திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
இரண்டாம் திருமுறை முதல் பகுதி
உள்ளுறை
திருப்பூந்தராய் மின்பதிப்பு
திருவலஞ்சுழி மின்பதிப்பு
திருத்தெளிச்சேரி மின்பதிப்பு
திருவான்மியூர் மின்பதிப்பு
திருவனேகதங்காபதம் மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருவாஞ்சியம் மின்பதிப்பு
திருச்சிக்கல் மின்பதிப்பு
திருமழபாடி மின்பதிப்பு
திருமங்கலக்குடி மின்பதிப்பு
சீகாழி மின்பதிப்பு
திருவேகம்பம் மின்பதிப்பு
திருக்கோழம்பம் மின்பதிப்பு
திருவெண்ணியூர் மின்பதிப்பு
திருக்காறாயில் மின்பதிப்பு
திருமணஞ்சேரி மின்பதிப்பு
திருவேணுபுரம் மின்பதிப்பு
திருமருகல் மின்பதிப்பு
திருநெல்லிக்கா மின்பதிப்பு
திருஅழுந்தூர் மின்பதிப்பு
திருக்கழிப்பாலை மின்பதிப்பு
திருக்குடவாயில் மின்பதிப்பு
திருவானைக்கா மின்பதிப்பு
திருநாகேச்சரம் மின்பதிப்பு
திருப்புகலி மின்பதிப்பு
திருநெல்வாயில் மின்பதிப்பு
திருஇந்திரநீலப்பருப்பதம் மின்பதிப்பு
திருக்கருவூரானிலை மின்பதிப்பு
திருப்புகலி மின்பதிப்பு
திருப்புறம்பயம் மின்பதிப்பு
திருக்கருப்பறியலூர் மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருநள்ளாறு மின்பதிப்பு
திருப்பழுவூர் மின்பதிப்பு
திருக்குரங்காடுதுறை மின்பதிப்பு
திருஇரும்பூளை மின்பதிப்பு
திருமறைக்காடு மின்பதிப்பு
திருச்சாய்க்காடு மின்பதிப்பு
திருக்ஷேத்திரக்கோவை மின்பதிப்பு
திருப்பிரமபுரம் மின்பதிப்பு
திருச்சாய்க்காடு மின்பதிப்பு
திருஆக்கூர் மின்பதிப்பு
திருப்புள்ளிருக்குவேளூர் மின்பதிப்பு
திருஆமாத்தூர் மின்பதிப்பு
திருக்கைச்சினம் மின்பதிப்பு
திருநாலூர்த்திருமயானம் மின்பதிப்பு
திருமயிலாப்பூர் மின்பதிப்பு
திருவெண்காடு மின்பதிப்பு
சீகாழி மின்பதிப்பு
திருஆமாத்தூர் மின்பதிப்பு
திருக்களர் மின்பதிப்பு
திருக்கோட்டாறு மின்பதிப்பு
திருப்புறவார் மின்பதிப்பு
திருப்புகலி மின்பதிப்பு
திருத்தலைச்சங்காடு மின்பதிப்பு
திருவிடைமருதூர் மின்பதிப்பு
திருநல்லூர் மின்பதிப்பு
திருக்குடவாயில் மின்பதிப்பு
சீகாழி மின்பதிப்பு
திருப்பாசூர் மின்பதிப்பு

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
இரண்டாம் திருமுறை முதல் பகுதி
திருப்பூந்தராய்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தரா
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே
எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்
பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தரா
சுற்றி நல்லிமை யோர்தொழு பொன்கழ லீர்சொலீர்
பெற்ற மேறுதல் பெற்றிமை யோபெரு மானிரே
சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு
பொங்கு தெண்டிரை வந்தலை கும்புனற் பூந்தரா
துங்க மால்களிற் றின்னுரி போர்த்துக தீர்சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே
சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தரா
சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்
காமன் வெண்பொடி யா கடைக்கண் சிவந்ததே
பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன
புள்ளும் நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தரா
துள்ளும் மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்
வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே
மாதி லங்கிய மங்கைய ராடம ருங்கெலாம்
போதி லங்கம லமது வார்புனற் பூந்தரா
சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்
காதி லங்குழை சங்கவெண் தோடுடன் வைத்ததே
இப்பதிகத்தில் ம் செய்யுள் மறைந்து போயிற்று
வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தரா
துரக்கும் மால்விடைமேல்வரு வீரடி கேள்சொலீர்
அரக்க னாற்றல் அழித்தரு ளாக்கிய ஆக்கமே
வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்
புரிசை நீடுயர் மாடம் நிலாவிய பூந்தரா
சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
கரிய மாலயன் நேடியு மைக்கண் டிலாமையே
வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்
புண்ட ரீகம லர்ந்து மதுத்தரு பூந்தரா
தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே
மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வா
புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தரா
பகவ னாரை பரவுசொல் மாலைப தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவலஞ்சுழி
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழி
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே
பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும்
வாரல் வெண்டிரை வாயிரை தேரும் வலஞ்சுழி
மூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர்
ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே
கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரை தாதளாய்
வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி
சுண்ண வெண்பொடி கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்
விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே
கோடெ லாம்நிறை யக்குவ ளைம்மல ருங்குழி
மாடெ லாம்மலி நீர்மண நாறும் வலஞ்சுழி
சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்
நாடெ லாமறி யத்தலை யின்னற வேற்றதே
கொல்லை வென்றபுன திற்குரு மாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி
முல்லை வெண்முறு வல்நகை யாளொளி யீர்சொலீர்
சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே
பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே
கந்த மாமலர சந்தொடு காரகி லுந்தழீஇ
வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
அந்த நீர்முதல் நீர்நடு வாமடி கேள்சொலீர்
பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே
தேனுற் றநறு மாமலர சோலையில் வண்டினம்
வானுற் றநசை யாலிசை பாடும் வலஞ்சுழி
கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்
ஊனுற் றதலை கொண்டுல கொக்க வுழன்றதே
தீர்த்த நீர்வ திழிபுனற் பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை யன்றடர தீர்சொலீர்
சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே
உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்
வரம னும்பெற லாவதும் எந்தை வலஞ்சுழி
பிரம னுந்திரு மாலும் அளப்பரி யீர்சொலீர்
சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே
வீடு ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
வாடி ஞானமென் னாவதும் எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை
பாடு ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் காப்பகத்தீசுவரர் தேவியார் மங்களநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருத்தெளிச்சேரி
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பூவ லர்ந்தன கொண்டுமு போதுமும் பொற்கழல்
தேவர் வந்து வணங்கு மிகுதெளி சேரியீர்
மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம்
பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவ ரேத்தவே
திளைக்கு தீர்த்த மறாத திகழ்தெளி சேரியீர்
வளைக்கு திண்சிலை மேலைந்து பாணமு தானெய்து
களிக்குங் காமனை யெங்ஙனம் நீர்கண்ணிற் காய்ந்ததே
வம்ப டுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ்
செம்ப டுத்த செழும்புரி சைத்தெளி சேரியீர்
கொம்ப டுத்ததொர் கோல விடைமிசை கூர்மையோ
டம்ப டுத்தகண் ணாளொடு மேவல் அழகிதே
காரு லாங்கட லிப்பிகள் முத்தங் கரைப்பெயு
தேரு லாநெடு வீதிய தார்தெளி சேரியீர்
ஏரு லாம்பலி கேகிட வைப்பிட மின்றியே
வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே
பக்க நுந்தமை பார்ப்பதி யேத்திமுன் பாவிக்குஞ்
செக்கர் மாமதி சேர்மதில் சூழ்தெளி சேரியீர்
மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவே
நக்க ராயுல கெங்கும் பலிக்கு நடப்பதே
தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநற்
றிவள மாமணி மாட திகழ்தெளி சேரியீர்
குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால்கரி யெங்ஙனம் நீர்கையிற் காய்ந்ததே
கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடுஞ்
சேட டுத்த தொழிலின் மிகுதெளி சேரியீர்
மாட டுத்த மலர்க்கண்ணி னாள்கங்கை நங்கையை
தோட டுத்த மலர்ச்சடை யென்கொல்நீர் சூடிற்றே
கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர்
சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளி சேரியீர்
வித்த கப்படை வல்ல அரக்கன் விறற்றலை
பத்தி ரட்டி கரம்நெரி திட்டதும் பாதமே
காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ்
சேல டுத்த வயற்பழ னத்தெளி சேரியீர்
மால டித்தல மாமல ரான்முடி தேடியே
ஓல மிட்டிட எங்ஙன மோருரு கொண்டதே
மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர்
செந்தி லங்கு மொழியவர் சேர்தெளி சேரியீர்
வெந்த லாகிய சாக்கிய ரோடு சமணர்கள்
தந்தி றத்தன நீக்குவி தீரோர் சதிரரே
திக்கு லாம்பொழில் சூழ்தெளி சேரியெஞ் செல்வனை
மிக்க காழியுள் ஞானசம் பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடி
தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பார்வதீசுவரர் தேவியார் சத்தியம்மாளம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவான்மியூர்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
உரையெ லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே
சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதஞ்
சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர
சுந்த ரக்கழல் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்
அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே
கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புற
தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர
தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்
ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே
மஞ்சு லாவிய மாட மதிற்பொலி மாளிகை
செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்
துஞ்சு வஞ்சிரு ளாடலு கக்கவல் லீர்சொலீர்
வஞ்ச நஞ்சுண்டு வானவர கின்னருள் வைத்ததே
மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்
திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர
துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்
விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே
போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புற
தீதி லந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மியூர
சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்
மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே
வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வா
தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர
தொண்டி ரைத்தெழு தேத்திய தொல்கழ லீர்சொலீர்
பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே
தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திற
திக்கில் வந்தல றவ்வடர தீர்திரு வான்மியூர
தொக்க மாதொடும் வீற்றிரு தீரரு ளென்சொலீர்
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே
பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்
திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்
சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர்
எருது மேல்கொ டுழன் றுக தில்பலி யேற்றதே
மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினஞ்
செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்
மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்
கைத வச்சமண் சாக்கியர் கட்டுரை கின்றதே
மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்
ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை
ஓதி யன்றெழு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
நீதி யால்நினை வார்நெடு வானுல காள்வரே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மருந்தீசுவரர் தேவியார் சுந்தரமாது அல்லது சொக்கநாயகி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவனேகதங்காபதம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
நீடல் மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளை
சூடல் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங் காவதம்
பாடல் மேவுமன தார்வினை பற்றறு பார்களே
சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்
ஆல முண்டபெரு மான்றன் அனேகதங் காவதம்
நீல முண்டதடங் கண்ணுமை பாகம் நிலாயதோர்
கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே
செம்பி னாருமதில் மூன்றெரி யச்சின வாயதோர்
அம்பி னாலெய்தருள் வில்லி யனேகதங் காவதங்
கொம்பின் நேரிடை யாளொடுங் கூடிக்கொல் லேறுடை
நம்பன் நாமநவி லாதன நாவென லாகுமே
தந திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோ
சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார்
அந்த மில்லவள வில்ல அனேகதங் காவதம்
எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே
பிறையு மாசில்கதி ரோனறி யாமை பெயர்ந்துபோய்
உறையுங் கோயில்பசும் பொன்னணி யாரசும் பார்புனல்
அறையும் ஓசைபறை போலும் அனேகதங் காவதம்
இறையெம் மீசனெம் மானிட மாகவு கந்ததே
தேனை யேறுநறு மாமலர் கொண்டடி சேர்த்துவீர்
ஆனை யேறுமணி சாரல் அனேகதங் காவதம்
வானை யேறுநெறி சென்றுண ருந்தனை வல்லிரேல்
ஆனை யேறுமுடி யானருள் செய்வதும் வானையே
வெருவி வேழம்இரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங்
குருவி வீழவயி ரங்கொழி யாவகி லுந்திவெள்
ளருவி பாயுமணி சாரல் அனேகதங் காவதம்
மருவி வாழும்பெரு மான்கழல் சேர்வது வாய்மையே
ஈர மேதுமில னாகி யெழுந்த இராவணன்
வீர மேதுமில னாக விளைத்த விலங்கலான்
ஆரம் பாம்பதணி வான்றன் அனேகதங் காவதம்
வார மாகிநினை வார்வினை யாயின மாயுமே
கண்ணன் வண்ணமல ரானொடுங் கூடியோர கையமாய்
எண்ணும் வண்ணமறி யாமையெ ழுந்ததோ ராரழல்
அண்ணல் நண்ணுமணி சாரல் அனேகதங் காவதம்
நண்ணும் வண்ணமுடை யார்வினை யாயின நாசமே
மாப தம்மறி யாதவர் சாவகர் சாக்கியர்
ஏப தம்பட நின்றிறு மாந்துழல் வார்கள்தாம்
ஆப தம்மறி வீருளி ராகில் அனேகதங்
காப தம்மமர தான்கழல் சேர்தல் கருமமே
தொல்லை யூழிப்பெயர் தோன்றிய தோணி புரத்திறை
நல்ல கேள்வித்தமிழ் ஞானசம் பந்தன்நல் லார்கள்முன்
அல்லல் தீரவுரை செய்த அனேகதங் காவதஞ்
சொல்ல நல்லஅடை யும்மடை யாசுடு துன்பமே
இத்தலம் வடதேசத்திலுள்ளது
சுவாமிபெயர் அருள்மன்னர் தேவியார் மனோன்மணியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர்
ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடு மொருவனார்
பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே
ஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே
தன்மை யாரும் அறிவாரில்லை தாம்பிறர் எள்கவே
பின்னு முன்னுஞ் சிலபே கணஞ்சூழ திரிதர்வர்
துன்ன ஆடை யுடுப்பர் சுடலைப்பொடி பூசுவர்
அன்னம் ஆலு துறையானும் ஐயாறுடை ஐயனே
கூறு பெண்ணுடை கோவணம் உண்பதும் வெண்டலை
மாறி லாருங்கொள் வாரிலை மார்பி லணிகலம்
ஏறும் ஏறி திரிவரிமை யோர்தொழு தேத்தவே
ஆறும் நான்குஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே
பண்ணின் நல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார்
எண்ணின் நல்லகுண தாரிணை வேல்வென்ற கண்ணினார்
வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டுக தானும் ஐயாறுடை ஐயனே
வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே
வானை யூடறு கும்மதி சூடிய மைந்தனார்
தேன்நெய் பால்தயிர் தெங்கிள நீர்கரும் பின்தெளி
ஆனஞ் சாடும் முடியானும் ஐயாறுடை ஐயனே
எங்கு மாகி நின்றானும் இயல்பறி யப்படா
மங்கை பாகங் கொண்டானும் மதிசூடு மைந்தனும்
பங்க மில்பதி னெட்டொடு நான்கு குணர்வுமாய்
அங்க மாறுஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே
ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாஞ்
சோதி யாய்நிறை தான்சுடர சோதியு சோதியான்
வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய்
ஆதி யாகி நின்றானும் ஐயாறுடை ஐயனே
குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி பாடுசெய்
விரவு நீறணி வார்சில தொண்டர் வியப்பவே
பரவி நாடொறும் பாடநம் பாவம் பறைதலால்
அரவ மார்த்துக தானும் ஐயாறுடை ஐயனே
உரைசெய் தொல்வழி செய்தறி யாஇலங் கைக்குமன்
வரைசெய் தோளடர தும்மதி சூடிய மைந்தனார்
கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான்
அரைசெய் மேகலை யானும் ஐயாறுடை ஐயனே
மாலுஞ் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான்
காலங் காம்பு வயிரங் கடிகையன் பொற்கழல்
கோல மாய்க்கொழு தீன்று பவள திரண்டதோர்
ஆல நீழ லுளானும் ஐயாறுடை ஐயனே
கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையால்
மெய்யை போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யல
மைகொள் கண்ட தெண்டோ ள்மு கணான்கழல் வாழ்த்தவே
தேர்ந்தளி பானும்ஐ யாறுடை ஐயனே
பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயஐ யாற்றினை
கலிக டிந்தகை யான்கடல் காழியர் காவலன்
ஒலிகொள் சம்பந்தன் ஒண்டமிழ் பத்தும்வல் லார்கள்போய்
மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு வார்களே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாஞ்சியம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே
கால காலர்கரி கானிடை மாநட மாடுவர்
மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர்
மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம்
ஞாலம் வந்துபணி யப்பொலி கோயில் நயந்ததே
மேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய்
நாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்
தேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
பாவ தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே
சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே
சால நல்லபொடி பூசுவர் பேசுவர் மாமறை
சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம்
ஆல முண்டவடி கள்ளிட மாக அமர்ந்ததே
கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல்
தையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர்
செய்ய மேனிக்கரி யம்மிடற் றார்திரு வாஞ்சி
தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே
அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும்
இரவில் நல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே
பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்
மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே
விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே
கண்ணி னாலனங் கன்னுட லம்பொடி யாக்கினார்
பண்ணி லானஇசை பாடல்மல் குந்திரு வாஞ்சி
தண்ண லார்தம்அடி போற்றவல் லார்க்கில்லை அல்லலே
மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்
வாடி யூடவரை யாலடர தன்றருள் செய்தவர்
வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரை
பாட நீடுமன தார்வினை பற்றறு பார்களே
செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை
கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்
நெடிய மாலொடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சி
தடிகள் பாதமடை தாரடி யாரடி யார்கட்கே
பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார்
மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை
வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சி
தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை அல்லலே
தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சி
தென்று நின்றஇறை யானையு ணர்ந்தடி யேத்தலால்
நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்
ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வாஞ்சியநாதர் தேவியார் வாழவந்தநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சிக்கல்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
வானுலா வுமதி வந்துல வும்மதின் மாளிகை
தேனுலா வுமலர சோலைமல் குந்திகழ் சிக்கலுள்
வேனல்வே ளைவிழி திட்டவெண் ணெய்ப்பெரு மானடி
ஞானமா கநினை வார்வினை யாயின நையுமே
மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர பொய்கைசூழ்
திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே
அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே
நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய
சேலு மாலுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள்
வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்
பால வண்ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே
கந்தமு தக்கைதை பூத்துக்க மழ்ந்துசே ரும்பொழிற்
செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்
வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்
சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே
மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு
தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்
வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே
தங்கு மேற்சர தந்திரு நாளுந்த கையுமே
வண்டிரை தும்மது விம்மிய மாமலர பொய்கைசூழ்
தெண்டிரை கொள்புனல் வந்தொழுகும் வயற் சிக்கலுள்
விண்டிரை தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப்பி ரானடி
கண்டிரை தும்மன மேமதி யாய்கதி யாகவே
முன்னுமா டம்மதில் மூன்றுட னேயெரி யாய்விழ
துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான்
செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை ஓயவே
தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவே
செற்ற தேவன்நஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை வாய்வினை யாயின ஓயவே
மாலி னோடரு மாமறை வல்ல முனிவனுங்
கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியுஞ்
சீல தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான்
பாலும் பன்மலர் தூவ பறையும்நம் பாவமே
பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலா
கட்ட மண்கழு கள்சொல்லி னைக்கரு தாதுநீர்
சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறை
பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே
கந்த மார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்நல்
செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
சந்தமா சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை
வெந்த நீறணி யும்பெரு மானடி மேவரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் நவநீதநாதர் தேவியார் வேனெடுங்கண்ணியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமழபாடி
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
களையும் வல்வினை யஞ்சல்நெஞ் சேகரு தார்புரம்
உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மது தும்பிவண்
டளையுங் கொன்றை தார்மழ பாடியுள் அண்ணலே
காச்சி லாதபொன் நோக்குங் கனவயி ரத்திரள்
ஆச்சி லாதப ளிங்கினன் அஞ்சுமுன் ஆடினான்
பேச்சி னாலு காவதென் பேதைகாள் பேணுமின்
வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே
உரங்கெ டுப்பவன் உம்பர்க ளாயவர் தங்களை
பரங்கெ டுப்பவன் நஞ்சையுண் டுபக லோன்றனை
முரண்கெ டுப்பவன் முப்புர தீயெழ செற்றுமுன்
வரங்கொ டுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே
பள்ள மார்சடை யிற்புடை யேயடை யப்புனல்
வெள்ளம் ஆதரி தான்விடை யேறிய வேதியன்
வள்ளல் மாமழ பாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரி மின்வினை யாயின ஓயவே
தேனு லாமலர் கொண்டுமெ தேவர்கள் சித்தர்கள்
பால்நெய் அஞ்சுடன் ஆட்டமுன் ஆடிய பால்வணன்
வான நாடர்கள் கைதொழு மாமழ பாடியெங்
கோனை நாடொறுங் கும்பிட வேகுறி கூடுமே
தெரிந்த வன்புரம் மூன்றுடன் மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான்
வரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியை
புரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே
சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை
எந்தை யான்இமை யாதமு கண்ணினன் எம்பிரான்
மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினை
சிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே
இரக்க மொன்றுமி லான்இறை யான்திரு மாமலை
உரக்கை யாலெடு தான்றன தொண்முடி பத்திற
விரற்ற லைந்நிறு வியுமை யாளொடு மேயவன்
வரத்தை யேகொடு கும்மழ பாடியுள் வள்ளலே
ஆலம் உண்டமு தம்மம ரர்க்கருள் அண்ணலார்
காலன் ஆருயிர் வீட்டிய மாமணி கண்டனார்
சால நல்லடி யார்தவ தார்களுஞ் சார்விடம்
மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே
கலியின் வல்லம ணுங்கருஞ் சாக்கி பேய்களும்
நலியும் நாள்கெடு தாண்டஎன் நாதனார் வாழ்பதி
பலியும் பாட்டொடு பண்முழ வும்பல வோசையும்
மலியும் மாமழ பாடியை வாழ்த்தி வணங்குமே
மலியு மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலை
கலிசெய் மாமதில் சூழ்கடற் காழி கவுணியன்
ஒலிசெய் பாடல்கள் பத்திவை வல்லார்உலகத்திலே
இப்பதிகத்தின் ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைவுற்றன
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வச்சிரத்தம்பேசுவரர் தேவியார் அழகாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமங்கலக்குடி
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி வடமங்க லக்குடி
நீரின் மாமுனி வன்நெடுங் கைகொடு நீர்தனை
பூரி தாட்டியர சிக்கஇ ருந்த புராணனே
பணங்கொ ளாடர வல்குல்நல் லார்பயின் றேத்தவே
மணங்கொள் மாமயி லாலும்பொ ழில்மங்க லக்குடி
இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட
அணங்கி னோடிரு தானடி யேசர ணாகுமே
கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்
மருங்கெ லாம்மண மார்பொழில் சூழ்மங்க லக்குடி
அரும்பு சேர்மலர கொன்றையி னானடி யன்பொடு
விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே
பறையி னோடொலி பாடலும் ஆடலும் பாரிடம்
மறையி னோடியல் மல்கிடு வார்மங்க லக்குடி
குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று
முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே
ஆனி லங்கிளர் ஐந்தும் அவிர்முடி யாடியோர்
மானி லங்கையி னான்மண மார்மங்க லக்குடி
ஊனில் வெண்டலை கையுடை யானுயர் பாதமே
ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே
தேனு மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள்
வானு மாய்மதி சூடவல் லான்மங்க லக்குடி
கோனை நாடொறும் ஏத்தி குணங்கொடு கூறுவார்
ஊன மானவை போயறும் உய்யும் வகையதே
வேள் படுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே
வாள ரக்கர் புரமெரி தான்மங்க லக்குடி
ஆளு மாதி பிரானடி கள்ளடை தேத்தவே
கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே
பொலியும் மால்வரை புக்கெடு தான்புகழ தேத்திட
வலியும் வாளொடு நாள்கொடு தான்மங்க லக்குடி
புலியின் ஆடையி னானடி யேத்திடும் புண்ணியர்
மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே
ஞாலம் முன்படை தான்நளிர் மாமலர் மேலயன்
மாலுங் காணவொ ணாஎரி யான்மங்க லக்குடி
ஏல வார்குழ லாளொரு பாகமி டங்கொடு
கோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே
மெய்யின் மாசினர் மேனி விரிதுவ ராடையர்
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங்க லக்குடி
செய்ய மேனி செழும்புனற் கங்கைசெ றிசடை
ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே
மந்த மாம்பொழில் சூழ்மங்க லக்குடி மன்னிய
எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன்
சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல்
முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் புராணவரதேசுவரர் தேவியார் மங்களநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

சீகாழி
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்
வல்லானை வல்லவர் பான்மலி தோங்கிய
சொல்லானை தொன்மதிற் காழியே கோயிலாம்
இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே
நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்ற
பெம்மானை பேயுடன் ஆடல் புரிந்தானை
அம்மானை அந்தணர் சேரு மணிகாழி
எம்மானை ஏத்தவல் லார்க்கிட ரில்லையே
அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால்
பொருந்தானை பொய்யடி மைத்தொழில் செய்வாருள்
விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி
இருந்தானை யேத்துமின் நும்வினை யேகவே
புற்றானை புற்றர வம்மரை யின்மிசை
சுற்றானை தொண்டுசெய் வாரவர் தம்மொடும்
அற்றானை அந்தணர் காழி யமர்கோயில்
பற்றானை பற்றிநின் றார்க்கில்லை பாவமே
நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம்
விதியானை விண்ணவர் தாம்வி தேத்திய
கதியானை காருல வும்பொழிற் காழியாம்
பதியானை பாடுமின் நும்வினை பாறவே
செப்பான மென்முலை யாளை திகழ்மேனி
வைப்பானை வார்கழ லேத்தி நினைவார்தம்
ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழி
மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே
துன்பானை துன்பம் அழித்தரு ளாக்கிய
இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்
அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய
நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே
குன்றானை குன்றெடு தான்புயம் நாலைந்தும்
வென்றானை மென்மல ரானொடு மால்தேட
நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்
நன்றானை நம்பெரு மானை நணுகுமே
இப்பதிகத்தில் ம் செய்யுள் மறைந்து போயிற்று
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்
பூவாய கொன்றையி னானை புனற்காழி
கோவாய கொள்கையி னாணடி கூறுமே
கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள்
ஒழியாது கோயில்கொண் டானை யுகந்துள்கி
தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழார
மொழிவார்கள் மூவுல கும்பெறு வார்களே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவேகம்பம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
மறையானை மாசிலா புன்சடை மல்குவெண்
பிறையானை பெண்ணொடா ணாகிய பெம்மானை
இறையானை யேர்கொள்க சித்திரு வேகம்ப
துறைவானை யல்லதுள் காதென துள்ளமே
நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்
உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான்
கச்சியே கம்பம்மே யகறை கண்டனை
நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே
பாராரு முழவமொ தைகுழல் யாழொலி
சீராலே பாடலா டல்சிதை வில்லதோர்
ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானை
சேராதார் இன்பமா யந்நெறி சேராரே
குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய்
மின்றேய்க்கு முகில்கள்தோ யும்வியன் கச்சியுள்
மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பஞ்
சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே
சடையானை தலைகையே திப்பலி தருவார்தங்
கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலி கச்சியுள்
புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம்
உடையானை யல்லதுள் காதென துள்ளமே
மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்
கெழுவாளோ ரிமையாரு சியுமை யாள்கங்கை
வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்ப
தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே
விண்ணுளார் மறைகள்வே தம்விரி தோதுவார்
கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை
நண்ணுவா ரெழில்கொள்க சிநக ரேகம்ப
தண்ணலா ராடுகின் றவலங் காரமே
தூயானை தூயவா யம்மறை யோதிய
வாயானை வாளர கன்வலி வாட்டிய
தீயானை தீதில்க சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா ரென்றலை மேலாரே
நாகம்பூண் ஏறதே றல்நறுங் கொன்றைதார்
பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர்
ஏகம்பம் மேவியா டுமிறை யிருவர்க்கும்
மாகம்பம் அறியும்வண் ணத்தவ னல்லனே
போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை
வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்
ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே
அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானை
கந்தண்பூங் காழியூ ரன்கலி கோவையால்
சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம்
பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கோழம்பம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்
ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர்
கூற்றானை குளிர்பொழிற் கோழம்பம் மேவிய
ஏற்றானை யேத்துமின் நும்மிடர் ஏகவே
மையான கண்டனை மான்மறி யேந்திய
கையானை கடிபொழிற் கோழம்பம் மேவிய
செய்யானை தேன்நெய்பா லுந்திகழ தாடிய
மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே
ஏதனை யேதமி லாஇமை யோர்தொழும்
வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய
காதனை கடிபொழிற் கோழம்பம் மேவிய
நாதனை யேத்துமின் நும்வினை நையவே
சடையானை தண்மல ரான்சிர மேந்திய
விடையானை வேதமும் வேள்வியு மாயநன்
குடையானை குளிர்பொழில் சூழ்திரு கோழம்பம்
உடையானை உள்குமின் உள்ளங்கு ளிரவே
காரானை கடிகமழ் கொன்றையம் போதணி
தாரானை தையலோர்பால்மகிழ தோங்கிய
சீரானை செறிபொழிற் கோழம்பம் மேவிய
ஊரானை யேத்துமின் நும்மிடர் ஒல்கவே
பண்டாலின் நீழலா னைப்பரஞ் சோதியை
விண்டார்கள் தம்புரம் மூன்றுட னேவேவ
கண்டானை கடிகமழ் கோழம்பங் கோயிலா
கொண்டானை கூறுமின் உள்ளங் குளிரவே
சொல்லானை சுடுகணை யாற்புரம் மூன்றெய்த
வில்லானை வேதமும் வேள்வியு மானானை
கொல்லானை உரியானை கோழம்பம் மேவிய
நல்லானை யேத்துமின் நும்மிடர் நையவே
விற்றானை வல்லர கர்விறல் வேந்தனை
குற்றானை திருவிர லாற்கொடுங் காலனை
செற்றானை சீர்திக ழுந்திரு கோழம்பம்
பற்றானை பற்றுவார் மேல்வினை பற்றாவே
நெடியானோ டயனறி யாவகை நின்றதோர்
படியானை பண்டரங்க வேடம்ப யின்றானை
கடியாருங் கோழம்பம் மேவிய வெள்ளேற்றின்
கொடியானை கூறுமின் உள்ளங் குளிரவே
புத்தரு தோகையம் பீலிகொள் பொய்ம்மொழி
பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடை
கொத்தலர் தண்பொழிற் கோழம்பம் மேவிய
அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே
தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர்
நண்புடை ஞானசம் பந்தன்நம் பானுறை
விண்பொழிற் கோழம்பம் மேவிய பத்திவை
பண்கொள பாடவல் லார்க்கில்லை பாவமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கோகுலேசுவரர் தேவியார் சவுந்தரியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவெண்ணியூர்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
சடையானை சந்திர னோடுசெங் கண்ணரா
உடையானை உடைதலை யிற்பலி கொண்டூரும்
விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை
உடையானை யல்லதுள் காதென துள்ளமே
சோதியை சுண்ணவெண் ணீறணி திட்டவெம்
ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத
வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே
கனிதனை கனிந்தவ ரைக்கல தாட்கொள்ளும்
முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை
நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே
மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியா
காத்தானை கனிந்தவ ரைக்கல தாளாக
ஆர்த்தானை அழகமர் வெண்ணியம் மான்றன்னை
ஏத்தாதா ரென்செய்வார் ஏழை பேய்களே
நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றை
தாரானை தையலோர் பாகமு டையானை
சீரானை திகழ்தரு வெண்ணிய மர்ந்துறை
ஊரானை உள்கவல் லார்வினை யோயுமே
முத்தினை முழுவயி ரத்திரள் மாணிக்க
தொத்தினை துளக்கமில் லாதவி ளக்காய
வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அத்தனை யடையவல் லார்க்கில்லை அல்லலே
காய்ந்தானை காமனை யுஞ்செறு காலனை
பாய்ந்தானை பரியகைம் மாவுரி தோன்மெய்யின்
மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே
மறுத்தானை மாமலை யைமதி யாதோடி
செறுத்தானை தேசழி யத்திகழ் தோள்முடி
இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானென
பொறுத்தானை போற்றுவா ராற்ற லுடையாரே
மண்ணினை வானவ ரோடுமனி தர்க்குங்
கண்ணினை கண்ணனும் நான்முகனுங் காணா
விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அண்ணலை அடையவல் லார்க்கில்லை அல்லலே
குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய
மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்மின்
விண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில்
தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே
மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன்
திருவாரு திகழ்தரு வெண்ணி யமர்ந்தானை
உருவாரும் ஒண்டமிழ் மாலை யிவைவல்லார்
பொருவாக புக்கிரு பார்புவ லோகத்தே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வெண்ணிநாயகர் தேவியார் அழகியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்காறாயில்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றை
தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ்
சீரானே சீர்திக ழுந்திரு காறாயில் ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே
மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்
விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்
நெதியானே நீர்வயல் சூழ்திரு காறாயிற்
பதியானே யென்பவர் பாவமி லாதாரே
விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர்
மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாங்
கண்ணானே கடிபொழில் சூழ்திரு காறாயில்
எண்ணானே யென்பவர் ஏதமி லாதாரே
தாயானே தந்தையு மாகிய தன்மைகள்
ஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானே
சேயானே சீர்திக ழுந்திரு காறாயில்
மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே
கலையானே கலைமலி செம்பொற் கயிலாய
மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த
சிலையானே சீர்திக ழுந்திரு காறாயில்
நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே
ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடர
வேற்றானே ஏழுல கும்மிமை யோர்களும்
போற்றானே பொழில்திக ழுந்திரு காறாயில்
நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே
சேர்த்தானே தீவினை தேய்ந்தற தேவர்கள்
ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்
காத்தானே கார்வயல் சூழ்திரு காறாயில்
ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே
கடுத்தானே காலனை காலாற் கயிலாயம்
எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்
கெடுத்தானே கேழ்கிள ருந்திரு காறாயில்
அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே
பிறையானே பேணிய பாடலோ டின்னிசை
மறையானே மாலொடு நான்முகன் காணாத
இறையானே யெழில்திக ழுந்திரு காறாயில்
உறைவானே யென்பவர் மேல்வினை ஓடுமே
செடியாரும் புன்சமண் சீவர தார்களும்
படியாரும் பாவிகள் பேச்சு பயனில்லை
கடியாரும் பூம்பொழில் சூழ்திரு காறாயில்
குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே
ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திரு காறாயில்
ஆய்ந்தசீ ரானடி யேத்தி யருள்பெற்ற
பாய்ந்தநீர காழியுள் ஞானசம் பந்தன்சொல்
வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கண்ணாயிரநாதர் தேவியார் கயிலாயநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமணஞ்சேரி
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரும் மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரி
பயில்வானை பற்றிநின் றார்க்கில்லை பாவமே
விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரி
பதியானை பாடவல் லார்வினை பாறுமே
எய்ப்பானார கின்புறு தேனளி தூறிய
இப்பாலா யெனையும் ஆள வுரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே
விடையானை மேலுல கேழுமி பாரெலாம்
உடையானை ஊழிதோ றூழி உளதாய
படையானை பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே
எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம்
வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை
மறியாருங் கையுடை யானை மணஞ்சேரி
செறிவானை செப்பவல் லார்க்கிடர் சேராவே
மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்
பழியாமை பண்ணிசை யான பகர்வானை
வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி
இழியாமை யேத்தவல் லார்க்கெய்தும் இன்பமே
எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்கு
கண்ணானை கண்ணொரு மூன்று முடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பெண்ணானை பேசநின் றார்பெரி யோர்களே
எடுத்தானை யெழில்முடி யெட்டும் இரண்டுந்தோள்
கெடுத்தானை கேடிலா செம்மை யுடையானை
மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி
பிடித்தார பேணவல் லார்பெரியோர்களே
சொல்லானை தோற்றங்கண் டானும் நெடுமாலுங்
கல்லானை கற்றன சொல்லி தொழுதோங்க
வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி
எல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே
சற்றேயு தாமறி வில்சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர் செம்மை உடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே
கண்ணாருங் காழியர் கோன்கரு தார்வித்த
தண்ணார்சீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை
மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணார பாடவல் லார்க்கில்லை பாவமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மணவாளநாயகர் தேவியார் யாழ்மொழியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவேணுபுரம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
நிலவும் புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார கிடமாம் எழிலார்
உலவும் வயலு கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே
அரவார் கரவன் அமையார் திரள்தோள்
குரவார் குழலா ளொருகூ றனிடங்
கரவா தகொடை கலந்தா ரவர்க்கு
விரவா கவல்லார் வேணு புரமே
ஆகம் மழகா யவள்தான் வெருவ
நாகம் உரிபோர தவனண் ணுமிடம்
போக தருசீர் வயல்சூழ் பொழில்கள்
மேக தவழும் வேணு புரமே

