விவாகங்கள் விகாரங்கள் விவாதங்கள்
      ரிச்சர பாஷ் அமெரிக்கா
      தமிழில்எஸ். ஷங்கரநாராயணன்
      வில்லியம் கூம்ஸ். ரெண்டு ஓ. மெலனி பாலிங்கர் அப்பாவிடம் தொலைது¡ரத்தில் இருந்து தொலைபேசியில் சொன்னாள். கூப்பிடும்போது சீப்பு வருமே கோம்ஸ் அதைப்போல. சொல்லுங்கப்பா...
      பாலிங்கர் திரும்பி அந்த பெயரை சொன்னார்.
      முழுப்பேரும் சொல்லுங்க.
      தெரியுண்டா. ஏன் சொல்ல சொல்றே
      அப்பா அவரை வீட்டுக்கு அழைச்சிட்டு வரேன். நாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்னிருக்கோம்.
      அவருக்கு பேச வரவில்லை.
      அப்பா கேட்கறீங்களா
      ம்
      அப்பறம்
      மீண்டும் அவருக்கு திண்டாட்டமாய் இருந்தது.
      அப்பா
      ம்... முக்கியமான சமாச்சாரம்தான்.
      அவ்ளதானாப்பா
      ஸ். அதாவது மெலனி அபார ஜரூர்... இல்லே
      அப்டில்லாம் இல்லப்பா. நீங்களும் அம்மாவும் எத்தனைநாள் காத்திட்டிருந்தீங்க
      அது ஞாபகமில்லை. ஆக அதுனாலதான் இந்த முடிவுன்றியா
      நீங்க ஆறு மாசமா யோசிச்சிட்டிருந்தீங்க. அப்புறம் ஒரு அஞ்சுமாசம் ஓடிட்டது. ஆனா அதைவெச்சி நாம பேச வேணாம். நானும் வில்லியமும் அஞ்சு மாசத்துக்கும் மேல பழகினவங்கதான். இப்ப இருபத்திமூணு முடியப்போகுது எனக்கு. அம்மாவின் கல்யாணவயசைவிட ரெண்டு வருஷம் ஜாஸ்தி... அப்ப அந்த காலம் வேறன்னுல்லாம் வேணாம்...
      இல்ல என்றார். எல்லாம் ஒண்ணுதான்-னு நினைக்கிறேன்.
      அப்பறம் அவள் கேட்டாள்.
      ம் பாலிங்கர் சொன்னார். உன் வாழ்க்கையை பத்தி... ரொம்ப சந்தோஷம்.
      உங்க குரல் அப்பிடி சொல்லலியே
      நான் சந்தோஷப்படறேன். மாப்ளையை உடனே பாக்கணுமே
      நிஜமாவா சத்தியமா சும்மாவாச்சும் சொல்றீங்களா
      நல்ல சேதி கண்ணே. ஆச்சரியப்படுத்திட்டே அது வாஸ்தவந்தான். எனக்கு விஷயம் உள்ள இறங்க அவகாசம் வேணாமா திடுதிப்னு... நானும் அம்மாவும்... நீ ஒருத்தரோட பழகறதே தெரியாது எங்களுக்கு. ஆனா அதைப்பத்தி என்ன சந்தோஷம்தான். அந்த வாலிபனை உடனே நான் பாக்கணும்.
      சரி. இப்ப இன்னொரு விஷயம் நீங்க தெரிஞ்சிக்கணும்.
      நான் தயார் என்றார் பாலிங்கர். புதிதா குடிவந்த வீட்டின் சமையலறை. இந்த வீட்டை மகள் அறிந்ததில்லை. ஜன்னலுக்கு அப்பால் அவர் மனைவி. மேரி. சிவப்பு துவாலையை போர்த்திக்கொண்டு வெள்ளை மஸ்லின் சட்டையும் ஜீன்ஸ் சாராயுமா தோட்ட வேலையில் இருந்தாள். இளமையாய் சந்தோஷமாய்... அவர்கள் ரொம்ப காலமாக சந்தோஷமாக இல்லைதான்.
      ம் இதை அத்தனை இதுவா சொல்ல முடியாது. ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து மகளின் குரல். வேணா அப்பறமா சொல்...
      இல்லல்ல. எதுவானாலும் சொல்லு. நான் எடுத்துக்கறேன்.
      உண்மையில் அவரே அவளிடம் சேதி ஒன்று பகிர வேண்டியிருந்தது. ஒரு ஒருவாரம் முன்னாடி அவரும் மேரியும் விலகிக்கொள்ள தீர்மானம் எடுத்திருந்தார்கள். பேசி விவாதித்து முடிவு எடுக்கிற நேரமாய் இருந்தது. மெலனி வீட்டுக்கு வரட்டும் சொல்லி கொள்ளலாம் என்றிருந்தார்கள். ஆனால் வரும்போது கூட வேறொருவரை அழைத்து வருகிறதாக இருக்கிறாள்...
      மறுமுனையில் அவள் தையலும் கையுமாய் இருந்தாள். தெர்ல அப்பா. நான்... கடவுளே... எப்பிடி அதை சொல்லறது
      காத்திருந்தார். சிகாகோவில் இருக்கிறாள். நாலு வருஷம் முன்னால் படிக்க அனுப்பியது. பட்டம் வாங்கியபின் அதே ஊரில் ஒரு தனியார் செய்தித்தாளில் வேலையும் ஏற்று கொண்டாள். சர்லோட்ஸ்வில் பகுதி மையத்திலான இந்த சிறு வீட்டுக்கு இவர்கள் மாறி கொண்டார்கள். இடமாற்றம் சில நல்லம்சங்களை கொண்டு வரலாம் என நப்பாசை. வரவில்லை. மணமாகி இத்தனை வருஷம். இப்போது மனசு ஒட்டுவதாய் இல்லை.
      அப்பா என்றாள் அநாதரவாய்.
      சமத்தே கேட்டுட்டிருக்கேன்.
      சரி இதப்பாருங்கப்பா... என்றாள் அவள். நீங்க திட்டக்கூடாது... சத்தியம் பண்ணுங்க.
      அதுல்லாம் எப்பிடி முடியும் மெலனி
      அப்ப திட்டுவீங்க... கோபப்பட மாட்டேன்னு சத்தியம் பண்ணி குடுங்க.
      சமத்தே நானும் உன்னாண்ட ஒண்ணு சொல்ல போறேன். நீயும் கடுப்பா கூடாது எனக்கு சத்தியம் பண்ணு.
      சத்தியம் என்றாள் அவள் - மனசில் என்ன ஆக போவுதோ
      ம் என்றார். இப்ப நீ சொல்லு. எதுனாலும் மனசில் ஒரு எண்ணம் அதிர்ச்சியா தாக்கியது. மெலனி... நீ... கர்ப்பமாய் இல்லேல்ல இல்ல
      அவள் கேட்டாள். உங்களுக்கு எப்பிடி தெரியும்
      அவருக்கு நெஞ்சடைத்தது. அட கடவுளே நிஜத்தில்...
      யேசுவே... அவள். சட்னு கண்டுபிடிச்சிட்டீங்க. ஆச்சர்யம்...
      அப்டின்னா நீ முழுகாம இருக்கே.
      ம். கடவுளே நீங்க எதிராளி மனசை படிக்க அறிஞ்சவர் அப்பா.
      அப்டில்லாம் இல்ல மெலனி... நீ பேசறதை வெச்சி ஒரு யூகம்... இது நிச்சயமா தெரியுமா
      ஆமாமாம் நிச்சயம். ஆனா அது இல்ல சிக்கல். நான் அப்பறமா சொல்லட்டுமா...
      ஏன் அப்பறமா
      மத்த விஷயத்துக்கும் நீங்க பழகிக்கற வரைக்கும்...
      அவர் பதில் பேசவில்லை. மறுபக்கம் அவள் குழப்பமாய் இருந்தாள். பெருமூச்செறித்தாள். பேச முயன்று நிறுத்தி கொண்டாள்.
      தெர்ல என்றாள் கடைசியாக. சட்டென்று அறையில் இருக்கிற இன்னொரு நபரிடம் அவள் பேசுவதாக உணர்ந்தார்.
      பெண்ணே அம்மாவை கூப்பிடட்டுமா
      இல்லப்பா. முதல்ல உங்ககிட்ட சொல்லிறணும். எல்லாம் சொல்லி முடிச்சிட்டா நல்லது.
      எல்லாம் முடிச்சிர்றதுன்னா மெலனி என்ன பேசிட்டிருக்கோம் நாம. அம்மாவை கூப்பிடறேன். கொஞ்சம் இடக்கு பண்ண ஏனோ தோணியது. ஏன்னா நான் கர்ப்பமா ஆனதில்லையே
      அட விஷயம் அது இல்லப்பா. அதை நீங்களே யூகிச்சிட்டீங்க.
      காதோடு தொலைபேசியை அழுத்தி கொண்டார். ஜன்னல் வெளியே குனிந்தும் நிமிர்ந்தும் கையுறையால் கீழ் முதுகுத்தண்டை வருடியபடி மனைவி. உடற்பயிற்சி. ஓ மேரி
      கேட்கறீங்களா என்றாள் மகள்.
      இரு என்றார். ஒரு நிமிஷம். உட்கார்ந்துக்கிட்டா நல்லதா ம் உட்கார்ந்துக்கறேன். மேஜையருகில் இருந்து நாற்காலியை இழுத்து உள்ளே அடங்கி கொண்டார். மறுமுனையில் அவளது மூச்சு. து¡ரத்து இணைப்பு. தொலைபேசி இரைச்சலா கூட இருக்கலாம். சரி தொண்டை உள்ளிழுத்தது.
      வில்லியம் என்னைவிட கொஞ்சம்... வயசு கூடியவர்... என்றவள் மூச்சு திகைப்பாய் உணர்ந்தாள்.
      சிறிது விட்டு அவர் அதான் விஷயமா என்றார்.
      ம் அது எவ்வளவுன்னு...
      சரி சரி.
      அவள் தன்னை தானே து¡க்கி நிறுத்தி கொள்ள போராடினாள். பெருமூச்சு. மெளனம். நான் நினைச்சதைவிட கஷ்டமாக போகுது...
      ஏய் நீ கர்ப்பமா இருக்கிறதை விட எக்குத்தப்பா எதாவது சொல்ல போறியா
      அவள் பேசவில்லை.
      யம்மாவே நீ மீதியை சொல்லி முடி.
      ம் நீங்க அப்பிடி கேட்டதுக்கு என்ன அர்த்தம்
      மெலனி மனசுக்கு கஷ்டமான விஷயம்னு நீதானே சொன்னே
      பதில் இல்லை.
      அட பெண்ணே சொல்லும்மா.
      நான் கல்ணாயம் கட்டிக்கப்... நிறுத்தினாள். அப்பா வில்லியம் அறுபது வயசுக்காரர். அறுபது.... அறுபத்திமூணு வயசு.
      எழுந்து நின்றுவிட்டார். வெளியே ஜன்னலுக்கப்பால் மனைவி மீண்டும் வேலையை ஆரம்பித்திருந்தாள். துலி செடிகளிடையே களை பறித்தவாறிருந்தாள். ஒளியூடுருவும் காலை கோடை. வீதி நெடுக அவரவர் வீடுகளில் வாசல் தோட்டத்தில் ஜனங்கள் புல்லும் பூவுமாய் இருந்தார்கள்.
      கேட்டுதா அப்பா அதுனால பிர்சனை எதுவுமே இல்லை. ஏன்னா அவர் அறுபத்திமூணு வயசு இளைஞர்தான் வாலிபமும் ஆரோக்கியமும் உள்ளவர். ஜார்ஜ் பேர்ன்ஸ் மாதிரி...
      ஜார்ஜ் பேர்ன்ஸ் என்றார். மெலினி புரியல்ல அதாரது
      இந்த நக்கலெல்லாம் வேணாம் அப்பா.
      இல்லல்ல நீ என்ன சொல்லிட்டிருந்தே மனசு வெறுமையாய் இருந்தது.
      வில்லியமுக்கு வயசு அறுபத்திமூணுன்னு சொன்னேன்...
      வில்லியம் யாரு
      நான் கட்டிக்க போறவர்...
      இரு. நீ காதலர்ன்றே. கட்டிக்க போறவர் அவர்... அவருக்கா
      வாலிப 63.
      63
      அப்பா
      ஆறு அடி மூணு அங்குலம் அதுமாதிரி சொல்லலே இல்லியா
      பதில் இல்லை.
      மெலனி
      ம்
      பெண்ணே இது தமாஷ¤க்காகத்தான். இல்லியா நீ கிண்டல் அடிக்கறே என்னை
      அப்டி இல்லப்பா... அவள் சொன்னாள். என்னால நம்பவே முடியல.
      உன்னால நம்ப முடியல்ல... என்றார் அவர். நம்பறா மாதிரி இல்லல்ல...
      அப்பா என்றாள். நான் அப்பவே சொன்னேன். அறையில் இருக்கிற மற்ற நபரிடம் பேசுகிறாள் போலும். குரல் விலகி தேய்ந்தது.
      மெலனி சரியா ·போனை கிட்ட வெச்சிக்கிட்டு பேசு...
      கஷ்டமான விஷயம்தான் என்றாள் அவள். உங்களை ரொம்ப அழுத்தறேன்... தெரியுது.
      இல்லல்ல அவர் சொன்னார். இரத்தம் அதிர்கிறது உள்ளே. அதைவிட அதிகமாயிருக்கு அவஸ்தை. மெலனி அப்பிடித்தானா இல்லை வானிலை அறிக்கை மாதிரி.... சொல்லி நடக்கா போகுதே அதுமாதிரி வேடிக்கையா
      இதெல்லாம் நான் எதிர்பார்த்திருக்கணும்...
      மன்னிச்சுக்க என்று சுருதி இறக்கினார். ஆனா ஒண்ணு உன்னை கேட்கணும்...
      பரவால்ல. அவளும் சகஜபாவனை கொண்டாடினாள். என் காரியத்தை நான் பாத்துக்க தெரிஞ்சவள் அப்பா. எதும் தடாலடியா எடுத்தம் கவுத்தோம்னு பண்ணல.
      அவர் இடைமறித்தார். அது சரி கடவுளே வேற யாரோ அவசர பட்டுட்டாங்க. இல்லியா
      அப்பா
      அவரை அப்படித்தான் கூப்பிடறியா நீ இல்ல நான் அப்பா. அவர் தாத்தா
      இதை கிண்டலா கூட எடுத்துக்க முடியாது என்றாள் அவள்.
      நானும் கிண்டலா சொல்லல மெலனி. போகட்டும். என் கேள்வி அதல்ல. அவர் நிறுத்தினார். தயவுசெஞ்சி மன்னிச்சுக்க ஆனா எனக்கு தெரிஞ்சாகணும்.
      வாஸ்தவத்தில் உங்களுக்கு தெரியன்னு எதுவுங் கிடையாது அப்பா. நான் பெரிய பெண். குடும்ப முறைக்காக பேசிட்டிருக்கேன்...
      அது எனக்கு புரியுது. ஒரு சம்பிரதாயம் அதேதான். நல்லாவே சொன்னே. சரி அதே மரியாதைக்கு மெலனி சொல்லு... உன் வயித்து குழந்தை... அதுக்கு அப்பா.... அவர்தானா
      ஆமாம். அவள் குரல் தாழ்ந்தது.
      கேள்வி கேட்டதுக்கு வருந்துகிறேன். ஆனா எல்லாம் கூட்டி கழிச்சு பாக்கணும். பாரு நீ போடற குண்டையெல்லாம் ஒரே தடவையா நான் வாங்கிக்கணும் இல்லியா
      உங்க அவஸ்தை புரியுது நான் முதல்லியே சொன்னேனே
      நீ புரிஞ்சிக்கிட்டதா நான் நினைக்கல. என் நிலைமை உனக்கு புரியவில்லை...
      சரி என்றாள். நான் உங்களை புரிஞ்சிக்கவில்லை. நீங்க எப்பிடி இதை எடுத்துக்குவீங்க அதை சரியா புரிஞ்சிக்கிட்டேன்னு நினைக்கிறேன்.
      கொஞ்ச நேரம் மெளனம். தொலைபேசியில் து¡ர இணைப்பின் அலையிரைச்சல் மாத்திரம்.
      பெண்ணே இது சரியா வருமா நல்லா யோசிச்சிட்டியா
      கண்டிப்பா பந்தயம் வைப்பேன் அதை பத்தி என்றாள் உற்சாகமாய்.
      நல்லது ஆனா கர்த்தரே... பாலிங்கர் சொன்னார். அவருக்கு வயசு என்னைவிட ஜாஸ்திம்மா குழந்தே அவரு... அவரு என்னை விடவும் ரொம்ப வயசாளி. பேசும்போதே அந்த வயசு கணக்கு மனசையே பாரமாக்கியது. குட்டிப்பெண்ணே 19 வருஷம். என் வயசாகும் போது இப்பத்தைய உன் வயசைவிட எனக்கு ரெண்டே வருஷந்தான் அதிகம்.
      அதை பத்தி என்ன
      மெலனி இந்த டிசம்பரோட எனக்கு 45. நான் 44 வயசு வாலிபன்.
      எனக்கு உங்க பிறந்த நாள் தெரியும் அப்பா.
      ம் அட ஆண்டவா அந்த மனுசர் உங்க அப்பாவை விட 19 வயசு கூடுதலானவர்
      எல்லா கணக்கும் என்ட்ட இருக்கு அப்பா. சரி அம்மாட்ட குடுங்க...
      மெலனி கொஞ்சம் என் வயசு அளவுக்காவது ஆள் நீ பார்த்திருக்க முடியாதா ஏப்ப சப்பையா ஒரு நாற்பது வயசில்...
      நிறுத்துங்கப்பா என்றாள் அவள். தயவு செஞ்சி... அப்பா நான் என்ன பண்றேன் எனக்கு தெரியும்ப்பா.
      உன் குழந்தைக்கு பத்து வயசுன்னும் போது அவர் வயசு என்ன தெரியுமா உனக்கு அதை பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சி பாத்தியா
      அவள் பேசவில்லை.
      அவர் பேசினார். எத்தனை குழந்தைங்க பெத்துக்க ஆசைப்படறே
      அதெல்லாம் பத்தி யோசனையில்லை. இந்த நிமிஷம் இது. மத்ததை அக்கறை இல்லை எனக்கு.
