மலைபடுகடாம்
ஆசிரியர் இரணிய முட்டத்து பெருங்குன்றூர பெருங்கெளசிகனார்


























©









சங்க கால நூல்களான பத்து பாட்டுக்களில் பத்தாவதான
மலைபடுகடாம்

பாடியவர் இரணிய முட்டத்து பெருங்குன்றூர பெருங்கெளசிகனார்
பாடப்பட்டவன் நன்னன் வேண்மான்
திணை பாடாண்திணை
துறை ஆற்றுப்படை
பாவகை ஆசிரியப்பா
மொத்த அடிகள்

திருமழை தலைஇய இருணிற விசும்பின்
விண்ணதிர் இமிழிசை கடு பண்ணமைத்து
திண்வார் விசித்த முழவொ டாகுளி
நுண்ணுரு குற்ற விளங்கடர பாண்டில்
மின்னிரும் பீலி அணித்தழை கோட்டொடு
கண்ணிடை விடுத்த களிற்றுயிர தூம்பின்
இளிப்பயிர் இமிரும் குறும்பர தூம்பொடு
விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ
நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை
கடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்
கார்கோ பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கி காய கலப்பையிர்
கடுக்கலி தெழுந்த கண்ணகன் சிலம்பில்
படுத்துவை தன்ன பாறை மருங்கின்
எடுத்துநிறு தன்ன இட்டருஞ் சிறுநெறி
தொடுத்த வாளியர் துணைபுணர் கானவர்
இடுக்கண் செய்யா தியங்குநர் இயக்கும்
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது
இடிச்சுர நிவப்பின் இயவுக்கொண் டொழுகி
தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவின்
கடிப்பகை யனைத்தும் கேள்வி போகா
குரலோர்த்து தொடுத்த சுகிர்புரி நரம்பின்
அரலை தீர உரீஇ வரகின்
குரல்வார தன்ன நுண்டுளை இரீஇ
சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்குதுளை செறிய ஆணி முடுக்கி
புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்து
புதுவது போர்த்த பொன்போற் பச்சை
வதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால்
மடந்தை மாண்ட நுடங்கெழில் ஆகத்து
அடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப
அகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது
கவடுபட கவைஇய சென்றுவாங் குந்தி
நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமை
களங்கனி யன்ன கதழ்ந்துகிளர் உருவின்
வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர பேரியாழ்
அமைவர பண்ணி அருள்நெறி திரியாது
இசைபெறு திருவின் வேத்தவை ஏற்ப
துறைபல முற்றிய பைதீர் பாணரொடு
உயர்ந்தோங்கு பெருமலை ஊறின் றேறலின்
மதந்தபு ஞமலி நாவி நன்ன
துளங்கியல் மெலிந்த கல்பொரு சீறடி
கணங்கொள் தோகையிற் கதுப்பிகு தசைஇ
விலங்குமலை தமர்ந்த சேயரி நாட்டத்து
இலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்ற
கயம்பு கன்ன பயம்படு தண்ணிழல்
புனல்கால் கழீஇய மணல்வார் புறவில்
புலம்புவி டிருந்த புனிறில் காட்சி
கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ
தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின்
மீமிசை நல்யாறு கடற்படர தாஅங்கு
யாமவ ணின்றும் வருதும் நீயிரும்
கனிபொழி கானம் கிளையொ டுணீஇய
துனைபறை நிவக்கும் புள்ளின மான
புனைதார பொலிந்த வண்டுபடு மார்பின்
வனைபுனை எழின்முலை வாங்கமை திரடோ ள்
மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன்
முனைபாழ் படுக்கும் துன்னரு துப்பின்
இசைநுவல் வித்தின் நசையே ருழவர்க்கு
