் மின்பதிப்பு
திருப்புகலூர் மின்பதிப்பு
திருவேகம்பம் மின்பதிப்பு
திருவேகம்பம் மின்பதிப்பு
திருவெண்காடு மின்பதிப்பு
திருவாய்மூர் மின்பதிப்பு


கோயில் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
அன்னம் பாலிக்கு தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமி பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோவி பிறவியே
அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்பட தூவி தொழுமினோ
கரும்பற் றச்சிலை காமனை காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே
அரிச்சுற் றவினை யால்அடர புண்டுநீர்
எரிச்சுற் றக்கிட தாரென் றயலவர்
சிரிச்சுற் றப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடை துய்ம்மினே
அல்லல் என்செயும் அருவினை
தொல்லை வல்வினை தொந்தந்தான் என்செயும்
தில்லை மாநகர சிற்றம் பலவனார
கெல்லை யில்லதோர் அடிமைபூண் டேனுக்கே
ஊனி லாவி உயிர்க்கும் பொழுதெலாம்
நானி லாவி யிருப்பனென் னாதனை
தேனி லாவிய சிற்றம் பலவனார்
வானி லாவி யிருக்கவும் வைப்பரே
சிட்டர் வானவர் சென்று வரங்கொளுஞ்
சிட்டர் வாழ்தில்லை சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழ செல்லு
சிட்டர் பாலணு கான்செறு காலனே
ஒருத்த னார்உல கங்க கொருசுடர்
திருத்த னார்தில்லை சிற்றம் பலவனார்
விருத்த னார்இளை யார்விட முண்டவெம்
அருத்த னார்அடி யாரை அறிவரே
விண்ணி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு
எண்ணி றைந்த இருவர கறிவொணா
கண்ணி றைந்த கடிபொழில் அம்பல
துண்ணி றைந்துநின் றாடும் ஒருவனே
வில்லைவ டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லைவ டம்மதின் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவ டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவ டங்கட தோடுதல் உண்மையே
நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரி துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பல
தாடி பாதமென் னெஞ்சுள் இருக்கவே
மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம் பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடு தான்முடி பத்திற
மிதிகொள் சேவடி சென்றடை துய்ம்மினே

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

கோயில் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பனைக்கை மும்மத வேழ முரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலா கொண்டவன்
அனைத்து வேடமாம் அம்பல கூத்தனை
தினைத்த னைப்பொழு தும்மற துய்வனோ
தீர்த்த னைச்சிவ
மூர்த்தி யைமுத லாய ஒருவனை
பார்த்த னுக்கருள் செய்த சிற்றம்பல
கூத்த னைக்கொடி யேன்மற துய்வனோ

கட்டும் பாம்புங் கபாலங் கைமான்மறி
இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பல கூத்தனை
எட்ட னைப்பொழு தும்மற துய்வனோ
மாணி பால்கற தாட்டி வழிபட
நீணு லகெலாம் ஆள கொடுத்தவன்
ஆணி யைச்செம்பொன் அம்பல துள்நின்ற
தாணு வைத்தமி யேன்மற துய்வனோ
பித்த னைப்பெருங் காடரங் காவுடை
முத்த னைமுளை வெண்மதி சூடியை
சித்த னைச்செம்பொன் அம்பல துள்நின்ற
அத்த னையடி யேன்மற துய்வனோ
நீதி யைநிறை வைமறை நான்குடன்
ஓதி யையொரு வர்க்கு மறிவொணா
சோதி யைச்சுடர செம்பொனின் அம்பல
தாதி யையடி யேன்மற துய்வனோ
மைகொள் கண்டனெண் டோ ளன்மு கண்ணினன்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனார்
செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள்
ஐய னையடி யேன்மற துய்வனோ
முழுதும் வானுல கத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியு தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்தசிற் றம்பல கூத்தனை
இழுதை யேன்மற தெங்ஙனம் உய்வனோ
காரு லாமலர கொன்றை தாரனை
வாரு லாமுலை மங்கை மணாளனை
தேரு லாவிய தில்லையு கூத்தனை
ஆர்கி லாவமு தைமற துய்வனோ
ஓங்கு மால்வரை ஏந்தலுற் றான்சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்
தேங்கு நீர்வயல் சூழ்தில்லை கூத்தனை
பாங்கி லாத்தொண்ட னேன்மற துய்வனோ
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவரத்துறை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

