சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி
      பாடல்கள் 518 - 1026
      உள்ளுறை
      7.051 திருவாரூர் 518-529 மின்பதிப்பு
      7.052 திருவாலங்காடு 530-539 மின்பதிப்பு
      7.053 திருக்கடவூர் மயானம் 540-549 மின்பதிப்பு
      7.054 திருவொற்றியூர் 550-559 மின்பதிப்பு
      7.055 திருப்புன்கூர் 560-569 மின்பதிப்பு
      7.056 திருநீடூர் 570-580 மின்பதிப்பு
      7.057 திருவாழ்கொளிபுத்தூர் 581-592 மின்பதிப்பு
      7.058 திருக்கழுமலம் 593-602 மின்பதிப்பு
      7.059 திருவாரூர் 603-613 மின்பதிப்பு
      7.060 திருவிடைமருதூர் 614-623 மின்பதிப்பு
      7.061 திருவேகம்பம் 624-634 மின்பதிப்பு
      7.062 திருக்கோலக்கா 635-644 மின்பதிப்பு
      7.063 நம்பிஎன்ற திருப்பதிகம் 645-654 மின்பதிப்பு
      7.064 திருத்தினைநகர் 655-664 மின்பதிப்பு
      7.065 திருநின்றியூர் 665-671 மின்பதிப்பு
      7.066 திருவாவடுதுறை 672-676 மின்பதிப்பு
      7.067 திருவலிவலம் 677-687 மின்பதிப்பு
      7.068 திருநள்ளாறு 688-697 மின்பதிப்பு
      7.069 திருவடமுல்லைவாயில் 698-798 மின்பதிப்பு
      7.070 திருவாவடுதுறை 709-718 மின்பதிப்பு
      7.071 திருமறைக்காடு 719-728 மின்பதிப்பு
      7.072 திருவலம்புரம் 729-739 மின்பதிப்பு
      7.073 திருவாரூர் 740-750 மின்பதிப்பு
      7.074 திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் 751-760
      மின்பதிப்பு
      7.075 திருவானைக்கா 761-770 மின்பதிப்பு
      7.076 திருவாஞ்சியம் 771-780 மின்பதிப்பு
      7.077 திருவையாறு 781-791 மின்பதிப்பு
      7.078 திருக்கேதாரம் 792-801 மின்பதிப்பு
      7.079 திருப்பருப்பதம் 802-811 மின்பதிப்பு
      7.080 திருக்கேதீச்சரம் 812-821 மின்பதிப்பு
      7.081 திருக்கழுக்குன்றம் 822-831 மின்பதிப்பு
      7.082 திருச்சுழியல் 832-841 மின்பதிப்பு
      7.083 திருவாரூர் 842-851 மின்பதிப்பு
      7.084 திருக்கானப்பேர் 852-861 மின்பதிப்பு
      7.085 திருக்கூடலையாற்றூர் 862-871 மின்பதிப்பு
      7.086 திருவன்பார்த்தான்பனங்காட்டூர் 872-881 மின்பதிப்பு
      7.087 திருப்பனையூர் 882-891 மின்பதிப்பு
      7.088 திருவீழிமிழலை 892-901 மின்பதிப்பு
      7.089 திருவெண்பாக்கம் 902-912 மின்பதிப்பு
      7.090 கோயில் 913-922 மின்பதிப்பு
      7.091 திருவொற்றியூர் 923-932 மின்பதிப்பு
      7.092 திருப்புக்கொளியூர் அவிநாசி 933-942 மின்பதிப்பு
      7.093 திருநறையூர்ச்சித்தீச்சரம் 943-953 மின்பதிப்பு
      7.094 திருச்சோற்றுத்துறை 954-963 மின்பதிப்பு
      7.095 திருவாரூர் 964-974 மின்பதிப்பு
      7.096 திருவாரூர்ப்பரவையுண்மண்டளி 975-984 மின்பதிப்பு
      7.097 திருநனிபள்ளி 985-994 மின்பதிப்பு
      7.098 திருநன்னிலத்துப்பெருங்கோயில் 995-1005 மின்பதிப்பு
      7.099 திருநாகேச்சரம் 1006-1016 மின்பதிப்பு
      7.100 திருநொடித்தான்மலை 1017-1026 மின்பதிப்பு
      ------------------------------------------------------------------------
      சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி
      7.51 திருவாரூர்
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      518 பத்திமையும் அடிமையையுங்
      கைவிடுவான் பாவியேன்
      பொத்தினநோ யதுவிதனை
      பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
      முத்தினைமா மணிதன்னை
      வயிரத்தை மூர்க்கனேன்
      எத்தனைநா பிரிந்திருக்கேன்
      என்னாரூர் இறைவனையே. 7.51.1
      519 ஐவணமாம் பகழியுடை
      அடல்மதனன் பொடியாக
      செவ்வணமா திருநயனம்
      விழிசெய்த சிவமூர்த்தி
      மையணவு கண்டத்து
      வளர்சடையெம் மாரமுதை
      எவ்வணம்நான் பிரிந்திருக்கேன்
      என்னாரூர் இறைவனையே. 7.51.2
      520 சங்கலக்கு தடங்கடல்வாய்
      விடஞ்சுடவ தமரர்தொழ
      அங்கலக்கண் தீர்த்துவிடம்
      உண்டுகந்த அம்மானை
      இங்கலக்கும் உடற்பிறந்த
      அறிவிலியேன் செறிவின்றி
      எங்குலக்க பிரிந்திருக்கேன்
      என்னாரூர் இறைவனையே. 7.51.3
      521 இங்ஙனம்வ திடர்ப்பிறவி
      பிறந்தயர்வேன் அயராமே
      அங்ஙனம்வ தெனையாண்ட
      அருமருந்தென் ஆரமுதை
      வெங்கனல்மா மேனியனை
      மான்மருவுங் கையானை
      எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன்
      என்னாரூர் இறைவனையே. 7.51.4
      522 செப்பரிய அயனொடுமால்
      சிந்தித்து தெரிவரிய
      அப்பெரிய திருவினையே
      அறியாதே அருவினையேன்
      ஒப்பரிய குணத்தானை
      இணையிலியை அணைவின்றி
      எப்பரிசு பிரிந்திருக்கேன்
      என்னாரூர் இறைவனையே. 7.51.5
      523 வன்னாகம் நாண்வரைவில்
      அங்கிகணை அரிபகழி
      தன்னாகம் உறவாங்கி
      புரமெரித்த தன்மையனை
      முன்னாக நினையாத
      மூர்க்கனேன் ஆக்கைசு
      தென்னாக பிரிந்திருக்கேன்
      என்னாரூர் இறைவனையே. 7.51.6
      524 வன்சயமாய் அடியான்மேல்
      வருங்கூற்றின் உரங்கிழிய
      முன்சயமார் பாதத்தால்
      முனிந்துகந்த மூர்த்திதனை
      மின்செயும்வார் சடையானை
      விடையானை அடைவின்றி
      என்செயநான் பிரிந்திருக்கேன்
      என்னாரூர் இறைவனையே. 7.51.7
      525 முன்னெறிவா னவர்கூடி
      தொழுதேத்தும் முழுமுதலை
      அந்நெறியை அமரர்தொழும்
      நாயகனை அடியார்கள்
      செந்நெறியை தேவர்குல
      கொழுந்தைமற திங்ஙனம்நான்
      என்னறிவான் பிரிந்திருக்கேன்
      என்னாரூர் இறைவனையே. 7.51.8
      526 கற்றுளவான் கனியாய
      கண்ணுதலை கருத்தார
      உற்றுளனாம் ஒருவனைமுன்
      இருவர்நினை தினிதேத்த
      பெற்றுளனாம் பெருமையனை
      பெரிதடியேன் கையகன்றி
      டெற்றுளனா பிரிந்திருக்கேன்
      என்னாரூர் இறைவனையே. 7.51.9
      527 ஏழிசையாய் இசைப்பயனாய்
      இன்னமுதாய் என்னுடைய
      தோழனுமாய் யான்செய்யு
      துரிசுகளு குடனாகி
      மாழையொண்கண் பரவையைத்த
      தாண்டானை மதியில்லா
      ஏழையேன் பிரிந்திருக்கேன்
      என்னாரூர் இறைவனையே. 7.51.10
      528 வங்கமலி கடல்நஞ்சை
      வானவர்கள் தாமுய்ய
      நுங்கிஅமு தவர்க்கருளி
      நொய்யேனை பொருட்படுத்து
      சங்கிலியோ டெனைப்புணர்த்த
      தத்துவனை சழக்கனேன்
      எங்குலக்க பிரிந்திருக்கேன்
      என்னாரூர் இறைவனையே. 7.51.11
      529 பேரூரும் மதகரியின்
      உரியானை பெரியவர்தஞ்
      சீரூரு திருவாரூர
      சிவனடியே திறம்விரும்பி
      ஆரூரன் அடித்தொண்டன்
      அடியன்சொல் அகலிடத்தில்
      ஊரூரன் இவைவல்லார்
      உலகவர்க்கு மேலாரே. 7.51.12
      இது திருவொற்றியூரிற் சங்கிலிநாச்சியாருடன்
      இருக்கும்போது வீதிவிடங்கப்பெருமானுடைய
      திருவோலக்கதரிசன ஞாபகம்வர ஓதியருளிய பதிகம்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.52 திருவாலங்காடு
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      530 முத்தா முத்தி தரவல்ல
      முகிழ்மென் முலையா ளுமைபங்கா
      சித்தா சித்தி திறங்காட்டுஞ்
      சிவனே தேவர் சிங்கமே
      பத்தா பத்தர் பலர்போற்றும்
      பரமா பழைய னூர்மேய
      அத்தா ஆலங் காடாவுன்
      அடியார கடியேன் ஆவேனே. 7.52.1
      531 பொய்யே செய்து புறம்புறமே
      திரிவேன் றன்னை போகாமே
      மெய்யே வந்திங் கெனையாண்ட
      மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே
      பையா டரவம் அரைக்கசைத்த
      பரமா பழைய னூர்மேய
      ஐயா ஆலங் காடாவுன்
      அடியார கடியேன் ஆவேனே. 7.52.2
      532 தூண்டா விளக்கின் நற்சோதீ
      தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
      பூண்டாய் எலும்பை புரமூன்றும்
      பொடியா செற்ற புண்ணியனே
      பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும்
      பரமா பழைய னூர்மேய
      ஆண்டா ஆலங் காடாவுன்
      அடியார கடியேன் ஆவேனே. 7.52.3
      533 மறிநேர் ஒண்கண் மடநல்லார்
      வலையிற் பட்டு மதிமயங்கி
      அறிவே அழிந்தே னையாநான்
      மையார் கண்ட முடையானே
      பறியா வினைக ளவைதீர்க்கும்
      பரமா பழைய னூர்மேய
      அறிவே ஆலங் காடாவுன்
      அடியார கடியேன் ஆவேனே. 7.52.4
      534 வேலங் காடு தடங்கண்ணார்
      வலையு பட்டுன் நெறிமறந்து
      மாலங் காடி மறந்தொழிந்தேன்
      மணியே முத்தே மரகதமே
      பாலங் காடி நெய்யாடி
      படர்புன் சடையாய் பழையனூர்
      ஆலங் காடா உன்னுடைய
      அடியார கடியேன் ஆவேனே. 7.52.5
      535 எண்ணார் தங்கள் எயிலெய்த
      எந்தாய் எந்தை பெருமானே
      கண்ணாய் உலகங் காக்கின்ற
      கருத்தா திருத்த லாகாதாய்
      பண்ணா ரிசைக ளவைகொண்டு
      பலரும் ஏத்தும் பழையனூர்
      அண்ணா ஆலங் காடாவுன்
      அடியார கடியேன் ஆவேனே. 7.52.6
      536 வண்டார் குழலி உமைநங்கை
      பங்கா கங்கை மணவாளா
      விண்டார் புரங்க ளெரிசெய்த
      விடையாய் வேத நெறியானே
      பண்டாழ் வினைகள் பலதீர்க்கும்
      பரமா பழைய னூர்மேய
      அண்டா ஆலங் காடாவுன்
      அடியார கடியேன் ஆவேனே. 7.52.7
      537 பேழ்வா யரவி னணையானும்
      பெரிய மலர்மே லுறைவானு
      தாழா துன்றன் சரண்பணி
      தழலாய் நின்ற தத்துவனே
      பாழாம் வினைக ளவைதீர்க்கும்
      பரமா பழையனூர் தன்னை
      ஆள்வாய் ஆலங் காடாவுன்
      அடியார கடியேன் ஆவேனே. 7.52.8
      538 எம்மான் எந்தை மூத்தப்பன்
      ஏழேழ் படிகால் எமையாண்ட
      பெம்மான் ஈ புறங்காட்டிற்
      பேயோ டாடல் புரிவானே
      பன்மா மலர்க ளவைகொண்டு
      பலரும் ஏத்தும் பழையனூர்
      அம்மா ஆலங் காடாவுன்
      அடியார கடியேன் ஆவேனே. 7.52.9
      539 பத்தர் சித்தர் பலரேத்தும்
      பரமன் பழைய னூர்மேய
      அத்தன் ஆலங் காடன்றன்
      அடிமை திறமே அன்பாகி
      சித்தர் சித்தம் வைத்தபுகழ
      சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள்
      பத்தும் பாடி ஆடுவார்
      பரமன் அடியே பணிவாரே. 7.52.10
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஊர்த்துவதாண்டவேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.53 திருக்கடவூர் மயானம்
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      540 மருவார் கொன்றை மதிசூடி
      மாணி கத்தின் மலைபோல
      வருவார் விடைமேல் மாதோடு
      மகிழ்ந்து பூத படைசூழ
      திருமால் பிரமன் இந்திரற்கு
      தேவர் நாகர் தானவர்க்கும்
      பெருமான் கடவூர் மயானத்து
      பெரிய பெருமா னடிகளே. 7.53.1
      541 விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்
      மார்பர் வேத கீதத்தர்
      கண்ணார் நுதலர் நகுதலையர்
      கால காலர் கடவூரர்
      எண்ணார் புரமூன் றெரிசெய்த
      இறைவ ருமையோ ரொருபாகம்
      பெண்ணா ணாவர் மயானத்து
      பெரிய பெருமா னடிகளே. 7.53.2
      542 காயும் புலியின் அதளுடையர்
      கண்டர் எண்டோ கடவூரர்
      தாயு தந்தை பல்லுயிர்க்கு
      தாமே யாய தலைவனார்
      பாயும் விடையொன் றதுவேறி
      பலிதேர துண்ணும் பரமேட்டி
      பேய்கள் வாழும் மயானத்து
      பெரிய பெருமா னடிகளே. 7.53.3
      543 நறைசேர் மலரைங் கணையானை
      நயன தீயாற் பொடிசெய்த
      இறையா ராவர் எல்லார்க்கும்
      இல்லை யென்னா தருள்செய்வார்
      பறையார் முழவம் பாட்டோ டு
      பயிலு தொண்டர் பயில்கடவூர
      பிறையார் சடையார் மயானத்து
      பெரிய பெருமா னடிகளே. 7.53.4
      544 கொத்தார் கொன்றை மதிசூடி
      கோள்நா கங்கள் பூணாக
      மத்த யானை உரிபோர்த்து
      மருப்பும் ஆமை தாலியார்
      பத்தி செய்து பாரிடங்கள்
      பாடி ஆட பலிகொள்ளும்
      பித்தர் கடவூர் மயானத்து
      பெரிய பெருமா னடிகளே. 7.53.5
      545 துணிவார் கீளுங் கோவணமு
      துதைந்து சுடலை பொடியணிந்து
      பணிமே லிட்ட பாசுபதர்
      பஞ்ச வடிமார் பினர்கடவூர
      திணிவார் குழையார் புரமூன்று
      தீவா படுத்த சேவகனார்
      பிணிவார் சடையார் மயானத்து
      பெரிய பெருமா னடிகளே.
      பஞ்சவடியாவது மயிர்ப்பூணநூல். இது மாவிரதியரென்னும்
      உட்சமயத்தாரணிவது. மேலும் அவர்களணியுமணி எலும்பினாலாகிய
      மணிகள். இவற்றை மானக்கஞ்சாறநாயனார் புராணத்து 23-வது
      திருவிருத்தத்தானுமுணர்க. 7.53.6
      546 காரார் கடலின் நஞ்சுண்ட
      கண்டர் கடவூர் உறைவாணர்
      தேரார் அரக்கன் போய்வீழ்ந்து
      சிதைய விரலா லூன்றினார்
      ஊர்தான் ஆவ துலகேழும்
      உடையார கொற்றி யூராரூர்
      பேரா யிரவர் மயானத்து
      பெரிய பெருமா னடிகளே. 7.53.7
      547 வாடா முலையாள் தன்னோடும்
      மகிழ்ந்து கானில் வேடுவனா
      கோடார் கேழற் பின்சென்று
      குறுகி விசயன் தவமழித்து
      நாடா வண்ணஞ் செருச்செய்து
      ஆவ நாழி நிலையருள்செய்
      பீடார் சடையார் மயானத்து
      பெரிய பெருமா னடிகளே. 7.53.8
      548 வேழம் உரிப்பர் மழுவாளர்
      வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்
      ஆழி அளிப்பர் அரிதனக்கன்
      றானஞ் சுகப்பர் அறமுரைப்பர்
      ஏழை தலைவர் கடவூரில்
      இறைவர் சிறுமான் மறிக்கையர்
      பேழை சடையர் மயானத்து
      பெரிய பெருமா னடிகளே. 7.53.9
      549 மாட மல்கு கடவூரில்
      மறையோ ரேத்தும் மயானத்து
      பீடை தீர அடியாரு
      கருளும் பெருமா னடிகள்சீர்
      நாடி நாவ லாரூரன்
      நம்பி சொன்ன நற்றமிழ்கள்
      பாடு மடியார் கேட்பார்மேற்
      பாவ மான பறையுமே. 7.53.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.54 திருவொற்றியூர்
      பண் - தக்கேசி
      திருச்சிற்றம்பலம்
      550 அழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன்
      அதுவும் நான்பட பாலதொன் றானாற்
      பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
      பிழைப்பன் ஆகிலு திருவடி பிழையேன்
      வழுக்கி வீழினு திருப்பெய ரல்லால்
      மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
      ஒழுக்க என்கணு கொருமரு துரையாய்
      ஒற்றி யூரெனும் ஊருறை வானே. 7.54.1
      551 கட்ட னேன்பிற தேன்உன காளாய்
      காதற் சங்கிலி காரண மாக
      எட்டி னாற்றிக ழுந்திரு மூர்த்தி
      என்செய் வான்அடி யேன்எடு துரைக்கேன்
      பெட்ட னாகிலு திருவடி பிழையேன்
      பிழைப்ப னாகிலு திருவடி கடிமை
      ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்
      ஒற்றி யூரெனும் ஊருறை வானே. 7.54.2
      552 கங்கை தங்கிய சடையுடை கரும்பே
      கட்டி யேபலர குங்களை கண்ணே
      அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே
      அத்தா என்னிடர் ஆர்க்கெடு துரைக்கேன்
      சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல
      வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி
      ஒங்கு மாகடல் ஓதம்வ துலவும்
      ஒற்றி யூரெனும் ஊருறை வானே. 7.54.3
      553 ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றா
      லியாவ ராகிலென் அன்புடை யார்கள்
      தோன்ற நின்றருள் செய்தளி திட்டாற்
      சொல்லு வாரைஅல் லாதன சொல்லாய்
      மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்
      கொள்வ தேகண குவழ காகில்
      ஊன்று கோல்என காவதொன் றருளாய்
      ஒற்றி யூரெனும் ஊருறை வானே. 7.54.4
      554 வழித்த லைப்படு வான்முயல் கின்றேன்
      உன்னை போல்என்னை பாவிக்க மாட்டேன்
      சுழித்த லைப்பட்ட நீரது போல
      சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளங்
      கழித்த லைப்பட்ட நாயது போல
      ஒருவன் கோல்பற்றி கறகற இழுக்கை
      ஒழித்து நீயரு ளாயின செய்யாய்
      ஒற்றி யூரெனும் ஊருறை வானே. 7.54.5
      555 மானை நோக்கியர் கண்வலை பட்டு
      வருந்தி யானுற்ற வல்வினை கஞ்சி
      தேனை ஆடிய கொன்றையி னாய்உன்
      சீல முங்குண முஞ்சிந்தி யாதே
      நானும் இத்தனை வேண்டுவ தடியேன்
      உயிரொ டும்நர கத்தழு தாமை
      ஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய்
      ஒற்றி யூரெனும் ஊருறை வானே. 7.54.6
      556 மற்று தேவரை நினைந்துனை மறவேன்
      எஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன்
      பெற்றி ருந்து பெறாதொழி கின்ற
      பேதை யேன்பிழை திட்டதை அறியேன்
      முற்றும் நீஎனை முனிந்திட அடியேன்
      கடவ தென்னுனை நான்மற வேனேல்
      உற்ற நோயுறு பிணிதவிர தருளாய்
      ஒற்றி யூரெனும் ஊருறை வானே. 7.54.7
      557 கூடினாய் மலை மங்கையை நினையாய்
      கங்கை ஆயிர முகம்உடை யாளை
      சூடி னாயென்று சொல்லிய புக்கால்
      தொழும்ப னேனுக்குஞ் சொல்லலு மாமே
      வாடி நீயிரு தென்செய்தி மனனே
      வருந்தி யானுற்ற வல்வினை கஞ்சி
      ஊடி னாலினி ஆவதொன் றுண்டே
      ஒற்றி யூரெனும் ஊருறை வானே. 7.54.8
      558 மகத்திற் புக்கதோர் சனிஎன கானாய்
      மைந்த னேமணி யேமண வாளா
      அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்
      அழையேற் போகுரு டாஎன தரியேன்
      முகத்திற் கண்ணிழ தெங்ஙனம் வாழ்கேன்
      முக்க ணாமுறை யோமறை யோதீ
      உகைக்கு தண்கடல் ஓதம்வ துலவும்
      ஒற்றி யூரெனும் ஊருறை வானே. 7.54.9
      559 ஓதம் வந்துல வுங்கரை தன்மேல்
      ஒற்றி யூருறை செல்வனை நாளும்
      ஞால தான்பர வப்படு கின்ற
      நான்ம றையங்கம் ஓதிய நாவன்
      சீல தான்பெரி தும்மிக வல்ல
      சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த
      பாடல் பத்திவை வல்லவர் தாம்போ
      பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே. 7.54.10
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - படம்பக்கநாதர்
      தேவியார் - வடிவுடையம்மை.
