சிசுப்ரமணிய பாரதியார் பாடல்கள் பாகம்
பாஞ்சாலி சபதம் முதற் பாகம்

























©








சிசுப்ரமணிய பாரதியார் பாடல்கள் பாகம்
பாஞ்சாலி சபதம் முதற் பாகம்
பிரம துதி
நொண்டி சிந்து
ஓமென பெரியோர் கள்என்றும்
ஓதுவ தாய் வினை மோதுவ
தீமைகள் மாய்ப்பது வாய்துயர்
தேய்ப்பது வாய்நலம் வாய்ப்பது வாய்
நாமமும் உருவும் அற்றேமனம்
நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்
ஆமெனும் பொருளனை தாய்வெறும்
அறிவுடன் ஆனந்த இயல்புடை தாய்
நின்றிடும் பிரமம்என் பார்அந்த
நிர்மல பொருளினை நினைதிடு வேன்
நன்றுசெய் தவம் யோகம்சிவ
ஞானமும் பக்தியும் நணுகிட வே
வென்றி கொள்சிவ சக்திஎனை
மேவுற வேஇருள் சாவுற வே
இன்றமிழ் நூலிது தான்புகழ்
ஏய்ந்தினி தாயென்றும் இலகிடவே
சரஸ்வதி வணக்கம்
வெள்ளை கமல திலேஅவள்
வீற்றிரு பாள்புக ழேற்றிரு பாள்
கொள்ளை கனியிசை தான்நன்கு
கொட்டுநல் யாழினை கொண்டிரு பாள்
கள்ளை கடலமு தைநிகர்
கண்டதொர் பூந்தமிழ கவிசொல வே
பிள்ளை பருவ திலேஎனை
பேணவ தாளருள் பூணவந்தாள்
வே திருவிழி யாள்அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையி டாள்
சீத கதிர்மதி யேநுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்
வா தருக்க மெனுஞ்செவி
வாய்ந்ததற் றுணிவெனு தோடணி தாள்
போதமென் நாசியி னாள்நலம்
பொங்கு பல்சாத்திர வாயுடை யாள்
கற்பனை தேனித ழாள்சுவை
காவிய மெனுமணி கொங்கையி னாள்
சிற்ப முதற்கலை கள்பல
தேமலர கரமென திகழ்ந்திரு பாள்
சொற்படு நயமறி வார்இசை
தோய்ந்திட தொகுப்பதின் சுவையறி வார்
விற்பன தமிழ்ப்புல வோர்அந்த
மேலவர் நாவெனும் மலர்ப்ப தாள்
வாணியை சரண்புகு தேன்அருள்
வாக்களி பாளென திடமிகு தேன்
பேணிய பெருந்தவ தாள்நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்
பூணியல் மார்பக தாள்ஐவர்
பூவைதிரௌபதி புகழ கதையை
மாணியல் தமிழ்ப்பாட்டால்நான்
வகுத்திட கலைமகள் வாழ்த்துக வே
முதலாவது அழைப்பு சருக்கம்
ஹஸ்தினாபுரம்
அத்தின புரமுண்டாம்இவ்
அவனியி லேயதற் கிணையிலை யாம்
பத்தியில் வீதிக ளாம்வெள்ளை
பனிவரை போற்பல மாளிகை யாம்
முத்தொளிர் மாடங்க ளாம்எங்கும்
மொய்த்தளி சூழ்மலர சோலைக ளாம்
நத்தியல் வாவிக ளாம்அங்கு
நாடு மிரதிநகர் தேவிக ளாம்
அந்தணர் வீதிக ளாம்மறை
யாதிக ளாம்கலை சோதிக ளாம்
செந்தழல் வேள்விக ளாம்மிக
சீர்பெறுஞ் சாத்திர கேள்விக ளாம்
மந்திர கீதங்க ளாம்தர்க்க
வாதங்க ளாம்தவ நீதங்க ளாம்
சிந்தையி லறமுண் டாம்எனிற்
சேர்ந்திடுங் கலிசெயும் மறமு முண்டாம்
மெய்த்தவர் பலருண் டாம்வெறும்
வேடங்கள் பூண்டவர் பலருமுண் டாம்
உய்த்திடு சிவஞா னம்கனி
தோர்ந்திடு மேலவர் பலருண் டாம்
பொய்த்தவி திரசா லம்நிகர்
பூசையும் கிரியையும் புலைநடை யும்
கைத்திடு பொய்ம்மொழி யும்கொண்டு
கண காற்பிழை போர்பல ராம்
மாலைகள் புரண்டசை யும்பெரு
வரையென திரண்டவன் தோளுடை யார்
வேலையும் வாளினை யும்நெடு
வில்லையு தண்டையும் விரும்பிடு வார்
காலையும் மாலையி லும்பகை
காய்ந்திடு தொழில்பல பழகிவெம் போர்
நூலையும் தேர்ச்சி கொள் வோர்கரி
நூறினை தனிநின்று நொறுக்கவல் லார்
ஆரிய வேல்மற வர்புவி
யாளுமொர் கடுந்தொழில் இனிதுணர தோர்
சீரியல் மதிமுக தார்மணி
தேனித ழமுதென நுகர்ந்திடு வார்
வேரியங் கள்ளருந்திஎங்கும்
வெம்மத யானைகள் எனத்திரி வார்
பாரினில் இந்திரர் போல்வளர்
பார்த்திவர் வீதிகள் பாடுவ மே
நல்லிசை முழக்கங்க ளாம்பல
நாட்டிய மாதர்தம் பழக்கங்க ளாம்
தொல்லிசை காவியங்கள்அரு
தொழிலுணர் சிற்பர்செய் ஓவியங் கள்
கொல்லிசை வாரணங் கள்கடுங்
குதிரைக ளடுபெரு தேர்களுண் டாம்
மல்லிசை போர்களுண் டாம்திரள்
வாய்ந்திவை பார்த்திடு வோர்களுண் டாம்
எண்ணரு கனிவகை யும்இவை
இலகிநல் லொளிதரும் பணிவகை யும்
தண்ணறுஞ் சாந்தங்க ளும்மலர
தார்களும் மலர்விழி காந்தங்க ளும்
சுண்ணமும் நறும்புகை யும்சுரர்
துய்ப்பதற்கு குரியபல் பண்டங்க ளும்
உண்ணநற் கனிவகை யும்களி
யுவகையும் கேளியும் ஓங்கின வே
சிவனுடை நண்பன்என் பார்வட
திசைக்கதி பதியள கேசன்என் பார்
அவனுடை பெருஞ்செல் வம்இவர்
ஆவண தொறும்புகு திருப்பது வாம்
தவனுடை வணிகர்க ளும்பல
தரனுடை தொழில் செயும் மாசன மும்
எவனுடை பயமு மிலாதினிது
இருந்திடு தன்மையது எழில் நகரே
துரியோதனன் சபை
கன்னங் கரியது வாய்அகல்
காட்சிய தாய்மிகு மாட்சிய தாய்
துன்னற் கினியது வாய்நல்ல
சுவைதரும் நீருடை யமுனையெ னும்
வன்ன திருநதி யின்பொன்
மருங்கிடை திகழ்ந்த அம் மணிநக ரில்
மன்னவர் தங்கோ மான்புகழ்
வாளர வக்கொடி யுயர்த்துநின் றான்
துரியோ தனப்பெய ரான்நெஞ்ச
துணிவுடையான்முடி பணிவறி யான்
கரியோ ராயிர தின்வலி
காட்டிடு வான்என்ற கவிஞர்பி ரான்
பெரியோன் வேத முனிஅன்று
பேசிடும் படிதிகழ் தோள்வலி யோன்
உரியோர் தாமெனி னும்பகை
குரியோர் தமக்குவெ தீயனை யான்
தந்தைசொல் நெறிப்படி யேஇந
தடந்தோள் மன்னவன் அரசிரு தான்
மந்திர முணர்பெரி யோர்பலர்
வா திரு தார்அவன் சபைதனி லே
அந்தமில் புகழுடை யான்அந்த
ஆரிய வீட்டுமன் அறம்அறி தோன்
வந்தனை பெறுங்குர வோர்பழ
மறைக்குல மறவர்கள் இருவரொ டே
மெய்ந்நெறி யுணர்விது ரன்இனி
வேறுபல் அமைச்சரும் விளங்கிநின் றார்
பொய்ந்நெறி தம்பிய ரும்அந்த
புலைநடை சகுனியும் புறமிரு தார்
மைந்நெறி வான்கொடை யான்உயர்
மானமும் வீரமும் மதியுமு ளோன்
உய்ந்நெறி யறியா தான்இறைக்கு
உயிர்நிகர் கன்னனும் உடனிரு தான்
துரியோதனன் பொறாமை
வேறு
எண்ணி லாத பொறுளின் குவையும்
யாங்க ணுஞ்செலுஞ் சக்கர மாண்பும்
மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர்
வார்க டற்பெருஞ் சேனையு மாங்கே
விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று
வேண்டு மின்பமும் பெற்றவ னேனும்
கண்ணி லாத்திரிதா ட்டிரன் மைந்தன்
காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர்
வேறு
பாண்டவர் முடியுயர்த்தேஇந்த
பார்மிசை யுலவிடு நாள்வரைநான்
ஆண்டதொர் அரசா மோஎனது
ஆண்மையும் புகழுமொர் பொருளா மோ
காண்டகு வில்லுடை யோன்அந்த
காளை யருச்சுனன் கண்களி லும்
மாண்டகு திறல்வீ மன்தட
மார்பிலும் எனதிகழ் வரைந்துள தே
பாரத நாட்டி லுள்ளமுடி
பார்த்திவர் யார்க்குமொர் பதியென்றே
நாரதன் முதன்முனி வோர்வந்து
நாட்டிட தருமன் அவ் வேள்விசெய் தான்
சோரனவ் வெதுகுல தான்சொலும்
சூழ்ச்சியும் தம்பியர் தோள்வலி யும்
வீரமி லாத்தரு மன்தனை
வேந்தர்தம் முதலென விதித்தன வே
ஆயிரம் முடிவே தர்பதி
னாயிர மாயிரங் குறுநில தார்
மாயிரு திறைகொணர்ந்தேஅங்கு
வைத்ததொர் வரிசையை மறந்திட வோ
தூயிழை யாடை களும்மணி
தொடையலும் பொன்ணுமொர் தொகைப்படுமோ
சேயிழை மடவா ரும்பரி
தேர்களும் கொடுத்தவர் சிறுதொகை யோ
ஆணிப்பொற் கலசங்க ளும்ரவி
யன்னநல் வயிரத்தின் மகுடங்க ளும்
மாணி குவியல்க ளும்பச்சை
மரக திரளும்நன் முத்துக்க ளும்
பூணிட்ட திருமணி தாம்பல
புதுப்புது வகைகளிற் பொலிவன வும்
காணிக்கை யாக்கொணர தார்அந்த
காட்சியை மறப்பதும் எளிதா மோ
நல்வகை பசும்பொன் னும்ஒரு
நாலா யிரவகை பணக்குவை யும்
வேல்வகை வில்வகை யும்அம்பு
விதங்களும் தூணியும் வாள்வகையும்
சூல்வகை தடிவகையும்பல
தொனிசெயும் பறைகளும் கொணர்ந்துவை தே
பால்வளர் மன்னவர் தாம்அங்கு
பணிந்ததை என்னுளம் மறந்திடு மோ
கிழவர் தபசியர் போல்பழங்
கிளிக்கதை படிப்பவன்பொறுமையென் றும்
பழவினை முடிவென் றும்சொலி
பதுங்கிநிற் போன்மற தன்மையி லான்
வழவழ தருமனு கோஇந்த
மாநில மன்னவர் தலைமைத தார்
முழவினை கொடிகொண் டான்புவி
முழுதையு தனியே குடிகொண் டான்
தம்பியர் தோள்வலி யால்இவன்
சக்கர வர்த்தியென் றுயர்ந்தது வும்
வெம்பிடு மதகரி யான்புகழ்
வேள்விசெய் தந்நிலை முழக்கிய தும்
அம்புவி மன்னரெ லாம்இவன்
ஆணைதம் சிரத்தினில் அணிந்தவ ராய்
நம்பரும் பெருஞ்செல் வம்இவன்
நலங்கிளர் சபையினில் பொழிந்தது வும்
எப்படி பொறுத்திடு வேன்இவன்
இளமையின் வளமைகள் அறியே னோ
குப்பை கொலோமு தும்அந்த
குரைகடல் நிலத்தவர் கொணர்ந்துபெய் தார்
சிப்பியும் பவளங்க ளும்ஒளி
திரண்டவெண் சங்கத்தின் குவியல்க ளும்