புதுநிறை வந்த புனலஞ் சாயல்
மதிமா றோரா நன்றுணர் சூழ்ச்சி
வின்னவில் தடக்கை மேவரும் பெரும்பூண்
நன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொடு
உள்ளினிர் சேறிர் ஆயிற் பொழுதெதிர்ந்த
புள்ளினிர் மன்ற எற்றா குறுதலின்
ஆற்றின் அளவும் அசையுநற் புலமும்
வீற்றுவளஞ் சுரக்குஅவ நாடுபடு வல்சியும்
மலையும் சோலையும் மாபுகல் கானமும்
தொலையா னல்லிசை உலகமொடு நிற
பலர்புறங் கண்டவர் அருங்கல தரீஇ
புலவோர்க்கு சுரக்கும்அவ நீகை மாரியும்
இகழுநர பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு
அரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
தூத்துளி பொழிந்த பொய்யா வானின்
வீயாது சுரக்குமவ நாள்மகி ழிருக்கையும்
நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து
வல்லா ராயினும் புறமறைத்து சென்றோரை
சொல்லி காட்டி சோர்வின்றி விளக்கி
நல்லிதின் இயக்குமவன் சுற்ற தொழுக்கமும்
நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேரிசை நவிர மேஎ யுறையும்
காரிஉண்டி கட வுள தியற்கையும்
பாயிருள் நீங்க பகல்செய்யா எழுதரு
ஞாயி றன்னவவன் வசையில் சிறப்பும்
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்
நுகம்பட கடந்து நூழி லாட்டி
புரைத்தோல் வரைப்பின் வேனிழற் புலவோர்க்கு
கொடைக்கடன் இறுத்தவன் தொல்லோர் வரவும்
இரைதேர திவரும் கொடுந்தாள் முதலையொடு
திரைபட குழிந்த கல்லகழ் கிடங்கின்
வரைபுரை நிவப்பின் வான்றோய் இஞ்சி
உரைசெல வெறுத்தவன் மூதூர் மாலையும்
கேளினி வேளைநீ முன்னிய திசையே
மிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற்
புதுவது வந்தன் றிதுவதன் பண்பே
வானமின்னு வசிவு பொழிய ஆனாது
இட்ட வெல்லாம் பெட்டாங்கு விளை
பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து
அகலிரு விசும்பி னாஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை
நீல தன்ன விதைப்புன மருங்கின்
மகுளி பாயாது மலிதுளி தழாலின்
அகள தன்ன நிறைசுனை புறவிற்
கெளவை போகிய கருங்காய் பிடியேழ்
நெய்கொள வொழுகின பல்கவ ரீரெண்
பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்ப
கொய்பத முற்றன குலவுக்குரல் ஏனல்
விளைதயிர பிதிர்வின் வீவு கிருவிதொறும்
குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவரை
மேதி யன்ன கல்பிறங்கு இயலின்
வாதிகை யன்ன கவைக்கதிர் இறைஞ்சி
இரும்புகவர் வுற்றன பெரும்புன வரகே
பால்வார்பு கெழீஇ பல்கவர் வளிபோழ்பு
வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல்
வேலீண்டு தொழுதி இரிவுற் றென்ன
காலுறு துவைப்பிற் கவிழ்க்கனை திறைஞ்சி
குறையறை வாரா நிவப்பி னறையுற்று
ஆலை கலமரு தீங்கழை கரும்பே
புயற்புனிறு போகிய பூமலி புறவின்
அவற்பதங் கொண்டன அம்பொதி தோரை
தொய்யாது வித்திய துளர்படு துடவை
ஐயவி யமன்ற வெண்காற் செறுவின்
மையென விரிந்தன நீணறு நெய்தல்
செய்யா பாவை வளர்ந்துகவின் முற்றி
காயங் கொண்டன இஞ்சிமா விருந்து
வயவுப்பிடி முழந்தாள் கடுப்ப குழிதொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடி கவலை
காழ்மண் டெஃகம் களிற்றுமுகம் பாய்ந்தென
ஊழ்மல ரொழிமுகை உயர்முக தோ
துறுகல் சுற்றிய சோலை வாழை
இறுகுகுலை முறுக பழுத்த பயம்புக்கு