      இது உன்னைப்பிரிந்துபோவதில்லையென்று சங்கிலி நாச்சியாருக்கு
      சூளுரைசெய்து மணந்துமகிழ திருக்கையில் திருவாரூர்
      வீதிவிடங்கப்பெருமானுடய திருவோலக்க தரிசனஞ்செய்வதற்கின்றி
      நெடுநாள் பிரிந்திருக்கின்றோமேயென்னும் ஞாபகமுண்டாக
      பரமசிவத்தின் திருவிளையாட்டால் முன்கூறிய சூளுரையைமறந்து
      திருவொற்றியூரெல்லையை கடந்தவளவில் நேத்திரங்களுக்கு
      அபாவந்தோன்ற வருந்தி துதிசெய்த பதிகம்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.55 திருப்புன்கூர்
      பண் - தக்கேசி
      திருச்சிற்றம்பலம்
      560 அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத
      அவனை காப்பது காரண மாக
      வந்த காலன்றன் ஆருயி ரதனை
      வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
      எந்தை நீயெனை நமன்றமர் நலியின்
      இவன்மற் றென்னடி யானென விலக்குஞ்
      சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன்
      செழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே. 7.55.1
      561 வைய கமுற்றும் மாமழை மறந்து
      வயலில் நீரிலை மாநில தருகோம்
      உ கொள்கமற் றெங்களை என்ன
      ஒலிகொள் வெண்முகி லாய்ப்பர தெங்கும்
      பெய்யும் மாமழை பெருவெள்ள தவிர்த்து
      பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளுஞ்
      செய்கை கண்டுநின் றிருவடி அடைந்தேன்
      செழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே. 7.55.2
      562 ஏத நன்னிலம் ஈரறு வேலி
      ஏயர் கோனுற்ற இரும்பிணி தவிர்த்து
      கோத னங்களின் பால்கற தாட்ட
      கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
      தாதை தாளற எறிந்ததண் டிக்குன்
      சடைமி சைமலர் அருள்செ கண்டு
      பூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன்
      பூம்பொ ழிற்றிரு புன்கூர் உளானே. 7.55.3
      563 நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
      நாவினு கரையன் நாளைப்போ வானுங்
      கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
      கண்ண பன்கணம் புல்லனென் றிவர்கள்
      குற்றஞ் செய்யினுங் குணமென கருதுங்
      கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
      பொற்றி ரள்மணி கமலங்கள் மலரும்
      பொய்கை சூழ்திரு புன்கூர் உளானே. 7.55.4
      564 கோல மால்வரை மத்தென நாட்டி
      கோள ரவுசுற் றிக்கடை தெழுந்த
      ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
      அமரர் கட்கருள் புரிவது கருதி
      நீல மார்கடல் விடந்தனை உண்டு
      கண்ட தேவைத்த பித்தநீ செய்த
      சீலங் கண்டுநின் றிருவடி அடைந்தேன்
      செழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே. 7.55.5
      565 இயக்கர் கின்னரர் யமனொடு வருணர்
      இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
      மயக்கம் இல்புலி வானரம் நாகம்
      வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
      அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி அதனை
      அர்ச்சி தார்பெறும் ஆரருள் கண்டு
      திகைப்பொன் றின்றிநின் றிருவடி அடைந்தேன்
      செழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே. 7.55.6
      566 போர்த்த நீள்செவி யாளர்அ தணர்க்கு
      பொழில்கொள் ஆல்நிழற் கீழறம் புரிந்து
      பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடு
      தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட
      ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை
      நங்கை யாளைநின் சடைமிசை கரந்த
      தீர்த்த னேநின்றன் றிருவடி அடைந்தேன்
      செழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே. 7.55.7
      567 மூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
      இருவர் நின்றிரு கோயிலின் வாய்தல்
      காவ லாளரென் றேவிய பின்னை
      ஒருவ நீகரி காடரங் காக
      மானை நோக்கியோர் மாநடம் மகிழ
      மணிமு ழாமுழ கஅருள் செய்த
      தேவ தேவநின் றிருவடி அடைந்தேன்
      செழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே. 7.55.8
      568 அறிவி னால்மிக்க அறுவகை சமயம்
      அவ்வ வர்க்கங்கே ஆரருள் புரிந்து
      எறியு மாகடல் இலங்கையர் கோனை
      துலங்க மால்வரை கீழடர திட்டு
      குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டு
      கோல வாளொடு நாளது கொடுத்த
      செறிவு கண்டுநின் றிருவடி அடைந்தேன்
      செழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே. 7.55.9
      569 கம்ப மால்களிற் றின்னுரி யானை
      காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானை
      செம்பொ னேயொக்கு திருவுரு வானை
      செழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானை
      உம்பர் ஆளியை உமையவள் கோனை
      ஊரன் வன்றொண்டன் உள்ள தாலுக
      தன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோ
      டைந்தும் வல்லவர் அருவினை இலரே. 7.55.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சிவலோகநாதர் தேவியார்
      சுந்தரமூர்த்திசுவாமிகள் திருப்புன்கூருக்கெழுந்தருளியபோது அந்தத்தலத்தார்
      கண்டு தொழுது சுவாமீ இங்கு நெடுநாளாக மழைபொழிதலின்றி
      வருந்துகிறோம் ஆதலால் கிருபைபாலிக்கவேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய
      மழைபொழிந்தால் சுவாமிக்கியாது தருவீர்களென்ன அவர்கள் பன்னிரண்டு
      வேலி நிலந்தருகிறோமென்ன கிருபை கூர்ந்து இந்தப்பதிகமோதியருளலும்
      மழை அதிகமாய்ப்பெய்ய அவர்களுடையவேண்டுதலினால்
      பெய்யும்படிசெய்து முன்னமவர்கள் சொல்லிய பன்னிரண்டுவேலி நிலமேயன்றி
      மீட்டும் பன்னிரண்டுவேலி நிலங்கொடுக்கப்பெற்றருளியது.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.56 திருநீடூர்
      பண் - தக்கேசி
      திருச்சிற்றம்பலம்
      570 ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை
      ஒண்ணு தல்தனி கண்ணுத லானை
      கார தார்கறை மாமிடற் றானை
      கருத லார்புரம் மூன்றெரி தானை
      நீரில் வாளை வரால்குதி கொள்ளும்
      நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர
      பாரு ளார்பர வித்தொழ நின்ற
      பரம னைப்பணி யாவிட லாமே. 7.56.1
      571 துன்னு வார்சடை தூமதி யானை
      துயக்கு றாவகை தோன்றுவி பானை
      பன்னு நான்மறை பாடவல் லானை
      பார்த்த னுக்கருள் செய்தபி ரானை
      என்னை இன்னருள் எய்துவி பானை
      ஏதி லார்த கேதிலன் றன்னை
      புன்னை மாதவி போதலர் நீடூர
      புனித னைப்பணி யாவிட லாமே. 7.56.2
      572 கொல்லும் மூவிலை வேலுடை யானை
      கொடிய காலனை யுங்குமை தானை
      நல்ல வாநெறி காட்டுவி பானை
      நாளும் நாம்உ கின்ற பிரானை
      அல்ல லில்லரு ளேபுரி வானை
      ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர
      கொல்லை வெள்ளெரு தேறவல் லானை
      கூறி நாம்பணி யாவிட லாமே. 7.56.3
      573 தோடு காதிடு தூநெறி யானை
      தோற்ற முந்துற பாயவன் றன்னை
      பாடு மாமறை பாடவல் லானை
      பைம்பொ ழிற்குயில் கூவிட மாடே
      ஆடு மாமயில் அன்னமோ டாட
      அலைபு னற்கழ னித்திரு நீடூர்
      வேட னாயபி ரானவன் றன்னை
      விரும்பி நாம்பணி யாவிட லாமே. 7.56.4
      574 குற்ற மொன்றடி யாரிலர் ஆனாற்
      கூடு மாறத னைக்கொடு பானை
      கற்ற கல்வியி லும்மினி யானை
      காண பேணும வர்க்கெளி யானை
      முற்ற அஞ்சு துறந்திரு பானை
      மூவ ரின்முத லாயவன் றன்னை
      சுற்று நீள்வயல் சூழ்திரு நீடூர
      தோன்ற லைப்பணி யாவிட லாமே. 7.56.5
      575 காடில் ஆடிய கண்ணுத லானை
      கால னைக்கடி திட்டபி ரானை
      பாடி ஆடும்பரி சேபுரி தானை
      பற்றி னோடுசுற் றம்மொழி பானை
      தேடி மாலயன் காண்பரி யானை
      சித்த முந்தெளி வார்க்கெளி யானை
      கோடி தேவர்கள் கும்பிடு நீடூர
      கூத்த னைப்பணி யாவிட லாமே. 7.56.6
      576 விட்டி லங்கெரி யார்கையி னானை
      வீடி லாதவி யன்புக ழானை
      கட்டு வாங்க தரித்தபி ரானை
      காதி லார்கன கக்குழை யானை
      விட்டி லங்குபுரி நூலுடை யானை
      வீந்த வர்தலை யோடுகை யானை
      கட்டி யின்கரும் போங்கிய நீடூர
      கண்டு நாம்பணி யாவிட லாமே. 7.56.7
      577 மாய மனங்கெடு
      மனத்து ளேமதி யாய்இரு பானை
      காய மாயமும் ஆக்குவி பானை
      காற்று மாய்க்கன லாய்க்கழி பானை
      ஓயு மாறுரு நோய்புணர பானை
      ஒல்லை வல்வினை கள்கெடு பானை
      வேய்கொள் தோள்உமை பாகனை நீடூர்
      வேந்த னைப்பணி யாவிட லாமே. 7.56.8
      578 கண்ட முங்கறு திட்டபி ரானை
      காண பேணும வர்க்கெளி யானை
      தொண்ட ரைப்பெரி தும்முக பானை
      துன்ப முந்துற தின்பினி யானை
      பண்டை வல்வினை கள்கெடு பானை
      பாக மாமதி யாயவன் றன்னை
      கெண்டை வாளை கிளர்புனல் நீடூர
      கேண்மை யாற்பணி யாவிட லாமே. 7.56.9
      579 அல்லல் உள்ளன தீர்த்திடு வானை
      அடைந்த வர்க்கமு தாயிடு வானை
      கொல்லை வல்லர வம்மசை தானை
      கோல மார்கரி யின்னுரி யானை
      நல்ல வர்க்கணி யானவன் றன்னை
      நானுங் காதல்செய் கின்றபி ரானை
      எல்லி மல்லிகை யேகமழ் நீடூர்
      ஏத்தி நாம்பணி யாவிட லாமே. 7.56.10
      580 பேரோர் ஆயிர மும்முடை யானை
      பேரி னாற்பெரி தும்மினி யானை
      நீரூர் வார்சடை நின்மலன் றன்னை
      நீடூர் நின்றுக திட்டபி ரானை
      ஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய்
      ஆத ரித்தழை திட்டவிம் மாலை
      பாரூ ரும்பர வித்தொழ வல்லார்
      பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே. 7.56.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சோமநாதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.57 திருவாழ்கொளிபுத்தூர்
      பண் - தக்கேசி
      திருச்சிற்றம்பலம்
      581 தலைக்க லன்றலை மேல்தரி தானை
      தன்னைஎன் னைநினை கத்தரு வானை
      கொலைக்கை யானைஉரி போர்த்துக தானை
      கூற்றுதை தகுரை சேர்கழ லானை
      அலைத்த செங்கண்விடை ஏறவல் லானை
      ஆணை யால்அடி யேன்அடி நாயேன்
      மலைத்தசெ நெல்வயல் வாழ்கொளி புத்தூர்
      மாணிக்க தைமற தென்நினை கேனே. 7.57.1
      582 படைக்க சூலம் பயிலவல் லானை
      பாவி பார்மனம் பரவிக்கொண் டானை
      கடைக்கட்பி சைக்கிச்சை காதலி தானை
      காமன்ஆ கந்தனை கட்டழி தானை
      சடைக்க கங்கையை தாழவை தானை
      தண்ணீர்மண் ணிக்கரை யானைத்த கானை
      மடைக்கண்நீ லம்அலர் வாழ்கொளி புத்தூர்
      மாணிக்க தைமற தென்நினை கேனே. 7.57.2
      583 வெந்த நீறுமெய் பூசவல் லானை
      வேத மால்விடை ஏறவல் லானை
      அந்தம் ஆதிஅறி தற்கரி யானை
      ஆறலை தசடை யானைஅம் மானை
      சிந்தை யென்றடு மாற்றறு பானை
      தேவ தேவனென் சொல்முனி யாதே
      வந்தென் உள்ளம்புகும் வாழ்கொளி புத்தூர்
      மாணிக்க தைமற தென்நினை கேனே. 7.57.3
      584 தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரை
      தன்னடி கேசெல்லு மாறுவல் லானை
      படங்கொள் நாகம்அரை ஆர்த்துக தானை
      பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை
      நடுங்க ஆனைஉரி போர்த்துக தானை
      நஞ்சம் உண்டுகண் டங்கறு தானை
      மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர்
      மாணிக்க தைமற தென்நினை கேனே. 7.57.4
      585 வளைக்கை முன்கைமலை மங்கை மணாளன்
      மார னார்உடல் நீறெழ செற்று
      துளைத்த அங்கத்தொடு தூமலர கொன்றை
      தோலும்நூ லுந்துதை தவரை மார்பன்
      திளைக்கு தெவ்வர் திரிபுரம் மூன்றும்
      அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
      வளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர்
      மாணிக்க தைமற தென்நினை கேனே. 7.57.5.
      586 திருவின் நாயகன் ஆகிய மாலு
      கருள்கள் செய்திடும் தேவர் பிரானை
      உருவி னானைஒன் றாவறி வொண்ணா
      மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்
      செருவில் ஏந்தியோர் கேழற்பின் சென்று
      செங்கண் வேடனாய் என்னொடும் வந்து
      மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர்
      மாணிக்க தைமற தென்நினை கேனே. 7.57.6
      587 எந்தை யைஎந்தை தந்தை பிரானை
      ஏத மாயஇடர் தீர்க்கவல் லானை
      முந்தி யாகிய மூவரின் மிக்க
      மூர்த்தி யைமுதற் காண்பரி யானை
      கந்தின் மிக்ககரி யின்மரு போடு
      கார கில்கவ ரிம்மயிர் மண்ணி
      வந்து வந்திழி வாழ்கொளி புத்தூர்
      மாணிக்க தைமற தென்நினை கேனே. 7.57.7
      588 தேனை ஆடிய கொன்றையி னானை
      தேவர் கைதொழு
      ஊனம் ஆயின தீர்க்க வல்லானை
      ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானை
      கான ஆனையின் கொம்பினை பீழ்ந்த
      கள்ள பிள்ளைக்குங் காண்பரி தாய
      வான நாடனை வாழ்கொளி புத்தூர்
      மாணிக்க தைமற தென்நினை கேனே. 7.57.8
      589 காளை யாகி வரையெடு தான்றன்
      கைகள் இற்றவன் மொய்தலை எல்லாம்
      மூளை போத ஒருவிரல் வைத்த
      மூர்த்தி யைமுதல் காண்பரி யானை
      பாளை தெங்கு பழம்விழ மண்டி
      செங்கண் மேதிகள் சேடெறி தெங்கும்
      வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்
      மாணிக்க தைமற தென்நினை கேனே. 7.57.9
      590 திருந்த நான்மறை பாடவல் லானை
      தேவர குந்தெரி தற்கரி யானை
      பொருந்த மால்விடை ஏறவல் லானை
      பூதி பைபுலி தோலுடை யானை
      இருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும்
      ஏச நின்றவன் ஆருயிர கெல்லாம்
      மருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர்
      மாணிக்க தைமற தென்நினை கேனே. 7.57.10
      591 மெய்யனை மெய்யின் நின்றுணர் வானை
      மெய்யி லாதவர் தங்களு கெல்லாம்
      பொய்ய னைப்புரம் மூன்றெரி தானை
      புனித னைப்புலி தோலுடை யானை
      செய்ய னைவெளி யதிரு நீற்றில்
      திகழு மேனியன் மான்மறி ஏந்தும்
      மைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர்
      மாணிக்க தைமற தென்நினை கேனே. 7.57.11
      592 வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர்
      மாணிக்க தைமற தென்நினை கேனென்
      றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன்
      சடையன் காதலன் வனப்பகை அப்பன்
      நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்
      நங்கை சிங்கடி தந்தை பயந்த
      பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேல்
      பறையு மாஞ்செய்த பாவங்கள் தானே. 7.57.12
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்
      தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.58 திருக்கழுமலம்
      பண் - தக்கேசி
      திருச்சிற்றம்பலம்
      593 சாதலும் பிறத்தலு தவிர்த்தெனை வகுத்து
      தன்னருள் தந்தஎ தலைவனை மலையின்
      மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை
      வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
      ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
      எண்வகை ஒருவனை எங்கள்பி ரானை
      காதில்வெண் குழையனை கடல்கொள மிதந்த
      கழுமல வளநகர கண்டுகொண் டேனே. 7.58.1
      594 மற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன்
      வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்
      சுற்றிய சுற்றமு துணையென்று கருதேன்
      துணையென்று நான்தொழ பட்டஒண் சுடரை
      முத்தியும் ஞானமும் வானவர் அறியா
      முறைமுறை பலபல நெறிகளுங் காட்டி
      கற்பனை கற்பித்த கடவுளை அடியேன்
      கழுமல வளநகர கண்டுகொண் டேனே. 7.58.2
      595 திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என்
      செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்
      ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன்
      உணர்வுபெற் றேன்உய்யுங் காரண தன்னால்
      விருத்தனை பாலனை கனவிடை விரவி
      விழித்தெங்குங் காணமா டாதுவி டிருந்தேன்
      கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலை
      கழுமல வளநகர கண்டுகொண் டேனே. 7.58.3
      596 மழைக்கரும் பும்மலர கொன்றையி னானை
      வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
      பிழைத்தொரு கால்இனி போய்ப்பிற வாமை
      பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்
      குழைக்கருங் கண்டனை கண்டுகொள் வானே
      பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்
      கழைக்கரும் புங்கத லிப்பல சோலை
      கழுமல வளநகர கண்டுகொண் டேனே. 7.58.4
      597 குண்டலங் குழைதிகழ் காதனே என்றுங்
      கொடுமழு வாட்படை குழகனே என்றும்
      வண்டலம் பும்மலர கொன்றையன் என்றும்
      வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே
      பண்டைநம் பலமன முங்களை தொன்றா
      பசுபதி பதிவின விப்பல நாளுங்
      கண்டலங் கழிக்கரை ஓதம்வ துலவுங்
      கழுமல வளநகர கண்டுகொண் டேனே. 7.58.5
      598 வரும்பெரும் வல்வினை என்றிரு தெண்ணி
      வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
      விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர பெய்தி
      வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே
      அரும்பினை அலரினை அமுதினை தேனை
      ஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங்
      கரும்பினை பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனி
      கழுமல வளநகர கண்டுகொண் டேனே. 7.58.6
      599 அயலவர் பரவவும் அடியவர் தொழவும்
      அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்
      முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை
      படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணி
      புயலினை திருவினை பொன்னின தொளியை
      மின்னின துருவை என்னிடை பொருளை
      கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்
      கழுமல வளநகர கண்டுகொண் டேனே. 7.58.7
      600 நினைதரு பாவங்கள் நாசங்க ளாக
      நினைந்துமுன் தொழுதெழ பட்டஒண் சுடரை
      மலைதரு மலைமகள் கணவனை வானோர்
      மாமணி மாணிக்க தைம்மறை பொருளை
      புனைதரு புகழினை எங்கள தொளியை
      இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனை
      கனைதரு கருங்கடல் ஓதம்வ துலவுங்
      கழுமல வளநகர கண்டுகொண் டேனே. 7.58.8
      601 மறையிடை துணிந்தவர் மனையிடை இருப்ப
      வஞ்சனை செய்தவர் பொய்கையும் மா
      துறையுற குளித்துள தாகவை துய்த்த
      உண்மை யெனுந்தக வின்மையை ஓரேன்
      பிறையுடை சடையனை எங்கள்பி ரானை
      பேரரு ளாளனை காரிருள் போன்ற
      கறையணி மிடறுடை அடிகளை அடியேன்
      கழுமல வளநகர கண்டுகொண் டேனே. 7.58.9
      602 செழுமலர கொன்றையுங் கூவிள மலரும்
      விரவிய சடைமுடி அடிகளை நினைந்தி
      டழுமலர கண்ணிணை அடியவர கல்லால்
      அறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங்
      கழுமல வளநகர கண்டுகொண் டூரன்
      சடையன்றன் காதலன் பாடிய பத்து
      தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மை
      துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே. 7.58.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பிரமபுரியீசுவரர்
      தேவியார் - திருநிலைநாயகியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.59 திருவாரூர்
      பண் - தக்கேசி
      திருச்சிற்றம்பலம்
      603 பொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானை
      போக முந்திரு வும்புணர பானை
      பின்னை என்பிழை யைப்பொறு பானை
      பிழையெ லாந்தவி ரப்பணி பானை
      இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
      எம்மா னைஎளி வந்தபி ரானை
      அன்னம் வைகும் வயற்பழ னத்தணி
      ஆரூ ரானை மறக்கலு மாமே. 7.59.1
      604 கட்ட மும்பிணி யுங்களை வானை
      காலற் சீறிய காலுடை யானை
      விட்ட வேட்கைவெ நோய்களை வானை
      விரவி னால்விடு தற்கரி யானை
      பட்ட வார்த்தை படநின்ற
      வாரா மேதவி ரப்பணி பானை
      அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை
      ஆரூ ரானை மறக்கலு மாமே. 7.59.2
      605 கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானை
      கலைக்கெ லாம்பொரு ளாயுடன் கூடி
      பார்க்கின் றஉயிர குப்பரி தானை
      பகலுங் கங்குலும் ஆகிநின் றானை
      ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை
      உணரும் நாவினை காண்கின்ற கண்ணை
      ஆர்க்கின் றகட லைமலை தன்னை
      ஆரூ ரானை மறக்கலு மாமே. 7.59.3
      606 செத்த போதினில் முன்னின்று நம்மை
      சிலர்கள் கூடி சிரிப்பதன் முன்னம்
      வைத்த சிந்தைஉண் டேமனம் உண்டே
      மதிஉண் டேவிதி யின்பயன் உண்டே
      முத்தன் எங்கள்பி ரானென்று வானோர்
      தொழநின் றதிமில் ஏறுடை யானை
      அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை
      ஆரூ ரானை மறக்கலு மாமே. 7.59.4
      607 செறிவுண் டேல்மன தாற்றெளி வுண்டேல்
      தேற்ற தால்வருஞ் சிக்கன வுண்டேல்
      மறிவுண் டேல்மறு மைப்பிற புண்டேல்
      வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்
      பொறிவண் டாழ்செய்யும் பொன்மலர கொன்றை
      பொன்போ லுஞ்சடை மேற்புனை தானை
      அறிவுண் டேஉட லத்துயிர் உண்டே
      ஆரூ ரானை மறக்கலு மாமே. 7.59.5
      608 பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று
      பொருளுஞ் சுற்றமும் போகமும் ஆகி
      மெள்ள நின்றவர் செய்வன எல்லாம்
      வாரா மேதவிர கும்விதி யானை
      வள்ளல் எந்த கேதுணை என்று
      நாள்நா ளும்அம ரர்தொழு தேத்தும்
      அள்ள லங்கழ னிப்பழ னத்தணி
      ஆரூ ரானை மறக்கலு மாமே. 7.59.6
      609 கரியா னைஉரி கொண்டகை யானை
      கண்ணின் மேலொரு கண்ணுடை யானை
      வரியா னைவரு தங்களை வானை
      மறையா னைக்குறை மாமதி சூடற்
      குரியா னைஉல கத்துயிர கெல்லாம்
      ஒளியா னைஉக துள்கிநண் ணாதார
      கரியா னைஅடி யேற்கெளி யானை
      ஆரூ ரானை மறக்கலு மாமே. 7.59.7
      610 வாளா நின்று தொழும்அடி யார்கள்
      வான்ஆ ளப்பெறும் வார்த்தையை கேட்டும்
      நாணா ளும்மலர் இட்டுவணங் கார்
      நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்
      கேளா நான்கிட தேஉழை கின்றேன்
      கிளைக்கெ லாந்துணை யாமென கருதி
      ஆளா வான்பலர் முன்பழை கின்றேன்
      ஆரூ ரானை மறக்கலு மாமே. 7.59.8
      611 விடக்கை யேபெரு கிப்பல நாளும்
      வேட்கை யாற்பட்ட வேதனை தன்னை
      கடக்கி லேன்நெறி காணவும் மாட்டேன்
      கண்கு ழிந்திர பார்கையி லொன்றும்
      இடக்கி லேன்பர வைத்திரை கங்கை
      சடையா னைஉமை யாளையோர் பாக
      தடக்கி னானைஅ தாமரை பொய்கை
      ஆரூ ரானை மறக்கலு மாமே. 7.59.9
      612 ஒட்டி ஆட்கொண்டு போயொளி திட்ட
      உச்சி போதனை நச்சர வார்த்த
      பட்டி யைப்பக லையிருள் தன்னை
      பாவி பார்மன தூறு தேனை
      கட்டி யைக்கரும் பின்றெளி தன்னை
      காத லாற்கடல் சூர்தடி திட்ட
      செட்டி யப்பனை பட்டனை செல்வ
      ஆரூ ரானை மறக்கலு மாமே. 7.59.10
      613 ஓரூ ரென்றுல கங்களு கெல்லாம்
      உரைக்க லாம்பொரு ளாயுடன் கூடி
      காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை
      முடியன் காரிகை காரண மாக
      ஆரூ ரைம்மற தற்கரி யானை
      அம்மான் றன்றிரு பேர்கொண்ட தொண்டன்
      ஆரூ ரன்னடி நாயுரை வல்லார்
      அமர லோக திருப்பவர் தாமே. 7.59.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.60 திருவிடைமருதூர்
      பண் - தக்கேசி
      திருச்சிற்றம்பலம்
      614 கழுதை குங்கு தான்சு தெய்த்தாற்
      கைப்பர் பாழ்புக மற்றது போல
      பழுது நான்உழன் றுள்தடு மாறி
      படுசு ழித்தலை பட்டனன் எந்தாய்
      அழுது நீயிரு தென்செய்தி மனனே
      அங்க ணாஅர னேயென மாட்டா
      இழுதை யேனுக்கோர் உய்வகை அருளாய்
      இடைம ருதுறை எந்தைபி ரானே. 7.60.1
      615 நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே
      நன்றி யில்வினை யேதுணி தெய்த்தேன்
      அரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன்
      அஞ்சி னேன்நம னாரவர் தம்மை
      உரைப்பன் நானுன சேவடி சேர
      உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத
      இரைப்ப னேனுக்கோர் உய்வகை அருளாய்
      இடைம ருதுறை எந்தைபி ரானே. 7.60.2
      616 புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்
      போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்
      என்னெ னக்கினி இற்றைக்கு நாளை
      என்றி ருந்திடர் உற்றனன் எந்தாய்
      முன்ன மேஉன சேவடி சேரா
      மூர்க்க னாகி கழிந்தன காலம்
      இன்னம் என்றன குய்வகை அருளாய்
      இடைம ருதுறை எந்தைபி ரானே. 7.60.3
      617 முந்தி செய்வினை இம்மைக்கண் நலிய
      மூர்க்க னாகி கழிந்தன காலம்
      சிந்தி தேமனம் வைக்கவும் மாட்டேன்
      சிறுச்சிறி தேஇர பார்கட்கொன் றீயேன்
      அந்தி வெண்பிறை சூடும்எம் மானே
      ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
      எந்தை நீயென குய்வகை அருளாய்
      இடைம ருதுறை எந்தைபி ரானே. 7.60.4
      618 அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்
      ஐவ ரும்புர வாசற ஆண்டு
      கழித்து காற்பெய்து போயின பின்னை
      கடைமு றைஉன கேபொறை ஆனேன்
      விழித்து கண்டனன் மெய்ப்பொருள் தன்னை
      வேண்டேன் மானுட வாழ்க்கையீ தாகில்
      இழித்தேன் என்றன குய்வகை அருளாய்
      இடைம ருதுறை எந்தைபி ரானே. 7.60.5
      619 குற்ற தன்னொடு குணம்பல பெருக்கி
      கோல நுண்ணிடை யாரொடு மயங்கி
      கற்றி லேன்கலை கள்பல ஞானங்
      கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்
      பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்
      பாவி யேன்பல பாவங்கள் செய்தேன்
      எற்று ளேன்என குய்வகை அருளாய்
      இடைம ருதுறை எந்தைபி ரானே. 7.60.6
      620 கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னை
      குற்றஞ் செற்றம் இவைமுத லாக
      விடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும்
      வேண்டில் ஐம்புலன் என்வசம் அல்ல
      நடுக்கம் உற்றதோர் மூப்புவ தெய்த
      நமன்த மர்நர கத்திடல் அஞ்சி
      இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய்
      இடைம ருதுறை எந்தைபி ரானே. 7.60.7
      621 ஐவ கையர் ஐயரவ ராகி
      ஆட்சி கொண்டொரு காலவர் நீங்கார்
      அவ்வ கையவர் வேண்டுவ தானால்
      அவர வர்வழி ஒழுகிநான் வந்து
      செய்வ கையறி யேன்சிவ லோகா
      தீவ ணாசிவ னேயெரி யாடீ
      எவ்வ கையென குய்வகை அருளாய்
      இடைம ருதுறை எந்தைபி ரானே. 7.60.8
      622 ஏழை மானுட இன்பினை நோக்கி
      இளைய வர்வ பட்டிரு தின்னம்
      வாழை தான்பழு கும்ந கென்று
      வஞ்ச வல்வினை யுள்வலை பட்டு
      கூழை மாந்தர்தஞ் செல்கதி பக்கம்
      போக மும்பொருள் ஒன்றறி யாத
      ஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய்
      இடைம ருதுறை எந்தைபி ரானே. 7.60.9
      623 அரைக்குஞ் சந்தன தோடகில் உந்தி
      ஐவ னஞ்சு தார்த்திரு பாலும்
      இரைக்குங் காவிரி தென்கரை தன்மேல்
      இடைம ருதுறை எந்தைபி ரானை
      உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை
      உள்ள தால்உக தேத்தவல் லார்கள்
      நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி
      நாதன் சேவடி நண்ணுவர் தாமே. 7.60.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மருதீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.61 திருவேகம்பம்
      பண் - தக்கேசி
      திருச்சிற்றம்பலம்
      624 ஆல தானுக தமுதுசெய் தானை
      ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ்
      சீல தான்பெரி தும்முடை யானை
      சிந்தி பாரவர் சிந்தையு ளானை
      ஏல வார்குழ லாள்உமை நங்கை
      என்றும் ஏத்தி வழிபட பெற்ற
      கால காலனை கம்பனெம் மானை
      காண கண்அடி யேன்பெற்ற வாறே. 7.61.1
      625 உற்ற வர்க்குத வும்பெரு மானை
      ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனை
      பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னை
      பாவி பார்மனம் பரவிக்கொண் டானை
      அற்ற மில்புக ழாள்உமை நங்கை
      ஆத ரித்து வழிபட பெற்ற
      கற்றை வார்சடை கம்பனெம் மானை
      காண கண்அடி யேன்பெற்ற வாறே. 7.61.2
      626 திரியும் முப்புரம் தீப்பிழம் பாக
      செங்கண் மால்விடை மேற்றிகழ் வானை
      கரியின் ஈருரி போர்த்துக தானை
      காம னைக்கன லாவிழி தானை
      வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
      மருவி யேத்தி வழிபட பெற்ற
      பெரிய கம்பனை எங்கள்பி ரானை
      காண கண்அடி யேன்பெற்ற வாறே.
      காமாட்சியம்மையால் பூசிக்கப்பட்ட ஏகாம்பர
      நாதரே பெரியகம்பர். 7.61.3
      627 குண்ட லந்திகழ் காதுடை யானை
      கூற்று தைத்த கொடுந்தொழி லானை
      வண்டலம் புமலர கொன்றையி னானை
      வாள ராமதி சேர்சடை யானை
      கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை
      கெழுமி யேத்தி வழிபட பெற்ற
      கண்டம் நஞ்சுடை கம்பனெம் மானை
      காண கண்அடி யேன்பெற்ற வறே. 7.61.4
      628 வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
      வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை
      அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
      அரும றையவை அங்கம்வல் லானை
      எல்லை யிற்புக ழாள்உமை நங்கை
      என்றும் ஏத்தி வழிபட பெற்ற
      நல்ல கம்பனை எங்கள் பிரானை
      காண கண்அடி யேன்பெற்ற வாறே.
      உருத்திரராற் பூசிக்கப்பட்ட சிவலிங்க பெருமானுக்கு
      நல்லகம்பனென்றுபெயர். 7.61.5
      629 திங்கள் தங்கிய சடையுடை யானை
      தேவ தேவனை செழுங்கடல் வளருஞ்
      சங்க வெண்குழை காதுடை யானை
      சாம வேதம் பெரிதுக பானை
      மங்கை நங்கை மலைமகள் கண்டு
      மருவி ஏத்தி வழிபட பெற்ற
      கங்கை யாளனை கம்பனெம் மானை
      காண கண்அடி யேன்பெற்ற வாறே. 7.61.6
      630 விண்ண வர்தொழு தேத்தநின் றானை
      வேத தான்விரி தோதவல் லானை
      நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
      நாளும் நாம்உ கின்றபி ரானை
      எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
      என்றும் ஏத்தி வழிபட பெற்ற
      கண்ணும் மூன்றுடை கம்பனெம் மானை
      காண கண்அடி யேன்பெற்ற வாறே. 7.61.7
      631 சிந்தி தென்றும் நினைந்தெழு வார்கள்
      சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னை
      பந்தி தவினை பற்றறு பானை
      பாலோ டானஞ்சும் ஆட்டுக தானை
      அந்த மில்புக ழாள்உமை நங்கை
      ஆத ரித்து வழிபட பெற்ற
      கந்த வார்சடை கம்பனெம் மானை
      காண கண்அடி யேன்பெற்ற வாறே. 7.61.8
      632 வரங்கள் பெற்றுழல் வாளர கர்தம்
      வாலி யபுரம் மூன்றெரி தானை
      நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி
      நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனை
      பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
      பரவி யேத்தி வழிபட பெற்ற
      கரங்கள் எட்டுடை கம்பனெம் மானை
      காண கண்அடி யேன்பெற்ற வாறே. 7.61.9
      633 எள்க லின்றி இமையவர் கோனை
      ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
      உள்ள துள்கி உகந்துமை நங்கை
      வழிபட சென்று நின்றவா கண்டு
      வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
      வெருவி ஓடி தழுவவெளி பட்ட
      கள்ள கம்பனை எங்கள் பிரானை
      காண கண்அடி யேன்பெற்ற வாறே.
      திருமாலாற் பூசிக்கப்பட்ட சிவலிங்க
      பெருமானுக்கு கள்ளக்கம்பனென்றுபெயர். 7.61.10
      634 பெற்றம் ஏறுக தேறவல் லானை
      பெரிய எம்பெரு மானென்றெ போதுங்
      கற்ற வர்பர வப்படு வானை
      காண கண்அடி யேன்பெற்ற தென்று
      கொற்ற வன்கம்பன் கூத்தனெம் மானை
      குளிர்பொ ழிற்றிரு நாவலா ரூரன்
      நற்ற மிழ்இவை ஈரைந்தும் வல்லார்
      நன்னெ றிஉல கெய்துவர் தாமே. 7.61.11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.62 திருக்கோலக்கா
      பண் - தக்கேசி
      திருச்சிற்றம்பலம்
      635 புற்றில் வாளர வார்த்த பிரானை
      பூத நாதனை பாதமே தொழுவார்
      பற்று வான்துணை எனக்கெளி வந்த
      பாவ நாசனை மேவரி யானை
      முற்ற லார்திரி புரமொரு மூன்றும்
      பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பா
      கொற்ற வில்லங்கை ஏந்திய கோனை
      கோல காவினிற் கண்டுகொண் டேனே. 7.62.1
      636 அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும்
      ஆய நம்பனை வேய்புரை தோளி
      தங்கு மாதிரு உருவுடை யானை
      தழல்ம திச்சடை மேற்புனை தானை
      வெங்கண் ஆனையின் ஈருரி யானை
      விண்ணு ளாரொடு மண்ணுளார் பரசுங்
      கொங்கு லாம்பொழிற் குரவெறி கமழுங்
      கோல காவினிற் கண்டுகொண் டேனே. 7.62.2
      637 பாட்ட கத்திசை யாகிநின் றானை
      பத்தர் சித்தம் பரிவினி யானை
      நாட்ட கத்தேவர் செய்கையு ளானை
      நட்ட மாடியை நம்பெரு மானை
      காட்ட கத்துறு புலியுரி யானை
      கண்ணோர் மூன்றுடை அண்ணலை அடியேன்
      கோட்ட கப்புன லார்செழுங் கழனி
      கோல காவினிற் கண்டுகொண் டேனே. 7.62.3
      638 ஆத்தம் என்றெனை ஆளுக தானை
      அமரர் நாதனை குமரனை பயந்த
      வார்த்த யங்கிய முலைமட மானை
      வைத்து வான்மிசை கங்கையை கரந்த
      தீர்த்த னைச்சிவ னைச்செழு தேனை
      தில்லை அம்பல துள்நிறை தாடுங்
      கூத்த னைக்குரு மாமணி தன்னை
      கோல காவினிற் கண்டுகொண் டேனே. 7.62.4
      639 அன்று வந்தெனை அகலிட தவர்முன்
      ஆள தாகஎன் றாவணங் காட்டி
      நின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த
      நித்தி லத்திரள் தொத்தினை முத்தி
      கொன்றி னான்றனை உம்பர் பிரானை
      உயரும் வல்லர ணங்கெட சீறுங்
      குன்ற வில்லியை மெல்லிய லுடனே
      கோல காவினிற் கண்டுகொண் டேனே. 7.62.5
      640 காற்று தீப்புன லாகிநின் றானை
      கடவு ளைக்கொடு மால்விடை யானை
      நீற்று தீயுரு வாய்நிமிர தானை
      நிரம்பு பல்கலை யின்பொ ருளாலே
      போற்றி தன்கழல் தொழுமவன் உயிரை
      போக்கு வான்உயிர் நீக்கிட தாளாற்
      கூற்றை தீங்குசெய் குரைகழ லானை
      கோல காவினிற் கண்டுகொண் டேனே. 7.62.6
      641 அன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண்
      டமர ருக்கருள் வெளிப்படு தானை
      துன்று பைங்கழ லிற்சிலம் பார்த்த
      சோதி யைச்சுடர் போலொளி யானை
      மின்ற யங்கிய இடைமட மங்கை
      மேவும் ஈசனை வாசமா முடிமேற்
      கொன்றை யஞ்சடை குழகனை அழகார்
      கோல காவினிற் கண்டுகொண் டேனே. 7.62.7
      642 நாளும் இன்னிசை யாற்றமிழ் பரப்பும்
      ஞான சம்பந்த னுக்குல கவர்முன்
      தாளம் ஈந்தவன் பாடலு கிரங்கு
      தன்மை யாளனை என்மன கருத்தை
      ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
      அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சுங்
      கோளி லிப்பெருங் கோயிலுள் ளானை
      கோல காவினிற் கண்டுகொண் டேனே. 7.62.8
      643 அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டு
      கன்றி ரங்கிய வென்றியி னானை
      பரக்கும் பாரளி துண்டுக தவர்கள்
      பரவி யும்பணி தற்கரி யானை
      சிரக்கண் வாய் செவி மூக்குயர் காயம்
      ஆகி தீவினை தீர்த்தஎம் மானை
      குரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ்
      கோல காவினிற் கண்டுகொண் டேனே. 7.62.9
      644 கோட ரம்பயில் சடையுடை கரும்பை
      கோல காவுளெம் மானைமெய்ம் மான
      பாட ரங்குடி அடியவர் விரு
      பயிலும் நாவலா ரூரன்வன் றொண்டன்
      நாடி ரங்கிமுன் அறியு நெறியால்
      நவின்ற பத்திவை விளம்பிய மாந்தர்
      காட ரங்கென நடம்நவின் றான்பாற்
      கதியும் எய்துவர் பதியவர கதுவே. 7.62.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சத்தபுரீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.63 நம்பி என்ற திருப்பதிகம்
      பண் - தக்கேசி
      திருச்சிற்றம்பலம்
      645 மெய்யைமுற் றப்பொடி பூசியோர் நம்பி
      வேதம்நான் கும்விரி தோதியோர் நம்பி
      கையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி
      கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி
      செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி
      திரிபுர தீயெழ செற்றதோர் வில்லால்
      எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி
      எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.1
      646 திங்கள் நம்பிமுடி மேலடி யார்பால்
      சிறந்தநம் பிபிற தஉயிர கெல்லாம்
      அங்கண் நம்பியருள் மால்விசும் பாளும்
      அமரர் நம்பிகும ரன்முதல் தேவர்
      தங்கள் நம்பிதவ துக்கொரு நம்பி
      தாதை என்றுன் சரண்பணி தேத்தும்
      எங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பி
      எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.2
      647 வருந்த அன்றுமத யானை உரித்த
      வழக்கு நம்பிமுழ குங்கடல் நஞ்சம்
      அருந்தும் நம்பிஅம ரர்க்கமு தீந்த
      அருளென் நம்பிபொரு ளால்வரு நட்டம்
      புரிந்த நம்பிபுரி நூலுடை நம்பி
      பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி
      இருந்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
      எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.3
      648 ஊறு நம்பிஅமு தாஉயிர கெல்லாம்
      உரிய நம்பிதெரி யம்மறை அங்கங்
      கூறு நம்பிமுனி வர்க்கருங் கூற்றை
      குமைத்த நம்பிகுமை யாப்புலன் ஐந்துஞ்
      சீறு நம்பிதிரு வெள்ளடை நம்பி
      செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு தென்றும்
      ஏறு நம்பிஎன்னை ஆளுடை நம்பி
      எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.4
      649 குற்ற நம்பிகுறு காரெயில் மூன்றை
      குலைத்த நம்பிசிலை யாவரை கையிற்
      பற்று நம்பிபர மானந்த வெள்ளம்
      பணிக்கும் நம்பிஎன பாடுத லல்லால்
      மற்று நம்பிஉன கென்செய வல்லேன்
      மதியி லேன்படு வெந்துயர் எல்லாம்
      எற்று நம்பிஎன்னை ஆளுடை நம்பி
      எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.5
      650 அரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய்
      ஆண்ட நம்பிமுன்னை ஈண்டுல கங்கள்
      தெரித்த நம்பிஒரு சேவுடை நம்பி
      சில்பலி கென்றக தோறுமெய் வேட
      தரித்த நம்பிசம யங்களின் நம்பி
      தக்கன்றன் வேள்விபு கன்றிமை யோரை
      இரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
      எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.6
      651 பின்னை நம்பும்பு தான்நெடு மாலும்
      பிரமனும் என்றிவர் நாடியுங் காணா
      உன்னை நம்பிஒரு வர்க்கெய்த லாமே
      உலகு நம்பிஉரை செய்யும தல்லால்
      முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி
      முழுதிவை இத்தனை யுந்தொகு தாண்ட
      தென்னை நம்பிஎம் பிரானாய நம்பி
      எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.7
      652 சொல்லை நம்பிபொரு ளாய்நின்ற நம்பி
      தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி
      வல்லை நம்பிஅடி யார்க்கருள் செய்ய
      வருந்தி நம்பிஉன காட்செய கில்லார்
      அல்லல் நம்பிபடு கின்றதென் நாடி
      அணங்கொரு பாகம்வை தெண்கணம் போற்ற
      இல்ல நம்பியிடு பிச்சைகொள் நம்பி
      எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.8
      653 காண்டு நம்பிகழற் சேவடி என்றுங்
      கலந்துனை காதலி தாட்செய்கிற் பாரை
      ஆண்டு நம்பியவர் முன்கதி சேர
      அருளும் நம்பிகுரு மாப்பிறை பாம்பை
      தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்க
      திருத்து நம்பிபொ சமண்பொரு ளாகி
      ஈண்டு நம்பிஇமை யோர்தொழு நம்பி
      எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.9
      654 கரக்கும் நம்பிகசி யாதவர் தம்மை
      கசிந்தவர கிம்மையோ டம்மையில் இன்பம்
      பெருக்கும் நம்பி பெரு கருத்தா...
      ............
      ............
      இச்செய்யுளின் பிற்பகுதி சிதைந்து போயிற்று.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.64 திருத்தினை நகர்
      பண் - தக்கேசி
      திருச்சிற்றம்பலம்
      655 நீறு தாங்கிய திருநுத லானை
      நெற்றி கண்ணனை நிரைவளை மடந்தை
      கூறு தாங்கிய கொள்கையி னானை
      குற்றம் இல்லியை கற்றையஞ் சடைமேல்
      ஆறு தாங்கிய அழகனை அமரர
      கரிய சோதியை வரிவரால் உகளுஞ்
      சேறு தாங்கிய திருத்தினை நகரு
      சிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே. 7.64.1
      656 பிணிகொள் ஆக்கை பிறப்பிற பென்னும்
      இதனைநீக்கி ஈசன் திருவடி யிணைக்காள்
      துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள்நீ
      அஞ்சல் நெஞ்சமே வஞ்சர்வாழ் மதின்மூன்
      றணிகொள் வெஞ்சிலை யால்உக சீறும்
      ஐயன் வையகம் பரவிநின் றேத்து
      திணியும் வார்பொழில் திருத்தினை நகரு
      சிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே. 7.64.2
      657 வடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால்
      மயல துற்றுவஞ் சனைக்கிட மாகி
      முடியு மாகரு தேலெரு தேறும்
      மூர்த்தி யைமுத லாயபி ரானை
      அடிகள் என்றடி யார்தொழு தேத்தும்
      அப்பன் ஒப்பிலா முலைஉமை கோனை
      செடிகொள் கான்மலி திருத்தினை நகரு
      சிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே. 7.64.3
      658 பாவ மேபுரி தகலிட தன்னிற்
      பலப கர்ந்தல மந்துயிர் வாழ்க்கை
      காவ என்றுழ தயர்ந்துவீ ழாதே
      அண்ணல் தன்றிறம் அறிவினாற் கருதி
      மாவின் ஈருரி உடைபுனை தானை
      மணியை மைந்தனை வானவர கமுதை
      தேவ தேவனை திருத்தினை நகரு
      சிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே. 7.64.4
      659 ஒன்ற லாவுயிர் வாழ்க்கையை நினைந்தி
      டுடல்த ளர்ந்தரு மாநிதி இயற்றி
      என்றும் வாழலாம் எமக்கென பேசும்
      இதுவும் பொய்யென வேநினை உளமே
      குன்று லாவிய புயமுடை யானை
      கூத்த னைக்குலா விக்குவ லயத்தோர்
      சென்றெ லாம்பயில் திருத்தினை நகரு
      சிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே. 7.64.5
      660 வேந்த ராயுல காண்டறம் புரிந்து
      வீற்றி ருந்தஇவ் வுடலிது தன்னை
      தேய்ந்தி றந்துவெ துயருழ திடுமி
      பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே
      பாந்த ளங்கையில் ஆட்டுக தானை
      பரமனை கடற் சூர்தடி திட்ட
      சேந்தர் தாதையை திருத்தினை நகரு
      சிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே. 7.64.6
      661 தன்னில் ஆசறு சித்தமு மின்றி
      தவ முயன்றவ மாயின பேசி
      பின்ன லார்சடை கட்டியென் பணிந்தாற்
      பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
      முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
      மூர்த்தி யாகிய முதலவன் றன்னை
      செந்நெ லார்வயல் திருத்தினை நகரு
      சிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே. 7.64.7
      662 பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும்
      பலருங் கண்டழு தெழவுயிர் உடலை
      பிரிந்து போமிது நிச்சயம் அறிந்தாற்
      பேதை வாழ்வெனும் பிணக்கினை தவிர்ந்து
      கருந்த டங்கண்ணி பங்கனை உயிரை
      கால காலனை கடவுளை விரும்பி
      செருந்தி பொன்மலர் திருத்தினை நகரு
      சிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே. 7.64.8
      663 நமையெ லாம்பலர் இகழ்ந்துரை பதன்முன்
      நன்மை ஒன்றிலா தேரர்புன் சமணாஞ்
      சமய மாகிய தவத்தினார் அவ
      தன்மை விட்டொழி நன்மையை வேண்டில்
      உமையோர் கூறனை ஏறுக தானை
      உம்பர் ஆதியை எம்பெரு மானை
      சிமய மார்பொழில் திருத்தினை நகரு
      சிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே. 7.64.9
      664 நீடு பொக்கையிற் பிறவியை பழித்து
      நீங்க லாமென்று மனத்தினை தெருட்டி
      சேடு லாம்பொழில் திருத்தினை நகரு
      சிவக்கொ ழுந்தினை திருவடி யிணைதான்
      நாடெ லாம்புகழ் நாவலூ ராளி
      நம்பி வன்றொண்ட னூரன் உரைத்த
      பாட லாந்தமிழ் பத்திவை வல்லார்
      முத்தி யாவது பரகதி பயனே. 7.64.10
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - திருநந்தீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.65 திருநின்றியூர்
      பண் - தக்கேசி
      திருச்சிற்றம்பலம்
      665 திருவும் வண்மையு திண்டிறல் அரசுஞ்
      சிலந்தி யார்செய்த செய்பணி கண்டு
      மருவு கோச்செங்க ணான்றன களித்த
      வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன்
      பெருகு பொன்னிவ துந்துபன் மணியை
      பிள்ளை பல்கணம் பண்ணையுள் நண்ணி
      தெருவு தெற்றியும் முற்றமும் பற்றி
      திரட்டு தென்றிரு நின்றியூ ரானே. 7.65.1
      666 அணிகொள் ஆடையம் பூண்மணி மாலை
      அமுது செய்தமு தம்பெறு சண்டி
      இணைகொள் ஏழெழு நூறிரு பனுவல்
      ஈன்ற வன்றிரு நாவினு கரையன்
      கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற
      காத லின்னருள் ஆதரி தடைந்தேன்
      திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ்
      செல்வ தென்றிரு நின்றியூ ரானே. 7.65.2
      667 மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி
      மூன்று நூறுவே தியரொடு நுனக்கு
      ஒத்த பொன்மணி கலசங்க ளேந்தி
      ஓங்கு நின்றியூர் என்றுன களி
      பத்தி செய்தவ பரசுரா மற்கு
      பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன்
      சித்தர் வானவர் தானவர் வணங்குஞ்
      செல்வ தென்றிரு நின்றியூ ரானே. 7.65.3
      668 இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம்
      எழுந்து தன்முலை கலசங்க ளேந்தி
      சுரபி பால்சொரி தாட்டிநின் பாத
      தொடர்ந்த வார்த்தை திடம்பட கேட்டு
      பரவி உள்கிவன் பாசத்தை அறுத்து
      பரம வந்துநுன் பாதத்தை அடைந்தேன்
      நிரவி நித்திலம் அத்தகு செம்பொன்
      அளிக்கு தென்றிரு நின்றியூ ரானே. 7.65.4
      669 வந்தோர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
      வான நாடுநீ ஆள்கென அருளி
      சந்தி மூன்றிலு தாபரம் நிறுத்தி
      சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்கு
      சிந்து மாமணி அணிதிரு பொதியிற்
      சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
      செந்தண் மாமலர திருமகள் மருவுஞ்
      செல்வ தென்றிரு நின்றியூ ரானே. 7.65.5
      670 காது பொத்தரை கின்னரர் உழுவை
      கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயங்
      கோதில் மாதவர் குழுவுடன் கேட்ப
      கோல ஆல்நிழற் கீழறம் பகர
      ஏதஞ் செய்தவர் எய்திய இன்பம்
      யானுங் கேட்டுநின் இணையடி அடைந்தேன்
      நீதி வேதியர் நிறைபுகழ் உலகில்
      நிலவு தென்றிரு நின்றியூ ரானே. 7.65.6
      671 கோடு நான்குடை குஞ்சரங் குலுங்க
      நலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதே
      பீடு விண்மிசை பெருமையும் பெற்ற
      பெற்றி கேட்டுநின் பொற்கழல் அடைந்தேன்
      பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்
      பிள்ளை கிள்ளையும் எனப்பிறை நுதலார்
      நீடு மாடங்கள் மாளிகை தோறும்
      நிலவு தென்றிரு நின்றியூ ரானே. 7.65.7
      இப்பதிகத்தில் 8-10ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 7.65.8-10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - இலட்சுமிவரதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.66 திருவாவடுதுறை
      பண் - தக்கேசி
      திருச்சிற்றம்பலம்
      672 மறைய வனொரு மாணிவ தடைய
      வார மாய்அவன் ஆருயிர் நிறுத்த
      கறைகொள் வேலுடை காலனை காலாற்
      கடந்த காரணங் கண்டுகண் டடியேன்
      இறைவன் எம்பெரு மானென்றெ போதும்
      ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்
      அறைகொள் சேவடி கன்பொடும் அடைந்தேன்
      ஆவ டுதுறை ஆதிஎம் மானே. 7.66.1
      673 தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
      சித்தி ரப்பந்தர் சிக்கென இயற்ற
      சுருண்ட செஞ்சடை யாயது தன்னை
      சோழன் ஆக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
      புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர பாதம்
      போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
      அருண்டென் மேல்வினை கஞ்சிவ தடைந்தேன்
      ஆவ டுதுறை ஆதிஎம் மானே. 7.66.2
      674 திகழும் மாலவன் ஆயிரம் மலரால்
      ஏத்து வானொரு நீண்மலர் குறை
      புகழி னாலவன் கண்ணிட திடலும்
      புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன்
      திகழும் நின்றிரு பாதங்கள் பரவி
      தேவ தேவநின் றிறம்பல பிதற்றி
      அகழும் வல்வினை கஞ்சிவ தடைந்தேன்
      ஆவ டுதுறை ஆதிஎம் மானே. 7.66.3
      675 வீர தாலொரு வேடுவ னாகி
      விசைத்தோர் கேழலை துரந்துசென் றணைந்து
      போரை தான்விச யன்றன கன்பா
      புரிந்து வான்படை கொடுத்தல்கண் டடியேன்
      வார தாலுன நாமங்கள் பரவி
      வழிப டுன்றிற மேநினை துருகி
      ஆர்வ தோடும்வ தடியிணை அடைந்தேன்
      ஆவ டுதுறை ஆதிஎம் மானே. 7.66.4
      676 ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ
      உன்னை உன்னிய மூவர்நின் சரணம்
      புக்கு மற்றவர் பொன்னுல காள
      புகழி னாலருள் ஈந்தமை அறிந்து
      மிக்க நின்கழ லேதொழு தரற்றி
      வேதி யாஆதி மூர்த்திநின் அரையில்
      அக்க ணிந்தஎம் மானுனை அடைந்தேன்
      ஆவ டுதுறை ஆதிஎம் மானே. 7.66.5
      இப்பதிகத்தில் 6-10ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 7.66.6-10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.67 திருவலிவலம்
      பண் - தக்கேசி
      திருச்சிற்றம்பலம்
      677 ஊனங் கைத்துயிர பாயுல கெல்லாம்
      ஓங்கா ரத்துரு வாகிநின் றானை
      வானங் கைத்தவர கும்மள பரிய
      வள்ள லையடி யார்கள்தம் உள்ள
      தேனங் கைத்தமு தாகியுள் ளூறு
      தேச னைத்திளை தற்கினி யானை
      மானங் கைத்தல தேந்தவல் லானை
      வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 7.67.1
      678 பல்லடி யார்பணி குப்பரி வானை
      பாடியா டும்பத்தர கன்புடை யானை
      செல்லடி யேநெரு கித்திறம் பாது
      சேர்ந்தவர கேசித்தி முத்திசெய் வானை
      நல்லடி யார்மன தெய்ப்பினில் வைப்பை
      நானுறு குறையறி தருள்புரி வானை
      வல்லடி யார்மன திச்சை உளானை
      வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 7.67.2
      679 ஆழிய னாய்அகன் றேஉயர தானை
      ஆதி தம்பணி வார்க்கணி யானை
      கூழைய ராகிப்பொய் யேகுடிஓம்பி
      குழைந்து மெய்யடி யார்குழு பெய்யும்
      வாழியர கேவழு வாநெறி காட்டி
      மறுபி றப்பென்னை மாசறு தானை
      மாழையொண் கண்ணுமை யைமகிழ தானை
      வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 7.67.3
      680 நாத்தான் உன்றிற மேதிறம் பாது
      நண்ணியண் ணித்தமு தம்பொதி தூறும்
      ஆத்தா னைஅடி யேன்றன கென்றும்
      அளவி றந்தபல தேவர்கள் போற்றுஞ்
      சோத்தா னைச்சுடர் மூன்றிலும் ஒன்றி
      துருவி மால்பிர மன்னறி யாத
      மாத்தா னைமா தெனக்குவை தானை
      வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 7.67.4
      681 நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினு
      கரசரும் பாடிய நற்றமிழ் மாலை
      சொல்லிய வேசொல்லி ஏத்துக பானை
      தொண்ட னேன்அறி யாமை அறிந்து
      கல்லி யல்மன தைக்கசி வித்து
      கழலடி காட்டியென் களைகளை அறுக்கும்
      வல்லியல் வானவர் வணங்க நின்றானை
      வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 7.67.5
      682 பாடுமா பாடி பணியுமா றறியேன்
      பனுவுமா பனுவி பரவுமா றறியேன்
      தேடுமா தேடி திருத்துமா றறியேன்
      செல்லுமா செல்ல செலுத்துமா றறியேன்
      கூடுமா றெங்ஙன மோவென்று கூற
      குறித்து காட்டி கொணர்ந்தெனை ஆண்டு
      வாடிநீ வாளா வருந்தலென் பானை
      வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 7.67.6
      683 பந்தித்த வல்வினை பற்றற பிறவி
      படுக டற்பர புத்தவிர பானை
      சந்தி ததிற லாற்பணி பூட்டி
      தவத்தை ஈட்டிய தம்மடி யார்க்கு
      சிந்தி தற்கெளி தாய்த்திரு பாதஞ்
      சிவலோ கந்திற தேற்றவல் லானை
      வந்தி பார்தம் மனத்தினுள் ளானை
      வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 7.67.7
      684 எவ்வவர் தேவர் இருடிகள் மன்னர்
      எண்ணிற தார்கள்மற் றெங்கும்நின் றேத்த
      அவ்வவர் வேண்டிய தேஅருள் செய்து
      அடைந்தவர கேஇட மாகிநின் றானை
      இவ்வவர் கருணையெங் கற்ப கடலை
      எம்பெரு மான்அரு ளாய்என்ற பின்னை
      வவ்வியென் ஆவி மனங்கல தானை
      வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 7.67.8
      685 திரியும் முப்புரஞ் செற்றதுங் குற்ற
      திறல ரக்கனை செறுத்ததும் மற்றை
      பெரிய நஞ்சமு துண்டதும் முற்றும்
      பின்னை யாய்முன்ன மேமுளை தானை
      அரிய நான்மறை அந்தணர் ஓவா
      தடிப ணிந்தறி தற்கரி யானை
      வரையின் பாவை மணாளனெம் மானை
      வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 7.67.9
      686 ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து
      நிறைக்க மாலுதி ரத்தினை ஏற்று
      தோன்று தோண்மிசை களேபர தன்னை
      சுமந்த மாவிர தத்தகங் காளன்
      சான்று காட்டுதற் கரியவன் எளியவன்
      றன்னை தன்னி லாமன தார்க்கு
      மான்று சென்றணை யாதவன் றன்னை
      வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 7.67.10
      687 கலிவ லங்கெட ஆரழல் ஓம்புங்
      கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்
      வலிவ லந்தனில் வந்துகண் டடியேன்
      மன்னும் நாவலா ரூரன்வன் றொண்டன்
      ஒலிகொள் இன்னிசை செந்தமிழ் பத்தும்
      உள்ள தாலுக தேத்தவல் லார்போய்
      மெலிவில் வானுல கத்தவர் ஏத்த
      விரும்பி விண்ணுல கெய்துவர் தாமே. 7.67.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மனத்துணைநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.68 திருநள்ளாறு
      பண் - தக்கேசி
      திருச்சிற்றம்பலம்
      688 செம்பொன் மேனிவெண் ணீறணி வானை
      கரிய கண்டனை மால்அயன் காணா
      சம்பு வைத்தழல் அங்கையி னானை
      சாம வேதனை தன்னொப்பி லானை
      கும்ப மாகரி யின்னுரி யானை
      கோவின் மேல்வருங் கோவினை எங்கள்
      நம்ப னைநள் ளாறனை அமுதை
      நாயி னேன்மற தென்நினை கேனே. 7.68.1
      689 விரைசெய் மாமலர கொன்றையி னானை
      வேத கீதனை மிகச்சிற துருகி
      பரசு வார்வினை பற்றறு பானை
      பாலொ டானஞ்சும் ஆடவல் லானை
      குரைக டல்வரை ஏழுல குடைய
      கோனை ஞான கொழுந்தினை தொல்லை
      நரைவிடை யுடையநல் லாறனை அமுதை
      நாயி னேன்மற தென்நினை கேனே. 7.68.2
      690 பூவில் வாசத்தை பொன்னினை மணியை
      புவியை காற்றினை புனல்அனல் வெளியை
      சேவின் மேல்வருஞ் செல்வனை சிவனை
      தேவ தேவனை தித்திக்கு தேனை
      காவி யங்கண்ணி பங்கனை கங்கை
      சடைய னைக்கா மரத்திசை பாட
      நாவில் ஊறும்நள் ளாறனை அமுதை
      நாயி னேன்மற தென்நினை கேனே. 7.68.3
      691 தஞ்சம் என்றுதன் தாளது வடைந்த
      பாலன் மேல்வந்த காலனை உருள
      நெஞ்சில் ஓர்உதை கொண்ட பிரானை
      நினைப்ப வர்மனம் நீங்ககில் லானை
      விஞ்சை வானவர் தானவர் கூடி
      கடைந்த வேலையுள் மிக்கெழு தெரியும்
      நஞ்சம் உண்டநள் ளாறனை அமுதை
      நாயி னேன்மற தென்நினை கேனே. 7.68.4
      692 மங்கை பங்கனை மாசிலா மணியை
      வான நாடனை ஏனமோ டன்னம்
      எங்கு நாடியுங் காண்பரி யானை
      ஏழை யேற்கெளி வந்தபி ரானை
      அங்கம் நான்மறை யால்நிறை கின்ற
      அந்த ணாளர் அடியது போற்றும்
      நங்கள் கோனைநள் ளாறனை அமுதை
      நாயி னேன்மற தென்நினை கேனே. 7.68.5
      693 கற்ப கத்தினை கனகமால் வரையை
      காம கோபனை கண்ணுத லானை
      சொற்ப தப்பொருள் இருளறு தருளு
      தூய சோதியை வெண்ணெய் நல்லூரில்
      அற்பு தப்பழ ஆவணங் காட்டி
      அடிய னாஎன்னை ஆளது கொண்ட
      நற்ப தத்தைநள் ளாறனை அமுதை
      நாயி னேன்மற தென்நினை கேனே. 7.68.6
      694 மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற
      மாய னைநால்வர காலின்கீழ் உரைத்த
      அறவ னைஅம ரர்க்கரி யானை
      அமரர் சேனைக்கு நாயக னான
      குறவர் மங்கைதன் கேள்வனை பெற்ற
      கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்
      நறைவி ரியும்நள் ளாறனை அமுதை
      நாயி னேன்மற தென்நினை கேனே. 7.68.7
      695 மாதி னுக்குடம் பிடங்கொடு தானை
      மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்
      வேத னைவேத வேள்வியர் வணங்கும்
      விமல னையடி யேற்கெளி வந்த
      தூதனை தன்னை தோழமை அருளி
      தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்
      நாத னைநள் ளாறனை அமுதை
      நாயி னேன்மற தென்நினை கேனே. 7.68.8
      696 இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை
      எடுப்ப ஆங்கிம வான்மகள் அஞ்ச
      துலங்கு நீண்முடி ஒருபது தோள்கள்
      இருப துந்நெரி தின்னிசை கேட்டு
      வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த
      வள்ள லைப்பிள்ளை மாமதி சடைமேல்
      நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதை
      நாயி னேன்மற தென்நினை கேனே. 7.68.9
      697 செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ்
      சிவனை நாவலூர சிங்கடி தந்தை
      மறந்து நான்மற்று நினைப்பதே தென்று
      வனப்ப கையப்பன் ஊரன்வன் றொண்டன்
      சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ்
      சிந்தையுள் ளுருகி செப்ப வல்லார
      கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி
      இன்பவெள் ளத்துள் இருப்பர்க ளினிதே. 7.68.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - தெர்ப்பாரணியயீசுவரர்
      தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.69 திருவடமுல்லைவாயில்
      பண் - தக்கேசி
      திருச்சிற்றம்பலம்
      698 திருவுமெ பொருளுஞ் செல்வமும் எனக்குன்
      சீருடை கழல்களென் றெண்ணி
      ஒருவரை மதியா துறாமைகள் செய்து
      மூடியும் உறைப்பனா திரிவேன்
      முருகமர் சோலை சூழ்திரு முல்லை
      வாயிலாய் வாயினால் உன்னை
      பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
      பாசுப தாபரஞ் சுடரே. 7.69.1
      699 கூடிய இலயம் சதிபிழை யாமை
      கொடியிடை உமையவள் காண
      ஆடிய அழகா அருமறை பொருளே
      அங்கணா எங்குற்றா யென்று
      தேடிய வானோர் சேர்திரு முல்லை
      வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
      பாடிய அடியேன் படுதுயர் களையாய்
      பாசுப தாபரஞ் சுடரே. 7.69.2
      700 விண்பணி தேத்தும் வேதியா மாதர்
      வெருவிட வேழமன் றுரித்தாய்
      செண்பக சோலை சூழ்திரு முல்லை
      வாயிலாய் தேவர்தம் மரசே
      தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்
      சங்கிலி காஎன்கண் கொண்ட
      பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்
      பாசுப தாபரஞ் சுடரே. 7.69.3
      701 பொன்னலங் கழனி புதுவிரை மருவி
      பொறிவரி வண்டிசை பாட
      அந்நலங் கமல தவிசின்மேல் உறங்கும்
      அலவன்வ துலவிட அள்ளல்
      செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
      வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
      பன்னல தமிழாற் பாடுவேற் கருளாய்
      பாசுப தாபரஞ் சுடரே. 7.69.4
      702 சந்தன வேருங் காரகிற் குறடு
      தண்மயிற் பீலியுங் கரியின்
      தந்தமு தரள குவைகளும் பவள
      கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
      வந்திழி பாலி வடகரை முல்லை
      வயிலாய் மாசிலா மணியே
      பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
      பாசுப தாபரஞ் சுடரே. 7.69.5
      703 மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
      வள்ளலே கள்ளமே பேசி
      குற்றமே செயினுங் குணமென கொள்ளுங்
      கொள்கையால் மிகைபல செய்தேன்
      செற்றுமீ தோடு திரிபுரம் எரித்த
      திருமுல்லை வாயிலாய் அடியேன்
      பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
      பாசுப தாபரஞ் சுடரே. 7.69.6
      704 மணிகெழு செவ்வாய் வெண்ணகை கரிய
      வார்குழல் மாமயிற் சாயல்
      அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
      அருநடம் ஆடல றாத
      திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்
      செல்வனே எல்லியும் பகலும்
      பணியது செய்வேன் படுதுயர் களையாய்
      பாசுப தாபரஞ் சுடரே. 7.69.7
      705 நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
      நாயினேன் தன்னையா கொண்ட
      சம்புவே உம்ப ரார்தொழு தேத்து
      தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
      செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
      தேடியான் திரிதர்வேன் கண்ட
      பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
      பாசுப தாபரஞ் சுடரே. 7.69.8
      706 மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
      மாணிதன் மேல்மதி யாதே
      கட்டுவான் வந்த காலனை மாள
      காலினால் ஆருயிர் செகுத்த
      சிட்டனே செல்வ திருமுல்லை வாயிற்
      செல்வனே செழுமறை பகர்ந்த
      பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
      பாசுப தாபரஞ் சுடரே. 7.69.9
      707 சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றை
      சூழ்கொடி முல்லையாற் கட்டி
      டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்ப
      டருளிய இறைவனே என்றும்
      நல்லவர் பரவு திருமுல்லை வாயில்
      நாதனே நரைவிடை ஏறீ
      பல்கலை பொருளே படுதுயர் களையாய்
      பாசுப தாபரஞ் சுடரே. 7.69.10
      708 விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
      வெருவிட நீண்டஎம் மானை
      திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
      செல்வனை நாவலா ரூரன்
      உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும்
      உள்குளிர தேத்தவல் லார்கள்
      நரைதிரை மூப்பும் நடலையு மின்றி
      நண்ணுவர் விண்ணவர கரசே. 7.69.11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.70 திருவாவடுதுறை
      பண் - தக்கேசி
      திருச்சிற்றம்பலம்
      709 கங்கை வார்சடை யாய்கண நாதா
      கால காலனே காமனு கனலே
      பொங்கு மாகடல் விடமிடற் றானே
      பூத நாதனே புண்ணியா புனிதா
      செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
      தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
      அங்க ணாஎனை அஞ்சலென் றருளாய்
      ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. 7.70.1
      710 மண்ணின் மேல்மயங் கிக்கிட பேனை
      வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே
      கண்ணி லேன்உடம் பில்லடு நோயாற்
      கருத்த ழிந்துன கேபொறை ஆனேன்
      தெண்ணி லாஎறி குஞ்சடை யானே
      தேவ னேதிரு வாவடு துறையுள்
      அண்ண லேயெனை அஞ்சலென் றருளாய்
      ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. 7.70.2
      711 ஒப்பி லாமுலை யாளொரு பாகா
      உத்த மாமத்த மார்தரு சடையாய்
      முப்பு ரங்களை தீவளை தங்கே
      மூவ ருக்கருள் செய்யவல் லானே
      செப்ப ஆல்நிழற் கீழிரு தருளுஞ்
      செல்வ னேதிரு வாவடு துறையுள்
      அப்ப னேயெனை அஞ்சலென் றருளாய்
      ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. 7.70.3
      712 கொதியி னால்வரு காளிதன் கோபங்
      குறைய ஆடிய கூத்துடை யானே
      மதியி லேன்உடம் பில்லடு நோயால்
      மயங்கி னேன்மணி யேமண வாளா
      விதியி னாலிமை யோர்தொழு தேத்தும்
      விகிர்த னேதிரு வாவடு துறையுள்
      அதிப னேயெனை அஞ்சலென் றருளாய்
      ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. 7.70.4
      713 வந்த வாளர கன்வலி தொலைத்து
      வாழும் நாள்கொடு தாய்வழி முதலே
      வெந்த வெண்பொடி பூசவல் லானே
      வேட னாய்விச யற்கருள் புரிந்த
      இந்து சேகர னேஇமை யோர்சீர்
      ஈச னேதிரு வாவடு துறையுள்
      அந்த ணாஎனை அஞ்சலென் றருளாய்
      ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. 7.70.5
      714 குறைவி லாநிறை வேகுண குன்றே
      கூத்த னேகுழை காதுடை யானே
      உறவி லேன்உனை அன்றிமற் றடியேன்
      ஒருபி ழைபொறு தால்இழி வுண்டே
      சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர
      செம்பொ னேதிரு வாவடு துறையுள்
      அறவ னேயெனை அஞ்சலென் றருளாய்
      ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. 7.70.6
      715 வெய்ய மாகரி ஈருரி யானே
      வேங்கை ஆடையி னாய்விதி முதலே
      மெய்ய னேஅடல் ஆழியன் றரிதான்
      வேண்ட நீகொடு தருள்புரி விகிர்தா
      செய்ய மேனிய னேதிகழ் ஒளியே
      செங்க ணாதிரு வாவடு துறையுள்
      ஐய னேயெனை அஞ்சலென் றருளாய்
      ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. 7.70.7
      716 கோதி லாவமு தேஅருள் பெருகு
      கோல மேஇமை யோர்தொழு கோவே
      பாதி மாதொரு கூறுடை யானே
      பசுப தீபர மாபர மேட்டீ
      தீதி லாமலை யேதிரு வருள்சேர்
      சேவ காதிரு வாவடு துறையுள்
      ஆதி யேயெனை அஞ்சலென் றருளாய்
      ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. 7.70.8
      717 வான நாடனே வழித்துணை மருந்தே
      மாசி லாமணி யேமறை பொருளே
      ஏன மாவெயி றாமையும் எலும்பும்
      ஈடு தாங்கிய மார்புடை யானே
      தேனெய் பால்தயிர் ஆட்டுக தானே
      தேவ னேதிரு வாவடு துறையுள்
      ஆனை யேயெனை அஞ்சலென் றருளாய்
      ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. 7.70.9
      718 வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும்
      வேரி மத்தமும் விரவிமுன் முடித்த
      இண்டை மாமலர செஞ்சடை யானை
      ஈச னைத்திரு வாவடு துறையுள்
      அண்ட வாணனை சிங்கடி யப்பன்
      அணுக்க வன்றொண்டன் ஆர்வத்தால் உரைத்த
      தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள்
      சாத லும்பிற பும்மறு பாரே. 7.70.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.71 திருமறைக்காடு
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      719 யாழைப்பழி தன்னமொழி
      மங்கையொரு பங்கன்
      பேழைச்சடை முடிமேற்பிறை
      வைத்தான்இடம் பேணில்
      தாழைப்பொழி லூடேசென்று
      பூழைத்தலை நுழைந்து
      வாழைக்கனி கூழைக்குரங்
      குண்ணும்மறை காடே. 7.71.1
      720 சிகரத்திடை இளவெண்பிறை
      வைத்தான்இட தெரியில்
      முகரத்திடை முத்தின்னொளி
      பவளத்திரள் ஓ
      தகரத்திடை தாழைத்திரள்
      ஞாழற்றிரள் நீழல்
      மகரத்தொடு சுறவங்கொணர
      தெற்றும்மறை காடே. 7.71.2
      721 அங்கங்களும் மறைநான்குடன்
      விரித்தானிடம் அறிந்தோம்
      தெங்கங்களும் நெடும்பெண்ணையும்
      பழம்வீழ்மணற் படப்பை
      சங்கங்களும் இலங்கிப்பியும்
      வலம்புரிகளும் இடறி
      வங்கங்களும் உயர்கூம்பொடு
      வணங்கும்மறை காடே. 7.71.3
      722 நரைவிரவிய மயிர்தன்னொடு
      பஞ்சவடி மார்பன்
      உரைவிரவிய உத்தமனிடம்
      உணரல்லுறு மனமே
      குரைவிரவிய குலசேகர
      கொண்டற்றலை விண்ட
      வரைபுரைவன திரைபொருதிழி
      தெற்றும்மறை காடே. 7.71.4
      723 சங்கைப்பட நினையாதெழு
      நெஞ்சேதொழு தேத்த
      கங்கைச்சடை முடியுடையவர
      கிடமாவது பரவை
      அங்கைக்கடல் அருமாமணி
      உந்திக்கரை கேற்ற
      வங்கத்தொடு சுறவங்கொணர
      தெற்றும்மறை காடே. 7.71.5
      724 அடல்விடையினன் மழுவாளினன்
      அலராலணி கொன்றை
      படருஞ்சடை முடியுடையவர
      கிடமாவது பரவை
      கடலிடையிடை கழியருகினிற்
      கடிநாறுதண் கைதை
      மடலிடையிடை வெண்குருகெழு
      மணிநீர்மறை காடே. 7.71.6
      725 முளைவளரிள மதியுடையவன்
      முன்செய்தவல் வினைகள்
      களைகளைந்தெனை ஆளல்லுறு
      கண்டன்னிடஞ் செந்நெல்
      வளைவிளைவயற் கயல்பாய்தரு
      குணவார்மணற் கடல்வாய்
      வளைவளையொடு சலஞ்சலங்கொணர
      தெற்றும்மறை காடே. 7.71.7
      726 நலம்பெரியன சுரும்பார்ந்தன
      நங்கோனிடம் அறிந்தோம்
      கலம்பெரியன சாருங்கடற்
      கரைபொருதிழி கங்கை
      சலம்புரிசடை முடியுடையவர
      கிடமாவது பரவை
      வலம்புரியொடு சலஞ்சலங்கொணர
      தெற்றும்மறை காடே. 7.71.8
      727 குண்டாடியுஞ் சமணாடியுங்
      குற்றுடுக்கையர் தாமுங்
      கண்டார்கண்ட காரணம்மவை
      கருதாதுகை தொழுமின்
      எண்டோ ளினன் முக்கண்ணினன்
      ஏழிசையினன் அறுகால்
      வண்டாடுதண் பொழில்சூழ்ந்தெழு
      மணிநீர்மறை காடே. 7.71.9
      728 பாரூர்பல புடைசூழ்வள
      வயல்நாவலர் வேந்தன்
      வாரூர்வன முலையாள்உமை
      பங்கன்மறை காட்டை
      ஆரூரன தமிழ்மாலைகள்
      பாடும்மடி தொண்டர்
      நீரூர்தரு நிலனோடுயர்
      புகழாகுவர் தாமே. 7.71.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மறைக்காட்டீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.72 திருவலம்புரம்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      729 எனக்கினி தினைத்தனை புகலிடம் அறிந்தேன்
      பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்
      எனக்கினி யவன்தமர கினியவன் எழுமையும்
      மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே. 7.72.1
      730 புரமவை எரிதர வளைந்தவில் லினன்அவன்
      மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்
      அரவுரி இரந்தவன் இரந்துண விரும்பிநின்
      றிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே. 7.72.2
      731 நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்
      கூறணி கொடுமழு ஏந்தியோர் கையினன்
      ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்
      ளேறணி அடிகள்தம் இடம்வலம் புரமே. 7.72.3
      732 கொங்கணை சுரும்புண நெருங்கிய குளிரிள
      தெங்கொடு பனைபழம் படுமிட தேவர்கள்
      தங்கிடும் இடந்தடங் கடற்றிரை புடைதர
      எங்கள தடிகள்நல் இடம்வலம் புரமே. 7.72.4
      733 கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன்
      நெடுமதில் சிறுமையின் நிரவவல் லவனிடம்
      படுமணி முத்தமும் பவளமும் மிகச்சு
      திடுமணல் அடைகரை இடம்வலம் புரமே. 7.72.5
      734 கருங்கட களிற்றுரி கடவுள திடங்கயல்
      நெருங்கிய நெடும்பெணை அடும்பொடு விரவிய
      மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர
      திருங்கடல் அணைகரை இடம்வலம் புரமே. 7.72.6
      735 நரிபுரி காடரங் காநடம் ஆடுவர்
      வரிபுரி பாடநின் றாடும்எம் மான்இடம்
      புரிசுரி வரிகுழல் அரிவையோர் பால்மகிழ
      தெரியெரி யாடிதன் இடம்வலம் புரமே. 7.72.7
      736 பாறணி முடைதலை கலனென மருவிய
      நீறணி நிமிர்சடை முடியினன் நிலவிய
      மாறணி வருதிரை வயலணி பொழிலது
      ஏறுடை அடிகள்தம் இடம்வலம் புரமே. 7.72.8
      737 சடசட விடுபெணை பழம்படும் இடவகை
      படவட கத்தொடு பலிகல துலவிய
      கடைகடை பலிதிரி கபாலிதன் இடமது
      இடிகரை மணலடை இடம்வலம் புரமே. 7.72.9
      738 குண்டிகை படப்பினில் விடக்கினை ஒழித்தவர்
      கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல்
      தண்டுடை தண்டிதன் இனமுடை அரவுடன்
      எண்டிசை கொருசுடர் இடம்வலம் புரமே. 7.72.10
      739 வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல்
      இருங்குல பிறப்பர்தம் இடம்வலம் புரத்தினை
      அருங்குல தருந்தமிழ் ஊரன்வன் றொண்டன்சொல்
      பெருங்குல தவரொடு பிதற்றுதல் பெருமையே. 7.72.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வலம்புரநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.73 திருவாரூர்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      740 கரையுங் கடலும் மலையுங்
      காலையும் மாலையும் எல்லாம்
      உரையில் விரவி வருவான்
      ஒருவன் உருத்திர லோகன்
      வரையின் மடமகள் கேள்வன்
      வானவர் தானவர கெல்லாம்
      அரையனி ருப்பதும் ஆரூர்அவர்
      எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.1
      741 தனியனென் றெள்கி அறியேன்
      தம்மை பெரிது முகப்பன்
      முனிபவர் தம்மை முனிவன்
      முகம்பல பேசி மொழியேன்
      கனிகள் பலவுடை சோலை
      காய்க்குலை ஈன்ற கமுகின்
      இனிய னிருப்பதும் ஆரூர்அவர்
      எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.2
      742 சொல்லிற் குலாவன்றி சொல்லேன்
      தொடர்ந்தவர குந்துணை அல்லேன்
      கல்லில் வலிய மனத்தேன்
      கற்ற பெரும்புல வாணர்
      அல்லல் பெரிதும் அறுப்பான்
      அருமறை ஆறங்கம் ஓதும்
      எல்லை இருப்பதும் ஆரூர்அவர்
      எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.3
      743 நெறியும் அறிவுஞ் செறிவும்
      நீதியும் நான்மிக பொல்லேன்
      மிறையு தறியும் உகப்பன்
      வேண்டிற்று செய்து திரிவன்
      பிறையும் அரவும் புனலும்
      பிறங்கிய செஞ்சடை வைத்த
      இறைவன் இருப்பதும் ஆரூர்அவர்
      எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.4
      744 நீதியில் ஒன்றும் வழுவேன்
      நிட்கண் டகஞ்செய்து வாழ்வேன்
      வேதியர் தம்மை வெகுளேன்
      வெகுண்டவர குந்துணை ஆகேன்
      சோதியிற் சோதிஎம் மானை
      சுண்ணவெண் ணீறணி திட்ட
      ஆதி இருப்பதும் ஆரூர்அவர்
      எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.5
      745 அருத்தம் பெரிதும் உகப்பேன்
      அலவலை யேன்அல தார்கள்
      ஒருத்தர குதவியேன் அல்லேன்
      உற்றவர குந்துணை அல்லேன்
      பொருத்தமே லொன்று மிலாதேன்
      புற்றெடு திட்டிடங் கொண்ட
      அருத்தன் இருப்பதும் ஆரூர்அவர்
      எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.6
      746 சந்தம் பலஅறு கில்லேன்
      சார்ந்தவர் தம்மடி சாரேன்
      முந்தி பொருவிடை யேறி
      மூவுல குந்திரி வானே
      கந்தங் கமழ்கொன்றை மாலை
      கண்ணியன் விண்ணவ ரேத்தும்
      எந்தை இருப்பதும் ஆரூர்அவர்
      எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.7
      747 நெண்டி கொண்டேயுங் கிலாய்ப்பன்
      நிச்சய மேயிது திண்ணம்
      மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன்
      மெய்ப்பொரு ளன்றி உணரேன்
      பண்டங் கிலங்கையர் கோனை
      பருவரை கீழடர திட்ட
      அண்டன் இருப்பதும் ஆரூர்அவர்
      எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.8
      748 நமர்பிறர் என்ப தறியேன்
      நான்கண்ட தேகண்டு வாழ்வேன்
      தமரம் பெரிதும் உகப்பன்
      தக்கவா றொன்றும் இலாதேன்
      குமரன் திருமால் பிரமன்
      கூடிய தேவர் வணங்கும்
      அமரன் இருப்பதும் ஆரூர்அவர்
      எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.9
      749 ஆசை பலஅறு கில்லேன்
      ஆரையும் அன்றி உரைப்பேன்
      பேசிற் சழக்கலாற் பேசேன்
      பிழைப்புடை யேன்மன தன்னால்
      ஓசை பெரிதும் உகப்பேன்
      ஒலிகடல் நஞ்சமு துண்ட
      ஈசன் இருப்பதும் ஆரூர்அவர்
      எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.10
      750 எந்தை இருப்பதும் ஆரூர்அவர்
      எம்மையும் ஆள்வரோ என்று
      சிந்தை செயுந்திறம் வல்லான்
      திருமரு வுந்திரள் தோளான்
      மந்த முழவம் இயம்பும்
      வளவயல் நாவலா ரூரன்
      சந்தம் இசையொடும் வல்லார்
      தாம்புகழ் எய்துவார் தாமே. 7.73.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.74 திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      751 மின்னுமா மேகங்கள் பொழிந்திழி தருவி
      வெடிபட கரையொடு திரைகொணர தெற்றும்
      அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்
      அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
      சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்வி
      குடியுளார் அடிகளை செடியனேன் நாயேன்
      என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
      என்னுடம் படும்பிணி இடர்கெடு தானை. 7.74.1
      752 கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்
      கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி
      மாடுமா கோங்கமே மருதமே பொருது
      மலையென குலைகளை மறிக்குமா றுந்தி
      ஓடுமா காவிரி துருத்தியார் வேள்வி
      குடியுளார் அடிகளை செடியனேன் நாயேன்
      பாடுமா றறிகிலேன் எம்பெரு மானை
      பழவினை உள்ளன பற்றறு தானை. 7.74.2
      753 கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார்
      கொழுங்கனி செழும்பயன் கொண்டுகூ டெய்தி
      புல்கியு தாழ்ந்தும் போந்து தவஞ்செய்யும்
      போகரும் யோகரும் புலரிவாய் மூழ்க
      செல்லுமா காவிரி துருத்தியார் வேள்வி
      குடியுளார் அடிகளை செடியனேன் நாயேன்
      சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானை
      தொடர்ந்தடுங் கடும்பிணி தொடர்வறு தானை. 7.74.3
      754 பொறியுமா சந்தன துண்டமோ டகிலும்
      பொழிந்திழி தருவிகள் புன்புலங் கவர
      கறியுமா மிளகொடு கதலியும் உந்தி
      கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்
      எறியுமா காவிரி துருத்தியார் வேள்வி
      குடியுளார் அடிகளை செடியனேன் நாயேன்
      அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை
      அருவினை உள்ளன ஆசறு தானை. 7.74.4
      755 பொழிந்திழி மும்மத களிற்றின மருப்பும்
      பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
      இழிந்திழி தருவிகள் கடும்புனல் ஈண்டி
      எண்டிசை யோர்களும் ஆடவ திங்கே
      சுழிந்திழி காவிரி துருத்தியார் வேள்வி
      குடியுளார் அடிகளை செடியனேன் நாயேன்
      ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை
      உற்றநோய் இற்றையே உறவொழி தானை. 7.74.5
      756 புகழுமா சந்தன துண்டமோ டகிலும்
      பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி
      அகழுமா அருங்கரை வளம்பட பெருகி
      ஆடுவார் பாவந்தீர தஞ்சனம் அலம்பி
      திகழுமா காவிரி துருத்தியார் வேள்வி
      குடியுளார் அடிகளை செடியனேன் நாயேன்
      இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை
      இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை. 7.74.6
      757 வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும்
      வருடியும் வணக்கியும் மராமரம் பொருது
      கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தா
      காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்
      விரையுமா காவிரி துருத்தியார் வேள்வி
      குடியுளார் அடிகளை செடியனேன் நாயேன்
      உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை
      உலகறி பழவினை அறவொழி தானை. 7.74.7
      758 ஊருமா தேசமே மனமுக துள்ளி
      புள்ளினம் பலபடி தொண்கரை உகள
      காருமா கருங்கடல் காண்பதே கருத்தா
      கவரிமா மயிர்சு தொண்பளிங் கிடறி
      தேருமா காவிரி துருத்தியார் வேள்வி
      குடியுளார் அடிகளை செடியனேன் நாயேன்
      ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை
      அம்மைநோய் இம்மையே ஆசறு தானை. 7.74.8
      759 புலங்களை வளம்பட போக்கற பெருகி
      பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப
      இலங்குமார் முத்தினோ டினமணி இடறி
      இருகரை பெருமரம் பீழந்துகொண் டெற்றி
      கலங்குமா காவிரி துருத்தியார் வேள்வி
      குடியுளார் அடிகளை செடியனேன் நாயேன்
      விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை
      மேலைநோய் இம்மையே வீடுவி தானை. 7.74.9
      760 மங்கையோர் கூறுக தேறுக தேறி
      மாறலார் திரிபுரம் நீறெழ செற்ற
      அங்கையான் கழலடி அன்றிமற் றறியான்
      அடியவர கடியவன் தொழுவனா ரூரன்
      கங்கையார் காவிரி துருத்தியார் வேள்வி
      குடியுளார் அடிகளை சேர்த்திய பாடல்
      தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார்
      தவநெறி சென்றம ருலகம்ஆள் பவரே. 7.74.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.75 திருவானைக்கா
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      761 மறைகள் ஆயின நான்கும்
      மற்றுள பொருள்களு மெல்லா
      துறையு தோத்திர திறையு
      தொன்மையும் நன்மையு மாய
      அறையும் பூம்புனல் ஆனை
      காவுடை ஆதியை நாளும்
      இறைவன் என்றடி சேர்வார்
      எம்மையும் ஆளுடை யாரே. 7.75.1
      762 வங்கம் மேவிய வேலை
      நஞ்செழ வஞ்சர்கள் கூடி
      தங்கள் மேல்அட ராமை
      உண்ணென உண்டிருள் கண்டன்
      அங்கம் ஓதிய ஆனை
      காவுடை ஆதியை நாளும்
      எங்கள் ஈசனென் பார்கள்
      எம்மையும் ஆளுடை யாரே. 7.75.2
      763 நீல வண்டறை கொன்றை
      நேரிழை மங்கையோர் திங்கள்
      சால வாளர வங்கள்
      தங்கிய செஞ்சடை எந்தை
      ஆல நீழலுள் ஆனை
      காவுடை ஆதியை நாளும்
      ஏலு மாறுவல் லார்கள்
      எம்மையும் ஆளுடை யாரே. 7.75.3
      764 தந்தை தாயுல குக்கோர்
      தத்துவன் மெய்த்தவ தோர்க்கு
      பந்த மாயின பெருமான்
      பரிசுடை யவர்திரு வடிகள்
      அந்தண் பூம்புனல் ஆனை
      காவுடை ஆதியை நாளும்
      எந்தை என்றடி சேர்வார்
      எம்மையும் ஆளுடை யாரே. 7.75.4
      765 கணைசெ தீயர வந்நாண்
      கல்வளை யுஞ்சிலை யாக
      துணைசெய் மும்மதில் மூன்றுஞ்
      சுட்டவ னேயுல குய்ய
      அணையும் பூம்புனல் ஆனை
      காவுடை ஆதியை நாளும்
      இணைகொள் சேவடி சேர்வார்
      எம்மையும் ஆளுடை யாரே. 7.75.5
      766 விண்ணின் மாமதி சூடி
      விலையிலி கலன்அணி விமலன்
      பண்ணின் நேர்மொழி மங்கை
      பங்கினன் பசுவுக தேறி
      அண்ண லாகிய ஆனை
      காவுடை ஆதியை நாளும்
      எண்ணு மாறுவல் லார்கள்
      எம்மையும் ஆளுடை யாரே. 7.75.6
      767 தார மாகிய பொன்னி
      தண்டுறை ஆடி விழுத்தும்
      நீரில் நின்றடி போற்றி
      நின்மலா கொள்ளென ஆங்கே
      ஆரங் கொண்டவெம் மானை
      காவுடை ஆதியை நாளும்
      ஈரம் உள்ளவர் நாளும்
      எம்மையும் ஆளுடை யாரே. 7.75.7
      768 உரவம் உள்ளதோர் உழையின்
      உரிபுலி அதளுடை யானை
      விரைகொள் கொன்றையி னானை
      விரிசடை மேற்பிறை யானை
      அரவம் வீக்கிய ஆனை
      காவுடை ஆதியை நாளும்
      இரவும் எல்லியும் பகலும்
      ஏத்துவார் எமையுடை யாரே. 7.75.8
      769 வலங்கொள் வாரவர் தங்கள்
      வல்வினை தீர்க்கும் மருந்து
      கலங காலனை காலாற்
      காமனை கண்சிவ பானை
      அலங்கல் நீர்பொரும் ஆனை
      காவுடை ஆதியை நாளும்
      இலங்கு சேவடி சேர்வார்
      எம்மையும் ஆளுடை யாரே. 7.75.9
      770 ஆழி யாற்கருள் ஆனை
      காவுடை ஆதிபொன் னடியின்
      நீழ லேசர ணாக
      நின்றருள் கூர நினைந்து
      வாழ வல்லவன் றொண்டன்
      வண்டமிழ் மாலைவல் லார்போய்
      ஏழு மாபிற பற்று
      எம்மையும் ஆளுடை யாரே. 7.75.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சம்புகேசுவரர்
      தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.76 திருவாஞ்சியம்
      பண் - பியந்தைக்காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      771 பொருவ னார்புரி நூலர்
      புணர்முலை உமையவ ளோடு
      மருவ னார்மரு வார்பால்
      வருவதும் இல்லைநம் அடிகள்
      திருவ னார்பணி தேத்து
      திகழ்திரு வாஞ்சி துறையும்
      ஒருவ னார்அடி யாரை
      ஊழ்வினை நலிய வொட்டாரே. 7.76.1
      772 தொறுவில் ஆனிள ஏறு
      துண்ணென இடிகுரல் வெருவி
      செறுவில் வாளைகள் ஓட
      செங்கயல் பங்க தொதுங
      கறுவி லாமன தார்கள்
      காண்டகு வாஞ்சி தடிகள்
      மறுவி லாதவெண் ணீறு
      பூசுதல் மன்னுமொன் றுடைத்தே. 7.76.2
      773 தூர்த்தர் மூவெயி லெய்து
      சுடுநுனை பகழிய தொன்றாற்
      பார்த்த னார்திரள் தோள்மேற்
      பன்னுனை பகழிகள் பாய்ச்சி
      தீர்த்த மாமலர பொய்கை
      திகழ்திரு வாஞ்சி தடிகள்
      சாத்து மாமணி கச்சங்
      கொருதலை பலதலை யுடைத்தே. 7.76.3
      774 சள்ளை வெள்ளையங் குருகு
      தானது வாமென கருதி
      வள்ளை வெண்மலர் அஞ்சி
      மறுகியோர் வாளையின் வாயில்
      துள்ளு தெள்ளுநீர பொய்கை
      துறைமல்கு வாஞ்சி தடிகள்
      வெள்ளை நுண்பொடி பூசும்
      விகிர்தமொன் றொழிகிலர் தாமே. 7.76.4
      775 மைகொள் கண்டர்எண் டோ ளர்
      மலைமக ளுடனுறை வாழ்க்கை
      கொய்த கூவிள மாலை
      குலவிய சடைமுடி குழகர்
      கைதை நெய்தலங் கழனி
      கமழ்புகழ் வாஞ்சி தடிகள்
      பைதல் வெண்பிறை யோடு
      பாம்புடன் வைப்பது பரிசே. 7.76.5
      776 கரந்தை கூவிள மாலை
      கடிமலர கொன்றையுஞ் சூடி
      பரந்த பாரிடஞ் சூழ
      வருவர்நம் பரமர்தம் பரிசால்
      திருந்து மாடங்கள் நீடு
      திகழ்திரு வாஞ்சி துறையும்
      மருந்த னார்அடி யாரை
      வல்வினை நலிய வொட்டாரே. 7.76.6
      777 அருவி பாய்தரு கழனி
      அலர்தரு குவளையங் கண்ணார்
      குருவி யாய்கிளி சேப்ப
      குருகினம் இரிதரு கிடங்கிற்
      பருவ ரால்குதி கொள்ளும்
      பைம்பொழில் வாஞ்சி துறையும்
      இருவ ராலறி யொண்ணா
      இறைவன தறைகழல் சரணே. 7.76.7
      778 களங்க ளார்தரு கழனி
      அளிதர களிதரு வண்டு
      உளங்க ளார்கலி பாடல்
      உம்பரில் ஒலித்திடுங் காட்சி
      குளங்க ளானிழற் கீழ்நற்
      குயில்பயில் வாஞ்சி தடிகள்
      விளங்கு தாமரை பாதம்
      நினைப்பவர் வினைநலி விலரே. 7.76.8
      779 வாழை யின்கனி தானும்
      மதுவிம்மு வருக்கையின் சுளையுங்
      கூழை வானர தம்மிற்
      கூறிது சிறிதென குழறி
      தாழை வாழை தண்டாற்
      செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்
      ஏழை பாகனை யல்லால்
      இறையென கருதுத லிலமே. 7.76.9
      780 செந்நெ லங்கலங் கழனி
      திகழ்திரு வாஞ்சி துறையும்
      மின்ன லங்கலஞ் சடையெம்
      இறைவன தறைகழல் பரவும்
      பொன்ன லங்கனல் மாட
      பொழிலணி நாவலா ரூரன்
      பன்ன லங்கனல் மாலை
      பாடுமின் பத்தரு ளீரே. 7.76.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சுகவாஞ்சிநாதர்
      தேவியார் - வாழவந்தநாயகி.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.77 திருவையாறு
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      781 பரவும் பரிசொன் றறியேன்நான்
      பண்டே உம்மை பயிலாதேன்
      இரவும் பகலும் நினைந்தாலும்
      எய்த நினைய மாட்டேன்நான்
      கரவில் அருவி கமுகுண்ண
      தெங்கங் குலைக்கீழ கருப்பாலை
      அரவ திரைக்கா விரிக்கோட்ட
      தையா றுடைய அடிகளோ. 7.77.1
      782 எங்கே போவே னாயிடினும்
      அங்கே வந்தென் மனத்தீரா
      சங்கை யொன்றும் இன்றியே
      தலைநாள் கடைநாள் ஒக்கவே
      கங்கை சடைமேற் கரந்தானே
      கலைமான் மறியுங் கனல்மழுவு
      தங்கு திரைக்கா விரிக்கோட்ட
      தையா றுடைய அடிகளோ. 7.77.2
      783 மருவி பிரிய மாட்டேன்நான்
      வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன்
      பருவி விச்சி மலைச்சாரற்
      பட்டை கொண்டு பகடாடி
      குருவி ஓப்பி கிளிகடிவார்
      குழன்மேல் மாலை கொண்டோ ட்ட
      தரவ திரைக்கா விரிக்கோட்ட
      தையா றுடைய அடிகளோ. 7.77.3
      784 பழகா நின்று பணிசெய்வார்
      பெற்ற பயனொன் றறிகிலேன்
      இகழா துமக்கா பட்டோ ர்க்கு
      வேக படமொன் றரைச்சாத்தி
      குழகா வாழை குலைத்தெங்கு
      கொணர்ந்து கரைமேல் எறியவே
      அழகார் திரைக்கா விரிக்கோட்ட
      தையா றுடைய அடிகளோ. 7.77.4
      785 பிழைத்த பிழையொன் றறியேன்நான்
      பிழையை தீர பணியாயே
      மழைக்கண் நல்லார் குடைந்தாட
      மலையும் நிலனுங் கொள்ளாமை
      கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங்
      கழனி மண்டி கையேறி
      அழைக்கு திரைக்கா விரிக்கோட்ட
      தையா றுடைய அடிகளோ. 7.77.5
      786 கார்க்கொள் கொன்றை சடைமேலொன்
      றுடையாய் விடையாய் கையினால்
      மூர்க்கர் புரமூன் றெரிசெய்தாய்
      முன்னீ பின்னீ முதல்வன்நீ
      வார்க்கொள் அருவி பலவாரி
      மணியும் முத்தும் பொன்னுங்கொண்
      டார்க்கு திரைக்கா விரிக்கோட்ட
      தையா றுடைய அடிகளோ. 7.77.6
      787 மலைக்கண் மடவாள் ஒருபாலா
      பற்றி உலகம் பலிதேர்வாய்
      சிலைக்கொள் கணையால் எயிலெய்த
      செங்கண் விடையாய் தீர்த்தன்நீ
      மலைக்கொள் ளருவி பலவாரி
      மணியும் முத்தும் பொன்னுங்கொண்
      டலைக்கு திரைக்கா விரிக்கோட்ட
      தையா றுடைய அடிகளோ. 7.77.7
      788 போழும் மதியும் புனக்கொன்றை
      புனல்சேர் சென்னி புண்ணியா
      சூழும் அரவ சுடர்ச்சோதீ
      உன்னை தொழுவார் துயர்போக
      வாழு மவர்கள் அங்கங்கே
      வைத்த சிந்தை உய்த்தாட்ட
      ஆழு திரைக்கா விரிக்கோட்ட
      தையா றுடைய அடிகளோ. 7.77.8
      789 கதிர்கொள் பசியே ஒத்தேநான்
      கண்டேன் உம்மை காணாதேன்
      எதிர்த்து நீந்த மாட்டேன்நான்
      எம்மான் றம்மான் றம்மானே
      விதிர்த்து மேகம் மழைபொழிய
      வெள்ளம் பரந்து நுரைசிதறி
      அதிர்க்கு திரைக்கா விரிக்கோட்ட
      தையா றுடைய அடிகளோ. 7.77.9
      790 கூசி அடியார் இருந்தாலுங்
      குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
      தேச வேந்தன் திருமாலும்
      மலர்மேல் அயனுங் காண்கிலா
      தேச மெங்கு தெளித்தாட
      தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும்
      வாச திரைக்கா விரிக்கோட்ட
      தையா றுடைய அடிகளோ. 7.77.10
      791 கூடி அடியார் இருந்தாலுங்
      குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
      ஊடி இருந்தும் உணர்கிலேன்
      உம்மை தொண்டன் ஊரனேன்
      தேடி யெங்குங் காண்கிலேன்
      திருவா ரூரே சிந்திப்பன்
      ஆடு திரைக்கா விரிக்கோட்ட
      தையா றுடைய அடிகளோ. 7.77.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - செம்பொற்சோதியீசுவரர் தேவியார் அறம் வளர்த்த
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.78 திருக்கேதாரம்
      பண் - நட்டபாடை
      திருச்சிற்றம்பலம்
      792 வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்
      பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
      தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனுங்
      கீழ்மேலுற நின்றான்றிரு கேதாரமெ னீரே. 7.78.1
      793 பறியேசு துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்
      குறிகூவிய கூற்றங்கொளும் நாளாலறம் உளவே
      அறிவானிலும் அறிவானல நறுநீரொடு சோறு
      கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே. 7.78.2
      794 கொம்பைப்பிடி தொருக்காலர்கள் இருக்கால்மலர் தூவி
      நம்பன்னமை ஆள்வானென்று நடுநாளையும் பகலுங்
      கம்பக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களை தூவி
      செம்பொற்பொடி சிந்துந்திரு கேதாரமெ னீரே. 7.78.3
      795 உழக்கேயுண்டு படைத்தீட்டிவை திழப்பார்களுஞ் சிலர்கள்
      வழக்கேயெனிற் பிழைக்கேமென்பர் மதிமாந்திய மாந்தர்
      சழக்கேபறி நிறைப்பாரொடு தவமாவது செயன்மின்
      கிழக்கேசல மிடுவார்தொழு கேதாரமெ னீரே. 7.78.4
      796 வாளோடிய தடங்கண்ணியர் வலையிலழு தாதே
      நாளோடிய நமனார்தமர் நணுகாமுனம் நணுகி
      ஆளாயுய்ம்மின் அடிகட்கிடம் அதுவேயெனில் இதுவே
      கீளோடர வசைத்தானிடங் கேதாரமெ னீரே. 7.78.5
      797 தளிசாலைகள் தவமாவது தம்மைப்பெறி லன்றே
      குளியீருளங் குருக்கேத்திரங் கோதாவிரி குமரி
      தெளியீருளஞ் சீபர்ப்பத தெற்குவட கா
      கிளிவாழையொண் கனிகீறியுண் கேதாரமெ னீரே. 7.78.6
      798 பண்ணின்றமிழ் இசைபாடலின் பழவேய்முழ வதிர
      கண்ணின்னொளி கனகச்சுனை வயிரம்மவை சொரிய
      மண்ணின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண் டெறி
      கிண்ணென்றிசை முரலுந்திரு கேதாரமெ னீரே. 7.78.7
      799 முளைக்கைப்பிடி முகமன்சொலி முதுவேய்களை இறுத்து
      துளைக்கைக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களை தூவி
      வளைக்கைப்பொழி மழைகூர்தர மயில்மான்பிணை நிலத்தை
      கிளைக்கமணி சிந்துந்திரு கேதாரமெ னீரே. 7.78.8
      800 பொதியேசு துழல்வீர்பொதி அவமாவதும் அறியீர்
      மதிமாந்திய வழியேசென்று குழிவீழ்வதும் வினையாற்
      கதிசூழ்கடல் இலங்கைக்கிறை மலங்கவரை அடர்த்து
      கெதிபேறுசெய் திருந்தானிடங் கேதாரமெ னீரே. 7.78.9
      801 நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன்
      யாவர்சிவன் அடியார்களு கடியானடி தொண்டன்
      தேவன்றிரு கேதாரத்தை ஊரன்னுரை செய்த
      பாவின்தமிழ் வல்லார்பர லோகத்திரு பாரே. 7.78.10
      இத்தலம் வடநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கேதாரேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.79 திருப்பருப்பதம்
      பண் - நட்டபாடை
      திருச்சிற்றம்பலம்
      802 மானும்மரை இனமும்மயில் இனமுங்கல தெங்கு
      தாமேமிக மேய்ந்துதடஞ் சுனைநீர்களை பருகி
      பூமாமரம் உரிஞ்சிப்பொழி லூடேசென்று புக்கு
      தேமாம்பொழில் நீழல்துயில் சீபர்ப்பத மலையே. 7.79.1
      803 மலைச்சாரலும் பொழிற்சாரலும் புறமேவரும் இனங்கள்
      மலைப்பாற்கொணர திடித்தூட்டிட மலங்கித்தன களிற்றை
      அழைத்தோடியும் பிளிறீயவை அலமந்துவ தெய்த்து
      திகைத்தோடித்தன் பிடிதேடிடுஞ் சீபர்ப்பத மலையே. 7.79.2
      804 மன்னிப்புனங் காவல்மட மொழியாள்புனங் கா
      கன்னிக்கிளி வந்துகவை கோலிக்கதிர் கொய்ய
      என்னைக்கிளி மதியாதென்று எடுத்துக்கவண் ஒலிப்ப
      தென்னற்கிளி திரிந்தேறிய சீபர்ப்பத மலையே. 7.79.3
      805 மையார்தடங் கண்ணாள்மட மொழியாள்புனங் காக்க
      செவ்வேதிரி தாயோவென போகாவிட விளிந்து
      கைபாவிய கவணால்மணி எறியஇரி தோடி
      செவ்வாயன கிளிபாடிடுஞ் சீபர்ப்பத மலையே. 7.79.4
      806 ஆனைக்குலம் இரிந்தோடித்தன் பிடிசூழலிற் றிரி
      தானப்பிடி செவிதாழ்த்திட அதற்குமிக இரங்கி
      மானக்குற அடல்வேடர்கள் இலையாற்கலை கோலி
      தேனைப்பிழி தினிதூட்டிடுஞ் சீபர்ப்பத மலையே. 7.79.5
      807 மாற்றுக்களி றடைந்தாயென்று மதவேழங்கை யெடுத்தும்
      ஊற்றித்தழல் உமிழ்ந்தும்மதம் பொழிந்தும்முகஞ் சுழி
      தூற்றத்தரி கில்லேனென்று சொல்லிஅயல் அறி
      தேற்றிச்சென்று பிடிசூழறுஞ் சீபர்ப்பத மலையே. 7.79.6
      808 அப்போதுவ துண்டீர்களு கழையாதுமுன் னிருந்தேன்
      எப்போதும்வ துண்டாலெமை எமர்கள்சுழி யாரோ
      இப்போது கிதுவேதொழில் என்றோடி கிளியை
      செப்பேந்திள முலையாள்எறி சீபர்ப்பத மலையே. 7.79.7
      809 திரியும்புரம் நீறாக்கிய செல்வன்றன கழலை
      அரியதிரு மாலோடயன் றானும்மவர் அறியார்
      கரியின்னினம் ஓடும்பிடி தேனுண்டவை களித்து
      திரிதந்தவை திகழ்வாற்பொலி சீபர்ப்பத மலையே. 7.79.8
      810 ஏனத்திரள் கிளைக்கஎரி போலமணி சிதற
      தீயென்றவை மலைச்சாரலிற் றிரியுங்கர டீயும்
      மானும்மரை இனமும்மயில் மற்றும்பல வெல்லா
      தேனுண்பொழில் சோலைமிகு சீபர்ப்பத மலையே. 7.79.9
      811 நல்லாரவர் பலர்வாழ்தரு வயல்நாவல வூரன்
      செல்லல்லுற அரியசிவன் சீபர்ப்பத மலையை
      அல்லலவை தீரச்சொன தமிழ்மாலைகள் வல்லார்
      ஒல்லைச்செல உயர்வானகம் ஆண்டங்கிரு பாரே. 7.79.10
      இத்தலம் வடநாட்டிலுள்ளது. இது ஸ்ரீசைலம் என்றும்
      மல்லிகார்ச்சுனம் என்றும் பெயர்பெறும்.
      சுவாமிபெயர் - பருவதநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.80 திருக்கேதீச்சரம்
      பண் - நட்டபாடை
      திருச்சிற்றம்பலம்
      812 நத்தார்புடை ஞானம்பசு ஏறிந்நனை கவிழ்வாய்
      மத்தம்மத யானைஉரி போர்த்தமழு வாளன்
      பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேற்
      செத்தாரெலும் பணிவான்றிரு கேதீச்சர தானே. 7.80.1
      813 சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறை கீளுங்
      கடமார்களி யானைஉரி அணிந்தகறை கண்டன்
      படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற்
      திடமாஉறை கின்றான்றிரு கேதீச்சர தானே. 7.80.2
      814 அங்கம்மொழி அன்னாரவர் அமரர்தொழு தேத்த
      வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்
      பங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேற்
      செங்கண்ணர வசைத்தான்றிரு கேதீச்சர தானே. 7.80.3
      815 கரியகறை கண்டனல்ல கண்மேலொரு கண்ணான்
      வரியசிறை வண்டியாழ்செயும் மாதோட்டநன் னகரு
      பரியதிரை எறியாவரு பாலாவியின் கரைமேற்
      றெரியும்மறை வல்லான்றிரு கேதீச்சர தானே. 7.80.4
      816 அங்கத்துறு நோய்களடி யார்மேலொழி தருளி
      வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்
      பங்கஞ்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேற்
      தெங்கம்பொழில் சூழ்ந்ததிரு கேதீச்சர தானே. 7.80.5
      817 வெய்யவினை யாயஅடி யார்மேலொழி தருளி
      வையம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்
      பையேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற்
      செய்யசடை முடியான்றிரு கேதீச்சர தானே. 7.80.6
      818 ஊனத்துறு நோய்களடி யார்மேலொழி தருளி
      வானத்துறு மலியுங்கடல் மாதோட்டநன் னகரிற்
      பானத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரைமேல்
      ஏனத்தெயி றணிந்தான்றிரு கேதீச்சர தானே. 7.80.7
      819 அட்டன்னழ காகவரை தன்மேலர வார்த்து
      மட்டுண்டுவண் டாலும்பொழில் மாதோட்டநன் னகரிற்
      பட்டவரி நுதலாளொடு பாலாவியின் கரைமேற்
      சிட்டன்நமை யாள்வான்றிரு கேதீச்சர தானே. 7.80.8
      820 மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி
      மாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்டநன் னகரிற்
      பாவம்வினை யறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல்
      தேவன்னெனை ஆள்வான்றிரு கேதீச்சர தானே. 7.80.9
      821 கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகரு
      சிறையார்பொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சர தானை
      மறையார்புகழ் ஊரன்னடி தொண்டனுரை செய்த
      குறையாத்தமிழ் பத்துஞ்சொல கூடாகொடு வினையே. 7.80.10
      இத்தலம் ஈழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கேதீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.81 திருக்கழுக்குன்றம்
      பண் - நட்டபாடை
      திருச்சிற்றம்பலம்
      822 கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே
      நின்ற பாவம் வினைகள் தாம்பல நீங்கவே
      சென்று தொழுமின் தேவர்
      கன்றி னோடு பிடிசூழ் தண்கழு குன்றமே. 7.81.1
      823 இறங்கி சென்று தொழுமின் இன்னிசை பாடியே
      பிறங்கு கொன்றை சடையன் எங்கள் பிரானிடம்
      நிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி
      கறங்கு வெள்ளை அருவி தண்கழு குன்றமே. 7.81.2
      824 நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்
      ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திட
      தோளும் எட்டும் உடைய மாமணி சோதியான்
      காள கண்டன் உறையு தண்கழு குன்றமே. 7.81.3
      825 வெளிறு தீர தொழுமின் வெண்பொடி ஆடியை
      முளிறி லங்குமழு வாளன் முந்தி உறைவிடம்
      பிளிறு தீர பெருங்கை பெய்ம்மதம் மூன்றுடை
      களிறி னோடு பிடிசூழ் தண்கழு குன்றமே. 7.81.4
      826 புலைகள் தீர தொழுமின் புன்சடை புண்ணியன்
      இலைகொள் சூல படையன் எந்தை பிரானிடம்
      முலைகள் உண்டு தழுவி குட்டி யொடுமுசு
      கலைகள் பாயும் புறவில் தண்கழு குன்றமே. 7.815
      827 மடமு டைய அடியார் தம்மன தேஉற
      விடமு டைய மிடறன் விண்ணவர் மேலவன்
      படமு டைய அரவன் றான்பயி லும்மிடங்
      கடமு டைய புறவில் தண்கழு குன்றமே. 7.81.6
      828 ஊன மில்லா அடியார் தம்மன தேஉற
      ஞான மூர்த்தி நட்ட மாடிநவி லும்மிட
      தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடியே
      கான மஞ்சை உறையு தண்கழு குன்றமே. 7.81.7
      829 அந்த மில்லா அடியார் தம்மன தேஉற
      வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
      சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே
      கந்தம் நாறும் புறவில் தண்கழு குன்றமே. 7.81.8
      830 பிழைகள் தீர தொழுமின் பின்சடை பிஞ்ஞகன்
      குழைகொள் காதன் குழகன் றானுறை யும்மிடம்
      மழைகள் சால கலித்து நீடுயர் வேயவை
      குழைகொள் முத்தஞ் சொரியு தண்கழு குன்றமே. 7.81.9
      831 பல்லில் வெள்ளை தலையன் றான்பயி லும்மிடம்
      கல்லில் வெள்ளை அருவி தண்கழு குன்றினை
      மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினாற்
      சொல்லல் சொல்லி தொழுவா ரைத்தொழு மின்களே. 7.81.10
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வேதகிரியீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.82 திருச்சுழியல்
      பண் - நட்டபாடை
      திருச்சிற்றம்பலம்
      832 ஊனாய்உயிர் புகலாய்அக லிடமாய் முகில்பொழியும்
      வானாய்வரு மதியாய்விதி வருவானிடம் பொழிலின்
      தேனாதரி திசைவண்டினம் மிழற்றுந்திரு சுழியல்
      நானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே. 7.82.1
      833 தண்டேர்மழு படையான்மழ விடையான்எழு கடல்நஞ்
      சுண்டேபுரம் எரியச்சிலை வளைத்தான்இமை யவர்க்கா
      திண்டேர்மிசை நின்றானவன் உறையுந்திரு சுழியல்
      தொண்டேசெய வல்லாரவர் நல்லார்துயர் இலரே. 7.82.2
      834 கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங்கரை கேற்ற
      கொவ்வைத்துவர் வாயார்குடை தாடுந்திரு சுழியல்
      தெய்வத்தினை வழிபாடுசெய் தெழுவாரடி தொழுவார்
      அவ்வத்திசை கரசாகுவர் அலராள்பிரி யாளே. 7.82.3
      835 மலையான்மகள் மடமாதிட மாகத்தவள் மற்று
      கொலையானையின் உரிபோர்த்தவெம் பெருமான்றிரு சுழியல்
      அலையார்சடை யுடையானடி தொழுவார்பழு துள்ளம்
      நிலையார்திகழ் புகழால்நெடு வானத்துயர் வாரே. 7.82.4
      836 உற்றான்ந குயரும்மதி சடையான்புலன் ஐந்துஞ்
      செற்றார்திரு மேனிப்பெரு மானூர்திரு சுழியல்
      பெற்றான்இனி துறையத்திறம் பாமைத்திரு நாமங்
      கற்றாரவர் கதியுட்செல்வர் ஏத்தும்மது கடனே. 7.82.5
      837 மலந்தாங்கிய பாசப்பிற பறுப்பீர்துறை கங்கை
      சலந்தாங்கிய முடியான்அமர திடமாந்திரு சுழியல்
      நிலந்தாங்கிய மலராற்கொழும் புகையால்நினை தேத்து
      தலந்தாங்கிய புகழாம்மிகு தவமாஞ்சது ராமே. 7.82.6
      838 சைவத்தசெவ் வுருவன்றிரு நீற்றன்னுரு மேற்றன்
      கைவைத்தொரு சிலையால்அரண் மூன்றும்மெரி செய்தான்
      தெய்வத்தவர் தொழுதேத்திய குழகன்றிரு சுழியல்
      மெய்வைத்தடி நினைவார்வினை தீர்தல்லெளி தன்றே. 7.82.7
      839 பூவேந்திய பீடத்தவன் றானும்மடல் அரியுங்
      கோவேந்திய வினையத்தொடு குறுகப்புகல் அறியார்
      சேவேந்திய கொடியானவன் உறையுந்திரு சுழியல்
      மாவேந்திய கரத்தான்எம சிரத்தான்றன தடியே. 7.82.8
      840 கொண்டாடுதல் புரியாவரு தக்கன்பெரு வேள்வி
      செண்டாடுதல் புரிந்தான்திரு சுழியற்பெரு மானை
      குண்டாடிய சமண்ஆதர்கள் குடைச்சாக்கியர் அறியா
      மிண்டாடிய அதுசெய்தது வானால்வரு விதியே. 7.82.9
      841 நீரூர்தரு நிமிலன்றிரு மலையார்க்கயல் அருகே
      தேரூர்தரும் அரக்கன்சிரம் நெரித்தான்றிரு சுழியல்
      பேரூரென உரைவானடி பெயர்நாவலர் கோமான்
      ஆரூரன தமிழ்மாலைப தறிவார்துயர் இலரே. 7.82.10
      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - இணைத்திருமேனிநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.83 திருவாரூர்
      பண் - புறநீர்மை
      திருச்சிற்றம்பலம்
      842 அந்தியும் நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லி
      முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்
      சிந்தை பராமரியா தென்றிரு வாரூர்பு
      கெந்தை பிரானாரை யென்றுகொல் எய்துவதே. 7.83.1
      843 நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுது
      துன்று மலரிட்டு சூழும் வலஞ்செய்து
      தென்றல் மணங்கமழு தென்றிரு வாரூர்பு
      கென்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே. 7.83.2
      844 முன்னை முதற்பிறவி மூதறி யாமையினாற்
      பின்னை நினைந்தனவும் பேதுற வும்மொழி
      செந்நெல் வயற்கழனி தென்றிரு வாரூர்பு
      கென்னுயிர கின்னமுதை என்றுகொல் எய்துவதே. 7.83.3
      845 நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆருயிரை
      கொல்ல நினைப்பனவுங் குற்றமும் அற்றொழி
      செல்வ வயற்கழனி தென்றிரு வாரூர்பு
      கெல்லை மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே. 7.83.4
      846 கடுவரி மாக்கடலு காய்ந்தவன் தாதையைமுன்
      சுடுபொடி மெய்க்கணிந்த சோதியை வன்றலைவாய்
      அடுபுலி ஆடையனை ஆதியை ஆரூர்பு
      கிடுபலி கொள்ளியைநான் என்றுகொல் எய்துவதே. 7.83.5
      847 சூழொளி நீர்நிலந்தீ தாழ்வளி ஆகாசம்
      வானுயர் வெங்கதிரோன் வண்டமிழ் வல்லவர்கள்
      ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர்பு
      கேழுல காளியைநான் என்றுகொல் எய்துவதே. 7.83.6
      848 கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த
      வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமரா
      செம்பொனை நன்மணியை தென்றிரு வாரூர்பு
      கென்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே. 7.83.7
      849 ஆறணி நீண்முடிமேல் ஆடர வஞ்சூடி
      பாறணி வெண்டலையிற் பிச்சைகொள் நச்சரவன்
      சேறணி தண்கழனி தென்றிரு வாரூர்பு
      கேறணி எம்மிறையை என்றுகொல் எய்துவதே. 7.83.8
      850 மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்
      அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடு
      திண்ணிய மாமதில்சூழ் தென்றிரு வாரூர்பு
      கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே. 7.83.9
      851 மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆரூரை
      நன்னெடுங் காதன்மையால் நாவலர் கோன்ஊரன்
      பன்னெடுஞ் சொல்மலர்கொண் டிட்டன பத்தும்வல்லார்
      பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே. 7.83.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.84 திருக்கானப்பேர்
      பண் - புறநீர்மை
      திருச்சிற்றம்பலம்
      852 தொண்ட ரடித்தொழலுஞ் சோதி இளம்பிறையுஞ்
      சூதன மென்முலையாள் பாகமு மாகிவரும்
      புண்டரி கப்பரிசாம் மேனியும் வானவர்கள்
      பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமருங்
      கொண்ட லெனத்திகழுங் கண்டமும் எண்டோ ளுங்
      கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிர
      கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன்
      கார்வயல் சூழ்கான பேருறை காளையையே. 7.84.1
      853 கூத லிடுஞ்சடையுங் கோளர வும்விரவுங்
      கொக்கிற குங்குளிர்மா மந்தமும் ஒத்துனதாள்
      ஓத லுணர்ந்தடியார் உன்பெரு மைக்குநினை
      துள்ளுரு காவிரசும் ஓசையை பாடலும்நீ
      ஆத லுணர்ந்தவரோ டன்பு பெருத்தடியேன்
      அங்கையின் மாமலர்கொண் டென்கண தல்லல்கெட
      காத லுறத்தொழுவ தென்றுகொ லோவடியேன்
      கார்வயல் சூழ்கான பேருறை காளையையே. 7.84.2
      854 நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை
      நற்பத மென்றுணர்வார் சொற்பத மார்சிவனை
      தேனிடை இன்னமுதை மற்றத னிற்றெளிவை
      தேவர்கள் நாயகனை பூவுயர் சென்னியனை
      வானிடை மாமதியை மாசறு சோதியனை
      மாருத மும்மனலும் மண்டல மும்மாய
      கானிடை மாநடனென் றெய்துவ தென்றுகொலோ
      கார்வயல் சூழ்கான பேருறை காளையையே. 7.84.3
      855 செற்றவர் முப்புரம்அன் றட்ட சிலைத்தொழிலார்
      சேவக முந்நினைவார் பாவக முந்நெறியுங்
      குற்றமில் தன்னடியார் கூறும் இசைப்பரிசுங்
      கோசிக மும்மரையிற் கோவண மும்மதளும்
      மற்றிகழ் திண்புயமும் மார்பிடை நீறுதுதை
      மாமலை மங்கையுமை சேர்சுவ டும்புகழ
      கற்றன வும்பரவி கைதொழல் என்றுகொலோ
      கார்வயல் சூழ்கான பேருறை காளையையே. 7.84.4
      856 கொல்லை விடைக்கழகுங் கோல நறுஞ்சடையிற்
      கொத்தல ரும்மிதழி தொத்தும் அதனருகே
      முல்லை படைத்தநகை மெல்லிய லாளொருபால்
      மோகம் மிகுத்திலங்குங் கூறுசெய் யெப்பரிசு
      தில்லை நகர்ப்பொதுவுற் றாடிய சீர்நடமு
      திண்மழு வுங்கைமிசை கூரெரி யும்மடியார்
      கல்ல வடப்பரிசுங் காணுவ தென்றுகொலோ
      கார்வயல் சூழ்கான பேருறை காளையையே. 7.84.5
      857 பண்ணு தலைப்பயனார் பாடலும் நீடுதலும்
      பங்கய மாதனையார் பத்தியும் முத்தியளி
      தெண்ணு தலைப்பெருமான் என்றெழு வாரவர்தம்
      ஏசற வும்மிறையாம் எந்தையை யும்விரவி
      நண்ணு தலைப்படுமா றெங்ஙனம் என்றயலே
      நைகிற என்னைமதி துய்யும்வண் ணமருளுங்
      கண்ணு தலைக்கனியை காண்பதும் என்றுகொலோ
      கார்வயல் சூழ்கான பேருறை காளையையே. 7.84.6
      858 மாவை உரித்ததள்கொண் டங்கம் அணிந்தவனை
      வஞ்சர் மனத்திறையும் நெஞ்சணு காதவனை
      மூவர் உருத்தனதாம் மூல முதற்கருவை
      மூசிடு மால்விடையின் பாகனை ஆகமுற
      பாவக மின்றிமெய்யே பற்று மவர்க்கமுதை
      பால்நறு நெய்தயிரை தாடு பரம்பரனை
      காவல் எனக்கிறையென் றெய்துவ தென்றுகொலோ
      கார்வயல் சூழ்கான பேருறை காளையையே. 7.84.7
      859 தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனை
      தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ்
      சுண்டத னுக்கிறவா தென்றும் இருந்தவனை
      ஊழி படைத்தவனோ டொள்ளரி யும்முணரா
      அண்டனை அண்டர்த காகம நூல்மொழியும்
      ஆதியை மேதகுசீர் ஓதியை வானவர்தங்
      கண்டனை அன்பொடுசென் றெய்துவ தென்றுகொலோ
      கார்வயல் சூழ்கான பேருறை காளையையே. 7.84.8
      860 நாதனை நாதமிகு தோசைய தானவனை
      ஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரை
      மாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும்
      பற்று விடாதவனை குற்றமில் கொள்கையனை
      தூதனை என்றனையாள் தோழனை நாயகனை
      தாழ்மக ரக்குழையு தோடும் அணிந்ததிரு
      காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ
      கார்வயல் சூழ்கான பேருறை காளையையே. 7.84.9
      861 கன்னலை இன்னமுதை கார்வயல் சூழ்கான
      பேருறை காளையைஒண் சீருறை தண்டமிழால்
      உன்னி மனத்தயரா உள்ளுரு கிப்பரவும்
      ஒண்பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன்
      பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார்
      பத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழ
      மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும்
      மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே. 7.84.10
      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே காளையார் கோயில்.
      சுவாமிபெயர் - காளைநாதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.85 திருக்கூடலையாற்றூர்
      பண் - புறநீர்மை
      திருச்சிற்றம்பலம்
      862 வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்து
      பொடியணி திருமேனி புரிகுழல் உமையோடுங்
      கொடியணி நெடுமாட கூடலை யாற்றூரில்
      அடிகளிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.85.1
      863 வையகம் முழுதுண்ட மாலொடு நான்முகனும்
      பையர விளவல்குற் பாவையொ டும்முடனே
      கொய்யணி மலர்ச்சோலை கூடலை யாற்றூரில்
      ஐயனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.85.2
      864 ஊர்தொறும் வெண்டலைகொண் டுண்பலி இடுமென்று
      வார்தரு மென்முலையாள் மங்கையொ டும்முடனே
      கூர்நுனை மழுவேந்தி கூடலை யாற்றூரில்
      ஆர்வனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.85.3
      865 சந்தண வும்புனலு தாங்கிய தாழ்சடையன்
      பந்தண வும்விரலாள் பாவையொ டும்முடனே
      கொந்தண வும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்
      அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.85.4
      866 வேதியர் விண்ணவரும் மண்ணவ ருந்தொழநற்
      சோதிய துருவாகி சுரிகுழல் உமையோடுங்
      கோதிய வண்டறையுங் கூடலை யாற்றூரில்
      ஆதியிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.85.5
      867 வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு
      முத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடனே
      கொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்
      அத்தனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.85.6
      868 மழைநுழை மதியமொடு வாளர வஞ்சடைமேல்
      இழைநுழை துகிலல்குல் ஏந்திழை யாளோடுங்
      குழையணி திகழ்சோலை கூடலை யாற்றூரில்
      அழகனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.85.7
      869 மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்
      பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழ
      குறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில்
      அறவனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.85.8
      870 வேலையின் நஞ்சுண்டு விடையது தானேறி
      பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே
      கோலம துருவாகி கூடலை யாற்றூரில்
      ஆலனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.85.9
      871 கூடலை யாற்றூரிற் கொடியிடை யவளோடும்
      ஆடலு கந்தானை அதிசயம் இதுவென்று
      நாடிய இன்றமிழால் நாவல வூரன்சொற்
      பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே. 7.85.10
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - நெறிகாட்டுநாயகர் தேவியார்
      இது திருப்புறம்பயமென்னு தலத்தினின்று மெழுந்தருளி
      திருக்கூடலையாற்றூருக்கு
      சமீபமாகச்செல்லுகின்றவர் அந தலத்துக்குள் செல்லாமல் திருமுதுகுன்றை
      நோக்கிச்செல்லுங் கருத்தினராக அந்தமார்க்கத்தில் பரமசிவம் ஒரு பிராமணராய்
      நிற்கக்கண்டு ஐயரே திருமுதுகுன்றுக்கு மார்க்கமெதுவென்ன இந்த கூடலையாற்றூர்
      மார்க்கமா செல்லுகின்றதென்று சொல்லி வழிகாட்டி பின்செல்ல சுந்தரமூர்த்தி
      சுவாமிகள் முன்சென்று கூடலையாற்றூருக்கு சமீபமாக சார்ந்தபோது
      பின்வந்த பிராமணர் மறையக்கண்டு அதிசயங்கொண்டு ஓதியபதிகம்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.86 திருவன்பார்த்தான்பனங்காட்டூர்
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      872 விடையின்மேல் வருவானை
      வேதத்தின் பொருளானை
      அடையில்அன் புடையானை
      யாவர்க்கும் அறியொண்ணா
      மடையில்வா ளைகள்பாயும்
      வன்பார்த்தான் பனங்காட்டூர
      சடையிற்கங்கை தரித்தானை
      சாராதார் சார்பென்னே. 7.86.1
      873 அறையும்பைங் கழலார்ப்ப
      அரவாட அனலேந்தி
      பிறையுங்கங் கையுஞ்சூடி
      பெயர்ந்தாடும் பெருமானார்
      பறையுஞ்சங் கொலிஓவா
      படிறன்றன் பனங்காட்டூர்
      உறையுமெங்கள் பிரானாரை
      உணராதார் உணர்வென்னே. 7.86.2
      874 தண்ணார்மா மதிசூடி
      தழல்போலு திருமேனி
      கெண்ணார்நாண் மலர்கொண்டங்
      கிசைந்தேத்தும் அடியார்கள்
      பண்ணார்பா டல்அறாத
      படிறன்றன் பனங்காட்டூர
      பெண்ணாணா யபிரானை
      பேசாதார் பேச்சென்னே. 7.86.3
      875 நெற்றிக்கண் ணுடையானை
      நீறேறு திருமேனி
      குற்றமில் குணத்தானை
      கோணாதார் மனத்தானை
      பற்றிப்பாம் பரையார்த்த
      படிறன்றன் பனங்காட்டூர
      பெற்றொன்றே றும்பிரானை
      பேசாதார் பேச்சென்னே. 7.86.4
      876 உரமென்னும் பொருளானை
      உருகிலுள் ளுறைவானை
      சிரமென்னுங் கலனானை
      செங்கண்மால் விடையானை
      வரம்முன்ன மருள்செய்வான்
      வன்பார்த்தான் பனங்காட்டூர
      பரமன்எங் கள்பிரானை
      பரவாதார் பரவென்னே. 7.86.5
      877 எயிலார்பொ கம்எரித்த
      எண்டோ ள்மு கண்இறைவன்
      வெயிலாய்க்காற் றெனவீசி
      மின்னாய்த்தீ எனநின்றான்
      மயிலார்சோ லைகள்சூழ்ந்த
      வன்பார்த்தான் பனங்காட்டூர
      பயில்வானு கடிமைக்க
      பயிலாதார் பயில்வென்னே. 7.86.6
      878 மெய்யன்வெண் பொடிபூசும்
      விகிர்தன்வே தமுதல்வன்
      கையில்மான் மழுவேந்தி
      காலன்கா லம்அறுத்தான்
      பைகொள்பாம் பரையார்த்த
      படிறன்றன் பனங்காட்டூர்
      ஐயன்எங் கள்பிரானை
      அறியாதார் அறிவென்னே. 7.86.7
      879 வஞ்சமற்ற மனத்தாரை
      மறவாத பிறப்பிலியை
      பஞ்சிச்சீ றடியாளை
      பாகம்வை துகந்தானை
      மஞ்சுற்ற மணிமாட
      வன்பார்த்தான் பனங்காட்டூர்
      நெஞ்சத்தெங் கள்பிரானை
      நினையாதார் நினைவென்னே. 7.86.8
      880 மழையானு திகழ்கின்ற
      மலரோனென் றிருவர்தாம்
      உழையாநின் றவருள்க
      உயர்வான துயர்வானை
      பழையானை பனங்காட்டூர்
      பதியாக திகழ்கின்ற
      குழைகாதற் கடிமைக்க
      குழையாதார் குழைவென்னே. 7.86.9
      881 பாரூரும் பனங்காட்டூர
      பவளத்தின் படியானை
      சீரூரு திருவாரூர
      சிவன்பேர்சென் னியில்வைத்த
      ஆரூரன் அடித்தொண்டன்
      அடியன்சொல் அடிநாய்சொல்
      ஊரூரன் உரைசெய்வார்
      உயர்வான துயர்வாரே. 7.86.10
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.87 திருப்பனையூர்
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      882 மாடமாளிகை கோபுரத்தொடு
      மண்டபம்வள ரும்வளர்பொழில்
      பாடல் வண்டறையும்
      பழன திருப்பனையூர
      தோடுபெய்தொரு காதினிற்குழை
      தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின்
      றாடு மாறுவல்லார்
      அவரே அழகியரே. 7.87.1
      883 நாறுசெங்கழு நீர்மலர்
      நல்லமல்லிகை சண்பகத்தொடு
      சேறுசெய் கழனி
      பழன திருப்பனையூர்
      நீறுபூசிநெய் யாடிதன்னை
      நினைப்பவர்தம் மனத்தனாகிநின்
      றாறு சூடவல்லார்
      அவரே அழகியரே. 7.87.2
      884 செங்கண்மேதிகள் சேடெறிந்து
      தடம்படிதலிற் சேலினத்தொடு
      பைங்கண் வாளைகள்
      பாய்பழன திருப்பனையூர
      திங்கள்சூடிய செல்வனாரடி
      யார்தம்மேல்வினை தீர்ப்பராய்விடி
      லங்கிரு துறைவார்
      அவரே அழகியரே. 7.87.3
      885 வாளைபாய மலங்கிளங்கயல்
      வரிவராலுக ளுங்கழனியுள்
      பாளையொண் கமுகம்
      புடைசூழ் திருப்பனையூர
      தோளுமாகமு தோன்றநட்டமி
      டாடுவாரடி தொண்டர்தங்களை
      ஆளு மாறுவல்லார்
      அவரே அழகியரே. 7.87.4
      886 கொங்கையார்பல ருங்குடை
      தாடநீர்க்குவ ளைமலர்தர
      பங்கயம் மலரும்
      பழன திருப்பனையூர்
      மங்கைபாகமும் மாலோர்பாகமு
      தாமுடையவர் மான்மழுவினோ
      டங்கை தீயுகப்பார்
      அவரே அழகியரே. 7.87.5
      887 காவிரிபுடை சூழ்சோணாட்டவர்
      தாம்பரவிய கருணையங்கடல
      பாவிரி புலவர்
      பயிலு திருப்பனையூர்
      மாவிரிமட நோக்கிஅஞ்ச
      மதகரியுரி போர்த்துகந்தவர்
      ஆவில்ஐ துகப்பார்
      அவரே அழகியரே. 7.87.6
      888 மரங்கள்மேல்மயி லாலமண்டப
      மாடமாளிகை கோபுரத்தின்மேல்
      திரங்கல்வன் முகவன்
      புகப்பாய் திருப்பனையூர
      துரங்கன்வாய்பிள தானுந்தூமலர
      தோன்றலுமறி யாமற்றோன்றிநின்
      றரங்கில் ஆடவல்லார்
      அவரே அழகியரே. 7.87.7
      889 மண்ணெலாம்முழ வம்மதிர்தர
      மாடமாளிகை கோபுரத்தின்மேற்
      பண்ணி யாழ்முரலும்
      பழன திருப்பனையூர்
      வெண்ணிலா சடைமேவிய
      விண்ணவரொடு மண்ணவர்தொழ
      அண்ணலாகி நின்றார்
      அவரே அழகியரே. 7.87.8
      890 குரக்கினங்குதி கொள்ளத்தேனு
      குண்டுதண்வயற் கெண்டைபாய்தர
      பரக்கு தண்கழனி
      பழன திருப்பனையூர்
      இரக்கமில்லவர் ஐந்தொடைத்தலை
      தோளிருபது தாள்நெரிதர
      அரக்கனை அடர்த்தார்
      அவரே அழகியரே. 7.87.9
      891 வஞ்சிநுண்ணிடை மங்கைபங்கினர்
      மாதவர்வள ரும்வளர்பொழில்
      பஞ்சின் மெல்லடியார்
      பயிலு திருப்பனையூர்
      வஞ்சியும்வளர் நாவலூரன்
      வனப்பகையவ ளப்பன்வன்றொண்டன்
      செஞ்சொற் கேட்டுகப்பார்
      அவரே அழகியரே. 7.87.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சவுந்தரேசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.88 திருவீழிமிழலை
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      892 நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்
      நான்மறைக்கிட மாயவேள்வியுள்
      செம்பொ னேர்மடவாரணி
      பெற்ற திருமிழலை
      உம்பரார்தொழு தேத்தமாமலை
      யாளொடும்முட னேஉறைவிடம்
      அம்பொன் வீழிகொண்டீர்
      அடியேற்கும் அருளுதிரே. 7.88.1
      893 விடங்கொள்மாமிடற் றீர்வெள்ளைச்சுருளொன்
      றிட்டுவிட்ட காதினீரென்று
      திடங்கொள் சிந்தையினார்
      கலிகாக்கு திருமிழலை
      மடங்கல்பூண்டவி மானம்மண்மிசை
      வந்திழிச்சிய வானநாட்டையும்
      அடங்கல் வீழிகொண்டீர்
      அடியேற்கும் அருளுதிரே. 7.88.2
      894 ஊனைஉற்றுயிர் ஆயினீரொளி
      மூன்றுமாய்த்தெளி நீரோடானஞ்சின்
      தேனை ஆட்டுகந்தீர்
      செழுமாட திருமிழலை
      மானைமேவிய கையினீர்மழு
      வேந்தினீர்மங்கை பாகத்தீர்விண்ணில்
      ஆன வீழிகொண்டீர்
      அடியேற்கும் அருளுதிரே. 7.88.3
      895 பந்தம்வீடிவை பண்ணினீர்படி
      றீர்மதிப்பிதிர கண்ணியீரென்று
      சிந்தை செய்திருக்குஞ்
      செங்கையாளர் திருமிழலை
      வந்துநாடகம் வானநாடியர்
      ஆடமாலயன் ஏத்தநாடொறும்
      அந்தண் வீழிகொண்டீர்
      அடியேற்கும் அருளுதிரே. 7.88.4
      896 புரிசைமூன்றையும் பொன்றக்குன்றவில்
      லேந்திவேத புரவித்தேர்மிசை
      திரிசெய் நான்மறையோர்
      சிறந்தேத்து திருமிழலை
      பரிசினாலடி போற்றும்பத்தர்கள்
      பாடியாட பரிந்துநல்கினீர்
      அரிய வீழிகொண்டீர்
      அடியேற்கும் அருளுதிரே. 7.88.5
      897 எறிந்தசண்டி இடந்தகண்ணப்பன்
      ஏத்துபத்தர்க கேற்றம்நல்கினீர்
      செறிந்த பூம்பொழில்
      தேன்துளிவீசு திருமிழலை
      நிறைந்தஅந்தணர் நித்தநாடொறும்
      நேசத்தாலுமை பூசிக்கும்மிடம்
      அறிந்து வீழிகொண்டீர்
      அடியேற்கும் அருளுதிரே. 7.88.6
      898 பணிந்தபார்த்தன் பகீரதன்பல
      பத்தர்சித்தர்க்கு பண்டுநல்கினீர்
      திணிந்த மாடந்தொறுஞ்
      செல்வம்மல்கு திருமிழலை
      தணிந்தஅந்தணர் சந்திநாடொறும்
      அந்திவானிடு பூச்சிறப்பவை
      அணிந்து வீழிகொண்டீர்
      அடியேற்கும் அருளுதிரே. 7.88.7
      899 பரந்தபாரிடம் ஊரிடைப்பலி
      பற்றிப்பார்த்துணுஞ் சுற்றமாயினீர்
      தெரிந்த நான்மறை
      யோர்க்கிடமாய திருமிழலை
      இருந்துநீர்தமி ழோடிசைகேட்கும்
      இச்சையாற்காசு நித்தல்நல்கினீர்
      அருந்தண் வீழிகொண்டீர்
      அடியேற்கும் அருளுதிரே. 7.88.8
      900 தூயநீரமு தாயவாறது
      சொல்லுகென்றுமை கேட்கச்சொல்லினீர்
      தீயரா குலையாளர்
      செழுமாட திருமிழலை
      மேயநீர்பலி ஏற்றதென்னென்று
      விண்ணப்பஞ்செய் பவர்க்குமெய்ப்பொருள்
      ஆய வீழிகொண்டீர்
      அடியேற்கும் அருளுதிரே. 7.88.9
      901 வேதவேதியர் வேதநீதியர்
      ஓதுவார்விரி நீர்மிழலையுள்
      ஆதி வீழிகொண்டீர்
      அடியேற்கும் அருளுகென்று
      நாதகீதம்வண் டோ துவார்பொழில்
      நாவலூரன்வன் றொண்டன்நற்றமிழ்
      பாதம் ஓதவல்லார்
      பரனோடு கூடுவரே. 7.88.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வீழியழகர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.89 திருவெண்பாக்கம்
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      902 பிழையுளன பொறுத்திடுவர்
      என்றடியேன் பிழைத்தக்காற்
      பழியதனை பாராதே
      படலமென்கண் மறைப்பித்தாய்
      குழைவிரவு வடிகாதா
      கோயிலுளா யேயென்ன
      உழையுடையான் உள்ளிருந்து
      உளோம்போகீர் என்றானே. 7.89.1
      903 இடையறியேன் தலையறியேன்
      எம்பெருமான் சரணமென்பேன்
      அடையுடையன் நம்மடியான்
      என்றவற்றை பாராதே
      விடையுடையான் விடநாகன்
      வெண்ணீற்றன் புலியின்றோல்
      உடையுடையான் எனையுடையான்
      உளோம்போகீர் என்றானே. 7.89.2
      904 செய்வினையொன் றறியாதேன்
      திருவடியே சரணென்று
      பொய்யடியேன் பிழைத்திடினும்
      பொறுத்திடநீ வேண்டாவோ
      பையரவா இங்கிருந்தா
      யோவென்ன பரிந்தென்னை
      உய்யஅருள் செய்யவல்லான்
      உளோம்போகீர் என்றானே. 7.89.3
      905 கம்பமருங் கரியுரியன்
      கறைமிடற்றன் காபாலி
      செம்பவள திருவுருவன்
      சேயிழையோ டுடனாகி
      நம்பியிங்கே இருந்தீரே
      என்றுநான் கேட்டலுமே
      உம்பர்தனி துணையெனக்கு
      உளோம்போகீர் என்றானே. 7.89.4
      906 பொன்னிலங்கு நறுங்கொன்றை
      புரிசடைமேற் பொலிந்திலங்க
      மின்னிலங்கு நுண்ணிடையாள்
      பாகமா எருதேறி
      துன்னியிரு பால்அடியார்
      தொழுதேத்த அடியேனும்
      உன்னதமா கேட்டலுமே
      உளோம்போகீர் என்றானே. 7.89.5
      907 கண்ணுதலாற் காமனையுங்
      காய்ந்ததிறற் கங்கைமலர்
      தெண்ணிலவு செஞ்சடைமேல்
      தீமலர்ந்த கொன்றையினான்
      கண்மணியை மறைப்பித்தாய்
      இங்கிருந்தா யோவென்ன
      ஒண்ணுதலி பெருமானார்
      உளோம்போகீர் என்றானே. 7.89.6
      908 பார்நிலவு மறையோரும்
      பத்தர்களும் பணிசெ
      தார்நிலவு நறுங்கொன்றை
      சடையனார் தாங்கரிய
      கார்நிலவு மணிமிடற்றீர்
      இங்கிருந்தீ ரேயென்ன
      ஊரரவம் அரைக்கசைத்தான்
      உளோம்போகீர் என்றானே. 7.89.7
      909 வாரிடங்கொள் வனமுலையாள்
      தன்னோடு மயானத்து
      பாரிடங்கள் பலசூழ
      பயின்றாடும் பரமேட்டி
      காரிடங்கொள் கண்டத்தன்
      கருதுமிட திருஒற்றி
      யூரிடங்கொண் டிருந்தபிரான்
      உளோம்போகீர் என்றானே. 7.89.8
      910 பொன்னவிலுங் கொன்றையினாய்
      போய்மகிழ்க்கீ ழிருவென்று
      சொன்னஎனை காணாமே
      சூளறவு மகிழ்க்கீழே
      என்னவல்ல பெருமானே
      இங்கிருந்தா யோவென்ன
      ஒன்னலரை கண்டாற்போல்
      உளோம்போகீர் என்றானே. 7.89.9
      911 மான்றிகழுஞ் சங்கிலியை
      தந்துவரு பயன்களெல்லா
      தோன்றஅருள் செய்தளித்தாய்
      என்றுரைக்க உலகமெலாம்
      ஈன்றவனே வெண்கோயில்
      இங்கிருந்தா யோவென்ன
      ஊன்றுவதோர் கோலருளி
      உளோம்போகீர் என்றானே. 7.89.10
      912 ஏராரும் பொழில்நிலவு
      வெண்பாக்கம் இடங்கொண்ட
      காராறும் மிடாற்றானை
      காதலித்தி டன்பினொடுஞ்
      சீராரு திருவாரூர
      சிவன்பேர்சென் னியில்வைத்த
      ஆரூரன் தமிழ்வல்லார
      கடையாவல் வினைதானே. 7.89.11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது.
      சுவாமிபெயர் - வெண்பாக்கத்தீசுவரர் தேவியார்
      இது திருவொற்றியூரில் சங்கிலிநாச்சியாருக்கு கூறிய சபதத்தை
      மறந்து திருவாரூருக்கு செல்லுங்கருத்தினால் திருவொற்றியூரெல்லையை
      கடந்த அளவில் பார்வைமறைய அவ்வண்ணமேயெழுந்தருளி
      வெண்பாக்கத்திற்சென்று ஆலயத்துக்குளடைந்து தரிசித்து
      கோயிலிலிருக்கின்றீரோவென்ன பரமசிவம் ஊன்றுகோலொன்றருளிச்செய்து
      நாம் கோயிலுலிருக்கிறோம் நீர் போமென்று அருளிச்செய்தபோது ஓதிய பதிகம்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.90 கோயில்
      பண் - குறிஞ்சி
      திருச்சிற்றம்பலம்
      913 மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே
      மனனேநீ வாழும் நாளு
      தடுத்தாட்டி தருமனார் தமர்செக்கில்
      இடும்போது தடுத்தா கொள்வான்
      கடுத்தாடுங் கரதலத்திற் றமருகமும்
      எரிஅகலுங் கரியபாம்பும்
      பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
      பெருமானை பெற்றா மன்றே. 7.90.1
      914 பேராது காமத்திற் சென்றார்போல்
      அன்றியே பிரியா துள்கி
      சீரார்ந்த அன்பரா சென்றுமுன்
      னடிவீழு திருவி னாரை
      ஓராது தருமனார் தமர்செக்கில்
      இடும்போது தடுத்தா கொள்வான்
      பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
      பெருமானை பெற்றா மன்றே. 7.90.2
      915 நரியார்தங் கள்ளத்தாற் பக்கான
      பரிசொழிந்து நாளும் உள்கி
      பிரியாத அன்பரா சென்றுமுன்
      அடிவீழுஞ் சிந்தை யாரை
      தரியாது தருமனார் தமர்செக்கில்
      இடும்போது தடுத்தா கொள்வான்
      பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
      பெருமானை பெற்றா மன்றே. 7.90.3
      916 கருமையார் தருமனார் தமர்நம்மை
      கட்டியக டறுப்பி பானை
      அருமையா தன்னுலக தருவானை
      மண்ணுலகங் காவல் பூண்ட
      உரிமையாற் பல்லவர்க்கு திறைகொடா
      மன்னவரை மறுக்கஞ் செய்யும்
      பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
      பெருமானை பெற்றா மன்றே. 7.90.4
      917 கருமானின் உரியாடை செஞ்சடைமேல்
      வெண்மதி கண்ணி யானை
      உருமன்ன கூற்றத்தை உருண்டோ ட
      உதைத்துக துலவா இன்பம்
      தருவானை தருமனார் தமர்செக்கில்
      இடும்போது தடுத்தா கொள்வான்
      பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
      பெருமானை பெற்றா மன்றே. 7.90.5
      918 உய்த்தாடி திரியாதே உள்ளமே
      ஒழிகண்டாய் ஊன்கண் ஓட்டம்
      எத்தாலுங் குறைவில்லை என்பர்காண்
      நெஞ்சமே நம்மை நாளும்
      பைத்தாடும் அரவினன் படர்சடையன்
      பரஞ்சோதி பாவ தீர்க்கும்
      பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
      பெருமானை பெற்றா மன்றே. 7.90.6
      919 முட்டாத முச்சந்தி மூவா
      யிரவர்க்கு மூர்த்தி என்ன
      பட்டானை பத்தரா பாவிப்பார்
      பாவமும் வினையும் போக
      விட்டானை மலையெடுத்த இராவணனை
      தலைபத்தும் நெரி காலால்
      தொட்டானை புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
      பெருமானை பெற்றா மன்றே. 7.90.7
      920 கற்றானுங் குழையுமா றன்றியே
      கருதுமா கருத கிற்றார
      கெற்றாலுங் குறைவில்லை என்பர்காண்
      உள்ளமே நம்மைநாளுஞ்
      செற்றாட்டி தருமனார் தமர்செக்கில்
      இடும்போது தடுத்தா கொள்வான்
      பெற்றேறி புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
      பெருமானை பெற்றா மன்றே. 7.90.8
      921 நாடுடைய நாதன்பால் நன்றென்றுஞ்
      செய்மனமே நம்மை நாளு
      தாடுடைய தருமனார் தமர்செக்கில்
      இடும்போது தடுத்தா கொள்வான்
      மோடுடைய சமணர்க்கும் முடையுடைய
      சாக்கியர்க்கும் மூடம் வைத்த
      பீடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
      பெருமானை பெற்றா மன்றே. 7.90.9
      922 பாரூரும் அரவல்குல் உமைநங்கை
      யவள்பங்கன் பைங்கண் ஏற்றன்
      ஊரூரன் தருமனார் தமர்செக்கில்
      இடும்போது தடுத்தா கொள்வான்
      ஆரூரன் தம்பிரான்
      மீகொங்கில் அணிகாஞ் சிவா
      பேரூரர் பெருமானை புலியூர்ச்சிற்
      றம்பலத்தே பெற்றா மன்றே. 7.90.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.91 திருவொற்றியூர்
      பண் - குறிஞ்சி
      திருச்சிற்றம்பலம்
      923 பாட்டும் பாடி பரவி திரிவார்
      ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
      காட்டுங் கலமு திமிலுங் கரைக்கே
      ஓட்டு திரைவாய் ஒற்றி யூரே. 7.91.1
      924 பந்துங் கிளியும் பயிலும் பாவை
      சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
      எந்தம் அடிகள் இறைவர கிடம்போல்
      உந்து திரைவாய் ஒற்றி யூரே. 7.91.2
      925 பவள கனிவா பாவை பங்கன்
      கவள களிற்றின் உரிவை போர்த்தான்
      தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல்
      உகளு திரைவாய் ஒற்றி யூரே. 7.91.3
      926 என்ன தெழிலும் நிறையுங் கவர்வான்
      புன்னை மலரும் புறவிற் றிகழு
      தன்னை முன்னம் நினைக்க தருவான்
      உன்ன படுவான் ஒற்றி யூரே. 7.91.4
      927 பணங்கொள் அரவம் பற்றி பரமன்
      கணங்கள் சூழ கபாலம் ஏந்தி
      வணங்கும் இடைமென் மடவார் இட்ட
      உணங்கல் கவர்வான் ஒற்றி யூரே. 7.91.5
      928 படையார் மழுவன் பால்வெண் ணீற்றன்
      விடையார் கொடியன் வேத நாவன்
      அடையார் வினைகள் அறுப்பான் என்னை
      உடையான் உறையும் ஒற்றி யூரே. 7.91.6
      929 சென்ற புரங்கள் தீயில் வேவ
      வென்ற விகிர்தன் வினையை வீட்ட
      நன்று நல்ல நாதன் நரையே
      றொன்றை உடையான் ஒற்றி யூரே. 7.91.7
      930 கலவ மயில்போல் வளைக்கை நல்லார்
      பலரும் பரவும் பவள படியான்
      உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
      உலவு திரைவாய் ஒற்றி யூரே. 7.91.8
      931 பற்றி வரையை எடுத்த அரக்கன்
      இற்று முரிய விரலால் அடர்த்தார்
      எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
      ஒற்று திரைவாய் ஒற்றி யூரே. 7.91.9
      932 ஒற்றி யூரும் அரவும் பிறையும்
      பற்றி யூரும் பவள சடையான்
      ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்த
      கற்று பாட கழியும் வினையே. 7.91.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.92 திருப்புக்கொளியூர் அவிநாசி
      பண் - குறிஞ்சி
      திருச்சிற்றம்பலம்
      933 எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே
      உற்றாயென் றுன்னையே உள்குகின் றேனுணர துள்ளத்தாற்
      புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே
      பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே. 7.92.1
      934 வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ
      ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே
      பொழிலாருஞ் சோலை புக்கொளி யூரிற் குளத்திடை
      இழியா குளித்த மாணியெ னைக்கிறி செய்ததே. 7.92.2
      935 எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்காற்
      கொங்கே புகினுங் கூறைகொண் டாறலை பாரிலை
      பொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியே
      எங்கோ னேயுனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே. 7.92.3
      936 உரைப்பார் உரையுக துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
      அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
      புரைக்காடு சோலை புக்கொளி யூரவி நாசியே
      கரைக்கால் முதலையை பிள்ளை தரச்சொல்லு காலனையே. 7.92.4
      937 அரங்காவ தெல்லா மாயிடு காடது வன்றியுஞ்
      சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்து
      புரங்கோட எய்தாய் புக்கொளி யூரவி நாசியே
      குரங்காடு சோலை கோயில்கொண் டகுழை காதனே. 7.92.5
      938 நாத்தா னும்உனை பாடலன் றிநவி லாதெனா
      சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தர சோதியாய்
      பூத்தாழ் சடையாய் புக்கொளி யூரவி நாசியே
      கூத்தா உனக்குநான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே. 7.92.6
      939 மந்தி கடுவனு குண்பழம் நாடி மலைப்புறஞ்
      சந்திகள் தோறுஞ் சலபுட்பம் இட்டு வழிபட
      புந்தி உறைவாய் புக்கொளி யூரவி நாசியே
      நந்தி உனைவேண்டி கொள்வேன் நரகம் புகாமையே. 7.92.7
      940 பேணா தொழிந்தேன் உன்னைய லாற்பிற தேவரை
      காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன்நான்
      பூணாண் அரவா புக்கொளி யூரவி நாசியே
      காணாத கண்கள் காட்டவல் லகறை கண்டனே. 7.92.8
      941 நள்ளாறு தெள்ளா றரத்துறை வாய்எங்கள் நம்பனே
      வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
      புள்ளேறு சோலை புக்கொளி யூரிற் குளத்திடை
      உள்ளாட புக்க மாணியென் னைக்கிறி செய்ததே. 7.92.9
      942 நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியை
      போரேற தேறியை புக்கொளி யூரவி நாசியை
      காரேறு கண்டனை தொண்டன் ஆரூரன் கருதிய
      சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே. 7.92.10
      இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அவிநாசியப்பர் தேவியார்
      இது முதலையுண்டபிள்ளையை அழைப்பித்தபதிகம்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.93 திருநறையூர்ச்சித்தீச்சரம்
      பண் - குறிஞ்சி
      திருச்சிற்றம்பலம்
      943 நீரும் மலரும் நிலவுஞ் சடைமேல்
      ஊரும் அரவம் உடையான் இடமாம்
      வாரும் அருவி மணிபொன் கொழித்து
      சேரும் நரையூர சித்தீ சரமே. 7.93.1
      944 அளைப்பை அரவேர் இடையாள் அஞ்ச
      துளைக்கை கரித்தோல் உரித்தான் இடமாம்
      வளைக்கை மடவார் மடுவிற் றடநீர
      திளைக்கும் நறையூர சித்தீ சரமே. 7.93.2
      945 இகழு தகையோர் எயில்மூன் றெரித்த
      பகழி யொடுவில் லுடையான் பதிதான்
      முகிழ்மென் முலையார் முகமே கமல
      திகழும் நறையூர சித்தீ சரமே. 7.93.3
      946 மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால்
      இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம்
      நறக்கொள் கமலம் நனிபள் ளியெழ
      திறக்கும் நறையூர சித்தீ சரமே. 7.93.4
      947 முழுநீ றணிமே னியன்மொய் குழலார்
      எழுநீர் மைகொள்வான் அமரும் இடமாம்
      கழுநீர் கமழ கயல்சேல் உகளுஞ்
      செழுநீர் நறையூர சித்தீ சரமே. 7.93.5
      948 ஊனா ருடைவெண் டலையுண் பலிகொண்
      டானார் அடலே றமர்வான் இடமாம்
      வானார் மதியம் பதிவண் பொழில்வா
      தேனார் நறையூர சித்தீ சரமே. 7.93.6
      949 காரூர் கடலில் விடமுண் டருள்செய்
      நீரூர் சடையன் நிலவும் இடமாம்
      வாரூர் முலையார் மருவும் மறுகில்
      தேரூர் நறையூர சித்தீ சரமே. 7.93.7
      950 கரியின் உரியுங் கலைமான் மறியும்
      எரியும் மழுவும் உடையான் இடமாம்
      புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள்
      தெரியும் நறையூர சித்தீ சரமே. 7.93.8
      951 பேணா முனிவன் பெருவேள் வியெலாம்
      மாணா மைசெய்தான் மருவும் இடமாம்
      பாணார் குழலும் முழவும் விழவிற்
      சேணார் நறையூர சித்தீ சரமே. 7.93.9
      952 குறியில் வழுவா கொடுங்கூற் றுதைத்த
      எறியும் மழுவா படையான் இடமாம்
      நெறியில் வழுவா நி தவர்கள்
      செறியும் நறையூர சித்தீ சரமே. 7.93.10
      953 போரார் புரமெய் புனிதன் அமருஞ்
      சீரார் நறையூர சித்தீ சரத்தை
      ஆரூ ரன்சொல் லிவைவல் லவர்கள்
      ஏரார் இமையோர் உலகெய் துவரே. 7.93.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.94 திருச்சோற்றுத்துறை
      பண் - கௌசிகம்
      திருச்சிற்றம்பலம்
      954 அழல்நீர் ஒழுகி யனைய சடையும்
      உழையீ ருரியும் உடையான் இடமாம்
      கழைநீர் முத்துங் கன குவையுஞ்
      சுழல்நீர பொன்னி சோற்று துறையே. 7.94.1
      955 பண்டை வினைகள் பறிய நின்ற
      அண்ட முதல்வன் அமலன் இடமாம்
      இண்டை கொண்டன் பிடைய றாத
      தொண்டர் பரவுஞ் சோற்று துறையே. 7.94.2
      956 கோல அரவுங் கொக்கின் இறகும்
      மாலை மதியும் வைத்தான் இடமாம்
      ஆலும் மயிலும் ஆடல் அளியுஞ்
      சோலை தருநீர சோற்று துறையே. 7.94.3
      957 பளிக்கு தாரை பவள வெற்பிற்
      குளிக்கும் போல்நூற் கோமாற் கிடமாம்
      அளிக்கும் ஆத்தி அல்லான் மதுவ
      துளிக்குஞ் சோலை சோற்று துறையே. 7.94.4
      958 உதையுங் கூற்று கொல்கா விதிக்கு
      வதையுஞ் செய்த மைந்தன் இடமாம்
      திதையு தாது தேனுஞ் ஞிமிறு
      துதையும் பொன்னி சோற்று துறையே. 7.94.5
      959 ஓத கடல்நஞ் சினையுண் டிட்ட
      பேதை பெருமான் பேணும் பதியாம்
      சீத புனலுண் டெரியை காலுஞ்
      சூத பொழில்சூழ் சோற்று துறையே. 7.94.6
      960 இறந்தார் என்பும் எருக்குஞ் சூடி
      புறங்கா டாடும் புனிதன் கோயில்
      சிறந்தார் சுற்ற திருவென் றின்ன
      துறந்தார் சேருஞ் சோற்று துறையே. 7.94.7
      961 காமன் பொடியா கண்ணொன் றிமைத்த
      ஓ கடலார் உகந்த இடமாம்
      தேமென் குழலார் சேக்கை புகைத்த
      தூமம் விசும்பார் சோற்று துறையே. 7.94.8
      962 இலையால் அன்பால் ஏத்து மவர்க்கு
      நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்
      தலையாற் றாழு தவத்தோர கென்று
      தொலையா செல்வ சோற்று துறையே. 7.94.9
      963 சுற்றார் தருநீர சோற்று துறையுள்
      முற்றா மதிசேர் முதல்வன் பா
      தற்றார் அடியார் அடிநாய் ஊரன்
      சொற்றான் இவைகற் றார்துன் பிலரே. 7.94.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.95 திருவாரூர்
      பண் - செந்துருத்தி
      திருச்சிற்றம்பலம்
      964 மீளா அடிமை உமக்கே ஆளா
      பிறரை வேண்டாதே
      மூளா தீப்போல் உள்ளே கனன்று
      முகத்தால் மிகவாடி
      ஆளா யிருக்கும் அடியார் தங்கள்
      அல்லல் சொன்னக்கால்
      வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
      வாழ்ந்து போதீரே. 7.95.1
      965 விற்று கொள்வீர் ஒற்றி யல்லேன்
      விரும்பி ஆட்பட்டேன்
      குற்ற மொன்றுஞ் செய்த தில்லை
      கொத்தை ஆக்கினீர்
      எற்று கடிகேள் என்கண் கொண்டீர்
      நீரே பழிப்பட்டீர்
      மற்றை கண்தான் தாரா தொழிந்தால்
      வாழ்ந்து போதீரே.
