சயங்கொண்டார் இயற்றிய
      கலிங்கத்து பரணி
      . ..
      - . ..
      .
      -43 0578 5

      .

      .
      2000 ...

      2000 .
      -8
      6 5
      -8 - .
      .
      .
      © 1999 - 2003



      .

      ..

      .
      சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்து பரணி

      உள்ளுறை
      1. கடவுள் வாழ்த்து 20 1 -
      2. கடை திறப்பு 54 21 - 74
      3.காடு பாடியது22 75 - 96
      4. கோயில் பாடியது 24 97 - 120
      5. தேவியை பாடியது 13 121 - 133
      6. பேய்களை பாடியது 19 134 - 152
      7 இந்திர சாலம் 25 153 - 177
      8. இராச பாரம்பரியம் 34 178 - 211
      9. பேய் முறைப்பாடு 20 212 - 231
      10. அவதாரம்80 232 - 311
      11. காளிக்கு கூளி கூறியது 92 312 - 403
      12. போர் பாடியது 68 404 - 471
      13. களம் பாடியது 125 472 - 596
      சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்து பரணி
      1. கடவுள் வாழ்த்து
      உமாபதி துதி
      1.
      புயல்வண்ணன் புனல்வார்க்க பூமிசையோன்
      தொழில்காட்ட புவன வாழ்க்கை
      செயல்வண்ண நிலைநிறுத்த மலைமகளை
      புணர்ந்தவனை சிந்தை செய்வாம். 1
      2.
      அருமறையி னெறிகாட்ட வயன்பயந்த
      நிலமகளை யண்டங் காக்கும்
      உரிமையினிற் கைப்பிடித்த வுபயகுலோ
      தமனபயன் வாழ்க வென்றே. 2
      திருமால் துதி
      3.
      ஒருவயிற்றிற் பிறவாது பிறந்தருளி யுலகொடுக்கு
      திருவயிற்றிற் றொருகுழவி திருநாமம் பரவுதுமே. 3
      4.
      அந்நெடுமா லுதரம்போ லருளபயன் றனிக்கவிகை
      இந்நெடுமா நிலமனைத்தும் பொதிந்தினிது வாழ்கவென்றே. 4
      நான்முகன் துதி
      5.
      உகநான்கும் பொருணான்கு முபநிடத மொருநான்கு
      முகநான்கும் படைத்துடைய முதல்வனையாம் பரவுதுமே. 5
      6.
      நிலநான்கு திசைநான்கு நெடுங்கடல்க ளொருநான்குங்
      குலநான்குங் காத்தளிக்குங் குலதீபன் வாழ்கவென்றே. 6
      சூரியன் துதி
      7.
      பேராழி யுலகனைத்தும் பிறங்கவள ரிருணீங்க
      ஓராழி தனைநடத்து மொண்சுடரை பரவுதுமே. 7
      8.
      பனியாழி யுலகனைத்தும் பரந்தகலி யிருணீங்க
      தனியாழி தனைநடத்துஞ் சயதுங்கன் வாழ்கவென்றே. 8
      கணபதி துதி
      9.
      காரணகா ரியங்களின்க டறுப்போர் யோ
      கருத்தென்னு தனித்தறியிற் கட்ட கட்டுண்
      டாரணமா நாற்கூட தணைந்து நிற்கும்
      ஐங்கரத்த தொருகளிற்று கன்பு செய்வாம். 9
      10.
      தனித்தனியே திசையானை தறிக ளாக
      சயத்தம்பம் பலநாட்டி யொருகூ டத்தே
      அனைத்துலகுங் கவித்ததென கவித்து நிற்கும்
      அருட்கவிகை கலிப்பகைஞன் வாழ்க வென்றே. 10
      முருகவேள் துதி
      11.
      பொன்னிரண்டு வரைதோற்கும் பொருவரிய நிறம்படைத்த புயமுங் கண்ணும்
      பன்னிரண்டு மாறிரண்டும் படைத்துடையான் அடித்தலங்கள் பணிதல் செய்வாம். 11
      12.
      ஓரிரண்டு திருக்குலமும் நிலைபெறவ தொருகுடைக்கீழ கடலு திக்கும்
      ஈரிரண்டு படைத்துடைய விரவிகுலோ தமனபயன் வாழ்க வென்றே. 12
      நாமகள் துதி
      13.
      பூமாதுஞ் சயமாதும் பொலிந்து வாழும் புயத்திருப்ப மிகவுயர திருப்ப ளென்று
      நாமாதுங் கலைமாது மென்ன சென்னி நாவகத்து ளிருப்பாளை நவிலு வாமே. 13
      14.
      எண்மடங்கு புகழ்மடந்தை நல்ல னெங்கோன் யானவன்பா லிருப்பதுநன் றென்பாள் போல
      மண்மடந்தை தன்சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்தபிரான் வளவர்பிரான் வாழ்க வென்றே. 14
      உமையவள் துதி
      15.
      செய்யதிரு மேனியொரு பாதிகரி தாக
      தெய்வமுத னாயகனை யெய்தசிலை மாரன்
      கையின்மலர் பாதமலர் மீதுமணு காநங்
      கன்னிதன் மலர்க்கழல்கள் சென்னிமிசை வைப்பாம். 15
      16.
      கறுத்தசெழி யன்கழல்சி வப்பவரை யேற
      கார்முகம்வ ளைத்துதியர் கோமகன்மு டிக்க
      பொறுத்தமலர் பாதமலர் மீதணிய நல்கும்
      பூழியர்பி ரானபயன் வாழ்கவினி தென்றே. 16
      சத்த மாதர்கள் துதி
      17.
      மேதி புள்ளலகை தோகை யேறுவணம் வேழ மென்றகொடி யேழுடை
      சோதி மென்கொடிக ளேழி னேழிருது ணைப்ப தந்தொழநி னைத்துமே. 17
      18.
      கேழன் மேழிகலை யாளி வீணைசிலை கெண்டை யென்றினைய பல்கொடி
      தாழ மேருவிலு யர்த்த செம்பியர்த னிப்பு லிக்கொடித ழைக்கவே. 18
      வாழி
      19.
      விதிமறை யவர்தொழில் விளைகவே விளைதலின் முகில்மழை பொழிகவே
      நிதிதரு பயிர்வளம் நிறைகவே நிறைதலி னுயிர்நிலை பெறுகவே. 19
      20.
      தலமுத லுளமனு வளர்கவே சயதர னுயர்புலி
      நிலவுமிழ் கவிகையும் வளர்கவே நிதிபொழி வளர்கவே. 20
      2. கடை திறப்பு
      உடல் அழகு
      21.
      சூதள வளவெனு மிளமுலை துடியள நுண்ணிடை
      காதள வளவெனு மதர்விழி கடலமு தனையவர் திறமினோ. 1
      மார்பழகு
      22.
      புடைபட விளமுலை வளர்தொறும் பொறையறி வுடையரு நிலைதளர
      திடைபடு வதுபட வருளுவீர் இடுகத வுயர்கடை திறமினோ. 2
      நடை அழகு
      23.
      சுரிகுழ லசைவுற வசைவுற துயிலெழு மயிலென மயிலென
      பரிபுர வொலியெழ வொலியெழ பனிமொழி யவர்கடை திறமினோ. 3
      ஊடிய மகளிர்
      24.
      கூடிய வின்கன வதனிலே கொடைநர துங்கனொ டணைவுறா
      தூடிய நெஞ்சினொ டூடுவீர் உமது நெடுங்கடை திறமினோ. 4
      விடுமின் பிடிமின்
      25.
      விடுமி னெங்கள்துகில் னென்றுமுனி வெகுளி மென்குதலை துகிலினை
      பிடிமி னென்றபொருள் விளைய நின்றருள்செய் பெடைந லீர்கடைகள் திறமினோ. 5
      கனவா நனவா
      26.
      எனத டங்கவினி வளவர் துங்கனருள் எனம கிழ்ந்திரவு கனவிடை
      தனத டங்கண்மிசை நகந டந்தகுறி தடவு வீர்கடைகள் திறமினோ. 6
      ஊடலும் கூடலும்
      27.
      முனிபவ ரொத்திலராய் முறுவல்கி ளைத்தலுமே
      முகிழ்நகை பெற்றமெனா மகிழ்நர் மணித்துவர்வாய்
      கனிபவ ளத்தருகே வருதலு முத்துதிருங்
      கயல்க ளிரண்டுடையீர் கடைதிற மின்றிறமின். 7
      பொ துயில்
      28.
      இத்துயின் மெய்த்துயிலே என்றுகு றித்திளைஞோர்
      இதுபுல விக்குமரு தெனமனம் வைத்தடியிற்
      கைத்தலம் வைத்தலுமே பொய்த்துயில் கூர்நயன
      கடைதிற வாமடவீர் மின்றிறமின். 8
      கனவில் பெற முயல்தல்
      29.
      இகலி ழந்தரசர் தொழவ ரும்பவனி இரவுக தருளு கனவினிற்
      பகலி ழந்தநிறை பெறமு யன்றுமொழி பதறு வீர்கடைகள் திறமினோ. 9
      முத்துமாலையும் பவளமாலையும்
      30.
      முத்து வடஞ்சேர் முகிழ்முலைமேன் முயங்குங் கொழுநர் மணிச்செவ்வாய்
      வைத்த பவள வடம்புனைவீர் மணிப்பொற் கபாட திறமினோ. 10
      ஆத்திமாலையின் மேல் ஆசை
      31.
      தண்கொடை மானதன் மார்புதோய் தாதகி மாலையின் மேல்விழுங்
      கண்கொடு போம்வழி தேடுவீர் கனகநெ டுங்கடை திறமினோ. 11
      படைக்கும் கண்களுக்கும் ஒப்புமை
      32.
      அஞ்சியே கழல்கெட கூடலிற் பொருதுசென்
      றணிகடை குழையிலே விழவடர தெறிதலால்
      வஞ்சிமா னதன்விடும் படையினிற் கொடியகண்
      மடநலீ ரிடுமணி கடைதிற திடுமினோ. 12
      கூடலில் தோன்றும் நிகழ்ச்சிகள்
      33.
      அவசமுற் றுளநெக துயினெக பவளவாய்
      அணிசிவ பறவிழி கடைசிவ புறநிறை
      கவசமற் றிளநகை களிவர களிவருங்
      கணவரை புணருவீர் கடைதிற திடுமினோ. 13
      கலவி மயக்கம்
      34.
      கலவி களியின் மயக்கத்தாற் கலைபோ யகல கலைமதியின்
      நிலவை துகிலென் றெடுத்துடுப்பீர் நீள்பொற் கபாட திறமினோ. 14
      நனவும் கனவும்
      35.
      நனவினிற் சயதரன் புணரவே பெறினுநீர்
      நனவென தௌிவுறா ததனையும் பழையவ
      கனவென கூறுவீர் தோழிமார் நகைமுகங்
      கண்டபின் தேறுவீர் கடைதிற திடுமினோ. 15
      மகளிர் உறங்காமை
      36.
      மெய்யே கொழுநர் பிழைநலிய வேட்கை நலிய விடியளவும்
      பொய்யே யுறங்கு மடநல்லீர் புனைபொற் கபாட திறமினோ. 16
      கொழுநர் மார்பில் துயில்
      37.
      போக வமளி களிமயக்கிற் புலர்ந்த தறியா தேகொழுநர்
      ஆக வமளி மிசைத்துயில்வீர் அம்பொற் கபாட திறமினோ. 17
      பிரிவாற்றாமை
      38
      ஆளுங் கொழுநர் வரவுபார தவர்தம் வரவு காணாமல்
      தாளு மனமும் புறம்பாக சாத்துங் கபாட திறமினோ. 18
      ஒன்றில் இரண்டு
      39.
      உந்தி சுழியின் முளைத்தெழுந்த உரோ பசுந்தா ளொன்றிலிரண்
      டந்தி கமலங் கொடுவருவீர் அம்பொற் கபாட திறமினோ. 19
      சிறைப்பட்ட மகளிர் நிலை
      40.
      மீனம்புகு கொடிமீனவர் விழியம்புக வோடி
      கானம்புக வேளம்புகு மடவீர்கடை திறமின். 20
      மகளிரை கப்பப்பொருளாக அளித்தல்
      41.
      அலைநாடிய புனனாடுடை யபயர்க்கிடு திறையா
      மலைநாடியர் துளுநாடியர் மனையிற் கடைதிறமின். 21
      தோளை தழுவி விளையாடல்
      42.
      விலையி லாதவடம் முலையி லாடவிழி குழையி லாடவிழை கணவர்தோள்
      மலையி லாடிவரு மயில்கள் போலவரு மடந லீர்கடைகள் திறமினோ. 22
      கன்னட பெண்டிரின் பேச்சு
      43.
      மழலைத்திரு மொழியிற்சில வடுகுஞ் சிலதமிழுங்
      குழறித்தரு கருநாடியர் குறுகிக்கடை திறமின். 23
      தழுவிய கை நழுவல்
      44.
      தழுவுங் கொழுநர் பிழைநலி தழுவே லென்ன தழுவியகை
      வழுவ வுடனே மயங்கிடுவீர் மணிப்பொற் கபாட திறமினோ. 24
      மகளிர் புன்னகை
      45.
      வேகம் விளைய வருங்கொழுநர் மேனி சிவந்த படிநோக்கி
      போகம் விளைய நகைசெய்வீர் புனைபொற் கபாட திறமினோ. 25
      உறக்கத்திலும் முகமலர்ச்சி
      46
      சொருகு கொந்தளக மொருகை மேலலைய ஒருகை கீழலைசெய் துகிலொடே
      திருவ னந்தலினு முகம லர்ந்துவரு தெரிவை மீர்கடைகள் திறமினோ. 26
      நெஞ்சம் களிப்பீர்
      47
      முலைமீது கொழுநர்கை நகமேவு குறியை
      முன்செல்வ மில்லாத வவர்பெற்ற பொருள்போல்
      கலைநீவி யாரேனு மில்லாவி டத்தே
      கண்ணுற்று நெஞ்சங்க ளிப்பீர்கள் திறமின். 27
      மதர்விழி மாதர்
      48
      கடலில் விடமென வமுதென மதனவேள் கருதி வழிபடு படையொடு கருதுவார்
      உடலி னுயிரையு முணர்வையும் நடுவுபோய் உருவு மதர்விழி யுடையவர் திறமினோ. 28
      பிறைநிலவும் முழுநிலவும்
      49
      முறுவன் மாலையொடு தரள மாலைமுக மலரின் மீதுமுலை முகிழினுஞ்
      சிறுநி லாவுமதின் மிகுநி லாவுமென வருந லீர்கடைகள் திறமினோ. 29
      திருகி செருகும் குழல் மாதர்
      50
      முருகிற் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிரு
      திருகி செருகுங் குழன்மடவீர் செம்பொற் கபாட திறமினோ. 30
      கொழுநரை நினைந்தழும் பெண்கள்
      51
      மெய்யில ணைத்துருகி பையவ கன்றவர்தா
      மீள்வரெ னக்கருதி கூடல்வி ளைத்தறவே
      கையில ணைத்தமணற் கண்பனி சோர்புனலிற்
      கரையவி ழுந்தழுவீர் கடைதிற மின்றிறமின். 31
      ஊடன் மகளிர்
      52
      செருவிள நீர்பட வெம்முலை செவ்விள நீர்படு சேயரி
      கருவிள நீர்பட வூடுவீர் கனகநெ டுங்கடை திறமினோ. 32
      நடந்துவரும் அழகு
      53
      அளக பாரமிசை யசைய மேகலைகள் அவிழ வாபரண மிவையெலாம்
      இளக மாமுலைக ளிணைய றாமல்வரும் இயன லீர்கடைகள் திறமினோ. 33
      இதழ் சுவைத்தல்
      54
      மதுர மானமொழி பதற வாள்விழிசி வப்ப வாயிதழ்வெ ளுப்பவே
      அதர பானமது பான மாகவறி வழியு மாதர்கடை திறமினோ. 34
      வேதும் மருந்தும்
      55
      தங்குகண் வேல்செய்த புண்களை தடமுலை வேதுகொண் டொற்றியுஞ்
      செங்கனி வாய்மரு தூட்டுவீர் செம்பொ னெடுங்கடை திறமினோ. 35
      வேதும் கட்டும்
      56
      பொருங்கண் வேலிளைஞர் மார்பி னூடுருவு புண்கள் தீரவிரு கொங்கையின்
      கருங்கண் வேதுபட வொற்றி மென்கைகொடு கட்டு மாதர்கடை திறமினோ. 36
      விழுதலும் எழுதலும்
      57
      இடையி னிலையரி திறுமிறு மெனவெழா எமது புகலிட மினியிலை யெனவிழா
      அடைய மதுகர மெழுவது விழுவதாம் அளக வனிதைய ரணிகடை திறமினோ. 37
      சிலம்புகள் முறையிடல்
      58
      உபய தனமசையி லொடியு மிடைநடையை ஒழியு மொழியுமென வொண்சிலம்
      பபய மபயமென வலற நடைபயிலும் அரிவை மீர்கடைகள் திறமினோ. 38
      பெண்ணுக்கும் பொன்னிக்கும் ஒப்புமை
      59
      பூவிரி மதுகரம் நுகரவும் பொருகய லிருகரை புரளவுங்
      காவிரி யெனவரு மடநலீர் கனகநெ டுங்கடை திறமினோ. 39
      வண்டுகள் கூந்தலிற் பந்தலிடல்
      60
      களப வண்டலிடு கலச கொங்கைகளின் மதியெ ழுந்துகனல் சொரியுமென்
      றளக பந்திமிசை யளிகள் பந்தரிடும் அரிவை மீர்கடைகள் திறமினோ. 40
      விழி சிவக்கும் உதடு வெளுக்கும்
      61
      வாயிற் சிவப்பை விழிவாங்க மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்க
      தோ கலவி யமுதளிப்பீர் துங கபாட திறமினோ. 41
      கலவியில் நிகழ்வன
      62
      கூடு மிளம்பிறையிற் குறுவெயர் முத்துருள
      கொங்கை வடம்புரள செங்கழு நீரள
      காடு குலைந்தலை கைவளை பூசலிட
      கலவி விடாமடவீர் கடைதிற மின்றிறமின். 42
      காஞ்சி இரு கலிங்கம் குலைந்தது
      63
      காஞ்சி யிரு கலிங்கங் குலைந்த கலவி மடவீர் கழற்சென்னி
      காஞ்சி யிரு கலிங்கங் குலைந்த களப்போர் பாட திறமினோ. 43
      கருணாகரனின் போர்ச்சிறப்பு
      64
      இலங்கை யெறிந்த கருணா கரன்றன் இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர்
      கலிங்க மெறிந்த கருணா கரன்றன் களப்போர் பாட திறமினோ. 44
      நினைவும் மறதியும்
      65
      பேணுங் கொழுநர் பிழைகளெலாம் பிரிந்த பொழுது நினைந்தவரை
      காணும் பொழுது மறந்திருப்பீர் கனப்பொற் கபாட திறமினோ. 45
      உறவாடும் மாதர்
      66
      வாச மார்முலைகண் மார்பி லாடமது மாலை தாழ்குழலின் வண்டெழு
      தூச லாடவிழி பூச லாடவுற வாடு வீர்கடைகள் திறமினோ. 46
      வாய் புதைக்கும் மடநல்லீர்
      67
      நே கலவி மயக்கத்தே நிகழ்ந்த மொழியை கிளியுரைப்ப
      வாயை புதைக்கு மடநல்லீர் மணிப்பொற் கபாட திறமினோ. 47
      மதியொளிக்கு நடுங்குவீர்
      68
      பொங்கு மதிக்கே தினநடுங்கி புகுந்த வறையை நிலவறையென்
      றங்கு மிருக்க பயப்படுவீர் அம்பொற் கபாட திறமினோ. 48
      தேயும் குடுமி
      69
      வருவார் கொழுந ரெனத்திறந்தும் வாரார் ரெனவடைத்து
      திருகுங் குடுமி விடியளவு தேயுங் கபாட திறமினோ. 49
      புலவியும் கலவியும்
      70
      ஊடு வீர்கொழுநர் தங்கள் பான்முனிவொ ழிந்து கூடுதலி னுங்களை
      தேடு வீர்கடைகள் திறமி னோவினிய தெரிவை மீர்கடைகள் திறமினோ. 50
      கண்ணின் இயல்பு
      71
      பண்படு கிளவியை யமுதென பரவிய கொழுநனை நெறிசெ
      கண்கொடு கொலைசெய வருளுவீர் கனக நெடுங்கடை திறமினோ. 51
      தரையில் விரல் எழுதுவீர்
      72
      பிழைநி னைந்துருகி யணைவு றாமகிழ்நர் பிரித லஞ்சிவிடு கண்கணீர்
      மழை ததும்பவிரல் தரையி லேயெழுதும் மடந லீர்கடைகள் திறமினோ. 52
      குலோத்துங்கன் போன்றீர்
      73
      நக்காஞ் சிக்கும் வடமலைக்கும் நடுவில் வௌிக்கே வேடனைவி
      டக்கா னகத்தே யுயிர்பறிப்பீர் அம்பொற் கபாட திறமினோ. 53
      பூவும் உயிரும் செருகுவீர்
      74
      செக்க சிவந்த கழுநீருஞ் செகத்தி லிளைஞ ராருயிரும்
      ஒக்க செருகுங் குழன்மடவீர் உம்பொற் கபாட திறமினோ. 54
      காடு பாடுவோம்
      75
      களப்போர் விளைந்த கலிங்கத்து கலிங்கர் நிணக்கூழ் களப்பேயின்
      உளப்போ ரிரண்டு நிறைவித்தாள் உறையுங் காடு பாடுவாம். 1
      மரம் செடி கொடிகள்
      76
      பொரிந்த காரைக ரிந்த சூரைபு கைந்த வீரையெ ரிந்தவேய்
      உரிந்த பாரையெ றிந்த பாலையு லர்ந்த வோமைக லந்தவே. 2