உடலு ளானையொ பாரியி லாதவெம்
அடலு ளானை அரத்துறை மேவிய
சுடரு ளானைக்கண் டீர்நா தொழுவதே
கரும்பொ பானை கரும்பினிற் கட்டியை
விரும்பொ பானைவிண் ணோரு மறிகிலா
அரும்பொ பானை அரத்துறை மேவிய
சுரும்பொ பானைக்கண் டீர்நா தொழுவதே
ஏறொ பானையெல் லாவுயிர கும்மிறை
வேறொ பானைவிண் ணோரு மறிகிலா
ஆறொ பானை அரத்துறை மேவிய
ஊறொ பானைக்கண் டீர்நா தொழுவதே
பரப்பொ பானை பகலிருள் நன்னிலா
இரப்பொ பானை இளமதி சூடிய
அரப்பொ பானை அரத்துறை மேவிய
சுரப்பொ பானைக்கண் டீர்நா தொழுவதே
நெய்யொ பானைநெய் யிற்சுடர் போல்வதோர்
மெய்யொ பானைவிண் ணோரு மறிகிலார்
ஐயொ பானை அரத்துறை மேவிய
கையொ பானைக்கண் டீர்நா தொழுவதே
நிதியொ பானை நிதியிற் கிழவனை
விதியொ பானைவிண் ணோரு மறிகிலார்
அதியொ பானை அரத்துறை மேவிய
கதியொ பானைக்கண் டீர்நா தொழுவதே
புனலொ பானை பொருந்தலர் தம்மையே
மினலொ பானைவிண் ணோரு மறிகிலார்
அனலொ பானை அரத்துறை மேவிய
கனலொ பானைக்கண் டீர்நா தொழுவதே
பொன்னொ பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர்
மின்னொ பானைவிண் ணோரு மறிகிலார்
அன்னொ பானை அரத்துறை மேவிய
தன்னொ பானைக்கண் டீர்நா தொழுவதே
காழி யானை கனவிடை யூருமெய்
வாழி யானைவல் லோருமென் றின்னவர்
ஆழி யான்பிர மற்கும் அரத்துறை
ஊழி யானைக்கண் டீர்நா தொழுவதே
கலையொ பானைக்கற் றார்க்கோ ரமுதினை
மலையொ பானை மணிமுடி யூன்றிய
அலையொ பானை அரத்துறை மேவிய
நிலையொ பானைக்கண் டீர்நா தொழுவதே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவண்ணாமலை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
வட்ட னைமதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு வண்ணா மலையனை
இட்ட னையிகழ தார்புர மூன்றையும்
அட்ட னையடி யேன்மற துய்வனோ
வான னைமதி சூடிய மைந்தனை
தேன னைத்திரு வண்ணா மலையனை
ஏன னையிகழ தார்புர மூன்றெய்த
ஆன னையடி யேன்மற துய்வனோ
மத்த னைமத யானை யுரித்தவெஞ்
சித்த னைத்திரு வண்ணா மலையனை
முத்த னைமுனி தார்புர மூன்றெய்த
அத்த னையடி யேன்மற துய்வனோ
காற்ற னைக்கல கும்வினை போயற
தேற்ற னைத்திரு வண்ணா மலையனை
கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த
ஆற்ற னையடி யேன்மற துய்வனோ
மின்ன னைவினை தீர்த்தெனை யாட்கொண்ட
தென்ன னைத்திரு வண்ணா மலையனை
என்ன னையிகழ தார்புர மூன்றெய்த
அன்ன னையடி யேன்மற துய்வனோ
மன்ற னைமதி யாதவன் வேள்விமேற்
சென்ற னைத்திரு வண்ணா மலையனை
வென்ற னைவெகுண் டார்புர மூன்றையுங்
கொன்ற னைக்கொடி யேன்மற துய்வனோ
வீர னைவிட முண்டனை விண்ணவர்
தீர னைத்திரு வண்ணா மலையனை
ஊர னையுண ரார்புர மூன்றெய்த
ஆர னையடி யேன்மற துய்வனோ
கருவி னைக்கடல் வாய்விட முண்டவெ
திருவி னைத்திரு வண்ணா மலையனை
உருவி னையுண ரார்புர மூன்றெய்த
அருவி னையடி யேன்மற துய்வனோ
அருத்த னையர வைந்தலை நாகத்தை
திருத்த னைத்திரு வண்ணா மலையனை
கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்த
அருத்த னையடி யேன்மற துய்வனோ
அரக்க னையல றவ்விர லூன்றிய
திருத்த னைத்திரு வண்ணா மலையனை
இரக்க மாயென் உடலுறு நோய்களை
துரக்க னைத்தொண்ட னேன்மற துய்வனோ
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவண்ணாமலை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பட்டி ஏறுக தேறி பலஇலம்
இட்ட மாக இரந்துண் டுழிதரும்
அட்ட மூர்த்திஅண் ணாமலை கைதொழ
கெட்டு போம்வினை கேடில்லை காண்மினே
பெற்ற மேறுவர் பெய்பலி கென்றவர்
சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும்
அற்ற தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
நற்ற வத்தொடு ஞான திருப்பரே
பல்லி லோடுகை யேந்தி பலஇலம்
ஒல்லை சென்றுணங் கல்கவர் வாரவர்
அல்லல் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
நல்ல வாயின நம்மை அடையுமே
பாடி சென்று பலிக்கென்று நின்றவர்
ஓடி போயினர் செய்வதொன் றென்கொலோ
ஆடி பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடி போகுநம் மேலை வினைகளே
தேடி சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடி பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடி போம்நம துள்ள வினைகளே
கட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
அட்ட மூர்த்திஅண் ணாமலை மேவிய
நட்ட மாடியை நண்ணநன் காகுமே
கோணி கொண்டையர் வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்க ளாடும் பரமனார்
ஆணி பொன்னினண் ணாமலை கைதொழ
பேணி நின்ற பெருவினை போகுமே
கண்ட தான்கறு தான்காலன் ஆருயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்ட தோங்கும்அண் ணாமலை கைதொழ
விண்டு போகுநம் மேலை வினைகளே
முந்தி சென்றுமு போதும் வணங்குமின்
அந்தி வாயொளி யான்றன்அண் ணாமலை
சிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடுங்
கந்த மாமலர் சூடுங் கருத்தனே
மறையி னானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்
உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழ
பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்
முப்போ தும்பிர மன்றொழ நின்றவன்
செப்போ தும்பொனின் மேனி சிவனவன்
அப்போ தைக்கஞ்சல் என்னும்ஆ ரூரனே
சடையின் மேலுமோர் தையலை வைத்தவர்
அடைகி லாவர வைஅரை யார்த்தவர்
படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா
அடைவர் போல்இடு காடர்ஆ ரூரரே
விண்ட வெண்டலை யேகல னாகவே
கொண்ட கம்பலி தேருங் குழகனார்
துண்ட வெண்பிறை வைத்த இறையவர்
அண்ட வாணர கருளும்ஆ ரூரரே
விடையும் ஏறுவர் வெண்டலை யிற்பலி
கடைகள் தோறு திரியுமெங் கண்ணுதல்
உடையுஞ் சீரை உறைவது காட்டிடை
அடைவர் போல்அரங் காகஆ ரூரரே
துளைக்கை வேழ துரியுடல் போர்த்தவர்
வளைக்கை யாளையோர் பாக மகிழ்வெய்தி
திளைக்கு திங்க சடையிற் திசைமுழு
தளக்கஞ் சிந்தையர் போலும்ஆ ரூரரே
பண்ணின் இன்மொழி யாளையோர் பாகமா
விண்ணி னார்விளங் கும்மதி சூடியே
சுண்ண நீறுமெ பூசி சுடலையின்
அண்ணி யாடுவர் போலும்ஆ ரூரரே
மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுக தேறும் இறைவனார்
கட்டு வாங்கங் கனல்மழு மான்றனோ
டட்ட மாம்புய மாகும்ஆ ரூரரே
தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நான்மறை யோதும்ஆ ரூரரே
உண்டு நஞ்சுகண் டத்துள் அடக்கியங்
கிண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்
கொண்ட கோவண ஆடையன் கூரெரி
அண்ட வாணர் அடையும்ஆ ரூரரே
மாலும் நான்முக னும்மறி கிற்கிலார்
கால னாய அவனை கடந்திட்டு
சூல மான்மழு வேந்திய கையினார்
ஆலம் உண்டழ காயஆ ரூரரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே
எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்த மில்புகழ் ஆரூர் அரனெறி
சிந்தை யுள்ளுஞ் சிரத்துளு தங்கவே
வண்டு லாமலர் கொண்டு வளர்சடை
கிண்டை மாலை புனைந்தும் இராப்பகல்
தொண்ட ராகி தொடர்ந்து விடாதவர
கண்டம் ஆளவும் வைப்பர்ஆ ரூரரே
துன்பெ லாமற நீங்கி சுபத்தராய்
என்பெ லாம்நெக்கி ராப்பக லேத்திநின்
றின்ப ராய்நினை தென்றும் இடையறா
அன்ப ராமவர கன்பர்ஆ ரூரரே
முருட்டு மெத்தையில் முன்கிட தாமுனம்
அரட்டர் ஐவரை ஆசறு திட்டுநீர்
முரட்ட டித்தவ தக்கன்றன் வேள்வியை
அரட்ட டக்கிதன் ஆரூர் அடைமினே
எம்மை யாரிலை யானுமு ளேனலேன்
எம்மை யாரும் இதுசெய வல்லரே
அம்மை யாரென கென்றென் றரற்றினேற்
கம்மை யாரைத்த தார்ஆரூர் ஐயரே
தண்ட ஆளியை தக்கன்றன் வேள்வியை
செண்ட தாடிய தேவர கண்டனை
கண்டு கண்டிவள் காதலி தன்பதா
கொண்டி யாயின வாறென்றன் கோதையே
இவண மைப்பல பேச தொடங்கினாள்
அவண மன்றெனில் ஆரூர் அரனெனும்
பவணி வீதி விடங்கனை கண்டிவள்
தவணி யாயின வாறென்றன் தையலே
நீரை செஞ்சடை வைத்த நிமலனார்
காரொ தமிடற் றர்கனல் வாயரா
ஆர தர்உறை யும்மணி ஆரூரை
தூர தேதொழு வார்வினை தூளியே
உள்ள மேயொன் றுறுதி யுரைப்பன்நான்
வெள்ள தாங்கு விரிசடை வேதியன்
அள்ளல் நீர்வயல் ஆரூர் அமர்ந்தவெம்
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே
விண்ட மாமலர் மேலுறை வானொடுங்
கொண்டல் வண்ணனுங் கூடி அறிகிலா
அண்ட வாணன்றன் ஆரூர் அடிதொழ
பண்டை வல்வினை நில்லா பறையுமே
மையு லாவிய கண்டத்தன் அண்டத்தன்
கையு லாவிய சூலத்தன் கண்ணுதல்
ஐயன் ஆரூர் அடிதொழு வார்க்கெலாம்
உய்ய லாமல்லல் ஒன்றிலை காண்மினே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஅன்னியூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாற லைத்த படுவெண் டலையினன்
நீற லைத்தசெம் மேனியன் நேரிழை
கூற லைத்தமெய் கோளர வாட்டிய
ஆற லைத்த சடைஅன்னி யூரரே
பண்டொ தமொழி யாளையோர் பாகமாய்
இண்டை செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர்
கண்ட தன்கரி யின்னுரி போர்த்தவன்
அண்ட தப்புற தான்அன்னி யூரரே
பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
துரவை யாக துடைப்பவர் தம்மிடங்
குரவம் நாறுங் குழலுமை கூறராய்
அரவ மாட்டுவர் போல்அன்னி யூரரே
வேத கீதர்விண் ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
நாதர் நீதியி னாலடி யார்த
காதி யாகிநின் றார்அன்னி யூரரே
எம்பி ரான்இமை யோர்கள் தமக்கெலாம்
இன்ப ராகி இருந்தவெம் மீசனார்
துன்ப வல்வினை போக தொழுமவர
கன்ப ராகிநின் றார்அன்னி யூரரே
வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர்
கந்த மாமலர் சூடுங் கருத்தினர்
சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர்
அந்த ணாளர்கண் டீர்அன்னி யூரரே
ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை யார்குழ லாளையோர் பாகமா
ஆனை யீருரி யார்அன்னி யூரரே
காலை போய்ப்பலி தேர்வர் கண்ணார்நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ்புறங் காடரங் காகவே
ஆலின் கீழற தார்அன்னி யூரரே
எரிகொள் மேனியர் என்பணி தின்பரா
திரியு மூவெயில் தீயெழ செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்
கரிய ராகிநின் றார்அன்னி யூரரே
வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும்
அஞ்சு மஞ்சுமோ ராறுநான் கும்மிற
பஞ்சின் மெல்விர லாலடர தாயிழை
அஞ்ச லஞ்சலென் றார்அன்னி யூரரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமறைக்காடு திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
ஓத மால்கடல் பாவி உலகெலாம்
மாத ரார்வலங் கொண்மறை காடரை
காதல் செய்து கருத படுமவர்
பாத மேத்த பறையுநம் பாவமே
பூக்கு தாழை புறணி அருகெலாம்
ஆக்க தானுடை மாமறை காடரோ
ஆர்க்குங் காண்பரி யீர்அடி யார்தமை
நோக்கி காண்பது நும்பணி செய்யிலே
புன்னை ஞாழல் புறணி அருகெலாம்
மன்னி னார்வலங் கொண்மறை காடரோ
அன்ன மென்னடை யாளையோர் பாகமா
சின்ன வேடம் உகப்பது செல்வமே
அட்ட மாமலர் சூடி அடம்பொடு
வட்ட புன்சடை மாமறை காடரோ
நட்ட மாடியும் நான்மறை பாடியும்
இட்ட மாக இருக்கும் இடமிதே
நெய்த லாம்பல் நிறைவயல் சூழ்தரும்
மெய்யி னார்வலங் கொண்மறை காடரோ
தையல் பாகங்கொண் டீர்கவர் புன்சடை
பைதல் வெண்பிறை பாம்புடன் வைப்பதே
துஞ்சும் போது துயிலின்றி ஏத்துவார்
வஞ்சின் றிவலங் கொண்மறை காடரோ
பஞ்சின் மெல்லடி பாவை பலிகொணர
தஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே
விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறை காடரோ
கண்ணி னாலுமை காண கதவினை
திண்ண மாக திறந்தருள் செய்ம்மினே
திருவி னார்செல்வ மல்கு விழாவணி
மருவி னார்வலங் கொண்மறை காடரோ
உருவி னாளுமை மங்கையோர் பாகமாய்
மருவி னாய்கங்கை யைச்சென்னி தன்னிலே
சங்கு வந்தலை குந்தடங் கானல்வாய்
வங்க மார்வலங் கொண்மறை காடரோ
கங்கை செஞ்சடை வைப்பது மன்றியே
அங்கை யில்லனல் ஏந்தல் அழகிதே
குறைக்கா டான்விட்ட தேர்குத்த மாமலை
இறைக்கா டியெடு தான்றலை ஈரைந்தும்
மறைக்கா டானிறை ஊன்றலும் வாய்விட்டான்
இறைக்கா டாயெம் பிரானுனை ஏத்தவே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமறைக்காடு திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறை காடரோ
கண்ணி னாலுமை காண கதவினை
திண்ண மாக திறந்தருள் செய்ம்மினே
ஈண்டு செஞ்சடை யாகத்துள் ஈசரோ
மூண்ட கார்முகி லின்முறி கண்டரோ
ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும்
நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே
அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ
துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
பட்டங் கட்டிய சென்னி பரமரோ
சட்ட விக்கத வந்திற பிம்மினே
அரிய நான்மறை யோதிய நாவரோ
பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ
பெரிய வான்கத வம்பிரி விக்கவே
மலையில் நீடிரு கும்மறை காடரோ
கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ
விலையில் மாமணி வண்ண வுருவரோ
தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே
பூக்கு தாழை புறணி அருகெலாம்
ஆக்கு தண்பொழில் சூழ்மறை காடரோ
ஆர்க்குங் காண்பரி யீர்அடி கேள்உமை
நோக்கி காண கதவை திறவுமே
வெந்த வெண்பொடி பூசும் விகிர்தரோ
அந்த மில்லி அணிமறை காடரோ
எந்தை நீயடி யார்வ திறைஞ்சிட
இந்த மாக்கத வம்பிணி நீக்குமே
ஆறு சூடும் அணிமறை காடரோ
கூறு மாதுமை கீந்த குழகரோ
ஏற தேறிய எம்பெரு மானிந்த
மாறி லாக்கத வம்வலி நீக்குமே
சுண்ண வெண்பொடி பூசுஞ் சுவண்டரோ
பண்ணி யேறுக தேறும் பரமரோ
அண்ண லாதி அணிமறை காடரோ
திண்ண மாக்கத வந்திற பிம்மினே
விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறை காடரோ
கண்ணி னாலுமை காண கதவினை
திண்ண மாக திறந்தருள் செய்ம்மினே
அரக்க னைவிர லாலடர திட்டநீர்
இரக்க மொன்றிலீர் எம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறை காடரோ
சரக்க விக்கத வந்திற பிம்மினே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமீயச்சூர் இளங்கோயில் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
தோற்றுங் கோயிலு தோன்றிய கோயிலும்
வேற்று கோயில் பலவுள மீயச்சூர
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்
கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே
வந்த னையடை கும்மடி தொண்டர்கள்
பந்த னைசெய்து பாவிக்க நின்றவன்
சிந்த னைதிரு துந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே
பஞ்ச மந்திர மோதும் பரமனார்
அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே
நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம்
வேறு விரித்த
ஆறு கொண்டுக தான்றிரு மீயச்சூர்
ஏறு கொண்டுக தாரிளங் கோயிலே
வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ண கனல்விரி தாடுவர்
செவ்வ வண்ண திகழ்திரு மீயச்சூர்
எவ்வ வண்ணம் பிரானிளங் கோயிலே
பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும்
பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று
மின்னு மேகலை யாளொடு மீயச்சூர்
இன்ன நாள்அக லாரிளங் கோயிலே
படைகொள் பூதத்தன் பைங்கொன்றை தாரினன்
சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் ணீற்றினன்
விடைகொ ளூர்தியி னான்றிரு மீயச்சூர்
இடைகொண் டேத்தநின் றாரிளங் கோயிலே
ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்
வேறு கொண்டதோர் வேடத்த ராகிலுங்
கூறு கொண்டுக தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டுக தாரிளங் கோயிலே
வே தானென்பர் வேள்வியு ளானென்பர்
பூ தானென்பர் புண்ணியன் றன்னையே
கீ தான்கிள ருந்திரு மீயச்சூர்
ஏத தீர்க்கநின் றாரிளங் கோயிலே
கடுக்கண் டன்கயி லாய மலைதனை
எடுக்க லுற்ற இராவணன் ஈடற
விடுக்க ணின்றி வெகுண்டவன் மீயச்சூர்
இடுக்கண் தீர்க்கநின் றாரிளங் கோயிலே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவீழிமிழலை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கரைந்து கைதொழு வாரையுங் காதலன்
வரைந்து வைதெழு வாரையும் வாடலன்
நிரந்த பாரிட தோடவர் நித்தலும்
விரைந்து போவது வீழி மிழலைக்கே
ஏற்று வெல்கொடி ஈசன்ற னாதிரை
நாற்றஞ் சூடுவர் நன்னறு திங்களார்
நீற்று சந்தன வெள்ளை விரவலார்
வேற்று கோலங்கொள் வீழி மிழலையே
புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான்
வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான்
நினைய நின்றவன் ஈசனை யேயெனா
வினையி லார்தொழும் வீழி மிழலையே
மாட தாடு மனத்துடன் வைத்தவர்
கோட தார்குரு கேத்திர தார்பலர்
பாட தார்பழி பார்பழி பல்லதோர்
வேட தார்தொழும் வீழி மிழலையே
எடுத்த வெல்கொடி யேறுடை யான்றமர்
உடுப்பர் கோவண முண்பது பிச்சையே
கெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினை
விடுத்து போவது வீழி மிழலைக்கே
குழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால்
உழலை யாக்கையை யூணும் உணர்விலீர்
தழலை நீர்மடி கொள்ளன்மின் சாற்றினோம்
மிழலை யானடி சாரவிண் ணாள்வரே
தீரன் தீத்திர ளன்சடை தங்கிய
நீரன் ஆடிய நீற்றன்வண் டார்கொன்றை
தாரன் மாலையன் றண்ணறுங் கண்ணியன்
வீரன் வீழி மிழலை விகிர்தனே
எரியி னாரிறை யாரிடு காட்டிடை
நரியி னார்பரி யாமகிழ் கின்றதோர்
பெரிய னார்தம் பிறப்பொடு சாதலை
விரியி னார்தொழு வீழி மிழலையே
நீண்ட சூழ்சடை மேலோர் நிலாமதி
காண்டு சேவடி மேலோர் கனைகழல்
வேண்டு வாரவர் வீதி புகுந்திலர்
மீண்டும் போவது வீழி மிழலைக்கே
பாலை யாழொடு செவ்வழி பண்கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலை யாரழல் அந்தண ராகுதி
வேலை யார்தொழும் வீழி மிழலையே
மழலை யேற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்தெடு தான்முடி தோளிற
கழல்கொள் காலிற் றிருவிர லூன்றலும்
மிழலை யானடி வாழ்கென விட்டதே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவீழிமிழலை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல்
நன்பொ னேநல தீங்கறி வொன்றிலேன்
செம்பொ னேதிரு வீழி மிழலையுள்
அன்ப னேயடி யேனை குறிக்கொளே
கண்ணி னாற்களி கூரக்கை யாற்றொழு
தெண்ணு மாறறி யாதிளை பேன்றனை
விண்ணு ளார்தொழும் வீழி மிழலையுள்
அண்ண லேயடி யேனை குறிக்கொளே
ஞால மேவிசும் பேநல தீமையே
கால மேகரு தேகரு தாற்றொழுஞ்
சீல மேதிரு வீழி மிழலையுள்
கோல மேயடி யேனை குறிக்கொளே
முத்த னேமுதல் வாமுகி ழும்முளை
ஒத்த னேயொரு வாவுரு வாகிய
சித்த னேதிரு வீழி மிழலையுள்
அத்த னேயடி யேனை குறிக்கொளே
கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம்
ஒருவ னேஉயிர பாய்உணர் வாய்நின்ற
திருவ னேதிரு வீழி மிழலையுள்
குருவ னேயடி யேனை குறிக்கொளே
காத்த னேபொழி லேழையுங் காதலால்
ஆத்த னேஅம ரர்க்கயன் றன்றலை
சேர்த்த னேதிரு வீழி மிழலையுள்
கூத்த னேயடி யேனை குறிகொளே
நீதி வானவர் நித்தல் நியமஞ்செய்
தோதி வானவ ரும்முண ராததோர்
வேதி யாவிகிர் தாதிரு வீழியுள்
ஆதி யேயடி யேனை குறிக்கொளே
பழகி நின்னடி சூடிய பாலனை
கழகின் மேல்வைத்த காலனை சாடிய
அழக னேயணி வீழி மிழலையுள்
குழக னேயடி யேனை குறிக்கொளே
அண்ட வானவர் கூடி கடைந்தநஞ்
சுண்ட வானவ னேஉணர் வொன்றிலேன்
விண்ட வான்பொழில் வீழி மிழலையுள்
கொண்ட னேயடி யேனை குறிக்கொளே
ஒருத்தன் ஓங்கலை தாங்கலுற் றானுரம்
வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னிய
திருத்த னேதிரு வீழி மிழலையுள்
அருத்த னேயடி யேனை குறிக்கொளே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவிடைமருதூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈச னெம்பெரு மான்இடை மருதினிற்
பூச நாம்புகு தும்புன லாடவே
மறையின் நாண்மலர் கொண்டடி வானவர்
முறையி னான்முனி கள்வழி பாடுசெய்
இறைவன் எம்பெரு மான்இடை மருதினில்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே
கொன்றை மாலையுங் கூவிள மத்தமுஞ்
சென்று சேர திகழ்சடை வைத்தவன்
என்று மெந்தை பிரான்இடை மருதினை
நன்று கைதொழு வார்வினை நாசமே
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும்
எம்மை யாளும் இடைமரு தன்கழல்
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே
வண்ட ணைந்தன வன்னியுங் கொன்றையுங்
கொண்ட ணிந்த சடைமுடி கூத்தனார்
எண்டி சைக்கும் இடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே
ஏற தேறும் இடைமரு தீசனார்
கூறு வார்வினை தீர்க்குங் குழகனார்
ஆறு செஞ்சடை வைத்த அழகனார
கூறி யூறி உருகுமென் உள்ளமே
விண்ணு ளாரும் விரு படுவர்
மண்ணு ளாரும் மதிக்க படுபவர்
எண்ணி னார்பொழில் சூழிடை மருதினை
நண்ணி னாரைநண் ணாவினை நாசமே
வெந்த வெண்பொடி பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடுங் கருத்தனார்
எந்தை யென்னிடை மருதினில் ஈசனை
சிந்தை யால்நினை வார்வினை தேயுமே
வேத மோதும் விரிசடை அண்ணலார்
பூதம் பாடநின் றாடும் புனிதனார்
ஏத தீர்க்கும் இடைமரு தாவென்று
பாத மேத்த பறையுநம் பாவமே
கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற் பாவைநல் லாரினு
தனிமு டிகவி தாளு மரசினும்
இனியன் றன்னடை தார்க்கிடை மருதனே
முற்றி லாமதி சூடும் முதல்வனார்
ஒற்றி னார்மலை யாலர கன்முடி
எற்றி னார்கொடி யாரிடை மருதினை
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவிடைமருதூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பறையின் ஓசையும் பாடலின்
மறையின் ஓசையும் வைகும் அயலெலாம்
இறைவன் எங்கள் பிரானிடை மருதினில்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே
மனத்துள் மாயனை மாசறு சோதியை
புனிற்று பிள்ளைவெள் ளைம்மதி சூடியை
எனக்கு தாயையெம் மானிடை மருதனை
நினைத்தி டூறி நிறைந்ததென் னுள்ளமே
வண்ட ணைந்தன வன்னியும் மத்தமுங்
கொண்ட ணிந்த சடைமுடி கூத்தனை
எண்டி சைக்கும் இடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே
துணையி லாமையிற் றூங்கிரு பேய்களோ
டணைய லாவதெ மக்கரி தேயெனா
இணையி லாஇடை மாமரு தில்லெழு
பணையி லாகமஞ் சொல்லுந்தன் பாங்கிக்கே
மண்ணை யுண்டமால் காணான் மலரடி
விண்ணை விண்டயன் காணான் வியன்முடி
மொண்ணை மாமரு தாவென்றென் மொய்குழல்
பண்ணை யாயமு தானும் பயிலுமே
மங்கை காண கொடார்மண மாலையை
கங்கை காண கொடார்முடி கண்ணியை
நங்கை மீர்இடை மருதரி நங்கைக்கே
எங்கு வாங்கி கொடுத்தார் இதழியே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள் சிதைந்து போயின
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பேரெயில் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
மறையு மோதுவர் மான்மறி கையினர்
கறைகொள் கண்ட முடைய கபாலியார்
துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்
பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே
கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும்
வணக்கி லாநெறி கண்டுகொண் டாரையு
தணக்கு வார்தணி பாரெ பொருளையும்
பிணக்கு வாரவர் பேரெயி லாளரே
சொரிவி பார்மழை சூழ்கதிர திங்களை
விரிவி பார்வெயிற் பட்ட விளங்கொளி
எரிவி பார்தணி பாரெ பொருளையும்
பிரிவி பாரவர் பேரெயி லாளரே
செறுவி பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்
உறுவி பார்பல பத்தர்கள் ஊழ்வினை
அறுவி பாரது வன்றியும் நல்வினை
பெறுவி பாரவர் பேரெயி லாளரே
மற்றை யாரறி யார்மழு வாளினார்
பற்றி யாட்டியோர் ஐந்தலை பாம்பரை
சுற்றி யாரவர் தூநெறி யால்மிகு
பெற்றி யாரவர் பேரெயி லாளரே
திருக்கு வார்குழற் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழி யாற்றனை யேத்துவார்
சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றற
பெருக்கு வாரவர் பேரெயி லாளரே
முன்னை யார்மயி லூர்தி முருகவேள்
தன்னை யாரெனிற் றானோர் தலைமகன்
என்னை யாளும் இறையவ னெம்பிரான்
பின்னை யாரவர் பேரெயி லாளரே
உழைத்து துள்ளியும் உள்ளத்து ளேயுரு
இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல்
அழைக்கும் அன்பின ராய அடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே
நீரு லாநிமிர் புன்சடை யாவெனா
ஏரு லாவனங் கன்றிறல் வாட்டிய
வாரு லாவன மென்முலை யாளொடும்
பேரு ளாரவர் பேரெயி லாளரே
பாணி யார்படு தம்பெயர தாடுவர்
தூணி யார்விச யற்கருள் செய்தவர்
மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன்
பேணி யாரவர் பேரெயி லாளரே
மதத்த வாளர கன்மணி புட்பகஞ்
சிதைக்க வேதிரு மாமலை கீழ்ப்புக்கு
பதைத்தங் கார்த்தெடு தான்பத்து நீண்முடி
பிதக்க வூன்றிய பேரெயி லாளரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவெண்ணி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
முத்தி னைப்பவ ளத்தை முளைத்தவெ
தொத்தி னைச்சுட ரைச்சுடர் போலொளி
பித்த னைக்கொலும் நஞ்சினை வானவர்
நித்த னைநெரு நற்கண்ட வெண்ணியே
வெண்ணி தொன்னகர் மேயவெண் டிங்களார்
கண்ணி தொத்த சடையர் கபாலியார்
எண்ணி தம்மை நினைந்திரு தேனுக்கு
அண்ணி திட்டமு தூறுமென் நாவுக்கே
காற்றி னைக்கன லைக்கதிர் மாமணி
நீற்றி னைநினை பார்வினை நீக்கிடுங்
கூற்றி னையுதை திட்ட குணமுடை
வீற்றி னைநெரு நற்கண்ட வெண்ணியே
நல்ல னைத்திகழ் நான்மறை யோதியை
சொல்ல னைச்சுட ரைச்சுடர் போலொளிர்
கல்ல னைக்கடி மாமதில் மூன்றெய்த
வில்ல னைநெரு நற்கண்ட வெண்ணியே
சுடரை போலொளிர் சுண்ணவெண் ணீற்றனை
அடருஞ் சென்னியில் வைத்த அமுதினை
படருஞ் செஞ்சடை பான்மதி சூடியை
இடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே
பூத நாதனை பூம்புக லூரனை
தாதெ னத்தவ ழும்மதி சூடியை
நாத னைநல்ல நான்மறை யோதியை
வேத னைநெரு நற்கண்ட வெண்ணியே
ஒருத்தி யையொரு பாக தடக்கியும்
பொருத்தி யபுனி தன்புரி புன்சடை
கருத்த னைக்கறை கண்டனை கண்ணுதல்
நிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே
சடைய னைச்சரி கோவண ஆடைகொண்
டுடைய னையுணர் வார்வினை தீர்த்திடும்
படைய னைமழு வாளொடு பாய்தரும்
விடைய னைநெரு நற்கண்ட வெண்ணியே
பொருப்ப னைப்புன லாளொடு புன்சடை
அருப்ப னையிள திங்களங் கண்ணியான்
பருப்ப தம்பர வித்தொழு தொண்டர்கள்
விருப்ப னைநெரு நற்கண்ட வெண்ணியே
சூல வஞ்சனை வல்லவெஞ் சுந்தரன்
கோல மாவருள் செய்ததோர் கொள்கையான்
காலன் அஞ்ச வுதைத்திருள் கண்டமாம்
வேலை நஞ்சனை கண்டது வெண்ணியே
இலையி னார்கொன்றை சூடிய ஈசனார்
மலையி னாலர கன்றிறல் வாட்டினார்
சிலையி னான்மதி லெய்தவன் வெண்ணியை
தலையி னாற்றொழு வார்வினை தாவுமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கடம்பந்துறை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
முற்றி லாமுலை யாளிவ ளாகிலும்
அற்ற தீர்க்கும் அறிவில ளாகிலுங்
கற்றை செஞ்சடை யான்கடம் பந்துறை
பெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே
தனகி ருந்ததோர் தன்மைய ராகிலும்
முனகு தீர தொழுதெழு மின்களோ
கனக புன்சடை யான்கடம் பந்துறை
நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே
ஆரி யந்தமி ழோடிசை யானவன்
கூரி யகுண தார்குறி நின்றவன்
காரி கையுடை யான்கடம் பந்துறை
சீரி யல்பத்தர் சென்றடை மின்களே
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
வண்ண நன்மல ரான்பல தேவருங்
கண்ண னும்மறி யான்கடம் பந்துறை
நண்ண நம்வினை யாயின நாசமே
மறைகொண் டமன தானை மனத்துளே
நிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவினை தீர தொழுமினே
நங்கை பாகம்வை தநறுஞ் சோதியை
பங்க மின்றி பணிந்தெழு மின்களோ
கங்கை செஞ்சடை யான்கடம் பந்துறை
அங்க மோதி அரனுறை கின்றதே
அரிய நான்மறை ஆறங்க மாயைந்து
புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன்
கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை
உரிய வாறு நினைமட நெஞ்சமே
பூமென் கோதை உமையொரு பாகனை
ஓமஞ் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தாற்
காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை
நாம மேத்த தீவினை நாசமே
பார ணங்கி வணங்கி பணிசெய
நார ணன்பிர மன்னறி யாததோர்
கார ணன்கடம் பந்துறை மேவிய
ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே
நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெட
பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்றுக தான்கடம் பந்துறை
மேலால் நாஞ்செய்த வல்வினை வீடுமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கடம்பூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
தளருங் கோளர வத்தொடு தண்மதி
வளருங் கோல வளர்சடை யார்க்கிடங்
கிளரும் பேரிசை கின்னரம் பாட்டறா
களருங் கார்க்கடம் பூர்க்கர கோயிலே
வெலவ லான்புலன் ஐந்தொடு வேதமுஞ்
சொலவ லான்சுழ லுந்தடு மாற்றமும்
அலவ லான்மனை யார்ந்தமென் றோளியை
கலவ லான்கடம் பூர்க்கர கோயிலே
பொய்தொ ழாது புலியுரி யோன்பணி
செய்தெ ழாவெழு வார்பணி செய்தெழா
வைதெ ழாதெழு வாரவர் எள்கநீர்
கைதொ ழாவெழு மின்கர கோயிலே
துண்ணெ னாமன தால்தொழு நெஞ்சமே
பண்ணி னான்முனம் பாடல துசெய்தே
எண்ணி லாரெயில் மூன்றும் எரித்தமு
கண்ணி னான்கடம் பூர்க்கர கோயிலே
சுனையுள் நீல மலரன கண்டத்தன்
புனையும் பொன்னிற கொன்றை புரிசடை
கனையும் பைங்கழ லான்கர கோயிலை
நினையும் உள்ள தவர்வினை நீங்குமே
குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர் அன்புடை யாரெலாம்
வணங்கி வான்மலர் கொண்டடி வைகலுங்
கணங்கள் போற்றிசை குங்கர கோயிலே
பண்ணி னார்மறை பல்பல பூசனை
மண்ணி னார்செய்வ தன்றியும் வைகலும்
விண்ணி னார்கள் வியக்க படுவன
கண்ணி னார்கடம் பூர்க்கர கோயிலே
அங்கை ஆரழ லேந்திநின் றாடலன்
மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடை
கங்கை யானுறை யுங்கர கோயிலை
தங்கை யாற்றொழு வார்வினை சாயுமே
நங்க டம்பனை பெற்றவள் பங்கினன்
தென்க டம்பை திருக்கர கோயிலான்
தன்க டன்னடி யேனையு தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே
பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும்
மணங்க மழ்மலர தாமரை யானவன்
பிணங்கும் பேரழல் எம்பெரு மாற்கிடங்
கணங்கள் போற்றிசை குங்கர கோயிலே
வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்றலை
அரைக்க வூன்றி அருள்செய்த ஈசனார்
திரைக்கு தண்புனல் சூழ்கர கோயிலை
உரைக்கும் உள்ள தவர்வினை ஓயுமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கடம்பூர்க்கரக்கோயில் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
ஒருவ ராயிரு மூவரு மாயவன்
குருவ தாய குழகன் உறைவிடம்
பருவ ரால்குதி கொள்ளும் பழனஞ்சூழ்
கருவ தாங்கடம் பூர்க்கர கோயிலே
வன்னி மத்தம் வளரிள திங்களோர்
கன்னி யாளை கதிர்முடி வைத்தவன்
பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும்
மன்னி னான்கடம் பூர்க்கர கோயிலே
இல்ல கோலமும் இந்த இளமையும்
அல்லற் கோலம் அறுத்துய வல்லிரே
ஒல்லை சென்றடை யுங்கடம் பூர்நகர
செல்வ கோயில் திருக்கர கோயிலே
வேறு சிந்தை யிலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவிடம்
ஏறு செல்வ திமையவர் தாந்தொழும்
ஆறு சேர்கடம் பூர்க்கர கோயிலே
திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர்
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்
பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலு
தெங்கு சேர்கடம் பூர்க்கர கோயிலே
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம்
எல்லை யான பிரானார் இருப்பிடங்
கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை
நல்ல சேர்கடம் பூர்க்கர கோயிலே
தளரும் வாளர வத்தொடு தண்மதி
வளரும் பொற்சடை யாற்கிட மாவது
கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறா
களரி யார்கடம் பூர்க்கர கோயிலே
உற்றா ராயுற வாகி உயிர்க்கெலாம்
பெற்றா ராய பிரானார் உறைவிடம்
முற்றார் மும்மதி லெய்த முதல்வனார்
கற்றார் சேர்கடம் பூர்க்கர கோயிலே
வெள்ளை நீறணி மேனிய வர்க்கெலாம்
உள்ள மாய பிரானார் உறைவிடம்
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்
கள்வன் சேர்கடம் பூர்க்கர கோயிலே
பரப்பு நீரிலங் கைக்கிறை வன்னவன்
உரத்தி னாலடு கல்லெடு கல்லுற
இரக்க மின்றி இறைவிர லாற்றலை
அரக்கி னான்கடம் பூர்க்கர கோயிலே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவின்னம்பர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
என்னி லாரும் எனக்கினி யாரில்லை
என்னி லும்மினி யானொரு வன்னுளன்
என்னு ளேஉயிர பாய்ப்புறம் போந்துபு
கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே
மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கணால்
கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ
தட்டி முட்டித்தள் ளாடி தழுக்குழி
எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே
கனலுங் கண்ணியு தண்மதி யோடுடன்
புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை
அனலுஞ் சூலமும் மான்மறி கையினர்
எனலும் என்மன தின்னம்பர் ஈசனே
மழைக்கண் மாமயி லாலும் மகிழ்ச்சியான்
அழைக்கு தன்னடி யார்கள்தம் அன்பினை
குழைக்கு தன்னை குறிக்கொள வேண்டியே
இழைக்கு மென்மன தின்னம்பர் ஈசனே
தென்ன வனென்னை யாளுஞ் சிவனவன்
மன்ன வன்மதி யம்மறை யோதியான்
முன்ன மன்னவன் சேரலன் பூழியான்
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே
விளக்கும் வேறு படப்பிறர் உள்ளத்தில்
அளக்கு தன்னடி யார்மன தன்பினை
குளக்கும் என்னை குறிக்கொள வேண்டியே
இளக்கும் என்மன தின்னம்பர் ஈசனே
சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர்
கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள்
படைக்க ணாற்பரு கப்படு வான்ந
கிடைக்க ணாய்நின்ற இன்னம்பர் ஈசனே
தொழுது தூமலர் தூவி துதித்துநின்
றழுது காமுற் றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கி புறக்கணி பாரையும்
எழுதுங் கீழ்க்கண கின்னம்பர் ஈசனே
விரியு தண்ணிள வேனலில் வெண்பிறை
புரியுங் காமனை வேவ புருவமு
திரியும் எல்லையில் மும்மதில் தீயெழு
தெரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே
சனியும் வெள்ளியு திங்களும் ஞாயிறும்
முனிவ னாய்முடி பத்துடை யான்றனை
கனிய வூன்றிய காரண மென்கொலோ
இனிய னாய்நின்ற இன்னம்பர் ஈசனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்குடமூக்கு திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணியங்
காவ ணத்துடை யானடி யார்களை
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை யான்குட மூக்கிலே
பூத்தா டிக்கழி யாதேநீர் பூமியீர்
தீத்தா டித்திறஞ் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்தா டுங்காளி தன்விசை தீர்கென்று
கூத்தா டியுறை யுங்குட மூக்கிலே
நங்கை யாளுமை யாளுறை நாதனார்
அங்கை யாளொ டறுபத தாழ்சடை
கங்கை யாளவள் கன்னி யெனப்படுங்
கொங்கை யாளுறை யுங்குட மூக்கிலே
ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல்
ஏதா னுமினி தாகும் மியமுனை
சேதா ஏறுடை யானமர தவிடங்
கோதா விரியுறை யுங்குட மூக்கிலே
நக்க ரையனை நாடொறும் நன்னெஞ்சே
வக்க ரையுறை வானை வணங்குநீ
அக்க ரையோ டரவரை யார்த்தவன்
கொக்க ரையுடை யான்குட மூக்கிலே
துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்க பிதற்றுமின் பித்தராய்
மறவ னாய்ப்பார்த்தன் மேற்கணை தொட்டவெங்
குறவ னாருறை யுங்குட மூக்கிலே
தொண்ட ராகி தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரை
கொண்ட வன்னுறை யுங்குட மூக்கிலே
காமி யஞ்செய்து காலம் கழியாதே
ஓமி யஞ்செய்தங் குள்ள துணர்மினோ
சாமி யோடு சரச்சுவ தியவள்
கோமி யும்முறை யுங்குட மூக்கிலே
சிரமஞ் செய்து சிவனுக்கு பத்தரா
பரம னைப்பல நாளும் பயிற்றுமின்
பிரமன் மாலொடு மற்றொழி தார்க்கெலாங்
குரவ னாருறை யுங்குட மூக்கிலே
அன்று தானர கன்கயி லாயத்தை
சென்று தானெடு கவுமை யஞ்சலும்
நன்று தான்நக்கு நல்விர லூன்றிப்பின்
கொன்று கீதங்கே டான்குட மூக்கிலே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநின்றியூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கொடுங்கண் வெண்டலை கொண்டு குறைவிலை
படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்
நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர
கடுங்கை கூற்றுதை திட்ட கருத்தரே
வீதி வேல்நெடுங் கண்ணியர் வெள்வளை
நீதி யேகொள பாலது நின்றியூர்
வேத மோதி விளங்குவெண் தோட்டரா
காதில் வெண்குழை வைத்தவெங் கள்வரே
புற்றி னார்அர வம்புலி தோல்மிசை
சுற்றி னார்சுண்ண போர்வைகொண் டார்சுடர்
நெற்றி கண்ணுடை யாரமர் நின்றியூர்
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே
பறையின் ஓசையும் பாடலின்
மறையின் ஓசையும் மல்கி அயலெலாம்
நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே
சுனையுள் நீலஞ் சுளியும் நெடுங்கணாள்
இனைய னென்றென்று மேசுவ தென்கொலோ
நினையு தண்வயல் சூழ்திரு நின்றியூர
பனையின் ஈருரி போர்த்த பரமரே
உரைப்ப கேண்மின்நும் உச்சியு ளான்றனை
நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர்
உரைப்பொற் கற்றைய ராரிவ ரோவெனிற்
திரைத்து பாடி திரிதருஞ் செல்வரே
கன்றி யூர்முகில் போலுங் கருங்களி
றின்றி ஏறல னாலிது வென்கொலோ
நின்றி யூர்பதி யாக நிலாயவன்
வென்றி யேறுடை எங்கள் விகிர்தனே
நிலையி லாவெள்ளை மாலையன் நீண்டதோர்
கொலைவி லாலெயில் எய்த கொடியவன்
நிலையி னார்வயல் சூழ்திரு நின்றியூர்
உரையி னாற்றொழு வார்வினை ஓயுமே
அஞ்சி யாகிலும் அன்புப டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதில் எய்திமை யோர்தொழ
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே
எளிய னாமொழி யாஇலங் கைக்கிறை
களியி னாற்கயி லாய மெடுத்தவன்
நெளிய வூன்ற வலானமர் நின்றியூர்
அளியி னாற்றொழு வார்வினை யல்குமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவொற்றியூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை
ஒற்றி யூரு பாம்பும் அதனையே
ஒற்றி யூர வொருசடை வைத்தவன்
ஒற்றி யூர்தொழ நம்வினை ஓயுமே
வாட்ட மொன்றுரை கும்மலை யான்மகள்
ஈட்ட வேயிரு ளாடி இடுபிண
காட்டி லோரி கடிக்க எடுத்ததோர்
ஓட்டை வெண்டலை கையொற்றி யூரரே
கூற்று தண்டத்தை அஞ்சி குறிக்கொண்மின்
ஆற்று தண்ட தடக்கு மரனடி
நீற்று தண்டத்த ராய்நினை வார்க்கெலாம்
ஊற்று தண்டொப்பர் போலொற்றி யூரரே
சுற்றும் பேய்சுழ லச்சுடு காட்டெரி
பற்றி யாடுவர் பாய்புலி தோலினர்
மற்றை யூர்களெல் லாம்பலி தேர்ந்துபோய்
ஒற்றி யூர்பு குறையும் ஒருவரே
புற்றில் வாளர வாட்டி உமையொடு
பெற்ற மேறுக தேறும் பெருமையான்
மற்றை யாரொடு வானவ ருந்தொழ
ஒற்றி யூருறை வானோர் கபாலியே
போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர்
மாது தாழ்சடை வைத்த மணாளனார்
ஓது வேதிய னார்திரு வொற்றியூர்
பாத மேத்த பறையுநம் பாவமே
பலவும் அன்னங்கள் பன்மலர் மேற்றுஞ்சுங்
கலவ மஞ்ஞைகள் காரென வெள்குறும்
உலவு பைம்பொழில் சூழ்திரு ஒற்றியூர்
நிலவி னானடி யேயடை நெஞ்சமே
ஒன்று போலும் உகந்தவ ரேறிற்று
ஒன்று போலும் உதைத்து களைந்தது
ஒன்று போலொளி மாமதி சூடிற்று
ஒன்று போலுக தாரொற்றி யூரரே
படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்
சடைகொள் வெள்ளத்தர் சாந்தவெண் ணீற்றினர்
உடையு தோலுக தாருறை யொற்றியூர்
அடையு முள்ள தவர்வினை யல்குமே
வரையி னாருயர் தோலுடை மன்னனை
வரையி னால்வலி செற்றவர் வாழ்விட
திரையி னார்புடை சூழ்திரு வொற்றியூர்
உரையி னாற்பொலி தாருயர தார்களே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பாசூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
முந்தி மூவெயி லெய்த முதல்வனார்
சிந்தி பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார்
அந்தி கோன்றன கேயருள் செய்தவர்
பந்தி செஞ்சடை பாசூ ரடிகளே
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்
தொடர்ந்த வல்வினை போக்கிடுஞ் சோதியார்
கடந்த காலனை கால்கொடு பாய்ந்தவர்
படர்ந்த நாகத்தர் பாசூ ரடிகளே
நாறு கொன்றையும் நாகமு திங்களும்
ஆறுஞ் செஞ்சடை வைத்த அழகனார்
காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர்
பாறி னோட்டினர் பாசூ ரடிகளே
வெற்றி யூருறை வேதிய ராவர்நல்
ஒற்றி யேறுக தேறு மொருவனார்
நெற்றி கண்ணினர் நீளர வந்தனை
பற்றி யாட்டுவர் பாசூ ரடிகளே
மட்ட விழ்ந்த மலர்நெடுங் கண்ணிபால்
இட்ட வேட்கைய ராகி யிருப்பவர்
துட்ட ரேலறி யேனிவர் சூழ்ச்சிமை
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே
பல்லில் ஓடுகை யேந்தி பகலெலாம்
எல்லி நின்றிடு பெய்பலி யேற்பவர்
சொல்லி போய்ப்புகும் ஊரறி யேன்சொலீர்
பல்கு நீற்றினர் பாசூ ரடிகளே
கட்டி விட்ட சடையர் கபாலியர்
எட்டி நோக்கிவ தில்புகு தவ்வவர்
இட்ட மாவறி யேனிவர் செய்வன
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே
வேத மோதிவ தில்புகு தாரவர்
காதில் வெண்குழை வைத்த கபாலியார்
நீதி யொன்றறி யார்நிறை கொண்டனர்
பாதி வெண்பிறை பாசூ ரடிகளே
சாம்பற் பூசுவர் தாழ்சடை கட்டுவர்
ஓம்பல் மூதெரு தேறு மொருவனார்
தேம்பல் வெண்மதி சூடுவர் தீயதோர்
பாம்பு மாட்டுவர் பாசூ ரடிகளே
மாலி னோடு மறையவன் றானுமாய்
மேலுங் கீழும் அளப்பரி தாயவர்
ஆலின் நீழல் அறம்பகர தார்மிக
பால்வெண் ணீற்றினர் பாசூ ரடிகளே
திரியு மூவெயில் செங்கணை யொன்றினால்
எரிய வெய்தன ரேனும் இலங்கைக்கோன்
நெரிய வூன்றியி டார்விர லொன்றினாற்
பரியர் நுண்ணியர் பாசூ ரடிகளே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பாசூர்நாதர்
தேவியார் பசுபதிநாயகி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவன்னியூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
காடு கொண்டரங் காக்கங்குல் வாய்க்கணம்
பாட மாநட மாடும் பரமனார்
வாட மானிறங் கொள்வர் மணங்கமழ்
மாட மாமதில் சூழ்வன்னி யூரரே
செங்கண் நாகம் அரையது தீத்திரள்
அங்கை யேந்திநின் றார்எரி யாடுவர்
கங்கை வார்சடை மேலிடங் கொண்டவர்
மங்கை பாகம்வை தார்வன்னி யூரரே
ஞானங் காட்டுவர் நன்னெறி
தானங் காட்டுவர் தம்மடை தார்க்கெலா
தானங் காட்டித்தன் றாளடை தார்கட்கு
வானங் காட்டுவர் போல்வன்னி யூரரே
இம்மை அம்மை யெனவிரண் டும்மிவை
மெய்ம்மை தானறி யாது விளம்புவர்
மெய்ம்மை யால்நினை வார்கள்தம் வல்வினை
வம்மின் தீர்ப்பர்கண் டீர்வன்னி யூரரே
பிறைகொள் வாணுதற் பெய்வளை தோளியர்
நிறையை கொள்பவர் நீறணி மேனியர்
கறைகொள் கண்டத்தர் வெண்மழு வாளினர்
மறைகொள் வாய்மொழி யார்வன்னி யூரரே
திளைக்கும் வண்டொடு தேன்படு கொன்றையர்
துளைக்கை வேழத்தர் தோலர் சுடர்மதி
முளைக்கு மூரற் கதிர்கண்டு நாகம்நா
வளைக்கும் வார்சடை யார்வன்னி யூரரே
குணங்கொள் தோளெட்டு மூர்த்தி இணையடி
இணங்கு வார்க கினியனு மாய்நின்றான்
வணங்கி மாமலர் கொண்டவர் வைகலும்
வணங்கு வார்மன தார்வன்னி யூரரே
இயலு மாலொடு நான்முகன் செய்தவம்
முயலிற் காண்பரி தாய்நின்ற மூர்த்திதான்
அயலெ லாம்அன்ன மேயும்அ தாமரை
வயலெ லாங்கயல் பாய்வன்னி யூரரே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
நலங்கொள் பாகனை நன்று முனிந்திடா
