திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
நான்காம் திருமுறை முதற் பகுதி
பாடல்கள்
உள்ளுறை
திருவதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருக்கெடிலவடவீரட்டானம் மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர்ப்பழமொழி மின்பதிப்பு
திருக்கழிப்பாலை மின்பதிப்பு
திருஏகம்பம் மின்பதிப்பு
சிவனெனுமோசை மின்பதிப்பு
திருஅங்கமாலை மின்பதிப்பு
திருக்கெடிலவாணர் மின்பதிப்பு
நமச்சிவாயப்பதிகம் மின்பதிப்பு
திருப்பழனம் மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
தசபுராணம் மின்பதிப்பு
பாவநாசத்திருப்பதிகம் மின்பதிப்பு
திருப்புகலூர் மின்பதிப்பு
திருவாரூர் அரநெறி மின்பதிப்பு
விடந்தீர்த்ததிருப்பதிகம் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர்திருவாதிரைப்பதிகம் மின்பதிப்பு

கோயில் மின்பதிப்பு
கோயில் மின்பதிப்பு
திருவதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருவதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருவதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருவதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருவதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருச்செம்பொன்பள்ளி மின்பதிப்பு
திருக்கழிப்பாலை மின்பதிப்பு
திருக்கடவூர் மின்பதிப்பு
திருப்பயற்றூர் மின்பதிப்பு
திருமறைக்காடு மின்பதிப்பு
திருமறைக்காடு மின்பதிப்பு
திருவிடைமருது மின்பதிப்பு
திருப்பழனம் மின்பதிப்பு
திருநெய்த்தானம் மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருச்சோற்றுத்துறை மின்பதிப்பு
திருத்துருத்தி மின்பதிப்பு
திருக்காஞ்சிமேற்றளி மின்பதிப்பு
திருஏகம்பம் மின்பதிப்பு
திருவொற்றியூர் மின்பதிப்பு
திருவொற்றியூர் மின்பதிப்பு
திருக்கயிலாயம் மின்பதிப்பு
திருஆப்பாடி மின்பதிப்பு
திருக்குறுக்கை மின்பதிப்பு
திருக்குறுக்கை மின்பதிப்பு

திருவதிகைவீரட்டானம்
பன் கொல்லி
திருச்சிற்றம்பலம்
கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடி கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
நெஞ்சம்மு கேயிட மாகவைத்தேன்
நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேயு காட்செய்து வாழலுற்றாற்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்
பெற்றமேற்றுக தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மனே
முன்னம்மடி யேன்அறி யாமையினான்
முனிந்தென்னை நலிந்து முடக்கியிட
பின்னையடி யேனு காளும்பட்டேன்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னையடை தார்வினை தீர்ப்பதன்றோ
தலையாயவர் தங்கட னாவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்
கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட
நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவின் மறந்தறியேன்
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
ஒருவர்தலை காவலி லாமையினல்
வயந்தேயு காட்செய்து வாழலுற்றால்
வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின கம்படியே
பறித்துப்புர டியறு தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னாத்துறை அம்மானே
வலித்தேன்மனை வாழ்கை மகிழ்ந்தடியேன்
வஞ்சம்மன மொன்று மிலாமையினாற்
சலித்தாலொரு வர்துணை யாருமில்லை
சங்கவெண்குழை காதுடை எம்பெருமான்
கலித்தேயென் வயிற்றி னகம்படியே
கலக்கி மலக்கிட்டு கவர்ந்துதின்ன
அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்
புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை
நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்
என்போலிக ளும்மை இனித்தெளியார்
அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்மதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தானர கன்றனை மால்வரைக்கீழ்
அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழு தும்மெழுந்தால்
என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வீரட்டானேசுவரர் தேவியார் திருவதிகைநாயகி
இப்பதிகம் சூலைநோய்தீர ஓதியருளியது
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கெடிலவடவீரட்டானம்
திருவதிகைவீரட்டானம் என்பதும் இது
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
சுண்ணவெண் சந்தன சாந்துஞ்
சுடர திங்க சூளாமணியும்
வண்ண உரிவை யுடையும்
வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண்முர ணேறும்
அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
பூண்டதோர் கேழல் எயிறும்
பொன்றிகழ் ஆமை புரள
நீண்டதிண் டோ ள்வலஞ் சூழ்ந்து
நிலாக்கதிர் போலவெண் ணூலுங்
காண்டகு புள்ளின் சிறகுங்
கலந்தக டங கொடியும்
ஈண்டு கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
ஒத்த வடத்திள நாகம்
உருத்திர பட்ட மிரண்டும்
முத்து வடக்கண் டிகையும்
முளைத்தெழு மூவிலை வேலுஞ்
சித்த வடமும் அதிகை
சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
தத்துங் கெடி புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
சித்தவடம் என்பது இத்தலத்துக்கு சமீபத்திலிருப்பது
மடமான் மறிபொற் கலையும்
மழுபாம் பொருகையில் வீணை
குடமால் வரைய திண்டோ ளுங்
குனிசிலை கூத்தின் பயில்வும்
இடமால் தழுவிய பாகம்
இருநில னேற்ற சுவடு
தடமார் கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
பலபல காமத்த ராகி
பதைத்தெழு வார்மன துள்ளே
கலமல கிட்டு திரியுங்
கணபதி யென்னுங் களிறும்
வலமே திரண்டு சுடரும்
வான்கயி லாய மலையும்
நலமார் கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதென்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
கரந்தன கொள்ளி விளக்குங்
கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும்
பயின்றறி யாதன பாட்டும்
அரங்கிடை நூலறி வாளர்
அறி படாததோர் கூத்தும்
நிரந்த கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
கொலைவரி வேங்கை அதளுங்
குலவோ டிலங்குபொற் றோடும்
விலைபெறு சங குழையும்
விலையில் கபால கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும்
மணியார திலங்கு மிடறும்
உலவு கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
ஆடல் புரிந்த நிலையும்
அரையில் அசைத்த அரவும்
பாடல் பயின்ற பல்பூதம்
பல்லா யிரங்கொள் கருவி
நாடற் கரியதோர் கூத்தும்
நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
ஓடுங் கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
சூழு மரவ துகிலு
துகில்கிழி கோவண கீளும்
யாழின் மொழியவள் அஞ்ச
அஞ்சா தருவரை போன்ற
வேழ முரித்த நிலையும்
விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழுங் கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
நரம்பெழு கைகள் பிடித்து
நங்கை நடுங்க மலையை
உரங்களெல் லாங்கொண் டெடுத்தான்
ஒன்பதும் ஒன்றும் அலற
வரங்கள் கொடுத்தருள் செய்வான்
வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து
நிரம்பு கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
இப்பதிகம் சமணர்களேவிய யானை அஞ்சும்படி ஓதி அருளியது
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
மாதர பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சு தேத்தி
புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
போழிளங் கண்ணியி னானை
பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றியென் றேத்தி
வட்டமி டாடா வருவேன்
ஆழி வலவனின் றேத்தும்
ஐயா றடைகின்ற போது
கோழி பெடையொடுங் கூடி
குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
எரிப்பிறை கண்ணியி னானை
யேந்திழை யாளொடும் பாடி
முரித்த இலயங்க ளிட்டு
முகமலர தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி
ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி
வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
பிறையிளங் கண்ணியி னானை
பெய்வளை யாளொடும் பாடி
துறையிளம் பன்மலர் தூவி
தோளை குளிர தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும்
ஐயா றடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடி
சேவல் வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
ஏடு மதிக்கண்ணி யானை
ஏந்திழை யாளொடும் பாடி
காடொடு நாடு மலையுங்
கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற
ஐயா றடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடி
பிணைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
தண்மதி கண்ணியி னானை
தையல்நல் லாளொடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி
உணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற
ஐயா றடைகின்ற போது
வண்ண பகன்றிலொ டாடி
வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
கடிமதி கண்ணியி னானை
காரிகை யாலொடும் பாடி
வடிவொடு வண்ண மிரண்டும்
வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்குங் கழலான்
ஐயா றடைகின்ற போது
இடிகுர லன்னதோர் ஏனம்
இசைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
விரும்பு மதிக்கண்ணி யானை
மெல்லிய லாளொடும் பாடி
பெரும்புலர் காலை யெழுந்து
பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி யுந்தும்
ஐயா றடைகின்ற போது
கருங்கலை பேடையொ டாடி
கலந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
முற்பிறை கண்ணியி னானை
மொய்குழ லாளொடும் பாடி
பற்றி கயிறறு கில்லேன்
பாடியும் ஆடா வருவேன்
அற்றருள் பெற்றுநின் றாரோ
டையா றடைகின்ற போது
நற்றுணை பேடையொ டாடி
நாரை வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
திங்கள் மதிக்கண்ணி யானை
தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொ லெந்தை
எனக்கினி யென்னா வருவேன்
அங்கிள மங்கைய ராடும்
ஐயா ரடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடி
பறந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
வளர்மதி கண்ணியி னானை
வார்குழ லாளொடும் பாடி
களவு படாததோர் காலங்
காண்பான் கடைக்கணி கின்றேன்
அளவு படாததோ ரன்போ
டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி
ஏறு வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் செம்பொற்சோதீசுவரர் தேவியார் அறம்வளர்த்தநாயகி
இது இந்தத்தலத்திலிருக்கும் ஆலயமே
கயிலாசமாக சுவாமி தரிசனங்கட்டளையிட்டபோது ஓதியருளிய பதிகம்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பாடிளம் பூதத்தி னானும்
பவளச்செவ் வாய்வண்ண தானுங்
கூடிள மென்முலை யாளை
கூடிய கோலத்தி னானும்
ஓடிள வெண்பிறை யானும்
ஒளிதிகழ் சூலத்தி னானும்
ஆடிளம் பாம்பசை தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
நரியை குதிரைசெய் வானும்
நரகரை தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும்
விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர தானை முன்னோட
முன்பணி தன்பர்கள் ஏத்த
அரவரை சாத்திநின் றானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
நீறுமெய் பூசவல் லானும்
நினைப்பவர் நெஞ்சத்து ளானும்
ஏறுக தேறவல் லானும்
எரிபுரை மேனியி னானும்
நாறு கரந்தையி னானும்
நான்மறை கண்டத்தி னானும்
ஆறு சடைக்கர தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
கொம்புநல் வேனி லவனை
குழைய முறுவல்செய் தானுஞ்
செம்புனல் கொண்டெயில் மூன்று
தீயெழ கண்சிவ தானும்
வம்புநற் கொன்றையி னானும்
வாட்கண்ணி வாட்டம தெய்த
அம்பர ஈருரி யானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
ஊழி யளக்கவல் லானும்
உகப்பவர் உச்சியுள் ளானு
தாழிளஞ் செஞ்சடை யானு
தண்ணமர் திண்கொடி யானு
தோழியர் தூதிடை யாட
தொழுதடி யார்கள் வணங்க
ஆழி வளைக்கையி னானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
ஊர்திரை வேலையுள் ளானும்
உலகிற தொண்பொரு ளானுஞ்
சீர்தரு பாடலுள் ளானுஞ்
செங்கண் விடைக்கொடி யானும்
வார்தரு பூங்குழ லாளை
மருவி யுடன்வை தவனும்
ஆதிரை நாளுக தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
தொழற்கங்கை துன்னிநின் றார்க்கு
தோன்றி யருளவல் லானுங்
கழற்கங்கை பன்மலர் கொண்டு
காதல் கனற்றநின் றானுங்
குழற்கங்கை யாளையுள் வைத்து
கோல சடைக்கர தானும்
அழற்கங்கை ஏந்தவல் லானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
ஆயிர தாமரை போலும்
ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும்
ஆயிர தோளுடை யானும்
ஆயிர ஞாயிறு போலும்
ஆயிர நீண்முடி யானும்
ஆயிரம் பேருக தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
வீடரங் காநிறு பானும்
விசும்பினை வேதி தொடர
ஓடரங் காகவை தானும்
ஓங்கியோ ரூழியுள் ளானுங்
காடரங் காமகிழ தானுங்
காரிகை யார்கள் மனத்துள்
ஆடரங் கத்திடை யானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
பையஞ் சுடர்விடு நாக
பள்ளிகொள் வானுள்ள தானுங்
கையஞ்சு நான்குடை யானை
கால்விர லாலடர தானும்
பொய்யஞ்சி வாய்மைகள் பேசி
புகழ்புரி தார்க்கருள் செய்யும்
ஐயஞ்சின் அப்புற தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர்ப்பழமொழி
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி
யுழிதந்தென் உள்ளம் விட்டு
கொய்யுலா மலர்ச்சோலை குயில்கூவ
மயிலாலும் ஆரூ ரரை
கையினாற் றொழா தொழிந்து
கனியிரு காய்கவர்ந்த கள்வனேனே
என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்தி
டென்னையோர் உருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்தி
டென்னுள்ளங் கோயி லாக்கி
அன்பிருத்தி அடியேனை கூழாட்கொண்
டருள்செய்த ஆரூ ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டு
காக்கைப்பின் போன வாறே
பெருகுவித்தென் பாவத்தை பண்டெலாங்
குண்டர்கள்தஞ் சொல்லே கேட்டு
உருகுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்த
கள்ளத்தை தள்ளி போக்கி
அருகுவித்து பிணிகாட்டி ஆட்கொண்டு
பிணிதீர்த்த ஆரூ ரர்தம்
அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க
மறம்விலைக்கு கொண்ட வாறே
குண்டானா தலைபறித்து குவிமுலையார்
நகைகாணா துழிதர் வேனை
பண்டமா படுத்தென்னை பால்தலையிற்
றெளித்துத்தன் பாதங் காட்டி
தொண்டெலா மிசைபாட தூமுறுவல்
அருள்செய்யும் ஆரூ ரரை
பண்டெலாம் அறியாதே பனிநீராற்
பரவைசெ பாவி தேனே
துன்னாக தேனாகி துர்ச்சனவர்
சொற்கேட்டு துவர்வா கொண்டு
என்னாக திரிதந்தீங் கிருகையேற்
றிடவுண்ட ஏழை யேன்நான்
பொன்னாக தடியேனை புகப்பெய்து
பொருட்படுத்த ஆரூ ரரை
என்னாக திருத்தாதே ஏதன்போர
காதனாய் அகப்ப டேனே
பப்போதி பவணனா பறித்ததொரு
தலையோடே திரிதர் வேனை
ஒப்போட வோதுவித்தென் உள்ளத்தின்
உள்ளிருந்தங் குறுதி காட்டி
அப்போதை கப்போதும் அடியவர்க
காரமுதாம் ஆரூ ரரை
எப்போது நினையாதே இருட்டறையின்
மலடுகற தெய்த்த வாறே
கதியொன்றும் அறியாதே கண்ணழல
தலைபறித்து கையில் உண்டு
பதியொன்று நெடுவீதி பலர்காண
நகைநாணா துழிதர் வேற்கு
மதிதந்த ஆருரில் வார்தேனை
வாய்மடுத்து பருகி உய்யும்
விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க
மின்மினித்தீ காய்ந்த வாறே
பூவையா தலைபறித்து பொறியற்ற
சமண்நீசர் சொல்லே கேட்டு
காவிசேர் கண்மடவார கண்டோ டி
கதவடைக்குங் கள்வ னேன்றன்
ஆவியை போகாமே தவிர்த்தென்னை
யாட்கொண்ட ஆரூ ரரை
பாவியேன் அறியாதே பாழூரிற்
பயிக்கம்பு கெய்த்த வாறே
ஒட்டாத வாளவுணர் புரம்மூன்றும்
ஓரம்பின் வாயின் வீழ
கட்டானை காமனையுங் காலனையுங்
கண்ணினொடு காலின் வீழ
அட்டானை ஆரூரில் அம்மானை
ஆர்வச்செற் றக்கு ரோத
தட்டானை சாராதே தவமிருக்க
அவஞ்செய்து தருக்கி னேனே
மறுத்தானோர் வல்லரக்கன் ஈரைந்து
முடியினொடு தோளு தாளும்
இறுத்தானை எழில்முளரி தவிசின்மிசை
இருத்தான்றன் தலையி லொன்றை
அறுத்தானை ஆரூரில் அம்மானை
ஆலாலம் உண்டு கண்டங்
கறுத்தானை கருதாதே கரும்பிருக்க
இரும்புகடி தெய்த்த வாறே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கழிப்பாலை
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
வனபவள வாய்திறந்து வானவர்க்கு
தானவனே என்கின் றாளாற்
சினபவள திண்டோ ள்மேற் சேர்ந்திலங்கு
வெண்ணீற்றன் என்கின் றாளால்
அனபவள மேகலையோ டப்பாலை
கப்பாலான் என்கின் றாளாற்
கனபவளஞ் சிந்துங் கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
வண்டுலவு கொன்றை வளர்புன்
சடையானே என்கின் றாளால்
விண்டலர்ந்து நாறுவதோர் வெள்ளெருக்க
நாண்மலருண் டென்கின் றாளால்
உண்டயலே தோன்றுவதோர் உத்தரி
பட்டுடையன் என்கின் றாளாற்
கண்டயலே தோன்றுங் கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
பிறந்திளைய திங்களெம் பெம்மான்
முடிமேல தென்கின் றாளால்
நிறங்கிளருங் குங்குமத்தின் மேனி
யவன்நிறமே யென்கின் றாளால்
மறங்கிளர்வேற் கண்ணாள் மணிசேர்
மிடற்றவனே யென்கின் றாளாற்
கறங்கோத மல்குங் கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தியோர்
வெண்மழுவன் என்கின் றாளாற்
சுரும்பார்ந்த மலர்க்கொன்றை சுண்ணவெண்
ணீற்றவனே என்கின் றாளாற்
பெரும்பால னாகியோர் பிஞ்ஞக
வேடத்தன் என்கின் றாளாற்
கரும்பானல் பூக்குங் கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
பழியிலான் புகழுடையன் பால்நீற்றான்
ஆனேற்றன் என்கின் றாளால்
விழியுலாம் பெருந்தடங்கண் இரண்டல்ல
மூன்றுளவே என்கின் றாளாற்
சுழியுலாம் வருகங்கை தோய்ந்த
சடையவனே என்கின் றாளாற்
கழியுலாஞ் சூழ்ந்த கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
பண்ணார்ந்த வீணை பயின்ற
விரலவனே என்கின் றாளால்
எண்ணார் புரமெரித்த எந்தை
பெருமானே என்கின் றாளாற்
பண்ணார் முழவதிர பாடலோ
டாடலனே என்கின் றாளாற்
கண்ணார் பூஞ்சோலை கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
முதிருஞ் சடைமுடிமேல் முழ்கும்
இளநாகம் என்கின் றாளால்
அதுகண் டதனருகே தோன்றும்
இளமதியம் என்கின் றாளாற்
சதுர்வெண் பளிக்கு குழைகாதின்
மின்னிடுமே என்கின் றாளாற்
கதிர்முத்தஞ் சிந்துங் கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
ஓரோத மோதி உலகம்
பலிதிரிவான் என்கின் றாளால்
நீரோத மேற நிமிர்புன்
சடையானே என்கின் றாளாற்
பாரோத மேனி பவளம்
அவனிறமே என்கின் றாளாற்
காரோத மல்குங் கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
வானுலா திங்கள் வளர்புன்
சடையானே என்கின் றாளால்
ஊனுலாம் வெண்டலைகொண் டூரூர்
பலிதிரிவான் என்கின் றாளாற்
தேனுலாங் கோதை திளைக்கு
திருமார்பன் என்கின் றாளாற்
கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
அடர்ப்பரிய இராவணனை அருவரைக்கீழ்
அடர்த்தவனே என்கின் றாளாற்
சுடர்ப்பெரிய திருமேனி சுண்ணவெண்
ணீற்றவனே என்கின் றாளால்
மடற்பெரிய ஆலின்கீழ் அறம்நால்வர
கன்றுரைத்தான் என்கின் றாளாற்
கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பால்வண்ணநாதர் தேவியார் வேதநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஏகம்பம்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
கரவாடும் வன்னெஞ்சர கரியானை கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாட சடைதாழ அங்கையினில் அனலேந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே
தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவள
தானோக்கு திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே
கைப்போது மலர்தூவி காதலித்து வானோர்கள்
முப்போதும் முடிசாய்த்து தொழநின்ற முதல்வனை
அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி
எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே
அண்டமாய் ஆதியாய் அருமறையோ டைம்பூத
பிண்டமாய் உலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனை
தொண்டர்தாம் மலர்தூவி சொன்மாலை புனைகின்ற
இண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தேனே
ஆறேறு சடையானை ஆயிரம்பே ரம்மானை
பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே
தேசனை தேசங்கள் தொழநின்ற திருமாலாற்
பூசனை பூசனைகள் உகப்பானை பூவின்கண்
வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம்
ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே
நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம்
வல்லானை வல்லார்கள் மனத்துறையும் மைந்தனை
சொல்லானை சொல்லார்ந்த பொருளானை துகளேதும்
இல்லானை எம்மானை என்மனத்தே வைத்தேனே
விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானை பதஞ்சந்தி பொருளுருவாம் புண்ணியனை
தரித்தானை கங்கைநீர் தாழ்சடைமேல் மதில்மூன்றும்
எரித்தானை எம்மானை என்மனத்தே வைத்தேனே
ஆகம்ப தரவணையான் அயன்அறிதற் கரியானை
பாகம்பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியை
மாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி
ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே
அடுத்தானை உரித்தானை அருச்சுனற்கு பாசுபதங்
கொடுத்தானை குலவரையே சிலையா கூரம்பு
தொடுத்தானை புரமெரி சுனைமல்கு கயிலாயம்
எடுத்தானை தடுத்தானை என்மனத்தே வைத்தேனே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஏகாம்பரநாதர்
தேவியார் காமாட்சியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

சிவனெனுமோசை
பண் பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற்
றிருநின்ற செம்மை யுளதே
அவனுமோ ரையமுண்ணி யதளாடை யாவ
ததன்மேலொ ராட லரவங்
கவணள வுள்ளஉண்கு கரிகாடு கோயில்
கலனாவ தோடு கருதில்
அவனது பெற்றிகண்டு மவனீர்மை கண்டு
மகநேர்வர் தேவ ரவரே
விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத
விதியல்லர் விண்ணு நிலனு
திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர்
தெளிநீரு மல்லர் தெரியில்
அரிதரு கண்ணியாளை ஒருபாக மாக
அருள்கார ணத்தில் வருவார்
எரியர வாரமார்பர் இமையாரு மல்லர்
இமைப்பாரு மல்லர் இவரே
தேய்பொடி வெள்ளைபூசி யதன்மேலோர் திங்கள்
திலகம் பதித்த நுதலர்
காய்கதிர் வேலைநீல ஒளிமா மிடற்றர்
கரிகாடர் காலோர் கழலர்
வேயுட னாடுதோளி அவள்விம்ம வெய்ய
மழுவீசி வேழவுரி போர
தேயிவ ராடுமாறும் இவள்காணு மாறும்
இதுதா னிவர்க்கோ ரியல்பே
வளர்பொறி யாமைபுல்கி வளர்கோதை வைகி
வடிதோலும் நூலும் வளர
கிளர்பொறி நாகமொன்று மிளிர்கின்ற மார்பர்
கிளர்காடு நாடு மகிழ்வர்
நளிர்பொறி மஞ்ஞையன்ன தளிர்போன்ற சாய
லவள்தோன்று வாய்மை பெருகி
குளிர்பொறி வண்டுபாடு குழலா லொருத்தி
யுளள்போல் குலாவி யுடனே
உறைவது காடுபோலு முரிதோ லுடுப்பர்
விடையூர்வ தோடு கலனா
இறையிவர் வாழும்வண்ண மிதுவேலு மீச
ரொருபா லிசைந்த தொருபால்
பிறைநுதல் பேதைமாதர் உமையென்னு நங்கை
பிறழ்பாட நின்று பிணைவான்
அறைகழல் வண்டுபாடும் அடிநீழ லாணை
கடவா தமர ருலகே
கணிவளர் வேங்கையோடு கடிதிங்கள் கண்ணி
கழல்கால் சிலம்ப அழகார்
அணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ண
மியலா ரொருவ ரிருவர்
மணிகிளர் மஞ்ஞையால மழையாடு சோலை
மலையான் மகட்கு மிறைவர்
அணிகிள ரன்னவண்ணம் அவள் வண்ணவண்ணம்
அவர்வண்ண வண்ணம் அழலே
நகைவலர் கொன்றைதுன்று நகுவெண் டலையர்
நளிர்கங்கை தங்கு முடியர்
மிகைவளர் வேதகீத முறையோடும் வல்ல
கறைகொள் மணிசெய் மிடறர்
முகைவளர் கோதைமாதர் முனிபாடு மாறு
மெரியாடு மாறு மிவர்கை
பகைவளர் நாகம்வீசி மதியங்கு மாறு
மிதுபோலும் ஈச ரியல்பே
ஒளிவளர் கங்கைதங்கு மொளிமா லயன்ற
னுடல்வெந்து வீய சுடர்நீ
றணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ணர்
தமியா ரொருவ ரிருவர்
களிகிளர் வேடமுண்டோ ர் கடமா வுரித்த
உடைதோல் தொடுத்த கலனார்
அணிகிள ரன்னதொல்லை யவள்பாக மாக
எழில்வேத மோது மவரே
மலைமட மங்கையோடும் வடகங்கை நங்கை
மணவாள ராகி மகிழ்வர்
தலைகல னாகவுண்டு தனியே திரிந்து
தவவாண ராகி முயல்வர்
விலையிலி சாந்தமென்று வெறிநீறு பூசி
விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ளமுற்று மலற கடைந்த
அழல்நஞ்ச முண்ட வவரே
புதுவிரி பொன்செயோலை யொருகாதோர் காது
சுரிசங்க நின்று புரள
விதிவிதி வேதகீத மொருபாடு மோத
மொருபாடு மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றைதுன்று சடைபாக மாதர்
குழல்பாக மாக வருவர்
இதுஇவர் வண்ணவண்ணம் இவள்வண்ண வண்ணம்
எழில்வண்ண வண்ண மியல்பே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஅங்கமாலை
பண் சாதாரி
திருச்சிற்றம்பலம்
தலையே நீவணங்காய் தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேரு தலைவனை
தலையே நீவணங்காய்
கண்காள் காண்மின்களோ கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னை
கண்காள் காண்மின்களோ
செவிகாள் கேண்மின்களோ சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
செவிகள் கேண்மின்களோ
மூக்கே நீமுரலாய் முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீமுரலாய்
வாயே வாழ்த்துகண்டாய் மத
யானை யுரிபோர்த்து
பேய்வாழ் காட்டக தாடும் பிரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்
நெஞ்சே நீநினையாய் நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய்
கைகாள் கூப்பித்தொழீர் கடி
மாமலர் தூவிநின்று
பைவா பாம்பரை யார்த்த பரமனை
கைகள் கூப்பித்தொழீர்
ஆக்கை யாற்பயனென் அரன்
கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டி போற்றி யென்னாதவிவ்
வாக்கை யாற்பயனென்
கால்க ளாற்பயனென் கறை
கண்ட னுறைகோயில்
கோல கோபுர கோகர ணஞ்சூழா
கால்க ளாற்பயனென்
உற்றா ராருளரோ உயிர்
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்ந
குற்றார் ஆருளரோ
இறுமா திருப்பன்கொலோ ஈசன்
பல்கண தெண்ணப்பட்டு
சிறுமா னேந்திதன் சேவடி கீழ்ச்சென்றங்
கிறுமா திருப்பன்கொலோ
தேடி கண்டுகொண்டேன் திரு
மாலொடு நான்முகனு
தேடி தேடொணா தேவனை என்னுளே
தேடி கண்டுகொண்டேன்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கெடிலவாணர்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர்
வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்
திளைத்ததோர் மான்மழு கையர் செய்யபொன்
கிளைத்துழி தோன்றிடுங் கெடில வாணரே
ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு
கூறினர் வேதம்
ஆறினர் ஆறிடு சடையர் பக்கமுங்
கீறின வுடையினர் கெடில வாணரே
விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீ
றுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலா
படந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல்
கிடந்தழ கெழுதிய கெடில வாணரே
விழுமணி அயிலெயிற் றம்பு வெய்யதோர்
கொழுமணி நெடுவரை கொளுவி கோட்டினார்
செழுமணி மிடற்றினர் செய்யர் வெய்யதோர்
கெழுமணி அரவினர் கெடில வாணரே
குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினை
தழுவின கழுவுவர் பவள மேனியர்
மழுவினர் மான்மறி கையர் மங்கையை
கெழுவின யோகினர் கெடில வாணரே
அங்கையில் அனலெரி யேந்தி யாறெனும்
மங்கையை சடையிடை மணப்பர் மால்வரை
நங்கையை பாகமு நயப்பர் தென்றிசை
கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே
கழிந்தவர் தலைகல னேந்தி காடுறை
திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர்
வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்
கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே
கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுற
கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுற
கிடந்தநீர சடைமிசை பிறையும் ஏங்கவே
கிடந்துதான் நகுதலை கெடில வாணரே
வெறியுறு விரிசடை புரள வீசியோர்
பொறியுறு புலியுரி யரைய தாகவும்
நெறியுறு குழலுமை பாக மாகவுங்
கிறிபட உழிதர்வர் கெடில வாணரே
பூண்டதோர் அரக்கனை பொருவில் மால்வரை
தூண்டுதோ ளவைபட அடர்த்த தாளினார்
ஈண்டுநீர கமலவாய் மேதி பாய்தர
கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

நமச்சிவாயப்பதிகம்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்த கைதொழ
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
பூவினு கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனு கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினு கருங்கலங் கோட்ட மில்லது
நாவினு கருங்கலம் நமச்சி வாயவே
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே
இடுக்கண்ப டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தை கெடுப்பது நமச்சி வாயவே
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர கருங்கலம் அருமறை யாறங்க
திங்களு கருங்கல திகழு நீண்முடி
நங்களு கருங்கலம் நமச்சி வாயவே
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமி கொடுப்பது நமச்சி வாயவே
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடி சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்த கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்ப
தேத்தவல் லார்த கிடுக்க ணில்லையே
இது சமணர்கள் கற்றூணிற்கட்டி கடலிலே வீழ்த்தினபோது ஓதியருளியது
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பழனம்
பண் பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னி
பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ
கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான் பாட்டோ வா பழனத்தான்
வண்டுலா தடமூழ்கி மற்றவனென் தளிர்வண்ணங்
கொண்டநாள் தானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ
மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மதமுகத்த
பனைக்கைமா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே
சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதா சோர்வாளோ
மனைக்காஞ்சியென்பது வீட்டுக்கு சமீபத்திலிருக்குங் காஞ்சிமரம்
புதியையாய் இனியையாம் பூந்தென்றால் புறங்காடு
பதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை
விதியாளன் என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ
மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை
பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென்
கண்பொருந்தும் போழ்தத்துங் கைவிடநான் கடவேனோ
பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போய் இரைதேருஞ்
செங்கால்வெண் மடநாராய் செயற்படுவ தறியேன்நான்
அங்கோல வளைகவர்ந்தான் அணிபொழில்சூழ் பழனத்தான்
தங்கோல நறுங்கொன்றை தாரருளா தொழிவானோ
துணையார முயங்கிப்போ துறைசேரும் மடநாராய்
பணையார வாரத்தான் பாட்டோ வா பழனத்தான்
கணையார இருவிசும்பிற் கடியரணம் பொடிசெய்த
இணையார மார்பன்என் எழில்நலமுண் டிகழ்வானோ
கூவைவாய் மணிவரன்றி கொழித்தோடுங் காவிரிப்பூம்
பாவைவாய் முத்திலங்க பாய்ந்தாடும் பழனத்தான்
கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடை
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே
கூவைவாய்மணி என்பது பூமியினிடத்தில்
பொருந்திய முத்துக்கள் அவையாவன
யானைக்கொம்பு பன்றிக்கொம்பு நாகம் பசுவின்பல்
மூங்கிற்கணு கொக்கின்கழுத்து கற்புள்ள
மாதர்கண்டம் என்னுமிவ்விடங்களி லுண்டாயிருக்கு
முத்துக்களாம்
காவிரிப்பூம்பாவைவாய் முத்து என்பது நீர்முத்து
எனக்கொள்க அவை சங்கு இப்பி மீன் தாமரைமலர்
என்னு மிவைகளி லுண்டாகு முத்துக்கள் இதனை
சிறைகொள் நீர்த்தரள திரல்கொணித்திலத்த என
திருமாளிகைத்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பா
வது பதிகம்
புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாக
பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுரைப்பர் உலகெல்லாங்
கள்ளியேன் நான்இவற்கென் கனவளையுங் கடவேனோ
வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்
பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போ கலிமெலிய அழலோம்பும் அப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஆபத்சகாயர் தேவியார் பெரியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு
பண் பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கால் யாதொன்றும்
இடைகிலேன் அமணர்கள்தம் அறவுறைகே டலமலந்தேன்
தொடர்கின்றேன் உன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான்
அடைகின்றேன் ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
செம்பவள திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர்
கொம்பமருங் கொடிமருங்கிற் கோல்வளையா ளொருபாகர்
வம்பவிழும் மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த
அம்பவள ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானே
மணியானே வானவர்க்கு மருந்தாகி பிணிதீர்க்கும்
அணியானே ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
ஊழித்தீ யாய்நின்றாய் உள்குவார் உள்ளத்தாய்
வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே
பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம்
ஆழித்தீ ஐயாறார காளாய்நான் உய்ந்தேனே
சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறி புரமெரித்த வித்தகனே
உடையானே உடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும்
அடையானே ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் அருத்தானாய்
எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கோர் இயல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
அருத்தனாயென்பதற்கு உண்ணப்படும் பொருள்களாயின
என பொருள்படுகின்றது
மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய்
பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய்
நின்னானார் இருவர்க்குங் காண்பரிய நிமிர்சோதி
அன்னானே ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்த
பத்தர்பலர் நீர்மூழ்கி பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்கள் எம்பெருமா னெனஇறைஞ்சும்
அத்திசையாம் ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
கருவரைசூழ் கடலிலங்கை கோமானை கருத்தழி
திருவிரலால் உதகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி
பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி என்றேத்தும்
அருவரைசூழ் ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

தசபுராணம்
பண் பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பருவரை யொன்றுசுற்றி அரவங்கை விட்ட
இமையோர் இரிந்து பயமா
திருநெடு மால்நிறத்தை அடுவான் விசும்பு
சுடுவா னெழுந்த விசைபோ
பெருகிட மற்றிதற்கொர் பிதிகார மொன்றை
அருளாய் பிரானே எனலும்
அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட
அவனண்டர் அண்ட ரரசே
நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்ட மூட
நிலநின்று தம்ப மதுவ
பரமொரு தெய்வமெய்த இதுவொப்ப தில்லை
யிருபாலு நின்று பணி
பிரமனு மாலுமேலை முடியோடு பாதம்
அறியாமை நின்ற பெரியோன்
பரமுத லாயதேவர் சிவனாய மூர்த்தி
யவனா நமக்கோர் சரணே
காலமு நாள்கள்ஊழி படையா முன்ஏக
உருவாகி மூவர் உருவில்
சாலவு மாகிமிக்க சமயங்க ளாறின்
உருவாகி நின்ற தழலோன்
ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழு முண்டு
குறளாயோ ராலின் இலைமேல்
பாலனு மாயவற்கோர் பரமாய மூர்த்தி
யவனா நமக்கோர் சரணே
நீடுயர் மண்ணுவிண்ணும் நெடுவேலை குன்றொ
டுலகேழு மெங்கு நலி
சூடிய கையராகி இமையோர் கணங்கள்
துதியோதி நின்று தொழலும்
ஓடிய தாருகன்றன் உடலம் பிளந்து
ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மாநடத்தெ மனலாடி பாதம்
அவையா நமக்கோர் சரணே
நிலைவலி இன்றியெங்கும் நிலனோடு விண்ணும்
நிதனஞ்செய் தோடு புரமூன்
றலைநலி வஞ்சியோடி அரியோடு தேவர்
அரணம் புகத்தன் அருளாற்
கொலைநலி வாளிமூள அரவங்கை நாணும்
அனல்பாய நீறு புரமா
மலைசிலை கையிலொல்க வளைவித்த வள்ள
லவனா நமக்கோர் சரணே
நீலநன் மேனிசெங்கண் வளைவெள் ளெயிற்ற
னெரிகேசன் நேடி வருநாள்
காலைநன் மாலைகொண்டு வழிபாடு செய்யும்
அளவின்கண் வந்து குறுகி
பாலனை ஓடவோட பயமெய்து வித்த
உயிர்வவ்வு பாசம் விடு
காலனை வீடுசெய்த கழல்போலும் அண்டர்
தொழுதோது சூடு கழலே
உயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்வி தன்னில்
அவியுண்ண வந்த இமையோர்
பயமுறு மெச்சனங்கி மதியோனு முற்ற
படிகண்டு நின்று பயமாய்
அயனொடு மாலுமெங்க ளறியாமை யாதி
கமியென் றிறைஞ்சி யகல
சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணன் எந்தை
கழல்கண்டு கொள்கை சரணே
நலமலி மங்கைநங்கை விளையாடி யோடி
நயன தலங்கள் கரமா
உலகினை ஏழுமுற்றும் இருள்மூட மூட
இருளோட நெற்றி ஒருகண்
அலர்தர அஞ்சிமற்றை நயனங்கை விட்டு
மடவாள் இறைஞ்ச மதிபோல்
அலர்தரு சோதிபோல அலர்வித்த முக்கண்
அவனா நமக்கோர் சரணே
கழைபடு காடுதென்றல் குயில்கூவ அஞ்சு
கணையோன் அணைந்து புகலும்
மழைவடி வண்ணன்எண்ணி மகவோனை விட்ட
மலரான தொட்ட மதனன்
எழில்பொடி வெந்துவீழ இமையோர் கணங்கள்
எரியென் றிறைஞ்சி யகல
தழல்படு நெற்றிஒற்றை நயனஞ் சிவந்த
தழல்வண்ணன் எந்தை சரணே
தடமலர் ஆயிரங்கள் குறைவொன்ற தாக
நிறைவென்று தன்க ணதனால்
உடன்வழி பாடுசெய்த திருமாலை யெந்தை
பெருமான் உகந்து மிகவும்
சுடரடி யான்முயன்று சுழல்வி தரக்கன்
இதயம் பிளந்த கொடுமை
அடல்வலி ஆழியாழி யவனு களித்த
அவனா நமக்கோர் சரணே
கடுகிய தேர்செலாது கயிலாய மீது
கருதேலுன் வீரம் ஒழிநீ
முடுகுவ தன்றுதன்ம மெனநின்று பாகன்
மொழிவானை நன்று முனியா
விடுவிடு வென்றுசென்று விரைவுற் றரக்கன்
வரையுற் றெடுக்க முடிதோள்
நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம்
நினைவுற்ற தென்றன் மனனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

பாவநாசத்திருப்பதிகம்
பண் பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பற்றற் றார்சேற் பழம்பதியை
பாசூர் நிலாய பவளத்தை
சிற்றம் பலத்தெ திகழ்கனியை
தீண்டற் கரிய திருவுருவை
வெற்றி யூரில் விரிசுடரை
விமலர் கோனை திரைசூழ்ந்த
ஒற்றி யூரெம் உத்தமனை
உள்ள துள்ளே வைத்தேனே
வெற்றியூரென்பது வைப்புத்தலங்களிலொன்று
ஆனை காவில் அணங்கினை
ஆரூர் நிலாய அம்மானை
கான பேரூர கட்டியை
கானூர் முளைத்த கரும்பினை
வான பேரார் வந்தேத்தும்
வாய்மூர் வாழும் வலம்புரியை
மான கயிலை மழகளிற்றை
மதியை சுடரை மறவேனே
மதியங் கண்ணி ஞாயிற்றை
மயக்க தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை
ஐயா றமர்ந்த ஐயனை
விதியை புகழை வானோர்கள்
வேண்டி தேடும் விளக்கினை
நெதியை ஞான கொழுந்தினை
நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே
புறம்ப யத்தெம் முத்தினை
புகலூர் இலங்கு பொன்னினை
உறந்தை யோங்கு சிராப்பள்ளி
உலகம் விளக்கு ஞாயிற்றை
கறங்கு மருவி கழுக்குன்றிற்
காண்பார் காணுங் கண்ணானை
அறஞ்சூழ் அதிகை வீரட்ட
தரிமான் ஏற்றை அடைந்தேனே
உறந்தையென்பது உறையூர்
கோல காவிற் குருமணியை
குடமூ குறையும் விடமுணியை
ஆலங் காட்டி லந்தேனை
அமரர் சென்னி யாய்மலரை
பாலிற் றிகழும் பைங்கனியை
பரா துறையெம் பசும்பொன்னை
சூல தானை துணையிலியை
தோளை குளிர தொழுதேனே
குடமூக்கென்பது கும்பகோணம்
மருக லுறையுமா ணிக்கத்தை
வலஞ் சுழியின் மாலையை
கருகா வூரிற் கற்பகத்தை
காண்டற் கரிய கதிரொளியை
பெருவே ளூரெம் பிறப்பிலியை
பேணு வார்கள் பிரிவரிய
திருவாஞ் சியத்தெஞ் செல்வனை
சிந்தை யுள்ளே வைத்தேனே
எழிலார் இராச சிங்கத்தை
இராமே சுரத்தெம் எழிலேற்றை
குழலார் கோதை வரைமார்பிற்
குற்றா லத்தெங் கூத்தனை
நிழலார் சோலை நெடுங்களத்து
நிலாய நித்த மணாளனை
அழலார் வண்ண தம்மானை
அன்பி லணைத்து வைத்தேனே
மாலை தோன்றும் வளர்மதியை
மறைக்கா டுறையும் மணாளனை
ஆலை கரும்பி னின்சாற்றை
அண்ணா மலையெம் அண்ணலை
சோலை துருத்தி நகர்மேய
சுடரிற் றிகழு துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை
விருப்பால் விழுங்கி யிட்டேனே
சோற்று துறையெஞ் சோதியை
துருத்தி மேய தூமணியை
ஆற்றிற் பழன தம்மானை
ஆல வாயெம் மருமணியை
நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள்
நெய்த்தா னத்தெ நிலாச்சுடரை
தோற்ற கடலை அடலேற்றை
தோளை குளிர தொழுதேனே
புத்தூ ருறையும் புனிதனை
பூவ ணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை
வேள்வி குடியெம் வேதியனை
பொய்த்தார் புரமூன் றெரித்தானை
பொதியில் மேய புராணனை
வைத்தேன் என்றன் மனத்துள்ளே
மாத்தூர் மேய மருந்தையே
மாத்தூரென்பது திருவாமாத்தூர்
முந்தி தானே முளைத்தானை
மூரி வெள்ளே றூர்ந்தானை
அந்தி செவ்வான் படியானை
அரக்க னாற்றல் அழித்தானை
சிந்தை வெள்ள புனலாட்டி
செஞ்சொன் மாலை யடிசேர்த்தி
எந்தை பெம்மான் என்னெம்மான்
என்பார் பாவ நாசமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புகலூர்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளுங்
கையர் கனைகழல் கட்டிய காலினர்
மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும்
பொய்யர் புகலூர புரிசடை யாரே
மேகநல் ஊர்தியர் மின்போல் மிளிர்சடை
பாக மதிநுத லாளையோர் பாகத்தர்
நாக வளையினர்
போகர் புகலூர புரிசடை யாரே
பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடி
கருந்தாழ் குழலியு தாமுங் கலந்து
திருந்தா மனமுடை யார்திற தென்றும்
பொருந்தார் புகலூர புரிசடை யாரே
அக்கார் அணிவடம் ஆகத்தர் நாகத்தர்
நக்கார் இளமதி கண்ணியர் நாடொறும்
உக்கார் தலைபிடி துன்பலி கூர்தொறும்
புக்கார் புகலூர புரிசடை யாரே
ஆர்த்தார் உயிரடும் அந்தகன் றன்னுடல்
பேர்த்தார் பிறைநுதற் பெண்ணின்நல் லாள்உட
கூர்த்தார் மருப்பிற் கொலைக்களிற் றீருரி
போர்த்தார் புகலூர புரிசடை யாரே
தூமன் சுறவ துதைந்த கொடியுடை
காமன் கணைவலங் காய்ந்தமு கண்ணினர்
சேம நெறியினர் சீரை யுடையவர்
பூமன் புகலூர புரிசடை யாரே
உதைத்தார் மறலி உருளவோர் காலாற்
சிதைத்தார் திகழ்தக்கன் செய்தநல் வேள்வி
பதைத்தார் சிரங்கரங் கொண்டுவெய் யோன்கண்
புதைத்தார் புகலூர புரிசடை யாரே
கரிந்தார் தலையர் கடிமதில் மூன்று
தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ண
விரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கை
புரிந்தார் புகலூர புரிசடை யாரே
ஈண்டார் அழலி னிருவருங் கைதொழ
நீண்டார் நெடுந்தடு மாற்ற நிலையஞ்ச
மாண்டார்தம் என்பு மலர்க்கொன்றை மாலையும்
பூண்டார் புகலூர புரிசடை யாரே
கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி
இறுத்தார் இலங்கையர் கோன்முடி பத்தும்
அறுத்தார் புலனைந்தும் ஆயிழை பாகம்
பொறுத்தார் புகலூர புரிசடை யாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் அக்கினீசுவரர்
தேவியார் கருந்தார்குழலியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் அரநெறி
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
எத்தீ புகினும் எமக்கொரு தீதிலை
தெத்தே யெனமுரன் றெம்முள் உழிதர்வர்
முத்தீ யனையதோர் மூவிலை வேல்பிடி
தத்தீ நிறத்தார் அரநெறி யாரே
வீரமும் பூண்பர் விசயனொ டாயதோர்
தாரமும் பூண்பர் தமக்கன்பு பட்டவர்
பாரமும் பூண்பர்நற் பைங்கண் மிளிரர
வாரமும் பூண்பர் அரநெறி யாரே
தஞ்சவண் ணத்தர் சடையினர் தாமுமோர்
வஞ்சவண் ணத்தர்வண் டார்குழ லாளொடு
துஞ்சவண் ணத்தர்துஞ் சாதகண் ணார்தொழும்
அஞ்சவண் ணத்தர் அரநெறி யாரே
விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின்
றிழித்தனர் கங்கையை யேத்தினர் பாவங்
கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும்
அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே
துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவண
தற்றவர் தம்வினை யானவெல் லாமற
அற்றவர் ஆரூர் அறநெறி கைதொழ
உற்றவர் தாமொளி பெற்றனர் தாமே
கூடர வத்தர் குரற்கிண் கிணியடி
நீடர வத்தர்முன் மாலை யிடையிருள்
பாடர வத்தர் பணமஞ்சு பைவிரி
தாடர வத்தர் அரநெறி யாரே
கூடவல் லார்குறி பில்லுமை யாளொடும்
பாடவல் லார்பயின் றந்தியுஞ் சந்தியும்
ஆடவல் லார்திரு வாரூர் அரநெறி
நாடவல் லார்வினை வீடவல் லாரே
பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றை
மாலையுங் கண்ணியு மாவன சேவடி
காலையு மாலையுங் கைதொழு வார்மனம்
ஆலயம் ஆரூர் அரநெறி யார்க்கே
முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பிற்
பொடிவண்ண தம்புக ழூர்தியின் வண்ணம்
படிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி
றடிவண்ணம் ஆரூர் அரநெறி யார்க்கே
பொன்னவில் புன்சடை யானடி யின்னிழல்
இன்னருள் சூடியெள் காதுமி ராப்பகல்
மன்னவர் கின்னரர் வானவர் தாந்தொழும்
அன்னவர் ஆரூர் அரநெறி யாரே
பொருள்மன் னனைப்பற்றி புட்பகங் கொண்ட
மருள்மன் னனையெற்றி வாளுட னீந்து
கருள்மன் னுகண்டங் கறுக்க நஞ்சுண்ட
அருள்மன்னர் ஆரூர் அரநெறி யாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வன்மீகநாதர் தேவியார் அல்லியங்கோதையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