      77
      உதிர்ந்த வெள்ளிலு ணங்கு நெல்லியொ டுங்கு துள்ளியு லர்ந்தவேல்
      பிதிர்ந்த முள்ளிசி தைந்த வள்ளிபி ளந்த கள்ளிப பரந்தவே. 3
      78
      வற்றல் வாகைவ றந்த கூகைம டிந்த தேறுபொ டிந்தவேல்
      முற்ற லீகைமு ளிந்த விண்டுமு ரிந்த புன்குநி ரைந்தவே. 4
      பரிதியின் செயல்
      79
      தீய வக்கொடிய கான கத்தரைதி றந்த வாய்தொறுநு ழைந்துதன்
      சாயை புக்கவழி யாதெ னப்பரிதி தன்க ரங்கொடுதி ளைக்குமே. 5
      நிழல் இல்லாமை
      80
      ஆடு கின்றசிறை வெம்ப ருந்தினிழல் அஞ்சி யக்கடுவ னத்தைவி
      டோடு கின்றநிழ லொக்கும் நிற்கும்நிழல் ஓரி டத்துமுள வல்லவே. 6
      நிழலின் செயல்
      81
      ஆத வம்பருகு மென்று நின்றநிழல் அங்கு நின்றுகுடி போனத
      பாத வம்புனல்பெ றாது ணங்குவன பருகும் நம்மையென வெருவியே. 7
      நெருப்பும் புகையும்
      82
      செந்நெ ருப்பினை தகடு செய்துபார் செய்த தொக்கு செந்த ரைப்பர
      பந்நெ ருப்பினிற் புகைதி ரண்டதொ பல்ல தொப்புறா வதனி டைப்புறா. 8
      நிலத்தில் நீரின்மை
      83
      தீயின் வாயினீர் பெறினு முண்பதோர் சிந்தை கூரவாய் வெந்து வந்துசெ
      நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே. 9
      நிலத்தின் வெம்மை
      84
      இந்நி லத்துளோ ரேக லாவதற் கௌிய தானமோ வரிய வானுளோர்
      அந்நி லத்தின்மேல் வெம்மை யைக்குறி தல்ல வோநில தடியி டாததே. 10
      இரவியும் இருபொழுதும்
      85
      இருபொழுது மிரவிபசும் புரவிவிசும் பியங்காத தியம்ப கேண்மின்
      ஒருபொழுது தரித்தன்றி யூடுபோ கரிதணங்கின் காடென் றன்றோ. 11
      பனிநீரும் மழைநீரும் வியர்வை நீரே
      86
      காடிதனை கடத்துமென கருமுகிலும் வெண்மதியுங் கடக்க வப்பால்
      ஓடியிளை துடல்வியர்த்த வியர்வன்றோ உகுபுனலும் பனியு மையோ. 12
      தேவர் வாழ்க்கை
      87
      விம்முகடு விசைவனத்தின் வெம்மையினை குறித்தன்றோ விண்ணோர் விண்ணின்
      மைம்முகடு முகிற்றிரையி டமுதவட்ட வாலவட்ட மெடுப்ப தையோ. 13
      பேயின் மூச்சும் மரத்தின் புகையும்
      88
      நிலம்புடைபேர தோடாமே நெடுமோடி நிறுத்தியபேய்
      புலம்பொடுநின் றுயிர்ப்பனபோல் புகைந்துமரங் கரிந்துளவால். 14
      வறண்ட நாக்கும் முதிய பேயும்
      89
      வற்றியபேய் வாயுலர்ந்து வறள்நாக்கை நீட்டுவபோல்
      முற்றியநீண் மரப்பொதும்பின் முதுப்பாம்பு புறப்படுமே. 15
      சூறாவளியின் இயல்பு
      90
      விழிசுழல வருபேய்த்தேர் மிதந்துவரு நீரந்நீர
      சுழிசுழல வருவதென சூறைவளி சுழன்றிடுமால். 16
      நீறு பூத்த நெருப்பு
      91
      சிதைந்தவுடற் சுடுசுடலை பொடியை சூறை சீத்தடிப்ப சிதறியவ பொடியாற் செம்மை
      புதைந்தமணி புகைபோர்த்த தழலே போலும் போலாவேற் பொடிமூடு தணலே போலும். 17
      முத்து சொரிதல் கண்ணீர் பொழிதல்
      92
      மண்ணோடி யறவறந்து துறந்தங் காந்த
      வாய்வழியே வேய்பொழியு முத்த மவ்வேய்
      கண்ணோடி சொரிகின்ற கண்ணீ ரன்றேற்
      கண்டிரங்கி சொரிகின்ற கண்ணீர் போலும். 18
      முத்துக்கள் கொப்புளங்கள்
      93
      வெடித்தகழை விசைதெறிப்ப தரைமேன் முத்தம்
      வீழ்ந்தனவ தரைபுழுங்கி யழன்று மேன்மேற்
      பொடித்தவியர புள்ளிகளே போலும்
      போலாவேற் கொப்புளங்கள் போலும் போலும். 19
      காற்றின் தன்மை
      94
      பல்கால்திண் திரைக்கரங்கள் கரையின் மேன்மேற்
      பாய்கடல்கள் நூக்குமத படர்வெங் கானில்
      செல்காற்று வாராமல் காக்க வன்றோ
      திசைக்கரியின் செவிக்காற்று மதற்கே யன்றோ. 20
      வெந்தவனமே இந்தவனம்
      95
      முள்ளாறுங் கல்லாறு தென்ன ரோட முன்னொருநாள் வாளபயன் முனிந்த போரின்
      வெள்ளாறுங் கோட்டாறும் புகையான் மூட வெந்தவன மிந்தவன மொக்கி லொக்கும். 21
      மணலின் தன்மை
      96
      அணிகொண்ட குரங்கினங்கள் அலைகடலு கப்பாலை
      மணலொன்று காணாமல் வரையெடுத்து மயங்கினவே. 22
      4. கோயில் பாடியது
      பழையகோயிலும் புதியகோயிலும்
      97
      ஓதி வந்தவ கொடிய கானக துறைய ணங்கினு கயன்வ குத்தவி
      பூத லம்பழங் கோயி லென்னினும் புதிய கோயிலுண் டதுவி ளம்புவாம். 1
      புதிய கோயிலுக்கு கடைக்கால்
      98
      வட்ட வெண்குடை சென்னி மானதன் வாளின் வாயினான் மறலி வாயிடை
      பட்ட மன்னர்தம் மங்கையர் பரும ணிக்கரு திருவி ருத்தியே. 2
      கோயில் இயல்பு
      99
      துவர்நி றக்களிற் றுதிய ரேவலிற் சுரிகை போர்முக துருவி நேரெதிர
      தவர்நி ணத்தொட குருதி நீர்குழை தவர்க ருந்தலை சுவர டுக்கியே. 3
      தூணும் உத்தரமும்
      100
      அறிஞர் தம்பிரா னபயன் வாரணம் அரசர் மண்டல தரண றப்பறி
      தெறித ரும்பெருங் கணைம ரங்கள்கொண் டெழுது தூணொடு திரமி யற்றியே. 4
      கை மரமும் பரப்பு
      101
      கடித ழிந்துபோர் மிதிலை யிற்படுங் கரிம ருப்பினை திரள் துலாமெனும்
      படிப ரப்பி பரும யானையின் பழுவெ லும்பினிற் பாவ டுக்கியே. 5
      மேல் முகடு
      102
      மீளி மாவுகை தபயன் முன்னொர்நாள் விருத ராசரை பொருது கொண்டபோர்
      ஆளி வாரணங் கேழல் சீயமென் றவை நிரைத்துநா சிகையி ருத்தியே. 6
      வெற்றிடத்தை மூடுதல்
      103
      துங்க பத்திரை செங்க ளத்திடை சோள சேகரன் வாளெ றிந்தபோர்
      வெங்க தக்களிற் றின்ப டத்தினால் வௌிய டங்கவே மிசைக விக்கவே. 7
      கோபுரமும் நெடுமதிலும்
      104
      கொள்ளிவா பேய்காக்குங் கோபுரமு நெடுமதிலும்
      வெள்ளியாற் சமைத்ததென வெள்ளெலும்பி னாற்சமைத்தே. 8
      கோயில் வாயிலில் மகரதோரணம்
      105
      காரிரும்பின் மகரதோ ரணமா கரும்பேய்கள்
      ஓரிரண்டு கால்நாட்டி யோரிரும்பே மிசைவளைத்தே. 9
      மதில்களின் காட்சி
      106
      மயிற்கழுத்துங் கழுத்தரிய மலர்ந்தமுக தாமரையு மருங்கு சூழ்ந்த
      எயிற்கழுத்து நிணக்கொடியு மிளங்குழவி பசுந்தலையு மெங்கு தூக்கி. 10
      மதுரையின் மகரதோரணம்
      107
      பணியாத வழுதியர்தம் பாய்களிற்றின் செவிச்சுளகு பலவு தூக்கி
      மணியூச லெனமதுரை மகரதோ ரணம்பறித்து மறித்து நாட்டி. 11
      ஈம விளக்கு
      108
      பரிவிருத்தி யலகிட்டு பசுங்குருதி நீர்தௌித்து நிணப்பூ சிந்தி
      எரிவிரித்த ஈமவிள கெம்மருங்கும் ஏற்றியதோ ரியல்பிற் றாலோ. 12
      வீரர்களின் பேரொலி
      109
      சலியாத தனியாண்மை தறுகண் வீரர் தருகவரம் வரத்தினுக்கு தக்க தாக
      பலியாக வுறுப்பரிந்து தருது மென்று பரவுமொலி கடலொலிபோற் பரக்குமாலோ. 13
      வீர வழிபாடு
      110
      சொல்லரிய ஓமத்தீ வளர்ப்ப ராலோ தொழுதிருந்து பழுவெலும்பு தொடர வாங்கி
      வல்லெரியின் மிசையெரிய விடுவ ராலோ வழிகுருதி நெய்யாக வார்ப்ப ராலோ. 14
      தலை துதிக்கும் முண்டம் வழிபடும்
      111
      அடிக்கழுத்தி னெடுஞ்சிரத்தை யரிவ ராலோ
      அரிந்தசிர மணங்கின்கை கொடுப்ப ராலோ
      கொடுத்தசிரங் கொற்றவையை பரவு மாலோ
      குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ. 15
      அச்சுறுத்தும் தலைகள்
      112
      நீண்டபலி பீடத்தி லரிந்து வைத்த
      நெடுங்குஞ்சி சிரத்தைத்தன் னினமென் றெண்ணி
      ஆண்டலைப்புள் ளருகணைந்து பார்க்கு மாலோ
      அணைதலு சிரமச்ச முறுத்து மாலோ. 16
      அஞ்சி அலைந்தன
      113
      கடன மைந்ததுக ருந்தலைய ரிந்த பொழுதே கடவ
      தொன்றுமிலை யென்றுவிளை யாடு முடலே
      உடல்வி ழுந்திடினு கர்ந்திடவு வந்த சிலபேய்
      உறுபெ ரும்பசியு டன்றிடவு டன்றி ரியுமே. 17
      குரல் ஒலியும் வாத்திய
      114
      பகடி டந்துகொள்ப சுங்குருதி யின்று தலைவீ
      பலிகொ ளென்றகுர லெண்டிசைபி ளந்து மிசைவான்
      முகடி டந்துருமெ றிந்தெனமு ழங்க வுடனே
      மொகுமொ கென்றொலிமி குந்தமரு கங்கள் பலவே. 18
      மெ காப்பாளர்கள்
      115
      தமரு கங்கள்தரு கின்றசதி யின்கண் வருவார்
      அமரி யின்புறும நாதிவரு சாத கர்களே. 19
      யோகினி பெண்கள்
      116
      படைவ லங்கொடுப சுந்தலையி டங்கொ டணைவார்
      இடைமொ ழிந்திடைநு டங்கவரு யோகி னிகளே. 20
      பெருந்தலை கண்டு பேய் உறங்காமை
      117
      வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறு திசைதோறும் விழித்து நின்று
      தூங்குதலை சிரிப்பனகண் டுறங்குதலை மறந்திருக்குஞ் சுழல்க சூர்ப்பேய். 21
      காலன் இடும் தூண்டில்
      118
      அரிந்ததலை யுடனமர்ந்தே ஆடுகழை அலைகுருதி புனலின் மூழ்கி
      இருந்தவுடல் கொளக்கால னிடுகின்ற நெடுந்தூண்டி லென்ன தோன்றும். 22
      கொள்ளிவா பேயின் தன்மை
      119
      கொல்வா யோரி முழவா கொள்ளி வாய்ப்பேய் குழவிக்கு
      நல்வா செய்ய தசைதேடி நரிவா தசையை பறிக்குமால். 23
      கோயிலை சுற்றியுள்ள சுடலை
      120
      நிணமு தசையும் பருந்திசிப்ப நெருப்பும் பருத்தி யும்பொன்று
      பிணமும் பேயுஞ் சுடுகாடும் பிணங்கு நரியு முடைத்தரோ. 24
      5. தேவியை பாடியது
      காளியின் வடிவழகு
      121
      உவையுவை யுளவென் றெண்ணி உரைப்ப தெனுரைக்க வந்த
      அவையவை மகிழ்ந்த மோடி அவயவம் விளம்பல் செய்வாம். 1
      பரிபுரம் விளங்கும் பாதம்
      122
      ஒருமலை மத்துவல துலவுக யிற்றினுமற்
      றுலகுப ரித்தபண துரகவ டத்தினு
      பருமணி முத்துநிரை துடுமணி தைத்தவிணை
      பரிபுரம் வைத்ததளிர பதயுக ளத்தினளே. 2
      காளி தேவியின் குங்குமப்பொட்டு
      123
      அருமறை யொத்தகுல தருணெறி யொத்தகுண
      தபயனு தித்தகுல துபயகு லத்துமுதல்
      திருமதி யொக்குமென தினகர னொக்குமென
      திகழ்வத னத்தினிடை திலகவ னப்பினளே. 3
      சதிகொள் நடனம்
      124
      அரவொடு திக்க பொழுதுப ரித்தவிட
      தடியிட வுட்குழிவுற் றசைவுறு மப்பொழுதில்
      தரணித ரித்ததென பரணிப ரித்தபுகழ
      சயதர னைப்பரவி சதிகொள் நடத்தினளே. 4
      பால் நிரம்பிய கிண்ணம்
      125
      தணிதவ ளப்பிறையை சடைமிசை வைத்தவிடை
      தலைவர்வ னத்தினிடை தனிநுகர் தற்குநினை
      தணிதவ ளப்பொடியி டடையவி லச்சினையி
      டமுதமி ருத்தியசெ பனையத னத்தினளே. 5
      ஆடையும் இடைக்கச்சும்
      126
      பரிவக லத்தழுவி புணர்கல விக்குருகி
      படர்சடை முக்கணுடை பரமர்கொ டுத்தகளிற்
      றுரிமிசை அக்கரியிற் குடரொடு கட்செவியி
      டொருபுரி யிட்டிறுக புனையுமு டுக்கையளே. 6
      தேவியின் பிள்ளைகள்
      127
      கலைவள ருத்தமனை கருமுகி லொப்பவனை
      கரடத டக்கடவு கனகநி றத்தவனை
      சிலைவளை வுற்றவுண தொகைசெக விட்டபரி
      திறலவ னைத்தரு திருவுத ரத்தினளே. 7
      தேவியின் அணிகள்
      128
      கவளம தக்கரட கரியுரி வைக்கயிலை
      களிறுவி ருப்புறு கனகமு லைத்தரள
      தவளவ டத்திடையிற் பவளமொ டொத்தெரி
      தழலுமி ழுத்தரி தனியுர கத்தினளே. 8
      காளியின் கைகள்
      129
      அரியுமி டற்றலையி டலைகுரு திக்கெதிர்வை
      தறவும டுத்தசிவ பதனைமு ழுத்திசையிற்
      கரிகர டத்தொளையிற் கலுழியி டைக்கழுவி
      கருமைப டைத்தசுடர கரகம ல தினளே. 9
      தேவியின் உதடுகள்
      130
      சிமையவ ரைக்கனக திரளுரு கப்பரவை
      திரைசுவ றிப்புகை திசைசுடு மப்பொழு
      திமையவ ரைத்தகைதற் கிருளுமி டற்றிறைவற்
      கினியத ரத்தமுத கனியத ரத்தினளே. 10
      சிவனின் பகை தீர்த்தவள்
      131
      உருகுத லுற்றுலக துவமைய றச்சுழல்வுற்
      றுலவுவி ழிக்கடைப டுடல்பகை யற்றொழி
      திருகுதலை கிளவி சிறுகுத லைப்பவள
      சிறுமுறு வற்றரள திருவத னத்தினளே. 11
      காதணிகளும் மாலைகளும்
      132
      அண்டமுறு குலகிரிகள் அவளொருகா லிருகாதிற்
      கொண்டணியிற் குதம்பையுமாம் கோத்தணியின் மணிவடமாம். 12
      தேவியின் ஆற்றல்
      133
      கைம்மலர்மே லம்மனையாம் கந்துகமாங் கழங்குமாம்
      அம்மலைக ளவள்வேண்டின் ஆகாத தொன்றுண்டோ. 13
      6. பேய்களை பாடியது
      காளியின் பெருமை
      134
      எவ்வணங்கு மடிவணங்க இப்பெருமை படைத்துடைய
      அவ்வணங்கை யகலாத அலகைகளை யினிப்பகர்வாம். 1
      பேய்களின் காலும் கையும்
      135
      பெருநெ டும்பசி பெய்கல மாவன பிற்றை நாளின்முன் னாளின்மெ லிவன
      கருநெ டும்பனங் காடுமு ழுமையுங் காலுங் கையுமு டையன போல்வன. 2
      வாய் வயிறு முழங்கால்கள்
      136
      வன்பி லத்தொடு வாதுசெய் வாயின வாயி னானிறை யாதவ யிற்றின
      முன்பி ருக்கின்மு கத்தினு மேற்செல மும்மு ழம்படு மம்முழ தாளின. 3
      பேய்களின் உடம்பு
      137
      வெற்றெ லும்பைந ரம்பின்வ லித்துமேல் வெந்தி லாவிற கேய்ந்தவு டம்பின
      கொற்ற லம்பெறு கூழில மெங்களை கொள்வ தேபணி யென்றுகு ரைப்பன. 4
      கன்னங்களும் விழிகளும்
      138
      உள்ளொ டுங்கியி ரண்டுமொன் றாகவே ஒட்டி யொட்டுவி டாதகொ டிற்றின
      கொள்ளி கொண்டிரண் டேமுழை யுட்புகிற் குன்று தோன்றுவ போலவி ழிப்பன. 5
      முதுகும் கொப்பூழும்
      139
      வற்ற லாகவு லர்ந்தமு துகுகள் மரக்க லத்தின்ம றிபுற மொப்பன
      ஒற்றை வான்றொளை புற்றென பாம்புடன் உடும்பு முட்புக்கு றங்கிடு முந்திய. 6
      உடல் மயிர் மூக்கு காது
      140
      பாந்தள் நால்வன போலுமு டல்மயிர் பாசி பட்டப ழந்தொளை மூக்கின
      ஆந்தை பாந்தி யிருப்ப துரிஞ்சில்பு கங்கு மிங்குமு லாவு செவியின. 7
      பல் தாலி தலை உதடு
      141
      கொட்டும் மேழியுங் கோத்தன பல்லின கோம்பி பாம்பிடை கோத்தணி தாலிய
      தட்டி வானை தகர்க்கு தலையின தாழ்ந்து மார்பிடை தட்டு முதட்டின. 8
      தாய்ப்பேயும் பிள்ளைப்பேயும்
      142
      அட்ட மிட்ட நெடுங்கழை காணிலென் அன்னை யன்னையென் றாலுங் குழவிய
      ஒட்ட ஒட்டகங் காணிலென் பிள்ளையை ஒக்கு மொக்குமென் றொக்கலை கொள்வன. 9
      ஆற்றாத பசி
      143
      புயல ளிப்பன மேலும ளித்திடும் பொற்க ர தப யன்புலி பின்செல
      கயலொ ளித்தக டுஞ்சுரம் போலகங் காந்து வெம்பசி யிற்புற தீந்தவும். 10
      காளியை பிரியாத பேய்கள்
      144
      துஞ்ச லுக்கணி தாமென முன்னமே சொன்ன சொன்னது றைதொறும் பேயெலாம்
      அஞ்ச லித்தொரு காலக லாமலவ் வணங்கி னுக்கரு காகவி ருக்கவே. 11
      நொண்டி பேய்
      145
      ஆளை சீறுக ளிற்றப யன்பொரூஉம் அக்க ளத்தில ரசர்சி ரஞ்சொரி
      மூளை சேற்றில் வழுக்கி விழுந்திட மொழிபெ யர்ந்தொரு கால்முட மானவும். 12
      கை ஒடிந்த பேய்
      146
      அந்த நாளக்க ளத்தடு கூழினு காய்ந்த வெண்பல் லரிசி யுரற்புக
      உந்து போதினிற் போத கொம்பெனும் உலக்கை பட்டுவ லக்கைசொற் றானவும். 13
      குருட்டு பேய்
      147
      விருத ராசப யங்கரன் முன்னொர்நாள் வென்ற சக்கர கோட்டத்தி டைக்கொழுங்
      குருதி யுங்குட ருங்கல தட்டவெங் கூழ்தெ றித்தொரு கண்குரு டானவும். 14
      ஊமை பேய்
      148
      வண்டல் பாய்பொன்னி நாடனை வாழ்த்திமா மதுரை வெங்கள தேமது ரிக்கவ
      டுண்ட கூழொடு நாவுஞ்சு ருண்டுபு குள்வி ழுந்தற ஊமைகள் ஆனவும். 15
      செவிட்டு பேய்
      149
      ஆனை சாயவ டுபரி யொன்றுகை தைம்ப டைப்பரு வத்தப யன்பொருஞ்
      சேனை வீரர்நின் றார்த்திடு மார்ப்பினில் திமிரி வெங்கள திற்செவி டானவும். 16
      குட்டை பேய்
      150
      பண்டு தென்னவர் சாயவ தற்குமுன் பணிசெய் பூதக ணங்கள னைத்தையுங்
      கொண்டு வந்தபேய் கூடிய போதில குமரி மாதர்பெ றக்குற ளானவும். 17
      கூன் பேய்
      151
      பரக்கு மோதக்க டாரம ழித்தநாள் பாய்ந்த செம்புன லாடியும் நீந்தியுங்
      குரக்கு வாதம்பி டித்தவி தத்தினிற் குடிய டங்கலுங் கூன்முது கானவும். 18