      திரும்ப உட்கார்ந்தார். வேற மாதிரி சொல்ல யோசித்தார். இந்த கலவரம் தெரியாமல் வெளியே அவர் மனைவி. ஜன்னல் மறைப்பு தட்டிகளின் ஊடே அவரை பார்த்துவிட்டு கையாட்டினாள். சிநேகபாவம் என்றாலும் சுமுகமாய் அது இல்லை. பாலிங்கர் அவரும் கையாட்டினார். மெலனி என்றார். வில்லியமை எங்க பார்த்தே சொல்லலாமா அதாவது உன்னைவிட 40 வயசு மூப்பான ஒருத்தரை. கல்லு¡ரியில் முதியோர் இளையோர் கலந்து படிக்கறாங்களா என்ன
      நிறுத்துங்கப்பா என்றாள் அவள்.
      இல்ல எனக்கு அது தெரியணும். ஒரு செய்தித்தாளில் இந்த விஷயத்தை வாசித்திருந்தால் விவரத்தை தெரிந்து கொள்ள ஆர்வ பட்டிருப்பேன். பத்திரிகைக்கே ·போன் பண்ணி விசாரித்திருப்பேன்.
      அம்மாவை கூப்பிடுங்க.
      எப்பிடி அவரை சந்திச்சே சொல்லு. சொல்ல மாட்டியா
      கர்த்தரே... என்றாள் அவள். பேசவில்லை. பாலிங்கர் காத்திருந்தார்.
      அவர் பேராசிரியர். உங்களையும் அம்மாவையும் போல. கல்லு¡ரியில். எனக்கு இலக்கியம் எடுத்தார். இலக்கியத்தில் அவருக்கு தெரியாத படைப்பே இல்லை. அவரைப்போல புத்திசாலி நான் பார்த்ததில்லை. அவருடைய பேச்சு அலுக்கவே அலுக்காது. உங்களுக்கு அதை பற்றியெல்லாம் தெரியாது.
      இனிமே நீ வேற என்ன செ போறே மெலனி. நிறைய வெறும் பேச்சு...
      நீங்க சொல்றது தவறுன்னு சொல்ல என்கிட்ட நிரூபணம்... வளர்ந்துக்கிட்டிருக்கு
      கட்டுப்படுத்த முடியாமல் கேட்டார். இப்பிடி பே சொல்லி குடுத்தாராக்கும்
      நான் ·போனை வைக்க போறேன்...
      நானும் ஒண்ணு சொல்லணும்னேன்... நீ கேட்டுக்கறேன்னு சத்தியம் வேற பண்ணினியா இல்லியா
      ம் என்றாள் பளிச்சென்று. கேட்டுட்டிருக்கேன்...
      தரையில் கட்டைவிரலால் தாளம் போடுகிறாளோ விளக்கம் கோர காத்திருக்கிறாள். அந்த பரபரப்பு. யோசித்தார் அவர். அவர் பேராசிரியர் இல்லியா
      சொல்ல வந்த உங்க விஷயம் அது இல்லை... இல்லே
      ஆனா நீ அவர் பேராசிரியர்னு சொன்னே.
      ஆமாம் சொன்னேன்.
      என்னை கிறுக்கன்னு நினைக்காதே மெலனி. எனக்கு விஷயம் பழகணும். அவர் கெளரவ பேராசிரியர்தானே
      அது மதிப்புக்குரியதுன்னா ஆமாம் ஆனா நீங்க...
      அதில்லை மெலனி. கெளரவ பேராசிரியர்னா பதவி ஓய்வு பெற்றவர். நீ கல்லு¡ரிக்குத்தானே போனே
      அவளிடம் பதில் இல்லை.
      மன்னிச்சுக்கோ ஆனா கடவுளே நியாயமான கேள்வி அது.
      புண்ணாக்கு அல்பத்தனமான கேள்வி. கண்ணீரை அடக்க பிரயத்தன படுகிறாள் என்று சொல்ல முடிந்தது
      இப்ப அங்க உங்கூட அவர் இருக்காரா
      ம் என்றபோது குரல் உடைந்தது.
      அட கடவுளே.
      அப்பா ஏன் இப்பிடி பேசறீங்க
      நாம தனியா இதை பேசியிருக்கலாம்னு நினைக்கறியா வேற ·போன்ல அவரும் கூட கேட்டுட்டிருக்காரா
      இல்ல
      நல்ல வேளை. ஆண்டவருக்கு நன்றி.
      நான் வைக்க போறேன்.
      இல்ல வெச்சிறாதே. நாம அமைதியா இதை பேசலாம். பேச வேண்டியதிருக்கு.
      அவள் செருமி மூக்கு சிந்தினாள். அதுவரை ·போனை யாரோ வாங்கி கொண்டார்கள். ஏதோ கரகர சத்தம். திரும்ப கொண்டாள். ம்
      அவர் உன்கூட அங்க இன்னும் இருக்காரா
      ஆமா என்ற குரலில் விரைப்பு.
      எங்க இருக்கார்
      ஐயய்ய
      மன்னிக்கணும். எனக்கு தெரியணும். அவர் உட்கார்ந்திருக்காரா
      என் பக்கத்தில் அவர் இருக்க நான் நினைக்கிறேன் அப்பா. நாங்க ரெண்டு பேருமே இப்ப சேர்ந்து இருக்கணும்னு நினைக்கிறோம்.
      அவர் உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்றார்...
      ஆமா என்றாள் பொறுமையிழந்து.
      நான் அவரோட பேச முடியுமா
      அவள் பேசியது அவருக்கு கேட்கவில்லை. சில விநாடிகள் அவர்களுக்குள் கிசுகிசுப்பாக பேசி கொண்டார்கள் போல. அப்புறம் பேசினாள். சத்தியமா அவரை நீங்க நையாண்டி பண்ண கூடாது.
      மெலனி அப்டின்னு அவர் சத்தியம் வாங்கிக்க சொல்றாரா
      ச்... உறுதியா சொல்லுங்க என்றாள். இல்லாட்டி ·போனை வெச்சிடறேன்.
      சரி. சத்தியம். சத்தியமா நான் அவரை எடுத்தெறிஞ்சி பேச மாட்டேன்...
      சிறு சப்தங்கள். ஓர் ஆணின் குரல். ஹலோ சார் சாதாரண உள்ளொடுங்கிய தொலைபேசியில் கேட்காத புகைப்பாரோ எனக்கு புரியுது... இந்த
      பாலிங்கர் இடைமறித்தார். புகைப்பீர்களா
      இல்லையே.
      சரி சொல்லுங்க.
      ம். உங்க கஷ்டம் அதை நான் புரிஞ்சிக்கறேன்...
      மெலனி அவளும் புரிஞ்சிக்கிட்டிருக்கிறதா சொல்றா... பாலிங்கர் சொன்னார். அதாவது நீங்க அப்பிடி நினைச்சிக்கறீங்க...
      மெலனியை உங்களோட பே சொன்னதே நான்தான் சார்.
      அப்பிடின்னா அது நல்ல விஷயந்தான். இதை நான் சகஜப்படுத்திக்க நாளாவும்னு தெரிஞ்சி அதுனாலதான்... நீங்க மெலனி கர்ப்பமாறவரை... காத்திருந்தீங்களாக்கும்
      மறுமுனையில் அவர் மெலிதா பெருமூச்சு.
      ஆக நீங்க இலக்கியத்தில் பேராசிரியர்...
      ஆமா சார்.
      என்னை சார் போடாதீங்க. ஏன்னா நான் ஒரு பொடியன் இங்க...
      குத்தல்லாம் வேணாம் சார்.
      ஓ அப்டில்லாம் இல்ல. தானா இந்த சூழல்ல வாய்ல வந்தது. உண்மைல... மிஸ்டர். கூம்ஸ் சரியா
      சரி சார்
      கூம்ஸ். சீப்புக்கு வருமே...
      மறுமுனையில் பதில் இல்லை.
      இதெல்லாம் எனக்கு ஒத்துக்க எத்தனை நாளாவும்னு நீங்க நினைக்கறீங்க எனக்கு பழகறதுக்குள்ள உங்களுக்கு எழுபது ஆரம்பிச்சிருமா உங்களைவிட இருபத்தியோரு வயசு சின்னவ என் பெண்டாட்டி. அவளுக்கு பழக எத்தனைகாலம் ஆகும்னு
      ...
      அதும் என் சம்சாரத்துக்கு நீங்க மகா வயசுக்காரர்... கடவுளே
      ...
      உங்க முதல் பேர்... திரும்ப சொல்லுங்க...
      மறுமுனையில் அவர் பெருமூச்சுடன் ரிங் ஆ· பண்ணிறலாம்னு தோணுது.
      ரிங் ஆ·ப்னீங்கதானே ஆ·ப். நீங்க எந்த பக்கத்து எந்த நாட்டு ஆளு
      அமெரிக்காதான். கொரியா சண்டையில் இருந்தேன்.
      முதலாம் உலக போரிலா
      ...
      எத்தனை முறை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க பாலிங்கர் கேட்டார்.
      நல்ல கேள்வி. நீங்கள் இப்படி கேட்டதில் மகிழ்ச்...
      ஆனால் நான் வகுப்பறைல இல்லை. எத்தனைன்னு சொன்னீங்க
      என்னை பேச விட்டீங்கன்னா சொல்லலாம்.
      ...
      ரெண்டு சார். முறை நான் மணம் முடித்தவன்.
      விவாகரத்தா
      ரெண்டு மனைவியுமே இறந்துட்டாங்க.
      ஆகா புரியுது. அந்த மாதிரி உங்களுக்கு எதும் ஆயிறாதுன்னு நீங்க உறுதி பண்ணிக்க முயற்சிக்கறீங்க...
      இதெல்லாம் நல்லால்ல. நான்... ·போனை... அவர் தடுமாறி பேச்சை நிறுத்தி விட்டார்.
      எந்த மாதிரி இதுல்லாம் ஆவணும்ன்றீங்க என்று அழுத்தமா கேட்டார் பாலிங்கர்.
      வதைக்கப்டாது. அதையில்ல நான் எதிர்பார்த்ததுன்னு சொல்றேன்.
      என் பெண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை நானே அமைச்சு குடுக்கு முன்னால அவளே தேடிக்கிட்டதை நான் சந்தோஷமா எடுத்துக்குவேன்னு நினைச்சீங்களா
      ...
      உங்களுக்கு வேற குழந்தைகள் இருக்கா
      ம். மூணு வாச்சது. அந்த குரலில் முரட்டுத்தனமான இறுக்கம் வந்திருந்தது.
      அவங்கல்லாம் என்னென்ன வயசு கேட்கலாமா
      காத்திருந்தார். அவர் மனைவி உள்ளே வந்தாள். கண்ணாடி பூசாடியில் தண்ணீரை ஊற்றி கையில் கொண்டு வந்திருந்த பூக்களை அடுக்கினாள். அவருக்கு முதுகு காட்டியபடி நின்றிருந்தாள். மறுமுனையில் பேச்சே இல்லை. மன்னிக்கணும் என்றார் பாலிங்கர். என் இப்பதான் உள்ள நுழையறா. நீங்க பேசினதை கேட்கல நான். உங்களுடைய எந்த பெண்ணுக்காவது மகள் வயசு
      நான் சொன்னேன். என் கடைசி பையனுக்கு 38.
      உங்களுக்கு தெரியுது. அவன் என் மகளை கல்யாணம் கட்ட ஆசைப்பட்டா நான் திகைப்பேன்... அந்தளவு வயசு வித்தியாசம். பாலிங்கரின் மனைவி கையை தாளில் துடைத்தபடி அவரை நோக்கி விஷயம் விளங்காத கவலையுடன் வந்தாள்.
      நான் முன்னமே சொல்ட்டேன் திரு பாலிங்கர். உங்க மனசு எனக்கு புரியுது. விஷயம் என்னன்னா இங்க ஒரு பெண் கர்ப்பமா இருக்கா. நாம ரெண்டு பேரும் அவளை நேசிக்கிறோம்.
      இல்ல என்றார் பாலிங்கர். அப்பிடியில்லை விஷயம். விஷயம் என்னன்னா நீங்க வேற யாருமில்லை ஒரு மோசமான கற்பழிக்கிற காமகொடூரன். . அதான் விஷயம்... அவர் மனைவி தோளை பற்றி குலுக்கினாள். அவளை பார்த்தார். தலையை குலுக்கி கொண்டார்.
      என்னாச்சி அவள் கிசுகிசுத்தாள். மெலனிக்கு ஒண்ணில்லியே
      அப்டி திட்டிட்டா அத்தோட சமாச்சாரம் முடிஞ்சிட்டதா என்ன மறுமுனையில் குரல்.
      ஒரு நிமிஷம் பாலிங்கர் சொன்னார். கேள்வி. பொல்லாத உங்க பல்கலைக்கழகத்தில் என்னா அது கொள்கை வர்ற பிள்ளைங்களை துணிய அவுத்து பாக்கறதுன்னு
      அட கடவுளே அவர் மனைவியின் குரல். மறுமுனையில் அந்த குரல் திக்கி திணறியது.
      சொல்லுங்க
      நாங்க செயல்பட்டப்ப மெலனி என்ட்ட படிக்கல...
      ஓ அப்டிதான் சொல்லிக்குவீங்களா நாங்க செயல்பட்டோம்...
      நான் மெலனிட்ட பேசறேன்... என்றாள் அவர் மனைவி.
      இங்க பார்... என்றார் அவளிடம். சித்த சும்மா இரு.
      மெலனி ·போனை வாங்கி கொண்டிருந்தாள். அப்பா
      நான் இங்கதான் இருக்கேன்... என்றார் அவர். ·போனை பிடுங்க முயன்ற மனைவியை தவிர்த்தபடியே.
      அப்பா நாங்க கல்யாணம் பண்ணிக்க போறம். இதுல நீங்க செய்ய எதுவுமில்லை. புரிஞ்சிக்கிட்டீங்களா
      மெலனி... அவர் சொன்னார். தானறியாமல் கோபம் எகிறியிருந்தது. கர்த்தராணை அடியே உன் காதலருக்கு என்வயசு நீ பிறந்தப்ப... என்ன கருமாந்தரம்டி இது குழந்தே. சரியா இருக்கியா பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிட்டதா உனக்கு
      அவரை தள்ளிவிட்டு அவர் மனைவி ·போனை பறிக்க வந்தாள். கொடுத்து விட்டார். எழுந்து நின்று கொண்டிருந்தார்.
      மெலனி அவள் பேசினாள். தங்கமே பாரு குட்டி...
      வெச்சிரு... பாலிங்கர் சொன்னார். கடவுளே. வை. ·போனை
      எய்யா நீங்க அந்த அறைக்கு போங்க. நான் பேசிக்கறேன்... என்றாள் மனைவி.
      அவகிட்ட சொல்லு. எனக்கே நிறைய மனுசாளை தெரியும். நாற்பது வயசில் நல்லாத்மாக்கள். எவனை வேணாலும் கட்டிக்கட்டும். வயசு குழந்தைகள். தொட்டிலாத்மாக்கள்... யாரை வேணா பண்ணிக்கட்டும். சொல்லு அவகிட்ட.
      ஜாக். நிறுத்தறீங்களா தொலைபேசியை நெஞ்சில் அழுத்தி கொண்டாள். நம்ம விவகாரம் பத்தி எதும் அவகிட்ட பேசினீங்களா
      சிறிது கழித்து இல்ல என்றார்.
      அவருக்கு மறுபுறம் திரும்பி கொண்டாள். மெலனி என்னம்மா இதெல்லாம் என்ன விஷயம் சொல்லு.
      அவளை விட்டுவிட்டு அவர் வெளியே வந்தார். கூடம். முற்றம். திரும்ப சமையலறையை சுற்றி உடம்பு படபடத்து சோர்ந்து நடுங்கி கொண்டிருந்தது. மேரி நின்ற நிலையில் தலையை அவ்வப்போது ஆட்டி கொண்டு ரெண்டு கையிலுமாக தொலைபேசியை அழுத்தி¢ தோளை குறுக்கி கொண்டிருந்தாள் குளிரில் நடந்தா
      மேரி கூப்பிட்டார். பதிலில்லை. படுக்கையறைக்குள் போனார். கதவை சாத்தி கொண்டார். ஜன்னல் வழியே பொன்வண்ண கதிர்கள். அறையில் நீள நிழல்களின் ஆக்கிரமிப்பு. திடீரென்று அவர் தான் தனக்கு தானே முணுமுணுத்து கொண்டிருப்பதை கவனித்தார். மூச்சை ஆழ இழுத்து மனசை அடக்க முயன்றார். அடுத்த இருந்து மனைவியின் குரல். ம்ம்... நான் ஏத்துக்கறேன். ஆனா
      வார்த்தை தேய்ந்தது. காத்திருந்தார். சில நிமிடங்கள் கழித்து அவள் அந்த அறைக்கதவை தட்டிவிட்டு பின் உள் நுழைந்து பார்த்தாள்.
      என்னாச்சி
      அவங்க தீர்மானமா இருக்காங்க. வாசல் நிலைப்படியில் நின்றிருந்தாள் அவள்.
      இங்க வா.
      அவர் பக்கத்தில் வந்து சாவகாசமாய் உட்கார்ந்தாள். சற்று நகர்ந்து அவள் உட்கார இடம் தந்தார். அவளை லேசா கட்டி கொண்டார். அசட்டுத்தனமாய் உணர்ந்து உடனே விலக்கி ரெண்டு பேராலுமே எதுவும் பேச முடியவில்லை. அவர்கள் தங்களை பற்றி பேசி தீர்த்தவை எல்லாம் இடையே பாறைபோல் நின்றன. மனைவி. மண்ணும் மலருமான தோட்டத்து
      கடவுளே என்றாள் அவள். எனக்கு யோசனையே அத்து போச்சு.
      நாம ஒரு குழந்தை பெத்துக்குவம். மெலனியின் பாப்பாவுக்கு அத்தையோ சித்தப்பனோ
      மேரி ஒரு உயிரற்ற சிரிப்பு சிரித்துவிட்டு திரும்ப அடங்கி விட்டாள்.
      ந பத்தி அவகிட்ட பேசினியா என்றார் அவர்.
      என்றாள். சந்தர்ப்பம் அமையல. என்னால சொல்ல முடியுமா அதே தெரியல.
      அவளுக்கு இது ஒரு விஷயமாவே இருக்குமோ இருக்காதோ
      இல்லல்ல. அப்டி எடுத்துக்கிற முடியாது.
      படுக்கையறை தொலைபேசி ஒலி அவர்களை பதறடித்தது. அவர் தொலைபேசியை எடுத்து அவளுக்கு பிடித்தார். ஹலோ என்றவள் இருக்காரு... என்று அவரிடம் தந்தாள். என்றார் அவர்.