விடந்தீர்த்ததிருப்பதிகம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே
இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம்
இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண்
இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு
இரண்டுகொ லாமவர் எய்தின தாமே
மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன
மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண்
மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே
நாலுகொ லாமவர் தம்முக மாவன
நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும்
நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள்
நாலுகொ லாமறை பாடின தாமே
அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம்
அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன
அஞ்சுகொ லாமவர் காயப்ப டான்கணை
அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே
ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன
ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம்
ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால்
ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே
ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன
ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல்
ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள்
ஏழுகொ லாமிசை யாக்கின தாமே
எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம்
எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர்
எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன
எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே
ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போலவர் கோல குழற்சடை
ஒன்பது போலவர் பாரிட தானே
பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாமெயி றுந்நெரி துக்கன
பத்துக்கொ லாமவர் காயப்ப டான்றலை
பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே
இது அப்பூதிநாயனார் புத்திரரை தீண்டியவிடம்
நீங்கும்படி அருளிச்செய்தது
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர்
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
சூல படையானை சூழாக வீழருவி
கோலத்தோ குங்குமஞ்சேர் குன்றெ டுடையானை
பாலொத்த மென்மொழியாள் பங்கனை பாங்காய
ஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே
பக்கமே பாரிடங்கள் சூழ படுதலையிற்
புக்கவூர பிச்சையேற் றுண்டு பொலிவுடைத்தா
கொக்கிறகின் தூவல் கொடியெடுத்த கோவணத்தோ
டக்கணிந்த அம்மானை நான்கண்ட தாரூரே
சேய உலகமுஞ் செல்சார்வு மானானை
மாயப்போர் வல்லானை மாலைதாழ் மார்பனை
வேயொத்த தோளியர்தம் மென்முலைமேல் தண்சாந்தின்
திடையானை நான்கண்ட தாரூரே
ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின்படர
மாறேற்றார் வல்லரணஞ் சீறி மயானத்தின்
நீறேற்ற மேனியானாய் நீள்சடைமேல் நீர்ததும்ப
ஆறேற்ற அந்தணனை நான்கண்ட தாரூரே
தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் ஏறேறி
பாங்கான வூர்க்கெல்லாஞ் செல்லும் பரமனார்
தேங்காவி நாறு திருவாரூர தொன்னகரில்
பூங்கோயி லுள்மகிழ்ந்து போகா திருந்தாரே
எம்பட்டம் பட்ட முடையானை யேர்மதியின்
நும்பட்டஞ் சேர்ந்த நுதலானை அந்திவா
செம்ப டுடுத்து சிறுமா னுரியாடை
அம்ப டசைத்தானை நான்கண்ட தாரூரே
போழொத்த வெண்மதியஞ் சூடி பொலிந்திலங்கு
வேழ துரிபோர்த்தான் வெள்வளையாள் தான்வெருவ
ஊழித்தீ யன்னானை ஓங்கொலிமா பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே
வஞ்சனையா ரார்பாடுஞ் சாராத மைந்தனை
துஞ்சிருளில் ஆடல் உகந்தானை தன்தொண்டர்
நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரி
தஞ்சுடராய் நின்றானை நான்கண்ட தாரூரே
காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்ன
நீரமுது கோதையோ டாடிய நீள்மார்பன்
பேரமுத முண்டார்கள் பெருங்கடல்நஞ்
சாரமுதா வுண்டானை நான்கண்ட தாரூரே
தாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன்
கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
ஆடரவ கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனை
ஆடுந்தீ கூத்தனை நான்கண்ட தாரூரே
மஞ்சாடு குன்றடர வூன்றி மணிவிரலாற்
றுஞ்சாப்போர் வாளரக்கன் றோள்நெரி கண்குருதி
செஞ்சா தணிவித்து தன்மார்பில் பால்வெண்ணீற்
றஞ்சா தணிந்தானை நான்கண்ட தாரூரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர்
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
காண்டலேகரு தாய்நினைந்திரு
தேன்மனம்புகு தாய்கழலடி
பூண்டுகொண் டொழிந்தேன்
புறம்போயி னாலறையோ
ஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை
மேலெழுகொடி வானிளம்மதி
தீண்டிவ துலவு
திருவாரூ ரம்மானே
கடம்படந்நட மாடினாய்களை
கண்ணெனக்கொரு காதல்செய்தடி
ஒடுங்கி வந்தடை
தேனொழிப்பாய் பிழைப்பவெல்லாம்
முடங்கிறால்முது நீர்மலங்கிள
வாளைசெங்கயல் சேல்வரால்களி
றடைந்த தண்கழனி
அணியாரூ ரம்மானே
அருமணித்தடம் பூண்முலை
அரம்பையரொ டருளிப்பாடியர்
உரிமையிற் றொழுவார்
உத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர்
சைவர்பாசுப தர்கபாலிகள்
தெருவினிற் பொலியு
திருவாரூ ரம்மானே
பூங்கழல்தொழு தும்பரவியும்
புண்ணியாபுனி தாவுன்பொற்கழல்
ஈங்கிருக்க பெற்றேன்
என்னகுறை யுடையேன்
ஓங்குதெங்கிலை யார்கமுகிப
வாழைமாவொடு மாதுளம்பல
தீங்கனி சிதறு
திருவாரூ ரம்மானே
நீறுசேர்செழு மார்பினாய்நிரம்
பாமதியொடு நீள்சடையிடை
ஆறுபாய வைத்தாய்
அடியே அடைந்தொழிந்தேன்
ஏறிவண்டொடு தும்பியஞ்சிற
கூன்றவிண்ட மலரிதழ்வழி
தேறல்பா தொழுகு
திருவாரூ ரம்மானே
அளித்துவந்தடி கைதொழுமவர்
மேல்வினைகெடு மென்றிவையகங்
களித்துவ துடனே
கலந்தாட காதலரா
குளித்துமூழ்கியு தூவியுங்குடை
தாடுகோதையர் குஞ்சியுள்புக
தெளிக்கு தீர்த்தமறா
திருவாரூ ரம்மானே
திரியுமூவெயில் தீயெழச்சிலை
வாங்கிநின்றவ னேயென்சிந்தையு
பிரியுமா றெங்ஙனே
பிழைத்தேயும் போகலொட்டேன்
பெரியசெந்நெற் பிரம்புரிகெந்த
சாலிதிப்பிய மென்றிவையக
தரியு தண்கழனி
யணியாரூ ரம்மானே
பிறத்தலும்பிற தாற்பிணிப்பட
வாய்ந்தசைந்துட லம்புகுந்துநின்
றிறக்குமா றுளதே
இழித்தேன் பிறப்பினைநான்
அறத்தையேபுரி தமனத்தனாய்
ஆர்வச்செற்றக்கு ரோதநீக்கியுன்
திறத்தனாய் ஒழிந்தேன்
திருவாரூ ரம்மானே
முளைத்தவெண்பிறை மொய்சடையுடை
யாயெப்போதுமென் னெஞ்சிடங்கொள்ள
வளைத்து கொண்டிருந்தேன்
வலிசெய்து போகலொட்டேன்
அளைப்பிரிந்த அலவன்போய்ப்புகு
தந்தகாலமுங் கண்டுதன்பெடை
திளைக்கு தண்கழனி
திருவாரூ ரம்மானே
நாடினார்கம லம்மலரய
னோடிரணியன் ஆகங்கீண்டவன்
நாடி காணமாட்டா
தழலாய நம்பானை
பாடுவார்பணி வார்பல்லாண்டிசை
கூறுபத்தர்கள் சித்தத்துள்புக்கு
தேடி கண்டுகொண்டேன்
திருவாரூ ரம்மானே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர்திருவாதிரைத்திருப்பதிகம்
பண் குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பத்தர்க ளோடு பாவையர் சூழ பலிப்பின்னே
வித்த கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்
நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோ றும்
பிணிதான் தீரும் என்று பிறங்கி கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்க
கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்
வீதிகள் தோறும் வெண்கொடி யோடுவி தானங்கள்
சோதிகள் விட்டு சுடர்மா மணிகள் ஒளிதோன்ற
சாதிக ளாய பவளமு முத்து தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்
குணங்கள் பேசி கூடி பாடி தொண்டர்கள்
பிணங்கி தம்மிற் பித்தரை போல பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்
நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லா
பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங்
கலவ மஞ்ஞை காரென் றெண்ணி களித்துவ
தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்
விம்மா வெருவா விழியா தெழியா வெருட்டுவார்
தம்மாண் பிலரா தரியார் தலையான் முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்க
கம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்
செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
மைந்தர்க ளோடு மங்கையர் கூடிம யங்குவார்
இந்திர னாதி வானவர் சித்தர் எடுத்தேத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்
முடிகள் வணங்கி மூவா தார்கண் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்ல
பொடிகள் பூசி பாடு தொண்டர் புடைசூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்
துன்பம் நும்மை தொழாத நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை யேத்து நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழை பணியே என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்
பாரூர் பௌவ தானை பத்தர் பணிந்தேத்த
சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பார
தோரூர் ஒழியா துலகம் எங்கும் எடுத்தேத்தும்
ஆரூ ரன்றன் ஆதிரை நாளால் அதுவண்ணம்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

கோயில் திருநேரிசை
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
செஞ்சடை கற்றை முற்ற
திளநிலா எறிக்குஞ் சென்னி
நஞ்சடை கண்ட னாரை
காணலா நறவ நாறும்
மஞ்சடை சோலை தில்லை
மல்குசிற் றம்ப லத்தே
துஞ்சடை இருள் கிழி
துளங்கெரி யாடு மாறே
ஏறனார் ஏறு தம்பால்
இளநிலா எறிக்குஞ் சென்னி
ஆறனார் ஆறு சூடி
ஆயிழை யாளோர் பாகம்
நாறுபூஞ் சோலை தில்லை
நவின்றசிற் றம்ப லத்தே
நீறுமெய் பூசி நின்று
நீண்டெரி யாடு மாறே
சடையனார் சாந்த நீற்றர்
தனிநிலா எறிக்குஞ் சென்னி
உடையனா ருடைத லையில்
உண்பதும் பிச்சை யேற்று
கடிகொள்பூ தில்லை தன்னு
கருதுசிற் றம்ப லத்தே
அடிகழ லார்க்க நின்று
வனலெரி யாடு மாறே
பையர வசைத்த அல்குற்
பனிநிலா எறிக்குஞ் சென்னி
மையரி கண்ணி யாளும்
மாலுமோர் பாக மாகி
செய்யெரி தில்லை தன்னு
டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
கையெரி வீசி நின்று
கனலெரி யாடு மாறே
ஓதினார் வேதம் வாயால்
ஒளிநிலா எறிக்குஞ் சென்னி
பூதனார் பூதஞ் சூழ
புலியுரி யதள னார்தாம்
நாதனார் தில்லை தன்னுள்
நவின்றசிற் றம்ப லத்தே
காதில்வெண் குழைகள் தாழ
கனலெரி யாடு மாறே
ஓருடம் பிருவ ராகி
ஒளிநிலா எறிக்குஞ் சென்னி
பாரிடம் பாணி செ
பயின்றஎம் பரம மூர்த்தி
காரிட தில்லை தன்னு
கருதுசிற் றம்ப லத்தே
பேரிடம் பெருக நின்று
பிறங்கெரி யாடு மாறே
முதற்றனி சடையை மூழ்க
முகிழ்நிலா எறிக்குஞ் சென்னி
மதக்களிற் றுரிவை போர்த்த
மைந்தரை காண லாகும்
மதத்துவண் டறையுஞ் சோலை
மல்குசிற் றம்ப லத்தே
கதத்ததோ ரரவ மாட
கனலெரி யாடு மாறே
மறையனார் மழுவொன் றேந்தி
மணிநிலா எறிக்குஞ் சென்னி
இறைவனார் எம்பி ரானார்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறைகொள்நீர தில்லை தன்னு
டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
அறைகழ லார்க்க நின்று
வனலெரி யாடு மாறே
விருத்தனா பால னாகி
விரிநிலா எறிக்குஞ் சென்னி
நிருத்தனார் நிருத்தஞ் செய்ய
நீண்டபுன் சடைகள் தாழ
கருத்தனார் தில்லை தன்னு
கருதுசிற் றம்ப லத்தே
அருத்தமா மேனி தன்னோ
டனலெரி யாடு மாறே
பாலனாய் விருத்த னாகி
பனிநிலா எறிக்குஞ் சென்னி
காலனை காலாற் காய்ந்த
கடவுளார் விடையொன் றேறி
ஞாலமா தில்லை தன்னுள்
நவின்றசிற் றம்ப லத்தே
நீலஞ்சேர் கண்ட னார்தாம்
நீண்டெரி யாடு மாறே
மதியிலா அரக்க னோடி
மாமலை யெடுக்க நோக்கி
நெதியன்றோள் நெரிய வூன்றி
நீடிரும் பொழில்கள் சூழ்ந்த
மதியந்தோய் தில்லை தன்னுள்
மல்குசிற் றம்ப லத்தே
அதிசயம் போல நின்று
வனலெரி யாடு மாறே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மூலத்தானநாயகர் சபாநாதர் தேவியார் சிவகாமியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

