குறுந்தொகை
எட்டுத்தொகை நூல்களில் ஒன்று பல ஆசிரியர்கள்
















©









குறுந்தொகை
எட்டுத்தொகை நூல்களில் ஒன்று பல ஆசிரியர்கள்
கடவுள் வாழ்த்து
தாமரை புரையுங் காமர் சேவடி
பவழ தன்ன மேனி திகழொளி
குன்றி யேய்க்கும் உடுக்கை குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே
பாரதம் பாடிய பெருந்தேவனார்
குறிஞ்சி தோழி கூற்று
செங்களம் படக்கொன் றவுணர தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானை
கழல்தொடி சேஎய் குன்றம்
குருதி பூவின் குலைக்கா தட்டே
திப்பு தோளார்
குறிஞ்சி தலைவன் கூற்று
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே
இறையனார்
குறிஞ்சி தலைவி கூற்று
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சி பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
தேவகுலத்தார்
நெய்தல் தலைமகள் கூற்று
நோம்என் நெஞ்சே
இமைதீ பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே
காமஞ்சேர் குளத்தார்
நெய்தல் தலைவி கூற்று
அதுகொல் தோழி காம நோயே
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரை திவலை அரும்பு தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தென
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே
நரிவெரூ உத்தலையார்
நெய்தல் தலைவி கூற்று
நள்ளென் றன்றே யாமம் சொல்லவி
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே
பதுமனார்
பாலை கண்டோர் கூற்று
வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொர கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே
பெரும்பதுமனார்
மருதம் காதற் பரத்தை கூற்று
கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறி தம்மிற்
கையும் காலும் தூக்க தூக்கும்
ஆடி பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே
ஆலங்குடி வங்கனார்
மருதம் தோழி கூற்று
யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பெய்யா பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ண துறைவன் கொடுமை
நம்மு னாணி கரப்பா டும்மே
கயமனார்
பாலை தோழி கூற்று
யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினை
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலின் நாணிய வருமே
ஓரம்போகியார்
பாலை தலைவி கூற்று
கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழுவினி வாழியென் னெஞ்சே முனாஅது
குல்லை கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நன்னா டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே
மாமூலனார்
பாலை தலைவி கூற்று
எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறி
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலை தென்பவர் தேர் சென்ற ஆறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே
ஓதலாந்தையார்
குறிஞ்சி தலைவி கூற்று
மாசற கழீஇய யானை போல
பெரும்பெயல் உழந்த இரும்பிணர துறுகற்
பைதல் ஒருதலை சேக்கும் நாடன்
நோய்த தனனே தோழி
பயலை ஆர்ந்தன குவளையங் கண்ணே
கபிலர்
குறிஞ்சி தலைவன் கூற்று
அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்று சின்மொழி அரிவையை
பெறுகதில் அம்ம யானே பெற்றாங்
கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவன் இவனென
பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே
தொல்கபிலர்
பாலை செவிலி கூற்று
பறைபட பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்து பொதியிற் றோன்றிய
நாலூர கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே
ஔவையார்
பாலை தோழி கூற்று
உள்ளார் கொல்லோ தோழி கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போல
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிற தாரே
பாலைபாடிய பெருங்கடுங்கோ
குறிஞ்சி தலைவன் கூற்று
மாவென மடலும் ஊர்ப பூவென
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே
பேரெயின் முறுவலார்
குறிஞ்சி தோழி கூற்று
வேரல் வேலி வேர்க்கோ பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டு பெரும்பழ தூங்கி யாங்கிவள்
உயிர்தவ சிறிது காமமோ பெரிதே
கபிலர்
மருதம் தலைவன் கூற்று
எவ்வி இழந்த வறுமையாழ பாணர்
பூவில் வறுந்தலை போல புல்லென்
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமர
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே
பரணர்
பாலை தலைவி கூற்று
அருளும் அன்பும் நீக்கி துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர்
மடவம் ஆக மடந்தை நாமே
கோப்பெருஞ்சோழன்
முல்லை தலைவி கூற்று
வண்டுபட ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றை
கானங் காரென கூறினும்
யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே
ஓதலாந்தையார்
பாலை தோழி கூற்று
நீர்வார் கண்ணை நீயிவண் ஒழிய
யாரோ பிரிகிற் பவரே சாரற்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அஞ்சினை கமழும்
தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே
சேரமானெந்தை
குறிஞ்சி தோழி கூற்று
அகவன் மகளே
மனவுக்கோ பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே
ஔவையார்
முல்லை தலைவி கூற்று
கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றயல் எழுந்த வெண்கோ டதவ
தெழுகுளிர் மிதித்த ஒருபழம் போல
குழை கொடியோர் நாவே
காதலர் அகல கல்லென் றவ்வே
பரணர்
குறிஞ்சி தலைவி கூற்று
யாரும் இல்லை தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே
கபிலர்
குறிஞ்சி தோழி கூற்று
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்
தகாஅன் போல தான்றீது மொழியினும்
தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே
தேக்கொ கருந்து முள்ளெயிற்று துவர்வாய்
வரையாடு வன்பறழ தந்தை
கடுவனும் அறியும்அ கொடியோ னையே
கொல்லனழிசி
பாலை தலைவி கூற்று
கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குலென் மாமை கவினே
வெள்ளிவீதியார்
பாலை தலைவி கூற்று
மூட்டு வேன்கொல் தாக்கு
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லென கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே
ஔவையார்
குறிஞ்சி தலைன் கூற்று
நல்லுரை யிகந்து புல்லுரை தாஅ
பெயல்நீர கேற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிதவா உற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுற தழீஇ கேட்குநர பெறினே
ஔவையார்
பாலை தலைவி கூற்று
கேட்டிசின் வாழி தோழி அல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகை பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவ தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅ
தமியேன் மன்ற அளியேன் யானே
கச்சிப்பேட்டு நன்னாகையார்
மருதம் தலைவி கூற்று
மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்த கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கை
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே
ஆதிமந்தியார்
குறிஞ்சி தலைவன் கூற்று
காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றி
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலோடு மறுகில் தோன்றி
தெற்றென தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே
அள்ளூர் நன்முல்லையார்
மருதம் தலைவி கூற்று
அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்
தன்னூர் மன்ற தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே
படுமரத்து மோசிகீரனார்
மருதம் தோழி கூற்று
ஒறுப்ப வோவலர் மறுப்ப தேறலர்
தமியர் உறங்கும் கௌவை யின்றாய்
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
முனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்
குட்டுவன் மாந்தை யன்னவெம்
குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே
கொல்லி கண்ணனார்
மருதம் தலைவி கூற்று
நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண்ணுறை யழிதுளி தலைஇய
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர கழலே
கழார்க்கீரனெயிற்றி
குறிஞ்சி தலைவி கூற்று
துறுக லயலது மாணை மாக்கொடி
துஞ்சுகளி றிவரும் குன்ற நாடன்
நெஞ்சுகள னாக நீயலென் யானென
நற்றோள் மணந்த ஞான்றை மற்றவன்
தாவா வஞ்சின முரைத்தது
நோயோ தோழி நின்வயி னானே
பரணர்
பாலை தோழி கூற்று
நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே
பாலைபாடிய பெருங்கடுங்கோ
குறிஞ்சி தலைவி கூற்று
கான மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரொ டொராங்கு தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே
கபிலர்
பாலை தலைவி கூற்று
வெந்திறற் கடுவளி பொங்கா போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்பநம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே
ஔவையார்
குறிஞ்சி தலைவன் கூற்று
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புல பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கல தனவே
செம்புல பெயனீரார்
பாலை தலைவி கூற்று
காதலர் உழைய ராக பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடி சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போல புல்லென்று
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே
அணிலாடு முன்றிலார்
குறிஞ்சி தோழி கூற்று
காமம் ஒழிவ தாயினும் யாமத்து
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரக தியம்பு நாடவெம்
தொடர்பு தேயுமோ நின்வயி னானே
கபிலர்
பாலை தலைவி கூற்று
செல்வார் அல்லரென் றியானிகழ தனனே
ஒல்வாள் அல்லளென் றவரிகழ தனரே
ஆயிடை இருபே ராண்மை செய்த பூசல்
நல்லரா கதுவி யாங்கென்
அல்லல் நெஞ்சம் அலமல குறுமே
ஔவையார்
பாலை செவிலித்தாய் கூற்று
காலே பரித பினவே கண்ணே
நோக்கி வாளிழ
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்து பிறரே
வெள்ளிவீதியார்
மருதம் தோழி கூற்று
காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர தழீஇய சென்ற
மல்ல லூரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே
தெறுவ தம்மவி திணைப்பிற தல்லே
ஆலங்குடி வங்கனார்
மருதம் தலைவி கூற்று
ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
எருவினுண் தாது குடைவன ஆடி
இல்லிறை பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே
மாமலாடனார்
குறிஞ்சி தோழி கூற்று
கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலி குருளையின் தோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே
நெடுவெண்ணிலவினார்
பாலை தோழி கூற்று
தாதிற் செய்த தண்பனி பாவை
காலை வருந்துங் கையா றோம்பென
ஓரை யாயங் கூற கேட்டும்
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்
நன்னுதல் பசலை நீங்க வன்ன
நசையாகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே
பூங்கணுத்திரையார்
நெய்தல் தலைவி கூற்று
அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே
அம்மூவனார்
மருதம் தலைவி கூற்று
ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅ
துறைஅணி தன்றவ ரூரே யிறையிற
திலங்குவளை ஞெகிழ சாஅ
புலம்பணி தன்றவர் மணந்த தோளே
குன்றியனார்
நெய்தல் தோழி கூற்று
கூன்முண் முண்ட கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலொடு பாறி
துறைதொறும் பரக்கு தூமணற் சேர்ப்பனை
யானும் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரும் அவனொடு மொழிமே
குன்றியனார்
குறிஞ்சி தோழி கூற்று
ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
சூர்நசை தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
நிரந்திலங்கு வெண்பல் மடந்தை
பரிந்தனென் அல்லனோ இறையிறை யானே
பனம்பாரனார்
மருதம் தோழி கூற்று
எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேரிறை முன்கை பற்றி
சூரர மகளிரோ டுற்ற சூளே
கோப்பெருஞ் சோழன்
குறிஞ்சி தலைவி கூற்று
யானே யீண்டை யேனே யென்னலனே
ஏனல் காவலர் கவணொலி வெரீஇ
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலி னிவக்கும்
கானக நாடனொ டாண்டொழி தன்றே
மீனெறிதூண்டிலார்
நெய்தல் தோழி கூற்று
மாக்கழி மணிப்பூ கூம்ப தூத்திரை
பொங்குபிதிர துவலையொடு மங்குல் தைஇ
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையு டாகும்
சின்னா டம்மவி சிறுநல் லூரே
நெய்தற் கார்க்கியர்
பாலை தலைவன் கூற்று
வேட்ட செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
வளையுடை கைய ளெம்மோ டுணீஇயர்
வருகதில் அம்ம தானே
அளியளோ அளியளெ நெஞ்சமர தோளே
சிறைக்குடி ஆந்தையார்
நெய்தல் தலைவி கூற்று
பூவிடை படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போல
பிரிவரி தாகிய தண்டா காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறி
திருவேம் ஆகிய வுலக
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே
சிறைக்குடி ஆந்தையார்
குறிஞ்சி தலைவன் கூற்று
இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே
வெள்ளி வீதியார்
பாலை தோழி கூற்று
பதலை பாணி பரிசிலர் கோமான்
அதலை குன்ற தகல்வா குண்டுசுனை
குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்
நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்
சுரம்பல விலங்கிய அரும்பொருள்
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே
மோசி கீரனார்
குறிஞ்சி தலைவி கூற்று
குறுந்தா கூதளி யாடிய நெடுவரை
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்
உட்கை சிறுகுடை கோலி கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்கு காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்து கினிதே
பரணர்
மருதம் தோழி கூற்று
தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின்
ஈர்த்தின் புறூஉம் இளையோர் போல
உற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர
பொய்கை யூரன் கேண்மை
செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே
தும்பிசேர் கீரனார்
குறிஞ்சி தலைவன் கூற்று
கோடல் எதிர்முகை பசுவீ முல்லை