ஊழுற் றலமரும் உந்தூழ் அகலறை
கால மன்றியும் மரம்பயன் கொடுத்தலிற்
காலின் உதிர்ந்தன கருங்கனி நாவல்
மாறுகொள வொழுகின ஊறுநீ ருயவை
நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந்து
உண்ணுநர தடுத்தன தேமா புண்ணரிந்து
அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி
விரலூன்று படுகண் ஆகுளி கடுப்ப
குடிஞை இரட்டு நெடுமலை அடுக்கத்து
கீழு மேலுங் கார்வா தெதிரி
கரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி
முரஞ்சுகொண் டிறைஞ்சின அலங்குசினை பலவே
தீயி னன்ன ஒண்செங் காந்தள்
தூவற் கலித்த புதுமுகை ஊன்செத்து
அறியா தெடுத்த புன்புற சேவல்
ஊஉ னன்மையி னுண்ணா துகுத்தென
நெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய்
வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும்
மணஇல் கமழு மாமலை சாரல்
தேனினர் கிழங்கினர் ஊனார் வட்டியர்
சிறுக பன்றி பழுதுளி போக்கி
பொருதுதொலை யானை கோடுசீ ராக
தூவொடு மலிந்த காய கானவர்
செழும்பல் யாணர சிறுகுடி படினே
இரும்பே ரொக்கலொடு பதமிக பெறுகுவிர்
அன்றவ ணசைஇ அற்சேர தல்கி
கன்றெரி யொள்ளிணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலை செப்பம் போகி
அலங்குகழை நரலும் ஆரி படுகர
சிலம்படை திருந்த பாக்க மெய்தி
நோனா செருவின் வலம்படு நோன்றாள்
மான விறல்வேள் வயிரிய மெனினே
நும்மில் போல நில்லாது புக்கு
கிழவிர் போல கேளாது கெழீஇ
சேட்புலம் பகல இனிய கூறி
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்க ணிறடி பொம்மல் பெறுகுவிர்
ஏறி தரூஉம் இலங்குமலை தாரமொடு
வேய்ப்பெயல் விளையுள் தேக்க தேறல்
குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறை
பழஞ்செரு குற்றநும் அனந்தல் தீர
அருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்
வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
முளவுமா தொலைச்சிய பைந்நிண பிளவை
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண்புடை கொண்ட துய்த்தலை பழனின்
இன்புளி கலந்து மாமோ ரா
கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து
வழையமை சாரல் கமழ துழைஇ
நறுமலர் அணிந்த நாறிரு முச்சி
குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி
அகமலி உவகை ஆர்வமொ டளைஇ
மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்
செருச்செய் முன்பிற் குருசில் முன்னிய
பரிசில் மறப்ப நீடலும் உரியிர்
அனைய தன்றவன் மலைமிசை நாடே
நிரையிதழ குவளை கடிவீ தொடினும்
வரையர மகளிர் இருக்கை காணினும்
உயிர்செல வெம்பி பனித்தலும் உரியிர்
பலநா ணில்லாது நிலநாடு படர்மின்
விளைபுன நிழத்தலிற் கேழல் அஞ்சி
புழைதொறு மாட்டிய இருங்கல் அடாடர்
அரும்பொறி உடைய வாறே நள்ளிருள்
அலரிவிரிந்த விடியல் வைகினிர் கழிமின்
நளிந்துபலர் வழங்கா செப்ப துணியின்
முரம்புகண் உடைந்த பரலவற் போழ்வில்
கரந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவே
குறிக்கொண்டு மரங் கொட்டி நோக்கி
செறிதொடி விறலியர் கைதொழூஉ பழிச்ச
வறிதுநெறி ஓரீஇ வலஞ்செயா கழிமின்
புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ் குறவர்
உயர்நிலை இதணம் ஏறி கைபுடையூஉ
அகன்மலை யிறும்பில் துவன்றிய யானை
