திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      ஆறாம் திருமுறை முதற் பகுதி
      பாடல்கள் 1 - 508
      உள்ளுறை
      6.001 கோயில் 1-10 மின்பதிப்பு
      6.002 கோயில் 11-21 மின்பதிப்பு
      6.003 திருவீரட்டானம் 22-32 மின்பதிப்பு
      6.004 திருவதிகைவீரட்டானம் 33-43 மின்பதிப்பு
      6.005 திருவீரட்டானம் 44-53 மின்பதிப்பு
      6.006 திருவதிகைவீரட்டானம் 54-63 மின்பதிப்பு
      6.007 திருவீரட்டானம் 64-75 மின்பதிப்பு
      6.008 திருக்காளத்தி 76-86 மின்பதிப்பு
      6.009 திருஆமாத்தூர் 87-96 மின்பதிப்பு
      6.010 திருப்பந்தணைநல்லூர் 97-103 மின்பதிப்பு
      6.011 திருப்புன்கூர் - திருநீடூர் 107-116 மின்பதிப்பு
      6.012 திருக்கழிப்பாலை 117-126 மின்பதிப்பு
      6.013 திருப்புறம்பயம் 127-136 மின்பதிப்பு
      6.014 திருநல்லூர் 137-147 மின்பதிப்பு
      6.015 திருக்கருகாவூர் 148-158 மின்பதிப்பு
      6.016 திருவிடைமருது 159-168 மின்பதிப்பு
      6.017 திருவிடைமருது 169-178 மின்பதிப்பு
      6.018 திருப்பூவணம் 179-189 மின்பதிப்பு
      6.019 திருவாலவாய் 190-200 மின்பதிப்பு
      6.020 திருநள்ளாறு 201-210 மின்பதிப்பு
      6.021 திருவாக்கூர் 211-220 மின்பதிப்பு
      6.022 திருநாகைக்காரோணம் 221-231 மின்பதிப்பு
      6.023 திருமறைக்காடு 232-241 மின்பதிப்பு
      6.024 திருவாரூர் 242-251 மின்பதிப்பு
      6.025 திருவாரூர் 252-262 மின்பதிப்பு
      6.026 திருவாரூர் 263-268 மின்பதிப்பு
      6.027 திருவாரூர் 269-278 மின்பதிப்பு
      6.028 திருவாரூர் 279-289 மின்பதிப்பு
      6.029 திருவாரூர் 290-299 மின்பதிப்பு
      6.030 திருவாரூர் 300-309 மின்பதிப்பு
      6.031 திருவாரூர் 310-319 மின்பதிப்பு
      6.032 திருவாரூர் 320-329 மின்பதிப்பு
      6.033 திருவாரூர் 330-339 மின்பதிப்பு
      6.034 திருவாரூர் 340-349 மின்பதிப்பு
      6.035 திருவெண்காடு 350-359 மின்பதிப்பு
      6.036 திருப்பழனம் 360-369 மின்பதிப்பு
      6.037 திருவையாறு 370-379 மின்பதிப்பு
      6.038 திருவையாறு 380-390 மின்பதிப்பு
      6.039 திருமழபாடி 391-400 மின்பதிப்பு
      6.040 திருமழபாடி 401-407 மின்பதிப்பு
      6.041 திருநெய்த்தானம் 408-417 மின்பதிப்பு
      6.042 திருநெய்த்தானம் 418-427 மின்பதிப்பு
      6.043 திருப்பூந்துருத்தி 428-437 மின்பதிப்பு
      6.044 திருச்சோற்றுத்துறை 438-447 மின்பதிப்பு
      6.045 திருவொற்றியூர் 448-457 மின்பதிப்பு
      6.046 திருஆவடுதுறை 458-468 மின்பதிப்பு
      6.047 திருஆவடுதுறை 469-478 மின்பதிப்பு
      6.048 திருவலிவலம் 479-488 மின்பதிப்பு
      6.049 திருக்கோகரணம் 489-498 மின்பதிப்பு
      6.050 திருவீழிமிழலை 499-508 மின்பதிப்பு
      ------------------------------------------------------------------------
      6. 01 கோயில் - பெரியதிருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      1 அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை
      அருமறையி னகத்தானை அணுவை யார்க்கு
      தெரியாத தத்துவனை தேனை பாலை
      திகழொளியை தேவர்கள்தங் கோனை மற்றை
      கரியானை நான்முகனை கனலை காற்றை
      கனைகடலை குலவரையை கலந்து நின்ற
      பெரியானை பெரும்பற்ற புலியூ ரானை
      பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 6.1.1
      2 கற்றானை கங்கைவார் சடையான் றன்னை
      காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
      அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
      ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
      மற்றாரு தன்னொப்பா ரில்லா தானை
      வானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்த
      பெற்றானை பெரும்பற்ற புலியூ ரானை
      பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 6.1.2
      3 கருமானின் உரியதளே உடையா வீக்கி
      கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்தி
      வருமான திரள்தோள்கள் மட்டி தாட
      வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
      அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
      அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
      பெருமானை பெரும்பற்ற புலியூ ரானை
      பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 6.1.3
      4 அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் றன்னை
      அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
      மருந்தமரர கருள்புரிந்த மைந்தன் றன்னை
      மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணு
      திருந்தொளிய தாரகையு திசைக ளெட்டு
      திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
      பெருந்தகையை பெரும்பற்ற புலியூ ரானை
      பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 6.1.4
      5 அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
      அருமருந்தை அகல்ஞால தகத்துள் தோன்றி
      வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
      வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
      பொருந்தணைமேல் வரும்பயனை போக மாற்றி
      பொதுநீக்கி தனைநினைய வல்லோர கென்றும்
      பெருந்துணையை பெரும்பற்ற புலியூ ரானை
      பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 6.1.5
      6 கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னை
      கனவயிர குன்றனைய காட்சி யானை
      அரும்பமரும் பூங்கொன்றை தாரான் றன்னை
      அருமறையோ டாறங்க மாயி னானை
      சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர
      சுடர்க்கொழுந்தை துளக்கில்லா விளக்கை மிக்க
      பெரும்பொருளை பெரும்பற்ற புலியூ ரானை
      பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 6.1.6
      7 வரும்பயனை எழுநரம்பி னோசை யானை
      வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
      அரும்பயஞ்செ யவுணர்புர மெரி கோத்த
      அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் றன்னை
      சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கிற்
      துளங்காத சிந்தையரா துறந்தோ ருள்ள
      பெரும்பயனை பெரும்பற்ற புலியூ ரானை
      பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 6.1.7
      8 காரானை ஈருரிவை போர்வை யானை
      காமருபூங் கச்சியே கம்பன் றன்னை
      ஆரேனு மடியவர்க கணியான் றன்னை
      அமரர்களு கறிவரிய அளவி லானை
      பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
      பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண்ணில்
      பேரானை பெரும்பற்ற புலியூ ரானை
      பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 6.1.8
      9 முற்றாத பால்மதியஞ் சூடினானை
      மூவுலகு தானாய முதல்வன் றன்னை
      செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றன்னை
      திகழொளியை மரகதத்தை தேனை பாலை
      குற்றால தமர்ந்துறையுங் குழகன் றன்னை
      கூத்தாட வல்லானை கோனை ஞானம்
      பெற்றானை பெரும்பற்ற புலியூ ரானை
      பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 6.1.9
      10 காரொளிய திருமேனி செங்கண் மாலுங்
      கடிக்கமல திருந்தயனுங் காணா வண்ணஞ்
      சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லை
      திகழொளியை சிந்தைதனை மயக்க தீர்க்கும்
      ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
      ஏழுலகுங் கடந்தண்ட தப்பால் நின்ற
      பேரொளியை பெரும்பற்ற புலியூ ரானை
      பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 6.1.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6. 02 கோயில் - புக்கதிருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      11 மங்குல் மதிதவழும் மாட வீதி
      மயிலாப்பி லுள்ளார் மருக
      கொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார்
      குடமூக்கி லுள்ளார்போ கொள்ளம் பூதூர
      தங்கு மிடமறியார் சால நாளார்
      தரும புரத்துள்ளார் தக்க ளூரார்
      பொங்குவெண் ணீறணிந்து பூதஞ் சூழ
      புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. 6.2.1
      12 நாக மரைக்கசைத்த நம்ப ரிந்நாள்
      நனிபள்ளி யுள்ளார்போய் நல்லூர தங்கி
      பாக பொழுதெல்லாம் பாசூர தங்கி
      பரிதி நியமத்தார் பன்னி ருநாள்
      வேதமும் வேள்வி புகையு மோவா
      விரிநீர் மிழலை எழுநாள் தங்கி
      போகமும் பொய்யா பொருளு மானார்
      புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. 6.2.2
      13 துறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலு
      தூமதியும் பாம்பு முடையார் போலும்
      மறங்காட்டி மும்மதிலு மெய்தார் போலும்
      மந்திரமு தந்திரமு தாமே போலும்
      அறங்காட்டி அந்தணர்க்கன் றால நீழல்
      அறமருளி செய்த அரனா ரிந்நாள்
      புறங்கா டெரியாடி பூதஞ் சூழ
      புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. 6.2.3
      14 வாரேறு வனமுலையாள் பாக மாக
      மழுவாள்கை யேந்தி மயான தாடி
      சீரேறு தண்வயல்சூழ் ஓத வேலி
      திருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார்
      காரேறு கண்டத்தார் காமற் காய்ந்த
      கண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார்
      போரேறு தாமேறி பூதஞ் சூழ
      புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. 6.2.4
      15 காரார் கமழ்கொன்றை கண்ணி சூடி
      கபாலங்கை யேந்தி கணங்கள் பாட
      ஊரா ரிடும்பிச்சை கொண்டு ழலும்
      உத்தம ராய்நின்ற ஒருவ னார்தாஞ்
      சீரார் கழல்வணங்கு தேவ தேவர்
      திருவாரூர திருமூல தான மேயார்
      போரார் விடையேறி பூதஞ் சூழ
      புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. 6.2.5
      16 காதார் குழையினர் கட்டங் கத்தார்
      கயிலாய மாமலையார் காரோ ணத்தார்
      மூதாயர் மூதாதை யில்லார் போலும்
      முதலு மிறுதியு தாமே போலும்
      மாதாய மாதர் மகிழ வன்று
      மன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நா
      போதார் சடைதாழ பூதஞ் சூழ
      புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. 6.2.6
      17 இறந்தார்க்கு மென்றும் இறவா தார்க்கும்
      இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று
      பிறந்தார்க்கு மென்றும் பிறவா தார்க்கும்
      பெரியான்றன் பெருமையே பேச நின்று
      மறந்தார் மனத்தென்றும் மருவார் போலும்
      மறைக்கா டுறையும் மழுவா செல்வர்
      புறந்தாழ் சடைதாழ பூதஞ் சூழ
      புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. 6.2.7
      18 குலாவெண் டலைமாலை யென்பு பூண்டு
      குளிர்கொன்றை தாரணிந்து கொல்லே றேறி
      கலாவெங் களிற்றுரிவை போர்வை மூடி
      கையோ டனலேந்தி காடு றைவார்
      நிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம்
      நிறைவயல்சூழ் நெய்த்தான மேய செல்வர்
      புலால்வெண் டலையேந்தி பூதஞ் சூழ
      புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. 6.2.8
      19 சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்
      சங்கரனை கண்டீரோ கண்டோ மிந்நாள்
      பந்தித்த வெள்விடையை பாய வேறி
      படுதலையி லென்கொலோ ஏந்தி கொண்டு
      வந்திங்கென் வெள்வளையு தாமு மெல்லாம்
      மணியாரூர் நின்றந்தி கொள்ள கொள்ள
      பொன்றி மணிவிளக்கு பூதம் பற்ற
      புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. 6.2.9
      20 பாதங்கள் நல்லார் பரவி யேத்த
      பத்திமையாற் பணிசெய்யு தொண்டர் தங்கள்
      ஏதங்கள் தீர இருந்தார் போலும்
      எழுபிறப்பும் ஆளுடைய ஈச னார்தாம்
      வேதங்க ளோதியோர் வீணை யேந்தி
      விடையொன்று தாமேறி வேத கீதர்
      பூதங்கள் சூழ புலித்தோல் வீக்கி
      புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. 6.2.10
      21 பட்டுடுத்து தோல்போர்த்து பாம்பொன் றார்த்து
      பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்
      சிட்டரா தீயேந்தி செல்வார் தம்மை
      தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்
      விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே
      ஓதுவதும் வேதமே வீணை யுண்டே
      கட்டங்கங் கையதே சென்று காணீர்
      கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே. 6.2.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6. 03 திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      22 வெறிவிரவு கூவிளநற் றொங்க லானை
      வீரட்ட தானைவெள் ளேற்றி னானை
      பொறியரவி னானைப்புள் ளூர்தி யானை
      பொன்னிறத்தி னானை புகழ்த கானை
      அறிதற் கரியசீ ரம்மான் றன்னை
      அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னை
      எறிகெடில தானை இறைவன் றன்னை
      ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 6.3.1
      23 வெள்ளிக்குன் றன்ன விடையான் றன்னை
      வில்வலான் வில்வட்டங் காய்ந்தான் றன்னை
      புள்ளி வரிநாகம் பூண்டான் றன்னை
      பொன்பிதிர தன்ன சடையான் றன்னை
      வள்ளி வளைத்தோள் முதல்வன் றன்னை
      வாரா வுலகருள வல்லான் றன்னை
      எள்க இடுபிச்சை ஏற்பான் றன்னை
      ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 6.3.2
      24 முந்தி யுலகம் படைத்தான் றன்னை
      மூவா முதலாய மூர்த்தி தன்னை
      சந்தவெண் டிங்கள் அணிந்தான் றன்னை
      தவநெறிகள் சாதிக்க வல்லான் றன்னை
      சிந்தையில் தீர்வினையை தேனை பாலை
      செழுங்கெடில வீரட்ட மேவி னானை
      எந்தை பெருமானை ஈசன் றன்னை
      ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 6.3.3
      25 மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை
      மதியமும் ஞாயிறுங் காற்று தீயும்
      அந்தரமு மலைகடலு மானான் றன்னை
      அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னை
      கந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பி
      கடிமலர்கள் பலதூவி காலை மாலை
      இந்திரனும் வானவரு தொழச்செல் வானை
      ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 6.3.4
      26 ஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார்
      உயர்கதிக்கு வழிதேடி போக மாட்டார்
      வருபிறப்பொன் றுணராது மாசு பூசி
      வழிகாணா தவர்போல்வார் மனத்த னாகி
      அருபிறப்பை அறுப்பிக்கும் அதிகை யூரன்
      அம்மான்றன் அடியிணையே அணைந்து வாழா
      திருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொற்கே
      டேழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 6.3.5
      27 ஆறேற்க வல்ல சடையான் றன்னை
      அஞ்சனம் போலு மிடற்றான் றன்னை
      கூறேற கூறமர வல்லான் றன்னை
      கோல்வளைக்கை மாதராள் பாகன் றன்னை
      நீறேற்க பூசும் அகல தானை
      நின்மலன் றன்னை நிமலன்
      ஏறேற்க ஏறுமா வல்லான் றன்னை
      ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 6.3.6
      28 குண்டாக்க னாயுழன்று கையி லுண்டு
      குவிமுலையார் தம்முன்னே நாண மின்றி
      உண்டி யுகந்தமணே நின்றார் சொற்கே
      டுடனாகி யுழிதந்தேன் உணர்வொன் றின்றி
      வண்டுலவு கொன்றையங் கண்ணி யானை
      வானவர்க ளேத்த படுவான் றன்னை
      எண்டிசைக்கு மூர்த்தியாய் நின்றான் றன்னை
      ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 6.3.7
      29 உறிமுடித்த குண்டிகைதங் கையிற் றூக்கி
      ஊத்தைவா சமணர்க்கோர் குண்டா கனா
      கறிவிரவு நெய்சோறு கையி லுண்டு
      கண்டார்க்கு பொல்லாத காட்சி யானேன்
      மறிதிரைநீர பவ்வநஞ் சுண்டான் றன்னை
      மறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன்
      எறிகெடில நாடர் பெருமான் றன்னை
      ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 6.3.8
      30 நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் றன்னை
      நெற்றிமேற் கண்ணொன் றுடையான் றன்னை
      மறையானை மாசொன் றிலாதான் றன்னை
      வானவர்மேல் மலரடியை வைத்தான் றன்னை
      கறையானை காதார் குழையான் றன்னை
      கட்டங்க மேந்திய கையி னானை
      இறையானை எந்தை பெருமான் றன்னை
      ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 6.3.9
      31 தொல்லைவான் சூழ்வினைகள் சூழ போந்து
      தூற்றியே னாற்றியேன் சுடராய் நின்று
      வல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்ட
      வானவர்க்கு தானவர்க்கும் பெருமான் றன்னை
      கொல்லைவா குருந்தொசித்து குழலு மூதுங்
      கோவலனும் நான்முகனுங் கூடி யெங்கும்
      எல்லைகாண் பரியானை எம்மான் றன்னை
      ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 6.3.10
      32 முலைமறைக்க பட்டுநீ ராட பெண்கள்
      முறைமுறையால் நந்தெய்வ மென்று தீண்டி
      தலைபறிக்கு தன்மையர்க ளாகி நின்று
      தவமேயென் றவஞ்செய்து தக்க தோரார்
      மலைமறிக்க சென்ற இலங்கை கோனை
      மதனழி செற்றசே வடியி னானை
      இலைமறித்த கொன்றை தாரான் றன்னை
      ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 6.3.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6. 04 திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      33 சந்திரனை மாகங்கை திரையால் மோத
      சடாமகுட திருத்துமே சாம வேத
      கந்தருவம் விரும்புமே கபால மேந்து
      கையனே மெய்யனே கனக மேனி
      பந்தணவு மெல்விரலாள் பாக னாமே
      பசுவேறு மேபரம யோகி யாமே
      ஐந்தலைய மாசுணங்கொண் டரையார கும்மே
      அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6.4.1
      34 ஏறேறி யேழுலகும் உழிதர் வானே
      இமையவர்கள் தொழுதேத்த இருக்கின் றானே
      பாறேறு படுதலையிற் பலிகொள் வானே
      படவரவ தடமார்பிற் பயில்வி தானே
      நீறேறு செழும்பவள குன்றொ பானே
      நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவி தானே
      ஆறேறு சடைமுடிமேற் பிறைவை தானே
      அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6.4.2
      35 முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே
      முதலாகி நடுவாகி முடிவா னானே
      கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே
      கதநாகங் கொண்டாடுங் காட்சி யானே
      பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானே
      பெருநிலநீர் தீவளிஆ காச மாகி
      அண்டத்து கப்பாலாய் இப்பா லானே
      அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6.4.3
      36 செய்யனே கரியனே கண்டம் பைங்கண்
      வெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக
      வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னி
      சடையனே விளங்குமழு சூல மேந்துங்
      கையனே காலங்கள் மூன்றா னானே
      கருப்புவிற் றனிக்கொடும்பூண் காமற் காய்ந்த
      ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே
      அவனாகி லதிகைவீ ரட்ட னாமே. 6.4.4
      37 பாடுமே யொழியாமே நால்வே தமும்
      படர்சடைமேல் ஒளிதிகழ பனிவெண் டிங்கள்
      சூடுமே அரைதிகழ தோலும் பாம்புஞ்
      சுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங்
      கூடுமே குடமுழவம் வீணை தாளங்
      குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூ
      தாடுமே அந்தடக்கை அனலே தும்மே
      அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6.4.5
      38 ஒழித்திடுமே உள்குவார் உள்ள துள்ள
      உறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றை கண்ணால்
      விழித்திடுமே காமனையும் பொடியா வீழ
      வெள்ள புனற்கங்கை செஞ்சடைமேல்
      இழித்திடுமே ஏழுலகு தானா கும்மே
      இயங்கு திரிபுரங்க ளோரம் பினால்
      அழித்திடுமே ஆதிமா தவத்து ளானே
      அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6.4.6
      39 குழலோடு கொக்கரைகை தாளம் மொந்தை
      குறட்பூதம் முன்பாட தானா டும்மே
      கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து
      கனவின்கண் திருவுருவ தான்கா டும்மே
      எழிலாரு தோள்வீசி நடமா டும்மே
      ஈ புறங்காட்டில் ஏ தோறும்
      அழலாடு மேயட்ட மூர்த்தி யாமே
      அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6.4.7
      40 மாலாகி மதமிக்க களிறு தன்னை
      வதைசெய்து மற்றதனின் உரிவை கொண்டு
      மேலாலுங் கீழாலு தோன்றா வண்ணம்
      வெம்புலால் கைகலக்க மெய்போர தானே
      கோலாலம் படவரைந டரவு சுற்றி
      குரைகடலை திரையலற கடைந்து கொண்ட
      ஆலால முண்டிருண்ட கண்ட தானே
      அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6.4.8
      41 செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
      செஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும்
      வம்பினார் மலர்க்கூந்த லுமையாள் காதல்
      மணவாள னேவலங்கை மழுவா ளனே
      நம்பனே நான்மறைகள் தொழநின் றானே
      நடுங்காதார் புரமூன்றும் நடுங்க செற்ற
      அம்பனே அண்டகோ சரத்து ளானே
      அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6.4.9
      42 எழுந்ததிரை நதித்துவலை நனைந்த திங்கள்
      இளநிலா திகழ்கின்ற வளர்ச டையனே
      கொழும்பவள செங்கனிவா கா கோட்டி
      கொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட
      தழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டே
      சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
      அழுந்தியசெ திருவுருவில் வெண்ணீற் றானே
      அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6.4.10
      43 நெடியானும் நான்முகனும் நேடி காணா
      நீண்டானே நேரொருவ ரில்லா தானே
      கொடியேறு கோலமா மணிகண் டனே
      கொல்வேங்கை அதளனே கோவ ணவனே
      பொடியேறு மேனியனே ஐயம் வேண்டி
      புவலோக திரியுமே புரிநூ லானே
      அடியாரை அமருலகம் ஆள்வி கும்மே
      அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6.4.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6. 05 திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      44 எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
      எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
      கொல்லார் மழுவா படையாய் போற்றி
      கொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி
      கல்லாதார் காட்சி கரியாய் போற்றி
      கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
      வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
      வீரட்டங் காதல் விமலா போற்றி. 6.5.1
      45 பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி
      பல்லூழி யாய படைத்தாய் போற்றி
      ஓட்டகத்தே யூணா உகந்தாய் போற்றி
      உள்குவார் உள்ள துறைவாய் போற்றி
      காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
      கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி
      ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி
      அலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி. 6.5.2
      46 முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
      முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
      எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
      ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
      சில்லை சிரைத்தலையில் ஊணா போற்றி
      சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
      தில்லைச்சிற் றம்பல மேயாய் போற்றி
      திருவீர டானத்தெஞ் செல்வா போற்றி. 6.5.3
      47 சாம்பர் அகல தணிந்தாய் போற்றி
      தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
      கூம்பி தொழுவார்தங் குற்றே வலை
      குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி
      பாம்பும் மதியும் புனலு தம்மிற்
      பகைதீர துடன்வைத்த பண்பா போற்றி
      ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி
      அலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி. 6.5.4
      48 நீறேறு நீல மிடற்றாய் போற்றி
      நிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி
      கூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றி
      கோளரவம் ஆட்டுங் குழகா போற்றி
      ஆறேறு சென்னி யுடையாய் போற்றி
      அடியார்க காரமுத மானாய் போற்றி
      ஏறேற என்றும் உகப்பாய் போற்றி
      இருங்கெடில வீரட்ட தெந்தாய் போற்றி. 6.5.5
      49 பாடுவார் பாட லுகப்பாய் போற்றி
      பழையாற்று பட்டீ சுரத்தாய் போற்றி
      வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
      வேழ துரிவெருவ போர்த்தாய் போற்றி
      நாடுவார் நாடற் கரியாய் போற்றி
      நாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி
      ஆடுமா னைந்தும் உகப்பாய் போற்றி
      அலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி. 6.5.6
      50 மண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
      மால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி
      விண்டுளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
      வேழ துரிமூடும் விகிர்தா போற்றி
      பண்டுளங்க பாடல் பயின்றாய் போற்றி
      பார்முழுது மாய பரமா போற்றி
      கண்டுளங காமனைமுன் காய்ந்தாய் போற்றி
      கார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி. 6.5.7
      51 வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி
      விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
      துஞ்சா பலிதேரு தோன்றால் போற்றி
      தொழுதகை துன்ப துடைப்பாய் போற்றி
      நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
      நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
      அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி
      அலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி. 6.5.8
      52 சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
      சீபர்ப்ப தஞ்சிந்தை செய்தாய் போற்றி
      புந்தியா புண்டரிக துள்ளாய் போற்றி
      புண்ணியனே போற்றி புனிதா
      சந்தியாய் நின்ற சதுரா போற்றி
      தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
      அந்தியாய் நின்ற அரனே போற்றி
      அலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி. 6.5.9
      53 முக்கணா போற்றி முதல்வா
      முருகவேள் தன்னை பயந்தாய் போற்றி
      தக்கணா போற்றி தருமா
      தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
      தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்ப
      துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி
      எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி
      எறிகெடில வீரட்ட தீசா போற்றி. 6.5.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6. 06 திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      54 அரவணையான் சிந்தி தரற்றும்மடி
      அருமறையான் சென்னி கணியாமடி
      சரவணத்தான் கைதொழுது சாரும்மடி
      சார்ந்தார்க கெல்லாஞ் சரணாமடி
      பரவுவார் பாவம் பறைக்கும்மடி
      பதினெண் கணங்களும் பாடும்மடி
      திரைவிரவு தென்கெடில நாடன்னடி
      திருவீர டானத்தெஞ் செல்வனடி. 6.6.1
      55 கொடுவினையா ரென்றுங் குறுகாவடி
      குறைந்தடைந்தார் ஆழாமை காக்கும்மடி
      படுமுழவம் பாணி பயிற்றும்மடி
      பதைத்தெழுந்த வெங்கூற்றை பாய்ந்தவடி
      கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி
      கடல்வையங் காப்பான் கருதும்மடி
      நெடுமதியங் கண்ணி யணிந்தானடி
      நிறைகெடில வீரட்டம் நீங்காவடி. 6.6.2
      56 வைதெழுவார் காமம்பொய் போகாவடி
      வஞ்சவலை பாடொன் றில்லாவடி
      கைதொழுது நாமேத்தி காணும்மடி
      கணக்கு வழக்கை கடந்தவடி
      நெய்தொழுது நாமேத்தி யாட்டும்மடி
      நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி
      தெய்வ புனற்கெடில நாடன்னடி
      திருவீர டானத்தெஞ் செல்வனடி. 6.6.3
      57 அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி
      அழகெழுத லாகா அருட்சேவடி
      சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி
      சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி
      பெரும்பித்தர் கூடி பிதற்றும்மடி
      பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி
      திருந்துநீர தென்கெடில நாடன்னடி
      திருவீர டானத்தெஞ் செல்வனடி. 6.6.4
      58 ஒருகால தொன்றாகி நின்றவடி
      ஊழிதோ றூழி உயர்ந்தவடி
      பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்மடி
      புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
      இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி
      இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி
      திருவதிகை தென்கெடில நாடன்னடி
      திருவீர டானத்தெஞ் செல்வனடி. 6.6.5
      59 திருமகட்கு செந்தா மரையாமடி
      சிறந்தவர்க்கு தேனாய் விளைக்கும்மடி
      பொருளவர்க்கு பொன்னுரையாய் நின்றவடி
      புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
      உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி
      உருவென் றுணர படாதவடி
      திருவதிகை தென்கெடில நாடன்னடி
      திருவீர டானத்தெஞ் செல்வனடி. 6.6.6
      60 உரைமாலை யெல்லா முடையவடி
      உரையால் உணர படாதவடி
      வரைமாதை வாடாமை வைக்கும்மடி
      வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி
      அரைமா திரையில் லடங்கும்மடி
      அகலம் அளக்கிற்பார் இல்லாவடி
      கரைமாங் கலிக்கெடில நாடன்னடி
      கமழ்வீர டான காபாலியடி. 6.6.7
      61 நறுமலராய் நாறு மலர்ச்சேவடி
      நடுவாய் உலகநா டாயவடி
      செறிகதிரு திங்களுமாய் நின்றவடி
      தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி
      மறுமதியை மாசு கழுவும்மடி
      மந்திரமு தந்திரமு மாயவடி
      செறிகெடில நாடர் பெருமானடி
      திருவீர டானத்தெஞ் செல்வனடி. 6.6.8
      62 அணியனவுஞ் சேயனவு மல்லாவடி
      அடியார்க காரமுத மாயவடி
      பணிபவர்க்கு பாங்காக வல்லவடி
      பற்றற்றார் பற்றும் பவளவடி
      மணியடி பொன்னடி மாண்பாமடி
      மருந்தா பிணிதீர்க்க வல்லவடி
      தணிபாடு தண்கெடில நாடன்னடி
      தகைசார் வீரட்ட தலைவனடி. 6.6.9
      63 அந்தாம ரைப்போ தலர்ந்தவடி
      அரக்கனையும் ஆற்றல் அழித்தவடி
      முந்தாகி முன்னே முளைத்தவடி
      முழங்கழலாய் நீண்டவெம் மூர்த்தியடி
      பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி
      பவள தடவரையே போல்வானடி
      வெந்தார் சுடலைநீ றாடும்மடி
      வீரட்டங் காதல் விமலனடி. 6.6.10
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - திருவீரட்டேசுவரர்
      தேவியார் - திருவதிகைநாயகியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6. 07 திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      64 செல்வ புனற்கெடில வீரட்டமுஞ்
      சிற்றேம மும்பெருந்தண் குற்றாலமு
      தில்லைச்சிற் றம்பலமு தென்கூடலு
      தென்னானை காவுஞ் சிராப்பள்ளியும்
      நல்லூரு தேவன் குடிமருகலும்
      நல்லவர்கள் தொழுதேத்து நாரையூருங்
      கல்லலகு நெடும்புருவ கபாலமேந்தி
      கட்டங்க தோடுறைவார் காப்புக்களே. 6.7.1
      65 தீர்த்த புனற்கெடில வீரட்டமு
      திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர்
      ஆர்த்தருவி வீழ்சுனைநீர் அண்ணாமலை
      அறையணி நல்லூரும் அரநெறியும்
      ஏத்துமின்கள் நீரேத்த நின்றஈசன்
      இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்
      கார்த்தயங்கு சோலை கயிலாயமுங்
      கண்ணுதலான் தன்னுடைய காப்புக்களே. 6.7.2
      66 சிறையார் புனற்கெடில வீரட்டமு
      திருப்பா திரிப்புலியூர் திருவாமாத்தூர்
      துறையார் வனமுனிக ளேத்தநின்ற
      சோற்று துறைதுருத்தி நெய்த்தானமும்
      அறையார் புனலொழுகு காவிரிசூழ்
      ஐயாற் றமுதன் பழனம்நல்ல
      கறையார் பொழில்புடைசூழ் கானப்பேருங்
      கழுக்குன்று தம்முடைய காப்புக்களே. 6.7.3
      67 திரையார் புனற்கெடில வீரட்டமு
      திருவாரூர் தேவூர் திருநெல்லிக்கா
      உரையார் தொழநின்ற ஒற்றியூரும்
      ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும்
      வரையா ரருவிசூழ் மாநதியும்
      மாகாளங் கேதாரம் மாமேருவுங்
      கரையார் புனலொழுகு காவிரிசூழ்
      கடம்ப துறையுறைவார் காப்புக்களே. 6.7.4
      68 செழுநீர புனற்கெடில வீரட்டமு
      திரிபுரா தகந்தென்னார் தேவீச்சரங்
      கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக்காவுங்
      குடமூக்குங் கோகரணங் கோலக்காவும்
      பழிநீர்மை யில்லா பனங்காட்டூரும்
      பனையூர் பயற்றூர் பராய்த்துறையுங்
      கழுநீர் மதுவிரியுங் காளிங்கமுங்
      கணபதீ சரத்தார்தங் காப்புக்களே. 6.7.5
      69 தெய்வ புனற்கெடில வீரட்டமுஞ்
      செழுந்தண் பிடவூருஞ் சென்றுநின்று
      பவ்வ திரியும் பருப்பதமும்
      பறியலூர் வீரட்டம் பாவநாசம்
      மவ்வ திரையும் மணிமுத்தமும்
      மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியுங்
      கவ்வை வரிவண்டு பண்ணேபாடுங்
      கழிப்பாலை தம்முடைய காப்புக்களே. 6.7.6
      70 தெண்ணீர புனற்கெடில வீரட்டமுஞ்
      சிக்காலி வல்ல திருவேட்டியும்
      உண்ணீரார் ஏடகமும் ஊறல்அம்பர்
      உறையூர் நறையூர் அரணநல்லூர்
      விண்ணார் விடையான் விளமர்வெண்ணி
      மீயச்சூர் வீழி மிழலைமிக்க
      கண்ணார் நுதலார் கரபுரமுங்
      காபாலி யாரவர்தங் காப்புக்களே. 6.7.7
      71 தெள்ளும் புனற்கெடில வீரட்டமு
      திண்டீ சரமு திருப்புகலூர்
      எள்ளும் படையான் இடைத்தானமும்
      ஏயீ சரமுநல் லேமங்கூடல்
      கொள்ளு மிலயத்தார் கோடிகாவுங்
      குரங்கணில் முட்டமுங் குறும்பலாவுங்
      கள்ளருந தெள்ளியா ருள்கியேத்துங்
      காரோண தம்முடைய காப்புக்களே. 6.7.8
      72 சீரார் புனற்கெடில வீரட்டமு
      திருக்காட்டு பள்ளி திருவெண்காடும்
      பாரார் பரவுஞ்சீர பைஞ்ஞீலியும்
      பந்தணை நல்லூரும் பாசூர்நல்லம்
      நீரார் நிறைவயல்சூழ் நின்றியூரும்
      நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலுங்
      காரார் கமழ்கொன்றை தாரார்க்கென்றுங்
      கடவூரில் வீரட்டங் காப்புக்களே. 6.7.9
      73 சிந்தும் புனற்கெடில வீரட்டமு
      திருவாஞ் சியமு திருநள்ளாறும்
      அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்
      ஆக்கூரு மாவூரு மான்பட்டியும்
      எந்தம் பெருமாற் கிடமாவது
      இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடுங்
      கந்தங் கமழுங் கரவீரமுங்
      கடம்பூர கரக்கோயில் காப்புக்களே. 6.7.10
      74 தேனார் புனற்கெடில வீரட்டமு
      திருச்செம்பொன் பள்ளிதிரு பூவணமும்
      வானோர் வணங்கும் மணஞ்சேரியும்
      மதிலுஞ்சை மாகாளம் வாரணாசி
      ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம்
      இலங்கார் பருப்பதத்தோ டேணார்சோலை
      கானார் மயிலார் கருமாரியுங்
      கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே. 6.7.11
      75 திருநீர புனற்கெடில வீரட்டமு
      திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்
      வருநீர் வளம்பெருகு மானிருபமும்
      மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
      பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற
      பிரமபுரஞ் சுழியல் பெண்ணாகடங்
      கருநீல வண்டரற்றுங் காளத்தியுங்
      கயிலா தம்முடைய காப்புக்களே. 6.7.12
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.8 திருக்காளத்தி - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      76 விற்றூணொன் றில்லாத நல்கூர தான்காண்
      வியன்கச்சி கம்பன்காண் பிச்சை யல்லால்
      மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்
      மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லா
      பொற்றூண்காண் மாமணிநற் குன்றொ பான்காண்
      பொய்யாது பொழிலேழு தாங்கி நின்ற
      கற்றூண்காண் காளத்தி காண பட்ட
      கணநாதன் காணவனென் கண்ணு ளானே. 6.8.1
      77 இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண்
      எலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே
      முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்
      முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
      படித்தான் தலையறுத்த பாசு பதன்காண்
      பராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண்
      கடித்தார் கமழ்கொன்றை கண்ணி யான்காண்
      காளத்தி யானவனென் கண்ணு ளானே. 6.8.2
      78 நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்
      ஞான பெருங்கடற்கோர் நாவா யன்ன
      பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் றான்காண்
      புரிசடைமேற் புனலேற்ற புனிதன் றான்காண்
      சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் றான்காண்
      தன்மைக்கண் தானேகாண் தக்கோர கெல்லாங்
      காரணன்காண் காளத்தி காண பட்ட
      கணநாதன் காணவனென் கண்ணு ளானே. 6.8.3
      79 செற்றான்காண் என்வினையை தீயா டிகாண்
      திருவொற்றி யூரான்காண் சிந்தை செய்வார
      குற்றான்காண் ஏகம்பம் மேவி னான்காண்
      உமையாள்நற் கொழுநன்காண் இமையோ ரேத்துஞ்
      சொற்றான்காண் சோற்று துறையு ளான்காண்
      சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோ
      கற்றான்காண் காளத்தி காண பட்ட
      கணநாதன் காணவனென் கண்ணு ளானே. 6.8.4
      80 மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
      வாயார தன்னடியே பாடு தொண்டர்
      இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
      ஏழண்ட தப்பாலான் இப்பாற் செம்பொன்
      புனத்தகத்தான் நறுங்கொன்றை போதி னுள்ளான்
      பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
      கனத்தகத்தான் கயிலா துச்சி யுள்ளான்
      காளத்தி யானவனென் கண்ணு ளானே. 6.8.5
      81 எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண்
      ஏகம்ப மேயான்காண் இமையோ ரேத்த
      பொல்லா புலனைந்தும் போக்கி னான்காண்
      புரிசடைமேற் பாய்கங்கை பூரி தான்காண்
      நல்லவிடை மேற்கொண்டு நாகம் பூண்டு
      நளிர்சிரமொன் றேந்தியோர் நாணா யற்ற
      கல்லாடை மேற்கொண்ட காபா லிகாண்
      காளத்தி யானவனென் கண்ணு ளானே. 6.8.6
      82 கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்
      கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
      எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்
      எண்டிசையு தானாய குணத்தி னான்காண்
      திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்
      தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்
      கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்
      காளத்தி யானவனென் கண்ணு ளானே. 6.8.7
      83 இல்லாடி சில்பலிசென் றேற்கின் றான்காண்
      இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின் றான்காண்
      வில்லாடி வேடனா யோடி னான்காண்
      வெண்ணூ லுஞ்சேர்ந்த அகல தான்காண்
      மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்
      மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்
      கல்லாலின் கீழிருந்த காபா லிகான்
      காளத்தி யானவனென் கண்ணு ளானே. 6.8.8
      84 தேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண்
      திருவேகம் பத்தான்காண் தேனார துக்க
      ஞானப்பூங் கோதையாள் பாக தான்காண்
      நம்பன்காண் ஞான தொளியா னான்காண்
      வானப்பே ரூரு மறிய வோடி
      மட்டித்து நின்றான்காண் வண்டார் சோலை
      கானப்பே ரூரான்காண் கறைக்கண் டன்காண்
      காளத்தி யானவனென் கண்ணு ளானே. 6.8.9
      85 இறையவன்காண் ஏழுலகு மாயி னான்காண்
      ஏழ்கடலுஞ் சூழ்மலையு மாயி னான்காண்
      குறையுடையார் குற்றேவல் கொள்வான் றான்காண்
      குடமூக்கிற் கீழ்க்கோட்டம் மேவி னான்காண்
      மறையுடைய வானோர் பெருமான் றான்காண்
      மறைக்கா டுறையும் மணிகண் டன்காண்
      கறையுடைய கண்டத்தெங் காபா லிகாண்
      காளத்தி யானவனென் கண்ணு ளானே. 6.8.10
      86 உண்ணா வருநஞ்ச முண்டான் றான்காண்
      ஊழித்தீ யன்னான்காண் உகப்பார் காண
      பண்ணார பல்லியம் பாடி னான்காண்
      பயின்றநால் வேதத்தின் பண்பி னான்காண்
      அண்ணா மலையான்காண் அடியா ரீட்டம்
      அடியிணைகள் தொழுதேத்த அருளு வான்காண்
      கண்ணார காண்பார்க்கோர் காட்சி யான்காண்
      காளத்தி யானவனென் கண்ணு ளானே. 6.8.11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - காளத்திநாதர்
      தேவியார் - ஞானப்பூங்கோதையாரம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.9 திருஆமாத்தூர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      87 வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று
      வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மை
      கண்ணம்பால் நின்றெய்து கனல பேசி
      கடியதோர் விடையேறி காபா லியார்
      சுண்ணங்கள் தாங்கொண்டு துதை பூசி
      தோலுடுத்து நூல்பூண்டு தோன்ற தோன்ற
      அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
      அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 6.9.1
      88 வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை
      விரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்தி
      கந்தார தாமுரலா போகா நிற
      கறைசேர் மணிமிடாற்றீ ரூரே தென்றேன்
      நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு
      நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்
      அந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்செய்
      ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே. 6.9.2
      89 கட்டங்க தாமொன்று கையி லேந்தி
      கடிய விடையேறி காபா லியார்
      இட்டங்கள் தாம்பேசி இல்லே புக்கு
      இடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர்
      பட்டிமையும் படிறுமே பேசா நின்றார்
      பார்ப்பாரை பரிசழிப்பார் போல்கின் றார்தாம்
      அட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார்
      அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 6.9.3
      90 பசைந்தபல பூதத்தர் பாட லாடல்
      படநா கச்சையர் பிச்சை கென்றங்
      கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி
      இமையாமு கண்ணினர் நால்வே தத்தர்
      பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம்
      பிரிவறியா பிஞ்ஞகனார் தெண்ணீர கங்கை
      அசைந்த திருமுடியர் அங்கை தீயர்
      அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 6.9.4
      91 உருளுடைய தேர்புரவி யோடும் யானை
      ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
      றிருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர்
      இமையவர்கள் தொழுதேத்தும் இறைவ னார்தாம்
      பொருளுடைய ரல்லர் இலரு மல்லர்
      புலித்தோ லுடையாக பூதஞ் சூழ
      அருளுடைய அங்கோதை மாலை மார்பர்
      அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 6.9.5
      92 வீறுடைய ஏறேறி நீறு பூசி
      வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தி
      கூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு
      குழையாட கொடுகொட்டி கொட்டா வந்து
      பாறுடைய படுதலையோர் கையி லேந்தி
      பலிகொள்வா ரல்லர் படிறே பேசி
      ஆறுடைய சடைமுடியெம் மடிகள் போலும்
      அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 6.9.6
      93 கையோர் கபாலத்தர் மானின் றோலர்
      கருத்துடையர் நிருத்தரா காண்பார் முன்னே
      செய்ய திருமேனி வெண்ணீ றாடி
      திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடி
      மெய்யொரு பாக துமையை வைத்து
      மேவார் திரிபுரங்கள் வேவ செய்து
      ஐயனார் போகின்றார் வந்து காணீர்
      அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 6.9.7
      94 ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
      றொற்றியூர் உம்மூரே உணர கூறீர்
      நின்றுதான் என்செய்வீர் போவீ ராகில்
      நெற்றிமேற் கண்காட்டி நிறையுங் கொண்டீர்
      என்றுந்தான் இவ்வகையே இடர்செய் கின்றீர்
      இருக்குமூர் இனியறிந்தோம் ஏகம் பமோ
      அன்றித்தான் போகின்றீர் அடிக ளெம்மோ
      டழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 6.9.8
      95 கல்லலகு தாங்கொண்டு காள தியார்
      கடியவிடை யேறி காண காண
      இல்லமே தாம்புகுதா இடுமின் பிச்சை
      என்றாரு கெதிரெழுந்தேன் எங்குங் காணேன்
      சொல்லாதே போகின்றீர் உம்மூ ரேது
      துருத்தி பழனமோ நெய்த்தானமோ
      அல்லலே செய்தடிகள் போகின் றார்தாம்
      அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 6.9.9
      96 மழுங்கலா நீறாடும் மார்பர் போலும்
      மணிமிழலை மேய மணாளர் போலுங்
      கொழுங்குவளை கோதை கிறைவர் போலுங்
      கொடுகொட்டி தாள முடையார் போலுஞ்
      செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலு
      தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்
      அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும்
      அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 6.9.10
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஆமாத்தீசுவரர்
      தேவியார் - அழகியநாயகியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.10 திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      97 நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார்
      நூல்பூண்டார் நூல்மேலோ ராமை பூண்டார்
      பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடி
      பிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி
      ஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார்
      அனல்கொண்டார் அந்திவாய் வண்ணங் கொண்டார்
      பாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார்
      பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 6.10.1
      98 காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார்
      களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக
      ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார்
      உறுபிணியுஞ் செறுபகையு மொற்றை கண்ணாற்
      பீடுலா தனைசெய்வார் பிடவ மொந்தை
      குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்க
      பாடலா ராடலார் பைங்க ணேற்றார்
      பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 6.10.2
      99 பூத படையுடையார் பொங்கு நூலார்
      புலித்தோ லுடையினார் போரேற் றினார்
      வே தொழிலார் விரும்ப நின்றார்
      விரிசடைமேல் வெண்திங்க கண்ணி சூடி
      ஓ தொலிகடல்வாய் நஞ்ச முண்டார்
      உம்பரோ டம்பொன் னுலக மாண்டு
      பா தொடுகழலார் பைங்க ணேற்றார்
      பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 6.10.3
      100 நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார்
      நெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார்
      ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார்
      ஒலிகடல் வாய்நஞ்சம் மிடற்றி லேற்றார்
      வாருலா முலைமடவாள் பாக மேற்றார்
      மழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார்
      பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார்
      பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 6.10.4
      101 தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
      துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
      இண்டை சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த
      இடுபிணக்கா டாடலா ரே தோறும்
      அண்டத்து கப்புறத்தார் ஆதி யானார்
      அருக்கனா யாரழலாய் அடியார் மேலை
      பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
      பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 6.10.5
      102 கடமன்னு களியானை யுரிவை போர்த்தார்
      கானப்பேர் காதலார் காதல் செய்து
      மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார்
      மானுரிதோள் மிசைத்தோளார் மங்கை காண
      நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார்
      நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
      படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார்
      பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 6.10.6
      103 முற்றா மதிச்சடையார் மூவ ரானார்
      மூவுலகு மேத்தும் முதல்வ ரானார்
      கற்றார் பரவுங் கழலார் திங்கள்
      கங்கையாள் காதலார் காம்பேய் தோளி
      பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார்
      பான்மையா லூழி உலக மானார்
      பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார்
      பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 6.10.7
      104 கண்ணமரும் நெற்றியார் காட்டார் நாட்டார்
      கனமழுவா கொண்டதோர் கையார் சென்னி
      பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார்
      பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார்
      மண்ணவரும் வானவரும் மற்றை யோரும்
      மறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்த
      பண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார்
      பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 6.10.8
      105 ஏறேறி யேழுலகு மேத்த நின்றார்
      இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார்
      நீறேறு மேனியார் நீல முண்டார்
      நெருப்புண்டார் அங்கை யனலு முண்டார்
      ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி
      அனலுமிழும் ஐவா யரவு மார்த்தார்
      பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார்
      பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 6.10.9
      106 கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்
      காரோணங் காதலார் காதல் செய்து
      நல்லூரார் ஞானத்தார் ஞான மானார்
      நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
      மல்லூர் மணிமலையின் மேலி ருந்து
      வாளரக்கர் கோன்றலையை மாள செற்று
      பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்
      பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 6.10.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பசுபதீசுவரர்
      தேவியார் - காம்பன்னதோளியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.11 திருப்புன்கூர் - திருநீடூர்
      திருச்சிற்றம்பலம்
      107 பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னை
      பேணாதார் அவர்தம்மை பேணா தானை
      துறவாதே கட்டறுத்த சோதி யானை
      தூநெறிக்கு தூநெறியாய் நின்றான் றன்னை
      திறமாய எத்திசையு தானே யாகி
      திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
      நிறமா மொளியானை நீடூ ரானை
      நீதனே னென்னேநான் நினையா வாறே. 6.11.1
      108 பின்றானும் முன்றானு மானான் றன்னை
      பித்தர்க்கு பித்தனாய் நின்றான் றன்னை
      நன்றாங் கறிந்தவர்க்கு தானே யாகி
      நல்வினையு தீவினையு மானான் றன்னை
      சென்றோங்கி விண்ணளவு தீயா னானை
      திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
      நின்றாய நீடூர் நிலாவி னானை
      நீதனே னென்னேநான் நினையா வாறே. 6.11.2
      109 இல்லானை எவ்விடத்தும் உள்ளான் றன்னை
      இனியநினை யாதார கின்னா தானை
      வல்லானை வல்லடைந்தார கருளும் வண்ணம்
      மாட்டாதார கெத்திறத்தும் மாட்டா தானை
      செல்லாத செந்நெறிக்கே செல்வி பானை
      திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
      நெல்லால் விளைகழனி நீடூ ரானை
      நீதனே னென்னேநான் நினையா வாறே. 6.11.3
      110 கலைஞானங் கல்லாமே கற்பி தானை
      கடுநரகஞ் சாராமே காப்பான் றன்னை
      பலவாய வேடங்கள் தானே யாகி
      பணிவார்க கங்கங்கே பற்றா னானை
      சிலையாற் புரமெரித்த தீயா டியை
      திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
      நிலையார் மணிமாட நீடூ ரானை
      நீதனே னென்னேநான் நினையா வாறே. 6.11.4
      111 நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை
      நுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை
      ஆக்காதே யாதொன்று மாக்கி னானை
      அணுகாதா ரவர்தம்மை அணுகா தானை
      தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் றன்னை
      திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
      நீக்காத பேரொளிசேர் நீடு ரானை
      நீதனே னென்னேநான் நினையா வாறே. 6.11.5
      112 பூணலா பூணானை பூசா சாந்த
      முடையானை முடைநாறும் புன்க லத்தில்
      ஊணலா வூணானை யொருவர் காணா
      உத்தமனை யொளிதிகழும் மேனி யானை
      சேணுலாஞ் செழும்பவள குன்றொ பானை
      திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
      நீணுலா மலர்க்கழனி நீடூ ரானை
      நீதனே னென்னேநான் நினையா வாறே. 6.11.6
      113 உரையார் பொருளு குலப்பி லானை
      ஒழியாமே எவ்வுயிரு மானான் றன்னை
      புரையா கனமாயாழ தாழா தானை
      புதியனவு மாய்மிகவும் பழையான் றன்னை
      திரையார் புனல்சேர் மகுட தானை
      திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
      நிரையார் மணிமாட நீடூ ரானை
      நீதனே னென்னேநான் நினையா வாறே. 6.11.7
      114 கூரரவ தணையானுங் குளிர்தண் பொய்கை
      மலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார்
      ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர்
      அறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகா
      சீரரவ கழலானை நிழலார் சோலை
      திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
      நீரரவ தண்கழனி நீடூ ரானை
      நீதனே னென்னேநான் நினையா வாறே. 6.11.8
      115 கையெலாம் நெய்பா கழுத்தே கிட்ட
      கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன
      பொய்யெலாம் மெய்யென்று கருதி புக்கு
      புள்ளுவரா லகப்படா து போந்தேன்
      செய்யெலாஞ் செழுங்கமல பழன வேலி
      திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
      நெய்தல்வா புனற்படப்பை நீடூ ரானை
      நீதனே னென்னேநான் நினையா வாறே. 6.11.9
      116 இகழுமா றெங்ஙனே ஏழை நெஞ்சே
      இகழாது பரந்தொன்றாய் நின்றான் றன்னை
      நகழமால் வரைக்கீழி டரக்கர் கோனை
      நலனழித்து நன்கருளி செய்தான் றன்னை
      திகழுமா மதகரியி னுரிபோர தானை
      திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
      நிகழுமா வல்லானை நீடூ ரானை
      நீதனே னென்னேநான் நினையா வாறே. 6.11.10
      இத்தலங்கள் சோழநாட்டிலுள்ளன. திருப்புன்கூரில்
      சுவாமிபெயர் - சிவலோகநாதர்
      தேவியார் - சொக்கநாயகியம்மை.