ஒப்பில்வை டூரியமும்கொடுத்து
ஒதுங்கி நின்றார் இவன் ஒருவனு கே
மலைநா டுடையமன் னர்பல
மான் கொணர்ந்தார்புது தேன்கொணர்ந்தார்
கொலைநால் வாய்கொணர தார்மலை
குதிரையும் பன்றியும் கொணர்ந்துத தார்
கலைமான் கொம்புக ளும்பெருங்
களிறுடை தந்தமும் கவரிக ளும்
விலையார் தோல்வகை யும்கொண்டு
மேலும்பொன் வைத்தங்கு வணங்கிநின் றார்
செந்நிற தோல்கரு தோல்அந
திருவளர் கதலியின் தோலுட னே
வெந்நிற புலித்தோல் கள்பல
வேழங்கள் ஆடுகள் இவற்றுடை தோல்
பன்னிற மயிருடைகள்விலை
பகரரும் பறவைகள்விலங்கினங் கள்
பொன்னிற பாஞ்சாலிமகிழ்
பூத்திடும் சந்தனம் அகில்வகை கள்
ஏலங் கருப்பூ ரம்நறும்
இலவங்கம் பாக்குநற் சாதி வகை
கோலம் பெற கொணர தேஅவர்
கொட்டி நின்றார்கரம் கட்டி நின்றார்
மேலு தலத்திலு ளார்பல
வேந்தர் அப்பாண்டவர் விழைந்திட வே
ஓல தரக்கொணர தேவைத்த
தொவ்வொன்றும் என் மன துறைந்ததுவே
மாலைகள் மொன்னும்மு தும்மணி
வகைகளிற் புனைந்தவும் கொணர்ந்துபெய் தார்
சேலைகள் நூறுவன் னம்பல
சித்திர தொழில்வகை சேர்ந்தன வாய்
சாலவும் பொன்னிழை தேதெய்வ
தையலர் விழைவன பலர்கொணர தார்
கோலநற் பட்டுக்க ளின்வகை
கூறுவதோஎண்ணில் ஏறுவ தோ
கழல்களும் கடகங்க ளும்மணி
கவசமும் மகுடமும் கணக்கில வாம்
நிழல்நிற பரிபல வும்செ
நிறத்தன பலவும்வெண் ணிறம்பல வும்
தழல்நிறம்மேக நிறம்விண்ணில்
சாரும் இந்திரவில்லை நேரும்நிறம்
அழகிய கிளிவயிற் றின்வண்ணம்
ஆர்ந்தன வாய்ப்பணி சேர்ந்தன வாய்
காற்றென செல்வன வாய்இவை
கடிதுகை திடுந்திறன் மறவ ரொடே
போற்றிய கையின ராய்ப்பல
புரவலர் கொணர்ந்துஅவன் சபைபுகு தார்
சீற்ற வன்போர் யானைமன்னர்
சேர்த்தவை பலபல மந்தையுண் டாம்
அற்றல் மிலேச்சமன் னர்தொலை
அரபியர் ஒட்டைகள் கொணர்ந்துத தார்
தென்றிசை சாவக மாம்பெரு
தீவு தொட்டேவட திசையத னில்
நின்றிடும் புகழ்ச்சீ னம்வரை
தேர்ந்திடும் பலப்பல நாட்டின ரும்
வென்றிகொள் தருமனு கேஅவன்
வேள்வியில் பெரும்புகழ் விளையும்வண் ணம்
நன்றுபல்பொருள்கொணர தார்புவி
நாயகன் யுதிட்டிரன் என வுணர்ந்தார்
ஆடுகள் சிலர்கொணர தார்பலர்
ஆயிர மாயிரம் பசுக்கொணார தார்
மாடுகள் பூட்டின வாய்ப்பல
வகைப்படு தானியம் சுமந்தன வாய்
ஈடுறு வண்டி கொண்டேபலர்
எய்தினர்கரும்புகள் பலகொணர தார்
நாடுறு தயில வகைநறு
நானத்தின் பொருள்பலர் கொணர்ந்துத தார்
நெய்க்குடம் கொண்டு வந்தார்மறை
நியமங்கொள் பார்ப்பனர் மகத்தினு கே
மொய்க்குமின் கள்வகைகள்கொண்டு
மோதினர் அரசினம் மகிழ்வுற வே
தைக்கு நற் குப்பாயம்செம்பொற்
சால்வைகள்போர்வைகள்கம்பளங் கள்
கைக்கு டினுந்தா னோஅவை
காண்பவர் விழிகட்கும் அடங்குப வோ
தந்தத்தில் கட்டில்க ளும்நல்ல
தந்தத்தின் பல்லக்கும்வாகன மும்
தந்தத்தின் பிடிவாளும் அந
தந்தத்திலே சிற்ப தொழில்வகை யும்
தந்தத்தி லாதன மும்பின்னும்
தமனிய மணிகளில் இவையனை தும்
தந்தத்தை கணக்கிட வோமுழு
தரணியின் திருவும்இ தருமனு கோ
வேறு
என்றிவ் வாறு பலபல எண்ணி
ஏழை யாகி இரங்குத லுற்றான்
வன்றி றத்தொரு கல்லெனு நெஞ்சன்
வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான்
முன்றமொன்று குழைவுற் றிளகி
குழம்பு பட்டழி வெய்திடும் வண்ணம்
கன்று பூதல தள்ளுறை வெம்மை
காய்ந்தெழுந்து வெளிப்படல் போல
நெஞ்ச துள்ளோர் பொறாமை யெனுந்தீ
நீள்வதால் உள்ளம் நெக்குரு கிப்போய்
மஞ்சன் ஆண்மை மறந்திண்மை மானம்
வன்மை யாவும் மறந்தன னாகி
பஞ்சை யாமொரு பெண்மகள் போலும்
பாலர் போலும் பரிதவி பானா
கொஞ்ச நேரத்திற் பாதக தொடு
கூடியேஉற வெய்திநின் றானால்
யாது நேரினும் எவ்வகை யானும்
யாது போயினும் பாண்டவர் வாழ்வை
தீது செய்து மடித்திட எண்ணி
செய்கை யன்றறி யாந்திகை பெய்தி
சூதும் பொய்யும் உருவென கொண்ட
துட்ட மாமனை தான்சர ணெய்தி
ஏதுசெய்வம்என சொல்லி நைந்தான்
எண்ண துள்ளன யாவும் உரைத்தே
மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த
மாம கத்தினில் வந்து பொழிந்த
சொன்னம் பூண்மணி முத்திவை கண்டும்
தோற்றங் கண்டும் மதிப்பினை
என்ன பட்டது தன்னுளம் என்றே
ஈன மாமன் அறிந்திடும் வண்ணம்
முன்னம் தான் நெஞ்சிற் கூறிய வெல்லாம்
மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான்
துரியோதனன் சகுனியிடம் சொல்வது
வேறு
உலகு தொடங்கிய நாள்முத லாகநஞ் சாதியில்புகழ்
ஓங்கிநிற் றாரி தருமனை போலெவர்மாம னே
இலகு புகழ்மனு வாதி முதுவர்க்கும் மாம னேபொருள்
ஏற்றமும் மாட்சியும் இப்படி யுண்டுகொல்மாம னே
கலைக ளுணர்ந்தநல் வேதி பாவலர் செய்தவாம்பழங்
கற்பனை காவியம் பற்பல கற்றனைமாம னே
பலகடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும் சொல்ல
பார்த்ததுண்டோகதை கேட்டதுண் டோபுகல் மாமனே
எதனை யுலகில் மறப்பினும்யானினிமாம னேஇவர்
யாகத்தை என்றும் மறந்திட லென்பதொன் றேது காண்
விதமுற சொன்ன பொருட்குவை யும்பெரி தில்லைகாண் அந்த
வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பலவுண் டே
இதனை யெலாமவ் விழியற்ற தந்தையின் பாற்சென்றே சொல்லி
இங்கிவர் மீதவ னும்பகை எய்திட செய்கு வாய்
மிதமிகு மன்பவர் மீதுகொண் டானவன் கேட்கவேஅந்த
வேள்விகண் டென்னுயிர் புண்படுஞ் செய்தி விளம்பு வாய்
கண்ணை பறிக்கும் அழகுடை யாரிள மங்கையர்பல
காமரு பொன்மணி பூண்க ளணிந்தவர் தம்மை யே
மண்ணை புரக்கும் புரவலர் தாமந்த வேள்வியில்கொண்டு
வாழ்த்தி யளித்தனர் பாண்டவர கேஎங்கள்மாமனே
எண்ணை பழிக்கு தொகையுடை யாரிள மஞ்சரைப்பலர்
ஈந்தனர் மன்ன ரிவர் தமக்கு தொண் டியற்ற வே
விண்ணை பிளக்கு தொனியுடை சங்குகள் ஊதினார் தெய்வ
வேதியர் மந்திர தோடுபல் வாழ்த்துக்கள் ஓதி னார்
நாரதன் தானும் அவ்வேத வியாசனும் ஆங்ஙனேபலர்
நானிங் குரைத்தற் கரிய பெருமை முனிவரும்
மாரத வீரர்அ பாண்டவர் வேள்விக்கு வந்ததும்வந்து
மாமறை யாசிகள் கூறி பெரும்புகழ் தந்த தும்
வீரர்தம் போரின் அரியநற் சாத்திர வாதங்கள்பல
விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீச வே
சார மறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும்நல்ல
தங்க மழை பொழி தாங்கவர்க்கே மகிழ் தந்த தும்
விப்பிர ராதிய நால்வரு ணத்தவர் துய்ப்பவேநல்
விருந்து செயலில் அளவற்ற பொன்செல விட்ட தும்
இப்பிற விக்குள் இவையத்த வேள்வி விருந்துகள்புவி
எங்கணும் நான்கண்ட தில்லைஎன தொனி பட்டதும்
தப்பின்றி யேநல் விருந்தினர் யாருக்கு தகுதிகள்கண்டு
தக்கசன் மானம் அளித்து வரிசைகள் இட்ட தும்
செல்புக நீயவ் விழியற்ற தந்தைக்குநின்மகன்இந்த
செல்வம் பெறாவிடில் செத்திடு வான்என்றும் செப்புவாய்
அண்ணன் மைந்தன் அவனி குரியவன் யானன்றோஅவர்
அடிய வராகி யெமைப்பற்றி நிற்றல் விதியன் றோ
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர் தந்தார் அந்த
பாண்ட வர்நமை புல்லென எண்ணுதல் பார்த்தை யோ
கண்ண னுக்கு முதல்உப சாரங்கள் காட்டினார்சென்று
கண்ணி லாத்தந்தை கிச்செய லின்பொருள் காட்டு வாய்
மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான் என்றன்
மாம னேஅவன் நம்மில் உயர்ந்த வகைசொல் வாய்
சந்தி ரன்குல தேபிற தோர்த தலைவன்யான்என்று
சகமெ லாஞ்சொலும் வார்த்தைமெய்யோவெறுஞ்சாலமோ
தந்தி ரத்தொழில் ஒன்றுண ரும்சிறு வேந்தனைஇவர்
தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலு மோ
மந்தி ரத்தில சேதியர் மன்னனை மாய்த்திட்டார்ஐய
மாம கத்தில் அதிதியை கொல்ல மரபுண் டோ
இந்தி ரத்துவம் பெற்றிவர் வாழும் நெறிநன்றேஇதை
எண்ணி என்நெஞ்சு
சதிசெய் தார்க்கு சதிசெயல் வேண்டும்என் மாம னே
தாமென் அன்பன் சராச தனுக்குமுன் எவ்வகை இவர்
விதிசெய் தார்அதை என்றும் என் உள்ளம் மறக்குமோ இந்த
மேதினி யோர்கள் மறந்துவிட்டார்இ·தோர் விந்தையே
நிதிசெய் தாரை பணிகுவர் மானிடர்மாமனேஎந்த
நெறியி னாலது செய்யினும்நாயென நீள்புவி
துதிசெய் தேயடி நக்குதல் கண்டனைமாமனேவெறுஞ்
சொல்லு கேயற நூல்கள் உரைக்கும் துணிவெ லாம்
வேறு
பொற்றட தேரொன்று வாலிகன்
கொண்டு விடுத்ததும்அதில்
பொற்கொடி சேதியர் கோமகன்
வந்து தொடுத்ததும்
உற்றதோர் தம்பிக்கு தென்னவன்
மார்பணி தந்ததும்ஒளி
