திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
முதல் திருமுறை
உள்ளுறை
திருப்பிரமபுரம் மின்பதிப்பு
திருப்புகலூர் மின்பதிப்பு
திருவலிதாயம் மின்பதிப்பு
திருப்புகலியும் திருவீழிமிழலையும் மின்பதிப்பு

திருக்காட்டுப்பள்ளி மின்பதிப்பு
திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் மின்பதிப்பு

திருநள்ளாறும் திருஆலவாயும் மின்பதிப்பு
திருஆவூர்ப்பசுபதீச்சரம் மின்பதிப்பு
திருவேணுபுரம் மின்பதிப்பு
திரு அண்ணாமலை மின்பதிப்பு
திருவீழிமிழலை மின்பதிப்பு
திருமுதுகுன்றம் மின்பதிப்பு
திருவியலூர் மின்பதிப்பு
திருக்கொடுங்குன்றம் மின்பதிப்பு
திருநெய்த்தானம் மின்பதிப்பு
திருப்புள்ளமங்கை திரு ஆலந்துறை மின்பதிப்பு

திருஇடும்பாவனம் மின்பதிப்பு
திருநின்றியூர் மின்பதிப்பு
திருக்கழுமலம் திருவிராகம் மின்பதிப்பு
திருவீழிமிழலை திருவிராகம் மின்பதிப்பு
திருச்சிவபுரம் திருவிராகம் மின்பதிப்பு
திருமறைக்காடு திருவிராகம் மின்பதிப்பு
திருக்கோலக்கா மின்பதிப்பு
சீகாழி மின்பதிப்பு
திருச்செம்பொன்பள்ளி மின்பதிப்பு
திருப்புத்தூர் மின்பதிப்பு
திருப்புன்கூர் மின்பதிப்பு
திருச்சோற்றுத்துறை மின்பதிப்பு
திருநறையூர்ச்சித்தீச்சரம் மின்பதிப்பு
திருப்புகலி மின்பதிப்பு
திருக்குரங்கணின்முட்டம் மின்பதிப்பு
திருவிடைமருதூர் மின்பதிப்பு
திரு அன்பிலாலந்துறை மின்பதிப்பு
சீகாழி மின்பதிப்பு
திருவீழிமிழலை மின்பதிப்பு
திரு ஐயாறு மின்பதிப்பு
திருப்பனையூர் மின்பதிப்பு
திருமயிலாடுதுறை மின்பதிப்பு
திருவேட்களம் மின்பதிப்பு
திருவாழ்கொளிபுத்தூர் மின்பதிப்பு
திருப்பாம்புரம் மின்பதிப்பு
திருப்பேணுபெருந்துறை மின்பதிப்பு
திருக்கற்குடி மின்பதிப்பு
திருப்பாச்சிலாச்சிராமம் மின்பதிப்பு
திருப்பழையனூர்திரு ஆலங்காடு மின்பதிப்பு
திரு அதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருச்சிரபுரம் மின்பதிப்பு
திருச்சேய்ஞலூர் மின்பதிப்பு
திருநள்ளாறு மின்பதிப்பு
திருவலிவலம் மின்பதிப்பு
திருச்சோபுரம் மின்பதிப்பு
திருநெடுங்களம் மின்பதிப்பு
திருமுதுகுன்றம் மின்பதிப்பு
திருஓத்தூர் மின்பதிப்பு
திருமாற்பேறு மின்பதிப்பு
திருப்பாற்றுறை மின்பதிப்பு
திருவேற்காடு மின்பதிப்பு
திருக்கரவீரம் மின்பதிப்பு
திருத்தூங்கானைமாடம் மின்பதிப்பு
திருத்தோணிபுரம் மின்பதிப்பு
திருச்செங்காட்டங்குடி மின்பதிப்பு
திருக்கோளிலி மின்பதிப்பு
திருப்பிரமபுரம் பல்பெயர்ப்பத்து மின்பதிப்பு

திருப்பூவணம் மின்பதிப்பு
காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் மின்பதிப்பு

திருச்சண்பைநகர் மின்பதிப்பு

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
முதல் திருமுறை
திருப்பிரமபுரம்
பண் நட்டபாடை
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணி தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு
வற்றலோடுகலனா பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்த
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்ன
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்ன
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே
மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்த
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே
சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்த
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்ன
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே
திருப்பிரமபுர மென்பது சீர்காழி இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பிரமபுரீசர் தேவியார் திருநிலைநாயகி
திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருப்புகலூர்

பண் நட்டபாடை
குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம்
நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி பேணி
முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின்
பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே
காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொரு பாகம்
மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரி யாடை
மீதிலங்கவணி தானிமையோர்தொழ மேவும்மிடஞ் சோலை
போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புக லூரே
பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கை
பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந்தொழு தேத்த
உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவற்கிட மென்பர்
மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும்புக லூரே
நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்அரண் மூன்றுஞ்
சீரின்மல்குமலை யேசிலையாக முனிந்தன்றுல கு
காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிட மென்பர்
ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புக லூரே
முனிந்தானுலகுய்ய என்றும் பாடம்
செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடி யார்மேல்
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசை தென்றும்பணி வாரை
மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள் பேணி
பொய்யிலாதமன தார்பிரியாதுபொ ருந்தும்புக லூரே

கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்
குழலினோசைகுற பாரிடம்போற்ற குனித்தாரிட மென்பர்
விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலி தெங்கும்
முழவினோசைமு நீரயர்வெய்த முழங்கும்புக லூரே
வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதி சூடி
உள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த உகக்கும்அருள் தந்தெங்
கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுட்கிட மென்பர்
புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புக லூரே
தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்டோ ள்
தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள் செய்த
மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிட மென்பர்
பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புக லூரே
நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள்
ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழு தேத்த
ஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மானிடம் போலும்
போகம்வைத்தபொழி லின்நிழலான்மது வாரும்புக லூரே

செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லா
கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம் போலுங்
கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதி செய்து
மெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புக லூரே
புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புக லூரை
கற்றுநல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் மாலை
பற்றியென்றுமிசை பாடியமாந்தர் பரமன்னடி சேர்ந்து
குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலி வாரே

காவிரி தென்கரை தலம்
சுவாமிபெயர் அக்கினீசுவரர் தேவியார் கருந்தார்க்குழலியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருவலிதாயம்

பண் நட்டபாடை
பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல் தூவி
ஒத்தசொல்லிஉல கத்தவர்தாம்தொழு தேத்தஉயர் சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலி தாயஞ்
சித்தம்வைத்தஅடி யாரவர்மேல்அடை யாமற்றிடர் நோயே
படையிலங்குகரம் எட்டுடையான்படி றாகக்கன லேந்தி
கடையிலங்குமனை யில்பலிகொண்டுணுங் கள்வன்னுறை கோயில்
மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது வீசும்வலி தாயம்
அடையநின்றஅடி யார்க்கடையாவினை அல்லல்துயர் தானே
ஐயனொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழு தேத்த
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு மாதோடுறை கோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலி தாயம்
உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீருந்நல மாமே
ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படை சூழ
புற்றின்நாகம்அரை யார்த்துழல்கின்றஎம் பெம்மான்மட வாளோ
டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட உள்கும்வலி தாயம்
பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடி யார்க்கே
புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொரு ளாய
அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயில்அய லெங்கும்
மந்திவந்துகடு வன்னொடுகூடி வணங்கும்வலி தாயஞ்
சிந்தியாதஅவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளி தன்றே
ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவ ரேத்த
கானியன்றகரி யின்உரிபோர்த்துழல் கள்வன்சடை தன்மேல்
வானியன்றபிறை வைத்தஎம்மாதி மகிழும்வலி தாயம்
தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளி வாமே
கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமனுயிர் வீட்டி
பெண்ணிறைந்தஒரு பால்மகிழ்வெய்திய பெம்மானுறை கோயில்
மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலி தா
துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் உண்மைக்கதி யாமே
கடலின்நஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநட மாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மானமர் கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலி தாயம்
உடலிலங்குமுயிர் உள்ளளவுந்தொழ உள்ளத்துயர் போமே
பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயில் மூன்றும்
எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடி வாகும்
எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழு தேத்த
உரியராகவுடை யார்பெரியாரென உள்கும்முல கோரே
ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர் கூடி
ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொரு ளென்னேல்
வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலி தாயம்
பேசுமார்வமுடை யாரடியாரென பேணும்பெரி யோரே
வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும்வலி தா
தண்டவாணனடி யுள்குதலாலருள் மாலைத்தமி ழா
கண்டல்வைகுகடல் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் பத்துங்
கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர் வாரே

இத்தலம் தொண்டைநாட்டில் பாடியென வழங்கப்பட்டிருக்கின்றது
சுவாமிபெயர் வலிதாயநாதர்
தேவியார் தாயம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருப்புகலியும் திருவீழிமிழலையும்


வினாவுரை
பண் நட்டபாடை
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற
வாணுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழி யாமறை யோர்களேத்த
புகலி நிலாவிய புண்ணியனே
எம்மிறை யேயிமை யாதமுக்கண்
ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே
கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில்
கற்றவர் சிற்றிடை கன்னிமார்கள்
பொழின்மல்கு கிள்ளையை சொற்பயிற்றும்
புகலி நிலாவிய புண்ணியனே
எழின்மல ரோன்சிர மேந்தியுண்டோ ர்
இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய்
மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த
விண்ணிழி கோயில் விரும்பியதே
கன்னிய ராடல் கலந்துமிக்க
கந்துக வாடை கலந்துதுங்க
பொன்னியல் மாடம் நெருங்குசெல்வ
புகலி நிலாவிய புண்ணியனே
இன்னிசை யாழ்மொழி யாளோர்பாக
தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
மின்னியல் நுண்ணிடை யார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே
நாகப ணந்திகழ் அல்குல்மல்கும்
நன்னுதல் மான்விழி மங்கையோடும்
பூகவ ளம்பொழில் சூழ்ந்தஅந்தண்
புகலிநி லாவிய புண்ணியனே
ஏகபெ ருந்தகை யாயபெம்மான்
எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே
சந்தள றேறுத டங்கொள்கொங்கை
தையலோடு தளராத வாய்மை
புந்தியி னான்மறை யோர்களேத்தும்
புகலி நிலாவிய புண்ணியனே
எந்தமை யாளுடை ஈசஎம்மான்
எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
வெந்தவெண் ணீறணி வார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே
சங்கொலி இப்பிசு றாமகர
தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற்
பொங்கொலி நீர்சு தோங்குசெம்மை
புகலி நிலாவிய புண்ணியனே
எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான்
எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே
காமனெ ரிப்பிழம் பாகநோக்கி
காம்பன தோளியொ டுங்கலந்து
பூமரு நான்முகன் போல்வரேத்த
புகலி நிலாவிய புண்ணியனே
ஈமவ னத்தெரி யாட்டுகந்த
எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வீமரு தண்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே
இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோ ள்
இற்றல றவ்விர லொற்றியைந்து
புலங்களை கட்டவர் போற்றஅந்தண்
புகலி நிலாவிய புண்ணியனே
இலங்கெரி யேந்திநின் றெல்லியாடும்
எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே
செறிமுள ரித்தவி சேறியாறுஞ்
செற்றதில் வீற்றிரு தானும்மற்றை
பொறியர வத்தணை யானுங்காணா
புகலி நிலாவிய புண்ணியனே
எறிமழு வோடிள மான்கையின்றி
இருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய்
வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே
பத்தர்க ணம்பணி தேத்தவாய்த்த
பான்மைய தன்றியும் பல்சமணும்
புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண்
புகலி நிலாவிய புண்ணியனே
எத்தவ தோர்க்குமி லக்காய்நின்ற
எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே
விண்ணிழி கோயில் விரும்பிமேவும்
வித்தக மென்கொலி தென்றுசொல்லி
புண்ணிய னைப்புக லிந்நிலாவு
பூங்கொடி யோடிரு தானைப்போற்றி
நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி
நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணியல் பாடல்வல் லார்களிந்த
பாரொடு விண்பரி பாலகரே

இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை புகலி என்பது சீகாழிக்கொருபெயர்
வீழிமிழலையில் சுவாமிபெயர் வீழியழகர் தேவியார் சுந்தரகுசாம்பிகை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருக்காட்டுப்பள்ளி

பண் நட்டபாடை
செய்யரு கேபுனல் பாயஓங்கி
செங்கயல் பா சிலமலர்த்தேன்
கையரு கேகனி வாழையீன்று
கானலெலாங் கமழ் காட்டுப்பள்ளி
பையரு கேயழல் வாயவைவா
பாம்பணை யான்பணை தோளிபாகம்
மெய்யரு கேயுடை யானையுள்கி
விண்டவ ரேறுவர் மேலுலகே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
திரைகளெல் லாமல ருஞ்சுமந்து
செழுமணி முத்தொடு பொன்வரன்றி
கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சி
காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி
உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல
உத்தம ராயுயர தாருலகில்
அரவமெல் லாமரை யார்த்தசெல்வர
காட்செய அல்லல் அறுக்கலாமே
தோலுடை யான்வண்ண போர்வையினான்
சுண்ணவெண் ணீறுது தைந்திலங்கு
நூலுடை யானிமை யோர்பெருமான்
நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங்
காலுடை யான்கரி தாயகண்டன்
காதலி கப்படுங் காட்டுப்பள்ளி
மேலுடை யானிமை யாதமுக்கண்
மின்னிடை யாளொடும் வேண்டினானே
சலசல சந்தகி லோடும்உந்தி
சந்தன மேகரை சார்த்தியெங்கும்
பலபல வாய்த்தலை யார்த்துமண்டி
பாய்ந்திழி காவிரி பாங்கரின்வாய்
கலகல நின்றதி ருங்கழலான்
காதலி கப்படுங் காட்டுப்பள்ளி
சொலவல தொண்டர்க ளேத்தநின்ற
சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே
தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல்
தாமரை செங்கழு நீருமெல்லாங்
களையவி ழுங்குழ லார்கடி
காதலி கப்படுங் காட்டுப்பள்ளி
துளைபயி லுங்குழல் யாழ்முரல
துன்னிய இன்னிசை யால்துதைந்த
அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர
காட்செய அல்லல் அறுக்கலாமே
முடிகையி னாற்றொடும் மோட்டுழவர்
முன்கை தருக்கை கரும்பின்கட்டி
கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி
காதல்செய் தான்கரி தாயகண்டன்
பொடியணி மேனியி னானையுள்கி
போதொடு நீர்சு தேத்திமுன்னின்
றடிகையி னாற்றொழ வல்லதொண்டர்
அருவினை யைத்துர தாட்செய்வாரே
பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான்
பெய்கழல் நாடொறும் பேணியேத்த
மறையுடை யான்மழு வாளுடையான்
வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடை யான்கன லாடுகண்ணாற்
காமனை காய்ந்தவன் காட்டுப்பள்ளி
குறையுடை யான்குற பூதச்செல்வன்
குரைகழ லேகைகள் கூப்பினோமே
செற்றவர் தம்அர ணம்மவற்றை
செவ்வழல் வாயெரி யூட்டிநின்றுங்
கற்றவர் தாந்தொழு தேத்தநின்றான்
காதலி கப்படுங் காட்டுப்பள்ளி
உற்றவர் தாமுணர் வெய்திநல்ல
உம்பருள் ளார்தொழு தேத்தநின்ற
பெற்றம ரும்பெரு மானையல்லால்
பேசுவதும் மற்றோர் பேச்சிலோமே
ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர
துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்
குண்டர்க ளோடரை கூறையில்லார்
கூறுவ தாங்குண மல்லகண்டீர்
அண்டம றையவன் மாலுங்காணா
ஆதியி னானுறை காட்டுப்பள்ளி
வண்டம ரும்மலர கொன்றைமாலை
வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே
பொன்னியல் தாமரை நீலம்நெய்தல்
போதுக ளாற்பொலி வெய்துபொய்கை
கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளி
காதல னைக்கடற் காழியர்கோன்
துன்னிய இன்னிசை யாற்றுதைந்து
சொல்லிய ஞானசம் பந்தன்நல்ல
தன்னிசை யாற்சொன்ன மாலைபத்து
தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே

இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஆரணியச்சுந்தரர் தேவியார் அகிலாண்டநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்


வினாவுரை
பண் நட்டபாடை
அங்கமும் வேதமும் ஓதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே
நெய்தவழ் மூவெரி காவலோம்பும்
நேர்புரி நூன்மறை யாளரேத்த
மைதவழ் மாட மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை யோர்களேத்துஞ்
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கைதவழ் கூரெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே
தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர்
தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ
மால்புகை போய்விம்மு மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங்
கணபதி யீச்சரங் காமுறவே
நாமரு கேள்வியர் வேள்வியோவா
நான்மறை யோர்வழி பாடுசெய்ய
மாமரு வும்மணி கோயில்மேய
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காமரு சீர்மகிழ தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே
பாடல் முழவும் விழவும்ஓவா
பன்மறை யோரவர் தாம்பரவ
மாட நெடுங்கொடி விண்தடவும்
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேடக மாமலர சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காடக மேயிட மாகஆடுங்
கணபதி யீச்சரங் காமுறவே
புனையழ லோம்புகை அந்தணாளர்
பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப
மனைகெழு மாட மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கனைவளர் கூரெரி ஏந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன்
பொன்னெடு தோள்வரை யாலடர்த்து
மாண்டங்கு நூன்மறை யோர்பரவ
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேண்டங்கு மாமலர சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காண்டங்கு தோள்பெயர தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே
அந்தமும் ஆதியும் நான்முகனும்
அரவணை யானும் அறிவரிய
மந்திர வேதங்க ளோதுநாவர்
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கந்தம் அகிற்புகை யேகமழுங்
கணபதி யீச்சரங் காமுறவே
இலைமரு தேயழ காகநாளும்
இடுதுவர காயொடு சுக்குத்தின்னும்
நிலையமண் டேரரை நீங்கிநின்று
நீதரல் லார்தொழும் மாமருகல்
மலைமகள் தோள்புணர் வாயருளாய்
மாசில்செங் காட்டங் குடியதனுள்
கலைமல்கு தோலுடு தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே
நாலுங் குலைக்கமு கோங்குகாழி
ஞானசம் பந்தன் நலந்திகழும்
மாலின் மதிதவழ் மாடமோங்கும்
மருகலின் மற்றதன் மேல்மொழிந்த
சேலுங் கயலு திளைத்தகண்ணார்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
சூலம்வல் லான்கழ லேத்துபாடல்
சொல்லவல் லார்வினை யில்லையாமே

இவைகளுஞ் சோழநாட்டிலுள்ளவை
திருமருகலில் சுவாமிபெயர் மாணிக்கவண்ணர் தேவியார் வண்டுவார்குழலி
திருச்செங்காட்டங்குடியில் சுவாமிபெயர் கணபதீசுவரர்
தேவியார் திருக்குழல்நாயகி
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருநள்ளாறும் திருஆலவாயும்


வினாவுரை
பண் நட்டபாடை
பாடக மெல்லடி பாவையோடும்
படுபிண காடிடம் பற்றிநின்று
நாடக மாடுநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள்
துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த
ஆடக மாடம் நெருங்குகூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே
திங்களம் போதுஞ் செழும்புனலுஞ்
செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து
நங்கள் மகிழுநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
பொங்கிள மென்முலை யார்களோடும்
புனமயி லாட நிலாமுளைக்கும்
அங்கள கச்சுதை மாடக்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே
தண்ணறு மத்தமுங் கூவிளமும்
வெண்டலை மாலையு தாங்கியார்க்கும்
நண்ணல் அரியநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும்
புகுந்துட னேத்த புனையிழையார்
அண்ணலின் பாட லெடுக்குங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே
பூவினில் வாசம் புனலிற்பொற்பு
புதுவிரை சாந்தினின் நாற்றத்தோடு
நாவினிற் பாடநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
தேவர்கள் தானவர் சித்தர்விச்சா
தரர்கண தோடுஞ் சிறந்துபொங்கி
ஆவினில் ஐந்துக தாட்டுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே
ஆவினிலைந்து பஞ்சகவ்வியம்
செம்பொன்செய் மாலையும் வாசிகையு
திருந்து புகையு மவியும்பாட்டும்
நம்பும்பெ ருமைநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
உம்பரும் நாக ருலகந்தானும்
ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்
அம்புத நால்களால் நீடுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே
பாகமு தேவியை வைத்துக்கொண்டு
பைவிரி துத்தி பரியபேழ்வாய்
நாகமும் பூண்டநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்து
புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
ஆகமு டையவர் சேருங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே
கோவண ஆடையும் நீறுப்பூச்சுங்
கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும்
நாவண பாட்டுநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
பூவண மேனி இளையமாதர்
பொன்னும் மணியுங் கொழித்தெடுத்து
ஆவண வீதியில் ஆடுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே
இலங்கை யிராவணன் வெற்பெடுக்க
எழில்விர லூன்றி யிசைவிரும்பி
நலம்கொள சேர்ந்த நள்ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புலன்களை செற்று பொறியைநீக்கி
புந்தியிலு நினை சிந்தைசெய்யும்
அலங்கல்நல் லார்கள் அமருங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே
பணியுடை மாலும் மலரினோனும்
பன்றியும் வென்றி பறவையாயும்
நணுகல் அரியநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
மணியொலி சங்கொலி யோடுமற்றை
மாமுர சின்னொலி என்றும்ஓவா
தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே
தடுக்குடை கையருஞ் சாக்கியருஞ்
சாதியின் நீங்கிய வத்தவத்தர்
நடுக்குற நின்றநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்னாள்விழவும்
இரும்பலி யின்பினோ டெத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே
அன்புடை யானை அரனைக்கூடல்
ஆலவாய் மேவிய தென்கொலென்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை
நயம்பெற போற்றி நலங்குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக்காழி
பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
இன்புடை பாடல்கள் பத்தும்வல்லார்
இமையவ ரேத்த இருப்பர்தாமே

இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் தெர்ப்பாரணியேசுவரர்
தேவியார் போகமார்த்தபூண்முலையம்மை
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருஆவூர்ப்பசுபதீச்சரம்

பண் நட்டபாடை
புண்ணியர் பூதியர் பூதநாதர்
புடைபடு வார்தம் மனத்தார்திங்க
கண்ணிய ரென்றென்று காதலாளர்
கைதொழு தேத்த இருந்தவூராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி
விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாடல றாதஆவூர
பசுபதி யீச்சரம் பாடுநாவே
முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார்
முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
அத்திய ரென்றென் றடியரேத்தும்
ஐயன் அணங்கொ டிருந்தவூராம்
தொத்திய லும்பொழில் மாடுவண்டு
துதைந்தெங்கும் தூமது பாயக்கோயிற்
பத்திமை பாடல றாதஆவூர
பசுபதி யீச்சரம் பாடுநாவே
பொங்கி வரும்புனற் சென்னிவைத்தார்
போம்வழி வந்திழி வேற்றமானார்
இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும்
இறையவ ரென்றுமி ருந்தவூராம்
தெங்குயர் சோலைசே ராலைசாலி
திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கை
பங்கய மங்கை விரும்புமாவூர
பசுபதி யீச்சரம் பாடுநாவே
தேவியோர் கூறின ரேறதேறுஞ்
செலவினர் நல்குர வென்னைநீக்கும்
ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும்
அப்பனா ரங்கே அமர்ந்தவூராம்
பூவிய லும்பொழில் வாசம்வீச
புரிகுழ லார்சுவ டொற்றிமுற்ற
பாவியல் பாடல றாதஆவூர
பசுபதி யீச்சரம் பாடுநாவே
இந்தணை யுஞ்சடை யார்விடையார்
இப்பிற பென்னை யறுக்கவல்லார்
வந்தணை தின்னிசை பாடுவார்பால்
மன்னினர் மன்னி யிருந்தவூராம்
கொந்தணை யுங்குழ லார்விழவில்
கூட்டமி டையிடை சேரும்வீதி
பந்தணை யும்விர லார்தம்ஆவூர
பசுபதி யீச்சரம் பாடுநாவே
குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார்
கும்பிடு வார்த கன்புசெய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார்
உறைபதி யாகுஞ் செறிகொள்மாடஞ்
சுற்றிய வாசலின் மாதர்விழா
சொற்கவி பாடநி தானம்நல்க
பற்றிய கையினர் வாழும்ஆவூர
பசுபதி யீச்சரம் பாடுநாவே
நீறுடை யார்நெடு மால்வணங்கும்
நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்
கூறுடை யாருடை கோவணத்தார்
குவலய மேத்த இருந்தவூராம்
தாறுடை வாழையிற் கூழைமந்தி
தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தை
பாறிட பாய்ந்து பயிலும்ஆவூர
பசுபதி யீச்சரம் பாடுநாவே
வெண்டலை மாலை விரவிப்பூண்ட
மெய்யுடை யார்விறல் ஆரரக்கன்
வண்டமர் பூமுடி செற்றுகந்த
மைந்த ரிடம்வள மோங்கியெங்குங்
கண்டவர் சிந்தை கருத்தின்மிக்கார்
கதியரு ளென்றுகை யாரக்கூப்பி
பண்டலர் கொண்டு பயிலும்ஆவூர
பசுபதி யீச்சரம் பாடுநாவே
மாலும் அயனும் வணங்கிநேட
மற்றவ ருக்கெரி யாகிநீண்ட
சீலம் அறிவரி தாகிநின்ற
செம்மையி னாரவர் சேருமூராம்
கோல விழாவி னரங்கதேறி
கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்
பாலென வேமொழி தேத்தும்ஆவூர
பசுபதி யீச்சரம் பாடுநாவே
பின்னிய தாழ்சடை யார்பிதற்றும்
பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்
தன்னிய லும்முரை கொள்ளகில்லா
சைவரி டந்தள வேறுசோலை
துன்னிய மாதரும் மைந்தர்தாமும்
சுனையிடை மூழ்கி தொடர்ந்தசிந்தை
பன்னிய பாடல் பயிலும்ஆவூர
பசுபதி யீச்சரம் பாடுநாவே
எண்டிசை யாரும் வணங்கியேத்தும்
எம்பெரு மானையெ ழில்கொளாவூர
பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும்
பசுபதி யீச்சர தாதிதன்மேல்
கண்டல்கள் மிண்டிய கானற்காழி
கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன
கொண்டினி தாயிசை பாடியாடி
கூடு மவருடை யார்கள்வானே

இது சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பசுபதீச்சுரர்
தேவியார் மங்களநாயகியம்மை
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருவேணுபுரம்

பண் நட்டபாடை
வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம்
பெண்டான்மிக ஆனான்பிறை சென்னிப்பெரு மானூர்
தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம்
விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே
படைப்பும்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை
கிடைப்பல்கண முடையான்கிறி பூதப்படை யானூர்
புடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம்
விடைத்தேவரு தென்றல்மிகு வேணுபுர மதுவே
குடைப்பாளை என்றும் பாடம்
கடந்தாங்கிய கரியையவர் வெருவவுரி போர்த்து
படந்தாங்கிய அரவக்குழை பரமேட்டிதன் பழவூர்
நடந்தாங்கிய நடையார்நல பவளத்துவர் வாய்மேல்
விடந்தாங்கிய கண்ணார்பயில் வேணுபுர மதுவே
தக்கன்தன சிரமொன்றினை அரிவித்தவன் தனக்கு
மிக்கவ்வரம் அருள்செய்தஎம் விண்ணோர்பெரு மானூர்
பக்கம்பல மயிலாடிட மேகம்முழ வதிர
மிக்கம்மது வண்டார்பொழில் வேணுபுர மதுவே
நானாவித உருவாய்நமை யாள்வான்நணு காதார்
வானார்திரி புரமூன்றெரி யுண்ணச்சிலை தொட்டான்
தேனார்ந்தெழு கதலிக்கனி யுண்பான்திகழ் மந்தி
மேனோக்கிநின் றிரங்கும்பொழில் வேணுபுர மதுவே
மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிமிக அஞ்ச
கண்ணார்சலம் மூடிக்கட லோங்கவ்வுயர தானூர்
தண்ணார்நறுங் கமலம்மலர் சாயவ்விள வாளை
விண்ணோர்துதி கொள்ளும்வியன் வேணுபுர மதுவே
விண்ணார் குதிகொள்ளும் என்றும் பாடம்
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
மலையான்மகள் அஞ்சவ்வரை எடுத்தவ்வலி யரக்கன்
தலைதோளவை நெரியச்சரண் உகிர்வைத்தவன் தன்னூர்
கலையாறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம்
விலையாயின சொற்றேர்தரு வேணுபுர மதுவே
வயமுண்டவ மாலும்அடி காணாதல மாக்கும்
பயனாகிய பிரமன்படு தலையேந்திய பரனூர்
கயமேவிய சங்கந்தரு கழிவிட்டுயர் செந்நெல்
வியன்மேவிவ துறங்கும்பொழில் வேணுபுர மதுவே
மாசேறிய உடலாரமண் கழுக்கள்ளொடு தேரர்
தேசேறிய பாதம்வணங் காமைத்தெரி யானூர்
தூசேறிய அல்குல்துடி இடையார்துணை முலையார்
வீசேறிய புருவத்தவர் வேணுபுர மதுவே
குழுக்கள் என்றும் பாடம்
வேதத்தொலி யானும்மிகு வேணுபுர தன்னை
பாதத்தினின் மனம்வைத்தெழு பந்தன்தன பாடல்
ஏதத்தினை இல்லா இவை பத்தும்இசை வல்லார்
கேதத்தினை இல்லார்சிவ கெதியைப்பெறு வாரே

வேணுபுரம் என்பது சீகாழிக்கொருபெயர்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திரு அண்ணாமலை

பண் நட்டபாடை
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டி
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே
பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ் கழைமுத்தஞ்
சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே
உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே
மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே
பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சை
பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகி
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்த குறுநோயடை யாவே
கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே
ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரணம் வதனம்பிடி துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேத
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்உமை தலைவன்னடி சரணே
வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்
மார்வம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழு படையான்நல கழல்சேர்வது குணமே
வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனை
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே

இது நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் அருணாசலேசுவரர்
தேவியார் உண்ணாமுலையம்மை
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருவீழிமிழலை

பண் நட்டபாடை
சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான்
படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்
விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே
ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்
ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாயுடன் ஆனானிடம் வீழிம்மிழ லையே
வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய
உம்மன்பினொ டெம்மன்புசெய் தீசன்னுறை கோயில்
மும்மென்றிசை முரல்வண்டுகள் கொண்டித்திசை யெங்கும்
விம்மும்பொழில் சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே
பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும்
உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்
மண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்
விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே
ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின்
தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமு
தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர்
மேயானவன் உறையும்மிடம் வீழிம்மிழ லையே
கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர்
எல்லாம்ஒரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப
வல்லாய்எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே
கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான்
புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்க கோவா
வரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமு தரும்பி
விரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே
முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை
தன்னைப்பிடி தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றி
பின்னைப்பணி தேத்தப்பெரு வாள்பேரொடு கொடுத்த
மின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே
பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா
ஒண்டீயுரு வானானுறை கோயில்நிறை பொய்கை
வண்டாமரை மலர்மேல்மட அன்னந்நடை பயில
வெண்டாமரை செந்தாதுதிர் வீழிம்மிழ லையே
மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள்
இசங்கும்பிற பறுத்தானிடம் இருந்தேன்களி திரைத்து
பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்
விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே
வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர்
காழிந்நகர கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும்
யாழின்னிசை வல்லார்சொல கேட்டாரவ ரெல்லாம்
ஊழின்மலி வினைபோயிட உயர்வானடை வாரே
ஊழின்வலி என்றும் பாடம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வீழியழகர்
தேவியார் சுந்தரகுசாம்பிகை
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருமுதுகுன்றம்

பண் நட்டபாடை
மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட
தொத்தார்தரு மணிநீண்முடி சுடர்வண்ணன திடமாங்
கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு
முத்தாறுவ தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே
தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்
முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே
விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்
டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்
களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு
முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே
சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா
நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார்
அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்
முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே
அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார்
கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே
ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற்
கோவாதவின் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில்
சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே
தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை முடிய
மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்
விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை
முழவோடிசை நடமுஞ்செயும் முதுகுன்றடை வோமே
முடியர் என்றும் பாடம்
நடமுன் செயும் என்றும் பாடம்
செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்
கதுவாய்கள்ப தலறியிட கண்டானுறை கோயில்
மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா
முதுவேய்கள்மு துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே
குறை யில்லா என்றும் பாடம்
இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய
செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்
புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தட தருகே
முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே
அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்
மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார்
கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி
முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே
முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர
புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த
நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்
பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே

இத்தலம் நடுநாட்டிலுள்ளது இதுவே விருத்தாசலம்
சுவாமிபெயர் பழமலைநாதர்
தேவியார் பெரியநாயகியம்மை
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருவியலூர்

பண் நட்டபாடை
குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவ
பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன்
அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும்
விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே
ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான்
ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான்
மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள்
வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே
செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும்
பெய்ம்மின்பலி எனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்
உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட உறைமேல்
விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே
அடைவாகிய அடியார்தொழ அலரோன்றலை யதனில்
மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாங்
கடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி
மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே
எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையா
பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனா
கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம்
விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே
வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான்
திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை
அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள்
விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்வியலூரே
மானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம்
ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள்
தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம்
மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே
பொருவாரென கெதிராரென பொருப்பையெடு தான்றன்
கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து
சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்
விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே
வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால்
அளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல்
உளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு உருவம்
விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே
தடுக்காலுடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடி
பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்
கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த
விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே
விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரை
தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்
துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவர் என்றும்
விளங்கும்புகழ் அதனோடுயர் விண்ணும்முடை யாரே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் யோகாநந்தேசுவரர்
தேவியார் சவுந்தரநாயகியம்மை
சாந்தநாயகியம்மை என்றும் பாடம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப


திருக்கொடுங்குன்றம்

பண் நட்டபாடை
வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழி தோடி
கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
ஆனிற்பொலி வைந்தும்மமர தாடியுல கே
தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே
மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே
மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்தி
குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே
பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல்
குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
பொருமாஎயில் வரைவிற்றரு கணையிற்பொடி செய்த
பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே
மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே
கைம்மாமத கரியின்னினம் இடியின்குர லதிர
கொய்ம்மாமலர சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம்
அம்மானென உள்கித்தொழு வார்கட்கருள் செய்யும்
பெம்மானவன் இமையோர்தொழ மேவும்பெரு நகரே
மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்
அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர கொன்றை
நிரவச்சடை முடிமேலுடன் வைத்தான்நெடு நகரே
முட்டாமுது கரியின்னினம் முதுவேய்களை முனிந்து
குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்
ஒட்டாவர கன்றன்முடி ஒருபஃதவை யுடனே
பிட்டானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே
அறையும்மரி குரலோசையை அஞ்சியடும் ஆனை
குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம்
மறையும்மவை யுடையானென நெடியானென இவர்கள்
இறையும்மறி வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே
மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னை
குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம்
புத்தரொடு பொல்லாமன சமணர்புறங் கூற
பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே
கூனற்பிறை சடைமேல்மிக வுடையான்கொடுங் குன்றை
கானற்கழு மலமாநகர தலைவன்நல கவுணி
ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்
ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கொடுங்குன்றேசுவரர் கொடுங்குன்றீசர் என்றும் பாடம்
தேவியார் அமுதவல்லியம்மை குயிலமுதநாயகி என்றும் பாடம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருநெய்த்தானம்

பண் நட்டபாடை
மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
கையாடியகேடில் கரியுரிமூடிய வொருவன்
செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே
பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும்
பிறையும்புனல் அரவும்படு சடையெம்பெருமா னூர்
அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே
பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்
தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே
சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மனல் ஏந்தி
நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம்
கடுவாளிள அரவாடுமிழ் கடல்நஞ்சம துண்டான்
நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே
நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்தி
பகராவரு புனற்காவிரி பரவிப்பணி தேத்தும்
நிகரான்மண லிடுதன்கரை நிகழ்வாயநெ தான
நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே
தண்கரை என்றும் பாடம்
விடையார்கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்
உடையார்நறு மாலைச்சடை யுடையாரவர் மேய
புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்தணெ தானம்
அடையாதவ ரென்றும்அம ருலகம்மடை யாரே
சூழ்ந்த நெய்த்தானம் என்றும் பாடம்
நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெ தான
தழலானவன் அனலங்கையி லேந்தியழ காய
கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றி
தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே
அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம்
இறையாரமுன் எடுத்தான்இரு பதுதோளிற ஊன்றி
நிறையார்புனல் நெய்த்தானன்நன் நிகழ்சேவடி பரவ
கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே
கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும்
சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெ தானம்
காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும்
ஞாலம்புகழ் அடியாருடல் உறுநோய்நலி யாவே
மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்
புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்
சித்தம்முடை யடியாருடல் செறுநோயடை யாவே
தலம்மல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன்
நிலம்மல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
பலம்மல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் நெய்யாடியப்பர்
தேவியார் வாலாம்பிகையம்மை
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருப்புள்ளமங்கை திரு ஆலந்துறை

பண் நட்டபாடை
பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்
போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கை
காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே
மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மை
புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கை
கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே
கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல்
பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கை
சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வால
துறையானவன் நறையார்கழல் தொழுமின்துதி செய்தே
தணியார்மதி அரவின்னொடு வைத்தானிடம் மொய்த்தெம்
பணியாயவன் அடியார்தொழு தேத்தும்புள மங்கை
மணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும்
அணியார்மணல் அணைகாவிரி யாலந்துறை யதுவே
மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின்
கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரி கரைமேல்
பொத்தின்னிடை யாந்தைபல பாடும்புள மங்கை
அத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே
மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே
முடியார்தரு சடைமேல்முளை இளவெண்மதி சூடி
பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கை
கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும்
அடியார்த கினியானிடம் ஆலந்துறை யதுவே
இலங்கைமன்னன் முடிதோளிற எழிலார்திரு விரலால்
விலங்கல்லிடை அடர்த்தானிடம் வேதம்பயின் றேத்தி
புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை
அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே
செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்ட
பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை
வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி
அறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே
நீதியறி யாதாரமண் கையரொடு மண்டை
போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை
ஆதியவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின்
சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே
பொந்தின்னிடை தேனூறிய பொழில்சூழ்புள மங்கை
அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானை
கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பசுபதிநாயகர்
தேவியார் பால்வளைநாயகியம்மை
பல்வளைநாயகியம்மை என்றும் பாடம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருஇடும்பாவனம்

பண் நட்டபாடை
மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூ
தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்தி
சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்
இனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே
மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புகழ் ஒளிசேர்
கலையார்தரு புலவோரவர் காவல்மிகு குன்றில்
இலையார்தரு பொழில்சூழ்வரும் இடும்பாவன மிதுவே
சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும் எந்தை
ஞாலம்மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார்
கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே
பொழிலார்தரு குலைவாழைகள் எழிலார்திகழ் போழ்தில்
தொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில்
குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
எழிலார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே
பந்தார்விரல் உமையாளொரு பங்காகங்கை முடிமேல்
செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல்
கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில்
எந்தாயென இருந்தானிடம் இடும்பாவன மிதுவே
நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி
அறிநீர்மையி லெய்தும்மவர கறியும்மறி வருளி
குறிநீர்மையர் குணமார்தரு மணமார்தரு குன்றில்
எறிநீர்வயல் புடைசூழ்தரும் இடும்பாவன மிதுவே
குளமார்தரும் என்றும் பாடம்
நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம்
பாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்கா
கூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே
தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை
ஓராதெடு தார்த்தான்முடி யொருபஃதவை நெரித்து
கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த
ஏரார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே
பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலி மலிசீர
தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர் பலதூய்
மருளார்தரு மாயன்னயன் காணார்மய லெய்த
இருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே
தடுக்கையுடன் இடுக்கித்தலை பறித்துச்சம ணடப்பர்
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும்
மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர கரைமேல்
இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே
சமண்டப்பர் என்றும் பாடம்
கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரை கோல
இடியார்கட லடிவீழ்தரும் இடும்பாவன திறையை
அடியாயு தணர்காழியுள் அணிஞானசம் பந்தன்
படியாற்சொன்ன பாடல்சொல பறையும்வினை தானே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சற்குணநாதர்
தேவியார் மங்களநாயகியம்மை
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருநின்றியூர்