கோயில் திருநேரிசை
பண் கொல்லி
திருச்சிற்றம்பலம்
பத்தனா பாட மாட்டேன்
பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கேன்
என்னைநீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை
அம்பல தாடு கின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான்
அடியனேன் வந்த வாறே
கருத்தனா பாட மாட்டேன்
காம்பன தோளி பங்கா
ஒருத்தரா லறிய வொண்ணா
திருவுரு வுடைய சோதீ
திருத்தமா தில்லை தன்னு
டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
நிருத்தம்நான் காண வேண்டி
நேர்பட வந்த வாறே
கேட்டிலேன் கிளைபி ரியேன்
கேட்குமா கேட்டி யாகில்
நாட்டினேன் நின்றன் பாதம்
நடுப்பட நெஞ்சி னுள்ளே
மாட்டினீர் வாளை பாயு
மல்குசிற் றம்ப லத்தே
கூட்டமாங் குவிமு லையாள்
கூடநீ யாடு மாறே
சிந்தையை திகைப்பி யாதே
செறிவுடை அடிமை செய்ய
எந்தைநீ அருளி செய்யாய்
யாதுநான் செய்வ தென்னே
செந்தியார் வேள்வி ஓவா
தில்லைச்சிற் றம்ப லத்தே
அந்தியும் பகலும் ஆட
அடியிணை அலசுங் கொல்லோ
கண்டவா திரிந்து நாளுங்
கருத்தினால் நின்றன் பாதங்
கொண்டிரு தாடி பாடி
கூடுவன் குறிப்பி னாலே
வண்டுபண் பாடுஞ் சோலை
மல்குசிற் றம்ப லத்தே
எண்டிசை யோரு மேத்த
இறைவநீ யாடு மாறே
பார்த்திரு தடிய னேன்நான்
பரவுவன் பாடி யாடி
மூர்த்தியே என்பன் உன்னை
மூவரில் முதல்வன் என்பன்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்
தில்லைச்சிற் றம்ப லத்து
கூத்தாவுன் கூத்து காண்பான்
கூடநான் வந்த வாறே
பொய்யினை தவிர விட்டு
புறமலா அடிமை செய்ய
ஐயநீ அருளி செய்யாய்
ஆதியே ஆதி மூர்த்தி
வையக தன்னில் மிக்க
மல்குசிற் றம்ப லத்தே
பையநின் னாடல் காண்பான்
பரமநான் வந்த வாறே
மனத்தினார் திகைத்து நாளும்
மாண்பலா நெறிகள் மேலே
கனைப்பரால் என்செய் கேனோ
கறையணி கண்ட தானே
தினைத்தனை வேதங் குன்றா
தில்லைச்சிற் றம்ப லத்தே
அனைத்துநின் னிலயங் காண்பான்
அடியனேன் வந்த வாறே
நெஞ்சினை தூய்மை செய்து
நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ
வானவர் தலைவ னேநீ
மஞ்சடை சோலை தில்லை
மல்குசிற் றம்ப லத்தே
அஞ்சொலாள் காண நின்று
அழகநீ யாடு மாறே
மண்ணுண்ட மால வனும்
மலர்மிசை மன்னி னானும்
விண்ணுண்ட திருவு ருவம்
விரும்பினார் காண மாட்டார்
திண்ணுண்ட திருவே மிக்க
தில்லைச்சிற் றம்ப லத்தே
பண்ணுண்ட பாட லோடும்
பரமநீ யாடு மாறே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவதிகைவீரட்டானம் திருநேரிசை
இரும்புகொ பளித்த யானை
ஈருரி போர்த்த ஈசன்
கரும்புகொ பளித்த இன்சொற்
காரிகை பாக மாக
சுரும்புகொ பளித்த கங்கை
துவலைநீர் சடையி லேற்ற
அரும்புகொ பளித்த சென்னி
அதிகைவீ ரட்ட னாரே
கொம்புகொ பளித்த திங்க
கோணல்வெண் பிறையுஞ் சூடி
வம்புகொ பளித்த கொன்றை
வளர்சடை மேலும் வைத்து
செம்புகொ பளித்த மூன்று
மதிலுடன் சுருங்க வாங்கி
அம்புகொ பளிக்க எய்தார்
அதிகைவீ ரட்ட னாரே
விடையுங்கொ பளித்த பாதம்
விண்ணவர் பரவி யேத்த
சடையுங்கொ பளித்த திங்க
சாந்தவெண் ணீறு பூசி
உடையுங்கொ பளித்த நாகம்
உள்குவார் உள்ள தென்றும்
அடையுங்கொ பளித்த சீரார்
அதிகைவீ ரட்ட னாறே
கறையுங்கொ பளித்த கண்டர்
காமவேள் உருவம் மங்க
இறையுங்கொ பளித்த கண்ணார்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
மறையுங்கொ பளித்த நாவர்
வண்டுண்டு பாடுங் கொன்றை
அறையுங்கொ பளித்த சென்னி
அதிகைவீ ரட்ட னாரே
நீறுகொ பளித்த மார்பர்
நிழல்திகழ் மழுவொன் றேந்தி
கூறுகொ பளித்த கோதை
கோல்வளை மாதோர் பாகம்
ஏறுகொ பளித்த பாதம்
இமையவர் பரவி யேத்த
ஆறுகொ பளித்த சென்னி
அதிகைவீ ரட்ட னாரே
வணங்குகொ பளித்த பாதம்
வானவர் பரவி யேத்த
பிணங்குகொ பளித்த சென்னி
சடையுடை பெருமை யண்ணல்
சுணங்குகொ பளித்த கொங்கை
சுரிகுழல் பாக மாக
அணங்குகொ பளித்த மேனி
அதிகைவீ ரட்ட னாரே
சூலங்கொ பளித்த கையர்
சுடர்விடு மழுவாள் வீசி
நூலுங்கொ பளித்த மார்பில்
நுண்பொறி யரவஞ் சேர்த்தி
மாலுங்கொ பளித்த பாகர்
வண்டுபண் பாடுங் கொன்றை
ஆலங்கொ பளித்த கண்ட
ததிகைவீ ரட்ட னாறே
நாகங்கொ பளித்த கையர்
நான்மறை யாய பாடி
மேகங்கொ பளித்த திங்கள்
விரிசடை மேலும் வைத்து
பாகங்கொ பளித்த மாதர்
பண்ணுடன் பாடி யாட
ஆகங்கொ பளித்த தோளார்
அதிகைவீ ரட்ட னாரே
பரவுகொ பளித்த பாடல்
பண்ணுடன் பத்தர் ஏத்த
விரவுகொ பளித்த கங்கை
விரிசடை மேவ வைத்து
இரவுகொ பளித்த கண்டர்
ஏத்துவா ரிடர்கள் தீர்ப்பார்
அரவுகொ பளித்த கையர்
அதிகைவீ ரட்ட னாரே
தொண்டைகொ பளித்த செவ்வா
துடியிடை பரவை யல்குற்
கொண்டைகொ பளித்த கோதை
கோல்வளை பாக மாக
வண்டுகொ பளித்த தீந்தேன்
வரிக்கயல் பருகி மாந்த
கெண்டைகொ பளித்த தெண்ணீர
கெடிலவீ ரட்ட னாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவதிகைவீரட்டானம் திருநேரிசை
வெண்ணிலா மதி தன்னை
விரிசடை மேவ வைத்து
உண்ணிலா புகுந்து நின்றங்
குணர்வினு குணர கூறி
விண்ணிலார் மீ சூரர்
வேண்டுவார் வேண்டு வார்க்கே
அண்ணியார் பெரிதுஞ் சேயார்
அதிகைவீ ரட்ட னாரே
பாடினார் மறைகள் நான்கும்
பாயிருள் புகுந்தென் உள்ளங்
கூடினார் கூட லால
வாயிலார் நல்ல கொன்றை
சூடினார் சூடல் மேவி
சூழ்சுடர சுடலை வெண்ணீ
றாடினார் ஆடல் மேவி
அதிகைவீ ரட்ட னாரே
ஊனையே கழிக்க வேண்டில்
உணர்மின்கள் உள்ள துள்ளே
தேனைய மலர்கள் கொண்டு
சிந்தையு சிந்தி கின்ற
ஏனைய பலவு மாகி
இமையவர் ஏத்த நின்று
ஆனையின் உரிவை போர்த்தார்
அதிகைவீ ரட்ட னாரே
துருத்தியாங் குரம்பை தன்னில்
தொண்ணூற்றங் கறுவர் நின்று
விருத்திதான் தருக வென்று
வேதனை பலவுஞ் செய்ய
வருத்தியால் வல்ல வாறு
வந்துவ தடைய நின்ற
அருத்தியார கன்பர் போலும்
அதிகைவீ ரட்ட னாரே
பத்தியால் ஏத்தி நின்று
பணிபவர் நெஞ்ச துள்ளார்
துத்திஐ தலைய நாகஞ்
சூழ்சடை முடிமேல் வைத்து
உத்தர மலையர் பாவை
உமையவள் நடுங்க அன்று
அத்தியின் உரிவை போர்த்தார்
அதிகைவீ ரட்ட னாரே
வரிமுரி பாடி யென்றும்
வல்லவா றடைந்து நெஞ்சே
கரியுரி மூட வல்ல
கடவுளை கால தாலே
சுரிபுரி விரிகு ழலாள்
துடியிடை பரவை யல்குல்
அரிவையோர் பாகர் போலும்
அதிகைவீ ரட்ட னாரே
நீதியால் நினைசெய் நெஞ்சே
நிமலனை நித்த மாக
பாதியாம் உமைதன் னோடும்
பாகமாய் நின்ற எந்தை
சோதியா சுடர்வி ளக்கா
சுண்ணவெண் ணீற தாடி
ஆதியும் ஈறு மானார்
அதிகைவீ ரட்ட னாரே
எல்லியும் பகலு மெல்லா
துஞ்சுவேற் கொருவர் வந்து
புல்லிய மனத்து கோயில்
புக்கனர் காம னென்னும்
வில்லிஐங் கணையி னானை
வெந்துக நோக்கி யிட்டார்
அல்லியம் பழன வேலி
அதிகைவீ ரட்ட னாரே
ஒன்றவே யுணர்தி ராகில்
ஓங்கார தொருவ னாகும்
வென்றஐம் புலன்கள் தம்மை
விலக்குதற் குரியீ ரெல்லாம்
நன்றவன் நார ணனும்
நான்முகன் நாடி காண்குற்
றன்றவர கரியர் போலும்
அதிகைவீ ரட்ட னாரே
தடக்கையால் எடுத்து வைத்து
தடவரை குலுங்க ஆர்த்து
கிடக்கையால் இடர்க ளோங
கிளர்மணி முடிகள் சாய
முடக்கினார் திருவி ரலான்
முருகமர் கோதை பாக
தடக்கினார் என்னை யாளும்
அதிகைவீ ரட்ட னாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவதிகைவீரட்டானம் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
நம்பனே எங்கள் கோவே
நாதனே ஆதி மூர்த்தி
பங்கனே பரம யோகி
என்றென்றே பரவி நாளுஞ்
செம்பொனே பவள குன்றே
திகழ்மலர பாதங் காண்பான்
அன்பனே அலந்து போனேன்
அதிகைவீ ரட்ட னாரே
பொய்யினால் மிடைந்த போர்வை
புரைபுரை அழுகி வீழ
மெய்யனாய் வாழ மாட்டேன்
வேண்டிற்றொன் றைவர் வேண்டார்
செய்யதா மரைகள் அன்ன
சேவடி இரண்டுங் காண்பான்
ஐயநான் அலந்து போனேன்
அதிகைவீ ரட்ட னாரே
நீதியால் வாழ மாட்டேன்
நித்தலு தூயே னல்லேன்
ஓதியும் உணர மாட்டேன்
உன்னையுள் வைக்க மாட்டேன்
சோதியே சுடரே உன்றன்
தூமலர பாதங் காண்பான்
ஆதியே அலந்து போனேன்
அதிகைவீ ரட்ட னாரே
தெருளுமா தெருள மாட்டேன்
தீவினை சுற்ற மென்னும்
பொருளுளே அழுந்தி நாளும்
போவதோர் நெறியுங் காணேன்
இருளுமா மணிகண் டாநின்
இணையடி இரண்டுங் காண்பான்
அருளுமா றருள வேண்டும்
அதிகைவீ ரட்ட னாரே
அஞ்சினால் இயற்ற பட்ட
ஆக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்க பட்டிங்
குழிதரும் ஆத னேனை
அஞ்சினால் உய்க்கும் வண்ணங்
காட்டினா கச்ச தீர்ந்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி
அதிகைவீ ரட்ட னாரே
உறுகயி றூசல் போல
ஒன்றுவி டொன்று பற்றி
மறுகயி றூசல் போல
வந்துவ துலவு நெஞ்சம்
பெறுகயி றூசல் போல
பிறைபுல்கு சடையாய் பா
தறுகயி றூச லானேன்
அதிகைவீ ரட்ட னாரே
கழித்திலேன் காம வெந்நோய்
காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி
உணர்வெனும் இமைதி றந்து
விழித்திலேன் வெளிறு தோன்ற
வினையெனுஞ் சரக்கு கொண்டேன்
அழித்திலேன் அயர்த்து போனேன்
அதிகைவீ ரட்ட னாரே
மன்றத்து புன்னை போல
மரம்படு துயர மெய்தி
ஒன்றினால் உணர மாட்டேன்
உன்னையுள் வைக்க மாட்டேன்
கன்றிய காலன் வந்து
கருக்குழி விழுப்ப தற்கே
அன்றினான் அல திட்டேன்
அதிகைவீ ரட்ட னாரே
பிணிவிடா ஆக்கை பெற்றேன்
பெற்றமொன் றேறு வானே
பணிவிடா இடும்பை யென்னும்
பாசன தழுந்து கின்றேன்
துணிவிலேன் தூய னல்லேன்
தூமலர பாதங் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன்
அதிகைவீ ரட்ட னாரே
திருவினாள் கொழுந னாரு
திசைமுக முடைய கோவும்
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும்
இணையடி காண மாட்டா
ஒருவனே எம்பி ரானே
உன்திரு பாதங் கண்பான்
அருவனே அருள வேண்டும்
அதிகைவீ ரட்ட னாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவதிகைவீரட்டானம் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
மடக்கினார் புலியின் தோலை
மாமணி நாகங் கச்சா
முடக்கினார் முகிழ்வெண் டிங்கள்
மொய்சடை கற்றை தன்மேல்
தொடக்கினார் தொண்டை செவ்வா
துடியிடை பரவை யல்குல்
அடக்கினார் கெடில வேலி
அதிகைவீ ரட்ட னாரே
சூடினார் கங்கை யாளை
சூடிய துழனி கேட்டங்
கூடினாள் நங்கை யாளும்
ஊடலை ஒழிக்க வேண்டி
பாடினார் சாம வேதம்
பாடிய பாணி யாலே
ஆடினார் கெடில வேலி
அதிகைவீ ரட்ட னாரே
கொம்பினார் குழைத்த வேனற்
கோமகன் கோல நீர்மை
நம்பினார் காண லாகா
வகையதோர் நடலை செய்தார்
வெம்பினார் மதில்கள் மூன்றும்
வில்லிடை எரித்து வீழ்த்த
அம்பினார் கெடில வேலி
அதிகைவீ ரட்ட னாரே
மறிபட கிடந்த கையர்
வளரிள மங்கை பாகஞ்
செறிபட கிடந்த செக்கர
செழுமதி கொழுந்து சூடி
பொறிபட கிடந்த நாகம்
புகையுமிழ தழல வீக்கி
கிறிபட நடப்பர் போலுங்
கெடிலவீ ரட்ட னாரே
நரிவரால் கவ்வ சென்று
நற்றசை இழந்த தொத்த
தெரிவரால் மால்கொள் சிந்தை
தீர்ப்பதோர் சிந்தை செய்வார்
வரிவரால் உகளு தெண்ணீணர
கழனிசூழ் பழன வேலி
அரிவரால் வயல்கள் சூழ்ந்த
அதிகைவீ ரட்ட னாரே
புள்ளலை துண்ட ஓட்டில்
உண்டுபோய் பலாசங் கொம்பின்
சுள்ளலை சுடலை வெண்ணீ
றணிந்தவர் மணிவெள் ளேற்று
துள்ளலை பாகன் றன்னை
தொடர்ந்திங்கே கிடக்கின் றேனை
அள்ளலை கடப்பி தாளும்
அதிகைவீ ரட்ட னாரே
நீறிட்ட நுதலர் வேலை
நீலஞ்சேர் கண்டர் மாதர்
கூறிட்ட மெய்ய ராகி
கூறினார் ஆறும் நான்குங்
கீறிட்ட திங்கள் சூடி
கிளர்தரு சடையி னுள்ளால்
ஆறிட்டு முடிப்பர் போலும்
அதிகைவீ ரட்ட னாரே
காணிலார் கருத்தில் வாரார்
திருத்தலார் பொருத்த லாகார்
ஏணிலார் இறப்பும் இல்லார்
பிறப்பிலார் துறக்க லாகார்
நாணிலார் ஐவ ரோடும்
இட்டெனை விரவி வைத்தார்
ஆணலார் பெண்ணும் அல்லார்
அதிகைவீ ரட்ட னாரே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
தீர்த்தமா மலையை நோக்கி
செருவலி அரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை அஞ்ச
பெருவிர லதனை யூன்றி
சீர்த்தமா முடிகள் பத்துஞ்
சிதறுவி தவனை யன்று
ஆர்த்தவாய் அலற வைத்தார்
அதிகைவீ ரட்ட னாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவதிகைவீரட்டானம் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
முன்பெலாம் இளைய காலம்
மூர்த்தியை நினையா தோடி
கண்கண இருமி நாளுங்
கருத்தழி தருத்த மின்றி
பின்பக லுணங்கல் அட்டும்
பேதைமார் போன்றேன் உள்ளம்
அன்பனாய் வாழ மாட்டேன்
அதிகைவீ ரட்ட னாரே
கறைப்பெருங் கண்ட தானே
காய்கதிர் நமனை யஞ்சி
நிறைப்பெருங் கடலை கண்டேன்
நீள்வரை யுச்சி கண்டேன்
பிறைப்பெருஞ் சென்னி யானே
பிஞ்ஞகா இவைய னைத்தும்
அறுப்பதோர் உபாயங் காணேன்
அதிகைவீ ரட்ட னாரே
நாதனா ரென்ன நாளும்
நடுங்கின ராகி தங்கள்
ஏதங்கள் அறிய மாட்டார்
இணையடி தொழுதோம் என்பார்
ஆதனா னவனென் றெள்கி
அதிகைவீ ரட்ட னேநின்
பாதநான் பரவா துய்க்கும்
பழவினை பரிசி லேனே
சுடலைசேர் சுண்ண மெய்யர்
சுரும்புண விரிந்த கொன்றை
படலைசேர் அலங்கல் மார்பர்
பழனஞ்சேர் கழனி தெங்கின்
மடலைநீர் கிழிய வோடி
அதனிடை மணிகள் சிந்துங்
கெடிலவீ ரட்ட மேய
கிளர்சடை முடிய னாரே
மந்திர முள்ள தாக
மறிகட லெழுநெய் யாக
இந்திரன் வேள்வி தீயில்
எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ்
சிந்திர மாக நோக்கி
தெருட்டுவார் தெருட்ட வந்து
கந்திரம் முரலுஞ் சோலை
கானலங் கெடில தாரே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள்
சிதைந்து போயின
மைஞ்ஞல மனைய கண்ணாள்
பங்கன்மா மலையை யோடி
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க
விசைதணி தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம் பெழுவி கொண்டு
காதலால் இனிது சொன்ன
கின்னரங் கேட்டு கந்தார்
கெடிலவீ ரட்ட னாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்செம்பொன்பள்ளி திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
ஊனினுள் ளுயிரை வாட்டி
யுணர்வினார கெளிய ராகி
வானினுள் வான வர்க்கும்
அறியலா காத வஞ்சர்
நானெனிற் றானே யென்னு
ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
தேனும்இன் னமுது மானார்
திருச்செம்பொன் பள்ளி யாரே
நொய்யவர் விழுமி யாரும்
நூலினுள் நெறியை காட்டும்
மெய்யவர் பொய்யு மில்லார்
உடலெனும் இடிஞ்சில் தன்னில்
நெய்யமர் திரியு மாகி
நெஞ்சத்துள் விளக்கு மாகி
செய்யவர் கரிய கண்டர்
திருச்செம்பொன் பள்ளி யாரே
வெள்ளியர் கரியர் செய்யர்
விண்ணவ ரவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர் ஊழி யூழி
யுலகம தேத்த நின்ற
பள்ளியர் நெஞ்ச துள்ளார்
பஞ்சமம் பாடி யாடு
தெள்ளியர் கள்ள தீர்ப்பார்
திருச்செம்பொன் பள்ளி யாரே
தந்தையு தாயு மாகி
தானவன் ஞான மூர்த்தி
முந்திய தேவர் கூடி
முறைமுறை இருக்கு சொல்லி
எந்தைநீ சரண மென்றங்
கிமையவர் பரவி யேத்த
சிந்தையு சிவம தானார்
திருச்செம்பொன் பள்ளி யாரே
ஆறுடை சடையர் போலும்
அன்பரு கன்பர் போலுங்
கூறுடை மெய்யர் போலுங்
கோளர வரையர் போலும்
நீறுடை யழகர் போலும்
நெய்தலே கமழு நீர்மை
சேறுடை கமல வேலி
திருச்செம்பொன் பள்ளி யாரே
ஞாலமும் அறிய வேண்டின்
நன்றென வாழ லுற்றீர்
காலமுங் கழிய லான
கள்ளத்தை ஒழிய கில்லீர்
கோலமும் வேண்டா ஆர்வ
செற்றங்கள் குரோத நீக்கில்
சீலமும் நோன்பு மாவார்
திருச்செம்பொன் பள்ளி யாரே
புரிகாலே நேசஞ் செய்ய
இருந்தபுண் டரீக தாரும்
எரிகாலே மூன்று மாகி
இமையவர் தொழநின் றாரும்
தெரிகாலே மூன்று சந்தி
தியானித்து வணங்க நின்று
திரிகாலங் கண்ட எந்தை
திருச்செம்பொன் பள்ளி யாரே
காருடை கொன்றை மாலை
கதிர்மதி அரவி னோடும்
நீருடை சடையுள் வைத்த
நீதியார் நீதி யுள்ளார்
பாரொடு விண்ணும் மண்ணும்
பதினெட்டு கணங்க ளேத்த
சீரொடு பாட லானார்
திருச்செம்பொன் பள்ளி யாரே
ஓவாத மறைவல் லானும்
ஓதநீர் வண்ணன் காணா
மூவாத பிறப்பி லாரும்
முனிகளா னார்கள் ஏத்தும்
பூவான மூன்றும் முந்நூற்
றறுபது மாகும் எந்தை
தேவாதி தேவ ரென்று
திருச்செம்பொன் பள்ளி யாரே
அங்கங்க ளாறு நான்கும்
அந்தணர கருளி செய்து
சங்கங்கள் பாட ஆடுஞ்
சங்கரன் மலைஎ டுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர
அலறிட அடர்த்து நின்றுஞ்
செங்கண்வெள் ளேற தேறு
திருச்செம்பொன் பள்ளி யாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சொர்னபுரீசர் தேவியார் சுகந்தவனநாயகி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கழிப்பாலை திரு நேரிசை
திருச்சிற்றம்பலம்
நங்கையை பாகம் வைத்தார்
ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார்
தங்கையின் யாழும் வைத்தார்
தாமரை மலரும் வைத்தார்
கங்கையை சடையுள் வைத்தார்
கழிப்பாலை சேர்ப்ப னாரே
விண்ணினை விரும்ப வைத்தார்
வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினை பாட வைத்தார்
பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினை தாவ நீண்ட
மாலினு கருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார்
கழிப்பாலை சேர்ப்ப னாரே
வாமனை வணங்க வைத்தார்
வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனை சடைமேல் வைத்தார்
சோதியு சோதி வைத்தார்
ஆமனை யாட வைத்தார்
அன்பெனும் பாசம் வைத்தார்
காமனை காய்ந்த கண்ணார்
கழிப்பாலை சேர்ப்ப னாரே
அரியன அங்கம் வேதம்
அந்தணர கருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும்
பேரழ லுண்ண வைத்தார்
பரியதீ வண்ண ராகி
பவளம்போல் நிறத்தை வைத்தார்
கரியதோர் கண்டம் வைத்தார்
கழிப்பாலை சேர்ப்ப னாரே
கூரிருள் கிழிய நின்ற
கொடுமழு கையில் வைத்தார்
பேரிருள் கழிய மல்கு
பிறைபுனற் சடையுள் வைத்தார்
ஆரிருள் அண்டம் வைத்தார்
அறுவகை சமயம் வைத்தார்
காரிருள் கண்டம் வைத்தார்
கழிப்பாலை சேர்ப்ப னாரே
உட்டங்கு சிந்தை வைத்தார்
உள்குவார குள்ளம் வைத்தார்
விட்டங்கு வேள்வி வைத்தார்
வெந்துயர் தீர வைத்தார்
நட்டங்கு நடமும் வைத்தார்
ஞானமு நவில வைத்தார்
கட்டங்க தோண்மேல் வைத்தார்
கழிப்பாலை சேர்ப்ப னாரே
ஊனப்பே ரொழிய வைத்தார்
ஓதியே உணர வைத்தார்
ஞானப்பேர் நவில வைத்தார்
ஞானமு நடுவும் வைத்தார்
வானப்பே ராறும் வைத்தார்
வைகுந்தற் காழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார்
கழிப்பாலை சேர்ப்ப னாரே
கொங்கினும் அரும்பு வைத்தார்
கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுள் முத்தம் வைத்தார்
சாம்பலும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார்
ஆலமும் உண்டு வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்
கழிப்பாலை சேர்ப்ப னாரே
சதுர்முகன் தானும் மாலு
தம்மிலே இகல கண்டு
எதிர்முக மின்றி நின்ற
எரியுரு வதனை வைத்தார்
பிதிர்முகன் காலன் றன்னை
கால்தனிற் பிதிர வைத்தார்
கதிர்முகஞ் சடையில் வைத்தார்
கழிப்பாலை சேர்ப்ப னாரே
மாலினாள் நங்கை அஞ்ச
மதிலிலங் கைக்கு மன்னன்
வேலினான் வெகுண் டெடு
காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு
நொடிப்பதோ ரளவில் வீழ
காலினால் ஊன்றி யிட்டார்
கழிப்பாலை சேர்ப்ப னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பால்வண்ணவீசுவரர் தேவியார் பொற்பதவேதநாயகி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கடவூர் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பொள்ளத்த காய மா
பொருளினை போக மாதர்
வெள்ளத்தை கழிக்க வேண்டில்
விரும்புமின் விளக்கு தூபம்
உள்ளத்த திரியொன் றேற்றி
உணருமா றுணர வல்லார்
கள்ளத்தை கழிப்பர் போலுங்
கடவூர்வீ ரட்ட னாரே
மண்ணிடை குரம்பை தன்னை
மதித்துநீர் மைய லெய்தில்
விண்ணிடை தரும ராசன்
வேண்டினால் விலக்கு வாரார்
பண்ணிடை சுவைகள் பாடி
ஆடிடும் பத்தர கென்றுங்
கண்ணிடை மணியர் போலுங்
கடவூர்வீ ரட்ட னாரே
பொருத்திய குரம்பை தன்னு
பொய்நடை செலுத்து கின்றீர்
ஒருத்தனை யுணர மாட்டீர்
உள்ளத்திற் கொடுமை நீக்கீர்
வருத்தின களிறு தன்னை
வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினில் இருப்பர் போலுங்
கடவூர்வீ ரட்ட னாரே
பெரும்புலர் காலை மூழ்கி
பித்தற்கு பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்
கார்வத்தை யுள்ளே வைத்து
விரும்பிநல் விளக்கு தூபம்
விதியினால் இடவல் லார்க்கு
கரும்பினிற் கட்டி போல்வார்
கடவூர்வீ ரட்ட னாரே
தலக்கமே செய்து வாழ்ந்து
தக்கவா றொன்று மின்றி
விலக்குவா ரிலாமை யாலே
விளக்கதிற் கோழி போன்றேன்
மலக்குவார் மனத்தி னுள்ளே
காலனார் தமர்கள் வந்து
கலக்கநான் கலங்கு கின்றேன்
கடவூர்வீ ரட்ட னாரே
பழியுடை யாக்கை தன்னிற்
பாழுக்கே நீரி றைத்து
வழியிடை வாழ மாட்டேன்
மாயமு தெளிய கில்லேன்
அழிவுடை தாய வாழ்க்கை
ஐவரால் அலைக்க பட்டு
கழியிடை தோணி போன்றேன்
கடவூர்வீ ரட்ட னாரே
மாயத்தை அறிய மாட்டேன்
மையல்கொள் மனத்த னாகி
பேயொத்து கூகை யானேன்
பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ
நேயத்தால் நினைய மாட்டேன்
நீதனே நீசனேன் நான்
காயத்தை கழிக்க மாட்டேன்
கடவூர்வீ ரட்ட னாரே
பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து
பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா
ரென்னுங்க டுரையோ டொத்தேன்
எற்றுளேன் என்செய் கேன்நான்
இடும்பையால் ஞான மேதுங்
கற்றிலேன் களைகண் காணேன்
கடவூர்வீ ரட்ட னாரே
சேலின்நேர் அனைய கண்ணார்
திறம்விட்டு சிவனு கன்பா
பாலுநற் றயிர்நெய் யோடு
பலபல ஆட்டி யென்றும்
மாலினை தவிர நின்ற
மார்க்கண்டற் காக வன்று
காலனை யுதைப்பர் போலுங்
கடவூர்வீ ரட்ட னாரே
முந்துரு இருவ ரோடு
மூவரு மாயி னாரும்
இந்திர னோடு தேவர்
இருடிகள் இன்பஞ் செய்ய
வந்திரு பதுகள் தோளால்
எடுத்தவன் வலியை வாட்டி
கந்திரு வங்கள் கேட்டார்
கடவூர்வீ ரட்ட னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் அமிர்தகடேசுவரர் தேவியார் அபிராமியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பயற்றூர் திரு நேரிசை
திருச்சிற்றம்பலம்
உரித்திட்டார் ஆனை யின்றோள்
உதிரவா றொழுகி யோட
விரித்திட்டார் உமையா ளஞ்சி
விரல்விதிர தலக்கண் நோக்கி
தரித்திட்டார் சிறிது போது
தரிக்கில ராகி தாமுஞ்
சிரித்திட்டார் எயிறு தோன்ற
திருப்பயற் றூர னாரே
உவந்திட்டங் குமையோர் பாகம்
வைத்தவர் ஊழி யூழி
பவந்திட்ட பரம னார் தாம்
மலைச்சிலை நாகம் ஏற்றி
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றுங்
கனலெரி யாக சீறி
சிவந்திட்ட கண்ணர் போலு
திருப்பயற் றூர னாரே
நங்களு கருள தென்று
நான்மறை யோது வார்கள்
தங்களு கருளும் எங்கள்
தத்துவன் றழலன் றன்னை
எங்களு கருள்செய் யென்ன
நின்றவன் நாகம் அஞ்சு
திங்களு கருளி செய்தார்
திருப்பயற் றூர னாரே
பார்த்தனு கருளும் வைத்தார்
பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்
சாமுண்டி சாம வேதங்
கூத்தொடும் பாட வைத்தார்
கோளரா மதியம் நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார்
திருப்பயற் றூர னாரே
மூவகை மூவர் போலும்
முற்றுமா நெற்றி கண்ணர்
நாவகை நாவர் போலும்
நான்மறை ஞான மெல்லாம்
ஆவகை யாவர் போலும்
ஆதிரை நாளர் போலு
தேவர்கள் தேவர் போலு
திருப்பயற் றூர னாரே
ஞாயிறாய் நமனு மாகி
வருணனா சோம னாகி
தீயறா நிருதி வாயு
திப்பிய சாந்த னாகி
பேயறா காட்டி லாடும்
பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
தீயறா கையர் போலு
திருப்பயற் றூர னாரே
ஆவியாய் அவியு மாகி
அருக்கமா பெருக்க மாகி
பாவியர் பாவ தீர்க்கும்
பரமனா பிரம னாகி
காவியங் கண்ண ளாகி
கடல்வண்ண மாகி நின்ற
தேவியை பாகம் வைத்தார்
திருப்பயற் றூர னாரே
தந்தையா தாயு மாகி
தரணியா தரணி யுள்ளார
கெந்தையு மென்ன நின்ற
ஏழுல குடனு மாகி
எந்தையெம் பிரானே என்றென்
றுள்குவா ருள்ள தென்றுஞ்
சிந்தையுஞ் சிவமு மாவார்
திருப்பயற் றூர னாரே
புலன்களை போக நீக்கி
புந்தியை யொருங்க வைத்து
இலங்களை போக நின்று
இரண்டையும் நீக்கி யொன்றாய்
மலங்களை மாற்ற வள்ளார்
மனத்தினு போக மாகி
சினங்களை களைவர் போலு
திருப்பயற் றூர னாரே
மூர்த்திதன் மலையின் மீது
போகாதா முனிந்து நோக்கி
பார்த்துத்தான் பூமி மேலாற்
பாய்ந்துடன் மலையை பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும்
அடர்த்துநல் லரிவை யஞ்ச
தேத்தெத்தா என்ன கேட்டார்
திருப்பயற் றூர னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் திருப்பயத்தீசுவரர்
தேவியார் காவியங்கண்ணியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமறைக்காடு திரு நேரிசை
திருச்சிற்றம்பலம்
இந்திர னோடு தேவர்
இருடிகள் ஏத்து கின்ற
சுந்தர மானார் போலு
துதிக்கலாஞ் சோதி போலுஞ்
சந்திர னோடுங் கங்கை
அரவையுஞ் சடையுள் வைத்து
மந்திர மானார் போலும்
மாமறை காட னாரே
தேயன நாட ராகி
தேவர்கள் தேவர் போலும்
பாயன நாட றுக்கும்
பத்தர்கள் பணிய வம்மின்
காயன நாடு கண்டங்
கதனுளார் காள கண்டர்
மாயன நாடர் போலும்
மாமறை காட னாரே
அறுமையிவ் வுலகு தன்னை
யாமென கருதி நின்று
வெறுமையின் மனைகள் வாழ்ந்து
வினைகளால் நலிவு ணாதே
சிறுமதி அரவு கொன்றை
திகழ்தரு சடையுள் வைத்து
மறுமையும் இம்மை யாவார்
மாமறை காட னாரே
கால்கொடு திருகை யேற்றி
கழிநிரை திறைச்சி மேய்ந்து
தோல்படு துதிர நீராற்
சுவரெடு திரண்டு வாசல்
ஏல்வுடை தாவ மைத்தங்
கேழுசா லேகம் பண்ணி
மால்கொடு தாவி வைத்தார்
மாமறை காட னாரே
விண்ணினார் விண்ணின் மிக்கார்
வேதங்கள் விரும்பி யோத
பண்ணினார் கின்ன ரங்கள்
பத்தர்கள் பாடி யாட
கண்ணினார் கண்ணி னுள்ளே
சோதியாய் நின்ற எந்தை
மண்ணினார் வலங்கொண் டேத்தும்
மாமறை காட னாரே
அங்கையுள் அனலும் வைத்தார்
அறுவகை சமயம் வைத்தார்
தங்கையில் வீணை வைத்தார்
தம்மடி பரவ வைத்தார்
திங்களை கங்கை யோடு
திகழ்தரு சடையுள் வைத்தார்
மங்கையை பாகம் வைத்தார்
மாமறை காட னாரே
கீதரா கீதங் கேட்டு
கின்னர தன்னை வைத்தார்
வேதராய் வேத மோதி
விளங்கிய சோதி வைத்தார்
ஏதராய் நட்ட மாடி
இட்டமா கங்கை யோடு
மாதையோர் பாகம் வைத்தார்
மாமறை காட னாரே
கனத்தினார் வலி யுடைய
கடிமதில் அரணம் மூன்றுஞ்
சினத்தினு சினமாய் நின்று
தீயெழ செற்றார் போலு
தனத்தினை தவிர்ந்து நின்று
தம்மடி பரவு வார்க்கு
மனத்தினுள் மாசு தீர்ப்பார்
மாமறை காட னாரே
தேசனை தேசன் றன்னை
தேவர்கள் போற்றி சைப்பார்
வாசனை செய்து நின்று
வைகலும் வணங்கு மின்கள்
காசினை கனலை என்றுங்
கருத்தினில் வைத்த வர்க்கு
மாசினை தீர்ப்பர் போலும்
மாமறை காட னாரே
பிணியுடை யாக்கை தன்னை
பிறப்பறு துய்ய வேண்டிற்
பணியுடை தொழில்கள் பூண்டு
பத்தர்கள் பற்றி னாலே
துணிவுடை அரக்க னோடி
எடுத்தலு தோகை அஞ்ச
மணிமுடி பத்தி றுத்தார்
மாமறை காட னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வேதாரணியேசுவரர்
தேவியார் யாழைப்பழித்தமொழியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமறைக்காடு திரு நேரிசை
திருச்சிற்றம்பலம்
தேரையு மேல்க டாவி
திண்ணமா தெளிந்து நோக்கி
யாரையு மேலு ணரா
ஆண்மையான் மிக்கான் தன்னை
பாரையும் விண்ணும் அஞ்ச
பரந்த தோள் முடியடர்த்து
காரிகை அஞ்ச லென்பார்
கலிமறை காட னாரே
முக்கிமுன் வெகுண்டெ டுத்த
முடியுடை அரக்கர்கோனை
நக்கிரு தூன்றி சென்னி
நாண்மதி வைத்த எந்தை
அக்கர வாமை பூண்ட
அழகனார் கருத்தி னாலே
தெக்குநீர திரைகள் மோது
திருமறை காட னாரே
மிகப்பெரு துலாவ மிக்கா
னக்கொரு தேர்க டாவி
அகப்படு தென்று தானும்
ஆண்மையால் மிக்க ரக்கன்
உகைத்தெடு தான்ம லையை
ஊன்றலும் அவனை யாங்கே
நகைப்படு தருளி னானூர்
நான்மறை காடு தானே
அந்தர தேர்க டாவி
யாரிவ னென்று சொல்லி
உந்தினான் மாம லையை
ஊன்றலும் ஒள்ள ரக்கன்
பந்தமா தலைகள் பத்தும்
வாய்கள்வி டலறி வீழ
சிந்தனை செய்து விட்டார்
திருமறை காட னாரே
தடுக்கவு தாங்க வொண்ணா
தன்வலி யுடைய னாகி
கடுக்கவோர் தேர்க டாவி
கையிரு பதுக ளாலும்
எடுப்பன்நான் என்ன பண்ட
மென்றெடு தானை ஏங்க
அடுக்கவே வல்ல னூராம்
அணிமறை காடு தானே
நாண்முடி கின்ற சீரான்
நடுங்கியே மீது போகான்
கோள்பிடி தார்த்த கையான்
கொடியன்மா வலிய னென்று
நீண்முடி சடையர் சேரும்
நீள்வரை யெடுக்க லுற்றான்
தோண்முடி நெரிய வைத்தார்
தொன்மறை காட னாரே
பத்துவாய் இரட்டி கைக
ளுடையன்மா வலிய னென்று
பொத்திவாய் தீமை செய்த
பொருவலி அரக்கர் கோனை
கத்திவாய் கதற அன்று
கால்விர லூன்றி யிட்டார்
முத்துவா திரைகள் மோதும்
முதுமறை காட னாரே
பக்கமே விட்ட கையான்
பாங்கிலா மதிய னாகி
புக்கனன் மாம லைக்கீழ
போதுமா றறிய மாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு
வீரமும் இழந்த வாறே
நக்கன பூத மெல்லாம்
நான்மறை காட னாரே
நாணஞ்சு கைய னாகி
நான்முடி பத்தி னோடு
பாணஞ்சு முன்னி ழந்த
பாங்கிலா மதிய னாகி
நீணஞ்சு தானு ணரா
நின்றெடு தானை அன்று
ஏணஞ்சு கைகள் செய்தார்
எழில்மறை காட னாரே
கங்கைநீர் சடையுள் வை
காண்டலும் மங்கை யூட
தென்கையான் தேர்க டாவி
சென்றெடு தான் மலையை
முன்கைமா நரம்பு வெட்டி
முன்னிரு கிசைகள் பாட
அங்கைவாள் அருளி னானூர்
அணிமறை காடு தானே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவிடைமருது திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
காடுடை சுடலை நீற்றர்
கையில்வெண் டலையர் தையல்
பாடுடை பூதஞ் சூழ
பரமனார் மருத வைப்பிற்
தோடுடை கைதை யோடு
சூழ்கிடங் கதனை சூழ்ந்த
ஏடுடை கமல வேலி
இடைமரு திடங்கொண் டாரே
முந்தையார் முந்தி யுள்ளார்
மூவர்க்கு முதல்வ ரானார்
சந்தியார் சந்தி யுள்ளார்
தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தை யுள்ளார்
சிவநெறி யனைத்து மானார்
எந்தையார் எம்பி ரானார்
இடைமரு திடங் கொண்டாரே
காருடை கொன்றை மாலை
கதிர்மணி அரவி னோடு
நீருடை சடையுள் வைத்த
நீதியார் நீதி யாய
போருடை விடையொன் றேற
வல்லவர் பொன்னி தென்பால்
ஏருடை கமல மோங்கும்
இடைமரு திடங் கொண்டாரே
விண்ணினார் விண்ணின் மிக்கார்
வேதங்கள் நான்கும் அங்கம்
பண்ணினார் பண்ணின் மிக்க
பாடலார் பாவ தீர்க்குங்
கண்ணினார் கண்ணின் மிக்க
நுதலினார் காமர் காய்ந்த
எண்ணினார் எண்ணின் மிக்கார்
இடைமரு திடங் கொண்டாரே
வேதங்கள் நான்குங் கொண்டு
விண்ணவர் பரவி ஏத்த
பூதங்கள் பாடி யாட
லுடையவன் புனிதன் எந்தை
பாதங்கள் பரவி நின்ற
பத்தர்கள் தங்கள் மேலை
ஏதங்கள் தீர நின்றார்
இடைமரு திடங் கொண்டாரே
பொறியர வரையி லார்த்து
பூதங்கள் பலவுஞ் சூழ
முறிதரு வன்னி கொன்றை
முதிர்சடை மூழ்க வைத்து
மறிதரு கங்கை தங்க
வைத்தவர் எத்தி சையும்
ஏறிதரு புனல்கொள் வேலி
இடைமரு திடங் கொண்டாரே
படரொளி சடையி னுள்ளாற்
பாய்புனல் அரவி னோடு
சுடரொளி மதியம் வைத்து
தூவொளி தோன்றும் எந்தை
அடரொளி விடையொன் றேற
வல்லவர் அன்பர் தங்கள்
இடரவை கெடவு நின்றார்
இடைமரு திடங் கொண்டாரே
கமழ்தரு சடையி னுள்ளாற்
கடும்புனல் அரவி னோடு
தவழ்தரு மதியம் வைத்து
தன்னடி பலரும் ஏத்த
மழுவது வலங்கை யேந்தி
மாதொரு பாக மாகி
எழில்தரு பொழில்கள் சூழ்ந்த
இடைமரு திடங் கொண்டாரே
பொன்றிகழ் கொன்றை மாலை
புதுப்புனல் வன்னி மத்தம்
மின்றிகழ் சடையில் வைத்து
மேதக தோன்று கின்ற
அன்றவர் அளக்க லாகா
அனலெரி யாகி நீண்டார்
இன்றுட னுலக மேத்த
இடைமரு திடங் கொண்டாரே
மலையுடன் விரவி நின்று
மதியிலா அரக்கன் நூக்க
தலையுட னடர்த்து மீண்டே
தலைவனாய் அருள்கள் நல்கி
சிலையுடை மலையை வாங்கி
திரிபுர மூன்றும் எய்தார்
இலையுடை கமல வேலி
இடைமரு திடங் கொண்டாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மருதீசர் தேவியார் நலமுலைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பழனம் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
ஆடினா ரொருவர் போலு
மலர்கமழ் குழலி னாலை
கூடினா ரொருவர் போலுங்
குளிர்புனல் வளைந்த திங்கள்
சூடினா ரொருவர் போலு
தூயநன் மறைகள் நான்கும்
பாடினா ரொருவர் போலும்
பழனத்தெம் பரம னாரே
போவதோர் நெறியு மானார்
புரிசடை புனித னார்நான்
வேவதோர் வினையிற் பட்டு
வெம்மைதான் விடவுங் கில்லேன்
கூவல்தான் அவர்கள் கேளார்
குணமிலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்
பழனத்தெம் பரம னாரே
கண்டராய் முண்ட ராகி
கையிலோர் கபால மேந்தி
தொண்டர்கள் பாடி யாடி
தொழுகழற் பரம னார்தாம்
விண்டவர் புரங்க ளெய்த
வேதியர் வேத நாவர்
பண்டையென் வினைகள் தீர்ப்பார்
பழனத்தெம் பரம னாரே
நீரவன் தீயி னோடு
நிழலவன் எழில தாய
பாரவன் விண்ணின் மிக்க
பரமவன் பரம யோகி
யாரவ னண்ட மிக்க
திசையினோ டொளிக ளாகி
பாரக தமுத மானார்
பழனத்தெம் பரம னாரே
ஊழியா ரூழி தோறும்
உலகினு கொருவ ராகி
பாழியார் பாவ தீர்க்கும்
பராபரர் பரம தாய
ஆழியான் அன்ன தானும்
அன்றவர கள பரிய
பாழியார் பரவி யேத்தும்
பழனத்தெம் பரம னாரே
ஆலின்கீழ் அறங்க ளெல்லாம்
அன்றவர கருளி செய்து
நூலின்கீ ழவர்க கெல்லா
நுண்பொரு ளாகி நின்று
காலின்கீழ காலன் றன்னை
கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யு மானார்
பழனத்தெம் பரம னாரே
ஆதித்தன் அங்கி சோமன்
அயனொடு மால்பு தனும்
போதித்து நின்று லகிற்
போற்றிசை தாரி வர்கள்
சோதித்தா ரேழு லகுஞ்
சோதியு சோதி யாகி
பாதிப்பெண் ணுருவ மானார்
பழனத்தெம் பரம னாரே
காற்றனாற் காலற் காய்ந்து
காருரி போர்த்த ஈசர்
தோற்றனார் கடலுள் நஞ்சை
தோடுடை காதர் சோதி
ஏற்றினார் இளவெண் டிங்கள்
இரும்பொழில் சூழ்ந்த காயம்
பாற்றினார் வினைக ளெல்லாம்
பழனத்தெம் பரம னாரே
கண்ணனும் பிரம னோடு
காண்கில ராகி வந்தே
எண்ணியு துதித்து மேத்த
எரியுரு வாகி நின்று
வண்ணநன் மலர்கள் தூவி
வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்த
பண்ணுலாம் பாடல் கேட்டார்
பழனத்தெம் பரம னாரே
குடையுடை அரக்கன் சென்று
குளிர்கயி லாய வெற்பின்
இடைமட வரலை அஞ்ச
எடுத்தலும் இறைவன் நோக்கி
விடையுடை விகிர்தன் றானும்
விரலினா லூன்றி மீண்டும்
படைகொடை அடிகள் போலும்
பழனத்தெம் பரம னாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநெய்த்தானம் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
காலனை வீழ செற்ற
கழலடி இரண்டும் வந்தென்
மேலவா யிருக்க பெற்றேன்
மேதக தோன்று கின்ற
கோலநெ தான மென்னுங்
குளிர்பொழிற் கோயில் மேய
நீலம்வை தனைய கண்ட
நினைக்குமா நினைக்கின் றேனே
காமனை யன்று கண்ணாற்
கனலெரி யாக நோக்கி
தூபமு தீபங் காட்டி
தொழுமவர கருள்கள் செய்து
சேமநெ தான மென்னுஞ்
செறிபொழிற் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம்
வாழ்வுற நினைந்த வாறே
பிறைதரு சடையின் மேலே
பெய்புனற் கங்கை தன்னை
உறைதர வைத்த எங்கள்
உத்தமன் ஊழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ
நின்றநெ தான மென்று
குறைதரும் அடிய வர்க்கு
குழகனை கூட லாமே
வடிதரு மழுவொன் றேந்தி
வார்சடை மதியம் வைத்து
பொடிதரு மேனி மேலே
புரிதரு நூலர் போலும்
நெடிதரு பொழில்கள் சூழ
நின்றநெ தானம் மேவி
அடிதரு கழல்கள் ஆர்ப்ப
ஆடுமெம் அண்ண லாரே
காடிட மாக நின்று
கனலெரி கையி லேந்தி
பாடிய பூதஞ் சூழ
பண்ணுடன் பலவுஞ் சொல்லி
ஆடிய கழலார் சீரார்
அந்தண்நெ தானம் என்றுங்
கூடிய குழக னாரை
கூடுமா றறிகி லேனே
வானவர் வணங்கி யேத்தி
வைகலும் மலர்கள் தூவ
தானவர கருள்கள் செய்யும்
சங்கரன் செங்கண் ஏற்றன்
தேனமர் பொழில்கள் சூழ
திகழுநெ தானம் மேய
கூனிள மதியி னானை
கூடுமா றறிகி லேனே
காலதிற் கழல்க ளார்ப்ப
கனலெரி கையில் வீசி
ஞாலமுங் குழிய நின்று
நட்டம தாடு கின்ற
மேலவர் முகடு தோய
விரிசடை திசைகள் பாய
மாலொரு பாக மாக
மகிழ்ந்தநெ தான னாரே
பந்தித்த சடையின் மேலே
பாய்புன லதனை வைத்து
அந்திப்போ தனலு மாடி
அடிகள்ஐ யாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று
வாழ்த்துவார் வாயி னுள்ளார்
சிந்திப்பார் சிந்தை யுள்ளார்
திருந்துநெ தான னாரே
சோதியா சுடரு மானார்
சுண்ணவெண் சாந்து பூசி
ஓதிவா யுலகம் ஏத்த
உகந்துதாம் அருள்கள் செய்வார்
ஆதியாய் அந்த மானார்
யாவரும் இறைஞ்சி யேத்த
நீதியாய் நியம மாகி
நின்றநெ தான னாரே
இலையுடை படைகை யேந்தும்
இலங்கையர் மன்னன் றன்னை
தலையுடன் அடர்த்து மீண்டே
தானவற் கருள்கள் செய்து
சிலையுடன் கணையை சேர்த்து
திரிபுரம் எரி செற்ற
நிலையுடை யடிகள் போலும்
நின்றநெ தான னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் நெய்யாடியப்பர் தேவியார் பாலாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
கங்கையை சடையுள் வைத்தார்
கதிர்பொறி அரவும் வைத்தார்
திங்களை திகழ வைத்தார்
திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையை பாகம் வைத்தார்
மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்
ஐயனை யாற னாரே
பொடிதனை பூச வைத்தார்
பொங்குவெண் ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார்
காலனை காலில் வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை
மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார்
ஐயனை யாற னாரே
உடைதரு கீளும் வைத்தார்
உலகங்க ளனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார்
பாய்புலி தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார்
வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார்
ஐயனை யாற னாரே
தொண்டர்கள் தொழவும் வைத்தார்
தூமதி சடையில் வைத்தார்
இண்டையை திகழ வைத்தார்
எமக்கென்று மின்பம் வைத்தார்
வண்டுசேர் குழலி னாளை
மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்கள் ஏத்தும்
ஐயனை யாற னாரே
வானவர் வணங்க வைத்தார்
வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார்
காமனை கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார்
ஆட்டுவார கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார்
ஐயனை யாற னாரே
சங்கணி குழையும் வைத்தார்
சாம்பல்மெ பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார்
விரிபொழி லனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்
கடுவினை களைய வைத்தார்
அங்கம தோத வைத்தார்
ஐயனை யாற னாரே
பத்தர்க கருளும் வைத்தார்
பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார்
சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார்
முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார்
ஐயனை யாற னாரே
ஏறுக தேற வைத்தார்
இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார்
நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை யாகம் வைத்தார்
கொல்புலி தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார்
ஐயனை யாற னாரே
பூதங்கள் பலவும் வைத்தார்
பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்
கின்னர தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்
பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்
ஐயனை யாற னாரே
இரப்பவர கீய வைத்தார்
ஈபவர கருளும் வைத்தார்
கரப்பவர் தங்க கெல்லாங்
கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர கங்கை தன்னை
படர்சடை பாகம் வைத்தார்
அரக்கனு கருளும் வைத்தார்
ஐயனை யாற னாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு திருநேரிசை
பண் கொல்லி
திருச்சிற்றம்பலம்
குண்டனா சமண ரோடே
கூடிநான் கொண்ட மாலை
துண்டனே சுடர்கொள் சோதீ
தூநெறி யாகி நின்ற
அண்டனே அமரர் ஏறே
திருவையா றமர்ந்த தேனே
தொண்டனேன் தொழுதுன் பாதஞ்
சொல்லிநான் திரிகின் றேனே
பீலிகை இடுக்கி நாளும்
பெரியதோர் தவமென் றெண்ணி
வாலிய தறிகள் போல
மதியிலார் பட்ட தென்னே
வாலியார் வணங்கி ஏத்து
திருவையா றமர்ந்த தேனோ
டாலியா எழுந்த நெஞ்சம்
அழகிதா எழுந்த வாறே
தட்டிடு சமண ரோடே
தருக்கிநான் தவமென் றெண்ணி
ஒட்டிடு மனத்தி னீரே
உம்மையான் செய்வ தென்னே
மொட்டிடு கமல பொய்கை
திருவையா றமர்ந்த தேனோ
டொட்டிடும் உள்ள தீரே
உம்மைநான் உகந்தி டேனே
பாசிப்பல் மாசு மெய்யர்
பலமிலா சமண ரோடு
நேசத்தா லிருந்த நெஞ்சை
நீக்குமா றறிய மாட்டேன்
தேசத்தார் பரவி யேத்து
திருவையா றமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார்
வல்வினை மாயு மன்றே
கடுப்பொடி யட்டி மெய்யிற்
கருதியோர் தவமென் றெண்ணி
வடுக்களோ டிசைந்த நெஞ்சே
மதியிலி பட்ட தென்னே
மடுக்களில் வாளை பாயு
திருவையா றமர்ந்த தேனை
அடுத்துநின் றுன்னு நெஞ்சே
அருந்தவஞ் செய்த வாறே
துறவியென் றவம தோரேன்
சொல்லிய செலவு செய்து
உறவினால் அமண ரோடும்
உணர்விலேன் உணர்வொன் றின்றி
நறவமார் பொழில்கள் சூழ்ந்த
திருவையா றமர்ந்த தேனை
மறவிலா நெஞ்ச மேநன்
மதியுன கடைந்த வாறே
பல்லுரை சமண ரோடே
பலபல கால மெல்லாஞ்
சொல்லிய செலவு செய்தேன்
சோர்வனான் நினைந்த போது
மல்லிகை மலருஞ் சோலை
திருவையா றமர்ந்த தேனை
எல்லியும் பகலு மெல்லாம்
நினைந்தபோ தினிய வாறே
மண்ணுளார் விண்ணு ளாரும்
வணங்குவார் பாவம் போக
எண்ணிலா சமண ரோடே
இசைந்தனை ஏழை நெஞ்சே
தெண்ணிலா எறிக்குஞ் சென்னி
திருவையா றமர்ந்த தேனை
கண்ணினாற் காண பெற்று
கருதிற்றே முடிந்த வாறே
குருந்தம தொசித்த மாலுங்
குலமலர் மேவி னானு
திருந்துநற் றிருவ டியு
திருமுடி காண மாட்டார்
அருந்தவ முனிவ ரேத்து
திருவையா றமர்ந்த தேனை
பொருந்திநின் றுன்னு நெஞ்சே
பொய்வினை மாயு மன்றே
அறிவிலா அரக்க னோடி
அருவரை எடுக்க லுற்று
முறுகினான் முறு கண்டு
மூதறி வாளன் நோக்கி
நிறுவினான் சிறுவி ரலால்
நெரிந்துபோய் நிலத்தில் வீழ
அறிவினால் அருள்கள் செய்தான்
திருவையா றமர்ந்த தேனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
தானலா துலக மில்லை
சகமலா தடிமை யில்லை
கானலா தாட லில்லை
கருதுவார் தங்க ளுக்கு
வானலா தருளு மில்லை
வார்குழல் மங்கை யோடும்
ஆனலா தூர்வ தில்லை
ஐயனை யாற னார்க்கே
ஆலலால் இருக்கை இல்லை
அருந்தவ முனிவர கன்று
நூலலால் நொடிவ தில்லை
நுண்பொரு ளாய்ந்து கொண்டு
மாலுநான் முகனுங் கூடி
மலரடி வணங்க வேலை
ஆலலால் அமுத மில்லை
ஐயனை யாற னார்க்கே
நரிபுரி சுடலை தன்னில்
நடமலால் நவிற்ற லில்லை
சுரிபுரி குழலி யோடு
துணையலால் இருக்கை யில்லை
தெரிபுரி சிந்தை யார்க்கு
தெளிவலால் அருளு மில்லை
அரிபுரி மலர்கொண் டேத்தும்
ஐயனை யாற னார்க்கே
தொண்டலாற் றுணையு மில்லை
தோலலா துடையு மில்லை
கண்டலா தருளு மில்லை
கலந்தபின் பிரிவ தில்லை
பண்டைநான் மறைகள் காணா
பரிசின னென்றென் றெண்ணி
அண்டவா னவர்கள் ஏத்தும்
ஐயனை யாற னார்க்கே
எரியலா லுருவ மில்லை
ஏறலால் ஏற லில்லை
கரியலாற் போர்வை யில்லை
காண்டகு சோதி யார்க்கு
பிரிவிலா அமரர் கூடி
பெருந்தகை பிரானென் றேத்தும்
அரியலாற் றேவி யில்லை
ஐயனை யாற னார்க்கே
என்பலாற் கலனு மில்லை
எருதலா லூர்வ தில்லை
புன்புலால் நாறு காட்டிற்
பொடியலாற் சாந்து மில்லை
துன்பிலா தொண்டர் கூடி
தொழுதழு தாடி பாடும்
அன்பலாற் பொருளு மில்லை
ஐயனை யாற னார்க்கே
கீளலால் உடையு மில்லை
கிளர்பொறி யரவம் பைம்பூண்
தோளலாற் றுணையு மில்லை
தொத்தலர் கின்ற வேனில்
வேளலாற் கா பட்ட
வீரரு மில்லை மீளா
ஆளலாற் கைம்மா றில்லை
ஐயனை யாற னார்க்கே
சகமலா தடிமை யில்லை
தானலாற் றுணையு மில்லை
நகமெலா தே கையான்
நாண்மலர் தொழுது தூவி
முகமெலாங் கண்ணீர் மல்க
முன்பணி தேத்து தொண்டர்
அகமலாற் கோயி லில்லை
ஐயனை யாற னார்க்கே
உமையலா துருவ மில்லை
உலகலா துடைய தில்லை
நமையெலா முடைய ராவர்
நன்மையே தீமை யில்லை
கமையெலா முடைய ராகி
கழலடி பரவு தொண்டர
கமைவிலா அருள் கொடுப்பார்
ஐயனை யாற னார்க்கே
மலையலா லிருக்கை யில்லை
மதித்திடா அரக்கன் றன்னை
தலையலால் நெரித்த தில்லை
தடவரை கீழ டர்த்து
நிலையிலார் புரங்கள் வேவ
நெருப்பலால் விரித்த தில்லை
அலையினார் பொன்னி மன்னும்
ஐயனை யாற னார்க்கே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சோற்றுத்துறை திருநேரிசை
பண் கொல்லி
திருச்சிற்றம்பலம்
பொய்விரா மேனி தன்னை
பொருளென காலம் போக்கி
மெய்விரா மனத்த னல்லேன்
வேதியா வேத நாவா
ஐவரால் அலைக்க பட்ட
ஆக்கைகொண் டயர்த்து போனேன்
செய்வரால் உகளுஞ் செம்மை
திருச்சோற்று துறைய னாரே
கட்டராய் நின்று நீங்கள்
காலத்தை கழிக்க வேண்டா
எட்டவாங் கைகள் வீசி
எல்லிநின் றாடு வானை
அட்டமா மலர்கள் கொண்டே
ஆனஞ்சும் ஆட்ட ஆடி
சிட்டராய் அருள்கள் செய்வார்
திருச்சோற்று துறைய னாரே
கல்லினாற் புரமூன் றெய்த
கடவுளை காத லாலே
எல்லியும் பகலு முள்ளே
ஏகாந்த மாக ஏத்தும்
பல்லில்வெண் டலைகை யேந்தி
பல்லில திரியுஞ் செல்வர்
சொல்லுநன் பொருளு மாவார்
திருச்சோற்று துறைய னாரே
கறையரா கண்ட நெற்றி
கண்ணரா பெண்ணோர் பாகம்
இறையராய் இனிய ராகி
தனியரா பனிவெண் டிங்க
பிறையரா செய்த வெல்லாம்
பீடரா கேடில் சோற்று
துறையரா புகுந்தெ னுள்ள
சோர்வுகண் டருளி னாரே
பொந்தையை பொருளா வெண்ணி
பொருக்கென காலம் போனேன்
எந்தையே ஏக மூர்த்தி
யென்றுநின் றேத்த மாட்டேன்
பந்தமாய் வீடு மாகி
பரம்பர மாகி நின்று
சிந்தையு டேறல் போலு
திருச்சோற்று துறைய னாரே
பேர்த்தினி பிறவா வண்ணம்
பிதற்றுமின் பேதை பங்கன்
பார்த்தனு கருள்கள் செய்த
பாசுப தன்றி றமே
ஆர்த்துவ திழிவ தொத்த
அலைபுனற் கங்கை யேற்று
தீர்த்தமா போத விட்டார்
திருச்சோற்று துறைய னாரே
கொந்தார்பூங் குழலி னாரை
கூறியே காலம் போன
எந்தையெம் பிரானாய் நின்ற
இறைவனை ஏத்தா தந்தோ
முந்தரா அல்கு லாளை
யுடன்வைத்த ஆதி மூர்த்தி
செந்தாது புடைகள் சூழ்ந்த
திருச்சோற்று துறைய னாரே
அங்கதி ரோன வனை
அண்ணலா கருத வேண்டா
வெங்கதி ரோன் வழியே
போவதற் கமைந்து கொண்மின்
அங்கதி ரோன வனை
யுடன்வைத்த ஆதி மூர்த்தி
செங்கதி ரோன்வ ணங்குஞ்
திருச்சோற்று துறைய னாரே
ஓதியே கழிக்கின் றீர்கள்
உலகத்தீர் ஒருவன் றன்னை
நீதியால் நினைக்க மாட்டீர்
நின்மலன் என்று சொல்லீர்
சாதியா நான்மு கனுஞ்
சக்கர தானுங் காணா
சோதியா சுடர தானார்
திருச்சோற்று துறைய னாரே
மற்றுநீர் மனம்வை யாதே
மறுமையை கழிக்க வேண்டிற்
பெற்றதோர் உபா தன்னாற்
பிரானையே பிதற்று மின்கள்
கற்றுவ தரக்க னோடி
கயிலாய மலைஎ டுக்க
செற்றுக தருளி செய்தார்
திருச்சோற்று துறைய னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் தொலையாச்செல்வர் தேவியார் ஒப்பிலாம்பிகை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருத்துருத்தி திருநேரிசை
பண் கொல்லி
திருச்சிற்றம்பலம்
பொருத்திய குரம்பை தன்னை
பொருளென கருத வேண்டா
இருத்தியெ போதும் நெஞ்சுள்
இறைவனை ஏத்து மின்கள்
ஒருத்தியை பாகம் வைத்தங்
கொருத்தியை சடையில் வைத்த
துருத்தியஞ் சுடரி னானை
தொண்டனேன் கண்ட வாறே
சவைதனை செய்து வாழ்வான்
சலத்துளே யழுந்து கின்ற
இவையொரு பொருளு மல்ல
இறைவனை ஏத்து மின்னோ
அவைபுர மூன்றும் எய்தும்
அடியவர கருளி செய்த
சுவையினை துருத்தி யானை
தொண்டனேன் கண்ட வாறே
உன்னியெ போதும் நெஞ்சுள்
ஒருவனை ஏத்து மின்னோ
கன்னியை ஒருபால் வைத்து
கங்கையை சடையுள் வைத்து
பொன்னியின் நடுவு தன்னுள்
பூம்புனல் பொலிந்து தோன்று
துன்னிய துருத்தி யானை
தொண்டனேன் கண்ட வாறே
ஊன்றலை வலிய னாகி
உலகத்துள் உயிர்க கெல்லா
தான்றலை பட்டு நின்று
சார்கன லகத்து வீழ
வான்றலை தேவர் கூடி
வானவர கிறைவா வென்னு
தோன்றலை துருத்தி யானை
தொண்டனேன் கண்ட வாறே
உடல்தனை கழிக்க லுற்ற
உலகத்துள் உயிர்க கெல்லாம்
இடர்தனை கழிக்க வேண்டில்
இறைவனை ஏத்து மின்னோ
கடல்தனில் நஞ்ச முண்டு
காண்பரி தாகி நின்ற
சுடர்தனை துருத்தி யானை
தொண்டனேன் கண்ட வாறே
அள்ளலை கடக்க வேண்டில்
அரனையே நினைமி னீணர்கள்
பொள்ளலி கா தன்னு
புண்டரீ கத்தி ருந்த
வள்ளலை வான வர்க்குங்
காண்பரி தாகி நின்ற
துள்ளலை துருத்தி யானை
தொண்டனேன் கண்ட வாறே
பாதியில் உமையாள் தன்னை
பாகமா வைத்த பண்பன்
வேதியன் என்று சொல்லி
விண்ணவர் விரும்பி ஏத்த
சாதியாஞ் சதுர்மு கனுஞ்
சக்கர தானுங் காணா
சோதியை துருத்தி யானை
தொண்டனேன் கண்ட வாறே
சாமனை வாழ்க்கை யான
சலத்துளே யழுந்த வேண்டா
தூமநல் லகிலுங் காட்டி
தொழுதடி வணங்கு மின்னோ
சோமனை சடையுள் வைத்து
தொன்னெறி பலவுங் காட்டு
தூமன துருத்தி யானை
தொண்டனேன் கண்டா வாறே
குண்டரே சமணர் புத்தர்
குறியறி யாது நின்று
கண்டதே கருது வார்கள்
கருத்தெண்ணா தொழிமி னீணர்கள்
விண்டவர் புரங்கள் எய்து
விண்ணவர கருள்கள் செய்த
தொண்டர்கள் துணையி னானை
துருத்திநான் கண்ட வாறே
பிண்டத்தை கழிக்க வேண்டிற்
பிரானையே பிதற்று மின்கள்
அண்டத்தை கழிய நீண்ட
அடலர கன்றன் ஆண்மை
கண்டொத்து கால்வி ரலால்
ஊன்றிமீண் டருளி செய்த
துண்டத்து துருத்தி யானை
தொண்டனேன் கண்ட வாறே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வேதேசுவரர்
தேவியார் முகிழாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்காஞ்சிமேற்றளி திருநேரிசை
பண் கொல்லி
திருச்சிற்றம்பலம்
மறையது பாடி பிச்சை
கென்றக திரிந்து வாழ்வார்
பிறையது சடைமு டிமேற்
பெய்வளை யாள்தன் னோடுங்
கறையது கண்டங் கொண்டார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
இறையவர் பாட லாடல்
இலங்குமேற் றளிய னாரே
மாலன மாயன் றன்னை
மகிழ்ந்தனர் விருத்த ராகும்
பாலனார் பசுப தியார்
பால்வெள்ளை நீறு பூசி
காலனை காலாற் செற்றார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏலநற் கடம்பன் தாதை
இலங்குமேற் றளிய னாரே
விண்ணிடை விண்ண வர்கள்
விரும்பிவ திறைஞ்சி வாழ்த்த
பண்ணிடை சுவையின் மிக்க
கின்னரம் பாடல் கேட்டார்
கண்ணிடை மணியி னொப்பார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணிடை யெழுத்து மானார்
இலங்குமேற் றளிய னாரே
சோமனை அரவி னோடு
சூழ்தர கங்கை சூடும்
வாமனை வான வர்கள்
வலங்கொடு வந்து போற்ற
காமனை காய்ந்த கண்ணார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏமநின் றாடும் எந்தை
இலங்குமேற் றளிய னாரே
ஊனவ ருயிரி னோடு
முலகங்க ளூழி யாகி
தானவர் தனமு மாகி
தனஞ்சய னோடெ திர்ந்த
கானவர் காள கண்டர்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏன கோடு பூண்டார்
இலங்குமேற் றளிய னாரே
மாயனாய் மால னாகி
மலரவ னாகி மண்ணா
தேயமா திசையெ டாகி
தீர்த்தமா திரிதர் கின்ற
காயமா கா துள்ளார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏயமென் றோளி பாகர்
இலங்குமேற் றளிய னாரே
மண்ணினை யுண்ட மாயன்
தன்னையோர் பாகங் கொண்டார்
பண்ணினை பாடி யாடும்
பத்தர்கள் சித்தங் கொண்டார்
கண்ணினை மூன்றுங் கொண்டார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணினை யெண்ண வைத்தார்
இலங்குமேற் றளிய னாரே
செல்வியை பாகங் கொண்டார்
சேந்தனை மகனா கொண்டார்
மல்லிகை கண்ணி யோடு
மாமலர கொன்றை சூடி
கல்வியை கரையி லாத
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார்
இலங்குமேற் றளிய னாரே
வேறிணை யின்றி யென்றும்
விளங்கொளி மருங்கி னாளை
கூறிய லாக வைத்தார்
கோளரா மதியும் வைத்தார்
ஆறினை சடையுள் வைத்தார்
அணிபொழிற் கச்சி தன்னுள்
ஏறினை யேறு மெந்தை
இலங்குமேற் றளிய னாரே
தென்னவன் மலையெ டுக்க
சேயிழை நடுங கண்டு
மன்னவன் விரலா லூன்ற
மணிமுடி நெரிய வாயாற்
கன்னலின் கீதம் பாட
கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற் கருளி செய்தார்
இலங்குமேற் றளிய னாரே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் திருமேற்றளிநாதர் தேவியார் திருமேற்றளிநாயகி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஏகம்பம் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
நம்பனை நகர மூன்றும்
எரியுண வெருவ நோக்கும்
அம்பனை அமுதை யாற்றை
அணிபொழிற் கச்சி யுள்ளே
கம்பனை கதிர்வெண் திங்க
செஞ்சடை கடவுள் தன்னை
செம்பொனை பவள தூணை
சிந்தியா எழுகின் றேனே
ஒருமுழம் உள்ள குட்டம்
ஒன்பது துளையு டைத்தாய்
அரைமுழம் அதன் அகலம்
அதனில்வாழ் முதலை ஐந்து
பெருமுழை வாய்தல் பற்றி
கிடந்துநான் பிதற்று கின்றேன்
கருமுகில் தவழும் மாட
கச்சியே கம்ப னீரே
மலையினார் மகளோர் பாக
மைந்தனார் மழுவொன் றேந்தி
சிலையினால் மதில்கள் மூன்று
தீயெழ செற்ற செல்வர்
இலையினார் சூலம் ஏந்தி
ஏகம்பம் மேவி னாரை
தலையினால் வணங்க வல்லார்
தலைவர்க்கு தலைவர் தாமே
பூத்தபொற் கொன்றை மாலை
புரிசடை கணிந்த செல்வர்
தீர்த்தமாங் கங்கை யாளை
திருமுடி திகழ வைத்து
ஏத்துவார் ஏத்த நின்ற
ஏகம்பம் மேவி னாரை
வாழ்த்துமா றறிய மாட்டேன்
மால்கொடு மயங்கி னேனே
மையினார் மலர்நெ டுங்கண்
மங்கையோர் பங்க ராகி
கையிலோர் கபாலம் ஏந்தி
கடைதொறும் பலிகொள் வார்தாம்
எய்வதோர் ஏனம் ஓட்டி
ஏகம்பம் மேவி னாரை
கையினாற் றொழவல் லார்க்கு
கடுவினை களைய லாமே
தருவினை மருவுங் கங்கை
தங்கிய சடையன் எங்கள்
அருவினை அகல நல்கும்
அண்ணலை அமரர் போற்று
திருவினை திருவே கம்பஞ்
செப்பிட உறைய வல்ல
உருவினை உருகி ஆங்கே
உள்ளத்தால் உகக்கின் றேனே
கொண்டதோர் கோல மாகி
கோலக்கா வுடைய கூத்தன்
உண்டதோர் நஞ்ச மாகில்
உலகெலாம் உய்ய உண்டான்
எண்டிசை யோரும் ஏத்த
நின்றஏ கம்பன் றன்னை
கண்டுநான் அடிமை செய்வான்
கருதியே திரிகின் றேனே
படமுடை அரவி னோடு
பனிமதி யதனை சூடி
கடமுடை யுரிவை மூடி
கண்டவர் அஞ்ச அம்ம
இடமுடை கச்சி தன்னுள்
ஏகம்பம் மேவி னான்றன்
நடமுடை யாடல் காண
ஞாலந்தான் உய்ந்த வாறே
பொன்றிகழ் கொன்றை மாலை
பொருந்திய நெடுந்தண் மார்பர்
நன்றியிற் புகுந்தெ னுள்ளம்
மெள்ளவே நவில நின்று
குன்றியில் அடுத்த மேனி
குவளையங் கண்டர் எம்மை
இன்றுயில் போது கண்டார்
இனியர்ஏ கம்ப னாரே
துருத்தியார் பழன துள்ளார்
தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார்
அவரவர கருள்கள் செய்தே
எருத்தினை இசைய ஏறி
ஏகம்பம் மேவி னார்க்கு
வருத்திநின் றடிமை செய்வார்
வல்வினை மாயு மன்றே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவொற்றியூர் திருநேரிசை
பண் கொல்லி
திருச்சிற்றம்பலம்
வெள்ளத்தை சடையில் வைத்த
வேதகீ தன்றன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டின்
மெய்தரு ஞான தீயாற்
கள்ளத்தை கழிய நின்றார்
காயத்து கலந்து நின்று
உள்ளத்துள் ஒளியு மாகும்
ஒற்றியூ ருடைய கோவே
வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா
வானவர் இறைவன் நின்று
புசிப்பதோர் பொள்ள லாக்கை
யதனொடும் புணர்வு வேண்டில்
அசிர்ப்பெனும் அருந்த வத்தால்
ஆன்மாவி னிடம தாகி
உசிர்ப்பெனும் உணர்வு முள்ளார்
ஒற்றியூ ருடைய கோவே
தானத்தை செய்து வாழ்வான்
சலத்துளே அழுந்து கின்றீர்
வானத்தை வணங்க வேண்டில்
வம்மின்கள் வல்லீ ராகில்
ஞானத்தை விளக்கை ஏற்றி
நாடியுள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும்
ஒற்றியூ ருடைய கோவே
காமத்துள் அழுந்தி நின்று
கண்டரால் ஒறுப்புண் ணாதே
சாமத்து வேத மாகி
நின்றதோர் சயம்பு தன்னை
ஏமத்தும் இடையி ராவும்
ஏகாந்தம் இயம்பு வார்க்கு
ஓமத்துள் ஒளிய தாகும்
ஒற்றியூ ருடைய கோவே
சமையமே லாறு மாகி
தானொரு சயம்பு வாகி
இமையவர் பரவி யேத்த
இனிதினங் கிருந்த ஈசன்
கமையினை யுடைய ராகி
கழலடி பரவு வார்க்கு
உமையொரு பாகர் போலும்
ஒற்றியூ ருடைய கோவே
ஒருத்திதன் றலைச்சென் றாளை
கரந்திட்டான் உலக மேத்த
ஒருத்திக்கு நல்ல னாகி
மறுப்படு தொளித்து மீண்டே
ஒருத்தியை பாகம் வைத்தான்
உணர்வினால் ஐயம் உண்ணி
ஒருத்திக்கு நல்ல னல்லன்
ஒற்றியூ ருடைய கோவே
பிணமுடை உடலு காக
பித்தரா திரிந்து நீங்கள்
புணர்வெனும் போகம் வேண்டா
போக்கலாம் பொய்யை நீங்க
நிணமுடை நெஞ்சி னுள்ளால்
நினைக்குமா நினைக்கின் றார்க்கு
உணர்வினோ டிருப்பர் போலும்
ஒற்றியூ ருடைய கோவே
பின்னுவார் சடையான் தன்னை
பிதற்றிலா பேதை மார்கள்
துன்னுவார் நரக தன்னுள்
தொல்வினை தீர வேண்டின்
மன்னுவான் மறைக ளோதி
மனத்தினுள் விளக்கொன் றேற்றி
உன்னுவார் உள்ள துள்ளார்
ஒற்றியூ ருடைய கோவே
முள்குவார் போகம் வேண்டின்
முயற்றியா லிடர்கள் வந்தால்
எள்குவார் எள்கி நின்றங்
கிதுவொரு மாய மென்பார்
பள்குவார் பத்த ராகி
பாடியு மாடி நின்று
உள்குவார் உள்ள துள்ளார்
ஒற்றியூ ருடைய கோவே
வெறுத்துக புலன்க ளைந்தும்
வேண்டிற்று வேண்டு நெஞ்சே
மறுத்துக ஆர்வ செற்ற
குரோதங்க ளான மா
பொறுத்துக புட்ப கத்தேர்
உடையானை அடர வூன்றி
ஒறுத்துக தருள்கள் செய்தார்
ஒற்றியூ ருடைய கோவே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மாணிக்கத்தியாகர் தேவியார் வடிவுடையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவொற்றியூர் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
ஓம்பினேன் கூட்டை வாளா
உள்ளத்தோர் கொடுமை வைத்து
காம்பிலா மூழை போல
கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வா தேரை போல
பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ கொள்ளாய்
ஒற்றியூ ருடைய கோவே
மனமெனு தோணி பற்றி
மதியெனுங் கோலை யூன்றி
சினமெனுஞ் சரக்கை யேற்றி
செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி
மறியும்போ தறிய வொண்ணா
துனையுனும் உணர்வை நல்காய்
ஒற்றியூ ருடய கோவே
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கயிலாயம் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
கனகமா வயிர முந்து
மாமணி கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி
யெடுத்தலு முமையா ளஞ்ச
அனகனாய் நின்ற ஈச
னூன்றலு மலறி வீழ்ந்தான்
மனகனா யூன்றி னானேல்
மறித்துநோ கில்லை யன்றே
கதித்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
அதிர்த்தவன் எடுத்தி டலும்
அரிவைதான் அஞ்ச ஈசன்
நெதித்தவ னூன்றி யிட்ட
நிலையழி தலறி வீழ்ந்தான்
மதித்திறை யூன்றி னானேல்
மறித்துநோ கில்லை யன்றே
கறுத்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை கையால்
மறித்தலும் மங்கை அஞ்ச
வானவர் இறைவன் நக்கு
நெறித்தொரு விரலா லூன்ற
நெடுவரை போல வீழ்ந்தான்
மறித்திறை யூன்றி னானேல்
மறித்துநோ கில்லை யன்றே
கடுத்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
எடுத்தலும் மங்கை அஞ்ச
இறையவ னிறையே நக்கு
நொடிப்பள விரலா லூன்ற
நோவது மலறி யிட்டான்
மடித்திறை யூன்றி னானேல்
மறித்துநோ கில்லை யன்றே
கன்றித்தன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
வென்றித்தன் கைத்த லத்தா
லெடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாத
னூன்றலு நகழ வீழ்ந்தான்
மன்றித்தான் ஊன்றி னானேல்
மறித்துநோ கில்லை யன்றே
களித்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
நெளித்தவ னெடுத்தி டலும்
நேரிழை அஞ்ச நோக்கி
வெளித்தவ னூன்றி யிட்ட
வெற்பினா லலறி வீழ்ந்தான்
மளித்திறை யூன்றி னானேல்
மறித்துநோ கில்லை யன்றே
கருத்தனா கண்சி வந்து
கயிலைநன் மலையை கையால்
எருத்தனாய் எடுத்த வாறே
ஏந்திழை அஞ்ச ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன்
திருவிர லூன்ற வீழ்ந்தான்
வருத்துவான் ஊன்றி னானேல்
மறித்துநோ கில்லை யன்றே
கடியவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
வடிவுடை மங்கை அஞ்ச
எடுத்தலும் மருவ நோக்கி
செடிபட திருவி ரலா
லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்
வடிவுற வூன்றி னானேல்
மறித்துநோ கில்லை யன்றே
கரியத்தான் கண்சி வந்து
கயிலைநன் மலையை பற்றி
இரியத்தான் எடுத்தி டலும்
ஏந்திழை அஞ்ச ஈசன்
நெரியத்தான் ஊன்றா முன்னம்
நிற்கிலா தலறி வீழ்ந்தான்
மரியத்தான் ஊன்றி னானேல்
மறித்துநோ கில்லை யன்றே
கற்றனன் கயிலை தன்னை
காண்டலும் அரக்கன் ஓடி
செற்றவன் எடுத்த வாறே
சேயிழை அஞ்ச ஈசன்
உற்றிறை ஊன்றா முன்னம்
உணர்வழி வகையால் வீழ்ந்தான்
மற்றிறை ஊன்றி னானேல்
மறித்துநோ கில்லை யன்றே
இத்தலம் வடநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கைலாயநாதர் தேவியார் பார்வதியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஆப்பாடி திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
கடலகம் ஏழி னோடும்
புவனமுங் கலந்த விண்ணும்
உடலக துயிரும் பாரும்
ஒள்ளழ லாகி நின்று
தடமலர கந்த மாலை
தண்மதி பகலு மாகி
மடலவிழ் கொன்றை சூடி
மன்னும்ஆ பாடி யாரே
ஆதியும் அறிவு மாகி
அறிவினு செறிவு மாகி
சோதியு சுடரு மாகி
தூநெறி கொருவ னாகி
பாதியிற் பெண்ணு மாகி
பரவுவார் பாங்க னாகி
வேதியர் வாழுஞ் சேய்ஞல்
விரும்பும்ஆ பாடி யாரே
எண்ணுடை இருக்கு மாகி
யிருக்கினு பொருளு மாகி
பண்ணொடு பாடல் தன்னை
பரவுவார் பாங்க னாகி
கண்ணொரு நெற்றி யாகி
கருதுவார் கருத லாகா
பெண்ணொரு பாக மாகி
பேணும்ஆ பாடி யாரே
அண்டமார் அமரர் கோமான்
ஆதியெம் அண்ணல் பாதங்
கொண்டவன் குறிப்பி னாலே
கூப்பினான் தாப ரத்தை
கண்டவன் தாதை பாய்வான்
காலற எறி கண்டு
தண்டியார கருள்கள் செய்த
தலைவர்ஆ பாடி யாரே
சிந்தையு தெளிவு மாகி
தெளிவினு சிவமு மாகி
வந்தநற் பயனு மாகி
வாணுதல் பாக மாகி
மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த
மண்ணித்தென் கரைமேல் மன்னி
அந்தமோ டளவி லாத
அடிகள்ஆ பாடி யாரே
வன்னிவா ளரவு மத்தம்
மதியமும் ஆறுஞ் சூடி
மின்னிய உருவாஞ் சோதி
மெய்ப்பொரு பயனு மாகி
கன்னியோர் பாக மாகி
கருதுவார் கருத்து மாகி
இன்னிசை தொண்டர் பாட
இருந்தஆ பாடி யாரே
உள்ளுமா புறமு மாகி
உருவுமாய் அருவு மாகி
வெள்ளமா கரையு மாகி
விரிகதிர் ஞாயி றாகி
கள்ளமா கள்ள துள்ளார்
கருத்துமாய் அருத்த மாகி
அள்ளுவார கள்ளல் செய்தி
டிருந்தஆ பாடி யாரே
மயக்கமா தெளிவு மாகி
மால்வரை வளியு மாகி
தியக்கமாய் ஒருக்க மாகி
சிந்தையுள் ஒன்றி நின்று
இயக்கமாய் இறுதி யாகி
எண்டிசை கிறைவ ராகி
அயக்கமாய் அடக்க மாய
ஐவர்ஆ பாடி யாரே
ஆரழல் உருவ மாகி
அண்டமேழ் கடந்த எந்தை
பேரொளி உருவி னானை
பிரமனும் மாலுங் காணா
சீரவை பரவி யேத்தி
சென்றடி வணங்கு வார்க்கு
பேரருள் அருளி செய்வார்
பேணும்ஆ பாடி யாரே
திண்டிறல் அரக்க னோடி
சீகயி லா தன்னை
எண்டிறல் இலனு மாகி
எடுத்தலும் ஏழை அஞ்ச
விண்டிறல் நெறிய வூன்றி
மிகக்கடு தலறி வீழ
பண்டிறல் கேட்டு கந்த
பரமர்ஆ பாடி யாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பாலுவந்தநாயகர் தேவியார் பெரியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்குறுக்கை திருநேரிசை
ஆதியிற் பிரம னார்தாம்
அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவர்
உணருமா றுணர லுற்றார்
சோதியு சுடரா தோன்றி
சொல்லினை யிறந்தார் பல்பூ
கோதிவண் டறையுஞ் சோலை
குறுக்கைவீ ரட்ட னாரே
நீற்றினை நிறை பூசி
நித்தலும் நியமஞ் செய்து
ஆற்றுநீர் பூரி தாட்டும்
அந்தண னாரை கொல்வான்
சாற்றுநாள் அற்ற தென்று
தருமரா சற்காய் வந்த
கூற்றினை குமைப்பர் போலுங்
குறுக்கைவீ ரட்ட னாரே
தழைத்ததோர் ஆத்தி யின்கீழ
தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலை
கறந்துகொண் டாட்ட கண்டு
பிழைத்ததன் றாதை தாளை
பெருங்கொடு மழுவால் வீச
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே
சிலந்தியும் ஆனை காவிற்
திருநிழற் பந்தர் செய்து
உலந்தவண் இறந்த போதே
கோச்செங்க ணானு மா
கலந்தநீர காவி ரிசூழ்
சோணாட்டு சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பி திட்டார்
குறுக்கைவீ ரட்ட னாரே
ஏறுடன் ஏழ டர்த்தான்
எண்ணியா யிரம்பூ கொண்டு
ஆறுடை சடையி னானை
அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்
வேறுமோர் பூக்கு றைய
மெய்ம்மலர கண்ணை மிண்ட
கூறுமோர் ஆழி ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே
கல்லினால் எறிந்து கஞ்சி
தாமுணுஞ் சாக்கி யனார்
நெல்லினார் சோறு ணாமே
நீள்விசும் பாள வைத்தார்
எல்லியாங் கெரிகை ஏந்தி
எழில்திகழ் நட்ட மாடி
கொல்லியாம் பண்ணு கந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே
காப்பதோர் வில்லும் அம்புங்
கையதோர் இறைச்சி பார
தோற்பெருஞ் செருப்பு தொட்டு
தூயவா கலசம் ஆட்டி
தீப்பெருங் கண்கள் செ
குருதிநீர் ஒழுக தன்கண்
கோப்பதும் பற்றி கொண்டார்
குறுக்கைவீ ரட்ட னாரே
நிறைமறை காடு தன்னில்
நீண்டெரி தீப தன்னை
கறைநிற தெலிதன் மூக்கு
சுட்டிட கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும்
நீண்டவா னுலக மெல்லாங்
குறைவற கொடுப்பர் போலுங்
குறுக்கைவீ ரட்ட னாரே
அணங்குமை பாக மாக
அடக்கிய ஆதி மூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும்
மருந்துநல் அருந்த வத்த
கணம்புல்லர கருள்கள் செய்து
காதலாம் அடியார கென்றுங்
குணங்களை கொடுப்பர் போலுங்
குறுக்கைவீ ரட்ட னாரே
எடுத்தனன் எழிற் கயிலை
இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்தொரு விரலால் ஊன்ற
அலறிப்போய் அவனும் வீழ்ந்து
விடுத்தனன் கைந ரம்பால்
வேதகீ தங்கள் பாட
கொடுத்தனர் கொற்ற வாணாள்
குறுக்கைவீ ரட்ட னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வீரட்டேசுவரர் தேவியார் ஞானாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்குறுக்கை திருநேரிசை
நெடியமால் பிரம னோடு
நீரெனும் பிலயங் கொள்ள
அடியொடு முடியுங் காணார்
அருச்சுனற் கம்பும் வில்லு
துடியுடை வேட ராகி
தூ திரங்கள் சொல்லி
கொடிநெடு தேர்கொ டுத்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே
ஆத்தமாம் அயனு மாலும்
அன்றிமற் றொழிந்த தேவர்
சோத்தமெம் பெருமான் என்று
தொழுதுதோ திரங்கள் சொல்ல
தீர்த்தமாம் அட்ட மிமுன்
சீருடை ஏழு நாளுங்
கூத்தராய் வீதி போந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
நான்காம் திருமுறை முதற் பகுதி முற்றும்
திருச்சிற்றம்பலம்









திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி
பாடல்கள்
























©









திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி
பாடல்கள்
உள்ளுறை
திருக்கோடிகா மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருப்புகலூர் மின்பதிப்பு
திருவலம்புரம் மின்பதிப்பு
திருஆவடுதுறை மின்பதிப்பு
திருஆவடுதுறை மின்பதிப்பு
திருப்பருப்பதம் மின்பதிப்பு
திருஅவளிவணல்லூர் மின்பதிப்பு
திருப்பெருவேளூர் மின்பதிப்பு
திருஇராமேச்சுரம் மின்பதிப்பு
திருவாலவாய் மின்பதிப்பு
திருவண்ணாமலை மின்பதிப்பு
திருவீழிமிழலை மின்பதிப்பு
திருச்சாய்க்காடு மின்பதிப்பு
திருநாகேச்சரம் மின்பதிப்பு
திருக்கொண்டீச்சரம் மின்பதிப்பு
திருவாலங்காடு மின்பதிப்பு
திருக்கோவலூர்வீரட்டம் மின்பதிப்பு
திருநனிபள்ளி மின்பதிப்பு
திருநாகைக்காரோணம் மின்பதிப்பு
திருவின்னம்பர் மின்பதிப்பு
திருச்சேறை மின்பதிப்பு
நெஞ்சம்ஈசனைநினைந்த மின்பதிப்பு
தனி திருநேரிசை மின்பதிப்பு
தனி திருநேரிசை மின்பதிப்பு
தனி திருநேரிசை மின்பதிப்பு
குறைந்த திருநேரிசை மின்பதிப்பு
குறைந்த திருநேரிசை மின்பதிப்பு
கோயில் திருவிருத்தம் மின்பதிப்பு
கோயில் திருவிருத்தம் மின்பதிப்பு
திருக்கழுமலம் மின்பதிப்பு
திருக்கழுமலம் மின்பதிப்பு
ஆருயிர திருவிருத்தம் மின்பதிப்பு
திருச்சோற்றுத்துறை மின்பதிப்பு
திருவொற்றியூர் மின்பதிப்பு
திருப்பழனம் மின்பதிப்பு
திருப்பூந்துருத்தி மின்பதிப்பு
திருநெய்த்தானம் மின்பதிப்பு
திருவேதிகுடி மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருக்கண்டியூர் மின்பதிப்பு
திருப்பாதிரிப்புலியூர் மின்பதிப்பு
திருவீழிமிழலை மின்பதிப்பு
திருச்சத்திமுற்றம் மின்பதிப்பு
திருநல்லூர் மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருவேகம்பம் மின்பதிப்பு
திருவின்னம்பர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருநாகைக்காரோணம் மின்பதிப்பு
திருவதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருப்புகலூர் மின்பதிப்பு
திருக்கழிப்பாலை மின்பதிப்பு
திருக்கடவூர் மின்பதிப்பு
திருமாற்பேறு மின்பதிப்பு
திருத்தூங்கானைமாடம் மின்பதிப்பு
பசுபதி மின்பதிப்பு
சரக்கறை மின்பதிப்பு
தனி திருவிருத்தம் மின்பதிப்பு
தனி திருவிருத்தம் மின்பதிப்பு

