சித்தர் பாடல்கள் தொகுப்பு
பட்டினத்து பிள்ளையார் பட்டினத்தார் அருளியது

















©







திருப்பாடல் திரட்டு
பட்டினத்து பிள்ளையார் பட்டினத்தார் அருளியது
திருவேகம்பமாலை
திருத்தில்லை
முதலாவது கோயிற்றிருவகவல்
இரண்டாவது கோயிற்றிருவகவல்
மூன்றாவது கோயிற்றிருவகவல்
நான்காவது கச்சி திருஅகவல்
அருட்புலம்பல் முதல்வன் முறையீடு
அருட்புலம்பல் மகடூஉ முதலாக உள்ளது

திருவேகம்பமாலை
அறந்தா னியற்று மவனிலுங்கோடி யதிகமில்ல
துறந்தான் அவனின் சதகோடி யுள்ளத்துறவுடையோன்
மறந்தா னறக்காற் றறிவோடிருந்திரு வாதனையற்று
இறந்தான் பெருமையையென் சொல்லுவேன் கச்சியேகம்பனே
கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார் மயானங் குறுகியப்பால்
எட்டி யடிவைப்ப ரோ யிறைவா கச்சியேகம்பனே
கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து
அப்புறங்தன்னி லசையாமல் முன்வை தயல்வளவில்
ஒப்புடன்சென்று துயில்நீத்து பின்வ துறங்குவளை
எப்படிநான் நம்புவேன் இறைவா கச்சியேகம்பனே
நன்னாரில் பூட்டிய சூத்திரப்பாவை நன்னார்தப்பினால்
நன்னாலுமாடி சலித்திடுமோ அந தன்மையைப்போல்
உன்னால்யானு திரிவதல்லால் மற்றுனை பிரிந்தால்
என்னாலிங் காவதுண்டோ இறைவா கச்சியேகம்பனே
நல்லா ரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும்
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா கச்சியேகம்பனே
பொல்லாதவன் நெறி நில்லாதவன் ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன் கல்வி கல்லாதவன் மெய்யடியவர்பால்
செல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின்திருவடிக்கன்பு
இல்லாதவன் மண்ணிலேன்பிறந்தேன் கச்சியேகம்பனே
பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை இடைநடுவில்
குறிக்குமி செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமரு கென்சொல்லுவேன் கச்சியேகம்பனே
அன்னவிசார மதுவேவிசாரம் அதுவொழிந்தால்
சொன்ன விசார தொலையா விசாரம் நல்தோகையரை
பன்னவிசாரம் பலகால் விசாரமி பாவிநெஞ்சக்கு
என்னவிசாரம் வைத்தாய் இறைவா கச்சியேகம்பனே
கல்லா பிழையும் கருதா
நில்லா பிழையு நினையா பிழையும் நின்னஞ்செழுத்தை
சொல்லா பிழையு துதியா தொழா
எல்லா பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே
மாயந போரையும் மாயா மலமெனும் மாதரையும்
வீயவிட்டோடி வெளியே புறப்பட்டு மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையை கூடிப்பின் தாயைமற
தேயும தேநிட்டை யென்றா னெழிற் கச்சியேகம்பனே
வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கிற்சென்று
சரிக்கோதுவேன் எழுத்தஞ்சுஞ் சொலேன் தமியேனுடலம்
நரிக்கோ கழுகுபருந்தினுக்கோ வெய்யநாய் தனக்கோ
எரிக்கோ இரையெதற்கோ இறைவா கச்சியேகம்பனே
காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமற் ககமென்று நாடுமி துர்ப்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன் இறைவா கச்சியேகம்பனே
ஊருஞ் சதமல்ல உற்றார்
பேருஞ் சதமல்ல பெண்டீர்
சீருஞ் சதமல்ல செல்வஞ்
யாருஞ் சதமல்ல நின்தாள் சதங்கச்சி யேகம்பனே
சீறும்வினையது பெண்ணுரு வாகி திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சியு மாகி கொடுமையினால்
பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங்கரைகண்டி லேன் இறைவா கச்சியேகம்பனே
பொருளுடை யோரை செயலினும் வீரரை போர்க்களத்தும்
தெருளுடை யோரை முகத்தினு தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடை யோரை தவத்திற் குணத்தி லருளிலன்பில்
இருளுறு சொல்லினு காணத்தகுங் கச்சி யேகம்பனே
பருத்தி பொதியினைப்போலே வயிறுபருக்க தங்கள்
துருத்திக்கு அறுசுவை போடுகின்றார் துறந்தோர்தமக்கு
வருத்தி யமுதிடமாட்டார் அவரையிம் மாநிலத்தில்
இருத்தி கொண்டேனிருந்தா யிறைவா கச்சியேகம்பனே
பொல்லா விருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்கு
அல்லா யிருந்திடு மாறொக்குமே அறிவோ ருளத்தில்
வல்லா ரறியார் தமக்கு மயக்கங் கண்டாய்
எல்லாம் விழி கேயிறைவா கச்சி யேகம்பனே
வாதுக்கு சண்டைக்கு போவார் வருவார் வழக்குரைப்பர்
தீது குதவியுஞ் செய்திடுவார் தினந்தேடி ஒன்று
மாது களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார் இறைவா கச்சியேகம்பனே
ஓயாமற் பொய்சொல்வர் நல்லோரை நிந்திப்பர் உற்றுப்பெற்ற
தாயாரை வைவர் சதியாயிரஞ் செய்வார் சாத்திரங்கள்
ஆயார் பிறர்க்குபகாரஞ் செய்யார் தமையண்டி னர்க்கொன்
றீயா ரிருந்தென்ன போயென்னகாண் கச்சி யேகம்பனே
அப்பென்றும் வெண்மையதாயினும் ஆங்கந்நிலத்தியல் பா
தப்பின்றியே குணவேற்றுமை தான்பல சார்தலினால்
செப்பில் அபக்குவம் பக்குவமாயுள்ள சீவரிலும்
இப்படி யே நிற்பன் எந்தைபிரான் கச்சியேகம்பனே
நாயா பிறந்திடில் நல்வேட்டை யாடிநயம் புரியும்
தாயார வயிற்றில் நாரா பிறந்தபின் கம்பன்னரா
காயாமரமும் வறளாங் குளமும் கல்லாவு மன்ன
ஈயாமனிதரை யேன் படைத்தாய் கச்சி யேகம்பனே
ஆற்றில் கரைத்த புளியாக்கிடாமலென் னன்பை யெல்லாம்
போற்றி திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெரித்து
கூற்றை பணிகொளு தாளுடையாய் குன்றவில்லுடையாய்
ஏற்று கொடியுடையாய் இறைவா கச்சியேகம்பனே
பெண்ணாகி வந்தொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னை
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கி கடிதடத்து
புண்ணாங் குழியிடை தள்ளி என்போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமற தேனிறைவா கச்சியேகம்பனே
நாவார வேண்டு மிதஞ்சொல்லுவார் உனைநான் பிரிந்தாற்
சாவேனென் றேயிருந்தொக்கவுண் பார்கள்கைதான் வறளின்
போய்வாரு மென்று நடுத்தலை கேகுட்டும் பூவையர்க்கு
ஈவார் தலைவிதியோ இறைவா கச்சியேகம்பனே
கல்லார் சிவகதை நல்லோர் தமக்கு கனவிலும்மெய்
சொல்லார் பசித்தவர கன்னங் கொடார் குருசொன்னபடி
நில்லார் அறத்தை நினையார் நின்நாமம் நினைவில்சற்றும்
இல்லா ரிருந்தென் இறந்தென் புகல் கச்சியேகம்பனே
வானமு தத்தின் சுவையறி யாதவர் வன்கனியின்
தானமு தத்தின் சுவையெண்ணல் போல தனித்தனியே
தேனமு தத்தின் தெளிவாய ஞானஞ் சிறிதுமில்லார
ஈனமு தச்சுவை நன்று அல்லவோ கச்சியேகம்பனே
ஊற்றை சரீரத்தை யாபாச கொட்டிலை யூன்பொதிந்த
பீற்றற் து ருத்தியை சோறிடு தோற்பையை பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தை காதல் செய்தே
யேற்றி திரிந்துவி டேனிறைவா கச்சியேகம்பனே
சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வருந்தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியை கேட்டிடு தீங்குகள் ஆயவுமற்று
எல்லா பிழையும் பொறுத்தருள் வாய் கச்சியேகம்பனே
முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற்கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டு பொட்டிட்டு பித்தளையோலை விளக்கியிட்டு
பட்ட பகலில் வெளி கேசெயும் பாவையர்மேல்
இட்டத்தை நீதவிர்ப்பாய் இறைவா கச்சியேகம்பனே
பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை
மறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகி புன்மாதருக்குள்
பறந்துழன்றே தடுமாறிப்பொன் தேடி பாவையர்க்கீந்து
இறந்திடவோ பணித்தாய் இறைவா கச்சியேகம்பனே
பூதங்களற்று பொறியற்று சாரைம் புலன்களற்று
பேதங்குணமற்று பேராசை தானற்று பின்முன்அற்று
காதங்கரணங்களும் அற்ற ஆனந்த காட்சியிலே
ஏதங் களைந்திரு பேனிறைவா கச்சியேகம்பனே
நல்லா யெனக்கு மனுவொன்று தந்தருள் ஞானமிலா
பொல்லா எனைக்கொன்று போடும்பொழுதியல் பூசைசெபஞ்
சொல்லாநற் கோயில்நியமம் பலவகை தோத்திரமும்
எல்லா முடிந்தபின் கொல்லுகண்டாய் கச்சியேகம்பனே
சடக்கடத்து இரைதேடி பலவுயிர் தம்மைக்கொன்று
விடக்கடித்து கொண்டிறுமா திருந்து மிகமெலிந்து
படங்கடி தின்றுழல்வார்கள் தமைக்கரம் பற்றிநமன்
இடக்கடிக்கும் பொழுதேது செய்வார் கச்சியேகம்பனே
நாறுமுடலை நரிப்பொதி சோற்றினை நான்தினமுஞ்
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தை தோகையர்தம்
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா கச்சியேகம்பனே
சொக்கிட்டு அரண்மனை புக்குள்திருடிய துட்டர்வந்து
திக்குற்ற மன்னரை கேட்பதுபோல் சிவநிந்தைசெய்து
மிக்கு குருலிங்க சங்கமம்நிந்தித்து வீடிச்சிக்கும்
எக்கு பெருந்தவர்க்கென் சொல்லுவேன் கச்சியேகம்பனே
விருந்தாக வந்தவர் தங்களு கன்னமிகக்கொடுக்க
பொருந்தார் வளம்பெற வாழ்வார்நின் நாமத்தைப்போற்றி நித்தம்
அருந்தா முலைப்பங்க ரெண்ணாதபாதகர் அம்புவியில்
இருந்தாவதேது கண்டாய் இறைவா கச்சியேகம்பனே
எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெ குள்ளபடி
வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கி
சொல்லான் மலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப்பின்
எல்லாம் சிவன்செயலே என்பார்காண் கச்சியேகம்பனே
பொன்னைநினைந்து வெகுவாக தேடுவர் பூவையன்னாள்
தன்னைநினைந்து வெகுவாய் உருகுவார் தாரணியில்
உன்னை நினைந்திங் குனைப்பூசியாத உலுத்தரெல்லாம்
என்னையிருந்து கண்டாய் இறைவா கச்சியேகம்பனே
கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக்குண்டரை காமுகரை
கொடும்பாவமே செய்யும் நிர்மூடர்தம்மை குவலயத்துள்
நெடும்பனைபோல வளர்ந்து நல்லோர் தம்நெறியறியா
இடும்பரை என்வகுத்தாய் இறைவா கச்சியேகம்பனே
கொன்றேன் அனேகமுயிரை எலாம்பின்பு கொன்றுகொன்று
தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர்கவென்றே
நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம்நீபொறுப்பாய்
என்றே யுனைநம்பினேன் இறைவா கச்சியேகம்பனே
ஊரிருந்தென்ன நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள
பேரிருந்தென்ன பெற்றதாய் இருந்தென் மடப்பெண்கொடியாள்
சீரிருந்தென்ன சிறப்பிரு தென்ன இத்தேயததினில்
ஏரிருந்தென்ன வல்லாய் இறைவா கச்சியேகம்பனே
வில்லால் அடிக்க செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லால் எறி பிரம்பால் அடி களிவண்டுகூர்ந்து
அல்லார் பொழில்தில்லை அம்பலவாணர்க்குஓர் அன்னைபிதா
இல்லாததால் அல்லவோ இறைவா கச்சிஏகம்பனே
திருவேகம்பவிருத்தம்
அன்னை எத்தனை
அப்பன் எத்தனை
பின்னை எத்தனை
பிள்ளை எத்தனை
முன்னை எத்தனை
மூடனாயடி யேனும றிந்திலேன்
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ
என்செய் வேன் கச்சியேகம்ப நாதனே