நாறிதழ குவளையொ டிடையிடுபு விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே
சிறைக்குடி ஆந்தையார்
பாலை தலைவன் கூற்று
ஈதலும் துய்த்தலும் இல்லோர கில்லென
செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே
உகாய்க்குடிகிழார்
முல்லை தலைவி கூற்று
பல்லா நெடுநெறி ககன்று வந்தென
புன்றலை மன்றம் நோக்கி மாலை
மடக்கண் குழவி அலவ தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்
சேயர்தோழி சேய்நா டோரே
கருவூர கதப்பிள்ளை
முல்லை தலைவி கூற்று
வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன்
இன்புறு துணையொடு மறுவ துகள
தான்வ தன்றே தளிதரு தண்கார்
வாரா துறையுநர் வரனசைஇ
வருந்திநொ துறைய இருந்திரோ எனவே
கோவூர்கிழார்
முல்லை தோழி கூற்று
மடவ மன்ற தடவுநிலை கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதர
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியை காரென மதித்தே
கோவர்த்தனார்
பாலை தலைவி கூற்று
உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவா கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர
பொலங்கல ஒருகா சேய்க்கும்
நிலங்கரி கள்ளியங் காடிற தோரே
அள்ளூர் நன்முல்லையார்
குறிஞ்சி தலைவி கூற்று
பூழ்க்கா லன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்
அரும்பனி அற்சிர தீர்க்கும்
மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே
அள்ளூர் நன்முல்லையார்
குறிஞ்சி தோழி கூற்று
கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றென
கைம்மை உய்யா காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்து பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே
கடுந்தோ கரவீரனார்
குறிஞ்சி தலைவன் கூற்று
ஒடுங்கீர் ஓதி ஒண்ணுதற் குறுமகள்
நறுந்தண் ணீரள் ஆரணங் கினளே
இனையள் என்றவ புனையள வறியேன்
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே
ஓரம்போகியார்
பாலை தலைவன் கூற்று
மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம்பக டிளமுலை
பெருந்தோள் நுணுகிய நுசுப்பிற்
கல்கெழு கானவர் நல்குறு மகளே
கருவூர் ஓதஞானியார்
குறிஞ்சி தலைவன் கூற்று
பூவொ தலமரு தகைய ஏவொத்து
எல்லாரும் அறிய நோய்செய் தனவே
தேமொழி திரண்ட மென்தோள் மாமலை
பரீஇ வித்திய ஏனற்
குரீஇ ஓப்புவாள் பெருமழை கண்ணே
மள்ளனார்
குறிஞ்சி தோழி கூற்று
மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
ஒன்று மொழி கோசர் போல
வன்க சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே
பரணர்
குறிஞ்சி தோழி கூற்று
விட்ட குதிரை விசைப்பி னன்ன
விசும்புதோய் பசுங்கழை குன்ற நாடன்
யாம்தற் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆனேறுபோல
சாயினன் என்பநம் மாணலம் நயந்தே
விட்டகுதிரையார்
மருதம் தலைவி கூற்று
நீகண் டனையோ கண்டார கேட்டனையோ
ஒன்று தௌிய நசையினம் மொழிமோ
வெண்கோ டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வா கேட்டனை காதலர் வரவே
படுமரத்து மோசிகீரனார்
குறிஞ்சி தலைவி கூற்று
காந்தள் வேலி ஓங்குமலை நல்நாட்டு
செல்ப என்பவோ கல்வரை மார்பர்
சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள்ளிலை
பெருங்களிற்று செவியின் மான தைஇ
தண்வரல் வாடை தூக்கும்
கடும்பனி அச்சிரம் நடுங்கஞர் உறவே
கிள்ளி மங்கலங்கிழார்
பாலை தலைவி கூற்று
அம்ம வாழி தோழி யாவதும்
தவறெனின் தவறோ இலவே வெஞ்சுரத்து
உலந்த வம்பலர் உவலிடு பதுக்கை
நெடுநல் யானை கிடுநிழ லாகும்
அரிய கானஞ் சென்றோர்க்கு
எளிய வாகிய தடமென் தோளே
மதுரை மருதன் இளநாகனார்
குறிஞ்சி பாங்கன் கூற்று
பெருவரை மிசையது நெடுவெள் ளருவி
முதுவா கோடியர் முழவின் ததும்பி
சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப
நோத கன்றே காமம் யாவதும்
நன்றென உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே
நக்கீரனார்
பாலை தலைவி கூற்று
கான யானை தோன துண்ட
பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை
அலங்கல் உலவை யேறி ஒய்யென
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அங்குடி சீறூர
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்கு
சொல்லா தகறல் வல்லு வோரே
குடவாயிற் கீரத்தனார்
மருதம் பரத்தை கூற்று
கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாமஃ தயர்கம் சேறும் தானஃது
அஞ்சுவ துடையள் ஆயின் வெம்போர்
நுகம்பட கடக்கும் பல்வேல் எழினி
முனையான் பெருநிரை போல
கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே
ஔவையார்
குறிஞ்சி தோழி கூற்று
இவளே நின்சொற் கொண்ட என்சொல் தேறி
பசுநனை ஞாழற் பல்சினை ஒருசிறை
புதுநலன் இழந்த புலம்புமார் உடையள்
உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும்
நிலவும் இருளும் போல புலவுத்திரை
கடலும் கானலு தோன்றும்
மடல்தாழ் பெண்ணையெம் சிறுநல் லூரே
வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்
குறிஞ்சி தலைவி கூற்று
வாருறு வணர்கது புளரி புறஞ்சேர்பு
அழாஅல் என்றுநம் அழுதகண் துடைப்பார்
யாரா குவர்கொல் தோழி சாரற்
பெரும்புன குறவன் சிறுதினை மறுகாற்
கொழுங்கொடி அவரை பூக்கும்
அரும்பனி அச்சிரம் வாரா தோரே
கடுவன் மள்ளனார்
குறிஞ்சி தோழி கூற்று
அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆக
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை
தம்மில் தமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழ தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை வரும்என் றாளே
வெண்பூதனார்
பாலை செவிலி கூற்று
பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள்
இனியறி தேனது துனியா குதலே
கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான்தண் தணியளே
மோசிகீரனார்
மருதம் தோழி கூற்று
யாரினும் இனியன் பேரன் பினனே
உள்ளூர குரீஇ துள்ளுநடை சேவல்
சூன்முதிர் பேடை கீனி லிழைஇயர்
தேம்பொதி கொண்ட தீங்கழை கரும்பின்
நாறா வெண்பூ கொழுதும்
யாண ரூரன் பாணன் வாயே
வடம வண்ணக்கன் தாமோதரனார்
குறிஞ்சி தலைவி கூற்று
சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலை கலங்கி
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து
ஊதை தூற்றம் கூதிர் யாமத்து
ஆனுளம் புலம்புதொ றுளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே
வெண்கொற்றனார்
குறிஞ்சி தலைவி கூற்று
மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லரெங் குன்றுகெழு நாடர்
பசைஇ பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே
கபிலர்
குறிஞ்சி தோழி கூற்று
ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்
சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கி
தொல்முரண் சோரு துன்னருஞ் சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம்
வடுநா ணலமே தோழி நாமே
மதுரை கதக்கண்ணனார்
மருதம் தோழி கூற்று
பாவடி உரல பகுவாய் வள்ளை
ஏதின் மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவ தெவன்கொலி பேதை யூர்க்கே
பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லி
கருங்கண் தெய்வம் குடவரை யெழுதிய
நல்லியற் பாவை அன்னஇம்
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே
பரணர்
குறிஞ்சி தோழி கூற்று
எற்றோ வாழி தோழி முற்றுபு
கறிவளர் அடுக்க திரவின் முழங்கிய
மங்குல் மாமழை வீழ்ந்தென பொங்குமயிர
கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி
வரையிழி அருவி உண்துறை தரூஉம்
குன்ற நாடன் கேண்மை
மென்தோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே
மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார்
மருதம் தலைவி கூற்று
அரிற்பவர பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீ ரிலஞ்சி கெண்டை கதூஉம்
தண்டுறை ஊரன் பெண்டினை யாயிற்
பலவா குகநின் நெஞ்சிற் படரே
ஓவா தீயு மாரி வண்கை
கடும்பக டியானை நெடுந்தே ரஞ்சி
கொன்முனை இரவூர் போல
சிலவா குகநீ துஞ்சு நாளே
ஔவையார்
நெய்தல் தலைவி கூற்று
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறை பறவை
இறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வா செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே
தாமோதரனார்
மருதம் தலைவி கூற்று
நன்னல தொலைய நலமிக சாஅய்
இன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே
அள்ளூர் நன்முல்லையார்
முல்லை தலைவி கூற்று
பெருந்தண் மாரி பேதை பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச்சிவ தனவே
மானே மருள்வேன் தோழி பானாள்
இன்னு தமியர் கேட்பிற் பெயர்த்தும்
என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே
அருவி மாமலை தத்த
கருவி மாமழை சிலை தருங் குரலே
கதக்கண்ணனார்
குறிஞ்சி தலைவன் கூற்று
மால்வரை இழிதரு தூவெள் அருவி
கல்முகை ததும்பும் பன்மலர சாரல்
சிறுகுடி குறவன் பெருந்தோ குறுமகள்
நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் உரனவி தன்றே
கபிலர்
குறிஞ்சி தலைவி கூற்று
அருவி வேங்கை பெருமலை நாடற்கு
யானெவன் செய்கோ என்றி யானது
நகையென உணரேன் ஆயின்
என்னா குவைகொல் நன்னுதல் நீயே
அள்ளூர் நன்முல்லையார்
நெய்தல் தலைவி கூற்று
யானே ஈண்டை யேனே யென்னலனே
ஆனா நோயொடு கான லஃதே
துறைவன் தம்மூ ரானே
மறையல ராகி மன்ற தஃதே
வெண்பூதியார்
முல்லை தலைவி கூற்று
இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர
துன்ன சென்று செப்புநர பெறினே
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
நீர்வார் பைம்புதற் கலித்த
மாரி பீர தலர்சில கொண்டே
கோக்குள முற்றனார்
முல்லை தலைவன் கூற்று
உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து
மருண்டனென் அல்லனோ உலகத்து பண்பே
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்துண சென்றற் றாஅங்கு
அனைப்பெருங் காமம் மீண்டுகடை கொளவே
ஔவையார்
குறிஞ்சி தலைவன் கூற்று
அருவி பரப்பின் ஐவனம் வித்தி
பருவிலை குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலி சிறுகுடி பசிப்பிற்
கடுங்கண் வேழத்து கோடுநொடு துண்ணும்
வல்வில் ஓரி கொல்லி குடவரை
பாவையின் மடவ தனளே
மணத்தற் கரிய பணைப்பெரு தோளே
கபிலர்
குறிஞ்சி தலைவன் கூற்று
விரிதிரை பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே
பரூஉ மோவா பதுமனார்
நெய்தல் தலைவி கூற்று
உள்ளின் உள்ளம் வேமே உள்ளா
திருப்பினெம் அளவை தன்றே வருத்தி
வான்றோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே
ஔவையார்
நெய்தல் தலைவி கூற்று
கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்
கவரிதழ் அன்ன தூவி செவ்வாய்
இரைதேர் நாரை கெவ்வ மாக
தூஉ துவலை துயர்கூர் வாடையும்
வாரார் போல்வர்நங் காதலர்
வாழேன் போல்வல் தோழி யானே
வாயிலான் தேவனார்
பாலை தலைவி கூற்று
அம்ம வாழி தோழி காதலர்
நூலறு முத்தின் தண்சிதர் உறைப்ப
தாளி தண்பவர் நாளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்
பிரியும் நாளும் பலவா குபவே
காவன் முல்லைப்பூதனார்
குறிஞ்சி தலைவி கூற்று
புனவன் துடவை பொன்போற் சிறுதினை
கடியுண் கடவு கிட்ட செழுங்குரல்
அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர்மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே
நக்கீரர்
குறிஞ்சி தலைவி கூற்று
புல்வீழ் இற்றி கல்லிவர் வெள்வேர்
வரையிழி அருவியின் தோன்றும் நாடன்
தீதில் நெஞ்சத்து கிளவி நம்வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய்பெய் தீயின் எதிர்கொண்டு
தான்மண தனையமென விடுக தூதே
கபிலர்
மருதம் தலைவி கூற்று
குவியிணர தோன்றி ஒண்பூ வன்ன
தொகுசெ நெற்றி கணங்கொள் சேவல்
நள்ளிருள் யா தில்லெலி பார்க்கும்
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகி
கடுநவை படீஇயரோ நீயே நெடுநீர்
யாணர்ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன்துயில் எடுப்பி யோயே
மதுரை கண்ணனார்
முல்லை தலைவி கூற்று
மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடி
கறவை கன்றுவயிற் படர புறவிற்
பாசிலை முல்லை ஆசில் வான்பூ
செவ்வான் செவ்வி கொண்டன்று
உய்யேன் போல்வல் தோழி யானே
வாயிலான் தேவனார்
நெய்தல் தோழி கூற்று
முட்கால் இறவின் முடங்குபுற பெருங்கிளை
புணரி இகுதிரை தரூஉ துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ நன்னுதற் கவினே
நம்பி குட்டுவனார்
முல்லை தலைவி கூற்று
வாரா ராயினும் வரினும் அவர்நமக்கு
யாரா கியரோ தோழி நீர
நீல பைம்போ துளரி புதல
பீலி ஒண்பொறி கருவிளை யாட்டி
நுண்முள் ஈங்கை செவ்வரும் பூழ்த்த
வண்ண துய்ம்மலர் உதிர தண்ணென்று
இன்னா தெறிதரும் வாடையொடு
என்னா யினள்கொல்
கிள்ளிமங்கலங்கிழார்
குறிஞ்சி தோழி கூற்று
மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும்
அதுவென உணரும் ஆயின் ஆயிடை
கூழை இரும்பிடி கைகர தன்ன
கேழிரு துறுகற் கெழுமலை நாடன்
வல்லே வருக தோழிநம்
இல்லோர் பெருநகை காணிய சிறிதே
தீன்மதி நாகனார்
குறிஞ்சி தலைவி கூற்று
கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே
ஆலத்தூர் கிழார்
மருதம் தோழி கூற்று
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்கு
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்
கூழை கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே
மாதீர்த்தனார்
நெய்தல் தோழி கூற்று
நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
நின்குறி வந்தனென் இயல்தேர கொண்க
செல்கம் செலவியங் கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என்மகள் நுதலே
பொன்னாகனார்
குறிஞ்சி தோழி கூற்று
பெருநன் றாற்றிற் பேணாரும் உளரே
ஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு
புலவி தீர அளிமதி இலைகவர்
பாடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்
நன்மலை நாட நின்னல திலளே
கபிலர்
குறிஞ்சி தலைவன் கூற்று
யான துறைவோள் தேம்பாய் கூந்தல்
வளங்கெழு சோழர் உறந்தை பெருந்துறை
நுண்மணல் அறல்வார தன்ன
நன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே
இளங்கீரனார்
நெய்தல் தோழி கூற்று
மாரி ஆம்ப லன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு
கண்டல் வேரளை செலீஇயர் அண்டர்
கயிறரி யெருத்திற் கதழு துறைவன்
வாரா தமையினும் அமைக
சிறியவும் உளவீண்டு விலைஞர்கை வளையே
குன்றியனார்
நெய்தல் தலைவி கூற்று
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நாரில் மாலை
பலர்புகு வாயில் அடைப்ப கடவுநர்
வருவீர் உளீரோ எனவும்
வாரார் தோழிநங் காத லோரே
நன்னாகையார்
குறிஞ்சி தலைவன் கூற்று
சிறுவெள் ளரவின் அவ்வரி குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள் முளைவாள் எயிற்றள்
வளையுடை கையள்எம் அணங்கி யோளே
சத்திநாதனார்
குறிஞ்சி தலைவன் கூற்று
இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு
அரிதுவே டனையால் நெஞ்சே காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியா தோயே
பரணர்
குறிஞ்சி தலைவி கூற்று
மெய்யே வாழி தோழி சாரல்
மைப டன்ன மாமுக முசுக்கலை
ஆற்ற பாயா தப்பல் ஏற்ற
கோட்டொடு போகி யாங்கு நாடன்
தான்குறி வாயா தப்பற்கு
தாம்பச தனஎன் தடமென் தோளே
கபிலர்
நெய்தல் தலைவி கூற்று
பைங்காற் கொக்கின் புன்புற தன்ன
குண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே
ஓரம் போகியார்
நெய்தல் தோழி கூற்று
இருள்திணி தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்
நிலவுக்குவி தன்ன வெண்மணல் ஒருசிறை
கருங்கோட்டு புன்னை பூம்பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன்மீன் வேட்ட தென்னையர் திமிலே
ஐயூர் முடவனார்
பாலை தோழி கூற்று
உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை
ஊர்பாழ தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே
பாலைபாடிய பெருங்கடுங்கோ
நெய்தல் தலைவி கூற்று
இலங்குவளை நெகிழ சாஅ யானே
உளெனே வாழி தோழி சாரல்
தழையணி அல்குல் மகளி ருள்ளும்
விழவுமேம் பட்டவென் நலனே பழவிறற்
பறைவல தப்பிய பைதல் நாரை
திரைதோய் வாங்குசினை யிருக்கும்
தண்ண துறைவனொடு கண்மா றின்றே
அம்மூவனார்
மருதம் தோழி கூற்று
குருகுகொள குளித்த கெண்டை அயலது
உருகெழு தாமரை வான்முகை வெரூஉம்
கழனியம் படப்பை காஞ்சி யூர
ஒருநின் பாணன் பொய்ய னாக
உள்ள பாணர் எல்லாம்
கள்வர் போல்வர்நீ அகன்றிசி னோர்க்கே
ஓரம் போகியார்
நெய்தல் தலைவன் கூற்று
குணகடல் திரையது பறைதபு நாரை
திண்டேர பொறையன் தொண்டி முன்றுறை
அயிரை ஆரிரை கணவ தாங்கு
சேயல் அரியோ படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே
பரணர்
குறிஞ்சி தலைவன் கூற்று
எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளா யத்தை
மாக்கடல் நடுவண் எண்ணா பக்கத்து
பசுவெண் திங்கள் தோன்றி யாங்கு
கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே
கோப்பெருஞ்சோழன்
பாலை தோழி கூற்று
நிலந்தொட்டு புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின்
குடிமுறை
கெடுநரும் உளரோநம் காதலோரே
வெள்ளி வீதியார்
முல்லை தலைவி கூற்று
இளமை பாரார் வளநசைஇ சென்றோர்
இவணும் வாரார் எவண ரோவென
பெயல்புற தந்த பூங்கொடி முல்லை
தொகுமுகை இலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே
ஒக்கூர் மாசாத்தியார்
பாலை தலைவன் கூற்று
ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோள்
பேரமர கண்ணி யிருந்த ஊரே
நெடுஞ்சேண் ஆரிடை யதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்வி பைம்புனத்து
ஓரேர் உழவன் போல
பெருவிது புற்றன்றால் நோகோ யானே
ஒரேருழவனார்
குறிஞ்சி தலைவன் கூற்று
கவவு கடுங்குரையள் காமர் வனப்பினள்
குவவுமென் முலையள் கொடிக்கூ தலளே
யாங்குமற தமைகோ யானே ஞாங்கர
கடுஞ்சுரை நல்லா னடுங்குதலை குழவி
தாய்காண் விருப்பி னன்ன
சாஅய்நோ கினளே மாஅ யோளே
சிறைக்குடியாந்தையார்
குறிஞ்சி தலைவி கூற்று
புனவன் துடவை பொன்போற் சிறுதினை
கிளிகுறை துண்ட கூழை யிருவி
பெரும்பெய லுண்மையி னிலையொலி தாங்கென்
உரஞ் செத்தும் உளெனே தோழியென்
நலம்புதி துண்ட புலம்பி னானே
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
குறிஞ்சி தலைவி கூற்று
அம்ம வாழி தோழி நம்மொடு
பிரிவின் றாயின் நன்றுமற் றில்ல
குறும்பொறை தடைஇய நெடுந்தாள் வேங்கை
பூவுடை அலங்குசினை புலம்ப தாக்கி
கல்பொரு திரங்கும் கதழ்வீழ் அருவி
நிலங்கொள் பாம்பின் இழிதரும்
விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே
கோவேங்கை பெருங்கதவனார்
பாலை தோழி கூற்று
வினையே ஆடவர குயிரே வாணுதல்
மனையுறை மகளிர காடவர் உயிரென
நமக்குரை தோரு தாமே
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே
பாலைபாடிய பெருங் கடுங்கோ
குறிஞ்சி தலைவன் கூற்று
காமங் காமம் என்ப
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கி
கடுத்தலு தணிதலும் இன்றே யானை
குளகுமென் றாள்மதம் போல
பாணியும் உடைத்தது காணுநர பெறினே
மிளைப்பெருங் கந்தனார்
பாலை தலைவன் கூற்று
மெல்லியல் அரிவைநின் னல்லகம் புலம்ப
நிற்றுற தமைகுவெ னாயின் எற்றுற
திரவலர் வாரா வைகல்
பலவா குகயான் செலவுறு தகவே
பாலை பாடிய பெருங் கடுங்கோ
மருதம் தோழி கூற்று
கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
எம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே
கொல்லன் அழிசி
மருதம் தோழி கூற்று
மனையுறை கோழி குறுங்காற் பேடை
வேலி வெருகின மாலை யுற்றென
புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய
பைதற் பிள்ளை கிளைபயிர தாஅங்
கின்னா திசைக்கும் அம்பலொடு
வாரல் வாழிய ரையவெ தெருவே
ஒக்கூர் மாசாத்தியார்
பாலை தலைவி கூற்று
வேதின வெரிநின் ஓதிமுது போத்து
ஆறுசெல் மாக்கள் புட்கொள பொருந்தும்
சுரனே சென்றனர் காதலர் உரனழிந்து
ஈங்கியான் தாங்கிய எவ்வம்
யாங்கறி தன்றிவ் வழுங்க லூரே
அள்ளூர் நன்முல்லையார்
குறிஞ்சி தலைவி கூற்று
வளைவா சிறுகிளி விளைதினை கடீஇயர்
செல்கென் றோளே அன்னை எனநீ
சொல்லின் எவனோ தோழி கொல்லை
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலி கொலைவல் ஏற்றை
பைங்க செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆரிரு ணடுநாள் வருதி
சாரல் நாட வாரலோ எனவே
மதுரை பெருங்கொல்லனார்
குறிஞ்சி தலைவன் கூற்று
சுனைப்பூ குற்று தொடலை தைஇ
புனக்கிளி கடியும் பூங்க பேதை
தானறி தனளோ இலளோ பானா
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ளம் பின்னு தன்னுழை யதுவே
கபிலர்
குறிஞ்சி தோழி கூற்று
அழிய லாயிழை அன்பு பெரிதுடையன்
பழியும் அஞ்சும் பயமலை நாடன்
நில்லா மையே நிலையிற் றாகலின்
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்
கடப்பா டாள னுடைப்பொருள் போல
தங்குதற் குரிய தன்றுநின்
அங்கலுழ் மேனி பாய பசப்பே
மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
பாலை செவிலித்தாய் கூற்று
கழிய காவி குற்றும் கடல
வெண்டலை புணரி யாடியும் நன்றே
பிரிவி லாய முரியதொன் றயர
இவ்வழி படுதலும் ஒல்லாள் அவ்வழி
பரல்பாழ் படுப்ப சென்றனள் மாதோ
சென்மழை தவழும் சென்னி
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே
மதுரை ஆசிரியர் கோடன் கொற்றனார்
நெய்தல் தலைவி கூற்று
உறைபதி யன்றி துறைகெழு சிறுகுடி
கானலஞ் சேர்ப்பன் கொடுமை ஏற்றி
ஆனா துயரமொடு வருந்தி பானாள்
துஞ்சா துறைநரொ டுசாவா
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே
கொல்லனழிசியார்
குறிஞ்சி தோழி கூற்று
அம்ம வாழி தோழி நம்மூர
பிரிந்தோர புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடை கையர் வெண்டலை சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களோ
டின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே
வெள்ளி வீதியார்
பாலை தலைவன் கூற்று
வேனிற் பாதிரி கூன்மல ரன்ன
மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை
நுண்பூண் மடந்தையை தந்தோய் போல
இன்றுயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணைப்பிரி தோரே
கோப்பெருஞ் சோழன்
முல்லை தலைவி கூற்று
செல்வ சிறாஅர் சீறடி பொலிந்த
தவளை வாய பொலஞ்செய் கிண்கிணி
காசி னன்ன போதீன் கொன்றை
குருந்தோ டலம்வரும் பெருந்தண் காலையும்
காரன் றென்றி யாயிற்
கனவோ மற்றிது வினவுவல் யானே
இளங் கீரந்தையார்
பாலை தலைவி கூற்று
அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டுழந்தன்று மன்னே இனியே
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புனல் நெரிதர வீய்ந்து காஅங்கு
தாங்கு மளவை தாங்கி
காம நெரிதர கைந்நில் லாவே
வெள்ளி வீதியார்
குறிஞ்சி தலைவி கூற்று
சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம்
உள்ளின் உண்ணோய் மல்கும்
புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய்
மாடலூர் கிழார்
பாலை தலைவன் கூற்று
வங்கா கடந்த செங்காற் பேடை
எழாஅலுற வீழ்ந்தென கணவற் காணாது
குழலிசை குரல் குறும்பல அகவும்
குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது
மறப்பருங் காதலி யொழிய
இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே
தூங்கலோரியார்
குறிஞ்சி தலைவி கூற்று
யாவதும் அறிகிலர் கழறு வோரே
தாயின் முட்டை போலவு கிடந்து
சாயின் அல்லது பிறிதெவ னுடைத்தே
யாமை பார்ப்பி னன்ன
காமங் காதலர் கையற விடினே
கிளிமங்கலங்கிழார்
குறிஞ்சி தலைவி கூற்று
குன்ற கூகை குழறினும் முன்றிற்
பலவி னிருஞ்சினை கலைபா துகளினும்
அஞ்சுமன் அளித்தெ னெஞ்ச மினியே
ஆரிரு கங்குல் அவர்வயிற்
சாரல் நீளிடை செலவா னாதே
கபிலர்
பாலை தலைவி கூற்று
யாங்கறி தனர்கொல் தோழி பாம்பின்
உரிநிமிர தன்ன உருப்பவி ரமை
திரைவே டெழுந்த சேவல் உள்ளி
பொறிமயிர் எருத்திற் குறுநடை பேடை
பொறிகாற் கள்ளி விரிகா யங்கவட்டு
தயங்க விருந்து புலம்ப கூஉம்
அருஞ்சுர வைப்பிற் கானம்
பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே
மதுரை சீத்தலை சாத்தனார்
முல்லை தலைவி கூற்று
முதைப்புனங் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக்குறு வட்டி போதொடு பொதுள
பொழுதோ தான்வ தன்றே மெழுகான்
றூதுலை பெய்த பகுவா தெண்மணி
மரம்பயில் இறும்பி னார்ப்ப சுரனிழிபு
மாலை நனிவிரு தயர்மார்
தேர்வரும் என்னும் உரைவா ராதே
உரோடகத்து காரத்தனார்
குறிஞ்சி தலைவன் கூற்று
பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்து
படிவ உண்டி பார்ப்பன மகனே
எழுதா கற்பி னின்சொல் உள்ளும்
பிரிந்தோர புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ விதுவே
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
மருதம் தலைவி கூற்று
குக்கூ வென்றது கோழி அதன்எதிர்
துட்கென் றன்றென் தூய நெஞ்சம்
தோடோய் காதலர பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே
அள்ளூர் நன்முல்லையார்
குறிஞ்சி தலைவி கூற்று
நெடுவரை மருங்கிற் பாம்புபட இடிக்கும்
கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇ
காலொடு வந்த கமஞ்சூல் மாமழை
ஆரளி யிலையோ நீயே பேரிசை
இமயமும் துளக்கும் பண்பினை
துணையிலர் அளியர் பெண்டிர் இஃதெவனோ
ஔவையார்
குறிஞ்சி தோழி கூற்று
தழையணி அல்குல் தாங்கல் செல்லா
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக
அம்மெல் ஆக நிறைய வீங்கி
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின
யாங்கா குவள்கொல் பூங்குழை என்னும்
அவல நெஞ்சமொ டுசாவா
கவலை மாக்கட்டி பேதை யூரே
வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்
குறிஞ்சி தலைவி கூற்று
நெருப்பி னன்ன செந்தலை யன்றில்
இறவி னன்ன கொடுவா பேடையொடு
தடவின் ஓங்குசினை கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்து
பெருந்தண் வாடையும் வாரார்
இஃதோ தோழிநங் காதலர் வரவே
மதுரை மருதனிள நாகனார்
குறிஞ்சி தலைவி கூற்று
பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுதுகண் பனிப்ப வீசும் அதன்றலை
புலிப்பல் தாலி புதல்வர புல்லி
அன்னா வென்னும் அன்னையு மன்னோ
என்மலை தனன்கொல் தானே தன்மலை
ஆரம் நாறு மார்பினன்
மாரி யானையின் வந்துநின் றனனே
நக்கீரனார்
முல்லை தலைவன் கூற்று
கார்புற தந்த நீருடை வியன்புலத்து
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போல காட்டல்
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே
கருவூர பவுத்திரனார்
நெய்தல் தலைவி கூற்று
யாரணங் குற்றனை கடலே பூழியர்
சிறுதலை வெள்ளை தோடுபர தன்ன
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீ தாழை திரையலை
நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே
அம்மூவனார்
மருதம் காதற்பரத்தை கூற்று
கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகு
துணர்த்தே கொக்கின் தீம்பழம் கதூஉம்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர குணாது
தண்பெரும் பவ்வம் அணங்குக தோழி
மனையோள் மடமையிற் புலக்கும்
அனையே மகிழ்நற்கியா மாயினம் எனினே
மாங்குடி மருதனார்
குறிஞ்சி தலைவன் கூற்று
மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு
விழைந்ததன் றலையும் நீவெய் துற்றனை
அருங்கரை நின்ற உப்பொய் சகடம்
பெரும்பெய றலையவீ தாங்கியவள்
இரும்பல் கூந்தல் இயலணி கண்டே
பரணர்
நெய்தல் தோழி கூற்று
தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை
நாரை நிரைபெயர தயிரை யாரும்
ஊரோ நன்றுமன் மரந்தை
ஒருதனி வைகிற் புலம்பா கின்றே
கூடலூர் கிழார்
முல்லை செவிலித்தாய் கூற்று
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇ
குவளை யுண்கண் குய்ப்புகை கழு
தான்றுழ தட்ட தீம்புளி பாகர்
இனிதென கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே
கூடலூர் கிழார்
பாலை தலைவன் கூற்று
மாரி பித்திகத்து நீர்வார் கொழுமுகை
இரும்பனம் பசுங்குடை பலவுடன் பொதிந்து
பெரும்பெயல் விடியல் விரித்துவி டன்ன
நறுந்தண் ணியளே நன்மா மேனி
புனற்புணை யன்ன சாயிறை பணைத்தோள்
மணத்தலு தணத்தலு மிலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே
சிறைக்குடி யாந்தையார்
மருதம் தலைவி கூற்று
சுரஞ்செல் யானை கல்லுறு கோட்டிற்
றெற்றென இறீஇயரோ ஐய மற்றியாம்
நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே
பாணர் பசுமீன் சொரிந்த மண்டைபோல
எமக்கும் பெரும்புல வாகி
நும்மும் பெறேஎம் இறீஇயரெம் முயிரே
வெள்ளிவீதியார்
குறிஞ்சி தலைவி கூற்று
பலவும் கூறுகவஃ தறியா தோரே
அருவி தந்த நாட்குர லெருவை
கயனா டியானை கவள மாந்தும்
மலைகெழு நாடன் கேண்மை
தலைபோ காமைநற் கறிந்தனென் யானே
கருவூர்கிழார்
மருதம் தலைவி கூற்று
காணினி வாழி தோழி யாணர
கடும்புன லடைகரை நெடுங்க திட்ட
மீன்வலை மாப்ப டாஅங்
கிதுமற் றெவனோ நொதுமலர் தலையே
பூங்கணுத்திரையார்
நெய்தல் தலைவி கூற்று
தாஅ வலஞ்சிறை நொப்பறை வாவல்
பழுமரம் படரும் பையுன் மாலை
எமிய மாக ஈங்கு துறந்தோர்
தமிய ராக இனியர் கொல்லோ
ஏழூர பொதுவினை கோரூர் யாத்த
உலைவாங்கு மிதிதோல் போல
தலைவரம் பறியாது வருந்துமென் னெஞ்சே
கச்சிப்பேட்டு நன்னாகையார்
குறிஞ்சி தலைவன் கூற்று
பொன்னேர் ஆவிரை புதுமலர் மிடைந்த
பன்னூல் மாலை பனைபடு கலிமா
பூண்மணி கறங்க வேறி நாண
டழிபடர் உண்ணோய் வழிவழி சிறப்ப
இன்னள் செய்த திதுவென முன்னின்
றவள் பழி நுவலு மிவ்வூர்
ஆங்குணர தமையினீங் கேகுமா றுளெனே
மதுரை காஞ்சிப்புலவன்
பாலை தலைவி கூற்று
பெயன்மழை துறந்த புலம்புறு கடத்து
கவைமு கள்ளி காய்விடு கடுநொடி
துதைமென் தூவி துணைப்புற விரிக்கும்
அத்தம் அரிய என்னார் நத்துறந்து
பொருள்வயிற் பிரிவா ராயினிவ் வுலகத்து
பொருளே மன்ற
அருளே மன்ற ஆருமில் லதுவே
வெண்பூதியார்
நெய்தல் தலைவி கூற்று
பருவ தேனசைஇ பல்பறை தொழுதி
உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை
நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மாநீர சேர்ப்பற்
கிரங்கேன் தோழியீங் கென்கொ லென்று
பிறர்பிறர் அறி கூறல்
அமைந்தாங் கமைக அம்பலஃ தெவனே
உலோச்சனார்
குறிஞ்சி தோழி கூற்று
ஒருநாள் வாரலன் இருநாள்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்
நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை
வரைமுதிர் தேனிற் போகி யோனே
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
வேறுபுல னன்னாட்டு பெய்த
ஏறுடை மழையிற் கலிழும்என் னெஞ்சே
வருமுலையாரித்தியார்
நெய்தல் தோழி கூற்று
கடல்பா டவிந்து கானல் மயங்கி
துறைநீர் இருங்கழி புல்லென் றன்றே
மன்றவம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும் இன்றவர்
வருவர்கொல் வாழி தோழி நாந்த
புலப்பினும் பிரிவாங் கஞ்சி
தணப்பருங் காமம் தண்டி யோரே
உலோச்சனார்
மருதம் தோழி கூற்று
அயிரை பரந்த அந்தண் பழன
தேந்தெழின் மலர தூம்புடை திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வே டாங்கிவள்
இடைமுலை கிடந்து நடுங்க லானீர்
தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநு
கரிய மாகிய காலை
பெரிய தோன்றினிர் நோகோ யானே
நெடும்பல்லியத்தையார்
குறிஞ்சி தோழி கூற்று
கல்லென் கானத்து கடமா வாட்டி
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன
செல்லல் ஐஇய உதுவெம் மூரே
ஓங்குவரை யடுக்கத்து தீந்தேன் கிழித்த
குவையுடை பசுங்கழை தின்ற கயவா
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே
குட்டுவன் கண்ணனார்
பாலை தோழி கூற்று
பழூஉப்பல் அன்ன பருவுகிர பாவடி
இருங்களிற் றினநிரை யேந்தல் வரின்மா
தறைமடி கரும்பின் கண்ணிடை யன்ன
பைத லொருகழை நீடிய சுரனிறந்து
எய்தினர் கொல்லோ பொருளே யல்குல்
அவ்வரி வாட துறந்தோர்
வன்ப ராகத்தாஞ் சென்ற நாட்டே
கச்சிப்பேட்டு நன்னாகையார்
மருதம் தலைவி கூற்று
இதுமற் றெவனோ தோழி துனியிடை
இன்னர் என்னும் இன்னா கிளவி
இருமரு பெருமை ஈன்றணி காரான்
உழவன் யாத்த குழவியி னகலாது
பாஅற் பைம்பயிர் ஆரு மூரன்
திருமனை பலகடம் பூண்ட
பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே
கிளிமங்கலங் கிழார்
குறிஞ்சி தலைவன் கூற்று
விழுத்தலை பெண்ணை விளையன் மாமடல்
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
வெள்ளென் பணிந்துபிறர் எள்ள தோன்றி
ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கி
தெருவின் இயலவும் தருவது கொல்லோ
கலிந்தவிர் அசைநடை பேதை
மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே
மடல் பாடிய மாதங்கீரனார்
முல்லை தலைவி கூற்று
சென்ற நாட்ட கொன்றையம் பசுவீ
நம்போற் பசக்குங் காலை தம்போற்
சிறுதலை பிணையிற் றீர்த்த நெறிகோ
டிரலை மானையுங் காண்பர்கொல் நமரே
புல்லென் காயா பூக்கெழு பெருஞ்சினை
மென்மயில் எருத்தில் தோன்றும்
கான வைப்பிற் புன்புல தானே
ஔவையார்
நெய்தல் தலைவன் கூற்று
அறிகரி பொய்த்தல் ஆன்றோர கில்லை
குறுக லோம்புமின் சிறுகுடி செலவே
இதற்கிது மாண்ட தென்னா ததற்ப
டாண்டொழி தன்றே மாண்டகை நெஞ்சம்
மயிற்கண் அன்ன மாண்முடி பாவை
நுண்வலை பரதவர் மடமகள்
கண்வலை படுஉம் கான லானே
ஆரிய வரசன் யாழ்ப்பிரமதத்தன்
குறிஞ்சி தலைவி கூற்று
நுதல்பச பிவர்ந்து திதலை வாடி
நெடுமென் பணைத்தோள் சாஅ தொடி நெகிழ
தின்ன ளாகுத னும்மி னாகுமென
சொல்லி னெவனா தோழி பல்வரி
பாம்புபை அவிழ்ந்தது போல கூம்பி
கொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள்
கன்மிசை கவியு நாடற்கென்
நன்மா மேனி யழிபடர் நிலையே
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
முல்லை தலைவி கூற்று
ஆர்கலி யேற்றொடு கார்தலை மணந்த
கொல்லை புனத்த முல்லை மென்கொடி
எயிறென முகையும் நாடற்கு
துயிறுற தனவால் தோழியென் கண்ணே
ஒக்கூர் மாசாத்தியார்
குறிஞ்சி தலைவி கூற்று
செவ்வரை சேக்கை வருடை மான்மறி
சுரைபொழி தீம்பால் ஆர மாந்தி
பெருவரை நீழ லுகளு நாடன்
கல்லினும் வலியன் தோழி
வலிய னென்னாது மெலியுமென் னெஞ்சே
கபிலர்
முல்லை தலைவி கூற்று
முகைமுற் றினவே முல்லை முல்லையொடு
தகைமுற் றினவே தண்கார் வியன்புனம்
வாலிழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்றென் மாணலங் குறித்தே
மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார்
பாலை தலைவன் கூற்று
இன்றே சென்று வருவது நாளை
குன்றிழி அருவியின் வெண்டேர் முடுக
இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்ப
காலியற் செலவின் மாலை எய்தி
சின்னிரை வால்வளை குறுமகள்
பன்மா ணாக மணந்துவ கும்மே
மதுரை ஈழத்து பூதன்தேவனார்
முல்லை தலைவி கூற்று
நெறியிருங் கதுப்பொடு பெருந்தோ ணீவி
செறிவளை நெகிழ செய்பொரு ககன்றோர்
அறிவர்கொல் வாழி தோழி பொறிவரி
வெஞ்சின அரவின் பைந்தலை துமிய
உரவுரும் உரறும் அரையிருள் நடுநாள்
நல்லே றியங்குதோ றியம்பும்
பல்லான் தொழுவ தொருமணி குரலே
பூதம் புலவனார்
முல்லை தலைவி கூற்று
உதுக்கா ணதுவே யிதுவென் மொழிகோ
நோன்சினை யிருந்த இருந்தோட்டு புள்ளினம்
தாம்புணர தமையிற் பிரிந்தோ ருள்ள
தீங்குரல் அகவ கேட்டு நீங்கிய
ஏதி லாள ரிவண்வரிற் போதிற்
பொம்ம லோதியும் புனையல்
எம்மு தொடாஅ லென்குவே மன்னே

பாலை தலைவி கூற்று
ஈங்கே வருவர் இனையல் அவர்என
அழாஅற்கோ இனியே நோய்நொ துறைவி
மின்னின் றூவி இருங்குயில் பொன்னின்
உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை
நறுந்தாது கொழுதும் பொழுதும்
வறுங்குரற் கூந்தல் தைவரு வேனே
கச்சிப்பேட்டு நன்னாகையார்
முல்லை தலைவி கூற்று
மட்டம் பெய்த மணிக்கல தன்ன
இட்டுவா சுனைய பகுவா தேரை
தட்டை பறையிற் கறங்கு நாடன்
தொல்லை திங்கள் நெடுவெண் ணிலவின்
மணந்தனன் மன்னெடு தோளே
இன்று முல்லை முகைநாறும்மே
அரிசில் கிழார்
முல்லை தலைவி கூற்று
என்னென படுங்கொல் தோழி மின்னுவர
வானோர் பிரங்கும் ஒன்றோ அதனெதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்
ஏதில கலந்த இரண்டற்கென்
பேதை நெஞ்சம் பெருமல குறுமே
கோவர்த்தனார்
நெய்தல் தலைவி கூற்று
சுடர்சின தணிந்து குன்றஞ் சேர
படர்சு தெழுதரு பையுள் மாலை
யாண்டுளர் கொல்லோ வேண்டுவினை முடிநர்
இன்னா திரங்கும் என்னார் அன்னோ
தைவரல் அசைவளி மெய்பா தூர்தர
செய்வுறு பாவை யன்னவென்
மெய்பிறி தாகுதல் அறியா தோரே
தேரதரனார்
மருதம் தோழி கூற்று
வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனை தெண்ணீர்
தைஇ திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே
மிளை கந்தனார்
நெய்தல் தலைவி கூற்று
யாதுசெய் வாங்கொல் தோழி நோதக
நீரெதிர் கருவிய காரெதிர் கிளைமழை
ஊதையங் குளிரொடு பேதுற்று மயங்கிய
கூதிர் உருவிற் கூற்றம்
காதலர பிரிந்த எற்குறித்து வருமே
கச்சிப்பேட்டு நன்னாகையார்
குறிஞ்சி தோழி கூற்று
யாஅங் கொன்ற மரஞ்சு டியவிற்
கரும்புமருண் முதல பைந்தா செந்தினை
மடப்பிடி தடக்கை யன்னபால் வார்பு
கரிக்குற டிறைஞ்சிய செறிகோ பைங்குரற்
படுகிளி கடிகஞ் சேறும் அடுபோர்
எஃகுவிளங்கு தடக்கை மலையன் கான
தார நாறு மார்பினை
வாரற்க தில்ல வருகுவள் யாயே
கபிலர்
குறிஞ்சி தலைவன் கூற்று
பெறுவ தியையா தாயினும் உறுவதொன்
றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர
கைவள் ளோரி கான தீண்டி
எறிவளி கமழு நெறிபடு கூந்தல்
மையீ ரோதி மாஅ யோள்வயின்
இன்றை யன்ன நட்பி னிந்நோய்
இறுமுறை எனவொன் றின்றி
மறுமை யுலகத்து மன்னுதல் பெறுமே
பரணர்
முல்லை தலைவி கூற்று
பெய்த குன்றத்து பூநாறு தண்கலுழ்
மீமிசை தாஅய வீஇ சுமந்துவ
திழிதரும் புனலும் வாரார் தோழி
மறந்தோர் மன்ற மறவா நாமே
கால மாரி மாலை மாமழை
இன்னிசை யுருமின முரலும்
முன்வரல் ஏமம் செய்தகன் றோரே
ஔவையார்
குறிஞ்சி தலைவி கூற்று
அமிழ்த முண்கநம் அயலி லாட்டி
பால்கல பன்ன தேக்கொ கருந்துபு
நீல மென்சிறை வள்ளுகிர பறவை
நெல்லி யம்புளி மாந்தி யயலது
முள்ளி லம்பணை மூங்கிற் றூங்கும்
கழைநிவ தோங்கிய சோலை
மலைகெழு நாடனை வருமென் றாளே

மருதம் தலைவி கூற்று
நோமென் னெஞ்சே
புன்புல தமன்ற சிறியிலை நெருஞ்சி
கட்கின் புதுமலர் முட்ப தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே
அள்ளூர் நன்முல்லையார்
மருதம் தலைவி கூற்று
மலையிடை யிட்ட நாட்டரு மல்லர்
மரந்தலை தோன்றா ஊரரு மல்லர்
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇ ஒழுகும் என்னைக்கு
பரியலென் மன்யான் பண்டொரு காலே
நெடும் பல்லியத்தனார்
குறிஞ்சி பாங்கன் கூற்று
காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவ தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே
மிளைப்பெருங் கந்தனார்
நெய்தல் தலைவி கூற்று
மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க
விசும்பா டன்னம் பறைநிவ தாங்கு
பொலம்படை பொலிந்த வெண்டேர் ஏறி
கலங்குகடல் துவலை ஆழி நனைப்ப
இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன்
யாங்கறி தன்றுகொல் தோழியென்
தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே
உலோச்சனார்
குறிஞ்சி தலைவன் கூற்று
அமிழ தன்ன அந்தீங் கிளவி
அன்ன இனியோள் குணனும் இன்ன
இன்னா அரும்படர் செய்யு மாயின்
உடனுறை வரிதே காமம்
குறுக லோம்புமின் அறிவுடை யீரே
ஐயூர் முடவனார்
பாலை தலைவி கூற்று
செப்பினஞ் செலினே செலவரி தாகுமென்
றத்த வோமை அங்கவ டிருந்த
இனந்தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விளி
சுரஞ்செல் மாக்க குயவுத்துணை யாகும்
கல்வரை யயலது தொல்வழங்கு சிறுநெறி
நல்லடி பொறிப்ப தாஅ
சென்றென கேட்டனம் ஆர்வலர் பலரே
உறையனார்
குறிஞ்சி தலைவி கூற்று
ஒன்றே னல்லேன் ஒன்றுவென் குன்றத்து
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
நின்றுகொய மலரும் நாடனொ
டொன்றேன் றோழி ஒன்றினானே
கபிலர்
பாலை தலைவன் கூற்று
அறந்தலை பட்ட நெல்லியம் பசுங்காய்
மறப்புலி குருளை கோளிடங் கறங்கும்
இறப்பருங் குன்ற மிறந்த யாமே
குறுநடை பலவுள் ளலமே நெறிமுதற்
கடற்றிற் கலித்த முடச்சினை வெட்சி
தளையவிழ் பல்போது கமழும்
மையிருங் கூந்தன் மடந்தை நட்பே
பாலைபாடிய பெருங்கடுங்கோ
முல்லை தோழி கூற்று
திண்டேர் நள்ளி கான தண்டர்
பல்லா பயந்த நெய்யிற் றொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
றெழுகல தேந்தினுஞ் சிறிதென் றோழி
பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
விருந்துவர கரைந்த காக்கையது பலியே
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
பாலை தோழி கூற்று
அஞ்சி லோதி யாய்வளை நெகிழ
நேர்ந்துநம் அருளார் நீத்தோர கஞ்சல்
எஞ்சினம் வாழி தோழி யெஞ்சா
தீய்ந்த மராஅ தோங்கல் வெஞ்சினை
வேனி லோரிணர் தேனோ டூதி
ஆராது பெயரு தும்பி
நீரில் வைப்பிற் சுரனிற தோரே
காவன்முல்லை பூதனார்
நெய்தல் தோழி கூற்று
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
தெண்கட லடைகரை தௌிமணி யொலிப்ப
காண வந்து நாண பெயரும்
அளிதோ தானே காமம்
விளிவது மன்ற நோகோ யானே
நெய்தற் கார்க்கியன்
பாலை தோழி கூற்று
நசைநன் குடையர் தோழி ஞெரேரென
கவைத்தலை முதுகலை காலின் ஒற்றி
பசிப்பிணி கிறைஞ்சிய பரூஉம்பெரு ததரல்
ஒழியின் உண்டு வழுவி னெஞ்சிற்
றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி
நின்றுவெயில் கழிக்கு மென்பநம்
இன்றுயில் முனிநர் சென்ற வாறே
கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றனார்
குறிஞ்சி தோழி கூற்று
மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய
பிறங்குகுரல் இறடி காக்கும் புறந்தாழ்
அஞ்சி லோதி அசையியற் கொடிச்சி
திருந்திழை அல்குற்கு பெருந்தழை உதவி
செயலை முழுமுதல் ஒழிய அயல
தரலை மாலை சூட்டி
ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே
கூடலூர்கிழார்
பாலை தோழி கூற்று
படரும் பை பெயருஞ் சுடரும்
என்றூழ் மாமலை மறையும் இன்றவர்
வருவர்கொல் வாழி தோழி நீரில்
வறுங்க துழைஇய விலங்குமரு பியானை
குறும்பொறை மருங்கின் அமர்துணை தழீஇ
கொடுவரி இரும்புலி காக்கும்
நெடுவரை மருங்கிற் சுரனிற தோரே
மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்
பாலை தலைவி கூற்று
அவரே கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியங் காடிற தோரே
யானே தோடார் எல்வளை ஞெகிழ ஏங்கி
பாடமை சேக்கையிற் படர்கூர திசினே
அன்னள் அளியள் என்னாது மாமழை
இன்னும் பெய்ய முழங்கி
மின்னு தோழியென் இன்னுயிர் குறித்தே
கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றனார்
குறிஞ்சி தோழி கூற்று
தினைகிளி கடிகெனிற் பகலும் ஒல்லும்
இரவுநீ வருதலி னூறு மஞ்சுவல்
யாங்கு செய்வாமெம் இடும்பை நோய்க்கென
ஆங்கியான் கூறிய அனைத்திற்கு பிறிதுசெ
தோங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற
ஐதே காமம் யானே
கழிமுது குறைமையும் பழியுமென் றிசினே
தங்கால் முடக்கொல்லனார்
பாலை தலைவி கூற்று
விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்கு
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்
புள்ளும் ஓராம் விரிச்சியு நில்லாம்
உள்ளலு முள்ளா மன்றே தோழி
உயிர்க்குயிர் அன்ன ராகலிற் றம்மின்
றிமைப்புவரை யமையா நம்வயின்
மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே
கொற்றனார்
நெய்தல் தலைவி கூற்று
பயப்பென் மேனி யதுவே நயப்பவர்
நாரில் நெஞ்ச தாரிடை யதுவே
செறிவுஞ் சேணிக தன்றே யறிவே
ஆங்க செல்கம் எழுகென வீங்கே
வல்லா கூறியிருக்கு முள்ளிலை
தடவுநிலை தாழை சேர்ப்பர
கிடமற் றோழியெ நீரிரோ வெனினே
வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்
முல்லை தலைவி கூற்று
பழமழை கலித்த புதுப்புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலை பாவை
இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை
வெருகுசிரி தன்ன பசுவீ மென்பிணி
குறுமுகை அவிழ்ந்த நறுமலர புறவின்
வண்டுசூழ் மாலையும் வாரார்
கண்டிசிற் றோழி பொருட்பிரி தோரே
ஒக்கூர் மாசாத்தியார்
முல்லை தலைவி கூற்று
அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடை கையர் மறியின தொழி
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை இடைமகன் சென்னி
சூடிய வெல்லாம் சிறுபசு முகையே
உறையூர் முதுகொற்றனார்
குறிஞ்சி தலைவன் கூற்று
தலைப்புணை கொளினே
கடைப்புணை கொளினே
புணைகை விட்டு புனலோ டொழுகின்
ஆண்டும் வருகுவள் போலு மாண்ட
மாரி பித்திகத்து நீர்வார் கொழுமுகை
செவ்வெரி நுறழும் கொழுங்கடை மழைக்க
டுளிதலை தலைஇய தளிரன் னோளே
சிறைக்குடி யாந்தையார்
குறிஞ்சி தலைவி கூற்று
பேரூர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் என்றி
நல்லோர் நல்ல பலவாற் றில்ல
தழலும் தட்டையும் முறியு தந்திவை
ஒத்தன நினக்கென பொய்த்தன கூறி
அன்னை யோம்பிய ஆய்நலம்
என்னை கொண்டான்யாம் இன்னமா லினியே
மதுரை கடையத்தார் மகனார் வெண்ணாகனார்
பாலை தலைவி கூற்று
கவலை யாத்த அவல நீளிடை
சென்றோர் கொடுமை யெற்றி துஞ்சா
நோயினு நோயா கின்றே கூவற்
குராலான் படுதுயர் இராவிற் கண்ட
உயர்திணை ஊமன் போல
துயர்பொறு கல்லேன் தோழி நோய்க்கே
கூவன் மைந்தனார்
குறிஞ்சி தோழி கூற்று
கன்றுதன் பயமுலை மாந்த முன்றில்
தினைபிடி உண்ணும் பெருங்கல் நாட
கெட்டிட துவந்த உதவி கட்டில்
வீறுபெற்று மறந்த மன்னன் போல
நன்றிமற தமையா யாயின் மென்சீர
கலிமயிற் கலாவ தன்ன இவள்
ஒலிமென் கூந்தல் உரியவா நினக்கே
கபிலர்
நெய்தல் தலைவி கூற்று
பூவொடு புரையுங் கண்ணும் வேயென
விறல்வன பெய்திய தோளும் பிறையென
மதி குறூஉ நுதலு நன்றும்
நல்லமன் வாழி தோழி அல்கலும்
தயங்குதிரை பொருத தாழை வெண்பூ
குருகென மலரும் பெருந்துறை
விரிநீர சேர்ப்பனொடு நகாஅ வூங்கே
மதுரை எழுத்தாளனார் சேந்தம்பூதனார்
நெய்தல் தோழி கூற்று
பூண்வனை தன்ன பொலஞ்சூட்டு நேமி
வாண்முக துமிப்ப வள்ளிதழ் குறைந்த
கூழை நெய்தலு முடைத்திவண்
தேரோன் போகிய கான லானே
ஓதஞானியார்
நெய்தல் தலைவி கூற்று
வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை
குருகுளர் இறகின் விரிபுதோ டவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
திரைவந்து பெயரும் என்பந துறந்து
நெடுஞ்சே ணாட்டார் ஆயினும்
நெஞ்சிற் கணியர் தண்கட னாட்டே
செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்
பாலை கண்டோர் கூற்று
இவனிவ ளைம்பால் பற்றவும் இவளிவன்
புன்றலை யோரி வாங்குநள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவு தவிரா
தேதில் சிறுசெரு வுறுப மன்னோ
நல்லைமன் றம்ம பாலே மெல்லியல்
துணைமலர பிணைய லன்னவிவர்
மணமகிழ் இயற்கை காட்டி யோயே
மோதாசானார்
நெய்தல் தோழி கூற்று
அம்ம வாழி தோழி கொண்கன்
தானது துணிகுவ னல்லன் யானென்
பேதை மையாற் பெருந்தகை கெழுமி
நோதக செய்ததொன் றுடையேன் கொல்லோ
வயச்சுறா வழங்குநீர் அத்தம்
சின்னாள் அன்ன வரவறி யானே
அறிவுடை நம்பியார்
மருதம் தலைவி கூற்று
ஓரூர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார்
ஏதி லாளர் சுடலை போல
காணா கழிப மன்னே நாணட்டு
நல்லறி விழுந்த காமம்
வில்லுமிழ் கணியிற் சென்றுசே படவே
பாலைபாடிய பெருங்கடுங்கோ
பாலை தோழி கூற்று
உள்ளார் கொல்லோ தோழி உள்ளியும்
வாய்ப்புணர் வின்மையின் வாரார் கொல்லோ
மரற்புகா வருந்திய மாவெரு திரலை
உரற்கா லியானை யொடித்துண் டெஞ்சிய
யாஅ வரிநிழல் துஞ்சும்
மாயிருஞ் சோலை மலையிற தோரே
ஊண் பித்தையார்
முல்லை தலைவன் கூற்று
கவலை கெண்டிய அகல்வா சிறுகுழி
கொன்றை யொள்வீ தாஅ செல்வர்
பொன்பெய் பேழை மூய்திற தன்ன
காரெதிர் புறவி னதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரைகோ ளறியா சொன்றி
நிரைகோற் குறுந்தொடி தந்தை யூரே
பேயனார்
முல்லை தலைவி கூற்று
சுடர்செல் வானஞ் சே படர்கூர
தெல்லறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கி யோரே
குடுமி கோழி நெடுநக ரியம்பும்
பெரும்புலர் விடியலு மாலை
பகலும் மாலை துணையி லோர்க்கே
மிளைப்பெருங் கந்தனார்
பாலை தலைவன் கூற்று
ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின்
தூங்குதோல் கடுக்கு தூவெள் ளருவி
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி
மரையின மாரு முன்றிற்
புல்வேய் குரம்பை நல்லோ ளூரே
மரயேண்டனார்
நெய்தல் தோழி கூற்று
விட்டென விடுக்குநாள் வருக அதுநீ
நேர்ந்தனை யாயின் தந்தனை சென்மோ
குன்ற தன்ன குவவுமணல் அடைகரை
நின்ற புன்னை நிலந்தோய் படுசினை
வம்ப நாரை சேக்கும்
தண்கடற் சேர்ப்பநீ உண்டவென் னலனே
நரிவெரூஉ தலையார்
பாலை தலைவன் கூற்று
அஞ்சுவ தறியா தமர்துணை தழீஇய
நெஞ்சுத பிரிந்தன் றாயினும் எஞ்சிய
கைபிணி நெகிழின்அஃ தெவனோ நன்றும்
சேய வம்ம இருவா மிடையே
மாக்கடல் திரையின் முழங்கி வலனேர்பு
கோட்புலி வழங்குஞ் சோலை
எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே
அள்ளூர் நன்முல்லையார்
மருதம் தோழி கூற்று
பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணை துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும்
தொண்டி யன்னவென் நலந்தந்து
கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே
குன்றியனார்
குறிஞ்சி தலைவி கூற்று
தொடிநெகிழ தனவே தோள்சா யினவே
விடுநாண் உண்டோ தோழி விடர்முகை
சிலம்புடன் கமழு மலங்குகுலை காந்தள்
நறுந்தா தூதுங் குறுஞ்சிறை தும்பி
பாம்புமிழ் மணியின் தோன்றும்
முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே
ஆசிரியர் பெருங்கண்ணனார்
முல்லை தலைவி கூற்று
பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரை
கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர்
வெருக்குப்பல் லுருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் றலையும் நோய்பொர
கண்டிசின் வாழி தோழி தெண்டிரை
கடலாழ் கலத்திற் றோன்றி
மாலை மறையு மவர் மணிநெடுங் குன்றே
கொல்லனழிசியார்
குறிஞ்சி தலைவி கூற்று
யாமெங் கா தாங்கவும் தாந்தம்
கெழுதகை மையி னழுதன தோழி
கன்றாற்று படுத்த புன்றலை சிறாஅர்
மன்ற வேங்கை மலர்பத நோக்கி
ஏறா திட்ட பூசல்
விண்டோய் விடரக தியம்பும்
குன்ற நாடற் கண்டவெங் கண்ணே
கபிலர்
முல்லை செவிலித்தாய் கூற்று
கானங் கோழி கவர்குரற் சேவல்
ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறை
புதனீர் வாரும் பூநாறு புறவிற்
சீறூ ரோளே மடந்தை வேறூர்
வேந்துவிடு தொழிலொடு செலினும்
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே
குழற்றத்தனார்
நெய்தல் தலைவி கூற்று
மானடி யன்ன கவட்டிலை அடும்பின்
தார்மணி யன்ன ஒண்பூ கொழுதி
ஒண்தொடி மகளிர் வண்ட லயரும்
புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை
உள்ளேன் தோழி படீஇயர்என் கண்ணே
நம்பி குட்டுவனார்
குறிஞ்சி தோழி கூற்று
பல்லோர் துஞ்சு நள்ளென் யா
துரவுக்களிறு போல்வ திரவுக்கதவு முயறல்
கேளே மல்லேங் கேட்டனெம் பெரும
ஓரி முருங்க பீலி சாய
நன்மயில் வலைப்ப டாங்கியாம்
உயங்குதொறு முயங்கும் அறனில் யாயே
கண்ணனார்
நெய்தல் தலைவி கூற்று
கடலங் கான லாய மாய்ந்தவென்
நலமிழ ததனினு நனியின் னாதே
வாள்போல் வாய கொழுமடல் தாழை
மாலைவேல் நாட்டு வேலி யாகும்
மெல்லம் புலம்பன் கொடுமை
பல்லோர் அறி பரந்துவௌி படினே
மாலைமாறனார்
நெய்தல் தலைவி கூற்று
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
களிற்றுச்செவி யன்ன பாசடை மயக்கி
பனிக்கழி துழவும் பானாள் தனித்தோர்
தேர்வந்து பெயர்ந்த தென்ப வதற்கொண்
டோரு மலைக்கு மன்னை பிறரும்
பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர்
இளையரு மடவரும் உளரே
அலையா தாயரொடு நற்பா லோரே
கபிலர்
குறிஞ்சி தோழி கூற்று
எழின்மிக வுடைய தீங்கணி படூஉம்
திறவோர் செய்வினை அறவ தாகும்
கிளையுடை மாந்தர்க்கு புணையுமா மிவ்வென
ஆங்கறி திசினே தோழி வேங்கை
வீயா மென்சினை வீயுக யானை
ஆர்துயில் இயம்பு நாடன்
மார்புரி தாகிய மறுவில் நட்பே
சேந்தம் பூதனார்
நெய்தல் தோழி கூற்று
அதுவர லன்மையோ அரிதே அவன்மார்
புறுக வென்ற நாளே குறுகி
ஈங்கா கின்றே தோழி கானல்
ஆடரை புதை கோடை யிட்ட
அடும்பிவர் மணற்கோ டூர நெடும்பனை
குறிய வாகு துறைவனை
பெரிய கூறி யாயறி தனளே
உலோச்சனார்
குறிஞ்சி தலைவி கூற்று
இனமயில் அகவு மரம்பயில் கானத்து
நரைமுக ஊகம் பார்ப்பொடு பனி
படுமழை பொழிந்த சாரலவர் நாட்டு
குன்ற நோக்கினென் தோழி
பண்டை யற்றோ கண்டிசின் நுதலே
கபிலர்
பாலை தலைவன் கூற்று
பரலவல் படுநீர் மாந்தி துணையோ
டிரலை நன்மா னெறிமுத லுகளும்
மாலை வாரா வளவை காலியற்
கடுமா கடவுமதி பாக நெடுநீர
பொருகயன் முரணிய உண்கண்
தெரிதீங் கிளவி தெருமர லுயவே
நாமலார் மகனார் இளங்கண்ணனார்
முல்லை தோழி கூற்று
மடவ வாழி மஞ்ஞை மாயினம்
கால மாரி பெய்தென அதனெதிர்
ஆலலு மாலின பிடவும் பூத்தன
காரன் றிகுளை தீர்கநின் படரே
கழிந்த மாரி கொழிந்த பழநீர்
புதுநீர் கொளீஇய வுகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே
இடைக்காடனார்
குறிஞ்சி தலைவி கூற்று
நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்த்த
கொடிய னாகிய குன்றுகெழு நாடன்
வருவதோர் காலை யின்முக திரியாது
கடவு கற்பி னவனெதிர் பேணி
மடவை மன்ற நீயென கடவுபு
துனியல் வாழி தோழி சான்றோர்
புகழு முன்னர் நாணுப
பழியாங் கொல்பவோ காணுங் காலே
கிடங்கிற் குலபதி நக்கண்ணனார்
பாலை தோழி கூற்று
கேளா ராகுவர் தோழி கேட்பின்
விழுமிது கழிவ தாயினு நெகிழ் நூற்
பூச்சே ரணையிற் பெருங்கவின் றொலைந்தநின்
நாட்டுயர் கெடப்பி னீடலர் மாதோ
ஒலிகழை நிவந்த ஓங்குமலை சாரற்
புலிபுகா வுறுத்த புலவுநாறு கல்லளை
ஆறுசென் மாக்கள் சேக்கும்
கோடுயர் பிறங்கன் மலையிற தோரே
பூங்கண்ணனார்
பாலை தலைவி கூற்று
இலையி லஞ்சினை யினவண் டார்ப்ப
முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின்
தலையலர் வந்தன வாரா தோழி
துயிலின் கங்குல் துயிலவர் மறந்தனர்
பயினறுங் கதுப்பிற் பாயலு முள்ளார்
செய்பொருள் தரனசைஇ சென்றோர்
எய்தின ராலென வரூஉ தூதே
பார்காப்பானார்
பாலை தோழி கூற்று
பொத்தில் காழ அத்த யாஅத்து
பொரியரை முழுமுதல் உருவ குத்தி
மறங்கெழு தடக்கையின் வாங்கி உயங்குநடை
சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும்
தடமரு பியானை கண்டனர் தோழி
தங்கட னிறீஇய ரெண்ணி யிடந்தொறும்
காமர் பொருட்பிணி போகிய
நாம்வெங் காதலர் சென்ற வாறே
கடுகு பெருந்தேவனார்
பாலை தலைவன் கூற்று
மணிவார தன்ன மாக்கொடி யறுகை
பிணிகான் மென்கொம்பு பிணையொடு மார்ந்த
மானே றுகளுங் கானம் பிற்பட
வினைநலம் படீஇ வருது மவ்வரை
தாங்கல் ஒல்லுமோ பூங்குழை யோயென
சொல்லா முன்னர் நில்லா வாகி
நீர்விலங் கழுத லானா
தேர்விலங் கினவால் தெரிவை கண்ணே

குறிஞ்சி தலைவி கூற்று
வேரு முதலும் கோடு மோராங்கு
தொடுத்த போல தூங்குபு தொடரி
கீழ்தாழ் வன்ன வீழ்கோ பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம்
அகலினும் அகலா தாகி
இகலு தோழிநங் காமத்து பகையே
உறையூர சிறுகந்தனார்
மருதம் தோழி கூற்று
வாரலெஞ் சேரி தாரனின் றாரே
அலரா கின்றாற் பெரும காவிரி
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த
ஏந்துகோ டியானை சேந்தன் தந்தை
அரியலம் புகவி னந்தோட்டு வேட்டை
நிரைய ஒள்வாள் இளைஞர் பெருமகன்
அழிசி ஆர்க்கா டன்ன விவள்
பழிதீர் மாணல தொலைதல் கண்டே
பரணர்
குறிஞ்சி தோழி கூற்று
மழைசேர தெழுதரு மாரி குன்ற
தருவி யார்ந்த தண்ணறுங் காந்தள்
முகையவிழ தானா நாறு நறுநுதல்
பல்லிதழ் மழைக்கண் மாஅ யோயே
ஒல்வை யாயினுங் கொல்வை யாயினும்
நீயள தறிவைநின் புரைமை வாய்போற்
பொய்ம்மொழி கூறலஃ தெவனோ
நெஞ்ச நன்றே நின்வயி னானே
பரணர்
பாலை தோழி கூற்று
குருகும் இருவிசும் பிவரும் புதலும்
வரிவண் டூத வாய்நெகிழ தனவே
சுரிவளை பொலிந்த தோளுஞ் செற்றும்
வருவர்கொல் வாழி தோழி பொருவார்
மண்ணெடு துண்ணும் அண்ணல் யானை
வண்தேர தொண்டையர் வழையம லடுக்கத்து
கன்றி லோரா விலங்கிய
புன்றா ளோமைய சுரனிற தோரே
கல்லாடனார்
குறிஞ்சி தலைவி கூற்று
பழமழை பொழிந்தென பதனழி துருகிய
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள்
சேற்றுநிலை முனைஇய செங்க காரான்
நள்ளென் யா தையென கரையும்
அஞ்சுவரு பொழுதி னானு மென்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழு தானே
கழார கீரனெயிற்றியார்
பாலை தோழி கூற்று
ஊஉ ரலரெழ சேரி கல்லென
ஆனா தலைக்கும் அறனி லன்னை
தானே இருக்க தன்மனை யானே
நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க
உணலா திசினா லவரொடு சேய்நாட்டு
விண்தொட நிவந்த விலங்குமலை கவாஅற்
கரும்புநடு பாத்தி யன்ன
பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே
பாலைபாடிய பெருங்கடுங்கோ
குறிஞ்சி தோழி கூற்று
மறிக்குர லறுத்து தினைப்பிர பிரீஇ
செல்லாற்று கவலை பல்லியங் கறங்க
தோற்ற மல்லது நோய்க்குமரு தாகா
வேற்று பெரு தெய்வம் பலவுடன் வாழ்த்தி
பேஎ கொளீஇயள் இவளென படுதல்
நோத கன்றே தோழி மால்வரை
மழைவிளை யாடு நாடனை
பிழையே மாகிய நாமிதற் படவே
பெருஞ்சாத்தனார்
குறிஞ்சி தலைவி கூற்று
கலிமழை கெழீஇய கான்யாற் றிகுகரை
ஒலிநெடும் பீலி துயில்வர இயலி
ஆடுமயி லகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்த காலும் பயப்பொல் லாதே
கபிலர்
குறிஞ்சி தோழி கூற்று
காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது
வண்டுவாய் திறக்கும் பொழுதிற் பண்டும்
தாமறி செம்மை சான்றோர கண்ட
கடனறி மாக்கள் போல இடன்வி
டிதழ்தளை யவிழ்ந்த ஏகல் வெற்பன்
நன்னர் நெஞ்சத்தன் தோழி நின்னிலை
யான்றன குரைத்தனெ னாக
தானா ணினனிஃ தாகா வாறே
கருவூர்க்கத பிள்ளை
பாலை தலைவி கூற்று
நமக்கொன் றுரையா ராயினு தமக்கொன்
றின்னா இரவின் இன்றுணை யாகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
மறப்புரும் பணைத்தோள் மரீஇ
துறத்தல் வல்லியோர் புள்வா தூதே
நக்கீரனார்
பாலை தலைவன் கூற்று
இருங்கண் ஞால தீண்டு பெருவளம்
ஒருங்குடன் இயைவ தாயினுங் கரும்பின்
காலெறி கடிகை கண்ணயின் றன்ன
வாலெயி றூறிய வசையில் தீநீர
கோலமை குறுந்தொடி குறுமக ளொழிய
ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும்
உறன்முறை மரபிற் கூற்ற
தறனில் கோணற் கறிந்திசி னோரே
காலெறி கடிகையார்
குறிஞ்சி தோழி கூற்று
சேறிரோ என செப்பலு மாற்றாம்
வருவி ரோஎன வினவலும் வினவாம்
யாங்கு செய்வாங்கொல் தோழிபாம்பின்
பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்து
நெடுமென் பணைத்தோள் அடைந்திசி னோரே
கருவூர சேரமான் சாத்தனார்
நெய்தல் தலைவி கூற்று
சேயாறு சென்று துனைபரி யசாவா
துசாவுநர பெறினே நன்றுமற் றில்ல
வயச்சுறா எறிந்த புண்தணி தெந்தையும்
நீனிற பெருங்கடல் புக்கனன் யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்புவிளை கழனி சென்றனள் இதனால்
பனியிரும் மரப்பிற் சேர்ப்பற்
கினிவரி னௌியள் என்னும் தூதே
கல்லாடனார்
முல்லை தலைவன் கூற்று
தாழிருள் துமிய மின்னி தண்ணென
வீழுறை யினிய சிதறி ஊழிற்
கடிப்பிடு முரசின் முழங்கி இடித்திடித்து
பெய்தினி வாழியோ பெறுவான் யாமே
செய்வினை முடித்த செம்ம லுள்ளமோ
டிவளின் மேவின மாகி குவளை
குறுந்தாள் நாள்மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே
பாண்டியன் பன்னாடுதந்தான்
மருதம் தலைவி கூற்று
அருவி யன்ன பருவறை சிதறி
யாறுநிறை பகரு நாடனை தேறி
உற்றது மன்னு மொருநாள் மற்றது
தவப்பன் னாள்தோள் மயங்கி
வௌவும் பண்பின் நோயா கின்றே
அழிசி நச்சாத்தனார்
குறிஞ்சி தலைவன் கூற்று
தீண்டலும் இயைவது கொல்லோ மாண்ட
வில்லுடை வீளையர் கல்லிடு பெடுத்த
நனந்தலை கான தினந்தலை பிரிந்த
புன்கண் மடமா னேர்பட தன்னையர்
சிலைமாண் கடுவிசை கலைநிற தழுத்தி
குருதியொடு பறித்த செங்கோல் வாளி
மாறுகொண் டன்ன வுண்கண்
நாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே
ஒருசிறை பெரியனார்
பாலை தோழி கூற்று
அல்குறு பொழுதில் தாதுமுகை தயங்க
பெருங்கா டுளரும் அசைவளி போல
தண்ணிய கமழும் ஒண்ணுத லோயே
நொந்தனை யாயிற் கண்டது மொழிவல்
பெருந்தேன் கண்படு வரையின் முதுமால்
பறியா தேறிய மடவோன் போல
ஏமா தன்றிவ் வுலகம்
நாமுளே மாக பிரியலன் தௌிமே
சிறைக்குடி யாந்தையார்
பாலை தலைவன் கூற்று
புறவு புறத்தன்ன புன்கா லுகாஅ
காசினை யன்ன நளிகனி யுதிர
விடுகணை வில்லொடு பற்றி கோடிவர்பு
வருநர பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர்நசை வேட்கையி னார்மென்று தணியும்
இன்னா கானமும் இனிய பொன்னொடு
மணிமிடை யல்குல் மடந்தை
அணிமுலை யாக முயகினஞ் செலினே
உருத்திரனார்
முல்லை தோழி கூற்று
முல்லை யூர்ந்த கல்லுய ரேறி
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி
எல்லூர சேர்தரும் ஏறுடை யினத்து
புல்லார் நல்லான் பூண்மணி கொல்லோ
செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு
வல்வில் இளையர் பக்கம் போற்ற
ஈர்மணற் காட்டாறு வரூஉம்
தேர்மணி கொல்லாண் டியம்பிய வுளவே
ஒக்கூர் மாசாத்தியார்
குறிஞ்சி தலைவன் கூற்று
பணைத்தோ குறுமகள் பாவை தைஇயும்
பஞ்சா பள்ளஞ் சூழ்ந்து மற்றிவள்
உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய
தொய்பில் காப்போர் அறிதலும் அறியார்
முறையுடை யரசன் செங்கோல் அவை
தியான்றற் கடவின் யாங்கா வதுகொல்
பெரிதும் பேதை மன்ற
அளிதோ னேயிவ் வழுங்கல் ஊரே
கோழி கொற்றனார்
பாலை தோழி கூற்று
ஆசில் தெருவில் நாயில் வியன்கடை
செந்நெல் அமலை வெண்மை வெள்ளிழுது
ஓரிற் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்ப தண்ணீர்
சே செப்பிற் பெறீஇயரோ நீயே
மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
எக்கால் வருவ தென்றி
அக்கால் வருவரெங் காத லோரே
ஓரிற் பிச்சையார்
பாலை தலைவி கூற்று
உறுவளி உளரிய அந்தளிர் மாஅத்து
முறிகண் டன்ன மெல்லென் சீறடி
சிறுபசும் பாவையும் எம்மும் உள்ளார்
கொடியர் வாழி தோழி கடுவன்
ஊழுறு தீங்கனி உதிர்ப்ப கீழிரு
தேற்பன ஏற்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலையிற தோரே
பேரி சாத்தனார்
முல்லை தலைவி கூற்று
திரிமரு பெருமை யிருணிற மையான்
வரிமிடறு யாத்த பகுவா தெண்மணி
புலம்புகொள் யா தியங்குதொ றிசைக்கும்
இதுபொழு தாகவும் வாரார் கொல்லோ
மழைகழூஉ மறந்த மாயிரு துறுகல்
துகள்சூழ் யானையிற் பொலி தோன்றும்
இரும்பல் குன்றம் போகி
திருந்திறை பணைத்தோள் உள்ளா தோரே
மதுரை மருதனிளநாகனார்
குறிஞ்சி தலைவன் கூற்று
கேளிர் வாழியோ
நெஞ்சுபிணி கொண்ட அஞ்சி லோதி
பெருந்தோ குறுமகள் சிறுமெல் லாகம்
ஒருநாள் புணர புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே
நக்கீரனார்
பாலை தலைவி கூற்று
வெண்மணற் பொதுளிய பைங்காற் கருக்கின்
கொம்மை போந்தை குடுமி வெண்தோ
டத்த வேம்பி னமலை வான்பூ
சுரியா ருளைத்தலை பொலி சூடி
குன்றுதலை மணந்த கானம்
சென்றனர் கொல்லோ சேயிழை நமரே
குடவாயிற் கீரத்தனார்
பாலை தோழி கூற்று
செவ்விகொள் வரகின் செஞ்சுவற் கலித்த
கௌவை நாற்றின் காரிரு ளோரிலை
நவ்வி நாண்மறி கவ்வி கடன்கழிக்கும்
காரெதிர் தண்புனங் காணிற் கைவளை
நீர்திகழ் சிலம்பின் ஓராங் கவிழ்ந்த
வெண்கூ தாள தந்தூம்பு புதுமலர்
ஆர்கழல் புகுவ போல
சோர்குவ வல்ல என்பர்கொல் நமரே
நாகம் போத்தனார்
பாலை தலைவி கூற்று
உள்ளது சிதைப்போர் உளரென படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவென
சொல்லிய வன்மை தௌி காட்டி
சென்றனர் வாழி தோழி யென்றும்
கூற்ற தன்ன கொலைவேல் மறவர்
ஆற்றிரு தல்கி வழங்குநர செகுத்த
படுமுடை பருந்துபார திருக்கும்
நெடுமூ திடைய நீரில் ஆறே
பாலை பாடிய பெருங்கடுங்கோ
குறிஞ்சி தோழி கூற்று
பொருத யானை புகர்முகங் கடுப்ப
மன்ற துறுகல் மீமிசை பலவுடன்
ஒண்செங் காந்தள் அவிழும் நாடன்
அறவ னாயினும் அல்ல
நம்மே சுவரோ தம்மிலர் கொல்லோ
வரையிற் றாழ்ந்த வால்வெள் ளருவி
கொன்னிலை குரம்பையி னிழிதரும்
இன்னா திருந்தவி சிறுகுடி யோரே
மிளைவேள் தித்தனார்
பாலை தலைவி கூற்று
வைகல் வைகவும்
எல்லா எல்லை எல்லையு தோன்றார்
யாண்டுளர் கொல்லோ தோழி ஈண்டிவர்
சொல்லிய பருவமோ இதுவே பல்லூழ்
புன்புற பெடையொடு பயிரி யின்புற
இமைக்கண் ஏதா கின்றோ ஞெமைத்தலை
ஊனசைஇ யொருபரு திருக்கும்
வானுயர் பிறங்கல் மலையிற தோரே
பூ தேவனார்
குறிஞ்சி தலைவன் கூற்று
உள்ளி காண்பென் போல்வன் முள்ளெயிற்
றமிழ்த மூறும்அஞ் செவ்வா கமழகில்
ஆர நாறும் அறல்போற் கூந்தல்
பேரமர் மழைக்க கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே
எயிற்றியனார்
முல்லை தோழி கூற்று
அம்ம வாழி தோழி காதலர்
இன்னே கண்டு துறக்குவர் கொல்லோ
முந்நாற் றிங்க ணிறைபொறு தசைஇ
ஒதுங்கல் செல்லா பசும்புளி வேட்கை
கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரி
செழும்பல் குன்றம் நோக்கி
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே
கச்சிப்பேட்டு நன்னாகையார்
குறிஞ்சி தலைவி கூற்று
கறிவளர் அடுக்க தாங்கண் முறியருந்து
குரங்கொருங் கிருக்கும் பெருங்க னாடன்
இனிய னாகலி னினத்தி னியன்ற
இன்னா மையினு மினிதோ
இனிதென படூஉம் புத்தே ணாடே
கபிலர்
முல்லை தலைவி கூற்று
வளர்பிறை போல வழிவழி பெருகி
இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழைபிசை தனையே மாகி சாஅய்
உழையர் அன்மையின் உழப்ப தன்றியும்
மழையு தோழி மான்றுப டன்றே
பட்ட மாரி படாஅ கண்ணும்
அவர்திற திரங்கு நம்மினும்
நந்திற திரங்குமிவ் வழங்கல் ஊரே
பெருங் கண்ணனார்
நெய்தல் தலைவி கூற்று
கா தாங்குமதி யென்போர் தாமஃ
தறியலர் கொல்லோ அனைமது கையர்கொல்
யாமெங் காதலர காணே மாயிற்
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல இல்லா
கல்பொரு சிறுநுரையார்
குறிஞ்சி தலைவன் கூற்று
சுடுபுன மருங்கிற் கலித்த வேனற்
படுகிளி கடியுங் கொடிச்சிகை குளிரே
இசையின் இசையா இன்பா ணித்தே
கிளியவள் விளியென எழலொல் லாவே
அதுபுல தழுத கண்ணே சாரற்
குண்டுநீர பைஞ்சுனை பூத்த குவளை
வண்டுபயில் பல்லிதழ் கலைஇ
தண்துளி கேற்ற மலர்போன் றனவே
கபிலர்
குறிஞ்சி தோழி கூற்று
மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்து செலீஇயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தென
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே
பரணர்
மருதம் தலைவி கூற்று
கள்ளிற் கேளிர் ஆத்திரை யுள்ளூர
பாளை தந்த பஞ்சியங் குறுங்காய்
ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி யருமன் மூதூ ரன்ன
அயவெள் ளாம்பல் அம்பகை நெறித்தழை
தித்தி குறங்கின் ஊழ்மா றலைப்ப
வருமே சேயிழை யந்திற்
கொழுநற் காணிய அளியேன் மன்னே
கள்ளில் ஆத்திரையனார்
நெய்தல் தோழி கூற்று
கடலுட னாடியும் கான லல்கியும்
தொடலை யாயமொடு தழுவணி யயர்ந்தும்
நொதுமலர் போல கதுமென வந்து
முயங்கினன் செலினே யலர்ந்தன்று மன்னே
தித்தி பரந்த பைத்தக லல்குல்
திருந்திழை துயல்வுக்கோ டசைத்த பசுங்குழை
தழையினும் உழையிற் போகான்
தான்த தனன்யாய் காத்தோம் பல்லே
அஞ்சிலாந்தையார்
மருதம் தோழி கூற்று
உடுத்து தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயும்
தழையணி பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயே யிஃதோ
ஓரான் வல்சி சீரில் வாழ்க்கை
பெருநல குறுமகள் வந்தென
இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே
தூங்கலோரியார்
நெய்தல் தலைவி கூற்று
அம்ம வாழி தோழி புன்னை
அலங்குசினை யிருந்த அஞ்சிறை நாரை
உறுகழி சிறுமீன் முனையிற் செறுவிற்
கள்நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ண துறைவற் காணின் முன்னின்று
கடிய கழறல் ஓம்புமதி தொடியோள்
இன்ன ளாக துறத்தல்
நும்மின் தகுமோ என்றனை துணிந்தே
பெரும்பாக்கனார்
குறிஞ்சி தோழி கூற்று
அவ்விளிம் புரீஇய கொடுஞ்சிலை மறவர்
வைவார் வாளி விறற்பகை பேணார்
மாறுநின் றிறந்த ஆறுசெல் வம்பலர்
உவலிடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல்லுயர் நனந்தலை நல்ல கூறி
புணர்ந்துடன் போதல் பொருளென
உணர்ந்தேன் மன்றவவர் உணரா வூங்கே
காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார்
குறிஞ்சி தோழி கூற்று
சேரி சேர மெல்ல வந்துவ
தரிது வாய்வி டினிய கூறி
வைகல் தோறும் நிறம்பெயர துறையுமவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி
இன்கடுங் கள்ளின் அகுதை தந்தை
வெண்கடை சிறுகோ லகவன் மகளிர்
மடப்பிடி பரிசில் மான
பிறிதொன்று குறித்ததவ னெடும்புற நிலையே
பரணர்
நெய்தல் தலைவி கூற்று
இதுமற் றெவனோ தோழி முதுநீர
புணரி திளைக்கும் புள்ளிமிழ் கானல்
இணரவிழ் புன்னை யெக்கர் நீழற்
புணர்குறி வாய்த்த ஞான்றை கொண்கற்
கண்டன மன்னெங் கண்ணே யவன்சொற்
கேட்டன மன்னெஞ் செவியே மற்றவன்
மணப்பின் மாணல மெய்தி
தணப்பின் நெகிழ்பவெ தடமென் றோளே
வெண்மணிப்பூதியார்
குறிஞ்சி தலைவன் கூற்று
குவளை நாறுங் குவையிருங் கூந்தல்
ஆம்பல் நாறும் தேம்பொதி துவர்வா
குண்டுநீர தாமரை கொங்கின் அன்ன
நுண்பல் தித்தி மாஅ யோயே
நீயே அஞ்ச லென்றவென் சொல்லஞ் சலையே
யானே குறுங்கா லன்னங் குவவுமணற் சேக்கும்
கடல்சூழ் மண்டிலம் பெறினும்
விடல்சூ ழலனான் நின்னுடை நட்பே
சிறைக்குடி ஆந்தையார்
குறிஞ்சி தலைவி கூற்று
முழவுமுத லரைய தடவுநிலை பெண்ணை
கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பை
கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப்பெடை யகவும் பானா கங்குல்
மன்றம் போழும் இனமணி நெடுந்தேர்
வாரா தாயினும் வருவது போல
செவிமுத லிசைக்கு மரவமொடு
துயில்துற தனவால் தோழியென் கண்ணே
குன்றியனார்
குறிஞ்சி தலைவி கூற்று
உரைத்திசின் தோழியது புரைத்தோ அன்றே
அருந்துயர் உழத்தலும் ஆற்றாம் இதன்றலை
பெரும்பிறி தாகல் அதனினும் அஞ்சுதும்
அன்னோ இன்னும் நன்மலை நாடன்
பிரியா நண்பினர் இருவரும் என்னும்
அலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன்
துஞ்சூர் யா தானுமென்
நெஞ்ச தல்லது வரவறி யானே
மாங்குடிகிழார்
நெய்தல் தோழி கூற்று
கழிதேர தசைஇய கருங்கால் வெண்குரு
கடைகரை தாழை குழீஇ பெருங்கடல்
உடைதிரை ஒலியில் துஞ்சு துறைவ
தொன்னிலை நெகிழ்ந்த வளைய ளீங்கு
பசந்தனள் மன்னென் தோழி யென்னொடும்
இன்னிணர புன்னையம் புகர்நிழற்
பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்றே
அம்மூவனார்
நெய்தல் தலைவி கூற்று
கொல்வினை பொலிந்த கூர்வா யெறியுளி
முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ்
தாங்கரு நீர்ச்சுர தெறிந்து வாங்குவிசை
கொடுந்திமிற் பரதவர் கோட்டுமீ னெறிய
நெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து
வெண்டோ டிரியும் வீததை கானற்
கைதை தண்புனற் சேர்ப்பனொடு
செய்தனெ மன்றவோர் பகைதரு நட்பே
கணக்காயர் தத்தனார்
மருதம் தலைவி கூற்று
கண்தர வந்த காம ஒள்ளெரி
என்புற நலியினும் அவரொடு பேணி
சென்றுநாம் முயங்கற் கருங்கா சியமே
வந்தஞர் களைதலை அவராற் றலரே
உய்த்தனர் விடாஅர் பிரித்திடை களையார்
குப்பை கோழி தனிப்போர் போல
விளிவாங்கு விளியி னல்லது
களைவோர் இலையா முற்ற நோயே
குப்பைக்கோழியார்
நெய்தல் தலைவி கூற்று
மெல்லிய இனிய மேவரு தகுந
இவைமொழி யாமென சொல்லினு மவைநீ
மறத்தியோ வாழியென் னெஞ்சே பலவுடன்
காமர் மாஅத்து தாதமர் பூவின்
வண்டுவீழ் பயருங் கானல்
தண்கடற் சேர்ப்பனை கண்ட பின்னே
அம்மூவனார்
பாலை தலைவி கூற்று
வளையுடை தனைய தாகி பலர்தொழ
செவ்வாய் வான தையென தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ
மறந்தனர் கொல்லோ தாமே களிறுதன்
உயங்குநடை மடப்பிடி வருத்த நோனாது
நிலையுயர் யாஅ தொலை குத்தி
வெண்ணார் கொண்டு கைசுவை தண்ணா
தழுங்க னெஞ்சமொடு முழங்கும்
அத்த நீளிடை அழப்பிரி தோரே
கடம்பனூர சாண்டிலியனார்
குறிஞ்சி தோழி கூற்று
சோலை வாழை சுரிநுகும் பினைய
அணங்குடை அருந்தலை நீவலின் மதனழிந்து
மயங்குதுயர் உற்ற மையல் வேழம்
உயங்குயிர் மடப்பிடி யுலைபுற தைவர
ஆமிழி சிலம்பின் அரிதுகண் படுக்கும்
மாமலை நாடன் கேண்மை
கா தருவதோர் கைதாழ தன்றே
பெருந்தோ குறுஞ்சாத்தனார்
மருதம் தோழி கூற்று
கைவினை மாக்கடம் செய்வினை முடிமார்
சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட
நீடின வரம்பின் வாடிய விடினும்
கொடியரோ நிலம்பெயர துறைவே மென்னாது
பெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கும்
நின்னூர் நெய்த லனையேம் பெரும
நீயெ கின்னா தனபல செய்யினும்
நின்னின் றமைதல் வல்லா மாறே
உறையூர சல்லியன் குமாரனார்
நெய்தல் தலைவி கூற்று
புள்ளும் புலம்பின பூவிங் கூம்பின
கானலும் புலம்புநனி யுடைத்தே வானமும்
நம்மே போலும் மம்மர தாகி
எல்லைகழி புல்லென் றன்றே
இன்னும் உளெனே தோழி இந்நிலை
தண்ணிய கமழுஞாழல்
தண்ண துறைவர குரைக்குநர பெறினே
பெருங்கண்ணனார்
நெய்தல் தலைவி கூற்று
அலர்யாங் கொழிவ தோழி பெருங்கடற்
புலவுநா றகன்றுறை வலவன் தாங்கவும்
நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர்
யான்கண் டனனோ இலனோ பானாள்
ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னை
தாதுசேர் நிகர்மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன்கண் டன்றே
சேந்தன் கீரனார்
குறிஞ்சி தலைவன் கூற்று
இரண்டறி கள்விநங் காத லோளே
முரண்கொள் துப்பிற் செவ்வேன் மலையன்
முள்ளூர கான நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து
சாந்துளர் நறுங்கது பெண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகி
தமரோ ரன்னள் வைகறை யானே
கபிலர்
நெய்தல் தலைவி கூற்று
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்துநீர் இருங்கழி இரைதேர துண்டு
பூக்கமழ் பொதும்பிற் சேக்கு துறைவனொடு
யாத்தேம் யாத்தன்று நட்பே
அவிழ்த்தற் கரிதது முடிந்தமை தன்றே

முல்லை தலைவி கூற்று
சேயுயர் விசும்பி னீருறு கமஞ்சூல்
தண்குரல் எழிலி ஒண்சுடர் இமை
பெயர்தாழ் பிருளிய புலம்புகொள் மாலையும்
வாரார் வாழி தோழி வரூஉம்
இன்னுறழ் இளமுலை ஞெமுங்க
இன்னா வைப்பின் சுரனிற தோரே
பேரிசாத்தனார்
குறிஞ்சி தலைவி கூற்று
எழுதரு மதியங் கடற்கண் டாஅங்
கொழுகுவெள் ளருவி யோங்குமலை நாடன்
ஞாயி றனையன் தோழி
நெருஞ்சி யனையவென் பெரும்பணை தோளே
மதுரை வேள்ஆதத்தனார்
நெய்தல் தலைவி கூற்று
ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும்
நோய்மலி வருத்தம் அன்னை யறியின்
உளெனோ வாழி தோழி விளியா
துரவுக்கடல் பொருத விரவுமண லடைகரை
ஓரை மகளி ரோராங் காட்ட
வாய்ந்த லவன் துன்புறு துனைபரி
ஓங்குவரல் விரிதிரை களையும்
துறைவன் கொல்லோ பிறவா யினவே
தும்பிசேர் கீரனார்
குறிஞ்சி தோழி கூற்று
புரிமட மரையான் கருநரை நல்லேறு
தீம்புளி நெல்லி மாந்தி யயலது
தேம்பாய் மாமலர் நடுங்க வெய்துயிர
தோங்குமலை பைஞ்சுனை பருகு நாடன்
நம்மைவி டமையுமோ மற்றே கைம்மிக
வடபுல வாடை கழிமழை
தென்புலம் படரு தண்பனி நாளே
மதுரை கண்டரதத்தனார்
நெய்தல் தலைவி கூற்று
எறிசுறா கலித்த இலங்குநீர பரப்பின்
நறுவீ ஞாழலொடு புன்னை தாஅய்
வெறியயர் களத்தினில் தோன்று துறைவன்
குறியா னாயினும் குறிப்பினும் பிறிதொன்
றறியாற் குரைப்பலோ யானே யெய்த்தவி
பணையெழின் மென்றோ ளணைஇய வந்நா
பிழையா வஞ்சினஞ் செய்த
கள்வனும் கடவனும் புனைவனு தானே
அம்மூவனார்
முல்லை தலைவி கூற்று
மானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்து
கான நண்ணிய புதன்மறை தொடுங்கவும்
கையுடை நன்மா பிடியொடு பொருந்தி
மையணி மருங்கின் மலையகஞ் சேரவும்
மாலைவ தன்று மாரி மாமழை
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்
என்னா தோழிநம் இன்னுயிர் நிலையே
தாயங் கண்ணனார்
நெய்தல் தலைவி கூற்று
பெருங்கடற் பரதவர் கொண்மீன் உணங்கல்
அருங்கழி கொண்ட இறவின் வாடலொடு
நிலவுநிற வெண்மணல் புலவ பலவுடன்
எக்கர்தொறும் பரக்கு துறைவனொ டொருநாள்
நக்கதோர் பழியு மிலமே போதவிழ்
பொன்னிணர் மரீஇய புள்ளிமிழ் பொங்கர
புன்னையஞ் சேரி யிவ்வூர்
கொன்னலர் தூற்றந்தன் கொடுமை யானே
தும்பிசேர் கீரனார்
குறிஞ்சி தோழி கூற்று
மலைச்செஞ் சாந்தின் ஆர மார்பினன்
சுனைப்பூங் குவளை சுரும்பார் கண்ணியன்
நடுநாள் வந்து நம்மனை பெயரும்
மடவர லரிவைநின் மார்பமர் இன்றுணை
மன்ற மரையா இரிய ஏறட்டு
செங்கண் இரும்புலி குழுமும் அதனால்
மறைத்தற் காலையோ அன்றே
திறப்பல் வாழிவேண் டன்னைநம் கதவே

குறிஞ்சி தலைவி கூற்று
அமர்க்க ணாமான் அஞ்செவி குழவி
கானவ ரெடுப்ப வெரீஇ யினந்தீர்ந்து
கான நண்ணிய சிறுகுடி பட்டென
இளைய ரோம்ப மரீஇயவ ணயந்து
மனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு
மருவின் இனியவு முளவோ
செல்வா தோழி யொல்வாங்கு நடந்தே
ஐயூர் முடவனார்
முல்லை தலைவன் கூற்று
எல்லாம் எவனோ பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வான தெழுஞ்சுவர் நல்லிசை வீழ
பெய்த புலத்து பூத்த முல்லை
பசுமுகை தாது நாறும் நறுநுதல்
அரிவை தோளிணை துஞ்சி
கழிந்த நாளிவண் வாழு நாளே
பதடி வைகலார்
நெய்தல் தோழி கூற்று
கொடுங்கால் முதலை கோள்வ லேற்றை
வழிவழ கறுக்குங் கானலம் பெருந்துறை
இனமீன் இருங்கழி நீந்தி நீநின்
நயனுடை மையின் வருதி யிவடன்
மடனுடை மையின் உயங்கும் யானது
கவைமக நஞ்சுண் டாஅங்
கஞ்சுவல் பெருமவென் னெஞ்ச தானே
கவை மகனார்
நெய்தல் தலைவி கூற்று
சேறுஞ் சேறு மென்றலின் பண்டைத்தன்
மா செலவா செத்து மருங்கற்று
மன்னி கழிகென் றேனே அன்னோ
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
கருங்கால் வெண்குருகு மேயும்
பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே
நன்னாகையார்
நெய்தல் தலைவி கூற்று
துணைத்த கோதை பணைப்பெரு தோளினர்
கடலாடு மகளிர் கான லிழைத்த
சிறுமனை புணர்ந்த நட்பே தோழி
ஒருநாள் துறைவன் துறப்பின்
பன்னாள் வரூஉம் இன்னா மைத்தே

குறிஞ்சி தலைவி கூற்று
நல்கின் வாழும் நல்கூர தோர்வயின்
நயனில ராகுதல் நன்றென உணர்ந்த
குன்ற நாடன் தன்னினும் நன்றும்
நின்னிலை கொடிதால் தீய கலுழி
நம்மனை மடமகள் இன்ன மென்மை
சாயலள் அளியள் என்னாய்
வாழைத தனையாற் சிலம்புபுல் லெனவே
அம்மூவனார்
நெய்தல் தோழி கூற்று
சிறுவீ ஞாழல் வேரளை பள்ளி
அலவன் சிறுமனை சிதை புணரி
குணில்வாய் முரசின் இயங்கு துறைவன்
நல்கிய நாள்தவ சிலவே அலரே
வில்கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றை பாணர்
புலிநோ குறழ்நிலை கண்ட
கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே
பரணர்
பாலை தலைவி கூற்று
கான விருப்பை வேனல் வெண்பூ
வளிபொரு நெடுஞ்சினை உகுத்தலி னார்கழல்பு
களிறுவழங்கு சிறுநெறி புதை தாஅம்
பிறங்குமலை அருஞ்சுரம் இறந்தவர படர்ந்து
பயிலிருள் நடுநாள் துயிலரி தாகி
தெண்ணீர் நிகர்மலர் புரையும்
நன்மலர் மழைக்கணிற் கௌியவாற் பனியே
ஓதலாந்தையார்
மருதம் தலைவி கூற்று
நலத்தகை புலைத்தி பசைதோ தெடுத்து
தலைப்புடை போக்கி தண்க திட்ட
நீரிற் பிரியா பரூஉத்திரி கடுக்கும்
பேரிலை பகன்றை பொதியவிழ் வான்பூ
இன்கடுங் கள்ளின் மணமில கமழும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே
கழார கீரனெயிற்றியனார்
பாலை தோழி கூற்று
நெடுங்கழை திரங்கிய நீரி லாரிடை
ஆறுசெல் வம்பலர் தொலைய மாறுநின்று
கொடுஞ்சிலை மறவர் கடறுகூ டுண்ணும்
கடுங்கண் யானை கான நீந்தி
இரப்பர்கொல் வாழி தோழி நறுவடி
பைங்கால் மாஅ தந்தளி ரன்ன
நன்மா மேனி பசப்ப
நம்மினுஞ் சிறந்த அரும்பொருள் தரற்கே
வாடா பிரபந்தனார்
பாலை தோழி கூற்று
வந்த வாடை சில்பெயற் கடைநாள்
நோய்நீ தரும்படர் தீரநீ நயந்து
கூறின் எவனோ தோழி நாறுயிர்
மடப்பிடி தழீஇ தடக்கை யானை
குன்ற சிறுகுடி யிழிதரு
மன்ற நண்ணிய மலைகிழ வோற்கே
மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார்
குறிஞ்சி தோழி கூற்று
குறும்படை பகழி கொடுவிற் கானவன்
புனமுண்டு கடிந்த பைங்கண் யானை
நறுந்தழை மகளிர் ஓப்புங் கிள்ளையொடு
குறும்பொறை கணவுங் குன்ற நாடன்
பணிக்குறை வருத்தம் வீட
துணியின் எவனோ தோழிநம் மறையே
உழுந்தினைம்புலவனார்
நெய்தல் தலைவி கூற்று
சிறுவெண் காக்கை செவ்வா பெருந்தோ
டெறிதிரை திவலை யீர்ம்புற நனை
பனிபுல துறையும் பல்பூங் கானல்
விரிநீர சேர்ப்பன் நீப்பி னொருநம்
இன்னுயி ரல்லது பிறிதொன்
றெவனோ தோழி நாமிழ பதுவே
இளம்பூதனார்
குறிஞ்சி தோழி கூற்று
நிரைவளை முன்கை நேரிழை மகளிர்
இருங்கல் வியலறை செந்தினை பரப்பி
சுனைபாய் சோர்விடை நோக்கி சினையிழிந்து
பைங்கண் மந்தி பார்ப்போடு கவரும்
வெற்பிடை நண்ணி யதுவே வார்கோல்
வல்விற் கானவர் தங்கை
பெருந்தோ கொடிச்சி யிருந்த வூரே
இருந்தையூர கொற்றன் புலவனார்
குறிஞ்சி தோழி கூற்று
செறுவர குவகை யாக தெறுவர
ஈங்கனம் வருபவோ தேம்பாய் துறைவ
சிறுநா வொண்மணி விளரி யார்ப்ப
கடுமா நெடுந்தேர் நேமி போகிய
இருங்கழி நெய்தல் போல
வருந்தின ளளியணீ பிரிந்திசி னோளே
குன்றியனார்
குறிஞ்சி தலைவன் கூற்று
முலையே முகிழ்முகிழ தனவே தலையே
கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ தனவே
செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற்
கியான்ற னறிவலே தானறி யலளே
யாங்கா குவள்கொ றானே
பெருமுது செல்வ ரொருமட மகளே
பொதுக்கயத்து கீரந்தையார்
பாலை தோழி கூற்று
திரிமரு பிரலை யண்ணல் நல்லேறு
அரிமட பிணையோ டல்குநிழ லசைஇ
வீததை வியலரில் துஞ்சி பொழுதுசெல
செழும்பயறு கறிக்கும் புன்கண் மாலை
பின்பனி கடைநாள் தண்பனி அச்சிரம்
வந்தன்று பெருவிறல் தேரே பணைத்தோள்
விளங்குநக ரடங்கிய கற்பின்
நலங்கே ழரிவை புலம்பசா விடவே
பெருங்குன்றூர்கிழார்
குறிஞ்சி தோழி கூற்று
நறையகில் வயங்கிய நளிபுன நறும்புகை
உறையறு மையிற் போகி சாரற்
குறவர் பாக்க திழிதரு நாடன்
மயங்குமலர கோதை நன்மார்பு முயங்கல்
இனிதுமன் வாழி தோழி மாயிதழ
குவளை யுண்கண் கலுழ
பசலை யாகா வூங்கலங் கடையே
பேயார்
நெய்தல் தலைவி கூற்று
காமங் கடையிற் காதலர படர்ந்து
நாமவர புலம்பி னம்மோ டாகி
ஒருபாற் படுதல் செல்லா தாயிடை
அழுவ நின்ற அலர்வேய் கண்டல்
கழிபெயர் மருங்கி னொல்கி யோதம்
பெயர்தர பெயர்த தாங்கு
வருந்து தோழியவ ரிருந்தவென் நெஞ்சே
அம்மூவனார்
நெய்தல் தலைவி கூற்று
பல்வீ பட்ட பசுநனை குரவம்
பொரிப்பூம் புன்கொடு பொழிலணி கொளாஅ
சினையினி தாகிய காலையுங் காதலர்
பேணா ராயினும் பெரியோர் நெஞ்சத்து
கண்ணிய ஆண்மை கடவ தன்றென
வலியா நெஞ்சம் வலிப்ப
வாழ்வேன் தோழியென் வன்க ணானே
மிளைகிழார் நல்வேட்டனார்
குறிஞ்சி தோழி கூற்று
கலைகை தொட்ட கமழ்சுளை பெரும்பழம்
காவல் மறந்த கானவன் ஞாங்கர
கடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும்
குன்ற நாட தகுமோ பைஞ்சுனை
குவளை தண்தழை யிவளீண்டு வருந்த
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயந்தலை படாஅ பண்பினை எனினே
காவிரிப்பூம்பட்டினத்து கந்தரத்தனார்
பாலை தோழி கூற்று
நினையாய் வாழி தோழி நனைகவுள்
அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென
மிகுவலி இரும்புலி பகுவா யேற்றை
வெண்கொடு செம்மறு கொளீஇ விடர்முகை
கோடை யொற்றிய கருங்கால் வேங்கை
வாடுபூஞ் சினையிற் கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயரும் ஆறே
ஈழத்து பூதன்றேவனார்
முல்லை தலைவி கூற்று
நோற்றோர் மன்ற தோழி தண்ணென
தூற்று துவலை பனிக்கடு திங்க
புலம்பயி ரருந்த அண்ண லேற்றொடு
நிலந்தூங் கணல வீங்குமுலை செருத்தல்
பால்வார்பு குழவி யுள்ளி நிரையிற
தூர்வயிற் பெயரும் புன்கண் மாலை
அரும்பெறற் பொருட்பிணி போகி
பிரிந்துறை காதலர் வரக்காண் போரே
குறுங்குடி மருதனார்
நெய்தல் தோழி கூற்று
இழையணி தியல்வருங் கொடுஞ்சி நெடுந்தேர்
வரைமருள் நெடுமணல் தவிர்த்துநின் றசைஇ
தங்கினி ராயின் தவறோ தெய்ய
தழைதாழ் அல்குல் இவள்புலம் பகல
தாழை தைஇய தயங்குதிரை கொடுங்கழி
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெருநீர் வேலியெம் சிறுநல் லூரே
அண்டர்மகன் குறுவழுதியார்
குறிஞ்சி தோழி கூற்று
நாகுபிடி நயந்த முளைக்கோ டிளங்களிறு
குன்றம் நண்ணி குறவர் ஆர்ப்ப
மன்றம் போழு நாடன் தோழி
சுனைப்பூங் குவளை தொடலை தந்தும்
தினைப்புன மருங்கிற் படுகிளி யோப்பியும்
காலை வந்து மாலை பொழுதில்
நல்லக நயந்துதான் உயங்கி
சொல்லவும் ஆகா தஃகி யோனே
வாயிலிளங் கண்ணனார்
பாலை தலைவன் கூற்று
மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதற்
குமரி வாகை கோலுடை நறுவீ
மடமா தோகை குடுமியிற் றோன்றும்
கான நீளிடை தானு நம்மொடு
ஒன்றுமணஞ் செய்தனள் இவளெனின்
நன்றே நெஞ்சம் நயந்தநின் துணிவே
காவிரிப்பூம்பட்டினத்து சேந்தங் கண்ணனார்
பாலை தோழி கூற்று
தாமே செல்ப வாயிற் கானத்து
புலந்தேர் யானை கோட்டிடை யொழிந்த
சிறுவீ முல்லை கொம்பிற் றாஅய்
இதழழி தூறுங் கண்பனி மதரெழிற்
பூணக வனமுலை நனைத்தலும்
காணார் கொல்லோ மாணிழை நமரே
மாவளத்தனார்
நெய்தல் தலைவி கூற்று
அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீன் அருந்தும்
தடந்தாள் நாரை இருக்கும் எக்கர
தண்ண துறைவற் றொடுத்து நந்நலம்
கொள்வாம் என்றி தோழி
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்தவை தாவென் சொல்லினும்
இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே
சாத்தனார்
பாலை தோழி கூற்று
அம்ம வாழி தோழி முன்னின்று
பனிக்கடுங் குரையஞ் செல்லா தீமென
சொல்லின மாயிற் செல்வர் கொல்லோ
ஆற்றய லிருந்த இருந்தோ டஞ்சிறை
நெடுங்காற் கணந்துள் ஆளறி வுறீஇ
ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்
மலையுடை கான நீந்தி
நிலையா பொருட்பிணி பிரிந்திசி னோரே
ஆலத்தூர் கிழார்
நெய்தல் தோழி கூற்று
வளையோய் உவந்திசின் விரைவுறு கொடுந்தாள்
அளைவாழ் அலவன் கூருகிர் வரித்த
ஈர்மணல் மலிர்நெறி சிதைய இழுமென
உருமிசை புணரி உடைதரும் துறைவர்க்கு
உரிமை செப்பினர் நமரே விரியலர
புன்னை ஓங்கிய புலாலஞ் சேரி
இன்னகை தாரோடு
இன்னும் அற்றோஇவ் வழுங்க லூரே
அம்மூவனார்
பாலை தலைவி கூற்று
நெடுநீ ராம்பல் அடைப்புற தன்ன
கொடுமென் சிறைய கூருகிர பறவை
அகலிலை பலவின் சாரல் முன்னி
பகலுறை முதுமரம் புல போகும்
சிறுபுன் மாலை உண்மை
அறிவேன் தோழியவர காணா ஊங்கே
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
குறிஞ்சி தோழி கூற்று