காச கடலில் விடமுண் டகண்ட
தீசர கிடமா வதுஇன் னறவ
வாச கமல தனம்வன் றிரைகள்
வீச துயிலும் வேணு புரமே
அரையார் கலைசேர் அனமென் னடையை
உரையா வுகந்தா னுறையும் இடமாம்
நிரையார் கமுகின் நிகழ்பா ளையுடை
விரையார் பொழில்சூழ் வேணு புரமே
ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்
தளிருஞ் சடைமே லுடையா னிடமாம்
நளிரும் புனலின் னலசெங் கயல்கள்
மிளிரும் வயல்சூழ் வேணு புரமே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
ஏவும் படைவே தன்இரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமா
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே
கண்ணன் கடிமா மலரிற் றிகழும்
அண்ணல் இருவர் அறியா இறையூர்
வண்ண சுதைமா ளிகைமேற் கொடிகள்
விண்ணிற் றிகழும் வேணு புரமே
போகம் மறியார் துவர்போர துழல்வார்
ஆகம் மறியா அடியார் இறையூர்
மூகம் மறிவார் கலைமு தமிழ்நூல்
மீகம் மறிவார் வேணு புரமே
கலமார் கடல்போல் வளமார் தருநற்
புலமார் தருவே ணுபுர திறையை
நலமார் தருஞா னசம்ப தன்சொன்ன
குலமார் தமிழ்கூ றுவர்கூர் மையரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமருகல் விடந்தீர்த்ததிருப்பதிகம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
சடையா யெனுமால் சரண்நீ
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே
சிந்தா யெனுமால் சிவனே
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே
அறையார் கழலும் மழல்வா யரவும்
பிறையார் சடையும் முடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே
ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளா கவும்வேண் டினையே
துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்ட முடையாய் மருகல்
கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வா கினையே
பலரும் பரவ படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலரு தனையு துயிலாள் புடைபோ
தலரும் படுமோ அடியா ளிவளே
வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகல் பெருமான்
தொழுவா ளிவளை துயரா கினையே
இலங்கை கிறைவன் விலங்க லெடுப்ப
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் லிவளை அலரா கினையே
எரியார் சடையும் மடியும் மிருவர்
தெரியா ததோர்தீ திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வா கினையே
அறிவில் சமணும் மலர்சா கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியே துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீ கினையே
வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர தடியுள் குதலால்
இயன்ஞா னசம்ப தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநெல்லிக்கா
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
அறத்தா லுயிர்கா வலமர தருளி
மறத்தால் மதில்மூன் றுடன்மாண் பழித்த
திறத்தால் தெரிவெய் தியதீ வெண்டிங்கள்
நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ டியமை தனுந்தான்
விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்
நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
நலந்தா னவன்நான் முகன்றன் தலையை
கலந்தா னதுகொண் டகபா லியுந்தான்
புலந்தான் புகழா லெரிவிண் புகழும்
நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
தலைதா னதுஏ தியதம் மடிகள்
கலைதான் திரிகா டிடம்நா டிடமா
மலைதா னெடுத்தான் மதில்மூன் றுடைய
நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல்
உவந்தான் சுறவே தனுரு வழி
சிவந்தான் செயச்செய் துசெறு துலகில்
நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி
மறியார் மலைமங் கைமகிழ தவன்றான்
குறியாற் குறிகொண் டவர்போ குறுகும்
நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
பிறைதான் சடைச்சேர தியஎ தைபெம்மான்
இறைதான் இறவா கயிலை மலையான்
மறைதான் புனலொண் மதிமல் குசென்னி
நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை
மிறைத்தான் வரையா லரக்கன் மிகையை
குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை
நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
தழல்தா மரையான் வையந்தா யவனுங்
கழல்தான் முடிகா ணியநா ணொளிரும்
அழல்தான் அடியார கருளா பயக்கும்
நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை
எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன்
மனத்தாற் சமண்சா கியர்மாண் பழிய
நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
புகரே துமிலா தபுத்தே ளுலகின்
நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை
நகரா நலஞா னசம்ப தன்சொன்ன
பகர்வா ரவர்பா வமிலா தவரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் நெல்லிவனேசுவரர் தேவியார் மங்களநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஅழுந்தூர்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினை
தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி
அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடம்மன் னினையே
கடலே றியநஞ் சமுதுண் டவனே
உடலே உயிரே உணர்வே யெழிலே
அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழமா மடம்மே வினையே
கழிகா டலனே கனலா டலினாய்
பழிபா டிலனே யவையே பயிலும்
அழிபா டிலராய் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடம்மன் னினையே
வானே மலையே யெனமன் னுயிரே
தானே தொழுவார் தொழுதாள் மணியே
ஆனே சிவனே அழுந்தை யவரெம்
மானே யெனமா மடம்மன் னினையே
அலையார் புனல்சூழ் அழுந்தை பெருமான்
நிலையார் மறியும் நிறைவெண் மழுவும்
இலையார் படையும் மிவையே துசெல்வ
நிலையா வதுகொள் கெனநீ நினையே
நறவார் தலையின் நயவா வுலகிற்
பிறவா தவனே பிணியில் லவனே
அறையார் கழலாய் அழுந்தை மறையோர்
மறவா தெழமா மடம்மன் னினையே
தடுமா றுவல்லாய் தலைவா மதியம்
சுடுமா றுவல்லாய் சுடரார் சடையில்
அடுமா றுவல்லாய் அழுந்தை மறையோர்
நெடுமா நகர்கை தொழநின் றனையே
பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறுங்
கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய்
அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்
வெரியார் தொழமா மடம்மே வினையே
மணீநீள் முடியான் மலையை அரக்கன்
தணியா தெடுத்தான் உடல நெரித்த
அணியார் விரலாய் அழுந்தை மறையோர்
மணிமா மடம்மன் னியிரு தனையே
முடியார் சடையாய் முனநா ளிருவர்
நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள்
அடிமே லறியார் அழுந்தை மறையோர்
படியாற் றொழமா மடம்பற் றினையே
அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர்
பெருஞா னமுடை பெருமா னவனை
திருஞா னசம்ப தனசெ தமிழ்கள்
உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வேதபுரீசுவரர் தேவியார் சவுந்தராம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கழிப்பாலை
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
புனலா டியபுன் சடையாய் அரணம்
அனலா கவிழி தவனே அழகார்
கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
உனவார் கழல்கை தொழுதுள் குதுமே
துணையா கவொர்தூ வளமா தினையும்
இணையா கவுக தவனே இறைவா
கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்
இணையார் கழலே தவிடர் கெடுமே
நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்
முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்
கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
அடியார கடையா அவலம் மவையே
எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ
வளிகா யமென வெளிமன் னியதூ
ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர
களியாய் கழிப்பா லையமர தவனே
நடநண் ணியொர்நா கமசை தவனே
விடநண் ணியதூ மிடறா விகிர்தா
கடல்நண் ணுகழி பதிகா வலனே
உடன்நண் ணிவணங் குவனுன் னடியே
பிறையார் சடையாய் பெரியாய் பெரியம்
மறையார் தருவாய் மையினா யுலகிற்
கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
இறையார் கழலே தவிடர் கெடுமே
முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்
கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்
எதிர்கொள் மொழியால் இரந்தே துமவர
கதிரும் வினையா யினஆ சறுமே
எரியார் கணையால் எயிலெய் தவனே
விரியார் தருவீழ் சடையாய் இரவிற்
கரிகா டலினாய் கழிப்பா லையுளாய்
உரிதா கிவணங் குவனுன் னடியே
நலநா ரணன்நான் முகன்நண் ணலுற
கனலா னவனே கழிப்பா லையுளாய்
உனவார் கழலே தொழுதுன் னுமவர
கிலதாம் வினைதான் எயிலெய் தவனே
தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடு
துவர்கொண் டனநுண் துகிலா டையரும்
அவர்கொண் டனவி டடிகள் ளுறையும்
உவர்கொண் டகழி பதியுள் குதுமே
கழியார் பதிகா வலனை புகலி
பழியா மறைஞா னசம்ப தனசொல்
வழிபா டிவைகொண் டடிவாழ தவல்லார்
கெழியார் இமையோ ரொடுகே டிலரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பால்வண்ணநாதர் தேவியார் வேதநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்குடவாயில்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
திகழு திருமா லொடுநான் முகனும்
புகழும் பெருமான் அடியார் புகல
மகிழும் பெருமான் குடவா யில்மன்னி
நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே
ஓடு நதியும் மதியோ டுரகம்
சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல்
கூடுங் குழகன் குடவா யில்தனில்
நீடும் பெருங்கோ யில்நிலா யவனே
கலையான் மறையான் கனலே துகையான்
மலையா ளவள்பா கம்மகிழ தபிரான்
கொலையார் சிலையான் குடவா யில்தனில்
நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே
சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா
நலமென் முலையாள் நகைசெய் யநடங்
குலவுங் குழகன் குடவா யில்தனில்
நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே
என்றன் உளமே வியிரு தபிரான்
கன்றன் மணிபோல் மிடறன் கயிலை
குன்றன் குழகன் குடவா யில்தனில்
நின்ற பெருங்கோ யில்நிலா யவனே
அலைசேர் புனலன் னனலன் னமலன்
தலைசேர் பலியன் சதுரன் விதிருங்
கொலைசேர் படையன் குடவா யில்தனில்
நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே
அறையார் கழலன் னமலன் னியலிற்
பறையாழ் முழவும் மறைபா டநடங்
குறையா அழகன் குடவா யில்தனில்
நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே
வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ்
வரையா ரவொர்கால் விரல்வை தபிரான்
வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும்
வரையார் பெருங்கோ யில்மகிழ தவனே
பொன்னொ பவனும் புயலொ பவனு
தன்னொ பறியா தழலாய் நிமிர்ந்தான்
கொன்னற் படையான் குடவா யில்தனில்
மன்னும் பெருங்கோ யில்மகிழ தவனே
வெயிலின் நிலையார் விரிபோர் வையினார்
பயிலும் முரையே பகர்பா விகள்பாற்
குயிலன் குழகன் குடவா யில்தனில்
உயரும் பெருங்கோ யிலுயர தவனே
கடுவாய் மலிநீர் குடவா யில்தனில்
நெடுமா பெருங்கோ யில்நிலா யவனை
தடமார் புகலி தமிழார் விரகன்
வடமார் தமிழ்வல் லவர்நல் லவரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கோணேசுவரர் தேவியார் பெரியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவானைக்கா
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
மழையார் மிடறா மழுவா ளுடையாய்
உழையார் கரவா உமையாள் கணவா
விழவா ரும்வெணா வலின்மே வியவெம்
அழகா எனும்ஆ யிழையாள் அவளே
கொலையார் கரியின் னுரிமூ டியனே
மலையார் சிலையா வளைவி தவனே
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
நிலையா அருளாய் எனும்நே ரிழையே
காலா லுயிர்கா லனைவீ டுசய்தாய்
பாலோ டுநெய்யா டியபால் வணனே
வேலா டுகையா யெம்வெண்நா வலுளாய்
ஆலார் நிழலாய் எனும்ஆ யிழையே
சுறவ கொடிகொண் டவன்நீ றதுவாய்
உறநெற் றிவிழி தவெம்உ தமனே
விறல்மி ககரி கருள்செய் தவனே
அறமி கதுவென் னுமெனா யிழையே
செங்க பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
அங்க கருணை பெரிதா யவனே
வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
அங்க தயர்வா யினள்ஆ யிழையே
குன்றே யமர்வாய் கொலையார் புலியின்
தன்றோ லுடையாய் சடையாய் பிறையாய்
வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளே
நின்றா யருளாய் எனும்நே ரிழையே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
மலையன் றெடுத்த வரக்கன் முடிதோள்
தொலையவ் விரலூன் றியதூ மழுவா
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே
திருவார் தருநா ரணன்நான் முகனும்
மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம்
அரவா எனும்ஆ யிழையா ளவளே
புத்தர் பலரோ டமண்பொ தவர்கள்
ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார்
மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய்
அத்தா அருளாய் எனும்ஆ யிழையே
வெண்நா வலமர துறைவே தியனை
கண்ணார் கமழ்கா ழியர்த தலைவன்
பண்ணோ டிவைபா டியப தும்வல்லார்
விண்ணோ ரவரே தவிரும் புவரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநாகேச்சரம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பொன்னேர் தருமே னியனே புரியும்
மின்னேர் சடையாய் விரைகா விரியின்
நன்னீர் வயல்நா கேச்சர நகரின்
மன்னே யெனவல் வினைமா தறுமே
சிறவார் புரமூன் றெரி சிலையில்
உறவார் கணையு தவனே உயரும்
நறவார் பொழில்நா கேச்சர நகருள்
அறவா எனவல் வினையா சறுமே
கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
வில்லான் எழில்வே வவிழி தவனே
நல்லார் தொழுநா கேச்சர நகரில்
செல்வா எனவல் வினைதே தறுமே
நகுவான் மதியோ டரவும் புனலும்
தகுவார் சடையின் முடியாய் தளவம்
நகுவார் பொழில்நா கேச்சர நகருள்
பகவா எனவல் வினைபற் றறுமே
கலைமான் மறியுங் கனலும் மழுவும்
நிலையா கியகை யினனே நிகழும்
நலமா கியநா கேச்சர நகருள்
தலைவா எனவல் வினைதான் அறுமே
குரையார் கழலா டநடங் குலவி
வரையான் மகள்கா ணமகிழ தவனே
நரையார் விடையே றுநாகே சரத்தெம்
அரைசே எனநீங் கும்அரு துயரே
முடையார் தருவெண் டலைகொண் டுலகில்
கடையார் பலிகொண் டுழல்கா ரணனே
நடையார் தருநா கேச்சர நகருள்
சடையா எனவல் வினைதான் அறுமே
ஓயா தஅர கன்ஒடி தலற
நீயா ரருள்செய் துநிகழ தவனே
வாயா ரவழு தவர்நா கேச்சர
தாயே எனவல் வினைதான் அறுமே
நெடியா னொடுநான் முகன்நே டலுற
சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே
நடுமா வயல்நா கேச்சர நகரே
இடமா வுறைவா யெனஇன் புறுமே
மலம்பா வியகை யொடுமண் டையதுண்
கலம்பா வியர்க டுரைவி டுலகில்
நலம்பாவியநா கேச்சர நகருள்
சிலம்பா எனத்தீ வினைதே தறுமே
கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன்
தலமார் தருசெ தமிழின் விரகன்
நலமார் தருநா கேச்சர தரனை
சொலன்மா லைகள்சொல் லநிலா வினையே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் செண்பகாரணியேசுவரர் தேவியார் குன்றமுலைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புகலி
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
உகலி யாழ்கட லோங்கு பாருளீர்
அகலி யாவினை யல்லல் போயறும்
இகலி யார்புர மெய்த வன்னுறை
புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே
பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதி
கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடி
புண்ணி யன்னுறை யும்பு கலியை
நண்ணு மின்னல மான வேண்டிலே
வீசு மின்புரை காதன் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்
பூசு நீற்றினன் பூம்பு கலியை
பேசு மின்பெரி தின்ப மாகவே
கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்
பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்
அடிகளை யடை தன்பு செய்யுமே
பா தாரொலி பல்சி லம்பினன்
தார்விட முண்ட வன்படை
பூ தான்புக லிந்ந கர்தொழ
தார்க்கிட மில்லை யென்பரே
மறையி னான்ஒலி மல்கு வீணையன்
நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்
பொறையி னானுறை யும்பு கலியை
நிறையி னாற்றொழ நேச மாகுமே
கரவி டைமன தாரை காண்கிலான்
இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை
பொருவி டைஉயர தான்பு கலியை
பரவி டப்பயில் பாவம் பாறுமே
அருப்பி னார்முலை மங்கை பங்கினன்
விருப்பி னான்அர கன்னு ரஞ்செகும்
பொருப்பி னான்பொழி லார்பு கலியூர்
இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே
மாலும் நான்முகன் றானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலு மேனியன் பூம்பு கலியுள்
பால தாடிய பண்ப னல்லனே
நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்
ஒன்ற தாகவை யாவு ணர்வினுள்
நின்ற வன்னிக ழும்பு கலியை
சென்று கைதொழ செல்வ மாகுமே
புல்ல மேறிதன் பூம்பு கலியை
நல்ல ஞானசம் பந்தன் நாவினாற்
சொல்லும் மாலையீ ரைந்தும் வல்லவர
கில்லை யாம்வினை இருநி லத்துளே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநெல்வாயில்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய
மடையி னார்மணி நீர்நெல் வாயிலார்
நடையி னால்விரற் கோவ
துடையி னாரெம துச்சி யாரே
வாங்கி னார்மதில் மேற்க ணைவெள்ள
தாங்கி னார்தலை யாய தன்மையர்
நீங்கு நீரநெல் வாயி லார்தொழ
ஓங்கி னாரெம துச்சி யாரே
நிச்ச லேத்தும்நெல் வாயி லார்தொழ
இச்சை யாலுறை வாரெம் மீசனார்
கச்சை யாவதோர் பாம்பி னார்கவின்
இச்சை யாரெம துச்சி யாரே
மறையி னார்மழு வாளி னார்மல்கு
பிறையி னார்பிறை யோடி லங்கிய
நிறையி னாரநெல் வாயிலார் தொழும்
இறைவ னாரெம துச்சி யாரே
விருத்த னாகிவெண் ணீறு பூசிய
கருத்த னார்கன லாட்டு கந்தவர்
நிருத்த னாரநெல் வாயில் மேவிய
ஒருத்த னாரெம துச்சி யாரே
காரி னார்கொன்றை கண்ணி யார்மல்கு
பேரி னார்பிறை யோடி லங்கிய
நீரி னாரநெல் வாயிலார் தொழும்
ஏரி னாரெம துச்சி யாரே
ஆதி யாரந்த மாயி னார்வினை
கோதி யார்மதில் கூட்ட ழித்தவர்
நீதி யாரநெல் வாயி லார்மறை
ஓதி யாரெம துச்சி யாரே
பற்றி னான்அர கன்க யிலையை
ஒற்றி னாரொரு கால்வி ரலுற
நெற்றி யாரநெல் வாயி லார்தொழும்
பெற்றி யாரெம துச்சி யாரே
நாடி னார்மணி வண்ணன் நான்முகன்
கூடி னார்குறு காத கொள்கையர்
நீடி னாரநெல் வாயி லார்தலை
ஓடி னாரெம துச்சி யாரே
குண்ட மண்துவர கூறை மூடர்சொல்
பண்ட மாகவை யாத பண்பினர்
விண்ட யங்குநெல் வாயி லார்நஞ்சை
உண்ட கண்டரெம் உச்சி யாரே
நெண்ப யங்குநெல் வாயி லீசனை
சண்பை ஞானசம் பந்தன் சொல்லிவை
பண்ப யன்கொள பாட வல்லவர்
விண்ப யன்கொளும் வேட்கை யாளரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திரு இந்திரநீலப்பருப்பதம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
குலவு பாரிடம் போற்ற வீற்றிரு
திலகு மான்மழு வேந்தும் அங்கையன்
நிலவும் இந்திர நீல பர்ப்ப
துலவி னான்அடி யுள்க நல்குமே
குறைவி லார்மதி சூடி யாடவண்
டறையு மாமலர கொன்றை சென்னிசேர்
இறைவன் இந்திர நீல பர்ப்ப
துறைவி னான்றனை யோதி உய்ம்மினே
என்பொன் என்மணி யென்ன ஏத்துவார்
நம்பன் நான்மறை பாடு நாவினான்
இன்பன் இந்திர நீல பர்ப்ப
தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே
நாச மாம்வினை நன்மை தான்வரு
தேச மார்புக ழாய செம்மையெம்
ஈசன் இந்திர நீல பர்ப்பதங்
கூசி வாழ்த்துதுங் குணம தாகவே
மருவு மான்மட மாதொர் பாகமா
பரவு வார்வினை தீர்த்த பண்பினான்
இரவன் இந்திர நீல பர்ப்ப
தருவி சூடிடும் அடிகள் வண்ணமே
வெண்ணி லாமதி சூடும் வேணியன்
எண்ணி லார்மதி லெய்த வில்லினன்
அண்ணல் இந்திர நீல பர்ப்ப
துண்ணி லாவுறும் ஒருவன் நல்லனே
கொடிகொள் ஏற்றினர் கூற்று தைத்தவர்
பொடிகொள் மேனியிற் பூண்ட பாம்பினர்
அடிகள் இந்திர நீல பர்ப்பதம்
உடைய வாண ருகந்த கொள்கையே
எடுத்த வல்லர கன்க ரம்புயம்
அடர்த்த தோர்விர லான வனையா
படுத்தன் இந்திர நீல பர்ப்பதம்
முடித்த லம்முற முயலும் இன்பமே
பூவி னானொடு மாலும் போற்றுறு
தேவன் இந்திர நீல பர்ப்பதம்
பாவி யாதெழு வாரை தம்வினை
கோவி யாவருங் கொல்லுங் கூற்றமே
கட்டர் குண்டமண் தேரர் சீரிலர்
விட்டர் இந்திர நீல பர்ப்பதம்
எட்ட னைநினை யாத தென்கொலோ
சிட்ட தாயுறை யாதி சீர்களே
கந்த மார்பொழில் சூழ்ந்த காழியான்
இந்தி ரன்தொழு நீல பர்ப
தந்த மில்லியை யேத்து ஞானசம்
பந்தன் பாடல்கொண் டோ தி வாழ்மினே
இத்தலம் வடதேசத்திலுள்ளது
சுவாமிபெயர் நீலாசலநாதர் தேவியார் நீலாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கருவூரானிலை
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்
சுண்ட லாருயி ராய தன்மையர்
கண்ட னார்கரு வூரு ளானிலை
அண்ட னாரரு ளீயும் அன்பரே
நீதி யார்நினை தாய நான்மறை
ஓதி யாரொடுங் கூட லார்குழை
காதி னார்கரு வூரு ளானிலை
ஆதி யாரடி யார்தம் அன்பரே
விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே
முடியர் மும்மத யானை யீருரி
பொடியர் பூங்கணை வேளை செற்றவர்
கடியு ளார்கரு வூரு ளானிலை
அடிகள் யாவையு மாய ஈசரே
பங்க யம்மலர பாதர் பாதியோர்
மங்கை யர்மணி நீல கண்டர்வான்
கங்கை யர்கரு வூரு ளானிலை
அங்கை யாடர வத்தெம் மண்ணலே
தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்
மேவர் மும்மதி லெய்த வில்லியர்
காவ லர்கரு வூரு ளானிலை
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே
பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெ
பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர்
கண்ணி னார்கரு வூரு ளானிலை
நண்ணி னார்நமை யாளும் நாதரே
கடுத்த வாளர கன்க யிலையை
எடுத்த வன்றலை தோளு தாளினால்
அடர்த்த வன்கரு வூரு ளானிலை
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே
உழுது மாநில தேன மாகிமால்
தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
கழுதி னான்கரு வூரு ளானிலை
முழுது மாகிய மூர்த்தி பாதமே
புத்தர் புன்சம ணாதர் பொய்யுரை
பித்தர் பேசிய பேச்சை விட்டுமெ
பத்தர் சேர்கரு வூரு ளானிலை
அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே
கந்த மார்பொழிற் காழி ஞானசம்
பந்தன் சேர்கரு வூரு ளானிலை
எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தை யிற்றுய ராய தீர்வரே
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பசுபதீசுவரர் தேவியார் கிருபாநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புகலி திருவிராகம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும்
பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞால
துன்னிஇமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்
சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே
வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல்சூடி
பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்
புண்டரிக வாசமது வீசமலர சோலை
தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே
பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர்
பூவணவு சோலையிருள் மாலையெதிர் கூர
தேவண விழாவளர் திருப்புகலி யாமே
மைதவழும் மாமிடறன் மாநடம தாடி
கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
செய்பணி பெருத்தெழும் உருத்திரங்கள் கூடி
தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே
முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகி
பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில் களக்கினொளி காட்ட
செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே
வங்கமலி யுங்கடல்வி டத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்திசெய் திருக்குமிட மென்பர்
கொங்கண வியன்பொழிலின் மாசுபணி மூச
தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே
நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி
வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர்
பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடி
செல்வமறை யோருறை திருப்புகலி யாமே
பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
அரக்கனை யடர்த்தருளும் அண்ணலிட மென்பர்
நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்த
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே
கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளும் அப்பன்இரு வர்க்கும்
நேடஎரி யாகிஇரு பாலுமடி பேணி
தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே
கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
பொற்றொடி மடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே
செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்தமுத லாகிநடு வாயபெரு மானை
பந்தனுரை செந்தமிழ்கள் பத்துமிசை கூர
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புறம்பயம் திருவிராகம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
மறம்பய மலிந்தவர் மதிற்பரி சறுத்தனை
நிரம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை
திறம்பய னுறும்பொருள் தெரிந்துணரு நால்வர
கறம்பய னுரைத்தனை புரம்பய மமர்ந்தோய்
விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ள
தரித்தனை யதன்றியும் மிகப்பெரிய காலன்
எருத்திற வுதைத்தனை இலங்கிழையொர் பாகம்
பொருத்துதல் கருத்தினை புறம்பய மமர்ந்தோய்
விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகும யானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புரம்பய மமர்ந்தோய்
வளங்கெழு கதும்புன லொடுஞ்சடை யொடுங்க
துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க
உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு
புளங்கொள விளங்கினை புரம்பய மமர்ந்தோய்
பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகங்
கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்புண அரும்பவிழ் திருந்தியெழு கொன்றை
விரும்பினை புறம்பய மமர்ந்தஇறை யோனே
அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும்
நினைப்புடை மனத்தவர் வினைப்பகையு நீயே
தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்ற
புனற்படு கிடைக்கையை புறம்பய மமர்ந்தோய்
மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ளம்
அறத்துறை யொறுத்துன தருட்கிழமை பெற்றோர்
திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும்
புறத்துள திறத்தினை புறம்பய மமர்ந்தோய்
இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க
உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி
வலங்கொள எழுந்தவ னலங்கவின வஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பய மமர்ந்தோய்
வடங்கெட நுடங்குண இடந்தவிடை யல்லி
கிடந்தவன் இருந்தவன் அளந்துணர லாகார்
தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்க
புடங்கருள்செய் தொன்றினை புறம்பய மமர்ந்தோய்
விடக்கொருவர் நன்றென
உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்குரை படுத்துமையொர் பாகம்
அடக்கினை புறம்பய மமர்ந்த வுரவோனே
கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்த
தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழமை ஞானன்
சுரும்பவிழ் புறம்பய மமர்ந்த தமிழ்வல்லார்
பெரும்பிணி மருங்கற ஒருங்குவர் பிறப்பே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சாட்சிவரதநாதர் தேவியார் கரும்பன்னசொல்லம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கருப்பறியலூர் திருவிராகம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்து குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றவரை வானவர்தம் வானுலக மேற்ற
கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே
வண்டணைசெய் கொன்றையது வார்சடைகள் மேலே
கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்
விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவோ ரம்பால்
கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே
வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாக
போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற
நாதனென நள்ளிருண்முன் ஆடுகுழை தாழுங்
காதவ னிருப்பது கருப்பறிய லூரே
மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்
உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனை
தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்
கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே
ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய
நிருத்தனவன் நீதியவன் நித்தன்நெறி யாய
விருத்தனவன் வேதமென அங்கமவை யோதுங்
கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே
விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன்
பண்ணமரும் மென்மொழியி னாளையணை விப்பான்
எண்ணிவரு காமனுடல் வேவஎரி காலுங்
கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே
ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர்
சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்கு
தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங
காதின னிருப்பது கருப்பறிய லூரே
வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்ச
பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்
கேய்ந்தபுய மத்தனையும் இற்றுவிழ மேனாள்
காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே
பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை
கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து
நிரந்தரம் நிரந்திருவர் நேடியறி யாமல்
கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே
அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்
சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டு
குற்றமறி யாதபெரு மான்கொகுடி கோயில்
கற்றென இருப்பது கருப்பறிய லூரே
நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன்
கலந்தவர் கருப்பறியல் மேயகட வுள்ளை
பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று
வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் குற்றம்பொறுத்தநாதர் தேவியார் கோல்வளையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு திருவிராகம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்
உருத்திகழ் எழிற்கயிலை வெற்பிலுறை தற்கே
விருப்புடைய அற்புத ரிருக்குமிட மேரார்
மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே
கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர்
இந்திர னுணர்ந்துபணி யெந்தையிட மெங்குஞ்
சந்தமலி யுந்தரு மிடைந்தபொழில் சார
வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே
கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில்
கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்தி
கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர்
வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே
நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன்
றெண்ணிலி மறைப்பொருள் விரித்தவ ரிடஞ்சீர
தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி
மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே
வென்றிமிகு தாருகன தாருயிர் மடங
கன்றிவரு கோபமிகு காளிகத மோவ
நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால்
மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே
பூதமொடு பேய்கள்பல பாடநட மாடி
பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்தி
கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ
மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே
துன்னுகுழல் மங்கையுமை நங்கைசுளி வெய்த
பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே
என்னசதி என்றுரைசெ யங்கண னிடஞ்சீர்
மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே
இரக்கமில் குணத்தொடுல கெங்கும்நலி வெம்போர்
அரக்கன்முடி யத்தலை புயத்தொடு மடங்க
துரக்கவிர லிற்சிறிது வைத்தவ ரிடஞ்சீர்
வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே
பருத்துருவ தாகிவிண் ணடைந்தவனொர் பன்றி
பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றுங்
கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவ னிடங்கார்
வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே
பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர்
சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம்
நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால்
மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே
வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள்
ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞான
பூசுர னுரைத்ததமிழ் பத்துமிவை வல்லார்
நேசமலி பத்தரவர் நின்மல னடிக்கே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநள்ளாறு திருவிராகம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
ஏடுமலி கொன்றையர விந்துஇள வன்னி
மாடவல செஞ்சடையெம் மைந்தனிட மென்பர்
கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
நாடுமலி வாசமது வீசியநள் ளாறே
விண்ணியல் பிறைப்பிள வறைப்புனல் முடித்த
புண்ணியன் இருக்குமிட மென்பர்புவி தன்மேல்
பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள்
நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே
விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாக
துளங்கொள இருத்திய ஒருத்தனிட மென்பர்
வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே
கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனி
செக்கரவர் சேருமிட மென்பர்தடம் மூழ்கி
புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி
நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே
நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார்
வஞ்சம தறுத்தருளும் மற்றவனை வானோர்
அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த
நஞ்சமுது செய்தவன் இருப்பிடம்நள் ளாறே
பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங்
காலனுடன் மாளமு னுதைத்தஅர னூராங்
கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர்
நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே
நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவை
பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை
வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்
ஓதியரன் நாமமும் உணர்த்திடும்நள் ளாறே
கடுத்துவல் லரக்கன்முன் நெருக்கிவரை தன்னை
எடுத்தவன் முடித்தலைகள் பத்தும்மிகு தோளும்
அடர்த்தவர் தமக்கிடம தென்பரளி பாட
நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே
உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம்
பயந்தவன் நினைப்பரிய பண்பனிட மென்பர்
வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும்
நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே
சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும்
பந்தனை யறுத்தருளு கின்றபர மன்னூர்
மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேத
சந்தம்விர விப்பொழில் முழங்கியநள் ளாறே
ஆடலர வார்சடையன் ஆயிழைத னோடும்
நாடுமலி வெய்திட இருந்தவன்நள் ளாற்றை
மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்
பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பழுவூர் திருவிராகம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்
அத்தன்எமை யாளுடைய அண்ணலிட மென்பர்
மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீச
பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே
கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர்
மாடமலி சூளிகையி லேறிமட வார்கள்
பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே
வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த
போலிய வொருத்தர்புரி நூலரிட மென்பர்
வேலியின் விரைக்கமல மன்னமுக மாதர்
பாலென மிழற்றிநட மாடுபழு வூரே
எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்
மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்தி
பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வூரே
சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்
நாதன்நமை யாளுடைய நம்பனிட மென்பர்
வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்
பாதமவை யேத்தநிகழ் கின்றபழு வூரே
மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மாவயர வன்றுரிசெய் மைந்தனிட மென்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லி
பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே
மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி
சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர்
அந்தணர்கள் ஆகுதியி லிட்டஅகில் மட்டார்
பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே
உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்
றரக்கனை யடர்த்தருளும் அப்பனிட மென்பர்
குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு
பரக்குறு புனல்செய்விளை யாடுபழு வூரே
நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட
அன்றுதழ லாய்நிமிரும் ஆதியிட மென்பர்
ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்
மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே
மொட்டையமண் ஆதர்துகில் மூடுவிரி தேரர்
முட்டைகள் மொழிந்தமுனி வான்றனிட மென்பர்
மட்டைமலி தாழைஇள நீரதிசை பூகம்
பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே
அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்
பந்தமலி கின்றபழு வூரரனை யார
சந்தமிகு ஞானசம் பந்தனுரை பேணி
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வடவனநாதர் தேவியார் அருந்தவநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்குரங்காடுதுறை
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பரவ கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ
இரவிற் புறங்கா டிடைநின் றெரியாடி
அரவ சடை தணன்மேய அழகார்
குரவ பொழில்சூழ் குரங்காடு துறையே
விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
இண்டார் புறங்கா டிடைநின் றெரியாடி
வண்டார் கருமென் குழல்மங்கை யொர்பாகங்
கொண்டான் நகர்போல் குரங்காடு துறையே
நிறைவில் புறங்கா டிடைநே ரிழையோடும்
இறைவில் லெரியான் மழுவேந்தி நின்றாடி
மறையின் னொலிவா னவர்தா னவரேத்துங்
குறைவில் லவனூர் குரங்காடு துறையே
விழிக்கு நுதல்மே லொருவெண் பிறைசூடி
தெழிக்கும் புறங்கா டிடைச்சேர தெரியாடி
பழிக்கும் பரிசே பலிதேர தவனூர்பொன்
கொழிக்கும் புனல்சூழ் குரங்காடு துறையே
நீறார்தரு மேனியன் நெற்றியொர் கண்ணன்
ஏறார்கொடி யெம்மிறை யீண்டெரி யாடி
ஆறார்சடை யந்தணன் ஆயிழை யாளோர்
கூறான்நகர் போல்குரங் காடு துறையே
நளிரும் மலர்க்கொன் றையுநாறு கரந்தை
துளிருஞ் சுலவி சுடுகா டெரியாடி
மிளிரும் மரவார தவன்மே வியகோயில்
குளிரும் புனல்சூழ் குரங்காடு துறையே
பழகும் வினைதீர பவன்பார பதியோடும்
முழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும்
அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங்
குழகன் னகர்போல் குரங்காடு துறையே
வரையார தெடுத்தவ் வரக்கன் வலியொல்க
நிரையார் விரலால் நெரித்தி டவனூராங்
கரையார திழிகா விரிக்கோல கரைமேல்
குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே
நெடியா னொடுநான் முகனு நினைவொண்ணா
படியா கியபண் டங்கனின் றெரியாடி
செடியார் தலையே தியசெங்கண் வெள்ளேற்றின்
கொடியான் நகர்போல் குரங்காடு துறையே
துவரா டையர்வே டமலா சமண்கையர்
கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம்
நவையார் மணிபொன் னகில்ச தனமுந்தி
குவையார் கரைசேர் குரங்காடு துறையே
நல்லார் பயில்கா ழியுள்ஞான சம்பந்தன்
கொல்லே றுடையான் குரங்காடு துறைமேல்
சொல்லார் தமிழ்மாலை பத்து தொழுதேத்த
வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் குலைவணங்குநாதர் தேவியார் அழகுசடைமுடியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஇரும்பூளை வினாவுரை
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
வாரார் முலைமங்கை யொடும் முடனாகி
ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே
தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர்
குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி
எழிலா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே
அன்பா லடிகை தொழுவீ ரறியீரே
மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி
இன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே
நச்சி தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
கச்சி பொலிகா கொடியுடன் கூடி
இச்சி திரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
உச்சி தலையிற் பலிகொண் டுழலூணே
சுற்றார தடியே தொழுவீ ரிதுசொல்லீர்
நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி
எற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
புற்றா டரவோடென்பு பூண்ட பொருளே
தோடார் மலர்தூ தொழுதொண்டர் கள்சொல்லீர்
சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
ஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காடார் கடுவே டுவனான கருத்தே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர்
பருக்கை மதவேழ முரித்துமை யோடும்
இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
அரக்கன் உரந்தீர தருளா கியவாறே
துயரா யினநீங்கி தொழுந்தொண்டர் சொல்லீர்
கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகி
இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
முயல்வா ரிருவர கெரியா கியமொய்ம்பே
துணைநன் மலர்தூ தொழுந்தொண்டர் கள்சொல்லீர்
பணைமென் முலைப்பார பதியோ டுடனாகி
இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
அணைவில் சமண்சா கியமா கியவாறே
எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன்
செந்தண் தமிழ்செ பியப திவைவல்லார்
பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் காசியாரண்ணியேசுவரர் தேவியார் ஏலவார்குழலம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமறைக்காடு கதவடைக்கப்பாடியபதிகம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்கா டுறைமைந்தா
இதுநன் கிறைவை தருள்செய்க எனக்குன்
கதவ திருக்காப்பு கொள்ளுங் கருத்தாலே
சங்க தரளம் மவைதான் கரைக்கெற்றும்
வங கடல்சூழ் மறைக்கா டுறைமைந்தா
மங்கை உமைபா கமுமா கவிதென்கொல்
கங்கை சடைமே லடைவித்த கருத்தே
குரவங் குருக்கத்தி கள்புன்னை கள்ஞாழல்
மருவும் பொழில்சூழ் மறைக்கா டுறைமைந்தா
சிரமும் மலரு திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ டடைவித்த லழகே
படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம்
மடலம் பொழில்சூழ் மறைக்கா டுறைமைந்தா
உடலம் முமைபங்க மதாகியு மென்கொல்
கடல்நஞ் சமுதா அதுவுண்ட கருத்தே
வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட
தேனார் பொழில்சூழ் மறைக்கா டுறைசெல்வா
ஏனோர் தொழுதேத்த இருந்தநீ யென்கொல்
கானார் கடுவே டுவனான கருத்தே
பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா
உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல்
தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே
வேலா வல தயலே மிளிர்வெய்துஞ்
சேலார் திருமா மறைக்கா டுறைசெல்வா
மாலோ டயன்இ திரனஞ்ச முன்னென்கொல்
காலார் சிலைக்கா மனைக்காய்ந்த கருத்தே
கலங்கொள் கடலோதம் உலாவுங் கரைமேல்
வலங்கொள் பவர்வாழ திசைக்கும் மறைக்காடா
இலங்கை யுடையான் அடர்ப்ப டிடரெய்த
அலங்கல் விரலூன்றி யருள்செய்த வாறே
கோனென்று பல்கோடி உருத்திரர் போற்று
தேனம் பொழில்சூழ் மறைக்கா டுறைசெல்வா
ஏனங் கழுகா னவருன்னை முன்னென்கொல்
வான தலமண்டி யுங்கண்டி லாவாறே
வேதம் பலவோமம் வியந்தடி போற்ற
ஓதம் உலவும் மறைக்காட்டி லுறைவாய்
ஏதில் சமண்சா கியர்வா கிவையென்கொல்
ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே
காழி நகரான் கலைஞான சம்பந்தன்
வாழிம் மறைக்கா டனைவா தறிவித்த
ஏழின் னிசைமாலை யீரை திவைவல்லார்
வாழி யுலகோர் தொழவான் அடைவாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சாய்க்காடு
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவி
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரி
தத்து நீர்ப்பொன்னி சாகர மேவுசா காடே
பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்
வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்
கொண்ட லைத்திகழ் பேரிமு ழங குலாவி
தண்ட லைத்தட மாமயி லாடுசா காடே
நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ
டாறு சூடும் அமரர் பிரானுறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலை
தாறு தண்கத லிப்புதல் மேவுசா காடே
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்
இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டி
தரங்கம் நீள்கழி தண்கரை வைகுசா காடே
ஏழை மார்கடை தோறு மிடுபலி கென்று
கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில்
மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூ
தாழை வெண்மடல் கொய்துகொண் டாடுசா காடே
துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில்
அங்கொர் நீழ லளித்தஎம் மானுறை கோயில்
வங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியுஞ்
சங்கும் வாரி தடங்கட லுந்து சாய்க்காடே
வேத நாவினர் வெண்பளிங் கின்குழை காதர்
ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில்
மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னை
தாது கண்டு பொழில்மறை தூடுசா காடே
இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த
அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்
மரு குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூ
தரு குலாவிய தண்பொழில் நீடுசா காடே
மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த
வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில்
சேலின் நேர்விழி யார்மயி லால செருந்தி
காலை யேகன கம்மலர் கின்றசா காடே
ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர கென்றும்
ஆத்த மாக அறிவரி தாயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசா காடே
ஏனை யோர்புகழ தேத்திய எந்தைசா காட்டை
ஞான சம்பந்தன் காழியர் கோன்நவில் பத்தும்
ஊன மின்றி உரைசெய வல்லவர் தாம்போய்
வான நாடினி தாள்வரிம் மாநில தோரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சாயாவனேசுவரர் தேவியார் குயிலுநன்மொழியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்ஷேத்திரக்கோவை
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
ஆரூர் தில்லையம் பலம்வல் லந்நல்லம்
வடக சியு சிறுபாக்கம் நல்ல
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி
கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்
நீரூர் வயல்நின்றி யூர்குன்றி யூருங்
குருகா வையூர் நாரையூர் நீடுகான
பேரூர் நன்னீள் வயல்நெ தானமும்
பிதற்றாய் பிறைசூ டிதன்பே ரிடமே
அண்ணா மலையீங் கோயுமத்தி முத்தா
றகலா முதுகுன் றங்கொடுங் குன்றமுங்
கண்ணார் கழுக்குன் றங்கயிலை கோணம்
பயில்கற் குடிகா ளத்திவா போக்கியும்
பண்ணார் மொழிமங்கை யோர்பங் குடையான்
பரங்குன் றம்பரு பதம்பேணி நின்றே
எண்ணாய் இரவும் பகலும் இடும்பை
கடல் நீ தலாங் காரணமே
அட்டா னமென் றோதியநா லிரண்டும்
அழகன் னுறைகா வனைத்து துறைகள்
எட்டா திருமூர தியின்கா டொன்பதுங்
குளமூன் றுங்கள மஞ்சும்பாடி நான்கும்
மட்டார் குழலாள் மலைமங்கை பங்கன்
மதிக்கும் மிடமா கியபாழி மூன்றுஞ்
சிட்டா னவன்பா சூரென்றே விரும்பாய்
அரும்பா வங்களா யினதே தறவே
அறப்பள்ளி அகத்தியான் பள்ளிவெள் ளைப்பொடி
பூசியா றணிவான் அமர்காட்டு பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி
திருநனி பள்ளி சீர்மகே திரத்து
பிறப்பில் லவன்பள்ளி வெள்ள சடையான்
விரும்பும் மிடைப்பள்ளி வண்சக்க ரம்மால்
உறைப்பா லடிபோற்ற கொடுத்த பள்ளி
உணராய் மடநெஞ்ச மேயுன்னி நின்றே
ஆறை வடமா கறலம்பர் ஐயா
றணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர்
சேறை துலைபுக லூரக லாதிவை
காதலி தானவன் சேர்பதியே
இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின
மனவஞ்சர் மற்றோட முன்மாத ராரும்
மதிகூர் திருக்கூட லில்ஆல வாயும்
இனவஞ் சொலிலா இடைமா மருதும்
இரும்பை பதிமா காளம்வெற் றியூருங்
கனமஞ் சினமால் விடையான் விரும்புங்
கருகா வூர்நல் லூர்பெரும் புலியூர்
தனமென் சொலிற்றஞ் சமென்றே நினைமின்
தவமாம் மலமா யினதா னருமே
மாட்டூர் மடப்பா சிலாச்சி ராமம்
முண்டீ சரம்வாத வூர்வார ணாசி
காட்டூர் கடம்பூர் படம்பக்கங் கொட்டுங்
கடலொற்றி யூர்மற் றுறையூ ரவையுங்
கோட்டூர் திருவாமா தூர்கோ ழம்பமுங்
கொடுங்கோ வலூர்திரு குணவாயில்
இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின
குலாவு திங்க
சடையான் குளிரும் பரிதி நியமம்
போற்றூ ரடியார் வழிபா டொழியா
தென்புறம் பயம்பூ வணம்பூ ழியூருங்
காற்றூர் வரையன் றெடுத்தான் முடிதோள்
நெரித்தா னுறைகோயில் லென் றென்றுநீ கருதே
இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின
நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல்
நெடுவா யிற்குறும் பலாநீ டுதிரு
நற்குன்றம் வலம்புரம் நாகே சுரம்நளிர்
சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர்
கற்குன்ற மொன்றே திமழை தடுத்த
கடல்வண் ணனுமா மலரோனுங் காணா
சொற்கென் றுந்தொலை விலாதா னுறையுங்
குடமூ கென்றுசொல் லிக்குலா வுமினே
குத்தங் குடிவே திகுடி புனல்சூழ்
குருந்தங் குடிதே வன்குடி மருவும்
அத்தங் குடிதண் டிருவண் குடியும்
அலம்புஞ் சலந்தன் சடைவை துகந்த
நித்தன் நிமலன் உமையோ டுங்கூட
நெடுங்கா லமுறை விடமென்று சொல்லா
புத்தர் புறங்கூ றியபுன் சமணர்
நெடும்பொய் களைவி டுநினை துய்ம்மினே
அம்மா னையரு தவமாகி நின்ற
அமரர் பெருமான் பதியான வுன்னி
கொய்ம்மா மலர்ச்சோலை குலாவு கொச்சை
கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன
இம்மா லையீரை தும்இரு நிலத்தில்
இரவும் பகலும் நினைந்தேத்தி நின்று
விம்மா வெருவா விரும்பும் மடியார்
விதியார் பிரியார் சிவன்சே வடிக்கே
இப்பதிகத்தில் வரும் குன்றியூர் இடைப்பள்ளி மாட்டூர் வாதவூர்
வாரணாசி கோட்டூர் குணவாயில் நெற்குன்றம் நற்குன்றம்
நெடுவாயில் உஞ்சேனைமாகாளம் குத்தங்குடி குருந்தேவன்குடி
மத்தங்குடி திருவண்குடி இவைகட்கு தனித்தனி
தேவார மில்லாமையால் வைப்புத்தலமென்று சொல்லப்படும்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பிரமபுரம்
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
எம்பிரான் எனக்கமுத மாவானு தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானு தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே
தாமென்றும் மனந்தளரா தகுதியராய் உலகத்து
காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
ஓமென்று மறைபயில்வார் பிரமபுர துறைகின்ற
காமன்றன் னுடலெரி கனல்சேர்ந்த கண்ணானே
நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் திருவடியே
உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
அன்னஞ்சேர் பிரமபுர தாரமுதை எப்போதும்
பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே
சாநாளின் றிம்மனமே சங்கைதனை தவிர்ப்பிக்குங்
கோனாளு திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையு
தேனாளும் பொழிற்பிரம புரத்துறையு தீவணனை
நாநாளும் நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே
கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
பெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
விண்ணுதலா தோன்றியசீர பிரமபுர தொழவிரும்பி
எண்ணுதலாஞ் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே
எங்கேனும் யாதாகி பிறந்திடினு தன்னடியார
கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறி
கொங்கேயும் மலர்ச்சோலை குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொ தொளிர்மேனி சங்கரன்றன் தன்மைகளே
சிலையதுவெஞ் சிலையாக திரிபுரமூன் றெரிசெய்த
இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன்
அலைபுனல்சூழ் பிரமபுர தருமணியை அடிபணிந்தால்
நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே
எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்க தோளொடுதாள்
நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான்
உரித்தவரி தோலுடையான் உறைபிரம புரந்தன்னை
தரித்தமனம் எப்போதும் பெறுவார்தாம் தக்காரே
கரியானும் நான்முகனுங் காணாமை கனலுருவாய்
அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான்
தெரியாதான் இருந்துறையு திகழ்பிரம புரஞ்சேர
உரியார்தாம் ஏழுலகும் உடனாள உரியாரே
உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான்
முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியா திருவுருவன்
பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ்
சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே
தன்னடைந்தார கின்பங்கள் தருவானை தத்துவனை
கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சாய்க்காடு
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்
கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதி
தண்புகார சாய்க்காட்டெ தலைவன்றாள் சார்ந்தாரே
போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார
சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும்
வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த
பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே
நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளு தலைசு புகழ்நாமம் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்த பெறலாமே நல்வினையே
கட்டலர்த்த மலர்தூவி கைதொழுமின் பொன்னியன்ற
தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமரு தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம்
பட்டினத்து சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே
கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோ கொடியிடையை
பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பால்மதி
தாங்கினான் பூம்புகார சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
ஓங்கினார் ஓங்கினா ரெனவுரைக்கும் உலகமே
சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன்
தீந்தாகம் எரிகொளுவ செற்றுகந்தான் திருமுடிமேல்
ஓய்ந்தார மதிசூடி ஒளிதிகழும் மலைமகள்தோள்
தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே
மங்குல்தோய் மணிமாடம் மதிதவழும் நெடுவீதி
சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்
கொங்குலா வரிவண்டி னிசைபாடு மலர்க்கொன்றை
தொங்கலான் அடியார்க்கு சுவர்க்கங்கள் பொருளலவே
தொடலரிய தொருகணையாற் புரமூன்றும் எரியுண்ண
படவரவ தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையு
தடவரையால் தடவரைத்தோ ளூன்றினான் சாய்க்காட்டை
இடவகையா லடைவோமென் றெண்ணுவார கிடரிலையே
வையநீ ரேற்றானும் மலருறையும் நான்முகனும்
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன்பெருமை
தையலார் பாட்டோ வா சாய்க்காட்டெம் பெருமானை
தெய்வமா பேணாதார் தெளிவுடைமை தேறோமே
குறங்காட்டு நால்விரற் கோவணத்து கோலோவிப்போய்
அறங்காட்டுஞ் சமணரும் சாக்கியரும் அலர்தூற்று
திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்
புறங்காட்டில் ஆடலான் பூம்புகார சாய்க்காடே
நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார்
அம்பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய் பூங்காழி
சம்பந்தன் தமிழ்பகர்ந்த சாய்க்காட்டு பத்தினையும்
எம்பந்த மெனக்கருதி ஏத்துவார கிடர்கெடுமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஆக்கூர்
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
அக்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையு
தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான்
புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
நீரார வார்சடையான் நீறுடையான் ஏறுடையான்
காரார்பூங் கொன்றையினான் காதலித்த தொல்கோயில்
கூராரல் வாய்நிறை கொண்டயலே கோட்டகத்திற்
தாராமல் காக்கூரில் தான்தோன்றி மாடமே
வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தை
தோளாகம் பாகமா புல்கினான் தொல்கோயில்
வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கு
தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடர
பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்
அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
வீக்கினான் ஆடரவம் வீழ்ந்தழிந்தார் வெண்டலையென்
பாக்கினான் பலகலன்க ளாதரித்து பாகம்பெண்
ஆக்கினான் தொல்கோயில் ஆம்பலம்பூம் பொய்கைபுடை
தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான்
கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில்
விண்ணொளிசேர் மாமதி தீண்டியக்கால் வெண்மாட
தண்ணொளிசேர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சு தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
கன்னெடிய குன்றெடுத்தான் தோளடர காலூன்றி
இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்கோயில்
பொன்னடிக்கே நாடோ றும் பூவோடு நீர்சுமக்கு
தன்னடியார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
நன்மையான் நாரணனும் நான்முகனுங் காண்பரிய
தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்
இன்மையாற் சென்றிரந்தார கில்லையென்னா தீந்துவக்கு
தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
நாமருவு புன்மை நவிற்ற சமண்தேரர்
பூமருவு கொன்றையினான் புக்கமரு தொல்கோயில்
சேன்மருவு பங்கயத்து செங்கழுநீர் பைங்குவளை
தாமருவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி
மாடம் அமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழி
நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல்
பாடலிவை வல்லார கில்லையாம் பாவமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சுயம்புநாதேசுவரர் தேவியார் கட்கநேத்திரவம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புள்ளிருக்குவேளூர்
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஆமாத்தூர்
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிட
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே
தையலாள் ஒருபாகஞ் சடைமேலாள் அவளோடும்
ஐயந்தேர துழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்
மெய்சொல்லா இராவணனை மேலோடி யீடழித்து
பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே
வாசநலஞ் செய்திமையோர் நாடோ றும் மலர்தூவ
ஈசனெம் பெருமானார் இனிதாக உறையுமிடம்
யோசனைபோ பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே
மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை
ஏகாய மிட்டுகந்த எரியாடி உறையுமிடம்
ஆகா தேரோடும் இராவணனை அமரின்கண்
போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே
கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாக
பாதத்தை தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே
திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானை
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே
அத்தியின்ஈ ருரிமூடி அழகாக அனலேந்தி
பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டு பலகால தவஞ்செய்து
புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே
பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானை
புண்ணொன்ற பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே
வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவி
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன அகன்ஞால தவரோடும்
போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே
கடுத்துவருங் கங்கைதனை கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம்
விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்கா
புடைத்தவனை பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே
செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடி கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரை
கடியார்ந்த பொழில்காழி கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார கில்லையாம் மறுபிறப்பே
துன்னம்பெய் கோவணமு தோலு முடையாடை
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
அன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான்றன்
பொன்னங் கழல்பரவா பொக்கமும் பொக்கமே
கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில்
மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி
அம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மானெம்
பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே
பாம்பரை சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்
தேம்பல் இளமதியஞ் சூடிய சென்னியான்
ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன்
சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே
கோணாக பேரல்குற் கோல்வளைக்கை மாதராள்
பூணாகம் பாகமா புல்கி யவளோடும்
ஆணாகங் காதல்செய் ஆமாத்தூர் அம்மானை
காணாத கண்ணெல்லாங்
பாடல் நெறிநின்றான் பைங்கொன்றை தண்டாரே
சூடல் நெறிநின்றான் சூலஞ்சேர் கையினான்
ஆடல் நெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்றன்
வேட நெறிநில்லா வேடமும் வேடமே
சாமவரை வில்லாக சந்தித்த வெங்கணையாற்
காவல் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்
யாவருஞ் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மான
தேவர் தலைவணங்கு தேவர்க்கு தேவனே
மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்
ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானை
கூறாத நாவெல்லாங்
தாளால் அரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன்
நாளாதிரை யென்றே நம்பன்றன் நாமத்தால்
ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானை
கேளா செவியெல்லாங்
புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர்
உள்ளு மவன்பெருமை ஒப்பளக்கு தன்மையதே
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மானெம்
வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே
பிச்சை பிறர்பெ பின்சார கோசார
கொச்சை புலால்நாற ஈருரிவை போர்த்துகந்தான்
அச்சந்தன் மாதேவி கீந்தான்றன் ஆமாத்தூர்
நிச்ச னினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே
ஆட லரவசைத்த ஆமாத்தூர் அம்மானை
கோட லிரும்புறவின் கொச்சை வயத்தலைவன்
நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்
பாட லிவைவல்லார கில்லையாம் பாவமே
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் அழகியநாதேசுவரர் தேவியார் அழகியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கைச்சினம்
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான்
மையுலா மணிமிடற்றன் மறைவிளங்கு பாடலான்
நெய்யுலா மூவிலைவே லேந்தி நிவந்தொளிசேர்
கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே
விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான்
படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான்
நடமல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான்
கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே
பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடுஞ்
சூடலான் வெண்மதி துன்று கரந்தையொடும்
ஆடலான் அங்கை அனலேந்தி யாடரவ
காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே
பண்டமரர் கூடி கடைந்த படுகடல்நஞ்
சுண்டபிரான் என்றிறைஞ்சி உம்பர் தொழுதேத்த
விண்டவர்கள் தொன்னகரம் மூன்றுடனே வெந்தவி
கண்ட பிரான் மேவியுறை கோயில் கைச்சினமே
தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினன்
வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான்
சாய்ந்தமரர் வேண்ட தடங்கடல்நஞ் சுண்டனங்கை
காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே
நஞ்சுண்டுஅனங்கை எனப்பிரித்து அனங்கை என்பதினுக்கு அனங்கனையெனப்பொருள் கொள்க
மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான்
அங்கையோர் வெண்டலையான் ஆடரவம் பூண்டுகந்தான்
திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேற்
கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே
வரியரவே நாணாக மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள் எய்துகந்த எம்பெருமான்
பொரிசுடலை யீ புறங்காட்டான் போர்த்ததோர்
கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே
போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்
மாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன்
நீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடுங்
காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே
மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரவனும்
எண்ணறியா வண்ணம் எரியுருவ மாயபிரான்
பண்ணிசையா லேத்த படுவான்றன் நெற்றியின்மேற்
கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
தண்வயல்சூழ் காழி தமிழ்ஞான சம்பந்தன்
கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தை
பண்ணிசையா லேத்தி பயின்ற இவைவல்லார்
விண்ணவரா யோங்கி வியனுலக மாள்வாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கைச்சினநாதர் தேவியார் வேள்வளையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநாலூர்த்திருமயானம்
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்றன் அடிநினைந்து
மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே
சூடும் பிறைச்சென்னி சூழ்கா டிடமாக
ஆடும் பறைசங் கொலியோ டழகாக
நாடுஞ் சிறப்போவா நாலூர் மயனத்தை
பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே
கல்லால் நிழல்மேவி காமுறுசீர் நால்வர்க்கன்
றெல்லா அறனுரையும் இன்னருளாற் சொல்லினான்
நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தை
சொல்லா தவரெல்லாஞ் செல்லாதார் தொன்னெறிக்கே
கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான்
நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்திற்
சூலத்தா னென்பார்பாற் சூழாவா தொல்வினையே
கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன்
பிறையார் வளர்சடையான் பெண்பாகன் நண்பாய
நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம்
இறையானென் றேத்துவார கெய்துமாம் இன்பமே
கண்ணார் நுதலான் கனலா டிடமாக
பண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதி
நண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை
நண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே
கண்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான்
பெண்பாவு பாகத்தான் நாகத்தோ லாகத்தான்
நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை
எண்பாவு சிந்தையார கேலா இடர்தானே
பத்து தலையோனை பா தொருவிரலால்
வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான்
நத்தின் ஒலியோவா நாலூர் மயானத்தென்
அத்தன் அடிநினைவார கல்லல் அடையாவே
மாலோடு நான்முகனும் நேட வளரெரியாய்
மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடும் ஆறங்கம் நாலூர் மயானத்தெம்
பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே
துன்பாய மாசார் துவராய போர்வையார்
புன்பேச்சு கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்
நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே
இன்பா யிருந்தானை யேத்துவார கின்பமே
ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான்
நாலு மறையோது நாலூர் மயானத்தை
சீலம் புகழாற் சிறந்தேத்த வல்லாரு
கேலும் புகழ்வான தின்பா யிருப்பாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பலாசவனேசுவரர் தேவியார் பெரியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமயிலாப்பூர் பூம்பாவைத்திருப்பதிகம்
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்
மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலை
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீ சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தே திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலை
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலை கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்
மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலை
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடு
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்
மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசி
கடலாட்டு கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடலானே றூரும் அடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்
மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலை
கலிவிழா கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழா பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழா காணாதே போதியோ பூம்பாவாய்
தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலை கபாலீச்சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணார காணாதே போதியோ பூம்பாவாய்
நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியை
கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்பு காணாதே போதியோ பூம்பாவாய்
உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையை போர்க்கும்
இருஞ்சா கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்
கானமர் சோலை கபாலீச்சரம் அமர்ந்தான்
தேனமர் பூம்பாவை பாட்டாக செந்தமிழான்
ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
வானசம் பந தவரோடும் வாழ்வாரே
இது எலும்பு பெண்ணாக ஓதியருளிய பதிகம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கபாலீசுவரர் தேவியார் கற்பகவல்லியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவெண்காடு
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மை தோயாவா தீவினையே
மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதியிரவி
எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலை குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறை
கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே
தண்மதியும் வெய்யரவு தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோத பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே
சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனை பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனு கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே
பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாட கடல்முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே
கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்
றுள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டை
பண்பொலிசெ தமிழ்மாலை பாடியப திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலி புகுவாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சுவேதாரணியேசுவரர் தேவியார் பிரமவித்தியாநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