யோங்கிய மாலையம் மாகதன்
தான்கொண்டு வந்த தும்
பற்றல ரஞ்சும் பெரும்புக
ழேக லவியனேசெம்பொற்
பாதுகை கொண்டு யுதிட்டிரன்
தாளினில் ஆர்த்த தும்
முற்றிடு மஞ்சன திற்கு பல
பல தீர்த்தங்கள் மிகு
மொய்ம்புடை யானல் வவந்தியர்
மன்னவன் சேர்தததும்
மஞ்சன நீர்தவ வேத
வியாசன் பொழிந்ததும்பல
வைதிகர் கூடிநன் மந்திர
வாழ்த்து மொழிந்த தும்
குஞ்சர சாத்தகி வெண்குடை
தாங்கிடவீமனும்இளங்
கொற்றவ னும்பொற் சிவிறிகள்
வீசஇரட்டை யர்
அஞ்சுவர் போலங்கு நின்று
கவரி இரட்டவேகடல்
ஆளுமொருவன் கொடுத்ததொர்
தெய்விக சங்கி னில்
வஞ்சகன் கண்ணன் புனிதமுறுங்
கங்கை நீர்கொண்டுதிரு
மஞ்சன மாட்டும்அ போதில்
எவரும் மகிழ்ந்த தும்
முற்றிடு மஞ்சன திற்குப்பல
பலதீர் த்தங்கள்மிகு
மொய்ம்புடை யானன்அவ் அவந்தியர்
மன்னவன் சேர்த்ததும்
மூச்சை யடைத்த தடாசபை
தன்னில் விழுந்துநான்அங்கு
மூர்ச்சை யடைந்தது கண்டனையே
என்றன் மாமனே
ஏச்சையும் அங்கவர் கொண்ட
நகைப்பையும் எண்ணுவாய்அந்த
ஏந்திழை யாளும் எனைச்சிரி
தாளிதை எண்ணு வாய்
பேச்சை வளர்த்து பயனென்று
மில்லைஎன் மாமனேஅவர்
பேற்றை அழிக்க உபாயஞ் சொல்வாய்
என்றன் மாமனே
தீச்செயல் நற்செயல் ஏதெனினும்
ஒன்று செய்துநாம்அவர்
செல்வங் கவர்ந்த வரைவிட
வேண்டும் தெருவிலே
சகுனியின் சதி
வேறு
என்று சுயோதனன் கூறியேநெஞ்சம்
ஈர்ந்திட கண்ட சகுனிதான் அட
இன்று தருகுவன் வெற்றியே இதற்கு
இத்தனை வீண்சொல் வளர்ப்ப தேன்இனி
ஒன்றுரை பேன்நல் உபாயந்தான்அதை
ஊன்றி கருத்தொடு கேட்பையால்ஒரு
மன்று புனைந்திட செய்தி நீ தெய்வ
மண்டப மொத்த நலங்கொண்டே
மண்டபங் காண வருவிரென்றந்த
மன்னவர் தம்மை வரவழைத்தங்கு
கொண்ட கருத்தை முடிப்பவேமெல்ல
கூட்டிவன் சூது பொர செய்வோம்அந்த
வண்டரை நாழிகை யன்றிலேதங்கள்
வான்பொருள் யாவையும் தொற்றனைப்பணி
தொண்ட ரெனச்செய் திடுவன்யான்என்றன்
சூதின் வலிமை அறிவை நீ
வெஞ்சமர் செய்திடு வோமெனில்அதில்
வெற்றியும் தோல்வியும் யார்கண்டார்அந்த
பஞ்சவர் வீரம் பெரிதுகாண்ஒரு
பார்த்தன்கை வில்லு கெதிருண்டோஉன்றன்
நெஞ்சத்திற் சூதை யிகழ்ச்சி யாக்கொள்ள
நீத மில்லை முன்னை பார்த்திவர்தொகை
கொஞ்ச மிலைப்பெருஞ் சூதினால்வெற்றி
கொண்டு பகையை அழித்து ளோர்
நாடும் குடிகளும் செல்வமும் எண்ணி
நனில தோர்கொடும் போர் செய்வார்அன்றி
ஓடும் குருதியை தேக்கவோதமர்
ஊன்குவை கண்டு களிக்கவோஅந்த
நாடும் குடிகளும் செல்வமும்ஒரு
நாழிகை போதினில் சூதினால்வெல்ல
கூடு மெனிற்பிறி தெண்ண லேன்என்றன்
கொள்கை இதுவென கூறினான்
இங்கிது கேட்ட சுயோதனன்மிக
இங்கிதம் சொல்லினை மாமனேஎன்று
சங்கிலி பொன்னின் மணியிட்டஒளி
தாமம் சகுனிக்கு சூட்டினான்பின்னர்
எங்கும் புவிமிசை உன்னைப்போல்என
கில்லை இனியது சொல்லுவோர்என்று
பொங்கும் உவகையின் மார்புறக்கட்டி
பூரித்து விம்மி தழுவினான்
சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்
மற்றதன்பின்னர் இருவரும்அரு
மந்திர கேள்வி உடையவன்பெருங்
கொற்றவர் கோந்திரித ராட்டிரன்சபை
கூடி வணங்கி இருந்தனர்அருள்
அற்ற சகுனியும் சொல்லுவான்ஐய
அண்டகை நின்மகன செய்திகேள்உடல்
வற்றி துரும்பொ துருக்கின்றான்உயிர்
வாழ்வை முழுதும் வெறுக்கின்றான்
உண்ப சுவையின்றி உண்கின்றான்பின்
உடுப்ப திகழ உடுக்கின்றான்பழ
நண்பர்க ளோடுற வெய்திடான்இள
நாரியரை சிந்தை செய்திடான்பிள்ளை
கண்பசலை கொண்டு போயினான்இதன்
காரணம் யாதென்று கேட்பையால்உயர்
திண்பரு மத்தட தோளினாய்என்று
தீய சகுனியும் செப்பினான்
தந்தையும் இவ்வுரை கேட்டதால்உளம்
சாலவும் குன்றி வருந்தியேஎன்றன்
மைந்தநினக்கு வருத்தமேன்இவன்
வார்த்தையி லேதும் பொருளுண்டோநினக்கு
எந்த விதத்துங் குறையுண்டோநினை
யாரும் எதிர்த்திடு வாருண்டோநின்றன்
சிந்தையில் எண்ணும் பொருளெலாம்கண
தேடி கொடுப்பவர் இல்லையோ
இன்னமு தொத்த உணவுகள்அந்த
இந்திரன் வெ·குறும் ஆடைகள்பலர்
சொன்ன பணிசெயும் மன்னவர்வரு
துன்ப தவிர்க்கும் அமைச்சர்கள்மிக
நன்னலங் கொண்ட குடிபடைஇந்த
நானில மெங்கும் பெரும்புகழ்மிஞ்சி
மன்னும்அ பாண்டவ சோதரர்இவை
வாய்ந்தும் உனக்கு துயருண்டோ
தந்தை வசனஞ் செவியுற்றேகொடி
சர்ப்பத்தை கொண்டதொர் கோமகன்
வெந்தழல் போல சினங்கொண்டேதன்னை
மீரி பலசொல் விளம்பினான்இவன்
மந்த மதிகொண்டு சொல்வதைஅந்த
மாமன் மதித்துரை செய்குவான்ஐய
சிந்தை வெதுப்பத்தி னாலிவன்சொலும்
சீற்ற மொழிகள் பொறுப்பையால்
தன்னுள துள்ள குறையெலாம்நின்றன்
சந்நிதி யிற்சென்று சொல்லிடமுதல்
என்னை பனித்தனன்யானிவன்றனை
இங்கு வலி கொணர்ந்திட்டேன்பிள்ளை
நன்னய மேசிந்தை செய்கின்றான்எனில்
நன்கு மொழிவ தறிந்திலன்நெஞ்சை
தின்னுங் கொடுந்தழல் கொண்டவர்சொல்லுஞ்
செய்தி தெளிய உரைப்பரோ
நீபெற்ற புத்திரனே யன்றோமன்னர்
நீதி யியல்பில் அறிடின்றான்ஒரு
தீபத்தில் சென்று கொளுத்தியபந்தம்
தேசு குறைய எரியுமோசெல்வ
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல்மன்னர்
சாத்திர தேமுதற் சூத்திரம்பின்னும்
ஆப தரசர்க்கு வேறுண்டோதம்மில்
அன்னியர் செல்வம் மிகுதல்போல்
வேள்வியில் அன்றந்த பாண்டவர்நமை
வெண்டு டுங்குறை செய்தனர்ஒரு
கேள்வி யிலதுன் மகன்றனைப்பலர்
கேலிசெய் தேநகை தார்கண்டாய் புவி
ஆள்வினை முன்னவர கின்றியேபுகழ்
ஆர திளை யோரது கொள்வதைப்பற்றி
வாள்விழி மாதரும் நம்மையேகய
மக்களென் றெண்ணி நகைத்திட்டார்
ஆயிரம் யானை வலிகொண்டான்உந்தன்
ஆண்டகை மைந்த னிவன்கண்டாய்இந்த
மாயிரு ஞால துயர்ந்ததாம்மதி
வான்குல திற்கு முதல்வனாம்ஒளி
ஞாயிறு நிற்பவும் மின்மினிதன்னை
நாடி தொழுதிடு தன்மைபோல்அவர்
வேயிரு தூதுமொர் கண்ணனைஅந்த
வேள்வியில் சால உயர்த்தினார்
ஐயநின் மைந்தனு கில்லைகாண்அவர்
அர்க்கியம் முற்பட தந்ததேஇந்த
வையக தார்வி பெய்தவேபுவி
மன்னவர் சேர்ந்த சபைதனில்மிக
நொய்யதொர் கண்ணனு காற்றினார்மன்னர்
நொந்து மனக்குன்றி போயினர்பணி
செய்யவும் கேலிகள் கேட்கவும்உன்றன்
சேயினை வைத்தனர் பாண்டவர்
பாண்டவர் செல்வம் விழைகின்றான்புவி
பாரத்தை வேண்டி குழைகின்றான்மிக
நீண்ட மகிதலம் முற்றிலும்உங்கள்
நேமி செலும்புகழ் கேட்கின்றான்குலம்
பூண்ட பெருமை கெடாதவாறெண்ணி
பொங்குகின் றான்நலம் வேட்கின்றான்மைந்தன்
ஆண்டகை கி·து தகுமன்றோஇல்லை
யாமெனில் வையம் நகுமன்றோ
நித்தங் கடலினிற் கொண்டுபோய்நல்ல
நீரை அளவின்றி கொட்டுமாம்உயர்
வித்தகர் போற்றிடுங் கங்கையாறது
வீணிற் பொருளை யழிப்பதோஒரு
சத்த மிலாநடுக்காட்டினில்புனல்
தங்கிநிற் குங்குளம் ஒன்றுண்டாம்அது
வைத்ததன் நீரை பிறர்கொளாவகை
வாரடை பாசியில் மூடியே
சூரிய வெப்பம் படாமலேமரம்
சூழ்ந்த மலையடி கீழ்ப்பட்டேமுடை
நீரினைநித்தலும் காக்குமாம்இந்த
நீள்சுனை போல்வர் பலருண்டேஎனில்
ஆரியர் செல்வம் வளர்தற்கேநெறி
ஆயிரம் நித்தம் புதியனகண்டு
வாரி பழம்பொருள் ஏற்றுவார்இந்த
வண்மையும் நீயறி யாததோ
திரிதராட்டிரன் பதில் கூறுதல்
கள்ளச்சகுனியும் இங்ஙனேபல
கற்பனை சொல்லித்தன் உள்ளத்தின்பொருள்
கொள்ள பகட்டுதல் கேட்டபின்பெருங்
கோபத்தோ டேதிரி தாட்டிரன்அட
பிள்ளையை நாசம் புரியவேஒரு
பேயென நீவந்து தோன்றினாய்பெரு
வெள்ளத்தை புல்லொன் றெதிர்க்குமோஇள
வேந்தரை நாம்வெல்ல லாகுமோ
சோதரர் தம்மு பகையுண்டோஒரு
சுற்றத்தி லேபெருஞ் செற்றமோநம்மில்
ஆதரங் கொண்டவ ரல்லரோமுன்னர்
ஆயிரம் சூழ்ச்சி இவன்செய் தும்அந்த
சீதரன் தண்ணரு ளாலுமோர்பெருஞ்
சீலத்தி னாலும் புயவலிகொண்டும்
யாதொரு தீங்கும் இலாமலேபிழை
தெண்ணருங் கீர்த்திபெற் றாரன்றோ
பிள்ளை பருவ தொடங்கியேஇந்த
பிச்சன் அவர்க்கு பெரும்பகைசெய்து
கொள்ள படாத பெரும்பழியன்றி
கொண்டதொர் நன்மை சிறிதுண்டோநெஞ்சில்
எள்ள தகுந்த பகைமையோஅவர்
யார்க்கும் இளைத்த வகையுண்டோவெறும்
நொள்ளை கதைகள் கதைக்கிறாய்பழ
நூலின் பொருளை சிதைக்கிறாய்
மன்னவர் நீதி சொலவந்தாய்பகை
மாமலை யைச்சிறு மட்குடம்கொள்ள
சொன்னதொர் நூல்சற்று காட்டுவாய்விண்ணில்
சூரியன் போல்நிக ரின்றியேபுகழ்
துன்ன புவி சக்க ராதிபம்உடற்
சோதரர் தாங்கொண் டிருப்பவும்தந்தை
என்ன கருதிஅவரெனைப்பணிந்து
என்சொற் கடங்கி நடப்பவும்