பண் நட்டபாடை
சூலம்படை சுண்ணப்பொடி சாந்தஞ்சுடு நீறு
பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டை
காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்
நீலம்மலர பொய்கைநின்றி யூரின்நிலை யோர்க்கே
சூலப்படை என்றும் பாடம்
சாத்துஞ் சுடுநீறு என்றும் பாடம்
அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்
நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்
நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றை தாளும்
பச்சம்முடை யடிகள்திரு பாதம்பணி வாரே
நயந்தானா என்றும் பாடம்
பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார
அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை
நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்
உறையும்மிறை யல்லதென துள்ளம் முணராதே
பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை
ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனை
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்
ஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே
குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும்
நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்
அழலின்வலன் அங்கையது ஏந்தியன லாடுங்
கழலின்னோலி ஆடும்புரி கடவுள்களை கண்ணே
எய்தி என்றும் பாடம்
மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்
சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த
வீரன்மலி அழகார்பொழில் மிடையுந்திரு நின்றி
யூரன்கழ லல்லாதென துள்ள முணராதே
பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும்
பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார்
சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்
நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
நல்லமலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான்
அல்லரென ஆவரென நின்றும்மறி வரிய
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெஞ்
செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே
நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை
அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே
நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில்
மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே
குன்றமது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக
நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி யூரை
நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் இலட்சுமியீசுவரர்
தேவியார் உலகநாயகியம்மை
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருக்கழுமலம் திருவிராகம்

பண் நட்டபாடை
பிறையணி படர்சடை முடியிடை
பெருகிய புனலுடை யவனிறை
இறையணி வளையிணை முலையவ
ளிணைவன தெழிலுடை யிடவகை
கறையணி பொழில்நிறை வயலணி
கழுமலம் அமர்கனல் உருவினன்
நறையணி மலர்நறு விரைபுல்கு
நலம்மலி கழல்தொழன் மருவுமே
பிணிபடு கடல்பிற விகளற
லெளிதுள ததுபெரு கியதிரை
அணிபடு கழுமலம் இனிதம
ரனலுரு வினனவிர் சடைமிசை
தணிபடு கதிர்வள ரிளமதி
புனைவனை உமைதலை வனைநிற
மணிபடு கறைமிட றனைநல
மலிகழ லிணைதொழன் மருவுமே
வரியுறு புலியத ளுடையினன்
வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி
விரியுறு சடைவிரை புழைபொழில்
விழவொலி மலிகழு மலம்அமர்
எரியுறு நிறஇறை வனதடி
இரவொடு பகல்பர வுவர்தம
தெரியுறு வினைசெறி கதிர்முனை
இருள்கெட நனிநினை வெய்துமதே
வினைகெட மனநினை வதுமுடி
கெனின்நனி தொழுதெழு குலமதி
புனைகொடி யிடைபொருள் தருபடு
களிறின துரிபுதை யுடலினன்
மனைகுட வயிறுடை யனசில
வருகுறள் படையுடை யவன்மலி
கனைகட லடைகழு மலமமர்
கதிர்மதி யினனதிர் கழல்களே
தலைமதி புனல்விட அரவிவை
தலைமைய தொருசடை யிடையுடன்
நிலைமரு வவொரிட மருளினன்
நிழன்மழு வினொடழல் கணையினன்
மலைமரு வியசிலை தனின்மதி
லெரியுண மனமரு வினன்நல
கலைமரு வியபுற வணிதரு
கழுமலம் இனிதமர் தலைவனே
வரைபொரு திழியரு விகள்பல
பருகொரு கடல்வரி மணலிடை
கரைபொரு திரையொலி கெழுமிய
கழுமலம் அமர்கன லுருவினன்
அரைபொரு புலியதள் உடையினன்
அடியிணை தொழவரு வினையெனும்
உரைபொடி படவுறு துயர்கெட
வுயருல கெய்தலொரு தலைமையே
முதிருறு கதிர்வளர் இளமதி
சடையனை நறநிறை தலைதனில்
உதிருறு மயிர்பிணை தவிர்தசை
யுடைபுலி அதளிடை யிருள்கடி
கதிருறு சுடரொளி கெழுமிய
கழுமலம் அமர்மழு மலிபடை
அதிருறு கழலடி களதடி
தொழுமறி வலதறி வறியமே
கடலென நிறநெடு முடியவ
னடுதிறல் தெறஅடி சரணென
அடல்நிறை படையரு ளியபுக
ழரவரை யினன்அணி கிளர்பிறை
விடம்நிறை மிடறுடை யவன்விரி
சடையவன் விடையுடை யவனுமை
உடனுறை பதிகடல் மறுகுடை
யுயர்கழு மலவியன் நகரதே
கொழுமல ருறைபதி யுடையவன்
நெடியவ னெனவிவர் களுமவன்
விழுமையை யளவறி கிலரிறை
விரைபுணர் பொழிலணி விழவமர்
கழுமலம் அமர்கன லுருவினன்
அடியிணை தொழுமவ ரருவினை
எழுமையு மிலநில வகைதனி
லெளிதிமை யவர்விய னுலகமே
அமைவன துவரிழு கியதுகி
லணியுடை யினர்அமண் உருவர்கள்
சமையமும் ஒருபொரு ளெனுமவை
சலநெறி யனஅற வுரைகளும்
இமையவர் தொழுகழு மலமம
ரிறைவன தடிபர வுவர்தமை
நமையல வினைநல னடைதலி
லுயர்நெறி நனிநணு குவர்களே
பெருகிய தமிழ்விர கினன்மலி
பெயரவ னுறைபிணர் திரையொடு
கருகிய நிறவிரி கடலடை
கழுமல முறைவிட மெனநனி
பெருகிய சிவனடி பரவிய
பிணைமொழி யனவொரு பதுமுடன்
மருவிய மனமுடை யவர்மதி
யுடையவர் விதியுடை யவர்களே

கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருவீழிமிழலை திருவிராகம்

பண் நட்டபாடை
தடநில வியமலை நிறுவியொர்
தழலுமிழ் தருபட அரவுகொ
டடல்அசு ரரொடம ரர்கள்அலை
கடல்கடை வுழியெழு மிகுசின
விடமடை தருமிட றுடையவன்
விடைமிசை வருமவ னுறைபதி
திடமலி தருமறை முறையுணர்
மறையவர் நிறைதிரு மிழலையே
தரையொடு திவிதல நலிதரு
தகுதிற லுறுசல தரனது
வரையன தலைவிசை யொடுவரு
திகிரியை அரிபெற அருளினன்
உரைமலி தருசுர நதிமதி
பொதிசடை யவனுறை பதிமிகு
திரைமலி கடல்மண லணிதரு
பெறுதிடர் வளர்திரு மிழலையே
மலைமகள் தனையிகழ் வதுசெய்த
மதியறு சிறுமன வனதுயர்
தலையினொ டழலுரு வனகரம்
அறமுனி வுசெய்தவ னுறைபதி
கலைநில வியபுல வர்களிடர்
களைதரு கொடைபயில் பவர்மிகு
சிலைமலி மதில்புடை தழுவிய
திகழ்பொழில் வளர்திரு மிழலையே
மருவலர் புரமெரி யினின்மடி
தரவொரு கணைசெல நிறுவிய
பெருவலி யினன்நலம் மலிதரு
கரனுர மிகுபிணம் அமர்வன
இருளிடை யடையுற வொடுநட
விசையுறு பரனினி துறைபதி
தெருவினில் வருபெரு விழவொலி
மலிதர வளர்திரு மிழலையே
அணிபெறு வடமர நிழலினி
லமர்வொடு மடியிணை யிருவர்கள்
பணிதர அறநெறி மறையொடு
மருளிய பரனுறை விடமொளி
மணிபொரு வருமர கதநில
மலிபுன லணைதரு வயலணி
திணிபொழில் தருமணம் மதுநுக
ரறுபத முரல்திரு மிழலையே
வசையறு வலிவன சரவுரு
வதுகொடு நினைவரு தவமுயல்
விசையன திறன்மலை மகளறி
வுறுதிற லமர்மிடல்கொடுசெய்து
அசைவில படையருள் புரிதரு
மவனுறை பதியது மிகுதரு
திசையினின் மலர்குல வியசெறி
பொழின்மலி தருதிரு மிழலையே
நலமலி தருமறை மொழியொடு
நதியுறு புனல்புகை ஒளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன்
மறையவ னுயிரது கொளவரு
சலமலி தருமற லிதனுயிர்
கெடவுதை செய்தவர னுறைபதி
திலகமி தெனவுல குகள்புகழ்
தருபொழி லணிதிரு மிழலையே
திலதமிதென என்றும் பாடம்
அரனுறை தருகயி லையைநிலை
குலைவது செய்ததச முகனது
கரமிரு பதுநெரி தரவிரல்
நிறுவிய கழலடி யுடையவன்
வரன்முறை யுலகவை தருமலர்
வளர்மறை யவன்வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதரு
சிவனுறை பதிதிரு மிழலையே
அயனொடும் எழிலமர் மலர்மகள்
மகிழ்கண னளவிட லொழியவொர்
பயமுறு வகைதழல் நிகழ்வதொர்
படியுரு வதுவர வரன்முறை
சயசய வெனமிகு துதிசெய
வெளியுரு வியவவ னுறைபதி
செயநில வியமதில் மதியது
தவழ்தர வுயர்திரு மிழலையே
இகழுரு வொடுபறி தலைகொடு
மிழிதொழில் மலிசமண் விரகினர்
திகழ்துவ ருடையுடல் பொதிபவர்
கெடஅடி யவர்மிக அருளிய
புகழுடை யிறையுறை பதிபுன
லணிகடல் புடைதழு வியபுவி
திகழ்சுரர் தருநிகர் கொடையினர்
செறிவொடு திகழ்திரு மிழலையே
சினமலி கரியுரி செய்தசிவ
னுறைதரு திருமிழ லையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை
தமிழ்விர கனதுரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவரெழின்
மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர
இருநில னிடையினி தமர்வரே

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருச்சிவபுரம் திருவிராகம்

பண் நட்டபாடை
புவம்வளி கனல்புனல் புவிகலை
யுரைமறை திரிகுணம் அமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர்
திகழ்தரும் உயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு
பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர்
செழுநில னினில்நிலை பெறுவரே
கலைபுரை என்றும் பாடம்
மலைபல வளர்தரு புவியிடை
மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர்முதல் உலகுகள்
நிலைபெறு வகைநினை வொடுமிகும்
அலைகடல் நடுவறி துயிலமர்
அரியுரு வியல்பர னுறைபதி
சிலைமலி மதிள்சிவ புரம்நினை
பவர்திரு மகளொடு திகழ்வரே
பழுதில கடல்புடை தழுவிய
படிமுத லியவுல குகள்மலி
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள்
குலம்மலி தருமுயி ரவையவை
முழுவதும் அழிவகை நினைவொடு
முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர்
தொழுமவர் புகழ்மிகு முலகிலே
முதலுருவிய வரனுரைபதி என்றும் பாடம்
நறைமலி தருமள றொடுமுகை
நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு
நியதமும் வழிபடும் அடியவர்
குறைவில பதமணை தரஅருள்
குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது
நினைபவர் செயமகள் தலைவரே
சினமலி யறுபகை மிகுபொறி
சிதைதரு வகைவளி நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு
தருபொருள் நியதமும் உணர்பவர்
தனதெழி லுருவது கொடுஅடை
தகுபர னுறைவது நகர்மதில்
கனமரு வியசிவ புரம்நினை
பவர்கலை மகள்தர நிகழ்வரே
சுருதிகள் பலநல முதல்கலை
துகளறு வகைபயில் வொடுமிகு
உருவிய லுலகவை புகழ்தர
வழியொழு குமெயுறு பொறியொழி
அருதவ முயல்பவர் தனதடி
யடைவகை நினையர னுறைபதி
திருவளர் சிவபுரம் நினைபவர்
திகழ்குலன் நிலனிடை நிகழுமே
கதமிகு கருவுரு வொடுவுகி
ரிடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுக னமர்வளை
மதிதிகழ் எயிறதன் நுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய
எழிலரி வழிபட அருள்செய்த
பதமுடை யவனமர் சிவபுரம்
நினைபவர் நிலவுவர் படியிலே
உகிரிடவட என்றும் படம்
அசைவுறு தவமுயல் வினிலயன்
அருளினில் வருவலி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை
இருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு
விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுரம் நினைபவர்
செழுநில னினில்நிகழ் வுடையரே
அடல்மலி படையரி அயனொடும்
அறிவரி யதொரழல் மலிதரு
சுடருரு வொடுநிகழ் தரவவர்
வெருவொடு துதியது செயவெதிர்
விடமலி களநுத லமர்கண
துடையுரு வெளிபடு மவன்நகர்
திடமலி பொழிலெழில் சிவபுரம்
நினைபவர் வழிபுவி திகழுமே
குணமறி வுகள்நிலை யிலபொரு
ளுரைமரு வியபொருள் களுமில
திணமெனு மவரொடு செதுமதி
மிகுசம ணருமலி தமதுகை
உணலுடை யவருணர் வருபர
னுறைதரு பதியுல கினில்நல
கணமரு வியசிவ புரம்நினை
பவரெழி லுருவுடை யவர்களே
திகழ்சிவ புரநகர் மருவிய
சிவனடி யிணைபணி சிரபுர
நகரிறை தமிழ்விர கனதுரை
நலமலி யொருபதும் நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருவுரு
நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின்
மிகைபுணர் தரநலம் மிகுவரே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பிரமபுரிநாயகர் தேவியார் பெரியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருமறைக்காடு திருவிராகம்

பண் நட்டபாடை
சிலைதனை நடுவிடை நிறுவியொர்
சினமலி அரவது கொடுதிவி
தலமலி சுரரசு ரர்களொலி
சலசல கடல்கடை வுழிமிகு
கொலைமலி விடமெழ அவருடல்
குலைதர வதுநுகர் பவனெழில்
மலைமலி மதில்புடை தழுவிய
மறைவனம் அமர்தரு பரமனே
கரமுத லியஅவ யவமவை
கடுவிட அரவது கொடுவரு
வரல்முறை அணிதரு மவனடல்
வலிமிகு புலியத ளுடையினன்
இரவலர் துயர்கெடு வகைநினை
இமையவர் புரமெழில் பெறவளர்
மரநிகர் கொடைமனி தர்கள்பயில்
மறைவனம் அமர்தரு பரமனே
இழைவளர் தருமுலை மலைமக
ளினிதுறை தருமெழி லுருவினன்
முழையினின் மிகுதுயி லுறுமரி
முசிவொடும் எழமுள ரியொடெழு
கழைநுகர் தருகரி யிரிதரு
கயிலையின் மலிபவ னிருளுறும்
மழைதவழ் தருபொழில் நிலவிய
மறைவனம் அமர்தரு பரமனே
நலமிகு திருவித ழியின்மலர்
நகுதலை யொடுகன கியின்முகை
பலசுர நதிபட அரவொடு
மதிபொதி சடைமுடி யினன்மிகு
தலநில வியமனி தர்களொடு
தவமுயல் தருமுனி வர்கள்தம
மலமறு வகைமனம் நினைதரு
மறைவன மமர்தரு பரமனே
கதிமலி களிறது பிளிறிட
வுரிசெய்த அதிகுண னுயர்பசு
பதியதன் மிசைவரு பசுபதி
பலகலை யவைமுறை முறையுணர்
விதியறி தருநெறி யமர்முனி
கணனொடு மிகுதவ முயல்தரும்
அதிநிபு ணர்கள்வழி படவளர்
மறைவனம் அமர்தரு பரமனே
கறைமலி திரிசிகை படையடல்
கனல்மழு வெழுதர வெறிமறி
முறைமுறை யொலிதம ருகமுடை
தலைமுகிழ் மலிகணி வடமுகம்
உறைதரு கரனுல கினிலுய
ரொளிபெறு வகைநினை வொடுமலர்
மறையவன் மறைவழி வழிபடு
மறைவனம் அமர்தரு பரமனே
இருநில னதுபுன லிடைமடி
தரஎரி புகஎரி யதுமிகு
பெருவளி யினிலவி தரவளி
கெடவிய னிடைமுழு வதுகெட
இருவர்க ளுடல்பொறை யொடுதிரி
யெழிலுரு வுடையவன் இனமலர்
மருவிய அறுபதம் இசைமுரல்
மறைவனம் அமர்தரு பரமனே
சனம்வெரு வுறவரு தசமுக
னொருபது முடியொடு மிருபது
கனமரு வியபுயம் நெரிவகை
கழலடி யிலொர்விரல் நிறுவினன்
இனமலி கணநிசி சரன்மகிழ்
வுறவருள் செய்தகரு ணையனென
மனமகிழ் வொடுமறை முறையுணர்
மறைவனம் அமர்தரு பரமனே
அணிமலர் மகள்தலை மகனயன்
அறிவரி யதொர்பரி சினிலெரி
திணிதரு திரளுரு வளர்தர
அவர்வெரு வுறலொடு துதிசெய்து
பணியுற வெளியுரு வியபர
னவனுரை மலிகடல் திரளெழும்
மணிவள ரொளிவெயில் மிகுதரு
மறைவனம் அமர்தரு பரமனே
இயல்வழி தரவிது செலவுற
இனமயி லிறகுறு தழையொடு
செயல்மரு வியசிறு கடமுடி
யடைகையர் தலைபறி செய்துதவம்
முயல்பவர் துவர்படம் உடல்பொதி
பவரறி வருபர னவனணி
வயலினில் வளைவளம் மருவிய
மறைவனம் அமர்தரு பரமனே
வசையறு மலர்மகள் நிலவிய
மறைவனம் அமர்பர மனைநினை
பசையொடு மிகுகலை பலபயில்
புலவர்கள் புகழ்வழி வளர்தரு
இசையமர் கழுமல நகரிறை
தமிழ்விர கனதுரை யியல்வல
இசைமலி தமிழொரு பதும்வல
அவருல கினிலெழில் பெறுவரே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மறைக்காட்டீசுரர் தேவியார் யாழைப்பழித்தமொழியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருக்கோலக்கா

பண் தக்கராகம்
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கை கோல காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ
பெண்டான் பாகமாக பிறை சென்னி
கொண்டான் கோல காவு கோயிலா
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே
பூணற் பொறிகொள் அரவம் புன்சடை
கோணற் பிறையன் குழகன் கோலக்கா
மாண பாடி மறைவல் லானையே
பேண பறையும் பிணிக ளானவே
தழுக்கொள் பாவ தளர வேண்டுவீர்
மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்
குழுக்கொள் பூத படையான் கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே
மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தைதன்
குயிலார் சோலை கோல காவையே
பயிலா நிற்க பறையும் பாவமே
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோல காவுளெம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே
நிழலார் சோலை நீல வண்டினங்
குழலார் பண்செய் கோல காவுளான்
கழலால் மொய்த்த பாதங் கைகளாற்
தொழலார் பக்கல் துயர மில்லையே
எறியார் கடல்சூழ் இலங்கை கோன்றனை
முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்
குறியார் பண்செய் கோல காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே
நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்
ஆற்ற லணைமே லவனுங் காண்கிலா
கூற்ற முதைத்த குழகன் கோலக்கா
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே
பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்
உற்ற துவர்தோ யுருவி லாளருங்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்கா
பற்றி பரவ பறையும் பாவமே
நலங்கொள் காழி ஞான சம்பந்தன்
குலங்கொள் கோல காவு ளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சத்தபுரீசர் தேவியார் ஓசைகொடுத்தநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



சீகாழி

பண் தக்கராகம்
பூவார் கொன்றை புரிபுன் சடையீசா
காவா யெனநின் றேத்துங் காழியார்
மேவார் புரம்மூன் றட்டா ரவர்போலாம்
பாவா ரின்சொற் பயிலும் பரமரே
எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டி
கந்த மாலை கொடுசேர் காழியார்
வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே
தேனை வென்ற மொழியா ளொருபாகங்
கான மான்கை கொண்ட காழியார்
வான மோங்கு கோயி லவர்போலாம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே
மாணா வென்றி காலன் மடியவே
காணா மாணி களித்த காழியார்
நாணார் வாளி தொட்டா ரவர்போலாம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே
மாடே ஓதம் எறிய வயற்செந்நெல்
காடே றிச்சங் கீனுங் காழியார்
வாடா மலராள் பங்க ரவர்போலாம்
ஏடார் புரமூன் றெரித்த இறைவரே
கொங்கு செருந்தி கொன்றை மலர்கூட
கங்கை புனைந்த சடையார் காழியார்
அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாஞ்
செங்கண் அரக்கர் புரத்தை யெரித்தாரே
கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங்
கல்ல வடத்தை யுகப்பார் காழியார்
அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம்
பல்ல விடத்தும் பயிலும் பரமரே
எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றி
கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம்
பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே
ஆற்ற லுடைய அரியும் பிரமனு
தோற்றங் காணா வென்றி காழியார்
ஏற்ற மேறங் கேறு மவர்போலாங்
கூற்ற மறு குமைத்த குழகரே
பெருக்க பிதற்றுஞ் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம்
அருப்பின் முலையாள் பங்க தையரே
காரார் வயல்சூழ் காழி கோன்றனை
சீரார் ஞான சம்ப தன்சொன்ன
பாரார் புகழ பரவ வல்லவர்
ஏரார் வான தினிதா இருப்பரே

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருச்செம்பொன்பள்ளி

பண் தக்கராகம்
மருவார் குழலி மாதோர் பாகமா
திருவார் செம்பொன் பள்ளி மேவிய
கருவார் கண்ட தீசன் கழல்களை
மருவா தவர்மேல் மன்னும் பாவமே
வாரார் கொங்கை மாதோர் பாகமா
சீரார் செம்பொன் பள்ளி மேவிய
ஏரார் புரிபுன் சடையெம் ஈசனை
சேரா தவர்மேற் சேரும் வினைகளே
வரையார் சந்தோ டகிலும் வருபொன்னி
திரையார் செம்பொன் பள்ளி மேவிய
நரையார் விடையொன் றூரும் நம்பனை
உரையா தவர்மே லொழியா வூனமே
மழுவா ளேந்தி மாதோர் பாகமா
செழுவார் செம்பொன் பள்ளி மேவிய
எழிலார் புரிபுன் சடையெம் மிறைவனை
தொழுவார் தம்மேல் துயர மில்லையே
மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த
சிலையார் செம்பொன் பள்ளி யானையே
இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே
அறையார் புனலோ டகிலும் வருபொன்னி
சிறையார் செம்பொன் பள்ளி மேவிய
கறையார் கண்ட தீசன் கழல்களை
நிறையால் வணங்க நில்லா வினைகளே
பையார் அரவே ரல்கு லாளொடுஞ்
செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
கையார் சூல மேந்து கடவுளை
மெய்யால் வணங்க மேவா வினைகளே
வானார் திங்கள் வளர்புன் சடைவைத்து
தேனார் செம்பொன் பள்ளி மேவிய
ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலே அடைந்து வாழ்மினே
காரார் வண்ணன் கனகம் அனையானு
தேரார் செம்பொன் பள்ளி மேவிய
நீரார் நிமிர்புன் சடையெ நிமலனை
ஓரா தவர்மே லொழியா வூனமே
மாசா ருடம்பர் மண்டை தேரரும்
பேசா வண்ணம் பேசி திரியவே
தேசார் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா என்ன நில்லா இடர்களே
நறவார் புகலி ஞான சம்பந்தன்
செறுவார் செம்பொன் பள்ளி மேயானை
பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்
உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சொர்னபுரீசர் தேவியார் சுகந்தவனநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருப்புத்தூர்

பண் தக்கராகம்
வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலை
திங்க ளோடு திளைக்கு திருப்புத்தூர
கங்கை தங்கு முடியா ரவர்போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே
வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலை
தேனும் வண்டு திளைக்கு திருப்புத்தூர்
ஊனம் இன்றி யுறைவா ரவர்போலும்
ஏன முள்ளும் எயிறும் புனைவாரே
பாங்கு நல்ல வரிவண் டிசைபாட
தேங்கொள் கொன்றை திளைக்கு திருப்புத்தூர்
ஓங்கு கோயில் உறைவா ரவர்போலு
தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே
நாற விண்ட நறுமா மலர்கவ்வி
தேறல் வண்டு திளைக்கு திருப்புத்தூர்
ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் இறையாரே
இசை விளங்கும் எழில்சூழ தியல்பாக
திசை விளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
பசை விளங்க படித்தா ரவர்போலும்
வசை விளங்கும் வடிசேர் நுதலாரே
வெண்ணி றத்த விரையோ டலருந்தி
தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்
ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும்
வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே
நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்குஞ்
செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர
தையல் பாகம் மகிழ்ந்தா ரவர்போலும்
மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே
கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலை
திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர்
இருக்க வல்ல இறைவ ரவர்போலும்
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே
மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறு திளைக்கு திருப்புத்தூர
பெருகி வாழும் பெருமா னவன்போலும்
பிரமன் மாலும் அறியா பெரியோனே
கூறை போர்க்கு தொழிலா ரமண்கூறல்
தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்
ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் இறையாரே
நல்ல கேள்வி ஞான சம்பந்தன்
செல்வர் சேடர் உறையு திருப்புத்தூர
சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
அல்லல் தீரும் அவலம் அடையாவே

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் புத்தூரீசர் தேவியார் சிவகாமியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருப்புன்கூர்

பண் தக்கராகம்
முந்தி நின்ற வினைக ளவைபோக
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்தம் இல்லா அடிக ளவர்போலுங்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே
மூவ ராய முதல்வர் முறையாலே
தேவ ரெல்லாம் வணங்கு திருப்புன்கூர்
ஆவ ரென்னும் அடிக ளவர்போலும்
ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே
பங்க யங்கள் மலரும் பழனத்து
செங்க யல்கள் திளைக்கு திருப்புன்கூர
கங்கை தங்கு சடையா ரவர்போலும்
எங்கள் உச்சி உறையும் மிறையாரே
கரையு லாவு கதிர்மா மணிமுத்தம்
திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்
உரையின் நல்ல பெருமா னவர்போலும்
விரையின் நல்ல மலர்ச்சே வடியாரே
பவழ வண்ண பரிசார் திருமேனி
திகழும் வண்ணம் உறையு திருப்புன்கூர்
அழக ரென்னும் அடிக ளவர்போலும்
புகழ நின்ற புரிபுன் சடையாரே
தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல்
திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர
பொருந்தி நின்ற அடிக ளவர்போலும்
விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே
பாரும் விண்ணும் பரவி தொழுதேத்தும்
தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
ஆர நின்ற அடிக ளவர்போலுங்
கூர நின்ற எயில்மூன் றெரித்தாரே
மலையத னாருடை யமதில் மூன்றுஞ்
சிலையத னாலெரி தார்திரு புன்கூர
தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை
மலையத னாலடர துமகிழ தாரே
நாட வல்ல மலரான் மாலுமா
தேட நின்றா ருறையு திருப்புன்கூர்
ஆட வல்ல அடிக ளவர்போலும்
பாட லாடல் பயிலும் பரமரே
குண்டு முற்றி கூறை யின்றியே
பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல்
வண்டு பாட மலரார் திருப்புன்கூர
கண்டு தொழுமின் கபாலி வேடமே
மாட மல்கு மதில்சூழ் காழிமன்
சேடர் செல்வ ருறையு திருப்புன்கூர்
நாட வல்ல ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்மினே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சிவலோகநாதர் தேவியார் சொக்கநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருச்சோற்றுத்துறை

பண் தக்கராகம்
செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்
றப்பர் சோற்று துறைசென் றடைவோமே
பாலும் நெய்யு தயிரும் பயின்றாடி
தோலும் நூலு துதைந்த வரைமார்பர்
மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
ஆலுஞ் சோற்று துறைசென் றடைவோமே
செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
தைய லாளொர் பாக மாயஎம்
ஐயர் சோற்று துறைசென் றடைவோமே
பிணிகொ ளாக்கை யொழி பிறப்புளீர்
துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்
மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
அணிகொள் சோற்று துறைசென் றடைவோமே
பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து
மறையும் ஓதி மயானம் இடமாக
உறையுஞ் செல்வம் உடையார் காவிரி
அறையும் சோற்று துறைசென் றடைவோமே
துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசி புறங்கா டரங்காக
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகள் சோற்று துறைசென் றடைவோமே
சாடி காலன் மாள தலைமாலை
சூடி மிக்கு சுவண்டாய் வருவார்தாம்
பாடி ஆடி பரவு வாருள்ள
தாடி சோற்று துறைசென் றடைவோமே
பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னி
கண்ணோர் பாகங் கலந்த நுதலினார்
எண்ணா தரக்கன் எடுக்க வூன்றிய
அண்ணல் சோற்று துறைசென் றடைவோமே
தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே
அழலா யோங்கி அருள்கள் செய்தவன்
விழவார் மறுகில் விதியால் மிக்கஎம்
எழிலார் சோற்று துறைசென் றடைவோமே
கோது சாற்றி திரிவார் அமண்குண்டர்
ஓதும் ஓத்தை யுணரா தெழுநெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்று துறைசென் றடைவோமே
போதுசாற்றி என்றும் பாடம்
அந்தண் சோற்று துறையெம் மாதியை
சிந்தை செய்ம்மின் அடியீ ராயினீர்
சந்தம் பரவு ஞான சம்பந்தன்
வந்த வாறே புனைதல் வழிபாடே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் தொலையாச்செல்வர் தேவியார் ஒப்பிலாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருநறையூர்ச்சித்தீச்சரம்

பண் தக்கராகம்
ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்
சீரு லாவு மறையோர் நறையூரிற்
சேருஞ் சித்தீ சரஞ்சென் றடைநெஞ்சே
காடு நாடுங் கலக்க பலிநண்ணி
ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ
வீடு மாக மறையோர் நறையூரில்
நீடுஞ் சித்தீ சரமே நினைநெஞ்சே
கல்வி யாளர் கனக மழல்மேனி
புல்கு கங்கை புரிபுன் சடையானூர்
மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரிற்
செல்வர் சித்தீ சரஞ்சென் றடைநெஞ்சே
நீட வல்ல நிமிர்புன் சடைதாழ
ஆட வல்ல அடிக ளிடமாகும்
பாடல் வண்டு பயிலும் நறையூரிற்
சேடர் சித்தீ சரமே தெளிநெஞ்சே
உம்ப ராலும் உலகின் னவராலும்
தம்பெ ருமைய ளத்தற் கரியானூர்
நண்பு லாவு மறையோர் நறையூரிற்
செம்பொன் சித்தீ சரமே தெளிநெஞ்சே
கூரு லாவு படையான் விடையேறி
போரு லாவு மழுவான் அனலாடி
பேரு லாவு பெருமான் நறையூரிற்
சேருஞ் சித்தீ சரமே யிடமாமே
அன்றி நின்ற அவுணர் புரமெய்த
வென்றி வில்லி விமலன் விரும்புமூர்
மன்றில் வாச மணமார் நறையூரிற்
சென்று சித்தீ சரமே தெளிநெஞ்சே
அன்றி நின்ற பகைத்து
அரக்கன் ஆண்மை யழிய வரைதன்னால்
நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர்
பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரிற்
திருக்கொள் சித்தீ சரமே தெளிநெஞ்சே
ஆழி யானும் அலரின் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்துமேல்
சூழு நேட எரியாம் ஒருவன்சீர்
நீழல் சித்தீ சரமே நினைநெஞ்சே
மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார்
கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல்
உய்ய வேண்டில் இறைவன் நறையூரிற்
செய்யுஞ் சித்தீ சரமே தவமாமே
மெய்த்து லாவு மறையோர் நறையூரிற்
சித்தன் சித்தீ சரத்தை உயர்காழி
அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன்
பத்தும் பாட பறையும் பாவமே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சித்தநாதேசர் தேவியார் அழகாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருப்புகலி

பண் தக்கராகம்
விதியாய் விளைவாய் விளைவின் பயனாகி
கொதியா வருகூற் றையுதை தவர்சேரும்
பதியா வதுபங் கயநின் றலரத்தேன்
பொதியார் பொழில்சூழ் புகலி நகர்தானே
ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன்
மின்னாரிடை யாளொடுங் கூடிய வேட
தன்னாலுறை வாவது தண்கடல் சூழ்ந்த
பொன்னார் வயற்பூம் புகலி நகர்தானே
வலியின்மதி செஞ்சடை வைத்தம ணாளன்
புலியின்னதள் கொண்டரை யார்த்த புனிதன்
மலியும்பதி மாமறை யோர்நிறை தீண்டி
பொலியும்புனற் பூம்புக லிந்நகர் தானே
கயலார்தடங் கண்ணி யொடும்மெரு தேறி
அயலார்கடை யிற்பலி கொண்ட அழகன்
இயலாலுறை யும்மிடம் எண்டிசை யோர்க்கும்
புயலார்கடற் பூம்புக லிந்நகர் தானே
காதார்கன பொற்குழை தோட திலங்க
தாதார்மலர் தண்சடை யேற முடித்து
நாதான்உறை யும்மிட மாவது நாளும்
போதார்பொழிற் பூம்புக லிந்நகர் தானே
நாதன் நாதான் என நீண்டது
வலமார்படை மான்மழு ஏந்திய மைந்தன்
கலமார்கடல் நஞ்சமு துண்ட கருத்தன்
குலமார்பதி கொன்றைகள் பொன்சொரி யத்தேன்
புலமார்வயற் பூம்புக லிந்நகர் தானே
கறுத்தான்கன லால்மதில் மூன்றையும் வேவ
செறுத்தான்திக ழுங்கடல் நஞ்சமு தாக
அறுத்தான்அயன் தன்சிரம் ஐந்திலும் ஒன்றை
பொறுத்தானிடம் பூம்புக லிந்நகர் தானே
தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ் சொல்ல
எழிலார்வரை யாலன் றரக்கனை செற்ற
கழலானுறை யும்மிடங் கண்டல்கள் மிண்டி
பொழிலால்மலி பூம்புக லிந்நகர் தானே
மாண்டார்சுட லைப்பொடி பூசி மயான
தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி
நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம்
பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே
உடையார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தை
கிடையாதவன் றன்னகர் நன்மலி பூகம்
புடையார்தரு பூம்புக லிந்நகர் தானே
இரைக்கும்புனல் செஞ்சடை வைத்தஎம் மான்றன்
புரைக்கும்பொழில் பூம்புக லிந்நகர் தன்மேல்
உரைக்குந்தமிழ் ஞானசம் பந்தனொண் மாலை
வரைக்குந்தொழில் வல்லவர் நல்லவர் தாமே

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருக்குரங்கணின்முட்டம்

பண் தக்கராகம்
விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங்
கழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயுங்
கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணின் முட்ட
தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே
விடைசேர்கொடி அண்ணல் விளங்குயர் மாட
கடைசேர்கரு மென்குள தோங்கிய காட்டில்
குடையார்புனல் மல்கு குரங்கணின் முட்டம்
உடையானெனை யாளுடை யெந்தை பிரானே
சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான்
காலன்றனை ஆருயிர் வவ்விய காலன்
கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்ட
தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே
வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில்
தோடார்குழை யான்நல பாலன நோக்கி
கூடாதன செய்த குரங்கணின் முட்டம்
ஆடாவரு வாரவ ரன்புடை யாரே
இறையார்வளை யாளையொர் பாக தடக்கி
கறையார்மிடற் றான்கரி கீறிய கையான்
குறையார்மதி சூடி குரங்கணின் முட்ட
துறைவானெமை யாளுடை யொண்சுட ரானே
பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோங்
கலவம்மயில் காமுறு பேடையொ டாடி
குலவும்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டம்
நிலவும்பெரு மானடி நித்தல் நினைந்தே
மாடார்மலர கொன்றை வளர்சடை வைத்து
தோடார்குழை தானொரு காதில் இலங
கூடார்மதி லெய்து குரங்கணின் முட்ட
தாடாரர வம்மரை யார்த்தமர் வானே
மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை
உய்யாவகை யாலடர தின்னருள் செய்த
கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்
கையால்தொழு வார்வினை காண்ட லரிதே
வெறியார்மலர தாமரை யானொடு மாலும்
அறியாதசை தேத்தவோர் ஆரழ லாகுங்
குறியால்நிமிர தான்றன் குரங்கணின் முட்டம்
நெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே
கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும்
வழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல்
குழுமின்சடை யண்ணல் குரங்கணின் முட்ட
தெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே
கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன்
கொல்லார்மழு வேந்தி குரங்கணில் முட்டஞ்
சொல்லார்தமிழ் மாலை செவிக்கினி தாக
வல்லார்க்கெளி தாம்பிற வாவகை வீடே

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வாலீசுவரர் தேவியார் இறையார்வளையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருவிடைமருதூர்

பண் தக்கராகம்
ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை
காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்
வாடாமுலை மங்கையு தானும் மகிழ
தீடாவுறை கின்ற இடைமரு தீதோ
தடம்கொண்டதொர் தாமரை பொன்முடி தன்மேல்
குடங்கொண்டடி யார்குளிர் நீர்சு தாட்ட
படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன்
இடங்கொண்டிரு தான்றன் இடைமரு தீதோ
வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி
அங்கோல்வளை யாளையொர் பாகம் அமர்ந்து
பொங்காவரு காவிரி கோல கரைமேல்
எங்கோ னுறைகின்ற இடைமரு தீதோ
அந்தம்மறி யாத அருங்கல முந்தி
கந்தங்கமழ் காவிரி கோல கரைமேல்
வெந்தபொடி பூசிய வேத முதல்வன்
எந்தையுறை கின்ற இடைமரு தீதோ
வாசங்கமழ் மாமலர சோலையில் வண்டே
தேசம்புகு தீண்டியொர் செம்மை யுடைத்தாய்
பூசம்புகு தாடி பொலிந்தழ காய
ஈசனுறை கின்ற இடைமரு தீதோ
வன்புற்றிள நாகம் அசை தழகாக
என்பிற்பல மாலையும் பூண்டெரு தேறி
அன்பிற்பிரி யாதவ ளோடு முடனாய்
இன்புற்றிரு தான்றன் இடைமரு தீதோ
தேக்குந்திமி லும்பல வுஞ்சு துந்தி
போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால்
ஆர்க்குந்திரை காவிரி கோல கரைமேல்
ஏற்கஇரு தான்றன் இடைமரு தீதோ
பூவார்குழ லாரகில் கொண்டு புகைப்ப
ஓவாதடி யாரடி யுள்குளிர தேத்த
ஆவாஅர கன்றனை ஆற்ற லழித்த
ஏவார்சிலை யான்றன் இடைமரு தீதோ
முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன்
நற்றாமரை யானொடு மால தேத்த
பொற்றோளியு தானும் பொலிந்தழ காக
எற்றேயுறை கின்ற இடைமரு தீதோ
சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற
நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த
வெறியாவரு காவிரி கோல கரைமேல்
எறியார்மழு வாளன் இடைமரு தீதோ
கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன்
எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல்
பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள்
விண்ணோருல கத்தினில் வீற்றிரு பாரே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மருதீசர் தேவியார் நலமுலைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திரு அன்பிலாலந்துறை