      மெலனியின் கண்ணீர குரலில் கோபம். என்னவோ அவரை சொல்லியிருக்கீங்க. சொல்லுங்க. என்ன அது அழுகை. குரலை செருமி கொண்டாள். சொன்னீங்க
      அதெல்லாம் ஒண்ணில்ல கண்ணு. எனக்கு இப்ப ஞாபகம் கூட இல்ல.
      ஒண்ணு தெரிஞ்சுக்கங்கப்பா. உங்களை விட நான் நல்லாதான் இருப்பேன் அப்பா அது எத்தனை கஷ்டகாலமா இருந்தாலும் சமாளிச்சுக்குவேன் அதிலேயே.
      ஆமா என்றார். உன்னால முடியும்.
      வெச்சிர்றேன். அப்பறமா சொல்றேன் வரோமா இல்லையான்னு. அம்மா இல்லைன்னா வர்றாப்லகூட இருந்திருக்காது.
      அப்பறம் பேசலாம் என்றார் அவர். கண்ணே நீங்க ரெண்டு பேருமே எனக்கு இன்னும் அவகாசம் குடுக்கணும்.
      எங்க ரெண்டுபேரை பொறுத்தவரை இனிமே யோசிக்க எதுவும் கிடையாது.
      அப்டில்லாம் இல்லம்மா. கல்யாணம்ன்றது... வார்த்தை சிக்கியது. மூச்சு வாங்கி கொண்டார். எல்லா கல்யாணத்துலயும் கூடி கலந்து பேச நாலு விஷயம் இருக்கத்தான் இருக்கு.
      எனக்கு என்ன தெரியும்ன்றது நல்லாவே தெரியும்.
      ம் என்றார் பாலிங்கர். உன் வயசில் அப்படி தோணும் சமத்தே.
      விடைபெறுவோம். அவள் சொன்னாள். மேல எதுவும் இல்லை.
      புரியுது பாலிங்கர் சொன்னார். தொலைபேசி இணைப்பு துண்டுபட்டபின் மடியில் அந்த ஒலிக்கருவியை வைத்திருந்தார் கொஞ்ச நேரம். அருகில் மேரி. அவளிடம் அசைவேயில்லை.
      ம் என்றார். என்னாலயும் சொல்ல முடியல. தொலைபேசியை பீடத்தில் வைத்தார். ஹா அறுபத்திமூணு வயசில் எனக்கு மாப்ளை
      இந்த மாதிரி நடந்திருக்கு - அவர் மேல் கைபோட்டவள் எடுத்து கொண்டாள். எனக்கு நடுங்கிட்டது. ஆனா அதான் வேணும்ன்றா அவ.
      கேடுகாலம். மேரி உனக்கு தெரியுதில்ல அந தடியன்... அவளோட வாத்தியார்
      என்ன பேச்சு இது நம்ம பொண்ணு அது. பொண்ணை பத்தியாக்கும் பேசறீங்க. அவ செய்யற காரியத்தை யோசனை பண்ணி செய்யறான்னு கூட உங்களால அவளை மதிக்க முடியல.
      இரண்டு பேருமே பேசவில்லை.
      யார் கண்டா என்றாள் அவர் மனைவி.. கொஞ்சநாள் அவங்க சந்தோஷமா இருக்கலாம். அவள் குரலில் ஒரு சோகம். மனசில் நினைவுகளின் அலைபுரட்டல் என அறிந்தார். அவருக்கும் மேரியுடனான எளிமையான ஆரம்பகால உல்லாச கணங்கள் நினைவு வந்தது. பழைய வீடு. வேறு அறைகள். மெலனி. பாப்பாவின் சவாரிவண்டி வராண்டா. அம்மாவின் துணிகள் சுருட்டிய உடல். இத்தனை வருஷத்தில் அந்த காட்சி மாத்திரம் சட்டென்று ஏன் கவனம் பெற வேண்டும். மூச்சு தவிர வேறில்லாத அமைதி. அவரை சுற்றி மாய வியூகம். மேல்தோலில் சுருக்கம் ஓடி உடனே அடங்கி விட்டது. நெஞ்சில் குப்பென கனம். மூச்சடைப்பு. மனைவியை பார்த்தார். திரும்பி கொண்டிருந்தாள். தன் மடியின் துணியை நீவி விட்டபடி யிருந்தாள். பிறகு எழுந்து கொண்டாள். ம் என்றாள். வேலை கிடக்கு
      மேரி என மெல்ல அழைத்தார். அவள் கண்டுகொள்ளவில்லை. கதவை திறந்து கூடத்துக்கு வந்து சமையலுள்ளுக்கு போனாள். குனிந்து உடலை நீட்டி படுக்கையருகே விளக்கை போட்டு படுத்து கொண்டார். அமைதி. சுவர சித்திரங்கள். நிழல் உருவங்கள் அவரிடம் உரக்க பேச அவர் கவனத்தை பெற முயன்றன. கண்ணை மூடி கொண்டபோது சமையலறையில் பாத்திரம் உருட்டும் சலனங்கள். பூவடுக்குதல். தண்ணீர குழா சத்தம். மென்மையா கூப்பிட்டார். வரை எட்டியிராது. திரும்பி பார்த்திருந்தால்



      மெம்·பிஸ் பல்கலைக்கழகத்தில் கெளரவ பேராசிரியர் இவர். கதைகளில் உரையாடல்களூடே அபாரமான அழுத்தம் தருகிறார். அமெரிக்க வாழ்வை இப்படி தேங்காய் விடல் உடைப்பு உடைத்த கதை அபூர்வமாயிருக்கிறது. கதையில் என்ன யதார்த்தம் வைத்தாலும் அது - நமக்கு அசாத்திய த்வனியைத்தான் தர முடியும்.
      அறுபத்தி மூணு வயசு ஆளின் பெயரை கோம்ஸ் என்று சீப்பு போல உச்சரிக்க சொன்னதை நுணுக்கமாய் எள்ளியிருக்கிறார். பெண்ணிடம் பாலிங்கர் செய்தித்தாளில் இதை வாசித்திருந்தால் விவரம் கேட்டு நாளிதழுக்கே ·போனில் பேசி விசாரித்திருப்பேன் என்கிறதாக ஒரு கட்டம். பெண் வேலைபார்க்கிற நாளிதழிலேயே செய்தி வருவதாக கற்பனை என்னில் எழுந்தது
      முழுதும் உரையாடல்களில் கதை அமைகிறதில் வாழ்க்கை சூழல் மண்ணீரம் போல ஒட்ட முடியாமல் போகிறது. வருத்தம் கிருத்தம் எதுவும் கிடையாது. ஒரு சந்தி சிரிச்ச நிலையை சிரிச்சிக்கிட்டே சொல்லிடலாம். கொரி சண்டையில் பங்கேற்ற அமெரிக்கர்கள் கொரியப்பெண்களை சூறையாடியதை எதிர்ப்பு குரலில் பதிவு செய்ததை கவனித்தேன்.
      பாலிங்கரின் மனைவி மேரி இன்னொரு கல்யாணம் முடி கூட சித்த பட்டிருக்கலாம். இளமையும் கலகலப்பும் அவள் மீள பெற்று வருகிறா போல பாலிங்கர் கவனிக்கிறார். ஓ அமெரிக்கா
      வழிப்பறி
      காஞ்சனா தாமோதரன்
      ஏ பாமா நீ ரெடியா ராவுத்தர் மகள் சலிமா அக்கா வாசலில் நின்று குரல் கொடுத்தாள்.
      அவா எங்க ரெடி இவ்ளோவ் நேரமா ஒரு பொஸ்தகத்தை வச்சிக்கிட்டு ஒக்காந்திருந்தா. நேரத்தோட குளிப்பியான்னு நா இப்பத்தான் வெரட்டி விட்டேன். அாிசியை சுளவில் பரப்பி கல் பொறுக்கி கொண்டு முன் திண்ணையில் உட்கார்ந்திருந்த பாமாவின் தாய் வாஞ்சையுடன் அலுத்து கொண்டாள்.
      அவளுக்கு எல்லாம் கேட்டது. புத்தகம் படிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் போவது தொியவில்லைதான். மாடப்பிறைக்கு மேல் மாட்டியிருந்த கண்ணாடியில் தன் முகத்தை இன்னொரு முறை பார்த்து கொண்டாள். சாயம் போன சிவப்பு கண்ணாடி ஃபிரேமுக்குள் விளம்பர படம் மாதிாி அவள் முகம். குறுகுறுக்கும் பொிய கண்கள் குளித்த ஈரத்தை தேக்கி கொண்டு. பளிச்சென்று பவுடர் பூச்சில் மினுங்கும் மாநிறம். நல்லாத்தான் இருக்கோம்...மனசில் இயற்கையான துள்ளல். தலையில் செருகியிருந்த சீப்பை எடுத்துவிட்டு ஒரு பின்னலை எடுத்து முன்னால் போட்டு அந்த கரும்பச்சை ஸ்டிக்கர் பொட்டையே வைத்திருக்கலாம் போல. இந்த பச்சை பொட்டு தாவணி கலருக்கோ பாவாடை பார்டர் சாியான மேட இல்லை. சாி இனி பள்ளிக்கூடத்துக்கு ஆயிற்று. சலிமா வேறு காத்திருக்கிறாள். நாள் ஆகாத பொட்டோடு போனால்
      போயிட்டு வா தாயீ. பள்ளிக்கு போகும் மகளை பற்றி அம்மையின் முகத்தில் தெறிக்கும் பெருமை அவளுக்கு பாராமலேயே தொியும். அப்பன் என்பவன் அந்த வெறும் பெயரோடும் அடுத்த ஊாிலிருந்து வயலில் வேலை செய்ய வந்த ஒருத்தியோடும் தென்னந்தோப்பு வீட்டோடும் நின்று விட்டான். அம்மைதான் ஆண்பிள்ளையாய். கல்யாணத்தின் போது போட்ட நகைகளை அடித்து மிதித்து அம்மையிடமிருந்து பிடுங்கினவன் அப்பன்காரன். அவள் பூர்வீக நிலத்தையும் பறிக்க அவன் பஞ்சாயத்து போர்டு வழியாக அதை தக்க வைத்து கொண்ட ஒரு புத்திசாலி அம்மை. அந்த கையகல நிலத்தை ராவுத்தாிடம் குத்தகைக்கு விட்டு வயிற்றை கழுவி அவளையும் படிக்க வைக்க வழி செய்திருக்கிறாள். அவ்வப்போது வந்து தொந்தரவு பண்ணும் அப்பனுக்கும் வாய்க்காிசி போடுகிறாள். கல்லான தன் கணவன் புல்லினும் கீழான புருஷன் என்று
      என்ன பாமா மூஞ்சை உர் ருன்னு வச்சிக்கிட்டு பேசாம வார இதுக்குள்ள நூறாயிரம் ஊர்க்கதைய வக்கணையா அளந்துருப்பியே. சலிமாவின் குரல் நினைப்பை கலைத்தது.
      ஒண்ணுமில்ல சலிமா க்கா சும்மாத்தான். இங்க பாரேன். அணில் கடிச்சு போட்டதும் காத்துல உதுர்றதுமா எவ்ளோவ் நவ்வாப்பழம் கீழ விழுந்து கெடக்கு.. கொஞ்சம் நில்லு க்கா. நம்மளும் ரெண்டு மூணு பழம் பொறுக்கி தின்னுக்கிட்டே போலாம். மொத பெல் அடிக்கவே இன்னும் நேரம் இருக்குல்லா.
      நாவல் பழங்கள் மேலிருந்த மணலை ஊதி ஊதி தின்று கொண்டு நாக்கு ஊதா நிறமாக மாறுவதை ரசித்து கொண்டே நடந்தார்கள். மண் சாலையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள மரங்களும் அத்தி ஆல வளைந்து பின்னி வேய்ந்திருக்கும் பச்சை கூரை. நடு நடுவே பளிச்சிடும் காலை கதிர்களின் உள்ளே குளிர்காய்ந்து ஆட்டம் போடும் தூசு பட்டாளங்கள். மரங்களுக்கு அப்பால் அடர்ந்த சிவப்பு அரளி செடிகளிடம் கோடையில் சுருங்கிய ஆற்றின் மெளன முணுமுணுப்பு. ஆடிமாத காற்றில் பாவாடைகள் கால்களை சுற்றும் குடைராட்டினமாயின. காற்றாடியாய் அலைந்த தாவணி தலைப்பை இறுக இடுப்பில் செருகி கொள்ள வேண்டியிருந்தது. நெற்றியிலும் காதோரத்திலும் குட்டை தலைமயிர் கலைந்து சுருள் சுருளாக சிலும்பிற்று. உச்சியை தொட்ட காற்று உடம்பு முழுதையும் நனைத்து பாதத்தை
      காத்து சொகம்மா இருக்குல்லா க்கா
      ம்ம்ம்ம்....ஸ்கூல் ஆண்டு மலர்ல காத்த பத்தியும் காளான கவிதை எழுதுறவா நீ. காத்து சொகமா இருக்குன்னு சொல்லுத. பாழா போன இப்டி பாவாடையை பறத்தி மானத்த வாங்குதேன்னு நான் நெனச்சிக்கிட்டு இருக்கேன். சலிமா அக்கா ஒரு
      இந்த வருஷம் பத்தாங்கிளாஸ் முடிச்சப்றம் மேல ப்ளஸ்-டூவுக்கு ஒங்க வீட்ல அனுப்புவாகளா க்கா
      இல்ல நிக்காஹ்தான். வாப்பா நேத்து கூட உம்மாகிட்ட சொல்லிக்கிட்டிருந்தாக. பத்தமடைலருந்து சொத்து பத்து உள்ள ஒரு நல்ல சம்மந்தம்னு.
      ஒனக்கு மேல படிக்கணும்னு ஆசையில்லையா க்கா
      ஸ்கூல் எனக்கு இப்பவே போரடிக்கி பாமா. நீ என்ன மெத்த படிச்ச மேதாவியாகி கலெக்டர் உத்தியோகம் பார்க்க போறியாக்கும் சலிமா அக்கா சிாித்தாள். பளீரென்று முகத்தில் விளக்கேற்றும் சிாிப்பு.
      அவளும் சேர்ந்து சிாித்தாள். கலெக்டர் உத்தியோகம்னு இல்ல க்கா. அம்மைக்கு கொஞ்சம் நெலம் நீச்சு இருக்கு. கூடவே படிப்பும் இருந்துதுன்னா நல்லதுன்னு படுது. நாளக்கி நம்மள கட்டுறவனுக நெலத்தையும் நகையையும் அடிச்சு உதச்சு புடுங்கினாலும் புடுங்கிருவானுக. நம்ம படிப்பை அப்டி புடுங்கிற முடியாதுல்லா. அதான்.
      சலிமா அக்கா மெளனமானாள். பாமா ஏன் அப்படி பேசுகிறாள் என்பது அவளுக்கு புாிந்ததுதானே.
      தளுக்கி மினுக்கிக்கிட்டு பொட்டச்சி இவா பள்ளிக்கூடத்துக்கு போணுமாங்கும் வீட்ல ஒரு ஆம்பள இருந்தா தட்டு தட்டி போட்டிருப்பான். அவன எவாகிட்டயோ கூட்டி குடுத்துப்புட்டு இங்க பவுரு பண்ணத பாரேன். பொிய ஐயமாருவ பொண்ணுன்னு நெனப்பு போல. கொஞ்சம் வெளுத்த தோலா போதுமே ஆடிருவாளுவ. என்னத்த படிச்சி என்னத்துக்கு ரெண்டு கொம்பா மொளைக்க போவுது நாளக்கி இவளும் நம்மள மாதிாி சட்டி சொரண்டத்தான போறா மயினியோவ் அம்மக்காாிக்கி கோட்டி பைத்தியம் புடிச்சுருக்கு. சமஞ்ச பொண்ண இப்டி ஊரு தாண்டி அனுப்புவாளா சொந்த பந்தத்தின் ஏச்சுகளும் எகத்தாளமும் நினைவுக்கு வந்தன....கூடவே அம்மையின் வைராக்கியமான மெளன பதிலும்.