திருத்தில்லை
காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தணித்து செத்து
போம்பிணம் தன்னை திரளாகக்கூடி புரண்டினிமேற்
சாம்பிணம் கத்துதையோ என்செய்வேன் தில்லைச்சங்கரனே
சோறிடும்நாடு துணிதருங் குப்பை தொண்டன்பரைக்கண்டு
ஏறிடுங்கைகள் இறங்கிடு தீவினை எப்பொழுதும்
நீறிடும் மேனியர் சிற்றம்பலவர் நிருத்தம்கண்டால்
ஊறிடுங் கண்கள் உருகிடும்நெஞ்சமென் னுள்ளமுமே
அழலுக்குள்வெண்ணெய் எனவே உருகி பொன்னம்பலத்தார்
நிழலுக்குள் நின்றுதவம் உஞற்றாமல் நிட்டூரமின்னார்
குழலுக்கிசைந்த வகைமாலை கொண்டு குற்றேவல்செய்து
விழலுக்கு முத்துலை இட்டிறைத்தேனென் விதிவசமே
ஓடாமற் பாழுக்கு உழையாமல் ஓரமுரைப்பவர்பால்
கூடாமல் நல்லவர்கூட்டம் விடாமல் வெங்கோபம்நெஞ்சில்
நாடாமல் நன்மைவழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
தேடாமல் செல்வ தருவாய் சிதம்பரதேசிகனே
பாராம லேற்பவர கில்லையென்னாமற் பழுதுசொல்லி
வாரமற் பாவங்கள் வந்தணுகாமல் மனமயர்ந்து
பேராமற் சேவைபுரியாம லன்புபெறா தவரை
சேராமற் செல்வந்தருவாய் சிதம்பர தேசிகனே
கொல்லாமற் கொன்றதை தின்னாமற் குத்திரங்கோள்கள்
கல்லாமற் கைதவரோ டிணங்காமற் கனவினும்பொய்
சொல்லாமற் சொற்களை கேளாமற் றோகையர்மாயையிலே
செல்லாமற் செல்வ தருவாய் சிதம்பர தேசிகனே
முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டுபின்னுமிந்த
பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னினம்பலவ
ரடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே யறிவாரில்லையே
காலையுபாதி மலஞ்சல மாமன்றி கட்டுச்சியிற்
சாலவுபாதி பசிதாக மாகுமுன் சஞ்சிதமாம்
மாலையுபாதி துயில்காம மாமிவை மாற்றிவிட்டே
ஆலமுகந்தரு ளம்பலவா என்னை யாண்டருளே
ஆயும்புகழ்ந்தில்லை யம்பலவாண ரருகிற் சென்றாற்
பாயுமிடபங் கடிக்குமரவம் பின்பற்றி சென்றாற்
பேயுங்கணமும் பெருந்தலை பூதமும் பின்தொடரும்
போயென்செய்வாய் மனமே பிணக்காடவர் போமிடமே
ஓடுமெடுத்தத ளாடையுஞ் சுற்றி யுலாவிமெள்ள
வீடுகடோறும் பலிவாங்கியே விதி யற்றவர்போ
லாடுமரு கொண்டிங்கு அம்பலத்தேநிற்கு மாண்டிதன்னை
தேடுங் கணக்கென்னகாண் சிவகாம சவுந்தரியே
ஊட்டுவிப்பானு முறங்குவிப்பானுமிங் கொன்றோ டொன்றை
மூட்டுவிப்பானு முயங்குவிப்பானு முயன்ற வினை
காட்டுவிப்பானு மிருவினை பாச கயிற்றின்வழி
யாட்டுவிப்பானு மொருவனுண் டேதில்லை யம்பலத்தே
அடியார கெளியவ ரம்பலவாண ரடிபணிந்தால்
மடியாமற்செல்வ வரம்பெறலாம் வையம் ஏழளந்த
நெடியோனும் வேதனுங்காணாத நித்த நிமலனரு
குடிகாணு நாங்களவர்காணு மெங்கள் குலதெய்வமே
தெய்வ சிதம்பரதேவா உன்சித்த திரும்பிவிட்டாற்
பொய்வைத்த சொப்பனமா மன்னர்வாழ்வும் புவியுமெங்கே
மெய்வைத்த செல்வமெங்கே மண்டலீகர்தம் மேடையெங்கே
கைவைத்த நாடகசாலையெங்கே இது கண்மயக்கே
உடுப்பானும் பாலன்னமுண்பானு முய்வித்தொருவர் தம்மை
கெடுப்பானு மேதென்று கேள்விசெய்வானுங் கெதியடங
கொடுப்பானு தேகியென்றேற்பானும் ஏற கொடாமனின்று
தடுப்பானு நீயல்லையோ தில்லையானந தாண்டவனே
வித்தாரம் பேசினுஞ் சோங்கேறினுங் கம்பமீதிருந்து
தத்தாரவென் றோதி பவுரிகொண்டாடினு தம்முன்தம்பி
யத்தாசைபேசினு மாவதுண்டோ தில்லையுண்ணிறைந்த
கத்தாவின் சொற்படியல்லாது வேறில்லை கன்மங்களே
பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும் பிறந்துவிட்டா
லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ
அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல
மறவா திருமனமே யதுகாணநல் மருந்துனக்கே
தவியாதிரு நெஞ்சமே தில்லைமேவிய சங்கரனை
புவியார திருக்கின்ற ஞானாகரனை புராந்தகனை
அவியாவிளக்கை பொன்னம்பல தாடியை யைந்தெழுந்தாற்
செவியாமல் நீ£செபித்தாற் பிறவாமுத்தி சித்திக்குமே
நாலின் மறைப்பொரு ளம்பலவாணரை நம்பியவர்
பாலிலொருதரஞ் சேவிக்கொணா திருப்பார கருங்கல்
மேலிலெடுத்தவர் கைவிலங்கை தைப்பர் மீண்டுமொரு
காலினிறுத்துவர் கிட்டியு தாம்வந்து கட்டுவரே
ஆற்றோடு தும்பை யணிந்தாடும் அம்பலவாணர்தம்மை
போற்றாதவர்க்கு அடையாளமுண் டேயிந்த பூதலத்திற்
சோற்றாவி யற்றுச்சுகமற்று சுற்ற துணியுமற்றே
ஏற்றாலும் பிச்சைகிடையாம லேக்கற் றிருப்பார்களே
அத்தனை முப்பத்து முக்கோடி தேவர கதிபதியை
நித்தனை அம்மை சிவகாமசுந்தரி நேசனை யெம்
கூத்தனை பொன்னம் பலத்தாடு மையனை காணக்கண்கள்
எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றவே