முன்னை இவன் செய்த தீதெலாம்அவர்
முற்றும் மறந்தவ ராகியேதன்னை
தின்ன வருமொர் தவளையைக்கண்டு
சிங்கஞ் சிரித்தருள் செய்தல்போல்துணை
யென்ன இவனை மதிப்பவும்அவர்
ஏற்றத்தை கண்டும் அஞ்சாமலேநின்றன்
சின்ன மதியினை என்சொல்வேன்பகை
செய்திட எண்ணி பிதற்றினாய்
ஒப்பில் வலிமை யுடையதாந்துணை
யோடு பகைத்தல் உறுதியோநம்மை
தப்பிழை தாரந்த வேள்வியில்என்று
சாலம் எவரிடஞ் செய்கிறாய்மயல்
அப்பி விழிதடு மாறியேஇவன்
அங்கு மிங்கும்விழு தாடல் கண்டுஅந
துப்பிதழ் மைத்துனி தான்சிரித்திடில்
தோஷ மிதில்மிக வந்ததோ
தவறி விழுபவர் தம்மையேபெற்ற
தாயுஞ் சிரித்தல் மரபன் றோஎனில்
இவனை துணைவர் சிரித்ததோர்செயல்
எண்ணரும் பாதக மாகுமோமன
கவலை வளர்த்திடல் வேண்டுவோர்ஒரு
காரணங் காணுதல் கஷ்டமோவெறும்
அவல மொழிகள் அளப்பதேன்தொழில்
ஆயிர முண்டவை செய்குவீர்
சின்னஞ் சிறிய வயதிலேஇவன்
தீமை அவர்க்கு தொடங்கினான்அவர்
என்னரும் புத்திரன் என்றெண்ணித்தங்கள்
யாக திவனை தலைக்கொண்டு பசும்
பொன்னை நிறைத்ததொர் பையினைமனம்
போல செலவிடு வாய்என்றேதந்து
மன்னவர் காண இவனுக்கேதம்முள்
மாண்பு கொடுத்தன ரல்லரோ
கண்ணனு கேமுதல் அர்க்கியம்அவர்
காட்டினர் என்று பழித்தனைஎனில்
நண்ணும் விருந்தினர கன்றியேநம்முள்
நாமுப சாரங்கள் செய்வதோஉறவு
அண்ணனும் தம்பியும் ஆதலால்அவர்
அன்னிய மாநமை கொண்டிலர்முகில்
வண்ணன் அதிதியர் தம்முளேமுதல்
மாண்புடை யானென கொண்டனர்
கண்ணனு கேயது சாலுமென்றுஉயர்
கங்கை மகன்சொல செய்தனர்இதை
பண்ணரும் பாவமென் றெண்ணினால்அதன்
பார மவர்தமை சாருமோபின்னும்
கண்ணனை ஏதன கொண்டனைஅவன்
காலிற் சிறிதுக ளப்பவர்நில
தெண்ணரும் மன்னவர் தம்முளேபிறர்
யாரு மிலையெனல் காணுவாய்
ஆதி பரம்பொருள் நாரணன்தெளி
வாகிய பொற்கடல் மீதி லேநல்ல
சோதி பணாமுடி யாயிரம் கொண்ட
தொல்லறி வென்னுமொர் பாம்பின்மேல்ஒரு
போ துயில்கொளும் நாயகன்கலை
போந்து புவிமிசை தோன்றினான்இந்த
சீத குவளை விழியினான்என்று
செப்புவார் உண்மை தெளித்தவர்
நானெனும் ஆணவ தள்ளலும்இந்த
ஞாலத்தை தானென கொள்ளலும்பர
மோன நிலையின் நடத்தலும்ஒரு
மூவகை காலங் கடத்தலும்நடு
வான கருமங்கள் செய்தலும்உயிர்
யாவிற்கும் நல்லருள் பெய்தலும்பிறர்
ஊனை சிதைத்திடும் போதினும்தனது
உள்ளம் அருளின் நெகுதலும்
ஆயிரங் கால முயற்சியால்பெற
லாவர் இப்பேறுகள் ஞானியர்இவை
தாயின் வயிற்றில் பிறந்தன்றேதமை
சார்ந்து விளங்க பெறுவரேல்இந்த
மாயிரு ஞாலம் அவர்தமைத்தெய்வ
மாண்புடை யாரென்று போற்றுங்காண்ஒரு
பேயினை வேதம் உணர்த்தல்போல்கண்ணன்
பெற்றி உனக்கெவர் பேசுவார்
துரியோதனன் சினங் கொள்ளுதல்
வேறு
வெற்றி வேற்கை பரதர்தங் கோமான்
மேன்மை கொண்ட விழியக துள்ளோன்
பெற்றி மிக்க விதுர னறிவை
பின்னும் மற்றொரு கண்ணென கொண்டோன்
முற்று ணர்திரித ராட்டிரன் என்போன்
மூட பிள்ளைக்கு மாமன்சொல் வார்த்தை
எற்றி நல்ல வழக்குரை செய்தே
ஏன்ற வாறு நயங்கள் புகட்ட
கொல்லலும் நோய்க்கு மருந்துசெய் போழ்தில்
கூடும் வெம்மைய தாய்ப்பிண குற்றே
தொல்லு ணார்வின் மருத்துவன் தன்னை
சோர்வு றுத்துதல் போல்ஒரு தந்தை
சொல்லும் வார்த்தையி லேதெரு ளாதான்
தோமி ழைப்பதிலோர்மதி யுள்ளான்
கல்லும் ஒப்பிட தந்தை விளக்கும்
கட்டு ரைக்கு கடுஞ்சின முற்றான்
துரியோதனன் தீ மொழி
வேறு
பாம்பை கொடியென் றுயர்த்தவன்அந்த
பாம்பென சீறி மொழிகுவான்அட
தாம்பெற்ற மைந்தர்க்கு தீதுசெய்திடும்
தந்தையர் பார்மிசை உண்டுகொல்கெட்ட
வேம்பு நிகரிவ னுக்குநான்சுவை
மிக்க சருக்கரை பாண்டவர் அவர்
தீம்புசெய்தாலும் புகழ்கின்றான்திரு
தேடினும் என்னை இதழ் கின்றான்
மன்னர்க்கு நீதி யருவகைபிற
மாந்தர்க்கு நீதிமற் றோர்வகைஎன்று
சொன்ன வியாழ முனிவனைஇவன்
சுத்த மடையனென் றெண்ணியேமற்றும்
என்னென்ன வோகதை சொல்கிறான்உற
வென்றும் நட்பென்றும் கதைக்கிறான்அவர்
சின்ன முறச்செய வேதிறங் கெட்ட
செத்தையென் றென்னை நினைக்கிறான்
இந்திர போகங்கள் என்கிறான்உண
வின்பமும் மாதரின் இன்பமும் இவன்
மந்திர மும்படை மாட்சியும்கொண்டு
வாழ்வதை விட்டிங்கு வீணிலேபிறர்
செந்திருவை கண்டு வெம்பியேஉளம்
தேம்புதல் பேதைமை என்கிறான்மன்னர்
தந்திர தேர்ந்தவர் தம்மிலேஎங்கள்
தந்தையை ஒப்பவர் இல்லைகாண்
மாதர்தம் இன்பம் எனக்கென்றான்புவி
மண்டல தாட்சி அவர்க்கென்றான்நல்ல
சாதமும் நெய்யும் எனக்கென்றான்எங்கும்
சாற்றிடுங் கீர்த்தி அவர்க்கென்றான்அட
ஆதர விங்ஙனம் பிள்ளைமேல் வைக்கும்
அப்பன் உலகினில் வேறுண்டோஉயிர
சோதரர் பாண்டவர் தந்தைநீகுறை
சொல்ல இனியிட மேதையா
சொல்லின் நயங்கள் அறிந்திலேன்உனை
சொல்லினில் வெல்ல விரும்பிலேன்கருங்
கல்லிடை நாருரி பாருண்டோநினை
காரணங் காட்டுத லாகுமோஎன்னை
கொல்லினும் வேறெது செய்யினும்நெஞ்சில்
கொண்ட கருத்தை விடுகிலேன்அந்த
புல்லிய பாண்டவர் மேம்படக்கண்டு
போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன்
வாது நின்னோடு தொடுக்கிலேன்ஒரு
வார்த்தை மட்டுஞ்சொல கேட்பையால்ஒரு
தீது நமக்கு வாராமலேவெற்றி
சேர்வதற் கோர்வழி யுண்டுகாண்களி
சூது கவரை யழைத்தெலாம்அதில்
தோற்றிடு மாறு புரியலாம்இதற்
கேது தடைகள் சொல் லாமலேஎன
தெண்ணத்தை நீகொளல் வேண்டுமால்
திரிதராட்டிரன் பதில்
வேறு
திரிதராட்டிரன் செவியில்இந
தீமொழி புகுதலு திகைத்து விட்டான்
பெரிதா துயர் கொணர்ந்தாய்கொடும்
பேயென பிள்ளைகள் பெற்று விட்டேன்
அரிதா குதல்போலேஅமர்
ஆங்கவ ரொடுபொரல் அவலம் என்றேன்
நரிதா குதல்போலாம்இந்த
நாணமில் செயலினை நாடுவானோ
ஆரியர் செய்வாரோஇந்த
ஆண்மை யிலாச்செயல் எண்ணுவரோ
பாரினில் பிறருடைமைவெ·கும்
பதரினை போலொரு பதருண்டோ
பேரியற் செல்வங்களும்இசை
பெருமையும் எய்திட விரும்புதியேல்
காரியம் இதுவாமோஎன்றன்
காளை யன்றோஇது கருதலடா
வீரனு கேயிசைவார்திரு
மேதினி எனுமிரு மனைவியர்தாம்
ஆரமர் தமரல்லார்மிசை
ஆற்றிநல் வெற்றியில் ஓங்குதியேல்
பாரத நாட்டினிலேஅந்த
பாண்டவ ரெனப்புகழ் படைத்திடுவாய்
சோரர்தம் மகனோ நீஉயர்
சோமன்ற னொருகுல தோன்றலன்றோ
தம்மொரு கருமத்திலேநித்தம்
தளர்வறு முயற்சி மற்றோர்பொருளை
இம்மியுங் கருதாமைசார
திருப்பவர் தமைநன்கு காத்திடுதல்
இம்மையில் இவற்றினையேசெல்வ
திலக்கணம் என்றனர் மூதறிஞர்
அம்மஇங்கிதனை யெலாம்நீ
அறிந்திலை யோபிழை யாற்றல் நன்றோ
நின்னுடை தோளனையார்இள
நிருபரை சிதைத்திட நினைப்பாயோ
என்னுடை யுயிரன் றோஎனை
எண்ணிஇ கொள்கையை நீக்குதியால்
பொன்னுடை மார்பக தார்இளம்
பொற்கொடி மாதரை களிப்பதினும்
இன்னும்பல் இன்பத்தினும்உளம்
இசையவி டேஇதை மறந்திடடா
துரியோதனன் பதில்
வேறு
தந்தை இ·து மொழிந்திடல் கேட்டே
தாரி சைந்த நெடுவரை தோளான்
எந்தைநின்னொடு வாதிடல் வேண்டேன்
என்று பன்முறை கூறியும் கேளாய்
வந்த காரியங் கேட்டிமற் றாங்குன்
வார்த்தை யின்றிஅ பாண்டவர் வாரார்
இந்த நின்முன் என்ஆவி இறுப்பேன்
மதித மக்கென் றிலாதவர் கோடி
வண்மை சாத்திர கேள்விகள் கேட்டும்
பதியுஞ் சாத்திர துள்ளுறை காணார்
பானை தேனில் அகப்பையை போல்வார்
துதிகள் சொல்லும் விதுரன் மொழியை
சுருதி யாமென கொண்டனை நீ தான்
அதிக மோகம் அவனுளங் கொண்டான்
ஐவர் மீதில்இங் கெம்மை வெறுப்பான்
தலைவன் ஆங்கு பிறர்கையில் பொம்மை
சார்ந்து நிற்பவர குய்ந்நெறி உண்டோ
உலைவ லால் திரி தாட்டிர வர்க்க
துள்ள வர்க்கு நலமென்ப தில்லை
நிலையி லாதன செல்வமும் மாண்பும்
நித்தம் தேடி வருந்த விலாமே
விலையி லாநிதி கொண்டனம்என்றே
மெய்கு ழைந்து துயில்பவர் மூடர்
பழைய வானிதி போதுமென் றெண்ணி
பாங்கு காத்திடு மன்னவர் வாழ்வை
விழையும் அன்னியர் ஓர் கணத்துற்றே
வென்ற ழிக்கும் விதிஅறி யாயோ
குழைத்த லென்பது மன்னவர கில்லை
கூட கூடப்பின் கூட்டுதல் வேண்டும்
பிறரை தாழ்த்து வதிற்சலி பெய்தல்
வேறு
செல்வதெங் குலத்தொழி லாம்எந்த
விதத்தினில் இசையினும் தவறிலை காண்
நல்வழி தீய வழிஎன
நாமதிற் சோதனை செயத்தகு மோ
செல்வழி யாவினுமேபகை
தீர்த்திடல் சாலுமென் றனர்பெரி யோர்
கொல்வது தான் படையோபகை
குமைப்பன யாவும்நற் படையல வோ
வேறு
சுற்று தாரிவர் என்றனை ஐயா
தோற்ற தாலும் பிறவியி னாலும்