பண் தக்கராகம்
கணைநீடெரி மாலர வம்வரை வில்லா
இணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணைமாமயி லுங்குயில் சேர்மட அன்னம்
அணையும்பொழி லன்பி லால துறையாரே
சடையார்சது ரன்முதி ராமதி சூடி
விடையார்கொடி யொன்றுடை யெந்தை விமலன்
கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை
அடையார்பொழில் அன்பி லாலந்துறை யாரே
ஊரும்மர வஞ்சடை மேலுற வைத்து
பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர்
நீருண்கய லும்வயல் வாளை வராலோ
டாரும்புனல் அன்பி லாலந்துறை யாரே
பிறையும்மர வும்முற வைத்த முடிமேல்
நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார்
மறையும்பல வேதிய ரோத ஒலிசென்
றறையும்புனல் அன்பி லாலந்துறை யாரே
நீடும்புனற் கங்கையு தங்க முடிமேல்
கூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார்
மாடும்முழ வம்மதி ரம்மட மாதர்
ஆடும்பதி அன்பி லாலந்துறை யாரே
நீறார்திரு மேனிய ரூனமி லார்பால்
ஊறார்சுவை யாகிய உம்பர் பெருமான்
வேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி
ஆறார்வயல் அன்பி லாலந்துறை யாரே
செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட
படியார்பர மன்பர மேட்டிதன் சீரை
கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும்
அடியார்தொழும் அன்பி லாலந்துறை யாரே
விடத்தார் திகழும்மிட றன்நட மாடி
படத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி
கொடித்தேரிலங் கைக்குல கோன்வரை யார
அடர்த்தாரருள் அன்பி லாலந்துறை யாரே
வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும்
பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை
சுணங்குமுக தம்முலை யாளொரு பாகம்
அணங்குந்திக ழன்பி லாலந்துறை யாரே
தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல்
வெறியார்மலர் கொண்டடி வீழு மவரை
அறிவாரவர் அன்பி லாலந்துறை யாரே
அரவார்புனல் அன்பி லாலந்துறை தன்மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன்
பரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய்
விரவாகுவர் வானிடை வீடெளி தாமே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
அன்பில் என வழங்கப்பெறும்
சுவாமிபெயர் சத்திவாகீசர் தேவியார் சவுந்தரநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



சீகாழி

பண் தக்கராகம்
அடலே றமருங் கொடியண்ணல்
மடலார் குழலா ளொடுமன்னுங்
கடலார் புடைசூழ் தருகாழி
தொடர்வா ரவர்தூ நெறியாரே
திரையார் புனல்சூ டியசெல்வன்
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர்தூ வுமினின்றே
இடியார் குரலே றுடையெந்தை
துடியா ரிடையா ளொடுதுன்னுங்
கடியார் பொழில்சூழ் தருகாழி
அடியார் அறியார் அவலம்மே
ஒளியார் விடமுண் டவொருவன்
அளியார் குழல்மங் கையொடன்பாய்
களியார் பொழில்சூழ் தருகாழி
எளிதாம் அதுகண் டவரின்பே
பனியார் மலரார் தருபாதன்
முனிதா னுமையோ டுமுயங்கி
கனியார் பொழில்சூழ் தருகாழி
இனிதாம் அதுகண் டவரீடே
கொலையார் தருகூற் றமுதைத்து
மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
கலையார் தொழுதே தியகாழி
தலையால் தொழுவார் தலையாரே
திருவார் சிலையால் எயிலெய்து
உருவார் உமையோ டுடனானான்
கருவார் பொழில்சூழ் தருகாழி
மருவா தவர்வான் மருவாரே
அரக்கன் வலியொல் கஅடர்த்து
வரைக்கு மகளோ டுமகிழ்ந்தான்
சுரக்கும் புனல்சூழ் தருகாழி
நிரக்கும் மலர்தூ வுநினைந்தே
இருவர கெரியா கிநிமிர்ந்தான்
உருவிற் பெரியா ளொடுசேருங்
கருநற் பரவை கமழ்காழி
மருவ பிரியும் வினைமாய்ந்தே
சமண்சா கியர்தாம் அலர்தூற்ற
அமைந்தான் உமையோ டுடனன்பா
கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே
நலமா கியஞான சம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையா கநினை தவர்பாடல்
வலரா னவர்வான் அடைவாரே

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருவீழிமிழலை

பண் தக்கராகம்
அரையார் விரிகோ வணஆடை
நரையார் விடையூர் திநயந்தான்
விரையார் பொழில்வீ ழிம்மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே
புனைதல் புரிபுன் சடைதன்மேல்
கனைதல் லொருகங் கைகரந்தான்
வினையில் லவர்வீ ழிம்மிழலை
நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே
அழவல் லவரா டியும்பாடி
எழவல் லவரெ தையடிமேல்
விழவல் லவர்வீ ழிம்மிழலை
தொழவல் லவர்நல் லவர்தொண்டே
உரவம் புரிபுன் சடைதன்மேல்
அரவம் மரையார தஅழகன்
விரவும் பொழில்வீ ழிம்மிழலை
பரவும் மடியார் அடியாரே
கரிதா கியநஞ் சணிகண்டன்
வரிதா கியவண் டறைகொன்றை
விரிதார் பொழில்வீ ழிம்மிழலை
உரிதா நினைவார் உயர்வாரே
சடையார் பிறையான் சரிபூத
படையான் கொடிமே லதொர்பைங்கண்
விடையான் உறைவீ ழிம்மிழலை
அடைவார் அடியார் அவர்தாமே
செறியார் கழலுஞ் சிலம்பார்க்க
நெறியார் குழலா ளொடுநின்றான்
வெறியார் பொழில்வீ ழிம்மிழலை
அறிவார் அவலம் அறியாரே
உளையா வலியொல் கஅரக்கன்
வளையா விரலூன் றியமைந்தன்
விளையார் வயல்வீ ழிம்மிழலை
அளையா வருவா ரடியாரே
மருள்செய் திருவர் மயலாக
அருள்செய் தவனார் அழலாகி
வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை
தெருள்செய் தவர்தீ வினைதேய்வே
துளங்கு நெறியா ரவர்தொன்மை
வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை
விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
உளங்கொள் பவர்தம் வினையோய்வே
நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன்
குளிரார் சடையான் அடிகூற
மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை
கிளர்பா டல்வல்லார கிலைகேடே

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திரு ஐயாறு

பண் தக்கராகம்
கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோ
டலையார் புனல்சே ருமையாறே
மதியொன் றியகொன் றைவடத்தன்
மதியொன் றவுதை தவர்வாழ்வும்
மதியின் னொடுசேர் கொடிமாடம்
மதியம் பயில்கின் றவையாறே
கொக்கின் னிறகின் னொடுவன்னி
புக்க சடையார கிடமாகு
திக்கின் னிசைதே வர்வணங்கும்
அக்கின் னரையா ரதையாறே
சிறைகொண் டபுரம் மவைசிந்த
கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
மறைகொண் டநல்வா னவர்தம்மில்
அறையும் மொலிசே ருமையாறே
உமையா ளொருபா கமதாக
சமைவார் அவர்சார் விடமாகும்
அமையா ருடல்சோர் தரமுத்தம்
அமையா வரு தணையாறே
தலையின் தொடைமா லையணிந்து
கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
நிலைகொண் டமன தவர்நித்தம்
மலர்கொண் டுவணங் குமையாறே
வரமொன் றியமா மலரோன்றன்
சிரமொன் றையறு தவர்சேர்வாம்
வரைநின் றிழிவார் தருபொன்னி
அரவங் கொடுசே ருமையாறே
வரையொன் றதெடு தஅரக்கன்
சிரமங் கநெரி தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னி
திரைதன் னொடுசே ருமையாறே
சங கயனும் மறியாமை
பொங்குஞ் சுடரா னவர்கோயில்
கொங்கிற் பொலியும் புனல்கொண்டு
அங்கி கெதிர்கா டுமையாறே
சங்கத்தயனும் என்றும் பாடம்
துவரா டையர்தோ லுடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணை தணையாறே
கலையார் கலிக்கா ழியர்மன்னன்
நலமார் தருஞான சம்பந்தன்
அலையார் புனல்சூ ழுமையாற்றை
சொலுமா லைவல்லார் துயர்வீடே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் செம்பொன்சோதீசுரர் தேவியார் அறம்வளர்த்தநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருப்பனையூர்

பண் தக்கராகம்
அரவ சடைமேல் மதிமத்தம்
விரவி பொலிகின் றவனூராம்
நிரவி பலதொண் டர்கள்நாளும்
பரவி பொலியும் பனையூரே
எண்ணொன் றிநினை தவர்தம்பால்
உண்ணின் றுமகிழ தவனூராம்
கண்ணின் றெழுசோ லையில்வண்டு
பண்ணின் றொலிசெய் பனையூரே
அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
மலரும் பிறையொன் றுடையானூர்
சிலரென் றுமிரு தடிபேண
பலரும் பரவும் பனையூரே
இடியார் கடல்நஞ் சமுதுண்டு
பொடியா டியமே னியினானூர்
அடியார் தொழமன் னவரேத்த
படியார் பணியும் பனையூரே
அறையார் கழல்மே லரவாட
இறையார் பலிதேர தவனூராம்
பொறையார் மிகுசீர் விழமல்க
பறையா ரொலிசெய் பனையூரே
அணியார் தொழவல் லவரேத்த
மணியார் மிடறொன் றுடையானூர்
தணியார் மலர்கொண் டிருபோதும்
பணிவார் பயிலும் பனையூரே
அடையா தவர்மூ வெயில்சீறும்
விடையான் விறலார் கரியின்தோல்
உடையா னவனெண் பலபூத
படையா னவனூர் பனையூரே
உடையா னவனொண் பலபூத என்றும் பாடம்
இலகும் முடிப துடையானை
அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல்
உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
பலகண் டவனூர் பனையூரே
வரமுன் னிமகிழ தெழுவீர்காள்
சிரமுன் னடிதா ழவணங்கும்
பிரமன் னொடுமா லறியாத
பரமன் னுறையும் பனையூரே
அழிவல் லமண ரொடுதேரர்
மொழிவல் லனசொல் லியபோதும்
இழிவில் லதொர்செம் மையினானூர்
பழியில் லவர்சேர் பனையூரே
அழிவில் லமணஃ தொடுதேரர் என்றும் பாடம்
பாரார் விடையான் பனையூர்மேல்
சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்
ஆரா தசொன்மா லைகள்பத்தும்
ஊரூர் நினைவா ருயர்வாரே
விடையார் என்றும் பாடம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சவுந்தரேசர் தேவியார் பெரியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருமயிலாடுதுறை

பண் தக்கராகம்
கரவின் றிநன்மா மலர்கொண்டே
இரவும் பகலு தொழுவார்கள்
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
வரமா மயிலா டுதுறையே
உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே
ஊன திருள்நீங் கிடவேண்டில்
ஞான பொருள்கொண் டடிபேணு
தேனொ தினியா னமருஞ்சேர்
வானம் மயிலா டுதுறையே
அஞ்சொண் புலனும் மவைசெற்ற
மஞ்சன் மயிலா டுதுறையை
நெஞ்சொன் றிநினை தெழுவார்மேல்
துஞ்சும் பிணியா யினதானே
தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணியார தவரு கருளென்றும்
பிணியா யினதீர தருள்செய்யும்
மணியான் மயிலா டுதுறையே
கணியார் என்றும் பாடம்
தொண்ட ரிசைபா டியுங்கூடி
கண்டு துதிசெய் பவனூராம்
பண்டும் பலவே தியரோத
வண்டார் மயிலா டுதுறையே
அணங்கோ டொருபா கமமர்ந்து
இணங்கி யருள்செய் தவனூராம்
நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
வணங்கும் மயிலா டுதுறையே
சிரங்கை யினிலே தியிரந்த
பரங்கொள் பரமே டிவரையால்
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
வரங்கொள் மயிலா டுதுறையே
ஞால தைநுகர தவன்றானுங்
கோல தயனும் மறியாத
சீல தவனூர் சிலர்கூடி
மாலை தீர்மயிலா டுதுறையே
நின்றுண் சமணும் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மையுயர்ந்த
வென்றி யருளா னவனூராம்
மன்றன் மயிலா டுதுறையே
நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலா லுரைசெய் தனபத்தும்
உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மாயூரநாதர் தேவியார் அஞ்சநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருவேட்களம்

பண் தக்கராகம்
அந்தமும் ஆதியு மாகிய வண்ணல்
ஆரழ லங்கை அமர்ந்திலங்க
மந்த முழவம் இயம்ப
மலைமகள் காண நின்றாடி
சந்த மிலங்கு நகுதலை கங்கை
தண்மதியம் மயலே ததும்ப
வெந்தவெண் ணீறு மெய்பூசும்
வேட்கள நன்னக ராரே
சடைதனை தாழ்தலும் ஏற முடித்து
சங்கவெண் டோ டு சரிந்திலங்க
புடைதனிற் பாரிடஞ் சூழ
போதரு மாறிவர் போல்வார்
உடைதனில் நால்விரற் கோவண ஆடை
உண்பது மூரிடு பிச்சைவெள்ளை
விடைதனை ஊர்தி நயந்தார்
வேட்கள நன்னக ராரே
பூதமும் பல்கண மும்புடை சூழ
பூமியும் விண்ணும் உடன்பொருந்த
சீதமும் வெம்மையு மாகி
சீரொடு நின்றவெஞ் செல்வர்
ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை
உள்ளங் கலந்திசை யாலெழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா
வேட்கள நன்னக ராரே
அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம்
அமையவெண் கோவண தோடசைத்து
வரைபுல்கு மார்பி லோராமை
வாங்கி யணி தவர்தா
திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோத
தேனலங் கானலில் வண்டுபண்செய்ய
விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த
வேட்கள நன்னக ராரே
பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல்
பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த
பெண்ணுறு மார்பினர் பேணார்
மும்மதில் எய்த பெருமான்
கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்க
கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும்
வெண்ணிற மால்விடை அண்ணல்
வேட்கள நன்னக ராரே
கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற்
கண்கவ ரைங்கணை யோனுடலம்
பொறிவளர் ஆரழ லுண்ண
பொங்கிய பூத புராணர்
மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர்
மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை
வெறிவளர் கொன்றை தாரார்
வேட்கள நன்னக ராரே
மண்பொடி கொண்டெரி தோர் சுடலை
மாமலை வேந்தன் மகள்மகிழ
நுண்பொடி சேர நின்றாடி
நொய்யன செய்யல் உகந்தார்
கண்பொடி வெண்டலை யோடுகை யேந்தி
காலனை காலாற் கடிந்துகந்தார்
வெண்பொடி சேர்திரு மார்பர்
வேட்கள நன்னக ராரே
ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார்
அமுத மமரர கருளி
சூழ்தரு பாம்பரை யார்த்து
சூலமோ டொண்மழு வேந்தி
தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கி
தண்மதி யம்மய லேததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார்
வேட்கள நன்னக ராரே
திருவொளி காணிய பேதுறு கின்ற
திசைமுக னுந்திசை மேலளந்த
கருவரை யேந்திய மாலுங்
கைதொழ நின்றது மல்லால்
அருவரை யொல்க எடுத்த வரக்கன்
ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த
வெருவுற வூன்றிய பெம்மான்
வேட்கள நன்னக ராரே
அத்தமண் டோ ய்துவ ராரமண் குண்டர்
யாதுமல் லாவுரை யேயுரைத்து
பொய்த்தவம் பேசுவ தல்லால்
புறனுரை யாதொன்றுங் கொள்ளேல்
முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச
மூரிவல் லானையின் ஈருரி போர்த்த
வித்தகர் வேத முதல்வர்
வேட்கள நன்னக ராரே
விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி
வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க
நண்ணிய சீர்வளர் காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
பெண்ணின்நல் லாளொரு பாகம மர்ந்து
பேணிய வேட்கள மேல்மொழிந்த
பண்ணியல் பாடல் வல்லார்கள்
பழியொடு பாவமி லாரே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பாசுபதேசுவரர் தேவியார் நல்லநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருவாழ்கொளிபுத்தூர்

பண் தக்கராகம்
திருவாளொளிபுற்றூர் என்றும் பாடம்

பொடியுடை மார்பினர் போர்விடை யேறி
பூதகணம் புடை சூழ
கொடியுடை யூர்திரி தையங்
கொண்டு பலபல கூறி
வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர
கடிகமழ் மாமல ரிட்டு
கறைமிடற் றானடி காண்போம்
அரைகெழு கோவண ஆடையின் மேலோர்
ஆடரவம் அசை தையம்
புரைகெழு வெண்டலை யேந்தி
போர்விடை யேறி புகழ
வரைகெழு மங்கைய தாகமொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரைகெழு மாமலர் தூவி
விரிசடை யானடி சேர்வோம்
பூண்நெடு நாகம் அசைத்தன லாடி
புன்றலை யங்கையி லேந்தி
ஊணிடு பிச்சையூ ரையம்
உண்டி யென்று பலகூறி
வாணெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
தாணெடு மாமல ரிட்டு
தலைவன தாள்நிழல் சார்வோம்
தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை
தாழ்சடை மேலவை சூடி
ஊரிடு பிச்சை கொள்செல்வம்
உண்டி யென்று பலகூறி
வாரிடு மென்முலை மாதொரு பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர
காரிடு மாமலர் தூவி
கறைமிடற் றானடி காண்போம்
கனமலர கொன்றை அலங்கல் இலங
காதிலொர் வெண்குழை யோடு
புனமலர் மாலை புனைந்தூர்
புகுதி யென்றே பலகூறி
வனமுலை மாமலை மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
இனமல ரேய்ந்தன தூவி
எம்பெரு மானடி சேர்வோம்

அளைவளர் நாகம் அசைத்தன லாடி
அலர்மிசை அந்தணன் உச்சி
களைதலை யிற்பலி கொள்ளுங்
கருத்தனே கள்வனே யென்னா
வளைபொலி முன்கை மடந்தையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர
தளையவிழ் மாமலர் தூவி
தலைவன தாளிணை சார்வோம்
வளையொலி என்றும் பாடம்
அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து
வழிதலை யங்கையி லேந்தி
உடலிடு பிச்சை யோடைய
முண்டி யென்று பலகூறி
மடல்நெடு மாமலர கண்ணியொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர
தடமல ராயின தூவி
தலைவன தாள்நிழல் சார்வோம்
உயர்வரை யொல்க எடுத்த அரக்கன்
ஒளிர்கட கக்கை யடர்த்து
அயலிடு பிச்சை யோடையம்
ஆர்தலை யென்றடி போற்றி
வயல்விரி நீல நெடுங்கணி பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர
சயவிரி மாமலர் தூவி
தாழ்சடை யானடி சார்வோம்
கரியவன் நான்முகன் கைதொழு தேத்த
காணலுஞ் சாரலு மாகா
எரியுரு வாகி யூரையம்
இடுபலி யுண்ணி யென்றேத்தி
வரியர வல்குல் மடந்தையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரிமல ராயின தூவி
விகிர்தன சேவடி சேர்வோம்
குண்டம ணர்துவர கூறைகள் மெய்யில்
கொள்கை யினார் புறங்கூற
வெண்டலை யிற்பலி கொண்டல்
விரும்பினை யென்று விளம்பி
வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர
தொண்டர்கள் மாமலர் தூவ
தோன்றி நின்றான் அடிசேர்வோம்
கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங்
கரைபொரு காழிய மூதூர்
நல்லுயர் நான்மறை நாவின்
நற்றமிழ் ஞானசம் பந்தன்
வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்
வல்லவன் வாழ்கொளி புத்தூர
சொல்லிய பாடல்கள் வல்லார்
துயர்கெடு தல்எளி தாமே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மாணிக்கவண்ணவீசுரர் தேவியார் வண்டார்பூங்குழலம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருப்பாம்புரம்

பண் தக்கராகம்
சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர்
திரிபுர மெரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்
மான்மறி யேந்திய மைந்தர்
காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல்
கண்ணுதல் விண்ணவ ரேத்தும்
பாரணி திகழ்தரு நான்மறை யாளர்
பாம்புர நன்னக ராரே
கொக்கிற கோடு கூவிள மத்தங்
கொன்றையொ டெருக்கணி சடையர்
அக்கினொ டாமை பூண்டழ காக
அனலது ஆடுமெம் மடிகள்
மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும்
விண்ணவர் விரைமலர் தூவ
பக்கம்பல் பூதம் பாடிட வருவார்
பாம்புர நன்னக ராரே
துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர்
சூறைநல் லரவது சுற்றி
பின்னுவார் சடைகள் தாழவி டாடி
பித்தரா திரியுமெம் பெருமான்
மன்னுமா மலர்கள் தூவிட நாளும்
மாமலை யாட்டியு தாமும்
பன்னுநான் மறைகள் பாடிட வருவார்
பாம்புர நன்னக ராரே
துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லா
சுடர்விடு சோதியெம் பெருமான்
நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர்
நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்
மஞ்சுதோய் சோலை மாமயி லாட
மாடமா ளிகைதன்மே லேறி
பஞ்சுசேர் மெல்லடி பாவையர் பயிலும்
பாம்புர நன்னக ராரே
நதியத னயலே நகுதலை மாலை
நாண்மதி சடைமிசை யணிந்து
கதியது வா காளிமுன் காண
கானிடை நடஞ்செய்த கருத்தர்
விதியது வழுவா வேதியர் வேள்வி
செய்தவர் ஓத்தொலி ஓவா
பதியது வாக பாவையு தாமும்
பாம்புர நன்னக ராரே
ஓதிநன் குணர்வார குணர்வுடை யொருவர்
ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர்
மாதினை யிடமா வைத்தவெம் வள்ளல்
மான்மறி யேந்திய மைந்தர்
ஆதிநீ யருளென் றமரர்கள் பணிய
அலைகடல் கடையவன் றெழுந்த
பாதிவெண் பிறைசடை வைத்தவெம் பரமர்
பாம்புர நன்னக ராரே
மாலினு கன்று சக்கர மீந்து
மலரவற் கொருமுக மொழித்து
ஆலின்கீ ழறமோர் நால்வரு கருளி
அனலது ஆடுமெம் மடிகள்
காலனை காய்ந்து தங்கழ லடியாற்
காமனை பொடிபட நோக்கி
பாலனு கருள்கள் செய்தவெம் மடிகள்
பாம்புர நன்னக ராரே
விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க
மெல்லிய திருவிர லூன்றி
அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள்
அனலது ஆடுமெம் மண்ணல்
மடக்கொடி யவர்கள் வருபுன லாட
வந்திழி அரிசிலின் கரைமேற்
படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும்
பாம்புர நன்னக ராரே
கடிபடு கமல தயனொடு மாலுங்
காதலோ டடிமுடி தேட
செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யு
தீவணர் எம்முடை செல்வர்
முடியுடையமரர் முனிகண தவர்கள்
முறைமுறை யடிபணி தேத்த
படியது வாக பாவையு தாமும்
பாம்புர நன்னக ராரே
குண்டர்சா கியருங் குணமிலா தாருங்
குற்றுவி டுடுக்கையர் தாமுங்
கண்டவா றுரைத்து கால்நிமிர துண்ணுங்
கையர்தாம் உள்ளவா றறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
வாரணம் உரிசெய்து போர்த்தார்
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
பாம்புர நன்னக ராரே
பார்மலி தோங்கி பருமதில் சூழ்ந்த
பாம்புர நன்னக ராரை
கார்மலி தழகார் கழனிசூழ் மாட
கழுமல முதுபதி கவுணி
நார்மலி தோங்கும் நால்மறை ஞான
சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலி தழகார் செல்வம தோங்கி
சிவனடி நண்ணுவர் தாமே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது சுவாமிபெயர் பாம்புரேசர்
பாம்புரநாதர் என்றும் பாடம் தேவியார் வண்டமர்பூங்குழலம்மை
வண்டார்பூங்குழலி என்றும் பாடம்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருப்பேணுபெருந்துறை

பண் தக்கராகம்
பைம்மா நாகம் பன்மலர கொன்றை
பன்றிவெண் கொம்பொன்று பூண்டு
செம்மா தையம் பெய்கென்று சொல்லி
செய்தொழில் பேணியோர் செல்வர்
அம்மா னோக்கிய அந்தளிர் மேனி
அரிவையோர் பாக மமர்ந்த
பெம்மான் நல்கிய தொல்புக ழாளர்
பேணு பெருந்துறை யாரே
மூவரு மாகி இருவரு
முதல்வனு மாய்நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி
பல்கணம் நின்று பணி
சாவம தாகிய மால்வரை கொண்டு
தண்மதில் மூன்று மெரித்த
தேவர்கள் தேவர் எம்பெரு மானார்
தீதில் பெருந்துறை யாரே
செய்பூங் கொன்றை கூவிள மாலை
சென்னியு சேர்புனல் சேர்த்தி
கொய்பூங் கோதை மாதுமை பாகங்
கூடியோர் பீடுடை வேடர்
கைபோ னான்ற கனிகுலை வாழை
காய்குலை யிற்கமு கீன
பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல்
பில்கு பெருந்துறை யாரே
நிலனொடு வானும் நீரொடு தீயும்
வாயுவு மாகியோ ரைந்து
புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த
புண்ணியர் வெண்பொடி பூசி
நலனொடு தீங்கு தானல தின்றி
நன்கெழு சிந்தைய ராகி
மலனொடு மாசும் இல்லவர் வாழும்
மல்கு பெருந்துறை யாரே
பணிவா யுள்ள நன்கெழு நாவின்
பத்தர்கள் பத்திமை செ
துணியார் தங்கள் உள்ள மிலாத
சுமடர்கள் சோதி பரியார்
அணியார் நீல மாகிய கண்டர்
அரிசி லுரிஞ்சு கரைமேல்
மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல்
மல்கு பெருந்துறை யாரே
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ
ஏவலங் காட்டிய எந்தை
விண்ணோர் சார தன்னருள் செய்த
வித்தகர் வேத முதல்வர்
பண்ணார் பாடல் ஆடல றாத
பசுபதி ஈசனோர் பாகம்
பெண்ணாண் ஆய வார்சடை யண்ணல்
பேணு பெருந்துறை யாரே
விழையா ருள்ளம் நன்கெழு நாவில்
வினைகெட வேதமா றங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய வாற்றல்
பெரியோ ரேத்தும் பெருமான்
தழையார் மாவின் தாழ்கனி யுந்தி
தண்அரி சில்புடை சூழ்ந்த
குழையார் சோலை மென்னடை யன்னங்
கூடு பெருந்துறை யாரே
அரிசில் என்பது ஒரு நதி அது அரிசொல்ல வந்ததினால்
அரிசொல் நதியென்று கும்பகோண புராணத்திற் சொல்லப்படுகின்றது
பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த
பொருகடல் வேலி இலங்கை
மன்ன னொல்க மால்வரை யூன்றி
மாமுரண் ஆகமு தோளும்
முன்னவை வாட்டி பின்னருள் செய்த
மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னங் கன்னி பேடையொ டாடி
அணவு பெருந்துறை யாரே
புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட
பொருகடல் வண்ணனும் பூவின்
உள்வா யல்லி மேலுறை வானும்
உணர்வரி யான்உமை கேள்வன்
முள்வாய் தாளில் தாமரை மொட்டின்
முகம்மல ரக்கயல் பா
கள்வாய் நீலம் கண்மல ரேய்க்குங்
காமர் பெருந்துறை யாரே
குண்டு தேருங் கூறை களைந்துங்
கூப்பிலர் செப்பில ராகி
மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு
மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்டலை சூல
தாங்கிய தேவர் தலைவர்
வண்டு தேனும் வாழ்பொழிற் சோலை
மல்கு பெருந்துறை யாரே
கடையார் மாடம் நன்கெழு வீதி
கழுமல வூரன் கலந்து
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன்
நல்ல பெருந்துறை மேய
படையார் சூலம் வல்லவன் பாதம்
பரவிய பத்திவை வல்லார்
உடையா ராகி உள்ளமு மொன்றி
உலகினில் மன்னுவர் தாமே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சிவாநந்தநாதர் தேவியார் மலையரசியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருக்கற்குடி

பண் தக்கராகம்
வடந்திகழ் மென்முலை யாளை பாகம தாக மதித்து
தடந்திரை சேர்புனல் மாதை தாழ்சடை வைத்த சதுரர்
இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாங்
கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே
அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும்
பங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர்
சங்கம தார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள் தாவி
கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே
நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து
தாரகை யின்னொளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
போரக லந்தரு வேடர் புனத்திடை யிட்ட விறகில்
காரகி லின்புகை விம்முங் கற்குடி மாமலை யாரே
ஒருங்களி நீயிறை வாவென் றும்பர்கள் ஓல மிடக்கண்
டிருங்கள மார விடத்தை இன்னமு துன்னிய ஈசர்
மருங்களி யார்பிடி வாயில் வாழ்வெதி ரின்முளை வாரி
கருங்களி யானை கொடுக்குங் கற்குடி மாமலை யாரே
போர்மலி திண்சிலை கொண்டு பூதக ணம்புடை சூழ
பார்மலி வேடுரு வாகி பண்டொரு வர்க்கருள் செய்தார்
ஏர்மலி கேழல் கிளைத்த இன்னொளி மாமணி யெங்குங்
கார்மலி வேடர் குவிக்குங் கற்குடி மாமலை யாரே
உலந்தவ ரென்ப தணிந்தே ஊரிடு பிச்சைய ராகி
விலங்கல்வில் வெங்கன லாலே மூவெயில் வேவ முனிந்தார்
நலந்தரு சிந்தைய ராகி நாமலி மாலையி னாலே
கலந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே
மானிட மார்தரு கையர் மாமழு வாரும் வலத்தார்
ஊனிடை யார்தலை யோட்டில் உண்கல னாக வுகந்தார்
தேனிடை யார்தரு சந்தின் திண்சிறை யால்தினை வித்தி
கானிடை வேடர் விளைக்குங் கற்குடி மாமலை யாரே
வாளமர் வீரம் நினைந்த இராவணன் மாமலை யின்கீழ
தோளமர் வன்றலை குன்ற தொல்விர லூன்று துணைவர்
தாளமர் வேய்தலை பற்றி தாழ்கரி விட்ட விசைபோ
காளம தார்முகில் கீறுங் கற்குடி மாமலை யாரே
தண்டமர் தாமரை யானு தாவியிம் மண்ணை அளந்து
கொண்டவ னும்மறி வொண்ணா கொள்கையர் வெள்விடை யூர்வர்
வண்டிசை யாயின பாட நீடிய வார்பொழில் நீழல்
கண்டமர் மாமயி லாடுங் கற்குடி மாமலை யாரே
மூத்துவ ராடையி னாரும் மூசு கருப்பொடி யாரும்
நாத்துவர் பொய்ம்மொழி யார்கள் நயமி லராமதி வைத்தார்
ஏத்துயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவரிட ரெல்லாங்
காத்தவர் காமரு சோலை கற்குடி மாமலை யாரே
மூசு கடுப்பொடி என்றும் பாடம்
காமரு வார்பொழில் சூழுங் கற்குடி மாமலை யாரை
நாமரு வண்புகழ காழி நலந்திகழ் ஞானசம் பந்தன்
பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல் லார்கள்
பூமலி வானவ ரோடும் பொன்னுல கிற்பொலி வாரே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் முத்தீசர் தேவியார் அஞ்சனாட்சியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருப்பாச்சிலாச்சிராமம் முயலகன் தீர்த்தது

பண் தக்கராகம்
துணிவளர் திங்கள் துளங்கி விளங்க
சுடர்ச்சடை சுற்றி முடித்து
பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ
வாரிடமும் பலி தேர்வர்
அணிவளர் கோல மெலாஞ்செய்து பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல்செய்வ தோயிவர் மாண்பே
கலைபுனை மானுரி தோலுடை யாடை
கனல்சுட ராலிவர் கண்கள்
தலையணி சென்னியர் தாரணி மார்பர்
தம்மடி கள்ளிவ ரென்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
இலைபுனை வேலரோ ஏழையை வாட
இடர்செய்வ தோயிவ ரீடே
வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை
வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக
நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாட
சிதைசெய்வ தோவிவர் சீரே
கனமலர கொன்றை யலங்க லிலங
கனல்தரு தூமதி கண்ணி
புனமலர் மாலை யணி தழகாய
புனிதர் கொலாமிவ ரென்ன
வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
மனமலி மைந்தரோ மங்கையை வாட
மயல்செய்வ தோவிவர் மாண்பே
மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ தாடி
வளர்சடை மேற்புனல் வைத்து
மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை
முதிரவோர் வாய்மூரி பாடி
ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாட
சதுர்செய்வ தோவிவர் சார்வே
நீறுமெய்பூசி நிறைசடை தாழ
நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி
ஆறது சூடி ஆடர வாட்டி
யைவிரற் கோவண ஆடை
பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
ஏறது ஏறியர் ஏழையை வாட
இடர்செய்வ தோவிவ ரீடே
பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ
டாமைவெண் ணூல்புனை கொன்றை
கொங்கிள மாலை புனை தழகாய
குழகர்கொ லாமிவ ரென்ன
அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாட
சதிர்செய்வ தோவிவர் சார்வே
ஏவல தால்விச யற்கருள் செய்து
இராவண னையீ டழித்து
மூவரி லும்முத லாய்நடு வாய
மூர்த்தியை யன்றி மொழியாள்
யாவர் களும்பர வும்மெழிற் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாட
சிதைசெய்வ தோவிவர் சேர்வே
மேலது நான்முக னெய்திய தில்லை
கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனு மெய்திய தில்லை
எனவிவர் நின்றது மல்லால்
ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
பாலது வண்ணரோ பைந்தொடி வாட
பழிசெய்வ தோவிவர் பண்பே
நாணொடு கூடிய சாயின ரேனும்
நகுவ ரவரிரு போதும்
ஊணொடு கூடிய உட்கு தகையார்
உரைக ளவைகொள வேண்டா
ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
பூணெடு மார்பரோ பூங்கொடி வாட
புனைசெய்வ தோவிவர் பொற்பே
அகமலி அன்பொடு தொண்டர் வணங்க
ஆச்சிரா மத்துறை கின்ற
புகைமலி மாலை புனை தழகாய
புனிதர்கொ லாமிவ ரென்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்த
சாரகி லாவினை தானே

முயலகன் என்பது ஒருவித வலிநோய் இது கொல்லி மழவனின்
மகளுக்கு கண்டிருந்து இந திருப்பதிகம் ஓதியருளினவளவில் தீர்ந்தது
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மாற்றறிவரதர் தேவியார் பாலசுந்தரநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருப்பழையனூர்திரு ஆலங்காடு

பண் தக்கராகம்
துஞ்ச வருவாரு தொழுவிப்பாரும் வழுவிப்போய்
நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய்
வஞ்ச படுத்தொருத்தி வாழ்நாள்கொள்ளும் வகைகே
டஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
கேடும் பிறவியும் ஆக்கினாருங் கேடிலா
வீடு மாநெறி விளம்பினாரெம் விகிர்தனார்
காடுஞ் சுடலையும் கைக்கொண்டெல்லி கணப்பேயோ
டாடும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
கந்தங் கமழ்கொன்றை கண்ணிசூடி கனலாடி
வெந்த பொடிநீற்றை விளங்கப்பூசும் விகிர்தனார்
கொந்தண் பொழிற்சோலை யரவின்தோன்றி கோடல்பூ
தந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
பால மதிசென்னி படரச்சூடி பழியோரா
கால னுயிர்செற்ற காலனாய கருத்தனார்
கோலம் பொழிற்சோலை பெடையோடாடி மடமஞ்ஞை
ஆலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
ஈர்க்கும் புனல்சூடி இளவெண்டிங்கள் முதிரவே
பார்க்கு மரவம்பூண் டாடிவேடம் பயின்றாருங்
கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறி கருந்தேன்மொ
தார்க்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே
மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
நுணங்கு மறைபாடி யாடிவேடம் பயின்றாரும்
இணங்கு மலைமகளோ டிருகூறொன்றாய் இசைந்தாரும்
வணங்குஞ் சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்துங்கே
டணங்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
கணையும் வரிசிலையும் எரியுங்கூடி கவர்ந்துண்ண
இணையில் எயின்மூன்றும் எரித்திட்டாரெம் இறைவனார்
பிணையுஞ் சிறுமறியுங் கலையுமெல்லாங் கங்குல்சேர
தணையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே

கவிழ மலைதரள கடகக்கையால் எடுத்தான்றோள்
பவழ நுனைவிரலாற் பையவூன்றி பரிந்தாரும்
தவழுங் கொடிமுல்லை புறவஞ்சேர நறவம்பூ
தவிழும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
பகலும் இரவுஞ்சேர் பண்பினாரும் நண்போரா
திகலும் இருவர்க்கும் எரியாய்த்தோன்றி நிமிர்ந்தாரும்
புகலும் வழிபாடு வல்லார்க்கென்று தீயபோய்
அகலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
போழம் பலபேசி போதுசாற்றி திரிவாரும்
வேழம் வருமளவும் வெயிலேதுற்றி திரிவாரும்
கேழல் வினைபோ கேட்பிப்பாரும் கேடிலா
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
சாந்தங் கமழ்மறுகிற் சண்பைஞான சம்பந்தன்
ஆந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளை
வேந்த னருளாலே விரித்தபாடல் இவைவல்லார்
சேர்ந்த விடமெல்லா தீர்த்தமாக சேர்வாரே

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஊர்த்ததாண்டவேசுரர் தேவியார் வண்டார்குழலியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திரு அதிகைவீரட்டானம்

பண் தக்கராகம்
குண்டை குறட்பூதங் குழும அனலேந்தி
கெண்டை பிறழ்தெண்ணீர கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட தொடையலா னாடும்வீர டானத்தே
அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கை
கரும்பின் மொழியாளோ டுடன்கை அனல்வீசி
சுரும்புண் விரிகொன்றை சுடர்பொற் சடைதாழ
விரும்பு மதிகையு ளாடும்வீர டானத்தே
ஆடல் அழல்நாக மரைக்கி டசைத்தாட
பாடல் மறைவல்லான் படுதம்பலி பெயர்வான்
மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள்
வேடம் பலவல்லா னாடும்வீர டானத்தே
எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி
மண்ணார் முழவதிர முதிரா மதிசூடி
பண்ணார் மறைபாட பரமன் அதிகையுள்
விண்ணோர் பரவநின் றாடும்வீர டானத்தே
கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்
திருநின் றொருகையால் திருவாம் அதிகையுள்
எரியே தியபெருமான் எரிபுன் சடைதாழ
விரியும் புனல்சூடி யாடும்வீர டானத்தே
துளங்குஞ் சுடரங்கை துதைய விளையாடி
இளங்கொம் பனசாயல் உமையோ டிசைபாடி
வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள்
விளங்கும் பிறைசூடி யாடும்வீர டானத்தே
பாதம் பலரேத்த பரமன் பரமேட்டி
பூதம் புடைசூழ புலித்தோ லுடையா
கீதம் உமைபாட கெடில வடபக்கம்
வேத முதல்வன்நின் றாடும்வீர டானத்தே
கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட
ஒல்லை யடர்த்தவனு கருள்செய் ததிகையுள்
பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி
வில்லால் எயிலெய்தான் ஆடும்வீர டானத்தே
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானை காண்கிலார்
பொடியாடு மார்பானை புரிநூ லுடையானை
கடியார் கழுநீலம் மலரு மதிகையுள்
வெடியார் தலையேந்தி யாடும்வீர டானத்தே
அரையோ டலர்பிண்டி மருவி குண்டிகை
சுரையோ டுடனேந்தி உடைவி டுழல்வார்கள்
உரையோ டுரையொவ்வா துமையோ டுடனாகி
விரைதோ யலர்தாரான் ஆடும்வீர டானத்தே
ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன்
வேழம் பொருதெண்ணீர் அதிகைவீர டானத்து
சூழுங் கழலானை சொன்ன தமிழ்மாலை
வாழு துணையாக நினைவார் வினையிலாரே

இத்தலம் நடுநாட்டில் கெடிலநதிக்கு வடபாலுள்ளது
சுவாமிபெயர் அதிகைநாதர் வீரட்டானேசுவரர்
தேவியார் திருவதிகைநாயகி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருச்சிரபுரம்