முதலாவது கோயிற்றிருவகவல்
திருமண்டில ஆசிரப்பா
நினைமின் மனனே
சிவபெரு மானை செம்பொனம் பலவனை
நினைமின் மனனே
அலகை தேரி னலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோம் பற்க
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும் மறந்தன வுணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்
அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம்
என்றிவை யனைத்து முணர்ந்தனை அன்றியும்
பிறந்தன பிறவிக
கொன்றனை யனைத்தும் அனைத்துநினை கொன்றன
தின்றன யனைத்தும் அனைத்துநினை
பெற்றன யனைத்தும் அனைத்துநினை
ஓம்பினை யனைத்தும் அனைத்துநினை யோம்பின
செல்வத்து களித்தனை தரித்திர தழுகினை
சுவர்க்க திருந்தினை நரகிற் கிடந்தனை
இன்பமும் துன்பமும் இருநில தருந்தினை
ஒன்றென் றெழியா துற்றனை அன்றியும்
புற்பத குரம்பை துச்சி லொதுக்கிடம்
என்ன நின்றியங்கு மிருவினை கூட்டை
கல்லினும் வலிதா கருதினை இதனுள்
பீளையு நீரும் புலப்படு மொருபொறி
மீளுங் குறும்பி வெளிப்படு மொருபொறி
சளியு நீரு தவழு மொருபொறி
உமிழ்நீர் கோழை யழுகு மொறிபொறி
வளியு மலமும் வழங்கு மொருவழி
சலமுஞ் சீயுஞ் சரியு மொருவழி
உள்ளுற தொடங்கி வெளிப்பட நாறுஞ்
சட்டக முடிவிற் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை யுள்ளுற தேர்ந்து
கடிமலர கொன்றை சடைமுடி கடவுளை
ஒழிவருஞ் சிவபெரும் போகவின் பத்தை
நிழலென கடவா நீர்மையடு பொருந்தி
எனதற நினைவற இருவனை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபர மறஒரு
முதல்வனை தில்லையுண் முளைத்தெழுஞ் சோதியை
அம்பல தரசனை ஆனந்த கூத்தனை
நெருப்பினி லரக்கென நெக்குநெ குருகி
திருச்சிற் றம்பல தொளிருஞ் சிவனை
நினைமின் மனனே
சிவபெருமானை செம்பொனம் பலவனை
நினைமின் மனனே

