பத்திரகிரியார் பாடல்கள் - மெய்ஞ்ஞான புலம்பல்
      காப்பு
      முக்திதரும் ஞான மொழியாம் புலம்பல் சொல்ல
      அத்தி முகவன்தன் அருள் பெருவது எக்காலம்
      நூல்
      ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனை சுட்டறுத்து
      தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் 1
      நீங்கா சிவயோக நித்திரை கொண்டே இருந்து
      தேங்கா கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம் 2
      தேங்கா கருணைவெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு
      வாங்காமல் விட்டகுறை வந்தெடுப்பது எக்காலம் 3
      ஓயா கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்
      மாயா பிறவி மயக்கு அறுப்பது எக்காலம் 4
      மாயா பிறவி மயக்கத்தை ஊடறுத்து
      காயா புரிக்கோட்டை கை கொள்வது எக்காலம் 5
      காயா புரிக்கோட்டை கைவசமா கொள்வதற்கு
      மாயா அனுபூதி வந்துஅடுப்பது எக்காலம் 6
      சேயா சமைந்து செவிடு ஊமை போல் திரிந்து
      பேய்போல் இருந்து உன் பிரமை கொள்வது எக்காலம் 7
      பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணை
      தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம் 8
      கால்காட்டி கைகாட்டி கண்கள் முகம்காட்டி
      மால்காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம் 9
      பெண்ணினல்லார் ஆசை பிரமையினை விட்டொழிந்து
      கண்ணிரண்டும் மூடி கலந்திருப்பது எக்காலம் 10
      வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
      தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம் 11
      ஆறாத புண்ணில் அழுந்தி கிடவாமல்
      தேறாத சிந்தைதனை தேற்றுவதும் எக்காலம் 12
      தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
      சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம் 13
      மன்னுயிரை கொன்று வதைத்து உண்டு உழலாமல்
      தன்னுயிர்போல் எண்ணி தவம் முடிப்பது எக்காலம் 14
      பாவி என்ற பேர்படைத்து பாழ்நரகில் வீழாமல்
      ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம் 15
      உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்
      புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம் 16
      வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
      வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம் 17
      பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும்
      விட்டுவிட்டு உன்பாதம் விரும்புவதும் எக்காலம் 18
      ஆமைவரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல்
      ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம் 19
      தண்டிகையும் சாவடியும் சாளிகையும் மாளிகையும்
      கண்டு களிக்கும் கருத்தொழிவது எக்காலம் 20
      அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம்
      செத்த சவம்போல் திரிவதினி எக்காலம் 21
      ஒழிந்த தருமத்தினை வைத்துள்ளெலும்பு வெள்ளெலும்பா
      கழிந்த பிணம்போல்இ ழிந்து காண்பதினி எக்காலம் 22
      அற்பசுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து
      கெர்ப்பத்தில் வீழிந்து கொண்ட கோளறுப்பது எக்காலம் 23
      கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்து கொள்ளாமுன்
      உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம் 24
      தூண்டு விளக்கணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தாற்போல்
      மாண்டு பிழைத்துவந்த வகை தெரிவது எக்காலம் 25
      தூரியினில் மீன்போல் சுழன்று மனம் வாடாமல்
      ஆரியனை தேடி அடிபணிவது எக்காலம் 26
      எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத விடுபெற
      வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம் 27
      அவவேடம் பூண்டு இங்கு அலைந்து திரியாமல்
      சிவவேடம் பூண்டு சிறந்திருப்பது எக்காலம் 28
      அண்டருக்காய் நஞ்சருந்தி அம்பலத்தில் ஆடுசிவன்
      தொண்டருக்கு தொண்டன் என தொண்டு செய்வது எக்காலம் 29
      பன்றி வடிவெடுத்து பார் இடந்து மால்காணா
      குன்றில் விளக்கொளியை கூறுவதும் எக்காலம் 30
      தித்திக்கும் தெள்ளமிழ்தை சித்தாந்தத்து உட்பொருளை
      முத்திக்கு வித்தை முதல் நினைப்பது எக்காலம் 31
      வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே
      ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம் 32
      மற்றிடத்தை தேடி என்றன் வாழ்நாளை போக்காமல்
      உற்றிடத்தை தேடி உறங்குவதும் எக்காலம் 33
      இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே
      மன்றுளோர் சொல்லும் வகையறிவது எக்காலம் 34
      கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல்
      பஞ்சா மிர்தம் பருகுவதும் எக்காலம் 35
      செஞ்சலத்தினால் திரண்ட சென்ன மோட்சம்பெறவே
      சஞ்சலத்தை விட்டு உன் சரண் அடைவது எக்காலம் 36
      கும்பிக்கு இரைதேடி கொடுப்பார் இடம்தோறும்
      வெம்பி திரிகை விடுப்பது இனி எக்காலம் 37
      ஆடுகின்ற சூத்திரம் தான் அறுமளவுமேதிரிந்து
      போடுகின்ற நாள் வருமுன் போற்றுவதும் எக்காலம் 38
      நவசூ திர வீட்டை நான்என்று அலையாமல்
      சிவசூ திரத்தை தெரிந்தறிவது எக்காலம் 39
      பரந்து மலசலங்கள் பாயும் புழுக்கூட்டை விட்டு
      கரந்துன் அடிஇணைக்கீழ கலந்து நிற்பது எக்காலம் 40
      இம்மைதனில் பாதகனாய் இருவினைக்கீடாய் எடுத்த
      பொம்மைதனைப்போட்டு உன்னை போற்றி நிற்பது எக்காலம் 41
      உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளு முன்னே
      அப்பிட்ட வேணியனுக்கு ஆட்படுவது எக்காலம் 42
      சேவைபுரிந்து சிவரூப காட்சிகண்டு
      பாவைதனை கழித்து பயன் அடைவது எக்காலம் 43
      காண்டத்தை வாங்கி கருமேகம் மீண்டது போல்
      பாண்டத்தை நீக்கி பரம் அடைவது எக்காலம் 44
      சோற்று துருத்திதனை சுமந்து அலைந்து வாடாமல்
      ஊத்தை சடம்போட்டு உனை அடைவது எக்காலம் 45
      தொடக்கை சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல்
      உடக்கை கழற்றி உனைஅறிவது எக்காலம் 46
      ஆசைவலை பாசத்து அகப்பட்டு மாயாமல்
      ஓசைமணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் 47
      கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத
      பார ரகசியத்தை பார்த்திருப்பது எக்காலம் 48
      புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய்
      எல்லா பிறப்பின் இருள் அகல்வது எக்காலம் 49
      தக்கும்வகைக்கு ஓர்பொருளும் சாராம லேநினைவில்
      பக்குவம்வந்துன் அருளை பார்த்திருப்பது எக்காலம் 50
      பருவ தலைவரொடும் புல்கியின்பம் கொள்வதற்கு
      தெரிவை பருவம் வந்து சிக்குவதும் எக்காலம் 51
      தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டெல்லாம் அறிந்து
      குருவை அறிந்தேநினைத்து கும்பிடுவது எக்காலம் 52
      வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி
      யம்பழமும் ஓடும்போல் ஆவதினி எக்காலம் 53
      பற்றற்று நீரில் படர்தா மரை இலைபோல்
      சுற்றத்தை நீக்கிமனம் தூர நிற்பது எக்காலம் 54
      சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம்
      சொல்லார கண்டு எனக்கு சொல்வதினி எக்காலம் 55
      மருவும் அயல்புருடன் வரும் நேரம் காணாமல்
      உருகுமனம் போல் என் உளம் உருகுவதும் எக்காலம் 56
      தன்கணவன் தன் சுகத்தில் தன்மனம்வே றானது போல்
      என் கருத்தில் உன் பதத்தை ஏற்றுவதும் எக்காலம் 57
      கூடி பிரிந்துவிட்ட கொம்பனையை காணாமல்
      தேடி தவிப்பவன் போல் சிந்தை வைப்பது எக்காலம் 58
      எவ்வனத்தின் மோகம் எப்படி யுண்டப்படிபோல்
      கவ்வன தியானம் கருத்து வைப்பது எக்காலம் 59
      கண்ணால் அருவி கசிந்து முத்து போல் உதிர
      சொன்ன பரம்பொருளை எண்ணுவது எக்காலம் 60
      ஆகம் மிகவுருக அன்புருக என்புருக
      போகஅனுபூதி பொருந்துவதும் எக்காலம் 61
      நீரில் குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டுநின்
      பேரின்ப கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம் 62
      அன்பை உருக்கி அறிவை அதன் மேல்புகட்டி
      துன்ப வலைப்பாச தொடக்கறுப்பது எக்காலம் 63
      கருவின் வழி அறிந்து கருத்தை செலுத்தாமல்
      அருவி விழிசொரிய அன்பு வைப்பது எக்காலம் 64
      தெள்ள தெளிய தெளிந்த சிவானந்ததேன்
      பொழி பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம் 65
      ஆதார மூலத்தடியில் கணபதியை
      பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம் 66
      மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவை
      கண்வளர்த்து பார்த்துள்ளே கண்டிருப்பது எக்காலம் 67
      அப்பு பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை
      உப்பு குடுக்கையுள்ளே உணர்ந்தறிவது எக்காலம் 68
      மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில்
      தோன்றும் உருத்திரனை தொழுது நிற்பது எக்காலம் 69
      வாயு அறுகோணத்தில் வாழும் மகேச்சுரனை
      தோயும் வகை கேட்க தொடங்குவதும் எக்காலம் 70
      வட்டவழிக்குள்ளே மருவும் சதாசிவத்தை
      கிட்ட வழிதேட கிருபை செய்வது எக்காலம் 71
      உச்சி கிடை நடுவே ஓங்கும் குருபதத்தை
      நிச்சயித்து கொண்டிருந்து நேர்வதினி எக்காலம் 72
      பாராகி பார்மீதில் பஞ்சவன்னம் தானாகி
      வேராகி நீமுளைத்த வித்தறிவது எக்காலம் 73
      கட்டறுக்க வொண்ணா கருவிகர ணாதி எல்லாம்
      சுட்டறுத்து நிட்டையிலே தூங்குவதும் எக்காலம் 74
      கள்ள கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு
      உள்ள கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம் 75
      அட்டகாசம் செலுத்தும் அவத்தை சடலத்துடனே
      பட்டபாடு அத்தனையும் பகுத்தறிவது எக்காலம் 76
      அறிவு கருவியுடன் அவத்தைபடும் பாட்டை எல்லாம்
      பிறிவுபட இருத்தி பெலப்படுவது எக்காலம் 77
      பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமா
      பேதம் பலவிதமும் பிரித்தறிவது எக்காலம் 78
      தோன்றாசை மூன்றும் பிரிந்தறிவது எக்காலம்
      ஊன்றாசை வேரை அடிஊடறுப்பது எக்காலம் 79
      புன்சனனம் போற்று முன்னே புரிவட்டம் போகில் இனி
      என் சனனம் ஈடேறும் என்றறிவது எக்காலம் 80
      நட்ட நடுவில்நின்று நல்திரோதாயி அருள்
      கிட்டவழி காட்டி கிருபை செய்வது எக்காலம் 81
      நானே நான் என்றிருந்தேன் நடுவினின்ற கட்டழகி
      நானே வெளிப்படுத்தி தருவன் என்பதும் எக்காலம் 82
      அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே
      தொடர்ந்து வெட்டி சுடுவது இனிஎக்காலம் 83
      ஐந்து பொறிவழிபோய் அலையும் இந்த பாழ்மனத்தை
      வெந்து விழ பார்த்து விழிப்பது இனி எக்காலம் 84
      இனமாண்டு சேர்திருந்தோர் எல்லோரும் தாமாண்டு
      சினமாண்டு போக அருள் தேர்ந்திருப்பது எக்காலம் 85
      அமையாமனம் அமையும் ஆனந்த வீடுகண்டு அங்கு
      இமையாமல் நோக்கி இருப்பது எக்காலம் 86
      கூண்டுவிழும் சீவன் மெள்ள கொட்டாவி கொண்டாற்போல்
      மாண்டுவிழும் முன்னே நான் மாண்டிருப்பது எக்காலம் 87
      ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகுமுன்னம்
      நான் இறந்து போக இனி நாள் வருவது எக்காலம் 88
      கெட்டுவிடும் மாந்தர் கெர்விதங்கள் பேசி வந்து
      சுட்டுவிடுமுன் என்னை சுட்டிருப்பது எக்காலம் 89
      தோல் ஏணி வைத்தேறி தூரநட தெய்க்காமல்
      நூல் ஏணி வைத்தேறி நோக்குவதும் எக்காலம் 90
      வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல்
      தாயோடு கண்மூடி தழுவி நிற்பது எக்காலம் 91
      காசினியெலாம் நடந்து கால் ஓய்ந்து போகாமல்
      வாசிதனில் ஏறிவருவது இனி எக்காலம் 92
      ஒலிபடரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பி
      சுழுமுனையின் தாள்திறந்து தூண்டுவதும் எக்காலம் 93
      இடைபிங் கலைநடுவே இயங்கும் சுழுமுனையில்
      தடை அறவே நின்று சலித்தருப்பது எக்காலம் 94
      மூலநெருப்பைவிட்டு மூட்டு நிலா மண்டபத்தில்
      பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம் 95
      ஆக வெளிக்குள்ளே அடங்கா புரவி செல்ல
      ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம் 96
      பஞ்சரித்து பேசும்பல்கலைக்கு எட்டா பொருளில்
      சஞ்சரித்து வாழ்ந்து தவம் பெறுவது எக்காலம் 97
      மலமும் சலமும்அற்று மாயை அற்று மானம்
      நலமும் குலமும் அற்று நான் இருப்பது எக்காலம் 98
      ஓடாமல் ஓடி உலகை வலம் வந்து சுற்றி
      தேடாமல் என்னிடமா தெரிசிப்பது எக்காலம் 99
      அஞ்ஞானம் விட்டே அருள் ஞானத்து எல்லைதொட்டு
      மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவது எக்காலம் 100
      வெல்லும்மட்டும் பார்த்து வெகுளியெலாம் விட்டு அகன்று
      சொல்லுமட்டும் சிந்தை செலுத்துவது எக்காலம் 101
      மேலாம் பதம்தேடி மெய்ப்பொருளை உள்இருத்தி
      நாலாம் பதம் தேடி நான் பெறுவது எக்காலம் 102
      எண்ணாத தூரம் எல்லாம் எண்ணி எண்ணி பாராமல்
      கண்ணாடிக்குள் ஒளிபோல கண்டறிவது எக்காலம் 103
      என்னை அறிந்து கொண்டே எங்கோமானோடு இருக்கும்
      தன்மை அறிந்து சமைந்திருப்பது எக்காலம் 104
      ஆறு ஆதாரம் கடந்த ஆனந்த பேரொளியை
      பேறா கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம் 105
      ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகாமுன்
      காணுதலால் இன்பமற்று கண்டறிவது எக்காலம் 106
      மும்மலமும் சேர்ந்து முளைத்தெழுந்த காயம் இதை
      நில்மலமா கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம் 107
      முன்னை வினை கெடவே மூன்று வகை காட்சியினால்
      உன்னை வெளிப்படுத்தி உறுவது இனி எக்காலம் 108
      கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும்
      விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம் 109
      கனவு கண்டால் போல் எனக்கு காட்டி மறைத்தே இருக்க
      நினைவை பரவெளியில் நிறுத்துவது எக்காலம் 110
      ஆர் என்று கேட்டதுவும் அறிவு வந்து கண்டதுவும்
      பார் என்று சொன்னதுவும் பகுத்தறிவது எக்காலம் 111
      நினைக்கும் நினைவுதோறும் நிறைந்த பரிபூரணத்தை
      முனைக்குமேல் கண்டு கண்ணில் முத்துதிர்ப்பது எக்காலம் 112
      முப்பாழும் பாழாய் முதற்பாழும் சூனியமாய்
      அப்பாழும் பாழாய் அன்பு செய்வது எக்காலம் 113
      சீ யென்று எழுந்து தெளிந்து நின்ற வான் பொருளை
      நீ யென்று கண்டு நிலை பெறுவது எக்காலம் 114
      வவ்வெழுத்தும் மவ்வெழுத்தும் வாளாகும் சிவ்வெழுத்தும்
      அவ்வெழுத்தின் உள்ளே அடங்கி நிற்பது எக்காலம் 115
      எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே
      அழுத்தமா சிந்தையை வைத்தன்பு கொள்வது எக்காலம் 116
      அருளாய் உருவாகி ஆதி அந்தம் ஆகின்ற
      குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம் 117
      நான் என்று அறிந்தவனை அறியா காலம் எல்லாம்
      தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம் 118
      என் மயமா கண்டதெல்லாம் எண்ணி எண்ணி பார்த்த பின்பு
      தன் மயமா கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம் 119
      ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறதுபோல்
      வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம் 120
      ஒளிஇட்ட மெய்ப்பொருளை உள் வழியிலே அடைத்து
      வெளியிட்டு சாத்திவைத்து வீடு உறுவது எக்காலம் 121
      காந்தம் வலித்து இரும்பை கரத்திழுத்து கொண்டதுபோல்
      பாய்ந்து பிடித்திழுத்துன் பாதத்தில் வைப்பது எக்காலம் 122
      பித்தாயம் கொண்டு பிரணவத்தை ஊடறுத்து
      செந்தாரை போலே திரிவது இனி எக்காலம் 123
      ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள் எலும்பா
      கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் 124
      ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
      சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம் 125
      சூதும் களவும் தொடர்வினையும் சுட்டி காற்று
      ஊதும் துருத்தியை போட்டு உனை அடைவது எக்காலம் 126
      ஆசைவலை பாசத்து அகப்பட்டு மாயாமல்
      ஓசைமணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் 127
      கல்லாய் மரமா கயலா பறவைகளா
      புல்லாய் பிறந்த சென்மம் போதும் என்பது எக்காலம் 128
      தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்
      பக்குவமாய் நின் அருளை பார்த்திருப்பது எக்காலம் 129
      தூரோடு அசைந்து சுழன்று வரும் தத்துவத்தை
      வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம் 130
      பாகம் நடு மாறி பயந்தெழுந்த சித்திரத்தை
      ஏகநடு மூலத்து இருத்துவதும் எக்காலம் 131
      ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதி சென்று
      பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்பது எக்காலம் 132
      காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்ததெல்லாம்
      பூரணமா கண்டு புகழ்ந்திருப்பது எக்காலம் 133
      ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின்
      நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம் 134
      குறியா கொண்டு குலம் அளித்த நாயகனை
      பிரியாமல் சேர்ந்து பிறப்பறுப்பது எக்காலம் 135
      மத்தடுத்து நின்ற மருள் ஆடு வார் போல
      பித்தடுத்து நின் அருளை பெற்றிருப்பது எக்காலம் 136
      சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக்கீழ்
      வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம் 137
      என்னை அறியாமல் இருந்து ஆட்டும் சூத்திரநின்
      தன்னை அறிந்து தவம் பெறுவது எக்காலம் 138
      உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை
      கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம் 139
      வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல்
      பூசித்தும் தோன்றா பொருள் காண்பது எக்காலம் 140
      பன்னிரண்டு கால்புரவி பாய்ந்து சில்லம் தட்டாமல்
      பின் இரண்டு சங்கிலிக்குள் பிணிப்பது இனி எக்காலம் 141
      நாட்டுக்கால் இரண்டும்விட்டு நடுவுக்கால் ஊடேபோய்
      ஆட்டுக்கால் இரண்டினுள்ளே அமர்ந்திருப்பது எக்காலம் 142
      பாற்சுவை பூட்டி பதியில் வைத்து சீராட்டி
      காற்பசுவை ஓட்டி அதில் கட்டி வப்பது எக்காலம் 143
      பல இடத்தே மனதை பாயவிட்டு பாராமல்
      நிலவரையின் ஊடேபோய் நேர்படுவது எக்காலம் 144
      கா கடல்கடந்து கரைஏறி போவதற்கே
      ஓ கனல்வளர்த்தி உள்ளிருப்பது எக்காலம் 145
      உத சுடர் மூன்றும் உள்வீட்டி லே கொளுத்தி
      இ திருநடனம் இனிக்காண்பது எக்காலம் 146
      வேதாந்த வேதம் எல்லாம் வீட்டேறியே கடந்து
      நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம் 147
      பட்டம் அற்று காதற்றில் பறந்தாடும் சூத்திரம் போல்
      வெட்டு வெளியாக விசும்பறிதல் எக்காலம் 148
      அட்டாங்கயோகம் அதற்கப்பாலு கப்பாலாய்
      கிட்டா பொருள் அதனை கிட்டுவதும் எக்காலம் 149
      ஒட்டாமல் ஒட்டிநிற்கும் உடலும் உயிரும்பிரிந்தே
      எட்டா பழம்பதிக்கு இங்கு ஏணிவைப்பது எக்காலம் 150
      பாசத்தை நீக்கி பசுவை பதியில்விட்டு
      நேசத்தின் உள்ளே நினைந்திருப்பது எக்காலம் 151
      ஆசார நேச அனுட்டானமும் மறந்து
      பேசாமெய்ஞ் ஞானநிலை பெற்றிருப்பது எக்காலம் 152
      பல்லாயிரம் கோடி பகிரண்டம் உம்படைப்பே
      அல்லாது வேறில்லை என்று அறிவது இனி எக்காலம் 153
      ஆதிமுதல் ஆகிநின்ற அரிஎன்ற அட்சரத்தை
      ஓதி அறிந்துள்ளே உணர்வது இனி எக்காலம் 154
      சாத்திரத்தை சுட்டு சதுர்மறையை பொய்யாக்கி
      சூத்திரத்தை கண்டு துயர் அறுப்பது எக்காலம் 155
      அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து
      சொல்லும் உரைமறந்து தூங்குவதும் எக்காலம் 156
      இயங்கும் சராசரத்தில் எள்ளும் எண்ணெ யும்போல
      முயங்கும் அந்த வேத முடிவு அறிவது எக்காலம் 157
      ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகும்
      தானாகி நின்றதனை அறிவது எக்காலம் 158
      என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
      உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம் 159
      இன்னதென்று சொல்லஒண்ணா எல்லையற்ற வான் பொருளை
      சொன்னதென்று நான் அறிந்து சொல்வது இனி எக்காலம் 160
      மனதைஒரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
      என தறிவைஅம்பாக்கி எய்வது இனி எக்காலம் 161
      என்னை இறக்கஎய்தே என்பழியை ஈடழித்த
      உன்னை வெளியில் வைத்தேஒளித்து நிற்பது எக்காலம் 162
      கடத்துகின்ற தோணிதனை கழைகள் குத்தி விட்டாற்போல்
      நடத்துகின்ற சித்திரத்தை நான்அறிவது எக்காலம் 163
      நின்றநிலை பேராமல் நினைவில்ஒன்றும் சாராமல்
      சென்றநிலை முத்தி என்று சேர்ந்தறிவது எக்காலம் 164
      பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தைஉள் அமைத்து
      மின்னும் ஒளிவெளியே விட்டு அடைப்பது எக்காலம் 165
      கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டதுபோல்
      வீட்டில்அடை பட்டுஅருளை வேண்டுவதும் எக்காலம் 166
      கடலில்ஒளித்திருந்த கனல்எழுந்து வந்தாற்போல்
      உடலில்ஒளித்த சிவம்ஒளி செய்வது எக்காலம் 167
      அருண பிரகாசம் அண்டஎங்கும் போர்த்தது போல்
      கருணை திருவடியில் கலந்து நிற்பது எக்காலம் 168
      பொன்னில் பலவிதமாம் பூடணம்உண்டானது போல்
      உன்னில் பிறந்து உன்னில்ஒடுங்குவதும் எக்காலம் 169
      நாயிற் கடைப்பிறப்பால் நான்பிறந்த துன்பம்அற
      வேயில் கனல் ஒளிபோல் விளங்குவதும் எக்காலம் 170
      சூரியகாந்தி ஒளி சூழ்ந்து பஞ்சை சுட்டதுபோல்
      ஆரியந்தோற்றத்து அருள் பெறுவது எக்காலம் 171
      இரும்பினில் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவா
      கரும்பில் சுவைரசத்தை கண்டறிவது எக்காலம் 172
      கருக்கொண்ட முட்டைதனை கடல் ஆமைதான் நினைக்க
      உருக்கொண்ட வாறதுபோல்உனை அடைவது எக்காலம் 173
      வீடுவிட்டு பாய்ந்து வெளியில் வருவார்போல்
      கூடுவிட்டு பாயும் குறிப்பறிவது எக்காலம் 174
      கடைந்த வெண்ணய் மோரில் கலவாதவாறதுபோல்
      உடைந்து தமியேன் உனைக்காண்பது எக்காலம் 175
      இருளை ஒளி விழுங்கி ஏகஉரு கொண்டாற்போல்
      அருளை விழுங்கும்இருள் அகன்று நிற்பது எக்காலம் 176
      மின் எழுந்து மின்ஒடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்
      என்னுள் நின்றதுஎன்னுள்ளே யான் அறிவது எக்காலம் 177
      கண்ட புனல்குடத்தில் கதிர் ஒளிகள் பாய்ந்தாற்போல்
      கொண்ட சொரூபமதை கூர்ந்தறிவது எக்காலம் 178
      பூணுகின்ற பொன் அணிந்தால் பொன்சுமக்குமோ உடலை
      காணுகின்றஎன் கருத்தில் கண்டறிவது எக்காலம் 179
      செம்பில் களிம்புபோல் சிவத்தைவிழுங்கி மிக
      வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம் 180
      ஆவியும் காயமும்போல் ஆத்துமத்தில் நின்றதனை
      பாவிஅறிந்து மனம் பற்றி நிற்பது எக்காலம் 181
      ஊமை கனாக்கண்டு உரைக்கஅறியா இன்பம்அதை
      நாம்அறிந்து கொள்வதற்கு நாள் வருவதுஎக்காலம் 182
      சாகா சிவனடியை தப்பாதார் எப்போதும்
      போகா உடல்அகன்று போவதென்பது எக்காலம் 183
      நிட்டைதனை விட்டு நினைவறிவு தப்பவிட்டு
      வெட்ட வெளியில்விரவி நிற்பது எக்காலம் 184
      வெட்டவெளி தன்னில்விளைந்த வெறும் பாழ்
      திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம் 185
      எங்கும் பரவடிவாய் என் வடிவு நின் வடிவா
      கங்குல்பகல் இன்றிஉனை கண்டிருப்பது எக்காலம் 186
      உண்டதுவும் மாதருடன் கூடிச்சேர்ந்து இன்பம்
      கண்டதுவும் நீயெனவேகண்டு கொள்வது எக்காலம் 187
      ஈம்என்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும்
      ஓம்என்று சொன்னதுவும் உற்றறிவது எக்காலம் 188
      சத்தம் பிறந்த இடம் தன் மயமாய் நின்ற
      சித்தம் பிறந்தஇடம் தேர்ந்தறிவது எக்காலம் 189
      போக்கு வரவும் புறம்புள்ளும் ஆகிநின்றும்
      தாக்கும் ஒரு பொருளை சந்திப்பது எக்காலம் 190
      நான் எனவும் நீ நாம் இரண்டு மற்றொன்றும்
      நீ எனவே சிந்தைதனில் நேர்படுவது எக்காலம் 191
      அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில்
      பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம் 192
      நீடும் புவனம் எல்லாம் நிறைந்துசி தூரம் அதாய்
      ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம் 193
      தித்தி என்ற கூத்தும் திருச்சிலம்பின் ஓசைகளும்
      பத்தியுடனே கேட்டு பணிவது இனி எக்காலம் 194
      நயனத்திடை வெளிபோல் நண்ணும் பரவெளியில்
      சயனி திருந்து தலைப்படுவது எக்காலம் 195
      அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்
      திருவிளையாடல்கண்டு தெரிசிப்பது எக்காலம் 196
      மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கதுபோல்
      தேனைமிக உண்டு தெவிட்டி நிற்பது எக்காலம் 197
      பொல்லாத காயம் அதை போட்டு விடுக்குமுன்னே
      கல் ஆவின் பால்கறப்ப கற்பது இனி எக்காலம் 198
      வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தை
      கிட்டவர தேடி கிருபை செய்வது எக்காலம் 199
      பேரறிவிலே மனதை பேராமலே இருத்தி
      ஓரறிவில் என்னாளும் ஊன்றி நிற்பது எக்காலம் 200
      அத்துவிதம் போலும் என்றன் ஆத்துமத்தின் உள்ளிருந்து
      முத்தி தர நின்றமுறை அறிவது எக்காலம் 201
      நான்நின்ற பாசம்அதில் நான்இருந்து மாளாமல்
      நீநின்ற கோலம்அதில் நிரவிநிற்பது எக்காலம் 202
      எள்ளும்கரும்பும் எழில்மலரும் காயமும்போல்
      உள்ளும் புறம்புநின்று உற்றறிவது எக்காலம் 203
      அன்னம் புனலை வகுத்து அமிர்தத்தை உண்பதுபோல்
      என்னை வகுத்து உன்னை இனிக்காண்பது எக்காலம் 204
      அந்தரத்தில் நீர்பூத்து அலர்ந்தெழுந்த தாமரைபோல்
      சிந்தை வைத்து கொண்டு தெரிசிப்பது எக்காலம் 205
      பிறப்பும் இறப்பும்அற்று பேச்சும்அற்று மூச்சும்அற்று
      மறப்பும் நினைப்பும்அற்று மாண்டிருப்பது எக்காலம் 206
      மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்துஅறிவை
      என்னுள் ஒருநினைவை எழுப்பிநிற்பது எக்காலம் 207
      ஆசை கொண்ட மாதர் அடைகனவு நீக்கி உன்மேல்
      ஓசை கொண்டு நானும் ஒடுங்குவதும் எக்காலம் 208
      தன்உயிரை கொண்டு தான் திரிந்த வாறதுபோல்
      உன்உயிரை கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம் 209
      சேற்றில் கிளை நாட்டும் திடமாம் உடலைஇனி
      காற்றில்உழல் சூத்திரமாய் காண்பது இனி எக்காலம் 210
      என் வசமும்கெட்டு இங்கிருந்த வசமும் அழிந்து
      தன்வசமும் கெட்டு அருளை சார்ந்து இருப்பது எக்காலம் 211
      தன்னை மறந்து தலத்து நிலை
      கன்மம் மறந்து கதி பெறுவது எக்காலம் 212
      என்னை என்னிலே மறந்தே இருந்த பதியும் மறந்து
      தன்னையும் தானே மறந்து தனித்து இருப்பது எக்காலம் 213
      தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே
      உன்னை நினைந்துள்ளே உறங்குவதும் எக்காலம் 214
      இணை பிரிந்தபோதல் இன்பமுறும் அன்றிலைப்போல்
      துணை பிரிந்தபோது அருள் தூல்தொடர்ந்து கொள்வது எக்காலம் 215
      ஆட்டம்ஒன்றும் இல்லாமல் அசைவு சற்றும் காணாமல்
      தேட்டம் அற்ற வான்பொருளைத்தேடுவதும் எக்காலம் 216
      முன்னை வினையால் அறிவுமுற்றாமல் பின் மறைந்தால்
      அன்னை தனைத்தேடி அமுதுண்பது எக்காலம் 217
      கள்ளுண்டவர்போல் களிதரும் ஆனந்தம்அதால்
      தள்ளுண்டு நின்றாடி தடைப்படுவது எக்காலம் 218
      நான் அவனா காண்பதெல்லாம்ஞானவிழியா ல்அறிந்து
      தான் அவனாய் நின்று சரண் அடைவது எக்காலம் 219
      தான் அந்தம் இல்லாத தற்பரத்தின் ஊடுருவில்
      ஆனந்தம் கண்டே அமர்ந்திருப்பது எக்காலம் 220
      உற்ற வெளிதனிலே உற்று பார்த்து அந்தரத்தே
      மற்றமற மாய்கை மாள்வது இனி எக்காலம் 221
      ஏடலர்ந்து பங்கயமும் இருகருணை நேத்திரமும்
      தோடணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம் 222
      ஐயாறும் ஆறும் அகன்று வெறுவெளியில்
      மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம் 223
      காட்டும்அருள் ஞானக்கடலில் அன்பு கப்பல்விட்டு
      மூட்டும் கருணை கடலில் மூழ்குவதும் எக்காலம் 224
      நான் யாரோ நீ நன்றாம் பரமான
      தான் யாரோ என்றுஉணர்ந்து தவம்முடிப்பது எக்காலம் 225
      எவர் எவர்கள் எப்படி கண்டுஎந்தப்படி நினைத்தார்
      அவர் அவர்க்குஅப்படி நின்றாய் என்பது எக்காலம் 226
      உற்றுற்று பார்க்க ஒளிதரும் ஆனந்தம்அதை
      நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பது இனி எக்காலம் 227
      விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல்
      களங்கமற உன்காட்சி கண்டறிவது எக்காலம் 228
      என்னையே நான் அறியேன் இந்த வண்ணம் சொன்ன தெல்லாம்
      முன்னையோர் கைக்கொள்ள முன்பணிவது எக்காலம் 229
      மாயத்தை நீக்கி வருவினையை பாழாக்கி
      காயத்தை வேறாக்கி காண்பதுஉனை எக்காலம் 230
      ஐஞ்சு கரத்தானை அடி இணையை போற்றிசெய்து
      நெஞ்சில் பொருத்தி நிலைபெறுவது எக்காலம் 231
      ------------------------------------------------------------------------