பகனிலை தவிர்க்கும் கவணுமிழ் கடுங்கல்
இருவெதிர் ஈர்ங்கழை தத்தி கல்லென
கருவிர லூகம் பார்ப்போ டிரிய
உயிர்செகு மரபிற் கூற்ற தன்ன
வரும்விசை தவிராது மரமறையா கழிமின்
உரவுக்களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி
இரவின் அன்ன இருள்தூங்கு வரைப்பின்
குமிழி சுழலும் குண்டுகய முடுக்கர்
அகழ்இழி தன்ன கான்யாற்று நடவை
வழூஉமருங் குடைய வழாஅல் ஓம்பி
பரூஉக்கொடி வலந்த மதலை பற்றி
துருவி னன்ன புன்றலை மகாரோடு
ஒருவிர் ஓம்பினிர் கழிமின்
அழுந்துப டலமரும் புழகமல் சாரல்
விழுந்தோர் மாய்க்குங் குண்டுக தருகா
வழும்புகண் புதைத்த நுண்ணீர பாசி
அடிநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
முழுநெறி பிணங்கிய நுண்கோல் வேரலோடு
எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின்
உயர்நிலை மாக்கற் புகர்முகம் புதைய
மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணை
தாரொடு பொலிந்த வினைநவில் யானை
சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சி
ஓரியாற் றியவின் மூத்த புரிசை
பராவரு மரபிற் கடவு காணிற்
தொழாஅநிர் கழியின் அல்லது வறிது
நும்மி தொடுதல் ஓம்புமின் மயங்குதுளி
மாரி தலையுமவன் மல்லல் வெற்பே
அலகை யன்ன வெள்வேர பீலி
கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்
கடும்பறை கோடியர் மகாஅ ரன்ன
நெடுங்கழை கொம்பர கடுவன் உகளினும்
நேர்கொள் நெடுவரை நேமியின் தொடுத்த
சூர்புகல் அடுக்கத்து பிரசங் காணினும்
ஞெரேரென நோக்கல் ஓம்புமின் உரித்தன்று
நிரைசெலல் மெல்லடி நெறிமாறு படுகுவிர்
வரைசேர் வகுந்திற் கானத்து படினே
கழுதிற் சேணோன் ஏவொடு போகி
இழுதி னன்ன வானிணஞ் செருக்கி
நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பின்
நெறிக்கெட கிடந்த இரும்பிணர் எருத்தின்
இருள்துணி தன்ன ஏனங் காணின்
முளிகழை இழைந்த காடுபடு தீயின்
நளிபுகை கமழா திறாயினிர் மிசைந்து
துகளற துணிந்த மணிமருள் தெண்ணீர்
குவளையம் பைஞ்சுனை அசைவிட பருகி
மிகுத்து பதங்கொண்ட பரூஉக்க பொதியினிர்
புட்கை போகிய புன்றலை மகாரோடு
அற்கிடை கழிதல் ஓம்பி ஆற்றநும்
இல்பு கன்ன கல்லளை வதிமின்
அல்சேர தல்கி அசைதல் ஓம்பி
வான்கண் விரிந்த விடிய லேற்றெழுந்து
கானக பட்ட செந்நெறி கொண்மின்
கயம்கண் டன்ன அகன்பை யங்கண்
மைந்துமலி சினத்த களிறுமதன் அழிக்கும்
துஞ்சுமரங் கடுக்கும் மாசுணம் விலங்கி
இகந்துசே கமழும் பூவும் உண்டோ ர்
மறந்தமை கல்லா பழனும் ஊழிறந்து
பெரும்பயங் கழியினும் மாந்தர் துன்னார்
இருங்கால் வீயும் பெருமர குழாமும்
இடனும் வலனும் நினையினர் நோக்கி
குறியறி தவையவை குறுகாது கழிமின்
கோடுபல முரஞ்சிய கோளி யாலத்து
கூடி தன்ன குரல்புணர் புள்ளின்
நாடுகா ணனந்தலை மென்மெல அகன்மின்
மாநிழற் பட்ட மரம்பயில் இறும்பின்
ஞாயிறு தெறாஅ மாசு நனந்தலை
தேஎ மருளும் அமைய மாயினும்
இறாஅவன் சிலையர் மாதேர்பு கொட்கும்
குறவரு மருளுங் குன்றத்து படினே
அகன்க பாறை துவன்றி கல்லென
இயங்கல் ஓம்பிநும் மியங்கள் தொடுமின்
பாடின் அருவி பயங்கெழு மீமிசை
காடுகா துறையுங் கானவர் உளரே
நிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள்
புனற்படு பூசலின் விரைந்துவல் லெய்தி
உண்டற் கினிய பழனுங் கண்டோ ர்