பற்றலா ரென்றும் நண்பர்க ளென்றும்
பார்ப்ப தில்லை உலகினில் யாரும்
மற்றெ தாலும் பகையுறல் இல்லை
வடிவினில் இல்லை அளவினில்
உற்ற துன்பத்தி னாற்பகை உண்டாம்
ஓர்தொ ழில்பயில் வார்த குள்ளே
பூமி தெய்வம் விழுங்கிடுங் கண்டாய்
புரவ லர்பகை காய்கிலர் தம்மை
நாமி பூதல தேகுறை வெய்த
நாளும் பாண்டவர் ஏறுகின் றாரால்
நேமி மன்னர் பகைசிறி தென்றே
நினைவ யர்ந்திரு பாரெனில்நோய்போல்
சாமிஅந்த பகைமிக லுற்றே
சடிதி மாய்த்திடும் என்பதும் காணாய்
போர்செய் வோமெனில் நீ தடுக்கின்றாய்
புவியினோரும் பழிபல சொல்வார்
தார்செய் தோளினம் பாண்டவர் தம்மை
சமரில் வெல்வதும் ஆங்கெளி தன்றாம்
யார்செய் புண்ணி தோந குற்றான்
எங்க ளாருயிர் போன்றைஇம் மாமன்
நேர்செய் சூதினில் வென்று தருவான்
நீதி தர்மனும் சூதில்அன் புள்ளோன்
பகைவர் வாழ்வினில் இன்புறு வாயோ
பாரதர்க்கு முடிமணி யன்னாய்
புகையும் என்றன் உளத்தினை வீறில்
புன்சொற் கூறி அவித்திட லாமோ
நகைசெய் தார்தமை நாளை நகைப்போம்
நமரி பாண்டவர் என்னில் இ·தாலே
மிகையு றுந்துன்ப மேது நம் மோடு
வேறு றாதெமை சார்ந்து நன் குய்வார்
ஐயசூதிற் கவரை அழைத்தால்
ஆடி உய்குதும்அ·தியற் றாயேல்
பொய்யன் றென்னுரைஎன்னியல் போர்வாய்
பொய்ம்மை நிறென்றுஞ் சொல்லிய துண்டோ
நைய நின்முனர் என்சிரங் கொய்தே
நானிங் காவி இறுத்திடு வேனால்
செய்ய லாவது செய்குதிஎன்றான்
திரித ராட்டிரன் நெஞ்ச முடைந்தான்
திரிதராட்டிரன் சம்மதித்தல்
வேறு
விதிசெயும் விளைவி னுக்கேஇங்கு
வேறு செய்வார் புவிமீ துளரோ
மதிசெறி விதுரன் அன்றேஇது
வருந்திறன் அறிந்துமுன் எனக்குரைத்தான்
அதிச கொடுங் கோலம்விளை
தரசர்தங் குலத்தினை அழிக்கும்என்றான்
சதிசெ தொடங்கி விட்டாய்நின்றன்
சதியினிற் றானது விளையும்என்றான்
விதிவிதிவிதிமகனேஇனி
வேறெது சொல்லுவன் அட மகனே
கதியுறுங் கால னன்றோஇந்த
கயமக னெனநினை சார்ந்து விட்டான்
கொதியுறு முளம் வேண்டாநின்றன்
கொள்கையின் படிஅவர் தமை அழைப்பேன்
வதியுறு மனை செல்வாய்என்று
விழியுங்கண் ணீரொடு விடை கொடுத்தான்
சபா நிர்மாணம்
மஞ்சனும் மாமனும் போயின பின்னர்
மன்னன் வினைஞர் பலரை அழைத்தே
பஞ்சவர் வேள்வியிற் கண்டது போல
பாங்கி னுயர்ந்ததொர் மண்டபஞ் செய்வீர்
மிஞ்சு பொருளதற் காற்றுவன்என்றான்
மிக்க உவகைய டாங்கவர் சென்றே
கஞ்ச மலரிற் கடவுள் வியப்ப
கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றே
வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும்
வண்மை கவிஞர் கனவினை போலும்
நல்ல தொழிலுணர தார்செய லென்றே
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூற
கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு
காமர் மணிகள் சிலசில சேர்த்து
சொல்லை யிசைத்து பிறர்செயு மாறே
சுந்தர மாமொரு காப்பியஞ் செய்தார்
விதுரனை தூதுவிடல்
தம்பி விதுரனை மன்னன் அழைத்தான்
தக்க பரிசுகள் கொண்டினி தேகி
எம்பியின் மக்கள் இருந்தர சாளும்
இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால்
கொம்பினை யத்த மடப்பிடி யோடும்
கூடிஇங் கெய்தி விருந்து களிக்க
நம்பி அழைத்தனன்கௌரவர் கோமான்
நல்லதொர் நுந்தைஎன உரை செய்வாய்
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும்
நன்மணி மண்டபம் செய்ததும் சொல்வாய்
நீடு புகழ்பெரு வேள்வியில் அந்நாள்
நேயமொ டேகி திரும்பிய பின்னர்
பீடுறு மக்களை ஓர்முறை இங்கே
பேணி அழைத்து விருந்துக ளாற்ற
கூடும் வயதிற் கிழவன் விரும்பி
கூறினன் இ·தென சொல்லுவை கண்டாய்
பேச்சி னிடையிற் சகுனிசொற் கேட்டே
பேயெனும் பிள்ளை கருத்தினிற் கொண்ட
தீச்செயல் இ·தென் றதையுங் குறிப்பாற்
செப்பிடு வாய்என மன்னவன் கூற
போச்சுதுபோச்சுது பாரத நாடு
போச்சுது நல்லறம்போச்சுது வேதம்
ஆச்சரி யக்கொடுங் கோலங்கள் காண்போம்
ஐயஇதனை தடுத்தல் அரிதோ
என்று விதுரன் பெருந்துயர் கொண்டே
ஏங்கி பலசொல் இயம்பிய பின்னர்
சென்று வருகுதிதம்பி இனிமேல்
சிந்தனை ஏதும் இதிற்செய மாட்டேன்
வென்று படுத்தனன் வெவ்விதி என்னை
மேலை விளைவுகள் நீஅறி யாயோ
அன்று விதித்ததை இன்று தடுத்தல்
யார்க்கெளிதென்றுமெய் சோர்ந்து விழுந்தான்
விதுரன் தூது செல்லுதல்
வேறு
அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான்
அடவிமலை ஆறெல்லாம் கடந்துபோகி
திண்ணமுறு தடந்தோளும் உளமும்கொண்டு
திருமலி பாண்டவர்தாம் அரசு செய்யும்
வண்ணமுயர் மணிநகரின் மருங்கு செல்வான்
விழியிடையே நாட்டினுறு வளங்கள் நோக்கி
எண்ணமுற லாகித்தன் இதயத்துள்ளே
இனையபல மொழிகூறி இரங்கு வானால்
நீலமுடி தரித்தபல மலைசேர் நாடு
நீரமுதம் எனப்பாய்ந்து நிரம்பும் நாடு
கோலமுறு பயன்மரங்கள் செறிந்து வாழுங்
குளிர்காவுஞ் சோலைகளுங் குலவு நாடு
ஞாலமெலாம் பசியின்றி காத்தல் வல்ல
நன்செய்யும் புன்செய்யும் நலமி கோங்க
பாலடையும் நறுநெய்யும் தேனு முண்டு
பண்ணவர்போல மக்களெலாம் பயிலும் நாடு
அன்னங்கள் பொற்கமல தடத்தின் ஊர
அளிமுரல கிளிமழலை அரற்ற கேட்போர்
கன்னங்கள் அமுதூற குயில்கள் பாடும்
காவினத்து நறுமலரின் கமழை தென்றல்
பொன்னங்க மணிமடவார் மாட மீது
புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச
வன்னங்கொள் வரைத்தோளார் மகிழமாதர்
மையல்விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு
பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கு நாடு
பெண்க ளெல்லாம் அரம்பையர்போல் ஒளிரும் நாடு
வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி
கேள்விஎனும் இவையெல்லாம் விளங்கு நாடு
சோரமுதற் புன்மையெது தோன்றா நாடு
தொல்லுலகின் முடிமணிபோல் தோன்று நாடு
பாரதர்த நாட்டிலே நாச மெய்த
பாவியேன் துணைபுரியும் பான்மை என்னே
விதுரனை வரவேற்றல்
வேறு
விதுரன் வருஞ்செய்தி தாஞ்செவி யுற்றே
வீறுடை ஐவர் உளமகிழ் பூத்து
சதுரங்க சேனை யுடன்பல பரிசும்
தாளமும் மேளமும் தாங்கொண்டு சென்றே
எதிர்கொண் டழைத்து மணிமுடி தாழ்த்தி
ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி
மதுர மொழியிற் குசலங்கள் பேசி
மன்ன னொடுந்திரு மாளிகை சேர்ந்தார்
குந்தி எனும்பெயர தெய்வத தன்னை
கோமகன் கண்டு வணங்கிய பின்னர்
வொந்திறல் கொண்ட துருபதன் செல்வம்
வெள்கி தலைகுனி தாங்குவ தெய்தி
அந்திமயங்க விசும்புடை தோன்றும்
ஆசை கதிர்மதி யன்ன முகத்தை
மந்திர தேர்ந்ததொர் மாமன் அடிக்கண்
வைத்து வணங்கி வனப்புற நின்றாள்
தங்க பதுமை எனவந்து நின்ற
தையலு கையன்நல் லாசிகள் கூறி
அங்கங் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர்
ஆங்குவ துற்ற உறவினர் நண்பர்
சிங்க மெனத்திகழ் வீரர் புலவர்
சேகவர் யாரொடுஞ் செய்திகள் பேசி
பொங்கு திருவின் நகர்வ லம்வந்து
போழ்து கழிந்திர வாகிய பின்னர்
விதுரன் அழைத்தல்
ஐவர் தமையு தனிக்கொண்டு போகி
ஆங்கொரு செம்பொன் னரங்கில் இருந்தே
மைவரை தோளன்பெரும்புக ழாளன்
மாமகள் பூமக கோர்மண வாளன்
மெய்வரு கேள்வி மிகுந்த புலவன்
வேந்தர் பிரான்திரி தாட்டிர கோமான்
தெய்வ நலங்கள் சிறந்திட நும்மை
சீரொடு நித்தலும் வாழ்கென வாழ்த்தி
உங்களு கென்னிடம் சொல்லி விடுத்தான்
ஓர்செய்திமற்ற· துரைத்திட கேளீர்
மங்களம் வாய்ந்தநல் அத்தி புரத்தே
வையக மீதில் இணையற்ற தாக
தங்கும் எழிற்பெரு மண்டபம் ஒன்று
தம்பியர் சூழ்ந்து சமைத்தனர்கண்டீர்
அங்கதன் விந்தை அழகினை காண
அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன்
வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து
மீண்டு பலதின மாயின வேனும்
வாள்வைக்கும் நல்விழி மங்கையோ டேநீர்
வந்ததெங்க ளூரில் மறுவிரு தாட
நாள் வைக்கும் சோதிட ராலிது மட்டும்
நாயகன் நும்மை அழைத்திட வில்லை
கேள்வி கொருமி திலாதிப னொத்தோன்
கேடற்ற மாதம் இதுவென கண்டே
வந்து விருந்து களித்திட நும்மை
வாழ்த்தி அழைத்தனன்என்னரு மக்காள்
சந்துகண் டேஅ சகுனிசொற் கேட்டு
தன்மை இழந்த சுயோதன மூடன்
விந்தை பொருந்திய மண்டப தும்மை
வெய்யபுன் சூது களித்திட செய்யும்
மந்திர மொன்றும் மனத்திடை கொண்டான்
வன்ம மிதுவும் நுமக்கறி வித்தேன்