      திருநீடூரில்
      சுவாமிபெயர் - சோமநாதேசுவரர்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.12 திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      117 ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து
      ஒள்ளெலும்பு தூணா வுரோம மேய்ந்து
      தாமெடுத்த கூரை தவிர போவார்
      தயக்கம் பலபடைத்தார் தாம ரையினார்
      கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலை
      கழிப்பாலை மேய கபால பனார்
      வானிடத்தை யூடறுத்து வல்லை செல்லும்
      வழிவைத்தார கவ்வழியே போது நாமே. 6.12.1
      118 முறையார்ந்த மும்மதிலும் பொடியா செற்று
      முன்னுமா பின்னுமாய் முக்க ணெந்தை
      பிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கை
      பிணக்கந்தீர துடன்வைத்தார் பெரிய நஞ்சு
      கறையார்ந்த மிடற்றடங கண்ட எந்தை
      கழிப்பாலை மேய கபால பனார்
      மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை
      வழிவைத்தார கவ்வழியே போது நாமே. 6.12.2
      119 நெளிவுண்டா கருதாதே நிமலன் றன்னை
      நினைமின்கள் நித்தலும்நே ரிழையா ளாய
      ஒளிவண்டார் கருங்குழலி யுமையாள் தன்னை
      ஒருபாக தமர்ந்தடியா ருள்கி யேத்த
      களிவண்டார் கரும்பொழில்சூழ் கண்டல் வேலி
      கழிப்பாலை மேய கபால பனார்
      வளியுண்டார் மா குரம்பை நீங்க
      வழிவைத்தார கவ்வழியே போது நாமே. 6.12.3
      120 பொடிநாறு மேனியர் பூதி பையர்
      புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
      அடிநாறு கமலத்தர் ஆரூ ராதி
      ஆனஞ்சு மாடுமா திரையி னார்தாங்
      கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங்
      கழிப்பாலை மேய கபால பனார்
      மடிநாறு மேனியிம் மாயம் நீங்க
      வழிவைத்தார கவ்வழியே போது நாமே. 6.12.4
      121 விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து
      வேதத்தாய் கீதத்தாய் விரவி யெங்கும்
      எண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய்
      இறையானாய் எம்மிறையே யென்று நிற்குங்
      கண்ணானாய் காரானாய் பாரு மானாய்
      கழிப்பாலை யுள்ளுறையுங் கபால பனார்
      மண்ணானாய் மா குரம்பை நீங்க
      வழிவைத்தார கவ்வழியே போது நாமே. 6.12.5
      122 விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த
      விரிகதிரோன் எரிசுடரான் விண்ணு மாகி
      பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும்
      பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
      கண்ணப்பன் கண்ணப்ப கண்டு கந்தார்
      கழிப்பாலை மேய கபால பனார்
      வண்ண பிணிமாய யாக்கை நீங்க
      வழிவைத்தார கவ்வழியே போது நாமே. 6.12.6
      123 பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யா
      பேத படுகின்ற பேதை மீர்காள்
      இணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்
      எண்டோ ளர் எண்ணிறைந்த குணத்தி னாலே
      கணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார்
      கழிப்பாலை மேய கபால பனார்
      மணம்புல்கு மா குரம்பை நீங்க
      வழிவைத்தார கவ்வழியே போது நாமே. 6.12.7
      124 இயல்பாய ஈசனை எந்தை தந்தை
      என்சிந்தை மேவி யுறைகின் றானை
      முயல்வானை மூர்த்தியை தீர்த்த மான
      தியம்பகன் திரிசூல தன்ன கையன்
      கயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலி
      கழிப்பாலை மேய கபால பனார்
      மயலாய மா குரம்பை நீங்க
      வழிவைத்தார கவ்வழியே போது நாமே. 6.12.8
      125 செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து
      சிவமூர்த்தி யென்றெழுவார் சிந்தை யுள்ளால்
      உற்றதோர் நோய்களைந்திவ் வுலக மெல்லாங்
      காட்டுவான் உத்தமன்றா னோதா தெல்லாங்
      கற்றதோர் நூலினன் களிறு செற்றான்
      கழிப்பாலை மேய கபால பனார்
      மற்றிதோர் மா குரம்பை நீங்க
      வழிவைத்தார கவ்வழியே போது நாமே. 6.12.9
      126 பொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன்
      புட்பகந்தான் பொருப்பின்மீ தோடா தாக
      இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்தி டுதலும்
      ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கி
      கரதலங்கள் கதிர்முடியா றஞ்சி னோடு
      கால்விரலா லூன்று கழிப்பா லையார்
      வருதலங்க மா குரம்பை நீங்க
      வழிவைத்தார கவ்வழியே போது நாமே. 6.12.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்
      தேவியார் - வேதநாயகியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.13 திருப்புறம்பயம் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      127 கொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர்
      கொடுங்கோளூர் தண்வளவி கண்டி யூரும்
      நடமாடு நன்மருகல் வைகி நாளும்
      நலமாகு மொற்றியூ ரொற்றி யாக
      படுமாலை வண்டறையும் பழனம் பாசூர்
      பழையாறும் பாற்குளமுங் கைவி டிந்நாள்
      பொடியேறு மேனியரா பூதஞ் சூழ
      புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. 6.13.1
      128 முற்றொருவர் போல முழுநீ றாடி
      முளைத்திங்கள் சூடிமு நூலும் பூண்டு
      ஒற்றொருவர் போல வுறங்கு வேன்கை
      ஒளிவளையை யொன்றொன்றா எண்ணு கின்றார்
      மற்றொருவ ரில்லை துணை யெனக்கு
      மால்கொண்டாற் போல மயங்கு வேற்கு
      புற்றரவ கச்சார்த்து பூதஞ் சூழ
      புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. 6.13.2
      129 ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
      ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்
      ஏகாச மாவிட்டோ டொன்றே திவ
      திடுதிருவே பலியென்றார கில்லே புக்கேன்
      பாகேதுங் கொள்ளார் பலியுங்
      பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி
      போகாத வேடத்தர் பூதஞ் சூழ
      புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. 6.13.3
      130 பன்மலிந்த வெண்டலை கையி லேந்தி
      பனிமுகில் போல்மேனி பவந்த நாதர்
      நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்று துறை
      நி துருத்தியும் நீடூர் பாச்சில்
      கன்மலி தோங்கு கழுநீர குன்றங்
      கடனாகை காரோணங் கைவி டிந்நாள்
      பொன்மலிந்த கோதையரு தாமு மெல்லாம்
      புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. 6.13.4
      131 செத்தவர்த தலைமாலை கையி லேந்தி
      சிரமாலை சூடி சிவந்த மேனி
      மத்தகத்த யானை யுரிவை மூடி
      மடவா ளவளோடு மானொன் றேந்தி
      அத்தவத்த தேவர் அறுப தின்மர்
      ஆறுநூ றாயிரவர காடல் காட்டி
      புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கி
      புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. 6.13.5
      132 நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி
      நல்ல புலியதள்மேல் நாகங் கட்டி
      பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாக
      பராய்த்துறை யேனென்றோர் பவள வண்ணர்
      துஞ்சிடையே வந்து துடியுங் கொட்ட
      துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்
      புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடி
      புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. 6.13.6
      133 மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி
      மறைக்காட்டே னென்றோர் மழலை பேசி
      செறியிலங்கு திண்டோ ள்மேல் நீறு கொண்டு
      திருமுண்ட மாவிட்ட திலக நெற்றி
      நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று
      நெடுங்கண் பனிசோர நின்று நோக்கி
      பொறியிலங்கு பாம்பார்த்து பூதஞ் சூழ
      புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. 6.13.7
      134 நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி
      நிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு
      கொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொ டியுங்
      குடமூக்கி லங்கொழி குளிர்தண் பொய்கை
      நல்லாலை நல்லூரே தவிரே னென்று
      நறையூரிற் றாமு தவிர்வார் போல
      பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழ
      புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. 6.13.8
      135 விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு
      வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தி
      திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னை
      திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்
      அரையேறு மேகலையாள் பாக மாக
      ஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன்
      புரையேறு தாமேறி பூதஞ் சூழ
      புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. 6.13.9
      136 கோவாய இந்திரனுள் ளிட்டா ரா
      குமரனும் விக்கின விநாய கனும்
      பூவாய பீடத்து மேல யனும்
      பூமி யளந்தானும் போற்றி சை
      பாவாய இன்னிசைகள் பாடி யாடி
      பாரிடமு தாமும் பரந்து பற்றி
      பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்க
      புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. 6.13.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சாட்சிவரதநாதர்
      தேவியார் - கரும்பன்னசொல்லம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.14 திருநல்லூர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      137 நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
      நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
      சினந்திருகு களிற்றுரிவை போர்வை வைத்தார்
      செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
      இனந்துருவி மணிமகுட தேற துற்ற
      இனமலர்கள் போதவிழ்ந்து மதுவா பில்கி
      நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார்
      நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.14.1
      138 பொன்னலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்
      புலியுரியின் அதள்வைத்தார் புனலும் வைத்தார்
      மன்னலத்த திரள்தோள்மேல் மழுவாள் வைத்தார்
      வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார்
      மின்னலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்
      வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார்
      நன்னலத்த திருவடியென் றலைமேல் வைத்தார்
      நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.14.2
      139 தோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
      துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்த
      பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்
      பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்
      சேடேறு திருநுதன்மேல் நாட்டம் வைத்தார்
      சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்
      நாடேறு திருவடியென் றலைமேல் வைத்தார்
      நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.14.3
      140 வில்லருளி வருபுருவ தொருத்தி பாகம்
      பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார்
      கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊரா
      கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார்
      சொல்லருளி யறநால்வர கறிய வைத்தார்
      சுடுசுடலை பொடிவைத்தார் துறவி வைத்தார்
      நல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார்
      நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.14.4
      141 விண்ணிரியு திரிபுரங்க ளெரிய வைத்தார்
      வினைதொழுவார கறவைத்தார் துறவி வைத்தார்
      கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார்
      கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார்
      திண்ணெரியு தண்புனலு முடனே வைத்தார்
      திசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி
      நண்ணரிய திருவடியென் றலைமேல் வைத்தார்
      நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.14.5
      142 உற்றுலவு பிணியுலக தெழுமை வைத்தார்
      உயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார்
      மற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணா
      மறைவைத்தார் குறைமதியம் வளர வைத்தார்
      செற்றமலி யார்வமொடு காம லோபஞ்
      சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார்
      நற்றவர்சேர் திருவடியென் றலைமேல் வைத்தார்
      நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.14.6
      143 மாறுமலை தாரரண மெரிய வைத்தார்
      மணிமுடிமே லரவைத்தா ரணிகொள் மேனி
      நீறுமலி தெரியாடல் நிலவ வைத்தார்
      நெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார்
      ஆறுமலை தறுதிரைக ளெறிய வைத்தார்
      ஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார்
      நாறுமலர திருவடியென் றலைமேல் வைத்தார்
      நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.14.7
      144 குலங்கள்மிகும் அலைகடல்கள் ஞாலம் வைத்தார்
      குருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார்
      உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்
      உண்டருளி விடம்வைத்தார் எண்டோ ள் வைத்தார்
      நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார்
      நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தா ரிந்நாள்
      நலங்கிளரு திருவடியென் றலைமேல் வைத்தார்
      நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.14.8
      145 சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்
      திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்
      நின்றருளி யடியமரர் வணங்க வைத்தார்
      நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்
      கொன்றருளி கொடுங்கூற்றம் நடுங்கி யோட
      குரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார்
      நன்றருளு திருவடியென் றலைமேல் வைத்தார்
      நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.14.9
      146 பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்க
      பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர்
      ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
      அடுசுடலை பொடிவைத்தார் அழகும் வைத்தார்
      ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார்
      உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர்
      நாம்பரவு திருவடியென் றலைமேல் வைத்தார்
      நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.14.10
      147 குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார்
      குருமணிசேர் மலைவைத்தார் மலையை கையால்
      உலங்கிளர எடுத்தவன்றோள் முடியும் நோவ
      ஒருவிரலா லுறவைத்தார் இறைவா வென்று
      புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்
      புகழ்வைத்தார் புரிந்தாளா கொள்ள வைத்தார்
      நலங்கிளரு திருவடியென் றலைமேல் வைத்தார்
      நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.14.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர்
      தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.15 திருக்கருகாவூர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      148 குருகாம் வயிரமாங் கூறு நாளாங்
      கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்
      பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
      பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
      ஒருகா லுமையாளோர் பாக னுமாம்
      உள்நின்ற நாவிற் குரையா டியாங்
      கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்
      கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.15.1
      149 வித்தாம் முளையாகும் வேரே தானாம்
      வேண்டு முருவமாம் விரும்பி நின்ற
      பத்தா மடியார்க்கோர் பாங்க னுமாம்
      பால்நிறமு மாம்பரஞ் சோதி தானா
      தொத்தா மமரர்கணஞ் சூழ்ந்து போற்ற
      தோன்றாதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
      கத்தாம் அடியேற்கு காணா காட்டுங்
      கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.15.2
      150 பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம்
      பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
      கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங்
      கொண்ட சமயத்தார் தேவ னாகி
      ஏத்தாதார கென்று மிடரே துன்பம்
      ஈவானா மென்னெஞ்ச துள்ளே நின்று
      காத்தானாங் காலன் அடையா வண்ணங்
      கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.15.3
      151 இரவனாம் எல்லி நடமா டியாம்
      எண்டிசைக்கு தேவனாம் என்னு ளானாம்
      அரவனாம் அல்லல் அறுப்பா னுமாம்
      ஆகாச மூர்த்தியாம் ஆனே றேறுங்
      குரவனாங் கூற்றை யுதைத்தான் றானாங்
      கூறாத வஞ்ச குயலர கென்றுங்
      கரவனாங் காட்சி கெளியா னுமாங்
      கண்ணாங் கருவூ ரெந்தை தானே. 6.15.4
      152 படைத்தானாம் பாரை யிடந்தா னாகும்
      பரிசொன் றறியாமை நின்றான் றானாம்
      உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
      ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று
      அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாகம்
      அசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகுங்
      கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற்
      கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.15.5
      153 மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்
      மூவாத மேனிமு கண்ணி னானாஞ்
      சீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ்
      செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்
      மாலனாம் மங்கையோர் பங்க னாகும்
      மன்றாடி யாம்வானோர் தங்க கெல்லாங்
      காலனாங் காலனை காய்ந்தா னாகுங்
      கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.15.6
      154 அரைசே ரரவனாம் ஆல தானாம்
      ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
      திரைசேர் திருமுடி திங்க ளானா
      தீவினை நாசனென் சிந்தை யானாம்
      உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம்
      உமையாளோர் பாகனாம் ஓத வேலி
      கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்
      கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.15.7
      155 துடியா துடியின் முழக்க தானாஞ்
      சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதி பானாம்
      படிதானாம் பாவ மறுப்பா னாகும்
      பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாங்
      கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங்
      கூறாத வஞ்ச குயலர கென்றுங்
      கடியானாங் காட்சி கரியா னாகுங்
      கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.15.8
      156 விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்
      விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்
      பட்டுருவ மால்யானை தோல்கீண் டானாம்
      பலபலவும் பாணி பயின்றான் றானாம்
      எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்
      என்னுச்சி மேலானாம் எம்பி ரானாங்
      கட்டுருவங் கடியானை காய்ந்தா னாகுங்
      கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.15.9
      157 பொறுத்திருந்த புள்ளூர்வான் உள்ளா னாகி
      உள்ளிருந்தங் குள்நோய் களைவான் றானா
      செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ
      சிலைகுனி தீமூட்டு திண்மை யானாம்
      அறுத்திருந்த கையானாம் அந்தார் அல்லி
      இருந்தானை ஒருதலையை தெரிய நோக்கி
      கறுத்திருந்த கண்ட முடையான் போலுங்
      கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.15.10
      158 ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
      ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து
      இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
      இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்
      அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே
      ஆகாய மந்திரமு மானா னாகுங்
      கறுத்தானாங் காலனை காலால் வீழ
      கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.15.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்
      தேவியார் - கரும்பனையாளம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.16 திருவிடைமருது - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      159 சூல படையுடையார் தாமே போலுஞ்
      சுடர்த்திங்க கண்ணி யுடையார் போலும்
      மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்
      மந்திரமு தந்திரமு மானார் போலும்
      வேலை கடல்நஞ்ச முண்டார் போலும்
      மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
      ஏல கமழ்குழலாள் பாகர் போலும்
      இடைமருது மேவிய ஈச னாரே. 6.16.1
      160 காரார் கமழ்கொன்றை கண்ணி போலுங்
      காரானை ஈருரிவை போர்த்தார் போலும்
      பாரார் பரவ படுவார் போலும்
      பத்து பல்லூழி பரந்தார் போலுஞ்
      சீரால் வணங்க படுவார் போலு
      திசையனைத்து மாய்மற்று மானார் போலும்
      ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும்
      இடைமருது மேவிய ஈச னாரே. 6.16.2
      161 வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்
      விண்ணுலகு மண்ணுலகு மானார் போலும்
      பூதங்க ளாய புராணர் போலும்
      புகழ வளரொளியாய் நின்றார் போலும்
      பாதம் பரவ படுவார் போலும்
      பத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும்
      ஏதங்க ளான கடிவார் போலும்
      இடைமருது மேவிய ஈச னாரே. 6.16.3
      162 திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தி
      திசைவணங்க சேவடியை வைத்தார் போலும்
      விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி
      வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்
      பண்குணத்தார் பாடலோ டாட லோவா
      பரங்குன்ற மேய பரமர் போலும்
      எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்
      இடைமருது மேவிய ஈச னாரே. 6.16.4
      163 ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
      உயர்பொழி லண்ணாவி லுறைகின் றாரும்
      பாகம் பணிமொழியாள் பாங்க ராகி
      படுவெண் டலையிற் பலிகொள் வாரும்
      மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு
      மணிபொழில் சூழாரூர் உறைகின் றாரும்
      ஏகம்ப மேயாரு மெல்லா மாவார்
      இடைமருது மேவிய ஈச னாரே. 6.16.5
      164 ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்
      அறுமூன்றும் நான்மூன்று மானார் போலுஞ்
      செய்வினைகள் நல்வினைக ளானார் போலு
      திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலுங்
      கொய்மலரங் கொன்றை சடையார் போலுங்
      கூத்தாட வல்ல குழகர் போலும்
      எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
      இடைமருது மேவிய ஈச னாரே. 6.16.6
      165 பிரியாத குணமுயிர்க கஞ்சோ டஞ்சா
      பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்
      விரியாத குணமொருகால் நான்கே யென்பர்
      விரிவிலா குணநாட்ட தாறே யென்பர்
      தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்
      பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்
      எரியாய தாமரைமே லியங்கி னாரும்
      இடைமருது மேவிய ஈச னாரே. 6.16.7
      166 தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ்
      சுடர்வா யரவசைத்த சோதி போலும்
      ஆல மமுதாக வுண்டார் போலும்
      அடியார்க காரமுத மானார் போலுங்
      காலனையுங் காய்ந்த கழலார் போலுங்
      கயிலா தம்மிடமா கொண்டார் போலும்
      ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்
      இடைமருது மேவிய ஈச னாரே. 6.16.8
      167 பைந்தளிர கொன்றை தாரார் போலும்
      படைக்கணாள் பாக முடையார் போலும்
      அந்திவாய் வண்ண தழகர் போலும்
      மணிநீல கண்ட முடையார் போலும்
      வந்த வரவுஞ் செலவு மாகி
      மாறாதென் னுள்ள திருந்தார் போலும்
      எந்த மிடர்தீர்க்க வல்லார் போலும்
      இடைமருது மேவிய ஈச னாரே. 6.16.9
      168 கொன்றையங் கூவிள மாலை தன்னை
      குளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும்
      நின்ற அனங்கனை நீறா நோக்கி
      நெருப்புருவ மாய்நின்ற நிமல னாரும்
      அன்றவ் வரக்கன் அலறி வீழ
      அருவரையை காலா லழுத்தி னாரும்
      என்று மிடுபிச்சை ஏற்றுண் பாரும்
      இடைமருது மேவிய ஈச னாரே. 6.16.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மருதீசர்
      தேவியார் - நலமுலைநாயகியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.17 திருவிடைமருது - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      169 ஆறு சடைக்கணிவர் அங்கை தீயர்
      அழகர் படையுடையர் அம்பொற் றோள்மேல்
      நீறு தடவ திடப மேறி
      நித்தம் பலிகொள்வர் மொய்த்த பூதங்
      கூறுங் குணமுடையர் கோவ ணத்தர்
      கோடால வேடத்தர் கொள்கை சொல்லின்
      ஈறு நடுவு முதலு மாவார்
      இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 6.17.1
      170 மங்குல் மதிவைப்பர் வான நாடர்
      மடமா னிடமுடையர் மாத ராளை
      பங்கில் மிகவைப்பர் பால்போல் நீற்றர்
      பளிக்கு வடம்புனைவர் பாவ நாசர்
      சங்கு திரையுகளுஞ் சாய்க்கா டாள்வர்
      சரிதை பலவுடையர் தன்மை சொல்லின்
      எங்கும் பலிதிரிவர் என்னுள் நீங்கார்
      இடைமருது மேவி யிடங் கொண்டாரே. 6.17.2
      171 ஆல நிழலிருப்பர் ஆகா யத்தர்
      அருவரையி னுச்சியர் ஆணர் பெண்ணர்
      காலம் பலகழித்தார் கறைசேர் கண்டர்
      கருத்துக்கு சேயார்தாங் காணா தார்க்கு
      கோலம் பலவுடையர் கொல்லை யேற்றர்
      கொடுமழுவர் கோழம்ப மேய ஈசர்
      ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார்
      இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 6.17.3
      172 தேசர் திறம்நினைவார் சிந்தை சேருஞ்
      செல்வர் திருவாரூ ரென்றும் உள்ளார்
      வாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர்
      மருவுங் கரியுரியர் வஞ்ச கள்வர்
      நேசர் அடைந்தார கடையா தார்க்கு
      நிட்டுரவர் கட்டங்கர் நினைவார கென்றும்
      ஈசர் புனற்பொன்னி தீர்த்தர் வாய்த்த
      இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 6.17.4
      173 கரப்பர் கரியமன கள்வர குள்ளங்
      கரவாதே தந்நினைய கிற்பார் பாவ
      துரப்பர் தொடுகடலின் நஞ்ச முண்பர்
      தூய மறைமொழியர் தீயா லொட்டி
      நிரப்பர் புரமூன்றும் நீறு செய்வர்
      நீள்சடையர் பாய்விடைகொண் டெங்கும் ஐயம்
      இரப்பர் எமையாள்வர் என்னுள் நீங்கார்
      இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 6.17.5
      174 கொடியா ரிடபத்தர் கூத்து மாடி
      குளிர்கொன்றை மேல்வைப்பர் கோல மார்ந்த
      பொடியாரு மேனியர் பூதி பையர்
      புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
      அடியார் குடியாவர் அந்த ணாளர்
      ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற
      இடியார் களிற்றுரியார் எவரும் போற்ற
      இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 6.17.6
      175 பச்சை நிறமுடையர் பாலர் சால
      பழையர் பிழையெலாம் நீக்கி யாள்வர்
      கச்சை கதநாகம் பூண்ட தோளர்
      கலனொன்று கையேந்தி இல்ல தோறும்
      பிச்சை கொளநுகர்வர் பெரியர் சால
      பிறங்கு சடைமுடியர் பேணு தொண்டர்
      இச்சை மிகஅறிவர் என்று முள்ளார்
      இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 6.17.7
      176 காவார் சடைமுடியர் காரோ ணத்தர்
      கயிலாய மன்னினார் பன்னு மின்சொற்
      பாவார் பொருளாளர் வாளார் கண்ணி
      பயிலு திருவுருவம் பாக மேயார்
      பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர்
      புரமூன்று மொள்ளழலா கா தொட்ட
      ஏவார் சிலைமலையர் எங்கு தாமே
      இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 6.17.8
      177 புரிந்தார் நடத்தின்கண் பூத நாதர்
      பொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மிற்
      பிரிந்தா ரகல்வாய பேயு தாமும்
      பிரியா ரொருநாளும் பேணு காட்டில்
      எரிந்தா ரனலுகப்பர் ஏழிலோசை
      எவ்விடத்து தாமேயென் றேத்து வார்பால்
      இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும்
      இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 6.17.9
      178 விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர்
      விடங்கர் விரிபுனல்சூழ் வெண்கா டுள்ளார்
      மட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர்
      மழபாடி யுள்ளுறைவர் மாகா ளத்தர்
      சிட்டிலங்கு வல்லரக்கர் கோனை யன்று
      செழுமுடியு தோளைந்நான் கடர காலால்
      இட்டிரங்கி மற்றவனு கீந்தார் வென்றி
      இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 6.17.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.18 திருப்பூவணம் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      179 வடிவேறு திரிசூல தோன்று தோன்றும்
      வளர்சடைமேல் இளமதி தோன்று தோன்றுங்
      கடியேறு கமழ்கொன்றை கண்ணி தோன்றுங்
      காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
      இடியேறு களிற்றுரிவை போர்வை தோன்றும்
      எழில்திகழு திருமுடியு மிலங்கி தோன்றும்
      பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
      பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. 6.18.1
      180 ஆணாகி பெண்ணாய வடிவு தோன்றும்
      அடியவர்க காரமுத மாகி தோன்றும்
      ஊணாகி ஊர்திரிவா னாகி தோன்றும்
      ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேற்
      சேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ்
      செத்தவர்தம் எலும்பினாற் செறி செய்த
      பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்
      பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. 6.18.2
      181 கல்லாலின் நீழலிற் கலந்து தோன்றுங்
      கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று
      சொல்லாக சொல்லியவா தோன்று தோன்றுஞ்
      சூழரவு மான்மறியு தோன்று தோன்றும்
      அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்
      ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
      பொல்லாத புலாலெலும்பு பூணா தோன்றும்
      பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. 6.18.3
      182 படைமலிந்த மழுவாளு மானு தோன்றும்
      பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்
      நடைமலிந்த விடையோடு கொடியு தோன்றும்
      நான்மறையின் ஒலிதோன்றும் நயன தோன்றும்
      உடைமலிந்த கோவணமுங் கீளு தோன்று
      மூரல்வெண் சிரமாலை உலாவி தோன்றும்
      புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்
      பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. 6.18.4
      183 மயலாகு தன்னடியார கருளு தோன்றும்
      மாசிலா புன்சடைமேல் மதி தோன்றும்
      இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்
      இருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்ட தோன்றுங்
      கயல்பா கடுங்கலுழி கங்கை நங்கை
      ஆயிரமா முகத்தினொடு வானிற் றோன்றும்
      புயல்பா சடைவிரித்த பொற்பு தோன்றும்
      பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. 6.18.5
      184 பாராழி வட்டத்தார் பரவி யிட்ட
      பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றுஞ்
      சீராழி தாமரையின் மலர்க ளன்ன
      திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்
      ஓராழி தேருடைய இலங்கை வேந்தன்
      உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பி தன்று
      போராழி முன்னீந்த பொற்பு தோன்றும்
      பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. 6.18.6
      185 தன்னடியார கருள்புரிந்த தகவு தோன்றுஞ்
      சதுர்முகனை தலையரிந்த தன்மை தோன்றும்
      மின்னனைய நுண்ணிடையாள் பாக தோன்றும்
      வேழத்தி னுரிவிரும்பி போர்த்தல் தோன்று
      துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்பு
      தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்
      பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்
      பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. 6.18.7
      186 செறிகழலு திருவடியு தோன்று தோன்றும்
      திரிபுரத்தை எரிசெய்த சிலையு தோன்றும்
      நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்
      நெற்றிமேல் கண்தோன்றும் பெற்ற தோன்றும்
      மறுபிறவி யறுத்தருளும் வகையு தோன்றும்
      மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்
      பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்
      பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. 6.18.8
      187 அருப்போட்டு முலைமடவாள் பாக தோன்றும்
      அணிகிளரும் உருமென்ன அடர்க்குங் கேழல்
      மருப்போட்டு மணிவயிர கோவை தோன்றும்
      மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகை
      திருக்கோட்டில் நின்றதோர் திறமு தோன்றுஞ்
      செக்கர்வான் ஒளிமிக்கு திகழ்ந்த சோதி
      பொருப்போட்டி நின்றதிண் புயமு தோன்றும்
      பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. 6.18.9
      188 ஆங்கணைந்த சண்டிக்கு மருளி யன்று
      தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்
      பாங்கணைந்து பணிசெய்வார கருளி யன்று
      பலபிறவி அறுத்தருளும் பரிசு தோன்றுங்
      கோங்கணைந்த கூவிளமும் தமுங்
      குழற்கணிந்த கொள்கையொடு கோல தோன்றும்
      பூங்கணைவேள் உருவழித்த பொற்பு தோன்றும்
      பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. 6.18.10
      189 ஆரொருவர் உள்குவார் உள்ள துள்ளே
      அவ்வுருவாய் நிற்கின்ற அருளு தோன்றும்
      வாருருவ பூண்முலைநன் மங்கை தன்னை
      மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவு தோன்றும்
      நீருருவ கடலிலங்கை அரக்கர் கோனை
      நெறுநெறென அடர்த்திட்ட நிலையு தோன்றும்
      போருருவ கூற்றுதைத்த பொற்பு தோன்றும்
      பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. 6.18.11
      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பூவணநாதர்
      தேவியார் - மின்னாம்பிகையம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.19 திருவாலவாய் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      190 முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
      முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்
      வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
      வரைசிலையா வாசுகிமா நாணா கோத்து
      துளைத்தானை சுடுசரத்தாற் றுவள நீறா
      தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடி
      திளைத்தானை தென்கூடற் றிருவா லவா
      சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே. 6.19.1
      191 விண்ணுலகின் மேலார்கள் மேலான் றன்னை
      மேலாடு புரமூன்றும் பொடிசெய் தானை
      பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழன தானை
      பசும்பொன்னின் நிறத்தானை பால்நீற் றானை
      உண்ணிலவு சடைக்கற்றை கங்கை யாளை
      கரந்துமையோ டுடனாகி யிருந்தான் றன்னை
      தெண்ணிலவு தென்கூடற் றிருவா லவா
      சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே. 6.19.2
      192 நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவி தானை
      நிலமருவி நீரோட கண்டான் றன்னை
      பாற்றிரளை பயின்றாட வல்லான் றன்னை
      பகைத்தெழுந்த வெங்கூற்றை பாய்ந்தான் றன்னை
      காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று
      கடுங்குரலாய் இடிப்பானை கண்ணோர் நெற்றி
      தீத்திரளை தென்கூடற் றிருவா லவா
      சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே. 6.19.3
      193 வானமிது வெல்லா முடையான் றன்னை
      வரியரவ கச்சானை வன்பேய் சூழ
      கானமதில் நடமாட வல்லான் றன்னை
      கடைக்கண்ணால் மங்கையுமை நோக்கா வென்மேல்
      ஊனமது வெல்லா மொழித்தான் றன்னை
      உணர்வாகி அடியேன துள்ளே நின்ற
      தேனமுதை தென்கூடற் றிருவா லவா
      சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே. 6.19.4
      194 ஊரானை உலகேழாய் நின்றான் றன்னை
      ஒற்றைவெண் பிறையானை உமையோ டென்றும்
      பேரானை பிறர்க்கென்று மரியான் றன்னை
      பிணக்காட்டில் நடமாடல் பேயோ டென்றும்
      ஆரானை அமரர்களு கமுதீ தானை
      அருமறையான் நான்முகனு மாலும் போற்றுஞ்
      சீரானை தென்கூடற் றிருவா லவா
      சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே. 6.19.5
      195 மூவனை மூர்த்தியை மூவா மேனி
      உடையானை மூவுலகு தானே யெங்கும்
      பாவனை பாவ மறுப்பான் றன்னை
      படியெழுத லாகாத மங்கை யோடும்
      மேவனை விண்ணோர் நடுங கண்டு
      விரிகடலின் நஞ்சுண் டமுத மீந்த
      தேவனை தென்கூடற் றிருவா லவா
      சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே. 6.19.6
      196 துறந்தார்க்கு தூநெறியாய் நின்றான் றன்னை
      துன்ப துடைத்தாள வல்லான் றன்னை
      இறந்தார்க ளென்பே அணிந்தான் றன்னை
      எல்லி நடமாட வல்லான் றன்னை
      மறந்தார் மதின்மூன்று மாய்த்தான் றன்னை
      மற்றொரு பற்றில்லா அடியேற் கென்றுஞ்
      சிறந்தானை தென்கூடற் றிருவா லவா
      சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே. 6.19.7
      197 வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
      கருத்தானை கருத்தறிந்து முடிப்பான் றன்னை
      தூயானை தூவெள்ளை ஏற்றான் றன்னை
      சுடர்த்திங்க சடையானை தொடர்ந்து நின்றென்
      தாயானை தவமாய தன்மை யானை
      தலையாய தேவாதி தேவர கென்றுஞ்
      சேயானை தென்கூடற் றிருவா லவா
      சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே. 6.19.8
      198 பகைச்சுடரா பாவ மறுப்பான் றன்னை
      பழியிலியாய் நஞ்சமுண் டமுதீ தானை
      வகைச்சுடராய் வல்லசுரர் புர டானை
      வளைவிலியா யெல்லார்க்கு மருள்செய் வானை
      மிகைச்சுடரை விண்ணவர்கண் மேல பாலை
      மேலாய தேவாதி தேவர கென்று
      திகைச்சுடரை தென்கூடற் றிருவா லவா
      சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே. 6.19.9
      199 மலையானை மாமேறு மன்னி னானை
      வளர்புன் சடையானை வானோர் தங்கள்
      தலையானை என்றலையின் உச்சி யென்று
      தாபி திருந்தானை தானே யெங்கு
      துலையாக ஒருவரையு மில்லா தானை
      தோன்றாதார் மதின்மூன்று துவள வெய்த
      சிலையானை தென்கூடற் றிருவா லவா
      சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே. 6.19.10
      200 தூர்த்தனை தோள்முடிப திறுத்தான் றன்னை
      தொன்னரம்பின் இன்னிசைகே டருள்செய் தானை
      பார்த்தனை பணிகண்டு பரிந்தான் றன்னை
      பரிந்தவற்கு பாசுபத மீந்தான் றன்னை
      ஆத்தனை அடியேனு கன்பன் றன்னை
      அளவிலா பல்லூழி கண்டு நின்ற
      தீர்த்தனை தென்கூடற் றிருவா லவா
      சிவனடியே சிந்திக்க பெற்றேன் நானே. 6.19.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.20 திருநள்ளாறு - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      201 ஆதிக்கண் ணான்முகத்தி லொன்று சென்று
      அல்லாத சொல்லுரைக்க தன்கை வாளாற்
      சேதித்த திருவடியை செல்ல நல்ல
      சிவலோக நெறிவகுத்து காட்டு வானை
      மாதிமைய மாதோர்கூ றாயி னானை
      மாமலர்மே லயனோடு மாலுங் காணா
      நாதியை நம்பியை நள்ளாற் றானை
      நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.20.1
      202 படையானை பாசுபத வேட தானை
      பண்டனங்கற் பார்த்தானை பாவ மெல்லாம்
      அடையாமை காப்பானை அடியார் தங்கள்
      அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானை
      சடையானை சந்திரனை தரித்தான் றன்னை
      சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்
      நடையானை நம்பியை நள்ளாற் றானை
      நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.20.2
      203 படவரவ மொன்றுகொண் டரையி லார்த்த
      பராபரனை பைஞ்ஞீலி மேவி னானை
      அடலரவம் பற்றி கடைந்த நஞ்சை
      அமுதாக உண்டானை ஆதி யானை
      மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை
      மாமணியை மாணிக்கா காலன் றன்னை
      நடலரவஞ் செய்தானை நள்ளாற் றானை
      நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.20.3
      204 கட்டங்க மொன்றுதங் கையி லேந்தி
      கங்கணமுங் காதில்விடு தோடு மிட்டு
      சுட்டங்கங் கொண்டு துதை பூசி
      சுந்தரனா சூலங்கை யேந்தி னானை
      பட்டங்க மாலை நிறை சூடி
      பல்கணமு தாமும் பரந்த காட்டில்
      நட்டங்க மாடியை நள்ளாற் றானை
      நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.20.4
      205 உலர்ந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம்
      ஒருநொடியில் உழல்வானை உலப்பில் செல்வஞ்
      சிலந்திதன கருள்செய்த தேவ தேவை
      திருச்சிரா பள்ளியெஞ் சிவலோ கனை
      கலந்தார்தம் மனத்தென்றுங் காதலானை
      கச்சியே கம்பனை கமழ்பூங் கொன்றை
      நலந்தாங்கு நம்பியை நள்ளாற் றானை
      நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.20.5
      206 குலங்கெடுத்து கோள்நீக்க வல்லான் றன்னை
      குலவரையன் மடப்பாவை இடப்பா லானை
      மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டி கொண்ட
      மறையவனை பிறைதவழ்செஞ் சடையி னானை
      சலங்கெடுத்து தயாமூல தன்ம மென்னு
      தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர கெல்லாம்
      நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை
      நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.20.6
      207 பூவிரியும் மலர்க்கொன்றை சடையி னானை
      புறம்பயத்தெம் பெருமானை புகலூ ரானை
      மாவிரி களிறுரித்த மைந்தன் றன்னை
      மறைக்காடும் வலிவலமும் மன்னி னானை
      தேவிரி திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ்
      சிதைத்தானை உதைத்தவன்றன் சிரங்கொண் டானை
      நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை
      நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.20.7
      208 சொல்லானை சுடர்ப்பவள சோதி யானை
      தொல்லவுணர் புரமூன்று மெரி செற்ற
      வில்லானை எல்லார்க்கு மேலா னானை
      மெல்லியலாள் பாகனை வேதம் நான்குங்
      கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானை
      காளத்தி யானை கயிலை மேய
      நல்லானை நம்பியை நள்ளாற் றானை
      நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.20.8
      209 குன்றாத மாமுனிவன் சாபம் நீங
      குரைகழலாற் கூற்றுவனை குமைத்த கோனை
      அன்றாக அவுணர்புர மூன்றும் வேவ
      ஆரழல்வா யோட்டி யடர்வி தானை
      சென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னை
      சிவனேயெம் பெருமானென் றிருப்பார கென்றும்
      நன்றாகும் நம்பியை நள்ளாற் றானை
      நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.20.9
      210 இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க
      இராவணனை இருபதுதோள் நெரிய வூன்றி
      உறவாகி இன்னிசைகே டிரங்கி மீண்டே
      உற்றபிணி தவிர்த்தருள வல்லான் றன்னை
      மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை
      மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்
      நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை
      நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.20.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.21 திருவாக்கூர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      211 முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்
      மூவுலகு தாமாகி நின்றார் போலுங்
      கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலுங்
      கல்லலகு பாணி பயின்றார் போலுங்
      கொடித்தா மரைக்காடே நாடு தொண்டர்
      குற்றேவல் தாமகிழ்ந்த குழகர்போலும்
      அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்
      ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.21.1
      212 ஓதிற் றொருநூலு மில்லை போலும்
      உணர படாதொன் றில்லை போலுங்
      காதிற்குழை யிலங்க பெய்தார் போலுங்
      கவலை பிறப்பிடும்பை காப்பார் போலும்
      வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும்
      விடஞ்சூழ திருண்ட மிடற்றார் போலும்
      ஆதி களவாகி நின்றார் போலும்
      ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.21.2
      213 மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும்
      மணிநீல கண்ட முடையார் போலும்
      நெய்யார் திரிசூலங் கையார் போலும்
      நீறேறு தோளெ டுடையார் போலும்
      வையார் மழுவா படையார் போலும்
      வளர்ஞாயி றன்ன ஒளியார் போலும்
      ஐவா யரவமொன் றார்த்தார் போலும்
      ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.21.3
      214 வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும்
      வஞ்ச கருங்கடல்நஞ் சுண்டார் போலும்
      பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும்
      பூங்கங்கை தோய்ந்த சடையார் போலுங்
      கடிவிளங்கு கொன்றை தாரார் போலுங்
      கட்டங்க மேந்திய கையார் போலும்
      அடிவிளங்கு செம்பொற் கழலார் போலும்
      ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.21.4
      215 ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ
      இடுவெண் டலைகலனா ஏந்தி நாளும்
      மேகாசங் கட்டழித்த வெள்ளி மாலை
      புனலார் சடைமுடிமேற் புனைந்தார் போலும்
      மாகாச மாயவெண் ணீரு தீயும்
      மதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும்
      ஆகாச மென்றிவையு மானார் போலும்
      ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.21.5
      216 மாதூரும் வாணெடுங்கண் செவ்வாய் மென்றோள்
      மலைமகளை மார்ப தணைத்தார் போலும்
      மூதூர் முதுதிரைக ளானார் போலும்
      முதலு மிறுதியு மில்லார் போலு
      தீதூர நல்வினையாய் நின்றார் போலு
      திசையெட்டு தாமேயாஞ் செல்வர் போலும்
      ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும்
      ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.21.6
      217 மால்யானை மத்தகத்தை கீண்டார் போலும்
      மான்றோ லுடையா மகிழ்ந்தார் போலுங்
      கோலானை கோளழலாற் காய்ந்தார் போலுங்
      குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலுங்
      காலனை காலாற் கடந்தார் போலுங்
      கயிலா தம்மிடமா கொண்டார் போலும்
      ஆலானை தாட லுகப்பார் போலும்
      ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.21.7
      218 கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங்
      காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்
      உண்ணா அருநஞ்ச முண்டார் போலும்
      ஊழித்தீ யன்ன ஒளியார் போலும்
      எண்ணா யிரங்கோடி பேரார் போலும்
      ஏறேறி செல்லு மிறைவர் போலும்
      அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்
      ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.21.8
      219 கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை
      கதிர்போது தாதணிந்த கண்ணி போலும்
      நெடியானுஞ் சதுர்முகனு நேட நின்ற
      நீலநற் கண்ட திறையார் போலும்
      படியேல் அழல்வண்ணஞ் செம்பொன் மேனி
      மணிவண்ண தம்வண்ண மாவார் போலும்
      அடியார் புகலிடம தானார் போலும்
      ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.21.9
      220 திரையானுஞ் செந்தா மரைமே லானு
      தேர்ந்தவர்கள் தாந்தேடி காணார் நாணும்
      புரையா னெனப்படுவார் தாமே போலும்
      போரேறு தாமேறி செல்வார் போலுங்
      கரையா வரைவில்லே நாகம் நாணா
      காலத்தீ யன்ன கனலார் போலும்
      வரையார் மதிலெய்த வண்ணர் போலும்
      ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.21.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சுயம்புநாதவீசுவரர்
      தேவியார் - கட்கநேத்திராம்பிகை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.22 திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      221 பாரார் பரவும் பழன தானை
      பருப்ப தானை பைஞ்ஞீலி யானை
      சீரார் செழும்பவள குன்றொ பானை
      திகழு திருமுடிமேற் றிங்கள் சூடி
      பேரா யிரமுடைய பெம்மான் றன்னை
      பிறர்தன்னை காட்சி கரியான் றன்னை
      காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகை
      காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.22.1
      222 விண்ணோர் பெருமானை வீர டானை
      வெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானை
      பெண்ணானை ஆணானை பேடி யானை
      பெரும்பெற்ற தண்புலியூர் பேணி னானை
      அண்ணா மலையானை ஆனை தாடும்
      அணியாரூர் வீற்றிருந்த அம்மான் றன்னை
      கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகை
      காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.22.2
      223 சிறையார் வரிவண்டு தேனே பாடு
      திருமறைக்கா டெந்தை சிவலோ கனை
      மறையான்றன் வாய்மூருங் கீழ்வே ளூரும்
      வலிவலமு தேவூரும் மன்னி யங்கே
      உறைவானை உத்தமனை ஒற்றி யூரிற்
      பற்றியாள் கின்ற பரமன் றன்னை
      கறையார் கடல்புடைசூழ் அந்தண் நாகை
      காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.22.3
      224 அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை
      ஆச்சிரா மன்னகரு மானை காவும்
      முன்னமே கோயிலா கொண்டான் றன்னை
      மூவுலகு தானாய மூர்த்தி தன்னை
      சின்னமாம் பன்மலர்க ளன்றே சூடி
      செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானை
      கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகை
      காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.22.4
      225 நடையுடைய நல்லெருதொன் றூர்வான் றன்னை
      ஞான பெருங்கடலை நல்லூர் மேய
      படையுடைய மழுவாளொன் றேந்தி னானை
      பன்மையே பேசும் படிறன் றன்னை
      மடையிடையே வாளை யுகளும் பொய்கை
      மருகல்வா சோதி மணிகண் டனை
      கடையுடைய நெடுமாட மோங்கு நாகை
      காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.22.5
      226 புலங்கொள்பூ தேறல்வா புகலி கோனை
      பூம்புகார கற்பகத்தை புன்கூர் மேய
      அலங்கலங் கழனிசூழ் அணிநீர கங்கை
      அவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் றன்னை
      இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே
      ஏகாச மிட்டியங்கும் ஈசன் றன்னை
      கலங்கற் கடல்புடைசூழ் அந்தண் நாகை
      காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.22.6
      227 பொன்மணியம் பூங்கொன்றை மாலை யானை
      புண்ணியனை வெண்ணீறு பூசி னானை
      சின்மணிய மூவிலைய சூல தானை
      தென்சிரா பள்ளி சிவலோ கனை
      மன்மணியை வான்சுடலை யூரா பேணி
      வல்லெருதொன் றேறும் மறைவல் லானை
      கன்மணிகள் வெண்டிரைசூழ் அந்தண் நாகை
      காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.22.7
      228 வெண்டலையும் வெண்மழுவு மேந்தி னானை
      விரிகோ வணமசைத்த வெண்ணீற் றானை
      புண்டலைய மால்யானை யுரிபோர தானை
      புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை
      எண்டிசையு மெரியாட வல்லான் றன்னை
      ஏகம்ப மேயானை எம்மான் றன்னை
      கண்டலங் கழனிசூழ் அந்தண் நாகை
      காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.22.8
      229 சொல்லார்ந்த சோற்று துறையான் றன்னை
      தொன்னரக நன்னெறியாற் றூர்ப்பான் றன்னை
      வில்லானை மீயச்சூர் மேவி னானை
      வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லி
      பொல்லாதார் தம்மரண மூன்றும் பொன்ற
      பொறியரவம் மார்பார பூண்டான் றன்னை
      கல்லாலின் கீழானை கழிசூழ் நாகை
      காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.22.9
      230 மனைதுறந்த வல்லமணர் தங்கள் பொய்யும்
      மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யுஞ்
      சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்
      மெய்யென்று கருதாதே போத நெஞ்சே
      பனையுரியை தன்னுடலிற் போர்த்த எந்தை
      அவன்பற்றே பற்றா காணி னல்லாற்
      கனைகடலின் றென்கழிசூழ் அந்தண் நாகை
      காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.22.10
      231 நெடியானும் மலரவனும் நேடி யாங்கே
      நேருருவங் காணாமே சென்று நின்ற
      படியானை பாம்புரமே காத லானை
      பாம்பரையோ டார்த்த படிறன் றன்னை
      செடிநாறும் வெண்டலையிற் பிச்சை கென்று
      சென்றானை நின்றியூர் மேயான் றன்னை
      கடிநாறு பூஞ்சோலை அந்தண் நாகை
      காரோண தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.22.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.23 திருமறைக்காடு - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      232 தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
      தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
      காண்டற் கரிய கடவுள் கண்டாய்
      கருதுவார காற்ற எளியான் கண்டாய்
      வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
      மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
      மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
      மறைக்கா டுறையும் மணாளன் றானே. 6.23.1
      233 கைகிளரும் வீணை வலவன் கண்டாய்
      காபாலி கண்டாய் திகழுஞ் சோதி
      மெய்கிளரும் ஞான விளக்கு கண்டாய்
      மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய்
      பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய்
      பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய்
      வைகிளருங் கூர்வா படையான் கண்டாய்
      மறைக்கா டுறையும் மணாளன் றானே. 6.23.2
      234 சிலந்தி கருள்முன்னஞ் செய்தான் கண்டாய்
      திரிபுரங்கள் தீவா படுத்தான் கண்டாய்
      நிலந்துக்க நீர்வளிதீ யானான் கண்டாய்
      நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
      சலந்துக்க சென்னி சடையான் கண்டாய்
      தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்
      மலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய்
      மறைக்கா டுறையும் மணாளன் றானே. 6.23.3
      235 கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய்
      காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய்
      புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய்
      புலியுரிசே ராடை புனிதன் கண்டாய்
      வெள்ளி மிளிர்பிறைமேற் சூடி கண்டாய்
      வெண்ணீற்றான் கண்டாய்நஞ் செந்தின் மேய
      வள்ளி மணாளற்கு தாதை கண்டாய்
      மறைக்கா டுறையும் மணாளன் றானே. 6.23.4
      236 மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
      முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
      ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
      இன்னடியார கின்பம் விளைப்பான் கண்டாய்
      ஆரியன் கண்டாய் தமிழன்
      அண்ணா மலையுறையு மண்ணல் கண்டாய்
      வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
      மறைக்கா டுறையும் மணாளன் றானே. 6.23.5
      237 ஆடல் மால்யானை யுரித்தான் கண்டாய்
      அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய்
      கோடியான் கண்டாய் குழகன்
      குளிராரூர் கோயிலா கொண்டான் கண்டாய்
      நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய்
      நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம்
      வாடிய வாட்ட தவிர்ப்பான் கண்டாய்
      மறைக்கா டுறையும் மணாளன் றானே. 6.23.6
      238 வேலைசேர் நஞ்ச மிடற்றான் கண்டாய்
      விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
      ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய்
      அமரர்கள் தாமேத்து மண்ணல் கண்டாய்
      பால்நெய்சே ரானஞ்சு மாடி கண்டாய்
      பருப்ப தான்கண்டாய் பரவை மேனி
      மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய்
      மறைக்கா டுறையும் மணாளன் றானே. 6.23.7
      239 அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்
      அந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்தி
      டிம்மை பயக்கு மிறைவன் கண்டாய்
      என்னெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்
      மெய்ம்மையே ஞான விளக்கு கண்டாய்
      வெண்காடன் கண்டாய் வினைகள் போக
      மம்ம ரறுக்கு மருந்து கண்டாய்
      மறைக்கா டுறையும் மணாளன் றானே. 6.23.8
      240 மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்
      முத்தமிழும் நான்மறையு மானான் கண்டாய்
      ஆலின்கீழ் நால்வர கறத்தான் கண்டாய்
      ஆதியு மந்தமு மானான் கண்டாய்
      பால விருத்தனு மானான் கண்டாய்
      பவள தடவரையே போல்வான் கண்டாய்
      மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய்
      மறைக்கா டுறையும் மணாளன் றானே. 6.23.9
      241 அயனவனும் மாலவனு மறியா வண்ணம்
      ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய்
      துயரிலங்கை வேந்தன் துளங்க வன்று
      சோதிவிர லாலுற வைத்தான் கண்டாய்
      பெயரவற்கு பேரருள்கள் செய்தான் கண்டாய்
      பேரும் பெரும்படையோ டீந்தான் கண்டாய்
      மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய்
      மறைக்கா டுறையும் மணாலன் றானே. 6.23.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.24 திருவாரூர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      242 கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண்
      கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
      அம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண்
      அனலாடி காண்அயில்வா சூல தான்காண்
      எம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண்
      எரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண்
      செம்மான தொளியன்ன மேனி யான்காண்
      திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 6.24.1
      243 ஊனேறு படுதலையில் உண்டி யான்காண்
      ஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண்
      ஆனேறொன் றூர்ந்துழலும் ஐயா றன்காண்
      அண்டன்காண் அண்டத்து கப்பா லான்காண்
      மானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண்
      மாதவன்காண் மாதவத்தின் விளைவா னான்காண்
      தேனேறு மலர்க்கொன்றை கண்ணி யான்காண்
      திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 6.24.2
      244 ஏவணத்த சிலையான்மு புரமெய் தான்காண்
      இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
      தூவணத்த சுடர்ச்சூல படையி னான்காண்
      சுடர்மூன்றுங் கண்மூன்றா கொண்டான் றான்காண்
      ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண்
      அனலாடி காண்அடியார கமிர்தா னான்காண்
      தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண்
      திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 6.24.3
      245 கொங்குவார் மலர்க்கண்ணி குற்றா லன்காண்
      கொடுமழுவன் காண்கொல்லை வெள்ளேற் றான்காண்
      எங்கள்பாற் றுயர்கெடுக்கு மெம்பி ரான்காண்
      ஏழ்கடலும் ஏழ்மலையு மாயி னான்காண்
      பொங்குமா கருங்கடல்நஞ் சுண்டான் றான்காண்
      பொற்றூண்காண் செம்பவள திரள்போல் வான்காண்
      செங்கண்வா ளராமதியோ டுடன்வை தான்காண்
      திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 6.24.4
      246 காரேறு நெடுங்குடுமி கயிலா யன்காண்
      கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
      போரேறு நெடுங்கொடிமே லுயர்த்தி னான்காண்
      புண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தி னான்காண்
      நீரேறு சுடர்ச்சூல படையி னான்காண்
      நின்மலன்காண் நிகரேது மில்லா தான்காண்
      சீரேறு திருமாலோர் பாக தான்காண்
      திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 6.24.5
      247 பிறையரவ குறுங்கண்ணி சடையி னான்காண்
      பிறப்பிலிகாண் பெண்ணோடா ணாயி னான்காண்
      கறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண்
      கழல்தொழுவார் பிறப்பறுக்குங் காபா லிகாண்
      இறையுருவ கனவளையாள் இடப்பா கன்காண்
      இருநிலன்காண் இருநிலத்து கியல்பா னான்காண்
      சிறையுருவ களிவண்டார் செம்மை யான்காண்
      திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 6.24.6
      248 தலையுருவ சிரமாலை சூடி னான்காண்
      தமருலக தலைகலனா பலிகொள் வான்காண்
      அலையுருவ சுடராழி ஆக்கி னான்காண்
      அவ்வாழி நெடுமாலு கருளி னான்காண்
      கொலையுருவ கூற்றுதைத்த கொள்கை யான்காண்
      கூரெரிநீர் மண்ணொடுகாற் றாயி னான்காண்
      சிலையுருவ சரந்துரந்த திறத்தி னான்காண்
      திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 6.24.7
      249 ஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண்
      அடல்மழுவாள் தானொன்று பியன்மே லேந்து
      கையன்காண் கடற்பூத படையி னான்காண்
      கண்ணெரியால் ஐங்கணையோ னுடல்கா தான்காண்
      வெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண்
      வெண்ணீற்றான் காண்விசயற் கருள்செய் தான்காண்
      செய்யன்காண் கரியன்காண் வெளியோன் றான்காண்
      திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 6.24.8
      250 மலைவளர்த்த மடமங்கை பாக தான்காண்
      மயானத்தான் காண்மதியஞ் சூடி னான்காண்
      இலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண்
      இறையவன்காண் எறிதிரைநீர் நஞ்சுண் டான்காண்
      கொலைவளர்த்த மூவிலைய சூல தான்காண்
      கொடுங்குன்றன் காண்கொல்லை யேற்றி னான்காண்
      சிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண்
      திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 6.24.9
      251 பொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண்
      புரிநூலன் காண்பொடியார் மேனி யான்காண்
      மற்றாரு தன்னொப்பா ரில்லா தான்காண்
      மறையோதி காண்எறிநீர் நஞ்சுண் டான்காண்
      எற்றாலுங் குறைவொன்று மில்லா தான்காண்
      இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
      செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றான்காண்
      திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 6.24.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.25 திருவாரூர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      252 உயிரா வணமிரு துற்று நோக்கி
      உள்ள கிழியி னுரு வெழுதி
      உயிரா வணஞ்செய்தி டுன்கை தந்தால்
      உணர படுவாரோ டொட்டி வாழ்தி
      அயிரா வணமேறா தானே றேறி
      அமரர்நா டாளாதே ஆரூ ராண்ட
      அயிரா வணமேயென் னம்மா னேநின்
      அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே. 6.25.1
      253 எழுது கொடியிடையார் ஏழை மென்றோள்
      இளையார்கள் நம்மை இகழா முன்னம்
      பழுது படநினையேல் பாவி நெஞ்சே
      பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ
      முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி
      முடியா லுறவணங்கி முற்றம் பற்றி
      அழுது திருவடிக்கே பூசை செய்ய
      இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே. 6.25.2
      254 தேரூரார் மாவூரார் திங்க ளூரார்
      திகழ்புன் சடைமுடிமேற் றிங்கள் சூடி
      காரூரா நின்ற கழனி சாயற்
      கண்ணார்ந்த மாடங் கலந்து தோன்றும்
      ஓரூரா உலகெலா மொப்ப கூடி
      உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
      ஆரூரா என்கின்
      அமரர்கள்தம் பெருமானே எங்குற் றாயே. 6.25.3
      255 கோவணமோ தோலோ உடை யாவது
      கொல்லேறோ வேழமோ ஊர்வ துதான்
      பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்
      பொருந்தாதார் வாழ்க்கை திருந்தா மையோ
      தீவணத்த செஞ்சடைமேற் றிங்கள் சூடி
      திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்
      ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்
      அறியேன்மற் றூராமா றாரூர் தானே. 6.25.4
      256 ஏந்து மழுவாளர் இன்னம் பரார்
      எரிபவள வண்ணர் குடமூ கிலார்
      வாய்ந்த வளைக்கையாள் பாக மாக
      வார்சடையார் வந்து வலஞ்சு ழியார்
      போந்தா ரடிகள் புறம்ப யத்தே
      புகலூர்க்கே போயினார் போரே றேறி
      ஆய்ந்தே யிருப்பார்போய் ஆரூர் புக்கார்
      அண்ணலார் செய்கின்ற கண்மா யமே. 6.25.5
      257 கருவாகி குழம்பிருந்து கலித்து மூளை
      கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி
      உருவாகி புறப்பட்டிங் கொருத்தி தன்னால்
      வளர்க்கப்ப டுயிராருங் கடைபோ காரால்
      மருவாகி நின்னடியே மறவே னம்மான்
      மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ண
      திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்
      செம்பொனே கம்பனே திகைத்தி டேனே. 6.25.6
      258 முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
      மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
      பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
      பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்
      அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
      அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
      தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
      தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே. 6.25.7
      259 ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா
      அவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னை
      பாடுவார் தும்புருவும் நார தாதி
      பரவுவார் அமரர்களு மமரர் கோனு
      தேடுவார் திருமாலும் நான்மு கனு
      தீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளுங்
      கூடுமே நாயடியேன் செய்குற் றேவல்
      குறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே. 6.25.8
      260 நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றி கண்ணாய்
      நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி
      ஓரூரு மொழியாமே ஒற்றி தெங்கும்
      உலகமெலா திரிதந்து நின்னை காண்பான்
      தேரூரும் நெடுவீதி பற்றி நின்று
      திருமாலும் நான்முகனு தேர்ந்துங் காணா
      தாரூரா ஆரூரா என்கின் றார்கள்
      அமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே. 6.25.9
      261 நல்லூரே நன்றாக நட்ட மிட்டு
      நரையேற்றை பழையாறே பாய ஏறி
      பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே
      பலர்காண தலையாலங் காட்டி னூடே
      இல்லார்ந்த பெருவேளூர தளியே பேணி
      இராப்பட்டீ சரங்கடந்து மணற்கால் புக்கு
      எல்லாரு தளிச்சாத்தங் குடியிற் காண
      இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே. 6.25.10
      262 கருத்துத்தி கதநாகங் கையி லேந்தி
      கருவரைபோற் களியானை கதற கையால்
      உரித்தெடுத்து சிவந்ததன்றோல் பொருந்த மூடி
      உமையவளை அச்சுறுத்தும் ஒளிகொள் மேனி
      திருத்துருத்தி திருப்பழன திருநெய்த்தானம்
      திருவையா றிடங்கொண்ட செல்வர் இந்நாள்
      அரிப்பெருத்த வெள்ளேற்றை அடர ஏறி
      அப்பனார் இப்பருவ மாரூ ராரே. 6.25.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.26 திருவாரூர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      263 பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானை
      பண்டொருகால் தசமுகனை அழுவி தானை
      வாதித்து தடமலரான் சிரங்கொண் டானை
      வன்கருப்பு சிலைக்காமன் உடல டானை
      சோதிச்ச திரன்மேனி மறுச்செய்தானை
      சுடரங்கி தேவனையோர் கைக்கொண் டானை
      ஆதித்தன் பற்கொண்ட அம்மான் றன்னை
      ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. 6.26.1
      264 வெற்புறுத்த திருவடியாற் கூற்ற டானை
      விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி
      ஒப்புறுத்த திருவுருவ தொருவன் றன்னை
      ஓதாதே வேத முணர்ந்தான் றன்னை
      அப்புறுத்த கடல்நஞ்ச முண்டான் றன்னை
      அமுதுண்டார் உலந்தாலு முலவா தானை
      அப்புறுத்த நீரகத்தே அழலா னானை
      ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. 6.26.2
      265 ஒருகால தொருதேவர் கண்கொண் டானை
      ஊழிதோ றூழி உயர்ந்தான் றன்னை
      வருகாலஞ் செல்கால மாயி னானை
      வன்கருப்பு சிலைக்காமன் உடல டானை
      பொருவேழ களிற்றுரிவை போர்வை யானை
      புள்ளரைய னுடல்தன்னை பொடிசெய் தானை
      அருவேள்வி தகர்த்தெச்சன் றலைகொண் டானை
      ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. 6.26.3
      266 மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை
      வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை
      ஒப்பானை ஒப்பிலா ஒருவன் றன்னை
      உத்தமனை நித்திலத்தை உலக மெல்லாம்
      வைப்பானை களைவானை வருவி பானை
      வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை
      அப்பாலை கப்பாலை கப்பா லானை
      ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. 6.26.4
      267 பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை மற்றை
      பிண்டத்தை படைத்ததனை பெரிய வே
      துண்டத்தின் துணிபொருளை சுடுதீ யாகி
      சுழல்காலாய் நீராகி பாரா யிற்றை
      கண்டத்தில் தீதினஞ் சமுது செய்து
      கண்மூன்று படைத்ததொரு கரும்பை பாலை
      அண்டத்து கப்புறத்தார் தமக்கு வித்தை
      ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. 6.26.5
      268 நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய்
      நிறைகாலாய் இவையிற்றின் நியம மாகி
      பாதியாய் ஒன்றாகி இரண்டாய் மூன்றாய்
      பரமாணு வாய்ப்பழுத்த பண்க ளாகி
      சோதியாய் இருளாகி சுவைக ளாகி
      சுவைகலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின்
      ஆதியாய் அந்தமாய் நின்றான் றன்னை
      ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. 6.26.6
      இப்பதிகத்தில் 78910-ம் செய்யுட்கள் 6.26.7-10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.27 திருவாரூர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      269 பொய்ம்மா பெருங்கடலிற் புலம்பா நின்ற
      புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
      இம்மா பெருங்கடலை அரித்து தின்பீர
      கில்லையே கிடந்துதான் யானேல் வானோர்
      தம்மானை தலைமகனை தண்ண லாரூர
      தடங்கடலை தொடர்ந்தோரை யடங்க செய்யும்
      எம்மான்ற னடித்தொடர்வான் உழிதர் கின்றேன்
      இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே. 6.27.1
      270 ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற்
      றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்
      உம்பரமே உம்வசமே ஆக்க வல்லீர
      கில்லையே னுகர்போகம் யானேல் வானோர்
      உம்பருமாய் ஊழியுமாய் உலகே ழாகி
      ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்
      தம்பெருமா னார்நின்ற அரனை காண்பேன்
      தடைப்படுவே னாக்கருதி தருக்கேன் மின்னே. 6.27.2
      271 சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றி
      செழுங்கணால் நோக்குமிது வூக்க மன்று
      பல்லுருவிற் றொழில்பூண்ட பஞ்ச பூத
      பளகீரும் வசமன்றே பாரே லெல்லாஞ்
      சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றா
      தூநயன மூன்றாகி ஆண்ட ஆரூர்
      நல்லுருவிற் சிவனடியே அடைவேன் நும்மால்
      நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின் களே. 6.27.3
      272 உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்ற
      துறுப்பினது குறிப்பாகும் ஐவீர் நுங்கள்
      மன்னுருவ தியற்கைளால் வைப்பீர கையோ
      வையகமே போதாதே யானேல் வானோர்
      பொன்னுருவை தென்னாரூர் மன்னு குன்றை
      புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தை புகுந்தென் சிந்தை
      தன்னுருவை தந்தவனை எந்தை தன்னை
      தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே. 6.27.4
      273 துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க
      சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்
      ஒப்பினையை பாவித்திவ் வுலக மெல்லாம்
      உழறுமிது குறைமுடிப்பீர கரிதே என்றன்
      வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்
      மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்
      அப்பனைச்செ பிடவடைவேன் நும்மால் நானும்
      ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே. 6.27.5
      274 பொங்குமத மானமே ஆர்வ செற்ற
      குரோதமே உலோபமே பொறையே நீங்கள்
      உங்கள்பெரு மாநிலத்தின் எல்லை யெல்லாம்
      உழறுமிது குறைமுடிப்பீர கரிதே யானேல்
      அங்கமல தயனொடுமா லாகி மற்றும்
      அதற்கப்பா லொன்றாகி அறிய வொண்ணா
      செங்கனக தனிக்குன்றை சிவனை ஆரூர
      செல்வனைச்சேர் வேனும்மாற் செலுத்து ணேனே. 6.27.6
      275 இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை
      வெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடி
      குடைகின்றீர குலகங்கள் குலுங்கி நுங்கள்
      குறிநின்ற தமையாதே யானேல் வானோர்
      அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை
      அமரர்கள்தம் பெருமானை அரனை ஆரூர்
      உடையானை கடுகச்சென் றடைவேன் நும்மால்
      ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே. 6.27.7
      276 விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா
      வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
      நிரந்தோடி மாநிலத்தை அரித்து தின்பீர
      கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
      கரைந்தோட வருநஞ்சை அமுது செய்த
      கற்பகத்தை தற்பரத்தை திருவா ரூரிற்
      பரஞ்சோதி தனைக்காண்பேன் படேனும் பண்பிற்
      பரிந்தோடி யோட்டந்து பகட்டேன் மின்னே. 6.27.8
      277 மூள்வாய தொழிற்பஞ்சே திரிய வஞ்ச
      முகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடி
      நாள்வாயு நும்முடைய மம்ம ராணை
      நடாத்துகின்றீர கமையாதே யானேல் வானோர்
      நீள்வான முகடதனை தாங்கி நின்ற
      நெடுந்தூணை பாதாள கருவை ஆரூர்
      ஆள்வானை கடுகச்சென் றடைவேன் நும்மால்
      ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே. 6.27.9
      278 சுருக்கமொடு பெருக்கநிலை நீத்தல் பற்றி
      துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடி
      செருக்கிமிகை செலுத்தியும் செய்கை வைகல்
      செய்கின்றீர கமையாதே யானேல் மிக்க
      தருக்கிமிக வரையெடுத்த அரக்க னாக
      தளரவடி எடுத்தவன்றன் பாடல் கேட்டு
      இரக்கமெழு தருளியவெம் பெருமான் பா
      திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே. 6.27.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.28 திருவாரூர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      279 நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும்
      நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலுங்
      காற்றினையுங் கடிதாக நடந்தார் போலுங்
      கண்ணின்மேற் கண்ணொன் றுடையார் போலுங்
      கூற்றினையுங் குரைகழலா லுதைத்தார் போலுங்
      கொல்புலித்தோ லாடை குழகர் போலும்
      ஆற்றினையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும்
      அணியாரூர திருமூல தான னாரே. 6.28.1
      280 பரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும்
      பாசுபதம் பார்த்தற் களித்தார் போலுங்
      கரியதோர் களிற்றுரிவை போர்த்தார் போலுங்
      காபாலங் கட்டங கொடியார் போலும்
      பெரியதோர் மலைவில்லா எய்தார் போலும்
      பேர்நந்தி யென்னும் பெயரார் போலும்
      அரியதோர் அரணங்க ளட்டார் போலும்
      அணியாரூர திருமூல தான னாரே. 6.28.2
      281 துணியுடையர் தோலுடைய ரென்பார் போலு
      தூய திருமேனி செல்வர் போலும்
      பிணியுடைய அடியாரை தீர்ப்பார் போலும்
      பேசுவார கெல்லாம் பெரியார் போலும்
      மணியுடைய மாநாக மார்ப்பார் போலும்
      வாசுகிமா நாணாக வைத்தார் போலும்
      அணியுடைய நெடுவீதி நடப்பார் போலும்
      அணியாரூர திருமூல தான னாரே. 6.28.3
      282 ஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும்
      ஓருருவா தோன்றி உயர்ந்தார் போலும்
      நாட்டகத்தே நடைபலவும் நவின்றார் போலும்
      ஞான பெருங்கடற்கோர் நாதர் போலுங்
      காட்டகத்தே ஆட லுடையார் போலுங்
      காமரங்கள் பாடி திரிவார் போலும்
      ஆட்டகத்தில் ஆனை துகந்தார் போலும்
      அணியாரூர திருமூல தான னாரே. 6.28.4
      283 ஏன திளமருப்பு பூண்டார் போலும்
      இமையவர்க ளேத்த இருந்தார் போலுங்
      கானக்கல் லாற்கீழ் நிழலார் போலுங்
      கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
      வான திளமதிசேர் சடையார் போலும்
      வான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும்
      ஆனத்து முன்னெழுந்தாய் நின்றார் போலும்
      அணியாரூர திருமூல தான னாரே. 6.28.5
      284 காமனையுங் கரியா காய்ந்தார் போலுங்
      கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலுஞ்
      சோமனையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலுஞ்
      சொல்லாகி சொற்பொருளாய் நின்றார் போலும்
      நாமனையும் வேதத்தார் தாமே போலும்
      நங்கையோர் பால்மகிழ்ந்த நம்பர் போலும்
      ஆமனையு திருமுடியார் தாமே போலும்
      அணியாரூர திருமூல தான னாரே. 6.28.6
      285 முடியார் மதியரவம் வைத்தார் போலும்
      மூவுலகு தாமேயாய் நின்றார் போலுஞ்
      செடியார் தலைப்பலிகொண் டுழல்வார் போலுஞ்
      செல்கதி தான்கண்ட சிவனார் போலுங்
      கடியார்நஞ் சுண்டிருண்ட கண்டர் போலுங்
      கங்காள வேட கருத்தர் போலும்
      அடியார் அடிமை உகப்பார் போலும்
      அணியாரூர திருமூல தான னாரே. 6.28.7
      286 இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும்
      இமையவர்கள் வந்திறைஞ்சு மிறைவர் போலுஞ்
      சுந்தரத்த பொடிதன்னை துதைந்தார் போலு
      தூத்தூய திருமேனி தோன்றல் போலும்
      மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும்
      மாநாகம் நாணாக வளைத்தார் போலும்
      அந்திரத்தே அணியாநஞ் சுண்டார் போலும்
      அணியாரூர திருமூல தான னாரே. 6.28.8
      287 பிண்டத்தை காக்கும் பிரானார் போலும்
      பிறவி யிறவி இலாதார் போலும்
      முண்டத்து முக்கண் ணுடையார் போலும்
      முழுநீறு பூசு முதல்வர் போலுங்
      கண்ட திறையே கறுத்தார் போலுங்
      காளத்தி காரோணம் மேயார் போலும்
      அண்டத்து கப்புறமாய் நின்றார் போலும்
      அணியாரூர திருமூல தான னாரே. 6.28.9
      288 ஒருகால தொன்றாகி நின்றார் போலும்
      ஊழி பலகண் டிருந்தார் போலும்
      பெருகாமே வெள்ள தவிர்த்தார் போலும்
      பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும்
      உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்
      உகப்பார்தம் மனத்தென்றும் நீங்கார் போலும்
      அருகாக வந்தென்னை அஞ்ச லென்பார்
      அணியாரூர திருமூல தான னாரே. 6.28.10
      289 நன்றாக நடைபலவும் நவின்றார் போலும்
      ஞான பெருங்கடற்கோர் நாதர் போலுங்
      கொன்றாகி கொன்றதொன் றுண்டார் போலுங்
      கோளரக்கர் கோன்றலைகள் குறைத்தார் போலுஞ்
      சென்றார் திரிபுரங்க ளெய்தார் போலு
      திசையனைத்து மாயனைத்து மானார் போலும்
      அன்றாகில் ஆயிரம் பேரார் போலும்
      அணியாரூர திருமூல தான னாரே. 6.28.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.29 திருவாரூர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      290 திருமணியை தித்திக்கு தேனை பாலை
      தீங்கரும்பின் இன்சுவையை தெளிந்த தேறற்
      குருமணியை குழல்மொந்தை தாளம் வீணை
      கொக்கரையின் சச்சரியின் பாணி யானை
      பருமணியை பவளத்தை பசும்பொன் முத்தை
      பருப்பதத்தி லருங்கலத்தை பாவ தீர்க்கும்
      அருமணியை ஆரூரி லம்மான் றன்னை
      அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.1
      291 பொன்னேபோற் றிருமேனி உடையான் றன்னை
      பொங்குவெண் ணூலானை புனிதன் றன்னை
      மின்னானை மின்னிடையாள் பாகன் றன்னை
      வேழத்தி னுரிவிரும்பி போர்த்தான் றன்னை
      தன்னானை தன்னொப்பா ரில்லா தானை
      தத்துவனை உத்தமனை தழல்போல் மேனி
      அன்னானை ஆரூரி லம்மான் றன்னை
      அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.2
      292 ஏற்றானை ஏழுலகு மானான் றன்னை
      ஏழ்கடலு மேழ்மலையு மானான் றன்னை
      கூற்றானை கூற்ற முதைத்தான் றன்னை
      கொடுமழுவாள் கொண்டதோர் கையான் றன்னை
      காற்றானை தீயானை நீரு மாகி
      கடிகமழும் புன்சடைமேற் கங்கை வெள்ள
      ஆற்றானை ஆரூரி லம்மான் றன்னை
      அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.3
      293 முந்திய வல்வினைகள் தீர்ப்பான் றன்னை
      மூவாத மேனிமு கண்ணி னானை
      சந்திரனும் வெங்கதிரு மாயி னானை
      சங்கரனை சங குழையான் றன்னை
      மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை
      மறுமையு மிம்மையு மானான் றன்னை
      அந்திரனை ஆரூரி லம்மான் றன்னை
      அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.4
      294 பிறநெறியா பீடாகி பிஞ்ஞ கனுமா
      பித்தனா பத்தர் மனத்தி னுள்ளே
      உறநெறியாய் ஓமமாய் ஈ காட்டில்
      ஓரிபல விடநட்ட மாடி னானை
      துறநெறியா தூபமா தோற்ற மாகி
      நாற்றமாய் நன்மலர்மே லுறையா நின்ற
      அறநெறியை ஆரூரி லம்மான் றன்னை
      அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.5
      295 பழகிய வல்வினைகள் பாற்று வானை
      பசுபதியை பாவகனை பாவ தீர்க்குங்
      குழகனை கோளரவொன் றாட்டு வானை
      கொடுகொட்டி கொண்டதோர் கையான் றன்னை
      விழவனை வீரட்ட மேவி னானை
      விண்ணவர்க ளேத்தி விரும்பு வானை
      அழகனை ஆரூரி லம்மான் றன்னை
      அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.6
      296 சூளா மணிசேர் முடியான் றன்னை
      சுண்ணவெண் ணீறணிந்த சோதி யானை
      கோள்வா யரவ மசைத்தான் றன்னை
      கொல்புலித்தோ லாடை குழகன் றன்னை
      நாள்வாயும் பத்தர் மனத்து ளானை
      நம்பனை நக்கனை முக்க ணானை
      ஆள்வானை ஆரூரி லம்மான் றன்னை
      அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.7
      297 முத்தினை மணிதன்னை மாணி கத்தை
      மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னை
      கொத்தினை வயிரத்தை கொல்லே றூர்ந்து
      கோளரவொன் றாட்டுங் குழகன் றன்னை
      பத்தனை பத்தர் மனத்து ளானை
      பரிதிபோற் றிருமேனி உடையான் றன்னை
      அத்தனை ஆரூரி லம்மான் றன்னை
      அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.8
      298 பையா டரவங்கை யேந்தி னானை
      பரிதிபோற் றிருமேனி பால்நீற் றானை
      நெய்யாடு திருமேனி நிமலன் றன்னை
      நெற்றிமேல் மற்றொருகண் நிறைவி தானை
      செய்யானை செழும்பவள திரளொ பானை
      செஞ்சடைமேல் வெண்டிங்கள் சேர்த்தி னானை
      ஐயாறு மேயானை ஆரூ ரானை
      அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.9
      299 சீரார் முடிப துடையான் றன்னை
      தேசழி திருவிரலாற் சிதைய நூக்கி
      பேரார் பெருமை கொடுத்தான் றன்னை
      பெண்ணிரண்டு மாணுமாய் நின்றான் றன்னை
      போரார் புரங்கள் புரள நூறும்
      புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை
      ஆரானை ஆரூரி லம்மான் றன்னை
      அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.30 திருவாரூர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      300 எம்பந்த வல்வினைநோய் தீர்த்தி டான்காண்
      ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்
      வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண்
      வளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்ட
      அம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண்
      அனலாடி யானஞ்சு மாடி னான்காண்
      செம்பொன்செய் மணிமாட திருவா ரூரிற்
      றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே. 6.30.1
      301 அக்குலாம் அரையினன்காண் அடியார கென்றும்
      ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண்
      கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை
      குளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னி
      தொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் சொல்லு
      தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்து
      திக்கெலாம் நிறைந்தபுகழ திருவா ரூரிற்
      றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே. 6.30.2
      302 நீரேறு சடைமுடியெ நிமலன் றான்காண்
      நெற்றிமே லொற்றைக்கண் நிறைவி தான்காண்
      வாரேறு வனமுலையாள் பாக தான்காண்
      வளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண்
      காரேறு முகிலனைய கண்ட தான்காண்
      கல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண்
      சீரேறு மணிமாட திருவா ரூரிற்
      றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே. 6.30.3
      303 கானேறு களிற்றுரிவை போர்வை யான்காண்
      கற்பகங்காண் காலனையன் றுதைசெய் தான்காண்
      ஊனேறு முடைதலையிற் பலிகொள் வான்காண்
      உத்தமன்காண் ஒற்றியூர் மேவி னான்காண்
      ஆனேறொன் றதுவேறும் அண்ணல் தான்காண்
      ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான்காண்
      தேனேறு மலர்ச்சோலை திருவா ரூரிற்
      றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே. 6.30.4
      304 பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண்
      பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண்
      மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண்
      வானவரு மறியாத நெறித தான்காண்
      நறப்படுபூ மலர்தூப தீப நல்ல
      நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்
      சிறப்போடு பூசிக்கு திருவா ரூரிற்
      றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே. 6.30.5
      305 சங்கரன்காண் சக்கரமாற் கருள்செய் தான்காண்
      தருணேந்து சேகரன்காண் தலைவன் றான்காண்
      அங்கமல தயன்சிரங்கள் ஐந்தி லொன்றை
      அறுத்தவன்காண் அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண்
      எங்கள்பெரு மான்காணென் னிடர்கள் போக
      அருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ்
      செங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரிற்
      றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே. 6.30.6
      306 நன்றருளி தீதகற்றும் நம்பி ரான்காண்
      நான்மறையோ டாறங்க மாயி னான்காண்
      மின்றிகழுஞ் சோதியன்காண் ஆதி தான்காண்
      வெள்ளேறு நின்றுலவு கொடியி னான்காண்
      துன்றுபொழிற் கச்சியே கம்பன் றான்காண்
      சோற்று துறையான்காண் சோலை சூழ்ந்த
      தென்றலார் மணங்கமழு திருவா ரூரிற்
      றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே. 6.30.7
      307 பொன்னலத்த நறுங்கொன்றை சடையி னான்காண்
      புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண்
      மின்னலத்த நுண்ணிடையாள் பாக தான்காண்
      வேதியன்காண் வெண்புரிநூல் மார்பி னான்காண்
      கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண்
      கோலமா நீறணிந்த மேனி யான்காண்
      செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரிற்
      றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே. 6.30.8
      308 விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
      வேலைவிட முண்டிருண்ட கண்ட தான்காண்
      மண்டலத்தி லொளிவளர விளங்கி னான்காண்
      வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண்
      புண்டரி கண்ணானும் பூவின் மேலை
      புத்தேளுங் காண்பரிய புராணன் றான்காண்
      தெண்டிரைநீர் வயற்புடைசூழ் திருவா ரூரிற்
      றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே. 6.30.9
      309 செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண்
      தென்னானை காவன்காண் தீயில் வீழ
      மருவலர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
      வஞ்சகர்பா லணுகாத மைந்தன் றான்காண்
      அருவரையை எடுத்தவன்றன் சிரங்கள் பத்தும்
      ஐந்நான்கு தோளுநெரி தலற வன்று
      திருவிரலா லடர்த்தவன்காண் திருவா ரூரிற்
      றிருமூல தானத்தெஞ் செல்வன் றானே. 6.30.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.31 திருவாரூர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      310 இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
      ஈண்டொளிசேர் கங்கை சடையா யென்றுஞ்
      சுடரொளியா யுள்விளங்கு சோதி யென்று
      தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றுங்
      கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங்
      கலைமான் மறியேந்து கையா வென்றும்
      அடல்விடையாய் ஆரமுதே ஆதி யென்றும்
      ஆரூரா வென்றென்றே அலறா நில்லே. 6.31.1
      311 செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ்
      சிந்தித்தே நெஞ்சமே திண்ண மாக
      பொடியேறு திருமேனி யுடையா யென்றும்
      புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும்
      அடியேனை யாளா கொண்டா யென்றும்
      அம்மானே ஆரூரெம் மரசே யென்றுங்
      கடிநாறு பொழிற்கச்சி கம்பா வென்றுங்
      கற்பகமே யென்றென்றே கதறா நில்லே. 6.31.2
      312 நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
      நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்கு
      புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டு
      பூமாலை புனைந்தேத்தி புகழ்ந்து பாடி
      தலையார கும்பிட்டு கூத்து மாடி
      சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
      அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
      ஆரூரா வென்றென்றே அலறா நில்லே. 6.31.3
      313 புண்ணியமும் நன்னெறியு மாவ தெல்லாம்
      நெஞ்சமே இதுகண்டாய் பொருந்த கேள்நீ
      நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா வென்றும்
      நுந்தாத வொண்சுடரே யென்று நாளும்
      விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும்
      விரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி
      எண்ணரிய திருநாம முடையா யென்றும்
      எழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே. 6.31.4
      314 இழைத்தநாள் எல்லை கடப்ப தென்றால்
      இரவினொடு நண்பகலு மேத்தி வாழ்த்தி
      பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோ யென்றும்
      பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா வென்றும்
      அழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய்
      அணியாரூர் இடங்கொண்ட அழகா வென்றுங்
      குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே
      குற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே. 6.31.5
      315 நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம்
      நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாக
      சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றுஞ்
      சிவலோக நெறிதந்த சிவனே யென்றும்
      பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலை
      புண்டரி கண்ணானும் போற்றி யென்ன
      தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்கு
      திருவாரூ ராவென்றே சிந்தி நெஞ்சே. 6.31.6
      316 பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டிற்
      பரகதிக்கு செல்வதொரு பரிசு வேண்டிற்
      சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டிற்
      சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்
      உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்
      உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும்
      புற்றரவ கச்சார்த்த புனிதா வென்றும்
      பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே. 6.31.7
      317 மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக
      வழியாவ திதுகண்டாய் வானோர கெல்லாம்
      அதிபதியே ஆரமுதே ஆதி யென்றும்
      அம்மானே ஆரூரெம் மையா வென்று
      துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவி
      சூழும் வலஞ்செய்து தொண்டு பாடி
      கதிர்மதிசேர் சென்னியனே கால காலா
      கற்பகமே யென்றென்றே கதறா நில்லே. 6.31.8
      318 பாசத்தை பற்றறுக்க லாகு நெஞ்சே
      பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா
      தேச தொளிவிளக்கே தேவ தேவே
      திருவாரூர திருமூல தானா வென்றும்
      நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி
      நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று
      ஏசற்று நின்றிமையோ ரேறே வென்றும்
      எம்பெருமா னென்றென்றே ஏத்தா நில்லே. 6.31.9
      319 புலன்களைந்தால் ஆட்டுண்டு போது போக்கி
      புறம்புறமே திரியாதே போது நெஞ்சே
      சலங்கொள்சடை முடியுடைய தலைவா வென்று
      தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தா யென்றும்
      இலங்கையர்கோன் சிரநெரித்த இறைவா வென்றும்
      எழிலாரூ ரிடங்கொண்ட எந்தா யென்றும்
      நலங்கொளடி என்றலைமேல் வைத்தா யென்றும்
      நாடோ றும் நவின்றேத்தாய் நன்மை யாமே. 6.31.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.32 திருவாரூர் - போற்றித்திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      320 கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி
      கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
      அற்றவர்க காரமுத மானாய் போற்றி
      அல்லலறு தடியேனை ஆண்டாய் போற்றி
      மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி
      வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
      செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
      திருமூல தானனே போற்றி போற்றி. 6.32.1
      321 வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி
      மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
      கொங்கலரும் நறுங்கொன்றை தாராய் போற்றி
      கொல்புலித்தோ லாடை குழகா போற்றி
      அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
      ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
      செங்கனக தனிக்குன்றே சிவனே போற்றி
      திருமூல தானனே போற்றி போற்றி. 6.32.2
      322 மலையான் மடந்தை மணாளா போற்றி
      மழவிடையாய் நின்பாதம் போற்றி
      நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
      நெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றி
      இலையார்ந்த மூவிலைவே லேந்தி போற்றி
      ஏழ்கடலு மேழ்பொழிலு மானாய் போற்றி
      சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி
      திருமூல தானனே போற்றி போற்றி. 6.32.3
      323 பொன்னியலும் மேனியனே போற்றி
      பூத படையுடையாய் போற்றி
      மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி
      மறியேந்து கையானே போற்றி
      உன்னுமவர குண்மையனே போற்றி
      உலகு கொருவனே போற்றி
      சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி
      திருமூல தானனே போற்றி போற்றி. 6.32.4
      324 நஞ்சுடைய கண்டனே போற்றி
      நற்றவனே நின்பாதம் போற்றி
      வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
      வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
      துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி
      தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி
      செஞ்சடையாய் நின்பாதம் போற்றி
      திருமூல தானனே போற்றி போற்றி. 6.32.5
      325 சங்கரனே நின்பாதம் போற்றி
      சதாசிவனே நின்பாதம் போற்றி
      பொங்கரவா நின்பாதம் போற்றி
      புண்ணியனே நின்பாதம் போற்றி
      அங்கமல தயனோடு மாலுங் காணா
      அனலுருவா நின்பாதம் போற்றி
      செங்கமல திருப்பாதம் போற்றி
      திருமூல தானனே போற்றி போற்றி. 6.32.6
      326 வம்புலவு கொன்றை சடையாய் போற்றி
      வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
      கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
      குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
      நம்புமவர கரும்பொருளே போற்றி
      நால்வேத மாறங்க மானாய் போற்றி
      செம்பொனே மரகதமே மணியே போற்றி
      திருமூல தானனே போற்றி போற்றி. 6.32.7
      327 உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
      உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
      வள்ளலே போற்றி மணாளா
      வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
      வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி
      மேலோர்க்கு மேலாய்
      தெள்ளுநீர கங்கை சடையாய் போற்றி
      திருமூல தானனே போற்றி போற்றி. 6.32.8
      328 பூவார்ந்த சென்னி புனிதா போற்றி
      புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
      தேவார்ந்த தேவர்க்கு தேவே போற்றி
      திருமாலு காழி யளித்தாய் போற்றி
      சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
      சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
      சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி
      திருமூல தானனே போற்றி போற்றி. 6.32.9
      329 பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி
      பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி
      கரநான்கும் முக்கண்ணு முடையாய் போற்றி
      காதலிப்பார காற்ற எளியாய் போற்றி
      அருமந்த தேவர கரசே போற்றி
      அன்றரக்கன் ஐந்நான்கு தோளு தாளுஞ்
      சிரம்நெரித்த சேவடியாய் போற்றி
      திருமூல தானனே போற்றி போற்றி. 6.32.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.33 திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      330 பொருங்கைமத கரியுரிவை போர்வை யானை
      பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானை
      கரும்புதரு கட்டியையின் னமிர்தை தேனை
      காண்பரிய செழுஞ்சுடரை கன குன்றை
      இருங்கனக மதிலாரூர் மூல தான
      தெழுந்தருளி யிருந்தானை இமையோ ரேத்தும்
      அருந்தவனை அரநெறியி லப்பன் றன்னை
      அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 6.33.1
      331 கற்பகமும் இருசுடரு மாயி னானை
      காளத்தி கயிலாய மலையு ளானை
      விற்பயிலும் மதனழிய விழித்தான் றன்னை
      விசயனுக்கு வேடுவனாய் நின்றான் றன்னை
      பொற்பமரும் பொழிலாரூர் மூல தானம்
      பொருந்தியவெம் பெருமானை பொருந்தார் சிந்தை
      அற்புதனை அரநெறியி லப்பன் றன்னை
      அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 6.33.2
      332 பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானை
      பாசூரும் பரங்குன்றும் மேயான் றன்னை
      வேதியனை தன்னடியார கெளியான் றன்னை
      மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்
      போதியலும் பொழிலாரூர் மூல தானம்
      புற்றிடங்கொண் டிருந்தானை போற்றுவார்கள்
      ஆதியனை அரநெறியி லப்பன் றன்னை
      அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 6.33.3
      333 நந்திபணி கொண்டருளும் நம்பன் றன்னை
      நாகே சரமிடமா நண்ணி னானை
      சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்து
      தத்துவனை சக்கரமாற் கீந்தான் றன்னை
      இந்துநுழை பொழிலாரூர் மூல தானம்
      இடங்கொண்ட பெருமானை இமையோர் போற்றும்
      அந்தணனை அரநெறியி லப்பன் றன்னை
      அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 6.33.4
      334 சுடர்ப்பவள திருமேனி வெண்ணீற் றானை
      சோதிலிங்க தூங்கானை மாட தானை
      விடக்கிடுகா டிடமாக உடையான் றன்னை
      மிக்கரண மெரியூட்ட வல்லான் றன்னை
      மடற்குலவு பொழிலாரூர் மூல தானம்
      மன்னியவெம் பெருமானை மதியார் வேள்வி
      அடர்த்தவனை அரநெறியி லப்பன் றன்னை
      அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 6.33.5
      335 தாயவனை எவ்வுயிர்க்கு தன்னொ பில்லா
      தகுதில்லை நடம்பயிலு தலைவன் றன்னை
      மாயவனும் மலரவனும் வானோ ரேத்த
      மறிகடல்நஞ் சுண்டுகந்த மைந்தன் றன்னை
      மேயவனை பொழிலாரூர் மூல தானம்
      விரும்பியஎம் பெருமானை யெல்லாம் முன்னே
      ஆயவனை அரநெறியி லப்பன் றன்னை
      அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 6.33.6
      336 பொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானை
      புகலூரும் புறம்பயமும் மேயான் றன்னை
      மருளியலுஞ் சிந்தையர்க்கு மருந்து தன்னை
      மறைக்காடுஞ் சாய்க்காடும் மன்னி னானை
      இருளியல்நற் பொழிலாரூர் மூல தான
      தினிதமரும் பெருமானை இமையோ ரேத்த
      அருளியனை அரநெறியி லப்பன் றன்னை
      அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 6.33.7
      337 காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னை
      காரோணங் கழிப்பாலை மேயான் றன்னை
      பாலனுக்கு பாற்கடலன் றீந்தான் றன்னை
      பணியுகந்த அடியார்க கினியான் றன்னை
      சேலுகளும் வயலாரூர் மூல தானஞ்
      சேர்ந்திருந்த பெருமானை பவள மீன்ற
      ஆலவனை அரநெறியி லப்பன் றன்னை
      அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 6.33.8
      338 ஒப்பொருவ ரில்லாத ஒருவன் றன்னை
      ஓத்தூரும் உறையூரும் மேவி னானை
      வைப்பவனை மாணிக்க சோதி யானை
      மாருதமு தீவெளிநீர் மண்ணா னானை
      மெய்ப்பொருளாய் அடியேன துள்ளே நின்ற
      வினையிலியை திருமூல தானம் மேய
      அப்பொன்னை அரநெறியி லப்பன் றன்னை
      அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
      இச்செய்யுளின் பின்னிரு அடிகள் பிற பதிப்புகளில்
      காணப்படவில்லை. 6.33.9
      339 பகலவன்றன் பல்லுகுத்த படிறன் றன்னை
      பராய்த்துறைபைஞ் ஞீலியிடம் பாவி தானை
      இகலவனை இராவணனை இடர்செய் தானை
      ஏத்தாதார் மனத்தகத்துள் இருளா னானை
      புகழ்நிலவு பொழிலாரூர் மூல தானம்
      பொருந்தியவெம் பெருமானை போற்றார் சிந்தை
      அகலவனை அரநெறியி லப்பன் றன்னை
      அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 6.33.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.34 திருவாரூர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      340 ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
      ஓருருவே மூவுருவ மான நாளோ
      கருவனா காலனைமுன் காய்ந்த நாளோ
      காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
      மருவனாய் மண்ணும்விண்ணு தெரித்த நாளோ
      மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாக
      திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
      திருவாரூர் கோயிலா கொண்ட நாளே. 6.34.1
      341 மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ
      வானவரை வலியமுத மூட்டி யந்நாள்
      நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ
      நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ
      அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ
      அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ
      சிலையால்மு புரமெரித்த முன்னோ பின்னோ
      திருவாரூர் கோயிலா கொண்ட நாளே. 6.34.2
      342 பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்
      நீயும்போ பார்த்தனது பலத்தை காண்பான்
      வேடனாய் வில்வாங்கி யெய்த நாளோ
      விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ
      மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
      மணிதிகழும் அம்பலத்தே மன்னி கூத்தை
      ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
      அணியாரூர் கோயிலா கொண்ட நாளே. 6.34.3
      343 ஓங்கி யுயர்ந்தெழுந்து நின்ற நாளோ
      ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ
      தாங்கியசீர தலையான வானோர் செய்த
      தக்கன்றன் பெருவேள்வி தகர்த்த நாளோ
      நீங்கியநீர தாமரையான் நெடுமா லோடு
      நில்லாயெம் பெருமானே யென்றங் கேத்தி
      வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ
      வளராரூர் கோயிலா கொண்ட நாளே. 6.34.4
      344 பாலனாய் வளர்ந்திலா பான்மை யானே
      பணிவார்க கங்கங்கே பற்றா னானே
      நீலமா மணிகண்ட தெண்டோ ளானே
      நெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ்
      சீலமே சிவலோக நெறியே யாகுஞ்
      சீர்மையே கூர்மையே குணமே நல்ல
      கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ
      குளிராரூர் கோயிலா கொண்ட நாளே. 6.34.5
      345 திறம்பலவும் வழிகாட்டி செய்கை காட்டி
      சிறியையா பெரியையாய் நின்ற நாளோ
      மறம்பலவு முடையாரை மயக்க தீர்த்து
      மாமுனிவர கருள்செய்தங் கிருந்த நாளோ
      பிறங்கியசீர பிரமன்றன் தலைகை யேந்தி
      பிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ
      அறம்பலவு முரைப்பதற்கு முன்னோ பின்னோ
      அணியாரூர் கோயிலா கொண்ட நாளே. 6.34.6
      346 நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ
      நிற்பனவும் நடப்பனவும் நீயே யாகி
      கலந்துரை கற்பகமாய் நின்ற நாளோ
      காரணத்தால் நாரணனை கற்பி தன்று
      வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ
      வாசுகியை வாய்மடுத்து வானோ ரு
      சலந்தரனை கொல்வதற்கு முன்னோ பின்னோ
      தண்ணாரூர் கோயிலா கொண்ட நாளே. 6.34.7
      347 பாதத்தால் முயலகனை பாது காத்து
      பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
      கீதத்தை மிகப்பாடும் அடியார கென்றுங்
      கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ
      பூதத்தான் பொருநீலி புனிதன் மேவி
      பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர கென்றும்
      வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ
      விழவாரூர் கோயிலா கொண்ட நாளே. 6.34.8
      348 புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்
      பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டுங்
      கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்
      கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்
      நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்
      நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டு
      திகையெட்டு தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
      திருவாரூர் கோயிலா கொண்ட நாளே. 6.34.9
      349 ஈசனா யுலகேழும் மலையு மாகி
      இராவணனை ஈடழித்தி டிருந்த நாளோ
      வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ
      மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ
      தாதுமலர் சண்டிக்கு கொடுத்த நாளோ
      சகரர்களை மறித்திட்டா கொண்ட நாளோ
      தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ
      திருவாரூர் கோயிலா கொண்ட நாளே. 6.34.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.35 திருவெண்காடு - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      350 தூண்டு சுடர்மேனி தூநீ றாடி
      சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
      பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
      பொற்சடைக ளவைதாழ புரிவெண் ணூலர்
      நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
      நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
      வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
      வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.35.1
      351 பாத தனிப்பார்மேல் வைத்த பாதர்
      பாதாள மேழுருவ பாய்ந்த பாதர்
      ஏதம் படாவண்ணம் நின்ற பாதர்
      ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்
      ஓ தொலிமடங்கி யூருண் டேறி
      ஒத்துலக மெல்லா மொடுங்கி யபின்
      வே தொலிகொண்டு வீணை கேட்பார்
      வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.35.2
      352 நென்னலையோர் ஓடேத்தி பிச்சை கென்று
      வந்தார்க்கு வந்தேனென் றில்லே புக்கேன்
      அந்நிலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார்
      அருகே வருவார்போல் நோக்கு கின்றார்
      நுந்நிலைமை யேதோநும் மூர்தா னேதோ
      என்றேனு கொன்றாக சொல்ல மாட்டார்
      மென்முலையார் கூடி விரும்பி யாடும்
      வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.35.3
      353 ஆக துமையடக்கி ஆறு சூடி
      ஐவா யரவசைத்தங் கானே றேறி
      போகம் பலவுடைத்தா பூதஞ் சூழ
      புலித்தோ லுடையா புகுந்து நின்றார்
      பாகிடுவான் சென்றேனை பற்றி நோக்கி
      பரிசழித்தென் வளைகவர்ந்தார் பாவி யேனை
      மேக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
      வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.35.4
      354 கொள்ளை குழைக்காதிற் குண்டை பூதங்
      கொடுகொட்டி கொட்டி குனித்து பாட
      உள்ளங் கவர்ந்திட்டு போவார் போல
      உழிதருவர் நான்தெரிய மாட்டேன் மீண்டேன்
      கள்ள விழிவிழிப்பார் காணா கண்ணாற்
      கண்ணுளார் போலே கரந்து நிற்பர்
      வெள்ள சடைமுடியர் வேத நாவர்
      வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.35.5
      355 தொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்தி
      சுடர்க்கொன்றை தாரணிந்து சுவைகள் பேசி
      பட்டிவெள் ளேறேறி பலியுங் கொள்ளார்
      பார்ப்பாரை பரிசழிப்பா ரொக்கின் றாராற்
      கட்டிலங்கு வெண்ணீற்றர் கனல பேசி
      கருத்தழித்து வளைகவர்ந்தார் காலை மாலை
      விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர்
      வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.35.6
      356 பெண்பா லொருபாகம் பேணா வாழ்க்கை
      கோள்நாகம் பூண்பனவும் நாணாஞ் சொல்லார்
      உண்பா ருறங்குவார் ஒவ்வா நங்காய்
      உண்பதுவும் நஞ்சன்றே லோபி யுண்ணார்
      பண்பா லவிர்சடையர் பற்றி நோக்கி
      பாலை பரிசழி பேசு கின்றார்
      விண்பால் மதிசூடி வேத மோதி
      வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.35.7
      357 மருதங்க ளாமொழிவர் மங்கை யோடு
      வானவரும் மாலயனுங் கூடி தங்கள்
      சுருதங்க ளாற்றுதித்து தூநீ ராட்டி
      தோத்திரங்கள் பலசொல்லி தூபங் காட்டி
      கருதுங்கொல் எம்பெருமான் செய்குற் றேவல்
      என்பார்க்கு வேண்டும் வரங் கொடுத்து
      விகிர்தங்க ளாநடப்பர் வெள்ளே றேறி
      வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.35.8
      358 புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங்
      காணார் பொறியழலாய் நின்றான் றன்னை
      உள்ளானை யொன்றலா உருவி னானை
      உலகு கொருவிளக்காய் நின்றான் றன்னை
      கள்ளேந்து கொன்றைதூ காலை மூன்றும்
      ஓவாமே நின்று தவங்கள் செய்த
      வெள்ளானை வேண்டும் வரங் கொடுப்பார்
      வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.35.9
      359 மாக்குன் றெடுத்தோன்றன் மைந்த னாகி
      மாவேழம் வில்லா மதித்தான் றன்னை
      நோக்கு துணைத்தேவ ரெல்லாம் நிற்க
      நொடிவரையில் நோவ விழித்தான் றன்னை
      காக்குங் கடலிலங்கை கோமான் றன்னை
      கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி
      வீக்க தவிர்த்த விரலார் போலும்
      வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.35.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.36 திருப்பழனம் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      360 அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே
      அமரர்களு கருள்செய்யு மாதி தாமே
      கொலையாய கூற்ற முதைத்தார் தாமே
      கொல்வேங்கை தோலொன் றசைத்தார் தாமே
      சிலையாற் புரமூன் றெரித்தார் தாமே
      தீநோய் களைந்தென்னை யாண்டார் தாமே
      பலிதேர தழகாய பண்பர் தாமே
      பழன நகரெம் பிரானார் தாமே. 6.36.1
      361 வெள்ள மொருசடைமே லேற்றார் தாமே
      மேலார்கண் மேலார்
      கள்ளங் கடிந்தென்னை யாண்டார் தாமே
      கருத்துடைய பூத படையார் தாமே
      உள்ள துவகை தருவார் தாமே
      உறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பார் தாமே
      பள்ள பரவைநஞ் சுண்டார் தாமே
      பழன நகரெம் பிரானார் தாமே. 6.36.2
      362 இரவும் பகலுமாய் நின்றார் தாமே
      எப்போது மென்னெஞ்ச துள்ளார் தாமே
      அரவ மரையி லசைத்தார் தாமே
      அனலாடி யங்கை மறித்தார் தாமே
      குரவங் கமழுங்குற் றாலர் தாமே
      கோலங்கள் மேன்மே லுகப்பார் தாமே
      பரவு மடியார்க்கு பாங்கர் தாமே
      பழன நகரெம் பிரானார் தாமே. 6.36.3
      363 மாறின் மதின்மூன்று மெய்தார் தாமே
      வரியரவங் கச்சாக ஆர்த்தார் தாமே
      நீறுசேர் திருமேனி நிமலர் தாமே
      நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே
      ஏறு கொடுஞ்சூல கையார் தாமே
      என்பா பரண மணிந்தார் தாமே
      பாறுண் தலையிற் பலியார் தாமே
      பழன நகரெம் பிரானார் தாமே. 6.364
      364 சீரால் வணங்க படுவார் தாமே
      திசைக்கெல்லா தேவாகி நின்றார் தாமே
      ஆரா வமுதமு மானார் தாமே
      அளவில் பெருமை யுடையார் தாமே
      நீரார் நியம முடையார் தாமே
      நீள்வரை வில்லாக வளைத்தார் தாமே
      பாரார் பரவ படுவார் தாமே
      பழன நகரெம் பிரானார் தாமே. 6.36.5
      365 கால னுயிர்வௌவ வல்லார் தாமே
      கடிதோடும் வெள்ளை விடையார் தாமே
      கோலம் பலவு முகப்பார் தாமே
      கோள்நாக நாணாக பூண்டார் தாமே
      நீலம் பொலிந்த மிடற்றார் தாமே
      நீள்வரையி னுச்சி யிருப்பார் தாமே
      பால விருத்தரு மானார் தாமே
      பழன நகரெம் பிரானார் தாமே. 6.36.6
      366 ஏய்ந்த வுமைநங்கை பங்கர் தாமே
      ஏழூழி கப்புறமாய் நின்றார் தாமே
      ஆய்ந்து மலர்தூவ நின்றார் தாமே
      அளவில் பெருமை யுடையார் தாமே
      தேய்ந்த பிறைசடைமேல் வைத்தார் தாமே
      தீவா யரவதனை யார்த்தார் தாமே
      பாய்ந்த படர்கங்கை யேற்றார் தாமே
      பழன நகரெம் பிரானார் தாமே. 6.36.7
      367 ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே
      உள்ளூறு மன்பர் மனத்தார் தாமே
      பேராதென் சிந்தை யிருந்தார் தாமே
      பிறர்க்கென்றுங் காட்சி கரியார் தாமே
      ஊராரு மூவுலக துள்ளார் தாமே
      உலகை நடுங்காமற் காப்பார் தாமே
      பாரார் முழவ திடையார் தாமே
      பழன நகரெம் பிரானார் தாமே. 6.36.8
      368 நீண்டவர்க்கோர் நெருப்புருவ மானார் தாமே
      நேரிழையை யொருபாகம் வைத்தார் தாமே
      பூண்டரவை புலித்தோல்மே லார்த்தார் தாமே
      பொன்னிறத்த வெள்ள சடையார் தாமே
      ஆண்டுலகே ழனைத்தினையும் வைத்தார் தாமே
      அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே
      பாண்டவரிற் பார்த்தனுக்கு பரிந்தார் தாமே
      பழன நகரெம் பிரானார் தாமே. 6.36.9
      369 விடையேறி வேண்டுலக திருப்பார் தாமே
      விரிகதிரோன் சோற்று துறையார் தாமே
      புடைசூழ தேவர் குழாத்தார் தாமே
      பூந்துருத்தி நெய்த்தான மேயார் தாமே
      அடைவே புனல்சூழ்ஐ யாற்றார் தாமே
      அரக்கனையு மாற்ற லழித்தார் தாமே
      படையா பல்பூத முடையார் தாமே
      பழன நகரெம் பிரானார் தாமே. 6.36.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.37 திருவையாறு - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      370 ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
      அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
      கூரார் மழுவா படையொன் றேந்தி
      குறட்பூத பல்படையா யென்றேன் நானே
      பேரா யிரமுடையா யென்றேன் நானே
      பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
      ஆரா வமுதேயென் ஐயா றனே
      என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.37.1
      371 தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்கு
      தீர்த்தா புராணனே யென்றேன் நானே
      மூவா மதிசூடி யென்றேன் நானே
      முதல்வாமு கண்ணனே யென்றேன் நானே
      ஏவார் சிலையானே யென்றேன் நானே
      இடும்பை கடல்நின்று மேற வாங்கி
      ஆவாவென் றருள்புரியும் ஐயா றனே
      என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.37.2
      372 அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே
      அடியார்க காரமுதே யென்றேன் நானே
      நஞ்சணி கண்டனே யென்றேன் நானே
      நாவலர்கள் நான்மறையே யென்றேன் நானே
      நெஞ்சுணர வுள்பு கிருந்த போது
      நிறையு மமுதமே யென்றேன் நானே
      அஞ்சாதே ஆள்வானே ஐயா றனே
      என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.37.3
      373 தொல்லை தொடுகடலே யென்றேன் நானே
      துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
      எல்லை நிறைந்தானே யென்றேன் நானே
      ஏழ்நரம்பி னின்னிசையா யென்றேன் நானே
      அல்லற் கடல்பு கழுந்து வேனை
      வாங்கி யருள்செய்தா யென்றேன் நானே
      எல்லையாம் ஐயாறா வென்றேன் நானே
      என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.37.4
      374 இண்டை சடைமுடியா யென்றேன் நானே
      இருசுடர் வானத்தா யென்றேன் நானே
      தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே
      துருத்திநெ தானத்தா யென்றேன் நானே
      கண்டங் கறுத்தானே யென்றேன் நானே
      கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே
      அண்டத்து கப்பாலாம் ஐயா றனே
      என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.37.5
      375 பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே
      பசுபதி பண்டரங்கா வென்றேன் நானே
      கற்றார்கள் நாவினா யென்றேன் நானே
      கடுவிடையொன் றூர்தியா யென்றேன் நானே
      பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே
      பார்த்தற் கருள்செய்தா யென்றேன் நானே
      அற்றார கருள்செய்யும் ஐயா றனே
      என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.37.6
      376 விண்ணோர் தலைவனே யென்றேன் நானே
      விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
      எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே
      ஏகம்பம் மேயானே யென்றேன் நானே
      பண்ணார் மறைபாடி யென்றேன் நானே
      பசுபதி பால்நீற்றா யென்றேன் நானே
      அண்ணாஐ யாறனே யென்றேன் நானே
      என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.37.7
      377 அவனென்று நானுன்னை அஞ்சா தேனை
      அல்ல லறுப்பானே யென்றேன் நானே
      சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்ல
      செல்வ தருவானே யென்றேன் நானே
      பவனாகி யென்னுள்ள துள்ளே நின்று
      பண்டை வினையறுப்பா யென்றேன் நானே
      அவனென்றே யாதியே ஐயா றனே
      என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.37.8
      378 கச்சியே கம்பனே யென்றேன் நானே
      கயிலாயா காரோணா வென்றேன் நானே
      நிச்சன் மணாளனே யென்றேன் நானே
      நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே
      உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே
      உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே
      அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றனே
      என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.37.9
      379 வில்லாடி வேடனே யென்றேன் நானே
      வெண்ணீறு மெய்க்கணிந்தா யென்றேன் நானே
      சொல்லாய சூழலா யென்றேன் நானே
      சுலாவாய தொன்னெறியே யென்றேன் நானே
      எல்லாமா யென்னுயிரே யென்றேன் நானே
      இலங்கையர்கோன் தோளிறுத்தா யென்றேன் நானே
      அல்லா வினைதீர்க்கும் ஐயா றனே
      என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.37.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.38 திருவையாறு - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      380 ஓசை ஒலியெலா மானாய் நீயே
      உலகு கொருவனாய் நின்றாய் நீயே
      வாச மலரெலா மானாய் நீயே
      மலையான் மருகனாய் நின்றாய் நீயே
      பேச பெரிது மினியாய் நீயே
      பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
      தேச விளக்கெலா மானாய் நீயே
      திருவையா றகலாத செம்பொற் சோதீ. 6.38.1
      381 நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே
      நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
      காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே
      காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
      ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே
      அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
      தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
      திருவையா றகலாத செம்பொற் சோதீ. 6.38.2
      382 கனத்தகத்து கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
      கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே
      தனத்தகத்து தலைகலனா கொண்டாய் நீயே
      சார்ந்தாரை தகைந்தாள வல்லாய் நீயே
      மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
      மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
      சினத்திருந்த திருநீல கண்டன் நீயே
      திருவையா றகலாத செம்பொற் சோதீ 6.38.3
      383 வானுற்ற மாமலைக ளானாய் நீயே
      வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
      ஊனுற்ற ஒளிமழுவா படையாய் நீயே
      ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
      ஆனுற்ற ஐந்து மமர்ந்தாய் நீயே
      அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
      தேனுற்ற சொன்மடவாள் பங்கன் நீயே
      திருவையா றகலாத செம்பொற் சோதீ. 6.38.4
      384 பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
      பெரியார்க கெல்லாம் பெரியாய் நீயே
      உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே
      ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
      கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே
      கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
      திண்ணார் மழுவா படையாய் நீயே
      திருவையா றகலாத செம்பொற் சோதீ. 6.38.5
      385 உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே
      உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
      கற்றிருந்த கலைஞான மானாய் நீயே
      கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
      பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
      பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே
      செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
      திருவையா றகலாத செம்பொற் சோதீ. 6.38.6
      386 எல்லா வுலகமு மானாய் நீயே
      ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
      நல்லாரை நன்மை யறிவாய் நீயே
      ஞான சுடர்விளக்காய் நின்றாய் நீயே
      பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
      புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
      செல்வாய செல்வ தருவாய் நீயே
      திருவையா றகலாத செம்பொற் சோதீ. 6.38.7
      387 ஆவினில் ஐந்து மமர்ந்தாய் நீயே
      அளவில் பெருமை யுடையாய் நீயே
      பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
      போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே
      நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
      நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே
      தேவ ரறியாத தேவன் நீயே
      திருவையா றகலாத செம்பொற் சோதீ. 6.38.8
      388 எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே
      ஏகம்ப மேய இறைவன் நீயே
      வண்டிசைக்கும் நறுங்கொன்றை தாராய் நீயே
      வாரா வுலகருள வல்லாய் நீயே
      தொண்டிசைத்துன் னடிபரவ நின்றாய் நீயே
      தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
      திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே
      திருவையா றகலாத செம்பொற் சோதீ. 6.38.9
      389 விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
      விண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயே
      கண்டாரை கொல்லும்நஞ் சுண்டாய் நீயே
      காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
      தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே
      தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
      திண்டோ ள்வி டெரியாட லுகந்தாய் நீயே
      திருவையா றகலாத செம்பொற் சோதீ. 6.38.10
      390 ஆரு மறியா இடத்தாய் நீயே
      ஆகா தேரூர வல்லாய் நீயே
      பேரும் பெரிய இலங்கை வேந்தன்
      பெரிய முடிப திறுத்தாய் நீயே
      ஊரும் புரமூன்று மட்டாய் நீயே
      ஒண்டா மரையானும் மாலுங் கூடி
      தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே
      திருவையா றகலாத செம்பொற் சோதீ. 6.38.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.39 திருமழபாடி - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      391 நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்
      நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
      கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்
      கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்
      ஏறேறி யெங்கு திரிவான் கண்டாய்
      ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்
      மாறானார் தம்மரண மட்டான் கண்டாய்
      மழபாடி மன்னும் மணாளன் றானே. 6.39.1
      392 கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்
      கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்
      அக்கரைமே லாட லுடையான் கண்டாய்
      அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்
      அக்கோ டரவ மணிந்தான் கண்டாய்
      அடியார்க காரமுத மானான் கண்டாய்
      மற்றிருந்த கங்கை சடையான் கண்டாய்
      மழபாடி மன்னும் மணாளன் றானே. 6.39.2
      393 நெற்றி தனிக்கண் ணுடையான் கண்டாய்
      நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
      பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்
      பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
      செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய்
      செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
      மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய்
      மழபாடி மன்னும் மணாளன் றானே. 6.39.3
      394 அலையார்ந்த புனற்கங்கை சடையான் கண்டாய்
      அண்டத்து கப்பாலாய் நின்றான் கண்டாய்
      கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்
      கொல்வேங்கை தோலொன் றுடுத்தான் கண்டாய்
      சிலையாற் றிரிபுரங்கள் செற்றான் கண்டாய்
      செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
      மலையார் மடந்தை மணாளன் கண்டாய்
      மழபாடி மன்னும் மணாளன் றானே. 6.39.4
      395 உலந்தார்தம் அங்க மணிந்தான் கண்டாய்
      உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்
      நலந்திகழுங் கொன்றை சடையான் கண்டாய்
      நால்வேத மாறங்க மானான் கண்டாய்
      உலந்தார் தலைகலனா கொண்டான் கண்டாய்
      உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
      மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த
      மழபாடி மன்னும் மணாளன் றானே. 6.39.5
      396 தாமரையான் தன்றலையை சாய்த்தான் கண்டாய்
      தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்
      பூமலரா னேத்தும் புனிதன் கண்டாய்
      புணர்ச்சி பொருளாகி நின்றான் கண்டாய்
      ஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய்
      இருளார்ந்த கண்ட திறைவன் கண்டாய்
      மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய்
      மழபாடி மன்னும் மணாளன் றானே. 6.39.6
      397 நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
      நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
      பாராகி பௌவமே ழானான் கண்டாய்
      பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
      ஆரேனு தன்னடியார கன்பன் கண்டாய்
      அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
      வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
      மழபாடி மன்னும் மணாளன் றானே. 6.39.7
      398 பொன்னியலு திருமேனி யுடையான் கண்டாய்
      பூங்கொன்றை தாரொன் றணிந்தான் கண்டாய்
      மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்
      வேழத்தி னுரிவிரும்பி போர்த்தான் கண்டாய்
      தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்
      தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
      மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
      மழபாடி மன்னும் மணாளன் றானே. 6.39.8
      399 ஆலால முண்டுகந்த ஆதி கண்டாய்
      அடையலர்தம் புரமூன்று மெய்தான் கண்டாய்
      காலால காலனையுங் காய்ந்தான் கண்டாய்
      கண்ணப்பர கருள்செய்த காளை கண்டாய்
      பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
      பசுவேறி பலிதிரியும் பண்பன் கண்டாய்
      மாலாலு மறிவரிய மைந்தன் கண்டாய்
      மழபாடி மன்னும் மணாளன் றானே. 6.39.9
      400 ஒருசுடரா யுலகேழு மானான் கண்டாய்
      ஓங்கார துட்பொருளாய் நின்றான் கண்டாய்
      விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்
      விழவொலியும் வேள்வொலியு மானான் கண்டாய்
      இருசுடர் மீதோடா இலங்கை கோனை
      ஈடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய்
      மருசுடரின் மாணி குன்று கண்டாய்
      மழபாடி மன்னும் மணாளன் றானே. 6.39.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர்
      தேவியார் - அழகாம்பிகையம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.40 திருமழபாடி - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      401 அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு
      அமரர்கள்த தலைகாத்த ஐயர் செம்பொற்
      சிலையெடுத்து மாநாக நெருப்பு கோத்து
      திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்
      நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட
      நிரைவயிர பலகையாற் குவையார துற்ற
      மலையடுத்த மழபாடி வயிர தூணே
      என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.40.1
      402 அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும்
      அந்தரத்திற் கந்தருவர் அமர ரேத்த
      மறைகலந்த மந்திரமும் நீருங் கொண்டு
      வழிபட்டார் வானாள கொடுத்தி யன்றே
      கறைகலந்த பொழிற்கச்சி கம்ப மே
      கனவயிர திரள்தூணே கலிசூழ் மாடம்
      மறைகலந்த மழபாடி வயிர தூணே
      என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.40.2
      403 உரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா
      ஊத்தைவா சமணர்தமை யுறவா கொண்ட
      பரங்கெடுத்திங் கடியேனை ஆண்டு கொண்ட
      பவளத்தின் திரள்தூணே பசும்பொன் முத்தே
      புரங்கெடுத்து பொல்லாத காம னாகம்
      பொடியாக விழித்தருளி புவியோர கென்றும்
      வரங்கொடுக்கும் மழபாடி வயிர தூணே
      என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.40.3
      404 ஊனிகந்தூ ணுறிகையர் குண்டர் பொல்லா
      ஊத்தைவா சமணருற வா கொண்டு
      ஞானகஞ்சேர துள்ளவயி ரத்தை நண்ணா
      நாயேனை பொருளாக ஆண்டு கொண்ட
      மீனகஞ்சேர் வெள்ளநீர் விதியாற் சூடும்
      வேந்தனே விண்ணவர்தம் பெருமான் மேக
      வானகஞ்சேர் மழபாடி வயிர தூணே
      என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.40.4
      405 சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றை
      திருமால்தன் செழுந்தலையும் பொன்ற சிந்தி
      உரமேற்ற இரவிபல் தகர்த்து சோமன்
      ஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கி
      நரையேற்ற விடையேறி நாகம் பூண்ட
      நம்பியையே மறைநான்கும் ஓல மிட்டு
      வரமேற்கும் மழபாடி வயிர தூணே
      என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.40.5
      406 சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்
      செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி
      புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்
      பொறியிலியேன் றனைப்பொருளா வாண்டு கொண்டு
      தனந்திருத்து மவர்திறத்தை யொழி பாற்றி
      தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி
      மனந்திருத்தும் மழபாடி வயிர தூணே
      என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.40.6
      407 சுழித்துணையாம் பிறவிவழி துக்கம் நீக்குஞ்
      சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர்
      இழிப்பரிய பசுபாச பிறப்பை நீக்கும்
      என்றுணையே என்னுடைய பெம்மான் தம்மான்
      பழிப்பரிய திருமாலும் அயனுங் காணா
      பரிதியே சுருதிமுடி கணியாய் வாய்த்த
      வழித்துணையாம் மழபாடி வயிர தூணே
      என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.40.7
      இப்பதிகத்தில் 8910-ம் செய்யுட்கள்
      சிதைந்து போயின. 6.40.8-10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.41 திருநெய்த்தானம் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      408 வகையெலா முடையாயும் நீயே யென்றும்
      வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்
      மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும்
      வெண்காடு மேவினாய் நீயே யென்றும்
      பகையெலா தீர்த்தாண்டாய் நீயே யென்றும்
      பாசூர் அமர்ந்தாயும் நீயே யென்றும்
      திகையெலா தொழச்செல்வாய் நீயே யென்றும்
      நின்றநெ தானாவென் னெஞ்சு ளாயே. 6.41.1
      409 ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும்
      ஆதி கயிலாயன் நீயே யென்றுங்
      கூர்த்த நடமாடி நீயே யென்றுங்
      கோடிகா மேய குழகா வென்றும்
      பார்த்தற் கருள்செய்தாய் நீயே யென்றும்
      பழையனூர் மேவிய பண்பா வென்று
      தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும்
      ------------------------------------------------------------------------

      6 2
      509-981

      திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த ௿
      தேவார பதிகங்கள்௿
      ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி௿
      பாடல்கள் 509 - 981௿
      ------------------------------------------------------------------------
      ------------------------------------------------------------------------

      .

      .
      .


      .
      - . ..

      .
      .

      .
      2000 ...

      2000 .
      -8
      6 5
      -8 - .
      .
      .
      ன 1999 - 2003



      .

      ..

      .
      ------------------------------------------------------------------------
      திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த ௿
      தேவார பதிகங்கள்௿
      ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி௿
      பாடல்கள் 509 - 981௿
      உள்ளுறை
      ௿
      6.051 திருவீழிமிழலை 509-519 மின்பதிப்பு
      6.052 திருவீழிமிழலை 520-529 மின்பதிப்பு
      6.053 திருவீழிமிழலை 530-540 மின்பதிப்பு
      6.054 திருப்புள்ளிருக்குவேளூர் 541-550 மின்பதிப்பு
      6.055 திருக்கயிலாயம் 551-561 மின்பதிப்பு
      6.056 திருக்கயிலாயம் 562-571 மின்பதிப்பு
      6.057 திருக்கயிலாயத்திருமலை 572-580 மின்பதிப்பு
      6.058 திருவலம்புரம் 581-590 மின்பதிப்பு
      6.059 திருவெண்ணி 591 -600 மின்பதிப்பு
      6.060 திருக்கற்குடி 601-610 மின்பதிப்பு
      6.061 திருக்கன்றாப்பூர் 611-619 மின்பதிப்பு
      6.062 திருவானைக்கா 620-629 மின்பதிப்பு
      6.063 திருவானைக்கா 630-639 மின்பதிப்பு
      6.064 திருவேகம்பம் 640-650 மின்பதிப்பு
      6.065 திருவேகம்பம் 651-660 மின்பதிப்பு
      6.066 திருநாகேச்சரம் 661-670 மின்பதிப்பு
      6.067 திருக்கீழ்வேளூர் 671-680 மின்பதிப்பு
      6.068 திருமுதுகுன்றம் 681-690 மின்பதிப்பு
      6.069 திருப்பள்ளியின்முக்கூடல் 691 -700 மின்பதிப்பு
      6.070 க்ஷேத்திரக்கோவை 701-711 மின்பதிப்பு
      6.071 திருஅடைவு 712-722 மின்பதிப்பு
      6.072 திருவலஞ்சுழி 723 மின்பதிப்பு
      6.073 திருவலஞ்சுழி-திருக்கொட்டையூர் 724-733 மின்பதிப்பு

      6.074 திருநாரையூர் 734-743 மின்பதிப்பு
      6.075 திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் 744-754 மின்பதிப்பு
      6.076 திருப்புத்தூர் 755-764 மின்பதிப்பு
      6.077 திருவாய்மூர் 765-774 மின்பதிப்பு
      6.078 திருவாலங்காடு 775-784 மின்பதிப்பு
      6.079 திருத்தலையாலங்காடு 785-794 மின்பதிப்பு
      6.080 திருமாற்பேறு 795-804 மின்பதிப்பு
      6.081 திருக்கோடிகா 805-812 மின்பதிப்பு
      6.082 திருச்சாய்க்காடு 813-822 மின்பதிப்பு
      6.083 திருப்பாசூர் 823-832 மின்பதிப்பு
      6.084 திருச்செங்காட்டங்குடி 833-842 மின்பதிப்பு
      6.085 திருமுண்டீச்சரம் 843-851 மின்பதிப்பு
      6.086 திருவாலம்பொழில் 852-860 மின்பதிப்பு
      6.087 திருச்சிவபுரம் 861-868 மின்பதிப்பு
      6.088 திருவோமாம்புலியூர் 869-877 மின்பதிப்பு
      6.089 திருவின்னம்பர் 878-887 மின்பதிப்பு
      6.090 திருக்கஞ்சனூர் 888-897 மின்பதிப்பு
      6.091 திருவெறும்பியூர் 898-907 மின்பதிப்பு
      6.092 திருக்கழுக்குன்றம் 908-909 மின்பதிப்பு
      6.093 பலவகை - திருத்தாண்டகம் 910-919 மின்பதிப்பு
      6.094 நின்ற - திருத்தாண்டகம் 920-929 மின்பதிப்பு
      6.095 தனி - திருத்தாண்டகம் 930-939 மின்பதிப்பு
      6.096 தனி - திருத்தாண்டகம் 940-950 மின்பதிப்பு
      6.097 திருவினா - திருத்தாண்டகம் 951-961 மின்பதிப்பு
      6.098 திருமறுமாற்றத்-திருத்தாண்டகம் 962-971 மின்பதிப்பு
      6.099 திருப்புகலூர் 972-981 மின்பதிப்பு
      ------------------------------------------------------------------------
      6.51 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்௿ ௿
      திருச்சிற்றம்பலம்
      509 கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார் ௿
      கந்தமா தனத்துளார் காள தியார்௿
      மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்௿
      வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்த௿
      அயில்வாய சூலமுங் காபா லமும்௿
      அமரு திருக்கரத்தார் ஆனே றேறி௿
      வெயிலாய சோதி விளங்கு நீற்றார்௿
      வீழி மிழலையே மேவி னாரே. 6.51.1
      510 பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்௿
      பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்௿
      கேதிசர மேவினார் கேதா ரத்தார்௿
      கெடில வடவதிகை வீர டத்தார்௿
      மாதுயர தீர்த்தென்னை உ கொண்டார்௿
      மழபாடி மேய மழுவா ளனார்௿
      வேதி குடியுளார் மீ சூரார்௿
      வீழி மிழலையே மேவி னாரே. 6.51.2
      511 அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார்௿
      அளப்பூரார் அந்தணர்கள் மாட கோயில்௿
      உண்ணாழி கையார் உமையா ளோடும்௿
      இமையோர் பெருமானார் ஒற்றி யூரார்௿
      பெண்ணா கடத்து பெருந்தூங் கானை௿
      மாடத்தார் கூடத்தார் பேரா வூரார்௿
      விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த ௿
      வீழி மிழலையே மேவி னாரே. 6.51.3
      512 வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி ௿
      நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்௿
      பண்காட்டும் வண்டார் பழன துள்ளார்௿
      பராய்த்துறையார் சிராப்பள்ளி யுள்ளார் பண்டோ ர்௿
      வெண்கோட்டு கருங்களிற்றை பிளிற பற்றி ௿
      உரித்துரிவை போர்த்த விடலை வேடம்௿
      விண்காட்டும் பிறைநுதலி யஞ்ச காட்டி௿
      வீழி மிழலையே மேவி னாரே. 6.51.4
      513 புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாட ௿
      புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார்௿
      உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்க சிமேற் ௿
      றளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார்௿
      கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார்௿
      கழுமலத்தார் செழுமலர்த்தார குழலி யோடும்௿
      விடைசூழ்ந்த வெல்கொடியர் மல்கு செல்வ ௿
      வீழி மிழலையே மேவி னாரே. 6.51.5
      514 பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழியார்௿
      பெரும்பற்ற புலியூர்மூ லட்டா னத்தார்௿
      இரும்புதலார் இரும்பூளை யுள்ளா ரேரார் ௿
      இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்௿
      கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்௿
      கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்௿
      விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த ௿
      வீழி மிழலையே மேவி னாரே. 6.51.6
      515 மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்௿
      வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்௿
      கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்௿
      கற்குடியார் விற்குடியார் கான பேரார்௿
      பறைக்காட்டுங் குழிவிழிக பல்பேய் சூழ ௿
      பழையனூர் ஆலங்கா டடிகள் பண்டோ ர்௿
      மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீட பாய்ந்தார்௿
      வீழி மிழலையே மேவி னாரே. 6.51.7
      516 அஞ்சை களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்௿
      ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்௿
      தஞ்சை தளிக்குளத்தார் தக்க ளூரார்௿
      சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்௿
      நஞ்சை தமக்கமுதா உண்ட நம்பர்௿
      நாகே சரத்துள்ளார் நாரை யூரார்௿
      வெஞ்சொ சமண்சிறையி லென்னை மீட்டார்௿
      வீழி மிழலையே மேவி னாரே. 6.51.8
      517 கொண்டலுள்ளார் கொண்டீ சரத்தி னுள்ளார்௿
      கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார்௿
      தண்டலையார் தலையாலங் காட்டி னுள்ளார்௿
      தலைச்சங்கை பெருங்கோயில் தங்கி னார்தாம்௿
      வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர் ௿
      வலஞ்சுழியார் வைகலின்மேன் மாட துள்ளார்௿
      வெண்டலைமான் கைக்கொண்ட விகிர்த வேடர்௿
      வீழி மிழலையே மேவி னாரே. 6.51.9
      518 அரிச்ச திரத்துள்ளார் அம்ப ருள்ளார்௿
      அரிபிரமர் இந்திரர்க்கு மரிய ரானார்௿
      புரிச்ச திரத்துள்ளார் போக துள்ளார்௿
      பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகி௿
      எரிச்சந்தி வேட்கு மிடத்தா ரேமக்௿
      கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர்௿
      விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர்௿
      வீழி மிழலையே மேவி னாரே. 6.51.10
      519 புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்௿
      பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க௿
      தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான் ௿
      தலைகளொடு மலைகளன தாளு தோளும்௿
      பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்௿
      பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்௿
      மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்௿
      வீழி மிழலையே மேவி னாரே. 6.51.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.52 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      520 கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண்௿
      கந்திருவம் பாட்டிசையிற் காட்டு கின்ற௿
      பண்ணவன்காண் பண்ணவற்றின் றிறலா னான்காண்௿
      பழமாகி சுவையாகி பயக்கின் றான்காண்௿
      மண்ணவன்காண் தீயவன்காண் நீரா னான்காண்௿
      வந்தலைக்கும் மாருதன்காண் மழைமே கஞ்சேர்௿
      விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண்௿
      விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 6.52.1
      521 ஆலை படுகரும்பின் சாறு போல ௿
      அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நா தான்காண்௿
      சீல முடையடியார் சிந்தை யான்காண்௿
      திரிபுரமூன் றெரிபடுத்த சிலையி னான்காண்௿
      பாலினொடு தயிர்நறுநெய் யாடி னான்காண்௿
      பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண்௿
      வேலை விடமுண்ட மிடற்றி னான்காண்௿
      விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 6.52.2
      522 தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண்௿
      சக்கரம் புட்பாகற் கருள்செய் தான்காண்௿
      கண்ணுமொரு மூன்றுடைய காபா லிகாண்௿
      காமனுடல் வேவித்த கண்ணி னான்காண்௿
      எண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண்௿
      இருவர கெரியா யருளி னான்காண்௿
      விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்௿
      விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 6.52.3
      523 காதிசைந்த சங குழையி னான்காண்௿
      கனக மலையனைய காட்சி யான்காண்௿
      மாதிசைந்த மாதவமுஞ் சோதி தான்காண்௿
      வல்லேன வெள்ளெயிற்றா பரண தான்காண்௿
      ஆதியன்காண் அண்டத்து கப்பா லான்காண்௿
      ஐந்தலைமா நாகம்நா ணாக்கி னான்காண்௿
      வேதியன்காண் வேதவிதி காட்டி னான்காண்௿
      விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 6.52.4
      524 நெய்யினொடு பாலிளநீ ராடி னான்காண்௿
      நித்தமண வாளனென நிற்கின் றான்காண்௿
      கையின்மழு வாளொடுமான் ஏந்தி னான்காண்௿
      காலனுயிர் காலாற் கழிவி தான்காண்௿
      செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண்௿
      செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னான்காண்௿
      வெய்ய கனல்விளையா டாடி னான்காண்௿
      விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 6.52.5
      525 கண்டுஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக்௿
      கண்ணிடந்து சூட்டக்கண் டருளு வான்காண்௿
      வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்௿
      வான்கங்கை சடைக்கரந்த மாதே வன்காண்௿
      பண்டங்கு மொழிமடவாள் பாக தான்காண்௿
      பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்௿
      வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவை தான்காண்௿
      விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 6.52.6
      526 கற்பொலிதோள் சலந்தரனை பிளந்த ஆழி௿
      கருமாலு கருள்செய்த கருணை யான்காண்௿
      விற்பொலிதோள் விசயன்வலி தேய்வி தான்காண்௿
      வேடுவனா போர்பொருது காட்டி னான்காண்௿
      தற்பரமா தற்பரமாய் நிற்கின் றான்காண்௿
      சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண்௿
      வெற்பரையன் பாவை விருப்பு ளான்காண்௿
      விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 6.52.7
      527 மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார கெல்லாம்௿
      விருப்பிலா இருப்புமன வினையர கென்றும்௿
      பொய்த்தவன்காண் புத்தன் மறவா தோடி ௿
      எறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்௿
      உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரை௿
      உலகனைத்தும் ஒளித்தளித்தி டு செய்யும்௿
      வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும் ௿
      விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 6.52.8
      528 சந்திரனை திருவடியாற் தளர்வி தான்காண்௿
      தக்கனையும் முனிந்தெச்சன் தலைகொண் டான்காண்௿
      இந்திரனை தோள்முறிவி தருள்செய் தான்காண்௿
      ஈசன்காண் நேசன்காண் நினைவோர கெல்லாம்௿
      மந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண்௿
      மாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்௿
      வெந்தழலின் விரிசுடரா யோங்கி னான்காண்௿
      விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 6.52.9
      529 ஈங்கைப்பேர் ஈமவன திருக்கின் றான்காண்௿
      எம்மான்காண் கைம்மாவி னுரிபோர தான்காண்௿
      ஓங்குமலை கரையன்றன் பாவை யோடும் ௿
      ஓருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண்௿
      கோங்குமலர கொன்றையந்தார கண்ணி யான்காண்௿
      கொல்லேறு வெல்கொடிமேற் கூட்டி னான்காண்௿
      வேங்கைவரி புலித்தோல்மே லாடை யான்காண்௿
      விண்ணிழிதண்வீழி மிழலை யானே. 6.52.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.53 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்
      ௿
      திருச்சிற்றம்பலம்
      530 மானேறு கரமுடைய வரதர் போலும்௿
      மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்௿
      கானேறு கரிகதற வுரித்தார் போலுங்௿
      கட்டங்கங் கொடிதுடிகை கொண்டார் போலுந்௿
      தேனேறு திருஇதழி தாரார் போலுந்௿
      திருவீழி மிழலையமர் செல்வர் போலும்௿
      ஆனேற தேறும் அழகர் போலும்௿
      அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 6.53.1
      531 சமரமிகு சலந்தரன்போர் வேண்டி னானை ௿
      சக்கரத்தாற் பிளப்பித்த சதுரர் போலும்௿
      நமனையொரு கால்குறைத்த நாதர் போலும்௿
      நாரணனை இடப்பாக தடைத்தார் போலுங்௿
      குமரனையும் மகனாக வுடையார் போலுங்௿
      குளிர்வீழி மிழலையமர் குழகர் போலும்௿
      அமரர்கள்பின் அமுதுணநஞ் சுண்டார் போலும்௿
      அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 6.53.2
      532 நீறணிந்த திருமேனி நிமலர் போலும்௿
      நேமிநெடு மாற்கருளி செய்தார் போலும்௿
      ஏறணிந்த கொடியுடையெம் மிறைவர் போலும்௿
      எயில்மூன்று மெரிசரத்தா லெய்தார் போலும்௿
      வேறணிந்த கோலமுடை வேடர் போலும்௿
      வியன்வீழி மிழலையுறை விகிர்தர் போலும்௿
      ஆறணிந்த சடாமகுட தழகர் போலும்௿
      அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 6.53.3
      533 கைவேழ முகத்தவனை படைத்தார் போலுங்௿
      கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலுஞ்௿
      செய்வேள்வி தக்கனைமுன் சிதைத்தார் போலுந்௿
      திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்௿
      மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்௿
      வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்௿
      ஐவேள்வி ஆறங்க மானார் போலும்௿
      அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 6.53.4
      534 துன்னத்தின் கோவணமொன் றுடையார் போலுஞ்௿
      சுடர்மூன்றுஞ் சோதியுமா தூயார் போலும்௿
      பொன்னொத்த திருமேனி புனிதர் போலும்௿
      பூதகணம் புடைசூழ வருவார் போலும்௿
      மின்னொத்த செஞ்சடைவெண் பிறையார் போலும்௿
      வியன்வீழி மிழலைசேர் விமலர் போலும்௿
      அன்னத்தேர் அயன்முடிசேர் அடிகள் போலும்௿
      அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 6.53.5
      535 மாலாலும் அறிவரிய வரதர் போலும்௿
      மறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும்௿
      நாலாய மறைக்கிறைவ ரானார் போலும்௿
      நாமவெழு தஞ்சாய நம்பர் போலும்௿
      வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும்௿
      வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்௿
      ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார் போலும்௿
      அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 6.53.6
      536 பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்௿
      பைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும்௿
      மஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும்௿
      வடகயிலை மலையுடைய மணாளர் போலுஞ்௿
      செஞ்சடைக்கண் வெண்பிறைகொண் டணிந்தார் போலுந்௿
      திருவீழி மிழலையமர் சிவனார் போலும்௿
      அஞ்சடக்கும் அடியவர்க கணியார் போலும்௿
      அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 6.53.7
      537 குண்டரொடு பிரித்தெனையா கொண்டார் போலுங்௿
      குடமூக்கி லிடமாக்கி கொண்டார் போலும்௿
      புண்டரிக புதுமலரா தனத்தார் போலும்௿
      புள்ளரசை கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும்௿
      வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும்௿
      வியன்வீழி மிழலைநக ருடையார் போலும்௿