விலங்கல் கோத்தெடு தானது மிக்கிட
இலங்கை மன்னன் இருபது தோளினை
மலங்க வூன்றிவை தார்வன்னி யூரரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன்
பொந்து வார்புலால் வெண்டலை கையினன்
முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடி
தந்தி வாயதோர் பாம்பர்ஐ யாறரே
பாக மாலை மகிழ்ந்தனர் பான்மதி
போக ஆனையின் ஈருரி போர்த்தவர்
கோக மாலை குலாயதோர் கொன்றையும்
ஆக ஆன்நெய்அஞ் சாடும்ஐ யாறரே
நெஞ்ச மென்பதோர் நீள்க தன்னுளே
வஞ்ச மென்பதோர் வான்சுழி பட்டுநான்
துஞ்சும் போழ்துநின் நா திருவெழு
தஞ்சு தோன்ற அருளும்ஐ யாறரே
நினைக்கும் நெஞ்சினுள் ளார்நெடு மாமதில்
அனைத்தும் ஒள்ளழல் வாயெரி யூட்டினார்
பனைக்கை வேழ துரியுடல் போர்த்தவர்
அனைத்து வாய்தலுள் ளாரும்ஐ யாறரே
பரியர் நுண்ணியர் பார்த்தற் கரியவர்
அரிய பாடலர் ஆடல ரன்றியுங்
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கெலாம்
அரியர் தொண்டர கெளியர்ஐ யாறரே
புலரும் போது மிலாப்பட்ட பொற்சுடர்
மலரும் போதுக ளாற்பணி யச்சிலர்
இலரும் போதும் இலாதது மன்றியும்
அலரும் போதும் அணியும்ஐ யாறரே
பங்க மாலை குழலியோர் பால்நிற
கங்கை மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை மாலை மதியமுங் கண்ணியும்
அங்க மாலையுஞ் சூடும்ஐ யாறரே
முன்னை யாறு முயன்றெழு வீரெலாம்
பின்னை யாறு பிரியெனும் பேதைகாள்
மன்னை யாறு மருவிய மாதவன்
தன்னை யாறு தொழத்தவ மாகுமே
ஆனை யாறென ஆடுகின் றான்முடி
வானை யாறு வளாயது காண்மினோ
நான்ஐ யாறுபு கேற்கவன் இன்னருள்
தேனை யாறு திறந்தாலே யொக்குமே
அரக்கின் மேனியன் அந்தளிர்
அரக்கின் சேவடி யாளஞ்ச அஞ்சலென்
றரக்கன் ஈரைந்து வாயும் அலறவே
அரக்கி னானடி யாலும்ஐ யாறனே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் செம்பொற்சோதீசுவரர் தேவியார் அறம்வளர்த்தநாயகி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
சிந்தை வண்ணத்த ராய்த்திறம் பாவணம்
முந்தி வண்ணத்த ராய்முழு நீறணி
சந்தி வண்ணத்த ராய்த்தழல் போல்வதோர்
அந்தி வண்ணமு மாவர்ஐ யாறரே
மூல வண்ணத்த ராய்முத லாகிய
கோல வண்ணத்த ராகி கொழுஞ்சுடர்
நீல வண்ணத்த ராகி நெடும்பளிங்
கால வண்ணத்த ராவர்ஐ யாறரே
சிந்தை வண்ணமு தீயதோர் வண்ணமும்
அந்தி போதழ காகிய வண்ணமும்
பந்தி காலனை பாய்ந்ததோர் வண்ணமும்
அந்தி வண்ணமு மாவர்ஐ யாறரே
இருளின் வண்ணமு மேழிசை வண்ணமுஞ்
சுருளின் வண்ணமுஞ் சோதியின் வண்ணமும்
மருளு நான்முகன் மாலொடு வண்ணமும்
அருளும் வண்ணமு மாவர்ஐ யாறரே
இழுக்கின் வண்ணங்க ளாகிய வெவ்வழல்
குழைக்கும் வண்ணங்க ளாகியுங் கூடியும்
மழைக்கண் மாமுகி லாகிய வண்ணமும்
அழைக்கும் வண்ணமு மாவர்ஐ யாறரே
இண்டை வண்ணமும் ஏழிசை வண்ணமு
தொண்டர் வண்ணமுஞ் சோதியின் வண்ணமுங்
கண்ட வண்ணங்க ளாய்க்கனல் மாமணி
அண்ட வண்ணமு மாவர்ஐ யாறரே
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமுங்
கரும்பின் இன்மொழி காரிகை வண்ணமும்
விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமு மாவர்ஐ யாறரே
ஊழி வண்ணமும் ஒண்சுடர்
வேழ ஈருரி போர்த்ததோர் வண்ணமும்
வாழி தீயுரு வாகிய வண்ணமும்
ஆழி வண்ணமு மாவர்ஐ யாறரே
செய்த வன்றிரு நீறணி வண்ணமும்
எய்த நோக்கரி தாகிய வண்ணமுங்
கைது காட்சி யரியதோர் வண்ணமும்
ஐது வண்ணமு மாவர்ஐ யாறரே
எடுத்த வாளர கன்றிறல் வண்ணமும்
இடர்க்கள் போல்பெரி தாகிய வண்ணமுங்
கடுத்த கைந்நரம் பாலிசை வண்ணமும்
அடுத்த வண்ணமு மாவர்ஐ யாறரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாவடுதுறை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
நிறைக்க வாலியள் அல்லளி நேரிழை
மறைக்க வாலியள் அல்லளிம் மாதராள்
பிறைக்க வாலி பெரும்புனல் ஆவடு
துறைக்க வாலியோ டாடிய சுண்ணமே
தவள மாமதி சாயலோர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம்மிறை
அளவு கண்டிலள் ஆவடு தண்டுறை
களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே
பாதி பெண்ணொரு பாகத்தன் பன்மறை
ஓதி யென்னுளங் கொண்டவன் ஒண்பொருள்
ஆதி ஆவடு தண்டுறை மேவிய
சோதி யேசுட ரேயென்று சொல்லுமே
கார்க்கொள் மாமுகில் போல்வதோர் கண்டத்தன்
வார்க்கொள் மென்முலை சேர்ந்திறு மாந்திவள்
ஆர்க்கொள் கொன்றையன் ஆவடு தண்டுறை
தார்க்கு நின்றிவள் தாழுமா காண்மினே
கருகு கண்டத்தன் காய்கதிர சோதியன்
பருகு பாலமு தேயென்னும் பண்பினன்
அருகு சென்றிலள் ஆவடு தண்டுறை
ஒருவன் என்னை யுடையகோ வென்னுமே
குழலுங் கொன்றையுங் கூவிள மத்தமு
தழலு தையலோர் பாகமா தாங்கினான்
அழகன் ஆவடு தண்டுறை யாவென
கழலுங் கைவளை காரிகை யாளுக்கே
பஞ்சின் மெல்லடி பாவையோர் பங்கனை
தஞ்ச மென்றிறு மாந்திவ ளாரையும்
அஞ்சு வாளல்லள் ஆவடு தண்டுறை
மஞ்ச னோடிவள் ஆடிய மையலே
பிறையுஞ் சூடிநற் பெண்ணொடா ணாகிய
நிறையு நெஞ்சமும் நீர்மையுங் கொண்டவன்
அறையும் பூம்பொழில் ஆவடு தண்டுறை
இறைவன் என்னை யுடையவன் என்னுமே
வை தானள தானும் அயனுமாய்
மெய்யை காணலுற் றார்க்கழ லாயினான்
ஐயன் ஆவடு தண்டுறை யாவென
கையில் வெள்வளை யுங்கழல் கின்றதே
பக்கம் பூதங்கள் பாட பலிகொள்வான்
மிக்க வாளர கன்வலி வீட்டினான்
அக்க ணிந்தவன் ஆவடு தண்டுறை
நக்கன் என்னுமி நாணிலி காண்மினே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பராய்த்துறை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடை
பரப்பு நீர்வரு காவிரி தென்கரை
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே
மூடி னார்களி யானையின் ஈருரி
பாடி னார்மறை நான்கினோ டாறங்கஞ்
சேட னார்தென் பராய்த்துறை செல்வரை
தேடி கொண்டடி யேன்சென்று காண்பனே
பட்ட நெற்றியர் பால்மதி கீற்றினர்
நட்ட மாடுவர் நள்ளிருள் ஏமமுஞ்
சிட்ட னார்தென் பராய்த்துறை செல்வனார்
இட்ட மாயிரு பாரை அறிவரே
முன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர்
என்பெ லாம்பல பூண்டங் குழிதர்வர்
தென்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
அன்ப ராயிரு பாரை அறிவரே
போது தாதொடு கொண்டு புனைந்துடன்
தாத விழ்சடை சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்கவென் றேத்தி பராய்த்துறை
சோதி யானை தொழுதெழு துய்ம்மினே
நல்ல நான்மறை யோதிய நம்பனை
பல்லில் வெண்டலை யிற்பலி கொள்வனை
தில்லை யான்றென் பராய்த்துறை செல்வனை
வல்லை யாய்வணங் கித்தொழு வாய்மையே
நெருப்பி னாற்குவி தாலொக்கு நீள்சடை
பருப்ப தம்மத யானை யுரித்தவன்
திருப்ப ராய்த்துறை யார்திரு மார்பின்நூல்
பொருப்ப ராவி இழிபுனல் போன்றதே
எட்ட விட்ட இடுமண லெக்கர்மேற்
பட்ட நுண்டுளி பாயும் பராய்த்துறை
சிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல்
விட்டு நம்வினை யுள்ளன வீடுமே
நெருப்ப ராய்நிமிர தாலொக்கு நீள்சடை
மருப்ப ராவளை தாலொக்கும் வாண்மதி
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்ப ராயிரு பாரை அறிவரே
தொண்டு பாடியு தூமலர் தூவியும்
இண்டை கட்டி இணையடி யேத்தியும்
பண்ட ரங்கர் பராய்த்துறை பாங்கரை
கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை யேத்துமின்
பொருக்க நும்வினை போயறுங் காண்மினே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் திருப்பராய்த்துறைநாதர்
தேவியார் பசும்பொன்மயிலம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவானைக்கா திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கோனை காவி குளிர்ந்த மனத்தரா
தேனை காவியுண் ணார்சில தெண்ணர்கள்
ஆனை காவிலெம் மானை அணைகிலார்
ஊனை காவி யுழிதர்வர் ஊமரே
திருகு சிந்தையை தீர்த்துச்செம் மைசெய்து
பருகி யூறலை பற்றி பதமறி
துருகி நைபவர கூனமொன் றின்றியே
அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே
துன்ப மின்றி துயரின்றி யென்றுநீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
என்பொன் ஈசன் இறைவனென் றுள்குவார
கன்ப னாயிடும் ஆனைக்கா அண்ணலே
நாவால் நன்று நறுமலர சேவடி
ஓவா தேத்தி யுளத்தடை தார்வினை
காவா யென்றுதங் கைதொழு வார்க்கெலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே
வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும்
வெஞ்சொ லின்றி விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சுநின் றுள்குளிர் வார்க்கெலாம்
அஞ்ச லென்றிடும் ஆனைக்கா அண்ணலே
நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடை தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே
ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலுங்
கழுக ரிப்பதன் முன்னங் கழலடி
தொழுது கைகளாற் றூமலர் தூவிநின்
றழும வர்க்கன்பன் ஆனைக்கா அண்ணலே
உருளும் போதறி வொண்ணா உலகத்தீர்
தெருளுஞ் சிக்கென தீவினை சேராதே
இருள றுத்துநின் றீசனென் பார்க்கெலாம்
அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே
நேச மாகி நினைமட நெஞ்சமே
நாச மாய குலநலஞ் சுற்றங்கள்
பாச மற்று பராபர ஆனந்த
ஆசை யுற்றிடும் ஆனைக்கா அண்ணலே
ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை
கீதங் கின்னரம் பாட கெழுவினான்
பாதம் வாங்கி பரிந்தருள் செய்தங்கோர்
ஆதி யாயிடும் ஆனைக்கா அண்ணலே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சம்புகேசுவரர்
தேவியார் அகிலாண்டநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பூந்துருத்தி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கொடிகொள் செல்வ விழாக்குண லையறா
கடிகொள் பூம்பொழிற் கச்சிஏ கம்பனார்
பொடிகள் பூசிய பூந்துரு திந்நகர்
அடிகள் சேவடி கீழ்நா மிருப்பதே
ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனா
பார்த்த னோடு படைதொடு மாகிலும்
பூத்த நீள்பொழிற் பூந்துரு திந்நகர
தீர்த்தன் சேவடி கீழ்நா மிருப்பதே
மாதி னைமதி தானொரு பாகமா
காத லாற்கர தான்சடை கங்கையை
பூத நாயகன் பூந்துரு திந்நகர
காதி சேவடி கீழ்நா மிருப்பதே
மூவ னாய்முத லாயிவ் வுலகெலாங்
காவ னாய்க்கடுங் காலனை காய்ந்தவன்
பூவின் நாயகன் பூந்துரு திந்கர
தேவன் சேவடி கீழ்நா மிருப்பதே
செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில்
உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும்
பொன்பொ னார்செல்வ பூந்துரு திந்நகர்
நம்பன் சேவடி கீழ்நா மிருப்பதே
வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினை
கொல்லம் பேசி கொடுஞ்சரம் நூறினான்
புல்லம் பேசியும் பூந்துரு திந்நகர
செல்வன் சேவடி கீழ்நா மிருப்பதே
ஒருத்த னாயுல கேழு தொழநின்று
பருத்த பாம்பொடு பான்மதி கங்கையும்
பொருத்த னாகிலும் பூந்துரு திந்நகர
திருத்தன் சேவடி கீழ்நா மிருப்பதே
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்
கருத நின்றவர் காண்பரி தாயினான்
பொருத நீர்வரு பூந்துரு திந்நகர
சதுரன் சேவடி கீழ்நா மிருப்பதே
செதுக றாமன தார்புறங் கூறினுங்
கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும்
பொதுவின் நாயகன் பூந்துரு திந்நகர
கதிபன் சேவடி கீழ்நா மிருப்பதே
துடித்த தோல்வலி வாளர கன்றனை
பிடித்த கைஞ்ஞெரி துற்றன கண்ணெலாம்
பொடிக்க வூன்றிய பூந்துரு திந்நகர
படிக்கொள் சேவடி கீழ்நா மிருப்பதே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் புஷ்பவனநாதர்
தேவியார் அழகாலமர்ந்தநாயகி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சோற்றுத்துறை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கொல்லை யேற்றினர் கோளர வத்தினர்
தில்லை சிற்றம் பலத்துறை செல்வனார்
தொல்லை யூழியர் சோற்று துறையர்க்கே
வல்லை யாய்ப்பணி செய்மட நெஞ்சமே
முத்தி யாக வொருதவஞ் செய்திலை
அத்தி யாலடி யார்க்கொன் றளித்திலை
தொத்து நின்றலர் சோற்று துறையர்க்கே
பத்தி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே
ஒட்டி நின்ற உடலுறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்தவை போயற
தொட்டு நின்று சோற்று துறையர்க்கே
பட்டி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே
ஆதி யானண்ட வாணர கருள்நல்கு
நீதி யானென்றும் நின்மல னேயென்றுஞ்
சோதி யானென்றுஞ் சோற்று துறையர்க்கே
வாதி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே
ஆட்டி னாயடி யேன்வினை யாயின
ஓட்டி னாயொரு காதில் இலங்குவெண்
தோட்டி னாயென்று சோற்று துறையர்க்கே
நீட்டி நீபணி செய்மட நெஞ்சமே
பொங்கி நின்றெழு தகடல் நஞ்சினை
பங்கி யுண்டதோர் தெய்வமுண் டோ சொலாய்
தொங்கி நீயென்றுஞ் சோற்று துறையர்க்கு
தங்கி நீபணி செய்மட நெஞ்சமே
ஆணி போலநீ ஆற்ற வலியைகாண்
ஏணி போலிழி தேறியும் ஏங்கியு
தோணி யாகிய சோற்று துறையர்க்கே
பூணி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே
பெற்றம் ஏறிலென் பேய்படை யாகிலென்
புற்றி லாடர வேயது பூணிலென்
சுற்றி நீயென்றுஞ் சோற்று துறையர்க்கே
பற்றி நீபணி செய்மட நெஞ்சமே
அல்லி யானர வைந்தலை நாகணை
பள்ளி யானறி யாத பரிசெலாஞ்
சொல்லி நீயென்றுஞ் சோற்று துறையர்க்கே
புல்லி நீபணி செய்மட நெஞ்சமே
மிண்ட ரோடு விரவியும் வீறிலா
குண்டர் தம்மை கழிந்து போந்துநீ
தொண்டு செய்தென்றுஞ் சோற்று துறையர்க்கே
உண்டு நீபணி செய்மட நெஞ்சமே
வாழ்ந்த வன்வலி வாளர கன்றனை
ஆழ்ந்து போயல றவ்விர லூன்றினான்
சூழ்ந்த பாரிடஞ் சோற்று துறையர்க்கு
தாழ்ந்து நீபணி செய்மட நெஞ்சமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் தொலையாச்செல்வர்
தேவியார் ஒப்பிலாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநெய்த்தானம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புர மூன்றெரி செய்தவன்
நெல்லி யானிலை யானநெ தானனை
சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே
இரவ னையிடு வெண்டலை யேந்தியை
பரவ னைப்படை யார்மதில் மூன்றையும்
நிரவ னைநிலை யானநெ தானனை
குரவ னைத்தொழு வார்கொடி வாணரே
ஆனி டையைந்தும் ஆடுவ ராரிருள்
கானி டைநடம் ஆடுவர் காண்மினோ
தேனி டைமலர் பாயுநெ தானனை
வானி டைத்தொழு வார்வலி வாணரே
விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறெழ
கண்ட வன்கடி தாகிய நஞ்சினை
உண்ட வன்னொளி யானநெ தானனை
தொண்ட ராய்த்தொழு வார்சுடர் வாணரே
முன்கை நோவ கடைந்தவர் நிற்கவே
சங்கி யாது சமுத்திர நஞ்சுண்டான்
நங்கை யோடு நவின்றநெ தானனை
தங்கை யாற்றொழு வார்தலை வாணரே
சுட்ட நீறுமெய் பூசி சுடலையுள்
நட்ட மாடுவர் நள்ளிரு பேயொடே
சிட்டர் வானவர் தேருநெ தானனை
இட்ட மாய்த்தொழு வாரின்ப வாணரே
கொள்ளி தீயெரி வீசி கொடியதோர்
கள்ளி காட்டிடை யாடுவர் காண்மினோ
தெள்ளி தேறி தெளிந்துநெ தானனை
உள்ள தாற்றொழு வாரும்பர் வாணரே
உச்சி மேல்விளங் கும்மிள வெண்பிறை
பற்றி யாடர வோடுஞ்ச டைப்பெய்தான்
நெற்றி யாரழல் கண்டநெ தானனை
சுற்றி மெய்தொழு வார்சுடர் வாணரே
மாலொ டும்மறை யோதிய நான்முகன்
காலொ டும்முடி காண்பரி தாயினான்
சேலொ டுஞ்செரு செய்யும்நெ தானனை
மாலொ டுந்தொழு வார்வினை வாடுமே
வலிந்த தோள்வலி வாளர கன்றனை
நெருங்க நீள்வரை யூன்றுநெ தானனார்
புரிந்து கைந்நரம் போடிசை பாடலும்
பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் நெய்யாடியப்பர் தேவியார் பாலாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பழனம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
அருவ னாய்அத்தி ஈருரி போர்த்துமை
உருவ னாய்ஒற்றி யூர்பதி யாகிலும்
பருவ ரால்வயல் சூழ்ந்த பழனத்தான்
திருவி னாற்றிரு வேண்டுமி தேவர்க்கே
வையம் வந்து வணங்கி வலங்கொளும்
ஐய னைஅறி யார்சிலர் ஆதர்கள்
பைகொ ளாடர வார்த்த பழனன்பால்
பொய்யர் காலங்கள் போக்கிடு வார்களே
வண்ண மாக முறுக்கிய வாசிகை
திண்ண மாக திருச்சடை சேர்த்தியே
பண்ணு மாகவே பாடும் பழனத்தான்
எண்ணும் நீரவன் ஆயிர நாமமே
மூர்க்க பாம்பு பிடித்தது மூச்சிட
வாக்க பாம்பினை கண்ட துணிமதி
பாக்க பாம்பினை பற்றும் பழனத்தான்
தார்க்கொண் மாலை சடைக்கர திட்டதே
நீல முண்ட மிடற்றினன் நேர்ந்ததோர்
கோல முண்ட குணத்தான் நிறைந்ததோர்
பாலு முண்டு பழனன்பா லென்னிடை
மாலு முண்டிறை யென்றன் மனத்துளே
மந்த மாக வளர்பிறை சூடியோர்
சந்த மாக திருச்சடை சாத்துவான்
பந்த மாயின தீர்க்கும் பழனத்தான்
எந்தை தாய்தந்தை எம்பெரு மானுமே
மார்க்க மொன்றறி யார்மதி யில்லிகள்
பூக்க ரத்திற் புரிகிலர் மூடர்கள்
பார்க்க நின்று பரவும் பழனத்தான்
தாட்கண் நின்று தலைவணங் கார்களே
ஏறி னாரிமை யோர்கள் பணிகண்டு
தேறு வாரலர் தீவினை யாளர்கள்
பாறி னார்பணி வேண்டும் பழனத்தான்
கூறி னானுமை யாளொடுங் கூடவே
சுற்று வார்தொழு வார்சுடர் வண்ணன்மேல்
தெற்றி னார்திரி யும்புர மூன்றெய்தான்
பற்றி னார்வினை தீர்க்கும் பழனனை
எற்றி னான்மற கேனெம் பிரானையே
பொங்கு மாகடல் சூழ்இலங் கைக்கிறை
அங்க மான இறுத்தருள் செய்தவன்
பங்க னென்றும் பழனன் உமையொடு
தங்கன் றானடி யேனுடை யுச்சியே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஆபத்சகாயர் தேவியார் பெரியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்செம்பொன்பள்ளி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கான றாத கடிபொழில் வண்டின
தேன றாத திருச்செம்பொன் பள்ளியான்
ஊன றாததோர் வெண்டலை யிற்பலி
தான றாததோர் கொள்கையன் காண்மினே
என்பும் ஆமையும் பூண்டங் குழிதர்வர
கன்பு மாயிடும் ஆயிழை யீரினி
செம்பொன் பள்ளியு ளான்சிவ லோகனை
நம்பொன் பள்ளியுள் கவினை நாசமே
வேறு கோலத்தர் ஆணலர் பெண்ணலர்
கீறு கோவண வைதுகி லாடையர்
தேற லாவதொன் றன்றுசெம் பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ணல் அவனையே
அருவ ராததோர் வெண்டலை யேந்திவ
திருவ ராயிடு வார்கடை தேடுவார்
தெருவெ லாமுழல் வார்செம்பொன் பள்ளியார்
ஒருவர் தாம்பல பேருளர் காண்மினே
பூவு லாஞ்சடை மேற்புனல் சூடினான்
ஏவ லாலெயில் மூன்றும் எரித்தவன்
தேவர் சென்றிறைஞ் சுஞ்செம்பொன் பள்ளியான்
மூவ ராய்முத லாய்நின்ற மூர்த்தியே
சலவ ராயொரு பாம்பொடு தண்மதி
கலவ ராவதன் காரண மென்கொலோ
திலக நீண்முடி யார்செம்பொன் பள்ளியார்
குலவி லாலெயில் மூன்றெய்த கூத்தரே
கைகொள் சூலத்தர் கட்டுவாங் கத்தினர்
மைகொள் கண்டத்த ராகி இருசுடர்
செய்ய மேனிவெண் ணீற்றர்செம் பொன்பள்ளி
ஐயர் கையதோர் ஐந்தலை நாகமே
வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர்
பைங்கண் ஆனையின் ஈருரி போர்த்தவர்
செங்கண் மால்விடை யார்செம்பொன் பள்ளியார்
அங்க ணாயடை தார்வினை தீர்ப்பரே
நன்றி நாரணன் நான்முக னென்றிவர்
நின்ற நீண்முடி யோடடி காண்புற்று
சென்று காண்பரி யான்செம்பொன் பள்ளியான்
நின்ற சூழலில் நீளெரி யாகியே
திரியு மும்மதில் செங்கணை யொன்றினால்
எரிய வெய்தன லோட்டி இலங்கைக்கோன்
நெரிய வூன்றியி டார்செம்பொன் பள்ளியார்
அரிய வானம் அவரருள் செய்வரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சொர்னபுரீசர் தேவியார் சுகந்தவனநாயகி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கடவூர்வீரட்டம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை
நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே
கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலாற்
கலைக்கை யானைகண் டீர்கட வூரரே
வெள்ளி மால்வரை போல்வதோ ரானையார்
உள்ள வாறெனை உள்புகு மானையார்
கொள்ள மாகிய கோயிலு ளானையார்
கள்ள வானைகண் டீர்கட வூரரே
ஞான மாகிய நன்குண ரானையார்
ஊனை வேவ வுருக்கிய ஆனையார்
வேன லானை யுரித்துமை அஞ்சவே
கான லானைகண் டீர்கட வூரரே
ஆல முண்டழ காயதோ ரானையார்
நீல மேனி நெடும்பளிங் கானையார்
கோல மாய கொழுஞ்சுட ரானையார்
கால வானைகண் டீர்கட வூரரே
அளித்த ஆனஞ்சு மாடிய வானையார்
வெளுத்த நீள்கொடி யேறுடை யானையார்
எளித்த வேழத்தை எள்குவி தானையார்
களித்த வானைகண் டீர்கட வூரரே
விடுத்த மால்வரை விண்ணுற வானையார்
தொடுத்த மால்வரை தூயதோ ரானையார்
கடுத்த காலனை காய்ந்ததோ ரானையார்
கடுத்த வானைகண் டீர்கட வூரரே
மண்ணு ளாரை மயக்குறு மானையார்
எண்ணு ளார்பல ரேத்திடு மானையார்
விண்ணு ளார்பல ரும்மறி யானையார்
கண்ணு ளானைகண் டீர்கட வூரரே
சினக்குஞ் செம்பவ ளத்திர ளானையார்
மனக்கும் வல்வினை தீர்த்திடு மானையார்
அனைக்கும் அன்புடை யார்மன தானையார்
கனைக்கு மானைகண் டீர்கட வூரரே
வேத மாகிய வெஞ்சுட ரானையார்
நீதி யானில னாகிய வானையார்
ஓதி யூழி தெரிந்துண ரானையார்
காத லானைகண் டீர்கட வூரரே
நீண்ட மாலொடு நான்முகன் றானுமா
காண்டு மென்றுபு கார்க ளிருவரும்
மாண்ட வாரழ லாகிய வானையார்
காண்ட லானைகண் டீர்கட வூரரே
அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்கள் இறநெரி தானையார்
கடுத்த காலனை காய்ந்ததோ ரானையார்
கடுக்கை யானைகண் டீர்கட வூரரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் அமிர்தகடேசுவரர் தேவியார் அபிராமியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கடவூர்மயானம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தாங்கட வூரின் மயானத்தார்
பழைய தம்மடி யார்செயும் பாவமும்
பிழையு தீர்ப்பர் பெருமா னடிகளே
உன்னி வானவர் ஓதிய சிந்தையிற்
கன்னல் தேன்கட வூரின் மயானத்தார்
தன்னை நோக்கி தொழுதெழு வார்க்கெலாம்
பின்னை என்னார் பெருமா னடிகளே
சூல மேந்துவர் தோலுடை ஆடையர்
ஆல முண்டமு தேமிக தேக்குவர்
கால காலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமா னடிகளே
இறைவ னாரிமை யோர்தொழு பைங்கழல்
மறவ னார்கட வூரின் மயானத்தார்
அறவ னாரடி யாரடி யார்தங்கள்
பிறவி தீர்ப்பர் பெருமா னடிகளே
கத்து காளி கதந்தணி வித்தவர்
மத்தர் தாங்கட வூரின் மயானத்தார்
ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு
பித்தர் காணும் பெருமா னடிகளே
எரிகொள் மேனி இளம்பிறை வைத்தவர்
கரியர் தாங்கட வூரின் மயானத்தார்
அரியர் அண்டத்து ளோரயன் மாலுக்கும்
பெரியர் காணும் பெருமா னடிகளே
அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை
கணங்கள் சேர்கட வூரின் மயானத்தார்
வணங்கு வாரிடர் தீர்ப்பர் மயக்குறும்
பிணங்கொள் காடர் பெருமா னடிகளே
அரவு கையினர் ஆதி புராணனார்
மரவு சேர்கட வூரின் மயானத்தார்
பரவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வார்
பிரமன் மாற்கும் பெருமா னடிகளே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள் சிதைந்து போயின
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பிரமபுரீசுவரர் தேவியார் மலர்க்குழன்மின்னம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமயிலாடுதுறை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளை
உள்ளம் உள்கி யுரைக்கு திருப்பெயர்
வள்ளல் மாமயி லாடு துறையுறை
வெள்ள தாங்கு சடையனை வேண்டியே
சித்த தேறுஞ் செறிவளை சிக்கெனும்
பச்சை தீருமென் பைங்கொடி பான்மதி
வைத்த மாமயி லாடு துறையரன்
கொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே
அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையுங்
கண்டு வீற்றிரு குங்கரு தொன்றிலோம்
வண்டு சேர்மயி லாடு துறையரன்
தொண்டர் பாதங்கள் சூடி துதையிலே
வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை பங்கன் அருளிலே
குறைவி லோங்கொடு மானிட வாழ்க்கையாற்
கறைநி லாவிய கண்டனெண் டோ ளினன்
மறைவ லான்மயி லாடு துறையுறை
இறைவன் நீள்கழ லேத்தி யிருக்கிலே
நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய்
கலைக ளாயவல் லான்கயி லாயநன்
மலையன் மாமயி லாடு துறையன்நம்
தலையின் மேலும் மனத்துளு தங்கவே
நீற்றி னான்நிமிர் புன்சடை யான்விடை
ஏற்றி னான்நமை யாளுடை யான்புலன்
மாற்றி னான்மயி லாடு துறையென்று
போற்று வார்க்குமுண் டோ புவி வாழ்க்கையே
கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமு
தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்
நீல மாமயி லாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர தோர்கட்கே
பணங்கொ ளாடர வல்குற் பகீரதி
மணங்கொ ளச்சடை வைத்த மறையவன்
வணங்கு மாமயி லாடு துறையரன்
அணங்கோர் பால்கொண்ட கோலம் அழகிதே
நீணி லாவர வச்சடை நேசனை
பேணி லாதவர் பேதுற வோட்டினோம்
வாணி லாமயி லாடு துறைதனை
காணி லார்க்குங் கடுந்துய ரில்லையே
பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தி னானவன் இன்னிசை கேட்டலும்
வரத்தி னான்மயி லாடு துறைதொழுங்
கரத்தி னார்வினை கட்டறுங் காண்மினே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மாயூரநாதர் தேவியார் அஞ்சொல்நாயகி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கழிப்பாலை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
வண்ண மும்வடி வுஞ்சென்று கண்டிலள்
எண்ணி நாமங்க ளேத்தி நிறைந்திலள்
கண்ணு லாம்பொழில் சூழ்கழி பாலையெம்
அண்ண லேயறி வானிவள் தன்மையே
மருந்து வானவர் உய்யநஞ் சுண்டுக
திருந்த வன்கழி பாலையுள் எம்பிரான்
திருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள்
பரிந்து ரைக்கிலு மென்சொற் பழிக்குமே
மழலை தான்வர சொற்றெரி கின்றிலள்
குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ
அழக னேகழி பாலையெம் மண்ணலே
இகழ்வ தோயெனை ஏன்றுகொ ளென்னுமே
செய்ய மேனிவெண் ணீறணி வான்றனை
மைய லாகி மதிக்கில ளாரையுங்
கைகொள் வெண்மழு வன்கழி பாலையெம்
ஐய னேஅறி வானிவள் தன்மையே
கருத்த னைக்கழி பாலையுள் மேவிய
ஒருத்த னையுமை யாளொரு பங்கனை
அருத்தி யாற்சென்று கண்டிட வேண்டுமென்
றொருத்தி யாருளம் ஊசல தாகுமே
கங்கை யைச்சடை வைத்து மலைமகள்
நங்கை யையுட னேவைத்த நாதனார்
திங்கள் சூடி திருக்கழி பாலையான்
இங்கு வந்திடு மென்றிறு மாக்குமே
ஐய னேஅழ கேஅன லேந்திய
கைய னேகறை சேர்தரு கண்டனே
மையு லாம்பொழில் சூழ்கழி பாலையெம்
ஐய னேவிதி யேஅரு ளென்னுமே
பத்தர் கட்கமு தாய பரத்தினை
முத்த னைமுடி வொன்றிலா மூர்த்தியை
அத்த னைஅணி யார்கழி பாலையெஞ்
சித்த னைச்சென்று சேருமா செப்புமே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
பொன்செய் மாமுடி வாளர கன்றலை
அஞ்சு நான்குமொன் றும்மிறு தானவன்
என்செ யான்கழி பாலையு ளெம்பிரான்
துஞ்சும் போது துணையென லாகுமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பால்வண்ண நாதர் தேவியார் வேதநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பைஞ்ஞீலி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
உடையர் கோவண மொன்றுங் குறைவிலர்
படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
சடையிற் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர கில்லை அவலமே
மத்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால்
பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம்
அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே
விழுது சூலத்தன் வெண்மழு வாட்படை
கழுது துஞ்சிரு காட்டக தாடலான்
பழுதொன் றின்றிப்பைஞ் ஞீலி பரமனை
தொழுது செல்பவர் தம்வினை தூளியே
ஒன்றி மாலும் பிரமனு தம்மிலே
நின்ற சூழ லறிவரி யானிடஞ்
சென்று பாரிட மேத்துபைஞ் ஞீலியுள்
என்றும் மேவி யிருந்த அடிகளே
வேழ தின்னுரி போர்த்த விகிர்தனார்
தாழ செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
தாழை தண்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
யாழின் பாட்டை யுகந்த அடிகளே
குண்டு பட்டு குறியறி யாச்சமண்
மிண்ட ரோடு படுத்து போந்துநான்
கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
அண்ட வாணன் அடியடை துய்ந்தனே
வரிப்பை யாடர வாட்டி மதகரி
உரிப்பை மூடிய வுத்தம னாருறை
திருப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள்போய்
இருப்பர் வானவ ரோடினி தாகவே
கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல்
பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார்
பேடு மாணும் பிறரறி யாததோர்
ஆடு நாகம் அசைத்த அடிகளே
காரு லாமலர கொன்றை தாரினான்
வாரு லாமுலை மங்கையோர் பங்கினன்
தேரு லாம்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
ஆர்கி லாவமு தையடை துய்ம்மினே
தருக்கி சென்று தடவரை பற்றலும்
நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே
அரக்கன் பாட அருளுமெம் மானிடம்
இருக்கை ஞீலியென் பார்க்கிட ரில்லையே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் நீலகண்டேசுவரர்
தேவியார் விசாலாட்சியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவேட்களம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
நன்று நாடொறும் நம்வினை போயறும்
என்று மின்ப தழைக்க இருக்கலாஞ்
சென்று நீர்திரு வேட்கள துள்ளுறை
துன்று பொற்சடை யானை தொழுமினே
கருப்பு வெஞ்சிலை காமனை காய்ந்தவன்
பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
திருப்ப னாகில் எனக்கிட ரில்லையே
வேட்க ளத்துறை வேதியன் எம்மிறை
ஆக்க ளேறுவர் ஆனைஞ்சு மாடுவர்
பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
காப்பர் நம்மை கறைமிடற் றண்ணலே
அல்ல லில்லை அருவினை தானில்லை
மல்கு வெண்பிறை சூடு மணாளனார்
செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
வல்ல ராகில் வழியது காண்மினே
துன்ப மில்லை துயரில்லை யாமினி
நம்ப னாகிய நன்மணி கண்டனார்
என்பொ னாருறை வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே
கட்ட பட்டு கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
சிட்ட னார்திரு வேட்களங் கைதொழ
பட்ட வல்வினை யாயின பாறுமே
வட்ட மென்முலை யாளுமை பங்கனார்
எட்டு மொன்றும் இரண்டுமூன் றாயினார்
சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு
திட்ட மாகி யிருமட நெஞ்சமே
நட்ட மாடிய நம்பனை நாடொறும்
இட்ட தாலினி தாக நினைமினோ
வட்ட வார்முலை யாளுமை பங்கனார்
சிட்ட னார்திரு வேட்கள தன்னையே
வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்குஞ்
சிட்டர் பொற்றிரு வேட்கள செல்வரே
சேட னாருறை யுஞ்செழு மாமலை
ஓடி யாங்கெடு தான்முடி பத்திற
வாட வூன்றி மலரடி வாங்கிய
வேட னாருறை வேட்களஞ் சேர்மினே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பாசுபதேசுவரர் தேவியார் நல்லநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநல்லம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கொல்ல தான்நம னார்தமர் வந்தக்கால்
இல்ல தார்செய்ய லாவதென் ஏழைகாள்
நல்ல தான்நமை யாளுடை யான்கழல்
சொல்ல தான்வல்லி ரேற்றுயர் தீருமே
பொக்கம் பேசி பொழுது கழியாதே
துக்க தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்
நக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே
பிணிகொள் வார்குழற் பேதையர் காதலாற்
பணிகள் மேவி பயனில்லை பாவிகாள்
அணுக வேண்டில் அரனெறி யாவது
நணுகு நாதன் நகர்திரு நல்லமே
தமக்கு நல்லது தம்முயிர் போயினால்
இமைக்கும் போதும் இராதி குரம்பைதான்
உமைக்கு நல்லவன் றானுறை யும்பதி
நமக்கு நல்லது நல்ல மடைவதே
உரைத ளர்ந்துட லார்நடுங் காமுனம்
நரைவி டையுடை யானிடம் நல்லமே
பரவு மின்பணி
விரவு மின்விர வாரை விடுமினே
அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும்
வல்ல வாறு சிவாய நமவென்று
நல்லம் மேவிய நாத னடிதொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே
மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும்
பேத மாகி பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய நல்லம் நகர்தொழ
போது மின்னெழு மின்புக லாகுமே
வெம்மை யான வினைக்கடல் நீங்கிநீர்
செம்மை யாய சிவகதி சேரலாஞ்
சும்மை யார்மலர் தூவி தொழுமினோ
நம்மை யாளுடை யானிடம் நல்லமே
கால மான கழிவதன் முன்னமே
ஏலு மாறு வணங்கிநின் றேத்துமின்
மாலும் மாமல ரானொடு மாமறை
நாலும் வல்லவர் கோனிடம் நல்லமே
மல்லை மல்கிய தோளர கன்வலி
ஒல்லை யில்லொழி தானுறை யும்பதி
நல்ல நல்லம் எனும்பெயர் நாவினாற்
சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் உமாமகேசுவரர் தேவியார் மங்களநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாமாத்தூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
மாமா தாகிய மாலயன் மால்கொடு
தாமா தேடியுங் காண்கிலர் தாள்முடி
ஆமா தூரர னேஅரு ளாயென்றென்
றேமா பெய்திக்கண் டாரிறை யானையே
சந்தி யானை சமாதிசெய் வார்தங்கள்
புந்தி யானைப்பு தேளிர் தொழப்படும்
அந்தி யானை ஆமத்தூர் அழகனை
சிந்தி யாதவர் தீவினை யாளரே
காமா தம்மெனுங் கார்வலை பட்டுநான்
போமா தையறி யாது புலம்புவேன்
ஆமா தூரர னேயென் றழைத்தலு
தேமா தீங்கனி போலத்தி திக்குமே
பஞ்ச பூத வலையிற் படுவதற்
கஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை
நெஞ்சி னால்நினை தேன்நினை வெய்தலும்
வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே
குராம னுங்குழ லாளொரு கூறனார்
அராம னுஞ்சடை யான்றிரு வாமாத்தூர்
இராம னும்வழி பாடுசெய் ஈசனை
நிராம யன்றனை நாளும் நினைமினே
பித்த னைப்பெரு தேவர் தொழப்படும்
அத்த னையணி யாமாத்தூர் மேவிய
முத்தி னையடி யேனுள் முயறலும்
பத்தி வெள்ளம் பரந்தது காண்மினே
நீற்றி னார்திரு மேனியன் நேரிழை
கூற்றி னான்குழல் கோல சடையிலோர்
ஆற்றி னான்அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றி னான்எமை யாளுடை ஈசனே
பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர
கண்ணி தாகும் அமுதினை ஆமாத்தூர்
சண்ணி பானை தமர்க்கணி தாயதோர்
கண்ணிற் பாவையன் னானவன் காண்மினே
குண்டர் பீலிகள் கொள்ளுங் குணமிலா
மிண்ட ரோடெனை வேறு படுத்து
கொண்ட நாதன் குளிர்புனல் வீரட்ட
தண்ட னாரிடம் ஆமாத்தூர் காண்மினே
வானஞ் சாடு மதியர வத்தொடு
தானஞ் சாதுடன் வைத்த சடையிடை
தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும்
ஆனஞ் சாடிய ஆமாத்தூர் ஐயனே
விடலை யாய்விலங் கல்லெடு தான்முடி
அடர வோர்விரல் ஊன்றிய ஆமாத்தூர்
இடம தாக்கொண்ட ஈசனு கென்னுளம்
இடம தாகக்கொண் டின்புற் றிருப்பனே
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் அழகியநாதர் தேவியார் அழகியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருத்தோணிபுரம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால்
நீதி தான்சொல நீயென காரெனுஞ்
சோதி யார்தரு தோணி புரவர்க்கு
தாதி யாவன்நா னென்னுமென் தையலே
நக்கம் வந்து பலியிடென் றார்க்கிட்ட
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க நீர்வயல் தோணி புரவர்க்கு
தக்க தன்று தமது பெருமைக்கே
கெண்டை போல்நய னத்திம வான்மகள்
வண்டு வார்குழ லாளுட னாகவே
துண்ட வான்பிறை தோணி புரவரை
கண்டு காமுறு கின்றனள் கன்னியே
பாலை யாழ்மொழி யாளவள் தாழ்சடை
மேல ளாவது கண்டனள் விண்ணுற
சோலை யார்தரு தோணி புரவர்க்கு
சால நல்லளா கின்றனள் தையலே
பண்ணின் நேர்மொழி யாள்பலி யிட்டவி
பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது
சுண்ண மாடிய தோணி புரத்துறை
அண்ண லாருக்கு சால அழகிதே
முல்லை வெண்ணகை மொய்குழ லாயுன
கல்ல னாவ தறிந்திலை நீகனி
தொல்லை யார்பொழில் தோணி புரவர்க்கே
நல்லை யாயிடு கின்றனை நங்கையே
ஒன்று தானறி யாருல கத்தவர்
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர்
துன்று வார்பொழில் தோணி புரவர்தங்
கொன்றை சூடுங் குறிப்பது வாகுமே
உறவு பேய்க்கணம் உண்பது வெண்டலை
உறைவ தீமம் உடலிலோர் பெண்கொடி
துறைக ளார்கடல் தோணி புரத்துறை
இறைவ னார்க்கிவள் என்கண்டன் பாவதே
மாக யானை மருப்பேர் முலையினர்
போக யானு மவள்புக்க தேபுக
தோகை சேர்தரு தோணி புரவர்க்கே
ஆக யானு மவர்க்கினி யாளதே
இட்ட மாயின செய்வாளென் பெண்கொடி
கட்டம் பேசிய காரர கன்றனை
துட்ட டக்கிய தோணி புரத்துறை
அட்ட மூர்த்திக்கு அன்பது வாகியே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் தோணியப்பர் தேவியார் திருநிலைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புகலூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
துன்ன கோவண சுண்ணவெண் ணீறணி
பொன்ன கன்ன சடைப்புக லூரரோ
மின்ன கன்னவெண் டிங்களை பாம்புடன்
என்னு கோவுடன் வைத்தி டிருப்பதே
இரைக்கும் பாம்பு மெறிதரு திங்களும்
நுரைக்குங் கங்கையும் நுண்ணிய செஞ்சடை
புரைப்பி லாத பொழிற்புக லூரரை
உரைக்கு மாசொல்லி ஒள்வளை சோருமே
ஊச லாம்அர வல்குலென் சோர்குழல்
ஏச லாம்பழி தந்தெழில் கொண்டனர்
ஓசொ லாய்மக ளேமுறை யோவென்று
பூசல் நாமிடு தும்புக லூரர்க்கே
மின்னின் நேரிடை யாளுமை பங்கனை
தன்னை நேரொ பிலாத தலைவனை
புன்னை கானற் பொழில்புக லூரனை
என்னு ளாகவை தின்புற் றிருப்பனே
விண்ணி னார்மதி சூடிய வேந்தனை
எண்ணி நாமங்கள் ஓதி எழுத்தஞ்சுங்
கண்ணி னாற்கழல் காண்பிட மேதெனிற்
புண்ணி யன்புக லூருமென் நெஞ்சுமே
அண்ட வாணர் அமுதுண நஞ்சுண்டு
பண்டு நான்மறை யோதிய பாடலன்
தொண்ட ராகி தொழுது மதிப்பவர்
புண்ட ரீகத்து ளார்புக லூரரே
தத்து வந்தலை கண்டறி வாரிலை
தத்து வந்தலை கண்டவர் கண்டிலர்
தத்து வந்தலை நின்றவர கல்லது
தத்து வன்னலன் தண்புக லூரனே
பெருங்கை யாகி பிளிறி வருவதோர்
கருங்கை யானை களிற்றுரி போர்த்தவர்
வருங்கை யானை மதகளி றஞ்சினை
பொருங்கை யானைகண் டீர்புக லூரரே
பொன்னொ தநிற தானும் பொருகடல்
தன்னொ தநிற தானும் அறிகிலா
புன்னை தாது பொழிற்புக லூரரை
என்ன தாவென என்னிடர் தீருமே
மத்த னாய்மதி யாது மலைதனை
எத்தி னான்றிரள் தோள்முடி பத்திற
ஒத்தி னான்விர லாலொருங் கேத்தலும்
பொத்தி னான்புக லூரை தொழுமினே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வர்த்தமானீசுவரர் தேவியார் கருந்தார்க்குழலியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவேகம்பம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பண்டு செய்த பழவினை யின்பயன்
கண்டுங் களித்திகாண்
வண்டு லாமலர செஞ்சடை யேகம்பன்
தொண்ட னாய்த்திரி யாய்துயர் தீரவே
நச்சி நாளும் நயந்தடி யார்தொழ
இச்சை யாலுமை நங்கை வழிபட
கொச்சை யார்குறு கார்செறி தீம்பொழிற்
கச்சி யேகம்ப மேகை தொழுமினே
ஊனி லாவி இயங்கி உலகெலாம்
தானு லாவிய தன்மைய ராகிலும்
வானு லாவிய பாணி பிறங்கவெங்
கானி லாடுவர் கச்சியே கம்பரே
இமையா முக்கணர் என்னெஞ்ச துள்ளவர்
தமையா ரும்மறி வொண்ணா தகைமையர்
இமையோ ரேத்த இருந்தவன் ஏகம்பன்
நமையா ளும்மவ னைத்தொழு மின்களே
மருந்தி னோடுநற் சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்றென காயவெம் புண்ணியன்
கருந்த டங்கண்ணி னாளுமை கைதொழ
இருந்த வன்கச்சி ஏகம்ப தெந்தையே
பொருளி னோடுநற் சுற்றமும் பற்றிலர
கருளும் நன்மைத தாய அரும்பொருள்
சுருள்கொள் செஞ்சடை யான்கச்சி யேகம்பம்
இருள்கெட சென்று கைதொழு தேத்துமே
மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவ
தாக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள்
நோக்கு வான்நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சி யேகம்பனே
பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை
பெண்ணொ டாணென்று பேசற் கரியவன்
வண்ண மில்லி வடிவுவே றாயவன்
கண்ணி லுண்மணி கச்சி யேகம்பனே
திருவின் நாயகன் செம்மலர் மேலயன்
வெருவ நீண்ட விளங்கொளி சோதியான்
ஒருவ னாயுணர் வாயுணர் வல்லதோர்
கருவுள் நாயகன் கச்சி யேகம்பனே
இடுகு நுண்ணிடை ஏந்திள மென்முலை
வடிவின் மாதர் திறம்மனம் வையன்மின்
பொடிகொள் மேனியன் பூம்பொழிற் கச்சியுள்
அடிகள் எம்மை அருந்துயர் தீர்ப்பரே
இலங்கை வேந்தன் இராவணன் சென்றுதன்
விலங்க லையெடு கவ்விர லூன்றலுங்
கலங்கி கச்சியே கம்பவோ வென்றலும்
நலங்கொள் செலவளி தானெங்கள் நாதனே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஏகாம்பரநாதர் தேவியார் காமாட்சியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவேகம்பம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பூமே லானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவ ரெனாமை நடுக்குற
தீமே வும்முரு வாதிரு வேகம்பா
ஆமோ அல்லற் படவடி யோங்களே
அருந்தி றல்அம ரர்அயன் மாலொடு
திருந்த நின்று வழிபட தேவியோ
டிருந்த வன்னெழி லார்கச்சி யேகம்பம்
பொருந்த சென்று புடைப டெழுதுமே
கறைகொள் கண்டத்தெண் டோ ளிறை முக்கணன்
மறைகொள் நாவினன் வானவர காதியான்
உறையும் பூம்பொழில் சூழ்கச்சி யேகம்பம்
முறைமை யாற்சென்று முந்தி தொழுதுமே
பொறிப்பு லன்களை போக்கறு துள்ளத்தை
நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு றும்மமு தாயவன் ஏகம்பம்
குறிப்பி னாற்சென்று கூடி தொழுதுமே
சிந்தை யுட்சிவ மாய்நின்ற செம்மையோ
டந்தி யாய்அன லாய்ப்புனல் வானமாய்
புந்தி யாய்ப்புகு துள்ளம் நிறைந்தவெம்
எந்தை யேகம்பம் ஏத்தி தொழுமினே
சாக்கி யத்தொடு மற்றுஞ் சமண்படும்
பாக்கி யம்மிலார் பாடு செலாதுற
பூக்கொள் சேவடி யான்கச்சி யேகம்பம்
நாக்கொ டேத்தி நயந்து தொழுதுமே
மூப்பி னோடு முனிவுறு தெந்தமை
ஆர்ப்ப தன்முன் னணிஅம ரர்க்கிறை
காப்ப தாய கடிபொழில் ஏகம்பம்
சேர்ப்ப தாகநாஞ் சென்றடை துய்துமே
ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடுஞ்
சால நீயுறு மால்தவிர் நெஞ்சமே
நீல மாமிடற் றண்ணலே கம்பனார்
கோல மாமலர பாதமே கும்பிடே
பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்திய
கைய னைக்கச்சி யேகம்பம் மேவிய
ஐய னைத்தொழு வார்க்கில்லை யல்லலே
அரக்கன் றன்வலி உன்னி கயிலையை
நெருக்கி சென்றெடு தான்முடி தோள்நெரி
திரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்ப
தருக்க தாகநாஞ் சார்ந்து தொழுதுமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவெண்காடு திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பண்கா டிப்படி யாயதன் பத்தர்க்கு
கண்கா டிக்கண்ணில் நின்ற மணியொக்கும்
பெண்கா டிப்பிறை சென்னிவை தான்றிரு
வெண்கா டையடை துய்ம்மட நெஞ்சமே
கொள்ளி வெந்தழல் வீசிநின் றாடுவார்
ஒள்ளி யகணஞ் சூழுமை பங்கனார்
வெள்ளி யன்கரி யன்பசு வேறிய
தெள்ளி யன்றிரு வெண்கா டடைநெஞ்சே
ஊனோ குமின்பம் வேண்டி யுழலாதே
வானோ கும்வழி யாவது நின்மினோ
தானோ குந்தன் னடியவர் நாவினில்
தேனோ குந்திரு வெண்கா டடைநெஞ்சே
பருவெண் கோட்டுப்பைங் கண்மத வேழத்தின்
உருவங் காட்டிநின் றானுமை அஞ்சவே
பெருவெண் காட்டிறை வன்னுறை யும்மிட
திருவெண் காடடை துய்ம்மட நெஞ்சமே
பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன்சடை யானுயர் ஞானங்கள்
கற்ற வன்கய வர்புரம் ஓரம்பால்
செற்ற வன்றிரு வெண்கா டடைநெஞ்சே
கூடி னானுமை யாளொரு பாகமாய்
வேட னாய்விச யற்கருள் செய்தவன்
சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்
காட னாரடி யேஅடை நெஞ்சமே
தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடை யான்கய வர்புரம்
எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம்
விரித்த வன்னுறை வெண்கா டடைநெஞ்சே
பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள்




திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
ஐந்தாம் திருமுறை இரண்டாம் பகுதி
பாடல்கள்

























©









திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
ஐந்தாம் திருமுறை இரண்டாம் பகுதி
பாடல்கள்
உள்ளுறை
திருப்பாலைத்துறை மின்பதிப்பு
திருநாகேச்சரம் மின்பதிப்பு
திருவதிகைவீரட்டம் மின்பதிப்பு
திருவதிகைவீரட்டம் மின்பதிப்பு
திருநாரையூர் மின்பதிப்பு
திருக்கோளிலி மின்பதிப்பு
திருக்கோளிலி மின்பதிப்பு
திருப்பழையாறைவடதளி மின்பதிப்பு
திருமாற்பேறு மின்பதிப்பு
திருமாற்பேறு மின்பதிப்பு
திருஅரிசிற்கரைப்புத்தூர் மின்பதிப்பு
திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் மின்பதிப்பு
திருக்குரங்காடுதுறை மின்பதிப்பு
திருக்கோழம்பம் மின்பதிப்பு
திருப்பூவனூர் மின்பதிப்பு
திருவலஞ்சுழி மின்பதிப்பு
திருவாஞ்சியம் மின்பதிப்பு
திருநள்ளாறு மின்பதிப்பு
திருக்கருவிலி மின்பதிப்பு
திருக்கொண்டீச்சரம் மின்பதிப்பு
திருவிசயமங்கை மின்பதிப்பு
திருநீலக்குடி மின்பதிப்பு
திருமங்கலக்குடி மின்பதிப்பு
திருஎறும்பியூர் மின்பதிப்பு
திருக்குரக்குக்கா மின்பதிப்பு
திருக்கானூர் மின்பதிப்பு
திருச்சேறை மின்பதிப்பு
திருக்கோடிகா மின்பதிப்பு
திருப்புள்ளிருக்குவேளூர் மின்பதிப்பு
திருஅன்பில்ஆலந்துறை மின்பதிப்பு
திருப்பாண்டிக்கொடுமுடி மின்பதிப்பு
திருவான்மியூர் மின்பதிப்பு
திருநாகைக்காரோணம் மின்பதிப்பு
திருக்காட்டுப்பள்ளி மின்பதிப்பு
திருச்சிராப்பள்ளி மின்பதிப்பு
திருவாட்போக்கி மின்பதிப்பு
திருமணஞ்சேரி மின்பதிப்பு
திருமருகல் மின்பதிப்பு
தனி மின்பதிப்பு
தனி மின்பதிப்பு
தனி மின்பதிப்பு
காலபாராயணம் மின்பதிப்பு
மறக்கிற்பனே என்னும் மின்பதிப்பு
தொழற்பாலனம் என்னும் மின்பதிப்பு
இலிங்கபுராணம் மின்பதிப்பு
மனத்தொகை மின்பதிப்பு
சித்தத்தொகை மின்பதிப்பு
உள்ளம் மின்பதிப்பு
பாவநாசம் மின்பதிப்பு
ஆதிபுராணம் மின்பதிப்பு