      ஆறும் அதை ஒட்டிய மரங்கள் அடர்ந்த சாலையும் வளைந்து விலகி போயின. இனி ஒரு குறுகிய முடுக்கை கடந்தால் பள்ளிக்கூடம். முடுக்கின் இரு புறமும் மண்ணாலான வீடுகள். சாணம் தெளித்து திருத்தமான புள்ளிக்கோலங்கள் ஒவ்வொரு வீட்டின் முன்னும். கோலம் போடுவது அழகான அருமையான வழக்கம்தான். போட்ட சில மணி நேரங்களிலேயே காற்று அழித்து விடும் என்று தொியும். இருந்தும் தினம் நடக்கிறது...மறுமலர்ச்சியில் அதன் தொடர்ச்சியில் மனிதர்களுக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை. திண்ணைகளில் ஆடுகள் உட்கார்ந்து நிதானமாய் அசை போட்டு கொண்டிருந்தன. என்ன நினைவுகளோ இவை மனசில். கோழிகளும் பன்றிகளும் தங்கள் குடும்பங்களோடு சமத்துவமாய் அதே சாக்கடையில் விருந்து சாப்பிட்டன. அரை டிராயர் சிறுவர்கள் அந்த டிராயர்கள் கீழே விழுந்து விடாமல் கையால் பிடித்தவாறு குறுக்கும் நெடுக்குமாய் ஓடி கொண்டிருந்தார்கள். இவர்கள் ஏன் இந்த
      நினைப்பும் மூச்சும் திடாரென்று நின்றன. அவளை கடந்து வேகமா போன சைக்கிளிலிருந்து ஒரு கரம் அவள் கழுத்தை நோக்கி நீண்டது. கை தானாகவே கழுத்திலிருந்த மெல்லிய சங்கிலியை இறுக்க பற்றி கொண்டது திருடனிடமிருந்து பாதுகாப்பாய். திருடன் சங்கிலியை குறி வைக்கவில்லை என்பது அவன் அரை கணத்துக்கு அப்புறம்தான் புாிந்தது. பிசைந்து சுகித்த வலது
      அந்த மின்வெட்டு கணத்துக்கு பிறகு அவள் உறைந்து போனாள். உணர்வுகள் மரத்து சுற்றிலும் உள்ள சப்தங்கள் எல்லாம் அடங்கி.. இன்னொருவாின் பயங்கரமான கனவுக்குள் விழித்து கொண்ட மாதிாி. சலிமா அக்கா கையை பிடித்து கொண்டு சத்தமில்லாமல் அழுதது ஞாபகம் இருக்கிறது. பாவம் இவள் ஏன் அழணும் அம்மாவிடம் அவளுக்கு உடம்பு சாியில்லை என்று சொல்லி வீட்டில் விட்டு விட்டு போனதும் அக்காதான். கால் தரையில் பாவாமல் எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் நினைவில்லை. தலையணையை போட்டு உடம்பை சாய்க்கையில் உத்திரத்து பனங்கட்டையில் ஒரு பல்லி அவளையே கண்ணிமைக்காமல் பார்த்தது நினைவிருக்கிறது. அப்புறம் தூக்கமோ மயக்கமோ ஏதோ ஒன்று கறுப்பு போர்வையாய் அவளை தன்னுள்
      சலிமா அக்காவும் அவளும் சேர்ந்து பள்ளிக்கு போகிறார்கள். அதே முடுக்கு. சைக்கிள். கரம் அவளை பார்த்து நீண்டது. இந தடவை அவள் வீண் அதிர்ச்சியிலும் பயத்திலும் தன்னினைவு இழக்கவில்லை. புத்தக பையை உயர்த்தி அவன் கையை தள்ளி விடுகிறாள். கனத்த பை மீது மோதும் வேகத்தில் நிலைகுப்புற சைக்கிளோடு விழுகிறான். இப்போது கண்களில் பயம். தன்னை அடையாளம் காட்டாமல் வம்பு பண்ணும் கோழைப்பயலின் கண்ணில் பயம் இல்லாமல் வீர தீரமா இருக்கும் பின்னே அக்கா கத்தி ஊரை கூட்டுகிறாள். கூடியவர்கள் அவனை திட்டி அடித்து
      திடுமென்று அவளுக்கு விழிப்பு தட்டியது. இருட்டியிருந்தது. தெருவிளக்கின் வெளிச்சம் ஜன்னல் கம்பிகளால் சிறையிடப்பட்டு சதுரமாய் அறைக்குள் சாிந்திருந்தது. உத்திரத்தில் பல்லியை காணோம். அதுவும் தூங்க போயிருக்கலாம். பல்லிகள் எங்கே எப்போது போ தூங்குமோ...தொியாது. அவள் நெற்றியில் அம்மை பூசியிருந்த பச்சிலை சாந்து காய்ந்து சொரசொரவென்று உதிர ஆரம்பித்திருந்தது. தீமூட்டி குழலால் விட்டு அடுப்பை ஊதும் சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டு பங்குசம் அத்தை குழம்புக்கு அரைக்க அம்மி தட்டி கொண்டிருந்தாள். சுற்று குடிசைகளில் ராச்சோறு கொதிக்கையில் பீடி சுற்றும் பெண்கள் பாடும் பாட்டு. எல்லாமா சேர்ந்து ஒரு முழு கச்சோியே நடந்து கொண்டிருந்தது வழக்கம் போல். எல்லாம் எங்கேயோ தூரத்திலிருந்து வருவது போல
      முந்தி மாதிாி கன்றுக்குட்டி துள்ளல் இனியும் அவளுக்குள் இருக்குமா தொியவில்லை. சந்தேகமும் தற்காப்பு உணர்ச்சியும் மரப்பு தன்மையும் இன்னும் கொஞ்சம் கூடவே தேவைதான் போல. நெஞ்சு எாிவது போலிருந்தது. காரணமில்லாத ஓர் அவமானமும் உடம்பெல்லாம் கூசுவது போல உணர்வும். இவையெல்லாம் நாளில் மறைந்து போகலாம் அச்சமே இல்லை என்று ஆனாலும் ஆகலாம். ஆனால் இப்போதைக்கு பேசாமல் அம்மையின் வயிற்றுக்கே திரும்பி போய் ஒரு பையனாக பிறந்து வந்தால்
      13 1999
      மண் பிள்ளையார்
      மனுபாரதி
      இன்று விநாயக சதுர்த்தி நாள்.
      என் கூடத்தங்கியிருந்தவர்கள் அனைவரும் நேற்றே அவரவர்களின் கூட்டை தேடி பறந்துவிட்டார்கள்.
      தனிமையில் ஆகாயத்தை வெறித்தபடி இங்கே நான். எனக்கு போக இஷ்டமில்லை. பரவாயில்ல கிளம்பி வாயேன்டா. - என்று பலமுறை அப்பா கூப்பிட்டார். அவாின் கெஞ்சலுக்கு நான் பதிலாக வெளிப்படுத்திய மெளனத்தின் அர்த்தத்தை புாிந்துகொண்டுவிட்டார் நினைக்கிறேன். அதற்குமேல் அவர் வற்புறுத்தவில்லை.
      காலையிலிருந்தே ஏதோ ஒரு சஞ்சலத்தில் அகப்பட்டு கொண்டிருந்தது என் மனம். என்னவென்று ஆய்ந்தறிய எனக்கு விருப்பமில்லை. மனத்தின் பின்கட்டில் அதை தள்ளிவைத்துவிட்டு வேலைக்கு சென்று பார்த்தேன். ஆள் அரவமேயில்லாது வெறிச்சோடி போயிருந்த அலுவலகத்தில் மனம் ஈடுபடவில்லை. கட்டட வரைபடங்கள் நவீன ஓவியங்களாயின. தப்பும் தவறுமாய் வரைந்துவைத்த படத்தின் மீது கோபம் கோபமாக வர கணினியை தூங்க செய்துவிட்டு அறைக்கு திரும்பிவிட்டேன்.
      தனிமையின் கரங்களுக்குள் அகப்படுவது எனக்கொன்றும் புதிதில்லையே இல்லை தனிமை காரணம் இல்லை. நினைக்க விரும்பாத ஒரு சோகம் மனத்தின் மேற்பரப்பிற்கு வர முயல்வது தொிகிறது. வேண்டாமே பழைய நினைவுகள்
      என் எண்ணங்கள் அழைப்பு மணியால் கலைக்கப்பட்டன. கீழ் வீட்டில் இருக்கும் வீட்டுக்கார மாமிதான் கூப்பிடுகிறாள். சஞ்சலத்தை தற்காலிகமாக தொலைத்து மறக்கும் ஆசையில் கீழிறங்கி போனேன்.
      இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. மதியம் சாப்பிட வா என்று நேற்றே அழைத்திருந்தார்கள். அலுவலகம் போனதில் மறந்தேவிட்டேன். பிரம்மச்சாாி ஒருவனுக்கு அன்னமிட்டு நேரே சொர்கத்திற்கு போகும் வாய்ப்பை நான் பறித்துவிட்டேன் குற்றம் சுமத்தினார்கள். இப்பொழுதாவது வேண்டும் கட்டாயப்படுத்தி வைத்தார்கள். பெங்களூாில் இருப்பது பல விதங்களில் வசதி. தமிழ் பேசும் வீட்டுக்கார அம்மாள் அதில் ஒன்று. கையேந்தி பவனில் இன்று இந்த இராத்திாியில் திறந்திருக்குமோ என்பதும் சந்தேகம்தான் கால் வலிக்க தன்னந்தனியே கீழே குனிந்த வண்ணம் எனக்குளேயே பேசிக்கொண்டு உண்ணுவதை விட இது எவ்வளவோ மேல். வேறொருவர் வீட்டில் உண்ணுகிறோம் என்ற அந்நிய உணர்வும் கூச்சமும் வந்து என்னை ஆக்கிரமித்து கொண்டாலும் அவர்கள் மத்தியில்
      அவர்களுடன் பேசிக்கொண்டு உண்டதில் சிறிது தெளிவடைந்திருந்தது மனம். மேலே ஏறி வந்து எனது அறையை விடுத்து மொட்டை மாடி தரையில் படுத்துக்கொண்டேன். விசாலமான வானத்தில் துண்டு நிலா பிரகாசமாக ஒளிர்ந்தது. வீட்டை சுற்றிலும் தென்னை மரங்கள் சற்றைக்கொருதரம் தங்கள் கீற்றுகளை காற்றில் ஆடவிட்டு மீண்டும் அசைவுகளை ஒடுக்கி அமைதியாய் அடங்கிய வண்ணம் இருந்தன. என் மனவெளியிலும் பழைய ஞாபகங்கள் எழுந்தெழுந்தடங்கின.
      தெளிவான வானத்தில் தொிந்த நட்சத்திர புள்ளிகளை என் மனக்கோடுகளால் இணைத்தேன். கட்டட வரைபடங்கள் போலல்லாமல் இங்கு இணைக்கும் கோடுகளை வளைத்தும் நெளித்தும் ஏன் எப்படி வேண்டுமானாலும் இழுக்கலாம். இந்த சுதந்திரம் சிறு குஷாயை கொடுத்தது. இழுத்து வரைந்தேன். பொிய அகண்ட காது மடல்கள் ஐந்து கைகள் மேலிருந்து கீழாய் இறங்கும் கண்கள் துதிக்கை என இஷ்டத்திற்கு வரைந்ததில் ஒரு பிள்ளையார் வடிவம்
      அப்பா செய்யும் மண் பிள்ளையாரை ஒத்திருந்தது உருவம்.
      எதை நினைக்கவேண்டாம் என்று தவிர்க்க நினைக்கிறோமோ அதுதான் முந்திக்கொண்டு முதலில் மனதில் தலைதூக்குகிகிறது.
      ஆமாம். அப்பா தான் ஒவ்வொரு சதுர்த்திக்கும் மண் பிள்ளையார் செய்வார். எனக்கு தொிந்து காசு கொடுத்து பிள்ளையாரை எங்கள் வீட்டில் வாங்கியதேயில்லை.
      மற்ற வீடுகளை போலில்லாமல் எங்கள் வீட்டில் மட்டும் அப்பா தானே செய்யும் பிள்ளையாரை வைத்து பூஜை செய்து வந்தது அந்த பால்ய வயதில் பெருமை அடித்து கொள்ளும் விஷயம் எனக்கு. என்றாலும் ஏன் அச்சில் வார்த்த மண் வாங்குவதில்லை என்று பலமுறை யோசித்ததுண்டு. இந்த வழக்கம் தாத்தா காலத்திலிருந்து
      பாட்டி சொல்லுவாள் உங்க அப்பா என்னடா பிள்ளையார் செய்யறான் அவரு அதான்.. உங்க தாத்தா செய்யறாப்பல வருமா கடைல கூட அப்படி அழகா ஒரு பிள்ளையாரை வாங்க முடியாது. தாத்தாவோட பாட்டனுக்கு பாட்டன் பொிய கோவில் சிலையெல்லாம் செஞ்சிருக்காரு தொியுமா என்று என் கண்கள் அகல விாி பெருமையடித்து
      தாத்தாவின் கையில் நிஜமாகவே திறமையிருந்ததா என்பது எனக்கு தொியாது. தாத்தா இடைத்தரகராக வேலைப்பார்த்தவர் என்று அப்பா சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். கிராக்கி எதுவும் மாட்டாத வருமானமற்ற வறுமை நாட்கள் நிறையவற்றை அனுபவித்திருக்கிறார். பாட்டி அப்பொழுது பட்ட கஷ்டங்களையும் சமாளித்த விதங்களையும் கதை கதையாக சொல்லுவாள். காலணா வள்ளி கிழங்கும் காட்டுல பறிச்ச கீரையுமா நிறைய நாள் ஓட்டியிருக்கோம். சில அது கூட இல்லாம வாழ்ந்திருக்கோம். என்பாள். இந்த வறுமைதான் காசு கொடுத்து பிள்ளையாரை வாங்க இயலாமல் செய்து விட்டதோ
      இதில் பாட்டியை பற்றி சொல்ல வேண்டும். பாட்டிக்கு பிள்ளையார்பட்டி தான் சொந்த ஊர். அதனால் பிள்ளையார்தான் பாட்டிக்கு கடவுள் குலதெய்வம் எல்லாம். விநாயக சதுர்த்திதான் அவளுக்கு தீபாவளி. எப்போதும் காலையிலும் மாலையிலும் ஜபமாலையை உருட்டிக்கொண்டு அர்த்தம் புாிந்தோ புாியாமலோ விநாயகர் அகவலை முணுமுணுத்தபடி தியானித்திருப்பாள்.
      பாட்டியின் இந்த பக்திதான் வருமானமற்ற நாட்களில் பண்டிகை விட்டு போகாமலிருக்க தாத்தாவை பிள்ளையார் செ தூண்டியிருக்கும் என்பதும் ஒரு சாத்தி கூறுதான். எது எப்படியோ பிடிப்பது என்பது எங்கள் குடும்ப வழக்கமாகி பாரம்பாியமும் ஆகிவிட்டது மட்டும்
      சிறு வயதில் என்னை வெகுவா கவர்ந்த விஷயமிது. சதுர்த்திக்கு மூன்று நாட்கள் ஒரு வாரத்திற்கு முன்பே இரும்பு வாளியையும் மண் வெட்டியையும் குட்டை கடப்பாரையும் கையில் கொடுத்து பாட்டி எடுத்து வர சொல்லுவாள்.அப்பா தன் பங்குக்கு மண்ணு ரப்பர் மாதிாி இழுத்த இழுப்புக்கு வளைஞ்சி கொடுக்கணும். பொடி பொடியா கலகலத்து போறமாதிாியோ ஒண்ணோட ஒண்ணு சேராமயோ இருந்தாக்க எடுத்திட்டு வராத. நான் சொன்ன கண்டுபிடிச்சு வெட்டி வா என்று
      நான் இதையெல்லாம் தூக்கிக்கொண்டு செல்லும் வயது வருவதற்குமுன் யார் மண் எடுத்து வருவார்கள் என்று தொியவில்லை. அப்பாவே வந்திருக்கலாம். அதை பற்றி யோசித்ததில்லை. என்னிடம் அந்த பொறுப்பை கொடுத்த பொழுது ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங கிளம்புவேன். குறி வைத்து போகும் இடம் முக்கால்வாசி ஏாிக்கரை ஓரமாகத்தான் இருக்கும். அங்கு நல்ல களிமண் கிடைக்கும். கோவிலின் பின்புறத்தில் உள்ள தாிசு நிலத்தின் மேற்கு மூலையிலும் ஈரத்தன்மை ஊடுருவியிருக்கும் அந்த மண்ணை வெட்டி வாளியில் போட்டு கொண்டு வருவேன்.
      அதற்கு பின் அந்த மண்ணை தொட விடமாட்டார்கள். செ கூடாது எனும்போது தான் ஆவல் அதிகம் பிறக்கும். அந்தி மயங்கி இருட்டும் நேரத்தில் கொல்லை தாழ்வாரத்தில் ஊறிக்கொண்டிருக்கும் அதிலிருந்து சிறிது திருடி எடுத்து உருண்டை உருண்டையா சிறிய சொப்பு பொம்மைகள் பிடிப்பதில் ஒரு கள்ள சந்தோஷம் இருந்திருக்கிறது. மொட்டை மாடியில் ஏதோ மூலையில் யாருக்கும் தொியாமல் உருவங்களை காய வைத்து அவை திடப்படும்போது
      அதெல்லாம் ஏழிலிருந்து எட்டு பத்து வயது வரைதான். ஆனால் அப்பா வடிக்கும் பிள்ளையார் படி படியாய் உருவம் பெறுவதை மட்டும் எல்லா வருடமும் கவனித்து பார்ப்பதில் ஒரு ஆர்வம் இருந்து கொண்டுதானிருந்தது.
      சதுர்த்தியன்று குளித்துவிட்டு ஈரத்துண்டுடன் தாழ்வாரத்தில் அமர்ந்து செ தொடங்குவார். அப்பாவிற்கு தோசை திருப்பியும் ஈர்க்குச்சியும் கைகளும்தான் சிற்பி உளிகள். மண்ணை நன்கு குழை பிசைந்து ஒரு செவ்வகமா பிடித்து நிறுத்தி தோசைத்திருப்பியை கொண்டு பின்புறத்தை சமன்படுத்தி முன்புறத்தில் தேவையில்லாத வெட்டியெடுத்து செதுக்குவார். முதலில் முகமும் துதிக்கையும் உருப்பெற்று பிரதானமா பிள்ளையார் என்று அடையாளம் காட்டும். பின் தந்தங்களும் சேர்ந்துகொள்ளும்.
      அதற்கப்புறம் பின்புலத்தினின்று மேடாய் எழும்பும் முகத்தின்மேல் கிாீடமாக மண்குவித்து ஈர்க்குச்சியால் கோடுகள் வரைந்து அழகுபடுத்துவார். பின்னர தொந்தியை வடிவமைப்பார். நடு நடுவில் தண்ணீரை தொட்டுத்தொட்டு மேற்பரப்பில் ஒரு வழவழப்பை கொண்டு வருவார். இதற்கு பிறகு கைகால்களை வடிப்பார். அவை மட்டும் அவ்வளவு சாியாக வராது.
      அப்பா பிள்ளையாாின் கைகால்களை எந்த உருவப்படத்திலும் கவனித்து பார்த்தில்லையோ என்று ஐயமிருந்திருக்கிறது எனக்கு. மற்ற அங்கங்களை கூட கூர்ந்து பார்த்திருக்க மாட்டார் என்பதும் என் முடிவகளில் ஒன்று.
      சாதரணமாக எல்லோர் கண்களிலும் தென்படும் விஷயங்களோ பொதுப்படையாக தொியும் அழகோ அற்புதமோ வடிவோ திறனோ இயக்கமோ - இவை மட்டும் தான் அவர் கண்களில் படும். நுண்ணிய அழகியல் நுணுக்கங்களை கண்டுபிடித்து ரசித்து நான் பார்த்ததில்லை. அப்படியிருக்க இந்த பிள்ளையார் பிடித்தலை கூர்ந்து கவனிக்காமல் செய்ய இயலாத இந்த கலையை அப்பா செய்கிறார் என்பது பெரும் வியப்பு எனக்கு. அதனால் சாியாக வராத அங்கங்களை சட்டை
      அப்பாவின் இந திறனுக்கு இன்னொரு காரணம் கூட சொல்லலாம். எங்கள் வீட்டு பூஜை விக்கிரகங்களில் சிறிய மாக்கல் பிள்ளையார் ஒன்று உண்டு. பாட்டியின் பிறந்தவீட்டு சீதனங்களுடன் வந்தது அது. நாள் தவறாமல் அதற்கு நல்லெண்ணெய் சிறிது தேய்த்து ஸ்நான பொடி போட்டு பின் சந்தனம் திருநீறு பால் தயிர் என்று அபிஷேகம் நடக்கும். அப்பாத்தான் செய்வார். அந்த சிறுசிலையை தொட்டு துடைத்த பாிச்சயம் கூட அப்பாவிற்கு உதவியிருக்கலாம்.
      ஒரு வழியாக மணி நேரத்திற்குள் பிள்ளையாாின் உருவத்தை கொண்டுவந்து விடுவார். கடைசியில் கண்கள் வைக்கும் படலம். இதற்கென்றே பிரத்யேகமாக கருஞ்சிவப்பில் சில கோதுமை வடிவ மணிகளை பழைய பெருங்காய டப்பாவில் பத்திர படுத்தியிருப்பாள் பாட்டி. எங்கள் வீட்டு கொல்லைப்புறத்து கம்பி வேலியில் படர்ந்திருக்கும் கொடியின் காய்கள் வைகாசி மாத வெயிலில் காய்ந்து வெடிக்கும்போது இந்த கருஞ்சிவப்பு மணிகள் பிள்ளையார் கண்மணிகள் என்றும் குறிப்பிடப்படும் தரையில் சிதறும். இதைத்தான் பொறுக்கியெடுத்து வைத்திருப்பாள்
      அந்த டப்பா ஒருமுறை என் தம்பியிடம் மாட்டிக்கொண்டது. அவனது நான்கு வயதிற்கு மணிகள் வண்ண பல்லி மிட்டாய்கள் போலவும் சிறு பூச்சிகள் தோன்ற கையில் எடுத்தும் மீண்டும் டப்பாவில் போட்டும் விளையாடி கொண்டிருந்தான். மின்மினி பூச்சியை பிடித்தது போன்ற சந்தோஷம் அவன் முகத்தில். அதை கொடுக்க சொல்லி கேட்டபொழுது தரமுடியாது என்று பிடிவாதம் பிடித்தான். இரண்டு கூட தர மறுத்துவிட்டான். அப்புறம் உமாச்சி சாமி -யோட கண்ணை நீ குடுக்கலன்னா உன்னோட எடுத்துக்கும். அதுனால குடுத்துரு. பயமுறுத்தித்தான் வாங்கினாள். பயம் கலந்த ஆற்றாமையுடன் பாட்டியின் கொடுத்தது இன்னும் பசுமையாக
      பாட்டியின் அந்த மாக்கல் பிள்ளையார சிலையும் இந்த மண் பிள்ளையார் பக்கத்தில் இடம்பெறும். இரண்டும் பார்த்தால் ஒரே உயரம் அகலம். அந்த சிலை கருப்பு. இது செம்பழுப்பு. பின்தெரு காலி நிலத்தில் மண்டிக்கிடக்கும் எருக்கஞ்செடியிலிருந்து பறித்த பூக்களாலான் மாலையையும் அருகம்புல் சூட்டிய பிறகு நிறத்தில் மட்டும் வித்தியாசப்பட்ட இரட்டைப்பிறவிகளா காட்சியளிக்கும். புஸ்தகத்தை பார்த்து அப்பா மந்திரம் சொல்லி பொியதாக
      இந்த நேரத்தில் சமையலறையில் அடுப்படியில் அமர்ந்துகொண்டு கொழுக்கட்டைக்கான வெள்ளை நிறச்சொப்புகளை பாட்டி செய்துகொடுக்க அம்மா பூர்ணத்தை வைத்து மூடி ஆவியில் வேகவைத்துக்கொண்டிருப்பாள். எண்ணையை தொட்டு தொட்டு உருண்டையாக எடுத்துக்கொண்ட மாவை தட்டையாக்கி சிறிது சிறிதாக விளிம்புகளை பொிதாக்கி குழிவாய் சிறிய அகல் விளக்கு சட்டியை போல் சொப்பு செய்யும் அழகும் அடுத்து என்னை கவர்ந்த விஷயம்.
      என் சித்தப்பாவிற்கு கல்யாணம் நடந்தால் என்னமோ தொில ஜாதகம்-லாம் நல்லாத்தானிருக்கு ஏன் தட்டிண்டே போறதுன்னு புாியல. அந்த பிள்ளையார்தான் ஒரு வழி பண்ணணும். என்று பலமுறை பாட்டி புலம்பியிருக்கிறாள். ஆயிரத்தெட்டு கொழுக்கட்டை செய்வதாக ஒருமுறை வேண்டிக்கொண்டுவிட்டாள். நடந்தபின் அம்மா அத்தை சித்தி சித்திப்பெண்கள் ஒண்ணுவிட்ட மாமிகள் கூட்டமே உட்கார்ந்து ஓயாமல் இந்த சொப்பு செய்திருக்கிறது விநாயக சதுர்த்தியில். எங்கள் தெருவில் உள்ள எல்லார் வீட்டிற்கும் ஓடி ஓடி கொண்டு கொடுத்ததுகூட ஞாபகமிருக்கிறது. அன்று
      துரதிர்ஷ்டவசமாக விநாயகச்சதுர்த்தி கொண்டாடுவது இரண்டு வருடம் முன்னால் நின்று போய்விட்டது. என் அப்பா செய்து வந்த ஒரே கலைப்படைப்பிற்கும் அப்படி சொல்லலாம் என்றே நினைக்கிறேன் களிமண் தேடலுக்கும் எப்பொழுது அந்த கருஞ்சிவப்பு மணிகள் வெடிக்கும் என்ற காத்திருப்புக்கும் பாட்டி செய்யும் கொழுக்கட்டை சொப்புகளுக்கும் மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
      ஆமாம் இரண்டு வருடம் முந்தைய விநாயக சதுர்த்தி அன்று காலையில் என் பாட்டி காலமாகிவிட்டாள். இனி வருடா விநாயக இல்லை. அவளது திதி திவசம்தான் இந்த
      பாட்டி போன சோகம் மட்டுமல்லாமல் சதுர்த்தி சம்மந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே வெறும் ஞாபகங்களாகி இந்த கடந்தகால நிகழ்வுகளின் பாரத்தை தாங்க முடியவில்லை. பாரம் தாங்கமுடியாத தென்னை மரம் முற்றிய தேங்காய்களை காற்றின் துணைகொண்டு பிய்த்து எறிவதை போல எறிந்துவிட முடிந்தால் தேவலை. இல்லை மூன்றாம் நாள் கிணற்றில் போட்ட மண் பிள்ளையாரா கால போக்கில் கரைந்துவிட்டாலும் பரவாயில்லை. கரைந்துவிடும் என்று உள்மனது சொல்லிற்று.
      11 1999
      முகங்களை விற்றவன்
      கோகுலக்கண்ணன்
      அந்த ஊாில் முச்சந்தி மத்தியிலுள்ள வளாகத்து தரையில் அவன் கடை விாித்த போது முதலில் யாரும் கண்டு கொள்ளவில்லை. அக்கடையை எல்லோரும் கடக்கும்பொழுது விாித்து வைத்திருந்த முகங்களை அருகில் பார்க்கும் ஆசை உள்ளுக்குள் இருந்தும் அதை வெளிக்காட்டாது ஓரக்கண்ணால் பார்த்தவாறு
      அவர்களின் கவனத்தை இழுக்கும் படியாய் அம்முச்சந்தியில் விதவித அங்காடிகளும் கண்ணை பறிக்கும் படியான பொருட்களும் இருந்தன. அக்கடைக்காரர்கள் அலங்காரமாய் எல்லோரையும் ஈர்க்கும்படி பேசவும் செய்தார்கள். அங்கே குலுக்கல் முறை பாிசுகளும் இருந்தது மக்களின் ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கவே செய்தது. இருந்தும் கீழ்ப்பார்வையில் அவன் பரத்திவைத்திருந்த முகங்களை பார்த்தவாறே சென்றார்கள்.
      மற்ற கடைக்காரர்கள் அவனுடைய கடையை சற்று ஏளனமாக பார்த்தார்கள். அவன் கடைக்கு கூரையும் பிரமிக்கும்படியான அலங்காரங்களும் இல்லாதது கடைக்காரர்களுக்கு இளக்காரமாகவே இருந்தது. வேற்றூரை சேர்ந்தவன் என்ற அன்னியத்தொனியுடனே அவர்களின் எண்ணங்களும் ஓடியது. அவனின் கடையினால் தங்களின் வியாபாரம் பாதிக்குமோ அச்சம் உள்ளே இருந்தாலும்
      முட்டாள்..முகங்களை விற்கிறானாம்.யார் வாங்குவார்கள் என்றும்
      ஒரு மாதம் தாங்கினாலே மேல்
      என்றும் தங்களுக்குள்ளும் சகவியாபாாிகளிடமும் மக்களிடமும் முணுமுணுத்து கொண்டார்கள். அவ்வியாபார வளாகத்தின் அழகையே அந்த நடைபாதை கடை கெடுக்கிறது பேசி
      அவன் அதை பற்றியேதும் கவலை படாது முகங்களை பரப்பி வைத்து கொண்டிருந்தான் விற்பனைக்கு.
      அவனிடம் வேறு பட்ட முகங்கள் இருந்தன. அதன் வண்ணங்கள் கண்ணை பறித்தன. விழிகளின் தீட்சண்யமும் புருவங்களின் நேர்த்தியும் தலைமயிாின் மென்மையும் நாசியின் கூர்மையும் இதழ்களில் ஒட்டியிருந்த புன்னகைகளின் ஆதரவும் கன்னங்களின் செழுமையும் உன்னதமான வடிவத்தில் அமைந்திருந்தது. பெண்ஆண்குழந்தை முதிர்ந்தது என்று வெவ்வேறு வடித்து வைத்திருந்தான். குழந்தைகளின் விளையாட்டுக்கென சில மிருக முகங்களையும் இட்டிருந்தான். அம்முகங்களில் ஒன்றை அணிந்து கொண்டு சமயம் அவன்
      வினோதமாக பார்த்தவாறு மக்கள் அக்கடையை கடந்து போனார்கள். குழந்தைகள் அக்கடையை பார்த்து தங்கள் பெற்றோர்களை பிடித்து இழுத்தன. அவர்கள் அதை புறக்கணித்து போக முயன்றார்கள். சில விடாது மீறி கொண்டு அக்கடையின் முன்வந்து நிற்கும். அவர்களை அவன் லேசாக புன்னகைப்பான். முயல் யானை சிங்கம் என்று முகங்களை அக்குழந்தைகள் உற்று கொண்டிருந்தார்கள். பார்வையில் ஆச்சர்யத்தின் சாயலும் ஆர்வத்தின் கலந்திருந்தன. அவனுக்கு அக்குழந்தையின் முகங்கள் தான் வடித்த விட மிக்க அழகுடையதாகவும் உயிரோட்டம் கொண்டிருந்ததாகவும் பட்டது. அப்படி பட்ட வடிக்க வேண்டும் நினைத்து கொள்வான். அக்குழந்தைகளுக்கு முன்னே வைக்க பட்டிருந்த இறந்த தன்மையுடன் இருந்ததாய் முகங்களிலிருக்கும் உயிாின் அடையாளங்களை எப்படியேனும் வடித்துவைத்த
      நாட்கள் செல்ல செல்ல அவனுக்கு கவலை அதிகமானது. வியாபாரமாகாத முகங்களை பார்க்கையில் எதிர்காலத்தின் மேல் அவநம்பிக்கை தாயில்லாத அவனுடை சிறியப்பெண் அவ்வப்போது பசி படர்ந்த கண்களுடன் அவனை பார்த்து கொண்டிருந்தாள். அவளுடைய மங்கி பார்வை அவன் இதயத்தை சுண்டி இழுத்தது. நாடோடியாக நாலைந்து ஊர்களில் அவனுடன் பசியுடன் அலைந்து திாிந்து அவளின் தேகம் தேசலாய் காட்சியளித்ததை அவனால் தாங்க முடியவில்லை.
      ஒரு வருஷமாக அலைந்த ஊர்களிலெல்லாம் முகங்களை விற்க முடியாது வறுமையில் தத்தளித்தது இங்கே முடிவுக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் இந்த ஊருக்கு அவன் வந்தது. இடம் செல்வம் கொழிக்கும் இடமென்று கேள்விப்பட்டிருந்தான். இறுதியாக முயன்று பார்த்துவிடலாம் போனால் முகங்கள் வடிக்கும் தொழிலை விட்டு கூலிவேலை செய்தோ அல்லது
      சில நாட்கள் கழித்து குழந்தைகளின் அடம் தாங்காது பெற்றோர் அவனிடம் மிருக முகங்களை வாங்கி கொண்டனர். குழந்தைகள் அணிந்து கொண்டு கூச்சலிட்டு தெருவில் ஆர்ப்பாித்த போது அவர்களின் மற்ற மனிதமுகங்களை பார்த்தார்கள். ஆனால் அவர்கள் இறுதியில் தங்களுக்கென்று வாங்காது அவைகளை கழற்றி வைத்து விட்டு போனார்கள். அவனுக்கு ஏனென்று புாியவில்லை. சிலாிடம் முகங்களில்
      ஒருத்தி முகங்களில் உணர்ச்சி பாவம் போதாதென்று சொன்னாள். இன்னொருவன் முகங்களிலுள்ள களை ஈர்க்கும்படியாய் இல்லையென்றான். பிறகு அவன் தன் முகத்தை போன்று வடித்து கொடுத்தால் வாங்க தயார் என்று சொல்ல அவனை உற்று பார்த்தான். அதில் லேசாய் குரூர படிந்திருந்தது.
      அவன் அன்றிரவு அவனுடை குட்டிபெண் தூங்கிய பிறகு தன் குடிசையின் வாசலில் நின்றான். அப்போது அசைவற்ற கருத்த மேகங்கள் நிலவை செதில் செதிலாக வெட்டியிருந்தன. கருமை தோய்ந்த ஒளி வெளியில் கனமான எண்ணை போல் வழிந்து கொண்டிருந்தது. தூரத்து மர உச்சிகள் மெதுவாய் தள்ளாடி கொண்டிருந்தன. இனந்தொியாத ஒரு பறவை அல்லது மிருகத்தின் அழுகையொலியில் காற்று சற்று நடுங்கி மரங்களின் நீண்ட நிழல்கள் தரையில் அழிக்க முடியாத கறைகள் போலிருந்தன.
      அவன் முகங்களை செய்ய தோல்களையும் வண்ணங்களையும் எடுத்து வைத்து கொண்டான். அவைகளை சற்று நேரம் உற்று பார்த்தான். கண்களில் ஒரு புதிய ஒளி மின்னியது. அடிவயிற்றில் சதை இழுத்து பிடித்து கொண்டது போல் இருந்தது. கால் முட்டிகள் சற்றே நடுங்கின. மனதில் ஏதோ ஓங்காரம் எழுந்ததுதாடைகள் இறுகி பூட்டி கொண்டன.காற்றில் இருக்கும் அதிர்வு உள்ளுக்குள் புகுந்து கொண்டது. மனதின் நுன்ணுணர்வுகள் அழிவது போலிருந்தது. விகாரத்தின் வீச்சுப்பொறியில் பற்றியொிவது போலவும் தீப்பிழம்பு கக்கி கூாிய நகங்களால் இரை பற்றி விழுங்கும் மிருகங்கள் உலாவும் அடர்ந்த அமானுஷ்யமான கானகத்தில் உலாவுவது தோன்றியது. தானே மிருகமாய் மாறி விட்டது வியர்வை துளிகள் முகத்தில் அரும்பி உடல் மூழுவதும் தீப்பற்றி வானம் சாிந்து பக்கத்தில் பாளம் பாளமாய் விழுவது போல உணர்ந்தான். மலைச்சாிவுப்பாறைகளில் தோல்சிராய்ந்து தீப்பொறி தெறிக்க அடியில்லா பள்ளத்தாக்கில் சுழன்று விழுவதை
      உணர்வுகளின் விசித்தரமானதொரு உந்துதலில் முகங்களை செய்ய ஆரம்பித்தான்.
      அவன் கைகள் உடலிருந்து விலகி முகங்களை வடிக்க ஆரம்பித்தது. விரல்களுக்கு வரும் ஆணைகள் காற்றின் வெப்பத்திலிருந்து வழிந்தது. முகங்கள் தானாய் வடிவெடுத்துக்கொள்வதாயும் இருந்தது. நிலவு மெளனமாய் சில சமயம் மேகங்களின் இடுக்குவழி சற்று அச்சத்துடன் பார்த்து கொண்டிருந்தது.

      மறுநாள் கடையில் அவன் வடித்து வைத்திருந்த புதிய முகங்களை பார்த்ததும் அவ்வழி சென்ற மக்களின்
      கண்களில் வித்தியாசமான வெளிச்சம் தெறித்தது. அச்சமும் குரூரக்ரோதங்களை பார்க்கையில் விளையும் தன்னிலை மறக்கும் ஆவலுமான கலவை அவர்கள் முகங்களில் நிழலாடியது. தாறுமாறாக சிதைந்து சற்றே காய்ந்த குருதி படர்ந்த
      காயங்களை கொண்ட பிணங்களை எப்படி ஆணியடித்தாற் போல அசையாது பார்க்கும்படி தோன்றுகிறதோ - அப்படி அவர்கள் அந்த முகங்களை பார்த்தார்கள். அவர்களுக்குள்ளே ஆழ்ந்து படிந்திருந்த ஆதி கோரங்களை மேலெழுப்பும்படியான விகாரத்தை முகங்கள் கொண்டிருந்தன.