சீகாழி
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர்
பாடி யாடிய வோசை நாடொறும்
கண்ணின் நேரயலே பொலியுங் கடற்காழி
பெண்ணின் நேரொரு பங்கு டைப்பெரு
மானை யெம்பெரு மானென் றென்றுன்னும்
அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே
மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல்
மோதி மீதெறி சங்கம் வங்கமுங்
கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி
வண்ட லம்பிய கொன்றை யானடி
வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே
நாடெ லாமொளி யெய்த நல்லவர்
நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்
காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழி
தோடு லாவிய காது ளாய்சுரி
சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும்
வேடங் கொண்டவர் கள்வினைநீங்க லுற்றாரே
மையி னார்பொழில் சூழ நீழலில்
வாச மார்மது மல்க நாடொறுங்
கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி
ஐய னேயர னேயென் றாதரி
தோதி நீதியு ளேநி னைப்பவர்
உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே
மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர்
வந்து வந்தொளிர் நித்தி லம்விழ
கலிக டிந்தகை யார்மருவுங் கலிக்காழி
வலிய காலனை வீட்டி மாணிதன்
இன்னு யிரளி தானை வாழ்த்திட
மெலியு தீவினை நோயவைமே வுவர்வீடே
மற்று மிவ்வுல கத்து ளோர்களும்
வானு ளோர்களும் வந்து வைகலுங்
கற்ற சிந்தைய ராய்க்கருதுங் கலிக்காழி
நெற்றி மேலமர் கண்ணி னானைநி
னைந்தி ருந்திசை பாடுவார் வினை
செற்ற மாந்தரெ னத்தெளிமின்கள் சிந்தையுளே
தான லம்புரை வேதி யரொடு
தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்
கான லின்விரை சேரவிம்முங் கலிக்காழி
ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற
வாகி நின்றவொ ருவனே யென்றென்
றானலங் கொடுப்பா ரருள்வேந்த ராவாரே
மைத்த வண்டெழு சோலை யாலைகள்
சாலி சேர்வய லார வைகலுங்
கத்து வார்கடல் சென்றுலவுங் கலிக்காழி
அத்த னேயர னேய ரக்கனை
யன்ற டர்த்துக தாயு னகழல்
பத்த ராய்ப்பர வும்பயனீங்கு நல்காயே
பரும ராமொடு தெங்கு பைங்கத
லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்
கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழி
திருவின் நாயக னாய மாலொடு
செய்ய மாமலர செல்வ னாகிய
இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே
பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி
யாது வண்டுகி லாடை போர்த்தவர்
கண்டு சேரகிலா ரழகார் கலிக்காழி
தொண்டை வாயுமை யோடுங் கூடிய
வேடனே சுட லைப்பொ டியணி
அண்ட வாணனென் பார்க்கடையா அல்லல்தானே
பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும்
உண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்
கயலு லாம்வயல் சூழ்ந்தழகார் கலிக்காழி
நயன டன்கழ லேத்தி வாழ்த்திய
ஞான சம்பந்தன் செந்தமிழ் உரை
உயரு மாமொழி வாருலக துயர்ந்தாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஆமாத்தூர்
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
குன்ற வார்சிலை நாண ராவரி
வாளி கூரெரி காற்றின் மும்மதில்
வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை
சூளிகை கெதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே
பரவி வானவர் தான வர்பல
ருங்க லங்கிட வந்த கார்விடம்
வெருவ உண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே
கரவின் மாமணி பொன்கொ ழித்திழி
சந்து காரகில் தந்து பம்பைநீர்
அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே
பம்பை என்பது ஒரு நதி
நீண்ட வார்சடை தாழ நேரிழை
பாட நீறுமெய் பூசி மாலயன்
மாண்ட வார்சுடலை நடமாடும் மாண்பதுவென்
பூண்ட கேழல்ம ருப்பரா விரி
கொன்றை வாளரி யாமை பூணென
ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே
சேலின் நேரன கண்ணி வெண்ணகை
மான்வி ழித்தி ருமாதை பாகம்வை
தேல மாதவம் நீமுயல்கின்ற வேடமிதென்
பாலின் நேர்மொழி மங்கை மார்நட
மாடி யின்னிசை பாட நீள்பதி
ஆலை சூழ்கழனி ஆமாத்தூர் அம்மானே
தொண்டர் வந்துவ ணங்கி மாமலர்
தூவி நின்கழ லேத்து வாரவர்
உண்டியால் வருந்த இரங்காத தென்னைகொலாம்
வண்ட லார்கழ னிக்க லந்தும
லர்ந்த தாமரை மாதர் வாண்முகம்
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே
ஓதி யாரண மாய நுண்பொருள்
அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி
நீதி யாலநீ ழல்உரைக்கின்ற நீர்மையதென்
சோதியே சுடரே சுரும் பமர்
கொன்றை யாய்திரு நின்றி யூருறை
ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே
மங்கை வாணுதன் மான்ம னத்திடை
வாடி யூடம ணங்க மழ்சடை
கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம்
பங்க யமது வுண்டு வண்டிசை
பாட மாமயி லாட விண்முழ
வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே
நின்ற டர்த்திடும் ஐம்பு லன்னிலை
யாத வண்ணம்நி னைந்து ளத்திடை
வென்றடர தொருபால் மடமாதை விரும்புதலென்
குன்றெ டுத்தநி சாசரன் திரள்
தோளி ருபது தான் நெரிதர
அன்றடர துகந்தாய் ஆமாத்தூர் அம்மானே
செய்ய தாமரை மேலி ருந்தவ
னோடு மாலடி தேட நீண்முடி
வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென்
தைய லாளொடு பிச்சை கிச்சைத
யங்கு தோலரை யார்த்த வேடங்கொண்
டைய மேற்றுகந்தாய் ஆமாத்தூர் அம்மானே
புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி
நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி
பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென்
முத்தை வென்ற முறுவ லாளுமை
பங்க னென்றிமை யோர் பரவிடும்
அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே
வாடல் வெண்டலை மாலை யார்த்தும
யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம்
ஆடல் மேயதென்னென் றாமாத்தூர் அம்மானை
கோடல் நாகம் அரும்பு பைம்பொழிற்
கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்
பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே
ஆமாத்தூர் என்பது பசுக்களுக்கு தாயகமானவூர் என்றும்
ஆமாதாவூர் எனற்பாலது ஆமாத்தூர் என மருவி நின்ற தென்றும் பெரியோர்களாற் சொல்ல
கேள்வி பசு
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்களர்
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
நீருளார் கயல் வாவி சூழ்பொழில்
நீண்ட மாவய லீண்டு மாமதில்
தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள்
ஊரு ளாரிடு பிச்சை பேணும்
ஒருவனே யொளிர் செஞ்ச டைம்மதி
ஆரநின் றவனே அடைந்தார கருளாயே
தோளின் மேலொளி நீறு தாங்கிய
தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய
தாளினார் வளரு தவமல்கு திருக்களருள்
வேளின் நேர்விச யற்க ருள்புரி
வித்த காவிரும் பும்ம டியாரை
ஆளுக தவனே அடைந்தார கருளாயே
பாட வல்லநல் மைந்த ரோடு
பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
சேடர் வாழ்பொழில் சூழ்செழுமாட திருக்களருள்
நீட வல்ல நிமல னேயடி
நிரை கழல்சிலம் பார்க்க மாநடம்
ஆடவல் லவனே அடைந்தார கருளாயே
அம்பின் நேர்தடங் கண்ணி னாருடன்
ஆடவர் பயில் மாட மாளிகை
செம்பொனார் பொழில்சூழ தழகாய திருக்களருள்
என்பு பூண்டதோர் மேனி யெம்மிறை
வாஇ ணையடி போற்றி நின்றவர
கன்புசெய் தவனே அடைந்தார கருளாயே
கொங்கு லாமலர சோலை வண்டினங்
கிண்டி மாமது வுண்டி சைசெ
தெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்
மங்கை தன்னொடுங் கூடிய மண
வாளனே பிணை கொண்டொர் கைத்தல
தங்கையிற் படையாய் அடைந்தார கருளாயே
கோல மாமயில் ஆல கொண்டல்கள்
சேர்பொ ழிற்குல வும்வ யலிடை
சேலிளங் கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள்
நீல மேவிய கண்டனே நிமிர்
புன்ச டைப்பெரு மானெ னப்பொலி
ஆலநீழ லுளாய் அடைந்தார கருளாயே
தம்ப லம்மறி யாதவர் மதில்
தாங்கு மால்வரை யால ழலெழ
திண்பலங் கெடுத்தாய் திகழ்கின்ற திருக்களருள்
வம்ப லர்மலர் தூவி நின்னடி
வானவர் தொழ கூத்து கந்துபே
ரம்பல துறைவாய் அடைந்தார கருளாயே
குன்ற டுத்தநன் மாளிகை கொடி
மாட நீடுயர் கோபு ரங்கள்மேல்
சென்றடு துயர்வான் மதிதோயு திருக்களருள்
நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள்
தோளி னாலெடு தான்றன் நீள்முடி
அன்றடர துகந்தாய் அடைந்தார கருளாயே
பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர்
பாட லாடலொ டார வாழ்பதி
தெண்ணிலா மதியம் பொழில்சேரு திருக்களருள்
உண்ணி லாவிய வொருவ னேயிரு
வர்க்கு நின்கழல் காட்சி யாரழல்
அண்ணலாய எம்மான் அடைந்தார கருளாயே
பாக்கி யம்பல செய்த பத்தர்கள்
பாட்டொ டும்பல பணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார் சிறந்தாரு திருக்களருள்
வாக்கின் நான்மறை யோதி னாயமண்
தேரர் சொல்லிய சொற்க ளானபொய்
ஆக்கி நின்றவனே அடைந்தார கருளாயே
இந்து வந்தெழு மாட வீதியெ
ழில்கொள் காழி நகர கவுணியன்
செந்துநேர் மொழியார் அவர்சேரு திருக்களருள்
அந்தி யன்னதொர் மேனி யானை
அமரர் தம்பெரு மானை ஞானசம்
பந்தன்சொல் லிவைப தும்பாட தவமாமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் களர்முளையீசுவரர் தேவியார் அழகேசுவரியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கோட்டாறு
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
கருந்த டங்கண்ணின் மாத ராரிசை
செ காரதிர் கின்ற பூம்பொழில்
குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெரு மானை யுள்கி
இணையடி தொழு தேத்தும் மாந்தர்கள்
வருந்துமா றறியார் நெறிசேர்வர் வானூடே
நின்று மேய்ந்து நினைந்து மாகரி
நீரொ டும்மலர் வேண்டி வான்மழை
குன்றின் நேர்ந்துகுத்தி பணிசெய்யுங் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பிரான் கழ
லேத்தி வானர சாள வல்லவர்
பொன்று மாறறியார் புகழார்ந்த புண்ணியரே
விரவி நாளும் விழாவி டைப்பொலி
தொண்டர் வந்து வியந்து பண்செ
குரவ மாரும்நீழற் பொழில்மல்கு கோட்டாற்றில்
அரவ நீள்சடை யானை யுள்கிநின்
றாத ரித்துமுன் அன்பு செய்தடி
பரவுமாறு வல்லார் பழிபற் றறுப்பாரே
அம்பின் நேர்விழி மங்கை மார்பலர்
ஆட கம்பெறு மாட மாளிகை
கொம்பி னேர்துகி லின்கொடியாடு கோட்டாற்றில்
நம்பனே நடனே நல திகழ்
நாதனே யென்று காதல் செய்தவர்
தம்பின் நேர்ந்தறியார் தடுமாற்ற வல்வினையே
பழைய தம்மடி யார்துதி செ
பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழ
குழலும் மொந்தை விழாவொலிசெய்யுங் கோட்டாற்றில்
கழலும் வண்சிலம் பும்மொ லிசெ
கானி டைக்கண மேத்த ஆடிய
அழக னென்றெழுவா ரணியாவர் வானவர்க்கே
பஞ்சின் மெல்லடி மாத ராடவர்
பத்தர் சித்தர்கள் பண்பு வைகலுங்
கொஞ்சி இன்மொழியாற் றொழின்மல்கு கோட்டாற்றில்
மஞ்ச னேமணி யேமணி மிடற்
றண்ண லேயென வுண்ணெ கிழ்ந்தவர்
துஞ்சு மாறறியார் பிறவாரி தொன்னிலத்தே
கலவ மாமயி லாளொர் பங்கனை
கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை
குலவு மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்
நிலவ மாமதி சேர்ச டையுடை
நின்ம லாவென வுன்னு வாரவர்
உலவு வானவரின் உயர்வாகுவ துண்மையதே
வண்ட லார்வயற் சாலி யாலைவ
ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை
கொண்ட லார்கொணர தங்குலவுந்திகழ் கோட்டாற்றில்
தொண்டெ லாந்துதி செய்ய நின்ற
தொழில னேகழ லால ரக்கனை
மிண்டெ லாந்தவிர தென்னுகந்திட்ட வெற்றிமையே
கருதி வந்தடி யார்தொ ழுதெழ
கண்ண னோடயன் தேட ஆனையின்
குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில்
விருதி னான்மட மாதும் நீயும்வி
யப்பொ டும்முயர் கோயில் மேவிவெள்
ளெருதுக தவனே இரங்காயுன தின்னருளே
உடையி லாதுலழ் கின்ற குண்டரும்
ஊணரு தவ தாய சாக்கியர்
கொடையிலார் மனத்தார் குறையாருங் கோட்டாற்றில்
படையி லார்மழு வேந்தி யாடிய
பண்ப னேயிவ ரென்கொ லோநுனை
அடைகிலாத வண்ணம் அருளாயுன் அடியவர்க்கே
கால னைக்கழ லாலு தைத்தொரு
காம னைக்கன லாக சீறிமெய்
கோல வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில்
மூல னைமுடி வொன் றிலாதவெம்
முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய
மாலைபத்தும் வல்லார கெளிதாகும் வானகமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஐராபதேசுவரர் தேவியார் வண்டமர்பூங்குழலம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புறவார் பனங்காட்டூர்
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
விண்ண மர்ந்தன மும்ம தில்களை
வீழ வெங்கணை யாலெய் தாய்வரி
பண்ணமர தொலிசேர் புறவார் பனங்காட்டூர
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய
பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடை
கண்ண மர்ந்தவ னேகலந்தார கருளாயே
நீடல் கோடல் அலரவெண் முல்லை
நீர்ம லர்நிரை தாத ளஞ்செ
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர
துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே அடைந்தார கருளாயே
வாளை யுங்கய லும்மி ளிர்பொய்கை
வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர
பூளை யுந்நறுங் கொன்றை யும்மத
மத்த மும்புனை வாய்க ழலிணை
தாளையே பரவு தவத்தார கருளாயே
மேய்ந்தி ளஞ்செந்நெல் மென்கதிர் கவ்வி
மேற்ப டுகலின் மேதி வைகறை
பாய்ந்த தண்பழன புறவார் பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடி யாடும்
அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
சாய்ந்தடி பரவு தவத்த்தார கருளாயே
செங்க யல்லொடு சேல்செ ருச்செ
சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர
கங்கை யும்மதி யுங்க மழ்சடை
கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
அங்கை யாடலனே அடியார கருளாயே
நீரி னார்வரை கோலி மால்கடல்
நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியா புறவார் பனங்காட்டூர
காரி னார்மலர கொன்றை தாங்கு
கடவு ளென்றுகை கூப்பி நாடொறுஞ்
சீரினால் வணங்கு திறத்தார கருளாயே
கைய ரிவையர் மெல்வி ரல்லவை
காட்டி யம்மலர காந்த ளங்குறி
பையரா விரியும் புறவார் பனங்காட்டூர்
மெய்ய ரிவையோர் பாக மாகவும்
மேவி னாய்கழ லேத்தி நாடொறும்
பொய்யிலா அடிமை புரிந்தார கருளாயே
தூவி யஞ்சிறை மென்ன டையன
மல்கி யொல்கிய தூமலர பொய்கை
பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்
மேவி யந்நிலை யாய ரக்கன
தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
ஏவிய பெருமான் என்பவர கருளாயே
அந்தண் மாதவி புன்னை நல்ல
அசோக மும்மர விந்த மல்லிகை
பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன்
என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம் ஆயவனே தவத்தார கருளாயே
நீண மார்முரு குண்டு வண்டினம்
நீல மாமலர் கவ்வி நேரிசை
பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்
நாண ழிந்துழல் வார்ச மணரும்
நண்பில் சாக்கிய ருந்ந கத்தலை
ஊணுரி யவனே உகப்பார கருளாயே
மையி னார்மணி போல்மி டற்றனை
மாசில் வெண்பொடி பூசும் மார்பனை
பைய தேன்பொழில் சூழ்புறவார் பனங்காட்டூர்
ஐய னைப்புக ழான காழியுள்
ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பனங்காட்டீசுவரர் தேவியார் திருப்புருவமின்னாளம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புகலி
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
உருவார்ந்த மெல்லியலோர் பாகமுடையீ ரடைவோர்க்கு
கருவார்ந்த வானுலகங் காட்டிக்கொடுத்தல் கருத்தானீர்
பொருவார்ந்த தெண்கடலொண் சங்கந்திளைக்கும் பூம்புகலி
திருவார்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே
நீரார்ந்த செஞ்சடையீர் நிரையார்கழல்சேர் பாதத்தீர்
ஊரார்ந்த சில்பலியீர் உழைமானுரிதோ லாடையீர்
போரார்ந்த தெண்டிரைசென் றணையுங்கானல் பூம்புகலி
சீரார்ந்த கோயிலே கோயிலாக சேர்ந்தீரே
அழிமல்கு பூம்புனலும் அரவுஞ்சடைமே லடைவெய்த
மொழிமல்கு மாமறையீர் கறையார்கண்ட தெண்தோளீர்
பொழின்மல்கு வண்டினங்கள் அறையுங்கானற் பூம்புகலி
எழில்மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே
கையிலார்ந்த வெண்மழுவொன் றுடையீர்கடிய கரியின்தோல்
மயிலார்ந்த சாயல்மட மங்கைவெருவ மெய்போர்த்தீர்
பயிலார்ந்த வேதியர்கள் பதியாய்விளங்கும் பைம்புகலி
எயிலார்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே
நாவார்ந்த பாடலீர் ஆடலரவம் அரைக்கார்த்தீர்
பாவார்ந்த பல்பொருளின் பயன்களானீர் அயன்பேணும்
பூவார்ந்த பொய்கைகளும் வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலி
தேவார்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே
மண்ணார்ந்த மணமுழவ ததும்பமலையான் மகளென்னும்
பெண்ணார்ந்த மெய்மகிழ பேணியெரிகொண் டாடினீர்
விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலி
கண்ணார்ந்த கோயிலே கோயிலா கலந்தீரே
களிபுல்கு வல்லவுணர் ஊர்மூன்றெரி கணைதொட்டீர்
அளிபுல்கு பூமுடியீர் அமரரேத்த அருள்செய்தீர்
தெளிபுல்கு தேனினமும் மலருள்விரைசேர் திண்புகலி
ஒளிபுல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே
பரந்தோங்கு பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழி
டுரந்தோன்றும் பாடல்கே டுகவையளித்தீர் உகவாதார்
புரந்தோன்று மும்மதிலு மெரியச்செற்றீர் பூம்புகலி
வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
சலந்தாங்கு தாமரைமேல் அயனுந்தரணி யளந்தானுங்
கலந்தோங்கி வந்திழிந்துங் காணாவண்ணங் கனலானீர்
புலந்தாங்கி ஐம்புலனுஞ் செற்றார்வாழும் பூம்புகலி
நலந்தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே
நெடிதாய வன்சமணும் நிறைவொன்றில்லா சாக்கியருங்
கடிதாய கட்டுரையாற் கழறமேலோர் பொருளானீர்
பொடியாரும் மேனியினீர் புகலிமறையோர் புரிந்தேத்த
வடிவாருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
ஒப்பரிய பூம்புகலி ஓங்குகோயில் மேயானை
அப்பரிசில் பதியான அணிகொள்ஞான சம்பந்தன்
செப்பரிய தண்டமிழால் தெரிந்தபாட லிவைவல்லார்
எப்பரிசில் இடர்நீங்கி இமையோருலக திருப்பாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருத்தலைச்சங்காடு
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
நலச்சங்க வெண்குழையு தோடும்பெய்தோர் நால்வேதஞ்
சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லால் கருதாதீர்
குலைச்செங்கா பைங்கமுகின் குளிர்கொள்சோலை குயிலாலு
தலைச்சங்கை கோயிலே கோயிலாக தாழ்ந்தீரே
துணிமல்கு கோவணமு தோலுங்காட்டி தொண்டாண்டீர்
மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லாம் மாண்பானீர்
பிணிமல்கு நூல்மார்பர் பெரியோர்வாழு தலைச்சங்கை
அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே
பிணி பிணித்தல்
சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளேற் றூர்தியீர்
நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றே
தார்கொண்ட நூல்மார்பர் தக்கோர்வாழு தலைச்சங்கை
ஏர்கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே
வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள்
ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர் தலைச்சங்கை
கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசல் கொடித்தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர்
நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமேல் நீரேற்றீர்
ஆலஞ்சேர் தண்கானல் அன்னமன்னு தலைச்சங்கை
கோலஞ்சேர் கோயிலே கோயிலா கொண்டீரே
நிலநீரொ டாகாசம் அனல்காலாகி நின்றைந்து
புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்செய்யார் போற்றோவார்
சலநீத ரல்லாதார் தக்கோர்வாழு தலைச்சங்கை
நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே
அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்தி
கொடிபுல்கு மென்சாயல் உமையோர்பாகங் கூடினீர்
பொடிபுல்கு நூல்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கை
கடிபுல்கு கோயிலே கோயிலா கலந்தீரே
திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கை கோமானை
வரையார்ந்த தோளடர விரலாலூன்றும் மாண்பினீர்
அரையார்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை
நிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே
பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும்
போயோங்கி காண்கிலார் புறம்நின்றோரார் போற்றோவார்
தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வ தலைச்சங்கை
சேயோங்கு கோயிலே கோயிலாக சேர்ந்தீரே
அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கியர்
தொலையாதங் கலர்தூற்ற தோற்றங்காட்டி யாட்கொண்டீர்
தலையான நால்வேத தரித்தார்வாழு தலைச்சங்கை
நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே
நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன்
குளிரு தலைச்சங்கை ஓங்குகோயில் மேயானை
ஒளிரும் பிறையானை யுரைத்தபாட லிவைவல்லார்
மிளிரு திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் செங்கணாயகேசுவரர் தேவியார் சௌந்தரியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவிடைமருதூர்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை
தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர்
எங்குமெழிலார் மறையோர்கள் முறையாலேத்த இடைமருதில்
மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்
போரார்ந்த வெண்மழுவொன் றுடையீர் பூதம்பாடலீர்
ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீர் இடைமருதில்
சீரார்ந்த கோயிலே கோயிலாக சேர்ந்தீரே
அழல்மல்கும் அங்கையி லேந்திப்பூதம் அவைபாட
சுழல்மல்கும் ஆடலீர் சுடுகாடல்லாற் கருதாதீர்
எழில்மல்கும் நான்மறையோர் முறையாலேத்த இடைமருதில்
பொழில்மல்கு கோயிலே கோயிலாக பொலிந்தீரே
பொல்லா படுதலையொன் றேந்திப்புறங்கா டாடலீர்
வில்லாற் புரமூன்றும் எரித்தீர்விடையார் கொடியினீர்
எல்லா கணங்களும் முறையாலேத்த இடைமருதில்
செல்வாய கோயிலே கோயிலாக சேர்ந்தீரே
வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டி
பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெ
திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாக புக்கீரே
சலமல்கு செஞ்சடையீர் சாந்தநீறு பூசினீர்
வலமல்கு வெண்மழுவொன் றேந்திமயான தாடலீர்
இலமல்கு நான்மறையோ ரினிதாயேத்த இடைமருதில்
புலமல்கு கோயிலே கோயிலாக பொலிந்தீரே
புனமல்கு கொன்றையீர் புலியின்அதளீர் பொலிவார்ந்த
சினமல்கு மால்விடையீர் செய்யீர்கரிய கண்டத்தீர்
இனமல்கு நான்மறையோ ரேத்துஞ்சீர்கொள் இடைமருதில்
கனமல்கு கோயிலே கோயிலா கலந்தீரே
சிலையுய்த்த வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திறலரக்கன்
தலைபத்து திண்டோ ளும் நெரித்தீர் தையல்பாகத்தீர்
இலைமொய்த்த தண்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த இடைமருதில்
நலமொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே
மறைமல்கு நான்முகனும் மாலும்அறியா வண்ணத்தீர்
கறைமல்கு கண்டத்தீர் கபாலமேந்து கையினீர்
அறைமல்கு வண்டினங்கள் ஆலுஞ்சோலை இடைமருதில்
நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே
சின்போர்வை சாக்கியரும் மாசுசேருஞ் சமணரு
துன்பாய கட்டுரைகள் சொல்லியல்லல் தூற்றவே
இன்பாய அந்தணர்கள் ஏத்தும்ஏர்கொள் இடைமருதில்
அன்பாய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே
கல்லின் மணிமாட கழுமலத்தார் காவலவன்
நல்ல அருமறையான் நற்றமிழ்ஞான சம்பந்தன்
எல்லி இடைமருதில் ஏத்துபாட லிவைபத்துஞ்
சொல்லு வார்க்குங் கேட்பார்க்கு துயரமில்லையே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநல்லூர்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பெண்ணமரு திருமேனி யுடையீர்பிறங்கு சடைதாழ
பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி அங்கையில்
கொலைமல்கு வெண்மழுவும் அனலுமேந்துங் கொள்கையீர்
சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர்
மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழ
பறைநவின்ற பாடலோ டாடல்பேணி பயில்கின்றீர்
சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
கூனமரும் வெண்பிறையும் புனலுஞ்சூடுங் கொள்கையீர்
மானமரும் மென்விழியாள் பாகமாகும் மாண்பினீர்
தேனமரும் பைம்பொழிலின் வண்டுபாடு திருநல்லூர்
வானமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
நிணங்கவரும் மூவிலையும் அனலுமேந்தி நெறிகுழலாள்
அணங்கமரும் பாடலோ டாடல்மேவும் அழகினீர்
திணங்கவரும் ஆடரவும் பிறையுஞ்சூடி திருநல்லூர்
மணங்கமழுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ
வார்மருவு மென்முலையாள் பாகமாகும் மாண்பினீர்
தேர்மருவு நெடுவீதி கொடிகளாடு திருநல்லூர்
ஏர்மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே
ஊன்தோயும் வெண்மழுவும் அனலுமேந்தி உமைகாண
மீன்தோயு திசைநிறைய ஓங்கியாடும் வேடத்தீர்
தேன்தோயும் பைம்பொழிலின் வண்டுபாடு திருநல்லூர்
வான்தோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
காதமரும் வெண்குழையீர் கறுத்தவரக்கன் மலையெடுப்ப
மாதமரும் மென்மொழியாள் மறுகும்வண்ணங் கண்டுகந்தீர்
தீதமரா அந்தணர்கள் பரவியேத்து திருநல்லூர்
மாதமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
போதின்மேல் அயன்திருமால் போற்றியும்மை காணாது
நாதனே இவனென்று நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர்
தீதிலா அந்தணர்கள் தீமூன்றோம்பு திருநல்லூர்
மாதராள் அவளோடு மன்னுகோயில் மகிழ்ந்தீரே
பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன்
றல்லாதார் அறவுரைவி டடியார்கள் போற்றோவா
நல்லார்கள் அந்தணர்கள் நாளுமேத்து திருநல்லூர்
மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல்சூழ் திருநல்லூர
பந்தணவு மெல்விரலாள் பங்கன்றன்னை பயில்பாடல்
சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகஞ்சேர திருப்பாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்குடவாயில்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
கலைவாழும் அங்கையீர் கொங்கையாருங் கருங்கூந்தல்
அலைவாழுஞ் செஞ்சடையில் அரவும்பிறையும் அமர்வித்தீர்
குலைவாழை கமுகம்பொன் பவளம்பழுக்குங் குடவாயில்
நிலைவாழுங் கோயிலே கோயிலாக நின்றீரே
அடியார்ந்த பைங்கழலுஞ் சிலம்புமார்ப்ப அங்கையில்
செடியார்ந்த வெண்டலையொன் றேந்தியுலகம் பலிதேர்வீர்
குடியார்ந்த மாமறையோர் குலாவியேத்துங் குடவாயிற்
படியார்ந்த கோயிலே கோயிலாக பயின்றீரே
கழலார்பூம் பாதத்தீர் ஓதக்கடலில் விடமுண்டன்
றழலாருங் கண்டத்தீர் அண்டர்போற்றும் அளவினீர்
குழலார வண்டினங்கள் கீதத்தொலிசெய் குடவாயில்
நிழலார்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே
மறியாருங் கைத்தலத்தீர் மங்கைபாக மாகச்சேர
தெறியாரும் மாமழுவும் எரியுமேந்துங் கொள்கையீர்
குறியார வண்டினங்கள் தேன்மிழற்றுங் குடவாயில்
நெறியாருங் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே
இழையார்ந்த கோவணமுங் கீளும்எழிலார் உடையாக
பிழையாத சூலம்பெய் தாடல்பாடல் பேணினீர்
குழையாரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த குடவாயில்
விழவார்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே
அரவார்ந்த திருமேனி யானவெண்ணீ றாடினீர்
இரவார்ந்த பெய்பலிகொண் டிமையோரேத்த நஞ்சுண்டீர்
குரவார்ந்த பூஞ்சோலை வாசம்வீசுங் குடவாயிற்
திருவார்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே
பாடலார் வாய்மொழியீர் பைங்கண்வெள்ளே றூர்தியீர்
ஆடலார் மாநடத்தீர் அரிவைபோற்றும் ஆற்றலீர்
கோடலார் தும்பிமுரன் றிசைமிழற்றுங் குடவாயில்
நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே
கொங்கார்ந்த பைங்கமல தயனுங்குறளாய் நிமிர்ந்தானும்
அங்காந்து தள்ளாட அழலாய்நிமிர்ந்தீர் இலங்கைக்கோன்
தங்காதல் மாமுடியு தாளுமடர்த்தீர் குடவாயில்
பங்கார்ந்த கோயிலே கோயிலாக பரிந்தீரே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
தூசார்ந்த சாக்கியரு தூய்மையில்லா சமணரும்
ஏசார்ந்த புன்மொழிநீ தெழில்கொள்மாட குடவாயில்
ஆசாரஞ் செய்மறையோர் அளவிற்குன்றா தடிபோற்ற
தேசார்ந்த கோயிலே கோயிலாக சேர்ந்தீரே
நளிர்பூ திரைமல்கு காழிஞான சம்பந்தன்
குளிர்பூங் குடவாயிற் கோயில்மேய கோமானை
ஒளிர்பூ தமிழ்மாலை உரைத்தபாட லிவைவல்லார்
தளர்வான தானொழி தகுசீர்வான திருப்பாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