திருப்பாலைத்துறை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
நீல மாமணி கண்டத்தர் நீள்சடை
கோல மாமதி கங்கையுங் கூட்டினார்
சூல மான்மழு வேந்தி சுடர்முடி
பால்நெய் யாடுவர் பாலை துறையரே
கவள மால்களிற் றின்னுரி போர்த்தவர்
தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர்
திவள வானவர் போற்றி திசைதொழும்
பவள மேனியர் பாலை துறையரே
மின்னின் நுண்ணிடை கன்னியர் மிக்கெங்கும்
பொன்னி நீர்மூழ்கி போற்றி யடிதொழ
மன்னி நான்மறை யோடுபல் கீதமும்
பன்னி னாரவர் பாலை துறையரே
நீடு காடிட மாய்நின்ற பேய்க்கணங்
கூடு பூதங் குழுமிநின் றார்க்கவே
ஆடி னாரழ காகிய நான்மறை
பாடி னாரவர் பாலை துறையரே
சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்
பித்தர் நான்மறை வேதியர் பேணிய
அத்த னேநமை யாளுடை யாயெனும்
பத்தர் கட்கன்பர் பாலை துறையரே
விண்ணி னார்பணி தேத்த வியப்புறும்
மண்ணி னார்மற வாதுசி வாயவென்
றெண்ணி னார்க்கிட மாவெழின் வானகம்
பண்ணி னாரவர் பாலை துறையரே
குரவ னார்கொடு கொட்டியுங் கொக்கரை
விரவி னார்பண் கெழுமிய வீணையும்
மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப்பொன்னி பாலை துறையரே
தொடரு தொண்டரை துக்க தொடர்ந்துவ
தடரும் போதர னாயருள் செய்பவர்
கடலின் நஞ்சணி கண்டர் கடிபுனற்
படருஞ் செஞ்சடை பாலை துறையரே
மேக தோய்பிறை சூடுவர் மேகலை
நாக தோய்ந்த அரையினர் நல்லியற்
போக தோய்ந்த புணர்முலை மங்கையோர்
பாக தோய்ந்தவர் பாலை துறையரே
வெங்கண் வாளர வாட்டி வெருட்டுவர்
அங்க ணாரடி யார்க்கருள் நல்குவர்
செங்கண் மாலயன் தேடற் கரியவர்
பைங்கண் ஏற்றினர் பாலை துறையரே
உரத்தி னாலர கன்னுயர் மாமலை
நெருக்கி னானை நெரித்தவன் பாடலும்
இரக்க மாவருள் செய்தபா லைத்துறை
கரத்தி னாற்றொழு வார்வினை யோயுமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பாலைவனநாதர் தேவியார் தவளவெண்ணகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநாகேச்சரம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை யேந்தி பலிதிரி
செல்வர் போல்திரு நாகே சரவரே
நாவ லம்பெரு தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி வினையொடு
பாவ மாயின பற்றறு வித்திடு
தேவர் போல்திரு நாகே சரவரே
ஓத மார்கட லின்விட முண்டவர்
ஆதி யார்அய னோடம ரர்க்கெலாம்
மாதோர் கூறர் மழுவல னேந்திய
நாதர் போல்திரு நாகே சரவரே
சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்
ஐந்த லையர வின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி நாகே சரவரே
பண்டோ ர் நாளிகழ் வான்பழி தக்கனார்
கொண்ட வேள்வி குமண்டை யதுகெட
தண்ட மாவிதா தாவின் றலைகொண்ட
செண்டர் போல்திரு நாகே சரவரே
வம்பு பூங்குழல் மாது மறுகவோர்
கம்ப யானை யுரித்த கரத்தினர்
செம்பொ னாரித ழிம்மலர செஞ்சடை
நம்பர் போல்திரு நாகே சரவரே
மானை யேந்திய கையினர் மையறு
ஞான சோதியர் தியர் நாமந்தான்
ஆன அஞ்செழு தோதவ தண்ணிக்கு
தேனர் போல்திரு நாகே சரவரே
கழல்கொள் காலினர் காலனை காய்ந்தவர்
தழல்கொள் மேனியர் சாந்தவெண் ணீறணி
அழகர் ஆல்நிழற் கீழற மோதிய
குழகர் போல்குளிர் நாகே சரவரே
வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண்
சுட்ட செய்கைய ராகிலுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்குஞ்
சிட்டர் போல்திரு நாகே சரவரே
தூர்த்தன் றோண்முடி தாளு தொலையவே
சேர்த்தி னார்திரு பா தொருவிரல்
ஆர்த்து வந்துல கத்தவ ராடிடு
தீர்த்தர் போல்திரு நாகே சரவரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் செண்பகாரணியேசுவரர்
தேவியார் குன்றமுலைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவதிகைவீரட்டம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கோணன் மாமதி சூடியோர் கோவணம்
நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை
பாணில் வீணை பயின்றவன் வீரட்டங்
காணில் அல்லதென் கண்டுயில் கொள்ளுமே
பண்ணி னைப்பவ ளத்திரள் மாமணி
அண்ண லையம ரர்தொழு மாதியை
சுண்ண வெண்பொடி யான்றிரு வீரட்டம்
நண்ணி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே
உற்ற வர்தம் உறுநோய் களைபவர்
பெற்ற மேறும் பிறங்கு சடையினர்
சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டங்
கற்கி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே
முற்றா வெண்மதி சூடும் முதல்வனார்
செற்றார் வாழு திரிபுர தீயெழ
விற்றான் கொண்டெயி லெய்தவர் வீரட்டங்
கற்றா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே
பல்லா ரும்பல தேவர் பணிபவர்
நல்லா ரு தேத்த படுபவன்
வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டங்
கல்லே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே
வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடை
கொண்டான் கோல மதியோ டரவமும்
விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டங்
கண்டா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே
அரையார் கோவண ஆடைய னாறெலா
திரையார் ஒண்புனல் பாய்கெடி லக்கரை
விரையார் நீற்றன் விளங்கு வீரட்டன்பாற்
கரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே
நீறு டைத்தட தோளுடை நின்மலன்
ஆறு டைப்புனல் பாய்கெடி லக்கரை
ஏறு டைக்கொடி யான்றிரு வீரட்டங்
கூறி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே
செங்கண் மால்விடை யேறிய செல்வனார்
பைங்க ணானையின் ஈருரி போர்த்தவர்
அங்கண் ஞாலம தாகிய வீரட்டங்
கங்கு லாகவென் கண்டுயில் கொள்ளுமே
பூணா ணாரம் பொருந்த வுடையவர்
நாணா கவ்வரை வில்லிடை யம்பினாற்
பேணார் மும்மதி லெய்தவன் வீரட்டங்
காணே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே
வரையார தவயி ரத்திரள் மாணிக்க
திரையார தபுனல் பாய்கெடி லக்கரை
விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம்
உரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே
உலந்தார் வெண்டலை உண்கல னாகவே
வலந்தான் மிக்கவன் வாளர கன்றனை
சிலம்பார் சேவடி யூன்றினான் வீரட்டம்
புலம்பே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வீரட்டானேசுவரர் தேவியார் திருவதிகைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவதிகைவீரட்டம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
மட்ட லரிடு வார்வினை மாயுமாற்
கட்டி தேன்கல தன்ன கெடிலவீ
ரட்ட னாரடி சேரு மவருக்கே
நீள மாநினை தெண்மலர் இட்டவர்
கோள வல்வினை யுங்குறை விப்பரால்
வாள மாலிழி யுங்கெடி லக்கரை
வேளி சூழ்ந்தழ காய வீரட்டரே
கள்ளின் நாண்மல ரோரிரு நான்குகொண்
டுள்குவா ரவர் வல்வினை யோட்டுவார்
தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை
வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே
பூங்கொ தாயின மூன்றொடோ ரைந்திட
வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார்
வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை
வேங்கை தோலுடை யாடைவீ ரட்டரே
தேன போதுகள் மூன்றொடோ ரைந்துடன்
தான போதிடு வார்வினை தீர்ப்பவர்
மீன தண்புனல் பாய்கெடி லக்கரை
வேன லானை யுரித்தவீ ரட்டரே
ஏழி தொன்மலர் கொண்டு பணிந்தவர்
ஊழி தொல்வினை யோட அகற்றுவார்
பாழி தண்புனல் பாய்கெடி லக்கரை
வேழ தின்னுரி போர்த்தவீ ரட்டரே
உரைசெய் நூல்வழி யொண்மல ரெட்டிட
திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்திழி யுங்கெடி லக்கரை
விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே
ஓலி வண்டறை யொண்மல ரெட்டினாற்
காலை யேத்த வினையை கழிப்பரால்
ஆலி வந்திழி யுங்கெடி லக்கரை
வேலி சூழ்ந்தழ காயவீ ரட்டரே
தாரி துள்ளி தடமல ரெட்டினாற்
பாரி தேத்தவல் லார்வினை பாற்றுவார்
மூரி தெண்டிரை பாய்கெடி லக்கரை
வேரி செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே
அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண்
டட்ட மூர்த்தி அனாதிதன் பாலணை
தட்டு மாறுசெய் கிற்ப அதிகைவீ
ரட்ட னாரடி சேரு மவர்களே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநாரையூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்
கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும்
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனு
காறு சூடலும் அம்ம அழகிதே
புள்ளி கொண்ட புலியுரி யாடையும்
வெள்ளி கொண்டவெண் பூதிமெய் யாடலும்
நள்ளி தெண்டிரை நாரையூ ரான்நஞ்சை
அள்ளி யுண்டலும் அம்ம அழகிதே
வேடு தங்கிய வேடமும் வெண்டலை
ஓடு தங்கிய வுண்பலி கொள்கையும்
நாடு தங்கிய நாரையூ ரான்நடம்
ஆடு பைங்கழல் அம்ம அழகிதே
கொக்கின் றூவலுங் கூவிளங் கண்ணியும்
மிக்க வெண்டலை மாலை விரிசடை
நக்க னாகிலும் நாரையூர் நம்பனு
கக்கி னாரமும் அம்ம அழகிதே
வடிகொள் வெண்மழு மானமர் கைகளும்
பொடிகொள் செம்பவ ளம்புரை மேனியும்
நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர்
அடிகள் தம்வடி வம்ம அழகிதே
சூல மல்கிய கையுஞ் சுடரொடு
பாலு நெய்தயி ராடிய பான்மையும்
ஞால மல்கிய நாரையூர் நம்பனு
கால நீழலும் அம்ம அழகிதே
பண்ணி னான்மறை பாடலொ டாடலும்
எண்ணி லார்புர மூன்றெரி செய்ததும்
நண்ணி னார்துயர் தீர்த்தலும் நாரையூர்
அண்ண லார்செய்கை அம்ம அழகிதே
என்பு பூண்டெரு தேறி இளம்பிறை
மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே
நன்ப கற்பலி தேரினும் நாரையூர்
அன்ப னுக்கது அம்ம அழகிதே
முரலுங் கின்னரம் மொந்தை முழங்கவே
இரவி னின்றெரி யாடலு நீடுவான்
நரலும் வாரிநன் னாரையூர் நம்பனு
கரவும் பூணுதல் அம்ம அழகிதே
கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலை
எடுத்த வாளர கன்றலை ஈரைஞ்சும்
நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல்
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சவுந்தரேசுவரர் தேவியார் திருபுரசுந்தரநாயகி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கோளிலி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழு
தொக்க கையினன் செய்யதோர் சோதியன்
கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி
நக்க னைத்தொழ நம்வினை நாசமே
முத்தி னைமுத லாகிய மூர்த்தியை
வித்தி னைவிளை வாய விகிர்தனை
கொத்த லர்பொழில் சூழ்தரு கோளிலி
அத்த னைத்தொழ நீங்கும்நம் மல்லலே
வெண்டி ரைப்பர வைவிட முண்டதோர்
கண்ட னைக்கல தார்த கன்பனை
கொண்ட லம்பொழிற் கோளிலி மேவிய
அண்ட னைத்தொழு வார்க்கல்ல லில்லையே
பலவும் வல்வினை பாறும் பரிசினால்
உலவுங் கங்கையு திங்களும் ஒண்சடை
குலவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
நிலவி னான்றனை நித்தல் நினைமினே
அல்ல லாயின தீரும் அழகிய
முல்லை வெண்முறு வல்லுமை யஞ்சவே
கொல்லை யானை யுரித்தவன் கோளிலி
செல்வன் சேவடி சென்று தொழுமினே
ஆவின் பால்கண் டளவில் அருந்தவ
பாலன் வேண்டலுஞ் செல்லென்று பாற்கடல்
கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
மேவி னானை தொழவினை வீடுமே
சீர்த்த நன்மனை யாளுஞ் சிறுவரும்
ஆர்த்த சுற்றமும் பற்றிலை யாதலாற்
கூத்த னாருறை யுந்திரு கோளிலி
ஏத்தி நீர்தொழு மின்னிடர் தீருமே
மால தாகி மயங்கு மனிதர்காள்
காலம் வந்து கடைமுடி யாமுனங்
கோல வார்பொழிற் கோளிலி மேவிய
நீல கண்டனை நின்று நினைமினே
கேடு மூடி கிடந்துண்ணு நாடது
தேடி நீர்திரி யாதே சிவகதி
கூட லாந்திரு கோளிலி ஈசனை
பாடு மின்னிர வோடு பகலுமே
மடுத்து மாமலை யேந்தலுற் றான்றனை
அடர்த்து பின்னும் இரங்கி யவற்கருள்
கொடுத்த வன்னுறை கோளிலி யேதொழ
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கோளிலிநாதர் தேவியார் வண்டமர்பூங்குழலம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கோளிலி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
முன்ன மேநினை யாதொழி தேனுனை
இன்னம் நானுன சேவடி யேத்திலேன்
செந்நெ லார்வயல் சூழ்திரு கோளிலி
மன்ன னேயடி யேனை மறவலே
விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினை
மண்ணு ளார்வினை தீர்க்கு மருந்தினை
பண்ணு ளார்பயி லுந்திரு கோளிலி
அண்ண லாரடி யேதொழு துய்ம்மினே
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்
ஆளும் நோய்களோ ரைம்பதோ டாறெட்டும்
ஏழை மைப்ப டிருந்துநீர் நையாதே
கோளி லியரன் பாதமே கூறுமே
விழவி னோசை ஒலியறா தண்பொழில்
பழகி னார்வினை தீர்க்கும் பழம்பதி
அழல்கை யானம ருந்திரு கோளிலி
குழக னார்திரு பாதமே கூறுமே
மூல மாகிய மூவர்க்கு மூர்த்தியை
கால னாகிய காலற்குங் காலனை
கோல மாம்பொழில் சூழ்திரு கோளிலி
சூல பாணிதன் பாத தொழுமினே
காற்ற னைக்கடல் நஞ்சமு துண்டவெண்
ணீற்ற னைநிமிர் புன்சடை யண்ணலை
ஆற்ற னையம ருந்திரு கோளிலி
ஏற்ற னாரடி யேதொழு தேத்துமே
வேத மாயவிண் ணோர்கள் தலைவனை
ஓதி மன்னுயி ரேத்து மொருவனை
கோதி வண்டறை யுந்திரு கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே
நீதி யாற்றொழு வார்கள் தலைவனை
வாதை யான விடுக்கும் மணியினை
கோதி வண்டறை யுந்திரு கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே
மாலும் நான்முக னாலும் அறிவொணா
பாலின் மென்மொழி யாளொரு பங்கனை
கோல மாம்பொழில் சூழ்திரு கோளிலி
நீல கண்டனை நித்தல் நினைமினே
அரக்க னாய இலங்கையர் மன்னனை
நெருக்கி யம்முடி பத்திறு தானவற்
கிரக்க மாகிய வன்றிரு கோளிலி
அருத்தி யாயடி யேதொழு துய்ம்மினே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பழையாறைவடதளி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
தலையெ லாம்பறி குஞ்சமண் கையருள்
நிலையி னான்மறை தான்மறை கொண்ணுமே
அலையி னார்பொழி லாறை வடதளி
நிலையி னானடி யேநினை துய்ம்மினே
மூக்கி னால்முரன் றோதி குண்டிகை
தூக்கி னார்குல தூரறு தேதன
காக்கி னானணி யாறை வடதளி
நோக்கி னார்க்கில்லை யாலரு நோய்களே
குண்ட ரைக்குண மில்லரை கூறையில்
மிண்ட ரைத்துர தவிம லன்றனை
அண்ட ரைப்பழை யாறை வடதளி
கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே
முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரை
கடைய ரைக்கடி தார்கனல் வெண்மழு
படைய ரைப்பழை யாறை வடதளி
உடைய ரைக்குளிர துள்குமென் உள்ளமே
ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணுங்
கள்ள ரைக்கடி தகரு பூறலை
அள்ள லம்புன லாறை வடதளி
வள்ள லைப்புக ழத்துயர் வாடுமே
நீதி யைக்கெட நின்றம ணேயுணுஞ்
சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன்
ஆதி யைப்பழை யாறை வடதளி
சோதி யைத்தொழு வார்துயர் தீருமே
திரட்டி ரைக்க வளந்திணி குஞ்சமண்
பிரட்ட ரைப்பிரி தபெரு மான்றனை
அருட்டி றத்தணி யாறை வடதளி
தெருட்ட ரைத்தொழ தீவினை தீருமே
ஓதி னத்தெழு தஞ்சுண ராச்சமண்
வேதி னைப்படு தானைவெங் கூற்றுதை
பாத னைப்பழை யாறை வடதளி
நாத னைத்தொழ நம்வினை நாசமே
வேது என்பது வெப்பம்
வாயி ருந்தமி ழேபடி தாளுறா
ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான்
பாயி ரும்புன லாறை வடதளி
மேய வன்னென வல்வினை வீடுமே
செருத்த னைச்செயுஞ் சேணர கன்னுடல்
எருத்தி றவிர லாலிறை யூன்றிய
அருத்த னைப்பழை யாறை வடதளி
திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சோமேசுவரர் தேவியார் சோமகலாநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமாற்பேறு திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல்
வருமாற் றின்மலர் கொண்டு வழிபடுங்
கருமாற் கின்னருள் செய்தவன் காண்டகு
திருமாற் பேறு தொழவினை தேயுமே
ஆல தார்நிழ லில்லறம் நால்வர்க்கு
கோல தாலுரை செய்தவன் குற்றமில்
மாலு காரருள் செய்தவன் மாற்பேறு
ஏல தான்றொழு வார்க்கிட ரில்லையே
துணிவண் ணச்சுட ராழிகொள் வானெண்ணி
அணிவண் ணத்தலர் கொண்டடி யர்ச்சித்த
மணிவண் ணற்கருள் செய்தவன் மாற்பேறு
பணிவண் ணத்தவர கில்லையாம் பாவமே
தீத வைசெய்து தீவினை வீழாதே
காதல் செய்து கருத்தினில் நின்றநன்
மாத வர்பயில் மாற்பேறு கைதொழ
போது மின்வினை யாயின போகுமே
வார்கொள் மென்முலை மங்கையோர் பங்கினன்
வார்கொள் நன்முர சம்மறை யவ்வறை
வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு
வார்கள் மன்னுவர் பொன்னுல கத்திலே
பண்டை வல்வினை பற்றறு கும்வகை
உண்டு சொல்லுவன் கேண்மின் ஒளிகிளர்
வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு
கண்டு கைதொழ தீருங் கவலையே
மழுவ லான்றிரு நாமம் மகிழ்ந்துரை
தழவ லார்களு கன்புசெய் தின்பொடும்
வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு
தொழவ லார்த கில்லை துயரமே
முன்ன வனுல குக்கு முழுமணி
பொன்ன வன்றிகழ் முத்தொடு போகமாம்
மன்ன வன்றிரு மாற்பேறு கைதொழும்
அன்ன வரெமை யாளுடை யார்களே
வேட னாய்விச யன்னொடும் எய்துவெங்
காடு நீடுக தாடிய கண்ணுதல்
மாட நீடுய ருந்திரு மாற்பேறு
பாடு வார்பெறு வார்பர லோகமே
கருத்த னாய்க்கயி லாய மலைதனை
தருக்கி னாலெடு தானை தகரவே
வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு
அருத்தி யாற்றொழு வார்க்கில்லை அல்லலே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மால்வணங்குமீசர் தேவியார் கருணைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமாற்பேறு திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
ஏது மொன்று மறிவில ராயினும்
ஓதி அஞ்செழு தும்முணர் வார்கட்கு
பேத மின்றி அவரவர் உள்ளத்தே
மாது தாமும் மகிழ்வர்மாற் பேறரே
அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள்
நிச்ச லுந்நினை யாய்வினை போயற
கச்ச மாவிட முண்டகண் டாவென
வைச்ச மாநிதி யாவர் மாற்பேறரே
சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்
கோத்தி ரமுங்கு லமுங்கொண் டென்செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே
இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள்
அருந்த வந்தரும் அஞ்செழு தோதினாற்
பொருந்து நோய்பிணி போக துரப்பதோர்
மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே
சாற்றி சொல்லுவன் கேண்மின் தரணியீர்
ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினாற்
கூற்றை நீக்கி குறைவறு தாள்வதோர்
மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே
ஈட்டு மாநிதி சால இழக்கினும்
வீட்டுங் காலன் விரைய அழைக்கினுங்
காட்டில் மாநட மாடுவாய் காவெனில்
வாட்ட தீர்க்கவும் வல்லர்மாற் பேறரே
ஐய னேயர னேயென் றரற்றினால்
உய்ய லாமுல கத்தவர் பேணுவர்
செய்ய பாத மிரண்டும் நினையவே
வைய மாளவும் வைப்பர்மாற் பேறரே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள் சிதைந்து போயின
உந்தி சென்று மலையை யெடுத்தவன்
சந்து தோளொடு தாளிற வூன்றினான்
மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறென
அந்த மில்லதோர் இன்பம் அணுகுமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஅரிசிற்கரைப்புத்தூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரை
புத்தூ ரன்னடி போற்றியென் பாரெலாம்
பொய்த்தூ ரும்புல னைந்தொடு புல்கிய
மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே
பிறைக்க ணிச்சடை யெம்பெரு மானென்று
கறைக்க ணித்தவர் கண்ட வணக்கத்தாய்
உறக்க ணித்துரு காமன தார்களை
புறக்க ணித்திடும் புத்தூர புனிதரே
அரிசி லின்கரை மேலணி யார்தரு
புரிசை நந்திரு புத்தூர புனிதனை
பரிசொ டும்பர விப்பணி வார்க்கெலா
துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே
வேத னைமிகு வீணையின் மேவிய
கீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம்
போத னைப்புனல் சூழ்ந்தபு தூரனை
நாத னைந்நினை தென்மனம் நையுமே
அருப்பு போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல்
விருப்பு சேர்நிலை விட்டுநல் லிட்டமாய்
திருப்பு தூரனை சிந்தை செயச்செ
கருப்பு சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே
பாம்பொ டுமதி யும்படர் புன்சடை
பூம்பு னலும்பொ திந்தபு தூருளான்
நாம்ப ணிந்தடி போற்றிட நாடொறுஞ்
சாம்பல் என்பு தனக்கணி யாகுமே
கனலங் கைதனி லேந்திவெங் காட்டிடை
அனலங் கெய்திநின் றாடுவர் பாடுவர்
பினலஞ் செஞ்சடை மேற்பிறை யுந்தரு
புனலுஞ் சூடுவர் போலும்பு தூரரே
காற்றி னுங்கடி தாகி நடப்பதோர்
ஏற்றி னும்மிசை தேறுவர் என்பொடு
நீற்றி னையணி வர்நினை வாய்த்தமை
போற்றி யென்பவர கன்பர்பு தூரரே
முன்னு முப்புரஞ் செற்றன ராயினும்
அன்ன மொப்பர் அலந்தடை தார்க்கெலாம்
மின்னு மொப்பர் விரிசடை மேனிசெம்
பொன்னு மொப்பர்பு தூரெம் புனிதரே
செருத்த னாற்றன தேர்செல வுய்த்திடுங்
கருத்த னாய்க்கயி லையெடு தானுடல்
பருத்த தோள்கெட பா தொருவிரல்
பொருத்தி னார்பொழி லார்ந்தபு தூரரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் படிக்காசுவைத்தநாதர் தேவியார் அழகாம்பிகை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும்
அருத்த னையடி யேன்மன துள்ளமர்
கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய
திருத்த னைப்புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே
யாவ ருமறி தற்கரி யான்றனை
மூவ ரின்முத லாகிய மூர்த்தியை
நாவின் நல்லுரை யாகிய நாதனை
தேவனை புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே
அன்ப னையடி யாரிடர் நீக்கியை
செம்பொ னைத்திக ழுந்திரு கச்சியே
கம்ப னைக்கடு வாய்க்கரை தென்புத்தூர்
நம்ப னைக்கண்டு நானு பெற்றேனே
மாத னத்தைமா தேவனை மாறிலா
கோத னத்திலை தாடியை வெண்குழை
காத னைக்கடு வாய்க்கரை தென்புத்தூர்
நாத னைக்கண்டு நானு பெற்றேனே
குண்டு பட்டகுற் றந்தவிர தென்னையா
கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனை
கண்ட னைக்கடு வாய்க்கரை தென்புத்தூர்
அண்ட னைக்கண் டருவினை யற்றேனே
பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட
மைந்த னைம்மண வாளனை மாமலர
கந்த நீர்க்கடு வாய்க்கரை தென்புத்தூர்
எந்தை யீசனை கண்டினி தாயிற்றே
உம்ப ரானை உருத்திர மூர்த்தியை
அம்ப ரானை அமலனை ஆதியை
கம்பு நீர்க்கடு வாய்க்கரை தென்புத்தூர்
எம்பி ரானைக்கண் டின்பம தாயிற்றே
மாசார் பாச மயக்கறு வித்தெனுள்
நேச மாகிய நித்த மணாளனை
பூச நீர்க்கடு வாய்க்கரை தென்புத்தூர்
ஈச னேயென இன்பம தாயிற்றே
இடுவா ரிட்ட கவளங் கவர்ந்திரு
கடுவா யிட்டவர் கட்டுரை கொள்ளாதே
கடுவா தென்கரை புத்தூ ரடிகட்கா
படவே பெற்றுநான் பாக்கியஞ் செய்தேனே
அரக்க னாற்றல் அழித்தவன் பாடல்கே
டிரக்க மாகி அருள்புரி யீசனை
திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரை தென்புத்தூர்
இருக்கு நாதனை காணப்பெற் றுய்ந்தேனே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சொர்ணபுரீசுவரர் தேவியார் சொர்ணபுரிநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்குரங்காடுதுறை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இரங்கா வன்மன தார்கள் இயங்குமு
புரங்கா வல்லழி யப்பொடி யாக்கினான்
தரங்கா டுந்தட நீர்ப்பொன்னி தென்கரை
குரங்கா டுதுறை கோல கபாலியே
முத்தி னைமணி யைப்பவ ளத்தொளிர்
தொத்தி னைச்சுடர் சோதியை சோலைசூழ்
கொத்த லர்குரங் காடு துறையுறை
அத்த னென்னஅண் ணித்தி டிருந்ததே
குளிர்பு னற்குரங் காடு துறையனை
தளிர்நி றத்தையல் பங்கனை தண்மதி
ஒளிய னைந்நினை தேனுக்கென் உள்ளமு
தெளிவி னைத்தெளி யத்தெளி திட்டதே
மணவன் காண்மலை யாள்நெடு மங்கல
கணவன் காண்கலை ஞானிகள் காதலெண்
குணவன் காண்குரங் காடு துறைதனில்
அணவன் காணன்பு செய்யு மடியர்க்கே
ஞால தார்தொழு தேத்திய நன்மையன்
கால தானுயிர் போக்கிய காலினன்
நீல தார்மிடற் றான்வெள்ளை நீறணி
கோல தான்குரங் காடு துறையனே
ஆட்டி னான்முன் அமணரோ டென்றனை
பாட்டி னான்றன பொன்னடி கின்னிசை
வீட்டி னான்வினை மெய்யடி யாரொடுங்
கூட்டி னான்குரங் காடு துறையனே
மாத்தன் றான்மறை யார்முறை யான்மறை
ஓத்தன் றாருகன் றன்னுயி ருண்டபெண்
போத்தன் றானவள் பொங்கு சினந்தணி
கூத்தன் றான்குரங் காடு துறையனே
நாடி நந்தம ராயின தொண்டர்காள்
ஆடு மின்னழு மின்தொழு மின்னடி
பாடு மின்பர மன்பயி லும்மிடங்
கூடு மின்குரங் காடு துறையையே
தென்றல் நன்னெடு தேருடை யானுடல்
பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்
அன்ற வந்தக னையயிற் சூலத்தாற்
கொன்ற வன்குரங் காடு துறையனே
நற்ற வஞ்செய்த நால்வர்க்கு நல்லறம்
உற்ற நன்மொழி யாலருள் செய்தநற்
கொற்ற வன்குரங் காடு துறைதொழ
பற்று தீவினை யாயின பாறுமே
கடுத்த தேரர கன்கயி லைம்மலை
எடுத்த தோள்தலை யிற்றல றவ்விரல்
அடுத்த லுமவன் இன்னிசை கேட்டருள்
கொடுத்த வன்குரங் காடு துறையனே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஆபத்சகாயர் தேவியார் பவளக்கொடியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கோழம்பம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
வேழம் பத்தைவர் வேண்டிற்று வேண்டிப்போய்
ஆழம் பற்றிவீழ் வார்பல வாதர்கள்
கோழம் பத்துறை கூத்தன் குரைகழற்
தாழும் பத்தர்கள் சால சதுரரே
கயிலை நன்மலை யாளுங் கபாலியை
மயிலி யன்மலை மாதின் மணாளனை
குயில்ப யில்பொழிற் கோழம்ப மேயவென்
உயிரி னைநினை துள்ளம் உருகுமே
வாழும் பான்மைய ராகிய வான்செல்வ
தாழும் பான்மைய ராகித்தம் வாயினால்
தாழம் பூமணம் நாறிய தாழ்பொழிற்
கோழம் பாவென கூடிய செல்வமே
பாட லாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள்
கூட லாக்கிடுங் குன்றின் மணற்கொடு
கோடல் பூத்தலர் கோழம்ப துண்மகிழ
தாடுங் கூத்தனு கன்புப டாளன்றே
தளிர்கொள் மேனியள் தான்மிக அஞ்சவோர்
பிளிறு வாரண தீருரி போர்த்தவன்
குளிர்கொள் நீள்வயல் கோழம்பம் மேவினான்
நளிர்கொள் நீர்சடை மேலு நயந்ததே
நாத ராவர் நமக்கும் பிறர்க்குந்தாம்
வேத நாவர் விடைக்கொடி யார்வெற்பிற்
கோதை மாதொடுங் கோழம்பங் கோயில்கொண்
டாதி பாத மடையவல் லார்களே
முன்னை நான்செய்த பாவ முதலற
பின்னை நான்பெரி தும்மருள் பெற்றதும்
அன்ன மார்வயற் கோழம்ப துள்ளமர்
பின்னல் வார்சடை யானை பிதற்றியே
ஏழை மாரிடம் நின்றிரு கைக்கொடுண்
கோழை மாரொடுங் கூடிய குற்றமாங்
கூழை பாய்வயற் கோழம்ப தானடி
ஏழை யேன்முன் மறந்தங் கிருந்ததே
அரவ ணைப்பயில் மாலயன் வந்தடி
பரவ னைப்பர மாம்பரஞ் சோதியை
குரவ னைக்குர வார்பொழிற் கோழம்ப
துரவ னையொரு வர்க்குணர் வொண்ணுமே
சமர சூரபன் மாவை தடிந்தவேற்
குமரன் தாதைநற் கோழம்ப மேவிய
அமரர் கோவினு கன்புடை தொண்டர்கள்
அமர லோகம தாளுடை யார்களே
துட்ட னாகி மலையெடு தஃதின்கீழ
பட்டு வீழ்ந்து படர்ந்து போயினான்
கொட்டம் நாறிய கோழம்ப தீசனென்
றிட்ட கீத மிசைத்த அரக்கனே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கோகுலேசுவரர் தேவியார் சவுந்தரியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பூவனூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பூவ னூர்ப்புனி தன்றிரு நாமந்தான்
நாவின் நூறுநூ றாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறி பறையவே
தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே
என்ன னென்மனை எந்தையெ னாருயிர்
தன்னன் றன்னடி யேன்றனமாகிய
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்
இன்ன னென்றறி வொண்ணான் இயற்கையே
குற்றங் கூடி குணம்பல கூடாதீர்
மற்று தீவினை செய்தன மாய்க்கலாம்
புற்ற ராவினன் பூவனூர் ஈசன்பேர்
கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே
ஆவின் மேவிய ஐந்தமர தாடுவான்
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான்
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரை
பூவ னூர்புகு வார்வினை போகுமே
புல்ல மூர்தியூர் பூவனூர் பூம்புனல்
நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளியூர்
தில்லை யூர்திரு வாரூர் சீர்காழிநல்
வல்ல மூரென வல்வினை மாயுமே
அனுச யப்பட்ட துவிது வென்னாதே
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கி
புனித னைப்பூவ னூரனை போற்றுவார்
மனித ரிற்றலை யான மனிதரே
ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன்
வேத நாவன்வெற் பின்மட பாவையோர்
பாதி யானான் பரந்த பெரும்படை
பூத நாதன்தென் பூவனூர் நாதனே
பூவ னூர்தண் புறம்பயம் பூம்பொழில்
நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங்
கோவ லூர்குட வாயில் கொடுமுடி
மூவ லூருமு கண்ணனூர் காண்மினே
ஏவ மேது மிலாவம ணேதலர்
பாவ காரிகள் சொல்வலை பட்டுநான்
தேவ தேவன் திருநெறி யாகிய
பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே
நார ணன்னொடு நான்முகன் இந்திரன்
வார ணன்கும ரன்வணங் குங்கழற்
பூர ணன்திரு பூவனூர் மேவிய
கார ணன்னெனை யாளுடை காளையே
மைக்க டுத்த நிறத்தர கன்வரை
புக்கெ டுத்தலும் பூவனூ ரன்னடி
மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும்
பக்க டுத்தபின் பாடியு தானன்றே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் புஷ்பவனநாதர் தேவியார் கற்பகவல்லியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவலஞ்சுழி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
ஓத மார்கட லின்விட முண்டவன்
பூத நாயகன் பொற்கயி லைக்கிறை
மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனை
பாத மேத்த பறையுநம் பாவமே
கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம்
எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன்
மயில்க ளாலும் வலஞ்சுழி யீசனை
பயில்கி லார்சிலர் பாவி தொழும்பரே
இளைய காலமெம் மானை யடைகிலா
துளையி லாச்செவி தொண்டர்காள் நும்முடல்
வளையுங் காலம் வலஞ்சுழி யீசனை
களைக ணா கருதிநீர் உய்ம்மினே
நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்கா
குறைவி லாக்கொடுங் கூற்றுதை திட்டவன்
மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய
இறைவ னையினி என்றுகொல் காண்பதே
விண்ட வர்புர மூன்று மெரிகொள
திண்டி றற்சிலை யாலெரி செய்தவன்
வண்டு பண்முர லுந்தண் வலஞ்சுழி
அண்ட னுக்கடி மைத்திற தாவனே
படங்கொள் பாம்பொடு பான்மதி யஞ்சடை
அடங்க வாழவல் லானும்பர் தம்பிரான்
மடந்தை பாகன் வலஞ்சுழி யானடி
அடைந்த வர்க்கடி மைத்திற தாவனே
நாக்கொண் டுபர வும்மடி யார்வினை
போக்க வல்ல புரிசடை புண்ணியன்
மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன்றன்
ஏக்கொ ளப்புர மூன்றெரி யானவே
தேடு வார்பிர மன்திரு மாலவர்
ஆடு பாத மவரும் அறிகிலார்
மாட வீதி வலஞ்சுழி யீசனை
தேடு வானுறு கின்றதென் சிந்தையே
கண்ப னிக்குங் கைகூப்புங் கண்மூன்றுடை
நண்ப னுக்கெனை நான்கொடு பேனெனும்
வண்பொ னித்தென் வலஞ்சுழி மேவிய
பண்ப னிப்பொனை செய்த பரிசிதே
இலங்கை வேந்தன் இருபது தோளிற
நலங்கொள் பா தொருவிர லூன்றினான்
மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி
வலங்கொள் வாரடி யென்றலை மேலவே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வலஞ்சுழிநாதர் தேவியார் பெரியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாஞ்சியம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள்
உடையு தாங்கிய உத்தம னார்க்கிடம்
புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர கல்லலொன் றில்லையே
பறப்பை யும்பசு வும்படு துப்பல
திறத்த வும்முடை யோர்திக ழும்பதி
கறைப்பி றைச்சடை கண்ணுதல் சேர்தரு
சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே
புற்றி லாடர வோடு புனல்மதி
தெற்று செஞ்சடை தேவர் பிரான்பதி
சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
பற்றி பாடுவார குப்பாவ மில்லையே
அங்க மாறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்
செங்கண் மாலிட மார்திரு வாஞ்சி
தங்கு வார்நம் மமரர கமரரே
நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை
ஆறு சூடும் அடிகள் உறைபதி
மாறு தானொருங் கும்வயல் வாஞ்சி
தேறி வாழ்பவர குச்செல்வ மாகுமே
அற்று பற்றின்றி யாரையு மில்லவர
குற்ற நற்றுணை யாவான் உறைபதி
தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியங்
கற்று சேர்பவர குக்கரு தாவதே
அருக்கன் அங்கி நமனொடு தேவர்கள்
திருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர்
ஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம்
அருத்தி யாலடை வார்க்கில்லை யல்லலே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள் சிதைந்து போயின
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சுகவாஞ்சிநாதர் தேவியார் வாழவந்தஅம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநள்ளாறு திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
உள்ளா றாததோர் புண்டரி கத்திரள்
தெள்ளா றாச்சிவ சோதி திரளினை
கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை
நள்ளா றாவென நம்வினை நாசமே
ஆர ணப்பொரு ளாமரு ளாளனார்
வார ணத்துரி போர்த்த மணாளனார்
நார ணன்நண்ணி யேத்துநள் ளாறனார்
கார ணக்கலை ஞான கடவுளே
மேகம் பூண்டதோர் மேருவிற் கொண்டெயில்
சோகம் பூண்டழல் சோரத்தொ டானவன்
பாகம் பூண்டமால் பங்க தானொடு
நாகம் பூண்டுகூ தாடுநள் ளாறனே
மலியுஞ் செஞ்சடை வாளர வம்மொடு
பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார்
நலியுங் கூற்றை நலிந்தநள் ளாறர்தம்
வலியுங் கண்டிறு மாந்து மகிழ்வனே
உறவ னாய்நிறை துள்ளங் குளிர்ப்பவன்
இறைவ னாகிநின் றெண்ணிறை தானவன்
நறவ நாறும் பொழிற்றிரு நள்ளாறன்
மறவ னாய்ப்பன்றி பின்சென்ற மாயமே
செக்க ரங்கழி செஞ்சுடர சோதியார்
நக்க ரங்கர வார்த்தநள் ளாறனார்
வக்க ரன்னுயிர் வவ்விய மாயற்கு
சக்க ரமருள் செய்த சதுரரே
வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர்
விஞ்சை யிற்செல்வ பாவைக்கு வேந்தனார்
வஞ்ச நெஞ்ச தவர்க்கு வழிகொடார்
நஞ்ச நெஞ்சர கருளுநள் ளாறரே
அல்ல னென்று மலர்க்கரு ளாயின
சொல்ல னென்றுசொல் லாமறை சோதியான்
வல்ல னென்றும்வல் லார்வள மிக்கவர்
நல்ல னென்றுநல் லார்க்குநள் ளாறனே
பாம்ப ணைப்பள்ளி கொண்ட பரமனும்
பூம்ப ணைப்பொலி கின்ற புராணனு
தாம்ப ணிந்தள பொண்ணா தனித்தழல்
நாம்ப ணிந்தடி போற்றுநள் ளாறனே
இலங்கை மன்னன் இருபது தோளிற
மலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர்
நலங்கொள் நீற்றர்நள் ளாறரை நாடொறும்
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் திருநள்ளாற்றீசர் தேவியார் போகமார்த்தபூண்முலையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கருவிலி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
மட்டி டகுழ லார்சுழ லில்வலை
பட்டி டுமயங் கிப்பரி யாதுநீர்
கட்டி டவினை போ கருவிலி
கொட்டி டையுறை வான்கழல் கூடுமே
ஞால மல்கு மனிதர்காள் நாடொறும்
ஏல மாமல ரோடிலை கொண்டுநீர்
கால னார்வரு தன்முன் கருவிலி
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே
பங்க மாயின பேச பறைந்துநீர்
மங்கு மாநினை யாதே மலர்கொடு
கங்கை சேர்சடை யான்றன் கருவிலி
கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே
வாடி நீர்வரு தாதே மனிதர்காள்
வேட னாய்விச யற்கருள் செய்தவெண்
காட னாருறை கின்ற கருவிலி
கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே
உய்யு மாறிது கேண்மின் உலகத்தீர்
பைகொள் பாம்பரை யான்படை யார்மழு
கையி னானுறை கின்ற கருவிலி
கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே
ஆற்ற வும்மவ லத்தழு தாதுநீர்
தோற்று தீயொடு நீர்நில தூவெளி
காற்று மாகிநின் றான்றன் கருவிலி
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே
நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணி
பொல்லா வாறு செயப்புரி யாதுநீர்
கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலி
கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே
பிணித்த நோய்ப்பிற விப்பிறி வெய்துமா
றுணர்த்த லாமிது கேண்மின் உருத்திர
கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலி
குணத்தி னானுறை கொட்டிட்டை சேர்மினே
நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும்
எம்பி ரானென் றிமையவ ரேத்துமே
கம்ப னாருறை கின்ற கருவிலி
கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே
பாரு ளீரிது கேண்மின் பருவரை
பேரு மாறெடு தானை யடர்த்தவன்
கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலி
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சற்குணநாதர் தேவியார் சர்வாங்கநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கொண்டீச்சரம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால்
மண்டி யேச்சுணு மாதரை சேராதே
சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவ
கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே
சுற்ற முந்துணை நன்மட வாளொடு
பெற்ற மக்களும் பேண லொழிந்தனர்
குற்ற மில்புகழ கொண்டீ சுரவனார்
பற்ற லாலொரு பற்றுமற் றில்லையே
மாடு தானது வில்லெனின் மானிடர்
பாடு தான்செல்வா ரில்லைபன் மாலையாற்
கூட நீர்சென்று கொண்டீ சுரவனை
பாடு மின்பர லோக திருத்துமே
தந்தை தாயொடு தார மெனுந்தளை
பந்த மாங்கறு துப்பயில் வெய்திய
கொந்த விழ்பொழிற் கொண்டீ சுரவனை
சிந்தை செய்ம்மின் அவனடி சேரவே
கேளு மின்னிள மையது கேடுவ
தீளை யோடிரு மல்லது வெய்தன்முன்
கோள ராவணி கொண்டீ சுரவனை
நாளு மேத்தி தொழுமின்நன் காகுமே
வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்ப முந்துய ரும்மெனுஞ் சூழ்வினை
கொம்ப னார்பயில் கொண்டீ சுரவனை
எம்பி ரானென வல்லவர கில்லையே
அல்ல லோடரு நோயில் அழுந்திநீர்
செல்லு மாநினை யாதே கனைகுரற்
கொல்லை யேறுடை கொண்டீ சுரவனை
வல்ல வாறு தொழவினை மாயுமே
நாறு சாந்தணி நன்முலை மென்மொழி
மாறி லாமலை மங்கையோர் பாகமா
கூற னாருறை கொண்டீ சுரநினை
தூறு வார்த கூனமொன் றில்லையே
அயிலார் அம்பெரி மேருவில் லாகவே
எயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன்
குயிலா ரும்பொழிற் கொண்டீ சுரவனை
பயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே
நிலையி னார்வரை நின்றெடு தான்றனை
மலையி னாலடர துவிறல் வாட்டினான்
குலையி னார்பொழிற் கொண்டீ சுரவனை
தலையி னால்வணங் கத்தவ மாகுமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பசுபதீச்சுவரர் தேவியார் சாந்தநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவிசயமங்கை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ்
வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையு தானுமொன் றாயினான்
விசைய மங்கையுள் வேதியன் காண்மினே
ஆதி நாதன் அடல்விடை மேலமர்
பூத நாதன் புலியத ளாடையன்
வேத நாதன் விசயமங் கையுளான்
பாத மோதவல் லார்க்கில்லை பாவமே
கொள்ளி டக்கரை கோவந்த புத்தூரில்
வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை
உள்ளி டத்துறை கின்ற உருத்திரன்
கிள்ளி டத்தலை யற்ற தயனுக்கே
திசையு மெங்குங் குலுங்க திரிபுரம்
அசைய வங்கெய்தி டாரழ லூட்டினான்
விசைய மங்கை விருத்தன் புறத்தடி
விசையின் மங்கி விழுந்தனன் காலனே
பொள்ள லாக்கை அகத்திலைம் பூதங்கள்
கள்ள மாக்கி கலக்கிய காரிருள்
விள்ள லாக்கி விசயமங் கைப்பிரான்
உள்ள நோக்கியெ னுள்ளுள் உறையுமே
கொல்லை யேற்று கொடியொடு பொன்மலை
வில்லை யேற்றுடை யான்விச யமங்கை
செல்வ போற்றியென் பாருக்கு தென்றிசை
எல்லை யேற்றலும் இன்சொலு மாகுமே
கண்பல் கபாலம்அங் கைக்கொண்டு
உண்ப லிக்குழல் உத்தம னுள்ளொளி
வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை
நண்ப னைத்தொழ பெற்றது நன்மையே
பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து
வேண்டு நல்வரங் கொள்விச யமங்கை
ஆண்ட வன்னடி யேநினை தாசையாற்
காண்ட லேகரு தாகி யிருப்பனே
வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்
வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான்
சிந்தை யால்நினை வார்களை சிக்கென
பந்து வாக்கி உயக்கொளுங் காண்மினே
இலங்கை வேந்தன் இருபது தோளிற
விலங்கள் சேர்விர லான்விச யமங்கை
வலஞ்செய் வார்களும் வாழ்த்திசை பார்களும்
நலஞ்செய் வாரவர் நன்னெறி நாடியே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் விசையநாதேசுவரர் தேவியார் மங்கைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநீலக்குடி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்
செத்த போது செறியார் பிரிவதே
நித்த நீல குடியர னைந்நினை
சித்த மாகிற் சிவகதி சேர்திரே
செய்ய மேனியன் றேனொடு பால்தயிர்
நெய்ய தாடிய நீல குடியரன்
மைய லாய்மற வாமன தார்க்கெலாங்
கையி லாமல கக்கனி யொக்குமே
ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு
கூற்றன் மேனியிற் கோலம தாகிய
நீற்றன் நீல குடியுடை யானடி
போற்றி னாரிடர் போக்கும் புனிதனே
நாலு வேதியர கின்னருள் நன்னிழல்
ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர்
நீலன் நீல குடியுறை நின்மலன்
கால னாருயிர் போக்கிய காலனே
நேச நீல குடியர னேயெனா
நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால்
ஈச னோர்சர மெய்ய எரிந்துபோய்
நாச மானார் திரிபுர நாதரே
கொன்றை சூடியை குன்ற மகளொடு
நின்ற நீல குடியர னேயெனீர்
என்றும் வாழ்வுக தேயிறு மாக்குநீர்
பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே
கல்லி னோடெனை பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீல குடியரன்
நல்ல நாமம் நவிற்றியு தேனன்றே
அழகி யோமிளை யோமெனு மாசையால்
ஒழுகி ஆவி உடல்விடு முன்னமே
நிழல தார்பொழில் நீல குடியரன்
கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே
கற்றை செஞ்சடை காய்கதிர் வெண்டிங்கள்
பற்றி பாம்புடன் வைத்த பராபரன்
நெற்றி கண்ணுடை நீல குடியரன்
சுற்றி தேவர் தொழுங்கழற் சோதியே
தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள்
அரக்க னாருட லாங்கோர் விரலினால்
நெரித்து நீல குடியரன் பின்னையும்
இரக்க மாயருள் செய்தனன் என்பரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் நீலகண்டேசுவரர் தேவியார் நீலநிறவுமையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமங்கலக்குடி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி
அங்க லக்கழி தாரருள் செய்தவன்
கொங்க லர்க்குழற் கொம்பனை யாளொடு
மங்க லக்குடி மேய மணாளனே
காவி ரியின்வ டகரை காண்டகு
மாவி ரியும்பொ ழில்மங் கலக்குடி
தேவ ரியும்பி ரமனு தேடொணா
தூவெ ரிச்சுடர சோதியு சோதியே
மங்க லக்குடி ஈசனை மாகாளி
வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணுநேர்
சங்கு சக்கர தாரி சதுர்முகன்
அங்க கத்திய னும்மர்ச்சி தாரன்றே
மஞ்சன் வார்கடல் சூழ்மங்க லக்குடி
நஞ்ச மாரமு தாக நயந்துகொண்
டஞ்சு மாட லமர்ந்தடி யேனுடை
நெஞ்ச மாலய மாக்கொண்டு நின்றதே
செல்வ மல்கு திருமங் கலக்குடி
செல்வ மல்கு சிவநிய மத்தரா
செல்வ மல்கு செழுமறை யோர்தொழ
செல்வன் றேவியொ டுந்திகழ் கோயிலே
மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய
பின்னு வார்சடை பிஞ்ஞகன் றன்பெயர்
உன்னு வாரு முரைக்கவல் லார்களு
துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே
மாத ரார்மரு வும்மங்க லக்குடி
ஆதி நாயகன் அண்டர்கள்
வேத நாயகன் வேதியர்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே
வண்டு சேர்பொழில் சூழ்மங்க லக்குடி
விண்ட தாதையை தாளற வீசிய
சண்ட நாயக னுக்கருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே
கூசு வாரலர் குண்டர் குணமிலர்
நேச மேது மிலாதவர் நீசர்கள்
மாசர் பால்மங்க லக்குடி மேவிய
ஈசன் வேறு படுக்கவு தேனன்றே
மங்க லக்குடி யான்கயி லைமலை
அங்க லைத்தெடு குற்ற அரக்கர்கோன்
தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர
தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பிராணேசவரதர் தேவியார் மங்களநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஎறும்பியூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பி னூறல்கண் டாய்கல தார்க்கவன்
இரும்பி னூறல றாததோர் வெண்டலை
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே
பிறங்கு செஞ்சடை பிஞ்ஞகன் பேணுசீர
கறங்கு பூத கணமுடை கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே
மருந்து வானவர் தானவர கின்சுவை
புரிந்த புன்சடை புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே
நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை
மறங்கொள் வேற்கண்ணி வாணுதல் பாகமா
அறம்பு ரிந்தருள் செய்தவெம் அங்கணன்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே
நறும்பொன் நாண்மலர கொன்றையு நாகமு
துறும்பு செஞ்சடை தூமதி வைத்துவான்
உறும்பொன் மால்வரை பேதையோ டூர்தொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே
கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டக திட்டெனை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே
மறந்து மற்றிது பேரிடர் நாடொறு
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே
புறஞ்செய் கோல குரம்பையி லிட்டெனை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே
இன்ப மும்பிற பும்மிற பின்னொடு
துன்ப மும்முட னேவைத்த சோதியான்
அன்ப னேயர னேயென் றரற்றுவார
கின்ப னாகும் எறும்பியூ ரீசனே
கண்ணி றைந்த கனபவ ளத்திரள்
விண்ணி றைந்த விரிசுடர சோதியான்
உண்ணி றைந்துரு வாயுயி ராயவன்
எண்ணி றைந்த எறும்பியூ ரீசனே
நிறங்கொள் மால்வரை ஊன்றி யெடுத்தலும்
நறுங்கு ழல்மட வாள்நடு கெய்திட
மறங்கொள் வாளர கன்வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை எம்மிறை காண்மினே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் எறும்பீசுவரர்
தேவியார் நறுங்குழல்நாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்குரக்குக்கா திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
மரக்கொ காமென வாய்வி டலறிநீர்
சரக்கு காவி திரிந்தய ராதுகால்
பரக்குங் காவிரி நீரலை குங்கரை
குரக்கு காவடை யக்கெடுங் குற்றமே
கட்டா றேகழி காவிரி பாய்வயல்
கொட்டா றேபுன லூறு குரக்குக்கா
முட்டா றாவடி யேத்த முயல்பவர
கிட்டா றாவிட ரோட எடுக்குமே
கைய னைத்துங் கலந்தெழு காவிரி
செய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல்
கொய்ய னைத்துங் கொணருங் குரக்குக்கா
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே
மிக்க னைத்து திசையும் அருவிகள்
புக்கு காவிரி போந்த புனற்கரை
கொக்கி னம்பயில் சோலை குரக்குக்கா
நக்க னைநவில் வார்வினை நாசமே
விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி
இட்ட நீர்வய லெங்கும் பரந்திட
கொட்ட மாமுழ வோங்கு குரக்குக்கா
இட்ட மாயிரு பார்க்கிட ரில்லையே
மேலை வானவ ரோடு விரிகடல்
மாலும் நான்முக னாலுமள பொணா
கோல மாளிகை கோயில் குரக்குக்கா
பால ராய்த்திரி வார்க்கில்லை பாவமே
ஆல நீழ லமர்ந்த அழகனார்
கால னையுதை கொண்ட கருத்தனார்
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்கா
பால ருக்கருள் செய்வர் பரிவொடே
செக்க ரங்கெழு செஞ்சுடர சோதியார்
அக்க ரையரெம் மாதிபு ராணனார்
கொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா
நக்க னைத்தொழ நம்வினை நாசமே
உருகி ஊன்குழை தேத்தி யெழுமின்நீர்
கரிய கண்டன் கழலடி தன்னையே
குரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்கா
இரவும் எல்லியும் ஏத்தி தொழுமினே
இரக்க மின்றி மலையெடு தான்முடி
உரத்தை யொல்க அடர்த்தா னுறைவிடங்
குரக்கி னங்குதி கொள்ளுங் குரக்குக்கா
வரத்த னைப்பெற வானுல காள்வரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கொந்தளக்கருணைநாதர் தேவியார் கொந்தளநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கானூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை
உருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாங்
கருவ னாகி முளைத்தவன் கானூரிற்
பரம னாய பரஞ்சுடர் காண்மினே
பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதி
உண்டின் றேயென் றுகவன்மின் ஏழைகாள்
கண்டு கொண்மின்நீர் கானூர் முளையினை
புண்ட ரீக பொதும்பி லொதுங்கியே
தா தார்தமர் நன்னிதி யென்னுமிம்
மா தேகிட திட்டு மயங்கிடேல்
கா தேயுளன் கானூர் முளையினை
வா தால்வணங் கீர்வினை மாயவே
குறியில் நின்றுண்டு கூறையி லாச்சமண்
நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன்
அறிய லுற்றிரேல் கானூர் முளையவன்
செறிவு செய்தி டிருப்பதென் சிந்தையே
பொத்தல் மண்சுவர பொல்லா குரம்பையை
மெய்த்த னென்று வியந்திடேல் ஏழைகாள்
சித்தர் பத்தர்கள் சேர்திரு கானூரில்
அத்தன் பாத மடைதல் கருமமே
கல்வி ஞான கலைப்பொரு ளாயவன்
செல்வ மல்கு திருக்கானூ ரீசனை
எல்லி யும்பக லும்மிசை வானவர்
சொல்லி டீர்நு துயரங்கள் தீரவே
நீரும் பாரும் நெருப்பும் அருக்கனுங்
காரு மாருதங் கானூர் முளைத்தவன்
சேர்வு மொன்றறி யாது திசைதிசை
ஓர்வு மொன்றில ரோடி திரிவரே
தோடயன் மாலறி யாவணம்
வீ பேரொளி யாய விழுப்பொருள்
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்
சே தாலிரு பாவதென் சிந்தையே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
வன்னி கொன்றை எருக்கணி தான்மலை
உன்னி யேசென் றெடுத்தவன் ஒண்டிறல்
தன்னை வீழ தனிவிரல் வைத்தவன்
கன்னி மாமதிற் கானூர கருத்தனே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் செம்மேனிநாயகர் தேவியார் சிவயோகநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சேறை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடுங்
கூரி தாய அறிவுகை கூடிடுஞ்
சீரி யார்பயில் சேறையு செந்நெறி
நாரி பாகன்றன் நாமம் நவிலவே
என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேதவி ழுப்பொருள்
செந்நெ லார்வயல் சேறையு செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே
பிறப்பு மூப்பு பெரும்பசி வான்பிணி
இறப்பு நீங்கியிங் கின்பம்வ தெய்திடுஞ்
சிறப்பர் சேறையு செந்நெறி யான்கழல்
மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
சேடர் வாழ்சேறை செந்நெறி மேவிய
ஆட லான்றன் அடியடை துய்ம்மினே
எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
துண்ணென் றோன்றிற் றுரக்கும் வழிகண்டேன்
திண்ணன் சேறை திருச்செ நெறியுறை
அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே
தப்பில் வான தரணிகம் பிக்கிலென்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
செப்ப மாஞ்சேறை செந்நெறி மேவிய
அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே
வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்
ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்
சித்தர் சேறை திருச்செ நெறியுறை
அத்தர் தாமுளர் அஞ்சுவ தென்னுக்கே
குலங்க ளென்செய்வ குற்றங்க
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
அலங்க னாருளர் அஞ்சுவ தென்னுக்கே
பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்
விழவி டாவிடில் வேண்டிய எய்தொணா
திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
அழக னாருளர் அஞ்சுவ தென்னுக்கே
பொருந்து நீண்மலை யைப்பிடி தேந்தினான்
வருந்த வூன்றி மலரடி வாங்கினான்
திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்
கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் செந்நெறியப்பர் தேவியார் ஞானவல்லியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கோடிகா திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
சங்கு லாமுன்கை தையலோர் பாகத்தன்
வெங்கு லாமத வேழம் வெகுண்டவன்
கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவென
எங்கி லாததோர் இன்பம்வ தெய்துமே
வாடி வாழ்வதென் னாவது மாதர்பால்
ஓடி வாழ்வினை உள்கிநீர் நாடொறுங்
கோடி காவனை கூறீரேற் கூறினேன்
பாடி காவலிற் பட்டு கழிதிரே
முல்லை நன்முறு வல்லுமை பங்கனார்
தில்லை யம்பல தில்லுறை செல்வனார்
கொல்லை யேற்றினர் கோடிகா வாவென்றங்
கொல்லை யேத்துவார கூனமொன் றில்லையே
நாவ ளம்பெறு மாறும னன்னுதல்
ஆம ளஞ்சொலி அன்புசெ யின்னலாற்
கோம ளஞ்சடை கோடிகா வாவென
ஏவ ளின்றெனை ஏசுமவ் வேழையே
வீறு தான்பெறு வார்சில ராகிலும்
நாறு பூங்கொன்றை தான்மிக நல்கானேற்
கூறு வேன்கோடி காவுளாய் என்றுமால்
ஏறு வேனும்மால் ஏச படுவனோ
நாடி நாரணன் நான்முகன் வானவர்
தேடி யேசற வுந்தெரி யாததோர்
கோடி காவனை கூறாத நாளெலாம்
பாடி காவலிற் பட்டு கழியுமே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள் சிதைந்து போயின
வரங்க ளால்வரை யையெடு தான்றனை
அரங்க வூன்றி யருள்செய்த அப்பனூர்
குரங்கு சேர்பொழிற் கோடிகா வாவென
இரங்கு வேன்மன தேதங்கள் தீரவே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கோடீசுவரர் தேவியார் வடிவாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புள்ளிருக்குவேளூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடை
புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல்
உள்ளி ருக்கு முணர்ச்சியில் லாதவர்
நள்ளி ருப்பர் நர குழியிலே
மாற்ற மொன்றறி யீர்மனை வாழ்க்கைபோ
கூற்றம் வந்துமை கொள்வதன் முன்னமே
போற்ற வல்லிரேற் புள்ளிரு குவேளூர்
சீற்ற மாயின தேய்ந்தறுங் காண்மினே
அரும றையனை ஆணொடு பெண்ணனை
கருவி டம்மிக வுண்டவெங் கண்டனை
புரிவெண் ணூலனை புள்ளிரு குவேளூர்
உருகி நைபவர் உள்ளங் குளிருமே
தன்னு ருவை யொருவர கறிவொணா
மின்னு ருவனை மேனிவெண் ணீற்றனை
பொன்னு ருவனை புள்ளிரு குவேளூர்
என்ன வல்லவர கில்லை யிடர்களே
செங்கண் மால்பிர மற்கு மறிவொணா
அங்கி யின்னுரு வாகி அழல்வதோர்
பொங்க ரவனை புள்ளிரு குவேளூர்
மங்கை பாகனை வாழ்த்த வருமின்பே
குற்ற மில்லியை கோல சிலையினாற்
செற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியை
புற்ற ரவனை புள்ளிரு குவேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே
கையி னோடுகால் கட்டி யுமரெலாம்
ஐயன் வீடினன் என்பதன் முன்னம்நீர்
பொய்யி லாவரன் புள்ளிரு குவேளூர்
மையு லாவிய கண்டனை வாழ்த்துமே
உள்ளம் உள்கி உகந்து சிவனென்று
மெள்ள வுள்க வினைகெடும் மெய்ம்மையே
புள்ளி னார்பணி புள்ளிரு குவேளூர்
வள்ளல் பாதம் வணங்கி தொழுமினே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
அரக்க னார்தலை பத்தும் அழிதர
நெருக்கி மாமலர பாதம் நிறுவிய
பொருப்ப னாருறை புள்ளிரு குவேளூர்
விருப்பி னாற்றொழு வார்வினை வீடுமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வைத்தியநாதர் தேவியார் தையல்நாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஅன்பில்ஆலந்துறை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை
நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை
ஆனஞ் சாடியை அன்பிலா லந்துறை
கோனெஞ் செல்வனை கூறிட கிற்றியே
கார ணத்தர் கருத்தர் கபாலியார்
வார ணத்துரி போர்த்த மணாளனார்
ஆர ணப்பொருள் அன்பிலா லந்துறை
நார ணற்கரி யானொரு நம்பியே
அன்பினா னஞ்ச மைந்துட னாடிய
என்பின் ஆனை யுரித்து களைந்தவன்
அன்பி லானையம் மானையள் ளூறிய
அன்பி னால்நினை தாரறி தார்களே
சங்கை யுள்ளதுஞ் சாவது மெய்யுமை
பங்க னாரடி பாவியே னானுய
அங்க ணனெந்தை அன்பிலா லந்துறை
செங்க ணாரடி சேரவும் வல்லனே
கொக்கி றகர் குளிர்மதி சென்னியர்
மிக்க ரக்கர் புரமெரி செய்தவர்
அக்க ரையினர் அன்பிலா லந்துறை
நக்கு ருவரும் நம்மை யறிவரே
வெள்ள முள்ள விரிசடை நந்தியை
கள்ள முள்ள மனத்தவர் காண்கிலார்
அள்ள லார்வயல் அன்பிலா லந்துறை
உள்ள வாறறி யார்சிலர் ஊமரே
பிறவி மா பிணக்கில் அழுந்தினும்
உறவெ லாஞ்சிந்தி துன்னி உகவாதே
அறவன் எம்பிரான் அன்பிலா லந்துறை
மறவா தேதொழு தேத்தி வணங்குமே
நுணங்கு நூலயன் மாலும் இருவரும்
பிணங்கி யெங்கு திரிந்தெய்த்துங் காண்கிலா
அணங்கன் எம்பிரான் அன்பிலா லந்துறை
வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே
பொய்யெ லாமுரை குஞ்சமண் சாக்கி
கையன் மாருரை கேளா தெழுமினோ
ஐயன் எம்பிரான் அன்பிலா லந்துறை
மெய்யன் சேவடி யேத்துவார் மெய்யரே
இலங்கை வேந்தன் இருபது தோளிற்று
மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன்
அலங்கல் எம்பிரான் அன்பிலா லந்துறை
வலங்கொள் வாரைவா னோர்வலங் கொள்வரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சத்திவாகீசர் தேவியார் சவுந்தரநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பாண்டிக்கொடுமுடி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்ட னைத்திரு பாண்டி கொடுமுடி
நட்ட னைத்தொழ நம்வினை நாசமே
பிரமன் மாலறி யாத பெருமையன்
தரும மாகிய தத்துவன் எம்பிரான்
பரம னாருறை பாண்டி கொடுமுடி
கரும மாக தொழுமட நெஞ்சமே
ஊச லாளல்லள் ஒண்கழ
தேச மாந்திரு பாண்டி கொடுமுடி
ஈச னேயெனும் இத்தனை யல்லது
பேசு மாறறி யாளொரு பேதையே
தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான்
காண்ட லுமெளி யன்னடி யார்கட்கு
பாண்டி கொடுமுடி மேய பரமனை
காண்டு மென்பவர கேதுங் கருத்தொணான்
நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்
இருக்கொ டும்பணி தேத்த இருந்தவன்
திருக்கொ டுமுடி யென்றலு தீவினை
கருக்கெ டுமிது கைகண்ட யோகமே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள் சிதைந்து போயின
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கொடுமுடிநாதேசுவரர் தேவியார் பண்மொழிநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவான்மியூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்
அண்ட நாயகன் றன்னடி சூழ்மின்கள்
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்
வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே
பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறு
தருளு மாவல்ல ஆதியா யென்றலும்
மருள றுத்திடும் வான்மியூ ரீசனே
மந்த மாகிய சிந்தை மயக்கறு
தந்த மில்குண தானை யடைந்துநின்
றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல்
வந்து நின்றிடும் வான்மியூ ரீசனே
உள்ள முள்கல தேத்தவல் லார்க்கலாற்
கள்ள முள்ள வழிக்கசி வானலன்
வெள்ள முமர வும்விர வுஞ்சடை
வள்ள லாகிய வான்மியூ ரீசனே
படங்கொள் பாம்பரை பான்மதி சூடியை
வடங்கொள் மென்முலை மாதொரு கூறனை
தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை
மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே
நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென்
றஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல்
வஞ்ச தீர்த்திடும் வான்மியூ ரீசனே
நுணங்கு நூலயன் மாலு மறிகிலா
குணங்கள் தாம்பர விக்குறை துக்கவர்
சுணங்கு பூண்முலை தூமொழி யாரவர்
வணங்க நின்றிடும் வான்மியூ ரீசனே
ஆதி யும்மர னாயயன் மாலுமா
பாதி பெண்ணுரு வாய பரமனென்
றோதி யுள்குழை தேத்தவல் லாரவர்
வாதை தீர்த்திடும் வான்மியூ ரீசனே
ஓட்டை மாடத்தி லொன்பது வாசலுங்
காட்டில் வேவதன் முன்னங் கழலடி
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில்
வாட்ட தீர்த்திடும் வான்மியூ ரீசனே
பார மாக மலையெடு தான்றனை
சீர மாக திருவிர லூன்றினான்
ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும்
வார மாயினன் வான்மியூ ரீசனே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மருந்தீசுவரர் தேவியார் சொக்கநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநாகைக்காரோணம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாண தான்மதில் மூன்று மெரித்தவன்
பூண தானர வாமை பொறுத்தவன்
காண தானினி யான்கடல் நாகைக்கா
ரோண தானென நம்வினை ஓயுமே
வண்ட லம்பிய வார்சடை ஈசனை
விண்ட லம்பணி தேத்தும் விகிர்தனை
கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனை
கண்ட லும்வினை யான கழலுமே
புனையு மாமலர் கொண்டு புரிசடை
நனையு மாமலர் சூடிய நம்பனை
கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை
நினைய வேவினை யாயின நீங்குமே
கொல்லை மால்விடை யேறிய கோவினை
எல்லி மாநட மாடும் இறைவனை
கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனை
சொல்ல வேவினை யானவை சோருமே
மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழு
கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை
மைய னுக்கிய கண்டனை வானவர்
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே
அலங்கல் சேர்சடை ஆதி புராணனை
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை
கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே
சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை
இனங்கொள் வானவ ரேத்திய ஈசனை
கனங்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை
மனங்கொள் வார்வினை யாயின மாயுமே
அந்த மில்புகழ் ஆயிழை யார்பணி
தெந்தை யீசனென் றேத்தும் இறைவனை
கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனை
சிந்தை செ கெடுந்துயர் திண்ணமே
கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை
இருவ ருக்கறி வொண்ணா இறைவனை
ஒருவ னையுண ரார்புர மூன்றெய்த
செருவ னைத்தொழ தீவினை தீருமே
கடல்க ழிதழி நாகைக்கா ரோணன்றன்
வடவ ரையெடு தார்த்த அரக்கனை
அடர வூன்றிய பாதம் அணைதர
தொடர அஞ்சு துயக்கறுங் காலனே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் காயாரோகணேசுவரர் தேவியார் நீலயதாட்சியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்காட்டுப்பள்ளி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
மாட்டு பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாங்
கேட்டு பள்ளிகண் டீர்கெடு வீரிது
ஓட்டு பள்ளிவி டோ லுறாமுனங்
காட்டு பள்ளியு ளான்கழல் சேர்மினே
மாட்டை தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டு பொய்யெலாம் பேசிடு நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டு பள்ளியு ளான்கழல் சேர்மினே
தேனை வென்றசொல் லாளொடு செல்வமும்
ஊனை விட்டுயிர் போவதன் முன்னமே
கான வேடர் கருதுங்கா டுப்பள்ளி
ஞான நாயக னைச்சென்று நண்ணுமே
அருத்த முமனை யாளொடு மக்களும்
பொருத்த மில்லை பொல்லாதது போக்கிடுங்
கருத்தன் கண்ணுதல் அண்ணல்கா டுப்பள்ளி
திருத்தன் சேவடி யைச்சென்று சேர்மினே
சுற்ற முந்துணை யும்மனை வாழ்க்கையும்
அற்ற போதணை யாரவ ரென்றென்றே
கற்ற வர்கள் கருதுங்கா டுப்பள்ளி
பெற்ற மேறும் பிரானடி சேர்மினே
அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமு
துடும்பல் செய்சடை தூமணி சோதியான்
கடம்பன் தாதை கருதுங்கா டுப்பள்ளி
உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே
மெய்யின் மாசுடை யாருடல் மூடுவார்
பொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின்
கையின் மானுடை யான்காட்டு பள்ளியெம்
ஐயன் றன்னடி யேயடை துய்மினே
வேலை வென்றகண் ணாரை விரும்பிநீர்
சீலங் கெட்டு திகையன்மின் பேதைகாள்
காலை யேதொழுங் காட்டுப்பள் ளியுறை
நீல கண்டனை நித்தல் நினைமினே
இன்று ளார்நாளை இல்லை யெனும்பொருள்
ஒன்று மோரா துழிதரும் ஊமர்காள்
அன்று வானவர காக விடமுண்ட
கண்ட னார்காட்டு பள்ளிகண் டுய்ம்மினே
எண்ணி லாவர கன்மலை யேந்திட
எண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன்
கண்ணு ளார்கரு துங்காட்டு பள்ளியை
நண்ணு வாரவர் தம்வினை நாசமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஆரணியசுந்தரர் தேவியார் அகிலாண்டநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சிராப்பள்ளி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுக தேறும் இறைவனார்
கட்டு நீத்தவர கின்னரு ளேசெயுஞ்
சிட்டர் போலுஞ் சிராப்பள்ளி செல்வரே
அரிய யன்றலை வெட்டிவ டாடினார்
அரிய யன்றொழு தேத்தும் அரும்பொருள்
பெரிய வன்சிரா பள்ளியை பேணுவார்
அரிய யன்றொழ அங்கிரு பார்களே
அரிச்சி ராப்பகல் ஐவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திரிச்சி ராப்பள்ளி யென்றலு தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே
தாயு மாயென கேதலை கண்ணுமா
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாய னாரென நம்வினை நாசமே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள் சிதைந்து போயின
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் தாயுமானேசுவரர் தேவியார் மட்டுவார்குழலம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாட்போக்கி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கால பாசம் பிடித்தெழு தூதுவர்
பால கர்விரு தர்பழை யாரெனார்
ஆல நீழ லமர்ந்தவா போக்கியார்
சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே
விடுத்த தூதுவர் வந்து வினைக்குழி
படுத்த போது பயனிலை பாவிகாள்
அடுத்த கின்னரங் கேட்கும்வா போக்கியை
எடுத்து மேத்தியும் இன்புறு மின்களே
வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர்
உந்தி யோடி நரக திடாமுனம்
அந்தி யின்னொளி தாங்கும்வா போக்கியார்
சிந்தி யாவெழு வார்வினை தீர்ப்பரே
கூற்றம் வந்து குமைத்திடும் போதினாற்
தேற்றம் வந்து தெளிவுற லாகுமே
ஆற்ற வுமருள் செய்யும்வா போக்கிபால்
ஏற்று மின்விள கையிருள் நீங்கவே
மாறு கொண்டு வளைத்தெழு தூதுவர்
வேறு படுப்பதன்
ஆறு செஞ்சடை வைத்தவா போக்கியார
கூறி யூறி உருகுமென் னுள்ளமே
கான மோடி கடிதெழு தூதுவர்
தான மோடு தலைபிடி யாமுனம்
ஆனஞ் சாடி யுகந்தவா போக்கியார்
ஊன மில்லவர குண்மையில் நிற்பரே
பார்த்து பாசம் பிடித்தெழு தூதுவர்
கூர்த்த வேலாற் குமைப்பதன் முன்னமே
ஆர்த்த கங்கை யடக்கும்வா போக்கியார்
கீர்த்தி மைகள் கிளர்ந்துரை மின்களே
நாடி வந்து நமன்தமர் நல்லிருள்
கூடி வந்து குமைப்பதன் முன்னமே
ஆடல் பாடல் உகந்தவா போக்கியை
வாடி யேத்தநம் வாட்ட தவிருமே
கட்ட றுத்து கடிதெழு தூதுவர்
பொட்ட நூக்கி புறப்படா முன்னமே
அட்ட மாமலர் சூடும்வா போக்கியார
கிட்ட மாகி யிணையடி யேத்துமே
இரக்க முன்னறி யாதெழு தூதுவர்
பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே
அரக்க னுக்கருள் செய்தவா போக்கியார்
கரப்ப துங்கர பாரவர் தங்கட்கே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் இரத்தினகிரீசுவரர் தேவியார் சுரும்பார்குழலம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமணஞ்சேரி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பட்ட நெற்றியர் பாய்புலி தோலினர்
நட்ட நின்று நவில்பவர் நாடொறுஞ்
சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரியெம்
வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே
துன்னு வார்குழ லாளுமை யாளொடும்
பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை
உன்னு வார்வினை யாயின ஓயுமே
புற்றி லாடர வாட்டும் புனிதனார்
தெற்றி னார்புர தீயெழ செற்றவர்
சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார்
பற்றி னாரவர் பற்றவர் காண்மினே
மத்த மும்மதி யும்வளர் செஞ்சடை
முத்தர் முக்குணர் மூசர வம்மணி
சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரியெம்
வித்தர் தாம்விரு பாரை விருப்பரே
துள்ளு மான்மறி தூமழு வாளினர்
வெள்ள நீர்கர தார்சடை மேலவர்
அள்ள லார்வயல் சூழ்மணஞ் சேரியெம்
வள்ள லார்கழல் வாழ்த்தவாழ் வாவதே
நீர்ப ரந்த நிமிர்புன் சடையின்மேல்
ஊர்ப ரந்த உரகம் அணிபவர்
சீர்ப ரந்த திருமணஞ் சேரியார்
ஏர்ப ரந்தங் கிலங்குசூ லத்தரே
சுண்ண தர்சுடு நீறுக தாடலார்
விண்ண தம்மதி சூடிய வேதியர்
மண்ண தம்முழ வார்மணஞ் சேரியார்
வண்ண தம்முலை யாளுமை வண்ணரே
துன்ன வாடையர் தூமழு வாளினர்
பின்னு செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரியெம்
மன்ன னார்கழ லேதொழ வாய்க்குமே
சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்
புத்தர் தேரமண் கையர் புகழவே
மத்தர் தாமறி யார்மணஞ் சேரியெம்
அத்த னாரடி யார்க்கல்ல லில்லையே
கடுத்த மேனி அரக்கன் கயிலையை
எடுத்த வனெடு நீண்முடி பத்திற
படுத்த லுமணஞ் சேரி யருளென
கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் அருள்வள்ளல்நாயகர் தேவியார் யாழின்மொழியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமருகல் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பெருக லாந்தவம் பேதைமை தீரலா
திருக லாகிய சிந்தை திருத்தலாம்
பருக லாம்பர மாயதோ ரானந்தம்
மருக லானடி வாழ்த்தி வணங்கவே
பாடங் கொள்பனு வற்றிறங் கற்றுப்போய்
நாடங் குள்ளன தட்டிய நாணிலீர்
மாடஞ் சூழ்மரு கற்பெரு மான்றிரு
வேடங் கைதொழ வீடெளி தாகுமே
சினத்தி னால்வருஞ் செய்தொழி லாமவை
அனைத்தும் நீங்கிநின் றாதர வாய்மிக
மனத்தி னால்மரு கற்பெரு மான்றிறம்
நினைப்பி னார்க்கில்லை நீணில வாழ்க்கையே
ஓது பைங்கிளி கொண்பால் அமுதூட்டி
பாது காத்து பலபல கற்பித்து
மாது தான்மரு கற்பெரு மானுக்கு
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே
இன்ன வாறென்ப துண்டறி யேனின்று
துன்னு கைவளை சோரக்கண் நீர்மல்கும்
மன்னு தென்மரு கற்பெரு மான்றிறம்
உன்னி யொண்கொடி உள்ள முருகுமே
சங்கு சோர கலையுஞ் சரியவே
மங்கை தான்மரு கற்பெரு மான்வரும்
அங்க வீதி அருகணை யாநிற்கும்
நங்கை மீரிதற் கென்செய்கேன் நாளுமே
காட்சி பெற்றில ளாகிலுங் காதலே
மீட்சி யொன்றறி யாது மிகுவதே
மாட்சி யார்மரு கற்பெரு மானுக்கு
தாழ்ச்சி சாலவுண் டாகுமென் தையலே
நீடு நெஞ்சுள் நினைந்துகண் ணீர்மல்கும்
ஓடு மாலினோ டொண்கொடி மாதராள்
மாட நீண்மரு கற்பெரு மான்வரிற்
கூடு நீயென்று கூட லிழைக்குமே
கந்த வார்குழல் கட்டிலள் காரிகை
அந்தி மால்விடை யோடுமன் பாய்மிக
வந்தி டாய்மரு கற்பெரு மானென்று
சிந்தை செய்து திகைத்திடுங் காண்மினே
ஆதி மாமலை அன்றெடு தானிற்று
சோதி யென்றலு தொல்லருள் செய்திடும்
ஆதி யான்மரு கற்பெரு மான்றிறம்
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மாணிக்கவண்ணவீசுவரர் தேவியார் வண்டுவார்குழலம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