தருமபுத்திரன் பதில்
என்று விதுரன் இயம்ப தருமன்
எண்ணங் கலங்கி சிலசொல் உரைப்பான்
மன்று புனைந்தது கேட்டுமி சூதின்
வார்த்தையை கேட்டுமிங் கென்றன் மனத்தே
சென்று வருத்தம் உளைகின்ற தையா
சிந்தையில் ஐயம் விளைகின்ற தையா
நன்று நமக்கு நினைப்பவ னல்லன்
நம்ப லரிது சுயோதனன் றன்னை
கொல்ல கருதி சுயோதனன் முன்பு
சூத்திர மான சதிபல செய்தான்
சொல்ல படாதவ னாலெ கான
துன்ப மனைத்தையும் நீ அறி யாயோ
வெல்ல கடவர் எவரென்ற போதும்
வேந்தர்கள் சூதை விரும்பிட லாமோ
தொல்லை படுமென் மனந்தெளி வெய்த
சொல்லுதி நீஒரு சூழ்ச்சிஇங் கென்றான்
விதுரன் பதில்
வேறு
விதுரனும் சொல்லு கிறான் இதை
விடமென சான்றவர் வெகுளுவர் காண்
சதுரென கொள்ளுவ ரோஇதன்
தாழ்மை யெலாமவர குரைத்து விட்டேன்
இதுமிக தீதென்றேஅண்ணன்
எத்தனை சொல்லியும் இள வரசன்
மதுமிகு துண்டவன் போல்ஒரு
வார்த்தையை யேபற்றி பிதற்றுகிறான்
கல்லெனில் இணங்கி விடும்அண்ணன்
காட்டிய நீதிகள் கணக்கில வாம்
புல்லனிங் கவற்றை யெலாம்உளம்
புகுதவொ டாதுதன் மடமையினால்
சல்லி சூதினி லேமனம்
தளர்வற நின்றிடு தகைமை சொன்னேன்
சொல்லிய குறிப்பறிந்தேநல
தோன்றிய வழியினை தொடர்கஎன்றான்
தருமபுத்திரன் தீர்மானம்
தருமனும் இவ்வள வில்உள
தளர்ச்சியை நீக்கியர் உறுதி கொண்டே
பருமங்கொள் குரலின னாய்மொழி
பகைத்திட லின்றிஇங் கிவைஉரை பான்
மருமங்கள் எவைசெயினும்மதி
மருண்டவர் விருந்தறஞ் சிதைத்திடினும்
கருமமொன் றேஉள தாம்நங்கள்
கடன்அதை நெறிப்படி புரிந்திடு வோம்
தந்தையும் வரப்பணி தான்சிறு
தந்தையும் தூதுவ ததைஉரை தான்
சிந்தை யன்றினி இல்லைஎது
சேரினும் நலமென தெளிந்து விட்டேன்
முந்தை சிலைரா மன்செய்த
முடிவினை நம்மவர் மறப்பது வோ
நொந்தது செயமா டோம்பழ
நூலினு கிணங்கிய நெறிசெல் வோம்
ஐம்பெருங் குரவோர் தாம்தரும்
ஆணையை கடப்பதும் அறநெறி யோ
வெம்பெரு மத யானைபரி
வியன்தேர் ஆளுடன் இருதின தில்
பைம்பொழில் அத்திநகர்செலும்
பயணத்திற் குரியன புரிந்திடு வாய்
மொய்ம்புடை விறல் வீமாஎன
மொழிந்தனன் அறநெறி முழுதுணர்ந்தான்
வீமனுடைய வீரப்பேச்சு
வீமனும் திகைத்துவிட்டான்இள
விசயனை நோக்கிஇங் கிதுசொலு வான்
மாமனும் மருமகனு மாநமை
யழித்திட கருதிஇவ் வழிதொடர தார்
தாமதஞ் செய்வோ மோசெல
தகுந்தகுமெனஇடி யுறநகை தான்
கோமகன் உரைப்படி யேபடை
கொண்டுசெல் வோமொரு தடையிலை காண்
நெடுநா பகைகண் டாய்இந்த
நினைவினில் யான்கழி தனபல நாள்
கெடுநாள் வருமளவும்ஒரு
கிருமியை அழிப்பவர் உலகிலுண் டோ
படுநா குறிஅன் றோஇந்த
பாதகம் நினைப்பவர் நினைத்தது தான்
விடுநாண் கோத்திட டாதம்பி
வில்லினு கிரைமிக விளையு தடா
போரிட செல்வ மடாமகன்
புலைமையும் தந்தையின் புலமை களும்
யாரிடம் அவிழ்க்கின் றார்இதை
எத்தனை நாள்வரை பொறுத்திரு போம்
பாரிட திவரொடு நாம்என
பகுதியிவ் விரண்டிற்கும் காலமொன் றில்
நேரிட வாழ்வுண் டோஇரு
நெருப்பினு கிடையினில் ஒருவிற கோ
தருமபுத்திரன் முடிவுரை
வேறு
வீமன் உரைத்தது போலவேஉளம்
வெம்பி நெடுவில் விசயனும் அங்கு
காமனும் சாமனும் ஒப்பவேநின்ற
காளை இளைஞர் இருவரும்செய்ய
தாமரை கண்ணன் யுதிட்டிரன்சொல்லை
தட்டி பணிவொடு பேசினார்தவ
நே தவறலும் உண்டுகாண்நரர்
நெஞ்சம் கொதித்திடு போழ்திலே
அன்பும் பணிவும் உருக்கொண்டோர்அணு
வாயினும் தன்சொல் வழாதவர்அங்கு
வன்பு மொழிசொல கேட்டனன்அற
மன்னவன் புன்னகை பூத்தனன்அட
முன்பு சுயோதனன் செய்ததும்இன்று
மூண்டிருக்குங் கொடுங் கோலமும்இதன்
பின்பு விளைவதும் தேர்ந்துளேன்என்னை
பித்தனென் றெண்ணி உரைத்திட்டீர்
கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்தன்
கணக்கிற் சுழன்றிடும் சக்கரம்அது
தப்பி மிகையுங் குறையுமாச்சுற்றும்
தன்மை அதற்குள தாகுமோஇதை
ஒப்பிட லாகும் புவியின்மேல்என்றும்
உள்ள உயிர்களின் வாழ்விற்கேஒரு
செப்பிடு வித்தையை போலவேபுவி
செய்திகள் தோன்றிடு மாயினும்
இங்கிவை யாவு தவறிலாவிதி
ஏற்று நடக்குஞ் செயல்களாம்முடி
வெங்கணு மின்றி எவற்றினும்என்றும்
ஏறி இடையின்றி செல்வதாம்ஒரு
சங்கிலி யக்கும் விதி கண்டீர்வெறுஞ்
சாத்திர மன்றிது சத்தியம்நின்று
மங்கியர் நாளில் அழிவதாம்நங்கள்
வாழ்க்கை இதனை கடந்ததோ
தோன்றி அழிவது வாழ்க்கைதான்இங்கு
துன்பத்தொ டின்பம் வெறுமையாம்இவை
மூன்றில் எதுவரு மாயினும்களி
மூழ்கி நடத்தல் முறைகண்டீர்நெஞ்சில்
ஊன்றிய கொள்கை தழைப்பரோதுன்பம்
உற்றிடு மென்பதொர் அச்சத்தால்விதி
போன்று நடக்கும் உலகென்றேகடன்
போற்றி ஒழுகுவர் சான்றவர்
சேற்றில் உழலும் புழுவிற்கும்புவி
செல்வ முடைய அரசர்க்கும்பிச்சை
ஏற்றுடல் காத்திடும் ஏழைக்கும்உயிர்
எத்தனை உண்டவை யாவிற்கும்நித்தம்
ஆற்றுதற் குள்ள கடமைதான்முன்வந்து
அவ்வ கணந்தொறும் நிற்குமால்அது
தோற்றும் பொழுதிற் புரிகுவார்பல
சூழ்ந்து கடமை அழிப்பரோ
யாவரு கும்பொது வாயினும்சிற
பென்பர் அரசர் குலத்திற்கேஉயர்
தேவரை யப்ப முன்னோர் தமைத்தங்கள்
சிந்தையிற் கொண்டு பணிகுதல்தந்தை
ஏவலை மைந்தர் புரிதற்கேவில்
இராமன் கதையையும் காட்டினேன்புவி
காவலர் தம்மிற் சிறந்தநீர்இன்று
கர்மம் பிழைத்திடு வீர்கொலோ
நால்வரும் சம்மதித்தல்
வேறு
என் றினைய நீதிபல தரும ராசன்
எடுத்துரைப்பஇளைஞர்களு தங்கை கூப்பி
முன்றினிலே ஏற்றிவைத்த விளக்கை போல
குவலயத்திற் கறங்காட்ட தோன்றி னாய் நீ
வென்றிபெறு திருவடியாய்நினது சொல்லை
மீறிஒரு செயலுண்டோஆண்டான் ஆணை
யன்றிஅடி யார்தமக்கு கடன்வே றுண்டோ
ஐயனேபாண்டவர்தம் ஆவி நீயே
துன்பமுரும் எமக்கென்றே எண்ணி நின்வா
சொல்லைமறு துரைத்தோமோநின்பா லுள்ள
அன்புமிகையா லன்றோ திருவுளத்தின்
ஆக்கினையை எதிர்த்துரைத்தோம் அறிவில் லாமல்
மன்பதையின் உளச்செயல்கள் தெளி காணும்
மன்னவனேமற்றதுநீ அறியா தொன்றோ
வன்புமொழி பொறுத்தருள்வாய் வாழிநின்சொல்
வழிச்செல்வோம்எனக்கூறி வணங்கி சென்றார்
பாண்டவர் பயணமாதல்
ஆங்கதன்பின் மூன்றாம்நாள் இளைஞ ரோடும்
அணியிழை பாஞ்சாலர் விளக்கி னோடும்
பாங்கினுறு பரிசனங்கள் பலவி னோடும்
படையினோடும் இசையினோடும் பயண மாகி
தீங்கதனை கருதாத தரு கோமான்
திருநகர்வி டகல்கின்றான் தீயோர் ஊர்க்கே
நீங்கிஅகன் றிடலாகு தன்மை உண்டோ
நெடுங்கரத்து விதிகாட்டும் நெறியில் நின்றே
நரிவகுத்த வலையினிலே தெரித்து சிங்கம்
நழுவி விழும்சிற்றெறும்பால் யானை சாகும்
வரிவகுத்த உடற்புலியை புழுவுங் கொல்லும்
வருங்கால முணர்வோரும் மயங்கி நிற்பார்
கிரிவகுத்த ஓடையிலே மிதத்து செல்லும்
கீழ்மேலாம்மேல் கீழாம்கிழக்கு மேற்காம்
புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மை
போற்றிடுவார்விதிவகுத்த போழ்தி னன்றே
மாலை வர்ணனை
மாலைப்போ தாதலுமேமன்னன் சேனை
வழியிடைஓர் பூம்பொழிலின் அமர்ந்த காலை
சேலைப்போல் விழியாளை பார்த்தன் கொண்டு
சென்றாங்கோர் தனியிடத்தே பசும்புல் மேட்டில்
மேலைப்போம் பரிதியினை தொழுது கண்டான்
மெல்லியலும் அவந்தொடைமேல் மெல்ல சாய்ந்து
பாலைப்போல் மொழிபிதற்ற அவளை நோக்கி
பார்த்தனும்அ பரிதிஎழில் விளக்கு கின்றான்
பாரடியோவானத்திற் புதுமை யெல்லாம்
பண்மொழீகணந்தோறும் மாறி
ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி
உவகையுற நவநவமாய் தொன்றுங் காட்சி
யாரடிஇங் கிவைபோல புவியின் மீதே
எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்
சீரடியால் பழவதே முனிவர் போற்றுஞ்
செழுஞ்சோதி நவப்பையெலாம் சேர காண்பாய்
கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்
கணந்தோறும் நவநவமாங் களிப்பு தோன்றும்
கருதிடவும் சொல்லிடவும் எளிதோஆங்கே
கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டி
காளிபரா சக்தி அவள் களிக்குங் கோலம்
கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்கு காண்பாய்
அடிவான தேஅங்கு பரிதி கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழல காண்பாய்
இடிவான தொளிமின்னல் பத்து கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
முடிவான வட்டத்தை காளி ஆங்கே
மொய்குழலாய்சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்