திருக்கோடிகா திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
நெற்றிமேற் கண்ணி னானே
நீறுமெய் பூசி னானே
கற்றைப்புன் சடையி னானே
கடல்விடம் பருகி னானே
செற்றவர் புரங்கள் மூன்றுஞ்
செவ்வழல் செலுத்தி னானே
குற்றமில் குணத்தி னானே
கோடிகா வுடைய கோவே
கடிகமழ் கொன்றை யானே
கபாலங்கை யேந்தி னானே
வடிவுடை மங்கை தன்னை
மார்பிலோர் பாக தானே
அடியிணை பரவ நாளும்
அடியவர கருள்செய் வானே
கொடியணி விழவ தோவா
கோடிகா வுடைய கோவே
நீறுமெய் பூசி னானே
நிழல்திகழ் மழுவி னானே
ஏறுக தேறி னானே
இருங்கடல் அமுதொ பானே
ஆறுமோர் நான்கு வேதம்
அறமுரை தருளி னானே
கூறுமோர் பெண்ணி னானே
கோடிகா வுடைய கோவே
காலனை காலாற் செற்றன்
றருள்புரி கருணை யானே
நீலமார் கண்ட தானே
நீண்முடி யமரர் கோவே
ஞாலமாம் பெருமை யானே
நளிரிள திங்கள் சூடுங்
கோலமார் சடையி னானே
கோடிகா வுடைய கோவே
பூணர வார தானே
புலியுரி அரையி னானே
காணில்வெண் கோவ ணமுங்
கையிலோர் கபால மேந்தி
ஊணுமூர பிச்சை யானே
உமையொரு பாக தானே
கோணல்வெண் பிறையி னானே
கோடிகா வுடைய கோவே
கேழல்வெண் கொம்பு பூண்ட
கிளரொளி மார்பி னானே
ஏழையேன் ஏழை யேன்நான்
என்செய்கேன் எந்தை பெம்மான்
மாழையொண் கண்ணி னார்கள்
வலைதனில் மயங்கு கின்றேன்
கூழைஏ றுடைய செல்வா
கோடிகா வுடைய கோவே
அழலுமிழ் அங்கை யானே
அரிவையோர் பாக தானே
தழலுமிழ் அரவம் ஆர்த்து
தலைதனிற் பலிகொள் வானே
நிழலுமிழ் சோலை சூழ
நீள்வரி வண்டி னங்கள்
குழலுமிழ் கீதம் பாடுங்
கோடிகா வுடைய கோவே
ஏவடு சிலையி னாலே
புரமவை எரிசெய் தானே
மாவடு வகிர்கொள் கண்ணாள்
மலைமகள் பாக தானே
ஆவடு துறையு ளானே
ஐவரால் ஆட்ட பட்டேன்
கோவடு குற்ற தீராய்
கோடிகா வுடைய கோவே
ஏற்றநீர கங்கை யானே
இருநில தாவி னானும்
நாற்றமா மலர்மேல் ஏறும்
நான்முகன் இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்க லுற்றார
கழலுரு வாயினானே
கூற்றுக்குங் கூற்ற தானாய்
கோடிகா வுடைய கோவே
பழகநான் அடிமை செய்வேன்
பசுபதீ பாவ நாசா
மழகளி யானை யின்றோல்
மலைமகள் வெருவ போர்த்த
அழகனே அரக்கன் திண்டோ ள்
அருவரை நெரிய வூன்றுங்
குழகனே கோல மார்பா
கோடிகா வுடைய கோவே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கோடீசுவரர் தேவியார் வடிவாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
படுகுழி பவ்வ தன்ன
பண்டியை பெய்த வாற்றாற்
கெடுவதிம் மனிதர் வாழ்க்கை
காண்டொறுங் கேது கின்றேன்
முடுகுவர் இருந்துள் ஐவர்
மூர்க்கரே இவர்க ளோடும்
அடியனேன் வாழ மாட்டேன்
ஆரூர்மூ லட்ட னீரே
புழுப்பெய்த பண்டி தன்னை
புறமொரு தோலால் மூடி
ஒழுக்கறா ஒன்ப துவாய்
ஒற்றுமை யொன்று மில்லை
சழக்குடை இதனுள் ஐவர்
சங்கடம் பலவுஞ் செய்ய
அழிப்பனாய் வாழ மாட்டேன்
ஆரூர்மூ லட்ட னீரே
பஞ்சின்மெல் லடியி னார்கள்
பாங்கரா யவர்கள் நின்று
நெஞ்சில்நோய் பலவுஞ் செய்து
நினையினும் நினைய வொட்டார்
நஞ்சணி மிடற்றி னானே
நாதனே நம்ப னேநான்
அஞ்சினேற் கஞ்ச லென்னீர்
ஆரூர்மூ லட்ட னீரே
கெண்டை தடங்கண் நல்லார்
தம்மையே கெழும வேண்டி
குண்டரா திரித தைவர்
குலைத்திடர குழியில் நூ
கண்டுநான் தரிக்க கில்லேன்
காத்துக்கொள் கறைசேர் கண்டா
அண்டவா னவர்கள் போற்றும்
ஆரூர்மூ லட்ட னீரே
தாழ்குழல் இன்சொல் நல்லார்
தங்களை தஞ்ச மென்று
ஏழையே னாகி நாளும்
என்செய்கேன் எந்தை பெம்மான்
வாழ்வதேல் அரிது போலும்
வைகலும் ஐவர் வந்து
ஆழ்குழி படுத்த வாற்றேன்
ஆரூர்மூ லட்ட னீரே
மாற்றமொன் றருள கில்லீர்
மதியிலேன் விதியி லாமை
சீற்றமு தீர்த்தல் செய்யீர்
சிக்கன வுடைய ராகி
கூற்றம்போல் ஐவர் வந்து
குலைத்திட்டு கோகு செய்ய
ஆற்றவுங் கில்லேன் நாயேன்
ஆரூர்மூ லட்ட னீரே
உயிர்நிலை யுடம்பே காலா
உள்ளமே தாழி யாக
துயரமே ஏற்ற மாக
துன்பக்கோ லதனை பற்றி
பயிர்தனை சுழிய விட்டு
பாழ்க்குநீர் இறைத்து மிக்க
அயர்வினால் ஐவர காற்றேன்
ஆரூர்மூ லட்ட னீரே
கற்றதேல் ஒன்று மில்லை
காரிகை யாரோ டாடி
பெற்றதேற் பெரிது துன்பம்
பேதையேன் பிழைப்பி னாலே
முற்றினால் ஐவர் வந்து
முறைமுறை துயரஞ் செய்ய
அற்றுநான் அலந்து போனேன்
ஆரூர்மூ லட்ட னீரே
பத்தனாய் வாழ மாட்டேன்
பாவியேன் பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய
செய்வினை பலவுஞ் செய்ய
மத்துறு தயிரே போல
மறுகுமென் னுள்ள தானும்
அத்தனே அமரர் கோவே
ஆரூர்மூ லட்ட னீரே
தடக்கைநா லைந்துங் கொண்டு
தடவரை தன்னை பற்றி
எடுத்தவன் பேர்க்க ஓடி
இரிந்தன பூத மெல்லாம்
முடித்தலை யனைத்து தோளும்
முறிதர இறையே யூன்றி
அடர்த்தருள் செய்த தென்னே
ஆரூர்மூ லட்ட னீரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
குழல்வலங் கொண்ட சொல்லாள்
கோலவேற் கண்ணி தன்னை
கழல்வலங் கொண்டு நீங்கா
கணங்கள கணங்க ளார
அழல்வலங் கொண்ட கையான்
அருட்கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல்வலங் கொண்டல் செய்வான்
தோன்றினார் தோன்றி னாரே
நாகத்தை நங்கை அஞ்ச
நங்கையை மஞ்ஞை யென்று
வேகத்தை தவிர நாகம்
வேழத்தின் உரிவை போர்த்து
பாகத்தின் நிமிர்தல் செய்யா
திங்களை மின்னென் றஞ்சி
ஆகத்திற் கிடந்த நாகம்
அடங்கும்ஆ ரூர னார்க்கே
தொழுதகங் குழைய மேவி
தோட்டிமை யுடைய தொண்டர்
அழுதகம் புகுந்து நின்றார்
அவரவர் போலும் ஆரூர்
எழிலக நடுவெண் முத்த
மன்றியும் ஏர்கொள் வேலி
பொழிலகம் விளங்கு திங்க
புதுமுகிழ் சூடி னாரே
நஞ்சிருள் மணிகொள் கண்டர்
நகையிருள் கங்குல்
வெஞ்சுடர் விளக்க தாடி
விளங்கினார் போலும் மூவா
வெஞ்சுடர் முகடு தீண்டி
வெள்ளிநா ராச மன்ன
அஞ்சுடர் அணிவெண் டிங்கள்
அணியும்ஆ ரூர னாரே
எந்தளிர் நீர்மை கோல
மேனியென் றிமையோ ரேத்த
பைந்தளிர கொம்ப ரன்ன
படர்கொடி பயில பட்டு
தஞ்சடை தொத்தி னாலு
தம்மதோர் நீர்மை யாலும்
அந்தளிர் ஆகம் போலும்
வடிவர்ஆ ரூர னாரே
வானகம் விளங்க மல்கும்
வளங்கெழு மதியஞ் சூடி
தானக மழிய வந்து
தாம்பலி தேர்வர் போலும்
ஊனகங் கழிந்த ஓட்டில்
உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
ஆனகம் அஞ்சும் ஆடும்
அடிகள்ஆ ரூர னாரே
அஞ்சணை கணையி னானை
அழலுற அன்று நோக்கி
அஞ்சணை குழலி னாளை
அமுதமா அணைந்து நக்கு
அஞ்சணை அஞ்சும் ஆடி
ஆடர வாட்டு வார்தாம்
அஞ்சணை வேலி ஆரூர்
ஆதரி திடங்கொண் டாரே
வணங்கிமுன் அமரர் ஏத்த
வல்வினை யான தீர
பிணங்குடை சடையில் வைத்த
பிறையுடை பெருமை யண்ணல்
மணங்கம ழோதி பாகர்
மதிநிலா வட்ட தாடி
அணங்கொடி மாட வீதி
ஆரூரெம் அடிக ளாரே
நகலிடம் பிறர்க காக
நான்மறை யோர்கள் தங்கள்
புகலிட மாகி வாழும்
புகலிலி இருவர் கூடி
இகலிட மாக நீண்டங்
கீண்டெழில் அழல தாகி
அகலிடம் பரவி யேத்த
அடிகள்ஆ ரூர னாரே
ஆயிர திங்கள் மொய்த்த
அலைகடல் அமுதம் வாங்கி
ஆயிரம் அசுரர் வாழும்
அணிமதில் மூன்றும் வேவ
ஆயிர தோளும் மட்டி
தாடிய அசைவு தீர
ஆயிரம் அடியும் வைத்த
அடிகள்ஆ ரூர னாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புகலூர் திருநேரிசை
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பகைத்திட்டார் புரங்கள் மூன்றும்
பாறிநீ றாகி வீழ
புகைத்திட்ட தேவர் கோவே
பொறியிலேன் உடல தன்னுள்
அகைத்திட்டங் கதனை நாளும்
ஐவர்கொண் டாட்ட வாடி
திகைத்திட்டேன் செய்வ தென்னே
திருப்புக லூர னீரே
மையரி மதர்த்த ஒண்கண்
மாதரார் வலையிற் பட்டு
கையெரி சூல மேந்துங்
கடவுளை நினைய மாட்டேன்
ஐநெரி தகமி டற்றே
அடைக்கும்போ தாவி யார்தாஞ்
செய்வதொன் றறிய மாட்டேன்
திருப்புக லூர னீரே
முப்பதும் முப்ப தாறும்
முப்பதும் இடுகு ரம்பை
அப்பர்போல் ஐவர் வந்து
அதுதரு கிதுவி டென்று
ஒப்பவே நலிய லுற்றால்
உய்யுமா றறிய மாட்டேன்
செப்பமே திகழு மேனி
திருப்புக லூர னீரே
பொறியிலா அழுக்கை யோம்பி
பொய்யினை மெய்யென் றெண்ணி
நெறியலா நெறிகள் சென்றேன்
நீதனேன் நீதி யேதும்
அறிவிலேன் அமரர் கோவே
அமுதினை மண்ணில் வைக்குஞ்
செறிவிலேன் செய்வ தென்னே
திருப்புக லூர னீரே
அளியினார் குழலி னார்கள்
அவர்களு கன்ப தாகி
களியினார் பாடல் ஓவா
கடவூர்வீ ரட்ட மென்னு
தளியினார் பாத நாளும்
நினைவிலா தகவில் நெஞ்ச
தெளிவிலேன் செய்வ தென்னே
திருப்புக லூர னீரே
இலவினார் மாதர் பாலே
இசைந்துநான் இருந்து பின்னும்
நிலவுநாள் பலவென் றெண்ணி
நீதனேன் ஆதி உன்னை
உலவிநான் உள்க மாட்டேன்
உன்னடி பரவு ஞானஞ்
செலவிலேன் செய்வ தென்னே
திருப்புக லூர னீரே
காத்திலேன் இரண்டும் மூன்றுங்
கல்வியேல் இல்லை என்பால்
வாய்த்திலேன் அடிமை தன்னுள்
வாய்மையால் தூயே னல்லேன்
பார்த்தனு கருள்கள் செய்த
பரமனே பரவு வார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கை
திருப்புக லூர னீரே
நீருமா தீயு மாகி
நிலனுமாய் விசும்பு மாகி
ஏருடை கதிர்க ளாகி
இமையவர் இறைஞ்ச நின்று
ஆய்வதற் கரிய ராகி
அங்கங்கே யாடு கின்ற
தேவர்க்கு தேவ ராவார்
திருப்புக லூர னாரே
மெய்யுளே விளக்கை ஏற்றி
வேண்டள வுயர தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி
உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்
அவர்களே வலியர் சால
செய்வதொன் றறிய மாட்டேன்
திருப்புக லூர னீரே
அருவரை தாங்கி னானும்
அருமறை யாதி யானும்
இருவரும் அறிய மாட்டா
ஈசனார் இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று
கண்வழி குருதி சோர
திருவிரல் சிறிது வைத்தார்
திருப்புக லூர னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் அக்கினீசுவரர்
தேவியார் கருந்தார்க்குழலியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவலம்புரம் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
தெண்டிரை தேங்கி ஓதஞ்
சென்றடி வீழுங் காலை
தொண்டிரை தண்டர் கோனை
தொழுதடி வணங்கி யெங்கும்
வண்டுகள் மதுக்கள் மாந்தும்
வலம்புர தடிகள் தம்மை
கொண்டுநற் கீதம் பாட
குழகர்தாம் இருந்த வாறே
மடுக்களில் வாளை பாய
வண்டினம் இரிந்த பொய்கை
பிடிக்களி றென்ன தம்மிற்
பிணைபயின் றணைவ ரால்கள்
தொடுத்தநன் மாலை ஏந்தி
தொண்டர்கள் பரவி யேத்த
வடித்தடங் கண்ணி பாகர்
வலம்புர திருந்த வாறே
தேனுடை மலர்கள் கொண்டு
திருந்தடி பொருந்த சேர்த்தி
ஆனிடை அஞ்சுங் கொண்டு
அன்பினால் அமர வாட்டி
வானிடை மதியஞ் சூடும்
வலம்புர தடிகள் தம்மை
நானடை தேத்த பெற்று
நல்வினை பயனுற் றேனே
முளைஎயிற் றிளநல் ஏனம்
பூண்டுமொய் சடைகள் தாழ
வளைஎயிற் றிளைய நாகம்
வலித்தரை யிசைய வீக்கி
புளைகைய போர்வை போர்த்து
புனலொடு மதியஞ் சூடி
வளைபயில் இளைய ரேத்தும்
வலம்புர தடிகள் தாமே
சுருளுறு வரையின் மேலாற்
றுளங்கிளம் பளிங்கு சிந்த
இருளுறு கதிர்நு ழைந்த
இளங்கதிர பசலை திங்கள்
அருளுறும் அடிய ரெல்லாம்
அங்கையின் மலர்கள் ஏந்த
மருளுறு கீதங் கேட்டார்
வலம்புர தடிக ளாரே
நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால்
நீண்டபுன் சடையி னானே
அனைத்துடன் கொண்டு வந்தங்
கன்பினால் அமைய வாட்டி
புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை
மெய்ம்மையை புணர மாட்டேன்
எனக்குநான் செய்வ தென்னே
இனிவலம் புரவ னீரே
செங்கயல் சேல்கள் பாய்ந்து
தேம்பழ மினிய நாடி
தங்க துறந்து போந்து
தடம்பொய்கை அடைந்து நின்று
கொங்கையர் குடையுங் காலை
கொழுங்கனி யழுங்கி னாராம்
மங்கல மனையின் மிக்கார்
வலம்புர தடிக ளாரே
அருகெலாங் குவளை செந்நெல்
அகவிலை யாம்பல் நெய்தல்
தெருவெலா தெங்கு மாவும்
பழம்விழும் படப்பை யெல்லாங்
குருகினங் கூடி யாங்கே
கும்மலி திறகு லர்த்தி
மருவலா மிடங்கள் காட்டும்
வலம்புர தடிக ளாரே
கருவரை யனைய மேனி
கடல்வண்ண னவனுங் காணான்
திருவரை யனைய பூமேல்
திசைமுக னவனுங் காணான்
ஒருவரை உச்சி ஏறி
ஓங்கினார் ஓங்கி வந்து
அருமையில் எளிமை யானார்
அவர்வலம் புரவ னாரே
வாளெயி றிலங்க நக்கு
வளர்கயி லா தன்னை
ஆள்வலி கருதி சென்ற
அரக்கனை வரைக்கீ ழன்று
தோளொடு பத்து வாயு
தொலைந்துடன் அழுந்த வூன்றி
ஆண்மையும் வலியு தீர்ப்பார்
அவர்வலம் புரவ னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வலம்புரநாதர் தேவியார் வடுவகிர்க்கண்ணம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஆவடுதுறை திருநேரிசை
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
மாயிரு ஞால மெல்லாம்
மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளை
படர்சடை வைப்பர் போலுங்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த
கழுமல வூரர கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும்
ஆவடு துறைய னாரே
மடந்தை பாகத்தர் போலும்
மான்மறி கையர் போலும்
குடந்தையிற் குழகர் போலுங்
கொல்புலி தோலர் போலுங்
கடைந்தநஞ் சுண்பர் போலுங்
காலனை காய்வர் போலும்
அடைந்தவர கன்பர் போலும்
ஆவடு துறைய னாரே
உற்றநோய் தீர்ப்பர் போலும்
உறுதுணை யாவர் போலுஞ்
செற்றவர் புரங்கள் மூன்று
தீயெழ செறுவர் போலுங்
கற்றவர் பரவி யேத்த
கலந்துல தலந்து பாடும்
அற்றவர கன்பர் போலும்
ஆவடு துறைய னாரே
மழுவமர் கையர் போலும்
மாதவள் பாகர் போலும்
எழுநுனை வேலர் போலும்
என்புகொண் டணிவர் போலு
தொழுதெழு தாடி பாடி
தோத்திரம் பலவுஞ் சொல்லி
அழுமவர கன்பர் போலும்
ஆவடு துறைய னாரே
பொடியணி மெய்யர் போலும்
பொங்குவெண் ணூலர் போலுங்
கடியதோர் விடையர் போலுங்
காமனை காய்வர் போலும்
வெடிபடு தலையர் போலும்
வேட்கையாற் பரவு தொண்டர்
அடிமையை அளப்பர் போலும்
ஆவடு துறைய னாரே
வக்கரன் உயிரை வவ்வ
கண்மலர் கொண்டு போற்ற
சக்கரங் கொடுப்பர் போலு
தானவர் தலைவர் போலு
துக்கமா மூடர் தம்மை
துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை ஆர்ப்பர் போலும்
ஆவடு துறைய னாரே
விடைதரு கொடியர் போலும்
வெண்புரி நூலர் போலும்
படைதரு மழுவர் போலும்
பாய்புலி தோலர் போலும்
உடைதரு கீளர் போலும்
உலகமு மாவர் போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும்
ஆவடு துறைய னாரே
முந்திவா னோர்கள் வந்து
முறைமையால் வணங்கி யேத்த
நந்திமா காள ரென்பார்
நடுவுடை யார்கள் நிற்ப
சிந்தியா தேயொ ழிந்தார்
திரிபுரம் எரிப்பர் போலும்
அந்திவான் மதியஞ் சூடும்
ஆவடு துறைய னாரே
பானமர் ஏன மாகி
பாரிட திட்ட மாலு
தேனமர தேறும் அல்லி
திசைமுக முடைய கோவு
தீனரை தி கறுத்த
திருவுரு வுடையர் போலும்
ஆனரை ஏற்றர் போலும்
ஆவடு துறைய னாரே
பார்த்தனு கருள்வர் போலும்
படர்சடை முடியர் போலும்
ஏத்துவார் இடர்கள் தீர
இன்பங்கள் கொடுப்பர் போலுங்
கூத்தரா பாடி யாடி
கொடுவலி யரக்கன் றன்னை
ஆர்த்தவாய் அலறு விப்பார்
ஆவடு துறைய னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மாசிலாமணியீசுவரர் தேவியார் ஒப்பிலாமுலையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஆவடுதுறை திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
மஞ்சனே மணியு மானாய்
மரக திரளு மானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று
நினைதரு நிகழ்வி னானே
துஞ்சும்போ தாக வந்து
துணையென காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டும்
ஆவடு துறையு ளானே
நானுக துன்னை நாளும்
நணுகுமா கருதி யேயும்
ஊனுக தோம்பும் நாயேன்
உள்ளுற ஐவர் நின்றார்
தானுக தேயு கந்த
தகவிலா தொண்ட னேன்நான்
ஆனுக தேறு வானே
ஆவடு துறையு ளானே
கட்டமே வினைக ளான
காத்திவை நோக்கி ஆளாய்
ஒட்டவே ஒட்டி நாளும்
உன்னையுள் வைக்க மாட்டேன்
பட்டவான் தலைகை யேந்தி
பலிதிரி தூர்கள் தோறும்
அட்டமா வுருவி னானே
ஆவடு துறையு ளானே
பெருமைநன் றுடைய தில்லை
யென்றுநான் பேச மாட்டேன்
ஒருமையால் உன்னை உள்கி
உகந்துவா னேற மாட்டேன்
கருமையி டாய வூனை
கட்டமே கழிக்கின் றேன்நான்
அருமையா நஞ்ச முண்ட
ஆவடு துறையு ளானே
துட்டனாய் வினைய தென்னுஞ்
சுழித்தலை அகப்ப டேனை
கட்டனாய் ஐவர் வந்து
கலக்காமை காத்து கொள்வாய்
மட்டவிழ் கோதை தன்னை
மகிழ்ந்தொரு பாகம் வைத்து
அட்டமா நாக மாட்டும்
ஆவடு துறையு ளானே
காரழற் கண்ட மேயாய்
கடிமதிற் புரங்கள் மூன்றும்
ஓரழல் அம்பி னாலே
யுகைத்துத்தீ எரிய மூட்டி
நீரழற் சடையு ளானே
நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆரழல் ஏந்தி யாடும்
ஆவடு துறையு ளானே
செறிவிலேன் சிந்தை யுள்ளே
சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன் றில்லேன்
கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன் றில்லேன்
நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்து போனேன்
ஆவடு துறையு ளானே
கோலமா மங்கை தன்னை
கொண்டொரு கோல மாய
சீலமே அறிய மாட்டேன்
செய்வினை மூடி நின்று
ஞாலமாம் இதனுள் என்னை
நைவியா வண்ணம் நல்காய்
ஆலமா நஞ்ச முண்ட
ஆவடு துறையு ளானே
நெடியவன் மலரி னானும்
நேர்ந்திரு பாலும் நேட
கடியதோர் உருவ மாகி
கனலெரி யாகி நின்ற
வடிவின வண்ண மென்றே
என்றுதாம் பேச லாகார்
அடியனேன் நெஞ்சி னுள்ளார்
ஆவடு துறையு ளானே
மலைக்குநே ராய ரக்கன்
சென்றுற மங்கை அஞ்ச
தலைக்குமேற் கைக ளாலே
தாங்கினான் வலியை மாள
உலப்பிலா விரலால் ஊன்றி
ஒறுத்தவற் கருள்கள் செய்து
அலைத்தவான் கங்கை சூடும்
ஆவடு துறையு ளானே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பருப்பதம் திருநேரிசை
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
கன்றினார் புரங்கள் மூன்றுங்
கனலெரி யாக சீறி
நின்றதோ ருருவ தன்னால்
நீர்மையும் நிறையுங் கொண்டு
ஒன்றியாங் குமையு தாமும்
ஊர்பலி தேர்ந்து பின்னும்
பன்றிப்பின் வேட ராகி
பருப்பத நோக்கி னாரே
கற்றமா மறைகள் பாடி
கடைதொறும் பலியு தேர்வார்
வற்றலோர் தலைகை யேந்தி
வானவர் வணங்கி வாழ்த்த
முற்றவோர் சடையில் நீரை
ஏற்றமு கண்ணர் தம்மை
பற்றினார கருள்கள் செய்து
பருப்பத நோக்கி னாரே
கரவிலா மனத்த ராகி
கைதொழு வார்க கென்றும்
இரவினின் றெரிய தாடி
இன்னருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்று
மாட்டிய நகைய ராகி
பரவுவார கருள்கள் செய்து
பருப்பத நோக்கி னாரே
கட்டிட்ட தலைகை யேந்தி
கனலெரி யாடி சீறி
சுட்டிட்ட நீறு பூசி
சுடுபிண காட ராகி
விட்டிட்ட வேட்கை யார்க்கு
வேறிரு தருள்கள் செய்து
பட்டிட்ட வுடைய ராகி
பருப்பத நோக்கி னாரே
கையரா கபால மேந்தி
காமனை கண்ணாற் காய்ந்து
மெய்யராய் மேனி தன்மேல்
விளங்குவெண் ணீறு பூசி
உய்யரா யுள்கு வார்க
குவகைகள் பலவுஞ் செய்து
பையரா அரையி லார்த்து
பருப்பத நோக்கி னாரே
வேடராய் வெய்ய ராகி
வேழத்தி னுரிவை போர்த்து
ஓடரா யுலக மெல்லா
முழிதர்வர் உமையு தாமுங்
காடரா கனல்கை யேந்தி
கடியதோர் விடைமேற் கொண்டு
பாடரா பூதஞ் சூழ
பருப்பத நோக்கி னாரே
மேகம்போல் மிடற்ற ராகி
வேழத்தி னுரிவை போர்த்து
ஏகம்பம் மேவி னார்தாம்
இமையவர் பரவி யேத்த
காகம்பர் கழற ராகி
கடியதோர் விடையொன் றேறி
பாகம்பெண் ணுருவ மானார்
பருப்பத நோக்கி னாரே
பேரிடர பிணிகள் தீர்க்கும்
பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
காருடை கண்ட ராகி
கபாலமோர் கையி லேந்தி
சீருடை செங்கண் வெள்ளே
றேறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செ
பருப்பத நோக்கி னாரே
அங்கண்மா லுடைய ராய
ஐவரா லாட்டு ணாதே
உங்கள்மால் தீர வேண்டில்
உள்ளத்தா லுள்கி யேத்துஞ்
செங்கண்மால் பரவி யேத்தி
சிவனென நின்ற செல்வர்
பைங்கண்வெள் ளேற தேறி
பருப்பத நோக்கி னாரே
அடல்விடை யூர்தி யாகி
அரக்கன்றோள் அடர வூன்றி
கடலிடை நஞ்ச முண்ட
கறையணி கண்ட னார்தாஞ்
சுடர்விடு மேனி தன்மேற்
சுண்ணவெண் ணீறு பூசி
படர்சடை மதியஞ் சேர்த்தி
பருப்பத நோக்கி னாரே
இத்தலம் வடநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பருப்பதேசுவரர் தேவியார் மனோன்மணியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஅவளிவணல்லூர் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
தோற்றினான் எயிறு கவ்வி
தொழிலுடை யரக்கன் றன்னை
தேற்றுவான் சென்று சொல்ல
சிக்கென தவிரு மென்று
வீற்றினை யுடைய னாகி
வெடுவெடு தெழுந்த வன்றன்
ஆற்றலை அழிக்க வல்லார்
அவளிவ ணல்லூ ராரே
வெம்பினா ரரக்க ரெல்லாம்
மிகச்சழ காயிற் றென்று
செம்பினா லெடுத்த கோயில்
சிக்கென சிதையு மென்ன
நம்பினா ரென்று சொல்லி
நன்மையான் மிக்கு நோக்கி
அம்பினால் அழிய வெய்தார்
அவளிவ ணல்லூ ராரே
கீழ்ப்பட கருத லாமோ
கீர்த்திமை யுள்ள தாகிற்
தோட்பெரு வலியி னாலே
தொலைப்பன்யான் மலையை யென்று
வேட்பட வைத்த வாறே
விதிர்விதிர தரக்கன் வீழ்ந்து
ஆட்பட கருதி புக்கார்
அவளிவ ணல்லூ ராரே
நிலைவலம் வல்ல னல்லன்
நேர்மையை நினைய மாட்டான்
சிலைவலங் கொண்ட செல்வன்
சீரிய கயிலை தன்னை
தலைவலங் கருதி புக்கு
தாக்கினான் தன்னை யன்று
அலைகுலை யாக்கு வித்தார்
அவளிவ ணல்லூ ராரே
தவ்வலி யொன்ற னாகி
தனதொரு பெருமை யாலே
மெய்வ்வலி யுடைய னென்று
மிகப்பெரு தேரை யூர்ந்து
செவ்வலி கூர்வி ழியாற்
சிரமத்தான் எடுக்குற் றானை
அவ்வலி தீர்க்க வல்லார்
அவளிவ ணல்லூ ராரே
நன்மைதான் அறிய மாட்டான்
நடுவிலா அரக்கர் கோமான்
வன்மையே கருதி சென்று
வலிதனை செலுத்த லுற்று
கன்மையான் மலையை யோடி
கருதித்தான் எடுத்து வாயால்
அம்மையோ வென்ன வைத்தார்
அவளிவ ணல்லூ ராரே
கதம்பட போது வார்கள்
போது கருத்தி னாலே
சிதம்பட நின்ற நீர்கள்
சிக்கென தவிரு மென்று
மதம்படு மனத்த னாகி
வன்மையான் மிக்கு நோக்க
அதம்பழ துருவு செய்தார்
அவளிவ ணல்லூ ராரே
நாடுமி குழிதர் கின்ற
நடுவிலா அரக்கர் கோனை
ஓடுமி கென்று சொல்லி
ஊன்றினான் உகிரி னாலே
பாடுமி குய்வ னென்று
பணியநற் றிறங்கள் காட்டி
ஆடுமி கரவம் பூண்டார்
அவளிவ ணல்லூ ராரே
ஏனமா யிடந்த மாலும்
எழில்தரு முளரி யானும்
ஞானந்தா னுடைய ராகி
நன்மையை அறிய மாட்டார்
சேனந்தான் இலாவ ரக்கன்
செழுவரை எடுக்க வூன்றி
ஆனந்த அருள்கள் செய்தார்
அவளிவ ணல்லூ ராரே
ஊக்கினான் மலையை யோடி
உணர்விலா அரக்கன் றன்னை
தாக்கினான் விரலி னாலே
தலைபத்து தகர வூன்றி
நோக்கினான் அஞ்ச தன்னை
நோன்பிற வூன்று சொல்லி
ஆக்கினார் அமுத மாக
அவளிவ ணல்லூ ராரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சாட்சிநாயகேசுவரர் தேவியார் சவுந்தரநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பெருவேளூர் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
மறையணி நாவி னானை
மறப்பிலார் மனத்து ளானை
கறையணி கண்டன் றன்னை
கனலெரி யாடி னானை
பிறையணி சடையி னானை
பெருவேளூர் பேணி னானை
நறையணி மலர்கள் தூவி
நாடொறும் வணங்கு வேனே
நாதனாய் உலக மெல்லாம்
நம்பிரான் எனவும் நின்ற
பாதனாம் பரம யோகி
பலபல திறத்தி னாலும்
பேதனா தோன்றி னானை
பெருவேளூர் பேணி னானை
ஓதநா வுடைய னாகி
உரைக்குமா றுரைக்கின் றேனே
குறவிதோள் மணந்த செல்வ
குமரவேள் தாதை யென்று
நறவிள நறுமென் கூந்தல்
நங்கையோர் பாக தானை
பிறவியை மாற்று வானை
பெருவேளூர் பேணி னானை
உறவினால் வல்ல னாகி
உணருமா றுணர்த்து வேனே
மைஞ்ஞவில் கண்டன் றன்னை
வலங்கையின் மழுவொன் றேந்தி
கைஞ்ஞவில் மானி னோடுங்
கனலெரி யாடி னானை
பிஞ்ஞகன் றன்னை அந்தண்
பெருவேளூர் பேணி னானை
பொய்ஞ்ஞெக நினைய மாட்டா
பொறியிலா அறிவி லேனே
ஓடைசேர் நெற்றி யானை
உரிவையை மூடி னானை
வீடதே காட்டு வானை
வேதநான் காயி னானை
பேடைசேர் புறவ நீங்கா
பெருவேளூர் பேணி னானை
கூடநான் வல்ல மாற்றங்
குறுகுமா றறிகி லேனே
கச்சைசேர் நாக தானை
கடல்விடங் கண்ட தானை
கச்சியே கம்பன் றன்னை
கனலெரி யாடு வானை
பிச்சைசேர துழல்வி னானை
பெருவேளூர் பேணி னானை
இச்சைசேர தமர நானும்
இறைஞ்சுமா றிறைஞ்சு வேனே
சித்தராய் வந்து தன்னை
திருவடி வணங்கு வார்கள்
முத்தனை மூர்த்தி யாய
முதல்வனை முழுது மாய
பித்தனை பிறரு மேத்த
பெருவேளூர் பேணி னானை
மெத்தனே யவனை நாளும்
விரும்புமா றறிகி லேனே
முண்டமே தாங்கி னானை
முற்றிய ஞான தானை
வண்டுலாங் கொன்றை மாலை
வளர்மதி கண்ணி யானை
பிண்டமே ஆயி னானை
பெருவேளூர் பேணி னானை
அண்டமாம் ஆதி யானை
அறியுமா றறிகி லேனே
விரிவிலா அறிவி னார்கள்
வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும்
எம்பிராற் கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோ ரேத்தும்
பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி உய்யும்
வகையது நினைக்கின் றேனே
பொருகடல் இலங்கை மன்னன்
உடல்கெட பொருத்தி நல்ல
கருகிய கண்ட தானை
கதிரிளங் கொழுந்து சூடும்
பெருகிய சடையி னானை
பெருவேளூர் பேணி னானை
உருகிய அடிய ரேத்தும்
உள்ளத்தால் உள்கு வேனே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பிரியாதநாதர் தேவியார் மின்னனையாளம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஇராமேச்சுரம் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பாசமுங் கழிக்க கில்லா
அரக்கரை படுத்து தக்க
வாசமி கலர்கள் கொண்டு
மதியினால் மால்செய் கோயில்
நேசமி கன்பி னாலே
நினைமின்நீர் நின்று நாளு
தேசமி கான் இருந்த
திருஇரா மேச்சு ரமே
முற்றின நாள்கள் என்று
முடிப்பதே கார ணமாய்
உற்றவன் போர்க ளாலே
உணர்விலா அரக்கர் தம்மை
செற்றமால் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தை
பற்றிநீ பரவு நெஞ்சே
படர்சடை ஈசன் பாலே
கடலிடை மலைகள் தம்மால்
அடைத்துமால் கருமம் முற்றி
திடலிடை செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தை
தொடலிடை வைத்து நாவிற்
சுழல்கின்றேன் தூய்மை யின்றி
உடலிடை நின்றும் பேரா
ஐவர்ஆ டுண்டு நானே
குன்றுபோல் தோளு டைய
குணமிலா அரக்கர் தம்மை
கொன்றுபோ ராழி யம்மால்
வேட்கையாற் செய்த கோயில்
நன்றுபோல் நெஞ்ச மேநீ
நன்மையை அறிதி யாயிற்
சென்றுநீ தொழுதுய் கண்டாய்
திருஇரா மேச்சு ரமே
வீரமி கெயிறு காட்டி
விண்ணுற நீண்ட ரக்கன்
கூரமி கவனை சென்று
கொன்றுடன் கடற் படுத்து
தீரமி கானி ருந்த
திருஇரா மேச்சு ரத்தை
கோரமி கார்த வத்தாற்
கூடுவார் குறிப்பு ளாரே
ஆர்வலம் நம்மின் மிக்கார்
என்றஅவ் வரக்கர் கூடி
போர்வலஞ் செய்து மிக்கு
பொருதவர் தம்மை வீட்டி
தேர்வலஞ் செற்ற மால்செய்
திருஇரா மேச்சு ரத்தை
சேர்மட நெஞ்ச மேநீ
செஞ்சடை எந்தை பாலே
வாக்கினால் இன்பு ரைத்து
வாழ்கிலார் தம்மை யெல்லாம்
போக்கினாற் புடைத்த வர்கள்
உயிர்தனை யுண்டு மால்தான்
தேக்குநீர் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தை
நோக்கினால் வணங்கு வார்க்கு
நோய்வினை நுணுகு மன்றே
பலவுநாள் தீமை செய்து
பார்தன்மேற் குழுமி வந்து
கொலைவிலார் கொடிய ராய
அரக்கரை கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தை
தலையினால் வணங்கு வார்கள்
தாழ்வரா தவம தாமே
கோடிமா தவங்கள் செய்து
குன்றினார் தம்மை யெல்லாம்
வீடவே சக்க ரத்தால்
எறிந்துபின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தை
நாடிவாழ் நெஞ்ச மேநீ
நன்னெறி யாகு மன்றே
வன்கண்ணர் வாள ரக்கர்
வாழ்வினை யொன்ற றியார்
புன்கண்ண ராகி நின்று
போர்கள்செய் தாரை மாட்டி
செங்கண்மால் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தை
தங்கணால் எய்த வல்லார்
தாழ்வரா தலைவன் பாலே
வரைகளொ தேயு யர்ந்த
மணிமுடி அரக்கர் கோனை
விரையமுற் றறவொ டுக்கி
மீண்டுமால் செய்த கோயில்
திரைகள்மு தால்வ ணங்கு
திருஇரா மேச்சு ரத்தை
உரைகள்ப தாலு ரைப்பார்
உள்குவார் அன்பி னாலே
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் இராமலிங்கேசுவரர் தேவியார் பருவதவர்த்தனியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாலவாய் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
வேதியா வேத கீதா
விண்ணவர் அண்ணா என்றென்
றோதியே மலர்கள் தூவி
ஒடுங்கிநின் கழல்கள் காண
பாதியோர் பெண்ணை வைத்தாய்
படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே
நம்பனே நான்மு கத்தாய்
நாதனே ஞான மூர்த்தி
என்பொனே ஈசா என்றென்
றேத்திநான் ஏசற் றென்றும்
பின்பினே திரிந்து நாயேன்
பேர்த்தினி பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில் அப்பனே
அருள் செயாயே
ஒருமரு தாகி யுள்ளாய்
உம்பரோ டுலகு கெல்லாம்
பெருமரு தாகி நின்றாய்
பேரமு தின்சு வையா
கருமரு தாகி யுள்ளாய்
ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
அருமரு தால வாயில்
அப்பனே அருள்செ யாயே
செய்யநின் கமல பாதஞ்
சேருமா தேவர் தேவே
மையணி கண்ட தானே
மான்மறி மழுவொன் றேந்துஞ்
சைவனே சால ஞானங்
கற்றறி விலாத நாயேன்
ஐயனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே
வெண்டலை கையி லேந்தி
மிகவுமூர் பலிகொண் டென்றும்
உண்டது மில்லை சொல்லில்
உண்டது நஞ்சு தன்னை
பண்டுனை நினைய மாட்டா
பளகனேன் உளம தார
அண்டனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே
எஞ்சலில் புகலி தென்றென்
றேத்திநான் ஏசற் றென்றும்
வஞ்சக மொன்று மின்றி
மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த
நற்பொரு பதமே நாயேற்
கஞ்சலென் றால வாயில்
அப்பனே அருள்செ யாயே
வழுவிலா துன்னை வாழ்த்தி
வழிபடு தொண்ட னேன்உன்
செழுமலர பாதங் காண
தெண்டிரை நஞ்ச முண்ட
குழகனே கோல வில்லீ
கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே
நறுமலர் நீருங் கொண்டு
நாடொறு மேத்தி வாழ்த்தி
செறிவன சித்தம் வைத்து
திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா
மாமறை யங்க மாறும்
அறிவனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே
நலந்திகழ் வாயின் நூலாற்
சருகிலை பந்தர் செய்த
சிலந்தியை அரச தாள
அருளினாய் என்று திண்ணங்
கலந்துடன் வந்து நின்றாள்
கருதிநான் காண்ப தாக
அலந்தனன் ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே
பொடிக்கொடு பூசி பொல்லா
குரம்பையிற் புந்தி யொன்றி
பிடித்துநின் றாள்க ளென்றும்
பிதற்றிநா னிருக்க மாட்டேன்
எடுப்பனென் றிலங்கை கோன்வ
தெடுத்தலும் இருப துதோள்
அடர்த்தனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சொக்கநாதேசுவரர் தேவியார் மீனாட்சியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவண்ணாமலை திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
ஓதிமா மலர்கள் தூவி
உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்டோ ள்
சுடர்மழு படையி னானே
ஆதியே அமரர் கோவே
அணியணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால்
நினையுமா நினைவி லேனே
பண்டனை வென்ற இன்சொற்
பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றை
கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே
அணியணா மலையு ளானே
தொண்டனேன் உன்னை அல்லாற்
சொல்லுமா சொல்லி லேனே
உருவமும் உயிரு மாகி
ஓதிய உலகு கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான்
மற்றொரு மாடி லேனே
பைம்பொனே பவள குன்றே
பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா
சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
அணியணா மலையு ளானே
என்பொனே உன்னை யல்லால்
யாதும்நான் நினைவி லேனே
பிறையணி முடியி னானே
பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார்
கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமர ரேத்தும்
அணியணா மலையு ளானே
இறைவனே உன்னை யல்லா
லியாதுநான் நினைவி லேனே
புரிசடை முடியின் மேலோர்
பொருபுனற் கங்கை வைத்து
கரியுரி போர்வை யா
கருதிய கால காலா
அரிகுலம் மலிந்த அண்ணா
மலையுளாய் அலரின் மிக்க
வரிமிகு வண்டு பண்செய்
பாதநான் மறப்பி லேனே
இரவியும் மதியும் விண்ணும்
இருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவனம் எட்டு
திசையொளி உருவ மானாய்
அரவுமிழ் மணிகொள் சோதி
அணியணா மலையு ளானே
பரவுநின் பாத மல்லாற்
பரமநான் பற்றி லேனே
பார்த்தனு கன்று நல்கி
பாசுப தத்தை ஈந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை
நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்துவ தீண்டு கொண்டல்
அணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பா
திறமலாற் றிறமி லேனே
பாலுநெய் முதலா மிக்க
பசுவில்ஐ தாடு வானே
மாலுநான் முகனுங் கூடி
காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூகம்
அணியணா மலையு ளானே
வாலுடை விடையாய் உன்றன்
மலரடி மறப்பி லேனே
இரக்கமொன் றியாது மில்லா
காலனை கடிந்த எம்மான்
உரத்தினால் வரையை ஊக்க
ஒருவிரல் நுதியி னாலே
அரக்கனை நெரித்த அண்ணா
மலையுளாய் அமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தி
திருவடி மறப்பி லேனே
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் அருணாசலேசுவரர் தேவியார் உண்ணாமுலையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவீழிமிழலை திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பூதத்தின் படையர் பாம்பின்
பூணினர் பூண நூலர்
சீதத்திற் பொலிந்த திங்க
கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர்
கீதத்திற் பொலிந்த ஓசை
கேள்வியர் வேள்வி யாளர்
வேதத்தின் பொருளர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே
காலையிற் கதிர்செய் மேனி
கங்குலிற் கறுத்த கண்டர்
மாலையின் மதியஞ் சேர்ந்த
மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையிற் பாகும் போல
அண்ணித்தி டடியார கென்றும்
வேலையின் அமுதர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே
வருந்தின நெருநல் இன்றாய்
வழங்கின நாளர் ஆற்கீழ்
இருந்துநன் பொருள்கள் நால்வர
கியம்பினர் இருவ ரோடும்
பொருந்தினர் பிரிந்து தம்பால்
பொய்யரா மவர்க கென்றும்
விருந்தினர் திருந்து வீழி
மிழலையுள் விகிர்த னாரே
நிலையிலா வூர்மூன் றொன்ற
நெருப்பரி காற்றம் பாக
சிலையுநா ணதுவு நாகங்
கொண்டவர் தேவர் தங்கள்
தலையினாற் றரித்த என்பும்
தலைமயிர் வடமும் பூண்ட
விலையிலா வேடர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே
மறையிடை பொருளர் மொட்டின்
மலர்வழி வாச தேனர்
கறவிடை பாலின் நெய்யர்
கரும்பினிற் கட்டி யாளர்
பிறையிடை பாம்பு கொன்றை
பிணையல்சேர் சடையுள் நீரர்
விறகிடை தீயர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே
எண்ணக தில்லை அல்லர்
உளரல்லர் இமவான் பெற்ற
பெண்ணக தரையர் காற்றிற்
பெருவலி யிருவ ராகி
மண்ணக தைவர் நீரில்
நால்வர்தீ யதனில் மூவர்
விண்ணக தொருவர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே
சந்தணி கொங்கை யாளோர்
பங்கினர் சாம வேதர்
எந்தையும் எந்தை தந்தை
தந்தையு மாய ஈசர்
அந்தியோ டுதயம் அந்த
ணாளர்ஆன் நெய்யால் வேட்கும்
வெந்தழ லுருவர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே
நீற்றினை நிறை பூசி
நித்தல்ஆ யிரம்பூ கொண்டு
ஏற்றுழி ஒருநா ளொன்று
குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலு காழி நல்கி
யவன்கொணர திழிச்சுங் கோயில்
வீற்றிரு தளிப்பர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே
சித்திசெய் பவர்க கெல்லாஞ்
சேர்விடஞ் சென்று கூட
பத்திசெய் பவர்கள் பாவம்
பறைப்பவர் இறப்பி லாளர்
முத்திசை பவள மேனி
முதிரொளி நீல கண்டர்
வித்தினில் முளையர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே
தருக்கின அரக்கன் தேரூர்
சாரதி தடைநி லாது
பொருப்பினை யெடுத்த தோளும்
பொன்முடி பத்தும் புண்ணாய்
நெரிப்புண்டங் கலறி மீண்டு
நினைந்தடி பரவ தம்வாள்
விருப்பொடுங் கொடுப்பர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வீழியழகீசுவரர் தேவியார் சுந்தராம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சாய்க்காடு திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
தோடுலா மலர்கள் தூவி
தொழுதெழு மார்க்கண் டேயன்
வீடுநாள் அணுகிற் றென்று
மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செல்லு மஞ்சி
பாதமே சரண மென்ன
சாடினார் காலன் மாள
சாய்க்காடு மேவி னாரே
வடங்கெழு மலை தாக
வானவர் அசுர ரோடு
கடைந்திட எழுந்த நஞ்சங்
கண்டுபல் தேவ ரஞ்சி
அடைந்துநும் சரண மென்ன
அருள்பெரி துடைய ராகி
தடங்கடல் நஞ்சம் உண்டார்
சாய்க்காடு மேவி னாரே
அரணிலா வெளிய நாவல்
அருள்நிழ லாக ஈசன்
வரணிய லாகி தன்வாய்
நூலினாற் பந்தர் செய்ய
முரணிலா சிலந்தி தன்னை
முடியுடை மன்ன னாக்கி
தரணிதான் ஆள வைத்தார்
சாய்க்காடு மேவி னாரே
அரும்பெருஞ் சிலைக்கை வேட
னாய்விறற் பார்த்தற் கன்று
உரம்பெரி துடைமை காட்டி
ஒள்ளமர் செய்து மீண்டே
வரம்பெரி துடைய னாக்கி
வாளமர் முகத்தின் மன்னுஞ்
சரம்பொலி தூணி ஈந்தார்
சாய்க்காடு மேவி னாரே
இந்திரன் பிரமன் அங்கி
எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி
வானவர் வணங்கி வாழ
தந்திர மறியா தக்கன்
வேள்வியை தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ்
சாய்க்காடு மேவி னாரே
ஆமலி பாலும் நெய்யும்
ஆட்டிஅர சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்ட
பொறாததன் தாதை தாளை
கூர்மழு வொன்றால் ஓச்ச
குளிர்சடை கொன்றை மாலை
தாமநற் சண்டி கீந்தார்
சாய்க்காடு மேவி னாரே
மையறு மனத்த னாய
பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் லமர ரேத்த
ஆயிர முகம தாகி
வையகம் நெளி பாய்வான்
வந்திழி கங்கை யென்னு
தையலை சடையில் ஏற்றார்
சாய்க்காடு மேவி னாரே
குவப்பெரு தடக்கை வேடன்
கொடுஞ்சிலை இறைச்சி பார
துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கி
தூயவா கலசம் ஆட்ட
உவப்பெருங் குருதி சோர
ஒருகணை யிடந்தங் கப்ப
தவப்பெரு தேவு செய்தார்
சாய்க்காடு மேவி னாரே
நக்குலா மலர்பன் னூறு
கொண்டுநன் ஞான தோடு
மிக்கபூ சனைகள் செய்வான்
மென்மல ரொன்று காணா
தொக்குமென் மலர்க்கண் ணென்றங்
கொருகணை யிடந்து மப்ப
சக்கரங் கொடுப்பர் போலுஞ்
சாய்க்காடு மேவி னாரே
புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து
மாயகொண் டரக்க னோடி
சிவன்திரு மலையை பேர்க்க
திருமலர குழலி யஞ்ச
வியன்பெற எய்தி வீழ
விரல்சிறி தூன்றி மீண்டே
சயம்பெற நாம மீந்தார்
சாய்க்காடு மேவி னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சாயவனேசுவரர்
தேவியார் குயிலின்நன்மொழியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநாகேச்சரம் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
கச்சைசேர் அரவர் போலுங்
கறையணி மிடற்றர் போலும்
பிச்சைகொண் டுண்பர் போலும்
பேரரு ளாலர் போலும்
இச்சையால் மலர்கள் தூவி
இரவொடு பகலு தம்மை
நச்சுவார கினியர் போலும்
நாகஈ சரவ னாரே
வேடுறு வேட ராகி
விசயனோ டெய்தார் போலுங்
காடுறு பதியர் போலுங்
கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலு
தீவினை தீர்க்க வல்ல
நாடறி புகழர் போலும்
நாகஈ சரவ னாரே
கற்றுணை வில்ல தா
கடியரண் செற்றார் போலும்
பொற்றுணை பாதர் போலும்
புலியத ளுடையார் போலுஞ்
சொற்றுணை மாலை கொண்டு
தொழுதெழு வார்க கெல்லாம்
நற்றுணை யாவர் போலும்
நாகஈ சரவ னாரே
கொம்பனாள் பாகர் போலுங்
கொடியுடை விடையர் போலுஞ்
செம்பொனா ருருவர் போலு
திகழ்திரு நீற்றர் போலும்
எம்பிரான் எம்மை யாளும்
இறைவனே என்று தம்மை
நம்புவார கன்பர் போலும்
நாகஈ சரவ னாரே
கடகரி யுரியர் போலுங்
கனல்மழு வாளர் போலும்
படவர வரையர் போலும்
பாரிடம் பலவுங் கூடி
குடமுடை முழவம் ஆர்ப்ப
கூளிகள் பாட நாளும்
நடநவில் அடிகள் போலும்
நாகஈ சரவ னாரே
பிறையுறு சடையர் போலும்
பெண்ணொரு பாகர் போலும்
மறையுறு மொழியர் போலும்
மால்மறை யவன்ற னோடு
முறைமுறை அமரர் கூடி
முடிகளால் வணங்க நின்ற
நறவமர் கழலர் போலும்
நாகஈ சரவ னாரே
வஞ்சகர கரியர் போலும்
மருவினோர கெளியர் போலுங்
குஞ்சர துரியர் போலுங்
கூற்றினை குமைப்பர் போலும்
விஞ்சையர் இரிய அன்று
வேலைவாய் வந்தெ ழுந்த
நஞ்சணி மிடற்றர் போலும்
நாகஈ சரவ னாரே
போகமார் மோடி கொங்கை
புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும்
வெண்பொடி யாடு மேனி
பாகமா லுடையர் போலும்
பருப்பத வில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும்
நாகஈ சரவ னாரே
கொக்கரை தாளம் வீணை
பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும்
ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும்
மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும்
நாகஈ சரவ னாரே
வின்மையாற் புரங்கள் மூன்றும்
வெந்தழல் விரித்தார் போலும்
தன்மையால் அமரர் தங்கள்
தலைவர்க்கு தலைவர் போலும்
வன்மையான் மலையெ டுத்தான்
வலியினை தொலைவி தாங்கே
நன்மையால் அளிப்பர் போலும்
நாகஈ சரவ னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சண்பகாரண்ணியேசுவரர்
தேவியார் குன்றமுலைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கொண்டீச்சரம் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
வரைகிலேன் புலன்க ளைந்தும்
வரைகிலா பிறவி மா
புரையிலே அடங்கி நின்று
புறப்படும் வழியுங் காணேன்
அரையிலே மிளிரு நாக
தண்ணலே அஞ்ச லென்னாய்
திரையுலாம் பழன வேலி
திருக்கொண்டீ சரத்து ளானே
தொண்டனேன் பிறந்து வாளா
தொல்வினை குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து
பேர்வதோர் வழியுங் காணேன்
அண்டனே அண்ட வாணா
அறிவனே அஞ்ச லென்னாய்
தெண்டிரை பழனஞ் சூழ்ந்த
திருக்கொண்டீ சரத்து ளானே
கால்கொடு தெலும்பு மூட்டி
கதிர்நரம் பாக்கை யார்த்து
தோலுடு துதிர மட்டி
தொகுமயிர் மேய்ந்த கூரை
ஓலெடு துழைஞர் கூடி
ஒளிப்பதற் கஞ்சு கின்றேன்
சேலுடை பழனஞ் சூழ்ந்த
திருக்கொண்டீ சரத்து ளானே
கூட்டமாய் ஐவர் வந்து
கொடுந்தொழிற் குணத்த ராகி
ஆட்டுவார காற்ற கில்லேன்
ஆடர வசைத்த கோவே
காட்டிடை யரங்க மாக
ஆடிய கடவு ளேயோ
சேட்டிரும் பழன வேலி
திருக்கொண்டீ சரத்து ளானே
பொக்கமாய் நின்ற பொல்லா
புழுமிடை முடைகொள் ஆக்கை
தொக்குநின் றைவர் தொண்ணூற்
றறுவரு துயக்க மெய்த
மிக்குநின் றிவர்கள் செய்யும்
வேதனை கலந்து போனேன்
செக்கரே திகழும் மேனி
திருக்கொண்டீ சரத்து ளானே
ஊனுலா முடைகொள் ஆக்கை
உடைகல மாவ தென்றும்
மானுலா மழைக்க ணார்தம்
வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
நானெலா மினைய கால
நண்ணிலேன் எண்ண மில்லேன்
தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த
திருக்கொண்டீ சரத்து ளானே
சாணிரு மடங்கு நீண்ட
சழக்குடை பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற்
றறுவரும் மயக்கஞ் செய்து
பேணிய பதியின் நின்று
பெயரும்போ தறிய மாட்டேன்
சேணுயர் மாட நீடு
திருக்கொண்டீ சரத்து ளானே
பொய்மறி தியற்றி வைத்து
புலால்கமழ் பண்டம் பெய்து
பைமறி தியற்றி யன்ன
பாங்கிலா குரம்பை நின்று
கைமறி தனைய வாவி
கழியும்போ தறிய மாட்டேன்
சென்னெறி செலவு காணேன்
திருக்கொண்டீ சரத்து ளானே
பாலனா கழிந்த நாளும்
பனிமலர கோதை மார்தம்
மேலனா கழிந்த நாளும்
மெலிவொடு மூப்பு வந்து
கோலனா கழிந்த நாளுங்
குறிக்கோளி லாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலி
திருக்கொண்டீ சரத்து ளானே
விரைதரு கருமென் கூந்தல்
விளங்கிழை வேலொண் கண்ணாள்
வெருவர இலங்கை கோமான்
விலங்கலை எடுத்த ஞான்று
பருவரை யனைய தோளும்
முடிகளும் பாரி வீழ
திருவிர லூன்றி னானே
திருக்கொண்டீ சரத்து ளானே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பசுபதீசுவரர் தேவியார் சாந்தநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாலங்காடு திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
வெள்ளநீர சடையர் போலும்
விரும்புவார கெளியர் போலும்
உள்ளுளே யுருகி நின்றங்
குகப்பவர கன்பர் போலுங்
கள்ளமே வினைக ளெல்லாங்
கரிசறு திடுவர் போலும்
அள்ளலம் பழனை மேய
ஆலங்கா டடிக ளாரே
செந்தழ லுருவர் போலுஞ்
சினவிடை யுடையர் போலும்
வெந்தவெண் ணீறு கொண்டு
மெய்க்கணி திடுவர் போலும்
மந்தமாம் பொழிற் பழனை
மல்கிய வள்ளல் போலும்
அந்தமில் அடிகள் போலும்
ஆலங்கா டடிக ளாரே
கண்ணினாற் காம வேளை
கனலெழ விழிப்பர் போலும்
எண்ணிலார் புரங்கள் மூன்று
மெரியுண சிரிப்பர் போலும்
பண்ணினார் முழவ மோவா
பைம்பொழிற் பழனை மேய
அண்ணலார் எம்மை யாளும்
ஆலங்கா டடிக ளாரே
காறிடு விடத்தை யுண்ட
கண்டரெண் தோளர் போலு
தூறிடு சுடலை தன்னிற்
சுண்ணவெண் ணீற்றர் போலுங்
கூறிடு முருவர் போலுங்
குளிர்பொழிற் பழனை மேய
ஆறிடு சடையர் போலும்
ஆலங்கா டடிக ளாரே
பார்த்தனோ டமர் பொருது
பத்திமை காண்பர் போலுங்
கூர்த்தவா யம்பு கோத்து
குணங்களை அறிவர் போலும்
பேர்த்துமோ ராவ நாழி
அம்போடுங் கொடுப்பர் போலு
தீர்த்தமாம் பழனை மேய
திருவாலங் காட னாரே
வீட்டினார் சுடுவெண் ணீறு
மெய்க்கணி திடுவர் போலுங்
காட்டில்நின் றாடல் பேணுங்
கருத்தினை யுடையர் போலும்
பாட்டினார் முழவ மோவா
பைம்பொழிற் பழனை மேயார்
ஆட்டினார் அரவ தன்னை
ஆலங்கா டடிக ளாரே
தாளுடை செங்க மல
தடங்கொள்சே வடியர் போலும்
நாளுடை காலன் வீழ
உதைசெய்த நம்பர் போலுங்
கோளுடை பிறவி தீர்ப்பார்
குளிர்பொழிற் பழனை மேய
ஆளுடை யண்ணல் போலும்
ஆலங்கா டடிக ளாரே
கூடினார் உமைதன் னோடே
குறிப்புடை வேடங் கொண்டு
சூடினார் கங்கை யாளை
சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாம வேதம்
பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண
ஆலங்கா டடிக ளாரே
வெற்றரை சமண ரோடு
விலையுடை கூறை போர்க்கும்
ஒற்றரை சொற்கள் கொள்ளார்
குணங்களை உகப்பர் போலும்
பெற்றமே உகந்தங் கேறும்
பெருமையை யுடையர் போலும்
அற்றங்கள் அறிவர் போலும்
ஆலங்கா டடிக ளாரே
மத்தனாய் மலையெ டுத்த
அரக்கனை கரத்தோ டொல்க
ஒத்தினார் திருவி ரலால்
ஊன்றியி டருள்வர் போலும்
பத்தர்தம் பாவ தீர்க்கும்
பைம்பொழிற் பழனை மேய
அத்தனார் நம்மை யாள்வார்
ஆலங்கா டடிக ளாரே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஊர்த்ததாண்டவேசுவரர்
தேவியார் வண்டார்குழலியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கோவலூர்வீரட்டம் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
செத்தையேன் சிதம்ப நாயேன்
செடியனேன் அழுக்கு பாயும்
பொத்தையே போற்றி நாளும்
புகலிடம் அறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கேன்
இருளற நோக்க மாட்டா
கொத்தையேன் செய்வ தென்னே
கோவல்வீ ரட்ட னீரே
தலைசு திருகை நாற்றி
தரணிக்கே பொறைய தாகி
நிலையிலா நெஞ்ச தன்னுள்
நித்தலும் ஐவர் வேண்டும்
விலைகொடு தறுக்க மாட்டேன்
வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
குலைகொள்மாங் கனிகள் சிந்தும்
கோவல்வீ ரட்ட னீரே
வழித்தலை படவு மாட்டேன்
வைகலு தூய்மை செய்து
பழித்திலேன் பாச மற்று
பரமநான் பரவ மாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை
என்னினை திருக்க மாட்டேன்
கொழித்துவ தலைக்கு தெண்ணீர
கோவல்வீ ரட்ட னீரே
சாற்றுவர் ஐவர் வந்து
சந்தித்த குடிமை வேண்டி
காற்றுவர் கனல பேசி
கண்செவி மூக்கு வாயுள்
ஆற்றுவர் அலந்து போனேன்
ஆதியை அறிவொன் றின்றி
கூற்றுவர் வாயிற் பட்டேன்
கோவல்வீ ரட்ட னீரே
தடுத்திலேன் ஐவர் தம்மை
தத்துவ துயர்வு நீர்மை
படுத்திலேன் பரப்பு நோக்கி
பன்மலர பாத முற்ற
அடுத்திலேன் சிந்தை யார
ஆர்வலி தன்பு திண்ணங்
கொடுத்திலேன் கொடிய வாநான்
கோவல்வீ ரட்ட னீரே
மாச்செய்த குரம்பை தன்னை
மண்ணிடை மயக்க மெய்து
நாச்செய்து நாலு மைந்தும்
நல்லன வாய்தல் வைத்து
காச்செய்த கா தன்னுள்
நித்தலும் ஐவர் வந்து
கோச்செய்து குமைக்க வாற்றேன்
கோவல்வீ ரட்ட னீரே
படைகள்போல் வினைகள் வந்து
பற்றியென் பக்கல் நின்றும்
விடகிலா வாத லாலே
விகிர்தனை விரும்பி யேத்தும்
இடையிலேன் என்செய் கேன்நான்
இரப்பவர் தங்க கென்றுங்
கொடையிலேன் கொள்வ தேநான்
கோவல்வீ ரட்ட னீரே
பிச்சிலேன் பிறவி தன்னை
பேதையேன் பிணக்க மென்னு
துச்சுளே அழுந்தி வீழ்ந்து
துயரமே இடும்பை தன்னுள்
அச்சனாய் ஆதி மூர்த்தி
கன்பனாய் வாழ மாட்டா
கொச்சையேன் செய்வ தென்னே
கோவல்வீ ரட்ட னீரே
நிணத்திடை யாக்கை பேணி
நியமஞ்செய் திருக்க மாட்டேன்
மணத்திடை ஆட்டம் பேசி
மக்களே சுற்ற மென்னுங்
கணத்திடை ஆட்ட பட்டு
காதலால் உன்னை பேணுங்
குணத்திடை வாழ மாட்டேன்
கோவல்வீ ரட்ட னீரே
விரிகடல் இலங்கை கோனை
வியன்கயி லா தின்கீழ்
இருபது தோளும் பத்து
சிரங்களும் நெறிய வூன்றி
பரவிய பாடல் கேட்டு
படைகொடு தருளி செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த
கோவல்வீ ரட்ட னாரே
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வீரட்டேசநாதர் தேவியார் சிவாநந்தவல்லி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநனிபள்ளி திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
முற்றுணை யாயி னானை
மூவர்க்கு முதல்வன் றன்னை
சொற்றுணை ஆயி னானை
சோதியை ஆத ரித்து
உற்றுணர துருகி யூறி
உள்கசி வுடைய வர்க்கு
நற்றுணை யாவர் போலும்
நனிபள்ளி அடிக ளாரே
புலர்ந்தகால் பூவும் நீருங்
கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயின் நூலால்
வட்டணை பந்தர் செய்த
சிலந்தியை அரைய னாக்கி
சீர்மைகள் அருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த
நனிபள்ளி அடிக ளாரே
எண்பதும் பத்தும் ஆறு
மென்னுளே இருந்து மன்னி
கண்பழ கொன்று மின்றி
கலக்கநான் அலக்க ழிந்தேன்
செண்பக திகழும் புன்னை
செழுந்திர குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த
நனிபள்ளி அடிக ளாரே
பண்ணினார் பாட லாகி
பழத்தினில் இரத மாகி
கண்ணினார் பார்வை யாகி
கருத்தொடு கற்ப மாகி
எண்ணினார் எண்ண மாகி
ஏழுல கனைத்து மாகி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார்
நனிபள்ளி அடிக ளாரே
துஞ்சிருள் காலை மாலை
தொடர்ச்சியை மற திராதே
அஞ்செழு தோதின் நாளும்
அரனடி கன்ப தாகும்
வஞ்சனை பால்சோ றாக்கி
வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார்
நனிபள்ளி அடிக ளாரே
செம்மலர கமல தோனு
திருமுடி காண மாட்டான்
அம்மலர பாதங் காண்பான்
ஆழியான் அகழ்ந்துங் காணான்
நின்மலன் என்றங் கேத்தும்
நினைப்பினை அருளி நாளும்
நம்மலம் அறுப்பர் போலும்
நனிபள்ளி அடிக ளாரே
அரவத்தால் வரையை சுற்றி
அமரரோ டசுரர் கூடி
அரவித்து கடை தோன்றும்
ஆலநஞ் சமுதா வுண்டார்
விரவித்தம் அடிய ராகி
வீடிலா தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ வொட்டார்
நனிபள்ளி அடிக ளாரே
மண்ணுளே திரியும் போது
வருவன பலவுங் குற்றம்
புண்ணுளே புரைபு ரையன்
புழுப்பொதி பொள்ள லாக்கை