தனி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
ஒன்று வெண்பிறை கண்ணியோர் கோவணம்
ஒன்று கீளுமை யோடு முடுத்தது
ஒன்று வெண்டலை யேந்தியெம் முள்ளத்தே
ஒன்றி நின்றங் குறையும் ஒருவனே
இரண்டு மாமவர குள்ளன செய்தொழில்
இரண்டு மாமவர குள்ளன கோலங்கள்
இரண்டு மில்லிள மானெமை யாளுக
திரண்டு போதுமென் சிந்தையுள் வைகுமே
மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில்
மூன்று மாயின மூவிலை சூலத்தன்
மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்
மூன்று போதுமென் சிந்தையுள் மூழ்குமே
நாலின் மேன்முகஞ் செற்றது மன்னிழல்
நாலு நன்குணர திட்டது மின்பமாம்
நாலு வேதஞ் சரித்தது நன்னெறி
நாலு போலெம் அகத்துறை நாதனே
அஞ்சு மஞ்சுமோ ராடி யரைமிசை
அஞ்சு போலரை யார்த்ததின் றத்துவம்
அஞ்சு மஞ்சுமோ ரோரைஞ்சு மாயவன்
அஞ்சு மாமெம் அகத்துறை ஆதியே
ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன்
ஆறு சூடிய அண்ட முதல்வனார்
ஆறு கூர்மையர கச்சம யப்பொருள்
ஆறு போலெம் அகத்துறை ஆதியே
ஏழு மாமலை ஏழ்பொழில் சூழ்கடல்
ஏழு போற்றுமி ராவணன் கைந்நரம்
பேழு கேட்டருள் செய்தவன் பொற்கழல்
ஏழுஞ் சூழடி யேன்மன துள்ளவே
எட்டு மூர்த்தியாய் நின்றிய லுந்தொழில்
எட்டு வான்குண தீசனெம் மான்றனை
எட்டு மூர்த்தியு மெம்மிறை யெம்முளே
எட்டு மூர்த்தியு மெம்மு ளொடுங்குமே
ஒன்ப தொன்பதி யானை யொளிகளி
றொன்ப தொன்பது பல்கணஞ் சூழவே
ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை
ஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமே
பத்து நூறவன் வெங்கண்வெள் ளேற்றண்ணல்
பத்து நூறவன் பல்சடை தோண்மிசை
பத்தி யாமில மாதலின் ஞானத்தாற்
பத்தி யானிடங் கொண்டது பள்ளியே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

