திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      மூன்றாம் திருமுறை முதல் பகுதி 1-713
      உள்ளுறை
      3.001 கோயில் 1-11 மின்பதிப்பு
      3.002 திருப்பூந்தராய் 12-22 மின்பதிப்பு
      3.003 திருப்புகலி 23-33 மின்பதிப்பு
      3.004 திருஆவடுதுறை 34-44 மின்பதிப்பு
      3.005 திருப்பூந்தராய் 45-55 மின்பதிப்பு
      3.006 திருக்கொள்ளம்பூதூர் 56-66 மின்பதிப்பு
      3.007 திருப்புகலி 67-77 மின்பதிப்பு
      3.008 திருக்கடவூர்வீரட்டம் 78-88 மின்பதிப்பு
      3.009 திருவீழிமிழலை 89-99 மின்பதிப்பு
      3.010 திருஇராமேச்சுரம் 100-109 மின்பதிப்பு
      3.011 திருப்புனவாயில் 110-120 மின்பதிப்பு
      3.012 திருக்கோட்டாறு 121-131 மின்பதிப்பு
      3.013 திருப்பூந்தராய் 132-142 மின்பதிப்பு
      3.014 திருப்பைஞ்ஞீலி 143-153 மின்பதிப்பு
      3.015 திருவெண்காடு 154-164 மின்பதிப்பு
      3.016 திருக்கொள்ளிக்காடு 165-175 மின்பதிப்பு
      3.017 திருவிசயமங்கை 176-186 மின்பதிப்பு
      3.018 திருவைகல்மாடக்கோயில் 187-197 மின்பதிப்பு
      3.019 திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் 198-208 மின்பதிப்பு
      3.020 திருப்பூவணம் 209-219 மின்பதிப்பு
      3.021 திருக்கருக்குடி 220-230 மின்பதிப்பு
      3.022 திருப்பஞ்சாக்கரப்பதிகம் 231-241 மின்பதிப்பு
      3.023 திருவிற்கோலம் 242-251 மின்பதிப்பு
      3.024 திருக்கழுமலம் 252-262 மின்பதிப்பு
      3.025 திருந்துதேவன்குடி 263-273 மின்பதிப்பு
      3.026 திருக்கானப்பேர் 274-284 மின்பதிப்பு
      3.027 திருச்சக்கரப்பள்ளி 285-295 மின்பதிப்பு
      3.028 திருமழபாடி 296-306 மின்பதிப்பு
      3.029 மேலைத்திருக்காட்டுப்பள்ளி 307-317 மின்பதிப்பு
      3.030 திருஅரதைப்பெரும்பாழி 318-328 மின்பதிப்பு
      3.031 திருமயேந்திரப்பள்ளி 329-339 மின்பதிப்பு
      3.032 திருஏடகம் 340-349 மின்பதிப்பு
      3.033 திருஉசாத்தானம் 350-358 மின்பதிப்பு
      3.034 திருமுதுகுன்றம் 359-369 மின்பதிப்பு
      3.035 திருத்தென்குடித்திட்டை 370-380 மின்பதிப்பு
      3.036 திருக்காளத்தி 381-389 மின்பதிப்பு
      3.037 திருப்பிரமபுரம் 390-399 மின்பதிப்பு
      3.038 திருக்கண்டியூர்வீரட்டம் 400-410 மின்பதிப்பு
      3.039 திருஆலவாய் 411-421 மின்பதிப்பு
      3.040 தனித்திருவிருக்குக்குறள் 422-432 மின்பதிப்பு
      3.041 திருவேகம்பம் 433-443 மின்பதிப்பு
      3.042 திருச்சிற்றேமம் 444-454 மின்பதிப்பு
      3.043 சீகாழி 455-465 மின்பதிப்பு
      3.044 திருக்கழிப்பாலை 466-476 மின்பதிப்பு
      3.045 திருவாரூர் 477-487 மின்பதிப்பு
      3.046 திருக்கருகாவூர் 488-497 மின்பதிப்பு
      3.047 திருஆலவாய் 498-508 மின்பதிப்பு
      3.048 திருமழபாடி 509-519 மின்பதிப்பு
      3.049 நமச்சிவாயத்திருப்பதிகம் 520-530 மின்பதிப்பு
      3.050 திருத்தண்டலைநீணெறி 531-538 மின்பதிப்பு
      3.051 திருஆலவாய் 539-549 மின்பதிப்பு
      3.052 திருஆலவாய் - திருவிராகம் 550-560 மின்பதிப்பு
      3.053 திருவானைக்கா - திருவிராகம் 561-571 மின்பதிப்பு
      3.054 திருப்பாசுரம் 572-583 மின்பதிப்பு
      3.055 திருவான்மியூர் 584-593 மின்பதிப்பு
      3.056 திருப்பிரமபுரம் 594-604 மின்பதிப்பு
      3.057 திருவொற்றியூர் 605-615 மின்பதிப்பு
      3.058 திருச்சாத்தமங்கை 616-626 மின்பதிப்பு
      3.059 திருக்குடமூக்கு 627-637 மின்பதிப்பு
      3.060 திருவக்கரை 638-648 மின்பதிப்பு
      3.061 திருவெண்டுறை 649-659 மின்பதிப்பு
      3.062 திருப்பனந்தாள் 660-670 மின்பதிப்பு
      3.063 திருச்செங்காட்டங்குடி 671-681 மின்பதிப்பு
      3.064 திருப்பெருவேளூர் 682-691 மின்பதிப்பு
      3.065 திருக்கச்சிநெறிக்காரைக்காடு 692-702 மின்பதிப்பு
      3.066 திருவேட்டக்குடி 703-713 மின்பதிப்பு
      ------------------------------------------------------------------------
      3.001. கோயில்
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      1 ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்
      அந்தணர்பிரி யாதசிற் றம்பலம்
      நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே
      பாடினாய்மறை யோடுபல் கீதமும்
      பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
      சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே. 01
      2. கொட்டமேகம ழுங்குழ லாளொடு
      கூடினாயெரு தேறினாய் நுதல்
      பட்டமேபுனை வாய்இசைபாடுவ பாரிடமா
      நட்டமேநவில் வாய்மறை யோர்தில்லை
      நல்லவர்பிரி யாதசிற் றம்பலம்
      இட்டமாவுறை வாயிவைமேவிய தென்னைகொலோ. 02
      3. நீலத்தார்கரி யமிடற் றார்நல்ல
      நெற்றிமேலுற்ற கண்ணி னார்பற்று
      சூலத்தார்சுட லைப்பொடிநீறணி வார்சடையார்
      சீலத்தார்தொழு தேத்துசிற் றம்பலஞ்
      சேர்தலாற்கழற் சேவடி கைதொழ
      கோலத்தாயரு ளாயுனகாரணங் கூறுதுமே. 03
      4. கொம்பலைத்தழ கெய்திய நுண்ணிடை
      கோலவாண்மதி போல முகத்திரண்
      டம்பலைத்தகண் ணாள்முலைமேவிய வார்சடையான்
      கம்பலைத்தெழு காமுறு காளையர்
      காதலாற்கழற் சேவடி கைதொழ
      அம்பலத்துறை வான்அடியார கடையாவினையே. 04
      5. தொல்லைஆரமு துண்ணநஞ் சுண்டதோர்
      தூமணிமிட றாபகு வாயதோர்
      பல்லையார்தலை யிற்பலியேற்றுழல் பண்டரங்கா
      தில்லையார்தொழு தேத்துசிற் றம்பலஞ்
      சேர்தலாற்கழற் சேவடி கைதொழ
      இல்லையாம்வினை தானெரியம்மதி லெய்தவனே. 05
      6. ஆகந்தோயணி கொன்றை யாய்அனல்
      அங்கையாய்அம ரர்க்கம ராஉமை
      பாகந்தோய்பகவா பலியேற்றுழல் பண்டரங்கா
      மாகந்தோய்பொழில் மல்குசிற் றம்பலம்
      மன்னினாய்மழு வாளினாய் அழல்
      நாகந்தோயரையாய் அடியாரைநண் ணாவினையே. 06
      7. சாதியார்பலிங் கின்னொடு வெள்ளிய
      சங்கவார்குழை யாய்திக ழப்படும்
      வேதியாவிகிர்தா விழவாரணி தில்லைதன்னுள்
      ஆதியாய்க்கிட மாயசிற் றம்பலம்
      அங்கையாற்றொழ வல்லடி யார்களை
      வாதியாதகலு நலியாமலி தீவினையே. 07
      8. வேயினார்பணை தோளியொ டாடலை
      வேண்டினாய்விகிர் தாஉயிர் கட்கமு
      தாயினாய்இடு காட்டெரியாட லமர்ந்தவனே
      தீயினார்கணை யாற்புர மூன்றெய்த
      செம்மையாய்திகழ் கின்றசிற் றம்பலம்
      மேயினாய்கழலே தொழுதெய்துதும் மேலுலகே. 08
      9. தாரினார்விரி கொன்றை யாய்மதி
      தாங்குநீள்சடை யாய்தலை வாநல்ல
      தேரினார்மறு கின்திருவாரணி தில்லைதன்னு
      சீரினால்வழி பாடொழி யாததோர்
      செம்மையாலழ காயசிற் றம்பலம்
      ஏரினாலமர தாயுனசீரடி யேத்துதுமே. 09
      10. வெற்றரையுழல் வார்துவ ராடைய
      வேடத்தாரவர் கள்ளுரை கொள்ளன்மின்
      மற்றவருலகின் அவலம்மவை மாற்றகில்லார்
      கற்றவர்தொழு தேத்துசிற் றம்பலங்
      காதலாற்கழற் சேவடி கைதொழ
      உற்றவருலகின் னுறுதிகொள வல்லவரே. 10
      11. நாறுபூம்பொழில் நண்ணிய காழியுள்
      நாண்மறைவல்ல ஞானசம் பந்தன்
      ஊறும்இன்றமி ழாலுயர்ந்தாருறை தில்லைதன்னுள்
      ஏறுதொல்புக ழேந்துசிற் றம்பல
      தீசனைஇசை யாற்சொன்ன பத்திவை
      கூறுமாறுவல்லார் உயர்ந்தாரொடுங் கூடுவரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 002 திருப்பூந்தராய்
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      12 பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்
      வாயினாள்பனி மாமதி போல்முக
      தந்தமில்புக ழாள்மலைமாதொடும் ஆதிப்பிரான்
      வந்துசேர்விடம் வானவ ரெத்திசை
      யுந்நிறைந்து வலஞ்செய்து மாமலர்
      புந்திசெய்திறைஞ் சிப்பொழிபூந்தராய் போற்றுதுமே. 01
      13. காவியங்கருங் கண்ணி னாள்கனி
      தொண்டைவாய்கதிர் முத்தநல் வெண்ணகை
      தூவியம்பெடை யன்னநடைச்சுரி மென்குழலாள்
      தேவியுந்திரு மேனியோர் பாகமாய்
      ஒன்றிரண்டொரு மூன்றொடு சேர்பதி
      பூவிலந்தணன் ஒப்பவர்பூந்தராய் போற்றுதுமே. 02
      14. பையராவரும் அல்குல் மெல்லியல்
      பஞ்சின்நேரடி வஞ்சிகொள் நுண்ணிடை
      தையலாளொரு பாலுடையெம்மிறை சாருமிடஞ்
      செய்யெலாங்கழு நீர்கமலம் மலர
      தேறலூறலின் சேறுல ராதநற்
      பொய்யிலாமறை யோர்பயில்பூந்தராய் போற்றுதுமே. 03
      15. முள்ளிநாண்முகை மொட்டியல் கோங்கின்
      அரும்புதேன்கொள் குரும்பைமூ வாமரு
      துள்ளியன்றபைம் பொற்கலசத்திய லொத்தமுலை
      வெள்ளிமால்வரை யன்னதோர் மேனியின்
      மேவினார்பதி வீமரு தண்பொழிற்
      புள்ளினந்துயில் மல்கியபூந்தராய் போற்றுதுமே. 04
      16. பண்ணியன்றெழு மென்மொழி யாள்பகர்
      கோதையேர்திகழ் பைந்தளிர் மேனியோர்
      பெண்ணியன்றமொய்ம் பிற்பெருமாற்கிடம் பெய்வளையார்
      கண்ணியன்றெழு காவி செழுங்கரு
      நீலமல்கிய காமரு வாவிநற்
      புண்ணியருறை யும்பதிபூந்தராய் போற்றுதுமே. 05
      17. வாணிலாமதி போல்நுத லாள்மட
      மாழையொண்கணாள் வண்தர ளந்நகை
      பாணிலாவிய இன்னிசையார்மொழி பாவையொடுஞ்
      சேணிலாத்திகழ் செஞ்சடையெம்மண்ணல்
      சேர்வதுசிக ரப்பெருங் கோயில்சூழ்
      போணிலாநுழை யும்பொழிற்பூந்தராய் போற்றுதுமே. 06
      18. காருலாவிய வார்குழ லாள்கயற்
      கண்ணினாள் புயற்காலொளி மின்னிடை
      வாருலாவிய மென்முலையாள்மலை மாதுடனாய்
      நீருலாவிய சென்னி யன்மன்னி
      நிகருநாமம்மு நான்கு நிகழ்பதி
      போருலாவெயில் சூழ்பொழிற்பூந்தராய் போற்றுதுமே. 07
      19. காசைசேர்குழ லாள்கய லேர்தடங்
      கண்ணிகாம்பன தோட்கதிர் மென்முலை
      தேசுசேர்மலை மாதமருந்திரு மார்பகல
      தீசன்மேவும் இருங்கயி லையெடு
      தானைஅன்றடர தான்இணை சேவடி
      பூசைசெய்பவர் சேர்பொழிற்பூந்தராய் போற்றுதுமே. 08
      20. கொங்குசேர்குழ லாள்நிழல் வெண்ணகை
      கொவ்வைவா கொடியேரிடை யாளுமை
      பங்குசேர்திரு மார்புடையார்படர் தீயுருவாய்
      மங்குல்வண்ணனும் மாமல ரோனும்
      மயங்கநீண்டவர் வான்மிசை வந்தெழு
      பொங்குநீரின் மிதந்தநன்பூந்தராய் போற்றுதுமே. 09
      21. கலவமாமயி லார்இய லாள்கரும்
      பன்னமென்மொழி யாள்கதிர் வாணுதற்
      குலவுபூங்குழ லாளுமைகூறனை வேறுரையால்
      அலவைசொல்லுவார் தேரமண் ஆதர்கள்
      ஆக்கினான்றனை நண்ணலு நல்குநற்
      புலவர்தாம்புகழ் பொற்பதிபூந்தராய் போற்றுதுமே. 10
      22. தேம்பல்நுண்ணிடை யாள்செழுஞ் சேலன
      கண்ணியோடண்ணல் சேர்விட தேன்அமர்
      பூம்பொழில்திகழ் பொற்பதிபூந்தராய் போற்றுதுமென்
      றோம்புதன்மையன் முத்தமிழ் நான்மறை
      ஞானசம்பந்தன் ஒண்டமிழ் மாலைகொண்
      டாம்படியிவை யேத்தவல்லார்க்கடை யாவினையே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 003 திருப்புகலி
      நாலடிமேல் வைப்பு
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      23 இயலிசை யெனும்பொரு ளின்திறமாம்
      புயலன மிடறுடை புண்ணியனே
      கயலன அரிநெடுங் கண்ணியொடும்
      அயலுல கடிதொழ அமர்ந்தவனே
      கலனாவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள்
      நிலனாள்தொறும் இன்புற நிறைமதி யருளினனே. 01
      24. நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம்
      இலையுறு மலர்கள்கொண் டேத்துதும்யாம்
      மலையினில் அரிவையை வெருவவன்தோல்
      அலைவரு மதகரி யுரித்தவனே
      இமையோர்கள்நின் தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி
      உமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே. 02
      25. பாடினை அருமறை வரல்முறையால்
      ஆடினை காணமுன் அருவனத்திற்
      சாடினை காலனை தயங்கொளிசேர்
      நீடுவெண் பிறைமுடி நின்மலனே
      நினையேயடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர்
      தனையேயிட மேவினை தவநெறி அருளெமக்கே. 03
      26. நிழல்திகழ் மழுவினை யானையின்தோல்
      அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
      கழல்திகழ் சிலம்பொலி யலம்பநல்ல
      முழவொடும் அருநட முயற்றினனே
      முடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி
      அடியாரவ ரேத்துற அழகொடும் இருந்தவனே. 04
      27. கருமையின் ஒளிர்கடல் நஞ்சமுண்ட
      உரிமையின் உலகுயிர் அளித்தநின்றன்
      பெருமையை நிலத்தவர் பேசினல்லால்
      அருமையில் அளப்பரி தாயவனே
      அரவேரிடை யாளொடும் அலைகடல் மலிபுகலி
      பொருள்சேர்தர நாடொறும் புவிமிசை பொலிந்தவனே. 05
      28. அடையரி மாவொடு வேங்கையின்தோல்
      புடைபட அரைமிசை புனைந்தவனே
      படையுடை நெடுமதிற் பரிசழித்த
      விடையுடை கொடிமல்கு வேதியனே
      விகிர்தாபர மாநின்னை விண்ணவர் தொழப்புகலி
      தகுவாய்மட மாதொடு தாள்பணி தவர்தமக்கே. 06
      29. அடியவர் தொழுதெழ அமரரேத்த
      செடியவல் வினைபல தீர்ப்பவனே
      துடியிடை அகலல்குல் தூமொழியை
      பொடியணி மார்புற புல்கினனே
      புண்ணியா புனிதாபுக ரேற்றினை புகலிந்நகர்
      நண்ணினாய் கழலேத்திட நண்ணகிலா வினையே. 07
      30. இரவொடு பகலதாம் எம்மானுன்னை
      பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்
      குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த
      அரவிரி சடைமுடி ஆண்டகையே
      அனமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கைமன்னை
      இனமார்தரு தோளடர திருந்தனை புகலியுளே. 08
      31. உருகிட வுவகைத துடலினுள்ளால்
      பருகிடும் அமுதன பண்பினனே
      பொருகடல் வண்ணனனும் பூவுளானும்
      பெருகிடும் அருளென பிறங்கெரியாய்
      உயர்ந்தாயினி நீயெனை ஒண்மலரடி யிணைக்கீழ்
      வயந்தாங்குற நல்கிடு வளர்மதிற் புகலிமனே. 09
      32. கையினி லுண்பவர் கணிகைநோன்பர்
      செய்வன தவமலா செதுமதியார்
      பொய்யவ ருரைகளை பொருளெனாத
      மெய்யவ ரடிதொழ விரும்பினனே
      வியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர் தொழுபுகலி
      உயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே. 10
      33. புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
      விண்ணவ ரடிதொழ விளங்கினானை
      நண்ணிய ஞானசம் பந்தன்வாய்மை
      பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்
      நடலையவை யின்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம்
      இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 004 திருவாவடுதுறை
      நாலடிமேல் வைப்பு
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      34 இடரினு தளரினும் எனதுறுநோய்
      தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
      கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
      மிடறினில் அடக்கிய வேதியனே
      இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
      அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 01
      35. வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
      வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
      தாழிள தடம்புனல் தயங்குசென்னி
      போழிள மதிவைத்த புண்ணியனே
      இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
      அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 02
      36. நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
      மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
      புனல்விரி நறுங்கொன்றை போதணிந்த
      கனலெரி யனல்புல்கு கையவனே
      இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
      அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே. 03
      37. தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
      அம்மல ரடியலால் அரற்றாதென்நா
      கைம்மல்கு வரிசிலை கணையொன்றினால்
      மும்மதிள் எரியெழ முனிந்தவனே
      இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
      அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே. 04
      38. கையது வீழினுங் கழிவுறினுஞ்
      செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
      கொய்யணி நறுமலர் குலாயசென்னி
      மையணி மிடறுடை மறையவனே
      இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
      அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே. 05
      39. வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
      எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
      ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
      சந்தவெண் பொடியணி சங்கரனே
      இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
      அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே. 06
      40. வெப்பொடு விரவியோர் வினைவரினும்
      அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
      ஒப்புடை யொருவனை உருவழிய
      அப்படி அழலெழ விழித்தவனே
      இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
      அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே. 07
      41. பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
      சீருடை கழலலாற் சிந்தைசெய்யேன்
      ஏருடை மணிமுடி இராவணனை
      ஆரிடர் படவரை யடர்த்தவனே
      இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
      அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே. 08
      42. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
      ஒண்மல ரடியலால் உரையாதென்நா
      கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
      அண்ணலும் அளப்பரி தாயவனே
      இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
      அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 09
      43. பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
      அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நா
      புத்தருஞ் சமணரும் புறனுரைக்க
      பத்தர்க கருள்செய்து பயின்றவனே
      இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
      அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 10
      44. அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
      இலைநுனை வேற்படை யெம்மிறையை
      நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
      விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
      இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
      அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 005 திருப்பூந்தராய்
      ஈரடிமேல் வைப்பு
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      45 தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
      மிக்க செம்மை விமலன் வியன்கழல்
      சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
      நன்ற தாகிய நம்பன்தானே. 01
      46. புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
      வெள்ள தாங்கு விகிர்தன் அடிதொழ
      ஞால தில்லுயர் வாருள்கு நன்னெறி
      மூல மாய முதல்வன்தானே. 02
      47. வேந்த ராயுல காள விருப்புறிற்
      பூந்தராய் நகர் மேயவன் பொற்கழல்
      நீதி யால்நினை தேத்தி யுள்கிட
      சாதி யாவினை யானதானே. 03
      48. பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய்
      ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிட
      சிந்தை நோயவை தீர நல்கிடும்
      இந்து வார்சடை யெம்மிறையே. 04
      49. பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
      மலிந்த புந்திய ராகி வணங்கிட
      நுந்தம் மேல்வினை யோட வீடுசெய்
      எந்தை யாயஎம் ஈசன்தானே. 05
      50. பூதஞ் சூழ பொலிந்தவன் பூந்தராய்
      நாதன் சேவடி நாளும் நவின்றிட
      நல்கு நாடொறும் இன்ப நளிர்புனல்
      பில்கு வார்சடை பிஞ்ஞகனே. 06
      51. புற்றில் நாகம் அணிந்தவன் பூந்தராய்
      பற்றி வாழும் பரமனை பாடிட
      பாவ மாயின தீர பணித்திடுஞ்
      சேவ தேறிய செல்வன்தானே. 07
      52. போத கத்துரி போர்த்தவன் பூந்தராய்
      காத லித்தான் கழல்விரல் ஒன்றினால்
      அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள்
      பெருக்கி நின்ற எம்பிஞ்ஞகனே. 08
      53. மத்த மான இருவர் மருவொணா
      அத்த னானவன் மேவிய பூந்தராய்
      ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை
      மாளு மாறருள் செய்யுந்தானே. 09
      54. பொருத்த மில்சமண் சாக்கியர் பொய்கடி
      திருத்தல் செய்த பிரான்இமை யோர்தொழ
      பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை
      ஏந்து மான்மறி யெம்மிறையே. 10
      55. புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய்
      அந்த மில்லெம் மடிகளை ஞானசம்
      பந்தன் மாலைகொண் டேத்தி வாழுநும்
      பந்த மார்வினை பாறிடுமே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 006 திருக்கொள்ளம்பூதூர்
      ஈரடிமேல் வைப்பு
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      56 கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்
      நட்டம் ஆடிய நம்பனை யுள்க
      செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
      நல்கு மாறருள் நம்பனே. 01
      57. கோட்ட கக்கழனி கொள்ளம் பூதூர்
      நாட்ட கத்துறை நம்பனை யுள்க
      செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
      நல்கு மாறருள் நம்பனே. 02
      58. குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர்
      விலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்க
      செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
      நல்கு மாறருள் நம்பனே. 03
      59. குவளை கண்மலருங் கொள்ளம் பூதூர
      தவள நீறணி தலைவனை யுள்க
      செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
      நல்கு மாறருள் நம்பனே. 04
      60. கொன்றை பொன்சொரியுங் கொள்ளம் பூதூர்
      நின்ற புன்சடை நிமலனை யுள்க
      செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
      நல்கு மாறருள் நம்பனே. 05
      61. ஓடம் வந்தணையுங் கொள்ளம் பூதூர்
      ஆடல் பேணிய அடிகளை யுள்க
      செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
      நல்கு மாறருள் நம்பனே. 06
      62. ஆறு வந்தணையுங் கொள்ளம் பூதூர்
      ஏறு தாங்கிய இறைவனை யுள்க
      செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
      நல்கு மாறருள் நம்பனே. 07
      63. குரக்கினம் பயிலுங் கொள்ளம் பூதூர்
      அரக்கனை செற்ற ஆதியை யுள்க
      செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
      நல்கு மாறருள் நம்பனே. 08
      64. பருவ ரால்உகளுங் கொள்ளம் பூதூர்
      இருவர் காண்பரி யான்கழ லுள்க
      செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
      நல்கு மாறருள் நம்பனே. 09
      65. நீர கக்கழனி கொள்ளம் பூதூர
      தேர மண்செற்ற செல்வனை யுள்க
      செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
      நல்கு மாறருள் நம்பனே. 10
      66. கொன்றை சேர்சடையான் கொள்ளம் பூதூர்
      நன்று காழியுள் ஞானசம் பந்தன்
      இன்றுசொன் மாலைகொண் டேத்தவல் லார்போய்
      என்றும் வானவ ரோடிருப்பாரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வில்வவனேசுவரர் தேவியார்
      இது ஓடக்காரனில்லாமல் அவ்வோடம் ஆற்றிற்சென்று
      கரைசேரும்படி அருளிச்செய்த பதிகம்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.007 திருப்புகலி
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      67 கண்ணுத லானும்வெண் ணீற்றினா னுங்கழ லார்க்கவே
      பண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ் சோதியும்
      புண்ணிய நான்மறை யோர்களே தும்புக லிந்நகர
      பெண்ணின்நல் லாளொடும் வீற்றிரு தபெரு மானன்றே. 01
      68. சாம்பலோ டுந்தழ லாடினா னுஞ்சடை யின்மிசை
      பாம்பினோ டும்மதி சூடினா னும்பசு வேறியும்
      பூம்படு கல்லிள வாளைபா யும்புக லிந்நகர்
      காம்பன தோளியோ டும்மிரு தகட வுளன்றே. 02
      69. கருப்புநல் வார்சிலை காமன்வே வக்கடை கண்டானும்
      மருப்புநல் லானையின் ஈருரி போர்த்த மணாளனும்
      பொருப்பன மாமணி மாடமோங் கும்புக லிந்நகர்
      விருப்பின்நல் லாளொடும் வீற்றிரு தவிம லனன்றே. 03
      70. அங்கையில் அங்கழல் ஏந்தினா னும்மழ காகவே
      கங்கையை செஞ்சடை சூடினா னுங்கட லின்னிடை
      பொங்கிய நஞ்சமு துண்டவ னும்புக லிந்நகர்
      மங்கைநல் லாளொடும் வீற்றிரு தமண வாளனே. 04
      71. சாமநல் வேதனு தக்கன்றன் வேள்வித கர்த்தானும்
      நாமநூ றாயிரஞ் சொல்லிவா னோர்தொழும் நாதனும்
      பூமல்கு தண்பொழில் மன்னு தண்புக லிந்நகர
      கோமள மாதொடும் வீற்றிரு தகுழ கனன்றே. 05
      72. இரவிடை யொள்ளெரி யாடினா னும்மிமை யோர்தொழ
      செருவிடை முப்புர தீயெரி தசிவ லோகனும்
      பொருவிடை யொன்றுக தேறினா னும்புக லிந்நகர்
      அரவிடை மாதொடும் வீற்றிரு தஅழ கனன்றே. 06
      73. சேர்ப்பது திண்சிலை மேவினா னுந்திகழ் பாலன்மேல்
      வேர்ப்பது செய்தவெங் கூற்றுதை தானும்வேள் விப்புகை
      போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக லிந்நகர்
      பார்ப்பதி யோடுடன் வீற்றிரு தபர மனன்றே. 07
      74. கன்னெடு மால்வரை கீழர கன்னிடர் கண்டானும்
      வின்னெடும் போர்விறல் வேடனா கிவிச யற்கொரு
      பொன்னெடுங் கோல்கொடு தானு தண்புக லிந்நகர்
      அன்னமன் னநடை மங்கையொ டுமமர தானன்றே. 08
      75. பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழி
      தன்னையின் னானென காண்பரி யதழற் சோதியும்
      புன்னைபொன் தாதுதிர் மல்கு தண்புக லிந்நகர்
      மின்னிடை மாதொடும் வீற்றிரு தவிம லனன்றே. 09
      76. பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினை பேணாததோர்
      தொண்டருங் காதல்செய் சோதியா யசுடர சோதியான்
      புண்டரீ கம்மலர பொய்கைசூழ தபுக லிந்நகர்
      வண்டமர் கோதையொ டும்மிரு தமண வாளனே. 10
      77. பூங்கமழ் கோதையொ டும்மிரு தான்புக லிந்நகர
      பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ் பத்திவை
      ஆங்கமர் வெய்திய ஆதியா கஇசை வல்லவர்
      ஓங்கம ராவதி யோர்தொழ செல்வதும் உண்மையே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 008 திருக்கடவூர்வீரட்டம்
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      78 சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண
      உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனுங்
      கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட வூர்தனுள்
      விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர னல்லனே. 01
      79. எரிதரு வார்சடை யானும்வெள் ளையெரு தேறியும்
      புரிதரு மாமலர கொன்றைமா லைபுனை தேத்தவே
      கரிதரு காலனை சாடினா னுங்கட வூர்தனுள்
      விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தர னல்லனே. 02
      80. நாதனு நள்ளிரு ளாடினா னுந்நளிர் போதின்கண்
      பாதனும் பாய்புலி தோலினா னும்பசு வேறியுங்
      காதலர் தண்கட வூரினா னுங்கல தேத்தவே
      வேதம தோதியும் வீரட்டா னத்தர னல்லனே. 03
      81. மழுவமர் செல்வனும் மாசிலா தபல பூதமுன்
      முழவொலி யாழ்குழல் மொந்தைகொ டம்முது காட்டிடை
      கழல்வளர் கால்குஞ்சி தாடினா னுங்கட வூர்தனுள்
      விழவொலி மல்கிய வீரட்டா னத்தர னல்லனே. 04
      82. சுடர்மணி சுண்ணவெண் ணீற்றினா னுஞ்சுழல் வாயதோர்
      படமணி நாகம் அரைக்கசை தபர மேட்டியுங்
      கடமணி மாவுரி தோலினா னுங்கட வூர்தனுள்
      விடமணி கண்டனும் வீரட்டா னத்தர னல்லனே. 05
      83. பண்பொலி நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்
      உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி மல்கிய
      கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட வூர்தனுள்
      வெண்பொடி பூசியும் வீரட்டா னத்தர னல்லனே. 06
      84. செவ்வழ லாய்நில னாகிநின் றசிவ மூர்த்தியும்
      முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி கேள்வனுங்
      கவ்வழல் வாய்க்கத நாகமார தான்கட வூர்தனுள்
      வெவ்வழ லேந்துகை வீரட்டா னத்தர னல்லனே. 07
      85. அடியிரண் டோ ருடம் பைஞ்ஞான் கிருபது தோள்தச
      முடியுடை வேந்தனை மூர்க்கழி தமுதல் மூர்த்தியுங்
      கடிகம ழும்பொழில் சூழு தண்கட வூர்தனுள்
      வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தர னல்லனே. 08
      86. வரைகுடை யாமழை தாங்கினா னும்வளர் போதின்கண்
      புரைகடி தோங்கிய நான்முக தான்புரி தேத்தவே
      கரைகடல் சூழ்வையங் காக்கின்றா னுங்கட வூர்தனுள்
      விரைகமழ் பூம்பொழில் வீரட்டா னத்தர னல்லனே. 09
      87. தேரரும் மாசுகொள் மேனியா ருந்தெளி யாததோர்
      ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎம தாதியான்
      காரிளங் கொன்றைவெண் டிங்களா னுங்கட வூர்தனுள்
      வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தர னல்லனே. 10
      88. வெந்தவெண் ணீறணி வீரட்டா னத்துறை வேந்தனை
      அந்தணர் தங்கட வூருளா னையணி காழியான்
      சந்தமெல் லாமடி சாத்தவல் லமறை ஞானசம்
      பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும் பாவமே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 009 திருவீழிமிழலை
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      89 கேள்வியர் நாடொறும் ஓதும்நல் வேதத்தர் கேடிலா
      வேள்விசெய் அந்தணர் வேதியர் வீழிமி ழலையார்
      வாழியர் தோற்றமுங் கேடும்வை பாருயிர் கட்கெலாம்
      ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட்க ணியரே. 01
      90. கல்லின்நற் பாவையோர் பாகத்தர் காதலி தேத்திய
      மெல்லின தார்பக்கல் மேவினர் வீழிமி ழலையார்
      நல்லின தார்செய்த வேள்விசெ குத்தெழு ஞாயிற்றின்
      பல்லனை துந்தகர தாரடி யார்பாவ நாசரே. 02
      91. நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண் டந்தக னைச்செற்ற
      வெஞ்சின மூவிலை சூலத்தர் வீழிமி ழலையார்
      அஞ்சன கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய
      மஞ்சன செஞ்சடை யாரென வல்வினை மாயுமே. 03
      92. கலையிலங் கும்மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம்
      விலையிலங் கும்மணி மாடத்தர் வீழிமி ழலையார்
      தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூல தமருகம்
      அலையிலங் கும்புன லேற்றவர கும்மடி யார்க்குமே. 04
      93. பிறையுறு செஞ்சடை யார்விடை யார்பிச்சை நச்சியே
      வெறியுறு நாட்பலி தேர்ந்துழல் வீழிமி ழலையார்
      முறைமுறை யாலிசை பாடுவா ராடிமுன் தொண்டர்கள்
      இறையுறை வாஞ்சியம் அல்லதெ போதுமென் உள்ளமே. 05
      94. வசையறு மாதவங் கண்டுவ ரிசிலை வேடனாய்
      விசையனு கன்றருள் செய்தவர் வீழிமி ழலையார்
      இசைவர விட்டியல் கேட்பித்து கல்லவ டமிட்டு
      திசைதொழு தாடியும் பாடுவார் சிந்தையு சேர்வரே. 06
      95. சேடர்விண் ணோர்கட்கு தேவர்நல் மூவிரு தொன்னூலர்
      வீடர்மு தீயர்நால் வேதத்தர் வீழிமி ழலையார்
      காடரங் காவுமை காணஅண் டத்திமை யோர்தொழ
      நாடக மாடியை யேத்தவல் லார்வினை நாசமே. 07
      96. எடுத்தவன் மாமலை கீழவி ராவணன் வீழ்தர
      விடுத்தருள் செய்திசை கேட்டவர் வீழிமி ழலையார்
      படுத்துவெங் காலனை பால்வழி பாடுசெய் பாலற்கு
      கொடுத்தனர் இன்பங் கொடுப்பர் தொழக்குறை வில்லையே. 08
      97. திக்கமர் நான்முகன் மாலண்டம் மண்டல தேடிட
      மிக்கமர் தீத்திர ளாயவர் வீழிமி ழலையார்
      சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும்
      நக்கர்த நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே. 09
      98. துற்றரை யார்துவ ராடையர் துப்புர வொன்றிலா
      வெற்றரை யார்அறி யாநெறி வீழிமி ழலையார்
      சொற்றெரி யாப்பொருள் சோதிக்க பால்நின்ற சோதிதான்
      மற்றறி யாவடி யார்கள்தஞ் சிந்தையுள் மன்னுமே. 10
      99. வேதியர் கைதொழு வீழிமி ழலைவி ரும்பிய
      ஆதியை வாழ்பொழில் காழியுள் ஞானசம் பந்தனா
      தோதிய ஒண்டமிழ் பத்திவை யுற்றுரை செய்பவர்
      மாதியல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 010 திருஇராமேச்சுரம்
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      100 அலைவளர் தண்மதி யோடய லேயட கியுமை
      முலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனி
      இலைவளர் தாழைகள் விம்முகா னல்இரா மேச்சுரம்
      தலைவளர் கோலநன் மாலையன் தானிரு தாட்சியே. 01
      101. தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
      பூவிய லும்முடி பொன்றுவி தபழி போயற
      ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்
      மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே. 02
      102. மானன நோக்கிவை தேகிதன் னையொரு மாயையால்
      கானதில் வவ்விய காரர கன்னுயிர் செற்றவன்
      ஈனமி லாப்புக ழண்ணல்செய் தஇரா மேச்சுரம்
      ஞானமும் நன்பொரு ளாகிநின் றதொரு நன்மையே. 03
      103. உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான்
      வரைபொரு தோளிற செற்றவில் லிமகிழ தேத்திய
      விரைமரு வுங்கட லோதமல் கும்இரா மேச்சுர
      தரையர வாடநின் றாடல்பே ணும்அம்மான் அல்லனே. 04
      104. ஊறுடை வெண்டலை கையிலே திப்பல வூர்தொறும்
      வீறுடை மங்கையர் ஐயம்பெய் யவிற லார்ந்ததோர்
      ஏறுடை வெல்கொடி யெந்தைமே யஇரா மேச்சுரம்
      பேறுடை யான்பெய ரேத்தும்மா தர்பிணி பேருமே. 05
      105. அணையலை சூழ்கடல் அன்றடை துவழி செய்தவன்
      பணையிலங் கும்முடி பத்திறு தபழி போக்கிய
      இணையிலி என்றுமி ருந்தகோ யில்இரா மேச்சுர
      துணையிலி தூமலர பாதமே தத்துயர் நீங்குமே. 06
      106. சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன
      முனிவது செய்துக தானைவென் றவ்வினை மூடிட
      இனியருள் நல்கிடென் றண்ணல்செய் தஇரா மேச்சுரம்
      பனிமதி சூடிநின் றாடவல் லபர மேட்டியே. 07
      107. பெருவரை யன்றெடு தேந்தினான் தன்பெயர் சாய்கெட
      அருவரை யாலடர தன்றுநல் கியயன் மாலெனும்
      இருவரும் நாடிநின் றேத்துகோ யில்இரா மேச்சுர
      தொருவனு மேபல வாகிநின் றதொரு வண்ணமே. 08
      இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 09
      108. சாக்கியர் வன்சமண் கையர்மெய் யில்தடு மாற்றத்தார்
      வாக்கிய லும்முரை பற்றுவி டுமதி யொண்மையால்
      ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்
      ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே. 10
      109. பகலவன் மீதியங் காமைக்கா தபதி யோன்தனை
      இகலழி வித்தவன் ஏத்துகோ யில்இரா மேச்சுரம்
      புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால்
      அகலிட மெங்கும்நின் றேத்தவல் லார்க்கில்லை அல்லலே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 011 திருப்புனவாயில்
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      110 மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நூலினன்
      பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்
      அன்னம்அன் னந்நடை யாளொ டும்மம ரும்மிடம்
      புன்னைநன் மாமலர் பொன்னுதிர கும்புன வாயிலே. 01
      111. விண்டவர் தம்புரம் மூன்றெரி துவிடை யேறிப்போய்
      வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ தானிடங்
      கண்டலும் ஞாழலும் நின்றுபெ ருங்கடற் கானல்வா
      புண்டரீ கம்மலர பொய்கைசூழ தபுன வாயிலே. 02
      112. விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறற் பாரிடம்
      புடைபட வாடிய வேடத்தா னும்புன வாயிலிற்
      தொடைநவில் கொன்றை தாரினா னுஞ்சுடர் வெண்மழு
      படைவலன் ஏந்திய பால்நெய்யா டும்பர மனன்றே. 03
      113. சங்கவெண் தோடணி காதினா னுஞ்சடை தாழவே
      அங்கையி லங்கழ லேந்தினா னும்மழ காகவே
      பொங்கர வம்மணி மார்பினா னும்புன வாயிலிற்
      பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின் றபர மேட்டியே. 04
      114. கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறை கண்டனும்
      புலியதள் பாம்பரை சுற்றினா னும்புன வாயிலில்
      ஒலிதரு தண்புன லோடெரு கும்மத மத்தமும்
      மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை யூர்தியே. 05
      115. வாருறு மென்முலை மங்கைபா டநட மாடிப்போ
      காருறு கொன்றைவெண் திங்களா னுங்கனல் வாயதோர்
      போருறு வெண்மழு வேந்தினா னும்புன வாயிலிற்
      சீருறு செல்வமல் கவ்விரு தசிவ லோகனே. 06
      116. பெருங்கடல் நஞ்சமு துண்டுக துபெருங் காட்டிடை
      திருந்திள மென்முலை தேவிபா டந்நட மாடிப்போ
      பொருந்தலர் தம்புரம் மூன்றுமெய் துபுன வாயிலில்
      இருந்தவன் தன்கழ லேத்துவார் கட்கிட ரில்லையே. 07
      117. மனமிகு வேலனவ் வாளர கன்வலி யொல்கிட
      வனமிகு மால்வரை யாலடர தானிட மன்னிய
      இனமிகு தொல்புகழ் பாடலா டல்லெழின் மல்கிய
      புனமிகு கொன்றை தென்றலார தபுன வாயிலே. 08
      118. திருவளர் தாமரை மேவினா னுந்திகழ் பாற்கடற்
      கருநிற வண்ணனுங் காண்பரி யகட வுள்ளிடம்
      நரல்சுரி சங்கொடும் இப்பியு திந்நலம் மல்கிய
      பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன வாயிலே. 09
      119. போதியெ னப்பெய ராயினா ரும்பொறி யில்சமண்
      சாதியு ரைப்பன கொண்டயர துதளர் வெய்தன்மின்
      போதவிழ் தண்பொழில் மல்கு தண்புன வாயிலில்
      வேதனை நாடொறும் ஏத்துவார் மேல்வினை வீடுமே. 10
      120. பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன வாயிலை
      கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற் காழியான்
      நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் நன்மையால்
      அற்றமில் பாடல்ப தேத்தவல் லாரருள் சேர்வரே. 11
      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - புனவாயிலீசுவரர்தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 012 திருக்கோட்டாறு
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      121 வேதியன் விண்ணவ ரேத்தநின் றான்விளங் கும்மறை
      ஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி யார்கிளி
      கோதிய தண்பொழில் சூழ்ந்தழ கார்திரு கோட்டாற்றுள்
      ஆதியை யேநினை தேத்தவல் லார்க்கல்லல் இல்லையே. 01
      122. ஏலம லர்க்குழல் மங்கைநல் லாளிம வான்மகள்
      பாலம ருந்திரு மேனியெங் கள்பர மேட்டியுங்
      கோலம லர்ப்பொழில் சூழ்ந்தெழி லார்திரு கோட்டாற்றுள்
      ஆலநீ ழற்கீழ் இருந்தறஞ் சொன்ன அழகனே. 02
      123. இலைமல்கு சூலமொன் றேந்தினா னும்இமை யோர்தொழ
      மலைமல்கு மங்கையோர் பங்கனா யம்மணி கண்டனுங்
      குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழ கார்திரு கோட்டாற்றுள்
      அலைமல்கு வார்சடை யேற்றுக தஅழ கனன்றே. 03
      124. ஊனம ரும்முட லுள்ளிரு தவ்வுமை பங்கனும்
      வானம ரும்மதி சென்னிவை தமறை யோதியு
      தேனம ரும்மலர சோலைசூழ ததிரு கோட்டாற்றுள்
      தானம ரும்விடை யானும்எங் கள்தலை வனன்றே. 04
      125. வம்பல ரும்மலர கோதைபா கம்மகிழ் மைந்தனுஞ்
      செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி செல்வனுங்
      கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திரு கோட்டாற்றுள்
      நம்பனெ னப்பணி வார்க்கருள் செய்யெங்கள் நாதனே. 05
      126. பந்தம ரும்விரல் மங்கைநல் லாளொரு பாகமா
      வெந்தம ரும்பொடி பூசவல் லவிகிர் தன்மிகுங்
      கொந்தம ரும்மலர சோலைசூழ ததிரு கோட்டாற்றுள்
      அந்தண னைநினை தேத்தவல் லார்க்கில்லை அல்லலே. 06
      127. துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர் வண்ணனும்
      வண்டம ருங்குழல் மங்கைநல் லாளொரு பங்கனு
      தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திரு கோட்டாற்றுள்
      அண்டமும் எண்டிசை யாகிநின் றஅழ கனன்றே. 07
      128. இரவம ருந்நிறம் பெற்றுடை யஇலங் கைக்கிறை
      கரவம ரக்கயி லையெடு தான்வலி செற்றவன்
      குரவம ரும்மலர சோலைசூழ ததிரு கோட்டாற்றுள்
      அரவம ருஞ்சடை யான்அடி யார்க்கருள் செய்யுமே. 08
      129. ஓங்கிய நாரணன் நான்முக னும்முண ராவகை
      நீங்கிய தீயுரு வாகிநின் றநிம லன்நிழற்
      கோங்கம ரும்பொழில் சூழ்ந்தெழி லார்திரு கோட்டாற்றுள்
      ஆங்கம ரும்பெரு மான்அம ரர்க்கம ரனன்றே. 09
      130. கடுக்கொடு ததுவ ராடையர் காட்சியில் லாததோர்
      தடுக்கிடு கிச்சம ணேதிரி வார்கட்கு தன்னருள்
      கொடுக்ககில் லாக்குழ கன்அம ருந்திரு கோட்டாற்றுள்
      இடுக்கணின் றித்தொழு வார்அம ரர்க்கிறை யாவரே. 10
      131. கொடியுயர் மால்விடை யூர்தியி னான்திரு கோட்டாற்றுள்
      அடிகழ லார்க்கநின் றாடவல் லஅரு ளாளனை
      கடிகம ழும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்சொற்
      படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை பாவமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஐராபதேசுவரர்
      தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 013 திருப்பூந்தராய்
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      132 மின்னன எயிறுடை விரவ லோர்கள்த
      துன்னிய புரம்உக சுளிந்த தொன்மையர்
      புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
      அன்னமன் னந்நடை அரிவை பங்கரே. 01
      133. மூதணி முப்புர தெண்ணி லோர்களை
      வேதணி சரத்தினால் வீட்டி னாரவர்
      போதணி பொழிலமர் பூந்த ராய்நகர்
      தாதணி குழலுமை தலைவர் காண்மினே. 02
      134. தருக்கிய திரிபுர தவர்கள் தாம்உக
      பெருக்கிய சிலைதனை பிடித்த பெற்றியர்
      பொருக்கடல் புடைதரு பூந்த ராய்நகர
      கருக்கிய குழலுமை கணவர் காண்மினே. 03
      135. நாகமும் வரையுமே நாணும் வில்லுமா
      மாகமார் புரங்களை மறித்த மாண்பினர்
      பூகமார் பொழிலணி பூந்த ராய்நகர
      பாகமர் மொழியுமை பங்கர் காண்மினே. 04
      136. வெள்ளெயி றுடையவவ் விரவ லார்களூர்
      ஒள்ளெரி யூட்டிய வொருவ னாரொளிர்
      புள்ளணி புறவினிற் பூந்த ராய்நகர
      கள்ளணி குழலுமை கணவர் காண்மினே. 05
      137. துங்கியல் தானவர் தோற்ற மாநகர்
      அங்கியில் வீழ்தர வாய்ந்த வம்பினர்
      பொங்கிய கடலணி பூந்த ராய்நகர்
      அங்கய லனகணி அரிவை பங்கரே. 06
      138. அண்டர்க ளுய்ந்திட அவுணர் மாய்தர
      கண்டவர் கடல்விட முண்ட கண்டனார்
      புண்டரீ கவ்வயற் பூந்த ராய்நகர்
      வண்டமர் குழலிதன் மணாளர் காண்மினே. 07
      139. மாசின அரக்கனை வரையின் வாட்டிய
      காய்சின வெயில்களை கறுத்த கண்டனார்
      பூசுரர் பொலிதரு பூந்த ராய்நகர
      காசைசெய் குழலுமை கணவர் காண்மினே. 08
      140. தாமுக மாக்கிய அசுரர் தம்பதி
      வேமுக மாக்கிய விகிர்தர் கண்ணனும்
      பூமகன் அறிகிலா பூந்தராய் நகர
      கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே 09
      141. முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம்
      அத்தகும் அழலிடை வீட்டி னார்அமண்
      புத்தரும் அறிவொணா பூந்த ராய்நகர
      கொத்தணி குழலுமை கூறர் காண்மினே. 10
      142. புரமெரி செய்தவர் பூந்த ராய்நகர
      பரமலி குழலுமை நங்கை பங்கரை
      பரவிய பந்தன்மெ பாடல் வல்லவர்
      சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 014 திருப்பைஞ்ஞீலி
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      143 ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால்
      ஓரிடங் குறைவிலர் உடையர் கோவணம்
      நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
      பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே. 01
      144. மருவிலார் திரிபுரம் எரிய மால்வரை
      பருவிலா குனித்தபைஞ் ஞீலி மேவலான்
      உருவிலான் பெருமையை உளங்கொ ளாதவ
      திருவிலார் அவர்களை தெருட்ட லாகுமே. 02
      145. அஞ்சுரும் பணிமலர் அமுதம் மாந்தித்தேன்
      பஞ்சுரம் பயிற்றுபைஞ் ஞீலி மேவலான்
      வெஞ்சுர தனிலுமை வெருவ வந்ததோர்
      குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே. 03
      146. கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல்
      பாடல்வண் டிசைமுரல் பயில்பைஞ் ஞீலியார்
      பேடலர் ஆணலர் பெண்ணும் அல்லதோர்
      ஆடலை யுகந்தஎம் அடிகள் அல்லரே. 04
      147. விழியிலா நகுதலை விளங்கி ளம்பிறை
      சுழியிலார் வருபுனற் சூழல் தாங்கினான்
      பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான்
      கிழியிலார் கேண்மையை கெடுக்க லாகுமே. 05
      148. விடையுடை கொடிவல னேந்தி வெண்மழு
      படையுடை கடவுள்பைஞ் ஞீலி மேவலான்
      துடியிடை கலையல்கு லாளோர் பாகமா
      சடையிடை புனல்வைத்த சதுரன் அல்லனே. 06
      149. தூயவன் தூயவெண் ணீறு மேனிமேற்
      பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலா
      மேயவன் வேய்புரை தோளி பாகமா
      ஏயவன் எனைச்செயு தன்மை யென்கொலோ. 07
      150. தொத்தின தோள்முடி யுடைய வன்றலை
      பத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான்
      முத்தினை முறுவல்செய் தாளோர் பாகமா
      பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே. 08
      151. நீருடை போதுறை வானும் மாலுமா
      சீருடை கழலடி சென்னி காண்கிலர்
      பாருடை கடவுள்பைஞ் ஞீலி மேவிய
      தாருடை கொன்றை தலைவர் தன்மையே. 09
      152. பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையுஞ்
      சாலியா தவர்களை சாதி யாததோர்
      கோலியா வருவரை கூட்டி யெய்தபைஞ்
      ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே. 10
      153. கண்புனல் விளைவயற் காழி கற்பகம்
      நண்புணர் அருமறை ஞான சம்பந்தன்
      பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார்
      உண்பின வுலகினி லோங்கி வாழ்வரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 015 திருவெண்காடு
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      154 மந்திர மறையவை வான வரொடும்
      இந்திரன் வழிபட நின்ற எம்மிறை
      வெந்தவெண் ணீற்றர்வெண் காடு மேவிய
      அந்தமு முதலுடை அடிக ளல்லரே. 01
      155. படையுடை மழுவினர் பாய்புலி தோலின்
      உடைவிரி கோவணம் உகந்த கொள்கையர்
      விடையுடை கொடியர்வெண் காடு மேவிய
      சடையிடை புனல்வைத்த சதுர ரல்லரே. 02
      156. பாலொடு நெய்தயிர் பலவு மாடுவர்
      தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
      மேலவர் பரவுவெண் காடு மேவிய
      ஆலம தமர்ந்தஎம் அடிக ளல்லரே. 03
      157. ஞாழலுஞ் செருந்தியும் நறுமலர புன்னையு
      தாழைவெண் குருகயல் தயங்கு கானலில்
      வேழம துரித்தவெண் காடு மேவிய
      யாழின திசையுடை இறைவ ரல்லரே. 04
      158. பூதங்கள் பலவுடை புனிதர் புண்ணியர்
      ஏதங்கள் பலஇடர் தீர்க்கும் எம்மிறை
      வேதங்கள் முதல்வர்வெண் காடு மேவிய
      பாதங்கள் தொழநின்ற பரம ரல்லரே. 05
      159. மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
      எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை
      விண்ணமர் பொழில்கொள்வெண் காடு மேவிய
      அண்ணலை அடிதொழ அல்ல லில்லையே. 06
      160. நயந்தவர கருள்பல நல்கி இந்திரன்
      கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்
      வியந்தவர் பரவுவெண் காடு மேவிய
      பயந்தரு மழுவுடை பரம ரல்லரே. 07
      161. மலையுடன் எடுத்தவல் லரக்கன் நீள்முடி
      தலையுடன் நெரித்தருள் செய்த சங்கரர்
      விலையுடை நீற்றர்வெண் காடு மேவிய
      அலையுடை புனல்வைத்த அடிக ளல்லரே. 08
      162. ஏடவிழ் நறுமலர் அயனும் மாலுமா
      தேடவு தெரிந்தவர் தேர கிற்கிலார்
      வேடம துடையவெண் காடு மேவிய
      ஆடலை யமர்ந்தஎம் அடிக ளல்லரே. 09
      163. போதியர் பிண்டியர் பொருத்த மில்லிகள்
      நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார்
      வேதியர் பரவுவெண் காடு மேவிய
      ஆதியை யடிதொழ அல்ல லில்லையே. 10
      164. நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
      செல்வன்எஞ் சிவனுறை திருவெண் காட்டின்மேற்
      சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
      அல்லலோ டருவினை அறுதல் ஆணையே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 016 திருக்கொள்ளிக்காடு
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      165 நிணம்படு சுடலையின் நீறு பூசிநின்
      றிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம்
      உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினுங்
      குணம்பெரி துடையர்நங் கொள்ளி காடரே. 01
      166. ஆற்றநல் அடியிணை அலர்கொண் டேத்துவான்
      சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்
      மாற்றல னாகிமுன் அடர்த்து வந்தணை
      கூற்றினை யுதைத்தனர் கொள்ளி காடரே. 02
      167. அத்தகு வானவர காக மால்விடம்
      வைத்தவர் மணிபுரை கண்ட தின்னுளே
      மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
      கொத்தலர் கொன்றையர் கொள்ளி காடரே. 03
      168. பாவணம் மேவுசொன் மாலை யிற்பல
      நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர்
      ஆவணங் கொண்டெமை யாள்வ ராயினுங்
      கோவணங் கொள்கையர் கொள்ளி காடரே. 04
      169. வாரணி வனமுலை மங்கை யாளொடுஞ்
      சீரணி திருவுரு திகழ்ந்த சென்னியர்
      நாரணி சிலைதனால் நணுக லார்எயில்
      கூரெரி கொளுவினர் கொள்ளி காடரே. 05
      170. பஞ்சுதோய் மெல்லடி பாவை யாளொடும்
      மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாடொறும்
      வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை
      குஞ்சரம் உரித்தனர் கொள்ளி காடரே. 06
      171. இறையுறு வரிவளை இசைகள் பாடிட
      அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்
      சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசை
      குறையுறு மதியினர் கொள்ளி காடரே. 07
      172. எடுத்தனன் கயிலையை இயல் வலியினால்
      அடர்த்தனர் திருவிர லால்அ லறிட
      படுத்தன ரென்றவன் பாடல் பாடலுங்
      கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளி காடரே. 08
      173. தேடினா ரயன்முடி மாலுஞ் சேவடி
      நாடினா ரவரென்று நணுக கிற்றிலர்
      பாடினார் பரிவொடு பத்தர் சித்தமுங்
      கூடினார கருள்செய்வர் கொள்ளி காடரே. 09
      174. நாடிநின் றறிவில்நா ணிலிகள் சாக்கியர்
      ஓடிமுன் ஓதிய வுரைகள் மெய்யல
      பாடுவர் நான்மறை பயின்ற மாதொடுங்
      கூடுவர் திருவுரு கொள்ளி காடரே. 10
      175. நற்றவர் காழியுள் ஞான சம்பந்தன்
      குற்றமில் பெரும்புகழ கொள்ளி காடரை
      சொற்றமிழ் இன்னிசை மாலை சோர்வின்றி
      கற்றவர் கழலடி காண வல்லரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அக்கினீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 017 திருவிசயமங்கை
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      176 மருவமர் குழலுமை பங்கர் வார்சடை
      அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாங்
      குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
      விரவிய பொழிலணி விசய மங்கையே. 01
      177. கீதமுன் இசைதர கிளரும் வீணையர்
      பூதமுன் இயல்புடை புனிதர் பொன்னகர்
      கோதனம் வழிபட குலவு நான்மறை
      வேதியர் தொழுதெழு விசய மங்கையே. 02
      178. அக்கர வரையினர் அரிவை பாகமா
      தொக்கநல் விடையுடை சோதி தொன்னகர்
      தக்கநல் வானவர் தலைவர் நாடொறும்
      மிக்கவர் தொழுதெழு விசய மங்கையே. 03
      179. தொடைமலி இதழியு துன்எ ருக்கொடு
      புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர்
      படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்
      விடைமலி கொடியணல் விசய மங்கையே. 04
      180. தோடமர் காதினன் துதைந்த நீற்றினன்
      ஏடமர் கோதையோ டினித மர்விடங்
      காடமர் மாகரி கதற போர்த்ததோர்
      வேடம துடையணல் விசய மங்கையே. 05
      181. மைப்புரை கண்ணுமை பங்கன் வண்டழல்
      ஒப்புரை மேனியெம் முடைய வன்னகர்
      அப்பொடு மலர்கொடங் கிறைஞ்சி வானவர்
      மெய்ப்பட அருள்புரி விசய மங்கையே. 06
      182. இரும்பொனின் மலைவிலின் எரிச ரத்தினால்
      வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர்
      சுரும்பமர் கொன்றையு தூய மத்தமும்
      விரும்பிய சடையணல் விசய மங்கையே. 07
      183. உளங்கையி லிருபதோ டொருப துங்கொடாங்
      களந்தரும் வரையெடு திடும்அ ரக்கனை
      தளர்ந்துடல் நெரிதர அடர்த்த தன்மையன்
      விளங்கிழை யொடும்புகும் விசய மங்கையே. 08
      184. மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை
      அண்ணல்கள் தமக்கள பரிய அத்தனூர்
      தண்ணறுஞ் சாந்தமும் பூவும் நீர்கொடு
      விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே. 09
      185. கஞ்சியுங் கவளமுண் கவணர் கட்டுரை
      நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார்
      செஞ்சடை முடியுடை தேவன் நன்னகர்
      விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே. 10
      186. விண்ணவர் தொழுதெழு விசய மங்கையை
      நண்ணிய புகலியுள் ஞான சம்பந்தன்
      பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
      புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - விசயநாதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 018 திருவைகன்மாடக்கோயில்
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      187 துளமதி யுடைமறி தோன்று கையினர்
      இளமதி யணிசடை எந்தை யாரிடம்
      உளமதி யுடையவர் வைக லோங்கிய
      வளமதி தடவிய மாட கோயிலே. 01
      188. மெய்யகம் மிளிரும்வெண் ணூலர் வேதியர்
      மையகண் மலைமக ளோடும் வைகிடம்
      வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசை
      செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே. 02
      189. கணியணி மலர்கொடு காலை மாலையும்
      பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர்
      தணியணி உமையொடு தாமு தங்கிடம்
      மணியணி கிளர்வைகல் மாட கோயிலே. 03
      190. கொம்பியல் கோதைமுன் அஞ்ச குஞ்சர
      தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்
      வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசை
      செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே. 04
      191. விடம்அடை மிடற்றினர் வேத நாவினர்
      மடமொழி மலைமக ளோடும் வைகிடம்
      மடவனம் நடைபயில் வைகல் மாநகர
      குடதிசை நிலவிய மாட கோயிலே. 05
      192. நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை
      இறையவ ருறைவிடம் இலங்கு மூவெரி
      மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்
      திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே. 06
      193. எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்
      திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம்
      வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை
      வருமுகி லணவிய மாட கோயிலே. 07
      194. மலையன இருபது தோளி னான்வலி
      தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம்
      மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள்
      வலம்வரு மலையன மாட கோயிலே. 08
      195. மாலவன் மலரவன் நேடி மால்கொள
      மாலெரி யாகிய வரதர் வைகிடம்
      மாலைகொ டணிமறை வாணர் வைகலில்
      மாலன மணியணி மாட கோயிலே. 09
      196. கடுவுடை வாயினர் கஞ்சி
      பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம்
      மடமுடை யவர்பயில் வைகல் மாநகர்
      வடமலை யனையநன் மாட கோயிலே. 101
      197. மைந்தன திடம்வைகல் மாட கோயிலை
      சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம்
      பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை
      சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வைகனாதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 019 திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில்
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      198 எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில்
      நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
      அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர
      குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே. 01
      199. மையகண் மலைமகள் பாக மாயிருள்
      கையதோர் கனலெரி கனல ஆடுவர்
      ஐயநன் பொருபுனல் அம்பர செம்பியர்
      செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே. 02
      200. மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர்
      பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர்