பண் பழந்தக்கராகம்
பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய்
வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே
சொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ்
செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே
கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய்
அல்லல்வாழ்க்கை பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ்
சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்
செல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே
நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்
ஊரடைந்த ஏறதேறி யுண்பலி கொள்வதென்னே
காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்ப
சீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் மேயவனே
கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்
மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னே
கையடைந்த களைகளாக செங்கழு நீர்மலர்கள்
செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே
புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானை தன்னை
கரமெடுத்து தோலுரித்த காரணம் ஆவதென்னே
மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ்
சிரமெடுத்த கைகள்கூப்புஞ் சிரபுரம் மேயவனே
கண்ணுமூன்றும் உடையதன்றி கையினில் வெண்மழுவும்
பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்ததென்னே
எண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியரா
திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே
குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற்
பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே
இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து
சிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே
மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச ஒருவிரலால்
நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார்
துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ்
சிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலுமஞ்ச பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
நாலுவேதம் ஓதலார்கள் நந்துணை யென்றிறைஞ
சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே
புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும்
பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம்
மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனே
சித்தர்வந்து பணியுஞ்செல்வ சிரபுரம் மேயவனே
தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை
அங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தனுரை
பங்கம்நீங்க பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற்
சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே

சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருச்சேய்ஞலூர்

பண் பழந்தக்கராகம்
நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனி சேய்ஞலூர் மேயவனே
நீறடைந்த மேனியின்கண் நேரிழையா ளொருபால்
கூறடைந்த கொள்கையன்றி கோலவளர் சடைமேல்
ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னே
சேறடைந்த தண்கழனி சேய்ஞலூர் மேயவனே
ஊனடைந்த வெண்டலையி னோடுபலி திரிந்து
கானடைந்த பேய்களோடு பூதங் கலந்துடனே
மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே
தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே
வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின்
நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னே
பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்
சேணடைந்த மாடம்மல்கு சேய்ஞலூர் மேயவனே
பேயடைந்த காடிடமா பேணுவ தன்றியும்போய்
வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னே
வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வி
தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே
காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே
கோடடைந்த மால்களிற்று கோச்செங்க ணாற்கருள்செய்
சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே
பீரடைந்த பாலதாட்ட பேணா தவன்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடி தான்றனக்கு
தாரடைந்த மாலைசூட்டி தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே
மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன்
நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே
பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யுஞ்
சேவடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே
காரடைந்த வண்ணனோடு கனக மனையானும்
பாரிடந்தும் விண்பறந்தும் பாத முடிகாணார்
சீரடைந்து வந்துபோற்ற சென்றருள் செய்ததென்னே
தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே
மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி
நேசடைந்த ஊணினாரும் நேசமி லாததென்னே
வீசடைந்த தோகையாட விரைகமழும் பொழில்வா
தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே
சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவி
தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன்
சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்
வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே

சோழநாட்டில் சுப்பிரமணியசுவாமியினா லுண்டான தலம்
சுவாமிபெயர் சத்தகிரீசுவரர் தேவியார் சகிதேவிநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருநள்ளாறு

பண் பழந்தக்கராகம்
பச்சைத்திருப்பதிகம்
இது சமணர்கள் வாதின்பொருட்டு தீயிலிட்டபோது
வேகாதிருந்தது
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே
தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையா
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே
ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே
புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடி
பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே
திங்களுச்சி மேல்விளங்கு தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்ச
தங்களுச்சி யால்வணங்கு தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே
வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர
அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போ
செஞ்சடைக்கோர் திங்கள்சூடி திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே
சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரை தீயம்பினால்
சுட்டுமாட்டி சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போ
பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே
உண்ணலாகா நஞ்சுகண்ட துண்டுட னேயொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே
மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே
தண்புனலும் வெண்பிறையு தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே

இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று
சுவாமிபெயர் தெர்ப்பாரணியர்
தேவியார் போகமார்த்தபூண்முலையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருவலிவலம்

பண் பழந்தக்கராகம்
ஒல்லையாறி உள்ளமொன்றி கள்ளம்ஒழி துவெய்ய
சொல்லையாறி தூய்மைசெய்து காமவினை யகற்றி
நல்லவாறே உன்றன்நாமம் நாவில்நவின் றேத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே
இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநற் றேவரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்
தயங்குசோதி சாமவேதா காமனைக்கா தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவல மேயவனே
பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதை பெருங்கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனை நோய்நலி
கண்டுகண்டே யுன்றன்நாமங் காதலி கின்றதுள்ளம்
வண்டுகிண்டி பாடுஞ்சோலை வலிவல மேயவனே
மெய்யராகி பொய்யைநீக்கி வேதனை யைத்துறந்து
செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே
நைவன்நாயேன் உன்றன்நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
வையம்முன்னே வந்துநல்காய் வலிவல மேயவனே
துஞ்சும்போது துற்றும்போதுஞ் சொல்லுவ னுன்றிறமே
தஞ்சமில்லா தேவர்வந்துன் தாளிணை கீழ்ப்பணிய
நஞ்சையுண்டா கென்செய்கேனோ நாளும் நினைந்தடியேன்
வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே
புரிசடையாய் புண்ணியனே நண்ணலார் மூவெயிலும்
எரியஎய்தாய் எம்பெருமான் என்றிமை யோர்பரவும்
கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று
வரியரவா வந்துநல்காய் வலிவல மேயவனே
தாயுநீயே தந்தைநீயே சங்கர னேயடியேன்
ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரி கின்றதுள்ளம்
ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின் றொன்றலொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே
நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய பொன்மலையை
வேரொடும்பீழ தேந்தலுற்ற வேந்தனி ராவணனை
தேரொடும்போய் வீழ்ந்தலற திருவிர லால்அடர்த்த
வாரொடுங்கும் கொங்கைபங்கா வலிவல மேயவனே
ஆதியாய நான்முகனு மாலு மறிவரிய
சோதியானே நீதியில்லேன் சொல்லுவன் நின்றிறமே
ஓதிநாளும் உன்னையேத்தும் என்னை வினைஅவலம்
வாதியாமே வந்துநல்காய் வலிவல மேயவனே
பொதியிலானே பூவணத்தாய் பொன்திக ழுங்கயிலை
பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவி டாதவனே
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள்
மதியிலாதார் என்செய்வாரோ வலிவல மேயவனே
பொதியில் என்பது பொதிகைமலை அது வைப்புத்தலங்களிலொன்று
வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல மேயவனை
பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவ தோர்விரும்பும்
மன்னுசோதி ஈசனோடே மன்னி யிருப்பாரே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மனத்துணைநாதர் தேவியார் வாளையங்கண்ணியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருச்சோபுரம்

பண் பழந்தக்கராகம்
வெங்கண்ஆனை யீருரிவை போர்த்து விளங்குமொழி
மங்கைபாகம் வைத்துகந்த மாண்பது வென்னைகொலாங்
கங்கையோடு திங்கள்சூடி கடிகம ழுங்கொன்றை
தொங்கலானே தூயநீற்றாய் சோபுர மேயவனே
விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவி ரிந்திலங்கு
சடையொடுங்க தண்புனலை தாங்கிய தென்னைகொலாங்
கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தன லுள்ளழுந
தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுர மேயவனே
தீயராய வல்லரக்கர் செந்தழ லுள்ளழுந்த
சாயவெய்து வானவரை தாங்கிய தென்னைகாலாம்
பாயும்வெள்ளை ஏற்றையேறி பாய்புலி தோலுடுத்த
தூயவெள்ளை நீற்றினானே சோபுர மேயவனே
பல்லிலோடு கையிலேந்தி பல்கடை யும்பலிதேர
தல்லல்வாழ்க்கை மேலதான ஆதர வென்னைகொலாம்
வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங் கண்ணியொடு
தொல்லையூழி யாகிநின்றாய் சோபுர மேயவனே
நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேல்மதியம்
ஏற்றமாக வைத்துகந்த காரண மென்னைகொலாம்
ஊற்றமிக்க காலன்றன்னை ஒல்க வுதைத்தருளி
தோற்றமீறு மாகிநின்றாய் சோபுர மேயவனே
கொன்னவின்ற மூவிலைவேல் கூர்மழு வாட்படையன்
பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற் பென்னைகொலாம்
அன்னமன்ன மென்னடையாள் பாக மமர்ந்தரைசேர்
துன்னவண்ண ஆடையினாய் சோபுர மேயவனே
குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடி யார்பணிவார்
கற்றல்கேள்வி ஞானமான காரண மென்னைகொலாம்
வற்றலாமை வாளரவம் பூண்டயன் வெண்டலையில்
துற்றலான கொள்கையானே சோபுர மேயவனே
விலங்கலொன்று வெஞ்சிலையா கொண்டு விறலரக்கர்
குலங்கள்வாழும் ஊரெரித்த கொள்கையி தென்னைகொலாம்
இலங்கைமன்னு வாளவுணர் கோனை யெழில்விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுர மேயவனே
விடங்கொள்நாக மால்வரையை சுற்றி விரிதிரைநீர்
கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரண மென்னைகொலாம்
இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர் மேலயனு
தொடர்ந்துமுன்னங் காணமாட்டா சோபுர மேயவனே
புத்தரோடு புன்சமணர் பொய்யுரை யேரைத்து
பித்தரா கண்டுகந்த பெற்றிமை யென்னைகொலாம்
மத்தயானை யீருரிவை போர்த்து வளர்சடைமேல்
துத்திநாகஞ் சூடினானே சோபுர மேயவனே
சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுர மேயவனை
சீலமிக்க தொல்புகழார் சிரபுர கோன்நலத்தான்
ஞாலம்மிக்க தண்டமிழான் ஞானசம் பந்தன்சொன்ன
கோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர் வானுலகே

இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சோபுரநாதர் தேவியார் சோபுரநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருநெடுங்களம்

பண் பழந்தக்கராகம்
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனை பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னை
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கி
தாங்கிநில்லா அன்பினோடு தலைவநின் றாள்நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே
விருத்தனாகி பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகி கங்கையாளை கமழ்சடை மேற்கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே
கூறுகொண்டாய் மூன்றுமொன்றா கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே
குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரை கீழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்
நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலா பொன்னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே
வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணு
தஞ்சமில்லா சாக்கியரு தத்துவ மொன்றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே
நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தை
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுர கோன்நலத்தால்
நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் நித்தியசுந்தரர் தேவியார் ஒப்பிலாநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருமுதுகுன்றம்

பண் பழந்தக்கராகம்
தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர்
நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும்
மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்
மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே
பற்றுமாகி வானுளோர்க்கு பல்கதி ரோன்மதிபார்
எற்றுநீர்தீ காலுமேலை விண்ணிய மானனொடு
மற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள்
முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே
வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி
நாரிபாகம் நயந்துபூமேல் நான்முகன் றன்றலையில்
சீரிதாக பலிகொள்செல்வன் செற்றலு தோன்றியதோர்
மூரிநாக துரிவைபோர்த்தான் மேயது முதுகுன்றே
பாடுவாரு கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர்
நீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும்
நாடுதானும் ஊடுமோடி ஞாலமும் நான்முகனும்
ஊடுகாண மூடும்வெள்ள துயர்ந்தது முதுகுன்றே
வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவி
செழுங்கல்வேந்தன் செல்விகாண தேவர் திசைவணங்க
தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ
முழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே
சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி
சழிந்தசென்னி சைவவேட தானினை தைம்புலனும்
அழிந்தசிந்தை அந்தணாளர கறம்பொரு ளின்பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே
இப்பதிகத்தின் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும்
இயங்குவோரு கிறைவனாய இராவணன் தோள்நெரித்த
புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள்
முயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே
ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியா
கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால்
ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎ போதுமேத்தும்
மூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே
உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை
நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின்
மறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட
முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே
மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை
பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுர தலைவன்


ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைந்து போயின
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருஓத்தூர்

பண் பழந்தக்கராகம்
பூத்தேர தாயன கொண்டுநின் பொன்னடி
ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கை
கூத்தீ ரும்ம குணங்களே
இடையீர் போகா இளமுலை யாளையோர்
புடையீ ரேபுள்ளி மானுரி
உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர
சடையீ ரேயும தாளே
உள்வேர் போல நொடிமையி னார்திறம்
கொள்வீ ரல்குலோர் கோவணம்
ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர
கள்வீ ரேயும காதலே
தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை
ஆட்டீ ரேயடி யார்வினை
ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்
நாட்டீ ரேயருள் நல்குமே
குழையார் காதீர் கொடுமழு வாட்படை
உழையாள் வீர்திரு வோத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்
அழையா மேயருள் நல்குமே
மிக்கார் வந்து விரும்பி பலியிட
தக்கார் தம்மக்க ளீரென்
றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்
நக்கீ ரேயருள் நல்குமே
தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா என்று நலம்புகழ
தோதா தாருள ரோதிரு வோத்தூர்
ஆதீ ரேயருள் நல்குமே
என்றா னிம்மலை யென்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே
நன்றா நால்மறை யானொடு மாலுமா
சென்றார் போலு திசையெலாம்
ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
நின்றீ ரேயுமை நேடியே
கார மண்கலிங் கத்துவ ராடையர்
தேரர் சொல்லவை தேறன்மின்
ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர
சீர வன்கழல் சேர்மினே
குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளை
பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்
விரும்பு வார்வினை வீடே

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வேதநாதர் தேவியார் இளமுலைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருமாற்பேறு

பண் பழந்தக்கராகம்
ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை
நீறு சேர்திரு மேனியர்
சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின்
மாறி லாமணி கண்டரே
தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
அடைவா ராமடி கள்ளென
மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
றுடையீ ரேயுமை யுள்கியே
பையா ரும்மர வங்கொடு வாட்டிய
கையா னென்று வணங்குவர்
மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற
ஐயா நின்னடி யார்களே
சால மாமலர் கொண்டு சரணென்று
மேலை யார்கள் விரும்புவர்
மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
நீல மார்கண்ட நின்னையே
மாறி லாமணி யேயென்று வானவர்
ஏற வேமிக ஏத்துவர்
கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்
நீற னேயென்று நின்னையே
உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையை
பரவா தாரில்லை நாள்களும்
திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்
றரையா னேயருள் நல்கிடே
இப்பதிகத்தில் ம் செய்யுள் மறைந்து போயிற்று
அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை
உரைகெ டுத்தவன் ஒல்கிட
வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளை
பரவி டக்கெடும் பாவமே
இருவர் தேவரு தேடி திரிந்தினி
ஒருவ ராலறி வொண்ணிலன்
மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளை
பரவு வார்வினை பாறுமே
தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும்
நீசர் தம்முரை கொள்ளெலு
தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின்
ஈச னென்றெடு தேத்துமே
மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
மன்னும் மாற்பேற் றடிகளை
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
பன்ன வேவினை பாறுமே

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மால்வணங்குமீசர் தேவியார் கருணைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருப்பாற்றுறை

பண் பழந்தக்கராகம்
காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரா ராதி முதல்வரே
நல்லா ரும்மவர் தீய ரெனப்படுஞ்
சொல்லார் நன்மலர் சூடினார்
பல்லார் வெண்டலை செல்வரெம் பாற்றுறை
எல்லா ருந்தொழும் ஈசரே
விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
எண்ணார் வந்தென் எழில் கொண்டார்
பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
யுண்ணா ணாளும் உறைவரே
பூவு திங்கள் புனைந்த முடியினர்
ஏவின் அல்லா ரெயிலெய்தார்
பாவ தீர்புனல் மல்கிய பாற்றுறை
ஓவென் சிந்தை யொருவரே
மாக தோய்மதி சூடிமகிழ தென
தாகம் பொன்னிற மாக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே
போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்தென் நலங்கொண்டார்
பாத தொண்டர் பரவிய பாற்றுறை
வேத மோதும் விகிர்தரே
வாடல் வெண்டலை சூடினர் மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
ஆடல் நாகம் அசைத்தாரே
வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்
எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார்
பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே
ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி
ஆன வண்ணத்தெம் அண்ணலார்
பான லம்மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே
வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
வந்தென் நன்னலம் வௌவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாமோர் மணாளரே
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரானை
பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ்
பத்தும் பாடி பரவுமே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் திருமூலநாதர் தேவியார் மோகாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருவேற்காடு

பண் பழந்தக்கராகம்
ஒள்ளி துள்ள கதிக்கா மிவனொளி
வெள்ளி யானுறை வேற்காடு
உள்ளி யாருயர தாரிவ் வுலகினில்
தெள்ளி யாரவர் தேவரே
ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடி யும்பணி தாரிவ் வுலகினில்
சேட ராகிய செல்வரே
பூதம் பாட புறங்கா டிடையாடி
வேத வித்தகன் வேற்காடு
போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர
கேதம் எய்துத லில்லையே
ஆழ்க டலென கங்கை கரந்தவன்
வீழ்ச டையினன் வேற்காடு
தாழ்வு டைமன தாற்பணி தேத்திட
பாழ்ப டும்மவர் பாவமே
காட்டி னாலும் அயர்த்திட காலனை
வீட்டி னானுறை வேற்காடு
பாட்டி னாற்பணி தேத்திட வல்லவர்
ஓட்டி னார்வினை ஒல்லையே
தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
வேலி னானுறை வேற்காடு
நூலி னாற்பணி தேத்திட வல்லவர்
மாலி னார்வினை மாயுமே
மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
வில்லி னானுறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே
மூரல் வெண்மதி சூடு முடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வார மாய்வழி பாடு நினைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே
பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
விரக்கி னானுறை வேற்காட்டூர்
அரக்கன் ஆண்மை யடர பட்டானிறை
நெருக்கி னானை நினைமினே
மாறி லாமல ரானொடு மாலவன்
வேற லானுறை வேற்காடு
ஈறி லாமொழி யேமொழி யாயெழில்
கூறி னார்க்கில்லை குற்றமே
விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணி
சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ்
கொண்டு பாட குணமாமே

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வேற்காட்டீசுவரர் தேவியார் வேற்கண்ணியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருக்கரவீரம்

பண் பழந்தக்கராகம்
அரியும் நம்வினை யுள்ளன ஆசற
வரிகொள் மாமணி போற்கண்டங்
கரிய வன்றிக ழுங்கர வீரத்தெம்
பெரிய வன்கழல் பேணவே
தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுடன் சூடிய
கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்
சங்க ரன்கழல் சாரவே
ஏதம் வந்தடை யாவினி நல்லன
பூதம் பல்படை யாக்கிய
காத லான்திக ழுங்கர வீரத்தெம்
நாதன் பாதம் நணுகவே
பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட
மறையும் மாமணி போற்கண்டங்
கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம்
இறைய வன்கழல் ஏத்தவே
பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்
விண்ணி னார்மதி லெய்தமு
கண்ணி னானுறை யுங்கர வீரத்தை
நண்ணு வார்வினை நாசமே
நிழலி னார்மதி சூடிய நீள்சடை
அழலி னாரன லேந்திய
கழலி னாருறை யுங்கர வீரத்தை
தொழவல் லார்க்கில்லை துக்கமே
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
அண்டன் ஆரழல் போலொளிர்
கண்ட னாருறை யுங்கர வீரத்து
தொண்டர் மேற்றுயர் தூரமே
புனலி லங்கையர் கோன்முடி பத்திற
சினவ லாண்மை செகுத்தவன்
கனல வனுறை கின்ற கரவீரம்
எனவல் லார்க்கிட ரில்லையே
வெள்ள தாமரை யானொடு மாலுமா
தெள்ள தீத்திர ளாகிய
கள்ள தானுறை யுங்கர வீரத்தை
உள்ள தான்வினை ஓயுமே
செடிய மண்ணொடு சீவர தாரவர்
கொடிய வெவ்வுரை கொள்ளன்மின்
கடிய வன்னுறை கின்ற கரவீர
தடிய வர்க்கில்லை யல்லலே
வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்
சேடன் மேற்கசி வாற்றமிழ்
நாடு ஞானசம் பந்தன சொல்லிவை
பாடு வார்க்கில்லை பாவமே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கரவீரேசுவரர் தேவியார் பிரத்தியட்சமின்னாளம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருத்தூங்கானைமாடம்

பண் பழந்தக்கராகம்
ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை
யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
அடங்கு மிடங்கருதி நின்றீரெல்லாம்
அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணங்
கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங்
கெழுமனைகள் தோறும்ம றையின்னொலி
தொடங்குங் கடந்தை தடங்கோயில்சேர்
தூங்கானை மாட தொழுமின்களே
பிணிநீர சாதல் பிறத்தலிவை
பிரி பிரியாத பேரின்பத்தோ
டணிநீர மேலுலகம் எய்தலுறில்
அறிமின் குறைவில்லை ஆனேறுடை
மணிநீல கண்ட முடையபிரான்
மலைமகளு தானும் மகிழ்ந்துவாழு
துணிநீர கடந்தை தடங்கோயில்சேர்
தூங்கானை மாட தொழுமின்களே
சாநாளும் வாழ்நாளு தோற்றமிவை
சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
ஆமா றறியா தலமந்துநீர்
அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடை
பூமாண் அலங்கல் இலங்குகொன்றை
புனல்பொதிந்த புன்சடையி னானுறையு
தூமாண் கடந்தை தடங்கோயில்சேர்
தூங்கானை மாட தொழுமின்களே
ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை
உடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
மான்று மனங்கருதி நின்றீரெல்லாம்
மனந்திரிந்து மண்ணில் மயங்காதுநீர்
மூன்று மதிலெய்த மூவாச்சிலை
முதல்வர கிடம்போலும் முகில்தோய்கொடி
தோன்றுங் கடந்தை தடங்கோயில்சேர்
தூங்கானை மாட தொழுமின்களே
மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை
மரணத்தொ டொத்தழியு மாறாதலால்
வியல்தீர மேலுக மெய்தலுறின்
மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்
உயர்தீர வோங்கிய நாமங்களா
லோவாது நாளும் அடிபரவல்செய்
துயர்தீர் கடந்தை தடங்கோயில்சேர்
தூங்கானை மாட தொழுமின்களே
பன்னீர்மை குன்றி செவிகேட்பிலா
படர்நோ கின்கண் பவளந்நிற
நன்னீர்மை குன்றி திரைதோலொடு
நரைதோன்றுங் காலம் நமக்காதல்முன்
பொன்னீர்மை துன்ற புறந்தோன்றுநற்
புனல்பொதிந்த புன்சடையி னானுறையு
தொன்னீர கடந்தை தடங்கோயில்சேர்
தூங்கானை மாட தொழுமின்களே
இறையூண் துகளோ டிடுக்கணெய்தி
யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம்
நீள்கழ லேநாளும் நினைமின்சென்னி
பிறைசூ ழலங்கல் இலங்குகொன்றை
பிணையும் பெருமான் பிரியாதநீர
துறைசூழ் கடந்தை தடங்கோயில்சேர்
தூங்கானை மாட தொழுமின்களே
பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடி
பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம்
இறையே பிரியா தெழுந்துபோதுங்
கல்சூ ழரக்கன் கதறச்செய்தான்
காதலியு தானுங் கருதிவாழு
தொல்சீர கடந்தை தடங்கோயில்சேர்
தூங்கானை மாட தொழுமின்களே
நோயும் பிணியும் அருந்துயரமும்
நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்
வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம்
மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்
தாய அடியளந்தான் காணமாட்டா
தலைவர கிடம்போலு தண்சோலைவிண்
டோ யும் கடந்தை தடங்கோயில்சேர்
தூங்கானை மாட தொழுமின்களே
பகடூர் பசிநலிய நோய்வருதலாற்
பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும்
மூடுதுவ ராடையாரும் நாடிச்சொன்ன
திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா
திருந்திழை யுந்தானும் பொருந்திவாழு
துகள்தீர் கடந்தை தடங்கோயில்சேர்
தூங்கானை மாட தொழுமின்களே
மண்ணார் முழவதிரும் மாடவீதி
வயல்காழி ஞானசம் பந்தன்நல்ல
பெண்ணா கடத்து பெருங்கோயில்சேர்
பிறையுரிஞ்சு தூங்கானை மாடமேயான்
கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங்
கருத்துணர கற்றாருங் கேட்டாரும்போய்
விண்ணோ ருலகத்து மேவிவாழும்
விதியது வேயாகும் வினைமாயுமே

இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சுடர்க்கொழுந்தீசர் தேவியார் கடந்தைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருத்தோணிபுரம்

பண் பழந்தக்கராகம்
வண்டரங்க புனற்கமல மதுமாந்தி பெடையினொடும்
ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதி
துண்டரங்க பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
பண்டரங்கர கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே
எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலை
அறிவுறா தொழிவதுவும் அருவினையேன் பயனன்றே
செறிசிறார் பதமோது திருத்தோணி புரத்துறையும்
வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே
பண்பழன கோட்டகத்து வாட்டமிலா செஞ்சூட்டு
கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலை
செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும்
பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே
காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற்
பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர்
சேண்டகைய மணிமாட திருத்தோணி புரத்துறையும்
ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய உணர்த்தாயே
பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த
காராரும் செழுநிறத்து பவளக்கால் கபோதகங்காள்
தேராரும் நெடுவீதி திருத்தோணி புரத்துறையும்
நீராருஞ் சடையாரு கென்நிலைமை நிகழ்த்தீரே
சேற்றெழுந்த மலர்க்கமல செஞ்சாலி கதிர்வீச
வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள்
தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத
கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே
முன்றில்வாய் மடல்பெண்ணை குரம்பைவாழ் முயங்குசிறை
அன்றில்காள் பிரிவுறும்நோய் அறியாதீர் மிகவல்லீர்
தென்றலார் புகுந்துலவு திருத்தோணி புரத்துறையுங்
கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே
பானாறு மலர்ச்சூத பல்லவங்க ளவைகோதி
ஏனோர்க்கும் இனிதாக மொழியுமெழில் இளங்குயிலே
தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர்
கோனாரை என்னிடத்தே வரவொருகாற் கூவாயே
நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன்
பொற்பமைந்த வாயலகின் பூவைநல்லாய் போற்றுகின்றேன்
சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும்
விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே
சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
முறையாலே உணத்தருவேன் மொய்பவள தொடுதரள
துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே
போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங்
கார்மிகுத்த கறைக்கண்ட திறையவனை வண்கமல
தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த
சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருச்செங்காட்டங்குடி

பண் பழந்தக்கராகம்
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோ றும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெ
சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீ சரத்தானே
வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோ டோ ங்கியசீர் விழவோவா
சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான் கணபதீ சரத்தானே
வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங்
கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீ சரத்தானே
தொங்கலுங் கமழ்சாந்தும் அகிற்புகையு தொண்டர்கொண்
டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான்
செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான் கணபதீ சரத்தானே
பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி
நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்த
சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்
காலினாற் கூற்றுதைத்தான் கணபதீ சரத்தானே
நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதி
கண்ணியான் கண்ணுதலான் கணபதீ சரத்தானே
மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம்
மெய்யினான் பையரவம் அரைக்கசைத்தான் மீன்பிறழ
செய்யினார் தண்கழனி செங்காட்டங் குடியதனுள்
கையினார் கூரெரியான் கணபதீ சரத்தானே
தோடுடையான் குழையுடையான் அரக்கன்றன் தோளடர்த்த
பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான்
சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடுங்
காடுடையான் நாடுடையான் கணபதீ சரத்தானே
ஆனூரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா
வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான்
தேனூரான் செங்காட்டாங் குடியான்சிற் றம்பலத்தான்
கானூரான் கழுமலத்தான் கணபதீ சரத்தானே
செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும்
படிநுகரா தயருழப்பார கருளாத பண்பினான்
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர கருள்செய்யும் பொருட்டா
கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீ சரத்தானே
கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்ட கடிபொழிலின்
நறையிலங்கு வயல்காழி தமிழ்ஞான சம்பந்தன்
சிறையிலங்கு புனற்படப்பை செங்காட்டங் குடிசேர்த்தும்
மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலக திருப்பாரே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கணபதீசுவரர் தேவியார் திருக்குழல்மாதம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருக்கோளிலி

பண் பழந்தக்கராகம்
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமங்
கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடா திறமருளி
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே
ஆடரவ தழகாமை அணிகேழற் கொம்பார்த்த
தோடரவ தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவ திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவ தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே
நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்
டொன்றிவழி பாடுசெய லுற்றவன்றன் ஓங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர் கண்டவனு கன்றளித்தான்
கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே
வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்க பாலாட்டுஞ்
சிந்தைசெய்வோன் தன்கரு தேர்ந்துசிதை பான்வரு
தந்தைதனை சாடுதலுஞ் சண்டீச னென்றருளி
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே
வஞ்சமன தஞ்சொடுக்கி வைகலும்நற் பூசனையால்
நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும்
பஞ்சவரிற் பார்த்தனுக்கு பாசுபதம் ஈந்துகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே
தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை
ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே
கன்னவிலும் மால்வரையான் கார்திகழும் மாமிடற்றான்
சொன்னவிலும் மாமறையான் தோத்திரஞ்செய் வாயினுளான்
மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினிற்
கொன்னவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே
அந்தரத்தில் தேரூரும் அரக்கன்மலை அன்றெடுப்ப
சுந்தரத்தன் திருவிரலால் ஊன்றஅவன் உடல்நெரிந்து
மந்திரத்த மறைபாட வாளவனு கீந்தானுங்
கொந்தரத்த மதிச்சென்னி கோளிலியெம் பெருமானே
நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணா
தாணுவெனை ஆளுடையான் தன்னடியார கன்புடைமை
பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்
கோணலிளம் பிறைச்சென்னி கோளிலியெம் பெருமானே
தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசா திரத்தவர்சொல்
இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே ஏத்துமின்கள்
நடுக்கமிலா அமருலகம் நண்ணலுமாம் அண்ணல்கழல்
கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே
நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்குங்
கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை
வம்பமரு தண்காழி சம்பந்தன் வண்டமிழ்கொண்
டின்பமர வல்லார்க ளெய்துவர்கள் ஈசனையே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கோளிலியப்பர் தேவியார் வண்டமர்பூங்குழலம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருப்பிரமபுரம் பல்பெயர்ப்பத்து

பண் தக்கேசி
எரியார்மழுவொன் றேந்தியங்கை இடுதலையேகலனா
வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம்வவ்வுதியே
சரியாநாவின் வேதகீதன் தாமரைநான்முகத்தன்
பெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே
பெயலார்சடைக்கோர் திங்கள்சூடி பெய்பலிக்கென்றயலே
கயலார்தடங்கண் அஞ்சொல்நல்லார் கண்டுயில்வவ்வுதியே
இயலால்நடாவி இன்பமெய்தி இந்திரனாள்மண்மேல்
வியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே
நகலார்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டயலே
பகலாப்பலிதேர தையம்வவ்வாய் பாய்கலைவவ்வுதியே
அகலாதுறையும் மாநிலத்தில் அயலின்மையாலமரர்
புகலால்மலிந்த பூம்புகலி மேவியபுண்ணியனே
சங்கோடிலங்க தோடுபெய்து காதிலோர்தாழ்குழையன்
அங்கோல்வளையார் ஐயம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
செங்கோல்நடாவி பல்லுயிர்க்குஞ் செய்வினைமெய்தெரிய
வெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குருமேயவனே
தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கியதாழ்சடையன்
பிணிநீர்மடவார் ஐயம்வவ்வாய் பெய்கலைவவ்வுதியே
அணிநீருலக மாகியெங்கும் ஆழ்கடலாலழுங்க
துணிநீர்பணி தான்மிதந்த தோணிபுரத்தானே
கவர்பூம்புனலு தண்மதியுங் கமழ்சடைமாட்டயலே
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
அவர்பூணரையர காதியாயவள்தன் மன்னனாள்மண்மேற்
தவர்பூம்பதிகள் எங்குமெங்கு தங்குதராயவனே
முலையாழ்கெழும மொந்தைகொட்ட முன்கடைமாட்டயலே
நிலையாப்பலிதேர தையம்வவ்வாய் நீநலம்வவ்வுதியே
தலையாய்க்கிடந்திவ் வையமெல்லா தன்னதோராணைநடா
சிலையால்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரமேயவனே
எருதேகொணர்கென் றேறியங்கை இடுதலையேகலனா
கருதேர்மடவார் ஐயம்வவ்வாய் கண்டுயில்வவ்வுதியே
ஒருதேர்கடாவி ஆரமரு ளொருபதுதோள்தொலை
பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர்புண்ணியனே
துவர்சேர்கலிங்க போர்வையாரு தூய்மையிலாச்சமணுங்
கவர்செய்துழல கண்டவண்ணங் காரிகைவார்குழலார்
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
தவர்செய்நெடுவேற் சண்டனாள சண்பையமர்ந்தவனே
நிழலால்மலிந்த கொன்றைசூடி நீறுமெய்பூசிநல்ல
குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளைவவ்வுதியே
அழலாயுலகங் கவ்வைதீர ஐந்தலைநீண்முடிய
கழல்நாகரையன் காவலா காழியமர்ந்தவனே
கட்டார்துழாயன் தாமரையான் என்றிவர்காண்பரிய
சிட்டார்பலிதேர தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே
நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த
கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே
கடையார்கொடிநன் மாடவீதி கழுமலவூர்க்கவுணி
நடையார்பனுவல் மாலையாக ஞானசம்பந்தன்நல்ல
படையார்மழுவன் றன்மேல்மொழிந்த பல்பெயர்ப்பத்தும்வல்லார
கடையாவினைகள் உலகில்நாளும் அமருலகாள்பவரே

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருப்பூவணம்

பண் தக்கேசி
அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல்
குறையார்மதியஞ் சூடிமாதோர் கூறுடையானிடமாம்
முறையால்முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம்வணங்கு
திறையாரொளிசேர் செம்மையோங்கு தென்திருப்பூவணமே
மருவார்மதில்மூன் றொன்றவெய்து மாமலையான்மடந்தை
ஒருபால்பாக மாகச்செய்த உம்பர்பிரானவனூர்
கருவார்சாலி ஆலைமல்கி கழல்மன்னர்காத்தளித்த
திருவால்மலிந்த சேடர்வாழு தென்திருப்பூவணமே
போரார்மதமா உரிவைபோர்த்து பொடியணிமேனியனா
காரார்கடலில் நஞ்சமுண்ட கண்ணுதல்விண்ணவனூர்
பாரார்வைகை புனல்வாய்பரப்பி பன்மணிபொன்கொழித்து
சீரார்வாரி சேரநின்ற தென்திருப்பூவணமே
கடியாரலங்கல் கொன்றைசூடி காதிலோர்வார்குழையன்
கொடியார்வெள்ளை ஏறுகந்த கோவணவன்னிடமாம்
படியார்கூடி நீடியோங்கும் பல்புகழாற்பரவ
செடியார்வைகை சூழநின்ற தென்திருப்பூவணமே
கூரார்வாளி சிலையிற்கோத்து கொடிமதிற்கூட்டழித்த
போரார்வில்லி மெல்லியலாளோர் பால்மகிழ்ந்தானிடமாம்
ஆராவன்பில் தென்னர்சேரர் சோழர்கள்போற்றிசைப்ப
தேரார்வீதி மாடம்நீடு தென்திருப்பூவணமே
நன்றுதீதென் றொன்றிலாத நான்மறையோன்கழலே
சென்றுபேணி யேத்தநின்ற தேவர்பிரானிடமாங்
குன்றிலொன்றி ஓங்கமல்கு குளிர்பொழில்சூழ்மலர்மேல்
தென்றலொன்றி முன்றிலாரு தென்திருப்பூவணமே
பைவாயரவம் அரையிற்சாத்தி பாரிடம்போற்றிசைப்ப
மெய்வாய்மேனி நீறுபூசி ஏறுகந்தானிடமாம்
கைவாழ்வளையார் மைந்தரோடுங் கலவியினால்நெருங்கி
செய்வார்தொழிலின் பாடலோவா தென்திருப்பூவணமே
மாடவீதி மன்னிலங்கை மன்னனைமாண்பழித்து
கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையினார்க்கிடமாம்
பாடலோடும் ஆடலோங்கி பன்மணிபொன்கொழித்து
ஓடநீரால் வைகைசூழும் உயர்திருப்பூவணமே
பொய்யாவேத நாவினானும் பூமகள்காதலனுங்
கையாற்றொழுது கழல்கள்போற்ற கனலெரியானவனூர்
மையார்பொழிலின் வண்டுபாட வைகைமணிகொழித்து
செய்யார்கமல தேனரும்பு தென்திருப்பூவணமே
அலையார்புனலை நீத்தவரு தேரருமன்புசெய்யா
நிலையாவண்ணம் மாயம்வைத்த நின்மலன்றன்னிடமாம்
மலைபோல்துன்னி வென்றியோங்கும் மாளிகைசூழ்ந்தயலே
சிலையார்புரிசை பரிசுபண்ணு தென்திருப்பூவணமே
திண்ணார்புரிசை மாடமோங்கு தென்திருப்பூவணத்து
பெண்ணார்மேனி எம்மிறையை பேரியல்இன்றமிழால்
நண்ணார்உட காழிமல்கும் ஞானசம்பந்தன்சொன்ன
பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வதுவானிடையே

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பூவணநாதர் தேவியார் மின்னாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்

பண் தக்கேசி
அடையார்தம் புரங்கள்மூன்றும் ஆரழலில்லழுந்த
விடையார்மேனிய ராய்ச்சீறும் வித்தகர்மேயவிடம்
கடையார்மாடம் நீடியெங்குங் கங்குல்புறந்தடவ
படையார்புரிசை பட்டினஞ்சேர் பல்லவனீச்சரமே
எண்ணாரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரானிமையோர்
கண்ணாயுலகங் காக்கநின்ற கண்ணுதல்நண்ணுமிடம்
மண்ணார்சோலை கோலவண்டு வைகலுந்தேனருந்தி
பண்ணார்செய்யும் பட்டினத்து பல்லவனீச்சரமே
மங்கையங்கோர் பாகமாக வாள்நிலவார்சடைமேல்
கங்கையங்கே வாழவைத்த கள்வனிருந்தவிடம்
பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர்பொய்கையின்மேற்
பங்கயஞ்சேர் பட்டினத்து பல்லவனீச்சரமே
தாரார்கொன்றை பொன்றயங்க சாத்தியமார்பகலம்
நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன்மன்னுமிடம்
போரார்வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசைபாடலினாற்
பாரார்கின்ற பட்டினத்து பல்லவனீச்சரமே
மைசேர்கண்டர் அண்டவாணர் வானவருந்துதிப்ப
மெய்சேர்பொடியர் அடியாரேத்த மேவியிருந்தவிடங்
கைசேர்வளையார் விழைவினோடு காதன்மையாற்கழலே
பைசேரரவார் அல்குலார்சேர் பல்லவனீச்சரமே
குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிர
கழலினோசை யார்க்கஆடுங் கடவுளிருந்தவிடஞ்
சுழியிலாருங் கடலிலோத தெண்டிரை மொண்டெறி
பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே
வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடிவிண்ணோர்
வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன்மகிழ்ந்தவிடம்
மந்தலாய மல்லிகையும் புன்னைவளர்குரவின்
பந்தலாரும் பட்டினத்து பல்லவனீச்சரமே
தேரரக்கன் மால்வரையை தெற்றியெடுக்கஅவன்
தாரரக்கு திண்முடிகள் ஊன்றியசங்கரனூர்
காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலாமுணர
பாரரக்கம் பயில்புகாரில் பல்லவனீச்சரமே
அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன்நெடுமால்
தங்கணாலும் நேடநின்ற சங்கரன்தங்குமிடம்
வங்கமாரும் முத்தம்இப்பி வார்கடலூடலை
பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே
உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நகவேதிரிவார்
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிட
தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார்
பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே
பத்தரேத்தும் பட்டினத்து பல்லவனீச்சரத்தெம்
அத்தன்தன்னை அணிகொள்காழி ஞானசம்பந்தன்சொல்
சித்தஞ்சேர செப்புமாந்தர் தீவினைநோயிலராய்
ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடோ ங்குவரே

இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பல்லவனேசர் தேவியார் சவுந்தராம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப



திருச்சண்பைநகர்

பண் தக்கேசி
பங்மேறு மதிசேர்சடையார் விடையார்பலவேதம்
அங்கமாறும் மறைநான்கவையு மானார்மீனாரும்
வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கேநுனைமூக்கின்
சங்கமேறி முத்தமீனுஞ் சண்பைநகராரே
சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர்சுடர்க்கமல
போதகஞ்சேர் புண்ணியனார் பூதகணநாதர்
மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில்விண்ணார்ந்த
சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பைநகராரே
மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய்தவனுடைய
நிகரொப்பில்லா தேவிக்கருள்செய் நீலகண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம்பணிந்தே
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பைநகராரே
மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ்சதுவுண்ட
தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்தி
கையர்கட்டங் கத்தர்கரியின் உரியர்காதலாற்
சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பைநகராரே
கலமார்கடலுள் விடமுண்டமரர கமுதம்அருள்செய்த
குலமார்கயிலை குன்றதுடைய கொல்லையெருதேறி
நலமார்வெள்ளை நாளிகேரம் விரியார்நறும்பாளை
சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பைநகராரே
மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்துமெய்ம்மாலான்
சூகரஞ்சேர் எயிறுபூண்ட சோதியன்மேதக்க
ஆகரஞ்சேர் இப்பிமுத்தை அந்தண்வயலுக்கே
சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பைநகராரே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
இருளைப்புரையும் நிறத்திலரக்கன்ன்றனையீடழிவித்து
அருளைச்செய்யும் அம்மானேரா ரந்தண்கந்தத்தின்
மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார்திரைக்கையால்
தரளத்தோடு பவளமீனுஞ் சண்பைநகராரே
மண்டான்முழுதும் உண்டமாலும் மலர்மிசைமேலயனும்
எண்டானறியா வண்ணம்நின்ற இறைவன்மறையோதி
தண்டார்குவளை கள்ளருந்தி தாமரைத்தாதின்மேற்
பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பைநகராரே
போதியாரும் பிண்டியாரும் புகழலசொன்னாலும்
நீதியா கொண்டங்கருளும் நிமலனிருநான்கின்
மாதிசித்தர் மாமறையின் மன்னியதொன்னூலர்
சாதிகீத வர்த்தமானர் சண்பைநகராரே
வந்தியோடு பூசையல்லா போழ்தில்மறைபேசி
சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பைநகர்மேய
அந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம்பந்தன்சொல்
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதிசேர்வாரே

திருச்சிற்றம்பலம்
தேவார பதிகங்கள் முதல் திருமுறை பகுதி












திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
முதல் திருமுறை இரண்டாம் பகுதி
பாடல்கள்























©









திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
முதல் திருமுறை இரண்டாம் பகுதி
உள்ளுறை
திருப்பழனம் மின்பதிப்பு
திருக்கயிலாயம் மின்பதிப்பு
திரு அண்ணாமலை மின்பதிப்பு
திரு ஈங்கோய்மலை மின்பதிப்பு
திருநறையூர்ச்சித்தீச்சரம் மின்பதிப்பு
திருக்குடந்தைக்காரோணம் மின்பதிப்பு
திருக்கானூர் மின்பதிப்பு
திருப்புறவம் மின்பதிப்பு
திருவெங்குரு மின்பதிப்பு
திரு இலம்பையங்கோட்டூர் மின்பதிப்பு
திருஅச்சிறுபாக்கம் மின்பதிப்பு
திருஇடைச்சுரம் மின்பதிப்பு
திருக்கழுமலம் மின்பதிப்பு
கோயில் மின்பதிப்பு
சீர்காழி மின்பதிப்பு
திருவீழிமிழலை மின்பதிப்பு
திரு அம்பர்மாகாளம் மின்பதிப்பு
திருக்கடனாகைக்காரோணம் மின்பதிப்பு
திருநல்லம் மின்பதிப்பு
திருநல்லூர் மின்பதிப்பு
திருவடுகூர் மின்பதிப்பு
திரு ஆப்பனூர் மின்பதிப்பு
திரு எருக்கத்தம்புலியூர் மின்பதிப்பு
திருப்பிரமபுரம் திருவிருக்குக்குறள் மின்பதிப்பு

திருஆரூர் திருவிருக்குக்குறள் மின்பதிப்பு

திருவீழிமிழலை திருவிருக்குக்குறள் மின்பதிப்பு

திருமுதுகுன்றம் திருவிருக்குக்குறள் மின்பதிப்பு

திருஆலவாய் திருவிருக்குக்குறள் மின்பதிப்பு

திருவிடைமருதூர் திருவிருக்குக்குறள்
மின்பதிப்பு
திரு அன்னியூர் திருவிருக்குக்குறள் மின்பதிப்பு

திருப்புறவம் மின்பதிப்பு
திருச்சிராப்பள்ளி மின்பதிப்பு
திருக்குற்றாலம் மின்பதிப்பு
திருப்பரங்குன்றம் மின்பதிப்பு
திருக்கண்ணார்கோயில் மின்பதிப்பு
சீகாழி மின்பதிப்பு
திருக்கழுக்குன்றம் மின்பதிப்பு
திருப்புகலி மின்பதிப்பு
திருஆரூர் மின்பதிப்பு
திருஊறல் மின்பதிப்பு
திருக்கொடிமாடச்செங்குன்றூர் மின்பதிப்பு
திருப்பாதாளீச்சரம் மின்பதிப்பு
திருச்சிரபுரம் மின்பதிப்பு
திருவிடைமருதூர் மின்பதிப்பு
திருக்கடைமுடி மின்பதிப்பு
திருச்சிவபுரம் மின்பதிப்பு
திருவல்லம் மின்பதிப்பு
திருமாற்பேறு மின்பதிப்பு
திரு இராமனதீச்சரம் மின்பதிப்பு
திரு நீலகண்டம் மின்பதிப்பு
திருப்பிரமபுரம் மொழிமாற்று மின்பதிப்பு
திருப்பருப்பதம் மின்பதிப்பு
திருக்கள்ளில் மின்பதிப்பு
திருவையாறு திருவிராகம் மின்பதிப்பு
திருவிடைமருதூர் திருவிராகம் மின்பதிப்பு

திருவிடைமருதூர் திருவிராகம் மின்பதிப்பு

திருவலிவலம் திருவிராகம் மின்பதிப்பு
திருவீழிமிழலை திருவிராகம் மின்பதிப்பு

திருச்சிவபுரம் திருவிராகம் மின்பதிப்பு

திருக்கழுமலம் திருத்தாளச்சதி மின்பதிப்பு

சீகாழி திருஏகபாதம் மின்பதிப்பு
திருவெழுகூற்றிருக்கை மின்பதிப்பு
திருக்கழுமலம் மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருமுதுகுன்றம் மின்பதிப்பு
திருவீழிமிழலை மின்பதிப்பு
திருவேகம்பம் மின்பதிப்பு
திருப்பறியலூர் திருவீரட்டம் மின்பதிப்பு

திருப்பராய்த்துறை மின்பதிப்பு
திருத்தருமபுரம் மின்பதிப்பு

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
முதல் திருமுறை இரண்டாம் பகுதி
திருப்பழனம்
பண் தக்கேசி
வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெருதேறி
பூதஞ்சூழ பொலியவருவார் புலியினுரிதோலார்
நாதாஎனவும் நக்காஎனவும் நம்பாஎனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழனநகராரே
கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையும் உடையார்காலனை
புண்ணாறுதிர மெதிராறோட பொன்றப்புறந்தாளால்
எண்ணாதுதைத்த எந்தைபெருமான் இமவான்மகளோடும்
பண்ணார்களிவண் டறைபூஞ்சோலை பழனநகராரே
பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல்விழிகட்பேய்
உறையுமயான மிடமாவுடையார் உலகர்தலைமகன்
அறையும்மலர்கொண் டடியார்பரவி ஆடல்பாடல்செய்
பறையுஞ்சங்கும் பலியுமோவா பழனநகராரே
உரம்மன்னுயர்கோ டுலறுகூகை யலறுமயானத்தில்
இரவிற்பூதம் பாடஆடி எழிலாரலர்மேலை
பிரமன்றலையின் நறவமேற்ற பெம்மானெமையாளும்
பரமன்பகவன் பரமேச்சுவரன் பழனநகராரே
குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடையண்ணல்
கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற்காவேரி
நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண்டெதிருந்தி
பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும் பழனநகராரே
வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின்னொலியோவா
மூளைத்தலைகொண் டடியாரேத்த பொடியாமதிளெய்தார்
ஈளைப்படுகில் இலையார்தெங்கின் குலையார்வாழையின்
பாளைக்கமுகின் பழம்வீழ்சோலை பழனநகராரே
பொய்யாமொழியார் முறையாலேத்தி புகழ்வார்திருமேனி
செய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல் சேர்ந்தஅகலத்தார்
கையாடலினார் புனலால்மல்கு சடைமேற்பிறையோடும்
பையாடரவ முடனேவைத்தார் பழனநகராரே
மஞ்சோங்குயரம் உடையான்மலையை மாறாயெடுத்தான்றோள்
அஞ்சோடஞ்சும் ஆறுநான்கும் அடரவூன்றினார்
நஞ்சார்சுடலை பொடிநீறணிந்த நம்பான்வம்பாரும்
பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த பழனநகராரே
கடியார்கொன்றை சுரும்பின்மாலை கமழ்புன்சடையார்விண்
முடியாப்படிமூ வடியாலுலக முழுதுந்தாவிய
நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காணாத
படியார்பொடியா டகலமுடையார் பழனநகராரே
கண்டான்கழுவா முன்னேயோடி கலவைக்கஞ்சியை
உண்டாங்கவர்கள் உரைக்குஞ்சிறுசொல் லோரார்பாராட்ட
வண்டாமரையின் மலர்மேல்நறவ மதுவாய்மிகவுண்டு
பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழனநகராரே
வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணுபுரந்தன்னுள்
நாவுய்த்தனைய திறலான்மிக்க ஞானசம்பந்தன்
பேசற்கினிய பாடல்பயிலும் பெருமான்பழனத்தை
வாயிற்பொலிந்த மாலைபத்தும் வல்லார்நல்லாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஆபத்சகாயர் தேவியார் பெரியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கயிலாயம்
பண் தக்கேசி
பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல்திகழ்மார்பில்
கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர்கண்டத்தர்
இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்குமுனைச்சாரல்
கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலைமலையாரே
புரிகொள்சடையார் அடியர்க்கெளியார் கிளிசேர்மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த தேவர்பெருமானார்
பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்கவிருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனி கயிலைமலையாரே
மாவினுரிவை மங்கைவெருவ மூடிமுடிதன்மேல்
மேவுமதியும் நதியும்வைத்த விளைவர்கழலுன்னு
தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கல்முகவன்சேர்
காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலைமலையாரே
முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர்மதனன்றன்
தென்னீருருவம் அழியத்திருக்கண் சிவந்தநுதலினார்
மன்னீணர்மடுவும் படுகல்லறையின் உழுவைசினங்கொண்டு
கன்னீணர்வரைமே லிரைமுன்தேடுங் கயிலைமலையாரே
ஒன்றும்பலவு மாயவேட தொருவர்கழல்சேர்வார்
நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித்திரண்டெங்கு
தென்றியிருளில் திகைத்தகரிதண் சாரல்நெறியோடி
கன்றும்பிடியும் அடிவாரஞ்சேர் கயிலைமலையாரே
தாதார்கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளை
போதார்பாக மாகவைத்த புனிதர்பனிமல்கும்
மூதாருலகில் முனிவருடனாய் அறநான்கருள்செய்த
காதார்குழையர் வேதத்திரளர் கயிலைமலையாரே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண்பகழியால்
எடுத்தான்றிரள்தோள் முடிகள்பத்தும் இடியவிரல்வைத்தார்
கொடுத்தார்படைகள் கொண்டாராளா குறுகிவருங்கூற்றை
கடுத்தாங்கவனை கழலாலுதைத்தார் கயிலைமலையாரே
ஊணாப்பலிகொண் டுலகிலேற்றார் இலகுமணிநாகம்
பூணாணார மாகப்பூண்டார் புகழுமிருவர்தாம்
பேணாவோடி நேடவெங்கும் பிறங்குமெரியாகி
காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலைமலையாரே
விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச்சாக்கியர்
பொருதுபகரும் மொழியைக்கொள்ளார் புகழ்வார்க்கணியராய்
எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால் இரந்துண்டிகழ்வார்கள்
கருதும்வண்ணம் உடையார்போலுங் கயிலைமலையாரே
போரார்கடலிற் புனல்சூழ்காழி புகழார்சம்பந்தன்
காரார்மேகங் குடிகொள்சாரற் கயிலைமலையார்மேல்
தேராவுரைத்த செஞ்சொல்மாலை செப்புமடியார்மேல்
வாராபிணிகள் வானோருலகில் மருவும்மனத்தாரே
சுவாமிபெயர் கயிலாயநாதர் தேவியார் பார்வதியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திரு அண்ணாமலை
பண் தக்கேசி
பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார்
தூமாமழைநின் றதிரவெருவி தொறுவின்நிரையோடும்
ஆமாம்பிணைவ தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே
மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார்
நஞ்சைக்கண்ட தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும்
வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணமதுவேறி
அஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே
ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும்
ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண்
ஆனைத்திரள்வ தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே
இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
தழைத்தசடையார் விடையொன்றேறி தரியார்புரமெய்தார்
பிழைத்தபிடியை காணாதோடி பெருங்கைமதவேழம்
அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே
உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
செருவில்லொருகால் வளையஊன்றி செந்தீயெழுவித்தார்
பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணிமுத்தம்
அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே
எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில்
கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத
அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே
வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில்
முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல்
அந்திப்பிறைவ தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே
மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள்
நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறையஅருள்செய்தார்
திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட
அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே
தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை
மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு
கூடிக்குறவர் மடவார்குவித்து கொள்ளவம்மினென்
றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே
தட்டையிடுக்கி தலையைப்பறித்து சமணேநின்றுண்ணும்
பிட்டர்சொல்லு கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள்
வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னியுறைகோயில்
அட்டமாளி திரள்வந்தணையும் அண்ணாமலையாரே
அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை
நல்லார்பரவ படுவான்காழி ஞானசம்பந்தன்
சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று
வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திரு ஈங்கோய்மலை
பண் தக்கேசி
வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடி
தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமா
கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்த
ஏனத்திரள்வ திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே
சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமா
கோலச்சடைகள்தாழ குழல்யாழ் மொந்தைகொட்டவே
பாலொத்தனைய மொழியாள்காண ஆடும்பரமனார்
ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே
கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார்
விண்கொள்மதிசேர் சடையார்விடையார் கொடியார்வெண்ணீறு
பெண்கொள்திருமார் பதனில்பூசும் பெம்மானெமையாள்வார்
எண்கும்அரியு திரியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே
மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடுங்
குறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன்சடைதாழ
பறையுங்குழலுங் கழலுமார படுகாட்டெரியாடும்
இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே
நொந்தசுடலை பொடிநீறணிவார் நுதல்சேர்கண்ணினார்
கந்தமலர்கள் பலவும்நிலவு கமழ்புன்சடைதாழ
பந்தண்விரலாள் பாகமாக படுகாட்டெரியாடும்
எந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய்மலையாரே
நீறாரகலம் உடையார்நிரையார் கொன்றையரவோடும்
ஆறார்சடையார் அயில்வெங்கணையால் அவுணர்புரம்மூன்றுஞ்
சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்கண்அடல்வெள்ளை
ஏறார்கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே
வினையாயினதீர தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை
நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு
தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும்
எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே
பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய
அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார்விரல்தன்னால்
நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த
இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே
வரியார்புலியின் உரிதோலுடையான் மலையான்மகளோடும்
பிரியாதுடனாய் ஆடல்பேணும் பெம்மான்திருமேனி
அரியோடயனும் அறியாவண்ணம் அளவில்பெருமையோ
டெரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமான் ஈங்கோய்மலையாரே
பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்குசமணரும்
மண்டைகலனா கொண்டுதிரியும் மதியில்தேரரும்
உண்டிவயிறார் உரைகள்கொள்ளா துமையோடுடனாகி
இண்டைச்சடையான் இமையோர்பெருமான் ஈங்கோய்மலையாரே
விழவாரொலியும் முழவும்ஓவா வேணுபுரந்தன்னுள்
அழலார்வண்ண தடிகளருள்சேர் அணிகொள்சம்பந்தன்
எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன்
கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலைகளைவாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநறையூர்ச்சித்தீச்சரம்
பண் தக்கேசி

பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய்நாகத்தர்
கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர்கங்காளர்
மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையில்மகிழ்வெய்தி
சிறைகொள்வண்டு தேனார்நறையூர சித்தீச்சரத்தாரே
பொங்கார்சடையர் புனலர்அனலர் பூதம்பாடவே
தங்காதலியு தாமுமுடனா தனியோர்விடையேறி
கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக்குளிர்பொய்கை
செங்கால்அனமும் பெடையுஞ்சேரும் சித்தீச்சரத்தாரே
முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல்
பொடிகொள்நூலர் புலியினதளர் புரிபுன்சடைதாழ
கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலாரினம்பா
கொடிகொள்மாட குழாமார்நறையூர சித்தீச்சரத்தாரே
பின்றாழ்சடைமேல் நகுவெண்டலையர் பிரமன்றலையேந்தி
மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரும்ஒருகாதர்
பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்துசெண்பகஞ்
சென்றார்செல்வ திருவார்நறையூர சித்தீச்சரத்தாரே
நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர்
பாரார்புகழால் பத்தர்சித்தர் பாடியாடவே
தேரார்வீதி முழவார்விழவின் ஒலியுந்திசைசெல்ல
சீரார்கோலம் பொலியும்நறையூர சித்தீச்சரத்தாரே
நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொள்மலர்மாலை
தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனி பவளத்தெழிலார்வ
தீண்டுமாடம் எழிலார்சோலை இலங்குகோபுர
தீண்டுமதி திகழும்நறையூர சித்தீச்சரத்தாரே
குழலார்சடையர் கொக்கின்இறகர் கோலநிறமத்த
தழலார்மேனி தவளநீற்றர் சரிகோவணக்கீளர்
எழிலார்நாகம் புலியினுடைமேல் இசைத்துவிடையேறி
கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச்சரத்தாரே
கரையார்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலைமலைதன்னை
வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்துமனமொன்றி
உரையார்கீதம் பாடநல்ல வுலப்பிலருள்செய்தார்
திரையார்புனல்சூழ் செல்வநறையூர சித்தீச்சரத்தாரே
நெடியான்பிரமன் நேடிக்காணார் நினைப்பார்மனத்தாராய்
அடியாரவரும் அருமாமறையும் அண்டத்தமரரும்
முடியால்வணங்கி குணங்களேத்தி முதல்வாஅருளென்ன
செடியார்செந்நெல் திகழும்நறையூர சித்தீச்சரத்தாரே
நின்றுண்சமணர் இருந்துண்தேரர் நீண்டபோர்வையார்
ஒன்றுமுணரா ஊமர்வாயில் உரைகேட்டுழல்வீர்காள்
கன்றுண்பயப்பா லுண்ணமுலையில் கபாலமயல்பொழி
சென்றுண்டார்ந்து சேரும்நறையூர சித்தீச்சரத்தாரே
குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ்சுரபுன்னை
செயிலார்பொய்கை சேரும்நறையூர சித்தீச்சரத்தாரை
மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்குசம்பந்தன்
பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவநாசமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்குடந்தைக்காரோணம்
பண் தக்கேசி
வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை
நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றிஒற்றைக்கண்
கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன்குடமூக்கிற்
காரார்கண்ட தெண்டோ ளெந்தை காரோணத்தாரே
முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும்மேத்தும்
படியார்பவள வாயார்பலரும் பரவிப்பணிந்தேத்த
கொடியார்விடையார் மாடவீதி குடந்தைக்குழகாருங்
கடியார்சோலை கலவமயிலார் காரோணத்தாரே
மலையார்மங்கை பங்கரங்கை அனலர்மடலாருங்
குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார்குடமூக்கின்
முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவாமதியினார்
கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோணத்தாரே
போதார்புனல்சேர் கந்தமுந்தி பொலியவ்வழகாரு
தாதார்பொழில்சூழ தெழிலார்புறவி லந்தண்குடமூக்கின்
மாதார்மங்கை பாகமாக மனைகள்பலிதேர்வார்
காதார்குழையர் காளகண்டர் காரோணத்தாரே
பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லா
தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடிபோற்ற
கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற்கிளிப்பிள்ளை
காவார்பொழில்சூழ தழகார்குடந்தை காரோணத்தாரே
மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னேஅனல்வாளி
கோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர்குடமூக்கில்
தீர்ப்பாருடலில் அடுநோயவலம் வினைகள்நலியாமை
காப்பார்காலன் அடையாவண்ணங் காரோணத்தாரே
ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந்துழல்வாழ்க்கை
மானார்தோலார் புலியினுடையார் கரியினுரிபோர்வை
தேனார்மொழியார் திளைத்தங்காடி திகழுங்குடமூக்கிற்
கானார்நட்டம் உடையார்செல்வ காரோணத்தாரே
வரையார்திரள்தோள் மதவாளரக்கன் எடுப்பமலைசேரும்
விரையார்பாதம் நுதியாலூன்ற நெரிந்துசிரம்பத்தும்
உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள்கொடுத்தாருங்
கரையார்பொன்னி சூழ்தண்குடந்தை காரோணத்தாரே
கரியமாலுஞ் செய்யபூமேல் அயனுங்கழறிப்போய்
அரியவண்ட தேடிப்புக்கும் அளக்கவொண்கிலார்
தெரியவரிய தேவர்செல்வ திகழுங்குடமூக்கிற்
கரியகண்டர் காலகாலர் காரோணத்தாரே
நாணார்அமணர் நல்லதறியார் நாளுங்குரத்திகள்
பேணார்தூய்மை மாசுகழியார் பேசேலவரோடுஞ்
சேணார்மதிதோய் மாடமல்கு செல்வநெடுவீதி
கோணாகரமொன் றுடையார்குடந்தை காரோணத்தாரே
கருவார்பொழில்சூழ தழகார்செல்வ காரோணத்தாரை
திருவார்செல்வம் மல்குசண்பை திகழுஞ்சம்பந்தன்
உருவார்செஞ்சொல் மாலையிவைப துரைப்பாருலகத்து
கருவாரிடும்பை பிறப்பதறுத்து கவலைகழிவாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சோமநாதர் தேவியார் தேனார்மொழியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கானூர்
பண் தக்கேசி
வானார்சோதி மன்னுசென்னி வன்னிபுனங்கொன்றை
தேனார்போது தானார்கங்கை திங்களொடுசூடி
மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலையாடுவார்
கானூர்மேய கண்ணார்நெற்றி ஆனூர் செல்வரே
நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடைதன்மேலோர்
ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றையெழிலார
போந்தமென்சொல் இன்பம்பயந்த மைந்தரவர்போலாங்
காந்தள்விம்மு கானூர்மேய சாந்தநீற்றாரே
சிறையார்வண்டு தேனும்விம்மு செய்யமலர்க்கொன்றை
மறையார்பாட லாடலோடு மால்விடைமேல்வருவார்
இறையார்வந்தென் இல்புகுந்தென் எழில்நலமுங்கொண்டார்
கறையார்சோலை கானூர்மேய பிறையார்சடையாரே
விண்ணார்திங்கள் கண்ணிவெள்ளை மாலையதுசூடி
தண்ணாரக்கோ டாமைபூண்டு தழைபுன்சடைதாழ
எண்ணாவந்தென் இல்புகுந்தங் கெவ்வநோய்செய்தான்
கண்ணார்சோலை கானூர்மேய விண்ணோர்பெருமானே
தார்கொள்கொன்றை கண்ணியோடு தண்மதியஞ்சூடி
சீர்கொள்பாட லாடலோடு சேடராய்வந்து
ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென் னுள்வெந்நோய்செய்தார்
கார்கொள்சோலை கானூர்மேய கறைக்கண்டத்தாரே
முளிவெள்ளெலும்பு நீறுநூலும் மூழ்குமார்பராய்
எளிவந்தார்போல் ஐயமென்றென் இல்லேபுகுந்துள்ள
தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேறலார்பூவில்
களிவண்டியாழ்செய் கானூர்மேய ஒளிவெண்பிறையாரே
மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல்செய்திங்கே
பூவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம்பலபேசி
போவார்போல மால்செய்துள்ளம் புக்கபுரிநூலர்
தேவார்சோலை கானூர்மேய தேவதேவரே
தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணிநல்ல
முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார்
குமிழின்மேனி தந்துகோல நீர்மையதுகொண்டார்
கமழுஞ்சோலை கானூர்மேய பவளவண்ணரே
அந்தமாதி அயனுமாலும் ஆர்க்குமறிவரியான்
சிந்தையுள்ளும் நாவின்மேலுஞ் சென்னியுமன்னினான்
வந்தென்னுள்ளம் புகுந்துமாலை காலையாடுவான்
கந்தமல்கு கானூர்மேய எந்தைபெம்மானே
ஆமையரவோ டேனவெண்கொம் பக்குமாலைபூண்
டாமோர்கள்வர் வெள்ளர்போல உள்வெந்நோய்செய்தார்
ஓமவேத நான்முகனுங் கோணாகணையானுஞ்
சேமமாய செல்வர்கானூர் மேயசேடரே
கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர்மேயானை
பழுதில்ஞான சம்பந்தன்சொல் பத்தும்பாடியே
தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித்துதித்துநின்
றழுதுநக்கும் அன்புசெய்வார் அல்லலறுப்பாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் செம்மேனிநாயகர் தேவியார் சிவயோகநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புறவம்
பண் தக்கேசி
நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்துநயனத்தால்
சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியாவிழிசெய்தான்
புறவமுறைவண் பதியாமதியார் புரமூன்றெரிசெய்த
இறைவனறவன் இமையோரேத்த உமையோடிருந்தானே
உரவன்புலியின் உரிதோலாடை உடைமேல்படநாகம்
விரவிவிரிபூங் கச்சாவசைத்த விகிர்தன்னுகிர்தன்னால்
பொருவெங்களிறு பிளிறவுரித்து புறவம்பதியாக
இரவும்பகலும் இமையோரேத்த உமையோடிருந்தானே
பந்தமுடைய பூதம்பாட பாதஞ்சிலம்பார
கந்தமல்கு குழலிகாண கரிகாட்டெரியாடி
அந்தண்கடல்சூழ தழகார்புறவம் பதியாவமர்வெய்தி
எந்தம்பெருமான் இமையோரேத்த உமையோடிருந்தானே
நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங்
கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள்கமழ்கொன்றை
புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம்பதியாக
எனையாளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே
செங்கண்அரவும் நகுவெண்டலையும் முகிழ்வெண்திங்களு
தங்குசடையன் விடையனுடையன் சரிகோவணஆடை
பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம்பதியாக
எங்கும்பரவி இமையோரேத்த உமையோடிருந்தானே
பின்னுசடைகள் தாழக்கேழல் எயிறுபிறழப்போய்
அன்னநடையார் மனைகள்தோறும் அழகார்பலிதேர்ந்து
புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் புறவம்பதியாக
என்னையுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே
உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோழந்தேவர்
விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர்கொடியண்ணல்
பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலை புறவம்பதியாக
எண்ணிற்சிறந்த இமையோரேத்த உமையோடிருந்தானே
விண்டானதிர வியனார்கயிலை வேரோடெடுத்தான்றன்
திண்டோ ளுடலும் முடியுநெரி சிறிதேயூன்றிய
புண்டானொழிய அருள்செய்பெருமான் புறவம்பதியாக
எண்டோ ளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே
நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காண்கில்லா
படியாமேனி யுடையான்பவள வரைபோல்திருமார்பிற்
பொடியார்கோலம் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
இடியார்முழவார் இமையோரேத்த உமையோடிருந்தானே
ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர்
கோலும்மொழிகள் ஒழியக்குழுவு தழலுமெழில்வானும்
போலும்வடிவும் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
ஏலும்வகையான் இமையோரேத்த உமையோடிருந்தானே
பொன்னார்மாடம் நீடுஞ்செல்வ புறவம்பதியாக
மின்னாரிடையாள் உமையாளோடும் இருந்தவிமலனை
தன்னார்வஞ்செய் தமிழின்விரகன் உரைத்ததமிழ்மாலை
பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோகந்தானே
திருப்புறவம் என்பதும் சீகாழிக்கொருபெயர்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவெங்குரு
பண் குறிஞ்சி
காலைநன் மாமலர் கொண்டடி பரவி
கைதொழு மாணியை கறுத்தவெங் காலன்
ஓலம திடமுன் உயிரொடு மாள
உதைத்தவ னுமையவள் விருப்பனெம் பெருமான்
மாலைவ தணுக ஓதம்வ துலவி
மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி
வேலைவ தணையுஞ் சோலைகள் சூழ்ந்த
வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே
பெண்ணினை பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற்
பிறையொடும் அரவினை யணி தழகாக
பண்ணினை பாடி யாடிமுன் பலிகொள்
பரமரெம் மடிகளார் பரிசுகள் பேணி
மண்ணினை மூடி வான்முக டேறி
மறிதிரை கடல்முக தெடுப்பமற் றுயர்ந்து
விண்ணள வோங்கி வந்திழி கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே
ஓரியல் பில்லா உருவம தாகி
ஒண்டிறல் வேடன துருவது கொண்டு
காரிகை காண தனஞ்சயன் றன்னை
கறுத்தவற் களித்துடன் காதல்செய் பெருமான்
நேரிசை யாக அறுபத முரன்று
நிரைமலர தாதுகள் மூசவிண் டுதிர்ந்து
வேரிக ளெங்கும் விம்மிய சோலை
வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே
வண்டணை கொன்றை வன்னியு மத்தம்
மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டணி சடையர் விடையினர் பூதங்
கொடுகொட்டி குடமுழா கூடியு முழவ
பண்டிகழ் வாக பாடியோர் வேதம்
பயில்வர்முன் பாய்புனற் கங்கையை சடைமேல்
வெண்பிறை சூடி உமையவ ளோடும்
வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே
சடையினர் மேனி நீறது பூசி
தக்கைகொள் பொக்கண மிட்டுட னா
கடைதொறும் வந்து பலியது கொண்டு
கண்டவர் மனமவை கவர தழகாக
படையது ஏந்தி பைங்கயற் கண்ணி
உமையவள் பாகமு மமர்ந்தருள் செய்து
விடையொடு பூதஞ் சூழ்தர சென்று
வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே
கரைபொரு கடலில் திரையது மோத
கங்குல்வ தேறிய சங்கமு மிப்பி
உரையுடை முத்தம் மணலிடை வைகி
ஓங்குவா னிருளற துரப்பவெண் டிசையும்
புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள்
புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த
விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும்
வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே
வல்லிநுண் ணிடையாள் உமையவள் தன்னை
மறுகிட வருமத களிற்றினை மயங்க
ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல்
கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில்
நல்லற முரைத்து ஞானமோ டிருப்ப
நலிந்திட லுற்று வந்தவ கருப்பு
வில்லியை பொடிபட விழித்தவர் விரும்பி
வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே
பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடு
பலதலை முடியொடு தோளவை நெரிய
ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே
ஒளிதிகழ் வாளது கொடு தழகாய
கோங்கொடு செருந்தி கூவிள மத்தம்
கொன்றையுங் குலாவிய செஞ்சடை செல்வர்
வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே
ஆறுடை சடையெம் அடிகளை காண
அரியொடு பிரமனும் அளப்பதற் காகி
சேறிடை திகழ்வா னத்திடை புக்குஞ்
செலவற தவிர்ந்தனர் எழிலுடை திகழ்வெண்
நீறுடை கோல மேனியர் நெற்றி
கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த
வேறெமை யாள விரும்பிய விகிர்தர்
வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே
பாடுடை குண்டர் சாக்கியர் சமணர்
பயில்தரு மறவுரை விட்டழ காக
ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன்
எல்லையில் வேள்வியை தகர்த்தருள் செய்து
காடிடை கடிநாய் கலந்துடன் சூழ
கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய
வேடுடை கோலம் விரும்பிய விகிர்தர்
வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே
விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்
வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரை
நண்ணிய நூலன் ஞானச ம்பந்தன்
நவின்றயிவ் வாய்மொழி நலம்மிகு பத்தும்
பண்ணியல் பாக பத்திமை யாலே
பாடியு மாடியும் பயில வல்லார்கள்
விண்ணவர் விமானங் கொடுவர வேறி
வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே
இதுவுஞ் சீகாழிக்குப்பெயர்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திரு இலம்பையங்கோட்டூர்
பண் குறிஞ்சி
மலையினார் பருப்பத துருத்தி மாற்பேறு
மாசிலா சீர்மறை காடுநெ தானம்
நிலையினான் எனதுரை தனதுரை யாக
நீறணி தேறுக தேறிய நிமலன்
கலையினார் மடப்பிணை துணையொடு துயில
கானலம் பெடைபுல்கி கணமயி லாலும்
இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே
திருமலர கொன்றையான் நின்றியூர் மேயான்
தேவர்கள் தலைமகன் திருக்கழி பாலை
நிருமல னெனதுரை தனதுரை யாக
நீறணி தேறுக தேறிய நிமலன்
கருமலர கமழ்சுனை நீள்மலர குவளை
கதிர்முலை யிளையவர் மதிமுக துலவும்
இருமலர தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்
இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே
பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம்
பண்டுவெங் கூற்றுதை தடியவர கருளுங்
காலனாம் எனதுரை தனதுரை யா
கனலெரி யங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய
நீர்மலர குவளைகள் தாதுவிண் டோ ங்கும்
ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையா பேணியென் எழில்கொள் வதியல்பே
உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன்
ஒற்றியூ ருறையுமண் ணாமலை யண்ணல்
விளம்புவா னெனதுரை தனதுரை யாக
வெள்ளநீர் விரிசடை தாங்கிய விமலன்
குளம்புற கலைதுள மலைகளுஞ் சிலம்ப
கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள
இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே
தேனுமா யமுதமா தெய்வமு தானா
தீயொடு நீருடன் வாயுவா தெரியில்
வானுமா மெனதுரை தனதுரை யாக
வரியரா வரைக்கசை துழிதரு மைந்தன்
கானமான் வெருவுற கருவிர லூகங்
கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்
ஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர்
இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே
மனமுலாம் அடியவர கருள்புரி கின்ற
வகையலாற் பலிதிரி துண்பிலான் மற்றோர்
தனமிலா னெனதுரை தனதுரை யாக
தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன்
புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம்
பொன்னொடு மணிகொழி தீண்டிவ தெங்கும்
இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர்
இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே
நீருளான் தீயுளான் அந்தர துள்ளான்
நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்
ஊருளான் எனதுரை தனதுரை யாக
ஒற்றைவெள் ளேறுக தேறிய வொருவன்
பாருளார் பாடலோ டாடல றாத
பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே
வேருலா மாழ்கடல் வருதிரை யிலங்கை
வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில்
ஆருலா மெனதுரை தனதுரை யாக
ஆகமோ ரரவணி துழிதரு மண்ணல்
வாருலா நல்லன மாக்களுஞ் சார
வாரண முழிதரும் மல்லலங் கானல்
ஏருலாம் பொழிலணி இலம்பையங் கோட்டூர்
இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே
கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன்
கீழடி மேல்முடி தேர்ந்தள கில்லா
உளமழை யெனதுரை தனதுரை யாக
வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன்
வளமழை யெனக்கழை வளர்துளி சோர
மாசுண முழிதரு மணியணி மாலை
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே
உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி
உழிதரு சமணருஞ் சாக்கி பேய்கள்
பெருஞ்செல்வ னெனதுரை தனதுரை யாக
பெய்பலி கென்றுழல் பெரியவர் பெருமான்
கருஞ்சுனை முல்லைநன் பொன்னடை வேங்கை
களிமுக வண்டொடு தேனின முரலும்
இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்
இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே
கந்தனை மலிகனை கடலொலி யோதங்
கானலங் கழிவளர் கழுமல மென்னும்
நந்தியா ருறைபதி நால்மறை நாவன்
நற்றமிழ கின்துணை ஞானசம் பந்தன்
எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர்
இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய்
வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும்
வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சந்திரசேகரர் தேவியார் கோடேந்துமுலையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஅச்சிறுபாக்கம்
பண் குறிஞ்சி
பொன்றிரண் டன்ன புரிசடை புரள
பொருகடற் பவளமொ டழல்நிறம் புரை
குன்றிரண் டன்ன தோளுடை யகலங்
குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை
மெல்லிய லாளையோர் பாகமா பேணி
அன்றிரண் டுருவ மாயவெம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே
தேனினு மினியர் பாலன நீற்றர்
தீங்கரும் பனையர்த திருவடி தொழுவார்
ஊன துருக உவகைகள் தருவார்
உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்
வானக மிறந்து வையகம் வணங்க
வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்
ஆனையி னுரிவை போர்த்தவெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே
காரிரு ளுருவ மால்வரை புரை
களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி
நீருரு மகளை நிமிர்சடை தாங்கி
நீறணி தேறுக தேறிய நிமலர்
பேரரு ளாளர் பிறவியில் சேரார்
பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ
ஆரிருள் மாலை ஆடுமெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே
மைம்மலர கோதை மார்பின ரெனவும்
மலைமக ளவளொடு மருவின ரெனவும்
செம்மலர பிறையுஞ் சிறையணி புனலுஞ்
சென்னிமே லுடையரெஞ்
தம்மல ரடியொன் றடியவர் பரவ
தமிழ்ச்சொலும் வடசொலு தாள்நிழற் சேர
அம்மலர கொன்றை யணிந்த வெம்மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே
விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்
விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்
பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்
பலபுக ழல்லது பழியில ரெனவும்
எண்ணலா காத இமையவர் நாளும்
ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற
அண்ணலா னூர்தி ஏறுமெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே
நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க
நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசி
தோடொரு காதினிற் பெய்துவெய் தாய
சுடலையி லாடுவர் தோலுடை யா
காடரங் கா கங்குலும் பகலுங்
கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த
ஆடர வாட ஆடுமெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே
ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி
இளங்கிளை யரிவையொ டொருங்குட னாகி
கூறுமொன் றருளி கொன்றை தாருங்
குளிரிள மதியமுங் கூவிள மலரும்
நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்
மகிழிள வன்னியும் இவைநலம் பகர
ஆறுமோர் சடைமேல் அணிந்த வெம்மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே
கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்
கதிர்முடி சுடர்விட கவரியுங் குடையும்
பிச்சமும் பிறவும் பெண்ணணங் காய
பிறைநுத லவர்தமை பெரியவர் பேண
பச்சமும் வலியுங் கருதிய வரக்கன்
பருவரை யெடுத்ததிண் டோ ள்களை யடர்வி
தச்சமும் அருளுங் கொடுத்த வெம்மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே
நோற்றலா ரேனும் வேட்டலா
நுகர்புகர் சாந்தமோ டேந்திய மாலை
கூற்றலா ரேனும் இன்னவா றென்றும்
எய்தலா காததோர் இயல்பினை யுடையார்
தோற்றலார் மாலும் நான்முக முடைய
தோன்றலும் அடியொடு முடியுற தங்கள்
ஆற்றலாற் காணா ராயவெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே
வாதுசெய் சமணுஞ் சாக்கியப்பேய்கள்
நல்வினை நீக்கிய வல்வினை யாளர்
ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார்
உள்கலா காததோர் இயல்பினை யுடையார்
வேதமும் வேத நெறிகளு மாகி
விமலவே டத்தொடு கமலமா மதிபோல்
ஆதியும் ஈறும் ஆயவெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே
மைச்செறி குவளை தவளைவாய் நிறைய
மதுமலர பொய்கையிற் புதுமலர் கிழி
பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழி
பதியவ ரதிபதி கவுணியர் பெருமான்
கைச்சிறு மறியவன் கழலலாற் பேணா
கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்
டச்சிறு பாக்க தடிகளை யேத்தும்
அன்புடை யடியவர் அருவினை யிலரே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பாக்கபுரேசர் தேவியார் சுந்தரமாதம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திரு இடைச்சுரம்
பண் குறிஞ்சி
வரிவள ரவிரொளி யரவரை தாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடி
கரிவளர் தருகழல் கால்வல னேந்தி
கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழில் இனமயி லால
வெண்ணிற தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே
ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர்
அழகினை யருளுவர் குழகல தறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
நடுவிரு ளாடுவர் கொன்றை தாரார்
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே
கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
வானமும் நிலமையும் இருமையு மானார்
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடு கமழ
நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே
கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர்
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடமுலை யயலன கருங்குரு தேறி
வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்
இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே
கார்கொண்ட கடிகமழ் விரிமலர கொன்றை
கண்ணியர் வளர்மதி கதிர்விட கங்கை
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ்
செழும்புன லனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே
தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
சுடலையி னாடுவர் தோலுடை யாக
பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்
பேயுட னாடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே
கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி
ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்
மன்னிய கவட்டிடை புணர்குயி லாலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே
தேங்கமழ் கொன்றை திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசை திங்களுஞ் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமு முடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதி தலம்பி
தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே
பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர்
பலபுக ழல்லது பழியிலர் தாமு
தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்
தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
மலையிலங் கருவிகள் மணமுழ வதிர
மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல்
இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே
பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா
அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும்
அன்புடை யடியவர கணியரு மாவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளை
கயலினம் வயலிள வாளைகள் இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே
மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்
மருவிய வயல்தனில் வருபுனற் காழி
சடைச்சுர துறைவதோர் பிறையுடை யண்ணல்
சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
புடைச்சுர தருவரை பூக்கமழ் சாரல்
புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த
இடைச்சுர மேத்திய இசையொடு பாடல்
இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் இடைச்சுரநாதர் தேவியார் இமயமடக்கொடியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கழுமலம்
பண் குறிஞ்சி
அயிலுறு படையினர் விடையினர் முடிமேல்
அரவமும் மதியமும் விரவிய அழகர்
மயிலுறு சாயல் வனமுலை யொருபால்
மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்
பயில்வுறு சரிதையர் எருதுக தேறி
பாடியு மாடியும் பலிகொள்வர் வலிசேர்
கயிலையும் பொதியிலும் இடமென வுடையார்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே
கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்
கொடுமுடி யுறைபவர் படுதலை கையர்
பண்டல ரயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்
படர்சடை யடிகளார் பதியத னயலே
வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும்
மறிகடல் திரைகொணர தெற்றிய கரைமேற்
கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே
எண்ணிடை யொன்றினர் இரண்டின ருருவம்
எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்
மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம்
வகுத்தன ரேழிசை எட்டிருங் கலைசேர்
பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர்
பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட
கண்ணிடை கனலினர் கருதிய கோயில்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே
எரியொரு கரத்தினர் இமையவர கிறைவர்
ஏறுக தேறுவர் நீறுமெய் பூசி
திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள்
தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி
வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச
மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த
கரியுரி மருவிய அடிகளு கிடமாங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே
ஊரெதிர திடுபலி தலைகல னாக
உண்பவர் விண்பொலி திலங்கிய வுருவர்
பாரெதிர தடிதொழ விரைதரு மார்பிற்
படஅர வாமை கணிந்தவர கிடமாம்
நீரெதிர திழிமணி நித்தில முத்தம்
நிரைசொரி சங்கமொ டொண்மணி வரன்றி
காரெதிர தோதம்வன் திரைகரை கெற்றுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே
முன்னுயிர தோற்றமும் இறுதியு மாகி
முடியுடை அமரர்கள் அடிபணி தேத்த
பின்னிய சடைமிசை பிறைநிறை வித்த
பேரரு ளாளனார் பேணிய கோயில்
பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ்
சாந்தமு மேந்திய கையின ராகி
கன்னியர் நாடொறும் வேடமே பரவுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே
கொலைக்கணி தாவரு கூற்றுதை செய்தார்
குரைகழல் பணிந்தவர கருளிய பொருளின்
நிலைக்கணி தாவர நினையவல் லார்தம்
நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலரு கிடமாம்
மலைக்கணி தாவர வன்றிரை முரல
மதுவிரி புன்னைகள் முத்தென வரும்ப
கலைக்கணங் கானலின் நீழலில் வாழுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே
புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன்
பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்டோ ள்
பயம்பல படவடர தருளிய பெருமான்
பரிவொடு மினிதுறை கோயில தாகும்
வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும்
வேறுவே றுகங்களிற் பெயருள தென்ன
கயம்பல படக்கடற் றிரைகரை கெற்றுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே
விலங்கலொன் றேந்திவன் மழைதடு தோனும்
வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம்
பலங்களால் நேடியும் அறிவரி தாய
பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில்
மலங்கிவன் றிரைவரை எனப்பர தெங்கும்
மறிகட லோங்கிவெள் ளிப்பியுஞ் சுமந்து
கலங்கடன் சரக்கொடு நிரக்கவ தேறுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே
ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும்
அறிவிலா சமணரு தேரருங் கணிசேர்
நோம்பல தவமறி யாதவர் நொடிந்த
மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனி
சாம்பலும் பூசிவெண் டலைகல னாக
தையலா ரிடுபலி வையக தேற்று
காம்பன தோளியொ டினிதுறை கோயில்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே
கலிகெழு பாரிடை யூரென வுளதாங்
கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல்
வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர்
வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்
ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும்
உண்மையி னால்நினை தேத்தவல் லார்மேல்
மெலிகெழு துயரடை யாவினை சிந்தும்
விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

