பொருநர் ஆற்றுப்படை ஆசிரியர் முடத்தா கண்ணியார்
இரண்டாம் பாட்டு




































©








பொருநர் ஆற்றுப்படை இரண்டாம் பாட்டு
பாடியவர் முடத்தா கண்ணியார்
பாடப்பட்டவன் சோழன் கரிகால் பெருவளத்தான்
திணை பாடாண்திணை
துறை ஆற்றுப்படை
பாவகை ஆசிரியப்பா
மொத்த வரிகள்
அறாஅ யாணரகன் றலை பேரூர
சாறுகழி வழிநா சோறுநசை யுறாது
வேறுபுல முன்னிய விரகறி பொருந
குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்
விளக்கழ லுருவின் விசியுறு பச்சை
எய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற்
றைதுமயி ரொழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அளைவா ழலவன் கண்கண் டன்ன
துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி
எண்ணா டிங்கள் வடிவிற் றாகி
அண்ணா வில்லா அமைவரு வறுவா
பாம்பண தன்ன வோங்கிரு மருப்பின்
மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண்கூ டிருக்கை திண்பிணி திவவின்
ஆய்தினை யரிசி யவைய லன்ன
வேய்வை போகிய விரலுளர் நரம்பின்
கேள்வி போகிய நீள்விசி தொடையல்
மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன
அணங்குமெ நின்ற அமைவரு காட்சி
ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கு மருவுஇன் பாலை
வாரியும் வடித்தும் உந்தியு முறழ்ந்தும்
சீருடை நன்மொழி நீரொடு சிதறி
அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற்
கொலைவிற் புருவத்து கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ் புரையும் இன்மொழி துவர்வா
பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன
பூங்குழை ஊசற் பொறைசால் காதின்
நாண்அட சாய்ந்த நலங்கிள ரெருத்தின்
ஆடமை பணைத்தோ ளரிமயிர் முன்கை
நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரற்
கிளிவா யப்பி னொளிவிடு வள்ளுகிர்
அணங்கென உருத்த சுணங்கணி யாக
தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை
நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூழ்
உண்டென வுணரா உயவும் நடுவின்
வண்டிரு பன்ன பல்காழ் அல்குல்
இரும்பிடி தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின்
பொருந்துமயி ரொழுகிய திருந்துதா கொப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
அரக்குரு கன்ன செந்நில னொதுங்கலிற்
பரற்பகை யுழந்த நோயடு சிவணி
மரற்பழு தன்ன மறுகுநீர் மொக்குள்
நன்பக லந்தி நடையிடை விலங்கலிற்
பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி
பாடின பாணி கேற்ப நாடொறும்
களிறு வழங்கதர கான தல்கி
இலைஇல் மராஅத்த எவ்வ தாங்கி
வலைவல தன்ன மென்னிழன் மருங்கிற்
காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றை
பீடுகெழு திருவிற் பெரும்பெயர் நோன்றாள்
முரசுமுழங்கு தானை மூவருங் கூடி
அரசவை யிருந்த தோற்றம் போல
பாடல் பற்றிய பயனுடை எழாஅற்
கோடியர் தலைவ கொண்ட தறிந
அறியா மையி னெறிதிரி தொராஅ
தாற்றெதிர படுதலு நோற்றதன் பயனே
போற்றி கேண்மதி புகழ்மேம் படுந
ஆடுபசி யுழந்தநின் இரும்பே ரொக்கலொடு
நீடுபசி யராஅல் வேண்டி னீடின்
றெழுமதி வாழி ஏழின் கிழவ
பழுமர முள்ளிய பறவையின் யானுமவன்
இழுமென் சும்மை யிடனுடை வரைப்பின்
நசையுநர தடையா நன்பெரு வாயில்
இசையேன் புக்கென் இடும்பை தீர
எய்த்த மெய்யே னெய்யே னாகி
பைத்த பாம்பின் துத்தி யேய்ப்ப
கைக்கச டிருந்தவென் கண்ணகன் தடாரி
இருசீர பாணி கேற்ப விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்
ஓன்றியான் பெட்டா அளவையி னொன்றிய