      அறைபுனல் நிறைவயல் அம்பர் மாநகர்
      இறைபுனை யெழில்வளர் இடம தென்பரே. 03
      201. இரவுமல் கிளமதி சூடி யீடுயர்
      பரவமல் கருமறை பாடி யாடுவர்
      அரவமோ டுயர்செம்மல் அம்பர கொம்பலர்
      மரவமல் கெழில்நகர் மருவி வாழ்வரே. 04
      202. சங்கணி குழையினர் சாமம் பாடுவர்
      வெங்கனல் கனல்தர வீசி யாடுவர்
      அங்கணி விழவமர் அம்பர் மாநகர
      செங்கண்நல் இறைசெய்த கோயில் சேர்வரே. 05
      203. கழல்வளர் காலினர் சுடர்கை மல்கவோர்
      சுழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர்
      அழல்வளர் மறையவர் அம்பர பைம்பொழில்
      நிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே. 06
      204. இகலுறு சுடரெரி இலங்க வீசியே
      பகலிடம் பலிகொள பாடி யாடுவர்
      அகலிடம் மலிபுகழ் அம்பர் வம்பவிழ்
      புகலிடம் நெடுநகர் புகுவர் போலுமே. 07
      205. எரியன மணிமுடி இலங்கை கோன்றன
      கரியன தடக்கைகள் அடர்த்த காலினர்
      அரியவர் வளநகர் அம்பர் இன்பொடு
      புரியவர் பிரிவிலா பூதஞ் சூழவே. 08
      206. வெறிகிளர் மலர்மிசை யவனும் வெந்தொழிற்
      பொறிகிளர் அரவணை புல்கு செல்வனும்
      அறிகில அரியவர் அம்பர செம்பியர்
      செறிகழல் இறைசெய்த கோயில் சேர்வரே. 09
      207. வழிதலை பறிதலை யவர்கள் கட்டிய
      மொழிதலை பயனென மொழியல் வம்மினோ
      அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்
      உழிதலை யொழிந்துளர் உமையு தாமுமே. 10
      208. அழகரை யடிகளை அம்பர் மேவிய
      நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை
      உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின்
      தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பிரமபுரிநாதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 020 திருப்பூவணம்
      ஈரடிமேல் வைப்பு
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      209 மாதமர் மேனிய னாகி வண்டொடு
      போதமர் பொழிலணி பூவ ணத்துறை
      வேதனை விரவலர் அரணம் மூன்றெய்த
      நாதனை யடிதொழ நன்மை யாகுமே. 01
      210. வானணி மதிபுல்கு சென்னி வண்டொடு
      தேனணி பொழில்திரு பூவ ணத்துறை
      ஆனநல் லருமறை யங்கம் ஓதிய
      ஞானனை யடிதொழ நன்மை யாகுமே. 02
      211. வெந்துய ருறுபிணி வினைகள் தீர்வதோர்
      புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை
      அந்திவெண் பிறையினோ டாறு சூடிய
      நந்தியை யடிதொழ நன்மை யாகுமே. 03
      212. வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடி
      பூசனை பொழில்திகழ் பூவ ணத்துறை
      ஈசனை மலர்புனை தேத்து வார்வினை
      நாசனை யடிதொழ நன்மை யாகுமே. 04
      213. குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை
      பொருந்திய பொழில்திரு பூவ ணத்துறை
      அருந்திறல் அவுணர்தம் அரணம் மூன்றெய்த
      பெருந்தகை யடிதொழ பீடை யில்லையே. 05
      214. வெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மிய
      பொறியர வணிபொழிற் பூவ ணத்துறை
      கிறிபடு முடையினன் கேடில் கொள்கையன்
      நறுமலர் அடிதொழ நன்மை யாகுமே. 06
      215. பறைமல்கு முழவொடு பாடல் ஆடலன்
      பொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறை
      மறைமல்கு பாடலன் மாதோர் கூறினன்
      அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே. 07
      216. வரைதனை யெடுத்தவல் லரக்கன் நீள்முடி
      விரல்தனில் அடர்த்தவன் வெள்ளை நீற்றினன்
      பொருபுனல் புடையணி பூவ ணந்தனை
      பரவிய அடியவர கில்லை பாவமே. 08
      217. நீர்மல்கு மலருறை வானும் மாலுமா
      சீர்மல்கு திருந்தடி சேர கிற்கிலர்
      போர்மல்கு மழுவினன் மேய பூவணம்
      ஏர்மல்கு மலர்புனை தேத்தல் இன்பமே. 09
      218. மண்டைகொண் டுழிதரு மதியில் தேரருங்
      குண்டருங் குணமல பேசுங் கோலத்தர்
      வண்டமர் வளர்பொழில் மல்கு பூவணங்
      கண்டவர் அடிதொழு தேத்தல் கன்மமே. 10
      219. புண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறை
      அண்ணலை யடிதொழு தந்தண் காழியுள்
      நண்ணிய அருமறை ஞான சம்பந்தன்
      பண்ணிய தமிழ்சொல பறையும் பாவமே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 021 திருக்கருக்குடி
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      220 நனவிலுங் கனவிலும் நாளு தன்னொளி
      நினைவிலும் எனக்குவ தெய்தும் நின்மலன்
      கனைகடல் வையக தொழு கருக்குடி
      அனலெரி யாடுமெம் மடிகள் காண்மினே. 01
      221. வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர்
      மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்
      காதியல் குழையினன் கருக்கு டியமர்
      ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே. 02
      222. மஞ்சுறு பொழில்வளம் மலி கருக்குடி
      நஞ்சுறு திருமிட றுடைய நாதனார்
      அஞ்சுரும் பார்குழல் அரிவை யஞ்சவே
      வெஞ்சுர தனில்விளை யாட லென்கொலோ. 03
      223. ஊனுடை பிறவியை அறுக்க வுன்னுவீர்
      கானிடை யாடலான் பயில் கருக்குடி
      கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்
      வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே. 04
      224. சூடுவர் சடையிடை கங்கை நங்கையை
      கூடுவ ருலகிடை யையங் கொண்டொலி
      பாடுவ ரிசைபறை கொட்ட நட்டிருள்
      ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே. 05
      225. இன்புடை யாரிசை வீணை பூணரா
      என்புடை யாரெழில் மேனி மேலெரி
      முன்புடை யார்முத லேத்தும் அன்பரு
      கன்புடை யார்கரு குடியெம் மண்ணலே. 06
      226. காலமும் ஞாயிறு தீயு மாயவர்
      கோலமும் முடியர வணிந்த கொள்கையர்
      சீலமும் உடையவர் திரு கருக்குடி
      சாலவும் இனிதவ ருடைய தன்மையே. 07
      227. எறிகடல் புடைதழு விலங்கை மன்னனை
      முறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார்
      கறைபடு பொழில்மதி தவழ் கருக்குடி
      அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே. 08
      228. பூமனு திசைமுகன் தானும் பொற்பமர்
      வாமனன் அறிகிலா வண்ண மோங்கெரி
      ஆமென வுயர்ந்தவன் அணி கருக்குடி
      நாமன னினில்வர நினைதல் நன்மையே. 09
      229. சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி
      ஆக்கிய வுரைகொளேல் அரு திருந்ந
      காக்கிய அரனுறை யணிக ருக்குடி
      பூக்கமழ் கோயிலே புடைப டுய்ம்மினே. 10
      230. கானலில் விரைமலர் விம்மு காழியான்
      வானவன் கருக்குடி மைந்தன் தன்னொளி
      ஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லிய
      ஊனமில் மொழிவலார குயரும் இன்பமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சற்குணலிங்கேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 022 திருப்பஞ்சாக்கரப்பதிகம்
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      231 துஞ்சலு துஞ்சலி லாத போழ்தினும்
      நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்
      வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்
      றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே. 01
      232. மந்திர நான்மறை யாகி வானவர்
      சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
      செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர
      கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே. 02
      233. ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
      ஞானவி ளக்கினை யேற்றி நன்புல
      தேனைவ ழிதிற தேத்து வார்க்கிடர்
      ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே. 03
      234. நல்லவர் தீயரெ னாது நச்சினர்
      செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
      கொல்லந மன்தமர் கொண்டு போமிட
      தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே. 04
      235. கொங்கலர் மன்மதன் வாளி யைந்தக
      தங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்
      தங்கர வின்படம் அஞ்சு தம்முடை
      அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே. 05
      236. தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
      வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
      இம்மை வினையடர தெய்தும் போழ்தினும்
      அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே. 06
      237. வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்
      பீடை கெடுப்பன பின்னை நாடொறும்
      மாடு கொடுப்பன மன்னு மாநடம்
      ஆடி யுகப்பன அஞ்செ ழுத்துமே. 07
      238. வண்டம ரோதி மடந்தை பேணின
      பண்டையி ராவணன் பாடி யுய்ந்தன
      தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர
      கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே. 08
      239. கார்வணன் நான்முகன் காணு தற்கொணா
      சீர்வண சேவடி செவ்வி நாடொறும்
      பேர்வணம் பேசி பிதற்றும் பித்தர்க
      கார்வண மாவன அஞ்செ ழுத்துமே. 09
      240. புத்தர் சமண்கழு கையர் பொய்கொளா
      சி தவர்கள் தெளிந்து தேறின
      வித்தக நீறணி வார்வி னைப்பகை
      கத்திர மாவன அஞ்செ ழுத்துமே. 10
      241. நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
      கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
      அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழு
      துற்றன வல்லவர் உம்ப ராவரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 023 திருவிற்கோலம்
      பண் - காந்தாரபஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      242 உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
      திருவினான் வளர்சடை திங்கள் கங்கையான்
      வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
      செருவினான் உறைவிட திருவிற் கோலமே. 01
      243. சிற்றிடை யுமையொரு பங்கன் அங்கையில்
      உற்றதோர் எரியினன் ஒருச ரத்தினால்
      வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தற
      செற்றவன் உறைவிட திருவிற் கோலமே. 02
      244. ஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர்தொழும்
      மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்
      பையர வல்குலாள் பாக மாகவுஞ்
      செய்யவன் உறைவிட திருவிற் கோலமே. 03
      245. விதைத்தவன் முனிவரு கறமுன் காலனை
      உதைத்தவன் உயிரிழ துருண்டு வீழ்தர
      புதைத்தவன் நெடுநகர புரங்கள் மூன்றையுஞ்
      சிதைத்தவன் உறைவிட திருவிற் கோலமே. 04
      246. முந்தினான் மூவருள் முதல்வ னாயினான்
      கொந்துலாம் மலர்ப்பொழிற் கூகம் மேவினான்
      அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
      சிந்துவான் உறைவிட திருவிற் கோலமே. 05
      247. தொகுத்தவன் அருமறை யங்கம் ஆகமம்
      வகுத்தவன் வளர்பொழிற் கூகம் மேவினான்
      மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தற
      செகுத்தவன் உறைவிட திருவிற் கோலமே. 06
      248. விரித்தவன் அருமறை விரிச டைவெள்ள
      தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற
      எரித்தவன் இலங்கையர் கோனி டர்பட
      சிரித்தவன் உறைவிட திருவிற் கோலமே. 07
      இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 08
      249. திரிதரு புரமெரி செய்த சேவகன்
      வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
      அரியொடு பிரமன தாற்ற லால்உரு
      தெரியலன் உறைவிட திருவிற் கோலமே. 09
      250. சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர்
      நீர்மையில் உரைகள்கொள் ளாத நேசர்க்கு
      பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடுஞ்
      சீர்மையி னானிட திருவிற் கோலமே. 10
      251. கோடல்வெண் பிறையனை கூகம் மேவிய
      சேடன செழுமதில் திருவிற் கோலத்தை
      நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
      பாடல்வல் லார்களு கில்லை பாவமே. 11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - புராந்தகேசுவரர் தேவியார்
      இந்தத்தலம் கூவமென வழங்கப்படுகின்றது.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 024 திருக்கழுமலம்
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      252 மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
      எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை
      கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர
      பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே. 01
      253. போதையார் பொற்கிண்ண தடிசில்பொல் லாதென
      தாதையார் முனிவுற தானெனை யாண்டவன்
      காதையார் குழையினன் கழுமல வளநகர
      பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே. 02
      254. தொண்டணை செய்தொழில் துயரறு துய்யலாம்
      வண்டணை கொன்றையான் மதுமலர சடைமுடி
      கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர
      பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே. 03
      255. அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
      நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
      கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர
      பெயர்பல துதிசெ பெருந்தகை யிருந்ததே. 04
      256. அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
      விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங்
      கடையுயர் மாடமார் கழுமல வளநகர
      பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே. 05
      257. மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
      கற்றநல் வேதியர் கழுமல வளநகர
      சிற்றிடை பேரல்குல் திருந்திழை யவளொடும்
      பெற்றெனை யாளுடை பெருந்தகை யிருந்ததே. 06
      258. குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே
      நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
      கறைவளர் பொழிலணி கழுமல வளநகர
      பிறைவளர் சடைமுடி பெருந்தகை யிருந்ததே. 07
      259. அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
      நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
      கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர
      பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே. 08
      260. நெடியவன் பிரமனும் நினைப்பரி தாயவர்
      அடியொடு முடியறி யாவழல் உருவினன்
      கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர
      பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே. 09
      261. தாருறு தட்டுடை சமணர்சா கியர்கள்தம்
      ஆருறு சொற்களை தடியிணை யடைந்துய்ம்மின்
      காருறு பொழில்வளர் கழுமல வளநகர
      பேரற தாளொடும் பெருந்தகை யிருந்ததே. 10
      262. கருந்தட தேன்மல்கு கழுமல வளநகர
      பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை
      அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
      விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 025 திருந்துதேவன்குடி
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      263 மருந்துவேண் டில்லிவை மந்திரங் கள்ளிவை
      புரிந்துகே கப்படும் புண்ணியங் கள்ளிவை
      திருந்துதே வன்குடி தேவர்தே வெய்திய
      அருந்தவ தோர்தொழும் அடிகள்வே டங்களே. 01
      264. வீதிபோ காவன வினையைவீ டுவ்வன
      ஓதியோர ககப்படா பொருளையோ விப்பன
      தீதில்தே வன்குடி தேவர்தே வெய்திய
      ஆதி தம்மிலா அடிகள்வே டங்களே. 02
      265. மானமா குவ்வன மாசுநீ
      வானையுள் கச்செலும் வழிகள்கா டுவ்வன
      தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
      ஆனஞ்சா டும்முடி யடிகள்வே டங்களே. 03
      266. செவிகளார் விப்பன சிந்தையு சேர்வன
      கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன
      புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
      அவிகளு கப்படும் அடிகள்வே டங்களே. 04
      267. விண்ணுலா வுந்நெறி வீடுகா டுந்நெறி
      மண்ணுலா வுந்நெறி மயக்கந்தீர குந்நெறி
      தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
      அண்ணலான் ஏறுடை யடிகள்வே டங்களே. 05
      268. பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா
      புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படு
      திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி
      அங்கமா றுஞ்சொன்ன அடிகள்வே டங்களே. 06
      269. கரைதலொன் றும்மிலை கருதவல் லார்த
      குரையிலூ னம்மிலை உலகினின் மன்னுவர்
      திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
      அரையில்வெண் கோவண தடிகள்வே டங்களே. 07
      270. உலகமு குந்திறல் லுடையர கன்வலி
      விலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தின
      திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி
      அலர்தயங் கும்முடி யடிகள்வே டங்களே. 08
      271. துளக்கமில் லாதன தூயதோற் றத்தன
      விளக்கமா குவ்வன வெறிவண்டா ரும்பொழில்
      திளைக்குந்தே வன்குடி திசைமுக னோடுமால்
      அளக்கவொண் ணாவண்ண தடிகள்வே டங்களே. 09
      272. செருமரு தண்துவர தேரமண் ஆதர்கள்
      உருமரு வப்படா தொழும்பர்தம் உரைகொளேல்
      திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி
      அருமரு தாவன அடிகள்வே டங்களே. 10
      273. சேடர்தே வன்குடி தேவர்தே வன்றனை
      மாடமோங் கும்பொழில் மல்குதண் காழியான்
      நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
      பாடல்ப தும்வல்லார கில்லையாம் பாவமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கர்க்கடகேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 026 திருக்கானப்பேர்
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      274 பிடியெலாம் பின்செல பெருங்கைமா மலர்தழீஇ
      விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடுங்
      கடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் அண்ணல்நின்
      அடியலால் அடைசரண் உடையரோ அடியரே. 01
      275. நுண்ணிடை பேரல்குல் நூபுரம் மெல்லடி
      பெண்ணின்நல் லாளையோர் பாகமா பேணினான்
      கண்ணுடை நெற்றியான் கருதிய கானப்பேர்
      விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே. 02
      276. வாவிவா தங்கிய நுண்சிறை வண்டினங்
      காவிவா பண்செயுங் கானப்பேர் அண்ணலை
      நாவிவா சாந்துளும் பூவுளும் ஞானநீர்
      தூவிவா பெய்துநின் றாட்டுவார் தொண்டரே. 03
      277. நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
      பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளுங்
      கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர்
      குறையுடை யவர்க்கலாற் களைகிலார் குற்றமே. 04
      278. ஏனப்பூண் மார்பின்மேல் என்புபூண் டீறிலா
      ஞானப்பே ராயிரம் பேரினான் நண்ணிய
      கானப்பே ரூர்தொழுங் காதலார் தீதிலர்
      வானப்பே ரூர்புகும் வண்ணமும் வல்லரே. 05
      279. பள்ளமே படர்சடை பாற்பட பாய்ந்தநீர்
      வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்
      கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
      உள்ளமே கோயிலா உள்குமென் னுள்ளமே. 06
      280. மானமா மடப்பிடி வன்கையால் அலகிட
      கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்
      ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணின்
      ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே. 07
      281. வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண்
      டோ ளினான் நெடுமுடி தொலையவே யூன்றிய
      தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
      நாளும்நாள் உயர்வதோர் நன்மையை பெறுவரே. 08
      282. சிலையினால் முப்புர தீயெழ செற்றவன்
      நிலையிலா இருவரை நிலைமைகண் டோ ங்கினான்
      கலையினார் புறவில்தேன் கமழ்தரு கானப்பேர்
      தலையினால் வணங்குவார் தவமுடை யார்களே. 09
      283. உறித்தலை சுரையொடு குண்டிகை பிடித்துச்சி
      பறித்தலும் போர்த்தலும் பயனிலை பாவிகாள்
      மறித்தலை மடப்பிடி வளரிளங் கொழுங்கொடி
      கறித்தெழு கானப்பேர் கைதொழல் கருமமே. 10
      284. காட்டக தாடலான் கருதிய கானப்பேர்
      கோட்டக திளவரால் குதிகொளுங் காழியான்
      நாட்டக தோங்குசீர் ஞானசம் பந்தன
      பாட்டக திவைவலார கில்லையாம் பாவமே. 11
      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - காளையீசுவரர் தேவியார்
      இத்தலம் காளையார் கோவிலென்று வழங்கப்படுகின்றது.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 027 திருச்சக்கரப்பள்ளி
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      285 படையினார் வெண்மழு பாய்புலி தோலரை
      உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
      விடையினார் வெண்பொடி பூசியார் விரிபுனல்
      சடையினார் உறைவிடஞ் சக்கர பள்ளியே. 01
      286. பாடினார் அருமறை பனிமதி சடைமிசை
      சூடினார் படுதலை துன்னெரு கதனொடும்
      நாடினார் இடுபலி நண்ணியோர் காலனை
      சாடினார் வளநகர் சக்கர பள்ளியே. 02
      287. மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்
      பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமு
      துன்னினார் உலகெலா தொழுதெழ நான்மறை
      தன்னினார் வளநகர் சக்கர பள்ளியே. 03
      288. நலமலி கொள்கையார் நான்மறை பாடலார்
      வலமலி மழுவினார் மகிழுமூர் வண்டறை
      மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
      சலசல மணிகொழி சக்கர பள்ளியே. 04
      289. வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்
      அந்தமில் அணிமலை மங்கையோ டமருமூர்
      கந்தமார் மலரொடு காரகில் பன்மணி
      சந்தினோ டணைபுனற் சக்கர பள்ளியே. 05
      290. பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
      வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
      ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்
      தாங்கினார் உறைவிடஞ் சக்கர பள்ளியே. 06
      291. பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
      பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
      நீரினார் சடைமுடி நிரைமலர கொன்றை
      தாரினார் வளநகர் சக்கர பள்ளியே. 07
      292. முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள்
      எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால்
      அதிரிலா வல்லர கன்வலி வாட்டிய
      சதிரினார் வளநகர் சக்கர பள்ளியே. 08
      293. துணிபடு கோவணஞ் சுண்ணவெண் பொடியினர்
      பணிபடு மார்பினர் பனிமதி சடையினர்
      மணிவண னவனொடு மலர்மிசை யானையு
      தணிவினர் வளநகர் சக்கர பள்ளியே. 09
      294. உடம்புபோர் சீவரர் ஊண்தொழிற் சமணர்கள்
      விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
      வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலு
      தடம்புனல் சூழ்தரு சக்கர பள்ளியே. 10
      295. தண்வயல் புடையணி சக்கர பள்ளியெங்
      கண்ணுத லவனடி கழுமல வளநகர்
      நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல்
      பண்ணிய இவைசொல பறையுமெ பாவமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஆலந்துறைஈசுவரர் தேவியார்
      சக்கரப்பள்ளியினிற் சார்ந்த அல்லியங்கோதை
      சொற்கிரங்கு மாலந்துறையானே என்னுஞ்
      சிவநா பஃறொடையானு முணர்க.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 028 திருமழபாடி
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      296 காலையார் வண்டினங் கிண்டிய காருறுஞ்
      சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே
      வேலையார் விடமணி வேதியன் விரும்பிடம்
      மாலையார் மதிதவழ் மாமழ பாடியே. 01
      297. கறையணி மிடறுடை கண்ணுதல் நண்ணிய
      பிறையணி செஞ்சடை பிஞ்ஞகன் பேணுமூர்
      துறையணி குருகின தூமலர் துதையவே
      மறையணி நாவினான் மாமழ பாடியே. 02
      298. அந்தணர் வேள்வியும் அருமறை துழனியுஞ்
      செந்தமிழ கீதமுஞ் சீரினால் வளர்தர
      பந்தணை மெல்விர லாளொடும் பயில்விடம்
      மந்தம்வ துலவுசீர் மாமழ பாடியே. 03
      299. அத்தியின் உரிதனை யழகுற போர்த்தவன்
      முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன்
      பத்தியாற் பாடிட பரிந்தவர கருள்செயும்
      அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே. 04
      300. கங்கையார் சடையிடை கதிர்மதி யணிந்தவன்
      வெங்கண்வா ளரவுடை வேதியன் தீதிலா
      செங்கயற் கண்ணுமை யாளொடுஞ் சேர்விடம்
      மங்கைமார் நடம்பயில் மாமழ பாடியே. 05
      301. பாலனா ராருயிர் பாங்கினால் உணவருங்
      காலனார் உயிர்செ காலினாற் சாடினான்
      சேலினார் கண்ணினாள் தன்னொடுஞ் சேர்விடம்
      மாலினார் வழிபடு மாமழ பாடியே. 06
      302. விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ தேத்தவே
      எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்
      கண்ணினாற் காமனை கனலெழ காய்ந்தஎம்
      அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே. 07
      303. கரத்தினாற் கயிலையை எடுத்தகார் அரக்கன
      சிரத்தினை யூன்றலுஞ் சிவனடி சரண்எனா
      இரத்தினாற் கைந்நரம் பெடுத்திசை பாடலும்
      வரத்தினான் மருவிடம் மாமழ பாடியே. 08
      304. ஏடுலா மலர்மிசை அயனெழில் மாலுமாய்
      நாடினார கரியசீர் நாதனார் உறைவிடம்
      பாடெலாம் பெண்ணையின் பழம்விழ பைம்பொழில்
      மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே. 09
      305. உறிபிடி தூத்தைவா சமணொடு சாக்கியர்
      நெறிபிடி தறிவிலா நீசர்சொற் கொள்ளன்மின்
      பொறிபிடி தரவினம் பூணென கொண்டுமான்
      மறிபிடி தானிடம் மாமழ பாடியே. 10
      306. ஞாலத்தார் ஆதிரை நாளினான் நாடொறுஞ்
      சீலத்தான் மேவிய திருமழ பாடியை
      ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல்
      கோலத்தாற் பாடுவார் குற்றமற் றார்களே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 029 மேலைத்திருக்காட்டுப்பள்ளி
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      307 வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
      ஊருமன் னும்பலி யுண்பதும் வெண்டலை
      காருமன் னும்பொழில் சூழ்ந்தகா டுப்பள்ளி
      நீருமன் னுஞ்சடை நிமலர்த நீர்மையே. 01
      308. நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணி
      கருத்தனார் கடிபொழில் சூழ்ந்தகா டுப்பள்ளி
      அருத்தனார் அழகமர் மங்கையோர் பாகமா
      பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே. 02
      309. பண்ணினார் அருமறை பாடினார் நெற்றியோர்
      கண்ணினார் கடிபொழில் சூழ்ந்தகா டுப்பள்ளி
      விண்ணினார் விரிபுனல் மேவினார் சடைமுடி
      அண்ணலார் எம்மையா ளுடையஎம் அடிகளே. 03
      310. பணங்கொள்நா கம்மரை கார்ப்பது பல்பலி
      உணங்கலோ டுண்கலன் உறைவது காட்டிடை
      கணங்கள்கூ டித்தொழு தேத்துகா ட்டுப்பள்ளி
      நிணங்கொள்சூ லப்படை நிமலர்த நீர்மையே. 04
      311. வரையுலாஞ் சந்தொடு வந்திழி காவிரி
      கரையுலாம் இடுமணல் சூழ்ந்தகா டுப்பள்ளி
      திரையுலாங் கங்கையு திங்களுஞ் சூடியங்
      கரையுலாங் கோவண தடிகள்வே டங்களே. 05
      312. வேதனார் வெண்மழு ஏந்தினார் அங்கமுன்
      ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழை
      காதினார் கடிபொழில் சூழ்ந்தகா டுப்பள்ளி
      நாதனார் திருவடி நாளும்நின் றேத்துமே. 06
      313. மையினார் மிடறனார் மான்மழு வேந்திய
      கையினார் கடிபொழில் சூழ்ந்தகா டுப்பள்ளி
      தையலோர் பாகமா தண்மதி சூடிய
      ஐயனார் அடிதொழ அல்லலொன் றில்லையே. 07
      314. சிலைதனால் முப்புரஞ் செற்றவன் சீரினார்
      மலைதனால் வல்லர கன்வலி வாட்டினான்
      கலைதனார் புறவணி மல்குகா டுப்பள்ளி
      தலைதனால் வணங்கிட தவமது ஆகுமே. 08
      315. செங்கண்மால் திகழ்தரு மலருறை திசைமுகன்
      தங்கையால் தொழுதெழ தழலுரு வாயினான்
      கங்கையார் சடையினான் கருதுகா டுப்பள்ளி
      அங்கையால் தொழுமவர கல்லலொன் றில்லையே. 09
      316. போதியார் பிண்டியா ரென்றஅ பொய்யர்கள்
      வாதினால் உரையவை மெய்யல வைகலுங்
      காரினார் கடிபொழில் சூழ்ந்தகா டுப்பள்ளி
      ஏரினால் தொழுதெழ இன்பம்வ தெய்துமே. 101
      317. பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன்
      அருமறை யவைவல்ல அணிகொள்சம் பந்தன்சொல்
      கருமணி மிடற்றினன் கருதுகா டுப்பள்ளி
      பரவிய தமிழ்சொல்ல பறையும்மெ பாவமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - தீயாடியப்பர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 030 திருஅரதைப்பெரும்பாழி
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      318 பைத்தபாம் போடரை கோவணம் பாய்புலி
      மொய்த்தபேய் கண்முழ கம்முது காட்டிடை
      நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
      பித்தர்கோ யில்லர தைப்பெரும் பாழியே. 01
      319. கயலசே லகருங் கண்ணியர் நாடொறும்
      பயலைகொள் ளப்பலி தேர்ந்துழல் பான்மையார்
      இயலைவா னோர்நினை தோர்களு கெண்ணரும்
      பெயரர்கோ யில்லர தைப்பெரும் பாழியே. 02
      320. கோடல்சா லவ்வுடை யார்கொலை யானையின்
      மூடல்சா லவ்வுடை யார்முளி கானிடை
      ஆடல்சா லவ்வுடை யாரழ காகிய
      பீடர்கோ யில்லர தைப்பெரும் பாழியே. 03
      321. மண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார்
      விண்ணர்வே தம்விரி தோதுவார் மெய்ப்பொருள்
      பண்ணர்பா டலுடை யாரொரு பாகமும்
      பெண்ணர்கோ யில்லர தைப்பெரும் பாழியே. 04
      322. மறையர்வா யின்மொழி மானொடு வெண்மழு
      கறைகொள்சூ லம்முடை கையர்கா ரார்தரும்
      நறைகொள்கொன் றை தார்தருஞ் சென்னிமேல்
      பிறையர்கோ யில்லர தைப்பெரும் பாழியே. 05
      323. புற்றர வம்புலி தோலரை கோவண
      தற்றிர வில்நட மாடுவர் தாழ்தரு
      சுற்றமர் பாரிட தொல்கொடி யின்மிசை
      பெற்றர்கோ யில்லர தைப்பெரும் பாழியே. 06
      324. துணையிறு தஞ்சுரி சங்கமர் வெண்பொடி
      இணையிலேற் றையுக தேறுவ ரும்மெரி
      கணையினால் முப்புரஞ் செற்றவர் கையினில்
      பிணையர்கோ யில்லர தைப்பெரும் பாழியே. 07
      325. சரிவிலா வல்லர கன்தட தோள்தலை
      நெரிவிலா ரவ்வடர தார்நெறி மென்குழல்
      அரிவைபா கம்மமர தாரடி யாரொடும்
      பிரிவில்கோ யில்லர தைப்பெரும் பாழியே. 08
      326. வரியரா என்பணி மார்பினர் நீர்மல்கும்
      எரியரா வுஞ்சடை மேற்பிறை யேற்றவர்
      கரியமா லோடயன் காண்பரி தாகிய
      பெரியர்கோ யில்லர தைப்பெரும் பாழியே. 09
      327. நாணிலா தசமண் சாக்கியர் நாடொறும்
      ஏணிலா தம்மொழி யவ்வெழி லாயவர்
      சேணுலா மும்மதில் தீயெழ செற்றவர்
      பேணுகோ யில்லர தைப்பெரும் பாழியே. 10
      328. நீரினார் புன்சடை நிமலனு கிடமென
      பாரினார் பரவர தைப்பெரும் பாழியை
      சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய்
      ஏரினார் தமிழ்வல்லார கில்லையாம் பாவமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பரதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 031 திருமயேந்திரப்பள்ளி
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      329 திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங்
      கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
      வரைவிலால் எயிலெய்த மயேந்திர பள்ளியுள்
      அரவரை அழகனை அடியிணை பணிமினே. 01
      330. கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை
      கண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும்
      வண்டுலாம் பொழிலணி மயேந்திர பள்ளியிற்
      செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே. 02
      331. கோங்கிள வேங்கையுங் கொழுமலர புன்னையு
      தாங்குதேன் கொன்றையு தகுமலர குரவமு
      மாங்கரும் பும்வயல் மயேந்திர பள்ளியுள்
      ஆங்கிரு தவன்கழ லடியிணை பணிமினே. 03
      332. வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு
      சங்கமார் ஒலிஅகில் தருபுகை கமழ்தரும்
      மங்கையோர் பங்கினன் மயேந்திர பள்ளியுள்
      எங்கள்நா யகன்றன திணையடி பணிமினே. 04
      333. நித்தில தொகைபல நிரைதரு மலரென
      சித்திர புணரிசேர திடத்திகழ திருந்தவன்
      மைத்திகழ் கண்டன்நன் மயேந்திர பள்ளியுள்
      கைத்தல மழுவனை கண்டடி பணிமினே. 05
      334. சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்
      இந்திரன் வழிபட இருந்தஎம் மிறையவன்
      மந்திர மறைவளர் மயேந்திர பள்ளியுள்
      அந்தமில் அழகனை அடிபணி துய்ம்மினே. 06
      335. சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
      நடம்நவில் புரிவினன் நறவணி மலரொடு
      படர்சடை மதியினன் மயேந்திர பள்ளியுள்
      அடல்விடை யுடையவன் அடிபணி துய்ம்மினே. 07
      336. சிரமொரு பதுமுடை செருவலி யரக்கனை
      கரமிரு பதுமிற கனவரை யடர்த்தவன்
      மரவமர் பூம்பொழில் மயேந்திர பள்ளியுள்
      அரவமர் சடையனை அடிபணி துய்ம்மினே. 08
      337. நாகணை துயில்பவன் நலமிகு மலரவன்
      ஆகணை தவர்கழல் அணையவும் பெறுகிலர்
      மாகணை தலர்பொழில் மயேந்திர பள்ளியுள்
      யோகணை தவன்கழல் உணர்ந்திரு துய்ம்மினே. 09
      338. உடைதுற தவர்களும் உடைதுவர் உடையரும்
      படுபழி யுடையவர் பகர்வன விடுமின்நீர்
      மடைவளர் வயலணி மயேந்திர பள்ளியுள்
      இடமுடை ஈசனை இணையடி பணிமினே. 10
      339. வம்புலாம் பொழிலணி மயேந்திர பள்ளியுள்
      நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல்
      நம்பர மிதுவென நாவினால் நவில்பவர்
      உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - திருமேனியழகர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 032 திருஏடகம்
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      340 வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன்
      பொன்னியல் திருவடி புதுமல ரவைகொடு
      மன்னிய மறையவர் வழிபட அடியவர்
      இன்னிசை பாடலர் ஏடக தொருவனே. 01
      341. கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதி
      வடிவுற அமைதர மருவிய ஏடக
      தடிகளை அடிபணி தரற்றுமின் அன்பினால்
      இடிபடும் வினைகள்போய் இல்லைய தாகுமே. 02
      342. குண்டல திகழ்தரு காதுடை குழகனை
      வண்டலம் பும்மலர கொன்றைவான் மதியணி
      செண்டலம் பும்விடை சேடனூர் ஏடகங்
      கண்டுகை தொழுதலுங் கவலைநோய் கழலுமே. 03
      343. ஏலமார் தருகுழல் ஏழையோ டெழில்பெறுங்
      கோலமார் தருவிடை குழகனார் உறைவிடஞ்
      சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகஞ்
      சீலமார் ஏடகஞ் சேர்தலாஞ் செல்வமே. 04
      344. வரியணி நயனிநன் மலைமகள் மறுகிட
      கரியினை யுரிசெய்த கறையணி மிடறினன்
      பெரியவன் பெண்ணினோ டாணலி யாகிய
      எரியவன் உறைவிடம் ஏட கோயிலே. 05
      345. பொய்கையின் பொழிலுறு புதுமலர தென்றலார்
      வைகையின் வடகரை மருவிய ஏடக
      தையனை அடிபணி தரற்றுமின் அடர்தரும்
      வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே. 06
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07
      346. தடவரை யெடுத்தவன் தருக்கிற தோளடர்
      படவிரல் ஊன்றியே பரிந்தவற் கருள்செய்தான்
      மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும்
      இடமுடை சடையினன் ஏடக திறைவனே. 08
      347. பொன்னுமா மணிகளும் பொருதிரை சந்தகில்
      தன்னுளார் வைகையின் கரைதனிற் சமைவுற
      அன்னமாம் அயனுமா லடிமுடி தேடியும்
      இன்னவா றெனவொணான் ஏடக தொருவனே. 09
      348. குண்டிகை கையினர் குணமிலா தேரர்கள்
      பண்டியை பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
      வண்டிரை கும்மலர கொன்றையும் வன்னியும்
      இண்டைசேர குஞ்சடை ஏடக தெந்தையே. 10
      349. கோடுச தனமகில் கொண்டிழி வைகைநீர்
      ஏடுசென் றணைதரும் ஏடக தொருவனை
      நாடுதென் புகலியுள் ஞானசம் பந்தன
      பாடல்ப திவைவல்லார கில்லையாம் பாவமே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 033 திருஉசாத்தானம்
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      350 நீரிடை துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்
      பேருடை சுக்கிரீ வன்னநு மன்றொழ
      காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்
      சீருடை சேடர்வாழ் திருவுசா தானமே. 01
      351. கொல்லையே றுடையவன் கோவண ஆடையன்
      பல்லையார் படுதலை பலிகொளும் பரமனார்
      முல்லையார் புறவணி முதுபதி நறைகமழ்
      தில்லையான் உறைவிட திருவுசா தானமே. 02
      352. தாமலார் போலவே தக்கனார் வேள்வியை
      ஊமனார் தங்கனா வாக்கினான் ஒருநொடி
      காமனா ருடல்கெட காய்ந்தஎங் கண்ணுதல்
      சேமமா உறைவிட திருவுசா தானமே. 03
      353. மறிதரு கரத்தினான் மால்விடை யேறியான்
      குறிதரு கோலநற் குணத்தினார் அடிதொழ
      நெறிதரு வேதியர் நித்தலும் நியமஞ்செய்
      செறிதரு பொழிலணி திருவுசா தானமே. 04
      இப்பதிகத்தில் 5-ம் 6-ம் செய்யுட்கள் மறைந்து போயின. 05-06
      354. பண்டிரை தயனுமா லும்பல பத்தர்கள்
      தொண்டிரை தும்மலர் தூவித்தோ திரஞ்சொல
      கொண்டிரை கொடியொடுங் குருகினின் நல்லின
      தெண்டிரை கழனிசூழ் திருவுசா தானமே. 07
      355. மடவரல் பங்கினன் மலைதனை மதியாது
      சடசட எடுத்தவன் தலைபத்து நெரிதர
      அடர்தர ஊன்றியங் கேயவற் கருள்செய்தான்
      திடமென வுறைவிட திருவுசா தானமே. 08
      356. ஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்குங்
      காணொணா வண்ணத்தான் கருதுவார் மனத்துளான்
      பேணுவார் பிணியொடும் பிறப்பறு பானிடஞ்
      சேணுலா மாளிகை திருவுசா தானமே. 09
      357. கானமார் வாழ்க்கையான் காரமண் தேரர்சொல்
      ஊனமா கொண்டுநீர் உரைமின்உய் யவெனில்
      வானமார் மதிலணி மாளிகை வளர்பொழில்
      தேனமா மதியந்தோய் திருவுசா தானமே. 10
      358. வரைதிரி திழியுநீர் வளவயற் புகலிமன்
      திரைதிரி தெறிகடல் திருவுசா தானரை
      உரைதெரி துணருஞ்சம் பந்தனொண் தமிழ்வல்லார்
      நரைதிரை யின்றியே நன்னெறி சேர்வரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மந்திரபுரீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 034 திருமுதுகுன்றம்
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      359 வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட
      அண்ணலார் ஆயிழை யாளொடும் அமர்விடம்
      விண்ணின்மா மழைபொழி திழியவெள் ளருவிசேர்
      திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே. 01
      360. வெறியுலாங் கொன்றை தாரினான் மேதகு
      பொறியுலாம் அரவசை தாடியோர் புண்ணியன்
      மறியுலாங் கையினான் மங்கையோ டமர்விடஞ்
      செறியுளார் புறவணி திருமுது குன்றமே. 02
      361. ஏறினார் விடைமிசை யிமையவர் தொழவுமை
      கூறனார் கொல்புலி தோலினார் மேனிமேல்
      நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விட
      தேறலார் பொழிலணி திருமுது குன்றமே. 03
      362. உரையினார் உறுபொரு ளாயினான் உமையொடும்
      விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம்
      உரையினார் ஒலியென வோங்குமு தாறுமெ
      திரையினார் எறிபுனல் திருமுது குன்றமே. 04
      363. கடியவா யினகுரல் களிற்றினை பிளிறவோர்
      இடியவெங் குரலினோ டாளிசென் றிடுநெறி
      வடியவாய் மழுவினன் மங்கையோ டமர்விடஞ்
      செடியதார் புறவணி திருமுது குன்றமே. 05
      364. கானமார் கரியின்ஈர் உரிவையார் பெரியதோர்
      வானமார் மதியினோ டரவர்தாம் மருவிடம்
      ஊனமா யினபிணி யவைகெடு துமையொடு
      தேனமார் பொழிலணி திருமுது குன்றமே. 06
      365. மஞ்சர்தாம் மலர்கொடு வானவர் வணங்கிட
      வெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவே
      அஞ்சொலாள் உமையொடும் மமர்விட மணிகலை
      செஞ்சொலார் பயில்தரு திருமுது குன்றமே. 07
      366. காரினார் அமர்தருங் கயிலைநன் மலையினை
      ஏரினார் முடியிரா வணனெடு தானிற
      வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடஞ்
      சீரினார் திகழ்தரு திருமுது குன்றமே. 08
      367. ஆடினார் கானக தருமறை யின்பொருள்
      பாடினார் பலபுகழ பரமனார் இணையடி
      ஏடினார் மலர்மிசை அயனுமா லிருவரு
      தேடினார் அறிவொணார் திருமுது குன்றமே. 09
      368. மாசுமெய் தூசுகொண் டுழல்சமண் சாக்கியர்
      பேசுமெய் யுளவல்ல பேணுவீர் காணுமின்
      வாசமார் தருபொழில் வண்டினம் இசைசெ
      தேசமார் புகழ்மிகு திருமுது குன்றமே. 10
      369. திண்ணினார் புறவணி திருமுது குன்றரை
      நண்ணினான் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
      எண்ணினான் ஈரைந்து மாலையும் இயலுமா
      பண்ணினாற் பாடுவார கில்லையாம் பாவமே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 035 திருத்தென்குடித்திட்டை
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      370 முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடு
      தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
      மன்னுமா காவிரி வந்தடி வருடநற்
      செந்நெலார் வளவயல் தென்குடி திட்டையே. 01
      371. மகரமா டுங்கொடி மன்மத வேள்தனை
      நிகரலா காநெரு பெழவிழி தானிடம்
      பகரபா ணித்தலம் பன்மக ரத்தோடுஞ்
      சிகரமா ளிகைதொகு தென்குடி திட்டையே. 02
      372. கருவினா லன்றியே கருவெலா மாயவன்
      உருவினா லன்றியே உருவுசெய் தானிடம்
      பருவநாள் விழவொடும் பாடலோ டாடலு
      திருவினான் மிகுபுகழ தென்குடி திட்டையே. 03
      373. உண்ணிலா வாவியா யோங்குதன் தன்மையை
      விண்ணிலார் அறிகிலா வேதவே தாந்தனூர்
      எண்ணிலார் எழில்மணி கனகமா ளிகையிள
      தெண்ணிலா விரிதரு தென்குடி திட்டையே. 04
      374. வருந்திவா னோர்கள்வ தடையமா நஞ்சுதான்
      அருந்திஆர் அமுதவர கருள்செய்தான் அமருமூர்
      செருந்திபூ மாதவி பந்தர்வண் செண்பக
      திருந்துநீள் வளர்பொழில் தென்குடி திட்டையே. 05
      375. ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்
      கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்
      ஆறினார் பொய்யக தையுணர் வெய்திமெய்
      தேறினார் வழிபடு தென்குடி திட்டையே. 06
      376. கானலை கும்மவன் கண்ணிட தப்பநீள்
      வானலை குந்தவ தேவுவை தானிட
      தானலை தெள்ளமூர் தாமரை தண்டுறை
      தேனலை கும்வயல் தென்குடி திட்டையே. 07
      377. மாலொடும் பொருதிறல் வாளர கன்நெரி
      தோலிடும் படிவிர லொன்றுவை தானிடங்
      காலொடுங் கனகமூ குடன்வர கயல்வரால்
      சேலொடும் பாய்வயல் தென்குடி திட்டையே. 08
      378. நாரணன் தன்னொடு நான்முகன் தானுமா
      காரணன் அடிமுடி காணவொண் ணானிடம்
      ஆரணங் கொண்டுபூ சுரர்கள்வ தடிதொழ
      சீரணங் கும்புகழ தென்குடி திட்டையே. 09
      379. குண்டிகை கையுடை குண்டரும் புத்தரும்
      பண்டுரை தேயிடும் பற்றுவி டீர்தொழும்
      வண்டிரை கும்பொழில் தண்டலை கொண்டலார்
      தெண்டிரை தண்புனல் தென்குடி திட்டையே. 10
      380. தேனலார் சோலைசூழ் தென்குடி திட்டையை
      கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள்
      ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்
      பானலார் மொழிவலார கில்லையாம் பாவமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பசுபதீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 036 திருக்காளத்தி
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      381 சந்தமார் அகிலொடு சாதிதே கம்மரம்
      உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
      மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
      எந்தையார் இணையடி யென்மன துள்ளவே. 01
      382. ஆலமா மரவமோ டமைந்தசீர சந்தனஞ்
      சாலமா பீலியுஞ் சண்பக முந்தியே
      காலமார் முகலிவ தணைதரு காளத்தி
      நீலமார் கண்டனை நினையுமா நினைவதே. 02
      383. கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி
      மூங்கில்வ தணைதரு முகலியின் கரையினில்
      ஆங்கமர் காளத்தி யடிகளை அடிதொழ
      வீங்குவெ துயர்கெடும் வீடெளி தாகுமே. 03
      384. கரும்புதேன் கட்டியுங் கதலியின் கனிகளும்
      அரும்புநீர் முகலியின் கரையினி லணிமதி
      ஒருங்குவார் சடையினன் காளத்தி யொருவனை
      விரும்புவா ரவர்கள்தாம் விண்ணுல காள்வரே. 04
      385. வரைதரும் அகிலொடு மாமுத்தம் உந்தியே
      திரைதரு முகலியின் கரையினில் தேமலர்
      விரைதரு சடைமுடி காளத்தி விண்ணவன்
      நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே. 05
      இப்பதிகத்தில் 6-ம் 7-ம் செய்யுட்கள் மறைந்து போயின. 06-07
      386. முத்துமா மணிகளும் முழுமலர திரள்களும்
      எத்துமா முகலியின் கரையினில் எழில்பெற
      கத்திட அரக்கனை கால்விரல் ஊன்றிய
      அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே. 08
      387. மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி
      நண்ணுமா முகலியின் கரையினில் நன்மைசேர்
      வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
      அண்ணலார் காளத்தி ஆங்கணை துய்ம்மினே. 09
      388. வீங்கிய உடலினர் விரிதரு துவருடை
      பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின்
      ஓங்குவண் காளத்தி யுள்ளமோ டுணர்தர
      வாங்கிடும் வினைகளை வானவர கொருவனே. 10
      389. அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி
      வட்டவார் சடையனை வயலணி காழியான்
      சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
      இட்டமா பாடுவார கில்லையாம் பாவமே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 037 திருப்பிரமபுரம்
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      390 கரமுனம்மல ராற்புனல்மலர்
      தூவியேகல தேத்துமின்
      பரமனூர்பல பேரினாற்பொலி
      பத்தர்சித்தர்கள் தாம்பயில்
      வரமுன்னவ்வருள் செய்யவல்லஎம்
      ஐயன்நாடொறும் மேயசீர
      பிரமனூர்பிர மாபுரத்துறை
      பிஞ்ஞகனருள் பேணியே. 01
      391. விண்ணிலார்மதி சூடினான்விரும்
      பும்மறையவன் தன்றலை
      உண்ணநன்பலி பேணினான்உல
      கத்துளூனுயி ரான்மலை
      பெண்ணினார்திரு மேனியான்பிர
      மாபுரத்துறை கோயிலுள்
      அண்ணலாரரு ளாளனாயமர்
      கின்றஎம்முடை யாதியே. 02
      392. எல்லையில்புக ழாளனும்இமை
      யோர்கணத்துடன் கூடியும்
      பல்லையார்தலை யிற்பலியது
      கொண்டுகந்த படிறனு
      தொல்லைவையக தேறுதொண்டர்கள்
      தூமலர்சொரி தேத்தவே
      மல்லையம்பொழில் தேன்பில்கும்பிர
      மாபுரத்துறை மைந்தனே. 03
      393. அடையலார்புரஞ் சீறியந்தணர்
      ஏத்தமாமட மாதொடும்
      பெடையெலாங்கடற் கானல்புல்கும்பிர
      மாபுரத்துறை கோயிலான்
      தொடையலார்நறுங் கொன்றையான்தொழி
      லேபரவிநின் றேத்தினால்
      இடையிலார்சிவ லோகமெய்துதற்
      கீதுகாரணங் காண்மினே. 04
      394. வாயிடைம்மறை யோதிமங்கையர்
      வந்திடப்பலி கொண்டுபோ
      போயிடம்எரி கானிடைப்புரி
      நாடகம்இனி தாடினான்
      பேயொடுங்குடி வாழ்வினான்பிர
      மாபுரத்துறை பிஞ்ஞகன்
      தாயிடைப்பொருள் தந்தையாகுமென்
      றோதுவார்க்கருள் தன்மையே. 05
      395. ஊடினாலினி யாவதென்னுயர்
      நெஞ்சமேயுறு வல்வினை
      கோடிநீயுழல் கின்றதென்னழ
      லன்றுதன்கையி லேந்தினான்
      பீடுநேர்ந்தது கொள்கையான்பிர
      மாபுரத்துறை வேதியன்
      ஏடுநேர்மதி யோடராவணி
      எந்தையென்றுநின் றேத்திடே. 06
      396. செய்யன்வெள்ளியன் ஒள்ளியார்சில
      ரென்றும்ஏத்தி நினைந்திட
      ஐயன்ஆண்டகை அந்தணன்அரு
      மாமறைப்பொரு ளாயினான்
      பெய்யும்மாமழை யானவன்பிர
      மாபுரம்இடம் பேணிய
      வெய்யவெண்மழு வேந்தியைநினை
      தேத்துமின்வினை வீடவே. 07
      397. கன்றொருக்கையில் ஏந்திநல்விள
      வின்கனிபட நூறியுஞ்
      சென்றொருக்கிய மாமறைப்பொருள்
      தேர்ந்தசெம்மல ரோனுமாய்
      அன்றரக்கனை செற்றவன்அடி
      யும்முடியவை காண்கிலார்
      பின்றருக்கிய தண்பொழிற்பிர
      மாபுரத்தரன் பெற்றியே. 08
      398. உண்டுடுக்கைவி டார்களும்உயர்
      கஞ்சிமண்டைகொள் தேரரும்
      பண்டடக்குசொற் பேசுமப்பரி
      வொன்றிலார்கள்சொல் கொள்ளன்மின்
      தண்டொடக்குவன் சூலமுந்தழல்
      மாமழுப்படை தன்கையிற்
      கொண்டொடுக்கிய மைந்தன்எம்பிர
      மாபுரத்துறை கூத்தனே. 09
      399. பித்தனைப்பிர மாபுரத்துறை
      பிஞ்ஞகன்கழல் பேணியே
      மெய்த்தவத்துநின் றோர்களுக்குரை
      செய்துநன்பொருள் மேவிட
      வைத்தசிந்தையுள் ஞானசம்பந்தன்
      வாய்நவின்றெழு மாலைகள்
      பொய்த்தவம்பொறி நீங்கஇன்னிசை
      போற்றிசெய்யும்மெய்ம் மாந்தரே. 10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 038 திருக்கண்டியூர்வீரட்டம் - வினாவுரை
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      400 வினவினேன்அறி யாமையில்லுரை
      செய்ம்மினீரருள் வேண்டுவீர்
      கனைவிலார்புனற் காவிரிக்கரை
      மேயகண்டியூர் வீரட்டன்
      தனமுனேதன கின்மையோதம
      ராயினாரண்ட மாளத்தான்
      வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ்
      வையமாப்பலி தேர்ந்ததே. 01
      401. உள்ளவாறென குரைசெய்ம்மின்னுயர்
      வாயமாதவம் பேணுவீர்
      கள்ளவிழ்பொழில் சூழுங்கண்டியூர்
      வீரட்டத்துறை காதலான்
      பிள்ளைவான்பிறை செஞ்சடைம்மிசை
      வைத்ததும்பெரு நீரொலி
      வெள்ளந்தாங்கிய தென்கொலோமிகு
      மங்கையாளுட னாகவே. 02
      402. அடியராயினீர் சொல்லுமின்னறி
      கின்றிலேன்அரன் செய்கையை
      படியெலாந்தொழு தேத்துகண்டியூர்
      வீரட்டத்துறை பான்மையான்
      முடிவுமாய்முத லாயிவ்வைய
      முழுதுமாயழ காயதோர்
      பொடியதார்திரு மார்பினிற்புரி
      நூலும்பூண்டெழு பொற்பதே. 03
      403. பழையதொண்டர்கள் பகருமின்பல
      வாயவேதியன் பான்மையை
      கழையுலாம்புனல் மல்குகாவிரி
      மன்னுகண்டியூர் வீரட்டன்
      குழையொர்காதினிற் பெய்துகந்தொரு
      குன்றின்மங்கை வெருவுற
      புழைநெடுங்கைநன் மாவுரித்தது
      போர்த்துகந்த பொலிவதே. 04
      404. விரவிலாதுமை கேட்கின்றேனடி
      விரும்பியாட்செய்வீர் விளம்புமின்
      கரவெலாந்திரை மண்டுகாவிரி
      கண்டியூருறை வீரட்டன்
      முரவமொந்தை முழாவொலிக்க
      முழங்குபேயொடுங் கூடிப்போ
      பரவுவானவர காகவார்கடல்
      நஞ்சமுண்ட பரிசதே 05
      405. இயலுமாறென கியம்புமின்னிறை
      வன்னுமாய்நிறை செய்கையை
      கயல்நெடுங்கண்ணி னார்கள்தாம்பொலி
      கண்டியூருறை வீரட்டன்
      புயல்பொழிந்திழி வானுளோர்களு
      காகவன்றயன் பொய்ச்சிரம்
      அயனகவ்வ தரிந்துமற்றதில்
      ஊனுகந்த அருத்தியே. 06
      406. திருந்துதொண்டர்கள் செப்புமின்மிக
      செல்வன்றன்னது திறமெலாங்
      கருந்தடங்கண்ணி னார்கள்தாந்தொழு
      கண்டியூருறை வீரட்டன்
      இருந்துநால்வரோ டால்நிழல்லறம்
      உரைத்ததும்மிகு வெம்மையார்
      வருந்தவன்சிலை யால்அம்மாமதில்
      மூன்றுமாட்டிய வண்ணமே 07
      407. நாவிரித்தரன் தொல்புகழ்பல
      பேணுவீரிறை நல்குமின்
      காவிரித்தடம் புனல்செய்கண்டியூர்
      வீரட்டத்துறை கண்ணுதல்
      கோவிரிப்பயன் ஆன்அஞ்சாடிய
      கொள்கையுங்கொடி வரைபெற
      மாவரைத்தல தாலரக்கனை
      வலியைவாட்டிய மாண்பதே. 08
      408. பெருமையேசர ணாகவாழ்வுறு
      மாந்தர்காளிறை பேசுமின்
      கருமையார்பொழில் சூழுந்தண்வயல்
      கண்டியூருறை வீரட்டன்
      ஒருமையாலுயர் மாலும்மற்றை
      மலரவன்னுணர தேத்தவே
      அருமையாலவ ருக்குயர்ந்தெரி
      யாகிநின்றஅ தன்மையே. 09
      409. நமரெழுபிற பறுக்குமாந்தர்கள்
      நவிலுமின்உமை கேட்கின்றேன்
      கமரழிவயல் சூழுந்தண்புனற்
      கண்டியூருறை வீரட்டன்
      தமரழிந்தெழு சாக்கியச்சமண்
      ஆதரோது மதுகொளா
      தமரரானவர் ஏத்தஅந்தகன்
      றன்னைச்சூலத்தி லாய்ந்ததே. 10
      410. கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர்
      வீரட்டத்துறை கள்வனை
      அருத்தனைத்திறம் அடியர்பால்மி
      கேட்டுகந்த வினாவுரை
      திருத்தமாந்திகழ் காழிஞானசம்
      பந்தன்செப்பிய செந்தமிழ்
      ஒருத்தராகிலும் பலர்களாகிலும்
      உரைசெய்வா ருயர்ந்தார்களே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வீரட்டேசுவரர் தேவியார்
      இறை உத்தரவு.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 039 திருஆலவாய்
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      411 மானின்நேர்விழி மாதராய்வழு
      திக்குமாபெரு தேவிகேள்
      பானல்வாயொரு பாலனீங்கிவன்
      என்றுநீபரி வெய்திடேல்
      ஆனைமாமலை ஆதியாய
      இடங்களிற்பல அல்லல்சேர்
      ஈனர்கட்கெளி யேனலேன்திரு
      ஆலவாயரன் நிற்கவே. 01
      412. ஆகமத்தொடு மந்திரங்க
      ளமைந்தசங்கத பங்கமா
      பாகதத்தொ டிரைத்துரைத்த
      சனங்கள்வெட்குறு பக்கமா
      மாகதக்கரி போல்திரிந்து
      புரிந்துநின்றுணும் மாசுசேர்
      ஆகதர்க்கெளி யேனலேன்திரு
      ஆலவாயரன் நிற்கவே. 02
      413. அத்தகுபொருள் உண்டுமில்லையு
      மென்றுநின்றவர கச்சமா
      ஒத்தொவ்வாமை மொழிந்துவாதில்
      அழிந்தெழுந்த கவிப்பெயர
      சத்திரத்தின் மடிந்தொடிந்து
      சனங்கள்வெட்குற நக்கமே
      சித்திரர்க்கெளி யேனலேன்திரு
      ஆலவாயரன் நிற்கவே. 03
      414. சந்துசேனனும் இந்துசேனனு
      தருமசேனனுங் கருமைசேர்
      கந்துசேனனுங் கனகசேனனும்
      முதலதாகிய பெயர்கொளா
      மந்திபோல்திரி தாரியத்தொடு
      செந்தமிழ்ப்பயன் அறிகிலா
      அந்தகர்க்கெளி யேனலேன்திரு
      ஆலவாயரன் நிற்கவே. 04
      415. கூட்டினார்கிளி யின்விருத்தம்
      உரைத்ததோரொலி யின்தொழிற்
      பாட்டுமெய்சொலி பக்கமேசெலும்
      எக்கர்தங்களை பல்லறங்
      காட்டியேவரு மாடெலாங்கவர்
      கையரைக்கசி வொன்றிலா
      சேட்டைகட்கெளி யேனலேன்திரு
      ஆலவாயரன் நிற்கவே. 05
      416. கனகநந்தியும் புட்பநந்தியும்
      பவணநந்தியுங் குமணமா
      சுனகநந்தியுங் குனகநந்தியு
      திவணநந்தியும் மொழிகொளா
      அனகநந்தியர் மதுவொழிந்தவ
      மேதவம்புரி வோமெனுஞ்
      சினகருக்கெளி யேனலேன்திரு
      ஆலவாயரன் நிற்கவே. 06
      417. பந்தணம்மவை யொன்றிலம்பரி
      வொன்றிலம்மென வாசக
      மந்தணம்பல பேசிமாசறு
      சீர்மையின்றிய நாயமே
      அந்தணம்மரு கந்தணம்மதி
      புத்தணம்மது சித்தண
      சிந்தணர்க்கெளி யேனலேன்திரு
      ஆலவாயரன் நிற்கவே. 07
      418. மேலெனக்கெதி ரில்லையென்ற
      அரக்கனார்மிகை செற்றதீ
      போலியைப்பணி யக்கிலாதொரு
      பொய்த்தவங்கொடு குண்டிகை
      பீலிகைக்கொடு பாயிடுக்கி
      நடுக்கியேபிறர் பின்செலுஞ்
      சீலிகட்கெளி யேனலேன்திரு
      ஆலவாயரன் நிற்கவே. 08
      419. பூமகற்கும் அரிக்குமோர்வரு
      புண்ணியன்னடி போற்றிலார்
      சாமவத்தையி னார்கள்போல்தலை
      யைப்பறித்தொரு பொய்த்தவம்
      வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி
      யட்டிவாய்சக திக்குநேர்
      ஆமவர்க்கெளி யேனலேன்திரு
      ஆலவாயரன் நிற்கவே. 09
      420. தங்களுக்கு சாக்கியர்க்கு
      தரிப்பொணாதநற் சேவடி
      எங்கள்நாயகன் ஏத்தொழிந்திடு
      கேமடுத்தொரு பொய்த்தவம்
      பொங்குநூல்வழி யன்றியேபுல
      வோர்களைப்பழி கும்பொலா
      அங்கதர்க்கெளி யேனலேன்திரு
      ஆலவாயரன் நிற்கவே. 10
      421. எக்கராம்அமண் கையருக்கெளி
      யேனலேன்திரு ஆலவா
      சொக்கனென்னு ளிருக்கவேதுளங்
      கும்முடித்தென்னன் முன்னிவை
      தக்கசீர்ப்புக லிக்குமன்தமிழ்
      நாதன்ஞானசம் பந்தன்வாய்
      ஒக்கவேயுரை செய்தபத்தும்
      உரைப்பவர்க்கிடர் இல்லையே. 11
      இது பாண்டியராசனுடைய சுரப்பிணி தீர்ப்பதற்காக திருஞான சம்பந்தசுவாமிகள்
      எழுந்தருளியிருக்கும்போது பாண்டிமாதேவி யாகிய மங்கையர்க்கரசியார்கண்டு
      சுவாமிகளுடைய
      திருமேனி மிகுந்த பாலியமாயிருக்கின்றதுமன்றி தனிமையாயுமிருக்கின்றது
      சமணர்களோ சரீரதிடமுள்ளவர்களும் பலருமாயிருக்கின்றார் களென்று உட்பரிவுற்ற
      குறிப்பினை திருஞானசம்பந்த சுவாமி கள் திருவுள்ளத்திலுணர்ந்து
      கொண்டு அன்னையே அஞ்சவேண்டு வதில்லை யென்று கட்டளையிட்ட பதிகம்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 040 தனித்திருவிருக்குக்குறள்
      பொது - திருப்பதிகம்
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      முதல் திருமுறையிற் போல பாடல் அடிகள் நான்கா கொள்ளப்படும்.