இரண்டாவது கோயிற்றிருவகவல்
காதள வோடிய கலக பாத
கன்னியர் மருங்கிற் புண்ணுட னாடுங்
காதலுங் கருத்து மல்லால்நின் னிருதாள்
பங்கயஞ் சூட பாக்கியஞ் செய்யா
சங்கடங் கூர்ந்த தமியேன் பாங்கிரு
தங்கோ டிங்கோ டலமருங் கள்வர்
ஐவர் கலகமி டலைக்குங் கானகம்
சலமல பேழை யிருவினை பெட்டகம்
வாதபி தங்கோழை குடிபுகுஞ் சீறூர்
ஊத்தை புன்தோ லுதிர கட்டளை
நாற்ற பாண்டம் நான்முழ தொன்பது
பீற்ற துண்டம் பேய்ச்சுரை தோட்டம்
அடலை பெரிய சுடலை திடருள்
ஆசை கயிற்றி லாடும் பம்பரம்
ஓயா நோய்க்கிடம் ஓரு மரக்கலம்
மாயா விகாரம் மரண பஞ்சரம்
சோற்று துருத்தி தூற்றம் பத்தம்
காற்றில் பறக்கும் காண பட்டம்
விதிவழி தருமன் வெட்டுங் கட்டை
சதுர்முக பாணன் தைக்குஞ் சட்டை
கனலி லிடுசில விருந்து
கா கனலிற் கருகுஞ் சருகு
கிருமி கிண்டுங் கிழங்கஞ் சருமி
பாவக்கொழு தேறுங் கவைக்கொழு கொம்பு
மணமாய் நடக்கும் வடிவின் முடிவிற்
பிணமா கிடக்கும் பிண்டம் பிணமேல்
ஊரிற் கிடக்க வொட்டா வுபாதி
காலெதிர் குவித்த பூளை காலை
கதிரெதிர பட்ட கடும்பனி கூட்டம்
அந்தர தியங்கு மிந்திர சாபம்
அதிரு மேக துருவி னருநிழல்
நீரிற் குமிழி நீர்மே லெழுத்து
கண்டுயில் கனவிற் கண்ட காட்சி
அதனினும் பொல்லா மா களங்கம்
அமையு மமையும் பிரானே யமையும்
இமைய வல்லி வாழியென் றேத்த
ஆனந தாண்டவங் காட்டி
ஆண்டுகொண் டருள்கைநின் னருளினு கழகே

மூன்றாவது கோயிற்றிருவகவல்
பாற்கடல் கடை படுங்கடு வெண்ணெயை
திருமிடற் றடக்கிய சிவனே யடைக்கலம்
அடங்கலு மடக்கிடுங் கடுங்கோலை காலனை
காலெடு தடக்கிய கடவுள்நின் னடைக்கலம்
உலகடங் கலும்படை துடையவன் றலைபறித்து
இடக்கையி லடக்கிய இறைவ நின் னடைக்கலம்
செய்யபொன் னம்பல செல்வ நின் னடைக்கலம்
ஐய நின் னடைக்கலம் அடியநின்
மனவழி விலைத்திடுங் கனவெனும் வாழ்க்கையும்
விழுப்பொரு ளறியா வழுக்குறு மனனும்
ஆணவ மலத்துதி தளைந்ததி னுளைத்திடும்
நிணவை புழுவென தெளிந்தெடு சிந்தையும்
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்
தவறும் அழுக்காறும் இவறுபொ சாப்பும்
கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சினம்
இகலும் கொலையும் இழிப்புறு புன்மையுங்
பகையும் அச்சமும் துணிவும் பனிப்பும்
முக்குண மடமையும் ஐம்பொறி மயக்கமும்
இடும்பையும் பிணியு மிடுக்கிய ஆக்கையை
உயிரெனுங் குருருவி டோடுங் குரம்பையை
எலும்பொடு நரம்புகொண் டிடையிற் பிணித்து
கொழுந்தசை வேய்ந்து மொழுக்குவிழுங் குடிலை
செம்பெழு வுதிர சிறுபுழு குரம்பையை
மலவுடற் குடத்தை பலவுடற் புட்டிலை
தொலைவிலா சோற்று துன்ப குழியை
கொலைபடை கலம்பல கிடக்கும் கூட்டை
சலிப்புறு வினைப்பல சரக்கு குப்பையை
கோள்சர கொழுகும் பீறல் கோணியை
கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை
ஐம்புல பறவை யடையும்பஞ் சரத்தை
புலரா கவலை விளைமர பொதும்பை
ஆசை கயிற்றி லாடுபம் பரத்தை
காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை
மக்கள் வினையின் மயங்குங் திகிரியை
கடுவெளி யுருட்டிய சகட காலை
பாவ சரக்கொடு பவக்கடல் புக்கு
கா காற்றெடு தலைப்ப கலங்கி
கெடுவழி கரைசேர் கொடுமர கலத்தை
இருவினை விலங்கொடு மியங்குபுற் கலனை
நடுவன்வ தழைத்திட நடுங்கிடும் யாக்கையை
பிணமென படுத்தியான் புறப்படும் பொழுதுநின்
அடிமலர கமலத்து கபயநின் னடைக்கலம்
வெளியிடை யுருமிடி யிடித்தென வெறித்தெழுங்
கடுநடை வெள்விடை கடவுணின் னடைக்கலம்
இமையா நாட்ட திறையே அடைக்கலம்
அடியார கெளியாய் அடைக்கல மடைக்கலம்
மறையவர் தில்லை மன்று நின் றாடி
கருணை மொண்டலையெறி கடலே அடைக்கலம்
தேவரு முனிவருஞ் சென்றுநின் றேத்து
பாசிழை கொடியடு பரிந்தருள் புரியும்
எம்பெருமா நின்இணை யடிக்கு கபயம்
அம்பல தரசே அடைக்கல முனக்கே