      கடல் விளையாட்டு
      152
      சிங்க ளத்தொடு தென்மது ராபுரி செற்ற கொற்றவன் வெற்றிகொள் காலையே
      வெங்க ளத்தில டுமடை பேய்க்குலம் வேலை புக்குவி ரல்கள் திறந்தவும். 19
      7. இந்திர சாலம்
      தீபக்கால் கட்டில்
      153
      இவ்வண்ண திருதிறமு தொழுதிருப்ப எலும்பின்மிசை குடர்மென் கச்சிற்
      செவ்வண்ண குருதிதோய் சிறுபூ தீபக்கால் கட்டி லிட்டே. 1
      பிண மெத்தை
      154
      பிணமெத்தை யஞ்சடுக்கி பேயணையை முறித்திட்டு தூய வெள்ளை
      நிணமெத்தை விரித்துயர்ந்த நிலாத்திகழும் பஞ்சசய னத்தின் மேலே. 2
      கொலு வீற்றிருத்தல்
      155
      கெடாதபடி கெடுஞ்செழியர் கெடும்பொழுதின் இடும்பிண்டி பால மேந்தி
      இடாகினிக ளிருமருங்கு மீச்சோப்பி பணிமாற விருந்த போழ்தின். 3
      கோயில் நாயகியை கும்பிடுதல்
      156
      அடல்நாக எலும்பெடுத்து நரம்பிற் கட்டி அடிக்கடியும் பிடித்தமரின் மடிந்த வீரர்
      குடர்சூடி நிணச்சட்டை யிட்டு நின்ற கோயில்நா யகிநெடும்பேய் கும்பி டாங்கே. 4
      காளியிடம் நெடும்பேய் கூறல்
      157
      சுரகுருவின் தூதாகி யமன்பாற் செல்வோன் துணித்துவைத்த சிரமன்று தின்ற பேயை
      சிரமரிய வதற்குறவா யொளித்து போந்த சிலபேயை திருவுள்ள தறிதி யன்றே. 5
      முதுபேயின் வருகை கூறல்
      158
      அப்பேயி னொருமுதுபேய் வந்து நின்றிங் கடியேனை விண்ணப்பஞ் செய்க வென்ற
      திப்பேயிங் கொருதீங்குஞ் செய்த தில்லை என்கொலோ திருவுள்ள மென்ன கேட்டே. 6
      முதுபேய் மன்னிப்பு கேட்டல்
      159
      அழைக்க வென்றலும ழைக்க வந்தணுகி அஞ்சி யஞ்சியுன தாணையிற்
      பிழைக்க வந்தனம்பொ றுத்தெ மக்கருள்செய் பெண்ண ணங்கெனவ ணங்கவே. 7
      காளியின் அருள்மொழி
      160
      அருத்தி யிற்பிழைநி னைத்த கூளியை யறுத்த வன்தலைய வன்பெற
      பொருத்தி யப்பிழைபொ றுத்த னம்பிழை பொறாத தில்லையினி யென்னவே. 8
      முதுபேய் வேண்டல்
      161
      உய்ந்து போயினமு வந்தெ மக்கருள ஒன்றொ டொப்பனவொ ராயிரம்
      இந்த்ர சாலமுள கற்று வந்தனெ னிருந்து காணென விறைஞ்சியே. 9
      கண் கட்டு வித்தைகள்
      162
      ஏற நின்னிருதி ருக்கண் வைத்தருள்செய் இக்கை யிற்சிலது திக்கைபார்
      மாறி இக்கையில ழைக்க மற்றவை மதக்க ரித்தலைக ளானபார். 10
      163
      இக்க ரித்தலையின் வாயி னின்றுதிர நீர்கு டித்துரு மிடித்தென
      கொக்க ரித்தலகை சுற்ற மற்றிவை குறைத்த லைப்பிணம் மிதப்பபார். 11
      164
      அடக்க மன்றிது கிடக்க வெம்முடைய அம்மை வாழ்கவென வெம்மைபார்
      கடக்க மென்றபயன் வென்றி வென்றிகொள் கள பெரும்பரணி யின்றுபார். 12
      165
      துஞ்சி வீழ்துரக ராசி பாருடல் துணிந்து வீழ்குறை துடிப்பபார்
      அஞ்சி யோடும்மத யானை பாருதிர ஆறு மோடுவன நூறுபார். 13
      166
      அற்ற தோளிவை யலைப்ப பாருவை யறாத நீள்குடர் மிதப்பபார்
      இற்ற தாள்நரி யிழுப்ப பாரடி யிழுக்கும் மூளையில் வழுக்கல்பார். 14
      167
      நிணங்கள் பார்நிண மணங் கனிந்தன நிலங்கள் பார்நில மடங்கலும்
      பிணங்கள் பாரிவை கிடக்க நம்முடைய பேய லாதசில பேய்கள் பார். 15
      வித்தை கண்ட பேய்களின் மயக்கம்
      168
      என்ற போதிலிவை மெய்யெ னாவுட னிருந்த பேய்பதறி யொன்றன்மேல்
      ஒன்று கால்முறிய மேல்வி ழுந்தடிசில் உண்ண வெண்ணிவெறும் மண்ணின்மேல். 16
      169
      விழுந்துகொ ழுங்குரு திப்புன லென்றுவெ றுங்கைமு கந்துமுக
      தெழுந்து விழுந்தசை யென்று நிலத்தை யிருந்து துழாவிடுமே. 17
      170
      சுற்ற நிணத்துகில் பெற்றன மென்றுசு லாவுவெ றுங்கையவே
      அற்ற குறைத்தலை யென்று விசும்பை யதுக்கு மெயிற்றினவே. 18
      171
      கயிற்றுறி யொப்பதொர் பேய்வறி தேயுடல் கௌவின தொக்கவிரை
      தெயிற்றை யதுக்கி நிலத்திடை பேய்கள் நிறைத்தன மேல்விழவே. 19
      172
      முறம்பல போல நகங்கள் முறிந்து முகஞ்சித றாமுதுகு
      திறம்பலி லாவிறல் யோகினி மாதர் சிரித்துவி லாவிறவே. 20
      பேய்கள் வேண்டுதல்
      173
      அக்கண மாளு மணங்கினை வந்தனை செய்துக ணங்களெலாம்
      இக்கண மாளுமி னித்தவிர் விச்சையெ னக்கைவி திர்த்தலுமே. 21
      முதுபேயின் வேண்டுகோள்
      174
      கொற்றவர்கோன் வாளபய னறிய வாழுங்
      குவலயத்தோர் கலையனைத்துங் கூற வாங்கே
      கற்றுவந்தார் கற்றவவன் காணு மாபோல்
      கடைபோ கண்டருளென் கல்வி யென்றே. 22
      தாயின்மேல் ஆணை
      175
      வணங்குதலுங் கணங்களெலா மா பாவி
      மறித்தெம்மை மறுசூடு சுடுவை யாகில்
      அணங்கரசி னாணையென அணங்கு மிப்போ
      தவைதவிரெங் கிவைகற்றா யென்ன வாங்கே. 23
      முதுபேய் வரலாறு
      176
      நின்முனிவுஞ் சுரகுருவின் முனிவு மஞ்சி
      நிலையரிதென் றிமகிரிபு கிருந்தேற் கௌவை
      தன்முனிவு மவன்முனிவு தவிர்க வென்று
      சாதன திரவிச்சை பலவு தந்தே. 24
      177
      உன்னுடைய பழவடியா ரடியாள் தெய்வ
      உருத்திரயோ கினியென்பா ளுனக்கு நன்மை
      இன்னுமுள கிடைப்பனவிங் கிருக்க வென்ன
      யானிருந்தேன் சிலகால மிருந்த நாளில். 25
      8. இராச பாரம்பரியம்
      இமயத்தில் புலிக்கொடி
      178
      செண்டு கொண்டுகரி காலனொரு காலி னி
      சிமய மால்வரை திரித்தருளி மீள வதனை
      பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
      பாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த பொழுதே. 1
      நாரதர் கூறல்
      179
      கால மும்மையுமு ணர்ந்தருளு நார தனெனுங்
      கடவுள் வேதமுனி வந்துகடல் சூழ்பு வியில்நின்
      போலு மன்னருள ரல்லரென ஆசி புகலா
      புகல்வ தொன்றுளது கேளரச வென்று புகல்வான். 2
      விநாயகர் பாரதம் எழுதினார்
      180
      பண்டு பாரதமெ னுங்கதை பராச ரன்மகன்
      பகர வெங்கரிமு கன்பரு மருப்பை யொருகை
      கொண்டு மேருசிக ரத்தொரு புறத்தி லெழுதி
      குவல யம்பெறு தவப்பய னுரைப்ப வரிதால். 3
      181
      பார தத்தினுள வாகிய பவித்ர கதையெம்
      பரம னற்சரிதை மெய்ப்பழைய நான்ம றைகளே
      நேர தற்கிதனை நான்மொழிய நீயு மெழுதி
      நெடிய குன்றின்மிசை யேயிசைவ தான கதையே. 4
      இதுவும் வேதம் ஆகும்
      182
      அதன் முதற்கண்வரு மாதிமுதன் மாய னிவனே
      அப்ர மேயமெனு மெய்ப்ரியம தாக வுடனே
      பதமு மிப்பதம் வகுக்கவரு பாத மதுவும்
      பாத மானசில பார்புகழ வந்த அவையும். 5
      183
      அந்த முட்பட விருக்குமவ் விருக்கின் வழியே
      ஆகி வந்தவவ் வருக்கமும் வருக்க முழுதும்
      வந்த அட்டகமு மொட்டரிய சங்கி தைகளும்
      வாய்மை வேதியர்கள் தாம்விதி யெனும் வகையுமே. 6
      184
      கமல யோனிமுத லாகவரு முங்கள் மரபிற்
      காவன் மன்னவர்க ளாகிவரு கின்ற முறையால்
      அமல வேதமிது காணுமிதி லார ணநில
      தமல னேயபய னாகிவரு கென்ற ருளியே. 7
      நாரதர் இருப்பிடம் செல்லல்
      185
      அரணி வேள்வியி லகப்படு மகண்ட வுருவாய்
      அரவ ணைத்துயிலு மாதிமுத லாக வபயன்
      தரணி காவலள வுஞ்செல மொழிந்து முனிவன்
      தானெ ழுந்தருள மாமுனி மொழிந்த படியே. 8
      நாரதர் கூறிய வரலாறு
      186
      ஆதி மாலமல நாபிகம லத்த யனுதி
      தயன் மரீசியெனும் அண்ணலை யளித்த பரிசுங்
      காதல் கூர்தரு மரீசிமக னாகி வளருங்
      காசி பன்கதி ரருக்கனை யளித்த பரிசும். 9
      187
      அவ்வ ருக்கன்மக னாகிமனு மேதினி புர
      தரிய காதலனை யாவினது கன்று நிகரென்
      றெவ்வ ருக்கமும் வியப்பமுறை செய்த கதையும்
      இக்கு வாகுவிவன் மைந்தனென வந்த பரிசும். 10
      188
      இக்கு வாகுவின் மகன்புதல்வ னான வுரவோன்
      இகலு வோனிகலு ரஞ்செய்து புரந்த ரனெனுஞ்
      சக்கு வாயிர முடைக்களிறு வாகன மென
      தானி ருந்துபொரு தானவரை வென்ற சயமும். 11
      189
      ஒருது றைப்புனல்சி னப்புலியு மானு முடனே
      உண்ண வைத்தவுர வோனுலகில் வைத்த அருளும்
      பொருது றைத்தலைபு குந்துமுசு குந்த னிமையோர்
      புரம டங்கலும ரண்செய்து புரந்த புகழும். 12
      190
      கடல் கலக்கவெழு மின்னமுது தன்னை யொருவன்
      கடவுள் வானவர்க ளுண்ணவருள் செய்த கதையும்
      உடல்க லக்கற அரிந்துதசை யிட்டு மொருவன்
      ஒருது லைப்புறவொ டொக்கநிறை புக்க புகழும். 13
      191
      சுராதி ராசன்முத லாகவரு சோழன் முனநாள்
      சோழ மண்டலம மைத்தபிற கேழு லகையும்
      இராச கேசரிபு ரந்துபர கேச ரிகளாம்
      இருவ ராணைபுலி ஆணையென நின்ற இதுவும். 14
      192
      கால னுக்கிது வழக்கென வுரைத்த அவனும்
      காவி ரிப்புனல்கொ ணர்ந்தவவ னும்பு வனியின்
      மேல னைத்துயிரும் வீவதிலை யாக நமன்மேல்
      வென்றி கொண்டவனு மென்றிவர்கள் கொண்ட விறலும். 15
      193
      புலியெ னக்கொடியி லிந்திரனை வைத்த அவனும்
      புணரி யொன்றினிடை யொன்றுபுக விட்ட அவனும்
      வலியி னிற்குருதி யுண்கென வளித்த அவனும்
      வாத ராசனைவ லிந்துபணி கொண்ட அவனும். 16
      194
      தேங்கு தூங்கெயிலெ றிந்தவவ னுந்தி ரள்மணி
      சுடர்வி மானமது வான்மிசையு யர்த்த அவனும்
      தாங்கள் பாரதமு டிப்பளவும் நின்று தருமன்
      தன்க டற்படைத னக்குதவி செய்த அவனும். 17
      195
      தளவ ழிக்குநகை வேல்விழி பிலத்தின் வழியே
      தனிந டந்துரகர் தங்கண்மணி கொண்ட அவனும்
      களவ ழிக்கவிதை பொய்கையுரை செய்ய உதியன்
      கால்வ ழி தளையை வெட்டியர சிட்ட அவனும். 18
      கரிகால் வளவன்
      196
      என்று மற்றவர்கள் தங்கள்சரி தங்கள் பலவும்
      எழுதி மீளவிதன் மேல்வழுதி சேரன் மடி
      தன்ற னிக்களி றணைந்தருளி வீர மகள்தன்
      தனத டங்களொடு தன்புய மணைந்த பரிசும். 19
      197
      தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
      தொடர வந்திலா முகரி யைப்பட
      தெழுது கென்றுகண் டிதுமி கைக்கணென்
      றிங்க ழிக்கவே அங்க ழிந்ததும். 20
      198
      தத்து நீர்வரால் குருமி வென்றது
      தழுவு செந்தமிழ பரிசில் வாணர்பொன்
      பத்தொ டாறுநூ றாயி ரம்பெற
      பண்டு பட்டின பாலை கொண்டதும். 21
      199
      ஒருவர் முன்னொர்நாள் தந்து பின்செலா
      உதியர் மன்னரே மதுரை மன்னரென்
      றிருவர் தம்மையுங் கிழிகள் சுற்றுவி
      தெரிவி ளக்குவை திகல்வி ளைத்ததும். 22
      முதலாம் பராந்தகன்
      200
      வேழ மொன்றுகை தாலி விண்ணின்வாய் விசைய டங்கவு மசைய வென்றதும்
      ஈழ முந்தமிழ கூடலுஞ் சிதை திகல்க டந்ததோ ரிசைப ரந்ததும். 23
      முதலாம் இராசராச சோழன்
      201
      சதய நாள்விழா உதியர் மண்டல தன்னில் வைத்தவன் றனியொர் மாவின்மேல்
      உதய பானுவொ துதகை வென்றகோன் ஒருகை வாரணம் பலக வர்ந்ததும். 24
      முதலாம் இராசேந்திர சோழன்
      202
      களிறு கங்கைநீ ருண்ண மண்ணையிற் காய்சி னத்தொடே கலவு செம்பியன்
      குளிறு தெண்டிரை குரைக டாரமுங் கொண்டு மண்டலங் குடையுள் வைத்ததும். 25
      முதலாம் இராசாதிராசன்
      203
      கம்பி லிச்ச தம்பம் நட்டதுங் கடிய ரண்கொள்கல் யாணர் கட்டற
      கிம்பு ரிப்பணை கிரியு கைத்தவன் கிரிக ளெட்டினும் புலிபொ றித்ததும். 26
      இராசேந்திர சோழன்
      204
      ஒருக ளிற்றின்மேல் வருக ளிற்றையொ துலகு யக்கொள பொருது கொப்பையிற்
      பொருக ளத்திலே முடிக வித்தவன் புவிக விப்பதோர் குடைக வித்ததும். 27
      இராச மகேந்திரன்
      205
      பனுவலுக்கு முதலாய வேத நான்கிற்
      பண்டுரைத்த நெறிபுதுக்கி பழையர் தங்கள்
      மனுவினுக்கு மும்மடிநான் மடியாஞ் சோழன்
      மதிக்குடைக்கீ ழறந்தளிர்ப்ப வளர்ந்த வாறும். 28
      முதற் குலோத்துங்கன் தோற்றம்
      206
      குந்தளரை கூடற்சங் கமத்து வென்ற கோனபயன் குவலயங்கா தளித்த பின்னை
      இந்தநில குலப்பாவை யிவன்பாற் சேர என்ன தவஞ் செய்திருந்தா ளென்ன தோன்றி. 29
      வெற்றி சிறப்பு
      207
      எவ்வளவு திரிபுவன முளவா தோன்றும் குலமறைக ளுளவாய் நிற்கும்
      அவ்வளவு திகிரிவரை யளவுஞ் செங்கோல் ஆணைசெல்ல வபயன்கா தளிக்கு மாறும். 30
      கரிகாலன் எழுதி முடித்தான்
      208
      இப்பு றத்திமய மால்வரையின் மார்பி னகல
      தெழுதி னானெழுது தற்கரிய வேத மெழுதி
      ஒப்பு றத்தனது தொன்மரபு மம்ம ரபின்மேல்
      உரைசெய் பல்புகழு மொன்றுமொழி யாத பரிசே. 31
      காளி வியத்தல்
      209
      எழுதி மற்றுரைசெய் தவரவர்கள் செய்பி ழையெலாம்
      எமர்பொ றுக்கவென விப்படிமு டித்த விதனை
      தொழுது கற்றனமெ னத்தொழுது சொல்லு மளவிற்
      சோழ வம்சமிது சொன்னவறி வென்னவழகோ. 32
      காளி மகிழ்தல்
      210
      வையகமாங் குலமடந்தை மன்னபயன் தன்னுடைய மரபு கேட்டே
      ஐயனையான் பெற்றெடுத்த வப்பொழுதும் இப்பொழுதொ திருந்த தில்லை. 33
      காளி புகழ்தல்
      211
      உலகையெலாங் கவிக்கின்ற ஒருகவிகை சயதுங்கன் மரபு கீர்த்தி
      அலகையெலாங் காக்கின்ற அம்மைபூ தலங்காப்பா னவனே யென்ன. 34
      9. பேய் முறைப்பாடு
      பேய்களாக பிறந்து கெட்டோம்
      212
      ஆறுடைய திருமுடியா னருளுடைய பெருந்தேவி யபயன் காக்கும்
      பேறுடைய பூதமா பிறவாமற் பேய்களா பிறந்து கெட்டேம். 1
      எங்களை யார் காப்பார்
      213
      ஆர்காப்பா ரெங்களைநீ யறிந்தருளி காப்பதல்லா லடை பாழாம்
      ஊர்காக்க மதில்வேண்டா வுயிர்காத்த உடம்பினைவி டோடி போதும். 2
      பிழைக்க மாட்டோம்
      214
      ஓய்கின்றே மோய்வுக்கு மினியாற்றேம் ஒருநாளை கொருநாள் நாங்கள்
      தேய்கின்ற படிதேய்ந்து மிடுக்கற்றேஞ் செற்றாலு முய்ய மாட்டேம். 3
      ஆசை போதும்
      215
      வேகைக்கு விறகானே மெலியா நின்றே மெலிந்தவுடல் தடிப்பதற்கு விரகுங் காணேஞ்
      சாகைக்கி தனையாசை போதும் பாழிற் சாக்காடு மரிதாக தந்து வைத்தாய். 4
      பசிக்கு ஒன்றும் இல்லேம்
      216
      சாவத்தாற் பெறுதுமோ சதுமுகன்றான் கீழ்நாங்கண் மேனா செய்த
      பாவத்தா லெம்வயிற்றிற் பசியைவைத்தான் பாவியேம் பசிக்கொன் றில்லேம். 5
      மூளி வாய் ஆனோம்
      217
      பதடிகளா காற்றடிப்ப நிலைநி லாமற் பறக்கின்றேம் பசிக்கலைந்து பாதி நாக்கும்
      உதடுகளிற் பாதியுந்தின் றொறுவா யானேம் உனக்கடிமை யடியேமை யோட பாராய். 6
      நெற்றாகி யுள்ளோம்
      218
      அகளங்க னமக்கிரங்கா னரசரிடு திறைக்கருள்வா னவன்றன் யானை
      நிகளம்பூண் டனவடியேம் நெடும்பசியான் அறவுலர்ந்து நெற்றா யற்றேம். 7
      நற்குறியால் பொறுத்துள்ளோம்
      219
      மூக்கருகே வழுநாறி முடைநாறி உதடுகளு துடிப்ப வாயை
      ஈக்கதுவுங் குறியாலு திருக்கின்றேம் அன்றாகி லின்றே சாதும். 8
      முதுபேய் வருகை
      220
      என்றுபல கூளிகளி ரைத்துரைசெய் போ
      தன்றிமய வெற்பினிடை நின்றுவரு மப்பேய். 9
      முதுபேய் வணங்கி கூறல்
      221
      கைதொழுதி றைஞ்சியடி யேன்வடக லிங்க
      தெய்தியவி டத்துளநி மித்தமிவை கேண்மோ. 10
      தீய சகுனங்கள்
      222
      மதக்கரி மருப்பிற மதம்புலரு மாலோ
      மடப்பிடி மருப்பெழ மதம்பொழியு மாலோ
      கதிர்ச்சுடர் விளக்கொளி கறுத்தெரியு மாலோ
      காலமுகில் செங்குருதி காலவரு மாலோ. 11
      223
      வார்முரசி ருந்துவறி தேயதிரு மாலோ
      வந்திரவி லிந்திரவில் வானிலிடு மாலோ
      ஊர்மனையி லூமனெழ ஓரியழு மாலோ
      ஓமஎரி ஈமஎரி போல்கமழு மாலோ. 12
      224
      பூவிரியு மாலைகள் புலால்கமழு மாலோ
      பொன்செய்மணி மாலையொளி போயொழியு மாலோ
      ஓவிய மெலாமுடல் வியர்ப்பவரு மாலோ
      ஊறுபுனல் செங்குருதி நாறவரு மாலோ. 13