மலைதற் கினிய பூவுங் காட்டி
ஊறு நிரம்பிய ஆறவர் முந்துற
நும்மி னெஞ்ச தவலம் வீட
இம்மென் கடும்போ டினியிர் ஆகுவிர்
அறிஞர் கூறிய மாதிரங் கைக்கொள்பு
குறியவும் நெடியவும் ஊழிழிபு புதுவோர்
நோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்து
அலர்தாய வரிநிழல் அசையினிர் இருப்பிற்
பலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ
கலைதொடு பெரும்பழம் புண்கூர தூறலின்
மலைமுழுதுங் கமழு மாதிர தோறும்
அருவிய நுகரும் வானர மகளிர்
வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும்
தெரியிமிழ் கொண்டநும் இயம்போ லின்னிசை
இலங்கேந்து மருப்பின் இனம்பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசை பணவை கானவர்
புலம்பு குண்ணும் புரிவளை பூசல்
சேயளை பள்ளி எஃகுறு முள்ளின்
எய்தெற இழுக்கிய கானவர் அழுகை
கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பின்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென
அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்
தலைநா பூத்த பொன்னிணர் வேங்கை
மலைமா ரிடூஉம் பூசல்
கன்றரை பட்ட கயந்தலை மடப்பிடி
வலிக்குவரம் பாகிய கணவன் ஓம்பலின்
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென கிளையொடு
நெடுவரை இயம்பும் இடியுமிழ் தழங்குகுரல்
கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி
அருவிடர் வீழ்ந்ததன் கல்லா பார்ப்பிற்கு
முறிமே யாக்கை கிளையொடு துவன்றி
சிறுமை யுற்ற களையா பூசல்
கலைகை யற்ற காண்பின் நெடுவரை
நிலைபெய் திட்ட மால்புநெறி யாக
பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை
அருங்குறும் பெறிந்த கானவர் உவகை
திருந்துவேல் அண்ணற்கு விருந்திறை சான்மென
நறவுநா செய்த குறவர்தம் பெண்டிரொடு
மான்றோற் சிறுபறை கறங கல்லென
வான்றோய் மீமிசை அயருங் குரவை
நல்லெழி னெடுந்தேர் இயவுவ தன்ன
கல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசை
நெடுஞ்சுழி பட்ட கடுங்கண் வேழத்து
உரவுச்சின தணித்து பெருவெளிற் பிணிமார்
விரவுமொழி பயிற்றும் பாக ரோதை
ஒலிகழை தட்டை புடையுநர் புனந்தொறும்
கிளிகடி மகளிர் விளிபடு பூசல்
இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபட தாக்கி
கோவலர் குறவரோ டொருங்கியை தார்ப்ப
வள்ளிதழ குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை
காந்தள் துடும்பிற் கமழ்மட லோச்சி
வன்கோ பலவின் சுளைவிளை தீம்பழம்
உண்டுபடு மிச்சிற் காழ்பயன் கொண்மார்
கன்று கடாஅ வுறுக்கு மகாஅ ரோதை
மழைகண் டன்ன ஆலைதொறு ஞெரேரென
கழைகண் ணுடைக்குங் கரும்பி னேத்தமும்
தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்
சேம்பு மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றி பறையுங் குன்றக சிலம்பும்
என்றிவ் வனைத்தும் இயைந்தொருங் கீண்டி
அவலவு மிசையவு துவன்றி பலவுடன்
அலகை தவிர்த்த எண்ணரு திறத்த
மலைபடு கடாஅ மாதிர தியம்ப
குரூஉக்க பிணையல் கோதை மகளிர்
முழவுத்துயில் அறியா வியலு ளாங்கண்
விழவின் அற்றவன் வியன்கண் வெற்பே
கண்ண் டண்ண்னென கண்டுங் கேட்டுங்
உண்டற் கினிய பலபா ராட்டியும்
இன்னும் வருவ தாக நமக்கென
தொன்முறை மரபினி ராகி பன்மாண்
செருமிக்கு புகலு திருவார் மார்பன்