      422. . கல்லால் நீழல் அல்லா தேவை
      நல்லார் பேணார் அல்லோம் நாமே. 01
      423. . கொன்றை சூடி நின்ற தேவை
      அன்றி யொன்று நன்றி லோமே. 02
      424. . கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்
      சொல்லா தாரோ டல்லோம் நாமே. 03
      425. . கூற்று தைத்த நீற்றி னானை
      போற்று வார்கள் தோற்றி னாரே. 04
      426. . காட்டு ளாடும் பாட்டு ளானை
      நாட்டு ளாரு தேட்டு ளாரே. 05
      427. . தக்கன் வேள்வி பொக்க தீர்த்த
      மிக்க தேவர் பக்க தோமே. 06
      428. . பெண்ணா ணாய விண்ணோர் கோவை
      நண்ணா தாரை எண்ணோம் நாமே. 07
      429.. தூர்த்தன் வீரம் தீர்த்த கோவை
      ஆத்த மாக ஏத்தி னோமே. 08
      430.. பூவி னானு தாவி னானும்
      நாவி னாலும் ஓவி னாரே. 09
      431.. மொட்ட மணர் கட்ட தேரர்
      பிட்டர் சொல்லை விட்டு ளோமே. 10
      432. . அந்தண் காழி பந்தன் சொல்லை
      சிந்தை செய்வோர் உய்ந்து ளோரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 041 திருவேகம்பம் - திருவிருக்குக்குறள்
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      433 கருவார் கச்சி திருவே கம்ப
      தொருவா வென்ன மருவா வினையே. 01
      434. . மதியார் கச்சி நதியே கம்பம்
      விதியா லேத்த பதியா வாரே. 02
      435.. கலியார் கச்சி மலியே கம்பம்
      பலியாற் போற்ற நலியா வினையே. 03
      436. . வரமார் கச்சி புரமே கம்பம்
      பரவா ஏத்த விரவா வினையே. 04
      437.. படமார் கச்சி இடமே கம்ப
      துடையா யென்ன அடையா வினையே. 05
      438. . நலமார் கச்சி நிலவே கம்பம்
      குலவா வேத்த கலவா வினையே. 06
      439.. கரியின் னுரியன் திருவே கம்பன்
      பெரிய புரமூன் றெரிசெய் தானே. 07
      440. . இலங்கை யரசை துலங்க வூன்றும்
      நலங்கொள் கம்பன் இலங்கு சரணே. 08
      441.. மறையோன் அரியும் அறியா வனலன்
      நெறியே கம்பம் குறியால் தொழுமே. 09
      442.. பறியா தேரர் நெறியில் கச்சி
      செறிகொள் கம்பம் குறுகு வோமே. 10
      443.. கொச்சை வேந்தன் கச்சி கம்பம்
      மெச்சுஞ் சொல்லை நச்சும் புகழே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 042 திருச்சிற்றேமம்
      பண் - கொல்லிக்கௌவாணம்
      திருச்சிற்றம்பலம்
      444 நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடை
      குறைவெண்டிங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
      சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
      இறைவனென்றே யுலகெலாம் ஏத்தநின்ற பெருமானே. 01
      445.. மாகத்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடை
      பாகத்திங்கள் சூடியோ ராடல்மேய பண்டங்கன்
      மேகத்தாடு சோலைசூழ் மிடைசிற்றேமம் மேவினான்
      ஆகத்தோர்கொள் ஆமையை பூண்டஅண்ணல் அல்லனே. 02
      446.. நெடுவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடை
      கொடுவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
      படுவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
      கடுவெங்கூற்றை காலினாற் காய்ந்தகடவுள் அல்லனே. 03
      447.. கதிரார்திங்கள் வாண்முக மாதர்பாட கண்ணுதல்
      முதிரார்திங்கள் சூடியோ ராடல்மேய முக்கணன்
      எதிரார்புனலம் புன்சடை யெழிலாருஞ்சிற் றேமத்தான்
      அதிரார்பைங்கண் ஏறுடை யாதிமூர்த்தி யல்லனே. 04
      448. . வானார்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடை
      கூனார்திங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
      தேனார்வண்டு பண்செயு திருவாருஞ்சிற் றேமத்தான்
      மானார்விழிநன் மாதோடும் மகிழ்ந்தமைந்தன் அல்லனே. 05
      449.. பனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட பல்சடை
      குனிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
      தனிவெள்விடையன் புள்ளின தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
      முனிவுமூப்பும் நீக்கிய முக்கண்மூர்த்தி அல்லனே. 06
      450. . கிளருந்திங்கள் வாண்முக மாதர்பாட கேடிலா
      வளருந்திங்கள் சூடியோ ராடல்மேய மாதவன்
      தளிருங்கொம்பும் மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
      ஒளிரும்வெண்ணூல் மார்பனென் னுள்ளத்துள்ளான் அல்லனே. 07
      451.. சூழ்ந்ததிங்கள் வாண்முக மாதர்பாட சூழ்சடை
      போழ்ந்ததிங்கள் சூடியோ ராடல்மேய புண்ணியன்
      தாழ்ந்தவயற்சிற் றேமத்தான் தடவரையைத்தன் தாளினால்
      ஆழ்ந்தஅரக்கன் ஒல்கஅன் றடர்த்தஅண்ணல் அல்லனே. 08
      452.. தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட தாழ்சடை
      துணிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய தொன்மையான்
      அணிவண்ணச்சிற் றேமத்தான் அலர்மேலந்த ணாளனும்
      மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வன் அல்லனே. 09
      453. . வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடை
      பிள்ளைத்திங்கள் சூடியோ ராடல்மேய பிஞ்ஞகன்
      உள்ளத்தார்சிற் றேமத்தான் உருவார்புத்தர் ஒப்பிலா
      கள்ளத்தாரை தானாக்கியு கரந்துவைத்தான் அல்லனே. 10
      454.. கல்லிலோதம் மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்
      நல்லவாய வின்றமிழ் நவிலும்ஞான சம்பந்தன்
      செல்வனூர்சிற் றேமத்தை பாடல்சீரார் நாவினால்
      வல்லாராகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பொன்வைத்தநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 043 சீகாழி
      பண் - கௌசிகம்
      திருச்சிற்றம்பலம்
      455 சந்த மார்முலை யாள்தன கூறனார்
      வெந்த வெண்பொடி யாடிய மெய்யனார்
      கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள்
      எந்தை யாரடி யென்மன துள்ளவே. 01
      456.. மானி டம்முடை யார்வளர் செஞ்சடை
      தேனி டங்கொளுங் கொன்றை தாரினார்
      கானி டங்கொளு தண்வயற் காழியார்
      ஊனி டங்கொண்டென் உச்சியில் நிற்பரே. 02
      457.. மைகொள் கண்டத்தர் வான்மதி சென்னியர்
      பைகொள் வாளர வாட்டும் படிறனார்
      கைகொள் மான்மறி யார்கடற் காழியுள்
      ஐயன் அந்தணர் போற்ற இருக்குமே. 03
      458. . புற்றின் நாகமும் பூளையும் வன்னியுங்
      கற்றை வார்சடை வைத்தவர் காழியு
      பொற்றொ டியோ டிருந்தவர் பொற்கழல்
      உற்ற போதுடன் ஏத்தி யுணருமே. 04
      459.. நலியுங் குற்றமும் நம்முட னோய்வினை
      மெலியு மாறது வேண்டுதி ரேல்வெய்ய
      கலிக டிந்தகை யார்கடற் காழியுள்
      அலைகொள் செஞ்சடை யாரடி போற்றுமே. 05
      460.. பெண்ணோர் கூறினர் பேயுடன் ஆடுவர்
      பண்ணும் ஏத்திசை பாடிய வேடத்தர்
      கண்ணு மூன்றுடை யார்கடற் காழியுள்
      அண்ண லாய அடிகள் சரிதையே. 06
      461.. பற்று மானும் மழுவும் அழகுற
      முற்று மூர்திரி துபலி முன்னுவர்
      கற்ற மாநன் மறையவர் காழியு
      பெற்றம் ஏற துகந்தார் பெருமையே. 07
      462.. எடுத்த வல்லர கன்முடி தோளிற
      அடர்த்து கந்தருள் செய்தவர் காழியுள்
      கொடித்த யங்குநற் கோயிலுள் இன்புற
      இடத்து மாதொடு தாமும் இருப்பரே. 08
      463.. காலன் தன்னுயிர் வீட்டு கழலடி
      மாலு நான்முகன் தானும் வனப்புற
      ஓல மிட்டுமுன் தேடி யுணர்கிலா
      சீலங் கொண்டவ னூர்திகழ் காழியே. 09
      464.. உருவ நீத்தவர் தாமும் உறுதுவர்
      தருவ லாடையி னாரு தகவிலர்
      கருமம் வேண்டுதி ரேற்கடற் காழியுள்
      ஒருவன் சேவடி யேயடை துய்ம்மினே. 10
      465.. கானல் வந்துல வுங்கடற் காழியுள்
      ஈன மில்லி இணையடி யேத்திடும்
      ஞான சம்பந்தன் சொல்லிய நற்றமிழ்
      மான மாக்கும் மகிழ்ந்துரை செய்யவே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 044 திருக்கழிப்பாலை
      பண் - கௌசிகம்
      திருச்சிற்றம்பலம்
      466 வெந்த குங்கிலி யப்புகை விம்மவே
      கந்தம் நின்றுல வுங்கழி பாலையார்
      அந்த மும்மள வும்மறி யாததோர்
      சந்த மாலவர் மேவிய சாந்தமே. 01
      467.. வானி லங்க விளங்கும் இளம்பிறை
      தான லங்கல் உகந்த தலைவனார்
      கானி லங்க வருங்கழி பாலையார்
      மான லம்மட நோக்குடை யாளொடே. 02
      468. . கொடிகொள் ஏற்றினர் கூற்றை யுதைத்தனர்
      பொடிகொள் மார்பினிற் பூண்டதோர் ஆமையர்
      கடிகொள் பூம்பொழில் சூழ்கழி பாலையுள்
      அடிகள் செய்வன ஆர்க்கறி வொண்ணுமே. 03
      469. . பண்ண லம்பட வண்டறை கொன்றையின்
      தண்ண லங்கல் உகந்த தலைவனார்
      கண்ண லங்க வருங்கழி பாலையுள்
      அண்ண லெங்கட வுள்ளவ னல்லனே. 04
      470.. ஏரி னாருல கத்திமை யோரொடும்
      பாரி னாருட னேபர வப்படுங்
      காரி னார்பொழில் சூழ்கழி பாலையெஞ்
      சீரி னார்கழ லேசிந்தை செய்ம்மினே. 05
      471. . துள்ளும் மான்மறி அங்கையி லேந்தியூர்
      கொள்வ னாரிடு வெண்டலை யிற்பலி
      கள்வ னாருறை யுங்கழி பாலையை
      உள்ளு வார்வினை யாயின வோயுமே. 06
      472.. மண்ணி னார்மலி செல்வமும் வானமும்
      எண்ணி நீரினி தேத்துமின் பாகமும்
      பெண்ணி னார்பிறை நெற்றியோ டுற்றமு
      கண்ணி னாருறை யுங்கழி பாலையே. 07
      473. . இலங்கை மன்னனை ஈரை திரட்டிதோள்
      துலங்க வூன்றிய தூமழு வாளினார்
      கலங்கள் வந்துல வுங்கழி பாலையை
      வலங்கொள் வார்வினை யாயின மாயுமே. 08
      474. . ஆட்சி யால்அல ரானொடு மாலுமா
      தாட்சி யாலறி யாது தளர்ந்தனர்
      காட்சி யாலறி யான்கழி பாலையை
      மாட்சி யால்தொழு வார்வினை மாயுமே. 09
      475.. செய்ய நுண்துவ ராடையி னாரொடு
      மெய்யின் மாசு பிறக்கிய வீறிலா
      கையர் கேண்மையெ னோகழி பாலையெம்
      ஐயன் சேவடி யேஅடை துய்ம்மினே. 101
      476.. அந்தண் காழி அருமறை ஞானசம்
      பந்தன் பாய்புனல் சூழ்கழி பாலையை
      சிந்தை யாற்சொன்ன செந்தமிழ் வல்லவர்
      முந்தி வானுல காடன் முறைமையே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 045 திருவாரூர்
      பண் - கௌசிகம்
      திருச்சிற்றம்பலம்
      477 அந்த மாயுல காதியு மாயினான்
      வெந்த வெண்பொடி பூசிய வேதியன்
      சிந்தை யேபுகு தான்திரு வாரூரெம்
      எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ. 01
      478.. கருத்த னேகரு தார்புரம் மூன்றெய்த
      ஒருத்த னேஉமை யாளொரு கூறனே
      திருத்த னேதிரு ஆரூரெ தீவண்ண
      அருத்த வென்னெனை யஞ்சலென் னாததே. 02
      479. . மறையன் மாமுனி வன்மரு வார்புரம்
      இறையின் மாத்திரை யில்லெரி யூட்டினான்
      சிறைவண் டார்பொழில் சூழ்திரு ஆரூரெம்
      இறைவன் தானெனை யேன்றுகொ ளுங்கொலோ. 03
      480.. பல்லில் ஓடுகை யேந்தி பலிதிரி
      தெல்லி வந்திடு காட்டெரி யாடுவான்
      செல்வம் மல்கிய தென்திரு ஆரூரான்
      அல்லல் தீர்த்தெனை யஞ்சலெ னுங்கொலோ. 04
      481. . குருந்த மேறி கொடிவிடு மாதவி
      விரிந்த லர்ந்த விரைகமழ் தேன்கொன்றை
      திருந்து மாடங்கள் சூழ்திரு ஆரூரான்
      வருந்தும் போதெனை வாடலெ னுங்கொலோ. 05
      482.. வார்கொள் மென்முலை யாளொரு பாகமா
      ஊர்க ளாரிடு பிச்சைகொள் உத்தமன்
      சீர்கொள் மாடங்கள் சூழ்திரு ஆரூரான்
      ஆர்க ணாவெனை அஞ்சலெ னாததே. 06
      483.. வளைக்கை மங்கைநல் லாளையோர் பாகமா
      துளைக்கை யானை துயர்பட போர்த்தவன்
      திளைக்கு தண்புனல் சூழ்திரு ஆரூரான்
      இளைக்கும் போதெனை யேன்றுகொ ளுங்கொலோ. 07
      484. . இலங்கை மன்னன் இருபது தோளிற
      கலங கால்விர லாற்கடை கண்டவன்
      வலங்கொள் மாமதில் சூழ்திரு ஆரூரான்
      அலங்கல் தந்தெனை யஞ்சலெ னுங்கொலோ. 08
      485. . நெடிய மாலும் பிரமனும் நேர்கிலா
      படிய வன்பனி மாமதி சென்னியான்
      செடிகள் நீக்கிய தென்திரு ஆரூரெம்
      அடிகள் தானெனை யஞ்சலெ னுங்கொலோ. 09
      486.. மாசு மெய்யினர் வண்துவ ராடைகொள்
      காசை போர்க்குங் கலதிகள் சொற்கொளேல்
      தேசம் மல்கிய தென்திரு ஆரூரெம்
      ஈசன் தானெனை யேன்றுகொ ளுங்கொலோ. 10
      487. . வன்னி கொன்றை மதியொடு கூவிளஞ்
      சென்னி வைத்த பிரான்திரு ஆரூரை
      மன்னு காழியுள் ஞானசம் பந்தன்வா
      பன்னு பாடல்வல் லார்க்கில்லை பாவமே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 046 திருக்கருகாவூர்
      பண் - கௌசிகம்
      திருச்சிற்றம்பலம்
      488 முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
      மத்த யானைமறு கவ்வுரி வாங்கி
      கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
      அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 01
      489.. விமுத வல்லசடை யான்வினை யுள்குவார
      கமுத நீழலக லாததோர் செல்வமாங்
      கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
      அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 02
      490. . பழக வல்லசிறு தொண்டர்பா வின்னிசை
      குழக ரென்றுகுழை யாவழை யாவருங்
      கழல்கொள் பாடலுடை யார்கரு காவூரெம்
      அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 03
      491. . பொடிமெய் பூசிமலர் கொய்துபு ணர்ந்துடன்
      செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர்
      கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூரெம்
      அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 04
      492. . மைய லின்றிமலர் கொய்து வணங்கிட
      செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர்
      கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம்
      ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 05
      493.. மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட
      ஆசை யாரஅருள் நல்கிய செல்வத்தர்
      காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம்
      ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே. 06
      494.. வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
      சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
      கந்த மௌவல்கம ழுங்கரு காவூரெம்
      எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே. 07
      இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 08
      495.. பண்ணின் நேர்மொழி யாளையோர் பாகனார்
      மண்ணு கோலம்முடை யம்மல ரானொடுங்
      கண்ணன் நேடஅரி யார்கரு காவூரெம்
      அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 09
      496.. போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல்
      தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்
      கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்
      ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 10
      497.. கலவ மஞ்ஞை யுலவுங் கருகாவூர்
      நிலவு பாடலுடை யான்றன நீள்கழல்
      குலவு ஞானசம் பந்தன செந்தமிழ்
      சொலவ லாரவர் தொல்வினை தீருமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 047 திருஆலவாய்
      பண் - கௌசிகம்
      திருச்சிற்றம்பலம்
      498 காட்டு மாவ துரித்துரி போர்த்துடல்
      நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான்
      வேட்டு வேள்விசெய் யாவமண் கையரை
      ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே. 01
      499. . மத்த யானையின் ஈருரி மூடிய
      அத்த னேயணி ஆலவா யாய்பணி
      பொய்த்த வன்றவ வேடத்த ராஞ்சமண்
      சித்த ரையழி கத்திரு வுள்ளமே. 02
      500.. மண்ண கத்திலும் வானிலும் எங்குமா
      திண்ண கத்திரு ஆலவா யாயருள்
      பெண்ண கத்தெழிற் சாக்கி பேயமண்
      தெண்ணர் கற்பழி கத்திரு வுள்ளமே. 03
      501.. ஓதி யோத்தறி யாவமண் ஆதரை
      வாதில் வென்றழி கத்திரு வுள்ளமே
      ஆதி யேதிரு ஆலவா யண்ணலே
      நீதி யாக நினைந்தருள் செய்திடே. 04
      502.. வைய மார்புக ழாயடி யார்தொழுஞ்
      செய்கை யார்திரு ஆலவா யாய்செப்பாய்
      கையி லுண்டுழ லும்மமண் கையரை
      பைய வாதுசெ யத்திரு வுள்ளமே. 05
      503.. நாறு சேர்வயல் தண்டலை மிண்டிய
      தேற லார்திரு ஆலவா யாய்செப்பாய்
      வீறி லாத்தவ மோட்டமண் வேடரை
      சீறி வாதுசெ யத்திரு வுள்ளமே. 06
      504. . பண்ட டித்தவ தார்பயில் வாற்றொழு
      தொண்ட ருக்கெளி யாய்திரு ஆலவாய்
      அண்ட னேயமண் கையரை வாதினில்
      செண்ட டித்துள றத்திரு வுள்ளமே. 07
      505. . அரக்கன் றான்கிரி யேற்றவன் தன்முடி
      செருக்கி னைத்தவிர தாய்திரு ஆலவா
      பரக்கும் மாண்புடை யாயமண் பாவரை
      கரக்க வாதுசெ யத்திரு வுள்ளமே. 08
      506. . மாலும் நான்முக னும்மறி யாநெறி
      ஆல வாயுறை யும்மண்ண லேபணி
      மேலை வீடுண ராவெற்ற ரையரை
      சால வாதுசெ யத்திரு வுள்ளமே. 09
      507. . கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண்
      அழிப்ப ரையழி கத்திரு வுள்ளமே
      தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு ஆலவாய்
      மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே. 10
      508. செந்தெ னாமுர லுந்திரு ஆலவாய்
      மைந்த னேயென்று வல்லம ணாசற
      சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம்
      பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 048 திருமழபாடி
      பண் - கௌசிகம்
      திருச்சிற்றம்பலம்
      509 அங்கை யாரழ லன்னழ கார்சடை
      கங்கை யான்கட வுள்ளிட மேவிய
      மங்கை யானுறை யும்மழ பாடியை
      தங்கை யாற்றொழு வார்தக வாளரே. 01
      510. விதியு மாம்விளை வாமொளி யார்ந்ததோர்
      கதியு மாங்கசி வாம்வசி யாற்றமா
      மதியு மாம்வலி யாம்மழ பாடியுள்
      நதி தோய்சடை நாதன்நற் பாதமே. 02
      511. முழவி னான்முது காடுறை பேய்க்கண
      குழுவி னான்குல வுங்கையி லேந்திய
      மழுவி னானுறை யும்மழ பாடியை
      தொழுமின் நுந்துய ரானவை தீரவே. 03
      512. கலையி னான்மறை யான்கதி யாகிய
      மலையி னான்மரு வார்புர மூன்றெய்த
      சிலையி னான்சேர் திருமழ பாடியை
      தலையி னால்வணங் கத்தவ மாகுமே. 04
      513. நல்வி னைப்பயன் நான்மறை யின்பொருள்
      கல்வி யாயக ருத்தன் உருத்திரன்
      செல்வன் மேய திருமழ பாடியை
      புல்கி யேத்தும் அதுபுக ழாகுமே. 05
      514. நீடி னாருல குக்குயி ராய்நின்றான்
      ஆடி னானெரி கானிடை மாநடம்
      பாடி னாரிசை மாமழ பாடியை
      நாடி னார்க்கில்லை நல்குர வானவே. 06
      515. மின்னி னாரிடை யாளொரு பாகமாய்
      மன்னி னானுறை மாமழ பாடியை
      பன்னி னாரிசை யால்வழி பாடுசெய்
      துன்னி னார்வினை யாயின வோயுமே. 07
      516. தென்னி லங்கையர் மன்னன் செழுவரை
      தன்னி லங்க அடர்த்தருள் செய்தவன்
      மன்னி லங்கிய மாமழ பாடியை
      உன்னி லங்க வுறுபிணி யில்லையே. 08
      517. திருவின் நாயக னுஞ்செழு தாமரை
      மருவி னானு தொழத்தழல் மாண்பமர்
      உருவி னானுறை யும்மழ பாடியை
      பரவி னார்வினை பற்றறு பார்களே. 09
      518. நலியும் நன்றறி யாச்சமண் சாக்கியர்
      வலிய சொல்லினும் மாமழ பாடியுள்
      ஒலிசெய் வார்கழ லான்திறம் உள்கவே
      மெலியும் நம்முடன் மேல்வினை யானவே. 10
      519. மந்தம் உந்து பொழில்மழ பாடியுள்
      எந்தை சந்தம் இனிதுக தேத்துவான்
      கந்த மார்கடற் காழியுள் ஞானசம்
      பந்தன் மாலைவல் லார்க்கில்லை பாவமே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 049 நமச்சிவா திருப்பதிகம்
      பண் - கௌசிகம்
      திருச்சிற்றம்பலம்
      520 காத லாகி கசிந்துகண் ணீர்மல்கி
      ஓது வார்தமை நன்னெறி குய்ப்பது
      வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
      நாதன் நாமம் நமச்சி வாயவே. 01
      521. நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
      வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
      செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
      நம்பன் நாமம் நமச்சி வாயவே. 02
      522. நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினை
      தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார்
      தக்க வானவ ராத்தகு விப்பது
      நக்கன் நாமம் நமச்சி வாயவே. 03
      523. இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
      நயம்வ தோதவல் லார்தமை நண்ணினால்
      நி தான்நினை வார்க்கினி யான்நெற்றி
      நயனன் நாமம் நமச்சி வாயவே. 04
      524. கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
      இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்
      எல்லா தீங்கையும் நீங்குவ ரென்பரால்
      நல்லார் நாமம் நமச்சி வாயவே. 05
      525. மந்த ரம்மன பாவங்கள் மேவிய
      பந்த னையவர் தாமும் பகர்வரேல்
      சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
      நந்தி நாமம் நமச்சி வாயவே. 06
      526. நரக மேழ்புக நாடின ராயினும்
      உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
      விரவி யேபுகு வித்திடு மென்பரால்
      வரதன் நாமம் நமச்சி வாயவே. 07
      527. இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
      தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
      மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
      நலங்கொள் நாமம் நமச்சி வாயவே. 08
      528. போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
      பாத தான்முடி நேடிய பண்பராய்
      யாதுங் காண்பரி தாகி அலந்தவர்
      ஓதும் நாமம் நமச்சி வாயவே. 09
      529. கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
      வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால்
      விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
      நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே. 10
      530. நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ்
      சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
      சிந்தை யால்மகிழ தேத்தவல் லாரெலாம்
      பந்த பாசம் அறுக்கவல் லார்களே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 050 திருத்தண்டலைநீணெறி
      பண் - கௌசிகம்
      திருச்சிற்றம்பலம்
      531 விரும்பு திங்களுங் கங்கையும் விம்மவே
      சுரும்பு தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடங்
      கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம்
      நெருங்கு தண்டலை நீணெறி காண்மினே. 01
      532. இகழுங் காலன் இதயத்தும் என்னுளு
      திகழுஞ் சேவடி யான்திரு தும்மிடம்
      புகழும் பூமக ளும்புணர் பூசுரர்
      நிகழு தண்டலை நீணெறி காண்மினே. 02
      533. பரந்த நீல படரெரி வல்விடங்
      கரந்த கண்டத்தி னான்கரு தும்மிடஞ்
      சுரந்த மேதி துறைபடி தோடையில்
      நிரந்த தண்டலை நீணெறி காண்மினே. 03
      534. தவந்த என்பு தவள பொடியுமே
      உவந்த மேனியி னானுறை யும்மிடஞ்
      சிவந்த பொன்னுஞ் செழுந்தர ளங்களும்
      நிவந்த தண்டலை நீணெறி காண்மினே. 04
      இப்பதிகத்தில் 5 6 7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 05-07
      535. இலங்கை வேந்தன் இருபது தோளிற
      விலங்க லில்லடர தான்விரும் பும்மிடஞ்
      சலங்கொள் இப்பி தரளமுஞ் சங்கமும்
      நிலங்கொள் தண்டலை நீணெறி காண்மினே. 08
      536. கருவ ருந்தியின் நான்முகன் கண்ணனென்
      றிருவ ருந்தெரி யாவொரு வன்னிடஞ்
      செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
      நிருபர் தண்டலை நீணெறி காண்மினே. 09
      537. கலவு சீவர தார்கையில் உண்பவர்
      குலவ மாட்டா குழகன் உறைவிடஞ்
      சுலவு மாமதி லுஞ்சுதை மாடமும்
      நிலவு தண்டலை நீணெறி காண்மினே. 10
      538. நீற்றர் தண்டலை நீணெறி நாதனை
      தோற்று மேன்மையர் தோணி புரத்திறை
      சாற்று ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்
      மாற்றில் செல்வர் மறப்பர் பிறப்பையே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - நீணெறிநாதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 051 திருஆலவாய்
      பண் - கௌசிகம்
      திருச்சிற்றம்பலம்
      539 செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
      ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனை
      பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
      பைய வேசென்று பாண்டியற் காகவே. 01
      540. சித்த னேதிரு ஆலவாய் மேவிய
      அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
      எத்த ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
      பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே. 02
      541. தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவா
      சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை
      எக்க ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
      பக்க மேசென்று பாண்டியற் காகவே. 03
      542. சிட்ட னேதிரு ஆலவாய் மேவிய
      அட்ட மூர்த்திய னேயஞ்ச லென்றருள்
      துட்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
      பட்டி மன்தென்னன் பாண்டியற் காகவே. 04
      543. நண்ண லார்புரம் மூன்றெரி ஆலவாய்
      அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை
      எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
      பண்ணி யல்தமிழ பாண்டியற் காகவே. 05
      544. தஞ்ச மென்றுன் சரண்புகு தேனையும்
      அஞ்ச லென்றருள் ஆலவா யண்ணலே
      வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர்
      பஞ்ச வன்தென்னன் பாண்டியற் காகவே. 06
      545. செங்கண் வெள்விடை யாய்திரு ஆலவாய்
      அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனை
      கங்கு லார்அமண் கையரிடுங் கனல்
      பங்க மில்தென்னன் பாண்டியற் காகவே. 07
      546. தூர்த்தன் வீர தொலைத்தருள் ஆலவாய்
      ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
      ஏத்தி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
      பார்த்தி வன்தென்னன் பாண்டியற் காகவே. 08
      547. தாவி னான்அயன் தானறி யாவகை
      மேவி னாய்திரு ஆலவா யாயருள்
      தூவி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
      பாவி னான்தென்னன் பாண்டியற் காகவே. 09
      548. எண்டி சைக்கெழில் ஆலவாய் மேவிய
      அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனை
      குண்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
      பண்டி மன்தென்னன் பாண்டியற் காகவே. 10
      549. அப்பன் ஆலவா யாதி யருளினால்
      வெப்ப தென்னவன் மேலுற மேதினி
      கொப்ப ஞானசம் பந்தன் உரைபத்துஞ்
      செப்ப வல்லவர் தீதிலா செல்வரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 052 திருஆலவாய் - திருவிராகம்
      பண் - கௌசிகம்
      திருச்சிற்றம்பலம்
      550 வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல்
      பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
      காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதில்
      கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே. 01
      551. பட்டிசைந்த அல்குலாள் பாவையாளோர் பாகமா
      ஒட்டிசைந்த தன்றியும் உச்சியா ளொருத்தியா
      கொட்டிசைந்த ஆடலாய் கூடல்ஆல வாயிலாய்
      எட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி தென்னையே. 02
      552. குற்றம்நீ குணங்கள்நீ கூடல்ஆல வாயிலாய்
      சுற்றம்நீ பிரானும்நீ தொடர்ந்திலங்கு சோதிநீ
      கற்றநூற் கருத்தும்நீ அருத்தமின்பம் என்றிவை
      முற்றும்நீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே. 03
      553. முதிருநீர சடைமுடி முதல்வநீ முழங்கழல்
      அதிரவீசி யாடுவாய் அழகன்நீ புயங்கன்நீ
      மதுரன்நீ மணாளன்நீ மதுரையால வாயிலாய்
      சதுரன்நீ சதுர்முகன் கபாலமேந்து சம்புவே. 04
      554. கோலமாய நீள்மதிற் கூடல்ஆல வாயிலாய்
      பாலனாய தொண்டுசெய்து பண்டுமின்றும் உன்னையே
      நீலமாய கண்டனே நின்னையன்றி நித்தலுஞ்
      சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே. 05
      555. பொன்தயங் கிலங்கொளி நலங்குளிர்ந்த புன்சடை
      பின்தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ
      கொன்றையம் முடியினாய் கூடல்ஆல வாயிலாய்
      நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே. 06
      556. ஆதியந்த மாயினாய் ஆலவாயில் அண்ணலே
      சோதியந்த மாயினாய் சோதியுள்ளோர் சோதியாய்
      கீதம்வந்த வாய்மையால் கிளர்தருக்கி னார்க்கல்லால்
      ஓதிவந்த வாய்மையால் உணர்ந்துரைக்க லாகுமே. 07
      557. கறையிலங்கு கண்டனே கருத்திலா கருங்கடற்
      துறையிலங்கை மன்னனை தோளடர ஊன்றினாய்
      மறையிலங்கு பாடலாய் மதுரையால வாயிலாய்
      நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே. 08
      558. தாவணவ் விடையினாய் தலைமையாக நாடொறுங்
      கோவணவ் வுடையினாய் கூடலால வாயிலாய்
      தீவணம் மலர்மிசை திசைமுகனும் மாலும்நின்
      தூவணம் மளக்கிலார் துளக்கமெய்து வார்களே. 09
      559. தேற்றமில் வினைத்தொழில் தேரருஞ் சமணரும்
      போற்றிசைத்து நின்கழற் புகழ்ந்துபுண்ணி யங்கொளார்
      கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய்
      நாற்றிசைக்கும் மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே. 10
      560. போயநீர் வளங்கொளும் பொருபுனற் புகலியான்
      பாயகேள்வி ஞானசம் பந்தன்நல்ல பண்பினால்
      ஆயசொல்லின் மாலைகொண் டாலவாயில் அண்ணலை
      தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 053 திருவானைக்கா - திருவிராகம்
      பண் - கௌசிகம்
      திருச்சிற்றம்பலம்
      561 வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடை
      தேனைக்காவில் இன்மொழி தேவிபாக மாயினான்
      ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
      ஏனைக்காவல் வேண்டுவார கேதும்ஏதம் இல்லையே. 01
      562. சேறுபட்ட தண்வயற் சென்றுசென்று சேணுலா
      வாறுபட்ட நுண்டுறை யானைக்காவில் அண்ணலார்
      நீறுபட்ட மேனியார் நிகரில்பாதம் ஏத்துவார்
      வேறுபட்ட சிந்தையார் விண்ணிலெண்ண வல்லரே. 02
      563. தாரமாய மாதராள் தானோர்பாக மாயினான்
      ஈரமாய புன்சடை யேற்றதிங்கள் சூடினான்
      ஆரமாய மார்புடை யானைக்காவில் அண்ணலை
      வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே. 03
      564. விண்ணினண்ணு புல்கிய வீரமாய மால்விடை
      சுண்ணவெண்ணீ றாடினான் சூலமேந்து கையினான்
      அண்ணல்கண்ணோர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ
      எண்ணும்வண்ணம் வல்லவர கேதமொன்றும் இல்லையே. 04
      565. வெய்யபாவங் கைவிட வேண்டுவீர்கள் ஆண்டசீர்
      மைகொள்கண்டன் வெய்யதீ மாலையாடு காதலான்
      கொய்யவிண்ட நாண்மலர கொன்றைதுன்று சென்னியெம்
      ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே. 05
      566. நாணுமோர்வு சார்வுமுன் நகையுமுட்கு நன்மையும்
      பேணுறாத செல்வமும் பேசநின்ற பெற்றியான்
      ஆணும்பெண்ணு மாகிய ஆனைக்காவில் அண்ணலார்
      காணுங்கண்ணு மூன்றுடை கறைகொள்மிடறன் அல்லனே. 06
      567. கூருமாலை நண்பகற் கூடிவல்ல தொண்டர்கள்
      பேருமூருஞ் செல்வமும் பேசநின்ற பெற்றியான்
      பாரும்விண்ணுங் கைதொழ பாயுங்கங்கை செஞ்சடை
      ஆரநீரோ டேந்தினான் ஆனைக்காவு சேர்மினே. 07
      568. பொன்னமல்கு தாமரை போதுதாது வண்டினம்
      அன்னமல்கு தண்டுறை ஆனைக்காவில் அண்ணலை
      பன்னவல்ல நான்மறை பாடவல்ல தன்மையோர்
      முன்னவல்லர் மொய்கழல் துன்னவல்லர் விண்ணையே. 08
      569. ஊனொடுண்டல் நன்றென வூனொடுண்டல் தீதென
      ஆனதொண்டர் அன்பினாற் பேசநின்ற தன்மையான்
      வானொடொன்று சூடினான் வாய்மையாக மன்னிநின்
      றானொடஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்மினே. 09
      570. கையிலுண்ணுங் கையருங் கடுக்கடின் கழுக்களும்
      மெய்யைப்போர்க்கும் பொய்யரும் வேதநெறியை யறிகிலார்
      தையல்பாக மாயினான் தழலதுருவ தானெங்கள்
      ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே. 10
      571. ஊழியூழி வையக துயிர்கள்தோற்று வானொடும்
      ஆழியானுங் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை
      காழிஞான சம்பந்தன் கருதிச்சொன்ன பத்திவை
      வாழியா கற்பவர் வல்வினைகள் மாயுமே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 054 திருப்பாசுரம்
      பண் - கௌசிகம்
      திருச்சிற்றம்பலம்
      572 வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
      வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
      ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
      சூழ்க வையக முந்துயர் தீர்கவே. 01
      573. அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
      எரியர் ஏறுக தேறுவர் கண்டமுங்
      கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
      பெரிய ராரறி வாரவர் பெற்றியே. 02
      574. வெந்த சாம்பல் விரையென பூசியே
      தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
      சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால்
      எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ. 03
      575. ஆட்பா லவர கருளும் வண்ணமும் ஆதிமாண்புங்
      கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா
      கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
      தாட்பால் வணங்கி தலைநின் றிவைகேட்க தக்கார். 04
      576. ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்கு
      சோதிக்க வேண்டா சுடர்வி டுளன் எங்கள்சோதி
      மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
      சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே. 05
      577. ஆடும் மெனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
      பாடும் மெனவும் புகழல்லது பாவம் நீங
      கேடும் பிறப்பும் அறுக்கும் மெனக்கேட்டீ ராகில்
      நாடு திறத்தார கருளல்லது நாட்ட லாமே. 06
      578. கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
      படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிட தாதை பண்டு
      முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
      அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக்கேட்டு மன்றே. 07
      579. வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
      ஏத படாமை யுலகத்தவர் ஏத்தல் செ
      பூத முதல்வன் முதலே முதலா பொலிந்த
      சூதன் ஒலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே. 08
      580. பாராழி வட்டம் பகையால் நலிந்தாட்ட ஆடி
      பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
      நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்கு
      போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே. 09
      581. மாலா யவனும் மறைவல்ல நான் முகனும்
      பாலாய தேவர்பக ரில்லமு தூட்டல் பேணி
      காலாய முந்நீர் கடைந்தார கரிதா யெழுந்த
      ஆலாலம் உண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே. 10
      582. அற்றன்றி அந்தண் மதுரை தொகை யாக்கினானு
      தெற்றென்ற தெய்வ தெளியார் கரைக்கோலை தெண்ணீர
      பற்றின்றி பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில்
      பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே. 11
      583. நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தன் நல்ல
      எல்லார் களும்பரவும் ஈசனை யேத்து பாடல்
      பல்லார் களும்மதிக்க பாசுரஞ் சொன்ன பத்தும்
      வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே. 12
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 055 திருவான்மியூர்
      பண் - கௌசிகம்
      திருச்சிற்றம்பலம்
      584 விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே
      உரையார் பல்புகழாய் உமைநங்கையோர் பங்குடையாய்
      திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி யூருறையும்
      அரையா வுன்னையல்லா லடையாதென தாதரவே. 01
      585. இடியார் ஏறுடையாய் இமையோர்தம் மணிமுடியாய்
      கொடியார் மாமதியோ டரவம்மலர கொன்றையினாய்
      செடியார் மாதவிசூழ் திருவான்மி யூருறையும்
      அடிகேள் உன்னையல்லால் அடையாதென தாதரவே. 02
      586. கையார் வெண்மழுவா கனல்போல்திரு மேனியனே
      மையார் ஒண்கண்நல்லாள் உமையாள்வளர் மார்பினனே
      செய்யார் செங்கயல்பாய் திருவான்மி யூருறையும்
      ஐயா வுன்னையல்லால் அடையாதென தாதரவே. 03
      587. பொன்போ லுஞ்சடைமேற் புனல்தாங்கிய புண்ணியனே
      மின்போ லும்புரிநூல் விடையேறிய வேதியனே
      தென்பால் வையமெலா திகழுந்திரு வான்மிதன்னில்
      அன்பா வுன்னையல்லால் அடையாதென தாதரவே. 04
      588. கண்ணா ருந்நுதலாய் கதிர்சூழொளி மேனியின்மேல்
      எண்ணார் வெண்பொடிநீ றணிவாயெழில் வார்பொழில்சூழ்
      திண்ணார் வண்புரிசை திருவான்மி யூருறையும்
      அண்ணா வுன்னையல்லால் அடையாதென தாதரவே. 05
      589. நீதீ நின்னையல்லால் நெறியாதும் நினைந்தறியேன்
      ஓதீ நான்மறைகள் மறையோன்தலை யொன்றினையுஞ்
      சேதீ சேதமில்லா திருவான்மி யூருறையும்
      ஆதீ உன்னையல்லால் அடையாதென தாதரவே. 06
      590. வானார் மாமதிசேர் சடையாய்வரை போலவருங்
      கானார் ஆனையின்தோல் உரித்தாய்கறை மாமிடற்றாய்
      தேனார் சோலைகள்சூழ் திருவான்மி யூருறையும்
      ஆனா யுன்னையல்லால் அடையாதென தாதரவே. 07
      591. பொறிவாய் நாகணையா னொடுபூமிசை மேயவனும்
      நெறியார் நீள்கழல்மேல் முடிகாண்பரி தாயவனே
      செறிவார் மாமதில்சூழ் திருவான்மி யூருறையும்
      அறிவே யுன்னையல்லால் அடையாதென தாதரவே. 08
      இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 09
      592. குண்டா டுஞ்சமணர் கொடுஞ்சாக்கிய ரென்றிவர்கள்
      கண்டார் காரணங்கள் கருதாதவர் பேசநின்றாய்
      திண்டேர் வீதியதார் திருவான்மி யூருறையும்
      அண்டா வுன்னையல்லால் அடையாதென தாதரவே. 10
      593. கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தரு காழிதனில்
      நன்றா னபுகழான் மிகுஞானசம் பந்தனுரை
      சென்றார் தம்மிடர்தீர் திருவான்மி யூரதன்மேற்
      குன்றா தேத்தவல்லார் கொடுவல்வினை போயறுமே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 056 திருப்பிரமபுரம்
      பண் - பஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      594 இறையவன் ஈசன்எந்தை இமையோர்தொழு தேத்தநின்ற
      கறையணி கண்டன்வெண்தோ டணிகாதினன் காலத்தன்று
      மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னுசென்னி
      பிறையணி செஞ்சடையான் பிரமாபுரம் பேணுமினே. 01
      595. சடையினன் சாமவேதன் சரிகோவண வன்மழுவா
      படையினன் பாய்புலித்தோ லுடையான்மறை பல்கலைநூல்
      உடையவன் ஊனமில்லி யுடனாயுமை நங்கையென்னும்
      பெடையொடும் பேணுமிடம் பிரமாபுரம் பேணுமினே. 02
      596. மாணியை நாடுகாலன் உயிர்மாய்தர செற்றுக்காளி
      காணிய ஆடல்கொண்டான் கலந்தூர்வழி சென்றுபிச்சை
      ஊணியல் பாகக்கொண்டங் குடனேயுமை நங்கையொடும்
      பேணிய கோயில்மன்னும் பிரமாபுரம் பேணுமினே. 03
      597. பாரிடம் விண்ணுமெங்கும் பயில்நஞ்சு பரந்துமிண்ட
      பேரிடர தேவர்கணம் பெருமானிது காவெனலும்
      ஓரிடத்தே கரந்தங் குமைநங்கையொ டும்முடனே
      பேரிட மாகக்கொண்ட பிரமாபுரம் பேணுமினே. 04
      598. நச்சர வச்சடைமேல் நளிர்திங்களு மொன்றவைத்தங்
      கச்சமெ ழவிடைமேல் அழகார்மழு வேந்திநல்ல
      இச்சை பகர்ந்துமிக இடுமின்பலி யென்றுநாளும்
      பிச்சைகொள் அண்ணல்நண்ணும் பிரமாபுரம் பேணுமினே. 05
      599. பெற்றவன் முப்புரங்கள் பிழையாவண்ணம் வாளியினாற்
      செற்றவன் செஞ்சடையில் திகழ்கங்கைத னைத்தரித்தி
      டொற்றை விடையினனாய் உமைநங்கையொ டும்முடனே
      பெற்றிமை யாலிருந்தான் பிரமாபுரம் பேணுமினே. 06
      600. வேத மலிந்தஒலி விழவின்னொலி வீணையொலி
      கீத மலிந்துடனே கிளரத்திகழ் பௌவமறை
      ஓத மலிந்துயர்வான் முகடேறவொண் மால்வரையான்
      பேதை யொடும்மிருந்தான் பிரமாபுரம் பேணுமினே. 07
      601. இமையவர் அஞ்சியோட எதிர்வாரவர் தம்மையின்றி
      அமைதரு வல்லரக்கன் அடர்த்தும்மலை அன்றெடுப்ப
      குமையது செய்துபாட கொற்றவாளொடு நாள்கொடுத்தி
      டுமையொ டிருந்தபிரான் பிரமாபுரம் உன்னுமினே. 08
      602. ஞாலம் அளித்தவனும் அரியும்மடி யோடுமுடி
      காலம் பலசெலவுங் கண்டிலாமையி னாற்கதறி
      ஓல மிடஅருளி உமைநங்கையொ டும்முடனாய்
      ஏல இருந்தபிரான் பிரமாபுரம் ஏத்துமினே. 09
      603. துவருறும் ஆடையினார் தொக்கபீலியர் நக்கரையர்
      அவரவர் தன்மைகள்கண் டணுகேன்மின் னருள்பெறுவீர்
      கவருறு சிந்தையொன்றி கழிகாலமெல் லாம்படைத்த
      இவரவர் என்றிறைஞ்சி பிரமாபுரம் ஏத்துமினே. 10
      604. உரைதரு நான்மறையோர் புகழ்ந்தேத்தவொண் மாதினொடும்
      வரையென வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுர
      தரசினை யேத்தவல்ல அணிசம்பந்தன் பத்தும்வல்லார்
      விரைதரு விண்ணுலகம் எதிர்கொள்ள விரும்புவரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 057 திருவொற்றியூர்
      பண் - பஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      605 விடையவன் விண்ணுமண்ணு தொழநின்றவன் வெண்மழுவா
      படையவன் பாய்புலித்தோல் உடைகோவணம் பல்கரந்தை
      சடையவன் சாமவேதன் சசிதங்கிய சங்கவெண்தோ
      டுடையவன் ஊனமில்லி யுறையும்மிடம் ஒற்றியூரே. 01
      606. பாரிடம் பாணிசெ பறைக்கட்செறு பல்கணப்பேய்
      சீரொடும் பாடலாடல் இலயஞ்சிதை யாதகொள்கை
      தாரிடும் போர்விடையன் தலைவன்றலை யேகலனா
      ஊரிடும் பிச்சைகொள்வான் உறையும்மிடம் ஒற்றியூரே. 02
      607. விளிதரு நீருமண்ணும் விசும்போடனல் காலுமாகி
      அளிதரு பேரருளான் அரனாகிய ஆதிமூர்த்தி
      களிதரு வண்டுபண்செய் கமழ்கொன்றையி னோடணிந்த
      ஒளிதரு வெண்பிறையான் உறையும்மிடம் ஒற்றியூரே. 03
      608. அரவமே கச்சதாக அசைத்தானலர கொன்றையந்தார்
      விரவிவெண் ணூல்கிடந்த விரையார்வரை மார்பன்எந்தை
      பரவுவார் பாவமெல்லாம் பறைத்துப்படர் புன்சடைமேல்
      உரவுநீ ரேற்றபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே. 04
      609. விலகினார் வெய்யபாவம் விதியாலருள் செய்துநல்ல
      பலகினார் மொந்தைதாள தகுணிச்சமும் பாணியாலே