ஆர்கலி வெற்பன் மார்புபுணை யா
கோடுயர் நெடுவரை கவாஅற் பகலே
பாடின் அருவி ஆடுதல் இனிதே
நிரையிதழ் பொருந்தா கண்ணோ டிரவிற்
பஞ்சி வெண்திரி செஞ்சுடர் நல்லிற்
பின்னுவீழ் சிறுபுற தழீஇ
அன்னை முயங்க துயிலின் னாதே
உறையூர் முதுகூற்றனார்
மருதம் தோழி கூற்று
நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
தணந்தனை யாயினெம் இல்லுய்த்து கொடுமோ
அந்தண் பொய்கை எந்தை எம்மூர
கடும்பாம்பு வழங்கு தெருவில்
நடுங்கஞர் எவ்வம் களைந்த எம்மே
கயத்தூர்கிழார்
குறிஞ்சி தோழி கூற்று
பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே
நீர்பர தொழுகலின் நிலங்கா ணலையே
எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானா கங்குல்
யாங்குவ தனையோ ஓங்கல் வெற்ப
வேங்கை கமழுமெஞ் சிறுகுடி
யாங்கறி தனையோ நோகோ யானே
கபிலர்
பாலை செவிலி கூற்று
நிழலான் றவிந்த நீரில் ஆரிடை
கழலோன் காப்ப கடுகுபு போகி
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ்வெங் கலுழி தவ்வென குடிக்கிய
யாங்கு வல்லுநள்கொல் தானே ஏந்திய
செம்பொற் புனைகல தம்பொரி கலந்த
பாலும் பலவென உண்ணாள்
கோலமை குறுந்தொடி தளிரன் னோளே
கயமனார்
குறிஞ்சி தோழி கூற்று
முனிபடர் உழந்த பாடில் உண்கண்
பனிகால் போழ்ந்து பணியெழில் ஞெகிழ்தோள்
மெல்லிய ஆகலின் மேவர திரண்டு
நல்ல என்னுஞ் சொல்லை மன்னிய
ஏனலஞ் சிறுதினை காக்குஞ் சேணோன்
ஞெகிழியிற் பெயர்ந்த நெடுநல் யானை
மின்படு சுடரொளி வெரூஉம்
வான்தோய் வெற்பன் மணவா ஊங்கே
கபிலர்
முல்லை தோழி கூற்று
வீங்கிழை நெகிழ விம்மி யீங்கே
எறிகண் பேதுற லாய்கோ டிட்டு
சுவர்வாய் பற்றுநின் படர்சே ணீங்க
வருவேம் என்ற பருவம் உதுக்காண்
தனியோர் இரங்கும் பனிகூர் மாலை
பல்லான் கோவலர் கண்ணி
சொல்லுப அன்ன முல்லைமென் முகையே
கொற்றனார்
மருதம் தோழி கூற்று
கண்டிசிற் பாண பண்புடை தம்ம
மாலை விரிந்த பசுவெண் ணிலவிற்
குறுங்கால் கட்டில் நறும்பூஞ் சேக்கை
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசையிற்
புதல்வற் றழீஇயினன் விறலவன்
புதல்வன் தாயவன் புறங்கவைஇ யினளே
பேயனார்
குறிஞ்சி தலைவி கூற்று
வெறியென உணர்ந்த வேல னோய்மரு
தறியா னாகுதல் அன்னை காணிய
அரும்படர் எவ்வம் இன்றுநாம் உழப்பினும்
வாரற்க தில்ல தோழி சாரற்
பிடிக்கை அன்ன பெருங்குரல் ஏனல்
உண்கிளி கடியும் கொடிச்சிகை குளிரே
சிலம்பிற் சிலம்புஞ் சோலை
இலங்குமலை நாடன் இரவி னானே
மதுரை ஈழத்து பூதன்றேவனார்
குறிஞ்சி தலைவி கூற்று
அம்ம வாழி தோழி அன்னை
குயர்நிலை உலகமுஞ் சிறிதால் அவர்மலை
மாலை பெய்த மணங்கமழ் உந்தியொடு
காலை வந்த காந்தள் முழுமுதல்
மெல்லிலை குழைய முயங்கலும்
இல்லுய்த்து நடுதலுங் கடியா தோளே
கபிலர்
குறிஞ்சி தோழி கூற்று
முருகயர துவந்த முதுவாய் வேல
சினவ லோம்புமதி வினவுவ துடையேன்
பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு
சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய
விண்தோய் மாமலை சிலம்பன்
ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே
வேம்பற்றூர கண்ணன் கூத்தனார்
பாலை தோழி கூற்று
கண்ணி மருப்பின் அண்ணநல் லேறு
செங்கோற் பதவின் வார்குரல் கறிக்கும்
மடக்கண் மரையா நோக்கிவெய் துற்று
புல்லரை உகாஅய் வரிநிழல் வதியும்
இன்னா அருஞ்சுரம் இறத்தல்
இனிதோ பெரும இன்றுணை பிரிந்தே
செல்லூர கொற்றனார்
மருதம் இற்பரத்தை கூற்று
அரிற்பவர பிரம்பின் வரிப்புற நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉம் ஊரன்
பொற்கோல் அவிர்தொடி தற்கெழு தகுவி
எற்புறங் கூறும் என்ப தெற்றென
வணங்கிறை பணைத்தோள் எல்வளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன அவ்வரை
கண்பொர மற்றதன் கண்ணவர்
மணங்கொளற் கிவரும் மள்ளர் போரே
ஔவையார்
குறிஞ்சி தோழி கூற்று
கோடீர் இலங்குவளை நெகிழ நாளும்
பாடில கலிழ்ந்து பனியா னாவே
துன்னரும் நெடுவரை ததும்பிய அருவி
தன்ணென் முரசின் இமிழிசை காட்டும்
மருங்கிற் கொண்ட பலவிற்
பெருங்கல் நாடநீ நயந்தோள் கண்ணே
மதுரை நல்வெள்ளியார்
குறிஞ்சி தோழி கூற்று
பால்வரை தமைத்த லல்ல தவர்வயிற்
சால்பள தறிதற் கியாஅம் யாரோ
வெறியாள் கூறவும் அமையாள் அதன்தலை
பைங்கண் மாச்சுனை பல்பிணி யவிழ்ந்த
வள்ளிதழ் நீலம் நோக்கி உள்ளகை
பழுத கண்ண ளாகி
பழூதன் றம்மவிவ் வாயிழை துணிவே
பேரிசாத்தனார்
மருதம் தோழி கூற்று
கொடியோர் நல்கா ராயினும் யாழநின்
தொடிவிளங் கிறைய தோள்கவின் பெறீஇயர்
உவக்காண் தோழி அவ்வ திசினே
தொய்யல் மாமழை தொடங்கலின் அவர்நாட்டு
பூச லாயம் புகன்றிழி அருவியின்
மண்ணுறு மணியின் தோன்றும்
தண்ணறு துறுகல் ஓங்கிய மலையே
மதுரை மருதனிள நாகனார்
மருதம் தலைவி கூற்று
மெல்லிய லோயே
நன்னாண் நீத்த பழிதீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பிற்
சொல்ல கிற்றா மெல்லிய லோயே
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே
நாளிடை படாஅ நளிநீர் நீ
திண்கரை பெருமரம் போல
தீதில் நிலைமை முயங்குகம் பலவே
நக்கீரனார்
பாலை தோழி கூற்று
அத்த வாகை அமலை வானெற்
றரியார் சிலம்பி னரிசி யார்ப்ப
கோடை தூக்குங் கானம்
செல்வா தோழி நல்கினர் நமரே
குடவாயிற் கீரத்தனார்
மருதம் பரத்தை கூற்று
பொய்கை யாம்ப லணிநிற கொழுமுகை
வண்டுவாய் திறக்கு தண்டுறை யூரனொடு
இருப்பி னிருமருங் கினமே கிடப்பின்
வில்லக விரலிற் பொருந்தியவன்
நல்லகஞ் சேரி னொருமருங் கினமே
வில்லகவிரலினார்
குறிஞ்சி தலைவி கூற்று
கைவளை நெகிழ்தலும் மெய்பச பூர்தலும்
மைபடு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு
மருவேன் தோழியது காமமோ பெரிதே
உறையூர் முதுகூற்றனார்
நெய்தல் தோழி கூற்று
பனைத்தலை கருக்குடை நெடுமடல் குருத்தொடு மா
கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பை
கணங்கொள் சிமைய வணங்குங் கானல்
ஆழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவி
கூழைபெய் எக்கர குழீஇய பதுக்கை
புலர்பதங் கொள்ளா வளவை
அலரெழு தன்றிவ் வழங்க லூரே
விற்றூற்று மூதெயினனார்
குறிஞ்சி தோழி கூற்று
நிலம்புடை பெயரினு நீர்தீ பிறழினும்
இலங்குதிரை பெருங்கடற் கெல்லை தோன்றினும்
வெவ்வா பெண்டிர் கௌவை அஞ்சி
கேடெவன் உடைத்தோ தோழி நீடுமயிர
கடும்பல் கறைவிரல் ஏற்றை
புடைத்தொடு புடைஇ பூநாறு பலவுக்கனி
காந்தளஞ் சிறுகுடி கமழும்
ஓங்குமலை நாடனொ டமைந்த தொடர்பே
மதுரை கொல்லம் புல்லனார்
குறிஞ்சி தோழி கூற்று
எந்தையும் யாயும் உணர காட்டி
ஒளித்த செய்தி வௌிப்பட கிளந்தபின்
மலைகெழு வெற்பன் தலைவ திரப்ப
நன்றுபுரி கொள்கையின் ஒன்றா கின்றே
முடங்கல் இறைய தூங்கணங் குரீஇ
நீடிரும் பெண்ணை தொடுத்த
கூடினும் மயங்கிய மைய லூரே
உறையூர பல்காயனார்
குறிஞ்சி தோழி கூற்று
அம்ம வாழி தோழி இன்றவர்
வாரா ராயினோ நன்றே சாரற்
சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புன
திரவரி வாரின் தொண்டக சிறுபறை
பானாள் யாமத்துங் கறங்கும்
யாமங் காவலர் அவியா மாறே

நெய்தல் தலைவன் கூற்று
மன்னுயிர் அறியா துன்னரும் பொதியிற்
சூருடை அடுக்க தாரங் கடுப்ப
வேனி லானே தண்ணியள் பனியே
வாங்குகதிர் தொகுப்ப கூம்பி ஐயென
அலங்குவெயிற் பொதிந்த தாமரை
உள்ளக தன்ன சிறுவெம் மையளே
படுமாத்து மோசிகொற்றனார்
குறிஞ்சி தலைவி கூற்று
மலரேர் உண்கண் மாணல தொலைய
வளையேர் மென்றோள் ஞெகிழ்ந்ததன் தலையும்
மாற்றா கின்றே தோழியாற் றலையே
அறிதற் கமையா நாடனொடு
செய்து கொண்டதோர் சிறுநன் னட்பே
மோசி கொற்றனார்
பாலை செவிலி கூற்று
ஞாயிறு காயாது மரநிழற் பட்டு
மலைமுதற் சிறுநெறி மணன்மிக தாஅ
தண்மழை தலையின் றாக நந்நீத்து
சுடர்வாய் நெடுவேற் காளையொடு
மடமா அரிவை போகிய சுரனே
கயமனார்
குறிஞ்சி தோழி கூற்று
இன்றியாண் டையனோ தோழி குன்றத்து
பழங்குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு
கண்ணகன் தூமணி பெறூஉம் நாடன்
அறிவுகாழ கொள்ளும் அளவை செறிதொடி
எம்மில் வருகுவை நீயென
பொம்மல் ஓதி நீவி யோனே

பாலை தோழி கூற்று
விசும்புகண் புதை பாஅய் வேந்தர்
வென்றெறி முரசின் நன்பல முழங்கி
பெயலா னாதே வானம் காதலர்
நனிசேய் நாட்டர் நம்முன் னலரே
யாங்குச்செய் வாங்கொல் தோழி யீங்கைய
வண்ண துய்ம்மலர் உதிர
முன்னர தோன்றும் பனிக்கடு நாளே
கருவூர கதப்பிள்ளை
நெய்தல் தோழி கூற்று
தொல்கவின் தொலைந்து தோணலஞ் சாஅய்
அல்லல் நெஞ்சமோ டல்கலும் துஞ்சாது
பசலை யாகி விளிவது கொல்லோ
வெண்குருகு நரலு தண்கமழ் கானற்
பூமலி பொதும்பர் நாண்மலர் மயக்கி
விலங்குதிரை உடைதரு துறைவனொ
டிலங்கெயிறு தோன்ற நக்கதன் பயனே

முல்லை தோழி கூற்று
தண்துளி கேற்ற பைங்கொடி முல்லை
முகைதலை திறந்த நாற்றம் புதல்மிசை
பூமலி தளவமொடு தேங்கமழ்பு கஞல
வம்பு பெய்யுமால் மழையே வம்பன்று
காரிது பருவம் ஆயின்
வாரா ரோநம் காத லோரே
குறுங்கீரனார்
பாலை தோழி கூற்று
நீயுடம் படுதலின் யான்தர வந்து
குறிநின் றனனே குன்ற நாடன்
இன்றை யளவை சென்றை கென்றி
கையுங் காலும் ஓய்வன அழுங்க
தீயுறு தளிரின் நடுங்கி
யாவதும் இலையான் செயற்குரி யதுவே
படுமரத்து மோசிகீரனார்
மருதம் தோழி கூற்று
உழுந்துடை கழுந்திற் கரும்புடை பணைத்தோள்
நெடும்பல் கூந்தற் குறுந்தொடி மகளிர்
நலனுண்டு துறத்தி யாயின்
மிகநன் றம்ம மகிழ்நநின் சூளே
ஓரம்போகியார்
குறிஞ்சி தலைவி கூற்று
பலவிற் சேர்ந்த பழமார் இனக்கலை
சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇ
செருவுறு குதிரையிற் பொங்கி சாரல்
இருவெதிர் நீடமை தயங்க பாயும்
பெருவரை அடுக்கத்து கிழவோன் என்றும்
அன்றை யன்ன நட்பினன்
புதுவோர தம்மவிவ் வழுங்க லூரே
கபிலர்
நெய்தல் தலைவி கூற்று
வெண்மணல் விரிந்த வீததை கானல்
தண்ண துறைவன் தணவா ஊங்கே
வாலிழை மகளிர் விழவணி கூட்டும்
மாலையோ அறிவேன் மன்னே மாலை
நிலம்பர தன்ன புன்கணொடு
புலம்புடை தாகுதல் அறியேன் யானே
வெள்ளிவீதியார்
முல்லை தலைவி கூற்று
எல்லை கழிய முல்லை மலர
கதிர்சின தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயின்
எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே
கங்குல் வெள்ளத்தார்
பாலை தோழி கூற்று
நீர்கால் யாத்த நிரையிதழ குவளை
கோடை ஒற்றினும் வாடா தாகும்
கவணை அன்ன பூட்டுப்பொரு தசாஅ
உமணெரு தொழுகை தோடுநிரை தன்ன
முளிசினை பிளக்கு முன்பின் மையின்
யானை கைமடி துயவும்
கானமும் இனியவாம் நும்மொடு வரினே
ஔவையார்
குறிஞ்சி தோழி கூற்று
நெய்கனி குறும்பூழ் காய மாக
ஆர்பதம் பெறுக தோழி அத்தை
பெருங்கல் நாடன் வரைந்தென அவனெதிர்
நன்றோ மகனே யென்றனென்
நன்றே போலும் என்றுரை தோனே
வேட்டகண்ணனார்
பாலை கண்டோர் கூற்று
எல்லும் எல்லின்று பாடுங் கேளாய்
செல்லா தீமோ சிறுபிடி துணையே
வேற்றுமுனை வெம்மையிற் சாத்துவ திறுத்தென
வளையணி நெடுவேல் ஏந்தி
மிளைவந்து பெயரும் தண்ணுமை குரலே
உறையூர் முதுகொற்றனார்
முல்லை தலைவி கூற்று
உவரி யொருத்தல் உழாது மடி
புகரி புழுங்கிய புயனீங்கு புறவிற்
கடிதிடி உருமிற் பாம்புபை அவிய
இடியொடு மயங்கி இனிதுவீழ தன்றே
வீழ்ந்த மாமழை தழீஇ பிரிந்தோர்
கையற வந்த பையுள் மாலை
பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்ஞை
தாஅம் நீர் நனந்தலை புலம்ப
கூஉ தோழி பெரும்பே தையவே
பொன்மணியார்
குறிஞ்சி தோழி கூற்று
அம்ம வாழியோ அணிச்சிறை தும்பி
நன்மொழி கச்ச மில்லை யவர்நா
டண்ணல் நெடுவரை சேறி யாயிற்
கடமை மிடைந்த துடவையஞ் சிறுதினை
துளரெறி நுண்டுக களைஞர் தங்கை
தமரின் தீராள் என்மோ அரசர்
நிரைசெல னுண்டோல் போல
பிரச தூங்கு மலைகிழ வோர்க்கே
தும்பிசேர் கீரனார்
மருதம் தோழி கூற்று
மயங்குமலர கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாடவ சிலவே அலரே
கூகை கோழி வாகை பறந்தலை
பசும்பூண் பாண்டியன் வினைவ லதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறுவா கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே
பரணர்
குறிஞ்சி தோழி கூற்று
முழந்தாள் இரும்பிடி கயந்தலை குழவி
நறவுமலி பாக்கத்து குறமகள் ஈன்ற
குறியிறை புதல்வரொடு மறுவ தோடி
முன்னாள் இனிய தாகி பின்னாள்
அவர்தினை புனம் மே தாங்கு
பகையா கின்றவர் நகைவிளை யாட்டே
குறியிரையார்
பாலை தலைவி கூற்று
நெஞ்சே நிறையொல் லாதே யவரே
அன்பின் மையின் அருள்பொருள் என்னார்
வன்கண் கொண்டு வலித்துவல் லுநரே
அரவுநுங்கு மதியினு கிவணோர் போல
களையார் ஆயினுங் கண்ணினிது படீஇயர்
அஞ்ச லென்மரும் இல்லை அந்தில்
அளிதோ தானே நாணே
ஆங்கவர் வதிவயின் நீங்க படினே

பாால செவிலி கூற்று
பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்
விளையாடு ஆயமொடு அயர்வோ ளினியே
எளிதென உணர்ந்தனள் கொல்லோ முளிசினை
ஓமை குத்திய உயர்கோ டொருத்தல்
வேனிற் குன்றத்து வெவ்வரை கவாஅன்
மழைமுழங்கு கடுங்குரல் ஓர்க்கும்
கழைதிரங் காரிடை அவனொடு செலவே
கமயனார்
நெய்தல் தோழி கூற்று
நனைமுதிர் ஞாழற் தினைமருள் திரள்வீ
நெய்தல் மாமலர பெய்தல் போல
ஊதை தூற்றும் உரவுநீர சேர்ப்ப
தாயுடன் றலைக்கும் காலையும் வாய்வி
டன்னா வென்னுங் குழவி போல
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும்
நின்வரை பினளென் தோழி
தன்னுறு விழுமங் களைஞரோ இலளே
அம்மூவனார்
பாலை தலைவி கூற்று
தேற்றா மன்றே தோழி தண்ணென
தூற்று துவலை துயர்கூர் காலை
கயலே ருண்க கனங்குழை மகளிர்
கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய
சுடர்துய ரெடுப்பும் புன்கண் மாலை
அரும்பெறற் காதலர் வந்தென விருந்தயர்பு
மெய்ம்மலி யுவகையி னெழுதரு
கண்கலி ழுகுபனி யரக்கு வோரே
பாலைபாடிய பெருங்கடுங்கோ
மருதம் தலைவி கூற்று
ஊருண் கேணி யுண்டுறை தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழி தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழி பரத்த லானே
பரணர்
முல்லை தலைவன் கூற்று
சேயாறு செல்வா மாயின் இடரின்று
களைகலம் காமம் பெருந்தோ கென்று
நன்றுபுரி தெண்ணிய மனத்தை யாகி
முரம்புகண் உடைய வேகி கரம்பை
புதுவழி படுத்த மதியுடை வல்லோய்
இன்று தந்தனை தேரோ
நோயுழ துறைவியை நல்க லானே
பேயனார்
நெய்தல் தலைவி கூற்று
அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல்
நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்
ஓரை மகளி ரஞ்சியீர் ஞெண்டு
கடலிற் பரிக்கு துறைவனொ டொருநாள்
நக்குவிளை யாடலுங் கடிந்தன்
றைதே கம்ம மெய்தோய் நட்பே
அம்மூவனார்

குறுந்தொகை முற்றிற்று