உருமுரறு கருவிய பெருமலை பிற்பட
இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர்
நறுங்கார் அடுக்கத்து குறிஞ்சி பாடி
கைதொழூஉ பரவி பழிச்சினிர் கழிமின்
மைபடு மாமலை பனுவலிற் பொங்கி
கைதோய் வன்ன கார்மழை தொழுதி
தூஉ யன்ன துவலை தூற்றலின்
தேஎ தேறா கடும்பரி கடும்பொடு
காஅ கொண்டநும் இயந்தொய் படாமற்
கூவல் அன்ன விடரகம் புகுமின்
இருங்கல் இகுப்ப திறுவரை சேராது
குன்றிடம் பட்ட ஆரிடர் அழுவத்து
நின்று நோக்கினும் கண்வாள் வெளவும்
மண்கனை முழவின் தலைக்கோல் கொண்டு
தண்டுகா லாக தளர்தல் ஓம்பி
ஊன்றினிர் கழிமின் ஊறுதவ பலவே
அயில்கா தன்ன கூர்ங்கற் பாறை
வெயில்புற தரூஉம் இன்னல் இயக்கத்து
கதிர்சின தணிந்த அமயத்து கழிமின்
உரைசெல வெறுத்தவவ னீங்கா சுற்றமொடு
புரைதவ உயரிய மழைமருள் பஃறோல்
அரசுநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
பின்னி யன்ன பிணங்கரி னுழைதொறும்
முன்னோன் வாங்கிய கடுவிசை கணைக்கோல்
இன்னிசை நல்யாழ பத்தரும் விசிபிணி
மண்ணார் முழவின் கண்ணு மோம்பி
கைபிணி விடாஅது பைப கழிமின்
களிறுமலை தன்ன கண்கூடு துறுகல்
தளிபொழி கான தலைதவ பலவே
ஒன்னா தெவ்வர் உலைவிட தார்த்தென
நல்வழி கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல்லிசை பெயரொடு நட்ட
கல்லேசு கவலை எண்ணுமிக பலவே
இன்புறு முரற்கைநும் பாட்டுவிரு பாக
தொன்றொழுகு மரபினும் மருப்பிகுத்து துனைமின்
பண்டுநற் கறியா புலம்பெயர் புதுவிர்
சந்து நீவி புன்முடி திடுமின்
செல்லு தேஎத்து பெயர்மருங் கறிமார்
கல்லெறி தெழுதிய நல்லரை மராஅத்து
கடவு ளோங்கிய காடேசு கவலை
ஒட்டா தகன்ற ஒன்னா தெவ்வர்
சுட்டினும் பனிக்குஞ் சுரந்தவ பலவே
தேம்பாய் கண்ணி தேர்வீசு கவிகை
ஓம்பா வள்ளற் படர்ந்திகும் எனினே
மேம்பட வெறுத்தவன் தொஃறிணை மூதூர்
ஆங்கன மற்றே நம்ம னோர்க்கே
அசைவுழி யசைஇ அஞ்சாது கழிமின்
புலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளி
கலைநின்று விளிக்குங் கானம் ஊழிறந்து
சிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடை
தலையிரும்பு கதழும் நாறுகொடி புறவின்
வேறுபுலம் படர்ந்த ஏறுடை இனத்த
வளையான் தீம்பால் மிளைசூழ் கோவலர்
வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின்
பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும்
புலம்புசேண் அகல புதுவிர் ஆகுவிர்
பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன
தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇ
கல்லென் கடத்திடை கடலின் இரைக்கும்
பல்யா டினநிரை எல்லினிர் புகினே
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்
துய்ம்மயிர் அடக்கிய சேக்கை யன்ன
மெய்யுரி தியற்றிய மிதியத பள்ளி
தீத்துணை யாக சேந்தனிர் கழிமின்
கூப்பிடு கடக்குங் கூர்நல் லம்பிற்
கொடுவிற் கூளியர் கூவை காணிற்
படியோர தேய்த்த பணிவில் ஆண்மை
கொடியோள் கணவற் படர்ந்திகு மெனினே
தடியுங் கிழங்கு தண்டினர் தரீஇ
ஓம்புநர் அல்ல துடற்றுநர் இல்லை
ஆங்குவியங் கொண்மின் அதுவதன் பண்பே
தேம்பட மலர்ந்த மராஅமெல் லிணரும்
உம்பல் அகைத்த ஒண்முறி யாவும்
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி
திரங்குமர னாரிற் பொலி சூடி
முரம்புகண் ணுடைந்த நடவை தண்ணென