      அலகினால் வீசிநீர்கொண் டடிமேல்அல ரிட்டுமுட்டா
      துலகினா ரேத்தநின்றான் உறையும்மிடம் ஒற்றியூரே. 05
      610. கமையொடு நின்றசீரான் கழலுஞ்சிலம் பும்ஒலிப்ப
      சுமையொடு மேலும்வைத்தான் விரிகொன்றையுஞ் சோமனையும்
      அமையொடு நீண்டதிண்டோ ள் அழகாயபொற் றோடிலங்க
      உமையொடுங் கூடிநின்றான் உறையும்மிடம் ஒற்றியூரே. 06
      611. நன்றியால் வாழ்வதுள்ளம் உலகுக்கொரு நன்மையாலே
      கன்றினார் மும்மதிலுங் கருமால்வரை யேசிலையா
      பொன்றினார் வார்சுடலை பொடிநீறணி தாரழல்அம்
      பொன்றினால் எய்தபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே. 07
      612. பெற்றியாற் பித்தனொப்பான் பெருமான்கரு மானுரிதோல்
      சுற்றியான் சுத்திசூலஞ் சுடர்க்கண்ணுதல் மேல்விளங்க
      தெற்றியாற் செற்றரக்கன் னுடலைச்செழு மால்வரைக்கீழ்
      ஒற்றியான் முற்றுமாள்வான் உறையும்மிடம் ஒற்றியூரே. 08
      613. திருவினார் போதினானு திருமாலுமோர் தெய்வமுன்னி
      தெரிவினாற் காணமாட்டார் திகழ்சேவடி சிந்தைசெய்து
      பரவினார் பாவமெல்லாம் பறையப்படர் பேரொளியோ
      டொருவனாய் நின்றபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே. 09
      614. தோகையம் பீலிகொள்வார் துவர்க்கூறைகள் போர்த்துழல்வார்
      ஆகம செல்வனாரை அலர்தூற்றுதல் காரணமா
      கூகையம் மாக்கள்சொல்லை குறிக்கொள்ளன்மின் ஏழுலகும்
      ஓகைத தாளவல்லான் உறையும்மிடம் ஒற்றியூரே. 10
      615. ஒண்பிறை மல்குசென்னி இறைவன்னுறை யொற்றியூரை
      சண்பையர் தந்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்ன
      பண்புனை பாடல்பத்தும் பரவிப்பணி தேத்தவல்லார்
      விண்புனை மேலுலகம் விருப்பெய்துவர் வீடெளிதே. 11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 058 திருச்சாத்தமங்கை
      பண் - பஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      616 திருமலர கொன்றைமாலை திளைக்கும்மதி சென்னிவைத்தீர்
      இருமலர கண்ணிதன்னோ டுடனாவது மேற்பதொன்றே
      பெருமலர சோலைமேகம் உரிஞ்சும்பெருஞ் சாத்தமங்கை
      அருமல ராதிமூர்த்தி அயவந்திய மர்ந்தவனே. 01
      617. பொடிதனை பூசுமார்பிற் புரிநூலொரு பாற்பொருந்த
      கொடியன சாயலாளோ டுடனாவதுங் கூடுவதே
      கடிமணம் மல்கிநாளுங் கமழும்பொழிற் சாத்தமங்கை
      அடிகள்ந கன்பரவ அயவந்திய மர்ந்தவனே. 02
      618. நூனல தங்குமார்பில் நுகர்நீறணி தேறதேறி
      மானன நோக்கிதன்னோ டுடனாவது மாண்பதுவே
      தானலங் கொண்டுமேக தவழும்பொழிற் சாத்தமங்கை
      ஆனல தோய்ந்தஎம்மான் அயவந்திய மர்ந்தவனே. 03
      619. மற்றவின் மால்வரையா மதிலெய்துவெண் ணீறுபூசி
      புற்றர வல்குலாளோ டுடனாவதும் பொற்பதுவே
      கற்றவர் சாத்தமங்கை நகர்கைதொழ செய்தபாவம்
      அற்றவர் நாளுமேத்த அயவந்திய மர்ந்தவனே. 04
      620. வெந்தவெண் ணீறுபூசி விடையேறிய வேதகீதன்
      பந்தண வும்விரலாள் உடனாவதும் பாங்கதுவே
      சந்தமா றங்கம்வேதம் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை
      அந்தமாய் ஆதியாகி அயவந்திய மர்ந்தவனே. 05
      621. வேதமாய் வேள்வியாகி விளங்கும்பொருள் வீடதாகி
      சோதியாய் மங்கைபாக நிலைதான்சொல்ல லாவதொன்றே
      சாதியால் மிக்கசீரால் தகுவார்தொழுஞ் சாத்தமங்கை
      ஆதியாய் நின்றபெம்மான் அயவந்திய மர்ந்தவனே. 06
      622. இமயமெல் லாம்இரிய மதிலெய்துவெண் ணீறுபூசி
      உமையையோர் பாகம்வைத்த நிலைதானுன்ன லாவதொன்றே
      சமயமா றங்கம்வேத தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை
      அமையவே றோங்குசீரான் அயவந்திய மர்ந்தவனே. 07
      623. பண்ணுலாம் பாடல்வீணை பயில்வானோர் பரமயோகி
      விண்ணுலா மால்வரையான் மகள்பாகமும் வேண்டினையே
      தண்ணிலா வெண்மதி தவழும்பொழிற் சாத்தமங்கை
      அண்ணலாய் நின்றஎம்மான் அயவந்திய மர்ந்தவனே. 08
      624. பேரெழில் தோளரக்கன் வலிசெற்றதும் பெண்ணோர்பாகம்
      ஈரெழிற் கோலமாகி யுடனாவதும் ஏற்பதொன்றே
      காரெழில் வண்ணனோடு கனகம்மனை யானுங்காணா
      ஆரழல் வண்ணமங்கை அயவந்திய மர்ந்தவனே. 09
      625. கங்கையோர் வார்சடைமேல் அடையப்புடை யேகமழும்
      மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல லாவதொன்றே
      சங்கையில் லாமறையோர் அவர்தாந்தொழு சாத்தமங்கை
      அங்கையிற் சென்னிவைத்தாய் அயவந்திய மர்ந்தவனே. 10
      626. மறையினார் மல்குகாழி தமிழ்ஞானசம் பந்தன்மன்னும்
      நிறையினார் நீலநக்கன் நெடுமாநக ரென்றுதொண்டர்
      அறையுமூர் சாத்தமங்கை அயவந்திமே லாய்ந்தபத்தும்
      முறைமையா லேத்தவல்லார் இமையோரிலும் முந்துவரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அயவந்தீசுவரர் தேவியார்
      சாத்தமங்கை என்பது ஸ்தலம் அயவந்தி
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 059 திருக்குடமூக்கு
      பண் - பஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      627 அரவிரி கோடனீட லணிகாவிரி யாற்றயலே
      மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழுங்
      குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
      இரவிரி திங்கள்சூடி யிருந்தானவன் எம்மிறையே. 01
      628. ஓத்தர வங்களோடும் ஒலிகாவிரி யார்த்தயலே
      பூத்தர வங்களோடும் புகைகொண்டடி போற்றிநல்ல
      கூத்தர வங்களோவா குழகன்குட மூக்கிடமா
      ஏத்தர வங்கள்செய்ய இருந்தானவன் எம்மிறையே. 02
      629. மயில்பெடை புல்கியால மணல்மேல்மட அன்னமல்கும்
      பயில்பெடை வண்டுபண்செய் பழங்காவிரி பைம்பொழில்வா
      குயில்பெடை யோடுபாட லுடையான்குட மூக்கிடமா
      இயலொடு வானமேத்த இருந்தானவன் எம்மிறையே. 03
      630. மிக்கரை தாழவேங்கை யுரியார்த்துமை யாள்வெருவ
      அக்கர வாமையேன மருப்போடவை பூண்டழகார்
      கொக்கரை யோடுபாட லுடையான்குட மூக்கிடமா
      எக்கரை யாருமேத்த இருந்தானவன் எம்மிறையே. 04
      631. வடிவுடை வாட்டடங்கண் ணுமையஞ்சவோர் வாரணத்தை
      பொடியணி மேனிமூட வுரிகொண்டவன் புன்சடையான்
      கொடிநெடு மாடமோங்குங் குழகன்குட மூக்கிடமா
      இடிபடு வானமேத்த இருந்தானவன் எம்மிறையே. 05
      632. கழைவளர் கவ்வைமுத்தங் கமழ்காவிரி யாற்றயலே
      தழைவளர் மாவின்நல்ல பலவின்கனி கள்தயங்குங்
      குழைவளர் சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
      இழைவளர் மங்கையோடும் இருந்தானவன் எம்மிறையே. 06
      633. மலைமலி மங்கைபாகம் மகிழ்ந்தானெழில் வையமு
      சிலைமலி வெங்கணையாற் சிதைத்தான்புர மூன்றினையுங்
      குலைமலி தண்பலவின் பழம்வீழ்குட மூக்கிடமா
      இலைமலி சூலமேந்தி இருந்தானவன் எம்மிறையே. 07
      634. நெடுமுடி பத்துடைய நிகழ்வாளர கன்னுடலை
      படுமிடர் கண்டயர பருமால்வரை கீழடர்த்தான்
      கொடுமடல் தங்குதெங்கு பழம்வீழ்குட மூக்கிடமா
      இடுமணல் எக்கர்சூழ இருந்தானவன் எம்மிறையே. 08
      635. ஆரெரி ஆழியானும் மலரானும் அளப்பரிய
      நீரிரி புன்சடைமேல் நிரம்பாமதி சூடிநல்ல
      கூரெரி யாகிநீண்ட குழகன்குட மூக்கிடமா
      ஈரிரு கோவணத்தோ டிருந்தானவன் எம்மிறையே. 09
      636. மூடிய சீவரத்தார் முதுமட்டையர் மோட்டமணர்
      நாடிய தேவரெல்லாம் நயந்தேத்திய நன்னலத்தான்
      கூடிய குன்றமெல்லா முடையான்குட மூக்கிடமா
      ஏடலர் கொன்றைசூடி யிருந்தானவன் எம்மிறையே. 10
      637. வெண்கொடி மாடமோங்கு விறல்வெங்குரு நன்னகரான்
      நண்பொடு நின்றசீரான் தமிழ்ஞானசம் பந்தனல்ல
      தண்குட மூக்கமர்ந்தான் அடிசேர்தமிழ் பத்தும்வல்லார்
      விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர் வீடெளிதே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கும்பேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 060 திருவக்கரை
      பண் - பஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      638 கறையணி மாமிடற்றான் கரிகாடரங் காவுடையான்
      பிறையணி கொன்றையினான் ஒருபாகமும் பெண்ணமர்ந்தான்
      மறையவன் தன்றலையிற் பலிகொள்பவன் வக்கரையில்
      உறைபவன் எங்கள்பிரான் ஒலியார்கழல் உள்குதுமே. 01
      639. பாய்ந்தவன் காலனைமுன் பணைத்தோளியோர் பாகமதா
      ஏய்ந்தவன் எண்ணிறந்தவ் விமையோர்கள் தொழுதிறைஞ்ச
      வாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில்
      தேய்ந்திள வெண்பிறைசேர் சடையானடி செப்புதுமே. 02
      640. சந்திர சேகரனே யருளாயென்று தண்விசும்பில்
      இந்திர னும்முதலா இமையோர்கள் தொழுதிறைஞ்ச
      அந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓரம்பினால்
      மந்தர மேருவில்லா வளைத்தானிடம் வக்கரையே. 03
      641. நெய்யணி சூலமோடு நிறைவெண்மழு வும்மரவுங்
      கையணி கொள்கையினான் கனல்மேவிய ஆடலினான்
      மெய்யணி வெண்பொடியான் விரிகோவண ஆடையின்மேல்
      மையணி மாமிடற்றான் உறையும்மிடம் வக்கரையே. 04
      642. ஏனவெண் கொம்பினோடும் இளவாமையும் பூண்டுகந்து
      கூனிள வெண்பிறையுங் குளிர்மத்தமுஞ் சூடிநல்ல
      மானன மென்விழியா ளொடும்வக்கரை மேவியவன்
      தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே. 05
      643. கார்மலி கொன்றையோடுங் கதிர்மத்தமும் வாளரவும்
      நீர்மலி யுஞ்சடைமேல் நிரம்பாமதி சூடிநல்ல
      வார்மலி மென்முலையா ளொடும்வக்கரை மேவியவன்
      பார்மலி வெண்டலையிற் பலிகொண்டுழல் பான்மையனே. 06
      644. கானண வும்மறிமான் ஒருகையதோர் கைமழுவாள்
      தேனண வுங்குழலாள் உமைசேர்திரு மேனியினான்
      வானண வும்பொழில்சூழ் திருவக்கரை மேவியவன்
      ஊனண வுந்தலையிற் பலிகொண்டுழல் உத்தமனே. 07
      645. இலங்கையர் மன்னனாகி எழில்பெற்றஇ ராவணனை
      கலங்கவோர் கால்விரலாற் கதிர்பொன்முடி பத்தலற
      நலங்கெழு சிந்தையனாய் அருள்போற்றலு நன்களித்த
      வலங்கெழு மூவிலைவேல் உடையானிடம் வக்கரையே. 08
      646. காமனை யீடழித்தி டவன்காதலி சென்றிரப்ப
      சேமமே உன்றனக்கென் றருள்செய்தவன் தேவர்பிரான்
      சாமவெண் டாமரைமேல் அயனுந்தர ணியளந்த
      வாமன னும்மறியா வகையானிடம் வக்கரையே. 09
      647. மூடிய சீவரத்தர் முதிர்பிண்டிய ரென்றிவர்கள்
      தேடிய தேவர்தம்மா லிறைஞ்சப்படு தேவர்பிரான்
      பாடிய நான்மறையன் பலிக்கென்றுபல் வீதிதோறும்
      வாடிய வெண்டலைகொண் டுழல்வானிடம் வக்கரையே. 10
      648. தண்புன லும்மரவுஞ் சடைமேலுடை யான்பிறைதோய்
      வண்பொழில் சூழ்ந்தழகார் இறைவன்னுறை வக்கரையை
      சண்பையர் தந்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்ன
      பண்புனை பாடல்வல்லா ரவர்தம்வினை பற்றறுமே. 11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சந்திரசேகரேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 061 திருவெண்டுறை
      பண் - பஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      649 ஆதியன் ஆதிரையன் னனலாடிய ஆரழகன்
      பாதியோர் மாதினொடும் பயிலும்பர மாபரமன்
      போதிய லும்முடிமேற் புனலோடர வம்புனைந்த
      வேதியன் மாதிமையால் விரும்பும்மிடம் வெண்டுறையே. 01
      650. காலனை யோருதையில் உயிர்வீடுசெய் வார்கழலான்
      பாலொடு நெய்தயிரும் பயின்றாடிய பண்டரங்கன்
      மாலைம தியொடுநீர் அரவம்புனை வார்சடையான்
      வேலன கண்ணியொடும் விரும்பும்மிடம் வெண்டுறையே. 02
      651. படைநவில் வெண்மழுவான் பலபூத படையுடையான்
      கடைநவில் மும்மதிலும் எரியூட்டிய கண்ணுதலான்
      உடைநவி லும்புலித்தோல் உடையாடையி னான்கடிய
      விடைநவிலுங் கொடியான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 03
      652. பண்ணமர் வீணையினான் பரவிப்பணி தொண்டர்கள்தம்
      எண்ணமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவரியான்
      பெண்ணமர் கூறுடையான் பிரமன்தலை யிற்பலியான்
      விண்ணவர் தம்பெருமான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 04
      653. பாரிய லும்பலியான் படியார்க்கும் அறிவரியான்
      சீரிய லும்மலையாள் ஒருபாகமுஞ் சேரவைத்தான்
      போரிய லும்புரமூன் றுடன்பொன்மலை யேசிலையா
      வீரிய நின்றுசெய்தான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 05
      654. ஊழிக ளாயுலகா யொருவர்க்கும் உணர்வரியான்
      போழிள வெண்மதியும் புனலும்மணி புன்சடையான்
      யாழின்மொ ழியுமையாள் வெருவவ்வெழில் வெண்மருப்பின்
      வேழமு ரித்தபிரான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 06
      655. கன்றிய காலனையும் முருளக்கனல் வாயலறி
      பொன்றமுன் நின்றபிரான் பொடியாடிய மேனியினான்
      சென்றிமை யோர்பரவு திகழ்சேவடி யான்புலன்கள்
      வென்றவன் எம்மிறைவன் விரும்பும்மிடம் வெண்டுறையே. 07
      656. கரமிரு பத்தினாலுங் கடுவன்சின மாயெடுத்த
      சிரமொரு பத்துமுடை அரக்கன்வலி செற்றுகந்தான்
      பரவவல் லார்வினைகள் அறுப்பானொரு பாகமும்பெண்
      விரவிய வேடத்தினான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 08
      657. கோலம லரயனுங் குளிர்கொண்டல் நிறத்தவனுஞ்
      சீலம றிவரிதா திகழ்ந்தோங்கிய செந்தழலான்
      மூலம தாகிநின்றான் முதிர்புன்சடை வெண்பிறையான்
      வேலைவி டமிடற்றான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 09
      658. நக்குரு வாயவரு துவராடைந யந்துடையாம்
      பொக்கர்கள் தம்முரைகள் ளவைபொய்யென எம்மிறைவன்
      திக்குநி றைபுகழார் தருதேவர்பி ரான்கனகம்
      மிக்குயர் சோதியவன் விரும்பும்மிடம் வெண்டுறையே. 10
      659. திண்ணம ரும்புரிசை திருவெண்டுறை மேயவனை
      தண்ணம ரும்பொழில்சூழ் தருசண்பையர் தந்தலைவன்
      எண்ணமர் பல்கலையான் இசைஞானசம் பந்தன்சொன்ன
      பண்ணமர் பாடல்வல்லார் வினையாயின பற்றறுமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வெண்டுறைநாதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 062 திருப்பனந்தாள்
      பண் - பஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      660 கண்பொலி நெற்றியினான் திகழ்கையிலோர் வெண்மழுவான்
      பெண்புணர் கூறுடையான் மிகுபீடுடை மால்விடையான்
      விண்பொலி மாமதிசேர் தருசெஞ்சடை வேதியனூர்
      தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே. 01
      661. விரித்தவன் நான்மறையை மிக்கவிண்ணவர் வந்திறைஞ்ச
      எரித்தவன் முப்புரங்கள் இயலேழுலகில் லுயிரும்
      பிரித்தவன் செஞ்சடைமேல் நிறைபேரொலி வெள்ளந்தன்னை
      தரித்தவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே. 02
      662. உடுத்தவன் மானுரிதோல் கழலுள்கவல் லார்வினைகள்
      கெடுத்தருள் செய்யவல்லான் கிளர்கீதமோர் நான்மறையான்
      மடுத்தவன் நஞ்சமுதா மிக்கமாதவர் வேள்வியைமுன்
      தடுத்தவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே. 03
      663. சூழ்தரு வல்வினையும் முடல் தோன்றிய பல்பிணியும்
      பாழ்பட வேண்டுதிரேல் மிகஏத்துமின் பாய்புனலும்
      போழிள வெண்மதியும் அனல்பொங்கர வும்புனைந்த
      தாழ்சடை யான்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே. 04
      664. விடம்படு கண்டத்தினான் இருள்வெள்வளை மங்கையொடும்
      நடம்புரி கொள்கையினான் அவன்எம்மிறை சேருமிடம்
      படம்புரி நாகமொடு திரைபன்மணியுங் கொணரு
      தடம்புனல் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே. 05
      665. விடையுயர் வெல்கொடியான் அடிவிண்ணொடு மண்ணுமெல்லாம்
      புடைபட ஆடவல்லான் மிகுபூதமார் பல்படையான்
      தொடைநவில் கொன்றையொடு வன்னிதுன்னெரு கும்மணிந்த
      சடையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே. 06
      666. மலையவன் முன்பயந்த மடமாதையோர் கூறுடையான்
      சிலைமலி வெங்கணையாற் புரம்மூன்றவை செற்றுகந்தான்
      அலைமலி தண்புனலும் மதிஆடரவும் மணிந்த
      தலையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே. 07
      667. செற்றர கன்வலியை திருமெல்விரலால் அடர்த்து
      முற்றும்வெண் ணீறணிந்த திருமேனியன் மும்மையினான்
      புற்றரவம் புலியின் னுரிதோலொடு கோவணமு
      தற்றவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே. 08
      668. வின்மலை நாணரவம் மிகுவெங்கனல் அம்பதனால்
      புன்மைசெய் தானவர்தம் புரம்பொன்றுவி தான்புனிதன்
      நன்மலர் மேலயனும் நண்ணுநாரண னும்மறியா
      தன்மையன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே. 09
      669. ஆதர் சமணரொடும் மடையைந்துகில் போர்த்துழலும்
      நீதர் உரைக்குமொழி யவைகொள்ளன்மின் நின்மலனூர்
      போதவிழ் பொய்கைதனுள் திகழ்புள்ளிரி யப்பொழில்வா
      தாதவி ழும்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே. 10
      670. தண்வயல் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரத்து
      கண்ணய லேபிறையான் அவன்றன்னைமுன் காழியர்கோன்
      நண்ணிய செந்தமிழால் மிகுஞானசம் பந்தன்நல்ல
      பண்ணியல் பாடல்வல்லார் அவர்தம்வினை பற்றறுமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சடையப்பஈசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 063 திருச்செங்காட்டங்குடி
      பண் - பஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      671 பைங்கோட்டு மலர்ப்புன்னை பறவைகாள் பயப்பூர
      சங்காட்ட தவிர்த்தென்னை தவிராநோய் தந்தானே
      செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
      வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே. 01
      672. பொன்னம்பூங் கழிக்கானற் புணர்துணையோ டுடன்வாழும்
      அன்னங்காள் அன்றில்காள் அகன்றும்போய் வருவீர்காள்
      கன்னவில்தோள் சிறுத்தொண்டன் கணபதீ சரமேய
      இன்னமுதன் இணையடிக்கீழ் எனதல்லல் உரையீரே. 02
      673. குட்டத்துங் குழிக்கரையுங் குளிர்பொய்கை தடத்தகத்தும்
      இட்டத்தால் இரைதேரும் இருஞ்சிறகின் மடநாராய்
      சிட்டன்சீர சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
      வட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே. 03
      674. கானருகும் வயலருகுங் கழியருகுங் கடலருகும்
      மீனிரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய்
      தேனமர்தார சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
      வானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே. 04
      675. ஆரலாஞ் சுறவமே தகன்கழனி சிறகுலர்த்தும்
      பாரல்வா சிறுகுருகே பயில்தூவி மடநாராய்
      சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
      நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென் றுரையீரே. 05
      676. குறைக்கொண்டார் இடர்தீர்த்தல் கடனன்றே குளிர்பொய்கை
      துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய்
      கறைக்கண்டன் பிறைச்சென்னி கணபதீச்சரம் மேய
      சிறுத்தொண்டன் பெருமான்சீர் அருளொருநாள் பெறலாமே. 06
      677. கருவடிய பசுங்கால்வெண் குருகேயொண் கழிநாராய்
      ஒருவடியாள் இரந்தாளென் றொருநாட்சென் றுரையீரே
      செருவடிதோ சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
      திருவடிதன் திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே. 07
      678. கூராரல் இரைதேர்ந்து குளமுலவி வயல்வாழு
      தாராவே மடநாராய் தமியேற்கொன் றுரையீரே
      சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
      பேராளன் பெருமான்றன் அருளொருநாள் பெறலாமே. 08
      679. நறப்பொலிபூங் கழிக்கானல் நவில்குருகே யுலகெல்லாம்
      அறப்பலிதேர துழல்வார்க்கென் அலர்கோடல் அழகியதே
      சிறப்புலவன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
      பிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம் பெருநலமே. 09
      இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 10
      680. செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய
      வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட
      அந்தண்பூங் கலிக்காழி அடிகளையே அடிபரவுஞ்
      சந்தங்கொள் சம்பந்தன் தமிழுரைப்போர் தக்கோரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 064 திருப்பெருவேளூர்
      பண் - பஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      681 அண்ணாவுங் கழுக்குன்றும் ஆயமலையவை வாழ்வார்
      விண்ணோரும் மண்ணோரும் வியந்தேத்த அருள்செய்வார்
      கண்ணாவார் உலகுக்கு கருத்தானார் புரமெரித்த
      பெண்ஆணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே. 01
      682. கருமானின் உரியுடையர் கரிகாடர் இமவானார்
      மருமானார் இவரென்றும் மடவாளோ டுடனாவர்
      பொருமான விடையூர்வ துடையார்வெண் பொடிப்பூசும்
      பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே. 02
      683. குணக்குந்தென் திசைக்கண்ணுங் குடபாலும் வடபாலுங்
      கணக்கென்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கு மொழிந்தோர்க்கும்
      வணக்கஞ்செய் மனத்தராய் வணங்காதார் தமக்கென்றும்
      பிணக்கஞ்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே. 03
      684. இறைக்கண்ட வளையாளோ டிருகூறா யொருகூறு
      மறைக்கண்ட திறைநாவர் மதிலெய்த சிலைவலவர்
      கறைக்கொண்ட மிடறுடையார் கனல்கிளருஞ் சடைமுடிமேல்
      பிறைக்கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே. 04
      685. விழையாதார் விழைவார்போல் விகிர்தங்கள் பலபேசி
      குழையாதார் குழைவார்போற் குணநல்ல பலகூறி
      அழையாவும் அரற்றாவும் அடிவீழ்வார் தமக்கென்றும்
      பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே. 05
      686. விரித்தார்நாண் மறைப்பொருளை உமையஞ்ச விறல்வேழம்
      உரித்தாராம் உரிபோர்த்து மதில்மூன்றும் ஒருகணையால்
      எரித்தாராம் இமைப்பளவில் இமையோர்கள் தொழுதிறைஞ்ச
      பெருத்தாரெம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே. 06
      687. மறப்பிலா அடிமைக்கண் மனம்வைப்பார் தமக்கெல்லாஞ்
      சிறப்பிலார் மதிலெய்த சிலைவல்லார் ஒருகணையால்
      இறப்பிலார் பிணியில்லார் தமக்கென்றுங் கேடிலார்
      பிறப்பிலா பெருமானார் பெருவேளூர் பிரியாரே. 07
      688. எரியார்வேற் கடற்றானை யிலங்கைக்கோன் தனைவீழ
      முரியார்ந்த தடந்தோள்கள் அடர்த்துகந்த முதலாளர்
      வரியார்வெஞ் சிலைபிடித்து மடவாளை யொருபாகம்
      பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே. 08
      689. சேணியலும் நெடுமாலு திசைமுகனுஞ் செருவெய்தி
      காணியல்பை யறிவிலரா கனல்வண்ணர் அடியிணைக்கீழ்
      நாணியவர் தொழுதேத்த நாணாமே யருள்செய்து
      பேணியஎம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே. 09
      690. புற்றேறி யுணங்குவார் புகையார்ந்த துகில்போர்ப்பார்
      சொற்றேற வேண்டாநீர் தொழுமின்கள் சுடர்வண்ணம்
      மற்றேரும் பரிமாவும் மதகளிரும் இவையொழி
      பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே. 10
      691. பைம்பொன்சீர் மணிவாரி பலவுஞ்சேர் கனியுந்தி
      அம்பொன்செய் மடவரலார் அணிமல்கு பெருவேளூர்
      நம்பன்றன் கழல்பரவி நவில்கின்ற மறைஞான
      சம்பந்தன் தமிழ்வல்லார கருவினைநோய் சாராவே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பிரியாவீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 065 திருக்கச்சிநெறிக்காரைக்காடு
      பண் - பஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      692 வாரணவு முலைமங்கை பங்கினராய் அங்கையினிற்
      போரணவு மழுவொன்றங் கேந்திவெண் பொடியணிவர்
      காரணவு மணிமாடங் கடைநவின்ற கலிக்கச்சி
      நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரை காட்டாரே. 01
      693. காரூரும் மணிமிடற்றார் கரிகாடர் உடைதலைகொண்
      டூரூரன் பலிக்குழல்வார் உழைமானின் உரியதளர்
      தேரூரு நெடுவீதி செழுங்கச்சி மாநகர்வாய்
      நீரூரும் மலர்ப்பொய்கை நெறிக்காரை காட்டாரே. 02
      694. கூறணிந்தார் கொடியிடையை குளிர்சடைமேல் இளமதியோ
      டாறணிந்தார் ஆடரவம் பூண்டுகந்தார் ஆன்வெள்ளை
      ஏறணிந்தார் கொடியதன்மேல் என்பணிந்தார் வரைமார்பில்
      நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரை காட்டாரே. 02
      695. பிறைநவின்ற செஞ்சடைகள் பின்தாழ பூதங்கள்
      மறைநவின்ற பாடலோ டாடலராய் மழுவேந்தி
      சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவா தேன்கதுவும்
      நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரை காட்டாரே. 04
      696. அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த அருளாளர்
      குன்றாத வெஞ்சிலையிற் கோளரவம் நாண்கொளுவி
      ஒன்றாதார் புரம்மூன்றும் ஓங்கெரியில் வெந்தவிய
      நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரை காட்டாரே. 05
      697. பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் பணிந்திறைஞ்ச
      நன்மையிலா வல்லவுணர் நகர்மூன்றும் ஒருநொடியில்
      வின்மலையின் நாண்கொளுவி வெங்கணையா லெய்தழித்த
      நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காறை காட்டாரே. 06
      698. புற்றிடைவாள் அரவினொடு புனைகொன்றை மதமத்தம்
      எற்றொழியா அலைபுனலோ டிளமதியம் ஏந்துசடை
      பெற்றுடையார் ஒருபாகம் பெண்ணுடையார் கண்ணமரும்
      நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரை காட்டாரே. 07
      699. ஏழ்கடல்சூழ் தென்னிலங்கை கோமானை யெழில்வரைவா
      தாழ்விரலால் ஊன்றியதோர் தன்மையினார் நன்மையினார்
      ஆழ்கிடங்குஞ் சூழ்வயலு மதில்புல்கி யழகமரும்
      நீள்மறுகிற் கலிக்கச்சி நெறிக்காரை காட்டாரே. 08
      700. ஊண்டானும் ஒலிகடல்நஞ் சுடைதலையிற் பலிகொள்வர்
      மாண்டார்தம் எலும்பணிவர் வரியரவோ டெழிலாமை
      பூண்டாரும் ஓரிருவர் அறியாமை பொங்கெரியாய்
      நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரை காட்டாரே. 09
      701. குண்டாடி சமண்படுவார் கூறைதனை மெய்போர்த்து
      மிண்டாடி திரிதருவார் உரைப்பனகள் மெய்யல்ல
      வண்டாருங் குழலாளை வரையாக தொருபாகங்
      கண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரை காட்டாரே. 10
      702. கண்ணாருங் கலிக்கச்சி நெறிக்காரை காட்டுறையும்
      பெண்ணாரு திருமேனி பெருமான தடிவாழ்த்தி
      தண்ணாரும் பொழிற்காழி தமிழ்ஞான சம்பந்தன்
      பண்ணாரு தமிழ்வல்லார் பரலோக திருப்பாரே. 11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - காரைத்திருநாதஈசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. 066 திருவேட்டக்குடி
      பண் - பஞ்சமம்
      திருச்சிற்றம்பலம்
      703 வண்டிரைக்கும் மலர்க்கொன்றை விரிசடைமேல் வரியரவங்
      கண்டிரைக்கும் பிறைச்சென்னி காபாலி கனைகழல்கள்
      தொண்டிரைத்து தொழுதிறைஞ்ச துளங்கொளிநீர சுடர்ப்பவள
      தெண்டிரைக்கண் கொணர்ந்தெறியு திருவேட்ட குடியாரே. 01
      704. பாய்திமிலர் வலையோடு மீன்வாரி பயின்றெங்குங்
      காசினியிற் கொணர்ந்தட்டுங் கைதல்சூழ் கழிக்கானல்
      போயிரவிற் பேயோடும் புறங்காட்டிற் புரிந்தழகார்
      தீயெரிகை மகிழ்ந்தாரு திருவேட்ட குடியாரே. 01
      705. தோத்திரமா மணலிலிங்க தொடங்கியஆன் நிரையிற்பால்
      பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி
      ஆத்தமென மறைநால்வர கறம்புரிநூ லன்றுரைத்த
      தீர்த்தமல்கு சடையாரு திருவேட்ட குடியாரே. 03
      706. கலவஞ்சேர் கழிக்கானல் கதிர்முத்தங் கலந்தெங்கும்
      அலவஞ்சேர் அணைவாரி கொணர்ந்தெறியும் அகன்றுறைவாய்
      நிலவஞ்சேர் நுண்ணிடைய நேரிழையா ளவளோடு
      திலகஞ்சேர் நெற்றியினார் திருவேட்ட குடியாரே. 04
      707. பங்கமார் கடலலற பருவரையோ டரவுழல
      செங்கண்மால் கடையஎழு நஞ்சருந்துஞ் சிவமூர்த்தி
      அங்கம்நான் மறைநால்வர கறம்பொருளின் பயனளித்த
      திங்கள்சேர் சடையாரு திருவேட்ட குடியாரே. 05
      708. நாவாய பிறைச்சென்னி நலந்திகழு மிலங்கிப்பி
      கோவாத நித்திலங்கள் கொணர்ந்தெறியுங் குளிர்கானல்
      ஏவாரும் வெஞ்சிலையால் எயின்மூன்றும் எரிசெய்த
      தேவாதி தேவனார் திருவேட்ட குடியாரே. 06
      709. பானிலவும் பங்கயத்து பைங்கானல் வெண்குருகு
      கானிலவு மலர்ப்பொய்கை கைதல்சூழ் கழிக்கானல்
      மானின்விழி மலைமகளோ டொருபாகம் பிரிவரியார்
      தேனிலவு மலர்ச்சோலை திருவேட்ட குடியாரே. 07
      710. துறையுலவு கடலோதஞ் சுரிசங்க மிடறிப்போய்
      நறையுலவும் பொழிற்புன்னை நன்னீழற் கீழமரும்
      இறைபயிலும் இராவணன்றன் தலைபத்தும் இருபதுதோள்
      திறலழிய அடர்த்தாரு திருவேட்ட குடியாரே. 08
      711. அருமறைநான் முகத்தானும் அகலிடம்நீ ரேற்றானும்
      இருவருமாய் அளப்பரிய எரியுருவாய் நீண்டபிரான்
      வருபுனலின் மணியுந்தி மறிதிரையார் சுடர்ப்பவள
      திருவுருவில் வெண்ணீற்றார் திருவேட்ட குடியாரே. 09
      712. இகழ்ந்துரைக்குஞ் சமணர்களும் இடும்போர்வை சாக்கியரும்
      புகழ்ந்துரையா பாவிகள்சொற் கொள்ளேன்மின் பொருளென்ன
      நிகழ்ந்திலங்கு வெண்மணலின் நிறைத்துண்ட பிறைக்கற்றை
      திகழ்ந்திலங்கு செஞ்சடையார் திருவேட்ட குடியாரே. 10
      713. தெண்டிரைசேர் வயலுடுத்த திருவேட்ட குடியாரை
      தண்டலைசூழ் கலிக்காழி தமிழ்ஞான சம்பந்தன்
      ஒண்டமிழ்நூல் இவைபத்தும் உணர்ந்தேத்த வல்லார்போய்
      உண்டுடுப்பில் வானவரோ டுயர்வான திருப்பாரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - திருமேனியழகீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      மூன்றாம் திருமுறை முதல் பகுதி முற்றும்.
      ------------------------------------------------------------------------
      6 2003


      1.
      ------------------------------------------------------------------------
      - 3 2
      714- 1347 1-33

      திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி
      பாடல்கள் 714- 1347 பிற்சேர்க்கை 1 -
      ------------------------------------------------------------------------
      ------------------------------------------------------------------------

      .

      .
      .


      .
      - . ..

      .
      .

      .
      2000 ...

      2000 .
      -8
      6 5
      -8 - .
      .
      .
      © 1999 - 2004



      .

      ..

      .
      ------------------------------------------------------------------------
      திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி
      பாடல்கள் 714- 1347 பிற்சேர்க்கை 1 -
      சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை முதல் பகுதிக்கு செல்ல

      இரண்டாம் பகுதி - உள்ளுறை
      3.067 திருப்பிரமபுரம் 714- 725 மின்பதிப்பு
      3.068 திருக்கயிலாயம் 726-736 மின்பதிப்பு
      3.069 திருக்காளத்தி 737-747 மின்பதிப்பு
      3.070 திருமயிலாடுதுறை 748 -758 மின்பதிப்பு
      3.071 திருவைகாவூர் 759 - 769 மின்பதிப்பு
      3.072 திருமாகறல் 770 - 780 மின்பதிப்பு
      3.073 திருப்பட்டீச்சரம் 781 - 791 மின்பதிப்பு
      3.074 திருத்தேவூர் 792-802 மின்பதிப்பு
      3.075 திருச்சண்பைநகர் 803-813 மின்பதிப்பு
      3.076 திருவேதவனம் 814-823 மின்பதிப்பு
      3.077 திருமாணிகுழி 824-835 மின்பதிப்பு
      3.078 திருவேதிகுடி 835-846 மின்பதிப்பு
      3.079 திருக்கோகரணம் 847-856 மின்பதிப்பு
      3.080 திருவீழிமிழலை 857-867 மின்பதிப்பு
      3.081 திருத்தோணிபுரம் 868-878 மின்பதிப்பு
      3.082 திருஅவளிவணல்லூர் 879-889 மின்பதிப்பு
      3.083 திருநல்லூர் 890-900 மின்பதிப்பு
      3.084 திருப்புறவம் 901-911 மின்பதிப்பு
      3.085 திருவீழிமிழலை 912-922 மின்பதிப்பு
      3.086 திருச்சேறை 923-933 மின்பதிப்பு
      3.087 திருநள்ளாறு 934-944 மின்பதிப்பு
      3.088 திருவிளமர் 945-955 மின்பதிப்பு
      3.089 திருக்கொச்சைவயம் 956-966 மின்பதிப்பு
      3.090 திருத்துருத்தியும்
      திருவேள்விக்குடியும் 967-977 மின்பதிப்பு
      3.091 திருவடகுரங்காடுதுறை 978-988 மின்பதிப்பு
      3.092 திருநெல்வேலி 989-998 மின்பதிப்பு
      3.093 திருஅம்பர்மாகாளம் 999-1009 மின்பதிப்பு
      3.094 திருவெங்குரு 1010-1019 மின்பதிப்பு
      3.095 திருஇன்னம்பர் 1020-1030 மின்பதிப்பு
      3.096 திருநெல்வெண்ணெய் 1031-1041 மின்பதிப்பு
      3.097 திருச்சிறுகுடி 1042-1052 மின்பதிப்பு
      3.098 திருவீழிமிழலை 1053-1063 மின்பதிப்பு
      3.099 திருமுதுகுன்றம் 1064-1071 மின்பதிப்பு
      3.100 திருத்தோணிபுரம் 1072-1078 மின்பதிப்பு
      3.101 திருஇராமேச்சுரம் 1079-1089 மின்பதிப்பு
      3.102 திருநாரையூர் 1090-1100 மின்பதிப்பு
      3.103 திருவலம்புரம் 1101-1111 மின்பதிப்பு
      3.104 திருப்பருதிநியமம் 1112-1122 மின்பதிப்பு
      3.105 திருக்கலிக்காமூர் 1123-.1133 மின்பதிப்பு
      3.106 திருவலஞ்சுழி 1134-1144 மின்பதிப்பு
      3.107 திருநாரையூர் 1145-1155 மின்பதிப்பு
      3.108 திருஆலவாய் 1156-1166 மின்பதிப்பு
      3.109 கூடச்சதுக்கம் 1167-1177 மின்பதிப்பு
      3.110 திருப்பிரமபுரம் 1178-1189 மின்பதிப்பு
      3.111 திருவீழிமிழலை 1190-1200 மின்பதிப்பு
      3.112 திருப்பல்லவனீச்சரம் 1201-1211 மின்பதிப்பு
      3.113 திருக்கழுமலம் 1212-1223 மின்பதிப்பு
      3.114 திருவேகம்பம் 1224-1234 மின்பதிப்பு
      3.115 திருஆலவாய் 1235-1245 மின்பதிப்பு
      3.116 திருவீழிமிழலை 1246-1256 மின்பதிப்பு
      3.117 சீகாழி 1257-1267 மின்பதிப்பு
      3.118 திருக்கழுமலம் 1268-1278 மின்பதிப்பு
      3.119 திருவீழிமிழலை 1279-1289 மின்பதிப்பு
      3.120 திருஆலவாய் 1290-1300 மின்பதிப்பு
      3.121 திருப்பந்தணநல்லூர் 1301-1310 மின்பதிப்பு
      3.122 திருஓமமாம்புலியூர் 1311-1320 மின்பதிப்பு
      3.123 திருக்கோணமாமலை 1321-1330 மின்பதிப்பு
      3.124 திருக்குருகாவூர் 1331-1336 மின்பதிப்பு
      3.125 திருநல்லூர்ப்பெருமணம் 1337-1347 மின்பதிப்பு
      பிற்சேர்க்கை
      1 திருவிடைவாய் 1-11 மின்பதிப்பு
      2 திருக்கிளியன்னவூர் 12-22 மின்பதிப்பு
      3 திருமறைக்காடு 23-33 மின்பதிப்பு
      ------------------------------------------------------------------------
      3.67 திருப்பிரமபுரம் - வழிமொழித்திருவிராகம்
      திருப்பிரமபுரம் - வழிமொழித்திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      714 சுரருலகு நரர்கள்பயில் தரணிதலம் முரணழிய அரணமதில்மு
      புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்
      வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற்
      பிரமனுயர் அரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே. 3.67.1
      715. தாணுமிகு வாணிசைகொள் தாணுவியர் பேணுமது காணுமளவிற்
      கோணுநுதல் நீள்நயனி கோணில்பிடி மாணிமது நாணும்வகையே
      ஏணுகரி பூணழிய வாணியல்கொள் மாணிபதி சேணமரர்கோன்
      வேணுவினை யேணிநகர் காணிறிவி காணநடு வேணுபுரமே. 3.67.2
      716. பகலொளிசெய் நகமணியை முகைமலரைநிகழ்சரண வகவுமுனிவர
      ககலமலி சகலகலை மிகவுரைசெய் முகமுடைய பகவனிடமாம்
      பகைகளையும் வகையில்அறு முகஇறையை மிகஅருள நிகரிலிமையோர்
      புகவுலகு புகழஎழில் திகழநிக ழலர்பெருகு புகலிநகரே. 3.67.3
      717. அங்கண்மதி கங்கைநதி வெங்கண்அர வங்களெழில் தங்குமிதழி
      துங்கமலர் தங்குசடை யங்கிநிகர் எங்களிறை தங்குமிடமாம்
      வெங்கதிர்வி ளங்குலகம் எங்குமெதிர் பொங்கெரிபு லன்கள்களைவோர்
      வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர ணங்கள்பணி வெங்குருவதே. 3.67.4
      718. ஆணியல்பு காணவன வாணவியல் பேணியெதிர் பாணமழைசேர்
      தூணியற நாணியற வேணுசிலை பேணியற நாணிவிசயன்
      பாணியமர் பூணவருள் மாணுபிர மாணியிட மேணிமுறையிற்
      பாணியுல காளமிக வாணின்மலி தோணிநிகர் தோணிபுரமே. 3.67.5
      719. நிராமய பராபர புராதன பராவுசிவ ராகவருளென்
      றிராவுமெ திராயது பராநினை புராணனம ராதிபதியாம்
      அராமிசை யிராதெழில் தராயர பராயண வராகவுருவா
      தராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே. 3.67.6
      720. அரணையுறு முரணர்பலர் மரணம்வர விரணமதி லரமலிபடை
      கரம்விசிறு விரகனமர் கரணனுயர் பரனெறிகொள் கரனதிடமாம்
      பரவமுது விரவவிடல் புரளமுறு மரவையரி சிரமரியவ
      சிரமரன சரணமவை பரவவிரு கிரகமமர் சிரபுரமதே. 3.67.7
      721. அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் விறலழிய நிறுவிவிரன்மா
      மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற னுறஅருளும் இறைவனிடமாங்
      குறைவின்மிக நிறைதையுழி மறையமரர் நிறையருள முறையொடுவரும்
      புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல் பெறவருளு புறவமதுவே. 3.67.8
      722. விண்பயில மண்பகிரி வண்பிரமன் எண்பெரிய பண்படைகொண்மால்
      கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள் தண்புகழ்கொள் கண்டனிடமாம்
      மண்பரியு மொண்பொழிய நுண்புசகர் புண்பயில விண்படரவ
      சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய் பண்புகளை சண்பைநகரே. 3.67.9
      723. பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழுமுட லாளருணரா
      ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங்
      கீழிசைகொள் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனு
      காழியசில் காழிசெய வேழுலகில் ஊழிவளர் காழிநகரே. 3.67.10
      724. நச்சரவு கச்செனவ சைச்சுமதி யுச்சியின்மி லைச்சொருகையான்
      மெய்ச்சிர மணைச்சுலகி னிச்சமிடு பிச்சையமர் பிச்சனிடமாம்
      மச்சமத நச்சிமத மச்சிறுமி யைச்செய்தவ வச்சவிரத
      கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள் நச்சிமிடை கொச்சைநகரே. 3.67.11
      725. ஒழுகலரி தழிகலியில் உழியுலகு பழிபெருகு வழியைநினையா
      முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனை
      தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவுமுரை கழுமலநகர
      பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகள் மொழிதகையவே. 3.67.12
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.68 திருக்கயிலாயம் - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      726 வாளவரி கோளபுலி கீளதுரி தாளின்மிசை நாளுமகிழ்வர்
      ஆளுமவர் வேளநகர் போளயில கோளகளி றாளிவரவில்
      தோளமரர் தாளமதர் கூளியெழ மீளிமிளிர் தூளிவளர்பொன்
      காளமுகில் மூளுமிருள் கீளவிரி தாளகயி லாயமலையே. 3.68.1
      727. புற்றரவு பற்றியகை நெற்றியது மற்றொருகண் ஒற்றைவிடையன்
      செற்றதெயில் உற்றதுமை யற்றவர்கள் நற்றுணைவன் உற்றநகர்தான்
      சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு குற்றமில தெற்றெனவினாய்
      கற்றவர்கள் சொற்றொகையின் முற்றுமொளி பெற்றகயி லாயமலையே. 3.68.2
      728. சிங்கவரை மங்கையர்கள் தங்களன செங்கைநிறை கொங்குமலர்தூய்
      எங்கள்வினை சங்கையவை இங்ககல வங்கமொழி யெங்குமுளவா
      திங்களிருள் நொங்கவொளி விங்கிமிளிர் தொங்கலொடு தங்கவயலே
      கங்கையொடு பொங்குசடை யெங்களிறை தங்குகயி லாயமலையே. 3.68.3
      729. முடியசடை பிடியதொரு வடியமழு வுடையர்செடி யுடையதலையில்
      வெடியவினை கொடியர்கெட விடுசில்பலி நொடியமகிழ் அடிகளிடமாங்
      கொடியகுர லுடையவிடை கடியதுடி யடியினொடு மிடியினதிர
      கடியகுரல் நெடியமுகில் மடியவத ரடிகொள்கயி லாயமலையே. 3.68.4
      730. குடங்கையி னுடங்கெரி தொடர்ந்தெழ விடங்கிளர் படங்கொளரவம்
      மடங்கொளி படர்ந்திட நடந்தரு விடங்கன திடந்தண்முகில்போ
      தடங்கடல் தொடர்ந்துட னுடங்குவ விடங்கொள மிடைந்தகுரலாற்
      கடுங்கலின் முடங்களை நுடங்கர வொடுங்குகயி லாயமலையே. 3.68.5
      731. ஏதமில பூதமொடு கோதைதுணை யாதிமுதல் வேதவிகிர்தன்
      கீதமொடு நீதிபல வோதிமற வாதுபயில் நாதன்நகர்தான்
      தாதுபொதி போதுவிட வூதுசிறை மீதுதுளி கூதல்நலி
      காதன்மிகு சோதிகிளர் மாதுபயில் கோதுகயி லாயமலையே. 3.68.6
      732. சென்றுபல வென்றுலவு புன்றலையர் துன்றலொடும் ஒன்றியுடனே
      நின்றமரர் என்றுமிறை வன்றனடி சென்றுபணி கின்றநகர்தான்
      துன்றுமலர் பொன்றிகழ்செய் கொன்றைவிரை தென்றலொடு சென்றுகமழ
      கன்றுபிடி துன்றுகளி றென்றிவைமுன் நின்றகயி லாயமலையே. 3.68.7
      733. மருப்பிடை நெருப்பெழு தருக்கொடு செருச்செய்த பருத்தகளிறின்
      பொருப்பிடை விருப்புற விருக்கையை யொருக்குடன் அரக்கனுணரா
      தொருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கென நிருத்தவிரலாற்
      கருத்தில வொருத்தனை யெருத்திற நெரித்தகயி லாயமலையே. 3.68.8
      734. பரியதிரை பெரியபுனல் வரியபுலி யுரியதுடை பரிசையுடையான்
      வரியவளை யரியகணி யுருவினொடு புரிவினவர் பிரிவில்நகர்தான்
      பெரியஎரி யுருவமது தெரியவுரு பரிவுதரும் அருமையதனாற்
      கரியவனும் அரியமறை புரியவனும் மருவுகயி லாயமலையே. 3.68.9
      735. அண்டர்தொழு சண்டிபணி கண்டடிமை கொண்டவிறை துண்டமதியோ
      டிண்டைபுனை வுண்டசடை முண்டதர சண்டவிருள் கண்டரிடமாங்
      குண்டமண வண்டரவர் மண்டைகையில் உண்டுளறி மிண்டுசமயங்
      கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டுமறி யாதகயி லாயமலையே. 3.68.10
      736. அந்தண்வரை வந்தபுனல் தந்ததிரை சந்தனமொ டுந்தியகிலுங்
      கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்துகயி லாயமலைமேல்
      எந்தையடி வந்தணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்தபுகலி
      பந்தனுரை சிந்தைசெய வந்தவினை நைந்துபர லோகமெளிதே. 3.68.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.69 திருக்காளத்தி - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      737 வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விட
      தானமுது செய்தருள் புரிந்தசிவன் மேவுமலை தன்னைவினவில்
      ஏனமின மானினொடு கிள்ளைதினை கொள்ளஎழி லார்க்கவணினாற்
      கானவர்தம் மாமகளிர் கனகமணி விலகுகா ளத்திமலையே. 3.69.1
      738. முதுசினவில் அவுணர்புரம் மூன்றுமொரு நொடிவரையின் மூளவெரிசெய்
      சதுரர்மதி பொதிசடையர் சங்கரர் விரும்புமலை தன்னைவினவில்
      எதிரெதிர வெதிர்பிணைய எழுபொறிகள் சிதறஎழி லேனமுழுத
      கதிர்மணியின் வளரொளிகள் இருளகல நிலவுகா ளத்திமலையே. 3.69.2
      739. வல்லைவரு காளியைவ குத்துவலி யாகிமிகு தாருகனைநீ
      கொல்லென விடுத்தருள் புரிந்தசிவன் மேவுமலை கூறிவினவில்
      பல்பல இருங்கனி பருங்கிமிக வுண்டவை நெருங்கியினமா
      கல்லதிர நின்றுகரு மந்திவிளை யாடுகா ளத்திமலையே.