      அவர்கள் முன்பு போல அக்கடையிலுள்ள முகங்களை அலட்சியபாவத்துடன் கடந்து போக இயலவில்லை. கண்களை அம்முகங்களில் விளைந்திருந்த வெறித்தனம் கட்டி போட்டுவிட்டது. குரூரத்தின் அழகு அரூபமாய்
      கண்கள்- ஒரு கோணத்தில் பார்கையில் -வக்கிரம் வழி சிாிப்பது போலிருந்தது - இன்னோரு பார்க்கையில் கருணையும் கொலைவெறியும் சாிவிகிதத்தில் கலந்தது போலவும் தோன்றியது. முழுமையாய் ஒவ்வொரு முகத்திலும் திகிலூட்டும் வெறியும் கீழுணர்வுகள் தாண்டவமாடும் பிரதிபலிப்பும் மாறி வினோதமான தோற்றங்களை அம்முகங்கள் வெளி காட்டி கொண்டிருந்தன. மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடைபட்டதொரு படிவத்தை அந்த இடமே திடிரென்று அபாிமிதமான
      மக்கள் மெதுவாய் அவன் கடையில் குழு தொடங்கினார்கள். பலகணங்கள் தயக்கத்துடன் மெளனமாய் முகங்களையே வெறித்தபடி பார்த்தவாறு நின்றிருந்தார்கள். அம்முகங்கள் அவர்கள் உள்ளுக்குள் தோற்றுவிக்கும் அலறல்களும் வெறியுடன் நாளங்களில் பாய்ந்தோடும் ரத்தத்தின் சப்தங்களும் கிளர்ச்சியுடன் துடிக்கும் இதயத்தின் சப்தமும் அவர்களின் உடல்விளிம்புகளை தாண்டி காற்றில் கலப்பதாய் இருந்தது. அங்கே கூச்சலும் தூரத்தில் இடைவிடாது கேட்கும் அலையோசை போல நிரம்பியது. உத்வேகத்துடன் அம்முகங்களை அணிந்து
      விகாரமாய் சிாிக்க தொடங்கினார்கள். அவன் மேல் கைக்கு கிடைத்த காசை அள்ளி வீசினார்கள். எங்கும் காசு சிதறியபடி துள்ளி விழுந்தவாறு இருந்தது. அதன் சத்தம் அவனுக்கு தித்திப்பாய் தலை குனிந்தபடி கைகளினால் அள்ள அள்ள பணம் விழுந்து கொண்டே கடையில் இருந்த அத்தனை குரூர முகங்களும் காலியாகி விட்டன. உற்சாகத்துடன் பணத்தையெல்லாம் பொறுக்கி கொண்டு நிமிர்ந்து சுற்றியிருந்த மக்களை பார்க்கையில் சற்று அச்சமாக அம்முகங்களில் கொதித்து நீளும் குருரத்தின் நாக்குகள் தீப்பிழம்புகளை கக்குமோ என்று பயந்தான். பையில் பணத்தை
      வீதியில் மக்கள் முகங்களை அணிந்து கொண்டு பெருத்த குரலில் சிாித்து கொண்டிருந்தார்கள். அச்சிாிப்பு சத்தம் காற்றின் இடைவெளிகளில் வெடிக்கும் குண்டுகளை போலிருந்தது. ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடு ஏதுமில்லாதிருந்தது. அவர்கள் நாக்குகளை நீட்டுகையில் தீக்கற்றைகள் நீண்டன. அப்போது கைதட்டியபடி குதிக்கத்தொடங்கினார்கள். ஒருவன் பக்கத்திலிருந்த துணிக்கடைக்குள் புகுந்து அங்கே வைக்கப்பட்டிருந்த துணிமணிகளை அள்ளி
      வந்தான். அவனை பார்த்து இன்னுமிருவர் அக்கடைக்குள் புகுந்து மிச்சமிருந்த துணிகளை அள்ளி கொண்டு வந்து நடுத்தெருவில் குமித்தனர். அக்கடை வியாபாாி அச்சத்தில் வாயடைத்து போய் நின்றிருந்தான். ஒருவன் அத்துணிகளின் மேல் வாய் விட்டு ஊத தீ பிழம்பு அம்பு போல் வெளியேறி துணிகளை தாக்க அவை பற்றி கொண்டன. அவை நெருப்பில் படபடத்து எாியும் சப்தம் எல்லாவித கூச்சல்களையும் மீறி கேட்கும்படி இருந்தது. அவர்களின் கும்மாளம் இன்னும் அதிகமானது. சுற்றி முற்றி இருந்த மற்றக்கடைகளிலிருந்து பொருட்களையும் சிலர் எடுத்த வர ஆரம்பித்தனர். தீயின் நாக்குகளுக்குள் ஒவ்வொன்றாய் எறி
      தீ ஜ்வாலை மஞ்சளும் சிகப்பும் நீலமும் கலந்து ஹோவென்று எழுந்தது. அடியில் அகன்று பரந்திருந்த ஜ்வாலையின் உச்சி மஞ்சள் அம்பாய் பிரபஞ்சத்தை குத்தி கிழிப்பது போலிருந்தது. அதைச்சுற்றி மக்களின் வெறியாட்டம் இன்னும் உச்சத்திற்கு போனது. முகங்களை அணியாமல் அப்பக்கம் வந்தவர்களை அத்தீக்குள் மற்றவர்கள் தள்ள முயற்சிக்க அவர்கள் பீதியுடன் தலை தெறிக்க ஓடத்தொடங்கினார்கள். அவர்களை துரத்த அந்த இடமே ஒரு பொிய போர்களத்தின் அம்சங்கொண்டதாய் தோற்றமளித்தது. சிலர் தங்கள் ஆடைகள் கழற்றி எாிந்து அம்மணமாய் தீயை சுற்றி குதிக்க தொடங்கினர். காறி தெருவில் உமிழ்ந்து கொண்டே இருந்தார்கள்.ஒரு காிய திரவம் கெட்டியாய் தெருவெங்கும் பரவியது. துர்நாற்றங்களும் உடல்கள் காியும் வாசனையும் எங்கும் நிறைந்தது. ஓங்கார ஓலமும் வெறி பிடித்த சிாிப்புகளும் எழும்ப காற்றும் மரங்களும் இலைகளும் நடுங்குவது போல் உணர்ந்தான். அவர்களின் நிர்வாண உடல்களையும் வக்கிர முகங்களையும் பார்க்கையில் அவனுக்கு தலைசுற்றி மூச்சு
      அப்போதுதான் தன் பெண்ணின் ஞாபகம் வந்தது அவனுக்கு. பெண் மட்டுமல்ல அவ்வூாின் மற்ற குழந்தைகளின் வந்தது. அவனுடை காலையில் அவனுடன் கடைக்கு வரவில்லை. தூங்கி கொண்டிருந்தவளை எழுப்ப வேண்டாமென்று அவன் மட்டுமே வந்திருந்தான். எழுந்து தானாகவே இந்நேரம் அவள் வந்திருக்க வேண்டும். இதையெல்லாம் பார்த்தால் ..என்ற பீதி அவனுள் எழுந்தது. மனம் பதைபதைத்து போனது. சிறிய இளவரசியும் மற்ற பூப்போன்ற மென்குழந்தைகளும் வயது தேய்ந்து கரைந்து கொண்டிருக்கும்
      என்ன ஆகி விட்டது எனக்கும் இந்த கேடு கெட்ட மனிதர்களுக்கும் இவர்கள் மனிதர்களா சில கணத்தில் சிாிக்கும் சிந்திக்கும் கருணை தவழும் அன்பு சுரக்கும் முகங்களை தூர எறிந்து விட்டு ஊழியின் முகமணிந்து அழிவின் நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கும் இவர்களா மனிதர்கள் முகங்களிலுள்ள குரூரமும் விகாரமும் அவர்களை தன்னிலை இழக்க செய்தது ஏன் இதற்கு நான் தானே காரணம் வடித்தது நானே. இல்லை இருக்காது. நானாக நேற்றைய ராத்திாி பித்து பிடித்து இப்படிப்பட்ட நானா செய்தேன் என் மனசின் வக்கிரங்களா இப்போது இங்கே பேயாட்டம் ஆடி கொண்டிருக்கின்றன நேற்று மனசையும் உயிரையும் யார் திருடி கொண்டு போனது இருந்திருந்தால் முகங்களை செய்திருப்பேனா நிகழ்ந்து எனக்கு அடர்ந்த கானகத்தின் இருளில் உலாவும் ஆவியொன்று உள்ளுக்குள் புகுந்து என்னை இப்படி பட்ட செ தோன்றியதா
      மனம் அரற்ற நேராய் தன் குடிசையை நோக்கி ஓடத்தொடங்கினான். இனி என்ன ஆகும்..இது எப்படி முடியும் என்ற உளைச்சலும் சிறிய மகள் இதையெல்லாம் பார்க்காது அவளுக்கு எந்த விதமான தீங்கும் நிகழாது இருக்க வேண்டுமே ஏக்கமும் அவனை விரைவாக செலுத்தின. போகும் தெருவெங்கும் இதற்குள் காற்று கடத்தி வந்த தீப்பொறி போல எங்கும் பேயாட்டம் பரவி கொண்டிந்தது. தீயின் ஜ்வாலை பெருக்கெடுத்து காட்டு நதியாய் பிரவாகித்து ஓடி
      ஊர் எல்லை தாண்டி தோப்போரம் ஒதுங்கியிருந்த கல்லறை அடுத்த தன் குடிசைக்கு வந்தான். உள்ளே அவள்
      இல்லை. மனம் விதிர்விதிர்த்து போனது. குடிசைக்கு பிற்பக்கத்திலுள்ள பரப்பு வெளியில் நின்று என்ன செய்வதென்ற குழப்பத்தில் நின்ற போது நடந்து போகும் ஒரு மலர்க்கூட்டமாய் சற்றுத்தூரத்தில் அந்த குழந்தைகளை பார்த்தான்.
      அவர்கள் அந்த சமவெளியின் மத்தியில் மெதுவாய் போ கொண்டிருந்தார்கள். வெறிபிடித்தவனை போல தன் மகளின் பெயரை கூவியவாறு அவர்களை நோக்கி ஓடினான். அதை கேட்டது தொியவில்லை. சற்று அருகாமையில் போன போது அவன் மகளை அக்கூட்டத்தில் பார்த்தான்.அவள் அவனை திரும்பிப்பார்க்காதது அவனுக்கு கிடைத்த
      ஒவ்வொரு சிறிய முகமும் அதீத ஒளியுடன் ஜ்வலித்தது. அம்முகங்களில் பறவைகளின் சிறகுகளை போன்ற மென்மை இருந்தது. சிறிது நேரம் முன்பு பார்த்த விகார முகங்களுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத அழகு அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது. எல்லா குழந்தைகளின் ஒரேவிதமாக எல்லோரும் அவன் மகளை போலவே இருந்ததாய்
      தரையில் விழுந்த பூக்கும்பலை மெதுவாய் காற்று முன்செலுத்துவதை போல அவர்கள் போய் கொண்டிருந்தார்கள்.
      அவன் பார்த்து கொண்டிருக்கையில் அவர்களுக்கு நீண்ட வண்ணமயமான சிறகுகள் முளைத்தன. வியந்து போய் நின்றான்.மெல்லிய காற்று அச்சிறகுகளுக்கு அடியில் படர்ந்து அவர்களை மேல் தூக்கியது. நீந்துகின்ற மீன்குட்டிகளை போல அவர்கள் வெளியில் படபடக்க நீந்தி
      சற்றுநேரத்தில் மேகக்கூட்டங்களில் அவர்கள் மறைந்து போனார்கள்.

      திண்ணை அக்டோபர் 27 1999
      முகங்களை விற்றவன்
      கோகுலக்கண்ணன்
      அந்த ஊாில் முச்சந்தி மத்தியிலுள்ள வளாகத்து தரையில் அவன் கடை விாித்த போது முதலில் யாரும் கண்டு கொள்ளவில்லை. அக்கடையை எல்லோரும் கடக்கும்பொழுது விாித்து வைத்திருந்த முகங்களை அருகில் பார்க்கும் ஆசை உள்ளுக்குள் இருந்தும் அதை வெளிக்காட்டாது ஓரக்கண்ணால் பார்த்தவாறு
      அவர்களின் கவனத்தை இழுக்கும் படியாய் அம்முச்சந்தியில் விதவித அங்காடிகளும் கண்ணை பறிக்கும் படியான பொருட்களும் இருந்தன. அக்கடைக்காரர்கள் அலங்காரமாய் எல்லோரையும் ஈர்க்கும்படி பேசவும் செய்தார்கள். அங்கே குலுக்கல் முறை பாிசுகளும் இருந்தது மக்களின் ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கவே செய்தது. இருந்தும் கீழ்ப்பார்வையில் அவன் பரத்திவைத்திருந்த முகங்களை பார்த்தவாறே சென்றார்கள்.
      மற்ற கடைக்காரர்கள் அவனுடைய கடையை சற்று ஏளனமாக பார்த்தார்கள். அவன் கடைக்கு கூரையும் பிரமிக்கும்படியான அலங்காரங்களும் இல்லாதது கடைக்காரர்களுக்கு இளக்காரமாகவே இருந்தது. வேற்றூரை சேர்ந்தவன் என்ற அன்னியத்தொனியுடனே அவர்களின் எண்ணங்களும் ஓடியது. அவனின் கடையினால் தங்களின் வியாபாரம் பாதிக்குமோ அச்சம் உள்ளே இருந்தாலும்
      முட்டாள்..முகங்களை விற்கிறானாம்.யார் வாங்குவார்கள் என்றும்
      ஒரு மாதம் தாங்கினாலே மேல்
      என்றும் தங்களுக்குள்ளும் சகவியாபாாிகளிடமும் மக்களிடமும் முணுமுணுத்து கொண்டார்கள். அவ்வியாபார வளாகத்தின் அழகையே அந்த நடைபாதை கடை கெடுக்கிறது பேசி
      அவன் அதை பற்றியேதும் கவலை படாது முகங்களை பரப்பி வைத்து கொண்டிருந்தான் விற்பனைக்கு.
      அவனிடம் வேறு பட்ட முகங்கள் இருந்தன. அதன் வண்ணங்கள் கண்ணை பறித்தன. விழிகளின் தீட்சண்யமும் புருவங்களின் நேர்த்தியும் தலைமயிாின் மென்மையும் நாசியின் கூர்மையும் இதழ்களில் ஒட்டியிருந்த புன்னகைகளின் ஆதரவும் கன்னங்களின் செழுமையும் உன்னதமான வடிவத்தில் அமைந்திருந்தது. பெண்ஆண்குழந்தை முதிர்ந்தது என்று வெவ்வேறு வடித்து வைத்திருந்தான். குழந்தைகளின் விளையாட்டுக்கென சில மிருக முகங்களையும் இட்டிருந்தான். அம்முகங்களில் ஒன்றை அணிந்து கொண்டு சமயம் அவன்
      வினோதமாக பார்த்தவாறு மக்கள் அக்கடையை கடந்து போனார்கள். குழந்தைகள் அக்கடையை பார்த்து தங்கள் பெற்றோர்களை பிடித்து இழுத்தன. அவர்கள் அதை புறக்கணித்து போக முயன்றார்கள். சில விடாது மீறி கொண்டு அக்கடையின் முன்வந்து நிற்கும். அவர்களை அவன் லேசாக புன்னகைப்பான். முயல் யானை சிங்கம் என்று முகங்களை அக்குழந்தைகள் உற்று கொண்டிருந்தார்கள். பார்வையில் ஆச்சர்யத்தின் சாயலும் ஆர்வத்தின் கலந்திருந்தன. அவனுக்கு அக்குழந்தையின் முகங்கள் தான் வடித்த விட மிக்க அழகுடையதாகவும் உயிரோட்டம் கொண்டிருந்ததாகவும் பட்டது. அப்படி பட்ட வடிக்க வேண்டும் நினைத்து கொள்வான். அக்குழந்தைகளுக்கு முன்னே வைக்க பட்டிருந்த இறந்த தன்மையுடன் இருந்ததாய் முகங்களிலிருக்கும் உயிாின் அடையாளங்களை எப்படியேனும் வடித்துவைத்த
      நாட்கள் செல்ல செல்ல அவனுக்கு கவலை அதிகமானது. வியாபாரமாகாத முகங்களை பார்க்கையில் எதிர்காலத்தின் மேல் அவநம்பிக்கை தாயில்லாத அவனுடை சிறியப்பெண் அவ்வப்போது பசி படர்ந்த கண்களுடன் அவனை பார்த்து கொண்டிருந்தாள். அவளுடைய மங்கி பார்வை அவன் இதயத்தை சுண்டி இழுத்தது. நாடோடியாக நாலைந்து ஊர்களில் அவனுடன் பசியுடன் அலைந்து திாிந்து அவளின் தேகம் தேசலாய் காட்சியளித்ததை அவனால் தாங்க முடியவில்லை.
      ஒரு வருஷமாக அலைந்த ஊர்களிலெல்லாம் முகங்களை விற்க முடியாது வறுமையில் தத்தளித்தது இங்கே முடிவுக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் இந்த ஊருக்கு அவன் வந்தது. இடம் செல்வம் கொழிக்கும் இடமென்று கேள்விப்பட்டிருந்தான். இறுதியாக முயன்று பார்த்துவிடலாம் போனால் முகங்கள் வடிக்கும் தொழிலை விட்டு கூலிவேலை செய்தோ அல்லது
      சில நாட்கள் கழித்து குழந்தைகளின் அடம் தாங்காது பெற்றோர் அவனிடம் மிருக முகங்களை வாங்கி கொண்டனர். குழந்தைகள் அணிந்து கொண்டு கூச்சலிட்டு தெருவில் ஆர்ப்பாித்த போது அவர்களின் மற்ற மனிதமுகங்களை பார்த்தார்கள். ஆனால் அவர்கள் இறுதியில் தங்களுக்கென்று வாங்காது அவைகளை கழற்றி வைத்து விட்டு போனார்கள். அவனுக்கு ஏனென்று புாியவில்லை. சிலாிடம் முகங்களில்
      ஒருத்தி முகங்களில் உணர்ச்சி பாவம் போதாதென்று சொன்னாள். இன்னொருவன் முகங்களிலுள்ள களை ஈர்க்கும்படியாய் இல்லையென்றான். பிறகு அவன் தன் முகத்தை போன்று வடித்து கொடுத்தால் வாங்க தயார் என்று சொல்ல அவனை உற்று பார்த்தான். அதில் லேசாய் குரூர படிந்திருந்தது.
      அவன் அன்றிரவு அவனுடை குட்டிபெண் தூங்கிய பிறகு தன் குடிசையின் வாசலில் நின்றான். அப்போது அசைவற்ற கருத்த மேகங்கள் நிலவை செதில் செதிலாக வெட்டியிருந்தன. கருமை தோய்ந்த ஒளி வெளியில் கனமான எண்ணை போல் வழிந்து கொண்டிருந்தது. தூரத்து மர உச்சிகள் மெதுவாய் தள்ளாடி கொண்டிருந்தன. இனந்தொியாத ஒரு பறவை அல்லது மிருகத்தின் அழுகையொலியில் காற்று சற்று நடுங்கி மரங்களின் நீண்ட நிழல்கள் தரையில் அழிக்க முடியாத கறைகள் போலிருந்தன.
      அவன் முகங்களை செய்ய தோல்களையும் வண்ணங்களையும் எடுத்து வைத்து கொண்டான். அவைகளை சற்று நேரம் உற்று பார்த்தான். கண்களில் ஒரு புதிய ஒளி மின்னியது. அடிவயிற்றில் சதை இழுத்து பிடித்து கொண்டது போல் இருந்தது. கால் முட்டிகள் சற்றே நடுங்கின. மனதில் ஏதோ ஓங்காரம் எழுந்ததுதாடைகள் இறுகி பூட்டி கொண்டன.காற்றில் இருக்கும் அதிர்வு உள்ளுக்குள் புகுந்து கொண்டது. மனதின் நுன்ணுணர்வுகள் அழிவது போலிருந்தது. விகாரத்தின் வீச்சுப்பொறியில் பற்றியொிவது போலவும் தீப்பிழம்பு கக்கி கூாிய நகங்களால் இரை பற்றி விழுங்கும் மிருகங்கள் உலாவும் அடர்ந்த அமானுஷ்யமான கானகத்தில் உலாவுவது தோன்றியது. தானே மிருகமாய் மாறி விட்டது வியர்வை துளிகள் முகத்தில் அரும்பி உடல் மூழுவதும் தீப்பற்றி வானம் சாிந்து பக்கத்தில் பாளம் பாளமாய் விழுவது போல உணர்ந்தான். மலைச்சாிவுப்பாறைகளில் தோல்சிராய்ந்து தீப்பொறி தெறிக்க அடியில்லா பள்ளத்தாக்கில் சுழன்று விழுவதை
      உணர்வுகளின் விசித்தரமானதொரு உந்துதலில் முகங்களை செய்ய ஆரம்பித்தான்.