      விளைவு என்ன ஆகும்
      225
      எனாவுரைமு டித்ததனை யென்கொல்விளை வென்றே
      வினாவுரை தனக்கெதிர் விளம்பின ளணங்கே. 14
      இரு குறிகள் நல்லன
      226
      உங்கள் குறியும் வடகலிங்க துள்ள குறியு முமக்கழகே
      நங்கள் கணித பேய்கூறு நனவுங் கனவுஞ் சொல்லுவாம். 15
      பரணி போர் உண்டு
      227
      நிருபரணி வென்றவக ளங்கன்மத யானைநிக ளங்களொடு நிற்பன வதற்
      கொருபரணி உண்டென வுரைத்தன வுரைப்படி யுமக்கிது கிடைக்கு மெனவே. 16
      களிப்பால் நடித்தன
      228
      தடித்தன மெனத்தலை மெனப்பல தனிப்பனை குனிப்ப வெனவே
      நடித்தன நடிப்பவலி யற்றன கொடிற்றையு நனைத்தன உதட்டி னுடனே. 17
      பசியை மறந்தன
      229
      விலக்குக விளைத்தன வெனக்களி
      அலக்குக வலக்குக வடிக்கடி சிரித்தன வயர்த்தன பசித்த பசியே. 18
      வயிறு நிர போதுமா
      230
      ஆடியிரை தெழுகணங்க ளணங்கேயி கலிங்கக்கூழ்
      கூடியிரை துண்டொழியெங் கூடார போதுமோ. 19
      ஒட்டிக்கு இரட்டி
      231
      போதும்போ தாதெனவே புடைப்படல மிடவேண்டா
      ஓதஞ்சூ ழிலங்கைப்போர கொட்டிரட்டி கலிங்க போர். 20
      10. அவதாரம்
      திருமாலே தோன்றினான்
      232
      அன்றிலங்கை பொருதழித்த வவனே பாரதப்போர் முடித்து பின்னை
      வென்றிலங்கு கதிராழி விசயதரன் எனவுதித்தான் விளம்ப கேண்மின். 1
      233
      தேவரெலாங் குறையிரப்ப தேவகிதன் திருவயிற்றில் வசுதே வற்கு
      மூவுலகு தொழநெடுமால் முன்னொருநாள் அவதாரஞ் செய்த பின்னை. 2
      கண்ணனே குலோத்துங்கனானான்
      234
      இருள்முழுது மகற்றும்விது குலத்தோன் தேவி இகல்விளங்கு தபனகுல திராச ராசன்
      அருள்திருவின் திருவயிற்றில் வந்து தோன்றி ஆலிலையில் அவதரித்தா னவனே மீள. 3
      துந்துமி முழங்கிற்று
      235
      வந்தருளி யவதாரஞ் செய்தலுமே மண்ணுலகும் மறைகள் நான்கும்
      அந்தரநீங் கினவென்ன வந்தரது துமிமுழங்கி யெழுந்த தாங்கே. 4
      மலர்க்கையால் எடுத்தாள்
      236
      அலர்மழைபோல் மழைபொழிய வதுகண்டு கங்கைகொண்ட சோழன் தேவி
      குலமகள்தன் குலமகனை கோகனத மலர்க்கையா னெடுத்து கொண்டே. 5
      பாட்டியார் கருத்து
      237
      அவனிபர்க்கு புரந்தரனா மடையாளம் அவயவத்தி னடைவே நோக்கி
      இவனெமக்கு மகனாகி யிரவிகுலம் பாரிக்க தகுவ னென்றே. 6
      இருகுலத்து அரசரும் மகிழ்ந்தனர்
      238
      திங்களினி ளங்குழவி செம்மலிவ னென்றுஞ்
      செய்யபரி திக்குழவி யையனிவ னென்று
      தங்களின் மகிழ்ந்திரு குலத்தரசர் தாமு
      தனித்தனி யுவப்பதொர் தவப்பயனு மொத்தே. 7
      நடை கற்றான்
      239
      சினப்புலி வளர்ப்பதொர் சிறுப்புலியு மொத்தே
      திசைக்களி றணைப்பதொர் தனிக்களிறு மொத்தே
      அனைத்தறமு மொக்கவடி வைக்கவடி வைத்தே
      அறத்தொடு மறத்துறை நடக்கநடை கற்றே. 8
      ஐம்படை தாலி அணிந்தனன்
      240
      பண்டுவசு தேவன்மக னாகிநில மாதின்
      படர்களையு மாயனிவ னென்றுதௌி வெ
      தண்டுதனு வாள்பணில நேமியெனு நா
      தன்படைக ளானதிரு வைம்படை தரித்தே. 9
      மழலை மொழிந்தான்
      241
      தாயர்தரு பால்முலை சுரக்கவரு நாளே
      தானுமுல கத்தவர்த மக்கருள்சு ரந்தே
      தூயமனு வுஞ்சுருதி யும்பொருள்வி ளங்கி
      சொற்கள்தெரி யத்தனது வித்தே. 10
      பூணூல் அணிந்தான்
      242
      திருமார்பின் மலர்மடந்தை திருக்கழுத்தின் மங்கலநா ணென்ன முந்நூற்
      பெருமார்பின் வந்தொளிர பிறப்பிரண்டா வதுபிறந்து சிறந்த பின்னர். 11
      மறை கற்றான்
      243
      போதங்கொள் மாணுருவா புவியிரந்த அஞ்ஞான்று புகன்று சென்ற
      வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டு கற்றே. 12
      வீர வாள் ஏந்தினான்
      244
      நிறைவாழ்வை பெறல்நமக்கும் அணித்தென்று நிலப்பாவை களிப்ப விந
      துறைவாளை புயத்திருத்தி யுடைவாளை திருவரையி னொளிர வைத்தே. 13
      யானையேற்றம் கற்றான்
      245
      ஈரிரும ருப்புடைய வாரணமு கைத்தே இந்திரனெ திர்ந்தவரை வென்றுவரு மேயான்
      ஓரிரும ருப்புடைய வாரணமு கைத்தே ஒன்னலரை வெல்வனென வன்னதுப யின்றே. 14
      குதிரையேற்றம் பயின்றான்
      246
      இற்றைவரை யுஞ்செலவ ருக்கனொரு நாள்போல் ஏழ்பரியு கைத்திருள கற்றிவரு மேயான்
      ஒற்றைவய மானடவி யித்தரைவ ளாக துற்றவிருள் தீர்ப்பனென மற்றதுப யின்றே. 15
      படைக்கலம் பயின்றான்
      247
      சக்கரமு தற்படையொ ரைந்துமுதல் நாளே தன்னுடைய வானவத னாலவைந மக்கு
      திக்குவிச யத்தின்வரு மென்றவைப யிற்றி செங்கைமலர் நொந்திலசு மந்திலத னக்கே. 16
      பல்கலை தேர்ந்தான்
      248
      உரைசெய்பல கல்விகளி னுரிமைபல சொல்லுவதெ னுவமையுரை செய்யி னுலக
      தரசருள ரல்லரென அவைபுகழ மல்குகலை யவையவைகள் வல்ல பிறகே. 17
      இளவரசன் ஆனான்
      249
      இசையுடனெ டுத்தகொடி யபயனவ னிக்கிவனை யிளவரசில் வைத்த பிறகே
      திசையரச ருக்குரிய திருவினைமு கப்பதொரு திருவுளம டுத்த ருளியே. 18
      போர்மேல் சென்றான்
      250
      வளர்வதொர்ப தத்தினிடை மதகரிமு கத்தினிடை
      வளையுகிர்ம டுத்து விளையா
      டிளவரியெ னப்பகைஞ ரெதிர்முனைக
      ளைக்கிழிய எறிபடைபி டித்த ருளியே. 19
      வடவரசரை வென்றான்
      251
      குடதிசை புகக்கடவு குரகதர
      தத்திரவி குறுகலு மெறிக்கு மிருள்போல்
      வடதிசை முகத்தரசர் வருகத
      முகத்தனது குரகத முகை தருளியே. 20
      வயிராகரத்தை எறித்தான்
      252
      புரமெரி மடுத்தபொழு ததுவிது வெனத்திகிரி புகையெரி குவிப்ப வயிரா
      கரமெரி மடுத்தரசர் கரமெதிர் குவிப்பதொரு கடவரை தனை கடவியே. 21
      களம் கொண்டான்
      253
      குளமுதிர மெத்தியதொர் குரைகடல்
      கடுப்பவெதிர் குறுகலர்கள் விட்ட குதிரை
      தளமுதிர வெட்டியொரு செருமுதிர
      ஒட்டினர்கள் தலைமலை குவி தருளியே. 22
      சக்கரக்கோட்டம் அழித்தான்
      254
      மனுக்கோட்ட மழித்தபிரான் வளவர்பிரான் திருப்புருவ
      தனுக்கோட்ட நமன்கோட்டம் பட்டதுச கரக்கோட்டம். 23
      சீதனம் பெற்றான்
      255
      சரிக ளந்தொறு தங்கள் சயமகள் தன்னை மன்னப யன்கை பிடித்தலும்
      பரிக ளுங்களி றுந்தன ராசியும் பாரி போகங் கொடுத்தனர் பார்த்திபர். 24
      கைவேல் சிவந்தது
      256
      பொருத ராதிபர் கண்கள் சிவந்தில போரி லோடிய கால்கள் சிவந்தன
      விருத ராசப யங்கரன் செங்கையில் வேல்சி வந்தது கீர்த்தி வெளுத்ததே. 25
      வீரராசேந்திரன் இறந்தான்
      257
      மாவுகை தொருதனி யபய னிப்படி வடதிசை மேற்செல மன்னர் மன்னவன்
      தேவரு கரசனாய் விசும்பின் மேற்செல தென்றிசை குப்புகு தன்மை செப்புவாம். 26
      சோழ நாட்டில் நிகழ்ந்தவை
      258
      மறையவர் வேள்வி குன்றி மனுநெறி யனைத்து மாறி
      துறைகளோ ராறு மாறி சுருதியு முழக்கம் ஓய்ந்தே. 27
      259
      சாதிக ளொன்றொ டொன்று தலைதடு மாறி யாரும்
      ஓதிய நெறியின் நில்லா தொழுக்கமும் மறந்த போயே. 28
      260
      ஒருவரை யொருவர் கைம்மி கும்பர்தங் கோயில் சோம்பி
      அரிவையர் கற்பின் மாறி யரண்களு மழிய வாங்கே. 29
      சோழநாடு அடைந்தான்
      261
      கலியிருள் பரந்த காலை கரக்க தோன்றும்
      ஒலிகட லருக்க னென்ன உலகுய்ய வந்து தோன்றி. 30
      நீதியை நிலைநிறுத்தினான்
      262
      காப்பெலா முடைய தானே படைப்பதுங் கடனா கொண்டு
      கோப்பெலாங் குலைந்தோர் தம்மை குறியிலே நிறுத்தி வைத்தே. 31
      திரு முழுக்கு
      263
      விரிபுனல் வேலை நான்கும் வேதங்க ணான்கு மார்ப்ப
      திரிபுவ னங்கள் வாழ திருவபி டேகஞ் செய்தே. 32
      முடி புனைதல்
      264
      அறைகழ லரச ரப்பொழு தடிமிசை யறுகெ டுத்திட
      மறையவர் முடியெ டுத்தனர் மனுநெறி தலையெ டுக்கவே. 33
      அறம் முளைத்தன
      265
      நிரைமணி பலகு யிற்றிய நெடுமுடி மிசைவி திப்படி
      சொரிபுன லிடைமு ளைத்தன துறைகளி னறம னைத்துமே. 34
      புலிக்கொடி எடுத்தான்
      266
      பொதுவற வுலகு கைக்கொடு புலிவளர் கொடியெ டுத்தலும்
      அதுமுதற் கொடியெ டுத்தன அமரர்கள் முழவெ டுக்கவே. 35
      நிலவு எறித்தது இருள் ஒளித்தது
      267
      குவிகைகொ டரசர் சுற்றிய குரைகழ லபயன் முத்தணி
      கவிகையி னிலவெ றித்தது கலியெனு மிருளொ ளித்ததே. 36
      குடை நிழலின் செயல்
      268
      அரனுறை யும்படி மலைகள் அடைய விளங்கின வனையோன்
      ஒருதனி வெண்குடை யுலகில் ஒளிகொள் நலந்தரு நிழலில். 37
      புகழ் மேம்பாடு
      269
      அரிதுயி லும்படி கடல்கள் அடைய விளங்கின கவினின்
      ஒருகரு வெங்கலி கழுவி உலவு பெரும்புகழ் நிழலில். 38
      270
      நிழலில டைந்தன திசைகள் நெறியில மறைகள்
      கழலில டைந்தனர் உதியர் கடலில செழியர். 39
      271
      கருணையொ டுந்தன துபய கரமுத வும்பொருள் மழையின்
      அரணிய மந்திர அனல்கள் அவையுத வும்பெரு மழையே. 40
      272
      பரிசில் சுமந்தன கவிகள் பகடு திறைகள்
      அரசு சுமந்தன இறைகள் அவனி புயமும். 41
      273
      விரித்த வாளுகிர் விழி தழற்புலியை மீது வைக்கவிம யத்தினை
      திரித்த கோலில்வளை வுண்டு நீதிபுரி செய்ய வில்லையே. 42
      274
      கதங்க ளிற்பொரு திறைஞ்சிடா வரசர் கால்க ளிற்றளையும் நூல்களின்
      பதங்க ளிற்றளையு மன்றி வேறொரு ளிற்றளைக ளில்லையே. 43
      275
      மென்க லாபமட வார்கள் சீறடி மிசைச்சி லம்பொலிவி ளைப்பதோர்
      இன்க லாம்விளைவ தன்றி யெங்குமொர் இகல்க தில்லையே. 44
      பொழுது போக்கு
      276
      வருசெருவொன் றின்மையினால் மற்போருஞ் சொற்புலவோர் வாத போரும்
      இருசிறைவா ரணப்போரு மிகன்மதவா மினைய கண்டே. 45
      277
      கலையினொடுங் கலைவாணர் கவியினொடும் இசையினொடுங் காதன் மாதர்
      முலையினொடு மனுநீதி முறையினொடு மறையினொடும் பொழுது போக்கி. 46
      பரிவேட்டையாட நினைத்தான்
      278
      காலாற்றண் டலையுழக்குங் காவிரியின் கரைமருங்கு வேட்டை யாடி
      பாலாற்றங் கரைமருங்கு பரிவேட்டை ஆடுதற்கு பயண மென்றே. 47
      படை திரண்டது
      279
      முரசறைகென் றருளுதலு முழுதுலகும் ஒருநகரு புகுந்த தொப்ப
      திரைசெய்கட லொலியடங்க திசைநான்கிற் படைநான்கு திரண்ட வாங்கே. 48
      வேட்டைக்கு புறப்பட்டான்
      280
      அழகின்மே லழகுபெற வணியனைத்தும் அணிந்தருளி கணித நூலிற்
      பழகினார் தெரிந்துரைத்த பழுதறுநா பழுதற்ற பொழு தாங்கே. 49
      தானம் அளித்தான்
      281
      அனக தானதரு மங்கண்மறை மன்னர் பெறவே
      அபய தானமப யம்புகுது மன்னர் பெறவே
      கனக தானமுறை நின்றுகவி வாணர் பெறவே
      கரட தானமத வாரணமு மன்று பெறவே. 50
      யானைமேல் ஏறினான்
      282
      மற்ற வெங்கட களிற்றினுத யக்கி ரியின்மேல்
      மதிக வித்திட வுதித்திடு மருக்க னெனவே
      கொற்ற வெண்குடை கவிப்பமிசை கொண்டு கவரி
      குலம திப்புடை கவித்தநில வொத்து வரவே. 51
      பல்லியம் முழங்கின
      283
      ஒருவ லம்புரி தழங்கொலி முழங்கி யெழவே
      உடன் முழங்குபணி லம்பல முழங்கி யெழவே
      பருவம் வந்துபல கொண்டல்கண் முழங்கி யெழவே
      பலவி தங்களொடு பல்லிய முழங்கி எழவே. 52
      வேறு பல ஒலிகள் எழுந்தன
      284
      மன்னர் சீர்சய மிகுத்திடை விடாத வொலியும்
      மறைவ லாளர்மறை நாள்வயின் வழாத வொலியும்
      இன்ன மாகடல் முழங்கியெழு கின்ற வொலியென்
      றிம்ப ரும்பரறி யாதபரி செங்கு மிகவே. 53
      ஏழிசைவல்லபியும் உடனிருந்தாள்
      285
      வாழி சோழகுல சேகரன் வகுத்த இசையின்
      மதுர வாரியென லாகுமிசை மாத ரிதெனா
      ஏழு பாருலகொ டேழிசை வளர்க்க உரியாள்
      யானை மீதுபிரி யாதுட னிருந்து வரவே. 54
      தியாகவல்லியும் சென்றாள்
      286
      பொன்னின் மாலைமலர் மாலைபணி மாறி யுடனே
      புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ்பிடி வர
      சென்னி யாணையுடன் ஆணையை நடத்து முரிமை
      தியாக வல்லிநிறை செல்வியுடன் மல்கி வரவே. 55
      மகளிரும் மன்னரும் சூழ வருதல்
      287
      பிடியின் மேல்வரு பிடிக்குல மநேக மெனவே
      பெய்வ ளைக்கைமட மாதர்பிடிமீதின் வரவே
      முடியின் மேன்முடி நிரைத்துவரு கின்ற தெனவே
      முறைசெய் மன்னவர்கள் பொற்குடை கவித்து வரவே. 56
      அரசரோடு வீரர் சூழ்ந்து வரல்
      288
      யானை மீதுவரும் யானையு மநேக மெனவே
      அடுக ளிற்றின்மிசை கொண்டர சநேகம் வரவே
      சேனை மீதுமொரு சேனைவரு கின்ற தெனவே
      தௌிப டைக்கலன் நிலாவொளி படைத்து வரவே. 57
      முரசொலியும் கொடிநிரலும்
      289
      முகிலின் மேன்முகின் முழங்கிவரு கின்ற தெனவே
      மூரி யானைகளின் மேன்முரச திர்ந்து வரவே
      துகிலின் மேல்வரு துகிற்குலமு மொக்கு மெனவே
      தோகை நீள்கொடிகள் மேன்முகில் தொடங்கி வரவே. 58
      புழுதி எழுந்தது
      290
      தேரின் மீதுவரு தேர்களு மநேக மெனவே
      செம்பொன் மேகலை நிதம்பநிரை தேரின் வரவே
      பாரின் மீதுமொரு பாருளது போலு மெனவே
      படல தூளியு மெழுந்திடையின் மூடி வரவே. 59
      படை செல்லும் காட்சி
      291
      யானை மேலிளம் பிடியின் மேனிரை
      திடைய றாதுபோ மெறிக டற்கிணை
      சேனை மாகடற் கபய னிம்முறை
      சேது பந்தனஞ் செய்த தொக்கவே. 60
      பல்லக்கும் முத்து குடையும்
      292
      நீல மாமணி சிவிகை வெள்ளமும் நித்தி லக்குல கவிகை வெள்ளமுங்
      காலி னான்வரும் யமுனை வெள்ளமுங் கங்கை காண்மி னென்னவே. 61
      புலிக்கொடி சிறப்பு
      293
      கெண்டை மாசுண முவணம் வாரணங் கேழ லாளிமா மேழி கோழிவிற்
      கொண்ட வாயிரங் கொடிநு டங்கவே குமுறு வெம்புலி கொடிகு லாவவே. 62
      மகளிர் கூட்டம்
      294
      தொடைகள் கந்தரம் புடைகொள் கொங்கைகண்
      சோதி வாண்முகங் கோதை யோதிமென்
      நடைகண் மென்சொலென் றடைய வொப்பிலா
      நகை மணிக்கொடி தொகைப ரக்கவே. 63
      மகளிர் தோற்றம்
      295
      எங்குமுள மென்கதலி யெங்குமுள
      தண்கமுக மெங்குமுள பொங்கு மிளநீர்
      எங்குமுள பைங்குமிழ்க ளெங்குமுள
      செங்குமுத மெங்குமுள செங்க யல்களே. 64
      296
      ஆறலைத ரங்கமுள வன்னநடை தாமுமுள
      வாலைகமழ் பாகு முளவாய்
      வேறுமொரு பொன்னிவள நாடுசய
      துங்கன்முன்வி தித்ததுவு மொக்கு மெனவே. 65
      மலை காட்சி
      297
      வேழம்நிரை வென்றுமலை யெங்குமிடை
      கின்றவயில் வென்றியப யன்ற னருளால்
      வாழவப யம்புகுது சேரனொடு
      கூடமலை நாடடைய வந்த தெனவே. 66
      298
      அக்கிரிகு லங்கள்விடு மங்குலியின்
      நுண்திவலை யச்செழிய ரஞ்சி விடு
      திக்கிலுள நித்திலமு கந்துகொடு
      வீசியொரு தென்றல்வரு கின்ற தெனவே. 67
      தில்லை கூத்தனை வணங்கினான்
      299
      தென்றிசையி னின்றுவட திக்கின்முகம்
      வைத்தருளி முக்கணுடை வெள்ளி மலையோன்
      மன்றினட மாடியருள் கொண்டுவிடை
      கொண்டதிகை மாநகருள் விட்ட ருளியே. 68
      காஞ்சியை அடைந்தான்
      300
      விட்டவதி கைப்பதியி னின்றுபய
      ணம்பயணம் விட்டுவிளை யாடி யபயன்
      வட்டமதி யொத்தகுடை மன்னர்தொழ
      நண்ணினன்வ ளங்கெழுவு கச்சி நகரே. 69
      கலிங்கப்பேய் ஓடிவந்தது
      301
      என்னுமித னன்மொழியெ டுத்திறைவி சொல்லுவதன் முன்னமிகல் கண்ட தொருபேய்
      தன்னுடைய கால்தனது பிற்பட மனத்துவகை தள்ளிவர வோடி வரவே. 70
      கலிங்க பேயின் மொழிகள்
      302
      கலிங்கர் குருதி கலிங்க மடைய வடைய
      மெலிந்த வுடல்கள் தடிமின் தடிமின்.
      303
      உணங்கள் வயிறு குளிர உவந்து பருக
      கணங்க ளெழுக வெழுக வெழுக.
      304
      என்செ பாவி காளிங் கிருப்பதங் கிருப்ப முன்னே
      வன்சிறை கழுகும் பாறும் வயிறுகள் பீறி போன. 73
      305
      வயிறுக ளென்னிற் போதா வாய்களோ பண்டை
      எயிறுக ளென்னிற் போதா என்னினு மீண்ட போதும். 74
      306
      சிரமலை விழுங்க செந்நீர திரைகடல் பருக லாக
      பிரமனை வேண்டி பின்னும் பெரும்பசி பெறவும் வேண்டும். 75
      பேய்களின் பேரின்பம்
      307
      என்ற வோசை தஞ்செ வி கிசைத்த லுந்த சைப்பிண
      தின்ற போற்ப ருத்து மெய் சிரித்து மேல்வி ழுந்துமே. 76
      308
      ஓகை சொன்ன பேயின் வாயை ஓடி முத்த முண்ணுமே
      சாகை சொன்ன பேய் களை தகர்க்க பற்க ளென்னுமே. 77
      309
      பிள்ளை வீழ வும்பெ ரு துணங்கை கொட்டுமே
      வள்ளை பாடி யாடி யோடி வாவெனாவ ழைக்குமே. 78
      310
      எனாவு ரைத்த தேவி வாழி யென்று வாழ்த்தியே
      கனாவு ரைத்த பேயி னைக்க ழுத்தி னிற்கொ டாடுமே. 79
      காளி போர்நிலை கேட்டல்
      311
      ஆடிவரு பேய்களின லந்தலைத விர்த்தடுப றந்தலைய றிந்த தனினின்
      றோடிவரு பேயையிக லுள்ளபடி சொல்கெனவு ரைத்தனளு ரைத்த ருளவே. 80
      11.காளிக்கு கூளி கூறியது
      நாவாயிரம் நாளாயிரம்
      312
      மாவா யிரமும் படக்கலிங்கர் மடிந்த களப்போ ருரைப்போர்க்கு
      நாவா யிரமுங் கேட்போர்க்கு நாளா யிரமும் வேண்டுமால். 1
      சிறியேன் விண்ணப்பம்
      313
      ஒருவர கொருவாய் கொண்டு ரைக்க ஒண்ணா தேனு முண்டாகுஞ்
      செருவை சிறியேன் விண்ணப்பஞ் செ சிறிது கேட்டருளே. 2
      காஞ்சனம் பொழிகாஞ்சி
      314
      பாரெ லாமுடை யானப யன்கொடை பங்க யக்கர மொப்பென பண்டொர்நாள்
      காரெ லாமெழு தேழரை நாழிகை காஞ்ச னம்பொழி காஞ்சிய தன்கணே. 3
      சித்திர மண்டபத்தில்
      315
      அம்பொன் மேருவ துகொலி துகொலென் றாயி ரங்கதிர் வெய்யவ னையுறுஞ்
      செம்பொன் மாளிகை தென்குட திக்கினிற் செய்த சித்திர மண்டப தன்னிலே. 4
      நித்தில பந்தரின்கீழ்
      316
      மொய்த்தி லங்கிய தாரகை வானின்நீள் முக டெழுந்த முழுமதி கொப்பென
      நெய்த்தி லங்கிய நித்தில பந்தரின் நின்று வெண்குடை யொன்று நிழற்றவே. 5
      குடையும் சாமரையும்
      317
      மேற்க வித்த மதிக்குடை யின்புடை வீசு கின்றவெண் சாமரை தன்றிரு
      பாற்க டற்றிரை யோரிரண் டாங்கிரு பாலும் வந்து பணிசெய்வ போலுமே. 6
      சிங்க ஏறு
      318
      அங்கண் ஞால மனைத்தும் புயத்தில்வை தாட கக்கிரி யிற்புலி வைத்தவன்
      சிங்க ஆசன தேறி யிருப்பதோர் வேறென செவ்வி சிறக்கவே. 7
      இருந்த மாட்சி
      319
      பணி பணத்துறை பார்க்கொரு நாயகன் பல்க லைத்துறை நாவிலி ருந்தவன்
      மணிப்ப ணிப்பு தேசிங்க வாகனி வந்து செந்திரு மாதொடி ருக்கவே. 8
      தேவியர் சேவித்திருந்தனர்
      320
      தரும டங்கமு கந்துத னம்பொழி தன்பு யம்பிரி யாச்ச பாவையு
      திரும டந்தையும் போற்பெரும் புண்ணியஞ் செய்த தேவியர் சேவி திருக்கவே. 9
      ஏவற் பெண்டிர்
      321
      நாட காதிநி ருத்தம னைத்தினு நால்வ கைப்பெரும் பண்ணினு மெண்ணிய
      ஆடல் பாடல ரம்பைய ரொக்குமவ் வணுக்கி மாரும நேகரி ருக்கவே. 10
      புகழ் பாடுவோம்
      322
      சூதர் மாகத ராதிய மாந்தரு துய்ய மங்கல பாடகர் தாமுநின்
      பாத மாதர ராயவர் கட்கெலாம் பைம்பொன் மௌலியெ னப்புகழ் பாடவே. 11
      இசை வல்லார் போற்றினர்
      323
      வீணை யாழ்குழல் தண்ணுமை வல்லவர் வேறு வேறிவை நூறுவி தம்பட
      காண லாம்வகை கண்டனம் நீயினி காண்டல் வேண்டுமெ னக்கழல் போற்றவே. 12
      கல்வியில் பிழை
      324
      தாள முஞ்செல வும்பிழை யாவகை தான் வகுத்தன தன்னெதிர் பாடியே
      காள முங்களி றும்பெறும் பாணர்தங் கல்வி யிற்பிழை கண்டனன் கேட்கவே. 13
      மன்னவர் பணிமாறினர்
      325
      வெங்க ளிற்றிலி ழிந்தபின் வந்தடி வீழ்ந்த மன்னவர் வெந்நிடு முன்னிடு
      தங்கள் பொற்குடை சாமர மென்றிவை தாங்கள் தங்கர தாற்பணி மாறவே. 14
      மன்னர் மனைவியர் சேடியர்
      326
      தென்ன ராதிந ராதிப ரானவர் தேவி மார்கள்தன் சேடிய ராகவே
      மன்ன ராதிபன் வானவ வந்தி ருந்தன னென்னவி ருக்கவே. 15
      அமைச்சர் முதலியோர்
      327
      மண்ட லீகரு மாநில வேந்தரும் வந்து ணங்குக டைத்தலை வண்டைமன்
      தொண்டை மான்முதல் மந்திர பாரகர் சூழ்ந்து தன்கழல் சூடியி ருக்கவே. 16
      கப்பம் செலுத்த சென்றனர்
      328
      முறையி டத்திரு மந்திர ஓலையாண் முன்வ ணங்கிமு ழுவதும் வேந்தர்த
      திறையி டப்புற நின்றன ரென்றலுஞ் செய்கை நோக்கிவ தெய்தியி ருக்கவே. 17
      கூடியிருந்த அரசர்கள்
      329
      தென்னவர் வில்லவர் கூபகர் சாவகர் சேதிபர் யாதவரே
      கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே. 18
      330
      கங்கர் கராளர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் துளும்பர்களே
      வங்க ரிலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே. 19
      331
      சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவ ரையணரே
      கொங்கணர் கொங்கர் குலிங்கர் சவுந்தியர் குச்சரர் கச்சியரே. 20
      332
      வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர்மி லேச்சர்களே
      குத்தர் குணத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே. 21
      333
      எந்நக ரங்களு நாடு மெமக்கருள் செய்தனை யெம்மையிட
      சொன்னத னங்கள்கொ ணர்ந்தன மென்றடி சூடுக ரங்களொடே. 22
      திறை பொருள்கள்
      334
      ஆர மிவையிவை பொற்கலம் ஆனை யிவையிவை ஒட்டகம்
      ஆட லயமிவை மற்றிவை ஆதி முடியொடு பெட்டகம்
      ஈர முடையன நித்திலம் ஏறு நவமணி கட்டிய
      ஏக வடமிவை மற்றிவை யாதும் விலையில் பதக்கமே. 23
      335
      இவையு மிவையு மணித்திரள் இனைய விவைகன கக்குவை
      இருளும் வெயிலு மெறித்திட இலகு மணிமக ரக்குழை
      உவையு முவையுமி லக்கணம் உடைய பிடியிவை யுள்பக
      டுயர்செய் கொடியிவை மற்றிவை உரிமை யரிவையர் பட்டமே. 24
      336
      ஏறி யருளவ டுக்குமி நூறு களிறுமி வற்றெதிர்
      ஏனை யரசரொ ருத்தரோர் ஆனை யிடுவரெ னிற்புவி
      மாறி யருளவ வர்க்கிடை யாமு மிசைவமெ னப்பல
      மான வரசர்த னித்தனி வாழ்வு கருதியு ரைப்பரே. 25
      உளர் கொல்
      337
      அரச ரஞ்சலென வடியி ரண்டுமவர் முடியின் வைத்தருளி யரசர்மற்
      றுரைசெ யுந்திறைக ளொழிய நின்றவரும் உளர்கொ லென்றருளு பொழுதிலே. 26
      திருமந்திர ஓலையின் மறுமொழி
      338
      கடகர் தந்திறைகொ டடைய வந்தரசர் கழல்வ ணங்கினர்க ளிவருடன்
      வடக லிங்கர்பதி யவனி ரண்டுவிசை வருகி லன்றிறைகொ டெனலுமே. 27
      முறுவல் கொண்டான்
      339
      உறுவ தென்கொலென நிலைகு லைந்தரசர் உயிர் நடுங்கவொளிர் பவளவாய்
      முறுவல் கொண்டபொரு ளறிகி லஞ்சிறிது முனிவு கொண்டதிலை வதனமே. 28
      குலோத்துங்கனின் கட்டளை
      340
      எளிய னென்றிடினும் வலிய குன்றரணம் இடிய நம்படைஞர் கடிதுசென்
      றளிய லம்புமத மலைகள் கொண்டணைமின் அவனை யுங்கொணர்மி னெனலுமே. 29
      தொண்டைமான் எழுந்தான்
      341
      இறைமொ ழிந்தளவி லெழுக லிங்கமவை எறிவ னென்றுகழல் தொழுதனன்
      மறைமொ ழிந்தபடி மரபின் வந்தகுல திலகன் வண்டைநக ரரசனே. 30
      விடை அளித்தான்
      342
      அடைய வத்திசை பகைது கைப்பனென் றாசை கொண்டடற் தொண்டைமான்
      விடையெ னக்கென புலியு யர்த்தவன் விடைகொ டுக்கவ பொழுதிலே. 31
      படைகள் திரண்டன
      343
      கடல்க லக்கல்கொன் மலையி டித்தல்கொல் கடுவி டப்பொறி பணபணி
      பிடரொ டித்தல்கொல் படைநி னைப்பென பிரள யத்தினிற் றிரளவே. 32
      திசை யானைகள் செவிடுபட்டன
      344
      வளைக லிப்பவு முரசொ மரமி ரட்டவும் வயிரமா
      தொளையி சைப்பவு திசையி பச்செவி தொளைய டைத்தலை தொடரவே. 33
      இருள் பரந்தது
      345
      குடைநி ரைத்தலிற் றழைநெ ருக்கலிற் கொடிவி ரித்தலிற் குளிர்ச துக்கமொ
      திடைநி ரைத்தலிற் பகல்க ரப்பவு திருநி லப்பர பிருள்ப ரக்கவே. 34
      ஒளி பிறந்தது
      346
      அலகில் கட்டழற் கனல்வி ரித்தலால் அரிய பொற்பணி கலனெ றித்தலால்
      இலகு கைப்படை கனல்வி ரித்தலால் இருள்க ரக்கவே யொளிப ரக்கவே. 35
      கண்டவர் வியப்பு
      347
      அகில வெற்புமின் றானை யானவோ அடைய மாருதம் புரவி
      முகில னைத்து தேர்க ளானவோ மூரி வேலைபோர் வீர ரானவோ. 36
      படையின் பரப்பு
      348
      பார்சி றுத்தலிற் படைபெ ருத்ததோ ருத்தலிற்
      நேர்செ றுத்தவர கரிது நிற்பிடம் நெடுவி சும்பலா லிடமு மில்லையே. 37
      படை பொறுமை இழந்தது
      349
      எனவெ டுத்துரை ததிச யித்துநின் றினைய மண்ணுளோ ரனைய விண்ணுளோர்
      மனந டுக்குற பொறைம றத்தலான் மாதி ரங்களிற் சாது ரங்கமே. 38
      யானைகள் சென்றன
      350
      கடல்க ளைச்சொரி மலையுள வெனவிரு கடத டத்திடை பொழிமத முடையன
      கனல்வி ளைப்பன முகிலுள வெனவிழி கனல்சி னத்தன கரியொடு பரிகளின்
      உடல்பி ளப்பன பிறைசில வுளவென உயர்ம ருப்பின வுலகுகள் குலைதர
      உருமி டிப்பன வடவன லுளவென ஒலிமு கிற்கட கரிகளு மிடையவே. 39
      குதிரைகள் சென்றன
      351
      முனைக ளொட்டினர் முடியினை யிடறுவ முடியின் முத்தினை விளைபுக ழெனநில
      முதுகில் வித்துவ நிலமுறு துகளற முகின்மி திப்பன முகில்விடு துளியொடு
      கனை கடற்றிரை நிரையென விரைவொடு கடலி டத்தினை வலமிடம் வருவன
      கடலி டத்திறு மிடியென வடியிடு கவன மிக்கன கதழ்பரி கடுகவே. 40
      தேர்கள் சென்றன
      352
      இருநி லத்திட ருடைபடு முருளன இருபு டைச்சிற குடையன முனைபெறின்
      எதிர்ப றப்பன விடுநுக மொடுகடி திவுளி முற்படி னிதுபரி பவமெனும்
      ஒருநி னைப்பினை யுடையன வினையன உயர்செய் மொட்டொடு மலரென நிறுவிய
      ஒழித ரச்செரு வுறுபுன லுமிழ்வன உலக ளப்பன விரதமு மருவியே. 41
      வீரர்கள் சென்றனர்
      353
      அலகில் வெற்றியு முரிமையு மிவையென
      அவய வத்தினி லெழுதிய வறிகுறி
      அவையெ னப்பல வடு நிரை யுடையவர்
      அடிபு றக்கிடி லமரர்த முலகொடிவ்
      வுலகு கைப்படு மெனினும தொழிபவர்
      உடல் நமக்கொரு சுமையென முனிபவர்
      உயிரை விற்றுறு புகழ்கொள வுழல்பவர்
      ஒருவ ரொப்பவர் படைஞர்கண் மிடையவே. 42
      வீரர் சிரிப்பொலி
      354
      விழித்த விழிதனி விருதர்கள் விடைத்து வெடுவெடு சிரித்தவாய்
      தெழித்த பொழுதுடல் திமிர்க்க விமையவர் திகைக்கண் மதகரி திகைக்கவே. 43
      குதிரைகளின் வாய்நுரை
      355
      உகத்தின் முடிவினி லுகைத்த கனைகடல் உவட்டி யெனமுகில் முகட்டின்மேல்
      நகைத்த விடுபரி முகக்கண் நுரைசுர நதிக்கண் நுரையென மிதக்கவே. 44
      யானைகளின் பிளிறல் ஒலி
      356
      கழப்பில் வௌில்சுளி கதத்தி லிருகவுள் கலித்த கடமிடி பொறுத்த போர
      குழப்பி வருமுகின் முழக்கி லலைகடல் குளிக்கு முகில்களு மிடக்கவே. 45
      தேர்ப்படைகளின் ஒலி
      357
      கடுத்த விசையிருள் கொடுத்த வுலகொரு கணத்தில் வலம்வரு கணிப்பில் தேர்
      எடுத்த கொடிதிசை யிபத்தின் மதமிசை இருக்கு மளிகளை யெழுப்பவே. 46
      எழுந்தது சேனை
      358
      எழுந்தது சேனை யெழலு மிரிந்தது பாரின் முதுகு
      விழுந்தன கானு மலையும் வெறுந்தரை யான திசைகள். 47
      அதிர்ந்தன திசைகள்
      359
      அதிர்ந்தன நாலு திசைகள் அடங்கின ஏழு கடல்கள்
      பிதிர்ந்தன மூரி மலைகள் பிறந்தது தூளி படலம். 48
      புழுதியால் வறண்டன
      360
      நிலந்தரு தூளி பருகி நிறைந்தது வானின் வயிறு
      வலந்தரு மேக நிரைகள் வறந்தன நீர்கள் சுவறி. 49
      புழுதி தணிந்தது
      361
      தயங்கொளி ஓடை வரைகள் தருங்கடம் தாரை மழையின்
      அயங்களின் வாயின் நுரையின் அடங்கின தூளி அடைய. 50
      இரவு தங்கி பகலில் சென்றன
      362
      எழுதூ ளியடங் கநட து தேகு திசைகண் டதுமீ ளவிழும்
      பொழுதே கலொழி துகடற் படையெ பொழுது தவிரா துவழி கொளவே. 51
      கருணாகரன் சென்றான்
      363
      தண்ணா ரின்மலர திரள்தோ ளபயன் தானே வியசே னைதன கடை
      கண்ணா கியசோ ழன்ச கரமாம் கருணா கரன்வா ரணமேற் கொளவே. 52
      பல்லவ அரசன் சென்றான்
      364
      தொண்டை யர்க்கரசு முன்வ ருஞ்சுரவி துங்க வெள்விடையு யர்த்தகோன்
      வண்டை யர்க்கரசு பல்ல வர்க்கரசு மால்க ளிற்றின்மிசை கொள்ளவே. 53
      அரையனும் சோழனும் சென்றனர்
      365
      வாசி கொண்டரசர் வார ணங்கவர வாண கோவரையன் வாண்முக
      தூசி கொண்டுமுடி கொண்ட சோழனொரு சூழி வேழமிசை கொள்ளவே. 54
      போர்மேற் செல்லல்
      366
      மறித்தோடி யெவ்வரசுஞ் சரிய வென்று
      வருமனுக்கை பல்லவர்கோன் வண்டை வேந்தன்
      எறித்தோடை யிலங்குநடை களிற்றின் மேற்கொண்
      டிரைவேட்ட பெரும்புலிபோ லிகன்மேற் செல்ல. 55
      ஆறு பல கடந்தனர்
      367
      பாலா றுகுசை தலைபொன் முகரி பழவா றுபடர தெழுகொல் லியெனும்
      நாலா றுமகன் றொருபெண் ணையெனும் நதியா றுகட துநட துடனே. 56
      368
      வயலா றுபுகு துமணி புனல்வாய் மண்ணா றுவளங் கெழுகுன் றியெனும்
      பெயலா றுபர துநிறை துவரும் பேரா றுமிழி ததுபிற் படவே. 57
      369
      கோதா வரிநதி மேலா றொடுகுளிர் பம்பா நதியொடு சந்தப்பேர்
      ஓதா வருநதி யொருகோ தமையுடன் ஒலிநீர் மலிதுறை பிறகாக. 58
      சூறையிடல்
      370
      கடையிற் புடைபெயர் கடலொ தமரர் கலங்கும் பரிசு கலிங்கம்பு
      கடை படரெரி கொளுவி பதிகளை அழி சூறைகொள் பொழுதத்தே. 59
      கலிங்கர் நடுக்கம்
      371
      கங்கா நதியொரு புறமா கப்படை கடல்போல் வந்தது கடல்வந்தால்
      எங்கே புகலிட மெங்கே யினியரண் யாரே அதிபதி யிங்கென்றே. 60
      372
      இடிகின் றனமதி லெரிகின் றனபதி எழுகின் றனபுகை பொழிலெல்லாம்
      மடிகின் றனகுடி கெடுகின் றனமினி வளைகின் றனபடை பகையென்றே. 61
      முறையீடு
      373
      உலகு கொருமுத லபயற் கிடுதிறை உரைத பியதெம தரசேயெம்
      பலகற் பனைகளை நினைவுற் றிலைவரு படைமற் றவன்விடு படையென்றே. 62
      கலிங்கர் நிலை
      374
      உரையிற் குழறியு முடலிற் பதறியும் ஒருவர கொருவர்முன் முறையிட்டே
      அரையிற் றுகில்விழ வடை சனபதி அடியிற் புகவிழு பொழுதத்தே. 63
      அனந்தவன்மனின் செயல்
      375
      அந்தரமொன் றறியாத வடகலிங்கர் குலவேந்த னனந்த பன்மன்
      வெந்தறுகண் வெகுளியினால் வெய்துயிர்த்து கைபுடைத்து வியர்த்து நோக்கி. 64
      அனந்தவன்மன் கூற்று
      376
      வண்டினுக்கு திசையானை மதங்கொடுக்கு மலர்க்கவிகை யபயற் கன்றி
      தண்டினுக்கு மௌியனோ வெனவெகுண்டு தடம்புயங்கள் குலுங்க நக்கே. 65
      இகழ்ந்து பேசினான்
      377
      கானரணு மலையரணுங் கடலரணுஞ் சூழ்கிடந்த கலிங்கர் பூமி
      தானரண முடைத்தென்று கருதாது வருவது தண்டு போலும். 66
      எங்கராயன் அறிவுரை
      378
      என்று கூறலு மெங்க ராயனான்
      ஒன்று கூறுவன் கேளென் றுணர்த்துவான். 67
      379
      அரசர் சீறுவ ரேனு மடியவர்
      உரைசெ யாதொழி யார்களு றுதியே. 68
      380
      ஏனை வேந்தை யெறி சயதரன்
      தானை யல்லது தான்வர வேண்டுமோ. 69
      381
      விட்ட தண்டினின் மீனவ ரைவருங்
      கெட்ட கேட்டினை கேட்டிலை போலுநீ. 70
      382
      போரின் மேற்றண் டெடுக்க புறக்கிடுஞ்
      சேரர் வார்த்தை செவிப்பட்ட தில்லையோ. 71
      383
      வேலை கொண்டு விழிஞ மழித்ததுஞ்
      சாலை கொண்டது தண்டுகொண் டேயன்றோ. 72
      384
      மாறு பட்டெழு தண்டெழ வத்தவர்
      ஏறு பட்டது மிம்முறை யேயன்றோ. 73
      385
      தளத்தொ டும்பொரு தண்டெழ பண்டொர்நாள்
      அளத்தி பட்டத றிந்திலை யையநீ. 74
      386
      கண்ட நாயகர் காக்குந விலையிற்
      கொண்ட தாயிரங் குஞ்சர மல்லவோ. 75
      387
      உழந்து தாமுடை மண்டல தண்டினால்
      இழந்த வேந்த ரெனையரென் றெண்ணுகேன். 76
      388
      கண்டு காணுன் புயவலி நீயு
      தண்டு கொண்டவன் சக்கரம் வந்ததே. 77
      389
      இன்று சீறினும் நாளை சேனைமுன்
      நின்ற போழ்தினி லென்னை நினைத்தியால். 78
      அனந்தவன்மனின் ஆத்திர பேச்சு
      390
      என்றிவையு ரைத்தலுமெ னக்கெதிரு
      ரைக்கவிமை யோர்களுந டுங்கு வர்பு
      குன்றிவைசெ ருத்தொழில்பெ றாதுநெடு
      நாண்மெலிவு கொண்டபடி கண்டு மிலையோ. 79
      391
      பிழைக்கவுரை செய்தனை பிழைத்தனை
      எனக்குறுதி பேசுவது வாசி கெடவோ
      முழைக்கணிள வாளரி முகத்தௌி
      தெனக்களிறு முட்டியெதிர் கிட்டி வருமோ. 80
      392
      என்னுடைய தோள்வலியு மென்னுடைய
      வாள்வலியும் யாதுமறி யாது பிறர்போல்
      நின்னுடைய பேதைமையி னாலுரைசெய்
      தாயிதுநி னைப்பளவில் வெல்ல வரிதோ. 81
      கலிங்கர்கோன் கட்டளை
      393
      வேழமிர தம்புரவி வெம்படைஞர்
      என்றினைய நம்படை விரைந்து கடுக
      சோழகுல துங்கன்விட வந்துவிடு
      தண்டினெதிர் சென்றமர் தொடங்கு கெனவே. 82
      394
      பண்ணுக வயக்களிறு
      வயப்புரவி பண்ணுக கணிப்பில் பலதேர்
      நண்ணுக படைச்செருநர்
      செருக்களம் நமக்கிகல் கிடைத்த தெனவே. 83
      கலிங்கர் படையொலி
      395
      கலிங்கமவை யேழினு மெழுந்ததொரு
      பேரொலி கறங்குகட லேழு முடனே
      மலங்கியெழு பேரொலி யெனத்திசை
      திகைப்புற வருந்தொனி யெழுந்த பொழுதே. 84
      கரி பரி படைகள்
      396
      தொளைமுக மதமலை யதிர்வன தொடுகடல் பருகிய முகிலெனவே
      வளைமுக நுரையுக வருபரி கடலிடை மறிதிரை யெனவெழவே. 85
      குடை சாமரை கொடி
      397
      இடையிடை யரசர்க ளிடுகுடை
      கவரிக ளிவைகடல் நுரையெனவே
      மிடைகொடி பிறழ்வன மறிகடல்
      அடையவு மிளிர்வன கயலெனவே. 86
      படையின் புறப்பாடு
      398
      அலகினொ டலகுகள் கலகல
      வெனுமொலி யலைதிரை யொலியெனவே
      உலகுகள் பருகுவ தொருகடல்
      இதுவென வுடலிய படையெழவே. 87
      தேர்களும் வீரர்களும்
      399
      விசைபெற விடுபரி யிரதமு
      மறிகடல் மிசைவிடு கலமெனவே
      இசைபெற வுயிரையு மிகழ்தரும்
      இளையவ ரெறிசுற வினமெனவே. 88
      படை சென்றதன் விளைவு
      400
      விடவிகண் மொடுமொடு விசைபட
      முறிபட வெறிபட நெறிபடவே
      அடவிகள் பொடிபட அருவிகள்
      அனல்பட அருவரை துகள்படவே. 89
      சினத்தீயும் முரசொலியும்
      401
      அறைகழ லிளையவர் முறுகிய
      சினவழ லதுவட வனலெனவே
      முறைமுறை முரசுகள் மொகுமொகு
      வதிர்வன முதிர்கட லதிர்வெனவே. 90
      படைகளின் நெருக்கம்
      402
      ஒருவர்த முடலினி லொருவர்தம்
      உடல்புக வுறுவதொர் படியுகவே
      வெருவர மிடைபடை நடுவொரு
      வௌியற விழியிட வரிதெனவே. 91
      வீரர்கள் போருக்கெழுந்தனர்
      403
      வௌியரி தெனவெதிர் மிடைபடை மனுபரன் விடுபடை யதனெதிரே
      எளிதென விரைபெறு புலியென வலியினொ டெடுமெடு மெடுமெனவே. 92
      12 . போர் பாடியது
      போரின் பேரொலி
      404
      எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே
      விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே. 1
      405
      வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே
      செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே. 2
      இருபடைகளும் குதிரைகளும்
      406
      எறிகட லொடுகடல் கிடைத்தபோல் இருபடை களுமெதிர் கிடைக்கவே
      மறிதிரை யொடுதிரை மலைத்தபோல் வருபரி யொடுபரி மலைக்கவே. 3
      யானை படையும் குதிரை
      407
      கனவரை யொடுவரை முனைத்தபோற் கடகரி யொடுகரி முனைக்கவே
      இனமுகின் முகிலொடு மெதிர்த்தபோல் இரதமொ டிரதமு மெதிர்க்கவே. 4
      வீரர்களும் அரசர்களும்
      408
      பொருபுலி புலியொடு சிலைத்தபோற் பொருபட ரொடுபடர் சிலைக்கவே
      அரியினொ டரியின மடர்ப்பபோல் அரசரு மரசரு மடர்க்கவே. 5
      விற்போர்
      409
      விளைகனல் விழிகளின் முளைக்கவே மினலொளி கனலிடை யெறிக்கவே
      வளைசிலை யுருமென விடிக்கவே வடிகணை நெடுமழை படைக்கவே. 6
      குருதி ஆறு
      410
      குருதியின் நதிவௌி பரக்கவே குடையின நுரையென மிதக்கவே
      கரிதுணி படுமுட லடுக்கியே கரையென விருபுடை கிடக்கவே. 7
      யானை போர்
      411
      மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை எனப்பொரு மதக்கரி மருப்பி னிடையே
      நெருப்பொடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி தெறித்தெழ நிழற்கொடி தழற்க துவவே. 8
      412
      நிழற்கொடி தழற்கது வலிற்கடி தொளித்தவை நினைப்பவர் நினைப்ப தன்முனே
      அழற்படு புகைக்கொடி யெடுத்தன புதுக்கொடி யனைத்தினு நிரைத்த தெனவே. 9
      413
      இடத்திடை வலத்திடை யிருத்திய துணைக்கரம் நிகர்த்தன வடுத்த கரியின்
      கடத்தெழு மதத்திடை மடுத்தன சிறப்பொடு கறுத்தன வவற்றி னெயிறே. 10
      414
      எயிறுக ளுடையபொ ருப்பை வலத்திடை எதிரெதி ரிருபணை யிட்டுமு றுக்கிய
      கயிறுக ளிவையென அக்கர டக்கரி கரமொடு கரமெதிர் தெற்றிவ லிக்கவே. 11
      குதிரைகளின் தோற்றம்
      415
      முடுகிய பவனப தத்திலு கக்கடை முடிவினி லுலகமு ணச்சுடர் விட்டெழு
      கடுகிய வடவன லத்தினை வைத்தது களமுறு துரகக ணத்தின்மு கத்திலே. 12
      வீரர்களின் பெருமிதம்
      416
      களமுறு துரகக ணத்தின்மு கத்தெதிர் கறுவிலர் சிலர்கல வித்தலை நித்தில
      இளமுலை யெதிர்பொரு மப்பொழு திப்பொழு தெனவெதிர் கரியின்ம ருப்பின்மு னிற்பரே. 13
      வாள் வீரர்களின் சிறப்பு
      417
      எதிர்பொரு கரியின்ம ருப்பையு ரத்தினில் இறவெறி படையினி றுத்துமி றைத்தெழு
      சதுரர்கண் மணியக லத்தும ருப்பவை சயமகள் களபமு லைக்குறி யொத்ததே. 14
      குதிரை வீரர்களின் சிறப்பு
      418
      சயமகள் களபமு லைக்கணி யத்தகு தனிவட மிவையென மத்தக முத்தினை
      அயமெதிர் கடவிம தக்கரி வெட்டினர் அலைபடை நிரைகள்க ளத்துநி ரைக்கவே. 15
      வில் வீரரின் சிறப்பு
      419
      அலைபடை நிரைகள்நி றைத்தசெ ருக்களம் அமர்புரி களமென வொப்பில விற்படை
      தலைபொர வெரியநெ ருப்பினின் மற்றது தழல்படு கழைவன மொக்கினு மொக்குமே. 16
      420
      தழல்படு கழைவன மெப்படி யப்படி சடசட தமரமெ ழப்பக ழிப்படை
      அழல்படு புகையொடி ழிச்சிய கைச்சிலை அடுசிலை பகழிதொ டுத்துவ லிப்பரே. 17
      421
      அடுசிலை பகழிதொ டுத்துவி டப்புகும் அளவினி லயமெதிர் விட்டவர் வெட்டின
      உடல்சில இருதுணி பட்டன பட்டபின் ஒருதுணி கருதுமி லக்கைய ழிக்குமே. 18
      422
      ஒருதுணி கருதுமி லக்கைய ழித்தன உருவிய பிறைமுக வப்பக ழித்தலை
      அரிதரி திதுவுமெ னப்பரி யுய்ப்பவர் அடியொடு முடிகள்து ணித்துவி ழுத்துமே. 19
      குதிரை வீரரின் சிறப்பு
      423
      அடியொடு முடிகள்து ணித்துவி ழப்புகும் அளவரி தொடைசம ரத்தொட ணைத்தனர்
      நெடியன சிலசர மப்படி பெற்றவர் நிறைசர நிமிரவி டத்துணி யுற்றவே. 20
      424
      நிறைசர நிமிரவி டத்துணி யுற்றவர் நெறியினை யொடியெறி கிற்பவ ரொத்தெதிர்
      அறைகழல் விருதர்செ ருக்கற வெட்டலின் அவருட லிருவகிர் பட்டன முட்டவே. 21
      கலிங்க வீரர் தடுத்தனர்
      425
      விடுத்த வீர ராயு தங்கள் மேல்வி ழாம லேநிரை
      தெடுத்த வேலி போற்க லிங்கர் வட்ட ணங்க ளிட்டவே. 22
      கேடகங்கள் துளைக்கப்பட்டன
      426
      இட்ட வட்ட ணங்கண் மேலெ றிந்த வேல்தி றந்தவாய்
      வட்ட மிட்ட நீண்ம திற்கு வைத்த பூழை யொக்குமே. 23
      வாளும் உலக்கையும்
      427
      கலக்க மற்ற வீரர் வாள்க லந்த சூரர் கைத்தல
      துலக்கை யுச்சி தைத்தபோ துழுங்க லப்பை யொக்குமே. 24
      துதிக்கையும் சக்கரமும்
      428
      மத்த யானை யின்க ரஞ்சு ருண்டு வீழ வன்சர
      தைத்த போழ்தி னக்க ரங்கள் சக்க ரங்க ளொக்குமே. 25
      வீழ்ந்த முத்துக்கள்
      429
      வெங்க ளிற்றின் மத்த கத்தின் வீழு முத்து வீரமா
      மங்கை யர்க்கு மங்க லப்பொ ரிசொ ரிந்த தொக்குமே. 26
      கேடகங்களுடன் வீரர்கள்
      430
      மறிந்த கேட கங்கி டப்ப மைந்தர் துஞ்சி வைகுவோர்
      பறிந்த தேரின் நேமி யோடு பார்கி டப்ப தொக்குமே. 27
      தண்டும் மழுவும்
      431
      களித்த வீரர் விட்ட நேமி கண்டு வீசு தண்டிடை
      குளித்த போழ்து கைப்பி டித்த கூர்ம ழுக்க ளொக்குமே. 28
      குறையுடல்களும் பேய்களும்
      432
      கவந்த மாட முன்பு தங்க ளிப்பொ டாடு பேயினம்
      நிவந்த வாட லாட்டு விக்கும் நித்த கார ரொக்குமே. 29
      ஒட்டகம் யானை குதிரை
      433
      ஒட்டகங்கள் யானை வாலு யர்த்தமா வழிந்த போர்
      விட்ட கன்று போகி லாது மீள்வ போலு மீளுமே. 30
      யானைகள் மேகங்களை ஒத்தன
      434
      பிறங்கு சோரி வாரி யிற்பி ளிற்றி வீழ்க ளிற்றினங்
      கறங்கு வேலை நீரு ண கவிழ்ந்த மேக மொக்குமே. 31
      வீரர் துருத்தியாளரை ஒத்தனர்
      435
      வாளில் வெட்டி வாரணக்கை தோளி லிட்ட மைந்தர் தாம்
      தோளி லிட்டு நீர்வி டு துருத்தி யாள ரொப்பரே. 32
      வில் வீரர் செயல்
      436
      நேர்முனையிற் றொடுத்த பகழிகள் நேர்வளைவிற் சுழற்று மளவினின்
      மார்பிடையிற் குளித்த பகழியை வார்சிலையிற் றொடுத்து விடுவரே. 33
      குதிரை வீரர் செயல்
      437
      அசையவுர தழுத்தி யிவுளியை அடுசவள தெடுத்த பொழுதவை
      விசையமக கெடுத்த கொடியென விருதர்கள தெடுத்து வருவரே. 34
      தொடை அறுந்த வீரர் செயல்
      438
      இருதொடையற் றிருக்கு மறவர்கள் எதிர்பொருகை களிற்றின் வலிகெட
      ஒருதொடையை சுழற்றி யெறிவர்கள் ஒருதொடையி டுவைப்ப ரெறியவே. 35
      வாள் வீரர் மடிந்தனர்
      439
      இருவருர தினுற்ற சுரிகையின் எதிரெதிர்பு கிழைக்கு மளவினில்
      ஒருவரென கிடைத்த பொழுதினில் உபயபல தெடுத்த தரவமே. 36
      யானை வீரரோடு பொருநர்
      440
      பொருநர்கள் சிலர்தமு ரத்தி னிற்கவிழ் புகர்முக மிசையடி யிட்ட திற்பகை
      விருதரை யரிவர்சி ரத்தை யச்சிரம் விழுபொழு தறையெனு மக்க ளிற்றையே. 37
      படைக்கருவி இல்லாதவர் செயல்
      441
      விடுபடை பெறுகிலர் மற்றி னிச்சிலர் விரைபரி விழவெறி தற்கு முற்பட
      அடுகரி நுதற்பட விட்ட கைப்படை அதனையொர் நொடிவரை யிற்ப றிப்பரே. 38
      வீரர்கள் நாணினர்
      442
      அமர்புரி தமதக லத்தி டைக்கவிழ் அடுகரி நுதலில டிப்ப ரிக்களி
      றெமதென விருகண்வி ழிக்க வுட்கினர் எனவிடு கிலர்படை ஞர்க்கு வெட்கியே. 39
      கருணாகரன் போரில் ஈடுபட்டான்
      443
      அலகில் செருமுதிர் பொழுது வண்டையர் அரச னரசர்கள் நாதன் மந்திரி
      உலகு புகழ்கரு ணாக ரன்றன தொருகை யிருபணை வேழ முந்தவே. 40
      இருபடைகளும் வெற்றிகாண முற்படல்
      444
      உபய பலமும்வி டாது வெஞ்சமம் உடலு பொழுதினில் வாகை முன்கொள
      அபயன் விடுபடை யேழ்க லிங்கமும் அடைய வொருமுக மாகி முந்தவே. 41
      இருபுற படைகளும் அழிந்தன
      445
      அணிக ளொருமுக மாக வுந்தின அமர ரமரது காண முந்தினர்
      துணிகள் படமத மாமு றிந்தன துரக நிரையொடு தேர்மு றிந்தவே. 42
      காலா படையின் அழிவு
      446
      விருத ரிருதுணி பார்நி றைந்தன விடர்கள் தலைமலை யாய்நெ ளிந்தன
      குருதி குரைகடல் போற்ப ரந்தன குடர்கள் குருதியின் மேன்மி தந்தவே. 43
      களத்தில் பேரொலி
      447
      கரிகள் கருவிக ளோடு சிந்தின கழுகு நரியொடு காக முண்டன
      திரைகள் திசைமலை யோட டர்ந்தன திமில குமிலமெ லாம்வி ளைந்தவே. 44
      அனந்தவன்மன் தோற்று ஓடினான்
      448
      புரசை மதமலை யாயி ரங்கொடு பொருவ மெனவரு மேழ்க லிங்கர்தம்
      அரச னுரைசெய்த வாண்மை யுங்கெட அமரி லெதிர்விழி யாதொ துங்கியே. 45
      449
      அறியு முழைகளி லோப துங்கிய தரிய பிலனிடை யோம றைந்தது
      செறியு மடவியி லோக ரந்தது தெரிய வரியதெ னாவ டங்கவே. 46
      கலிங்கர் நடுங்கினர்
      450
      எதுகொ லிதுவிது மாயை யொன்றுகொல் எரிகொன் மறலிகொ லூழி யின்கடை
      அதுகொ லெனவல றாவி ழுந்தனர் அலதி குலதியொ டேழ்க லிங்கரே. 47
      கலிங்கர் சிதைந்தோடினர்
      451
      வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்
      இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர் இருவ ரொருவழி போக லின்றியே. 48
      452
      ஒருவ ரொருவரி னோட முந்தினர் உடலி னிழலினை யோட வஞ்சினர்
      அருவர் வருவரெ னாவி றைஞ்சினர் அபய மபயமெ னாந டுங்கியே. 49
      குகைகளில் நுழைந்தனர்
      453
      மழைக ளதிர்வன போலு டன்றன வளவன் விடுபடை வேழ மென்றிருள்
      முழைகள் நுழைவர்கள் போரி லின்றுநம் முதுகு செயுமுப கார மென்பரே. 50
      கலிங்கம் இழந்த கலிங்கர்
      454
      ஒருக லிங்கமொ ருவன ழித்தநாள்
      ஒருக லிங்கமொ ருவரு டுத்ததே. 51
      சோழர் யானை குதிரைகளை கைப்பற்றினர்
      455
      அப்படி கலிங்க ரோட அடர்த்தெறி சேனை வீரர்
      கைப்படு களிறும் மாவுங் கணித்துரை பவர்கள் யாரே. 52
      களிறுகளின் தன்மை
      456
      புண்டரு குருதி பா பொழிதரு கடமும் பாய
      வண்டொடும் பருந்தி னோடும் வளைப்புண்ட களிற நேகம். 53
      457
      ஒட்டற பட்ட போரி லூர்பவர் தம்மை வீசி
      கட்டறு தவர்போல் நின்று கட்டுண்ட களிற நேகம். 54
      458
      வரைசில புலிக ளோடு வந்துக டுண்ட வேபோல்
      அரைசரு தாமுங் கட்டுண் டகப்பட்ட களிற நேகம். 55
      சோழ வீரர்கள் கைப்பற்றியவை
      459
      நடைவ யப்பரி யிரத மொட்டகம் நவநி திக்குல மகளிரென்
      றடைவ வப்பொழு தவர்கள் கைக்கொளும் அவைக ணிப்பது மருமையே. 56
      கருணாகரன் கட்டளை இட்டான்
      460
      இவைக வர்ந்தபி னெழுக லிங்கர்தம் இறையை யுங்கொடு பெயர்துமென்
      றவனி ருந்துழி யறிக வென்றனன் அபயன் மந்திரி முதல்வனே. 57
      ஒற்றர்கள் தேடினர்
      461
      உரைகள் பிற்படு மளவி லொற்றர்கள் ஒலிக டற்படை கடிதுபோய்
      வரைக ளிற்புடை தடவி யப்படி வனமி லைப்புரை தடவியே. 58
      ஒற்றர்களின் பேச்சு
      462
      சுவடு பெற்றில மவனை மற்றொரு பெற்றன மொருமலை
      குவடு பற்றிய தவன டற்படை அதுகு ணிப்பரி தெனலுமே. 59
      மலையை அடைந்தனர்
      463
      எக்குவடு மெக்கடலு மெந்த காடும் இனிக்கலிங்கர கரணாவ தின்றே நாளும்
      அக்குவடு மக்கடலும் வளைந்து வெய்யோன் அத்தமன குவடணையு மளவிற் சென்றே. 60
      விடியளவும் வெற்பை காத்தனர்
      464
      தோலாத களிற்றபயன் வேட்டை பன்றி தொழுவடைத்து தொழுவதனை காப்பார்போல
      வேலாலும் வில்லாலும் வேலி கோலி வெற்பதனை விடியளவுங் காத்து நின்றே. 61
      மலை சிவந்தது
      465
      செம்மலையா யொளிபடைத்த தியாதோ வென்றுஞ்
      செங்கதிரோ னுதயஞ்செய் துதய மென்னும்
      அம்மலையோ விம்மலையு மென்ன தெவ்வர்
      அழிகுருதி நதிபரக்க வறுக்கும் போழ்தில். 62
      சிலர் திகம்பரரானார்
      466
      வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை யேற்றி
      வன்றூறு பறித்தமயிர குறையும் வாங்கி
      அரைக்கலிங்க முரிப்புண்ட கலிங்க ரெல்லாம்
      அமணரென பிழைத்தாரு மநேக ராங்கே. 63
      சிலர் வேதியரானார்
      467
      வேடத்தாற் குறையாது முந்நூ லாக
      வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியாற் கங்கை
      ஆடப்போ தகப்பட்டேங் கரந்தோ மென்றே
      அரிதனைவி டுயிர்பிழைத்தா ரநேக ராங்கே. 64
      சிலர் பு துறவியரானார்
      468
      குறியா குருதிகொடி யாடை யா
      கொண்டுடுத்து போர்த்துத்தங் குஞ்சி முண்டி
      தறியீரோ சாக்கியரை யுடைகண் டாலென்
      அப்புறமென் றியம்பிடுவ ரநேக ராங்கே. 65
      சிலர் பாணர் ஆனார்
      469
      சேனைமடி களங்கண்டே திகைத்து நின்றேம்
      தெலுங்கரே மென்றுசில கலிங்கர் தங்கள்
      ஆனைமணி யினைத்தாளம் பிடித்து கும்பி
      டடிப்பாண ரெனப்பிழைத்தா ரநேக ராங்கே. 66
      கலிங்க வீரர் முற்றும் அழிந்தனர்
      470
      இவர்கண்மே லினியொருவர் பிழைத்தா ரில்லை
      எழுகலிங்க தோவியர்க ளெழுதி வைத்த
      சுவர்கண்மே லுடலன்றி யுடல்க ளெங்கு
      தொடர்ந்துபிடி தறுத்தார்முன் னடைய வாங்கே. 67
      அடி சூடினான் தொண்டைமான்
      471
      கடற்கலிங்க மெறிந்துச தம்ப நாட்டி
      கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வ
      சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்
      சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே. 68
      13. களம் பாடியது
      கள சிறப்பு
      472
      தேவாசுர ராமாயண மாபாரத முளவென்
      றோவாவுரை ஓயும்படி உளத பொருகளமே. 1
      பேய் வேண்ட காளி அணுகல்
      473
      காலக்கள மதுகண்டரு ளிறைவீகடி தெனவே
      ஆலக்கள முடையான்மகி ழமுதக்கள மணுகி. 2
      காளி களங்கண்டு வியத்தல்
      474
      என்னேயொரு செருவெங்கள மெனவேயதி சயமுற்
      றந்நேரிழை யலகைக்கண மவைகண்டிட மொழியும். 3
      யானையும் கப்பலும்
      475
      உடலின்மேற் பலகாயஞ் சொரிந்து பின்கால்
      உடன்பதைப்ப வுதிரத்தே யொழுகும் யானை
      கடலின்மேற் கலந்தொடர பின்னே செல்லுங்
      கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின். 4
      குதிரையும் குதிரை தறியும்
      476
      நெடுங்குதிரை மிசைக்கலணை சரி பாய்ந்து
      நிணச்சேற்றிற் கால்குளிப்ப நிரையே நின்று
      படுங்குருதி கடும்புனலை யடைக்க பாய்ந்த
      பலகுதிரை தறிபோன்ற பரிசு காண்மின். 5
      வீரர் முகமலர்ந்து கிடந்தமை
      477
      விருந்தினரும் வறியவரு நெருங்கி யுண்ண
      மேன்மேலு முகம்மலரு மேலோர் போல
      பருந்தினமுங் கழுகினமு தாமே யுண்ண
      பதுமமுக மலர்ந்தாரை பார்மின் பார்மின். 6
      வீரர்களும் கருமிகளும்
      478
      சாமளவும் பிறர்க்குதவா தவரை நச்சி
      சாருநர்போல் வீரருடல் தரிக்கு மாவி
      போமளவு மவரருகே யிருந்து விட்டு
      போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின். 7
      வண்டும் விலைமாதரும்
      479
      மாமழைபோற் பொழிகின்ற தான வாரி
      மறித்துவிழுங் கடகளிற்றை வெறுத்து வானோர்
      பூமழைமேற் பாய்ந்தெழுந்து நிரந்த வண்டு
      பொருட்பெண்டிர் போன்றமையுங் காண்மின்காண்மின். 8
      கொடியொடு கிடக்கும் யானைகள்
      480
      சாய்ந்துவிழுங் கடகளிற்றி னுடனே சாய்ந்து
      தடங்குருதி மிசைப்படியுங் கொடிகள் தங்கள்
      காந்தருடன் கனலமளி யதன்மேல் வைகுங்
      கற்புடைமா தரையொத்தல் காண்மின் காண்மின். 9
      கணவரை தேடும் மகளிர்
      481
      தங்கணவ ருடன்றாமும் போக வென்றே
      சாதகரை கேட்பாரே தடவி பார்ப்பார்
      எங்கணவர் கிடந்தவிட மெங்கே யென்றென்
      றிடாகினியை கேட்பாரை காண்மின் காண்மின். 10
      ஆவி சோரும் மனைவி
      482
      வாய்மடித்து கிடந்ததலை மகனை நோக்கி
      மணியதர தேதேனும் வடுவுண் டாயோ
      நீமடித்து கிடந்ததென புலவி கூர்ந்து
      நின்றாவி சோர்வாளை காண்மின் காண்மின். 11
      கணவனை தழுவி உயிர்விடும் பெண்
      483
      தரைமகள்தன் கொழுநன்ற னுடல தன்னை
      தாங்காமற் றன்னுடலாற் றாங்கி விண்ணா
      டரமகளி ரவ்வுயிரை புணரா முன்னம்
      ஆவியொக்க விடுவாளை காண்மின் காண்மின். 12
      தலை பெற்ற மனைவி செயல்
      484
      பொருதடக்கை வாளெங்கே மணிமார் பெங்கே
      போர்முகத்தி லெவர்வரினும் புறங்கொ டாத
      பருவயிர தோளெங்கே யெங்கே யென்று
      பயிரவியை கேட்பாளை காண்மின் காண்மின். 13
      கருமேகம் செம்மேகத்தை ஒத்திருத்தல்
      485
      ஆடற்று ரங்கம்பி டி தாளை யாளோட
      டித்துப்பு டைத்தவ்வி ரும்புண்ணினீர்
      ஓடித்தெ றி கருங்கொண்டல் செங்கொண்டல்
      ஒக்கின்ற விவ்வாறு காண்மின்களோ. 14
      கருங்காகம் வெண்காகத்தை ஒத்திருத்தல்
      486
      நெருங்காக வச்செங் களத்தே
      தயங்கும் நிணப்போர்வை மூடிக்கொள
      கருங்காகம் வெண்காக மாய்நின்ற
      வாமுன்பு காணாத காண்மின்களோ. 15
      போர்க்களம் தாமரை குளத்தை ஒத்திருத்தல்
      487
      மிடையுற்ற தேர்மொட்டு மொட்டொக்க வெஞ்சோரி நீரொக்க வீழ்தொங்கல்பா
      சடையொக்க வடுசெங்க ளம்பங்க யப்பொய்கை யாமாறு காண்மின்களோ. 16
      வீரர் மூங்கிலை ஒத்திருத்தல்
      488
      வெயிற்றாரை வேல்சூழ வுந்தைக்க மண்மேல்வி ழாவீரர் வேழம்பர்தங்
      கயிற்றாலி ழுப்புண்டு சாயாது நிற்குங்க ழாயொத்தல் காண்மின்களோ. 17
      பருந்தும் கழுகும் துன்புறல்
      489
      இருப்புக்க வந்தத்தின் மீதேற லுஞ்சூர ரெஃகம்பு தைக்கஇறகை
      பரப்பிச்சு ழன்றிங்கொர் பாறாட ஈதோர்ப ருந்தாடல் காண்மின்களோ. 18
      படைத்தலைவர் கடனாற்றல்
      490
      வருஞ்சேனை தஞ்சேனை மேல்வந்து றாமேவில் வாள்வீரர் வாணாளு
      கருஞ்சேவ கஞ்செய்து செஞ்சோற றச்செய்த கைம்மாறு காண்மின்களோ. 19
      எழுந்தாடும் வீரர் தலை
      491
      யானைப்ப டைச்சூரர் நேரான போழ்தற்றெ ழுந்தாடு கின்றார்தலை
      மானச்ச யப்பாவை விட்டாடும் அம்மானை வட்டொத்தல் காண்மின்களோ. 20
      வானில் கண்ட காட்சி
      492
      எதிர்கொளுஞ் சுரர்விமா னங்களிற் சுரர்களாய்
      ஏறுமா னவர்கள்தா மெண்ணுதற் கருமையிற்
      கதிர்விசும் பதனிலே யிதனிலும் பெரியதோர்
      காளையம் விளையுமா காண்மினோ காண்மினோ. 21
      குருதி கடல்
      493
      அவரிபஞ் சொரிமதங் கழியென புகமடு
      தவர்பரி திரையலை தமர்செய்கா லிங்கர்தங்
      கவரிவெண் ணுரைநிரை தவருடற் குருதியிற்
      கடல்பர தோடுமா காண்மினோ காண்மினோ. 22
      யானைகள் மலைகளை ஒத்தல்
      494
      புவிபுர தருள்செயுஞ் சயதர னொருமுறை
      புணரிமே லணைபட பொருவில்விற் குனிதலிற்
      கவிகுலங் கடலிடை சொரிபெருங் கிரியென
      கரிகளின் பிணமிதிற் காண்மினோ காண்மினோ. 23
      வீரர் வியத்தல்
      495
      உற்றவா யம்புதம் பரிசையுங் கருவியும்
      உருவிமார் பகலமு முருவிவீழ் செருநர்விற்
      கற்றவா வொருவன்விற் வென்றுதங்
      கைம்மறி தவரையுங் காண்மினோ காண்மினோ. 24
      வீரர்தம் உடலங்கள் தேவர்களை ஒத்தல்
      496
      விண்ணின்மொ தெழுவிமா னங்களிற் சுரர்களாய்
      மீதுபோ முயிர்களே யன்றியே யின்றுதங்
      கண்ணிமை பொழியவே முகமலர துடல்களுங்
      கடவுளோர் போலுமா காண்மினோ காண்மினோ. 25
      வெட்டுண்ட யானைத்தலைகள் சம்மட்டியை ஒத்தல்
      497
      பிறைப்பெ ரும்பணை வேழ முன்னொடு பின்று ணிந்துத ரைப்படுங்
      குறைத்த லைத்துணி கொல்ல னெஃகெறி கூட மொத்தமை காண்மினோ. 26
      வேல் பறித்து சாயும் வீரர்
      498
      வாயி னிற்புகு வேல்கள் பற்றுவ லக்கை யோடுநி லத்திடை
      சாயு மற்றவர் காள மூதிகள் தம்மை யொத்தமை காண்மினோ. 27
      வீரர் படகோட்டிகளை ஒத்தல்
      499
      படவூன்று நெடுங்குந்த மார்பி னின்று
      பறித்ததனை நிலத்தூன்றி தேர்மே னிற்பார்
      படவூன்றி விடுந்தொழிலோ ரென்ன முன்னம்
      பசுங்குருதி தோன்றுமால் காண்மின் காண்மின். 28
      நிணமென அம்பு பற்றிய பருந்தின் நிலை
      500
      வாயகலம் பரத்தமொடு நிணங்கொண் டோட
      மற்றதனை வள்ளுகிரின் பருந்து கோணல்
      வாயகலம் பரத்தினிடை கௌவி வல்வாய்
      வகிர்ப்பட்டு நிலம்பட்ட வண்ணங் காண்மின். 29
      பிணந்தின்ற பூதம் வரும் தோற்றம்
      501
      சாதுரங்க தலைவனைப்போர களத்தில் வந்த
      தழைவயிற்று பூதந்தா னருந்தி மிக்க
      சாதுரங்க தலைசுமந்து கமஞ்சூற் கொண்டு
      தனிப்படுங்கா ரெனவரு தன்மை காண்மின். 30
      விழுப்புண்பட்ட யானை வீரர்
      502
      முதுகுவடி படியிருக்கு மென்ன நிற்கு
      முனைக்களிற்றோர் செருக்களத்து முந்து தங்கண்
      முதுகுவடு படுமென்ற வடுவை யஞ்சி
      முன்னம்வடு பட்டாரை யின்னங் காண்மின். 31
      கூழ் அடுமாறு கூறல்
      503
      களமடை காட்டுதற்கு முடிவ தன்று கவிழுமத கரிசொரி குமிழி விட்டு
      குளமடைப டதுபோலுங் குருதி யாடி கூழடுமி னென்றருள கும்பி டாங்கே. 32
      பேய்கள் அழைத்தல்
      504
      குறுமோ டீநெடு நிணமா லாய்குடை கலதீ கூரெயி றீநீலி
      மறிமா டீகுதிர் வயிறீ கூழட வாரீர் வாரீரே. 33
      பல் விளக்கல்
      505
      பறிந்த மருப்பின் வெண்கோலாற் பல்லை விளக்கி கொள்ளீரே
      மறிந்த களிற்றின் பழுவெலும்பை வாங்கி நாக்கை வழியீரே. 34
      நகம் நீக்கலும் எண்ணெய் தேய்த்தலும்
      506
      வாயம் புகளா முகிர்கொள்ளி வாங்கி யுகிரை வாங்கீரே
      பாயுங் களிற்றின் மதத்தயிலம் பா பாய வாரீரே. 35
      இரத்தத்தில் குளித்தல்
      507
      எண்ணெய் போக வெண்மூளை யென்னுங் களியான் மயிர் குழப்பி
      பண்ணை யா குருதிமடு பாய்ந்து நீந்தி யாடிரே. 36
      கரையிலிருந்தே குளிப்பீர்
      508
      குருதி குட்ட மித்தனையுங் கோலும் வேலுங் குந்தமுமே
      கருவி கட்டு மாட்டாதீர் கரைக்கே யிருந்து குளியீரே. 37
      ஆடை உடுத்தல்
      509
      ஆழ்ந்த குருதி மடுநீந்தி யங்கே யினையா திங்கேறி
      வீழ்ந்த கலிங்கர் நிணக்கலிங்கம் விரித்து விரித்து புனையீரே. 38
      கைவளையும் காலணியும்
      510
      மதங்கொள் கரியின் கோளகையை மணிச்சூ டகமா செறியீரே
      பதங்கொள் புரவி படிதரள பொற்பா டகமா புனையீரே. 39
      காதணி
      511
      ஈண்டுஞ் செருவிற் படுவீர ரெறியும் பாரா வளையடுக்கி
      வேண்டு மளவும் வாய்நெகிழ்த்து விடுகம் பிகளா புனையீரே. 40
      காப்பணியும் காதணியும்
      512
      பணைத்த பனைவெங் கரிக்கரத்தாற் பரிய பருநாண் கட்டீரே
      இணைத்த முரசம் வாள்கம்பி டிரட்டை வாளி யேற்றீரே. 41
      தோளணியும் முத்து மாலையும்
      513
      பட்ட புரவி கவிகுரத்தாற் பாகு வலயஞ் சாத்தீரே
      இட்ட சுரிசங் கெடுத்துக்கோ தேகா வலியுஞ் சாத்தீரே. 42
      வன்னசரம் அணிதல்
      514
      பொருசின வீரர்தங் கண்மணியும் போதக மத்தக முத்தும்வாங்கி
      வரிசை யறிந்து நரம்பிற்கோத்து வன்ன சரங்க ளணியீரே. 43
      உணவின் பொருட்டு எழுக
      515
      கொள்ளு மெனைப்பல கோலமென்மேற் கொண்டிட வேளையு மீதூர
      உள்ளும் புறம்பும் வெதும்புங்காண் உண்பத னுக்கொரு படுவீரே. 44
      சமையலறை அமைத்தல்
      516
      மாகாய மதமலையின் பிணமலைமேல் வன்கழுகின் சிறகாற் செய்த
      ஆகாய மேற்கட்டி யதன்கீழே அடுக்களைகொண் டடுமி னம்மா. 45
      மெழுகல் கோலமிடல் அடுப்பமைத்தல்
      517
      பொழிமதத்தா னிலமெழுகி பொடிந்துதிர்ந்த பொடித்தரள பிண்டி தீட்டி
      அழிமதத்த மத்தகத்தை யடுப்பா கடுப்பாக்கொண் டடுமி னம்மா. 46
      பானையை அடுப்பில் ஏற்றல்
      518
      கொற்றவாண் மறவ ரோச்ச குடரொடு தலையுங் காலும்
      அற்றுவீ ழானை பானை அடுப்பினி லேற்று மம்மா. 47
      உண்பொருள் கொணர்தல்
      519
      வெண்டயிருஞ் செந்தயிரும் விராய்க்கிடந்த கிழான்போல வீரர் மூளை
      தண்டயிரு மிடைவித்த புளிதமுமா தாழிதொறு தம்மி னம்மா. 48
      உலைநீர் ஊற்றல்
      520
      கொலையினு படுகரி குழிசியு கூழினு
      குலையென குதிரையின் உதிரமே சொரிமினோ. 49
      உப்பும் காயமும் இடல்
      521
      துள்ளிவெங் களனில்வீழ் துரகவெண் பல்லெனும்
      உள்ளியுங் கிள்ளியி டுகிரினு பிடுமினோ. 50
      தீ மூட்டல்
      522
      தனிவிசும் படையினும் படைஞர்கண் டவிர்கிலா
      முனிவெனுங் கனலைநீர் மூளவை திடுமினோ. 51
      விறகு கொண்டு எரித்தல்
      523
      குந்தமும் பகழியுங் கோல்களும் வேலுமாம்
      இந்தனம் பலவெடு திடைமடு தெரிமினோ. 52
      பல்லும் பழவரிசியும்
      524
      கல்லை கறித்து பல்முறிந்து கவிழ்ந்து வீழ்ந்த கலிங்கர்தம்
      பல்லை தகர்த்து பழவரிசி ஆக பண்ணி கொள்ளீரே. 53
      அரிசியும் குற்றும் உரலும்
      525
      சுவைக்கு முடிவிற் கூழினுக்கு சொரியு மரிசி வரியெயிறா
      அவைக்கு முரல்க ளெனக்குரல்கள் அவிந்த முரசங் கொள்ளீரே. 54
      அரிசி குற்றல்
      526
      இந்த வுரற்க ணிவ்வரிசி எல்லாம் பெய்து கொல்யானை
      தந்த வுலக்கை தனையோச்சி சலுக்கு முலுக்கென குற்றீரே. 55
      காளியை பாடி அரிசி குற்றல்
      527
      தணந்த மெலிவு தான்றீர தடித்த வுடல்வெம் பசிதீர
      பிணந்தரு நாச்சியை பாடீரே பெருந்திரு வாட்டியை பாடீரே. 56
      குலோத்துங்கனை பாடி குற்றல்
      528
      கவன நெடும்பரி வீரதரன் காவிரி நாடுடை யானிருதோள்
      அவனி சுமந்தமை பாடீரே அரவு தவிர்ந்தமை பாடீரே. 57
      சேர பாண்டியரை வென்றலை கூறி குற்றல்
      529
      மன்னர் புரந்தரன் வாளபயன் வாரண மிங்கு மதம்படவே
      தென்ன ருடைந்தமை பாடீரே சேர பாடீரே. 58
      சேர பாண்டியர் வணங்கியமை கூறி குற்றல்
      530
      வணங்கிய சேரர் மணிமுடியும் வழுதியர் தங்கண்
      பிணங்கிய சேவடி பாடீரே பெருமான் திருவடி பாடீரே. 59
      வடவேந்தரை வென்றமை கூறி குற்றல்
      531
      ஒளிறு நெடும்படை வாளபயற் குத்தர பூமிய ரிட்டதிறை
      களிறு வரும்படி பாடீரே கடமத நாறுவ பாடீரே. 60
      பகைவர் பணிந்தமை கூறி குற்றல்
      532
      பௌவ மடங்க வளைந்தகுடை பண்டித சோழன் மலர்க்கழலில்
      தெவ்வர் பணிந்தமை பாடீரே சிலையா டியவலி பாடீரே. 61
      உலகம் இன்புற ஆண்டமை கூறி குற்றல்
      533
      எற்றை பகலினும் வெள்ளணிநாள் இருநில பாவை நிழலுற்ற
      கொற்ற குடையினை பாடீரே குலோத்துங்க சோழனை பாடீரே. 62
      கருணாகரனை பாடி குற்றல்
      534
      வண்டை வளம்பதி பாடீரே மல்லையுங் கச்சியும்
      பண்டை மயிலையும் பாடீரே பல்லவர் தோன்றலை பாடீரே. 63
      தொண்டையர் வேந்தனை பாடி குற்றல்
      535
      காட்டிய வேழ வணிவாரி கலிங்க பரணிநங் காவலன்மேற்
      சூட்டிய தோன்றலை பாடீரே தொண்டையர் வேந்தனை பாடீரே. 64
      குலோத்துங்கன் புகழ் பாடி குற்றல்
      536
      இடைபார்த்து திறைகாட்டி இறைவிதிரு புருவத்தின்
      கடைபார்த்து தலைவணங்குங் கதிர்முடி நூறாயிரமே. 65
      பலவேந்தர் அடி வணங்கல் கூறி குற்றல்
      537
      முடிசூடு முடியொன்றே முதலபய னெங்கோமான்
      அடிசூடு முடியெண்ணில் ஆயிரம் நூறாயிரமே. 66
      திறைதரா வேந்தர் அழிந்தமை கூறி குற்றல்
      538
      முடியினால் வழிபட்டு மொழிந்ததிறை யிடாவேந்தர்
      அடியினால் மிதிபட்ட அருவரைநூ றாயிரமே. 67
      பார்வேந்தர் படும் சிறுமை கூறி குற்றல்
      539
      தார்வேய்ந்த புயத்தபயன் தன்னமைச்சர் கடைத்தலையிற்
      பார்வேந்தர் படுகின்ற பரிபவம்நூ றாயிரமே. 68
      மறை ஓம்பியமை கூறி குற்றல்
      540
      தாங்கார புயத்தபயன் தண்ணளியாற் புயல்வளர்க்கும்
      ஓங்கார மந்திரமும் ஒப்பிலநூ றாயிரமே. 69
      பாராண்ட புகழ்பாடி குற்றல்
      541
      போர்தாங்குங் களிற்றபயன் புயமிரண்டு மெந்நாளும்
      பார்தாங்க பரந்தீர்ந்த பணிப்பணநூ றாயிரமே. 70
      திருமால் என பாடி குற்றல்
      542
      நாற்கடலை கவித்தகுடை நரதுங்க னமுதமெழ
      பாற்கடலை கடைந்தருளும் பணைப்புயநூ றாயிரமே. 71
      தோள் இரண்டால் துணித்தமை
      543
      தாளிரண்டா னிலவேந்தர் தலைதாங்குஞ் சயதுங்கன்
      தோளிரண்டால் வாணனைமுன் துணித்ததோ ளாயிரமே. 72
      தூது நடந்தான்
      544
      சூழிமு களிற்றபயன் தூதுநட தருளியநாள்
      ஆழிமுதற் படையெடுத்த அணிநெடுந்தோ ளாயிரமே. 73
      அரிசி புடைத்தல்
      545
      பல்லரிசி யாவுமிக பழவரிசி தாமாக
      சல்லவட்ட மெனுஞ்சுளகால் தவிடுபட புடையீரே. 74
      அரிசியை அளத்தல்
      546
      பாணிகளா னிலந்திருத்தி படைக்கலிங்க ரணிபகழி
      தூணிகளே நாழிகளா தூணிமா வளவீரே. 75
      உலையில் இடல்
      547
      விரற்புட்டி லவைசிறிய விற்கூடை பெரியனகொண்
      டுரற்பட்ட வரிசிமுக துலைகடொறுஞ் சொரியீரே. 76
      துடுப்பும் அகப்பையும்
      548
      களப்பரணி கூழ்பொங்கி வழியாமற் கைதுடுப்பா
      அளப்பரிய குளப்புக்கால் அகப்பைகளா கொள்ளீரே. 77
      கூழை சுவை பார்த்தல்
      549
      வைப்பு காணு நமக்கின்று வாரீர் கூழை யெல்லீரும்
      உப்பு பார்க்க வொருதுள்ளி உள்ளங் கையிற் கொள்ளீரே. 78
      கூழை நன்கு கிண்டுதல்
      550
      அழலை கையிற் கொள்ளாமே அடுப்பை யவித்து கைத்துடுப்பாற்
      சுழல சுழல புடையெங்கு துழாவி துழாவி கொள்ளீரே. 79
      பதம் பார்த்து கூழ் இறக்கல்
      551
      பற்றி பாரீ ரினிக்கூழின் பதமுஞ் சுவையும் பண்டுண்ட
      மற்றை கூழின் மிகநன்று வாரீ ரிழிச்ச வாரீரே. 80
      பானை பிடித்து இறக்கல்
      552
      எடுத்து கைகள் வேகாமே இவுளி துணியி டிருமருங்கும்
      அடுத்து பிடித்து மெத்தெனவே அடுப்பி னின்று மிழிச்சீரே. 81
      கூழின் மிகுதி
      553
      ஒருவாய் கொண்டே யிதுதொலைய உண்ண வொண்ணா தென்றென்று
      வெருவா நின்றீ ராயிரம்வாய் வேண்டு மோவி கூழுணவே. 82
      நா தோய்க்கின் கூழ் சுவறும்
      554
      வெந்த இரும்பிற் புகும்புனல்போல் வெந்தீ பசியால் வெந்தெரியும்
      இந்த விடம்பை நாத்தோய்க்கில் இக்கூ ழெல்லாஞ் சுவறாதோ. 83
      உண்டு மிகுமோ
      555
      பண்டு மிகுமோ பரணிக்கூழ் பார கத்தி லறியேமோ
      உண்டு மிகுமோ நீர்சொன்ன உபாய மிதுவுஞ் செய்குவமே. 84
      உணவுக்குமுன் நீர் வைத்து கொள்ளல்
      556
      வெம்புங் குருதி பேராற்றில் வேண்டு தண்ணீர் வேழத்தின்
      கும்பங் களிலே முகந்தெடுத்து குளிர வைத்து கொள்ளீரே. 85
      நிலத்தை தூய்மை செய்தல்
      557
      சோருங் களிற்றின் வாலதியாற் சுழல வலகி டலைகுருதி
      நீரு தௌித்து கலம்வைக்க நிலமே சமைத்து கொள்ளீரே. 86
      உண்கலம் அமைத்தல்
      558
      போர்மண் டலிகர் கேடகத்தின் புளக சின்னம் பரப்பீரே
      பார்மண் டலிகர் தலைமண்டை பலமண் டைகளா கொள்ளீரே. 87
      பொன் வெள்ளி கலங்கள்
      559
      அழிந்த கலிங்கர் பொற்பரிசை அவைபொற் கலமா கொள்ளீரே
      விழுந்த தவள குடைமின்னும் வெள்ளி கலமா கொள்ளீரே. 88
      கூழ் பங்கிட கருவி கொள்ளல்
      560
      நிலத்தை சமைத்து கொள்ளீரே நெடுங்கை களிற்றி னிருசெவியாங்
      கலத்திற் கொள்ள குறையாத கலங்கள் பெருக்கி கொள்ளீரே. 89
      பகல் விளக்கும் பா ஆடையும்
      561
      கதம்பெற் றார்க்குஞ் செறுநர்விழி கனலு நிணமு மணங்கின்பாற்
      பதம்பெற் றார்க்கு பகல்விளக்கும் பாவா டையுமா கொள்ளீரே. 90
      உணவுண்ண அழைத்தல்
      562
      பரிசு படவே கலம்பரப்பி பந்தி படவுங்கள்
      வரிசை யுடனே யிருந்துண்ண வாரீர் கூழை வாரீரே. 91
      தலைகளை அகப்பைகளா கொள்ளல்
      563
      கங்கா புரியின் மதிற்புறத்து கருதார் சிரம்போய் மிகவீழ
      இங்கே தலையின் வேல்பாய்ந்த இவைமூ ழைகளா கொள்ளீரே. 92
      மடைப்பேய்களுக்கு ஆணை
      564
      கிடைக்க பொருது மணலூரிற் கீழ்நா ளட்ட பரணிக்கூழ்
      படைத்து பயின்ற மடைப்பேய்கள் பந்தி தோறும் வாரீரே. 93
      பார்ப்பன பேய்க்கு கூழ் வார்த்தல்
      565
      அவதி யில்லா சுவைக்கூழ்கண் டங்கா தங்கா தடிக்கடியும்
      பவதி பிட்சா தேகியெனும் பனவ பேய்க்கு வாரீரே. 94
      சமண பேய்களுக்கு கூழ் வார்த்தல்
      566
      உயிரை கொல்லா சமண்பேய்கள் ஒருபோழ் துண்ணு மவையுண்ண
      மயிரை பார்த்து நிணத்துகிலால் வடித்து கூழை வாரீரே. 95
      புத்த பேய்க்கு கூழ் வார்த்தல்
      567
      முழுத்தோல் போர்க்கும் புத்தப்பேய் மூளை கூழை நாக்குழற
      கழுத்தே கிட்ட மணந்திரியா கஞ்சி யாக வாரீரே. 96
      பார்வை பேய்க்கு கூழை வார்த்தல்
      568
      கொய்த விறைச்சி யுறுப்பனைத்துங் கொள்ளுங் கூழை வெள்ளாட்டின்
      பைத லிறைச்சி தின்றுலர்ந்த பார்வை பேய்க்கு வாரீரே. 97
      குருட்டு பேய்க்கு கூழை வார்த்தல்
      569
      ஊணா தரிக்குங் கள்ளப்பேய் ஒளித்து கொண்ட கலந்தடவி
      காணா தரற்றுங் குருட்டுப்பேய் கைக்கே கூழை வாரீரே. 98
      ஊமை பேய்க்கு கூழ் வார்த்தல்
      570
      பையா போடு பசிகாட்டி பதலை நிறைந்த கூழ்காட்டி
      கையா லுரைக்கு மூமைப்பேய் கைக்கே கூழை வாரீரே. 99
      கருவுற்ற பேய்க்கு கூழ் வார்த்தல்
      571
      அடைத்த செவிகள் திறந்தனவால் அடியேற் கென்று கடைவாயை
      துடைத்து நக்கி சுவைகாணுஞ் சூற்பே கின்னுஞ் சொரியீரே. 100
      மூடப்பேய்க்கு கூழ் வார்த்தல்
      572
      பொல்லா வோட்டை கலத்துக்கூழ் புறத்தே யொழுக மறித்துப்பார
      தெல்லாங் கவிழ்த்து திகைத்திருக்கும் இழுதை பேய்க்கு வாரீரே. 101
      நோக்க பேய்க்கு கூழ் வார்த்தல்
      573
      துதிக்கை துணியை பல்லின்மேற் செவ்வே நிறுத்தி துதிக்கையின்
      நுதிக்கே கூழை வாரென்னும் நோக்க பேய்க்கு வாரீரே. 102
      கூத்தி பேய்க்கு கூழ் வார்த்தல்
      574
      தடியான் மடுத்து கூழெல்லா தானே பருகி தன்கணவன்
      குடியா னென்று தான்குடிக்குங் கூத்தி பேய்க்கு வாரீரே. 103
      விருந்து பேய்க்கும் ஊர்ப்பேய்க்கும் கூழ் வார்த்தல்
      575
      வருகூழ பரணி களங்கண்டு வந்த பேயை முன்னூட்டி
      ஒருகூழ பரணி நாமிருக்கும் ஊர்க்க பேய்க்கு வாரீரே. 104
      கனாக்கண்டு உரைத்த பேய்க்கு கூழ் வார்த்தல்
      576
      இரவு கனவு கண்டபே கிற்றை கன்றி நாளைக்கும்
      புரவி யுரித்தோற் பட்டைக்கே கூழை பொதிந்து வையீரே. 105
      கணக்க பேய்க்கு கூழ் வார்த்தல்
      577
      இணக்க மில்லா நமையெல்லாம் எண்ணி கண்டே மென்றுரைக்குங்
      கணக்க பேய்க்கு மகங்களி கையா லெடுத்து வாரீரே. 106
      பேய்கள் உண்ணல்
      578
      மென்குடர் வெள்ளை குதட்டிரே மெல்விர லிஞ்சி யதுக்கீரே
      முன்கை யெலும்பினை மெல்லீரே மூளையை வாரி விழுங்கீரே. 107
      579
      அள்ளி யருகிரு துண்ணீரே அரிந்திடு தாமரை மொட்டென்னும்
      உள்ளி கறித்துக்கொண் டுண்ணீரே ஊதி வரன்றிக்கொண் டுண்ணீரே. 108
      580
      தமக்கொரு வாயொடு வாய்மூன்று தாமினி தாப்படை துக்கொண்டு
      நமக்கொரு வாய்தந்த நான்முகனார் நாணும் படிகளி துண்ணீரே. 109
      581
      ஓடி யுடல்வியர துண்ணீரே உந்தி பறந்திளை
      ஆடி யசைந்தசை துண்ணீரே அற்ற தறவறி துண்ணீரே. 110
      வாய் கழுவல்
      582
      கொதித்த கரியின் கும்பத்து குளிர்ந்த தண்ணீர் தனைமொண்டு
      பொதுத்த தொளையாற் புகமடுத்து புசித்த வாயை பூசீரே. 111
      வெற்றிலை போடுதல்
      583
      பண்ணு மிவுளி செவிச்சுருளும் பரட்டிற் பிளவும் படுகலிங்கர்
      கண்ணின் மணியிற் சுண்ணாம்புங் கலந்து மடித்து தின்னீரே. 112
      புரையேற்றம் நீங்குவதற்கு மருந்து
      584
      பெருக்க தின்றீர் தாம்பூலம் பிழைக்க செய்தீர் பிழைப்பீரே
      செருக்கும் பேய்காள் பூதத்தின் சிரத்தின் மயிரை மோவீரே. 113
      பேய்கள் களிப்பு மிகுதியால் கூத்தாடல்
      585
      என்று களித்து குமண்டையிட்டே ஏப்ப மிட்டு பருத்துநின்ற
      குன்று குனிப்பன போற்களத்து கும்பி டேநட மிட்டனவே. 114
      பாடி நின்று ஆடின
      586
      வாசி கிட கலிங்கரோட மானத னேவிய சேனைவீரர்
      தூசி யெழுந்தமை பாடிநின்று தூசியு மிட்டுநின் றாடினவே. 115
      வென்றி பாடி ஆடின
      587
      பொருகை தவிர்ந்து கலிங்கரோட போக புரந்தரன் விட்டதண்டின்
      இருகையும் வென்றதொர் வென்றிபாடி வீசிநின் றாடினவே. 116
      பேய்கள் களிப்பு மிகுதியால் விளையாடல்
      588
      வழுதியர் வரைமுழை நுழைவடி விதுவென மதகரி வயிறுகள் புகநுழை வனசில
      எழுதிய சிலையவர் செறிகடல் விழுமவை இதுவென வழிகுரு தியின்விழு வனசில. 117
      உருள்வன சில மறிவன
      589
      உருவிய சுரிகையொ டுயர்கணை விடுபடை உருள்வடி விதுவென உருள்வன சிலசில
      வெருவிய வடுநர்த முடைவடி விதுவென விரிதலை யதனொடு மறிவன சிலசில. 118
      பேய்கள் குலோத்துங்கனை வாழ்த்துதல்
      590
      உபய மெனும்பிற பாளரேத்த உரைத்த கலிங்கர் தமைவென்ற
      அபய னருளினை பாடினவே அணிசெறி தோளினை வாழ்த்தினவே. 119
      வ புகழ் வாழ்த்தின
      591
      திசையிற் பலநர பாலர்முன்னே தெரிந்துரை குஞ்சிசு பாலன்வைத
      வசையில் வயப்புழ் வாழ்த்தினவே மனுகுல தீபனை வாழ்த்தினவே. 120
      பொன்னி துறைவனை வாழ்த்தின
      592
      பொன்னி துறைவனை வாழ்த்தினவே பொருநை கரையனை
      கன்னி கொழுநனை வாழ்த்தினவே கங்கை மணாளனை வாழ்த்தினவே. 121
      உலகுய்ய வந்தானை வாழ்த்தின
      593
      ஆழிக ளேழுமொ ராழியின்கீழ் அடிப்பட வந்த வகலிடத்தை
      ஊழிதொ றூழியுங் காத்தளிக்கும் உலகுய்ய வந்தானை வாழ்த்தினவே. 122
      கரிகாலனோடு ஒப்பிட்டு வாழ்த்தின
      594
      பூப்பது மத்தன் படைத்தமைத்த புவியை யிரண்டா வதும்படைத்து
      காப்பது மென்கட னென்றுகாத்த கரிகால சோழனை வாழ்த்தினவே. 123
      வாழ்த்து
      595
      யாவ ருங்களிசி றக்க வேதருமம் எங்கு மென்றுமுள தாகவே
      தேவ ரின்னருள் தழைக்க வேமுனிவர் செய்த வப்பயன்வி ளைக்கவே. 124
      596
      வேத நன்னெறி பரக்க வேஅ பயன் வென்ற வெங்கலிக ரக்கவே
      பூத லம்புகழ்ப ரக்க வேபுவி நிலைக்க வேபுயல்சு ரக்கவே. 125
      கலிங்கத்து பரணி முற்றிற்று
      28 2001 1.7
      14 2002