      பருகி எனச்சொல்வது விகாரவகையாற் பருங்கியென நின்றது. 3.69.3
      740. வேயனைய தோளுமையோர் பாகமது வாகவிடை யேறிசடைமேற்
      தூயமதி சூடிசுடு காடில்நட மாடிமலை தன்னைவினவில்
      வாய்கலச மாகவழி பாடுசெயும் வேடன்மல ராகுநயனங்
      காய்கணையி னாலிட தீசனடி கூடுகா ளத்திமலையே. 3.69.4
      741. மலையின்மிசை தனில்முகில்போல் வருவதொரு மதகரியை மழைபோலலற
      கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன் மேவுமலை கூறிவினவில்
      அலைகொள்புனல் அருவிபல சுனைகள்வழி யிழியவயல் நிலவுமுதுவேய்
      கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை சிந்துகா ளத்திமலையே. 3.69.5
      742. பாரகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்றபணிகண்
      டாரருள் புரிந்தலைகொள் கங்கைசடை யேற்றஅரன் மலையைவினவில்
      வாரதர் இருங்குறவர் சேவலின் மடுத்தவர் எரித்தவிறகிற்
      காரகில் இரும்புகை விசும்புகமழ் கின்றகா ளத்திமலையே. 3.69.6
      743. ஆருமெதி ராதவலி யாகியச லந்தரனை ஆழியதனால்
      ஈரும்வகை செய்தருள் புரிந்தவன் இருந்தமலை தன்னைவினவில்
      ஊரும்அர வம்மொளிகொள் மாமணியு மிழ்ந்தவையு லாவிவரலாற்
      காரிருள் கடிந்துகன கம்மெனவி ளங்குகா ளத்திமலையே. 3.69.7
      744. எரியனைய சுரிமயிர் இராவணனை யீடழிய எழில்கொள்விரலாற்
      பெரியவரை யூன்றியருள் செய்தசிவன் மேவுமலை பெற்றிவினவில்
      வரியசிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடுவரை யூடுவரலாற்
      கரியினொடு வரியுழுவை அரியினமும் வெருவுகா ளத்திமலையே. 3.69.8
      745. இனதளவி லிவனதடி யிணையுமுடி யறிதுமென இகலுமிருவர்
      தனதுருவம் அறிவரிய சகலசிவன் மேவுமலை தன்னைவினவிற்
      புனவர்புன மயிலனைய மாதரொடு மைந்தரும ணம்புணரும்நாள்
      கனகமென மலர்களணி வேங்கைகள் நிலாவுகா ளத்திமலையே. 3.69.9
      746. நின்றுகவ ளம்பலகொள் கையரொடு மெய்யிலிடு போர்வையவரும்
      நன்றியறி யாதவகை நின்றசிவன் மேவுமலை நாடிவினவிற்
      குன்றின்மலி துன்றுபொழில் நின்றகுளிர் சந்தின்முறி தின்றுகுலவி
      கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை யாடுகா ளத்திமலையே. 3.69.10
      747. காடதிட மாகநட மாடுசிவன் மேவுகா ளத்திமலையை
      மாடமொடு மாளிகைகள் நீடுவளர் கொச்சைவயம் மன்னுதலைவன்
      நாடுபல நீடுபுகழ் ஞானசம் பந்தனுரை நல்லதமிழின்
      பாடலொடு பாடுமிசை வல்லவர்கள் நல்லர்பர லோகமெளிதே. 3.69.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.70 திருமயிலாடுதுறை - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      748 ஏனவெயி றாடரவோ டென்புவரி யாமையிவை பூண்டிளைஞரா
      கானவரி நீடுழுவை யதளுடைய படர்சடையர் காணியெனலாம்
      ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீதுபுகை போகியழகார்
      வானமுறு சோலைமிசை மாசுபட மூசுமயி லாடுதுறையே. 3.70.1
      749. அந்தண்மதி செஞ்சடையர் அங்கணெழில் கொன்றையொ டணிந்தழகராம்
      எந்தம்அடி கட்கினிய தானமது வேண்டில்எழி லார்பதியதாங்
      கந்தமலி சந்தினொடு காரகிலும் வாரிவரு காவிரியுளால்
      வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர் சிந்துமயி லாடுதுறையே. 3.70.1
      750. தோளின்மிசை வரியரவம் நஞ்சழல வீக்கிமிகு நோக்கரியராய்
      மூளைபடு வெண்டலையி லுண்டுமுது காடுறையும் முதல்வரிடமாம்
      பாளைபடு பைங்கமுகு செங்கனி யுதிர்த்திட நிரந்துகமழ்பூ
      வாளைகுதி கொள்ளமடல் விரியமணம் நாறுமயி லாடுதுறையே. 3.70.3
      751. ஏதமிலர் அரியமறை மலையர்மக ளாகியஇ லங்குநுதலொண்
      பேதைதட மார்பதிட மாகவுறை கின்றபெரு மானதிடமாங்
      காதன்மிகு கவ்வையொடு மவ்வலவை கூடிவரு காவிரியுளான்
      மாதர்மறி திரைகள்புக வெறியவெறி கமழுமயி லாடுதுறையே. 3.70.4
      752. பூவிரி கதுப்பின்மட மங்கையர கந்தொறும் நடந்துபலிதேர்
      பாவிரி யிசைக்குரிய பாடல்பயி லும்பரமர் பழமையெனலாங்
      காவிரி நுரைத்திரு கரைக்குமணி சிந்தவரி வண்டுகவர
      மாவிரி மதுக்கிழிய மந்திகுதி கொள்ளுமயி லாடுதுறையே. 3.70.5
      753. கடந்திகழ் கருங்களி றுரித்துமையும் அஞ்சமிக நோக்கரியராய்
      விடந்திகழும் மூவிலைநல் வேலுடைய வேதியர் விரும்புமிடமா
      தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு தொண்டையெழில் கொண்டதுவர்வாய்
      மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக நாறுமயி லாடுதுறையே. 3.70.6
      754. அவ்வதிசை யாரும்அடி யாருமுள ராகஅருள் செய்தவர்கள்மேல்
      எவ்வமற வைகலும் இரங்கியெரி யாடுமெம தீசனிடமாங்
      கவ்வையொடு காவிரிக லந்துவரு தென்கரை நிரந்துகமழ்பூ
      மவ்வலொடு மாதவிம யங்கிமணம் நாறுமயி லாடுதுறையே. 3.70.7
      755. இலங்கைநகர் மன்னன்முடி யொருபதினோ டிருபதுதோள் நெரியவிரலால்
      விலங்கலி லடர்த்தருள் புரிந்தவ ரிருந்தவிடம் வினவுதிர்களேற்
      கலங்கல்நுரை யுந்தியெதிர் வந்தகயம் மூழ்கிமலர் கொண்டுமகிழா
      மலங்கிவரு காவிரிநி ரந்துபொழி கின்றமயி லாடுதுறையே. 3.70.8
      756. ஒண்டிறலின் நான்முகனும் மாலுமிக நேடியுண ராதவகையால்
      அண்டமுற அங்கியுரு வாகிமிக நீண்டஅர னாரதிடமாங்
      கெண்டையிரை கொண்டுகெளி றாருடனி ருந்துகிளர் வாயறுதல்சேர்
      வண்டல்மணல் கெண்டிமட நாரைவிளை யாடுமயி லாடுதுறையே. 3.70.9
      757. மிண்டுதிறல் அமணரொடு சாக்கியரும் அலர்தூற்ற மிக்கதிறலோன்
      இண்டைகுடி கொண்டசடை யெங்கள்பெரு மானதிட மென்பரெழிலார்
      தெண்டிரை பரந்தொழுகு காவிரிய தென்கரை நிரந்துகமழ்பூ
      வண்டவை கிளைக்கமது வந்தொழுகு சோலைமயி லாடுதுறையே. 3.70.10
      758. நிணந்தரும யானநில வானமதி யாததொரு சூலமொடுபே
      கணந்தொழு கபாலிகழ லேத்திமிக வாய்த்ததொரு காதன்மையினால்
      மணந்தண்மலி காழிமறை ஞானசம் பந்தன்மயி லாடுதுறையை
      புணர்ந்ததமிழ் பத்துமிசை யாலுரைசெய் வார்பெறுவர் பொன்னுலகமே. 3.70.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.71 திருவைகாவூர் - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      759 கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை கூடுவகையால்
      ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசனிடமா
      தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி
      வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே. 3.71.1
      760. அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகஎழிலார்
      விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம்
      புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம்
      வண்டினிசை பாடஅழ கார்குயில்மி ழற்றுபொழில் வைகாவிலே. 3.71.2
      761. ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவையு ணர்ந்தஅடியார்
      ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம்
      ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்கள் தோறுமழகார்
      வானமதி யோடுமழை நீள்முகில்கள் வந்தணவும் வைகாவிலே. 3.71.3
      762. இன்னவுரு இன்னநிறம் என்றறிவ தேலரிது நீதிபலவு
      தன்னவுரு வாமெனமி குத்ததவன் நீதியொடு தானமர்விடம்
      முன்னைவினை போம்வகையி னால்முழு துணர்ந்துமுயல் கின்றமுனிவர்
      மன்னஇரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே. 3.71.4
      763. வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்
      ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்
      மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கஅழகான்
      மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே. 3.71.5
      764. நஞ்சமுது செய்தமணி கண்டன்நமை யாளுடைய ஞானமுதல்வன்
      செஞ்சடையி டைப்புனல் கரந்தசிவ லோகனமர் கின்றஇடமாம்
      அஞ்சுடரொ டாறுபத மேழின்இசை யெண்ணரிய வண்ணமுளதாய்
      மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே. 3.71.6
      765. நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையாற்
      தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம்
      நீளவளர் சோலைதொறும் நாளிபல துன்றுகனி நின்றதுதிர
      வாளைகுதி கொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே. 3.71.7
      766. கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன்
      ஐயிருசி ரங்களையொ ருங்குடன் நெரித்தஅழ கன்றனிடமாங்
      கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம்
      வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே. 3.71.8
      767. அந்தமுதல் ஆதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள்
      எந்தைபெரு மான்இறைவன் என்றுதொழ நின்றருள்செ யீசனிடமாஞ்
      சிந்தைசெய்து பாடும்அடி யார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள்
      வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே. 3.71.9
      768. ஈசனெமை யாளுடைய எந்தைபெரு மானிறைவ னென்றுதனையே
      பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிட
      தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன்
      வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே. 3.71.10
      769. முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்திருவை காவிலதனை
      செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தனுரைசெய்
      உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவர் உருத்திரரென
      பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே. 3.71.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வில்லவனேசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.72 திருமாகறல் - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      770 விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம்
      மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்
      கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
      செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே. 3.72.1
      771. கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார்
      மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
      இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள்
      அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே. 3.72.2
      772. காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
      மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்
      தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதா
      பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே. 3.72.3
      773. இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனே
      மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்
      கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே
      நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராவெழுமினே. 3.72.4
      774. துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்
      மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடல்மலி மாகறலுளான்
      வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானோர்மழு வாளன்வளரும்
      நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே. 3.72.5
      775. மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
      இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்
      மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
      உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர் வானுலகம் ஏறலெளிதே. 3.72.6
      776. வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர்
      மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார்
      கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்
      ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே. 3.72.7
      777. தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
      மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்
      பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
      பூசுபொடி யீசனென ஏத்தவினை நிற்றலில போகுமுடனே. 3.72.8
      778. தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமருவுண்
      பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்
      சாயவிர லூன்றியஇ ராவணன தன்மைகெட நின்றபெருமான்
      ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை யாயினவும் அகல்வதெளிதே. 3.72.9
      779. காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்
      மாலுமல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
      நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
      ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே. 3.72.10
      780. கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
      அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தன்உரையான்
      மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையே
      உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்குமுடனே. 3.72.11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அடைக்கலங்காத்தநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.73 திருப்பட்டீச்சரம் - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      781 பாடன்மறை சூடன்மதி பல்வளையோர் பாகமதில் மூன்றோர்கணையாற்
      கூடஎரி யூட்டியெழில் காட்டிநிழல் கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
      மாடமழ பாடியுறை பட்டிசர மேயகடி கட்டரவினார்
      வேடநிலை கொண்டவரை வீடுநெறி காட்டிவினை வீடுமவரே. 3.73.1
      782. நீரின்மலி புன்சடையர் நீளரவு கச்சையது நச்சிலையதோர்
      கூரின்மலி சூலமது ஏந்தியுடை கோவணமும் மானின்உரிதோல்
      காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள் காதல்செய்து மேயநகர்தான்
      பாரின்மலி சீர்பழைசை பட்டிசர மேத்தவினை பற்றழியுமே. 3.73.2
      783. காலைமட வார்கள்புன லாடுவது கௌவைகடி யார்மறுகெலாம்
      மாலைமணம் நாறுபழை யாறைமழ பாடியழ காயமலிசீர
      பாலையன நீறுபுனை மார்பனுறை பட்டிசர மேபரவுவார்
      மேலையொரு மால்கடல்கள் போற்பெருகி விண்ணுலகம் ஆளுமவரே. 3.73.3
      784. கண்ணின்மிசை நண்ணியிழி விப்பமுக மேத்துகமழ் செஞ்சடையினான்
      பண்ணின்மிசை நின்றுபல பாணிபட ஆடவல பால்மதியினான்
      மண்ணின்மிசை நேரில்மழ பாடிமலி பட்டிசர மேமருவுவார்
      விண்ணின்மிசை வாழும்இமை யோரொடுட னாதலது மேவலெளிதே. 3.73.4
      785. மருவமுழ வதிரமழ பாடிமலி மத்தவிழ வார்க்கஅரையார்
      பருவமழை பண்கவர்செய் பட்டிசர மேயபடர் புன்சடையினான்
      வெருவமத யானையுரி போர்த்துமையை அஞ்சவரு வெள்விடையினான்
      உருவமெரி கழல்கள்தொழ உள்ளமுடை யாரையடை யாவினைகளே. 3.73.5
      786. மறையின்ஒலி கீதமொடு பாடுவன பூதமடி மருவிவிரவார்
      பறையினொலி பெருகநிகழ் நட்டம்அமர் பட்டிசரம் மேயபனிகூர்
      பிறையினொடு மருவியதோர் சடையினிடை யேற்றபுனல் தோற்றநிலையாம்
      இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர்மிகவே. 3.73.6
      787. பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை யோருலகு பேணலுறுவார்
      துறவியெனும் உள்ளமுடை யார்கள்கொடி வீதியழ காயதொகுசீர்
      இறைவனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்
      நறவவிரை யாலுமொழி யாலும்வழி பாடுமற வாதவவரே. 3.73.7
      788. நேசமிகு தோள்வலவ னாகியிறை வன்மலையை நீக்கியிடலும்
      நீசன்விறல் வாட்டிவரை யுற்றதுண ராதநிரம் பாமதியினான்
      ஈசனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்
      நாசமற வேண்டுதலின் நண்ணலெளி தாம்அமரர் விண்ணுலகமே. 3.73.8
      789. தூயமல ரானும்நெடி யானும்அறி யாரவன தோற்றநிலையின்
      ஏயவகை யானதனை யாரதறி வாரணிகொள் மார்பினகலம்
      பாயநல நீறதணி வானுமைத னோடுமுறை பட்டிசரமே
      மேயவன தீரடியு மேத்தஎளி தாகுநல மேலுலகமே. 3.73.9
      790. தடுக்கினையி டுக்கிமட வார்களிடு பிண்டமது வுண்டுழல்தருங்
      கடுப்பொடியு டற்கயவர் கத்துமொழி காதல்செய்தி டாதுகமழ்சேர்
      மடைக்கயல்வ யல்கொள்மழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்
      படைக்கொரு கரத்தன்மிகு பட்டிசர மேத்தவினை பற்றறுதலே. 3.73.10
      791. மந்தமலி சோலைமழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்
      பந்தமுயர் வீடுநல பட்டிசர மேயபடர் புன்சடையனை
      அந்தண்மறை யோரினிது வாழ்புகலி ஞானசம் பந்தன்அணியார்
      செந்தமிழ்கள் கொண்டினிது செப்பவல தொண்டர்வினை நிற்பதிலவே. 3.73.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பட்டீச்சரநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.74 திருத்தேவூர் - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      792 காடுபயில் வீடுமுடை யோடுகலன் மூடுமுடை யாடைபுலிதோல்
      தேடுபலி யூணதுடை வேடமிகு வேதியர் திருந்துபதிதான்
      நாடகம தாடமஞ்ஞை பாடவரி கோடல்கைம்ம றிப்பநலமார்
      சேடுமிகு பேடையனம் ஊடிமகிழ் மாடமிடை தேவூரதுவே. 3.74.1
      793. கோளரவு கொன்றைநகு வெண்டலையெ ருக்குவன்னி கொக்கிறகொடும்
      வாளரவு தண்சலம கட்குலவு செஞ்சடைவ ரத்திறைவனூர்
      வேளரவு கொங்கையிள மங்கையர்கள் குங்குமம்வி ரைக்குமணமார்
      தேளரவு தென்றல்தெரு வெங்கும்நிறை வொன்றிவரு தேவூரதுவே. 3.74.2
      794. பண்தடவு சொல்லின்மலை வல்லியுமை பங்கன்எமை யாளும்இறைவன்
      எண்தடவு வானவரி றைஞ்சுகழ லோன்இனிதி ருந்தஇடமாம்
      விண்தடவு வார்பொழிலு குத்தநற வாடிமலர் சூடிவிரையார்
      செண்தடவு மாளிகைசெ றிந்துதிரு வொன்றிவளர் தேவூரதுவே.
      சேண் என்பது செண் என குறுகிநின்றது. 3.74.3
      795. மாசில்மனம் நேசர்தம தாசைவளர் சூலதரன் மேலையிமையோர்
      ஈசன்மறை யோதியெரி ஆடிமிகு பாசுபதன் மேவுபதிதான்
      வாசமலர் கோதுகுயில் வாசகமும் மாதரவர் பூவைமொழியு
      தேசவொலி வீணையொடு கீதமது வீதிநிறை தேவூரதுவே. 3.74.4
      796. கானமுறு மான்மறியன் ஆனையுரி போர்வைகன லாடல்புரிவோன்
      ஏனஎயி றாமையிள நாகம்வளர் மார்பினிமை யோர்தலைவனூர்
      வானணவு சூதமிள வாழைமகிழ் மாதவிப லாநிலவிவார்
      தேனமுது வுண்டுவரி வண்டுமருள் பாடிவரு தேவூரதுவே. 3.74.5
      797. ஆறினொடு கீறுமதி யேறுசடை யேறன்அடை யார்நகர்கள்தான்
      சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன்நமை யாளும்அரனூர்
      வீறுமலர் ஊறுமது ஏறிவளர் வாயவிளை கின்றகழனி
      சேறுபடு செங்கயல்வி ளிப்பஇள வாளைவரு தேவூரதுவே. 3.74.6
      798. கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுரம் அன்றவிய நின்றுநகைசெய்
      என்றனது சென்றுநிலை யெந்தைதன தந்தையமர் இன்பநகர்தான்
      முன்றின்மிசை நின்றபல வின்கனிகள் தின்றுகற வைக்குருளைகள்
      சென்றிசைய நின்றுதுளி ஒன்றவிளை யாடிவளர் தேவூரதுவே. 3.74.7
      799. ஓதமலி கின்றதென் இலங்கையரை யன்மலிபு யங்கள்நெரி
      பாதமலி கின்றவிர லொன்றினில டர்த்தபர மன்றனதிடம்
      போதமலி கின்றமட வார்கள்நட மாடலொடு பொங்குமுரவஞ்
      சேதமலி கின்றகரம் வென்றிதொழி லாளர்புரி தேவூரதுவே. 3.74.8
      800. வண்ணமுகி லன்னஎழில் அண்ணலொடு சுண்ணமலி வண்ணமலர்மேல்
      நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள் கண்ணவன் நலங்கொள்பதிதான்
      வண்ணவன நுண்ணிடையின் எண்ணரிய அன்னநடை யின்மொழியினார்
      திண்ணவண மாளிகைசெ றிந்தஇசை யாழ்மருவு தேவூரதுவே. 3.74.9
      801. பொச்சமமர் பிச்சைபயில் அச்சமணு மெச்சமறு போதியருமா
      மொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு நச்சரவன் மொச்சநகர்தான்
      மைச்சின்முகில் வைச்சபொழில்... ...
      ...
      இச்செய்யுளின் மற்றையஅடிகள் சிதைந்துபோயின 3.74.10
      802. துங்கமிகு பொங்கரவு தங்குசடை நங்களிறை துன்றுகுழலார்
      செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு பங்கனமர் தேவூரதன்மேல்
      பைங்கமல மங்கணிகொள் திண்புகலி ஞானசம் பந்தனுரைசெய்
      சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை வல்லவர்கள் சங்கையிலரே. 3.74.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.75 திருச்சண்பைநகர் - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      803 எந்தமது சிந்தைபிரி யாதபெரு மானெனஇ றைஞ்சியிமையோர்
      வந்துதுதி செய்யவளர் தூபமொடு தீபமலி வாய்மையதனால்
      அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள் செய்யஅமர் கின்றஅழகன்
      சந்தமலி குந்தளநன் மாதினொடு மேவுபதி சண்பைநகரே. 3.75.1
      804. அங்கம்விரி துத்தியர வாமைவிர வாரமமர் மார்பிலழகன்
      பங்கயமு கத்தரிவை யோடுபிரி யாதுபயில் கின்றபதிதான்
      பொங்குபர வைத்திரைகொ ணர்ந்துபவ ளத்திரள்பொ லிந்தவயலே
      சங்குபுரி யிப்பிதர ளத்திரள்பி றங்கொளிகொள் சண்பைநகரே. 3.75.2
      805. போழுமதி தாழுநதி பொங்கரவு தங்குபுரி புன்சடையினன்
      யாழின்மொழி மாழைவிழி யேழையிள மாதினொ டிருந்தபதிதான்
      வாழைவளர் ஞாழல்மகிழ் மன்னுபுனை துன்னுபொழில் மாடுமடலார்
      தாழைமுகிழ் வேழமிகு தந்தமென உந்துதகு சண்பைநகரே. 3.75.3
      806. கொட்டமுழ விட்டவடி வட்டணைகள் கட்டநட மாடிகுலவும்
      பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி பாவையொடு மேவுபதிதான்
      வட்டமதி தட்டுபொழி லுட்டமது வாய்மைவழு வாதமொழியார்
      சட்டகலை எட்டுமரு வெட்டும்வளர் தத்தைபயில் சண்பைநகரே. 3.75.4
      807. பணங்கெழுவு பாடலினோ டாடல்பிரி யாதபர மேட்டிபகவன்
      அணங்கெழுவு பாகமுடை ஆகமுடை யன்பர்பெரு மானதிடமாம்
      இணங்கெழுவி யாடுகொடி மாடமதில் நீடுவிரை யார்புறவெலா
      தணங்கெழுவி யேடலர்கொள் தாமரையில் அன்னம்வளர் சண்பைநகரே. 3.75.5
      808. பாலனுயிர் மேலணவு காலனுயிர் பாறவுதை செய்தபரமன்
      ஆலுமயில் போலியலி ஆயிழைத னோடுமமர் வெய்துமிடமாம்
      ஏலமலி சோலையின வண்டுமலர் கெண்டிநற வுண்டிசைசெய
      சாலிவயல் கோலமலி சேலுகள நீலம்வளர் சண்பைநகரே. 3.75.6
      809. விண்பொய்அத னால்மழைவி ழாதொழியி னும்விளைவு தான்மிகவுடை
      மண்பொய்அத னால்வளமி லாதொழியி னுந்தமது வண்மைவழுவார்
      உண்பகர வாருலகி னூழிபல தோறும்நிலை யானபதிதான்
      சண்பைநகர் ஈசனடி தாழுமடி யார்தமது தன்மையதுவே. 3.75.7
      810. வரைக்குல மகட்கொரு மறுக்கம்வரு வித்தமதி யில்வலியுடை
      யரக்கனது ரக்கரசி ரத்துறவ டர்த்தருள் புரிந்தஅழகன்
      இருக்கையத ருக்கன்முத லானஇமை யோர்குழுமி யேழ்விழவினிற்
      தருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் கொண்டலன சண்பைநகரே. 3.75.8
      811. நீலவரை போலநிகழ் கேழலுரு நீள்பறவை நேருருவமாம்
      மாலுமல ரானும்அறி யாமைவளர் தீயுருவ மானவரதன்
      சேலும்இன வேலும்அன கண்ணியொடு நண்ணுபதி சூழ்புறவெலாஞ்
      சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு கிள்ளைபயில் சண்பைநகரே. 3.75.9
      812. போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு வாதவகை யுண்டுபலபொய்
      ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை நன்றதுணர் வீருரைமினோ
      ஆதியெமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்தபதிதான்
      சாதிமணி தெண்டிரைகொ ணர்ந்துவயல் புகஎறிகொள் சண்பைநகரே. 3.75.10
      813. வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு சங்கரன்ம கிழ்ந்தமருமூர்
      சாரின்முரல் தெண்கடல்வி சும்புறமு ழங்கொலிகொள் சண்பைநகர்மேற்
      பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் ஞானசம் பந்தனுரைசெய்
      சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர்சிவ லோகநெறியே. 3.75.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.76 திருவேதவனம் - திருவிராகம்
      வேதவனம் என்பது வேதாரணியம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      814 கற்பொலிசு ரத்தினெரி கானினிடை மாநடம தாடிமடவார்
      இற்பலிகொ ளப்புகுதும் எந்தைபெரு மானதிடம் என்பர்புவிமேல்
      மற்பொலிக லிக்கடன்ம லைக்குவடெ னத்திரைகொ ழித்தமணியை
      விற்பொலிநு தற்கொடியி டைக்கணிகை மார்கவரும் வேதவனமே. 3.76.1
      815. பண்டிரைபௌ வப்புணரி யிற்கனக மால்வரையை நட்டரவினை
      கொண்டுகயி றிற்கடைய வந்தவிட முண்டகுழ கன்றனிடமாம்
      வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின் மீதணவு தென்றல்வெறியார்
      வெண்டிரைகள் செம்பவளம் உந்துகடல் வந்தமொழி வேதவனமே. 3.76.2
      816. காரியன்மெல் லோதிநதி மாதைமுடி வார்சடையில் வைத்துமலையார்
      நாரியொரு பால்மகிழும் நம்பருறை வென்பர்நெடு மாடமறுகில்
      தேரியல் விழாவினொலி திண்பணில மொண்படக நாளுமிசையால்
      வேரிமலி வார்குழல்நன் மாதரிசை பாடலொலி வேதவனமே. 3.76.3
      817. நீறுதிரு மேனியின் மிசைத்தொளி பெறத்தடவி வந்திடபமே
      ஏறியுல கங்கடொறும் பிச்சைநுகர் இச்சையர் இருந்தபதியாம்
      ஊறுபொரு ளின்தமிழி யற்கிளவி தேருமட மாதருடனார்
      வேறுதிசை யாடவர்கள் கூறஇசை தேருமெழில் வேதவனமே. 3.76.4
      818. கத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
      எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச
      ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
      மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே. 3.76.5
      819. மாலைமதி வாளரவு கொன்றைமலர் துன்றுசடை நின்றுசுழல
      காலையி லெழுந்தகதிர் தாரகைம டங்கஅன லாடும்அரனூர்
      சோலையின் மரங்கடொறும் மிண்டியின வண்டுமது வுண்டிசைசெய
      வேலையொலி சங்குதிரை வங்கசுற வங்கொணரும் வேதவனமே. 3.76.6
      820. வஞ்சக மனத்தவுணர் வல்லரணம் அன்றவிய வார்சிலைவளை
      தஞ்சக மவித்தஅம ரர்க்கமர னாதிபெரு மானதிடமாங்
      கிஞ்சுக விதழ்க்கனிகள் ஊறியசெவ் வாயவர்கள் பாடல்பயில
      விஞ்சக இயக்கர்முனி வக்கணம் நிறைந்துமிடை வேதவனமே. 3.76.7
      821. முடித்தலைகள் பத்துடை முருட்டுரு வரக்கனை நெருக்கிவிரலால்
      அடித்தலமுன் வைத்தலம ரக்கருணை வைத்தவ னிடம்பலதுயர்
      கெடுத்தலை நினைத்தற வியற்றுதல் கிளர்ந்துபுல வாணர்வறுமை
      விடுத்தலை மதித்துநிதி நல்குமவர் மல்குபதி வேதவனமே. 3.76.8
      822. வாசமலர் மேவியுறை வானும்நெடு மாலுமறி யாதநெறியை
      கூசுதல்செ யாதஅம ணாதரொடு தேரர்குறு காதஅரனூர்
      காசுமணி வார்கனகம் நீடுகட லோடுதிரை வார்துவலைமேல்
      வீசுவலை வாணரவை வாரிவிலை பேசுமெழில் வேதவனமே. 3.76.9
      இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 3.76.10
      823. மந்தமுர வங்கடல் வளங்கெழுவு காழிபதி மன்னுகவுணி
      வெந்தபொடி நீறணியும் வேதவனம் மேவுசிவன் இன்னருளினாற்
      சந்தமிவை தண்டமிழின் இன்னிசை யெனப்பரவு பாடலுலகிற்
      பந்தனுரை கொண்டுமொழி வார்கள்பயில் வார்களுயர் வானுலகமே. 3.76.11
      வேதவனம் என்பது வேதாரணியம்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.77 திருமாணிகுழி - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      824 பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு பங்கர்புனல் தங்குசடைமேல்
      வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல் வித்தகர் மகிழ்ந்துறைவிடங்
      கன்னியிள வாளைகுதி கொள்ளவிள வள்ளைபடர் அள்ளல்வயல்வாய்
      மன்னியிள மேதிகள் படிந்துமனை சேருதவி மாணிகுழியே. 3.77.1
      825. சோதிமிகு நீறதுமெய் பூசியொரு தோலுடை புனைந்துதெருவே
      மாதர்மனை தோறும்இசை பாடிவசி பேசும்அர னார்மகிழ்விட
      தாதுமலி தாமரைம ணங்கமழ வண்டுமுரல் தண்பழனமி
      கோதமலி வேலைபுடை சூழுலகில் நீடுதவி மாணிகுழியே. 3.77.2
      826. அம்பனைய கண்ணுமை மடந்தையவள் அஞ்சிவெரு வச்சினமுடை
      கம்பமத யானையுரி செய்தஅர னார்கருதி மேயவிடமாம்
      வம்புமலி சோலைபுடை சூழமணி மாடமது நீடியழகார்
      உம்பரவர் கோன்நகர மென்னமிக மன்னுதவி மாணிகுழியே. 3.77.3
      827. நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவுஞ்
      சித்தமதொ ருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாங்
      கொத்தலர் மலர்ப்பொழிலின் நீடுகுல மஞ்ஞைநடம் ஆடலதுகண்
      டொத்தவரி வண்டுகளு லாவியிசை பாடுதவி மாணிகுழியே. 3.77.4
      828. மாசில்மதி சூடுசடை மாமுடியர் வல்லசுரர் தொன்னகரமுன்
      நாசமது செய்துநல வானவர்க ளுக்கருள்செய் நம்பனிடமாம்
      வாசமலி மென்குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னியழகார்
      ஊசல்மிசை யேறியினி தாகஇசை பாடுதவி மாணிகுழியே. 3.77.5
      829. மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
      வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாஞ்
      சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
      உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே. 3.77.6
      830. எண்பெரிய வானவர்கள் நின்றுதுதி செய்யஇறை யேகருணையாய்
      உண்பரிய நஞ்சதனை உண்டுலகம் உய்யஅருள் உத்தமனிடம்
      பண்பயிலும் வண்டுபல கெண்டிமது உண்டுநிறை பைம்பொழிலின்வாய்
      ஒண்பலவின் இன்கனி சொரிந்துமணம் நாறுதவி மாணிகுழியே. 3.77.7
      831. எண்ணமது வின்றியெழி லார்கைலை மாமலை யெடுத்ததிறலார்
      திண்ணிய அரக்கனை நெரித்தருள் புரிந்தசிவ லோகனிடமாம்
      பண்ணமரும் மென்மொழியி னார்பணைமு லைப்பவள வாயழகதார்
      ஒண்ணுதல் மடந்தையர் குடைந்துபுன லாடுதவி மாணிகுழியே. 3.77.8
      832. நேடும்அய னோடுதிரு மாலும்உண ராவகை நிமிர்ந்துமுடிமேல்
      ஏடுலவு திங்கள்மத மத்தமித ழிச்சடையெம் ஈசனிடமாம்
      மாடுலவு மல்லிகை குருந்துகொடி மாதவி செருந்திகுரவின்
      ஊடுலவு புன்னைவிரி தாதுமலி சேருதவி மாணிகுழியே. 3.77.9
      833. மொட்டையமண் ஆதர்முது தேரர்மதி யில்லிகள் முயன்றனபடும்
      முட்டைகள் மொழிந்தமொழி கொண்டருள்செய் யாதமுதல் வன்றனிடமாம்
      மட்டைமலி தாழையிள நீர்முதிய வாழையில் விழுந்தஅதரில்
      ஒட்டமலி பூகம்நிரை தாறுதிர வேறுதவி மாணிகுழியே. 3.77.10
      834. உந்திவரு தண்கெடில மோடுபுனல் சூழுதவி மாணிகுழிமேல்
      அந்திமதி சூடியஎம் மானையடி சேருமணி காழிநகரான்
      சந்தம்நிறை தண்டமிழ் தெரிந்துணரும் ஞானசம் பந்தனதுசொல்
      முந்தியிசை செய்துமொழி வார்களுடை யார்கள்நெடு வானநிலனே. 3.77.11
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மாணிக்கமேனியீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.78 திருவேதிகுடி - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      835 நீறுவரி ஆடரவொ டாமைமன என்புநிரை பூண்பரிடபம்
      ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல் ஆதியர் இருந்தவிடமா
      தாறுவிரி பூகம்மலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில்
      வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே. 3.78.1
      836. சொற்பிரி விலாதமறை பாடிநட மாடுவர்தொ லானையுரிவை
      மற்புரி புயத்தினிது மேவுவரெ நாளும்வளர் வானவர்தொழ
      துற்பரிய நஞ்சமுத மாகமுன் அயின்றவரி யன்றதொகுசீர்
      வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக ரென்பர்திரு வேதிகுடியே. 3.78.2
      837. போழுமதி பூணரவு கொன்றைமலர் துன்றுசடை வென்றிபுகமேல்
      வாழுநதி தாழுமரு ளாளரிரு ளார்மிடறர் மாதரிமையோர்
      சூழுமிர வாளர்திரு மார்பில்விரி நூலர்வரி தோலருடைமேல்
      வேழவுரி போர்வையினர் மேவுபதி யென்பர்திரு வேதிகுடியே. 3.78.3
      838. காடர்கரி காலர்கனல் கையரனல் மெய்யருடல் செய்யர்செவியிற்
      தோடர்தெரி கீளர்சரி கோவணவர் ஆவணவர் தொல்லைநகர்தான்
      பாடலுடை யார்களடி யார்கள்மல ரோடுபுனல் கொண்டுபணிவார்
      வேடமொளி யானபொடி பூசியிசை மேவுதிரு வேதிகுடியே. 3.78.4
      839. சொக்கர்துணை மிக்கஎயில் உக்கற முனிந்துதொழும் மூவர்மகிழ
      தக்கஅருள் பக்கமுற வைத்தஅர னாரினிது தங்கும்நகர்தான்
      கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல் பற்றிவரி வண்டிசைகுலா
      மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர் போகநல்கு வேதிகுடியே. 3.78.5
      840. செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர
      தையமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியும் அண்ணலிடமாம்
      வையம்விலை மாறிடினு மேறுபுகழ் மிக்கிழிவி லாதவகையார்
      வெய்யமொழி தண்புலவ ருக்குரை செயாதஅவர் வேதிகுடியே. 3.78.6
      841. உன்னிஇரு போதுமடி பேணுமடி யார்தமிடர் ஒல்கஅருளி
      துன்னியொரு நால்வருடன் ஆல்நிழலி ருந்ததுணை வன்றனிடமாங்
      கன்னியரொ டாடவர்கள் மாமணம் விரும்பியரு மங்கலம்மிக
      மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையரி யற்றுபதி வேதிகுடியே. 3.78.7
      842. உரக்கர நெருப்பெழ நெருக்கிவரை பற்றியவொ ருத்தன்முடிதோள்
      அரக்கனை யடர்த்தவன் இசைக்கினிது நல்கியருள் அங்கணனிடம்
      முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்தகலவை
      விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை யுலாவுதிரு வேதிகுடியே. 3.78.8
      843. பூவின்மிசை அந்தணனொ டாழிபொலி அங்கையனும் நேடஎரியா
      தேவுமிவ ரல்லரினி யாவரென நின்றுதிகழ் கின்றவரிடம்
      பாவலர்கள் ஓசையியல் கேள்வியத றாதகொடை யாளர்பயில்வாம்
      மேவரிய செல்வநெடு மாடம்வளர் வீதிநிகழ் வேதிகுடியே. 3.78.9
      844. வஞ்சமணர் தேரர்மதி கேடர்தம்ம னத்தறிவி லாதவர்மொழி
      தஞ்சமென என்றுமுண ராதஅடி யார்கருது சைவனிடமாம்
      அஞ்சுபுலன் வென்றறுவ கைப்பொருள் தெரிந்தெழு இசைக்கிளவியால்
      வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவிநிகழ் கின்றதிரு வேதிகுடியே. 3.78.10
      845. கந்தமலி தண்பொழில்நன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
      பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதிகழலே
      சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
      அந்தவுல கெய்தியர சாளுமது வேசரதம் ஆணைநமதே. 3.78.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வேதபுரீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.79 திருக்கோகரணம் - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      846 என்றுமரி யானயல வர்க்கியலி சைப்பொருள்க ளாகியெனதுள்
      நன்றுமொளி யானொளிசி றந்தபொன்மு டிக்கடவுள் நண்ணுமிடமாம்
      ஒன்றிய மனத்தடியர் கூடியிமை யோர்பரவும் நீடரவமார்
      குன்றுகள் நெருங்கிவிரி தண்டலை மிடைந்துவளர் கோகரணமே. 3.79.1
      847. பேதைமட மங்கையொரு பங்கிட மிகுத்திடப மேறியமரர்
      வாதைபட வண்கடலெ ழுந்தவிட முண்டசிவன் வாழுமிடமாம்
      மாதரொடும் ஆடவர்கள் வந்தடியி றைஞ்சிநிறை மாமலர்கள்தூ
      கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல் கின்றவளர் கோகரணமே. 3.79.2
      848. முறைத்திறம் உறப்பொருள் தெரிந்துமுனி வர்க்கருளி யாலநிழல்வாய்
      மறைத்திறம றத்தொகுதி கண்டுசம யங்களைவ குத்தவனிட
      துறைத்துறை மிகுத்தருவி தூமலர் சுமந்துவரை யுந்திமதகை
      குறைத்தறையி டக்கரி புரிந்திடறு சாரல்மலி கோகரணமே. 3.79.3
      849. இலைத்தலை மிகுத்தபடை யெண்கரம் விளங்கஎரி வீசிமுடிமேல்
      அலைத்தலை தொகுத்தபுனல் செஞ்சடையில் வைத்தஅழ கன்றனிடமாம்
      மலைத்தலை வகுத்தமுழை தோறும்உழை வாளரிகள் கேழல்களிறு
      கொலைத்தலை மடப்பிடிகள் கூடிவிளை யாடிநிகழ் கோகரணமே. 3.79.4
      850. தொடைத்தலை மலைத்திதழி துன்னிய எருக்கலரி வன்னிமுடியின்
      சடைத்தலை மிலைச்சிய தபோதனன் எமாதிபயில் கின்றபதியாம்
      படைத்தலை பிடித்துமற வாளரொடு வேடர்கள் பயின்றுகுழுமி
      குடைத்தலை நதிப்படிய நின்றுபழி தீரநல்கு கோகரணமே. 3.79.5
      851. நீறுதிரு மேனிமிசை யாடிநிறை வார்கழல்சி லம்பொலிசெய
      ஏறுவிளை யாடவிசை கொண்டிடு பலிக்குவரும் ஈசனிடமாம்
      ஆறுசம யங்களும் விரும்பியடி பேணியரன் ஆகமமி
      கூறுவனம் வேறிரதி வந்தடியர் கம்பம்வரு கோகரணமே. 3.79.6
      852. கல்லவடம் மொந்தைகுழல் தாளமலி கொக்கரைய ரக்கரைமிசை
      பல்லபட நாகம்விரி கோவணவர் ஆளுநகர் என்பரயலே
      நல்லமட மாதரரன் நாமமும் நவிற்றிய திருத்தமுழு
      கொல்லவிட நோயகல்த ரப்புகல்கொ டுத்தருளு கோகரணமே. 3.79.7
      853. வரைத்தலம் நெருக்கிய முருட்டிருள் நிறத்தவன வாய்கள்அலற
      விரற்றலை யுகிர்ச்சிறிது வைத்தபெரு மானினிது மேவுமிடமாம்
      புரைத்தலை கெடுத்தமுனி வாணர்பொலி வாகிவினை தீரஅதன்மேல்
      குரைத்தலை கழற்பணிய ஓமம்வில கும்புகைசெய் கோகரணமே. 3.79.8
      854. வில்லிமையி னால்விறல ரக்கனுயிர் செற்றவனும் வேதமுதலோன்
      இல்லையுள தென்றிகலி நேடஎரி யாகியுயர் கின்றபரனூர்
      எல்லையில் வரைத்தகடல் வட்டமும் இறைஞ்சிநிறை வாசமுருவ
      கொல்லையில் இருங்குறவர் தம்மயிர் புலர்த்திவளர் கோகரணமே. 3.79.9
      855. நேசமில் மனச்சமணர் தேரர்கள்நி ரந்தமொழி பொய்கள்அகல்வி
      தாசைகொள் மனத்தையடி யாரவர் தமக்கருளும் அங்கணனிடம்
      பாசமத றுத்தவனி யிற்பெயர்கள் பத்துடைய மன்னன்அவனை
      கூசவகை கண்டுபின் அவற்கருள்கள் நல்கவல கோகரணமே. 3.79.10
      856. கோடலர வீனும்விரி சாரல்முன் நெருங்கிவளர் கோகரணமே
      ஈடமினி தாகவுறை வானடிகள் பேணியணி காழிநகரான்
      நாடிய தமிழ்க்கிளவி யின்னிசைசெய் ஞானசம் பந்தன்மொழிகள்
      பாடவல பத்தரவர் எத்திசையும் ஆள்வர்பர லோகமெளிதே. 3.79.11

      இத்தலம் துளுவதேசத்திலிருப்பது.
      அந்தத்தேயத்தில் இது ஒரேதலம்.