      அவன் கைகள் உடலிருந்து விலகி முகங்களை வடிக்க ஆரம்பித்தது. விரல்களுக்கு வரும் ஆணைகள் காற்றின் வெப்பத்திலிருந்து வழிந்தது. முகங்கள் தானாய் வடிவெடுத்துக்கொள்வதாயும் இருந்தது. நிலவு மெளனமாய் சில சமயம் மேகங்களின் இடுக்குவழி சற்று அச்சத்துடன் பார்த்து கொண்டிருந்தது.

      மறுநாள் கடையில் அவன் வடித்து வைத்திருந்த புதிய முகங்களை பார்த்ததும் அவ்வழி சென்ற மக்களின்
      கண்களில் வித்தியாசமான வெளிச்சம் தெறித்தது. அச்சமும் குரூரக்ரோதங்களை பார்க்கையில் விளையும் தன்னிலை மறக்கும் ஆவலுமான கலவை அவர்கள் முகங்களில் நிழலாடியது. தாறுமாறாக சிதைந்து சற்றே காய்ந்த குருதி படர்ந்த
      காயங்களை கொண்ட பிணங்களை எப்படி ஆணியடித்தாற் போல அசையாது பார்க்கும்படி தோன்றுகிறதோ - அப்படி அவர்கள் அந்த முகங்களை பார்த்தார்கள். அவர்களுக்குள்ளே ஆழ்ந்து படிந்திருந்த ஆதி கோரங்களை மேலெழுப்பும்படியான விகாரத்தை முகங்கள் கொண்டிருந்தன.
      அவர்கள் முன்பு போல அக்கடையிலுள்ள முகங்களை அலட்சியபாவத்துடன் கடந்து போக இயலவில்லை. கண்களை அம்முகங்களில் விளைந்திருந்த வெறித்தனம் கட்டி போட்டுவிட்டது. குரூரத்தின் அழகு அரூபமாய்
      கண்கள்- ஒரு கோணத்தில் பார்கையில் -வக்கிரம் வழி சிாிப்பது போலிருந்தது - இன்னோரு பார்க்கையில் கருணையும் கொலைவெறியும் சாிவிகிதத்தில் கலந்தது போலவும் தோன்றியது. முழுமையாய் ஒவ்வொரு முகத்திலும் திகிலூட்டும் வெறியும் கீழுணர்வுகள் தாண்டவமாடும் பிரதிபலிப்பும் மாறி வினோதமான தோற்றங்களை அம்முகங்கள் வெளி காட்டி கொண்டிருந்தன. மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடைபட்டதொரு படிவத்தை அந்த இடமே திடிரென்று அபாிமிதமான
      மக்கள் மெதுவாய் அவன் கடையில் குழு தொடங்கினார்கள். பலகணங்கள் தயக்கத்துடன் மெளனமாய் முகங்களையே வெறித்தபடி பார்த்தவாறு நின்றிருந்தார்கள். அம்முகங்கள் அவர்கள் உள்ளுக்குள் தோற்றுவிக்கும் அலறல்களும் வெறியுடன் நாளங்களில் பாய்ந்தோடும் ரத்தத்தின் சப்தங்களும் கிளர்ச்சியுடன் துடிக்கும் இதயத்தின் சப்தமும் அவர்களின் உடல்விளிம்புகளை தாண்டி காற்றில் கலப்பதாய் இருந்தது. அங்கே கூச்சலும் தூரத்தில் இடைவிடாது கேட்கும் அலையோசை போல நிரம்பியது. உத்வேகத்துடன் அம்முகங்களை அணிந்து
      விகாரமாய் சிாிக்க தொடங்கினார்கள். அவன் மேல் கைக்கு கிடைத்த காசை அள்ளி வீசினார்கள். எங்கும் காசு சிதறியபடி துள்ளி விழுந்தவாறு இருந்தது. அதன் சத்தம் அவனுக்கு தித்திப்பாய் தலை குனிந்தபடி கைகளினால் அள்ள அள்ள பணம் விழுந்து கொண்டே கடையில் இருந்த அத்தனை குரூர முகங்களும் காலியாகி விட்டன. உற்சாகத்துடன் பணத்தையெல்லாம் பொறுக்கி கொண்டு நிமிர்ந்து சுற்றியிருந்த மக்களை பார்க்கையில் சற்று அச்சமாக அம்முகங்களில் கொதித்து நீளும் குருரத்தின் நாக்குகள் தீப்பிழம்புகளை கக்குமோ என்று பயந்தான். பையில் பணத்தை
      வீதியில் மக்கள் முகங்களை அணிந்து கொண்டு பெருத்த குரலில் சிாித்து கொண்டிருந்தார்கள். அச்சிாிப்பு சத்தம் காற்றின் இடைவெளிகளில் வெடிக்கும் குண்டுகளை போலிருந்தது. ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடு ஏதுமில்லாதிருந்தது. அவர்கள் நாக்குகளை நீட்டுகையில் தீக்கற்றைகள் நீண்டன. அப்போது கைதட்டியபடி குதிக்கத்தொடங்கினார்கள். ஒருவன் பக்கத்திலிருந்த துணிக்கடைக்குள் புகுந்து அங்கே வைக்கப்பட்டிருந்த துணிமணிகளை அள்ளி
      வந்தான். அவனை பார்த்து இன்னுமிருவர் அக்கடைக்குள் புகுந்து மிச்சமிருந்த துணிகளை அள்ளி கொண்டு வந்து நடுத்தெருவில் குமித்தனர். அக்கடை வியாபாாி அச்சத்தில் வாயடைத்து போய் நின்றிருந்தான். ஒருவன் அத்துணிகளின் மேல் வாய் விட்டு ஊத தீ பிழம்பு அம்பு போல் வெளியேறி துணிகளை தாக்க அவை பற்றி கொண்டன. அவை நெருப்பில் படபடத்து எாியும் சப்தம் எல்லாவித கூச்சல்களையும் மீறி கேட்கும்படி இருந்தது. அவர்களின் கும்மாளம் இன்னும் அதிகமானது. சுற்றி முற்றி இருந்த மற்றக்கடைகளிலிருந்து பொருட்களையும் சிலர் எடுத்த வர ஆரம்பித்தனர். தீயின் நாக்குகளுக்குள் ஒவ்வொன்றாய் எறி
      தீ ஜ்வாலை மஞ்சளும் சிகப்பும் நீலமும் கலந்து ஹோவென்று எழுந்தது. அடியில் அகன்று பரந்திருந்த ஜ்வாலையின் உச்சி மஞ்சள் அம்பாய் பிரபஞ்சத்தை குத்தி கிழிப்பது போலிருந்தது. அதைச்சுற்றி மக்களின் வெறியாட்டம் இன்னும் உச்சத்திற்கு போனது. முகங்களை அணியாமல் அப்பக்கம் வந்தவர்களை அத்தீக்குள் மற்றவர்கள் தள்ள முயற்சிக்க அவர்கள் பீதியுடன் தலை தெறிக்க ஓடத்தொடங்கினார்கள். அவர்களை துரத்த அந்த இடமே ஒரு பொிய போர்களத்தின் அம்சங்கொண்டதாய் தோற்றமளித்தது. சிலர் தங்கள் ஆடைகள் கழற்றி எாிந்து அம்மணமாய் தீயை சுற்றி குதிக்க தொடங்கினர். காறி தெருவில் உமிழ்ந்து கொண்டே இருந்தார்கள்.ஒரு காிய திரவம் கெட்டியாய் தெருவெங்கும் பரவியது. துர்நாற்றங்களும் உடல்கள் காியும் வாசனையும் எங்கும் நிறைந்தது. ஓங்கார ஓலமும் வெறி பிடித்த சிாிப்புகளும் எழும்ப காற்றும் மரங்களும் இலைகளும் நடுங்குவது போல் உணர்ந்தான். அவர்களின் நிர்வாண உடல்களையும் வக்கிர முகங்களையும் பார்க்கையில் அவனுக்கு தலைசுற்றி மூச்சு
      அப்போதுதான் தன் பெண்ணின் ஞாபகம் வந்தது அவனுக்கு. பெண் மட்டுமல்ல அவ்வூாின் மற்ற குழந்தைகளின் வந்தது. அவனுடை காலையில் அவனுடன் கடைக்கு வரவில்லை. தூங்கி கொண்டிருந்தவளை எழுப்ப வேண்டாமென்று அவன் மட்டுமே வந்திருந்தான். எழுந்து தானாகவே இந்நேரம் அவள் வந்திருக்க வேண்டும். இதையெல்லாம் பார்த்தால் ..என்ற பீதி அவனுள் எழுந்தது. மனம் பதைபதைத்து போனது. சிறிய இளவரசியும் மற்ற பூப்போன்ற மென்குழந்தைகளும் வயது தேய்ந்து கரைந்து கொண்டிருக்கும்
      என்ன ஆகி விட்டது எனக்கும் இந்த கேடு கெட்ட மனிதர்களுக்கும் இவர்கள் மனிதர்களா சில கணத்தில் சிாிக்கும் சிந்திக்கும் கருணை தவழும் அன்பு சுரக்கும் முகங்களை தூர எறிந்து விட்டு ஊழியின் முகமணிந்து அழிவின் நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கும் இவர்களா மனிதர்கள் முகங்களிலுள்ள குரூரமும் விகாரமும் அவர்களை தன்னிலை இழக்க செய்தது ஏன் இதற்கு நான் தானே காரணம் வடித்தது நானே. இல்லை இருக்காது. நானாக நேற்றைய ராத்திாி பித்து பிடித்து இப்படிப்பட்ட நானா செய்தேன் என் மனசின் வக்கிரங்களா இப்போது இங்கே பேயாட்டம் ஆடி கொண்டிருக்கின்றன நேற்று மனசையும் உயிரையும் யார் திருடி கொண்டு போனது இருந்திருந்தால் முகங்களை செய்திருப்பேனா நிகழ்ந்து எனக்கு அடர்ந்த கானகத்தின் இருளில் உலாவும் ஆவியொன்று உள்ளுக்குள் புகுந்து என்னை இப்படி பட்ட செ தோன்றியதா
      மனம் அரற்ற நேராய் தன் குடிசையை நோக்கி ஓடத்தொடங்கினான். இனி என்ன ஆகும்..இது எப்படி முடியும் என்ற உளைச்சலும் சிறிய மகள் இதையெல்லாம் பார்க்காது அவளுக்கு எந்த விதமான தீங்கும் நிகழாது இருக்க வேண்டுமே ஏக்கமும் அவனை விரைவாக செலுத்தின. போகும் தெருவெங்கும் இதற்குள் காற்று கடத்தி வந்த தீப்பொறி போல எங்கும் பேயாட்டம் பரவி கொண்டிந்தது. தீயின் ஜ்வாலை பெருக்கெடுத்து காட்டு நதியாய் பிரவாகித்து ஓடி
      ஊர் எல்லை தாண்டி தோப்போரம் ஒதுங்கியிருந்த கல்லறை அடுத்த தன் குடிசைக்கு வந்தான். உள்ளே அவள்
      இல்லை. மனம் விதிர்விதிர்த்து போனது. குடிசைக்கு பிற்பக்கத்திலுள்ள பரப்பு வெளியில் நின்று என்ன செய்வதென்ற குழப்பத்தில் நின்ற போது நடந்து போகும் ஒரு மலர்க்கூட்டமாய் சற்றுத்தூரத்தில் அந்த குழந்தைகளை பார்த்தான்.
      அவர்கள் அந்த சமவெளியின் மத்தியில் மெதுவாய் போ கொண்டிருந்தார்கள். வெறிபிடித்தவனை போல தன் மகளின் பெயரை கூவியவாறு அவர்களை நோக்கி ஓடினான். அதை கேட்டது தொியவில்லை. சற்று அருகாமையில் போன போது அவன் மகளை அக்கூட்டத்தில் பார்த்தான்.அவள் அவனை திரும்பிப்பார்க்காதது அவனுக்கு கிடைத்த
      ஒவ்வொரு சிறிய முகமும் அதீத ஒளியுடன் ஜ்வலித்தது. அம்முகங்களில் பறவைகளின் சிறகுகளை போன்ற மென்மை இருந்தது. சிறிது நேரம் முன்பு பார்த்த விகார முகங்களுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத அழகு அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது. எல்லா குழந்தைகளின் ஒரேவிதமாக எல்லோரும் அவன் மகளை போலவே இருந்ததாய்
      தரையில் விழுந்த பூக்கும்பலை மெதுவாய் காற்று முன்செலுத்துவதை போல அவர்கள் போய் கொண்டிருந்தார்கள்.
      அவன் பார்த்து கொண்டிருக்கையில் அவர்களுக்கு நீண்ட வண்ணமயமான சிறகுகள் முளைத்தன. வியந்து போய் நின்றான்.மெல்லிய காற்று அச்சிறகுகளுக்கு அடியில் படர்ந்து அவர்களை மேல் தூக்கியது. நீந்துகின்ற மீன்குட்டிகளை போல அவர்கள் வெளியில் படபடக்க நீந்தி
      சற்றுநேரத்தில் மேகக்கூட்டங்களில் அவர்கள் மறைந்து போனார்கள்.

      திண்ணை அக்டோபர் 27 1999
      உறைந்த கணங்கள்
      ராம்ஜி
      விமானத்தில் நுழைந்த அர்ச்சனாவின் கண்களில் முதலில் பட்டது அங்கு இல்லாதது- பயணிகள். அவளையும் சேர்த்து மொத்தம் நாலு பேர். ஏர்ஹோஸ்டஸின் உறைந்த புன்னகையை பெற்றுக்கொண்டு இவ்வளவுதானா என்று கேட்டாள்.
      ஆமாம். ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் எங்கள் மிக முக்கிய விருந்தாளிகள்.
      இடத்தை அடைந்து கைப்பெட்டியை மேலே வைத்துவிட்டு கைப்பையுடன் சீட்டில் அமர்ந்தாள். லேசாக நெற்றியில் வியர்வையை உணர்ந்தவள் பையை திறந்து டிஷ்யூ பேப்பரால் நெற்றியை ஒற்றிக்கொண்டாள். பைக்குள்ளிருந்த செல் போஃன் ஒரு மெஸ்ஸேஜ் உள்ளது என்றது. தன்னறியாமல் அதை எடுக்க போன கையை திசை மாற்றி பையை மூடினாள்.
      கு ஈவினிங் நண்பர்களே. இது காப்டன் பில் ரேமண . இன்னும் சுமார் எட்டு மணி நேரத்தில் உலகெங்கும் புது மில்லெனியத்தில் ஆகாயத்திலுருந்து இறங்கப்போகும் வெகு சில மனிதர்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்காக அங்கே காத்திருப்பவர்களின் லிஸ இதோ. மற்றும் பல ஸ்பீல்பெர்கின் குழு அவரது .... எனும் படத்தின் முதல் காட்சியில் நீங்கள் இருப்பீர்கள்
      அர்ச்சனாவின் உதட்டில் ஒரு புன்னகை பிறந்தது. . காலத்தை பாகம் பிாித்து செயற்கையான ஓர் எல்லையிட்டு சிறையிலிட்டு அந்த சிறையில் இப்பொழுது தானே சிக்கி தொன்னூற்றொம்பதாவது கதவை திறந்தால் தொடர்ச்சியா அல்லது சூன்யமா என்று தெறியாமல் கலங்கும் மனித வர்க்கம். ஜன்னல் வழியே தொலை வானத்தில் கூட்டமாக பறக்கும் பறவைகளை ஏக்கத்துடன் பார்த்தாள்.
      ...... போ ஜானின் தூதுவர் புண்ணிய நீருடன் வரவழைப்பார். ஸ்பீல்பெர்க்கிர்க்கும் போப்பிற்க்கும் இடையிலுள்ள லிஸ்டை அவளது எண்ணங்கள் விழுங்கியிருந்தன.
      ஏர்போர கட்டிடங்கள் மெள்ள பின்னோக்கி நகர ஆரம்பித்து இந்த மில்லெனியத்தின் கடைசி நிலக்காட்சிகளாய் மறைந்தன.

      பெல்டை எடுக்கலாம் என்றவுடனேயே நீக்கிவிட்டு எழுந்தாள்.இன்னும் இருவர் அதே சமயத்தில் எழுந்திருந்தார்கள். ஹாய் ஹாய்........
      கைகளை நீட்டிக்கொண்டே ஒன்று கூடினர்.
      இருப்பது நாலு பேர். ஒருவருக்கொருவர் தொிந்துகொள்ளலாமா நான் பீட்டர். கம்ப்யூட்டர் இஞ்ஜினியர். ஹெர்ண்டன் வர்ஜினியா - இளைஞன். தொழிலுக்கேற்ற அலட்சிய உடை.
      என்ன இன்றைக்கு இங்கே இருக்கிறீர்கள் சும்மா வேடிக்கை. நான் பா நாக்மன் . மோிலாந்து யூனிவெர்ஸிடியில் ப்ரொபஸர். - நீள மூக்கின் நுனியில் ஓர் இளக்கார அகம்பாவம்.
      அர்ச்சனா ராய். சைக்காலஜிஸ . லாஸ் ஏன்ஜலஸ்.
      ஒரு இந்திய பெண்ணாய் இருப்பதற்கு நீங்கள் தைாியசாலி. இன்றைக்கு பயணம் செய்கிறீர்களே - மூக்கு.
      என் யூனிவர்சிடியிலும் உங்களை போல் ப்ரொபஸர்கள் உண்டு. தங்கள் துறையை தவிர வேறெதுவும் தொியாது.
      கம்ப்யூட்டர் இளைஞன் பக்கென்று சிாித்து விட்டான். மூக்கு சுருங்கியது.
