மதுரை காஞ்சி
ஆசிரியர் மாங்குடி மருதனார்



































©









சங்க கால நூல்களான பத்து பாட்டுக்களில் ஆறாவதான
மதுரை காஞ்சி

பாடியவர் மாங்குடி மருதனார்
பாடப்பட்டவன் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன்
திணை காஞ்சி
பாவகை ஆசிரியப்பா
மொத்த அடிகள்

ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம் பாக
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து
வல மாதிரத்தான் வளி கொட்ப
விய னாண்மீ னெறி யழுக
பகற் செய்யும் செஞ் ஞாயிறும்
இரவு செய்யும் வெண் திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க
மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்க
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனு மரனும் பயன்எதிர்பு நந்த
நோ யிகந்து நோக்கு விளங்க
மே தக மிக பொலிந்த
ஓங்கு நிலை களிறு
கண்டு தண்டா கட்கின் பத்து
உண்டு தண்டா மிகுவள தான்
உயர் பூரிம விழு தெருவிற்
பொய் யறியா வாய்மொழி யாற்
புகழ் நிறைந்த நன்மாந்த ரொடு
நல் லூழி அடி படர
பல் வெள்ளம் மீ கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக
பிண கோட்ட களிற்று குழும்பின்
நிணம் வாய்ப்பெய்த பேய் மகளிர்
இணை யலியிமிழ் துணங்கை சீர
பிணை யூபம் எழு தாட
அஞ்சு வந்த போர்க்கள தான்
ஆண் டலை அணங் கடுப்பின்
வய வேந்தர் ஒண் குருதி
சின தீயிற் பெயர்பு பொங்க
தெற லருங் கடு துப்பின்
விறல் விளங்கிய விழு சூர்ப்பின்
தொடி தோட்கை துடு பாக
டுற்ற ஊன் சோறு
நெறி யறிந்த கடிவா லுவன்
அடி யதுங்கி பிற் பெயரா
படை யோர்க்கு முரு கயர
அமர் கடக்கும் வியன் றானை
தென்னவற் பெயரிய துன்னரு துப்பின்
தொல்முது கடவு பின்னர் மேய
வரைத்தாழ் அருவி பொருப்பிற் பொருந
விழு சூழிய விளங்கோ டைய
கடுஞ் சினத்த கமழ்கடா அத்து
அளறு பட்ட நறுஞ் சென்னிய
வரை மருளும் உயர் தோன்றல
வினை நவின்ற பேர் யானை
சினஞ் சிறந்து களனு ழக்கவும்
மா வெடுத்த மலிகுரூஉ துகள்
அகல் வானத்து வெயில் கரப்பவும்
வாம் பரிய கடுந்திண் டேர்
காற் றென்ன கடிது கொட்பவும்
வாள் மிகு மற மைந்தர்
தோள் முறையான் வீறு முற்றவும்
இருபெரு வேந்தரொடு வேளிர் சா
பொரு தவரை செரு வென்றும்
இலங் கருவிய வரை நீந்தி
சுரம் போழ்ந்த இக லாற்றல்
உயர தோங்கிய விழு சிறப்பின்
நில தந்த பே ருதவி
பொலந்தார் மார்பி னெடியோன் உம்பல்
மர தின்னூஉ வரை யுதிர்க்கும்
நரை யுருமின் ஏற னையை
அருங் குழுமிளை குண்டு கிடங்கின்
உயர தோங்கிய நிரை புதவின்
நெடு மதில் நிரை ஞாயில்
அம் புமிழ் அயி லருப்ப
தண் டாது தலை சென்று
கொண்டு நீங்கிய விழு சிறப்பின்
தென் குமரி வட பெருங்கல்
குண குட கடலா வெல்லை
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
வெற்ற மொடு வெறு தொழுகிய
கொற்ற வர்தங் கோனா குவை
வானி யைந்த இரு முந்நீர
பேஎம் நிலைஇய இரும் பெளவத்து
கொடும் புணரி விலங்கு போழ
கடுங் காலொடு கரை சேர
நெடுங் கொடிமிசை இதை யெடுத்து
இன் னிசைய முரச முழங்க
பொன் மலிந்த விழு பண்டம்
நா டார நன் கிழிதரும்
ஆடி யற் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரை
துறை முற்றிய துளங் கிருக்கை
தெண் கடற் குண் டகழி
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ
நீர தெவ்வும் நிரை தொழுவர்
பாடு சிலம்பு மிசை யேற்ற
தோடு வழங்கும் அக லாம்பியிற்
கய னகைய வய னிறைக்கு
மென் றொடை வன் கிழாஅர்
அதரி கொள்பவர் பகடுபூண் தெண்மணி
இரும்புள் ஒப்பும் இசையே என்றும்
மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானற்
பரதவர் மகளிர் குரவைய டொலிப்ப
ஒருசார் விழவுநின்ற விய லாங்கண்
முழவு தோள் முர பொருநர்க்கு
உரு கெழு பெருஞ் சிறப்பின்
இரு பெயர பேரா யமொடு
இலங்கு மருப்பிற் களிறு கொடுத்தும்
பொல தாமரை பூ சூட்டியும்
நலஞ் சான்ற கலஞ் சிதறும்
பல் குட்டுவர் வெல் கோவே
கல் காயுங் கடுவேனி லொடு
இரு வானம் பெயலொ ளிப்பினும்
வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளமா றாது விளையுள் பெருக
நெல்லி னோதை அரிநர் கம்பலை
புள்ளிமிழ தொலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று கறவு கலித்த
புலவு நீர் வியன் பெளவத்து
நிலவு கானல் முழவு தாழை
குளிர பொதும்பர் நளி தூவல்
நிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
இருங்கழி செறுவின் வெள்ளுப்பு பகர்நரொடு
ஒலி யோவா கலி யாணர்
முது வெள்ளிலை மீ கூறும்
வியன் மேவல் விழு செல்வத்து
இரு வகையான் இசை சான்ற
சிறு குடி பெரு தொழுவர்
குடி கெழீஇய நானிலவ ரொடு
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
கா லென்ன கடிது ராஅய்
நாடு கெட எரி பரப்பி
ஆலங் கான தஞ்சுவர விறுத்து
அரசு பட அமரு ழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட
அடு திறலுயர் புகழ் வேந்தே
நட்டவர் குடி யுயர குவை
செற்றவர் அரசு பெயர குவை
பேரு லகத்து மேஎ தோன்றி
சீரு டைய விழு சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழு முத்தின்
இலங்கு வளை இருஞ் சேரி
கொண்டி குடி பாக்கத்து
நற் கொற்கை யோர்நசை பொருந
செற்ற தெவ்வர் கலங்க தலைச்சென்று
அஞ்சுவர தட்கும் அணங்குடை துப்பிற்
கோழூ உன்குறை கொழு வல்சி
புலவு விற் பொலி கூவை
ஒன்று மொழி ஒலி யிருப்பில்
தென் பரதவர் போ ரேறே
அரிய வெல்லாம் எளிதினிற் கொண்டு
உரிய வெல்லாம் ஓம்பாது வீசி
நனிபுகன் றுறைது மென்னா தேற்றெழுந்து
பனிவார் சிமை கானம் போகி
அகநாடு புக்கவர் விருப்பம் வெளவி
யாண்டுபல கழிய வேண்டுபுல திறுத்து
மேம்பட மரீஇய வெல்போர குருசில்
உறு செறுநர் புலம் புக்கவர்
கடி காவி னிலை தொலைச்சி
இழி பறியா பெருந்தண் பணை
குரூஉ கொடிய எரி மேய
நா டெனும் பேர் காடாக
சேந்த வழி மாசேப்ப
ஊரி ருந்த வழி பாழாக
இலங்கு வளை மட மங்கையர்
துணங்கை யஞ்சீர தழூஉ மறப்ப
அவை யிருந்த பெரும் பொதியிற்
கவை யடி கடு நோக்கத்து
பேய் மகளிர் பெயர் பாட
அணங்கு வழங்கு மகலாங் கண்
நில தாற்றுங் குழூஉ புதவின்
அரந்தை பெண்டிர் இனைந்தனர் அகவ
கொழும் பதிய குடி தேம்ப
செழுங் கேளிர் நிழல் சேர
நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர பள்ளி
குடுமி கூகை குராலொடு முரல
கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கை
களிறுமாய் செருந்தியடு கண்பமன் றூர்தர
நல்லேர் நடந்த நசைசால் விளைவயல்
பன்மயிர பிணவொடு கேழல் உகள
வாழா மையின் வழிதவ கெட்டு
பாழா யினநின் பகைவர் தேஎம்
எழாஅ தோள் இமிழ்மு ழக்கின்
மாஅ தாள் உயர் மருப்பிற்
கடுஞ் சினத்த களிறு பரப்பி
விரி கடல் வியன் றானையடு
முரு குறழ பகைத்தலை சென்று
அகல் விசும்பின் ஆர பிமிழ
பெய லுறழ கணை சிதறி
பல புரவி நீ றுகைப்ப
வளை நரல வயி ரார
பீ டழி கட தட்டவர்
நா டழி எயில் வெளவி
சுற்ற மொடு தூ வறுத்தலிற்
செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப
வியன்கண் முதுபொழில் மண்டில முற்றி
அரசியல் பிழையா தறநெறி காட்டி
பெரியோர் சென்ற அடிவழி பிழையாது
குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
வழிவழி சிறக்கநின் வலம்படு கொற்றம்
குணமுதல் தோன்றிய ஆரிருள் மதியின்
தேய்வன கெடுகநின் தெவ்வர் ஆக்கம்
உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய்சேண் நீங்கிய வாய்ந பினையே
முழங்குகட லேணி மலர்தலை யுலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்
பகைவர கஞ்சி பணிந்தொழு கலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழிந கெழுக என்னாய் விழுநிதி
ஈதல் உள்ளமொடு இசைவே குவையே
அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ
கொன்னொன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுகநின் அவலம்
கெடாது நிலைஇயர்நின் சேண்விளங்கு நல்லிசை
தவா பெருக்க தறா யாணர்
அழி தானா கொழு திற்றி
இழி தானா பல சொன்றி
உண் டானா கூர் நறவில்
தின் றானா இன வைக
னிலனெடு கல்லா வொண்பல் வெறுக்கை
பயனற வறியா வளங்கெழு திருநகர்
நரம்பின் முரலு நயம்வரு முரற்சி