      ------------------------------------------------------------------------
      -
      -8
      சித்தர் பாடல்கள் தொகுப்பு -
      ------------------------------------------------------------------------
      அழுகணி சித்தர் பாடல்கள்
      இராமதேவர் - பூஜாவிதி
      கடுவெளி சித்தர் - ஆனந்த களிப்பு
      குதம்பை சித்தர் பாடல்கள்
      சட்டைமுனி ஞானம்
      திருமூல நாயனார் ஞானம்
      திருவள்ளுவர் ஞானம்
      ------------------------------------------------------------------------
      .
      - .
      ...

      .

      .
      2000 ...

      2000 .
      -8
      4.6 5
      -8 - .
      .

      © 1999


      .
      ..

      .
      ------------------------------------------------------------------------
      அழுகணி சித்தர் பாடல்கள்
      கலித்தாழிசை
      மூல பதியடியோ மூவிரண்டு வீடதிலே
      கோல பதியடியோ குதர்க்க தெருநடுவே
      பால பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
      மேல பதிதனிலே என் கண்ணம்மா
      விளையாட்டை பாரேனோ 1
      எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
      பஞ்சா காரர்ஐவர் பட்டணமு தானிரண்டு
      அஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்கு தான்பயந்து
      நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா
      நிலைகடந்து வாடுறண்டி 2
      முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
      பத்தாம் இதழ்பரப்பி பஞ்சணையின் மேலிருத்தி
      அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
      குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா
      கோலமிட்டு பாரேனோ 3
      சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க
      உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
      முத்து போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
      தித்திக்கு தேனாமிர்தம் என் கண்ணம்மா
      தின்றுகளை பாரேனோ 4
      பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கி
      செம்பொற் கலையுடுத்தி சேல்விழிக்கு மையெழுதி
      அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
      கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா
      கண்குளிர பாரேனோ 5
      எட்டா புரவியடி யீராறு காலடியோ
      விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்து
      கட்ட கயிறெடுத்து கால்நாலும் சேர்த்திறுக்கி
      அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா
      ஆண்டிருந்தா லாகாதோ 6
      கொல்லன் உலைபோல கொதிக்குதடி யென்வயிறு
      நில்லென்று சொன்னால் நிலைநிறுத்த கூடுதில்லை
      நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்கு
      கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா
      குடியோடி போகானோ 7
      ஊற்றை சடலமடி உப்பிருந்த பாண்டமடி
      மாற்றி பிறக்க மருந்தெனக்கு கிட்டுதில்லை
      மாற்றி பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
      ஊற்றை சடலம் விட்டேஎன் கண்ணம்மா
      உன்பாதஞ் சேரேனோ 8
      வாழை பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லி
      தாழை பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
      தாழை பழத்தைவிட்டு சாகாமற் சாகவல்லோ
      வாழை பழந்தின்றால் என் கண்ணம்மா
      வாழ்வெனக்கு வாராதோ 9
      பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
      மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
      மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
      பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா
      பாழாய் முடியாவோ 10
      மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
      காமன் கணையெனக்கு கனலாக வேகுதடி
      மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
      காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா
      கண்விழிக்க வேகாவோ 11
      அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
      மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்கு
      சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
      வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா
      மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ 12
      காட்டானை மேலேறி கடைத்தெருவே போகையிலே
      நாட்டார் நமைமறித்து நகைபுரி பார்ப்பதென்றோ
      நாட்டார் நமைமறித்து நகைபுரி பார்த்தாலும்
      காட்டானை மேலேறி என் கண்ணம்மா
      கண்குளிர காண்பேனோ 13
      உச்சிக்கு கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
      மச்சுக்கு மேலேறி வானுதிரம் தானேடுத்து
      கச்சை வடம்புரி காயலூர பாதையிலே
      வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா
      வகைமோச மானேண்டி 14
      மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டா தான்தூக்கி
      நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
      நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
      மூக்காலை காணாமல் என் கண்ணம்மா
      முழுதும் தவிக்கிறண்டி 15
      காமமலர் தூவ கருத்தெனக்கு வந்ததடி
      பாமவலி தொலைக்க பாசவலி கிட்டுதில்லை
      பாமவலி தொலைக்க பாசவலி நிற்குமென்றால்
      காமமலர் மூன்றும் என் கண்ணம்மா
      கண்ணெதிரே நில்லாவோ 16
      தங்காயம் தோன்றாமல் சாண்கல கொல்லைகட்டி
      வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளா காத்திருந்தேன்
      வெங்கா தின்னாமல் மேற்றொல்லை தின்றலவோ
      தங்கா தோணாமல் என் கண்ணம்மா
      சாகிறண்டி சாகாமல் 17
      பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்
      உற்றுற்று பார்த்தாலும் உன்மயக்கம் தீரவில்லை
      உற்றுற்று பார்த்தாலும் உன்மயக்க தீர்ந்தக்கால்
      பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா
      பாசியது வேறாமோ 18
      கற்றாரும் மற்றாரு தொண்ணூற்றோ டாறதிலே
      உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
      உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டு போகையிலே
      சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா
      துணையிழந்து நின்றதென்ன 19
      கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
      உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
      உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும்
      கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா
      காரணங்கள் மெத்தவுண்டே 20
      சா சரக்கெடுத்தே சாதிலிங்கம் தான்சேர்த்து
      மா பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றி
      பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
      இட்ட மருந்தாலே என் கண்ணம்மா
      இவ்வேட மானேண்டி 21
      பாதாள மூலியடி பாடாணம் தான்சேர்த்து
      வேதாளங் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றி
      செந்தூர மையடியோ செகமெல்லாம் தான்மிரட்டி
      தந்த மருந்தாலே என் கண்ணம்மா
      தணலாக வேகுறண்டி 22
      கள்ளர் பயமெனக்கு கால்தூக்க வொட்டாமல்
      பிள்ளை யழுதுநின்றால பெற்றவட்கு பாரமடி
      பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
      கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா
      கடுகளவு காணாதோ 23
      பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
      விட்டு பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
      விட்டு பிரிந்தவரே வேறு படுங்காலம்
      பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
      படைமன்னர் மாண்டதென்ன 24
      ஆகா புலையனடி அஞ்ஞான தான்பேசி
      சாகா தலையறியேன் தன்னறிவு தானறியேன்
      வேகாத காலறியேன் விதிமோச மானேனடி
      நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா
      நொடியில்மெழு கானேனடி 25
      தாயை சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
      மா கலவிவந்து மதிமயக்க மானேனடி
      மா கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
      தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா
      தந்தையரு மொப்பாமோ 26
      அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
      நெஞ்சார போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
      கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
      அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா
      ஆண்டிருந்தா லாகாதோ 27
      உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்
      தன்னை மறந்தார்க்கு தாய்தந்தை யில்லையடி
      தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
      உன்னை மறக்காமல் என் கண்னம்மா
      ஒத்திருந்து வாழேனோ 28
      கா பதிதனிலே கந்தமூலம் வாங்கி
      மா பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
      ஆ துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே
      மா சுருளோலை என் கண்ணம்மா
      மடிமேல் விழுந்ததென்ன 29
      சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து
      உத்திரத்தை காட்டாமல் ஊரம்ப லமானேன்
      உத்திரத்தை காட்டியல்லோ ஊரம்ப லமானால்
      சித்திரமும் வேறாமோ என் கண்னம்மா
      சிலையுங் குலையாதோ 30
      புல்ல ரிடத்திற்போ பொருள்தனக்கு கையேந்தி
      பல்லை மிகக்காட்டி பரக்க விழிக்கிறண்டி
      பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்
      புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
      பொருளெனக்கு தாராயோ 31
      வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்து
      குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே
      குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக
      வெட்டுண்டு பிணிநீங்கி என் கண்ணம்மா
      விழித்துவெளி காட்டாயோ 32
      ஐங்கரனை தொண்ட னிட்டேன் - ஆத்தாடி
      அருளடைய வேணுமென்று
      தாங்காமல் வந்தொருவன் - ஆத்தாடி
      தற்சொரூபங் காட்டி யென்னை 33
      கொள்ள பிறப்பறுக்க - ஆத்தாடி
      கொண்டான் குருவாகி
      கள்கள புலனறுக்க - ஆத்தாடி
      காரணமாய் வந்தாண்டி. 34
      ஆதாரம் ஆறினையும் - ஆத்தாடி
      ஐம்பத்தோர் அக்கரமும்
      சூதான கோட்டையெல்லாம் - ஆத்தாடி
      சுட்டான் துரிசறவே. 35
      வாகாதி ஐவரையும் - ஆத்தாடி
      மாண்டுவிழ கண்டேண்டி
      தத்துவங்க ளெல்லாம் - ஆத்தாடி
      தலைகெட்டு வெந்ததடி. 36
      மஞ்சன நீராட்டி - ஆத்தாடி
      மலர்பறித்து தூவாமல்
      நெஞ்சு வெறும்பாழாய் - ஆத்தாடி
      நின்றநிலை காணேண்டி. 37
      பாடி படித்து - ஆத்தாடி
      பன்மலர்கள் சாத்தாமல்
      ஓடி திரியாமல் - ஆத்தாடி
      உருக்கெட்டு விட்டேண்டி. 38
      மாணிக்கத்து உள்ளளிபோல் - ஆத்தாடி
      மருவி யிருந்தாண்டி
      பேணி தொழுமடியார் - ஆத்தாடி
      பேசா பெருமையன் காண். 39
      புத்தி கலங்கியடி - ஆத்தாடி
      போந்தேன் பொரிவழியே
      பதித்தறியாமல் - ஆத்தாடி
      பாழியில் கவிழ்ந்தேனே. 40
      தோற்றம் மொடுக்கம் இல்லா - ஆத்தாடி
      தொல் பொருளை அறியார்கள் .
      முடிந்தது
      ------------------------------------------------------------------------

      ------------------------------------------------------------------------
      இராமதேவர் - பூஜாவிதி
      ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும்
      அகண்டபரி பூரணத்தை காண வேணும்
      சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
      சுகம்பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னை
      நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
      நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்
      வேதியென்ற வேதாந துள்ளே நின்று
      விளங்கவும் பூசையிது வீண் போகாதே. 1
      போகாமல் நின்ற தோரையா நீதான்
      பூரணத்தி னானகலை ஐந்தும் பெற்றே
      ஆகாம லானந்த வல்லி யாலே
      அடிமுடியி னடுவாசி யாறு குள்ளே
      வாகாமல் வாலையுடை மூல தாலே
      வழிதோன்றும் மூன்றெழுத்தை யுரைக்க வேணும்
      சாகாமல் சாகுமடா இந்த மூலஞ்
      சசிவட்டம் நடுக்கோண முக்கோண மாமே. 2
      முக்கோண மூசுழிதற் கோண மாகி
      முதலான மூலமணி வாலை தன்னில்
      நாற்கோண நாலுவரை நயந்து காக்க
      நாயகியாள் பரஞ்சோதி நாட்ட முற்று
      தீக்கோண திக்குதிசை யிருந்த மாயம்
      தெரிந்திடவே யுரைத்திட்டேன் விவர மாக
      தாக்கோண விட்டகுறை வந்த தென்றால்
      தனியிருந்து பார்த்தவனே சித்த னாமே. 3
      சித்தான மூன்றெழுத்து செயலாஞ் சோதி
      சீரியவை யுங்கிலியும் சவ்வு மாகி
      முத்தான லட்சவுரு செபிக்க சித்தி
      முற்றிடுமே யெதிரியென்ற பேய்க குந்தான்
      வித்தான வித்தையடா முட்டும் பாரு
      விரிவான முகக்கருவு மூன்று கேளு
      சத்தான அதன்கருவும் சிலையில் வைத்து
      சதுரான விதிவிவர மறி கேளே. 4
      கேளப்பா பலிகொடுத்து பூசை செய்து
      கிருபையுள்ள வுருவேற்றி திட்ட மாக
      வாளப்பா சுடுகாட்டின் சாம்பல் தன்னில்
      வளமாக புதைத்துவிடு நடு சாமத்தில்
      ஆளப்பா அடியற்று மரண மாகி
      ஆண்டிருந்த தவசுநிலை தான்கு லைந்து
      காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி
      கதைதெரி சொல்லுகிறேனின்னம் பாரே. 5
      இன்னமின்னங் கண்முன்சோ தனையு மாகும்
      ஈடேற வேணுமென்றா லிதனிற் சூட்சம்
      அன்னமின்னா அகிற்கட்டை தேவ தாரம்
      அறிவுடைய முளைச்சீவி சிங்கை யோதி
      வன்னமின்னார் பேர்சொல்லி நசியென் றேதான்
      வலுவான நூற்றெட்டு வுருவம் போடு
      சன்னமின்னா மரத்தடியி லிருந்து கொண்டு
      சதிராக ஆணிகொண் டடித்தி டாயே. 6
      அடித்தமுளை பிடுங்கிவை திறுக்கி போடு
      ஆனந்த வுருக்குலைந்து பட்டு போகும்
      தொடுத்தமுதல் நாலாநாள் கண்டு தானு
      தொகைமுடிந்து வாச்சுதடா விந்த போக்கு
      விடுத்தபின்பு விடமேறி கருவி போகும்
      விரிந்துரைத்தேன் பூட்டிதுவே வீண் போகாது
      தடுத்துவிடு நகரத்தி லடித்து பாரு
      தட்டழிந்து உயிர்புதலா சேத மாமே. 7
      ஆமப்பா அடிதரிசிங் களத்தி லானால்
      அதியங்காண் கண்டவர்க்கே யடைக்க லம்போம்
      வீமப்பா வெளிதிறந்து சொன்னேன் பாரு
      விளையாட்டே யில்லையடா இந்த போக்கு
      சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கி
      சுருக்கெனவே தியானிப்பா யாத்தாள் மூலம்
      தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு
      தவறாது ராமனுடை வாக தானே. 8
      தானென்ற மூலமுடன் சித்தி பண்ணு
      தனதான நூற்றெட்டு குள்ளே சித்தி
      ஆனென்ற அண்டர் பதியெட்டு மாடும்
      அறுபத்து நால்மூலி யெல்லா மாடும்
      கோனென்ற கோடு சித்து கணத்திலாடுங்
      குணமாக ரேவதிநா செய்ய நன்று
      வானென்ற அட்டமியிற் செய்ய நன்று
      வளர்பிறையில் செய்தவனே யோகி யாமே. 9
      யோகியா யாவதற்கீ துனக்கு சொன்னேன்
      ஓகோகோ முன்னுரைத்த மூல தாலே
      யோகிகளா யேகாந்த வல்லி யாட்கிங்
      ஏட்டிலே யெழுதினதால் எல்லா மாச்சு
      தாகிகளா தாயுடைய கிருபை யாலே
      தவமாகும் மவமாகும் சுபமுண்டாகும்
      மோகிகளால் மூலபூசா விதிப தாலே
      முத்திபெற சித்திவிளை பத்து முற்றே. 10
      முடிந்தது
      ------------------------------------------------------------------------

      ------------------------------------------------------------------------
      கடுவெளி சித்தர் - ஆனந்த களிப்பு
      பல்லவி
      பாபஞ்செய் யாதிரு மனமே - நாளை
      கோபஞ்செய் தேயமன் கொண்டோடி போவான்
      பாபஞ்செய் யாதிரு மனமே.
      சரணங்கள்
      சாபம் கொடுத்திட லாமோ - விதி
      தன்னை நம்மாலே தடுத்திடலாமோ
      கோப தொடுத்திடலாமோ - இச்சை
      கொள்ள கருத்தை கொடுத்திடலாமோ 1
      சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
      சுற்றத்தை முற்றா துடைத்திடும் நாசம்
      நல்லபத்த திவிசு வாசம் - எந்த
      நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். 2
      நீர்மேற் குமிழியி காயம் - இது
      நில்லாது போய்விடும் நீயறிமாயம்
      பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
      பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3
      நந்த வனத்திலோ ராண்டி - அவன்
      நாலாறு மாதமா குயவனை வேண்டி
      கொண்டுவ தானொரு தோண்டி - மெத்த
      கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி. 4
      தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்
      சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
      ஏடாணை மூன்றும் பொல்லாதே - சிவ
      திச்சைவை தாலெம லோகம் பொல்லாதே. 5
      நல்ல வழிதனை நாடு- எந்த
      நாளும் பரமனை நத்தியே தேடு
      வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
      வள்ளலை நெஞ்சினில் வாழ்த்தி கொண்டாடு. 6
      நல்லவர் தம்மை தள்ளாதே - அறம்
      நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
      பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
      பொய்மொழி கோள்கள் பொருந்த விள்ளாதே. 7
      வேத விதிப்படி நில்லு - நல்லோர்
      மேவும் வழியினை வேண்டியே செல்லு
      சாத நிலைமையே சொல்லு - பொல்லா
      சண்டாள கோபத்தை சாதித்து கொல்லு. 8
      பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
      பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
      இச்சைய துன்னையாளாதே - சிவன்
      இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9
      மெஞ்ஞான பாதையி லேறு - சுத்த
      வேதாந்த வெட்ட வெளியினை தேறு
      அஞ்ஞான மார்க்கத்தை தூறு - உன்னை
      அண்டினோர கானந்த மாம்வழி கூறு. 10
      மெய்குரு சொற்கட வாதே - நன்மை
      மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
      பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
      புத்தியை பொய்வழி தனில் நடத்தாதே. 11
      கூடவருவ தொன்றில்லை - புழு
      கூடெடு திங்ஙன் உலைவதே தொல்லை
      தேடரு மோட்சம தெல்லை - அதை
      தேடும் வழியை தெளிவோரு மில்லை. 12
      ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
      ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
      முந்தி வருந்திநீ தேடு - அந்த
      மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 13
      உள்ளாக நால்வகை கோட்டை - பகை
      ஓட பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
      கள்ள புலனென்னுங் காட்டை - வெட்டி
      கனலி டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 14
      காசிக்கோ டில்வினை போமோ - அந்த
      கங்கையா டில்கதி தானுமுண் டாமோ
      பேசுமுன் கன்மங்கள் சாமோ - பல
      பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15
      பொய்யாக பாராட்டுங் கோலம் - எல்லாம்
      போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்
      மெய்யாக வேசுத்த காலம் - பாரில்
      மேவ புரிந்திடில் என்னனு கூலம் 16
      சந்தேக மில்லாத தங்கம் - அதை
      சார்ந்து கொண்டாலுமே தாழ்விலா பொங்கம்
      அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்
      ஆனந்தமாக நிரம்பிய புங்கம். 17
      பாரி லுயர்ந்தது பக்தி - அதை
      பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
      சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
      சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 18
      அன்பெனும் நன்மலர் தூவி - பர
      மானந தேவியின் அடியிணை மேவி
      இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
      ஈடேற்ற தேடாய்நீ இங்கே குலாவி. 19
      ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்
      கான வழியை யறிந்து நீகொண்டு
      சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
      சிவனுக்கு செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு. 20
      ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேக
      தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
      வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
      வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21
      எட்டுமி ரண்டையும் ஓர்ந்து - மறை
      எல்லா முனக்குள்ளே ஏகமா தேர்ந்து
      வெட்ட வெளியினை சார்ந்து - ஆனந்த
      வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 22
      இந்த வுலகமு முள்ளு - சற்றும்
      இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
      செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்
      சிந்தைதி திக்க தெவிட்டவு கொள்ளு. 23
      பொய்வேத தன்னை பாராதே - அந்த
      போதகர் சொற்புத்தி போத வாராதே
      மையவிழி யாரை சாராதே - துன்
      மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24
      வைதோரை கூடவை யாதே - இந்த
      வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
      வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
      வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25
      சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்கு
      தீங்கான சண்டையை சிறக்க தூண்டாதே
      தவநிலை விட்டு தாண்டாதே - நல்ல
      சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26
      பாம்பினை பற்றியா டாதே - உன்றன்
      பத்தினி மார்களை பழித்துக்கா டாதே
      வேம்பினை யுலகிலூ டாதே - உன்றன்
      வீறாப்பு தன்னை விளங்கநா டாதே. 27
      போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னை
      புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே
      சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்
      தாழும் படிக்கு நீதாழ்வை பண்ணாதே. 28
      கஞ்சா புகைபிடி யாதே - வெறி
      காட்டி மயங்கிய கட்குடி யாதே
      அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி
      அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29
      பத்தி யெனுமேணி நாட்டி - தொந்த
      பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டி
      சத்திய மென்றதை யீட்டி - நாளும்
      தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30
      செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
      சீயென் றொறுத்து திடங்கொள் விவேகம்
      ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
      ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31
      எவ்வகை யாகநன் னீதி - அவை
      எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
      ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்
      ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32
      கள்ள வேடம் புனையாதே - பல
      கங்கையி லேயுன் கடன் நனையாதே
      கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு
      கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33
      எங்கும் சுயபிர காசன் - அன்பர்
      இன்ப இரு திருந்திடும் வாசன்
      துங்க அடியவர் தாசன் - தன்னை
      துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34
      முடிந்தது
      ------------------------------------------------------------------------

