நெடுநல்வாடை
ஆசிரியர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர்



































©









சங்க கால நூல்களான பத்து பாட்டுக்களில் ஏழாவதான
நெடுநல்வாடை

பாடியவர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர்
திணை வாகை
துறை கூதிர்ப்பாசறை
பாவகை ஆசிரியப்பா
மொத்த அடிகள்

வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பி
புலம்பெயர் புலம்பொடு கலங்கி கோடல்
நீடிதழ கண்ணி நீரலை கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலி பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
மாமேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழ கறவை
கன்றுகோ ளழி கடிய வீசி
குன்றுகுளிர பன்ன கூதிர பானாள்
புன்கொடி முசுண்டை பொறிப்புற வான்பூ
பொன்போற் பீரமொடு புதற்புதல் மலர
பைங்காற் கொக்கின் மென்பறை தொழுதி
இருங்களி பரந்த ஈர வெண்மணற்
செவ்வரி நாரைய டெவ்வாயுங் கவர
கயலறல் எதிர கடும்புனற் சாஅ
பெயலுல தெழுந்த பொங்கல் வெண்மழை
அகலிரு விசும்பில் துவலை கற்ப
அங்கண் அகல்வயல் ஆர்பெயற் கலித்த
வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க
முழுமுதற் கமுகின் மணியுறழ் எருத்திற்
கொழுமடல் அவிழ்ந்த குரூஉக்கொள் பெருங்குலை
நுண்ணீர் தெவிள வீங்கி புடைதிரண்டு
தெண்ணீர பசுங்காய் சேறுகொள முற்ற
நளிகொள் சிமைய விரவுமலர் வியன்கா
குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க
மாட மோங்கிய மல்லன் மூதூர்
ஆறுகிட தன்ன அகனெடு தெருவிற்
படலை கண்ணி பரேரெறுழ திணிதோள்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து
துவலை தண்துளி பேணார் பகலிறந்து
இருகோட்ட டறுவையர் வேண்டுவயின் திரிதர
வெள்ளி வள்ளி வீங்கிறை பணைத்தோள்
மெத்தென் சாயல் முத்துறழ் முறுவல்
பூங்குழை கமர்ந்த ஏந்தெழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகை பெய்த
செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து
அவ்வித ழவிழ்பதங் கமழ பொழுதறிந்து
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ
நெல்லு மலரு தூஉ கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை யயர
மனையுறை புறவின் செங்காற் சேவல்
இன்புறு பெடையடு மன்றுதேர துண்ணாது
இரவும் பகலும் மயங்கி கையற்று
மதலை பள்ளி மாறுவன இருப்ப
கடியுடை வியனகர சிறுகுறு தொழுவர்
கொள்ளுறழ் நறுங்கல் பலகூட்டு மறுக
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்ப
கூந்தல் மகளிர் கோதை புனையார்
பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார்
தண்ணறு தகர முளரி நெருப்பமைத்து
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்ப
கைவல் கம்மியன் கவின்பெற புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கி கொடுந்தறி
சிலம்பி வானூல் வலந்தன தூங்க
வானுற நிவந்த மேனிலை மருங்கின்
வேனிற் பள்ளி தென்வளி தரூஉம்
நேர்வா கட்டளை திரியாது திண்ணிலை
போர்வா கதவம் தாழொடு துறப்ப
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகுவா கன்னல் தண்ணீர் உண்ணார்
பகுவா தடவில் செந்நெரு பார
ஆடல் மகளிர் பாடல்கொள புணர்மார்
தண்மையிற் றிரிந்த இன்குரல் தீந்தொடை
கொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇ
கருங்கோட்டு சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப
காதலர பிரிந்தோர் புல பெயல்கனைந்து
கூதிர்நின் றன்றாற் போதே மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்
பொருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டு
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும்பெயர் மன்னர கொப்ப மனைவகுத்து
ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பிற்
பருவிரும்பு பிணித்து செல்வர குரீஇ
துணைமாண் கதவம் பொருத்தி இணைமாண்டு
நாளடு பெயரிய கோளமை விழுமரத்து
போதவிழ் குவளை புதுப்பிடி காலமைத்து
தாளடு குயின்ற போரமை புணர்ப்பிற்
கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து
ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபு
குன்றுகுயின் றன்ன ஓங்குநிலை வாயில்
திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து
நெடுமயி ரெகின தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமோ டுகளு முன்கடை