தனி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே
ஆளா காராளா னாரை அடைந்துய்யார்
மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண் ணாகி கழிவரே
தோளாத சுரையென்பது துவாரமிடாத சுரைக்காய்
நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிட தூர்முனி பண்டமே
பூக்கை கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கை கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கை கேயிரை தேடி அலமந்து
காக்கை கேயிரை யாகி கழிவரே
குறிக ளுமடை யாளமுங் கோயிலும்
நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியி லீர்மன மென்கொல் புகாததே
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்த சென்னியு தந்த தலைவனை
சூழ்த்த மாமலர் தூவி துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே
எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி யேயுழு வான்பொரு
டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே
நெக்கு நினைபவர்
புக்கு நிற்கும்பொன் னார்சடை புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்ப ரவர்தமை நாணியே
விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணி சோதியான்
உறவு கோல்ந டுணர்வு கயிற்றினான்
முறுக வாங்கி கடையமுன் னிற்குமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

தனி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
ஏயி லானையெ னிச்சை யகம்படி
கோயி லானை குணப்பெருங் குன்றினை
வாயி லானை மனோன்மனி யைப்பெற்ற
தாயி லானை தழுவுமென் ஆவியே
முன்னை ஞான முதற்றனி வித்தினை
பின்னை ஞான பிறங்கு சடையனை
என்னை ஞான திருளறு தாண்டவன்
தன்னை ஞான தளையிட்டு வைப்பனே
ஞான தாற்றொழு வார்சில ஞானிகள்
ஞான தாற்றொழு வேனுனை நானலேன்
ஞான தாற்றொழு வார்கள் தொழக்கண்டு
ஞான தாயுனை நானு தொழுவனே
புழுவு குங்குணம் நான்கென கும்மதே
புழுவு கிங்கென குள்ளபொல் லாங்கில்லை
புழுவி னுங்கடையேன்புனி தன்றமர்
குழுவு கெவ்விட தேன்சென்று கூடவே
மலையே வந்து விழினும் மனிதர்காள்
நிலையி னின்று கலங்க பெறுதிரேல்
தலைவ னாகிய ஈசன் றமர்களை
கொலைகை யானைதான் கொன்றிடு கிற்குமே
கற்று கொள்வன வாயுள நாவுள
இட்டு கொள்வன பூவுள நீருள
கற்றை செஞ்சடை யானுளன் நாமுளோம்
எற்று கோநம னால்முனி வுண்பதே
மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன்
கனித தாற்கனி யுண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி
இனிது சாலவும் ஏசற் றவர்கட்கே
என்னை யேதும் அறிந்திலன் எம்பிரான்
தன்னை நானுமு னேது மறிந்திலேன்
என்னை தன்னடி யானென் றறிதலு
தன்னை நானும் பிரானென் றறிந்தெனே
தெள்ள தேறி தெளிந்துதி திப்பதோர்
உள்ள தேறல் அமுத ஒளிவெளி
கள்ள தேன்கடி யேன்கவ லைக்கடல்
வெள்ள தேனுக்கெவ் வாறு விளைந்ததே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

காலபாராயணம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கண்டு கொள்ளரி யானை கனிவித்து
பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கை
கொண்ட தொண்டரை துன்னிலுஞ் சூழலே
நடுக்க துள்ளும் நகையுளும் நம்பற்கு
கடு கல்ல வடமிடு வார்கட்கு
கொடு கொள்க வெனவுரை பார்களை
இடுக்கண் செ பெறீரிங்கு நீங்குமே
கார்கொள் கொன்றை கடிமலர கண்ணியான்
சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார்
ஆர்க ளாகிலு மாக அவர்களை
நீர்கள் சார பெறீரிங்கு நீங்குமே
சாற்றி னேன்சடை நீண்முடி சங்கரன்
சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
ஆற்ற வுங்களி பட்ட மனத்தரா
போற்றி யென்றுரை பார்புடை போகலே
இறையென் சொன்மற வேல்நமன் றூதுவீர்
பிறையும் பாம்பு முடைப்பெரு மான்றமர்
நறவம் நாறிய நன்னறுஞ் சாந்திலும்
நிறைய நீறணி வாரெதிர் செல்லலே
வாம தேவன் வளநகர் வைகலுங்
காம மொன்றில ராய்க்கை விளக்கொடு
தா தூபமு தண்ணறுஞ் சாந்தமும்
ஏம மும்புனை வாரெதிர் செல்லலே
படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன் மின்னம தீசன் அடியரை
விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம்
புடைபு காதுநீர் போற்றியே போமினே
விச்சை யாவதும் வேட்கைமை
நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
அச்ச மெய்தி அருகணை யாதுநீர்
பிச்சை புக்கவன் அன்பரை பேணுமே
இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துட னேத்துவார்
மன்னும் அஞ்செழு தாகிய மந்திர
தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே
மற்றுங் கேண்மின் மனப்பரி பொன்றின்றி
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
ஒற்றை யேறுடை யானடியே யல்லாற்
பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே
அரக்கன் ஈரை தலையுமோர் தாளினால்
நெருக்கி யூன்றியி டான்தமர் நிற்கிலுஞ்
சுருக்கெ னாதங்கு பேர்மின்கண் மற்றுநீர்
சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

மறக்கிற்பனே என்னும் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
காச னைக்கன லைக்கதிர் மாமணி
தேச னைப்புக ழார்சிலர் தெண்ணர்கள்
மாசி னைக்கழி தாட்கொள வல்லவெம்
ஈச னையினி நான்மற கிற்பனே
புந்தி குவிள காய புராணனை
சந்தி கண்ணட மாடுஞ் சதுரனை
அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை
வந்தெ னுள்ளங்கொண் டானை மறப்பனே
ஈசன் ஈசனென் றென்றும் அரற்றுவன்
ஈசன் றானென் மனத்திற் பிரிவிலன்
ஈசன் றன்னையு மென்மன துக்கொண்டு
ஈசன் றன்னையும் யான்மற கிற்பனே
ஈசன் என்னை யறிந்த தறிந்தனன்
ஈசன் சேவடி யேற்ற பெறுதலால்
ஈசன் சேவடி யேத்த பெற்றேனினி
ஈசன் றன்னையும் யான்மற கிற்பனே
தேனை பாலினை திங்களை ஞாயிற்றை
வான வெண்மதி சூடிய மைந்தனை
வேனி லானை மெலிவுசெய் தீயழல்
ஞான மூர்த்தியை நான்மற கிற்பனே
கன்ன லைக்கரும் பூறிய தேறலை
மின்ன னைமின் னனைய வுருவனை
பொன்ன னைமணி குன்று பிறங்கிய
என்ன னையினி யான்மற கிற்பனே
கரும்பி னைக்கட்டி யைக்கந்த மாமலர
சுரும்பி னைச்சுடர சோதியு சோதியை
அரும்பி னிற்பெரும் போதுகொண் டாய்மலர்
விரும்பும் ஈசனை நான்மற கிற்பனே
துஞ்சும் போதுஞ் சுடர்விடு சோதியை
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கு நீதியை
நஞ்சு கண்ட தடக்கிய நம்பனை
வஞ்ச னேனினி யான்மற கிற்பனே
புதிய பூவினை புண்ணிய நாதனை
நிதியை நீதியை நித்தில குன்றினை
கதியை கண்டங் கறுத்த கடவுளை
மதியை மைந்தனை நான்மற கிற்பனே
கருகு கார்முகில் போல்வதோர் கண்டனை
உருவ நோக்கியை ஊழி முதல்வனை
பருகு பாலனை பான்மதி சூடியை
மருவு மைந்தனை நான்மற கிற்பனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

தொழற்பாலனம் என்னும் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
அண்ட தானை அமரர் தொழப்படும்
பண்ட தானை பவித்திர மாந்திரு
முண்ட தானைமுற் றாத இளம்பிறை
துண்ட தானைக்கண் டீர்தொழற் பாலதே
முத்தொ பானை முளைத்தெழு கற்பக
வித்தொ பானை விளக்கிடை நேரொளி
ஒத்தொ பானை ஒளிபவ ளத்திரள்
தொத்தொ பானைக்கண் டீர்தொழற் பாலதே
பண்ணொ தானை பவள திரண்டதோர்
வண்ண தானை வகையுணர் வான்றனை
எண்ண தானை இளம்பிறை போல்வெள்ளை
சுண்ண தானைக்கண் டீர்தொழற் பாலதே
விடலை யானை விரைகமழ் தேன்கொன்றை
படலை யானை பலிதிரி வான்செலும்
நடலை யானை நரிபிரி யாததோர்
சுடலை யானைக்கண் டீர்தொழற் பாலதே
பரிதி யானைப்பல் வேறு சமயங்கள்
கருதி யானைக்கண் டார்மனம் மேவிய
பிரிதி யானை பிறரறி யாததோர்
சுருதி யானைக்கண் டீர்தொழற் பாலதே
ஆதி யானை அமரர் தொழப்படும்
நீதி யானை நியம நெறிகளை
ஓதி யானை உணர்தற் கரியதோர்
சோதி யானைக்கண் டீர்தொழற் பாலதே
ஞால தானைநல் லானைவல் லார்தொழுங்
கோல தானை குணப்பெருங் குன்றினை
மூல தானை முதல்வனை மூவிலை
சூல தானைக்கண் டீர்தொழற் பாலதே
ஆதி பாலட்ட மூர்த்தியை ஆனஞ்சும்
வேதி பானைநம் மேல்வினை வெந்தற
சாதி பானை தவத்திடை மாற்றங்கள்
சோதி பானைக்கண் டீர்தொழற் பாலதே
நீற்றி னானை நிகரில்வெண் கோவண
கீற்றி னானை கிளரொளி செஞ்சடை
ஆற்றி னானை அமரர்தம் ஆருயிர்
தோற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே
விட்டி டானைமெய்ஞ் ஞானத்து மெய்ப்பொருள்
கட்டி டானை கனங்குழை பாலன்பு
பட்டி டானை பகைத்தவர் முப்புரஞ்
சுட்டி டானைக்கண் டீர்தொழற் பாலதே
முற்றி னானை இராவணன் நீண்முடி
ஒற்றி னானை ஒருவிர லாலுற
பற்றி னானையோர் வெண்டலை பாம்பரை
சுற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர்
நக்க ணைந்து நறுமலர் கொய்திலர்
சொக்க ணைந்த சுடரொளி வண்ணனை
மிக்கு காணலுற் றாரங் கிருவரே
அலரு நீருங்கொண் டாட்டி தெளிந்திலர்
திலக மண்டல தீட்டி திரிந்திலர்
உலக மூர்த்தி யொளிநிற வண்ணனை
செலவு காணலுற் றாரங் கிருவரே
ஆப்பி நீரோ டலகுகை கொண்டிலர்
பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர்
காப்பு கொள்ளி கபாலிதன் வேடத்தை
ஓப்பி காணலுற் றாரங் கிருவரே
நெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர்
பொய்யும் பொக்கமும் போக்கி புகழ்ந்திலர்
ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை
மெய்யை காணலுற் றாரங் கிருவரே
எருக்கங் கண்ணிகொண் டிண்டை புனைந்திலர்
பெரு கோவணம் பீறி யுடுத்திலர்
தருக்கி னாற்சென்று தாழ்சடை யண்ணலை
நெருக்கி காணலுற் றாரங் கிருவரே
மரங்க ளேறி மலர்பறி திட்டிலர்
நிரம்ப நீர்சு தாட்டி நினைந்திலர்
உரம்பொ ருந்தி யொளிநிற வண்ணனை
நிரம்ப காணலுற் றாரங் கிருவரே
கட்டு வாங்கங் கபாலங்கை கொண்டிலர்
அட்ட மாங்கங் கிடந்தடி வீழ்ந்திலர்
சிட்டன் சேவடி சென்றெய்தி காணிய
பட்ட கட்டமுற் றாரங் கிருவரே
வெந்த நீறு விளங்க அணிந்திலர்
கந்த மாமலர் இண்டை புனைந்திலர்
எந்தை ஏறுக தேறெரி வண்ணனை
அந்தங் காணலுற் றாரங் கிருவரே
இளவெ ழுந்த இருங்குவ ளைம்மலர்
பிளவு செய்து பிணைத்தடி யிட்டிலர்
களவு செய்தொழிற் காமனை காய்ந்தவன்
அளவு காணலுற் றாரங் கிருவரே
கண்டி பூண்டு கபாலங்கை கொண்டிலர்
விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர்
அண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனை
கெண்டி காணலுற் றாரங் கிருவரே
செங்க ணானும் பிரமனு தம்முளே
எங்கு தேடி திரிந்தவர் காண்கிலார்
இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடை புண்ணிய மூர்த்தியே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

மனத்தொகை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம்
மின்னுள் ளத்திரள் வெண்பிறை யாயிறை
நின்னுள் ளத்தருள் கொண்டிருள் நீங்குதல்
என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே
முக்க ணும்முடை யாய்முனி கள்பலர்
தொக்கெ ணுங்கழ லாயொரு தோலினோ
டக்க ணும்மரை யாயரு ளெய்தலா
தெக்க ணும்மிலன் எந்தை பிரானிரே
பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை
முனியாய் நீயுல கம்முழு தாளினு
தனியாய் நீசரண் நீசல மேபெரி
தினியாய் நீயென கெந்தை பிரானிரே
மறையும் பாடுதிர் மாதவர் மாலினு
குறையு மாயினை கோளர வோடொரு
பிறையுஞ் சூடினை யென்பத லாற்பிறி
திறையுஞ் சொல்லிலை எந்தை பிரானிரே
பூத்தார் கொன்றையி னாய்புலி யின்னதள்
ஆர்த்தா யாடர வோடன லாடிய
கூத்தா நின்குரை யார்கழ லேயல
தேத்தா நாவென கெந்தை பிரானிரே
பைம்மா லும்மர வாபர மாபசு
மைம்மால் கண்ணியோ டேறுமை தாவெனும்
அம்மா லல்லது மற்றடி நாயினேற்
கெம்மா லும்மிலன் எந்தை பிரானிரே
வெப்ப தின்மன மாசு விளக்கிய
செப்ப தாற்சிவ னென்பவர் தீவினை
ஒப்ப தீர்த்திடும் ஒண்கழ லாற்கல்ல
தெப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே
திகழுஞ் சூழ்சுடர் வானொடு வைகலும்
நிகழு மொண்பொரு ளாயின நீதியென்
புகழு மாறு மலானுன பொன்னடி
இகழு மாறிலன் எந்தை பிரானிரே
கைப்பற் றித்திரு மால்பிர மன்னுனை
எப்பற் றியறி தற்கரி யாயருள்
அப்பற் றல்லது மற்றடி நாயினேன்
எப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே
எந்தை யெம்பிரான் என்றவர் மேல்மனம்
எந்தை யெம்பிரான் என்றிறைஞ் சித்தொழு
தெந்தை யெம்பிரான் என்றடி யேத்துவார்
எந்தை யெம்பிரான் என்றடி சேர்வரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

சித்தத்தொகை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
சிந்தி பார்மன தான்சிவன் செஞ்சுடர்
அந்தி வானிற தானணி யார்மதி
முந்தி சூடிய முக்கண்ணி னானடி
வந்தி பாரவர் வானுல காள்வரே
அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர்
கண்டிங் காரறி வாரறி வாரெலாம்
வெண்டிங் கட்கண்ணி வேதியன் என்பரே
ஆதி யாயவ னாரு மிலாதவன்
போது சேர்புனை நீண்முடி புண்ணியன்
பாதி பெண்ணுரு வாகி பரஞ்சுடர
சோதி யுட்சோதி யாய்நின்ற சோதியே
இட்ட திட்டதோ ரேறுக தேறியூர்
பட்டி துட்டங்க னாய்ப்பலி தேர்வதோர்
கட்ட வாழ்க்கைய னாகிலும் வானவர்
அட்ட மூர்த்தி யருளென் றடைவரே
ஈறில் கூறைய னாகி எரிந்தவெண்
ணீறு பூசி நிலாமதி சூடிலும்
வீறி லாதன செய்யினும் விண்ணவர்
ஊற லாயரு ளாயென் றுரைப்பரே
உச்சி வெண்மதி சூடிலும் ஊனறா
பச்சை வெண்டலை யேந்தி பலஇலம்
பிச்சை யேபுகு மாகிலும் வானவர்
அச்ச தீர்த்தரு ளாயென் றடைவரே
ஊரி லாயென்றொன் றாக வுரைப்பதோர்
பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா
காரு லாங்கண்ட னேயுன் கழலடி
சேர்வி லார்கட்கு தீயவை தீயவே
எந்தை யேயெம் பிரானே யெனவுள்கி
சிந்தி பாரவர் தீவினை தீருமால்
வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
அந்த மாவள பாரடை தார்களே
ஏன வெண்மரு போடென்பு பூண்டெழில்
ஆனை யீருரி போர்த்தன லாடிலு
தான வண்ணத்த னாகிலு தன்னையே
வான நாடர் வணங்குவர் வைகலே
ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம்
மெய்யன் மேதகு வெண்பொடி பூசிய
மைகொள் கண்டத்தன் மான்மறி கையினான்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனே
ஒருவ னாகிநின் றானிவ் வுலகெலாம்
இருவ ராகிநின் றார்க கறிகிலான்
அருவ ராவரை ஆர்த்தவ னார்கழல்
பரவு வாரவர் பாவம் பறையுமே
ஓத வண்ணனும் ஒண்மலர செல்வனும்
நாத னேயரு ளாயென்று நாடொறுங்
காதல் செய்து கருத படுமவர்
பாத மேத்த பறையுநம் பாவமே
தன்மை யவரவ ராக்கையான்
வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ
மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு
பௌவ வண்ணனு மாய்ப்பணி வார்களே
அக்கும் ஆமையும் பூண்டன லேந்திஇல்
புக்கு பல்பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ
தொக்க வானவ ராற்றொழு வானையே
கங்கை தங்கிய செஞ்சடை மேலிள
திங்கள் சூடிய தீநிற வண்ணனார்
இங்க ணாரெழில் வானம் வணங்கவே
அங்க ணாற்கது வாலவன் தன்மையே
நகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே
நுகர நீயுனை கொண்டு போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனை காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே
சரண மாம்படி யார்பிற ரியாவரோ
கரண தீர்த்துயிர் கையி லிகழ்ந்தபின்
மரண மெய்திய பின்னவை நீக்குவான்
அரண மூவெயி லெய்தவ னல்லனே
ஞமனென் பான்நர கர்க்கு நமக்கெலாஞ்
சிவனென் பான்செழு மான்மறி கையினான்
கவனஞ் செய்யுங் கனவிடை யூர்தியான்
தமரென் றாலுங் கெடுந்தடு மாற்றமே
இடப மேறியும் இல்பலி யேற்பவர்
அடவி காதலி தாடுவர் ஐந்தலை
படவம் பாம்பரை யார்த்த பரமனை
கடவி ராய்ச்சென்று கைதொழு துய்ம்மினே
இணர்ந்து கொன்றைபொற் றாது சொரிந்திடும்
புணர்ந்த வாளர வம்மதி யோடுடன்
அணைந்த அஞ்சடை யானவன் பாதமே
உணர்ந்த உள்ள தவருணர் வார்களே
தரு தான்றவ தான்றவ தால்வருங்
கரு தான்கரு மான்மறி கையினான்
அரு தன்ன அதிர்கழல் சேர்மினோ
சிரமஞ் சேரழல் தீவினை யாளரே
நமச்சி வாயவென் பாருள ரேலவர்
தமச்ச நீங்க தவநெறி சார்தலால்
அமைத்து கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும்
இமைத்து நிற்பது சால அரியதே
பற்பல் காலம் பயிற்றி பரமனை
சொற்பல் காலம்நின் றேத்துமின் தொல்வினை
வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டவ
புற்ப னிக்கெடு மாறது போலுமே
மணிசெய் கண்டத்து மான்மறி கையினான்
கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினாற்
பணிகள் தாஞ்செய வல்லவர் யாவர்தம்
பிணிசெய் யாக்கையை நீக்குவர் பேயரே
இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர்
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்
மயக்க மெய்தவன் மாலெரி யாயினான்
வியக்கு தன்மையி னானெம் விகிர்தனே
அரவ மார்த்தன லாடிய அண்ணலை
பரவு வாரவர் பாவம் பறைதற்கு
குரவை கோத்தவ னுங்குளிர் போதின்மேல்
கரவில் நான்முக னுங்கரி யல்லரே
அழலங் கையினன் அந்தர தோங்கிநின்
றுழலும் மூவெயில் ஒள்ளழ லூட்டினான்
தழலு தாமரை யானொடு தாவினான்
கழலுஞ் சென்னியுங் காண்டற் கரியனே
இளமை கைவி டகறலும் மூப்பினார்
வளமை போய்ப்பிணி யோடு வருதலால்
உளமெ லாமொளி யாய்மதி ஆயினான்
கிளமை யேகிளை யாக நினைப்பனே
தன்னிற் றன்னை அறியு தலைமகன்
தன்னிற் றன்னை அறியிற் றலைப்படு
தன்னிற் றன்னை அறிவில னாயிடிற்
தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே
இலங்கை மன்னனை ஈரைந்து பத்துமன்
றலங்க லோடுட னேசெல வூன்றிய
நலங்கொள் சேவடி நாடொறும்
வலம்கொண் டேத்துவார் வானுல காள்வரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

உள்ளம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
நீற லைத்ததோர் மேனி நிமிர்சடை
ஆற லைக்கநின் றாடும் அமுதினை
தேற லைத்தெளி யைத்தெளி வாய்த்ததோர்
ஊற லைக்கண்டு கொண்டதெ னுள்ளமே
பொந்தை யைப்புக்கு நீக்க புகுந்திடு
தந்தை யைத்தழல் போல்வதோர் மேனியை
சிந்தை யைத்தெளி வைத்தெளி வாய்த்ததோர்
எந்தை யைக்கண்டு கொண்டதெ னுள்ளமே
வெள்ள தார்விஞ்சை யார்கள் விரும்பவே
வெள்ள தைச்சடை வைத்த விகிர்தனார்
கள்ள தைக்கழி யம்மன மொன்றிநின்
றுள்ள தில்லொளி யைக்கண்ட துள்ளமே
அம்மா னையமு தின்னமு தேயென்று
தம்மா னைத்தத்து வத்தடி யார்தொழுஞ்
செம்மா னநிறம் போல்வதோர் சிந்தையுள்
எம்மா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே
கூறே றும்முமை பாகமோர் பாலராய்
ஆறே றுஞ்சடை மேற்பிறை சூடுவர்
பாறே றுந்தலை யேந்தி பலஇலம்
ஏறேறு மெந்தையை கண்டதெ னுள்ளமே
முன்னெஞ் சம்மின்றி மூர்க்கரா சாகின்றார்
தன்னெஞ் சந்த குத்தாம் இலாதவர்
வன்னெஞ் சம்மது நீங்குதல் வல்லிரே
என்னெஞ்சி லீசனை கண்டதெ னுள்ளமே
வென்றா னைப்புல னைந்துமென் தீவினை
கொன்றா னைக்குண தாலே வணங்கிட
நன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம்
ஒன்றா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே
மருவி னைமட நெஞ்சம் மனம்புகுங்
குருவி னைக்குண தாலே வணங்கிடு
திருவி னைச்சிந்தை யுட்சிவ னாய்நின்ற
உருவி னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே
தேச னைத்திரு மால்பிர மன்செயும்
பூச னைப்புண ரிற்புணர் வாயதோர்
நேச னைநெஞ்சி னுள்நிறை வாய்நின்ற
ஈச னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே
வெறுத்தா னைம்புல னும்பிர மன்றலை
அறுத்தா னையர கன்கயி லாயத்தை
கறுத்தா னைக்கா லில்விர லொன்றினால்
ஒறுத்தா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

பாவநாசம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்
ஆவில் அஞ்சுக தாடு மவன்கழல்
மேவ ராய்மிக வும்மகிழ துள்குமின்
காவ லாளன் கலந்தருள் செய்யுமே
கங்கை யாடிலென் காவிரி
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஒங்கு மாகட லோதநீ ராடிலென்
எங்கு மீசனெ னாதவர கில்லையே
பட்ட ராகிலென் சாத்திரங் கேட்கிலென்
இட்டு மட்டியு மீதொழில் பூணிலென்
எட்டு மொன்றும் இரண்டு மறியிலென்
இட்ட மீசனெ னாதவர கில்லையே
வேத மோதிலென் வேள்விகள் செய்கிலென்
நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்
ஓதி யங்கமோ ராறும் உணரிலென்
ஈச னையுள்கு வார்க்கன்றி இல்லையே
காலை சென்று கலந்துநீர் மூழ்கிலென்
வேலை தோறும் விதிவழி நிற்கிலென்
ஆலை வேள்வி யடைந்தது வேட்கிலென்
ஏல ஈசனென் பார்க்கன்றி இல்லையே
கான நாடு கலந்து திரியிலென்
ஈன மின்றி இருந்தவஞ் செய்யிலென்
ஊனை யுண்டல் ஒழிந்துவா னோக்கிலென்
ஞான னென்பவர கன்றிநன் கில்லையே
கூட வேடத்த ராகி குழுவிலென்
வாடி யூனை வருத்தி திரியிலென்
ஆடல் வேடத்தன் அம்பல கூத்தனை
பாட லாளர்க்கல் லாற்பயன் இல்லையே
நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்
குன்ற மேறி யிருந்தவஞ் செய்யிலென்
சென்று நீரிற் குளித்து திரியிலென்
என்று மீசனென் பார்க்கன்றி இல்லையே
கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடும் நீரினை ஓட்டை குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே
மற்று நற்றவஞ் செய்து வருந்திலென்
பொற்றை யுற்றெடு தானுடல் புக்கிற
குற்ற நற்குரை யார்கழற் சேவடி
பற்றி லாதவர குப்பயன் இல்லையே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

ஆதிபுராணம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
வேத நாயகன் வேதியர்
மாதின் நாயகன் மாதவர்
ஆதி நாயகன் ஆதிரை
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே
செத்து செத்து பிறப்பதே தேவென்று
பத்தி செய்மன பாறைக கேறுமோ
அத்த னென்றரி யோடு பிரமனு
துத்தி யஞ்செய நின்றநற் சோதியே
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே
வாது செய்து மயங்கு மனத்தராய்
ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள்
யாதோர் தேவ ரெனப்படு வார கெல்லாம்
மாதே வனலாற் றேவர்மற் றில்லையே
கூவ லாமை குரைகட லாமையை
கூவ லோடொக்கு மோகட லென்றல்போற்
பாவ காரிகள் பார்ப்பரி தென்பராற்
தேவ தேவன் சிவன்பெரு தன்மையே
பேய்வ னத்தமர் வானைப்பி ரார்த்தித்தார
கீவ னையிமை யோர்முடி தன்னடி
சாய்வ னைச்சல வார்கள் தமக்குடற்
சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே
எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன
துருவ ருக்கம தாவ துணர்கிலார்
அரிய யற்கரி யானை அயர்த்துப்போய்
நரிவி ருத்தம தாகுவர் நாடரே
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்க னாவான் அரனுரு வல்லனோ
இருக்கு நான்மறை ஈசனை யேதொழுங்
கருத்தி னைநினை யார்கன் மனவரே
தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர்
ஆய வுள்ள தமுதரு தப்பெறார்
பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய
மாயன் மாயத்து பட்ட மனத்தரே
அரக்கன் வல்லர டாங்கொழி தாரருள்
பெருக்க செய்த பிரான்பெரு தன்மையை
அருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர்
கருத்தி லாக்கய வக்கண தோர்களே
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
ஐந்தாம் திருமுறை முற்றும்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப