மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய
      சந்திரிகையின் கதை
      முதல் அத்தியாயம்
      பூகம்பம்
      பொதியை மலைச்சாரலில் வேளாண்குடி என்றொரு அழகான கிராமம் இருக்கிறது. அதற்கருகே
      ஒரு சிறிய நதி ஓடுகிறது. நான்கு திசைகளையும் நோக்கினால் நீல மலை சிகரங்களும்
      குன்றுகளும் தோன்றும். ஊரெங்கும் தோப்புக்கள். எனவே காலையில் எழுந்தால் மாலைவரை
      எப்போதும் ரமணீயமான பட்சிகளின் ஒலிகள் கேட்டு கொண்டிருக்கும்.
      இந்த ஊரில் மற்ற வீதிகளின்றும் ஒதுக்கமாக மேற்றிசையில் நதிக்கருகே ஓர் அக்ரஹாரம்
      அதாவது பிராமணர் வீதி இருந்தது. அந்த அக்ரஹாரத்தில் குழந்தைகளெல்லாம் எப்போதும்
      பட்சிகளின் நாதங்களுக்கிடையே வளர்ந்தது பற்றியோ வேறு எந்த காரணத்தாலோ மிகவும்
      இனிய குரலுடையனவாயிருந்தன. அக்குழந்தைகள்-விசேஷமாக பெண் குழந்தைகள்-
      பேசும்போது சாதாரணமாக நம்மை போலவே மனுஷ தமிழ் பாஷையே பேசுமெனினும் அந்த
      பாஷையை குயில்கள் போலவும் கிளிகள் நாகணவா புட்கள்
      குரலில் பேசின.
      அந்த அக்ரஹாரத்தின் மேலோரத்திலே கிழக்கை பார்த்த ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்தது.
      கோயிலுக்கெதிரே புல் ஏராளமாக வளர்ந்து கிடக்கும். அங்கு பசுக்களும் ஒரு சில
      கழுதைகளும் மேய்ந்து கொண்டிருக்கும். அல்லது சில பசுக்கள் கிருஷ்ணன்
      சந்நிதிக்கெதிரே படுத்துக்கொண்டு சுவாமியை நோக்கி ஜபம் பண்ணி கொண்டிருப்பது போல்
      அசைபோட்டு கொண்டிருக்கும். அவற்றின்மீது காக்கைகள் வந்து உண்ணிகளை கொத்தி
      இன்புறுத்தும். சில சமயங்களில் கண்ணோரத்தை கொத்துவது போல் விளையாடி மாட்டுக்கு
      பொழுது போக செய்துகொண்டிருக்கும். இதையெல்லாம் மர கிளைகளின் மீதுள்ள பட்சிகள்
      பார்த்து வியப்புரை கூறிக்கொண்டிருக்கும்.
      அன்புக்கும் அமைதிக்கும் சாந்திக்கும் அழகுக்கும் இலக்கியமாக திகழ்ந்தது
      அவ்வேளாண்குடியூர் அக்ரஹாரம். அங்கு பெண்மக்கள் எல்லாரும் மகாசுந்தரிகள். ஆண்மக்கள்
      மிகவும் நல்ல குணமுடையோர் ஆனால் பெரும்பாலும் பரம ஏழைகள். பூர்வீக சொத்து நிலம்
      தோட்டம் முதலியன-எல்லோருக்கும் சிறிது சிறிதுண்டு. ஆனால் அதிலிருந்து வரும்
      வரும்படி வெறுமே போஜனத்துக்கு கூட காணாது. இதில் வேஷ்டிகள் புடவைகள்
      ரவிக்கைகள் பாவாடைகள் குடுமி கலியாணம் பூணூல் விவாகங்கள்
      ஸ்நானங்கள் ருதுசாந்திகள் சீமந்தங்கள் பல பண்டிகைகள் உற்சவங்கள் விழாக்கள்
      ஓயாமல் நிகழுமாதலால் அவ்வூர் கிருஹஸ்தர்கள் மேன்மேலும் தம் நில முதலியன
      சுருங்கவும் வறுமை மேன்மேலும் வளரவும் ஏக்கம் பிடித்து வாழ்ந்து வந்தனர். ஆனால்
      வயது முதிர்ந்தோரிடையே இத்தனை ஏக்கமும் மனக்குறைவும் குடிகொண்டிருந்தன என்ற செய்தி
      அவ்வூர குழந்தைகளுக்கு தெரியாது பட்சிகளுக்கு
      எப்போதும் செழுமையாக வளர்ந்த புற்றரைகளில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கும்
      கழுதைகளுக்கும் தெரியாது. இவை எப்போதும் மகிழ்ச்சியிலும் ஆரவாரத்திலும்
      பாட்டிலும் ஆனந்த களியிலும் மூழ்கி கிடந்தன.
      இந்த அக்ரஹாரத்தில் மற்றெல்லா பிராமணர்களை காட்டிலும் அதிக ஏழையான மகாலிங்கையர்
      என்பவர் ஒருவர் இருந்தார். அவருடைய குடும்பம் மிக பெரிது. வீடு மிக சிறிது.
      அவருடைய கிழ தாய் தந்தையர் இருவர் விதவையான தங்கை ஒருத்தி சுமார் முப்பது
      வயதுள்ள மனைவி ஒருத்தி அவளுக்கு ஐந்து பெண் குழந்தைகள். ஆறாவது பிரசவம்
      நெருங்கிய சமயம்.
      இத்தனை பேருக்கும் ஆகாரம் வேண்டுமே மகாலிங்கையருக்கு பூர்வ சொத்து கிடையாது.
      இளமையும் ஊக்கமும் எப்படியேனும் பணம் சம்பாதிக்கலாமென்ற நம்பிக்கையும் அவரை
      விட்டு பிரிந்து நெடுங்காலமாய் விட்டது. அவருக்கு சுமார் நாற்பது வயதுக்கு
      மேலாகவில்லை. அதற்குள்ளே குழந்தைகளின் தொகை வலியாலும் மனைவியின் வாய்
      வலியாலும் தாய் தந்தையரின் நோய் விதவை தங்கையின்
      மகாலிங்கையர் மனத்துயர் பெருகி தலைமயிரெல்லாம் அன்ன தூவிபோல் நரைத்து
      கூனிக்குறுகி மிகவும் மெலிந்து கன்னங்கள் ஒட்டி கண்கள் குழி வீழ்ந்து முகம்
      சுருங்கி திரை கொண்டு இளமையிலே பாராட்டிய சிங்கார ரஸமிகுதியால் மேகநோய்
      கொண்டு முகத்திலும் முதுகிலும் தோட்களிலும் பரந்த மேகப்படைகளுடையவராய் விளங்கினார்.
      இப்படியிருக்கையில் ஒரு மார்கழி மாதத்திரவில் வானம் மைபோல் இருண்டிருந்தது.
      நட்சத்திரங்களெவையும் கண்ணுக்கு புலப்படவில்லை. கிராமத்தாரெல்லாரும் தத்தம்
      வீடுகளுக்குள்ளே பதுங்கி கிடந்தார்கள். வெளியே பெருமழையும் சூறை காற்றும்
      மிகவும் உக்ரமாக வீச தொடங்கின. இரண்டு கணத்துக்கு ஒரு முறை உலகம் தகர்ந்து விட
      செய்வன போன்ற இடியோசைகள் செவிப்பட்டன. மரங்கள் ஒடிந்து விழும் ஒலி கேட்டது.
      தோப்புகளெல்லாம் சூறைபோகும் ஒலி பிறந்தது. பக்கத்து குன்றுகள் ஒன்றுக்கொன்று மோதி
      சிதறுவன போன்ற ஓசை தோன்றிற்று.
      அக்ரஹாரத்தில் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கியிருந்த ஜனங்கள் இன்றுடன் உலகம் முடிந்து
      போய்விட்டது என்று தம் மனதில் நிச்சயப்படுத்திக்கொண்டார்கள். குழந்தைகளெல்லாம்
      பயமிகுதியால் கோ என்று அலறின. மாதர்கள் புலம்பினர். ஆண்மக்கள்
      சூறைக்காற்றின் ஆர்ப்பு மிகுதிப்பட்டது.
      இப்படியிருக்கையில் பூகம்பம் தொடங்கிற்று. அந்த அக்ரஹாரத்திலுள்ள வீடுகளெல்லாம் பழைய
      வீடுகள். அத்தனை வீடுகளும் சிதறி போயின. ஜனங்களும் மடிந்து
      மகாலிங்கையர் வீட்டு வாயிற் புறத்திலிருந்த குச்சிலொன்று மாத்திரம் விழவில்லை.
      ரேழியில் கூடியிருந்த கிழவர் கிழவி மகாலிங்கையர் அவருடைய ஐந்து பெண்
      குழந்தைகள் - எல்லார்மீதும் வீடு விழுந்து அவர்களத்தனை பேரும் பிணங்களா கிடந்தனர்.