விறலியர் வறுங்கை குறுந்தொடி செறி
பாணர் உவப்ப களிறுபல தரீஇ
கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ
மறங் கலங்க தலை சென்று
வாளுழ ததன் தாள் வாழ்த்தி
நா ளீண்டிய நல் லகவர்க்கு
தே ரோடு மா சிதறி
சூ டுற்ற சுடர பூவின்
பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்ற மா
கள்ளின் இரும்பை கலஞ்செல வுண்டு
பணிந்தோர் தேஎ தம்வழி நட
பணியார் தேஎம் பணித்துத்திறை கொண்மார்
பருந்துபற கல்லா பார்வற் பாசறை
படுகண் முரசங் காலை யியம்ப
வெடிபட கடந்து வேண்டுபுல திறுத்த
பணைகெழு பெருந்திறற் பல்வேல் மன்னர்
கரைபொரு திரங்கும் சுனையிரு முந்நீர
திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை யுலகம் ஆண்டுகழி தோரே
அதனால் குணகடல் கொண்டு குடகடல்முற்றி
இரவு மெல்லையும் விளிவிட னறியாது
அவலு மிசையு நீர்த்திரள் பீண்டி
கவலையங் குழும்பின் அருவி ஒலிப்ப
கழைவளர் சாரற் களிற்றின நடுங்க
வரைமுத லிரங்கும் ஏறொடு வான்ஞெமிர்ந்து
சிதரற் பெரும்பெயல் சிறத்தலிற் றாங்காது
குணகடற் கிவர்தருங் குரூஉப்புன லுந்தி
நிவந்துசெ னீத்தங் குளங்கொள சாற்றி
களிறு மாய்க்குங் கதிர கழனி
ஒளி றிலஞ்சி அடை நிவந்த
மு டாள சுடர தாமரை
கமழு நறு நெய்தல்
வள் ளிதழ் அவிழ் நீலம்
மெல் லிலை யரி யாம்பலொடு
வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கை
கம்பு சேவல் இன்றுயில் இரிய
வள்ளை நீக்கி வயமீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
வேழ பழனத்து நூழி லாட்டு
கரும்பி னெந்திரங் கட்பி னோதை
அள்ளற் றங்கிய பகடுறு விழுமங்
கள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே
ஒலிந்த பகன்றை விளைந்த கழனி
வன்கை வினைஞர் அரிபறை யின்குரல்
தளிமழை பொழியு தண்பரங் குன்றிற்
கவிகொள் சும்மை யலிகொ ளா
ததைந்த கோதை தாரொடு பொலி
புணர்ந்துட னாடும் இசையே யனைத்தும்
அகலிரு வான திமிழ்ந்தினி திசைப்ப
குருகு நரல மனை மரத்தான்
மீன் சீவும் பாண் சேரியடு
மருதஞ் சான்ற தண்பணை சுற்றிஒருசார
சிறுதினை கொ கவ்வை கறுப்ப
கருங்கால் வரகின் இருங்குரல் புலர
ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர
எழுந்த கடற்றி னன்பொன் கொழி
பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி
மடக்க பிணையடு மறுகுவன உகள
சுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழற்
பாஅ யன்ன பாறை யணிந்து
நீல தன்ன பைம்பயிர் மிசைதொறும்
வெள்ளி யன்ன வொள்வி யுதிர்ந்து
சுரிமுகிழ் முசுண்டையடு முல்லை தாஅய்
மணிமரு ணெய்தல் உறழ காமர்
துணிநீர் மெல்லவற் றொய்யிலொடு மலர
வல்லொன் தைஇய வெறிக்களங் கடுப்ப
முல்லை சான்ற புறவணி தொருசார்
நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர தோரை நெடுங்கால் ஐயவி
ஐவன வெண்ணெலொ டரில்கொள்பு நீடி
இஞ்சி மஞ்ச பைங்கறி பிறவும்
பல்வேறு தாரமொடு கல்லக தீண்டி
தினைவிளை சாரற் கிளிகடி பூசல்
மணிப்பூ அவரை குரூஉத்தளிர் மேயும்
ஆமா கடியுங் கானவர் பூசல்
சேணோன் அகழ்ந்த மடிவா பயம்பின்
வீழ்மு கேழல் அட்ட பூசல்
கருங்கால் வேங்கை இருஞ்சினை பொங்கர்
நறும்பூ கொய்யும் பூசல் இருங்கேழ்
ஏறடு வயப்புலி பூசலொ டனைத்தும்
இலங்குவெள் ளருவியடு சிலம்பக திரட்ட
கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து
அருங்கடி மாமலை தழீஇ ஒருசார்
இருவெதிர பைந்தூறு கூரெரி நைப்ப
நிழத்த யானை மேய்புலம் படர
கலித்த இயவர் இயந்தொ டன்ன
கண்விடு புடையூஉ தட்டை கவினழிந்து
அருவி யான்ற அணியில் மாமலை
வைகண் டன்ன புன்முளி யங்காட்டு
கமழ்சூழ் கோடை விடரக முகந்து
காலுறு கடலின் ஒலிக்குஞ் சும்மை
இலைவேய் குரம்பை உழையத பள்ளி
உவலை கண்ணி வன்சொல் இளைஞர்
சிலையுடை கையர் கவலை காப்ப
நிழலுரு விழந்த வேனிற்குன் றத்து
பாலை சான்ற சுரஞ்சேர தொருசார்
முழங்குகடல் தந்த விளங்குகதிர் முத்தம்
அரம்போழ தறுத்த கண்ணேர் இலங்குவளை
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழி செறுவிற் றீம்புளி வெள்ளுப்பு
