சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய
முதற் காண்டம் பன்னிரண்டாம் திருமுறை
சருக்கம் திருமலை
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
ன
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய
முதற் காண்டம்
உள்ளுறை
திருமலை சருக்கம்
பாயிரம் மின்பதிப்பு
திருமலை சிறப்பு மின்பதிப்பு
திரு நாட்டு சிறப்பு மின்பதிப்பு
திருநகர சிறப்பு மின்பதிப்பு
திருக்கூட்ட சிறப்பு மின்பதிப்பு
தடுத்தாட்கொண்ட புராணம் மின்பதிப்பு
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
தில்லை வாழ் அந்தணர் புராணம் மின்பதிப்பு
திருநீலகண்ட நாயனார் புராணம் மின்பதிப்பு
இயற்பகை நாயனார் புராணம் மின்பதிப்பு
இளையான் குடி மாற நாயனார் புராணம் மின்பதிப்பு
மெ பொருள் நாயனார் புராணம் மின்பதிப்பு
விறன்மிண்ட நாயனார் புராணம் மின்பதிப்பு
அமர் நீதி நாயனார் புராணம் மின்பதிப்பு
பாயிரம்
உலகெலாம் உணர தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
தான் அடைந்த உறுதியை சாருமால்
தேன் அடைந்த மலர பொழில் தில்லையுள்
மா நடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ
எடுக்கும் மாக்கதை இன்தமிழ செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திட
தடக்கை ஐந்துடை தாழ்செவி நீள்முடி
கட களிற்றை கருத்துள் இருத்து வாம்
மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்
துதி செயும் நாயன்மார் தூய சொல்மலர
பொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை
விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே
அளவிலாத பெருமையராகிய
அளவிலா அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பது அரிது ஆயினும்
அளவிலாசை துரைப்ப அறைகுவேன்
தெரிவரும் பெருமை திரு தொண்டர் தம்
பொருவரும் சீர் புகலலுற்றேன் முற்ற
பெருகு தெண் கடல் ஊற்றுண் பெரு நசை
ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன்
செப்பலுற்ற பொருளின் சிறப்பினால்
அ பொருட்கு உரை யாவரும் கொள்வர் ஆல்
இ பொருட்கு என் உரை சிறிது ஆயினும்
மெ பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால்
மேய இவ் உரை கொண்டு விரும்புமாம்
சேயவன் திரு பேர் அம்பலம் செய்ய
தூய பொன்னணி சோழன் நீடூழிபார்
ஆய சீர் அநபாயன் அரசவை
அருளின் நீர்மை திரு தொண்டறிவரும்
தெருளில் நீரிது செப்புதற்காம் எனின்
வெருளில் மெய் மொழி வான் நிழல் கூறிய
பொருளின் ஆகும் என புகல்வாம் அன்றே
இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனை புற இருள் போக்கு கின்ற
செங் கதிரவன் போல் நீக்கும் திரு தொண்டர் புராணம் என்பாம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருமலை சருக்கம்
திருமலை சிறப்பு
திருச்சிற்றம்பலம்
பொன்னின் வெண்திரு நீறு புனைந்தென
பன்னும் நீள்பனி மால்வரை பாலது
தன்னை யார்க்கும் அறிவரியான் என்றும்
மன்னிவாழ் கயிலை திரு மாமலை
அண்ணல் வீற்றிருக்க பெற்றதாதலின்
நண்ணும் மூன்று உலகு நான்மறைகளும்
எண்ணில் மாதவம் செய்ய வந்தெய்திய
புண்ணி திரண்டு உள்ளது போல்வது
நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி
இலகு தண்தளிர் ஆக எழுந்ததோர்
உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல்
மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை
மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்
கான வீணையின் ஓசையும் காரெதிர்
தான மாக்கள் முழக்கமும் தாவில் சீர்
வான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம்
பனி விசும்பில் அமரர் பணிந்துசூழ்
அனித கோடி அணிமுடி மாலையும்
புனித கற்பக பொன்னரி மாலையும்
முனிவர் அஞ்சலி மாலையும் முன்னெனலாம்
நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்
நாடும் ஐம் பெரும் பூதமும் நாட்டுவ
கோடி குறட்சிறு
பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம்
நாயகன் கழல் சேவிக்க நான்முகன்
மேய காலம் அலாமையின் மீண்டவன்
தூயமால்வரை சோதியில் மூழ்கியொன்று
ஆய அன்னமும் காணா தயர்க்குமால்
காதில் வெண்குழையோன் கழல் தொழ
நெடியோன் காலம் பார்த்திருந்தும் அறியான்
சோதி வெண் கயிலை தாழ்வரை முழையில்
துதிக்கையோன் ஊர்தியை கண்டு
மீதெழு பண்டை செஞ் சுடர் இன்று
வெண்சுடர் ஆனது என்றதன் கீழ்
ஆதி ஏனமதாய் இடக்கலுற்றான்
என்றதனை வந்தணைதரும் கலுழன்
அரம்பையர் ஆடல் முழவுடன்
மருங்கில் அருவிகள் எதிர்
வரம் பெறு காதல் மனத்துடன் தெய்வ
மது மலர் இருகையும் ஏந்தி
நிரந்தரம் மிடைந்த விமான சோபான
நீடுயர் வழியினால் ஏறி
புரந்தரன் முதலாங் கடவுளர் போற்ற
பொலிவ திருமலை புறம்பு
வேத நான்முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணிலார் மற்றும்
காதலால் மிடைந்த முதல் பெருந தடையாம் கதிர் மணி கோபுரத்துள்ளார்
பூத வேதாள பெரும் கண நாதர் போற்றிட பொதுவில் நின்று ஆடும்
நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம்பெருமான்
நெற்றியின் கண்ணர் நாற் பெருந்தோளர் நீறணி மேனியர் அநேகர்
பெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன் தன் அருள் பெறுவார்
மற்றவர கெல்லாம் தலைமையாம் பணியும் மலக்கையில் சுரிகையும் பிரம்பும்
கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான் காப்பத கயிலைமால் வரைதான்
கையில்மான் மழுவர் கங்கைசூழ் சடையில் கதிரிளம் பிறைநறுங் கண்ணி
ஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பரும் பெருமையினாலும்
மெய்யொளி தழைக்கும் தூய்மையினாலும் வென்றி வெண்குடை அநபாயன்
செய்யகோல் அபயன் திருமனத்தோங்கும் திருக்கயிலாய நீள்சிலம்பு
அன்ன தன்திரு தாழ்வரையின் இடத்து
இன்ன தன்மையன் என்றறியா சிவன்
தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான்
உன்னாரும் சீர் உபமன் னிய முனி
யாதவன் துவரைக்கிறை யாகிய
மாதவன் முடிமேல் அடி வைத்தவன்
பூதநாதன் பொருவரு தொண்டினுக்கு
ஆதி அந்தம் இலாமை அடைந்தவன்
அத்தர் தந்த அரு பாற்கடல் உண்டு
சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்
பத்தராய முனிவர் பல்லாயிரவர்
சுத்த யோகிகள் சூழ இருந்துழி
அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு
பொங்கு பேரொளி போன்று முன் தோன்றிட
துங்க மாதவர் சூழ்ந்திருந்தாரெலாம்
இங்கி தென்கொல் அதிசயம் என்றலும்
அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்
சிந்தியா உணர்ந்தம் முனி தென் திசை
வந்த நாவலர் கோன்புகழ் வன்தொண்டன்
எந்தையார் அருளால் அணைவான் என
கைகள் கூப்பி தொழுதெழுந்து அ திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிட
செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி
ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர்
சம்புவின் அடி தாமரை போதலால்
எம்பிரான் இறைஞ்சாயிஃதென் என
தம்பிரானை தன் உள்ளம் தழீயவன்
நம்பி ஆரூரன் நாம்தொழும் தன்மையான்
என்றுகூற இறைஞ்சி இயம்புவார்
வென்ற பேரொளியார் செய் விழுத்தவம்
நன்று கேட்க விரும்பும் நசையினோம்
இன்றெமக்குரை செய்து அருள் என்றலும்
உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொருளாகிய
வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்
அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன்
அன்னவன் பெயர் ஆலால சுந்தரன்
முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு
இன்ன ஆமெனும் நாண்மலர் கொய்திட
துன்னினான் நந்தவன சூழலில்
அங்கு முன்னரே ஆளுடை நாயகி
கொங்கு சேர் குழற்காம் மலர் கொய்திட
திங்கள் வாள்முக சேடியர் எய்தினார்
பொங்கு கின்ற கவினுடை பூவைமார்
அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல்
கந்த மாலை கமலினி என்பவர்
கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி
வந்து வானவர் ஈசர் அருள் என
மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திட
தீது இலா திரு தொண்ட தொகை தர
போதுவார் அவர் மேல்மனம் போக்கிட
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்
முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர்
என்னை ஆட்கொண்ட ஈசனுக்கேய்வன
பன் மலர் கொய்து செல்ல பனிமலர்
அன்னம் அன்னவருங் கொண்டகன்ற பின்
ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே
மாதர் மேல் மனம் வைத்தனை தென்புவி
மீது தோன்றி அம் மெல்லியலார் உடன்
காதல் இன்பம் கலந்து அணைவாய் என
கைகள் அஞ்சலி கூப்பி கலங்கினான்
செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன்
மையல் மானுடமாய் மயங்கும் வழி
ஐயனே தடுத்தாண்டருள் செய் என
அங்கணாளன் அதற்கருள் செய்த பின்
நங்கை மாருடன் நம்பிமற்ற திசை
தங்கு தோற்றத்தில் இன்புற்று சாறுமென்று
அங்கவன் செயல் எல்லாம் அறைந்தனன்
அந்தணாளரும் ஆங்கது கேட்டவர்
பந்த மானிட பாற்படு தென்திசை
இந்த வான்திசை எட்டினும் மேற்பட
வந்த புண்ணியம் யாதென மாதவன்
பொருவரு தவத்தான் புலி காலனாம்
அரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது
பெருமை சேர்பெரும் பற்றப்புலியூர் என்று
ஒருமையாளர் வைப்பாம் பதி ஓங்குமால்
அ திருப்பதியில் நமை ஆளுடை
மெ தவக்கொடி காண விருப்புடன்
அத்தன் நீடிய அம்பலத்தாடும் மற்று
இ திறம் பெறலாம் திசை எத்திசை
பூதம் யாவையின் உள்ளலர் போதென
வேத மூலம் வெளிப்படு மேதினி
காதல் மங்கை இதய கமலமாம்
மாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால்
எம்பிராட்டி இவ்வேழுலகு ஈன்றவள்
தம்பிரானை தனி தவத்தால் எய்தி
கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று
உம்பர் போற்றும் பதியும் உடையது
நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்து
பொங்கு நீடருள் எய்திய பொற்பது
கங்கை வேணி மலர கனல்மலர்
செங்கை யாளர் ஐயாறும் திகழ்வது
தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை
ஈசர் தோணி புரத்துடன் எங்கணும்
பூசனைக்கு பொருந்தும் இடம் பல
பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை
என்று மாமுனி வன்தொண்டர் செய்கையை
அன்று சொன்ன படியால் அடியவர்
தொன்று சீர்த்திரு தொண்ட தொகைவிரி
இன்று என் ஆதரவால் இங்கியம்புகேன்
மற்றிதற்கு பதிகம் வன்தொண்டர் தாம்
புற்று இடத்து எம்புராணர் அருளினால்
சொற்ற மெ திருத்தொண்டத்தொகை என
பெற்ற நற்பதிகம் தொழ பெற்றதாம்
அந்த மெ பதிகத்து அடியார்களை
நம்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி
புந்தி ஆர புகன்ற வகையினால்
வந்த வாறு வழாமல் இயம்புவாம்
உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும்
அலகில் சீர்நம்பி ஆரூரர் பாடிய
நிலவு தொண்டர்தம் கூட்டம் நிறைந்துறை
குலவு தண்புனல் நாட்டணி கூறுவாம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருநாட்டு சிறப்பு
திருச்சிற்றம்பலம்
பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுள்
கோட்டுயர் பனிவரை குன்றின் உச்சியில்
சூட்டிய வளர் புலி சோழர் காவிரி
நாட்டியல்பதனை யான் நவிலல் உற்றனன்
ஆதி மாதவமுனி அகத்தியன் தரு
பூத நீர கமண்டலம் பொழிந்த காவிரி
மாதர் மண் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்ததோர்
ஓதநீர் நித்தில தாமம் ஒக்குமால்
சையமால் வரை பயில் தலைமை சான்றது
செய்ய பூ மகட்கு நற் செவிலி போன்றது
வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும்
உய்யவே சுரந்தளி தூட்டும் நீரது
மாலின் உந்திச்சுழி மலர் தன் மேல் வரும்
சால்பினால் பல்லுயிர் தரும் தன் மாண்பினால்
கோல நற்குண்டிகை தாங்குங் கொள்கையால்
போலும் நான்முகனையும் பொன்னி மாநதி
திங்கள் சூடிய முடி சிகரத்து உச்சியில்
பொங்கு வெண் தலை நுரை பொருது போதலால்
எங்கள் நாயகன் முடிமிசை நின்றேயிழி
கங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே
வண்ண நீள் வரை தர வந்த மேன்மையால்
எண்ணில் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால்
அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி
உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது
வம்புலா மலர் நீரால் வழிபட்டு
செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து
எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி
உம்பர் நாயகர்க்கன்பரும் ஒக்குமால்
வாசநீர் குடை மங்கையர் கொங்கையில்
பூசும் குங்குமமும் புனை சாந்தமும்
வீசு தெண்டிரை மீதிழந்தோடும் நீர்
தேசுடை தெனினும் தெளிவில்லதே
மாவிரை தெழுந்து ஆர்ப்ப வரை தரு
பூ விரித்த புதுமது பொங்கிட
வாவியிற் பொலி நாடு வளம்தர
காவிரி புனல் கால்பரந்து ஓங்குமால்
ஒண் துறை தலை மாமத கூடு போய்
மண்டு நீர்வயலுட்புக வந்தெதிர்
கொண்ட மள்ளர் குரை தகை ஓசைபோய்
அண்டர் வானத்தின் அப்புறஞ் சாருமால்
மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்
சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும்
ஒதையார் செய் உழுநர் ஒழுக்கமும்
காதல் செய்வதோர் காட்சி மலிந்ததே
உழுத சால்மிக வூறி தெளிந்த சேறு
இழுது செய்யினுள் இந்திர தெய்வதம்
தொழுது நாறு நடுவார் தொகுதியே
பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்
மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரி
கண்டுழவர் பதங்காட்ட களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார்
செங்குவளை பறித்தணிவார் கருங்குழல்மேல் சிறை வண்டை
அங்கை மலர்களை கொடுகைத்தயல் வண்டும் வரவழைப்பார்
திங்கள்நுதல் வெயர்வரும்ப சிறுமுறுவல் தளவரு
பொங்குமலர கமலத்தின் புதுமதுவாய் மடுத்தயர்வார்
கரும்பல்ல நெல்லென்ன கமுகல்ல கரும்பென்ன
கரும்பல்லி குடைநீல துகளல்ல பகலெல்லாம்
அரும்பல்ல முலையென்ன அமுதல்ல மொழியென்ன
வரும்பல்லாயிரம் கடைசி மடந்தையர்கள் வயல்எல்லாம்
கயல்பாய் பைந்தட நந்தூன் கழிந்த கருங்குழிசி
வியல்வாய் வெள்வளை தரள மலர்வேரி உலைப்பெய்தங்
கயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் நெருப்பூதும்
வயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பெல்லாம்
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனை ஒவ்வா நலமெல்லாம்
ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்
சோலை வாய்வண்டு இரைத்தெழு சும்மையும்
ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்
வேலை ஓசையின் மிக்கு விரவுமால்
அன்னம் ஆடும் அகன்துறை பொய்கையில்
துன்னும் மேதிபடி துதைந்தெழும்
கன்னி வாளை கமுகின் மேற்பாய்வன
மன்னு வான்மிசை வானவில் போலுமால்
காவினிற் பயிலுங்களி வண்டினம்
வாவியிற் படிந்து உண்ணும் மலர் மது
மேவி அத்தடம் மீதெழ பாய்கயல்
தாவி அப்பொழிலிற் கனி சாடுமால்
சாலிநீள் வயலின் ஓங்கி தந்நிகர் இன்றி மிக்கு
வாலிதாம் வெண்மை உண்மை கருவினாம் வளத்தவாகி
சூல்முதிர் பசலை கொண்டு சுருல் விரித்தானு கன்பர்
ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்களெல்லாம்
பத்தியின் பாலர் ஆகி பரமனுக்கு ஆளாம் அன்பர்
தத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல விளைந்தன சாலியெல்லாம்
அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
பரிவுற தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்
சுரிவளை சொரிந்த முத்தின் சுடர பெரும் பொருப்பு யாப்பர்
விரிமலர் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார்
சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்து
காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம் அருவரை சி சாரல்
மேல் வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்கதன்றே
வைதெரி தகற்றி ஆற்றி மழை பெயல் மான தூற்றி
செய்ய பொற் குன்றும் வேறு நவமனி சிலம்பும் என்ன
கைவினை மள்ளர் வானம் கரக்கவாக்கிய நெல் குன்றால்
மொய்வரை உலகம் போலும் முளரிநீர் மருத வைப்பு
அரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதிகொண்டறங்கள் பேணி
பரவருங் கடவு போற்றி குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையும் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி
வரைபுரை மாடம்நீடி மல்ர்ந்துள பதிகள் எங்கும்
கரும்படு களமர் ஆலை கமழ்நறும் புகையோ மாதர்
சுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்வி
பெரும் பெயர சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின்
வருங்கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும்
நாளிகேரஞ் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
கோளி சாலந்த மாலம் குளிர்மலர குரவம் எங்கும்
தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்
நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர கோங்கம் எங்கும்
சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல்
சாதி மாலதிகள் எங்கும் தண்தளிர் நறவம்
மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள்
போதவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம்
மங்கல வினைகள் எங்கும் மணஞ் செய் கம்பலைகள்
பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை
பொங்கொளி கலன்கள் எங்கும் புது மலர பந்தர்
செங்கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள்
மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும்
யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும்
யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும்
போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர்
பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி
வண்டறை குழல்கள் எங்கும் வளர் இசை
தொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை
தண்டலை பலவும் எங்கும் தாதகி
மாடு போதகங்கள் எங்கும் வண்டு
பாடும் அம்மனைகள் எங்கும் பயிலும்
நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள்
தோடு சூழ் மாலை எங்கும் துணைவர்
வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின்
சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில்
நீதிய புள்ளும் மாவும் நிலத்திரு புள்ளு
ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வர தாம்
நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநாடு என்றும்
பொற் தட தோளால் வையம் பொது கடிந்து இனிது காக்கும்
கொற்றவன் அநபாயன் பொற் குடை நிழல் குளிர்வதென்றால்
மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்பலாமோ
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருநகர சிறப்பு
திருச்சிற்றம்பலம்
சொன்ன நாட்டிடை தொன்மையில் மிக்கது
மன்னு மாமலராள் வழி பட்டது
வன்னியாறு மதி பொதி செஞ் சடை
சென்னியார் திருவாரூர திருநகர்
வேத ஓசையும் வீணையின்
சோதி வானவர் தோத்திர ஓசையும்
மாதர் ஆடல் பாடல் மணி முழவோசையும்
கீத ஓசையும் மா கிளர்உற்றவே
பல்லியங்கள் பரந்த ஒலியுடன்
செல்வ வீதி செழுமணி தேரொலி
மல்லல் யானை ஒலியுடன் மாவொலி
எல்லை இன்றி எழுந்துள எங்கணும்
மாட மாளிகை சூளிகை மண்டபம்
கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள்
நீடு சாளர நீடரங்கு எங்கெணும்
ஆடல் மாதர் அணி சிலம் பார்ப்பன
அங்குரைக்கென்ன அளவ பதியிலார்
தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின்
பங்கினாள் திரு சேடி பரவையாம்
மங்கையார் அவதாரஞ் செய் மாளிகை
படர்ந்த பேரொளி பன்மணி வீதிதான்
இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்
தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்கு தூது போய்
நடந்த செந்தாமரை அடி நாறுமால்
செங்கண் மாதர் தெருவில் தெளித்த செங்
குங்குமத்தின் குழம்பை அவர் குழல்
பொங்கு கோதையிற் பூந்துகள் வீழ்ந்துடன்
அங்கண் மேவி அளறு புலர்த்துமால்
உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை
வள்ளலார் திருவாரூர் மருங்கெலாம்
தெள்ளும் ஓசை திருப்பதிகங்கள் பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்
விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்
துளக்கில் பேரொலியால் துன்னு பண்டங்கள்
வள தொடும் பலவாறு மடுத்தலால்
அளக்கர் போன்றன ஆவண வீதிகள்
ஆரணங்களே அல்ல மறுகிடை
வாரணங்களும் மாறி முழங்குமால்
சீரணங்கிய தேவர்களே அலால்
தோரணங்களில் தாமமும் சூழுமால்
தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்
வீழ்ந்த இன்ப துறையுள் விரவுவார்
சூழ்ந்த பல்வேறு இட தொல் நகர்
நில மகட்கு அழகார் திரு நீள் நுதல்
திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி
மலர் மகட்கு வண்தாமரை போல்மலர்ந்து
அலகில் சீர்த்திருவாரூர் விளங்குமால்
அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான்
துன்னு செங் கதிரோன் வழி தோன்றினான்
மன்னு சீர் அநபாயன் வழி முதல்
மின்னும் மாமணி பூண்மனு வேந்தனே
மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எல்லாம்
கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலான்
விண்ணுளார் மகிழ்வு எய்திட வேள்விகள்
எண்ணிலாதன் மாண இயற்றினான்
கொற்ற ஆழிகுவலயஞ் சூழ்ந்திட
சுற்று மன்னர் திறை கடை சூழ்ந்திட
செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம் மனு
பெற்ற நீதியும் தன்பெயர் ஆக்கினான்
பொங்கு மா மறை புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான்
துங்க ஆகமம் சொன்ன முறைமையால்
அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமற் புல்லி
மறங் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில்
சிறந்த நல் தவத்தால் தேவி திருமணி வயிற்றின் மைந்தன்
பிறந்தனன் உலகம் போற்ற பேர் அரி குருளை அன்னான்
தவமுயன்று அரிதில் பெற்ற தனி இளங் குமரன் நாளும்
சிவ முயன்றடையு தெய்வ கலை பல திருந்த ஓதி
கவனவாம் புரவி யானை தேர படை தொழில்கள் கற்று
பவமுயன்றதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான்
அளவில் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க
உளமகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி
இளவரசு என்னும் தன்மை எய்துதற்கணியன் ஆகி
வளரிளம் பரிதி போன்று வாழுநாள் ஒருநாள் மைந்தன்
திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில் நின்று
மங்குல் தோய் மாட வீதி மன்னிளங் குமரர் சூழ
கொங்கலர் மாலை தாழ்ந்த குங்குமம் குலவு தோளான்
பொங்கிய தானை சூழ தேர்மிசை பொலிந்து போந்தான்
பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர்
விரை நறுங் குழலார் சிந்தும் வெள் வளை ஒருபால் மிக்க
முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால் வென்றி
அரசிளங் குமரன் போதும் அணி மணி மாட வீதி
தனிப்பெரு தருமம் தானோர் தயாஇன்றி தானை மன்னன்
பனிப்பில் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன
மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் நல்
புனிற்றிளங் கன்று துள்ளி போந்ததம் மறுகினூடே
அம்புனிற்றாவின் கன்றோர் அபாயத்தின் ஊடு போகி
செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்ல பட்டே
உம்பரின் அடை கண்டங்கு உருகுதாய் அலமந்தோடி
வெம்பிடும் அலறும் சோரும் மெ நடுக்குற்று வீழும்
மற்றுது கண்டு மைந்தன் வந்ததிங்கு அபாயம் என்று
சொற்றடுமாறி நெஞ்சில் துயருழந்து அறிவு அழிந்து
பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாள
செற்ற என் செய்கேன் என்று தேரினின் இன்று இழிந்து வீழ்ந்தான்
அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்து சோரும்
நிலமிசை கன்றை நோக்கி நெடிதுயிர்த்து இரங்கி நிற்கும்
மலர் தலை உலகங் காக்கும் மனுவெனும் என் கோமானுக்கு
உலகில் இ பழி வந்து எய்த பிறந்தவா ஒருவன் என்பான்
வந்த இ பழியை மாற்றும் வகையினை மறை நூல் வாய்மை
அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில்
எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன் என்று மைந்தன்
சிந்தை வெ துயரம் தீர்ப்பான்திரு மறையவர் முன் சென்றான்
தன்னுயிர கன்று வீ தளர்ந்த ஆ தரியாதாகி
முன் நெருப்புயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோல் மனுவின் பொற் கோயில் வாயில்
பொன்னணி மணியை சென்று கோட்டினால் புடைத்தது அன்றே
பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன்
வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்தி
கழுத்தணி மணியின் ஆர்ப்போ என்னத்தன் சடைமுன் கோளா
தெழித்தெழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது
ஆங்கது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து
பூங்கொடி வாயில் நண்ண காவலர் எதிரே போற்றி
ஈங்கிதோர் பசுவந்தெய்தி இறைவ நின் கொற்ற வாயில்
தூங்கிய மணியை கோட்டால் துளக்கியது என்று சொன்னார்
மன்னவன் அதனை கேளா வருந்திய பசுவை நோக்கி
என் இதற்குற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்க
முன்னுற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வி
தொல் நெறி அமைச்சன் மன்னன் தாளிணை தொழுது சொல்வான்
வளவ நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடு தேர்மேல் ஏறி
அளவில் தேர்த்தானை சூழ அரசுலா தெருவில் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால் இடை புகுந்து இறந்ததாக
தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததி தன்மை என்றான்
அவ்வுரை கேட்ட வேந்தன் ஆவுறு துயரம் எய்தி
வெவ்விட தலை கொண்டாற் போல் வேதனை அகத்து மிக்கிங்கு
இவ் வினை விளைந்தவாறு என்று இடருறும் இரங்கும் ஏங்கும்
செவ்விது என் செங்கோல் என்னும் தெருமரும் தெளியும் தேறான்
மன்னுயிர் புரந்து வையம் பொது கடிந்து அறத்தில் நீடும்
என்னெறி நன்றால் என்னும் என்செய்தால் தீரும்
தன்னிளங் கன்று காணா தாய்முகங் கண்டு சோரும்
அ நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்றால்
மந்திரிகள் அதுகண்டு மன்னவனை அடி வணங்கி
சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வு அன்றால்
கொந்தலர்த்தார் மைந்தனை முன் கோவதை செய்தார்க்கு மறை
அந்தணர்கள் விதித்தமுறை வழிநிறுத்தல் அறம் என்றார்
வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்றது தான் வலிப்பட்டு
குழக்கன்றை இழந்தலறும் கோவுறு நோய் மருந்தாமோ
இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீருஞ் சொல்லிய இ
சழக்கு இன்று நான் இசைந்தால் தரு தான் சலியாதோ
மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலை
தான தனக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்
ஊன மிகு பகை திறத்தால் கள்வரால் உயிர் தம்மால்
ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ
என் மகன் செய் பாதகத்துக்கு இருந்தவங்கள் செய இசைந்தே
அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனை கொல்வேன் ஆனால்
தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை
மன்னுலகில் பெற மொழிந்தீர் மந்திரிகள் வழக்கு என்றான்
என்று அரசன் இகழ்து உரைப்ப எதிர் நின்ற மதி அமைச்சர்
நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்ததால்
பொன்று வித்தல் மரபு அன்று மறை மொழிந்த அறம் புரிதல்
தொன்று தொடு நெறி யன்றோ தொல் நிலங் காவல என்றார்
அவ் வண்ணம் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி
மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு வென்னும் விறல் வேந்தன்
இவ் வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியின் இடை தோய்ந்த
செவ் வண்ண கமலம் போல் முகம் புலந்து செயிர்த்துரைப்பான்
அவ்வுரையில் வருநெறிகள் அவை நிற்க அறநெறியின்
செவ்விய உண்மை திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர்
எவ் உலகில் எ பெற்றம் இப்பெற்றி தாம் இடரால்
வெவ்வுயிர்த்து கதறி மணி எறிந்து விழுந்தது விளம்பீர்
போற்றிசைத்து புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச
வீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர
தோற்றமுடை உயிர் கொன்றான் ஆதலினால் துணிபொருள் தான்
ஆற்றவுமற்று அவற் கொல்லும் அதுவேயாம் என நினைமின்
என மொழிந்து மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இவ் ஆன்
மனம் அழியு துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது
தனதுறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம் என
அனகன் அரும் பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார்
மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்தொரு மந்திரி தன்னை
முன்னிவனை அவ்வீதி முரண் தேர்க்கால் ஊர்க என
அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்ப
தன்னுடைய குலமகனை தான் கொண்டு மறுங்கணைந்தான்
ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்
தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று
மருமம் தன் தேராழி உறஊர்ந்தான் மனு வேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோ மற்று எளிதோ தான்
தண்ணளி வெண் குடை வேந்தன் செயல் கண்டு தரியாது
மண்ணவர் கண்மழை பொழிந்தார் வானவர் பூ மழை சொரிந்தார்
அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல்
விண்ணவர்கள் தொழ நின்றான் வீதி விடங்க பெருமான்
சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்கு திருநுதலும்
இடம் மருங்கில் உமையாளும் எம் மருங்கும் பூதகணம்
புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப
விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான்
அ நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அவ் அரசன்
மன்னுரிமை தனிக்கன்றும் மந்திரியும் உடன் எழலும்
இன்ன பரிசானான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும்
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ
அடி பணிந்த திருமகனை ஆகமுற எடுத்து அணைத்து
நெடிது மகிழ்ந்து அரு துயரம் நீங்கினான் நிலவேந்தன்
மடி சுரந்து பொழிதீம் பால் வருங் கன்று மகிழ்ந்துண்டு
படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே
பொன் தயங்கு மதிலாரூர பூங்கோயில் அமர்ந்தபிரான்
வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்து
சென்று அருளும் பெரும் கருணை திறம் கண்டு தன் அடியார்க்கு
என்றும் எளிவரும் பெருமை ஏழ் உலகும் எடுத்தேத்தும்
இனைய வகை அற நெறியில் எண்ணிறந்தோர்க்கு அருள் புரிந்து
முனைவர் அவர் மகிழ்ந்தருள பெற்றுடைய மூதூர் மேல்
புனையும் உரை நம்மளவில் புகலலா தகைமையதோ
அனைய தனு ககமலராம் அறவனார் பூங்கோயில்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருக்கூட்ட சிறப்பு
திருச்சிற்றம்பலம்
பூத நாயகர் புற்று இடம் கொண்டவர்
ஆதி தேவர் அமர்ந்த பூங் கோயிலிற்
சோதி மாமணி நீள் சுடர் முன்றில் சூழ்
மூதெயில் திரு வாயில் முன்னாயது
பூவார் திசை முகன் இந்திரன் பூ மிசை
மா வாழ் அகலத்து மால் முதல் வானவர்
ஓவாது எவரும் நிறைந்து உள்ளது
தேவா சிரியன் எனு திரு காவணம்
அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்
நிரந்த நீற்று ஒளியால் நிறை தூய்மையால்
புரந்த அஞ்சு எழுத்து ஓசை பொலிதலால்
பரந்த ஆயிரம் பாற் கடல் போல்வது
அகில காரணர் தாள பணிவார்கள் தாம்
அகில லோகமும் ஆளற்கு உரியர் என்று
அகில லோகத்து உளார்கள் அடைதலின்
அகில லோகமும் போல்வத தனிடை
அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால்
மெ தழைந்து விதிர்ப்புறு சிந்தையார்
கை திரு தொண்டு செய்கட பாட்டினார்
இத்திறத்தவர் அன்றியும் எண்ணிலார்
மாசிலாத மணி திகழ் மேனி மேல்
பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்
