------------------------------------------------------------------------

      -8
      பட்டினப்பாலை
      ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்
      ------------------------------------------------------------------------
      ------------------------------------------------------------------------
      ...

      . ...

      .
      .
      . ...

      .
      ...

      - .
      .
      .

      .
      2000 ...

      2000 .
      -8
      4.6 5
      -8 - .
      .

      © 1999-2000


      .
      ..

      .
      ------------------------------------------------------------------------


      சங்க கால நூல்களான பத்து பாட்டுக்களில் ஒன்பதாவதான
      பட்டினப்பாலை
      -----------------------
      பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்
      பாடப்பட்டவன் திருமாவளவன் கரிகாற் பெருவளத்தான்
      திணை பாலை
      துறை செலவழுங்குதல்
      மொத்த அடிகள் 301
      -----------------------
      வசையில்புகழ் வயங்குவெண்மீன்
      திசைதிரிந்து தெற்கேகினும்
      தற்பாடிய தளியுணவிற்
      புட்டே புயன்மாறி
      வான்பொய்ப்பினும் தான்பொய்யா
      மலைத்தலைய கடற்காவிரி
      புனல்பரந்து பொன்கொழிக்கும்
      விளைவறா வியன்கழனி
      கார்க்கரும்பின் கமழாலை
      தீத்தெறுவிற் கவின்வாடி .. .10
      நீர்ச்செறுவி னீணெய்தற்
      பூச்சாம்பும் புலத்தாங்க
      காய்ச்செந்நெற் கதிரருந்து
      மோட்டெருமை முழுக்குழவி
      கூட்டுநிழல் துயில்வதியும்
      கோட்டெங்கிற் குலைவாழை
      காய்க்கமுகிற் கமழ்மஞ்சள்
      இனமாவின் இணர்ப்பெண்ணை
      முதற்சேம்பின் முளையிஞ்சி
      அனகர் வியன்முற்றத்து ... 20
      சுடர்நுதல் மடநோக்கின்
      நேரிழை மகளிர் உணங்குணா கவரும்
      கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
      பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்
      முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்
      விலங்குபகை யல்லது கலங்குபகை யறியா
      கொழும்பல்குடி செழும்பாக்கத்து
      குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
      வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
      நெல்லொடு வந்த வல்லா ப·றி ... 30
      பணைநிலை புரவியின் அணைமுதற் பிணிக்கும்
      கழிசூழ் படப்பை கலியாணர
      பொழிற் புறவிற் பூந்தண்டலை
      மழைநீங்கிய மாவிசும்பின்
      மதிசேர்ந்த மகவெண்மீன்
      உருகெழுதிறல் உயர்கோட்டத்து
      முருகமர்பூ முரண்கிடக்கை
      வரியணிசுடர் வான்பொய்கை
      இருகா திணையேரி
      புலிப்பொறி போர்க்கதவின் ... 40
      திருத்துஞ்சு திண்காப்பிற்
      புகழ்நிலைஇய மொழிவளர
      அறநிலைஇய அகனட்டிற்
      சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
      யாறுபோல பரந்தொழுகி
      ஏறுபொர சேறாகி
      தேரொட துகள் கெழுமி
      நீறாடிய களிறுபோல
      வேறுபட்ட வினையோவத்து
      வெண்கோயில் மாசூட்டு ... 50
      தண்கேணி தகைமுற்றத்து
      பகட்டெருத்தின் பலசாலை
      தவப்பள்ளி தாழ்காவின்
      அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும்
      ஆவுதி நறும்புகை முனைஇ குயில்தம்
      மாயிரும் பெடையோ டிரியல் போகி
      பூதங் காக்கும் புகலருங் கடிநகர
      தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும்
      முதுமரத்த முரண்களரி
      வரிமணல் அகந்திட்டை ... 60
      இருங்கிளை யினனொக்கற்
      கருந்தொழிற் கலிமாக்கள்
      கடலிறவின் சூடுதின்றும்
      வயலாமை புழுக்குண்டும்
      வறளடும்பின் மலர்மலைந்தும்
      புனலாம்பற் பூச்சூடியும்
      நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும்
      நாண்மீன் விராய கோண்மீன் போல
      மலர்தலை மன்றத்து பலருடன் குழீஇ
      கையினுங் கலத்தினு மெய்யுற தீண்டி ... 70
      பெருங்சினத்தாற் புறக்கொடாஅது
      இருஞ்செருவின் இகல்மொய்ம்பினோர்
      கல்லெறியும் கவண்வெரீஇ
      புள்ளிரியும் புகர்ப்போந்தை
      பறழ்ப்பன்றி பல்கோழி
      உறைக்கிணற்று புறச்சேரி
      மேழக தகரொடு சிவல்விளை யாட
      கிடுகுநிரை தெ·கூன்றி
      நடுகல்லின் அரண்போல
      நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய ... 80
      குறுங்கூரை குடிநாப்பண்
      நிலவடைந்த இருள்போல
      வலையுணங்கு மணல்முன்றில்
      வீழ்த்தாழை தாட்டழ்ந்த
      வெண்கூ தாளத்து தண்பூங் கோதையர்
      சினைச்சுறவின் கோடுநட்டு
      மனைச்சேர்த்திய வல்லணங்கினால்
      மடற்றாழை மலர்மலைந்தும்
      பிணர்ப்பெண்ணை பிழிமாந்தியும்
      புன்றலை இரும்பரதவர் ... 90
      பைந்தழைமா மகளிரொடு
      பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாது
      உவவுமடி துண்டாடியும்
      புலவுமணற் பூங்கானல்
      மாமலை யணைந்த கொண்மூ போலவும்
      தாய்முலை தழுவிய குழவி போலவும்
      தேறுநீர புணரியோ டியாறுதலை மணக்கும்
      மலியோ தொலிகூடல்
      தீதுநீங கடலாடியும்
      மாசுபோக புனல்படிந்தும் ... 100
      அலவ னாட்டியும் உரவுத்திரை உழக்கியும்
      பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும்
      அகலா காதலொடு பகல்விளை யாடி
      பெறற்கரு தொல்சீர துறக்க மேய்க்கும்
      பொய்யா மரபிற் பூமலி பெருந்துறை
      துணைப்புணர்ந்த மடமங்கையர்
      பட்டுநீக்கி துகிலுடுத்தும்
      மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும்
      மைந்தர்கண்ணி மகளிர் சூடவும்
      மகளிர்கோதை மைந்தர் மலையவும் ... 110
      நெடுங்கால் மாட தொள்ளெரி நோக்கி
      கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுடர் எண்ணவும்
      பாட லோர்த்தும் நாடக நயந்தும்
      வெண்ணிலவின் பயன்றுய்த்தும்
      கண்ணடைஇய கடைக்கங்குலான்
      மாஅகாவிரி மணங்கூட்டும்
      தூஉவெக்கர துயில் மடிந்து
      வாலிணர் மடற்றாழை
      வேலாழி வியந்தெருவின்
      நல்லிறைவன் பொருள்காக்கும் ... 120
      தொல்லிசை தொழில்மாக்கள்
      காய்சினத்த கதிர்ச்செல்வன்
      தேர்பூண்ட மாஅபோல
      வைகல்தொறும் அசைவின்றி
      உல்குசெ குறைபடாது
      வான்முகந்தநீர் மலைப்பொழியவும்
      மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும்
      மாரிபெய்யும் பருவம்போல
      நீரினின்று நிலத்தேற்றவும்
      நிலத்தின்று நீர்ப்பரப்பவும் ... 130
      அளந்தறியா பலபண்டம்
      வரம்பறியாமை வந்தீண்டி
      அருங்கடி பெருங்காப்பின்
      வலியுடை வல்லணங்கினோன்
      புலிபொறித்து புறம்போக்கி
      மதிநிறைந்த மலிபண்டம்
      பொதிமூடை போரேறி
      மழையாடு சிமைய மால்வரை கவாஅன்
      வரையாடு வருடை தோற்றம் போல
      கூருகிர் ஞமலி கொடுந்தா ளேற்றை ... 140
      ஏழக தகரோ டுகளு முன்றிற்
      குறுந்தொடை நெடும்படிக்காற்
      கொடுந்திண்ணை ப·றகைப்பிற்
      புழைவாயிற் போகிடைகழி
      மழைதோயும் உயர்மாடத்து
      சேவடி செறிகுறங்கிற்
      பாசிழை பகட்டல்குல்
      தூசிடை துகிர்மேனி
      மயிலியல் மானோக்கிற்
      கிளிமழலை மென்சாயலோர் ... 150
      வளிநுழையும் வாய்பொருந்தி
      ஓங்குவரை மருங்கின் நுண்தா துறைக்கும்
      காந்தள துடுப்பிற் கவிகுலை யன்ன
      செறிதொடி முன்கை கூப்பி செவ்வேள்
      வெறியாடு மகளிரொடு செறி தாஅ
      குழலகவ யாழ்முரல
      முழவதிர முரசியம்ப
      விழவறா வியலாவணத்து
      மையறு சிறப்பின் தெய்வஞ் சேர்த்திய
      மலரணி வாயிற் பலர்தொழ கொடியும் ... 160
      வருபுனல் தந்த வெண்மணற் கான்யாற்று
      உருறுகெழு கரும்பின் ஓண்பூ போல
      கூழுடை கொழுமஞ்சிகை
      தாழுடை தண்பணியத்து
      வாலரிசி பலிசிதறி
      பாகுகுத்த பசுமெழுக்கிற்
      காழூன்றிய கவிகிடுகின்
      மேலூன்றிய துகிற்கொடியும்
      பல்கேள்வி துறைபோகிய
      தொல்லாணை நல்லாசிரியர் ... 170
      உறழ்குறி தெடுத்த உருகெழு கொடியும்
      வெளிலிளக்குங் களிறுபோல
      தீம்புகார திரைமுன்றுறை
      தூங்குநாவாய் துவன்றிருக்கை
      மிசைச்கூம்பி னசைச்கொடியும்
      மீந்தடிந்து விடக்கறுத்து
      ஊன்பொரிக்கும் ஒலிமுன்றில்
      மணற்குவைஇ மலர்சிதறி
      பலர்புகுமனை பலிப்புதவின்
      நறவுநொடை கொடியோடு ... 180.
      பிறபிறவு நனிவிரைஇ
      பல்வே றுருவிற் பதாகை நீழல்
      செல்கதிர் நுழையா செழுநகர் வரைப்பிற்
      செல்லா நல்லிசை யுமரர் காப்பின்
      நீரின் வந்த நிமிர்பரி புரவியும்
      காலின் வந்த கருங்கறி மூடையும்
      வடமலை பிறந்த மணியும் பொன்னும்
      குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
      தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்
      கங்கை வாரியும் காவிரி பயுனும் .... 190
      ஈழ துணவும் காழக தாக்கமும்
      அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
      வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்
      நீர்நா பண்ணு நிலத்தின் மேலும்
      ஏமாப்ப இனிதுதுஞ்சி
      கிளை கலித்து பகைபேணாது
      வலைஞர்முன்றில் மீன்பிறழவும்
      விலைஞர்குரம்பை மாவீண்டவும்
      கொலைகடிந்தும் களவுநீக்கியும்
      அமரர பேணியும் ஆவுதி அருத்தியும் .... 200
      நல்லனெடு பகடோம்பியும்
      நான்மறையோர் புகழ்பரப்பியும்
      பண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும்
      புண்ணிய முட்டா தண்ணிழல் வாழ்க்கை
      கொடுமேழி நசையுழவர்
      நெடுநுகத்து பகல்போல
      நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
      வடுவஞ்சி வாய்மொழிந்து
      தமவும் பிறவு மொப்ப நாடி
      கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது ...210
      பல்பண்டம் பகர்ந்துவீசும்
      தொல்கொண்டி துவன்றிருக்கை
      பல்லாயமொடு பதிபழகி
      வேறுவே றுயர்ந்த முதுவா யக்கற்
      சாறயர் மூதூர் சென்றுதொ காங்கு
      மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்து
      புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
      முட்டா சிறப்பிற் பட்டினம் பெறினும்
      வாரிருங் கூந்தல் வயங்கிழை யழிய
      வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர ... 220
      கொடுவரி குருளை கூட்டுள் வளர்ந்தாந்கும்
      பிறர் பிணியக திருந்து பீடுகாழ் முற்றி
      அருங்கரை கவி குத்தி குழிகொன்று
      பெருங்கை யானை பிடிபு காங்கு
      நுண்ணிதின் உணர நாடி நண்ணார்
      செறிவுடை திண்கா பேறிவாள் கழித்து
      உருகெழு தாயம் ஊழினெய்தி
      பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்
      கடியரண் தொலைத்த கதவுகொல் மருப்பின்
      முடியுடை கருந்தலை புரட்டு முன்றாள் ... 230
      உகிருடை யடிய ஓங்கெழில் யானை
      வடிமணி புரவியடு வயவர் வீழ
      பெருநல் வானத்து பருந்துலாய் நடப்ப
      தூறிவர் துறுகற் போல போர்வேட்டு
      வேறுபல் பூளைய டுழிஞை சூடி
      பேய்க்கண் அன்ன பிளிறுகடி முரசம்
      மாக்கண் அகலறை அதிர்வன முழங்க
      முனைகெட சென்று முன்சம முருக்கி
      தலைதவ சென்று தண்பணை எடுப்பி
      வெண்பூ கரும்பொடு செந்நெல் நீடி ... 240
      மாவிதழ குவளையடு நெய்தலும் மயங்கி
      கராஅங் கலித்த கண்ணகன் பொய்கை
      கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடி
      செறுவும் வாவிய மயங்கி நீரற்று
      அறுகோ டிரலையடு மான்பிணை உகளவும்
      கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
      அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
      மலரணி மெழுக்க மேறி பலர்தொழ
      வம்பலர் சேக்கும் கந்துடை பொதியிற்
      பருநிலை நெடுந்தூண் ஒல்க தீண்டி ... 250
      பெருநல் யானையடு பிடிபுணர துறையவும்
      அருவிலை நறும்பூ தூஉ தெருவின்
      முதுவா கோடியர் முழவொடு புணர்ந்த
      திரிபுரி நரம்பின் தீந்தொடை யோர்க்கும்
      பெருவிழா கழிந்த பேஎமுதிர் மன்றத்து
      சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி
      அழல்வா யோரி அஞ்சுவர கதிர்ப்பவும்
      அழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவும்
      கணங்கொள் கூளியடு கதுப்பிகு தசைஇ
      பிணந்தின் யாக்கை பேய்மகள் துவன்றவும் ... 260
      கொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி
      விருந்துண் டானா பெருஞ்சோற் றட்டில்
      ஒண்சுவர் நல்லில் உயர்திணை யிருந்து
      பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர
      தொடுதோ லடியரி துடிபட குழீஇ
      கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட
      உணவில் வறுங்கூ டுள்ளக திருந்து
      வளைவா கூகை நன்பகற் குழறவும்
      அருங்கடி வரைப்பின் ஊர்கவி னழி
      பெரும்பாழ் செய்தும் அமையான் மருங்கற ... 270
      மலையகழ குவனே கடல்தூர
      வான்வீழ குவனே வளிமாற் றுவனென
      தன்முன்னிய துறைபோகலிற்
      பல்லொளியர் பணிபொடுங்க
      தொல்லரு வாளர் தொழில் கேட்ப
      வடவர் வாட குடவர் கூம்ப
      தென்னவன் திறல்கெட சீறி மன்னர்
      மன்னெயில் கதுவும் மதனுடை நோன்றாள்
      மாத்தனை மறமொய்ம்பிற்
      செங்கண்ணாற் செயிர்த்துநோக்கி ... 280
      புன்பொதுவர் வழிபொன்ற
      இருங்கோவேள் மருங்குசா
      காடுகொன்று நாடாக்கி
      குளந்தொட்டு வளம்பெருக்கி
      பிறங்குநிலை மாட துறந்தை போக்கி
      கோயிலொடு குடிநிறீஇ
      வாயிலொடு புழையமைத்து
      ஞாயிறொறும் புதைநிறீஇ
      பொருவேமென பெயர்கொடுத்து
      ஒருவேனெ புறக்கொடாது ... 290
      திருநிலைஇய பெருமன் னெயில்
      மின்னொளியெறிப்ப தம்மொளி மழுங்கி
      விசிபிணி முழவின் வேந்தர் சூடிய
      பசுமணி பொருத பரேரெறுழ கழற்காற்
      பொற்றொடி புதல்வர் ஒடி யாடவும்
      முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவும்
      செஞ்சாந்து சிதைந்த மார்பின் ஒண்பூண்
      அரிமா அன்ன அணங்குடை துப்பின்
      திருமா வளவன் தெவ்வர கோக்கிய
      வேலினும் வெய்ய கானமவன்
      கோலினு தண்ணிய தடமென் தோளே. ... 301
      --------------------
      பட்டினப்பாலை முற்றிற்று
      ------------------
      ------------------------------------------------------------------------
      22 2000