      வாயிற் குச்சிலில் பிரசவ வேதனையிலிருந்த மகாலிங்கயைருடைய மனைவியும் அவளுக்கு
      துணையாக அவருடைய விதவை தங்கையுமிருந்தனர்.
      இரவு சுமார் ஏழு மணிக்கு தொடங்கிய சூறைக்காற்றும் மழையும் காலை நான்கு மணி
      சுமாருக்கு பூகம்பத்துடன் முடிவுபெற்றன. அரைமணி நேரத்துக்கெல்லாம் உலகம் அமைதி
      பெற்று விட்டது. மறுநாள் பொழுது விடிந்தது. விதவை தங்கை-அவள் பெயர்
      விசாலாட்சி-வெளியே வந்து பார்த்தாள்.
      எல்லா வீடுகளும் விழுந்திருந்தன. எங்கும் மனிதருடல்களும் மிருக பட்சிகளின்
      உடம்புகளும் பிரேதங்களாக விழுந்து கிடந்தன. முழுக்காட்சியும் அவள் பார்க்க
      நேரமில்லை. காற்றினாலும் மழையினாலும் மோதுண்டு வீதியில் வந்து கிடந்த பிரேதங்களை
      மாத்திரமே அவள் கண்டாள். இடிந்த வீடுகளுக்குள்ளே செத்து கிடக்கும் ஜனங்களை
      காணவில்லை. எனினும் தன் வீட்டில் எல்லாரும் செத்தது அவளுக்கு தெரியுமாதலால் மற்ற
      வீடுகளிலும் அப்படியே நடந்திருக்க வேண்டுமென்றும் அதுகொண்டே தெருவில் ஆட்களை
      காணவில்லையென்றும் அவள் ஊகித்து கொண்டாள். அப்பொழுது மீண்டும் அவளுடைய மனதில்
      சென்ற பயங்கரமான இரவில் நிகழ்ந்த செய்திகள் நினைப்புறலாயின.
      தோன்றினவுடனே மகாலிங்கையருடைய தந்தையாகிய கிழவர் ஐயையோ பூமி ஆடுகிறதே
      நாமெல்லாரும் வாயிற்புறத்திலுள்ள குச்சிலுக்கு போய் விடுவோம். அதுதான் இவ்வீட்டில்
      சற்றே உறுதியான இடம். என்னை அங்கே கொண்டு விடுங்கள் என்று அலறினார். அந்த சத்தம்
      மாத்திரம் விசாலாட்சியின் செவியிற்பட்டது. அப்புறம் நடந்த பேச்சொன்றும் அவள் செவியிற்
      படவில்லை. வாயிற் குச்சிலுக்குள் வெளி திண்ணை வழியாகத்தான் புகலாம்.
      வீட்டுக்குள்ளிருந்தபடியே அங்குவர வழியில்லை. எனிலும் ஒரு சாளர பொந்து வழியாக
      அந்த கிழவருடைய பேரோலம் மாத்திரம் புயற் காற்றொலியையும் மிஞ்சி அவளுடைய
      செவியிற்பட்டது.
      ஆனால் அங்ஙனம் அவர்கள் குச்சிலுக்குள் வருவது மாத்திரம் சாத்தியமில்லை யென்பதை
      அவள் உடனே ஊகித்து கொண்டாள். ஏனெனில் உள்ளேயிருந்தவர்கள் வீட்டு வாயிற்கதவை
      திறந்தன்றோ திண்ணையிலேறி அதன் வழியா குச்சிலுக்குள் வரவேண்டும் வாயிற்கதவை
      திறந்த மாத்திரத்திலே சப்த மேகங்களும் ஊழிக்காற்றும் வீட்டுக்குள் புகுந்து
      விடுமன்றோ ஆதலால் அவர்கள் வெளியேற வில்லையென்று நினைத்து கொண்டாள். ஓரிரண்டு
      கணங்களில் திடீரென்று உள் வீட¦ல்லாம் இடிந்து விழுந்த ஒலியும் அங்கிருந்தோர் எல்லாம்
      கூடியலறிய பேரொலியும் அவள் செவியிற்பட்டன. எல்லோரும் செத்தார்கள் என்று
      நிச்சயித்து கொண்டாள். தானிருந்த குச்சிலும் விழுமென்று அவள் மிகவும்
      எதிர்பார்த்தாள். அது விழவில்லை. அதற்குள்ளே பூகம்பம் நின்று போய்விட்டது. சிறிது
      நேரத்துக்கெல்லாம் புயற்காற்றும் மழையும் அடங்கி போயின.
      இச்செய்திகளையெல்லாம் எண்ணமிட்டு கொண்டு விசாலாட்சி தன்னை சூழ இடிந்து கிடக்கும்
      வீடுகளையும் ஒடிந்து கிடக்கும் மரங்களையும் பார்த்து நிற்கையிலே
      குச்சிலுக்குள்ளிருந்து குவாகுவா என்ற சத்தம் வந்தது. உள்ளே போ பார்த்தாள்.
      அண்ணன் மனைவியாகிய கோமதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து கிடந்தது. விசாலாட்சி
      அதற்கு வேண்டிய சிகிச்சைகளெல்லாம் செய்து கொண்டிருக்கையில் கோமதிக்கு மரணாவஸ்தை
      நேர்ந்துவிட்டது. அவள் சாகும்போது-விசாலாட்சிவிசாலாட்சி நான் இரண்டு
      நிமிஷங்களுக்கு மேல் உயிருடனிருக்க மாட்டேன். என் பிராணன் போகு முன்னர் உன்னிடம்
      சில வார்த்தைகள் சொல்லிவிட்டு போகிறேன். அதை உன் பிராணன் உள்ளவரை மறந்து போகாதே
      முதலாவது நீ விவாகம் செய்து கொள். விதவா செய்யத்தக்கது.
      பெண்களும் ஒருங்கே யமனுக்கு கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் ஆண்களுக்கு பெண்கள்
      அடிமைகளாய் ஆண்களுக்கு பெண்கள் அஞ்சி ஜீவனுள்ளவரை வருந்தி
      அவசியமில்லை. ஆதலால் நீ ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல
      சாஸ்திரத்தை கிழித்து கரியடுப்பிலே போட்டுவிட்டு தைரியத்துடன் சென்னை
      பட்டணத்துக்கு போய் அங்கு கைம்பெண் விவாதத்துக்கு உதவி செய்யும் சபையாரை
      கண்டுபிடித்து அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையை தேடி வாழ்க்கைப்படு.
      இரண்டாவது நீயுள்ளவரை என் குழந்தையை காப்பாற்று. அதற்கு சந்திரிகை என்று பெயர்
      வை என்றாள்.
      விசாலாட்சி சரி என்றாள். கோமதியின் உயிர் பரலோகஞ் சென்று விட்டது.
      ----
      இரண்டாம் அத்தியாயம்
      விசாலாட்சிக்கு ஜீ.சுப்பிரமணிய அய்யர் செய்த உதவி.
      சென்ற அத்தியாயத்தில் கூறிய செய்திகள் நிகழ்ந்து சரியான மூன்று வருஷங்களாயின.
      1904-ஆம் வருஷத்தின் இறுதி நடைபெற்றது. அப்பொழுது சென்னை பட்டணத்தில்
      சுதேசமித்திரன் பத்திராதிபராகிய ஜீ.சுப்பிரமணிய அய்யர் சில தினங்களுக்கப்பால்
      பம்பாயில் நடைபெற போகிற காங்கிரஸ் என்ற பாரத ஜன சபைக்கொரு பிரதிநிதியாக
      செல்ல வேண்டுமென்ற கருத்துடன் யாத்திரைக்கு வேண்டிய உடுப்புகள் தின்பண்டங்கள் முதலியன
      தயார் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் திருவல்லிக்கேணி வீரராகவ முதலி
      தெருவில் ஜீ.சுப்பிரமணிய அய்யர் மகா கீர்த்தி பெற்று விளங்கினார். அவருக்கு கொடிய
      ரோகமொன்றினால் உடம்பெல்லாம் முகமெல்லாம் சிதைந்து முள்சிரங்குகள் புறப்பட்டிருந்தன.
      இருந்தாலும் நிகரற்ற மனோ தைரியத்துடன் அவர் தேச பொது காரியங்களை நடத்தி
      வந்தார். மேற்கூறிய 1904 டிசம்பர் மாதத்திடையே ஒரு நாள் காலையில் அவர் தம் வீட்டு
      மேடையின் மேல் தம்முடைய விஸ்தாரமான புத்தகசாலையினருகே ஒரு சாய் நாற்காலியின்
      மீது சாய்ந்து கொண்டு பத்திரிகை வாசித்து கொண்டிருந்தார்.
      அவர் முன்னே ஒரு சுமங்கலி பெண்-அவருடைய இளைய மகள் பிரமாண்டமான
      பரணியை கொண்டு வைத்தாள்.
      இதில் என்னம்மா வைத்திருக்கிறாய் என்று அய்யர் கேட்டார்.
      நெய்யிலே பொரித்த எலுமிச்சங்காய் ஊறுகாய் நல்ல காரம் போட்டது என்று மகள் சொன்னாள்.
      இதையெல்லாம் எப்படி சுமந்து கொண்டு போக போகிறோம் அந்த வேலைக்காரனோ பெரிய
      குருட்டு முண்டம் என்று அய்யர் முணுமுணுத்தார்.
      இதற்குள் மேடையைவிட்டு கீழே இறங்கி சென்ற மகள் திரும்பி வந்து அப்பா
      வாயிலிலே ஒரு பிராமண விதவை சிறு குழந்தையுடன் வந்து நிற்கிறாள்.
      அவசரகாரிய நிமித்தமாக உம்மை உடனே பார்க்க வேண்டுமென்று சொல்லுகிறாள் என்றாள்.
      அவளுக்கு எத்தனை வயதிருக்கும் என்று ஜீ.சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.
      இருபது வயதிருக்கலாமென்று தோன்றுகிறது என்று மகள் சொன்னாள்.
      சரி ஒரு நாற்காலியை கொணர்ந்து என் எதிரே போடு. அந்த பெண்ணை வரச்சொல்
      என்று அய்யர் சொன்னார்.
      மகள் அங்ஙனமே ஒரு நாற்காலி எடுத்துக்கொண்டு வந்து அவரெதிரே போட்டாள். அப்பால் கீழே
      சென்றாள். சில கணங்களுக்குள்ளே நம்முடைய விசாலாட்சி குழந்தை சந்திரிகையுடன் அந்த
      மேடைக்கு வந்து ஜீ.சுப்பிரமணிய அய்யருக்கெதிரே போட்டிருந்த நாற்காலியின் மேல்
      உட்கார்ந்தாள்.
      எந்த விசாலாட்சி சென்ற அத்தியாத்தில் பூகம்பத்திலே தப்பி பிழைத்த விசாலாட்சி.
      அங்ஙனமே பூகம்பத்தில் பிழைத்த சந்திரிகை என்ற குழந்தையுடன் வந்து ஜீ. சுப்பிரமணிய
      அய்யர் முடியசைப்பால் உணர்த்திய குறிப்பின்படி அவரெதிரே ஆசனத்தில் அமர்ந்தாள்.
      எந்த ஊரம்மா என்று அய்யர் கேட்டார்.
      பொதியை மலைச்சாரலில் குற்றாலத்துக்கருகே வேளாண்குடி என்ற கிராமம் என்று
      விசாலாட்சி சொன்னாள்.
      ஓஹோஹோ மூன்று வருஷங்களுக்கு முன்பு ஏறக்குறைய இதே மாசத்தில் கிராமத்தில்
      சூத்திர தெருக்களெல்லாம் தப்பி பிழைக்க அக்ரஹாரம் மாத்திரம் பூகம்பத்தில் அழிந்து
      போனதா கேள்விப்பட்டேன். அதே வேளாண்குடிதானா என்று அய்யர் கேட்டார்.
      விசாலாட்சி ஆம் என்றாள்.
      நீ மிகவும் யௌவனமுடையவளாகவும் அழகுடையவளாகவும் இருக்கிறாயே உனக்கு இந்த
      கைம்பெண் நிலைமை நேர்ந்து எத்தனை காலமாயிற்று என்று அய்யர் கேட்டார்.
      பதினைந்து வருஷங்களாயின என்று விசாலாட்சி சொன்னாள்.
      உனக்கு இப்போது எத்தனை வயது என்று அய்யர் கேட்டார்.
      இருபத்தைந்து என்று விசாலாட்சி சொன்னாள்.
      பத்து வயதில் கன்னி பருவத்தில் விதவையாய் விட்டாயா என்று அய்யர் கேட்டார்.
      ஆம் என்று விசாலாட்சி சொன்னாள்.
      அதை கேட்டவுடனே தமது சொந்த மகளருத்தி இளம் பிராயத்திலே விதவையானதும் பிறகு
      தாம் அவளுக்கு பம்பாயிலே சென்று தென்னாட்டு வைதிக பிராமணரொருவருக்கு விவாகம்
      செய்து கொடுத்தும் அம் மகள் தன் கணவனுடன் நீடு சுகித்து வாழும் பாக்கியம் பெறாமல்
      மிக விரைவிலே மடிந்ததும் தம்முடைய தர்ம பத்தினி உயிர் துறந்ததும்-ஆகிய
      இச்செய்திகளெல்லாம் ஜீ.சுப்பிரமணிய அய்யரின் ஞாபகத்துக்கு வர அப்போது
      சிங்கத்துக்கும் இடிக்கும் அஞ்சாத அவருடைய வீர நெஞ்சம் இளகி அவர் பச்சை குழந்தை
      போல் விம்மி அழ தலைப்பட்டார். சில கணங்களுக்குள்ளே தம்மை
      தேற்றிக்கொண்டு ஜீ.சுப்பிரமணிய அய்யர் விசாலாட்சியை நோக்கி நீ இங்கே வந்ததின்
      நோக்கம் யாது என்று கேட்டார்.
      என்னை தக்க கணவனொருவனுக்கு வாழ்க்கைப்படுத்தி கொடுக்க வேண்டும். என் கையில் ஒரு
      கொழும்பு காசுகூட கிடையாது. ஆதலால் என் கணவன் பணமுடையவனில்லாவிட்டாலும் நல்ல
      படிப்பும் மாதந்தோறும் கொஞ்சம் பொருள் சம்பாதிக்கும் திறமும் உடையவனாக இருக்க
      வேண்டும். இந்த குழந்தையும் என்னோடுதான் இருக்கும் என்றாள்.
      இந்த குழந்தை ஏது என்று ஜீ.சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.
      இது என் தமையனாரின் குழந்தை. வேளாண்குடி அக்ரஹாரம் முழுமையும் பூகம்பத்தில்
      அழிந்தபோது நானும் இக்குழந்தையின் தாயும் மாத்திரம் மழைக்கும் காற்றுக்கும்
      பூகம்பத்துக்கும் இரையாகாமல் உயிர் தப்பினோம். பூகம்பமும் புயற் காற்றும் பெருமழையும்
      அடங்கி சிறிது நேரத்துக்கப்பால் இக்குழந்தை பிறந்தது. இதை பெறும் கடமை
      தீர்ந்தவுடன் தாயும் பரலோகம் போய் விட்டாள். சாகும் போது இதன் காவலை என் மீது
      சுமத்தி கட்டளையிட்டாள் என்று விசாலாட்சி சொன்னாள்.
      இந்த மூன்று வருஷங்களாக நீ ஆகாரத்துக்கு என்ன செய்கிறாய் என்று ஜீ.
      சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.
      செம்பு பிச்சை உவாதானமெடுத்து வயிறு வளர்த்து இந்த குழந்தையையும்
      காப்பாற்றி கொண்டு வருகிறேன் என்றாள்.
      ஜீ.சுப்பிரமணிய அய்யர் உடனே தம்முடைய கைப்பெட்டியை திறந்து நூறு ரூபாய் நோட்டு
      ஒன்றை எடுத்து விசாலாட்சி கையில் கொடுத்தார்.
      விசாலாட்சி அதனை எழுந்து நின்று வாங்கி இரண்டு கண்களிலும் ஒற்றிக்கொண்டு தன்
      புடவை தலைப்பில் முடித்து இடுப்பிலே சொருகி கொண்டாள்.
      சரி அம்மா நீ போய் வா என்று ஜீ.சுப்பிரமணிய அய்யர் சொன்னார். அப்போது
      விசாலாட்சி சொல்லுகிறாள்- ஐயா நான் தங்களை பிதா ஸ்தானமாக பாவித்து
      தங்களிடம் பணம் வாங்க உடம்பட்டேன். எனினும் நான் இங்கு வந்தது
      கொண்டு போவதற்கன்று என்பதை தாங்கள் மறக்கக்கூடாது கணவனை வேண்டி உங்களிடம்
      வந்தேன் என்றாள்.
      அது கேட்டு ஜீ.சுப்பிரமணிய அய்யர்-அந்த காரியம் என்னால் செய்து கொடுக்க
      முடியாது என்றார்.
      தங்களை தவிர எனக்கு வேறு புகலுமில்லை என்று விசாலாட்சி வற்புறுத்தினாள்.
      என்னால் சாத்தியமில்லையே நான் என்ன செய்வேன் என்றார் அய்யர்.
      நீங்கள் தயவு வைத்தால் சாத்தியப்படும் என்று விசாலாட்சி சொன்னாள்.
      உன்னிடம் நல்லெண்ணமில்லாமலா நீ கேட்காமலே உனக்கு நூறு ரூபா கொடுத்தேன் என்று
      ஜீ. சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.
      அவ்வளவு தயவு போதாது. இன்னும் அதிக செலுத்த வேண்டும் என்று
      மன்றாடினாள்.
      ஜீ.சுப்பிரமணிய அய்யர் தலையை சொரிந்தார். சிலகணங்களுக்கப்பால் விசாலாட்சியை
      நோக்கி சொல்லுகிறார்- ராஜமஹேந்திரபுரத்தில் என்னுடைய சிநேகிதர் ஒருவர்
      இருக்கிறார். அவருடைய பெயர் வீரேசலிங்கம் பந்துலு அவர் விதவைகளுக்கு விவாகம்
      செய்து வைப்பதில் மிகவும் சிரத்தையுடன் உழைத்து வருகிறார். உன் வசம் ஒரு கடிதம்
      எழுதி கொடுக்கிறேன். அதை அவரிடத்தில் கொண்டு கொடு. அவர் உனக்கு வேண்டிய
      சௌகரியம் செய்து கொடுப்பார் என்றார்.
      சரி என்றாள் விசாலாட்சி.
      உடனே ஜீ.சுப்பிரமணிய அய்யர் தம்முடைய மேஜையின் மேல் வைத்திருந்த மணியை
      குலுக்கினார். கீழேயிருந்து அவருடைய மகள் வந்து என்ன வேண்டுமப்பா என்று
      கேட்டாள்.
      அந்த வேலைக்கார பயல் இன்னும் வரவில்லையோ என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர்
      உறுமினார்.
      அவன் பட்டணத்துக்கன்றோ போயிருக்கிறான் ஸ்மி ஷாப்பிலே போய் மருந்து வாங்கி
      கொண்டு வர இனி அவன் பன்னிரண்டு மணிக்கு மேலேதான் வருவான். உமக்கென்ன வேண்டும்
      என்றாள்.
      என்னுடைய மேஜை மேலே பேனா மைக்கூடு வைத்திருக்கிறேன்.
      இருக்கிறது. அதற்குள்ளே வலப்பக்கத்து அறையில் கடிதமெழுது தாளும் உறைகளும்
      கிடக்கின்றன. ஒரு தாளும் உறையும் கொண்டு வா. மையத்தும் தாளையும்
      வா என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் சொன்னார்.
      அவர் வேண்டிய சாமான்களையெல்லாம் மகள் கொண்டு வந்து கொடுத்தாள். ஜீ.சுப்பிரமணிய அய்யர்
      ஒரு கடிதமெழுதி உறைக்குள்ளே போட்டு அதை மகளிடம் கொடுத்து உறையை சரியாக
      ஒட்டி கொண்டு வா என்றார். அவள் அதை
      கொடுத்துவிட்டு மகள் மறுபடி பேனாவையும் மைக்கூட்டையும் மையத்தும் தாளையும்
      கொண்டு மேஜையில் வைத்துவிட்டு கீழே சென்றுவிட்டாள். ஜீ.சுப்பிரமணிய அய்யர்
      கடிதத்தை கையில் வைத்து கொண்டே விசாலாட்சியை நோக்கி உனக்கு தெலுங்கு
      தெரியுமா என்று கேட்டார். தெரியும் என்றாள் விசாலாட்சி. எங்கே
      படித்தாய் என்று அய்யர் கேட்டார்.
      எங்களூரில் நானிருந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தெலுங்கு பிராமணரொருவர்
      இருந்தார். நான் சிறு குழந்தை பிராய முதலாகவே அந்த குடும்பத்தாருடன் மிகவும்
      நெருக்கமாக பழகி கொண்டு வந்தபடியால் எனக்கு தெலுங்கு பாஷை தெலுங்கர்களை
      போலவே பேச வரும் என்றாள்.
      சரி உனக்கு கூடிய சீக்கிரத்தில் நல்ல மணமகனுடன் விவாகம் நடைபெறும். நீங்கள்
      தம்பதிகளிருவரும் நெடுங்காலம் இன்புற்று வாழ கடவீர் என்று சொல்லி அய்யர் அவளிடம்
      காகிதத்தை கொடுத்தார். அவள் அக்கடித்தை வாங்கி கண்ணிலே ஒற்றிக்கொண்டு மடியில்
      வைத்து கட்டி கொண்டாள். பிறகு ஜீ.சுப்பிரமணிய அய்யரை நோக்கி சாஷ்டாங்கமாக
      நமஸ்காரம் பண்ணிவிட்டு அவரிடம் விடை பெற்று கொண்டு குழந்தையை அழைத்து
      சென்றனள். அக்குழந்தையும் ஜீ. சுப்பிரமணிய அய்யரை நோக்கி புன்னகை செய்து கொண்டே
      போயிற்று.
      ----
      மூன்றாம் அத்தியாயம்
      விசாலாட்சியின் ஏமாற்றம்
      ராஜமஹேந்திரபுரத்தில் வீரேசலிங்கம் பந்துலு வீட்டை தேடி போய் விசாலாட்சி
      விசாரித்தாள். அவர் அங்கில்லையென்றும் அவள் வந்த நாளுக்கு முதல் நாள்தான் புறப்பட்டு
      சென்னை பட்டணத்துக்கு போனாரென்றும் தெரியவந்தது. சென்னை எழும்பூரில் பண்டித
      வீரேசலிங்கம் பந்துலு ஒரு தனி வீட்டில் தம் மனைவியுடன் வந்து தங்கியிருந்தார்.
      விசாலாட்சி சென்னைப்பட்டணத்துக்கு வந்து மறுநா காலையில் எழும்பூரில் அவர் இருந்த
      வீட்டிற்கு போனாள். உள்ளே அவர் மாத்திரம் நாற்காலி மேஜை போட்டு உட்கார்ந்து கொண்டு
      ஏதோ நூலெழுதி கொண்டிருந்தார்.
      விசாலாட்சி அவரை நமஸ்காரம் பண்ணினாள். ஜீ.சுப்பிரமணிய அய்யரிடமிருந்து தான்
      வாங்கிக்கொண்டு வந்த கடிதத்தை கொடுத்தாள். வீரேசலிங்கம் பந்துலு தன் எதிரேயிருந்த
      நாற்காலியின் மீது விசாலாட்சியை உட்கார சொன்னார். அவள் தன் மடியில் சந்திரிகையை
      வைத்து கொண்டு அந்நாற்காலியின் மீது உட்கார்ந்தாள். வீரேசலிங்கம் பந்துலு அவள் கொணர்ந்த
      கடிதம் முழுதையும் வாசித்து பார்த்துவிட்டு அவளை நோக்கி இன்றைக்கென்ன
      கிழமை என்று தமிழில் கேட்டார். அவள் புதவாரமு தெலுங்கில்
      சொன்னாள்.
      மீரு தெலுகு வச்சுனா என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.
      அவுனு சால பாக வச்சுனு என்றாள் விசாலட்சி.
      இங்கு நமது கதை வாசிப்போரிலே பலருக்கு தெலுங்கு பாஷை தெரிந்திருக்க
      வழியில்லையாதலால் அவ்விருவருக்குள் தெலுங்கில் நடைபெற்ற சம்பாஷணையை நான் தமிழில்
      மொழிபெயர்த்து தருகிறேன்.
      உனக்கு தாய் தந்தையர் இருக்கிறார்களா என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.
      இல்லை என்றாள் விசாலாட்சி.
      அண்ணன் தம்பி அக்காள் தங்கை-
      எனக்கு யாருமே இல்லை. அதாவது என்னுடைய விவகாரங்களிலே கவனம் செலுத்தி என்னை
      காப்பாற்றக்கூடிய பந்துக்கள் யாருமில்லை. அப்படியே சிலர் இருந்தபோதிலும் நான்
      இப்போது விவாகம் செய்துகொள்ள போவதினின்றும் அவர்கள் என்னை ஜாதிக்கு புறம்பா
      கருதி விடுவார்கள் என்று விசாலாட்சி சொன்னாள்.
      உனக்கு என்னென்ன பாஷைகள் தெரியும் என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.
      எனக்கு தமிழ் தெரியும். தெலுங்கு இரண்டு பாஷைகளும் நன்றாக
      வாசிக்கவும் பேசவு தெரியும் என்று விசாலாட்சி சொன்னாள்.
      இங்கிலீஷ் தெரியுமா என்று பந்துலு கேட்டார்.
      தெரியாது என்றாள் விசாலாட்சி.
      கொஞ்சங் கூட என்று கேட்டார்.
      கொஞ்சங்கூட தெரியாது என்றாள்.
      சங்கீதம் தெரியுமா என்று பந்துலு கேட்டார்.
      எனக்கு நல்ல தொண்டை. என் பாட்டை மிகவும் பாட்டென்று
      சொல்வார்கள் என்று விசாலாட்சி சொன்னாள்.
      வீணை பிடில் ஹார்மோனியம்-ஏதேனும் வாத்தியம் வாசிப்பாயா என்று பந்துலு கேட்டார்.
      ஒரு வாத்தியமும் நான் பழகவில்லை என்றாள் விசாலாட்சி.
      தாள தவறாமல் பாடுவாயா என்று பந்துலு கேட்டார்.
      தாளம் கொஞ்சங்கூட தவறமாட்டேன் என்று விசாலாட்சி சொன்னாள்.
      எங்கே ஏதேனும் ஒரு பாட்டு பாடிக்காட்டு பார்ப்போம் என்று பந்துலு கேட்டார்.
      அந்த சமயத்தில் சமையலறைக்குள் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவளாகிய வீரேசலிங்கம்
      பந்துலுவின் கிழமனைவி உள்ளேயிருந்து இவர்கள் பேசி கொண்டிருந்த கூடத்துக்கு வந்து
      ஒரு நாற்காலியின் மீது உட்கார்ந்தாள். அவளை கண்டவுடன் விசாலாட்சி எழுந்து
      நமஸ்காரம் பண்ணினாள். அவள் ஆசீர்வாதங் கூறி வீற்றிருக்க விடை கொடுத்து விசாலாட்சியின்
      மடியிலிருந்த குழந்தையை வாங்கி தன் மடியில் வைத்து கொண்டாள்.
      குழந்தை வீறிட்டு அழ தொடங்கிற்று.
      என்னிடம் கொடு நான் அழாதபடி வைத்து கொள்ளுகிறேன் என்று பந்துலு சொன்னார்.
      அவள் அக்குழந்தையை தன் கணவனிடம் கொடுத்தாள். அவர் மடிக்கு போனவுடனே
      குழந்தையாகிய சந்திரிகை அழுகையை நிறுத்தியது மட்டுமன்றி வாயை திறந்து புன்னகை
      செ தொடங்கினாள்.
      கிழவருக்கு வேறொன்று தெரியாவிட்டாலும் குழந்தைகளை அழாதபடி வைத்து
      கொள்வதில் மிகவும் சமர்த்தர் என்றாள் கிழவி.
      ஆமாம் எனக்கென்ன தெரியும் படிப்பு தெரியுமா இழவா நீ தான் சகலகலா
      பண்டிதை என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலு முறுவலித்தார்.
      அப்பால் வீரேசலிங்கம் பந்துலு தமக்கு ஜீ.சுப்பிரமணிய அய்யர் எழுதிய கடிதத்தில்
      கண்டபடி விசாலாட்சியின் விருத்தாந்தங்களையெல்லாம் விரித்து கூறினார்.
      அவருடைய மனைவி இதை கேட்டு- சென்ற வாரம் தங்களை பார்க்கும் பொருட்டு
      தஞ்சாவூர் டிப்டி கலெக்டர் ஒரு அய்யங்கார் வந்திருந்தாரன்றோ அவர் தமக்கு
      பெண் பார்த்து விவாகம் செய்து வைக்கவேண்டுமென்று தங்களை வேண்டினாரன்றோ அவருக்கு
      இந்த பெண்ணை கொடுக்கலாம். இவளுடைய முதல் புருஷன் இவள் ருது ஆவதற்கு
      முன்னேயிறந்தானா பிந்தி இறந்தானா என்று வினவினாள்.
      அப்போது வீரேசலிங்கம் பந்துலு- அந்த விஷயம் உனக்கு சொல்ல தவறிவிட்டேனா இதோ
      சொல்லுகிறேன் கேள். இவளுக்கு பத்தாம் வயதிலே அந்த புருஷன் இறந்து போனான். அவன்
      இறந்து போய் இப்போது பதினைந்து வருஷங்களாயின என்றார்.
      சரி அப்படியானால் அந்த டிப்டி கலெக்டர் யாதோர் ஆட்சேபமின்றி இவளை மணம் புரிந்து
      கொள்வார். முதற் புருஷனுடன் கூடியனுபவிக்காமல் கன்னி பருவத்திலே தாலியறுத்த பெண்
      தமக்கு வேண்டுமென்று அவர் சொன்னாரன்றோ என்று கிழவி கேட்டாள்.
      ஆம் இவள்தான் அவர் விரும்பிய லட்சணங்களெல்லாம் பொருந்தியவளாக இருக்கிறாள். இவளை
      அவர் அவசியம் மணம் புரிந்துகொள்ள விரும்புவார். நீ சொல்லுமுன்பே நான் இந்த
      கடிதத்தை வாசித்து பார்த்த மாத்திரத்தில் டிப்டி கலெக்டர் கோபலாய்யங்காரை
      நினைத்தேன். ஆனால் இந்த பெண் அவரை மணம் புரிந்து கொள்ள உடன்படுவாளோ என்பதுதான்
      சந்தேகம் என்று பந்துலு சொன்னார்.
      இதை கேட்டவுடனே கிழவி- ஏன் அவரிடத்தில் என்ன குற்றங் கண்டீர் எலுமிச்சம் பழம்
      போலே நிறம் ராஜபார்வை பருத்த புஜங்கள் அகன்ற மார்பு ஒரு மயிர் கூட
      நரையில்லை நல்ல வாலி பருவம் டிப்டி கலெக்டர் உத்தியோகம் பண்ணுகிறார். எத்தனை
      கோடி தவம் பண்ணியோ அவளுக்கு அப்படிப்பட்ட புருஷன் கிடைக்க வேண்டும் என்றாள்.
      அப்போது வீரேசலிங்கம் பந்துலு- அந்த கோபலாய்யங்கார் நீ சொன்ன லட்சணங்களெல்லாம்
      உடையவரென்பது மெய்யே. ஆனால் சாராயம் குடிக்கிறார். மாமிச போஜனம் பண்ணுகிறார்.
      கட்குடியர் வேறென்ன நல்ல லட்சணங்களுமுடையவராக இருப்பினும் அவற்றை விரைவில் இழந்து
      விடுவார்கள். அவர்களுடைய செல்வமும் பதவியும் விரைவில் அழிந்து போய் விடும் என்றார்.
      இது கேட்டு விசாலாட்சி- சரி. அவர் என்னை விவாகம் செய்து கொள்ளும்படி ஏற்பாடு
      செய்யுங்கள். அவருடைய கெட்ட குணங்களையெல்லாம் நான் மாற்றி விடுகிறேன் என்றாள்.
      குடி வழக்கத்தை மாற்ற பிரம தேவனாலேகூட முடியாது என்று வீரேசலிங்கம் பந்துலு
      சொன்னார்.
      அதற்கு விசாலாட்சி- என்னால் முடியும். சாவித்திரி தன் கணவனை
      யமனுலகத்திலிருந்து மீட்டு கொண்டு வரவில்லையா பெண்களுடைய அன்புக்கு
      சாத்தியப்படாது யாதொன்றுமில்லை. நான் அவருடைய மாமிச போஜன வழக்கத்தை உடனே
      நிறுத்தி விடுவேன். மது வழக்கத்தை ஓரிரண்டு வருஷங்களில் வைப்பேன்.
      லட்சணங்களெல்லாம் அவரிடம் நல்லனவாக இருப்பதால் இவ்விரண்டு குற்றங்களிருப்பது
      பெரிதில்லை. நான் அவரை மணம் புரிந்து கொள்ள முற்றிலும் சம்மதப்படுகிறேன் என்றாள்.
      இது கேட்டு வீரேசலிங்கம் பந்துலு- சரி. பாட்டு பாட தெரியும் என்றாயே
      ஏதேனும் கீர்த்தனம் பாடு கேட்போம் என்றார்.
      சுருதிக்கு தம்பூர் இருக்கிறதோ என்று விசாலாட்சி கேட்டாள்.
      ஹார்மோனியம் இருக்கிறது என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி உள்ளே
      போய் ஒரு நேர்த்தியான சிறிய அழகிய மோஹின் பெட்டியை எடுத்து கொண்டு வந்து
      விசாலாட்சியிடம் கொடுத்தாள்.
      பெட்டியை மடிமீது வைத்து விசாலாட்சி முதற்கட்டை சுருதி வைத்துக்கொண்டு மிகவும்
      சன்னமான அற்புதமான குரலில் தியாகய்யர் செய்த மாருபல்கு கொன்னா லேமிரா
      மறுமொழி சொல்லாதிருப்பதென்னடா என்ற தெலுங்கு கீர்த்தனையை பாடினாள். கால்
      விரல்களினால் தாளம் போட்டாள்.
      அப்போது அந்த வீட்டு வாசலில் ஒரு மோட்டார் வண்டி நின்ற சத்தம் கேட்டது. சேவகனொருவன்
      ஒரு சீட்டை கொண்டு வந்து வீரேசலிங்கம் பந்துலுவிடம் கொடுத்தான். அதை பார்த்தவுடனே
      வீரேசலிங்கம் பந்துலு எழுந்து தன் கையிலிருந்த குழந்தை சந்திரிகையை
      விசாலாட்சியிடம் நீட்டினார். அவள் கீர்த்தனத்தில் பல சங்கதிகளுடன் அனுபல்லவி பாடி
      முடித்து மறுபடி மாரு பல்க என்ற பல்லவியெடுக்கு தறுவாயிலிருந்தாள்.
      வீரேசலிங்கம் பந்துலு குழந்தையை நீட்டினவுடனே விசாலாட்சி தன் கையிலிருந்த
      ஹார்மோனி பெட்டியை கீழே வைத்துவிட்டு எழுந்து நின்று குழந்தையை கையில்
      வாங்கி கொண்டாள்.
      என்ன விசேஷம் யார் வந்திருக்கிறார்கள் என்ற பந்துலுவை நோக்கி அவருடைய மனைவி
      கேட்டாள்.
      கோபாலய்யங்காரே வந்து விட்டார். பழம் நழுவி பாலில் விழுந்தது என்று சொல்லி
      வீரேசலிங்கம் பந்துலு மேல் வேஷ்டியை எடுத்து போர்த்து கொண்டு மடமடவென்று வெளியே
      சென்றார்.
      இவர் வெளியே போனவுடன் கிழவி விசாலாட்சியை நோக்கி அவர்களிருவரும் வந்தால்
      தமக்குள்ளே பேசிக்கொண்டிருப்பார்கள். நாம் சமையறைக்கு போய்விடுவோம். இன்று பகலில்
      கோபலாய்யங்கார் இங்கேயே போஜனம் பண்ணுவார். அவர் பந்துலுவை பார்க்க வந்தால் ஒரு
      வேளை ஆகாரமாவது இங்கு செய்யாமல் போவது வழக்கமில்லை. மேலும் இப்போது அவருக்கு
      ரஜாக்காலம். ஆதலால் நாம் விருந்துக்கு அழைத்தால் மறுத்து சொல்ல வேண்டிய ஹேது
      இராது. நீயும் இங்கேயே இரு. நாளைக்கு போகலாம். பந்துலுவுக்கும் எனக்கும்
      மாத்திரமென்று ஒரு ரஸம் அன்னம் சட்னி அப்பளம் பண்ணிவை கருதியிருந்தேன்.
      இப்போது விருந்து வந்து விட்டது. நேற்று வாங்கிக்கொண்டு வந்த வெங்கயாமும்
      புடலங்காயும் நிறைய மிஞ்சி கிடக்கின்றன. வெங்காய சாம்பார் தேங்காய் சட்னி மைசூர்
      ரசம் புடலங்காய் பொடித்தூவல் வடை பாயசம் இவ்வளவும் போதும். அப்பளத்தை நிறை
      பொரித்து வைப்போம். கோபாலய்யங்காருக்கு பொரித்த அப்பளத்தில் மோகம் அதிகம். சரி. நீ
      காலையிலே ஸ்நானம் பண்ணிவிட்டு தான் வந்திருக்கிறாய். குழந்தையை வேலைக்காரியிடம்
      கொடுத்தால் விளையாட்டு காட்டி கொண்டிருப்பாள். நீ கைகால் அலம்பிவிட்டு என்னுடன்
      சமையலுக்கு வா என்றாள்.
      விசாலாட்சி அப்படியே சரி என்றாள். மாதர் இருவரும் சமையலறைக்குள்ளே
      புகுந்தனர். வேலைக்காரியும் குழந்தை சந்திரிகையும் அவ்வீட்டு கொல்லையிலிருந்த
      விஸ்தாரமான பூஞ்சோலையில் மர நிழலில் வீற்றிருந்த பட்சிகளின விளையாட்டுக்களையும்
      அற்புதமான பாட்டுகளையும் ரசித்து கொண்டிருந்தனர்.
      குழந்தை சந்திரிகைக்கு வயது இப்போது மூன்று தானாயிற்று. எனினும் அது
      சிறிதேனும் கொச்சை சொற்களும் மழலை இல்லாமல் அழுத்தந்திருத்தமாக
      சொல்லும். அந்த குழந்தையின் குரல் சிறிய தங்க புல்லாங்குழலின் ஓசையை போன்றது.
      குழந்தையின் அழகோ வர்ணிக்கு தரமன்று. தெய்விக ரூபம் வனப்பின் இலக்கியம்.
      சோலை பறவைகளெல்லாம் இக்குழந்தையின் அழகை கண்டு மயங்கி களிகொண்டு இதன் தலையை
      சுற்றி சுற்றி வட்டமிடலாயின. பலவித குருவிகளும் குயில்களும் கிளிகளும்
      நாகணவாய்களும் தங்களுக்கு தெரிந்த நாதங்களில் மிகவும் அழகிய நாதங்களை
      பொறுக்கியெடுத்து இக்குழந்தையின் முன்னே வந்து நின்றொலித்தன. வானரங்கள் தமக்கு
      தெரிந்த பாய்ச்சல்களிலும் நாட்டியங்களிலும் மிகவும் வியக்கத்தக்கனவற்றை
      இக்குழந்தைகளுக்கு காண்பித்தன.
      புன்னகை செய்த மலர சிறு வாயை சந்திரிகை மூடவேயில்லை. வானமும் சூரியனும்
      ஒளியும் மேகங்களும் மரங்களும் செடிகளும் கொடிகளும் மலர்களும் சுந்தர
      பட்சிகளும் கூடி காலை நேரத்தில் விளைவித்த அற்புத காட்சியிலும் பறவைகளின்
      ஒலிகளிலும் சந்திரிகை சொக்கி போய்விட்டாள்.
      ஒரு சமயம் அவள் தன்னை மறந்து எழுந்து வானத்தை நோக்கி நின்று இரண்டு கைகளையும்
      கொட்டிக்கொண்டு கூத்தாடுவாள். ஒரு சமயம் பட்சிகளின் ஒலிகளை அனுசரித்து தானும்
      கூவுவாள்.
      இங்ஙனமிருக்கையில் வேலைக்காரி குழந்தையை நோக்கி- நீ ஒரு பாட்டுப்பாடு
      என்றாள். அத்தை கற்று கொடுத்த நந்தலால் பாட்டு பாடலாமா என்று சந்திரிகை
      கேட்டாள்.
      அந்த அம்மா உனக்கு தாயில்லையா அத்தையா என்று வேலைக்காரி கேட்டாள்.
      அதற்கு சந்திரிகை- என் தந்தையும் தாயும் நான் பிறந்தன்றைக்கே செத்து
      போய்விட்டார்கள். இந்த சங்கதி எனக்கு அத்தை சொன்னாள். நடுராத்திரி வேளையாம் பூமி
      நடுங்கிற்றாம் பே காற்றடித்ததாம். சோனை மழை பெய்ததாம். எங்கள் ஊர் முழுதும்
      எல்லா வீடுகளும் இடிந்து விழுந்து அத்தனை ஜனங்களும் செத்து போய்விட்டார்களாம்.
      எங்கள் வீடும் இடிந்து அப்பா தாத்தா பாட்டி என்னுடைய அக்காமார் ஐந்து குழந்தைகள்
      ஆகிய எல்லாரும் செத்து போய்விட்டார்கள். அம்மாவும் அத்தையுமிருந்த குச்சில் மாத்திரம்
      இடிந்து விழவில்லை. அம்மா வயிற்றுக்குள்ளே நான் இருந்தேன். அப்பால்
      இராத்திரியிலேயே பிறந்தேன். நான் பிறந்தவுடனே அம்மா செத்து போனாள். இதுவெல்லாம்
      அத்தை எனக்கு சொன்னாள். அது முதல் எனக்கு பசுவின் பாலும் சாதமும் கொடுத்து
      அத்தைதான் காப்பாற்றி கொண்டு வருகிறாள் என்று தன் குழந்தை பாஷையில் கால்மணி
      நேரத்தில் சொல்லி முடித்தது. ஆனால் உடைந்த சொற்களும் நிறுத்தி
      யோசித்து மெல்ல மெல்ல பேசுவதும் இருந்தனவேயல்லாது
      விளங்காததும் உரு சிதைந்ததுமாகிய குதலை சொல் ஒன்றுகூட கிடையாது.
      இங்ஙனம் அந்த அழகிய குழந்தை பேசிக்கொண்டு வருகையில் அதன் விழிகளிலும் இதழ்களிலும்
      பொறி வீசியெழுந்த அன்பு சுடரையும் அறிவு பணிப்பெண் மிகவும்
      நோக்கி கவனித்து கொண்டு வந்தாள். அவள் அதன் அழகில் மயங்கி போய் அதனை எடுத்து
      மார்பார தழுவி கொண்டு முகத்தோடு முகமொற்றி முத்தமிட்டாள்.
      அந்த சமயம் காலை பதினொரு மணியிருக்கும். சுகமான காற்று வீசிக்கொண்டிருந்தது.
      அந்த பணிப்பெண் அவளை முத்தமிடும் செய்கையை இருவர் பார்த்து கொண்டு நின்றனர்.
      அவ்விருவரில் ஒருவர் அவள் மீது காதல் கொண்டார்.
      ---
      நான்காம் அத்தியாயம்
      வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து
      மோட்டார் வண்டியிலிருந்து டிப்டி கலெக்டர் கோபாலய்யங்காரை தக்க உபசார
      வார்த்தைகளுடன் கைகொடுத்தழைத்து வந்து வீரேசலிங்கம் பந்துலு வீட்டுக்குள் தமது
      படிப்பறையில் நாற்காலியில் உட்கார்த்தி காபி கொணர்ந்து கொடுத்தார். நெ தேங்குழல்
      நான்கை தின்று ஒரு பெரிய வெள்ளி ஸ்தாலி நிறை காபியும் குடித்துவிட்டு
      கோபாலய்யங்கார் ஹோ என்று ஏப்பமிட்டு சாய்வு நாற்காலியின் மீது சாய்ந்து
      கொண்டார். அவரிடம் வீரேசலிங்கம் பந்துலு ஒரு வெற்றிலை தட்டு நிறைய வெற்றிலை
      பாக்கு சுண்ணாம்பு வாசனை திரவியங்களுடன் கொண்டு வைத்தார். அது முழுதையும்
      அய்யங்கார் மென்று முக்கால்மணி நேரத்தில் ஹதம்
      அப்பால் பந்துலு அவரிடம் ஒரு தெலுங்கு பத்திரிகையை நீட்டினார். அவர் அதை ஆதிமுதல்
      அந்தம் வரை விளம்பரங்களுட்பட ஒரு வரிகூட மிச்சமில்லாமல் வாசித்து முடித்தார்.
      கோபாலய்யங்கார் இங்கிலீஷ் சமஸ்கிருதம் தமிழ் தெலுங்கு நான்கு பாஷைகளிலும் உயர்ந்த
      பயிற்சியுடையவர். இவர் தெலுங்கு ஜில்லாக்களில் சில வருஷங்களில் வேலை பார்த்த
      சமயத்தில் தெலுங்கு பாஷையை தன் தாய் மொழிக்கு நிகராக பயின்று கொண்டார்.
      இவர் பத்திரிகை வாசித்து முடித்தபின் இருவரும் வீட்டு கொல்லையிலே போ சிறிது
      நேரம் உலாவி கொண்டிருந்தனர் பிறகு ஸ்நானம் பண்ணினார்கள் போஜனம் பண்ண உட்கார்ந்தார்கள்.
      தேவலோகத்து விருந்து போன்ற சமையல் பக்குவம். வீரேசலிங்கம் பந்துலுக்கு மூர்ச்சை போட
      தெரிந்தது. இத்தனை ருசியான உணவை அவர் தம்முடைய ஜன்மத்தில் உண்டதில்லை. கனவில்
      கண்டதில்லை. கற்பனையில் எட்டினதில்லை. தின்ன தின்ன ருசி
      கோபாலய்யங்காருடைய முகத்தை பந்துலு ஒரு முறை திரும்பி பார்த்தார். பந்துலுவின்
      முகத்தை அய்யங்கார் ஒரு முறை திரும்பி பார்த்தார்.
      பந்துலுவின் மனைவி பரிமாறி கொண்டிருந்தாள்.
      யாருடைய சமையல் தெரியுமா என்று பந்துலுவின் மனைவி கேட்டாள். காலையில்
      வந்தாளே அந்த பெண்ணுடைய சமையலா என்றார் பந்துலு.
      ஆம் என்றாள் பந்துலுவின் மனைவி.
      அந்த பெண்ணை இங்கு சற்றே வரச்சொல். நம்முடைய கோபாலய்யங்கார் அவளுடைய முகத்தின்
      அழகையும் அவள் சொல்லின் அவளறிவின் பார்க்க
      மாத்திரம் பார்த்தால் போதுமா அந்த மகா சுந்தரியின் சகல சௌந்தர்யங்களையும் பார்க்க
      வேண்டாமா என்றார் வீரேசலிங்கம் பந்துலு.
      அவளுக்கு பலமான தலைநோவு. சமையல் சிரமம் யாத்திரை எல்லாம்
      அவளுக்கு தலைநோவு உண்டாக்கிவிட்டன. இராத்திரி அவளுக்கு உடம்பு நேராய் விடும்.
      அப்போது அய்யங்கார் அவளை பார்க்கலாம் என்று பந்துலுவின் மனைவி சொன்னாள். அப்பால்
      நெடுநேரம் இருவரும் ஆகாரம் பண்ணி கொண்டிருந்தார்கள். போஜனம் முடிந்து
      கைகழுவிவிட்டு பந்துலுவும் அய்யங்காரும் மறுபடி பந்துலுவின் படிப்பறையில் வந்து
      நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள். மேஜைமேல் பந்துலுவின் மனைவி கொண்டு வந்து
      வைத்த தாம்பூலத்தை எடுத்து போட தொடங்குகையில் இதுவே சுவர்க்கம் என்று
      பந்துலு சொன்னார்.
      எது என்று பந்தலுவின் மனைவி கேட்டாள்.
      இப்போது செய்த போஜனம் என்று பந்துலு சொன்னார்.
      சமையல் ருசியாக இருந்ததா என்று பந்துலுவின் மனைவி கோபாலய்யங்காரை நோக்கி
      வினவினாள்.
      மிகவும் ருசியாக இருந்தது என்று கோபாலய்யங்கார் சொன்னார். அந்த சமயத்தில்
      கோபாலய்யங்காருடைய மனம் அங்ஙனம் ருசியாக சமையல் செய்த பெண்ணின் அழகையும் புத்தி
      நுட்பத்தையும் சொல்லினிமையையுங் குறித்து வீரேசலிங்கம் பந்துலு செய்த வர்ணனைகளை
      பற்றி சிந்திக்கலாயிற்று. அவள் உண்மையாகவே அத்தனை அற்புதமான பெண்தானா அல்லது
      பந்துலு நூலாசிரியராகையால் வெறுமே கற்பனை தான் சொன்னாரா என்று அவருக்கு ஓர்
      ஐயமுண்டாயிற்று.
      அப்போது பந்துலு தன் மனைவியை நோக்கி அந்த பெண் தன்னுடன் கொண்டு வந்திருக்கும்
      குழந்தையை இங்கே கூட்டி வா என்றார். சரி என்று சொல்லி பந்துலுவின் மனைவி
      சமையலறைக்குள்ளே போனாள்.
      அப்போது கோபாலய்யங்கார் வீரேசலிங்கம் பந்துலுவை நோக்கி- அந்த பெண் அக்குழந்தைக்கு
      உறவெப்படி என்று கேட்டார்.
      அந்த பெண்ணுடைய தமையனார் மகள் அக்குழந்தை. அவர்களுடைய கதை மிகவும் ரஸமானது.
      நான் அதை உங்களுக்கு பின்பு சொல்லுகிறேன். முதலாவது அக்குழந்தையை பார்த்து
      அதனுடன் சிறிது நேரம் சம்பாஷணை செய்யுங்கள். அத்தையின் புத்திக்கூர்மை அதற்கும்
      இருக்கிறது. அவளுடைய வயதாகும்போது அக்குழந்தையும் அவளை போலவே சரஸ்வதி ரூபமாக
      விளங்கும் என்று பந்துலு சொன்னார்.
      பந்துலுவின் மனைவி குழந்தை சந்திரிகையை அழைத்து கொண்டு வந்தாள். செம்பட்டு
      பாவாடை செம்பட்டு சட்டை செம்பட்டு நாடாவிலே பின்னல் செய்ய குங்கு பொட்டு
      அந்த குழந்தை விசாலாட்சியை போல் இருபத்தைந்து வயதாகும்போது சரஸ்வதி ஸ்வரூபமாக
      விளங்குமென்று பந்துலு சொன்னார். ஆனால் அதை இப்போது பார்க்கையில் அது சிறிய
      லட்சுமிதேவி விக்ரஹமாக விளங்கிற்று.