நான்காவது கச்சி திருவகவல்
திருமால் பயந்த திசைமுக னமைத்து
வருமேழ் பிறவியு மானுட துதித்து
மலைமகள் கோமான் மலரடி யிறைஞ்சி
குலவிய சிவபதங் குறுகா தவமே
மாதரை மகிழ்ந்து காதற் கொண்டாடும்
மானிடர கெல்லாம் யானெடு துரைப்பேன்
விழிவெளி மாக்கள் தெளிவுற கேண்மின்
முள்ளுங் கல்லு முயன்று நடக்கும்
உள்ளங் காலை பஞ்சென வுரைத்தும்
வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால்
துள்ளும் வராலென சொல்லி துதித்தும்
தசையு மெலும்பு தக்ககன் குறங்கை
இசையுங் கதலி தண்டென வியம்பும்
நெடுமுடல் தாங்கி நின்றிடு மிடையை
துடிபிடி யென்று சொல்லி துதித்தும்
மலமும் சலமும் வழும்பு திரையும்
அலையும் வயிற்றை யாலிலை யென்றும்
சிலந்தி போல கிளைத்துமுன் னெழுந்து
திரண்டு விம்மி சீப்பா தேறி
உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி
நகுவார கிடமாய் நான்று வற்றும்
முலையை பார்த்து முளரிமொ டென்றும்
குலையுங் கா குருடர குரைப்பேன்
நீட்டவு முடக்கவு நெடும்பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவு முதவியிங் கியற்றும்
அங்கையை பார்த்து காந்தளென் றுரைத்தும்
வேர்வையு மழுக்கு மேவிய கழுத்தை
பாரினி லினிய கமுகென பகர்ந்தும்
வெப்பு மூத்தையு மேவிய வாயை
துப்பு முருக்கின் தூய்மல ரென்றும்
அன்னமுங் கறியு மசைவி டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீருஞ் சளியு நின்றுநின் றொழுகும்
கூரிய மூக்கை குமிழென கூறியும்
தண்ணீர் பீளை தவிரா தொழுகும்
கண்ணை பார்த்து கழுநீ ரென்றும்
உள்ளுங் குறும்பி யழுகுங் காதை
வள்ளை தண்டின் வளமென வாழ்த்தியும்
கையு மெண்ணெயுங் கலவா தொழியில்
வெய்ய வதரும் பேனும் விளை
தக்க தலையோ டின்முளை தெழுந்த
சிக்கின் மயிரை திரண்முகி லென்றும்
சொற்பல பேசி துதித்து நீங்கள்
நச்சி செல்லு நரக வாயில்
தோலு மிறைச்சியு துதைந்துசீ பாயும்
கா பாழி கருவிளை கழனி
தூமை கடவழி தொளைபெறு வாயில்
எண்சா ணுடம்பு மிழியும் பெருவழி
மண்பாற் காமங் கழிக்கு மறைவிடம்
நச்சி காமுக நாய்தா னென்றும்
இச்சி திருக்கு மிடைகழி வாயில்
திங்க சடையோன் திருவரு ளில்லார்
தங்கி திரியுஞ் சவலை பெருவழி
புண்ணிது வென்று புடவையை மூடி
உண்ணீர் பாயு மோசை செழும்புண்
மால்கொண் டறியா மாந்தர் புகும்வழி
நோய்கொண் டொழியா நுண்ணியர் போம்வழி
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி
பெண்ணு மாணும் பிறக்கும் பெருவழி
மலஞ்சொரி திழியும் வாயிற் கருகே
சலஞ்சொரி திழியு தண்ணீர் வாயில்
இத்தை நீங்க ளினிதென வேண்டா
பச்சிலை யிடினும் பத்தர கிரங்கி
மெச்சி சிவபத வீடருள் பவனை
முத்தி நாதனை மூவா முதல்வனை
அண்ட ரண்டமு மனைத்துள புவனமும்
கண்ட வண்ணலை கச்சியிற் கடவுளை
ஏக நாதனை இணையடி யிறைஞ்சுமின்
போக மாதரை போற்றுத லொழிந்தே

திருச்செங்கோடு
நெருப்பான மேனியர் செங்கோட்டி லாத்தி நிழலருகே
இருப்பார் திருவுள மெப்படியோ இன்னமென்னை யன்னை
கருப்ப சாயக்குழிக்கே தள்ளுமோ கண்ணன் காணரிய
திருப்பாதமே தருமோ தெரியாது சிவன்செயலே

திருவொற்றியூர்
ஐயுந்தொடர்ந்து விழியுஞ் செருகி யறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
செய்யு திருவொற்றி யூருடையீர் திருநீறுமிட்டு
கையுந்தொழப்பண்ணி யைந்தெழு தோதவுங் கற்பியுமே
சுடப்படுவா ரறியார் புரம்முன்றையுஞ் சுட்டபிரான்
திடப்படு மாமதில்தென் ஒற்றியூரன் தெருப்பரப்பில்
நடப்பவர் பொற்பாத நந்தலைமேற்பட நன்குருண்டு
கிடப்பது காண்மனமே விதியேட்டை கிழிப்பதுவே

திருவிடைமருதூர்
காடே திருந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைகற்றி
யோடே யெடுத்தென்ன உள்ளன்பி லாதவ ரோங்குவிண்ணோர்
நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பனு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே
தாயும்பகை கொண்ட பெண்டீர் பெரும்பகை தன்னுடைய
சேயும்பகை யுறவோரும் பகை யிச்செகமும்
ஆயும் பொழுதி லருஞ்செல்வம் நீங்கில் இக்காதலினாற்
தோயுநெஞ்சே மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே

திருக்கழுக்குன்றம்
காடோ செடியோ கடற்புறமோ கனமேமிகுந்த
நாடோ நகரோ நகர்நடுவோ நலமேமிகுந்த
வீடோ புறத்திண்ணையோ தமியேனுடல் வீழுமிடம்
நீடோய் கழுக்குன்றி லீசா உயிர்த்துணை நின்பதமே

திருக்காளத்தி
பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்துப டாடைசுற்றி
முத்தும் பவளமும் பூண்டோடி யாடி முடிந்தபின்பு
செத்து கிடக்கும் பிணத்தரு கேயினி சாம்பிணங்கள்
கத்துங் கணக்கெண்ன காண்கயிலாபுரி காளத்தியே
பொன்னாற் பிரயோசனம் பொன்படை தார்க்குண்டு பொன்படைத்தோன்
தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு அத்தன்மையைப்போ
உன்னாற் பிரயோசனம் வேணதெல்லாம் உண்டுஉனை பணியும்
என்னாற் பிரயோசன மேதுண்டு காளத்தி யீச்சுரனே
வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன் மாதுசொன்ன
சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன் தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே
முப்போது மன்னம் புசிக்கவு தூங்கவு மோகத்தினாற்
செப்போ திளமுலை யாருடன் சேரவுஞ் சீவன்விடு
மப்போது கண்கலக்க படவும் வைத்தா யையனே
எப்போது காணவல்லேன் திருக்காளத்தி யீச்சுரனே
இரைக்கே யிரவும் பகலு திரிந்திங் கிளைத்துமின்னார்
அரைக்கே யவல குழியரு கேயசும் பார்ந்தொழுகும்
புரைக்கே யுழலு தமியேனை யாண்டருள் பொன்முகலி
கரைக்கேகல் லால நிழற்கீ ழமர்ந்தருள் காளத்தியே
நாறுங் குதிரை சலதாரை தோற்புரை நாடொறுஞ்சீழ்
ஊறு மலக்குழி காமத்துவார மொளி திடும்புண்
தேறு தசைப்பிள பந்தரங் கத்துள சிற்றின்பம்விட்டு
ஏறும் பதந்தரு வாய் திருக்காளத்தி யீச்சுரனே