தேசினால் எ திசையும் விளங்கினார்
பேச ஒண்ணா பெருமை பிறங்கினார்
பூதம் ஐந்தும் நிலையிற் கலங்கினும்
மாதோர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்
ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார்
கோதிலாத குண பெருங் குன்றனார்
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்
ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன் பணி அலாது ஒன்று இலார்
ஈர அன்பினர் யாதுங் குறைவு இலார்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ
வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்
தாண்டவ பெருமான் தனி தொண்டர்கள்
நீண்ட தொல் புகழார் தம் நிலைமையை
ஈண்டு வாழ்த்துகேன் என்னறிந்து ஏத்துகேன்
இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்
அந்தம் இல் புகழ் ஆலால சுந்தரன்
சுந்தர திரு தொண்ட தொகை தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
தடுத்தாட்கொண்ட புராணம்
திருச்சிற்றம்பலம்
கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத மதி இருமருங்கும் ஓடி
செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு
பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில்
அரு மறை சைவம் ஓங்க அருளினால் அவதரித்த
மருவிய தவத்தால் மிக்க வளம்பதி வாய்மை குன்றா
திரு மறையவர்கள் நீடும் நாவலூராம்
மாதொ ஒரு பாகனார்க்கு வழி அடிமை
வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்கு
ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்பால்
தீதகன்று உலகம் உ திரு அவதாரம் செய்தார்
தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும்
நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றிமிக்க
ஐம் படை சதங்கை சாத்தி அணிமணி சுட்டி
செம் பொன் நாண் அரையில் மின்ன தெருவில் தேர் உருட்டு நாளில்
நர சிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு
பரவருங் காதல்கூர பயந்தவர் தம்பால் சென்று
விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்று தங்கள்
அரசிளங் குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார்
பெருமைசால் அரசர் காதற் பிள்ளையா பின்னும் தங்கள்
வரு முறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து
அரு மறை மு நூல் சாத்தி அளவில் தொல் கலைகள் ஆய்ந்து
திரு மலி சிறப்பின் ஓங்கி சீர் மண பருவஞ் சேர்ந்தார்
தந்தையார் சடையனார் தம் தனி திரு மகற்கு சைவ
அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப
வந்த தொல் சிறப்பிற் புத்தூர சடங்கவி மறையோன் தன்பால்
செ திரு அனைய கன்னி மண திறஞ் செப்பி விட்டார்
குல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார்
நல மிகு முதியோர் சொல்ல சடங்கவி நன்மை ஏற்று
மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை
பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான்
மற்றவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னை
பெற்றவர் தம்பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தை
உற்றதோர் மகிழ்ச்சி எய்தி மண வினை உவந்து சாற்றி
கொற்றவர் திருவுக்கு ஏற்ப குறித்து நாள் ஓலை விட்டார்
மங்கலம் பொலி செய்த மண வினை ஓலை ஏந்தி
அங்கயற் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டி
கொங்கலர சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து
பங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார்
மகிழ்ச்சி யால் மணம் மீ கூறி மங்கல வினைகள் எல்லாம்
புகழ்ச்சியால் பொலிந்து தோன்ற போற்றிய தொழிலராகி
இகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூ மாலை பந்தர்
நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள் முளை சாத்தினார்கள்
மண வினைக்கு அமைந்த செய்கை மாதினை பயந்தார் செ
துணர் மலர கோதை தா சுரும்பணை தோளினானை
புணர் மண திருநாள் முன்னா பொருந்திய விதியினாலே
பணை முரசு இயம்ப வாழ்த்தி பைம் பொன் நாண் காப்பு சேர்த்தார்
மா மறை விதி வழாமல் மணத்துறை கடன்கள் ஆற்றி
தூ மறை மூதூர கங்குல் மங்கல துன்றி ஆர்ப்ப
தேமரு தொடையல் மார்பன் திரு மண கோலம் காண
காமுறு மனத்தான் போல கதிரவன் உதயம் செய்தான்
காலை செய் வினைகள் முற்றி கணித நூல் புலவர் சொன்ன
வேலை வந்து அணையும் முன்னர் விதி மணக்கோலம் கொள்வான்
நூல் அசைந்து இலங்கு மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன்
மாலையு தாரும் பொங்க மஞ்சன சாலை புக்கான்
வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர
பாசனத்து அமைந்த பாங்கர பருமணி பைம்பொன் திண்கால்
ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால்
ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள்
அகில் விரை தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டாடை சாத்தி
முகில் நுழை மதியம் போல கைவலான் முன் கை சூழ்ந்த
துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தி தன் தூய செங்கை
உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறுஞ்சிகழி ஆர்த்தான்
தூநறும் பசும் கர்ப்பூர சுண்ணத்தால் வண்ண போதில்
ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தன சேறாட்டி
மான்மத சாந்து தோய்ந்த மங்கல கலவை சாத்தி
பான் மறை முந்நூல் மின்ன பவித்திரஞ் சிறந்த கையான்
தூமலர பிணையல் மாலை துணர் இணர கண்ணி கோதை
தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமை சாத்தி
மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள்கால் சீக்கும்
நாம நீள் கலன்கள் சாத்தி நன்மண கோலம் கொண்டான்
மன்னவர் திருவும் தங்கள் வைதிக
நன்நகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர் நாதன்
தன் அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்தி
பொன் அணி மணியார் யோக புரவிமேற் கொண்டு போந்தார்
இயம் பல துவைப்ப எங்கும் ஏத்தொலி எடுப்ப மாதர்
நயந்து பல்லாண்டு போற்ற நான்மறை ஒலியின் ஓங்க
வியந்துபார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பஞ் செய்தே
உயர்ந்த வாகன யானங்கள் மிசை கொண்டார் உழையரானார்
மங்கல கீத நாத மறையவர் குழாங்களோடு
தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துன்றி சூதும்
பங்கய முகையும் சாயத்து பணைத்து எழு தணியில் மிக்க
குங்கும முலையினாரும் பரந்தெழு கொள்கை தாகி
அருங்கடி எழுந்த போழ்தின் ஆர்த்த வெள்வளை களாலும்
இருங்குழை மகர தாலும் இலங்கொளி மணிகளாலும்
நெருங்கிய பீலி சோலை நீல நீர தரங்க தாலும்
கருங்கடல் கிளர்ந்தது என்ன காட்சியில் பொலிந்தது அன்றே
நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்க
பெருங்குடை மிடைந்து செல்ல பிணங்கு பூங் கொடிகள் ஆட
அருங் கடி மணம் வந்து எய்த அன்று தொட்டு என்றும் அன்பில்
வருங்குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூராமால்
நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி
நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி
உறைமலி கலவை சாந்தின் உறுபுனல் தெளித்து வீதி
மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர் கொள்ள வந்தார்
கண்கள் எண்ணிலாத வேண்டுன்ங் காளையை காண என்பார்
பெண்களில் உயர நோன் தாள் சடங்கவி பேதை என்பார்
மண் களி கூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார்
பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடுவார்கள்
ஆண்டகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார்
தாண்டிய பரியும் நம்பால் தகுதியின் நடந்தது என்பார்
பூண்டயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி என்பார்
ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்ப சென்றார்
வருமண கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாச
திருமண பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும்
பெருமழை குலத்தின் ஆர பரிமிசை இழிந்து பேணும்
ஒரு மண திறத்தின் அங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன்
ஆலுமறை சூழ்கயிலையின் கண் அருள் செய்த
சாலுமொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான்
மேலுற எழுந்து மிகு கீழுற அகழ்ந்து
மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார்
கண்ணிடை கரந்த கதிர் வெண்படம் என சூழ்
புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எ
தண்மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே
வெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க
காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழ
சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின்
மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க
ஆதபம் மறை குடை அணிக்கரம் விளங்க
பண்டிசரி கோவண உடை பழமை கூர
கொண்டதோர் சழங்கலுடை ஆர்ந்து அழகு கொள்ள
வெண் துகிலுடன் குசை முடிந்து விடு வேணு
தண்டொருகை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள
மொய்த்து வளர் பேரழகு மூத்தவடி வேயோ
அத்தகைய மூப்பெனும் அதன் படிவ மேயோ
மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதல்யோ
இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி
வந்துதிரு மாமறை மண தொழில் தொடங்கும்
பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று
இந்த மொழி கேண்மின் எதிர் யாவர்களும் என்றான்
முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான்
என்றுரை செய் அந்தணனை எண்ணில் மறை யோரும்
மன்றல் வினை மங்கல மடங்கல் அனை யானும்
நன்று உமது நல்வரவு நங்கள் தவம் என்று ஏ
நின்றது இவண் நீர் மொழிமின் நீர்மொழிவது என்றார்
பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி
என்னிடையும் நின்னிடையும் நின்ற இசை வால்யான்
முன்னுடையது ஓர்பெரு வழக்கினை முடித்தே
நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி என்றான்
நெற்றி விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான்
உற்றதோர் வழக்கு எனிடை நீ உடையது உண்டேல்
மற்றது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன்
முற்ற இது சொல்லுக என எல்லை முடிவு இல்லான்
ஆவதிது கேண்மின் மறையோர் என் அடியான் இ
நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான்
தேவரையும் மாலயன் முதன் திருவின் மிக்கோர்
யாவரையும் வேறு அடிமை யாவுடைய எம்மான்
என்றான் இறையோன் அது கேட்டவர் எம் மருங்கும்
நின்றார் இருந்தார் இவன் என் நினைந்தான் கொல் என்று
சென்றார் வெகுண்டார் சிரித்தார் திரு நாவல் ஊரான்
நன்றால் மறையோன் மொழி என்று எதிர் நோக்கி நக்கான்
நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்
மிக்கான் மிசையுத்தரி துகில் தாங்கி மேல் சென்று
அ காலம் உன் தந்தை தன் ஆள்ஓலை
இ காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட என்ன
மாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி
நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி
ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னை கேட்டோ ம் பித்தனோ மறையோன் என்றார்
பித்தனும் ஆக பின்னும் பேயனும் ஆக நீ இன்று
எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன்
அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று
வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும் என்றார்
கண்டதோர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும்
கொண்டதோர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்
உண்டொராள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று
தொண்டனார் ஓலை காட்டுக என்றனர் துணைவனாரை
ஓலை காட்டு என்று நம்பி உரைக்க நீ
பாலையோ அவை முன் காட்ட பணிசெயற் பாலை என்ற
வேலையில் நாவலூரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று
மாலயன் தொடரா தானை வலிந்து பின்தொடரல் உற்றார்
ஆவணம் பறிக்க சென்ற அளவினில் அந்தணாளன்
காவணத்து இடையே ஓட கடிது பின்தொடர்ந்து நம்பி
பூவனத்து அவரை உற்றார் அவரலால் புரங்கள் செற்ற
ஏவண சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார்
மறைகள் ஆயின முன் போற்றி மலர்ப்பதம் பற்றி நின்ற
இறைவனை தொடர்ந்து பற்றி எழுதும்ஆள் ஓலை வாங்கி
அறை கழல் அண்ணல் ஆளாய் அந்தணர் செய்தல் என்ன
முறை என கீறியிட்டார் முறையிட்டான் முடிவிலாதான்
அருமறை முறையிட்டின்னும் அறிவதற்கு அறியான் பற்றி
ஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி இந்த
பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்கு கின்ற
திரு மறை முனிவரே எங்குளீர் செப்பும் என்றார்
என்றலும் நின்ற ஐயர் இங்குளேன் இருப்புஞ் சேயது
அன்றிந்த வெண்ணெய் நல்லூர் அதுநிற்க அறத்தாறு இன்றி
வன்றிறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி
நின்றிவன் கிழித்து தானே நிரப்பினான் அடிமை என்றான்
குழை மறை காதினானை கோல் ஆரூரர் நோக்கி
பழைய மன்றாடி போலும் இவன் என்று பண்பின் மிக்க
விழைவுறு மனமும் பொங்க வெண்ணெய் நல்லூராயேல் உன்
பிழை நெறி வாழ்க்கை ஆங்கே பேச நீ போதாய் என்றார்
வேதியன் அதனை கேட்டு வெண்ணெய் நல்லூரிலே நீ
போதினும் நன்று மற்ற புனித நான்மறையோர் முன்னர்
ஆதியில் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல்
சாதிப்பன் என்று முன்னே தண்டுமுன் தாங்கி சென்றான்
செல்லு நான் மறையோன் தன்பின் திரிமு காந்தஞ் சேர்ந்த
வல்லிரும்பணையு மா போல் வள்ளலும் கடிது சென்றான்
எல்லையில் சுற்றத்தாரும் இது என்னாம் என்று செல்ல
நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல்லூரை நண்ணி
வேத பாரகரின் மிக்கார் விளங்கு பேர் அவை முன் சென்று
நாதனாம் மறையோன் சொல்லும் நாவலூர் ஆரூரன் தன்
காதல் என் அடியான் என்ன காட்டிய ஓலை கீறி
மூதறிவீர் முன் போந்தானிது மற்றென் முறைபாடு என்றான்
அந்தணர் அவையில் மிக்கார் மறையவர் அடிமை ஆதல்
இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயர் என்றார்
வந்தவாறிசைவே அன்றோ வழக்கு இவன் கிழித்த ஓலை
தந்தை தன் நேர்ந்தது என்றனன் தனியாய்
இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று
விசையினால் வலிய வாங்கி கிழிப்பது வெற்றி ஆமோ
தசையெலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினை சார சொன்னான்
அசைவில் ஆரூரர் எண்ணம் என் என்றார் அவையில்மிக்கார்
அனைத்து நூல் உணர்ந்தீர் ஆதி சைவன் என்று அறிவீர் என்னை
தனக்கு வேறு அடிமை என்று இவ் அந்தணன் சாதித்தானேல்
மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான்
எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன் எண்ணம் மிக்கான்
அவ்வுரை அவையின் முன்பு நம்பி ஆரூரர் சொல்ல
செவ்விய மறையோர் நின்ற திரு மறை முனியை நோக்கி
இவ்வுலகின் கண் நீ இன்று இவரை உன் அடிமை என்ற
வெவ்வுரை எம்முன்பு ஏற்ற வேண்டும் என்று உரைத்து மீண்டும்
ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன முன்னே
மூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல
மாட்சியில் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான்
வல்லையேல் காட்டிங்கு என்ன மறையவன் வலி செய்யாமல்
சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன் என்று சொல்ல
செல்வ நான் மறையோய் நாங்கள் தீங்குற ஒட்டோ ம் என்றார்
அல்லல் தீர்த்து ஆள நின்றார் ஆவணம் கொண்டு சென்றார்
இருள் மறை மிடறு ஒன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ
அருள் பெறு காரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கி
சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கி
தெருள் பெறு சபையோர் கேட்ப வாசகம் செப்பு கின்றான்
அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கை
பெரு முனி வெண்ணெய் நல்லூர பித்தனுக்கியானும் என்பால்
வரு முறை மரபுளோரும் வழி தொண்டு செய்தற்கு ஓலை
இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து
வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள்
ஆசிலா எழுத்தை நோக்கி அவையொக்கும் என்ற பின்னர்
மாசிலா மறையோர் ஐயா மற்றுங்கள் பேரனார் தம்
தேசுடை எழுத்தே ஆகில் தெளி பார்த்து அறிமின் என்றார்
அந்தணர் கூற இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான்
தந்தை தன் தான் வேறு எழுதுகை
இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி
வந்தது மொழிமின் என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல்
திரண்ட மா மறையோர் தாமும் திரு நாவலூரர் கோ முன்
மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை
அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி
இரண்டும் ஒத்திருந்தது என்னே இனி செயல் இல்லை என்றார்
நான் மறை முனிவ னார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர்
பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பில் மிக்க
மேன்மையோர் விளம்ப நம்பி விதி முறை இதுவே ஆகில்
யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ என்று நின்றார்
திருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி
அருமுனி நீமுன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள்
பெருமைசேர் பதியேயாக பேசியதுமக்கு இவ்வூரில்
வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக என்றார்
பெருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை
ஒருவரும் அறியீராகில் போதும் என்றுரைத்து சூழ்ந்த
பெருமறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்ல
திருவரு துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார்
எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் எங்கள்
நம்பர் தங்கோயில் புக்கது என்கொலோ என்று நம்பி
தம்பெரு விருப்பினோடு தனி தொடர்ந்து அழைப்ப மாதோடு
உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார்
முன்பு நீ நமக்கு தொண்டன் முன்னிய வேட்கை கூர
பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது
துன்புறு வாழ்க்கை நின்னை தொடர்வற தொடர்ந்து வந்து
நன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோ ம் என்றார்
என்று எழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்பு கேட்ட
கன்று போல் கதறி நம்பி கரசரண் ஆதி அங்கம்
துன்றிய புளகம் ஆக தொழுத கை தலை மேல் ஆக
மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆ கொண்டது என்றார்
எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும்
விண்ணவர் பொழி பூ மாரி மேதினி நிறைந்து விம்ம
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப
அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளி செய்வார்
மற்று நீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மை
சொற் தமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்
தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து எழுத்தும்
பாடிய பொருளாய் உள்ளான் பாடுவாய் நம்மை என்ன
நாடிய மனத்தராகி நம்பி ஆரூரர் மன்றுள்
ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று
வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த
ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உ கொண்ட
கோதிலா அமுதே இன்று உன் குண பெருங் கடலை நாயேன்
யாதினை அறிந்து என் சொல்லி பாடுகேன் என மொழிந்தார்
அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளி செய்வார்
முன்பு எனை பித்தன் என்றே மொழிந்தனை ஆதலால்லே
என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார் நின்ற
வன்பெரு தொண்டர் ஆண்ட வள்ளலை பாடல் உற்றார்
கொத்தார் மலர குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்
மெ தாயினும் இனியானை அவ்வியன் நாவலர் பெருமான்
பித்தா பிறை சூடி என பெரிதாம் திரு பதிகம்
இத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்
முறையால் வரு மதுர துடன் மொழி இந்தள முதலில்
குறையா நிலை மும்மைப்பாடி கூடுங் கிழமை யினால்
நிறை பாணியின் இசை கோள்புணர் நீடும் புகழ் வகையால்
இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான்
சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன் தனை இன்னும்
பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு என்றுறு பரிவில்
நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள்துறை மேவிய நம்பன்
எல்லா உலகும் உ புரம் எய்தான் அருள் செய்தான்
அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும்
உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில்
பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள்
நாவலர் கோன் ஆரூரன் தனை வெண்ணெய் நல் ஊரில்
மேவும் அருள்துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதற்பின்
பூ அலரும் தடம் பொய்கை திருநாவலூர் புகுந்து
தேவர் பிரான் தனை பணிந்து திரு பதிகம் பாடினார்
சிவன் உறையு திருத்துறையூர் சென்றணைந்து தீவினையால்
அவ நெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்கு
தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று
பவ நெறிக்கு விலக்கு ஆகு திருப்பதிகம் பாடினார்
புலன் ஒன்றும் படி தவத்திற் புரிந்த நெறி கொடுத்து அருள
அலர் கொண்ட நறுஞ் சோலை திரு துறையூர் அமர்ந்து அருளும்
நிலவும் தண் புனலும் ஒளிர் நீள்சடையோன் திருப்பாதம்
மலர் கொண்டு போற்றிசைத்து வந்தித்தார் வன தொண்டர்
திரு துறையூர் தனை பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும்
பொருத்தமாம் இடம் பலவும் புக்கிறைஞ்சி பொற்புலியூர்
நிருத்தனார் திரு கூத்து தொழுவதற்கு நினைவுற்று
வருத்தம் மிகு காதலினால் வழி கொள்வான் மனங் கொண்டார்
மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும்
அலை தருதண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின்
நிலவு பசும் புரவிநெடும் தேர் இரவி மேல் கடலில்
செலவணையும் பொழுது அணை திருவதிகை புறத்து அணைந்தார்
உடைய அரசு உலகேத்தும் உழவார படையாளி
விடையவர்க்கு கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து
அடையும் அதற்கு அஞ்சுவான் என்று அ நகரில் புகுதாதே
மடை வளர் தண் புறம் பணையிற் சித்தவட மடம் புகுந்தார்
வரி வளர் பூஞ்சோலை சூழ் மடத்தின் கண் வன்தொண்டர்
விரிதிரை நீர கெடில வட வீரட்டானத்து இறை தாள்
புரிவுடைய மனத்தினரா புடை எங்கும் மிடைகின்ற
பரிசனமும் துயில் கொள்ள பள்ளி அமர்ந்து அருளினார்
அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும்
முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே
பொது மடத்தின் உள்புகுந்து பூ தாரான் திரு முடி மேல்
பதும மலர தாள் வைத்து பள்ளி கொள்வார் போல் பயின்றார்
அந்நிலை ஆரூரன் உணர்ந்து அருமறையோய் உன்னடி என்
சென்னியில் வைத்தனை என்ன திசை அறியா வகை செய்தது
என்னுடைய மூப்பு காண் என்று அருள அதற்கு இசைந்து
தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன்
அங்குமவன் திரு முடிமேல் மீட்டும் அவர் தாள் நீட்ட
செங்கயல் பாய் தடம் புடை சூழ் திரு நாவலூராளி
இங்கு என்னை பலகாலும் மிதித்தனை நீ யார் என்ன
கங்கை சடை கரந்த பிரான் அறிந்திலையோ என கரந்தான்
செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் என தெளிந்து
தம்மானை அறியாத சதியார் உளரே என்று
அம்மானை திருவதிகை வீரட்டா னத்து அமர்ந்த
கைம்மாவின் உரியானை கழல் பணிந்து பாடினார்
பொன் திரளும் மணி பொரு கரிவெண்
மின்றிரண்ட வெண்முத்தும் விரைமலரும் நறுங் குறடும்
வன்றிரைகளாற் கொணர்ந்து திருவதிகை வழிபடலால்
தென் திசையில் கங்கை எனும் திரு கெடிலம் திளைத்தாடி
அங்கணரை அடிபோற்றி அங்கு அகன்று மற்று அந்த
பொங்கு நதி தென்கரை போ போர் வலித்தோள் மாவலி தன்
மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த
செங்கணவன் வழி பட்ட திரு மாணிக்குழி அணைந்தார்
பரம் பொருளை பணிந்து தாள் பரவிப்போ பணிந்தவர்க்கு
வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி
நரம்புடை யாழ் ஒலி முழவின் நாத
அரம்பையர் தம் கீத ஒலி அறா தில்லை மருங்கு அணைந்தார்
தேம் அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அங்கயல்கள் செங்கமல தண்
பூ மலங்க எதிர் பாய்வன மாடே புள்ளலம்பு திரை வெள் வளை வாவி
தா மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள் தம்மும்மை
மா மலங்களற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி
நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் நாளிகேரம் இலவங்கம் நரந்தம்
பூக ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி
மேக சாலமலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்ற
போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம்புறம்பணை கடந்து புகுந்தார்
வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர பலாசொடு செருந்தி மந்தாரம்
கன்னி காரங் குரவங் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கி
துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த
பன் மலர புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்
இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து
நடநவின்று அருள் சிலம்பொலி போற்றும் நான் மறை பதியை நாளும் வணங்க
கடல் வலங் கொள்வது போல் புடை சூழுங் காட்சி மேவி மிகு
சே செல ஓங்கும் தடமருங்கு வளர் மஞ்சிவர்
இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார்
மன்றுளாடு மதுவின் நசையாலே மறை சுரும்பறை புறத்தின் மருங்கே
குன்று போலுமணி மாமதில் சூழுங் குண்ட கழக்கமல வண்டலர் கைதை
துன்று நீறுபுனை மேனிய வாகி தூய நீறு புனை தொண்டர்கள் என்ன
சென்று முரல்கின்றன கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர்
பார் விளங்க வளர் நான் மறை நாதம் பயின்ற பண்புமிக வெண்கொடி ஆடும்
சீர் விளங்கு மணி நாவொலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும்
தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர்முகங்கள் என ஆயின தில்லை
ஊர்விளங்கு திருவாயில்கள் நான்கின் உத்தர திசை வாயில் முன் எய்தி
அன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ
முன் பிறைஞ்சினரி யாவர் என்று அறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து
பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும்
பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவிறந்த திருவீதி புகுந்தார்
அங்கண் மாமறை முழங்கும் மருங்கே ஆடரம்பையர் அரங்கு
மங்குல் வானின்மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளில் வண்டு
பொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர் போற்றிசைக்கும் ஒலி எங்கும் முழங்கும்
திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும் திருவீதி
போக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி
மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகை குலம் மிடைந்த பதாகை
யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓமதூமம் உயர்வானில் அடுப்ப
மேக பந்திகளின் மீதிடைஎங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும்
ஆடு தோகை புடை நாசிகள் தோறும் அரணி தந்த சுடர் ஆகுதி
மாடுதாமமணி வாயில்கள் தோறும் மங்கல கலசம் வேதிகை
சேடு கொண்ட ஒளி தேர் நிரை தோறும் செந்நெல் அன்னமலை சாலைகள்
நீடு தண்புனல்கள் பந்தர்கள் தோறும் நிறைந்த தேவர் கணம் நீளிடை
எண்ணில் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லையில் அழகு சொல்லிய எல்லாம்
மண்ணில் இப்பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகி
புண்ணி புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும்
அண்ணல் ஆடு திருஅம்பலம் சூழ்ந்த அம்பொன் வீதியினை நம்பி வணங்கி
மால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி
சீல மாமுனிவர் சென்று முன் துன்னி திரு பிரம்பின் அடி கொண்டு திளைத்து
காலம் நேர் படுதல் பார்த்தயல் நிற்ப காதல் அன்பர் கணநாதர் புகும்பொற்
கோல நீடு திருவாயில் இறைஞ்சி குவித்த செங்கை தலை மேற்கொடு புக்கார்
பெரு மதில் சிறந்த செம் பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேரு
வருமுறை வலம் கொண்டிறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்
அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர் தம் சிந்தையில் அலர்ந்த
திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் அணுக்கன்
வையகம் பொலிய மறை சிலம்பு ஆர்ப்ப மன்றுளே மால் அயன் தேட
ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த
கைகளோ திளைத்த கண்களோ அந்த கரணமோ கலந்த அன்புந்த
செய் தவ பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திரு களிற்றுப்படி
மருங்கு
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆ குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்து விகமே ஆக
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனி பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்
தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருநடம் கும்பிட பெற்று
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம் ஆம் என்று
கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரி கைம்மலர் உச்சி மேற் குவித்து
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்
தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனி பெரு தாண்டவம் புரிய
எடுத்த சேவடியார் அருளினால் தரளம் எறிபுனல் மறி திரை பொன்னி
மடுத்த நீள் வண்ண பண்ணை ஆரூரில் வருக நம்பால் என வானில்
அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து
எழுந்தார்
ஆடு கின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அ பணி சென்னி மேற் கொண்டு
சூடு தங்கரங்கள் அஞ்சலி கொண்டு தொழு தொறும் புறவிடை
மாடு பேரொளியின் வளரும் அம்பலத்தை வலங் கொண்டு வணங்கினர் போந்து
நீடுவான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரங் கடந்து
நின்று கோபுரத்தை நிலமுற பணிந்து நெடு திருவீதியை வணங்கி
மன்றலார் செல்வ மறுகினூடேகி மன்னிய திருப்பதி அதனில்
தென்திசை வாயில் கடந்து முன் போந்து சேட்படு திரு எல்லை இறைஞ்சி
கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிட திருநதி கடந்தார்
புற தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணிமார்பர்
அறம் பயந்தாள் திருமுலை பால் அமுதுண்டு வளர்ந்தவர் தாம்
பிறந்து அருளும் பெரும்பேறு பெற்றது என முற்றுலகில்
சிறந்த புகழ கழுமலமாம் திருப்பதியை சென்று அணைந்தார்
பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி
உள்ளு நான் மிதியேன் என்றூர் எல்லை புறம் வணங்கி
வள்ளலார் வலமாக வரும்பொழுதின் மங்கை இடங்
கொள்ளுமால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள
மண்டிய பேரன்பினால் வன்தொண்டர் நின்று இறைஞ்சி
தெண் திரை வேலையில் மிதந்த திரு தேணி புர தாரை
கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்று இருந்த படி என்று
பண்டரும் இன்னிசை பயின்ற திரு பதிகம் பாடினார்
இருக்கோலம் இடும்பெருமான் எதிர் நின்றும் எழுந்து அருள