சீகாழி
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
நலங்கொள் முத்தும் மணியும் அணியு திரளோதங்
கலங்கள் தன்னில் கொண்டு கரைசேர் கலிக்காழி
வலங்கொள் மழுவொன் றுடையாய் விடையா யெனவேத்தி
அலங்கல் சூட்ட வல்லார கடையா அருநோயே
ஊரார் உவரி சங்கம் வங்கங் கொடுவந்து
காரார் ஓதங் கரைமேல் உயர்த்துங் கலிக்காழி
நீரார் சடையாய் நெற்றி கண்ணா என்றென்று
பேரா யிரமும் பிதற்ற தீரும் பிணிதானே
வடிகொள் பொழிலில் மிழலை வரிவண் டிசைசெ
கடிகொள் போதிற் றென்றல் அணையுங் கலிக்காழி
முடிகொள் சடையாய் முதல்வா வென்று முயன்றேத்தி
அடிகை தொழுவார கில்லை அல்லல் அவலமே
மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங்
கனைக்குங் கடலுள் ஓதம் ஏறுங் கலிக்காழி
பனைக்கா பகட்டீ ருரியாய் பெரியாய் யெனப்பேணி
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே
பருதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் கலிக்காழி
சுருதி மறைநான் கான செம்மை தருவானை
கருதி யெழுமின் வழுவா வண்ண துயர்போமே
மந்த மருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டு
கந்த மருவ வரிவண் டிசைசெய் கலிக்காழி
பந்தம் நீங்க அருளும் பரனே எனவேத்தி
சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பாரே
புயலார் பூமி நாமம் ஓதி புகழ்மல
கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழி
பயில்வான் றன்னை பத்தி யார தொழுதேத்த
முயல்வார் தம்மேல் வெம்மை கூற்ற முடுகாதே
அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்கு
கரக்ககில்லா தருள்செய் பெருமான் கலிக்காழி
பரக்கும் புகழான் தன்னை யேத்தி பணிவார்மேல்
பெருக்கும் இன்ப துன்ப மான பிணிபோமே
மாணா யுலகங் கொண்ட மாலும் மலரோனுங்
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழி
பூணார் முலையாள் பங்க தானை புகழ்ந்தேத்தி
கோணா நெஞ்சம் உடையார கில்லை குற்றமே
அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர்
கஞ்சி காலை யுண்பார கரியான் கலிக்காழி
தஞ்ச மாய தலைவன் தன்னை நினைவார்கள்
துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே
ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வ
காழி யீசன் கழலே பேணுஞ் சம்பந்தன்
தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார்
வாழி நீங்கா வானோ ருலகில் மகிழ்வாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பாசூர்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
மைந்தர் மணாளர் என்ன மகிழ்வா ரூர்போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே
பேரும் பொழுதும் பெயரும்
றாரு தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்
ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர்போலும்
பாரின் மிசையார் பாட லோவா பாசூரே
கையாற் றொழுது தலைசா துள்ளங் கசிவார்கள்
மெய்யார் குறையு துயரு தீர்க்கும் விமலனார்
நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவும் ஊர்போலும்
பைவாய் நாகங் கோட லீனும் பாசூரே
பொங்கா டரவும் புனலுஞ் சடைமேல் பொலிவெய்த
கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங் குளிர்வித்தார்
தங்கா தலியு தாமும் வாழும் ஊர்போலும்
பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூரே
ஆடற் புரியும் ஐவா யரவொன் றரைச்சாத்தும்
சேட செல்வர் சிந்தையு ளென்றும் பிரியாதார்
வாடற் றலையிற் பலிதேர் கையார் ஊர்போலும்
பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலை பாசூரே
கானின் றதிர கனல்வாய் நாகம் கச்சாக
தோலொன் றுடையார் விடையார் தம்மை தொழுவார்கள்
மால்கொண் டோ மையல் தீர்ப்பார் ஊர்போலும்
பால்வெண் மதிதோய் மாடஞ்சூழ்ந்த பாசூரே
கண்ணின் அயலே கண்ணொன் றுடையார் கழலுன்னி
எண்ணு தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்
உண்ணின் றுருக உவகை தருவார் ஊர்போலும்
பண்ணின் மொழியார் பாட லோவா பாசூரே
தேசு குன்றா தெண்ணீ ரிலங்கை கோமானை
கூச அடர்த்து கூர்வாள் கொடுப்பார் தம்மையே
பேசி பிதற்ற பெருமை தருவார் ஊர்போலும்
பாசி தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே
நகுவாய் மலர்மேல் அயனும் நாக தணையானும்
புகுவா யறியார் புறம்நின் றோரார் போற்றோவார்
செகுவாய் உகுபற் றலைசேர் கையார் ஊர்போலும்
பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே
தூய வெயில்நின் றுழல்வார் துவர்தோய் ஆடையர்
நாவில் வெய்ய சொல்லி திரிவார் நயமில்லார்
காவல் வேவ கணையொன் றெய்தார் ஊர்போலும்
பாவை குரவம் பயில்பூஞ் சோலை பாசூரே
ஞானம் உணர்வான் காழி ஞான சம்பந்தன்
தேனும் வண்டும் இன்னிசை பாடு திருப்பாசூர
கானம் முறைவார் கழல்சேர் பாடல் இவைவல்லார்
ஊனம் இலராய் உம்பர் வான துறைவாரே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பாசூர்நாதர் தேவியார் பசுபதிநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவார பதிகங்கள்
இரண்டாம் திருமுறை முதல் பகுதி முற்றும்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப









திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
இரண்டாம் திருமுறை
பாடல்கள்























©









திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
இரண்டாம் திருமுறை
உள்ளுறை
திருவெண்காடு மின்பதிப்பு
திருமீயச்சூர் மின்பதிப்பு
திருஅரிசிற்கரைப்புத்தூர் மின்பதிப்பு
திருமுதுகுன்றம் மின்பதிப்பு
திருப்பிரமபுரம் மின்பதிப்பு
திருஆலவாய் மின்பதிப்பு
திருப்பெரும்புலியூர் மின்பதிப்பு
திருக்கடம்பூர் மின்பதிப்பு
திருப்பாண்டிக்கொடுமுடி மின்பதிப்பு
திருப்பிரமபுரம் மின்பதிப்பு
திருக்குறும்பலா மின்பதிப்பு
திருநணா மின்பதிப்பு
திருப்பிரமபுரம் மின்பதிப்பு
திருப்பிரமபுரம் மின்பதிப்பு
சீகாழி மின்பதிப்பு
திருஅகத்தியான்பள்ளி மின்பதிப்பு
திருஅறையணிநல்லூர் மின்பதிப்பு
திருவிளநகர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருக்கடவூர்மயானம் மின்பதிப்பு
திருவேணுபுரம் மின்பதிப்பு
திருத்தேவூர் மின்பதிப்பு
திருக்கொச்சைவயம் மின்பதிப்பு
திருநனிபள்ளி மின்பதிப்பு
கோளாறு திருப்பதிகம் மின்பதிப்பு
திருநாரையூர் மின்பதிப்பு
திருநறையூர் மின்பதிப்பு
திருமுல்லைவாயில் மின்பதிப்பு
திருக்கொச்சைவயம் மின்பதிப்பு
திருநெல்வாயில் மின்பதிப்பு
திருமறைக்காடு மின்பதிப்பு
திருப்புகலூர் மின்பதிப்பு
திருத்தெங்கூர் மின்பதிப்பு
திருவாழ்கொளிபுத்தூர் மின்பதிப்பு
திருஅரைசிலி மின்பதிப்பு
சீகாழி மின்பதிப்பு
சீகாழி மின்பதிப்பு
திருத்துருத்தி மின்பதிப்பு
திருக்கோடிகா மின்பதிப்பு
திருக்கோவலூர் வீரட்டம் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருச்சிரபுரம் மின்பதிப்பு
திருஅம்பர்த்திருமாகாளம் மின்பதிப்பு
திருக்கடிக்குளம் மின்பதிப்பு
திருக்கீழ்வேளூர் மின்பதிப்பு
திருவலஞ்சுழி மின்பதிப்பு
திருக்கேதீச்சரம் மின்பதிப்பு
திருவிற்குடிவீரட்டானம் மின்பதிப்பு
திருக்கோட்டூர் மின்பதிப்பு
திருமாந்துறை மின்பதிப்பு
திருவாய்மூர் மின்பதிப்பு
திருஆடானை மின்பதிப்பு
சீகாழி மின்பதிப்பு
திருக்கேதாரம் மின்பதிப்பு
திருப்புகலூர் மின்பதிப்பு
திருநாகைக்காரோணம் மின்பதிப்பு
திருஇரும்பைமாகாளம் மின்பதிப்பு
திருத்திலதைப்பதி மின்பதிப்பு
திருநாகேச்சரம் மின்பதிப்பு
திருமூக்கீச்சரம் மின்பதிப்பு
திருப்பாதிரிப்புலியூர் மின்பதிப்பு
திருப்புகலி மின்பதிப்பு

திருவெண்காடு
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கி
தொண்டா திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும்
வெண்டா மரைமேல் கருவண் டியாழ்செய் வெண்காடே
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்தி
பாதம் பன்னால் பணியும் அடியார் தங்கள்மேல்
ஏத தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
வே தொலியாற் கிளிசொல் பயிலும் வெண்காடே
தண்மு தரும்ப தடமூன் றுடையான் றனையுன்னி
கண்மு தரும்ப கழற்சே வடிகை தொழுவார்கள்
உண்மு தரும்ப வுவகை தருவான் ஊர்போலும்
வெண்மு தருவி புனல்வ தலைக்கும் வெண்காடே
நரையார் வந்து நாளுங் குறுகி நணுகாமுன்
உரையால் வேறா வுள்குவார்கள் உள்ளத்தே
கரையா வண்ணங் கண்டான் மேவும் ஊர்போலும்
விரையார் கமல தன்னம் மருவும் வெண்காடே
பிள்ளை பிறையும் புனலுஞ் சூடும் பெம்மானென்
றுள்ள துள்ளி தொழுவார் தங்கள் உறுநோய்கள்
தள்ளி போக அருளு தலைவன் ஊர்போலும்
வெள்ளை சுரிசங் குலவி திரியும் வெண்காடே
ஒளிகொள் மேனி யுடையாய் உம்பர் ஆளீயென்
றளிய ராகி அழுதுற் றூறும் அடியார்க
கெளியான் அமரர கரியான் வாழும் ஊர்போலும்
வெளிய வுருவ தானை வணங்கும் வெண்காடே
கோள்வி தனைய கூற்ற தன்னை குறிப்பினால்
மாள்வி தவனை மகிழ்ந்தங் கேத்த மாணிக்காய்
ஆள்வி தமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்
வேள்வி புகையால் வானம் இருள்கூர் வெண்காடே
வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி
முளையார் மதியஞ் சூடியென்று முப்போதும்
இளையா தேத்த இருந்தான் எந்தை ஊர்போலும்
விளையார் கழனி பழனஞ் சூழ்ந்த வெண்காடே
கரியா னோடு கமல மலரான் காணாமை
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்க
குரியான் அமரர கரியான் வாழும் ஊர்போலும்
விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே
பாடும் அடியார் பலருங் கூடி பரிந்தேத்த
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவின்றி
மூடம் உடைய சமண்சா கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டை
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார
கடையா வினைகள் அமர லோகம் ஆள்வாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமீயச்சூர்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
கா செவ்வி காமற் காய்ந்து கங்கையை
பா படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி
மா சூரன் றறுத்த மைந்தன் தாதைதன்
மீ சூரே தொழுது வினையை வீட்டுமே
பூவார் சடையின் முடிமேற் புனலர் அனல்கொள்வர்
நாவார் மறையர் பிறையர் நறவெண் டலையேந்தி
ஏவார் மலையே சிலையா கழியம் பெரிவாங்கி
மேவார் புரமூன் றெரித்தார் மீ சூராரே
பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்
மின்னேர் சடைக ளுடையான் மீ சூரானை
தன்னேர் பிறரில் லானை தலையால் வணங்குவார
கன்னே ரிமையோர் உலக மெய்தற் கரிதன்றே
வேக மதநல் லியானை வெருவ வுரிபோர்த்து
பாகம் உமையோ டாக படிதம் பலபாட
நாகம் அரைமே லசைத்து நடமா டியநம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீ சூரானே
விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம்
படையார் பூதஞ் சூழ பாட லாடலார்
பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் கொன்றையார்
விடையார் நடையொன் றுடையார் மீ சூராரே
குளிருஞ் சடைகொள் முடிமேற் கோல மார்கொன்றை
ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் கைகோடி
நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில்நம்பன்
மிளிரும் மரவம் உடையான் மீ சூரானே
நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்
கோல வடிவு தமதாங் கொள்கை யறிவொண்ணார்
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்
மேலர் மதியர் விதியர் மீ சூராரே
புலியின் உரிதோ லாடை பூசும் பொடிநீற்றர்
ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தார் உமையஞ்ச
வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன்தன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீ சூராரே
காதின் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார்
போதி லவனும் மாலு தொழ பொங் கெரியானார்
கோதி வரிவண் டறைபூம் பொய்கை புனல்மூழ்கி
மேதி படியும் வயல்சூழ் மீ சூராரே
கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டை
கொண்டார் சொல்லை குறுகா ருயர்ந்த கொள்கையார்
பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லால்
விண்டார் புரமூன் றெரித்தார் மீ சூராரே
வேட முடைய பெருமா னுறையும் மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன்
பாட லாய தமிழீ ரைந்தும் மொழிந்துள்கி
ஆடும் அடியார் அகல்வா னுலகம் அடைவாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் முயற்சிநாதேசுவரர் தேவியார் சுந்தரநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஅரிசிற்கரைப்புத்தூர்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
மின்னுஞ் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே
துன்னுங் கடல்நஞ் சிருள்தோய் கண்டர் தொன்மூதூர்
அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டு
பொன்னும் மணியும் பொருதென் கரைமேற் புத்தூரே
மேவா அசுரர் மேவெயில் வேவ மலைவில்லால்
ஏவார் எரிவெங் கணையா லெய்தான் எய்துமூர்
நாவால் நாதன் நாமம் ஓதி நாடோ றும்
பூவால் நீராற் பூசுரர் போற்றும் புத்தூரே
பல்லார் தலைசேர் மாலைசூடி பாம்பும்பூண்
டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ ரேறேறி
கல்லார் மங்கை பங்க ரேனுங் காணுங்கால்
பொல்லா ரல்லர் அழகியர் புத்தூர புனிதரே
வரியேர் வளையாள் அரிவை யஞ்ச வருகின்ற
கரியேர் உரிவை போர்த்த கடவுள் கருதுமூர்
அரியேர் கழனி பழனஞ் சூழ்ந்தங் கழகாய
பொரியேர் புன்கு சொரிபூஞ் சோலை புத்தூரே
என்போ டரவம் ஏன தெயிறோ டெழிலாமை
மின்போற் புரிநூல் விரவி பூண்ட மணிமார்பர்
அன்போ டுருகும் அடியார கன்பர் அமருமூர்
பொன்போ தலர்கோங் கோங்கு சோலை புத்தூரே
வள்ளி முலைதோய் குமரன் தாதை வான்தோயும்
வெள்ளி மலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர்
தெள்ளி வருநீர் அரிசில் தென்பாற் சிறைவண்டும்
புள்ளும் மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே
நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்க சோழனாக செய்தானூர்
அலந்த அடியான் அற்றை கன்றோர் காசெய்தி
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே
இத்தே ரேக இம்மலை பேர்ப்பன் என்றேந்தும்
பத்தோர் வாயான் வரைக்கீழ் அலற பாதந்தான்
வைத்தா ரருள்செய் வரதன் மருவும் ஊரான
புத்தூர் காண புகுவார் வினைகள் போகுமே
முள்ளார் கமல தயன்மால் முடியோ டடிதேட
ஒள்ளா ரெரியா யுணர்தற் கரியான் ஊர்போலுங்
கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல் கமலங்கள்
புள்ளார் பொய்கை பூப்பல தோன்றும் புத்தூரே
கையார் சோறு கவர்குண் டர்களு துவருண்ட
மெய்யார் போர்வை மண்டையர் சொல்லும் மெய்யல்ல
பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில்
ஐயா என்பார கையுற வின்றி யழகாமே
நறவங் கமழ்பூங் காழி ஞான சம்பந்தன்
பொறிகொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்
செறிவண் டமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள்
அறவன் கழல்சேர தன்போ டின்பம் அடைவாரே
இத்தலம் சோழ நாட்டிலுள்ளது
சுவாமிபெயர் படிக்காசளித்தவீசுவரர் தேவியார் அழகம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமுதுகுன்றம்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
தேவா சிறியோம் பிழையை பொறுப்பாய் பெரியோனே
ஆவா வென்றங் கடியார் தங்க கருள்செய்வாய்
ஓவா உவரி கொள்ள உயர்ந்தா யென்றேத்தி
மூவா முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றே
எந்தை யிவனென் றிரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தை யுள்ளே கோயி லாக திகழ்வானை
மந்தி யேறி யினமா மலர்கள் பலகொண்டு
முந்தி தொழுது வணங்குங் கோயில் முதுகுன்றே
நீடு மலரும் புனலுங் கொண்டு நிரந்தர
தேடும் அடியார் சிந்தை யுள்ளே திகழ்வானை
பாடுங் குயிலின் அயலே கிள்ளை பயின்றேத்த
மூடுஞ் சோலை முகில்தோய் கோயில் முதுகுன்றே
தெரிந்த அடியார் சிவனே யென்று திசைதோறுங்
குருந்த மலருங் குரவின் அலருங் கொண்டேந்தி
இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்துஞ்சீர்
முரிந்து மேக தவழுஞ் சோலை முதுகுன்றே
வைத்த நிதியே மணியே யென்று வருந்தித்தஞ்
சித்தம் நைந்து சிவனே யென்பார் சிந்தையார்
கொத்தார் சந்துங் குரவும் வாரி கொணர்ந்துந்தும்
முத்தா றுடைய முதல்வர் கோயில் முதுகுன்றே
வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி
நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
வாசங் கமழும் பொழில்சூழ் இலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமான் அமர்கோயில்
பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே
அல்லி மலர்மேல் அயனும் அரவின் அணையானுஞ்
சொல்லி பரவி தொடர வொண்ணா சோதியூர்
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட
முல்லை யயலே முறுவல் செய்யும் முதுகுன்றே
கருகும் உடலார் கஞ்சி யுண்டு கடுவேதின்
றுருகு சிந்தை யில்லார கயலான் உறைகோயில்
திருகல் வேய்கள் சிறிதே வளை சிறுமந்தி
முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே
அறையார் கடல்சூழ் அந்தண் காழி சம்பந்தன்
முறையால் முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றை
குறையா பனுவல் கூடி பாட வல்லார்கள்
பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் பிரியாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பிரமபுரம்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
கறையணி வேலிலர் போலுங் கபால தரித்திலர் போலும்
மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர்
பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர்
பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரம்அமர தாரே
கூரம் பதுவிலர் போலுங் கொக்கின் இறகிலர் போலும்
ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலு
தாருஞ் சடைக்கிலர் போலும் சண்டி கருளிலர்
பேரும் பலவிலர் போலும் பிரம புரம்அமர தாரே
சித்த வடிவிலர் போலு தேச திரிந்திலர் போலுங்
கத்தி வருங் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்
மெய்த்த நயனம் இடந்தார காழி யளித்திலர் போலும்
பித்த வடிவிலர் போலும் பிரம புரம்அமர தாரே
நச்சர வாட்டிலர் போலும் நஞ்சம் மிடற்றிலர் போலுங்
கச்சு தரித்திலர் போலுங் கங்கை
மொய்ச்சவன் பேயிலர் போலும் முப்புரம் எய்திலர்
பிச்சை இரந்திலர் போலும் பிரம புரம்அமர தாரே
தோடு செவிக்கிலர் போலுஞ் சூலம் பிடித்திலர் போலும்
ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர் போலும்
ஓடு கரத்திலர் போலும் ஒள்ளழல் கையிலர்
பீடு மிகுத்தெழு செல்வ பிரம புரம்அமர தாரே
விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி யழித்திலர்
அண்ணல் அயன்றலை வீழ அன்று மறுத்திலர் போலும்
வண்ண எலும்பினொ டக்கு வடங்கள் தரித்திலர் போலும்
பெண்ணினம் மொய்த்தெழு செல்வ பிரம புரம்அமர தாரே
பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங்
கன்றிய காலனை வீழ கால்கொடு பாய்ந்திலர் போலு
துன்று பிணஞ்சுடு காட்டி லாடி துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும் பிரம புரம்அமர தாரே
பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர்
அரசன் இலங்கையர் கோனை அன்றும் அடர்த்திலர் போலும்
புரைசெய் புனத்திள மானும் புலியின் அதளிலர் போலும்
பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம புரம்அமர தாரே
அடிமுடி மாலயன் தேட அன்றும் அளப்பிலர் போலுங்
கடிமலர் ஐங்கணை வேளை கனல விழித்திலர் போலும்
படிமலர பாலனு காக பாற்கடல் ஈந்திலர் போலும்
பிடிநடை மாதர் பெருகும் பிரம புரம்அமர தாரே
வெற்றரை சீவர தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும்
அற்றவர் ஆழ்நிழல் நால்வர கறங்கள் உரைத்திலர் போலும்
உற்றவ ரொன்றிலர் போலும் ஓடு முடி கிலர்போலும்
பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரம புரம்அமர தாரே
பெண்ணுரு ஆணுரு அல்லா பிரம புரநகர் மேய
அண்ணல்செய் யாதன வெல்லாம் அறிந்து வகைவகை யாலே
நண்ணிய ஞானசம் பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள்
விண்ணவ ரோடினி தாக வீற்றிரு பாரவர் தாமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஆலவாய் திருநீற்றுப்பதிகம்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
மந்திர மாவது நீறு வானவர் மேலது
சுந்தர மாவது நீறு துதிக்க படுவது
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது
போத தருவது நீறு புன்மை தவிர்ப்பது
தகுவது நீறு வுண்மையி லுள்ளது
சீத புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது
பத்தி தருவது நீறு பரவ இனியது
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே
காண இனியது நீறு கவினை தருவது
பேணி அணிபவர கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாண தகைவது நீறு மதியை தருவது
சேண தருவது நீறு திருஆல வாயான் திருநீறே
பூச இனியது நீறு புண்ணிய மாவது
பேச இனியது நீறு பெருந்தவ தோர்களு கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது
வருத்த தணிப்பது நீறு வானம் அளிப்பது
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது
பயில படுவது நீறு பாக்கிய மாவது
துயிலை தடுப்பது நீறு சுத்தம தாவது
அயிலை பொலிதரு சூல தால வாயான் திருநீறே
இராவணன் மேலது நீறு எண்ண தகுவது
பராவண மாவது நீறு பாவ மறுப்பது
தராவண மாவது நீறு தத்துவ
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்ப தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே
குண்டிகை கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட
கண்டிகை பிப்பது நீறு கருத இனியது
எண்டிசை பட்ட பொருளார் ஏத்து தகையது நீறு
அண்ட தவர்பணி தேத்தும் ஆல வாயான் திருநீறே
ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றை
போற்றி புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றி தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீர
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பெரும்புலியூர்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர்
விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்
கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்
பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே
துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோ ள்கள்
மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு கங்கை
கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்த
பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே
கங்கைக்கன்னிகளின் புனையோடு என்பதனுக்கு கங்கை
யாறுகளாகிய மாலையுடனெனப்பொருள் தோன்றுகின்றது
கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக ஏந்தி
துள்ள மிதித்துநின் றாடு தொழிலர் எழில்மிகு செல்வர்
வெள்ள நகுதலை மாலை விரிசடை மேல்மிளிர் கின்ற
பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே
ஆட லிலையம் உடையார் அருமறை தாங்கியா றங்கம்
பாட லிலையம் உடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும்
ஊட லிலையம் உடையார் யோகெனும் பேரொளி தாங்கி
பீட லிலையம் உடையார் பெரும்புலி யூர்பிரி யாரே
தோடுடை யார்குழை காதிற் சுடுபொடி யாரன லாட
காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த
நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த
பீடுடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே
கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண்
முற்றி தறிதுமென் பார்கள் முதலியர் வேதபு ராணர்
மற்றி தறிதுமென் பார்கள் மனத்திடை யார்பணி செ
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலி யூர்பிரி யாரே
மறையுடை யாரொலி பாடல் மாமலர சேவடி சேர்வார்
குறையுடை யார்குறை தீர்ப்பார் குழகர் அழகர் நஞ்செல்வர்
கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார்
பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே
உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளி தாகி
துறவியுங் கூட்டமுங் காட்டி துன்பமும் இன்பமு தோற்றி
மறவியென் சிந்தனை மாற்றி வாழவல் லார்த கென்றும்
பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே
சீருடை யாரடி யார்கள் சேடரொ பார்சடை சேரும்
நீருடை யார்பொடி பூசு நினைப்புடை யார்விரி கொன்றை
தாருடை யார்விடை யூர்வார் தலைவரை நூற்றுப்ப தாய
பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே
உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்க
கருமை யுடையன காட்டி அருள்செயும் ஆதி முதல்வர்
கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணா
பெருமை யுடை பெருமானார் பெரும்புலி யூர்பிரி யாரே
பிறைவள ரும்முடி சென்னி பெரும்புலி யூர்ப்பெரு மானை
நறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன்
மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி
நிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திரு பாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வியாக்கிரபுரீசுவரர் தேவியார் சவுந்தராம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கடம்பூர்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
வானமர் திங்களும் நீரும் மருவிய வார்சடை யானை
தேனமர் கொன்றையி னானை தேவர் தொழப்படு வானை
கானம ரும்பிணை புல்கி கலைபயி லுங்கடம் பூரில்
தானமர் கொள்கையி னானை தாள்தொழ வீடெளி தாமே
அரவினொ டாமையும் பூண்டு அந்துகில் வேங்கை யதளும்
விரவு திருமுடி தன்மேல் வெண்திங்கள் சூடி விரும்பி
பரவு தனிக்கடம் பூரிற் பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கது வாமே
இளிபடும் இன்சொலி னார்கள் இருங்குழல் மேலிசை தேற
தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழி லார்கடம் பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி யொண்ணுத லோடுட னாகி
புலியத ளாடை புனைந்தான் பொற்கழல் போற்றுதும் நாமே
இளி என்பது ஏழிசையிலொன்று
பறையொடு சங்கம் பல்கொடி சேர்நெடு மாடங்
கறையுடை வேல்வரி கண்ணார் கலையொலி சேர்கடம் பூரில்
மறையொலி கூடிய பாடல் மருவிநின் றாடல் மகிழும்
பிறையுடை வார்சடை யானை பேணவல் லார்பெரி யோரே
தீவிரி யக்கழ லார்ப்ப சேயெரி கொண்டிடு காட்டில்
நாவிரி கூந்தல்நற் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன்
காவிரி கொன்றை கலந்த கண்ணுத லான்கடம் பூரில்
பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவ மிலாரே
தண்புனல் நீள்வயல் தோறு தாமரை மேலனம் வை
கண்புணர் காவில்வண் டேற கள்ளவி ழுங்கடம் பூரில்
பெண்புனை கூறுடை யானை பின்னு சடைப்பெரு மானை
பண்புனை பாடல் பயில்வார் பாவமி லாதவர் தாமே
பலிகெழு செம்மலர் சார பாடலொ டாட லறாத
கலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ்கடம் பூரில்
ஒலிதிகழ் கங்கை கரந்தான் ஒண்ணுத லாள்உமை கேள்வன்
புலியத ளாடையி னான்றன் புனைகழல் போற்றல் பொருளே
பூம்படு கிற்கயல் பா புள்ளிரி யப்புறங் காட்டில்
காம்படு தோளியர் நாளுங் கண்கவ ருங்கடம் பூரில்
மேம்படு தேவியோர் பாகம் மேவியெம் மானென வாழ்த்தி
தேம்படு மாமலர் தூவி திசைதொழ தீய கெடுமே
திருமரு மார்பி லவனு திகழ்தரு மாமல ரோனும்
இருவரு மாயறி வொண்ணா எரியுரு வாகிய ஈசன்
கருவரை காலில் அடர்த்த கண்ணுத லான்கடம் பூரில்
மருவிய பாடல் பயில்வார் வானுல கம்பெறு வாரே
ஆடை தவிர்த்தறங் காட்டு மவர்களும் அந்துவராடை
சோடைகள் நன்னெறி சொல்லார் சொல்லினுஞ் சொல்லல கண்டீர்
வேடம் பலபல காட்டும் விகிர்தன்நம் வேதமு தல்வன்
காடத னில்நட மாடுங் கண்ணுத லான்கடம் பூரே
விடைநவி லுங்கொடி யானை வெண்கொடி சேர்நெடு மாடங்
கடைநவி லுங்கடம் பூரிற் காதல னைக்கடற் காழி
நடைநவில் ஞானசம் பந்தன் நன்மையா லேத்திய பத்தும்
படைநவில் பாடல்ப யில்வார் பழியொடு பாவ மிலாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் அமுதகடேசுவரர் தேவியார் சோதிமின்னம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பாண்டிக்கொடுமுடி
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங்
கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும்
எண்ணம ருங்குண தாரும் இமையவ ரேத்த நின்றாரும்
பண்ணமர் பாடலி னாரும் பாண்டி கொடுமுடி யாரே
தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள்
வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்க
பனைக்கை பகட்டுரி போர்த்தார் பாண்டி கொடுமுடி யாரே
சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணி தாரும்
புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசை தாரும்
விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலை சூல
படையமர் கொள்கையி னாரும் பாண்டி கொடுமுடி யாரே
நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்த
கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி
மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தை
பறைவளர் பாடலி னாரும் பாண்டி கொடுமுடி யாரே
போகமு மின்பமு மாகி போற்றியென் பாரவர் தங்கள்
ஆகமு றைவிட மாக அமர்ந்தவர் கொன்றையி னோடும்
நாகமு திங்களுஞ் சூடி நன்னுதல் மங்கைதன் மேனி
பாகமு கந்தவர் தாமும் பாண்டி கொடுமுடி யாரே
கடிபடு கூவிளம் மத்தங் கமழ்சடை மேலுடை யாரும்
பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும்
வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும்
படிபடு கோலத்தி னாரும் பாண்டி கொடுமுடி யாரே
ஊனமர் வெண்டலை யேந்தி உண்பலி கென்றுழல் வாரு
தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாருங்
கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரி கோல கரைமேல்
பானல நீறணி வாரும் பாண்டி கொடுமுடி யாரே
புரந்தரன் தன்னொடு வானோர் போற்றியென் றேத்த நின்றாரும்
பெருந்திறல் வாளர கன்னை பேரிடர் செய்துக தாருங்
கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்தி
பரந்திழி காவிரி பாங்கர பாண்டி கொடுமுடி யாரே
திருமகள் காதலி னானு திகழ்தரு மாமலர் மேலை
பெருமக னும்மவர் காணா பேரழ லாகிய பெம்மான்
மருமலி மென்மலர சந்து வந்திழி காவிரி மாடே
பருமணி நீர்த்துறை யாரும் பாண்டி கொடுமுடி யாரே
புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லால்
மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால்
சித்தரு தேவருங் கூடி செழுமலர் நல்லன கொண்டு
பத்தர்கள் தாம்பணி தேத்தும் பாண்டி கொடுமுடி யாரே
கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன்
பலமல்கு வெண்டலை யேந்தி பாண்டி கொடுமுடி தன்னை
சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்ல வல்லார் துயர்தீர்ந்து
நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கொடுமுடிநாதேசுவரர் தேவியார் பண்மொழியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பிரமபுரம் திருச்சக்கரமாற்று
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு பெருநீர தோணி
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை
அரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளி டங்காதி யாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிரு கழுமலம் நாம்பரவு மூரே
வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ள தோங்கு
தோணிபுரம் பூந்தராய் தூநீர சிரபுரம் புறவங் காழி
கோணிய கோட்டாற்று கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங்
காணிய வையகத்தா ரேத்துங் கழுமலம் நாங்கருது மூரே
புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழி
நிகரில் பிரமபுரங் கொச்சை வயம்நீர்மேல் நின்ற மூதூர்
அகலிய வெங்குருவோ டந்தண் டராய்அமரர் பெருமாற் கின்பம்
பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே
வெங்குரு தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ள
தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி
தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர்
கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே
தொன்னீரில் தோணிபுரம் புகலி வெங்குரு துயர்தீர் காழி
இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பை
நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்ப னகராம் நல்ல
பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம்நாம் புகழு மூரே
தண்ண தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமுன் ஆண்ட
அண்ணல்நகர் கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழி
விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுர தோணிபுரம் மேலா லேந்து
கண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாங் கைதொழுது கருது மூரே
சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல
ஆரா தராய்பிரம னூர்புகலி வெங்குருவோ டந்தண் காழி
ஏரார் கழுமலமும் வேணுபுர தோணிபுர மென்றென் றுள்கி
பேரால் நெடியவனும் நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே
புறவஞ் சிரபுரமு தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழி
நறவ மிகுசோலை கொச்சை வயந்தராய் நான்முகன் றனூர்
விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்து
திறலால் அரக்கனைச்செற் றான்றன் கழுமலம்நாஞ் சேரு மூரே
சண்பை பிரமபுர தண்புகலி வெங்குருநற் காழி சாயா
பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல்
நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுர தோணிபுரம் நாணி லாத
வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே
செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர புகலி செய்ய
கொழுமலரான் நன்னகர தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய
விழுமியசீர் வெங்குருவோ டோ ங்குதராய் வேணுபுரம் மிகுநன் மாட
கழுமலமென் றின்னபெயர் பன்னிரண்டுங் கண்ணுதலான் கருது மூரே
கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குரு புறவங் காழி
நிச்சல் விழவோவா நீடார் சிரபுரம்நீள் சண்பை மூதூர்
நச்சினிய பூந்தராய் வேணுபுர தோணிபுர மாகி நம்மேல்
அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரு மூரே
காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்
பாவியசீர பன்னிரண்டும் நன்னூலா பத்திமையாற் பனுவல் மாலை
நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன
மேவி யிசைமொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு ளாரே
இது பாண்டியராசனுடைய சுரப்பிணிதீர்க்கச்சென்
றாசனத்திலிருந்தபோது அவ்வரசன் சுவாமிகளை
நோக்கி எந்தவூரென்று வினவ நாமின்னவூரென்று
திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்குறும்பலா
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
திருந்த மதிசூடி தெண்ணீர் சடைக்கரந்து தேவி பாகம்
பொருந்தி பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்த செல்வர்
இருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின் வண்டு யாழ்செய்
குருந்த மணம்நாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே
நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடி பொடியணிந்த நம்பான் நம்மை
ஆட்பலவு தானுடைய அம்மா னிடம்போலு மந்தண் சாரல்
கீட்பலவுங் கீண்டு கிளைகிளையன் மந்திபா துண்டு விண்ட
கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்ப லாவே
வாடல் தலைமாலை சூடி புலித்தோல் வலித்து வீக்கி
ஆட லரவசைத்த அம்மா னிடம்போலு மந்தண் சாரல்
பாடற் பெடைவண்டு போதலர்த்த தாதவிழ்ந்து பசும்பொ னுந்தி
கோடன் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே
பால்வெண் மதிசூடி பாகத்தோர் பெண்கலந்து பாடி யாடி
கால னுடல்கிழி காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில்
நீல மலர்க்குவளை கண்திறக்க வண்டரற்றும் நெடுந்தண் சாரல்
கோல மடமஞ்ஞை பேடையோ டாட்டயருங் குறும்ப லாவே
தலைவாண் மதியங் கதிர்விரி தண்புனலை தாங்கி தேவி
முலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும் முதுவேய் சூழ்ந்த
மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்கு சாரல்
குலைவாழை தீங்கனியும் மாங்கனியு தேன்பிலிற்றுங் குறும்ப லாவே
நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர் நெற்றி கண்ணர்
கூற்றேர் சிதை கடிந்தா ரிடம்போலுங் குளிர்சூழ் வெற்பில்
ஏற்றேனம் ஏன மிவையோ டவைவிரவி யிழிபூஞ் சாரல்
கோற்றேன் இசைமுரல கேளா குயில்பயிலுங் குறும்ப லாவே
பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலுஞ் சூடி
பின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும் பில தாங்கி
மன்றத்து மண்முழவம் ஓங்கி மணிகொழித்து வயிரம் உந்தி
குன்ற தருவி யயலே புனல்ததும்புங் குறும்ப லாவே
ஏந்து திணிதிண்டோ ள் இராவணனை மால்வரைக்கீழ் அடர வூன்றி
சாந்தமென நீறணிந்த சைவர் இடம்போலுஞ் சாரற் சாரல்
பூந்தண் நறுவேங்கை கொத்திறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்தி
கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங் குறும்ப லாவே
அரவின் அணையானும் நான்முகனுங் காண்பரிய அண்ணல் சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர கிடம்போலும் விரிபூஞ் சாரல்
மரவம் இருகரையும் மல்லிகையுஞ் சண்பகமும் மலர்ந்து மாந்த
குரவம் முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரல் குறும்ப லாவே
மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூ றுண்டு
காடி தொடுசமணை காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில்
நீடுயர் வேய்குனி பாய்கடுவன் நீள்கழைமேல் நிருத்தஞ் செ
கூடிய வேடுவர்கள் கூய்விளியா கைமறிக்குங் குறும்ப லாவே
கொம்பார்பூஞ் சோலை குறும்பலா மேவிய கொல்லேற் றண்ணல்
நம்பான் அடிபரவும் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன
இன்பாய பாட லிவைபத்தும் வல்லார் விரும்பி கேட்பார்
தம்பால தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளரா வன்றே
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது இதுவே திருக்குற்றாலம்
சுவாமிபெயர் குறும்பலாநாதர்
தேவியார் குழன்மொழியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநணா
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பந்தார் விரல்மடவாள் பாகமா
நாகம்பூண் டேற தேறி
அந்தார் அரவணிந்த அம்மா
னிடம்போலும் அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட
வார்பொழிலில் வண்டு பாட
செந்தேன் தெளியொளிர தேமா
கனியுதிர்க்கு திருந ணாவே
நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான்
மற்றொருகை வீணை யேந்தி
ஈட்டு துயரறுக்கும் எம்மா
னிடம்போலு மிலைசூழ் கானில்
ஓட்ட தருமருவி வீழும்
விசைகாட்ட முந்தூ ழோசை
சேட்டார் மணிகள் அணியு
திரைசேர்க்கு திருந ணாவே
நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள்
பாகமாய் ஞால மேத்த
மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர
கிடம்போலும் விரைசூழ் வெற்பில்
குன்றோங்கி வன்றிரைகள் மோத
மயிலாலுஞ் சாரற் செவ்வி
சென்றோங்கி வானவர்க ளேத்தி
அடிபணியு திருந ணாவே
கையில் மழுவேந்தி காலிற்
சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு
மெய்யில் முழுதணிந்த விகிர்தர
கிடம்போலு மிடைந்து வானோர்
ஐய ரவரெம் பெருமா
னருளென்றென் றாத ரிக்க
செய்ய கமலம் பொழிதே
னளித்தியலு திருந ணாவே
முத்தேர் நகையா ளிடமாக
தம்மார்பில் வெண்ணூல் பூண்டு
தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தா
ரிடம்போலுஞ் சோலை சூழ்ந்த
அத்தேன் அளியுண் களியா
லிசைமுரல ஆல தும்பி
தெத்தே யெனமுரல கேட்டார்
வினைகெடுக்கு திருந ணாவே
வில்லார் வரையாக மாநாகம்
நாணாக வேடங் கொண்டு
புல்லார் புரமூன் றெரித்தார
கிடம்போலும் புலியு மானும்
அல்லாத சாதிகளு மங்கழல்மேற்
கைகூப்ப அடியார் கூடி
செல்லா வருநெறிக்கே செல்ல
அருள்புரியு திருந ணாவே
கானார் களிற்றுரிவை மேல்மூடி
ஆடரவொன் றரைமேற் சாத்தி
ஊனார் தலையோட்டி லூணுகந்தான்
றானுகந்த கோயி லெங்கும்
நானா விதத்தால் விரதிகள்நன்
னாமமே யேத்தி வாழ
தேனார் மலர்கொண் டடியார்
அடிவணங்கு திருந ணாவே
மன்னீ ரிலங்கையர்தங் கோமான்
வலிதொலைய விரலா லூன்றி
முந்நீர கடல்நஞ்சை யுண்டார
கிடம்போலும் முநனைசேர் சீயம்
அன்னீர் மைகுன்றி அழலால்
விழிகுறைய வழியு முன்றில்
செந்நீர் பரப்ப சிறந்து
கரியொளிக்கு திருந ணாவே
மையார் மணிமிடறன் மங்கையோர்
பங்குடையான் மனைக டோ றும்
கையார் பலியேற்ற கள்வன்
இடம்போலுங் கழல்கள் நேடி
பொய்யா மறையானும் பூமி
யளந்தானும் போற்ற மன்னி
செய்யார் எரியாம் உருவ
முறவணங்கு திருந ணாவே
ஆடை யொழித்தங் கமணே
திரிந்துண்பார் அல்லல் பேசி
மூடு உருவம் உகந்தார்
உரையகற்றும் மூர்த்தி கோயில்
ஓடு நதிசேரும் நித்திலமும்
மொய்த்தகிலுங் கரையில் சார
சேடர் சிறந்தே தோன்றி
யொளிபெருகு திருந ணாவே
கல்வி தகத்தால் திரைசூழ்
கடற்காழி கவுணி சீரார்
நல்வி தகத்தால் இனிதுணரும்
ஞானசம் பந்தன் எண்ணுஞ்
சொல்வி தகத்தால் இறைவன்
திருநணா ஏத்து பாடல்
வல்வி தகத்தான் மொழிவார்
பழியிலரிம் மண்ணின் மேலே
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது இது பவானி நதி
காவிரியுடன் சேருமிடமாதலால் பவானிகூடலென
பெயர் வழங்கப்படுகின்றது
சுவாமிபெயர் சங்கமுகநாதேசுவரர்
தேவியார் வேதமங்கையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பிரமபுரம் திருச்சக்கரமாற்று
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
விளங்கியசீர பிரமனூர் வேணுபுரம்
புகலிவெங் குருமேற் சோலை
வளங்கவரு தோணிபுரம் பூந்தரா
சிரபுரம்வண் புறவ மண்மேல்
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங்
கொச்சைகழு மலமென் றின்ன
இளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம்
பகையெறிவி திறைவ னூரே
திருவளருங் கழுமலமே கொச்சைதே
வேந்திரனூர் அயனூர் தெய்வ
தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர்
காழிதகு சண்பை யொண்பா
வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய்
தோணிபுரம் உயர்ந்த தேவர்
வெருவவளர் கடல்விடம துண்டணிகொள்
கண்டத்தோன் விரும்புமூரே
வாய்ந்தபுகழ் மறைவளரு தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் வாழூர்
ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழில்
காழியிறை கொச்சை யம்பொன்
வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய
மிக்கயனூர் அமரர் கோனூர்
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ
தரன்நாளும் அமரு மூரே
மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமா
புகலிதராய் தோணிபுரம் வான்
சேமமதில் புடைதிகழுங் கழுமலமே
கொச்சைதே வேந்திரனூர் சீர
பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற்
சிலம்பனூர் காழி சண்பை
பாமருவு கலையெட்டெ டுணர்ந்தவற்றின்
பயன்நுகர்வோர் பரவு மூரே

தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி
வயங்கொச்சை தயங்கு பூமேல்
விரைச்சேருங் கழுமலம்மெய் யுணர்ந்தயனூர்
விண்ணவர்தங் கோனூர் வென்றி
திரைச்சேரும் புனற்புகலி வெங்குருசெல்
வம்பெருகு தோணிபுரஞ் சீர்
உரைசேர்பூ தராய்சிலம்ப னூர்புறவம்
உலகத்தில் உயர்ந்த வூரே
புண்டரிக தார்வயல்சூழ் புறவமிகு
சிரபுரம்பூங் காழி சண்பை
எண்டிசையோர் இறைஞ்சியவெங் குருப்புகலி
பூந்தராய் தோணிபுரஞ் சீர்
வண்டமரும் பொழில்மல்கு கழுமலம்நற்
கொச்சைவா னவர்தங் கோனூர்
அண்டயனூ ரிவையென்பர் அருங்கூற்றை
யுதைத்துகந்த அப்ப னூரே
வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங்
கோனூர்வண் புகலி யிஞ்சி
வெண்மதிசேர் வெங்குருமி கோரிறைஞ்சு
சண்பைவியன் காழி கொச்சை
கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழு
தோணிபுரம் பூந்தராய் சீர
பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம்
பால்வண்ணன் பயிலு மூரே
மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர
சிலம்பனூர் காழி மூதூர்
நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை
வேணுபுரங் கமல நீடு
கூடியய னூர்வளர்வெங் குருப்புகலி
தராய்தோணி புரங்கூ டப்போர்
தேடியுழல் அவுணர்பயில் திரிபுரங்கள்
செற்றமலை சிலைய னூரே
இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் தன்னூர்
நிரக்கவரு புனற்புறவம் நின்றதவ
தயனூர்சீர தேவர் கோனூர்
வரக்கரவா புகலிவெங் குருமாசி
லாச்சண்பை காழி கொச்சை
அரக்கன்விறல் அழித்தருளி கழுமல
தணர்வேத மறாத வூரே
மேலோதுங் கழுமலமெ தவம்வளருங்
கொச்சையி திரனூர் மெய்ம்மை
நூலோதும் அயன்றனூர் நுண்ணறிவார்
குருப்புகலி தராய்தூ நீர்மேல்
சேலோடு தோணிபுர திகழ்புறவஞ்
சிலம்பனூர் செருச்செய் தன்று
மாலோடும் அயனறியான் வண்காழி
சண்பைமண்ணோர் வாழ்த்து மூரே
ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர்
கொச்சைகழு மலமன் பானூர்
ஓக்கமுடை தோணிபுரம் பூந்தராய்
சிரபுரமொண் புறவ நண்பார்
பூக்கமல தோன்மகிழூர் புரந்தரனூர்
புகலிவெங் குருவு மென்பர்
சாக்கியரோ டமண்கையர் தாமறியா
வகைநின்றான் தங்கு மூரே
அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய்
தோணிபுரம் அணிநீர பொய்கை
புக்கரஞ்சேர் புறவஞ்சீர சிலம்பனூர்
புகழ்க்காழி சண்பை தொல்லூர்
மிக்கரஞ்சீர கழுமலமே கொச்சைவயம்
வேணுபுரம் அயனூர் மேலி
சக்கரஞ்சீர தமிழ்விரகன் தான்சொன்ன
தமிழ்தரிப்போர் தவஞ்செய் தோரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பிரமபுரம் திருக்கோமூத்திரி
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பூமகனூர் புத்தேளு கிறைவனூர்
குறைவிலா புகலி பூமேல்
மாமகளூர் வெங்குருநல் தோணிபுரம்
பூந்தராய் வாய்ந்த இஞ்சி
சேமமிகு சிரபுரஞ்சீர புறவநிறை
புகழ்ச்சண்பை காழி கொச்சை
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர்
கழுமலம்நாங் கருது மூரே
கருத்துடைய மறையவர்சேர் கழுமலம்மெ
தோணிபுரம் கனக மாட
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா
யுலகாருங் கொச்சை காழி
திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர்
செங்கமல தயனூர் தெய்வ
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை
முடியண்ணல் தங்கு மூரே
ஊர்மதியை கதுவவுயர் மதிற்சண்பை
யொளிமருவு காழி கொச்சை
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெ
தோணிபுரங் கற்றோ ரேத்துஞ்
சீர்மருவு பூந்தராய் சிரபுரம்மெ
புறவம்அய னூர்பூங் கற்ப
தார்மருவும் இந்திரனூர் புகலிவெங்
குருக்கங்கை தரித்தோ னூரே
தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர
தோணிபுர தரியா ரிஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூ
தராய்புகலி யிமையோர் கோனூர்
தெரித்தபுகழ சிரபுரஞ்சீர் திகழ்காழி
சண்பைசெழு மறைக ளெல்லாம்
விரித்தபுகழ புறவம்விரை கமலத்தோ
னூருலகில் விளங்கு மூரே
விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை
வேணுபுரம் மேக மேய்க்கும்
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி
யெழிற்புகலி புறவம் ஏரார்
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமா
சிரபுரம்வன் னஞ்ச முண்டு
களங்கமலி களத்தவன்சீர கழுமலங்கா
மன்னுடலங் காய்ந்தோ னூரே
காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர்
கழுமலமா தோணிபுரஞ் சீர்
ஏய்ந்தவெங் குருபுகலி இந்திரனூர்
இருங்கமல தயனூர் இன்பம்
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூ
தராய்கொச்சை காழி சண்பை
சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம்
பகைகெடுத்தோன் திகழு மூரே
திகழ்மாட மலிசண்பை பூந்தராய்
பிரமனூர் காழி தேசார்
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம்
வயங்கொச்சை புறவம் விண்ணோர்
புகழ்புகலி கழுமலஞ்சீர சிரபுரம்வெங்
குருவெம்போர் மகிடற் செற்று
நிகழ்நீலி நின்மலன்றன் அடியிணைகள்
பணிந்துலகில் நின்ற வூரே
நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி
புரநிகழும் வேணு மன்றில்
ஒன்றுகழு மலங்கொச்சை உயர்காழி
சண்பைவளர் புறவ மோடி
சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூ
தராய்புகலி தேவர் கோனூர்
வென்றிமலி பிரமபுரம் பூதங்கள்
தாங்காக்க மிக்க வூரே
மிக்ககம லத்தயனூர் விளங்குபுற
வஞ்சண்பை காழி கொச்சை
தொக்கபொழிற் கழுமலந்தூ தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் சேரூர்
மைக்கொள்பொழில் வேணுபுரம் மதிற்புகலி
வெங்குருவல் அரக்கன் திண்டோ ள்
ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதுமீ
டழித்துகந்த எம்மா னூரே
எம்மான்சேர் வெங்குருச்சீர சிலம்பனூர்
கழுமலநற் புகலி யென்றும்
பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுர
தரனூர்நற் றோணிபுரம் போர
கைம்மாவை யுரிசெய்தோன் காழியய
னூர்தராய் சண்பை காரின்
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய்
விளங்கியஎம் இறைவ னூரே
இறைவனமர் சண்பையெழிற் புறவம்அய
னூர்இமையோர கதிபன் சேரூர்
குறைவில்புகழ புகலிவெங் குருத்தோணி
புரங்குணமார் பூந்தராய் நீர
சிறைமலிநற் சிரபுரஞ்சீர காழிவளர்
கொச்சைகழு மலந்தே சின்றி
பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள்
பரிசறியா அம்மா னூரே
அம்மான்சேர் கழுமலமா சிரபுரம்வெங்
குருக்கொச்சை புறவ மஞ்சீர்
மெய்ம்மான தொண்புகலி மிகுகாழி
தோணிபுர தேவர் கோனூர்
அம்மான்மன் னுயர்சண்பை தராய்அயனூர்
வழிமுடக்கு மாவின் பாச்சல்
தம்மானொன் றியஞான சம்பந்தன்
தமிழ்கற்போர் தக்கோர் தாமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

சீகாழி
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
விண்ணி யங்குமதி கண்ணியான்விரி யுஞ்சடை
பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற்
கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலி காழியுள்
மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர பாதனே
வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும்
பலிவி ரும்பியதோர் கையினான்பர மேட்டியான்
கலியை வென்றமறை யாளர்தங்கலி காழியுள்
நலிய வந்தவினை தீர்த்துகந்தஎம் நம்பனே
சுற்ற லாநற்புலி தோலசைத்தயன் வெண்டலை
துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான்
கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலி காழியுள்
மற்ற யங்குதிரள் தோளெம்மைந்தனவன் அல்லனே
பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை
மல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங்
கல்ல யங்குதிரை சூழநீள்கலி காழியுள்
தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே
தூந யங்கொள்திரு மேனியிற்பொடி பூசிப்போய்
நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமா
கான யங்கொள்புனல் வாசமார்கலி காழியுள்
தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே
சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே
மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன்
கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலி காழியுள்
பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே
முடியி லங்கும்உயர் சிந்தையான்முனி வர்தொழ
அடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங்
கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலி காழியுள்
கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே
வல்ல ரக்கன்வரை பேர்க்கவந்தவன் தோள்முடி
கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலி காழியுள்
நல்லொ ருக்கியதோர் சிந்தையார்மலர் தூவவே
தொல்லி ருக்குமறை யேத்துகந்துடன் வாழுமே
மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும்
இருவர் கூடியிசை தேத்தவேயெரி யான்றனூர்
வெருவ நின்றதிரை யோதமார்வியன் முத்தவை
கருவை யார்வயற் சங்குசேர்கலி காழியே
நன்றி யொன்றுமுண ராதவன்சமண் சாக்கியர்
அன்றி யங்கவர் சொன்னசொல்லவை கொள்கிலான்
கன்று மேதியிளங் கானல்வாழ்கலி காழியுள்
வென்றி சேர்வியன் கோயில்கொண்டவிடை யாளனே
கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலி காழியுள்
அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல்
வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார்
விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஅகத்தியான்பள்ளி
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
வாடிய வெண்டலை மாலைசூடி வயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய எம்பெரு மான்அகத்தியான் பள்ளியை
பாடிய சிந்தையி னார்கட்கில்லையாம் பாவமே
துன்னங் கொண்டவுடை யான்துதைந்தவெண் ணீற்றினான்
மன்னுங் கொன்றைமத மத்தஞ்சூடினான் மாநகர்
அன்ன தங்கும்பொழில் சூழ்அகத்தியான் பள்ளியை
உன்னஞ் செய்தமன தார்கள்தம்வினை யோடுமே
உடுத்ததுவும் புலித்தோல் பலிதிரி துண்பதுங்
கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால்
அடுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
தொடுத்தது வுஞ்சரம் முப்புர துகளாகவே
காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றி கண்ணினால்
பாய்ந்ததுவுங் கழற்காலனை பண்ணி னான்மறை
ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே
போர்த்ததுவுங் கரியின் னுரிபுலி தோலுடை
கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரை
கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
பார்த்ததுவும் மரணம் படரெரி மூழ்கவே
தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன்
எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை
அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
புரிந்ததுவும் முமையாளொர் பாகம் புனைதலே
ஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு ளாகிமெ
சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்
ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை
நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே
செறுத்ததுவு தக்கன் வேள்வியைத்திரு தார்புரம்
ஒறுத்ததுவும் ஒளிமா மலருறை வான்சிரம்
அறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே
சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும்
அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியை
பிரமனோடு திருமாலு தேடிய பெற்றிமை
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே
செந்துவ ராடையி னாரும்வெற்றரை யேதிரி
புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி
அந்தணன் எங்கள்பி ரான்அகத்தியான் பள்ளியை
சிந்திமின் நும்வினை யானவைசிதை தோடுமே
ஞால மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்
ஆலுஞ் சோலைபுடை சூழ்அகத்தியான் பள்ளியுள்
சூல நல்லபடை யான்அடிதொழு தேத்திய
மாலை வல்லாரவர் தங்கள்மேல்வினை மாயுமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் அகத்தீசுவரர்
தேவியார் மங்கைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஅறையணிநல்லூர்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெட தீதிலா
வீடினாலுயர தார்களும் வீடிலாரிள வெண்மதி
சூடினார்மறை பாடினார் சுடலைநீறணி தாரழல்
ஆடினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே
இலையினார்சூலம் ஏறுக தேறியேயிமை யோர்தொழ
நிலையினாலொரு காலுற சிலையினால்மதி லெய்தவன்
அலையினார்புனல் சூடிய அண்ணலாரறை யணிநல்லூர்
தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே
என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான்
பின்பினார்பிறங் குஞ்சடை பிஞ்ஞகன்பிற பிலியென்று
முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களு
கன்பினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே
விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன்
உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும்
அரவுநீள்சடை கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர்
பரவுவார்பழி நீங்கிட பறையுந்தாஞ்செய்த பாவமே
தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீ
ஆயினாய்கொன்றை யாய்அன லங்கையாயறை யணிநல்லூர்
மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனை
பாயினாயெதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே
விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய
அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர்
நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர்
உரையினாலுயர தார்களும்
வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின்
ஈரமாகிய வுரிவைபோர தரிவைமேற்சென்ற எம்மிறை
ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர்
வாரமாய்நினை பார்கள்தம் வல்வினையவை மாயுமே
தக்கனார்பெரு வேள்வியை தகர்த்துகந்தவன் தாழ்சடை
முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ
அக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர்
நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே
வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார்
செய்வதேயலங் காரமாம் இவையிவைதேறி யின்புறில்
ஐயமேற்றுணு தொழிலராம் அண்ணலாரறை யணிநல்லூர
சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே
வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின்
சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி
ஆக்கியம்மழு வாட்படை அண்ணலாரறை யணிநல்லூர
பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே
கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதி
பழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார்
மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள்தொழ
கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் அறையணிநாதேசுவரர் தேவியார் அருள்நாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவிளநகர்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர் கோவணஆடையர்
குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி
நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார்
மிளிரிளம்பொறி அரவினார் மேயதுவிள நகரதே
அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் ஆமைபூண்
டுக்கவர்சுடு நீறணி தொளிமல்குபுனற் காவிரி
புக்கவர்துயர் கெடுகென பூசுவெண்பொடி மேவிய
மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே
வாளிசேரடங் கார்மதில் தொலையநூறிய வம்பின்வே
தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கடல் நஞ்சுண்ட
காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர்
மீளியேறுக தேறினார் மேயதுவிள நகரதே
கால்விளங்கெரி கழலினார் கையிளங்கிய வேலினார்
நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிற பும்மிலார்
மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே
பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரி
துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரென
சென்னிதிங்களை பொங்கரா கங்கையோடுடன் சேர்த்தினார்
மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே
தேவரும்மம ரர்களு திசைகள்மேலுள தெய்வமும்
யாவரும்மறி யாததோர் அமைதியாற்றழ லுருவினார்
மூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ
மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே
சொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ் சடைமுடியினார்
கற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார்
மற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடி பூசினார்
விற்றரும்மணி மிடறினார் மேயதுவிள நகரதே
படர்தருஞ்சடை முடியினார் பைங்கழல்லடி பரவுவார்
அடர்தரும்பிணி கெடுகென அருளுவாரர வரையினார்
விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார்
மிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே
கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார்
பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார்
மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே
உள்ளதன்றனை காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும்
உள்ளதன்றனை காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும்
உள்ளதன்றனை கண்டிலார் ஒளியார்தருஞ்சடை முடியின்மேல்
உள்ளதன்றனை கண்டிலா வொளியார்விளநகர் மேயதே
மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய
நன்பிறைநுதல் அண்ணலை சண்பைஞானசம் பந்தன்சீர்
இன்புறுந்தமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போ
துன்புறு துயரம்மிலா தூநெறிபெறு வார்களே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் துறைகாட்டும்வள்ளநாதர் தேவியார் தோழியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
கவனமா சோடையாய் நாவெழா
பஞ்சுதோ சட்ட வுண்டு
சிவனதா சிந்தியா பேதைமார்
போலநீ வெள்கி னாயே
கவனமா பாய்வதோர் ஏறுக
தேறிய காள கண்டன்
அவனதா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே
தந்தையார் போயினார் தாயரும்
போயினார் தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார்
பார்க்கின்றார் கொண்டு போவார்
எந்தநாள் வாழ்வதற் கேமனம்
வைத்தியால் ஏழை நெஞ்சே
அந்தணா ரூர்தொழு துய்யலா
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே
நிணங்குடர் தோல்நரம் பென்புசேர்
ஆக்கைதான் நிலாய தன்றால்
குணங்களார கல்லது குற்றம்நீங்
காதென குலுங்கி னாயே
வணங்குவார் வானவர் தானவர்
வைகலும் மனங்கொ டேத்தும்
அணங்கனா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே
நீதியால் வாழ்கிலை நாள்செலா
நின்றன நித்த நோய்கள்
வாதியா ஆதலால் நாளும்நாள்
இன்பமே மருவி னாயே
சாதியார் கின்னரர் தருமனும்
வருணனும் ஏத்து முக்கண்
ஆதியா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே
பிறவியால் வருவன கேடுள
ஆதலாற் பெரிய இன்ப
துறவியார கல்லது துன்பம்நீங்
காதென தூங்கி னாயே
மறவல்நீ மார்க்கமே நண்ணினாய்
தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவனா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே
செடிகொள்நோ யாக்கையம் பாம்பின்வா
தேரையா சிறு பறவை
கடிகொள்பூ தேன்சுவை தின்புற
லாமென்று கருதி னாயே
முடிகளால் வானவர் முன்பணி
தன்பரா யேத்து முக்கண்
அடிகளா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே
ஏறுமால் யானையே சிவிகை
தளகமீ சேர்ப்பி வட்டில்
மாறிவா ழுடம்பினார் படுவதோர்
நடலைக்கு மயங்கி னாயே
மாறிலா வனமுலை மங்கையோர்
பங்கினர் மதியம் வைத்த
ஆறனா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே
என்பினாற் கழிநிரை திறைச்சிமண்
சுவரெறி திதுநம் இல்லம்
புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல்
லாமையான் முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தலார்
குரம்பையின் மூழ்கி டாதே
அன்பனா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே
தந்தைதாய் தன்னுடன் தோன்றினார்
புத்திரர் தார மென்னும்
பந்தம்நீங் காதவர குய்ந்துபோ
கில்லென பற்றி னாயே
வெந்தநீ றாடியார் ஆதியார்
சோதியார் வேத கீதர்
எந்தையா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே
நெடியமால் பிரமனும் நீண்டுமண்
ணிடந்தின்னம் நேடி காணா
படியனார் பவளம்போல் உருவனார்
பனிவளர் மலையாள் பாக
வடிவனார் மதிபொதி சடையனார்
மணியணி கண்ட தெண்டோ ள்
அடிகளா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே
பல்லிதழ் மாதவி அல்லிவண்
டியாழ்செயுங் காழி யூரன்
நல்லவே
ஞானசம் பந்தன் ஆரூர்
எல்லியம் போதெரி யாடுமெம்
மீசனை யேத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீதிலார்
ஓதநீர் வைய கத்தே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கடவூர்மயானம்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார்
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவா ரவரெம் பெருமான் அடிகளே
மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலனொன் றேந்தி
கங்கை சடையிற் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்
செங்கண் வெள்ளே றேறி செல்வஞ் செய்யா வருவார்
அங்கை யேறிய மறியார் அவரெம் பெருமான் அடிகளே
ஈட லிடபம் இசைய ஏறி மழுவொன் றேந்தி
காட திடமா வுடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பாட லிசைகொள் கருவி படுதம் பலவும் பயில்வார்
ஆட லரவம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே
இறைநின் றிலங்கு வளையாள் இளையா ளொருபா லுடையார்
மறைநின் றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார்
கறைநின் றிலங்கு பொழில்சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்
பிறைநின் றிலங்கு சடையார் அவரெம் பெருமான் அடிகளே
வெள்ளை யெருத்தின் மிசையார் விரிதோ டொருகா திலங்க
துள்ளு மிளமான் மறியார் சுடர்பொற் சடைகள் துளங
கள்ள நகுவெண் டலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பிள்ளை மதியம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே
பொன்றா துதிரு மணங்கொள் புனைபூங் கொன்றை புனைந்தார்
ஒன்றா வெள்ளே றுயர்த்த துடையா ரதுவே யூர்வார்
கன்றா வினஞ்சூழ் புறவிற் கடவூர் மயானம் அமர்ந்தார்
பின்றாழ் சடையார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே
பாச மான களைவார் பரிவார கமுதம் அனையார்
ஆசை தீர கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
காசை மலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பேச வருவார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே
செற்ற அரக்கன் அலற திகழ்சே வடிமெல் விரலாற்
கற்குன் றடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார்
மற்றொன் றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல்
பெற்றொன் றேறி வருவார் அவரெம் பெருமான் அடிகளே
வருமா கரியின் உரியார் வளர்புன் சடையார் விடையார்
கருமான் உரிதோல் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
திருமா லொடுநான் முகனு தேர்ந்துங் காணமுன் ஒண்ணா
பெருமா னெனவும் வருவார் அவரெம் பெருமான் அடிகளே
தூய விடைமேல் வருவார் துன்னா ருடைய மதில்கள்
காய வேவ செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
தீய கருமஞ் சொல்லுஞ் சிறுபுன் தேரர் அமணர்
பேய்பே யென்ன வருவார் அவரெம் பெருமான் அடிகளே
மரவம் பொழில்சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த
அரவ மசைத்த பெருமான் அகலம் அறிய லாக
பரவு முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பிரமபுரீசுவரர் தேவியார் மலர்க்குழல்மின்னம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவேணுபுரம்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பூதத்தின் படையினீர் பூங்கொன்றை தாரினீர்
ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வா னவர்புகுந்து
வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும்
பாதத்தீர் வேணுபுரம் பதியா கொண்டீரே
சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல்
உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம்
அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுவெனும்
படையாள்வீர் வேணுபுரம் பதியா கொண்டீரே
கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர்
திங்களோ டிளஅரவ திகழ்சென்னி வைத்துகந்தீர்
மங்கையோர் கூறுடையீர் மறையோர்கள் நிறைந்தேத்த
பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியா கொண்டீரே
நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்
ஏர்கொண்ட கொன்றையினோ டெழில்மத்தம் இலங்கவே
சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்ப
கார்கொண்ட வேணுபுரம் பதியா கலந்தீரே
ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு
சோலைசேர் வண்டினங்கள் இசைபாட தூமொழியார்
காலையே புகுந்திறைஞ்சி கைதொழமெய் மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதியா கொண்டீரே
மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்திருந்தீர்
துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்
பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுர
தணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே
நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர்
கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் தனைச்செற்றீர்
ஆலஞ்சேர் கழனியழ கார்வேணு புரம்அமருங்
கோலஞ்சேர் கோயிலே கோயிலா கொண்டீரே
இரைமண்டி சங்கேறுங் கடல்சூழ்தென் னிலங்கையர்கோன்
விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற்
கரைகண்டி பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார்
விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே
தீயோம்பு மறைவாணர காதியா திசைமுகன்மால்
போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர்
பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு
சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியா திகழ்ந்தீரே
நிலையார்ந்த வுண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள்
புலையானார் அறவுரையை போற்றாதுன் பொன்னடியே
நிலையாக பேணிநீ சரணென்றார் தமையென்றும்
விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருத்தேவூர்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்
விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி
தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகை தேவூர்
அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லலொன் றிலமே
ஓதி மண்டல தோர்முழு துய்யவெற் பேறு
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர
தீதில் பங்க தெரிவையர் முகமலர் தேவூர்
ஆதி சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே
மறைக ளான்மிக வழிபடு மாணியை கொல்வான்
கறுவு கொண்டவ காலனை காய்ந்தவெங் கடவுள்
செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவூர்
அறவன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே
முத்தன் சில்பலி கூர்தொறும் முறைமுறை திரியும்
பித்தன் செஞ்சடை பிஞ்ஞகன் தன்னடி யார்கள்
சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவூர்
அத்தன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே
பாடு வாரிசை பல்பொரு பயனுக தன்பால்
கூடு வார்துணை கொண்டதம் பற்றற பற்றி
தேடு வார்பொரு ளானவன் செறிபொழில் தேவூர்
ஆடு வானடி யடைந்தனம் அல்லலொன் றிலமே
பொங்கு பூண்முலை புரிகுழல் வரிவளை பொருப்பின்
மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான்
திங்கள் சூடிய தீநிற கடவுள்தென் தேவூர்
அங்க ணன்றனை அடைந்தனம் அல்லலொன் றிலமே
வன்பு யத்தவ தானவர் புரங்களை யெரி
தன்பு யத்துற தடவரை வளைத்தவன் தக்க
தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே
தருவு யர்ந்தவெற் பெடுத்தவ தசமுகன் நெரிந்து
வெருவ வூன்றிய திருவிரல் நெகிழ்த்துவாள் பணித்தான்
தெருவு தோறும்நல் தென்றல்வ துலவிய தேவூர்
அரவு சூடியை அடைந்தனம் அல்லலொன் றிலமே
முந்தி கண்ணனும் நான்முக னும்மவர் காணா
எந்தை திண்டிறல் இருங்களி றுரித்தவெம் பெருமான்
செந்தி னத்திசை யறுபத முரல்திரு தேவூர்
அந்தி வண்ணனை யடைந்தனம் அல்லலொன் றிலமே
பாறு புத்தரு தவமணி சமணரும் பலநாள்
கூறி வைத்ததோர் குறியினை பிழையென கொண்டு
தேறி மிக்கநஞ் செஞ்சடை கடவுள்தென் தேவூர்
ஆறு சூடியை யடைந்தனம் அல்லலொன் றிலமே
அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர கதிபன்
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன்
எல்லை யில்புகழ் மல்கிய எழில்வளர் தேவூர
தொல்லை நம்பனை சொல்லிய பத்தும் வல்லாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் தேவகுருநாதர் தேவியார் தேன்மொழியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கொச்சைவயம்
பண் பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்த
நெடுமா வுரித்த நிகரில்
சேலன கண்ணிவண்ணம் ஒருகூ றுருக்கொள்
திகழ்தேவன் மேவு பதிதான்
வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை
விழவோசை வேத வொலியின்
சாலநல் வேலையோசை தருமாட வீதி
கொடியாடு கொச்சை வயமே
விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல
விகிர துருக்கொள் விமலன்
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள்
தகவைத்த சோதிபதி தான்
மடையிடை யன்னமெங்கும் நிறை பரந்து
கமலத்து வைகும் வயல்சூழ்
கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும்
வளர்கின்ற கொச்சை வயமே
படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை
களைவிக்கும் எங்கள் பரமன்
இடமுடை வெண்டலைக்கை பலிகொள்ளு மின்பன்
இடமாய வேர்கொள் பதிதான்
நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடும்
நளிர்சோலை கோலு கன
குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல
மறையோது கொச்சை வயமே
எண்டிசை பாலரெங்கும் இகலி புகுந்து
முயல்வுற்ற சிந்தை முடுகி
பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு
பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டன்மிண்டி வரும்நீர பொன்னி
வயல்பாய வாளை குழுமி
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன
வளர்கின்ற கொச்சை வயமே
பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர
னொடுதோழ மைக்கொள் பகவன்
இனியன அல்லவற்றை யினிதாக நல்கும்
இறைவன் இடங்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம்
வளர்தூம மோடி யணவி
குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து
நிறைகின்ற கொச்சை வயமே
புலியதள் கோவணங்கள் உடையாடை யாக
வுடையான் நினைக்கு மளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன்
நலமா இருந்த நகர்தான்
கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை
யுடையார் நிறைந்து வளர
பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு
வரைமேவு கொச்சை வயமே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன்
முடியோடு தோள்கள் நெரி
பிழைகெட மாமலர்ப்பொன் அடிவைத்த பேயொ
டுடனாடி மேய பதிதான்
இழைவள ரல்குல்மாதர் இசைபாடி யாட
விடுமூச லன்ன கமுகின்
குழைதரு கண்ணிவிண்ணில் வருவார்கள் தங்கள்
அடிதேடு கொச்சை வயமே
வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம்
முழுதுண்ட மாலும் இகலி
கண்டிட வொண்ணுமென்று கிளறி பறந்தும்
அறியாத சோதி பதிதான்
நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து
விரைதேர போது மடுவிற்
புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து
வயல்மேவு கொச்சை வயமே
கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்டர்
இடுசீவ ரத்தி னுடையார்
மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல
விகிர துருக்கொள் விமலன்
பையுடை நாகவாயில் எயிறார மிக்க
குரவம் பயின்று மலர
செய்யினில் நீலமொட்டு விரி கமழ்ந்து
மணநாறு கொச்சை வயமே
இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை
உலகங்க ளேழு முடனே
மறைதரு வெள்ளமேறி வளர்கோயில் மன்னி
இனிதா இருந்த மணியை
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த
தமிழ்மாலை பாடு மவர்போய்
அறைகழ லீசனாளும் நகர்மேவி யென்றும்
அழகா இருப்ப தறிவே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநனிபள்ளி
பண் பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை
படர்தொடரி கள்ளி கவினி
சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த
சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை
குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரல்வார வயன்மேதி வைகும்
நனிபள்ளி போலு நமர்காள்
சடையிடை புக்கொடுங்கி உளதங்கு வெள்ளம்
வளர்திங்கள் கண்ணி அயலே
இடையிடை வைத்ததொக்கும் மலர்தொத்து மாலை
யிறைவன்னி டங்கொள் பதிதான்
மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து
மணநாறும் நீல மலரும்
நடையுடை அன்னம்வைகு புனலம் படப்பை
நனிபள்ளி போலு நமர்காள்
பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல்
ஒழிபாடி லாத பெருமான்
கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை
யிடமாய காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின்
விடுபோ தலர்ந்த விரைசூழ்
நறுமலர் அல்லிபல்லி ஒலிவண் டுறங்கும்
நனிபள்ளி போலு நமர்காள்
குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு
தலைமாலை யோடு குலவி
ஒளிர்தரு திங்கள்சூடி உமைபாக மாக
வுடையா னுகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட
பெடைவண்டு தானும் முரல
நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகும்
நனிபள்ளி போலு நமர்காள்
தோடொரு காதனாகி யொருகா திலங்கு
சுரிசங்கு நின்று புரள
காடிட மாகநின்று கனலாடு மெந்தை
யிடமாய காதல் நகர்தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று
வெறிநீர் தெளிப்ப விரலால்
நாடுட னாடுசெம்மை ஒளிவெள்ள மாரும்
நனிபள்ளி போலு நமர்காள்
மேகமொ டோ டுதிங்கள் மலரா அணிந்து
மலையான் மடந்தை மணிபொன்
ஆகமோர் பாகமாக அனலாடு மெந்தை
பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமோ டாடுமந்தி உகளுஞ் சிலம்ப
அகிலுந்தி யொண்பொன் இடறி
நாகமோ டாரம்வாரு புனல்வ தலைக்கும்
நனிபள்ளி போலு நகர்காள்
தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங்
கொடுகொட்டி வீணை முரல
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த
பெருமான் உகந்த நகர்தான்
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல்
பணிவார்கள் பாடல் பெருகி
நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை
நனிபள்ளி போலு நமர்காள்
பாலை நெய்தல் பாடியது இந்த நான்காவது
சரணத்தால் விளங்குகின்றது எவ்வாறெனில்
முத்துகள் விளங்கு மணல் சூழ்ந்த நிலமென்றதனா
லென்க பாலை நெய்தல் பாடியதும் பாம்பழி
பாடியதும் என்னு திருவெண்பாவானுமுணர்க
வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று
மதியா அரக்கன் வலியோ
டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த
பெருமான் உகந்த நகர்தான்
நிலமிகு கீழுமேலும் நிகராது மில்லை
எனநின்ற நீதி யதனை
நலம்மிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்
நனிபள்ளி போலு நமர்காள்
நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற
தொருநீர்மை சீர்மை நினையார்
அறவுரு வேதநாவன் அயனோடு மாலும்
அறியாத அண்ணல் நகர்தான்
புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை
புனைகொன்றை துன்று பொதுளி
நறவிரி போதுதாது புதுவாச நாறும்
நனிபள்ளி போலு நமர்காள்
அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில்
இடவுண்டு பட்ட அமணும்
மனமிகு கஞ்சிமண்டை அதிலுண்டு தொண்டர்
குணமின்றி நின்ற வடிவும்
வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின்
விடையா னுகந்த நகர்தான்
நனிமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்
நனிபள்ளி போலு நமர்காள்
கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல்
கமழ்காழி என்று கருத
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த
பதியான ஞான முனிவன்
இடுபறை யொன்றஅத்தர் பியன்மே லிருந்தி
னிசையா லுரைத்த பனுவல்
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க
வினைகெடுதல் ஆணை நமதே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