பரந்தோங்கு வரைப்பின் வன்கை திமிலர்
கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல்
விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர்
நனந்தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவிய டனைத்தும்
வைகல் தோறும் வழிவழி சிறப்ப
நெய்தல் சான்ற வளம்பல பயின்றாங்கு
ஐம்பால் திணையுங் கவினி யமைவர
முழ வீமிழும் அக லாங்கண்
விழவு நின்ற வியன் மறுகில்
துணங்கை தழூஉவின் மணங்கமழ் சேரி
இன்கலி யாணர குழூஉப்பல பயின்றாங்கு
பாடல் சான்ற நன்னாட்டு நடுவண்
கலை தாய உயர் சிமையத்து
மயி லகவு மலி பொங்கர்
மந்தி யாட மாவிசும் புகந்து
முழங்குகால் பொருத மரம்பயில் காவின்
இயங்குபுனல் கொழித்த வெண்டலை குவவுமணற்
கான்பொழில் தழீஇய அடைகரை தோறு
தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅ
கோதையி னொழுகும் விரிநீர் நல்வரல்
அவிரறல் வையை துறைதுறை தோறும்
பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி
அழுந்துப டிருந்த பெரும்பாண் இருக்கையும்
நிலனும் வளனுங் கண்டமை கல்லா
விளங்குபெரு திருவின் மான விறல்வேள்
அழும்பில் அன்ன நாடிழ தனருங்
கொழும்பல் புதிய குடியிழ தனரும்
தொன்றுகறு துறையு துப்புத்தர வந்த
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
இன்னிசை முரச மிடைப்புல தொழி
பன்மா றோட்டி பெயர்புறம் பெற்று
மண்ணுற ஆழ்ந்த மணிநீர கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படை புரிசை
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்பட கரிந்த திண்போர கதவின்
மழையாடு மலையி னிவந்த மாடமொடு
வையை யன்ன வழக்குடை வாயில்
வகைபெற எழுந்து வான மூழ்கி
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்
யாறுகிட தன்ன அகனெடு தெருவிற்
பல்வேறு குழாஅ திசையெழு தொலிப்ப
மாகா லெடுத்த முந்நீர் போல
முழங்கிசை நன்பணை அறைவனர் நுவல
கயங்குடை தன்ன இயந்தொ டிமிழிசை
மகிழ்ந்தோ ராடுங் கலிகொள் சும்மை
ஓவுக்கண் டன்ன இருபெரு நியமத்து
சாறயர தெடுத்த உருவ பல்கொடி
வேறுபல் பெயர ஆரெயில் கொளக்கொள
நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி
நீர்ஒலி தன்ன நிலவுவேற் றானையடு
புலவுப்பட கொன்று மிடைதோ லோட்டி
புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி
கள்ளின் களிநவில் கொடியடு நன்பல
பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇ
பெருவரை மருங்கி னருவியி னுடங்க
பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின்
வீங்குபிணி நோன்கயி றரீஇ யிதைபுடையூ
கூம்புமுதல் முருங்க எற்றி காய்ந்துடன்
கடுங்காற் றெடுப்ப கல்பொரு துரைஇ
நெடுஞ்சுழி பட்ட நாவாய் போல
இருதலை பணில மார்ப்ப சினஞ்சிறந்து
கோலோர கொன்று மேலோர் வீசி
மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்து
கந்துநீ துழிதருங் கடாஅ யானையும்
அங்கண்மால் விசும்பு புதைய வளிபோழ்ந்து
ஒண்கதிர் ஞாயிற் றூறளவா திரிதரும்
செங்கால் அன்னத்து சேவல் அன்ன
குரூஉமயிர புரவி யுராலிற் பரிநிமிர்ந்து
காலென கடுங்குங் கவின்பெறு தேருங்
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டில தாதி போகிய
கொடிபடு சுவல விடுமயிர புரவியும்
வேழ தன்ன வெருவரு செலவிற்
கள்ளார் களமர் இருஞ்செரு மயக்கமும்
அரியவும் பெரியவும் வருவன பெயர்தலிற்
தீம்புழல் வல்சி கழற்கால் மழவர்
பூந்தலை முழவின் நோன்றலை கடு
பிடகை பெய்த கமழ்நறும் பூவினர்
பலவகை விரித்த வெதிர்பூங் கோதையர்
பலர்தொகுபு இடித்த தாதுகு சுண்ணத்தர்
தகைசெய் தீஞ்சேற் றின்னீர பசுங்காய்
நீடுகொடி யிலையினர் கோடுசுடு நூற்றினர்
இருதலை வந்த பகைமுனை கடுப்ப
இன்னுயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து
ஏங்குவன ரிருந்தவை நீங்கிய பின்றை
பல்வேறு பண்ணி தழீஇத்திரி விலைஞர்
மலைபுரை மாடத்து கொழுநிழல் இருத்தர
இருங்கடல் வான்கோடு புரைய வாருற்று
பெரும்பின் னிட்ட வானரை கூந்தலர்
நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர்
செந்நீர பசும்பொன் புனைந்த பாவை
செல்சுடர பசுவெயிற் றோன்றி யன்ன
செய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்கண்
ஐஇய கலுழு மாமையர் வையெயிற்று
வார்ந்த வாயர் வணங்கிறை பணைத்தோ
சோர்ந்துகு வன்ன வயக்குறு வந்திகை
தொய்யில் பொறித்த சுணங்கெதி ரிளமுலை
மையு கன்ன மொய்யிருங் கூந்தல்
மயிலிய லோரும் மடமொழி யோரும்
கைஇ மெல்லிதின் ஒதுங்கி கையெறிந்து
கல்லா மாந்தரொடு நகுவனர் திளை
புடையமை பொலிந்த வகையமை செப்பிற்
காம ருருவிற் றாம்வேண்டு பண்ணியம்
கமழ்நறும் பூவொடு மனைமனை மறுக
மழைகொள குறையாது புனல்புக மிகாது
கரைபொரு திரங்கு முந்நீர் போல
கொளக்கொள குறையாது தரத்தர மிகாது
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடுதுவன்று விழவி னாடார தன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழ கூடல்
நாளங் காடி நனந்தலை கம்பலை
வெயிற்கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்று
செக்கர் அன்ன சிவந்துணங் குருவிற்
கண்பொரு புகூஉம் ஒண்பூங் கலிங்கம்
பொன்புனை வாளடு பொலி கட்டி
திண்டேர பிரம்பிற் புரளு தானை
கச்ச தின்ற கழறயங்கு திருந்தடி
மொய்ம்பிறந்து திரிதரும் ஒருபெரு தெரியல்
மணிதொடர தன்ன வொண்பூங் கோதை
அணிகிளர் மார்பி னாரமொ டளைஇ
காலி கன்ன கதழ்பரி கடைஇ
காலோர் காப்ப காலென கழியும்
வான வண்கை வளங்கெழு செல்வர்
நாள்மகிழ் இருக்கை காண்மார் பூணொடு
தெள்ளரி பொற்சிலம் பொலிப்ப வொள்ளழல்
தாவற விளங்கிய வாய்பொன் னவிரிழை
அணங்குவீழ் வன்ன பூந்தொடி மகளிர்
மணங்கமழ் நாற்ற தெருவுடன் கமழ
ஒண்குழை திகழும் ஒளிகெழு திருமுக
திண்காழ் ஏற்ற வியலிரு விலோத
தெண்கடற் றிரையின் அசைவளி புடைப்ப
நிரைநிலை மாட தரமி தோறும்
மழைமாய் மதியிற் றோன்றுபு மறைய
நீரு நிலனு தீயும் வளியும்
மாக விசும்போ டைந்துட னியற்றிய
மழுவா ணெடியோன் றலைவ னாக
மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சூடர்
வாடா பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு
மாற்றரு மரபி னுயர்பலி கொடுமார்
அந்தி விழவிற் றூரியங் கறங்க
திண்கதிர் மதாணி யண்குறு மாக்களை
ஓம்பினர தழீஇ தாம்புணர்ந்து முயங்கி
தாதணி தாமரை போதுபிடி தாங்கு
தாமு மவரும் ஓராங்கு விளங
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி
சிறந்து புறங்காக்குங் கடவு பள்ளியுஞ்
சிறந்த வேதம் விளங்க பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வை தொருதா மாகி
உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்
பெரியோர் மேஎ யினிதி னுறையுங்
குன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும்
வண்டுபட பழுநிய தேனார் தோற்றத்து
பூவும் புகையுஞ் சாவகர் பழி
சென்ற காலமும் வரூஉ மமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனு தாமுழு துணருஞ்
சான்ற கொள்கை சாயா யாக்கை
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல்பொளி தன்ன விட்டுவா கரண்டை
பல்புரி சிமிலி நாற்றி நல்குவர
கயங்கண் டன்ன வயங்குடை நகரத்து
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர தோங்கி
இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையுங்
குன்றுபல குழீஇ பொலிவன தோன்ற
அச்சமும் அவலமும் ஆர்வமு நீக்கி
செற்றமும் உவகையுஞ் செய்யாது காத்து
ஞெமன்கோ லன்ன செம்மை தாகி
சிறந்த கொள்கை அறங்கூ றவையமும்
நறுஞ்சாந்து நீவிய கேழ்கிளர் அகலத்து
ஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல
நன்று தீதுங் கண்டா தடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்து
பழியரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்
அறநெறி பிழையா தாற்றி னொழுகி
குறும்பல் குழுவிற் குன்றுகண் டன்ன
பருந்திரு துகக்கும் பன்மா ணல்லிற்
பல்வேறு பண்டமொ டூண்மலிந்து கவினி
மலையவு நிலத்தவு நீரவும் பிறவும்
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு
சிறந்த தேஎத்து பண்ணியம் பகர்நரும்
மழையழு கறாஅ பிழையா விளையு
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழி கோசர் தோன்றி யன்ன
தாமேஎ தோன்றிய நாற்பெருங் குழுவும்
கோடுபோழ் கடைநரு திருமணி குயினரும்
சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும்
பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்நரும்
செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும்
பூவும் புகையும் ஆயு மாக்களும்
எவ்வகை செய்தியும் உவமங் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கிற்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடி
தெண்டிரை யவிரறல் கடுப்ப வொண்பகல்
குறியவு நெடியவு மடிதரூஉ விரித்து
சிறியரும் பெரியருங் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினுங் காலுற நிற்றர
கொடும்பறை கோடியர் கடும்புடன் வாழ்த்து
தண்கட னாடன் ஒண்பூங் கோதை
பெருநா ளிருக்கை விழுமியோர் குழீஇ
விழைவுகொள் கம்பலை கடு பலவுடன்
சேறு நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபட கவினிய தேமாங் கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்ப கொடிவிடுபு கவினி
மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்
அமிர்தியன் றன்ன தீஞ்சேற்று கடிகையும்
புகழ்பட பண்ணிய பேரூன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயி னுகர
வாலிதை எடுத்த வளிதரு வங்கம்
பல்வேறு பண்ட மிழிதரும் பட்டின
தொல்லென் இமிழிசை மான கல்லென
நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுக
பெருங்கடற் குட்டத்து புலவுத்திரை யோதம்
இருங்கழி மருவி பா பெரிதெழுந்து
உருகெழு பானாள் வருவன பெயர்தலிற்
பல்வேறு புள்ளின் இசையெழு தற்றே
அல்லங் காடி அழிதரு கம்பலை
ஒண்சுடர் உருப்பொளி மழுங்க சினந்தணிந்து
சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு
குடமுதற் குன்றஞ் சேர குணமுதல்
நாள்முதிர் மதி தோன்றி நிலாவிரிபு
பகலுரு வுற்ற இரவுவர நயந்தோர்
காதல் இன்றுணை புணர்மார் ஆயிதழ
தண்ணறுங் கழுநீர் துணைப்ப இழைபுனையூஉ
நன்னெடுங் கூந்த னறுவிரை குடைய
நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென்னூற் கலிங்கங் கமழ்புகை மடு
பெண்மகிழ் வுற்ற பிணைநோக்கு மகளிர்
நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ நெடுநகர்
எல்லை எல்லா நோயடு புகுந்து
கல்லென் மாலை நீங்க நாணுக்கொள
ஏழ்புணர் சிறப்பின் இன்றொடை சீறியாழ்
தாழ்பயற் கனைகுரல் கடு பண்ணுப்பெயர்த்து
வீழ்துணை தழீஇ வியல்விசும்பு கமழ
நீர்திரண் டன்ன கோதை பிறக்கிட்டு
ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசி
போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ
மேதகு தகைய மிகுநல மெய்தி
பெரும்பல் குவளை சுரும்புபடு பன்மலர்
திறந்துமோ தன்ன சிறந்துகமழ் நாற்றத்து
கொண்டல் மலர்ப்புதல் மானப்பூ வேய்ந்து
நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி
மா பொய்பல கூட்டி கவவுக்கரந்து
சேயரு நணியரு நலனயந்து வந்த
இளம்பல் செல்வர் வளந்தப வாங்கி
நுண்தா துண்டு வறும்பூ துறக்கும்
மென்சிறை வண்டின மான புணர்ந்தோர்
நெஞ்சே மாப்ப இன்றுயில் துறந்து
பழந்தேர் வாழ்க்கை பறவை போல
கொழுங்குடி செல்வரும் பிறரு மேஎய
மணம்புணர தோங்கிய அணங்குடை நல்லில்
ஆய்பொன் அவிர்தொடி பாசிழை மகளிர்
ஒண்சுடர் விளக்கத்து பலருடன் துவன்றி
நீனிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மான கண்டோர்
நெஞ்சு நடுங்குறூஉ கொண்டி மகளிர்
யாம நல்யாழ் நாப்ப ணின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடி குண்டுநீர
பனித்துறை குவவுமணல் முனைஇ மென்றளிர
கொழுங்கொம்பு கொழுதி நீர்நனை மேவர
நெடுந்தொடர குவளை வடிம்புற அடைச்சி
மணங்கமழ் மனைதொறும் பொய்தல் அயர
கணங்கொள் அவுணர கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நன்னா