      ------------------------------------------------------------------------
      குதம்பை சித்தர் பாடல்கள்
      கண்ணிகள்
      வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்கு
      பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
      பட்டயம் ஏதுக்கடி 1
      மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்கு
      கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
      கற்பங்கள் ஏதுக்கடி 2
      காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
      வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
      வீணாசை ஏதுக்கடி 3
      வஞ்சகம் அற்று வழிதன்னை கண்டோர்க்கு
      சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
      சஞ்சலம் ஏதுக்கடி 4
      ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
      வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
      வாதாட்டம் ஏதுக்கடி 5
      நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
      முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்
      முத்திரை ஏதுக்கடி 6
      தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
      மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
      மந்திரம் ஏதுக்கடி 7
      சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
      உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
      உத்தியம் ஏதுக்கடி 8
      நாட்டத்தை பற்றி நடுவணை சேர்வோர்க்கு
      வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
      வாட்டங்கள் ஏதுக்கடி 9
      முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்கு
      சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
      சத்தங்கள் ஏதுக்கடி 10
      உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
      இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய்
      இச்சிப்பிங்கு ஏதுக்கடி 11
      வேகாமல் வெந்து வெளியெளி கண்டோர்க்கு
      மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
      மோகாந்தம் ஏதுக்கடி 12
      சாகாமல் தாண்டி தனிவழி போவோர்க்கு
      ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
      ஏகாந்தம் ஏதுக்கடி 13
      அந்தர தன்னில் அசைந்தாடு முத்தர்க்கு
      தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
      தந்திரம் ஏதுக்கடி 14
      ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
      ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
      ஞானந்தான் ஏதுக்கடி 15
      சித்தர கூடத்தை தினந்தினம் காண்போர்க்கு
      பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
      பத்திரம் ஏதுக்கடி 16
      முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்கு
      சட்கோணம் ஏதுக்கடி - குதம்பாய்
      சட்கோணம் ஏதுக்கடி 17
      அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
      நட்டணை ஏதுக்கடி - குதம்பாய்
      நட்டணை ஏதுக்கடி 18
      முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்கு
      பத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
      பத்தியம் ஏதுக்கடி 19
      அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்கு
      பல்லாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
      பல்லாக்கு ஏதுக்கடி 20
      அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
      முட்டாங்கம் ஏதுக்கடி - குதம்பாய்
      முட்டாங்கம் ஏதுக்கடி 21
      வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
      யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
      யோகந்தான் ஏதுக்கடி 22
      மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்கு
      பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய்
      பூத்தானம் ஏதுக்கடி 23
      செத்தாரை போல திரியுமெய்ஞ் ஞானிக்கு
      கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்
      கைத்தாளம் ஏதுக்கடி 24
      கண்டாரை நோக்கி கருத்தோடு இருப்போர்க்கு
      கொண்டாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
      கொண்டாட்டம் ஏதுக்கடி 25
      காலனை வென்ற கருத்தறி வாளர்க்கு
      கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
      கோலங்கள் ஏதுக்கடி 26
      வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
      உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
      உண்காயம் ஏதுக்கடி 27
      மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்கு
      தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
      தேங்காய்ப்பால் ஏதுக்கடி 28
      பட்டணஞ் சுற்றி பகலே திரிவோர்க்கு
      முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
      முட்டாக்கு ஏதுக்கடி 29
      தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
      தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
      தேவாரம் ஏதுக்கடி 30
      தன்னை அறிந்து தலைவனை சேர்ந்தோர்க்கு
      பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
      பின்னாசை ஏதுக்கடி 31
      பத்தாவு தானும் பதியோடு இருப்பார்க்கு
      உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
      உத்தாரம் ஏதுக்கடி 32
      முடிந்தது
      ------------------------------------------------------------------------

      ------------------------------------------------------------------------
      சட்டைமுனி ஞானம்
      எண்சீர் விருத்தம்
      காணப்பா பூசைசெய்யும் முறையை கேளாய்
      கைம்முறையா சுவடிவைத்து பூசை செய்வார்
      பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்து
      புகழாக பூசை செய்வார் பெண்ணை வைத்தும்
      நாளப்பா சக்கரத்தை பூசை செய்வார்
      நம்முடைய பூசையென்ன மேரு போலே
      ஓதப்பா நாற்பத்துமு கோணம் வைத்தே
      உத்தமனே பூசை செய்வார் சித்தர்தாமே. 1
      தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
      சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்
      தேனென்ற மேருவுக்கு தீட்சை வேண்டும்
      சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா
      வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
      வாய்திறந்தே உபதேசம் சொன்ன ராகிற்
      கோனென்ற வாதசித்தி கவன சித்தி
      கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே. 2
      கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தை கேளாய்
      குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய்
      மாறியதோர் திரிபுரையெ டெழுத்தை கேளாய்
      மைந்தனே இவளை நீபூசை பண்ண
      தேறியதோர் புவனைதனின் எழுத்தை கேளாய்
      திறமாக புவனையைநீ பூசை பண்ணு
      ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய்
      அவளுடைய பதம் போற்றி பூசைபண்ணே. 3
      பண்ணியபின் யாமளைஐ தெழுத்தை கேளாய்
      பண்பாக தீட்சையைந்தும் முடிந்த பின்பு
      வண்ணியதோர் வாசியென்ற யோக துக்கு
      மைந்தனே வைத்துப்ராணா யா தீரும்
      கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாம்
      காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை
      உண்ணியதோர் உலகமென்ன சித்தர் சொன்ன
      உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே 4
      தியங்கினால் கெர்சித்து துரத்து சண்ணுஞ்
      சீறியர் மிலேச்சரையே சுகத்தி ன்ள்ளே
      மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்
      மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ
      தயங்கினார் உலகத்திற் கோடி பேர்கள்
      சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு
      துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு
      சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்த பாழே. 5
      பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ
      பர தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ
      வாளான விழியுடைய பெண்ணை சேரும்
      மயக்கமற்று நிற்பதெப்போ மனமே ஐயோ
      காழான உலகமத னாசை யெல்லாங்
      கருவறுத்து நிற்பதெப்போ கருதி நின்ற
      கோளான கருவிவிட்டு மேலே நோக்கி
      கூடுவது மேதனென்றால் மூலம்பாரே. 6
      முடிந்தது
      ------------------------------------------------------------------------

      ------------------------------------------------------------------------
      திருமூல நாயனார் ஞானம்
      அடியாகி அண்டரண்ட தப்பால் ஆகி
      அகாரமெனுமெழு ததுவே பாதமாகி
      முடியாகி நடுவாகி மூல தன்னில்
      முப்பொருளு தானாகி முதலுமாகி
      படியாய்மு பாழற்று படிக்கு மப்பாற்
      படிகடந்த பரஞ்சோதி பதியுமாகி
      அடியாகு மூலமதே அகார மாகி
      அவனவளாய் நின்றநிலை யணுவ தாமே. 1
      அதுவாகி அவனளாய் எல்லா மாகி
      அடிநடுவு முடிவாகி யகண்ட மாகி
      பொதுவாகி பல்லுயிர்க ளனைத்து கெல்லாம்
      புகலிடமாய் எப்பொருட்கு மூலமாகி
      மதுவாகி வண்டாகி சுவையு மாகி
      மலராகி மணமாகி மதிக்க வொண்ணா
      அதுவாரும் அகாரமதே மூலமாகி
      அண்டமெல்லா தாங்கிநின்ற அம்மூலமே. 2
      மூலமெனு மாதார வட்ட தானே
      முச்சுடரு முக்கோண மூன்று நாடி
      சீலமெனுஞ் சிவலிங்க பாத தீர்த்த
      திருவடியு திருமேனி நடமுமாகும்
      கோலமுடன் அன்ட மெல்லா தாங்கிக்கொண்டு
      கொழுந்து விட்டகம்பமதாய் மேலேநோக்கி
      ஆலமுண்ட கண்டமெலா தானாய் நின்ற
      அகாரமுதல் அவ்வெழுத்தை அறிந்துபாரே. 3
      அரிந்ததுவு தற்பரமே அகார மாகும்
      அறிவுடைய உகாரம்சிற் பரம தாகும்
      பிறந்ததுவு முலகமெலாஞ் ச தானாம்
      பேதமெனுங் கருவிவகை யெல்லா மாகும்
      அறிந்ததுவும் அகாரமெனும் பாத தன்னை
      அடிமுடியென்று அனுதினமும் அறிந்து நோக்கே. 4
      நோக்கமுடன் மூலமெனும் பாத தன்னை
      நுண்பொருளாஞ் சிற்பரத்தினூடே நோக்கு
      தீர்க்கமுட னாதார வகையு தாண்டி
      திருநயனம் நாசிநெற்றி நடுவே பார்த்து
      போக்கறிந்திங் கிந்தநிலை நோக்க வல்லார்
      புரிசடையோன் தன்னுடைய புதல்வ ராவார்
      ஆக்கமுடன் அருட்சுடர்போற் குருவை தானே
      அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே. 5
      ஆசானு மீசானு மொன்றே யாகும்
      அவனவளு மொன்றாகும் அது தானாகும்
      பேசாத மந்திரமு மிதுவே யாகும்
      பேரொளியின் வடிவாகும் பேரு மாகும்
      நேசாருங் கலைகளெலா தானே யாகும்
      நிலையான ஓங்கார பூட மாகும்
      ஈசானை ஆசானா காணும் பேர்க்கிங்
      கின்பமுடன் கயிலாச மெய்த லாமே. 6
      எய்தரியா பரசிவத்தின் மூல தன்னில்
      இருசுடரும் உதித்தொடுங்கு மிடமே யென்று
      மெய்த்தொழுயுஞ் சுழுமுனையே கம்ப மாகி
      மெய்ப்பொருளாஞ் சோதி யென மேவி நிற்கும்
      இவ்வகையே மூலமெனும் பாத தன்னை
      இருநேர மர்றிடத்தே யிறைஞ்சி காணே. 7
      காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்
      காணரிய பொருளாகுங் காட்டும் போதே
      ஆண் பெண்ணாய் அலியாகி அடியுமாகி
      அப்பாலை கப்பாலாய் அமர்ந்த சோதி
      வீண்பயிலும் வேதமெல்லா தேடி கானா
      வெறும்பாழ தாகியே மேவி நின்றார்
      சேண்பயிலும் செகசோதி மூல தன்னை
      தேடரிய பாதவென்றே தெளிந்து நோக்கே. 8
      தெளிவரிய பாதமது கார மாகி
      சிற்பரமு தற்பரமு தானேயாகி
      அழிவரிய சோதியது தானே யாகி
      அடிநடுவு முடியாகி யமர்ந்து நின்று
      மொழிவரிய முதலாகி மூலமாகி
      முச்சுடர தானாகி முடிந சோதி
      சுழியினிலே முனையாகி கோப மாகி
      சொல்லரிய வெழுத்தொன்றே தொகுத்து பாரீர். 9
      முடிந்தது
      ------------------------------------------------------------------------

      ------------------------------------------------------------------------
      திருவள்ளுவர் ஞானம்
      காப்பு
      அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி
      அகண்டம்பரி பூரணத்தின் அருளே போற்றி
      மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி
      மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி
      எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி
      இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி
      குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி
      குருமுனியின் தாளினையெ போதும் போற்றி 1
      கட்டளை கலித்துறை
      அன்னை யெனுங்கர்ப்ப மதனில்வ துமதிலேயிருந்தும்
      நன்னயமா பத்துத்திங்களு நானக தேயிருந்தேன்
      என்ன அதிசயங் காணிவ்வுலகி லேயமைந்த
      உன்னதமெல்லா மமைந்தேன் உண்மையை காண்கிலரே. 1
      அம்புவி தன்னிலேயுதி தாய்ந்தறி பாடைதன்னை
      வம்புலக தார்வசிய மாய்க்கை பிடித்தேபிரிந்து
      கும்பி தனிலேயுழன்று மக்குண்டலி பொற்கமலம்
      நம்பியிருந்தேன் சிலநாள் ரகசியங் காண்கிலனே 2
      தரவு கொச்சகம்
      அண்டரண்ட வான்புவியும் ஆகமத்தி னுட்பொருளும்
      கண்டிதமா யான்விளங்கு காயமதி லேயறியும்
      வண்டரெனை நீசனென்ற வாறுதனை யேயழித்தேன்
      விண்டரக சியந்தன்னை விளக்கமது காண்கிலரே. 3
      வையமதி லேயுதிக்கு மாண்பர்கனே யுங்களுயிர்
      மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ தென்னவிதம்
      அய்யமில்லா வாழ்ந்துலகில் ஆண்மையா பூண்டமதி
      பொய்யெனுமிவ் வாழ்க்கையது போகுஞ்சுடு காடுளதே 4
      கட்டளை கலித்துறை
      வீடானமூல சுழிநாத வீட்டில்விளங்கும் விந்து
      நீடாழி லோகந்தழைத்து பெருகியு நின்றிலகு
      தேடாதழித்த பொருளான பொக்கிட தேடியென்ன
      காடானநாடு சுடுகாடு சேர்வதுங் கண்டிலரே 5
      எழுவகை தோற்றமும் நால்வகை யோனியிலெய்திடினும்
      பொழி சுரோணிதம் நாதவிந்து பொருள் போதகத்தால்
      கழியக்கழி கடலுயிர் தேய்பிறை கண்டுமிரு
      தழி பெருந்தரை யெந்நாளிருந்தும் அனித்தியமே 6
      எந்நா ளிருந்தென்ன முன்னாளனுப்படி யிந்தவுடல்
      தன்னா லழிவது தானறியாதென தந்தைவிதி
      உன்னலழிவ துடலுயிர் காயமொழிவ துங்கண்
      டந்நா ளனுப்படி கண்டுபிரு தறியாதவரே 7
      யோனிக்குளாசை யழியா தனித்தியம் உங்களுயிர்
      தேனிக்குள் இன்பஞ்சுகாதித மோவருஞ் சிற்றின்பத்தில்
      ஊனற்றுக்காய முடலற்று போம்பொழு தொன்றறியா
      ஈனர்க்கு சொர்க்கஞ் சுடுகாடொழிய இனியில்லையே. 8
      நேரிசை வெண்பா
      இந்தவுடல் காயம் இறந்துவிடு மிவ்வுலகில்
      வந்தவழி தானறியா வாழ்க்கை - இந்தவுடல்
      அற்ப குழியி லரவ மிருப்பதெனும்
      கற்பகத்தை யாண்டிடுமோ காண். 9
      ஞானமறி தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
      பானமதை யுண்டு பசியினால் - ஞானமது
      கண்டால் உடலுயி ருங்காயம் வலுவாகும்
      உண்டால் அமிர்தரச முண். 10
      சுழியறியார கென்ன சுகமறியார
      வழியறியார கென்ன எய்துமாறு - சுழியறியா
      மூலமறி தவ்வழியில் முத்தியடை யார்க்குநமன்
      காலனவர கேமரணங் காண். 11
      வேத மறைஞான மெய்யுணர்வு தானாகில்
      நாதனரு ளால்பதவி நாடுமே - வேதமறை
      னாலு பொருளுள் நற்பொருளின் ஆற்றி
      பாலுமது நெய்யெனவும் பார். 12
      முதலிருந்த ஊழ்வினையை முப்பாழை சுட்டு
      பதறா மதிபாடு பட்டேன் - முதலிருந்த
      நல்வினையு தீவினையு நாடாம லும்பிறந்து
      வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு. 13
      காயசித்தி யாலெனது கன்மவினை போக்கியபின்
      மாயசித்தி மூலசுழி வாய்க்குமே - காயசித்தி
      மூல புளியால் முதல்தீட்சை யாச்சுது இனி
      காலமென்னி ரண்டாண்டில் காண். 14
      கல்லுப்பின் வாருங் கருத்தறியா துண்டுமனு
      வல்வினை குள்ளாகி மரணமார் - கல்லுப்பு
      வெள்ளை கல்லுப்பு வெகுவிதமாய் வந்தாலும்
      உள்ளமதி லுண்டென்றே உன். 15
      என்றும்இ துப்பாகும் எண்சாணு டலிரு
      கண்டுமறி யாததென்ன காரணமோ - என்றுமதி
      வாரி யமுரியதை வன்னிவிட்டு காய்ச்சியபின்
      வீரியமா யானுணரு மெய். 16
      உப்பின் கசடுதான் ஊறலது மாறினதால்
      மூப்புசுன்ன மாவதற்கு முன்னமே - உப்பதனால்
      கற்பாந்தங் கோடி காய மிதுவலுத்து
      சொற்பாயும் வாசியில் தேகம். 17
      அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போல்
      அஞ்சு வசப்படுவ தாண்டதனில் - அஞ்சினையும்
      கண்டறி வோர்ஞான கார்சி யதினினைவு
      விண்டறிய லாமே விதி. 18
      எண்சாணா தேக மெடுத்தாலென் னாண்டையே
      பெண்சாரல் நீக்கியே பேரின்பம் - க்ண்காண
      தேக மொழியாமல் சித்தி பெறுஞானம்
      யோகசித்தி போசைவிதி யுன். 19
      முடிந்தது
      -----
      ------------------------------------------------------------------------

      ------------------------------------------------------------------------
      -
      -8
      சித்தர் பாடல்கள் தொகுப்பு -
      பட்டினத்து பிள்ளையார் பட்டினத்தார் அருளியது
      ------------------------------------------------------------------------
      ------------------------------------------------------------------------
      .
      - .
      ...
      .
      .

      .
      2000 ...

      2000 .
      -8
      4.6 5
      -8 - .
      .

      © 1998-2000


      .
      ..