கோளாறு திருப்பதிகம்
பண் பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
இரண்டாவது தேவாரம் மூன்றாவது சரணத்தில் பிரயாண துக்காகாத
நட்சத்திரங்களை குறித்திருக்கின்றது
விவரம் நட்சத்திரங்களில் முதலுற்பத்தி கிருத்திகையாம்
ஆதலாலதனை முதலாகக்கொண்டு பார்க்கில் வது
நட்சத்திரம் பூரம் ஒன்றென்றது கிருத்திகை ஆயிலிய
நட்சத்திரம் பூராடம் ஆறுமுடனாய நாள்கள் என்றது
மேற்கூறிய நான்கும் அல்லாத நட்சத்திரங்களுமாம்
நட்சத்திரங்களாவன பூரம் பூராடம் பூரட்டாதி மகம்
கேட்டை பரணி கிருத்திகை சுவாதி ஆயிலியம் விசாகம்
ஆதிரை சித்திரை என்பவைகளாகும்
உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வ மானபலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு
மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே
இப்பதிகம் பாண்டிநாட்டு கெழுந்தருளியபோது அருளிச்செய்தது
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநாரையூர்
பண் பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்ம
செயல்தீங்கு குற்ற முலகில்
வரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம்
மிகவேத்தி நித்தம் நினைமின்
வரைசிலை யாகவன்று மதில்மூன் றெரித்து
வளர்கங்குல் நங்கை வெருவ
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வ
திருநாரை யூர்கை தொழவே
ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற
பிணிநோ யொருங்கும் உயரும்
வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி
விதியான வேத விகிர்தன்
கானிடை யாடிபூத படையா னியங்கு
விடையான் இலங்கு முடிமேல்
தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு
திருநாரை யூர்கை தொழவே
ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன்
துயருற்ற தீங்கு விரவி
பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை
ஒழிவுற்ற வண்ண மகலும்
போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று
புகழ்வானு ளோர்கள் புணரு
தேரிடை நின்றஎந்தை பெருமா னிருந்த
திருநாரை யூர்கை தொழவே
தீயுற வாயஆக்கை அதுபற்றி வாழும்
வினைசெற்ற வுற்ற உலகின்
தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம்
நிலையாக நின்று மருவும்
பேயுற வாயகானில் நடமாடி கோல
விடமுண்ட கண்டன் முடிமேல்
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வ
திருநாரை யூர்கை தொழவே
வசையப ராதமாய வுவரோத நீங்கு
தவமாய தன்மை வரும்வான்
மிசையவ ராதியாய திருமார் பிலங்கு
விரிநூலர் விண்ணும் நிலனும்
இசையவ ராசிசொல்ல இமையோர்க ளேத்தி
யமையாத காத லொடுசேர்
திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வ
திருநாரை யூர்கை தொழவே
உறைவள ரூன்நிலாய வுயிர்நிற்கும் வண்ணம்
உணர்வாக்கும் உண்மை உலகில்
குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில்
நிறைவாற்று நேசம் வளரும்
மறைவளர் நாவன்மாவின் உரிபோர்த்த மெய்யன்
அரவார்த்த அண்ணல் கழலே
திறைவளர் தேவர்தொண்டின் அருள்பேண நின்ற
திருநாரை யூர்கை தொழவே
தனம்வரும் நன்மையாகு தகுதி குழந்து
வருதி குழன்ற உடலின்
இனம்வள ரைவர்செய்யும் வினையங்கள் செற்று
நினைவொன்று சிந்தை பெருகும்
முனமொரு காலம்மூன்று புரம்வெந்து மங்க
சரமுன் றெரிந்த அவுணர்
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வ
திருநாரை யூர்கை தொழவே
உருவரை கின்றநாளில் உயிர்கொள்ளுங் கூற்றம்
நனியஞ்சு மாத லுறநீர்
மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின்
அழிபா டிலாத கடலின்
அருவரை சூழிலங்கை அரையன்றன் வீரம்
அழி தடக்கை முடிகள்
திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வ
திருநாரை யூர்கை தொழவே
வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க
பகைதீர்க்கு மேய வுடலில்
தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற
கரவை கரந்து திகழுஞ்
சேறுயர் பூவின்மேய பெருமானு மற்றை
திருமாலும் நேட எரியா
சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வ
திருநாரை யூர்கை தொழவே
மிடைபடு துன்பமின்பம் உளதாக்கு முள்ளம்
வெளியாக்கு முன்னி யுணரும்
படையொரு கையிலேந்தி பலிகொள்ளும் வண்ணம்
ஒலிபாடி யாடி பெருமை
உடையினை விட்டுளோரும் உடல்போர துளோரும்
உரைமாயும் வண்ணம் அழி
செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வ
திருநாரை யூர்கை தொழவே
எரியொரு வண்ணமாய உருவானை யெந்தை
பெருமானை உள்கி நினையார்
திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வ
திருநாரை யூர்கை தொழுவான்
பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன்
உரைமாலை பத்தும் மொழிவார்
திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க
துளதென்பர் செம்மை யினரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநறையூர்
பண் பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி
யரியான்மு னாய வொளியான்
நீரியல் காலுமாகி நிறைவானு மாகி
யுறுதீயு மாய நிமலன்
ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த
நலகண்டு பண்டு சுடலை
நாரியோர் பாகமாக நடமாட வல்ல
நறையூரின் நம்ப னவனே
இடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை
யெதிர்நாணி பூண வரையிற்
கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து
அமரர களித்த தலைவன்
மடமயில் ஊர்திதாதை எனநின்று தொண்டர்
மனம்நின்ற மைந்தன் மருவும்
நடமயி லாலநீடு குயில்கூவு சோலை
நறையூரின் நம்ப னவனே
சூடக முன்கைமங்கை யொருபாக மாக
அருள்கார ணங்கள் வருவான்
ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு
படுபிச்ச னென்று பரவ
தோடக மாயோர்காதும் ஒருகா திலங்கு
குழைதாழ வேழ வுரியன்
நாடக மாகவாடி மடவார்கள் பாடும்
நறையூரின் நம்ப னவனே
சாயல்நன் மாதோர்பாகன் விதியாய சோதி
கதியாக நின்ற கடவுள்
ஆயக மென்னுள்வந்த அருளாய செல்வன்
இருளாய கண்டன் அவனி
தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு
மலையின்கண் வந்து தொழுவார்
நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும்
நறையூரின் நம்ப னவனே
நெதிபடு மெய்யெம்ஐயன் நிறைசோலை சுற்றி
நிகழம் பலத்தின் நடுவே
அதிர்பட ஆடவல்ல அமரர கொருத்தன்
எமர்சுற்ற மாய இறைவன்
மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து
விடையேறி இல்பலி கொள்வான்
நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும்
நறையூரின் நம்ப னவனே
கணிகையோர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை
மலர்துன்று செஞ்சடை யினான்
பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு
பலவாகி நின்ற பரமன்
அணுகிய வேதவோசை யகலங்க மாறின்
பொருளான ஆதி யருளான்
நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து
நறையூரின் நம்ப னவனே
ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க
மவையார ஆட லரவம்
மிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும்
விகிர்தன் விடங்கொள் மிடறன்
துளிதரு சோலையாலை தொழில்மேவ வேதம்
எழிலார வென்றி யருளும்
நளிர்மதி சேருமாடம் மடவார்க ளாரும்
நறையூரின் நம்ப னவனே
அடலெரு தேறுகந்த அதிருங் கழற்கள்
எதிருஞ் சிலம்பொ டிசை
கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன்
முனிவுற் றிலங்கை யரையன்
உடலொடு தோளனைத்து முடிப திறுத்தும்
இசைகே டிரங்கி யொருவாள்
நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல
நறையூரின் நம்ப னவனே
குலமலர் மேவினானும் மிகுமாய னாலும்
எதிர்கூடி நேடி நினைவுற்
றிலபல எய்தொணாமை எரியா யுயர்ந்த
பெரியா னிலங்கு சடையன்
சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச
வருமை திகழ்ந்த பொழிலின்
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி
நறையூரின் நம்ப னவனே
துவருறு கின்றவாடை யுடல்போர துழன்ற
வவர்தாமு மல்ல சமணுங்
கவருறு சிந்தையாளர் உரைநீ துகந்த
பெருமான் பிறங்கு சடையன்
தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண
முறைமாதர் பாடி மருவும்
நவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட
நறையூரின் நம்ப னவனே
கானலு லாவியோதம் எதிர்மல்கு காழி
மிகுபந்தன் முந்தி யுணர
ஞானமு லாவுசிந்தை யடிவை துகந்த
நறையூரின் நம்ப னவனை
ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த
தமிழ்மாலை பத்தும் நினைவார்
வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று
வழிபாடு செய்யும் மிகவே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமுல்லைவாயில்
பண் பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன்
நடமன்னு துன்னு சுடரோன்
ஒளிமண்டி யும்ப ருலகங் கடந்த
உமைபங்க னெங்க ளரனூர்
களிமண்டு சோலை கழனி கலந்த
கமலங்கள் தங்கு மதுவின்
தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு
திருமுல்லை வாயி லிதுவே
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன்
அயனை படைத்த பரமன்
அரவ தொடங்க மவைகட்டி யெங்கு
மரவிக்க நின்ற அரனூர்
உருவத்தின் மிக்க ஒளிர்சங் கொடிப்பி
யவையோத மோத வெருவி
தெருவத்தில் வந்து செழுமு தலைக்கொள்
திருமுல்லை வாயி லிதுவே
வாராத நாடன் வருவார்தம் வில்லின்
உருமெல்கி நாளு முருகில்
ஆராத வின்ப னகலாத அன்பன்
அருள்மேவி நின்ற அரனூர்
பேராத சோதி பிரியாத மார்பின்
அலர்மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நெதிநேர நீடு
திருமுல்லை வாயி லிதுவே
ஒன்றொன்றொ டொன்றும் ஒருநான்கொ டைந்தும்
இருமூன்றொ டேழு முடனாய்
அன்றின்றொ டென்றும் அறிவான வர்க்கும்
அறியாமை நின்ற அரனூர்
குன்றொன்றொ டொன்று குலையொன்றொ
கொடியொன்றொ டொன்று குழுமி
சென்றொன்றொ டொன்று செறிவாய் நிறைந்த
திருமுல்லை வாயி லிதுவே
கொம்பன்ன மின்னின் இடையாளோர் கூறன்
விடைநாளும் ஏறு குழகன்
நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின்
மதியேறு சென்னி அரனூர்
அம்பன்ன வொண்க ணவரா டரங்கின்
அணிகோபு ரங்க ளழகார்
செம்பொன்ன செவ்வி தருமாடம் நீடு
திருமுல்லை வாயி லிதுவே
ஊனேறு வேலின் உருவேறு கண்ணி
ஒளியேறு கொண்ட வொருவன்
ஆனேற தேறி யழகேறு நீறன்
அரவேறு பூணு மரனூர்
மானேறு கொல்லை மயிலேறி வந்து
குயிலேறு சோலை மருவி
தேனேறு மாவின் வளமேறி யாடு
திருமுல்லை வாயி லிதுவே
நெஞ்சார நீடு நினைவாரை மூடு
வினைதேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன்
அனலாடு மேனி யரனூர்
மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம்
உளதென்று வைகி வரினுஞ்
செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள்
திருமுல்லை வாயி லிதுவே
வரைவ தெடுத்த வலிவா ளரக்கன்
முடிபத்து மிற்று நெரிய
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி
உமைபங்கன் எங்க ளரனூர்
வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து
மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரைவந்து வந்து செறிதேற லாடு
திருமுல்லை வாயி லிதுவே
மேலோடி நீடு விளையாடல் மேவு
விரிநூலன் வேத முதல்வன்
பாலாடு மேனி கரியானு முன்னி
யவர்தேட நின்ற பரனூர்
காலாடு நீல மலர்துன்றி நின்ற
கதிரேறு செந்நெல் வயலிற்
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு
திருமுல்லை வாயி லிதுவே
பனைமல்கு திண்கை மதமா வுரித்த
பரமன்ன நம்ப னடியே
நினைவன்ன சிந்தை அடையாத தேரர்
அமண்மாய நின்ற அரனூர்
வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு
முகுளங்க ளெங்கு நெரி
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு
திருமுல்லை வாயி லிதுவே
அணிகொண்ட கோதை யவள்நன்று மேத்த
அருள்செய்த எந்தை மருவார்
திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி
திருமுல்லை வாயி லிதன்மேல்
தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான
மிகுபந்தன் ஒண்டமிழ் களின்
அணிகொண்ட பத்தும் இசைபாடு பத்தர்
அகல்வானம் ஆள்வர் மிகவே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் முல்லைவனநாதர் தேவியார் கோதையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கொச்சைவயம்
பண் பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
அறையும் பூம்புன லோடு மாடர வச்சடை தன்மேற்
பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார்
மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத
குறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயமமர தாரே
சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூத
கண்ணத்தர் வெங்கன லேந்தி கங்குல்நின் றாடுவர் கேடில்
எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும்
வண்ணத்த அந்தணர் வாழுங் கொச்சை வயமமர தாரே
பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை தாழ
மாலை யாடுவர் கீத மாமறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால்கட லோதம் வெண்டிரை கரைமிசை விளங்குங்
கோல மாமணி சிந்துங் கொச்சை வயமமர தாரே
கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடி கணிவர்
பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையோர் பங்கர்
கடிகொள் நீடொலி சங்கின் ஒலியொடு கலையொலி துதைந்து
கொடிக ளோங்கிய மாட கொச்சை வயமமர தாரே
ஆடன் மாமதி யுடையா ராயின பாரிடஞ் சூழ
வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலி குழல்வார்
ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையொ டாடி
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர தாரே
மண்டு கங்கையும் அரவு மல்கிய வளர்சடை தன்மேற்
துண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாக
விண்ட தானவர் அரணம் வெவ்வழல் எரிகொள விடைமேற்
கொண்ட கோலம துடையார் கொச்சை வயமமர தாரே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
அன்றவ் வால்நிழ லமர்ந்து வறவுரை நால்வர கருளி
பொன்றி னார்தலை யோட்டி லுண்பது பொருகட லிலங்கை
வென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்தோய்
குன்ற மன்னபொன் மாட கொச்சை வயமமர தாரே
சீர்கொள் மாமல ரானுஞ் செங்கண்மா லென்றிவ ரேத்த
ஏர்கொள் வெவ்வழ லாகி யெங்கு முறநிமிர தாரும்
பார்கொள் விண்ணழல் கால்நீர பண்பினர் பால்மொழி யோடுங்
கூர்கொள் வேல்வல னேந்தி கொச்சை வயமமர தாரே
குண்டர் வண்துவ ராடை போர்த்ததோர் கொள்கை யினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டர்
பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங்
கொண்டல் சேர்மணி மாட கொச்சை வயமமர தாரே
கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய
அந்த ணன்னடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன்
சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய்
முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநெல்வாயில் திருஅரத்துறை
பண் பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
எந்தை ஈசனெம் பெருமான்
ஏறமர் கடவுளென் றேத்தி
சிந்தை செய்பவர கல்லால்
சென்றுகை கூடுவ தன்றாற்
கந்த மாமல ருந்தி
கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே
ஈர வார்சடை தன்மேல்
இளம்பிறை யணிந்த எம்பெருமான்
சீருஞ் செல்வமும் ஏத்தா
சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்
வாரி மாமல ருந்தி
வருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆருஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே
பிணிக லந்தபுன் சடைமேற்
பிறையணி சிவனென பேணி
பணிக லந்துசெய் யாத
பாவிகள் தொழச்செல் வதன்றால்
மணிக லந்துபொன் னுந்தி
வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணிக லந்தநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே
பிணி கட்டுதல்
துன்ன ஆடையொன் றுடுத்து
தூயவெண் ணீற்றி னராகி
உன்னி நைபவர கல்லால்
ஒன்றுங்கை கூடுவ தன்றாற்
பொன்னும் மாமணி யுந்தி
பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
அன்ன மாருநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே
வெருகு ரிஞ்சுவெங் காட்டி
லாடிய விமலனென் றுள்கி
உருகி நைபவர கல்லால்
ஒன்றுங்கை கூடுவ தன்றால்
முருகு ரிஞ்சுபூஞ் சோலை
மொய்ம்மலர் சுமந்திழி நிவாவ
தருகு ரிஞ்சுநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே
உரவு நீர்சடை கரந்த
வொருவனென் றுள்குளிர தேத்தி
பரவி நைபவர கல்லாற்
பரிந்துகை கூடுவ தன்றால்
குரவ நீடுயர் சோலை
குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவ மாருநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே
நீல மாமணி மிடற்று
நீறணி சிவனென பேணுஞ்
சீல மாந்தர்க கல்லாற்
சென்றுகை கூடுவ தன்றால்
கோல மாமல ருந்தி
குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
ஆலுஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே
செழுந்தண் மால்வரை யெடுத்த
செருவலி இராவணன் அலற
அழுந்த ஊன்றிய விரலான்
போற்றியென் பார்க்கல்ல தருளான்
கொழுங் கனிசு துந்தி
குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே
நுணங்கு நூலயன் மாலும்
இருவரும் நோக்கரி யானை
வணங்கி நைபவர கல்லால்
வந்துகை கூடுவ தன்றால்
மணங்க மழ்ந்துபொன் னுந்தி
வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணங்குஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே
சாக்கி யப்படு வாருஞ்
சமண்படு வார்களும் மற்றும்
பாக்கி யப்பட கில்லா
பாவிகள் தொழச்செல்வ தன்றால்
பூக்க மழ்ந்துபொன் னுந்தி
பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆர்க்குஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே
கறையி னார்பொழில் சூழ்ந்த
காழியுள் ஞான சம்பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த
அரத்துறை யடிகள்தம் அருளை
முறைமை யாற்சொன்ன பாடல்
மொழியும் மாந்தர்தம் வினைபோ
பறையும் ஐயுற வில்லை
பாட்டிவை பத்தும் வல்லார்க்கே
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் அரத்துறைநாதர் தேவியார் ஆனந்தநாயகியம்மை
நிவா வென்பது ஒரு நதி புனல்நிவாவென பதம்பிரிக்க
இது முத்துச்சிவிகை முத்துச்சின்ன முதலியவை பெற்றபோதருளிச்செய்தது
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமறைக்காடு
பண் பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பொங்கு வெண்மணற் கானற் பொருகடல் திரைதவழ் முத்தங்
கங்கு லாரிருள் போழுங் கலிமறை காடமர தார்தா
திங்கள் சூடின ரேனு திரிபுரம் எரித்தன ரேனும்
எங்கும் எங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே
கூனி ளம்பிறை சூடி கொடுவரி தோலுடை யாடை
ஆனி லங்கிள ரைந்தும் ஆடுவர் பூண்பது மரவங்
கான லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப
தேன லங்கமழ் சோலை திருமறை காடமர தாரே
நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிட திலங்கு பொன்மார்பிற்
பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன்
தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்ப
கண்ணி தானுமோர் பிறையார் கலிமறை காடமர தாரே
ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதென கருதி
தாழை வெண்மடற் புல்கு தண்மறை காடமர தார்தாம்
மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின்
நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே
அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும்
பரவ நாஞ்செய்த பாவம் பறைதர வருளுவர் பதிதான்
மரவம் நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயும் மறைக்கா
டிரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெ னலாமே
பல்லி லோடுகை யேந்தி பாடியும் ஆடியும் பலிதேர்
அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள்
புல்ல மேறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர கிடமாம்
மல்கு வெண்டிரை யோதம் மாமறை காடது தானே
நாக தான்கயி றாக நளிர்வரை யதற்கு மத்தாக
பாக தேவரோ டசுரர் படுகடல் அளறெழ கடைய
வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கு மோட
ஆக தன்னில்வை தமிர்தம் ஆக்குவி தான்மறை காடே
தக்கன் வேள்வியை தகர்த்தோன் தனதொரு பெருமையை ஓரான்
மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலும் மலைமகள் நடுங்க
நக்கு தன்திரு விரலா லூன்றலும் நடுநடு தரக்கன்
பக்க வாயும்வி டலற பரிந்தவன் பதிமறை காடே
விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை யானும்
பண்டுங் காண்பரி தாய பரிசினன் அவனுறை பதிதான்
கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப
வண்ட லங்கமழ் சோலை மாமறை காடது தானே
பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவா
கரிய மண்டைகை யேந்தி கல்லென வுழிதருங் கழுக்கள்
அரிய வாகவுண் டோ து மவர்திறம் ஒழிந்து நம்மடிகள்
பெரிய சீர்மறை காடே பேணுமின் மனமுடை யீரே
மையுலாம் பொழில் சூழ்ந்த மாமறை காடமர தாரை
கையினாற் றொழு தெழுவான் காழியுள் ஞானசம் பந்தன்
செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுள் சேர்க்க வல்லார்போ
பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வேதாரணியேசுவரர் தேவியார் யாழைப்பழித்தமொழியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
பண் பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பட்டம் பால்நிற மதியம் படர்சடை சுடர்விடு பாணி
நட்டம் நள்ளிரு ளாடும் நாதனார் நவின்றுறை கோயில்
புட்டன் பேடையோ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி
வட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சர தாரே
முயல் வளாவிய திங்கள் வாண்முக தரிவையில் தெரிவை
இயல் வளாவிய துடைய இன்னமு தெந்தையெம் பெருமான்
கயல் வளாவிய கழனி கருநிற குவளைகள் மலரும்
வயல் வளாவிய புகலூர் வர்த்தமா னீச்சர தாரே
தொண்டர் தண்கயம் மூழ்கி துணையலுஞ் சாந்தமும் புகையுங்
கொண்டு கொண்டடி பரவி குறிப்பறி முருகன் செய்கோலங்
கண்டு கண்டுகண் குளிர களிபர தொளிமல்கு கள்ளார்
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சர தாரே
பண்ண வண்ணத்த ராகி பாடலொ டாட லறாத
விண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரோர் பாகம்
பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த
வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சர தாரே
ஈசன் ஏறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான்
பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடை பூம்புக லூரில்
மூசு வண்டறை கொன்றை முருகன்மு போதுஞ்செய் முடிமேல்
வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சர தாரே
தளிரி ளங்கொடி வளர தண்கயம் இரிய வண்டேறி
கிளரி ளம்முழை நுழை கிழிதரு பொழிற்புக லூரில்
உளரி ளஞ்சுனை மலரும் ஒளிதரு சடைமுடி யதன்மேல்
வளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சர தாரே
தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி யெழில்நரம் பெடுத்து
துஞ்சு நெஞ்சிருள் நீங்க தொழுதெழு தொல்புக லூரில்
அஞ்ச னம்பிதிர தனைய அலைகடல் கடைய அன்றெழுந்த
வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சர தாரே
சாம வேதமோர் கீத மோதி தசமுகன் பரவும்
நாம தேயம துடையார் நன்குணர தடிகளென் றேத்த
காம தேவனை வேவ கனலெரி கொளுவிய கண்ணார்
வாம தேவர்தண் புகலூர் வர்த்தமா னீச்சர தாரே
சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக னோடு
நார ணன்கரு தழிய நகைசெய்த சடைமுடி நம்பர்
ஆர ணங்குறும் உமையை அஞ்சுவி தருளுதல் பொருட்டால்
வார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சர தாரே
கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி னாற்றம்
மெய்யை போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யென விரும்பேற்
செய்யில் வாளைக ளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்
மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சர தாரே
பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழிற் புகலூரில்
மங்குல் மாமதி தவழும் வர்த்தமா னீச்சர தாரை
தங்கு சீர்திகழ் ஞான சம்பந்தன் தண்டமிழ் பத்தும்
எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவ ருலகே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வர்த்தமானீசுவரர் தேவியார் கருந்தார்க்குழலியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருத்தெங்கூர்
பண் பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்ற
கரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள்
இரைசெய் தாரழ லூட்டி யுழல்பவர் இடுபலி கெழில்சேர்
விரைசெய் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே
சித்த தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்குங்
கொத்தின் தாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன்
பத்தர் தாம்பணி தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த
வித்தன் தாழ்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே
அடையும் வல்வினை யகல அருள்பவர் அனலுடை மழுவா
படையர் பாய்புலி தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன்
சடையில் வெண்பிறை சூடி தார்மணி யணிதரு தறுகண்
விடையர் வீங்கெழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே
பண்டு நான்செய்த வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார்
கொண்டல் வான்மதி சூடி குரைகடல் விடமணி கண்டர்
வண்டு மாமல ரூதி மதுவுண இதழ் மறிவெய்தி
விண்ட வார்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே
சுழித்த வார்புனற் கங்கை சூடியோர் காலனை காலால்
தெழித்து வானவர் நடுங்க செற்றவர் சிறையணி பறவை
கழித்த வெண்டலை யேந்தி காமன துடல் பொடியாக
விழித்த வர்திரு தெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே
தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் பொடியணி சுவண்டர்
எல்லி சூடிநின் றாடும் இறையவர் இமையவ ரேத்த
சில்லை மால்விடை யேறி திரிபுர தீயெழ செற்ற
வில்லி னார்திரு தெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே
நெறிகொள் சிந்தைய ராகி நினைபவர் வினைகெட நின்றார்
முறிகொள் மேனிமு கண்ணர் முளைமதி நடுநடு திலங்க
பொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடி பூசி
வெறிகொள் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே
எண்ணி லாவிற லரக்கன் எழில்திகழ் மால்வரை யெடு
கண்ணெ லாம்பொடி தலற கால்விர லூன்றிய கருத்தர்
தண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடி சதுரர்
விண்ணு லாம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே
தேடி தானயன் மாலு திருமுடி யடியிணை காணார்
பாட தான்பல பூத படையினர் சுடலையிற் பலகால்
ஆட தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செ கருதும்
வேட தார்திரு தெங்கூர் வெள்ளியங் குன்ற மர்ந்தாரே
சடங்கொள் சீவர போர்வை சாக்கியர் சமணர் சொல்தவிர
இடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமின் இருமரு பொருகை
கடங்கொள் மால்களிற் றுரியர் கடல்கடை திடக்கனன் றெழுந்த
விடங்கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரை
கந்த மார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன்
சந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும் வல்லார்மேல்
பந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வெள்ளிமலையீசுவரர் தேவியார் பெரியாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாழ்கொளிபுத்தூர்
பண் பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார்
ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார்
தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே
எண்ணி லீரமும் உடையார் எத்தனை யோரிவர் அறங்கள்
கண்ணு மாயிரம் உடையார் கையுமோ ராயிரம்
பெண்ணு மாயிரம் உடையார் பெருமையோ ராயிரம்
வண்ண மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே
நொடியோ ராயிரம் உடையர் நுண்ணிய ராமவர் நோக்கும்
வடிவு மாயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம்
முடியு மாயிரம் உடையார் மொய்குழ லாளையும்
வடிவு மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே
பஞ்சி நுண்துகி லன்ன பைங்கழற் சேவடி யுடையார்
குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார்
அஞ்சும் வென்றவர கணியார் ஆனையின் ஈருரி யுடையார்
வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே
பரவு வாரையும் உடையார் பழித்திகழ்
விரவு வாரையும் உடையார் வெண்டலை பலிகொள்வ துடையார்
அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம் பேர்மிக வுடையார்
வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே
தண்டு தாளமுங் குழலு தண்ணுமை கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்
கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை
வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே
மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்
தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ தேத்த
ஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருள் மகளிர் நின்றேத்த
வான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே
ஏழு மூன்றுமோர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார்
கேழல் வெண்பிறை யன்ன கெழுமணி மிடறுநின் றிலங்க
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே
வென்றி மாமல ரோனும் விரிகடல் துயின்றவன் றானும்
என்றும் ஏத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பி
முன்றில் மாமலர் வாசம் முதுமதி தவழ்பொழில் தில்லை
மன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே
மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர்
குண்டர் பேசிய பேச்சு கொள்ளன்மின் திகழொளி நல்ல
துண்ட வெண்பிறை சூடி சுண்ணவெண் பொடியணி தெங்கும்
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே
நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் ஞான சம்பந்தன்
வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூ ருளானை
இலங்கு வெண்பிறை யானை யேத்திய தமிழிவை வல்லார்
நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மாணிக்கவண்ணநாதர் தேவியார் வண்டமர்பூங்குழலம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஅரைசிலி
பண் பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய்புனற் கங்கை
கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடை குலாவி
வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லி தோல்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளு கிடம்அர சிலியே
ஏறு பேணிய தேறி யிளமத களிற்றினை யெற்றி
வேறு செய்ததன் உரிவை வெண்புலால் கலக்க மெய்போர்த்த
ஊறு தேனவன் உம்பர கொருவன்நல் லொளிகொளொண் சுடராம்
ஆறு சேர்தரு சென்னி யடிகளு கிடம்அர சிலியே
கங்கை நீர்சடை மேலே கதம்மி கதிரிள வனமென்
கொங்கை யாளொரு பாக மருவிய கொல்லை வெள்ளேற்றன்
சங்கை யாய்த்திரி யாமே தன்னடி யார கருள்செய்து
அங்கை யாலன லேந்தும் அடிகளு கிடம்அர சிலியே
மிக்க காலனை வீட்டி மெய்கெட காமனை விழித்து
புக்க ஊரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை
தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணி தாமை
அக்கின் ஆரமும் பூண்ட அடிகளு கிடம்அர சிலியே
மானஞ் சும்மட நோக்கி மலைமகள் பாகமு மருவி
தானஞ் சாவரண் மூன்று தழலெழ சரமது துரந்து
வானஞ் சும்பெரு விடத்தை யுண்டவன் மாமறை யோதி
ஆனஞ் சாடிய சென்னி யடிகளு கிடம்அர சிலியே
பரிய மாசுணங் கயிறா பருப்பத மதற்கு மத்தாக
பெரிய வேலையை கலங்க பேணிய வானவர் கடை
கரிய நஞ்சது தோன்ற கலங்கிய அவர்தமை கண்டு
அரிய ஆரமு தாக்கும் அடிகளு கிடம்அர சிலியே
இப்பதிகத்தில் ம்செய்யுள் சிதைந்துபோயிற்று
வண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் லரக்கன்
கண்ணு தோளுநல் வாயும் நெரிதர கால்விர லூன்றி
பண்ணின் பாடல்கை நரம்பாற் பாடிய பாடலை கேட்டு
அண்ண லாயருள் செய்த அடிகளு கிடம்அர சிலியே
குறிய மாணுரு வாகி குவலயம் அளந்தவன் றானும்
வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்த வத்தோனுஞ்
செறிவொ ணாவகை யெங்கு தேடியு திருவடி காண
அறிவொ ணாவுரு வத்தெம் அடிகளு கிடம்அர சிலியே
குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியை பறித்து
திரளை கையிலுண் பவரு தேரருஞ் சொல்லிய தேறேல்
பொருளை பொய்யிலி மெய்யெம் நாதனை பொன்னடி வணங்கும்
அருளை ஆர்தர நல்கும் அடிகளு கிடம்அர சிலியே
அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி யடிகளை காழி
நல்ல ஞானசம் பந்தன் நற்றமிழ் பத்திவை நாளுஞ்
சொல்ல வல்லவர் தம்மை சூழ்ந்தம ரர்தொழு தேத்த
வல்ல வானுல கெய்தி வைகலும் மகிழ்ந்திரு பாரே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் அரைசிலிநாதர் தேவியார் பெரியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