கோயில்
பண் குறிஞ்சி
கற்றாங் கெரியோம்பி கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லை சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரை
பறப்பை படுத்தெங்கும் பசுவே டெரியோம்புஞ்
சிறப்பர் வாழ்தில்லை சிற்றம் பலமேய
பிறப்பில் பெருமானை பின்தாழ் சடையானை
மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே
மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதி
கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள்
பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்த
செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே
நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்ட
பிறைவ திறைதாக்கும் பேரம் பலந்தில்லை
சிறைவண் டறையோவா சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே
செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கி
செல்வ மதிதோ செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லை சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே
வருமா தளிர்மேனி மாதோர் பாகமா
திருமா தில்லையு சிற்றம் பலமேய
கருமான் உரியாடை கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே
அலையார் புனல்சூடி யாக தொருபாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்த
சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னை
தலையால் வணங்குவார் தலையா னார்களே
கூர்வாள் அரக்கன்றன் வலியை குறைவித்து
சீரா லேமல்கு சிற்றம் பலமேய
நீரார் சடையானை நித்த லேத்துவார்
தீரா நோயெல்லா தீர்தல் திண்ணமே
கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
காணார் கழலேத்த கனலாய் ஓங்கினான்
சேணார் வாழ்தில்லை சிற்றம் பலமேத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே
பட்டை துவராடை படிமங் கொண்டாடும்
முட்டை கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லை சிற்றம் பலமேய
நட்ட பெருமானை நாளு தொழுவோமே
ஞால துயர்காழி ஞான சம்பந்தன்
சீல தார்கொள்கை சிற்றம் பலமேய
சூல படையானை சொன்ன தமிழ்மாலை
கோல தாற்பாட வல்லார் நல்லாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் திருமூலத்தானநாயகர் சபாநாதர்
தேவியார் சிவகாமியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

சீர்காழி
பண் குறிஞ்சி
நல்லார் தீமேவு தொழிலார் நால்வேதஞ்
சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்
கல்லார் மதில்சூழ்ந்த காழி நகர்தானே
துளிவண் டேன்பாயும் இதழி தூமத்த
தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி
ஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங்
களிவண்டியாழ் செய்யுங் காழி நகர்தானே
ஆல கோலத்தின் நஞ்சுண் டமுதத்தை
சால தேவர்க்கீ தளித்தான் தன்மையால்
பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால்
காலற் காய்ந்தானூர் காழி நகர்தானே
இப்பதிகத்தில் ம்செய்யுட்கள் மறைந்துபோயின
இரவில் திரிவோர்க கிறைதோ ளிணைபத்தும்
நிரவி கரவாளை நேர்ந்தா னிடம்போலும்
பரவி திரிவோர்க்கும் பால்நீ றணிவோர்க்குங்
கரவில் தடக்கையார் காழி நகர்தானே
மாலும் பிரமனும் அறியா மாட்சியான்
தோலும் புரிநூலு துதைந்த வரைமார்பன்
ஏலும் பதிபோலும் இரந்தோர கெந்நாளுங்
காலம் பகராதார் காழி நகர்தானே
தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை யுணராதே பேணி தொழுமின்கள்
மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னி
கங்கை தரித்தானூர் காழி நகர்தானே
வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த
ஈசன் நகர்தன்னை இணையில் சம்பந்தன்
பேசு தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்து
பாச தனையற்று பழியில் புகழாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவீழிமிழலை
பண் குறிஞ்சி
இரும்பொன் மலைவில்லா எரியம் பாநாணில்
திரிந்த புரமூன்றுஞ் செற்றான் உறைகோயில்
தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி யெதிர்கொள்வார் வீழி மிழலையே
வாதை படுகின்ற வானோர் துயர்தீர
ஓத கடல்நஞ்சை உண்டான் உறைகோயில்
கீ திசையோடுங் கேள்வி கிடையோடும்
வே தொலியோவா வீழி மிழலையே
பயிலும் மறையாளன் தலையிற் பலிகொண்டு
துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில்
மயிலும் மடமானும் மதியும் மிளவேயும்
வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே
இரவன் பகலோனும் எச்ச திமையோரை
நிரவி டருள்செய்த நிமலன் உறைகோயில்
குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கை
விரவும் பொழிலந்தண் வீழி மிழலையே
கண்ணிற் கனலாலே காமன் பொடியாக
பெண்ணு கருள்செய்த பெருமான் உறைகோயில்
மண்ணிற் பெருவேள்வி வளர்தீ புகைநாளும்
விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே
மாலா யிரங்கொண்டு மலர்க்கண் ணிடஆழி
ஏலா வலயத்தோ டீந்தான் உறைகோயில்
சேலா கியபொய்கை செழுநீர கமலங்கள்
மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே
மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான்
கொதியா வருகூற்றை குமைத்தான் உறைகோயில்
நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள்
விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே
எடுத்தான் தருக்கினை இழித்தான் விரலூன்றி
கொடுத்தான் வாள்ஆளா கொண்டான் உறைகோயில்
படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை
விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே
கிடந்தான் இருந்தானுங் கீழ்மேல் காணாது
தொடர்ந்தாங் கவரேத்த சுடரா யவன்கோயில்
படந்தாங் கரவல்குல் பவள துவர்வாய்மேல்
விடந்தாங் கியகண்ணார் வீழி மிழலையே
சிக்கார் துவராடை சிறுத டுடையாரும்
நக்காங் கலர்தூற்றும் நம்பான் உறைகோயில்
தக்கார் மறைவேள்வி தலையா யுலகுக்கு
மிக்கார் அவர்வாழும் வீழி மிழலையே
மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்
ஏன தெயிற்றானை எழிலார் பொழில்காழி
ஞான துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
வாய்மை திவைசொல்ல வல்லோர் நல்லோரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திரு அம்பர்மாகாளம்
பண் குறிஞ்சி
அடையார் புரமூன்றும் அனல்வாய்விழ வெய்து
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளை பிறைசூடுஞ்
சடையான் கழலேத்த சாரா வினைதானே
தேனார் மதமத்த திங்கள் புனல்சூடி
வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே
திரையார் புனலோடு செல்வ மதிசூடி
விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய
நரையார் விடையூரும் நம்பான் கழல்நாளும்
உரையா தவர்கண்மேல் ஒழியா வூனம்மே
கொந்தண் பொழிற்சோலை கோல வரிவண்டு
மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய
கந்தங் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த
எந்தை கழலேத்த இடர்வ தடையாவே
அணியார் மலைமங்கை ஆகம் பாகமாய்
மணியார் புனலம்பர் மாகா ளம்மேய
துணியா ருடையினான் துதைபொற் கழல்நாளும்
பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே
பண்டாழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி
வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய
விண்டார் புரம்வேவ மேரு சிலையா
கொண்டான் கழலேத்த குறுகா குற்றம்மே
மிளிரும் மரவோடு வெள்ளை பிறைசூடி
வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய
கிளருஞ் சடையண்ணல் கேடில் கழலே
தளரும் முறுநோய்கள் சாரு தவந்தானே
கொலையார் மழுவோடு கோல சிலையேந்தி
மலையார் புனலம்பர் மாகா ளம்மேய
இலையார் திரிசூல படையான் கழல்நாளும்
நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே
சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட
மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய
நறையார் மலரானும் மாலுங் காண்பொண்ணா
இறையான் கழலேத்த எய்தும் இன்பமே
மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்
கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஈசா என்பார்க கில்லை யிடர்தானே
வெருநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
திருமா மறைஞான சம்ப தனசேணார்
பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி
உருகா வுரைசெய்வார் உயர்வான் அடைவாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் காளகண்டேசுவரர் தேவியார் பட்சநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கடனாகைக்காரோணம்
பண் குறிஞ்சி
புனையும் விரிகொன்றை கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டு
கனையுங் கடல்நாகை காரோ ணத்தானே
பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
அண்ணா மலைநாடன் ஆரூ ருறையம்மான்
மண்ணார் முழவோவா மாட நெடுவீதி
கண்ணார் கடல்நாகை காரோ ணத்தானே
பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும்
ஆரார் அழலூட்டி அடியார கருள்செய்தான்
தேரார் விழவோவா செல்வன் திரைசூழ்ந்த
காரார் கடல்நாகை காரோ ணத்தானே
மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல்
அழிசூழ் புனலேற்ற அண்ண லணியா
பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்த
கழிசூழ் கடல்நாகை காரோ ணத்தானே
ஆணும் பெண்ணுமாய் அடியார கருள்நல்கி
சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான்
பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர்
காணுங் கடல்நாகை காரோ ணத்தானே
ஏன தெயிறோடும் மரவ மெய்பூண்டு
வான திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல்
ஞான துறைவல்லார் நாளும் பணிந்தேத்த
கானற் கடல்நாகை காரோ ணத்தானே
அரையார் அழல்நாகம் அக்கோ டசைத்திட்டு
விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல்
வரையார் வனபோல வளரும்வங்கங்கள்
கரையார் கடல்நாகை காரோ ணத்தானே
வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்டோ ள்
இலங்கை கிறைவாட அடர்த்தங் கருள்செய்தான்
பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்த
கலங்கொள் கடல்நாகை காரோ ணத்தானே
திருமா லடிவீழ திசைநான் முகனேத்த
பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
செருமால் விடையூருஞ் செல்வன் திரைசூழ்ந்த
கருமால் கடல்நாகை காரோ ணத்தானே
நல்லா ரறஞ்சொல்ல பொல்லார் புறங்கூற
அல்லா ரலர்தூற்ற அடியார கருள்செய்வான்
பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்த
கல்லார் கடல்நாகை காரோ ணத்தானே
கரையார் கடல்நாகை காரோ ணம்மேய
நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன்
உரையார் தமிழ்மாலை பாடு மவரெல்லாங்
கரையா வுருவாகி கலிவான் அடைவாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் காயாரோகணேசுவரர் தேவியார் நீலாயதாட்சியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநல்லம்
பண் குறிஞ்சி
கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாவென்
றெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த
நல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே
தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரை
துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழ
கொக்கின் இறகோடு குளிர்வெண் பிறைசூடும்
நக்கன் நமையாள்வான் நல்லம் நகரானே
அந்தி மதியோடும் அரவ சடைதாழ
முந்தி யனலேந்தி முதுகா டெரியாடி
சிந்தி தெழவல்லார் தீரா வினைதீர்க்கும்
நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே
குளிரும் மதிசூடி கொன்றை சடைதாழ
மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில்
தளிரு திகழ்மேனி தையல் பாகமாய்
நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே
மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு
பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணி
துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே
வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
ஈச னெனவுள்கி யெழுவார் வினைகட்கு
நாசன் நமையாள்வான் நல்லம் நகரானே
அங்கோல் வளைமங்கை காண அனலேந்தி
கொங்கார் நறுங்கொன்றை சூடி குழகாக
வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே
பெண்ணார் திருமேனி பெருமான் பிறைமல்கு
கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்
எண்ணா தெடுத்தானை இறையே விரலூன்றி
நண்ணார் புரமெய்தான் நல்லம் நகரானே
நாக தணையானும் நளிர்மா மலரானும்
போக தியல்பினாற் பொலிய அழகாகும்
ஆக தவளோடும் அமர்ந்தங் கழகாரும்
நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே
குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே
பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
நறைகொள் பொழில்சூழ்ந்த நல்லம் நகரானே
நலமார் மறையோர்வாழ் நல்லம் நகர்மேய
கொலைசேர் மழுவானை கொச்சை யமர்ந்தோங்கு
தலமார் தமிழ்ஞான சம்ப தன்சொன்ன
கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் உமாமகேசுவரர் தேவியார் மங்களநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநல்லூர்
பண் குறிஞ்சி
கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி
நட்டம் பயின்றாடும் நல்லூர பெருமானை
முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே
ஏறில் எருதேறும் எழிலா யிழையோடும்
வேறும் முடனுமாம் விகிர்தர் அவரென்ன
நாறும் மலர்ப்பொய்கை நல்லூர பெருமானை
கூறு மடியார்க கடையா குற்றமே
சூடும் இளந்திங்கள் சுடர் பொற்சடைதாழ
ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை
நாடும் நெறியானை நல்லூர பெருமானை
பாடும் மடியார்க கடையா பாவமே
நீத்த நெறியானை நீங்கா தவத்தானை
நாத்த நெறியானை நல்லூர பெருமானை
காத்த நெறியானை கைகூப்பி தொழு
தேத்தும் அடியார்க கில்லை யிடர்தானே
ஆக துமைகேள்வன் அரவ சடைதாழ
நாகம் மசைத்தானை நல்லூர பெருமானை
தாகம் புகுந்தண்மி தாள்கள் தொழுந்தொண்டர்
போகம் மனத்தரா புகழ திரிவாரே
கொல்லுங் களியானை யுரிபோர துமையஞ்ச
நல்ல நெறியானை நல்லூர பெருமானை
செல்லும் நெறியானை சேர்ந்தா ரிடர்தீர
சொல்லு மடியார்கள் அறியார் துக்கமே
எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும்
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லா
தங்கை தலைக்கேற்றி ஆளென் றடிநீழல்
தங்கும் மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே
காமன் எழில்வாட்டி கடல்சூழ் இலங்கைக்கோன்
நாமம் இறுத்தானை நல்லூர பெருமானை
ஏம மனத்தாராய் இகழா தெழுந்தொண்டர்
தீப மனத்தார்கள் அறியார் தீயவே
வண்ண மலரானும் வையம் அளந்தானும்
நண்ண லரியானை நல்லூர பெருமானை
தண்ண மலர்தூவி தாள்கள் தொழுதேத்த
எண்ணும் அடியார்க கில்லை யிடுக்கணே
பிச்ச குடைநீழற் சமணர் சாக்கியர்
நிச்சம் அலர்தூற்ற நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை நல்லூர பெருமானை
எச்சும் அடியார்க கில்லை யிடர்தானே
தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன்
நண்ணும் புனல்வேலி நல்லூர பெருமானை
வண்ணம் புனைமாலை வைகலேத்துவார்
விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பெரியாண்டேசுவரர் தேவியார் திரிபுரசுந்தரியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவடுகூர்
பண் குறிஞ்சி
சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்
கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்
கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்
வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே
பாலு நறுநெய்யு தயிரும் பயின்றாடி
ஏலுஞ் சுடுநீறும் என்பும் ஒளிமல
கோலம் பொழிற்சோலை கூடி மடவன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும் மடிகளே
சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதன்மேல்
ஓடுங் களியானை உரிபோர துமையஞ்ச
ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு
பாடும் வடுகூரில் ஆடும் மடிகளே
துவரும் புரிசையு துதைந்த மணிமாடம்
கவர வெரியோட்டி கடிய மதிலெய்தார்
கவரு மணிகொல்லை கடிய முலைநல்லார்
பவரும் வடுகூரில் ஆடும் மடிகளே
துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல்
தணியா அழல்நாக தரியா வகைவைத்தார்
பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த
அணியார் வடுகூரில் ஆடும் மடிகளே
தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகி
கிளரும் அரவார்த்து
வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட
ஒளிரும் வடுகூரில் ஆடும் மடிகளே
நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும்
முடியர் விடையூர்வர் கொடியர் மொழிகொள்ளார்
கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட
அடியர் வடுகூரில் ஆடும் மடிகளே
பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயான துறைவாரும்
பறையும் அதிர்குழலும் போல பலவண்டாங்
கறையும் வடுகூரில் ஆடும் மடிகளே
சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்மு
கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்தெம்மை நன்றும் அருள்செய்வார்
அந்தண் வடுகூரில் ஆடும் மடிகளே
திருமா லடிவீழ திசைநான் முகனாய
பெருமா னுணர்கில்லா பெருமான் நெடுமுடிசேர்
செருமால் விடையூருஞ் செம்மான் திசைவில்லா
அருமா வடுகூரில் ஆடும் மடிகளே
படிநோன் பவையாவர் பழியில் புகழான
கடிநாண் நிகழ்சோலை கமழும் வடுகூரை
படியா னசிந்தை மொழியார் சம்பந்தன்
அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வடுகேசுவரர் தேவியார் வடுவகிர்க்கண்ணியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திரு ஆப்பனூர்
பண் குறிஞ்சி
முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன்
ஒற்றை படவரவம் அதுகொண் டரைக்கணிந்தான்
செற்றமில் சீரானை திருஆப்ப னூரானை
பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே
குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவு திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானை
பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே
முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன்
பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்
அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானை
பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே
பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
துணியின் உடைதாழ சுடரேந்தி யாடுவான்
அணியும் புனலானை அணியாப்ப னூரானை
பணியும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே
தகர மணியருவி தடமால்வரை சிலையா
நகர மொருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை அணியாப்ப னூரானை
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே
ஓடு திரிபுரங்கள் உடனே யுலந்தவி
காட திடமா கனல்கொண்டு நின்றிரவில்
ஆடு தொழிலானை அணியாப்ப னூரானை
பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே
இயலும் விடையேறி எரிகொள் மழுவீசி
கயலி னிணைக்கண்ணாள் ஒருபால் கலந்தாட
இயலும் இசையானை எழிலாப்ப னூரானை
பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே
கருக்கு மணிமிடறன் கதநா கச்சையினான்
உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி
அரக்கன் றிறலழித்தான் அணியாப்ப னூரானை
பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே
கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும்
அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல்
எண்ணில் வினைகளைவான் எழிலாப்ப னூரானை
பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே
செய்ய கலிங்கத்தார் சிறுத டுடையார்கள்
பொய்யர் புறங்கூற புரிந்தவடியாரை
ஐயம் அகற்றுவான் அணியாப்ப னூரானை
பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே
அந்தண் புனல்வைகை அணியாப்ப னூர்மேய
சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை
நந்தி யடிபரவும் நலஞான சம்பந்தன்
சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஆப்பனூரீசுவரர் தேவியார் அம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திரு எருக்கத்தம்புலியூர்
பண் குறிஞ்சி
படையார் தருபூத பகடார் உரிபோர்வை
உடையான் உமையோடும் உடனா யிடுகங்கை
சடையான் எருக்கத்தம் புலியூர தகுகோயில்
விடையான் அடியேத்த மேவா வினைதானே
இலையார் தருசூல படையெம் பெருமானாய்
நிலையார் மதில்மூன்றும் நீறாய் விழவெய்த
சிலையான் எருக்கத்தம் புலியூர திகழ்கோயிற்
கலையான் அடியேத்த கருதா வினைதானே
விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடி
எண்ணார் எருக்கத்தம் புலியூ ருறைகின்ற
அண்ணா எனவல்லார கடையா வினைதானே
அரையார் தருநாகம் அணிவான் அலர்மாலை
விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி
வரையான் எருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
திரையார் சடையானை சேர திருவாமே
வீறார் முலையாளை பாகம் மிகவைத்து
சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்
ஏறான் எருக்கத்தம் புலியூ ரிறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே
நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடி
புகுவா னயம்பெ புலித்தோல் பியற்கிட்டு
தகுவான் எருக்கத்தம் புலியூர தகைந்தங்கே
தொகுவான் கழலே தொடரா வினைதானே
இப்பதிகத்தின் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டு
தேவா எனஅருளார் செல்வங் கொடுத்திட்ட
கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயிற்
தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே
மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்மு தின்தொத்தே
இறையான் எருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
கறையார் மிடற்றானை கருத கெடும்வினையே
புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கி
சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்
நித்தன் எருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
அத்தன் அறவன்றன் அடியே அடைவோமே
ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானை
சீரார் திகழ்காழி திருவார் சம்பந்தன்
ஆரா அருந்தமிழ் மாலை யிவைவல்லார்
பாரா ரவரேத்த பதிவான் உறைவாரே
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் நீலகண்டேசுரர் தேவியார் நீலமலர்க்கண்ணம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பிரமபுரம் திருவிருக்குக்குறள்
பண் குறிஞ்சி
அரனை உள்குவீர் பிரம னூருளெம்
பரனை யேமனம் பரவி உய்ம்மினே
காண உள்குவீர் வேணு நற்புர
தாணுவின் கழல் பேணி உய்ம்மினே
நாதன் என்பிர்காள் காதல் ஒண்புகல்
ஆதி பாதமே ஓதி உய்ம்மினே
அங்கம் மாதுசேர் பங்கம் ஆயவன்
வெங்கு ருமன்னும் எங்க ளீசனே
வாணி லாச்சடை தோணி வண்புர
தாணி நற்பொனை காணு மின்களே
பாந்த ளார்சடை பூந்த ராய்மன்னும்
ஏந்து கொங்கையாள் வேந்த னென்பரே
கரிய கண்டனை சிரபு ரத்துளெம்
அரசை நாடொறும் பரவி உய்ம்மினே
நறவ மார்பொழிற் புறவம் நற்பதி
இறைவன் நாமமே மறவல் நெஞ்சமே
தென்றில் அரக்கனை குன்றிற் சண்பைமன்
அன்று நெரித்தவா நின்று நினைமினே
அயனும் மாலுமாய் முயலுங் காழியான்
பெயல்வை எய்திநின் றியலும் உள்ளமே
தேரர் அமணரை சேர்வில் கொச்சைமன்
நேரில் கழல்நினை தோரும் உள்ளமே
தொழும னத்தவர் கழும லத்துறை
பழுதில் சம்பந்தன் மொழிகள் பத்துமே
பிரம்மபுரமென்பது சீகாழி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஆரூர் திருவிருக்குக்குறள்
பண் குறிஞ்சி
சித்தம் தெளிவீர்காள் அத்தன் ஆரூரை
பத்தி மலர்தூவ முத்தி யாகுமே
பிறவி யறுப்பீர்காள் அறவன் ஆரூரை
மறவா தேத்துமின் துறவி யாகுமே
துன்ப துடைப்பீர்காள் அன்பன் அணியாரூர்
நன்பொன் மலர்தூவ இன்ப மாகுமே
உய்ய லுறுவீர்காள் ஐயன் ஆரூரை
கையி னாற்றொழ நையும் வினைதானே
பிண்டம் அறுப்பீர்காள் அண்டன் ஆரூரை
கண்டு மலர்தூவ விண்டு வினைபோமே
பாசம் அறுப்பீர்காள் ஈசன் அணியாரூர்
வாச மலர்தூவ நேச மாகுமே
வெய்ய வினைதீர ஐயன் அணியாரூர்
செய்ய மலர்தூவ வைய முமதாமே
அரக்கன் ஆண்மையை நெருக்கி னானாரூர்
கரத்தி னாற்றொழ திருத்த மாகுமே
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை
உள்ளு மவர்தம்மேல் விள்ளும் வினைதானே
கடுக்கொள் சீவரை அடக்கி னானாரூர்
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர் வேட்கையே
சீரூர் சம்பந்தன் ஆரூரை சொன்ன
பாரூர் பாடலார் பேரா ரின்பமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வன்மீகநாதர் தேவியார் அல்லியங்கோதையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவீழிமிழலை திருவிருக்குக்குறள்
பண் குறிஞ்சி
வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏச லில்லையே
இறைவ ராயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே
செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே
நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறும் அருளுமே
காமன் வேவவோர் தூ கண்ணினீர்
நாம மிழலையீர் சேமம் நல்குமே
பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண் டருளுமே
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே
அரக்கன் நெரிதர இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே
அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர் பயனும் அருளுமே
பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிரிவ தரியதே
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழும் மொழிகளே
இது படிக்காசு சுவாமியருளியபோது வட்டந்தீர ஓதியது
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமுதுகுன்றம் திருவிருக்குக்குறள்
பண் குறிஞ்சி
நின்று மலர்தூவி இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர கென்றும் இன்பமே
அத்தன் முதுகுன்றை பத்தி யாகிநீர்
நித்தம் ஏத்துவீர குய்த்தல் செல்வமே
ஐயன் முதுகுன்றை பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர் வைய முமதாமே
ஈசன் முதுகுன்றை நேச மாகிநீர்
வாச மலர்தூவ பாச வினைபோமே
மணியார் முதுகுன்றை பணிவா ரவர்கண்டீர்
பிணியா யினகெட்டு தணிவா ருலகிலே
மொய்யார் முதுகுன்றில் ஐயா வெனவல்லார்
பொய்யா ரிரவோர்க்கு செய்யாள் அணியாளே
விடையான் முதுகுன்றை இடையா தேத்துவார்
படையா யினசூழ உடையா ருலகமே
பத்து தலையோனை கத்த விரலூன்றும்
அத்தன் முதுகுன்றை மொய்த்து பணிமினே
இருவ ரறியாத ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே
தேரர் அமணருஞ் சேரும் வகைஇல்லான்
நேரில் முதுகுன்றை நீர்நின் றுள்குமே
நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன்
ஒன்றும் உரைவல்லார் என்றும் உயர்வோரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஆலவாய் திருவிருக்குக்குறள்
பண் குறிஞ்சி
நீல மாமிடற் றால வாயிலான்
பால தாயினார் ஞாலம் ஆள்வரே
ஞால மேழுமாம் ஆல வாயிலார்
சீல மேசொலீர் காலன் வீடவே
ஆல நீழலார்
கால காலனார் பால தாமினே
அந்த மில்புகழ் எந்தை யாலவாய்
பந்தி யார்கழல் சிந்தை செய்ம்மினே
ஆட லேற்றினான் கூட லாலவாய்
பாடி யேமனம் நாடி வாழ்மினே
அண்ணல் ஆலவாய் நண்ணி னான்றனை
எண்ணி யேதொழ திண்ணம் இன்பமே
அம்பொன் ஆலவாய் நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே
அரக்க னார்வலி நெருக்க னாலவாய்
உரைக்கு முள்ளத்தார கிரக்கம் உண்மையே
அருவன் ஆலவாய் மருவி னான்றனை
இருவ ரேத்தநின் றுருவ மோங்குமே
ஆரம் நாகமாம் சீரன் ஆலவா
தேர மண்செற்ற வீர னென்பரே
அடிகள் ஆலவா படிகொள் சம்பந்தன்
முடிவி லின்றமிழ செடிகள் நீக்குமே
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது இதுவே மதுரை
சுவாமிபெயர் சொக்கநாதசுவாமி தேவியார் மீனாட்சியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவிடைமருதூர் திருவிருக்குக்குறள்
பண் குறிஞ்சி
தோடொர் காதினன் பாடு மறையினன்
காடு பேணிநின் றாடு மருதனே
கருதார் புரமெய்வர் எருதே இனிதூர்வர்
மருதே யிடமாகும் விருதாம் வினைதீர்ப்பே
எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை
பண்ணின் மொழிசொல்ல விண்ணு தமதாமே
விரியார் சடைமேனி எரியார் மருதரை
தரியா தேத்துவார் பெரியா ருலகிலே
பந்த விடையேறும் எந்தை மருதரை
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே
கழலுஞ் சிலம்பார்க்கும் எழிலார் மருதரை
தொழலே பேணுவார குழலும் வினைபோமே
பிறையார் சடையண்ணல் மறையார் மருதரை
நிறையால் நினைபவர் குறையா ரின்பமே
எடுத்தான் புயந்தன்னை அடுத்தார் மருதரை
தொடுத்தார் மலர்சூட்ட விடுத்தார் வேட்கையே
இருவர கெரியாய உருவ மருதரை
பரவி யேத்துவார் மருவி வாழ்வரே
நின்றுண் சமண்தேரர் என்று மருதரை
அன்றி யுரைசொல்ல நன்று மொழியாரே
கருது சம்பந்தன் மருத ரடிபாடி
பெரிது தமிழ்சொல்ல பொருத வினைபோமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திரு அன்னியூர் திருவிருக்குக்குறள்
பண் குறிஞ்சி
மன்னி யூரிறை சென்னி யார்பிறை
அன்னி யூரமர் மன்னு சோதியே
பழகு தொண்டர்வம் அழகன் அன்னியூர
குழகன் சேவடி தொழுது வாழ்மினே
நீதி பேணுவீர் ஆதி அன்னியூர
சோதி நாமமே ஓதி உய்ம்மினே
பத்த ராயினீர் அத்தர் அன்னியூர
சித்தர் தாள்தொழ முத்த ராவரே
நிறைவு வேண்டுவீர் அறவன் அன்னியூர்
மறையு ளான்கழற் குறவு செய்ம்மினே
இன்பம் வேண்டுவீர் அன்பன் அன்னியூர்
நன்பொ னென்னுமின் உம்ப ராகவே
அந்த ணாளர்தம் தந்தை அன்னியூர்
எந்தை யேயென பந்தம் நீங்குமே
தூர்த்த னைச்செற்ற தீர்த்தன் அன்னியூர்
ஆத்த மாவடை தேத்தி வாழ்மினே
இருவர் நாடிய அரவன் அன்னியூர்
பரவுவார் விண்ணு கொருவ ராவரே
குண்டர் தேரரு கண்டன் அன்னியூர
தொண்டு ளார்வினை விண்டு போகுமே
பூந்த ராய்ப்பந்தன் ஆய்ந்த பாடலால்
வேந்தன் அன்னியூர் சேர்ந்து வாழ்மினே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஆபத்சகாயர் தேவியார் பெரியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புறவம்
பண் குறிஞ்சி
எய்யாவென்றி தானவரூர்மூன் றெரிசெய்த
மையார்கண்டன் மாதுமைவைகு திருமேனி
செய்யான்வெண்ணீ றணிவான்றிகழ்பொற் பதிபோலும்
பொய்யாநாவின் அந்தணர்வாழும் புறவம்மே
மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற
நாதனென்றேத்தும் நம்பரன்வைகு நகர்போலும்
மாதவிமேய வண்டிசைபாட மயிலாட
போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே
வற்றாநதியும் மதியும்பொதியும் சடைமேலே
புற்றாடரவின் படமாடவுமி புவனிக்கோர்
பற்றாயிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
பொற்றாமரையின் பொய்கைநிலாவும் புறவம்மே
துன்னார்புரமும் பிரமன்சிரமு துணிசெய்து
மின்னார்சடைமேல் அரவும்மதியும் விளையாட
பன்னாளிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
பொன்னார்புரிநூல் அந்தணர்வாழும் புறவம்மே
தேவாஅரனே சரணென்றிமையோர் திசைதோறுங்
காவாயென்று வந்தடையக்கார் விடமுண்டு
பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும்
பூவார்கோல சோலைசுலாவும் புறவம்மே
கற்றறிவெய்தி காமன்முன்னாகும் முகவெல்லாம்
அற்றரனேநின் னடிசரணென்னும் அடியோர்க்கு
பற்றதுவாய பாசுபதன்சேர் பதியென்பர்
பொற்றிகழ்மாட தொளிகள்நிலாவும் புறவம்மே
எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்ன
கொண்டெழுகோல முகில்போற் பெரியகரிதன்னை
பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும் பதியென்பர்
புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே
பரக்குந்தொல்சீர தேவர்கள்சேனை பௌவத்தை
துரக்குஞ்செந்தீ போலமர்செய்யு தொழில்மேவும்
அரக்கன்திண்டோ ள் அழிவித்தான காலத்திற்
புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே
மீத்திகழண்ட தந்தயனோடு மிகுமாலும்
மூர்த்தியைநாடி காணவொணாது முயல்விட்டாங்
கேத்தவெளிப்பா டெய்தியவன்றன் னிடமென்பர்
பூத்திகழ்சோலை தென்றலுலாவும் புறவம்மே
வையகம்நீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான்
மெய்யலதேரர் உண்டிலையென்றே நின்றேதம்
கையினிலுண்போர் காணவொணாதான் நகரென்பர்
பொய்யகமில்லா பூசுரர்வாழும் புறவம்மே
பொன்னியல்மாட புரிசைநிலாவும் புறவத்து
மன்னியஈசன் சேவடிநாளும் பணிகின்ற
தன்னியல்பில்லா சண்பையர்கோன்சீர சம்பந்தன்
இன்னிசைஈரை தேத்தவல்லோர்க கிடர்போமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சிராப்பள்ளி
பண் குறிஞ்சி
நன்றுடையானை தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானை
சென்றடையாத திருவுடையானை சிராப்பள்ளி
குன்றுடையானை கூறவென்னுள்ளங் குளிரும்மே
கைம்மகவேந்தி கடுவனொடூடி கழைபாய்வான்
செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
வெம்முகவேழ தீருரிபோர்த்த விகிர்தாநீ
பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே
மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளி
சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே
துறைமல்குசாரற் சுனைமல்குநீல திடைவைகி
சிறைமல்குவண்டு தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளி
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே
கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றுஞ்
சிலைவரையாக செற்றனரேனுஞ் சிராப்பள்ளி
தலைவரைநாளு தலைவரல்லாமை யுரைப்பீர்காள்
நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே
வெய்யதண்சாரல் விரிநிறவேங்கை தண்போது
செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே
வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர்கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேயுயர்கொள்ளி கைவிளக்காக பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே
மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்
தலைகலனாக பலிதிரிந்துண்பர் பழியோரார்
சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்
சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே
அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமை
கரப்புள்ளிநாடி கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீரும்மை ஏதிலர்கண்டால் இகழாரே
நாணாதுடைநீ தோர்களுங்கஞ்சி நாட்காலை
ஊணாப்பகலுண் டோ துவோர்கள் உரைக்குஞ்சொல்
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே
தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானை திரைசூழ்ந்த
கானல்சங்கேறுங் கழுமலவூரில் கவுணியன்
ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார்
வானசம்பந தவரொடுமன்னி வாழ்வாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் தாயுமானேசுவரர் தேவியார் மட்டுவார்குழலம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்குற்றாலம்
பண் குறிஞ்சி
வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கை
கொம்பார்சோலை கோலவண்டியாழ்செய் குற்றாலம்
அம்பால்நெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றை
நம்பான்மேய நன்னகர்போலு நமரங்காள்
பொடிகள்பூசி தொண்டர்பின்செல்ல புகழ்வி
கொடிகளோடு நாள்விழமல்கு குற்றாலங்
கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய்
அடிகள்மேய நன்னகர்போலு மடியீர்காள்
செல்வம்மல்கு செண்பகம்வேங்கை சென்றேறி
கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்
வில்லின்ஒல்க மும்மதிலெய்து வினைபோக
நல்குநம்பான் நன்னகர்போலு நமரங்காள்
பக்கம்வாழை பாய்கனியோடு பலவின்றேன்
கொக்கின்கோட்டு பைங்கனிதூங்குங் குற்றாலம்
அக்கும்பாம்பும் ஆமையும்பூண்டோ ர் அனலேந்தும்
நக்கன்மேய நன்னகர்போலு நமரங்காள்
மலையார்சாரல் மகவுடன்வந்த மடமந்தி
குலையார்வாழை தீங்கனிமாந்துங் குற்றாலம்
இலையார்சூல மேந்தியகையான் எயிலெய்த
சிலையான்மேய நன்னகர்போலுஞ் சிறுதொண்டீர்
மைம்மாநீல கண்ணியர்சாரல் மணிவாரி
கொய்ம்மாஏனல் உண்கிளியோப்புங் குற்றாலங்
கைம்மாவேழ தீருரிபோர்த்த கடவுள்ளெம்
பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள்
நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த நீள்சோலை
கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலங்
காலன்றன்னை காலாற்காய்ந்த கடவுள்ளெஞ்
சூலபாணி நன்னகர்போலு தொழுவீர்காள்
போதும்பொன்னும் உந்தியருவி புடைசூழ
கூதன்மாரி நுண்துளிதூங்குங் குற்றாலம்
மூதூரிலங்கை முட்டியகோனை முறைசெய்த
நாதன்மேய நன்னகர்போலு நமரங்காள்
அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப அரும்பீன்று
குரவம்பாவை முருகமர்சோலை குற்றாலம்
பிரமன்னோடு மாலறியாத பெருமையெம்
பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்காள்
பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கி
குருந்தம்மேறி செவ்வழிபாடுங் குற்றாலம்
இருந்துண்தேரும் நின்றுண்சமணும் எடுத்தார்ப்ப
அருந்தண்மேய நன்னகர்போலும் அடியீர்காள்
மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன்
கோடலீன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம்
நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன்
பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் குறும்பலாவீசுவரர் தேவியார் குழல்வாய்மொழியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பரங்குன்றம்
பண் குறிஞ்சி
நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை
சூடலனந்தி சுடரெரியேந்தி சுடுகானில்
ஆடலனஞ்சொல் அணியிழையாளை யொருபாகம்
பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே
அங்கமொராறும் அருமறைநான்கு மருள்செய்து
பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்து
திங்களும்பாம்பு திகழ்சடைவைத்தோர் தேன்மொழி
பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே
நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரைகொன்றை
சீரிடங்கொண்ட எம்மிறைபோலுஞ் சேய்தாய
ஓருடம்புள்ளே உமையொருபாகம் உடனாகி
பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே
வளர்பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகை
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலை பரங்குன்ற
தளிர்போல்மேனி தையல்நல்லாளோ டொருபாகம்
நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே
பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடை
துன்னியசோதி யாகியஈசன் தொன்மறை
பன்னியபாடல் ஆடலன்மேய பரங்குன்றை
உன்னியசிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே
கடைநெடுமாட கடியரண்மூன்றுங் கனல்மூழ்க
தொடைநவில்கின்ற வில்லினனந்தி சுடுகானில்
புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூல
படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே
அயிலுடைவேலோர் அனல்புல்குகையின் அம்பொன்றால்
எயில்படவெய்த எம்மிறைமேய இடம்போலும்
மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலை
பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே
மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள்
பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான் பரங்குன்றை
சித்தமதொன்றி செய்கழலுன்னி சிவனென்று
நித்தலுமே தொல்வினைநம்மேல் நில்லாவே
முந்தியிவ்வை தாவியமாலும் மொய்யொளி
உந்தியில்வந்திங் கருமறையீந்த உரவோனும்
சிந்தையினாலு தெரிவரிதாகி திகழ்சோதி
பந்தியலங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே
குண்டாய்முற்று திரிவார்கூறை மெய்போர்த்து
மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல
பண்டால்நீழல் மேவியஈசன் பரங்குன்றை
தொண்டாலே தொல்வினைநம்மேல் நில்லாவே
தடமலிபொய்கை சண்பைமன்ஞான சம்பந்தன்
படமலிநாகம் அரைக்கசைத்தான்றன் பரங்குன்றை
தொடைமலிபாடல் பத்தும்வல்லார்த துயர்போகி
விடமலிகண்டன் அருள்பெறுந்தன்மை மிக்கோரே
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பரங்கிரிநாதர் தேவியார் ஆவுடைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கண்ணார்கோயில்
பண் குறிஞ்சி
தண்ணார்திங்க பொங்கரவந்தாழ் புனல்சூடி
பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவோர்க கிடர்பாவம்
நண்ணாவாகும் நல்வினையாய நணுகும்மே
கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும்
வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயல்மண்டி
கொந்தலர்சோலை கோகிலமாட குளிர்வண்டு
செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே
பல்லியல்பாணி பாரிடமேத்த படுகானின்
எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் இடமென்பர்
கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னி
கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே
தருவளர்கான தங்கியதுங்க பெருவேழம்
மருவளர்கோதை அஞ்சவுரித்து மறைநால்வர
குருவற்ஆல நீழலமர்ந்தீங் குரைசெய்தார்
கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் கற்றோரே
மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரை
செறுமாவலிபால் சென்றுலகெல்லாம் அளவிட்ட
குறுமாணுருவன் தற்குறியா கொண்டாடும்
கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே
விண்ணவருக்காய் வேலையுள்நஞ்சம் விருப்பாக
உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் வுலகிற்கும்
கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை
நண்ணவல்லோர்க கில்லைநமன்பால் நடலையே
முன்னொருகால திந்திரனுற்ற முனிசாபம்
பின்னொருநாளவ் விண்ணவரேத்த பெயர்வெய்தி
தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்
கன்னியர்நாளு துன்னமர்கண்ணார் கோயிலே
பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணாத்தன் நீள்கழல்நெஞ்சில் நினைந்தேத்த
முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னீந்த
திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ் சேர்வாரே
செங்கமலப்போ திற்திகழ்செல்வன் திருமாலும்
அங்கமலக்கண் நோக்கரும்வண்ண தழலானான்
தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ள
தங்கமலத்தோ டேத்திடஅண்ட தமர்வாரே
தாறிடுபெண்ணை தட்டுடையாரு தாமுண்ணுஞ்
சோறுடையார்சொல் தேறன்மின்வெண்ணூல் சேர்மார்பன்
ஏறுடையன்பரன் என்பணிவான்நீள் சடைமேலோர்
ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே
காமருகண்ணார் கோயிலுளானை கடல்சூழ்ந்த
பூமருசோலை பொன்னியல்மாட புகலிக்கோன்
நாமருதொன்மை தன்மையுள்ஞான சம்பந்தன்
பாமருபாடல் பத்தும்வல்லார்மேல் பழிபோமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கண்ணாயிரேசுவரர் தேவியார் முருகுவளர்கோதையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