பணைநிலை முனைஇய பல்லுளை புரவி
புல்லுணா தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து
கிம்புரி பகுவாய் அம்பண நிறை
கலுழ்ந்துவீழ் அருவி பாடிற தயல
ஒலிநெடும் பீலி ஒல்க மெல்லியல்
கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை
நளிமலை சிலம்பிற் சிலம்புங் கோயில்
யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கையே தையகல் நிறையநெய் சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி
அறுஅறு காலைதோ றமைவர பண்ணி
பல்வேறு பள்ளிதொறும் பாயிருள் நீங்க
பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்
வரைகண் டன்ன தோன்றல வரைசேர்பு
வில்கிட தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி யன்ன விளங்குஞ் கதையுரீஇ
மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்
உருவ பல்பூ ஒருகொடி வளைஇ
கருவொடு பெயரிய காண்பி னல்லில்
தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள்
இகன்மீ கூறும் ஏந்தெழில் வரிநுதல்
பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்து
சீருஞ் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூருளி குயின்ற ஈரிலை யிடையிடுபு
தூங்கியல் மகளிர் வீங்குமுலை கடு
புடைதிரண் டிருந்த குடத்த இடைதிரண்டு
உள்ளி நோன்முதல் பொருத்தி அடியமைத்து
பேரள வெய்திய பெரும்பெயர பாண்டில்
மடைமாண் நுண்ணிழை பொலி தொடைமாண்டு
முத்துடை சாலேகம் நாற்றி குத்துறுத்து
புலிப்பொறி கொண்ட பூங்கேழ தட்டத்து
தகடுகண் புதை கொளீஇ துகள்தீர்ந்து
ஊட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியன்க கானத்து
முல்லை பல்போ துறழ பூநிரைத்து
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட
துணைபுணர் அன்ன தூநிற தூவி
இணையணை மேம்பட பாயணை யிட்டு
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து
தோடமை தூமடி விரித்த சேக்கை
ஆர தாங்கிய அலர்முலை யாகத்து
பின்னமை நெடுவீழ் தாழ துணைதுறந்து
நன்னுதல் உலறிய சின்மெல் லோதி
நெடுநீர் வார்குழை களைந்தென குறுங்கண்
வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற்
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையடு கடிகைநூல் யாத்து
வாளை பகுவாய் கடுப்ப வணக்குறுத்து
செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்து
பூந்துகில் மரீஇய ஏந்துகோ டல்குல்
அம்மா சூர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு
புனையா ஓவியங் கடு புனைவில்
தளிரேர் மேனி தாய சுணங்கின்
அம்பணை தடைஇய மென்றோள் முகிழ்முலை
வம்புவிசி தியாத்த வாங்குசாய் நுசுப்பின்
மெல்லியல் மகளிர் நல்லடி வருட
நரைவிரா வுற்ற நறுமென் கூந்தல்
செம்முக செவிலியர் கைம்மி குழீஇ
குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி
இன்னே வருகுவர் இன்துணை யோரென
உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து
நுண்சேறு வழித்த நோனிலை திரள்கால்
ஊறா வறுமுலை கொளீஇய காறிருத்தி
புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசை
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா
மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்தி சிலதெறியா
புலம்பொடு வதியு நலங்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர விறறந்து
இன்னே முடிகதில் அம்ம மின்னவிர்
ஓடையடு பொலிந்த வினைநவில் யானை
நீள்திரள் தடக்கை நிலமிசை புரள
களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவர்
ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
வடந்தை தண்வளி எறிதொறும் நுடங்கி
தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல்
பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல
வேம்புதலை யாத்த நோன்காழ் எ·கமொடு
முன்னோன் முறைமுறை காட்ட பின்னர்
மணிபுற திட்ட மாத்தா பிடியடு
பருமங் களையா பாய்பரி கலிமா
இருஞ்சேற்று தெருவின் எறிதுளி விதிர
புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ
வாள்தோள் கோத்த வன்க காளை
சுவல்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து
நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென் றசைஇ தாதுளி மறைப்ப
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறை தொழிலே

நெடுநல்வாடை முற்றிற்று