      அண்டத்து புறத்தப்பா லானார் போலும்௿
      அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 6.53.8
      538 முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும்௿
      மொய்பவள கொடியனைய சடையார் போலும்௿
      எத்தனையும் பத்திசெய்வார கினியார் போலும்௿
      இருநான்கு மூர்த்திகளு மானார் போலும்௿
      மித்திரவ சிரவணற்கு விருப்பர் போலும்௿
      வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்௿
      அத்தனொடும் அம்மையென கானார் போலும்௿
      அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 6.53.9
      539 கரியுரிசெய் துமைவெருவ கண்டார் போலுங்௿
      கங்கையையுஞ் செஞ்சடைமேற் கரந்தார் போலும்௿
      எரியதொரு கைதரித்த இறைவர் போலும்௿
      ஏனத்தின் கூனெயிறு பூண்டார் போலும்௿
      விரிகதிரோ ரிருவரைமுன் வெகுண்டார் போலும்௿
      வியன்வீழி மிழலையமர் விமலர் போலும்௿
      அரிபிரமர் துதிசெயநின் றளித்தார் போலும்௿
      அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 6.53.10
      540 கயிலாய மலையெடுத்தான் கதறி வீழ ௿
      கால்விரலால் அடர்த்தருளி செய்தார் போலுங்௿
      குயிலாய மென்மொழியாள் குளிர்ந்து நோ ௿
      கூத்தாட வல்ல குழகர் போலும்௿
      வெயிலாய சோதிவிள கானார் போலும்௿
      வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்௿
      அயிலாய மூவிலைவேற் படையார் போலும்௿
      அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 6.53.11
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.54 திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      541 ஆண்டானை அடியேனை ஆளா கொண்டு௿
      அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்௿
      நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னை௿
      நேமிவான் படையால்நீ ளுரவோ னாகங்௿
      கீண்டானை கேதாரம் மேவி னானைக்௿
      கேடிலியை கிளர்பொறிவாள் அரவோ டென்பு௿
      பூண்டானை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
      போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6.54.1
      542 சீர்த்தானை சிறந்தடியேன் சிந்தை யுள்ளே ௿
      திகழ்ந்தானை சிவன்றன்னை தேவ தேவைக்௿
      கூர்த்தானை கொடுநெடுவேற் கூற்ற தன்னை ௿
      குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்௿
      பேர்த்தானை பிறப்பிலியை இறப்பொன் றில்லா ௿
      பெம்மானை கைம்மாவி னுரிவை பேணிப்௿
      போர்த்தானை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
      போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6.54.2
      543 பத்திமையாற் பணிந்தடியேன் றன்னை பன்னாட்௿
      பாமாலை பாட பயில்வி தானை௿
      எத்தேவு மேத்தும் இறைவன் றன்னை௿
      எம்மானை என்னுள்ள துள்ளே யூறும்௿
      அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை௿
      அண்ணிக்கு தீங்கரும்பை அரனை ஆதிப்௿
      புத்தேளை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
      போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6.54.3
      544 இருளாய உள்ளத்தி னிருளை நீக்கி௿
      இடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்௿
      தெருளாத சிந்தைதனை தெருட்டி தன்போற்௿
      சிவலோக நெறியறி சிந்தை தந்த௿
      அருளானை ஆதிமா தவத்து ளானை௿
      ஆறங்கம் நால்வே தப்பால் நின்ற௿
      பொருளானை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
      போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6.54.4
      545 மின்னுருவை விண்ணகத்தி லொன்றாய் மிக்கு ௿
      வீசுங்கால் தன்னகத்தில் இரண்டா செந்தீத்௿
      தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்௿
      தரணிதல தஞ்சாகி யெஞ்சா தஞ்ச௿
      மன்னுருவை வான்பவள கொழுந்தை முத்தை௿
      வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்௿
      பொன்னுருவை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
      போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6.54.5
      546 அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை ௿
      அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக்௿
      கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்௿
      கடல்நாகை காரோணங் கருதி னானை௿
      இறையானை என்னுள்ள துள்ளே விள்ளா ௿
      திருந்தானை ஏழ்பொழிலு தாங்கி நின்ற௿
      பொறையானை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
      போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6.54.6
      547 நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை௿
      நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற௿
      விருப்பவனை வேதியனை வேத வித்தை௿
      வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி௿
      இருப்பவனை இடைமருதோ டீங்கோய் நீங்கா ௿
      இறையவனை எனையாலுங் கயிலை யென்னும்௿
      பொருப்பவனை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
      போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6.54.7
      548 பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் ௿
      பெம்மானை பிரிவிலா அடியார கென்றும்௿
      வாராத செல்வம் வருவி பானை௿
      மந்திரமு தந்திரமும் மருந்து மாகித்௿
      தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்௿
      திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகை கொண்ட௿
      போரானை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
      போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6.54.8
      549 பண்ணியனை பைங்கொடியாள் பாகன் றன்னைப்௿
      படர்சடைமேற் புனல்கரந்த படிறன் றன்னை௿
      நண்ணியனை யென்னாக்கி தன்னா னானை௿
      நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கள்௿
      கண்ணியனை கடியநடை விடையொன் றேறுங்௿
      காரணனை நாரணனை கமல தோங்கும்௿
      புண்ணியனை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
      போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6.54.9
      550 இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்௿
      எழுநரம்பின் இன்னிசைகே டின்புற் றானை௿
      அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்௿
      அலைகடலில் ஆலால முண்டு கண்டங்௿
      கறுத்தானை கண்ணழலாற் காம னாகங்௿
      காய்ந்தானை கனன்மழுவுங் கலையு மங்கை௿
      பொறுத்தானை புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
      போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6.54.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.55 திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      551 வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி௿
      மீளாமே ஆளென்னை கொண்டாய் போற்றி௿
      ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி௿
      ஓவாத ச தொலியே போற்றி௿
      ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி௿
      ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி௿
      காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.55.1
      552 பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி௿
      பிறவி யறுக்கும் பிரானே போற்றி௿
      வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி௿
      மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
      பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி௿
      போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
      கச்சாக நாக மசைத்தாய் போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.55.2
      553 மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி௿
      மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
      உருவாகி யென்னை படைத்தாய் போற்றி௿
      உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி௿
      திருவாகி நின்ற திறமே போற்றி௿
      தேசம் பரவ படுவாய் போற்றி௿
      கருவாகி யோடு முகிலே போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.55.3
      554 வானத்தார் போற்றும் மருந்தே போற்றி௿
      வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி௿
      ஊனத்தை நீக்கு முடலே போற்றி௿
      ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி௿
      தேனத்தை வார்த்த தெளிவே போற்றி௿
      தேவர்க்கு தேவனாய் நின்றாய் போற்றி௿
      கானத்தீ யாட லுகந்தாய் போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.55.4
      555 ஊராகி நின்ற உலகே போற்றி௿
      ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி௿
      பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி௿
      பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
      நீராவி யான நிழலே போற்றி௿
      நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி௿
      காராகி நின்ற முகிலே போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.55.5
      556 சில்லுருவா சென்று திரண்டாய் போற்றி௿
      தேவ ரறியாத தேவே போற்றி௿
      புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி௿
      போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
      பல்லுயிரா பார்தோறும் நின்றாய் போற்றி௿
      பற்றி உலகை விடாதாய் போற்றி௿
      கல்லுயிராய் நின்ற கனலே போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.55.6
      557 பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி௿
      பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி௿
      எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி௿
      என்சிந்தை நீங்கா இறைவா போற்றி௿
      விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி௿
      மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி௿
      கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.55.7
      558 இமையா துயிரா திருந்தாய் போற்றி௿
      என்சிந்தை நீங்கா இறைவா போற்றி௿
      உமைபாக மாக தணைத்தாய் போற்றி௿
      ஊழியே ழான ஒருவா போற்றி௿
      அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி௿
      ஆதி புராணனாய் நின்றாய் போற்றி௿
      கமையாகி நின்ற கனலே போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.55.8
      559 மூவாய் பிறவாய் இறவாய் போற்றி௿
      முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி௿
      தேவாதி தேவர்தொழு தேவே போற்றி௿
      சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி௿
      ஆவா அடியேனு கெல்லாம் போற்றி௿
      அல்லல் நலிய அலந்தேன் போற்றி௿
      காவாய் கனக திரளே போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.55.9
      560 நெடிய விசும்போடு கண்ணே போற்றி௿
      நீள அகல முடையாய் போற்றி௿
      அடியும் முடியும் இகலி போற்றி௿
      அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி௿
      கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி௿
      கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி௿
      கடிய உருமொடு மின்னே போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.55.10
      561 உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி௿
      ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி௿
      எண்ணா இலங்கைக்கோன் றன்னை போற்றி௿
      இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி௿
      பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி௿
      பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
      கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.55.11
      ௿
      இத்தலம் வடநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - கைலாயநாதர்௿ தேவியார்
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.56 திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்
      ௿
      திருச்சிற்றம்பலம்
      562 பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி௿
      பூத படையாள் புனிதா போற்றி௿
      நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி௿
      நீங்காதென் னுள்ள திருந்தாய் போற்றி௿
      மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி௿
      வானோர் வணங்க படுவாய் போற்றி௿
      கறையுடைய கண்ட முடையாய் போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.56.1
      563 முன்பாகி நின்ற முதலே போற்றி௿
      மூவாத மேனிமு கண்ணா போற்றி௿
      அன்பாகி நின்றார கணியாய் போற்றி௿
      ஆறேறு சென்னி சடையாய் போற்றி௿
      என்பாக வெங்கு மணிந்தாய் போற்றி௿
      என்சிந்தை நீங்கா இறைவா போற்றி௿
      கண்பாவி நின்ற கனலே போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.56.2
      564 மாலை யெழுந்த மதியே போற்றி௿
      மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி௿
      மேலை வினைக ளறுப்பாய் போற்றி௿
      மேலாடு திங்கள் முடியாய் போற்றி௿
      ஆலை கரும்பின் தெளிவே போற்றி௿
      அடியார்க காரமுத மானாய் போற்றி௿
      காலை முளைத்த கதிரே போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.56.3
      565 உடலின் வினைக ளறுப்பாய் போற்றி௿
      ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி௿
      படருஞ் சடைமேல் மதியாய் போற்றி௿
      பல்கண கூத்த பிரானே போற்றி௿
      சுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றி௿
      தோன்றியென் னுள்ள திருந்தாய் போற்றி௿
      கடலி லொளியாய முத்தே போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.56.4
      566 மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி௿
      மாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றி௿
      பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி௿
      போகாதென் னுள்ள திருந்தாய் போற்றி௿
      மெய்சேர பால்வெண்ணீ றாடி போற்றி௿
      மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி௿
      கைசேர் அனலேந்தி யாடீ போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.56.5
      567 ஆறேறு சென்னி முடியாய் போற்றி௿
      அடியார்க காரமுதாய் நின்றாய் போற்றி௿
      நீறேறு மேனி யுடையாய் போற்றி௿
      நீங்காதென் னுள்ள திருந்தாய் போற்றி௿
      கூறேறு மங்கை மழுவா போற்றி௿
      கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி௿
      காறேறு கண்ட மிடற்றாய் போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.56.6
      568 அண்டமே ழன்று கடந்தாய் போற்றி௿
      ஆதி புராணனாய் நின்றாய் போற்றி௿
      பண்டை வினைக ளறுப்பாய் போற்றி௿
      பாரோர்விண் ணேத்த படுவாய் போற்றி௿
      தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி௿
      தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி௿
      கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.56.7
      569 பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி௿
      பேராநோய் பேர விடுப்பாய் போற்றி௿
      உருகி நினைவார்தம் முள்ளாய் போற்றி௿
      ஊன தவிர்க்கும் பிரானே போற்றி௿
      அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி௿
      ஆரு மிகழ படாதாய் போற்றி௿
      கருகி பொழிந்தோடு நீரே போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.56.8
      570 செய்ய மலர்மேலான் கண்ணன் போற்றி ௿
      தேடி யுணராமை நின்றாய் போற்றி௿
      பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி௿
      பொருளாக என்னையா கொண்டாய் போற்றி௿
      மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி௿
      மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி௿
      கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.56.9
      571 மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி௿
      மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி௿
      சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி ௿
      சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி௿
      கோலத்தாற் குறைவில்லான் றன்னை யன்று௿
      கொடிதா காய்ந்த குழகா போற்றி௿
      காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.56.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.57 திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      572 பாட்டான நல்ல தொடையாய் போற்றி௿
      பரிசை யறியாமை நின்றாய் போற்றி௿
      சூட்டான திங்கள் முடியாய் போற்றி௿
      தூமாலை மத்த மணிந்தாய் போற்றி௿
      ஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றி௿
      அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி௿
      காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.57.1
      573 அதிரா வினைக ளறுப்பாய் போற்றி௿
      ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி௿
      சதுரா சதுர குழையாய் போற்றி௿
      சாம்பர் மெய்பூசு தலைவா போற்றி௿
      எதிரா உலக மமைப்பாய் போற்றி௿
      என்றுமீ ளாவருள் செய்வாய் போற்றி௿
      கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.57.2
      574 செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி௿
      செல்லாத செல்வ முடையாய் போற்றி௿
      ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி௿
      ஆகாச வண்ண முடியாய் போற்றி௿
      வெய்யாய் தணியா யணியாய் போற்றி௿
      வேளாத வேள்வி யுடையாய் போற்றி௿
      கையார் தழலார் விடங்கா போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.57.3
      575 ஆட்சி யுலகை யுடையாய் போற்றி௿
      அடியார கமுதெலாம் ஈவாய் போற்றி௿
      சூட்சி சிறிது மிலாதாய் போற்றி௿
      சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி௿
      மாட்சி பெரிது முடையாய் போற்றி௿
      மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி௿
      காட்சி பெரிது மரியாய் போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.57.4
      576 முன்னியா நின்ற முதல்வா போற்றி௿
      மூவாத மேனி யுடையாய் போற்றி௿
      என்னியா யெந்தை பிரானே போற்றி௿
      ஏழி னிசையே யுகப்பாய் போற்றி௿
      மன்னிய மங்கை மணாளா போற்றி௿
      மந்திரமு தந்திரமு மானாய் போற்றி௿
      கன்னியார் கங்கை தலைவா போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.57.5
      577 உரியாய் உலகினு கெல்லாம் போற்றி௿
      உணர்வென்னு மூர்வ துடையாய் போற்றி௿
      எரியாய தெய்வ சுடரே போற்றி௿
      ஏசுமா முண்டி யுடையாய் போற்றி௿
      அரியாய் அமரர்க கெல்லாம் போற்றி௿
      அறிவே அடக்க முடையாய் போற்றி௿
      கரியானு காழியன் றீந்தாய் போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.57.6
      578 எண்மேலும் எண்ண முடையாய் போற்றி௿
      ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி௿
      பண்மேலே பாவி திருந்தாய் போற்றி௿
      பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி௿
      விண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி௿
      மேலார்கண் மேலாய்
      கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.57.7
      579 முடியார் சடையின் மதியாய் போற்றி௿
      முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி௿
      துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி௿
      சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி௿
      அடியா ரடிமை அறிவாய் போற்றி௿
      அமரர் பதியாள வைத்தாய் போற்றி௿
      கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.57.8
      580 போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி௿
      புண்ணியனே நண்ண லரியாய் போற்றி௿
      ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி௿
      எண்ணா யிரநூறு பேராய் போற்றி௿
      நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி௿
      நான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றி௿
      காற்றிசைக்கு திசைக்கெல்லாம் வித்தே போற்றி௿
      கயிலை மலையானே போற்றி போற்றி. 6.57.9
      இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 6.57.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.58 திருவலம்புரம் - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      581 மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை ௿
      மறையவனும் வானவருஞ் சூழ நின்று௿
      கண்மலிந்த திருநெற்றி யுடையா ரொற்றை ௿
      கதநாகங் கையுடையார் காணீ ரன்றே௿
      பண்மலிந்த மொழியவரு மியானு மெல்லாம் ௿
      பணிந்திறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல௿
      மண்மலிந்த வயல்புடைசூழ் மாட வீதி ௿
      வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.58.1
      582 சிலைநவின்ற தொருகணையாற் புரமூன் றெய்த ௿
      தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக்௿
      கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக்௿
      கூத்தாடி திரிதரு கூத்தர் நல்ல௿
      கலைநவின்ற மறையவர்கள் காண காணக்௿
      கடுவிடைமேற் பாரிடங்கள் சூழ காதல்௿
      மலைமகளுங் கங்கையு தாமு மெல்லாம் ௿
      வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.58.2
      583 தீக்கூரு திருமேனி யொருபால் மற்றை ௿
      யொருபாலும் அரியுருவ திகழ்ந்த செல்வர்௿
      ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல௿
      அருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்௿
      நோக்கா ரொருவிடத்து நூலு தோலுந்௿
      துதைந்திலங்கு திருமேனி வெண்ணீ றாடி௿
      வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி௿
      வலம்புரமே புக்கிங்கே மன்னி னாரே. 6.58.3
      584 மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி ௿
      மூவர் உருவாய முதல்வ ரிந்நாள்௿
      கோவாத எரிகணையை சிலைமேற் கோத்த ௿
      குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே௿
      போவாரை கண்டடியேன் பின்பின் செல்லப்௿
      புறக்கணித்து தம்முடைய பூதஞ் சூழ௿
      வாவா வெனவுரைத்து மாயம் பேசி௿
      வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.58.4
      585 அனலொருகை யதுவேந்தி அதளி னோடே ௿
      ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்௿
      புனல்பொதிந்த சடைக்கற்றை பொன்போல் மேனி ௿
      புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச்௿
      சினவிடையை மேற்கொண்டு திருவா ரூருஞ்௿
      சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல௿
      மனமுருக வளைகழல மாயம் பேசி௿
      வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.58.5
      586 கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழ ௿
      காலினாற் காய்ந்துகந்த காபா லியார்௿
      முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி௿
      முனிகணங்கள் புடைசூழ முற்ற தோறுந்௿
      தெறித்ததொரு வீணையரா செல்வார் தம்வா ௿
      சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ௿
      மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி௿
      வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.58.6
      587 பட்டுடுத்து பவளம்போல் மேனி யெல்லாம் ௿
      பசுஞ்சாந்தங் கொண்டணிந்து பாதம் நோவ௿
      இட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார ௿
      கெவ்வூரீர் எம்பெருமா னென்றேன் ஆவி௿
      விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி௿
      வேறோர் பதிபுக போவார் போல௿
      வட்டணைகள் படநடந்து மாயம் பேசி௿
      வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.58.7
      588 பல்லார் பயில்பழன பாசூ ரென்றும்௿
      பழனம் பதிபழமை சொல்லி நின்றார்௿
      நல்லார் நனிபள்ளி யின்று வைகி௿
      நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார்௿
      சொல்லார் ஒருவிடமா தோள்கை வீசிச்௿
      சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கும்௿
      மல்லார் வயல்புடைசூழ் மாடவீதி ௿
      வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.58.8
      589 பொங்கா டரவொன்று கையிற் கொண்டு௿
      போர்வெண் மழுவேந்தி போகா நிற்பர்௿
      தங்கா ரொருவிடத்து தம்மேல் ஆர்வ ௿
      தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர்௿
      எங்கே யிவர்செய்கை யொன்றொன் றொவ்வா௿
      என்கண்ணில் நின்றகலா வேடங் காட்டி௿
      மங்குல் மதிதவழும் மாட வீதி ௿
      வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.58.9
      590 செங்கண்மால் சிலைபிடித்து சேனை யோடுஞ் ௿
      சேதுப தனஞ்செய்து சென்று புக்குப்௿
      பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற ௿
      போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ௿
      அங்கொருதன் றிருவிரலால் இறையே யூன்றி௿
      அடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்௿
      வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி ௿
      வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.58.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.59 திருவெண்ணி - திருத்தாண்டகம்௿ ௿
      திருச்சிற்றம்பலம்
      591 தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்௿
      தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்௿
      புண்டரிக தயனொடுமால் காணா வண்ணம் ௿
      பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்௿
      வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்௿
      வானவர்க்காய் நஞ்சுண்ட மைந்த னாரும்௿
      விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தாரும்௿
      வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே. 6.59.1
      592 நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்௿
      நெற்றிமே லொற்றைக்கண் நிறைவி தாரும்௿
      பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லாரும்௿
      பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்௿
      மருப்பனைய வெண்மதி கண்ணி யாரும்௿
      வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்௿
      விருப்புடைய அடியவர்தம் முள்ள தாரும்௿
      வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே. 6.59.2
      593 கையுலாம் மூவிலைவே லேந்தி னாருங்௿
      கரிகாட்டி லெரியாடுங் கடவு ளாரும்௿
      பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்௿
      பரவுவார் பாவங்கள் பாற்று வாருஞ்௿
      செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த ௿
      திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும்௿
      மெய்யுலாம் வெண்ணீறு சண்ணி தாரும்௿
      வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே. 6.59.3
      594 சடையேறு புனல்வைத்த சதுர னாருந்௿
      தக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும்௿
      உடையேறு புலியதள்மேல் நாகங் கட்டி ௿
      உண்பலிக்கென் றூரூரி னுழிதர் வாரும்௿
      மடையேறி கயல்பாய வயல்கள் சூழ்ந்த ௿
      மயிலாடு துறையுறையும் மணாள னாரும்௿
      விடையேறு வெல்கொடியெம் விமல னாரும்௿
      வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே. 6.59.4
      595 மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி ௿
      மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்௿
      பண்ணிலங்கு பாடலோ டாட லாரும்௿
      பருப்பதமும் பாசூரும் மன்னி னாருங்௿
      கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்தி ௿
      கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்௿
      விண்ணிலங்கு வெண்மதி கண்ணி யாரும்௿
      வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே. 6.59.5
      596 வீடுதனை மெய்யடியார கருள்செய் வாரும்௿
      வேலைவிட முண்டிருண்ட கண்ட தாருங்௿
      கூடலர்தம் மூவெயிலு மெரிசெய் தாருங்௿
      குரைகழலாற் கூற்றுவனை குமைசெய் தாரும்௿
      ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்௿
      ஆலமர நீழலிரு தறஞ்சொன் னாரும்௿
      வேடுவனாய் மேல்விசயற் கருள்செய் தாரும்௿
      வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே. 6.59.6
      597 மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி௿
      மடவா ளவளோடு மானொன் றேந்திச்௿
      சிட்டிலங்கு வேடத்தா ராகி நாளுஞ்௿
      சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங்௿
      கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த ௿
      காலன்றன் கால மறுப்பார் தாமும்௿
      விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்௿
      வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே. 6.59.7
      598 செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்௿
      திருவால வாயுறையுஞ் செல்வ னாரும்௿
      அஞ்சனக்கண் அரிவையொரு பாக தாரும்௿
      ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்௿
      மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி ௿
      மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்௿
      வெஞ்சினத்த வேழமது வுரிசெய் தாரும்௿
      வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே. 6.59.8
      599 வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்௿
      வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்௿
      களங்கொளவென் சிந்தையுள்ளே மன்னி னாருங்௿
      கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்௿
      உளங்குளிர அமுதூறி அண்ணி பாரும்௿
      உத்தமராய் எத்திசையும் மன்னி னாரும்௿
      விளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும்௿
      வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே. 6.59.9
      600 பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி ௿
      புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்௿
      கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்௿
      குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந்௿
      தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்௿
      திருவிரலா லடர்த்தவனு கருள்செய் தாரும்௿
      மின்னிலங்கு நுண்ணிடையாள் பாக தாரும்௿
      வெண்ணியமர துறைகின்ற விகிர்த னாரே. 6.59.10
      ௿
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - வெண்ணிநாயகர்௿
      தேவியார் - அழகியநாயகியம்மை.௿
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.60 திருக்கற்குடி - திருத்தாண்டகம்௿
      ௿
      திருச்சிற்றம்பலம்
      601 மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி ௿
      முதலவனை திருவரையின் மூக்க பாம்பொன்௿
      றார்த்தவனை அக்கரவம் ஆர மாக ௿
      அணிந்தவனை பணிந்தடியா ரடைந்த வன்போ௿
      டேத்தவனை இறுவரையிற் றேனை ஏனோர்க்௿
      கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங்௿
      காத்தவனை கற்குடியில் விழுமி யானை ௿
      கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே. 6.60.1
      602 செய்யானை வெளியானை கரியான் றன்னைத்௿
      திசைமுகனை திசையெட்டுஞ் செறிந்தான் றன்னை௿
      ஐயானை நொய்யானை சீரி யானை௿
      அணியானை சேயானை ஆனஞ் சாடும்௿
      மெய்யானை பொய்யாது மில்லான் றன்னை௿
      விடையானை சடையானை வெறித்த மான்கொள்௿
      கையானை கற்குடியில் விழுமி யானைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே. 6.60.2
      603 மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை௿
      வயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டை௿
      விண்ணதனி லொன்றை விரிக திரைத்௿
      தண்மதியை தாரகைகள் தம்மின் மிக்க௿
      எண்ணதனில் எழுத்தையே ழிசையை காமன் ௿
      எழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்௿
      கண்ணவனை கற்குடியில் விழுமி யானைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே. 6.60.3
      604 நற்றவனை புற்றரவ நாணி னானை௿
      நாணாது நகுதலையூண் நயந்தான் றன்னை௿
      முற்றவனை மூவாத மேனி யானை௿
      முந்நீரின் நஞ்சமுக துண்டான் றன்னைப்௿
      பற்றவனை பற்றார்தம் பதிகள் செற்ற ௿
      படையானை அடைவார்தம் பாவம் போக்கக்௿
      கற்றவனை கற்குடியில் விழுமி யானைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே. 6.60.4
      605 சங்கைதனை தவிர்த்தாண்ட தலைவன் றன்னைச்௿
      சங்கரனை தழலுறுதாள் மழுவாள் தாங்கும்௿
      அங்கையனை அங்கமணி ஆக தானை௿
      ஆகத்தோர் பாகத்தே அமர வைத்த௿
      மங்கையனை மதியொடுமா சுணமு தம்மின் ௿
      மருவவிரி சடைமுடிமேல் வைத்த வானீர்க்௿
      கங்கையனை கற்குடியில் விழுமி யானைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே. 6.60.5
      606 பெண்ணவனை ஆணவனை பேடா னானைப்௿
      பிறப்பிலியை இறப்பிலியை பேரா வாணி௿
      விண்ணவனை விண்ணவர்க்கு மேலா னானை௿
      வேதியனை வேதத்தின் கீதம் பாடும்௿
      பண்ணவனை பண்ணில்வரு பயனா னானைப்௿
      பாரவனை பாரில்வாழ் உயிர்க கெல்லாங்௿
      கண்ணவனை கற்குடியில் விழுமி யானைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே. 6.60.6
      607 பண்டானை பரந்தானை குவிந்தான் றன்னைப்௿
      பாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம்௿
      உண்டானை உமிழ்ந்தானை உடையான் றன்னை௿
      ஒருவருந்தன் பெருமைதனை அறிய வொண்ணா௿
      விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும் ௿
      வெவ்வழலில் வெந்துபொடி யாகி வீழக்௿
      கண்டானை கற்குடியில் விழுமி யானைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே. 6.60.7
      608 வானவனை வானவர்க்கு மேலா னானை௿
      வணங்குமடி யார்மனத்துள் மருவி புக்க௿
      தேனவனை தேவர்தொழு கழலான் றன்னைச்௿
      செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்௿
      கோனவனை கொல்லைவிடை யேற்றி னானைக்௿
      குழல்முழவம் இயம்பக்கூ தாட வல்ல௿
      கானவனை கற்குடியில் விழுமி யானைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே. 6.60.8
      609 கொலையானை யுரிபோர்த்த கொள்கை யானைக்௿
      கோளரியை கூரம்பா வரைமேற் கோத்த௿
      சிலையானை செம்மைதரு பொருளான் றன்னைத்௿
      திரிபுரத்தோர் மூவர்க்கு செம்மை செய்த௿
      தலையானை தத்துவங்க ளானான் றன்னைத்௿
      தையலோர் பங்கினனை தன்கை யேந்து௿
      கலையானை கற்குடியில் விழுமி யானைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே. 6.60.9
      610 பொழிலானை பொழிலாரும் புன்கூ ரானைப்௿
      புறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானை௿
      எழிலானை இடைமருதி னிடங்கொண் டானை௿
      ஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் றன்னை௿
      அழலாடு மேனியனை அன்று சென்ற ௿
      குன்றெடுத்த அரக்கன்றோள் நெரிய வூன்றுங்௿
      கழலானை கற்குடியில் விழுமி யானைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே. 6.60.10
      ௿
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - முத்தீசர்௿
      தேவியார் - அஞ்சனாட்சியம்மை.௿
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.61 திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      611 மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா௿
      மதிசூடி வானவர்கள் தங்க கெல்லாம்௿
      நாதனே யென்றென்று பரவி நாளும் ௿
      நைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து௿
      வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு௿
      வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்௿
      காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
      கன்றாப்பூர் நடுதறியை காண லாமே. 6.61.1
      612 விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி௿
      வெளுத்தமைந்த கீளொடுகோ வணமு தற்றுச்௿
      செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ்௿
      செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்௿
      துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்௿
      சுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங்௿
      கடிமலர்தூ தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
      கன்றாப்பூர் நடுதறியை காண லாமே. 6.61.2
      613 எவரேனு தாமாக விலாட திட்ட ௿
      திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி௿
      உவராதே அவரவரை கண்ட போது ௿
      உகந்தடிமை திறநினைந்தங் குவந்து நோக்கி௿
      இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி ௿
      இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்௿
      கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
      கன்றாப்பூர் நடுதறியை காண லாமே. 6.61.3
      614 இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்ச ௿
      திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு௿
      விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு௿
      மெய்யன்பு மிகப்பெய்து பொய்யை நீக்கித்௿
      துலங்காமெய் வானவரை காத்து நஞ்சம் ௿
      உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்௿
      கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
      கன்றாப்பூர் நடுதறியை காண லாமே. 6.61.4
      615 விருத்தனே வேலைவிட முண்ட கண்டா௿
      விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்க சூடும்௿
      ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தி௿
      நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்௿
      பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும் ௿
      புலனைந்தும் அகத்தடக்கி புலம்பி நோக்கிக்௿
      கருத்தினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
      கன்றாப்பூர் நடுதறியை காண லாமே. 6.61.5
      616 பொசியினால் மிடைந்துபுழு பொதிந்த போர்வை ௿
      பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று௿
      பசியினால் மீதூர பட்டே யீட்டிப்௿
      பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்௿
      வசியினா லகப்பட்டு வீழா முன்னம்௿
      வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்௿
      கசிவினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
      கன்றாப்பூர் நடுதறியை காண லாமே. 6.61.6
      617 ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு ௿
      ஆவியார் போவதுமே அகத்தார் கூடி௿
      மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி௿
      மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்௿
      ஐயனார காளாகி அன்பு மிக்கு௿
      அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்௿
      கையினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
      கன்றாப்பூர் நடுதறியை காண லாமே. 6.61.7
      618 திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்௿
      திகையாதே சிவாயநம என்னுஞ் சிந்தைச்௿
      சுருதிதனை துயக்கறுத்து துன்ப வெள்ளக்௿
      கடல்நீந்தி கரையேறுங் கருத்தே மிக்குப்௿
      பருதிதனை பற்பறித்த பாவ நாசா௿
      பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்௿
      கருதிமிக தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
      கன்றாப்பூர் நடுதறியை காண லாமே. 6.61.8
      இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 6.61.9
      619 குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தா யென்றுங்௿
      கூற்றுதைத்த குரைகழற்சே வடியா யென்றுந்௿
      தனஞ்சயற்கு பாசுபத மீந்தா யென்றுந்௿
      தசக்கிரிவன் மலையெடுக்க விரலா லூன்றி௿
      முனிந்தவன்றன் சிரம்பத்து தாளு தோளும் ௿
      முரணழித்தி டருள்கொடுத்த மூர்த்தி யென்றுங்௿
      கனிந்துமிக தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
      கன்றாப்பூர் நடுதறியை காண லாமே. 6.61.10
      ௿
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - நடுதறிநன்னாயகர்௿
      தேவியார் - மாதுமைநாயகியம்மை.௿
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.62 திருவானைக்கா - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      620 எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்௿
      எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்௿
      செத்தால்வ துதவுவார் ஒருவ ரில்லை௿
      சிறுவிறகால் தீமூட்டி செல்லா நிற்பர்௿
      சித்தாய வேடத்தாய் நீடு பொன்னி ௿
      திருவானை காவுடைய செல்வா என்றன்௿
      அத்தாவுன் பொற்பாத மடை பெற்றால்௿
      அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 6.62.1
      621 ஊனாகி உயிராகி யதனுள் நின்ற ௿
      உணர்வாகி பிறவனைத்தும் நீயாய் நின்றாய்௿
      நானேதும் அறியாமே யென்னுள் வந்து௿
      நல்லனவு தீயனவுங் காட்டா நின்றாய்௿
      தேனாருங் கொன்றையனே நின்றி யூராய்௿
      திருவானை காவிலுறை சிவனே ஞானம்௿
      ஆனாயுன் பொற்பாத மடை பெற்றால்௿
      அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 6.62.2
      622 ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான்௿
      ஒன்றலா தவத்தாரோ டுடனே நின்று௿
      துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன் ௿
      திறமறந்து திரிவேனை காத்து நீவந்௿
      தெப்பாலும் நுண்ணுணர்வே யாக்கி யென்னை ௿
      ஆண்டவனே எழிலானை காவா வானோர்௿
      அப்பாவுன் பொற்பாத மடை பெற்றால்௿
      அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 6.62.3
      623 நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா௿
      நிறைமதியஞ் சடைவைத்தாய் அடையா துன்பால்௿
      முனைத்தவர்கள் புரமூன்று மெரி செற்றாய்௿
      முன்னானை தோல்போர்த்த முதல்வா வென்றுங்௿
      கனைத்துவரும் எருதேறுங் காள கண்டா௿
      கயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன்௿
      அனைத்துலகும் ஆள்வானே ஆனை காவா௿
      அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 6.62.4
      624 இம்மா பிறப்பென்னுங் கடலா துன்பத்௿
      திடைச்சுழிப்ப டிளைப்பேனை இளையா வண்ணங்௿
      கைம்மான மனத்துதவி கருணை செய்து௿
      காதலரு ளவைவைத்தாய் காண நில்லாய்௿
      வெம்மான மதகரியி னுரிவை போர்த்த ௿
      வேதியனே தென்னானை காவுள் மேய௿
      அம்மான்நின் பொற்பாத மடை பெற்றால்௿
      அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 6.62.5
      625 உரையாரும் புகழானே ஒற்றி யூராய்௿
      கச்சியே கம்பனே காரோ ணத்தாய்௿
      விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்௿
      மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்௿
      திரையாரும் புனற்பொன்னி தீர்த்த மல்கு ௿
      திருவானை காவிலுறை தேனே வானோர்௿
      அரையாவுன் பொற்பாத மடை பெற்றால்௿
      அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 6.62.6
      626 மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்௿
      மான்மறியு மாமழுவும் அனலு மேந்துங்௿
      கையானே காலனுடல் மாள செற்ற ௿
      கங்காளா முன்கோளும் விளைவு மானாய்௿
      செய்யானே திருமேனி யரியாய் தேவர்௿
      குலக்கொழுந்தே தென்னானை காவுள் மேய௿
      ஐயாவுன் பொற்பாத மடை பெற்றால்௿
      அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 6.62.7
      627 இலையாருஞ் சூலத்தாய் எண்தோ ளானே௿
      எவ்விடத்தும் நீயலா தில்லை யென்று௿
      தலையார கும்பிடுவார் தன்மை யானே௿
      தழல்மடுத்த மாமேரு கையில் வைத்த௿
      சிலையானே திருவானை காவுள் மேய ௿
      தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்௿
      அலையாதே நின்னடியே அடை பெற்றால்௿
      அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 6.62.8
      628 விண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத௿
      நெறியானே எறிகடலின் நஞ்ச முண்டாய்௿
      எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான்௿
      என்றென்றே நாவினிலெ பொழுதும் உன்னிக்௿
      கண்ணார கண்டிரு களித்தெ போதுங்௿
      கடிபொழில்சூழ் தென்னானை காவுள் மேய௿
      அண்ணாநின் பொற்பாத மடை பெற்றால்௿
      அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 6.62.9
      629 கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக்௿
      குறட்பூதங் கூத்தாட நீயு மாடி௿
      வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா௿
      மதிலானை காவுளாய் மாகா ளத்தாய்௿
      படியேயுங் கடலிலங்கை கோமான் றன்னை ௿
      பருமுடியு திரள்தோளு மடர்த்து கந்த௿
      அடியேவ தடைந்தடிமை யாக பெற்றால்௿
      அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 6.62.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.63 திருவானைக்கா - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      630 முன்னானை தோல்போர்த்த மூர்த்தி தன்னை௿
      மூவாத சிந்தையே மனமே வாக்கே௿
      தன்னானை யாப்பண்ணி யேறி னானைச்௿
      சார்தற் கரியானை தாதை தன்னை௿
      என்னானை கன்றினையென் ஈசன் றன்னை௿
      எறிநீர திரையுகளுங் காவி ரிசூழ்௿
      தென்னானை காவானை தேனை பாலைச்௿
      செழுநீர திரளைச்சென் றாடி னேனே. 6.63.1
      631 மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை௿
      வளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் னுள்ளத்௿
      திருந்தானை இறப்பிலியை பிறப்பி லானை௿
      இமையவர்தம் பெருமானை உமையா ளஞ்சக்௿
      கருந்தான மதகளிற்றி னுரிபோர தானைக்௿
      கனமழுவா படையானை பலிகொண் டூரூர்௿
      திரிந்தானை திருவானை காவு ளானைச்௿
      செழுநீர திரளைச்சென் றாடி னேனே. 6.63.2
      632 முற்றாத வெண்டிங்க கண்ணி யானை௿
      முந்நீர்நஞ் சுண்டிமையோர கமுதம் நல்கும்௿
      உற்றானை பல்லுயிர்க்கு துணையா னானை௿
      ஓங்கார துட்பொருளை உலக மெல்லாம்௿
      பெற்றானை பின்னிறக்கஞ் செய்வான் றன்னைப்௿
      பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்௿
      செற்றானை திருவானை காவு ளானைச்௿
      செழுநீர திரளைச்சென் றாடி னேனே. 6.63.3
      633 காராரு மணிமிடற்றெம் பெருமான் றன்னைக்௿
      காதில்வெண் குழையானை கமழ்பூங் கொன்றைத்௿
      தாரானை புலியதளி னாடை யானைத்௿
      தானன்றி வேறொன்று மில்லா ஞானப்௿
      பேரானை மணியார மார்பி னானைப்௿
      பிஞ்ஞகனை தெய்வநான் மறைகள் பூண்ட௿
      தேரானை திருவானை காவு ளானைச்௿
      செழுநீர திரளைச்சென் றாடி னேனே. 6.63.4
      634 பொய்யேது மில்லாத மெய்யன் றன்னைப்௿
      புண்ணியனை நண்ணாதார் புரநீ றாக௿
      எய்தானை செய்தவத்தின் மிக்கான் றன்னை௿
      ஏறமரும் பெருமானை இடமா னேந்து௿
      கையானை கங்காள வேட தானைக்௿
      கட்டங கொடியானை கனல்போல் மேனிச்௿
      செய்யானை திருவானை காவு ளானைச்௿
      செழுநீர திரளைச்சென் றாடி னேனே. 6.63.5
      635 கலையானை பாசுபத பாணி யானைக்௿
      கனவயிர திரளானை மணிமா ணிக்க௿
      மலையானை யென்றலையி னுச்சி யானை௿
      வார்தருபுன் சடையானை மயான மன்னும்௿
      நிலையானை வரியரவு நாணா கோத்து ௿
      நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்௿
      சிலையானை திருவானை காவு ளானைச்௿
      செழுநீர திரளைச்சென் றாடி னேனே. 6.63.6
      636 ஆதியனை எறிமணியின் ஓசை யானை௿
      அண்டத்தார கறிவொண்ணா தப்பால் மிக்க௿
      சோதியனை தூமறையின் பொருளான் றன்னைச்௿
      சுரும்பமரும் மலர்க்கொன்றை தொன்னூல் பூண்ட௿
      வேதியனை அறமுரைத்த பட்டன் றன்னை௿
      விளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்௿
      சேதியனை திருவானை காவு ளானைச்௿
      செழுநீர திரளைச்சென் றாடி னேனே. 6.63.7
      637 மகிழ்ந்தானை கச்சியே கம்பன் றன்னை௿
      மறவாது கழல்நினைந்து வாழ்த்தி யேத்திப்௿
      புகழ்ந்தாரை பொன்னுலகம் ஆள்வி பானைப்௿
      பூதகண படையானை புறங்கா டாடல்௿
      உகந்தானை பிச்சையே யிச்சி பானை௿
      ஒண்பவள திரளையென் னுள்ள துள்ளே௿
      திகழ்ந்தானை திருவானை காவு ளானைச்௿
      செழுநீர திரளைச்சென் றாடி னேனே. 6.63.8
      638 நசையானை நால்வே தப்பா லானை௿
      நல்குரவு தீப்பிணிநோய் காப்பான் றன்னை௿
      இசையானை எண்ணிறந்த குணத்தான் றன்னை௿
      இடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்௿
      மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும்௿
      மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்௿
      திசையானை திருவானை காவு ளானைச்௿
      செழுநீர திரளைச்சென் றாடி னேனே. 6.63.9
      639 பார்த்தானை காமனுடல் பொடியாய் வீழப்௿
      பண்டயன்மா லிருவர்க்கும் அறியா வண்ணஞ்௿
      சீர்த்தானை செந்தழல்போ லுருவி னானைத்௿
      தேவர்கள்தம் பெருமானை திறமுன் னாதே௿
      ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன் ௿
      ஆண்மையெலாங் கெடுத்தவன்றன் இடர போதே௿
      தீர்த்தானை திருவானை காவு ளானைச்௿
      செழுநீர திரளைச்சென் றாடி னேனே. 6.63.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.64 திருவேகம்பம் - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      640 கூற்றுவன்காண் கூற்றுவனை குமைத்த கோன்காண்௿
      குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்௿
      காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்௿
      கனபவள செம்மேனி கலந்த வெள்ளை௿
      நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்௿
      நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்௿
      ஏற்றவன்காண் எழிலாறும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.64.1
      641 பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும்௿
      பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்௿
      துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண்௿
      தோற்ற நிலையிறுதி பொருளாய் வந்த௿
      மருந்தவன்காண் வையங்கள் பொறைதீர பான்காண்௿
      மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா௿
      திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.64.2
      642 நீற்றவன்காண் நீராகி தீயா னான்காண்௿
      நிறைமழுவு தமருகமும் எரியுங் கையில்௿
      தோற்றவன்காண் தோற்றக்கே டில்லா தான்காண்௿
      துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம்௿
      போற்றவன்காண் புகழ்கள்தமை படைத்தான் றான்காண்௿
      பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை௿
      ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.64.3
      643 தாயவன்காண் உலகிற்கு தன்னொ பில்லா ௿
      தத்துவன்காண் மலைமங்கை பங்கா வென்பார்௿
      வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர பான்காண்௿
      வானவர்க்கு தானவர்க்கும் மண்ணு ளோர்க்குஞ்௿
      சேயவன்காண் நினைவார்க்கு சித்த மார ௿
      திருவடியே உள்கிநினை தெழுவா ருள்ளம்௿
      ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.64.4
      644 அடுத்தானை யுரித்தான் காண் ...
      ...