வெரு கோளுற்றது நீங்க ஆரூர் மேற் செல விரும்பி
பெருக்கோதம் சூழ்புறவ பெரும் பதியை வணங்கி போ
திருக்கோலக்கா வணங்கி செந்தமிழ் மாலைகள் பாடி
தேன் ஆர்க்கும் மலர சோலை திரு புன்கூர் நம்பர் பால்
ஆனா பேரன்பு மிக அடி பணிந்து தமிழ் பாடி
மானார்க்கும் கரதலத்தார் மகிழ்த இடம் பல வணங்கி
கானார்க்கும் மலர தடஞ் சூழ் காவிரியின் கரை அணைந்தார்
வம்புலா மலர் அலை மணிகொழித்து வந்திழியும்
பைம் பொன் வார் கரை பொன்னி பயில் தீர்த்தம் படிந்தாடி
தம்பிரான் மயிலாடுதுறை வணங்கி தாவில் சீர்
அம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார்
மின்னார் செஞ்சடை அண்ணல் விரும்பு திருப்புகலூரை
முன்னாக பணிந்தேத்தி முதல்வன் தன் அருள் நினைந்து
பொன்னாரும் உத்தரியம் புரி முந்நூல் அணி மார்பர்
தென் நாவலூராளி திருவாரூர் சென்று அணைந்தார்
தேர் ஆரும் நெடு வீதி திருவாரூர் வாழ்வார்க்கு
ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க
வாரா நின்றான் அவனை மகிழ்ந்து எதிர் கொள்வீர் என்று
நீராரும் சடை முடிமேல் நிலவணிந்தார் அருள் செய்தார்
தம்பிரான் அருள் செய்த திரு தொண்டர் அது சாற்றி
எம் பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுவானால்
நம் பிரானார் ஆவார் அவரன்றே எனும் நலத்தால்
உம்பர் நாடு இழிந்தது என எதிர் கொள்ள உடன் எழுந்தார்
மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெருங் கொடி நெருங்க
தாளின் நெடு தோரணமும் தழை கமுகும் குழை தொடையும்
நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும் பொற்றசும்பும்
ஒளி நெடு மணிவிளக்கும் உயர் வாயில் தொறும் நிரைத்தார்
சோதி மணி வேதிகைகள் தூ நறுஞ் சாந்து அணி நீவி
கோதில் பொரி பொற் சுண்ணங் குளிர் தரள மணி பரப்பி
தாதிவர் பூ தொடை மாலை தண் பந்தர்களுஞ் சமைத்து
வீதிகள் நுண் துகள் அடங்க விரை பனிநீர் மிகத்தெளித்தார்
மங்கல கீதம் பாட மழை நிகர் தூரியம் முழங்க
செங் கயற் கண் முற்றிழையார் தெற்றி தொறும் நடம் பயில
நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன்
பொங்கெயில் நீள் திருவாயில் புறம் உறவந்து எதிர்கொண்டார்
வந்து எதிர் கொண்டு வணங்குவார் முன் வன்தொண்டர் அஞ்சலி கூப்பி
சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திரு தொண்டர் தம்மை நோக்கி
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும்
சந்த இசை பதிகங்கள் பாடி தம் பெருமான் திருவாயில் சார்ந்தார்
வானுற நீள் திரு வாயில் நோக்கி மண்ணுற ஐந்து உறுப்பால் வணங்கி
தேனுறை கற்பக வாசமாலை தேவாசிரியன் தொழுது இறைஞ்சி
ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செங்கைகள்டும்
தூநறுங் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார்
புற்றிடங் கொண்ட புராதனனை பூங்கோயில் மேய பிரானையார்க்கும்
பற்று இடம் ஆய பரம் பொருளை பார்ப்பதி பாகனை பங்கயத்தாள்
அர்ச்சனை செய்ய அருள் புரிந்த அண்ணலை மண்மிசை வீழ்ந்து இறைஞ்சி
நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்
அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக
முன்பு முறைமை யினால் வணங்கி முடிவு இலா காதல் முதிர ஓங்கி
நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்த பெற்ற
இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்னிசை வண்டமிழ் மாலை பாட
வாழிய மா மறை புற்றிடங்கொள் மன்னவனார் அருளாலோர் வாக்கு
தோழமை ஆக உனக்கு நம்மை தந்தனம் நாம் முன்பு தொண்டு கொண்ட
வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீர
வாழி மண் மேல் விளையாடுவாய் என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே
கேட்க விரும்பி வன்றொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே
ஆட்கொள வந்த மறையவனே ஆரூர் அமர்ந்த அருமணியே
வாட்கயல் கொண்ட கண்மங்கை பங்கா மற்று உன் பெரிய கருணை அன்றே
நாட்கமல பதம் தந்தது இன்று நாயினேனை பொருளாக என்றார்
என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ள களிப்பினொடும்
வென்றி அடல் விடைபோல் நடந்து வீதி விடங்க பெருமான் முன்பு
சென்று தொழுது துதித்து வாழ்ந்து திருமாளிகை வலம் செய்து போந்தார்
அன்று முதல் அடியார்கள் எல்லாம் தம்பிரான் தோழர் என்றே அழைத்தார்
மைவளர் கண்டர் அருளினாலே வண்டமிழ் நாவலர் தம் பெருமான்
சைவ விடங்கின் அணிபுனைந்து சாந்தமும் மாலையும் தாரும் ஆகி
மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழுத்தவ வேந்தர் என்ன
தெய்வ மணி புற்றுளாரை பாடித்திளைத்து மகிழ்வொடுஞ் செல்லா நின்றார்
இதற்கு முன் எல்லை இல்லா திரு நகர் இதனுள் வந்து
முதல் பெருங் கயிலை ஆதி முதல்வர் தம் பங்கினாட்கு
பொது கடிந்து உரிமை செய்யும் பூங்குழற் சேடிமாரில்
கதிர்த்த பூண் ஏந்து கொங்கை கமலினி அவதரித்தாள்
கதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகை மாராம்
பதியிலார் குலத்துள் தோன்றி பரவையார் என்னும் நாமம்
விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற
மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி
பரவினர் காப்பு போற்றி பயில் பெருஞ் சுற்றம் திங்கள்
விரவிய பருவம் தோறும் விழா அணி எடுப்ப மிக்கோர்
வர மலர் மங்கை இங்கு வந்தனள் என்று சிந்தை
தர வரு மகிழ்ச்சி பொங்க தளர் நடை பருவஞ் சேர்ந்தார்
மானிளம் பிணையோ தெய்வ வளரிள முகையோ வாச
தேனிளம் பதமோ வேலை திரை இளம் பவள வல்லி
கானிளம் கொடியோ திங்கள் கதிரிளங் கொழுந்தோ காமன்
தானிளம் பருவம் கற்கும் தனி இள தனுவோ என்ன
நாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்க
ஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மானை ஊசல் இன்ன
பாடும் இன்னிசையும் தங்கள் பனிமலை வல்லி பாதம்
கூடும் அன்பு உருக பாடும் கொள்கையோர் குறிப்பு தோன்ற
பிள்ளைமை பருவம் மீதாம் பேதைமை
அள்ளுதற்கு அமைந்த பொற் பால் அநங்கன் மெ தனங்கள் ஈட்டம்
கெள்ள மிக்குயர்வ போன்ற கொங்கைகோங் கரும்பை வீழ்ப்ப
உள்ள மெ தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார்
பாங்கியர் மருங்கு சூழ படரொளி மறுகு சூழ
தேங்கமழ் குழலின் வாசம் திசையெலாம் சென்று சூழ
ஓங்கு பூங் கோயில் உள்ளார் ஒருவரை அன்பி னோடும்
பூங்கழல் வணங்க என்றும் போதுவார் ஒருநா போந்தார்
அணி சிலம்பு அடிகள் பார் வென்றடி படுத்தனம் என்று ஆர்ப்ப
மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அர உலகை வென்ற
துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற் கழிய விண்ணும்
பணியும் என்றின வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில்
புற்றிடம் விரும்பினாரை போற்றினர் தொழுது செல்வார்
சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடை நம்பி
நற் பெரும் பான்மை கூட்ட நகைபொதிந்து இலங்கு செவ்வாய்
விற் புரை நுதலின் வேற்கண் விளங்கு இழையவரை கண்டார்
கற்பகத்தின் பூங் கொம்போ காமன் தன் பெரு வாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து
விற் குவளை பவள மலர் மதிபூத்த விரை கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேன் என்று அதிசயித்தார்
ஓவிய நான்முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால்
மேவிய தன் வருத்தமுற விதித்ததொரு மணி விளக்கோ
மூவுலகின் பயனாகி முன் நின்றது என நினைந்து
நாவலர் காவலர் நின்றார் நடு படை
தண்டரள மணி தோடும் தகைத்தோடும் கடை பிறழும்
கெண்டை நெடுங் கண் வி கிளர் ஒளி பூண் உரவோனை
அண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரு
பண்டை விதி கடை கூட்ட பரவையாருங் கண்டார்
கண் கொள்ளா கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப
விண் கொள்ளா பேரொளியான் எதிர் நோக்கும் மெல்லியலுக்கு
எண் கொள்ளா காதலின் முன்பு எய்தாத ஒரு வேட்கை
மண் கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும்
முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ பெருகு ஒளியால்
தன்னேரில் மாரனோ தார் மார்பின் விஞ்சையனோ
மின் நேர் செஞ் சடை அண்ணல் மெய்யருள் பெற்று உடையவனோ
என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார்
அண்ணல் அவன் தன் மருங்கே அளவு இறந்த காதலினால்
உண்ணிறையும் குணம் நான்கும் ஒரு புடை சாய்ந்தன எனினும்
வண்ண மலர கரும் கூந்தல் மட கொடியை வலிதாக்கி
கண் நுதலை தொழும் அன்பே கை கொண்டு செலவுய்ப்ப
பாங்கு ஓடி சிலை வளைத்து படை அநங்கன் விடு பாணம்
தாங்கோலி எம் மருங்கும் தடை செய்ய மடவரலும்
தேங்கோதை மலர குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர
பூங்கோயில் அமர்ந்த பிரான் பொற் கோயில் போ புகுந்தான்
வன்தொண்டர் அது கண்டு என் மனம் கொண்ட மயில் இயலின்
இன் தொண்டை செங்கனி வாய் இளங் கொடி தான் யார் என்ன
அன்றங்கு முன் நின்றார் அவர் நங்கை பரவையார்
சென்றும்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார் என செப்ப
பேர் பரவை பெண்மையினில் பெரும்
ஆர்பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை
சீர் பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல்
ஏர் பரவை இடை பட்ட என் ஆசை எழு
என்றினைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையான்
முன் தொடர்ந்து வருங் காதல் முறைமை யினால் தொடக்குண்டு
நன்று எனை ஆ கொண்டவர் பால் நண்ணுவன் என்றுள் மகிழ்ந்து
சென்றுடைய நம்பியும் போ தேவர் பிரான் கோயில் புக
பரவையார் வலங் கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே
புரவலனார் கோயிலின் நின்று ஒரு மருங்கு புறப்பட்டார்
விரவு பெருங் காதலினால் மெல்லியலார் தமை வேண்டி
அரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர்
அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணி புற்றின்
மை வாழும் திரு மிடற்று வானவர் பால் நின்றும் போந்து
எவ்வாறு சென்றாள் என் இன்னுயிராம் அன்னம் என
செவ்வாய் வெண் நகை கொடியை தேடுவார் ஆயினார்
பாசமாம் வினை பற்று அறுப்பான் மிகும்
ஆசை மேலும் ஓர்
தேசின் மன்னி என் சிந்தை மயக்கிய
ஈசனார் அருள் என் நெறி சென்றதே
உம்பர் நாயகர் தங்கழல் அல்லது
நம்புமாறு அறியேனை நடுக்குற
வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கியின்று
எம் பிரான் அருள் எந்நெறி சென்றதே
பந்தம் வீடு தரும் பரமன் கழல்
சிந்தை ஆரவும் உன்னும் என் சிந்தையை
வந்து மால் செய்து மான் எனவே விழித்து
எந்தையார் அருள் எ நெறி சென்றதே
என்று சாலவும் ஆற்றலர் என்னுயிர்
நின்றது எங்கு என நித்தில பூண் முலை
மன்றல் வார்குழல் வஞ்சியை தேடுவான்
சென்று தேவ ஆசிரியனை சேர்ந்த பின்
காவி நேர் வரும் கண்ணியை நண்ணுவான்
யாவரோடும் உரையியம்பாது இருந்து
ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர்
பூவின் மங்கையை தந்து எனும் போழ்தினில்
நாட்டு நல்லிசை நாவலூரன் சிந்தை
வேட்ட மின்னிடை இன் அமுதத்தினை
காட்டுவன் கடலை கடைந்தது என்ப போல்
பூட்டும் ஏழ் பரி தேரோன் கடல் புக
எய்து மென் பெடையோடும் இரை தேர்ந்து உண்டு
பொய்கையிற் பகல் போக்கிய புள்ளினம்
வைகு சேக்கை கண் மேற்செல வந்தது
பையுள் மாலை தமியோர் புனிப்புற
பஞ்சின் மெல் அடி பாவையர் உள்ளமும்
வஞ்ச மாக்கள் தம் வல் வினையும் அரன்
அஞ்சு எழுத்தும் உணரா அறிவிலோர்
நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான்
மறுவில் சிந்தை வன்தொண்டர் வருந்தினால்
இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார் என்று
நறு மலர கங்குல் நங்கை முன் கொண்ட புன்
முறுவல் என்ன முகிழ்த்தது வெண் நிலா
அரந்தை செய்வார்க்கு அழுங்கி தம் ஆருயிர்
வரன் கை தீண்ட மலர் குலமாதர் போல்
பரந்த வெம் பகற்கொல்கி பனி மதி
கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம்
தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மையே
சாற்றும் இன்பமும் தண்மையும் தந்து போய்
ஆற்ற அண்டம் எலாம் பரந்து அண்ணல் வெண்
நீற்றின் பேரொளி போன்றது நீள் நிலா
வாவி புள்ளொலி மாறிய மாலையில்
நாவலூரரும் நங்கை பரவையாம்
பாவை தந்த படர் பெருங் காதலும்
ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்
தந்திரு கண் எரிதழலிற் பட்டு
வெந்த காமன் வெளியே உரு செய்து
வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே
எந்தையார் அருள் இவ் வண்ணமோ என்பார்
ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர்
தூர்ப்பதே எனை தொண்டு கொண்டு ஆண்டவர்
நீர தரங்க நெடுங் கங்கை நீள் முடி
சாத்தும் வெண் மதி போன்றிலை தண்
அடுத்து மேன் மேல் அலைத்து எழும் ஆழியே
தடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உண
கடுத்த நஞ்சுன் தரங கரங்களால்
எடுத்து நீட்டு நீ என்னை இன்று என் செயாய்
பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடை
சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில்
புறம் பணை தடம் பொங்கழல் வீசிட
மறம் பயின்றது எங்கோ தமிழ் மாருதம்
இன்ன தன்மைய பின்னும் இயம்புவான்
மன்னு காதலன் ஆகிய வள்ளல் பால்
தன் அரும் பெறல் நெஞ்சு தயங்க போம்
அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம்
கனங்கொண்ட மணி கண்டர் கழல்
வணங்கி கணவனை முன் பெறுவாள் போல
இனங் கொண்ட சேடியர்கள் புடை சூழ எய்து பெருங் காதலோடும்
தனங் கொண்டு தளர் மருங்குற் பரவையும் வன்தொண்டர் பால்
தனித்து சென்ற மனங்கொண்டு வரும் பெரிய மயல்
கொண்டு தன்மணிமாளிகையை சார்ந்தாள்
சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிதளவே ஒலிப்ப முன்னர்
வேறொருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால்
ஏறி மரக தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலங் கொள் பொற் கால்
மாறில் மலர சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கிருந்தாள் வந்து
அவ்வளவில் அருகிருந்த சேடிதனை முகநோக்கி ஆரூர் ஆண்ட
மைவிரவு கண்டாரை நாம் வணங்க போம் மறுகெதிர் வந்தவரார் என்ன
இவ்வுலகில் அந்தணராய் இருவர் தேடொருவர் தாம் எதிர் நின்று ஆண்ட
சைவ முதல் திரு தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி என்றாள்
என்றவுரை கேட்டலுமே எம் பிரான் தமரேயோ என்னா முன்னம்
வன் தொண்டர் பால் வைத்த மன காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க
நின்ற நிறை நாண்முதலாங் குணங்களுடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கி
மின் தயங்கு நுண் இடையாள் வெவ்வுயிர்த்து மெல் அணை மேல் வீழ்ந்த போது
ஆர நறுஞ் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறுந்திவலை அருகு வீசி
ஈர இள தளிர்க்குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம்
பேரழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்று அதன் மீது சமிதை என்ன
மாரனும் தன் பெருஞ் சிலையின் வலிகாட்டி மலர் வாளி சொரிந்தான் வந்து
மலரமளி துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு மங்குல்
நிலவுமிழும் தழல் ஆற்றாள் நிறை ஆற்றும் பொறை ஆற்றா நீர்மை யோடும்
கலவ மயில் என எழுந்து கருங் குழலின் பரமாற்றா கையள் ஆகி
இலவ இதழ செந்துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள்
கந்தம் கமழ் மென் குழலீர் இது என் கலை வாண் மதியம் கனல்வான் எனை இ
சந்தின் தழலை பனி நீர் அளவி தடவுங் கொடியீர் தவிரீர்
வந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையானிலமும் எரியாய் வருமால்
அந்தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்றுடையார் அருளார்
புலரும் படி யன்றி இரவென்னளவும் பொறையும் நிறையும் இறையும் தரியா
உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெரு வாழ்வுரையீர்
பலரும் புரியும் துயர்தான் இதுவோ படை மன் மதனார் புடை நின்று அகலார்
அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார்
தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவா ரூரிர் நீரே அல்லால்
ஆரென் துயரம் அறிவார் அடிகேள் அடியேன் அயரும் படியோ இதுதான்
நீரும் பிறையும் பொறிவாள் அரவின் நிரையும் நிரை வெண்டலையின் புடையே
ஊரும் சடையீர் விடைமேல் வருவீர் உமது அன்பிலர் போல் யானோ உறுவேன்
என்றின்னவெ பலவும் புகலும் இருளார் அளக சுருள் ஓதியையும்
வன் தொண்டரையும் படிமேல் வர முன்பு அருளுவான் அருளும் வகையார் நினைவார்
சென்று உம்பர்களும் பணியும் செல்வ திருவாரூர் வாழ் பெருமான் அடிகள்
அன்று அங்கு அவர் மன்றலை நீர் செயும் என்று அடியார் அறியும் படியால்
அருளி
மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ மங்கை பரவை தன்னை தந்தோம்
இன்னவ்வகை நம் அடியார் அறியும் படியே உரை செய்தனம் என்று அருளி
பொன்னின் புரி புன் சடையன் விடையன் பொருமா கரியின் உரிவை புனைவான்
அன்ன நடையாள் பரவைக்கு அணியது ஆரூரன் பால் மணம் என்று அருள
கா துயரில் கவல்வார் நெஞ்சிற் கரையில் இருளும் கங்குல் கழி போம்
யாமத்து இருளும் புலர கதிரோன் எழுகாலையில் வந்து அடியார் கூடி
சே துணையாம் அவர் பேர் அருளை தொழுதே திரு நாவலர் கோன் மகிழ
தா குழலாள் பரவை வதுவை தகு நீர்மை யினால் நிகழ செய்தார்
தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால்
மின்னாருங் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல் தன்
பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வாக
பன்னாளும் பயில் யோக பரம்பரையின் விரும்பினார்
தன்னையாளுடைய பிரான் சரணர விந்த மலர்
சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்து திரு பதிகம்
பன்னு தமிழ தொடை மாலை பல சாத்தி பரவை எனும்
மின்னிடையாள் உடன் கூடி விளையாடி செல்கின்றார்
மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை
போதலர் வாவி மாடு செய் குன்றின் புடையோர் தெற்றி
சீதள தரள பந்தர செழு தவிசி இழிந்து தங்கள்
நாதர் பூங் கோயில் நண்ணி கும்பிடும் விருப்பால் நம்பி
அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்தி
சந்தனத்து அளறு தோய்ந்த குங்கு கலவை சாத்தி
சுந்தர சுழியஞ் சாத்தி சுடர் மணி கலன்கள் சாத்தி
இந்திர திருவின் மேலாம் எழில் மிக விளங்கி தோன்ற
கையினிற் புனை பொற்கோலும் காதினில் இலங்கு தோடும்
மெய்யினில் துவளு நூலும் நெற்றியில் விளங்கும் நீறும்
ஐயனுக்கு அழகு இதாம் என்று ஆயிழை மகளிர் போற்ற
சைவ மெ திருவின் கோலம் தழைப்ப வீதியினை சார்ந்தார்
நாவலூர் வந்த சைவ நற் தவ களிறே என்றும்
மேலவர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்பர் என்றும்
தாவில் சீர பெருமை ஆரூர் மறையவர் தலைவ என்றும்
மேவினர் இரண்டு பாலும் வேறு வேறாயம் போற்ற
கை கிடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றி
பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றி செல்ல
மிக்க பூம் பிடகை கொள்வோர் விரையடைப்பையோர் சூழ
மைக்கருங் கண்ணினார்கள் மறுக நீள் மறுகில் வந்தார்
பொலங் கல புரவி பண்ணி போதுவார் பின்பு போத
இலங்கொளி வல பொற்தோள் இடை இடைமிடைந்து தொங்கல்
நலங் கிளர் நீழல் சூழ நான்மறை முனிவரோடும்
அலங்கல தோளினான் வந்து அணைந்தான் அண்ணல் கோயில்
கண் நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து
விண்ணவர் ஒழிய மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி
எண் இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆக
பண்ணு நாள் எந்நாள் என்று பரமர் தாள் பரவி சென்றார்
அடியவர்க்கு அடியன் ஆவேன் என்னும் ஆதரவு கூர
கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்து புக்கார்
கடி கொள்பூங் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காண காட்டும்
படி எதிர் தோன்றி நிற்க பாதங்கள் பணிந்து பூண்டு
மன் பெரு திருமா மறை வண்டு சூழ்ந்து
அன்பர் சிந்தை அலர்ந்த செ தாமரை
நன் பெரும் பரம ஆனந்த
என் தரத்தும் அளித்து எதிர் நின்றன
ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின
காலன் ஆருயிர் மாள கருத்தன
மாலை தாழ் குழல் மாமலையாள் செங் கை
சீலம் ஆக வருட சிவந்தன
நீதி மாதவர் நெஞ்சில் பொலிந்தன
வேதி யாதவர் தம்மை வேதிப்பன
சோதியாய் எழுஞ் சோதியு சோதிய
ஆதி மால் அயன் காணா அளவின
வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன
பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன
ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன
பூத நாத நின் புண்டரீக பதம்
இன்னவாறு ஏத்து நம்பி கேறு சேவகனார் தாமும்
அ நிலை அவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி
மன்னு சீர் அடியார் தங்கள் வழி தொண்டை உணர நல்கி
பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளி செய்வார்
பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மை பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார் ஊனம் மேல் ஒன்றும் இல்லார்
அருமையாம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய் என்று
நாதனார் அருளி செய்ய நம்பி ஆரூரர் நான் இங்கு
ஏத தீர் நெறியை பெற்றேன் என்றெதிர் வணங்கி போற்ற
நீதியால் அவர்கள் தம்மை பணிந்து நீ நிறை சொன் மாலை
கோதிலா வாய்மையாலே பாடென அண்ணல் கூற
தன்னை ஆளுடைய நாதன் தான் அருள் செ கேட்டு
சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர்
இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார்
பன்னுபா மாலை பாடும் பரிசு எனக்கு அருள் செய் என்ன
தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள் தன் திரு பாகன்
அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால்
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று
எல்லையில் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி என்றார்
மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர்
சென்னியுற அடி வணங்கி திருவருள் மேல் கொள் பொழுதில்
முன்னம் மால் அயன் அறியா முதல்வர் தாம் எழுந்து அருள
அ நிலை கண்டு அடியவர் பால் சார்வதனுக்கு அணைகின்றார்
தூரத்தே திரு கூட்டம் பல முறையால் தொழுது அன்பு
சேர தாழ்ந்து எழுந்து அருகு சென்று எய்தி நின்று அழியா
வீரத்தார் எல்லார்க்கும் தனி தனி வேறு அடியேன் என்று
ஆர்வத்தால் திரு தொண்ட தொகை பதிகம் அருள் செய்வார்
தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆக தமிழ் மாலை
செம் பொருளால் திரு தொண்ட தொகை ஆன திரு பதிகம்
உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகேத்த
எம் பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார்
உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த
நம்பி ஆரூரர் திரு கூட்டத்தின் நடுவணைந்தார்
தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே
எம்பிரான் தமர்கள் திரு தொண்டு ஏத்தல் உறுகின்றேன்
திருமலை சருக்கம் முற்றிற்று
சருக்கம் ஒன்றுக்கு திருவிருத்தம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
தில்லை வாழ் அந்தணர் புராணம்
திருச்சிற்றம்பலம்
ஆதியாய் நடுவுமாகி அளவு இலா அளவுமாகி
சோதியாய் உணர்வுமாகி தோன்றிய பொருளுமாகி
பேதியா ஏகம் ஆகி பெண்ணுமாய் ஆணும்
போதியா நிற்கும் தில்லை பொது நடம் போற்றி
கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
அற்புத கோலம் நீடி அரு மறை சிறத்தின் மேலாம்
சிற்பர வியோமம் ஆகும் திரு சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி
போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம்
போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும்
ஆற்றினார் பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார்
பொங்கிய திருவில் நீடும் பொற்புடை பணிகள் ஏந்தி
மங்கல தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும்
தங்களுக்கு ஏற்ற பண்பில் தரும் பணி தலை நின்று உய்த்தே
அங்கணர் கோயில் உள்ளா அகம் படி தொண்டு செய்வார்
வரு முறை எரி மூன்று ஓம்பி மன்னுயிர் அருளால் மல்க
தருமமே பொருளா கொண்டு தத்துவ நெறியில் செல்லும்
அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார்
திரு நடம் புரிவார்க்கு ஆளாம் திருவினால் சிறந்த சீரார்
மறுவிலா மரபின் வந்து மாறிலா ஒழுக்கம் பூண்டார்
அறு தொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கி உள்ளார்
உறுவது நீற்றின் செல்வம் என கொளும் உள்ளம் மிக்கார்
பெறுவது சிவன் பால் அன்பாம் பேறு என பெருகி வாழ்வார்
ஞானமே முதலாம் நான்கும் நவை அற தெரிந்து மிக்கார்
தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனமேல் ஒன்றும் இல்லார் உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார்
செம்மையால் தணிந்த சிந்தை தெய்வ வேதியர்கள் ஆனார்
மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை
இம்மையே பெற்று வாழ்வார் இனி பெறும் பேறு ஒன்று இல்லார்
தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார்
இன்றிவர் பெருமை எம்மால் இயம்பலாம் எல்லைத்தாமோ
தென் தமிழ பயனாய் உள்ள திரு தொண்ட தொகை முன் பாட
அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல்
முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றால்
அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம்
புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ
நிகழ் திரு நீல கண்ட குயவனார் நீடு வாய்மை
திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருநீலகண்ட நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
வேதியர் தில்லை மூதூர் வே கோவர் குலத்து வந்தார்
மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே
ஆதியும் முடிவும் இல்லா அற்பு தனி கூத்து ஆடும்
நாதனார் கழல்கள் வாழ்தி வழிபடும் நலத்தின் மிக்கார்
பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனற் சடை முடியார்க்கு அன்பர்
மெய் அடியார் கட்கு ஆன செயும் விருப்பில் நின்றார்
வையகம் போற்றும் செய்கை மனை அறம் புரிந்து வாழ்வார்
சைவ மெ திருவின் சார்வே பொருள் என சாரு நீரார்
அளவிலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி
வளரிளம் திங்கள் கண்ணி மன்றுளார் அடியார்க்கு என்றும்
உள மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
இளமை மீது ஊர இன்ப துறையினில் எளியர் ஆனார்
அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததி கற்பின் மிக்கார்
புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய்
தவ நின்று அடுத்தது என்ன தகைந்து தான் தரித்தது என்று
சிவன் எந்தை கண்டம் தன்னை திரு நீல
ஆன தம் கேள்வர் அங்கோர் பரத்தை பால் அணைந்து நண்ண
மானமுன் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய எல்லாஞ் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்
தேனலர் கமல போதில் திருவினும் உருவம் மிக்கார்
மூண்ட அ புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
பூண்டயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில்
தீண்டுவீர் ஆயின் எம்மை திரு நீல கண்டம் என்றார்
ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார்
கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்
பொற்புற மெய் உறாமல் பொருந்துவ போற்றி செய்ய
இல் புறம்பு ஒழியாது அங் கண் இருவரும் வேறு வைகி
அன்புறு புணர்ச்சி இன்மை அயலறியாமை வாழ்ந்தார்
இளமையின் மிக்குளார்கள் இருவரும் அறிய நின்ற
அளவில் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல
வள மலி இளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து
தளர்வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்து சாயார்
இ நெறி ஒழுகும் நாளில் எரி தளர்ந்தது என்ன நீண்ட
மின்னொளிர் சடையோன் தானு தொண்டரை விளக்கங் காண
நன்னெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும்
அ நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி
கீள் ஒடு கோவணம் சாத்தி கேடு இலா
வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மெல்
தோளொடு மார்பிடை துவளும் நூலுடன்
நீளொளி வளர் திரு முண்ட நெற்றியும்
நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடுங் கதிர் முறுவல் வெண்ணிலவும் மேம்பட
இடும் பலி பாத்திரம் ஏந்து கையராய்
நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார்
நண்ணிய தவ சிவ யோக நாதரை
கண்ணுற நோக்கிய காதல் அன்பர் தாம்
புண்ணி தொண்டராம் என்று போற்றி செய்து
எண்ணிய வகையினால் எதிர் கொண்டு ஏத்தினார்
பிறை வளர் சடை முடி பிரானை தொண்டர் என்று
உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட
முறைமையின் வழி பட மொழிந்த பூசைகள்
நிறை பெரு விருப்பொடு செய்து நின்ற பின்
எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர்
வம்புலா மலர சடை வள்ளல் தொண்டனார்
உம்பர் நாயகனும் இவ்வோடு நின்பால் வைத்து
நம்பி நீ தருக நாம் வேண்டும் போது என்று
தன்னை ஒப்பு அரியது தலத்து தன் உழை
துன்னிய யாவையும் தூய்மை செய்வது
பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
இன்ன தன்மையது இது வாங்கு நீ என
தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய
மல்கு சீர தொண்டனார் வணங்கி வாங்கி கொண்டு
ஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்புறும்
எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார்
வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள்
நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்
உய்த்து உடன் போய் விடை கொண்டு மீண்டனர்
அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார்
சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த
கோலமார் ஓடு தன்னை குறி இடத்து அகல போக்கி
சீலமார் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர் தம்பால்
வாலி தாம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார்
வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து
சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப
முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு
தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்
என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு
சென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கி
நின்றவர் தம்மை கேட்டார் தேடியும் காணார் மாயை
ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார்
மறையவன் ஆகி நின்ற மலைமகள் கேள்வன் தானும்
உறை உளில் புக்கு நின்ற ஒரு பெரு தொண்டர் கேட்ட
இறையில் இங்கு எய்த புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து
கறை மறை மிடற்றினானை கை தொழுது உரைக்கல் உற்றார்
இழையணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன
விழை தகும் ஓடு வைத்த வேறு இடம் தேடி காணேன்
பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இ
பிழையினை பொறுக்க வேண்டும் பெரும என்று இறைஞ்சி நின்றார்
சென்னியால் வணங்கி நின்ற தொண்டரை செயிர்த்து நோக்கி
என்னிது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றி
பொன்னினால் அமைத்து தந்தாய் ஆயினுங் கொள்ளேன் போற்ற
முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா என்றான் முன்னோன்
கேடு இலா பெரியோய் என்பால் வைத்தது கெடுதலாலே
நாடியும் காணேன் வேறு நல்லது ஓர் ஓடு சால
நீடு செல்வது தான் ஒன்று தருகிறேன் எனவும் கொள்ளாது
ஊடி நின்று உரைத்தது என் தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன
ஆவதென் உன்பால் வைத்த அடைக்கல பொருளை வௌவி
பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய்
யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றி
போவதும் செய்யேன் என்றான் புண்ணி பொருளாய் நின்றான்
வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லை
உளத்தினும் களவிலாமைக்கு என் செய்கேன் உரையும் என்ன
களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனை பற்றி
குளத்தினில் மூழ்கி போ என்று அருளினான் கொடுமை இல்லான்
ஐயர் நீர் அருளி செய்த வண்ணம் யான் செய்வதற்கு
பொய்யில் சீர புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன
மையறு சிறப்பின் மிக்க மனையவள் தன்னை பற்றி
மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார்
கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர் நின்ற
வெங் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார்
எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை
பொங்கு புனல் யான்மூழ்கி தருகின்றேன் போதும் என
தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவி
அ தளிர செங் கைப்பற்றி அலை புனலில் மூழ்காதே
சிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள்
வந்து இருந்த பேர் அவையில் மன்னுவன் யான் என சென்றார்
நல் ஒழுக்கம் தலை நின்றார் நான் மறையின் துறை போனார்
தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்தவையில்
எல்லை இலான் முன் செல்ல இருந்தொண்டர் அவர் தாமும்
மல்கு பெரும் காதலினால் வழக்கு மேலிட்டு அணைந்தார்
அந்தணன் ஆம் எந்தை பிரான் அரு மறையோர் முன் பகர்வான்
இந்த வேட்கோவன்பால் யான் வைத்த பாத்திரத்தை
தந்து ஒழியான் கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி
வந்து மூழ்கியும் தாரான் வலி செய்கின்றான் என்றார்
நறை கமழும் சடை முடியும் நாற்றோளும் மு கண்ணும்
கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும்
மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர் உரை செய்வார்
நிறையுடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என
நீணிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு
பேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன்
பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்று
சேணிடையும் தீங்கு அடையா திருத்தொண்டர் உரைசெய்தார்
திருவுடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின்
உருவுடை இவர் தாம் வைத்த ஓட்டினை கொடுத்தீர் ஆனால்
தருமிவர் குளத்தில் மூழ்கி தருக என்று உரைத்தார் ஆகில்
மருவிய மனைவியொடு மூழ்குதல் வழக்கே என்றார்
அரு தவ தொண்டர் தாமும் அந்தணர் மொழி கேட்டு
திருந்திய மனைவியாரை தீண்டாமை செப்ப மாட்டார்
பொருந்திய வகையால் மூழ்கி தருகின்றேன் போதும் என்று
பெரு தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையை சார்ந்தார்
மனைவியார் தம்மை கொண்டு மறை சிவ யோகியார் முன்
சினவிடை பாகர் மேவும் திருப்புலீ சுரத்து முன்னர்
நனை மலர சோலை வாவி நண்ணி தம் உண்மை காப்பார்
புனை மணி வேணு தண்டின் இரு தலை பிடித்து புக்கார்
தண்டிரு தலையும் பற்றி புகும் அவர் தம்மை நோக்கி
வெண் திரு நீற்று முண்ட வேதியர் மாதை தீண்டி
கொண்டு உடன் மூழ்கீர் என்ன கூடாமை பாரோர் கேட்க
பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார்
வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவி யாரும்
மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்று
தேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு பொழியு தெய்வ
பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற
அந்நிலை அவரை காணும் அதிசயம் கண்டார் எல்லாம்
முன்நிலை நின்ற வேத முதல் வரை கண்டார் இல்லை
இந்நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார்
துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கொண்டார்
கண்டனர் கைகளார தொழுதனர் கலந்த காதல்
அண்டரும் ஏத்தினார்கள் அன்பர்தம் பெருமை நோக்கி
விண்டரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார் தம்மை
தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார்
மன்றுளே திரு கூத்து ஆடி அடியவர் மனைகள் தோறும்
சென்றவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர் தாமும்
வென்ற ஐம் புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்பால்
என்றும் இவ் இளமை நீங்காது என்று எழுந்து அருளினாரே
விறலுடை தொண்டனாரும் வெண்ணகை செவ்வாய் மென் தோள்
அறல் இயல் கூந்தல் ஆளாம் மனைவியும் அருளின் ஆர்ந்த
திறலுடை செய்கை செய்து சிவலோகம் அதனை எய்தி
பெறல் அரும் இளமை பெற்று பேர் இன்பம் உற்றார் அன்றே
அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த
மயலில் சீர தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்தி
புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய்யில்
செயல் இயற் பகையார் செய்த திரு தொண்டு செப்பல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
இயற்பகை நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
சென்னி வெண்குடை நீடு அநபாயன் திரு குலம் புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்து
பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி தன்னையும் புனித மாக்குவதோர்
நன்னெடும் பெரும் தீர்த்த முன்னுடைய நலம் சிறந்தது வளம் புகார் நகரம்
அ குல பதி குடி முதல் வணிகர் அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார்
செக்கர் வெண் பிறை சடையவர் அடிமை திறத்தின் மிக்கவர் மறை சிலம்படியார்
மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே
இ கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற் பகையார்
ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவிலாத ஓர் உளம் நிறை அருளால்
நீறு சேர் திரு மேனியார் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறு இலாத நன்னெறியினில் விளங்கும் மனை அறம் புரி மகிழ்ச்சியின் வந்த
பேறெலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே என பேணி வாழ் நாளில்
ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்துள் நின்று ஆடுவார் உம்பர்
நாயகிக்கும் அஃது அறியவோ பிரியா நங்கைதான் அறியாமையோ அறியோம்
தூய நீறு பொன் மேனியில் விளங்க தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய்
மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மாறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்
வந்து தண்புகார் வணிகர் தம் மறுகின் மருங்கு இயற் பகையார் மனை புகுந்த
எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால்
சிந்தை அன்பொடு சென்று எதிர் வணங்கி சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து
முந்தை எம் பெரும் தவத்தினாலென்கோ முனிவர் இங்கு எழுந்து அருளியது
என்றார்
என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அ கைதவ மறையோர்
கொன்ற வார்சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் என கொண்டே
ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும் பாலொன்று வேண்டி
இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார்
என்ன அவ்வுரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில்
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள் செயும் என்ன
மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அங்கணர் எதிரே
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரை செய்வார்
இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம் பிரான் செய்த பேறு
கதுமென சென்று தம் மனைவாழ் வாழ்க்கை கற்பின் மேம்படு காதலி யாரை
விதி மண குல மடந்தை இன்றுனை இம் மெ தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன
மது மலர குழலாள் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது
மொழிவார்
இன்று நீர் எனக்கு அருள் செய்தது இதுவேல் என உயிர்க்கு ஒரு நாத
உரைத்தது
ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று
தன் தனிப்பெருங் கணவரை வணங்க தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர் வணங்க
சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்
மாது தன்னை முன் கொடுத்த மாதவர் தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே
யாது நான் இனி செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர் தம் எதிர் நோக்கி
சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல் தன்னை யான் தனி கொடு போ
காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார்
என்று அவர் அருளி செய்ய யானே முன் செய் குற்றேவல்
ஒன்றியது தன்னை என்னை உடையவர் அருளி செய்ய
நின்றது பிழையாம் என்று நினைந்து வேறு இடத்து புக்கு
பொன் திகழ் அறுவை சாத்தி பூங்கச்சு பொலிய வீக்கி
வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர் வணங்கி மிக்க
ஆளரி ஏறு போல்வார் அவரை முன் போக்கி பின்னே
தோளிணை துணையே ஆக போயினார் துன்னினாரை
நீளிடை பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார்
மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார்
இனையது ஒன்றி யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால்
புனை இழை தன்னை கொண்டு போவதாம் ஒருவன் என்று
துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார்
வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க
காலென விசையில் சென்று கடிநகர் புறத்து போகி
பாலிரு மருங்கும் ஈண்டி பரந்த ஆர்வம் பொங்க
மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர் வளைத்து கொண்டார்
வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார்
கழி பெரும் காதல் காட்டி காரிகை உடன் போம் போதில்
அழிதகன் போகேல் ஈண்டவ் வருங் குல கொடியை விட்டு
பழிவிட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார்
மறை முனி அஞ்சினான் போல் மாதினை பார்க்க மாதும்
இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்ன
அறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லாம்
தறை இடை படுத்துகின்றேன் தளர்ந்து அருள் செய்யேல் என்று
பெரு விறல் ஆளி என்ன பிறங்கு எரி சிதற நோக்கி
பரிபவ பட்டு வந்த படர் பெருஞ் சுற்ற தாரை
ஒருவரும் எதிர் நில்லாமே ஓடி போ பிழையும் அன்றேல்
எரி சுடர் வாளில் கூறா துடிக்கின்றீர் என்று நேர்ந்தார்
ஏட நீ என் செய்தாயால் இத்திறம் இயம்பு கின்றாய்
நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்று
பாடவம் உரைப்பது உன்றன் மனைவியை பனவற்கு ஈந்தோ
கூடவே மடிவது அன்றி கொடுக்க யாம் ஓட்டோ ம் என்றார்
மற்றவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த
செற்ற முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி
முற்று நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றி கொண்டு
நற்றவர் தம்மை போக விடுவேன் என்று எழுந்தார் நல்லோர்
நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அ சுற்றத்தாரும்
சார்ந்தவர் தம் முன் செல்லார் தையலை கொண்டு பெற்றம்
ஊர்ந்தவர் படிமேற் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி
ஆர்ந்த வெஞ் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர் தடுத்தார் அன்றே
சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி
வன்றுணை வாளே யாக சாரிகை மாறி வந்து
துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து
வென்றடு புலியேறு அன்ன அமர் விளையாட்டில் மிக்கார்
மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள்
வேண்டிய திசைகள் தோறும் வேறு அமர் செய்
ஆண்டகை வீரர் தாமே அனைவர்க்கும் அனைவர் ஆகி
காண்டகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார்
சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள்
விரிந்தன தலைகள் எங்கும் மிடைந்தன கழுகும்
எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றி
திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர்
மாடலை குருதி பொங்க மடிந்த செங் களத்தின் நின்றும்
ஆடுறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார் தம்மில்
ஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார்
நீடிய வாளும் தாமும் நின்றவர் தாமே நின்றார்
திருவுடை மனைவியாரை கொடுத்து இடை செறுத்து முன்பு
வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி
அருமறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம்
பொருவருங் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார்
இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை
பொரு திறல் வீரர் பின்பு போக முன் போகும் போதில்
அருமறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவி
திரு மலி தோளினானை மீள் என செப்பினானே
தவ முனி தன்னை மீள சொன்ன பின் தலையால் ஆர
அவன் மலர பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று
புவனம் மூன்று உய்ய வந்த பூசுரன் தன்னை ஏத்தி
இவன் அருள் பெற பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார்
செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக
மை திகழ் கண்டன் எண்தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கி
பொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று
மெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல் உற்றான்
இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய்
அயர்ப்பு இலாதானே ஓலம் அன்பனே
செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான்
மயக்கறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான்
அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன்
பிழைத்தவர் உளரேல் இன்னும் பெருவலி தடக்கை வாளின்
இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்த
குழை பொலி காதினானும் மறைந்தனன் கோலம் கொள்வான்
சென்றவர் முனியை காணார் சேயிழை தன்னை கண்டார்
பொன்திகழ் குன்று வெள்ளி பொருப்பின் மேல் பொலிந்தது என்ன
தன்துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார்
நின்றிலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தினின்று எழுந்தார் நேர்ந்தார்
சொல்லுவது அறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி
வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி
எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கு அருள் செய்தாய் போற்றி
தில்லை அம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி என்ன
விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை
எண்ணிய உலகு தன்னில் இப்படி நம்பால் அன்பு
பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய்
நண்ணிய மனைவி யோடு நம்முடன் போதுக என்று
திருவளர் சிறப்பின் மிக்க திரு தொண்டர் தமக்கு தேற்றம்
மருவிய தெய்வ கற்பின் மனைவியார் தமக்கு தக்க
பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்த
பொரு விடை பாகர் மன்னும் பொற் பொது அதனுள் புக்கார்
வானவர் பூவின் மாரி பொழிய மா மறைகள் ஆர்ப்ப
ஞான மா முனிவர் போற்ற நல மிகு சிவலோகத்தில்
ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார்
ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார்
இன்புறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே
துன்புறாது உதவும் தொண்டர் பெருமையை தொழுது வாழ்த்தி
அன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடு
மன்புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
இளையான் குடி மாற நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார்
தம்பிரான் அடிமை திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற் குலம் செய் தவத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடி பதி மாறனார்
ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லதொர் செல்வமும்
நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்ததோர்
சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும்
பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார்
ஆரம் என்பு புனைந்த ஐயர் தம் அன்பர் என்பதோர் தன்மையால்
நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன்
கூர வந்து எதிர் கொண்டு கைகள் குவித்து நின்று செவி புலத்து
ஈரம் மென் மதுர பதம் பரிவு எய்த முன்னுரை செய்தபின்
கொண்டு வந்து மனை புகுந்து குலாவு பாதம் விளக்கியே
மண்டு காதலின் ஆதனத்து இடைவைத்து அருச்சனை செய்த பின்
உண்டி நாலு விதத்தில் ஆறு சுவை திறத்தினில் ஒப்பு இலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துளார்
ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு இலார் உளம் மகிழவே
நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின்
நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி எண்
தோளினார் அளகைக்கு இருத்திய தோழனார் என வாழும் நாள்
செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வது அன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள் தொறும் மாறி வந்து
ஒல்லையில் வறுமை பதம் புக உன்னினார் தில்லை மன்னினார்
இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான் குடி
மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும்
தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின்
முன்னை மாறில் திருப்பணி கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார்
மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயனான அ
கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினர்
பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாளுடன்
நற்றவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார்
மாரி காலத்து இரவினில் வைகியோர்
தாரிப்பு இன்றி பசி தலை கொள்வது
பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற
வேரித்து ஆரான் விருந்து எதிர் கொண்டனன்
ஈர மேனியை நீக்கி இடங் கொடுத்து
ஆர இன்னமுது ஊட்டுதற்கு ஆசையால்
தார மாதரை நோக்கி தபோதனர்
தீரவே பசித்தார் செய்வது என் என்று
நமக்கு முன்பு இங்கு உணவிலை ஆயினும்
இ குலக்கொடி பாகர்க்கு இனியவர்
தமக்கு நாம் இன் அடிசில் தகவுற
அமைக்கு மாறு எங்ஙனே அணங்கே என
மாது கூறுவாள் மற்று ஒன்றுங் காண்கிலேன்
ஏதிலாரும் இனி தருவார் இல்லை
போதும் வைகிற்று போம் இடம் வேறில்லை
தீது செய்வினை யேற்கு என் செயல்
செல்லல் நீங்க பகல் வித்திய செந்நெல்
மல்லல் நீர் முளை வாரி கொடு வந்தால்
வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று
அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வுற
மற்ற மாற்றம் மனைவியார் கூற முன்
பெற்ற செல்வம் என பெரிது உள் மகிழ்ந்து
உற்ற காதலினால் ஒரு பட்டனர்
சுற்று நீர் வயல் செல்ல தொடங்குவார்
பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து
அருகு நாப்பண் அறிவருங் கங்குல் தான்
கருகு மை இருளின் கணம் கட்டு விட்டு
உருகு கின்றது போன்றது உலகு எலாம்
எண்ணும் இவ் உலகத்தவர் யாவரும்
துண்ணெனும்படி தோன்ற முன் தோன்றிடில்
வண்ண நீடிய மைக்குழம்பாம் என்று
நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து
உள்ளம் அன்பு கொண்டு ஊக்கவோர் பேரிடா
கொள்ள முன் கவித்து குறியின் வழி
புள்ளும் உறங்கும் வயல் புக போயினார்
வள்ளலார் இளையான் குடி மாறனார்
காலினால் தடவி சென்று கைகளால்
சாலி வெண் முளை நீர் வழி சார்ந்தன
கோலி வாரி இடா நிறை கொண்டு
மேல் எடுத்து சுமந்து ஒல்லை மீண்டார்
வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கி
சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி
வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர்
அந்தமில் மனையில் நீடும் அலகினை அறுத்து வீழ்த்தார்
முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்து பதம் முன் கொள்ள
வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து
வெறுப்பில் இன் அடிசில் ஆக்கிமேம் படு கற்பின் மிக்கார்
கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினார் கணவனாரை
வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே
அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று
குழி நிரம்பாத புன்செ குறும்பயிர் தடவி பாச
பழி முதல் பறிப்பார் போல பறித்து அவை கறிக்கு நல்க
மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து
புனல் இடை கழுவி தக்க புனித பாத்திரத்து கைம்மை
வினையினால் வேறு கறி அமுது ஆக்கி
நினைவினால் குறையை நேர்ந்து திருவமுது அமைத்து நின்று
கணவனார் தம்மை நோக்கி கறி அமுது ஆன காட்டி
இணை இலாதாரை ஈண்ட அமுது செய்விப்போம் என்ன
உணவினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி
அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார்
அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்பால்
எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று
தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்து தோன்ற
செழு திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றார்
மாலயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆக
சாலவே மயங்குவார்க்கு சங்கரன் தான் மகிழ்ந்தே
ஏலவார் குழலாள் தன்னோடு இடப வாகனனாய் தோன்றி
சீலமார் பூசை செய்த திரு தொண்டர் தம்மை நோக்கி
அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும்
என் பெரும் உலகம் எய்தி இருநிதி கிழவன் தானே
முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப
இன்பம் ஆர்ந்து இருக்க என்றே செய்தான் எவர்க்கும் மிக்கான்
இப்பரிசு இவர்க்கு தக்க வகையினால் இன்பம் நல்கி
முப்புரம் செற்றார் அன்பர் முன்பு எழுந்து அருளி போனார்
அ பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு
மெ பொருள் சோதி வேந்தன் செயலினை விளம்பல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
மெ பொருள் நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
சேதி நன்னாட்டு நீடு திரு கோவலூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான்
வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து அறிந்து ஏவல் செய்வார்
அரசியல் நெறியின் வந்த அறநெறி வழாமல் காத்து
வரை நெடும்ந்தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி
உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மையினின் மிக்கார்
திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார்
மங்கையை பாகமாக உடையவர் மன்னும் கோயில்
எங்கணும் பூசை நீடி ஏழிசை பாடல் ஆடல்
பொங்கிய சிறப்பின் மல்க போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள் நாயகருக்கு அன்பர் தாளலால் சார்பு ஒன்று இல்லார்
தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று
நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங குறைவு அற கொடுத்து வந்தார்
இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும் ஆசையால் அமர் மேற்கொண்டு
பொன் அணி ஓடை யானை பொரு பரி காலாள் மற்றும்
பன் முறை இழந்து தோற்று பரிபவ பட்டு போனான்
இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான்
மெ பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும்
அப்பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆக
செப்பரு நிலைமை எண்ணி திரு கோவலூரில் சேர்வான்
மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்து கட்டி
கையினில் படை கரந்த புத்த கவளி ஏந்தி
மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து
பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன்
மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம் தோறும்
கோதை சூழ் அளக பார குழை கொடி ஆட மீது
சோதி வெண் கொடிகள் ஆடுஞ் சுடர் நெடு மறுகில் போகி
சேயதிர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான்
கடை உடை காவலாளர் கை தொழுது ஏற நின்றே
உடையவர் தாமே வந்தார் உள் எழுந்து அருளும் என்ன
தடை பல புக்க பின்பு தனி நின்ற
இடை தெரிந்து அருள வேண்டும் துயில் கொள்ளும் இறைவன் என்றான்
என்று அவன் கூற கேட்டே யான் அவற்கு உறுதி கூற
நின்றிடு நீயும் என்றே அவனையும் நீக்கி புக்கு
பொன் திகழ் பள்ளி கட்டில் புரவலன் துயில மாடே
மன்றலங் குழல் மென் சாயல் மா தேவி இருப்ப கண்டான்
கண்டு சென்று அணையும் போது கதும் என இழிந்து தேவி
வண்டலர் மாலையானை எழுப்பிட உணர்ந்து மன்னன்
அண்டர் நாயகனார் தொண்டராம் என குவித்த செங்கை
கொண்டு எழுந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று
மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன
இங்கு எழுந்து அருள பெற்றது என் கொலோ என்று கூற
உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்கும் இலாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான்
பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள் செய்த இந்த
மாறிலா ஆகமத்தை வாசித்து அருள வேண்டும் என்ன
நாறு பூங் கோதை மாது தவிரவே நானும் நீயும்
வேறு இடத்து இருக்க வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன்
திருமகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கி
பரிவுடன் விரைய அந்தப்புரத்திடை போக ஏவி
தரு தவ வேடத்தானை தவிசின் மேல் இருத்தி தாமும்
இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள் செய்யும் என்றான்
கை தலத்து இருந்த வஞ்ச கவளிகை மடி மேல் வைத்து
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்த அவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கி தான் முன் நினைத்த அ பரிசே செய்ய
மெ தவ வேடமே மெய்ப்பொருள் என தொழுது வென்றார்
மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன்
இறை பொழுதின் கண் கூடி வாளினால் எறியல் உற்றான்
நிறைத்த செங் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால்
தறை படும் அளவில் தத்தா நமர் என தடுத்து வீழ்ந்தார்
வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்க பட்ட
தாதனா தத்தன் தானும் தலையினால் வணங்கி தாங்கி
யாது நான் செய்கேன் என்ன எம்பிரான் அடியார் போக
மீதிடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார்
அ திறம் அறிந்தார் எல்லாம் அரசனை தீங்கு செய்த
பொ தவன் தன்னை கொல்வோம் என புடை சூழ்ந்த போது
தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான்
இ தவன் போக பெற்றது இறைவனது ஆணை என்றான்
அவ்வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகன்று நீங்க
செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து
கை வடி நெடுவாள் ஏந்தி ஆளுறா கானஞ் சேர
வெவ் வினை கொடியோன் தன்னை விட்ட பின் மீண்டு போந்தான்
மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல்
செற்றவர் தம்மை நீக்கி தீது இலா நெறியில் விட்ட
சொல் திறம் கேட்க வேண்டி சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான் கோமகன் குறிப்பில் நின்றான்
சென்று அடி வணங்கி நின்று செய் தவ வேடம் கொண்டு
வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன் என்று கூற
இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய வல்லார் என்று
நின்றவன் தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார்
அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும்
விரவிய செய்கை தன்னை விளம்புவார் விதியினாலே
பரவிய திரு நீற்று அன்பு பாது காத்து உய்ப்பீர் என்று
புரவலர் மன்றுள் ஆடும் பூங் கழல் சிந்தை செய்தார்
தொண்டனார்க்கு இ பாவை துணைவனார் அவர் முன் தம்மை
கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்தருளி மிக்க
அண்ட வானவர் கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேர
கொண்டவாறு இடை அறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார்
இன்னுயிர் செகு கண்டும் எம்பிரான் அன்பர் என்றே
நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை தன்னில்
என் உரை செய்தேன் ஆக இகல் விறன் மிண்டர் பொற் தாள்
சென்னி வைத்து அவர் முன் செய்த திரு தொண்டு செப்பல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
விறன்மிண்ட நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
விரை செய் நறும் பூ தொடை இதழி வேணியார் தம் கழல் பரவி
பரசுபெறு மா தவ முனிவன் பரசு ராமன் பெறு நாடு
திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும்
வரையின் வளனும் உடன் பெருகி மல்கு நாடு மலை
வாரி சொரியும் கதிர் முத்தும் வயல்மென் கரும்பில் படு
வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர்
மூரல் என சொல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும்
சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர்
என்னும் பெயரின் விளங்கி உலகேறும் பெருமை உடையது தான்
அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை
சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமை தலை நின்றார்
மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபிற் பெரியோர் வாழ் பதியாம்
அ பொன் பதியின் இடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார்
செப்பற்கு அரிய பெரும் சீர்த்தி சிவனார் செய்ய கழல் பற்றி
எ பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார்
மெ பத்தர்கள் பால் பரிவுடையார் எம்பிரானார் விறன் மிண்டர்
நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த
பதிகள் எங்கும் கும்பிட்டு படரும் காதல் வழி செல்வார்
முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திரு கூட்டத்து
எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழ பெற்றார்
பொன் தாழ் அருவி மலைநாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும்
சென்று ஆள் உடையார் அடியவர் தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி
வன் தாள் மேரு சிலை வளைத்து புரங்கள் செற்ற வைதிக தேர்
நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார்
திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியன் இடை பொலிந்து
மருவா நின்ற சிவனடியார் தம்மை தொழுது வந்து அணையாது
ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகென்று உரைப்ப சிவன் அருளால்
பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார்
சேண் ஆர் மேரு சிலை வளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம்
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரானாம் தன்மை பிறை சூடி
பூணார் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர் பால்
கோணா அருளை பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார்
ஞாலம் உய்ய நாம் நம்பி சைவ நன்
சீலம் உ திரு தொண்ட தொகை முன் பாட செழு மறைகள்
ஓலம் இடவும் உணர்வு அரியார் உடனாம் உளது என்றால்
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தாரார்