      சுவாமிபெயர் - மாபலநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.80 திருவீழிமிழலை - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      857 சீர்மருவு தேசினொடு தேசமலி செல்வமறை யோர்கள்பணி
      தார்மருவு கொன்றையணி தாழ்சடையி னானமர்ச யங்கொள்பதிதான்
      பார்மருவு பங்கயமு யர்ந்தவயல் சூழ்பழன நீடஅருகே
      கார்மருவு வெண்கனக மாளிகை கவின்பெருகு வீழிநகரே. 3.80.1
      858. பட்டமுழ விட்டபணி லத்தினொடு பன்மறைகள் ஓதுபணிநற்
      சிட்டர்கள் சயத்துதிகள் செய்யவருள் செய்தழல்கொள் மேனியவனூர்
      மட்டுலவு செங்கமல வேலிவயல் செந்நெல்வளர் மன்னுபொழில்வாய்
      விட்டுலவு தென்றல்விரை நாறுபதி வேதியர்கள் வீழிநகரே. 3.80.2
      859. மண்ணிழி சுரர்க்குவளம் மிக்கபதி மற்றுமுள மன்னுயிர்களு
      கெண்ணிழிவில் இன்பநிகழ் வெய்தஎழி லார்பொழில் இலங்கறுபதம்
      பண்ணிழிவி லாதவகை பாடமட மஞ்ஞைநட மாடஅழகார்
      விண்ணிழி விமானமுடை விண்ணவர் பிரான்மருவு வீழிநகரே. 3.80.3
      860. செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு நன்கலை தெரிந்தவவரோ
      டந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்யஅமர் கின்றஅரனூர்
      கொந்தலர் பொழிற்பழன வேலிகுளிர் தண்புனல் வளம்பெருகவே
      வெந்திறல் விளங்கிவளர் வேதியர் விரும்புபதி வீழிநகரே. 3.80.4
      861. பூதபதி யாகிய புராணமுனி புண்ணியநன் மாதைமருவி
      பேதமதி லாதவகை பாகமிக வைத்தபெரு மானதிடமாம்
      மாதவர்கள் அன்னமறை யாளர்கள் வளர்த்தமலி வேள்வியதனால்
      ஏதமதி லாதவகை இன்பம்அமர் கின்றஎழில் வீழிநகரே. 3.80.5
      862. மண்ணின்மறை யோர்மருவு வைதிகமும் மாதவமும் மற்றுமுலக
      தெண்ணில்பொரு ளாயவை படைத்தஇமை யோர்கள்பெரு மானதிடமாம்
      நண்ணிவரு நாவலர்கள் நாடொறும் வளர்க்கநிகழ் கின்றபுகழ்சேர்
      விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர் நீள்புரிசை வீழிநகரே. 3.80.6
      863. மந்திரநன் மாமறையி னோடுவளர் வேள்விமிசை மிக்கபுகைபோய்
      அந்தர விசும்பணவி அற்புத மெனப்படரும் ஆழியிருள்வாய்
      மந்தரநன் மாளிகை நிலாவுமணி நீடுகதிர் விட்டஒளிபோய்
      வெந்தழல் விளக்கென விரும்பினர் திருந்துபதி வீழிநகரே. 3.80.7
      864. ஆனவலி யிற்றசமு கன்றலைய ரங்கவணி யாழிவிரலால்
      ஊனமரு யர்ந்தகுரு திப்புனலில் வீழ்தரவு ணர்ந்தபரனூர்
      தேனமர் திருந்துபொழில் செங்கனக மாளிகை திகழ்ந்தமதிலோ
      டானதிரு உற்றுவளர் அந்தணர் நிறைந்தஅணி வீழிநகரே. 3.80.8
      865. ஏனவுரு வாகிமண் இடந்தஇமை யோனுமெழி லன்னவுருவம்
      ஆனவனும் ஆதியினொ டந்தமறி யாதஅழல் மேனியவனூர்
      வானணவும் மாமதில் மருங்கலர் நெருங்கிய வளங்கொள்பொழில்வாய்
      வேனலமர் வெய்திட விளங்கொளியின் மிக்கபுகழ் வீழிநகரே. 3.80.9
      866. குண்டமண ராகியொரு கோலமிகு பீலியொடு குண்டிகைபிடி
      தெண்டிசையு மில்லதொரு தெய்வமுள தென்பரது வென்னபொருளாம்
      பண்டையய னன்னவர்கள் பாவனை விரும்புபரன் மேவுபதிசீர்
      வெண்டரள வாள்நகைநன் மாதர்கள் விளங்குமெழில் வீழிநகரே. 3.80.10
      867. மத்தமலி கொன்றைவளர் வார்சடையில் வைத்தபரன் வீழிநகர்சேர்
      வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்புதமிழ் மாலைகள்வலார்
      சித்திர விமானம்அமர் செல்வமலி கின்றசிவ லோகமருவி
      அத்தகு குணத்தவர்க ளாகியனு போகமோடி யோகவரதே. 3.80.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.81 திருத்தோணிபுரம் - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      868 சங்கமரு முன்கைமட மாதையொரு பாலுடன் விரும்பி
      அங்கமுடல் மேலுறவ ணிந்துபிணி தீரஅருள் செய்யும்
      எங்கள்பெரு மானிடமெ னத்தகுமு னைக்கடலின் முத்த
      துங்கமணி இப்பிகள் கரைக்குவரு தோணிபுர மாமே. 3.81.1
      869. சல்லரிய யாழ்முழவம் மொந்தைகுழல் தாளமதி யம்ப
      கல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்து
      அல்லெரிகை யேந்திநட மாடுசடை அண்ணலிட மென்பர்
      சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே. 3.81.2
      870. வண்டரவு கொன்றைவளர் புன்சடையின் மேல்மதியம் வைத்து
      பண்டரவு தன்னரையி லார்த்தபர மேட்டிபழி தீர
      கண்டரவ வொண்கடலின் நஞ்சமமு துண்டகட வுள்ளூர்
      தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு தோணிபுர மாமே. 3.81.3
      871. கொல்லைவிடை யேறுடைய கோவணவன் நாவணவு மாலை
      ஒல்லையுடை யான்அடைய லார்அரணம் ஒள்ளழல் விளைத்த
      வில்லையுடை யான்மிக விரும்புபதி மேவிவளர் தொண்டர்
      சொல்லையடை வாகஇடர் தீர்த்தருள்செய் தோணிபுர மாமே. 3.81.4
      872. தேயுமதி யஞ்சடை யிலங்கிட விலங்கன்மலி கானிற்
      காயுமடு திண்கரியின் ஈருரிவை போர்த்தவன் நினைப்பார்
      தாயெனநி றைந்ததொரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு
      தூயமறை யாளர்முறை யோதிநிறை தோணிபுர மாமே. 3.81.5
      873. பற்றலர்தம் முப்புரம் எரித்தடி பணிந்தவர்கள் மேலை
      குற்றம தொழித்தருளு கொள்கையினன் வெள்ளின்முது கானிற்
      பற்றவன் இசைக்கிளவி பாரிடம தேத்தநட மாடு
      துற்றசடை அத்தனுறை கின்றபதி தோணிபுர மாமே. 3.81.6
      874. பண்ணமரு நான்மறையர் நூன்முறை பயின்றதிரு மார்பிற்
      பெண்ணமரு மேனியினர் தம்பெருமை பேசும்அடி யார்மெ
      திண்ணமரும் வல்வினைகள் தீரஅருள் செய்தலுடை யானூர்
      துண்ணென விரும்புசரி யைத்தொழிலர் தோணிபுர மாமே. 3.81.7
      875. தென்றிசை யிலங்கையரை யன்திசைகள் வீரம்விளை வித்து
      வென்றிசை புயங்களை யடர்த்தருளும் வித்தக னிடஞ்சீர்
      ஒன்றிசை யியற்கிளவி பாடமயி லாடவளர் சோலை
      துன்றுசெய வண்டுமலி தும்பிமுரல் தோணிபுர மாமே. 3.81.8
      876. நாற்றமிகு மாமலரின் மேலயனும் நாரணனும் நாடி
      ஆற்றலத னால்மிக வளப்பரிய வண்ணம்எரி யாகி
      ஊற்றமிகு கீழுலகும் மேலுலகும் ஓங்கியெழு தன்மை
      தோற்றமிக நாளுமரி யானுறைவு தோணிபுர மாமே. 3.81.9
      877. மூடுதுவ ராடையினர் வேடநிலை காட்டும்அமண் ஆதர்
      கேடுபல சொல்லிடுவ ரம்மொழி கெடுத்தடை வினான
      காடுபதி யாகநட மாடிமட மாதொடிரு காதிற்
      தோடுகுழை பெய்தவர் தமக்குறைவு தோணிபுர மாமே. 3.81.10
      878. துஞ்சிருளின் நின்றுநட மாடிமிகு தோணிபுர மேய
      மஞ்சனை வணங்குதிரு ஞானசம் பந்தனசொன் மாலை
      தஞ்சமென நின்றிசை மொழிந்தஅடி யார்கள்தடு மாற்றம்
      வஞ்சமிலர் நெஞ்சிருளும் நீங்கியருள் பெற்றுவளர் வாரே. 3.81.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.82 திருஅவளிவணல்லூர் - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      879 கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடு குலாவி
      தம்பரிசி னோடுசுடு நீறுதட வந்திடப மேறி
      கம்பரிய செம்பொனெடு மாடமதில் கல்வரைவி லாக
      அம்பெரிய வெய்தபெரு மானுறைவ தவளிவண லூரே. 3.82.1
      880. ஓமையன கள்ளியன வாகையன கூகைமுர லோசை
      ஈமம்எரி சூழ்சுடலை வாசமுது காடுநட மாடி
      தூய்மையுடை அக்கொடர வம்விரவி மிக்கொளி துளங்க
      ஆமையொடு பூணும்அடி கள்ளுறைவ தவளிவண லூரே. 3.82.2
      881. நீறுடைய மார்பில்இம வான்மகளோர் பாகம்நிலை செய்து
      கூறுடைய வேடமொடு கூடியழ காயதொரு கோலம்
      ஏறுடைய ரேனுமிடு காடிரவில் நின்றுநட மாடும்
      ஆறுடைய வார்சடையி னான்உறைவ தவளிவண லூரே. 3.823
      882. பிணியுமிலர் கேடுமிலர் தோற்றமிலர் என்றுலகு பேணி
      பணியும்அடி யார்களன பாவம்அற இன்னருள் பயந்து
      துணியுடைய தோலுமுடை கோவணமும் நாகமுடல் தொங்க
      அணியுமழ காகவுடை யானுறைவ தவளிவண லூரே. 3.82.4
      883. குழலின்வரி வண்டுமுரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
      கழலின்மிசை யிண்டைபுனை வார்கடவு ளென்றமரர் கூடி
      தொழலும்வழி பாடுமுடை யார்துயரு நோயுமில ராவர்
      அழலுமழு ஏந்துகையி னானுறைவ தவளிவண லூரே. 3.82.5
      884. துஞ்சலில ராயமரர் நின்றுதொழு தேத்தஅருள் செய்து
      நஞ்சுமிட றுண்டுகரி தாயஎளி தாகியொரு நம்பன்
      மஞ்சுற நிமிர்ந்துமை நடுங்கஅக லத்தொடு வளாவி
      அஞ்சமத வேழவுரி யானுறைவ தவளிவண லூரே. 3.82.6
      885. கூடரவ மொந்தைகுழல் யாழ்முழவி னோடும்இசை செ
      பீடரவ மாகுபட ரம்புசெய்து பேரிடப மோடுங்
      காடரவ மாகுகனல் கொண்டிரவில் நின்றுநட மாடி
      ஆடரவம் ஆர்த்தபெரு மானுறைவ தவளிவண லூரே. 3.82.7
      886. ஒருவரையும் மேல்வலிகொ டேனென எழுந்தவிற லோன்இ
      பெருவரையின் மேலோர்பெரு மானுமுள னோவென வெகுண்ட
      கருவரையும் ஆழ்கடலும் அன்னதிறல் கைகளுடை யோனை
      அருவரையி லூன்றியடர தானுறைவ தவளிவண லூரே. 3.82.8
      887. பொறிவரிய நாகமுயர் பொங்கணைய ணைந்தபுக ழோனும்
      வெறிவரிய வண்டறைய விண்டமலர் மேல்விழுமி யோனுஞ்
      செறிவரிய தோற்றமொடு ஆற்றல்மிக நின்றுசிறி தேயும்
      அறிவரிய னாயபெரு மானுறைவ தவளிவண லூரே. 3.82.9
      888. கழியருகு பள்ளியிட மாகவடு மீன்கள்கவர் வாரும்
      வழியருகு சாரவெயில் நின்றடிசி லுள்கிவரு வாரும்
      பழியருகி னாரொழிக பான்மையொடு நின்றுதொழு தேத்தும்
      அழியருவி தோய்ந்தபெரு மானுறைவ தவளிவண லூரே. 3.82.10
      889. ஆனமொழி யானதிற லோர்பரவும் அவளிவண லூர்மேல்
      போனமொழி நன்மொழிக ளாயபுகழ் தோணிபுர வூரன்
      ஞானமொழி மாலைபல நாடுபுகழ் ஞானசம் பந்தன்
      தேனமொழி மாலைபுகழ் வார்துயர்கள் தீயதிலர் தாமே. 3.82.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சாட்சிநாயகர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.83 திருநல்லூர் - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      890 வண்டிரிய விண்டமலர் மல்குசடை தாழவிடை யேறி
      பண்டெரிகை கொண்டபர மன்பதிய தென்பரத னயலே
      நண்டிரிய நாரையிரை தேரவரை மேலருவி முத்த
      தெண்டிரைகள் மோதவிரி போதுகம ழுந்திருந லூரே. 3.83.1
      891. பல்வளரு நாகமரை யார்த்துவரை மங்கையொரு பாகம்
      மல்வளர் புயத்திலணை வித்துமகி ழும்பரம னிடமாஞ்
      சொல்வளரி சைக்கிளவி பாடிமட வார்நடம தாட
      செல்வமறை யோர்கள்முறை யேத்தவள ருந்திருந லூரே. 3.83.2
      892. நீடுவரை மேருவில தாகநிகழ் நாகம்அழ லம்பாற்
      கூடலர்கள் மூவெயி லெரித்தகுழ கன்குலவு சடைமேல்
      ஏடுலவு கொன்றைபுனல் நின்றுதிக ழுந்நிமல னிடமாஞ்
      சேடுலவு தாமரைகள் நீடுவய லார்திருந லூரே. 3.83.3
      893. கருகுபுரி மிடறர்கரி காடரெரி கைஅதனி லேந்தி
      அருகுவரு கரியினுரி யதளர்பட அரவரிடம் வினவில்
      முருகுவிரி பொழிலின்மணம் நாறமயி லாலமர மேறி
      திருகுசின மந்திகனி சிந்தமது வார்திருந லூரே. 3.83.4
      894. பொடிகொள்திரு மார்பர்புரி நூலர்புனல் பொங்கரவு தங்கும்
      முடிகொள்சடை தாழவிடை யேறுமுத லாளரவ ரிடமாம்
      இடிகொள்முழ வோசையெழி லார்செய்தொழி லாளர்விழ மல்க
      செடிகொள்வினை யகலமனம் இனியவர்கள் சேர்திருந லூரே. 3.83.5
      895. புற்றரவர் நெற்றியொர்கண் ஒற்றைவிடை யூர்வரடை யாளஞ்
      சுற்றமிருள் பற்றியபல் பூதம்இசை பாடநசை யாலே
      கற்றமறை யுற்றுணர்வர் பற்றலர்கள் முற்றும்எயில் மாள
      செற்றவர் இருப்பிடம் நெருக்குபுன லார்திருந லூரே. 3.83.6
      896. பொங்கரவர் அங்கமுடன் மேலணிவர் ஞாலமிடு பிச்சை
      தங்கரவ மாகவுழி தந்துமெய் துலங்கியவெண் ணீற்றர்
      கங்கையர வம்விரவு திங்கள்சடை யடிகளிடம் வினவிற்
      செங்கயல் வதிக்குதிகொ ளும்புனல தார்திருந லூரே. 3.83.7
      897. ஏறுபுகழ் பெற்றதென் இலங்கையவர் கோனையரு வரையிற்
      சீறியவ னுக்கருளும் எங்கள்சிவ லோகனிட மாகுங்
      கூறும்அடி யார்களிசை பாடிவலம் வந்தயரும் அருவி
      சேறுகம ரானவழி யத்திகழ்த ருந்திருந லூரே. 3.83.8
      898. மாலுமலர் மேலயனும் நேடியறி யாமையெரி யாய
      கோலமுடை யானுணர்வு கோதில்புக ழானிடம தாகும்
      நாலுமறை யங்கமுத லாறுமெரி மூன்றுதழ லோம்புஞ்
      சீலமுடை யார்கள்நெடு மாடம்வள ருந்திருந லூரே. 3.83.9
      899. கீறுமுடை கோவணமி லாமையிலோ லோவியத வத்தர்
      பாறுமுடன் மூடுதுவ ராடையர்கள் வேடமவை பாரேல்
      ஏறுமட வாளொடினி தேறிமுனி ருந்தவிட மென்பர்
      தேறுமன வாரமுடை யார்குடிசெ யுந்திருந லூரே. 3.83.10
      900. திரைகளிரு கரையும்வரு பொன்னிநில வுந்திருந லூர்மேல்
      பரசுதரு பாணியை நலந்திகழ்செய் தோணிபுர நாதன்
      உரைசெய்தமிழ் ஞானசம் பந்தனிசை மாலைமொழி வார்போய்
      விரைசெய்மலர் தூவவிதி பேணுகதி பேறுபெறு வாரே. 3.83.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.84 திருப்புறவம் - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      901 பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விர வியபிறை
      கண்ணியர் கடுநடை விடையினர் கழல்தொழும் அடியவர்
      நண்ணிய பிணிகெட அருள்புரி பவர்நணு குயர்பதி
      புண்ணிய மறையவர் நிறைபுகழ் ஒலிமலி புறவமே. 3.84.1
      902. கொக்குடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
      அக்குடை வடமுமோர் அரவமு மலரரை மிசையினிற்
      திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை மகளொடும்
      புக்குட னுறைவது புதுமலர் விரைகமழ் புறவமே. 3.84.2
      903. கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை உமையொரு
      பங்கியல் திருவுரு வுடையவர் பரசுவொ டிரலைமெய்
      தங்கிய கரதல முடையவர் விடையவர் உறைபதி
      பொங்கிய பொருகடல் கொளவதன் மிசையுயர் புறவமே. 3.84.3
      904. மாதவ முடைமறை யவனுயிர் கொளவரு மறலியை
      மேதகு திருவடி யிறையுற வுயிரது விலகினார்
      சாதக வுருவியல் கானிடை உமைவெரு வுறவரு
      போதக உரியதள் மருவினர் உறைபதி புறவமே. 3.84.4
      905. காமனை யழல்கொள விழிசெய்து கருதலர் கடிமதில்
      தூமம துறவிறல் சுடர்கொளு வியஇறை தொகுபதி
      ஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொ டொளிகெழு
      பூமகன் அலரொடு புனல்கொடு வழிபடு புறவமே. 3.84.5
      906. சொன்னய முடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்
      பின்னைய நடுவுணர் பெருமையர் திருவடி பேணிட
      முன்னைய முதல்வினை யறஅரு ளினருறை முதுபதி
      புன்னையின் முகைநெதி பொதியவிழ் பொழிலணி புறவமே. 3.84.6
      907. வரிதரு புலியத ளுடையினர் மழுவெறி படையினர்
      பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி பெருமையர்
      எரிதரு முருவினர் இமையவர் தொழுவதோ ரியல்பினர்
      புரிதரு குழலுமை யொடுமினி துறைபதி புறவமே. 3.84.7
      908. வசிதரு முருவொடு மலர்தலை யுலகினை வலிசெயும்
      நிசிசர னுடலொடு நெடுமுடி யொருபது நெரிவுற
      ஒசிதர வொருவிரல் நிறுவினர் ஒளிவளர் வெளிபொடி
      பொசிதரு திருவுரு வுடையவர் உறைபதி புறவமே. 3.84.8
      909. தேனக மருவிய செறிதரு முளரிசெய் தவிசினில்
      ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடை யொருவனும்
      வானகம் வரையக மறிகடல் நிலனெனு மெழுவகை
      போனக மருவின னறிவரி யவர்பதி புறவமே. 3.84.9
      910. கோசர நுகர்பவர் கொழுகிய துவரன துகிலினர்
      பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு மொழியினர்
      நீசரை விடுமினி நினைவுறு நிமலர்த முறைபதி
      பூசுரர் மறைபயில் நிறைபுக ழொலிமலி புறவமே. 3.84.10
      911. போதியல் பொழிலணி புறவநன் னகருறை புனிதனை
      வேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன்
      ஓதிய வொருபது முரியதொ ரிசைகொள வுரைசெயும்
      நீதிய ரவரிரு நிலனிடை நிகழ்தரு பிறவியே. 3.84.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.85 திருவீழிமிழலை - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      912 மட்டொளி விரிதரு மலர்நிறை சுரிகுழல் மடவரல்
      பட்டொளி மணியல்குல் உமையமை யுருவொரு பாகமா
      கட்டொளிர் புனலொடு கடியர வுடனுறை முடிமிசை
      விட்டொளி யுதிர்பிதிர் மதியவர் பதிவிழி மிழலையே 3.85.1
      913. எண்ணிற வரிவளை நெறிகுழல் எழில்மொழி யிளமுலை
      பெண்ணுறும் உடலினர் பெருகிய கடல்விட மிடறினர்
      கண்ணுறு நுதலினர் கடியதோர் விடையினர் கனலினர்
      விண்ணுறு பிறையணி சடையினர் பதிவிழி மிழலையே. 3.85.2
      914. மைத்தகு மதர்விழி மலைமகள் உருவொரு பாகமா
      வைத்தவர் மதகரி யுரிவைசெய் தவர்தமை மருவினார்
      தெத்தென இசைமுரல் சரிதையர் திகழ்தரும் அரவினர்
      வித்தக நகுதலை யுடையவர் இடம்விழி மிழலையே. 3.85.3
      915. செவ்வழ லெனநனி பெருகிய வுருவினர் செறிதரு
      கவ்வழல் அரவினர் கதிர்முதிர் மழுவினர் தொழுவிலா
      முவ்வழல் நிசிசரர் விறலவை யழிதர முதுமதில்
      வெவ்வழல் கொளநனி முனிபவர் பதிவிழி மிழலையே. 3.85.4
      916. பைங்கண தொருபெரு மழலைவெ ளேறினர் பலியெனா
      எங்கணு முழிதர்வர் இமையவர் தொழுதெழும் இயல்பினர்
      அங்கணர் அமரர்கள் அடியிணை தொழுதெழ ஆரமா
      வெங்கண அரவினர் உறைதரு பதிவிழி மிழலையே. 3.85.5
      917. பொன்னன புரிதரு சடையினர் பொடியணி வடிவினர்
      உன்னினர் வினையவை களைதலை மருவிய ஒருவனார்
      தென்னென விசைமுரல் சரிதையர் திகழ்தரு மார்பினில்
      மின்னென மிளிர்வதோர் அரவினர் பதிவிழி மிழலையே. 3.85.6
      918. அக்கினோ டரவரை யணிதிகழ் ஒளியதோ ராமைபூண்
      டிக்குக மலிதலை கலனென இடுபலி யேகுவர்
      கொக்கரை குழல்முழ விழவொடு மிசைவதோர் சரிதையர்
      மிக்கவர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே. 3.85.7
      919. பாதமோர் விரலுற மலையடர் பலதலை நெரிதர
      பூதமோ டடியவர் புனைகழல் தொழுதெழு புகழினர்
      ஓதமோ டொலிதிரை படுகடல் விடமுடை மிடறினர்
      வேதமோ டுறுதொழில் மதியவர் பதிவிழி மிழலையே. 3.85.8
      920. நீரணி மலர்மிசை உறைபவன் நிறைகடல் உறுதுயில்
      நாரண னெனஇவர் இருவரும் நறுமல ரடிமுடி
      ஓருணர் வினர்செல லுறலரு முருவினோ டொளிதிகழ்
      வீரணர் உறைவது வெறிகமழ் பொழில்விழி மிழலையே. 3.85.9
      921. இச்சைய ரினிதென இடுபலி படுதலை மகிழ்வதோர்
      பிச்சையர் பெருமையை யிறைபொழு தறிவென வுணர்விலர்
      மொச்சைய அமணரும் முடைபடு துகிலரும் அழிவதோர்
      விச்சைய ருறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே. 3.85.10
      922. உன்னிய அருமறை யொலியினை முறைமிகு பாடல்செய்
      இன்னிசை யவருறை யெழில்திகழ் பொழில்விழி மிழலையை
      மன்னிய புகலியுள் ஞானசம் பந்தன வண்டமிழ்
      சொன்னவர் துயரிலர் வியனுல குறுகதி பெறுவரே. 3.85.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.86 திருச்சேறை - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      923 முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
      வெறியுறு மதகரி யதள்பட வுரிசெய்த விறலினர்
      நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை
      செறியுறு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே. 3.86.1
      924. புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதோர் புரிவினர்
      மனமுடை அடியவர் படுதுயர் களைவதோர் வாய்மையர்
      இனமுடை மணியினோ டரைசிலை யொளிபெற மிளிர்வதோர்
      சினமுதிர் விடையுடை யடிகள்தம் வளநகர் சேறையே. 3.86.2
      925. புரிதரு சடையினர் புலியதள் அரையினர் பொடிபுல்கும்
      எரிதரும் உருவினர் இடபம தேறுவ ரீடுலா
      வரிதரு வளையின ரவரவர் மகிழ்தர மனைதொறு
      திரிதரு சரிதையர் உறைதரு வளநகர் சேறையே. 3.86.3
      926. துடிபடும் இடையுடை மடவர லுடனொரு பாகமா
      இடிபடு குரலுடை விடையினர் படமுடை யரவினர்
      பொடிபடும் உருவினர் புலியுரி பொலிதரும் அரையினர்
      செடிபடு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே. 3.86.4
      927. அந்தர முழிதரு திரிபுர மொருநொடி யளவினில்
      மந்தர வரிசிலை யதனிடை யரவரி வாளியால்
      வெந்தழி தரவெய்த விடலையர் விடமணி மிடறினர்
      செந்தழல் நிறமுடை யடிகள்தம் வளநகர் சேறையே. 3.86.5
      928. மத்தர முறுதிறன் மறவர்தம் வடிவுகொ டுருவுடை
      பத்தொரு பெயருடை விசயனை அசைவுசெய் பரிசினால்
      அத்திரம் அருளும்நம் அடிகள தணிகிளர் மணியணி
      சித்திர வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே. 3.86.6
      929. பாடினர் அருமறை முறைமுறை பொருளென அருநடம்
      ஆடினர் உலகிடை அலர்கொடும் அடியவர் துதிசெய
      வாடினர் படுதலை யிடுபலி யதுகொடு மகிழ்தருஞ்
      சேடர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே. 3.86.7
      930. கட்டுர மதுகொடு கயிலைநல் மலைநலி கரமுடை
      நிட்டுரன் உடலொடு நெடுமுடி யொருபதும் நெரிசெய்தார்
      மட்டுர மலரடி யடியவர் தொழுதெழ அருள்செயுஞ்
      சிட்டர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே. 3.86.8
      931. பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தர
      அன்றிய அவரவர் அடியொடு முடியவை யறிகிலார்
      நின்றிரு புடைபட நெடுவெரி நடுவெயோர் நிகழ்தர
      சென்றுயர் வெளிபட அருளிய அவர்நகர் சேறையே. 3.86.9
      932. துகடுறு விரிதுகில் உடையவர் அமணெனும் வடிவினர்
      விகடம துறுசிறு மொழியவை நலமில மெனவிடன்
      முகிழ்தரும் இளமதி யரவொடும் அழகுற முதுநதி
      திகழ்தரு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே. 3.86.10
      933. கற்றநன் மறைபயில் அடியவர் அடிதொழு கவினுறு
      சிற்றிடை யவளொடு மிடமென வுறைவதோர் சேறைமேற்
      குற்றமில் புகலியுள் இகலறு ஞானசம் பந்தன
      சொற்றக வுறமொழி பவரழி விலர்துயர் தீருமே. 3.86.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சென்னெறியப்பர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.87 திருநள்ளாறு - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      934 தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள்
      குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின்
      நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தம் நாமமே
      மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே. 3.87.1
      935. போதமர் தருபுரி குழலெழின் மலைமகள் பூணணி
      சீதம தணிதரு முகிழிள வனமுலை செறிதலின்
      நாதம தெழிலுரு வனையநள் ளாறர்த நாமமே
      மீதம தெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே. 3.87.2
      936. இட்டுறு மணியணி யிணர்புணர் வளரொளி யெழில்வடங்
      கட்டுறு கதிரிள வனமுலை யிணையொடு கலவலின்
      நட்டுறு செறிவயல் மருவுநள் ளாறர்த நாமமே
      இட்டுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே. 3.87.3
      937. மைச்சணி வரியரி நயனிதொன் மலைமகள் பயனுறு
      கச்சணி கதிரிள வனமுலை யவையொடு கலவலின்
      நச்சணி மிடறுடை யடிகள்நள் ளாறர்த நாமமே
      மெச்சணி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே. 3.87.4
      938. பண்ணியல் மலைமகள் கதிர்விடு பருமணி யணிநிற
      கண்ணியல் கலசம தனமுலை யிணையொடு கலவலின்
      நண்ணிய குளிர்புனல் புகுதுநள் ளாறர்த நாமமே
      விண்ணிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே. 3.87.5
      939. போதுறு புரிகுழல் மலைமகள் இளவளர் பொன்னணி
      சூதுறு தளிர்நிற வனமுலை யவையொடு துதைதலின்
      தாதுறு நிறமுடை யடிகள்நள் ளாறர்த நாமமே
      மீதுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே. 3.87.6
      940. கார்மலி நெறிபுரி சுரிகுழல் மலைமகள் கவினுறு
      சீர்மலி தருமணி யணிமுலை திகழ்வொடு செறிதலின்
      தார்மலி நகுதலை யுடையநள் ளாறர்த நாமமே
      ஏர்மலி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே. 3.87.7
      941. மன்னிய வளரொளி மலைமகள் தளிர்நிற மதமிகு
      பொன்னியல் மணியணி கலசம தனமுலை புணர்தலின்
      தன்னியல் தசமுகன் நெறியநள் ளாறர்த நாமமே
      மின்னிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே. 3.87.8
      942. கான்முக மயிலியன் மலைமகள் கதிர்விடு கனமிகு
      பான்முக மியல்பணை யிணைமுலை துணையொடு பயிறலின்
      நான்முகன் அரியறி வரியநள் ளாறர்த நாமமே
      மேன்முக வெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே. 3.87.9
      943. அத்திர நயனிதொன் மலைமகள் பயனுறு மதி
      சித்திர மணியணி திகழ்முலை யிணையொடு செறிதலின்
      புத்தரொ டமணர்பொய் பெயருநள் ளாறர்த நாமமே
      மெய்த்திர ளெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே. 3.87.10
      944. சிற்றிடை அரிவைதன் வனமுலை யிணையொடு செறிதரு
      நற்றிற முறுகழு மலநகர் ஞானசம் பந்தன
      கொற்றவன் எதிரிடை யெரியினி லிடஇவை கூறிய
      சொற்றெரி யொருபதும் அறிபவர் துயரிலர் தூயரே. 3.87.11
      இது சமணர் வாதின்பொருட்டு தீயிலிடுதற்கு போகமார்த்த பூண்முலையாளென்னும்
      பதிகம் உதயமாக இது தீயில் பழுது படாது என்னு துணிவுகொண்டு
      அருளிச்செய்த பதிகம்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.88 திருவிளமர் - திருவிராகம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      945 மத்தக மணிபெற மலர்வதோர் மதிபுரை நுதல்கரம்
      ஒத்தக நகமணி மிளிர்வதோர் அரவினர் ஒளிகிளர்
      அத்தக வடிதொழ அருள்பெறு கண்ணொடும் உமையவள்
      வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே. 3.88.1
      946. பட்டில கியமுலை அரிவையர் உலகினில் இடுபலி
      ஒட்டில கிணைமர வடியினர் உமையுறு வடிவினர்
      சிட்டில கழகிய பொடியினர் விடைமிசை சேர்வதோர்
      விட்டில கழகொளி பெயரவர் உறைவது விளமரே. 3.88.2
      947. அங்கதிர் ஒளியினர் அரையிடை மிளிர்வதோர் அரவொடு
      செங்கதி ரெனநிற மனையதோர் செழுமணி மார்பினர்
      சங்கதிர் பறைகுழல் முழவினொ டிசைதரு சரிதையர்
      வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் விளமரே. 3.88.3
      948. மாடம தெனவளர் மதிலவை யெரிசெய்வர் விரவுசீர
      பீடென வருமறை யுரைசெய்வர் பெரியபல் சரிதைகள்
      பாடலர் ஆடிய சுடலையில் இடமுற நடம்நவில்
      வேடம துடையவர் வியன்நக ரதுசொலில் விளமரே. 3.88.4
      949. பண்டலை மழலைசெய் யாழென மொழியுமை பாகமா
      கொண்டலை குரைகழ லடிதொழு மவர்வினை குறுகிலர்
      விண்டலை யமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர்
      வெண்டலை பலிகொளும் விமலர்தம் வளநகர் விளமரே. 3.88.5
      950. மனைகள்தோ றிடுபலி யதுகொள்வர் மதிபொதி சடையினர்
      கனைகடல் அடுவிடம் அமுதுசெய் கறையணி மிடறினர்
      முனைகெட வருமதில் எரிசெய்த அவர்கழல் பரவுவார்
      வினைகெட அருள்புரி தொழிலினர் செழுநகர் விளமரே. 3.88.6
      951. நெறிகமழ் தருமுரை யுணர்வினர் புணர்வுறு மடவரல்
      செறிகமழ் தருமுரு வுடையவர் படைபல பயில்பவர்
      பொறிகமழ் தருபட அரவினர் விரவிய சடைமிசை
      வெறிகமழ் தருமலர் அடைபவர் இடமெனில் விளமரே. 3.88.7
      952. தெண்கடல் புடையணி நெடுமதில் இலங்கையர் தலைவனை
      பண்பட வரைதனில் அடர்செய்த பைங்கழல் வடிவினர்
      திண்கட லடைபுனல் திகழ்சடை புகுவதோர் சேர்வினார்
      விண்கடல் விடமலி யடிகள்தம் வளநகர் விளமரே. 3.88.8
      953. தொண்டசை யுறவரு துயருறு காலனை மாள்வுற
      அண்டல்செய் திருவரை வெருவுற ஆரழ லாயினார்
      கொண்டல்செய் தருதிரு மிடறின ரிடமெனில் அளியினம்
      விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில் விளமரே. 3.88.9
      954. ஒள்ளியர் தொழுதெழ வுலகினில் உரைசெயு மொழிபல
      கொள்ளிய களவினர் குண்டிகை யவர்தவம் அறிகிலார்
      பள்ளியை மெய்யென கருதன்மின் பரிவொடு பேணுவீர்
      வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் விளமரே. 3.88.10
      955. வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள் விகிர்தரை
      சிந்தையுள் இடைபெற வுரைசெய்த தமிழிவை செழுவிய
      அந்தணர் புகலியுள் அழகமர் அருமறை ஞானசம்
      பந்தன மொழியிவை உரைசெயு மவர்வினை பறையுமே. 3.88.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பதஞ்சலிமனோகரேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.89 திருக்கொச்சைவயம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      956 திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணி சந்தமுந்தி
      குருந்துமா குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டு
      நிரந்துமா வயல்புகு நீடுகோ டாறுசூழ் கொச்சைமேவி
      பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே. 3.89.1
      957. ஏலமார் இலவமோ டினமலர தொகுதியா யெங்கும்நுந்தி
      கோலமா மிளகொடு கொழுங்கனி கொன்றையுங் கொண்டுகோட்டா
      றாலியா வயல்புகு மணிதரு கொச்சையே நச்சிமேவும்
      நீலமார் கண்டனை நினைமட நெஞ்சமே அஞ்சல்நீயே. 3.89.2
      958. பொன்னுமா மணிகொழி தெறிபுனற் கரைகள்வாய் நுரைகளுந்தி
      கன்னிமார் முலைநலம் கவரவ தேறுகோ டாறுசூழ
      மன்னினார் மாதொடும் மருவிடங் கொச்சையே மருவின்நாளும்
      முன்னைநோய் தொடருமா றில்லைகாண் நெஞ்சமே அஞ்சல்நீயே. 3.89.3
      959. கந்தமார் கேதகை சந்தன காடுசூழ் கதலிமாடே
      வந்துமா வள்ளையின் பவரளி குவளையை சாடியோட
      கொந்துவார் குழலினார் குதிகொள்கோ டாறுசூழ் கொச்சைமேய
      எந்தையார் அடிநினை துய்யலாம் நெஞ்சமே அஞ்சல்நீயே. 3.89.4
      960. மறைகொளு திறலினார் ஆகுதி புகைகள்வான் அண்டமிண்டி
      சிறைகொளும் புனலணி செழுமதி திகழ்மதிற் கொச்சைதன்பால்
      உறைவிட மெனமன மதுகொளும் பிரமனார் சிரமறுத்த
      இறைவன தடியிணை இறைஞ்சிவாழ் நெஞ்சமே அஞ்சல்நீயே. 3.89.5
      961. சுற்றமும் மக்களு தொக்கவ தக்கனை சாடியன்றே
      உற்றமால் வரையுமை நங்கையை பங்கமா உள்கினானோர்
      குற்றமில் லடியவர் குழுமிய வீதிசூழ் கொச்சைமேவி
      நற்றவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும்நெஞ்சே. 3.89.6
      962. கொண்டலார் வந்திட கோலவார் பொழில்களிற் கூடிமந்தி
      கண்டவார் கழைபிடி தேறிமாமுகில்தனை கதுவுகொச்சை
      அண்டவா னவர்களும் அமரரும் முனிவரும் பணியஆலம்
      உண்டமா கண்டனார் தம்மையே உள்குநீ அஞ்சல்நெஞ்சே. 3.89.7
      963. அடலெயிற் றரக்கனார் நெருக்கிமா மலையெடு தார்த்தவாய்கள்
      உடல்கெட திருவிரல் ஊன்றினார் உறைவிடம் ஒளிகொள்வெள்ளி
      மடலிடை பவளமும் முத்தமு தொத்துவண் புன்னைமாடே
      பெடையொடுங் குருகினம் பெருகுதண் கொச்சையே பேணுநெஞ்சே. 3.89.8
      964. அரவினிற் றுயில்தரும் அரியும்நற் பிரமனும் அன்றயர்ந்து
      குரைகழற் றிருமுடி யளவிட அரியவர் கொங்குசெம்பொன்
      விரிபொழி லிடைமிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
      கரியநன் மிடறுடை கடவுளார் கொச்சையே கருதுநெஞ்சே. 3.89.9
      965. கடுமலி யுடலுடை அமணருங் கஞ்சியுண் சாக்கியரும்
      இடுமற வுரைதனை இகழ்பவர் கருதுநம் ஈசர்வானோர்
      நடுவுறை நம்பனை நான்மறை யவர்பணி தேத்தஞாலம்
      உடையவன் கொச்சையே உள்கிவாழ் நெஞ்சமே அஞ்சல்நீயே. 3.89.10
      966. காய்ந்துதங் காலினாற் காலனை செற்றவர் கடிகொள்கொச்சை
      ஆய்ந்துகொண் டிடமென இருந்தநல் லடிகளை ஆதரித்தே
      ஏய்ந்ததொல் புகழ்மிகு மெழில்மறை ஞானசம் பந்தன்சொன்ன
      வாய்ந்தஇம் மாலைகள் வல்லவர் நல்லவா னுலகின்மேலே. 3.89.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.90 திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      967 ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனற் கங்கையை ஒருசடைமேற்
      தாங்கினார் இடுபலி தலைகலனாக்கொண்ட தம்மடிகள்
      பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்
      வீங்குநீர துருத்தியார் இரவிட துறைவர்வேள் விக்குடியே. 3.90.1
      968. தூறுசேர் சுடலையிற் சுடரெரி யாடுவர் துளங்கொளிசேர்
      நீறுசா தெனவுக தணிவர்வெண் பிறைமல்கு சடைமுடியார்
      நாறுசா திளமுலை யரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்
      வீறுசேர் துருத்தியார் இரவிட துறைவர்வேள் விக்குடியே. 3.90.2
      969. மழைவளர் இளமதி மலரொடு தலைபுல்கு வார்சடைமேற்
      கழைவளர் புனல்பு கண்டவெங் கண்ணுதற் கபாலியார்தாம்
      இழைவளர் துகிலல்குல் அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்
      விழைவளர் துருத்தியார் இரவிட துறைவர்வேள் விக்குடியே. 3.90.3
      970. கரும்பன வரிசிலை பெருந்தகை காமனை கவினழித்த
      சுரும்பொடு தேன்மல்கு தூமலர கொன்றையஞ் சுடர்ச்சடையார்
      அரும்பன வனமுலை அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்
      விரும்பிட துருத்தியார் இரவிட துறைவர்வேள் விக்குடியே. 3.90.4
      971. வளங்கிளர் மதியமும் பொன்மலர கொன்றையும் வாளரவுங்
      களங்கொள சடையிடை வைத்தஎங் கண்ணுதற் கபாலியார்தா
      துளங்குநூல் மார்பினர் அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்
      விளங்குநீர துருத்தியார் இரவிட துறைவர்வேள் விக்குடியே. 3.90.5
      972. பொறியுலாம் அடுபுலி யுரிவையர் வரியரா பூண்டிலங்கும்
      நெறியுலாம் பலிகொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பரியார்
      மறியுலாங் கையினர் மங்கையோ டொருபகல் அமர்ந்தபிரான்
      வெறியுலா துருத்தியார் இரவிட துறைவர்வேள் விக்குடியே. 3.90.6
      973. புரிதரு சடையினர் புலியுரி யரையினர் பொடியணிந்து
      திரிதரும் இயல்பினர் திரிபுர மூன்றையு தீவளைத்தார்
      வரிதரு வனமுலை மங்கையோ டொருபகல் அமர்ந்தபிரான்
      விரிதரு துருத்தியார் இரவிட துறைவர்வேள் விக்குடியே. 3.90.7
      974. நீண்டிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்இ நீள்வரையை
      கீண்டிட திடுவனென் றெழுந்தவ னாள்வினை கீழ்ப்படுத்தார்
      பூண்டநூல் மார்பினர் அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்
      வேண்டிட துருத்தியார் இரவிட துறைவர்வேள் விக்குடியே. 3.90.8
      975. கரைகடல் அரவணை கடவுளு தாமரை நான்முகனுங்
      குரைகழ லடிதொழ கூரெரி யெனநிறங் கொண்டபிரான்
      வரைகெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண்பொழில்சூழ்
      விரைகமழ் துருத்தியார் இரவிட துறைவர்வேள் விக்குடியே. 3.90.9
      976. அயமுக வெயினிலை அமணருங் குண்டருஞ் சாக்கியரும்
      நயமுக வுரையினர் நகுவன சரிதைகள் செய்துழல்வார்
      கயலன வரிநெடுங் கண்ணியோ டொருபகல் அமர்ந்தபிரான்
      வியனகர துருத்தியார் இரவிட துறைவர்வேள் விக்குடியே. 3.90.10
      977. விண்ணுலாம் விரிபொழில் விரைமணல் துருத்திவேள் விக்குடியும்
      ஒண்ணுலாம் ஒலிகழல் ஆடுவார் அரிவையோ டுறைபதியை
      நண்ணுலாம் புகலியுள் அருமறை ஞானசம் பந்தன்சொன்ன
      பண்ணுலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார் பழியிலரே. 3.90.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.91 திருவடகுரங்காடுதுறை
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      978 கோங்கமே குரவமே கொழுமலர புன்னையே கொகுடிமுல்லை
      வேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விரவியெங்கும்
      ஓங்குமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
      வீங்குநீர சடைமுடி அடிகளா ரிடமென விரும்பினாரே. 3.91.1
      979. மந்தமா யிழிமத களிற்றிள மருப்பொடு பொருப்பின்நல்ல
      சந்தமார் அகிலொடு சாதியின் பலங்களு தகையமோதி
      உந்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
      எந்தையார் இணையடி இமையவர் தொழுதெழும் இயல்பினாரே. 3.91.2
      980. முத்துமா மணியொடு முழைவளர் ஆரமும் முகந்துநுந்தி
      எத்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
      மத்தமா மலரொடு மதிபொதி சடைமுடி யடிகள்தம்மேற்
      சித்தமாம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணமன்றே. 3.91.3
      981. கறியுமா மிளகொடு கதலியின் பலங்களுங் கலந்துநுந்தி
      எறியுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
      மறியுலாங் கையினர் மலரடி தொழுதெழ மருவுமுள்ள
      குறியினா ரவர்மி கூடுவார் நீடுவா னுலகினூடே. 3.91.4
      982. கோடிடை சொரிந்ததே னதனொடுங் கொண்டல்வாய் விண்டமுன்னீர்
      காடுடை பீலியுங் கடறுடை பண்டமுங் கலந்துநுந்தி
      ஓடுடை காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
      பீடுடை சடைமுடி யடிகளா ரிடமென பேணினாரே. 3.91.5
      983. கோலமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றி
      வாலியார் வழிபட பொருந்தினார் திருந்துமாங் கனிகளுந்தி
      ஆலுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
      நீலமா மணிமிடற் றடிகளை நினையவல் வினைகள்வீடே. 3.91.6
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 3.91.7
      984. நீலமா மணிநிற தரக்கனை யிருபது கரத்தொடொல்க
      வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்
      ஏலமோ டிலையில வங்கமே யிஞ்சியே மஞ்சளுந்தி
      ஆலியா வருபுனல் வடகரை யடைகுரங் காடுதுறையே. 3.91.8
      985. பொருந்திறல் பெருங்கைமா வுரித்துமை யஞ்சவே யொருங்குநோக்கி
      பெருந்திற தனங்கனை அநங்கமா விழித்ததும் பெருமைபோலும்
      வருந்திறற் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
      அருந்திற திருவரை யல்லல்கண் டோ ங்கிய அடிகளாரே. 3.91.9
      986. கட்டமண் தேரருங் கடுக்கடின் கழுக்களுங் கசிவொன்றில்லா
      பிட்டர்தம் அறவுரை கொள்ளலும் பெருவரை பண்டமுந்தி
      எட்டுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
      சிட்டனா ரடிதொழ சிவகதி பெறுவது திண்ணமாமே. 3.91.10
      987. தாழிளங் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
      போழிள மதிபொதி புரிதரு சடைமுடி புண்ணியனை
      காழியான் அருமறை ஞானசம் பந்தன கருதுபாடல்
      கோழையா அழைப்பினுங் கூடுவார் நீடுவா னுலகினூடே. 3.91.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - குலைவணங்குநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.92 திருநெல்வேலி
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      988 மருந்தவை மந்திரம் மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்
      அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
      பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதர துன்றுபைம்பூஞ்
      செருந்திசெம் பொன்மலர் திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 3.92.1
      989. என்றுமோ ரியல்பின ரெனநினை வரியவ ரேறதேறி
      சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே
      துன்றுதண் பொழில்நுழை தெழுவிய கேதகை போதளைந்து
      தென்றல்வ துலவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 3.92.2
      990. பொறிகிளர் அரவமும் போழிள மதியமுங் கங்கையென்னும்
      நெறிபடு குழலியை சடைமிசை சுலவிவெண் ணீறுபூசி
      கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர்போலுஞ்
      செறிபொழில் தழுவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 3.92.3
      991. காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்
      பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி
      ஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதி
      தீண்டிவ துலவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 3.92.4
      992. ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளஅரவுங்
      கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலி தோலுடையார்
      ஆனின்நல் லைந்துக தாடுவர் பாடுவர் அருமறைகள்
      தேனில்வண் டமர்பொழில் திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 3.92.5
      993. வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
      பொடியணி மார்பினர் புலியதள் ஆடையர் பொங்கரவர்
      வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
      செடிபடு பொழிலணி திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 3.92.6
      994. அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
      தக்கனார் வேள்வியை சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை
      புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலை
      திக்கெலாம் புகழுறு திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 3.92.7
      995. முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே
      உந்திமா மலரடி யொருவிரல் உகிர்நுதி யாலடர்த்தார்
      கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
      சிந்துபூ துறைகமழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 3.92.8
      996. பைங்கண்வாள் அரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா
      அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்சநின்றார்
      சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேண
      திங்கள்நாள் விழமல்கு திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 3.92.9
      997. துவருறு விரிதுகில் ஆடையர் வேடமில் சமணரென்னும்
      அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் அண்ணலார்தாங்
      கவருறு கொடிமல்கு மாளிகை சூளிகை மயில்களால
      திவருறு மதிதவழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 3.92.10
      998. பெருந்தண்மா மலர்மிசை அயனவன் அனையவர் பேணுகல்வி
      திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர்தம்மை
      பொருந்துநீர தடமல்கு புகலியுள் ஞானசம் பந்தன்சொன்ன
      அருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவினையே. 3.92.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.93 திருஅம்பர்மாகாளம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      999 படியுளார் விடையினர் பாய்புலி தோலினர் பாவநாசர்
      பொடிகொள்மா மேனியர் பூதமார் படையினர் பூணநூலர்
      கடிகொள்மா மலரிடும் அடியினர் பிடிநடை மங்கையோடும்
      அடிகளார் அருள்புரி திருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 3.93.1
      1000. கையின்மா மழுவினர் கடுவிடம் உண்டவெங் காளகண்டர்
      செய்யமா மேனியர் ஊனமர் உடைதலை பலிதிரிவார்
      வையமார் பொதுவினில் மறையவர் தொழுதெழ நடமதாடும்
      ஐயன்மா தேவியோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 3.93.2
      1001. பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார்பால்
      கரவினர் கனலன வுருவினர் படுதலை பலிகொடேகும்
      இரவினர் பகலெரி கானிடை யாடிய வேடர்பூணும்
      அரவினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 3.93.3
      1002. நீற்றினர் நீண்டவார் சடையினர் படையினர் நிமலர்வெள்ளை
      ஏற்றினர் எரிபுரி கரத்தினர் புரத்துளார் உயிரைவவ்வுங்
      கூற்றினர் கொடியிடை முனிவுற நனிவருங் குலவுகங்கை
      ஆற்றினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 3.93.4
      1003. புறத்தினர் அகத்துளர் போற்றிநின் றழுதெழும் அன்பர்சிந்தை
      திறத்தினர் அறிவிலா செதுமதி தக்கன்றன் வேள்விசெற்ற
      மறத்தினர் மாதவர் நால்வரு காலின்கீழ் அருள்புரிந்த
      அறத்தினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 3.93.5
      1004. பழகமா மலர்பறி திண்டை கொண் டிறைஞ்சுவார் பாற்செறிந்த
      குழகனார் குணம்புகழ தேத்துவா ரவர்பலர் கூடநின்ற
      கழகனார் கரியுரி தாடுகங் காளர்நங் காளியேத்தும்
      அழகனார் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 3.93.6
      1005. சங்கவார் குழையினர் தழலன வுருவினர் தமதருளே
      எங்குமா யிருந்தவர் அருந்தவ முனிவரு களித்துகந்தார்
      பொங்குமா புனல்பர தரிசிலின் வடகரை திருத்தம்பேணி
      அங்கமா றோதுவார் இருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 3.93.7
      1006. பொருசிலை மதனனை பொடிபட விழித்தவர் பொழிலிலங்கை
      குரிசிலை குலவரை கீழுற அடர்த்தவர் கோயில்கூறிற்
      பெருசிலை நலமணி பீலியோ டேலமும் பெருகநுந்தும்
      அரசிலின் வடகரை அழகமர் அம்பர்மா காளந்தானே. 3.93.8
      1007. வரியரா அதன்மிசை துயின்றவன் தானுமா மலருளானும்
      எரியரா அணிகழ லேத்தவொண் ணாவகை யுயர்ந்துபின்னும்
      பிரியராம் அடியவர கணியரா பணிவிலா தவருக்கென்றும்
      அரியராய் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 3.93.9
      1008. சாக்கி கயவர்வன் றலைபறி கையரும் பொய்யினால்நூல்
      ஆக்கிய மொழியவை பிழையவை யாதலில் வழிபடுவீர்
      வீக்கிய அரவுடை கச்சையா னிச்சையா னவர்கட்கெல்லாம்
      ஆக்கிய அரனுறை அம்பர்மா காளமே யடைமின்நீரே. 3.93.10
      1009. செம்பொன்மா மணிகொழி தெழுதிரை வருபுனல் அரிசில்சூழ்ந்த
      அம்பர்மா காளமே கோயிலா அணங்கினோ டிருந்தகோனை
      கம்பினார் நெடுமதிற் காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன
      நம்பிநாள் மொழிபவர கில்லையாம் வினைநலம் பெறுவர்தாமே. 3.93.11
      கம்பினார் நெடுமதில் என்பது ஆகாயம் பின்னிடும்படி மேலோங்கிய மதிலென
      பொருள்படுகின்றது. கம் என்பது ஆகாயம்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.94 திருவெங்குரு - திருமுக்கால்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      1010 விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய
      சுண்ணவெண் பொடியணி வீரே
      சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்
      எண்ணவல் லாரிட ரிலரே. 3.94.1
      1011. வேதியர் தொழுதெழு வெங்குரு மேவிய
      ஆதிய அருமறை யீரே
      ஆதிய அருமறை யீருமை யலர்கொடு
      ஓதிய ருணர்வுடை யோரே. 3.94.2
      1012. விளங்குதண் பொழிலணி வெங்குரு மேவிய
      இளம்பிறை யணிசடை யீரே
      இளம்பிறை யணிசடை யீரும திணையடி
      உளங்கொள உறுபிணி யிலரே. 3.94.3
      1013. விண்டலர் பொழிலணி வெங்குரு மேவிய
      வண்டமர் வளர்சடை யீரே
      வண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்து
      தொண்டர்கள் துயர்பிணி யிலரே. 3.94.4
      1014. மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய
      அக்கினோ டரவசை தீரே
      அக்கினோ டரவசை தீரும தடியிணை
      தக்கவர் உறுவது தவமே. 3.94.5
      1015. வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய
      அந்தமில் பெருமையி னீரே
      அந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு
      சிந்தைசெய் வோர்வினை சிதைவே. 3.94.6
      1016. விழமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
      அழன்மல்கும் அங்கையி னீரே
      அழன்மல்கும் அங்கையி னீருமை யலர்கொடு
      தொழஅல்லல் கெடுவது துணிவே. 3.94.7
      1017. வித்தக மறையவர் வெங்குரு மேவிய
      மத்தநன் மலர்புனை வீரே
      மத்தநன் மலர்புனை வீரும தடிதொழுஞ்
      சித்தம துடையவர் திருவே. 3.94.8
      1018. மேலவர் தொழுதெழு வெங்குரு மேவிய
      ஆலநன் மணிமிடற் றீரே
      ஆலநன் மணிமிடற் றீரும தடிதொழுஞ்
      சீலம துடையவர் திருவே. 3.94.9
      1019. விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
      அரைமல்கு புலியத ளீரே
      அரைமல்கு புலியத ளீரும தடியிணை
      உரைமல்கு புகழவர் உயர்வே. 3.94.10
      இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 3.94.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.95 திருஇன்னம்பர் - திருமுக்கால்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      1020 எண்டிசை கும்புகழ் இன்னம்பர் மேவிய
      வண்டிசை குஞ்சடை யீரே
      வண்டிசை குஞ்சடை யீருமை வாழ்த்துவார்
      தொண்டிசை குந்தொழி லோரே. 3.95.1
      1021. யாழ்நரம் பின்னிசை இன்னம்பர் மேவிய
      தாழ்தரு சடைமுடி யீரே
      தாழ்தரு சடைமுடி யீருமை சார்பவர்
      ஆழ்துயர் அருவினை யிலரே. 3.95.2
      1022. இளமதி நுதலியோ டின்னம்பர் மேவிய
      வளமதி வளர்சடை யீரே
      வளமதி வளர்சடை யீருமை வாழ்த்துவார்
      உளமதி மிகவுடை யோரே. 3.95.3
      1023. இடிகுரல் இசைமுரல் இன்னம்பர் மேவிய
      கடிகமழ் சடைமுடி யீரே
      கடிகமழ் சடைமுடி யீரும கழல்தொழும்
      அடியவர் அருவினை யிலரே. 3.95.4
      1024. இமையவர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
      உமையொரு கூறுடை யீரே
      உமையொரு கூறுடை யீருமை உள்குவார்
      அமைகில ராகிலர் அன்பே. 3.95.5
      1025. எண்ணரும் புகழுடை இன்னம்பர் மேவிய
      தண்ணருஞ் சடைமுடி யீரே
      தண்ணருஞ் சடைமுடி யீருமை சார்பவர்
      விண்ணவர் அடைவுடை யோரே. 3.95.6
      1026. எழில்திக ழும்பொழில் இன்னம்பர் மேவிய
      நிழல்திகழ் மேனியி னீரே
      நிழல்திகழ் மேனியி னீருமை நினைபவர்
      குழறிய கொடுவினை யிலரே. 3.95.7
      1027. ஏத்தரும் புகழணி இன்னம்பர் மேவிய
      தூர்த்தனை தொலைவுசெய் தீரே
      தூர்த்தனை தொலைவுசெய் தீருமை தொழுபவர்
      கூர்த்தநற் குணமுடை யோரே. 3.95.8
      1028. இயலுளோர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
      அயனுமால் அறிவரி யீரே
      அயனுமால் அறிவரி யீரும தடிதொழும்
      இயலுளார் மறுபிற பிலரே. 3.95.9
      1029. ஏரமர் பொழிலணி இன்னம்பர் மேவிய
      தேரமண் சிதைவுசெய் தீரே
      தேரமண் சிதைவுசெய் தீருமை சேர்பவ
      ராழ்துயர் அருவினை யிலரே. 3.95.10
      1030. ஏடமர் பொழிலணி இன்னம்பர் ஈசனை
      நாடமர் ஞானசம் பந்தன்
      நாடமர் ஞானசம் பந்தன நற்றமிழ்
      பாடவல் லார்பழி யிலரே. 3.95.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.96 திருநெல்வெண்ணெய் - திருமுக்கால்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      1031 நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும்
      நெல்வெணெய் மேவிய நீரே
      நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறுஞ்
      சொல்வணம் இடுவது சொல்லே. 3.96.1
      1032. நிச்சலும் அடியவர் தொழுதெழு நெல்வெணெ
      கச்சிள அரவசை தீரே
      கச்சிள அரவசை தீருமை காண்பவர்
      அச்சமொ டருவினை யிலரே. 3.96.2
      1033. நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
      அரைவிரி கோவண தீரே
      அரைவிரி கோவண தீருமை யலர்கொடு
      உரைவிரி போருயர தோரே. 3.96.3
      1034. நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
      ஊர்மல்கி உறையவல் லீரே
      ஊர்மல்கி உறையவல் லீருமை யுள்குதல்
      பார்மல்கு புகழவர் பண்பே. 3.96.4
      1035. நீடிளம் பொழிலணி நெல்வெணெய் மேவிய
      ஆடிளம் பாப்பசை தீரே
      ஆடிளம் பாப்பசை தீருமை அன்பொடு
      பாடுளம் உடையவர் பண்பே. 3.96.5
      1036. நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
      பெற்றிகொள் பிறைநுத லீரே
      பெற்றிகொள் பிறைநுத லீருமை பேணுதல்
      கற்றறி வோர்கள்தங் கடனே. 3.96.6
      1037. நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய
      கறையணி மிடறுடை யீரே
      கறையணி மிடறுடை யீருமை காண்பவர்
      உறைவதும் உம்மடி கீழே. 3.96.7
      1038. நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்
      றரக்கனை யசைவுசெய் தீரே
      அரக்கனை யசைவுசெய் தீருமை யன்புசெய்
      திருக்கவல் லாரிட ரிலரே. 3.96.8
      1039. நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்
      றிருவரை யிடர்கள்செய் தீரே
      இருவரை இடர்கள்செய் தீருமை யிசைவொடு
      பரவவல் லார்பழி யிலரே. 3.96.9
      1040. நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய
      சாக்கி சமண்கெடு தீரே
      சாக்கி சமண்கெடு தீருமை சார்வது
      பாக்கியம் உடையவர் பண்பே. 3.96.10
      1041. நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை
      நலமல்கு ஞானசம் பந்தன்
      நலமல்கு ஞானசம் பந்தன செந்தமிழ்
      சொலமல்கு வார்துய ரிலரே. 3.96.11
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வெண்ணையப்பர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.97 திருச்சிறுகுடி - திருமுக்கால்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      1042 திடமலி மதிலணி சிறுகுடி மேவிய
      படமலி அரவுடை யீரே
      படமலி அரவுடை யீருமை பணிபவர்
      அடைவதும் அமருல கதுவே. 3.97.1
      1043. சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய
      சுற்றிய சடைமுடி யீரே
      சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல்
      உற்றவர் உறுபிணி யிலரே. 3.97.2
      1044. தெள்ளிய புனலணி சிறுகுடி மேவிய
      துள்ளிய மானுடை யீரே
      துள்ளிய மானுடை யீரும தொழுகழல்
      உள்ளுதல் செயநலம் உறுமே. 3.97.3
      1045. செந்நெல வயலணி சிறுகுடி மேவிய
      ஒன்னலர் புரமெரி தீரே
      ஒன்னலர் புரமெரி தீருமை யுள்குவார்
      சொன்னலம் உடையவர் தொண்டே. 3.97.4
      1046. செற்றினின் மலிபுனல் சிறுகுடி மேவிய
      பெற்றிகொள் பிறைமுடி யீரே
      பெற்றிகொள் பிறைமுடி யீருமை பேணிநஞ்
      சற்றவர் அருவினை யிலரே. 3.97.5
      1047. செங்கயல் புனலணி சிறுகுடி மேவிய
      மங்கையை இடமுடை யீரே
      மங்கையை இடமுடை யீருமை வாழ்த்துவார்
      சங்கைய திலர்நலர் தவமே. 3.97.6
      1048. செறிபொழில் தழுவிய சிறுகுடி மேவிய
      வெறிகமழ் சடைமுடி யீரே
      வெறிகமழ் சடைமுடி யீருமை விரும்பிமெ
      நெறியுணர் வோருயர தோரே. 3.97.7
      1049. திசையவர் தொழுதெழு சிறுகுடி மேவிய
      தசமுகன் உரநெரி தீரே
      தசமுகன் உரநெரி தீருமை சார்பவர்
      வசையறும் அதுவழி பாடே. 3.97.8
      1050. செருவரை வயலமர் சிறுகுடி மேவிய
      இருவரை அசைவுசெய் தீரே
      இருவரை அசைவுசெய் தீருமை யேத்துவார்
      அருவினை யொடுதுய ரிலரே. 3.97.9
      1051. செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய
      புத்தரோ டமண்புற தீரே
      புத்தரோ டமண்புற தீருமை போற்றுதல்
      பத்தர்கள் தம்முடை பரிசே. 3.97.10
      1052. தேனமர் பொழிலணி சிறுகுடி மேவிய
      மானமர் கரமுடை யீரே
      மானமர் கரமுடை யீருமை வாழ்த்திய
      ஞானசம் பந்தன தமிழே. 3.97.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மங்களேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.98 திருவீழிமிழலை - திருமுக்கால்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      1053 வெண்மதி தவழ்மதில் மிழலையு ளீர்சடை
      ஒண்மதி அணியுடை யீரே
      ஒண்மதி அணியுடை யீருமை உணர்பவர்
      கண்மதி மிகுவது கடனே. 3.98.1
      1054. விதிவழி மறையவர் மிழலையு ளீர்நடம்
      சதிவழி வருவதோர் சதிரே
      சதிவழி வருவதோர் சதிருடை யீருமை
      அதிகுணர் புகழ்வதும் அழகே. 3.98.2
      1055. விரைமலி பொழிலணி மிழலையு ளீரொரு
      வரைமிசை உறைவதும் வலதே
      வரைமிசை உறைவதோர் வலதுடை யீருமை
      உரைசெயும் அவைமறை யொலியே. 3.98.3
      1056. விட்டெழில் பெறுபுகழ் மிழலையு ளீர்கையில்
      இட்டெழில் பெறுகிற தெரியே
      இட்டெழில் பெறுகிற தெரியுடை யீர்புரம்
      அட்டது வரைசிலை யாலே. 3.98.4
      1057. வேணிகர் கண்ணியர் மிழலையு ளீர்நல
      பானிகர் உருவுடை யீரே
      பானிகர் உருவுடை யீரும துடனுமை
      தான்மிக உறைவது தவமே. 3.98.5
      1058. விரைமலி பொழிலணி மிழலையு ளீர்சென்னி
      நிரையுற அணிவது நெறியே
      நிரையுற அணிவதோர் நெறியுடை யீரும
      தரையுற அணிவன அரவே. 3.98.6
      1059. விசையுறு புனல்வயல் மிழலையு ளீர்அர
      வசைவுற அணிவுடை யீரே
      அசைவுற அணிவுடை யீருமை அறிபவர்
      நசையுறு நாவினர் தாமே. 3.98.7
      1060. விலங்கலொண் மதிலணி மிழலையு ளீரன்றவ்
      இலங்கைமன் இடர்கெடு தீரே
      இலங்கைமன் இடர்கெடு தீருமை யேத்துவார்
      புலன்களை முனிவது பொருளே. 3.98.8
      1061. வெற்பமர் பொழிலணி மிழலையு ளீருமை
      அற்புதன் அயனறி யானே
      அற்புதன் அயனறி யாவகை நின்றவன்
      நற்பதம் அறிவது நயமே. 3.98.9
      1062. வித்தக மறையவர் மிழலையு ளீரன்று
      புத்தரோ டமணழி தீரே
      புத்தரோ டமணழி தீருமை போற்றுவார்
      பத்திசெய் மனமுடை யவரே. 3.98.10
      1063. விண்பயில் பொழிலணி மிழலையுள் ஈசனை
      சண்பையுள் ஞானசம் பந்தன்
      சண்பையுள் ஞானசம் பந்தன தமிழிவை
      ஒண்பொருள் உணர்வதும் உணர்வே. 3.98.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.99 திருமுதுகுன்றம் - திருமுக்கால்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      1064 முரசதிர தெழுதரு முதுகுன்ற மேவிய
      பரசமர் படையுடை யீரே
      பரசமர் படையுடை யீருமை பரவுவார்
      அரசர்கள் உலகில்ஆ வாரே. 3.99.1
      1065. மொய்குழ லாளொடு முதுகுன்ற மேவிய
      பையர வம்மசை தீரே
      பையர வம்மசை தீருமை பாடுவார்
      நைவிலர் நாடொறும் நலமே. 3.99.2
      1066. முழவமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
      மழவிடை யதுவுடை யீரே
      மழவிடை யதுவுடை யீருமை வாழ்த்துவார்
      பழியொடு பகையிலர் தாமே. 3.99.3
      1067. முருகமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
      உருவமர் சடைமுடி யீரே
      உருவமர் சடைமுடி யீருமை யோதுவார்
      திருவொடு தேசினர் தாமே. 3.99.4
      இப்பதிகத்தில்567-ம்செய்யுட்கள்மறைந்து போயின. 3.99.5-7
      1068. முத்தி தருமுயர் முதுகுன்ற மேவிய
      பத்து முடியடர தீரே
      பத்து முடியடர தீருமை பாடுவார்
      சித்தநல் லவ்வடி யாரே. 3.99.8
      1069. முயன்றவர் அருள்பெறு முதுகுன்ற மேவியன்
      றியன்றவ ரறிவரி யீரே
      இயன்றவ ரறிவரி யீருமை யேத்துவார்
      பயன்றலை நிற்பவர் தாமே. 3.99.9
      1070. மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய
      கட்டமண் தேரைக்கா தீரே
      கட்டமண் தேரைக்கா தீருமை கருதுவார்
      சிட்டர்கள் சீர்பெறு வாரே. 3.99.10
      1071. மூடிய சோலைசூழ் முதுகுன்ற தீசனை
      நாடிய ஞானசம் பந்தன்
      நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ்
      பாடிய அவர்பழி யிலரே. 3.99.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.100 திருத்தோணிபுரம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      1072 கரும்பமர் வில்லியை காய்ந்துகாதற் காரிகை மாட்டருளி
      அரும்பமர் கொங்கையோர் பால்மகிழ்ந்த அற்புதஞ் செப்பரிதாற்
      பெரும்பக லேவந்தென் பெண்மைகொண்டு பேர்ந்தவர் சேர்ந்தஇடஞ்
      சுரும்பமர் சோலைகள் சூழ்ந்தசெம்மை தோணி புரந்தானே. 3.100.1
      1073. கொங்கியல் பூங்குழற் கொவ்வைச்செவ்வா கோமள மாதுமையாள்
      பங்கிய லுந்திரு மேனியெங்கும் பால்வெள்ளை நீறணிந்து
      சங்கியல் வெள்வளை சோரவந்தென் சாயல்கொண் டார்தமதூர்
      துங்கியன் மாளிகை சூழ்ந்தசெம்மை தோணி புரந்தானே. 3.100.2
      1074. மத்த களிற்றுரி போர்க்கக்கண்டு மாதுமை பேதுறலுஞ்
      சித்த தெளியநின் றாடியேறூர் தீவண்ணர் சில்பலிக்கென்
      றொத்தபடி வந்தென் னுள்ளங்கொண்ட ஒருவர கிடம்போலு
      துத்தநல் லின்னிசை வண்டுபாடு தோணி புரந்தானே. 3.100.3
      இப்பதிகத்தில் 4567-ம்செய்யுட்கள்மறைந்துபோயின. 3.100.4-7
      1075. வள்ள லிருந்த மலையதனை வலஞ்செய்தல் வாய்மையென
      உள்ளங் கொள்ளாது கொதித்தெழுந்தன் றெடுத்தோன் உரம்நெரிய
      மெள்ள விரல்வைத்தென் உள்ளங்கொண்டார் மேவு மிடம்போலு
      துள்ளொலி வெள்ளத்தின் மேல்மிதந்த தோணி புரந்தானே. 3.100.8
      1076. வெல்பற வைக்கொடி மாலும்மற்றை விரைமலர் மேலயனும்
      பல்பற வைப்படி யாயுயர்ந்தும் பன்றிய தாய்ப்பணிந்துஞ்
      செல்வற நீண்டெஞ் சிந்தைகொண்ட செல்வ ரிடம்போலு
      தொல்பற வைசு தோங்குசெம்மை தோணி புரந்தானே. 3.100.9
      1077. குண்டிகை பீலித டோ டுநின்று கோசரங் கொள்ளியரும்
      மண்டைகை யேந்தி மனங்கொள்கஞ்சி யூணரும் வாய்மடிய
      இண்டை புனைந்தெரு தேறிவந்தென் எழில்கவர தாரிடமா
      தொண்டிசை பாடல றாததொன்மை தோணி புரந்தானே. 3.100.10
      1078. தூமரு மாளிகை மாடம்நீடு தோணிபுர திறையை
      மாமறை நான்கினொ டங்கமாறும் வல்லவன் வாய்மையினால்
      நாமரு கேள்வி நலந்திகழும் ஞானசம் பந்தன்சொன்ன
      பாமரு பாடல்கள் பத்தும்வல்லார் பார்முழு தாள்பவரே. 3.100.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.101 திருஇராமேச்சுரம்
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      1079 திரிதரு மாமணி நாகமாட திளைத்தொரு தீயழல்வாய்
      நரிகதி கவெரி யேந்தியாடும் நலமே தெரிந்துணர்வார்
      எரிகதிர் முத்தம் இலங்குகானல் இராமே சுரமேய
      விரிகதிர் வெண்பிறை மல்குசென்னி விமலர் செயுஞ்செயலே. 3.101.1
      1080. பொறிகிளர் பாம்பரை யார்த்தயலே புரிவோ டுமைபாட
      தெறிகிள ரப்பெயர தெல்லியாடு திறமே தெரிந்துணர்வார்
      எறிகிளர் வெண்டிரை வந்துபேரும் இராமே சுரமேய
      மறிகிளர் மான்மழு புல்குகையெம் மணாளர் செயுஞ்செயலே. 3.101.2
      1081. அலைவளர் தண்புனல் வார்சடைமேல் அடக்கி யொருபாகம்
      மலைவளர் காதலி பாடஆடி மயக்கா வருமாட்சி
      இலைவளர் தாழை முகிழ்விரியும் இராமே சுரமேயார்
      தலைவளர் கோலநன் மாலைசூடு தலைவர் செயுஞ்செயலே. 3.101.3
      1082. மாதன நேரிழை யேர்தடங்கண் மலையான் மகள்பாட
      தேதெரி அங்கையில் ஏந்தியாடு திறமே தெரிந்துணர்வார்
      ஏதமி லார்தொழு தேத்திவாழ்த்தும் இராமே சுரமேயார்
      போதுவெண் டிங்கள்பைங் கொன்றைசூடும் புனிதர் செயுஞ்செயலே. 3.101.4
      1083. சூலமோ டொண்மழு நின்றிலங்க சுடுகா டிடமா
      கோலநன் மாதுடன் பாடஆடுங் குணமே குறித்துணர்வார்
      ஏலந றும்பொழில் வண்டுபாடும் இராமே சுரமேய
      நீலமார் கண்ட முடையவெங்கள் நிமலர் செயுஞ்செயலே. 3.1015
      1084. கணைபிணை வெஞ்சிலை கையிலேந்தி காமனை காய்ந்தவர்தாம்
      இணைபிணை நோக்கிநல் லாளொடாடும் இயல்பின ராகிநல்ல
      இணைமலர் மேலனம் வைகுகானல் இராமே சுரமேயார்
      அணைபிணை புல்கு கரந்தைசூடும் அடிகள் செயுஞ்செயலே. 3.101.6
      1085. நீரினார் புன்சடை பின்புதாழ நெடுவெண் மதிசூடி
      ஊரினார் துஞ்சிருள் பாடியாடும் உவகை தெரிந்துணர்வார்
      ஏரினார் பைம்பொழில் வண்டுபாடும் இராமே சுரமேய
      காரினார் கொன்றைவெண் டிங்கள்சூடுங் கடவுள் செயுஞ்செயலே. 3.101.7
      1086. பொன்றிகழ் சுண்ணவெண் ணீறுபூசி புலித்தோ லுடையாக
      மின்றிகழ் சோதியர் பாடலாடல் மிக்கார் வருமாட்சி
      என்றுநல் லோர்கள் பரவியேத்தும் இராமே சுரமேயார்
      குன்றினா லன்றர கன்றடந்தோள் அடர்த்தார் கொளுங்கொள்கையே. 3.101.8
      1087. கோவலன் நான்முகன் நோக்கொணாத குழகன் அழகாய
      மேவலன் ஒள்ளெரி ஏந்தியாடும் இமையோர் இறைமெய்ம்மை
      ஏவல னார்புகழ தேத்திவாழ்த்தும் இராமே சுரமேய
      சேவல வெல்கொடி யேந்துகொள்கையெம் மிறைவர் செயுஞ்செயலே. 3.101.9
      1088. பின்னொடு முன்னிடு தட்டைச்சாத்தி பிரட்டே திரிவாரும்
      பொன்னெடுஞ் சீவர போர்வையார்கள் புறங்கூறல் கேளாதே
      இன்னெடுஞ் சோலைவண் டியாழ்முரலும் இராமே சுரமேய
      பன்னெடு வெண்டலை கொண்டுழலும் பரமர் செயுஞ்செயலே. 3.101.10
      1089. தேவியை வவ்விய தென்னிலங்கை அரையன் திறல்வாட்டி
      ஏவியல் வெஞ்சிலை யண்ணல்நண்ணும் இராமே சுரத்தாரை
      நாவியன் ஞானசம் பந்தன்நல்ல மொழியான் நவின்றேத்தும்
      பாவியன் மாலைவல் லாரவர்தம் வினையாயின பற்றறுமே. 3.101.11
      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் -இராமநாதேசுவரர் தேவியார் - பர்வதவர்த்தனி.