இப்பதிகத்தில் ம் செய்யுளின்
பின்னிரண்டடிகளும் ம்செய்யுளும்
மறைந்து போயின
பத்துமோர் இரட்டி தோளான்
பாரித்து மலையெ டுக்க
பத்துமோர் இரட்டி தோள்கள்
படருடம் படர வூன்றி
பத்துவாய் கீதம் பாட
பரிந்தவற் கருள்கொ டுத்தார்
பத்தர்தாம் பரவி யேத்தும்
நனிபள்ளி பரம னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் நற்றுணையப்பர் தேவியார் பர்வதராசபுத்திரி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநாகைக்காரோணம் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
மனைவிதாய் தந்தை மக்கள்
மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி
வேதனை கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை
மன்னுகா ரோண தானை
நினையுமா வல்லீ ராகில்
உய்யலாம் நெஞ்சி னீரே
வையனை வைய முண்ட
மாலங்க தோண்மேற் கொண்ட
செய்யனை செய்ய போதிற்
திசைமுகன் சிரமொன் றேந்துங்
கையனை கடல்சூழ் நாகை
காரோணங் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே
அம்மநாம் உய்ந்த வாறே
நிருத்தனை நிமலன் றன்னை
நீணிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேத வித்தை
விளைபொருள் மூல மான
கருத்தனை கடல்சூழ் நாகை
காரோணங் கோயில் கொண்ட
ஒருத்தனை உணர்த லால்நாம்
உய்ந்தவா நெஞ்சி னீரே
மண்டனை இரந்து கொண்ட
மாயனோ டசுரர் வானோர்
தெண்டிரை கடைய வந்த
தீவிட தன்னை யுண்ட
கண்டனை கடல்சூழ் நாகை
காரோணங் கோயில் கொண்ட
அண்டனை நினைந்த நெஞ்சே
அம்மநாம் உய்ந்த வாறே
நிறைபுனல் அணிந்த சென்னி
நீணிலா அரவஞ் சூடி
மறையொலி பாடி யாடல்
மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகை
காரோணங் கோயில் கொண்ட
இறைவனை நாளு மேத்த
இடும்பைபோய் இன்ப மாமே
வெம்பனை கருங்கை யானை
வெருவவன் றுரிவை போர்த்த
கம்பனை காலற் காய்ந்த
காலனை ஞால மேத்தும்
உம்பனை உம்பர் கோனை
நாகைக்கா ரோண மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே
திண்ணம்நாம் உய்ந்த வாறே
வெங்கடுங் கான தேழை
தன்னொடும் வேட னாய்ச்சென்
றங்கமர் மலைந்து பார்த்தற்
கடுசரம் அருளி னானை
மங்கைமார் ஆட லோவா
மன்னுகா ரோண தானை
கங்குலும் பகலுங் காண
பெற்றுநாங் களித்த வாறே
தெற்றினர் புரங்கள் மூன்று
தீயினில் விழவோ ரம்பால்
செற்றவெஞ் சிலையர் வஞ்சர்
சிந்தையு சேர்வி லாதார்
கற்றவர் பயிலும் நாகை
காரோணங் கருதி யேத்த
பெற்றவர் பிறந்தார் மற்று
பிறந்தவர் பிறந்தி லாரே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
கருமலி கடல்சூழ் நாகை
காரோணர் கமல பா
தொருவிரல் நுதிக்கு நில்லா
தொண்டிறல் அரக்க னுக்கான்
இருதிற மங்கை மாரோ
டெம்பிரான் செம்பொ னாக
திருவடி தரித்து நிற்க
திண்ணம்நாம் உய்ந்த வாறே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் காயாரோகணேசுவரர்
தேவியார் நீலாயதாட்சியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவின்னம்பர் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
விண்ணவர் மகுட கோடி
மிடைந்தசே வடியர் போலும்
பெண்ணொரு பாகர் போலும்
பேடலி யாணர் போலும்
வண்ணமால் அயனுங் காணா
மால்வரை எரியர் போலும்
எண்ணுரு வநேகர் போலும்
இன்னம்பர் ஈச னாரே
பன்னிய மறையர் போலும்
பாம்பரை யுடையர் போலு
துன்னிய சடையர் போலு
தூமதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும்
மாதிடம் மகிழ்வர் போலும்
என்னையும் உடையர் போலும்
இன்னம்பர் ஈச னாரே
மறியொரு கையர் போலும்
மாதுமை யுடையர் போலும்
பறிதலை பிறவி நீக்கி
பணிகொள வல்லர் போலுஞ்
செறிவுடை அங்க மாலை
சேர்திரு வுருவர் போலும்
எறிபுனற் சடையர் போலும்
இன்னம்பர் ஈச னாரே
விடமலி கண்டர் போலும்
வேள்வியை அழிப்பர் போலுங்
கடவுநல் விடையர் போலுங்
காலனை காய்வர் போலும்
படமலி அரவர் போலும்
பாய்புலி தோலர் போலும்
இடர்களை தருள்வர் போலும்
இன்னம்பர் ஈச னாரே
அளிமலர கொன்றை துன்றும்
அவிர்சடை யுடையர் போலுங்
களிமயிற் சாய லோடுங்
காமனை விழிப்பர் போலும்
வெளிவளர் உருவர் போலும்
வெண்பொடி யணிவர் போலும்
எளியவர் அடியர கென்றும்
இன்னம்பர் ஈச னாரே
கணையமர் சிலையர் போலுங்
கரியுரி உடையர் போலு
துணையமர் பெண்ணர் போலு
தூமணி குன்றர் போலும்
அணையுடை அடியர் கூடி
அன்பொடு மலர்கள் தூவும்
இணையடி உடையர் போலும்
இன்னம்பர் ஈச னாரே
பொருப்பமர் புயத்தர் போலும்
புனலணி சடையர் போலும்
மருப்பிள வாமை தாங்கு
மார்பில்வெண் ணூலர் போலும்
உருத்திர மூர்த்தி போலும்
உணர்விலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும்
இன்னம்பர் ஈச னாரே
காடிடம் உடையர் போலுங்
கடிகுரல் விளியர் போலும்
வேடுரு வுடையர் போலும்
வெண்மதி கொழுந்தர் போலுங்
கோடலர் வன்னி தும்பை
கொக்கிற கலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும்
இன்னம்பர் ஈச னாரே
காறிடு விடத்தை யுண்ட
கண்டரெண் டோ ளர் போலும்
நீறுடை யுருவர் போலும்
நினைப்பினை அரியர் போலும்
பாறுடை தலைகை ஏந்தி
பலிதிரி துண்பர் போலும்
ஏறுடை கொடியர் போலும்
இன்னம்பர் ஈச னாரே
ஆர்த்தெழு மிலங்கை கோனை
அருவரை அடர்ப்பர் போலும்
பார்த்தனோ டமர் பொருது
படைகொடு தருள்வர் போலு
தீர்த்தமாங் கங்கை தன்னை
திருச்சடை வைப்பர் போலும்
ஏத்தஏ ழுலகும் வைத்தார்
இன்னம்பர் ஈச னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் எழுத்தறிந்தவீசுவரர்
தேவியார் கொந்தார்பூங்குழலம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சேறை திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பெருந்திரு இமவான் பெற்ற
பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் தவங்கள் செய்ய
மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனி தன்பால்
அங்கொரு பாக மாக
திருந்திட வைத்தார் சேறை
செந்நெறி செல்வ னாரே
ஓர்த்துள வாறு நோக்கி
உண்மையை உணரா குண்டர்
வார்த்தையை மெய்யென் றெண்ணி
மயக்கில்வீழ தழுந்து வேனை
பேர்த்தெனை ஆளா கொண்டு
பிறவிவான் பிணிக ளெல்லா
தீர்த்தருள் செய்தார் சேறை
செந்நெறி செல்வ னாரே
ஒன்றிய தவத்து மன்னி
உடையனாய் உலப்பில் காலம்
நின்றுதங் கழல்க ளேத்தும்
நீள்சிலை விசய னுக்கு
வென்றிகொள் வேட னாகி
விரும்பிவெங் கான கத்து
சென்றருள் செய்தார் சேறை
செந்நெறி செல்வ னாரே
அஞ்சையும் அடக்கி ஆற்ற
லுடையனாய் அநேக காலம்
வஞ்சமில் தவத்துள் நின்று
மன்னிய பகீர தற்கு
வெஞ்சின முகங்க ளாகி
விசையொடு பாயுங் கங்கை
செஞ்சடை யேற்றார் சேறை
செந்நெறி செல்வ னாரே
நிறைந்தமா மணலை கூப்பி
நேசமோ டாவின் பாலை
கறந்துகொண் டாட்ட கண்டு
கறுத்ததன் தாதை தாளை
எறிந்தமா ணிக்க போதே
எழில்கொள்சண் டீசன் என்ன
சிறந்தபே றளித்தார் சேறை
செந்நெறி செல்வ னாரே
விரித்தபல் கதிர்கொள் சூலம்
வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல கால
பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்ச கண்டு
ஒண்டிரு மணிவாய் விள்ள
சிரித்தருள் செய்தார் சேறை
செந்நெறி செல்வ னாரே
சுற்றுமுன் இமையோர் நின்று
தொழுதுதூ மலர்கள் தூவி
மற்றெமை உயக்கொள் என்ன
மன்னுவான் புரங்கள் மூன்றும்
உற்றொரு நொடியின் முன்னம்
ஒள்ளழல் வாயின் வீழ
செற்றருள் செய்தார் சேறை
செந்நெறி செல்வ னாரே
முந்தியிவ் வுலக மெல்லாம்
படைத்தவன் மாலி னோடும்
எந்தனி நாத னேயென்
றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை
அடிமுடி யறியா வண்ணஞ்
செந்தழ லானார் சேறை
செந்நெறி செல்வ னாரே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
ஒருவரும் நிக ரிலாத
ஒண்டிறல் அரக்கன் ஓடி
பெருவரை யெடுத்த திண்டோ ள்
பிறங்கிய முடிகள் இற்று
மருவியெம் பெருமா னென்ன
மலரடி மெள்ள வாங்கி
திருவருள் செய்தார் சேறை
செந்நெறி செல்வ னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சென்னெறியப்பர் தேவியார் ஞானவல்லியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

நெஞ்சம்ஈசனைநினைந்த திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
முத்தினை மணியை பொன்னை
முழுமுதற் பவள மேய்க்குங்
கொத்தினை வயிர மாலை
கொழுந்தினை அமரர் சூடும்
வித்தினை வேத வேள்வி
கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே
முன்பனை யுலகு கெல்லாம்
மூர்த்தியை முனிக ளேத்தும்
இன்பனை இலங்கு சோதி
இறைவனை அரிவை யஞ்ச
வன்பனை தடக்கை வேள்வி
களிற்றினை யுரித்த எங்கள்
அன்பனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே
கரும்பினு மினியான் றன்னை
காய்கதிர சோதி யானை
இருங்கட லமுத தன்னை
இறப்பொடு பிற பிலானை
பெரும்பொரு கிளவி யானை
பெருந்தவ முனிவ ரேத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே
செருத்தனை யருத்தி செய்து
செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல்
கருத்தனை கனக மேனி
கடவுளை கருதும் வானோர
கொருத்தனை யொருத்தி பாகம்
பொருத்தியும் அருத்தி தீரா
நிருத்தனை நினைந்த நெஞ்சம்
நேர்பட நினைந்த வாறே
கூற்றினை யுதைத்த பாத
குழகனை மழலை வெள்ளே
றேற்றனை இமையோ ரேத்த
இருஞ்சடை கற்றை தன்மேல்
ஆற்றனை அடிய ரேத்தும்
அமுதனை அமுத யோக
நீற்றனை நினைந்த நெஞ்சம்
நேர்பட நினைந்த வாறே
கருப்பனை தடக்கை வேழ
களிற்றினை யுரித்த கண்டன்
விருப்பனை விளங்கு சோதி
வியன்கயி லாய மென்னும்
பொருப்பனை பொருப்பன் மங்கை
பங்கனை அங்கை யேற்ற
நெருப்பனை நினைந்த நெஞ்சம்
நேர்பட நினைந்த வாறே
நீதியால் நினைப்பு ளானை
நினைப்பவர் மனத்து ளானை
சாதியை சங்க வெண்ணீற்
றண்ணலை விண்ணில் வானோர்
சோதியை துளக்க மில்லா
விளக்கினை அளக்க லாகா
ஆதியை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே
பழகனை யுலகு கெல்லாம்
பருப்பனை பொருப்போ டொக்கும்
மழகளி யானை யின்றோல்
மலைமகள் நடுங்க போர்த்த
குழகனை குழவி திங்கள்
குளிர்சடை மருவ வைத்த
அழகனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே
விண்ணிடை மின்னொ பானை
மெய்ப்பெரும் பொருளொ பானை
கண்ணிடை மணியொ பானை
கடுவிரு சுடரொ பானை
எண்ணிடை யெண்ண லாகா
இருவரை வெருவ நீண்ட
அண்ணலை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே
உரவனை திரண்ட திண்டோ ள்
அரக்கனை யூன்றி மூன்றூர்
நிரவனை நிமிர்ந்த சோதி
நீண்முடி யமரர் தங்கள்
குரவனை குளிர்வெண் டிங்கள்
சடையிடை பொதியும் ஐவாய்
அரவனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

தனி திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
தொண்டனேன் பட்ட தென்னே
தூயகா விரியின் நன்னீர்
கொண்டிரு கோதி யாட்டி
குங்கு குழம்பு சாத்தி
இண்டைகொண் டேற நோக்கி
ஈசனை எம்பி ரானை
கண்டனை கண்டி ராதே
காலத்தை கழித்த வாறே
பின்னிலேன் முன்னி லேன்நான்
பிறப்பறு தருள்செய் வானே
என்னிலேன் நாயி னேன்நான்
இளங்கதிர பயலை திங்க
சின்னிலா எறிக்குஞ் சென்னி
சிவபுர தமர ரேறே
நின்னலால் களைகண் ஆரே
நீறுசே ரகல தானே
கள்ளனேன் கள்ள தொண்டா
காலத்தை கழித்து போக்கி
தெள்ளியே னாகி நின்று
தேடினேன் நாடி கண்டேன்
உள்குவார் உள்கிற் றெல்லாம்
உடனிரு தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும்
விலாவிற சிரித்தி டேனே
உடம்பெனு மனைய கத்துள்
உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் யட்டி
உயிரெனு திரிம யக்கி
இடம்படு ஞான தீயால்
எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை
கழலடி காண லாமே
வஞ்சப்பெண் ணரங்கு கோயில்
வாளெயிற் றரவ துஞ்சா
வஞ்சப்பெண் இருந்த சூழல்
வான்றவழ் மதி தோயும்
வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன்
வாழ்வினை வாழ லுற்று
வஞ்சப்பெண் ணுறக்க மானேன்
வஞ்சனேன் என்செய் கேனே
உள்குவார் உள்ள தானை
உணர்வெனும் பெருமை யானை
உள்கினேன் நானுங் காண்பான்
உருகினேன் ஊறி யூறி
எள்கினேன் எந்தை பெம்மான்
இருதலை மின்னு கின்ற
கொள்ளிமேல் எறும்பென் னுள்ளம்
எங்ஙனங் கூடு மாறே
மோத்தையை கண்ட காக்கை
போலவல் வினைகள் மொய்த்துன்
வார்த்தையை பேச வொட்டா
மயக்கநான் மயங்கு கின்றேன்
சீத்தையை சிதம்பு தன்னை
செடிகொள்நோய் வடிவொன் றில்லா
ஊத்தையை கழிக்கும் வண்ணம்
உணர்வுதா உலக மூர்த்தீ
அங்கத்தை மண்ணு காக்கி
ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தை போக மாற்றி
பாவித்தேன் பரமா நின்னை
சங்கொத்த மேனி செல்வா
சாதல்நாள் நாயேன் உன்னை
எங்குற்றாய் என்ற போதா
இங்குற்றேன் என்கண் டாயே
வெள்ளநீர சடைய னார்தாம்
வினவுவார் போல வந்தென்
உள்ளமே புகுந்து நின்றார
குறங்குநான் புடைகள் போந்து
கள்ளரோ புகுந்தீ ரென்ன
கலந்துதான் நோக்கி நக்கு
வெள்ளரோ மென்று நின்றார்
விளங்கிளம் பிறைய னாரே
பெருவிரல் இறைதா னூன்ற
பிறையெயி றிலங்க அங்கா
தருவரை அனைய தோளான்
அரக்கனன் றலறி வீழ்ந்தான்
இருவரும் ஒருவ னாய
உருவமங் குடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு
காண்கநான் திரியு மாறே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

தனி திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
மருளவா மனத்த னாகி
மயங்கினேன் மதியி லாதேன்
இருளவா அறுக்கும் எந்தை
இணையடி நீழ லென்னும்
அருளவா பெறுத லின்றி
அஞ்சிநான் அல தேற்கு
பொருளவா தந்த வாறே
போதுபோ புலர்ந்த தன்றே
மெய்ம்மையாம் உழவை செய்து
விருப்பெனும் வித்தை வித்தி
பொய்ம்மையாங் களையை வாங்கி
பொறையெனும் நீரை பாய்ச்சி
தம்மையும் நோக்கி கண்டு
தகவெனும் வேலி யிட்டு
செம்மையுள் நிற்ப ராகிற்
சிவகதி விளையு மன்றே
எம்பிரான் என்ற தேகொண்
டென்னுளே புகுந்து நின்றிங்
கெம்பிரான் ஆட்ட ஆடி
என்னுளே உழிதர் வேனை
எம்பிரான் என்னை பின்னை
தன்னுளே கரக்கு மென்றால்
எம்பிரான் என்னி னல்லால்
என்செய்கேன் ஏழை யேனே
காயமே கோயி லா
கடிமனம் அடிமை யாக
வாய்மையே தூய்மை யாக
மனமணி இலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா
நிறையநீர் அமைய வாட்டி
பூசனை ஈச னார்க்கு
போற்றவி காட்டி னோமே
வஞ்சக புலைய னேனை
வழியற தொண்டிற் பூட்டி
அஞ்சலென் றாண்டு கொண்டாய்
அதுவுநின் பெருமை யன்றே
நெஞ்சகங் கனிய மாட்டேன்
நின்னையுள் வைக்க மாட்டேன்
நஞ்சிடங் கொண்ட கண்டா
என்னென நன்மை தானே
நாயினுங் கடைப்ப டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவ மார்த்த
அமுதனே அமுத மொத்து
நீயுமென் னெஞ்சி னுள்ளே
நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகில்
நோக்கிநீ அருள்செய் வாயே
விள்ளத்தா னொன்று மாட்டேன்
விருப்பெனும் வேட்கை யாலே
வள்ளத்தேன் போல நுன்னை
வாய்மடு துண்டி டாமே
உள்ளத்தே நிற்றி யேனும்
உயிர்ப்புளே வருதி யேனுங்
கள்ளத்தே நிற்றி அம்மா
எங்ஙனங் காணு மாறே
ஆசைவன் பாச மெய்தி
அங்குற்றே னிங்குற் றேனாய்
ஊசலா டுண்டு வாளா
உழந்துநான் உழித ராமே
தேசனே தேச மூர்த்தி
திருமறை காடு மேய
ஈசனே உன்றன் பாதம்
ஏத்துமா றருளெம் மானே
நிறைவிலேன் நேச மில்லேன்
நினைவிலேன் வினையின் பாச
மறைவிலே புறப்ப டேறும்
வகையென கருளெ னெம்மான்
சிறையிலேன் செய்வ தென்னே
திருவடி பரவி யேத்த
குறைவிலேன் குற்ற தீராய்
கொன்றைசேர் சடையி னானே
நடுவிலா காலன் வந்து
நணுகும்போ தறிய வொண்ணா
அடுவன அஞ்சு பூதம்
அவைத காற்ற லாகேன்
படுவன பலவுங் குற்றம்
பாங்கிலா மனிதர் வாழ்க்கை
கெடுவதி பிறவி சீசீ
கிளரொளி சடையி னீரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

தனி திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
கடும்பகல் நட்ட மாடி
கையிலோர் கபால மேந்தி
இடும்பலி கில்ல தோறு
முழிதரும் இறைவ னீரே
நெடும்பொறை மலையர் பாவை
நேரிழை நெறிமென் கூந்தற்
கொடுங்குழை புகுந்த வன்றுங்
கோவண மரைய தேயோ
கோவண முடுத்த வாறுங்
கோளர வசைத்த வாறு
தீவண சாம்பர் பூசி
திருவுரு இருந்த வாறும்
பூவண கிழவ னாரை
புலியுரி அரைய னாரை
ஏவண சிலையி னாரை
யாவரே எழுது வாரே
விளக்கினாற் பெற்ற இன்பம்
மெழுக்கினாற் பதிற்றி யாகு
துளக்கில்நன் மலர்தொ டுத்தால்
தூயவிண் ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின்
மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
அளப்பில கீதஞ் சொன்னார
கடிகள்தாம் அருளு மாறே
சந்திரற் சடையில் வைத்த
சங்கரன் சாம வேதி
அந்தர தமரர் பெம்மான்
ஆன்நல்வெள் ளூர்தி யான்றன்
மந்திரம் நமச்சி வாய
ஆகநீ றணி பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும்
வெவ்வழல் விறகி டன்றே
புள்ளுவர் ஐவர் கள்வர்
புனத்திடை புகுந்து நின்று
துள்ளுவர் சூறை கொள்வர்
தூநெறி விளைய வொட்டார்
முள்ளுடை யவர்கள் தம்மை
முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்து நின்றங்
குணர்வினா லெய்ய லாமே
தொண்டனேன் பிறந்து வாளா
தொல்வினை குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நாளும்
பெரியதோர் அவாவிற் பட்டேன்
அண்டனே அமரர் கோவே
அறிவனே அஞ்ச லென்னாய்
தெண்டிரை கங்கை சூடு
திகழ்தரு சடையி னானே
பாறினாய் பாவி நெஞ்சே
பன்றிபோல் அளற்றிற் பட்டு
தேறிநீ நினைதி யாயின்
சிவகதி திண்ண மாகும்
ஊறலே உவர்ப்பு நாறி
உதிரமே யொழுகும் வாசல்
கூறையால் மூட கண்டு
கோலமா கருதி னாயே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள்
சிதைந்து போயின
உய்த்தகால் தும்பர்
உமையவள் நடுக்க தீர
வைத்தகா லரக்க னோதன்
வான்முடி தனக்கு நேர்ந்தான்
மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கள்
மூர்த்தியெ னுச்சி தன்மேல்
வைத்தகால் வருந்து மென்று
வாடிநான் ஒடுங்கி னேனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

குறைந்த திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
வென்றிலேன் புலன்க ளைந்தும்
வென்றவர் வளாக தன்னுள்
சென்றிலே னாத லாலே
செந்நெறி யதற்குஞ் சேயேன்
நின்றுளே துளும்பு கின்றேன்
நீசனேன் ஈச னேயோ
இன்றுளேன் நாளை யில்லேன்
என்செய்வான் தோன்றி னேனே
கற்றிலேன் கலைகள் ஞானங்
கற்றவர் தங்க ளோடும்
உற்றிலே னாத லாலே
உணர்வுக்குஞ் சேய னானேன்
பெற்றிலேன் பெருந்த டங்கண்
பேதைமார் தமக்கும் பொல்லேன்
எற்றுளேன் இறைவ னேநான்
என்செய்வான் தோன்றி னேனே
மாட்டினேன் மனத்தை முன்னே
மறுமையை உணர மாட்டேன்
மூட்டிநான் முன்னை நாளே
முதல்வனை வணங்க மாட்டேன்
பாட்டினாய் போல நின்று
பற்றதாம் பாவ தன்னை
ஈட்டினேன் களைய மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே
கரைக்கட தோத மேறுங்
கடல்விட முண்ட கண்டன்
உரைக்கட தோது நீர்மை
யுணர்ந்திலே னாத லாலே
அரைக்கிட தசையு நாகம்
அசைப்பனே இன்ப வாழ்க்கை
கிரைக்கிடை துருகு கின்றேன்
என்செய்வான் தோன்றி னேனே
செம்மைவெண் ணீறு பூசுஞ்
ச்஢வனவன் தேவ தேவன்
வெம்மைநோய் வினைகள் தீர்க்கும்
விகிர்தனு கார்வ மெய்தி
அம்மைநின் றடிமை செய்யா
வடிவிலா முடிவில் வாழ்க்கை
கிம்மைநின் றுருகு கின்றேன்
என்செய்வான் தோன்றி னேனே
பேச்சொடு பேச்சு கெல்லாம்
பிறர்தமை புறமே பேச
கூச்சிலே னாத லாலே
கொடுமையை விடுமா றோரேன்
நாச்சொலி நாளும் மூர்த்தி
நன்மையை யுணர மாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே
என்செய்வான் தோன்றி னேனே
தேசனை தேச மாகு
திருமாலோர் பங்கன் றன்னை
பூசனை புனிதன் றன்னை
புணரும்புண் டரிக தானை
நேசனை நெருப்பன் றன்னை
நிவஞ்சக தகன்ற செம்மை
ஈசனை அறிய மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே
விளைக்கின்ற வினையை நோக்கி
வெண்மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையை போக
முயல்கிலேன் இயல வெள்ள
திளைக்கின்ற முடியி னான்றன்
திருவடி பரவ மாட்டா
திளைக்கின்றே னிருமி யூன்றி
என்செய்வான் தோன்றி னேனே
விளைவறி விலாமை யாலே
வேதனை குழியி லாழ்ந்து
களைகணு மில்லேன் எந்தாய்
காமரங் கற்று மில்லேன்
தளையவிழ் கோதை நல்லார்
தங்களோ டின்ப மெய்த
இளையனு மல்லேன் எந்தாய்
என்செய்வான் தோன்றி னேனே
வெட்டன வுடைய னாகி
வீரத்தால் மலை யெடுத்த
துட்டனை துட்டு தீர்த்து
சுவைப்பட கீதங் கேட்ட
அட்டமா மூர்த்தி யாய
ஆதியை ஓதி நாளும்
எட்டனை எட்ட மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

குறைந்த திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
தம்மானங் காப்ப தாகி
தையலார் வலையு ளாழ்ந்து
அம்மானை அமுதன் றன்னை
ஆதியை அந்த மாய
செம்மான ஒளிகொள் மேனி
சிந்தையு ளொன்றி நின்ற
எம்மானை நினைய மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே
மக்களே மணந்த தார
மவ்வயிற் றவரை யோம்புஞ்
சிக்குளே யழுந்தி ஈசன்
திறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போல தோன்றி
யதனுளே மறை கண்டும்
இக்களே பரத்தை யோம்ப
என்செய்வான் தோன்றி னேனே
கூழையே னாக மாட்டேன்
கொடுவினை குழியில் வீழ்ந்து
ஏழினின் னிசையி னாலும்
இறைவனை யேத்த மாட்டேன்
மாழையொண் கண்ணின் நல்ல
மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
ஏழையே னாகி நாளு
மென்செய்வான் தோன்றி னேனே
முன்னையென் வினையி னாலே
மூர்த்தியை நினைய மாட்டேன்
பின்னைநான் பித்த னாகி
பிதற்றுவன் பேதை யேன்நான்
என்னுளே மன்னி நின்ற
சீர்மைய தாயி னானை
என்னுளே நினைய மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே
கறையணி கண்டன் றன்னை
காமரங் கற்று மில்லேன்
பிறைநுதற் பேதை மாதர்
பெய்வளை யார்க்கு மல்லேன்
மறைநவில் நாவி னானை
மன்னிநின் றிறைஞ்சி நாளும்
இறையேயு மேத்த மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே
இப்பதிகத்தில் ம்செய்யுட்கள்
மறைந்து போயின
வளைத்துநின் றைவர் கள்வர்
வந்தெனை நடுக்கஞ் செ
தளைத்துவை துலையை யேற்றி
தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற
ஆமைபோல் தெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றேன்
என்செய்வான் தோன்றி னேனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

கோயில் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாளையு டைக்கமு கோங்கிப்பன்
மாடம்நெ ருங்கியெங்கும்
வாளையு டைப்புனல் வந்தெறி
வாழ்வயல் தில்லைதன்னுள்
ஆளவு டைக்கழற் சிற்றம்ப
லத்தரன் ஆடல்கண்டாற்
பீளையு டைக்கண்க ளாற்பின்னை
பேய்த்தொண்டர் காண்பதென்னே
பொருவிடை யொன்றுடை புண்ணிய
மூர்த்தி புலியதளன்
உருவுடை யம்மலை மங்கைம
ணாளன் உலகுக்கெல்லா
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லைச்சிற் றம்பலவன்
திருவடி யைக்கண்ட கண்கொண்டு
மற்றினி காண்பதென்னே
தொடுத்த மலரொடு தூபமுஞ்
சாந்துங்கொண் டெப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு
மாலுக்குங் காண்பரியான்
பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய
தில்லைச்சிற் றம்பலவன்
உடுத்த துகில்கண்ட கண்கொண்டு
மற்றினி காண்பதென்னே
வைச்ச பொருள்ந காகுமென்
றெண்ணி நமச்சிவாய
அச்ச மொழிந்தேன் அணிதில்லை
யம்பல தாடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி
உந்தியின் மேலசைத்த
கச்சின் அழகுகண் டாற்பின்னை
கண்கொண்டு காண்பதென்னே
செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற
தில்லைச்சிற் றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள்
கண்டு மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த
நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னை
கண்கொண்டு காண்பதென்னே
ஊனத்தை நீக்கி உலகறிய
என்னை யாட்கொண்டவன்
தேனொ தெனக்கினி யான்தில்லை
சிற்றம் பலவனெங்கோன்
வான தவருய்ய வன்னஞ்சை
யுண்டகண் டத்திலங்கும்
ஏன தெயிறு கண்டாற்பின்னை
கண்கொண்டு காண்பதென்னே
தெரித்த கணையாற் திரிபுர
மூன்றுஞ்செ தீயின்மூழ்க
எரித்த இறைவன் இமையவர்
கோமான் இணையடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற
தில்லைச்சிற் றம்பலவன்
சிரித்த முகங்கண்ட கண்கொண்டு
மற்றினி காண்பதென்னே
சுற்று மமரர் சுரபதி
நின்திரு பாதமல்லால்
பற்றொன் றிலோமென் றழை
பரவையுள் நஞ்சையுண்டான்
செற்றங் கனங்கனை தீவிழி
தான்றில்லை யம்பலவன்
நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு
மற்றினி காண்பதென்னே
சி தெழுந்த செழுங்கம
லத்தன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற
தில்லைச்சிற் றம்பலவன்
முத்தும் வயிரமும் மாணிக்க
தன்னுள் விளங்கியதூ
மத்த மலர்கண்ட கண்கொண்டு
மற்றினி காண்பதென்னே
தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி
யுன்னி தடவரையை
வரைக்கை களாலெடு தார்ப்ப
மலைமகள் கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்தும்
அணிதில்லை யம்பலவன்
நெருக்கி மிதித்த விரல்கண்ட
கண்கொண்டு காண்பதென்னே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் திருமூலத்தானநாயகர் சபாநாதர்
தேவியார் சிவகாமியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

கோயில் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
கருநட்ட கண்டனை அண்ட
தலைவனை கற்பகத்தை
செருநட்ட மும்மதி லெய்யவல்
லானைச்செ தீமுழங்க
திருநட்ட மாடியை தில்லை
கிறையைச்சிற் றம்பலத்து
பெருநட்ட மாடியை வானவர்
கோனென்று வாழ்த்துவனே
ஒன்றி யிருந்து நினைமின்கள்
உந்த கூனமில்லை
கன்றிய காலனை காலாற்
கடிந்தான் அடியவற்கா
சென்று தொழுமின்கள் தில்லையு
சிற்றம் பலத்துநட்டம்
என்றுவ தாயெனும் எம்பெரு
மான்றன் திருக்குறிப்பே
கன்மன வீர்கழி யுங்கரு
தேசொல்லி காண்பதென்னே
நன்மன வர்நவில் தில்லையு
சிற்றம் பலத்துநட்டம்
பொன்மலை யில்வெள்ளி குன்றது
போல பொலிந்திலங்கி
என்மன மேயொன்றி புக்கனன்
போந்த சுவடில்லையே
குனித்த புருவமுங் கொவ்வைச்செவ்
வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற்
பாதமுங் காணப்பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே
வாய்த்தது நந்த கீதோர்
பிறவி மதித்திடுமின்
பார்த்தற்கு பாசு பதமருள்
செய்தவன் பத்தருள்ளீர்
கோத்தன்று முப்புர தீவளை
தான்றில்லை யம்பலத்து
கூத்தனு காட்ப டிருப்பதன்
றோநந்தங் கூழைமையே
பூத்தன பொற்சடை பொன்போல்
மிளிர புரிகணங்கள்
ஆர்த்தன கொட்டி யரித்தன
பல்குற பூதகண
தேத்தென வென்றிசை வண்டுகள்
பாடுசிற் றம்பலத்து
கூத்தனிற் கூத்துவல் லாருள
ரோவென்றன் கோல்வளைக்கே
முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின்
நோக்கும் முறுவலிப்பு
துடிகொண்ட கையு துதைந்தவெண்
ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலி
தோலுமென் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை யம்பல
கூத்தன் குரைகழலே
படைக்கல மாகவுன் னா
தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லேன் எழுபிற
பும்முன காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது
வணங்கித்தூ நீறணிந்துன்
அடைக்கலங் கண்டாய் அணிதில்லை
சிற்றம் பலத்தரனே
பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ
றணிந்து புரிசடைகள்
மின்னொ திலங்க பலிதேர
துழலும் விடங்கவேட
சின்னத்தி னான்மலி தில்லையு
சிற்றம் பலத்துநட்டம்
என்னத்தன் ஆடல்கண் டின்புற்ற
தாலிவ் விருநிலமே
சாட எடுத்தது தக்கன்றன்
வேள்வியிற் சந்திரனை
வீட எடுத்தது காலனை
நாரணன் நான்முகனு
தேட எடுத்தது தில்லையு
சிற்றம் பலத்துநட்டம்
ஆட எடுத்திட்ட பாதமன்
றோநம்மை யாட்கொண்டதே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கழுமலம் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பார்கொண்டு மூடி கடல்கொண்ட
ஞான்றுநின் பாதமெல்லாம்
நாலஞ்சு புள்ளினம் ஏந்தின
என்பர் நளிர்மதியங்
கால்கொண்ட வண்கை சடைவிரி
தாடுங் கழுமலவர
காளன்றி மற்றுமுண் டோ அந்த
ணாழி அகலிடமே
கடையார் கொடிநெடு மாடங்க
ளெங்குங் கலந்திலங்க
உடையா னுடைதலை மாலையுஞ்
சூடி உகந்தருளி
விடைதா னுடையவவ் வேதியன்
வாழுங் கழுமலத்துள்
அடைவார் வினைக ளவையெள்க
நாடொறும் ஆடுவரே
திரைவா பெருங்கடல் முத்தங்
குவிப்ப முகந்துகொண்டு
நுரைவாய் நுளைச்சிய ரோடி
கழுமல துள்ளழுந்தும்
விரைவாய் நறுமலர் சூடிய
விண்ணவன் றன்னடிக்கே
வரையா பரிசிவை நாடொறும்
நந்தமை யாள்வனவே
விரிக்கும் அரும்பதம் வேதங்க
ளோதும் விழுமியநூல்
உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர்
கேட்கில் உலகமுற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள்
பாட கழுமலவன்
நிருத்தம் பழம்படி யாடுங்
கழல்நம்மை ஆள்வனவே
சிந்தி தெழுமன மேநினை
யாமுன் கழுமலத்தை
பந்தித்த வல்வினை தீர்க்க
வல்லானை பசுபதியை
சந்தித்த கால மறுத்துமென்
றெண்ணி யிருந்தவர்க்கு
முந்தி தொழுகழல் நாடொறும்
நந்தம்மை ஆள்வனவே
நிலையும் பெருமையும் நீதியுஞ்
சால அழகுடைத்தாய்
அலையும் பெருவெள்ள தன்று
மிதந்தவி தோணிபுரஞ்
சிலையில் திரிபுரம் மூன்றெரி
தார்தங் கழுமலவர்
அலருங் கழலடி நாடொறும்
நந்தமை ஆள்வனவே
முற்றி கிடந்துமு நீரின்
மிதந்துடன் மொய்த்தமரர்
சுற்றி கிடந்து தொழப்படு
கின்றது சூழரவ
தெற்றி கிடந்துவெங் கொன்றள
துன்றிவெண் திங்கள்சூடுங்
கற்றை சடைமுடி யார்க்கிட
மாய கழுமலமே
உடலும் உயிரும் ஒருவழி
செல்லும் உலகத்துள்ளே
அடையும் உனைவ தடைந்தார்
அமரர் அடியிணைக்கீழ்
நடையும் விழவொடு நாடொறும்
மல்கும் கழுமலத்துள்
விடையன் தனிப்பதம் நாடொறும்
நந்தமை ஆள்வனவே
பரவை கடல்நஞ்ச முண்டது
மில்லையி பார்முழுதும்
நிரவி கிடந்து தொழப்படு
கின்றது நீண்டிருவர்
சிர படவந்து சார்ந்தார்
கழலடி காண்பதற்கே
அரவ கழலடி நாடொறும்
நந்தமை ஆள்வனவே
கரையார் கடல்சூழ் இலங்கையர்
கோன்றன் முடிசிதற
தொலையா மலரடி ஊன்றலும்
உள்ளம் விதிர்விதிர்த்து
தலையா கிடந்துயர தான்றன்
கழுமலங் காண்பதற்கே
அலையா பரிசிவை நாடொறும்
நந்தமை ஆள்வனவே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பிரமபுரீசர் தேவியார் திருநிலைநாயகி
திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கழுமலம் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
படையார் மழுவொன்று பற்றிய
கையன் பதிவினவிற்
கடையார் கொடிநெடு மாடங்க
ளோங்குங் கழுமலமாம்
மடைவா குருகினம் பாளை
விரிதொறும் வண்டினங்கள்
பெடைவாய் மதுவுண்டு பேரா
திருக்கும் பெரும்பதியே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