      .
      ------------------------------------------------------------------------
      திருப்பாடல் திரட்டு
      பட்டினத்து பிள்ளையார் பட்டினத்தார் அருளியது
      1. திருவேகம்பமாலை
      2. திருத்தில்லை
      3. முதலாவது கோயிற்றிருவகவல்
      4. இரண்டாவது கோயிற்றிருவகவல்
      5. மூன்றாவது கோயிற்றிருவகவல்
      6. நான்காவது கச்சி திருஅகவல்
      7. அருட்புலம்பல் - முதல்வன் முறையீடு
      8. அருட்புலம்பல் - மகடூஉ முதலாக உள்ளது
      ------------------------------------------------------------------------
      1. திருவேகம்பமாலை
      அறந்தா னியற்று மவனிலுங்கோடி யதிகமில்ல
      துறந்தான் அவனின் சதகோடி யுள்ளத்துறவுடையோன்
      மறந்தா னறக்காற் றறிவோடிருந்திரு வாதனையற்று
      இறந்தான் பெருமையையென் சொல்லுவேன் கச்சியேகம்பனே 1
      கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
      வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
      கொட்டிமுழக்கி யழுவார் மயானங் குறுகியப்பால்
      எட்டி யடிவைப்ப ரோ யிறைவா கச்சியேகம்பனே. 2
      கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து
      அப்புறங்தன்னி லசையாமல் முன்வை தயல்வளவில்
      ஒப்புடன்சென்று துயில்நீத்து பின்வ துறங்குவளை
      எப்படிநான் நம்புவேன் இறைவா கச்சியேகம்பனே 3
      நன்னாரில் பூட்டிய சூத்திரப்பாவை நன்னார்தப்பினால்
      நன்னாலுமாடி சலித்திடுமோ அந தன்மையைப்போல்
      உன்னால்யானு திரிவதல்லால் மற்றுனை பிரிந்தால்
      என்னாலிங் காவதுண்டோ இறைவா கச்சியேகம்பனே 4
      நல்லா ரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
      அல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும்
      இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
      எல்லாம் வெளிமயக்கே இறைவா கச்சியேகம்பனே 5
      பொல்லாதவன் நெறி நில்லாதவன் ஐம்புலன்கள்தமை
      வெல்லாதவன் கல்வி கல்லாதவன் மெய்யடியவர்பால்
      செல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின்திருவடிக்கன்பு
      இல்லாதவன் மண்ணிலேன்பிறந்தேன் கச்சியேகம்பனே 6
      பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை பிறந்து மண்மேல்
      இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை இடைநடுவில்
      குறிக்குமி செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
      இறக்குங் குலாமரு கென்சொல்லுவேன் கச்சியேகம்பனே 7
      அன்னவிசார மதுவேவிசாரம் அதுவொழிந்தால்
      சொன்ன விசார தொலையா விசாரம் நல்தோகையரை
      பன்னவிசாரம் பலகால் விசாரமி பாவிநெஞ்சக்கு
      என்னவிசாரம் வைத்தாய் இறைவா கச்சியேகம்பனே 8
      கல்லா பிழையும் கருதா கசிந்துருகி
      நில்லா பிழையு நினையா பிழையும் நின்னஞ்செழுத்தை
      சொல்லா பிழையு துதியா தொழா பிழையும்
      எல்லா பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9
      மாயந போரையும் மாயா மலமெனும் மாதரையும்
      வீயவிட்டோடி வெளியே புறப்பட்டு மெய்யருளாம்
      தாயுடன் சென்றுபின் தாதையை கூடிப்பின் தாயைமற
      தேயும தேநிட்டை யென்றா னெழிற் கச்சியேகம்பனே. 10
      வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கிற்சென்று
      சரிக்கோதுவேன் எழுத்தஞ்சுஞ் சொலேன் தமியேனுடலம்
      நரிக்கோ கழுகுபருந்தினுக்கோ வெய்யநாய் தனக்கோ
      எரிக்கோ இரையெதற்கோ இறைவா கச்சியேகம்பனே. 11
      காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே
      மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
      தூதென் றெண்ணாமற் ககமென்று நாடுமி துர்ப்புத்தியை
      ஏதென் றெடுத்துரைப்பேன் இறைவா கச்சியேகம்பனே. 12
      ஊருஞ் சதமல்ல உற்றார் உற்றுப்பெற்ற
      பேருஞ் சதமல்ல பெண்டீர் பிள்ளைகளும்
      சீருஞ் சதமல்ல செல்வஞ் தேசத்திலே
      யாருஞ் சதமல்ல நின்தாள் சதங்கச்சி யேகம்பனே. 13
      சீறும்வினையது பெண்ணுரு வாகி திரண்டுருண்டு
      கூறுமுலையு மிறைச்சியு மாகி கொடுமையினால்
      பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு
      ஏறுங்கரைகண்டி லேன் இறைவா கச்சியேகம்பனே. 14
      பொருளுடை யோரை செயலினும் வீரரை போர்க்களத்தும்
      தெருளுடை யோரை முகத்தினு தேர்ந்து தெளிவதுபோல்
      அருளுடை யோரை தவத்திற் குணத்தி லருளிலன்பில்
      இருளுறு சொல்லினு காணத்தகுங் கச்சி யேகம்பனே. 15
      பருத்தி பொதியினைப்போலே வயிறுபருக்க தங்கள்
      துருத்திக்கு அறுசுவை போடுகின்றார் துறந்தோர்தமக்கு
      வருத்தி யமுதிடமாட்டார் அவரையிம் மாநிலத்தில்
      இருத்தி கொண்டேனிருந்தா யிறைவா கச்சியேகம்பனே. 16
      பொல்லா விருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்கு
      அல்லா யிருந்திடு மாறொக்குமே அறிவோ ருளத்தில்
      வல்லா ரறியார் தமக்கு மயக்கங் கண்டாய்
      எல்லாம் விழி கேயிறைவா கச்சி யேகம்பனே. 17
      வாதுக்கு சண்டைக்கு போவார் வருவார் வழக்குரைப்பர்
      தீது குதவியுஞ் செய்திடுவார் தினந்தேடி ஒன்று
      மாது களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
      ஏதுக்கிவர் பிறந்தார் இறைவா கச்சியேகம்பனே. 18
      ஓயாமற் பொய்சொல்வர் நல்லோரை நிந்திப்பர் உற்றுப்பெற்ற
      தாயாரை வைவர் சதியாயிரஞ் செய்வார் சாத்திரங்கள்
      ஆயார் பிறர்க்குபகாரஞ் செய்யார் தமையண்டி னர்க்கொன்
      றீயா ரிருந்தென்ன போயென்னகாண் கச்சி யேகம்பனே. 19
      அப்பென்றும் வெண்மையதாயினும் ஆங்கந்நிலத்தியல் பா
      தப்பின்றியே குணவேற்றுமை தான்பல சார்தலினால்
      செப்பில் அபக்குவம் பக்குவமாயுள்ள சீவரிலும்
      இப்படி யே நிற்பன் எந்தைபிரான் கச்சியேகம்பனே. 20
      நாயா பிறந்திடில் நல்வேட்டை யாடிநயம் புரியும்
      தாயார வயிற்றில் நாரா பிறந்தபின் கம்பன்னரா
      காயாமரமும் வறளாங் குளமும் கல்லாவு மன்ன
      ஈயாமனிதரை யேன் படைத்தாய் கச்சி யேகம்பனே. 21
      ஆற்றில் கரைத்த புளியாக்கிடாமலென் னன்பை யெல்லாம்
      போற்றி திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெரித்து
      கூற்றை பணிகொளு தாளுடையாய் குன்றவில்லுடையாய்
      ஏற்று கொடியுடையாய் இறைவா கச்சியேகம்பனே. 22
      பெண்ணாகி வந்தொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னை
      கண்ணால் வெருட்டி முலையால் மயக்கி கடிதடத்து
      புண்ணாங் குழியிடை தள்ளி என்போதப்பொருள் பறிக்க
      எண்ணா துனைமற தேனிறைவா கச்சியேகம்பனே. 23
      நாவார வேண்டு மிதஞ்சொல்லுவார் உனைநான் பிரிந்தாற்
      சாவேனென் றேயிருந்தொக்கவுண் பார்கள்கைதான் வறளின்
      போய்வாரு மென்று நடுத்தலை கேகுட்டும் பூவையர்க்கு
      ஈவார் தலைவிதியோ இறைவா கச்சியேகம்பனே. 24
      கல்லார் சிவகதை நல்லோர் தமக்கு கனவிலும்மெய்
      சொல்லார் பசித்தவர கன்னங் கொடார் குருசொன்னபடி
      நில்லார் அறத்தை நினையார் நின்நாமம் நினைவில்சற்றும்
      இல்லா ரிருந்தென் இறந்தென் புகல் கச்சியேகம்பனே. 25
      வானமு தத்தின் சுவையறி யாதவர் வன்கனியின்
      தானமு தத்தின் சுவையெண்ணல் போல தனித்தனியே
      தேனமு தத்தின் தெளிவாய ஞானஞ் சிறிதுமில்லார
      ஈனமு தச்சுவை நன்று அல்லவோ கச்சியேகம்பனே. 26
      ஊற்றை சரீரத்தை யாபாச கொட்டிலை யூன்பொதிந்த
      பீற்றற் து ருத்தியை சோறிடு தோற்பையை பேசரிய
      காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தை காதல் செய்தே
      யேற்றி திரிந்துவி டேனிறைவா கச்சியேகம்பனே. 27
      சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வருந்தோடஞ்செய்த
      பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
      அல்லாத கேள்வியை கேட்டிடு தீங்குகள் ஆயவுமற்று
      எல்லா பிழையும் பொறுத்தருள் வாய் கச்சியேகம்பனே 28
      முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற்கூட்டி முகமினுக்கி
      மெட்டிட்டு பொட்டிட்டு பித்தளையோலை விளக்கியிட்டு
      பட்ட பகலில் வெளி கேசெயும் பாவையர்மேல்
      இட்டத்தை நீதவிர்ப்பாய் இறைவா கச்சியேகம்பனே. 29
      பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை
      மறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகி புன்மாதருக்குள்
      பறந்துழன்றே தடுமாறிப்பொன் தேடி பாவையர்க்கீந்து
      இறந்திடவோ பணித்தாய் இறைவா கச்சியேகம்பனே. 30
      பூதங்களற்று பொறியற்று சாரைம் புலன்களற்று
      பேதங்குணமற்று பேராசை தானற்று பின்முன்அற்று
      காதங்கரணங்களும் அற்ற ஆனந்த காட்சியிலே
      ஏதங் களைந்திரு பேனிறைவா கச்சியேகம்பனே. 31
      நல்லா யெனக்கு மனுவொன்று தந்தருள் ஞானமிலா
      பொல்லா எனைக்கொன்று போடும்பொழுதியல் பூசைசெபஞ்
      சொல்லாநற் கோயில்நியமம் பலவகை தோத்திரமும்
      எல்லா முடிந்தபின் கொல்லுகண்டாய் கச்சியேகம்பனே. 32
      சடக்கடத்து இரைதேடி பலவுயிர் தம்மைக்கொன்று
      விடக்கடித்து கொண்டிறுமா திருந்து மிகமெலிந்து
      படங்கடி தின்றுழல்வார்கள் தமைக்கரம் பற்றிநமன்
      இடக்கடிக்கும் பொழுதேது செய்வார் கச்சியேகம்பனே. 33
      நாறுமுடலை நரிப்பொதி சோற்றினை நான்தினமுஞ்
      சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தை தோகையர்தம்
      கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
      ஏறும் படியருள்வாய் இறைவா கச்சியேகம்பனே. 34
      சொக்கிட்டு அரண்மனை புக்குள்திருடிய துட்டர்வந்து
      திக்குற்ற மன்னரை கேட்பதுபோல் சிவநிந்தைசெய்து
      மிக்கு குருலிங்க சங்கமம்நிந்தித்து வீடிச்சிக்கும்
      எக்கு பெருந்தவர்க்கென் சொல்லுவேன் கச்சியேகம்பனே. 35
      விருந்தாக வந்தவர் தங்களு கன்னமிகக்கொடுக்க
      பொருந்தார் வளம்பெற வாழ்வார்நின் நாமத்தைப்போற்றி நித்தம்
      அருந்தா முலைப்பங்க ரெண்ணாதபாதகர் அம்புவியில்
      இருந்தாவதேது கண்டாய் இறைவா கச்சியேகம்பனே. 36
      எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெ குள்ளபடி
      வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கி
      சொல்லான் மலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப்பின்
      எல்லாம் சிவன்செயலே என்பார்காண் கச்சியேகம்பனே. 37
      பொன்னைநினைந்து வெகுவாக தேடுவர் பூவையன்னாள்
      தன்னைநினைந்து வெகுவாய் உருகுவார் தாரணியில்
      உன்னை நினைந்திங் குனைப்பூசியாத உலுத்தரெல்லாம்
      என்னையிருந்து கண்டாய் இறைவா கச்சியேகம்பனே. 38
      கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக்குண்டரை காமுகரை
      கொடும்பாவமே செய்யும் நிர்மூடர்தம்மை குவலயத்துள்
      நெடும்பனைபோல வளர்ந்து நல்லோர் தம்நெறியறியா
      இடும்பரை என்வகுத்தாய் இறைவா கச்சியேகம்பனே. 39
      கொன்றேன் அனேகமுயிரை எலாம்பின்பு கொன்றுகொன்று
      தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர்கவென்றே
      நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம்நீபொறுப்பாய்
      என்றே யுனைநம்பினேன் இறைவா கச்சியேகம்பனே. 40
      ஊரிருந்தென்ன நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள
      பேரிருந்தென்ன பெற்றதாய் இருந்தென் மடப்பெண்கொடியாள்
      சீரிருந்தென்ன சிறப்பிரு தென்ன இத்தேயததினில்
      ஏரிருந்தென்ன வல்லாய் இறைவா கச்சியேகம்பனே. 41
      வில்லால் அடிக்க செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
      கல்லால் எறி பிரம்பால் அடி களிவண்டுகூர்ந்து
      அல்லார் பொழில்தில்லை அம்பலவாணர்க்குஓர் அன்னைபிதா
      இல்லாததால் அல்லவோ இறைவா கச்சிஏகம்பனே. 42
      திருவேகம்பவிருத்தம்
      அன்னை எத்தனை அன்னையோ
      அப்பன் எத்தனை அப்பனோ
      பின்னை எத்தனை பெண்டீரோ
      பிள்ளை எத்தனை பிள்ளையோ
      முன்னை எத்தனை சன்மமோ
      மூடனாயடி யேனும றிந்திலேன்
      இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ
      என்செய் வேன் கச்சியேகம்ப நாதனே
      ------------------------------------------------------------------------
      2. திருத்தில்லை
      காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
      தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தணித்து செத்து
      போம்பிணம் தன்னை திரளாகக்கூடி புரண்டினிமேற்
      சாம்பிணம் கத்துதையோ என்செய்வேன் தில்லைச்சங்கரனே. 1
      சோறிடும்நாடு துணிதருங் குப்பை தொண்டன்பரைக்கண்டு
      ஏறிடுங்கைகள் இறங்கிடு தீவினை எப்பொழுதும்
      நீறிடும் மேனியர் சிற்றம்பலவர் நிருத்தம்கண்டால்
      ஊறிடுங் கண்கள் உருகிடும்நெஞ்சமென் னுள்ளமுமே. 2
      அழலுக்குள்வெண்ணெய் எனவே உருகி பொன்னம்பலத்தார்
      நிழலுக்குள் நின்றுதவம் உஞற்றாமல் நிட்டூரமின்னார்
      குழலுக்கிசைந்த வகைமாலை கொண்டு குற்றேவல்செய்து
      விழலுக்கு முத்துலை இட்டிறைத்தேனென் விதிவசமே. 3
      ஓடாமற் பாழுக்கு உழையாமல் ஓரமுரைப்பவர்பால்
      கூடாமல் நல்லவர்கூட்டம் விடாமல் வெங்கோபம்நெஞ்சில்
      நாடாமல் நன்மைவழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
      தேடாமல் செல்வ தருவாய் சிதம்பரதேசிகனே. 4
      பாராம லேற்பவர கில்லையென்னாமற் பழுதுசொல்லி
      வாரமற் பாவங்கள் வந்தணுகாமல் மனமயர்ந்து
      பேராமற் சேவைபுரியாம லன்புபெறா தவரை
      சேராமற் செல்வந்தருவாய் சிதம்பர தேசிகனே. 5
      கொல்லாமற் கொன்றதை தின்னாமற் குத்திரங்கோள்கள்
      கல்லாமற் கைதவரோ டிணங்காமற் கனவினும்பொய்
      சொல்லாமற் சொற்களை கேளாமற் றோகையர்மாயையிலே
      செல்லாமற் செல்வ தருவாய் சிதம்பர தேசிகனே. 6
      முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிலொரு
      பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டுபின்னுமிந்த
      பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னினம்பலவ
      ரடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே யறிவாரில்லையே. 7
      காலையுபாதி மலஞ்சல மாமன்றி கட்டுச்சியிற்
      சாலவுபாதி பசிதாக மாகுமுன் சஞ்சிதமாம்
      மாலையுபாதி துயில்காம மாமிவை மாற்றிவிட்டே
      ஆலமுகந்தரு ளம்பலவா என்னை யாண்டருளே. 8
      ஆயும்புகழ்ந்தில்லை யம்பலவாண ரருகிற் சென்றாற்
      பாயுமிடபங் கடிக்குமரவம் பின்பற்றி சென்றாற்
      பேயுங்கணமும் பெருந்தலை பூதமும் பின்தொடரும்
      போயென்செய்வாய் மனமே பிணக்காடவர் போமிடமே. 9
      ஓடுமெடுத்தத ளாடையுஞ் சுற்றி யுலாவிமெள்ள
      வீடுகடோறும் பலிவாங்கியே விதி யற்றவர்போ
      லாடுமரு கொண்டிங்கு அம்பலத்தேநிற்கு மாண்டிதன்னை
      தேடுங் கணக்கென்னகாண் சிவகாம சவுந்தரியே. 10
      ஊட்டுவிப்பானு முறங்குவிப்பானுமிங் கொன்றோ டொன்றை
      மூட்டுவிப்பானு முயங்குவிப்பானு முயன்ற வினை
      காட்டுவிப்பானு மிருவினை பாச கயிற்றின்வழி
      யாட்டுவிப்பானு மொருவனுண் டேதில்லை யம்பலத்தே. 11
      அடியார கெளியவ ரம்பலவாண ரடிபணிந்தால்
      மடியாமற்செல்வ வரம்பெறலாம் வையம் ஏழளந்த
      நெடியோனும் வேதனுங்காணாத நித்த நிமலனரு
      குடிகாணு நாங்களவர்காணு மெங்கள் குலதெய்வமே. 12
      தெய்வ சிதம்பரதேவா உன்சித்த திரும்பிவிட்டாற்
      பொய்வைத்த சொப்பனமா மன்னர்வாழ்வும் புவியுமெங்கே
      மெய்வைத்த செல்வமெங்கே மண்டலீகர்தம் மேடையெங்கே
      கைவைத்த நாடகசாலையெங்கே இது கண்மயக்கே. 13
      உடுப்பானும் பாலன்னமுண்பானு முய்வித்தொருவர் தம்மை
      கெடுப்பானு மேதென்று கேள்விசெய்வானுங் கெதியடங
      கொடுப்பானு தேகியென்றேற்பானும் ஏற கொடாமனின்று
      தடுப்பானு நீயல்லையோ தில்லையானந தாண்டவனே. 14
      வித்தாரம் பேசினுஞ் சோங்கேறினுங் கம்பமீதிருந்து
      தத்தாரவென் றோதி பவுரிகொண்டாடினு தம்முன்தம்பி
      யத்தாசைபேசினு மாவதுண்டோ தில்லையுண்ணிறைந்த
      கத்தாவின் சொற்படியல்லாது வேறில்லை கன்மங்களே. 15
      பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும் பிறந்துவிட்டா
      லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ
      அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல
      மறவா திருமனமே யதுகாணநல் மருந்துனக்கே. 16
      தவியாதிரு நெஞ்சமே தில்லைமேவிய சங்கரனை
      புவியார திருக்கின்ற ஞானாகரனை புராந்தகனை
      அவியாவிளக்கை பொன்னம்பல தாடியை யைந்தெழுந்தாற்
      செவியாமல் நீ£செபித்தாற் பிறவாமுத்தி சித்திக்குமே. 17
      நாலின் மறைப்பொரு ளம்பலவாணரை நம்பியவர்
      பாலிலொருதரஞ் சேவிக்கொணா திருப்பார கருங்கல்
      மேலிலெடுத்தவர் கைவிலங்கை தைப்பர் மீண்டுமொரு
      காலினிறுத்துவர் கிட்டியு தாம்வந்து கட்டுவரே. 18
      ஆற்றோடு தும்பை யணிந்தாடும் அம்பலவாணர்தம்மை
      போற்றாதவர்க்கு அடையாளமுண் டேயிந்த பூதலத்திற்
      சோற்றாவி யற்றுச்சுகமற்று சுற்ற துணியுமற்றே
      ஏற்றாலும் பிச்சைகிடையாம லேக்கற் றிருப்பார்களே. 19
      அத்தனை முப்பத்து முக்கோடி தேவர கதிபதியை
      நித்தனை அம்மை சிவகாமசுந்தரி நேசனை யெம்
      கூத்தனை பொன்னம் பலத்தாடு மையனை காணக்கண்கள்
      எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றவே. 20
      ------------------------------------------------------------------------
      3. முதலாவது கோயிற்றிருவகவல்
      திருமண்டில ஆசிரப்பா
      நினைமின் மனனே
      சிவபெரு மானை செம்பொனம் பலவனை
      நினைமின் மனனே
      அலகை தேரி னலமரு காலின்
      உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோம் பற்க 5
      பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
      தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
      பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
      உணர்ந்தன மறக்கும் மறந்தன வுணரும்
      புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும் 10
      அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்
      உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம்
      என்றிவை யனைத்து முணர்ந்தனை அன்றியும்
      பிறந்தன பிறவிக டோறும்
      கொன்றனை யனைத்தும் அனைத்துநினை கொன்றன 15
      தின்றன யனைத்தும் அனைத்துநினை
      பெற்றன யனைத்தும் அனைத்துநினை
      ஓம்பினை யனைத்தும் அனைத்துநினை யோம்பின
      செல்வத்து களித்தனை தரித்திர தழுகினை
      சுவர்க்க திருந்தினை நரகிற் கிடந்தனை 20
      இன்பமும் துன்பமும் இருநில தருந்தினை
      ஒன்றென் றெழியா துற்றனை அன்றியும்
      புற்பத குரம்பை துச்சி லொதுக்கிடம்
      என்ன நின்றியங்கு மிருவினை கூட்டை
      கல்லினும் வலிதா கருதினை இதனுள் 25
      பீளையு நீரும் புலப்படு மொருபொறி
      மீளுங் குறும்பி வெளிப்படு மொருபொறி
      சளியு நீரு தவழு மொருபொறி
      உமிழ்நீர் கோழை யழுகு மொறிபொறி
      வளியு மலமும் வழங்கு மொருவழி 30
      சலமுஞ் சீயுஞ் சரியு மொருவழி
      உள்ளுற தொடங்கி வெளிப்பட நாறுஞ்
      சட்டக முடிவிற் சுட்டெலும் பாகும்
      உடலுறு வாழ்க்கையை யுள்ளுற தேர்ந்து
      கடிமலர கொன்றை சடைமுடி கடவுளை 35
      ஒழிவருஞ் சிவபெரும் போகவின் பத்தை
      நிழலென கடவா நீர்மையடு பொருந்தி
      எனதற நினைவற இருவனை மலமற
      வரவொடு செலவற மருளற இருளற
      இரவொடு பகலற இகபர மறஒரு 40
      முதல்வனை தில்லையுண் முளைத்தெழுஞ் சோதியை
      அம்பல தரசனை ஆனந்த கூத்தனை
      நெருப்பினி லரக்கென நெக்குநெ குருகி
      திருச்சிற் றம்பல தொளிருஞ் சிவனை
      நினைமின் மனனே
      சிவபெருமானை செம்பொனம் பலவனை
      நினைமின் மனனே
      ------------------------------------------------------------------------
      4. இரண்டாவது கோயிற்றிருவகவல்
      காதள வோடிய கலக பாத
      கன்னியர் மருங்கிற் புண்ணுட னாடுங்
      காதலுங் கருத்து மல்லால்நின் னிருதாள்
      பங்கயஞ் சூட பாக்கியஞ் செய்யா
      சங்கடங் கூர்ந்த தமியேன் பாங்கிரு 5
      தங்கோ டிங்கோ டலமருங் கள்வர்
      ஐவர் கலகமி டலைக்குங் கானகம்
      சலமல பேழை யிருவினை பெட்டகம்
      வாதபி தங்கோழை குடிபுகுஞ் சீறூர்
      ஊத்தை புன்தோ லுதிர கட்டளை 10
      நாற்ற பாண்டம் நான்முழ தொன்பது
      பீற்ற துண்டம் பேய்ச்சுரை தோட்டம்
      அடலை பெரிய சுடலை திடருள்
      ஆசை கயிற்றி லாடும் பம்பரம்
      ஓயா நோய்க்கிடம் ஓரு மரக்கலம் 15
      மாயா விகாரம் மரண பஞ்சரம்
      சோற்று துருத்தி தூற்றம் பத்தம்
      காற்றில் பறக்கும் காண பட்டம்
      விதிவழி தருமன் வெட்டுங் கட்டை
      சதுர்முக பாணன் தைக்குஞ் சட்டை 20
      ஈ கனலி லிடுசில விருந்து
      கா கனலிற் கருகுஞ் சருகு
      கிருமி கிண்டுங் கிழங்கஞ் சருமி
      பாவக்கொழு தேறுங் கவைக்கொழு கொம்பு
      மணமாய் நடக்கும் வடிவின் முடிவிற் 25
      பிணமா கிடக்கும் பிண்டம் பிணமேல்
      ஊரிற் கிடக்க வொட்டா வுபாதி
      காலெதிர் குவித்த பூளை காலை
      கதிரெதிர பட்ட கடும்பனி கூட்டம்
      அந்தர தியங்கு மிந்திர சாபம் 30
      அதிரு மேக துருவி னருநிழல்
      நீரிற் குமிழி நீர்மே லெழுத்து
      கண்டுயில் கனவிற் கண்ட காட்சி
      அதனினும் பொல்லா மா களங்கம்
      அமையு மமையும் பிரானே யமையும் 35
      இமைய வல்லி வாழியென் றேத்த
      ஆனந தாண்டவங் காட்டி
      ஆண்டுகொண் டருள்கைநின் னருளினு கழகே. 38
      ------------------------------------------------------------------------
      5. மூன்றாவது கோயிற்றிருவகவல்
      பாற்கடல் கடை படுங்கடு வெண்ணெயை
      திருமிடற் றடக்கிய சிவனே யடைக்கலம்
      அடங்கலு மடக்கிடுங் கடுங்கோலை காலனை
      காலெடு தடக்கிய கடவுள்நின் னடைக்கலம்
      உலகடங் கலும்படை துடையவன் றலைபறித்து 5
      இடக்கையி லடக்கிய இறைவ நின் னடைக்கலம்
      செய்யபொன் னம்பல செல்வ நின் னடைக்கலம்
      ஐய நின் னடைக்கலம் அடியநின்
      மனவழி விலைத்திடுங் கனவெனும் வாழ்க்கையும்
      விழுப்பொரு ளறியா வழுக்குறு மனனும் 10
      ஆணவ மலத்துதி தளைந்ததி னுளைத்திடும்
      நிணவை புழுவென தெளிந்தெடு சிந்தையும்
      படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்
      தவறும் அழுக்காறும் இவறுபொ சாப்பும்
      கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சினம் 15
      இகலும் கொலையும் இழிப்புறு புன்மையுங்
      பகையும் அச்சமும் துணிவும் பனிப்பும்
      முக்குண மடமையும் ஐம்பொறி மயக்கமும்
      இடும்பையும் பிணியு மிடுக்கிய ஆக்கையை
      உயிரெனுங் குருருவி டோடுங் குரம்பையை 20
      எலும்பொடு நரம்புகொண் டிடையிற் பிணித்து
      கொழுந்தசை வேய்ந்து மொழுக்குவிழுங் குடிலை
      செம்பெழு வுதிர சிறுபுழு குரம்பையை
      மலவுடற் குடத்தை பலவுடற் புட்டிலை
      தொலைவிலா சோற்று துன்ப குழியை 25
      கொலைபடை கலம்பல கிடக்கும் கூட்டை
      சலிப்புறு வினைப்பல சரக்கு குப்பையை
      கோள்சர கொழுகும் பீறல் கோணியை
      கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை
      ஐம்புல பறவை யடையும்பஞ் சரத்தை 30
      புலரா கவலை விளைமர பொதும்பை
      ஆசை கயிற்றி லாடுபம் பரத்தை
      காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை
      மக்கள் வினையின் மயங்குங் திகிரியை
      கடுவெளி யுருட்டிய சகட காலை 35
      பாவ சரக்கொடு பவக்கடல் புக்கு
      கா காற்றெடு தலைப்ப கலங்கி
      கெடுவழி கரைசேர் கொடுமர கலத்தை
      இருவினை விலங்கொடு மியங்குபுற் கலனை
      நடுவன்வ தழைத்திட நடுங்கிடும் யாக்கையை 40
      பிணமென படுத்தியான் புறப்படும் பொழுதுநின்