      ௿
      இச்செய்யுளில் எஞ்சிய பாகம் சிதைந்து போயிற்று. 6.64.5
      645 அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால்௿
      ஐயாறும் இடைமருதும் ஆள்வான் றான்காண்௿
      பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள் ௿
      பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்௿
      சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்று ௿
      தூயமா முனிவர்க்கா பார்மேல் நிற்க௿
      இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.64.6
      646 அசைந்தவன்காண் நடமாடி பாடல் பேணி௿
      அழல்வண்ண தில்லடியும் முடியு தேடப்௿
      பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும் ௿
      பான்மையன்காண் பரவிநினை தெழுவார் தம்பால்௿
      கசிந்தவன்காண் கரியினுரி போர்த்தான் றான்காண்௿
      கடலில்விட முண்டமரர கமுத மீய௿
      இசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.64.7
      647 முடித்தவன்காண் வன்கூற்றை சீற்ற தீயால் ௿
      வலியார்தம் புரமூன்றும் வேவ சாபம்௿
      பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேட தான்காண்௿
      பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி௿
      முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண்௿
      முழங்கியுரு மெனத்தோன்று மழையாய் மின்னி௿
      இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.64.8
      648 வருந்தான்காண் மனமுருகி நினையா தார்க்கு ௿
      வஞ்சகன்காண் அஞ்செழுத்து நினைவார கென்றும்௿
      மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்௿
      வானகமும் மண்ணகமு மற்று மாகிப்௿
      பரந்தவன்காண் படர்சடையெ டுடையான் றான்காண்௿
      பங்கயத்தோன் றன்சிரத்தை யேந்தி யூரூர்௿
      இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.64.9
      649 வெம்மான உழுவையத ளுரிபோர தான்காண்௿
      வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பி௿
      விம்மாநின் றழுவார்க களிப்பான் றான்காண்௿
      விடையேறி திரிவான்காண் நடஞ்செய் பூதத்௿
      தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண்௿
      அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்ற௿
      எம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.64.10
      650 அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட௿
      ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர கங்கை௿
      செறுத்தான்காண் தேவர்க்கு தேவன் றான்காண்௿
      திசையனைத்து தொழுதேத்த கலைமான் கையிற்௿
      பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து ௿
      பொருகயிலை யெடுத்தவன்றன் முடிதோள் நாலஞ்௿
      சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.64.11
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.65 திருவேகம்பம் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      651 உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க௿
      ஓங்கார தொருவன்காண் உணர்மெய்ஞ் ஞானம்௿
      விரித்தவன்காண் விரித்தநால் வே தான்காண்௿
      வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே௿
      தெரித்தவன்காண் சில்லுருவா தோன்றி யெங்குந்௿
      திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்௿
      எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.65.1
      652 நேசன்காண் நேசர்க்கு நேச தன்பால் ௿
      இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்௿
      கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே ௿
      குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை௿
      வாசன்காண் மலைமங்கை பங்கன் றான்காண்௿
      வானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும்௿
      ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.65.2
      653 பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும் ௿
      புண்ணியன்காண் நண்ணியபுண் டரிக போதின்௿
      மறையவன்காண் மறையவனை பயந்தோன் றான்காண்௿
      வார்சடைமா சுணமணிந்து வளரும் பிள்ளைப்௿
      பிறையவன்காண் பிறைதிகழும் எயிற்று பேழ்வா ௿
      பேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும்௿
      இறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.65.3
      654 பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வ தான்காண்௿
      பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற௿
      சீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ்௿
      செறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தை செய்யும்௿
      பேரவன்காண் பேராயி ரங்க ளேத்தும் ௿
      பெரியவன்காண் அரியவன்காண் பெற்ற மூர்ந்த௿
      ஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.65.4
      655 பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண்௿
      பேதையேன் வாதையுறு பிணியை தீர்க்கும்௿
      மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்௿
      வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்௿
      அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம் ௿
      அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சி தேத்த௿
      இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.65.5
      656 ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்க மாறும்௿
      அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை௿
      காய்ந்தவன்காண் கண்ணழலாற் காம னாகங்௿
      கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்௿
      பாய்ந்தவன்காண் பண்டுபல சருகாற் பந்தர் ௿
      பயின்றநூற் சிலந்திக்கு பாராள் செல்வம்௿
      ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.65.6
      657 உமையவளை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்௿
      உகந்தொலிநீர கங்கைசடை யொழுக்கி னான்காண்௿
      இமய வடகயிலை செல்வன் றான்காண்௿
      இல்பலிக்கு சென்றுழலும் நல்கூர தான்காண்௿
      சமயமவை ஆறினுக்கு தலைவன் றான்காண்௿
      தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய௿
      இமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.65.7
      658 தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் றான்காண்௿
      தூமலர்ச்சே வடியிணையெஞ் சோதி யான்காண்௿
      உண்டுபடு விடங்கண்ட தொடுக்கி னான்காண்௿
      ஒலிகடலி லமுதமரர குதவி னான்காண்௿
      வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண்௿
      வாண்மதியாய் நாண்மீனு மாயி னான்காண்௿
      எண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.65.8
      659 முந்தைகாண் மூவரினு முதலா னான்காண்௿
      மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்௿
      தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்கு ௿
      தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்௿
      சிந்தைகாண் சிந்தாத சி தார்க்கு ௿
      சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்௿
      எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.65.9
      660 பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் றான்காண்௿
      பூதகண நாதன்காண் புலித்தோ லாடை௿
      தன்னிசைய வைத்தவெழி லரவி னான்காண்௿
      சங்கவெண் குழைக்காதிற் சதுரன் றான்காண்௿
      மின்னிசையும் வெள்ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை ௿
      எடுக்கவடி அடர்ப்பமீண் டவன்றன் வாயில்௿
      இன்னிசைகே டிலங்கொளிவாள் ஈந்தோன் கச்சி ௿
      ஏகம்பன் காணவனென் எண்ண தானே. 6.65.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.66 திருநாகேச்சரம் - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      661 தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்௿
      தலையவனை மலையவனை உலக மெல்லாம்௿
      ஆயவனை சேயவனை அணியான் றன்னை௿
      அழலவனை நிழலவனை அறிய வொண்ணா௿
      மாயவனை மறையவனை மறையோர் தங்கள் ௿
      மந்திரனை தந்திரனை வளரா நின்ற௿
      தீயவனை திருநாகே சரத்து ளானைச்௿
      சேராதார் நன்னெறிக்க சேரா தாரே. 6.66.1
      662 உரித்தானை மதவேழ தன்னை மின்னார் ௿
      ஒளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந்௿
      தரித்தானை தரியலர்தம் புரமெய் தானைத்௿
      தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம்௿
      அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர ௿
      கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந்௿
      தெரித்தானை திருநாகே சரத்து ளானைச்௿
      சேராதார் நன்னெறிக்க சேரா தாரே. 6.66.2
      663 காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக்௿
      காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்௿
      வாரானை மதிப்பவர்தம் மனத்து ளனை௿
      மற்றொருவர் தன்னொப்பா ரொப்பி லாத௿
      ஏரானை இமையவர்தம் பெருமான் றன்னை௿
      இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்க௿
      சீரானை திருநாகே சரத்து ளானைச்௿
      சேராதார் நன்னெறிக்க சேரா தாரே. 6.66.3
      664 தலையானை எவ்வுலகு தானா னானைத்௿
      தன்னுருவம் யாவர்க்கு மறிய வொண்ணா௿
      நிலையானை நேசர்க்கு நேசன் றன்னை௿
      நீள்வான முகடதனை தாங்கி நின்ற௿
      மலையானை வரியரவு நாணா கோத்து ௿
      வல்லசுரர் புரமூன்று மடிய வெய்த௿
      சிலையானை திருநாகே சரத்து ளானைச்௿
      சேராதார் நன்னெறிக்க சேரா தாரே. 6.66.4
      665 மெய்யானை தன்பக்கல் விரும்பு வார்க்கு௿
      விரும்பாத அரும்பாவி யவர்க கென்றும்௿
      பொய்யானை புறங்காட்டி லாட லானைப்௿
      பொன்பொலிந்த சடையானை பொடிகொள் பூதிப்௿
      பையானை பையரவ மசைத்தான் றன்னைப்௿
      பரந்தானை பவளமால் வரைபோல் மேனிச்௿
      செய்யானை திருநாகே சரத்து ளானைச்௿
      சேராதார் நன்னெறிக்க சேரா தாரே. 6.66.5
      666 துறந்தானை அறம்புரியா துரிசர் தம்மைத்௿
      தோத்திரங்கள் பலசொல்லி வானோ ரேத்த௿
      நிறைந்தானை நீர்நிலந்தீ வெளிகாற் றாகி௿
      நிற்பனவும் நடப்பனவு மாயி னானை௿
      மறந்தானை தன்னினையா வஞ்சர் தம்மை௿
      அஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர கென்றுஞ்௿
      சிறந்தானை திருநாகே சரத்து ளானைச்௿
      சேராதார் நன்னெறிக்க சேரா தாரே. 6.66.6
      667 மறையானை மால்விடையொன் றூர்தி யானை௿
      மால்கடல்நஞ் சுண்டானை வானோர் தங்கள்௿
      இறையானை என்பிறவி துயர்தீர பானை௿
      இன்னமுதை மன்னியசீர் ஏகம் பத்தில்௿
      உறைவானை ஒருவருமீங் கறியா வண்ணம் ௿
      என்னுள்ள துள்ளே யொளித்து வைத்த௿
      சிறையானை திருநாகே சரத்து ளானைச்௿
      சேராதார் நன்னெறிக்க சேரா தாரே. 6.66.7
      668 எய்தானை புரமூன்றும் இமைக்கும் போதில்௿
      இருவிசும்பில் வருபுனலை திருவார் சென்னிப்௿
      பெய்தானை பிறப்பிலியை அறத்தில் நில்லா ௿
      பிரமன்றன் சிரமொன்றை கரமொன் றினாற்௿
      கொய்தானை கூத்தாட வல்லான் றன்னைக்௿
      குறியிலா கொடியேனை அடியே னாகச்௿
      செய்தானை திருநாகே சரத்து ளானைச்௿
      சேராதார் நன்னெறிக்க சேரா தாரே. 6.66.8
      669 அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை௿
      வான்பயிரை அப்பயிரின் வாட்ட தீர்க்குந்௿
      துளியானை அயன்மாலு தேடி காணா ௿
      சுடரானை துரிசற தொண்டு பட்டார்க்௿
      கெளியானை யாவர்க்கு மரியான் றன்னை௿
      இன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறற்௿
      தெளியானை திருநாகே சரத்து ளானைச்௿
      சேராதார் நன்னெறிக்க சேரா தாரே. 6.66.9
      670 சீர்த்தானை உலகேழுஞ் சிறந்து போற்ற ௿
      சிறந்தானை நிறைந்தோங்கு செல்வன் றன்னைப்௿
      பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப்௿
      பனிமதியஞ் சடையானை புனிதன் றன்னை௿
      ஆர்த்தோடி மலையெடுத்த அரக்க னஞ்ச ௿
      அருவிரலா லடர்த்தானை அடைந்தோர் பாவந்௿
      தீர்த்தானை திருநாகே சரத்து ளானைச்௿
      சேராதார் நன்னெறிக்க சேரா தாரே. 6.66.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.67 திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      671 ஆளான அடியவர்க கன்பன் றன்னை௿
      ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க௿
      தாளானை தன்னொப்பா ரில்லா தானைச்௿
      சந்தனமுங் குங்குமமுஞ் சாந்து தோய்ந்த௿
      தோளானை தோளாத முத்தொ பானைத்௿
      தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த௿
      கீளானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
      கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.1
      672 சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்௿
      தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை௿
      நற்பான்மை அறியாத நாயி னேனை௿
      நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்௿
      பற்பாவும் வாயார பாடி யாடிப்௿
      பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்கக்௿
      கிற்பானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
      கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.2
      673 அளைவாயில் அரவசைத்த அழகன் றன்னை௿
      ஆதரிக்கு மடியவர்க கன்பே யென்றும்௿
      விளைவானை மெய்ஞ்ஞான பொருளா னானை௿
      வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்௿
      குளைவானை அல்லாதார குளையா தானை௿
      உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு௿
      கிளைவானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
      கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.3
      674 தாட்பாவு கமலமலர் தயங்கு வானை ௿
      தலையறுத்து மாவிரத தரித்தான் றன்னைக்௿
      கோட்பாவு நாளெல்லா மானான் றன்னைக்௿
      கொடுவினையேன் கொடுநர குழியில் நின்றால்௿
      மீட்பானை வித்துருவின் கொத்தொ பானை௿
      வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை௿
      கேட்பானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
      கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.4
      675 நல்லானை நரைவிடையொன் றூர்தி யானை௿
      நால்வே தாறங்கம் நணுக மாட்டாச்௿
      சொல்லானை சுடர்மூன்று மானான் றன்னைத்௿
      தொண்டாகி பணிவார்க கணியான் றன்னை௿
      வில்லானை மெல்லியலோர் பங்கன் றன்னை௿
      மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க௿
      கில்லானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
      கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.5
      676 சுழித்தானை கங்கைமலர் வன்னி கொன்றை௿
      தூமத்தம் வாளரவஞ் சூடி னானை௿
      அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ௿
      ஆலால நஞ்சதனை யுண்டான் றன்னை௿
      விழித்தானை காமனுடல் பொடியாய் வீழ௿
      மெல்லியலோர் பங்கனைமுன் வேனி லானைக்௿
      கிழித்தானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
      கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.6
      677 உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற ௿
      ஓங்கார துட்பொருள்தா னாயி னானை௿
      விளரொளியை விடுசுடர்கள் இரண்டு மொன்றும் ௿
      விண்ணொடுமண் ஆகாச மாயி னானை௿
      வளரொளியை மரகதத்தி னுருவி னானை௿
      வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தி யேத்துங்௿
      கிளரொளியை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
      கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.7
      678 தடுத்தானை காலனை காலாற் பொன்றத்௿
      தன்னடைந்த மாணிக்கன் றருள்செய் தானை௿
      உடுத்தானை புலியதளோ டக்கும் பாம்பும்௿
      உள்குவார் உள்ளத்தி னுள்ளான் றன்னை௿
      மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க௿
      வானவர்கள் கூடியஅ தக்கன் வேள்வி௿
      கெடுத்தானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
      கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.8
      679 மாண்டார் எலும்பணிந்த வாழ்க்கை யானை௿
      மயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்பு௿
      பூண்டானை புறங்காட்டி லாட லானைப்௿
      போகாதென் னுட்புகு திடங்கொண் டென்னை௿
      ஆண்டானை அறிவரிய சிந்தை யானை௿
      அசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங்௿
      கீண்டானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
      கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.9
      680 முறிப்பான பேசிமலை யெடுத்தான் றானும் ௿
      முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்து பாடப்௿
      பறிப்பான்கை சிற்றரிவாள் நீட்டி னானைப்௿
      பாவியேன் நெஞ்சகத்தே பாத போது௿
      பொறித்தானை புரமூன்று மெரிசெய் தானைப்௿
      பொய்யர்களை பொய்செய்து போது போக்கிக்௿
      கிறிப்பானை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
      கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.10
      ௿
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - கேடிலியப்பர்௿ தேவியார்
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.68 திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      681 கருமணியை கனகத்தின் குன்றொ பானைக்௿
      கருதுவார காற்ற எளியான் றன்னைக்௿
      குருமணையை கோளரவ மாட்டு வானைக்௿
      கொல்வேங்கை யதளனைக்கோ வணவன் றன்னை௿
      அருமணியை அடைந்தவர்க கமுதொ பானை௿
      ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க௿
      திருமணியை திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
      தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 6.68.1
      682 காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக்௿
      காபாலி கட்டங்க மேந்தி னானைப்௿
      பாரொளியை விண்ணொளியை பாதாள தானைப்௿
      பான்மதியஞ் சூடியோர் பண்பன் றன்னைப்௿
      பேரொளியை பெண்பாகம் வைத்தான் றன்னைப்௿
      பேணுவார் தம்வினையை பேணி வாங்குஞ்௿
      சீரொளியை திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
      தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 6.68.2
      683 எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை௿
      ஏறூர்ந்த பெம்மானை யெம்மா னென்று௿
      பத்தனா பணிந்தடியேன் றன்னை பன்னாட்௿
      பாமாலை பாட பயில்வி தானை௿
      முத்தினை யென்மணியை மாணி கத்தை௿
      முளைத்தெழுந்த செம்பவள கொழுந்தொ பானைச்௿
      சித்தனையென் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
      தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 6.68.3
      684 ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை௿
      உத்தமனை பத்தர்மனம் குடிகொண் டானைக்௿
      கான்றிரிந்து காண்டீப மேந்தி னானைக்௿
      கார்மேக மிடற்றானை கனலை காற்றைத்௿
      தான்றெரிந்தங் கடியேனை யாளா கொண்டு ௿
      தன்னுடைய திருவடியென் றலைமேல் வைத்த௿
      தீன்கரும்பை திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
      தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 6.68.4
      685 தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித்௿
      தாமரையான் நான்முகனு தானே யாகி௿
      மிக்கதொரு தீவளிநீர் ஆகா சமாய்௿
      மேலுலகு கப்பாலாய் இப்பா லானை௿
      அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க்௿
      கங்கங்கே அறுசமய மாகி நின்ற௿
      திக்கினையென் றிருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
      தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 6.68.5
      686 புகழொளியை புரமெரித்த புனிதன் றன்னைப்௿
      பொன்பொதிந்த மேனியனை புராணன் றன்னை௿
      விழவொலியும் விண்ணொலியு மானான் றன்னை ௿
      வெண்காடு மேவிய விகிர்தன் றன்னைக்௿
      கழலொலியுங் கைவளையு மார்ப்ப வார்ப்பக்௿
      கடைதோறு மிடுபிச்சை கென்று செல்லுந்௿
      திகழொளியை திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
      தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 6.68.6
      687 போர்த்தானை யின்னுரிதோல் பொங்க பொங்கப்௿
      புலியதளே உடையாக திரிவான் றன்னைக்௿
      காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றுங்௿
      காலனையுங் குரைகழலாற் காய்ந்தான் றன்னை௿
      மாத்தாடி பத்தராய் வணங்கு தொண்டர்௿
      வல்வினைவே ரறும்வண்ணம் மருந்து மாகித்௿
      தீர்த்தானை திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
      தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 6.68.7
      688 துறவாதே யாக்கை துறந்தான் றன்னைச்௿
      சோதி முழுமுதலாய் நின்றான் றன்னைப்௿
      பிறவாதே எவ்வுயிர்க்கு தானே யாகிப்௿
      பெண்ணினோ டாணுருவாய் நின்றான் றன்னை௿
      மறவாதே தன்றிறமே வாழ்த்து தொண்டர்௿
      மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற௿
      திறலானை திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
      தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 6.68.8
      689 பொற்றூணை புலால்நாறு கபால மேந்திப்௿
      புவலோக மெல்லா முழித தானை௿
      முற்றாத வெண்டிங்க கண்ணி யானை௿
      முழுமுதலாய் மூவுலகும் முடிவொன் றில்லாக்௿
      கற்றூணை காளத்தி மலையான் றன்னைக்௿
      கருதாதார் புரமூன்று மெரிய அம்பாற்௿
      செற்றானை திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
      தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 6.68.9
      690 இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றி௿
      எழுநரம்பின் இசைபாட லினிது கேட்டுப்௿
      புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான் றன்னைப்௿
      புண்ணியனை விண்ணவர்கள் நிதி தன்னை௿
      மகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்து௿
      வளர்மதியஞ் சடைவைத்து மாலோர் பாகந்௿
      திகழ்ந்தானை திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
      தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 6.68.10
      ௿
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது. இதுவே விருத்தாசலம்.௿
      சுவாமிபெயர் - பழமலைநாதர்௿
      தேவியார் - பெரியநாயகியம்மை.௿
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.69 திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      691 ஆராத இன்னமுதை அம்மான் றன்னை௿
      அயனொடுமா லறியாத ஆதி யானைத்௿
      தாராரும் மலர்க்கொன்றை சடையான் றன்னைச்௿
      சங்கரனை தன்னொப்பா ரில்லா தானை௿
      நீரானை காற்றானை தீயா னானை௿
      நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த௿
      பாரானை பள்ளியின்மு கூட லானைப்௿
      பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.69.1
      692 விடையானை விண்ணவர்கள் எண்ண தானை௿
      வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச்௿
      சடையானை சாமம்போற் கண்ட தானைத்௿
      தத்துவனை தன்னொப்பா ரில்லா தானை௿
      அடையாதார் மும்மதிலு தீயில் மூழ்க௿
      அடுகணைகோ தெய்தானை அயில்கொள் சூலப்௿
      படையானை பள்ளியின்மு கூட லானைப்௿
      பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.69.2
      693 பூதியனை பொன்வரையே போல்வான் றன்னைப்௿
      புரிசடைமேற் புனல்கரந்த புனிதன் றன்னை௿
      வேதியனை வெண்காடு மேயான் றன்னை௿
      வெள்ளேற்றின் மேலானை விண்ணோர கெல்லாம்௿
      ஆதியனை ஆதிரைநன் னாளான் றன்னை௿
      அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்௿
      பாதியனை பள்ளியின்மு கூட லானைப்௿
      பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.69.3
      694 போர்த்தானை ஆனையின்றோல் புரங்கள் மூன்றும்௿
      பொடியாக எய்தானை புனிதன் றன்னை௿
      வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் றன்னை௿
      மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந்௿
      தீர்த்தானை தென்றிசைக்கே காமன் செல்லச்௿
      சிறிதளவில் அவனுடலம் பொடியா வங்கே௿
      பார்த்தானை பள்ளியின்மு கூட லானைப்௿
      பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.69.4
      695 அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்௿
      அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங்௿
      கடிந்தானை கார்முகில்போற் கண்ட தானைக்௿
      கடுஞ்சினத்தோன் றன்னுடலை நேமி யாலே௿
      தடிந்தானை தன்னொப்பா ரில்லா தானைத்௿
      தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சிற்௿
      படிந்தானை பள்ளியின்மு கூட லானைப்௿
      பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.69.5
      696 கரந்தானை செஞ்சடைமேற் கங்கை வெள்ளங்௿
      கனலாடு திருமேனி கமல தோன்றன்௿
      சிரந்தாங்கு கையானை தேவ தேவைத்௿
      திகழொளியை தன்னடியே சிந்தை செய்வார்௿
      வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய்௿
      மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப்௿
      பரந்தானை பள்ளியின்மு கூட லானைப்௿
      பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.69.6
      697 நதியாருஞ் சடையானை நல்லூ ரானை௿
      நள்ளாற்றின் மேயானை நல்ல தானை௿
      மதுவாரும் பொழிற்புடைசூழ் வாய்மூ ரானை௿
      மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை௿
      நிதியாளன் றோழனை நீடு ரானை௿
      நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும்௿
      பதியானை பள்ளியின்மு கூட லானைப்௿
      பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.69.7
      698 நற்றவனை நான்மறைக ளாயி னானை௿
      நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்௿
      செற்றவனை செஞ்சடைமேற் றிங்கள் சூடுந்௿
      திருவாரூர திருமூல தான மேய௿
      கொற்றவனை கூரரவம் பூண்டான் றன்னைக்௿
      குறைந்தடைந்து தன்றிறமே கொண்டார கென்றும்௿
      பற்றவனை பள்ளியின்மு கூட லானைப்௿
      பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.69.8
      699 ஊனவனை உடலவனை உயிரா னானை௿
      உலகேழு மானானை உம்பர் கோவை௿
      வானவனை மதிசூடும் வளவி யானை௿
      மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற௿
      கானவனை கயிலாய மலையு ளானைக்௿
      கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே௿
      பானவனை பள்ளியின்மு கூட லானைப்௿
      பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.69.9
      700 தடுத்தானை தான்முனிந்து தன்றோள் கொட்டித்௿
      தடவரையை இருபதுதோள் தலையி னாலும்௿
      எடுத்தானை தாள்விரலால் மாள வூன்றி௿
      எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்௿
      கொடுத்தானை பேரோடுங் கூர்வாள் தன்னைக்௿
      குரை கழலாற் கூற்றுவனை மாள வன்று௿
      படுத்தானை பள்ளியின்மு கூட லானைப்௿
      பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.69.10
      ௿
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - முக்கோணவீசுவரர்௿ தேவியார்
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.70 க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      701 தில்லை சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி௿
      தேவன் குடிசிரா பள்ளி தெங்கூர்௿
      கொல்லி குளிரறை பள்ளி கோவல்௿
      வீரட்டங் கோகரணங் கோடி காவும்௿
      முல்லை புறவம் முருகன் பூண்டி௿
      முழையூர் பழையாறை சத்தி முற்றங்௿
      கல்லிற் றிகழ்சீரார் காள தியுங்௿
      கயிலாய நாதனையே காண லாமே. 6.70.1
      702 ஆரூர்மூ லத்தானம் ஆனை காவும்௿
      ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்௿
      பேரூர் பிரமபுரம் பேரா வூரும்௿
      பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்௿
      கூரார் குறுக்கைவீ ரட்டா னமுங்௿
      கோட்டூர் குடமூக்கு கோழம் பமுங்௿
      காரார் கழுக்குன்றுங் கான பேருங்௿
      கயிலாய நாதனையே காண லாமே. 6.70.2
      703 இடைமரு தீங்கோ யிராமே சுரம்௿
      இன்னம்பர் ஏரிடவை ஏ பேறூர்௿
      சடைமுடி சாலை குடித களூர்௿
      தலையாலங் காடு தலைச்சங் காடு௿
      கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்௿
      கோத்திட்டை கோட்டாறு கோட்டு காடு௿
      கடைமுடி கானூர் கடம்ப துறை௿
      கயிலாய நாதனையே காண லாமே. 6.70.3
      704 எச்சில் இளமர் ஏம நல்லூர்௿
      இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி௿
      அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர்௿
      ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறைக்௿
      கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக்௿
      கோயில் கரவீரங் காட்டு பள்ளி௿
      கச்சி பலதளியும் ஏகம் பத்துங்௿
      கயிலாய நாதனையே காண லாமே. 6.70.4
      705 கொடுங்கோளூர் அஞ்சை களஞ்செங் குன்றூர்௿
      கொங்கணங் குன்றியூர் குரக்கு காவும்௿
      நெடுங்களம் நன்னிலம் நெல்லி காவும்௿
      நின்றியூர் நீடூர் நியம நல்லூர்௿
      இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்௿
      எறும்பியூர் ஏராரும் ஏம கூடங்௿
      கடம்பை யிளங்கோயில் தன்னி லுள்ளுங்௿
      கயிலாய நாதனையே காண லாமே. 6.70.5
      706 மண்ணி படிக்கரை வாழ்கொளி புத்தூர்௿
      வக்கரை மந்தாரம் வார ணாசி௿
      வெண்ணி விளத்தொட்டி வேள்வி குடி௿
      விளமர் விராடபுரம் வேட்க ளத்தும்௿
      பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்௿
      பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்௿
      கண்ணை களர்க்காறை கழிப்பா லையுங்௿
      கயிலாய நாதனையே காண லாமே. 6.70.6
      707 வீழி மிழலைவெண் காடு வேங்கூர்௿
      வேதி குடிவிசய மங்கை வியலூர்௿
      ஆழியக தியான்பள்ளி அண்ணா மலை௿
      ஆலங் காடும் அரைதை பெரும்௿
      பாழி பழனம்பன தாள்பா தாளம்௿
      பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்கா டூர்தண்௿
      காழி கடல்நாகை காரோ ணத்துங்௿
      கயிலாய நாதனையே காண லாமே. 6.70.7
      708 உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்௿
      உரித்திர கோடி மறைக்கா டுள்ளும்௿
      மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்௿
      வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்௿
      வெஞ்சமா கூடல்மீ யச்சூர் வைகா௿
      வேதிச்சுரம் வீவிசுரம் வொற்றி யூருங்௿
      கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சா கையுங்௿
      கயிலாய நாதனையே காண லாமே. 6.70.8
      709 திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி௿
      தேவூர் சிரபுரஞ்சிற் றேமஞ் சேறை௿
      கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல்௿
      குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு௿
      அண்டர் தொழுமதிகை வீர டானம்௿
      ஐயா றசோகந்தி ஆமா தூருங்௿
      கண்டியூர் வீரட்டங் கருகா வூருங்௿
      கயிலாய நாதனையே காண லாமே. 6.70.9
      710 நறையூரிற் சித்தீ சரம்நள் ளாறு௿
      நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல௿
      துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை௿
      தோணிபுர துருத்தி சோமீ சரம்௿
      உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர்௿
      ஓமாம் புலியூரோர் ஏட கத்துங்௿
      கறையூர் கருப்பறியல் கன்றா பூருங்௿
      கயிலாய நாதனையே காண லாமே. 6.70.10
      711 புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்௿
      புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்௿
      வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்௿
      வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி௿
      நிலமலிநெ தானத்தோ டெத்தா னத்தும்௿
      நிலவுபெருங் கோயில்பல கண்டாற் றொண்டீர்௿
      கலிவலிமி கோனைக்கால் விரலாற் செற்ற௿
      கயிலாய நாதனையே காண லாமே. 6.70.11
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.71 திருஅடைவு - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      712 பொருப்பள்ளி வரைவில்லா புரமூன் றெய்து௿
      புலந்தழிய சலந்தரனை பிளந்தான் பொற்சக்௿
      கரப்பள்ளி திருக்காட்டு பள்ளி கள்ளார்௿
      கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்௿
      சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி௿
      செழுநனி பள்ளிதவ பள்ளி சீரார்௿
      பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்௿
      பரலோக தினிதாக பாலி பாரே. 6.71.1
      713 காவிரியின் கரைக்கண்டி வீர டானங்௿
      கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை௿
      மேவியவீ ரட்டானம் வழுவை வீரட்டம்௿
      வியன்பறியல் வீரட்டம் விடையூர்தி கிடமாங்௿
      கோவல்நகர் வீரட்டங் குறுக்கை வீரட்டங்௿
      கோத்திட்டை குடிவீர டானமிவை கூறி௿
      நாவினவின் றுரைப்பார்க்கு நணுக சென்றால்௿
      நமன்றமருஞ் சிவன்றமரென் றகல்வர் நன்கே. 6.71.2
      714 நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்௿
      குடிநல்ல குடிநளிநா டியத்தான் குடி௿
      கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி௿
      கருந்திட்டை குடிகடை குடிகா ணுங்கால்௿
      விற்குடிவேள் விக்குடிநல் வேட்ட குடி௿
      வேதிகுடி மாணிகுடி விடைவா குடி௿
      புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி௿
      புதுக்குடியும் போற்றவிடர் போகு மன்றே. 6.71.3
      715 பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்௿
      பெரும்பற்ற புலியூரும் பேரா வூரும்௿
      நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்௿
      நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்௿
      உறையூரும் ஓத்தூரும் ஊற்ற தூரும்௿
      அளப்பூரோ மாம்புலியூர் ஒற்றி யூருந்௿
      துறையூரு துவையூரு தோழுர் தானுந்௿
      துடையூரு தொழவிடர்கள் தொடரா வன்றே. 6.71.4
      716 பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்௿
      பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்௿
      கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்௿
      கருப்பறியல் பொருப்பனைய கொகுடி கோயில்௿
      இருக்கோதி மறையவர்கள் வழிப டேத்தும்௿
      இளங்கோயில் மணிக்கோயில் ஆல கோயில்௿
      திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து௿
      தாழ்ந்திறைஞ்ச தீவினைகள் தீரு மன்றே. 6.71.5
      717 மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்௿
      மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு௿
      தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்௿
      சாய்க்காடு தெள்ளுபுனற் கொள்ளி காடு௿
      பலர்பாடும் பழையனூர் ஆலங் காடு௿
      பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க௿
      விலையாடும் வளைதிளை குடையும் பொய்கை௿
      வெண்காடும் அடையவினை வேறா மன்றே. 6.71.6
      718 கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்௿
      கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல் வாயில்௿
      நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்௿
      நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்௿
      மடுவார்தென் மதுரைநகர் ஆல வாயில்௿
      மறிகடல்சூழ் புனவாயில் மாடம் நீடு௿
      குடவாயில் குணவாயி லான வெல்லாம்௿
      புகுவாரை கொடுவினைகள் கூடா வன்றே. 6.71.7
      719 நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்௿
      சுரநாகே சுரநாகளே சுரநன் கான௿
      கோடீச்சுரங் கொண்டீ சுரந்திண் டீச்சுரங்௿
      குக்குடே சுரமக்கீ சுரங்கூ றுங்கால்௿
      ஆடகே சுரமகத்தீ சுரமய னீச்சுரம்௿
      அத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்௿
      ஈடுதிரை இராமேச்சுர மென்றென் றேத்தி௿
      இறைவனுறை சுரம்பலவும் இயம்பு வோமே. 6.71.8
      720 கந்தமா தனங்கயிலை மலை கேதாரங்௿
      காளத்தி கழுக்குன்றங் கண்ணார் அண்ணா௿
      மந்தமாம் பொழிற்சாரல் வடபர பதம்௿
      மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம்௿
      விந்தமா மலைவேதஞ் சைய மிக்க௿
      வியன் பொதியின் மலைமேரு வுதய மத்தம்௿
      இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும்௿
      ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே. 6.71.9
      721 நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு௿
      நலந்திகழும் நாலாறு திருவை யாறுந்௿
      தெள்ளாறும் வளைகுளமு தளிக்கு ளமுநல்௿
      இடைக்குளமு திருக்குளத்தோ டஞ்சை களம்௿
      விள்ளாத நெடுங்களம்வே களம்நெல் லிக்கா௿
      கோலக்கா ஆனைக்கா வியன்கோ டிகா௿
      கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்௿
      குளங்களங்கா எனவனைத்துங் கூறு வோமே. 6.71.10
      722 கயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடு௿
      சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்௿
      பயில்வாய பராய்த்துறைதென் பாலை துறை௿
      பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்௿
      குயிலால துறைசோற்று துறைபூ துறை௿
      பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு௿
      மயிலாடு துறைகடம்ப துறையா வடு௿
      துறைமற்று துறையனைத்தும் வணங்கு வோமே. 6.71.11
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.72 திருவலஞ்சுழி - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      723 அலையார் புனற்கங்கை நங்கை காண௿
      அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந்௿
      தொலையாத வென்றியார் நின்றி யூரும்௿
      நெடுங்களமும் மேவிவிடை யைமேற் கொண்டு௿
      இலையார் படைகையி லேந்தி யெங்கும்௿
      இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த௿
      மலையார் திரளருவி பொன்னி சூழ்ந்த௿
      வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே. 6.72.1
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.73 திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும்
      திருச்சிற்றம்பலம்
      724 கருமணிபோற் கண்ட தழகன் கண்டாய்௿
      கல்லால நிழற்கீ ழிருந்தான் கண்டாய்௿
      பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்௿
      பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்௿
      வருமணிநீர பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
      மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்௿
      குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற்௿
      கோடீ சரத்துறையுங் கோமான் றானே. 6.73.1
      725 கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்௿
      கலைபயில்வோர் ஞானக்கண் ணானான் கண்டாய்௿
      அலைக்கங்கை செஞ்சடைமே லேற்றான் கண்டாய்௿
      அண்ட கபாலத்த பாலான் கண்டாய்௿
      மலைப்பண்டங் கொண்டு வருநீர பொன்னி௿
      வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்௿
      குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டை யூரிற்௿
      கோடீச்சர துறையுங் கோமான் றானே. 6.73.2
      726 செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்௿
      சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்௿
      பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்௿
      பாலோடு நெய் தயிர்தே னாடி கண்டாய்௿
      மந்தார முந்தி வருநீர பொன்னி௿
      வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்௿
      கொந்தார் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்௿
      கோடீ சரத்துறையுங் கோமான் றானே. 6.73.3
      727 பொடியாடு மேனி புனிதன் கண்டாய்௿
      புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய்௿
      இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய்௿
      எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்௿
      மடலார் திரைபுரளுங் காவி ரிவாய்௿
      வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்௿
      கொடியாடு நெடுமாட கொட்டை யூரிற்௿
      கோடீச்சர துறையுங் கோமான் றானே. 6.73.4
      728 அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்௿
      அருமறைக ளாறங்க மானான் கண்டாய்௿
      தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்௿
      சதாசிவன்காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய்௿
      மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர பொன்னி௿
      வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்௿
      கொக்கமரும் வயற்புடைசூழ் கொட்டை யூரிற்௿
      கோடீ சரத்துறையுங் கோமான் றானே. 6.73.5
      729 சண்டனைநல் லண்டர்தொழ செய்தான் கண்டாய்௿
      சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய்௿
      தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்௿
      சுடரொளியா தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்௿
      மண்டுபுனற் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
      மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்௿
      கொண்டல்தவழ் கொடிமாட கொட்டை யூரிற்௿
      கோடீ சரத்துறையுங் கோமான் றானே. 6.73.6
      730 அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்௿
      அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்௿
      பணமணிமா நாக முடையான் கண்டாய்௿
      பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்௿
      மணல்வருநீர பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
      மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்௿
      குணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற்௿
      கோடீ சரத்துறையுங் கோமான் றானே. 6.73.7
      731 விரைகமழு மலர்க்கொன்றை தாரான் கண்டாய்௿
      வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்௿
      அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய்௿
      அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்௿
      வருதிரைநீர பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
      வஞ்சமன தவர்க்கரிய மைந்தன் கண்டாய்௿
      குரவமரும் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்௿
      கோடீ சரத்துறையுங் கோமான் றானே. 6.73.8
      732 தளங்கிளரு தாமரையா தனத்தான் கண்டாய்௿
      தசரதன்றன் மகனசைவு தவிர்த்தான் கண்டாய்௿
      இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்௿
      எட்டெ டிருங்கலையு மானான் கண்டாய்௿
      வளங்கிளர்நீர பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
      மாமுனிகள் தொழுதெழுபொற் கழலான் கண்டாய்௿
      குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரிற்௿
      கோடீ சரத்துறையுங் கோமான் றானே. 6.73.9
      733 விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்௿
      விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய்௿
      தண்டா மரையானும் மாலு தேடத்௿
      தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்௿
      வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்௿
      மாதேவன் கண்டாய் மறையோ டங்கங்௿
      கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற்௿
      கோடீ சரத்துறையுங் கோமான் றானே. 6.73.10
      இத்தலங்கள் சோழநாட்டிலுள்ளன.௿
      திருவலஞ்சுழியில்௿
      சுவாமிபெயர் - கபர்த்தீசுவரர்௿ தேவியார்
      திருக்கொட்டையூரில்௿
      சுவாமிபெயர் - சுந்தரகோடீசுவரர்௿ தேவியார்
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.74 திருநாரையூர் - திருத்தாண்டகம்௿ ௿
      திருச்சிற்றம்பலம்
      734 சொல்லானை பொருளானை சுருதி யானைச்௿
      சுடராழி நெடுமாலு கருள்செய் தானை௿
      அல்லானை பகலானை அரியான் றன்னை௿
      அடியார்க கெளியானை அரண்மூன் றெய்த௿
      வில்லானை சரம்விசயற் கருள்செய் தானை௿
      வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும்௿
      நல்லானை தீயாடு நம்பன் றன்னை௿
      நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 6.74.1
      735 பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் றன்னைப்௿
      பாரொடுநீர் சுடர்படர்காற் றாயி னானை௿
      மஞ்சுண்ட வானாகி வான தன்னில்௿
      மதியாகி மதிசடைமேல் வைத்தான் றன்னை௿
      நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் றன்னை௿
      நெடுங்கடலை கடைந்தவர்போய் நீங்க வோங்கும்௿
      நஞ்சுண்டு தேவர்களு கமுதீ தானை௿
      நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 6.74.2
      736 மூவாதி யாவர்க்கும் மூத்தான் றன்னை௿
      முடியாதே முதல்நடுவு முடிவா னானைத்௿
      தேவாதி தேவர்கட்கு தேவன் றன்னைத்௿
      திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் றன்னை௿
      ஆவாத அடலேறொன் றுடையான் றன்னை௿
      அடியேற்கு நினைதோறும் அண்ணி கின்ற௿
      நாவானை நாவினில்நல் லுரையா னானை௿
      நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 6.74.3
      737 செம்பொன்னை நன்பவள திகழு முத்தைச்௿
      செழுமணியை தொழுமவர்தஞ் சி தானை௿
      வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி௿
      மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற௿
      கம்பனையெங் கயிலாய மலையான் றன்னைக்௿
      கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும்௿
      நம்பனையெம் பெருமானை நாதன் றன்னை௿
      நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 6.74.4
      738 புரையுடைய கரியுரிவை போர்வை யானைப்௿
      புரிசடைமேற் புனலடைத்த புனிதன் றன்னை௿
      விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானை௿
      வெண்ணீறு செம்மேனி விரவி னானை௿
      வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் றன்னை௿
      வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை௿
      நரைவிடைநற் கொடியுடைய நாதன் றன்னை௿
      நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 6.74.5
      739 பிறவாதும் இறவாதும் பெருகி னானைப்௿
      பேய்பாட நடமாடும் பித்தன் றன்னை௿
      மறவாத மனத்தகத்து மன்னி னானை௿
      மலையானை கடலானை வனத்து ளானை௿
      உறவானை பகையானை உயிரா னானை௿
      உள்ளானை புறத்தானை ஓசை யானை௿
      நறவாரும் பூங்கொன்றை சூடி னானை௿
      நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 6.74.6
      740 தக்கனது வேள்விகெட சாடி னானைத்௿
      தலைகலனா பலியேற்ற தலைவன் றன்னைக்௿
      கொக்கரை சரிவீணை பாணி யானைக்௿
      கோணாகம் பூணா கொண்டான் றன்னை௿
      அக்கினொடும் என்பணிந்த அழகன் றன்னை௿
      அறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னை௿
      நக்கனைவ கரையானை நள்ளாற் றானை௿
      நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 6.74.7
      741 அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் றன்னை௿
      அந்தகனு கந்தகனை அளக்க லாகா௿
      எரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானை௿
      எண்ணாகி பண்ணா ரெழுத்தா னானைத்௿
      திரிபுரஞ்செற் றொருமூவர கருள்செய் தானைச்௿
      சிலந்திக்கும் அரசளித்த செல்வன் றன்னை௿
      நரிவிரவு காட்டகத்தி லாட லானை௿
      நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 6.74.8
      742 ஆலால மிடற்றணியா அடக்கி னானை௿
      ஆலதன்கீழ் அறம்நால்வர கருள்செய் தானைப்௿
      பாலாகி தேனாகி பழமு மாகிப்௿
      பைங்கரும்பா யங்கருந்துஞ் சுவையா னானை௿
      மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி௿
      வேள்வியினின் பயனாய விமலன் றன்னை௿
      நாலாய மறைக்கிறைவ னாயி னானை௿
      நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 6.74.9
      743 மீளாத ஆளென்னை உடையான் றன்னை௿
      வெளிசெய்த வழிபாடு மேவி னானை௿
      மாளாமை மறையவனு குயிரும் வைத்து௿
      வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான் றன்னைத்௿
      தோளாண்மை கருதிவரை யெடுத்த தூர்த்தன்௿
      தோள்வலியு தாள்வலியு தொலைவி தாங்கே௿
      நாளோடு வாள்கொடுத்த நம்பன் றன்னை௿
      நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 6.74.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.75 திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      744 சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்௿
      சொற்பொருளுங் கடந்தசுடர சோதி போலுங்௿
      கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்௿
      கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்௿
      மன்மலிந்த மணிவரைத்திண் டோ ளர் போலும்௿
      மலையரையன் மடப்பாவை மணாளர் போலுங்௿
      கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்௿
      குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே. 6.75.1
      745 கானலிளங் கலிமறவ னாகி பார்த்தன்௿
      கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்௿
      ஆனவிளங் கடுவிடையொன் றேறி அண்டத்௿
      தப்பாலும் பலிதிரியும் அழகர் போலுந்௿
      தேனலிள துவலைமலி தென்றல் முன்றிற்௿
      செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்௿
      கூனலிளம் பிறைதடவு கொடிகொள் மாடக்௿
      குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே. 6.75.2
      746 நீறலைத்த திருவுருவும் நெற்றி கண்ணும்௿
      நிலாவலைத்த பாம்பினொடு நிறைநீர கங்கை௿
      ஆறலைத்த சடைமுடியும் அம்பொற் றோளும்௿
      அடியவர்க்கு காட்டியருள் புரிவார் போலும்௿
      ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையார் போலும்௿
      ஏழுலகு தொழுகழலெம் மீசர் போலுங்௿
      கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்௿
      குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே. 6.75.3
      747 தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்௿
      சந்திரனை கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்௿
      செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி௿
      செழுஞ்சுடர்த்தீ ஞாயிறென செய்யர் போலும்௿
      மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி௿
      மிகுபுகைபோய் விண்பொழி கழனி யெல்லாங்௿
      கொக்கினிய கனிசிதறி தேறல் பாயுங்௿
      குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே. 6.75.4
      748 காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங்௿
      காமனெழில் அழல்விழுங கண்டார் போலும்௿
      ஆலதனில் அறம்நால்வர களித்தார் போலும்௿
      ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்௿
      நீலவுரு வயிரநிரை பச்சை செம்பொன்௿
      நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்௿
      கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்௿
      குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே. 6.75.5
      749 முடிகொண்ட வளர்மதியும் மூன்றா தோன்றும்௿
      முளைஞாயி றன்னமலர கண்கள் மூன்றும்௿
      அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி௿
      அணிமுறுவற் செவ்வாயும் அழகா தோன்றத்௿
      துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு௿
      சுடர்ச்சோதி கடிச்செம்பொன் மலைபோ லிந்நாள்௿
      குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங்௿
      குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே. 6.75.6
      750 காரிலங்கு திருவுருவ தவற்கும் மற்றைக்௿
      கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்௿
      சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்௿
      சிலைவளைவி தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்௿
      பாரிலங்கு புனலனல்கால் பரமா காசம்௿
      பருதிமதி சுருதியுமா பரந்தார் போலுங்௿
      கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்௿
      குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே. 6.75.7
      751 பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்௿
      புறம்பயத்தார் அறம்புரிபூ துருத்தி புக்கு௿
      மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்௿
      மாதவத்து வளர்சோற்று துறையார் நல்ல௿
      தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலு கீந்து௿
      திருவானை காவிலோர் சிலந்தி கந்நாள்௿
      கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலுங்௿
      குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே. 6.75.8
      752 பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற்௿
      பொறிகிளர்வெண் பூணநூற் புனிதர் போலுஞ்௿
      சங்கரவ கடன்முகடு தட்ட விட்டுச்௿
      சதுரநட மாட்டுகந்த சைவர் போலும்௿
      அங்கரவ திருவடிக்கா பிழைப்ப தந்தை௿
      அந்தணனை அறஎறிந்தார கருள போதே௿
      கொங்கரவ சடைக்கொன்றை கொடுத்தார் போலுங்௿
      குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே. 6.75.9
      753 ஏவியிடர கடலிடைப்ப டிளைக்கின் றேனை௿
      இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே௿
      கூவிஅம ருலகனைத்து முருவி போகக்௿
      குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்௿
      தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை௿
      சரச்வதிபொற் றாமரைப்பு கரணி தெண்ணீர்க்௿
      கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த௿
      குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே. 6.75.10
      754 செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்௿
      தித்திக்குஞ் சிவபுவன தமுதம் போலும்௿
      நெறிகொண்ட குழலியுமை பாக மாக௿
      நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்௿
      மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்௿
      மதிலிலங்கை கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக்௿
      குறிகொண்ட இன்னிசைகே டுகந்தார் போலுங்௿
      குடந்தைக்கீழ கோட்டத்தெங் கூத்த னாரே. 6.75.11
      ௿
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - மடந்தைபாகேசுவரர்௿
      தேவியார் - பெரியநாயகியம்மை.௿
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.76 திருப்புத்தூர் - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      755 புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்த கோன்காண்௿
      போர்விடையின் பாகன்காண் புவன மேழும்௿
      விரிந்துபல உயிராகி விளங்கி னான்காண்௿