ஒக்க நெடு நாள் இவ் உலகில் உயர்ந்த சைவ பெரு தன்மை
தொக்க நிலைமை நெறி போற்றி தொண்டு பெற்ற விறன் மிண்டர்
தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல்ற்கீழ்
மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார்
வேறு பிரிதென் திரு தொண்ட தொகையால் உலகு விளங்க வரும்
பேறு தனக்கு காரணராம் பிரானார் விறன் மிண்டரின் பெருமை
கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேற் கொண்டே
ஆறை வணிகர் அமர் நீதி அன்பர் திரு தொண்டு அறைகுவாம்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
அமர் நீதி நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
சீரில் நீடிய செம்பியர் பொன்னி நன்னாட்டு
காரின் மேவிய களி அளி மலர பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழு மணிவீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை
மன்னும் அ பதி வணிகர் தம் குலத்தினில் வந்தார்
பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூந்துகில் முதலா
எ நிலத்தினும் உள்ளன வரு வளத்து இயல்பால்
அ நிலைக்கண் மிக்கவர் அமர் நீதியார் என்பார்
சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார்
அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்து
கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார்
முக்கண் நக்கராம் முதல்வனார் அவர் திரு நலூர்
மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கி
தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார்
தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர்
மருவும் அன்பொடு வணங்கினர் மணி கண்டர் நல்லூர
திரு விழா அணி சேவித்து மடத்து
பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணி
உருகு சிந்தையின் மகிழ்ந்து உறை நாள் இடை ஒருநாள்
பிறை தளிர் சடை பெருந்தகை பெரும் திரு நல்லூர
கறை களத்து இறை கோவண பெருமை முன் காட்டி
நிறைத்த அன்புடை தொண்டர்க்கு நீடருள் கொடுப்பான்
மறை குலத்தொரு பிரமசாரியின் வடிவு ஆகி
செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடி சிகையும்
சைவ வெண் திரு நீற்று முண்டகத்து ஒளி தழைப்பும்
மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கும் மான் தோலும்
கையில் மன்னிய பவித்திர மரகத கதிரும்
முஞ்சி நாணுற முடிந்தது சாத்திய அரையில்
தஞ்ச மா மறை கோவண ஆடையின் அசைவும்
வஞ்ச வல் வினை கறுப்பறும் மனத்து அடியார்கள்
நெஞ்சில் நீங்கிடா அடி மலர் நீணிலம் பொலிய
கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருக
தொண்டர் அன்பு எனும் தூ நெறி வெளி படுப்பார் ஆ
தண்டின் மீது திரு கோவணம் நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்து அமர் நீதியார் திரு மடம் குறுக
வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம் மலர்ந்து
கடிது வந்து எதிர் வணங்கி இம் மடத்தினில் காணும்
படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ
அடியனேன் செய்தது என்றனர் அமர்நீதி அன்பர்
பேணும் அன்பரை நோக்கி நீர் பெருகிய அடியார்க்கு
ஊணும் மேன்மையில் ஊட்டி நற் கந்தை கீள் உடைகள்
யாணர் வெண் கிழி கோவணம் ஈதல் கேட்டு உம்மை
காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன்
என்று தம்பிரான் அருள் செய இ திரு மடத்தே
நன்று நான் மறை நற்றவர் அமுது செய்து அருள
துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால்
இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச
வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே
அணங்கு நீர பொன்னி ஆடி நான் வர மழை வரினும்
உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும் என்று ஒரு வெண்
குணங் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்து கொடுப்பார்
ஓங்கு கோவண பெருமையை உள்ளவாறு உமக்கே
ஈங்கு நான் சொல்ல வேண்டுவது இல்லை நீர் இதனை
வாங்கி நான் வரும் அளவும் உம்மிடத்து இகழாதே
ஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார்
கொடுத்த கோவணம் கை கொண்டு கோது இலா அன்பர்
கடுப்பில் இங்கு எழுந்து அருளும் நீர் குளித்து என கங்கை
மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அம் மறையோர்
அடுத்த தெண்டிரை பொன்னி நீர் ஆட என்று அகன்றார்
தந்த கோவணம் வாங்கிய தனி பெரு தொண்டர்
முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும்
கந்தை கீள் உடை கோவணம் அன்றி ஓர் காப்பு
சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்தின் வைத்தார்
போன வேதியர் வைத்த கோவணத்தினை போக்கி
பானலந்துறை பொன்னி நீர் படிந்து வந்தாரோ
தூநறுஞ் சடை கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ
வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார்
கதிர் இளம் பிறை கண்ணியர் நண்ணிய பொழுதில்
முதிரும் அன்பு உடை தொண்டர் தாம் முறைமையின் முன்னே
அதிக நன்மையின் அறு சுவை திருவமுது ஆக்கி
எதிர் எழுந்து சென்று இறைஞ்சிட நிறைந்த நூல் மார்பர்
தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி
மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்ற
தண்டின் மேலதும் ஈரம் நான் தந்த கோவணத்தை
கொண்டு வாரும் என்று உரைத்தனர் கோவண கள்வர்
ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி
எய்தி நோக்குற கோவணம் இருந்த வேறு இடத்தில்
மை இல் சிந்தையர் கண்டிலர் வைத்த கோவணம் முன்
செய்தது என் என்று திகைத்தனர் தேடுவார் ஆனார்
பொங்கு வெண் கிழி கோவணம் போயின நெறி மேல்
சங்கை இன்றியே தப்பினது என்று தம் சரக்கில்
எங்கு நாடியும் கண்டிலர் என் செய்வார் நின்றார்
அங்கண் வேதியர் பெரும் தொடக்கினில் அக பட்டார்
மனைவி யாரொடு மன்னிய கிளைஞரும் தாமும்
இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்து
நினைவது ஒன்று இலர் வருந்தினர் நிற்கவும் மாட்டார்
புனைய வேறு ஒரு கோவணம் கொடு புறப்பட்டார்
அத்தர் முன்பு சென்று அடிகள் நீர் தந்த கோவணத்தை
வைத்த இடத்து நான் கண்டிலேன் மற்றும் ஓர் இடத்தில்
உய்த்து ஒளித்தனர் இல்லை அஃது ஒழிந்தவாறு அறியேன்
இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன் என்று
வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன்
கீறு கோவணம் அன்று நெய்தமைத்தது கிளர் கொள்
நீறு சாத்திய நெற்றியீர் மற்றுது களைந்து
மாறு சாத்தி என் பிழை பொறுப்பீர் என வணங்க
நின்ற வேதியர் வெகுண்டு அமர் நீதியார் நிலைமை
நன்று சாலவும் நாள் இடை கழிந்ததும் அன்றால்
இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறு
ஒன்று கொள்க என உரைப்பதே நீர்
நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும்
சொல்லும் விதத்தது என் கோவணம் கொள்வது துணிந்தோ
ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்று
எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான்
மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுள
பொறி கலங்கிய உணர்வினர் ஆய் முகம் புலர்ந்து
சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள் செய்வீர் அடியேன்
அறிய வந்தது ஒன்று என அடி பணிந்து அயர்வார்
செயத்தகும் பணி செய்வன் இ கோவணம் அன்றி
ந தகுந்தன நல்ல பட்டு ஆடைகள் மணிகள்
உயர்த்த கோடி கொண்டு அருளும் என்று உடம்பினில் அடங்கா
பயத்தொடுங்குலைந்து அடி மிசை பல முறை பணிந்தார்
பணியும் அன்பரை நோக்கி அ பரம் பொருளானார்
தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று நீர் தந்த
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய
அணியும் கோவணம் நேர் தர அமையும் என்றான்
மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார்
அலர்ந்த வெண்ணிற கோவணம் அதற்கு நேராக
இலங்கு பூ துகில் கொள்வதற்கு இசைந்து அருள் செய்யீர்
நலங் கொள் கோவணம் தரும் பரிசு யாதென நம்பர்
உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர்
கொடுத்ததாக முன் சொல்லும் அ கிழிந்த கோவணநேர்
அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழாது
எடுத்து மற்று இதன் எடையிடும் கோவணம் என்றார்
நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்ட
குன்ற வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார்
நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவண தட்டு
ஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார்
நாடும் அன்பொடு நாயன்மார களிக்க முன் வைத்த
நீடு கோவணம் அடைய நேராக ஒன்று ஒன்றா
கோடு தட்டின் மீது இட கொண்டு எழுந்தது கண்டு
ஆடு சேவடிக்கு அயரும் அற்புதம் எய்தி
உலகில் இல்லதோர் மாயை இ கோவணம் ஒன்றுக்கு
அலகில் கோவணம் ஒத்தில என்று அதிசயத்து
பலவும் மென் துகில் பட்டுடன் இட
இலகு பூந்துகிற் பொதிகளை எடுத்து மேல் இட்டார்
முட்டில் அன்பர் தம் அன்பிடு தட்டுக்கு முதல்வர்
மட்டு நின்ற தட்டு அருளொடு தாழ்வு உறும் வழக்கால்
பட்டொடும் துகில் அநேக கோடிகளிடும் பத்தர்
தட்டு மேற் பட தாழ்ந்தது கோவண
ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன்
தூ நறு துகில் வர்க்க நூல் வர்க்கமே முதலா
மானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால்
ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச
மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே
இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என் கொல்
அங்கு மற்று உங்கள் தனங்களினாகிலும் இடுவீர்
எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது என்றார்
நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ மணி திரளும்
பல் வகை திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும்
எல்லை இல் பொருள் சுமந்து அவர் இட இட கொண்டே
மல்கு தட்டு மீது எழுந்தது வியந்தனர் மண்ணோர்
தவம் நிறைந்த நான் மறை பொருள் நூல்களால் சமைந்த
சிவன் விரும்பிய கோவணம் இடும் செழுந்தட்டுக்கு
அவனி மேலமர் நீதியார் தனமெலாம் அன்றி
புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ
நிலைமை மற்றது நோக்கிய நிகர் இலார் நேர் நின்று
உலைவில் பஃறனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன்
தலைவ யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையில் ஏறிட பெறுவது உன் அருள் என தொழுதார்
பொச்சமில்ல அடிமை திறம் புரிந்தவர் எதிர்நின்று
அச்ச முன்புற உரைத்தலும் அங்கணர் அருளால்
நிச்சயித்தவர் நிலையினை துலை எனுஞ் சலத்தால்
இ சழக்கினின்று ஏற்றுவார் ஏறுதற்கு இசைந்தார்
மனம் மகிழ்ந்து அவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கி
புனை மலர குழல் மனைவியார் தம்மொடு புதல்வன்
தனை உடன் கொடு தனி துலை வலம் கொண்டு தகவால்
இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து
இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை
பிழைத்திலோம் எனில் பெருந்துலை நேர் நிற்க என்று
மழை தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கி
தழைத்த அஞ்செழுத்து ஓதினார் ஏறினார் தட்டில்
மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்து உடன் ஏற
அண்டர் தம்பிரான் திரு அரை கோவணம் அதுவும்
கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமை
தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அ துலைதான்
மதி விளங்கிய தொண்டர் தம் பெருமையை மண்ணோர்
துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர் தொழுதார்
கதிர் விசும்பு இடை கரந்திட நிரந்த கற்பகத்தின்
புதிய பூ மழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார்
அண்டர் பூ மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த
முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர
பண்டு தாம் பயில் கோலமே விசும்பினிற் பாகங்
கொண்ட பேதையும் தாமுமா காட்சி முன் கொடுத்தார்
தொழுது போற்றி அ துலை மிசை நின்று நேர் துதிக்கும்
வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும்
முழுதும் இன்னருள் பெற்று தம் முன் தொழுது இருக்கும்
அழிவில் வான் பதங் கொடுத்து எழுந்து அருளினார் ஐயர்
நாதர் தம் திரு அருளினால் நல் பெரு துலையே
மீது கொண்டெழு விமானம் அதுவாகி மேல் செல்ல
கோதில் அன்பரும் குடும்பமும் குறைவு அற கொடுத்த
ஆதி மூர்த்தியார் உடன் சிவ புரியினை அணைந்தார்
மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல்
பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் அவண பழமை காட்டி
உலகு உய்ய ஆண்டு கொள்ள பெற்றவர் பாதம் உன்னி
தலை மிசை வைத்து வாழும் தலைமை நம்
திருச்சிற்றம்பலம்
தில்லைவாழ் அந்தணர் சருக்கம் முற்றிற்று
சருக்கம் இரண்டுக்கு திருவிருத்தம்
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய
முதற் காண்டம் பன்னிரண்டாம் திருமுறை
சருக்கம் இலை மலிந்த
ன
சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
என்ற பெரிய புராணம் முதற் காண்டம்
இலை மலிந்த சருக்கம்
உள்ளுறை
எறி பத்த நாயனார் புராணம் மின்பதிப்பு
ஏனாதிநாத நாயனார் புராணம் மின்பதிப்பு
கண்ணப்ப நாயனார் புராணம் மின்பதிப்பு
குங்குலி கலய நாயனார் புராணம் மின்பதிப்பு
மானக்கஞ்சாற நாயனார் புராணம் மின்பதிப்பு
அரிவாட்டாய நாயனார் புராணம் மின்பதிப்பு
ஆனாய நாயனார் புராணம் மின்பதிப்பு
எறி பத்த நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
மல்லல் நீர் ஞால தன்னுள் மழவிடை உடையான் அன்பர்க்கு
ஒல்லை வந்து உற்ற செய்கை உற்று இடத்து உதவும் நீரார்
எல்லையில் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால்
சொல்லலாம் படித்து அன்றேனும் ஆசையால் சொல்லல் உற்றாம்
பொன் மலை புலி வென்று ஓங்க புதுமலை இடித்து போற்றும்
அ நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன்
மன்னிய அநபாயன் சீர் மரபின் மா நகரமாகும்
தொன் நெடுங் கருவூர் என்னுஞ்சுடர் மணி வீதி மூதூர்
மா மதில் மஞ்சு சூழும் மாளிகை நிரை விண்
தூ மணி வாயில் சூழும் சோலையில் வாசம்
தேமலர் அளகஞ் சூழும் சில மதி தெருவிற்
தாம் மகிழ்ந்து அமரர் சூழும் சதமகன் நகரம் தாழ
கட கரி துறையில் ஆடும் களி மயில் புறவில்
அடர் மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டு
படரொளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது
தடம் நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால்
மன்னிய சிறப்பின் மிக்க வள நகர் அதனில் மல்கும்
பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால்
துன்னிய அன்பின் மிக்க தொண்டர் தம் சிந்தை நீங்கா
அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில்
பொருட்டிரு மறை கடந்த புனிதரை இனிது அ கோயில்
மருட்டுறை மாற்றும் ஆற்றால் வழி படும் தொழிலர் ஆகி
இருட்கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு
அரு பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார்
மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க
அழலவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது
முழையரி என்ன தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும்
பழ மறை பரசும் தூய பரசு முன் எடுக்க பெற்றார்
அண்ணலார் நிகழும் நாளில் ஆனிலை அடிகளார்க்கு
திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும்
புண்ணிய முனிவனார் தாம் பூ பறித்து அலங்கல் சாத்தி
உண்ணிறை காதலோடும் ஒழுகுவார் ஒரு நாள் முன் போல்
வைகறை உணர்ந்து போந்து புனல் மூழ்கி வாயும் கட்டி
மெய்ம் மலர் நெருங்கு வாச நந்த வனத்து முன்னி
கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலை
தெய்வ நாயகருக்கு சாத்தும் திரு பள்ளி தாமம் கொய்து
கோல பூங் கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசம் கொண்டு மலர கையில் தண்டும்
ஆலயம் அதனை நோக்கி அங்கணர் அமைத்து சாத்தும்
காலை வந்து உதவ வேண்டி கடிதினில் வாரா நின்றார்
மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள் குல புகழ சோழனார் தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்ட வர்த்தனமாம் பண்பு
பெற்ற வெங் களிறு கோலம் பெருகு மா நவமி முன்னாள்
மங்கல விழைவு கொண்டு வரு நதி துறை நீராடி
பொங்கிய களிப்பினோடும் பொழி மதம் சொரிய நின்றார்
எங்கணும் இரியல் போக எதிர் பரி காரர் ஓட
துங்க மால் வரை போல் தோன்றி துண்ணென அணைந்தது அன்றே
வென்றிமால் யானை தன்னை மேல் கொண்ட பாகரோடும்
சென்று ஒரு தெருவின் முட்டி சிவகாமியார் முன் செல்ல
வன் தனி தண்டில் தூங்கும் மலர் கொள் பூ கூடை தன்னை
பின் தொடர்ந்து ஓடி சென்று பிடித்து முன் பறித்து சிந்த
மேல் கொண்ட பாகர் கண்டு விசை களிறு
கால் கொண்டு போவார் போல கடிது அகல
நூல் கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்து பொங்கி
மால் கொண்ட களிற்றின் பின்பு தண்டு கொண்டு அடிக்க வந்தார்
அப்பொழுது அணைய ஒட்டாது அடற் களிறு அகன்று போக
மெ பொருள் தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்ல மாட்டார்
தப்பினர் விழுந்து கையால் தரை அடித்து எழுந்து நின்று
செப்பு அரும் துயரம் நீடி செயிர்த்து முன் சிவதா என்பார்
களி யானையின் ஈர் உரியாய் சிவதா
எளியார் வலியாம் இறைவா சிவதா
அளியார் அடியார் அறிவே சிவதா
தெளிவார் அமுதே சிவதா
ஆறும் மதியும் அணியும் சடை மேல்
ஏறும் மலரை கரி சிந்துவதே
வேறுள் நினைவார் புரம் வெந்து அவி
சீறும் சிலையாய் சிவதா
தஞ்சே சரணம் புகுது தமியோர்
நெஞ்சேய் துயரம் கெட நேர் தொடரும்
மஞ்சே என வீழ் மறலிக்கு இறை நீள்
செஞ் சேவடியாய் சிவதா
நெடியோன் அறியா நெறியார் அறியும்
படியால் அடிமை பணி செய்து ஒழுகும்
அடியார்களில் யான் ஆரா அணைவாய்
முடியா முதலாய் எனவே மொழிய
என்று அவர் உரைத்த மாற்றம் எறி பத்தர் எதிரே வாரா
நின்றவர் கேளா மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி
மன்றவர் அடியார்க்கு என்றும் வழி பகை களிறே அன்றோ
கொன்று அது வீழ்ப்பன் என்று கொலை மழு எடுத்து வந்தார்
வந்தவர் அழைத்த தொண்டர் தமை கண்டு வணங்கி உம்மை
இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது என்ன
எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து மண் மேல்
சிந்தி முன் பிழைத்து போகா நின்றது இ தெருவே என்றார்
இங்கு அது பிழைப்பது எங்கே இனி என எரிவாய் சிந்தும்
அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெங்காலும் என்ன
பொங்கிய விசையில் சென்று பொரு கரி தொடர்ந்து பற்றும்
செங்கண் வாள் அரியிற் கூடி கிடைத்தனர் சீற்ற மிக்கார்
கண்டவர் இது முன்பு அண்ணல் உரித்த அ களிறே போலும்
அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்து சிந
துண்டித்து கொல்வேன் என்று சுடர் மழு வலத்தில் வீசி
கொண்டு எழுந்து ஆர்த்து சென்று காலினால் குலுங்க பாய்ந்தார்
பாய்தலும் மிசை கொண்டு உய்க்கும் பாகரை
காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேற் கதுவ அச்சம்
தாய் தலை அன்பின் முன் நிற்குமே தகைந்து பாய்ந்து
தோய் தனி தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர்
கையினை துணித்த போது கடல் என கதறி வீழ்ந்து
மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த
வெய்ய கோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர்
ஐவரை கொன்று நின்றார் அருவரை அனைய தோளார்
வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடி
மட்டு அவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கி
பட்ட வர்த்தனமும் பட்டு பாகரும் பட்டார் என்று
முட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார்
மற்று அவர் மொழிந்த மாற்றம் மணி கடை காப்போர் கேளா
கொற்றவன் தன்பால் எய்தி குரை கழல் பணிந்து போற்றி
பற்றலர் இலாதாய் நின் பொற் பட்டமால் யானை வீழ
செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர் என்றார்
வளவனும் கேட்ட போதில் மாறின்றி மண் காக்கின்ற
கிளர் மணி தோள் அலங்கல் சுரும்பு இனம் கிளர்ந்து பொங்க
அளவில் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான்
இள அரி ஏறு போல எழில் மணி வாயில் நீங்க
தந்திர தலைவர் தாமும் தலைவன் தன் நிலைமை கண்டு
வந்துற சேனை தன்னை வல் விரைந்து எழ முன் சாற்ற
அந்தரத்து அகலம் எல்லாம் அணி துகில் பதாகை தூர்ப்ப
எந்திர தேரும் மாவும் இடை களிறும்
வில்லொடு வேல் வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க
வல்லெழும் உசலம் நேமி மழு கழு கடை முன் ஆன
பல் படை கலன்கள் பற்றி பைங்கழல் வரிந்த வன் கண்
எல்லையில் படைஞர் கொட்புற்று எழுந்தனர் எங்கும்
சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி
பொங்கொலி சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க
தூரி துவைப்பும் முட்டுஞ் சுடர படை ஒலியும் மாவின்
தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடந்தேர சீரும்
வீரர் தஞ்செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லை
காருடன் கடைநாள் பொங்கும் கடல் என கலித்த அன்றே
பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம்
மண்ணிடை இறு கால் மேல் வந்து எழுந்தது போல்
தண்ணளி கவிகை மன்னன் தானை பின் தொடர தானோர்
அண்ணலம் புரவி மேற்கொண்டு அரச மா வீதி சென்றான்
கடு விசை முடுகி போகி களிற் றொடும் பாகர் வீழ்ந்த
படு களம் குறுக சென்றான் பகை புலத்து அவரை காணான்
விடு சுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தட கைத்தாய
அடு களிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான்
பொன் தவழ் அருவி குன்றம் என புரள் களிற்றின் முன்பு
நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளி
குன்றவர் அடியார் ஆனார் கொற்றவர் இவர் என்று ஓரான்
வென்றவர் இவர் யாவர் என்றான் வெடிபட முழங்கும் சொல்லான்
அரசன் ஆங்கு அருளி செய்ய அருகு சென்று அணைந்து பாகர்
விரை செய்தார் மாலையோய் நின் விறற் களிற்று எதிரே நிற்கும்
திரை செய் நீர் உலகின் மன்னர் யாருளார் தீங்கு செய்தார்
பரசு முன் கொண்டு நின்ற இவர் என பணிந்து சொன்னார்
குழையணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார்
பிழை படின் அன்றி கொல்லார் பிழைத்தது உண்டு என்று உட்கொண்டு
மழை மத யானை சேனை வரவினை மாற்றி மற்ற
உழை வ புரவி மேல் நின்று இழிந்தனன் உலக மன்னன்
மை தடம் குன்று போலும் மத களிற்று எதிரே இந்த
மெய்த்தவர் சென்ற போது வேறு ஒன்றும் புகுதா விட்ட
அ தவம் உடையேன் ஆனேன் அம்பல வாணர் அன்பர்
இத்தனை முனி கெட்டேன் என் கொலோ பிழை என்று அஞ்சி
செறிந்தவர் தம்மை நீக்கி அன்பர் முன் தொழுது சென்று ஈது
அறிந்திலேன் அடியேன் அங்கு கேட்டது ஒன்று அதுதான் நிற்க
மறிந்த இ களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள
எறிந்ததே போதுமோதான் அருள் செய்யும் என்று நின்றார்
மன்னவன் தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர்
சென்னி இ துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து
பன்னக ஆபரணர் சாத்த கொடுவரும் பள்ளி தாமம்
தன்னை முன் பறித்து சிந தரை பட துணித்து வீழ்த்தேன்
மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர் தாமும்
மீதங்கு கடாவுவாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார்
ஈதங்கு நிகழ்ந்தது என்றார் எறி பத்தர் என்ன அஞ்சி
பாதங்கள் முறையால் தாழ்ந்து பருவரை தடந்தோள் மன்னன்
அங்கணர் அடியார் தம்மை செய்த இவ் அபராதத்துக்கு
இங்கு இது தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும்
மங்கல மழுவால் கொல்கை வழக்கும் அன்று இதுவாம் என்று
செங்கையால் உடைவாள் வாங்கி கொடுத்தனர் தீர்வு நேர்வார்
வெந்தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக கெட்டேன்
அந்தமில் புகழான் அன்புக்கு அளவின்மை கண்டேன் என்று
தந்த வாள் வாங்க மாட்டார் தன்னை தான் துறக்கும் என்று
சிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார்
வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே
ஈங்கு எனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்க வேண்டி
ஓங்கிய உதவி செ பெற்றனன் இவர் பால் என்றே
ஆங்கு அவர் உவப்ப கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி
வன் பெருங் களிறு பாகர் மடியவும் உடை வாளை தந்து
என் பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும் என்னும்
அன்பனார் தமக்கு தீங்கு நினைந்தனன் என்று கொண்டு
முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு என்று எண்ணி
புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டி
அரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை
இருந்தவாறு என் கெட்டேன் என்று எதிர் கடிதிற் சென்று
பெருந்தட தோளால் கூடி பிடித்தனன் வாளும் கையும்
வளவனார் விடாது பற்ற மாதவர் வருந்து கின்ற
அளவு இலா பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டி
கள மணி களத்து செய்ய கண்ணுதல் அருளால் வாக்கு
கிளர் ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப
தொழும் தகை அன்பின் மிக்கீர் தொண்டினை மண் மேற்காட்ட
செழு திருமலரை இன்று சினக்கரி சிந திங்கள்
கொழுந்து அணி வேணி கூத்தர் அருளினால் கூடிற்று என்று அங்கு
எழுந்தது பாகரோடும் யானையும்
ஈரவே பூட்டும் வாள் விட்டு எறிபத்தர் தாமும் அந்த
நேரியர் பெருமான் தாள் மேல் விழுந்தனர் நிருபர் கோனும்
போர் வடி வாளை போக எறிந்து அவர் கழல்கள் போற்றி
பார்மிசை பணிந்தான் விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார்
இருவரும் எழுந்து வானில் எழுந்த பேரொலியை போற்ற
அருமறை பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை தன்னில்
மருவிய பள்ளி தாமம் நிறைந்திட அருள மற்று அ
திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார்
மட்டவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர்
உட்டரு களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்து
முட்ட வெங்கடங்கள் பாய்ந்து முகில் என முழங்கி பொங்கும்
பட்ட வர்த்தனத்தை கொண்டு பாகரும் அணைய வந்தார்
ஆன சீர தொண்டர் கும்பிட்டு அடியனேன் களிப்ப இந்த
மான வெங் களிற்றில் ஏறி மகிழ்ந்து எழுந்து அருளும் என்ன
மேன்மை பணி மேற் கொண்டு வணங்கி வெண் குடையின் நீழல்
யானை மேற் கொண்டு சென்றார் இவுளிமேற்
அந்நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழும் ஒன்றாய்
மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்த
பொன்னெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொற்றாள்
சென்னியிற் கொண்டு சென்னி திருவளர் கோயில் புக்கான்
தம்பிரான் பணிமேற் கொண்டு சிவகாமியாரும் சார
எம்பிரான் அன்பரான எறிபத்தர் தாமும் என்னே
அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார் என்று
செம்பியன் பெருமை உன்னி திருப்பணி நோக்கி சென்றார்
மற்றவர் இனையவான வன்பெரும் தொண்டு மண்மேல்
உற்றிடத்து அடியார் முன் சென்று உதவியே நாளும்
நல்தவ கொள்கை தாங்கி நலமிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம் கோ முதல் தலைமை பெற்றார்
ஆளுடை தொண்டர் செய்த ஆண்மையும் தம்மை கொல்ல
வாளினை கொடுத்து நின்ற வளவனார் பெருமை தானும்
நாளும் மற்றவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கிலன்றி
நீளும் இ தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார்
தேனாரும் தண் பூங் கொன்றை செஞ்சடையவர் பொற்றாளில்
ஆனாத காதல் அன்பர் எறிபத்தர் அடிகள் சூடி
வானாளும் தேவர் போற்றும் மன்றுளார் நீறு
ஏனாதி நாதர் செய்த திரு தொழில் இயம்பலுற்றேன்
திருச்சிற்றம்பலம்
ஏனாதிநாத நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றி புவி அளிக்கும்
தண்டரள வெண்கவிகை தார் வளவர் சோணாட்டில்
வண்டறை பூஞ் சோலை வயல் மரு தண் பணை சூழ்ந்து
எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினனூர்
வேழ கரும்பினோடு மென் கரும்பு தண்வயலில்
தாழ கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மையதாய்
வாழ குடி தழைத்து மன்னிய அ பொற் பதியில்
ஈழ குல சான்றார் ஏனாதி நாதனார்
தொன்மை திரு நீற்று தொண்டின் வழிபாட்டின்
நன்மை கண் நின்ற நலம் என்றும் குன்றாதார்
மன்னர்க்கு வென்றி வடிவா படை பயிற்றும்
தன்மை தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார்
வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம்
நாளும் பெரு விருப்பால் நண்ணுங் கட பாட்டில்
தாளும் தட முடியும் காணாதார் தம்மையு தொண்டு
ஆளும் பெருமான் அடி தொண்டர்க்கு ஆக்குவார்
நள்ளர்களும் போற்றும் நன்மை துறையின் கண்
எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள்
தள்ளாத தங்கள் தொழில் உரிமை தாயத்தின்
உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான்
மற்ற அவனும் கொற்ற வடிவா படை தொழில்கள்
கற்றவர்கள் தன்னில் கடந்துள்ளார் இல்லை எனும்
பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்து
உற்றுலகில் தன்னையே சால மதித்து உள்ளான்
தானாள் விருத்தி கெட தங்கள் குல தாயத்தின்
ஆனாத செய் தொழிலாம் ஆசிரி தன்மை வளம்
மேனாளும் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால்
ஏனாதி நாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான்
கதிரோன் எழ மழுங்கி கால்சாயுங்காலை
மதி போல் அழிந்து பொறா மற்றவனுஞ் சுற்ற
பதியோர் உடன் கூட பண்ணி அமர் மேல் சென்று
எதிர் போர் விளைப்பதற்கே எண்ணி துணிந்து எழுந்தான்
தோள் கொண்ட வல் ஆண்மை சுற்றத்தொடும் துணையாம்
கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடுஞ் சென்று
வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என
மூள்கின்ற செற்றத்தான் முன் கடையில் நின்று அழைத்தான்
வெங்க புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும்
பைங்கண் குறுநரியே போல்வான் படை கொண்டு
பொங்கி புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே
அங்க கடை நின்று அழைத்தான் ஒலி கேளா
ஆர் கொல் பொர அழைத்தார் என்றரி ஏற்றின் கிளர்ந்து
சேர்வு பெற கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவா பலகைகொடு
போர் முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார்
புறப்பட்ட போதின் க போர தொழில்கள் கற்கும்
விறல் பெருஞ் சீர காளையர்கள் வேறு இடத்து நின்றார்
மற படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து
செறற்கரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள்
வந்தழைத்த மாற்றான் வ புலி போத்து அன்னார் முன்
நம் தமது வாள் பயிற்று நற்றாயம் கொள்ளுங்கால்
இந்த வெளி மேற்கை வகுத்து இருவேம் பொரு படையும்
சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வதென்
என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதி நாதர் அது
நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து
சென்றவன் முன் சொன்ன செரு களத்து போர் குறிப்ப
கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார்
மேக ஒழுங்குகள் முன் கொடு மின்னிரை தம்மிடையே
மாக மருங்கினும் மண்ணினும் வல்லுரு மேல் எதிர் செல்வன
வாக நெடும் பல கைக்குல மாள் வினை வாளுடை ஆடவர்
காக மிடைந்த களத்திரு கைகளின் வந்து கலந்தனர்
கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய
வாளொளி வட்ட முளைத்திட வந்து இரு கைகளின் முந்தினர்
வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டுயர்
ஞாலமுறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன
வெங்கண் விறற் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர்
தங்கள் சிலைக்குலம் உந்தின தாவில் சரங்கள் நெருங்குவ
பொங்கு சினத்து எரியிற் புகை போகு கொடிக்கள் வளைத்து எதிர்
செங்கண் விழி கனல் சிந்திய சீறு பொறி செலவு ஒத்தன
வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன
தோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன
தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன
நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில்
குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன
பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின
வெருவர எருவை நெருங்கின வீசியறு துடிகள் புரண்டன
இரு படை தனினும் எதிர்ந்தவர் எதிர் அமர் செய்
நீள் இடை முடுகி நடந்து எதிர் நேர் இருவரில் ஒரு வன்றொடர்
தாளிரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன்
வாளொடு விழுடல் வென்றவன் மார்பிடை அறமுன் எறிந்திட
ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும்
கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன்
நேருரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர்
ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை
போரடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவிலர் பட்டனர்
பொற்சிலை வளைய எதிர்ந்தவர் புற்றரவு அனைய சரம்பட
விற்படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர்
முற்றிய பெருவளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட
உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டகர்
அடல்முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிருள வென்றுறு
படர் சிறை சுலவு கருங்கொடி படர்வன சுழல்வன துன்றலில்
விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி
புடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன
திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர்
புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு
கொண்டெழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர்
விண்படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர்
இம் முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர்
வெம் முனையில் வீடியபின் வீடாது மிக்கு ஒழிந்த
தம்முடைய பல் படைஞர் பின்னாக தாம் முன்பு
தெம்முனையில் ஏனாதி நாதர் செயிர்த்து எழுந்தார்
வெஞ்சினவாள் தீ உமிழ வீர கழல் கலிப்ப
நஞ்சணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின் கண்
எஞ்சி எதிர் நின்ற இகல் முனையில் வேலுழவர்
தஞ்சிரமும் தோளுரமும் தாளுரமும் தாந்துணித்தார்
தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில்
கொலை பட்டார் முட்டாதார் கொல் களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய் உணர்வு நேர் பட்ட போதில்
அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம் போல் ஆயினார்
இ நிலைய வெங்களத்தில் ஏற்றழிந்த மானத்தால்
தன்னுடைய பல் படைஞர் மீண்டார் தமை கொண்டு
மின்னொளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி யேறு
அன்னவர் தம் முன் சென்று அதி சூரன் நேர் அடர்ந்தான்
மற்றவர் தம் செய்கை வடி வாள் ஒளி காண
சுற்றி வரும் வட்ட அணையில் தோன்றா வகை கலந்து
பற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்து
பொற்றட தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான்
போன அதிசூரன் போரில் அவர கழிந்த
மான மிக மீதூர மண் படுவான் கண் படான்
ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே
ஈன மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான்
கேட்டாரும் கங்குல் புலர்காலை தீயோனும்
நாட்டாரை கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்து
வாட்டாயங் கொள் போர் மலைக்க வருக என
தோட்டார் பூந்தாரார்க்கு சொல்லி செலவிட்டான்
இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார்
அவ்வாறு செய்தல் அழகிதென அமைந்து
கை வாள் அமர் விளைக்க தான் கருதும் அ களத்தில்
வெவ்வாள் உரவோன் வருக என மேற் கொள்வார்
சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள்
பொற் பலகையும் தாமே கொண்டு புறம் போந்து
மற்றவன் முன் சொல்லி வரக்குறித்தே அ களத்தே
பற்றலனை முன் வரவு பார்த்து தனி நின்றார்
தீங்கு குறித்து அழைத்த தீயோன் திரு நீறு
தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும்
ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானா
பாங்கில் திரு நீறு பண்டு பயிலாதான்
வெண்ணீறு நெற்றி விரவ புறம் பூசி
உள் நெஞ்சில் வஞ்ச கறுப்பும் உடன் கொண்டு
வண்ண சுடர் வாள் மணி பலகை கை கொண்டு
புண்ணி போர் வீரர்க்கு சொன்ன இடம் புகுந்தான்
வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்து
நின்றாற் போல் நின்ற நிலை கண்டு தன் நெற்றி
சென்று கிடப்பளவு திண் பலகையான் மறைத்தே
முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான்
அடல் விடையேறு என்ன அடத்தவனை கொல்லும்
இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதி நாதர்
புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போ
கடையவன் தன் நெற்றியின் மேல் வெண்ணீறு தாம் கண்டார்
கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத
வெண் திரு நீற்றின் பொலிவு மேற்கண்டேன் வேறு இனி என்
அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம்
கொண்டு இவர் தம் கொள்கை குறி வழி நிற்பேன் என்று
கை வாளுடன் பலகை நீ கருதியது
செய்யார் நிராயுதரை கொன்றார் எனும் தீமை
எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை
நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார்
அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார்
முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான்
இ நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள
மின்னின்ற செஞ்சடையார் தாமே வெளி நின்றார்
மற்றினி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளை
பற்றலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி
உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளி
பொற்றொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார்
தம் பெருமான் சாத்தும் திரு நீற்று சார்புடைய
எம் பெருமான் ஏனாதி நாதர் கழல் இறைஞ்சி
உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்கு கண்ணப்பும்
நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம்
திருச்சிற்றம்பலம்
கண்ணப்ப நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
மேலவர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மை
காவலர் திரு காளத்தி கண்ணப்பர் திரு நாடு என்பர்
நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற
பூவலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு
இ திரு நாடு தன்னில் இவர் திரு பதியாதென்னில்
நித்தில அருவி சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர்
மத்த வெம் களிற்று கோட்டு வன் தொடர் வேலி கோலி
ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும்
குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ் செவி ஞமலி யாத்த
வன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்க
பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும்
வன் புலி குருளையோடும் வ கரி கன்றினோடும்
புன்றலை சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி
அன்புறு காதல் கூற அணையும் மான் பிணைகளோடும்
இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும்
வெல் படை தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்து குழுமிய ஓசை அன்றி
சில்லரி துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்
ஆறலைத்து உண்ணும் வேடர் அயற் புலங் கவர்ந்து கொண்ட
வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி
ஏறுடை வானம் தன்னில் இடி குரல் எழிலி யோடு
மாறுகொள் முழக்கங் காட்டும் மதக்கை மாநிரைகள் எங்கும்
மை செறிந்தனைய மேனி வன் தொழில் மறவர் தம்பால்
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார்
பொச்சை யின் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும்
நச்சழற்பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான்
பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலை நின்றுள்ளான்
வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான்
மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள்
அரும் பெறல் மறவர் தாயத்தான்ற தொல் குடியில் வந்தாள்
இரும் புலி எயிற்று தாலி இடை மனவு
பெரும் புறம் அலை பூண்டான் பீலியும் குழையும் தட்ட
சுரும்புறு படலை முச்சி சூர் அரி பிணவு போல்வான்
பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனி புதல்வர் பேறே
அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே
முருகலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று
பரவுதல் செய்து நாளும் பரா கடன் நெறியில் நிற்பார்
வாரண சேவலோடும் வரிமயிற் குலங்கள் விட்டு
தோரண மணிகள் தூக்கி சுரும்பணி கதம்பம் நாற்றி
போரணி நெடுவேலோற்கு புகழ்புரி குரவை தூங்க
பேரணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை
பயில் வடு பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற்கு
எயிலுடை புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன
மயிலுடை கொற்ற ஊர்தி வரையுரங் கிழித்த திண்மை
அயிலுடை தடக்கை வென்றி அண்ணலார் அருளினாலே
கானவர் குலம் விளங்க தத்தைபால் கருப்பம் நீட
ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறி ஆட்டோ டும்
ஆன அ திங்கள் செல்ல அளவில் செய் தவத்தினாலே
பான்மதி உவரி ஈன்றால் என மக பயந்த போது
கரிப்பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர்
பொருப்பின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி
வரி சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும்
அரிக்குறு துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த
அருவரை குறவர் தங்கள் அகன் குடி சீறூர் ஆயம்
பெரு விழா எடுத்து மிக்க பெருங்களி கூறும் காலை
கருவரை காள மேகம் ஏந்தியது என்ன தாதை
பொருவரை தோள்களார புதல்வனை எடுத்து கொண்டான்
கருங் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி தானும்
இரும்புலி பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி
அரும் பெறல் உலகமெல்லாம் அளப்பரும் பெருமை காட்டி
தருங்குறி பலவும் சாற்றும் தன்மையிற் பொலிந்து தோன்ற
அண்ணலை கையில் ஏந்தற்கு அருமையால் உரிமை பேரும்
திண்ணன் என்றியம்பும் என்ன திண்சிலை வேடர் ஆர்த்தார்
புண்ணி பொருளாய் உள்ள பொருவில் சீர் உருவினானை
கண்ணினுக்கு அணியா தங்கள் கலன்பல அணிந்தார் அன்றே
வரையுறை கடவு காப்பு மறகுடி மரபில் தங்கள்
புரையில் தொல் முறைமைக்கு ஏற பொருந்துவ போற்றி செய்து
விரையிள தளிருஞ் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த
அரை மணி கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில்
வருமுறை பருவம் தோறும் வளமிகு சிறப்பில் தெய்வ
பெருமடை கொடுத்து தொக்க பெருவிறல் வேடர்க்கெல்லாம்
திருமலி துழனி பொங்க செழுங்களி மகிழ்ச்சி செய்தே
அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார்
ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடி தளர்வு நீங்கி
பூண் திகழ் சிறு புன் குஞ்சி புலியுகிர சுட்டி சாத்தி
மூண்டெழு சினத்து செங்கண் முளவு முள் அரிந்து கோத்த
நாண்டரும் எயிற்று தாலி நலங்கிளர் மார்பில் தூங்க
பாசொளி மணியோடு ஆர்த்த பன் மணி சதங்கை ஏங்க
காசொடு தொடுத்த காப்பு கலன் புனை அரைஞாண் சேர்த்தி
தேசுடை மருப்பில் தண்டை செறிமணி குதம்பை மின்ன
மாசறு கோலம் காட்டி மறுகிடை ஆடும் நாளில்
தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து
புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய்
உண்ணனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலை தீஞ் சொல்
வண்ண மென் பவள செவ்வாய் குதட்டியே வளரா நின்றார்
பொரு புலி பார்வை பேழ்வாய் முழை என பொற்கை நீட்ட
பரிஉடை தந்தை கண்டு பைந்தழை கை கொண்டோ ச்ச
இரு சுடர குறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி
வருதுளி முத்தம் அத்தாய் வாய் கொள்ள
துடி குறடு உருட்டி ஓடி தொடக்கு நா பாசம் சுற்றி
பிடித்து அறுத்து எயின பிள்ளை பேதையர் இழைத்த வண்டல்
அடி சிறு தளிரால் சிந்தி அருகுறு சிறுவரோடும்
குடி செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து
அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின்
வனை தரு வடிவார் கண்ணி மற சிறு மைந்த ரோடும்
சினை மலர காவுகள் ஆடி செறிகுடி குறிச்சி சூழ்ந்த
புனை மரு புழலை வேலி புறச்சிறு கானிற் போகி
கடு முயல் பறழினோடுங் கான ஏனத்தின் குட்டி
கொடு வரி குருளை செந்நாய் கொடுஞ் செவி சாபம் ஆன
முடுகிய விசையில் ஓடி தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து
இடு மர திரளில் கட்டி வளப்பன எண்ணிலாத
அலர் பகல் கழிந்த அந்தி ஐயவி புகையும் ஆட்டி
குலமுது குறத்தி ஊட்டி கொண்டு கண் துயிற்றி கங்குல்
புலர ஊன் உணவு நல்கி புரி விளையாட்டின் விட்டு
சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார்
தந்தையும் மைந்தனாரை நோக்கி தன் தடித்த தோளால்
சிந்தை உள் மகிழ புல்லி சிலை தொழில் பயிற்ற வேண்டி
முந்தை அ துறையில் மிக்க முதியரை அழைத்து கூட்டி
வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்கு சொல்லி விட்டான்
வேடர் தம் கோமான் நாதன் வென்றி வேள் அருளால் பெற்ற
சேடரின் மிக்க செய்கை திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று
ஆடியல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு
மாடுயர் மலைகள் ஆளும் மற குல தலைவர் எல்லாம்
மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும்
கொலை புரி களிற்று கோடும் பீலியின் குவையும் தேனும்
தொலைவில் பல் நறவும் ஊனும் பலங்களும் கிழங்கும் துன்ற
சிலை பயில் வேடர் கொண்டு திசை தொறும் நெருங்க வந்தார்
மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறில் சீறூர்
எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தா எங்கும்
பல்பெருங் கிளைஞர் போற்ற பரா கடன் பலவும் செய்து
வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன்
பான்மையில் சமைத்து கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்த
தேனலர் கொன்றையார் தம் திருச்சிலை செம்பொன் மேரு
வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும்
கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினை காப்பு செய்தார்
சிலையினை காப்பு கட்டும் திண் புலி நரம்பில் செய்த
நலமிகு காப்பு நன்னாண் நாகனார் பயந்த நாகர்
குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி
மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள்
ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புற்பாற் சொன்றி
மெய் வரை தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும்
கைவினை எயினர் ஆக்கி கலந்த ஊன் கிழங்கு துன்ற
செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சினவில் வேடர்
செம் தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து
வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனி கவளம் கொள்வார்
நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார் வெவ்வேறு
அந்தமில் உணவின் மேலோர் ஆயினர் அளவிலார்கள்
அயல் வரை புலத்தின் வந்தார் அருங்குடி இருப்பின் உள்ளார்
இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம்
உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவில் பல் நறவு மாந்தி
மயலுறு களிப்பின் நீடி வரிசிலை விழவு கொள்வார்
பாசிலை படலை சுற்றி பன் மலர தொடையல் சூடி
காசுடை வட தோல் கட்டி கவடி மெ கலன்கள் பூண்டார்
மாசில் சீர் வெட்சி முன்னா வருதுறை கண்ணி சூடி
ஆசில் ஆசிரியன் ஏந்தும் அடற் சிலை மருங்கு சூழ்ந்தார்
தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும்
எண்டிசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும்
திண்டிறல் மறவர் ஆர்ப்பு சேண் விசும்பு இடித்து செல்ல
கொண்ட சீர் விழவு பொங குறிச்சியை வலம் கொண்டார்கள்
குன்றவர் களி கொண்டாட கொடிச்சியர் துணங்கை ஆட
துன்றிய மகிழ்ச்சியோடும் சூர் அரமகளிர் ஆட
வென்றி வில் விழவினோடும் விருப்புடை ஏழாம் நாளாம்
அன்றிரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர்
வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும்
மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்ப
தங்கள் தொல் மரபின் விஞ்சை தனு தொழில் வலவர் தம்பால்
பொங்கொளி கரும் போர் ஏற்றை பொருசிலை பிடிப்பித்தார்கள்
பொற்றட வரையின் பாங்கர புரிவுறு கடன் முன் செய்த
வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும்
அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்ற
கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம்
வண்ணவெஞ் சிலையும் மற்ற படைகளும் மலர கற்று
கண்ணகல் சாயல் பொங கலை வளர் திங்களே போல்
எண்ணிரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லா
புண்ணியம் தோன்றி மேல் வளர் அதன் பொலிவு
இவ் வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில்
இருங் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய
மை வண்ண வரை நெடு தோள் நாகன் தானும் மலை எங்கும்
வனம் எங்கும் வரம்பில் காலம்
கை வண்ண சிலை வேட்டை ஆடி தெவ்வர் கண
நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து
மெய் வண்ணந்தளர் மூப்பின் பருவம் எய்தி வில்லுழவின்
பெரு முயற்சி மெலிவன் ஆனான்
அங்கண் மலை தடஞ்சாரல் புனங்கள் எங்கும்
அடலேனம் புலி கரடி கடமை ஆமா
வெங் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள்
மிக நெருங்கி மீதூர் காலை
திங்கள் முறை வேட்டை வினை தாழ்தது என்று சிலை
வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று
தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல்
நாகன் பால் சார்ந்து சொன்னார்
சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும் சூழ்ந்து
வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி
முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல்
வேட்டையினில் முயல கில்லேன்
என் மகனை உங்களுக்கு நாதனாக எல்லீரும் கை
கொண்மின் என்ற போதின்
அன்னவரும் இரங்கி பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி
இம் மாற்றம் அரைகின்றார்கள்
இத்தனை காலமும் நினது சிலை கீழ் தங்கி இனிது
உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும்
அத்த நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி
வேறு உளதோ அதுவே அன்றி
மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம் படவே
பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை
ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர்
சிலை மறவர் உரை செய்ய நாகன் தானும் திண்ணனை
முன் கொண்டுவர செப்பி விட்டு
மலை மருவு நெடும் கானில் கன்னி வேட்டை மகன் போ
காடு பலி மகிழ்வு ஊட்ட
தலை மரபின் வழி வந்த தேவராட்டிதனை அழைமின் என
அங்கு சார்ந்தோர் சென்று
நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து
விருப்பினோடும் கடிது வந்தாள்
கானில் வரித்தளிர் துதைந்த கண்ணி சூடி கலை
மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து
மானின் வயிற்று அரிதார திலகம் இட்டு மயில் கழுத்து
மனவு மணி வடமும் பூண்டு
தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழ தாழைப்பீலி
மரவுரி மேல் சார எய்தி
பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கி போர் வேடர்
கோமானை போற்றி நின்றாள்
நின்ற முதுகுறக்கோல படிமத்தாளை நேர் நோக்கி
அன்னை நீ நிரப்பு நீங்கி
நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன்
எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல
மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை
வளனும் வேண்டிற்று எல்லாம்
அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி
என் என்றாள் அணங்கு சார்ந்தாள்
கோட்டமில் என்குல மைந்தன் திண்ணன் எங்கள்
குல தலைமை யான் கொடுப்பக்கொண்டு பூண்டு
பூட்டுறு வெஞ் சிலை வேடர் தம்மை காக்கும் பொருப்புரிமை
புகுகின்றான் அவனுக்கு என்றும்
வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு
புலங் கவர் வென்றி மேவு மாறு
காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ண காடு பலி
ஊட்டு என்றான் கவலை இல்லான்
மற்று அவன்தன் மொழி கேட்ட வரை சூராட்டி மனமகிழ்ந்து
இங்கு அன்போடு வருகின்றேனுக்கு
எற்றையினுங் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன்
மைந்தன் திண்ணனான வெற்றி வரி
சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான்
என்று விரும்பி வாழ்த்தி
கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன
குறைவின்றி கொண்டு போனாள்
தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார்
சிலை தாதை அழைப்ப சீர்கொள்
மைவிரவு நறுங் குஞ்சி வாச கண்ணி மணி நீல
ஒன்று வந்தது என்ன
கைவிரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி
தாதை கழல் வணங்கும் போதில்
செய்வரை போல் புயம் இரண்டும் செறி புல்லி
செழும் புலித்தோல் இருக்கையின் முன்சேர வைத்தான்
முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன்
மூப்பு எனை வந்து அடைந்தலினால் முன்புபோல
என்னுடைய முயற்சியினால் வேட்டை ஆட இனி
எனக்கு கருத்து இல்லை எனக்கு மேலாய்
மன்னு சிலை மலையர் குல காவல் பூண்டு மாறு
எறிந்து மா வேட்டை ஆடி என்றும்
உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்றுடைய
தோலும் சுரிகையும் கை கொடுத்தான் அன்றே
தந்தை நிலை உள்கொண்டு தளர்வு கொண்டு தங்கள்
குல தலைமைக்கு சார்வு தோன்ற
வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட
குறிப்பினால் மறாமை கொண்டு
முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை
உடை தோலும் வாங்கி கொண்டு
சிந்தை பரங்கொள நின்ற திண்ணனார்க்கு திரு
தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான்
நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு
பரித்து அதன் மேல் நலமே செய்து
தெம் முனையில் அயற் புலங்கள் கவர்ந்து கொண்ட திண்
சிலையின் வளமொழியா சிறப்பின் வாழ்வாய்
வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும்
விரைந்து நீ தாழாதே வேட்டை ஆட
இம் முரண் வெஞ் சிலை வேடர் தங்களோடும் எழுக என
விடை கொடுத்தான் இயல்பில் நின்றான்
செங்கண் வ கோளரியேறு அன்ன திண்மை
திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற
வெங்கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடை
கொண்டு புறம் போந்து வேடரோடும்
மங்கல நீர சுனை படிந்து மனையின் வைகி வைகிருளின்
புலர் காலை வரிவிற் சாலை
பொங்கு சிலை அடல் வேட்டை கோலம் கொள்ள புனை
தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார்
நெறி கொண்ட குஞ்சி சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க
முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய்யொளி பீலி சேர்த்தி
வெறி கொண்ட முல்லை பிணைமீது குறிஞ்சி வெட்சி
செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொள பின்பு செய்து
முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி
தன்னில் புரி கொண்ட மயிர் கயிறார சாத்தி
மின்னல் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின்
மன்னி புடை நின்றன மா மதி போல வைக
கண்டத்திடை வெண் கவடி கதிர் மாலை சேர
கொண்ட கொடு பன் மணி கோத்திடை ஏன கோடு
துண்ட பிறை போல்வன தூங்கிட வேங்கை வன்தோல்
தண்டை செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க
மார்பில் சிறு தந்த மணித்திரள் மாலை தாழ
தாரிற் பொலி தோள் வலயங்கள் தழைத்து மின்ன
சேர்விற் பொலி கங்கண மீது திகழ்த முன் கை
கார்விற் செறி நாண் எறி கை
அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவத்து
திரையில் படு வெள்ளலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி
நிரையில் பொலி நீளுடை தோல்கரி கைப்புறம் சூழ்
விரையில் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி
வீர கழல் காலின் விளங்க அணிந்து பாதம்
சேர தொடு நீடு செருப்பு விருப்பு வா
பார பெரு வில் வலம் கொண்டு பணிந்து திண்ணன்
சார திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி
அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கி
துங்க பெரு மா மழை போன்று துண் என்று ஒலிப்ப
வெங்கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்க
செங்கை தலத்தால் தடவி சிறு நாண் எறிந்தார்
பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி
வில் வேடர் ஆ துடி மேவி ஒலிக்கு முன்றில்
சொல் வேறு வாழ்த்து திசைதோறும் துதைந்து விம்ம
வல்லேறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார்
மான சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில்
பானற்குல மாமலரில் படர் சோதியார் முன்
தேனற்றசை தேறல் சரு பொரி மற்றும் உள்ள
கான பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள்
நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்க புக்கு
சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி
உன் தந்தை தந்தைக்கும் இ நன்மைகள் உள்ள வல்ல
நன்றும் பெரிது விறல் நம்மளவு அன்று இது என்றாள்
அ பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை ஆட்டி தன்னை
செப்பற்கு அரிதாய சிறப்பு எதிர் செய்து போக்கி கை பற்றிய
திண் சிலை கார் மழை மேகம் என்ன
மெ பொற்புடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார்
தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையர்
வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன் கணார்
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்ணிலார்
மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே
வன் தொடர் பிணித்த பாசம் கை மள்ளர்
வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதமுன்
சென்று நீளுமாறு போல்வ செய்ய நாவின் வாய வாய்
ஒன்றோடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடெலாம்
போர் வலை சிலை தொழில் புறத்திலே விளைப்ப
சார் வலை தொடக்கு அறுக்க ஏகும் ஐயர் தம் முன்னே
கார் வலை படுத்த குன்று கானமா வளைக்க நீள்
வார் வலை திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார்
நண்ணி மா மறை குலங்கள் நாட என்று நீடும் அ
தண்ணிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார் தமை
கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன்
எண்ணில் பார்வை கொண்டு வேடர் எம் மருங்கும் ஏகினார்
கோடுமுன் பொலிக்கவும் குறுங் கணா குளிக்குலம்
மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும்
சேடு கொண்டகை விளி சிறந்த ஓசை செல்லவும்
காடு கொண்டு எழுந்த வேடு கை வளைந்து சென்றதே
நெருங்கு பைந்தரு குலங்கள் நீடு காடு கூட நேர்
வருங்கருஞ் சிலை தடக்கை மான வேடர் சேனை தான்
பொரு தட திரைக்கடல் பரப்பு இடை புகும் பெருங்
கருந்தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே
தென் திசை பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம்
பன்றி வெம் மரை கணங்கள் ஆதியான பல் குலம்
துன்றி நின்ற என்றடி சுவட்டின் ஒற்றர் சொல்லவே
வன் தடக்கை வார்கொடு எம் மருங்கும் வேடர் ஓடினார்
ஓடி எறிந்து வாரொழுக்கி யோசனை பரப்பு எலாம்
நெடிய திண் வலை தொடக்கு நீளிடை பிணித்து நேர்
கடி கொள பரந்த காடு காவல் செய்து அமைத்த பின்
செடி தலை சிலைக்கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார்
வெஞ்சிலைக்கை வீரனாரும் வேடரோடு கூடி முன்
மஞ்சலைக்கு மாமலை சரி புறத்து வந்த மா
அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள்
செஞ்சரத்தினோடு குழல் செய்த கானுள் எய்தினர்
வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பராயம் ஓடி நேர்
எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும்
மொய் குரல் துடி குலங்கள் பம்பை முன் சிலைத்து எழ
கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கானெலாம்
ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலை குலம்
கான மேதி யானை வெம் புலி கணங்கள் கான் மரை
ஆன மா அநேக வெருண்டு எழுந்து பாய
சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார்
தாளறுவன் இடை துணிவன தலை துமிவன கலைமா
வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா
நீளுடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா
மீளிகொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே
வெங்கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய்
செங் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா
அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனை
பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள்
பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய்
முன் நடுமுக மிசை உருவிட முடுகிய விசையுடன் அ
கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவ
தன் எதிர் பொருவன நிகர் தலையன பல
கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர்
குரிசில் முன் விடும் அடுசரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே
பொரு கரி யொடு சின அரியிடை புரையறவுடல் புகலால்
வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அவ்வனமே
நீளிடை விசை மிசை குதிகொள நெடு முகில் தொட எழு மான்
தாளுறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வன தாம்
வாள் விடுகதிர் மதி பிரிவுற வருமென விழும் உழையை
கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே
கடல் விரி புனல் கொள விழுவன கரு முகிலென நிரையே
படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல்
அடலுறு சரம் உடலுற வரை அடியிடம் அலமரலால்
மிடை கரு மரை கரடிகள் ஓடு விழுவன வன மேதி
பல துறைகளின் வெருவரலொடு பயில் வலையற நுழை மா
உலமொடு படர்வன தகையுற உறு சினமொடு கவர் நாய்
நிலவிய இரு வினை வலை இடை நிலை சுழல் பவர் நெறி சேர்
புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அலவுளவே
துடியடியன மடி செவியன துறுகய முனி தொடரார்
வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார்
அடி தளர்வுறு கரு உடையன அணை உறு பிணை அலையார்
கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர்
இவ்வகை வரு கொலை மறவினை எதிர் நிகழ்வுழி அதிர