திருக்கைலாயம்
கான்சாயும் வெள்ளி மலைக்கரசே நின்கழல் நம்பினேன்
ஊன்சாயுஞ் சென்ம மொழித்திடு வாய் காவூரனுக்காய்
மான்சாயு செங்கை மழுவலஞ் சாய வனைந்தகொன்றை
தேன்சாய நல்ல திருமேனி சாய்த்த சிவக்கொழுந்தே
இல்ல துறந்து பசிவந்த போதங் கிரந்துநின்று
பல்லுங் கரையற்று வெள்வாயுமாய் ஒன்றிற் பற்றுமின்றி
சொல்லும் பொருளு மிழந்து சுகானந தூக்கத்திலே
யல்லும் பகலு மிருப்பதென்றோ கயிலா யத்தனே
சிந்தனை யற்று பிரியமு தானற்று செய்கையற்று
நினைந்தது மற்று நினையா மையுமற்று நிர்ச்சிந்தனா
தனந்தனி யேயிரு தானந்த நித்திரை தங்குகின்ற
அனந்தலி லென்றிரு பேனத்தனை கயிலாயத்தனே
கையார ஏற்றுநின் றங்ஙன தின்று கரித்துணியை
தையா துடுத்து நின் சந்நிதிக்கே வந்துசந்ததமு
மெய்யார நிற்பணி துள்ளே யுரோமம் விதிர்விதிர்ப்ப
ஐயா வென்று ஓலமிடுவது என்றோ கயிலாயத்தனே
நீறார்த்த மேனி யுரோமஞ்சிலிர துளம் நெக்குநெக்கு
சேறா கசிந்து கசிந்தே யுருகி நின்சீரடிக்கே
மாறா தியானமுற் றானந்த மேற்கொண்டு மார்பிற்கண்ணீர்
ஆறா பெரு கிடைப்ப தென்றோ கயிலாயத்தனே
செல்வரை பின்சென்று சங்கடம் பேசி தினந்தினமும்
பல்லினை காட்டி பரிதவியாமற் பரமானந்தத்தின்
எல்லையிற் புக்கிட வேகாந்தமாய் எனக்காம் இடத்தே
அல்லல் அற்று என்றிரு பேனத்தனே கயிலாயத்தனே
மந்தி குருளை தேனில்லை நாயேன் வழக்கறிந்துஞ்
சிந்திக்குஞ் சிந்தையையான் என்செய்வேன் எனை தீதகற்றி
புந்தி பிரிவிற் குருளையை யேந்திய பூசையைப்போல்
எந்தை குரியவன் காண் அத்தனே கயிலாயத்தனே
வருந்தேன் பிறந்து மிறந்தும் மயக்கும் புலன்வழிபோ
பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன் புகழ் வாரிடத்தில்
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இயலஞ்செழுத்தாம்
அருந்தேன் அருந்துவ நின் அருளால் கயிலாயத்தனே

மதுரை
விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை விட்டுமனம்
திடப்படுமோ நின்னருளின்றியே தினமே அலை
கடப்படுமோ அற்பர்வாயிலிற் சென்று கண்ணீர்ததும்பி
படப்படுமோ சொக்க நாதா சவுந்தர பாண்டியனே