கோண தின்ற வடுவாழ் முகத்த
சாண தின்ற சமந்தாங்கு தடக்கை
மறங்கொள் சேரி மாறுபொரு செருவில்
மாறா துற்ற வடுப்படு நெற்றி
சுரும்பார் கண்ணி பெரும்புகல் மறவர்
கடுங்களி றோட்டலிற் காணுநர் இட்ட
நெடுங்கரை காழக நிலம்பர லுறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ்சிறந்து திரிதர
கணவ ருவ புதல்வர பயந்து
பணைத்தே திளமுலை அமுதம் ஊற
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீர் அயர
திவவுமெ நிறுத்து செவ்வழி பண்ணி
குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி
நுண்ணீ ராகுளி இரட்ட பலவுடன்
ஒண்சுடர் விளக்க முந்துற மடையடு
நன்மா மயிலின் மென்மெல இயலி
கடுஞ்சூன் மகளிர் பேணி கைதொழுது
பெருந்தோ சாலினி மடுப்ப ஒருசார்
அருங்கடி வேலன் முருகொடு வளைஇ
அரிக்கூ டின்னியங் கறங்கநேர் நிறுத்து
கார்மலர குறிஞ்சி சூடி கடம்பின்
சீர்மிகு நெடுவே பேணி தழூஉப்பிணையூஉ
மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கி
பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னா
சேரி விழவின் ஆர்ப்பெழு தாங்கு
முந்தை யாமம் சென்ற பின்றை
பணிலங் கலியவி தடங காழ்சாய்த்து
நொடைநவில் நெடுங்கடை அடைத்து மடமதர்
ஒள்ளிழை மகளிர் பள்ளி யயர
நல்வரி இறாஅல் புரையு மெல்லடை
அயிருரு புற்ற ஆடமை விசயங்
கவவொடு பிடித்த வகையமை மோதக
தீஞ்சேற்று கூவியர் தூங்குவனர் உறங்க
விழவி னாடும் வயிரியர் மடி
பாடான் றவிந்த பனிக்கடல் புரை
பாயல் வளர்வோர் கண்ணினிது மடு
பானா கொண்ட கங்கு லிடையது
பேயும் அணங்கும் உருவுகொண் டாய்கோற்
கூற்ற கொ·றேர் கழுதொடு கொட்ப
இரும்பிடி மேஎந்தோ லன்ன இருள்சேர்பு
கல்லு மரனு துணிக்குங் கூர்மை
தொடலை வாளர் தொடுதோ லடியர்
குறங்கிடை பதித்த கூர்நுனை குறும்பிடி
சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்
நிறங்கவர்பு புனைந்த நீல கச்சினர்
மென்னூல் ஏணி பன்மாண் சுற்றினர்
நிலனகழ் உளியர் கலனசைஇ கொட்கும்
கண்மா றாடவர் ஒடுக்க மொற்றி
வயக்களிறு பார்க்கும் வயப்புலி போல
துஞ்சா கண்ணர் அஞ்சா கொள்கையர்
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த
நூல்வழி பிழையா நுணங்குநுண் டேர்ச்சி
ஊர்கா பாளர் ஊக்கருங் கணையினர்
தேர்வழங்கு தெருவி னீர்திரண் டொழுக
மழையமை துற்ற அரைநா ளமயமும்
அசைவிலர் எழுந்து நயம்வந்து வழங்கலிற்
கடவுள் வழங்குங் கையாறு கங்குலும்
அச்ச மறியா தேம மாகிய
மற்றை யாமம் பகலுற கழிப்பி
போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கை
தாதுண் தும்பி போது முரன்றாங்
கோத லந்தணர் வேதம் பாட
சீரினிது கொண்டு நரம்பினி தியக்கி
யாழோர் மருதம் பண்ண காழோர்
கடுங்களிறு கவளங் கைப்ப நெடுந்தேர
பணைநிலை புரவி புல்லுணா தெவிட்ட
பல்வேறு பண்ணி கடைமெழு குறுப்ப
கள்ளோர் களிதொடை நுவல இல்லோர்
நயந்த காதலர் கவவுப்பிணி துஞ்சி
புலர்ந்துவிரி விடிய லெய்த விரும்பி
கண்பொரா வெறிக்கு மின்னுக்கொடி புரைய
ஒண்பொ னவிரிழை தெழிப்ப இயலி
திண்சுவர் நல்லிற் கதவங் கரைய
உண்டுமகிழ் தட்ட மழலை நாவிற்
பழஞ்செரு காளர் தழங்குகுரல் தோன்ற
சூதர் வாழ்ந்த மாகதர் நுவல
வேதா ளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ்முர சிரங்க ஏறுமாறு சிலை
பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப
யானையங் குருகின் சேவலொடு காமர்
அன்னங் கரைய அணிமயில் அகவ
பிடிபுணர் பெருங்களிறு முழங்க முழுவலி
கூட்டுறை வயமா புலியடு குழும
வான நீங்கிய நீனிற விசும்பின்
மின்னுநிமிர தனைய ராகி நறவுமகிழ்ந்து
மாணிழை மகளிர் புலந்தனர் பரிந்த
பரூஉக்கா ழாரஞ் சொரிந்த முத்தமொடு
பொன்சுடு நெருப்பி னிலமு கென்ன
அம்மென் குரும்பை காய்படுபு பிறவு
தருமணன் முற்ற தரிஞிமி றார்ப்ப
மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப
இரவுத்தலை பெயரு மேம வைகறை
மைபடு பெருந்தோள் மழவ ரோட்டி
இடைப்புல தொழிந்த ஏந்துகோ டியானை
பகைப்புலங் கவர்ந்த பாய்பரி புரவி
வேல்கோ லாக ஆள்செல நூறி