      அடிமலர கமலத்து கபயநின் னடைக்கலம்
      வெளியிடை யுருமிடி யிடித்தென வெறித்தெழுங்
      கடுநடை வெள்விடை கடவுணின் னடைக்கலம்
      இமையா நாட்ட திறையே அடைக்கலம். 45
      அடியார கெளியாய் அடைக்கல மடைக்கலம்
      மறையவர் தில்லை மன்று நின் றாடி
      கருணை மொண்டலையெறி கடலே அடைக்கலம்
      தேவரு முனிவருஞ் சென்றுநின் றேத்து
      பாசிழை கொடியடு பரிந்தருள் புரியும் 50
      எம்பெருமா நின்இணை யடிக்கு கபயம்
      அம்பல தரசே அடைக்கல முனக்கே
      ------------------------------------------------------------------------
      6. நான்காவது கச்சி திருவகவல்
      திருமால் பயந்த திசைமுக னமைத்து
      வருமேழ் பிறவியு மானுட துதித்து
      மலைமகள் கோமான் மலரடி யிறைஞ்சி
      குலவிய சிவபதங் குறுகா தவமே
      மாதரை மகிழ்ந்து காதற் கொண்டாடும் 5
      மானிடர கெல்லாம் யானெடு துரைப்பேன்
      விழிவெளி மாக்கள் தெளிவுற கேண்மின்
      முள்ளுங் கல்லு முயன்று நடக்கும்
      உள்ளங் காலை பஞ்சென வுரைத்தும்
      வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் 10
      துள்ளும் வராலென சொல்லி துதித்தும்
      தசையு மெலும்பு தக்ககன் குறங்கை
      இசையுங் கதலி தண்டென வியம்பும்
      நெடுமுடல் தாங்கி நின்றிடு மிடையை
      துடிபிடி யென்று சொல்லி துதித்தும் 15
      மலமும் சலமும் வழும்பு திரையும்
      அலையும் வயிற்றை யாலிலை யென்றும்
      சிலந்தி போல கிளைத்துமுன் னெழுந்து
      திரண்டு விம்மி சீப்பா தேறி
      உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி 20
      நகுவார கிடமாய் நான்று வற்றும்
      முலையை பார்த்து முளரிமொ டென்றும்
      குலையுங் கா குருடர குரைப்பேன்
      நீட்டவு முடக்கவு நெடும்பொருள் வாங்கவும்
      ஊட்டவும் பிசையவு முதவியிங் கியற்றும் 25
      அங்கையை பார்த்து காந்தளென் றுரைத்தும்
      வேர்வையு மழுக்கு மேவிய கழுத்தை
      பாரினி லினிய கமுகென பகர்ந்தும்
      வெப்பு மூத்தையு மேவிய வாயை
      துப்பு முருக்கின் தூய்மல ரென்றும் 30
      அன்னமுங் கறியு மசைவி டிறக்கும்
      முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
      நீருஞ் சளியு நின்றுநின் றொழுகும்
      கூரிய மூக்கை குமிழென கூறியும்
      தண்ணீர் பீளை தவிரா தொழுகும் 35
      கண்ணை பார்த்து கழுநீ ரென்றும்
      உள்ளுங் குறும்பி யழுகுங் காதை
      வள்ளை தண்டின் வளமென வாழ்த்தியும்
      கையு மெண்ணெயுங் கலவா தொழியில்
      வெய்ய வதரும் பேனும் விளை 40
      தக்க தலையோ டின்முளை தெழுந்த
      சிக்கின் மயிரை திரண்முகி லென்றும்
      சொற்பல பேசி துதித்து நீங்கள்
      நச்சி செல்லு நரக வாயில்
      தோலு மிறைச்சியு துதைந்துசீ பாயும் 45
      கா பாழி கருவிளை கழனி
      தூமை கடவழி தொளைபெறு வாயில்
      எண்சா ணுடம்பு மிழியும் பெருவழி
      மண்பாற் காமங் கழிக்கு மறைவிடம்
      நச்சி காமுக நாய்தா னென்றும் 50
      இச்சி திருக்கு மிடைகழி வாயில்
      திங்க சடையோன் திருவரு ளில்லார்
      தங்கி திரியுஞ் சவலை பெருவழி
      புண்ணிது வென்று புடவையை மூடி
      உண்ணீர் பாயு மோசை செழும்புண் 55
      மால்கொண் டறியா மாந்தர் புகும்வழி
      நோய்கொண் டொழியா நுண்ணியர் போம்வழி
      தருக்கிய காமுகர் சாரும் படுகுழி
      செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி
      பெண்ணு மாணும் பிறக்கும் பெருவழி 60
      மலஞ்சொரி திழியும் வாயிற் கருகே
      சலஞ்சொரி திழியு தண்ணீர் வாயில்
      இத்தை நீங்க ளினிதென வேண்டா
      பச்சிலை யிடினும் பத்தர கிரங்கி
      மெச்சி சிவபத வீடருள் பவனை 65
      முத்தி நாதனை மூவா முதல்வனை
      அண்ட ரண்டமு மனைத்துள புவனமும்
      கண்ட வண்ணலை கச்சியிற் கடவுளை
      ஏக நாதனை இணையடி யிறைஞ்சுமின்
      போக மாதரை போற்றுத லொழிந்தே 70
      -
      திருச்செங்கோடு
      நெருப்பான மேனியர் செங்கோட்டி லாத்தி நிழலருகே
      இருப்பார் திருவுள மெப்படியோ இன்னமென்னை யன்னை
      கருப்ப சாயக்குழிக்கே தள்ளுமோ கண்ணன் காணரிய
      திருப்பாதமே தருமோ தெரியாது சிவன்செயலே.
      -
      திருவொற்றியூர்
      ஐயுந்தொடர்ந்து விழியுஞ் செருகி யறிவழிந்து
      மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
      செய்யு திருவொற்றி யூருடையீர் திருநீறுமிட்டு
      கையுந்தொழப்பண்ணி யைந்தெழு தோதவுங் கற்பியுமே. 1
      சுடப்படுவா ரறியார் புரம்முன்றையுஞ் சுட்டபிரான்
      திடப்படு மாமதில்தென் ஒற்றியூரன் தெருப்பரப்பில்
      நடப்பவர் பொற்பாத நந்தலைமேற்பட நன்குருண்டு
      கிடப்பது காண்மனமே விதியேட்டை கிழிப்பதுவே. 2
      -
      திருவிடைமருதூர்
      காடே திருந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைகற்றி
      யோடே யெடுத்தென்ன உள்ளன்பி லாதவ ரோங்குவிண்ணோர்
      நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
      வீடே யிருப்பனு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே. 1
      தாயும்பகை கொண்ட பெண்டீர் பெரும்பகை தன்னுடைய
      சேயும்பகை யுறவோரும் பகை யிச்செகமும்
      ஆயும் பொழுதி லருஞ்செல்வம் நீங்கில் இக்காதலினாற்
      தோயுநெஞ்சே மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே. 2
      -
      திருக்கழுக்குன்றம்
      காடோ செடியோ கடற்புறமோ கனமேமிகுந்த
      நாடோ நகரோ நகர்நடுவோ நலமேமிகுந்த
      வீடோ புறத்திண்ணையோ தமியேனுடல் வீழுமிடம்
      நீடோய் கழுக்குன்றி லீசா உயிர்த்துணை நின்பதமே.
      -
      திருக்காளத்தி
      பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்துப டாடைசுற்றி
      முத்தும் பவளமும் பூண்டோடி யாடி முடிந்தபின்பு
      செத்து கிடக்கும் பிணத்தரு கேயினி சாம்பிணங்கள்
      கத்துங் கணக்கெண்ன காண்கயிலாபுரி காளத்தியே 1
      பொன்னாற் பிரயோசனம் பொன்படை தார்க்குண்டு பொன்படைத்தோன்
      தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு அத்தன்மையைப்போ
      உன்னாற் பிரயோசனம் வேணதெல்லாம் உண்டுஉனை பணியும்
      என்னாற் பிரயோசன மேதுண்டு காளத்தி யீச்சுரனே 2
      வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன் மாதுசொன்ன
      சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன் தொண்டுசெய்து
      நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
      ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே 3
      முப்போது மன்னம் புசிக்கவு தூங்கவு மோகத்தினாற்
      செப்போ திளமுலை யாருடன் சேரவுஞ் சீவன்விடு
      மப்போது கண்கலக்க படவும் வைத்தா யையனே
      எப்போது காணவல்லேன் திருக்காளத்தி யீச்சுரனே. 4
      இரைக்கே யிரவும் பகலு திரிந்திங் கிளைத்துமின்னார்
      அரைக்கே யவல குழியரு கேயசும் பார்ந்தொழுகும்
      புரைக்கே யுழலு தமியேனை யாண்டருள் பொன்முகலி
      கரைக்கேகல் லால நிழற்கீ ழமர்ந்தருள் காளத்தியே. 5
      நாறுங் குதிரை சலதாரை தோற்புரை நாடொறுஞ்சீழ்
      ஊறு மலக்குழி காமத்துவார மொளி திடும்புண்
      தேறு தசைப்பிள பந்தரங் கத்துள சிற்றின்பம்விட்டு
      ஏறும் பதந்தரு வாய் திருக்காளத்தி யீச்சுரனே. 6
      -
      திருக்கைலாயம்
      கான்சாயும் வெள்ளி மலைக்கரசே நின்கழல் நம்பினேன்
      ஊன்சாயுஞ் சென்ம மொழித்திடு வாய் காவூரனுக்காய்
      மான்சாயு செங்கை மழுவலஞ் சாய வனைந்தகொன்றை
      தேன்சாய நல்ல திருமேனி சாய்த்த சிவக்கொழுந்தே. 1
      இல்ல துறந்து பசிவந்த போதங் கிரந்துநின்று
      பல்லுங் கரையற்று வெள்வாயுமாய் ஒன்றிற் பற்றுமின்றி
      சொல்லும் பொருளு மிழந்து சுகானந தூக்கத்திலே
      யல்லும் பகலு மிருப்பதென்றோ கயிலா யத்தனே. 2
      சிந்தனை யற்று பிரியமு தானற்று செய்கையற்று
      நினைந்தது மற்று நினையா மையுமற்று நிர்ச்சிந்தனா
      தனந்தனி யேயிரு தானந்த நித்திரை தங்குகின்ற
      அனந்தலி லென்றிரு பேனத்தனை கயிலாயத்தனே. 3
      கையார ஏற்றுநின் றங்ஙன தின்று கரித்துணியை
      தையா துடுத்து நின் சந்நிதிக்கே வந்துசந்ததமு
      மெய்யார நிற்பணி துள்ளே யுரோமம் விதிர்விதிர்ப்ப
      ஐயா வென்று ஓலமிடுவது என்றோ கயிலாயத்தனே. 4
      நீறார்த்த மேனி யுரோமஞ்சிலிர துளம் நெக்குநெக்கு
      சேறா கசிந்து கசிந்தே யுருகி நின்சீரடிக்கே
      மாறா தியானமுற் றானந்த மேற்கொண்டு மார்பிற்கண்ணீர்
      ஆறா பெரு கிடைப்ப தென்றோ கயிலாயத்தனே. 5
      செல்வரை பின்சென்று சங்கடம் பேசி தினந்தினமும்
      பல்லினை காட்டி பரிதவியாமற் பரமானந்தத்தின்
      எல்லையிற் புக்கிட வேகாந்தமாய் எனக்காம் இடத்தே
      அல்லல் அற்று என்றிரு பேனத்தனே கயிலாயத்தனே. 6
      மந்தி குருளை தேனில்லை நாயேன் வழக்கறிந்துஞ்
      சிந்திக்குஞ் சிந்தையையான் என்செய்வேன் எனை தீதகற்றி
      புந்தி பிரிவிற் குருளையை யேந்திய பூசையைப்போல்
      எந்தை குரியவன் காண் அத்தனே கயிலாயத்தனே. 7
      வருந்தேன் பிறந்து மிறந்தும் மயக்கும் புலன்வழிபோ
      பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன் புகழ் வாரிடத்தில்
      இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இயலஞ்செழுத்தாம்
      அருந்தேன் அருந்துவ நின் அருளால் கயிலாயத்தனே. 8
      -
      மதுரை
      விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை விட்டுமனம்
      திடப்படுமோ நின்னருளின்றியே தினமே அலை
      கடப்படுமோ அற்பர்வாயிலிற் சென்று கண்ணீர்ததும்பி
      படப்படுமோ சொக்க நாதா சவுந்தர பாண்டியனே.
      ------------------------------------------------------------------------
      7. அருட்புலம்பல் - முதல்வன் முறையீடு
      கன்னிவனநாதா
      மூலமறியேன் முடியும் முடிவறியேன்
      ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா 1
      அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதற் கெட்டனடா
      பிரியா வினைப்பயனால் பித்து பிடித்தனடா. 2
      தனுவாதி நான்கும் தானாய் மயங்கினடா
      மனுவாதி சத்தி வலையி லகப்பட்டனடா 3
      மாமாயை யென்னும் வனத்தில் அலைகிறண்டா
      தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா. 4
      கன்னி வனநாதா -
      மண்ணாசை பட்டேனை மண்ணுண்டு போட்டதடா
      பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே. 5
      மக்கள்சுற்ற தாசை மறக்கேனே யென்குதே
      திக்கரசாம் ஆசையது தீரேனே யென்குதே. 6
      வித்தைகற்கு மாசையது விட்டொழியே னென்குதே
      சித்துகற்கு மாசை சிதையேனே யென்குதே. 7
      மந்திரத்தி லாசை மறக்கேனே யென்குதே
      சுந்தரத்தி லாசை துறக்கேனே யென்குதே. 8
      கன்னி வனநாதா -
      கட்டுவர்க்க தாசை கழலேனே யென்குதே
      செட்டுதலில் ஆசை சிதையேனே யென்குதே. 9
      மாற்றுஞ் சலவை மறக்கேனே யென்குதே
      சோற்று குழியுமின்ன தூரேனே யென்குதே. 10
      ஐந்து புலனு மடங்கேனே யென்குதே
      சிந்தை தவிக்கிறது தேறேனே யென்குதே. 11
      கா குரோதம் கடக்கேனே யென்குதே
      நாமே அரசென்று நாடோறு மெண்ணுதே. 12
      கன்னி வனநாதா -
      அச்ச மாங்கார மடங்கேனே யென்குதே
      கைச்சு மின்னுமான் கழலேனே யென்குதே. 13
      நீர்க்குமிழி யாமுடலை நித்தியமா யெண்ணுதே
      ஆர்க்கு முயராசை அழியேனே யென்குதே. 14
      கண்ணுக்கு கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்
      எண்ணு திரமா யிருப்போமென் றெண்ணுதே. 15
      கன்னி வனநாதா -
      அநித்தியத்தை நித்தியமென் றாதரவா யெண்ணுதே
      தனித்திருக்கே னென்குதே தனைமறக்கே னென்குதே. 16
      நர குழியும்இன்னும் நான்புசிப்பே னென்குதே
      உரக படத்தல்கு லுனைக்கெடுப்பே னென்குதே. 17
      குரும்பை முலையுங் குடிகெடுப்பே னென்குதே
      அரும்புவிழியு மென்ற னாவியுண்பே னென்குதே. 18
      மாதருரு கொண்டு மறலிவஞ்ச மெண்ணுதே
      ஆதரவு மற்றிங் கரக்கா யுருகிறண்டா. 19
      கந்தனை யீன்றருளுங் கன்னிவன நாதா
      எந்த விதத்தினா னேறி படருவண்டா. 20
      கன்னி வனநாதா -
      புல்லாகி பூடா புலர்ந்தநாள் போதாதோ
      கல்லாய் மரமா கழிந்தநாள் போதாதோ 21
      கீரியா கிடமா கெட்டநாள் போதாதோ
      நீரியா யூர்வனவாய் நின்றநாள் போதாதோ 22
      பூதமொடு தேவருமா போனநாள் போதாதோ
      வேதனைசெய் தானவராய் வீழ்ந்தநாள் போதாதோ 23
      அன்னை வயிற்றி லழிந்தநாள் போதாதோ
      மன்னவனாய் வாழ்ந்து மரித்தநாள் போதாதோ 24
      கன்னி வனநாதா -
      தாயாகி தாரமா தாழ்ந்தநாள் போதாதோ
      சேயா புருடனுமா சென்றநாள் போதாதோ 25
      நோயுண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ
      பேயுண்ண பேயா பிறந்தநாள் போதாதோ 26
      ஊனவுடல் கூன்குருடா யுற்றநாள் போதாதோ
      ஈன புசிப்பு லிளைத்தநாள் போதாதோ 27
      பட்ட களைப்பபும் பரிதவிப்பும் போதாதோ
      கெட்டநாள் கெட்டே னென்றுகேளாதும் போதாதோ 28
      கன்னி வனநாதா -
      நில்லாமைக்கே யழுது நின்றநாள் போதாதோ
      எல்லாரு மென்பார மெடுத்தநாள் போதாதோ 29
      காமன் கணையாற் கடைப்பட்டல் போதாதோ
      ஏமன் கரத்தால் நாலுமிடியுண்டல் போதாதோ 30
      நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ
      தேன்துளப தான்நேமி தேக்குண்டல் போதாதோ 31
      உருத்திரனார் சங்கார துற்றநாள் போதாதோ
      வருத்த மறிந்தையிலை வாவென் றழைத்தையிலை 32
      கன்னி வனநாதா -
      பிறப்பை தவிர்த்தையிலை பின்னா கொண்டையிலை
      இறப்பை தவிர்த்தையிலை என்னென்று கேட்டையிலை 33
      பாச மெரித்தையிலை பரதவிப்பை தீர்த்தையிலை
      பூசிய நீற்றை புனையென் றளித்தையிலை. 34
      அடிமையென்று சொன்னையிலை அக்கமணி தந்தையிலை
      விடுமுலகம் நோக்கி யுன்றன்வேட மளித்தையிலை. 35
      உன்னி லழைத்தையிலை ஒன்றாக்கி கொண்டையிலை
      நின்னடியார் கூட்டத்தில் நீயழைத்து வைத்தையிலை 36
      கன்னி வனநாதா -
      ஓங்கு பரத்துள் ஒளித்தவடி யார்க்கடியான்
      ஈங்கோ ரடியா னெமக்கென்று உரைத்தையிலை 37
      நா தரித்தையிலை நானொழிய நின்றையிலை
      சேம வருளி லெனைச்சிந்தி தழைத்தையிலை. 38
      முத்தி யளித்தையிலை மோனங் கொடுத்தையிலை
      சித்தி யளித்தையிலை சீராட்டி கொண்டையிலை 39
      தவிர்ப்பை தவிர்த்தையிலை தானாக்கி கொண்டையிலை
      அவிப்பரிய தீயாமென் னாசை தவிர்த்தையிலை 40
      கன்னி வனநாதா -
      நின்ற நிலையில் நிறுத்தியெனை வைத்தையிலை
      துன்றுங் கரணமொடு தொக்கழி பார்த்தையிலை 41
      கட்டவுல கக்காட்சி கட்டொழி பார்த்தையிலை
      நிட்டையிலே நில்லென்றுநீ நிறுத்தி கொண்டையிலை 42
      கடைக்கண் ணருள்தாடா கன்னிவன நாதா
      கெடுக்கு மலமொறுக்கி கிட்டிவர பாரேடா 43
      காதல் தணியேனோ கண்டு மகிழேனோ
      சாதல் தவிரேனோ சங்கடந்தான் தீரேனோ 44
      கன்னி வனநாதா -
      உன்னை துதியேனோ ஊர்நாடி வாரேனோ
      பொன்னடியை பாரேனோ பூரித்து நில்லேனோ 45
      ஓங்கார பொற்சிலம்பி னுல்லாசம் பாரேனோ
      பாங்கான தண்டை பலமணியும் பாரேனோ 46
      வீரகண்டா மணியின் வெற்றிதனை பாரேனோ
      சூரர்கண்டி போற்றுமந்த சுந்தரத்தை பாரேனோ 47
      இடையில் புலித்தோ லிருந்தநலம் பாரேனோ
      விடையி லெழுந்தருளும் வெற்றியினை பாரேனோ 48
      கன்னி வனநாதா -
      ஆனை உரிபோர்த்த அழகுதனை பாரேனோ
      மானை பிடித்தேந்து மலர்க்கரத்தை பாரேனோ 49
      மாண்டார் தலைபூண்ட மார்பழகை பாரேனோ
      ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனோ 50
      கண்டங் கறுத்துநின்ற காரணத்தை பாரேனோ
      தொண்டர் குழுவினின்ற தோற்றமதை பாரேனோ 51
      அருள்பழுத்த மாமதியா மானனத்தை பாரேனோ
      திருநயன சடையளிருஞ் செழுங்கொழுமை பாரேனோ 52
      கன்னி வனநாதா -
      செங்குழியின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ
      அங்கனியை வென்ற அதரத்தை பாரேனோ 53
      முல்லை நிலவெறிக்கு மூரலொளி பாரேனோ
      அல்லார் புருவ தழகுதனை பாரேனோ 54
      மகரங் கிடந்தொளிரும் வள்ளைதனை பாரேனோ
      சிகர முடியழகுஞ் செஞ்சடையும் பாரேனோ 55
      கங்கையோடு திங்கள் நின்றகாட்சிதனை பாரேனோ
      பொங்கு அரவைத்தான்சடையிற் பூண்டவிதம் பாரேனோ 56
      கன்னி வனநாதா -
      சரக்கொன்றை பூத்த சடைக்காட்டை பாரேனோ
      எருக்கறுகு ஊமத்தையணி யேகாந்தம் பாரேனோ 57
      கொக்கிறகு கூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ
      அக்கினியை யேந்திநின்ற ஆனந்தம் பாரேனோ 58
      தூக்கிய காலு துடியிடையும் பாரேனோ
      தாக்கு முயலகன் தாண்டவத்தை பாரேனோ 59
      வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ
      ஆசை அளிக்கு மபயகரம் பாரேனோ 60
      கன்னி வனநாதா -
      அரிபிரமர் போற்ற அமரர் சயசயென
      பெரியம்மை பாகம்வளர் பேரழகை பாரேனோ 61
      சுந்தர நீற்றின் சொகுகதனை பாரேனோ
      சந்திர சேகரனா தயவுசெய்தல் பாரேனோ 62
      கெட்டநாள் கெட்டாலுங் கிருபையினி பாரேடா
      பட்டநாள் பட்டாலும் பதமெனக்கு கிட்டாதோ 63
      நற்பருவ மாக்குமந்த நாளெனக்கு கிட்டாதோ
      எப்பருவ முங்சுழன்ற ஏகாந்தங் கிட்டாதோ 64
      கன்னி வனநாதா -
      வாக்கிற்து நின்ற மவுனமது கிட்டாதோ
      தாக்கிறந்து நிற்குமந தற்சுத்தி கிட்டாதோ 65
      வெந்துயரை தீர்க்குமந்த வெட்டவெளி கிட்டாதோ
      சிந்தையையு தீர்க்குமந தேறலது கிட்டாதோ 66
      ஆன அடியார கடிமைகொள கிட்டாதோ
      ஊனமற வென்னை வுணர்த்துவித்தல் கிட்டாதோ 67
      என்னென்று சொல்லுவண்டா என்குருவே கேளேடா
      பின்னை எனக்குநீ யல்லாமற் பிறிதிலையே. 68
      கன்னி வனநாதா -
      அன்ன விசாரமது வற்றவிடங் கிட்டாதோ
      சொன்ன விசார தொலைந்தவிடங் கிட்டாதோ 69
      உலக விசார மொழிந்தவிடங் கிட்டாதோ
      மலக்குழுவின் மின்னார் வசியாதுங் கிட்டாதோ 70
      ஒப்புவமை பற்றோ டொழிந்தவிடங் கிட்டாதோ
      செப்புதற்கு மெட்டா தெளிந்தவிடங் கிட்டாதோ 71
      வாக்கு மனாதீத வசோகசத்திற் செல்லவெனை
      தாக்கு மருட்குருவே நின்தாளிணைக்கே யான்போற்றி. 72
      ------------------------------------------------------------------------
      8. அருட்புலம்பல் - மகடூ முன்னிலையாக உள்ளது
      ஐங்கரனை தெண்டனிட்டே னருளடைய வேண்டுமென்று
      தங்காமல் வந்தொருவன் தன்சொரூபங் காட்டியெனை. 1
      கொள்ளை பிறப்பறு கொண்டான் குருவடிவம்
      கள்ள புலனறு காரணமாய் வந்தாண்டி 2
      ஆதார மோராறு மைம்பத்தோ ரட்சரமும்
      சூதான கோட்டையெல்லாஞ் சுட்டான் துரிசறவே. 3
      மெத்த விகாரம் விளைக்கும் பலபலவாம்
      தத்துவங்க ளெல்லா தலைகெட்டு வெந்ததடி. 4
      என்னோ டுடன்பிறந்தா ரெல்லாரும் பட்டார்கள்
      தன்ன தனியே தனித்திருக்க மாட்டேண்டி. 5
      எல்லாரும் பட்டகள மென்று தொலையுமடி
      சொல்லி யழுதாற் றுயரமனெ காறுமடி. 6
      மண்முதலா மைம்பூத மாண்டுவிழ கண்டேண்டி
      விண்முதலா மைம்பொறிகள் வெந்து விழ கண்டேண்டி. 7
      நீங்கா புனல்களைந்து நீறாக வெந்ததடி
      வாக்காதி ஐவரையும் மாண்டுவிழங் கண்டேண்டி. 8
      மனக்கரண மத்தனையும் வகைவகையே பட்டழிய
      இனக்கரண தோடே யெரிந்துவிழ கண்டேண்டி. 9
      ஆத்து தத்துவங்கள் அடுக்கழிய வெந்ததடி
      போற்றும்வகை யெப்படியோ போதமிழ தானை. 10
      வித்தியா தத்துவங்கள் வெந்துவிழ கண்டேண்டி
      சுத்தவித்தை ஐந்தினையுஞ் சுட்டான் துரிசறவே. 11
      முன்று வகைக்கிளையு முப்ப தறுவரையும்
      கான்றுவிழ சுட்டு கருவே ரறுத்தாண்டி. 12
      குருவாகி வந்தானோ குலமறுக்க
      உருவாகி வந்தானோ உருவழிக்க 13
      கேடுவரு மென்றறியேன் கெடுமதிகண் டோற்றாமல்
      பாடுவரு மென்றறியேன் பதியாண்டு இருந்தேண்டி. 14
      எல்லாரும் பட்டகள மின்னிட மென்றறியேன்
      பொல்லாங்கு தீர்க்கும் பொறியிலியை கண்டேண்டி. 15
      உட்கோட்டை குள்ளிருந்தா ரொக்க மடிந்தார்கள்
      அக்கோட்டை குள்ளிருந்தா ரறுபதுபேர் பட்டார்கள். 16
      ஒக்க மடிந்ததடி ஊடுருவ வெந்ததடி
      கற்கோட்டை யெல்லாங் கரிக்கோட்டை யாச்சுதடி. 17
      தொண்ணூற் றறுவரையுஞ் சுட்டான் துரிசறிவே
      கண்ணேறு பட்டதடி கருவே ரறுத்தாண்டி. 18
      ஓங்காரங் கெட்டதடி உள்ளதெல்லாம் போச்சுதடி
      ஆங்காரங் கெட்டதடி அடியோ டறுத்தாண்டி. 19
      தரையாங் குடிலைமுதல் தட்டிருவ வெந்ததடி
      இரையு மனத்திடும்பை யெல்லா மறுத்தாண்டி. 20
      முன்னை வினையெல்லா முழுது மறுத்தாண்டி
      தன்னை யறியவே தானொருத்தி யானேண்டி. 21
      என்னையே நானறிய இருவினையு மீடழித்து
      தன்னை யறி தலமெனக்கு சொன்னாண்டி. 22
      தன்னை யறிந்தேண்டி தனிக்குமரி யானேண்டி
      தன்ன தனியே தனியிருக்கும் பக்குவமோ. 23
      வீட்டி லொருவரில்லை வெட்டவெளி யானேண்டி
      காட்டு கெறித்திநிலா கனவாச்சே கண்டதெல்லாம். 24
      நகையாரோ கண்டவர்கள் நாட்டுக்கு பாட்டலவோ
      பகையாரோ கண்டவர்கள் பார்த்தாரு கேச்சலவோ 25
      இந்நிலமை கண்டாண்டி எங்கு மிருந்தாண்டி
      கன்னி யழித்தாண்டி கற்பை குலைத்தாண்டி. 26
      கற்பு குலைத்தமையுங் கருவே ரறுத்தமையும்
      பொற்பு குலைத்தமையும் போத மிழந்தமையும். 27
      என்ன வினைவருமோ இன்னமென கென்றறியேன்
      சொன்ன சொல்லெல்லாம் பலித்ததடி சோர்வறவே. 28
      கங்குல்பக லற்றிடத்தை காட்டி கொடுத்தாண்டி
      பங்க மழித்தாண்டி பார்த்தானை பார்த்திருந்தேன். 29
      சாதியிற் கூட்டுவாரோ சாத்திரத்து குள்ளாமோ
      ஓதி யுணர்ந்தெல்லா முள்ளபடி யாச்சுதடி 30
      என்னகுற்றஞ் செய்தேனோ எல்லாரும் காணாமல்
      அன்னைசுற்ற மெல்லா மறியாரோ வம்புவியில் 31
      கொன்றாரை தின்றேனோ தின்றாரை கொன்றேனோ
      எண்ணாதெல் லாமெண்ணு மிச்சை மறந்தேனோ 32
      சாதியிற் கூட்டுவரோ சமயத்தோ ரெண்ணுவரோ
      பேதித்து வாழ்ந்ததெல்லாம் பேச்சு கிடமாச்சுதடி 33
      கண்டார்க்கு பெண்ணல்லவோ காணார்க்கும் காமமடி
      உண்டார்க ளுண்டதெலா மூணல்ல துண்பர்களோ 34
      கொண்டவர்கள் கொண்டதெல்லாங் கொள்ளாதார் கொள்ளுவரோ
      விண்டவர்கள் கண்டவரோ கண்டவர்கள் விண்டவரோ 35
      பண்டாய நான்மறைகள் பாடும் பரிசலவோ
      தொண்டாய தொண்டருள தோற்றி யடுங்குமதோ 36
      ஓத எளிதோ ஒருவர் உணர்வரிதோ
      பேதமற எங்கும் விளங்கும் பெருமையன்காண். 37
      வாக்கு மனமுங் கடந்த மனோலயன்காண்
      நோக்க அரியவன்காண் நுண்ணியரில் நுண்ணியன்காண். 38
      சொல்லு கடங்கான்காண் சொல்லிறந்து நின்றவன்காண்
      கல்லு ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண் 39
      சூட்டிறந்த பாழதனிற் கசிந்திருக்க சொன்னவன்காண்
      ஏட்டி லெழுத்தோ எழுதினவன் கைப்பிழையோ 40
      சும்மா விருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்
      அம்மா பொருளிதென வடைய விழுங்கினண்டி 41
      பார்த்த விடமெல்லாம் பரமா கண்டேண்டி
      கோத்த நிலைகுலைந்த கொள்கை யறியேண்டி 42
      மஞ்சனமாட்டி மலர்பறித்து சாத்தாமல்
      நெஞ்சுவெறும் பாழானேன் நின்றநிலை காணேண்டி 43
      பாடி படித்திருந்தும் பன்மலர்கள் சாத்தாமல்
      ஓடி திரியாம லுருக்கெட்டு விட்டேண்டி 44
      மாணிக்க துள்ளளிபோல் மருவி யிருந்தாண்டி
      பேணி தொழுமடியார் பேசா பெருமையன்காண் 45
      அன்றுமுத லின்றளவு மறியா பருவமதில்
      என்றும் பொதுவா யிருந்த நிராமயன்காண் 46
      சித்த விகாரத்தாலே சின்மயனை காணாமல்
      புத்தி கலங்கி புகுந்தேன் பொறிவழியே 47
      பத்தி யறியாமற் பாழில் கவிழ்ந்தேண்டி
      ஒத்தவிட நித்திரையென் றொத்து மிருந்தேண்டி 48
      திருச்சிற்றம்பலம்
      ------------------------------------------------------------------------
      22 2000



      ------------------------------------------------------------------------
      - 4



      சித்தர் பாடல்கள் - 4
      அகப்பேய் சித்தர் இடைக்காட்டு
      கொங்கண சித்தர் பாடல்கள்
      ------------------------------------------------------------------------
      ------------------------------------------------------------------------

      .
      - .
      .
      .

      .
      2000 ...

      2000 .
      -8
      6 5
      -8 - .
      .
      .
      ன 1999 - 2004



      .

      ..

      .
      ------------------------------------------------------------------------
      சித்தர் பாடல்கள் - 4
      1. அகப்பே சித்தர் பாடல்கள்
      நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய்
      நாயகன் தாள் பெறவே
      நெஞ்சு மலையாதே - அகப்பேய்
      நீ ஒன்றுஞ் சொல்லாதே
      என்று இவர் அலையும் மனதை பெண்பேயாக உருவகப்படுத்தி முன்நிறுத்தி
      அகப்பேய் என்று ஒவ்வொரு அடியிலும் விளித்து பாடுவதால் அகப்பே சித்தர்
      எனப்பட்டார். அகப்பேய் என்பது மருவி இவரை அகப்பை சித்தர் என
      கூறுவதும் உண்டு.
      இவரை பற்றிய மற்றெந்த குறிப்பும் இல்லை.
      இவர் பாடல்களில் சைவம் என்பதற்கு அன்பு என்று பொருள். அகங்காரம் அற்று
      வாழவேண்டும் சாதி வேற்றுமை சாத்திர மறுப்பு போன்ற கருத்துகள்பேசப்படுகின்றன.
      --
      அகப்பேய் சித்தர் பாடல்கள்
      நஞ்சுண்ண வேண்டாவே ......அகப்பேய்
      நாயகன் தாள் பெறவே
      நெஞ்சு மலையாதே .....அகப்பேய்
      நீ ஒன்றுஞ் சொல்லாதே. 1
      பராபர மானதடி .....அகப்பேய்
      பரவையாய் வந்தடி
      தராதலம் ஏழ்புவியும் .....அகப்பேய்
      தானே படைத்ததடி. 2
      நாத வேதமடி .....அகப்பேய்
      நன்னடம் கண்டாயோ
      பாதஞ் சத்தியடி .....அகப்பேய்
      பரவிந்து நாதமடி. 3
      விந்து நாதமடி .....அகப்பேய்
      மெய்யாக வந்ததடி
      ஐந்து பெரும்பூதம் .....அகப்பேய்
      அதனிடம் ஆனதடி. 4
      நாலு பாதமடி .....அகப்பேய்
      நன்னெறி கண்டாயே
      மூல மானதல்லால் .....அகப்பேய்
      முத்தி அல்லவடி. 5
      வாக்காதி ஐந்தடியோ .....அகப்பேய்
      வந்த வகைகேளாய்
      ஒக்கம் அதானதடி .....அகப்பேய்
      உண்மையது அல்லவடி. 6
      சத்தாதி ஐந்தடியோ .....அகப்பேய்
      சாத்திரம் ஆனதடி
      மித்தையும் ஆகமடி .....அகப்பேய்
      மெய்யது சொன்னேனே. 7
      வசனாதி ஐந்தடியோ .....அகப்பேய்
      வண்மையாய் வந்ததடி
      தெசநாடி பத்தேடி .....அகப்பேய்
      திடன் இது கண்டாயே. 8
      காரணம் ஆனதெல்லாம் .....அகப்பேய்
      கண்டது சொன்னேனே
      மாரணங் கண்டாயே .....அகப்பேய்
      வந்த விதங்கள் எல்லாம். 9
      ஆறு தத்துவமும் .....அகப்பேய்
      ஆகமஞ் சொன்னதடி
      மாறாத மண்டலமும் .....அகப்பேய்
      வந்தது மூன்றடியே. 10
      பிருதிவி பொன்னிறமே .....அகப்பேய்
      பேதமை அல்லவடி
      உருவது நீரடியோ .....அகப்பேய்
      உள்ளது வெள்ளையடி. 11
      தேயு செம்மையடி .....அகப்பேய்
      திடனது கண்டாயே
      வாயு நீலமடி .....அகப்பேய்
      வான்பொருள் சொல்வேனே. 12
      வான மஞ்சடியோ .....அகப்பேய்
      வந்தது நீகேளாய்
      ஊனமது ஆகாதே .....அகப்பேய்
      உள்ளது சொன்னேனே. 13
      அகாரம் இத்தனையும் .....அகப்பேய்
      அங்கென்று எழுந்ததடி
      உகாரங் கூடியடி .....அகப்பேய்
      உருவாகி வந்ததடி. 14
      மகார மாயையடி .....அகப்பேய்
      மலமது சொன்னேனே
      சிகார மூலமடி .....அகப்பேய்
      சிந்தித்து கொள்வாயே. 15
      வன்னம் புவனமடி .....அகப்பேய்
      மந்திரம் தந்திரமும்
      இன்னமும் சொல்வேனே .....அகப்பேய்
      இம்மென்று கேட்பாயே. 16
      அத்தி வரைவாடி .....அகப்பேய்
      ஐம்பத்தோர் அட்சரமும்
      மித்தையாங் கண்டாயே .....அகப்பேய்
      மெய்யென்று நம்பாதே. 17
      தத்துவம் ஆனதடி .....அகப்பேய்
      சகலமாய் வந்ததடி
      புத்தியுஞ் சொன்னேனே .....அகப்பேய்
      பூத வடிவலவோ. 18
      இந்த விதங்களெல்லாம் .....அகப்பேய்
      எம்இறை அல்லவடி
      அந்த விதம்வேறே .....அகப்பேய்
      ஆராய்ந்து காணாயோ. 19
      பாவ தீரவென்றால் .....அகப்பேய்
      பாவிக்க லாகாதே
      சாவதும் இல்லையடி .....அகப்பேய்
      சற்குரு பாதமடி. 20
      எத்தனை சொன்னாலும் .....அகப்பேய்
      என் மனந்தேறாதே
      சித்து மசித்தும்விட்டே .....அகப்பேய்
      சேர்த்துநீ காண்பாயே. 21
      சமய மாறுமடி .....அகப்பேய்
      தம்மாலே வந்தவடி
      அமைய நின்றவிடம் .....அகப்பேய்
      ஆராய்ந்து சொல்வாயே. 22
      ஆறாறும் ஆகுமடி .....அகப்பேய்
      ஆகாது சொன்னேனே
      வேறே உண்டானால் .....அகப்பேய்
      மெய்யது சொல்வாயே. 23
      உன்னை அறிந்தக்கால் .....அகப்பேய்
      ஒன்றையும் சேராயே
      உன்னை அறியும்வகை .....அகப்பேய்
      உள்ளது சொல்வேனே. 24
      சரியை ஆகாதே .....அகப்பேய்
      சாலோகங் கண்டாயே
      கிரியை செய்தாலும் .....அகப்பேய்
      கிட்டுவது ஒன்றுமில்லை. 25
      யோகம் ஆகாதே .....அகப்பேய்
      உள்ளது கண்டக்கால்
      தேக ஞானமடி .....அகப்பேய்
      தேடாது சொன்னேனே. 26
      ஐந்துதலை நாகமடி .....அகப்பேய்
      ஆதாயங் கொஞ்சமடி
      இந்த விடந்தீர்க்கும் .....அகப்பேய்
      எம் இறை கண்டாயே. 27
      இறைவன் என்றதெல்லாம் .....அகப்பேய்
      எந்த விதமாகும்
      அறைய நீகேளாய் .....அகப்பேய்
      ஆனந்த மானதடி. 28
      கண்டு கொண்டேனே .....அகப்பேய்
      காதல் விண்டேனே
      உண்டு கொண்டேனே .....அகப்பேய்
      உள்ளது சொன்னாயே. 29
      உள்ளது சொன்னாலும் .....அகப்பேய்
      உன்னாலே காண்பாயே
      கள்ளமு தீராதே .....அகப்பேய்
      கண்டார்க்கு காமமடி. 30
      அறிந்து நின்றாலும் .....அகப்பேய்
      அஞ்சார்கள் சொன்னேனே
      புரிந்த வல்வினையும் .....அகப்பேய்
      போகாதே உன்னை விட்டு. 31
      ஈசன் பாசமடி .....அகப்பேய்
      இவ்வண்ணங் கண்டதெல்லாம்
      பாசம் பயின்றதடி .....அகப்பேய்
      பரமது கண்டாயே. 32
      சாத்திரமும் சூத்திரமும் .....அகப்பேய்
      சங்கற்பம் ஆனதெல்லாம்
      பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்
      பாழ் பலங்கண்டாயே. 33
      ஆறு கண்டாயோ .....அகப்பேய்
      அந்த வினை தீர
      தேறி தெளிவதற்கே .....அகப்பேய்
      தீர்த்தமும் ஆடாயே. 34
      எத்தனை காலமுந்தான் .....அகப்பேய்
      யோகம் இருந்தாலென்
      முத்தனு மாவாயோ .....அகப்பேய்
      மோட்சமும் உண்டாமோ 35
      நாச மாவதற்கே .....அகப்பேய்
      நாடாதே சொன்னேனே
      பாசம் போனாலும் .....அகப்பேய்
      பசுக்களும் போகாவே. 36
      நாணம் ஏதுக்கடி .....அகப்பேய்
      நல்வினை தீர்ந்தக்கால்
      காண வேணுமென்றால் .....அகப்பேய்
      காண கிடையாதே. 37
      சும்மா இருந்துவிடாய் .....அகப்பேய்
      சூத்திரஞ் சொன்னேனே
      சும்மா இருந்தவிடம் .....அகப்பேய்
      சுட்டது கண்டாயே. 38
      உன்றனை காணாதே .....அகப்பேய்
      ஊனுள் நுழைந்தாயே
      என்றனை காணாதே .....அகப்பேய்
      இடத்தில் வந்தாயே. 39
      வானம் ஓடிவரில் .....அகப்பேய்
      வந்தும் பிறப்பாயே
      தேனை உண்ணாமல் .....அகப்பேய்
      தெருவொடு அலைந்தாயே. 40
      சைவ மானதடி .....அகப்பேய்
      தானாய் நின்றதடி
      சைவம் இல்லையாகில் .....அகப்பேய்
      சலம்வருங் கண்டாயே 41
      ஆசை அற்றவிடம் .....அகப்பேய்
      ஆசாரங் கண்டாயே
      ஈசன் பாசமடி .....அகப்பேய்
      எங்ஙனஞ் சென்றாலும். 42
      ஆணவ மூலமடி .....அகப்பேய்
      அகாரமாய் வந்ததடி
      கோணும் உகாரமடி .....அகப்பேய்
      கூட பிறந்ததுவே. 43
      ஒன்றும் இல்லையடி .....அகப்பேய்
      உள்ளபடி யாச்சே
      நன்றிலை தீதிலையே .....அகப்பேய்
      நாணமும் இல்லையடி. 44
      சும்மா இருந்தவிடம் .....அகப்பேய்
      சுட்டது சொன்னேனே
      எம்மாயம் ஈதறியேன் .....அகப்பேய்
      என்னையுங் காணேனே. 45
      கலைகள் ஏதுக்கடி .....அகப்பேய்
      கண்டார் நகையாரோ
      நிலைகள் ஏதுக்கடி .....அகப்பேய்
      நீயார் சொல்வாயே. 46
      இந்து அமிழ்தமடி .....அகப்பேய்
      இரவி விடமோடி
      இந்து வெள்ளையடி .....அகப்பேய்
      இரவி சிவப்பாமே. 47
      ஆணல பெண்ணலவே .....அகப்பேய்
      அக்கினி கண்டாயே
      தாணுவும் இப்படியே .....அகப்பேய்
      சற்குரு கண்டாயே. 48
      என்ன படித்தாலும் .....அகப்பேய்
      எம்முரை யாகாதே
      சொன்னது கேட்டாயே .....அகப்பேய்
      சும்மா இருந்துவிடு. 49
      காடும் மலையுமடி .....அகப்பேய்
      கடுந்தவம் ஆனால்என்
      வீடும் வெளியாமோ .....அகப்பேய்
      மெய்யாக வேண்டாவோ. 50
      பரத்தில் சென்றாலும் .....அகப்பேய்
      பாரிலே மீளுமடி
      பரத்துக்கு அடுத்தஇடம் .....அகப்பேய்
      பாழது கண்டாயே. 51
      பஞ்ச முகமேது .....அகப்பேய்
      பஞ்சு படுத்தாலே
      குஞ்சித பாதமடி .....அகப்பேய்
      குருபா தங்கண்டாயே. 52
      பங்கம் இல்லையடி .....அகப்பேய்
      பாதம் இருந்தவிடம்
      கங்கையில் வந்ததெல்லாம் .....அகப்பேய்
      கண்டு தெளிவாயே. 53
      தானற நின்றவிடம் .....அகப்பேய்
      சைவங் கண்டாயே
      ஊனற நின்றவர்க்கே .....அகப்பேய்
      ஊனமொன்று இல்லையடி. 54
      சைவம் ஆருக்கடி .....அகப்பேய்
      தன்னை அறிந்தவர்க்கே
      சைவம் ஆனவிடம் .....அகப்பேய்
      சற்குரு பாதமடி. 55
      பிறவி தீரவென்றால் .....அகப்பேய்
      பேதகம் பண்ணாதே
      துறவி யானவர்கள் .....அகப்பேய்
      சும்மா இருப்பார்கள். 56
      ஆரலை தாலும் .....அகப்பேய்
      நீயலை யாதேடி
      ஊர லைந்தாலும் .....அகப்பேய்
      ஒன்றையும் நாடாதே. 57
      தேனாறு பாயுமடி .....அகப்பேய்
      திருவடி கண்டவர்க்கே
      ஊனாறு மில்லையடி .....அகப்பேய்
      ஒன்றையும் நாடாதே. 58
      வெள்ளை கறுப்பாமோ .....அகப்பேய்
      வெள்ளியுஞ் செம்பாமோ
      உள்ளது உண்டோ டி .....அகப்பேய்
      உன் ஆணை கண்டாயே. 59
      அறிவுள் மன்னுமடி .....அகப்பேய்
      ஆதாரம் இல்லையடி
      அறிவு பாசமடி .....அகப்பேய்
      அருளது கண்டாயே. 60
      வாசியிலே றியதடி .....அகப்பேய்
      வான் பொருள் தேடாயோ
      வாசியில் ஏறினாலும் .....அகப்பேய்
      வாராது சொன்னேனே. 61
      தூராதி தூரமடி .....அகப்பேய்
      தூரமும் இல்லையடி
      பாராமற் பாரடியோ .....அகப்பேய்
      பாழ்வினை தீரவென்றால். 62
      உண்டாக்கி கொண்டதல்ல .....அகப்பேய்
      உள்ளது சொன்னேனே
      கண்டார்கள் சொல்வாரோ .....அகப்பேய்
      கற்வனை அற்றதடி. 63
      நாலு மறைகாணா .....அகப்பேய்
      நாதனை யார் காண்பார்
      நாலு மறை முடிவில் .....அகப்பேய்
      நற்குரு பாதமடி. 64
      மூலம் இல்லையடி .....அகப்பேய்
      முப்பொருள் இல்லையடி
      மூலம் உண்டானால் .....அகப்பேய்
      முத்தியும் உண்டாமே. 65
      இந்திர சாலமடி .....அகப்பேய்
      எண்பத்தொரு பதமும்
      மந்திரம் அப்படியே .....அகப்பேய்
      வாயை திறவாதே. 66
      பாழாக வேணுமென்றால் .....அகப்பேய்
      பார்த்ததை நம்பாதே
      கேளாமற் சொன்னேனே .....அகப்பேய்
      கேள்வியும் இல்லையடி. 67
      சாதி பேதமில்லை .....அகப்பேய்
      தானாகி நின்றவர்க்கே
      ஓதி உணர்ந்தாலும் .....அகப்பேய்
      ஒன்றுந்தான் இல்லையடி. 68
      சூழ வானமடி .....அகப்பேய்
      சுற்றி மரக்காவில்
      வேழம் உண்டகனி .....அகப்பேய்
      மெய்யது கண்டாயே. 69
      தானும் இல்லையடி .....அகப்பேய்
      நாதனும் இல்லையடி
      தானும் இல்லையடி .....அகப்பேய்
      சற்குரு இல்லையடி. 70
      மந்திரம் இல்லையடி .....அகப்பேய்
      வாதனை இல்லையடி
      தந்திரம் இல்லையடி .....அகப்பேய்
      சமயம் அழிந்ததடி. 71
      பூசை பசாசமடி .....அகப்பேய்
      போதமே கோட்டமடி
      ஈசன் மாயையடி .....அகப்பேய்
      எல்லாமும் இப்படியே. 72
      சொல்ல லாகாதே .....அகப்பேய்
      சொன்னாலும் தோடமடி
      இல்லை இல்லையடி .....அகப்பேய்
      ஏகாந்தங் கண்டாயே. 73
      தத்துவ தெய்வமடி .....அகப்பேய்
      சதாசிவ மானதடி
      மற்றுள்ள தெய்வமெல்லாம் .....அகப்பேய்
      மாயை வடிவாமே. 74
      வார்த்தை அல்லவடி .....அகப்பேய்
      வாசா மகோசரத்தே
      ஏற்ற தல்லவடி .....அகப்பேய்
      என்னுடன் வந்ததல்ல. 75
      சாத்திரம் இல்லையடி .....அகப்பேய்
      சலனங் கடந்ததடி
      பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்
      பாவனை கெட்டாதே. 76
      என்ன படித்தால்என் .....அகப்பேய்
      ஏதுதான் செய்தால்என்
      சொன்ன விதங்களெல்லாம் .....அகப்பேய்
      சுட்டது கண்டாயே. 77
      தன்னை அறியவேணும் .....அகப்பேய்
      சாராமற் சாரவேணும்
      பின்னை அறிவதெல்லாம் .....அகப்பேய்
      பேயறி வாகுமடி. 78
      பிச்சை எடுத்தாலும் .....அகப்பேய்
      பிறவி தொலையாதே
      இச்சை அற்றவிடம் .....அகப்பேய்
      எம்இறை கண்டாயே. 79
      கோலம் ஆகாதே .....அகப்பேய்
      குதர்க்கம் ஆகாதே
      சாலம் ஆகாதே .....அகப்பேய்
      சஞ்சலம் ஆகாதே. 80
      ஒப்பனை அல்லவடி .....அகப்பேய்
      உன்ஆணை சொன்னேனே
      அப்புடன் உப்பெனவே .....அகப்பேய்
      ஆராய்ந்து இருப்பாயே. 81
      மோட்சம் வேண்டார்கள் .....அகப்பேய்
      முத்தியும் வேண்டார்கள்
      தீட்சை வேண்டார்கள் .....அகப்பேய்
      சின்மய மானவர்கள். 82
      பாலன் பிசாசமடி .....அகப்பேய்
      பார்த்தக்கால் பித்தனடி
      கால மூன்றுமல்ல .....அகப்பேய்
      காரியம் அல்லவடி. 83
      கண்டதும் இல்லையடி .....அகப்பேய்
      கண்டவர் உண்டானால்
      உண்டது வேண்டடியோ .....அகப்பேய்
      உன்ஆணை சொன்னேனே 84
      அஞ்சயும் உண்ணாதே .....அகப்பேய்
      ஆசையும் வேண்டாதே
      நெஞ்சையும் விட்டுவிடு .....அகப்பேய்
      நிட்டையில் சேராதே. 85
      நாதாந்த உண்மையிலே .....அகப்பேய்
      நாடாதே சொன்னேனே
      மீதான சூதானம் .....அகப்பேய்
      மெய்யென்று நம்பாதே. 86
      ஒன்றோடு ஒன்றுகூடில் .....அகப்பேய்
      ஒன்றுங் கெடுங்காணே
      நின்ற பரசிவமும் .....அகப்பேய்
      நில்லாது கண்டாயே. 87
      தோன்றும் வினைகளெல்லாம் .....அகப்பேய்
      சூனியங் கண்டாயே
      தோன்றாமல் தோன்றிவிடும் .....அகப்பேய்
      சுத்த வெளிதனிலே. 88
      பொய்யென்று சொல்லாதே .....அகப்பேய்
      போக்கு வரத்துதானே
      மெய்யென்று சொன்னக்கால் .....அகப்பேய்
      வீடு பெறலாமே. 89
      வேதம் ஓதாதே .....அகப்பேய்
      மெய்கண்டோ ம் என்னாதே
      பாதம் நம்பாதே .....அகப்பேய்
      பாவித்து பாராதே. 90
      ------------------------------------------------
      2. பரவை - கடல்
      3. நடம் - கூத்து
      4. நாலுபதம் - சரியை கிரியை யோகம் ஞானம்
      6. வாக்காதி ஐவர் - வாக்கு பாதம் பாணி பாயுரு
      உபத்தம் ஆகிய கர்மேந்திரியங்கள்
      7. மித்தை - பொய்
      11. பிருதிவி - மண்
      12. தேயு - தீ
      17. அத்தி - யானை நாடி
      25. சரியை - கடவுளை கோவிலில் வைத்து வழிபடுதல்
      கிரியை - கடவுளை ஆகம விதிப்படி வழிபடுதல்
      28. அறைய - கூற
      34. ஆறு - வழி
      52. குஞ்சிதபாதம் - நடனத்தில் வளை தூக்கிய பாதம்
      69. மரக்கா - மரச்சோலை
      வேழம் - விலாம்பழத்தை பற்றும் ஒரு நோய்
      72. பசாசம் - பிசாசு
      74. வாசாம கோசரம் - வாக்குக்கு எட்டாதது
      80. கோலம் - அலங்காரம்
      82. சின்மயம் - அறிவு வடிவான கடவுள் நிலை
      85. நிட்டை - சிவயோகம்
      86. சூதானம் - சாக்கிரதை
      ------------------------------------------------
      ------------------------------------------------------------------------
      2. இடைக்காட்டு சித்தர் பாடல்கள்
      இடைக்காடு என்னும் ஊரினர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால்
      இடைக்காடு சித்தர் என பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம்.
      இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் கோனார்
      இக்கோனாரையும் ஆடுமாடுகளையும் முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர்
      பெற்றார் என்பர்.
      சங்கபுலவர்களிலே இடைக்காடனார் என்று ஒருவர் உண்டு. இவர் பாடல்கள்
      நற்றிணை குறுந்தொகை அகநானூறு முதலிய சங்க நூற்களில் உள்ளன.
      திருவள்ளுவ மாலையிலும் ஒரு பாடல் உள்ளது. திருவிளையாடல்
      புராணத்திலே இவரை பற்றிய குறிப்பு உள்ளது. ஊசிமுறி என்றொரு நூல்
      இவரால் பாடபட்டதாக பழைய உரைகளினால் அறி கிடக்கிறது. ஆனால்
      சங்ககால புலவரும் இடைக்காட்டு சித்தரும் வேறு வேறானவர்.
      இவர் கொங்கணரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கி.பி 10-15 ஆம்
      நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர்.
      தா திமிதிமி தந்த கோனாரே
      தீ திமிதிமி திந்த கோனாரே
      ஆனந்த கோனாரே - அருள்
      ஆனந்த கோனாரே
      என பாடுவோரும் கேட்போரும் குதித்தாடும் இந்த பாடல்கள் ஆசை என்னும்
      பசுவையும் சினம் என்னும் விஷப்பாம்பையும் அடக்கி விட்டால் முத்தி
      வாய்த்ததென்று எண்ணடா தாண்டவக்கோனே என்று கூறும் சிறப்புடையன.
      இவர் ஆடுமாடுகள் மேய்த்து கொண்டிருக்கும் போது இவரிடம் சித்தர் ஒருவர்
      வந்து பால் கேட்க இவர் கறந்து கொடுக்க பருகிய
      மனமகிழ்ந்து இவர் அனைத்து சித்துக்களும் அடையும்படி செய்து சென்றதனால்
      இவர் சித்தர் ஆனார் என்பர்.
      ஒருமுறை நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது இவர் உணவின்றி தவித்த
      ஆடுமாடுகளை காப்பாற்றியதோடு மழை பெய்வித்து பஞ்சத்ததை போக்கினார்
      என்றும் கதை வழங்குகிறது.
      --
      இடைக்காட்டு சித்தர் பாடல்கள்
      காப்பு
      கலிவிருத்தம்
      ஆதி யந்தமில் லாதவ னாதியை
      தீது றும்பவம் தீப்படு பஞ்சுபோல்
      மோது றும்படி முப்பொறி யொத்துற
      காதலா கருத்திற் கருதுவோம்.
      தாண்டவரா கோனார் கூற்று
      கண்ணிகள்
      எல்லா உலகமும்
      எல்லா பொருள்களும் எண்ணரிய
      வல்லாளன் ஆதிபரம சிவனது
      சொல்லால் ஆகுமே கோனாரே. 1
      வானியல் போல் வயங்கும் பிரமமே
      சூனியம் என்றறிந்து ஏத்தாக்கால்
      ஊனியல் ஆவிக்கு ஒருகதி இல்லையென்று
      ஓர்ந்து கொள்ளுவீர் நீர் கோனாரே. 2
      முத்திக்கு வித்தான மூர்த்தியை தொழுது
      முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால்
      சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும்
      சேரா வாகுமே கோனாரே. 3
      தொல்லை பிறவியின் தொந்தமுற்ற அறவே
      சோம்பலற்று தவஞ் செய்யாக்கால்
      எல்லையில் கடவுள் எய்தும் பலம் உமக்கு
      இல்லையென்று எண்ணுவீர் கோனாரே. 4
      ஆரண மூலத்தை அன்புட னேபர
      மானந்த கோலத்தை பண்புடனே
      பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞான
      போதத்தை சார்ந்திரும் கோனாரே. 5
      காலா காலங் கடந்திடும் சோதியை
      கற்பனை கடந்த அற்புதத்தை
      நூலார் பெரியவர் சொன்னநுண் பொருளை
      நோக்கத்திற் காண்பது கோனாரே. 6
      சொல்லருஞ் சகள நிட்களம் ஆனதை
      சொல்லினாற் சொல்லாமல் கோனாரே
      அல்லும் பகலும் அகத்தில் இருந்திடில்
      அந்தகன் கிட்டுமோ கோனாரே. 7
      சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடும்
      தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
      நாறி இடப்பாகன்தாள் நெஞ்சிற் போற்றியே
      நற்பதி சேர்ந்திடும் கோனாரே. 8
      மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத
      முப்பாழ் கிடந்ததாம் அப்பாழை
      செம்மறி யோட்டிய வேலை யமயத்தும்
      சிந்தையில் வைப்பீரே கோனாரே. 9
      பஞ்ச விதமா சஞ்சலம் பறக்க
      பற்றற்று நின்றதை பற்றி அன்பாய்
      நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே
      நேசித்து கொள்ளுவீர் கோனாரே. 10
      நாராயண கோனார் கூற்று
      தரவு கொச்சகம்
      சீரார் சிவகொழுந்தை தெள்ளமுதை செந்தேனை
      பாராதி வான்பொருளைப்பஞ்ச உரு ஆனஒன்றை
      பேரான விண்ணொளியை பேரின்ப வாரிதியை
      நேராக எந்நாளும் நெஞ்சுஇருத்தி வாழ்வேனே. 11
      கண்ணுள் கருமணியை கற்பகத்தை காஞ்சனத்தை
      பெண்ணுருவ பாதியினை பேசரிய முப்பொருளை
      விண்ணின் அமுதை விளக்கொளியை வெங்கதிரை
      தண்ணளியை உள்ளில் வைத்துசாரூபஞ் சாருவனே. 12
      கண்ணிகள்
      மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முத்தி
      வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே 13
      சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும்
      சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே 14
      ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே - இந்த
      அண்டமெல்லாம் கண்டறிவாய் தாண்டவக்கோனே 15
      ஓசையுள் அடங்குமுன்னம் தாண்டவக்கோனே - மூல
      ஓங்காரங் கண்டறிநீ தாண்டவக்கோனே 16
      மூல பகுதியற தாண்டவக்கோனே - உள்ளம்
      முளைத்தவேர் பிடுங்கேடா தாண்டவக்கோனே 17
      சால கடத்தியல்பு தாண்டவக்கோனே - மல
      சாலென்றே தேர்ந்தறிநீ தாண்டவக்கோனே 18
      பற்றே பிறப்புண்டார்க்கும் தாண்டவக்கோனே - அதை
      பற்றாது அறுத்துவிடு தாண்டவக்கோனே 19
      சற்றே பிரமத்திச்சை தாண்டவக்கோனே - உன்னுள்
      சலியாமல் வைக்கவேண்டும் தாண்டவக்கோனே 20