      இது மலைவளர்காதலியென்று தமிழிற்சொல்லப்படும்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.102 திருநாரையூர்
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      1090 காம்பினை வென்றமென் தோளிபாகங் கலந்தான் நலந்தாங்கு
      தேம்புனல் சூழ்திகழ் மாமடுவின் திருநாரை யூர்மேய
      பூம்புனல் சேர்புரி புன்சடையான் புலியின் னுரிதோன்மேற்
      பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே. 3.102.1
      1091. தீவினை யாயின தீர்க்கநின்றான் திருநாரை யூர்மேயான்
      பூவினை மேவு சடைமுடியான் புடைசூழ பலபூதம்
      ஆவினில் ஐந்துங்கொண் டாட்டுகந்தான் அடங்கார் மதில்மூன்றும்
      ஏவினை யெய்தழி தான்கழலே பரவா எழுவோமே. 3.102.2
      1092. மாயவன் சேயவன் வெள்ளியவன் விடஞ்சேரும் மைமிடற்றன்
      ஆயவ னாகியோர் அந்தரமும் மவனென்று வரையாக
      தீயவன் நீரவன் பூமியவன் திருநாரை யூர்தன்னில்
      மேயவ னைத்தொழு வாரவர்மேல் வினையாயின வீடுமே. 3.102.3
      1093. துஞ்சிரு ளாடுவர் தூமுறுவல் துளங்கும் உடம்பினராய்
      அஞ்சுட ராரெரி யாடுவர்ஆர் அழலார் விழிக்கண்ணி
      னஞ்சுமிழ் நாகம் அரைக்கசைப்பர் நலனோங்கு நாரையூர்
      எஞ்சிவ னார்க்கடி மைப்படுவார கினியில்லை யேதமே. 3.102.4
      1094. பொங்கிளங் கொன்றையி னார்கடலில் விடமுண் டிமையோர்கள்
      தங்களை ஆரிடர் தீரநின்ற தலைவர் சடைமேலோர்
      திங்களை வைத்தனல் ஆடலினார் திருநாரை யூர்மேய
      வெங்கனல் வெண்ணீ றணியவல்லார் அவரே விழுமியரே. 3.102.5
      1095. பாருறு வாய்மையி னார்பரவும் பரமேட்டி பைங்கொன்றை
      தாருறு மார்புடை யான்மலையின் தலைவன் மலைமகளை
      சீருறு மாமறு கிற்சிறைவண் டறையு திருநாரை
      யூருறை யெம்மிறை வர்க்கிவை யொன்றொடொன் றொவ்வாவே. 3.102.6
      1096. கள்ளி இடுதலை யேந்துகையர் கரிகாடர் கண்ணுதலர்
      வெள்ளிய கோவண ஆடைதன்மேன் மிளிரா டரவார்த்து
      நள்ளிருள் நட்டம தாடுவர்நன் னலன்ஓங்கு நாரையூர்
      உள்ளிய போழ்திலெம் மேல்வருவல் வினையாயின வோடுமே. 3.102.7
      1097. நாமம் எனைப்பல வும்முடையான் நலனோங்கு நாரையூர்
      தாமொம் மெனப்பறை யாழ்குழ றாளார் கழல்பயில
      ஈம விளக்கெரி சூழ்சுடலை யியம்பு மிடுகாட்டிற்
      சாமம் உரைக்கநின் றாடுவானு தழலாய சங்கரனே. 3.102.8
      1098. ஊனுடை வெண்டலை கொண்டுழல்வான் ஒளிர்புன் சடைமேலோர்
      வானிடை வெண்மதி வைத்துகந்தான் வரிவண்டி யாழ்முரல
      தேனுடை மாமலர் அன்னம்வைகு திருநாரை யூர்மேய
      ஆனிடை யைந்துக தானடியே பரவா அடைவோமே. 3.102.9
      1099. தூசு புனைதுவ ராடைமேவு தொழிலா ருடம்பினிலுள்
      மாசு புனைந்துடை நீத்தவர்கள் மயல்நீர்மை கேளாதே
      தேசுடை யீர்கள் தெளிந்தடைமின் திருநாரை யூர்தன்னில்
      பூசு பொடித்தலை வர்அடியார் அடியே பொருத்தமே. 3.102.10
      1100. தண்மதி தாழ்பொழில் சூழ்புகலி தமிழ்ஞான சம்பந்தன்
      ஒண்மதி சேர்சடை யான்உறையு திருநாரை யூர்தன்மேற்
      பண்மதி யாற்சொன்ன பாடல்பத்தும் பயின்றார் வினைபோகி
      மண்மதி யாதுபோய் வான்புகுவர் வானோர் எதிர்கொளவே. 3.102.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சௌந்தரேசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.103 திருவலம்புரம்
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      1101 கொடியுடை மும்மதி லூடுருவ குனிவெஞ் சிலைதாங்கி
      இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்தே
      துடியிடை யாளையோர் பாகமாக துதைந்தா ரிடம்போலும்
      வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே. 3.103.1
      1102. கோத்தகல் லாடையுங் கோவணமுங் கொடுகொட்டி கொண்டொருகை
      தேய்த்தன் றனங்கனை தேசழித்து திசையார் தொழுதேத்த
      காய்த்தகல் லாலதன் கீழிருந்த கடவுள் ளிடம்போலும்
      வாய்த்தமு தீத்தொழில் நான்மறையோர் வலம்புர நன்னகரே. 3.103.2
      1103. நொய்யதோர் மான்மறி கைவிரலின் நுனைமேல் நிலையாக்கி
      மெய்யெரி மேனிவெண் ணீறுபூசி விரிபுன் சடைதாழ
      மையிருஞ் சோலை மணங்கமழ இருந்தா ரிடம்போலும்
      வைகலும் மாமுழ வம்மதிரும் வலம்புர நன்னகரே. 3.103.3
      1104. ஊனம ராக்கை யுடம்புதன்னை யுணரின் பொருளன்று
      தேனமர் கொன்றையி னானடிக்கே சிறுகாலை யேத்துமினோ
      ஆனமர் ஐந்துங்கொண் டாட்டுகந்த அடிகள் இடம்போலும்
      வானவர் நாடொறும் வந்திறைஞ்சும் வலம்புர நன்னகரே. 3.103.4
      1105. செற்றெறி யுந்திரை யார்கலுழி செழுநீர்கிளர் செஞ்சடைமேல்
      அற்றறி யாதன லாடுநட்ட மணியார் தடங்கண்ணி
      பெற்றறி வார்எரு தேறவல்ல பெருமான் இடம்போலும்
      வற்றறி யாப்புனல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே. 3.103.5
      1106. உண்ணவண் ணத்தொளி நஞ்சமுண்டு வுமையோ டுடனாகி
      சுண்ணவண் ணப்பொடி மேனிபூசி சுடர்ச்சோதி நின்றிலங்க
      பண்ணவண் ணத்தன பாணிசெ பயின்றா ரிடம்போலும்
      வண்ணவண் ணப்பறை பாணியறா வலம்புர நன்னகரே. 3.103.6
      1107. புரிதரு புன்சடை பொன்றயங்க புரிநூல் புரண்டிலங்க
      விரைதரு வேழத்தின் ஈருரிதோல் மேல்மூடி வேய்புரைதோள்
      அரைதரு பூந்துகில் ஆரணங்கை யமர்ந்தா ரிடம்போலும்
      வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறா வலம்புர நன்னகரே. 3.103.7
      1108. தண்டணை தோளிரு பத்தினொடு தலைப துடையானை
      ஒண்டணை மாதுமை தான்நடுங்க ஒருகால் விரலூன்றி
      மிண்டது தீர்த்தருள் செய்யவல்ல விகிர்தர கிடம்போலும்
      வண்டணை தன்னொடு வைகுபொழில் வலம்புர நன்னகரே. 3.103.8
      1109. தாருறு தாமரை மேலயனு தரணி யளந்தானு
      தேர்வறி யாவகை யால்இகலி திகைத்து திரிந்தேத்த
      பேர்வறி யாவகை யால்நிமிர்ந்த பெருமான் இடம்போலும்
      வாருறு சோலை மணங்கமழும் வலம்புர நன்னகரே. 3.103.9
      1110. காவிய நற்றுவ ராடையினார் கடுநோன்பு மேற்கொள்ளும்
      பாவிகள் சொல்லை பயின்றறியா பழந்தொண்டர் உள்ளுருக
      ஆவியுள் நின்றருள் செய்யவல்ல அழகர் இடம்போலும்
      வாவியின் நீர்வயல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே. 3.103.10
      1111. நல்லியல் நான்மறை யோர்புகலி தமிழ்ஞான சம்பந்தன்
      வல்லி தோலுடை யாடையினான் வலம்புர நன்னகரை
      சொல்லிய பாடல்கள் பத்துஞ்சொல்ல வல்லவர் தொல்வினைபோ
      செல்வன சேவடி சென்றணுகி சிவலோகஞ் சேர்வாரே. 3.103.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வலம்புரநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.104 திருப்பருதிநியமம்
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      1112 விண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழ
      பெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசி பேணார் பலிதேர்ந்து
      கண்கொண்ட சாயலோ டேர்கவர்ந்த கள்வர கிடம்போலும்
      பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பருதி நியமமே. 3.104.1
      1113. அரவொலி வில்லொலி அம்பினொலி அடங்கார் புரமூன்றும்
      நிரவவல் லார்நிமிர் புன்சடைமேல் நிரம்பா மதிசூடி
      இரவில் புகுந்தென் னெழில்கவர்ந்த இறைவர கிடம்போலும்
      பரவவல் லார்வினை பாழ்படுக்கும் பருதி நியமமே. 3.104.2
      1114. வாண்முக வார்குழல் வாள்நெடுங்கண் வளைத்தோள் மாதஞ்ச
      நீண்முக மாகிய பைங்களிற்றின் உரிமேல் நிகழ்வித்து
      நாண்முகங் காட்டி நலங்கவர்ந்த நாதர கிடம்போலும்
      பாண்முக வண்டினம் பாடியாடும் பருதி நியமமே. 3.104.3
      1115. வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி விரிபுன் சடைதாழ
      துஞ்சிருள் மாலையும் நண்பகலு துணையார் பலிதேர்ந்து
      அஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங் கவர்ந்தார கிடம்போலும்
      பஞ்சுரம் பாடிவண் டியாழ்முரலும் பருதி நியமமே. 3.104.4
      1116. நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண் மதிசூடி
      தார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்து தலையார் பலிதேர்வார்
      ஏர்புல்கு சாயல் எழில்கவர்ந்த இறைவர கிடம்போலும்
      பார்புல்கு தொல்புக ழால்விளங்கும் பருதி நியமமே. 3.104.5
      1117. வெங்கடுங் காட்டக தாடல்பேணி விரிபுன் சடைதாழ
      திங்கள் திருமுடி மேல்விளங்க திசையார் பலிதேர்வார்
      சங்கொடு சாயல் எழில்கவர்ந்த சைவர கிடம்போலும்
      பைங்கொடி முல்லை படர்புறவிற் பருதி நியமமே. 3.104.6
      1118. பிறைவளர் செஞ்சடை பின்தயங்க பெரிய மழுவேந்தி
      மறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
      இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர கிடம்போலும்
      பறையொலி சங்கொலி யால்விளங்கும் பருதி நியமமே. 3.104.7
      1119. ஆசடை வானவர் தானவரோ டடியார் அமர்ந்தேத்த
      மாசடை யாதவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
      காசடை மேகலை சோரவுள்ளங் கவர்ந்தார கிடம்போலும்
      பாசடை தாமரை வைகுபொய்கை பருதி நியமமே. 3.104.8
      1120. நாடினர் காண்கிலர் நான்முகனு திருமால் நயந்தேத்த
      கூடலர் ஆடலர் ஆகிநாளுங் குழகர் பலிதேர்வார்
      ஏடலர் சோர எழில்கவர்ந்த இறைவர கிடம்போலும்
      பாடலர் ஆடல ராய்வணங்கும் பருதி நியமமே. 3.104.9
      1121. கல்வளர் ஆடையர் கையிலுண்ணுங் கழுக்கள் இழுக்கான
      சொல்வள மாக நினைக்கவேண்டா சுடுநீ றதுவாடி
      நல்வளை சோர நலங்கவர்ந்த நாதர கிடம்போலும்
      பல்வளர் முல்லையங் கொல்லைவேலி பருதி நியமமே. 3.104.10
      1122. பையர வம்விரி காந்தள்விம்மு பருதி நியமத்து
      தையலொர் பாகம் அமர்ந்தவனை தமிழ்ஞான சம்பந்தன்
      பொய்யிலி மாலை புனைந்தபத்தும் பரவி புகழ்ந்தேத்த
      ஐயுற வில்லை பிறப்பறுத்தல் அவலம் அடையாவே. 3.104.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பருதியப்பர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.105 திருக்கலிக்காமூர்
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      1123 மடல்வரை யின்மது விம்முசோலை வயல்சூழ தழகாருங்
      கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ் சொரியுங் கலிக்காமூர்
      உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய ஒருவன் கழலேத்த
      இடர்தொட ராவினை யானசிந்தும் இறைவன் னருளாமே. 3.105.1
      1124. மைவரை போற்றிரை யோடுகூடி புடையே மலிந்தோதங்
      கைவரை யால்வளர் சங்கமெங்கு மிருக்குங் கலிக்காமூர்
      மெய்வரை யான்மகள் பாகன்தன்னை விரும்ப உடல்வாழும்
      ஐவரை ஆசறு தாளுமென்பர் அதுவுஞ் சரதமே. 3.105.2
      1125. தூவிய நீர்மல ரேந்திவை தவர்கள் தொழுதேத்த
      காவியின் நேர்விழி மாதரென்றுங் கவினார் கலிக்காமூர்
      மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்
      ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே. 3.105.3
      1126. குன்றுகள் போற்றிரை உந்தியந்தண் மணியார் தரமேதி
      கன்றுடன் புல்கியா யம்மனைசூழ் கவினார் கலிக்காமூர்
      என்றுணர் ஊழியும் வாழுமெந்தை பெருமான் அடியேத்தி
      நின்றுணர் வாரை நினையகில்லார் நீசர் நமன்தமரே. 3.105.4
      1127. வானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடலோதங்
      கானிடை நீழலிற் கண்டல்வாழுங் கழிசூழ் கலிக்காமூர்
      ஆனிடை ஐந்துக தாடினானை அமரர் தொழுதேத்த
      நானடை வாம்வண மின்புதந்த நலமே நினைவோமே. 3.105.5
      1128. துறைவளர் கேதகை மீதுவாசஞ் சூழ்வான் மலிதென்றல்
      கறைவள ருங்கட லோதமென்றுங் கலிக்குங் கலிக்காமூர்
      மறைவள ரும்பொரு ளாயினானை மனத்தால் நினைந்தேத்த
      நிறைவள ரும்புக ழெய்தும்வாதை நினையா வினைபோமே. 3.105.6
      1129. கோலநன் மேனியின் மாதர்மைந்தர் கொணர் மங்கிலியத்திற்
      காலமும் பொய்க்கினு தாம்வழுவா தியற்றுங் கலிக்காமூர்
      ஞாலமு தீவளி ஞாயிறாய நம்பன் கழலேத்தி
      ஓலமி டாதவர் ஊழியென்றும் உணர்வை துறந்தாரே. 3.105.7
      1130. ஊரர வந்தலை நீண்முடியான் ஒலிநீர் உலகாண்டு
      காரர வக்கடல் சூழவாழும் பதியாம் கலிக்காமூர்
      தேரர வல்குல்அம் பேதையஞ்ச திருந்து வரைபேர்த்தான்
      ஆரர வம்பட வைத்தபாதம் உடையான் இடமாமே. 3.105.8
      1131. அருவரை யேந்திய மாலும்மற்றை அலர்மேல் உறைவானும்
      இருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான் கலிக்காமூர்
      ஒருவரை யான்மகள் பாகன்றன்னை உணர்வாற் றொழுதே
      திருமரு வுஞ்சிதை வில்லைசெம்மை தேசுண் டவர்பாலே. 3.105.9
      1132. மாசு பிறக்கிய மேனியாரும் மருவு துவராடை
      மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர்தோற்றங்
      காசினி நீர்த்திரள் மண்டியெங்கும் வளமார் கலிக்காமூர்
      ஈசனை யெந்தை பிரானையேத்தி நினைவார் வினைபோமே. 3.105.10
      1133. ஆழியுள் நஞ்சமு தாரவுண்டன் றமரர கமுதுண்ண
      ஊழிதோ றும்முள ராவளித்தான் உலக துயர்கின்ற
      காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன தமிழாற் கலிக்காமூர்
      வாழியெம் மானை வணங்கியேத்த மருவா பிணிதானே. 3.105.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சுந்தரேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.106 திருவலஞ்சுழி
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      1134 பள்ளம தாய படர்சடைமேற் பயிலு திரைக்கங்கை
      வெள்ளம தார விரும்பிநின்ற விகிர்தன் விடையேறும்
      வள்ளல் வலஞ்சுழி வாணனென்று மருவி நினைந்தேத்தி
      உள்ளம் உருக உணருமின்கள் உறுநோ யடையாவே. 3.106.1
      1135. காரணி வெள்ளை மதியஞ்சூடி கமழ்புன் சடைதன்மேற்
      தாரணி கொன்றையு தண்ணெருக்கு தழை நுழைவித்து
      வாரணி கொங்கை நல்லாள்தனோடும் வலஞ்சுழி மேவியவர்
      ஊரணி பெய்பலி கொண்டுகந்த உவகை அறியோமே. 3.106.2
      1136. பொன்னிய லுந்திரு மேனிதன்மேற் புரிநூல் பொலிவித்து
      மின்னிய லுஞ்சடை தாழவேழ உரிபோர தரவாட
      மன்னிய மாமறை யோர்கள்போற்றும் வலஞ்சுழி வாணர்தம்மேல்
      உன்னிய சிந்தையில் நீங்ககில்லார குயர்வாம் பிணிபோமே. 3.106.3
      1137. விடையொரு பாலொரு பால்விரும்பு மெல்லியல் புல்கியதோர்
      சடையொரு பாலொரு பாலிடங்கொள் தாழ்குழல் போற்றிசைப்ப
      நடையொரு பாலொரு பால்சிலம்பு நாளும் வலஞ்சுழிசேர்
      அடையொரு பாலடை யாதசெய்யுஞ் செய்கை அறியோமே. 3.106.4
      1138. கையம ரும்மழு நாகம்வீணை கலைமான் மறியேந்தி
      மெய்யம ரும்பொடி பூசிவீசுங் குழையார் தருதோடும்
      பையம ரும்மர வாடஆடும் படர்சடை யார்க்கிடமாம்
      மையம ரும்பொழில் சூழும்வேலி வலஞ்சுழி மாநகரே. 3.106.5
      1139. தண்டொடு சூல தழையவேந்தி தைய லொருபாகங்
      கண்டிடு பெய்பலி பேணிநாணார் கரியின் உரிதோலர்
      வண்டிடு மொய்பொழில் சூழ்ந்தமாட வலஞ்சுழி மன்னியவர்
      தொண்டொடு கூடி துதைந்துநின்ற தொடர்பை தொடர்வோமே. 3.106.6
      1140. கல்லிய லும்மலை யங்கைநீங்க வளைத்து வளையாதார்
      சொல்லிய லும்மதில் மூன்றும்செற்ற சுடரான் இடர்நீங்க
      மல்லிய லுந்திரள் தோளெம்மாதி வலஞ்சுழி மாநகரே
      புல்கிய வேந்தனை புல்கிஏத்தி யிருப்பவர் புண்ணியரே. 3.106.7
      1141. வெஞ்சின வாளர கன்வரையை விறலா லெடுத்தான்றோள்
      அஞ்சுமோ ராறிறு நான்குமொன்றும் அடர்த்தார் அழகாய
      நஞ்சிருள் கண்டத்து நாதரென்றும் நணுகும் இடம்போலும்
      மஞ்சுல வும்பொழில் வண்டுகெண்டும் வலஞ்சுழி மாநகரே. 3.106.8
      1142. ஏடியல் நான்மு கன்சீர்நெடுமா லெனநின் றவர்காணார்
      கூடிய கூரெரி யாய்நிமிர்ந்த குழகர் உலகேத்த
      வாடிய வெண்டலை கையிலேந்தி வலஞ்சுழி மேயஎம்மான்
      பாடிய நான்மறை யாளர்செய்யுஞ் சரிதை பலபலவே. 3.106.9
      1143. குண்டரும் புத்தருங் கூறையின்றி குழுவார் உரைநீத்து
      தொண்டரு தன்றொழில் பேணநின்ற கழலான் அழலாடி
      வண்டம ரும்பொழில் மல்குபொன்னி வலஞ்சுழி வாணன்எம்மான்
      பண்டொரு வேள்வி முனிந்துசெற்ற பரிசே பகர்வோமே. 3.106.10
      1144. வாழியெம் மானென கெந்தைமேய வலஞ்சுழி மாநகர்மேல்
      காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன கருத்தின் தமிழ்மாலை
      ஆழியிவ் வையக தேத்தவல்லார் அவர்க்கு தமருக்கும்
      ஊழி யொருபெரும் இன்பமோர்க்கும் உருவும் உயர்வாமே. 3.106.1
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.107 திருநாரையூர்
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      1145 கடலிடை வெங்கடு நஞ்சமுண்ட கடவுள் விடையேறி
      உடலிடை யிற்பொடி பூசவல்லான் உமையோ டொருபாகன்
      அடலிடை யிற்சிலை தாங்கியெய்த அம்மான் அடியார்மேல்
      நடலைவி னைத்தொகை தீர்த்துக தானிடம் நாரையூர்தானே. 3.107.1
      1146. விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம் விரிபூ மலர்க்கொன்றை
      பெண்ணின்முன் னேமிக வைத்துகந்த பெருமான் எரியாடி
      நண்ணிய தன்னடி யார்களோடு திருநாரை யூரானென்
      றெண்ணுமின் நும்வினை போகும்வண்ணம் இறைஞ்சும் நிறைவாமே. 3.107.2
      1147. தோடொரு காதொரு காதுசேர்ந்த குழையான் இழைதோன்றும்
      பீடொரு கால்பிரி யாதுநின்ற பிறையான் மறையோதி
      நாடொரு காலமுஞ் சேரநின்ற திருநாரை யூரானை
      பாடுமின் நீர்பழி போகும்வண்ணம் பயிலும் உயர்வாமே. 3.107.3
      1148. வெண்ணில வஞ்சடை சேரவைத்து விளங்கு தலையேந்தி
      பெண்ணில மர்ந்தொரு கூறதாய பெருமான் அருளார்ந்த
      அண்ணல்மன் னியுறை கோயிலாகும் அணிநாரை யூர்தன்னை
      நண்ணல மர்ந்துற வாக்குமின்கள் நடலை கரிசறுமே. 3.107.4
      1149. வானமர் தீவளி நீர்நிலனாய் வழங்கும் பழியாகும்
      ஊனமர் இன்னுயிர் தீங்குகுற்ற முறைவாற் பிறிதின்றி
      நானம ரும்பொரு ளாகிநின்றான் திருநாரை யூரெந்தை
      கோனவ னைக்குறு கக்குறுகா கொடுவல் வினைதானே. 3.107.5
      1150. கொக்கிற குங்குளிர் சென்னிமத்தங் குலாய மலர்சூடி
      அக்கர வோடரை யார்த்துகந்த அழகன் குழகாக
      நக்கம ருந்திரு மேனியாளன் திருநாரை யூர்மேவி
      புக்கம ரும்மன தோர்கள்தம்மை புணரும் புகல்தானே. 3.107.6
      1151. ஊழியும் இன்பமுங் காலமாகி உயரு தவமாகி
      ஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி
      நாழிகை யும்பல ஞாயிறாகி நளிர்நாரை யூர்தன்னில்
      வாழியர் மேதகு மைந்தர்செய்யும் வகையின் விளைவாமே. 3.107.7
      1152. கூசமி லாதர கன்வரையை குலுங்க எடுத்தான்றோள்
      நாசம தாகி இறஅடர்த்த விரலான் கரவாதார்
      பேசவி யப்பொடு பேணநின்ற பெரியோன் இடம்போலு
      தேசமு றப்புகழ் செம்மைபெற்ற திருநாரை யூர்தானே. 3.107.8
      1153. பூமக னும்மவ னைப்பயந்த புயலார் நிறத்தானும்
      ஆமள வுந்திரி தேத்திக்காண்டல் அறிதற் கரியானூர்
      பாமரு வுங்குண தோர்கள்ஈண்டி பலவும் பணிசெய்யு
      தேமரு வுந்திகழ் சோலைசூழ்ந்த திருநாரை யூர்தானே. 3.107.9
      1154. வெற்றரை யாகிய வேடங்காட்டி திரிவார் துவராடை
      உற்றரை யோர்கள் உரைக்குஞ்சொல்லை உணரா தெழுமின்கள்
      குற்றமி லாததோர் கொள்கையெம்மான் குழகன் தொழிலார
      பெற்றர வாட்டி வரும்பெருமான் திருநாரை யூர்சேர்வே. 3.107.10
      1155. பாடிய லுந்திரை சூழ்புகலி திருஞான சம்பந்தன்
      சேடிய லும்புக ழோங்குசெம்மை திருநாரை யூரான்மேற்
      பாடிய தண்டமிழ் மாலைபத்தும் பரவி திரிந்தாக
      வாடிய சிந்தையி னார்க்குநீங்கும் அவல கடல்தானே. 3.107.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.108 திருஆலவாய் - நாலடிமேல் வைப்பு
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      1156 வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
      ஆத மில்லி அமணொடு தேரரை
      வாதில் வென்றழி கத்திரு வுள்ளமே
      பாதி மாதுட னாய பரமனே
      ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
      ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.1
      1157. வைதி கத்தின் வழியொழு காதவ
      கைத வமுடை காரமண் தேரரை
      எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே
      மைதி கழ்தரு மாமணி கண்டனே
      ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
      ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.2
      1158. மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
      பறித லைக்கையர் பாயுடு பார்களை
      முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
      மறியு லாங்கையில் மாமழு வாளனே
      ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
      ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.3
      1159. அறுத்த வங்கமா றாயின நீர்மையை
      கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடுஞ்
      செறுத்து வாதுசெ யத்திரு வுள்ளமே
      முறித்த வாண்மதி கண்ணி முதல்வனே
      ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
      ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.4
      1160. அந்த ணாளர் புரியும் அருமறை
      சிந்தை செய்யா அருகர் திறங்களை
      சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
      வெந்த நீற தணியும் விகிர்தனே
      ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
      ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.5
      1161. வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
      மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
      ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
      காட்டி லானை உரித்தஎங் கள்வனே
      ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
      ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.6
      1162. அழல தோம்பும் அருமறை யோர்திறம்
      விழல தென்னும் அருகர் திறத்திறங்
      கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
      தழல்இ லங்கு திருவுரு சைவனே
      ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
      ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.7
      1163. நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
      காற்று கொள்ளவும் நில்லா அமணரை
      தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
      ஆற்ற வாளர கற்கும் அருளினாய்
      ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
      ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.8
      1164. நீல மேனி அமணர் திறத்துநின்
      சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே
      மாலும் நான்முக னுங்காண் பரியதோர்
      கோல மேனிய தாகிய குன்றமே
      ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
      ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.9
      1165. அன்று முப்புரஞ் செற்ற அழகநின்
      துன்று பொற்கழல் பேணா அருகரை
      தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே
      கன்று சாக்கியர் காணா தலைவனே
      ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
      ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.10
      1166. கூடல் ஆலவா கோனை விடைகொண்டு
      வாடல் மேனி அமணரை வாட்டிட
      மாட காழிச்சம் பந்தன் மதித்தஇ
      பாடல் வல்லவர் பாக்கிய வாளரே. 3.108.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.109 திருக்கயிலாயமும் - திருஆனைக்காவும்
      திருமயேந்திரமும் - திருஆரூரும்
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      1167 மண்ணது வுண்டரி மலரோன்காணா
      வெண்ணாவல் விரும்பும யேந்திரருங்
      கண்ணது வோங்கிய கயிலையாரும்
      அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே. 3.109.1
      1168. வந்துமா லயனவர் காண்பரியார்
      வெந்தவெண் ணீறணி மயேந்திரருங்
      கந்தவார் சடையுடை கயிலையாரும்
      அந்தண்ஆ ரூராதி யானைக்காவே. 3.109.2
      1169. மாலயன் தேடிய மயேந்திரருங்
      காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
      வேலைய தோங்கும்வெண் ணாவலாரும்
      ஆலைஆ ரூராதி யானைக்காவே. 3.109.3
      1170. கருடனை யேறரி அயனார்காணார்
      வெருள்விடை யேறிய மயேந்திரருங்
      கருடரு கண்டத்தெம் கயிலையாரும்
      அருளன்ஆ ரூராதி யானைக்காவே. 3.109.4
      1171. மதுசூதனன் நான்முகன் வணங்கரியார்
      மதியது சொல்லிய மயேந்திரருங்
      கதிர்முலை புல்கிய கயிலையாரும்
      அதியன்ஆ ரூராதி யானைக்காவே. 3.109.5
      1172. சக்கரம் வேண்டுமால் பிரமன்காணா
      மிக்கவர் கயிலை மயேந்திரரு
      தக்கனை தலையரி தழலுருவர்
      அக்கணி யவராரூர் ஆனைக்காவே. 3.109.6
      1173. கண்ணனும் நான்முகன் காண்பரியார்
      வெண்ணாவல் விரும்பு மயேந்திரருங்
      கண்ணப்பர கருள்செய்த கயிலையெங்கள்
      அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே. 3.109.7
      1174. கடல்வண்ணன் நான்முகன் காண்பரியார்
      தடவரை யரக்கனை தலைநெரித்தார்
      விடமது வுண்டவெம் மயேந்திரரும்
      அடல்விடை யாரூராதி யானைக்காவே. 3.109.8
      1175. ஆதிமால் அயனவர் காண்பரியார்
      வேதங்கள் துதிசெயும் மயேந்திரருங்
      காதிலோர் குழையுடை கயிலையாரும்
      ஆதிஆ ரூரெந்தை யானைக்காவே. 3.109.9
      1176. அறிவில் அமண்புத்தர் அறிவுகொள்ளேல்
      வெறியமான் கரத்தாரூர் மயேந்திரரும்
      மறிகட லோன்அயன் தேடத்தானும்
      அறிவரு கயிலையோன் ஆனைக்காவே. 3.109.10
      1177. ஏனமா லயனவர் காண்பரியார்
      கானமார் கயிலைநன் மயேந்திரரும்
      ஆனஆ ரூராதி யானைக்காவை
      ஞானசம் பந்தன தமிழ்சொல்லுமே. 3.109.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.110 திருப்பிரமபுரம் - ஈரடி
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      1178 வரம தேகொளா உரம தேசெயும்
      புரமெ ரித்தவன் பிரம நற்புர
      தரன்நன் நாமமே பரவு வார்கள்சீர்
      விரவு நீள்புவியே. 3.110.1
      1179. சேணு லாமதில் வேணு மண்ணுளோர்
      காண மன்றலார் வேணு நற்புர
      தாணு வின்கழல் பேணு கின்றவ
      ராணி யொத்தவரே. 3.110.2
      1180. அகல மார்தரை புகலும் நான்மறை
      கிகலி யோர்கள்வாழ் புகலி மாநகர
      பகல்செய் வோனெதிர சகல சேகரன்
      அகில நாயகனே. 3.110.3
      1181. துங்க மாகரி பங்க மாவடுஞ்
      செங்கை யானிகழ் வெங்கு ருத்திகழ்
      அங்க ணானடி தங்கை யாற்றொழ
      தங்கு மோவினையே. 3.110.4
      1182. காணி யொண்பொரு கற்ற வர்க்கீகை
      யுடைமை யோரவர் காதல் செய்யுநற்
      றோணி வண்புர தாணி யென்பவர்
      தூமதி யினரே. 3.110.5
      1183. ஏந்த ராவெதிர் வாய்ந்த நுண்ணிடை
      பூந்த ணோதியாள் சேர்ந்த பங்கினன்
      பூந்த ராய்தொழும் மாந்தர் மேனிமேற்
      சேர்ந்தி ராவினையே. 3.110.6
      1184. சுரபு ரத்தினை துயர்செய் தாருகன்
      துஞ்ச வெஞ்சின காளி யைத்தருஞ்
      சிரபு ரத்துளா னென்ன வல்லவர்
      சித்தி பெற்றவரே. 3.110.7
      1185. உறவு மாகியற் றவர்க ளுக்குமா
      நெதிகொ டுத்துநீள் புவியி லங்குசீர
      புறவ மாநகர கிறைவ னேயென
      தெறகி லாவினையே. 3.110.8
      1186. பண்பு சேரிலங் கைக்கு நாதன்நன்
      முடிகள் பத்தையுங் கெடநெ ரித்தவன்
      சண்பை யாதியை தொழும வர்களை
      சாதியா வினையே. 3.110.9
      1187. ஆழி யங்கையிற் கொண்ட மாலயன்
      அறிவொ ணாததோர் வடிவு கொண்டவன்
      காழி மாநகர கடவுள் நாமமே
      கற்றல் நற்றவமே. 3.110.10
      1188. விச்சை யொன்றிலா சமணர் சாக்கி
      பிச்சர் தங்களை கரிச றுத்தவன்
      கொச்சை மாநகர கன்பு செய்பவர்
      குணங்கள் கூறுமினே. 3.110.11
      1189. கழும லத்தினு கடவுள் பாதமே
      கருது ஞானசம் பந்த னின்றமிழ்
      முழுதும் வல்லவர கின்ப மேதரும்
      முக்கண் எம்மிறையே. 3.110.12
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.111 திருவீழிமிழலை ஈரடி
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      1190 வேலி னேர்தரு கண்ணி னாளுமை
      பங்க னங்கணன் மிழலை மாநகர்
      ஆல நீழலின் மேவி னானடி
      கன்பர் துன்பிலரே. 3.111.1
      1191. விளங்கு நான்மறை வல்ல வேதியர்
      மல்கு சீர்வளர் மிழலை யானடி
      உளங்கொள் வார்தமை
      ஒல்லை யாசறுமே. 3.111.2
      1192. விசையி னோடெழு பசையு நஞ்சினை
      யசைவு செய்தவன் மிழலை மாநகர்
      இசையு மீசனை நசையின் மேவினான்
      மிசை செயாவினையே. 3.111.3
      1193. வென்றி சேர்கொடி மூடு மாமதில்
      மிழலை மாநகர் மேவி நாடொறும்
      நின்ற ஆதிதன் அடிநி னைப்பவர்
      துன்ப மொன்றிலரே. 3.111.4
      1194. போத கந்தனை யுரிசெய் தோன்புயல்
      நேர்வ ரும்பொழில் மிழலை மாநகர்
      ஆத ரஞ்செய்த அடிகள் பாதம
      லாலோர் பற்றிலமே. 3.111.5
      1195. தக்கன் வேள்வியை சாடி னார்மணி
      தொக்க மாளிகை மிழலை மேவிய
      நக்க னாரடி தொழுவர் மேல்வினை
      நாடொ றுங்கெடுமே. 3.111.6
      1196. போர ணாவுமு புரமெ ரித்தவன்
      பொழில்கள் சூழ்தரு மிழலை மாநகர
      சேரு மீசனை சிந்தை செய்பவர்
      தீவி னைகெடுமே. 3.111.7
      1197. இரக்க மிற்றொழில் அரக்க னாருடல்
      நெருக்கி னான்மிகு மிழலை யானடி
      சிரக்கொள் பூவென ஒருக்கி னார்புகழ்
      பரக்கும் நீள்புவியே. 3.111.8
      1198. துன்று பூமகன் பன்றி யானவன்
      ஒன்று மோர்கிலா மிழலை யானடி
      சென்று பூம்புனல் நின்று தூவினார்
      நன்று சேர்பவரே. 3.111.9
      1199. புத்தர் கைச்சமண் பித்தர் பொய்க்குவை
      வைத்த வித்தகன் மிழலை மாநகர்
      சித்தம் வைத்தவர் இத்த லத்தினுள்
      மெய்த்த வத்தவரே. 3.111.10
      1200. சந்த மார்பொழில் மிழலை யீசனை
      சண்பை ஞானசம் பந்தன் வாய்நவில்
      பந்த மார்தமிழ் பத்தும் வல்லவர்
      பத்த ராகுவரே. 3.111.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.112 திருப்பல்லவனீச்சரம் - ஈரடி
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      1201 பரசு பாணியர் பாடல் வீணையர்
      பட்டி னத்துறை பல்லவ னீச்சர
      தரசு பேணிநின் றாரி வர்தன்மை
      யறிவா ரார். 3.112.1
      1202. பட்ட நெற்றியர் நட்ட மாடுவர்
      பட்டி னத்துறை பல்லவ னீச்சர
      திட்ட மாயிரு பாரி வர்தன்மை
      யறிவா ரார். 3.112.2
      1203. பவள மேனியர் திகழும் நீற்றினர்
      பட்டி னத்துறை பல்லவ னீச்சர
      தழக ராயிரு பாரி வர்தன்மை
      யறிவா ரார். 3.112.3
      1204. பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர்
      பட்டி னத்துறை பல்லவ னீச்சர
      தண்ண லாயிரு பாரி வர்தன்மை
      யறிவா ரார். 3.112.4
      1205. பல்லி லோட்டினர் பலிகொண் டுண்பவர்
      பட்டி னத்துறை பல்லவ னீச்சர
      தெல்லி யாட்டுக தாரி வர்தன்மை
      யறிவா ரார். 3.112.5
      1206. பச்சை மேனியர் பிச்சை கொள்பவர்
      பட்டி னத்துறை பல்லவ னீச்சர
      திச்சை யாயிரு பாரி வர்தன்மை
      யறிவா ரார். 3.112.6
      1207. பைங்கண் ஏற்றினர் திங்கள் சூடுவர்
      பட்டி னத்துறை பல்லவ னீச்சர
      தெங்கு மாயிரு பாரி வர்தன்மை
      யறிவா ரார். 3.112.7
      1208. பாதங் கைதொழ வேத மோதுவர்
      பட்டி னத்துறை பல்லவ னீச்சர
      தாதி யாயிரு பாரி வர்தன்மை
      யறிவா ரார். 3.112.8
      1209. படிகொள் மேனியர் கடிகொள் கொன்றையர்
      பட்டி னத்துறை பல்லவ னீச்சர
      தடிக ளாயிரு பாரி வர்தன்மை
      யறிவா ரார். 3.112.9
      1210. பறைகொள் பாணியர் பிறைகொள் சென்னியர்
      பட்டி னத்துறை பல்லவ னீச்சர
      திறைவ ராயிரு பாரி வர்தன்மை
      யறிவா ரார். 3.112.10
      1211. வான மாள்வதற் கூன மொன்றிலை
      மாதர் பல்லவ னீச்ச ரத்தானை
      ஞான சம்பந்தன் நற்ற மிழ்சொல்ல
      வல்லவர் நல்லரே. 3.112.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.113 திருக்கழுமலம் திருஇயமகம்
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      1212 உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள்
      கற்றவர் காய்வது காமனையே கனல்விழி
      அற்றம் மறைப்பதும் உன்பணியே அமரர்கள் செய்வதும்
      பெற்று முகந்தது கந்தனையே பிரம புரத்தை யுகந்தனையே. 3.113.1
      1213. சதிமிக வந்த சலந்தரனே தடிசிர நேர்கொள்
      அதிரொளி சேர்திகி ரிப்படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்படையால்
      மதிதவழ் வெற்பது கைச்சிலையே மருவிட மேற்பது
      விதியினி லிட்ட விரும்பரனே வேணு புரத்தை விரும்பரனே. 3.113.2
      1214. காதம ரத்திகழ் தோடினனே கானவ னாய்க்கடி
      பாதம தாற்கூற் றுதைத்தனனே பார்த்தன் உடலம் புதைத்தனனே
      தாதவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினைய
      போத மமரு முரைப்பொருளே புகலி யமர்ந்த பரம்பொருளே. 3.113.3
      1215. மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே மகிழ்ந்தரை சேர்வது
      மெய்த்துடல் பூசுவர் மேன்மதியே வேதம தோதுவர்
      பொய்த்தலை யோடுறு மத்தமதே புரிசடை வைத்தது
      வித்தக ராகிய வெங்குருவே விரும்பி யமர்ந்தனர் வெங்குருவே. 3.113.4
      1216. உடன்பயில் கின்றனன் மாதவனே யுறுபொறி காய்ந்திசை
      திடம்பட மாமறை கண்டனனே திரிகுண மேவிய
      படங்கொள் அரவரை செய்தனனே பகடுரி கொண்டரை
      தொடர்ந்த துயர்க்கொரு நஞ்சிவனே தோணி புரத்துறை நஞ்சிவனே. 3.113.5
      1217. திகழ்கைய தும்புகை தங்கழலே தேவர் தொழுவது
      இகழ்பவர் தாமொரு மானிடமே யிருந்தனு வோடெழில்
      மிகவரு நீர்கொளு மஞ்சடையே மின்னிகர் கின்றது
      தகவிர தங்கொள்வர் சுந்தரரே தக்கத ராயுறை சுந்தரரே. 3.113.6
      1218. ஓர்வரு கண்கள் இணைக்கயலே உமையவள்
      ஏர்மரு வுங்கழ னாகமதே யெழில்கொ ளுதாசன
      நீர்வரு கொந்தள கங்கையதே நெடுஞ்சடை மேவிய
      சேர்வரு யோகதி யம்பகனே சிரபுர மேயதி யம்பகனே. 3.113.7
      1219. ஈண்டு துயிலம ரப்பினனே யிருங்கணி டந்தடி யப்பினனே
      தீண்டல ரும்பரி சக்கரமே திகழ்ந்தொளி சேர்வது
      வேண்டி வருந்த நகைத்தலையே மிகைத்தவ ரோடுந கைத்தலையே
      பூண்டனர் சேரலு மாபதியே புறவம் அமர்ந்த வுமாபதியே. 3.113.8
      1220. நின்மணி வாயது நீழலையே நேசம தானவர்
      உன்னி மனத்தெழு சங்கமதே யொளியத னோடுறு
      கன்னிய ரைக்கவ ருங்களனே கடல்விட முண்ட கருங்களனே
      மன்னி வரைப்பதி சண்பையதே வாரி வயன்மலி சண்பையதே. 3.113.9
      1221. இலங்கை யரக்கர் தமக்கிறையே யிடந்து கயிலை யெடுக்கிறையே
      புலன்கள் கெடவுடன் பாடினனே பொறிகள்
      இலங்கிய மேனி யிராவணனே யெய்து பெயரும் இராவணனே
      கலந்தருள் பெற்றது மாவசியே காழி யரனடி மாவசியே. 3.113.10
      1222. கண்ணிகழ் புண்டரி கத்தினனே கலந்திரி
      மண்ணிக ழும்பரி சேனமதே வானக மேய்வகை
      நண்ணி யடிமுடி யெய்தலரே நளிர்மலி சோலையில் எய்தலரே
      பண்ணியல் கொச்சை பசுபதியே பசுமிக வூர்வர் பசுபதியே. 3.113.11
      1223. பருமதில் மதுரைமன் அவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே
      வருநதி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட
      கருதலில் இசைமுரல் தருமருளே கழுமலம் அமரிறை
      மருவிய தமிழ்விர கனமொழியே வல்லவர் தம்மிடர் திடமொழியே. 3.113.12
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.114 திருவேகம்பம் - திருஇயமகம்
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      1224 பாயுமால்விடை மேலொரு பாகனே பாவைதன்னுரு
      தூயவானவர் வே துவனியே சோதிமாலெரி
      ஆயுநன்பொருள் நுண்பொரு ளாதியே ஆலநீழல் அரும்பொரு
      காயவின்மதன் பட்டது கம்பமே கண்ணுதற்பர மற்கிடங் கம்பமே. 3.114.1
      1225. சடையணிந்ததும் வெண்டலை மாலையே தம்முடம்பிலும்
      படையிலங்கையிற் சூலம தென்பதே பரந்திலங்கையிற்
      புடைபரப்பன பூத கணங்களே போற்றிசைப்பன
      கடைகடோ றும் இரப்பது மிச்சையே கம்பமேவி யிருப்பது மிச்சையே. 3.114.2
      1226. வெள்ளெருக்கொடு தும்பை மிலைச்சியே வேறுமுன்செல
      மிலைச்சியே
      அள்ளிநீறது பூசுவ தாகமே யானமாசுண மூசுவ
      புள்ளியாடை யுடுப்பது கத்துமே போனவூழி
      கள்ளுலாமலர கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர மிருப்பதே.