கேளிர் போல கேள்கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்ப கூறி
கண்ணிற் காண நண்ணுவழி இரீஇ
பருகு அன்ன அருகா நோக்கமொடு
உருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ
ஈரும் பேனும் இருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த
துன்னற் சிதாஅர் துவர நீக்கி
நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரி யன்ன அறுவை நல்கி
மழையென மருளும் மகிழ்செய் மாடத்து
இழையணி வனப்பி னின்னகை மகளிர்
போக்கில் பொலங்கல நிறை பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர வுண்டு பேரஞர் போக்கி
செருக்கொடு நின்ற காலை மற்றவன்
திருக்கிளர் கோயி லொருசிறை தங்கி
தவஞ்செய் மாக்கள் தம்முடம் பிடாஅ
ததன்பய மெய்திய வளவை மான
ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர் நடுக்க மல்ல தியாவதும்
மனங்கவல் பின்றி மாழா தெழுந்து
மாலை யன்னதோர் புன்மையுங் காலை
கண்டோ மருளும் வண்டுசூழ் நிலையும்
கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப
வல்லஞர் பொத்திய மனம்மகிழ் சிறப்ப
கல்லா இளைஞர் சொல்லி காட்ட
கதுமென கரைந்து வம்மென கூஉய்
அதன்முறை கழிப்பிய பின்றை பதனறிந்து
துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்
பராஅரை வேவை பருகென தண்டி
காழிற் சுட்ட கோழூன் கொழூங்குறை
ஊழின் வாய்வெய்
அவையவை முனிகுவ மெனினே சுவைய
வேறுபல் லுருவின் விரகுத திரீஇ
மண்ணமை முழவின் பண்ணமை சீறியாழ்
ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க
மகிழ்ப்பதம் பன்னா கழிப்பி யருநாள்
அவிழ்ப்பதங் கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை
முரவை போகிய முரியா அரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்
பரல்வறை கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலை பயின்றினி திருந்து
கொல்லை உழுகொழு பல்லே
எல்லையு மிரவும் ஊன்றின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனி தொருநாள்
செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய
செல்வ சேறுமெ தொல்பதிர் பெயர்ந்தென
மெல்லென கிளந்தன மாக வல்லே
அகறி ரொவெம் ஆயம் விட்டென
சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு
துடியடி யன்ன தூங்குநடை குழவியடு
பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கென
தன்னறி யளவையின் தரத்தர யானும்
என்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்டு
இன்மை தீர வந்தனென் வென்வேல்
உருவ ப·றேர் இளையோன் சிறுவன்
முருகற் சீற்ற துருகெழு குருசில்
தாய்வயிற் றிருந்து தாய மெய்தி
எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப
செய்யார் தேஎம் தெருமரல் கலி
பவ்வ மீமிசை பகற்கதிர் பரப்பி
வெல்வெஞ் செல்வன் விசும்புபடர தாங்கு
பிறந்துதவழ் கற்றதற் றொட்டு சிறந்தநன்
னாடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப
ஆளி நன்மான் அணங்குடை குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென
தலைக்கோள் வேட்டங் களிற டாஅங்கு
இரும்பனம் போந்தை தோடுங் கருஞ்சினை
அரவாய் வேம்பின் அங்குழை தெரியலும்
ஒங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த
இருபெரு வேந்தரு மொருகள தவிய
வெண்ணி தாக்கிய வெருவரு நோன்றா
கண்ணார் கண்ணி கரிகால் வளவன்
தாணிழல் மருங்கி னணுகுபு குறுகி
தொழுதுமுன் னிற்குவி ராயிற் பழுதின்
றீற்றா விருப்பிற் போற்றுபு நோக்கிநும்
கையது கேளா அளவை ஒய்யென