      அவித்தவித்து முளையாதே தாண்டவக்கோனே - பத்தி
      அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே 21
      செவிதனிற் கேளாத மறை தாண்டவக்கோனே - குரு
      செப்பில் வெளியாம் அல்லவோ தாண்டவக்கோனே 22
      கட்டளை கலித்துறை
      மாடும் மனைகளும் மக்களுஞ் சுற்றமும் வான்பொருளும்
      வீடும் மணிகளும் வெண்பொன்னுஞ் செம்பொன்னுஞ் வெண்கலமும்
      காடும் கரைகளும் கல்லாம் பணியுங் கரிபரியும்
      தேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே. 23
      நேரிசை வெண்பா
      போகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புன்மைபோம்
      மோகம்போம் மூர்க்கம்போம் மோசம்போம் - தாகம்போம்
      வேதமுதல் ஆகமங்கள் மேலானதென்று பல்கால்
      ஓதுபிர மரத்துஉற்ற கால். 24
      தாண்டவராயக்கோனார் கூற்று
      தா திமித்திமி தந்தக்கோ னாரே
      தீ திமித்திமி திந்தக்கோ னாரே
      ஆனந்த கோனாரே - அருள்
      ஆனந்த கோனாரே.
      ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன்
      அந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன்
      மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்
      மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் தா 25
      அந்த கரணம் எனச்சொன்னால் ஆட்டையும்
      அஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன் காட்டையும்
      சந தவமென்னும் வாளினால் வெட்டினேன்
      சாவாது இருந்திட கோட்டையுங் கட்டினேன் தா 26
      மெய்வாய்கண் மூக்கு செவியெனும் ஐந்தாட்டை
      வீறுஞ் சுவையொளி ஊறோசை யாம்காட்டை
      எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்
      ஏக வெளிக்குள்ளே யோக தா
      பற்றிரண் டும்அற பண்புற்றேன் நண்புற்றேன்
      பாலையும் உட்கொண்டேன் மேலையாம் கண்கண்டேன்
      சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்
      சிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன் தா 28
      அண்ணாக்கை யூடே யடைத்தே அமுதுண்ணேன்
      அந்தர தரத்தை அப்பொழு தேயெண்ணேன்
      விண்ணாளும் மொழியை மேவிப்பூசை பண்ணேன்
      மெய்ஞ்ஞானம் ஒன்றுஅன்றி வேறேஒன்றை நண்ணேன் தா 29
      மண்ணாதி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே
      மாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே
      விண்ணாளி மொழியை மெய்யினுள் கொண்டேனே
      மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே தா 30
      வாக்காதி ஐந்தையும் வாகா தெரிந்தேனே
      மாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே
      நோக்கரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே
      நுவலுமற்ற ஐந்தியோக நோக்கம் பரிந்தேனே தா 31
      ஆறாதார தெய் வங்களை நாடு
      அவர்க்கும் மேலான ஆதியை தேடு
      கூறான வட்ட ஆனந்தத்திற் கூடு
      கோசமை துங்கண்டு குன்றேறி ஆடு தா 32
      நாராயண கோனார் கூற்று
      ஆதிபகவனையே ......பசுவே
      அன்பாய் நினைப்பாயேல்
      சோதி பரகதிதான் ......பசுவே
      சொந்தமது ஆகாதோ 33
      எங்கும் நிறைபொருளை ......பசுவே
      எண்ணி பணிவாயேல்
      தங்கும் பரகதியில் ......பசுவே
      சந்ததம் சாருவையே. 34
      அல்லும் பகலும்நிதம் ......பசுவே
      ஆதி பதந்தேடில்
      புல்லும் மோட்சநிலை ......பசுவே
      பூரணங் காண்பாயே. 35
      ஒன்றை பிடித்தோர்க்கே ......பசுவே
      உண்மை வசப்படுமே
      நின்ற நிலைதனிலே ......பசுவே
      நேர்மை அரிவாயே. 36
      எல்லாம் இருந்தாலும் ......பசுவே
      ஈசர் அருள் இல்லையேல்
      இல்லா தன்மையென்றே ......பசுவே
      எண்ணி பணிவாயே. 37
      தேவன் உதவியின்றி ......பசுவே
      தேர்ந்திடில் வேறொன்றுமில்லை
      ஆவிக்கும் ஆவியதாம் ......பசுவே
      அத்தன் திருவடியே. 38
      தாயினும் அன்பன்அன்றோ ......பசுவே
      சத்திக்குள் ளானவன்தான்
      நேயம் உடையவர்பால் ......பசுவே
      நீங்காது இருப்பானே. 39
      முத்திக்கு வித்தானோன் ......பசுவே
      மூல பொருளானோன்
      சத்திக்கு உறவானோன் ......பசுவே
      தன்னை துதிப்பாயே. 40
      ஐயன் திருபாதம் ......பசுவே
      அன்புற்று நீபணிந்தால்
      வெய்ய வினைகளெல்லாம் ......பசுவே
      விட்டோ டும் கண்டாயே. 41
      சந்திர சேகரன்தாள் ......பசுவே
      தாழ்ந்து பணிவாயேல்
      இந்திரன் மான்முதலோர் ......பசுவே
      ஏவல் புரிவாரே. 42
      கட்புலன் காணஒண்ணா ......பசுவே
      கர்த்தன் அடியிணையை
      உட்புலன் கொண்டேத்தி ......பசுவே
      உன்னதம் எய்வாயே. 43
      சுட்டியும் காணஒண்ணா ......பசுவே
      சூனிய மானவத்தை
      ஒட்டி பிடிப்பாயேல் ......பசுவே
      உன்னை நிகர்ப்பவர் யார் 44
      தன்மன தன்னாலே ......பசுவே
      தானுவை சாராதார்
      வன்மரம் ஒப்பாக ......பசுவே
      வையத்துள் உரைவாரே 45
      சொல்லெனும் நற்பொருளாம் ......பசுவே
      சோதியை போற்றாக்கால்
      இல்லென்று முத்திநிலை ......பசுவே
      எப்பொ ருளுஞ்சொல்லுமே. 46
      பலரோடு கிளத்தல்
      குறள் வெண்செந்துறை
      கண்ணுள் மணியை கருதிய பேரொளியை
      விண்ணின் மணியை விளக்கொளியை போற்றீரே. 47
      மனம்வாக்கு காயம்எனும் வாய்த்தபொறிக்கு எட்டாத
      தினகரனை நெஞ்சமதில் சேவித்து போற்றீரே. 48
      காலமூன் றுங்கடந்த கதிரொளியை உள்ளத்தால்
      சாலமின்றி பற்றி சலிப்பறவே போற்றீரே. 49
      பாலிற் சுவைபோலும் பழத்தில் மதுபோலும்
      நூலிற் பொருள்போலும் நுண்பொருளை போற்றீரே. 50
      மூவர் முதலை முக்கனியை சர்க்கரையை
      தேவர் பொருளை தெள்ளமுதை போற்றீரே. 51
      தூய மறைப்பொருளை சுகவாரி நல்அமிழ்தை
      நேய முடனாளும்நிலை பெறவே போற்றீரே. 52
      சராசர தைத்தந்த தனிவான மூலம்என்னும்
      பராபரத்தை பற்ற பலமறவே போற்றீரே. 53
      மண்ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளை
      கண்ணார காண கருத்திசைந்து போற்றீரே. 54
      பொய்ப்பொருளை விட்டு புலமறிய ஒண்ணாத
      மெய்ப்பொருளை நாளும் விருப்புற்று போற்றீரே. 55
      எள்ளில் தைலம்போல் எங்கும் நிறைபொருளை
      உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே. 56
      நெஞ்சொடு கிளத்தல்
      பூமியெல்லாம்ஓர் குடைக்கீழ பொருந்த அரசாளுதற்கு
      காமியம்வைத்தால் உனக்கு கதியுளதோ கல்மனமே 57
      பெண்ணாசை யைக்கொண்டு பேணி திரிந்தக்கால்
      விண்ணாசை வைக்க விதியில்லையே கல்மனமே 58
      மேயும் பொறிகடமை மேலிடவொ டார்க்குவினை
      தேயும்என்றே நல்வழியில் சொல்லுகநீ கல்மனமே 59
      பொன்னிச்சை கொண்டு பூமிமுற்றும் திரிந்தால்
      மன்னிச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே 60
      பொய்யான கல்விகற்று பொருள்மயக்கம் கொள்ளாமல்
      மெய்யான ஞானக்கல்வியினை விரும்புவாய் கல்மனமே 61
      பேய்க்குரங்கு போல பேருலகில் இச்சைவைத்து
      நாய்நரிகள் போலலைந்தால் நன்மையுண்டோ கல்மனமே 62
      இரும்பைஇழு குங்காந்தத்து இயற்கைபோல் பல்பொருளை
      விரும்பினதால் அவைநிலையோ விளம்புவாய் கல்மனமே 63
      கற்பநிலை யால் அலவோகற்பக லங்கடத்தல்
      சொற்பநிலை மற்றநிலை சூட்சங்காண் கல்மனமே 64
      தேகம் இழப்பதற்கு செபஞ்செய்தேன் தவஞ்செய்தேன்
      யோகமட்டுஞ் செய்தால்என் யோசிப்பாய் கல்மனமே 65
      பேசாது இருப்பதற்குத்தான் கற்ற கல்வியன்றோ
      வாகான மெய்க்கல்வி வகுத்தறிநீ கல்மனமே 66
      அறிவோடு கிளத்தல்
      எல்லா பொருள்களையும் எண்ணப்படி படைத்த
      வல்லாளன் தன்னை வகுத்தறிநீ புல்லறிவே. 67
      கட்புலனுக்கு எள்ளளவும் காணாது இருந்தெங்கும்
      உட்புலனாய் நின்றஒன்றை உய்த்தறிநீ புல்லறிவே. 68
      விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும்
      செழித்திலங்கும் ஆன்மாவை தேர்ந்தறிநீ புல்லறிவே. 69
      மெய்யில்ஒரு மெய்யாகி மேலாகி காலாகி
      பொய்யில்ஒரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே. 70
      ஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே
      கூத்துபுரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே. 71
      இருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும்உன்றன் வல்லமையை
      அருள்துறையில் நிறுத்தி விளக்காகுநீ புல்லறிவே. 72
      நல்வழியில் சென்று நம்பதவி எய்தாமல்
      கொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே. 73
      கைவிளக்கு கொண்டு கடலில்வீழ் வார்போல்
      மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே. 74
      வாசிக்கு மேலான வாள்கதியுன் னுள்ளிருக்க
      யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே. 75
      அன்னையைப்போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
      முன்னவனை கண்டு முக்தியடை புல்லறிவே. 76
      சித்தத்தொடு கிளத்தல்
      கண்ணிகள்
      அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீபற - பர
      மானந்தம் கண்டோ ம் என்று தும்பீபற
      மெய்ஞ்ஞானம் வாய்த்தென்று தும்பீபற - பர
      மேலேறி கொண்டோ ம் என்று தும்பீபற 77
      அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை
      ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீபற
      தொல்லைவினை நீங்கிற்று என்றே தும்பீபற - பரஞ்
      சோதியை கண்டோ ம் என தும்பீபற 78
      ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை
      அறிவே பொருளாம் என தும்பீபற
      செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு
      தெய்வீகம் கண்டோ ம் என்றே தும்பீபற 79
      மூவாசை விட்டோ மென்றே தும்பீபற - பர
      முத்தி நிலை சித்தியென்றே தும்பீபற
      தேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்த
      செகத்தை ஒழித்தோம் என்று தும்பீபற 80
      பாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயை
      பற்றற்றோம் என்றேநீ தும்பீபற
      வாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற - நிறை
      வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற 81
      எப்பொருளும் கனவென்றே தும்பீபற - உல
      கெல்லாம் அழியுமென்றே தும்பீபற
      அப்பிலெழு துடலென்றே தும்பீபற - என்றும்
      அழிவில்லாதது ஆதியென்றே தும்பீபற 82
      குயிலொடு கிளத்தல்
      கரணங்கள் ஒருநான்கும் அடங்கினவே - கெட்ட
      காமமுதல் ஓராறும் ஒடுங்கினவே
      சரணங்கள் ஒருநான்கும் கண்டனமென்றே - நிறை
      சந்தோட மாகவே கூவு குயிலே 83
      உலகம் ஒக்காளமாம் என்றோதுகுயிலே - எங்கள்
      உத்தமனை காண்பதரிதென்று ஓதுகுயிலே
      பலமதம் பொய்மையே என்றோதுகுயிலே - எழு
      பவம் அகன்றிட்டோ ம் நாமென்று ஓதுகுயிலே 84
      சாதனங்கள் செய்தவர்கள் சாவார்குயிலே - எல்லா
      தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேவார்குயிலே
      மாதவங்கள் போலும்பலன் வாயாக்குயிலே - மூல
      மந்திரங்கள் தான்மகிமை வாய்க்கும்குயிலே. 85
      எட்டிரண்டு அறிந்தோர்க்குஇடர் இல்லைகுயிலே - மனம்
      ஏகாமல் நிற்கில்கதி எய்துங்குயிலே
      நட்டணையை சார்ந்தறிந்து கொள்ளு குயிலே - ஆதி
      நாயகனை நினைவில் வைத்தோதுகுயிலே. 86
      மயிலொடு கிளத்தல்
      ஆடுமயிலே நடமாடு மயிலே எங்கள்
      ஆதியணி சேடனை கண்டாடுமயிலே
      கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே - என்றும்
      குறையாமல் மோனநெறி கொள்ளுமயிலே. 87
      இல்லறமே அல்லலாமென்று ஆடுமயிலே - பத்தி
      இல்லவர்க்கு முத்திசித்தி இல்லைமயிலே
      நல்லறமே துறவறங் காணுமயிலே - சுத்த
      நாதாந்த வெட்டவெளி நாடுமயிலே. 88
      காற்றூனை போல்மனத்தை காட்டுமயிலே - வரும்
      காலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே
      பாற்றூடு உருவவே பாயுமயிலே - அக
      பற்று சற்றுமில்லாமற் பண்ணுமயிலே. 89
      அன்னத்தொடு கிளத்தல்
      சிறுதவளை தான்கலக்கிற் சித்திரத்தின் நிழல்மறையும்
      மறுவாயை தான்கலக்கின் மதிமயங்கும் மடவனமே. 90
      காற்றின் மரமுறியும் காட்சியைப்போல் நல்லறிவு
      தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்போம் மடவனமே. 91
      அக்கினியாற் பஞ்சுபொதி அழிந்திட்ட வாறேபோல்
      பக்குவநல் அறிவாலே பாவம்போம் மடவனமே. 92
      குளவிபுழு வைக்கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல்போல்
      வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவனமே. 93
      அப்புடனே உப்பு சேர்ந்தளவுசரி யானதுபோல்
      ஒப்புறவே பிரமமுடன் ஒன்றிநில்லு மடவனமே. 94
      காய்ந்த இரும்புநிறங் காட்டுதல்போல் ஆத்துமத்தை
      வாய்ந்திலங்க செய்து வளம்பெறுநீ மடவனமே. 95
      புல்லாங்குழலூதல்
      தொல்லை பிறவி தொலைத்தக்கார்க்கு முத்திதான்
      இல்லையென்று ஊதுகுழல் - கோனே
      இல்லையென்று ஊதுகுழல். 96
      இந்திர போகங்கள் எய்தினு தொல்லையென்று
      அந்தமாய் ஊதுகுழல் - கோனே
      அந்தமாய் ஊதுகுழல். 97
      மோன நிலையில் முத்திஉண்டாம் என்றே
      கானமாய் ஊதுகுழல் - கோனே
      கானமாய் ஊதுகுழல். 98
      நாய்போற் பொறிகளை நானாவி தம்விட்டோ ர்
      பேயரென்று ஊதுகுழல் - கோனே
      பேயரென்று ஊதுகுழல். 99
      ஓடி திரிவோர்க்கு உணர்வுகி டும்படி
      சாடியே ஊதுகுழல் - கோனே
      சாடியே ஊதுகுழல். 100
      ஆட்டு கூட்டங்களை அண்டும் புலிகளை
      ஓட்டியே ஊதுகுழல் - கோனே
      ஓட்டியே ஊதுகுழல். 101
      மட்டி குணமுள்ள மாரீச நாய்களை
      கட்டிவைத்து ஊதுகுழல் - கோனே
      கட்டிவைத்து ஊதுகுழல். 102
      கட்டாத நாயெல்லாம் காவலு கெப்போதும்
      கிட்டாவென்று ஊதுகுழல் - கோனே
      கிட்டாவென்று ஊதுகுழல். 103
      பெட்டியிற் பாம்பென பேய்மனமே அடங்க
      ஒட்டியே ஊதுகுழல் - கோனே
      ஒட்டியே ஊதுகுழல். 104
      எனதென்றும் யானென்றும் இல்லா திருக்கவே
      தனதாக ஊதுகுழல் - கோனே
      தனதாக ஊதுகுழல். 105
      அற்ற விடமொன்றே அற்றதோடு உற்றதை
      கற்றதென்று ஊதுகுழல் - கோனே
      கற்றதென்று ஊதுகுழல். 106
      பால் கறத்தல்
      சாவாது இருந்திட பால்கற - சிரம்
      தன்னில் இருந்திடும் பால்கற
      வேவாது இருந்திட பால்கற - வெறு
      வெட்ட வெளிக்குள்ளே பால்கற. 107
      தோயாது இருந்திடும் பால்கற
      தொல்லை வினையற பால்கற
      வாயால் உமிழ்ந்திடும் பால்கற - வெறும்
      வயிறார உண்டிட பால்கற. 108
      நாறா திருந்திடும் பால்கற
      நாளும் இருந்திட பால்கற
      மாறாது ஒழுகிடும் பால்கற - தலை
      மண்டையில் வளரும் பால்கற. 109
      உலகம் வெறுத்திடும் பால்கற - மிக
      ஒக்காளம் ஆகிய பால்கற
      கலசத்தினுள் விழ பால்கற - நிறை
      கண்டத்தின் உள்விழ பால்கற. 110
      ஏப்பம் விடாமலே பால்கற - வரும்
      ஏமன் விலக்கவே பால்கற
      தீப்பொறி ஓய்ந்திட பால்கற - பர
      சிவத்துடன் சாரவே பால்கற. 111
      அண்ணாவின் மேல்வரும் பால்கற - பேர்
      அண்டத்தில் ஊறிடும் பால்கற
      விண்ணாட்டில் இல்லாத பால்கற - தொல்லை
      வேதனை கெடவே பால்கற. 112
      கிடை கட்டுதல்
      இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே - உன்
      அடங்குமன மாடொன்றை அடக்கிவிடு கோனே. 113
      சாற்றரிய நைட்டிகரே தற்பரத்தை சார்வார் - நாளும்
      தவமா கழிப்பவரே சன்னமதில் வருவார். 114
      அகங்கார மாடுகள்மூன்று அகற்றிவிடு கோனே - நாளும்
      அவத்தையெனும் மாடதைநீ அடக்கிவிடு கோனே. 115
      ஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக்கட்டு கோனே - உன்
      உறையுமிரு மலந்தனையும் ஓட்டி கட்டு கோனே. 116
      மும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்கட்டு கோனே - மிக
      முக்கால நேர்மையெல்லாம் முன்பறிவாய் கோனே. 117
      இந்திரி திரயங்களை இறுக்கிவிடு கோனே - என்றும்
      இல்லை என்றேமரணக்குழல் எடுத்து ஊதுகோனே. 118
      உபாதியெனும் மூன்றாட்டை ஓட்டிவிடு கோனே - உன
      குள்ளிருக்கும் கள்ளமெல்லாம் ஓடிப்போம் கோனே. 119
      முக்காய மாடுகளை முன்னங்கட்டு கோனே - இனி
      மோசமில்லை நாசமில்லை முத்திஉண்டாங் கோனே. 120
      கன்மமல மாடுகளை கடைக்கட்டு கோனே - மற்ற
      கன்மத்திர யப்பசுவை கடையிற்கட்டு கோனே. 121
      காரணக்கோ மூன்றையுங் கால்பிணிப்பாய் கோனே - நல்ல
      கைவசமாய் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே. 122
      பிரம்மாந்திரத்திற்பே ரொளிகாண் எங்கள்கோனே - முத்தி
      பேசாதிருந்து பெருநிட்டைசார் எங்கள் கோனே. 123
      சிரமதிற் கமல சேவைதெரி தெங்கள்கோனே - வாய்
      சித்திக்கு தந்திரம் சித்தத்தறியெங்கள் கோனே. 124
      விண்நாடி வத்துவை மெய்யறிவிற் காணுங்கோனே - என்றும்
      மெய்யே மெய்யில்கொண்டு மெய்யறிவில் செல்லுங்கோனே. 125
      கண்ணாடியின் உள்ளே கண்டுபார்த்து கொள்ளுகோனே - ஞான
      கண்ணன்றி கண்ணடிகாண ஒண்ணாதெங்கள் கோனே. 126
      சூனியமானத்தை சுட்டுவார் எங்குண்டு கோனே - புத்தி
      சூக்குமமேயதை சுட்டுமென்று எண்ணங்கொள் கோனே. 127
      நித்தியமானது நேர்படி லேநிலை கோனே - என்றும்
      நிற்குமென்றே கண்டு நிச்சயங்காணெங்கள் கோனே. 128
      சத்தியும் பரமும் தன்னு கலந்தேகோனே - நிட்டை
      சாதிக்கில் இரண்டுந்தன்னுள்ளே காணலாங் கோனே. 129
      கூகைபோல் இருந்து மோனத்தைச்சாதியெங் கோனே - பர
      மூலநிலைகண்டு மூட்டு பிறப்பறு கோனே. 130
      --------------------------------------------------
      2. வயங்கும் - விளங்கும்
      7. சகளம் - உருவுள்ளது நிட்களம்
      8. நாரி இடப்பாகன் - அர்த்தநாரீஸ்வரன்
      9. முப்பாழ் - விந்து மோகினி மான் ஆகிய மூன்று மாயை
      24. போக்கியம் - அனுபவம்
      32. கோசம் - கருப்பை
      38. அத்தன் - தந்தை
      51. மூவர் முதல் - மும்மூர்த்திகளின் தலைவன்
      52. சுகவாரி - இன்பக்கடல்
      53. சராசரம் - உலகம் பவம்
      57. காமியம் - விருப்பம்
      70. கால் - காற்று
      80. மூவாசை - மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை
      தேவாசை - கடவுள் மீது கொள்ளும் ஆசை
      82. அப்பு - நீர்
      85. வாயா - வாய்க்காது
      86. நட்டணை - நடிப்பு
      114. தற்பரம் - பரம்பொருள்
      129. நிட்டை - சிவயோகம்
      --------------------------------------------------
      ------------------------------------------------------------------------
      3. கொங்கண சித்தர் பாடல்கள்
      இவருக்கு கொங்கணர் கொங்கண சித்தர் கொங்கண நாயனார் கொங்கணத்தேவர்
      கொங்கண நாதர் என பல பெயர்களும் உண்டு. இவர்கள் வெவ்வேறானவர்கள்
      என்பாருமுண்டு.
      கொங்கணர் திருவள்ளுவரின் சீடர் என்றும் போகரின்
      இவர்பெயரால் வைத்திய இரசவாத யோக நூல்களும் பாடல்களும் இருக்கின்றன.
      இவர் கி.பி 7ஆம் நூற்றாண்டில் இருந்தவர். கொங்கு நாட்டை சேர்ந்தவர்.
      ஆதலின் இப்பெயர் பெற்றார் என்பர்.
      இவர் பெயரில் வழங்கப்படும் பாடல்களில் வாலை கும்மி என்பது ஒன்று.
      வாலை என்பது சக்தியின் பெயர். கன்னி என்றும் பொருள். கன்னி பெண்ணை
      முன்நிறுத்தி கும்மி பாடியுள்ளதால் வாலைக்கும்மி என வழங்குகிறது.
      இது இவர் பெயரால் வழங்கினாலும் இவரால் பாடப்பட்டது அன்று.
      கருத்துக்களை அமைத்து ஆசிரியர் வீர பெருமாளின் மாணாக்கர் ஒருவர்
      பாடியதாகவும் அவர் வலவேந்திரன் துரைவள்ளல் என்ற சிற்றரசன் காலத்தவர்
      என்றும் அவன் அஞ்செழுத்துணர்ந்த சைவன் வாலைக்கும்மி பாடல்
      கொங்கணர் பற்றிய கதை ஒன்று உண்டு. ஒரு மரத்தின் கீழ்
      செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது
      எச்சம் இட்டது. உடனே
      கொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கை பார்த்தார். அது எரிந்து
      சாம்பலாயிற்று. அதன் பிறகு அவர் ஊருக்குள் வந்து திருவள்ளுவர்
      மனைவாயிலில் நின்று பிச்சை கேட்டார். வள்ளுவர் மனைவி வாசுகியார்
      கணவருக்கு உணவு பரிமாறி கொண்டிருந்த நேரம். ஆதலால் அவர் பிச்சை
      கொண்டுவர சிறிது நேரமாயிற்று. நேரங்கடந்து பிச்சை கொண்டுவந்த
      வாசுகியாரை கொங்கணர் சினத்துடன் விழித்து பார்த்தார். உடனை
      வாசுகியார் கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என்று கேட்டார். அஞ்சிய
      கொங்கணர் வாசுகியை பணிந்தார். பின்னர் திருவள்ளுவர் சீடரானார்.
      கொங்கண சித்தர் வாலை கும்மி
      காப்பு
      விநாயகர் துதி
      பின் முடுகு வெண்பா
      கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்ற
      செல்வியின்மேற் கும்மிதனை செப்புதற்கே - நல்விசய
      நாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்ச
      பாதம்வஞ்ச நெஞ்சினில்வை போம். 1
      கும்மி
      சத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த
      உத்தமிமேற் கும்மி பாட்டுரைக்க
      வித்தை குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை
      சித்தி விநாயகன் காப்பாமே. 2
      சரசுவதி துதி
      சித்தர்கள் போற்றிய வாலைப்பெண் ணாமந்த
      சக்தியின் மேற்கும்மி பாட்டுரைக்க
      தத்தமி தோமென ஆடும் சரசுவதி
      பத்தினி பொற்பதங் காப்பாமே. 3
      சிவபெருமான் துதி
      எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின்
      தங்கையின் மேற்கும்மி பாடுதற்கு
      கங்கை யணிசிவ சம்புவாம் சற்குரு
      பங்க பொற்பாதம் காப்பாமே. 4
      சுப்பிரமணியர் துதி
      ஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி
      வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்கு
      மானை பெண்ணாக்கிய வள்ளி கிசைந்திடும்
      மால்முரு கேசனும் காப்பாமே. 5
      விஷ்ணு துதி
      ஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை
      அம்பிகை மேற்கும்மி பாடுதற்கு
      காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம்
      ஆண்டவன் பொற்பதங் காப்பாமே. 6
      நந்தீசர் துதி
      அந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த
      அம்பிகை மேற்கும்மி பாடுதற்கு
      சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும்
      நந்தீசர் பொற்பதங் காப்பாமே. 7
      நூல்
      கும்மி
      தில்லையில் முல்லையி லெல்லையுளாடிய
      வல்லவள் வாலைப்பெண் மீதினிலே
      சல்லாப கும்மி தமிழ்பா டவரும்
      தொல்லைவினை போக்கும் வாலைப்பெண்ணே 8
      மாதா பிதாகூட இல்லாம லேவெளி
      மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்று
      பேதை பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று
      புகுந்தா ளிந்த புவியடக்கம். 9
      வேதமும் பூதமுண் டானது வும்வெளி
      விஞ்ஞான சாத்திர மானதுவும்
      நாதமுங் கீதமுண் டானதுவும் வழி
      நான்சொல்ல கேளடி வாலைப்பெண்ணே. 10
      மூந்த செகங்களுண் டானது வும்முதல்
      தெய்வமு தேவருண் டானதுவும்
      விந்தையாய் வாலையுண் டானதுவும் ஞான
      விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே. 11
      அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்
      அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்
      தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி
      பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம். 12
      ஆதியி லைந்தெழு தாயினாள் வாலைபெண்
      ஐந்தெழு துமென்று பேரானாள்
      நாதியி னூமை யெழுத்தியவள் தானல்ல
      ஞான வகையிவள் தானானாள். 13
      ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும்
      ஓமென் றெழுத்தே யுயிராச்சு
      ஆமி தெழுத்தை யறிந்துகொண்டு விளை
      யாடி கும்மி யடியுங்கடி. 14
      செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்
      சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்
      உகமு டிந்தது மஞ்செழுத்தாம் பின்னும்
      உற்பன மானது மஞ்செழுத்தாம். 15
      சாத்திரம் பார்த்த்தாலு தானுமென்ன வேதம்
      தானுமே பார்த்திரு தாலுமென்ன
      சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு
      சொல்லை யறிந்தல்லோ காணவேணும் 16
      காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்
      காரிய மில்லையென் றேநினைத்தால்
      காணாதுங் காணலா மஞ்செழு தாலதில்
      காரிய முண்டுதியானஞ் செய்தால். 17
      ஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி
      வாயனு மைந்தா மெழுத்துக்குள்ளே
      வாயனு மைந்தாம் எழுத்துக்குள் ளேயிந்த
      வாலையு மைந்தாம் எழுத்துக்குள்ளே. 18
      அஞ்செழு தானதும் எட்டெழுத்தாம் பின்னும்
      ஐம்பத்தோர் அட்சர தானாச்சு
      நெஞ்செழு தாலே நிலையா மலந்த
      நிசந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே 19
      ஏய்க்கு தேய்க்கு ஐந்செழு துவதை
      எட்டி பிடித்துக்கொளிரண் டெழுத்தை
      நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி
      நிலையை பாரடி வாலைப்பெண்ணே 20
      சிதம்பர சக்கர தானறிவா ரிந்த
      சீமையி லுள்ள பெரியோர்கள்
      சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே
      தெய்வத்தை யல்லோ அறியவேணும் 21
      மனமு மதியு மில்லாவிடில் வழி
      மாறுதல் சொல்லியேயென்ன செய்வாள்
      மனமு றுதியும் வைக்கவேணும் பின்னும்
      வாலை கிருபையுண் டாகவேணும். 22
      இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்
      தீமட்டு திந்தவரி விழிக்கே
      கனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்
      கருவை சொல்லுவேன் கேளுங்கடி. 23
      ஊத்தை சடலமென் றெண்ணாதே இதை
      உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே
      பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதை
      பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே. 24
      உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
      வைத்த விளக்கும் எரியுதடி
      அச்சுள்ள விளக்கு வாலையடி அவி
      யாம லெரியுது வாலைப்பெண்ணே 25
      எரியு தேஅறு வீட்டினி லேயதில்
      எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லை
      தெரியுது போக வழியுமில்லை பாதை
      சிக்குது வாலைப்பெண்ணே.
      சிலம்பொலி யென்ன கேட்குமடி மெத்த
      சிக்குள்ள பாதை துடுக்கமடி
      வலம்புரி யச்சங்கமூது மடி மேலே
      வாசியை பாரடி வாலைப்பெண்ணே 27
      வாசி பழக்க மறியவே ணும்மற்றும்
      மண்டல வீடுகள் கட்டவேணும்
      நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும்
      நாட்டத்தை பாரடி வாலைப்பெண்ணே 28
      முச்சுடரான விளக்கி னுள்ளே மூல
      மண்டல வாசி வழக்கத்திலே
      எச்சுடராகி அந்த சுடர் வாலை
      இவள்விட வேறில்லை வாலைப்பெண்ணே 29
      சூடாமல் வாலை இருக்கிறதும் பரி
      சித்த சிவனுக்குள் ளானதனால்
      வீடாமல் வாசி பழக்கத்தை பாருநாம்
      மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே 30
      மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்
      விளக்கில் நின்றவன் வாணியடி
      தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி
      தாண்டி கொண்டான்ப டாணியடி. 31
      அத்தியி லேகரம் பத்தியி லேமனம்
      புத்தியி லேநடு மத்தியிலே
      நெற்றி சதாசிவ மென்றுசொன் னேனுன்றன்
      நிலைமையை பாரடி வாலைப்பெண்ணே 32
      அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும்
      வழுத்தி னேன்ஞான பழத்திலே
      கழுத்தி லேமயே வரனு முண்டுகண்
      கண்டு பாரடி வாலைப்பெண்ணே 33
      அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம்
      கொஞ்சி விளையாடும் வஞ்சியரே
      நெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பா னவன்
      நேருட னாமடி வாலைப்பெண்ணே 34
      தொந்தியி லேநடு பந்தியிலே திட
      சிந்தையி லேமுந்தி உன்றனுடன்
      உந்தியில் விட்ணுவு தாமிரு பாரிதை
      உண்மையா பாரடி வாலைப்பெண்ணே 35
      ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங்
      காலத்தி லேயனு கூலத்திலே
      முலத்திலே பிரமன் தானிரு துவாசி
      முடிக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே. 36
      தேருமுண் டைஞ்சூறாம் ஆணியுண்டே அதில்
      தேவரு முண்டுசங் கீதமுண்டே
      ஆருண்டு பாரடி வாலைத்தெய் வம்மதிலே
      அடக்க தானடி வாலைப்பெண்ணே 37
      ஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில்
      உள்ளே நிலைக்கார ரஞ்சுபேராம்
      அன்புடனே பரிகாரர்கள் ஆறு பேர்
      அடக்க தானடி வாலைப்பெண்ணே 38
      இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம்
      இருக்கையில் புத்தி கறிக்கையினால்
      சந்தோட வாலையை பாராமல் மனிதர்
      சாகிற தேதடி வாலைப்பெண்ணே 39
      நகார திட்டிப்பே ஆனதனால் வீடு
      வான வகார நயமாச்சு
      உகார முச்சி சிரசாச்சே இதை
      உற்று பாரடி வாலைப்பெண்ணே 40
      வகார மானதே ஓசையாச்சே அந்த
      மகார மானது மாய்கையாச்சே
      சிகார மானது மாய்கையாச்சே இதை
      தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே 41
      ஓமென்ற அட்சர தானுமுண்டு அதற்குள்
      ஊமை யெழுத்து மிருக்குதடி
      நாமிந்தெ ழுத்தை யறிந்துகொண் டோ ம்வினை
      நாடி பாரடி வாலைப்பெண்ணே 42
      கட்டாத காளையை கட்டவே ணுமாசை
      வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்
      எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காயம்
      என்றை கிருக்குமோ வாலைப்பெண்ணே 43
      இருந்த மார்க்க்கமா தானிருந்து வாசி
      ஏற்காம லேதான டக்கவேணும்
      திரிந்தே ஓடிய லைந்துவெந்து தேகம்
      இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே 44
      பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில்
      பூவில்லா பிஞ்சும் அநேகமுண்டு
      மூத்த மகனாலே வாழ்வுண்டு மற்ற
      மூன்று பேராலே அழிவுமுண்டு 45
      கற்புள்ள மாதர் குலம்வாழ்க நின்ற
      கற்பை யளித்தவரே வாழ்க
      சிற்பர னை போற்றி கும்மியடி
      தற்பரனை போற்றி கும்மியடி. 46
      அஞ்சி னிலேரெண் டழிந்ததில் லையஞ்
      சாறிலேயும் நாலொழிந்த தில்லை
      பிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது
      பேணி போடலாம் வாலைப்பெண்ணே 47
      கையில்லா குட்டையன் கட்டிக்கிட்டா னிரு
      காலில்லா நெட்டையன் முட்டிக்கிட்டான்
      ஈயில்லா தேனென துண்டுவி டானது
      இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே 48
      மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய்
      விளக்கு கன்னனூர பாதையிலே
      காலூரு வம்பலம் விட்டத னாலது
      கடுநடை யடி வாலைப்பெண்ணே 49
      தொண்டையுள் முக்கோண கோட்டையிலே இதில்
      தொத்தி கொடிமரம் நாட்டையிலே
      சண்டை செய்துவந்தே ஓடிப்போனாள் கோட்டை
      வெந்து தணலாச்சு வாலைப்பெண்ணே 50
      ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு
      அப்போதே வெந்தே அழிந்திட்டதும்
      பாச வலைவந்து மூடியதும் ஈசன்
      பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே 51
      அன்ன மிருக்குது மண்டபத்தில் விளை
      யாடி திரிந்தே ஆண்புலியும் அங்கே
      இன்ன மிருக்குமே யஞ்சு கிளியவை
      எட்டி பிடிக்குமே மூன்று கிளியடி வாலைப்பெண்ணே. 52
      தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது
      மாப்பிள்ளை தான்வந்து சாப்பிடவும்
      ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தைஇருந்து
      விழிப்பது பாருங்கடி வாலைப்பெண்ணே. 53
      மீனு மிருக்குது தூரணி யிலிதை
      மேய்ந்து திரியுங் கலசாவல்
      தேனு மிருக்குது போரையிலே யுண்ண
      தெவிட்டு தில்லையே வாலைப்பெண்ணே 54
      காக்கை யிருக்குது கொம்பிலே தான்கத
      சாவி லிருக்குது தெம்பிலேதான்
      பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம்
      பார்த்தால் தெரியுமே வாலைப்பெண்ணே 55
      கும்பி குளத்திலே யம்பல மாமந்த
      குளக்க ருவூரில் சேறுமெத்த
      தெம்பிலிடை காட்டு பாதைக ளாய்வந்து
      சேர்ந்து ஆராய்ந்துபார் வாலைப்பெண்ணே 56
      பண்டுமே ஆழ கிணற்றுக்குள் ளேரெண்டு
      கெண்டை யிருந்து பகட்டுதடி
      கண்டிருந்து மந்த காக்கையுமே அஞ்சி
      கழுகு கொன்றது பாருங்கடி 57
      ஆற்றிலே அஞ்சு முதலைய டியரும்
      புற்றிலே ரண்டு கரடியடி
      கூற்றுனு மூன்று குருடன டிபாசங்
      கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே 58
      முட்டை யிடுகு தொருபற வைமுட்டை
      மோசம் பண்ணு தொருபறவை
      வட்டமி டாரூர் கண்ணியி லிரண்டு
      மானு தவிக்குது வாலைப்பெண்ணே 59
      அட்டமா விண்வட்ட பொட்டலி லேரண்டு
      அம்புலி நிற்குது தேர் மேலே
      திட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம்
      செந்தண லானதே வாலைப்பெண்ணே 60
      முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல
      மண்டல வாசி பழக்கத்திலே
      அக்கோண வட்ட சக்கரத்தில் வாலை
      அமர்ந்தி ருக்கிறாள் வாலைப்பெண்ணே 61
      இரண்டு காலாலொரு கோபுரமாம் நெடு
      நாளா யிருந்தேஅமிழ்ந்து போகும்
      கண்டபோ துகோபு ரமிருக்கும் வாலை
      காணவு மொட்டாள் நிலைக்கவொட்டாள். 62
      அஞ்சு பூதத்தை யுண்டுபண்ணி கூட்டி
      ஆரா தாரத்தை யுண்டுபண்ணி
      கொஞ்சு பொண்ணாசை யுண்டுபண்ணி வாலை
      கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள். 63
      காலனை காலால் உதைத்தவளாம் வாலை
      ஆலகா லவிட முண்டவளாம்
      மாளா செகத்தை படைத்த வளாமிந்த
      மானுடன் கோட்டை இடித்தவளாம். 64
      மாதாவாய் வந்தே அமுதந்தந்தாள் மனை
      யாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள்
      ஆதரவாகிய தங்கையானாள் ந
      காசை கொழுந்தியு மாமியானாள். 65
      சிரித்து மெல்ல புரமெரி தாள்வாலை
      செங்காட்டு செட்டியை தானுதைத்தாள்
      ஒருத்தி யாகவே சூரர்தமை வென்றாள்
      ஒற்றையா கஞ்சனை கொன்று விட்டாள். 66
      இப்படி யல்லொ இவள்தொழி லாமிந்த
      ஈனா மலடி கொடுஞ்சூலி
      மைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த
      வயசு வாலை திரிசூலி. 67
      கத்தி பெரிதோ உறைபெரிதோ விவள்
      கண்ணு பெரிதோ முகம்
      சத்தி பெரிதோ சிவன்
      சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே 68
      அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல
      அப்படி வாலை பெரிதானால்
      பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல
      பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி. 69
      மாமிச மானால் எலும்புண்டு சதை
      வாங்கிஓடு கழன்று விடும்
      ஆமிச மிப்படி சத்தியென்றே விளை
      யாடி கும்மி அடியுங்கடி. 70
      பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
      விண்டுமி போனால் விளையாதென்று
      கண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாளது
      உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே 71
      மண்ணு மில்லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்
      வாசமில் லாமலே பூவுமில்லை
      பெண்ணு மில்லாமலே ஆணுமில் லையிது
      பேணி பாரடி வாலைப்பெண்ணே 72
      நந்த வனத்திலே சோதியுண்டு நிலம்
      நத்திய பேருக்கு நெல்லுமுண்டு
      விந்தையாய் வாலையை பூசிக்க முன்னாளில்
      விட்ட குறைவேணும் வாலைப்பெண்ணே 73
      வாலையை பூசிக்க சித்தரானார் வாலை
      கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்
      வேலையை பார்த்தல்லோ கூலிவைத்தா ரிந்த
      விதந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே 74
      வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங்
      காப்பது சேலைக்கு மேலுமில்லை
      பாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலை
      கும்மி மேலான பாடலில்லை. 75
      நாட்டத்தை கண்டா லறியலாகு மந்த
      நாலாறு வாசல் கடக்கலாகும்
      பூட்டை கதவை திறக்கலா கும்மிது
      பொய்யல்ல மெய்யடி வாலைப்பெண்ணே 76
      ஆணும் பெண்ணும்கூடி யானதால் பிள்ளை
      ஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்
      ஆணும் பெண்ணுங்கூடி யானதல்லோ பேதம்
      அற்றொரு வித்தாச்சு வாலைப்பெண்ணே 77
      இன்றை கிருப்பதும் பொய்யல்ல வேவீடே
      என்வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவே
      அன்றை கெழுத்தின் படிமுடியும் வாலை
      ஆத்தாளை போற்றடி வாலைப்பெண்ணே 78
      வீணாசை கொண்டு திரியாதே இது
      மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு
      காணாத வாலையை கண்டுகொண்டால் காட்சி
      காணலாம் ஆகாயம் ஆளலாமே. 79
      பெண்டாட்டி யாவதும் பொய்யல்லவோ பெற்ற
      பிள்ளைக ளாவதும் பொய்யல்லவோ
      கொண்டாட்ட மானதகப்பன் பொய்யே முலை
      கொடுத்த தாயும் நிசமாமோ 80
      தாயும் பெண்டாட்டியும் தான்சரி யேதன்யம்
      தாமே இருவரு தாங்கொடுத்தார்
      காயும் பழமுஞ் சரியாமோ உன்றன்
      கருத்தை பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே 81
      பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற
      பிள்ளை மசான கரையின் மட்டும்
      தொண்டாட்டு தர்மம் நடுவினிலே வந்து
      சேர்ந்து பரகதி தான்கொடுக்கும். 82
      பாக்கியமும் மகள் போக்கியமும் ராச
      போக்கியமும் வந்த தானாக்கால்
      சீக்கிர தருமஞ் செய்யவேண்டும் கொஞ்ச
      திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும். 83
      திருப்பணி களைமுடி தோரும் செத்துஞ்
      சாகாத பேரி லொருவரென்றும்
      அரு பொலிந்திடும் வேதத்தி லேயவை
      அறிந்து சொன்னாளே வாலைப்பெண்ணே 84
      மெத்தை தனிலே படுத்திரு துநாமும்
      மெல்லிய ரோடு சிரிக்கும்போது
      யுத்தகாலன் வந்துதான் பிடித்தால் நாமும்
      செத்த சவமடி வாலைப்பெண்ணே 85
      ஏழை பனாதிக னில்லையென்றால் அவர்க்கு
      இருத்தால் அன்னங் கொடுக்க வேண்டும்
      நாளையென்று சொல்ல லாகாதே என்று
      நான்மறை வேத முழங்குதடி. 86
      பஞ்சை பனாதி யடியாதே அந்த
      பாவ தொலைய முடியாதே
      தஞ்சமென்றோரை கெடுக்காதே யார்க்கும்
      வஞ்சனை செய்ய நினையாதே. 87
      கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்
      காணாத வுத்தரம் விள்ளாதே
      பெண்டாட்டி குற்றது சொல்லாதே பெற்ற
      பிள்ளை கிளப்பங் கொடுக்காதே. 88
      சிவன்ற னடியாரை வேதியரை சில
      சீர்புல ஞான பெரியோரை
      மவுன மாகவும் வையாதே அவர்
      மனத்தை நோகவும் செய்யாதே. 89
      வழக்க ழிவுகள் சொல்லாதே கற்பு
      மங்கையர் மேல்மனம் வையாதே
      பழக்க வாசியை பார்த்துக்கொண் டுவாலை
      பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே 90
      கூடிய பொய்களை சொல்லாதே பொல்லா
      கொளைக ளவுகள் செய்யாதே
      ஆடிய பாம்பை யடியா தேயிது
      அறிவு தானடி வாலைப்பெண்ணே 91
      காரிய னாகினும் வீரியம் பேசவும்
      காணா தென்றவ்வை சொன்னாளே
      பாரினில் வம்புகள் செய்யாதே புளி
      பழம்போ லுதிர்த்து விழுந்தானே. 92
      காசார் கள்பகை செய்யா தேநடு
      காட்டு புலிமுன்னே நில்லாதே
      தேசாந்தி ரங்களுஞ் செல்லா தேமாய்கை
      தேவடி யாள்தனம் பண்ணாதே 93
      தன்வீடி ருக்க அசல்வீடு போகாதே
      தாயார் தகப்பனை வையாதே
      உன்வீட்டு குள்ளேயே யூக மிருக்கையில்
      ஓடி திரிகிறாய் வாலைப்பெண்ணே 94
      சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்
      தானென் றொருவுடல் பேதமுண்டோ
      ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
      உற்பத்தி நெய்தயிர் மோராச்சு. 95
      பாலோடு முண்டிடு பூனையு முண்டது
      மேலாக காணவுங் காண்பதில்லை
      மேலந்த ஆசையை தள்ளிவி டுள்ளத்தில்
      வேண்டி பூசையை செய்திடுங்கள். 96
      கோழி காறுகாலுண் டென்றுசொன்னேன் கிழ
      கூனி மூன்றுகா லென்றுசொன் னேன்
      கூனிக்கிரண் டெழுத்தென்று சொன்னேன் முழு
      பானைக்கு வாயில்லை யென்றுசொன்னேன். 97
      ஆட்டு கிரண்டுகா லென்றுசொன் னேன்நம்
      பானைக்கு பானைக்குநிற்கு மேல்சூல்
      மாட்டுக்கு காலில்லை யென்றுசொன்னேன் கதை
      வகையை சொல்லடி வாலைப்பெண்ணே 98
      கோயிலு மாடும் பறித்தவ னுங்களறி
      கூற்று மேகற் றிருந்தவனும்
      வாயில்லா குதிரை கண்டவனும் மாட்டு
      வகை தெரியுமோ வாலைப்பெண்ணே 99
      இத்தனை சாத்திரஞ் தாம்படித்தோர் செத்தார்
      என்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்
      செத்து போய்கூட கலக்கவேண்டும் அவன்
      தேவர்க ளுடனே சேரவேண்டும். 100
      உற்றது சொன்னாக்கா லற்றது பொருந்தும்
      உண்டோ உலகத்தில் அவ்வைசொன்னாள்
      அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
      அவனே குருவடி வாலைப்பெண்ணே 101
      பூரணம் நிற்கும் நிலையறியான் வெகு
      பொய்சொல்வான் கோடி மந்திரஞ்சொல்வான்
      காரணகுரு அவனு மல்ல இவன்
      காரியகுரு பொருள் பறிப்பான். 102
      எல்லா மறிந்தவ ரென்றுசொல்லி இந்த
      பூமியி லேமுழு ஞானியென்றே
      உல்லாச மாக வயிறு பிழைக்கவே
      ஓடி திரிகிறார் வாலைப்பெண்ணே 103
      ஆதிவா லைபெரி தானா லும்மவள்
      அக்காள் பெரிதோ சிவன்
      நாதிவா லைபெரி தானாலும் அவள்
      நாயக னல்ல சிவம்பெரிது. 104
      ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல்
      அண்டாது மற்ற வியாதியெல்லாம்
      பேயும் பறந்திடும் பில்லிவி னாடியில்
      பத்தினி வாலைப்பெண் பேரைச்சொன்னால். 105
      நித்திரை தன்னிலும் வீற்றிருப்பா ளெந்த
      நேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்
      சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை
      உற்றகா லனையும் தானுதைப்பாள். 106
      பல்லாயி ரங்கோடி யண்டமுதல் பதி
      னாங்கு புவனமும் மூர்த்திமுதல்
      எல்லா தானா படைத்தவளாம் வாலை
      எள்ளுக்கு ளெண்ணைய்போல நின்றவளாம். 107
      தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும்மி தமிழ்
      செய்ய எனக்குப தேசஞ்செய்தாள்
      நேசவான் வீர பெருமாள் குருசாமி
      நீள்பதம் போற்றிக்கொண் டாடுங்கடி. 108
      ஆறு படைப்புகள் வீடுகடை சூத்ர
      அஞ்செழு துக்கும் வகையறிந்து
      கூறுமுயர் வல வேந்திரன் துரைவள்ளல்
      கொற்றவன் வாழக்கொண் டாடுங்கடி. 109
      ஆடுங்கள் பெண்டுகள் எல்லோரு மந்த
      அன்பான கொங்கணர் சொன்னதமிழ்
      பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை
      பாதத்தை போற்றி கொண்டாடுங்கடி. 110
      சித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி
      தேவர்கள் வாழி ரிஷிவாழி
      பத்தர்கள் வாழி பதம்வா ழிகுரு
      பாரதி வாலைப்பெண் வாழியவே 111
      ------------------------------------------------------------------------
      23 2004


      -4.