      1227. முற்றலாமை யணிந்த முதல்வரே மூரியாமை
      பற்றிவாளர வாட்டும் பரிசரே பாலுநெய்யுக தாட்டும்
      வற்றலோடு கலம்பலி தேர்வதே வானினோடு
      கற்றிலாமனங் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர மிருப்பதே.
      1228. வேடனாகி விசையற் கருளியே வேலைநஞ்ச மிசையற்
      ஆடுபாம்பரை யார்த்த துடையதே யஞ்சுபூதமு மார்த்த
      கோடுவான்மதி கண்ணி யழகிதே குற்றமின்மதி
      காடுவாழ்பதி யாவது மும்மதே கம்பமாபதி மும்மதே.
      1229. இரும்புகைக்கொடி தங்கழல் கையதே இமயமாமகள்
      அரும்புமொய்த்த மலர்ப்பொறை தாங்கியே ஆழியான்றன்
      பெரும்பகல்நட மாடுதல் செய்துமே பேதைமார்மனம் வாடுதல்
      கரும்புமொய்த்தெழு கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர மிருப்பதே.
      1230. முதிரமங்கை தவஞ்செய்த காலமே முன்புமங்கை
      வெதிர்களோடகில் சந்த முருட்டியே வேழமோடகில்
      அதிரவாறு வரத்தழு வத்தொடே ஆன்நெய்ஆடு
      கதிர்கொள்பூண்முலை கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர மிருப்பதே.
      1231. பண்டரக்க னெடுத்த பலத்தையே பாய்ந்தரக்க
      கொண்டரக்கிய துங்கால் விரலையே கோளரக்கிய
      உண்டுழன்றது முண்ட தலையிலே யுடுபதிக்கிட
      கண்டநஞ்சம் அடக்கினை கம்பமே கடவுள்நீயிடங் கொண்டது கம்பமே. 3.114.8
      1232. தூணியான சுடர்விடு சோதியே சுத்தமான
      பேணியோடு பிர பறவையே பித்தனான
      சேணினோடு கீழூழி திரிந்துமே சித்தமோடு
      காணநின்றனர் உற்றது கம்பமே கடவுள்நீயிடம் கம்பமே.
      1233. ஓருடம்பினை யீருரு வாகவே யுன்பொருட்டிற மீருரு
      ஆருமெய்தற் கரிது பெரிதுமே ஆற்றலெய்தற்
      தேரரும்மறி யாது திகைப்பரே சித்தமும்மறி
      கார்நிறத்தம ணர்க்கொரு கம்பமே கடவுள்நீயிடங் கொண்டது கம்பமே. 3.114.10
      1234. கந்தமார்பொழில் சூழ்தரு கம்பமே காதல்செய்பவர் தீர்த்திடு
      புந்திசெய்து விரும்பி புகலியே பூசுரன்றன்
      அந்தமில்பொரு ளாயின கொண்டுமே அண்ணலின்பொரு
      பந்தனின்னியல் பாடிய பத்துமே பாடவல்லவ ராயின பத்துமே. 3.114.11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர் தேவியார் -காமாட்சியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.115 திருஆலவாய் - திருஇயமகம்
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      1235 ஆலநீழ லுகந்த திருக்கையே யானபாட
      பாலின்நேர்மொழி யாளொரு பங்கனே பாதமோதலர் சேர்புர
      கோலநீறணி மேதகு பூதனே கோதிலார்மனம் மேவிய
      ஆலநஞ்சமு துண்ட களத்தனே ஆலவாயுறை யண்டர்கள் அத்தனே. 3.115.1
      1236. பாதியாயுடன் கொண்டது மாலையே பாம்புதார்மலர கொன்றைநன்
      கோதில்நீறது பூசிடு மாகனே கொண்டநற்கையின் மானிட
      நாதன்நாடொறும் ஆடுவ தானையே நாடியன்றுரி செய்ததும் ஆனையே
      வேதநூல்பயில் கின்றது வாயிலே விகிர்தனூர்திரு ஆலநல் வாயிலே. 3.115.2
      1237. காடுநீட துறப்பல கத்தனே காதலால்நினை வார்தம் அகத்தனே
      பாடுபேயொடு பூத மசிக்கவே பல்பிணத்தசை நாடி யசிக்கவே
      நீடுமாநட மாட விருப்பனே நின்னடித்தொழ நாளும் இருப்பனே
      ஆடல்நீள்சடை மேவிய அப்பனே ஆலவாயினின் அப்பனே.
      1238. பண்டயன்றலை யொன்று மறுத்தியே பாதமோதினர் பாவ
      துண்டவெண்பிறை சென்னி யிருத்தியே தூயவெள்ளெரு தேறி
      கண்டுகாமனை வேவ விழித்தியே காதலில்லவர் தம்மை யிழித்தியே
      அண்டநாயக னேமிகு கண்டனே ஆலவாயினின் மேவிய கண்டனே. 3.115.4
      1239. சென்றுதாதை யுகுத்தனன் பாலையே சீறியன்பு செகுத்தனன்
      வென்றிசேர்மழு கொண்டுமுன் காலையே வீடவெட்டிட கண்டுமுன்
      நின்றமாணியை யோடின கங்கையால் நிலவமல்கி யுதித்தன
      அன்றுநின்னுரு வாக தடவியே ஆலவாயர னாக தடவியே. 3.115.5
      1240. நக்கமேகுவர் நாடுமோர் ஊருமே நாதன்மேனியின் மாசுணம்
      தக்கபூமனை சுற்ற கருளொடே தாரமுய்த்தது பாணற்
      மிக்கதென்னவன் தேவி கணியையே மெல்லநல்கிய தொண்டர
      அக்கினாரமு துண்கல னோடுமே ஆலவாயர னாருமை யோடுமே. 3.115.6
      1241. வெய்யவன்பல் உகுத்தது குட்டியே வெங்கண்மாசுணங் கையது
      ஐயனேயன லாடிய மெய்யனே அன்பினால்நினை வார்க்கருள்
      வையமுய்யவன் றுண்டது காளமே வள்ளல்கையது மேவுகங்
      ஐயமேற்ப துரைப்பது வீணையே ஆலவாயரன் கையது வீணையே. 3.115.7
      1242. தோள்கள்பத்தொடு பத்து மயக்கியே தொக்கதேவர் செருக்கை
      வாளரக்கன் நிலத்து களித்துமே வந்தமால்வரை கண்டு
      நீள்பொருப்பை யெடுத்தவுன் மத்தனே நின்விரற்றலை யான்மத
      ஆளுமாதி முறித்தது மெய்கொலோ ஆலவாயர னுய்த்தது மெய்கொலோ. 3.115.8
      1243. பங்கயத்துள நான்முகன் மாலொடே பாதம்நீண்முடி நேடிட
      துங்கநற்றழ லின்னுரு வாயுமே தூயபாடல் பயின்றது
      செங்கயற்கணி னாரிடு பிச்சையே சென்றுகொண்டுரை செய்வது
      அங்கியைத்திகழ் விப்பதி டக்கையே ஆலவாயர னாரதி டக்கையே. 3.115.9
      1244. தேரரோடம ணர்க்குநல் கானையே தேவர்நாடொறுஞ் சேர்வது
      கோரமட்டது புண்டரி கத்தையே கொண்டநீள்கழல்
      நேரிலூர்கள் அழித்தது நாகமே நீள்சடைத்திகழ் கின்றது
      ஆரமாக வுகந்தது மென்பதே ஆலவாயர னாரிட மென்பதே. 3.115.10
      1245. ஈனஞானிகள் தம்மொடு விரகனே யேறுபல்பொருள் முத்தமிழ்
      ஆனகாழியுள் ஞானசம் பந்தனே ஆலவாயினின் மேயசம்
      ஆனவானவர் வாயினுள் அத்தனே அன்பரானவர்
      நானுரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே. 3.115.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.116 திருவீழிமிழலை - திருஇயமகம்
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      1246 துன்று கொன்றைநஞ் சடையதே தூய கண்டம்நஞ்
      கன்றின் மானிட கையதே கல்லின்
      என்று மேறுவ திடவமே என்னி டைப்பலி யிடவமே
      நின்ற தும்மிழலை யுள்ளுமே நீரெனை சிறிதும் உள்ளுமே. 3.116.1
      1247. ஓதி வாயதும் மறைகளே உரைப்ப தும்பல
      பாதி கொண்டதும் மாதையே பணிகின் றேன்மிகு
      காது சேர்கனங் குழையரே காத லார்கனங்
      வீதி வாய்மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா. 3.116.2
      1248. பாடு கின்றபண் டாரமே பத்த ரன்னபண்
      சூடு கின்றது மத்தமே தொழுத என்னையுன்
      நீடு செய்வது தக்கதே நின்ன ரைத்திகழ
      நாடு சேர்மிழலை யூருமே நாகம் நஞ்சழலை யூருமே. 3.116.3
      1249. கட்டு கின்றகழல் நாகமே காய்ந்த தும்மதனன் ஆகமே
      இட்ட மாவதிசை பாடலே யிசைந்த நூலினமர்
      கொட்டு வான்முழவம் வாணனே குலாய சீர்மிழலை
      நட்ட மாடுவது சந்தியே நானுய் தற்கிரவு சந்தியே. 3.116.4
      1250. ஓவி லாதிடுங் கரணமே யுன்னு மென்னுடை
      ஏவு சேர்வுநின் னாணையே யருளி நின்னபொற் றாணையே
      பாவி யாதுரை மெய்யிலே பயின்ற நின்னடி
      மேவி னான்விறற் கண்ணனே மிழலை மேயமு கண்ணனே. 3.116.5
      1251. வாய்ந்த மேனியெரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது
      காய்ந்து வீழ்ந்தவன் காலனே கடுந டஞ்செயுங்
      போந்த தெம்மிடை யிரவிலே உம்மி டைக்கள்வ மிரவிலே
      ஏய்ந்த தும்மிழலை யென்பதே விரும்பி யேயணிவ தென்பதே. 3.116.6
      1252. அப்பி யன்றகண் ணயனுமே அமரர் கோமகனு மயனுமே
      ஒப்பி லின்றமரர் தருவதே ஒண்கை யாலமரர்
      மெய்ப்ப யின்றவ ரிருக்கையே மிழலை யூரும திருக்கையே
      செப்பு மின்னெருது மேயுமே சேர்வு கெருது மேயுமே. 3.116.7
      1253. தானவ குலம் விளக்கியே தாரகை செல
      வான டர்த்தகயி லாயமே வந்து மேவுகயி
      தானெ டுத்தவல் லரக்கனே தடமு டித்திர ளரக்கனே
      மேன டைச்செல விருப்பனே மிழலை நற்பதி விருப்பனே. 3.116.8
      1254. காய மிக்கதொரு பன்றியே கலந்த நின்னவுரு
      ஏய விப்புவி மயங்கவே யிருவர் தாமன
      தூய மெய்த்திரள் அகண்டனே தோன்றி நின்றமணி கண்டனே
      மேய வித்துயில் விலக்கணா மிழலை மேவிய விலக்கணா. 3.116.9
      1255. கஞ்சி யைக்குலவு கையரே கலக்க மாரமணர்
      அஞ்ச வாதிலருள் செய்யநீ யணைந்தி டும்பரிசு
      வஞ்ச னேவரவும் வல்லையே மதித்தெ னைச்சிறிதும்
      வெஞ்ச லின்றிவரு வித்தகா மிழலை சேரும்விறல் வித்தகா. 3.116.10
      1256. மேய செஞ்சடையின் அப்பனே மிழலை மேவியவெ னப்பனே
      ஏயுமா செய விருப்பனே இசைந்த வாசெய
      காய வர்க்கசம் பந்தனே காழி ஞானசம்
      வாயு ரைத்ததமிழ் பத்துமே வல்லவர குமிவை பத்துமே. 3.116.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.117 சீகாழி - திருமாலைமாற்று
      பண் - கௌசிகம்
      திருச்சிற்றம்பலம்
      1257 யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
      காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. 3.117.1
      1258. யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
      யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா. 3.117.2
      1259. தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
      மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா. 3.117.3
      1260. நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
      மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ. 3.117.4
      1261. யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
      வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா. 3.117.5
      1262. மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
      யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே. 3.117.6
      1263. நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
      நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண. 3.117.7
      1264. நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
      காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே. 3.117.8
      1265. காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
      பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா. 3.117.9
      1266. வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே
      தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே. 3.117.10
      1267. நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
      காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே. 3.117.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.118 திருக்கழுமலம்
      பண் - புறநீர்மை
      திருச்சிற்றம்பலம்
      1268 மடமலி கொன்றை துன்றுவா ளெருக்கும் வன்னியும் மத்தமுஞ் சடைமேற்
      படலொலி திரைகள் மோதிய கங்கை தலைவனார் தம்மிடம் பகரில்
      விடலொலி பரந்த வெண்டிரை முத்தம் இப்பிகள் கொணர்ந்துவெள் ளருவி
      கடலொலி யோதம் மோதவ தலைக்குங் கழுமல நகரென லாமே. 3.118.1
      1269. மின்னிய அரவும் வெறிமலர் பலவும் விரும்பிய திங்களு தங்கு
      சென்னிய துடையான் தேவர்தம் பெருமான் சேயிழை யொடும்உறை விடமாம்
      பொன்னியன் மணியும் முரிகரி மருப்புஞ் சந்தமும் உந்துவன் றிரைகள்
      கன்னிய ராட கடலொலி மலியுங் கழுமல நகரென லாமே. 3.118.2
      1270. சீருறு தொண்டர் கொண்டடி போற்ற செழுமலர் புனலொடு தூப
      தாருறு கொன்றை தம்முடி வைத்த சைவனார் தங்கிட மெங்கும்
      ஊருறு பதிகள் உலகுடன் பொங்கி யொலிபுனல் கொளவுடன் மிதந்த
      காருறு செம்மை நன்மையான் மிக்க கழுமல நகரென லாமே. 3.118.3
      1271. மண்ணினா ரேத்த வானுலார் பரச அந்தர தமரர்கள் போற்ற
      பண்ணினா ரெல்லாம் பலபல வேட முடையவர் பயில்விட மெங்கும்
      எண்ணினான் மிக்கார் இயல்பினா னிறைந்தார் ஏந்திழை யவரொடு மைந்தர்
      கண்ணினால் இன்பங் கண்டொளி பரக்குங் கழுமல நகரென லாமே. 3.118.4
      1272. சுருதியான் றலையும் நாமகள் மூக்குஞ் சுடரவன் கரமுமுன் னியங்கு
      பருதியான் பல்லும் இறுத்தவர கருளும் பரமனார் பயின்றினி திருக்கை
      விருதினான் மறையும் அங்கமோ ராறும் வேள்வியும் வேட்டவர் ஞானங்
      கருதினா ருலகிற் கருத்துடை யார்சேர் கழுமல நகரென லாமே. 3.118.5
      1273. புற்றில்வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனிமலர கொன்றை
      பற்றிவான் மதியஞ் சடையிடை வைத்த படிறனார் பயின்றினி திருக்கை
      செற்றுவன் றிரைகள் ஒன்றொடொன் றோடி செயிர்த்துவண் சங்கொடு வங்கங்
      கற்றுறை வரைகள் கரைக்குவ துரைக்குங் கழுமல நகரென லாமே. 3.118.6
      1274. அலைபுனற் கங்கை தங்கிய சடையார் அடல்நெடு மதிலொரு மூன்றுங்
      கொலையிடை செந்தீ வெந்தற கண்ட குழகனார் கோயில தென்பர்
      மலையின்மி குயர்ந்த மரக்கலஞ் சரக்கு மற்றுமற் றிடையிடை யெங்குங்
      கலைகளி தேறி கானலில் வாழுங் கழுமல நகரென லாமே. 3.118.7
      1275. ஒருக்கமுன் நினையா தக்கன்றன் வேள்வி யுடைதர வுழறிய படையார்
      அரக்கனை வரையால் ஆற்றலன் றழித்த அழகனார் அமர்ந்துறை கோயில்
      பரக்கும்வண் புகழார் பழியவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி
      கரக்குமா றறியா வண்மையால் வாழுங் கழுமல நகரென லாமே. 3.118.8
      1276. அருவரை பொறுத்த ஆற்றலி னானும் அணிகிளர் தாமரை யானும்
      இருவரும் ஏத்த எரியுரு வான இறைவனார் உறைவிடம் வினவில்
      ஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல் வெள்ளமுன் பரப்ப
      கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங் கழுமல நகரென லாமே. 3.118.9
      1277. உரிந்துயர் உருவில் உடைதவிர தாரும் அத்துகில் போர்த்துழல் வாரு
      தெரிந்து புன்மொழிகள் செப்பின கேளா செம்மையார் நன்மையால் உறைவாங்
      குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை
      கருந்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங் கழுமல நகரென லாமே. 3.118.10
      1278. கானலங் கழனி யோதம்வ துலவுங் கழுமல நகருறை வார்மேல்
      ஞானசம் பந்தன் நற்றமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார்
      ஊனசம் பந துறுபிணி நீங்கி உள்ளமும் ஒருவழி கொண்டு
      வானிடை வாழ்வர் மண்மிசை பிறவார் மற்றிதற் காணையும் நமதே. 3.118.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.119 திருவீழிமிழலை
      பண் - புறநீர்மை
      திருச்சிற்றம்பலம்
      1279 புள்ளித்தோ லாடை பூண்பது நாகம் பூசுசா தம்பொடி நீறு
      கொள்ளீத்தீ விளக்கு கூளிகள் கூட்டங் காளியை குணஞ்செய்கூ துடையோன்
      அள்ளற் காராமை அகடு வான்மதியம் ஏய்க்கமு டாழைக ளானை
      வெள்ளைக்கொம் பீனும் விரிபொழில் வீழி மிழலையா னெனவினை கெடுமே. 3.119.1
      1280. இசைந்தவா றடியா ரிடுதுவல் வானோர் இழுகுச தனத்திளங் கமல
      பசும்பொன்வா சிகைமேற் பரப்புவாய் கரப்பாய் பத்திசெய் யாதவர் பக்கல்
      அசும்புபாய் கழனி யலர்கயன் முதலோ டடுத்தரி தெடுத்தவான் சும்மை
      விசும்புதூர பனபோல் விம்மிய வீழி மிழலையா னெனவினை கெடுமே. 3.119.2
      1281. நிருத்தனா றங்கன் நீற்றன் நான்மறையன் நீலமார் மிடற்றன்நெற் றிக்கண்
      ஒருத்தன்மற் றெல்லா வுயிர்கட்கும் உயிராய் யுளனிலன் கேடிலி யுமைகோன்
      திருத்தமாய் நாளும் ஆடுநீர பொய்கை சிறியவர் அறிவினின் மிக்க
      விருத்தரை யடிவீழ திடம்புகும் வீழி மிழலையா னெனவினை கெடுமே. 3.119.3
      1282. தாங்கருங் கால தவிரவ திருவர் தம்மொடுங் கூடினா ரங்கம்
      பாங்கினால் தரித்து பண்டுபோ லெல்லாம் பண்ணிய கண்ணுதற் பரமர்
      தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமா செண்பகம் வண்பலா இலுப்பை
      வேங்கைபூ மகிழால் வெயில்புகா வீழி மிழலையா னெனவினை கெடுமே. 3.119.4
      1283. கூசுமா மயானங் கோயில்வா யிற்கண் குடவயிற் றனசில பூதம்
      பூசுமா சாந்தம் பூதிமெல் லோதி பாதிநற் பொங்கர வரையோன்
      வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர் மலரணை தெழுந்தவான் தென்றல்
      வீசுமாம் பொழில்தேன் துவலைசேர் வீழி மிழலையா னெனவினை கெடுமே. 3.119.5
      1284. பாதியோர் மாதர் மாலுமோர் பாகர் பங்க தயனுமோர் பாலர்
      ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்க கமரர்
      போதுசேர் சென்னி புரூரவா பணிசெய் பூசுரர் பூமகன் அனைய
      வேதியர் வே தொலியறா வீழி மிழலையா னெனவினை கெடுமே. 3.119.6
      1285. தன்றவம் பெரிய சலந்தர னுடல தடிந்தச கரமென கருளென்
      றன்றரி வழிப டிழிச்சிய விமான திறையவன் பிறையணி சடையன்
      நின்றநா காலை யிருந்தநாள் மாலை கிடந்தமண் மேல்வரு கலியை
      வென்றவே தியர்கள் விழாவறா வீழி மிழலையா னெனவினை கெடுமே. 3.119.7
      1286. கடுத்தவா ளரக்கன் கைலையன் றெடுத்த கரமுரஞ் சிரநெரி தலற
      அடர்த்ததோர் விரலால் அஞ்செழு துரைக்க அருளினன் தடமிகு நெடுவாள்
      படித்தநான் மறைகே டிருந்தபைங் கிளிகள் பதங்களை யோதப்பா டிருந்த
      விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி மிழலையா னெனவினை கெடுமே.
      3.119.8
      1287. அளவிட லுற்ற அயனொடு மாலும் அண்டமண் கிண்டியுங் காணா
      முளையெரி யாய மூர்த்தியை தீர்த்த முக்கண்எம் முதல்வனை முத்தை
      தளையவிழ் கமல தவிசின்மேல் அன்ன தன்னிளம் பெடையோடும் புல்கி
      விளைகதிர கவரி வீசவீற் றிருக்கும் மிழலையா னெனவினை கெடுமே. 3.119.9
      1288. கஞ்சிப்போ துடையார் கையிற்கோ சார கலதிகள் கட்டுரை விட்டு
      அஞ்சித்தே விரிய எழுந்தநஞ் சதனை யுண்டம ரர்க்கமு தருளி
      இஞ்சிக்கே கதலி கனிவிழ கமுகின் குலையொடும் பழம்விழ தெங்கின்
      மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழி மிழலையா னெனவினை கெடுமே. 3.119.10
      1289. வேந்தர்வ திறைஞ்ச வேதியர் வீழி மிழலையுள் விண்ணிழி விமான
      தேய்ந்ததன் றேவி யோடுறை கின்ற ஈசனை யெம்பெரு மானை
      தோய்ந்தநீர தோணி புரத்துறை மறையோன் தூமொழி ஞானசம் பந்தன்
      வாய்ந்தபா மாலை வாய்நவில் வாரை வானவர் வழிபடு வாரே. 3.119.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.120 திருஆலவாய்
      பண் - புறநீர்மை
      திருச்சிற்றம்பலம்
      1290 மங்கையர கரசி வளவர்கோன் பாவை வரிவளை கைம்மட மானி
      பங்க செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவ
      பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
      அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே. 3.120.1
      1291. வெற்றவே யடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியுங்
      கொற்றவன் றனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவி நின்றேத்தும்
      ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை யொழிந்தி
      டற்றவர கற்ற சிவனுறை கின்ற ஆலவா யாவதும் இதுவே. 3.120.2
      1292. செந்துவர் வாயாள் சேலன கண்ணாள் சிவன்திரு நீற்றினை வளர்க்கும்
      பந்தணை விரலாள் பாண்டிமா தேவி பணிசெ பாரிடை நிலவுஞ்
      சந்தமார் தரளம் பாம்புநீர் மத்த தண்ணெரு கம்மலர் வன்னி
      அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே. 3.120.3
      1293. கணங்களாய் வரினு தமியராய் வரினும் அடியவர் தங்களை கண்டால்
      குணங்கொடு பணியுங் குலச்சிறை பரவுங் கோபுரஞ் சூழ்மணி கோயில்
      மணங்கமழ் கொன்றை வாளரா மதியம் வன்னிவண் கூவிள மாலை
      அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே. 3.120.4
      1294. செய்யதா மரைமேல் அன்னமே யனைய சேயிழை திருநுதற் செல்வி
      பையர வல்குற் பாண்டிமா தேவி நாடொறும் பணிந்தினி தேத்த
      வெய்யவேற் சூலம் பாசம்அங் குசமான் விரிகதிர் மழுவுடன் தரித்த
      ஐயனார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே. 3.120.5
      1295. நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற
      குலமில ரா குலமதுண் டாக தவம்பணி குலச்சிறை பரவுங்
      கலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன்
      அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே. 3.120.6
      1296. முத்தின்தாழ் வடமுஞ் சந்தன குழம்பும் நீறுந்தன் மார்பினின் முயங்க
      பத்தியார் கின்ற பாண்டிமா தேவி பாங்கொடு பணிசெய நின்ற
      சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே சுடர்மர கதமடு தாற்போல்
      அத்தனார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே. 3.120.7
      1297. நாவணங் கியல்பாம் அஞ்செழு தோதி நல்லராய் நல்லியல் பாகுங்
      கோவணம் பூதி சாதனங் கண்டால் தொழுதெழு குலச்சிறை போற்ற
      ஏவணங் கியல்பாம் இராவணன் திண்டோ ள் இருபதும் நெரிதர வூன்றி
      ஆவணங் கொண்ட சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே. 3.120.8
      1298. மண்ணெலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடி சோழன்றன் மகளாம்
      பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி பாங்கினாற் பணிசெய்து பரவ
      விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்பரி தாம்வகை நின்ற
      அண்ணலார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே. 3.120.9
      1299. தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறு தொழுதுதன் குணத்தினை குலாவ
      கண்டுநா டோ றும் இன்புறு கின்ற குலச்சிறை கருதிநின் றேத்த
      குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள் குறியின்கண் நெறியிடை வாரா
      அண்டநா யகன்றான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவா யாவதும் இதுவே. 3.120.10
      1300. பன்னலம் புணரும் பாண்டிமா தேவி குலச்சிறை யெனுமிவர் பணியும்
      அந்நலம் பெறுசீர் ஆலவா யீசன் திருவடி யாங்கவை போற்றி
      கன்னலம் பெரிய காழியுள் ஞான சம்பந்தன் செந்தமி ழிவைகொண்
      டின்னலம் பாட வல்லவர் இமையோர் ஏத்தவீற் றிருப்பவர் இனிதே. 3.120.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.121 திருப்பந்தணநல்லூர்
      பண் - புறநீர்மை
      திருச்சிற்றம்பலம்
      1301 இடறினார் கூற்றை பொடிசெய்தார் மதிலை யிவைசொல்லி யுலகெழு தேத்த
      கடறினா ராவர் காற்றுளா காதலி துறைதரு
      கொடிறனார் யாதுங் குறைவிலார் தாம்போ கோவணங் கொண்டு கூத்தாடும்
      படிறனார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 3.121.1
      1302. கழியுளா ரெனவுங் கடலுளா காட்டுளார் நாட்டுளா
      வழியுளா ரெனவும் மலையுளா மண்ணுளார் விண்ணுளா
      சுழியுளா ரெனவுஞ் சுவடுதா மறியார் தொண்டர்வாய் வந்தன சொல்லும்
      பழியுளார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 3.121.2
      1303. காட்டினா ரெனவும் நாட்டினா ரெனவுங் கடுந்தொழிற் காலனை காலால்
      வீட்டினா ரெனவுஞ் சாந்தவெண் ணீறு பூசியோர் வெண்மதி சடைமேற்
      சூட்டினா ரெனவுஞ் சுவடுதா மறியார் சொல்லுள சொல்லு நால்வேத
      பாட்டினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 3.121.2
      1304. முருகினார் பொழில்சூழ் உலகினா ரேத்த மொய்த்தபல் கணங்களின் றுயர்கண்
      டுருகினா ராகி உறுதிபோ துள்ளம் ஒண்மையால் ஒளிதிகழ் மேனி
      கருகினா ரெல்லாங் கைதொழு தேத்த கடலுள்நஞ் சமுதமா வாங்கி
      பருகினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 3.121.4
      1305. பொன்னினார் கொன்றை யிருவடங் கிடந்து பொறிகிளர் பூணநூல் புரள
      மின்னினார் உருவின் மிளிர்வதோர் அரவம் மேவுவெண் ணீறுமெய் பூசி
      துன்னினார் நால்வர கறமமர தருளி தொன்மையார் தோற்றமுங் கேடும்
      பன்னினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 3.121.5
      1306. ஒண்பொனா ரனைய அண்ணல்வாழ் கெனவும் உமையவள் கணவன்வாழ்
      அண்பினார் பிரியார் அல்லுநண் பகலும் அடியவர் அடியிணை தொழவே
      நண்பினார் எல்லாம் நல்லரென் றேத்த அல்லவர் தீயரென் றேத்தும்
      பண்பினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 3.121.6
      1307. எற்றினார் ஏதும் இடைகொள்வா ரில்லை இருநிலம் வானுல கெல்லை
      தெற்றினார் தங்கள் காரண மாக செருமலை தடியிணை சேர்வான்
      முற்றினார் வாழும் மும்மதில் வேவ மூவிலை சூலமும் மழுவும்
      பற்றினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 3.121.7
      1308. ஒலிசெய்த குழலின் முழவம தியம்ப வோசையால் ஆட லறாத
      கலிசெய்த பூதங் கையினா லிடவே காலினாற் பாய்தலும் அரக்கன்
      வலிகொள்வர் புலியின் உரிகொள்வ ரேனை வாழ்வுநன் றானுமோர் தலையிற்
      பலிகொள்வர் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 3.121.8
      1309. சேற்றினார் பொய்கை தாமரை யானுஞ் செங்கண்மா லிவரிரு கூறா
      தோற்றினார் தோற்ற தொன்மையை யறியார் துணைமையும் பெருமையு தம்மில்
      சாற்றினார் சாற்றி யாற்றலோ மென்ன சரண்கொடு தவர்செய்த பாவம்
      பாற்றினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதியாரே. 3.121.9
      இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 3.121.10
      1310. கல்லிசை பூண கலையொலி ஓவா கழுமல முதுபதி தன்னில்
      நல்லிசை யாளன் புல்லிசை கேளா நற்றமிழ் ஞானசம் பந்தன்
      பல்லிசை பகுவா படுதலை யேந்தி மேவிய பந்தண நல்லூர்
      சொல்லிய பாடல் பத்தும்வல் லவர்மேல் தொல்வினை சூழகி லாவே. 3.121.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.122 திருஓமமாம்புலியூர்
      பண் - புறநீர்மை
      திருச்சிற்றம்பலம்
      1311 பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்
      வீங்கிருள் நட்டம் ஆடுமெம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில்
      தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதி செறிதரு வண்டிசை பாடும்
      ஓங்கிய புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.1
      1312. சம்பரற் கருளி சலந்தரன் வீ தழலுமிழ் சக்கரம் படைத்த
      எம்பெரு மானார் இமையவ ரேத்த இனிதினங் குறைவிடம் வினவில்
      அம்பர மாகி அழலுமிழ் புகையின் ஆகுதி யான்மழை பொழியும்
      உம்பர்க ளேத்தும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.2
      1313. பாங்குடை தவத்து பகீரதற் கருளி படர்சடை கரந்தநீர கங்கை
      தாங்குதல் தவிர்த்து தராதல திழித்த தத்துவன் உறைவிடம் வினவில்
      ஆங்கெரி மூன்றும் அமர்ந்துட னிருந்த அங்கையால் ஆகுதி வேட்கும்
      ஓங்கிய மறையோர் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.3
      1314. புற்றர வணிந்து நீறுமெய் பூசி பூதங்கள் சூழ்தர வூரூர்
      பெற்றமொன் றேறி பெய்பலி கொள்ளும் பிரானவன் உறைவிடம் வினவிற்
      கற்றநால் வேதம் அங்கமோ ராறுங் கருத்தினார் அருத்தியாற் றெரியும்
      உற்றபல் புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.4
      1315. நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர்கெட நெடியமாற் கருளால்
      அலைத்தவல் லசுரர் ஆசற வாழி யளித்தவன் உறைவிடம் வினவிற்
      சலத்தினாற் பொருள்கள் வேண்டுதல் செய்யா தன்மையார் நன்மையான் மிக்க
      உலப்பில்பல் புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.5
      1316. மணந்திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியுமா றங்கம் ஐவேள்வி
      இணைந்தநால் வேதம் மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையா லுணருங்
      குணங்களும் அவற்றின் கொள்பொருள் குற்றம் மற்றவை யுற்றது மெல்லாம்
      உணர்ந்தவர் வாழும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.6
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 3.122.7
      1317. தலையொரு பத்து தடக்கைய திரட்டி தானுடை அரக்க னொண்கயிலை
      அலைவது செய்த அவன்றிறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில்
      மலையென வோங்கும் மாளிகை நிலவும் மாமதில் மாற்றல ரென்றும்
      உலவுபல் புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.8
      1318. கள்ளவிழ் மலர்மே லிருந்தவன் கரியோ னென்றிவர் காண்பரி தாய
      ஒள்ளெரி யுருவர் உமையவ ளோடும் உகந்தினி துறைவிடம் வினவிற்
      பள்ளநீர் வாளை பாய்தரு கழனி பனிமலர சோலைசூ ழாலை
      ஒள்ளிய புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.9
      1319. தெள்ளிய ரல்லா தேரரோ டமணர் தடுக்கொடு சீவரம் உடுக்குங்
      கள்ளமார் மனத்து கலதிக கருளா கடவுளார் உறைவிடம் வினவில்
      நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்து நலந்திகழ் மூன்றெரி யோம்பும்
      ஒள்ளியார் வாழும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.10
      1320. விளைதரு வயலுள் வெயில்செறி பவளம் மேதிகள் மேய்புல திடறி
      ஒளிதர மல்கும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யரனை
      களிதரு நிவப்பிற் காண்டகு செல்வ காழியுள் ஞானசம் பந்தன்
      அளிதரு பாடல் பத்தும்வல் லார்கள் அமரலோ கத்திரு பாரே. 3.122.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.123 திருக்கோணமாமலை
      பண் - புறநீர்மை
      திருச்சிற்றம்பலம்
      1321 நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி
      வரைகெழு மகளோர் பாகமா புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
      கரைகெழு சந்துங் காரகிற் பிளவும் அளப்பருங் கனமணி வரன்றி
      குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர தாரே. 3.1232.1
      1322. கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
      பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடும் உடனா
      கொடிதென கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமுன் நித்திலஞ் சுமந்து
      குடிதனை நெருங்கி பெருக்கமா தோன்றுங் கோணமா மலையமர தாரே.
      3.1232.2
      1323. பனித்திள திங்க பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார்
      கனித்திள துவர்வா காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதின்மேற்
      தனித்தபே ருருவ விழித்தழல் நாக தாங்கிய மேருவெஞ் சிலையா
      குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர தாரே. 3.1232.3
      1324. பழித்திளங் கங்கை சடைமுடி வைத்து பாங்குடை மதனனை பொடியா
      விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த விமலனார் கமலமார் பாதர்
      தெழித்துமுன் அரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனும் இப்பியுஞ் சுமந்து
      கொழித்துவன் றிரைகள் கரையிடை சேர்க்குங் கோணமா மலையமர தாரே.
      3.1232.4
      1325. தாயினும் நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசை பார்கள்
      வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர்
      நோயிலும் பிணியு தொழலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலங்
      கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர தாரே. 3.1232.5
      1326. பரிந்துநன் மனத்தால் வழிபடும் மாணி தன்னுயிர் மேல்வருங் கூற்றை
      திரிந்திடா வண்ணம் உதைத்தவற் கருளுஞ் செம்மையார் நம்மையா ளுடையார்
      விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
      குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ் கோணமா மலையமர தாரே.
      3.1232.6
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 3.1232.7
      1327. எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலால் ஏத்திட வாத்தமாம் பேறு
      தொடுத்தவர் செல்வ தோன்றிய பிறப்பும் இறப்பறி யாதவர் வேள்வி
      தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னரு பெருமையும் வாழ்வுங்
      கொடுத்தவர் விரும்பும் பெரும்புக ழாளர் கோணமா மலையமர தாரே. 3.1232.8
      1328. அருவரா தொருகை வெண்டலை யேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க
      பெருவரா யுறையும் நீர்மையர் சீர்மை பெருங்கடல் வண்ணனும் பிரமன்
      இருவரும் அறியா வண்ணம்ஒள் ளெரியாய் உயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்குங்
      குருவராய் நின்றார் குரைகழல் வணங கோணமா மலையமர தாரே. 3.1232.9
      1329. நின்றுணுஞ் சமணும் இருந்துணு தேரும் நெறியலா தனபுறங் கூற
      வென்றுநஞ் சுண்ணும் பரிசினர் ஒருபால் மெல்லிய லொடும்உட னாகி
      துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதி
      குன்றுமொண் கானல் வாசம்வ துலவுங் கோணமா மலையமர தாரே. 3.1232.10
      1330. குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர தாரை
      கற்றுணர் கேள்வி காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன்
      உற்றசெ தமிழார் மாலை யீரைந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
      சுற்றமு மாகி தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடை பொலிந்தே.
      3.1232.11
      இத்தலம் ஈழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கோணீசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.124 திருக்குருகாவூர் - வெள்ளடை
      பண் - அந்தாளிக்குறிஞ்சி
      திருச்சிற்றம்பலம்
      1331 சுண்ணவெண் ணீறணி மார்பில் தோல்புனை
      தெண்ணரும் பல்கணம் ஏத்தநின் றாடுவார்
      விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
      பெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே. 3.124.1
      1332. திரைபுல்கு கங்கை திகழ்சடை வைத்து
      வரைமக ளோடுடன் ஆடுதிர் மல்கு
      விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
      அரை மல்கு வாளர வாட்டுக தீரே. 3.124.2
      1333. அடையலர் தொன்னகர் மூன்றெரி தன்ன
      நடைமட மங்கையோர் பாகம் நயந்து
      விடையுக தேறுதிர் வெள்ளடை மேவிய
      சடையமர் வெண்பிறை சங்கர னீரே. 3.124.3
      1334. வளங்கிளர் கங்கை மடவர லோடு
      களம்பட ஆடுதிர் காடரங் காக
      விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
      இளம்பிறை சேர்சடை யெம்பெரு மானே. 3.124.4
      1335. சுரிகுழல் நல்ல துடியிடை யோடு
      பொரிபுல்கு காட்டிடை யாடுதிர் பொங்க
      விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
      எரிமழு வாட்படை எந்தை பிரானே. 3.124.5
      1336. காவியங் கண்மட வாளொடுங் காட்டிடை
      தீயக லேந்திநின் றாடுதிர் தேன்மலர்
      மேவிய தண்பொழில் வெள்ளடை
      ஆவினில் ஐந்துகொண் டாட்டுக தீரே. 3.124.6
      இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின. 3.124.7
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3.125 திருநல்லூர்ப்பெருமணம்
      பண் - அந்தாளிக்குறிஞ்சி
      திருச்சிற்றம்பலம்
      1337 கல்லூர பெருமணம் வேண்டா கழுமலம்
      பல்லூர பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
      சொல்லூர பெருமணஞ் சூடல ரேதொண்டர்
      நல்லூர பெருமண மேயநம் பானே. 3.125.1
      1338. தருமண லோதஞ்சேர் தண்கடல் நித்திலம்
      பருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள்
      வருமணங் கூட்டி மணஞ்செயும் நல்லூர
      பெருமண தான்பெண்ணோர் பாகங்கொண் டானே. 3.125.2
      1339. அன்புறு சிந்தைய ராகி அடியவர்
      நன்புறு நல்லூர பெருமணம் மேவிநின்
      றின்புறும் எந்தை இணையடி யேத்துவார்
      துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே. 3.125.3
      1340. வல்லி தோலுடை யார்ப்பது போர்ப்பது
      கொல்லியல் வேழ துரிவிரி கோவணம்
      நல்லிய லார்தொழு நல்லூர பெருமணம்
      புல்கிய வாழ்க்கையெம் புண்ணிய னார்க்கே. 3.125.4
      1341. ஏறுக தீரிடு காட்டெரி யாடிவெண்
      ணீறுக தீர்நிரை யார்விரி தேன்கொன்றை
      நாறுக தீர்திரு நல்லூர பெருமணம்
      வேறுக தீருமை கூறுக தீரே. 3.125.5
      1342. சிட்டப்ப டார்க்கெளி யான்செங்கண் வேட்டுவ
      பட்டங்க டுஞ்சென்னி யான்பதி யாவது
      நட்டக்கொ டாட்டறா நல்லூர பெருமண
      திட்டப்ப டாலொத்தீ ராலெம்பி ரானீரே. 3.125.6
      1343. மேகத்த கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமை
      பாகத்தன் பாய்புலி தோலொடு பந்தித்த
      நாகத்தன் நல்லூர பெருமண தான்நல்ல
      போகத்தன் யோகத்தை யேபுரி தானே. 3.125.7
      1344. தக்கிரு தீரன்று தாளால் அரக்கனை
      உக்கிரு தொல்க உயர்வரை கீழிட்டு
      நக்கிரு தீரின்று நல்லூர பெருமணம்
      புக்கிரு தீரெமை போக்கரு ளீரே. 3.125.8
      1345. ஏலுந்தண் டாமரை யானும் இயல்புடை
      மாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறை
      நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர பெருமணம்
      போலுந்தங் கோயில் புரிசடை யார்க்கே. 3.125.9
      1346. ஆதர் அமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும்
      பேதைமை கேட்டு பிணக்குறு வீர்வம்மின்
      நாதனை நல்லூர பெருமணம் மேவிய
      வேதன தாள்தொழ வீடெளி தாமே. 3.125.10
      1347. நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்
      பெறும்பத நல்லூர பெருமண தானை
      உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார
      கறும்பழி பாவம் அவலம் இலரே. 3.125.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சிவலோகத்தியாகேசர்
      தேவியார் - நங்கையுமைநாயகியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      பிற்சேர்க்கை
      1. திருவிடைவாய்
      இப்பதிகம் 1917 இல் திருவிடைவா கல்வெட்டினின்று எடுக்கப்பட்டது.
      திருச்சிற்றம்பலம்
      1 மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும்
      பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்
      பொறிவாய் வரிவண்டுதன் பூம்பெடை புல்கி
      வெறியார் மலரில் துயிலும் விடைவாயே. 1.1
      2. ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலி
      செவ்வான்மதி வைத்தவர் சேர்விட மென்பர்
      எவ்வாயிலும் ஏடலர் கோடலம் போது
      வெவ்வாய் அரவம் மலரும் விடைவாயே. 1.2
      3. கரையார்கடல் நஞ்சமு துண்டவர் கங்கை
      திரையார்சடை தீவண்ணர் சேர்விட மென்பர்
      குரையார்மணி யுங்குளிர் சந்தமுங் கொண்டு
      விரையார் புனல்வ திழியும் விடைவாயே. 1.3
      4. கூச தழல்போல் விழியா வருகூற்றை
      பாச தொடும்வீழ உதைத்தவர் பற்றாம்
      வாச கதிர்ச்சாலி வெண்சா மரையேபோல்
      வீச களியன்னம் மல்கும் விடைவாயே. 1.4
      5. திரிபுரம் மூன்றையுஞ் செந்தழல் உண்ண
      எரியம்பு எய்தகுன்ற வில்லிஇட மென்பர்
      கிரியு தருமாளிகை சூளிகை தன்மேல்
      விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே. 1.5
      6. கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீ
      தள்ளி தலைதக்கனை கொண்டவர் சார்வாம்
      வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்
      வெள்ளை நகையார் நடஞ்செய் விடைவாயே. 1.6
      7. பா தொலி பாரிடம் பாடநடஞ்செய்
      நா தொலியர் நவிலும் இடமென்பர்
      கீ தொலியுங் கெழுமும் முழவோடு
      வே தொலியும் பயிலும் விடைவாயே. 1.7
      8. எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்து
      பண்ணார் தருபாடல் உகந்தவர் பற்றாம்
      கண்ணார் விழவிற் கடிவீதிகள் தோறும்
      விண்ணோர் களும்வ திறைஞ்சும் விடைவாயே. 1.8
      9. புள்வாய் பிளந்தான் அயன்பூ முடிபாதம்
      ஒள்வான் நிலந்தேடும் ஒருவர கிடமா
      தெள்வார் புனற்செங் கழுநீர் முகைதன்னில்
      விள்வாய் நறவுண்டு வண்டார் விடைவாயே. 1.9
      10. உடையேது மிலார் துவராடை யுடுப்போர்
      கிடையா நெறியான் கெழுமும் இடமென்பர்
      அடையார் புரம்வேவ மூவர கருள்செய்த
      விடையார் கொடியான் அழகார் விடைவாயே. 1.10
      11. ஆறும் மதியும்பொதி வேணியன் ஊராம்
      மாறில் பெருஞ்செல்வம் மலிவிடை வாயை
      நாறும் பொழிற்காழியர் ஞானசம் பந்தன்
      கூறு தமிழ்வல்லவர் குற்றமற் றோரே. 1.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2. திருக்கிளியன்னவூர்
      பண் - கௌசிகம்
      சித்தாந்தம்-மலர் 5 இதழ் 11 1932 தலைப்பு ஏட்டிலிருந்து எடுக்கப்பட்டது.
      திருச்சிற்றம்பலம்
      12 தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின்
      சீர்சி றக்கும் துணைப்பதம் உன்னுவோர்
      பேர்சி றக்கும் பெருமொழி உய்வகை
      ஏர்சி றக்கும் கிளியன்ன வூரனே. 2.1
      13. வன்மை செய்யும் வறுமைவ தாலுமே
      தன்மை யில்லவர் சார்பிரு தாலுமே
      புன்மை கன்னியர் பூசலுற் றாலுமே
      நன்மை யுற்ற கிளியன்ன வூரனே. 2.2
      14. பன்னி நின்ற பனுவல் அகத்தியன்
      உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன்
      மன்னி நாகம் முகத்தவர் ஓதலும்
      முன்னில் நின்ற கிளியன்ன வூரனே. 2.3
      15. அன்பர் வேண்டும் அவையளி சோதியான்
      வன்பர் நெஞ்சில் மருவல்இல் லாமுதற்
      துன்ப தீர்த்து சுகங்கொடு கண்ணுதல்
      இன்ப தேக்குங் கிளியன்ன வூரனே. 2.4
      16. செய்யும் வண்ணஞ் சிரித்து புரம்மிசை
      பெய்யும் வண்ண பெருந்தகை யானதோர்
      உய்யும் வண்ணமிங் குன்னருள் நோக்கிட
      மெய்யும் வண்ண கிளியன்ன வூரனே. 2.5
      17. எண்பெ றாவினை கேதுசெய் நின்னருள்
      நண்பு றாப்பவம் இயற்றிடில் அந்நெறி
      மண்பொ றாமுழு செல்வமும் மல்குமால்
      புண்பொ றாதகி ளியன்ன வூரனே. 2.6
      18. மூவ ராயினும் முக்கண்ண நின்னருள்
      மேவு றாதுவி லக்கிடற் பாலரோ
      தாவு றாதுன தைந்தெழு துன்னிட
      தேவ ராக்குங் கிளியன்ன வூரனே. 2.7
      19. திரம் மிகுத்த சடைமுடி யான்வரை
      உரம் மிகுத்த இராவணன் கீண்டலும்
      நிரம் மிகுத்து நெரித்தவன் ஓதலால்
      வரம் மிகுத்த கிளியன்ன வூரனே. 2.8
      20. நீதி யுற்றிடும் நான்முகன் நாரணன்
      பேத முற்று பிரிந்தழ லாய்நிமிர்
      நாதன் உற்றன நன்மலர் பாய்இரு
      கீதம் ஏற்ற கிளியன்ன வூரனே. 2.9
      21. மங்கை யர்க்கர சோடுகு லச்சிறை
      பொங்க ழற்சுரம் போக்கென பூழியன்
      சங்கை மாற்றி சமணரை தாழ்த்தவும்
      இங்கு ரைத்த கிளியன்ன வூரனே. 2.10
      22. நிறைய வாழ்கிளி யன்னவூர் ஈசனை
      உறையும் ஞானசம் பந்தன்சொல் சீரினை
      அறைய நின்றன பத்தும்வல் லார்க்குமே
      குறையி லாது கொடுமை தவிர்வரே. 2.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      3. திருமறைக்காடு
      பண் - கொல்லி
      பின்னர் கிடைக்க பெற்ற திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்.
      திருச்சிற்றம்பலம்
      23 விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை முனிய வாங்கி
      படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே பரம யோகீ
      கடைத்தலை புகுந்து நின்றோம் கலிமறை காட மர்ந்தீர்
      அடைத்திடுங் கதவு தன்னை யப்படி தாளி னாலே. 3.1
      24. முடைத்தலை பலிகொள் வானே முக்கணா நக்க மூர்த்தி
      மடைத்தலை கமலம் ஓங்கும் வயல்மறை காட மர்ந்தாய்
      அடைத்திடுங் கதவை என்றிங் கடியனேன் சொல்ல வல்லே
      அடைத்தனை தேவி தன்னோ டெம்மையாள் உகக்கு மாறே. 3.2
      25. கொங்கண மலர்கள் மேவுங் குளிர்பொழில் இ பாவை
      பங்கணா வுருவி னாலே பருமணி யுமிழும் வெம்மை
      செங்கணார் அரவம் பூண்ட திகழ்மறை காட மர்ந்தாய்
      அங்கணா இதுவன் றோதான் எம்மையாள் உகக்கு மாறே. 3.3
      26. இருளிடை மிடற்றி னானே எழில்மறை பொருட்கள் எல்லா
      தெருள்பட முனிவர கீந்த திகழ்மறை காட மர்ந்தாய்
      மருளுடை மனத்த னேனும் வந்தடி பணிந்து நின்றேர
      கருளது புரிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே. 3.4
      27. பெருத்தகை வேழ தன்னை பிளிறிட உரிசெய் தானே
      மருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மாமறை காட மர்ந்தாய்
      கருத்தில னேனும் நின்றன் கழலடி பணிந்து நின்றேன்
      அருத்தியை அறிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே. 3.5
      28. செப்பமர் கொங்கை மாதர் செறிவளை கொள்ளு தேசோ
      டொப்பமர் பலிகொள் வானே ஒளிமறை காட மர்ந்தாய்
      அப்பமர் சடையி னானே அடியனேன் பணியு கந்த
      அப்பனே அளவிற் சோதீ அடிமையை உகக்கு மாறே. 3.6
      29. மதிதுன்றும் இதழி மத்தம் மன்னிய சென்னி யானே
      கதியொன்றும் ஏற்றி னானே கலிமறை காட மர்ந்தாய்
      விதியொன்று பாவின் மாலை கேட்டருள் வியக்கு தன்மை
      இதுவன்றோ உலகின் நம்பி எம்மையாள் உகக்கு மாறே. 3.7
      30. நீசனாம் அரக்கன் றிண்டோ ள் நெரிதர விரலால் ஊன்று
      தேசனே ஞான மூர்த்தீ திருமறை காட மர்ந்தாய்
      ஆசையை யறுக்க உய்ந்தி டவனடி பரவ மெய்யே
      ஈசனார காள தானான் என்பதை அறிவி தாயே. 3.8
      31. மைதிகழ் உருவி னானும் மலரவன் றானும் மெய்ம்மை
      எய்துமா றறிய மாட்டார் எழில்மறை காட மர்ந்தாய்
      பொய்தனை யின்றி நின்னை போற்றினார கருளை சேர
      செய்தனை யெனக்கு நீயின் றருளிய திறத்தி னாலே. 3.9
      32. மண்டல தமணர் பொய்யு தேரர்கள் மொழியும் மாற
      கண்டனை யகள என்றும் கலிமறை காட மர்ந்தாய்
      தண்டியை தானா வைத்தான் என்னு தன்மை யாலே
      எண்டிசை கறிய வைத்தாய் இக்கத வடைப்பி தன்றே. 3.10
      33. மதமுடை களிறு செற்ற மாமறை காட்டு ளானை
      கதவடை திறமுஞ் செப்பி கடிபொழிற் காழி வேந்தன்
      தகவுடை புகழின் மிக்க தமிழ்கெழு விரகன் சொன்ன
      பதமுடை பத்தும் வல்லார்
      பரமனு கடியர் தாமே. 3.11
      திருச்சிற்றம்பலம்
      மூன்றாம் திருமுறை முற்றும்.
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள் மூன்று திருமுறையும் முற்றுப்பெற்றது.
      ------------------------------------------------------------------------
      17 2003


      2.