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதாஅர் நீக்கி தூய
கொட்டை கரைய பட்டுடை நல்கி
பெறலருங் கலத்திற் பெட்டாங் குண்கென
பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர
வைகல் கைகவி
எரியகை தன்ன வேடில் தாமரை
சுரியிரும் பித்தை பொலி சூட்டி
நூலின் வலவா நுணங்கரில் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணி
கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஊட்டுளை துயல்வர வோரி நுடங்க
பால்புரை புரவி நால்குடன் பூட்டி
காலி னேழடி பின்சென்று கோலின்
தாறுகளை தேறென் றேற்றி வீறுபெறு
பேரியாழ் முறையுழி கழிப்பி நீர்வா
தண்பணை தழீஇய தளரா விருக்கை
நன்பல் லூர நாட்டொடு
வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெரு தடக்கை
வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவிடை தங்கலோ விலனே வரவிடை
பெற்றவை பிறர்பிறர கார்த்தி தெற்றென
செலவுகடை கூட்டுதி ராயிற் பலபுலந்து
நில்லா வுலகத்து நிலைமை தூக்கி
செல்கென விடுக்குவ னல்ல நொல்லென
திரை பிறழிய விரும் பெளவத்து
கரை சூழ்ந்த அகன் கிடக்கை
மா மாவின் வயின் வயினெற்
றாழ் தாழை தண் டண்டலை
கூடு கெழீஇய குடி வயினாற்
செஞ் சோற்ற பலி மாங்திய
கருங் காக்கை கவவு முனையின்
மனை நொச்சி நிழலாங் கண்
ஈற்றி யாமைதன் பார்ப்பு ஓம்பவும்
இளையோர் வண்ட லயரவும் முதியோர்
அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் சொலவும்
முட காஞ்சி செம் மருதின்
மட கண்ண மயில் ஆல
பைம் பாகற் பழ துணரிய
செஞ் சுளைய கனி மாந்தி
அறை கரும்பி னரி நெல்லின்
இன களமர் இசை பெருக
வற ளடும்பி னிவர் பகன்றை
தளிர புன்கின் றாழ் காவின்
நனை ஞாழலொடு மரங் குழீஇய
அவண் முனையி னகன்று மாறி
அவிழ் தளவி னகன் தோன்றி
நகு முல்லை யுகுதேறு வீ
பொற் கொன்றை மணி காயா
நற் புறவி னடை முனையிற்
சுற வழங்கும் இரும் பெளவ
திற வருந்திய இன நாரை
பூம் புன்னை சினை சேப்பின்
ஒங்கு திரை யலிவெரீ
தீம் பெண்ணை மடற் சேப்பவும்
கோ டெங்கின் குலை வாழை
கொழுங் காந்தண் மலர் நாகத்து
துடி குடிஞை குடி பாக்கத்து
யாழ் வண்டின் கொளை கேற்ப
கலவம் விரித்த மட மஞ்ஞை
நில வெக்கர பல பெயர
தேனெய் யடு கிழங்கு மாறியோர்
மீனெய் யடு நறவு மறுகவும்
தீங் கரும்போ டவல் வகுத்தோர்
மான் குறையடு மது மறுகவும்
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும்பூங் கண்ணி குறவர் சூட
கானவர் மருதம் பாட அகவர்
நீனிற முல்லை ப·றிணை நுவல
கான கோழி கதிர் குத்த
மனை கோழி தினை கவர
வரை மந்தி கழி மூழ்க
கழி நாரை வரை யிறுப்ப
தண் வைப்பினா னாடு குழீஇ
மண் மருங்கினான் மறு வின்றி
ஒரு குடையா னென்று கூற
பெரி தாண்ட பெருங் கேண்மை
அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்
அன்னோன் வாழி வென்வேற் குருசில்
மன்னர் நடுங்க தோன்றி பன்மாண்
எல்லை தருநன் பல்கதிர் பரப்பி
குல்லை கரியவுங் கோடெரி நைப்பவும்
அருவி மாமலை நிழத்தவு மற்ற
கருவி வானங் கடற்கோள் மறப்பவும்
பெருவற னாகிய பண்பில் காலையும்
நறையும் நரந்தமு மகிலு மாரமும்
துறைதுறை தோறும் பொறையுயிர தொழுகி
நுரைத்தலை குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும்
புனலாடு மகளிர் கதுமென குடை
கூனி குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடுகோ டாக பிறக்கி நாடொறும்
குன்றென குவைஇய குன்றா குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெட கிடக்கும்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையு டா
காவிரி புரக்கு நாடுகிழ வோனே
பொருநர் ஆற்றுப்படை முற்றிற்று