சீகாழி
பண் பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பனெம் பெருமான்
செங்கண் ஆடர வாட்டுஞ் செல்வனெஞ் சிவனுறை கோயில்
பங்க மில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவு
தங்கு வெண்டிரை கானல் தண்வயல் காழிநன் னகரே
தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கடல் நிறுவி
நாவ தாலமிர் துண்ண நயந்தவர் இரிந்திட கண்டு
ஆவ வென்றரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்
காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழிற் காழிநன் னகரே
கரியின் மாமுக முடைய கணபதி தாதை பல்பூத
திரிய இல்பலி கேகுஞ் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்
சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநட மாடி
உரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே
சங்க வெண்குழை செவியன் தண்மதி சூடிய சென்னி
அங்கம் பூணென வுடைய அப்பனு கழகிய வூரா
துங்க மாளிகை யுயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்து
வங்க வாண்மதி தடவு மணிபொழிற் காழிநன் னகரே
மங்கை கூறமர் மெய்யான் மான்மறி யேந்திய கையான்
எங்க ளீசனென் றெழுவார் இடர்வினை கெடுப்பவற் கூராஞ்
சங்கை யின்றிநன் நி தாஞ்செய்து தகுதியின் மிக்க
கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே
நாறு கூவிள மத்தம் நாகமுஞ் சூடிய நம்பன்
ஏறு மேறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர்
நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றி
தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே
நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடை காட்டில்
விடம மர்ந்தொரு காலம் விரித்தறம் உரைத்தவற் கூராம்
இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிற்
குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே
கார்கொள் மேனியவ் வரக்கன் றன்கடு திறலினை கருதி
ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில்மலை யெடுத்தவன் நெரி
சீர்கொள் பாதத்தோர் விரலாற் செறுத்தவெஞ் சிவனுறை கோயில்
தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த தண்வயல் காழிநன் னகரே
மாலும் மாமல ரானும் மருவிநின் றிகலிய மனத்தாற்
பாலுங் காண்பரி தாய பரஞ்சுடர் தன்பதி யாகுஞ்
சேலும் வாளையுங் கயலுஞ் செறிந்துதன் கிளையொடு மேய
ஆலுஞ் சாலிநற் கதிர்கள் அணிவயற் காழிநன் னகரே
புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழ லடியிணை காணுஞ்
சித்த மற்றவர கிலாமை திகழ்ந்தநற் செழுஞ்சுடர கூராஞ்
சித்த ரோடுநல் லமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு
முத்த னேயரு ளென்று முறைமைசெய் காழிநன் னகரே
ஊழி யானவை பலவும் ஒழித்திடுங் காலத்தி லோங்கு



இப்பதிகத்தில் ம்செய்யுளின் பின்மூன்றடிகள்
சிதைந்துபோயின
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

சீகாழி திருவிராகம்
பண் நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர்
அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம்
உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை
நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே
பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும்
ஏவமான செய்துசாவ தன்முனம் மிசைந்துநீர்
தீபமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகி
தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே
சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நு
கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம்
ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன்
நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே
நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்
உச்சிவம் மெனும்முரை உணர்ந்துகேட்ப தன்முனம்
பிச்சர்ந சரவரை பெரியசோதி பேணுவார்
இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே
கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன் றலாதநோய்
உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம்
விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய்
கண்கள்மூன் றுடையவெங் கருத்தர்காழி சேர்மினே
அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர்
எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ
பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான்
கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே
இப்பதிகத்தில் ம்செய்யுள் சிதைந்துபோயிற்று
பொய்மிகுத்த வாயரா பொறாமையோடு சொல்லுநீர்
ஐமிகுத்த கண்டரா யடுத்துரைப்ப தன்முனம்
மைமிகுத்த மேனிவா ளரக்கனை நெரித்தவன்
பைமிகுத்த பாம்பரை பரமர்காழி சேர்மினே
காலினோடு கைகளு தளர்ந்துகாம நோய்தனால்
ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே
நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள்
முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முன
தலைபறித்த கையர்தேரர் தாந்தரி பரியவன்
சிலைபிடித்தெ யிலெய்தான் திருந்துகாழி சேர்மினே
தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை
அக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை
ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர்
மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருத்துருத்தி திருவிராகம்
பண் நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
வரைத்தலை பசும்பொனோ டருங்கலங்கள் உந்திவ
திரைத்தலை சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரி
கரைத்தலை துருத்திபு கிருப்பதே கருத்தினாய்
உரைத்தலை பொலிந்துன குணர்த்துமாறு வல்லமே
அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிள
தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனை
கடுத்தடி புறத்தினா னிறத்துதைத்த காரணம்
எடுத்தெடு துரைக்குமாறு வல்லமாகின் நல்லமே
கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடை
சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய்
பொங்கிலங்கு பூணநூல் உருத்திரா துருத்திபு
கெங்குநின் இடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ
கருத்தினாலோர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம்
அருத்தியால்தம் மல்லல்சொல்லி ஐயமேற்ப தன்றியும்
ஒருத்திபால் பொருத்திவை துடம்புவிட்டி யோகியாய்
இருத்திநீ துருத்திபு கிதென்னமாயம் என்பதே
துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
மறக்குமா றிலாதஎன்னை மையல்செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவி
டிறக்குமாறு காட்டினா கிழுக்குகின்ற தென்னையே
வெயிற்கெதிர திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில்
துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய்
மயிற்கெதிர தணங்குசாயல் மாதொர்பாக மாகமூ
வெயிற்கெதிர தோரம்பினால் எரித்தவில்லி யல்லையே
கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர கொழிந்தசீர்
துணிச்சிர கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்
அணிப்படு தனிப்பிறை பனிக்கதிர கவாவுநல்
மணிப்படும்பை நாகம்நீ மகிழ்ந்தஅண்ணல் அல்லையே
சுடப்பொடி துடம்பிழ தநங்கனாய மன்மதன்
இடர்ப்பட கடந்திட துருத்தியாக எண்ணினாய்
கடற்படை யுடையவ கடலிலங்கை மன்னனை
அடற்பட அடுக்கலில் லடர்த்தஅண்ணல் அல்லையே
களங்குளிர திலங்குபோது காதலானும் மாலுமாய்
வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார்
துளங்கிளம்பி றைச்செனி துருத்தியாய் திருந்தடி
உளங்குளிர்ந்த போதெலா முகந்துக துரைப்பனே
புத்தர துவமிலா சமணுரைத்த பொய்தனை
உத்தம மெனக்கொளா துகந்தெழுந்து வண்டின
துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம்
பித்தர்பி தனைத்தொழ பிறப்பறுத்தல் பெற்றியே
கற்றுமுற்றி னார்தொழுங் கழுமல தருந்தமிழ்
சுற்றுமுற்று மாயினான் அவன்பகர்ந்த சொற்களால்
பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே
குற்றமுற்று மின்மையின் குணங்கள்வந்து கூடுமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வேதேசுவரர் தேவியார் முகிழாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கோடிகா திருவிராகம்
பண் நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையை போகவிட்டு போதுமின்
மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே
அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரி திராதுநீர்
நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ
வில்லையன்ன வாணுதல் வெள்வளையோர் பாகமாங்
கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே
துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினை துறந்துநீர்
தக்கதோர் நெறியினை சார்தல்செ போதுமின்
அக்கணி தரைமிசை யாறணிந்த சென்னிமேல்
கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே
பண்டுசெய்த வல்வினை பற்றற கெடும்வகை
உண்டு குரைப்பன்நான் ஒல்லைநீர் எழுமினோ
மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதோர் பாகமா
கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே
முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா
தின்னநீரி டும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ
பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான்
கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே
ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமென
பாவமெ தனையும்நீர் செய்தொரு பயனிலை
காவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்பட
கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே
ஏணழிந்த வாழ்க்கையை இன்பமென் றிருந்துநீர்
மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ
பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடி
கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே
மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினை தவிர்ந்துநீர்
பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவ தெழுமினோ
வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர்
குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே
மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன்
செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா
வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர்
கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே
தட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும்
பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை
விட்டபுன் சடையினான் மேதகு முழவொடுங்
கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே
கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய
செந்தழ லுருவனை சீர்மிகு திறலுடை
அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்
பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கோடீசுவரர் தேவியார் வடிவாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கோவலூர் வீரட்டம் திருவிராகம்
பண் நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
படைகொள்கூற்றம் வந்துமெ பாசம்விட்ட போதின்கண்
இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே
குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள்
விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே
கரவலாளர் தம்மனை கடைகள்தோறுங் கால்நிமிர
திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டினீர்
குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே
உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல்
அள்ளற்சேற்றிற் காலிட்டங் கவலத்துள் அழுந்தாதே
கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள்
வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே
கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும்
இனையபலவும் மூப்பினோ டெய்திவந்து நலியாமுன்
பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர்
வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே
உளங்கொள் போகமுய்த்திடார் உடம்பிழந்த போதின்கண்
துளங்கிநின்று நாடொறு துயரலாழி நெஞ்சமே
வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே
கேடுமூப்பு சாக்காடு கெழுமிவந்து நாடொறும்
ஆடுபோல நரைகளாய் யாக்கைபோக்க தன்றியுங்
கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள்
வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே
உரையும்பாட்டு தளர்வெய்தி உடம்புமூத்த போதின்கண்
நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர்நமர்கள் ஆதலால்
வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே
ஏதமிக்க மூப்பினோ டிருமல்ஈளை யென்றிவை
ஊதலாக்கை ஓம்புவீர் உறுதியாவ தறிதிரேல்
போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள்
வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே
ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொரு
கூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனில்
நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே
குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரி டார்களும்
அறிவிலாத அமணர்சொல் அவத்தமாவ தறிதிரேல்
பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனில்
வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே
கழியொடுலவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன்
பழிகள்தீர சொன்னசொல் பாவநாச மாதலால்
அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனில்
விழிகொள்பூத படையினான் வீரட்டானஞ் சேர்துமே
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வீரட்டானேசுவரர் தேவியார் சிவானந்தவல்லியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் திருவிராகம்
பண் நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பருக்கையானை மத்தக தரிக்குல துகிர்ப்புக
நெருக்கிவாய நித்தில நிரக்குநீள் பொருப்பனூர்
கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி
அருக்கன்மண்ட லத்தணாவும் அந்தணாரூ ரென்பதே
விண்டவெள்ளெ ருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்
இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவூர்
கெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய்
அண்டரண்டம் ஊடறுக்கும் அந்தணாரூ ரென்பதே
கறுத்தநஞ்சம் உண்டிருண்ட கண்டர்காலன் இன்னுயிர்
மறுத்துமாணி தன்றனாகம் வண்மைசெய்த மைந்தனூர்
வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி
அறுத்துமண்டி யாவிபாயும் அந்தணாரூ ரென்பதே
அஞ்சுமொன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில்
குஞ்சியார வந்திசெய்ய அஞ்சலென்னி மன்னுமூர்
பஞ்சியாரு மெல்லடி பணைத்தகொங்கை நுண்ணிடை
அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூ ரென்பதே
சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மன
தங்குலாவி நின்றஎங்க ளாதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்
அங்குலாவி யண்டநாறும் அந்தணாரூ ரென்பதே
கள்ளநெஞ்ச வஞ்ச கருத்தைவி டருத்தியோ
டுள்ளமொன்றி யுள்குவார் உளத்துளான் உகந்தவூர்
துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய்
அள்ளல்நாரை ஆரல்வாரும் அந்தணாரூ ரென்பதே
கங்கைபொங்கு செஞ்சடை கரந்தகண்டர் காமனை
மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர்
தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல்
அங்கண்மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே
வரைத்தல மெடுத்தவன் முடித்தலம் முரத்தொடும்
நெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர்
நிரைத்தமாளி கைத்திருவின் நேரனார்கள் வெண்ணகை
அரத்தவாய் மடந்தைமார்கள் ஆடுமாரூ ரென்பதே
இருந்தவன் கிடந்தவன் னிடந்துவிண் பறந்துமெய்
வருந்தியும் அளப்பொணாத வானவன் மகிழ்ந்தவூர்
செருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா
அரும்புசோலை வாசநாறும் அந்தணாரூ ரென்பதே
பறித்தவெண் டலைக்கடு படுத்தமேனி யார்தவம்
வெறித்தவேடன் வேலைநஞ்சம் உண்டகண்டன் மேவுமூர்
மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செநெல்
அறுத்தவா யசும்புபாயு மந்தணாரூ ரென்பதே
வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா
அல்லிமா தமர்ந்திருந்த அந்தணாரூ ராதியை
நல்லசொல்லும் ஞானசம் பந்தன்நாவின் இன்னுரை
வல்லதொண்டர் வானமாள வல்லர்வாய்மை யாகவே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சிரபுரம்
பண் நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
அன்ன மென்னடை அரிவையோ டினிதுறை
அமரர்தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெரு கம்மலர்
வைத்தவர் வேதந்தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற்
சிரபுர தார்சீரார்
பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர்
வினையொடும் பொருந்தாரே
கோல மாகரி உரித்தவர் அரவொடும்
ஏனக்கொம் பிளஆமை
சால பூண்டுதண் மதியது சூடிய
சங்கர னார்தம்மை
போல தம்மடி யார்க்குமின் பளிப்பவர்
பொருகடல் விடமுண்ட
நீல தார்மிடற் றண்ணலார் சிரபுர
தொழவினை நில்லாவே
மான திண்புய வரிசிலை பார்த்தனை
தவங்கெட மதித்தன்று
கான தேதிரி வேடனா யமர்செ
கண்டருள் புரிந்தார்பூ
தேனை தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ்
சிரபுர துறையெங்கள்
கோனை கும்பிடும் அடியரை கொடுவினை
குற்றங்கள் குறுகாவே
மாணி தன்னுயிர் மதித்துண வந்தவ
காலனை உதைசெய்தார்
பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர
பிணக்கறு தருள்செய்வார்
வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ
சிரபுர தமர்கின்ற
ஆணி பொன்னினை அடிதொழும் அடியவர
கருவினை யடையாவே
பாரும் நீரொடு பல்கதிர் இரவியும்
பனிமதி ஆகாசம்
ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில்
தலைவனு மாய்நின்றார்
சேருஞ் சந்தனம் அகிலொடு வந்திழி
செழும்புனற் கோட்டாறு
வாரு தண்புனல் சூழ்சிர புரந்தொழும்
அடியவர் வருந்தாரே
ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ்
வுலகங்க ளவைமூட
ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக
அந்தர துயர்ந்தார்தாம்
யாழின் நேர்மொழி யேழையோ டினிதுறை
இன்பன்எம் பெருமானார்
வாழி மாநகர சிரபுர தொழுதெழ
வல்வினை அடையாவே
பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெய
பிணமிடு சுடுகாட்டில்
வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநடம்
ஆடும்வி தகனாரொண்
சாய்கள் தான்மிக வுடையதண் மறையவர்
தகுசிர புரத்தார்தா
தாய்க ளாயினார் பல்லுயிர குந்தமை
தொழுமவர் தளராரே
இலங்கு பூண்வரை மார்புடை இராவணன்
எழில்கொள்வெற் பெடுத்தன்று
கலங்க செய்தலுங் கண்டுதங் கழலடி
நெரியவை தருள்செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர தென்றல்மன்
றதனிடை புகுந்தாருங்
குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழு
தெழவினை குறுகாவே
வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன்
மாயனென் றிவரன்று
கண்டு கொள்ளவோர் ஏனமோ டன்னமா
கிளறியும் பறந்துந்தாம்
பண்டு கண்டது காணவே நீண்டவெம்
பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்து சிரபுர தொழுதெழ
வினையவை கூடாவே
பறித்த புன்தலை குண்டிகை சமணரும்
பார்மிசை துவர்தோய்ந்த
செறித்த சீவர தேரரு தேர்கிலா
தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்புதின் றாவியில்
மூழ்கிட இளவாளை
வெறித்து பாய்வயற் சிரபுர தொழவினை
விட்டிடும் மிகத்தானே
பரசு பாணியை பத்தர்கள் அத்தனை
பையர வோடக்கு
நிரைசெய் பூண்திரு மார்புடை நிமலனை
நித்தில பெருந்தொத்தை
விரைசெய் பூம்பொழிற் சிரபுர தண்ணலை
விண்ணவர் பெருமானை
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர்
பரமனை பணிவாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திரு அம்பர்த்திருமாகாளம்
பண் நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடி
போழிள மதிசூடி
பில்கு தேனுடை நறுமலர கொன்றையும்
பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
அல்லும் நண்பக லுந்தொழும் அடியவர
கருவினை அடையாவே
அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள்
அங்கையில் அனலேந்தி
இரவும் ஆடுவர் இவையிவர் சரிதைக
ளிசைவன பலபூதம்
மரவ தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பரவி யும்பணி தேத்தவல் லாரவர்
பயன்தலை படுவாரே
குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங்
குரைகழ லடிசேர
கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங்
கருத்தறி தவர்மேய
மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
வணங்கும் உள்ளமோ டணையவல் லார்களை
வல்வினை அடையாவே
எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர்
இழைவளர் நறுங்கொன்றை
தங்கு தொங்கலு தாமமுங் கண்ணியு
தாமகிழ தவர்மேய
மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கங்கு லும்பக லுந்தொழும் அடியவர்
காதன்மை யுடையாரே
நெதியம் என்னுள போகமற் றென்னுள
நிலமிசை நலமாய
கதியம் என்னுள வானவர் என்னுளர்
கருதிய பொருள்கூடில்
மதி தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண்
டேத்துதல் புரிந்தோர்க்கே
கண்ணு லாவிய கதிரொளி முடிமிசை
கனல்விடு சுடர்நாக
தெண்ணி லாவொடு திலதமு நகுதலை
திகழவை தவர்மேய
மண்ணு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
உண்ணி லாநினை புடையவ ரியாவரிவ்
வுலகினில் உயர்வாரே
தூசு தானரை தோலுடை கண்ணியஞ்
சுடர்விடு நறுங்கொன்றை
பூசு வெண்பொடி பூசுவ தன்றியும்
புகழ்புரி தவர்மேய
மாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பேசு நீர்மையர் யாவரிவ் வுலகினிற்
பெருமையை பெறுவாரே
பவ்வ மார்கடல் இலங்கையர் கோன்றனை
பருவரை கீழூன்றி
எவ்வ தீரவன் றிமையவர கருள்செய்த
இறையவன் உறைகோயில்
மவ்வ தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கவ்வை யாற்றொழும் அடியவர் மேல்வினை
கனலிடை செதிளன்றே
உய்யுங் காரணம் உண்டென்று கருதுமின்
ஒளிகிளர் மலரோனும்
பைகொள் பாம்பணை பள்ளிகொள் அண்ணலும்
பரவநின் றவர்மேய
மையு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங்
கவலையுங் களைவாரே
பிண்டி பாலரும் மண்டைகொள் தேரரும்
பீலிகொண் டுழல்வாருங்
கண்ட நூலருங் கடுந்தொழி லாளருங்
கழறநின் றவர்மேய
வண்டு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றற
பரவுதல் செய்வோமே
மாறு தன்னொடு மண்மிசை யில்லது
வருபுனல் மாகாள
தீறும் ஆதியு மாகிய சோதியை
ஏறமர் பெருமானை
நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம்
பந்தன தமிழ்மாலை
கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங்
குற்றங்கள் குறுகாவே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் காளகண்டேசுவரர்
தேவியார் பட்சநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கடிக்குளம்
பண் நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர்
புலியுரி யதளாடை
கொடிகொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு
குரைகழல் சிலம்பார
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குள
துறையுங்கற் பகத்தைத்தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை
முன்வினை மூடாவே
விண்க ளார்தொழும் விளக்கினை துளக்கிலா
விகிர்தனை விழவாரும்
மண்க ளார்துதி தன்பராய் இன்புறும்
வள்ளலை மருவித்தங்
கண்க ளார்தர கண்டுநங் கடிக்குள
துறைதரு கற்பகத்தை
பண்க ளார்தர பாடுவார் கேடிலர்
பழியிலர் புகழாமே
பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது
புலியதள் அழல்நாக
தங்க மங்கையை பாகம துடையவர்
தழல்புரை திருமேனி
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குள
துறைதரு கற்பகத்தை
எங்கு மேத்திநின் றின்புறும் அடியரை
இடும்பைவ தடையாவே
நீர்கொள் நீள்சடை முடியனை நித்தில
தொத்தினை நிகரில்லா
பார்கொள் பாரிட தவர்தொழும் பவளத்தை
பசும்பொன்னை விசும்பாருங்
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குள
துறையுங்கற் பகந்தன்னை
சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை
தேய்வது திணமாமே
சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு
துன்னிய தழல்நாகம்
அரும்பு தாதவிழ தலர்ந்தன மலர்பல
கொண்டடி யவர்போற்ற
கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குள
துறைதரு கற்பகத்தை
விரும்பு வேட்கையோ டுளமகிழ துரைப்பவர்
விதியுடை யவர்தாமே
மாதி லங்கிய பாகத்தன் மதியமொ
டலைபுனல் அழல்நாகம்
போதி லங்கிய கொன்றையும் மத்தமும்
புரிசடை கழகா
காதி லங்கிய குழையினன் கடிக்குள
துறைதரு கற்பகத்தின்
பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை
பற்றற கெடுமன்றே
குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்
குழாம்பல குளிர்பொய்கை
உலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும்
பூவைசே ருங்கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குள
துறையுங்கற் பகத்தைச்சீர்
நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை
நிற்ககில் லாதானே
மடுத்த வாளர கன்னவன் மலைதன்மேல்
மதியிலா மையிலோடி
எடுத்த லும்முடி தோள்கரம் நெரிந்திற
இறையவன் விரலூன்ற
கடுத்து வாயொடு கையெடு தலறிட
கடிக்குள தனில்மேவி
கொடுத்த பேரரு கூத்தனை யேத்துவார்
குணமுடை யவர்தாமே
நீரி னார்கடல் துயின்றவன் அயனொடு
நிகழடி முடிகாணார்
பாரி னார்விசும் புறப்பர தெழுந்ததோர்
பவளத்தின் படியாகி
காரி னார்பொழில் சூழ்தரு கடிக்குள
துறையுங்கற் பகத்தின்றன்
சீரி னார்கழ லேத்தவல் லார்களை
தீவினை யடையாவே
குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங்
குறியினில் நெறிநில்லா
மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யென
கொள்ளன்மின் விடமுண்ட
கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குள
துறைதரும் எம்மீசர்
தொண்டர் தொண்டரை தொழுதடி பணிமின்கள்
தூநெறி எளிதாமே
தனம லிபுகழ் தயங்குபூ தராயவர்
மன்னன்நற் சம்பந்தன்
மனம லிபுகழ் வண்டமிழ் மாலைகள்
மாலதாய் மகிழ்வோடுங்
கனம லிகட லோதம்வ துலவிய
கடிக்குள தமர்வானை
இனம லிந்திசை பாடவல் லார்கள்போய்
இறைவனோ டுறைவாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கற்பகேசுவரர் தேவியார் சவுந்தரநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கீழ்வேளூர்
பண் நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
மின்னு லாவிய சடையினர் விடையினர்
மிளிர்தரும் அரவோடும்
பன்னு லாவிய மறைஒலி நாவினர்
கறையணி கண்டத்தர்
பொன்னு லாவிய கொன்றை தாரினர்
புகழ்மிகு கீழ்வேளூர்
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை
யோடிட வீடாமே
நீரு லாவிய சடையிடை யரவொடு
மதிசிர நிரைமாலை
வாரு லாவிய வனமுலை யவளொடு
மணிசிலம் பவையார்க்க
ஏரு லாவிய இறைவன துறைவிடம்
எழில்திகழ் கீழ்வேளூர்
சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர்
பிணியொடு வினைபோமே
வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு
வெள்ளெரு கலர்மத்தம்
பண்ணி லாவிய பாடலோ டாடலர்
பயில்வுறு கீழ்வேளூர
பெண்ணி லாவிய பாகனை பெருந்திரு
கோயிலெம் பெருமானை
உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையார்
உலகினில் உள்ளாரே
சேடு லாவிய கங்கையை சடையிடை
தொங்கவை தழகாக
நாடு லாவிய பலிகொளும் நாதனார்
நலமிகு கீழ்வேளூர
பீடு லாவிய பெருமையர் பெருந்திரு
கோயிலு பிரியாது
நீடு லாவிய நிமலனை பணிபவர்
நிலைமிக பெறுவாரே
துன்று வார்சடை சுடர்மதி நகுதலை
வடமணி சிரமாலை
மன்று லாவிய மாதவ ரினிதியன்
மணமிகு கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திரு கோயிலின்
நிமலனை நினைவோடுஞ்
சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை
தேய்வது திணமாமே
கொத்து லாவிய குழல்திகழ் சடையனை
கூத்தனை மகிழ்ந்துள்கி
தொத்து லாவிய நூலணி மார்பினர்
தொழுதெழு கீழ்வேளூர
பித்து லாவிய பத்தர்கள் பேணிய
பெருந்திரு கோயில்மன்னும்
முத்து லாவிய வித்தினை யேத்துமின்
முடுகிய இடர்போமே
பிறைநி லாவிய சடையிடை பின்னலும்
வன்னியு துன்னாரும்
கறைநி லாவிய கண்டரெண் டோ ளினர்
காதல்செய் கீழ்வேளூர்
மறைநி லாவிய அந்தணர் மலிதரு
பெருந்திரு கோயில்மன்னும்
நிறைநி லாவிய ஈசனை நேசத்தால்
நினைபவர் வினைபோமே
மலைநி லாவிய மைந்தனம் மலையினை
யெடுத்தலும் அரக்கன்றன்
தலையெ லாம்நெரி தலறிட வூன்றினான்
உறைதரு கீழ்வேளூர
கலைநி லாவிய நாவினர் காதல்செய்
பெருந்திரு கோயிலுள்
நிலைநி லாவிய ஈசனை நேசத்தால்
நினையவல் வினைபோமே
மஞ்சு லாவிய கடல்கிட தவனொடு
மலரவன் காண்பொண்ணா
பஞ்சு லாவிய மெல்லடி பார்ப்பதி
பாகனை பரிவோடுஞ்
செஞ்சொ லார்பலர் பரவிய தொல்புகழ்
மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின்
நடலைகள் நணுகாவே
சீறு லாவிய தலையினர் நிலையிலா
அமணர்கள் சீவரத்தார்
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின்
சுரும்பமர் கீழ்வேளூர்
ஏறு லாவிய கொடியனை யேதமில்
பெருந்திரு கோயில்மன்னு
பேறு லாவிய பெருமையன் திருவடி
பேணுமின் தவமாமே
குருண்ட வார்குழற் சடையுடை குழகனை
அழகமர் கீழ்வேளூர
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திரு
கோயிலெம் பெருமானை
இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு
புகலிமன் சம்பந்தன்
தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி
பெறுவது திடமாமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் அட்சயலிங்கநாதர் தேவியார் வனமுலைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவலஞ்சுழி
பண் நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே
யிருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினை பயனிடை
முழுமணி தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
வாணனை வாயார
பன்னி யாதரி தேத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே
விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை
விரிகடல் வருநஞ்சம்
உண்டி றைஞ்சுவா னவர்தமை தாங்கிய
இறைவனை உலகத்தில்
வண்டு வாழ்குழன் மங்கையோர் பங்கனை
வலஞ்சுழி யிடமா
கொண்ட நாதன்மெ தொழில்புரி தொண்டரோ
டினிதிரு தமையாலே
திருந்த லார்புர தீயெழ செறுவன
விறலின்கண் அடியாரை
பரிந்து காப்பன பத்தியில் வருவன
மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்து மாவன மந்திர
வலஞ்சுழி யிடமாக
இருந்த நாயகன் இமையவ ரேத்திய
இணையடி தலந்தானே
கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர்
அறத்திற முனிவர்க்கன்
றிறைவ ராலிடை நீழலி லிருந்துக
தினிதருள் பெருமானார்
மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி
யிடமகிழ தருங்கான
தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய
அற்புதம் அறியோமே
மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலாம்
எரியுரு வொருபாகம்
பெண்ண ராணென தெரிவரு வடிவினர்
பெருங்கடற் பவளம்போல்
வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார்
பரிபவர் மனம்புக்க
எண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர்
இணையடி தொழுவாரே
ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர்
மேனியர் மடமாதர்
இருவ ராதரி பார்பல பூதமும்
பேய்களும் அடையாளம்
அருவ ராததோர் வெண்டலை கைப்பிடி
தகந்தொறும் பலிக்கென்று
வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே
வரிவளை கவர்ந்தாரே
குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங்
குலவிய நெய்த்தானம்
என்றிவ் வூர்களி லோமென்றும் இயம்புவர்
இமையவர் பணிகேட்பார்
அன்றி யூர்த குள்ளன அறிகிலோம்
வலஞ்சுழி யரனார்பால்
சென்ற வூர்தனில் தலைப்பட லாமென்று
சேயிழை தளர்வாமே
குயிலின் நேர்மொழி கொடியிடை வெருவுற
குலவரை பரப்பாய
கயிலை யைப்பிடி தெடுத்தவன் கதிர்முடி
தோளிரு பதுமூன்றி
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன்
வலஞ்சுழி யெம்மானை
பயில வல்லவர் பரகதி காண்பவர்
அல்லவர் காணாரே
அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும்
அரவணை துயின்றானுங்
கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர்
மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி
வலங்கொடு பாதத்தால்
சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு
துன்பங்கள் களைவாரே
அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர்
தவம்புரி தவஞ்செய்வார்
நெறிய லாதன கூறுவர் மற்றவை
தேறன்மின் மாறாநீர்
மறியு லாந்திரை காவிரி வலஞ்சுழி
மருவிய பெருமானை
பிறிவி லாதவர் பெறுகதி பேசிடில்
அளவறு பொண்ணாதே
மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய
மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய்
நவிற்றிய தமிழ்மாலை
ஆத ரித்திசை கற்றுவல் லார்சொல
கேட்டுக தவர்தம்மை
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும்
வருத்தம்வ தடையாவே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சித்தீசநாதர் தேவியார் பெரியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கேதீச்சரம்
பண் நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
விருது குன்றமா மேருவில் நாணர
வாவனல் எரியம்பா
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்
றுறைபதி யெந்நாளுங்
கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ்
பொழிலணி மாதோட்டங்
கருத நின்றகே தீச்சரங் கைதொழ
கடுவினை யடையாவே
பாடல் வீணையர் பலபல சரிதையர்
எருதுகை தருநட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ்
சுண்டிருள் கண்டத்தர்
ஈட மாவது இருங்கடற் கரையினில்
எழில்திகழ் மாதோட்டம்
கேடி லாதகே தீச்சரங் கைதொழ
கெடுமிடர் வினைதானே
பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்
அறைகழல் சிலம்பார்க்க
சுண்ண மாதரி தாடுவர் பாடுவர்
அகந்தொறும் இடுபிச்சை
குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர்
உயர்தரு மாதோட்ட
தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர
கருவினை யடையாவே
பொடிகொள் மேனியர் புலியத ளரையினர்
விரிதரு கரத்தேந்தும்
வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
மறிகடல் மாதோட்ட
தடிக ளாதரி திருந்தகே தீச்சரம்
பரிந்தசி தையராகி
முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல்
மொய்த்தெழும் வினைபோமே
நல்ல ராற்றவும் ஞானநன் குடையர்தம்
மடைந்தவர கருளீய
வல்லர் பார்மிசை வான்பிற பிறப்பிலர்
மலிகடல் மாதோட்ட
தெல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம்
இராப்பகல் நினைந்தேத்தி
அல்லல் ஆசறு தரனடி யிணைதொழும்
அன்பராம் அடியாரே
பேழை வார்சடை பெருந்திரு மகள்தனை
பொருந்தவை தொருபாகம்
மாழை யங்கயற் கண்ணிபா லருளிய
பொருளினர் குடிவாழ்க்கை
வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற
மருவிய மாதோட்ட
கேழல் வெண்மரு பணிந்தநீள் மார்பர்கே
தீச்சரம் பிரியாரே
பண்டு நால்வரு கறமுரை தருளிப்பல்
லுலகினில் உயிர்வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிடங் கைதொழ
காதலி துறைகோயில்
வண்டு பண்செயு மாமலர பொழில்மஞ்ஞை
நடமிடு மாதோட்ட
தொண்டர் நாடொறு துதிசெய அருள்செய்கே
தீச்சர மதுதானே
தென்னி லங்கையர் குலபதி மலைநலி
தெடுத்தவன் முடிதிண்டோ ள்
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த
தலைவனார் கடல்வா
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும்
பொருந்திய மாதோட்ட
துன்னி யன்பொடும் அடியவ ரிறைஞ்சுகே
தீச்சர துள்ளாரே
பூவு ளானு பொருகடல் வண்ணனும்
புவியிட தெழுந்தோடி
மேவி நாடிநின் அடியிணை காண்கிலா
வித்தக மென்னாகும்
மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா
தோட்டநன் னகர்மன்னி
தேவி தன்னொடு திருந்துகே தீச்சர
திருந்தஎம் பெருமானே
புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர்
புறனுரை சமணாதர்
எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய
ஏழைமை கேலேன்மின்
மத்த யானையை மறுகிட உரிசெய்து
போர்த்தவர் மாதோட்ட
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே
தீச்சரம் அடைமின்னே
மாடெ லாமண முரசென கடலின
தொலிகவர் மாதோட்ட
தாட லேறுடை அண்ணல்கே தீச்சர
தடிகளை யணிகாழி
நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல்
நவின்றெழு பாமாலை
பாட லாயின பாடுமின் பத்தர்காள்
பரகதி பெறலாமே
இத்தலம் ஈழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கேதீச்சுவரர் தேவியார் கௌரிநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவிற்குடிவீரட்டானம்
பண் நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
வடிகொள் மேனியர் வானமா மதியினர்
நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர்
உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர தினிதுறை
விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை
அருவினை யடையாவே
களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங்
கடிகமழ் சடைக்கேற்றி
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்
பொருகரி யுரிபோர்த்து
விளங்கு மேனியர் எம்பெரு மானுறை
விற்குடி வீரட்டம்
வளங்கொள் மாமல ரால்நினை தேத்துவார்
வருத்தம தறியாரே
கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி
மார்பினர் வலங்கையில்
எரியர் புன்சடை யிடம்பெற காட்டக
தாடிய வேடத்தர்
விரியும் மாமலர பொய்கைசூழ் மதுமலி
விற்குடி வீரட்டம்
பிரிவி லாதவர் பெருந்தவ தோரென
பேணுவ ருலகத்தே
பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர்
பொலிதர நலமார்ந்த
பாதஞ் சேரிணை சிலம்பினர் கலம்பெறு
கடலெழு விடமுண்டார்
வேத மோதிய நாவுடை யானிடம்
விற்குடி வீரட்டஞ்
சேரும் நெஞ்சினர கல்லதுண் டோ பிணி
தீவினை கெடுமாறே
கடிய ஏற்றினர் கனலன மேனியர்
அனலெழ வூர்மூன்றும்
இடிய மால்வரை கால்வளை தான்றன
தடியவர் மேலுள்ள
வெடிய வல்வினை வீட்டுவி பானுறை
விற்குடி வீரட்டம்
படிய தாகவே பரவுமின் பரவினாற்
பற்றறும் அருநோயே
பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறி
கையினர் மெய்யார்ந்த
அண்ண லன்புசெய் வாரவர கெளியவர்
அரியவர் அல்லார்க்கு
விண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி
விற்குடி வீரட்டம்
எண்ணி லாவிய சிந்தையி னார்த
கிடர்கள்வ தடையாவே
இப்பதிகத்தின் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை
யிகலழி தரவூன்று
திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு
பொருளினன் இருளார்ந்த
விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி
விற்குடி வீரட்ட
தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமை
துன்பநோ யடையாவே
செங்கண் மாலொடு நான்முகன் தேடியு
திருவடி யறியாமை
எங்கு மாரெரி யாகிய இறைவனை
யறைபுனல் முடியார்ந்த
வெங்கண் மால்வரை கரியுரி துகந்தவன்
விற்குடி வீரட்ட
தங்கை யாற்றொழு தேத்தவல் லாரவர்
தவமல்கு குணத்தாரே
பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ
ராடைய ரவர்வார்த்தை
பண்டு மின்றுமோர் பொருளென கருதன்மின்
பரிவுறு வீர்கேண்மின்
விண்ட மாமலர சடையவ னிடமெனில்
விற்குடி வீரட்டங்
கண்டு கொண்டடி காதல்செய் வாரவர்
கருத்துறுங் குணத்தாரே
விலங்க லேசிலை யிடமென வுடையவன்
விற்குடி வீரட்ட
திலங்கு சோதியை எம்பெரு மான்றனை
யெழில்திகழ் கழல்பேணி
நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம்
பந்தனற் றமிழ்மாலை
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால்
மற்றது வரமாமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வீரட்டானேசுவரர் தேவியார் மைவார்குழலியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கோட்டூர்
பண் நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
நீல மார்தரு கண்டனே நெற்றியோர்
கண்ணனே ஒற்றைவிடை
சூல மார்தரு கையனே துன்றுபைம்
பொழில்கள்சூழ தழகாய
கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
சால நீள்தல மதனிடை புகழ்மிக
தாங்குவர் பாங்காலே
பங்க யம்மலர சீறடி பஞ்சுறு
மெல்விர லரவல்குல்
மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென
மிழற்றிய மொழியார்மென்
கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு
அருள்பெறல் எளிதாமே
நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும்
அடியவர் தமக்கெல்லாஞ்
செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர்
செல்வமல் கியநல்ல
கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
அம்பொ னார்தரு முலகினில் அமரரோ
டமர்ந்தினி திருப்பாரே
பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா
மாங்கனி பயில்வாய
கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள்
அன்னஞ்சேர தழகாய
குலவு நீள்வயல் கயலுகள் கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை
நீடிய புகழாரே
உருகு வாருள்ள தொண்சுடர் தனக்கென்றும்
அன்பராம் அடியார்கள்
பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு
பத்திசெய் தெத்திசையுங்
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய்
அவனருள் பெறலாமே
துன்று வார்சடை தூமதி மத்தமு
துன்னெரு கார்வன்னி
பொன்றி னார்தலை கலனொடு பரிகலம்
புலியுரி யுடையாடை
கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவாரை
என்று மேத்துவார கிடரிலை கேடிலை
ஏதம்வ தடையாவே
மாட மாளிகை கோபுரங் கூடங்கள்
மணியரங் கணிசாலை
பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம்
பரிசொடு பயில்வாய
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
கேட தொன்றில ராகிநல் லுலகினிற்
கெழுவுவர் புகழாலே
ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை
யெடுத்தலும் உமையஞ்சி
சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு
நாளவற் கருள்செய்த
குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
கொழுந்தினை தொழுவார்கள்
தளிர்கொள் தாமரை பாதங்கள் அருள்பெறு
தவமுடை யவர்தாமே
பாடி யாடுமெ பத்தர்க கருள்செயும்
முத்தினை பவளத்தை
தேடி மாலயன் காணவொண் ணாதவ
திருவினை தெரிவைமார்
கூடி யாடவர் கைதொழு கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில்
நிகழ்தரு புகழாரே
கோணல் வெண்பிறை சடையனை கோட்டூர்நற்
கொழுந்தினை செழுந்திரளை
பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா
மெய்யன்நல் லருளென்றுங்
காண லொன்றிலா காரமண் தேரர்குண்
டாக்கர்சொற் கருதாதே
பேணல் செய்தர னைத்தொழும் அடியவர்
பெருமையை பெறுவாரே
பந்து லாவிரற் பவளவா தேன்மொழி
பாவையோ டுருவாருங்
கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற்
கொழுந்தினை செழும்பவளம்
வந்து லாவிய காழியுள் ஞானசம்
பந்தன்வா துரைசெய்த
சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர்
தாங்குவர் புகழாலே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கொழுந்தீசுவரர் தேவியார் தேன்மொழிப்பாவையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமாந்துறை
பண் நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ்
செருந்திசெண் பகமானை
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை
குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ
லேத்துதல் செய்வோமே
விளவு தேனொடு சாதியின் பலங்களும்
வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை உறைவான
துளவ மால்மக னைங்கணை காமனை
சுடவிழி தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை
யன்றிமற் றறியோமே
கோடு தேன்சொரி குன்றிடை பூகமுங்
கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன்
வானவர் மகிழ்ந்தேத்துங்
கேடி லாமணி யைத்தொழ லல்லது
கெழுமுதல் அறியோமே
இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
இளமரு திலவங்கங்
கலவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும்
ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை யல்லது
வணங்குதல் அறியோமே
கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி
குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைவானை
பாங்கி னாலிடு தூபமு தீபமும்
பாட்டவி மலர்சேர்த்தி
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில்
தலைப்படு தவத்தோரே
பெருகு சந்தனங் காரகில் பீலியும்
பெருமரம் நிமிர்ந்துந்தி
பொருது காவிரி வடகரை மாந்துறை
புனிதனெம் பெருமானை
பரிவி னாலிரு திரவியும் மதியமும்
பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி
வணங்குதல் செய்வோமே
நறவ மல்லிகை முல்லையும் மௌவலும்
நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை
மாந்துறை யிறைஅன்றங்
கறவ னாகிய கூற்றினை சாடிய
அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன்
நிரைகழல் பணிவோமே
மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட
மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைவானை
நிந்தி யாவெடு தார்த்தவல் லரக்கனை
நெரித்திடு விரலானை
சிந்தி யாமன தாரவர் சேர்வது
தீநெறி யதுதானே
நீல மாமணி நித்தில தொத்தொடு
நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை
மாந்துறை யமர்வானை
மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா
மலரடி யிணைநாளுங்
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின்
கூற்றுவன் நலியானே
நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர்
நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களும்
நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழி தெழும்பரி சழகிது
அதுவவர கிடமாமே
வரைவ ளங்கவர் காவிரி வடகரை
மாந்துறை யுறைவானை
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன்
செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம்
பந்தனன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும்
பாவமும் இலர்தாமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஐராவணேசுவரர் தேவியார் அழகாயமர்ந்தநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாய்மூர்
பண் நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
தளிரிள வளரென உமைபாட
தாள மிடவோர் கழல்வீசி
கிளரிள மணியர வரையார
தாடும் வேட கிறிமையார்
விளரிள முலையவர கருள்நல்கி
வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
வளரிள மதியமொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே
வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி
விரிதரு கோவண வுடைமேலோர்
பந்தஞ்செய் தரவசை தொலிபாடி
பலபல கடைதொறும் பலிதேர்வார்
சிந்தனை புகுந்தென கருள்நல்கி
செஞ்சுடர் வண்ணர்தம் மடிபரவ
வந்தனை பலசெய இவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே
பண்ணிற் பொலிந்த வீணையர்
பதினெண் கணமு முணராநஞ்
சுண்ண பொலிந்த மிடற்றினார்
உள்ள முருகி லுடனாவார்
சுண்ண பொடிநீ றணிமார்பர்
சுடர்பொற் சடைமேல் திகழ்கின்ற
வண்ண பிறையோ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே
எரிகிளர் மதியமொ டெழில்நுதல்மேல்
எறிபொறி யரவினொ டாறுமூழ்க
விரிகிளர் சடையினர் விடையேறி
வெருவவ திடர்செய்த விகிர்தனார்
புரிகிளர் பொடியணி திருவகலம்
பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்
வரியர வரைக்கசை திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே
அஞ்சன மணிவணம் எழில்நிறமா
வகமிட றணிகொள வுடல்திமில
நஞ்சினை யமரர்கள் அமுதமென
நண்ணிய நறுநுதல் உமைநடுங்க
வெஞ்சின மால்களி யானையின்தோல்
வெருவுற போர்த்ததன் நிறமுமஃதே
வஞ்சனை வடிவினோ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே
அல்லிய மலர்புல்கு விரிகுழலார்
கழலிணை யடிநிழ லவைபரவ
எல்லியம் போதுகொண் டெரியேந்தி
யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்
சொல்லிய அருமறை யிசைபாடி
சூடிள மதியினர் தோடுபெய்து
வல்லி தோலுடு திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே
கடிபடு கொன்றைநன் மலர்திகழுங்
கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்
முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார்
முறைமுறை பலிபெய முறுவல்செய்வார்
பொடியணி வடிவொடு திருவகலம்
பொன்னென மிளிர்வதோர் அரவினொடும்
வடிநுனை மழுவினொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே
கட்டிணை புதுமலர் கமழ்கொன்றை
கண்ணியர் வீணையர் தாமுமஃதே
எட்டுணை சாந்தமொ டுமைதுணையா
இறைவனா ருறைவதோ ரிடம்வினவில்
பட்டிணை யகலல்குல் விரிகுழலார்
பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வட்டணை யாடலொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே
ஏனம ருப்பினொ டெழிலாமை
யிசை பூண்டோ ரேறேறி
கானம திடமா வுறைகின்ற
கள்வர் கனவில் துயர்செய்து
தேனுண மலர்கள் உந்திவிம்மி
திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற
வானநன் மதியினோ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே
சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர்
சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார்
பாம்பொடு நூலவை பசைந்திலங
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார்
குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வாடல்வெண் டலைபிடி திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே
திங்களோ டருவரை பொழிற்சோலை
தேனலங் கானல திருவாய்மூர்
அங்கமோ டருமறை யொலிபாடல்
அழல்நிற வண்ணர்தம் மடிபரவி
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல
ஞானசம் பந்தன் தமிழ்மாலை
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார்
தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வாய்மூரீசுவரர் தேவியார் பாலினுநன்மொழியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஆடானை
பண் நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
மாதோர் கூறுக தேற தேறிய
ஆதியா னுறை ஆடானை
போதினாற் புனை தேத்து வார்தமை
வாதியா வினை மாயுமே
வாடல் வெண்டலை அங்கை யேந்திநின்
றாடலா னுறை ஆடானை
தோடுலா மலர் தூவி கைதொழ
வீடும் நுங்கள் வினைகளே
மங்கை கூறினன் மான்ம றியுடை
அங்கை யானுறை ஆடானை
தங்கை யாற்றொழு தேத்த வல்லவர்
மங்கு நோய்பிணி மாயுமே
சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை
அண்ண லானுறை ஆடானை
வண்ண மாமலர் தூவி கைதொழ
எண்ணு வாரிடர் ஏகுமே
கொய்ய ணிம்மலர கொன்றை சூடிய
ஐயன் மேவிய ஆடானை
கைய ணிம்மல ரால்வ ணங்கிட
வெய்ய வல்வினை வீடுமே
வானி ளம்மதி மல்கு வார்சடை
ஆனஞ் சாடலன் ஆடானை
தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த
ஊன முள்ள வொழியுமே
துலங்கு வெண்மழு வேந்தி சூழ்சடை
அலங்க லானுறை ஆடானை
நலங்கொள் மாமலர் தூவி நாடொறும்
வலங்கொள் வார்வினை மாயுமே
வெந்த நீறணி மார்பிற் றோல்புனை
அந்த மில்லவன் ஆடானை
கந்த மாமலர் தூவி கைதொழுஞ்
சிந்தை யார்வினை தேயுமே
மறைவல் லாரொடு வான வர்தொழு
தறையு தண்புனல் ஆடானை
உறையும் ஈசனை யே தீவினை
பறையும் நல்வினை பற்றுமே
மாய னும்மல ரானுங் கைதொழ
ஆய அந்தணன் ஆடானை
தூய மாமலர் தூவி கைதொழ
தீய வல்வினை தீருமே
வீடி னார்மலி வேங்க டத்துநின்
றாட லானுறை ஆடானை
நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ்
பாட நோய்பிணி பாறுமே
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஆதிரத்தினேசுவரர் தேவியார் அம்பாயிரவல்லியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