அருட்புலம்பல் முதல்வன் முறையீடு
கன்னிவனநாதா
மூலமறியேன் முடியும் முடிவறியேன்
ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா
அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதற் கெட்டனடா
பிரியா வினைப்பயனால் பித்து பிடித்தனடா
தனுவாதி நான்கும் தானாய் மயங்கினடா
மனுவாதி சத்தி வலையி லகப்பட்டனடா
மாமாயை யென்னும் வனத்தில் அலைகிறண்டா
தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா
கன்னி வனநாதா
மண்ணாசை பட்டேனை மண்ணுண்டு போட்டதடா
பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே
மக்கள்சுற்ற தாசை மறக்கேனே யென்குதே
திக்கரசாம் ஆசையது தீரேனே யென்குதே
வித்தைகற்கு மாசையது விட்டொழியே னென்குதே
சித்துகற்கு மாசை சிதையேனே யென்குதே
மந்திரத்தி லாசை மறக்கேனே யென்குதே
சுந்தரத்தி லாசை துறக்கேனே யென்குதே
கன்னி வனநாதா
கட்டுவர்க்க தாசை கழலேனே யென்குதே
செட்டுதலில் ஆசை சிதையேனே யென்குதே
மாற்றுஞ் சலவை மறக்கேனே யென்குதே
சோற்று குழியுமின்ன தூரேனே யென்குதே
ஐந்து புலனு மடங்கேனே யென்குதே
சிந்தை தவிக்கிறது தேறேனே யென்குதே
கா குரோதம் கடக்கேனே யென்குதே
நாமே அரசென்று நாடோறு மெண்ணுதே
கன்னி வனநாதா
அச்ச மாங்கார மடங்கேனே யென்குதே
கைச்சு மின்னுமான் கழலேனே யென்குதே
நீர்க்குமிழி யாமுடலை நித்தியமா யெண்ணுதே
ஆர்க்கு முயராசை அழியேனே யென்குதே
கண்ணுக்கு கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்
எண்ணு திரமா யிருப்போமென் றெண்ணுதே
கன்னி வனநாதா
அநித்தியத்தை நித்தியமென் றாதரவா யெண்ணுதே
தனித்திருக்கே னென்குதே தனைமறக்கே
நர குழியும்இன்னும் நான்புசிப்பே னென்குதே
உரக படத்தல்கு லுனைக்கெடுப்பே னென்குதே
குரும்பை முலையுங் குடிகெடுப்பே னென்குதே
அரும்புவிழியு மென்ற னாவியுண்பே னென்குதே
மாதருரு கொண்டு மறலிவஞ்ச மெண்ணுதே
ஆதரவு மற்றிங் கரக்கா யுருகிறண்டா
கந்தனை யீன்றருளுங் கன்னிவன நாதா
எந்த விதத்தினா னேறி படருவண்டா
கன்னி வனநாதா
புல்லாகி பூடா புலர்ந்தநாள் போதாதோ
கல்லாய் மரமா கழிந்தநாள் போதாதோ
கீரியா கிடமா கெட்டநாள் போதாதோ
நீரியா யூர்வனவாய் நின்றநாள் போதாதோ
பூதமொடு தேவருமா போனநாள் போதாதோ
வேதனைசெய் தானவராய் வீழ்ந்தநாள் போதாதோ
அன்னை வயிற்றி லழிந்தநாள் போதாதோ
மன்னவனாய் வாழ்ந்து மரித்தநாள் போதாதோ
கன்னி வனநாதா
தாயாகி தாரமா தாழ்ந்தநாள் போதாதோ
சேயா புருடனுமா சென்றநாள் போதாதோ
நோயுண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ
பேயுண்ண பேயா பிறந்தநாள் போதாதோ
ஊனவுடல் கூன்குருடா யுற்றநாள் போதாதோ
ஈன புசிப்பு லிளைத்தநாள் போதாதோ
பட்ட களைப்பபும் பரிதவிப்பும் போதாதோ
கெட்டநாள் கெட்டே னென்றுகேளாதும் போதாதோ
கன்னி வனநாதா
நில்லாமைக்கே யழுது நின்றநாள் போதாதோ
எல்லாரு மென்பார மெடுத்தநாள் போதாதோ
காமன் கணையாற் கடைப்பட்டல் போதாதோ
ஏமன் கரத்தால் நாலுமிடியுண்டல் போதாதோ
நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ
தேன்துளப தான்நேமி தேக்குண்டல் போதாதோ
உருத்திரனார் சங்கார துற்றநாள் போதாதோ
வருத்த மறிந்தையிலை வாவென் றழைத்தையிலை
கன்னி வனநாதா
பிறப்பை தவிர்த்தையிலை பின்னா கொண்டையிலை
இறப்பை தவிர்த்தையிலை என்னென்று கேட்டையிலை
பாச மெரித்தையிலை பரதவிப்பை தீர்த்தையிலை
பூசிய நீற்றை புனையென் றளித்தையிலை
அடிமையென்று சொன்னையிலை அக்கமணி தந்தையிலை
விடுமுலகம் நோக்கி யுன்றன்வேட மளித்தையிலை
உன்னி லழைத்தையிலை ஒன்றாக்கி கொண்டையிலை
நின்னடியார் கூட்டத்தில் நீயழைத்து வைத்தையிலை
கன்னி வனநாதா
ஓங்கு பரத்துள் ஒளித்தவடி யார்க்கடியான்
ஈங்கோ ரடியா னெமக்கென்று உரைத்தையிலை
நா தரித்தையிலை நானொழிய நின்றையிலை
சேம வருளி லெனைச்சிந்தி தழைத்தையிலை
முத்தி யளித்தையிலை மோனங் கொடுத்தையிலை
சித்தி யளித்தையிலை சீராட்டி கொண்டையிலை
தவிர்ப்பை தவிர்த்தையிலை தானாக்கி கொண்டையிலை
அவிப்பரிய தீயாமென் னாசை தவிர்த்தையிலை
கன்னி வனநாதா
நின்ற நிலையில் நிறுத்தியெனை வைத்தையிலை
துன்றுங் கரணமொடு தொக்கழி பார்த்தையிலை
கட்டவுல கக்காட்சி கட்டொழி பார்த்தையிலை
நிட்டையிலே நில்லென்றுநீ நிறுத்தி கொண்டையிலை
கடைக்கண் ணருள்தாடா கன்னிவன நாதா
கெடுக்கு மலமொறுக்கி கிட்டிவர பாரேடா
காதல் தணியேனோ கண்டு மகிழேனோ
சாதல் தவிரேனோ சங்கடந்தான் தீரேனோ
கன்னி வனநாதா
உன்னை துதியேனோ ஊர்நாடி வாரேனோ
பொன்னடியை பாரேனோ பூரித்து நில்லேனோ
ஓங்கார பொற்சிலம்பி னுல்லாசம் பாரேனோ
பாங்கான தண்டை பலமணியும் பாரேனோ
வீரகண்டா மணியின் வெற்றிதனை பாரேனோ
சூரர்கண்டி போற்றுமந்த சுந்தரத்தை பாரேனோ
இடையில் புலித்தோ லிருந்தநலம் பாரேனோ
விடையி லெழுந்தருளும் வெற்றியினை பாரேனோ
கன்னி வனநாதா
ஆனை உரிபோர்த்த அழகுதனை பாரேனோ
மானை பிடித்தேந்து மலர்க்கரத்தை பாரேனோ
மாண்டார் தலைபூண்ட மார்பழகை பாரேனோ
ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனோ
கண்டங் கறுத்துநின்ற காரணத்தை பாரேனோ
தொண்டர் குழுவினின்ற தோற்றமதை பாரேனோ
அருள்பழுத்த மாமதியா மானனத்தை பாரேனோ
திருநயன சடையளிருஞ் செழுங்கொழுமை பாரேனோ
கன்னி வனநாதா
செங்குழியின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ
அங்கனியை வென்ற அதரத்தை பாரேனோ
முல்லை நிலவெறிக்கு மூரலொளி பாரேனோ
அல்லார் புருவ தழகுதனை பாரேனோ
மகரங் கிடந்தொளிரும் வள்ளைதனை பாரேனோ
சிகர முடியழகுஞ் செஞ்சடையும் பாரேனோ
கங்கையோடு திங்கள் நின்றகாட்சிதனை பாரேனோ
பொங்கு அரவைத்தான்சடையிற் பூண்டவிதம் பாரேனோ
கன்னி வனநாதா
சரக்கொன்றை பூத்த சடைக்காட்டை பாரேனோ
எருக்கறுகு ஊமத்தையணி யேகாந்தம் பாரேனோ
கொக்கிறகு கூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ
அக்கினியை யேந்திநின்ற ஆனந்தம் பாரேனோ
தூக்கிய காலு துடியிடையும் பாரேனோ
தாக்கு முயலகன் தாண்டவத்தை பாரேனோ
வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ
ஆசை அளிக்கு மபயகரம் பாரேனோ
கன்னி வனநாதா
அரிபிரமர் போற்ற அமரர் சயசயென
பெரியம்மை பாகம்வளர் பேரழகை பாரேனோ
சுந்தர நீற்றின் சொகுகதனை பாரேனோ
சந்திர சேகரனா தயவுசெய்தல் பாரேனோ
கெட்டநாள் கெட்டாலுங் கிருபையினி பாரேடா
பட்டநாள் பட்டாலும் பதமெனக்கு கிட்டாதோ
நற்பருவ மாக்குமந்த நாளெனக்கு கிட்டாதோ
எப்பருவ முங்சுழன்ற ஏகாந்தங் கிட்டாதோ
கன்னி வனநாதா
வாக்கிற்து நின்ற மவுனமது கிட்டாதோ
தாக்கிறந்து நிற்குமந தற்சுத்தி கிட்டாதோ
வெந்துயரை தீர்க்குமந்த வெட்டவெளி கிட்டாதோ
சிந்தையையு தீர்க்குமந தேறலது கிட்டாதோ
ஆன அடியார கடிமைகொள கிட்டாதோ
ஊனமற வென்னை வுணர்த்துவித்தல் கிட்டாதோ
என்னென்று சொல்லுவண்டா என்குருவே கேளேடா
பின்னை எனக்குநீ யல்லாமற் பிறிதிலையே
கன்னி வனநாதா
அன்ன விசாரமது வற்றவிடங் கிட்டாதோ
சொன்ன விசார தொலைந்தவிடங் கிட்டாதோ
உலக விசார மொழிந்தவிடங் கிட்டாதோ
மலக்குழுவின் மின்னார் வசியாதுங் கிட்டாதோ
ஒப்புவமை பற்றோ டொழிந்தவிடங் கிட்டாதோ
செப்புதற்கு மெட்டா தெளிந்தவிடங் கிட்டாதோ
வாக்கு மனாதீத வசோகசத்திற் செல்லவெனை
தாக்கு மருட்குருவே நின்தாளிணைக்கே யான்போற்றி