கைவரைகலும் வெருவுற இடை கான் எழுவதோர் ஏனம்
பெய் கருமுகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி
மொய் வலைகளை அற நிமிர் முடுகிய கடு விசையில்
போமது தணை அடுதிறலொடு பொரு மறவர்கள் அரியேறு
ஆமவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில்
தாம் ஒருவரும் அறிகிலரவர் தனி தொடர்வுழி அதன்மேல்
ஏமுனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார்
நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரிவில்
காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில்
கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி
நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல்
குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இட குரல் நீள்
பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிதோடி
துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல்
சென்று அதனிடை நின்றது வலிது தெருமர நிரையில்
அ தரு வளர் சுழல் இடை அடை அதன் நிலை அறிபவர் முன்
கை தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி
மொய்த்தெழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி
குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர்
வேடர் தங்கரிய செங்கண் வில்லியார் விசையில் குத்த
மாடிரு துணியாய் வீழ்ந்த வராகத்தை கண்டு நாணன்
காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம்
ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார்
மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற
உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனை காய்ச்சி
சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து
வெற்றி கொள் வேட்டை காடு குருகுவோம் மெல்ல என்றார்
என்று அவர் கூற நோக்கி திண்ணனார் தண்ணீர் எங்கே
நன்றும் இவ் வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன்
நின்ற இ பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட
குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான்
பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே
இங்கிது தன்னை கொண்டு போதுமின் என்று தாமும்
அங்கது நோக்கி சென்றார் காவதம் அரையில் கண்டார்
செங்கண் ஏறு உடையார் வைகும் திருமலை சாரல் சோலை
நாணனே தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணன்
காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்த
சேணுயர் திரு காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
கோணமில் குடுமி தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான்
ஆவதென் இதனை கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம்
போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல்
மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும்
தேவர் அங்கு இருப்பது எங்கே போகென்றார் திண்ணனார் தாம்
உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து
கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும்
வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும்
திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினை சார்ந்தார்
ஆங்கு அதன் கரையின் பாங்கோர் அணி நிழல் கேழல் இட்டு
வாங்கு வில் காடன் தன்னை மர கடை தீ கோல் பண்ணி
ஈங்கு நீ நெருப்பு காண்பாய் இம்மலை ஏறி கண்டு
நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார்
அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின்
தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார் தாம்
களி வரும் மகிழ்ச்சி பொங காளத்தி கண்டு கொண்டு
குளிர் வரு நதி ஊடு ஏகி குலவரை சாரல் சேர்ந்தார்
கதிரவன் உச்சி நண்ண கடவுள் மால் வரையின்
அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர் கலி முழக்கம் காட்ட
இது என் கொல் நாணா என்றார்க்கு இம் மலை பெருந்தேன் சூழ்ந்து
மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி கொல் என்றான்
முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பம் ஆன
அன்பினை எடுத்து காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி
மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி
என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கை யோடும்
நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏற தாமும்
பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி
ஆணையாம் சிவத்தை சாரா அணைபவர் போல ஐயர்
நீணிலை மலையை ஏறி நேர் பட செல்லும் போதில்
திங்கள் சேர் சடையார் தம்மை சென்றவர் காணா முன்னே
அம் கண்ணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எ
தங்கிய பவத்தின் முன்னை சார்பு விட்டு அகல நீங்கி
பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்பு உருவம் ஆனார்
மாகமார் திரு காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள
ஏக நாயகரை கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின்
வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும்
மோகமாய் ஓடி சென்றார் தழுவினார் மோந்து நின்றார்
நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால் தோறும்
வடிவெலாம் புளகம் பொங்க மலர கண்ணீர் அருவி பாய
அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று
படி இலா பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற
வெம் மற குலத்து வந்த வேட்டுவ சாதியார் போல்
கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம் தன்னில்
உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றி கெட்டேன்
இம் மலை தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார்
கைச்சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்த
பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற
அச்சிலை நாணன் தானும் நான் இது அறிந்தேன் என்பான்
வன்றிறல் உந்தை யோடு மா வேட்டை ஆடி பண்டி
குன்று இடை வந்தோம் ஆ குளிர்ந்த நீர் இவரை ஆட்டி
ஒன்றிய இலை பூச்சூட்டி ஊட்டி முன்பு அறைந்த தேர் பார்ப்பான்
அன்றிது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான்
உண்ணிறைந்து எழுந்த தேனும் ஒழிவின்றி ஆரா அன்பில்
திண்ணனார் திரு காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை
எண்ணிய இவைகொலாம் என்று இது கடை பிடித்து கொண்டு அவ்
அண்ணலை பிரிய மாட்டா அளவில் ஆதரவு நீட
இவர் தமை கண்டேனுக்கு தனியராய் இருந்தார் என்னே
இவர் தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை
இவர் தமை பிரிய ஒண்ணாது என்செய்கேன் இனி யான் சால
இவர் தமக்கு இறைச்சி கொண்டிங்கு எய்தவும் வேண்டும் என்று
போதுவர் மீண்டும் செல்வர் புல்லுவர் மீள போவர்
காதலின் நோக்கி நிற்பர் கன்று அகல் புனிற்று ஆ போல்வர்
நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே
கோதற தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார்
ஆர்தமராக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன்
நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று
சோர் தரு கண்ணீர் வார போய் வர துணிந்தார் ஆகி
வார் சிலை எடுத்து கொண்டு மலர கையால் தொழுது போந்தார்
முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன்
பின்பு வந்து அணைய முன்னை பிற துறை வேட்கை நீங்கி
அன்பு கொண்டு உய்ப்ப செல்லும் அவர் திரு முகலி ஆற்றின்
பொன் புனை கரையில் ஏறி புது மலர காவில் புக்கார்
காடனும் எதிரே சென்று தொழுது தீ கடைந்து வைத்தேன்
கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம்
மாடுற நோக்கி கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று
நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன்
அங்கிவர் மலையில் தேவர் தம்மை கண்டு அணைத்து கொண்டு
வங்கினை பற்றி போதாவல்லுடும்பு என்ன நீங்கான்
இங்கும் அ தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏக போந்தான்
நம்குல தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான்
என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள்
முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார்
வன் பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி மிக்க
இன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு
கோலினில் கோத்து காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவ
வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கி பார்த்து
சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லை
ஏலவே கோலி கூட அதன் மிசை இடுவார் ஆனார்
மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே
அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான்
பெரும் பசி உடையன் ஏனும் பேச்சிலன் எமக்கும் பேறு
தரும் பரிசு உணரான் மற்றை தசை புறத்து எறியா நின்றான்
தேவுமால் கொண்டான் இந திண்ணன் மற்று இதனை தீர்க்கல்
ஆவது ஒன்று அறியோம் தேவராட்டியை நாகனோடு
மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அவ் வேட்டை கானில்
ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணி போனார்
கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண்
ஊன் அமுது அமைத்து கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி
மா நதி நன்னீர் தூய வாயினில் கொண்டு கொய்த
தூ நறும் பள்ளி தாமங் குஞ்சி மேல் துதை கொண்டார்
தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கி கல்லை
புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி
இனிய எம்பிரானார் சால பசிப்பர் என்று இரங்கி ஏங்கி
நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்தாம்
இளைத்தனர் நாயனார் என்று ஈண்ட சென்று எய்தி வெற்பின்
முளைத்து எழு முதலை கண்டு முடிமிசை மலரை காலில்
வளைத்த பொற் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர் தன்னை
விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடிமேல் விட்டார்
தலை மிசை சுமந்த பள்ளி தாமத்தை தடங் காளத்தி
மலை மிசை தம்பிரானார் முடி மிசை வணங்கி சாத்தி
சிலைமிசை பொலிந்த செங்கை திண்ணனார் சேர்த்த கல்லை
இலை மிசை படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து
கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு
அழலுறு பதத்தில் காய்ச்சி பல்லினால் அதுக்கி நாவில்
பழகிய இனிமை பார்த்து படைத்த இவ் இறைச்சி சால
அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார்
அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர்
மன்னனார் திரு காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன்
இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு
பன்னெடுங் கரங்கள் கூப்பி பகலவன் மலையில் தாழ்ந்தான்
அவ்வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும்
வெவ்விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளா
செவ்விய அன்பு தாங்கி திரு கையில் சிலையும் தாங்கி
மைவரை என்ன ஐயர் மருங்கு நின்று அகலா நின்றார்
சார்வரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும்
கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார் தம்மை
ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே
நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க
கழை சொரி தரள குன்றில் கதிர் நிலவு ஒருபால் பொங்க
முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒருபால் மொய்ப்ப
தழை கதிர பரிதியோடும் சந்திரன் தலை உவாவில்
குழையணி காதர் வெற்பை கும்பிட சென்றால் ஒக்கும்
விரவு பன்மணிகள் கான்ற விரிகதிர படலை பொங்க
மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி
பொர இரு சுடருக்கு அஞ்சி போயின புடைகள் தோறும்
இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும்
செந்தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும்
மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும்
ஐந்தும் ஆறடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும்
எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை
வரும் கறை பொழுது நீங்கி மல்கிய யாமஞ் சென்று
சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டு
கருங்கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர்
அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி
ஏறுகாற்பன்றியோடும் இருங்கலை புனமான் மற்றும்
வேறு இனங்கள் வேட்டை வினை தொழில்
ஊறுசெய் காலம் சிந்தித்து உருமிக தெரியா போதின்
மாறடு சிலையும் கொண்டு வள்ளலை தொழுது போந்தார்
மொய் காட்டும் இருள் வாங்கி முகம் தேர்
மெய் காட்டும் அன்புடைய வில்லியர் தனி வேட்டை
எய்காட்டின் மாவளைக்க இட்ட கரும் திரை எடுத்து
கை காட்டும் வான் போல கதிர் காட்டி எழும் போதில்
எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்ப
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார்
மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழி பாடு
செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவ கோசரியார்
வந்து திருமலையின் கண் வானவர் நாயகர் மருங்கு
சிந்தை நியமத்தோடும் செல் கின்றார் திரு முன்பு
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி
இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார்
மேவநேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார்
தேவ ஈசனே திருமுன்பே இது
போவதே இவ் வண்ணம் புகுத நீர் திரு உள்ளம்
ஆவதோ என பதறி அழுது விழுந்து அலமந்தார்
பொருப்பில் எழுஞ் சுடர கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான்
இருப்பது இனி ஏன் என்று அவ் இறைச்சி எலும்புடன் இலையும்
செருப்பு அடியும் நாய் திரு அலகால் மாற்றிய
விருப்பின் ஒடும் திருமுகலி புனல் மூழ்கி விரைந்து அணைந்தார்
பழுது புகுந்தது அது தீர பவித்திரமாம் செயல் புரிந்து
தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி
வழுவில் திரு மஞ்சனமே வரும் முதலாக
முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார்
பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால்
துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர திங்கள்
அணிந்த சடை முடி கற்றை அங்கணரை விடை கொண்டு
தணிந்த மன திருமுனிவர் தபோ வனத்திடை சார்ந்தார்
இவ் வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனி இப்பால்
மைவண்ண கருங் குஞ்சி வன வேடர் பெருமானார்
கைவண்ண சிலை வளைத்து கான் வேட்டை தனி ஆடி
செய்வண்ண திறம் மொழிவேன் தீவினையின்
திரு மலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல்
பெருமலைகள் இடை சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து
வருவனவும் துணி படுத்து மான் இனங்கள் கான் இடை நின்று
ஒரு வழி சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி
பயில் விளியால் கலை அழைத்து பாடு பெற ஊடுருவும்
அயில் முகவெங் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள்
துயில் இடையில் கிடை செய்து தொடர்ந்து கடமைகள் எய்து
வெயில் படு வெங்கதிர் முதிர தனி வேட்டை வினை முடித்தார்
பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல்
இட்டு அருகு தீ கடை கோல் இரும் சுரிகை தனை உருவி
வெட்டி நறுங் கோல் தேனும் மிக முறித்து தேக்கு இலையால்
வட்டமுறு பெருங் கல்லை மருங்கு புடை பட அமைத்தார்
இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில்
வெம் தழலை பிறப்பித்து மிக வளர்த்து மிருகங்கள்
கொந்தி அயில் அலகம்பால் குட்டம் இட்டு கொழுப்பரிந்து
வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து
வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின்
ஆய உறுப்பு இறைச்சி யெலாம் அரிந்து ஒருகல் இலையில் இட்டு
காய நெடும் கோல் கோத்து கனலின் கண் உறக்காய்ச்சி
தூய திரு அமுது அமைக்க சுவை காணல் உறுகின்றார்
எண்ணிறைந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும்
வண்ண எரி வாயின் கண் வைத்தது என காளத்தி
அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்கு
திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது
நல்ல பதமுற வெந்து நாவின் கண் இடும் இறைச்சி
கல்லையினிற் படைத்து தேன் பிழிந்து கலந்து கொண்டு
வல் விரைந்து திரு பள்ளி தாமமும் உந்தூய் மஞ்சனமும்
ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார்
வந்து திரு காளத்தி மலை ஏறி வனசரர்கள்
தந்தலைவனார் இமையோர் தலைவனார் தமை எய்தி
அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின்
முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார்
ஊனமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்றால்
ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில்
ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன்
தேனும் உடன் கலந்து இதுதித்திக்கும் என மொழிந்தார்
இ பரிசு திரு அமுது செய்வித்து தம்முடைய
ஒப்பரிய பூசனை செய்து அந்நெறியில் ஒழுகுவார்
எப்பொழுதும் மேன்மேல்வந்து எழும் அன்பால் காளத்தி
அப்பர் எதிர் அல்லுறங்கார் பகல் வேட்டை ஆடுவார்
மாமுனிவர் நாள் தோறும் வந்து அணைந்து வன வேந்தர்
தாம் முயலும் பூசனைக்கு சால மிக தளர்வு எய்தி
தீமை என அது நீக்கி செப்பிய ஆகம விதியால்
ஆமுறையில் அர்ச்சனை செய்து அ நெறியில் ஒழுவாரால்
நாணனொடு காடனும் போய் நாகனுக்கு சொல்லியபின்
ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு
பேணு மகனார் தம் பால் வந்து எல்லாம் பேதித்து
காணு நெறி தங்கள் குறி வாராமல் கை விட்டார்
முன்பு திரு காளத்தி முதல்வனார் அருள் நோக்கால்
இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கை
தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற
அன்பு பிழம் பா திரிவார் அவர் கருத்தின் அளவினரோ
அந்நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப
மன்னிய ஆக படியால் மாமுனிவர் அருச்சித்து இங்கு
என்னுடைய நாயகனே இது செய்தார் தமை காணேன்
உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என
அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர் தம்பாலே
மின் திகழும் சடை மவுலி வேதியர் தாம் எழுந்து அருளி
வன்திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல்
நன்றவன் தன் செயல் தன்னை நாம் உரைப்ப கேள் என்று
அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு என்றும்
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு அறிநீ என்று அருள் செய்வார்
பொருட்பினில் வந்தவன் செய்யும் பூசனைக்கு முன்பென்மேல்
அருப்புறுமென் மலர்முன்னை அவை நீக்கும் ஆதரவால்
விருப்புரும் அன்பெனும் வெள்ளக்கால் பெருகிற் றெனவீழ்ந்த
செருப்படி அவ்விளம்பருவ சேயடியிற் சிறப்புடைத்தால்
உருகிய அன்பொழிவின்றி நிறைந்த அவன் உருவென்னும்
பெருகியகொள் கலமுகத்தில் பிறங்கியினி தொழுகுதலால்
ஒருமுனிவன் செவிஉமிழும் உயர்கங்கை முதல்தீர்த்த
பொருபுனலின் எனக்கவன்தன் வாயுமிழும் புனல்புனிதம்
இம்மலைவ தெனையடைந்த கானவன்தன் இயல்பாலே
மெய்மலரும் அன்புமேல் விரிந்தனபோல் விழுதலால்
செம்மலர்மேல் அயனொடுமால் முதல்தேவர் வந்துபுனை
எம்மலரும் அவன் தலையால் இடுமலர்போல் எனக்கொல்வா
வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால்
நையுமன தினிமையினால் நையமிக மென்றிடலால்
செய்யுமறை வேள்வியோர் முன்புதரு திருந்தவியில்
எய்யும்வரி சிலையவந்தான் இட்டஊன் எனக்கினிய
மன்பெருமா மறைமொழிகள் மாமுனிவர் மகிழ்ந்துரைக்கும்
இன்பமொழி தோத்திரங்கள் மந்திரங்களியாவையினும்
முன்பிருந்து மற்றவன்தன்முகமலர அகநெகிழ
அன்பில்நினை தெனையல்லால் அறிவுறா மொழிநல்ல
உனக்கவன் தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால்
எனக்கு அவன் தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய்
மன கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள் செய்து
புனல் சடில திரு முடியார் எழுந்து அருளி போனார்
கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குல் இடை
புனை தவத்து மாமுனிவர் புலர் அளவும் கண் துயிலார்
மனம் உறும் அற்புதமாகி வரும் பயமும் உடன் ஆகி
துனை புரவி தனி தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற
முன்னை நாள் போல் வந்து திருமுகலி புனல் மூழ்கி
பன் முறையும் தம்பிரான் அருள் செய்த படி நினைந்து
மன்னு திரு காளத்தி மலை ஏறி முன்பு போல்
பிஞ்ஞகனை பூசித்து பின்பாக ஒளித்திருந்தார்
கருமுகில் என்ன நின்ற கண் படா வில்லியார் தாம்
வருமுறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த காலை
அருமறை முனிவனார் வந்தணை வதன் முன்னம் போகி
தருமுறை முன்பு போல தனிப்பெரு வேட்டை ஆடி
மாறில் ஊன் அமுதும் நல்ல மஞ்சன புனலும் சென்னி
ஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்து கொண்டு
தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி
ஆறுசேர் சடையார் தம்மை அணுக வந்து அணையா நின்றார்
இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன்
மொய்த்த பல்சகுனம் எல்லாம் முறை தீங்கு
இ தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரங் காட்டும்
அதனுக்கு என் கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில்
அண்ணலார் திரு காளத்தி அடிகளார் முனிவனார்க்கு
திண்ணனார் பரிவு காட்ட திரு நயனத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அவ்
வண்ணவெஞ் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார்
வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நன்னீர்
சிந்திட கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழ
கொந்தவர் பள்ளி தாமம் குஞ்சி நின்று அலைந்து சோர
பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்து இடை பதைத்து வீழ்ந்தார்
விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது
ஒழிந்திட காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீள
அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யாரிது செய்தார் என்னா
எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும்
வாளியு தெரிந்து கொண்டு இம் மலையிடை எனக்கு மாறா
மீளி வெம் மறவர் செய்தார் உளர் கொலோ விலங்கின் சாதி
ஆளி முன்னாகி யுள்ள விளைத்தவோ அறியேன் என்று
நீளிருங் குன்றை சாரல் நெடிதிடை நேடி சென்றார்
வேடரை காணார் தீய விலங்குகள் மருங்கு எங்கும்
நாடியுங் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்து
நீடிய சோகத்தோடு நிறை மலர பாதம் பற்றி
மாடுற கட்டி கொண்டு கதறினார் கண்ணீர் வார
பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ
ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும்
என் செய்தால் தீருமோதான் எம்பிரான் திறத்து தீங்கு
முன்செய்தார் தம்மை காணேன் மொய் கழல் வேடர் என்றும்
மின்செய்வார் பகழி புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடி
பொன்செய் தாழ் வரையிற் கொண்டு வருவன் நான் என்று போனார்
நினைத்தனர் வேறு நெருங்கிய வனங்கள்
இனத்திடை பிரிந்த செங்கணேறு என வெரு கொண்டு எய்தி
புனத்திடை பறித்து கொண்டு பூத நாயகன்பால் வைத்த
மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார்
மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திரு காளத்தி
கொற்றவர் கண்ணில் புண்ணீர் குறை படாது இழி கண்டும்
இற்றையின் நிலைமைக்கு என்னோ இனி செயல் என்று பார்ப்பார்
உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரைமுன் கண்டார்
இதற்கினி என்கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண்
அதற்கிது மருந்தா புண்ணீர் நிற்கவும் அடுக்கும் என்று
மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தங்கண்
முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர் தம் கண்ணில் அப்ப
நின்ற செங்குருதி கண்டார் நிலத்தின் நின்றே பாய்ந்தார்
குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி
நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார்
வலத்திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார்
நலத்தினை பின்னும் காட்ட நாயனார் மற்றை கண்ணில்
உலப்பில் செம் குருதி பா கண்டனர் உலகில் வேடர்
குலப்பெரு தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார்
கண்டபின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று
புண்டரு குருதி நிற்க மற்றை கண்
மண்டுமற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும்
உண்டொரு கண் அக்கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று
கண்ணுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பிற் காணும் நேர்பாடு
எண்ணுவர் தம்பிரான் தன் திரு கண்ணில் இடக்கால் ஊன்றி
உண்ணிறை விருப்பினோடும் ஒரு தனி பகழி கொண்டு
திண்ணனார் கண்ணில் ஊன்ற தரித்திலர் தேவ தேவர்
செங்கண் வெள்விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திரு காளத்தி அற்புதர் திருக்கை அன்பர்
தங்கண் முன் இடக்குங் கையை தடுக்க மூன்று அடுக்கு நாக
கங்கணர் அமுதவாக்கு கண்ணப்ப நிற்க என்ற
கானவர் பெருமானார் தங்கண் இடந்து அப்பும் போதும்
ஊனமும் உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும்
ஞான மாமுனிவர் கண்டார் நான்முகன் முதலாய் உள்ள
வானவர் வளர் பூ மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப
பேறினி இதன் மேல் உண்டோ பிரான் திரு கண்ணில் வந்த
ஊறு கண்டு அஞ்சி தம் கண் இடந்தப்ப உதவும் கையை
ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்து கொண்டு என் வலத்தில்
மாறிலாய் நிற்க என்று மன்னு பேர் அருள் புரிந்தார்
மங்குல் வாழ் திரு காளத்தி மன்னனார் கண்ணில் புண்ணீர்
தங்கணால் மாற்ற பெற்ற தலைவர் தாள் தலைமேற் கொண்டே
கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம்
பொங்கிய புகழின் மிக்கார் திரு தொண்டு புகலல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்
குங்குலி கலய நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாட்டின்
ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயிற் பதி எறி நீர கங்கை
தோய்ந்த நீள் சடையார் பண்டு தொண்டர் மேல் வந்த கூற்றை
காய்ந்த சேவடியார் நீடி இருப்பது கடவூர் ஆகும்
வயல் எலாம் விளை செஞ் சாலி வரம்பு வளையின்
அயல் எலாம் வேள்வி சாலை அணை கழுநீர
புயல் எலாம் கமுகின் காடு அப்புறமெலாம் அதன் சீர் போற்றல்
செயல் எலாம் தொழில்கள் ஆறே செழு திரு கடவூர் என்றும்
குடங் கையின் அகன்ற உண் கண் கடைசியர் குழுமி ஆடும்
இடம் படு பண்ணை தோறும் எழுவன மருதம் பாடல்
வடம் புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கை
சடங்குடை இடங்கள் தோறும் எழுவன சாமம் பாடல்
துங்க நீள் மருப்பின் மேதி படிந்து பால் சொரிந்த வாவி
செங்கயல் பாய்ந்து வாச கமலமும் தீம் பால் நாறும்
மங்குல் தோய் மாட சாலை மருங்கு இறை ஒதுங்கும் மஞ்சும்
அங்கவை பொழிந்த நீரும் ஆகுதி புகைப்பால் நாறும்
மருவிய திருவின் மிக்க வளம்பதி அதனில் வாழ்வார்
அருமறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார்
பெருநதி அணியும் வேணி பிரான் கழல் பேணி நாளும்
உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார் ஒழுக்கம் மிக்கார்
பாலனாம் மறையோன் பற்ற பயங்கொடுத்து அருளும் ஆற்றால்
மாலும் நான் முகனும் காணா வடிவு கொண்டு எதிரே வந்து
காலனார் உயிர் செற்றார்க்கு கமழ்ந்த குங்குலி தூபம்
சாலவே நிறைந்து விம்ம இடும் பணி தலை நின்றுள்ளார்
கங்கை நீர் கலிக்கும் சென்னி கண்ணுதல் எம்பிரார்க்கு
பொங்கு குங்குலி தூபம் பொலிவுற போற்றி செல்ல
அங்கவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும்
தங்கள் நாயகர்க்கு தாம் முன்செய் பணி தவாமை உய்த்தார்
இந்நெறி ஒழுகு நாளில் இலம்பாடு நீடு செல்ல
நன்னிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை
பன்னெடு தனங்கள் மாள பயில் மனை வாழ்க்கை தன்னில்
மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தினார்கள்
யாதொன்றும் இல்லையாகி இரு பகல் உணவு மாறி
பேதுறு மைந்தரோடும் பெருகு சுற்றத்தை நோக்கி
காதல்செய் மனைவியார் தம் கணவனார் கலயனார் கை
கோதில் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார்
அப்பொழுது அதனை கொண்டு நெல் கொள்வான் அவரும் போக
ஒப்பில் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான்
இப்பொதி என் கொல் என்றார்க்கு உள்ளவாறு இயம்ப கேட்டு
முப்புரி வெண்நூல் மார்பர் முகம் மலர்ந்து இதனை சொன்னார்
ஆறு செஞ் சடைமேல் வைத்த அங்கணர் பூசைக்கான
நாறுகுங்குலியம் ஈதேல் நன்று இன்று பெற்றேன் நல்ல
பேறு மற்றிதன் மேல் உண்டோ பெறாப்பேறு பெற்று வைத்து
வேறினி கொள்வது என் என்று உரைத்தெழும் விருப்பின் மிக்கார்
பொன் தர தாரும் என்று புகன்றிட வணிகன் தானும்
என் தர இசைந்தது என்ன தாலியை கலயர் ஈந்தார்
அன்றவன் அதனை வாங்கி அப்பொதி கொடுப்ப கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார் நிறைந்து எழுகளிப்பினோடும்
விடையவர் வீர டானம் விரைந்து சென்று எய்தி என்னை
உடையவர் எம்மை ஆளும் ஒருவர் தம் பண்டாரத்தில்
அடைவுற ஒடுக்கி எல்லாம் அயர்த்து எழும் அன்பு பொங்க
சடையவர் மலர்த்தாள் போற்றி இருந்தனர் தமக்கு ஒப்பு இல்லார்
அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன்
தன் பெரு நிதி தூர்த்து தரணி மேல் நெருங்க எங்கும்
பொன்பயில் குவையும் நெல்லும் பொருவில் பல் வளனும் பொங்க
மல்பெருஞ் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில் நீட
மற்றவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி
அற்றை நாள் இரவு தன்னில் அயர்வுற துயிலும் போதில்
நல்தவ கொடியனார்க்கு கனவிடை நாதன் நல்க
தெற்றென உணர்ந்து செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார்
கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா நிறைவில் காணும்
அம் பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலாய் உள்ள
எம்பிரான் அருளாம் என்றே இருகரங் குவித்து போற்றி
தம் பெரும் கணவனார்க்கு திரு அமுது அமைக்க சார்ந்தார்
காலனை காய்ந்த செய்ய காலனார் கலயனாராம்
ஆலும் அன்புடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால்
சாலநீ பசித்தாய் உன் தன் தட நெடு மனையில் நண்ணி
பாலின் அடிசில் உண்டு பருவரல் ஒழிக என்றார்
கலையனார் அதனை கேளா கை தொழுது இறைஞ்சி கங்கை
அலைபுனல் சென்னியார் தம் அருள் மறுத்து இருக்க அஞ்சி
தலை மிசை பணிமேற் கொண்டு சங்கரன் கோயில் நின்று
மலை நிகர் மாட வீதி மருங்கு தம் மனையை சார்ந்தார்
இல்லத்தில் சென்று புக்கார் இருநிதி குவைகள் ஆர்ந்த
செல்வத்தை கண்டு நின்று திரு மனையாரை நோக்கி
வில்லொத்த நுதலாய் இந்த விளைவு எல்லாம் என்கொல் என்ன
அல்லொத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார்
மின்னிடை மடவார் கூற மிக்க சீர் கலயனார் தாம்
மன்னிய பெரும் செல்வத்து வளமலி சிறப்பை நோக்கி
என்னையும் ஆளும் தன்மைத்து எந்தை எம்பெருமான் ஈசன்