      விச்சை - வித்தையென்பதுபோல் கொச்சை கொத்தை எனநின்றது.
      966 அன்றில் முட்டா தடையுஞ் சோலை
      ஆரூர் அகத்தீரே
      கன்று முட்டி உண்ண சுரந்த
      காலி யவைபோல
      என்றும் முட்டா பாடும் அடியார்
      தங்கண் காணாது
      குன்றில் முட்டி குழியில் விழுந்தால்
      வாழ்ந்து போதீரே. 7.95.3
      967 துருத்தி உறைவீர் பழனம் பதியா
      சோற்று துறையாள்வீர்
      இருக்கை திருவா ரூரே உடையீர்
      மனமே எனவேண்டா
      அருத்தி யுடைய அடியார் தங்கள்
      அல்லல் சொன்னக்கால்
      வருத்தி வைத்து மறுமை பணித்தால்
      வாழ்ந்து போதீரே. 7.95.4
      968 செந்தண் பவள திகழுஞ் சோலை
      இதுவோ திருவாரூர்
      எந்தம் அடிகேள் இதுவே ஆமா
      றுமக்கா பட்டோ ர்க்கு
      சந்தம் பலவும் பாடும் அடியார்
      தங்கண் காணாது
      வந்தெம் பெருமான் முறையோ வென்றால்
      வாழ்ந்து போதீரே. 7.95.5
      969 தினைத்தா ளன்ன செங்கால் நாரை
      சேரு திருவாரூர
      புனைத்தார் கொன்றை பொன்போல் மாலை
      புரிபுன் சடையீரே
      தனத்தா லின்றி தாந்தாம் மெலிந்து
      தங்கண் காணாது
      மனத்தால் வாடி அடியார் இருந்தால்
      வாழ்ந்து போதீரே. 7.95.6
      970 ஆயம் பேடை அடையுஞ் சோலை
      ஆரூர் அகத்தீரே
      ஏயெம் பெருமான் இதுவே ஆமா
      றுமக்கா பட்டோ ர்க்கு
      மாயங் காட்டி பிறவி காட்டி
      மறவா மனங்காட்டி
      காயங் காட்டி கண்ணீர் கொண்டால்
      வாழ்ந்து போதீரே. 7.95.7
      971 கழியா கடலா கலனாய் நிலனா
      கலந்த சொல்லாகி
      இழியா குலத்திற் பிறந்தோம் உம்மை
      இகழா தேத்துவோம்
      பழிதா னாவ தறியீர் அடிகேள்
      பாடும் பத்தரோம்
      வழிதான் காணா தல திருந்தால்
      வாழ்ந்து போதீரே. 7.95.8
      972 பேயோ டேனும் பிரிவொன் றின்னா
      தென்பர் பிறரெல்லாங்
      காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ
      கருதி கொண்டக்கால்
      நாய்தான் போல நடுவே திரிந்தும்
      உமக்கா பட்டோ ர்க்கு
      வாய்தான் திறவீர் திருவா ரூரீர்
      வாழ்ந்து போதீரே. 7.95.9
      973 செருந்தி செம்பொன் மலருஞ் சோலை
      இதுவோ திருவாரூர்
      பொருந்தி திருமூ லத்தா னம்மே
      இடமா கொண்டீரே
      இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை
      இகழா தேத்துவோம்
      வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால்
      வாழ்ந்து போதிரே. 7.95.10
      974 காரூர் கண்ட தெண்டோ ள் முக்கண்
      கலைகள் பலவாகி
      ஆரூர திருமூ லத்தா னத்தே
      அடிப்பே ராரூரன்
      பாரூர் அறிய என்கண் கொண்டீர்
      நீரே பழிப்பட்டீர்
      வாரூர் முலையாள் பாகங் கொண்டீர்
      வாழ்ந்து போதீரே. 7.95.11
      காஞ்சீபுரத்தில் ஆலந்தானெனும் பதிகமோதி ஒருகண்பெற்று
      இந்தத்தலத்தில் இந்தப்பதிகமோதி மற்றொரு கண்ணும் பெற்றது.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.96 திருவாரூர்ப்பரவையுண்மண்டளி
      பண் - பஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      975 தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள்
      காவாயே கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
      நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்
      காவாவென் பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.1
      976 பொன்னானே புலவர்க்கு நின்புகழ் போற்றலாம்
      தன்னானே தன்னை புகழ்ந்திடு தற்சோதி
      மின்னானே செக்கர் வான திளஞாயி
      றன்னானே பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.2
      977 நாமாறா துன்னையே நல்லன சொல்லுவார்
      போமாறென் புண்ணியா புண்ணியம் ஆனானே
      பேய்மாறா பிணமிடு காடுக தாடுவா
      காமாறென் பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.3
      978 நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமை
      காக்கின்றாய் கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
      வாக்கென்னும் மாலைகொண் டுன்னை என்மன
      தார்க்கின்றேன் பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.4
      979 பஞ்சேரும் மெல்லடி யாளையோர் பாகமாய்
      நஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானே
      நெஞ்சேர நின்னையே உள்கி நினைவாரை
      அஞ்சேலென் பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.5
      980 அம்மானே ஆகம சீலர கருள்நல்கும்
      பெம்மானே பேரரு ளாளன் பிடவூரன்
      தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்
      அம்மானே பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.6
      981 விண்டானே மேலையார்
      எண்டானே எழுத்தொடு சொற்பொருள் எல்லாமுன்
      கண்டானே கண்டனை கொண்டிட்டு காட்டாயே
      அண்டானே பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.7
      982 காற்றானே கார்முகில் போல்வதோர் கண்டத்தெங்
      கூற்றானே கோல்வளை யாளையோர் பாகமாய்
      நீற்றானே நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்
      ஆற்றானே பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.8
      983 செடியேன்நான் செய்வினை நல்லன செய்யாத
      கடியேன்நான் கண்டதே
      கொடியேன்நான் கூறுமா றுன்பணி கூறாத
      அடியேன்நான் பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.9
      984 கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம்
      பரந்தசீர பரவையுண் மண்டளி யம்மானை
      நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை
      விரும்புவார் மேலையார் மேலாரே.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.97 திருநனிபள்ளி
      பண் - பஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      985 ஆதியன் ஆதிரை யன்அயன் மால்அறி தற்கரிய
      சோதியன் சொற்பொரு ளாய்ச்சுருங் காமறை நான்கினையும்
      ஓதியன் உம்பர்தங் கோனுல கத்தினுள் எவ்வுயிர்க்கும்
      நாதியன் நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.1
      986 உறவிலி ஊன மிலிஉண ரார்புரம் மூன்றெரி
      செறுவிலி தன்னினை வார்வினை யாயின தேய்ந்தழிய
      அறவில கும்மரு ளான்மரு ளார்பொழில் வண்டறையும்
      நறவிரி கொன்றையி னான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.2
      987 வானுடை யான்பெரி யான்மன தாலும்நினை பரியான்
      ஆனிடை ஐந்தமர தான்அணு வாகியோர் தீயுருக்கொண்
      டூனுடை இவ்வுட லம்ஒடுங் கிப்புகு தான்பரந்தான்
      நானுடை மாடெம் பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.3
      988 ஓடுடை யன்கல னாவுடை கோவண வன்உமையோர்
      பாடுடை யன்பலி தேர்ந்துண்ணும் பண்புடை யன்பயில
      காடுடை யன்னிட மாமலை ஏழுங் கருங்கடல்சூழ்
      நாடுடை நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.4
      989 பண்ணற் கரிய தொருபடை ஆழி தனைப்படைத்து
      கண்ணற் கருள்புரி தான்கரு தாதவர் வேள்விஅவி
      உண்ணற் கிமையவ ரையுருண் டோ ட உதைத்துகந்து
      நண்ணற் கரிய பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.5
      990 மல்கிய செஞ்சடை மேல்மதி யும்மர வும்முடனே
      புல்கிய ஆரணன் எம்புனி தன்புரி நூல்விகிர்தன்
      மெல்கிய விற்றொழி லான்விரு பன்பெரும் பார்த்தனுக்கு
      நல்கிய நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.6
      991 அங்கமோ ராறவை யும்அரு மாமறை வேள்விகளும்
      எங்கும் இருந்த தணர்எரி மூன்றவை ஓம்புமிடம்
      பங்கய மாமுக தாளுமை பங்கன் உறைகோயில்
      செங்கயல் பாயும் வயற்றிரு ஊர்நனி பள்ளியதே. 7.97.7
      992 திங்க குறுந்தெரி யற்றிகழ் கண்ணியன் நுண்ணியனாய்
      நங்க பிணிகளை வான்அரு மாமரு தேழ்பிறப்பும்
      மங்க திருவிர லால்அடர தான்வல் லரக்கனையும்
      நங்க கருளும் பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.8
      993 ஏன மருப்பினொ டும்மெழில் ஆமையும் பூண்டுகந்து
      வான மதிளர ணம்மலை யேசிலை யாவளைத்தான்
      ஊனமில் காழிதன் னுள்ளுயர் ஞானசம் பந்தற்கன்று
      ஞானம் அருள்புரி தான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.9
      994 காலமும் நாழிகை யுந்நனி பள்ளி மனத்தினுள்கி
      கோலம தாயவ னைக்குளிர் நாவல ஊரன்சொன்ன
      மாலை மதித்துரை பார்மண் மறந்துவா னோருலகிற்
      சாலநல் லின்பமெய் தித்தவ லோக திருப்பவரே. 7.97.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - நற்றுணையப்பர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.98 திருநன்னிலத்துப்பெருங்கோயில்
      பண் - பஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      995 தண்ணியல் வெம்மையி னான்றலை
      யிற்கடை தோறும்பலி
      பண்ணியல் மென்மொழி யார்இட
      கொண்டுழல் பண்டரங்கன்
      புண்ணிய நான்மறை யோர்முறை
      யாலடி போற்றிசைப்ப
      நண்ணிய நன்னில துப்பெருங்
      கோயில் நயந்தவனே. 7.98.1
      996 வலங்கிளர் மாதவஞ் செய்மலை
      மங்கையோர் பங்கினனா
      சலங்கிளர் கங்கைதங் கச்சடை
      யொன்றிடை யேதரித்தான்
      பலங்கிளர் பைம்பொழில் தண்பனி
      வெண்மதி யைத்தடவ
      நலங்கிளர் நன்னில துப்பெருங்
      கோயில் நயந்தவனே. 7.98.2
      997 கச்சிய னின்கரு பூர்விரு
      பன்கரு திக்கசிவார்
      உச்சியன் பிச்சையுண் ணியுல
      கங்களெல் லாமுடையான்
      நொச்சியம் பச்சிலை யான்நுரை
      தீர்புன லாற்றொழுவார்
      நச்சிய நன்னில துப்பெருங்
      கோயில் நயந்தவனே. 7.98.3
      998 பாடிய நான்மறை யான்படு
      பல்பிண காடரங்கா
      ஆடிய மாநட தானடி
      போற்றியென் றன்பினரா
      சூடிய செங்கையி னார்பல
      தோத்திரம் வாய்த்தசொல்லி
      நாடிய நன்னில துப்பெருங்
      கோயில் நயந்தவனே. 7.98.4
      999 பிலந்தரு வாயினொ டுபெரி
      தும்வலி மிக்குடைய
      சலந்தரன் ஆகம் இருபிள
      வாக்கிய சக்கரமுன்
      நிலந்தரு மாமகள் கோன்நெடு
      மாற்கருள் செய்தபிரான்
      நலந்தரு நன்னில துப்பெருங்
      கோயில் நயந்தவனே. 7.98.5
      1000 வெண்பொடி மேனியி னான்கரு
      நீல மணிமிடற்றான்
      பெண்படி செஞ்சடை யான்பிர
      மன்சிரம் பீடழித்தான்
      பண்புடை நான்மறை யோர்பயின்
      றேத்திப்பல் கால்வணங்கும்
      நண்புடை நன்னில துப்பெருங்
      கோயில் நயந்தவனே. 7.98.6
      1001 தொடைமலி கொன்றைதுன் றுஞ்சடை
      யன்சுடர் வெண்மழுவா
      படைமலி கையன்மெய் யிற்பக
      டீருரி போர்வையினான்
      மடைமலி வண்கம லம்மலர்
      மேல்மட வன்னம்மன்னி
      நடைமலி நன்னில துப்பெருங்
      கோயில் நயந்தவனே. 7.98.7
      1002 குளிர்தரு திங்கள்கங் கைகுர
      வோடர கூவிளமும்
      மிளிர்தரு புன்சடை மேலுடை
      யான்விடை யான்விரைசேர்
      தளிர்தரு கோங்குவேங் கைதட
      மாதவி சண்பகமும்
      நளிர்தரு நன்னில துப்பெருங்
      கோயில் நயந்தவனே. 7.98.8
      1003 கமர்பயில் வெஞ்சுர துக்கடுங்
      கேழற்பின் கானவனாய்
      அமர்பயில் வெய்திய ருச்சுன
      னுக்கருள் செய்தபிரான்
      தமர்பயில் தண்விழ வில்தகு
      சைவர் தவத்தின்மிக்க
      நமர்பயில் நன்னில துப்பெருங்
      கோயில் நயந்தவனே. 7.98.9
      1004 கருவரை போலர கன்கயி
      லைம்மலை கீழ்க்கதற
      ஒருவிர லாலடர தின்னருள்
      செய்த உமாபதிதான்
      திரைபொரு பொன்னிநன் னீர்த்துறை
      வன்றிகழ் செம்பியர்கோன்
      நரபதி நன்னில துப்பெருங்
      கோயில் நயந்தவனே. 7.98.10
      1005 கோடுயர் வெங்களிற் றுத்திகழ்
      கோச்செங்க ணான்செய்கோயில்
      நாடிய நன்னில துப்பெருங்
      கோயில் நயந்தவனை
      சேடியல் சிங்கித தைசடை
      யன்றிரு வாரூரன்
      பாடிய பத்தும்வல் லார்புகு
      வார்பர லோகத்துள்ளே. 7.98.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.99 திருநாகேச்சரம்
      பண் - பஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      1006 பிறையணி வாணு தலாள்உமை
      யாளவள் பேழ்கணிக்க
      நிறையணி நெஞ்சனுங் கநீல
      மால்விடம் உண்டதென்னே
      குறையணி குல்லைமுல் லைஅளை
      துகுளிர் மாதவிமேற்
      சிறையணி வண்டுகள் சேர்திரு
      நாகே சரத்தானே. 7.99.1
      1007 அருந்தவ மாமுனி வர்க்கரு
      ளாகியோர் ஆலதன்கீழ்
      இருந்தற மேபுரி தற்கியல்
      பாகிய தென்னைகொலாங்
      குருந்தய லேகுர வம்மர
      வின்னெயி றேற்றரும்ப
      செருந்திசெம் பொன்மல ருந்திரு
      நாகே சரத்தானே. 7.99.2
      1008 பாலன தாருயிர் மேற்பரி
      யாது பகைத்தெழுந்த
      காலனை வீடுவி துக்கரு
      தாக்கிய தென்னைகொலாங்
      கோல மலர்க்குவ ளைக்கழு
      நீர்வயல் சூழ்கிடங்கிற்
      சேலொடு வாளைகள் பாய்திரு
      நாகே சரத்தானே. 7.99.3
      1009 குன்ற மலைக்கும ரிகொடி
      யேரிடை யாள்வெருவ
      வென்றி மதகரி யின்னுரி
      போர்த்தது மென்னைகொலாம்
      முன்றில் இளங்கமு கின்முது
      பாளை மதுவளைந்து
      தென்றல் புகுந்துல வுந்திரு
      நாகே சரத்தானே. 7.99.4
      1010 அரைவிரி கோவண தோடர
      வார்த்தொரு நான்மறைநூல்
      உரைபெரு கவ்வுரை தன்று
      உகந்தருள் செய்ததென்னே
      வரைதரு மாமணி யும்வரை
      சந்தகி லோடுமுந்தி
      திரைபொரு தண்பழ னத்திரு
      நாகே சரத்தானே. 7.99.5
      1011 தங்கிய மாதவ தின்றழல்
      வேள்வியி னின்றெழுந்த
      சிங்கமும் நீள்புலி யுஞ்செழு
      மால்கரி யோடலற
      பொங்கிய போர்புரி துபிள
      தீருரி போர்த்ததென்னே
      செங்கயல் பாய்கழ னித்திரு
      நாகே சரத்தானே. 7.99.6
      1012 நின்றவிம் மாதவ தையொழி
      பான்சென் றணைந்துமிக
      பொங்கிய பூங்கணை வேள்பொடி
      யாக விழித்தலென்னே
      பங்கய மாமலர் மேன்மது
      வுண்டுவண் தேன்முரல
      செங்கயல் பாய்வயல் சூழ்திரு
      நாகே சரத்தானே. 7.99.7
      1013 வரியர நாண தாகமா
      மேரு வில்லதாக
      அரியன முப்புரங் கள்ளவை
      யாரழ லூட்டலென்னே
      விரிதரு மல்லிகை யும்மலர
      சண்பக மும்மளைந்து
      திரிதரு வண்டுபண் செய்திரு
      நாகே சரத்தானே. 7.99.8
      1014 அங்கியல் யோகுதன் னையழி
      பான்சென் றணைந்துமிக
      பொங்கிய பூங்கணை வேள்பொடி
      யாக விழித்தலென்னே
      பங்கய மாமலர் மேல்மது
      வுண்டுபண் வண்டறை
      செங்கயல் நின்றுக ளுந்திரு
      நாகே சரத்தானே. 7.99.9
      1015 குண்டரை கூறையின் றித்திரி
      யுஞ்சமண் சாக்கியப்பேய்
      மிண்டரை கண்டதன் மைவிர
      வாகிய தென்னைகொலோ
      தொண்டிரை துவணங் கித்தொழில்
      பூண்டடி யார்பரவு
      தெண்டிரை தண்வயல் சூழ்திரு
      நாகே சரத்தானே. 7.99.10
      1016 கொங்கணை வண்டரற் றக்குயி
      லும்மயி லும்பயிலு
      தெங்கணை பூம்பொழில் சூழ்திரு
      நாகே சரத்தானை
      வங்கம் மலிகடல் சூழ்வயல்
      நாவலா ரூரன்சொன்ன
      பங்கமில் பாடல்வல் லாரவர்
      தம்வினை பற்றறுமே. 7.99.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர்
      தேவியார் - குன்றமுலையம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      7.100 திருநொடித்தான்மலை
      பண் - பஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      1017 தானெனை முன்படை தானத
      றிந்துதன் பொன்னடிக்கே
      நானென பாடல தோநாயி
      னேனை பொருட்படுத்து
      வானெனை வந்தெதிர் கொள்ள
      தயானை அருள்புரிந்து
      ஊனுயிர் வேறுசெய் தான்நொடி
      தான்மலை உத்தமனே. 7.100.1
      1018 ஆனை உரித்த பகைஅடி
      யேனொடு மீளக்கொலோ
      ஊனை உயிர்வெரு டிஒள்ளி
      யானை நினைந்திருந்தேன்
      வானை மதித்தம ரர்வலஞ்
      செய்தெனை ஏறவைக்க
      ஆனை அருள்புரி தான்நொடி
      தான்மலை உத்தமனே. 7.100.2
      1019 மந்திரம் ஒன்றறி யேன்மனை
      வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
      சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயு
      தொண்டனெனை
      அந்தர மால்விசும் பில்அழ
      கானை அருள்புரிந்த
      துந்தர மோநெஞ்ச மேநொடி
      தான்மலை உத்தமனே. 7.100.3
      1020 வாழ்வை உகந்தநெஞ் சேமட
      வார்தங்கள் வல்வினைப்ப
      டாழ முகந்தவென் னைஅது
      மாற்றி அமரரெல்லாஞ்
      சூழ அருள்புரி துதொண்ட
      னேன்பரம் அல்லதொரு
      வேழம் அருள்புரி தான்நொடி
      தான்மலை உத்தமனே. 7.100.4
      1021 மண்ணுல கிற்பிற துநும்மை
      வாழ்த்தும் வழியடியார்
      பொன்னுல கம்பெறு தல்தொண்ட
      னேனின்று கண்டொழிந்தேன்
      விண்ணுல கத்தவர் கள்விரும்
      பவெள்ளை யானையின்மேல்
      என்னுடல் காட்டுவி தான்நொடி
      தான்மலை உத்தமனே. 7.100.5
      1022 அஞ்சினை ஒன்றிநின் றுஅலர்
      கொண்டடி சேர்வறியா
      வஞ்சனை யென்மன மேவைகி
      வானநன் னாடர்முன்னே
      துஞ்சுதல் மாற்றுவி துத்தொண்ட
      னேன்பர மல்லதொரு
      வெஞ்சின ஆனைத தான்நொடி
      தான்மலை உத்தமனே. 7.100.6
      1023 நிலைகெட விண்ணதி ரநில
      மெங்கும் அதிர்ந்தசைய
      மலையிடை யானையே றிவழி
      யேவரு வேன்எதிரே
      அலைகட லால்அரை யன்அலர்
      கொண்டுமுன் வந்திறைஞ்ச
      உலையணை யாதவண் ணம்நொடி
      தான்மலை உத்தமனே. 7.100.7
      1024 அரவொலி ஆகமங் கள்அறி
      வாரறி தோத்திரங்கள்
      விரவிய வேதஒ லிவிண்ணெ
      லாம்வ தெதிர்ந்திசைப்ப
      வரமலி வாணன்வ துவழி
      தந்தென கேறுவதோர்
      சிரமலி யானைத தான்நொடி
      தான்மலை உத்தமேனே. 7.100.8
      1025 இந்திரன் மால்பிர மன்னெழி
      லார்மிகு தேவரெல்லாம்
      வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த
      யானை அருள்புரிந்து
      மந்திர மாமுனி வர்இவ னாரென
      எம்பெருமன்
      நந்தமர் ஊரனென் றான்நொடி
      தான்மலை உத்தமனே. 7.100.9
      1026 ஊழிதோ றூழிமுற் றுமுயர்
      பொன்னொடி தான்மலையை
      சூழிசை யின்கரும் பின்சுவை
      நாவல ஊரன்சொன்ன
      ஏழிசை இன்றமி ழால்இசை
      தேத்திய பத்தினையும்
      ஆழி கடலரை யாஅஞ்சை
      யப்பர கறிவிப்பதே.
      நொடித்தான்மலையென்பது - கயிலைமலை. 7.100.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      சுந்தரமூர்த்திசுவாமிகள் அருளிச்செய்த
      தேவாரப்பதிகங்கள் ஏழாம் திருமுறை முற்றும்.
      ------------------------------------------------------------------------
      17 2004


      --2.