அருட்புலம்பல் மகடூ முன்னிலையாக உள்ளது
ஐங்கரனை தெண்டனிட்டே னருளடைய வேண்டுமென்று
தங்காமல் வந்தொருவன் தன்சொரூபங் காட்டியெனை
கொள்ளை பிறப்பறு கொண்டான் குருவடிவம்
கள்ள புலனறு காரணமாய் வந்தாண்டி
ஆதார மோராறு மைம்பத்தோ ரட்சரமும்
சூதான கோட்டையெல்லாஞ் சுட்டான் துரிசறவே
மெத்த விகாரம் விளைக்கும் பலபலவாம்
தத்துவங்க ளெல்லா தலைகெட்டு வெந்ததடி
என்னோ டுடன்பிறந்தா ரெல்லாரும் பட்டார்கள்
தன்ன தனியே தனித்திருக்க மாட்டேண்டி
எல்லாரும் பட்டகள மென்று தொலையுமடி
சொல்லி யழுதாற் றுயரமனெ காறுமடி
மண்முதலா மைம்பூத மாண்டுவிழ கண்டேண்டி
விண்முதலா மைம்பொறிகள் வெந்து விழ கண்டேண்டி
நீங்கா புனல்களைந்து நீறாக வெந்ததடி
வாக்காதி ஐவரையும் மாண்டுவிழங் கண்டேண்டி
மனக்கரண மத்தனையும் வகைவகையே பட்டழிய
இனக்கரண தோடே யெரிந்துவிழ கண்டேண்டி
ஆத்து தத்துவங்கள் அடுக்கழிய வெந்ததடி
போற்றும்வகை யெப்படியோ போதமிழ தானை
வித்தியா தத்துவங்கள் வெந்துவிழ கண்டேண்டி
சுத்தவித்தை ஐந்தினையுஞ் சுட்டான் துரிசறவே
முன்று வகைக்கிளையு முப்ப தறுவரையும்
கான்றுவிழ சுட்டு கருவே ரறுத்தாண்டி
குருவாகி வந்தானோ குலமறுக்க
உருவாகி வந்தானோ உருவழிக்க
கேடுவரு மென்றறியேன் கெடுமதிகண் டோற்றாமல்
பாடுவரு மென்றறியேன் பதியாண்டு இருந்தேண்டி
எல்லாரும் பட்டகள மின்னிட மென்றறியேன்
பொல்லாங்கு தீர்க்கும் பொறியிலியை கண்டேண்டி
உட்கோட்டை குள்ளிருந்தா ரொக்க மடிந்தார்கள்
அக்கோட்டை குள்ளிருந்தா ரறுபதுபேர் பட்டார்கள்
ஒக்க மடிந்ததடி ஊடுருவ வெந்ததடி
கற்கோட்டை யெல்லாங் கரிக்கோட்டை யாச்சுதடி
தொண்ணூற் றறுவரையுஞ் சுட்டான் துரிசறிவே
கண்ணேறு பட்டதடி கருவே ரறுத்தாண்டி
ஓங்காரங் கெட்டதடி உள்ளதெல்லாம் போச்சுதடி
ஆங்காரங் கெட்டதடி அடியோ டறுத்தாண்டி
தரையாங் குடிலைமுதல் தட்டிருவ வெந்ததடி
இரையு மனத்திடும்பை யெல்லா மறுத்தாண்டி
முன்னை வினையெல்லா முழுது மறுத்தாண்டி
தன்னை யறியவே தானொருத்தி யானேண்டி
என்னையே நானறிய இருவினையு மீடழித்து
தன்னை யறி தலமெனக்கு சொன்னாண்டி
தன்னை யறிந்தேண்டி தனிக்குமரி யானேண்டி
தன்ன தனியே தனியிருக்கும் பக்குவமோ
வீட்டி லொருவரில்லை வெட்டவெளி யானேண்டி
காட்டு கெறித்திநிலா கனவாச்சே கண்டதெல்லாம்
நகையாரோ கண்டவர்கள் நாட்டுக்கு பாட்டலவோ
பகையாரோ கண்டவர்கள் பார்த்தாரு கேச்சலவோ
இந்நிலமை கண்டாண்டி எங்கு மிருந்தாண்டி
கன்னி யழித்தாண்டி கற்பை குலைத்தாண்டி
கற்பு குலைத்தமையுங் கருவே ரறுத்தமையும்
பொற்பு குலைத்தமையும் போத மிழந்தமையும்
என்ன வினைவருமோ இன்னமென கென்றறியேன்
சொன்ன சொல்லெல்லாம் பலித்ததடி சோர்வறவே
கங்குல்பக லற்றிடத்தை காட்டி கொடுத்தாண்டி
பங்க மழித்தாண்டி பார்த்தானை பார்த்திருந்தேன்
சாதியிற் கூட்டுவாரோ சாத்திரத்து குள்ளாமோ
ஓதி யுணர்ந்தெல்லா முள்ளபடி யாச்சுதடி
என்னகுற்றஞ் செய்தேனோ எல்லாரும் காணாமல்
அன்னைசுற்ற மெல்லா மறியாரோ வம்புவியில்
கொன்றாரை தின்றேனோ தின்றாரை கொன்றேனோ
எண்ணாதெல் லாமெண்ணு மிச்சை மறந்தேனோ
சாதியிற் கூட்டுவரோ சமயத்தோ ரெண்ணுவரோ
பேதித்து வாழ்ந்ததெல்லாம் பேச்சு கிடமாச்சுதடி
கண்டார்க்கு பெண்ணல்லவோ காணார்க்கும் காமமடி
உண்டார்க ளுண்டதெலா மூணல்ல துண்பர்களோ
கொண்டவர்கள் கொண்டதெல்லாங் கொள்ளாதார் கொள்ளுவரோ
விண்டவர்கள் கண்டவரோ கண்டவர்கள் விண்டவரோ
பண்டாய நான்மறைகள் பாடும் பரிசலவோ
தொண்டாய தொண்டருள தோற்றி யடுங்குமதோ
ஓத எளிதோ ஒருவர் உணர்வரிதோ
பேதமற எங்கும் விளங்கும் பெருமையன்காண்
வாக்கு மனமுங் கடந்த மனோலயன்காண்
நோக்க அரியவன்காண் நுண்ணியரில் நுண்ணியன்காண்
சொல்லு கடங்கான்காண் சொல்லிறந்து நின்றவன்காண்
கல்லு ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண்
சூட்டிறந்த பாழதனிற் கசிந்திருக்க சொன்னவன்காண்
ஏட்டி லெழுத்தோ எழுதினவன் கைப்பிழையோ
சும்மா விருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்
அம்மா பொருளிதென வடைய விழுங்கினண்டி
பார்த்த விடமெல்லாம் பரமா கண்டேண்டி
கோத்த நிலைகுலைந்த கொள்கை யறியேண்டி
மஞ்சனமாட்டி மலர்பறித்து சாத்தாமல்
நெஞ்சுவெறும் பாழானேன் நின்றநிலை காணேண்டி
பாடி படித்திருந்தும் பன்மலர்கள் சாத்தாமல்
ஓடி திரியாம லுருக்கெட்டு விட்டேண்டி
மாணிக்க துள்ளளிபோல் மருவி யிருந்தாண்டி
பேணி தொழுமடியார் பேசா பெருமையன்காண்
அன்றுமுத லின்றளவு மறியா பருவமதில்
என்றும் பொதுவா யிருந்த நிராமயன்காண்
சித்த விகாரத்தாலே சின்மயனை காணாமல்
புத்தி கலங்கி புகுந்தேன் பொறிவழியே
பத்தி யறியாமற் பாழில் கவிழ்ந்தேண்டி
ஒத்தவிட நித்திரையென் றொத்து மிருந்தேண்டி
திருச்சிற்றம்பலம்