வடிவான தொன்றாக தகடி ரண்டு
வட்டமுற சுழலுவதை வளைந்து காண்பாய்
அமைதியடு பார்த்திடுவாய் மின்னேபின்னே
அசைவுறுமோர் மின்செய்த வட்டுமுன்னே
சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய்
தரணியிலிங் கிதுபோலோர் பசுமை உண்டோ
இமைகுவிய மின்வட்டின் வயிர கால்கள்
எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்
உமை கவிதை செய்கின்றாள்எழுந்து நின்றே
உரைத்திடுவோம்பல்லாண்டு வாழ்கஎன்றே
வேறு
பார்சுடர்ப்பிரிதியை சூழவே படர்முகில்
எத்தனை தீப்ப டெரிவனஓகோ
என்னடிஇந்த வன்ன தியல்புகள்
எத்தனை வடிவம்எத்தனை கலவை
தீயின் குழம்புகள்செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்வெம்மை தோன்றாமே
எரிந்திடு தங்க தீவுகள்பாரடி
நீல பொய்கைகள்அடடாநீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடி
எத்தனை செம்மைபசுமையுங் கருமையும்
எத்தனைகரிய பெரும்பெரும் பூதம்
நீல பொய்கையின் மிதந்திடு தங்க
தோணிகள் சுடரொளி பொற்கரை யிட்ட
கருஞ்சிக ரங்கள்காணடிஆங்கு
தங்க திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்ஆஹாஎங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்ஒளித்திரள்வன்ன களஞ்சியம்
வேறு
செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினை தேர்கின்றோம்அவன்
எங்களறிவினை தூண்டி நடத்துகஎன்பதோர் நல்ல
மங்களம் வாய்ந்த சுருதி மொழிகொண்டு வாழ்த்தியேஇவர்
தங்க வினங்க விருந்த பொழி விடைச்சார தனர்பின்னர்
அங்கவ் விரவு கழிந்திடவைகறை யாதலும்மன்னர்
பொங்குகடலொத்த சேனைகளோடு புறப்பட்டேவழி
எங்கு திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றேகதிர்
மங்கிடு முன்னொளி மங்கு நகரிடை வந்துற்றார்
துரியோதனன் சூழ்ச்சி சுருக்கம் முற்றும்
இரண்டாவது சூதாட்ட சருக்கம்
வாணியை வேண்டுதல்
தெளிவுறவே அறிந்திடல் தெளிவுதர
மொழிந்திடுதல் சிந்தி பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்த
கனவுபல காட்டல்கண்ணீர
துளி வளரஉள் ளுருக்குதல்இங் கிவையெல்லாம்
நீஅருளும் தொழில்க ளன்றோ
ஒளிவளரு தமிழ் வாணீஅடியனேற்
கிவையனைத்தும் உதவு வாயே
பாண்டவர் வரவேற்பு
அத்தின மாநக ரத்தினில் வந்தனர்
ஆரி பாண்டவர் என்றது கேட்டலும்
தத்தி எழுந்தன எண்ணருங் கூட்டங்கள்
சந்திகள்வீதிகள்சாலைகள்சோலைகள்
எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர்
இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர்
இத்தின மட்டும் எனவி பெய்துற
எள்ளும் விழற்கிட மின்றி யிருந்தார்
மந்திர கீதம் முழக்கினர் பார்ப்பனர்
வந்தட தோள்கொட்டி ஆர்த்தனர் மன்னவர்
வெந்திறல் யானையும் தேரும் குதிரையும்
வீதிகள் தோறும் ஒலிமிக செய்தன
வந்தியர் பாடினர்வேசையர் ஆடினர்
வாத்தியங் கோடி வகையின் ஒலித்தன
செந்திரு வாழும் நகரினில் அத்தினஞ்
சேர்ந்த ஒலியை சிறிதென லாமொ
வாலிகன் தந்ததொர் தேர்மிசை ஏறிஅம்
மன்னன் யிதிட்டிரன் தம்பியர் மாதர்கள்
நாலிய லாம்படை யோடு நகரிடை
நல்ல பவனி எழுந்த பொழுதினில்
சேலியல் கண்ணியர் பொன்விள கேந்திட
சீரிய பார்ப்பனர் கும்பங்கள் ஏந்திட
கோலிய பூமழை பெய்திட தோரணம்
கொஞ்சநகரெழில் கூடிய தன்றே
வேறு
மன்னவன் கோயிலிலேஇவர்
வந்து புகுந்தனர் வரிசை யடே
பொன்னரங் கினிலிருந்தான்கண்ணில்
புலவனை போய்நின்று போற்றிய பின்
அன்னவன் ஆசிகொண்டேஉயர்
ஆரிய வீட்டுமன் அடி வணங்கி
வின்னய முணர் கிருபன்புகழ்
வீர துரோணன் அங்கவன் புதல்வன்
மற்றுள பெரியோர்கள்தமை
வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கிநின்றார்
கொற்றமி குயர்கன் னன்பணி
கொடியோன் இளையவர் சகுனியடும்
பொற்றட தோள் சருவப்பெரும்
புகழினர்தழுவினர்மகிழ்ச்சிகொண்டார்
நற்றவ காந்தாரிமுதல்
நாரியர் தமைமுறை படிதொழுதார்
குந்தியும் இளங்கொடியும்வந்து
கூடிய மாதர் தம்மொடு குலவி
முந்திய கதைகள் சொல்லிஅன்பு
மூண்டுரை யாடிப்பின் பிரிந்து விட்டார்
அந்தியும் புகுந்ததுவால்பின்னர்
ஐவரும் உடல்வலி தொழில் முடித்தே
சந்தியுஞ் சபங்களுஞ் செய்தங்கு
சாருமின் னுணவமு துண்டதன் பின்
சந்தன மலர்புனை தேஇள
தையலர் வீணைகொண் டுயிருருக்கி
விந்தைகொள் பாட்டிசைப்பஅதை
விழைவொடு கேட்டனர் துயில்புரி தார்
வந்ததொர் துன்ப தினைஅங்கு
மடித்திட லன்றி பின்தரு துயர்க்கே
சிந்தனை உழல்வா ரோஉள
சிதைவின்மை ஆரியர் சிறப்பன் றோ
பாண்டவர் சபைக்கு வருதல்
பாணர்கள் துதிகூறஇளம்
பகலவன் எழுமுனர துயிலெழு தார்
தோணல திணையில்லார்தெய்வ
துதித்தனர் செய்யபொற் பட்டணிந்து
பூணணி தாயுதங் கள்பல
பூண்டுபொற் சபையிடை போந்தனரால்
நாணமில் கவுரவரும்தங்கள்
நாயக னொடுமங் வீற்றிருந்தார்
வீட்டுமன் தானிரு தான்அற
விதுரனும்பார்ப்ப்பன குரவர்களும்
நாட்டு திரிமாரும்பிற
நாட்டினர் பலபல மன்னர்களும்
கேட்டினு கிரையாவான்மதி
கெடுந்துரி யோதனன் கிளையின ரும்
மாட்டுறு நண்பர்களும்அந்த
வான்பெருஞ் சவையிடை வயங்கிநின்றார்
சூதுக்கு அழைத்தல்
புன்தொழிற் கவறத னில்இந்த
புவிமிசை இணையிலை எனும்புக ழான்
நன்றறி யாச்சகுனிசபை
நடுவினில் ஏறென களித்திரு தான்
வென்றிகொள் பெருஞ்சூதர்அந்த
விவிஞ்சதி சித்திர சேனனுடன்
குன்றுச தியவிர தன்இதழ்
கூர்புரு மித்திரன் சய னென்பார்
சாலவும் அஞ்ச தரும்கெட்ட
சதிக்குண தார்பல மாயம் வல்லோர்
கோலநற் சபைதனிலேவந்து
கொக்கரி தார்ப்பரி திருந்தனரால்
மேலவர் தமை வணங்கிஅந்த
வெந்திறற் பாண்டவர் இளைஞர் தமை
ஆல முற்றிட தழுவிச்செம்பொன்
ஆதன தமர்ந்தவ பொழுதினி லே
சொல்லுகின் றான்சகுனிஅற
தோன்றல்உன் வரவினை காத்துளர் காண்
மல்லுறு தடந்தோளார்இந்த
மன்னவ ரனைவரும் நெடும்பொழு தா
வில்லுறு போர்த்தொழி லாற்புவி
வென்று தங்குலத்தினை மேம்படுத்தீர்
வல்லுறு சூதெனும் போர்தனில்
வலிமைகள் பார்க்குதும் வருதிஎன்றான்
தருமன் மறுத்தல்
தருமனங் கிவைசொல் வான்ஐய
சதியுறு சூதினு கெனைஅழை தாய்
பெருமைஇங் கிதிலுண்டோஅற
பெற்றி உண்டோமற பீடுளதோ
வருமம்நின் மனத்துடை யாய்எங்கள்
வாழ்வினை உகந்திலை என லறிவேன்
இருமையுங் கெடு பது வாம்இந்த
இழிதொழி லாலெமை அழித்த லுற்றாய்
சகுனியின் ஏச்சு
கலகல வெனச்சிரி தான்பழி
கவற்றையர் சாத்திர மெனப்பயின் றோன்
பலபல மொழிகுவ தேன்உனை
பார்த்திவன் என்றெணி அழைத்துவி டேன்
நிலமுழு தா கொண் டாய்தனி
நீஎன பலர்சொல கேட்டதனால்
சிலபொருள் விளையாட்டிற்செலுஞ்
செலவினு கழிகலை எனநினை தேன்
பாரத மண்டல தார்தங்கள்
பதிஒரு பிசுனனென் றறிவே னோ
சோரமிங் கிதிலுண்டோதொழில்
சூதெனி லாடுநர் அரசரன் றோ
மாரத வீரர்முன் னேநடு
மண்டப தேபட்ட பகலினிலே
சூரசி காமணியேநின்றன்
சொத்தினை திருடுவ மெனுங்கரு தோ
அச்சமிங் கிதில்வேண்டாவிரை
தாடுவம் நெடும்பொழு தாயின தால்
கச்சையர் நாழிகை யாநல்ல
காயுடன் விரித்திங்கு கிடந்திடல் காண்
நிச்சயம் நீவெல் வாய்வெற்றி
நின கியல் பாயின தறியா யோ
நிச்சயம நீவெல் வாய்பல
நினைகுவ தேன்களி தொடங்கு கென்றான்
தருமனின் பதில்
வேறு
தோல் விலைக்கு பசுவினை கொல்லும்
துட்டன் இவ்வுரை கூறுதல் கேட்டே
நூல்வி லக்கிய செய்கைக ளஞ்சும்
நோன்பி னோனுளம் நொந்திவை கூறும்
தேவ லப்பெயர் மாமுனி வோனும்
செய்ய கேள்வி அசிதனும் முன்னர்
காவ லர்க்கு விதித்த நூலிற்
கவறும் நஞ்சென கூறினர்கண்டாய்
வஞ்ச கத்தினில் வெற்றியை வேண்டார்
மா சூதை பழியென கொள்வார்
அஞ்ச லின்றி சமர்க்கள தேறி
ஆக்கும் வெற்றி அதனை மதிப்பார்
துஞ்ச நேரினு தூயசொல் லன்றி
சொல்மி லேச்சரை போலென்றுஞ் சொல்லார்
மிஞ்சு சீர்த்திகொள் பாரத நாட்டில்
மேவு மாரியர்என்றனர் மேலோர்
ஆத லாலிந்த சூதினை வேண்டேன்
ஐயசெல்வம் பெருமை இவற்றின்
காத லாலர சாற்றுவ னல்லேன்
காழ்த்த நல்லற மோங்கவும் ஆங்கே
ஓத லானும் உணர்த்துத
உண்மை சான்ற கலை தொகை யாவும்
சாத லின்றி வளர்ந்திடு மாறும்
சகுனியானர் சாளுதல்கண்டாய்
என்னை வஞ்சித்தென் செல் வத்தை கொள்வோர்
என்ற கிடர் செய்பவ ரல்லர்
முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார்
மூது ணர்விற் கலைத்தொகை மாய்ப்பார்
பின்னை என்னுயிர பாரத நாட்டில்