ஆருயிர திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
எட்டா திசைக்கும் இருதிசை
கும்மிறை வாமுறையென்
றிட்டார் அமரர்வெம் பூசல்
எனக்கே டெரிவிழியா
ஒட்டா கயவர் திரிபுரம்
மூன்றையும் ஓரம்பினால்
அட்டான் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே
பேழ்வாய் அரவின் அரைக்கமர
தேறி பிறங்கிலங்கு
தேய்வாய் இளம்பிறை செஞ்சடை
மேல்வைத்த தேவர்பிரான்
மூவான் இளகான் முழுவுல
கோடுமண் விண்ணுமற்றும்
ஆவான் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே
தரியா வெகுளிய னாய்த்தக்கன்
வேள்வி தகர்த்துகந்த
எரியார் இலங்கிய சூலத்தி
னான்இமை யாதமுக்க
பெரியான் பெரியார் பிறப்பறு
பானென்று தன்பிறப்பை
அரியான் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே
வடிவுடை வாணெடுங் கண்ணுமை
யாளையோர் பால்மகிழ்ந்து
வெடிகொள் அரவொடு வேங்கை
அதள்கொண்டு மேல்மருவி
பொடிகொ ளகலத்து பொன்பிதிர
தன்னபைங் கொன்றையந்தார்
அடிகள் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே
பொறுத்தான் அமரர கமுதரு
ளிநஞ்ச முண்டுகண்டங்
கறுத்தான் கறுப்பழ காவுடை
யான்கங்கை செஞ்சடைமேற்
செறுத்தான் தனஞ்சயன் சேணா
ரகலங் கணையொன்றினால்
அறுத்தான் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே
காய்ந்தான் செறற்கரி யானென்று
காலனை காலொன்றினாற்
பாய்ந்தான் பணைமதில் மூன்றுங்
கணையென்னும் ஒள்ளழலால்
மேய்ந்தான் வியனுல கேழும்
விளங்க விழுமியநூல்
ஆய்ந்தான் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே
உளைந்தான் செறுத்தற் கரியான்
றலையை உகிரொன்றினாற்
களைந்தான் அதனை நிறைய
நெடுமால் கணார் குருதி
வளைந்தான் ஒருவிர லின்னொடு
வீழ்வித்து சாம்பர்வெண்ணீ
றளைந்தான் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே
முந்திவ டத்திடை பட்டதெல்
லாம்முடி வேந்தர்தங்கள்
பந்திவ டத்திடை பட்டலை
புண்பதற் கஞ்சிக்கொல்லோ
நந்திவ டந்நறு மாமலர
கொன்றையு நக்கசென்னி
அந்திவ டத்தொளி யானடி
சேர்ந்ததென் ஆருயிரே
மிகத்தான் பெரியதோர் வேங்கை
யதள்கொண்டு மெய்ம்மருவி
அகத்தான் வெருவநல் லாளை
நடுக்குறு பான்வரும்பொன்
முகத்தாற் குளிர்ந்திரு துள்ளத்தி
னாலுக பானிசைந்த
அகத்தான் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே
பைம்மா ணரவல்குற் பங்க
சீறடி யாள்வெருவ
கைம்மா வரிசிலை காமனை
யட்ட கடவுள்முக்கண்
எம்மான் இவனென் றிருவரு
மேத்த எரிநிமிர்ந்த
அம்மான் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே
பழகவோ ரூர்தி யரன்பைங்க
பாரிடம் பாணிசெ
குழலும் முழவொடு மாநட
மாடி உயரிலங்கை
கிழவன் இருபது தோளும்
ஒருவிர லாலிறுத்த
அழகன் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சோற்றுத்துறை திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
காலை யெழுந்து கடிமலர்
தூயன தாங்கொணர்ந்து
மேலை யமரர் விரும்பு
மிடம்விரை யான்மலிந்த
சோலை மணங்கமழ் சோற்று
துறையுறை வார்சடைமேல்
மாலை மதியமன் றோவெம்
பிரானு கழகியதே
வண்டணை கொன்றையும் வன்னியும்
மத்தமும் வாளரவுங்
கொண்டணை தேறு முடியுடை
யான்குரை சேர்கழற்கே
தொண்டணை தாடிய சோற்று
துறையுறை வார்சடைமேல்
வெண்டலை மாலையன் றோவெம்
பிரானு கழகியதே
அளக்கு நெறியினன் அன்பர்கள்
தம்மன தாய்ந்துகொள்வான்
விளக்கு மடியவர் மேல்வினை
தீர்த்திடும் விண்ணவர்கோன்
துளக்குங் குழையணி சோற்று
துறையுறை வார்சடைமேற்
றிளைக்கும் மதியமன் றோவெம்
பிரானு கழகியதே
ஆய்ந்தகை வாளர வத்தொடு
மால்விடை யேறியெங்கும்
பேர்ந்தகை மானட மாடுவர்
பின்னு சடையிடையே
சேர்ந்தகைம் மாமலர் துன்னிய
சோற்று துறையுறைவார்
ஏந்துகை சூல மழுவெம்
பிரானு கழகியதே
கூற்றை கடந்ததுங் கோளர
வார்த்ததுங் கோளுழுவை
நீற்றில் துதைந்து திரியும்
பரிசது நாமறியோம்
ஆற்றிற் கிடந்தங் கலைப்ப
அலைப்புண் டசைந்ததொக்குஞ்
சோற்று துறையுறை வார்சடை
மேலதோர் தூமதியே
வல்லாடி நின்று வலிபேசு
வார்கோளர் வல்லசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும்
வானவர் வந்திறைஞ
சொல்லாடி நின்று பயில்கின்ற
சோற்று துறையுறைவார்
வில்லாடி நின்ற நிலையெம்
பிரானு கழகியதே
ஆய முடையது நாமறி
யோம்அர ணத்தவரை
கா கணைசிலை வாங்கியு
மெய்து துயக்கறுத்தான்
தூயவெண் ணீற்றினன் சோற்று
துறையுறை வார்சடைமேற்
பாயும்வெண் ணீர்த்திரை கங்கையெம்
மானு கழகியதே
அண்டர் அமரர் கடை
தெழு தோடிய நஞ்சதனை
உண்டும் அதனை ஒடுக்க
வல்லான் மிக்க உம்பர்கள்கோன்
தொண்டு பயில்கின்ற சோற்று
துறையுறை வார்சடைமேல்
இண்டை மதியமன் றோவெம்
பிரானு கழகியதே
கடல்மணி வண்ணன் கருதிய
நான்முகன் றானறியான்
விடமணி கண்ட முடையவன்
றானெனை ஆளுடையான்
சுடரணி தாடிய சோற்று
துறையுறை வார்சடைமேற்
படமணி நாகமன் றோவெம்
பிரானு கழகியதே
இலங்கை கிறைவன் இருபது
தோளு முடிநெரி
கலங்க விரலினா லூன்றி
அவனை கருத்தழித்த
துலங்கல் மழுவினன் சோற்று
துறையுறை வார்சடைமேல்
இலங்கு மதியமன் றோவெம்
பிரானு கழகியதே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவொற்றியூர் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
செற்று களிற்றுரி கொள்கின்ற
ஞான்று செருவெண்கொம்பொன்
றிற்று கிடந்தது போலும்
இளம்பிறை பாம்பதனை
சுற்றி கிடந்தது கிம்புரி
போல சுடரிமைக்கும்
நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்குமா
லொற்றி யூரனுக்கே
சொல்ல கருதிய தொன்றுண்டு
கேட்கிற் றொண்டாயடைந்தார்
அல்லற் படக்கண்டு பின்னென்
கொடுத்தி அலைகொள்முந்நீர்
மல்லற் றிரைச்சங்க நித்திலங்
கொண்டுவம் பக்கரைக்கே
ஒல்லை திரைகொணர தெற்றொற்றி
யூருறை யுத்தமனே
பரவை வருதிரை நீர்க்கங்கை
பாய்ந்துக்க பல்சடைமேல்
அரவ மணிதரு கொன்றை
இளந்திங்க சூடியதோர்
குரவ நறுமலர் கோங்க
மணிந்து குலாய சென்னி
உரவு திரைகொணர தெற்றொற்றி
யூருறை யுத்தமனே
தானகங் காடரங் காக
வுடையது தன்னடைந்தார்
ஊனக நாறு முடைதலை
யிற்பலி கொள்வதுந்தான்
தேனக நாறு திருவொற்றி
யூருறை வாரவர்தா
தானக மேவந்து போனகம்
வேண்டி உழிதர்வரே
வேலை கடல்நஞ்ச முண்டுவெள்
ளேற்றொடும் வீற்றிருந்த
மாலை சடையார குறைவிட
மாவது வாரிகுன்றா
ஆலை கரும்பொடு செந்நெற்
கழனி அருகணைந்த
சோலை திருவொற்றி யூரையெ
போது தொழுமின்களே
புற்றினில் வாழும் அரவுக்கு
திங்கட்குங் கங்கையென்னுஞ்
சிற்றிடை யாட்குஞ் செறிதரு
கண்ணிக்குஞ் சேர்விடமாம்
பெற்றுடை யான்பெரும் பேச்சுடை
யான்பிரி யாதெனையாள்
விற்றுடை யானொற்றி யூருடை
யான்றன் விரிசடையே
இன்றரை கண்ணுடை யாரெங்கு
மில்லை இமய மென்னுங்
குன்றரை கண்ணன் குலமக
பாவைக்கு கூறிட்டநாள்
அன்றரை கண்ணுங் கொடுத்துமை
யாளையும் பாகம்வைத்த
ஒன்றரை கண்ணன்கண் டீரொற்றி
யூருறை உத்தமனே
சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங்
காவு துதைந்திலங்கு
பெற்றிகண் டால்மற்று யாவருங்
கொள்வர் பிறரிடைநீ
ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங்
கைவி டுறுமென்றெண்ணி
விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப
தில்லிடம் வேதியனே
சுற்றி கிடந்தொற்றி யூரனென்
சிந்தை பிரிவறியான்
ஒற்றி திரிதந்து நீயென்ன
செய்தி உலகமெல்லாம்
பற்றி திரிதந்து பல்லொடு
நாமென்று கண்குழித்து
தெற்றி திருப்பதல் லாலென்ன
செய்யுமி தீவினையே
அங்க கடுக்கைக்கு முல்லை
புறவம் முறுவல்செய்யும்
பைங்க டலைக்கு சுடலை
களரி பருமணிசேர்
கங்கைக்கு வேலை அரவுக்கு
புற்று கலைநிரம்பா
திங்கட்கு வான திருவொற்றி
யூரர் திருமுடியே
தருக்கின வாளர கன்முடி
பத்திற பாதந்தன்னால்
ஒருக்கின வாறடி யேனை
பிறப்பறு தாளவல்லான்
நெருக்கின வானவர் தானவர்
கூடி கடைந்தநஞ்சை
பருக்கின வாறென்செய் கேனொற்றி
யூருறை பண்டங்கனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பழனம் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
மேவித்து நின்று விளைந்தன
வெந்துயர் துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன
அல்லல் அவையறுப்பான்
பாவித்த பாவனை நீயறி
வாய்பழ னத்தரசே
கூவித்து கொள்ளு தனையடி
யேனை குறிக்கொள்வதே
சுற்றிநின் றார்புறங் காவ
லமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு
நான்முகன் வந்தடிக்கீழ
பற்றிநின் றார்பழ னத்தர
சேயுன் பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனை
குறிக்கொண் டருளுவதே
ஆடிநின் றாயண்டம் ஏழுங்
கடந்துபோய் மேலவையுங்
கூடிநின் றாய்குவி மென்முலை
யாளையுங் கொண்டுடனே
பாடிநின் றாய்பழ னத்தர
சேயங்கோர் பால்மதியஞ்
சூடிநின் றாயடி யேனையஞ்
சாமை குறிக்கொள்வதே
எரித்துவி டாய்அம்பி னாற்புர
மூன்றுமுன் னேபடவும்
உரித்துவி டாய்உமை யாள்நடு
கெய்தவோர் குஞ்சரத்தை
பரித்துவி டாய்பழ னத்தர
சேகங்கை வார்சடைமேற்
தரித்துவி டாயடி யேனை
குறிக்கொண் டருளுவதே
முன்னியும் முன்னி முளைத்தன
மூவெயி லும்முடனே
மன்னியு மங்கும் இருந்தனை
மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசறி
வாய்பழ னத்தரசே
உன்னியும் உன்னடி யேனை
குறிக்கொண் டருளுவதே
ஏய்ந்தறு தாய்இன்ப னாய்இரு
தேபடை தான்றலையை
காய்ந்தறு தாய்கண்ணி னாலன்று
காமனை காலனையும்
பாய்ந்தறு தாய்பழ னத்தர
சேயென் பழவினைநோய்
ஆய்ந்தறு தாயடி யேனை
குறிக்கொண் டருளுவதே
மற்றுவை தாயங்கோர் மாலொரு
பாகம் மகிழ்ந்துடனே
உற்றுவை தாய்உமை யாளொடுங்
கூடும் பரிசெனவே
பற்றிவை தாய்பழ னத்தர
சேயங்கோர் பாம்பொருகை
சுற்றிவை தாய்அடி யேனை
குறிக்கொண் டருளுவதே
ஊரினின் றாய்ஒன்றி நின்றுவிண்
டாரையும் ஒள்ளழலாற்
போரினின் றாய்பொறை யாயுயி
ராவி சுமந்துகொண்டு
பாரிநின் றாய்பழ னத்தர
சேபணி செய்பவர்க
காரநின் றாய்அடி யேனை
குறிக்கொண் டருளுவதே
போகம்வை தாய்புரி புன்சடை
மேலோர் புனலதனை
ஆகம்வை தாய்மலை யான்மட
மங்கை மகிழ்ந்துடனே
பாகம்வை தாய்பழ னத்தர
சேயுன் பணியருளால்
ஆகம்வை தாய்அடி யேனை
குறிக்கொண் டருளுவதே
அடுத்திரு தாய்அர கன்முடி
வாயொடு தோள்நெரி
கெடுத்திரு தாய்கிளர தார்வலி
யைக்கிளை யோடுடனே
படுத்திரு தாய்பழ னத்தர
சேபுலி யின்னுரிதோல்
உடுத்திரு தாய்அடி யேனை
குறிக்கொண் டருளுவதே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பூந்துருத்தி திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
மாலினை மாலுற நின்றான்
மலைமகள் தன்னுடைய
பாலனை பான்மதி சூடியை
பண்புண ரார்மதின்மேற்
போலனை போர்விடை யேறியை
பூந்துரு திமகிழும்
ஆலனை ஆதிபு ராணனை
நானடி போற்றுவதே
மறியுடை யான்மழு வாளினன்
மாமலை மங்கையோர்பால்
குறியுடை யான்குண மொன்றறி
தாரில்லை கூறிலவன்
பொறியுடை வாளர வத்தவன்
பூந்துரு தியுறையும்
அறிவுடை ஆதி புராணனை
நானடி போற்றுவதே
மறுத்தவர் மும்மதில் மாயவோர்
வெஞ்சிலை கோத்தோரம்பால்
அறுத்தனை ஆலதன் கீழனை
ஆல்விட முண்டதனை
பொறுத்தனை பூத படையனை
பூந்துரு தியுறையும்
நிறத்தனை நீல மிடற்றனை
யானடி போற்றுவதே
உருவினை ஊழி முதல்வனை
ஓதி நிறைந்துநின்ற
திருவினை தேசம் படைத்தனை
சென்றடை தேனுடைய
பொருவினை யெல்லா துரந்தனை
பூந்துரு தியுறையுங்
கருவினை கண்மூன் றுடையனை
யானடி போற்றுவதே
தக்கன்றன் வேள்வி தகர்த்தவன்
சார மதுவன்றுகோள்
மிக்கன மும்மதில் வீயவோர்
வெஞ்சிலை கோத்தோரம்பால்
புக்கனன் பொன்றிகழ தன்னதோர்
பூந்துரு தியுறையும்
நக்கனை நங்கள் பிரான்றனை
நானடி போற்றுவதே
அருகடை மாலையு தானுடை
யான்அழ காலமைந்த
உருவுடை மங்கையு தன்னொரு
பாலுல காயுநின்றான்
பொருபடை வேலினன் வில்லினன்
பூந்துரு தியுறையு
திருவுடை தேச மதியனை
யானடி போற்றுவதே
மன்றியு நின்ற மதிலரை
மாய வகைகெடு
கன்றியு நின்று கடுஞ்சிலை
வாங்கி கனலம்பினாற்
பொன்றியும் போக புரட்டினன்
பூந்துரு தியுறையும்
அன்றியுஞ் செய்த பிரான்றனை
யானடி போற்றுவதே
மின்னிறம் மிக்க இடையுமை
நங்கையோர் பான்மகிழ்ந்தான்
என்னிற மென்றம ரர்பெரி
யாரின்ன தாமறியார்
பொன்னிற மிக்க சடையவன்
பூந்துரு தியுறையும்
என்னிற வெந்தை பிரான்றனை
யானடி போற்றுவதே
அந்தியை நல்ல மதியினை
யார்க்கும் அறிவரிய
செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினை
சென்றடை தேனுடைய
புந்தியை புக்க அறிவினை
பூந்துரு தியுறையும்
நந்தியை நங்கள் பிரான்றனை
நானடி போற்றுவதே
பைக்கையும் பாந்தி விழிக்கையும்
பாம்பு சடையிடையே
வைக்கையும் வானிழி கங்கையும்
மங்கை நடுக்குறவே
மொய்க்கை அரக்கனை யூன்றினன்
பூந்துரு தியுறையும்
மிக்கநல் வேத விகிர்தனை
நானடி போற்றுவதே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநெய்த்தானம் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாரிடஞ் சாடிய பல்லுயிர்
வானம ரர்க்கருளி
காரடை தகடல் வாயுமிழ்
நஞ்சமு தாகவுண்டான்
ஊரடை திவ்வுல கிற்பலி
கொள்வது நாமறியோம்
நீரடை தகரை நின்றநெ
தான திருந்தவனே
தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி
யாய்நின் திருச்சடைமேற்
பாய்ந்தகங் கைப்புனற் பன்முக
மாகி பரந்தொலிப்ப
ஆய்ந்திலங் கும்மழு வேலுடை
யாயடி யேற்குரைநீ
ஏந்திள மங்கையும் நீயும்நெ
தான திருந்ததுவே
கொன்றடை தாடி குமைத்திடுங்
கூற்றமொன் னார்மதின்மேற்
சென்றடை தாடி பொருதது
தேசமெல் லாமறியுங்
குன்றடை தாடுங் குளிர்பொழிற்
காவிரி யின்கரைமேற்
சென்றடை தார்வினை தீர்க்குநெ
தான திருந்தவனே
கொட்டு முழவர வத்தொடு
கோலம் பலஅணிந்து
நட்டம் பலபயின் றாடுவர்
நாகம் அரை கசைத்து
சிட்டர் திரிபுர தீயெழ
செற்ற சிலையுடையான்
இட்ட முமையொடு நின்றநெ
தான திருந்தவனே
கொய்மலர கொன்றை துழாய்வன்னி
மத்தமுங் கூவிளமும்
மெய்மலர் வேய்ந்த விரிசடை
கற்றைவிண் ணோர்பெருமான்
மைமலர் நீல நிறங்கருங்
கண்ணியோர் பால்மகிழ்ந்தான்
நின்மல னாடல் நிலயநெ
தான திருந்தவனே
பூந்தார் நறுங்கொன்றை மாலையை
வாங்கி சடைக்கணிந்து
கூர்ந்தார் விடையினை யேறிப்பல்
பூத படைநடுவே
போந்தார் புறவிசை பாடவும்
ஆடவுங் கேட்டருளி
சேர்ந்தார் உமையவ ளோடுநெ
தான திருந்தவனே
பற்றின பாம்பன் படுத்த
புலியுரி தோலுடையன்
முற்றின மூன்று மதில்களை
மூட்டி யெரித்தறுத்தான்
சுற்றிய பூத படையினன்
சூல மழுவொருமான்
செற்று தீவினை தீர்க்குநெ
தான திருந்தவனே
விரித்த சடையினன் விண்ணவர்
கோன்விட முண்டகண்டன்
உரித்த கரியுரி மூடியொன்
னார்மதில் மூன்றுடனே
எரித்த சிலையினன் ஈடழியா
தென்னை ஆண்டுகொண்ட
தரித்த உமையவ ளோடுநெ
தான திருந்தவனே
தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை
துன்னிய செஞ்சடைமேல்
வாங்கா மதியமும் வாளர
வுங்கங்கை தான்புனைந்தான்
தேங்கார் திரிபுர தீயெழ
வெய்து தியக்கறுத்து
நீங்கான் உமையவ ளோடுநெ
தான திருந்தவனே
ஊட்டிநின் றான்பொரு வானில
மும்மதில் தீயம்பினால்
மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து
வீழவும் வானவர்க்கு
காட்டிநின் றான்கத மாக்கங்கை
பாயவோர் வார்சடையை
நீட்டிநின் றான்றிரு நின்றநெ
தான திருந்தவனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவேதிகுடி திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
கையது காலெரி நாகங்
கனல்விடு சூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட
விரிசடை விண்ணவர்கோன்
செய்யினில் நீல மணங்கம
ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை
நாமடை தாடுதுமே
கைத்தலை மான்மறி யேந்திய
கையன் கனல்மழுவன்
பொய்த்தலை யேந்திநற் பூதி
யணிந்து பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக
ளுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை
நாமடை தாடுதுமே
முன்பின் முதல்வன் முனிவனெம்
மேலை வினைகழித்தான்
அன்பின் நிலையில் அவுணர்
புரம்பொடி யானசெய்யுஞ்
செம்பொனை நன்மலர் மேலவன்
சேர்திரு வேதிகுடி
அன்பனை நம்மை யுடையனை
நாமடை தாடுதுமே
பத்தர்கள் நாளும் மறவார்
பிறவியை யொன்றறுப்பான்
முத்தர்கள் முன்னம் பணிசெய்து
பாரிடம் முன்னுயர்த்தான்
கொத்தன கொன்றை மணங்கம
ழுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை
நாமடை தாடுதுமே
ஆனணை தேறுங் குறிகுண
மாரறி வாரவர்கை
மானணை தாடு மதியும்
புனலுஞ் சடைமுடியன்
தேனணை தாடிய வண்டு
பயில்திரு வேதிகுடி
ஆனணை தாடு மழுவனை
நாமடை தாடுதுமே
எண்ணும் எழுத்துங் குறியும்
அறிபவர் தாமொழி
பண்ணின் இசைமொழி பாடிய
வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளை தீர்க்கும்
பிரான்றிரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை
நாமடை தாடுதுமே
ஊர்ந்த விடையுக தேறிய
செல்வனை நாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையோர்
பாகம் மகிழ்ந்துடையான்
சேர்ந்த புனற்சடை செல்வ
பிரான்றிரு வேதிகுடி
சார்ந்த வயலணி தண்ணமு
தையடை தாடுதுமே
எரியும் மழுவினன் எண்ணியும்
மற்றொரு வன்றலையுள்
திரியும் பலியினன் தேயமும்
நாடுமெல் லாமுடையான்
விரியும் பொழிலணி சேறு
திகழ்திரு வேதிகுடி
அரிய அமுதினை அன்பர்க
ளோடடை தாடுதுமே
மையணி கண்டன் மறைவிரி
நாவன் மதித்துகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய
வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணங்கம
ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை
நாமடை தாடுதுமே
வருத்தனை வாளர கன்முடி
தோளொடு பத்திறுத்த
பொருத்தனை பொய்யா அருளனை
பூத படையுடைய
திருத்தனை தேவர் பிரான்றிரு
வேதி குடியுடைய
அருத்தனை ஆரா அமுதினை
நாமடை தாடுதுமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வேதபுரீசுவரர்
தேவியார் மங்கையர்க்கரசியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
குறுவித்த வாகுற்ற நோய்வினை
காட்டி குறுவித்தநோய்
உறுவித்த வாவுற்ற நோய்வினை
தீர்ப்பான் உகந்தருளி
அறிவித்த வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
செறிவித்த வாதொண்ட னேனைத்தன்
பொன்னடி கீழெனையே
கூர்வித்த வாகுற்ற நோய்வினை
காட்டியுங் கூர்வித்தநோய்
ஊர்வித்த வாவுற்ற நோய்வினை
தீர்ப்பான் உகந்தருளி
ஆர்வித்த வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
சேர்வித்த வாதொண்ட னேனைத்தன்
பொன்னடி கீழெனையே
தாக்கின வாசல மேவினை
காட்டியு தண்டித்தநோய்
நீக்கின வாநெடு நீரினின்
றேற நினைந்தருளி
ஆக்கின வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
நோக்கின வாதொண்ட னேனைத்தன்
பொன்னடி கீழெனையே
தருக்கின நான்றக வின்றியு
மோட சலமதனால்
நெருக்கின வாநெடு நீரினின்
றேற நினைந்தருளி
உருக்கின வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
பெருக்கின வாதொண்ட னேனைத்தன்
பொன்னடி கீழெனையே
இழிவித்த வாறிட்ட நோய்வினை
காட்டி இடர்ப்படுத்து
கழிவித்த வாகட்ட நோய்வினை
தீர்ப்பான் கலந்தருளி
அழிவித்த வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
தொழுவித்த வாதொண்ட னேனைத்தன்
பொன்னடி கீழெனையே
இடைவித்த வாறிட்ட நோய்வினை
காட்டி இடர்ப்படுத்து
உடைவித்த வாறுற்ற நோய்வினை
தீர்ப்பான் உகந்தருளி
அடைவித்த வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன்
பொன்னடி கீழெனையே
படக்கின வாபட நின்றுபன்
னாளும் படக்கினநோய்
அடக்கின வாறது வன்றியு
தீவினை பாவமெல்லாம்
அடக்கின வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
தொடக்கின வாதொண்ட னேனைத்தன்
பொன்னடி கீழெனையே
மறப்பித்த வாவல்லை நோய்வினை
காட்டி மறப்பித்தநோய்
துறப்பித்த வாதுக்க நோய்வினை
தீர்ப்பான் உகந்தருளி
இறப்பித்த வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன்
பொன்னடி கீழெனையே
துயக்கின வாதுக்க நோய்வினை
காட்டி துயக்கினநோய்
இயக்கின வாறிட்ட நோய்வினை
தீர்ப்பான் இசைந்தருளி
அயக்கின வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
மயக்கின வாதொண்ட னேனைத்தன்
பொன்னடி கீழெனையே
கறுத்துமி டார்கண்டங் கங்கை
சடைமேற் கரந்தருளி
இறுத்துமி டார்இலங் கைக்கிறை
தன்னை இருபதுதோள்
அறுத்துமி டாரடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
பொறுத்துமி டார்தொண்ட னேனைத்தன்
பொன்னடி கீழெனையே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
சிந்தி பரியன
பவர்க்கு சிறந்துசெந்தேன்
முந்தி பொழிவன முத்தி
கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை
தீர்ப்பன பாம்புசுற்றி
அந்தி பிறையணி தாடும்ஐ
யாறன் அடித்தலமே
இழித்தன ஏழேழ் பிறப்பும்
அறுத்தன என்மனத்தே
பொழித்தன போரெழிற் கூற்றை
யுதைத்தன போற்றவர்க்கா
கிழித்தன தக்கன் கிளரொளி
வேள்வியை கீழமுன்சென்
றழித்தன ஆறங்க மானஐ
யாறன் அடித்தலமே
மணிநிற மொப்பன பொன்னிற
மன்னின மின்னியல்வாய்
கணிநிற மன்ன கயிலை
பொருப்பன காதல்செ
துணிவன சீலத்த ராகி
தொடர்ந்து விடாததொண்டர
கணியன சேயன தேவர்க்கை
யாறன் அடித்தலமே
இருள்தரு துன படல
மறைப்பமெய்ஞ் ஞானமென்னும்
பொருள்தரு கண்ணிழ துண்பொருள்
நாடி புகலிழந்த
குருடரு தம்மை பரவ
கொடுநர கக்குழிநின்
றருள்தரு கைகொடு தேற்றும்ஐ
யாறன் அடித்தலமே
எழுவாய் இறுவாய் இலாதன
வெங்க பிணிதவிர்த்து
வழுவா மருத்துவ மாவன
மாநர கக்குழிவாய்
விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன
மீட்பன மிக்கவன்போ
டழுவார கமுதங்கள் காண்கஐ
யாறன் அடித்தலமே
துன்ப கடலிடை தோணி
தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்ப கரைமுக தேற்று
திறத்தன மாற்றயலே
பொன்ப டொழுக பொருந்தொளி
செய்யு பொய்பொருந்தா
அன்பர கணியன காண்கஐ
யாறன் அடித்தலமே
களித்து கலந்ததோர் காதற்
கசிவொடு காவிரிவா
குளித்து தொழுதுமுன் நின்றவி
பத்தரை கோதில்செந்தேன்
தெளித்து சுவையமு தூட்டி
யமரர்கள் சூழிருப்ப
அளித்து பெருஞ்செல்வ மாக்கும்ஐ
யாறன் அடித்தலமே
திருத்தி கருத்தினை செவ்வே
நிறுத்தி செறுத்துடலை
வருத்தி கடிமலர் வாளெடு
தோச்சி மருங்குசென்று
விருத்தி குழக்கவல் லோர்கட்கு
விண்ப டிகையிடுமால்
அருத்தி தருந்தவ ரேத்தும்ஐ
யாறன் அடித்தலமே
பாடும் பறண்டையு மாந்தையு
மார பரந்துபல்பே
கூடி முழவ குவிகவிழ்
கொட்ட குறுநரிகள்
நீடுங் குழல்செய்ய வையம்
நெளிய நிணப்பிணக்கா
டாடு திருவடி காண்கஐ
யாறன் அடித்தலமே
நின்போல் அமரர்கள் நீண்முடி
சாய்த்து நிமிர்த்துகுத்த
பைம்போ துழக்கி பவள
தழைப்பன பாங்கறியா
என்போ லிகள்பறி திட்ட
இலையும் முகையுமெல்லாம்
அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ
யாறன் அடித்தலமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
மலையார் மடந்தை மனத்தன
வானோர் மகுடமன்னி
நிலையா யிருப்பன நின்றோர்
மதிப்பன நீணிலத்து
புலையாடு புன்மை தவிர்ப்பன
பொன்னுல கம்மளிக்கும்
அலையார் புனற்பொன்னி சூழ்ந்தஐ
யாறன் அடித்தலமே
பொலம்புண் டரீக புதுமலர்
போல்வன போற்றியென்பார்
புலம்பும் பொழுதும் புணர்துணை
யாவன பொன்னனைய
சிலம்புஞ் செறிபா டகமுஞ்
செழுங்கிண் கிணித்திரளும்
அலம்பும் திருவடி காண்கஐ
யாறன் அடித்தலமே
உற்றா ரிலாதார குறுதுணை
யாவன ஓதிநன்னூல்
கற்றார் பரவ பெருமை
யுடையன காதல்செய்ய
கிற்பார் தமக்கு கிளரொளி
வானக தான்கொடுக்கும்
அற்றார கரும்பொருள் காண்கஐ
யாறன் அடித்தலமே
வானை கடந்தண்ட தப்பால்
மதிப்பன மந்திரிப்பார்
ஊனை கழித்து கொண்டருள்
செய்வன உத்தமர்க்கு
ஞான சுடராய் நடுவே
யுதிப்பன நங்கையஞ்ச
ஆனை யுரித்தன காண்கஐ
யாறன் அடித்தலமே
மாதர மானில மாவன
வானவர் மாமுகட்டின்
மீதன மென்கழல் வெங்கச்சு
வீக்கின வெந்நமனார்
தூதரை யோட துரப்பன
துன்பற தொண்டுபட்டார
காதர மாவன காண்கஐ
யாறன் அடித்தலமே
பேணி தொழுமவர் பொன்னுல
காள பிறங்கருளால்
ஏணி படிநெறி யிட்டு
கொடுத்திமை யோர்முடிமேல்
மாணிக்க மொத்து மரகதம்
போன்று வயிரமன்னி
ஆணி கனகமு மொக்கும்ஐ
யாறன் அடித்தலமே
ஓதிய ஞானமும் ஞான
பொருளும் ஒலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியு
மாவன விண்ணுமண்ணுஞ்
சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு
மொப்பன தூமதியோ
டாதியும் அந்தமு மானஐ
யாறன் அடித்தலமே
சுணங்கு முகத்து துணைமுலை
பாவை சுரும்பொடுவண்
டணங்குங் குழலி யணியார்
வளைக்கரங் கூப்பிநின்று
வணங்கும் பொழுதும் வருடும்
பொழுதும்வண் காந்தளொண்போ
தணங்கும் அரவிந்த மொக்கும்ஐ
யாறன் அடித்தலமே
சுழலார் துயர்வெயிற் சுட்டிடும்
போதடி தொண்டர்துன்னும்
நிழலா வனவென்று நீங்கா
பிறவி நிலைகெடுத்து
கழலா வினைகள் கழற்றுவ
கால வனங்கடந்த
அழலார் ஒளியன காண்கஐ
யாறன் அடித்தலமே
வலியான் றலைபத்தும் வாய்வி
டலற வரையடர்த்து
மெலியா வலியுடை கூற்றை
யுதைத்துவிண் ணோர்கள்முன்னே
பலிசேர் படுகடை பார்த்துப்பன்
னாளும் பலர்இகழ
அலியா நிலைநிற்கும் ஐயன்ஐ
யாறன் அடித்தலமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கண்டியூர் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
வானவர் தானவர் வைகல்
மலர்கொணர திட்டிறைஞ்சி
தானவர் மால்பிர மன்னறி
யாத தகைமையினான்
ஆனவ னாதிபு ராணனன்
றோடிய பன்றியெய்த
கானவ னைக்கண்டி யூரண்ட
வாணர் தொழுகின்றதே
வான மதியமும் வாளர
வும்புன லோடுசடை
தான மதுவென வைத்துழல்
வான்றழல் போலுருவன்
கான மறியொன்று கையுடை
யான்கண்டி யூரிருந்த
ஊனமில் வேத முடையானை
நாமடி யுள்குவதே
பண்டங் கறுத்ததோர் கையுடை
யான்படை தான்றலையை
உண்டங் கறுத்ததும் ஊரொடு
நாடவை தானறியுங்
கண்டங் கறுத்த மிடறுடை
யான்கண்டி யூரிருந்த
தொண்டர் பிரானைக்கண் டீரண்ட
வாணர் தொழுகின்றதே
முடியின்முற் றாததொன் றில்லையெல்
லாமுடன் தானுடையான்
கொடியுமுற் றவ்விடை யேறியோர்
கூற்றொரு பாலுடையான்
கடியமுற் றவ்வினை நோய்களை
வான்கண்டி யூரிருந்தான்
அடியுமுற் றார்தொண்டர் இல்லைகண்
டீரண்ட வானவரே
பற்றியோ ரானை யுரித்த
பிரான்பவ ளத்திரள்போல்
முற்றும் அணிந்ததோர் நீறுடை
யான்முன்ன மேகொடுத்த
கற்றங் குடையவன் றானறி
யான்கண்டி யூரிருந்த
குற்றமில் வேத முடையானை
யாமண்டர் கூறுவதே
போர்ப்பனை யானை யுரித்த
பிரான்பொறி வாயரவஞ்
சேர்ப்பது வான திரைகடல்
சூழுல கம்மிதனை
காப்பது காரண மாகக்கொண்
டான்கண்டி யூரிருந்த
கூர்ப்புடை ஒள்வாள் மழுவனை
யாமண்டர் கூறுவதே
அட்டது காலனை ஆய்ந்தது
வேதமா றங்கமன்று
சுட்டது காமனை கண்ணத
னாலே தொடர்ந்தெரி
கட்டவை மூன்று மெரித்த
பிரான்கண்டி யூரிருந்த
குட்டமுன் வேத படையனை
யாமண்டர் கூறுவதே
அட்டும் ஒலிநீர் அணிமதி
யும்மல ரானவெல்லாம்
இட்டு பொதியுஞ் சடைமுடி
யான்இண்டை மாலையங்கை
கட்டும் அரவது தானுடை
யான்கண்டி யூரிருந்த
கொட்டும் பறையுடை கூத்தனை
யாமண்டர் கூறுவதே
மாய்ந்தன தீவினை மங்கின
நோய்கள் மறுகிவிழ
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில்
லாநம்மை செற்றநங்கை
காய்ந்த பிரான்கண்டி யூரெம்
பிரான்அங்க மாறினையும்
ஆய்ந்த பிரானல்ல னோவடி
யேனையா கொண்டவனே
மண்டி மலையை யெடுத்து
தாக்கியவ் வாசுகியை
தண்டி அமரர் கடைந்த
கடல்விடங் கண்டருளி
உண்ட பிரான்நஞ் சொளித்தபி
ரான்அஞ்சி யோடிநண்ண
கண்ட பிரானல்ல னோகண்டி
யூரண்ட வானவனே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வீரட்டேசுவரர் தேவியார் மங்கைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பாதிரிப்புலியூர் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
ஈன்றாளு மாயென கெந்தையு
மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துக
தான்மன துள்ளிருக்க
ஏன்றான் இமையவர கன்பன்
திருப்பா திரிப்புலியூர
தோன்றா துணையா யிருந்தனன்
றன்னடி யோங்களுக்கே
பற்றாய் நினைந்திட போதுநெஞ்
சேயிந்த பாரைமுற்றுஞ்
சுற்றாய் அலைகடல் மூடினுங்
கண்டேன் புகல்நமக்கு
உற்றான் உமையவ கன்பன்
திருப்பா திரிப்புலியூர்
முற்றா முளைமதி கண்ணியி
னான்றன மொய்கழலே
விடையான் விரும்பியென் னுள்ள
திருந்தான் இனிநமக்கிங்
கடையா அவலம் அருவினை
சாரா நமனையஞ்சோம்
புடையார் கமல தயன்போல்
பவர்பா திரிப்புலியூர்
உடையான் அடியார் அடியடி
யோங்க கரியதுண்டே
மாயமெல் லாமுற்ற விட்டிருள்
நீங்க மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தா
னவன்றன் திருவடிக்கே
தேயமெல் லாநின் றிறைஞ்சு
திருப்பா திரிப்புலியூர்
மேயநல் லான்மலர பாதமென்
சிந்தையுள் நின்றனவே
வைத்த பொருள்ந காமென்று
சொல்லி மனத்தடைத்து
சித்த மொருக்கி சிவாய
நமவென் றிருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வா
ரவர்பா திரிப்புலியூர்
அத்தன் அருள்பெற லாமோ
அறிவிலா பேதைநெஞ்சே
கருவா கிடந்துன் கழலே
நினையுங் கருத்துடையேன்
உருவா தெரிந்துன்றன் நாமம்
பயின்றேன் உனதருளாற்
திருவாய் பொலி சிவாய
நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா
திரிப்புலி யூரரனே
எண்ணா தமரர் இரக்க
பரவையுள் நஞ்சமுண்டாய்
திண்ணார் அசுரர் திரிபுர
தீயெழ செற்றவனே
பண்ணார தமைந்த பொருள்கள்
பயில்பா திரிப்புலியூர
கண்ணார் நுதலாய் கழல்நங்
கருத்தில் உடையனவே
புழுவா பிறக்கினும் புண்ணியா
வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர
வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார கிரங்கி யிருந்தருள்
செய்பா திரிப்புலியூர
செழுநீர புனற்கங்கை செஞ்சடை
மேல்வைத்த தீவண்ணனே
மண்பா தலம்புக்கு மால்கடல்
மூடிமற் றேழுலகும்
விண்பால் திசைகெ டிருசுடர்
வீழினும் அஞ்சல்நெஞ்சே
திண்பால் நமக்கொன்று கண்டோ
திருப்பா திரிப்புலியூர
கண்பாவு நெற்றி கடவு
சுடரான் கழலிணையே
திருந்தா அமணர்த தீநெறி
பட்டு திகைத்துமுத்தி
தருந்தா ளிணைக்கே சரணம்
புகுந்தேன் வரையெடுத்த
பொருந்தா அரக்கன் உடல்நெரி
தாய்பா திரிப்புலியூர்
இருந்தாய் அடியேன் இனிப்பிற
வாமல்வ தேன்றுகொள்ளே
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் தோன்றாத்துணையீசுவரர்
தேவியார் தோகையம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவீழிமிழலை திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
வான்சொட்ட சொட்டநின் றட்டும்
வளர்மதி யோடயலே
தேன்சொட்ட சொட்டநின் றட்டு
திருக்கொன்றை சென்னிவைத்தீர்
மான்பெட்டை நோக்கி மணாளீர்
மணிநீர் மிழலையுள்ளீர்
நான்சட்ட வும்மை மறக்கினும்
என்னை குறிக்கொண்மினே
அந்தமும் ஆதியு மாகிநின்
றீரண்டம் எண்டிசையும்
பந்தமும் வீடும் பரப்புகின்
றீர்பசு வேற்றுகந்தீர்
வெந்தழல் ஓம்பு மிழலையுள்
ளீரென்னை தென்றிசைக்கே
உந்திடும் போது மறக்கினும்
என்னை குறிக்கொண்மினே
அலைக்கின்ற நீர்நிலங் காற்றனல்
அம்பர மாகிநின்றீர்
கலைக்கன்று சேருங் கரத்தீர்
கலைப்பொரு ளாகிநின்றீர்
விலக்கின்றி நல்கும் மிழலையுள்
ளீர்மெய்யிற் கையொடுகால்
குலைக்கின்று நும்மை மறக்கினும்
என்னை குறிக்கொண்மினே
தீத்தொழி லான்றலை தீயிலி
டுச்செய்த வேள்விசெற்றீர்
பேய்த்தொழி லாட்டியை பெற்றுடை
யீர்பிடி துத்திரியும்
வேய்த்தொழி லாளர் மிழலையுள்
ளீர்விக்கி அஞ்செழுத்தும்
ஓத்தொழி தும்மை மறக்கினும்
என்னை குறிக்கொண்மினே
தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ்
சுத்தியும் பத்திமையான்
மேற்பட்ட அந்தணர் வீழியும்
என்னையும் வேறுடையீர்
நாட்பட்டு வந்து பிறந்தேன்
இறக்க நமன்தமர்தம்
கோட்பட்டு நும்மை மறக்கினும்
என்னை குறிக்கொண்மினே
கண்டியிற் பட்ட கழுத்துடை
யீர்கரி காட்டிலிட்ட
பண்டியிற் பட்ட பரிகல
தீர்பதி வீழிகொண்டீர்
உண்டியிற் பட்டினி நோயில்
உறக்கத்தில் உம்மையைவர்
கொண்டியிற் பட்டு மறக்கினும்
என்னை குறிக்கொண்மினே
தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண்
டீர்தூய வெள்ளெருதொன்
றேற்றங்கொண் டீரெழில் வீழி
மிழலை இருக்கைகொண்டீர்
சீற்றங்கொண் டென்மேல் சிவந்ததோர்
பாசத்தால் வீசியவெங்
கூற்றங்கண் டும்மை மறக்கினும்
என்னை குறிக்கொண்மினே
சுழிப்பட்ட கங்கையு திங்களுஞ்
சூடிச்சொ கம்பயின்றீர்
பழிப்பட்ட பாம்பரை பற்றுடை
யீர்படர் தீப்பருக
விழிப்பட்ட காமனை வீட்டீர்
மிழலையுள் ளீர்பிறவி
சுழிப்பட்டு நும்மை மறக்கினும்
என்னை குறிக்கொண்மினே
பிள்ளையிற் பட்ட பிறைமுடி
யீர்மறை யோதவல்லீர்
வெள்ளையிற் பட்டதோர் நீற்றீர்
விரிநீர் மிழலையுள்ளீர்
நள்ளையிற் பட்டைவர் நக்கரை
பிக்க நமன்தமர்தங்
கொள்ளையிற் பட்டு மறக்கினும்
என்னை குறிக்கொண்மினே
கறுக்கொண் டரக்கன் கயிலையை
பற்றிய கையுமெய்யும்
நெறுக்கென் றிறச்செற்ற சேவடி
யாற்கூற்றை நீறுசெய்தீர்
வெறிக்கொன்றை மாலை முடியீர்
விரிநீர் மிழலையுள்ளீர்
இறக்கின்று நும்மை மறக்கினும்
என்னை குறிக்கொண்மினே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வீழியழகர் தேவியார் சுந்தரகுஜாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சத்திமுற்றம் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
கோவாய் முடுகி யடுதிறற்
கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற்
பொறித்துவை போகவிடின்
மூவா முழுப்பழி மூடுங்கண்
டாய்முழங் குந்தழற்கை
தேவா திருச்சத்தி முற்ற
துறையுஞ் சிவக்கொழுந்தே
காய்ந்தாய் அனங்கன் உடலம்
பொடிபட காலனைமுன்
பாய்ந்தாய் உயிர்செக பாதம்
பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்தா தறுப்பாய் அடியேற்
கருளாயுன் அன்பர்சிந்தை
சேர்ந்தாய் திருச்சத்தி முற்ற
துறையுஞ் சிவக்கொழுந்தே
பொத்தார் குரம்பை புகுந்தைவர்
நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போல் மறுகுமென்
சிந்தை மறுக்கொழிவி
அத்தா அடியேன் அடைக்கலங்
கண்டாய் அமரர்கள்தஞ்
சித்தா திருச்சத்தி முற்ற
துறையுஞ் சிவக்கொழுந்தே
நில்லா குரம்பை நிலையா
கருதியி நீணிலத்தொன்
றல்லா குழிவீழ தயர்வுறு
வேனைவ தாண்டுகொண்டாய்
வில்லேர் புருவ துமையாள்
கணவா விடிற்கெடுவேன்
செல்வா திருச்சத்தி முற்ற
துறையுஞ் சிவக்கொழுந்தே
கருவுற் றிருந்துன் கழலே
நினைந்தேன் கருப்புவியிற்
தெருவிற் புகுந்தேன் திகைத்தடி
யேனை திகைப்பொழிவி
உருவிற் றிகழும் உமையாள்
கணவா விடிற்கெடுவேன்
திருவிற் பொலிசத்தி முற்ற
துறையுஞ் சிவக்கொழுந்தே
வெம்மை நமன்தமர் மிக்கு
விரவி விழுப்பதன்முன்
இம்மையுன் தாளென்றன் நெஞ்ச
தெழுதிவை ஈங்கிகழில்
அம்மை அடியேற் கருளுதி
யென்பதிங் காரறிவார்
செம்மை தருசத்தி முற்ற
துறையுஞ் சிவக்கொழுந்தே
விட்டார் புரங்கள் ஒருநொடி
வேவவோர் வெங்கணையாற்
சுட்டாயென் பாச தொடர்பறு
தாண்டுகொள் தும்பிபம்பும்
மட்டார் குழலி மலைமகள்
பூசை மகிழ்ந்தருளுஞ்
சிட்டா திருச்சத்தி முற்ற
துறையுஞ் சிவக்கொழுந்தே
இகழ்ந்தவன் வேள்வி அழித்தி
டிமையோர் பொறையிரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமுங்
கொண்டது நீலகண்டா
புகழ்ந்த அடியேன்றன் புன்மைகள்
தீர புரிந்துநல்காய்
திகழ்ந்த திருச்சத்தி முற்ற
துறையுஞ் சிவக்கொழுந்தே
தக்கார்வ மெய்தி சமண்தவிர
துன்றன் சரண்புகுந்தேன்
எக்காதல் எப்பயன் உன்றிற
மல்லால் எனக்குளதே
மிக்கார் திலையுள் விருப்பா
மிகவட மேருவென்னு
திக்கா திருச்சத்தி முற்ற
துறையுஞ் சிவக்கொழுந்தே
பொறித்தேர் அரக்கன் பொருப்பெடு
புற்றவன் பொன்முடிதோள்
இறத்தாள் ஒருவிரல் ஊன்றி
டலற இரங்கிஒள்வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய்
குற்ற கொடுவினைநோய்
செறுத்தாய் திருச்சத்தி முற்ற
துறையுஞ் சிவக்கொழுந்தே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சிவக்கொழுந்தீசுவரர் தேவியார் பெரியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநல்லூர் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
அட்டுமின் இல்பலி யென்றென்
றகங்கடை தோறும்வந்து
மட்டவி ழுங்குழ லார்வளை
கொள்ளும் வகையென்கொலோ
கொட்டிய பாணி யெடுத்திட்ட
பாதமுங் கோளரவும்
நட்டநின் றாடிய நாதர்நல்
லூரிடங் கொண்டவரே
பெண்ணிட்டம் பண்டைய தன்றிவை
பெய்பலி கென்றுழல்வார்
நண்ணிட்டு வந்து மனைபுகு
தாரும்நல் லூரகத்தே
பண்ணிட்ட பாடலர் ஆடல
ராய்ப்பற்றி நோக்கிநின்று
கண்ணிட்டு போயிற்று காரண
முண்டு கறைக்கண்டரே
படவேர் அரவல்ன்ற் பாவைநல்
லீர்பக லேயொருவர்
இடுவார் இடைப்பலி கொள்பவர்
போலவ தில்புகுந்து
நடவார் அடிகள் நடம்பயின்
றாடிய கூத்தர்கொலோ
வடபாற் கயிலையு தென்பால்நல்
லூருந்தம் வாழ்பதியே
செஞ்சுடர சோதி பவள
திரள்திகழ் முத்தனைய
நஞ்சணி கண்டன்நல் லூருறை
நம்பனை நானொருகாற்
துஞ்சிடை கண்டு கனவின்
றலைத்தொழு தேற்கவன்றான்
நெஞ்சிடை நின்றக லான்பல
காலமும் நின்றனனே
வெண்மதி சூடி விளங்கநின்
றானைவிண் ணோர்கள்தொழ
நண்ணில யத்தொடு பாட
லறாதநல் லூரகத்தே
திண்ணிலை யங்கொடு நின்றான்
திரிபுர மூன்றெரித்தான்
கண்ணுளும் நெஞ்ச தகத்தும்
உளகழற் சேவடியே
தேற்ற படத்திரு நல்லூ
ரகத்தே சிவனிருந்தாற்
தோற்ற படச்சென்று கண்டுகொள்
ளார்தொண்டர் துன்மதியால்
ஆற்றிற் கெடுத்து குளத்தினிற்
றேடிய ஆதரைப்போற்
காற்றிற் கெடுத்துல கெல்லா
திரிதர்வர் காண்பதற்கே
நாட்கொண்ட தாமரை பூத்தடஞ்
சூழ்ந்த நல்லூரகத்தே
கீட்கொண்ட கோவணங் காவென்று
சொல்லி கிறிபடத்தான்
வாட்கொண்ட நோக்கி மனைவியொ
டுமங்கோர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன்
றோவிவ் வகலிடமே
அறைமல்கு பைங்கழ லார்ப்பநின்
றானணி யார்சடைமேல்
நறைமல்கு கொன்றை தாருடை
யானும்நல் லூரகத்தே
பறைமல்கு பாடலன் ஆடல
னாகி பரிசழித்தான்
பிறைமல்கு செஞ்சடை தாழநின்
றாடிய பிஞ்ஞகனே
மன்னிய மாமறை யோர்மகிழ
தேத்த மருவியெங்கு
துன்னிய தொண்டர்கள் இன்னிசை
பாடி தொழுதுநல்லூர
கன்னியர் தாமுங் கனவிடை
யுன்னிய காதலரை
அன்னியர் அற்றவர் அங்கண
னேயருள் நல்கென்பரே
திருவமர் தாமரை சீர்வளர்
செங்கழு நீர்கொள்நெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ்
சண்பகங் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட
மலிமறை யோர்கள்நல்லூர்
உருவமர் பாக துமையவள்
பாகனை உள்குதுமே
செல்லேர் கொடியன் சிவன்பெருங்
கோயில் சிவபுரமும்
வல்லேன் புகவும் மதில்சூழ்
இலங்கையர் காவலனை
கல்லார் முடியொடு தோளிற
செற்ற கழலடியான்
நல்லூ ரிருந்த பிரான்அல்ல
னோநம்மை ஆள்பவனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
அந்திவ டத்திங்க கண்ணியன்
ஐயா றமர்ந்துவந்தென்
புந்திவ டத்திடை புக்குநின்
றானையும் பொய்யென்பனோ
சிந்திவ டச்சடை கற்றை
யலம்ப சிறிதலர்ந்த
நந்திவ டத்தொடு கொன்றை
வளாவிய நம்பனையே
பாட கால்கழற் கால்பரி
திக்கதி ருக்கவந்தி
நாட கால்நங்கை முன்செங்கண்
ஏனத்தின் பின்னடந்த
காட கால்கணங் கைதொழுங்
காலெங்க ணாய்நின்றகால்
ஆட காலரி மான்றேர்
வலவன்ஐ யாற்றனவே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவேகம்பம் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
ஓதுவி தாய்முன் அறவுரை
காட்டி அமணரொடே
காதுவி தாய்கட்ட நோய்பிணி
தீர்த்தாய் கலந்தருளி
போதுவி தாய்நின் பணிபிழை
கிற்புளி யம்வளாரால்
மோதுவி பாய்உக பாய்முனி
வாய்கச்சி யேகம்பனே
எத்தைக்கொண் டெத்தகை ஏழை
அமணொ டிசைவித்தெனை
கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு
வித்தென்னை கோகுசெய்தாய்
முத்தின் திரளும் பளிங்கினிற்
சோதியும் மொய்பவள
தொத்தினை யேய்க்கும் படியாய்
பொழிற்கச்சி யேகம்பனே
மெய்யம்பு கோத்த விசயனோ
டன்றொரு வேடுவனா
பொய்யம்பெய் தாவ மருளிச்செய்
தாய்புர மூன்றெரி
கையம்பெய் தாய்நுன் கழலடி
போற்றா கயவர்நெஞ்சிற்
குய்யம்பெய் தாய்கொடி மாமதில்
சூழ்கச்சி யேகம்பனே
குறிக்கொண் டிருந்துசெ தாமரை
ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற
மாலை நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை
வித்துக்கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங்
காஞ்சியெம் பிஞ்ஞகனே
உரைக்குங் கழிந்திங் குணர்வரி
யான்உள்கு வார்வினையை
கரைக்கு மெனக்கை தொழுவதல்
லாற்கதி ரோர்களெல்லாம்
விரைக்கொண் மலரவன் மால்எண்
வசுக்கள்ஏ காதசர்கள்
இரைக்கும் அமிர்தர கறியவொண்
ணானெங்கள் ஏகம்பனே
கருவுற்ற நாள்முத லாகவுன்
பாதமே காண்பதற்கு
உருகிற்றென் னுள்ளமும் நானுங்
கிடந்தல தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி யூரா திருவால
வாயா திருவாரூரா
ஒருபற் றிலாமையுங் கண்டிரங்
காய்கச்சி யேகம்பனே
அரிஅயன் இந்திரன் சந்திரா
தித்தர் அமரரெல்லாம்
உரியநின் கொற்ற கடைத்தலை
யார்உணங் காக்கிடந்தார்
புரிதரு புன்சடை போக
முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செஞ்சடை ஏகம்ப
என்னோ திருக்குறிப்பே
பாம்பரை சேர்த்தி படருஞ்
சடைமுடி பால்வண்ணனே
கூம்பலை செய்த கரதல
தன்பர்கள் கூடிப்பன்னாள்
சாம்பலை பூசி தரையிற்
புரண்டுநின் றாள்சரணென்
றேம்பலி பார்க கிரங்குகண்
டாய்கச்சி யேகம்பனே
ஏன்றுகொண் டாயென்னை எம்பெரு
மானினி யல்லமென்னிற்
சான்றுகண் டாய்இவ் வுலகமெல்
லாந்தனி யேனென்றென்னை
ஊன்றிநின் றாரைவர கொற்றிவை
தாய்பின்னை ஒற்றியெல்லாஞ்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப
மேய சுடர்வண்ணனே
உந்திநின் றாருன்றன் ஓலக்க
சூளைகள் வாய்தல்பற்றி
துன்றிநின் றார்தொல்லை வானவ
ரீட்டம் பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு
மாலும் மதிற்கச்சியாய்
இந்தநின் றோமினி எங்ஙன
மோவ திறைஞ்சுவதே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவின்னம்பர் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
மன்னு மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறு தூப்பொரு
ளாயின தூக்கமல
தன்ன வடிவின அன்புடை
தொண்டர கமுதருத்தி
இன்னல் களைவன இன்னம்ப
ரான்றன் இணையடியே
பைதற் பிணக்குழை காளிவெங்
கோபம்பங் கப்படுப்பான்
செய்தற் கரிய திருநடஞ்
செய்தன சீர்மறையோன்
உய்தற் பொருட்டுவெங் கூற்றை
யுதைத்தன உம்பர்க்கெல்லாம்
எய்தற் கரியன இன்னம்ப
ரான்றன் இணையடியே
சுணங்குநின் றார்கொங்கை யாள்உமை
சூடின தூமலரால்
வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின
மன்னு மறைகள்தம்மிற்
பிணங்கிநின் றின்னன வென்றறி
யாதன பேய்க்கணத்தோ
டிணங்கிநின் றாடின இன்னம்ப
ரான்றன் இணையடியே
ஆறொன் றியசம யங்களின்
அவ்வவர கப்பொருள்கள்
வேறொன் றிலாதன விண்ணோர்
மதிப்பன மிக்குவமன்
மாறொன் றிலாதன மண்ணொடு
விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறொன் றிலாதன இன்னம்ப
ரான்றன் இணையடியே
அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றி
னாலட லங்கியின்வா
கரக்கமுன் வைதிக தேர்மிசை
நின்றன கட்டுருவம்
பரக்கவெங் கானிடை வேடுரு
வாயின பல்பதிதோ
றிரக்க நடந்தன இன்னம்ப
ரான்றன் இணையடியே
கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழல்முன்
தேடின கேடுபடா
ஆண்டும் பலபல வூழியு
மாயின ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்கநின்
றாடின மேவுசிலம்
பீண்டும் கழலின இன்னம்ப
ரான்றன் இணையடியே
போற்று தகையன பொல்லா
முயலகன் கோபப்புன்மை
ஆற்று தகையன ஆறு
தவரவரை
தேற்று தகையன தேறிய
தொண்டரை செந்நெறிக்கே
ஏற்று தகையன இன்னம்ப
ரான்றன் இணையடியே
பயம்புன்மை சேர்தரு பாவ
தவிர்ப்பன பார்ப்பதிதன்
குயம்பொன்மை மாமல ரா
குலாவின கூடவொண்ணா
சயம்புவென் றேதகு தாணுவென்
றேசதுர் வேதங்கள்நின்
றியம்புங் கழலின இன்னம்ப
ரான்றன் இணையடியே
அயன்நெடு மால்இ திரன்சந்தி
ராதித்தர் அமரரெல்லாஞ்
சயசய என்றுமு போதும்
பணிவன தண்கடல்சூழ்
வியனில முற்றுக்கும் விண்ணுக்கும்
நாகர் வியன்நகர்க்கும்
இயபர மாவன இன்னம்ப
ரான்றன் இணையடியே
தருக்கிய தக்கன்றன் வேள்வி
தகர்த்தன தாமரைப்போ
துருக்கிய செம்பொன் உவமன்
இலாதன வொண்கயிலை
நெருக்கிய வாளர கன்றலை
பத்தும் நெரித்தவன்றன்
இருக்கியல் பாயின இன்னம்ப
ரான்றன் இணையடியே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
குலம்பலம் பாவரு குண்டர்முன்
னேந குண்டுகொலோ
அலம்பலம் பாவரு தண்புனல்
ஆரூர் அவிர்சடையான்
சிலம்பலம் பாவரு சேவடி
யான்றிரு மூலத்தானம்
புலம்பலம் பாவரு தொண்டர்க்கு
தொண்டராம் புண்ணியமே
மற்றிட மின்றி மனைதுற
தல்லுணா வல்லமணர்
சொற்றிட மென்று துரிசுப
டேனுக்கு முண்டுகொலோ
விற்றிடம் வாங்கி விசயனோ
டன்றொரு வேடுவனா
புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்கு
தொண்டராம் புண்ணியமே
ஒருவடி வின்றிநின் றுண்குண்டர்
முன்ன குண்டுகொலோ
செருவடி வெஞ்சிலை யாற்புரம்
அட்டவன் சென்றடையா
திருவுடை யான்றிரு வாரூர
திருமூல தானன்செங்க
பொருவிடை யானடி தொண்டர்க்கு
தொண்டராம் புண்ணியமே
மாசினை யேறிய மேனியர்
வன்கண்ணர் மொண்ணரைவி
டீசனை யேநினை தேசறு
வேனுக்கும் உண்டுகொலோ
தேசனை ஆரூர திருமூல
தானனை சிந்தைசெய்து
பூசனை பூசரர் தொண்டர்க்கு
தொண்டராம் புண்ணியமே
அருந்தும் பொழுதுரை யாடா
அமணர் திறமகன்று
வருந்தி நினைந்தர னேயென்று
வாழ்த்துவேற் குண்டுகொலோ
திருந்திய மாமதில் ஆரூர
திருமூல தானனுக்கு
பொருந்து தவமுடை தொண்டர்க்கு
தொண்டராம் புண்ணியமே
வீங்கிய தோள்களு தாள்களு
மாய்நின்று வெற்றரையே
மூங்கைகள் போலுண்ணு மூடர்முன்
னேந குண்டுகொலோ
தேங்கமழ் சோலைத்தென் னாரூர
திருமூல தானன்செய்ய
பூங்கழ லானடி தொண்டர்க்கு
தொண்டராம் புண்ணியமே
பண்ணிய சாத்திர பேய்கள்
பறிதலை குண்டரைவி
டெண்ணிற் புகழீசன் றன்னருள்
பெற்றேற்கு முண்டுகொலோ
திண்ணிய மாமதில் ஆரூர
திருமூல தானனெங்கள்
புண்ணியன் றன்னடி தொண்டர்க்கு
தொண்டராம் புண்ணியமே
கரப்பர்கள் மெய்யை தலைபறி
கச்சுகம் என்னுங்குண்டர்
உரைப்பன கேளாதிங் குய்யப்போ
தேனுக்கும் உண்டுகொலோ
திருப்பொலி ஆரூர திருமூல
தானன் திருக்கயிலை
பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்கு
தொண்டராம் புண்ணியமே
கையி லிடுசோறு நின்றுண்ணுங்
காதல் அமணரைவி
டுய்யும் நெறிகண் டிங்கு
போந்தேனுக்கு முண்டுகொலோ
ஐயன் அணிவயல் ஆரூர
திருமூல தானனுக்கு
பொய்யன் பிலாவடி தொண்டர்க்கு
தொண்டராம் புண்ணியமே
குற்ற முடைய அமணர்
திறமது கையகன்றி
டுற்ற கருமஞ்செய் துய்யப்போ
தேனுக்கும் உண்டுகொலோ
மற்பொலி தோளான் இராவணன்
றன்வலி வாட்டுவித்த
பொற்கழ லானடி தொண்டர்க்கு
தொண்டராம் புண்ணியமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
வேம்பினை பேசி விடக்கினை
யோம்பி வினைபெருக்கி
தூம்பினை தூர்த்தங்கோர் சுற்ற
துணையென் றிருத்திர்தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர்
அமர்ந்தான் அடிநிழற்கீழ
சாம்பலை பூசி சலமின்றி
தொண்டுப டுய்ம்மின்களே
ஆரா தடித்தொண்டர் ஆணிப்பொன்
ஆரூர் அகத்தடக்கி
பாரூர் பரிப்பத்தம் பங்குனி
உத்திரம் பாற்படுத்தா
னாரூர் நறுமலர் நாதன்
அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால் திருவிள கிட்டமை
நீணா டறியுமன்றே
பூம்படி மக்கலம் பொற்படி
மக்கலம் என்றிவற்றால்
ஆம்படி மக்கல மாகிலும்
ஆரூர் இனிதமர்ந்தார்
தாம்படி மக்கலம் வேண்டுவ
ரேல்தமிழ் மாலைகளால்
நாம்படி மக்கலஞ் செய்து
தொழுதுய் மடநெஞ்சமே
துடிக்கின்ற பாம்பரை ஆர்த்து
துளங்கா மதியணிந்து
முடித்தொண்ட ராகி முனிவர்
பணிசெய்வ தேயுமன்றி
பொடிக்கொண்டு பூசி புகுந்தொண்டர்
பாதம் பொறுத்தபொற்பால்
அடித்தொண்டன் நந்தியென் பானுளன்
ஆரூர் அமுதினுக்கே
கரும்பு பிடித்தவர் காயப்ப
டாரங்கோர் கோடலியால்
இரும்பு பிடித்தவர் இன்புற
பட்டார் இவர்கள்நிற்க
அரும்பவிழ் தண்பொழில் சூழணி
ஆரூர் அமர்ந்தபெம்மான்
விரும்பு மனத்தினை யாதொன்று
நானுன்னை வேண்டுவனே
கொடிகொள் விதானங் கவரி
பறைசங்கங் கைவிளக்கோ
டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர்
எய்தியும் ஊனமில்லா
அடிகளும் ஆரூர் அகத்தின
ராயினும் அந்தவள
பொடிகொண் டணிவார கிருளொக்கு
நந்தி புறப்படிலே
இப்பதிகத்தில் ம்செய்யுட்கள் சிதைந்து போயின
சங்கொலி பித்திடு மின்சிறு
காலை தடவழலில்
குங்கிலி யப்புகை கூட்டென்றுங்
காட்டி இருபதுதோள்
அங்குலம் வைத்தவன் செங்குரு
திப்புன லோடஅஞ்ஞான்
றங்குலி வைத்தான் அடித்தா
மரையென்னை ஆண்டனவே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநாகைக்காரோணம் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
வடிவுடை மாமலை மங்கைபங்
காகங்கை வார்சடையாய்
கடிகமழ் சோலை சுலவு
கடல்நாகை காரோணனே
பிடிமத வாரணம் பேணு
துரகநிற் கப்பெரிய
இடிகுரல் வெள்ளெரு தேறுமி
தென்னைகொல் எம்மிறையே
கற்றார் பயில்கடல் நாகைக்கா
ரோணத்தெங் கண்ணுதலே
விற்றாங் கியகரம் வேல்நெடுங்
கண்ணி வியன்கரமே
நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலி
தகர நின்கரமே
செற்றார் புரஞ்செற்ற சேவக
மென்னைகொல் செப்புமினே
தூமென் மலர்க்கணை கோத்துத்தீ
வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபட காய்ந்த
கடல்நாகை காரோணநின்
நாமம் பரவி நமச்சிவா
யவென்னும் அஞ்செழுத்துஞ்
சாமன் றுரைக்க தருதிகண்
டாயெங்கள் சங்கரனே
பழிவழி யோடிய பாவி
பறிதலை குண்டர்தங்கள்
மொழிவழி யோடி முடிவேன்
முடியாமை காத்துக்கொண்டாய்
கழிவழி யோதம் உலவு
கடல்நாகை காரோணவென்
வழிவழி யாளாகும் வண்ணம்
அருளெங்கள் வானவனே
செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை
வெண்ணகை தேமொழியார்
வந்து வலஞ்செய்து மாநட
மாட மலிந்தசெல்வ
கந்த மலிபொழில் சூழ்கடல்
நாகைக்கா ரோணமென்றுஞ்
சிந்தைசெய் வாரை பிரியா
திருக்கு திருமங்கையே
பனைபுரை கைம்மத யானை
யுரித்த பரஞ்சுடரே
கனைகடல் சூழ்தரு நாகைக்கா
ரோணத்தெங் கண்ணுதலே
மனைதுற தல்லுணா வல்லமண்
குண்டர் மயக்கைநீக்கி
எனைநினை தாட்கொண்டா கென்னினி
யான்செயும் இச்சைகளே
சீர்மலி செல்வம் பெரிதுடை
யசெம்பொன் மாமலையே
கார்மலி சோலை சுலவு
கடல்நாகை காரோணனே
வார்மலி மென்முலை யார்பலி
வந்திட சென்றிரந்து
ஊர்மலி பிச்சைகொண் டுண்பது
மாதிமை யோவுரையே
வங்கம் மலிகடல் நாகைக்கா
ரோணத்தெம் வானவனே
எங்கள் பெருமானோர் விண்ணப்பம்
உண்டது கேட்டருளீர்
கங்கை சடையு கரந்தா
கள்ளத்தை மெள்ளவுமை
நங்கை அறியிற்பொல் லாதுகண்டா
யெங்கள் நாயகனே
இப்பதிகத்தில் ம் செய்யுள் மறைந்து போயிற்று
கருந்தடங் கண்ணியு தானுங்
கடல்நாகை காரோணத்தான்
இருந்த திருமலை யென்றிறைஞ்
சாதன் றெடுக்கலுற்றான்
பெருந்தலை பத்தும் இருபது
தோளும் பிதிர்ந்தலற
இருந்தரு ளிச்செய்த தேமற்று
செய்திலன் எம்மிறையே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவதிகைவீரட்டானம் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
மாசிலொள் வாள்போல் மறியும்
மணிநீர திரைத்தொகுதி
ஊசலை யாடியங் கொண்சிறை
அன்னம் உறங்கலுற்றால்
பாசறை நீலம் பருகிய
வண்டுபண் பாடல்கண்டு
வீசுங் கெடில வடகரை
தேயெந்தை வீரட்டமே
பைங்காற் றவளை பறைகொட்ட
பாசிலை நீர்ப்படுகர்
அங்காற் குவளைமேல் ஆவி
உயிர்ப்ப அருகுலவுஞ்
செங்காற் குருகிவை சேருஞ்
செறிகெடி லக்கரைத்தே
வெங்காற் குருசிலை வீரன்
அருள்வைத்த வீரட்டமே
அம்மலர கண்ணியர் அஞ்சனஞ்
செந்துவர் வாயிளையார்
வெம்முலை சாந்தம் விலைபெறு
மாலை யெடுத்தவர்கள்
தம்மருங் கிற்கிரங் கார்தட
தோள்மெலி யக்குடைவார்
விம்மு புனற்கெடி லக்கரை
தேயெந்தை வீரட்டமே
மீனுடை தண்புனல் வீரட்ட
ரேநும்மை வேண்டுகின்ற
தியானுடை சில்குறை ஒன்றுள
தால்நறு தண்ணெருக்கின்
தேனுடை கொன்றை சடையுடை
கங்கை திரைதவழுங்
கூனுடை திங்க குழவியெ
போதுங் குறிக்கொண்மினே
ஆரட்ட தேனும் இரந்துண்
டகமக வன்றிரிந்து
வேரட்ட நிற்பி திடுகின்ற
தால்விரி நீர்ப்பரவை
சூரட்ட வேலவன் தாதையை
சூழ்வய லாரதிகை
வீரட்ட தானை விரும்பா
வரும்பாவ வேதனையே
படர்பொற் சடையும் பகுவாய்
அரவும் பனிமதியுஞ்
சுடலை பொடியு மெல்லா
முளவேயவர் தூயதெண்ணீர
கெடில கரைத்திரு வீரட்ட
ராவர்கெ டேனடைந்தார்
நடலைக்கு நற்றுணை யாகுங்கண்
டீரவர் நாமங்களே
காளங் கடந்ததோர் கண்டத்த
ராகி கண்ணார்கெடில
நாளங் கடிக்கோர் நகரமு
மாதிற்கு நன்கிசைந்த
தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு
மியாழ்கொண்டு தாமங்ஙனே
வேடங்கள் கொண்டும் விசும்புசெல்
வாரவர் வீரட்டரே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள் மறைந்து போயின
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புகலூர் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
தன்னை சரணென்று தாளடை
தேன்றன் அடியடை
புன்னை பொழிற்புக லூரண்ணல்
செய்வன கேண்மின்களோ
என்னை பிறப்பறு தென்வினை
கட்டறு தேழ்நரக
தென்னை கிடக்கலொ டான்சிவ
லோக திருத்திடுமே
பொன்னை வகுத்தன்ன மேனிய
னேபுணர் மென்முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்தனே
தமியேற் கிரங்காய்
புன்னை மலர்த்தலை வண்டுறங்
கும்புக லூரரசே
என்னை வகுத்திலை யேலிடும்
பைக்கிடம் யாதுசொல்லே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
பொன்னள வார்சடை கொன்றையி
னாய்புக லூர்க்கரசே
மன்னுள தேவர்கள் தேடு
மருந்தே வலஞ்சுழியாய்
என்னள வேயுன காட்ப
டிடைக்கல தேகிடப்பார்
உன்னள வேயென கொன்றுமி
ரங்காத உத்தமனே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள் சிதைந்து போயின
ஓண பிரானும் ஒளிர்மா
மலர்மிசை உத்தமனுங்
காண பராவியுங் காண்கின்
றிலர்கர நாலைந்துடை
தோணற் பிரானை வலிதொலை
தோன்தொல்லை நீர்ப்புகலூர
கோண பிரானை குறு
குறுகா கொடுவினையே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கழிப்பாலை திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
நெய்தற் குருகுதன் பிள்ளையென்
றெண்ணி நெருங்கிச்சென்று
கைதை மடற்புல்கு தென்கழி
பாலை யதனுறைவாய்
பைதற் பிறையொடு பாம்புடன்
வைத்த பரிசறியோம்
எய்த பெறின்இரங் காதுகண்
டாய்நம் மிறையவனே
பருமா மணியும் பவளமு
தும்பர துந்திவரை
பொருமால் கரைமேற் றிரைகொணர
தெற்ற பொலிந்திலங்குங்
கருமா மிடறுடை கண்டனெம்
மான்கழி பாலையெந்தை
பெருமா னவனென்னை யாளுடை
யானி பெருநிலத்தே
நாட்ப டிருந்தின்பம் எய்தலுற்
றிங்கு நமன்தமராற்
கோட்ப டொழிவதன் முந்துற
வேகுளி ரார்தடத்து
தாட்பட்ட தாமரை பொய்கை
தண்கழி பாலையண்ணற்
காட்ப டொழிந்தவன் றேவல்ல
மாயிவ் வகலிடத்தே
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கடவூர் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த
மாணிமார கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவாள்
எயிற்றெரி போலுங்குஞ்சி
சுருட்டிய நாவில்வெங் கூற்றம்
பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட
வூருறை உத்தமனே
பதத்தெழு மந்திரம் அஞ்செழு
தோதி பரிவினொடும்
இதத்தெழு மாணிதன் இன்னுயிர்
உண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனை கண்குரு
திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட
வூருறை உத்தமனே
கரப்புறு சிந்தையர் காண்டற்
கரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற்
கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடை பால்வண்ணன்
காலனை பண்டொருகால்
உரப்பிய சேவடி யான்கட
வூருறை உத்தமனே
மறித்திகழ் கையினன் வானவர்
கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணிதன் ஆருயிர்
கொள்வான் கொதித்தசிந்தை
கறுத்தெழு மூவிலை வேலுடை
காலனை தானலற
உறுக்கிய சேவடி யான்கட
வூருறை உத்தமனே
குழைத்திகழ் காதினன் வானவர்
கோனை குளிர்ந்தெழுந்து
பழக்கமோ டர்ச்சித்த மாணிதன்
ஆருயிர் கொள்ளவந்த
தழற்பொதி மூவிலை வேலுடை
காலனை தானலற
உழக்கிய சேவடி யான்கட
வூருறை உத்தமனே
பாலனு காயன்று பாற்கடல்
ஈந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிரு தாரண
மோதி அருமுனிக்கா
சூலமும் பாசமுங் கொண்டு
தொடர்ந்தடர தோடிவந்த
காலனை காய்ந்த பிரான்கட
வூருறை உத்தமனே
படர்சடை கொன்றையும் பன்னக
மாலை பணிகயிறா
உடைதலை கோத்துழல் மேனியன்
உண்பலி கென்றுழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடை
காலனை துண்டமதா
உடறிய சேவடி யான்கட
வூருறை உத்தமனே
வெண்டலை மாலையுங் கங்கை
கரோடி விரிசடைமேற்
பெண்டனி நாயகன் பேயுக
தாடும் பெருந்தகையான்
கண்டனி நெற்றியன் காலனை
காய்ந்து கடலின்விடம்
உண்டருள் செய்தபி ரான்கட
வூருறை உத்தமனே
கேழல தாகி கிளறிய
கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர கண்ணிட
திட்டவம் மாலவற்கன்
றாழியும் ஈந்து அடுதிறற்
காலனை அன்றடர்த்து
ஊழியு மாய பிரான்கட
வூருறை உத்தமனே
தேன்றிகழ் கொன்றையுங் கூவிள
மாலை திருமுடிமேல்
ஆன்றிகழ் ஐந்துக தாடும்
பிரான்மலை ஆர்த்தெடுத்த
கூன்றிகழ் வாளர கன்முடி
பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட
வூருறை உத்தமனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமாற்பேறு திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
முதலிரு செய்யுட்கள் சிதைந்து போயின
மாணி குயிர்பெற கூற்றை
யுதைத்தன மாவலிபால்
காணி கிரந்தவன் காண்டற்
கரியன கண்டதொண்டர்
பேணி கிடந்து பரவ
படுவன பேர்த்துமஃதே
மாணிக்க மாவன மாற்பே
றுடையான் மலரடியே
கருட தனிப்பாகன் காண்டற்
கரியன காதல்செய்யிற்
குருடர்க்கு முன்னே குடிகொண்
டிருப்பன கோலமல்கு
செருட கடிமலர செல்விதன்
செங்கம லக்கரத்தால்
வருட சிவப்பன மாற்பே
றுடையான் மலரடியே
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருத்தூங்கானைமாடம் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பொன்னார் திருவடி கொன்றுண்டு
விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண்
டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலை சூலமென்
மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை
மாட சுடர்க்கொழுந்தே
ஆவா சிறுதொண்ட னென்நினை
தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன்
மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னை
பூசுசெ தாமரையின்
பூவார் கடந்தையுள் தூங்கானை
மாடத்தெம் புண்ணியனே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள்
சிதைந்து போயின
கடவு திகிரி கடவா
தொழி கயிலையுற்றான்
படவு திருவிர லொன்றுவை
தாய்பனி மால்வரைபோல்
இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள்
ளாயிருஞ் சோலைதிங்கள்
தடவுங் கடந்தையுள் தூங்கானை
மாடத்தெ தத்துவனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