      வேடிக்கையா
      உங்கள் கேள்வி வேடிக்கையானால் இதுவும் வேடிக்கைதான்
      அப்படியானால் வேடிக்கையாக இன்னொரு கேள்வி. உங்கள் புராணத்து சீதா கணவன் ஆணைப்படி தீக்குளித்தாளாமே நீங்கள் சீதாவாக இருந்தால் என்ன செய்வீர்கள்
      முதலில் என் மைத்துனன் லக்ஷ்மணனிடம் உன் மூக்கை உடைக்க சொல்லுவேன் பதிலளிக்காமல் புன்முறுவலுடன் அவனை தாண்டி சென்றாள். கம்ப்யூட்டர் த கய் இஸ் ட்ரங என்று முணுமுணுத்தது காதில் விழுந்தது. வழியில் நான்காவது பயணியை பார்த்தாள். வயதானவன் - வர். நல்ல வயது. தலை முடி எங்கே முடிகிறது தாடி ஆரம்பிக்கிறது தொியவில்லை. கண்கள் மட்டும் தான் முழுதும் தொிகிறது. ஒரு பக்கம் சாய்ந்து .... தூக்கம். அடுத்த
      திரும்பி இடத்தை நோக்கி போகும்போது எதிரே புன்னகையுடன் ட்ரே நிறைய ட்ாின்க்ஸுடன் ஏர்ஹோஸ்டஸ்.
      என்ன குடிக்கிறீர்கள்
      க்ள சோடா
      இடத்தில் அமர்ந்து புத்தகம் படிக்கலாம் என்று பையை திறந்தாள். ஆக்டாவியோ பாஸின் கவிதை தொகுப்பு.
      ஏர்போர்டிர்க்கு வந்த டாக்ஸியின் டிரைவர் கார்லோஸை நினைத்து கொண்டாள். விசித்திரமானவன். கணத்திற்கு கணம் வாழ்கிறேன் என்கிறான். ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ஆத்மா சாந்தி அடையும். இப்பொழுது அந்த கார்லோஸ் எங்கே என்ன செய்கிறானோ அடுத்த மில்லெனியத்தை பற்றி நினைப்பானா
      பக்க அடையாளமாக வைத்திருந்த லெட்டரை எடுத்து பிாித்தாள். அம்மாவிடமிருந்து. கடிதத்தில் அம்மாவின் பிறந்த மண்ணின் தமிழும் புகுந்த பெங்காலியும் ஒன்றா குழைந்து அன்பை சொாிந்தன. தேன்குழலையும் ரசகுல்லாவையும் மாற்றி மாற்றி தின்ன நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த கணமே உன்னை பார்க்கவேண்டும் போலிருக்கிறது. பார்ப்பதற்குள் ஒரு யுகம் ஆகிவிடும் - டிஜிட்டல் கணக்கில் அடுத்த யுகத்தில் தான் பார்ப்போம் அம்மா. அப்பா இப்பொழுது என்ன செய்துகொண்டிருப்பார் அவர் கொஞ்சம் சுக பேர்வழி. வாழ்க்கையில் நிலத்தை விட ஆகாயத்தை அதிகம் பார்த்திருக்கிறார்-படுத்தவாறு. எப்பொழுதும் அர்ச்சனாவை தேவி என்றுதான் அழைப்பார். சட்டென்று என்று காதில் ஒலித்து உடல் சிலிர்த்தாள். அது மறைந்த பழைய கணங்களின் பின்னொலியா அல்லது எதிர்பார்க்கும் இன்னும் வராத கணத்தின் முன்னொலியா டாக்ஸி டிரைவர் கார்லோஸின் வார்த்தைகள் ஒலித்தன. சென்ற கணங்களை சுமப்பது பிணத்தை போல். வெறும் அர்த்தமில்லாத கனம். எதிர்பார்ப்பது பிறக்காத குழந்தைகளை வளர்ப்பது பிறக்காவிட்டால் துன்பம். பிறந்தால் தொடர்ந்து எதிர்பார்ப்புகள். அறிவுக்கு புாிகிறது. இதயம் முரண்டு பிடிக்கிறது.
      கவிதைகளின் தாலாட்டில் உடலும் உள்ளமும் கனமிழக்க உறங்கிப்போனாள் அர்ச்சனா.
      அம்மாவின் நெய் தோசையை விள்ளி மிள்காய்ப்பொடியில் தேய்த்து நாக்கில் வைப்பதற்கு முன்பே எச்சில் ஊற கண்விழித்து கனவென்ற உணர்வு வந்த பின்னும் நாவில் அந்த ருசியின் நினைவால் தொடர்ந்து ஊறல். புத்தகம் தரையில் விழுந்து கிடந்தது. அதை எடுத்து எதிாில் இருந்த பையில் சொருகிவிட்டு உடம்பை முறித்தவாறு பா ரூம் போக எழுந்தாள். மூக்கும் கம்ப்யூட்டரும் இடம் மாற்றி ஒரு மூன்று சீ ரோவில் நடுவில் காலியாக விட்டு ஒருவரை ஒருவர் ஒருக்களித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். அவள் அவர்களை நெருங்கும்போது கம்ப்யூட்டர் என்ன பெயர் ஹா பீட்டர் ஹல்லோ நன்றாக தூங்கினீர்களா என்று கேட்டான். ஹாய் பீட்டர். ஓ எஸ். நல்ல தூக்கம் என்றாள். அவர்கள் இருவருக்கும் இடையில் காலி சீட்டில் செஸ் போர்ட். மூக்கு பா சீதா வாய் குழறினான். இதென்ன ஸின்ட்ரோம் எதோ ஓர் அனுபவத்தின் எதிரொலி என்றது அவளது சைக்காலஜி அறிவு ப்ளஸ் அனுபவம். காப்டனின் அறிவிப்பை கேட்டார்களா தன் கடிகாரத்தை உங்கள் நேரத்தை சாியாக ப்தினொன்று முப்பத்தெட்டுக்கு மாற்றுங்கள்.
      உங்களுக்கு பயமாக இல்லை - பாப். கையிலிருந்த க்ளாஸில் ஐஸ் கட்டிகளின் மோதல் சத்தம்- கை நடுக்கத்தால். அர்ச்சனாவிற்கு திடாரென்று அவன் மேல் ஒரு பச்சாதாபம். ஆதரவுடன் தோளில் வைத்தவாறு என்னை விடுங்கள். உங்கள் மனைவி எப்படி தனியே விட்டு வந்திருக்கிறீர்களே என்றாள். க்ளாஸ் நழுவி விழுந்து உருண்டோடியது.
      தாடியின் ஸீ காலியாக இருந்தது. எதிரே பாத்ரூம் கதவு திறந்து தாடி வெளியே வந்தது. எந்த நாடு ஊர் என்று கணிக்க முடியாதபடியான முகம். முகம் தொிந்தால்தானே
      கையை நீட்டியவாறு நான் அர்ச்சனா. உங்களை இன்னும் தொிந்து கொள்ளவில்லை. தூங்கி கொண்டிருந்தீர்கள். என்றாள்.
      தாடி பேசாமல் வழியை மறைத்துக்கொண்டு நின்றது.
      உங்கள் பெயர்
      காலம்.
      ஏதடா இது மூன்றில் இரண்டு கேஸா
      இன்னும் இருபது நிமிடங்கள். நான் முடி போகிறேன். முடிந்தால் எல்லாமே
      அர்ச்சனாவின் உள்ளத்தில் மறுபடியும் பச்சாதாபம். தொழில் தந்த யுக்தி ஒன்றை கருணையுடன் கலந்து கையாண்டாள். ரொம்ப சீாியஸாக உங்களுக்கு ஆதியும் அந்தமும் கிடையாதே என்றாள்.
      நான் தூங்கிவிட்டால் நீங்களெல்லாம் தூங்கினாலும் நீங்கள் கணித்து வைத்திருக்கும் நேரப்படி கடிகாரம் உங்களை எழுப்பும். நானே
      அறிவுாீதியாக செயல் பட்ட அர்ச்சனாவுக்கே அவள் அறியாமல் உடம்பு புல்லாித்தது. இவருக்கு மனக்கோளாறு போல்தான் தோன்றுகிறது.... ஆனாலும்...... அறிவு லாஜி நம்பிக்கைகள் ஐயங்கள் அவநம்பிக்கைகள் சயன்ஸ் பிலாசபி எல்லாவற்றையும் கடந்த எதோ ஒன்றின் ஆக்கிரமிப்பை அந்த கணத்தில் உணர்ந்தாள். அவளுக்குள் தொிந்ததற்கும் தொியாததிற்கும் இடையே ஒரு போர்.
      பாத்ரூமிலிருந்து திரும்பி தன் ஸீட்டுக்கு செல்லும் வழியில் தாடியை திரும்பி பார்த்தாள். தாடி இன்னும் பதினைந்து நிமிடங்கள் என்று ஒரு உரத்த அமானுஷ்யமான குரலில் அறிவித்தது. பாபும் பீட்டரும் பார்த்தார்கள். பா முகத்தில் பரபரப்பின் அடையாளம். அர்ச்சனாவை பார்த்ததும் இடத்தை விட்டு எழுந்து அவள் பின்னாலேயே ஸீ வரை தள்ளாடிக்கொண்டே
      ஸீதா. உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும். அவள் உட்கார்ந்து பக்க ஸீட்டை காட்டினாள். தடாலென்று அமர்ந்த பா கையை பிடித்துக்கொண்டு ஸீதா... உங்கள் கணவருக்காக வேண்டி வந்தால் புனிதத்தை நிரூபிக்க தயாராக
      முதலில் நான் சீதா இல்லை. இரண்டாவது உங்கள் கஷ்டத்தில் சம்பந்தம் அற்றவள். .
      உண்மை. என் மனைவி......லாரா... . கட வென்று கொட்டிவிட்டான். ஆணாதிக்க நோக்குள்ளவன். மனைவியை தன் உடைமை போல் நேசித்தவன். அந்த உடைமையில் பங்கு இருக்கிறதோ என்ற சந்தேகம். இவன் துறை புராண காவியங்களில் ஆராய்ச்சி. மனைவியிடம் உன் புனிதத்தை நிரூபி அல்லது வெளியே நட என்று கூற அவள் வெளியேற காவி தலைவன் ஸீதா சின்ட்ரோமில் சிக்கி வெறுமையை தாங்க முடியாமல்
      அந்த வெறுமையிலிருந்து தப்ப வந்து .... இப்போது நிரந்தர வெறுமைக்குள் போகிறேனோ ....... தாடி மனிதன்
      பயங்கர வாய்க்குழறல். நடுக்கம். குடியை விட பயத்தின் ஆக்கிரமிப்பு.
      என் துறையில் இந்த மாதிாி மனநிலை கண்டிருக்கிறேன். தான் ஜீஸஸ் பெர்னாட்ஷா என்று நம்புவார்கள். அதற்கு உகந்த சூழ்நிலை வந்தால் உக்கிரம் அதீகாிக்கும். என்னிடம் ஒரு மிக வயதானவர் வருகிறார். இது எந்த வருடம் கேட்டால் மிலியன் பி.சி. என்பார். உணமையிலேயே
      அம்மாவிடம் தன் குறையை கூறிவிட்டு பொம்மையிடம் திரும்பும் குழந்தைபோல் பா க்ளாஸுடன் உறவாட ஆரம்பித்தான்.
      யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் உங்கள் காப்டன் பில். இன்னும் பன்னிரண்டு நிமிடங்களில் அடுத்த மில்லெனியத்தை அடைகிறோம். ஹோஸ்டஸ் ஷர்லீ ஷாம்பெயின் கொண்டு வருவாள்.
      திடாரென்று தாடியின் குரல். விஞ்ஞானத்தின் அகங்காரம் அடங்க போகிறது பாருங்கள்
      அர்ச்சனாவின் மனதில் அவள் பார்த்த சத்யஜி ரேயின் ஒரு படம் வேகமாக ஒடியது. பெண்ணை சிறு வயதிலிருந்தே ஊர் மக்கள் எல்லொரும் காளியின் அவதாரமென்று நம்பி அந்த சூழ்நிலையில் வளரும் தான் காளி என்று நம்ப ஆரம்பிக்கிறாள். பூஜையன்று எல்லோரும் பொம்மையை கடைசியில் கிணத்தில் எறியும் போது
      ஹோஸ்டஸ் ஷர்லீ ட்ரேயில் ஷாம்பெயினுடன் வந்தாள். அர்ச்சனாவிடமும் பாபிடமிடும் ஒவ்வொரு க்ளாஸை கொடுக்கும் போது பீட்டரும் அங்கே வந்து நானும் இங்கே உட்காரலாமா என்று கேட்டான்.
      ப்ளீஸ் என்றாள் அர்ச்சனா. பீட்டர் பாபிற்கு அடுத்த ஸ ட்டில் உட்கார்ந்து ஒரு க்ளாஸை வாங்கி தனக்கு எதிரே வைத்து கொண்டான்.
      பின்னாலிருந்து ஷர்லியின் குரல் கேட்டது.
      ஸர் ஷாம்பெய்ன்
      ஷாம்பெய்னா எனக்கா - கட என்று சிாித்தது தாடி. இன்னும் பத்து நிமிடங்கள் மறுபடி
      பா கைகளால் முகத்தை மூடியவாறு ஓ லாரா என்று முனகினான். அர்ச்சனா அவன் தோளை ஆதரவாக தட்டி கொடுத்தாள். திடாரென்று பீட்டரை நோக்கி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இந்த 2 பற்றி
      அதீதமான பதட்டங்கள். பயங்கள். என்றான் பீட்டர் தன் தோள்களை அலட்சிய பாவத்துடன் உலுக்கியவாறு.
      உங்களூக்கு துளியேனும் கவலை இல்லையா - பாப்.
      என் நினைவெல்லாம் கல்யாணத்தை பற்றிதான். ஒரு வாரத்தில் ஊர் திரும்பிகிறேன். அதற்கு அடுத்த வாரம் கல்யாணம். அவள் பெயர் ஸபிதா ஸன்யால். ஆமாம்.
      கங்கிராட்ஸ் அர்ச்சனாவும் பாபும் கை நீட்டினர்.
      அர்ச்சனாவின் மனம் அக்கணத்திலிருந்து கழன்று பின்னோக்கி சென்றது. ராபர்ட்.அவளுடன் இந்நேரம் இந்தியாவிற்கு பயணம் செய்திருக்க வேண்டும். கடைசி நிமிடத்தில் மற்றொருத்தி பெயரை சொல்லி கொண்டு பிறகு மறுபடியும் அர்ச்சனாவை செல் போனில் கூப்பிட்டு அவளிடம் சரணடய அர்ச்சனா அவனிடம் எல்லாவற்றையும் மறந்து விட்டு வாழ்க்கையை தொடரு என்று கூறியிருந்தாள். இவ்வளவும் நடந்தது அவள் ஏர்போர வரும் வழியில். டாக்சியில். போன் மூலம். இயந்திர உலகில் எல்லாமே வேகமாக நடந்து மறைகின்றன. ஆனால் நினைவுகள் மறைய மட்டும்
      ஐந்து நிமிடங்கள் - மறுபடியும் தாடி. அந்த குரலை கேட்டதும் அர்ச்சனாவின் உடலில் அதே இனம் புாியாத சிலிர்ப்பு. தொிந்தவைக்கு அப்பால்
      விமானத்திற்குள் திடாரென்று கனமான நிசப்தம். நேரம் ஊர்ந்தது.
      நான்கு நிமிடங்கள்.
      மூன்று.
      இரண்டு.
      யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ். காப்டன் பில். இன்னும் ஒரு நிமிடம். இருபத்தி ஐந்து நொடிகள் இருக்கும் போது எண்ண ஆரம்பிக்கிறேன். கையில் ஷாம்பெய்ன் வைத்திருங்கள்.
      பா நெற்றியில் வியர்வை. பீட்டர் கூட மெளனமாக இருந்தான். அவனும் அறிவைத்தாண்டிய சூன்யத்தை உணர்ந்து விட்டனோ
      காப்டனின் குரல் ஒலித்தது.
      இருபத்து ஐந்து .....
      மூவரும் கையில் ஷாம்பெய்ன் க்ளாஸை எடுத்து கொண்டனர்.
      இருபது.......
      நினைவுகள் சுமந்த இறந்த கணங்களும் எதிர்பார்ப்புகள் உருவாக்கிய பிறக்காத உறைய ஆரம்பித்தன. மூவரது உணர்விலிருந்தும் ராபர்ட்டும் கார்லோஸும் லாராவும் சபிதாவும் மறைந்தனர்.
      பதினான்கு........
      சீதா சின்ட்ரோம் மறைந்தது. இன்னும் ருசிக்காத நெய் தோசை மணக்க வில்லை. அப்பாவின் தேவி என்ற அழைப்பு காதில் விழவில்லை. அவையெல்லாம் அர்த்தமிழந்து விட்டனவா
      ஒன்பது.......
      நான்கு...
      மூன்று....
      இரண்டு......
      திடாரென்று நிசப்தம். ஒன்று வரவில்லை என்பதை உணர மூவருக்கும் சில வினாடிகள் ஆயின.
      என்ன ஆயிற்று என்று பதட்டத்துடன் பா தள்ளாடிய படி விமானத்தின் முன் பக்கம் ஒடி கதவை திறக்க போனான். முடியவில்லை. ஓங்கி தட்டினான். பதிலில்லை. திரும்பி இவர்களை பார்த்து இது
      எல்லாம் அந்த கிழவனால் தான். அவனை கொல்கிறேன் என்று ஓடினான்.
      அர்ச்சனாவும் பீட்டரும் அவனை குறுக்கே நின்று தடுக்க பார்த்தனர். இருவரையும் மூர்க்கமாக தள்ளிவிட்டு ஓடினான் பாப். இருவரும் சமாளித்து கொண்டு பின்னால் ஒடினர். பீட்டர் பாபை பிடித்து நிறுத்த அர்ச்சனா அவர்களை கடந்து அந்த கிழவாிடம் சென்று ஸர் என்று அழைத்தாள். பதிலில்லை. கண் மூடி மோன நிலையில் இருந்தார். தோளை லேசா குலுக்கினாள். உடல் ஒரு பக்கமாக சாிந்தது. பாிசோதனை செய்துவிட்டு ஓ கா இறந்து விட்டார் என்றாள்.
      மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு சிலை போல் நின்றனர்.
      இங்கே இப்பொது நிகழும் கணங்கள் மட்டும் தான் உண்மையா இது கணங்களின் தொடரா அல்லது ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒரே ஒரு கணமா இதற்குள் அந்த உறைந்த கணங்களெல்லாம் ஒடுங்கிவிட்டனவா எதை நோக்கி செல்கிறது
      மூவரும் உணர்வு நினைவு எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் கடந்த ஒரு நிலையில் இருந்தனர்.
      யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் காப்டன் பில்.....

      31 1999
      1999 3