சீகாழி
பண் குறிஞ்சி
உரவார்கலையின் கவிதைப்புலவர கொருநாளுங்
கரவாவண்கை கற்றவர்சேருங் கலிக்காழி
அரவார்அரையா அவுணர்புரமூன் றெரிசெய்த
சரவாவென்பார் தத்துவஞான தலையாரே
மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழ
கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி
மைசேர்கண்ட தெண்டோ ள்முக்கண் மறையோனே
ஐயாவென்பார கல்லல்களான அடையாவே
இளகக்கமல தீன்களியங்குங் கழிசூழ
களகப்புரிசை கவினார்சாருங் கலிக்காழி
அளகத்திருநன் நுதலிபங்கா அரனேயென்
றுளகப்பாடும் அடியார்க்குறுநோய் அடையாவே
எண்ணார்முத்தம் ஈன்றுமரகதம் போற்காய்த்து
கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழி
பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு
நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே
மழையார்சாரல் செம்புனல்வந்தங் கடிவருட
கழையார்கரும்பு கண்வளர்சோலை கலிக்காழி
உழையார்கரவா உமையாள்கணவா ஒளிர்சங
குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே
குறியார்திரைகள் வரைகள்நின்றுங் கோட்டாறு
கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி
வெறியார்கொன்றை சடையாவிடையா என்பாரை
அறியாவினைகள் அருநோய்பாவம் அடையாவே
இப்பதிகத்தின் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
உலங்கொள்சங்க தார்கலியோ துதையுண்டு
கலங்கள்வந்து கார்வயலேறுங் கலிக்காழி
இலங்கைமன்னன் தன்னையிடர்கண் டருள்செய்த
சலங்கொள்சென்னி மன்னாஎன்ன தவமாமே
ஆவிக்கமல தன்னமியங்குங் கழிசூழ
காவிக்கண்ணார் மங்கலம்ஓவா கலிக்காழி
பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும்
மேவிப்பரவும் அரசேயென்ன வினைபோமே
மலையார்மாடம் நீடுயர்இஞ்சி மஞ்சாருங்
கலையார்மதியஞ் சேர்தரும்அந்தண் கலிக்காழி
தலைவாசமணர் சாக்கியர்க்கென்றும் அறிவொண்ணா
நிலையாயென்ன தொல்வினையாய நில்லாவே
வடிகொள்வாவி செங்கழுநீரிற் கொங்காடி
கடிகொள்தென்றல் முன்றிலில்வைகுங் கலிக்காழி
அடிகள்தம்மை அந்தமில்ஞான சம்பந்தன்
படிகொள்பாடல் வல்லவர்தம்மேற் பழிபோமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கழுக்குன்றம்
பண் குறிஞ்சி
தோடுடையானொரு காதில்தூய குழைதாழ
ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங்
காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே
கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை
பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகங்
காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே
தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதிசூடி தலைமேலோர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்துங்
கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே
துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணின்நல்லாளை யொருபாகம்
இணையல்செய்யா இலங்கெயின்மூன்றும் எரியுண்ண
கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே
பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே
வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர்
உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடுங்
கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின்
நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றி
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங்
காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே
இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயு
தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம்
மடந்தைபெம்மான் வார்கழலோச்சி காலனை
கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே
தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே
பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாஞ்
சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர்
காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே
கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
பண்ணியல்பாற் பாடியபத்தும் இவைவல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வேதகிரீசுவரர் தேவியார் பெண்ணினல்லாளம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புகலி
பண் வியாழக்குறிஞ்சி
ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றை
சூடிய செஞ்சடையான் சுடுகாடமர்ந்த பிரான்
ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்தடியார் ஏத்த
ஆடிய எம்மிறையூர் புகலி பதியாமே
ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று
சோலை மலிசுனையிற் குடைந்தாடி துதிசெய்ய
ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று நல்ல
மாலை யதுசெய்யும் புகலி பதியாமே
ஆறணி செஞ்சடையான் அழகார்புரம் மூன்றுமன்று வேவ
நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை எம்மிறைவன்
பாறணி வெண்டலையிற் பகலேபலி என்றுவந்து நின்ற
வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே
வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கள் மூன்றுங்
கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில்
அள்ளல் விளைகழனி அழகார்விரை தாமரைமேல் அன்ன
புள்ளினம் வைகியெழும் புகலி பதிதானே
சூடும் மதிச்சடைமேல் சுரும்பார்மலர கொன்றைதுன்ற நட்டம்
ஆடும் அமரர்பிரான் அழகார்உமை யோடுமுடன்
வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவி தொண்டர்
பாட இனிதுறையும் புகலி பதியாமே
மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள் வந்து
நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம்
அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும்
புந்திசெய் நால்மறையோர் புகலி பதிதானே
மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேல் திங்கள்
கங்கைதனை கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ்
செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனை சென்றுதம்
அங்கையி னால்தொழுவார் அவலம் அறியாரே
வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும்
நல்லிட மென்றறியான் நலியும் விறலரக்கன்
பல்லொடு தோள்நெரிய விரலூன்றி பாடலுமே கைவாள்
ஒல்லை அருள்புரிந்தான் உறையும் புகலியதே
தாதலர் தாமரைமேல் அயனு திருமாலு தேடி
ஓதியுங் காண்பரிய உமைகோன் உறையுமிடம்
மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த
போதலர் சோலைகள்சூழ் புகலி பதிதானே
வெந்துவர் மேனியினார் விரிகோவ ணநீத்தார் சொல்லும்
அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருளென்னேல்
வந்தெதி ரும்புரமூன் றெரித்தான் உறைகோயில் வாய்ந்த
புந்தியினார் பயிலும் புகலி பதிதானே
வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாச
போதனை போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள்
நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
ஓதவல் லாருலகில் உறுநோய் களைவாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஆரூர்
பண் வியாழக்குறிஞ்சி
பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்
சூடலன் மூவிலைய சூலம் வலனேந்தி
கூடலர் மூவெயிலும் எரியுண்ண கூரெரிகொண் டெல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே
சோலையில் வண்டினங்கள் சுரும்போ டிசைமுரல சூழ்ந்த
ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூரில்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம்
காலையும் மாலையும்போ பணிதல் கருமமே
உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தி தொழுமின்தொண்டீர் மெய்யே
கள்ளம் ஒழிந்திடுமின் கரவா திருபொழுதும்
வெள்ளமோர் வார்சடைமேற் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய
அள்ளல் அகன்கழனி ஆரூர் அடைவோமே
வெந்துறு வெண்மழுவா படையான் மணிமிடற்றான் அரையின்
ஐந்தலை யாடரவம் அசைத்தான் அணியாரூர
பைந்தளிர கொன்றையந்தார பரமன் அடிபரவ பாவம்
நைந்தறும் வந்தணையும் நாடொறும் நல்லனவே
வீடு பிறப்பெளிதாம் அதனை வினவுதிரேல் வெய்ய
காடிட மாகநின்று கனலேந்தி கைவீசி
ஆடும் அவிர்சடையான் அவன்மேய ஆரூரை சென்று
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே
கங்கையோர் வார்சடைமேற் கரந்தான் கிளிமழலை கேடில்
மங்கையோர் கூறுடையான் மறையான் மழுவேந்தும்
அங்கையி னான்அடியே பரவி யவன்மேய ஆரூர்
தங்கையினாற் றொழுவார் தடுமாற் றறுப்பாரே
நீறணி மேனியனாய் நிரம்பா மதிசூடி நீண்ட
ஆறணி வார்சடையான் ஆரூர் இனிதமர்ந்தான்
சேறணி மாமலர்மேல் பிரமன் சிரமரிந்த செங்கண்
ஏறணி வெல்கொடியான் அவனெம் பெருமானே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
வல்லி தோலுடையான் வளர்திங்கள் கண்ணியினான் வாய்த்த
நல்லியல் நான்முகத்தோன் தலையின் னறவேற்றான்
அல்லியங் கோதைதன்னை ஆக தமர்ந்தருளி ஆரூர
புல்லிய புண்ணியனை தொழுவாரும் புண்ணியரே
செந்துவர் ஆடையினார் உடைவிட்டு நின்றுழல்வார் சொன்ன
இந்திர ஞாலமொழி தின்புற வேண்டுதிரேல்
அந்தர மூவெயிலு மரணம் எரியூட்டி ஆரூர
தந்திர மாவுடையான் அவனெ தலைமையனே
நல்ல புனற்புகலி தமிழ்ஞான சம்பந்தன்
அல்லி மலர்க்கழனி ஆரூர் அமர்ந்தானை
வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்க
சொல்லுதல் கேட்டல்வல்லார் துன்ப துடைப்பாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஊறல்
பண் வியாழக்குறிஞ்சி
மாறில் அவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று
நீறெழ எய்தவெங்கள் நிமலன் இடம்வினவில்
தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த
ஊறல் அமர்ந்தபிரான் ஒலியார்கழல் உள்குதுமே
மத்த மதக்கரியை மலையான்மகள் அஞ்சவன்று கையால்
மெத்த உரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம்
தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலம்நாளு நயனம்
ஒத்தல ருங்கழனி திருவூறலை உள்குதுமே
ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டழகார் நன்றுங்
கானமர் மான்மறி கைக்கடவுள் கருதுமிடம்
வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை
ஊனம் அறுத்தபிரான் திருவூறலை உள்குதுமே
நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு வும்மனலும் அன்று
கையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவின்
மையணி கண்மடவார் பலர்வ திறைஞ்சமன்னி நம்மை
உய்யும் வகைபுரிந்தான் திருவூறலை உள்குதுமே
எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும் போனகமும் பண்டு
சண்டி தொழவளித்தான் அவன்றாழும் இடம்வினவில்
கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கை கள்சூழ்ந்து நஞ்சை
உண்டபி ரானமரு திருவூறலை உள்குதுமே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள் சிதைந்து போயின
கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வ தெய்துதலுங் கலங்கி
மறுக்குறும் மாணிக்கருள மகிழ்ந்தானிடம் வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளும் மெய்யுந்நெரிய அன்று
ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை உள்குதுமே
நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும்மறியா தன்று
தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும் இடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வ திறைஞ்சமகிழ தாகம்
ஊரும் அரவசைத்தான் திருவூறலை உள்குதுமே
பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர்
என்னும் இவர்க்கருளா ஈசன் இடம்வினவில்
தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை
உன்னவினை கெடுப்பான் திருவூறலை உள்குதுமே
கோட லிரும்புறவிற் கொடிமாட கொச்சையர்மன் மெச்ச
ஓடுபுனல் சடைமேற் கரந்தான் திருவூறல்
நாட லரும்புகழான் மிகுஞானசம் பந்தன்சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத்து இருப்பாரே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது தக்கோலமென வழங்குகின்றது
சுவாமிபெயர் உமாபதீசுவரர் தேவியார் உமையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கொடிமாடச்செங்குன்றூர்
பண் வியாழக்குறிஞ்சி
வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல
பந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளி
கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாட செங்குன்றூர் நின்ற
அந்தணனை தொழுவார் அவலம் அறுப்பாரே
அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணி தாகம்
மலைமகள் கூறுடையான் மலையார் இளவாழை
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாட செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே
பாலன நீறுபுனை திருமார்பிற் பல்வளைக்கை நல்ல
ஏலம லர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளி
கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாட செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே
வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங்
காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளி
சீருறும் அந்தணர்வாழ் கொடிமாட செங்குன்றூர் நின்ற
நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே
பொன்றிகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்ல
பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமா
குன்றன மாளிகைசூழ் கொடிமாட செங்குன்றூர் வானில்
மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே
ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாட செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே
நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை
வாடலுடை தலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனா
கோடல் வளம்புறவிற் கொடிமாட செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே
மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடி
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாட செங்குன்றூர் மேய
தத்துவனை தொழுவார் தடுமாற் றறுப்பாரே
செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்ற
அம்பவ ளத்திரள்போல் ஒளியாய ஆதிபிரான்
கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாட செங்குன்றூர் மேய
நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே
போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகே டுழல்வீர் வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாட செங்குன்றூர் நின்ற
வேதியனை தொழநும் வினையான வீடுமே
அலைமலி தண்புனல்சூழ தழகார் புகலிந்நகர் பேணு
தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாட செங்குன்றூ ரேத்தும்
நலம்மலி பாடல்வல்லார் வினையான நாசமே
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது
திருச்செங்கோடு என வழங்குகின்றது
சுவாமிபெயர் அர்த்தநாரீசுவரர் தேவியார் அர்த்தநாரீசுவரி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பாதாளீச்சரம்
பண் வியாழக்குறிஞ்சி
மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடி பொற்பமரும்
அன்னம் அனநடையாள் ஒருபாக தமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே
நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளை
தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான்
ஆடர வம்பெருக அனலேந்தி கைவீசி வேதம்
பாடலி னாலினியான் உறைகோயில் பாதாளே
நாகமும் வான்மதியும் நலம்மல்கு செஞ்சடையான் சாமம்
போகநல் வில்வரையாற் புரம்மூன் றெரித்துகந்தான்
தோகைநல் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியை கூட
பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே
அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதி
பங்கயம் நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே
பேய்பல வுந்நிலவ பெருங்காடரங் காகவுன்னி நின்று
தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்து
தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றை சடைதன்மேற் சேர
பாய்புன லும்முடையான் உறைகோயில் பாதாளே
கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றை சடைதன்மே னின்றும்
விண்ணியல் மாமதியு முடன்வைத்தவன் விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும்
பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே
விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ்
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய் துரைவேதம் நான்குமவை
பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே
மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால்
தொல்லை மலையெடுத்த அரக்கன்றலை தோள்நெரித்தான்
கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்க ணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே
தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையாற் றேடி
காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார்
பூமரு வுங்குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பாமரு வுங்குணத்தான் உறைகோயில் பாதாளே
காலையில் உண்பவருஞ் சமண்கையருங் கட்டுரைவி டன்று
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்றன் அடியேபரவி
மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரல வாய்த்த
பாலையாழ பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே
பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளை சேர
பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும்வல்லார் எழில்வான திருப்பாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சிரபுரம்
பண் வியாழக்குறிஞ்சி
வாருறு வனமுலை மங்கைபங்கன்
நீருறு சடைமுடி நிமலனிடங்
காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்
சீருறு வளவயற் சிரபுரமே
அங்கமொ டருமறை யருள்புரிந்தான்
திங்களொ டரவணி திகழ்முடியன்
மங்கையொ டினிதுறை வளநகரஞ்
செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே
பரிந்தவன் பன்முடி அமரர்க்காகி
திரிந்தவர் புரமவை தீயின்வேவ
வரிந்தவெஞ் சிலைபிடி தடுசரத்தை
தெரிந்தவன் வளநகர் சிரபுரமே
நீறணி மேனியன் நீள்மதியோ
டாறணி சடையினன் அணியிழையோர்
கூறணி தினிதுறை குளிர்நகரஞ்
சேறணி வளவயல் சிரபுரமே
அருந்திறல் அவுணர்கள் அரணழி
சரந்துர தெரிசெய்த சங்கரனூர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவணி சிரபுரமே
கலையவன் மறையவன் காற்றொடுதீ
மலையவன் விண்ணொடு மண்ணுமவன்
கொலையவன் கொடிமதில் கூட்டழித்த
சிலையவன் வளநகர் சிரபுரமே
வானமர் மதியொடு மத்தஞ்சூடி
தானவர் புரமெய்த சைவனிடங்
கானமர் மடமயில் பெடைபயிலு
தேனமர் பொழிலணி சிரபுரமே
மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழி
கறுத்தவன் காரர கன்முடிதோள்
இறுத்தவன் இருஞ்சின காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே
வண்ணநன் மலருறை மறையவனுங்
கண்ணனுங் கழல்தொழ கனலுருவாய்
விண்ணுற வோங்கிய விமலனிடம்
திண்ணநன் மதிலணி சிரபுரமே
வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார்
கற்றிலர் அறவுரை புறனுரைக்க
பற்றலர் திரிபுரம் மூன்றும்வேவ
செற்றவன் வளநகர் சிரபுரமே
அருமறை ஞானசம் பந்தனந்தண்
சிரபுர நகருறை சிவனடியை
பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்
திருவொடு புகழ்மல்கு தேசினரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவிடைமருதூர்
பண் வியாழக்குறிஞ்சி
மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
இருந்தவன் வளநகர் இடைமருதே
தோற்றவன் கேடவன் துணைமுலையாள்
கூற்றவன் கொல்புலி தோலசைத்த
நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றவன் வளநகர் இடைமருதே
படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம்
முடைதலை இடுபலி கொண்டுழல்வான்
இடைமரு தினிதுறை யெம்மிறையே
பணைமுலை உமையொரு பங்கனொன்னார்
துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ
கணைதுர தடுதிறற் காலற்செற்ற
இணையிலி வளநகர் இடைமருதே
பொழிலவன் புயலவன் புயலியக்கு
தொழிலவன் துயரவன் துயரகற்றுங்
கழலவன் கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநகர் இடைமருதே
நிறையவன் புனலொடு மதியும்வைத்த
பொறையவன் புகழவன் புகழநின்ற
மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட
இறையவன் வளநகர் இடைமருதே
நனிவளர் மதியொடு நாகம்வைத்த
பனிமலர கொன்றையம் படர்சடையன்
முனிவரொ டமரர்கள் முறைவணங்க
இனிதுறை வளநகர் இடைமருதே
தருக்கின அரக்கன தாளுந்தோளும்
நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன்
றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும்
எரித்தவன் வளநகர் இடைமருதே
பெரியவன் பெண்ணினொ டாணுமானான்
வரியர வணைமறி கடற்றுயின்ற
கரியவன் அலரவன் காண்பரிய
எரியவன் வளநகர் இடைமருதே
சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
புந்தியில் உரையவை பொருள்கொளாதே
அந்தணர் ஓத்தினொ டரவமோவா
எந்தைதன் வளநகர் இடைமருதே
ஓத்து என்பது வேதம்
இலைமலி பொழிலிடை மருதிறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
உலகுறு புகழினொ டோ ங்குவரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கடைமுடி
பண் வியாழக்குறிஞ்சி
அருத்தனை அறவனை அமுதனைநீர்
விருத்தனை பாலனை வினவுதிரேல்
ஒருத்தனை யல்லதிங் குலகமேத்துங்
கருத்தவன் வளநகர் கடைமுடியே
திரைபொரு திருமுடி திங்கள்விம்மும்
அரைபொரு புலியதள் அடிகளிட
திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்
கரைபொரு வளநகர் கடைமுடியே
ஆலிள மதியினொ டரவுகங்கை
கோலவெண் ணீற்றனை தொழுதிறைஞ்சி
ஏலநன் மலரொடு விரைகமழுங்
காலன வளநகர் கடைமுடியே
கொய்யணி நறுமலர கொன்றையந்தார்
மையணி மிடறுடை மறையவனூர்
பையணி யரவொடு மான்மழுவாள்
கையணி பவனிடங் கடைமுடியே
மறையவன் உலகவன் மாயமவன்
பிறையவன் புனலவன் அனலுமவன்
இறையவன் எனவுல கேத்துங்கண்டங்
கறையவன் வளநகர் கடைமுடியே
படவர வேரல்குற் பல்வளைக்கை
மடவர லாளையொர் பாகம்வைத்து
குடதிசை மதியது சூடுசென்னி
கடவுள்தன் வளநகர் கடைமுடியே
பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல்
அடிபுல்கு பைங்கழல் அடிகளிடங்
கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்
கடிபுல்கு வளநகர் கடைமுடியே
நோதல்செய் தரக்கனை நோக்கழி
சாதல்செய் தவனடி சரணெனலும்
ஆதர வருள்செய்த அடிகளவர்
காதல்செய் வளநகர் கடைமுடியே
அடிமுடி காண்கிலர் ஓரிருவர்
புடைபுல்கி யருளென்று போற்றிசைப்ப
சடையிடை புனல்வைத்த சதுரனிடங்
கடைமுடி யதனயல் காவிரியே
மண்ணுதல் பறித்தலு மாயமிவை
எண்ணிய காலவை யின்பமல்ல
ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே
பொன்றிகழ் காவிரி பொருபுனல்சீர்
சென்றடை கடைமுடி சிவனடியை
நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன
இன்றமி ழிவைசொல இன்பமாமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கடைமுடியீசுவரர் தேவியார் அபிராமியம்பிகை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சிவபுரம்
பண் வியாழக்குறிஞ்சி
இன்குர லிசைகெழும் யாழ்முரல
தன்கரம் மருவிய சதுரன்நகர்
பொன்கரை பொருபழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே
அன்றடற் காலனை பாலனுக்கா
பொன்றிட வுதைசெய்த புனிதன்நகர்
வென்றிகொள் ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே
மலைமகள் மறுகிட மதகரியை
கொலைமல்க வுரிசெய்த குழகன்நகர்
அலைமல்கும் அரிசிலி னதனயலே
சிலைமல்கு மதிலணி சிவபுரமே
அரிசில் என்பது ஒரு நதி
மண்புன லனலொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்தன்நகர்
பண்புனை குரல்வழி வண்டுகெண்டி
செண்பக மலர்பொழிற் சிவபுரமே
வீறுநன் குடையவள் மேனிபாகங்
கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்
நாறுநன் குரவிரி வண்டுகிண்டி
தேறலுண் டெழுதரு சிவபுரமே
மாறெதிர் வருதிரி புரமெரித்து
நீறது வாக்கிய நிமலன்நகர்
நாறுடை நடுபவர் உழவரொடுஞ்
சேறுடை வயலணி சிவபுரமே
ஆவிலை தமர்ந்தவன் அரிவையொடு
மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான்
பூவில்வண் டமர்தரு பொய்கையன்ன
சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே
எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்
முழுவலி யடக்கிய முதல்வன்நகர்
விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து
செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே
சங்கள வியகையன் சதுர்முகனும்
அங்கள வறிவரி யவன்நகர்தான்
கங்குலும் பறவைகள் கமுகுதொறுஞ்
செங்கனி நுகர்தரு சிவபுரமே
மண்டையின் குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய விமலன்நகர்
பண்டமர் தருபழங் காவிரியின்
தெண்டிரை பொருதெழு சிவபுரமே
சிவனுறை தருசிவ புரநகரை
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவல்லம்
பண் வியாழக்குறிஞ்சி
எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்க
தரித்தவன் கங்கையை தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவிட திருவல்லமே
தாயவன் உலகுக்கு தன்னொப்பிலா
தூயவன் தூமதி சூடியெல்லாம்
ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ்
சேயவன் உறைவிட திருவல்லமே
பார்த்தவன் காமனை பண்பழி
போர்த்தவன் போதக தின்னுரிவை
ஆர்த்தவன் நான்முகன் தலையையன்று
சேர்த்தவன் உறைவிட திருவல்லமே
கொய்தஅம் மலரடி கூடுவார்தம்
மைதவழ் திருமகள் வணங்கவைத்து
பெய்தவன் பெருமழை யுலகமு
செய்தவன் உறைவிட திருவல்லமே
சார்ந்தவர கின்பங்கள் தழைக்கும்வண்ணம்
நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடி
தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே
சேர்ந்தவன் உறைவிட திருவல்லமே
பதைத்தெழு காலனை பாதமொன்றால்
உதைத்தெழு மாமுனி குண்மைநின்று
விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று
சிதைத்தவன் உறைவிட திருவல்லமே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்
ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
திகழ்ந்தவன் உறைவிட திருவல்லமே
பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவன் அருமறை யங்கமானான்
கரியவன் நான்முகன் காணவொண்ணா
தெரியவன் உறைவிட திருவல்லமே
அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய அறவுரை கூறாவண்ணம்
வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்குஞ்
சென்றவன் உறைவிட திருவல்லமே
கற்றவர் திருவல்லங் கண்டுசென்று
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்
பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வல்லநாதர் தேவியார் வல்லாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமாற்பேறு
பண் வியாழக்குறிஞ்சி
குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே
பாறணி வெண்டலை கையிலேந்தி
வேறணி பலிகொளும் வேட்கையனாய்
நீறணி துமையொரு பாகம்வைத்த
மாறிலி வளநகர் மாற்பேறே
கருவுடை யாருல கங்கள்வேவ
செருவிடை ஏறியுஞ் சென்றுநின்
றுருவுடை யாளுமை யாளுந்தானும்
மருவிய வளநகர் மாற்பேறே
தலையவன் தலையணி மாலைபூண்டு
கொலைநவில் கூற்றினை கொன்றுகந்தான்
கலைநவின் றான்கயி லாயமென்னும்
மலையவன் வளநகர் மாற்பேறே
துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும்
பிறையணி சடைமுடி பெண்ணொர்பாகன்
கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற
மறையவன் வளநகர் மாற்பேறே
பெண்ணின்நல் லாளையொர் பாகம்வைத்து
கண்ணினாற் காமனை காய்ந்தவன்றன்
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
தீதிலா மலையெடு தவ்வரக்கன்
நீதியால் வேதகீ தங்கள்பாட
ஆதியா னாகிய அண்ணலெங்கள்
மாதிதன் வளநகர் மாற்பேறே
செய்யதண் தாமரை கண்ணனொடுங்
கொய்யணி நறுமலர் மேலயனும்
ஐயன்நன் சேவடி அதனையுள்க
மையல்செய் வளநகர் மாற்பேறே
குளித்துணா அமணர்குண் டாக்கரென்றுங்
களித்துநன் கழலடி காணலுற்றார்
முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே
அந்தமில் ஞானசம் பந்தன்நல்ல
செந்திசை பாடல்செய் மாற்பேற்றை
சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார்
எந்தைதன் கழலடி எய்துவரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திரு இராமனதீச்சரம்
பண் வியாழக்குறிஞ்சி
சங்கொளிர் முன்கையர் தம்மிடையே
அங்கிடு பலிகொளு மவன்கோ
பொங்கர வாடலோன் புவனியோங்க
எங்குமன் இராமன தீச்சுரமே
சந்தநன் மலரணி தாழ்சடையன்
தந்தம தத்தவன் தாதையோதான்
அந்தமில் பாடலோன் அழகன்நல்ல
எந்தவன் இராமன தீச்சுரமே
தழைமயி லேறவன் தாதையோதான்
மழைபொதி சடையவன் மன்னுகாதிற்
குழையது விலங்கிய கோலமார்பின்
இழையவன் இராமன தீச்சுரமே
சத்தியு ளாதியோர் தையல்பங்கன்
முத்திய தாகிய மூர்த்தியோதான்
அத்திய கையினில் அழகுசூலம்
வைத்தவன் இராமன தீச்சுரமே
தாழ்ந்த குழற்சடை முடியதன்மேல்
தோய்ந்த இளம்பிறை துளங்குசென்னி
பாய்ந்தகங் கையொடு படவரவம்
ஏய்ந்தவன் இராமன தீச்சுரமே
சரிகுழல் இலங்கிய தையல்காணும்
பெரியவன் காளிதன் பெரியகூத்தை
அரியவன் ஆடலோன் அங்கையேந்தும்
எரியவன் இராமன தீச்சுரமே
மாறிலா மாதொரு பங்கன்மேனி
நீறது ஆடலோன் நீள்சடைமேல்
ஆறது சூடுவான் அழகன்விடை
ஏறவன் இராமன தீச்சுரமே
தடவரை அரக்கனை தலைநெரித்தோன்
படவர வாட்டிய படர்சடையன்
நடமது வாடலான் நான்மறைக்கும்
இடமவன் இராமன தீச்சுரமே
தனமணி தையல்தன் பாகன்றன்னை
அனமணி அயன்அணி முடியுங்காணான்
பனமணி அரவரி பாதங்காணான்
இனமணி இராமன தீச்சுரமே
தறிபோலாஞ் சமணர்சா கியர்சொற்கொளேல்
அறிவோரால் நாமம் அறிந்துரைமின்
மறிகையோன் தன்முடி மணியார்கங்கை
எறிபவன் இராமன தீச்சுரமே
தேன் மலர கொன்றை யோன்
முந்தமக்கூனமன்றே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் இராமநாதேசுவரர் தேவியார் சரிவார்குழலியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திரு நீலகண்டம்
பண் வியாழக்குறிஞ்சி
அவ்வினை கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்த கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயில் மூன்றெரி தீரென் றிருபொழுதும்
பூவினை கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலை சூலமு தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமை தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போது தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவது தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்து திருவடி யேயடைந்தோம்
செற்றெமை தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்தி
பிறப்பில் பெருமான் திருந்தடி கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலி தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
கருவை கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனை சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலி தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய அடியும் முடியு தொடர்வரியீர்
தோற்றினு தோற்று தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
சாக்கி பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலை போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றை புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழி தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே
இது திருக்கொடிமாட செங்குன்றூரில் அடியார்களுக்கு
கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பிரமபுரம் மொழிமாற்று
பண் வியாழக்குறிஞ்சி
காட தணிகலங் காரர வம்பதி காலதனிற்
தோட தணிகுவர் சுந்தர காதினில் தூச்சிலம்பர்
வேட தணிவர் விசயற் குருவம்வில் லுங்கொடுப்பர்
பீட தணிமணி மாட பிரம புரத்தாரே
கற்றை சடையது கங்கணம் முன்கையில் திங்கள்கங்கை
பற்றித்து முப்புரம் பார்படை தோன்றலை சுட்டதுபண்
டெற்றித்து பாம்பை யணிந்தது கூற்றை யெழில்விளங்கும்
வெற்றி சிலைமதில் வேணு புரத்தெங்கள் வேதியரே
கூவிளங் கையது பேரி சடைமுடி கூட்டத்தது
தூவிளங் கும்பொடி பூண்டது பூசிற்று துத்திநாகம்
ஏவிளங் குந்நுத லாளையும் பாகம் உரித்தனரின்
பூவிளஞ் சோலை புகலியுள் மேவிய புண்ணியரே
உரித்தது பாம்பை யுடல்மிசை இட்டதோர் ஒண்களிற்றை
எரித்ததொ ராமையை இன்புற பூண்டது முப்புரத்தை
செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்விபன்னூல்
விரித்தவர் வாழ்தரு வேங்குரு வில்வீற் றிருந்தவரே
கொட்டுவர் அக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன
விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின்
மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர்வான்
தொட்டுவ ருங்கொடி தோணி புரத்துறை சுந்தரரே
சாத்துவர் பாச தடக்கையி லேந்துவர் கோவணந்தங்
கூத்தவர் கச்சு குலவிநின் றாடுவர் கொக்கிறகும்
பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார்
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே
காலது கங்கை கற்றைச்சடை யுள்ளாற் கழல்சிலம்பு
மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர்கொழுங்கோ
டாலது ஊர்வர் அடலேற் றிருப்பர் அணிமணிநீர
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே
நெருப்புரு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின்கண்
மருப்புரு வன்கண்ணர் தாதையை காட்டுவர் மாமுருகன்
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறல் மாதவர்வாழ்
பொருப்புறு மாளிகை தென்புற வத்தணி புண்ணியரே
இலங்கை தலைவனை யேந்திற் றிறுத்த திரலை யின்னாள்
கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது
கலங்கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டகத்து
சலங்கிளர் வாழ்வயல் சண்பையுள் மேவிய தத்துவரே
அடியிணை கண்டிலன் தாமரை யோன்மால் முடிகண்டிலன்
கொடியணி யும்புலி யேறுக தேறுவர் தோலுடுப்பர்
பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர் கூறுடையர்
கடியணி யும்பொழிற் காழியுள் மேய கறைக்கண்டரே
கையது வெண்குழை காதது சூலம் அமணர்புத்தர்
எய்துவர் தம்மை அடியவர் எய்தாரோர் ஏனக்கொம்பு
மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது மேதகைய
கொய்தலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே
கல்லுயர் கழுமல விஞ்சியுள் மேவிய கடவுள்தன்னை
நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணர
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லைவானவர் தங்களொடுஞ்
செல்குவர் சீரரு ளாற்பெற லாம்சிவ லோகமதே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பருப்பதம்
பண் வியாழக்குறிஞ்சி
சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர அரைக்கசைத்தான்
இடுமணி யெழிலானை யேறலன் எருதேறி
விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டு
படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே
நோய்புல்கு தோல்திரைய நரைவரு நுகருடம்பில்
நீபுல்கு தோற்றமெல்லாம் நினையுள்கு மடநெஞ்சே
வாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கி
பாய்புலி தோலுடையான் பருப்பதம் பரவுதுமே
துனியுறு துயர்தீர தோன்றியோர் நல்வினையால்
இனியுறு பயனாதல் இரண்டுற மனம்வையேல்
கனியுறு மரமேறி கருமுசு கழையுகளும்
பனியுறு கதிர்மதியான் பருப்பதம் பரவுதுமே
கொங்கணி நறுங்கொன்றை தொங்கலன் குளிர்சடையான்
எங்கள்நோய் அகலநின்றா னெனவரு ளீசனிடம்
ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகழித்த
பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே
துறைபல சுனைமூழ்கி தூமலர் சுமந்தோடி
மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்த
சிறையொலி கிளிபயிலு தேனினம் ஒலியோவா
பறைபடு விளங்கருவி பருப்பதம் பரவுதுமே
சீர்கெழு சிறப்போவா செய்தவ நெறிவேண்டில்
ஏர்கெழு மடநெஞ்சே யிரண்டுற மனம்வையேல்
கார்கெழு நறுங்கொன்றை கடவுள திடம்வகையால்
பார்கெழு புகழோவா பருப்பதம் பரவுதுமே
புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழ
தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேற
விடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணீறணிவான்
படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே
நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே
மனத்தினை வலித்தொழிந்தேன் அவலம்வ தடையாமை
கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடை கரந்தான்றன்
பனைத்திரள் பாயருவி பருப்பதம் பரவுதுமே
மருவிய வல்வினைநோய் அவலம்வ தடையாமல்
திருவுரு அமர்ந்தானு திசைமுகம் உடையானும்
இருவரும் அறியாமை எழுந்ததோ ரெரிநடுவே
பருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே
சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின்
படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே
வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான்
பண்செல பலபாடல் இசைமுரல் பருப்பதத்தை
நன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தன்நல்ல
ஒண்சொலின் இவைமாலை யுருவெண தவமாமே
இத்தலம் வடதேசத்திலுள்ளது ஸ்ரீசைலமென்றும்
மல்லிகார்ச்சுன மென்றும் வழங்குகின்றது
சுவாமிபெயர் பருப்பதேசுவரர் தேவியார் பருப்பதமங்கையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கள்ளில்
பண் வியாழக்குறிஞ்சி
முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை
வெள்ளின்மேல் விடுகூறை கொடி விளைந்த
கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே
ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான்
ஓடலாற் கலனில்லான் உறை பதியால்
காடலாற் கருதாத கள்ளில் மேயான்
பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே
எண்ணார்மும் மதிலெய்த இமையா முக்கண்
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
கண்ணார் நீறணிமார்பன் கள்ளில் மேயான்
பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே
பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்
நறைபெற்ற விரிகொன்றை தார் நயந்த
கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான்
நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே
விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மா
கரையார்பொன் புனல்வேலி கள்ளில் மேயான்
அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே
நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
கலனாய தலையோட்டான் கள்ளில் மேயான்
மலனாய தீர்த்தெய்தும் மாதவ தோர்க்கே
பொடியார்மெய் பூசினும் புறவின் நறவங்
குடியாவூர் திரியினுங் கூப்பி டினுங்
கடியார்பூம் பொழிற்சோலை கள்ளில் மேயான்
அடியார்பண் பிகழ்வார்கள் ஆதர் களே
திருநீல மலரொண்கண் தேவி பாகம்
புரிநூலு திருநீறும் புல்கு மார்பில்
கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும்
பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே
வரியாய மலரானும் வை தன்னை
உரிதாய அளந்தானும் உள்ளு தற்கங்
கரியானும் அறியாத கள்ளில் மேயான்
பெரியானென் றறிவார்கள் பேசு வாரே
ஆச்சி பேய்களோ டமணர் குண்டர்
பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள்
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
தீச்செய்த சடையண்ணல் திரு தடியே
திகைநான்கும் புகழ்காழி செல்வம் மல்கு
பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல
முகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்த
புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சிவானந்தேசுவரர் தேவியார் ஆனந்தவல்லியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு திருவிராகம்
பண் வியாழக்குறிஞ்சி
பணிந்தவர் அருவினை பற்றறு தருள்செ
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்
டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
கீர்த்திமி கவன்நகர் கிளரொளி யுடனட
பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்து
போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை
ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
வரிந்தவெஞ் சிலைபிடி தவுணர்தம் வளநகர்
எரிந்தற வெய்தவன் எழில்திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள
அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடை
மாய்ந்தற எய்தவன் வளர்பிறை விரிபுனல்
தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம்
ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
மானன மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே
முன்பனை முனிவரொ டமரர்கள் தொழுதெழும்
இன்பனை இணையில இறைவனை எழில்திகழ்
என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும்
அன்பன வளநகர் அந்தண் ஐயாறே
வன்றிறல் அவுணர்தம் வளநகர் எரியிடை
வெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில்
பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன்
அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே
விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை யெடுத்தலும்
அடித்தல தால்இறை யூன்றிமற் றவனது
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனனல்
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட
கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய
அண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே
மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா
இருளுடை இணைத்துவர போர்வையி னார்களு
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
அருளுடை யடிகள்தம் அந்தண் ஐயாறே
நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ்
அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினை
கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக
நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவிடைமருதூர் திருவிராகம்
பண் வியாழக்குறிஞ்சி
நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே
மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை
கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்
குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்
இழைநுழை புரியணல் இடமிடை மருதே
அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன்
கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்
பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின்
இருமையும் உடையணல் இடமிடை மருதே
பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்
வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர்
எரிவளர் சடையணல் இடமிடை மருதே
வருநல மயிலன மடநடை மலைமகள்
பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான்
செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்
இருநல புகழ்மல்கும் இடமிடை மருதே
கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்
விலையுடை அணிகலன் இலனென மழுவினொ
டிலையுடை படையவன் இடமிடை மருதே
வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்
இளமணல் அணைகரை யிசைசெயும் இடைமரு
துளமென நினைபவர் ஒலிகழல் இணையடி
குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே
மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு
துறையவன் எனவல அடியவர் துயரிலர்
கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை
இறையவன் உறைதரும் இடமிடை மருதே
மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
இருதுடை யகலமொ டிகலின ரினதென
கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர்
எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே
துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்
கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்
அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே
தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த
படமலி தமிழிவை பரவவல் லவர்வினை
கெடமலி புகழொடு கிளரொளி யினரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவிடைமருதூர் திருவிராகம்
பண் வியாழக்குறிஞ்சி
விரிதரு புலியுரி விரவிய அரையினர்
திரிதரும் எயிலவை புனைகணை யினிலெய்த
எரிதரு சடையினர் இடைமரு தடைவுனல்
புரிதரு மன்னவர் புகழ்மிக வுளதே
மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
எறிதிரை கரைபொரும் இடைமரு தெனுமவர்
செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்
பிறிதிரை பெறுமுடல் பெருகுவ தரிதே
சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்
இலரென இடுபலி யவரிடை மருதினை
வலமிட வுடல்நலி விலதுள வினையே
விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி
கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்
இடைவிட லரியவர் இடைமரு தெனும்நகர்
உடையவர் அடியிணை தொழுவதெம் உயர்வே
உரையரும் உருவினர் உணர்வரு வகையினர்
அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை
இரைமரும் அரவினர் இடைமரு தெனவுளம்
உரைகள துடையவர் புகழ்மிக வுளதே
ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும்
அழகிய முடியுடை அடிகள தறைகழல்
எழிலினர் உறையிடை மருதினை மலர்கொடு
தொழுதல்செய் தெழுமவர் துயருறல் இலரே
கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
நிலையினர் சலமகள் உலவிய சடையினர்
மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்
இலைமலி படையவர் இடமிடை மருதே
செருவடை யிலவல செயல்செ திறலொடும்
அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர
இருவகை விரனிறி யவரிடைமருதது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே
அரியொடு மலரவன் எனவிவ ரடிமுடி
தெரிவகை அரியவர் திருவடி தொழுதெழ
எரிதரும் உருவர்தம் இடைமரு தடைவுறல்
புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே
குடைமயி லினதழை மருவிய வுருவினர்
உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழிலிடைமருதினை
பரவிய ஒருபது பயிலவல் லவரிடர்
விரவிலர் வினையொடு வியனுல குறவே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவலிவலம் திருவிராகம்
பண் வியாழக்குறிஞ்சி
பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை எதிர்விழி யுமையவள்
மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்
மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே
இட்டம தமர்பொடி யிசைதலின் நசைபெறு
பட்டவிர் பவளநல் மணியென அணிபெறு
விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர்
மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே
உருமலி கடல்கடை வுழியுல கமருயிர்
வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி
கருமணி நிகர்களம் உடையவன் மிடைதரு
மருமலி பொழில்வலி வலமுறை யிறையே
அனல்நிகர் சடையழல் அவியுற வெனவரு
புனல்நிகழ் வதுமதி நனைபொறி அரவமும்
எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை
மனமுடை யவர்வலி வலமுறை யிறையே
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே
தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக
விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து
நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில்
வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே
நலிதரு தரைவர நடைவரும் இடையவர்
பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு
பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர்
வலிவரு மதில்வலி வலமுறை யிறையே
இரவணன் இருபது கரமெழில் மலைதனின்
இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து
இரவணம் அமர்பெயர் அருளின னகநெதி
இரவண நிகர்வலி வலமுறை யிறையே
தேனமர் தருமலர் அணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நிலம் அகழ்அரி யடிமுடி
தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலமுறை யிறையே
இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையில் உணலுடை யவர்களும் நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
மலைமலி மதில்வலி வலமுறை யிறையே
மன்னிய வலிவல நகருறை யிறைவனை
இன்னியல் கழுமல நகரிறை யெழில்மறை
தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை
உன்னிய வொருபதும் உயர்பொருள் தருமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவீழிமிழலை திருவிராகம்
பண் வியாழக்குறிஞ்சி
அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
மலர்மலி குழலுமை தனையிடம் மகிழ்பவர்
நலம்மலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ்
நிலமலி மிழலையை நினையவ லவரே
இருநில மிதன்மிசை யெழில்பெறும் உருவினர்
கருமலி தருமிகு புவிமுதல் உலகினில்
இருளறு மதியினர் இமையவர் தொழுதெழு
நிருபமன் மிழலையை நினையவ லவரே
கலைமகள் தலைமகன் இவனென வருபவர்
அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை
இலைமலி யிதழியு மிசைதரு சடையினர்
நிலைமலி மிழலையை நினையவ லவரே
மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர்
காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடமர் மிழலையை நினையவ லவரே
புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை
இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர்
முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு
நிகழ்தரு மிழலையை நினையவ லவரே