பீடை செய்யுங் கலியை அழைப்பார்
நின்னை மிக்க பணிவொடு கேட்பேன்
நெஞ்சிற் கொள்கையை நீக்குதிஎன்றான்
சகுனி வல்லுக்கு அழைத்தல்
வேறு
சாத்திரம் பேசுகின்றாய்என
தழல்படு விழியடு சகுனிசொல் வான்
கோத்திர குலமன் னர்பிறர்
குறைபட தம்புகழ் கூறுவ ரோ
நாத்திறன் மிக உடை யாய்எனில்
நம்மவர் காத்திடும் பழவழ கை
மாத்திர மறந்துவி டாய்மன்னர்
வல்லினு கழைத்திடில் மறுப்பதுண்டோ
தேர்ந்தவன் வென்றிடு வான்தொழில்
தேர்ச்சிஇல் லாதவன் தோற்றிடு வான்
நேர்ந்திடும் வாட்போரில்குத்து
நெறி அறி தவன்வெல பிறனழி வான்
ஓர்ந்திடு சாத்திர போர்தனில்
உணர்ந்தவன் வென்றிடஉணரா தான்
சோர்ந்தழி வெய்திடு வான்இவை
சூதென்றும் சதிஎன்றும் சொல்வா ரோ
வல்லவன் வென்றிடு வான்தொழில்
வன்மைஇல் லாதவன் தோற்றிடு வான்
நல்லவ னல்லா தான்என
நாண மிலார்சொலுங் கதை வேண்டா
வல்லமர் செய்திடவேஇந்த
மன்னர் முன்னேநினை அழைத்துவிட்டேன்
சொல்லுக வருவதுண் டேல்மன
துணிவிலை யேலதுஞ் சொல்லுகென்றான்
தருமன் இணங்குதல்
வேறு
வெய்ய தான் விதியை நினைந்தான்
விலக்கொ ணாதறம் என்ப துணர்ந்தோன்
பொய்ய தாகுஞ் சிறுவழ கொன்றை
புலனி லாதவர் தம்முடம் பாட்டை
ஐயன் நெஞ்சில் அறமென கொண்டான்
ஐயகோஅந்த நாள்முத லாக
துய்ய சிந்தைய ரெத்தனை மக்கள்
துன்பம் இவ்வகை எய்தினர்அம்மா
முன்பி ருந்ததொர் காரண தாலே
மூடரேபொய்யை மெய்என லாமோ
முன்பென சொலுங் கால மதற்கு
மூடரேஓர் வரையறை உண்டோ
முன்பென சொலின் நேற்றுமுன் பேயாம்
மூன்று கோடி வருடமும் முன்பே
முன்பிரு தெண்ணி லாது புவிமேல்
மொய்த்த மக்க ளெலாம்முனி வோரோ
நீர்பி றக்குமுன் பார்மிசை மூடர்
நேர்ந்த தில்லை எனநினை தீரோ
பார்பி றந்தது தொட்டின்று மட்டும்
பல பல பற்பல
கார்பி றக்கும் மழைத்துளி போலே
கண்ட மக்க ளனைவருள் ளேயும்
நீர்பி றப்பதன் முன்பு மடமை
நீச தன்மை இருந்தன வன்றோ
பொய்ய ழுக்கை அறமென்று கொண்டும்
பொய்யர் கேலியை சாத்திர மென்றும்
ஐயகோநங்கள் பாரத நாட்டில்
அறிவி லாரற பற்றுமி குள்ளோர்
நொய்ய ராகி அழிந்தவர் கோடி
நூல்வ கைபல தேர்ந்து தெளிந்தோன்
மெய்யறிந்தவர் தம்மு ளுயர்ந்தோன்
விதியினால தருமனும் வீழ்ந்தான்
மதியி னும்விதி தான் பெரி தன்றோ
வைய மீதுள வாகு மவற்றுள்
விதியினும்பெரி தோர்பொரு ளுண்டோ
மேலை நாம்செயுங் கர்மமல் லாதே
நதியி லுள்ள சிறுகுழி தன்னில்
நான்கு திக்கி லிருந்தும் பன்மாசு
பதியு மாறுபிறர்செயுங் கர
பயனும் நம்மைஅடைவதுண் டன்றோ
சூதாடல்
வேறு
மா சூதினுக்கேஐயன்மன மிணங்கி விட்டான்
தாய முருட்ட லானார்அங்கே சகுனி ஆர்ப்ப ரித்தான்
நேய முற்ற விதுரன்போலே நெறியு ளோர்க ளெல்லாம்
வாயை மூடிவிட்டார்தங்கள் மதி மயங்கி விட்டார்
அந்த வேளை யதனில்ஐவர கதிபன் இ· துரைப்பான்
பந்தயங்கள் சொல்வாய்சகுனி பரபர திடாதே
விந்தை யான செல்வம்கொண்ட வேந்த ரோடு நீ தான்
வந்தெ திர்த்து விட்டாய்எதிரே வைக்க நிதிய முண்டோ
தருமன் வார்த்தை கேட்டேதுரியோ தன னெழுந்து சொல்வான்
அருமையான செல்வம்என்பால் அளவி லாத துண்டு
ஒரு மடங்கு வைத்தால்எதிரே ஒன்ப தாக வைப்பேன்
பெருமை சொல்ல வேண்டாஐயா பின் னடக்கு கென்றான்
ஒருவனாட பணயம்வேறே ஒருவன் வைப்ப துண்டோ
தரும மாகு மோடாசொல்வாய் தம்பி இந்த வார்த்தை
வரும மில்லை ஐயாஇங்கு மாம னாடப்பணயம்
மருமகன் வை கொணாதோஇதிலே வந்த குற்ற மேதோ
பொழுதுபோக்கு தற்கேசூது போர் தொடங்கு கின்றோம்
அழுத லேனிதற்கேஎன்றே அங்கர் கோன் நகைத்தான்
பழு திருப்ப தெல்லாம்இங்கே பார்த்திவர குரைத்தேன்
முழுது மிங்கிதற்கேபின்னர் முடிவு காண்பீர்என்றான்
ஒளி சிறந்த மணியின்மாலை ஒன்றை அங்கு வைத்தான்
களி மிகுந்த பகைவன் எதிரே கன தனங்கள் சொன்னான்
விழி இமைக்கு முன்னேமாமன் வென்று தீர்த்து விட்டான்
பழி இலாத தருமன்பின்னும் பந்தயங்கள் சொல்வான்
ஆயிரங் குடம் பொன் வைத்தே ஆடுவோமிதென்றான்
மாயம் வல்ல மாமன் அதனை வசம தாக்கி விட்டான்
பாயுமா வொரொட்டில்செல்லும் பாரமான பொற்றேர்
தாய முருட்ட லானார்அங்கே சகுனி வென்று விட்டான்
இளையரான மாதர்செம்பொன் எழிலிணைந்த வடிவும்
வளை அணிந்த தோளும்மாலை மணி குலுங்கு மார்பும்
விளையு மின்ப நூல்கள்தம்மில் மிக்க தேர்ச்சி யோடு
களை இலங்கு முகமும்சாயற் கவினும் நன்கு கொண்டோர்
ஆயிர கணக்காஐவர கடிமை செய்து வாழ்வோர்
தாய முருட்டலானார்அந்த சகுனி வென்று விட்டான்
ஆயிரங்க ளாவார்செம்பொன்அணிகள் பூண்டிருப்பார்
தூயிழை பொனாடைசுற்று தொண்டர் தம்மை வைத்தான்
சோரனங் கவற்றைவார்த்தை சொல்லுமுன்னர் வென்றான்
தீர மிக்க தருமன்உள்ள திடனழி திடாதே
நீரை யுண்ட மேகம்போல நிற்கு மாயிரங்கள்
வாரணங்கள் கண்டாய்போரில் மறலி யத்து மோதும்
என்று வைத்த பணயந்தன்னை இழிஞன் வென்று விட்டான்
வென்றி மிக்க படைகள்பின்னர் வேந்தன் வைத்திழந்தான்
நன்றிழைத்த தேர்கள்போரின் நடையுணர்ந்த பாகர்
என் றிவற்றை யெல்லாம்தருமன் ஈடு வை திழந்தான்
எண்ணிலாத கண்டீர்புவியில் இணை யிலாத வாகும்
வண்ணமுள்ள பரிகள் தம்மை வை திழந்து விட்டான்
நண்ணு பொற் கடாரந்தம்மில் நாலு கோடி வைத்தான்
கண்ணி ழப்பவன் போலஅவையோர் கண மழிந்து விட்டான்
மாடிழந்து விட்டான்தருமன் மந்தை மந்தையாக
ஆடிழந்து விட்டான்தருமன் ஆளிழந்து விட்டான்
பீடிழந்த சகுனிஅங்கு பின்னுஞ் சொல்லு கின்றான்
நா டிழக்க வில்லைதருமாநாட்டை வைத்திடென்றான்
நாட்டை வைத்தாடுதல்
வேறு
ஐய கோஇதை யாதென சொல்வோம்
அரச ரானவர் செய்குவ தொன்றோ
மெய்ய தாகவொர் மண்டல தாட்சி
வென்று சூதினி லாளுங் கருத்தோ
வைய மி·து பொறு திடுமோமேல்
வான் பொறு திடுமோபழி மக்காள்
துய்ய சீர்த்தி மதிக்குல மோ நாம்
தூவென் றென்னி விதுரனும் சொல்வான்
பாண்ட வர்பொறை கொள்ளுவ ரேனும்
பைந்து ழாயனும் பாஞ்சால தானும்
மூண்ட வெஞ்சின தோடுநஞ் சூழல்
முற்றும் வேரற செய்குவ ரன்றோ
ஈண்டி ருக்குங் குருகுல வேந்தர்
யார்க்கு மி·துரை பேன்குறி கொண்மின்
மாண்டு போரில் மடிந்து நரகில்
மாழ்கு தற்கு வகைசெயல் வேண்டா
குலமெ லாமழி வெய்திடற் கன்றோ
குத்தி ரத்துரி யோதனன் றன்னை
நலமி லாவிதி நம்மிடை வைத்தான்
ஞால மீதி லவன்பிற தன்றே
அலறி யோர்நரி போற்குரை திட்டான்
அ·து ணர்ந்த நிமித்திகர்வெய்ய
கலக தோன்றுமி பாலக னாலே
காணு வீரென சொல்லிட கேட்டோம்
சூதிற் பிள்ளை கெலித்திடல் கொண்டு
சொர்க்க போகம் பெறுபவன் போல
பேதை நீயு முகமலர் வெய்தி
பெட்பு மிக்குற வீற்றிரு கின்றாய்
மீது சென்று மலையிடை தேனில்
மிக்க மோகத்தி னாலொரு வேடன்
பாத மாங்கு நழுவிட மாயும்
படும லைச்சரி வுள்ளது காணான்
மற்று நீருமி சூதெனுங் கள்ளால்
மதிம யங்கி வருஞ்செயல் காணீர்
முற்றுஞ் சாதி சுயோதன னாமோர்
மூடற் காக முழுகிட லாமோ
பற்று மிக்கஇ பாண்டவர் தம்மை
பாத கத்தி லழித்திடு கின்றாய்
கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே
கடலிற் காயங் கரைத்ததொ பாமே
வீட்டு ளேநரி யைவிட பாம்பை
வேண்டி பிள்ளை எனவளர திட்டோம்
நாட்டு ளேபுக ழோங்கிடு மாறி
நரியை விற்று புலிகளை கொள்வாய்
மோட்டு கூகையை காக்கையை விற்று
மொய்ம்பு சான்ற மயில்களை கொள்வாய்
கேட்டி லேகளி யோடு செல் வாயோ
கேட்குங் காதும் இழந்துவி டாயோ
தம்பி மக்கள் பொருள் வெ·கு வாயோ
சாதற் கான வயதினில் அண்ணே
நம்பி நின்னை அடைந்தவ ரன்றோ
நாத னென்றுனை கொண்டவ ரன்றோ
எம்பி ரானுளங் கொள்ளுதி யாயின்
யாவு தான மெனக்கொடு பாரே
கும்பி மாநரகத்தினி லாழ்த்துங்
கொடிய செய்கை தொடர்வதும் என்னே
குருகு லத்தலை வன்சபை கண்ணே
கொற்ற மிக்க துரோணன் கிருபன்
பெருகு சீர்த்திஅ கங்கையின் மைந்தன்
பேதை நானும் மதிப்பிழ தேக
திருகு நெஞ சகுனி ஒருவன்
செப்பு மந்திரஞ் சொல்லுதல் நன்றே
அருகு வைக்க தகுதியுள் ளானோ
அவனை வெற்பிடை போக்குதி அண்ணே
நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம்
நேரு மென்று நினைத்திடல் வேண்டா
பொறி இழந்த சகுனியின் சூதால்
புண்ணி யர்தமை மாற்றல ராக்கி
சிறியர் பாதகர் என்றுல கெல்லாம்
சீ என் றேச உகந்தர சாளும்
வறிய வாழ்வை விரும்பிட லாமோ
வாழிசூதை நிறுத்துதிஎன்றான்
இரண்டாவது சூதாட்ட சருக்கம் முற்றிற்று
பாஞ்சாலி சபதம் முதற்பாகம் முற்றிற்று