உண்டனிர் ஆடி கொண்டனிர் கழிமின்
செவ்வீ வேங்கை பூவி னன்ன
வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த
சுவல்விளை நெல்லின் அவரையம் பைங்கூழ்
அற்கிடை உழந்தநும் வருத்தம் வீட
அகலு ளாங்க கழிமிடை தியற்றிய
புல்வேய் குரம்பை குடிதொறும் பெறுகுவிர்
பொன்னறை தன்ன நுண்ணேர் அரிசி
வெண்ணெறி தியற்றிய மாக்கண் அமலை
தண்ணெ ணுண்ணிழு துள்ளீ டாக
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்
விசையங் கொழித்த பூழி யன்ன
உண்ணுநர தடுத்த நுண்ணிடி நுவணை
நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டி
பனிசேண் நீங்க இனிதுடன் துஞ்சி
புலரி விடியற் புள்ளோர்த்து கழிமின்
புல்லரை காஞ்சி புனல்பொரு புதவின்
மெல்லவ லிருந்த ஊர்தொறு நல்லியாழ
பண்ணுப்பெயர தன்ன காவும் பள்ளியும்
பன்னா ணிற்பினும் சேந்தனிர் செலினும்
நன்பல வுடைத்தவன் தண்பணை நாடே
கண்புமலி பழனங் கமழ துழைஇ
வலையோர் தந்த இருஞ்சுவல் வாளை
நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டிற்
பிடிக்கை யன்ன செங்கண் வராஅல்
துடிக்கண் அன்ன குறையொடு விரைஇ
பகன்றை கண்ணி பழையர் மகளிர்
ஞெண்டாடு செறுவிற் றாரஅய்க்கண் வைத்த
விலங்கல் அன்ன போர்முதற் றொலைஇ
வளஞ்செய் வினைஞர் வல்சி நல்க
துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதி தேறல்
இளங்கதிர் ஞாயிற்று களங்கடொறும் பெறுகுவிர்
முள்ளரி தியற்றிய வெள்ளரி வெண்சோறு
வண்டுபட கமழு தேம்பாய் கண்ணி
திண்டேர் நன்னற்கும் அயினி சான்மென
கண்டோ ர் மருள கடும்புடன் அருந்தி
எருதெறி களமர் ஓதையொடு நல்யாழ்
மருதம் பண்ணி அசையினிர் கழிமின்
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
செங்கண் எருமை இனம்பிரி ஒருத்தல்
கனைசெலல் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றி
வனைகல திகிரியிற் குமிழி சுழலும்
துனைசெலற் றலைவாய் ஓவிற தொலிக்கும்
காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின்
யாணர் ஒருகரை கொண்டனிர் கழிமின்
நிதி துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற்
பதியெழ லறியா பழங்குடி கெழீஇ
வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து
யாறென கிடந்த செருவிற் சாறென
இகழுநர் வெரூஉங் கவலை மறுகிற்
கடலென காரென ஒலிக்குஞ் சும்மையொடு
மலையென மழையென மாட மோங்கி
துனிதீர் காதலின் இனிதமர துறையும்
பனிவார் காவிற் பல்வண் டிமிரும்
நனிசே தன்றவன் பழவிறன் மூதூர்
பொருந்தா தெவ்வர் இருந்தலை துமி
பருந்துபட கடக்கும் ஒள்வாண் மறவர்
கருங்கடை எஃகஞ் சாத்திய புதவின்
அருங்கடி வாயில் அயிராது புகுமின்
மன்றில் வதியுநர் சேட்புல பரிசிலர்
வெல்போர சேஎ பெருவிற லுள்ளி
வந்தோர் மன்ற அளியர் தாமென
கண்டோ ரெல்லாம் அமர்ந்தினிது நோக்கி
விருந்திறை அவரவர் எதிர்கொள குறுகி
பரிபுலம் பலைத்தநும் வருத்தம் வீட
எரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்து
தொழுதி போக வலிந்தக பட்ட
மடநடை ஆமான் கயமுனி குழவி
ஊமை எண்கின் குடாவடி குருளை
மீமிசை கொண்ட கவர்பரி கொடுந்தாள்
வரைவாழ் வருடை வன்றலை மாத்தகர்
அரவுக்குறும் பெறிந்த சிறுகண் தீர்வை
அளைச்செறி உழுவை கோளுற வெறுத்த
மடக்கண் மரையான் பெருஞ்செவி குழவி
அரக்குவிரி தன்ன செந்நில மருங்கிற்