அன்றினர் அரியென வருபவர் அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினிலெரி
சென்றுகொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற
நின்றவன் மிழலையை நினையவ லவரே
கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர்
சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர்
வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி
நிரம்பினர் மிழலையை நினையவ லவரே
ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர்
அரக்கன்நன் மணிமுடி யொருபதும் இருபது
கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
நெருக்கினன் மிழலையை நினையவ லவரே
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமலர் அயனரி கருதரு வகைதழல்
வடிவுரு வியல்பினொ டுலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினையவ லவரே
மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர்
வன்மலர் துவருடை யவர்களும் மதியிலர்
துன்மதி யமணர்கள் தொடர்வரு மிகுபுகழ்
நின்மலன் மிழலையை நினையவ லவரே
நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி
பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு
கற்றுவல் லவருல கினிலடி யவரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சிவபுரம் திருவிராகம்
பண் வியாழக்குறிஞ்சி
கலைமலி யகலல்குல் அரிவைதன் உருவினன்
முலைமலி தருதிரு வுருவம துடையவன்
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே
படரொளி சடையினன் விடையினன் மதிலவை
சுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதி
திடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம்
இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே
வரைதிரி தரவர வகடழ லெழவரு
நுரைதரு கடல்விடம் நுகர்பவன் எழில்திகழ்
திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்
உரைதரும் அடியவர் உயர்கதி யினரே
துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடு
பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர்
தணிவுடை யவர்பயில் சிவபுரம் மருவிய
மணிமிட றனதடி இணைதொழு மவரே
மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
நிறையவன் உமையவள் மகிழ்நடம் நவில்பவன்
இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென உடையவன் எமையுடை யவனே
முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய்
ததிர்கழல் ஒலிசெய வருநடம் நவில்பவன்
எதிர்பவர் புரமெய்த இணையிலி யணைபதி
சதிர்பெறும் உளமுடை யவர்சிவ புரமே
வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்
பொடிபடும் உழையதள் பொலிதிரு வுருவினன்
செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
அடைதரும் அடியவர் அருவினை யிலரே
கரமிரு பதுமுடி யொருபதும் உடையவன்
உரம்நெரி தரவரை யடர்வுசெய் தவனுறை
பரனென அடியவர் பணிதரு சிவபுர
நகரது புகுதல்நம் உயர்கதி யதுவே
அன்றிய லுருவுகொள் அரியய னெனுமவர்
சென்றள விடலரி யவனுறை சிவபுரம்
என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்
ஒன்றிலர் புகழொடும் உடையரிவ் வுலகே
புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரை
வித்தக மொழிகில விடையுடை யடிகள்தம்
இத்தவம் முயல்வுறில் இறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே
புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
எந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினை
சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கழுமலம் திருத்தாளச்சதி
பண் வியாழக்குறிஞ்சி
பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பர
பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ்
சிந்தித்தே வந்திப்ப சிலம்பின்மங்கை தன்னொடுஞ்
சேர்வார்நாள்நாள் நீள்கயிலை திகழ்தரு பரிசதெலாஞ்
சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற்
தாமேகாணா வாழ்வார தகவுசெய் தவனதிடங்
கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தன
காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே
பிச்சைக்கே யிச்சித்து பிசைந்தணிந்த வெண்பொடி
பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும்
உச்சத்தால் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணே
றூராவூரா நீள்வீதி பயில்வொடும் ஒலிசெயிசை
வச்சத்தான் நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்
வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங்
கச்சத்தான் மெச்சிப்பூ கலந்திலங்கு வண்டினங்
காரார்காரார் நீள்சோலை கழுமல வளநகரே
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்
சேரேசேரே நீராக செறிதரு சுரநதியோ
டங்கைச்சேர் வின்றிக்கே அடைந்துடைந்த வெண்டலை
பாலேமேலே மாலே படர்வுறு மவனிறகும்
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின்
போதார்தாரே தாமேவி புரிதரு சடையனிடங்
கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே
அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டல
தாறேவேறே வானாள்வார் அவரவ ரிடமதெலாம்
மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரும்
மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய
முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த இஞ்சிசூழ்
மூவாமூதூர் மூதூரா முனிவுசெய் தவனதிடங்
கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திர
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே
திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டல
சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீ
போலேபூநீர் தீகான்மீ புணர்தரு முயிர்கள்திறஞ்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்க
தோடேயாமே மாலோக துயர்களை பவனதிடங்
கைக்கப்போ யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலை
காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே
செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ்
சேரேவாரா நீள்கோதை தெரியிழை பிடியதுவாய்
ஒற்றைச்சேர் முற்றல்கொம் புடைத்தடக்கை முக்கண்மி
கோவாதேபாய் மாதான துறுபுகர் முகஇறையை
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
பேராநோய்தா மேயாமை பிரிவுசெய் தவனதிடங்
கற்றிட்டே யெட்டெட்டு கலைத்துறை கரைச்செல
காணாதாரே சேராமெ கழுமல வளநகரே
பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வா
பாலேபோகா மேகாவா பகையறும் வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்குமு குணங்கள்வாய்
மூடாவூடா நாலந்த கரணமும் ஒருநெறியா
சித்திக்கே யுய்த்திட்டு திகழ்ந்தமெ பரம்பொருள்
சேர்வார்தாமே தானாக செயுமவன் உறையுமிடங்
கத்திட்டோ ர் சட்டங்கங் கலந்திலங்கும் நற்பொருள்
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே
செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற்
சேரேவாரா வாரீச திரையெறி நகரிறைவன்
இம்பர்க்கே தஞ்செய்தி டிருந்தரன் பயின்றவெற்
பேரார்பூநே ரோர்பா தெழில்விரல் அவண்நிறுவி
டம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்துவந்த னஞ்செய்தாற்
காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங்
கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மத
காரார்சேறார் மாவீதி கழுமல வளநகரே
பன்றிக்கோ லங்கொண்டி படித்தடம் பயின்றிட
பானாமால்தா னாமே பறவையி னுருவுகொள
ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ
னோதானோதான் அஃதுணரா துருவின தடிமுடியுஞ்
சென்றிட்டே வந்திப்ப திருக்களங்கொள் பைங்கணின்
றேசால்வேறோ ராகார தெரிவுசெய் தவனதிடங்
கன்றுக்கே முன்றிற்கே கலந்தில நிறைக்கவுங்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே
தட்டிட்டே முட்டிக்கை தடுக்கிடுக்கி நின்றுணா
தாமேபேணா தேநாளுஞ் சமணொடு முழல்பவரும்
இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர
கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூ
புட்டத்தே யட்டிட்டு புதைக்குமெய்க்கொள் புத்தரும்
போல்வார்தாமோ ராமேபோ புணர்வுசெய் தவனதிடங்
கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே
கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்ப
கானேதேனே போராருங் கழுமல நகரிறையை
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை
தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள்
எஞ்சத்தேய் வின்றிக்கே இமைத்திசை தமைத்தகொண்
டேழேயேழே நாலேமூன் றியலிசை இசையியல்பா
வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொள பயிற்றுவோர்
மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

சீகாழி திருஏகபாதம்
பண் வியாழக்குறிஞ்சி
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
சுடர்மணி மாளிகை தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகை தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகை தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகை தோணி புரத்தவன்
பூசுரர் சேர்பூ தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூ தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூ தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூ தராயவன் பொன்னடி
செருக்குவா புடையான் சிரபுர மென்னில்
செருக்குவா புடையான் சிரபுர மென்னில்
செருக்குவா புடையான் சிரபுர மென்னில்
செருக்குவா புடையான் சிரபுர மென்னில்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
தசமுக னெறிதர வூன்று சண்பையான்
தசமுக னெறிதர வூன்று சண்பையான்
தசமுக னெறிதர வூன்று சண்பையான்
தசமுக னெறிதர வூன்று சண்பையான்
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கழுமல முதுபதி கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதி கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதி கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதி கவுணியன் கட்டுரை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவெழுகூற்றிருக்கை
பண் வியாழக்குறிஞ்சி
ஓருரு வாயினை மானாங் கார
தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்தளி தழிப்பமும் மூர்த்திக ளாயினை
இருவரோ டொருவ னாகி நின்றனை
ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும்
முப்பொழு தேத்திய நால்வர கொளிநெறி
காட்டினை நாட்டமூன் றா கோட்டினை
இருநதி யரவமோ டொருமதி சூடினை
ஒருதா ளீரயின் மூவிலை சூலம்
நாற்கால் மான்மறி ஐந்தலை யரவம்
ஏந்தினை காய்ந்த நால்வாய் மு
திருகோ டொருகரி யீடழி துரித்தனை
ஒருதனு இருகால் வளைய வாங்கி
முப்புர தோடு நானிலம் அஞ்ச
கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை
ஐம்புலன் நாலாம் அந்த கரணம்
முக்குணம் இருவளி யொருங்கிய வானோர்
ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ
டிருபிற போர்ந்து முப்பொழுது குறைமுடித்து
நான்மறை யோதி ஐவகை வேள்வி
அமைத்தா றங்க முதலெழு தோதி
வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை
இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை
பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூ வுலகும் புதையமேல் மிதந்த
தோணிபுர துறைந்தனை தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை
வரபுர மென்றுணர் சிரபுர துறைந்தனை
ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடு தருளினை புறவம் புரிந்தனை
முந்நீர துயின்றோன் நான்முகன் அறியா
பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை
ஐயுறும் அமணரும் அறுவகை தேரரும்
ஊழியும் உணரா காழி யமர்ந்தனை
எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்
மறை முதல் நான்கும்
மூன்று காலமு தோன்ற நின்றனை
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதி கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதி கவுணியன் அறியும்
அனைய தன்மையை யாதலின் நின்னை
நினைய வல்லவ ரில்லை நீள்நிலத்தே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கழுமலம்
பண் மேகராகக்குறிஞ்சி
சேவுயரு திண்கொடியான் திருவடியே
சரணென்று சிறந்தவன்பால்
நாவியலும் மங்கையொடு நான்முகன்றான்
வழிபட்ட நலங்கொள்கோயிற்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்ட
செங்குமுதம் வாய்கள்காட்ட
காவியிருங் கருங்குவளை கருநெய்தல்
கண்காட்டுங் கழுமலமே
பெருந்தடங்கண் செந்துவர்வா பீடுடைய
மலைச்செல்வி பிரியாமேனி
அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தான்
அமரர்தொழ வமருங்கோயில்
தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்
இறைவனது தன்மைபாடி
கருந்தடங்கண் ணார்கழல்ப தம்மானை
பாட்டயருங் கழுமலமே
அலங்கல்மலி வானவரு தானவரும்
அலைகடலை கடையப்பூதங்
கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி
கண்டத்தோன் கருதுங்கோயில்
விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபு
கூன்சலிக்குங் காலத்தானுங்
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய
மெய்யர்வாழ் கழுமலமே
பாரிதனை நலிந்தமரர் பயமெய்த
சயமெய்தும் பரிசுவெம்மை
போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு
சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில்
வாரிசைமென் முலைமடவார் மாளிகையின்
சூளிகைமேல் மகப்பாராட்ட
காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு
மகிழ்வெய்துங் கழுமலமே
ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க
ளொடுவன்னி மத்தமன்னும்
நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர்
செஞ்சடையான் நிகழுங்கோயில்
ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி
மலையென்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு
சுதைமாட கழுமலமே
தருஞ்சரத தந்தருளென் றடிநினைந்து
தழலணைந்து தவங்கள்செய்த
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ
ழமையளித்த பெருமான்கோயில்
அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப
அதுகுடித்து களித்துவாளை
கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய
அகம்பாயுங் கழுமலமே
புவிமுதலைம் பூதமா புலனைந்தாய்
நிலனைந்தா கரணம்நான்காய்
அவையவைசேர் பயனுருவா யல்லவுரு
வாய்நின்றான் அமருங்கோயில்
தவமுயல்வோர் மலர்பறிப்ப தாழவிடு
கொம்புதைப்ப கொக்கின்காய்கள்
கவணெறிகற் போற்சுனையின் கரைசேர
புள்ளிரியுங் கழுமலமே
அடல்வந்த வானவரை யழித்துலகு
தெழித்துழலும் அரக்கர்கோமான்
மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல்
பணிகொண்டோ ன் மேவுங்கோயில்
நடவந்த உழவரிது நடவொணா
வகைபரலா தென்றுதுன்று
கடல்வந்த சங்கீன்ற முத்துவயற்
கரைகுவிக்குங் கழுமலமே
பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு
கேழலுரு வாகிப்புக்கி
டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா
வகைநின்றான் அமருங்கோயில்
பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள்
கொண்டணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்து களிகூர்ந்து
நின்றேத்துங் கழுமலமே
குணமின்றி புத்தர்களும் பொய்த்தவத்தை
மெய்த்தவமாய் நின்றுகையில்
உணல்மருவுஞ் சமணர்களு முணராத
வகைநின்றான் உறையுங்கோயில்
மணமருவும் வதுவையொலி விழவினொலி
யிவையிசைய மண்மேல்தேவர்
கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க
மேல்படுக்குங் கழுமலமே
கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து
ளீசன்றன் கழல்மேல்நல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்
பந்தன்றான் நயந்துசொன்ன
சொற்றுணையோ ரைந்தினொடை திவைவல்லார்
தூமலராள் துணைவராகி
முற்றுலக மதுவாண்டு முக்கணான்
அடிசேர முயல்கின்றாரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு
பண் மேகராகக்குறிஞ்சி
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்தி டைம்மே஧லுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென்
றருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவதிர மழையென்றஞ்சி
சிலமந்தி யலமந்து மரமேறி
முகில்பார்க்கு திருவையாறே
விடலேறு படநாகம் அரைக்கசைத்து
வெற்பரையன் பாவையோடும்
அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர்
பலியென்னு மடிகள்கோயில்
கடலேறி திரைமோதி காவிரியி
னுடன்வந்து கங்குல்வைகி
திடலேறி சுரிசங்கஞ் செழுமுத்தங்
கீன்றலைக்கு திருவையாறே
கங்காளர் கயிலாய மலையாளர்
கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூல படையாளர்
விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காள பொழில்நுழைந்து கூர்வாயால்
இறகுலர்த்தி கூதல்நீங்கி
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல்
இரைதேரு திருவையாறே
ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின்
பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார்
தழலுருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி
மந்திபாய் மடுக்கள்தோறு
தேன்பாய மீன்பாய செழுங்கமல
மொட்டலரு திருவையாறே
நீரோடு கூவிளமும் நிலாமதியும்
வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றை
தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த
தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும்
பொழிலணைந்த கமழ்தார்வீதி
தேரோடும் அரங்கேறி சேயிழையார்
நடம்பயிலு திருவையாறே
வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
நெறிகாட்டும் விகிர்தனாகி
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த
புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தார மிசையமைத்து காரிகையார்
பண்பாட கவினார்வீதி
தேந்தாமென் றரங்கேறி சேயிழையார்
நடமாடு திருவையாறே
நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு
புரமூன்றும் நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி
மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவ கொழும்பிரச
மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருட செழுங்கரும்பு
கண்வளரு திருவையாறே
அஞ்சாதே கயிலாய மலையெடுத்த
அரக்கர்கோன் தலைகள்பத்தும்
மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனு
கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ
இளமேதி இரிந்தங்கோடி
செஞ்சாலி கதிருழக்கி செழுங்கமல
வயல்படியு திருவையாறே
மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை
மிகவகழ்ந்து மிக்குநாடும்
மாலோடு நான்முகனு மறியாத
வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலோட கோல்வளையார் கூத்தாட
குவிமுலையார் முகத்தினின்று
சேலோட சிலையாட சேயிழையார்
நடமாடு திருவையாறே
குண்டாடு குற்றுடுக்கை சமணரொடு
சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே
யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர்
இறைவரினி தமருங்கோயில்
செண்டாடு புனல்பொன்னி செழுமணிகள்
வந்தலைக்கு திருவையாறே
அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம்
பெருமானை அந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான
சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால்
ஈசனடி யேத்துவார்கள்
தன்னிசையோ டமருலகில் தவநெறிசென்
றெய்துவார் தாழாதன்றே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமுதுகுன்றம்
பண் மேகராகக்குறிஞ்சி
மெய்த்தாறு சுவையும் ஏழிசையும்
எண்குணங்களும் விரும்பும்நால்வே
தத்தாலும் அறிவொண்ணா நடைதெளி
பளிங்கேபோல் அரிவைபாகம்
ஒத்தாறு சமயங்க கொருதலைவன்
கருதுமூர் உலவுதெண்ணீர்
முத்தாறு வெதிருதிர நித்திலம்வா
ரிக்கொழிக்கும் முதுகுன்றமே
வேரிமிகு குழலியொடு வேடுவனாய்
வெங்கானில் விசயன்மேவு
போரின்மிகு பொறையளந்து பாசுபதம்
புரிந்தளித்த புராணர்கோயில்
காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல
மலருதிர்த்து கயமுயங்கி
மூரிவளம் கிளர்தென்றல் திருமுன்றிற்
புகுந்துலவு முதுகுன்றமே
தக்கனது பெருவேள்வி சந்திரனி
திரனெச்சன் அருக்கன்அங்கி
மிக்கவிதா தாவினொடும் விதிவழியே
தண்டித்த விமலர்கோயில்
கொக்கினிய கொழும்வருக்கை கதலிகமு
குயர்தெங்கின் குவைகொள்சோலை
முக்கனியின் சாறொழுகி சேறுலரா
நீள்வயல்சூழ் முதுகுன்றமே
வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய
விறலழிந்து விண்ணுளோர்கள்
செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்ப
தேவர்களே தேரதாக
மைம்மருவு மேருவிலு மாசுணநாண்
அரியெரிகால் வாளியாக
மும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த
முதல்வனிடம் முதுகுன்றமே
இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள்
ஒருபாலா யொருபாலெள்கா
துழைமேவும் உரியுடுத்த ஒருவனிரு
பிடமென்பர் உம்பரோங்கு
கழைமேவு மடமந்தி மழைகண்டு
மகவினொடும் புகவொண்கல்லின்
முழைமேவு மால்யானை இரைதேரும்
வளர்சாரல் முதுகுன்றமே
நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த
நாதனிடம் நன்முத்தாறு
வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு
கரையருகு மறியமோதி
தகையாரும் வரம்பிடறி சாலிகழு
நீர்குவளை சாயப்பாய்ந்து
முகையார்செ தாமரைகள் முகம்மலர
வயல்தழுவு முதுகுன்றமே
அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ்
இருந்தருளி யமரர்வேண்ட
நிறங்கிளர்செ தாமரையோன் சிரமைந்தின்
ஒன்றறுத்த நிமலர்கோயில்
திறங்கொள்மணி தரளங்கள் வரத்திரண்டங்
கெழிற்குறவர் சிறுமிமார்கள்
முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி
முத்துலைப்பெய் முதுகுன்றமே
கதிரொளிய நெடுமுடிப துடையகடல்
இலங்கையர்கோன் கண்ணும்வாயும்
பிதிரொளிய கனல்பிறங்க பெருங்கயிலை
மலையைநிலை பெயர்த்தஞான்று
மதிலளகை கிறைமுரல மலரடியொன்
றூன்றிமறை பாடவாங்கே
முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்
வாய்ந்தபதி முதுகுன்றமே
பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும்
பூந்துழாய் புனைந்தமாலும்
ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ
துறநாடி யுண்மைகாணா
தேவாரு திருவுருவன் சேருமலை
செழுநிலத்தை மூடவந்த
மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ
மேலுயர்ந்த முதுகுன்றமே
மேனியில்சீ வரத்தாரும் விரிதருத
டுடையாரும் விரவலாகா
ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும்
உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்
ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை
முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து
தவம்புரியும் முதுகுன்றமே
முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும்
முதுகுன்ற திறையைமூவா
பழங்கிழமை பன்னிருபேர் படைத்துடைய
கழுமலமே பதியாக்கொண்டு
தழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான
சம்பந்தன் சமைத்தபாடல்
வழங்குமிசை கூடும்வகை பாடுமவர்
நீடுலகம் ஆள்வர்தாமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவீழிமிழலை
பண் மேகராகக்குறிஞ்சி
ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்
கீரிருவர கிரங்கிநின்று
நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர்
நெறியளித்தோன் நின்றகோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னா஡ளும்
பயின்றோது மோசைகேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்
பொருள்சொல்லும் மிழலையாமே
பொறியரவ மதுசுற்றி பொருப்பே
தாகப்பு தேளிர்கூடி
மறிகடலை கடைந்திட்ட விடமுண்ட
கண்டத்தோன் மன்னுங்கோயில்
செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு
மிலைக்குடைக்கீழ செய்யார்செந்நெல்
வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம்
வீற்றிருக்கும் மிழலையாமே
எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம்
புரமூன்றும் எழிற்கண்நாடி
உழந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ்
சிலைவளைத்தோன் உறையுங்கோயில்
கொழுந்தரளம் நகைகாட்ட கோகநதம்
முகங்காட்ட குதித்துநீர்மேல்
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்
வாய்காட்டும் மிழலையாமே
உரைசேரும் எண்பத்து நான்குநூ
றாயிரமாம் யோனிபேதம்
நிரைசேர படைத்தவற்றின் உயிர்க்குயிராய்
அங்கங்கே நின்றான்கோயில்
வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல
நடமாட வண்டுபாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள்
கையேற்கும் மிழலையாமே
காணுமா றரியபெரு மானாகி
காலமா குணங்கள்மூன்றா
பேணுமூன் றுருவாகி பேருலகம்
படைத்தளிக்கும் பெருமான்கோயில்
தாணுவாய் நின்றபர தத்துவனை
உத்தமனை இறைஞ்சீரென்று
வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப
போலோங்கு மிழலையாமே
அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்
றைம்புலனும் அடக்கிஞான
புகலுடையோர் தம்முள்ள புண்டரிக
துள்ளிருக்கும் புராணர்கோயில்
தகவுடைநீர் மணித்தலத்து சங்குளவர
கந்திகழ சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர பொரியட்ட
மணஞ்செய்யும் மிழலையாமே
ஆறாடு சடைமுடியன் அனலாடு
மலர்க்கையன் இமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடுங்
குணமுடையோன் குளிருங்கோயில்
சேறாடு செங்கழுநீர தாதாடி
மதுவுண்டு சிவந்தவண்டு
வேறாய உருவாகி செவ்வழிநற்
பண்பாடும் மிழலையாமே
கருப்பமிகும் உடலடர்த்து காலூன்றி
கைமறித்து கயிலையென்னும்
பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள்
நெரித்தவிரற் புனிதர்கோயில்
தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த
சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி
விமானஞ்சேர் மிழலையாமே
செந்தளிர்மா மலரோனு திருமாலும்
ஏனமொடு அன்னமாகி
அந்தமடி காணாதே அவரேத்த
வெளிப்பட்டோ ன் அமருங்கோயில்
புந்தியினான் மறைவழியே புற்பரப்பி
நெய்சமிதை கையிற்கொண்டு
வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர்
சேருமூர் மிழலையாமே
எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர்
சாக்கியரும் என்றுந்தன்னை
நண்ணரிய வகைமயக்கி தன்னடியார
கருள்புரியும் நாதன்கோயில்
பண்ணமரும் மென்மொழியார் பாலகரை
பாராட்டும் ஓசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ
டும்மிழியும் மிழலையாமே
மின்னியலும் மணிமாடம் மிடைவீழி
மிழலையான் விரையார்பாதஞ்
சென்னிமிசை கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன்
செழுமறைகள் பயிலும்நாவன்
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன்
பரிந்துரைத்த பத்துமேத்தி
இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில்
ஈசனெனும் இயல்பினோரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவேகம்பம்
பண் மேகராகக்குறிஞ்சி
வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்த
கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரி
எந்தை மேவிய ஏகம்பந்தொழு தேத்த இடர்கெடுமே
வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மா தவி
சரந்துர தெரிசெய்த தாழ்சடை சங்கரன் மேயவிடம்
குருந்தம் மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவ
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே
வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து
பெண்ணமர தெரியாடற் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்
விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள்
திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ் சேர விடர்கெடுமே
தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து
காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம்
மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள்
ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த விடர்கெடுமே
தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடை தூமதி யம்புனைந்து
பாடல்நான் மறையாக பல்கண பேய்க ளவைசூழ
வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரி
சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே
சாகம்பொன் வரையாக தானவர் மும்மதில் சாயவெய்
தாகம்பெண் ணொருபாக மாக அரவொடு நூலணிந்து
மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள்
ஏகம்ப துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து
நாணிட தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர
தேணிலா அரக்கன்றன் நீள்முடி பத்தும் இறுத்தவனூர்
சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே
பிரமனு திருமாலுங் கைதொழ பேரழ லாயபெம்மான்
அரவஞ் சேர்சடை அந்தணன் அணங்கினொ டமருமிடம்
கரவில்வண் கையினார்கள் வாழ்கலி கச்சி மாநகருள்
மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வில்வினை மாய்ந்தறுமே
குண்டுப டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின்
விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றி னாலவி
கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே
ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்பம் மேயவனை
காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள்
பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார்
சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பறியலூர் திருவீரட்டம்
பண் மேகராகக்குறிஞ்சி
கருத்தன் கடவுள் கனலே தியாடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில்
விருத்தன் எனத்தகும் வீரட்ட தானே
மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்ட தானே
குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்
விளிந்தான் அடங்க வீந்தெய்த செற்றான்
தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்ட தானே
பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்பு
செறப்பாதி யந்தஞ் செலச்செய்யு தேசன்
சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்
விறற்பா ரிடஞ்சூழ வீரட்ட தானே
கரிந்தார் இடுகாட்டி லாடுங் கபாலி
புரிந்தார் படுதம் புறங்கா டிலாடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்ட தானே
அரவுற்ற நாணா அனலம்ப தாக
செருவுற் றவர்புர தீயெழ செற்றான்
தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில்
வெருவுற் றவர்தொழும் வீரட்ட தானே
நரையார் விடையான் நலங்கொள் பெருமான்
அரையா ரரவம் அழகா வசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்
விரையார் மலர்ச்சோலை வீரட்ட தானே
வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்
இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்
திளைக்கும் படுகர திருப்பறி யலூரில்
விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்ட தானே
வளங்கொள் மலர்மேல் அயனோத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
இளங்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்
விளங்கு திருப்பறியல் வீரட்ட தானே
சடையன் பிறையன் சமண்சா கியரோ
டடையன் பிலாதான் அடியார் பெருமான்
உடையன் புலியின் உரிதோல் அரைமேல்
விடையன் திருப்பறியல் வீரட்ட தானே
நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன்
வெறிநீர திருப்பறியல் வீரட்ட தானை
பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார
கறுநீ டவலம் அறும்பிற புத்தானே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பராய்த்துறை
பண் மேகராகக்குறிஞ்சி
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பராய்த்துறைநாதவீசுவரர் தேவியார் பொன்மயிலாம்பிகையம்மை
நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமா
பாறுசேர்தலை கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை அண்ணலே
கந்தமாமலர கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல அடிகளே
வேதர்வேதமெல் லாமுறையால்விரி
தோதநின்ற ஒருவனார்
பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை
ஆதியாய அடிகளே
தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
நூலுந்தாமணி மார்பினர்
பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை
ஆலநீழல் அடிகளே
விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
இரவில்நின்றெரி யாடுவர்
பரவினாரவர் வேதம்பராய்த்துறை
அரவமார்த்த அடிகளே
மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
கறைகொள்கண்ட முடையவர்
பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
அறையநின்ற அடிகளே
விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
அடையநின்ற அடிகளே
தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார்விர லொன்றினால்
பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
அருக்கன்றன்னை அடிகளே
நாற்றமாமல ரானொடுமாலுமா
தோற்றமும் மறியாதவர்
பாற்றினார்வினை யானபராய்த்துறை
ஆற்றல்மிக்க அடிகளே
திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலாலெயில் எய்துபராய்த்துறை
மருவினான்றனை வாழ்த்துமே
செல்வமல்கிய செல்வர்பராய்த்துறை
செல்வர்மேற் சிதையாதன
செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்
செல்வமாமிவை செப்பவே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருத்தருமபுரம்
பண் யாழ்மூரி
மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
இரை நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே
பொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண்
பொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள
மங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர்
வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர்
சங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரி
தொசி தசை திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல்
தங்கு கதிர்மணி நித்தில மெல்லிரு ளொல்கநின்
றிலங் கொளி நலங் கெழிற் றருமபு ரம்பதியே
விண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ
டுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங
கண்ணுற நின்றொளி ருங்கதிர் வெண்மதி கண்ணியர்
கழி தவ ரிழி திடும் முடைதலை கலனா
பெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ்
வரி வையை பிணை திணை தணைந்ததும் பிரியார்
தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர்
கருங் கழி நெருங் குநற் றரும புரம்பதியே
வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர்
வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
காருற நின்றல ரும்மலர கொன்றை யங்கண்ணியர்
கடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர்
பாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர்
படு தலை பலி கொளல் பரிபவ நினையார்
தாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர்
தழை பொழின் மழை நுழை தருமபு ரம்பதியே
நேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடை
கடும் புனல் படர திடம் படுவதொர் நிலையர்
பேரும வர்க்கெனை யாயிரம் முன்னைப்பி றப்பிற
பிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார்
ஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழஃகுறவ்
வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்
தாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை
கடி படு செடி பொழிற் றருமபு ரம்பதியே
கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல்
குமென் முலை பொறி கொள்பொற் கொடியிடை துவர்வாய்
மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர்
வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள்
யாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றின
துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற்
தாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசை
புள் ளின துயில் பயில் தருமபு ரம்பதியே
தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழி
திரு திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய
தூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை
தொல் புனல் சிரங் கர துரித்த தோலுடையர்
காமரு தண்கழி நீடிய கானல கண்டகங்
கடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலே
தாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர்
வெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே
தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல்
குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர்
கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர்
கொலை மலி படையொர் சூல மேந்திய குழகர்
பாவண மாவல றத்தலை பத்துடை யவ்வர
கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர்
தாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்றடங்
கடல் லிடு தடங் கரை தருமபு ரம்பதியே
வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர்
வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர்
கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை
குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்
ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம்
மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்
தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிட
தடங் கடல் லிடு திரை தருமபு ரம்பதியே
புத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம்
மொழி தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர்
பத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர்
நிகழ தவர் சிவ சுடலைப்பொடி
முத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி
புணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார்
தத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வ
தடர திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே
பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி
பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற்
தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ
துசெ தமிழ தடங் கடற் றருமபு ரம்பதியை
பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை
யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்
இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும்
உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
முதல் திருமுறை முற்றும்