      விரைக்கொன்றை கண்ணியன்காண் வேத நான்குந்௿
      தெரிந்துமுதல் படைத்தோனை சிரங்கொண் டோ ன்காண்௿
      தீர்த்தன்காண் திருமாலோர் பங்க தான்காண்௿
      திருந்துவயல் புடைதழுவு திருப்பு தூரில்௿
      திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. 6.76.1
      756 வாராரும் முலைமங்கை பாக தான்காண்௿
      மாமறைக ளாயவன்காண் மண்ணும் விண்ணுங்௿
      கூரார்வெ தழலவனுங் காற்றும் நீருங்௿
      குலவரையும் ஆயவன்காண் கொடுநஞ் சுண்ட௿
      காராருங் கண்டன்காண் எண்டோ ளன்காண்௿
      கயிலைமலை பொருப்பன்காண் விருப்போ டென்றுந்௿
      தேராரும் நெடுவீதி திருப்பு தூரில்௿
      திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. 6.76.2
      757 மின்காட்டுங் கொடிமருங்குல் உமையா கென்றும்௿
      விருப்பவன்காண் பொருப்புவலி சிலைக்கை யோன்காண்௿
      நன்பாட்டு புலவனா சங்க மேறி௿
      நற்கன கிழிதருமி கருளி னோன்காண்௿
      பொன்காட்ட கடிக்கொன்றை மருங்கே நின்ற௿
      புனக்காந்த கைகாட்ட கண்டு வண்டு௿
      தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்பு தூரில்௿
      திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. 6.76.3
      758 ஏடேறு மலர்க்கமல தயனும் மாலும்௿
      இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண்௿
      தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந்௿
      துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம்௿
      மாடேறி முத்தீனுங் கானல் வேலி௿
      மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி௿
      சேடேறி மடுப்படியு திருப்பு தூரில்௿
      திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. 6.76.4
      759 கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண்௿
      காமருபூங் கச்சியே கம்ப தான்காண்௿
      பெருமருவு பேருலகிற் பிணிகள் தீர்க்கும்௿
      பெரும்பற்ற தண்புலியூர் மன்றா டீகாண்௿
      தருமருவு கொடைத்தடக்கை அளகை கோன்றன்௿
      சங்காத்தி ஆரூரில் தனியா னைகாண்௿
      திருமருவு பொழில்புடைசூழ் திருப்பு தூரில்௿
      திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. 6.76.5
      760 காம்பாடு தோளுமையாள் காண நட்டங்௿
      கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்ய௿
      பாம்பாட படுதலையிற் பலிகொள் வான்காண்௿
      பவளத்தின் பருவரைபோற் படி தான்காண்௿
      தாம்பாடு சினவிடையே பகடா கொண்ட௿
      சங்கரன்காண் பொங்கரவ கச்சை யோன்காண்௿
      சேம்பாடு வயல்புடைசூழ் திருப்பு தூரில்௿
      திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. 6.76.6
      761 வெறிவிரவு மலர்க்கொன்றை விளங்கு திங்கள்௿
      வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண்௿
      பொறிவிரவு கதநாகம் அக்கி னோடு௿
      பூண்டவன்காண் பொருபுலித்தோ லாடை யான்காண்௿
      அறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண்௿
      ஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானற்௿
      செறிபொழில்சூழ் மணிமாட திருப்பு தூரில்௿
      திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. 6.76.7
      762 புக்கடைந்த வேதியற்கா காலற் காய்ந்த௿
      புண்ணியன்காண் வெண்ணகைவெள் வளையா ளஞ்ச௿
      மிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன்காண்௿
      வெண்மதியை கலைசேர்த்த திண்மை யோன்காண்௿
      அக்கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலை௿
      ஆரூரு கதிபதிகாண் அந்தண் தென்றல்௿
      திக்கணைந்து வருமருங்கில் திருப்பு தூரில்௿
      திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. 6.76.8
      763 பற்றவன்காண் ஏனோர்க்கும் வானோ ருக்கும்௿
      பராபரன்காண் தக்கன்றன் வேள்வி செற்ற௿
      கொற்றவன்காண் கொடுஞ்சினத்தை யடங்க செற்று௿
      ஞானத்தை மேன்மிகுத்தல் கோளா கொண்ட௿
      பெற்றியன்காண் பிறங்கருவி கழுக்குன் றத்தெம்௿
      பிஞ்ஞகன்காண் பேரெழிலார் காம வேளைச்௿
      செற்றவன்காண் சீர்மருவு திருப்பு தூரில்௿
      திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. 6.76.9
      764 உரமதித்த சலந்தரன்றன் ஆகங் கீண்ட௿
      ஓராழி படைத்தவன்காண் உலகு சூழும்௿
      வரமதித்த கதிரவனை பற்கொண் டான்காண்௿
      வானவர்கோன் புயம்நெரித்த வல்லா ளன்காண்௿
      அரமதித்து செம்பொன்னி னாரம் பூணா௿
      அணிந்தவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்௿
      சிரம்நெரித்த சேவடிகாண் திருப்பு தூரில்௿
      திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. 6.76.10
      ௿
      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - புத்தூரீசர்௿ தேவியார்
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.77 திருவாய்மூர் - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      765 பாட வடியார் பரவ கண்டேன்௿
      பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்௿
      ஆடல் முழவம் அதிர கண்டேன்௿
      அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்௿
      கோட லரவார் சடையிற் கண்டேன்௿
      கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்௿
      வாடல் தலையொன்று கையிற் கண்டேன்௿
      வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.1
      766 பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன்௿
      பதினெண் கணமும் பயில கண்டேன்௿
      நீல நிறமுண்ட கண்டங் கண்டேன்௿
      நெற்றி நுதல்கண்டேன் பெற்றங் கண்டேன்௿
      காலை கதிர்செய் மதியங் கண்டேன்௿
      கரந்தை திருமுடிமேல் தோன்ற கண்டேன்௿
      மாலை சடையும் முடியுங் கண்டேன்௿
      வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.2
      767 மண்ணை திகழ நடம தாடும்௿
      வரைசிலம் பார்க்கின்ற பாதங் கண்டேன்௿
      விண்ணிற் றிகழும் முடியுங் கண்டேன்௿
      வேடம் பலவாஞ் சரிதை கண்டேன்௿
      நண்ணி பிரியா மழுவுங் கண்டேன்௿
      நாலு மறையங்க மோத கண்டேன்௿
      வண்ண பொலிந்திலங்கு கோலங் கண்டேன்௿
      வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.3
      768 விளைத்த பெரும்பத்தி கூர நின்று௿
      மெய்யடியார் தம்மை விரும்ப கண்டேன்௿
      இளைக்குங் கதநாக மேனி கண்டேன்௿
      என்பின் கலந்திகழ்ந்து தோன்ற கண்டேன்௿
      திளைக்கு திருமார்பில் நீறு கண்டேன்௿
      சேணார் மதின்மூன்றும் பொன்ற வன்று௿
      வளைத்த வரிசிலையுங் கையிற் கண்டேன்௿
      வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.4
      769 கான்மறையும் போதகத்தி னுரிவை கண்டேன்௿
      காலிற் கழல்கண்டேன் கரியின் றோல்கொண்௿
      டூன்மறை போர்த்த வடிவுங் கண்டேன்௿
      உள்க மனம்வைத்த உணர்வுங் கண்டேன்௿
      நான்மறை யானோடு நெடிய மாலும்௿
      நண்ணி வரக்கண்டேன் திண்ண மாக௿
      மான்மறி தங்கையின் மருவ கண்டேன்௿
      வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.5
      770 அடியார் சிலம்பொலிக ளார்ப்ப கண்டேன்௿
      அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன்௿
      முடியார் சடைமேல் அரவ மூழ்க௿
      மூரி பிறைபோய் மறை கண்டேன்௿
      கொடியா ரதன்மேல் இடபங் கண்டேன்௿
      கோவணமுங் கீளுங் குலாவ கண்டேன்௿
      வடியாரும் மூவிலைவேல் கையிற் கண்டேன்௿
      வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.6
      771 குழையார் திருத்தோடு காதிற் கண்டேன்௿
      கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன்௿
      இழையார் புரிநூல் வலத்தே கண்டேன்௿
      ஏழிசை யாழ்வீணை முரல கண்டேன்௿
      தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன்௿
      தக்கையொடு தாளங் கறங கண்டேன்௿
      மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன்௿
      வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.7
      772 பொருந்தாத செய்கை பொலி கண்டேன்௿
      போற்றிசைத்து விண்ணோர் புகழ கண்டேன்௿
      பரிந்தார கருளும் பரிசுங் கண்டேன்௿
      பாராகி புனலாகி நிற்கை கண்டேன்௿
      விருந்தா பரந்த தொகுதி கண்டேன்௿
      மெல்லியலும் விநாயகனு தோன்ற கண்டேன்௿
      மருந்தா பிணிதீர்க்கு மாறு கண்டேன்௿
      வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.8
      773 மெய்யன்ப ரானார கருளுங் கண்டேன்௿
      வேடுவனாய் நின்ற நிலையுங் கண்டேன்௿
      கையம் பரனெரித்த காட்சி கண்டேன்௿
      கங்கணமும் அங்கை கனலுங் கண்டேன்௿
      ஐயம் பலவூர் திரி கண்டேன்௿
      அன்றவன் றன்வேள்வி அழித்து கந்து௿
      வையம் பரவ இருத்தல் கண்டேன்௿
      வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.9
      774 கலங்க இருவர கழலாய் நீண்ட௿
      காரணமுங் கண்டேன் கருவாய் நின்று௿
      பலங்கள் தரித்துகந்த பண்புங் கண்டேன்௿
      பாடல் ஒலியெலாங் கூட கண்டேன்௿
      இலங்கை தலைவன் சிரங்கள் பத்தும்௿
      இறுத்தவனு கீந்த பெருமை கண்டேன்௿
      வலங்கை தலத்துள் அனலுங் கண்டேன்௿
      வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.78 திருவாலங்காடு - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      775 ஒன்றா வுலகனைத்து மானார் தாமே௿
      ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே௿
      நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே௿
      நீர்வளிதீ யாகாச மானார் தாமே௿
      கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே௿
      கோல பழனை யுடையார் தாமே௿
      சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே௿
      திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. 6.78.1
      776 மலைமகளை பாக மமர்ந்தார் தாமே௿
      வானோர் வணங்க படுவார் தாமே௿
      சலமகளை செஞ்சடைமேல் வைத்தார் தாமே௿
      சரணென் றிருப்பார்க கன்பர் தாமே௿
      பலபலவும் வேடங்க ளானார் தாமே௿
      பழனை பதியா வுடையார் தாமே௿
      சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே௿
      திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. 6.78.2
      777 ஆவுற்ற ஐந்து முகந்தார் தாமே௿
      அளவில் பெருமை யுடையார் தாமே௿
      பூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமே௿
      புனித பொருளாகி நின்றார் தாமே௿
      பாவுற்ற பாட லுகப்பார் தாமே௿
      பழனை பதியா வுடையார் தாமே௿
      தேவுற் றடிபரவ நின்றார் தாமே௿
      திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. 6.78.3
      778 நாறுபூங் கொன்றை முடியார் தாமே௿
      நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே௿
      மாறிலா மேனி யுடையார் தாமே௿
      மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே௿
      பாறினார் வெண்டலையி லுண்டார் தாமே௿
      பழனை பதியா வுடையார் தாமே௿
      தேறினார் சி திருந்தார் தாமே௿
      திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. 6.78.4
      779 அல்லும் பகலுமாய் நின்றார் தாமே௿
      அந்தியுஞ் சந்தியு மானார் தாமே௿
      சொல்லும் பொருளெலா மானார் தாமே௿
      தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே௿
      பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே௿
      பழனை பதியா வுடையார் தாமே௿
      செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே௿
      திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. 6.78.5
      780 தொண்டா பணிவார கணியார் தாமே௿
      தூநீ றணியுஞ் சுவண்டர் தாமே௿
      தண்டா மரையானும் மாலு தேடத்௿
      தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே௿
      பண்டா னிசைபாட நின்றார் தாமே௿
      பழனை பதியா வுடையார் தாமே௿
      திண்டோ ள்க ளெட்டு முடையார் தாமே௿
      திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. 6.78.6
      781 மையாருங் கண்ட மிடற்றார் தாமே௿
      மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே௿
      ஐயாறும் ஆரூரும் ஆனை காவும்௿
      அம்பலமுங் கோயிலா கொண்டார் தாமே௿
      பையா டரவ மசைத்தார் தாமே௿
      பழனை பதியா வுடையார் தாமே௿
      செய்யாள் வழிபட நின்றார் தாமே௿
      திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. 6.78.7
      782 விண்முழுதும் மண்முழுது மானார் தாமே௿
      மிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே௿
      கண்விழியாற் காமனையுங் காய்ந்தார் தாமே௿
      காலங்க ளூழி கடந்தார் தாமே௿
      பண்ணியலும் பாட லுகப்பார் தாமே௿
      பழனை பதியா வுடையார் தாமே௿
      திண்மழுவா ளேந்து கரத்தார் தாமே௿
      திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. 6.78.8
      783 காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே௿
      கயிலை மலையை யுடையார் தாமே௿
      ஊரா வேகம்பம் உகந்தார் தாமே௿
      ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே௿
      பாரார் புகழ படுவார் தாமே௿
      பழனை பதியா வுடையார் தாமே௿
      தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே௿
      திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. 6.78.9
      784 மாலை பிறைசென்னி வைத்தார் தாமே௿
      வண்கயிலை மாமலையை வந்தி யாத௿
      நீல கடல்சூ ழிலங்கை கோனை௿
      நெரிய விரலா லடர்த்தார் தாமே௿
      பாலொத்த மேனி நிறத்தார் தாமே௿
      பழனை பதியா வுடையார் தாமே௿
      சீலத்தா ரேத்து திறத்தார் தாமே௿
      திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. 6.78.10
      ௿
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர்௿
      தேவியார் - வண்டார்குழலியம்மை.௿
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.79 திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      785 தொண்டர்க்கு தூநெறியாய் நின்றான் றன்னைச்௿
      சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னை௿
      அண்டத்து கப்பாலை கப்பா லானை௿
      ஆதிரைநா ளாதரித்த அம்மான் றன்னை௿
      முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை௿
      மூவுருவ தோருருவாய் முதலாய் நின்ற௿
      தண்டத்திற் றலையாலங் காடன் றன்னைச்௿
      சாராதே சாலநாள் போக்கி னேனே. 6.79.1
      786 அக்கிருந்த அரையானை அம்மான் றன்னை௿
      அவுணர்புர மொருநொடியி லெரிசெய் தானைக்௿
      கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் றன்னைக்௿
      குண்டலஞ்சேர் காதானை குழைவார் சிந்தை௿
      புக்கிருந்து போகாத புனிதன் றன்னைப்௿
      புண்ணியனை எண்ணருஞ்சீர போக மெல்லாந்௿
      தக்கிருந்த தலையாலங் காடன் றன்னைச்௿
      சாராதே சாலநாள் போக்கி னேனே. 6.79.2
      787 மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை௿
      விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் றன்னை௿
      எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை௿
      இடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப்௿
      பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப்௿
      புனல்கரந்தி டுமையொடொரு பாகம் நின்ற௿
      தத்துவனை தலையாலங் காடன் றன்னைச்௿
      சாராதே சாலநாள் போக்கி னேனே. 6.79.3
      788 சிவனாகி திசைமுகனா திருமா லாகிச்௿
      செழுஞ்சுடரா தீயாகி நீரு மாகிப்௿
      புவனாகி புவனங்க ளனைத்து மாகிப்௿
      பொன்னாகி மணியாகி முத்து மாகிப்௿
      பவனாகி பவனங்க ளனைத்து மாகிப்௿
      பசுவேறி திரிவானோர் பவனாய் நின்ற௿
      தவனாய தலையாலங் காடன் றன்னைச்௿
      சாராதே சாலநாள் போக்கி னேனே. 6.79.4
      789 கங்கையெனுங் கடும்புனலை கரந்தான் றன்னைக்௿
      காமருபூம் பொழிற்கச்சி கம்பன் றன்னை௿
      அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை௿
      ஐயாறு மேயானை ஆரூ ரானைப்௿
      பங்கமிலா அடியார்க்கு பரிந்தான் றன்னைப்௿
      பரிதிநிய மத்தானை பாசூ ரானைச்௿
      சங்கரனை தலையாலங் காடன் றன்னைச்௿
      சாராதே சாலநாள் போக்கி னேனே. 6.79.5
      790 விடந்திகழும் அரவரைமேல் வீக்கி னானை௿
      விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை௿
      அடைந்தவரை அமருலக மாள்வி பானை௿
      அம்பொன்னை கம்பமா களிற டானை௿
      மடந்தையொரு பாகனை மகுட தன்மேல்௿
      வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த௿
      தடங்கடலை தலையாலங் காடன் றன்னைச்௿
      சாராதே சாலநாள் போக்கி னேனே. 6.79.6
      791 விடையேறி கடைதோறும் பலிகொள் வானை௿
      வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை௿
      முடைநாறு முதுகாட்டி லாட லானை௿
      முன்னானை பின்னானை அந்நா ளானை௿
      உடையாடை யுரிதோலே உகந்தான் றன்னை௿
      உமையிருந்த பாகத்து ளொருவன் றன்னைச்௿
      சடையானை தலையாலங் காடன் றன்னை௿
      சாராதே சாலநாள் போக்கி னேனே. 6.79.7
      792 கரும்பிருந்த கட்டிதனை கனியை தேனைக்௿
      கன்றாப்பின் நடுதறியை காறை யானை௿
      இரும்பமர்ந்த மூவிலைவே லேந்தி னானை௿
      என்னானை தென்னானை காவான் றன்னைச்௿
      சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்௿
      தூயானை தாயாகி உலகு கெல்லாந்௿
      தரும்பொருளை தலையாலங் காடன் றன்னைச்௿
      சாராதே சாலநாள் போக்கி னேனே. 6.79.8
      793 பண்டளவு நரம்போசை பயனை பாலைப்௿
      படுபயனை கடுவெளியை கனலை காற்றைக்௿
      கண்டளவிற் களிகூர்வார கெளியான் றன்னைக்௿
      காரணனை நாரணனை கமல தோனை௿
      எண்டளவி லென்னெஞ்ச துள்ளே நின்ற௿
      எம்மானை கைம்மாவி னுரிவை பேணுந்௿
      தண்டரனை தலையாலங் காடன் றன்னைச்௿
      சாராதே சாலநாள் போக்கி னேனே. 6.79.9
      794 கைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான்௿
      கயிலைமலை அதுதன்னை கருதா தோடி௿
      முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி௿
      முடுகுதலு திருவிரலொன் றவன்மேல் வைப்பப்௿
      பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்௿
      பரிந்தவனு கிராவணனென் றீந்த நாம௿
      தத்துவனை தலையாலங் காடன் றன்னைச்௿
      சாராதே சாலநாள் போக்கி னேனே. 6.79.10
      ௿
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - ஆடவல்லவீசுவரர்௿ தேவியார்
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.80 திருமாற்பேறு - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      795 பாரானை பாரினது பயனா னானைப்௿
      படைப்பாகி பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னை௿
      ஆராத இன்னமுதை அடியார் தங்கட்௿
      கனைத்துலகு மானானை அமரர் கோனைக்௿
      காராருங் கண்டனை கயிலை வேந்தைக்௿
      கருதுவார் மனத்தானை காலற் செற்ற௿
      சீரானை செல்வனை திருமாற் பேற்றெஞ்௿
      செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே. 6.80.1
      796 விளைக்கின்ற நீராகி வித்து மாகி௿
      விண்ணோடு மண்ணாகி விளங்கு செம்பொன்௿
      துளைக்கின்ற துளையாகி சோதி யாகித்௿
      தூண்டரிய சுடராகி துளக்கில் வான்மேல்௿
      முளைக்கின்ற கதிர்மதியு மரவு மொன்றி௿
      முழங்கொலிநீர கங்கையொடு மூவா தென்றுந்௿
      திளைக்கின்ற சடையானை திருமாற் பேற்றெஞ்௿
      செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே. 6.80.2
      797 மலைமகள்தங் கோனவனை மாநீர் முத்தை௿
      மரகதத்தை மாமணியை மல்கு செல்வக்௿
      கலைநிலவு கையானை கம்பன் றன்னைக்௿
      காண்பினிய செழுஞ்சுடரை கன குன்றை௿
      விலைபெரிய வெண்ணீற்று மேனி யானை௿
      மெய்யடியார் வேண்டுவதே வேண்டு வானைச்௿
      சிலைநிலவு கரத்தானை திருமாற் பேற்றெஞ்௿
      செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே. 6.80.3
      798 உற்றானை உடல்தனக்கோர் உயிரா னானை௿
      ஓங்கார தொருவனையங் குமையோர் பாகம்௿
      பெற்றானை பிஞ்ஞகனை பிறவா தானைப்௿
      பெரியனவும் அரியனவு மெல்லாம் முன்னே௿
      கற்றானை கற்பனவு தானே யாய௿
      கச்சியே கம்பனை காலன் வீழச்௿
      செற்றானை திகழொளியை திருமாற் பேற்றெஞ்௿
      செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே. 6.80.4
      799 நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி௿
      நினைவாகி நினைவினிய மலையான் மங்கை௿
      கூறாகி கூற்றாகி கோளு மாகிக்௿
      குணமாகி குறையாத உவகை கண்ணீர்௿
      ஆறாத ஆனந தடியார் செய்த௿
      அனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றுஞ்௿
      சீறாத பெருமானை திருமாற் பேற்றெஞ்௿
      செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே. 6.80.5
      800 மருவினிய மறைப்பொருளை மறைக்கா டானை௿
      மறப்பிலியை மதியேந்து சடையான் றன்னை௿
      உருநிலவு மொண்சுடரை உம்ப ரானை௿
      உரைப்பினிய தவத்தானை உலகின் வித்தைக்௿
      கருநிலவு கண்டனை காள தியைக்௿
      கருதுவார் மனத்தானை கல்வி தன்னைச்௿
      செருநிலவு படையானை திருமாற் பேற்றெஞ்௿
      செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே. 6.80.6
      801 பிறப்பானை பிறவாத பெருமை யானைப்௿
      பெரியானை அரியானை பெண்ணா ணாய௿
      நிறத்தானை நின்மலனை நினையா தாரை௿
      நினையானை நினைவோரை நினைவோன் றன்னை௿
      அறத்தானை அறவோனை ஐயன் றன்னை௿
      அண்ணல்தனை நண்ணரிய அமர ரேத்துந்௿
      திறத்தானை திகழொளியை திருமாற் பேற்றெஞ்௿
      செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே. 6.80.7
      802 வானகத்தில் வளர்முகிலை மதி தன்னை௿
      வணங்குவார் மனத்தானை வடிவார் பொன்னை௿
      ஊனகத்தில் உறுதுணையை உலவா தானை௿
      ஒற்றியூர் உத்தமனை ஊழி கன்றைக்௿
      கானகத்து கருங்களிற்றை காள தியைக்௿
      கருதுவார் கருத்தானை கருவை மூலத்௿
      தேனகத்தி லின்சுவையை திருமாற் பேற்றெஞ்௿
      செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே. 6.80.8
      803 முற்றாத முழுமுதலை முளையை மொட்டை௿
      முழுமலரின் மூர்த்தியை முனியா தென்றும்௿
      பற்றாகி பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னைப்௿
      பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில்௿
      உற்றானை உயர்கருப்பு சிலையோன் நீறாய்௿
      ஒள்ளழல்வாய் வேவவுறு நோக்க தானைச்௿
      செற்றானை திரிபுரங்கள் திருமாற் பேற்றெஞ் ௿
      செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே. 6.80.9
      804 விரித்தானை நான்மறையோ டங்க மாறும்௿
      வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றி௿
      நெரித்தானை நின்மலனை அம்மான் றன்னை௿
      நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர கங்கை௿
      தரித்தானை சங்கரனை சம்பு தன்னைத்௿
      தரியலர்கள் புரமூன்று தழல்வாய் வேவச்௿
      சிரித்தானை திகழொளியை திருமாற் பேற்றெஞ்௿
      செம்பவள குன்றினைச்சென் றடைந்தேன் நானே. 6.80.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.81 திருக்கோடிகா - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      805 கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்௿
      கன்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்௿
      மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய் ௿
      மதிற்கச்சி யேகம்ப மேயான் கண்டாய்௿
      விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய்௿
      மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்௿
      கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய்௿
      கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 6.81.1
      806 வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்௿
      மறைக்கா டுறையும் மணாளன் கண்டாய்௿
      பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்௿
      பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்௿
      செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்௿
      திருவாரூர திருமூல தானன் கண்டாய்௿
      கொண்டாடு மடியவர்தம் மனத்தான் கண்டாய்௿
      கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 6.81.2
      807 அலையார்ந்த புனற்கங்கை சடையான் கண்டாய்௿
      அடியார்க காரமுத மானான் கண்டாய்௿
      மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்௿
      வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய்௿
      இலையார்ந்த திரிசூல படையான் கண்டாய்௿
      ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய்௿
      கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய்௿
      கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 6.81.3
      808 மற்றாரு தன்னொப்பா ரில்லான் கண்டாய்௿
      மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய்௿
      புற்றா டரவணிந்த புனிதன் கண்டாய்௿
      பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய்௿
      அற்றார்க கற்றானாய் நின்றான் கண்டாய்௿
      ஐயா றகலாத ஐயன் கண்டாய்௿
      குற்றால தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய்௿
      கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 6.81.4
      809 வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்௿
      மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்௿
      போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய்௿
      புகலூரை யகலாத புனிதன் கண்டாய்௿
      நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய்௿
      நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்௿
      கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய்௿
      கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 6.81.5
      810 கடிமலிந்த மலர்க்கொன்றை சடையான் கண்டாய்௿
      கண்ணப்ப விண்ணப்பு கொடுத்தான் கண்டாய்௿
      படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய்௿
      பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்௿
      அடிமலிந்த சிலம்பலம்ப திரிவான் கண்டாய்௿
      அமரர்கண தொழுதேத்தும் அம்மான் கண்டாய்௿
      கொடிமலிந்த மதில்தில்லை கூத்தன் கண்டாய்௿
      கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 6.81.6
      811 உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய்௿
      ஒற்றியூ ரொற்றியா வுடையான் கண்டாய்௿
      கழையாடு கழுக்குன்ற மமர்ந்தான் கண்டாய்௿
      காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய்௿
      இழையாடு மெண்புயத்த இறைவன் கண்டாய்௿
      என்னெஞ்ச துள்நீங்கா எம்மான் கண்டாய்௿
      குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய்௿
      கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 6.81.7
      812 படமாடு பன்னகக்க சசைத்தான் கண்டாய்௿
      பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்௿
      நடமாடி ஏழுலகு திரிவான் கண்டாய்௿
      நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்௿
      கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்௿
      கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய்௿
      குடமாடி யிடமா கொண்டான் கண்டாய்௿
      கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 6.81.8
      இப்பதிகத்தில் 910-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 6.81.9-10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.82 திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      813 வான திளமதியும் பாம்பு தன்னில்௿
      வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலுந்௿
      தேனை திளைத்துண்டு வண்டு பாடுந்௿
      தில்லை நடமாடு தேவர் போலும்௿
      ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்௿
      நன்மையு தீமையு மானார் போலுந்௿
      தேனொ தடியார கினியார் போலுந்௿
      திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே. 6.82.1
      814 விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்௿
      வியன்துருத்தி வேள்வி குடியார் போலும்௿
      அண்ணா மலையுறையும் அண்ணல் போலும்௿
      அதியரைய மங்கை யமர்ந்தார் போலும்௿
      பண்ணார் களிவண்டு பாடி யாடும்௿
      பராய்த்துறையுள் மேய பரமர் போலுந்௿
      திண்ணார் புகார்மு தலைக்கு தெண்ணீர்த்௿
      திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே. 6.82.2
      815 கானிரிய வேழ முரித்தார் போலுங்௿
      காவிரிப்பூம் பட்டின துள்ளார் போலும்௿
      வானிரிய வருபுரமூன் றெரித்தார் போலும்௿
      வடகயிலை மலையதுதம் மிருக்கை போலும்௿
      ஊனிரி தலைகலனா வுடையார் போலும்௿
      உயர்தோணி புரத்துறையு மொருவர் போலுந்௿
      தேனிரிய மீன்பாயு தெண்ணீர பொய்கைத்௿
      திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே. 6.82.3
      816 ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும்௿
      ஊழி பலகண் டிருந்தார் போலும்௿
      மானுற்ற கரதலமொன் றுடையார் போலும்௿
      மறைக்காட்டு கோடி மகிழ்ந்தார் போலுங்௿
      கானுற்ற ஆட லமர்ந்தார் போலுங்௿
      காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலுந்௿
      தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்று ௿
      திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே. 6.82.4
      817 கார்மல்கு கொன்றை தாரார் போலுங்௿
      காலனையும் ஓருதையாற் கண்டார் போலும்௿
      பார்மல்கி யேத்த படுவார் போலும்௿
      பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்௿
      ஊர்மல்கு பிச்சை குழன்றார் போலும்௿
      ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலுஞ்௿
      சீர்மல்கு பாட லுகந்தார் போலுந்௿
      திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே. 6.82.5
      818 மாவா பிளந்துகந்த மாலுஞ் செய்ய௿
      மலரவனு தாமேயாய் நின்றார் போலும்௿
      மூவாத மேனி முதல்வர் போலும்௿
      முதுகுன்ற மூதூ ருடையார் போலுங்௿
      கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்௿
      குரைகழலா லன்று குமைத்தார் போலுந்௿
      தேவாதி தேவர கரியார் போலுந்௿
      திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே. 6.82.6
      819 கடுவெளியோ டோ ரைந்து மானார் போலுங்௿
      காரோண தென்று மிருப்பார் போலும்௿
      இடிகுரல்வா பூத படையார் போலும்௿
      ஏகம்பம் மேவி யிருந்தார் போலும்௿
      படியொருவ ரில்லா படியார் போலும்௿
      பாண்டி கொடுமுடியு தம்மூர் போலுஞ்௿
      செடிபடுநோ யடியாரை தீர்ப்பார் போலுந்௿
      திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே. 6.82.7
      820 விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்௿
      வெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தர் போலும்௿
      மலையினார் மங்கை மணாளர் போலும்௿
      மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலுந்௿
      தொலைவிலார் புரமூன்று தொலைத்தார் போலுஞ்௿
      சோற்று துறைதுருத்தி யுள்ளார் போலுஞ்௿
      சிலையினார் செங்க ணரவர் போலுந்௿
      திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே. 6.82.8
      821 அல்ல லடியார கறுப்பார் போலும்௿
      அமருலக தம்மடைந்தார காட்சி போலும்௿
      நல்லமும் நல்லூரும் மேயார் போலும்௿
      நள்ளாறு நாளும் பிரியார் போலும்௿
      முல்லை முகைநகையாள் பாகர் போலும்௿
      முன்னமே தோன்றி முளைத்தார் போலுந்௿
      தில்லை நடமாடு தேவர் போலுந்௿
      திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே. 6.82.9
      822 உறைப்புடைய இராவணன்பொன் மலையை கையால்௿
      ஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச௿
      நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும்௿
      நிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும்௿
      பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்௿
      பெண்ணா ணுருவாகி நின்றார் போலுஞ்௿
      சிறப்புடைய அடியார்க கினியார் போலுந்௿
      திருச்சாய்க்கா டினிதுறையுஞ் செல்வர் தாமே. 6.82.10
      ௿
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - சாயாவனேசுவரர்௿
      தேவியார் - குயிலினும்நன்மொழியம்மை.௿
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.83 திருப்பாசூர் - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      823 விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி௿
      வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற௿
      எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி௿
      ஏழுலகு தொழுதேத்தி காண நின்ற௿
      கண்ணாகி மணியாகி காட்சி யாகிக்௿
      காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற௿
      பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய௿
      பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே. 6.83.1
      824 வேதமோர் நான்காயா றங்க மாகி௿
      விரிக்கின்ற பொருட்கெல்லாம் வித்து மாகிக்௿
      கூதலா பொழிகின்ற மாரி யாகிக்௿
      குவலயங்கள் முழுதுமா கொண்ட லாகிக்௿
      காதலால் வானவர்கள் போற்றி யென்று௿
      கடிமலர்க ளவைதூவி ஏத்த நின்ற௿
      பாதியோர் மாதினனை பாசூர் மேய௿
      பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே. 6.83.2
      825 தடவரைக ளேழுமா காற்றா தீயாய்த்௿
      தண்விசும்பா தண்விசும்பி னுச்சி யாகிக்௿
      கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞால மாகிக்௿
      காண்கின்ற கதிரவனும் மதியு மாகிக்௿
      குடமுழவ சதிவழியே அனல்கை யேந்திக்௿
      கூத்தாட வல்ல குழக னாகிப்௿
      படவரவொன் றதுவாட்டி பாசூர் மேய௿
      பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே. 6.83.3
      826 நீராருஞ் செஞ்சடைமேல் அரவங் கொன்றை௿
      நிறைமதிய முடன்சூடி நீதி யாலே௿
      சீராரும் மறையோதி உலக முய்யச்௿
      செழுங்கடலை கடைந்தகடல் நஞ்ச முண்ட௿
      காராருங் கண்டனை கச்சி மேய௿
      கண்ணுதலை கடலொற்றி கருதி னானைப்௿
      பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப்௿
      பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே. 6.83.4
      827 வேடனாய் விசயன்றன் வியப்பை காண்பான்௿
      விற்பிடித்து கொம்புடைய ஏன தின்பின்௿
      கூடினார் உமையவளுங் கோலங் கொள்ளக்௿
      கொலைப்பகழி யுடன்கோத்து கோர பூசல்௿
      ஆடினார் பெருங்கூத்து காளி காண௿
      அருமறையோ டாறங்கம் ஆய்ந்து கொண்டு௿
      பாடினார் நால்வேதம் பாசூர் மேய௿
      பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே. 6.83.5
      828 புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலாற்௿
      பொதுப்பந்தர் அதுவிழைத்து சருகால் மேய்ந்த௿
      சித்தியினால் அரசாண்டு சிறப்பு செய்யச்௿
      சிவகணத்து புகப்பெய்தார் திறலான் மிக்க௿
      வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு௿
      விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப்௿
      பத்தர்களு கின்னமுதாம் பாசூர் மேய௿
      பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே. 6.83.6
      829 இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார்௿
      இடைமருதோ டேகம்ப தென்றும் நீங்கார்௿
      அணைவரியர் யாவர்க்கும் ஆதி தேவர்௿
      அருமந்த நன்மையெலாம் அடியார கீவர்௿
      தணல்முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித்௿
      தத்துவனை சாந்தகிலி னளறு தோய்ந்த௿
      பணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேய௿
      பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே. 6.83.7
      830 அண்டவர்கள் கடல்கடைய அதனு டோ ன்றி௿
      அதிர்ந்தெழுந்த ஆலாலம் வேலை ஞாலம்௿
      எண்டிசையுஞ் சுடுகின்ற ஆற்றை கண்டும்௿
      இமைப்பளவில் உண்டிருண்ட கண்டர் தொண்டர்௿
      வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று௿
      வானவர்கள் தானவர்கள் வணங்கி யேத்தும்௿
      பண்டரங்க வேடனையெம் பாசூர் மேய௿
      பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே. 6.83.8
      831 ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை௿
      நான்முகனு மறியாத நெறியான் கையிற்௿
      சூலத்தால் அந்தகனை சுருள கோத்துத்௿
      தொல்லுலகிற் பல்லுயிரை கொல்லுங் கூற்றைக்௿
      காலத்தா லுதைசெய்து காதல் செய்த௿
      அந்தணனை கைக்கொண்ட செவ்வான் வண்ணர்௿
      பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேய௿
      பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே. 6.83.9
      832 வேந்தன்நெடு முடியுடைய அரக்கர் கோமான்௿
      மெல்லியலாள் உமைவெருவ விரைந்தி டோ டிச்௿
      சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத்௿
      தடக்கைகளா லெடுத்திடலு தாளா லூன்றி௿
      ஏந்துதிரள் திண்டோ ளு தலைகள் பத்தும் ௿
      இறுத்தவன்றன் இசைகேட்டு விரக்கங் கொண்ட௿
      பாந்தளணி சடைமுடியெம் பாசூர் மேய௿
      பரஞ்சுடரை கண்டடியேன் உய்ந்த வாறே. 6.83.1
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.84 திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      833 பெருந்தகையை பெறற்கரிய மாணி கத்தைப்௿
      பேணிநினை தெழுவார்தம் மனத்தே மன்னி௿
      இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்௿
      எழுந்தருளி இருந்தானை எண்டோ ள் வீசி௿
      அருந்திறன்மா நடமாடும் அம்மான் றன்னை௿
      அங்கனக சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்௿
      திருந்துமறை பொருள்நால்வர கருள்செய் தானைச்௿
      செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 6.84.1
      834 துங்கநக தாலன்றி தொலையா வென்றித்௿
      தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட௿
      அங்கனக திருமாலும் அயனு தேடும்௿
      ஆரழலை அனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து௿
      மங்கநக தான்வல்ல மருந்து தன்னை௿
      வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற௿
      செங்கனக திரள்தோளெஞ் செல்வன் றன்னைச்௿
      செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 6.84.2
      835 உருகுமன தடியவர்க கூறு தேனை௿
      உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற௿
      பெருகுநிலை குறியாளர் அறிவு தன்னைப்௿
      பேணியஅ தணர்க்குமறை பொருளை பின்னும்௿
      முருகுவிரி நறுமலர்மே லயற்கும் மாற்கும்௿
      முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த௿
      திருகுகுழல் உமைநங்கை பங்கன் றன்னைச்௿
      செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 6.84.3
      836 கந்தமலர கொன்றையணி சடையான் றன்னைக்௿
      கதிர்விடுமா மணிபிறங்கு கனக சோதிச்௿
      சந்தமலர தெரிவையொரு பாக தானைச்௿
      சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்௿
      பந்தமறு தாளாக்கி பணிகொண் டாங்கே௿
      பன்னியநூற் றமிழ்மாலை பாடு வித்தென்௿
      சிந்தை கறுத்ததிரு வருளி னானைச்௿
      செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 6.84.4
      837 நஞ்சடைந்த கண்டத்து நாதன் றன்னை௿
      நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக௿
      வெஞ்சினத்தீ விழித்ததொரு நயன தானை௿
      வியன்கெடில வீரட்டம் மேவி னானை௿
      மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி௿
      மதிலாரூ ரிடங்கொண்ட மைந்தன் றன்னைச்௿
      செஞ்சினத்த திரிசூல படையான் றன்னைச்௿
      செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 6.84.5
      838 கன்னியையங் கொருசடையிற் கரந்தான் றன்னைக்௿
      கடவூரில் வீரட்டங் கருதி னானைப்௿
      பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் றன்னைப்௿
      பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்௿
      பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் றன்னைப்௿
      பரிந்திமையோர் தொழுதேத்தி பரனே யென்று௿
      சென்னிமிசை கொண்டணிசே வடியி னானைச்௿
      செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 6.84.6
      839 எத்திக்கு மாய்நின்ற இறைவன் றன்னை௿
      ஏகம்பம் மேயானை இல்லா தெய்வம்௿
      பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்௿
      புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்௿
      பத்திக்கே வழிகாட்டி பாவ தீர்த்துப்௿
      பண்டைவினை பயமான எல்லாம் போக்கித்௿
      தித்தித்தென் மனத்துள்ளே ஊறு தேனைச்௿
      செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 6.84.7
      840 கல்லாதார் மனத்தணுகா கடவுள் தன்னைக்௿
      கற்றார்கள் உற்றோருங் காத லானைப்௿
      பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும்௿
      பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொ டானை௿
      நில்லாத நிணக்குரம்பை பிணக்கம் நீங்க௿
      நிறைதவத்தை அடியேற்கு நிறைவி தென்றுஞ்௿
      செல்லாத செந்நெறிக்கே செல்வி பானைச்௿
      செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 6.84.8
      841 அரியபெரும் பொருளாகி நின்றான் றன்னை௿
      அலைகடலில் ஆலால மமுது செய்த௿
      கரியதொரு கண்டத்து செங்க ணேற்றுக்௿
      கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை௿
      உரியபல தொழிற்செய்யு மடியார் தங்கட்௿
      குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்௿
      தெரிவையொரு பாகத்து சேர்த்தி னானைச்௿
      செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 6.84.9
      842 போரரவம் மால்விடையொன் றூர்தி யானைப்௿
      புறம்பயமும் புகலூரும் மன்னி னானை௿
      நீரரவ செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்௿
      நீங்காமை வைத்தானை நிமலன் றன்னைப்௿
      பேரரவ புட்பகத்தே ருடைய வென்றிப்௿
      பிறங்கொளிவா ளரக்கன்முடி யிடி செற்ற௿
      சீரரவ கழலானை செல்வன் றன்னைச்௿
      செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 6.84.1
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - கணபதீசுவரர்௿ தேவியார்
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.85 திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      843 ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா௿
      அடியவர்க கன்பன்காண் ஆனை தோலைப்௿
      போர்த்தான்காண் புரிசடைமேற் புனலேற் றான்காண்௿
      புறங்காட்டி லாடல் புரிந்தான் றான்காண்௿
      காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங்௿
      கனைகடல்வாய் நஞ்சதனை கண்ட துள்ளே௿
      சேர்த்தான்காண் திருமுண்டீ சரத்து மேய௿
      சிவலோகன் காணவனென் சிந்தை யானே. 6.85.1
      844 கருத்தன்காண் கமலத்தோன் றலையி லொன்றைக்௿
      காய்ந்தான்காண் பாய்ந்தநீர் பரந்த சென்னி௿
      ஒருத்தன்காண் உமையவளோர் பாக தான்காண்௿
      ஓருருவின் மூவுருவா யொன்றாய் நின்ற௿
      விருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்௿
      மெய்யடியா ருள்ளத்தே விரும்பி நின்ற௿
      திருத்தன்காண் திருமுண்டீ சரத்து மேய௿
      சிவலோகன் காணவனென் சிந்தை யானே. 6.85.2
      845 நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண்௿
      நாதன்காண் கீதத்தை நவிற்றி னான்காண்௿
      இன்பன்காண் இமையாமு கண்ணி னான்காண்௿
      ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட்௿
      கன்பன்காண் ஆரழல தாடி னான்காண்௿
      அவனிவனென் றியாவர்க்கும் அறிய வொண்ணாச்௿
      செம்பொன்காண் திருமுண்டீ சரத்து மேய௿
      சிவலோகன் காணவனென் சிந்தை யானே. 6.85.3
      846 மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்௿
      முன்னுமா பின்னுமாய் முடிவா னான்காண்௿
      காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண்௿
      கங்காளன் காண்கயிலை மலையி னான்காண்௿
      ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண்௿
      ஆரழலாய் அயற்கரிக்கும் அறிய வொண்ணாத்௿
      தேவன்காண் திருமுண்டீ சரத்து மேய௿
      சிவலோகன் காணவனென் சிந்தை யானே. 6.85.4
      847 கானவன்காண் கானவனா பொருதான் றான்காண்௿
      கனலாட வல்லான்காண் கையி லேந்தும்௿
      மானவன்காண் மறைநான்கு மாயி னான்காண்௿
      வல்லேறொன் றதுவேற வல்லான் றான்காண்௿
      ஊனவன்காண் உலகத்து குயிரா னான்காண்௿
      உரையவன்காண் உணர்வவன்காண் உணர்ந்தார கென்றுந்௿
      தேனவன்காண் திருமுண்டீ சரத்து மேய௿
      சிவலோகன் காணவனென் சிந்தை யானே. 6.85.5
      848 உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்௿
      ஒழிவற நின்றெங்கு முலப்பி லான்காண்௿
      புற்றரவே ஆடையுமா பூணு மாகிப்௿
      புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்௿
      நற்றவன்காண் அடியடைந்த மாணி காக௿
      நணுகியதோர் பெருங்கூற்றை சேவ டியினாற்௿
      செற்றவன்காண் திருமுண்டீ சரத்து மேய௿
      சிவலோகன் காணவனென் சிந்தை யானே. 6.85.6
      849 உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்வி௿
      உருண்டோ ட தொடர்ந்தருக்கன் பல்லை யெல்லாந்௿
      தகர்த்தவன்காண் தக்கன்றன் தலையை செற்ற௿
      தலையவன்காண் மலைமகளாம் உமையை சால௿
      மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் வேள்வி௿
      வந்தவியுண் டவரோடு மதனை யெல்லாஞ்௿
      சிதைத்தவன்காண் திருமுண்டீ சரத்து மேய௿
      சிவலோகன் காணவனென் சிந்தை யானே. 6.85.7
      850 உரிந்தவுடை யார்துவரா லுடம்பை மூடி௿
      உழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம்௿
      பரிந்தவன்காண் பனிவரைமீ பண்ட மெல்லாம்௿
      பறித்துடனே நிரந்துவரு பாய்நீர பெண்ணை௿
      நிரந்துவரும் இருகரையு தடவா வோடி௿
      நின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித்௿
      திரிந்துலவு திருமுண்டீ சரத்து மேய௿
      சிவலோகன் காணவனென் சிந்தை யானே. 6.85.8
      இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 6.85.9
      851 அறுத்தவன்காண் அடியவர்கள் அல்ல லெல்லாம்௿
      அரும்பொருளாய் நின்றவன்காண் அனங்க னாகம்௿
      மறுத்தவன்காண் மலைதன்னை மதியா தோடி௿
      மலைமகள்தன் மனம்நடுங்க வானோ ரஞ்சக்௿
      கறுத்தவனா கயிலாய மெடுத்தோன் கையுங்௿
      கதிர்முடியுங் கண்ணும் பிதுங்கி யோடச்௿
      செறுத்தவன்காண் திருமுண்டீ சரத்து மேய௿
      சிவலோகன் காணவனென் சிந்தை யானே. 6.85.1
      ௿
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - முண்டீசுவரர்௿ தேவியார்
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.86 திருவாலம்பொழில் - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      852 கருவாகி கண்ணுதலாய் நின்றான் றன்னைக்௿
      கமலத்தோன் றலையரிந்த கபா லியை௿
      உருவார்ந்த மலைமகளோர் பாக தானை௿
      உணர்வெலா மானானை ஓசை யாகி௿
      வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை௿
      மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய௿
      திருவானை தென்பரம்பை குடியின் மேய௿
      திருவாலம் பொழிலானை சிந்தி நெஞ்சே. 6.86.1
      853 உரித்தானை களிறதன் றோல் போர்வை யாக௿
      உடையானை உடைபுலியி னதளே யாகத்௿
      தரித்தானை சடையதன்மேற் கங்கை யங்கைத்௿
      தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம்௿
      பரித்தானை பவளமால் வரையன் னானைப்௿
      பாம்பணையான் றனக்கன்றங் காழி நல்கிச்௿
      சிரித்தானை தென்பரம்பை குடியின் மேய௿
      திருவாலம் பொழிலானை சிந்தி நெஞ்சே. 6.86.2
      854 உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானை௿
      ஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளாற்௿
      கருவீன்ற வெங்களவை யறிவான் றன்னைக்௿
      காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக்௿
      கருளீன்ற ஆரமுதை அமரர் கோனை௿
      அள்ளூறி எம்பெருமா னென்பார கென்றுந்௿
      திருவீன்ற தென்பரம்பை குடியின் மேய௿
      திருவாலம் பொழிலானை சிந்தி நெஞ்சே. 6.86.3
      855 பார்முழுதாய் விசும்பாகி பாதா ளமாம்௿
      பரம்பரனை சுரும்பமருங் குழலாள் பாகத்௿
      தாரமுதாம் அணிதில்லை கூத்தன் றன்னை௿
      வாட்போக்கி யம்மானை எம்மா னென்று௿
      வாரமதா மடியார்க்கு வார மாகி௿
      வஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ்௿
      சீரரசை தென்பரம்பை குடியின் மேய௿
      திருவாலம் பொழிலானை சிந்தி நெஞ்சே. 6.86.4
      856 வரையார்ந்த மடமங்கை பங்கன் றன்னை௿
      வானவர்க்கும் வானவனை மணியை முத்தை௿
      அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்த௿
      அம்மானை தம்மானை அடியார கென்றும்௿
      புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் றன்னைப்௿
      பூந்துருத்தி மேயானை புகலூ ரானைத்௿
      திரையார்ந்த தென்பரம்பை குடியின் மேய௿
      திருவாலம் பொழிலானை சிந்தி நெஞ்சே. 6.86.5
      857 விரிந்தானை குவிந்தானை வேத வித்தை௿
      வியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் றன்னை௿
      அரிந்தானை சலந்தரன்றன் உடலம் வேறா௿
      ஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப்௿
      பரிந்தானை பல்லசுரர் புரங்கள் மூன்றும்௿
      பாழ்படுப்பான் சிலைமலைநா ணேற்றி யம்பு௿
      தெரிந்தானை தென்பரம்பை குடியின் மேய௿
      திருவாலம் பொழிலானைச்சிந்தி நெஞ்சே. 6.86.6
      858 பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப்௿
      புறம்புறமே சோதித்த புனிதன் றன்னை௿
      எல்லாரு தன்னையே இகழ அந்நாள்௿
      இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச்௿
      சொல்லாதா ரவர்தம்மை சொல்லா தானைத்௿
      தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச்௿
      செல்லாத நெறிசெலுத்த வல்லான் றன்னைத்௿
      திருவாலம் பொழிலானை சிந்தி நெஞ்சே. 6.86.7
      859 ஐந்தலைய நாகவணை கிடந்த மாலோ௿
      டயன்தேடி நாடரிய அம்மான் றன்னைப்௿
      பந்தணவு மெல்விரலாள் பாக தானைப்௿
      பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் றன்னைப்௿
      பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப்௿
      பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச்௿
      சிந்தியவெ தீவினைகள் தீர்ப்பான் றன்னைத்௿
      திருவாலம் பொழிலானை சிந்தி நெஞ்சே. 6.86.8
      860 கையிலுண் டுழல்வாருஞ் சாக்கி யருங்௿
      கல்லாத வன்மூடர கல்லா தானைப்௿
      பொய்யிலா தவர்க்கென்றும் பொய்யி லானைப்௿
      பூணாகம் நாணாக பொருப்பு வில்லாக்௿
      கையினார் அம்பெரிகால் ஈர்க்கு கோலாக்௿
      கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த௿
      செய்யினார் தென்பரம்பை குடியின் மேய௿
      திருவாலம் பொழிலானை சிந்தி நெஞ்சே. 6.86.9
      இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 6.86.1
      ௿
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - ஆத்மநாதீசுவரர்௿ தேவியார்
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.87 திருச்சிவபுரம் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      861 வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண்௿
      வடமொழியு தென்றமிழும் மறைகள் நான்கும்௿
      ஆனவன்காண் ஆனைந்து மாடி னான்காண்௿
      ஐயன்காண் கையிலன லேந்தி யாடுங்௿
      கானவன்காண் கானவனு கருள்செய் தான்காண்௿
      கருதுவார் இதயத்து கமல தூறுந்௿
      தேனவன்காண் சென்றடையா செல்வன் றான்காண்௿
      சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 6.87.1
      862 நக்கன்காண் நக்கரவ மரையி லார்த்த௿
      நாதன்காண் பூதகண மாட ஆடுஞ்௿
      சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்௿
      துடியிடையாள் துணைமுலைக்கு சேர்வ தாகும்௿
      பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற் றான்காண்௿
      புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற௿
      திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்௿
      சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 6.87.2
      863 வம்பின்மலர குழலுமையாள் மணவா ளன்காண்௿
      மலரவன்மால் காண்பரிய மைந்தன் றான்காண்௿
      கம்பமத கரிபிளிற வுரிசெய் தோன்காண்௿
      கடல்நஞ்ச முண்டிருண்ட கண்ட தான்காண்௿
      அம்பர்நகர பெருங்கோயி லமர்கின் றான்காண்௿
      அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்௿
      செம்பொனென திகழ்கின்ற உருவ தான்காண்௿
      சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 6.87.3
      864 பித்தன்காண் தக்கன்றன் வேள்வி யெல்லாம்௿
      பீடழி சாடி யருள்கள் செய்த௿
      முத்தன்காண் முத்தீயு மாயி னான்காண்௿
      முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க௿
      அத்தன்காண் புத்தூரி லமர்ந்தான் றான்காண்௿
      அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட௿
      சித்தன்காண் சித்தீ சரத்தான் றான்காண்௿
      சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 6.87.4
      865 தூயவன்காண் நீறு துதைந்த மேனி௿
      துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்௿
      தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்௿
      சிறுமான்கொள் செங்கையெம் பெருமான் றான்காண்௿
      ஆயவன்காண் ஆரூரி லம்மான் றான்காண்௿
      அடியார்க காரமுத மாயி னான்காண்௿
      சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்௿
      சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 6.87.5
      866 பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்௿
      பயிர்வளர்க்கு துளியவன்காண் துளியில் நின்ற௿
      நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வி தான்காண்௿
      நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்௿
      பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளை பன்றி௿
      பிரியாது பலநாளும் வழிப டேத்துஞ்௿
      சீரவன்காண் சீருடைய தேவர கெல்லாஞ்௿
      சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 6.87.6
      867 வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்௿
      வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்௿
      மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்௿
      வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க௿
      கையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண்௿
      காமரங்கம் பொடிவீழ்த்த கண்ணி னான்காண்௿
      செய்யவன்காண் செய்யவளை மாலு கீந்த௿
      சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 6.87.7
      இப்பதிகத்தில் 89-ம் செய்யுட்கள் மறைந்து போயின. 6.87.8-9
      868 கலையாரு நூலங்க மாயி னான்காண்௿
      கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி௿
      மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற௿
      மண்ணாகி விண்ணாகி நின்றான் றான்காண்௿
      தலையாய மலையெடுத்த தகவி லோனைத்௿
      தகர்ந்துவிழ ஒருவிரலாற் சாதி தாண்ட௿
      சிலையாரும் மடமகளோர் கூறன் றான்காண்௿
      சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 6.87.1
      ௿
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர்௿ தேவியார்
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.88 திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      869 ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை௿
      அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்௿
      ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை௿
      எழுபிறப்பும் எனையாளா வுடையான் றன்னை௿
      ஊராரும் படநாக மாட்டு வானை௿
      உயர்புகழ்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்௿
      சீராரும் வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
      சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 6.88.1
      870 ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா௿
      அமரர்தொழுங் கழலானை அமலன் றன்னைச்௿
      சோதிமதி கலைதொலை தக்க னெச்சன்௿
      சுடரிரவி அயிலெயிறு தொலைவி தானை௿
      ஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும்௿
      உயர்புகழார் தருமோமாம் புலியூர் மன்னுந்௿
      தீதிற்றிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
      சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 6.88.2
      871 வருமிக்க மதயானை யுரித்தான் றன்னை௿
      வானவர்கோன் தோளனைத்தும் மடிவி தானைத்௿
      தருமிக்க குழலுமையாள் பாகன் றன்னைச்௿
      சங்கரனெம் பெருமானை தரணி தன்மேல்௿
      உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி௿
      உத்தமர்வாழ் தருமோமாம் புலியூர் மன்னுந்௿
      திருமிக்க வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
      சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 6.88.3
      872 அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ௿
      அழல்விழித்த கண்ணானை அமரர் கோனை௿
      வென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ௿
      விளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் றன்னை௿
      ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும்௿
      உயர்புகழ்நான் மறையோமாம் புலியூர் நாளுந்௿
      தென்றல்மலி வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
      சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 6.88.4
      873 பாங்குடைய எழிலங்கி யருச்சனைமுன் விரும்பப்௿
      பரிந்தவனு கருள்செய்த பரமன் றன்னைப்௿
      பாங்கிலா நரகதனிற் தொண்ட ரானார்௿
      பாராத வகைபண்ண வல்லான் றன்னை௿
      ஓங்குமதிற் புடைதழுவும் எழிலோமாம் புலியூர்௿
      உயர்புகழ தணரேத்த வுலகர கென்றுந்௿
      தீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
      சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 6.88.5
      874 அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் றன்னை௿
      ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்௿
      வருந்துயர தவிர்ப்பானை உமையாள் நங்கை௿
      மணவாள நம்பியையென் மருந்து தன்னைப்௿
      பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்௿
      பொழில்கெழுவு தருமோமாம் புலியூர் நாளுந்௿
      திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
      சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 6.88.6
      875 மலையானை வருமலையன் றுரிசெய் தானை௿
      மறையானை மறையாலும் அறிய வொண்ணாக்௿
      கலையானை கலையாருங் கையி னானைக்௿
      கடிவானை அடியார்கள் துயர மெல்லாம்௿
      உலையாத அந்தணர்கள் வாழு மோமாம்௿
      புலியூரெம் உத்தமனை புரமூன் றெய்த௿
      சிலையானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
      சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 6.88.7
      876 சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச்௿
      செழுமதியும் படஅரவும் உடன்வை தானைச்௿
      சார்ந்தோர்க கினியானை தன்னொ பில்லாத்௿
      தழலுருவை தலைமகனை தகைநால் வேதம்௿
      ஓர்ந்தோதி பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர்௿
      உள்ளானை கள்ளாத அடியார் நெஞ்சிற்௿
      சேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
      சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 6.88.8
      877 வார்கெழுவு முலையுமையாள் வெருவ வன்று௿
      மலையெடுத்த வாளரக்கன் றோளு தாளும்௿
      ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டே௿
      இன்னிசைகே டிருந்தானை இமையோர் கோனைப்௿
      பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப்௿
      பைம்பொழில்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்௿
      சீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
      சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 6.88.9
      இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 6.88.1
      ௿
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - துயர்தீர்த்தசெல்வர்௿ தேவியார்
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.89 திருவின்னம்பர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      878 அல்லி மலர்நாற்ற துள்ளார் போலும்௿
      அன்புடையார் சிந்தை யகலார் போலுஞ்௿
      சொல்லின் அருமறைகள் தாமே போலுந்௿
      தூநெறிக்கு வழிகாட்டு தொழிலார் போலும்௿
      வில்லிற் புரமூன் றெரித்தார் போலும்௿
      வீங்கிருளும் நல்வெளியு மானார் போலும்௿
      எல்லி நடமாட வல்லார் போலும்௿
      இன்னம்பர தான்தோன்றி யீச னாரே. 6.89.1
      879 கோழி கொடியோன்றன் தாதை போலுங்௿
      கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்௿
      ஊழி முதல்வரு தாமே போலும்௿
      உள்குவார் உள்ளத்தி னுள்ளார் போலும்௿
      ஆழித்தேர் வித்தகரு தாமே போலும்௿
      அடைந்தவர்க கன்பராய் நின்றார் போலும்௿
      ஏழு பிறவிக்கு தாமே போலும்௿
      இன்னம்பர தான்தோன்றி யீச னாரே. 6.89.2
      880 தொண்டர்கள் தந்தகவி னுள்ளார் போலுந்௿
      தூநெறிக்கு தூநெறியாய் நின்றார் போலும்௿
      பண்டிருவர் காணா படியார் போலும்௿
      பத்தர்கள்தஞ் சி திருந்தார் போலுங்௿
      கண்ட மிறையே கறுத்தார் போலுங்௿
      காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும்௿
      இண்டை சடைசேர் முடியார் போலும்௿
      இன்னம்பர தான்தோன்றி யீச னாரே. 6.89.3
      881 வான திளந்திங்க கண்ணி தன்னை௿
      வளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும்௿
      ஊனொத்த வேலொன் றுடையார் போலும்௿
      ஒளிநீறு பூசு மொருவர் போலுந்௿
      தானத்தின் முப்பொழுது தாமே போலுந்௿
      தம்மின் பிறர்பெரியா ரில்லை போலும்௿
      ஏன தெயிறிலங்க பூண்டார் போலும்௿
      இன்னம்பர தான்தோன்றி யீச னாரே. 6.89.4
      882 சூழு துயர மறுப்பார் போலுந்௿
      தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்௿
      ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும்௿
      ஆட லுகந்த அழகர் போலுந்௿
      தாழ்வின் மனத்தேனை யாளா கொண்டு௿
      தன்மை யளித்த தலைவர் போலும்௿
      ஏழு பிறப்பு மறுப்பார் போலும்௿
      இன்னம்பர தான்தோன்றி யீச னாரே. 6.89.5
      883 பா தணையுஞ் சிலம்பர் போலும்௿
      பாரூர் விடையொன் றுடையார் போலும்௿
      பூத படையாள் புனிதர் போலும்௿
      பூம்புகலூர் மேய புராணர் போலும்௿
      வேத பொருளாய் விளைவார் போலும்௿
      வேடம் பரவி திரியு தொண்டர்௿
      ஏத படாவண்ணம் நின்றார் போலும்௿
      இன்னம்பர தான்தோன்றி யீச னாரே. 6.89.6
      884 பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்௿
      பத்தர்கள்தஞ் சி திருந்தார் போலுங்௿
      கல்லாதார் காட்சி கரியார் போலுங்௿
      கற்றவர்கள் ஏதங் களைவார் போலும்௿
      பொல்லாத பூத படையார் போலும்௿
      பொருகடலும் ஏழ்மலையு தாமே போலும்௿
      எல்லாரு மே தகுவார் போலும்௿
      இன்னம்பர தான்தோன்றி யீச னாரே. 6.89.7
      885 மட்டு மலியுஞ் சடையார் போலும்௿
      மாதையோர் பாக முடையார் போலுங்௿
      கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலுங்௿
      காலன்றன் வாழ்நாள் கழிப்பார் போலும்௿
      நட்டம் பயின்றாடும் நம்பர் போலும்௿
      ஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும்௿
      எட்டு திசைகளு தாமே போலும்௿
      இன்னம்பர தான்தோன்றி யீச னாரே. 6.89.8
      886 கருவுற்ற காலத்தே என்னை யாண்டு௿
      கழற்போது தந்தளித்த கள்வர் போலுஞ்௿
      செருவிற் புரமூன்று மட்டார் போலுந்௿
      தேவர்க்கு தேவராஞ் செல்வர் போலும்௿
      மருவி பிரியாத மைந்தர் போலும்௿
      மலரடிகள் நாடி வணங்க லுற்ற௿
      இருவர கொருவராய் நின்றார் போலும்௿
      இன்னம்பர தான்தோன்றி யீச னாரே. 6.89.9
      887 அலங்கற் சடைதாழ ஐய மேற்று௿
      அரவ மரையார்க்க வல்லார் போலும்௿
      வலங்கை மழுவொன் றுடையார் போலும்௿
      வான்றக்கன் வேள்வி சிதைத்தார் போலும்௿
      விலங்கல் எடுத்துகந்த வெற்றி யானை௿
      விறலழித்து மெய்ந்நரம்பாற் கீதங் கேட்டன்௿
      றிலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்௿
      இன்னம்பர தான்தோன்றி யீச னாரே. 6.89.10
      ௿
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர்௿
      தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.௿
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.90 திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      888 மூவிலைவேற் சூலம்வல னேந்தி னானை௿
      மூன்றுசுடர கண்ணானை மூர்த்தி தன்னை௿
      நாவலனை நரைவிடையொன் றேறு வானை௿
      நால்வேத மாறங்க மாயி னானை௿
      ஆவினிலை துகந்தானை அமரர் கோவை௿
      அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங்௿
      காவலனை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டு தேனே. 6.90.1
      889 தலையேந்து கையானை என்பார தானைச்௿
      சவந்தாங்கு தோளானை சாம்ப லானைக்௿
      குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக்௿
      கோணாக மசைத்தானை குலமாங் கைலை௿
      மலையானை மற்றொப்பா ரில்லா தானை௿
      மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங்௿
      கலையானை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டு தேனே. 6.90.2
      890 தொண்டர்குழா தொழுதேத்த அருள்செய் வானைச்௿
      சுடர்மழுவா படையானை சுழிவான் கங்கைத்௿
      தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச்௿
      செக்கர்வா னொளியானை சேரா தெண்ணிப்௿
      பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம்௿
      பாழ்படுத்து தலையறுத்து பற்கண் கொண்ட௿
      கண்டகனை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டு தேனே. 6.90.3
      891 விண்ணவனை மேருவில்லா வுடையான் றன்னை௿
      மெய்யாகி பொய்யாகி விதியா னானைப்௿
      பெண்ணவனை ஆணவனை பித்தன் றன்னைப்௿
      பிணமிடுகா டுடையானை பெருந்த கோனை௿
      எண்ணவனை எண்டிசையுங் கீழு மேலும்௿
      இருவிசும்பு மிருநிலமு மாகி தோன்றுங்௿
      கண்ணவனை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டு தேனே. 6.90.4
      892 உருத்திரனை உமாபதியை உலகா னானை௿
      உத்தமனை நித்திலத்தை ஒருவன் றன்னைப்௿
      பருப்பதத்தை பஞ்சவடி மார்பி னானைப்௿
      பகலிரவாய் நீர்வெளியா பரந்து நின்ற௿
      நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொ பானை௿
      நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்௿
      கருத்தவனை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டு தேனே. 6.90.5
      893 ஏடேறு மலர்க்கொன்றை அரவு தும்பை௿
      இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கைச்௿
      சேடெறிந்த சடையானை தேவர் கோவைச்௿
      செம்பொன்மால் வரையானை சேர்ந்தார் சிந்தைக்௿
      கேடிலியை கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
      கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங்௿
      காடவனை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டு தேனே. 6.90.6
      894 நாரணனும் நான்முகனு மறியா தானை௿
      நால்வே துருவானை நம்பி தன்னைப்௿
      பாரிடங்கள் பணிசெ பலிகொண் டுண்ணும்௿
      பால்வணனை தீவணனை பகலா னானை௿
      வார்பொதியும் முலையாளோர் கூறன் றன்னை௿
      மானிடங்கை யுடையானை மலிவார் கண்டங்௿
      கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டு தேனே. 6.90.7
      895 வானவனை வலிவலமும் மறைக்கா டானை௿
      மதிசூடும் பெருமானை மறையோன் றன்னை௿
      ஏனவனை இமவான்றன் பேதை யோடும்௿
      இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத்௿
      தேனவனை தித்திக்கும் பெருமான் றன்னைத்௿
      தீதிலா மறையவனை தேவர் போற்றுங்௿
      கானவனை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டு தேனே. 6.90.8
      896 நெருப்புருவு திருமேனி வெண்ணீற் றானை௿
      நினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத்௿
      தருக்கழிய முயலகன்மேற் றாள்வை தானைச்௿
      சலந்தரனை தடிந்தோனை தக்கோர் சிந்தை௿
      விருப்பவனை விதியானை வெண்ணீற் றானை௿
      விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங்௿
      கருத்தவனை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டு தேனே. 6.90.9
      897 மடலாழி தாமரையா யிரத்தி லொன்று௿
      மலர்க்கணிட திடுதலுமே மலிவான் கோலச்௿
      சுடராழி நெடுமாலு கருள்செய் தானைத்௿
      தும்பியுரி போர்த்தானை தோழன் விட்ட௿
      அடலாழி தேருடைய இலங்கை கோனை௿
      அருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக்௿
      கடலானை கஞ்சனூ ராண்ட கோவைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டு தேனே. 6.90.10
      ௿
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - அக்கினீசுவரர்௿ தேவியார்
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.91 திருவெறும்பியூர் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      898 பன்னியசெ தமிழறியேன் கவியேன் மாட்டேன்௿
      எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய௿
      தன்னையுந்தன் றிறத்தறியா பொறியி லேனைத்௿
      தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி௿
      அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்௿
      அடைந்தேனை தொடர்ந்தென்னை யாளா கொண்ட௿
      தென்னெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
      செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே. 6.91.1
      899 பளிங்கினிழ லுட்பதித்த சோதி யானைப்௿
      பசுபதியை பாசுபத வேட தானை௿
      விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை௿
      வேதியனை விண்ணவனை மேவி வையம்௿
      அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்௿
      அருமருந்தை ஆமா றறிந்தென் னுள்ளந்௿
      தெளிந்தெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
      செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே. 6.91.2
      900 கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்௿
      கடுஞ்சுடரை படிந்துகிட தமர ரேத்தும்௿
      உருவையண்ட தொருமுதலை யோத வேலி௿
      உலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற௿
      மருவைவென்ற குழன்மடவாள் பாகம் வைத்த௿
      மயானத்து மாசிலா மணியை வாசத்௿
      திருவெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
      செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே. 6.91.3
      901 பகழிபொழி தடலரக்கர் புரங்கள் மூன்றும்௿
      பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னைப்௿
      புகழுமன்பர கின்பமரும் அமுதை தேனைப்௿
      புண்ணியனை புவனியது முழுதும் போக௿
      உமிழுமம்பொற் குன்றத்தை முத்தின் றூணை௿
      உமையவள்தம் பெருமானை இமையோ ரேத்துந்௿
      திகழெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
      செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே. 6.91.4
      902 பாரிடங்க ளுடன்பாட பயின்று நட்டம்௿
      பயில்வானை அயில்வாய சூல மேந்தி௿
      நேரிடும்போர் மிகவல்ல நிமலன் றன்னை௿
      நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்௿
      பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்௿
      பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்௿
      சீரெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
      செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே. 6.91.5
      903 கார்முகிலா பொழிவானை பொழிந்த முந்நீர்௿
      கரப்பானை கடியநடை விடையொன் றேறி௿
      ஊர்பலவு திரிவானை ஊர தாக௿
      ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு௿
      பேரெழுத்தொன் றுடையானை பிரம னோடு௿
      மாலவனும் இந்திரனும் மந்திரத்தா லேத்துஞ்௿
      சீரெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
      செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே. 6.91.6
      904 நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை௿
      நெறியிலங்கு மிகுகாலும் ஆகா சமும்௿
      வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்௿
      மன்னுயிரும் என்னுயிரு தானாஞ் செம்பொன்௿
      ஆணியென்றும் அஞ்சனமா மலையே யென்றும்௿
      அம்பவள திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ்௿
      சேணெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
      செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே. 6.91.7
      905 அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை௿
      ஆரம்ப குண்டரோ டயர்த்து நாளும்௿
      மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா௿
      மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்௿
      பிறந்தநாள் நாளல்ல வாளா வீசன்௿
      பேர்பிதற்றி சீரடிமை திறத்து ளன்பு௿
      செறிந்தெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
      செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே. 6.91.8
      906 அறிவிலங்கு மனத்தானை அறிவார கன்றி௿
      அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்௿
      பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட௿
      புண்ணியனை பொருதிரைவாய் நஞ்ச முண்ட௿
      குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்௿
      சடையானை மடைதோறுங் கமல மென்பூச்௿
      செறியெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
      செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே. 6.91.9
      907 அருந்தவத்தின் பெருவலியா லறிவ தன்றி௿
      அடலரக்கன் றடவரையை யெடுத்தான் றிண்டோ ள்௿
      முரிந்துநெரி தழிந்துபா தாள முற்று௿
      முன்கைநரம் பினையெடுத்து கீதம் பாட௿
      இருந்தவனை ஏழுலகு மாக்கி னானை௿
      எம்மானை கைம்மாவி னுரிவை போர்த்த௿
      திருந்தெறும்பி யூர்மலைமேன் மாணி கத்தைச்௿
      செழுஞ்சுடரை சென்றடை பெற்றேன் நானே. 6.91.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.92 திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம்
      திருச்சிற்றம்பலம்
      908 மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை௿
      முதுபிணக்கா டுடையானை முதலா னானை௿
      ஆவினிலை துகந்தானை அமரர் கோனை௿
      ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்௿
      பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்௿
      புணர்வரிய பெருமானை புனிதன் றன்னைக்௿
      காவலனை கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே. 6.92.1
      909 பல்லாடு தலைசடைமே லுடையான் றன்னைப்௿
      பாய்புலித்தோ லுடையானை பகவன் றன்னைச்௿
      சொல்லோடு பொருளனைத்து மானான் றன்னைச்௿
      சுடருருவில் என்பறா கோல தானை௿
      அல்லாத காலனைமுன் னடர்த்தான் றன்னை௿
      ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்௿
      கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்௿
      கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே. 6.92.2
      இப்பதிகத்தில் முதலிரண்டு செய்யுட்கள் தவிர ௿
      ஏனைய செய்யுட்கள் மறைந்து போயின. 6.92.3-10
      ௿
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.௿
      சுவாமிபெயர் - வேதகிரீசுவரர்௿
      தேவியார் - பெண்ணினல்லாளம்மை.௿
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.93 பலவகை - திருத்தாண்டகம்
      ௿
      திருச்சிற்றம்பலம்
      910 நேர்ந்தொருத்தி ஒருபாக தடங கண்டு௿
      நிலைதளர ஆயிரமா முகத்தி னோடு௿
      பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயில கண்டு௿
      படவரவும் பனிமதியும் வைத்த செல்வர்௿
      தாந்திருத்தி தம்மனத்தை ஒருக்கா தொண்டர்௿
      தனித்தொருதண் டூன்றிமெய் தளரா முன்னம்௿
      பூந்துருத்தி என்பீ
      பொல்லா புலாற்றுருத்தி போக்க லாமே. 6.93.1
      911 ஐத்தான தகமிடறு சுற்றி யாங்கே௿
      அகத்தடைந்தால் யாதொன்று மிடுவா ரில்லை௿
      மைத்தான கண்மடவார் தங்க ளோடு௿
      மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்௿
      பைத்தான தொண்மதியும் பாம்பும் நீரும்௿
      படர்சடைமேல் வைத்துகந்த பண்பன் மேய௿
      நெய்த்தானம் என்பீ
      நிலாவா புலாற்றானம் நீக்க லாமே. 6.93.2
      912 பொய்யாறா வாறே புனைந்து பேசிப்௿
      புலர்ந்தெழுந்த காலை பொருளே தேடிக்௿
      கையாறா கரண முடையோ மென்று௿
      களித்த மனத்தரா கருதி வாழ்வீர்௿
      நெய்யாறா ஆடிய நீல கண்டர்௿
      நிமிர்புன் சடைநெற்றி கண்ணர் மேய௿
      ஐயாறே என்பீ
      அல்லல்தீர தமருலகம் ஆள லாமே. 6.93.3
      913 இழவொன்று தாமொருவர கிட்டொன் றீயார்௿
      ஈன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்௿
      கழனங்கோ வையாதல் கண்டு தேறார்௿
      களித்த மனத்தரா கருதி வாழ்வீர்௿
      அழனம்மை நீக்குவிக்கும் அரைய னாக்கும்௿
      அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேய௿
      பழனம் பழனமே என்பீ ராகிற்௿
      பயின்றெழுந்த பழவினைநோய் பாற்ற லாமே. 6.93.4
      914 ஊற்று துறையொன்ப துள்நின் றோரீர்௿
      ஒக்க அடைக்கும்போ துணர மாட்டீர்௿
      மாற்று துறைவழிகொண் டோ டா முன்னம்௿
      மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்௿
      வேற்று தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும்௿
      வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய௿
      சோற்றுத்துறை என்பீ
      துயர்நீங்கி தூநெறிக்கண் சேர லாமே. 6.93.5
      915 கலஞ்சுழிக்குங் கருங்கடல்சூழ் வை தன்னிற்௿
      கள்ள கடலி லழுந்தி வாளா௿
      நலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில்௿
      நம்பன்றன் அடியிணைக்கே நவில்வா யாகில்௿
      அலஞ்சுழிக்கும் மன்னாக தன்னான் மேய௿
      அருமறையோ டாறங்க மானார் கோயில்௿
      வலஞ்சுழியே என்பீ
      வல்வினைகள் தீர்ந்துவா னாள லாமே. 6.93.6
      916 தண்டி குண்டோ தரன்பிங் கிருடி௿
      சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்௿
      பண்டை உலகம் படைத்தான் றானும்௿
      பாரை யளந்தான்பல் லாண்டி சைப்பத்௿
      திண்டி வயிற்று சிறுக பூதஞ்௿
      சிலபாட செங்கண் விடையொன் றூர்வான்௿
      கண்டியூர் என்பீ
      கடுகநும் வல்வினையை கழற்ற லாமே. 6.93.7
      917 விடமூக்க பாம்பேபோற் சிந்தி நெஞ்சே௿
      வெள்ளேற்றான் தன்றமரை கண்ட போது௿
      வடமூக்க மாமுனிவர் போல சென்று௿
      மாதவத்தார் மனத்துளார் மழுவா செல்வர்௿
      படமூக்க பாம்பணையிற் பள்ளி யானும்௿
      பங்கயத்து மேலயனும் பரவி காணா௿
      குடமூக்கே என்பீ
      கொடுவினைகள் தீர்ந்தரனை குறுக லாமே. 6.93.8
      918 தண்காட்டா சந்தனமு தவள நீறுந்௿
      தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக்௿
      கண்காட்டா கருவரைபோ லனைய காஞ்சிக்௿
      கார்மயிலஞ் சாயலார் கலந்து காண௿
      எண்காட்டா காடங் கிடமா நின்று௿
      எரிவீசி இரவாடும் இறைவர் மேய௿
      வெண்காடே என்பீ
      வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே. 6.93.9
      919 தந்தையார் தாயா ருடன் பிறந்தார்௿
      தாரமார் புத்திரரார் தாந்தா மாரே௿
      வந்தவா றெங்ஙனே போமா றேதோ௿
      மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா௿
      சிந்தையீர் உமக்கொன்று சொல்ல கேண்மின்௿
      திகழ்மதியும் வாளரவு திளைக்குஞ் சென்னி௿
      எந்தையார் திருநாமம் நமச்சி வாய௿
      என்றெழுவார கிருவிசும்பி லிருக்க லாமே. 6.93.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.94 நின்ற - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      920 இருநிலனா தீயாகி நீரு மாகி௿
      இயமான னாயெறியுங் காற்று மாகி௿
      அருநிலைய திங்களாய் ஞாயி றாகி௿
      ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்௿
      பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும்௿
      பிறருருவு தம்முருவு தாமே யாகி௿
      நெருநலையாய் இன்றாகி நாளை யாகி௿
      நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே. 6.94.1
      921 மண்ணாகி விண்ணாகி மலையு மாகி௿
      வயிரமுமாய் மாணிக்க தானே யாகிக்௿
      கண்ணாகி கண்ணுக்கோர் மணியு மாகிக்௿
      கலையாகி கலைஞான தானே யாகிப்௿
      பெண்ணாகி பெண்ணுக்கோ ராணு மாகிப்௿
      பிரளயத்து கப்பாலோ ரண்ட மாகி௿
      எண்ணாகி எண்ணுக்கோ ரெழுத்து மாகி௿
      எழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே. 6.94.2
      922 கல்லாகி களறாகி கானு மாகிக்௿
      காவிரியா காலாறா கழியு மாகிப்௿
      புல்லாகி புதலாகி பூடு மாகிப்௿
      புரமாகி புரமூன்றுங் கெடுத்தா னாகிச்௿
      சொல்லாகி சொல்லுக்கோர் பொருளு மாகிச்௿
      சுலாவாகி சுலாவுக்கோர் சூழ லாகி௿
      நெல்லாகி நிலனாகி நீரு மாகி௿
      நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே. 6.94.3
      923 காற்றாகி கார்முகிலா காலம் மூன்றாய்க்௿
      கனவாகி நனவாகி கங்கு லாகிக்௿
      கூற்றாகி கூற்றுதைத்தகொல் களிறு மாகிக்௿
      குரைகடலா குரைகடற்கோர் கோமா னுமாய்௿
      நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி௿
      நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி௿
      ஏற்றானாய் ஏறூர்ந்த செல்வ னாகி௿
      எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. 6.94.4
      924 தீயாகி நீராகி திண்மை யாகித்௿
      திசையாகி அத்திசைக்கோர் தெய்வ மாகித்௿
      தாயாகி தந்தையா சார்வு மாகித்௿
      தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்௿
      காயாகி பழமாகி பழத்தில் நின்ற௿
      இரதங்கள் நுகர்வானு தானே யாகி௿
      நீயாகி நானாகி நேர்மை யாகி௿
      நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே. 6.94.5
      925 அங்கமா யாதியாய் வேத மாகி௿
      அருமறையோ டைம்பூத தானே யாகிப்௿
      பங்கமா பலசொல்லு தானே யாகிப்௿
      பான்மதியோ டாதியா பான்மை யாகிக்௿
      கங்கையா காவிரியா கன்னி யாகிக்௿
      கடலாகி மலையாகி கழியு மாகி௿
      எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி௿
      எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. 6.94.6
      926 மாதா பிதாவாகி மக்க ளாகி௿
      மறிகடலும் மால்விசும்பு தானே யாகிக்௿
      கோதா விரியா குமரி யாகிக்௿
      கொல்புலித்தோ லாடை குழக னாகிப்௿
      போதாய மலர்கொண்டு போற்றி நின்று௿
      புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி௿
      யாதானு மெனநினைந்தார கெளிதே யாகி௿
      அழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே. 6.94.7
      927 ஆவாகி ஆவினில் ஐந்து மாகி௿
      அறிவாகி அழலாகி அவியு மாகி௿
      நாவாகி நாவுக்கோர் உரையு மாகி௿
      நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்௿
      பூவாகி பூவுக்கோர் நாற்ற மாகிப்௿
      பூக்குளால் வாசமாய் நின்றா னாகித்௿
      தேவாகி தேவர் முதலு மாகிச்௿
      செழுஞ்சுடரா சென்றடிகள் நின்ற வாறே. 6.94.8
      928 நீராகி நீளகல தானே யாகி௿
      நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்௿
      பேராகி பேருக்கோர் பெருமை யாகிப்௿
      பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி௿
      ஆரேனு தன்னடைந்தார் தம்மை யெல்லாம்௿
      ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்௿
      பாராகி பண்ணாகி பாட லாகிப்௿
      பரஞ்சுடரா சென்றடிகள் நின்ற வாறே. 6.94.9
      929 மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்௿
      மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்௿
      பாலாகி எண்டிசைக்கும் எல்லை யாகிப்௿
      பரப்பாகி பரலோக தானே யாகிப்௿
      பூலோக புவலோக சுவலோ கமாய்ப்௿
      பூதங்க ளாய்ப்புராணன் றானே யாகி௿
      ஏலா தனவெலாம் ஏல்வி பானாய்௿
      எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. 6.94.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.95 தனி - திருத்தாண்டகம்௿
      ௿
      திருச்சிற்றம்பலம்
      930 அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ௿
      அன்புடைய மாமனும் மாமி யும்நீ௿
      ஒப்புடைய மாதரு மொண்பொரு ளும்நீ௿
      ஒருகுலமுஞ் சுற்றமும் ஓரூ ரும்நீ௿
      துய்ப்பனவும் உய்ப்பனவு தோற்று வாய்நீ௿
      துணையாயென் நெஞ்ச துறப்பி பாய்நீ௿
      இப்பொன்நீ இம்மணிநீ இம்மு தும்நீ௿
      இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே. 6.95.1
      931 வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்௿
      வெய்ய வினைப்பகையும் பைய நையும்௿
      எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்௿
      எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்௿
      அம்பவள செஞ்சடைமேல் ஆறு சூடி௿
      அனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்த௿
      செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்௿
      செவ்வான வண்ணரென் சிந்தை யாரே. 6.95.2
      932 ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே௿
      அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே௿
      ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே௿
      உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே௿
      பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே௿
      பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே௿
      காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே௿
      காண்பாரார் கண்ணுதலாய் காட்டா காலே. 6.95.3
      933 நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தி௿
      நலஞ்சுடரே நால்வே தப்பால் நின்ற௿
      சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற௿
      சொலற்கரிய சூழலாய் இதுவுன் றன்மை௿
      நிற்பதொத்து நிலையிலா நெஞ்ச தன்னுள்௿
      நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற௿
      கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்௿
      கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே. 6.95.4
      934 திருக்கோயி லில்லாத திருவி லூருந்௿
      திருவெண்ணீ றணியாத திருவி லூரும்௿
      பருக்கோடி பத்திமையாற் பாடா வூரும்௿
      பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்௿
      விருப்போடு வெண்சங்க மூதா வூரும்௿
      விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்௿
      அருப்போடு மலர்பறித்தி டுண்ணா வூரும்௿
      அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே. 6.95.5
      935 திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற்௿
      தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்௿
      ஒருகாலு திருக்கோயில் சூழா ராகில்௿
      உண்பதன்முன் மலர்பறித்தி டுண்ணா ராகில்௿
      அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்௿
      அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்௿
      பெருநோய்கள் மிகநலி பெயர்த்துஞ் செத்துப்௿
      பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே. 6.95.6
      936 நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்௿
      நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்௿
      மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்௿
      மறைநான்கு மானாயா றங்க மானாய்௿
      பொன்னானாய் மணியானாய் போக மானாய்௿
      பூமிமேற் புகழ்தக்க பொருளே உன்னை௿
      என்னானாய் என்னி
      ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே. 6.95.7
      937 அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்௿
      அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டி கொண்டாய்௿
      எத்தனையும் அரியைநீ எளியை யானாய்௿
      எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்௿
      பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்௿
      பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே௿
      இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ௿
      எம்பெருமான் றிருக்கருணை இருந்த வாறே. 6.95.8
      938 குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்௿
      குற்றமே பெரிதுடையேன் கோல மாய௿
      நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்௿
      நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற௿
      விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தே னல்லேன்௿
      வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்௿
      இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்௿
      என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே. 6.95.9
      939 சங்கநிதி பதுமநிதி இரண்டு தத்து௿
      தரணியொடு வானாள தருவ ரேனும்௿
      மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்௿
      மாதேவர கேகாந்த ரல்லா ராகில்௿
      அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்௿
      ஆவுரித்து தின்றுழலும் புலைய ரேனுங்௿
      கங்கைவார் சடைக்கரந்தார கன்ப ராகில்௿
      அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே. 6.95.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.96 தனி - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      940 ஆமயந்தீர தடியேனை ஆளா கொண்டார்௿
      அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்௿
      தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார்௿
      தலையதனிற் பலிகொண்டார் நிறைவா தன்மை௿
      வாமனனார் மாகா துதிரங் கொண்டார்௿
      மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார்௿
      காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக்௿
      கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே. 6.96.1
      941 முப்புரிநூல் வரைமார்பில் முயங கொண்டார்௿
      முதுகேழல் முளைமருப்புங் கொண்டார் பூணாச்௿
      செப்புருவ முலைமலையாள் பாகங் கொண்டார்௿
      செம்மேனி வெண்ணீறு திகழ கொண்டார்௿
      துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார்௿
      சுடர்முடிசூழ தடியமரர் தொழவுங் கொண்டார்௿
      அப்பலிகொண் டாயிழையார் அன்புங் கொண்டார்௿
      அடியேனை ஆளுடைய அடிக ளாரே. 6.96.2
      942 முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு௿
      மூசுமிள நாகமுட னா கொண்டார்௿
      அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப௿
      அடங்காத முயலகனை அடிக்கீழ கொண்டார்௿
      வடிகொண்டார திலங்குமழு வலங்கை கொண்டார்௿
      மாலையிட பாகத்தே மருவ கொண்டார்௿
      துடிகொண்டார் கங்காள தோள்மேற் கொண்டார்௿
      சூலைதீர தடியேனை யாட்கொண் டாரே. 6.96.3
      943 பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார்௿
      பூத படைகள்புடை சூழ கொண்டார்௿
      அக்கினொடு படவரவம் அரைமேற் கொண்டார்௿
      அனைத்துலகும் படைத்தவையும் அடங கொண்டார்௿
      கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார்௿
      கொடியானை அடலாழி கிரையா கொண்டார்௿
      செக்கர்நிற திருமேனி திகழ கொண்டார்௿
      செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே. 6.96.4
      944 அந்தகனை அயிற்சூல தழுத்தி கொண்டார்௿
      அருமறையை தேர்க்குதிரை யாக்கி கொண்டார்௿
      சுந்தரனை துணைக்கவரி வீச கொண்டார்௿
      சுடுகாடு நடமாடு மிடமா கொண்டார்௿
      மந்தரநற் பொருசிலையா வளைத்து கொண்டார்௿
      மாகாளன் வாசற்கா பா கொண்டார்௿
      தந்திர திரத்தரா யருளி கொண்டார்௿
      சமண்தீர்த்தென் றன்னையா கொண்டார் தாமே. 6.96.5
      945 பாரிடங்கள் பலகருவி பயில கொண்டார்௿
      பவள நிறங்கொண்டார் பளிங்குங் கொண்டார்௿
      நீரடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார்௿
      நீலநிறங் கோலநிறை மிடற்றிற் கொண்டார்௿
      வாரடங்கு வனமுலையார் மைய லாகி௿
      வந்திட்ட பலிகொண்டார் வளையுங் கொண்டார்௿
      ஊரடங்க ஒற்றிநகர் பற்றி கொண்டார்௿
      உடலுறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே. 6.96.6
      946 அணிதில்லை அம்பலமா டரங்கா கொண்டார்௿
      ஆலால அருநஞ்சம் அமுதா கொண்டார்௿
      கணிவளர்தார பொன்னிதழி கமழ்தார் கொண்டார்௿
      காதலார் கோடிகல திருக்கை கொண்டார்௿
      மணிபணத்த அரவந்தோள் வளையா கொண்டார்௿
      மால்விடைமேல் நெடுவீதி போத கொண்டார்௿
      துணிபுலித்தோ லினையாடை யுடையா கொண்டார்௿
      சூலங்கை கொண்டார்தொண் டெனைக்கொண் டாரே. 6.96.7
      947 படமூக்க பாம்பணையா னோடு வானோன்௿
      பங்கயனென் றங்கவரை படைத்து கொண்டார்௿
      குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார்௿
      கூற்றுதைத்தோர் வேதியனை உ கொண்டார்௿
      நெடுமூக்கிற் கரியினுரி மூடி கொண்டார்௿
      நினையாத பாவிகளை நீங கொண்டார்௿
      இடமாக்கி இடைமருதுங் கொண்டார் பண்டே௿
      என்னையிந்நா ளாட்கொண்ட இறைவர் தாமே. 6.96.8
      948 எச்சனிணை தலைகொண்டார் பகன்கண் கொண்டார்௿
      இரவிகளி லொருவன்பல் லிறுத்து கொண்டார்௿
      மெச்சன்வியா திரன்றலையும் வேறா கொண்டார்௿
      விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்து௿
      உச்சநமன் றாளறுத்தார் சந்திரனை யுதைத்தார்௿
      உணர்விலா தக்கன்றன் வேள்வி யெல்லாம்௿
      அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார்௿
      அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே. 6.96.9
      949 சடையொன்றிற் கங்கையையு தரித்து கொண்டார்௿
      சாமத்தின் இசைவீணை தடவி கொண்டார்௿
      உடையொன்றிற் புள்ளியுழை தோலுங் கொண்டார்௿
      உள்குவார் உள்ளத்தை ஒருக்கி கொண்டார்௿
      கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார்௿
      காபால வேடங் கருதி கொண்டார்௿
      விடைவென்றி கொடியதனில் மேவ கொண்டார்௿
      வெந்துயர தீர்த்தென்னை யாட்கொண் டாரே. 6.96.10
      950 குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார்௿
      குடமுழ தீசனைவா சகனா கொண்டார்௿
      சிராமலைதஞ் சேர்விடமா திருந்த கொண்டார்௿
      தென்றல்நெடு தேரோனை பொன்ற கொண்டார்௿
      பராபரனென் பதுதமது பேரா கொண்டார்௿
      பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி௿
      இராவணனென் றவனைப்பே ரியம்ப கொண்டார்௿
      இடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே. 6.96.11
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.97 திருவினா - திருத்தாண்டகம்
      ௿
      திருச்சிற்றம்பலம்
      951 அண்டங் கடந்த சுவடு முண்டோ ௿
      அனலங்கை யேந்திய ஆட லுண்டோ ௿
      பண்டை யெழுவர் படியு முண்டோ ௿
      பாரிடங்கள் பலசூழ போந்த துண்டோ ௿
      கண்ட மிறையே கறுத்த துண்டோ ௿
      கண்ணின்மேற் கண்ணொன்று கண்ட துண்டோ ௿
      தொண்டர்கள் சூழ தொடர்ச்சி யுண்டோ ௿
      சொல்லீரெம் பிரானாரை கண்ட வாறே. 6.97.1
      952 எரிகின்ற இளஞாயி றன்ன மேனி௿
      இலங்கிழையோர் பாலுண்டோ வெள்ளே றுண்டோ ௿
      விரிகின்ற பொறியரவ தழலு முண்டோ ௿
      வேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோ ௿
      வரிநின்ற பொறியரவ சடையு முண்டோ ௿
      அச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோ ௿
      சொரிகின்ற புனலுண்டோ சூல முண்டோ ௿
      சொல்லீரெம் பிரானாரை கண்ட வாறே. 6.97.2
      953 நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ ௿
      நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ௿
      புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ ௿
      பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ ௿
      கலாமாலை வேற்கண்ணாள் பாக துண்டோ ௿
      கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ ௿
      சுலாமாலை யாடரவ தோள்மே லுண்டோ ௿
      சொல்லீரெம் பிரானாரை கண்ட வாறே. 6.97.3
      954 பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ ௿
      பாரிடங்கள் பலசூழ போந்த துண்டோ ௿
      உண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ ௿
      ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ ௿
      கண்ணார் கழற்காலற் செற்ற துண்டோ ௿
      காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ ௿
      எண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ ௿
      எவ்வகையெம் பிரானாரை கண்ட வாறே. 6.97.4
      955 நீறுடைய திருமேனி பாக முண்டோ ௿
      நெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோ ௿
      கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ ௿
      கொல்புலித்தோ லுடையுண்டோ கொண்ட வேடம்௿
      ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ ௿
      அதனருகே பிறையுண்டோ அளவி லாத௿
      ஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ ௿
      எவ்வகையெம் பிரானாரை கண்ட வாறே. 6.97.5
      956 பட்டமு தோடுமோர் பாகங் கண்டேன்௿
      பார்திகழ பலிதிரிந்து போத கண்டேன்௿
      கொட்டிநின் றிலயங்க ளாட கண்டேன்௿
      குழைகாதிற் பிறைசென்னி யிலங கண்டேன்௿
      கட்டங கொடிதிண்டோ ளாட கண்டேன்௿
      கனமழுவாள் வலங்கையி லிலங கண்டேன்௿
      சிட்டனை திருவால வாயிற் கண்டேன்௿
      தேவனை கனவில்நான் கண்ட வாறே. 6.97.6
      957 அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன்௿
      அலர்கொன்றை தாரணிந்த வாறு கண்டேன்௿
      பலிக்கோடி திரிவார்கை பாம்பு கண்டேன்௿
      பழனம் புகுவாரை பகலே கண்டேன்௿
      கலிக்கச்சி மேற்றளியே இரு கண்டேன்௿
      கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன்௿
      வலித்துடுத்த மான்றோ லரையிற் கண்டேன்௿
      மறைவல்ல மாதவனை கண்ட வாறே. 6.97.7
      958 நீறேறு திருமேனி நிகழ கண்டேன்௿
      நீள்சடைமேல் நிறைகங்கை யேற கண்டேன்௿
      கூறேறு கொடுமழுவாள் கொள்ள கண்டேன்௿
      கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்௿
      ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன்௿
      அடியார்க காரமுத மா கண்டேன்௿
      ஏறேறி இந்நெறியே போத கண்டேன்௿
      இவ்வகையெம் பெருமானை கண்ட வாறே. 6.97.8
      959 விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு௿
      வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு௿
      சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு௿
      சூலமு தண்டுஞ் சுமந்த துண்டு௿
      அரையுண்ட கோவண ஆடை யுண்டு௿
      வலிக்கோலு தோலு மழகா வுண்டு௿
      இரையுண் டறியாத பாம்பு முண்டு௿
      இமையோர் பெருமா னிலாத தென்னே. 6.97.9
      960 மைப்படிந்த கண்ணாளு தானுங் கச்சி௿
      மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்௿
      ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்௿
      ஓரூர னல்லனோ ருவம னில்லி௿
      அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்௿
      அவனருளே கண்ணா காணி னல்லால்௿
      இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்௿
      இவனிறைவன் என்றெழுதி காட்டொ ணாதே. 6.97.10
      961 பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன்௿
      புலித்தோ லுடைகண்டேன் புணர தன்மேல்௿
      மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்௿
      மிளிர்வதொரு பாம்பும் அரைமேற் கண்டேன்௿
      அன்னத்தே ரூர்ந்த அரக்கன் றன்னை௿
      அலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன்௿
      சின்ன மலர்க்கொன்றை கண்ணி கண்டேன்௿
      சிவனைநான் சிந்தையு கண்ட வாறே. 6.97.11
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.98 திருமறுமாற்ற - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      962 நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்௿
      நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம்௿
      ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்௿
      இன்பமே எந்நாளு துன்ப மில்லை௿
      தாமார்க்குங் குடியல்லா தன்மை யான௿
      சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்௿
      கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்௿
      கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே. 6.98.1
      963 அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்௿
      அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்௿
      புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி௿
      உடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே௿
      இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்௿
      இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோந்௿
      துகிலுடுத்து பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ்௿
      சொற்கேட கடவோமோ துரிசற் றோமே. 6.98.2
      964 வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்௿
      மாதேவா என்று
      நீராண்ட புரோதாயம் ஆட பெற்றோம்௿
      நீறணியுங் கோலமே நிகழ பெற்றோங்௿
      காராண்ட மழைபோல கண்ணீர் சோரக்௿
      கன்மனமே நன்மனமா கரை பெற்றோம்௿
      பாராண்டு பகடேறி திரிவார் சொல்லும்௿
      பணிகேட கடவோமோ பற்றற் றோமே. 6.98.3
      965 உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்௿
      உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே௿
      செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்௿
      நன்மையா சிறப்பதே பிறப்பிற் செல்லோம்௿
      நறவார்பொன் னிதழிநறு தாரோன் சீரார்௿
      நமச்சிவா யஞ்சொல்ல வல்லோம் நாவாற்௿
      சுறவாருங் கொடியானை பொடியா கண்ட௿
      சுடர்நயன சோதியையே தொடர்வுற் றோமே. 6.98.4
      966 என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்௿
      இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை௿
      சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோஞ்௿
      சிவபெருமான் திருவடியே சேர பெற்றோம்௿
      ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே௿
      உறுபிணியார் செறலொழிந்தி டோ டி போனார்௿
      பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்௿
      புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே. 6.98.5
      967 மூவுருவின் முதலுருவாய் இருநான் கான௿
      மூர்த்தியே யென்றுமு பத்து மூவர்௿
      தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ்௿
      செம்பவள திருமேனி சிவனே யென்னும்௿
      நாவுடையார் நமையாள வுடையா ரன்றே௿
      நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான௿
      காவலரே யேவி விடுத்தா ரேனுங்௿
      கடவமலோங் கடுமையொடு களவற் றோமே. 6.98.6
      968 நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்௿
      நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி௿
      அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி௿
      அன்புடையார கெளிமையதாய் அளக்க லாகாத்௿
      தற்பரமா சதாசிவமா தானும் யானும்௿
      ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்௿
      பொற்புடைய பேச கடவோம் பேயர்௿
      பேசுவன பேசுதுமோ பிழையற் றோமே. 6.98.7
      969 ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் றன்னை௿
      இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க௿
      தேசனை செம்மேனி வெண்ணீற் றானைச்௿
      சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற௿
      நேசனை நித்தலும் நினை பெற்றோம்௿
      நின்றுண்பா ரெம்மை நினை சொன்ன௿
      வாசக மெல்லாம் மறந்தோ மன்றே௿
      வந்தீரார் மன்னவனா வான்றா னாரே. 6.98.8
      970 சடையுடையான் சங குழையோர் காதன்௿
      சாம்பலும் பாம்பு மணிந்த மேனி௿
      விடையுடையான் வேங்கை யதள்மே லாடை௿
      வெள்ளிபோற் புள்ளியுழை மான்றோல் சார்ந்த௿
      உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்௿
      உம்மோடு மற்று முளராய் நின்ற௿
      படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்௿
      பாசமற வீசும் படியோம் நாமே. 6.98.9
      971 நாவார நம்பனையே பாட பெற்றோம்௿
      நாணற்றார் நள்ளாமே விள்ள பெற்றோம்௿
      ஆவாவென் றெமையாள்வான் அமரர் நாதன்௿
      அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட௿
      தேவாதி தேவன் சிவனென் சிந்தை௿
      சேர்ந்திருந்தான் தென்றிசைக்கோன் றானே வந்து௿
      கோவாடி குற்றேவல் செய்கென் றாலுங்௿
      குணமா கொள்ளோமெண் குணத்து ளோமே. 6.98.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      6.99 திருப்புகலூர் - திருத்தாண்டகம்௿
      திருச்சிற்றம்பலம்
      972 எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ௿
      எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்௿
      கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்௿
      கழலடியே கைதொழுது காணி னல்லால்௿
      ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்௿
      ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்௿
      புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்௿
      பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 6.99.1
      973 அங்கமே பூண்டாய் அனலா டினாய்௿
      ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்௿
      பங்கமொன் றில்லாத படர்ச டையினாய்௿
      பாம்பொடு திங்கள் பகைதீர தாண்டாய்௿
      சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்௿
      சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்௿
      சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்௿
      திருப்புகலூர் மேவிய தேவ தேவே. 6.99.2
      974 பையரவ கச்சையாய் பால்வெண் ணீற்றாய்௿
      பளிக்கு குழையினாய் பண்ணார் இன்சொல்௿
      மைவிரவு கண்ணாளை பாகங் கொண்டாய்௿
      மான்மறிகை யேந்தினாய் வஞ்ச கள்வர்௿
      ஐவரையும் என்மேற் றரவ றுத்தாய்௿
      அவர்வேண்டுங் காரியமிங் காவ தில்லை௿
      பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்௿
      பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 6.99.3
      975 தெருளாதார் மூவெயிலு தீயில் வேவச்௿
      சிலைவளைத்து செங்கணையாற் செற்ற தேவே௿
      மருளாதார் தம்மனத்தில் வாட்ட தீர்ப்பாய்௿
      மருந்தா பிணிதீர்ப்பாய் வானோர கென்றும்௿
      அருளாகி ஆதியாய் வேத மாகி௿
      அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்௿
      பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்௿
      பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 6.99.4
      976 நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்௿
      நீங்காமை வைத்துகந்த நீதி யானே௿
      பாரேறு படுதலையிற் பலிகொள் வானே௿
      பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா௿
      காரேறு முகிலனைய கண்ட தானே௿
      கருங்கை களிற்றுரிவை கதற போர்த்த௿
      போரேறே உன்னடிக்கே போது கின்றேன்௿
      பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 6.99.5
      977 விரிசடையாய் வேதியனே வேத கீதா௿
      விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீ சூராய்௿
      திரிபுரங்க ளெரிசெய்த தேவ தேவே௿
      திருவாரூர திருமூல தான மேயாய்௿
      மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய்௿
      வலஞ்சுழியாய் மாமறைக்கா டெந்தா யென்றும்௿
      புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன்௿
      பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 6.99.6
      978 தேவார்ந்த தேவனை தேவ ரெல்லாந்௿
      திருவடிமேல் அலரிட்டு தேடி நின்று௿
      நாவார்ந்த மறைபாடி நட்ட மாடி௿
      நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்௿
      காவார்ந்த பொழிற்சோலை கான பேராய்௿
      கழுக்குன்ற துச்சியாய் கடவு ளேநின்௿
      பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்௿
      பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 6.99.7
      979 நெய்யாடி நின்மலனே நீல கண்டா௿
      நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே௿
      மையாடு கண்மடவாள் பாக தானே௿
      மான்றோ லுடையாய் மகிழ்ந்து நின்றாய்௿
      கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை௿
      கொண்டடியேன் நானிட்டு கூறி நின்று௿
      பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்௿
      பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 6.99.8
      980 துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்௿
      துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்௿
      தன்னணையு தண்மதியும் பாம்பும் நீருஞ்௿
      சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே௿
      அன்ன நடைமடவாள் பாக தானே௿
      அக்காரம் பூண்டானே ஆதி யானே௿
      பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்௿
      பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 6.99.9
      981 ஒருவனையு மல்லா துணரா துள்ளம்௿
      உணர்ச்சி தடுமாற்ற துள்ளே நின்ற௿
      இருவரையும் மூவரையும் என்மே லேவி௿
      இல்லாத தரவறுத்தா கில்லேன் ஏலக்௿
      கருவரை சூழ்கானல் இலங்கை வேந்தன்௿
      கடுந்தேர்மீ தோடாமை காலாற் செற்ற௿
      பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்௿
      பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 6.99.10
      ௿
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த ௿
      தேவாரப்பதிகங்கள்௿ ஆறாம் திருமுறை முற்றும் .
      ------------------------------------------------------------------------
      16 2003


      2.