சீகாழி
பண் செவ்வழி
திருச்சிற்றம்பலம்
பொடியிலங்கு திருமேனி யாளர்புலி யதளினர்
அடியிலங்குங் கழலார்க்க ஆடும்மடி கள்ளிடம்
இடியிலங்குங் குரலோதம் மல்கவ்வெறி வார்திரை
கடியிலங்கும் புனல்மு தலைக்குங்கடற் காழியே
மயலிலங்கு துயர்மா சறுப்பானரு தொண்டர்கள்
அயலிலங்க பணிசெய்ய நின்றவ்வடி கள்ளிடம்
புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே
கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே
கூர்விலங்கு திருசூல வேலர்குழை காதினர்
மார்விலங்கும் புரிநூலு கந்தம்மண வாளனூர்
நேர்விலங்கல் லனதிரைகள் மோதந்நெடு தாரைவா
கார்விலங்கல் லெனக்கல தொழுகுங்கடற் காழியே
குற்றமில்லார் குறைபாடு செய்வார்பழி தீர்ப்பவர்
பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்தபெரு மானிடம்
மற்றுநல்லார் மனத்தா லினியார்மறை கலையெலாங்
கற்றுநல்லார் பிழைதெரி தளிக்குங்கடற் காழியே
விருதிலங்குஞ் சரிதைத்தொழி லார்விரி சடையினார்
எருதிலங்க பொலிந்தேறும் எந்தைக்கிட மாவது
பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற்
கருதுகிள்ளை குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே
தோடிலங்குங் குழைக்காதர் வேதர்சுரும் பார்மலர
பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க்கிட மாவது
கோடிலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெருஞ் செந்நெலின்
காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே
மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரி
தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம்
இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலால்
கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே
முழுதிலங்கும் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன்
அழுதிரங்க சிரமுர மொடுங்கவ்வடர தாங்கவன்
தொழுதிரங்க துயர்தீர துகந்தார கிடமாவது
கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே
பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகள்தனை
மேவினானும் வியந்தேத்த நீண்டாரழ லாய்நிறை
தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ்வொரு வர்க்கிடங்
காவியங்கண் மடமங்கை யர்சேர்கடற் காழியே
உடைநவின்றா ருடைவி டுழல்வாரிரு தவத்தார்
முடைநவின்றம் மொழியொழி துகந்தம்முதல் வன்னிடம்
மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதர
கடைநவின்ற நெடுமாட மோங்குங்கடற் காழியே
கருகுமுந்நீர் திரையோத மாருங்கடற் காழியுள்
உரகமாருஞ் சடையடிகள் தம்பாலுணர துறுதலாற்
பெருகமல்கும் புகழ்பேணு தொண்டர்க்கிசை யார்தமிழ்
விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கேதாரம்
பண் செவ்வழி
திருச்சிற்றம்பலம்
தொண்டரஞ்சுங் களிறு மடக்கி சுரும்பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யுமிட மென்பரால்
வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரி
கெண்டைபா சுனைநீல மொட்டலருங் கேதாரமே
பாதம்விண் ணோர்பலரும் பரவிப்பணி தேத்தவே
வேதநான்கும் பதினெட்டொ டாறும்விரி தார்க்கிட
தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினங்
கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே
முந்திவந்து புரோதாய மூழ்கிம் முனிகள்பலர்
எந்தைபெம்மா னெனநின் றிறைஞ்சுமிட மென்பரால்
மந்திபா சரேல சொரிந்தும் முரிந்துக்கபூ
கெந்தநாற கிளருஞ் சடையெந்தை கேதாரமே
உள்ளமிக்கார் குதிரைம் முகத்தாரொரு காலர்கள்
எள்கலில்லா இமையோர்கள் சேரும்மிட மென்பரால்
பிள்ளைதுள்ளி கிளைபயில்வ கேட்டுப்பிரி யாதுபோ
கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே
ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் பொருள்களால்
வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும்மிட மென்பரால்
மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய
கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே
நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கிநீள் வரைதன்மேல்
தேறுசிந்தை யுடையார்கள் சேரும்மிட மென்பரால்
ஏறிமாவின் கனியும்பலா வின்னிருஞ் சுளைகளுங்
கீறிநாளும் முசுக்கிளையோ டுண்டுகளுங் கேதாரமே
மடந்தைபாக தடக்கிம் மறையோதி வானோர்தொழ
தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க நின்றார்க்கிட மென்பரால்
உடைந்தகாற்று குயர்வேங்கை பூத்துதிர கல்லறைகண்மேல்
கிடந்தவேங்கை சினமா முகஞ்செய்யுங் கேதாரமே
அரவமுந்நீர் அணியிலங்கை கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலாலடர தார்க்கிட மென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல்
கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே
ஆழ்ந்துகாணார் உயர்ந்தெய்த கில்லாரல மந்தவர்
தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க்கிட மென்பரால்
வீழ்ந்துசெற்று நிழற்கிறங்கும் வேழத்தின்வெண் மருப்பினை
கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங் கேதாரமே
கடுக்கள்தின்று கழிமீன்கவர் வார்கள் மாசுடம்பினர்
இடுக்கணுய்ப்பா ரவரெய்த வொண்ணாவிட மென்பரால்
அடுக்கநின்றவ் வறவுரைகள் கேட்டாங்கவர் வினைகளை
கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே
வாய்ந்தசெந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான்
ஏய்ந்தநீர்க்கோ டிமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்மிசை வல்லவர்
வேந்தராகி யுலகாண்டு வீடு கதிபெறுவரே
இத்தலம் வடதேசத்திலுள்ளது
சுவாமிபெயர் கேதாரேசுவரர்
தேவியார் கௌரியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புகலூர்
பண் செவ்வழி
திருச்சிற்றம்பலம்
வெங்கள்விம்மு குழலிளைய ராடவ்வெறி விரவுநீர
பொங்குசெங்க கருங்கயல்கள் பாயும்புக லூர்தனுள்
திங்கள்சூடி திரிபுரமோ ரம்பாலெரி யூட்டிய
எங்கள்பெம்மான் அடிபரவ நாளும்மிடர் கழியுமே
வாழ்ந்தநாளும் மினிவாழு நாளும்மிவை யறிதிரேல்
வீழ்ந்தநாளெம் பெருமானை யேத்தாவிதி யில்லிகாள்
போழ்ந்ததிங்க புரிசடையி னான்றன்புக லூரையே
சூழ்ந்தவுள்ளம் உடையீர்காள் உங்கள்துயர் தீருமே
மடையின்நெய்தல் கருங்குவளை செய்யம்மலர தாமரை
புடைகொள்செந்நெல் விளைகழனி மல்கும்புக லூர்தனுள்
தொடைகொள்கொன்றை புனைந்தானோர் பாகம்மதி சூடியை
அடையவல்லார் அமருலகம் ஆள பெறுவார்களே
பூவுந்நீரும் பலியுஞ் சுமந்துபுக லூரையே
நாவினாலே நவின்றேத்த லோவார்செவி துளைகளால்
யாவுங்கேளார் அவன்பெருமை யல்லால்அடி யார்கள்தாம்
ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்றுள்ளங் கொள்ளவே
அன்னங்கன்னி பெடைபுல்கி யொல்கியணி நடையவா
பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன மாலும்புக லூர்தனுள்
முன்னம்மூன்று மதிலெரித்த மூர்த்திதிறங் கருதுங்கால்
இன்னரென்ன பெரிதரியர் ஏத்தச்சிறி தெளியரே
குலவரா குலம்இலரு மாகக்குணம் புகழுங்கால்
உலகில்நல்ல கதிபெறுவ ரேனும்மல ரூறுதேன்
புலவமெல்லாம் வெறிகமழும் அந்தண்புக ளுர்தனுள்
நிலவமல்கு சடையடிகள் பாதம்நினை வார்களே
ஆணும்பெண்ணும் மெனநிற்ப ரேனும்மர வாரமா
பூணுமேனும் புகலூர் தனக்கோர் பொருளாயினான்
ஊணும்ஊரார் இடுபிச்சை யேற்றுண்டுடை கோவணம்
பேணுமேனும் பிரானென்ப ராலெம்பெரு மானையே
உய்யவேண்டில் எழுபோத நெஞ்சேயுய ரிலங்கைக்கோன்
கைகளொல கருவரை யெடுத்தானையோர் விரலினால்
செய்கைதோன்ற சிதைத்தருள வல்லசிவன் மேயபூம்
பொய்கைசூழ்ந்த புகலூர் புகழ பொருளாகுமே
நேமியானும் முகநான் குடையந்நெறி யண்ணலும்
ஆமிதென்று தகைந்தேத்த போயாரழ லாயினான்
சாமிதாதை சரணாகு மென்றுதலை சாய்மினோ
பூமியெல்லாம் புகழ்செல்வம் மல்கும்புக லூரையே
வேர்த்தமெய்யர் உருவ துடைவி டுழல்வார்களும்
போர்த்தகூறை போதிநீழ லாரும்புக லூர்தனுள்
தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த தேவன்திறங் கருதுங்கால்
ஓர்த்துமெய்யென் றுணராது பாதந்தொழு துய்ம்மினே
புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும்புக லூர்தனுள்
வெந்தசாம்பற் பொடிப்பூச வல்லவிடை யூர்தியை
அந்தமில்லா அனலாட லானையணி ஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாடி யாடக்கெடும் பாவமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநாகைக்காரோணம்
பண் செவ்வழி
திருச்சிற்றம்பலம்
கூனல்திங்க குறுங்கண்ணி கான்றந்நெடு வெண்ணிலா
வேனற்பூத்தம் மராங்கோதை யோடும்விரா வுஞ்சடை
வானநாடன் னமரர் பெருமாற் கிடமாவது
கானல்வேலி கழிசூழ் கடல்நாகை காரோணமே
விலங்கலொன்று சிலையா மதில்மூன்றுடன் வீட்டினான்
இலங்குகண்ட தெழிலாமை பூண்டாற் கிடமாவது
மலங்கியோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடற்
கலங்கலோதங் கழிசூழ் கடல்நாகை காரோணமே
வெறிகொளாருங் கடற்கைதை நெய்தல்விரி பூம்பொழில்
முறிகொள்ஞாழல் முடப்புன்னை முல்லைம்முகை வெண்மலர்
நறைகொள்கொன்றை நயந்தோங்கு நாதற் கிடமாவது
கறைகொளோதங் கழிசூழ் கடல்நாகை காரோணமே
வண்டுபாடவ் வளர்கொன்றை மாலைம்மதி யோடுடன்
கொண்டகோலங் குளிர்கங்கை தங்குங்குருள் குஞ்சியுள்
உண்டுபோலும் மெனவை துகந்தவ்வொரு வற்கிடம்
கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகை காரோணமே
வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ தேத்தவே
நீர்கொள்கோல சடைநெடுவெண் டிங்கள்நிகழ் வெய்தவே
போர்கொள்சூல படைபுல்கு கையார கிடமாவது
கார்கொளோதங் கழிசூழ் கடல்நாகை காரோணமே
விடையதேறிவ் விடவர வசைத்த விகிர்தரவர்
படைகொள்பூதம் பலபாட ஆடும் பரமாயவர்
உடைகொள்வேங்கை யுரிதோ லுடையார கிடமாவது
கடைகொள்செல்வங் கழிசூழ் கடல்நாகை காரோணமே
பொய்துவாழ்வார் மனம்பாழ் படுக்கும்மலர பூசனை
செய்துவாழ்வார் சிவன்சே வடிக்கேசெலுஞ் சிந்தையார்
எய்தவாழ்வார் எழில்நக்க ரெம்மாற்கிட மாவது
கைதல்வேலி கழிசூழ் கடல்நாகை காரோணமே
பத்திரட்டி திரள்தோ ளுடையான்முடி பத்திற
அத்திரட்டி விரலா லடர்த்தார கிடமாவது
மைத்திரட்டிவ் வருவெண் டிரைமல்கிய வார்கடல்
கைத்திரட்டுங் கழிசூழ் கடல்நாகை காரோணமே
நல்லபோதில் லுறைவானும் மாலும்நடு கத்தினால்
அல்லராவ ரெனநின்ற பெம்மாற் கிடமாவது
மல்லலோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடல்
கல்லலோதங் கழிசூழ் கடல்நாகை காரோணமே
உயர்ந்தபோதின் னுருவ துடைவிட்டுழல் வார்களும்
பெயர்ந்தமண்டை யிடுபிண்ட மாவுண்டுழல் வார்களும்
நயந்துகாணா வகைநின்ற நாதர கிடமாவது
கயங்கொளோதங் கழிசூழ் கடல்நாகை காரோணமே
மல்குதண்பூம் புனல்வா தொழுகும்வயற் காழியான்
நல்லகேள்வி தமிழ்ஞான சம்பந்தன் நல்லார்கள்முன்
வல்லவாறே புனைந்தேத்துங் காரோணத்து வண்டமிழ்
சொல்லுவார்க்கும் மிவைகே பவர்க்குந்துய ரில்லையே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திரு இரும்பைமாகாளம்
பண் செவ்வழி
திருச்சிற்றம்பலம்
மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்
கொண்டகையாற் புரம்மூன் றெரித்த குழகன்னிடம்
எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே
வேதவித்தாய வெள்ளைநீறு பூசி வினையாயின
கோதுவித்தாய நீறெழ கொடிமா மதிலாயின
ஏதவித்தா யினதீர கும்மிடம் மிரும்பைதனுள்
மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே
வெந்தநீறு மெலும்பும் மணிந்த விடையூர்தியான்
எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை இரும்பைதனுள்
கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில்
மந்தியேறி கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே
நஞ்சுகண்ட தடக்கி நடுங்கும் மலையான்மகள்
அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம்
எஞ்சலில்லா புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
மஞ்சிலோங்கும் பொழில்சூழ தழகாய மாகாளமே
பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பன்மகள்
கூசஆனை உரித்த பெருமான் குறைவெண்மதி
ஈசனெங்கள் ளிறைவன் னிடம்போல் இரும்பைதனுள்
மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே
குறைவதாய குளிர்திங்கள் சூடி குனித்தான்வினை
பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை
இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள்
மறைகள்வல்லார் வணங்கி தொழுகின்ற மாகாளமே
பொங்குசெங்கண் ணரவும் மதியும் புரிபுன்சடை
தங்கவைத்த பெருமா னெனநின் றவர்தாழ்விடம்
எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்
மங்குல்தோயும் பொழில்சூழ தழகாய மாகாளமே
நட்டத்தோடு நரியாடு கான தெரியாடுவான்
அட்டமூர்த்தி அழல்போ லுருவன் னழகாகவே
இட்டமாக இருக்கும் மிடம்போல் இரும்பைதனுள்
வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே
அட்டகாலன் றனைவவ்வி னானவ் வரக்கன்முடி
எட்டுமற்றும் இருப திரண்டும் மிறவூன்றினான்
இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ தெழிலாரு மாகாளமே
அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி
பிரமன்மாலும் மறியாமை நின்ற பெரியோனிடங்
குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் மிரும்பைதனுள்
மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே
எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை யிரும்பைதனுள்
மந்தமாய பொழில்சூழ தழகாரு மாகாளத்தில்
அந்தமில்லா அனலாடு வானை யணிஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார் பழிபோகுமே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மாகாளேசுவரர் தேவியார் குயிலம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருத்திலதைப்பதி மதிமுத்தம்
பண் செவ்வழி
திருச்சிற்றம்பலம்
பொடிகள்பூசி பலதொண்டர் கூடிப்புலர் காலையே
அடிகளார தொழுதேத்த நின்றவ்வழ கன்னிடங்
கொடிகளோங்கி குலவும் விழவார்தில தைப்பதி
வடிகொள்சோலைம் மலர்மணங் கமழும்மதி முத்தமே
தொண்டர்மிண்டி புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலுங்
கொண்டுகண்டார் குறிப்புணர நின்றகுழ கன்னிட
தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி
வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலைமதி முத்தமே
அடலுளேறு துகந்தான் அடியார்அம ரர்தொழ
கடலுள்நஞ்சம் அமுதாக வுண்டகட வுள்ளிட
திடலடங்க செழுங்கழனி சூழ்ந்ததில தைப்பதி
மடலுள்வாழை கனிதேன் பிலிற்றும்மதி முத்தமே
கங்கைதிங்கள் வன்னிதுன் னெருக்கின்னொடு கூவிளம்
வெங்கண்நாகம் விரிசடையில் வைத்தவிகிர் தன்னிடஞ்
செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி
மங்குல்தோயும் பொழில்சூழ தழகார்மதி முத்தமே
புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடி தேரினான்
பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள்
மரவம்மவ்வன் மலரு திலதைமதி முத்தமே
விண்ணர்வேதம் விரித்தோத வல்லார்ஒரு பாகமும்
பெண்ணர்எண்ணார் எயில்செற் றுகந்தபெரு மானிட
தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத்தில தைப்பதி
மண்ணுளார்வ தருள்பேணி நின்றமதி முத்தமே
ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி
கூறுசேரும் உருவர கிடமாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில்சூழ தழகார்தில தைப்பதி
மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தமதி முத்தமே
கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு வரைதனை
எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார கிடமாவது
புடைக்கொள்பூக திளம்பாளை புல்கும்மது பாயவாய்
மடுத்துமந்தி யுகளு திலதைமதி முத்தமே
படங்கொள்நாக தணையானும் பைந்தாமரை யின்மிசை
இடங்கொள்நால் வேதனு மேத்தநின்ற இறைவன்னிட
திடங்கொள்நாவின் னிசைதொண்டர் பாடு திலைதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு செய்யும்மதி முத்தமே
புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலா
பித்தர்சொன்னம் மொழிகே கிலாதபெரு மானிடம்
பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந்தில தைப்பதி
மத்தயானை வழிபாடு செய்யும்மதி முத்தமே
மந்தமாரும் பொழில்சூழ் திலதைமதி முத்தமேற்
கந்தமாருங் கடற்காழி யுள்ளான்தமிழ் ஞானசம்
பந்தன்மாலை பழிதீரநின் றேத்தவல் லார்கள்போ
சிந்தைசெய்வார் சிவன்சே வடிசேர்வது திண்ணமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மதிமுத்தநாதேசுவரர் தேவியார் பொற்கொடியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநாகேச்சரம்
பண் செவ்வழி
திருச்சிற்றம்பலம்
தழைகொள்சந்தும் மகிலும் மயில்பீலியுஞ் சாதியின்
பழமுமுந்தி புனல்பாய் பழங்காவிரி தென்கரை
நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சர
தழகர்பாத தொழுதேத்த வல்லார்க்கழ காகுமே
பெண்ணோர்பாகம் மடை சடையிற்புனல் பேணிய
வண்ணமான பெருமான் மருவும்மிடம் மண்ணுளார்
நண்ணிநாளு தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரங்
கண்ணினாற் காணவல்லா ரவர்கண்ணுடை யார்களே
குறவர்கொல்லை புனங்கொள்ளை கொண்டும்மணி குலவுநீர்
பறவையால பரக்கும் பழங்காவிரி தென்கரை
நறவநாறும் பொழில்சூழ தழகாய நாகேச்சர
திறைவர்பாத தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே
கூசநோக்காது முன்சொன்ன பொய்கொடுவினை குற்றமும்
நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சர
தேசமாக்கு திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல்
நேசமாக்கு திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே
வம்புநாறும் மலரும்மலை பண்டமுங் கொண்டுநீர்
பைம்பொன்வாரி கொழிக்கும் பழங்காவிரி தென்கரை
நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்
உம்பர்வானோர் தொழச்சென் றுடனாவதும் உண்மையே
காளமேக நிறக்கால னோடந்தகன் கருடனும்
நீளமாய்நின் றெய்தகாம னும்பட்டன நினைவுறின்
நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்
கோளுநாளு தீயவேனும் நன்காங்குறி கொண்மினே
வேயுதிர்மு தொடுமத்த யானைமரு பும்விராய்
பாய்புனல்வ தலைக்கும் பழங்காவிரி தென்கரை
நாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம்
மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே
இலங்கைவேந்தன் சிரம்ப திரட்டியெழில் தோள்களும்
மலங்கிவீழம் மலையா லடர்த்தானிட மல்கிய
நலங்கொள்சிந்தை யவர்நாடொறும் நண்ணும் நாகேச்சரம்
வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே
கரியமாலும் அயனும் மடியும்முடி காண்பொணா
எரியதாகி நிமிர்ந்தான் அமரும்மிட மீண்டுகா
விரியின்நீர்வ தலைக்குங் கரைமேவு நாகேச்சரம்
பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே
தட்டிடுக்கி யுறிதூக்கிய கையினர் சாக்கியர்
கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளிலங் காட்டிடை
நட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சரம்
மட்டிருக்கும் மலரிட்டடி வீழ்வது வாய்மையே
கந்தநாறும் புனற்காவிரி தென்கரை கண்ணுதல்
நந்திசேரு திருநாகே சரத்தின்மேன் ஞானசம்
பந்தன்நாவிற் பனுவல்லிவை பத்தும்வல் லார்கள்போய்
எந்தையீசன் னிருக்கும் முலகெய்த வல்லார்களே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமூக்கீச்சரம்
பண் செவ்வழி
திருச்சிற்றம்பலம்
சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தளாரும் விரலேழை யோடாடிய காரணம்
ஆய்ந்துகொண்டாங் கறி நிறைந்தாரவ ரார்கொலோ
வேந்தன்மூக்கீ சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே
வெண்டலையோர் கலனா பலிதேர்ந்து விரிசடை
கொண்டலாரும் புனல்சேர துமையா ளொடுங்கூட்டமா
விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில்வேள் வெந்தெழ
கண்டவர்மூ கீச்சரத்தெம் மடிகள்செய் கன்மமே
மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை
உருவிலாரவ் வெரியூ டியதும்முல குண்டதால்
செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த
பொருவின்மூ கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே
அன்னமன்ன நடைச்சாய லாளொடழ கெய்தவே
மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரண
தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான்
மன்னன்மூக்கீ சரத்தடிகள் செய்கின்றதோர் மாயமே
விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே
நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்
வடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன்
அடல்மன்மூக்கீ சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே
வெந்தநீறு மெய்யிற்பூ சுவராடுவர் வீங்கிருள்
வந்தெனாரவ் வளைகொள்வது மிங்கொரு மாயமாம்
அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய
எந்தைமூக்கீ சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே
அரையிலாருங் கலையில்லவ னாணொடு பெண்ணுமாய்
உரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோ
விரவலார்தம் மதில்மூன்றுடன் வெவ்வழ லாக்கினான்
அரையான்மூக்கீ சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே
ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற துங்கூற்றை யுதைத்ததுங்
கூர்க்குநன் மூவிலைவேல் வலனேந்திய கொள்கையும்
ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தைந்நெரி தவ்வடல்
மூர்க்கன்மூக்கீ சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே
நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமா
சீருளாருங் கழல்தேட மெய்த்தீ திரளாயினான்
சீரினாலங் கொளிர்தென்னவன் செம்பியன் வல்லவன்
சேருமூக்கீ சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே
வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர்
உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான்
ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழில் கிள்ளிசேர்
பண்பின்மூக்கீ சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே
மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சர தடிகளை
செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
நல்லராய்வாழ் பவர்காழியுள் ஞானசம் பந்தன
சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பாதிரிப்புலியூர்
பண் செவ்வழி
திருச்சிற்றம்பலம்
முன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள்
புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்
தன்னைநின்று வணங்கு தனைத்தவ மில்லிகள்
பின்னைநின்ற பிணியா கையை பெறுவார்களே
கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே
முள்ளிலவம் முதுகா டுறையும் முதல்வன்னிடம்
புள்ளினங்கள் பயிலும் பாதிரி புலியூர்தனை
உள்ள நம்மேல் வினையாயின வொழியுங்களே
மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல்
பொருளினல்லார் பயில்பா திரிப்புலி யூருளான்
வெருளின்மானின் பிணைநோக்கல் செய்துவெறி செய்தபின்
அருளியாக திடைவை ததுவும் மழகாகவே
போதினாலும் புகையாலும் உய்த்தே யடியார்கள்தாம்
போதினாலே வழிபாடு செ புலியூர்தனுள்
ஆதினாலும் மவலம் மிலாதவடி கள்மறை
ஓதிநாளும் மிடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே
ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை
நாகநல்லார் பரவ தங்கரை யார்த்தவன்
போகநல்லார் பயிலும் பாதிரிப்புலி யூர்தனுள்
பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே
மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வா
புதியமுத்த திகழ்பா திரிப்புலி யூரெனும்
பதியில்வைக்க படுமெந்தை தன்பழ தொண்டர்கள்
குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே
கொங்கரவ படுவண் டறைகுளிர் கானல்வா
சங்கரவ பறையின் னொலியவை சார்ந்தெழ
பொங்கரவம் முயர்பா திரிப்புலி யூர்தனுள்
அங்கரவம் மரையில் லசைத்தானை அடைமினே
வீக்கமெழும் இலங்கை கிறைவிலங் கல்லிடை
ஊக்கமொழி தலறவ் விரலாலிறை யூன்றினான்
பூக்கமழும் புனல்பா திரிப்புலி யூர்தனை
நோக்கமெலி தணுகா வினைநுணு குங்களே
அன்னந்தாவும் மணியார் பொழின்மணி யார்புன்னை
பொன்னந்தாது சொரிபா திரிப்புலி யூர்தனுள்
முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன்
தன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே
உரிந்தகூறை யுருவ தொடுதெரு வத்திடை
திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெரு தேரரும்
எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடு தேத்துமின்
புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே
அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம்
பந்தன்நல் லார்பயில் பாதிரிப்புலி யூர்தனுள்
சந்தமாலை தமிழ்ப திவைதரி தார்கள்மேல்
வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் தோன்றாத்துணையீசுவரர் தேவியார் தோகையம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புகலி
பண் செவ்வழி
திருச்சிற்றம்பலம்
விடையதேறி வெறி கரவார்த்த விமலனார்
படையதாக பரசு தரித்தார கிடமாவது
கொடையிலோவார் குலமும் முயர்ந்தம் மறையோர்கள்தாம்
புடைகொள்வேள்வி புகையும்பர் உலாவும் புகலியே
வேலைதன்னில் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார்
ஞாலமெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது
சாலநல்லார் பயிலும் மறைகேட்டு பதங்களை
சோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே
வண்டுவாழுங் குழல்மங்கை யோர்கூ றுகந்தார்மதி
துண்டமேவுஞ் சுடர்த்தொல் சடையார கிடமாவது
கெண்டைபாய மடுவில் லுயர்கேதகை மாதவி
புண்டரீக மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே
திரியும்மூன்று புரமும் மெரித்து திகழ்வானவர
கரியபெம்மான் அரவ குழையார கிடமாவது
பெரியமாட துயருங் கொடியின் மிடைவால்வெயிற்
புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே
ஏவிலாருஞ் சிலைப்பார தனுக்கின் னருள்செய்தவர்
நாவினாள்மூ கரிவித்த நம்பர கிடமாவது
மாவிலாருங் கனிவார் கிடங்கில்விழ வாளைபோ
பூவிலாரும் புனற்பொய்கை யில்வைகும் புகலியே
தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும்
ஒக்கவேயெம் முரவோ னுறையும் மிடமாவது
கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள்
புக்கவாச புன்னைபொன் திரள்காட்டும் புகலியே
இப்பதிகத்தில் ம்செய்யுள் சிதைந்துபோயிற்று
தொலைவிலாத அரக்கன் னுரத்தை தொலைவித்தவன்
தலையுந்தோளும் நெரித்து சதுரர கிடமாவது
கலையின்மேவும் மனத்தோர் இரப்போர்க்கு கரப்பிலார்
பொலியுமந்தண் பொழில்சூழ தழகாரும் புகலியே
கீண்டுபுக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழலன்னமா
காண்டுமென்றார் கழல்பணிய நின்றார கிடமாவது
நீண்டநாரை இரையாரல் வாரநிறை செறுவினிற்
பூண்டுமிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியே
தடுக்குடுத்து தலையை பறிப்பாரொடு சாக்கியர்
இடுக்கணுய்ப்பார் இறைஞ்சாத எம்மாற் கிடமாவது
மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர்
அடுத்தடுத்து புகுந்தீண்டும் அந்தண் புகலியே
எய்தவொண்ணா இறைவன் உறைகின்ற புகலியை
கைதவமில்லா கவுணியன் ஞானசம் பந்தன்சீர்
செய்தபத்தும் இவைசெப்ப வல்லார்சிவ லோகத்தில்
எய்திநல்ல இமையோர்கள் ஏத்தவிரு பார்களே
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள் இரண்டாம் திருமுறை முற்றும்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
பண் அவை
பகற் பண்
புறநீர்மை காந்தாரம் பியந்தைக்காந்தாரம்
கவுசிகம் இந்தளம் தக்கேசி சாதாரி நட்டபாஷை
நட்டராகம் பழம்பஞ்சுரம் காந்தாரபஞ்சமம் பஞ்சமம் ஆக பகற்பண்
இராப்பண்
தக்கராகம் பழந்தக்கராகம் சீகாமரம் கொல்லி
கொல்லிக்காவாணம் வியாழக்குறிஞ்சி மேகராகக்குறிஞ்சி
அந்தாளிக்குறிஞ்சி குறிஞ்சி ஆக இராப்பண்
பொதுப்பண்
செவ்வழி செந்துருதி திருத்தாண்டகம் ஆக பொதுப்பண்