பரற்றவழ் உடும்பின் கொடுந்தாள் ஏற்றை
வரைப்பொலி தியலும் மடக்கண் மஞ்ஞை
கான கோழி கவர்குரற் சேவல்
கான பலவின் முழவுமருள் பெரும்பழம்
இடிக்கல பன்ன நறுவடி மாவின்
வடிச்சேறு விளைந்த தீம்பழ தாரம்
தூவற் கலித்த இவர்நனை வளர்கொடி
காஅ கொண்ட நுகமரு ணூறை
பரூஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணி
குரூஉப்புலி பொருத புண்கூர் யானை
முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள்
வளையுடை தன்ன வள்ளிதழ காந்தள்
நாக திலக நறுங்காழ் ஆரம்
கருங்கொடி மிளகின் காய்த்துணர பசுங்கறி
திருந்தமை விளைந்த தேக்கள் தேறல்
கானிலை எருமை கழைபெய் தீந்தயிர்
நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை
நேமியிற் செல்லும் நெய்க்கண் இறாஅல்
உடம்புணர்வு தழீஇய ஆசினி யனைத்தும்
குடமலை பிறந்த தண்பெருங் காவிரி
கடன்மண் டழுவத்து கயவாய் கடுப்ப
நோனா செருவி னெடுங்கடை துவன்றி
வான தன்ன வளமலி யானை
தாதெரு ததைந்த முற்ற முன்னி
மழையெதிர் படுகண் முழுவுகண் இகுப்ப
கழைவளர் தூம்பின் கண்ணிடம் இமிர
மருதம் பண்ணிய கருங்கோட்டு சீறியாழ்
நரம்புமீ திறவா துடன்புணர தொன்றி
கடவ தறிந்த இன்குரல் விறலியர்
தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅது
அருந்திறற் கடவு பழிச்சிய பின்றை
விருந்திற் பாணி கழிப்பி நீண்மொழி
குன்றா நல்லிசை சென்றோர் உம்பல்
இன்றிவ செல்லா துலகமொடு நிற்ப
இடைத்தெரி துணரும் பெரியோர் மாய்ந்தென
கொடைக்கட னிறுத்த செம்ம லோயென
வென்றி பல்புகழ் விறலோ டேத்தி
சென்றது நொடியவும் விடாஅன் நசைதர
வந்தது சாலும் வருத்தமும் பெரிதென
பொருமுரண் எதிரிய வயவரொடு பொலிந்து
திருநகர் முற்றம் அணுகல் வேண்டி
கல்லென் ஒக்கல் நல்வல திரீஇ
உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து
அகன்ற தா தஃகிய நுட்பத்து
இலமென மலர்ந்த கைய ராகி
தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடுவரை இழிதரு நீத்தஞ்சால் அருவி
கடுவரற் கலுழி கட்கின் சேயாற்று
வடுவாழ் எக்கர் மணலினும் பலரே
அதனால் புகழொடுங் கழிகநம் வரைந்த நாளென
பரந்திடங் கொடுக்கும் விசும்புதோய் உள்ளமொடு
நயந்தனிர் சென்ற நும்மினு தான்பெரிது
உவந்த உள்ளமோ டமர்ந்தினிது நோக்கி
இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்
எள்ளறு சிறப்பின் வெள்ளரை கொளீஇ
முடுவல் தந்த பைந்நிண தடியொடு
நெடுவெ ணெல்லின் அரிசிமு டாது
தலைநாள் அன்ன புகலொடு வழிச்சிறந்து
பலநாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது
செல்வே தில்லவெ தொல்பதி பெயர்ந்தென
மெல்லென கூறி விடுப்பின் நும்முள்
தலைவன் தாமரை மலைய விறலியர்
சீர்கெழு சிறப்பின் விளங்கிழை அணிய
நீரி கன்ன நிரைசெலல் நெடுந்தேர்
வாரி கொள்ளா வரைமருள் வேழம்
கறங்குமணி துவைக்கும் ஏறுடை பெருநிரை
பொலம்படை பொலிந்த கொய்சுவற் புரவி
நிலந்தின கிடந்த நிதியமொ டனைத்தும்
இலம்படு புலவர் ஏற்றகை நிறை
கலம்பெ கவிழ்ந்த கழறொடி தடக்கையின்
வளம்பிழை பறியாது வாய்வளம் பழுநி
கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழைசுர தன்ன ஈகை நல்கி
தலைநாள் விடுக்கும் பரிசின் மலைநீர்
வென்றெழு கொடியிற் றோன்றும்
குன்றுசூழ் இருக்கை நாடுகிழ வோனே

மலைபடுகடாம் முற்றிற்று