காய்சின முன்பிற் கடுங்க கூளியர்
ஊர்சுடு விளக்கிற் றந்த ஆயமும்
நாடுடை நல்லெயில் அணங்குடை தோட்டி
நாடொறும் விளங கைதொழூஉ பழிச்சி
நாடர வந்த விழுக்கல மனைத்தும்
கங்கையம் பேரியாறு கடற்படர தாங்கு
அளந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு
புத்தே ளுலகம் கவினி காண்வர
மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரை
சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ
ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த காவிற்
சுடர்பொழி தேறிய விளங்குகதிர் ஞாயிற்று
இலங்குகதி ரிளவெயிற் றோன்றி யன்ன
தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை
நிலம்விள குறுப்ப மேதக பொலிந்து
மயிலோ ரன்ன சாயல் மாவின்
தளிரே ரன்ன மேனி தளிர்ப்புறத்து
ஈர்க்கி னரும்பிய திதலையர் கூரெயிற்
றொண்குழை புணரிய வண்டாழ் காதிற்
கடவு கயத்தமன்ற சுடரிதழ தாமரை
தாதுபடு பெரும்போது புரையும் வாண்முக
தாய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து
கோதையிற் பொலிந்த சேக்கை துஞ்சி
திருந்துதுயில் எடுப்ப இனிதி னெழுந்து
திண்கா ழார நீவி கதிர்விடு
மொண்காழ் ஆரங் கவைஇய மார்பின்
வரிக்கடை பிரச மூசுவன மொய்ப்ப
எருத்த தாழ்ந்த விரவுப்பூ தெரியற்
பொலஞ்செ பொலிந்த நலம்பெறு விளக்கம்
வலிகெழு தடக்கை தொடியடு சுடர்வர
சோறமை வுற்ற நீருடை கலிங்கம்
உடையணி பொலி குறைவின்று கவைஇ
வல்லோன் தைஇய வரிப்புனை பாவை
முருகியன் றன்ன உருவினை யாகி
வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்து
ஒன்னா ரோட்டிய செருப்புகல் மறவர்
வாள்வளம் புணர்ந்தநின் தாள்வலம் வாழ்த்த
வில்லை கவைஇ கணைதாங்கு மார்பின்
மாதாங் கெறுழ்த்தோள் மறவர தம்மின்
கல்லிடி தியற்றிய இட்டுவா கிடங்கின்
நல்லெயி லுழந்த செல்வர தம்மின்
கொல்லேற்று பைந்தோல் சீவாது போர்த்த
மாக்கண் முரசம் ஓவில கறங்க
எரிநிமிர தன்ன தானை நாப்பண்
பெருநல் யானை போர்க்கள தொழிய
விழுமிய வீழ்ந்த குரிசிலர தம்மின்
புரையோர்க்கு தொடுத்த பொலம்பூ தும்பை
நீர்யார் என்னாது முறைகருதுபு சூட்டி
காழ்மண் டெ·கமொடு கணையலை கலங்கி
பிரிபிணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து
வான தன்ன வளநகர் பொற்ப
நோன்குற டன்ன ஊன்சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர தம்மின்
நிவந்த யானை கணநிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப்பூ தெரியற்
பெருற்செய் ஆடவர தம்மின் பிறரும்
யாவரும் வருக ஏனோரு தம்மென
வரையா வாயிற் செறாஅ திருந்து
பாணர் வருக பாட்டியர்
யாணர புலவரொடு வயிரியர் வருகென
இருங்கிளை புரக்கும் இரவலர கெல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி
கள தோறும் கள் ளரிப்ப
மர தோறு மை வீழ்ப்ப
நிண வூன்சு டுரு கமைய
நெய் கனிந்து வறை யார்ப்ப
குரூஉ குய்ப்புகை மழை மங்குலிற்
பரந்து தோன்றா விய னகராற்
பல் சாலை முது குடுமியின்
நல் வேள்வி துறை போகிய
தொல் லாணை நல் லாசிரியர்
புணர்கூ டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவி னெடியோன் போல
வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர்
பலர்வா புகரறு சிறப்பிற் றோன்றி
அரிய தந்து குடி யகற்றி
பெரிய கற் றிசை விளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கி
பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார
பெரும்பெயர் மாறன் தலைவ னா
கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்
இயனெறி மரபினின் வாய்மொழி கேட
பொலம்பூண் ஐவர் உட்பட புகழ்ந்த
மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன
ரவரும் பிறகும் துவன்றி
பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ தேத்த
இலங்கிழை மகளிர் பொலங்கல தேந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்தினி துறைமதி பெரும்
வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே

மதுரைக்காஞ்சி முற்றிற்று