தன்னருள் இருந்த வண்ணம் என்று கைதலைமேல் கொண்டார்
பதும நற்திருவின் மிக்கார் பரிகல திருத்தி கொண்டு
கது மென கணவனாரை கண்ணுதற்கு அன்பரோடும்
விதிமுறை தீபம் ஏந்தி மேவும் இன் அடிசில் ஊட்ட
அது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அருமறை கலயனார் தாம்
ஊர் தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடி
சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்
ஆர்தரு காதல் கூர அடியவர்க்கு உதவும் நாளில்
செங்கண் வெள் ஏற்றின் பாகன் திரு பன தாளில் மேவும்
அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம்
பொங்கி தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில்லாமை
கங்குலும் பகலும் தீரா கவலை உற்று அழுங்கி செல்ல
மன்னவன் வருத்தங் கேட்டு மாசறு புகழின் மிக்க
நன்னேறி கலயனார் தாம் நாதனை நேரே காணும்
அந்நெறி தலை நின்றான் என்று அரசனை விரும்பி தாமும்
மின்னெறித்து அனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார்
மழுவுடை செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று
தொழுது போந்து அன்பினோடும் தொன்மறை நெறி வழாமை
முழுதுலகினையும் போற்ற மூன்று எரிபுர போர் வாழும்
செழு மலர சோலை வேலி திரு பன தாளில் சேர்ந்தார்
காதலால் அரசன் உற்ற வருத்தமும் களிற்றினோடும்
தீதிலா சேனை செய்யும் திருப்பணி நேர் படாமை
மேதினி மிசையே எய்த்து வீழ்ந்து இளைப்பதுவும் நோக்கி
மாதவ கலயர் தாமும் மனத்தினில் வருத்தம் எய்தி
சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி
யானும் இவ் இளை புற்று எய்க்கும் இது பெற வேண்டும் என்று
தேனலர் கொன்றையார் தம் திருமேனி பூங்க சேய்ந்த
மானவன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்தல் உற்றார்
நண்ணிய ஒருமை அன்பின் நாருறு பாசத்தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்த பின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலயனார் தம் ஒருப்பாடு கண்ட போதே
அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார்
பார்மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில் பூ மாரி
தேர்மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம்
கார்பெறு கானம் போல களித்தன கைகள் கூப்பி
வார்கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலைமேல் வைத்து
விண் பயில் புரங்கள் வேவ வைதிக தேரில் மேரு
திண்சிலை குனிய நின்றார் செந்நிலை காண செய்தீர்
மண்பகிர்ந்தவனும் காணா மலரடி இரண்டும் யாரே
பண்புடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார்
என்றுமெ தொண்டர் தம்மை ஏத்தி அங்கு எம்பிரானுக்கு
ஒன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து
நின்ற வெண் கவிகை மன்னன் நீங்கவும் நிகரில் அன்பர்
மன்றிடை ஆடல் செய்யும் மலர கழல் வாழ்த்தி வைகி
சிலபகல் கழிந்த பின்பு திருக்கடவூரில் நண்ணி
நிலவுதம் பணியில் தங்கி நிகழும் நாள் நிகரில் காழி
தலைவராம் பிள்ளையாரும் தாண்டக சதுரராகும்
அலர்புகழ் அரசுங்கூட அங்கு எழுந்து அருள கண்டு
மாறிலா மகிழ்ச்சி பொங்க எதிர் கொண்டு மனையில் எய்தி
ஈறிலா அன்பின் மிக்கார்க்கு இன் அமுது ஏற்கும் ஆற்றால்
ஆறு நற்சுவைகள் ஓங்க அமைத்து அவர் அருளே அன்றி
நாறு பூங்கொன்றை வேணி நம்பர் தம் அருளும் பெற்றார்
கருப்பு வில்லோனை கூற்றை காய்ந்தவர் கடவூர் மன்னி
விருப்புறும் அன்பு மேன்மேல் மிக்கு எழும் வேட்கை கூர
ஒருப்படும் உள்ள தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவுஞ் செய்து சிவ பத நிழலில் சேர்ந்தார்
தேனக்க கோதை மாதர் திருநெடு தாலி மாறி
கூனல்தண் பிறையினார்க்கு குங்குலியம் கொண்டு உய்த்த
பான்மைத்திண் கலயனாரை பணிந்து அவர் அருளினாலே
மானக்கஞ் சாறர் மிக்க வண்புகழ் வழுத்தல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்
மானக்கஞ்சாற நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
மேலாறு செஞ்சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியது
நூலாறு நன்கு உணர்வார் தாம் பாடும் நோன்மையது
கோலாறு தேன் பொழி கொழுங் கனியின் சாறு ஒழுகும்
காலாறு வயல் கரும்பின் கழழ் சாறூர் கஞ்சாறூர்
கண்ணீல கடைசியர்கள் கடுங்களையிற் பிழைத்து ஒதுங்கி
உண்ணீர்மை புணர்ச்சி கண் உறைத்து மலர்க்கண் சிவக்கும்
தண்ணீர் மென் கழுநீர்க்கு தடஞ்சாலி தலை வணங்கும்
மண்ணீர்மை நலஞ்சிறந்த வள வயல்கள் உள அயல்கள்
புயல் காட்டுங் கூந்தல் சிறு புறங்காட்ட புன மயிலின்
இயல் காட்டி இடை ஒதுங்க இனங்காட்டும் உழத்தியர்கண்
முயல் காட்டும் மதி தோற்கும் முகம் காட்ட கண் மூரி
கல் காட்டு தடங்கள் பல கதிர்காட்டு தடம் பணைகள்
சேர் அணி தண் பழன வயல் செழுநெல்லின் கொழுங் கதிர் போய்
வேறருகு மிடை வேலி பைங்கமுகின் மிடறுரிஞ்சி
மாறெழுதிண் குலை வளைப்ப வண்டலை தண்டலை உழவர்
தாறிரியும் நெடுங்கொடுவாள் அனையயுள தனி இடங்கள்
பாங்கு மணிப்பல வெயிலும் சுலவெயிலும் உள மாடம்
ஞாங்கரணி துகிற் கொடியும் நகிற் உள
ஓங்கு நிலை தோரணமும் பூரண கும்பமும் உளவால்
பூம் கணை வீதியில் அணைவோர் புலமறுகுஞ் சிலமறுகு
மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்த வளம் பெருகும்
வினை சாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடி துவன்றி
புனை சாயல் மயில் அனையார் நடம் புரி புகல் முழவம்
கனை சாறு மிடை வீதி கஞ்சாறு விளங்கியதால்
அ பதியில் குல பதியாய் அரசர் சேனா பதியாம்
செப்பவருங் குடி விளங்க திரு அவதாரம் செய்தார்
மெ பொருளை அறிந்து உணர்ந்தார் விழுமிய வேளாண் குடிமை
வைப்பனைய மேன்மையினார் மானக்கஞ் சாறனார்
பணிவுடைய வடிவுடையார் பணியினொடும் பனி மதியின்
அணிவுடைய சடை முடியார்க்கு ஆளாகும் பதம் பெற்ற
தணிவில் பெரும் பேறுடையார் தம் பெருமான் கழல் சார்ந்த
துணிவுடைய தொண்டர்க்கே ஏவல் செயும் தொழில் பூண்டார்
மாறில் பெருஞ்செல்வத்தின் வளம் பெருக மற்றதெலாம்
ஆறுலவுஞ் சடை கற்றை அந்தணர் தம் அடியாராம்
ஈறில் பெரு திருவுடையார் உடையார் என்றியாவையுநேர்
கூறுவதன்முன் அவர் தங்குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார்
விரிகடல் சூழ் மண்ணுலகை விளக்கிய இ தன்மையராம்
பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளை பேறு இன்மையினால்
அரியறியா மலர கழல்கள் அறியாமை அரியாதார்
வரு மகவு பெறல் பொருட்டு மனத்தருளால் வழுத்தினார்
குழை கலையும் வடி காதில் கூத்தனார் அருளாலே
மழைக்கு உதவும் பெருங்கற்பின் மனை கிழத்தியார் தம்பால்
இழைக்கும் வினை பயன் சூழ்ந்த இ பிறவிக்கு கொடுஞ்சூழல்
பிழைக்கும் நெறி தமக்கு உதவ பெண் கொடியை பெற்று எடுத்தார்
பிறந்த பெரு மகிழ்ச்சியினால் மூதூர் களி
சிறந்த நிறை மங்கல தூரியம் முழங்க தேவர் பிரான்
அறந்தலை நின்று அவர்க்கெல்லாம் அளவில் வளத்து அருள் பெருக்கி
புறந்தருவார் போற்றி இசைப்ப பொன் கொடியை வளர்க்கின்றார்
காப்பணியும் இளங்குழவி பதநீக்கி கமழ் சுரும்பின்
பூப்பயிலுஞ் சுருள் குழலும் பொலங்குழையும் உடன் தாழ
யாப்புறு மென் சிறுமணிமேகலை அணி சிற்றாடையுடன்
கோப்புமை கிண்கிணி அசை குறுந்தளிர் மெல்லடி ஒதுங்கி
புனை மலர்மென் கரங்களினால் போற்றிய தாதியர் நடுவண்
மனையகத்து மணிமூன்றில் மணல் சிற்றில் இழைத்து மணி
கனை குரல் நூபுரம் அலை கழன்முதலாய் பயின்று முலை
நனை முகஞ்செய் முதல் பருவம் நண்ணினள் அப்பெண் அமுதம்
உறுகவின் மெ புறம் பொலிய ஒளி நுசுப்பை முலை வருத்த
முறுவல் புற மலராத முகிண்முத்த நகை என்னும்
நறுமுகை மென் கொடி மருங்குல் நளிர சுருள் அந்தளிர் செங்கை
மறுவில் கொழுந்தினுக்கு மண பருவம் வந்தணைய
திருமகட்கு மேல் விளங்கும் செம்மணியின் தீபம் எனும்
ஒரு மகளை மண் உலகில் ஓங்கு குல மரபினரா
கரு மிடற்று மறையவனார் தமர் ஆய கழல் ஏயர்
பெரு மகற்கு மகள் பேச வந்து அணைந்தார்
வந்த மூது அறிவோரை மானக்கஞ் சாறனார்
முந்தை முறைமையின் விரும்பி மொழிந்த மண திறம் கேட்டே
எந்தமது மரபினுக்கு தரும் பரிசால் ஏயும் என
சிந்தை மகிழ்வுற உரைத்து மணநேர்ந்து செலவிட்டார்
சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்தபடி செப்ப
குன்றனைய புயத்தேயர் கோனாரும் மிக விரும்பி
நின்ற நிலைமையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வாய
மன்றல் வினை மங்கல நாள் மதிநூல் வல்லவர் வகுத்தார்
மங்கலமாஞ் செயல் விரும்பி மகள் பயந்த வள்ளலார்
தங்குல நீள் சுற்றம் எலாம் தயங்கு பெருங்களி சிற
பொங்கிய வெண் முளை பெய்து பொலங் கலங்களிடை நெருங
கொங்கலர் தண் பொழில் மூதூர் வதுவை முகங் கோடித்தார்
கஞ்சாறர் மகள் கொடுப்ப கை பிடிக்க வருகின்ற
எஞ்சாத புகழ பெருமை ஏயர் குல பெருமானும்
தஞ்சால்பு நிறை சுற்றம் தலை நிறைய முரசு இயம்ப
மஞ்சாலும் மலர சோலை கஞ்சாற்றின் மருங்கணைய
வள்ளலார் மணம் அவ்வூர் மருங்கு அணையா முன் மலர்க்கண்
ஒள்ளிழையை பயந்தார் த திருமனையில் ஒரு வழியே
தெள்ளுதிரை நீர் உலகம் உய்வதற்கு மற்றவர்தம்
உள்ள நிலை பொருளாய உம்பர் பிரான் தாம் அணைவார்
முண்டநிறை நெற்றியின் மேல் முண்டித்த திருமுடியில்
கொண்டசிகை முச்சியின் கண் கோத்தணிந்த எற்பு மணி
பண்டொருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்த
வெண்டரளம் என காதின் மிசை அசையும் குண்டலமும்
அவ்வென்பின் ஒளிமணி கோத்து அணிந்த திரு தாழ்வடமும்
பைவன்பேர் அரவு ஒழி தோளில் இடும் பட்டிகையும்
மைவந்த நிற கேச வட பூண் நூலும் மன
செவ்வன்பர் பவமாற்று திரு நீற்று பொக்கணமும்
ஒரு முன் கைத்தனி மணிகோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும்
அருமறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திருவுடையும்
இரு நிலத்தின் மிசை தோய்ந்த எழுதரிய திருவடியும்
திருவடியில் திரு பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க
பொடி மூடு தழல் என்ன திரு மேனி தனிற்பொலிந்த
படி நீடு திருநீற்றின் பரப்பணிந்த பான்மையரா
கொடு நீடு மறுகு அணைந்து தம்முடைய குளிர் கமலத்து
அடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார்
வந்து அணைந்த மா விரத முனிவரை கண்டு எதிர் எழுந்து
சிந்தை களி கூர்ந்து மகிழ் சிறந்த பெரு தொண்டனார்
எந்தை பிரான் புரி தவத்தோர் இவ் இடத்தே எழுந்து அருள
உய்ந்து ஒழிந்தேன் அடியேன் என்று உருகிய அன்பொடு பணிந்தார்
நற்றவராம் பெருமானார் நலமிகும் அன்பரை நோக்கி
உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன்
பெற்றது ஒரு பெண்கொடி தன் வதுவை என பெருந்தவம்
மற்று உமக்கு சோபனம் ஆகுவது என்று வாய் மொழிந்தார்
ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி
மானக்கம் சாறனார் மண கோலம் புனைந்து இருந்த
தேனக்க மலர கூந்தல் திரு மகளை கொண்டு அணைந்து
பானற்க தர மறைத்து வரும் அவரை பணிவித்தார்
தம் சரணத்து இடை பணிந்து தாழ்ந்து எழுந்த மட கொடி தன்
மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர கூந்தல் புறம் நோக்கி
அஞ்சலி மெ தொண்டரை பார்த்து அணங்கு இவள் தன் மயிர் நமக்கு
பஞ்ச வடிக்காம் என்றார் பரவ அடி தலங்கொடுப்பார்
அருள் செய்த மொழி கேளா அடல் சுரிகைதனை உருவி
பொருள் செய்தாம் என பெற்றேன் என கொண்டு பூங்கொடி தன்
இருள் செய்த கருங்கூந்தல் அடியில் அரிந்து எதிர் நின்ற
மருள் செய்த பிறப்பு அறுப்பார் மலர கரத்தினிடை நீட்ட
வாங்குவார் போல் நின்ற மறை பொருளாம் அவர் மறைந்து
பாங்கின் மலை வல்லியுடன் பழைய மழவிடை யேறி
ஓங்கிய விண் மிசை வந்தார் ஒளி விசும்பின் நிலன் நெருங்க
தூங்கிய பொன்மலர் மாரி தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார்
விழுந்து எழுந்து மெய்ம் மறந்த மெய் அன்பர் தமக்கு மதி
கொழுந்து அலைய விழுங் கங்கை குதித்த சடை கூத்தனார்
எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசிந்த
செழும் புவனங்களில் ஏற செய்தோம் என்று அருள் செய்தார்
மருங்கு பெருங்கண நாதர் போற்றிசைப்ப வானவர்கள்
நெருங்க விடை மேல் கொண்டு நின்றவர் முன் நின்றவர்தாம்
ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்தையர்
பெருங் கருணை திறம் போற்றும் பெரும் பேறு நேர் பெற்றார்
தொண்டனார் தமக்கு அருளி சூழ்ந்து இமையோர் துதி செய்ய
இண்டை வார் சடை முடியார் எழுந்து அருளி போயினார்
வண்டுவார் குழற் கொடியை கை பிடிக்க மண கோலம்
கண்டவர்கள் கண் களிப்ப கலி காமனார் புகுந்தார்
வந்தணைந்த ஏயர் குல மன்னவனார் மற்றந்த
சிந்தை நினைவு அரிய செயல் செறிந்தவர் பால் கேட்டருளி
புந்தியினில் மிக உவந்து புனிதனார் அருள் போற்றி
சிந்தை தளர்ந்து அருள் செய்த திருவாக்கின் திறம் கேட்டு
மனந்தளரும் இடர் நீங்கி வானவர் நாயகர் அருளால்
புனைந்த மலர குழல் பெற்ற பூங்கொடியை மணம் புரிந்து
தனம் பொழிந்து பெருவதுவை உலகெலாம் தலை சிறப்ப
இனம்பெருக தம்முடைய எயின் மூதூர் சென்றணைந்தார்
ஒரு மகள் கூந்தல் தன்னை வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்த
பெருமையார் தன்மை போற்றும் பெருமை என் அளவிற்றாமே
மருவிய கமரிற் புக்க மா வடு விடேல் என் ஓசை
உரிமையால் கேட்க வல்லார் திறம் இனி உரைக்கல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்
அரிவாட்டாய நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
வரும் புனற்பொன்னி நாட்டு ஒரு வாழ்பதி
கரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட
விரும்பு மென்கண் உடையவாய் விட்டு நீள்
கரும்பு தேன் பொழியும் கணமங்கலம்
செந்நெல்லார் வயல் காட்ட செந்தாமரை
முன்னர் நந்துமிழ் முத்தம் சொரிந்திட
துன்னு மள்ளர் கைம் மேற் கொண்டு தோன்றுவார்
மன்னு பங்கய மாநிதி போன்றுள்ளார்
வளத்தில் நீடும் பதியதன் கண்வரி
உளர்த்தும் ஐம்பால் உடையோர் முகத்தினும்
களத்தின் மீதும் கயல்பாய் வயல் அயல்
குளத்தும் நீளும் குழையுடை நீலங்கள்
அக்குல பதி தன்னில் அறநெறி
தக்க மாமனை வாழ்க்கையில் தங்கினார்
தொக்க மாநிதி தொன்மையில் ஓங்கிய
மிக்க செல்வத்து வேளாண் தலைமையார்
தாயனார் எனும் நாமம் தரித்துள்ளார்
சேய கால தொடர்ந்து தெளிவிலா
மாயனார் மண் கிளைத்து அறியாத அ
தூய நாண் மலர பாதம் தொடர்ந்துளார்
மின்னும் செஞ்சடை வேதியர்க்காம் என்று
செ நெல் இன்னமுதோடு செங்கீரையும்
மன்னு பைந்துணர் மாவடுவும் கொணர்ந்து
அன்ன என்றும் அமுது செய்விப்பாரால்
இந்த நன்னிலை இன்னல் வந்து எய்தினும்
சிந்தை நீங்கா செயலின் உவந்திட
முந்தை வேத முதல்வர் அவர் வழி
வந்த செல்வம் அறியாமை மாற்றினார்
மேவு செல்வம் களிறு உண் விளங்கனி
ஆவதாகி அழியவும் அன்பினால்
பாவை பங்கர்க்கு முன்பு பயின்ற அ
தாவில் செய்கை தவிர்ந்திலர் தாயனார்
அல்லல் நல்குரவு ஆயிட கூலிக்கு
நெல் அறுத்து மெ நீடிய அன்பினால்
நல்ல செந்நெலிற் பெற்றன நாயனார்க்கு
ஒல்லை இன்னமுதா கொண்டு ஒழுகுவார்
சாலி தேடி அறுத்தவை தாம் பெறும்
கூலி எல்லாம் திரு அமுதா கொண்டு
நீல நெல்லரி கூலி கொண்டு உண்ணும் நாள்
மால் அயற்கு அரியார் அது மாற்றுவார்
நண்ணிய வயல்கள் எல்லாம் நாள் தொறும் முன்னம் காண
வண்ணவார் கதிர செஞ்சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தை
அண்ணலார் அறுத்த கூலி கொண்டு இஃது அடியேன் செய்த
புண்ணியம் என்று போத அமுது செய்விப்பார் ஆனார்
வைகலும் உணவு இலாமை மனை படப்பையினிற் புக்கு
நைகரம் இல்லா அன்பின் நங்கை கைஅடகு கொய்து
பெய்கலத்து அமைத்து வைக்க பெருந்தகை அருந்தி தங்கள்
செய்கடன் முட்டா வண்ண திருப்பணி செய்யும் நாளில்
மனை மருங்கு அடகு மாள வட நெடு வான மீனே
அனையவர் தண்ணீர் வார்க்க அமுது செய்து அன்பனாரும்
வினை செயல் முடித்து செல்ல மேவு நாள் ஒருநாள் மிக்க
முனைவனார் தொண்டர்க்கு அங்கு நிகழ்ந்தது மொழி பெற்றேன்
முன்பு போல் முதல்வனாரை அமுது செய்விக்க மூளும்
அன்பு போல் தூய செந்நெல் அரிசி மாவடு மென் கீரை
துன்புபோம் மனத்து தொண்டர் கூடையில் சுமந்து போக
பின்புபோம் மனைவியார் ஆன் பெற்ற அஞ்சு ஏந்தி சென்றார்
போதரா நின்ற போது புலர்ந்து கால் தளர்ந்து தப்பி
மாதரார் வருந்தி வீழ்வார் மட்கல மூடுகையால்
காதலால் அணைத்தும் எல்லாம் கமரிடை சிந்த கண்டு
பூதநாயகர் தம் தொண்டர் போவது அங்கு இனி ஏன் என்று
நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்த
அல்லல் தீர்த்தாள வல்லார் அமுது செய்து அருளும் அப்பேறு
எல்லையில் தீமையேன் இங்கு எய்திட பெற்றிலேன் என்று
ஒல்லையில் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார்
ஆ கொள்ளும் ஐயர் தாம் இங்கு அமுது செய்திலர் கொல் என்னா
பூட்டிய அரிவாள் பற்றி புரையற விரவும் அன்பு
காட்டிய நெறியின் உள்ள தண்டு அற கழுத்தினோடே
ஊட்டியும் அரிய நின்றார் உறுபிற பரிவார் ஒத்தார்
மாசறு சிந்தை அன்பர் கழுத்து அரி அரிவாள் பற்றும்
ஆசில்வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர்
வீசிய செய்ய கையும் மாவடு விடேல்
ஓசையும் கமரில் நின்றும் ஒக்கவே எழுந்த அன்றே
திருக்கை சென்று அரிவாள் பற்றும் திண் கையை பிடித்த போது
வெருக்கொடு தம் கூறு நீங்க வெவ் வினை விட்டு நீங்கி
பெருக்கவே மகிழ்ச்சி நீட தம்பிரான் பேணி தந்த
அரு பெரும் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று
அடியனேன் அறிவு இலாமை கண்டும் என் அடிமை வேண்டி
படி மிசை கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே போற்றி
துடியிடை பாக மான தூயநற் சோதி போற்றி
பொடியணி பவள மேனி புரி சடை புராண போற்றி
என்றவர் போற்றி செய்ய இடப வாகனரா தோன்றி
நன்று நீ புரிந்த செய்கை நன்னுதல் உடனே கூட
என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ண
மன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்து சென்றார்
பரிவு உறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ள
பெரியவர் அமுது செ பெற்றிலேன் என்று மாவின்
வரிவடு விடேலெனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி
அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம்
முன்னிலை கமரே யாக முதல்வனார் அமுது செ
செந்நெலின் அரிசி சிந்த செவியுற வடுவின் ஓசை
அ நிலை கேட்ட தொண்டர் அடி இணை தொழுது வாழ்த்தி
மன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவாறு வழுத்தல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்
ஆனாய நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
மாடு விரை பொலி சோலையின் வான் மதிவந்து ஏற
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்தேற
நீடு வளத்தது மேன்மழ நாடெனும் நீர் நாடு
நீவி நிதம்ப உழத்தியர் நெ குழல் மை சூழல்
மேவி உறங்குவ மென் சிறை வண்டு விரை கஞ்ச
பூவில் உறங்குவ நீள் கயல் பூமலி தேமாவின்
காவின் நறுங் குளிர் நீழல் உறங்குவ கார் மேதி
வன்னிலை மள்ளர் உகைப்ப எழுந்த மரக்கோவை
பன் முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால்
அன்னம் மருங்குறை தண் துறை வாவி அதன் பாலை
கன்னல் அடும் புகையால் முகில் செய்வ கருப்பாலை
பொங்கிய மாநதி நீடலை உந்து புனற் சங்கம்
துங்க இலை கதலி புதல் மீது தொடங்கி போய்
தங்கிய பாசடை சூழ் கொடி யூடு தவழ்ந்தேறி
பைங்கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளையென
அல்லி மலர பழனத்து அயல் நாகிள ஆன் ஈனும்
ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழக்கன்று
கொல்லை மடக்குல மான் மறியோடு குதித்து ஓடும்
மல்கு வளத்தது முல்லை உடுத்த மருங்கோர்பால்
கண் மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லை
தண் நகை வெண் முகை மேவும் சுரும்பு தடஞ் சாலி
பண்ணை எழுங்கயல் பாய இருப்பன காயாவின்
வண்ண நறுஞ்சினை மேவிய வன் சிறை வண்டானம்
பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் மேல் ஓடும்
வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ நன்னாடாம்
அங்கது மண்ணின் அருங்கலமாக அதற்கேயோர்
மங்கல மானது மங்கலம் ஆகிய வாழ் மூதூர்
ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமே
தப்பில் வளங்கள் பெருக்கி அறம்புரி சால்போடும்
செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர் மேவும்
அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர்
ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார்
தூய சுடர்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்
வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின் வினை பாலில்
பேயுடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார்
ஆனிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறி
கானுறை தீய விலங்குறு நோய்கள் கடிந்து எங்கும்
தூநறு மென்புல் அருந்தி விரும்பிய தூ நீறுண்டு
ஊனமில் ஆயம் உலப்பில பல்க அளித்து உள்ளார்
கன்றொடு பால் மறை நாகு கறப்பன பாலாவும்
புன்றலை மென்சிலை ஆனொடு நீடு புனிற்றாவும்
வென்றி விடை குலமோடும் இனந்தொறும் வெவ்வேறே
துன்றி நிறைந்துள சூழல் உடன் பல தோழங்கள்
ஆவின் நிரை குலம் அப்படி பல்க அளித்தென்றும்
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும்
காவலர் தம் பெருமான் அடி அன்புறு கானத்தின்
மேவு துளை கருவி குழல் வாசனை மேற்கொண்டார்
முந்தை மறை நூன்மரபின் மொழிந்த முறை எழுந்தவேய்
அந்த முதல் நாலிரண்டில் அரிந்து நரம்புறு தானம்
வந்ததுளை நிரையாக்கி வாயு முதல் வழங்கு துளை
அந்தமில் சீர் இடை ஈட்டின் அங்குலி எண் களின் அமைத்து
எடுத்த குழற் கருவியினில் எம்பிரான் எழுத்து அஞ்சும்
தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து
அடுத்தசரா சரங்களெலாம் தங்கவரு தங்கருணை
அடுத்த இசை அமுது அளித்து செல்கின்றார் அங்கு ஒரு நாள்
வாச மலர பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்த
தேசுடைய சிகழிகையிற் செறி கண்ணி தொடை செருகி
பாசிலை மென் கொடியின் வடம் பயில நறு விலி புனைந்து
காசுடை நாண் அதற்கயலே கருஞ்சுருளின் புறங்காட்டி
வெண் கோடல் இலை சுருளிற் பைந்தோட்டு விரை தோன்றி
தண் கோல மலர் புனைந்த வடி காதின் ஒளி தயங்க
திண் கோல நெற்றியின் மேல் திரு நீற்றின் ஒளி கண்டோ ர்
கண் கோடல் நிறைந்தாரா கவின் விளங்க மிசை அணிந்து
நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கி
செறிந்த புனை வடம் தாழ திரள் தோளின் புடை அலங்கல்
அறைந்த சுரும்பு இசை அரும்ப அரையுடுத்த மரவுரியின்
புறந்தழையின் மலி தானை பூம் பட்டு பொலிந்து அசைய
சேவடியில் தொடு தோலும் செங்கையினில் வெண் கோலும்
மேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க வினை செய்யும்
காவல்புரி வல்லாயர் கன்றுடை ஆன் நிரை சூழ
பூவலர் தார கோவலனார் நிரை காக்க புறம் போந்தார்
நீலமா மஞ்ஞை ஏங்க நிரை கொடி புறவம் பாட
கோல வெண் முகையேர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட
ஆலு மின்னிடை சூழ் மாலை பயோதரம் அசைய வந்தாள்
ஞால நீடு அரங்கில் ஆட கார் எனும் பருவ நல்லாள்
எம்மருங்கு நிரை பரப்ப எடுத்த கோலுடை பொதுவர்
தம்மருங்கு தொழுது அணை தண் புறவில் வருந்தலைவர்
அம்மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மதுவுண்டு
செம்மருந்தண் சுரும்பு சுழல் செழுங் கொன்றை மருங்கு அணைந்தார்
சென்றணைந்த ஆனாயர் செய்த விரை தாமம் என
மன்றல் மலர்த்துனர் தூக்கி மருங்குதாழ் சடையார் போல்
நின்ற நறுங் கொன்றையினை நேர் நோக்கி நின்று உருகி
ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர் பால் மடை திறந்தார்
அன்பூறி மிசை பொங்கும் அமுத இசை குழல் ஒலியால்
வன்பூத படையாளி எழுத்து ஐந்தும் வழுத்தி தாம்
முன்பூதி வரும் அளவின் முறைமையே எவ்வுயிரும்
என்பூடு கரைந்து உருக்கும் இன்னிசை வேய்ங் கருவிகளில்
ஏழு விரல் இடை இட்ட இன்னிசை வங்கியம் எடுத்து
தாழுமலர் வரிவண்டு தாது பிடிப்பன போல
சூழுமுரன்று எழ நின்று தூய பெரும் தனி துளையில்
வாழிய நந்தோன்றலார் மணி அதரம் வைத்தூத
முத்திரையே முதல் அனைத்தும் முறை தானம் சோதித்து
வைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கி
ஒத்த நிலை உணர்ந்து அதற்பின் ஒன்று முதல்படி முறையாம்
அத்தகைமை ஆரோசை அமரோசைகளின் அமைத்தார்
மாறுமுதற் பண்ணின் பின் வளர் முல்லை பண்ணாக்கி
ஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடுந்தானம்
ஆறுலவுஞ் சடை முடியார் அஞ்செழுத்தின் இசை பெரு
கூறிய பட்டடை குரலாங் கொடி பாலையினில் நிறுத்தி
ஆய இசை புகல் நான்கின் அமைந்த வகை
மேய துளை பற்றுவன விடுபனவாம் விரல் நிரையிற்
சேய வொளியிடை அலை திருவாளன் எழுத்தஞ்சும்
தூய இசை கிளை கொள்ளு துறையஞ்சின் முறை விளைத்தார்
மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால்
தந்திரிகள் மெலிவித்தும் சமங்கொண்டும் வலிவித்தும்
அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்தியக்கி
சுந்தர செங்கனிவாயும் துளைவாயும் தொடக்குண்ண
எண்ணிய நூல் பெருவண்ணம் இடை வண்ணம் வனப்பென்னும்
வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில்
நண்ணிய பாணியும் இயலும் தூக்கு நடை முதற்கதியில்
பண்ணமைய எழும் ஓசை எம் மருங்கும் பரப்பினார்
வள்ளலார் வாசிக்கும் மணி துளைவாய் வேய்ங் குழலின்
உள்ளுறை அஞ்செழுத்தாக ஒழுகி மதுர ஒலி
வெள்ளநிறைந்து எவ்வுயிர்க்கும் மேல் அமரர் தருவிளை தேன்
தெள்ளமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது என தேக்க
ஆனிரைகள் அறுகருந்தி அசை விடாது அணைந்து அயர
பால் நுரை வா தாய் முலை பற்றும் இளங்கன்று
தான் உணவு மறந்து ஒழி தட மருப்பின் விடை குலமும்
மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய
ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கணுக
ஊடுசெவி இசை நிறைந்த உள்ளம் ஒடு புள்ளினமும்
மாடுபடிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும்
கூடியவண் கோவலரும் குறை வினையின் துறை நின்றார்
பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார்
மணிவரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார்
தணிவில் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர்
அணிவிசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார்
சுரமகளிர் கற்பக பூஞ்சோலைகளின் மருங்கிருந்து
கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன்
விரவு நறுங்குழல் அலைய விமானங்கள் விரைந்து ஏறி
பரவிய ஏழிசை அமுதம் செவி மடுத்து பருகினார்
நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்திலினால்
மலிவாய்வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும்
சலியாத நிலை அரியும் தடம் கரியும் உடன் சாரும்
புலி வாயின் மருங்கு அணையும் புல்வாய புல்வாயும்
மருவிய கால் விசைத்து அசையா மரங்கள் மலர சினை சலியா
கருவரை வீழ் அருவிகளும் கான்யாறும் கலித்து ஓடா
பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழி புனல் சோரா
இரு விசும்பின் இடை முழங்கா எழுகடலும்
இவ்வாறு நிற்பனமும் சரிப்பனவும் இசை மயமாய்
மெய் வாழும் புலன் கரண மேவிய ஒன்று ஆயினவால்
மொய்வாச நறுங்கொன்றை முடி சடையார் அடி தொண்டர்
செவ்வாயின் மிசை வைத்த திருக்குழல் வாசனை உருக்க
மெய்யன்பர் மனத்து அன்பின் விளைந்த இசை குழல் ஓசை
வையம் தன்னையும் நிறைத்து வானம் தன் வயமாக்கி
பொய் அன்புக்கு எட்டாத பொற் பொதுவில் நடம் புரியும்
ஐயன் தன் திரு செவியின் அருகணைய பெருகியதால்
ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை
தானாய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன்
கானாதி காரணராம் கண்ணுதலார் விடையுகைத்து
வானாறு வந்தணைந்தார் மதி நாறுஞ் சடை தாழ
திசை முழுதுங் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கி
மிசை மிடைந்து வரும் பொழுது வேற்று ஒலிகள் விரவாமே
அசைய எழுங்குழல் நாதத்து அஞ்செழுத்தால் தமை பரவும்
இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர் நின்றார்
முன் நின்ற மழவிடை மேல் முதல்வனார் எப்பொழுதும்
செந்நின்ற மன பெரியோர் திரு குழல் வாசனை கேட்க
இந்நின்ற நிலையே நம்பால் அணைவாய் என அவரும்
அந்நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார்
விண்ணவர்கள் மலர் மாரி மிடைந்து உலகமிசை விளங்க
எண்ணில் அருமுனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த
அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்ல
புண்ணியனார் எழுந்து அருளி பொற் பொதுவின் இடை புக்கார்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
தீது கொள் வினைக்கு வாரோம் செஞ்சடை கூத்தர் தம்மை
காது கொள் குழைகள் வீசும் கதிர் நிலவு இருள் கால் சீப்ப
மாது கொள் புலவி நீக்க மனையிடை இரு கால் செல்ல
தூது கொள்பவராம் நம்மை தொழும்பு கொண்டு உரிமை கொள்வார்
திருச்சிற்றம்பலம்
இலை மலிந்த சருக்கம் முற்றிற்று
சருக்கம் க்கு திருவிருத்தம்
கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்
அருளிச்செய்த
திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்
சேக்கிழார் சுவாமிகள் புராணம்
ன
உ
சிவசிவ
திருச்செந்திலாண்டவன் துணை
கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்
அருளிச்செய்த
திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்
சேக்கிழார் சுவாமிகள் புராணம்
பாயிரம்
விநாயகர்
வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழ
பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்
சபாநாதர்
சீராருஞ் சதுர்மறையும் தில்லைவா ழந்தணரும்
பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த
வாராருங் கடல்புடைசூழ் வையமெலாற் ஈடேற
ஏராரு மணிமன்றுள் எடுத்ததிரு வடிபோற்றி
சிவகாமசுந்தரி
பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்க
சிரந்தழுவு சமயநெறி திருநீற்றின் ஒளிவிளங்க
அரந்தைகெட புகலியர்கோன் அமுதுசெ திருமுலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி
கற்பக விநாயகர்
மலரயனு திருமாலுங் காணாமை மதிமயங்க
புலிமுனியும் பதஞ்சலியுங் கண்டுதொழ புரிசடையார்
குலவுநட தருந்தில்லை குடதிசை கோபுரவாயில்
நிலவியகற் பகக்கன்றின் நிரைமலர்த்தா ளிணைபோற்றி
சுப்ரமணியர்
பாறுமுக மும்பொருந்த பருந்துவிரு துணக்கழுகு
நூறுமுக மாயணைந்து நூழில்படு களம்புகுத
மாறுமுக தருநிருதர் மடியவடி வேலெடுத்த
ஆறுமுகன் திருவடித்தா மறையிணைக ளவைபோற்றி
சைவ சமயாசாரியார்
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலுர் வன்றொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாத வூரர்திரு தாள்போற்றி
திருத்தொண்டர் சேக்கிழார்
தில்லைவாழ் அந்தணரே முதலாக சீர்படைத்த
தொல்லையதா திருத்தொண்ட தெகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர சேக்கிழார ரடிபோற்றி
நூற்பெயர்
தாய்மலர்ந்த முகத்தினளா தழுவிமுலை தரவந்த
நோய்மலர்ந்த பிறவிதொறு நுழையாமல் உலகு
தீமலர்ந்த சடைக்கூத்தர் திருவருளாற் சேக்கிழார்
வாய்மலர்ந்த புராணத்தின் வரலாறு விரித்துரைப்பாம்
அவையடக்கம்
ஊர்கடலை இவனெனவ துதித்தநான் ஓங்குதமிழ்
நூற்கடலை கரைகண்டு நுவலநினை குமதுதிரு
பாற்கடலை சிற்றெரும்பு பருகநினை பதுபோலும்
நீர்கடல்சூழ் மண்ணுலகை நிறுக்கநினை குமதொக்கும்
தேவுடனே கூடியசொல் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த
பாவுடனே கூடியஎ பருப்பொருளும் விழுப்பொருளாம்
கோவுடனே கூடிவருங் குருட்டாவும் ஊர்புகுதும்
பூவுடனே கூடியநார் புனிதர்முடி கணியாமால்
இஃது உமாபதிசிவம் என்னும் புலவர் இயற்றியது என்பர்
நூல்
பாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும்
பாளைவிரி மணங்கமழ் பூஞ்சேநலை தோறும்
காலாறு கோலிஇசை பாடநீடும் களிமயில்நின்
றாடும்இயல் தொண்டை நாட்டுள்
நாலாறு கோட்டத்து புலியூர கோட்டம்