பசுபதி திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
சாம்பலை பூசி தரையிற்
புரண்டுநின் றாள்பரவி
ஏம்பலி பார்க கிரங்குகண்
டாயிருங் கங்கையென்னுங்
காம்பலை கும்பணை தோளி
கதிர்ப்பூண் வனமுலைமேற்
பாம்பலை குஞ்சடை யாயெம்மை
யாளும் பசுபதியே
உடம்பை தொலைவித்துன் பாத
தலைவைத்த உத்தமர்கள்
இடும்பை படாமல் இரங்குகண்
டாயிரு ளோடச்செந்தீ
அடும்பொ தனைய அழன்மழு
வாவழ லேயுமிழும்
படம்பொ தரவரை யாயெம்மை
யாளும் பசுபதியே
தாரி திரந்தவி ராவடி
யார்தடு மாற்றமென்னும்
மூரி திரைப்பௌவ நீக்குகண்
டாய்முன்னை நாளொருகால்
வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை
வேள்வெந்து வீழச்செந்தீ
பாரித்த கண்ணுடை யாயெம்மை
யாளும் பசுபதியே
ஒருவரை தஞ்சமென் றெண்ணாதுன்
பாத மிறைஞ்சுகின்றார்
அருவினை சுற்றம் அகல்விகண்
டாயண்ட மேயணவும்
பெருவரை குன்றம் பிளிற
பிளந்துவே தோளியஞ்ச
பருவரை தோலுரி தாயெம்மை
யாளும் பசுபதியே
இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன்
பாத மிறைஞ்சுகின்றார
கடர்க்கின்ற நோயை விலக்குகண்
டாயண்டம் எண்டிசையுஞ்
சுடர்த்திங்கள் சூடி சுழற்கங்கை
யோடுஞ் சுரும்புதுன்றி
படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை
யாளும் பசுபதியே
அடலை கடல்கழி வான்நின்
னடியிணை யேயடைந்தார்
நடலை படாமை விலக்குகண்
டாய்நறுங் கொன்றை திங்கள்
சுடலை பொடிச்சுண்ண மாசுணஞ்
சூளா மணிகிடந்து
படர சுடர்மகு டாயெம்மை
யாளும் பசுபதியே
துறவி தொழிலே புரிந்துன்
சுரும்படி யேதொழுவார்
மறவி தொழிலது மாற்றுகண்
டாய்மதின் மூன்றுடைய
அறவை தொழில்புரி தந்தர
தேசெல்லு மந்திரத்தேர
பறவை புரமெரி தாயெம்மை
யாளும் பசுபதியே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள் சிதைந்து போயின
சி துருகி சிவனெம்
பிரானென்று சிந்தையுள்ளே
பித்து பெருக பிதற்றுகின்
றார்பிணி தீர்த்தருளாய்
தரக்கன் இருபது
தோளு முடியுமெல்லாம்
பத்துற் றுறநெரி தாயெம்மை
யாளும் பசுபதியே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

சரக்கறை திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
விடையும் விடைப்பெரும் பாகாவென்
விண்ணப்பம் வெம்மழுவா
படையும் படையாய் நிரைத்தபல்
பூதமும் பாய்புலித்தோல்
உடையு முடைதலை மாலையும்
மாலை பிறையொதுங்குஞ்
சடையு மிருக்குஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே
விஞ்ச தடவரை வெற்பாவென்
விண்ணப்பம் மேலிலங்கு
சங கலனுஞ் சரிகோ
வணமு தமருகமும்
அந்தி பிறையும் அனல்வா
யரவும் விரவியெல்லாஞ்
சந்தி திருக்குஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே
வீந்தார் தலைகல னேந்தீயென்
விண்ணப்பம் மேலிலங்கு
சாந்தாய வெந்த தவளவெண்
ணீறு தகுணிச்சமும்
பூந்தா மரைமேனி புள்ளி
யுழைமா னதள்புலித்தோல்
தாந்தா மிருக்குஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே
வெஞ்சமர் வேழ துரியாயென்
விண்ணப்பம் மேலிலங்கு
வஞ்சமா வந்த வருபுனற்
கங்கையும் வான்மதியும்
நஞ்சமா நாகம் நகுசிர
மாலை நகுவெண்டலை
தஞ்சமா வாழுஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே
வேலை கடல்நஞ்ச முண்டாயென்
விண்ணப்பம் மேலிலங்கு
காலற் கடந்தா னிடங்கயி
லாயமுங் காமர்கொன்றை
மாலை பிறையும் மணிவா
யரவும் விரவியெல்லாஞ்
சால கிடக்குஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே
வீழிட்ட கொன்றை தாராயென்
விண்ணப்பம் மேலிலங்கு
சூழி டிருக்குநற் சூளா
மணியுஞ் சுடலைநீறும்
ஏழி டிருக்குநல் லக்கு
மரவுமென் பாமையோடு
தாழி டிருக்குஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே
விண்டார் புரமூன்று மெய்தாயென்
விண்ணப்பம் மேலிலங்கு
தொண்டா டியதொண் டடிப்பொடி
நீறு தொழுதுபாதங்
கண்டார்கள் கண்டிரு குங்கயி
லாயமுங் காமர்கொன்றை
தண்டார் இருக்குஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே
விடுபட்டி ஏறுக தேறீயென்
விண்ணப்பம் மேலிலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை
குழல்தாளம் வீணைமொந்தை
வடுவிட்ட கொன்றையும் வன்னியும்
மத்தமும் வாளரவு
தடுகுட்ட மாடுஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே
வெண்டிரை கங்கை விகிர்தாவென்
விண்ணப்பம் மேலிலங்கு
கண்டிகை பூண்டு கடிசூ
திரமேற் கபாலவடங்
குண்டிகை கொக்கரை கோணற்
பிறைகுற பூதப்படை
தண்டிவை திட்ட சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே
வேதித்த வெம்மழு வாளீயென்
விண்ணப்பம் மேலிலங்கு
சோதி திருக்குநற் சூளா
மணியுஞ் சுடலைநீறும்
பாதி பிறையும் படுதலை
துண்டமும் பாய்புலித்தோல்
சாதி திருக்குஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே
விவந்தா டியகழல் எந்தாயென்
விண்ணப்பம் மேலிலங்கு
தவந்தா னெடுக்க தலைப
திறுத்தனை தாழ்புலித்தோல்
சிவந்தா டியபொடி நீறுஞ்
சிரமாலை சூடிநின்று
தவந்தா னிருக்குஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

தனி திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
வெள்ளி குழைத்துணி போலுங்
கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளி புரியன்ன வெண்புரி
நூலன் விரிசடைமேல்
வெள்ளி தகடன்ன வெண்பிறை
சூடிவெள் ளென்பணிந்து
வெள்ளி பொடிப்பவ ளப்புறம்
பூசிய வேதியனே
உடலை துறந்துல கேழுங்
கடந்துல வாததுன்ப
கடலை கடந்து போயிட
லாகுங் கனகவண்ண
படலை சடைப்பர வைத்திரை
கங்கை பனிப்பிறைவெண்
சுடலை பொடிக்கட வுட்கடி
மைக்கண் துணிநெஞ்சமே
முன்னே யுரைத்தால் முகமனே
யொக்குமிம் மூவுலகு
கன்னையும் அத்தனு மாவா
யழல்வணா நீயலையோ
உன்னை நினைந்தே கழியுமென்
னாவி கழிந்ததற்பின்
என்னை மறக்க பெறாயெம்
பிரானுன்னை வேண்டியதே
நின்னையெ போது நினையலொ
டாய்நீ நினையப்புகிற்
பின்னை போதே மறப்பித்து
பேர்த்தொன்று நாடுவித்தி
உன்னையெ போதும் மறந்தி
டுனக்கினி தாயிருக்கும்
என்னையொ பாருள ரோசொல்லு
வாழி இறையவனே
முழுத்தழல் மேனி தவள
பொடியன் கனகக்குன்ற
தெழிற்பெருஞ் சோதியை எங்கள்
பிரானை யிகழ்ந்திர்கண்டீர்
தொழப்படு தேவர் தொழப்படு
வானை தொழுதபின்னை
தொழப்படு தேவர்தம் மால்தொழு
விக்குந்தன் தொண்டரையே
விண்ணக தான்மிக்க வே
துளான்விரி நீருடுத்த
மண்ணக தான்திரு மாலக
தான்மரு வற்கினிய
பண்ணக தான்பத்தர் சி
துளான்பழ நாயடியேன்
கண்ணக தான்மன தான்சென்னி
யானெங் கறைக்கண்டனே
பெருங்கடல் மூடி பிரளயங்
கொண்டு பிரமனும்போய்
இருங்கடல் மூடி இறக்கும்
இறந்தான் களேபரமுங்
கருங்கடல் வண்ணன் களேபர
முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை
நல்வீணை வாசிக்குமே
வான துளங்கிலென் மண்கம்ப
மாகிலென் மால்வரையு
தான துளங்கி தலைதடு
மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர்
வீழிலென் வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனு
காட்பட்ட உத்தமர்க்கே
சிவனெனும் நா தனக்கே
யுடையசெம் மேனியெம்மான்
அவனெனை ஆட்கொண் டளித்திடு
மாகில் அவன்றனையான்
பவனெனு நாமம் பிடித்து
திரிந்துபன் னாளழைத்தால்
இவனெனை பன்னாள் அழைப்பொழி
யானென் றெதிர்ப்படுமே
என்னையொ பாருன்னை எங்ஙனம்
காண்பர் இகலியுன்னை
நின்னையொ பார்நின்னை காணும்
படித்தன்று நின்பெருமை
பொன்னையொ பாரி தழலை
வளாவிச்செம் மானஞ்செற்று
மின்னையொ பார மிளிருஞ்
சடைக்கற்றை வேதியனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

தனி திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பவள தடவரை போலுந்திண்
டோ ள்கள தோள்மிசையே
பவள குழைதழை தாலொக்கும்
பல்சடை அச்சடைமேற்
பவள கொழுந்தன்ன பைம்முக
நாக நாகத்தொடும்
பவளக்கண் வால மதியெந்தை
சூடும் பனிமலரே
முருகார் நறுமலர் இண்டை
தழுவிவண் டேமுரலும்
பெருகா றடைசடை கற்றையி
னாய்பிணி மேய்ந்திருந்த
இருகாற் குரம்பை யிதுநா
னுடைய திதுபிரிந்தாற்
தருவாய் எனக்குன் திருவடி
கீழோர் தலைமறைவே
மூவா உருவத்து முக்கண்
முதல்வமீ கூரிடும்பை
காவா யெனக்கடை தூங்கு
மணியைக்கை யாலமரர்
நாவா யசைத்த வொலியொலி
மாறிய தில்லையப்பாற்
தீயாய் எரிந்து பொடியா
கழிந்த திரிபுரமே
பந்தித்த பாவங்கள் அம்மையிற்
செய்தன இம்மைவந்து
சந்தித்த பின்னை சமழ்ப்பதென்
னேவ தமரர்முன்னாள்
முந்தி செழுமல ரிட்டு
முடிதாழ தடிவணங்கும்
நந்திக்கு முந்துற ஆட்செய்கி
லாவிட்ட நன்னெஞ்சமே
அந்திவ டத்திளங் கண்ணிய
னாறமர் செஞ்சடையான்
புந்திவ டத்திடை புக்குநின்
றானையும் பொய்யென்பனோ
சந்திவ டச்சடை கற்றை
யலம்ப சிறிதலர்ந்த
நந்திவ டத்தொடு கொன்றை
வளாவிய நம்பனையே
உன தகமலர் சூடி
உலக தொழச்சுடலை
பன தகங்கொண்டு பல்கடை
தோறும் பலிதிரிவான்
என தகத்தே இரவும்
பகலும் பிரிவரியான்
தன தகத்தோர் இளம்பிறை
சூடிய சங்கரனே
அரைப்பா லுடுப்பன கோவண
சின்னங்கள் ஐயமுணல்
வரைப்பாவை யைக்கொண்ட தெக்குடி
வாழ்க்கைக்கு வானிரைக்கும்
இரைப்பா படுதலை யேந்துகை
யாமறை தேடுமெந்தாய்
உரைப்பார் உரைப்பன வேசெய்தி
யாலெங்கள் உத்தமனே
துறக்க படாத உடலை
துறந்துவெ தூதுவரோ
டிறப்பன் இறந்தால் இருவிசும்
பேறுவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி
வார்சடை பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங்
கிடந்து மறுகிடுமே
வேரி வளாய விரைமலர
கொன்றை புனைந்தனகன்
சேரி வளாயவென் சிந்தை
புகுந்தான் திருமுடிமேல்
வாரி வளாய வருபுனற்
கங்கை சடைமறிவாய்
ஏரி வளாவி கிடந்தது
போலும் இளம்பிறையே
கன்னெடுங் காலம் வெதும்பி
கருங்கடல் நீர்சுருங்கி
பன்னெடுங் காலம் மழைதான்
மறுக்கினும் பஞ்சமுண்டென்
றென்னொடுஞ் சூளறும் அஞ்சல்நெஞ்
சேயிமை யாதமுக்கண்
பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண்
டீரி புகலிடத்தே
மேலு மறிந்திலன் நான்முகன்
மேற்சென்று கீழிடந்து
மாலு மறிந்திலன் மாலுற்ற
தேவழி பாடுசெய்யும்
பாலன் மிசைச்சென்று பாசம்
விசிறி மறிந்தசிந்தை
கால னறிந்தான் அறிதற்
கரியான் கழலடியே
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
நான்காம் திருமுறை முற்றும்