      அது சிரித்தால் ரோஜாப்பூ நகைப்பது போலிருக்கும். அதன் கைகளும் கால்களும் தங்கத்தால்
      செய்யப்பட்டன போன்றிருந்தன. அதன் முகம் நிலவை கொண்டு சமைக்கப்பட்டது போன்றிருந்தது.
      அதன் மொழிகள் பொன் வீணையில் கந்தர்வர் வாசிக்கும் நாதம்போல் ஒலித்தன.
      இயக்கங்கள் தேவஸ்திரீகளின் நாட்டி செயல்களையத்திருந்தன.
      இந்த குழந்தையை பார்த்தவுடனே காலையில் இதன் முகத்தோடு முகமொற்றி முத்தமிட்டு
      நகைத்து கொண்டிருந்த பணிப்பெண்ணுடைய அழகிய தோற்றம் கோபாலய்யங்காரின் மனக்கண்ணுக்கு
      முன்னே எழுந்தது.
      குழந்தாய் உனக்கு பாட்டு பாட தெரியுமா என்று கோபாலய்யங்கார் கேட்டார்.
      தெரியும் என்றாள் சந்திரிகை. எங்கே ஒன்று பாடு கேட்போம் என்றார்
      கோபாலய்யங்கார்.
      அத்தை எனக்கு கற்று கொடுத்த நந்தலால் பாட்டு பாடலாமா என்று சந்திரிகை
      கேட்டாள்.
      பாடு என்றார் கோபாலய்யங்கார்.
      சந்திரிகை பாட தொடங்கினாள்-
      நந்தலால் பாட்டு
      யதுகுல காம்போதி ராகம்-ஆதி தாளம்.
      ஸஸ்ஸாஸா-ஸம்மாபதா-பததபபமபா-பாபா
      பநீஸதபா-மாகா-ஸரிமகரீ-கெகரிரிஸஸா.
      பார்க்கு மரத்திலெல்லாம் நந்தலாலா-நின்றன்
      பச்சை நிறந்தோன்றுதடா நந்தலாலா
      காக்கை சிறகினிலே நந்தலாலா-நின்றன்
      கரியவிழி தோன்றுதடா நந்தலாலா
      கேட்க மொலியி லெல்லாம் நந்தலாலா-நின்றன்
      கீத மிசைக்கு தடா நந்தலாலா
      தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா-நின்னை
      தீண்டு மின்ப தோன்றுதடா நந்தலாலா.
      இந்த பாட்டடை மிகவும் மெதுவாக ஒவ்வோரடியையும் இரண்டு தரம் சொல்லி இசை தவறாமல்
      தாள தவறாமல் கந்தர்வ குழந்தை பாடுவது போல் அக்குழந்தை மிகவும் அற்புதமாக
      பாடி முடித்தது. கோபாலய்யங்காருக்கு மூர்ச்சை போட்டுவிட தெரிந்தது. அவர்
      தம்முடைய ஜன்மத்தில் இவ்வித சங்கீதம் கேட்டதில்லை கனவில் கண்டதில்லை கற்பனையில்
      எட்டியதில்லை.
      இதுதான் சுவர்க்கம் என்று கோபாலய்யங்கார் சொன்னார்.
      எது என்று பந்துலுவின் மனைவி கேட்டாள்.
      இந்த குழந்தையின் பாட்டு என்று அய்யங்கார் சொன்னார்.
      சங்கீதமா கவிதையா இந்த குழந்தையின் குரலா இவற்றுள் எது சுவர்க்கம்
      போலிருக்கிறது என்று பந்துலுவின் மனைவி கேட்டாள்.
      அதற்கு கோபாலய்யங்கார்- மூன்றும் கலந்து சுவர்க்கம் போன்றிருந்தது. விசேஷமாக இதன்
      குரல் மிகவும் தெய்வீகமானது. குரல்கூட அவ்வளவில்லை. இந்த குழந்தை பாடிய
      மாதிரியே ஆச்சரியம் என்றார்.
      குழந்தையின் அழகையும் பாடுகையில் அது காண்பித்த புத்திக்கூர்மையையும் சேர்த்து
      சொல்லுங்கள் என்று பந்துலு சொன்னார்.
      அவையும் சேர்ந்துதான் என்று அய்யங்கார் சொன்னார்.
      இவர்கள் இங்ஙனம் வியப்புரை சொல்லி கொண்டிருக்கையில் அக்குழந்தை எழுந்து அறையை
      விட்டு வெளியே ஓடி போய்விட்டது. அதன் பிறகே பந்துலுவின் மனைவியும் சென்றுவிட்டாள்.
      அப்போது கோபாலய்யங்கார் வீரேசலிங்கம் பந்துலுவை நோக்கி இந்த குழந்தையையும் இதன்
      அத்தையையும் பற்றிய கதை சொல்வதாக தெரிவித்தீர்களே இப்போது சொல்லுகிறீர்களா
      என்று கேட்டார்.
      பந்துலு பூகம்பம் முதலாக நாளதுவரை தாமறிந்து கொண்ட அளவில் அவ்விருவருடைய கதை
      முழுதையும் சாங்கோபாங்கமாக எடுத்துரைத்தார்.
      என் ஜன்மம் பலிதமாய் விட்டது என்றார் கோபாலய்யங்கார்.
      அதெப்படி என்று பந்துலு கேட்டார்.
      இப்படிப்பட்ட பெண்ணொருத்தியை விவாகம் செய்யும் பொருட்டாகவே நான் நெடுங்காலமா
      காத்திருந்தேன். இப்போது என் மனோரதம் நிறைவேறிவிட்டது என்றார் அய்யங்கார்.
      இதை கேட்டு வீரேசலிங்கம் பந்துலு கலகலவென்று நகைத்தார்.
      ஏன் சிரிக்கிறீர்கள் என்று அய்யங்கார் கேட்டார்.
      விவாகம் முடிந்து விட்டதுபோல் நீங்கள் பேசுகிறீர்களே அதை கேட்டு நகைத்தேன்.
      தங்களை மணம் புரிந்து கொள்ள அந்த பெண் சம்மதிப்பாளோ மாட்டாளோ இன்று ராத்திரி அவள்
      போஜன காலத்தில் நம்மோடிருந்து விருந்துண்பாள். சாதாரணமாக இந்து ஸ்திரீகளிடம்
      காணப்படும் பொய்ந்நாணம் அவளிடத்தில் சிறிதேனும் கிடையாது. அப்போது நீங்களிருவரும்
      பரஸ்பரம் சந்தித்து சம்பாஷணை செய்ய இடமுண்டாகும். நாளை காலையில் என் மனைவியின்
      மூலமாக அந்த பெண்ணுடைய சம்மதத்தை விசாரித்து தெரிந்து கொள்ளலாம். அவள்
      சம்மதமுணர்த்துவாளாயின் பிறகு விவாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யலாம் என்று
      பந்துலு சொன்னார். இதை கேட்டு கோபாலய்யங்கார் அப்படியானால் இன்றைக்கும் நாளைக்கும்
      நான் இங்கேயே தங்களுடைய விருந்தாளியாக இருந்து விடுகிறேன். எனக்கு வேறெங்கும்
      எவ்விதமான காரியமுமில்லை என்றார்.
      அப்படியே செய்யுங்கள் என்றார் பந்துலு.
      பிறகு வீரேசலிங்கம் பந்துலு தம்முடைய பேனா மைக்கூடு முதலிய கருவிகளை எடுத்து
      ஏதோ எழுத்து வேலை செ தொடங்கினார்.
      கோபலய்யங்கார் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே நித்திரை போய்விட்டார்.
      கோபலய்யங்கார் தூங்கி கொண்டிருக்கையில் சமையலறைக்குள் மாதரிருவரும் இராத்திரி
      போஜனத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். மிக விஸ்தாரமான சமையல்
      அறுசுவைகளும் வியப்புற சமைந்தது. வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி சமையல்
      தொழிலில் மிக தேர்ச்சி ¦ப்றறவள். நமது விசாலாட்சியோ அவளிலும் ஆயிரமடங்கு அதிக
      தேர்ச்சி கொண்டவள். கோபாலய்யங்கார் பிராமண ஆசாரங்களை கைவிட்டு பாஷண்டராய்
      விட்டபோதிலும் பிராமணா போஜனப்ரியா பிராமணர் உணவில் பிரியமுடையோர்
      என்ற வாக்கியத்தை அனுசரிப்பதில் சாமான்ய வைதிக பிராமணர்களை காட்டிலும்
      நெடுந்தூரம் மேற்பட்டவர்.
      பிராமணர்களை குற்றஞ் சொல்ல வேண்டுமென்ற கருத்துடன் மேற்படி வாக்கியத்தை பலர்
      உபயோகப்படுத்துகிறார்கள். பார்ப்பானுக்கு சோற்று ருசியில் மோகம் அதிகம் என்று
      மற்ற ஜாதியார் சாதாரணமாக சொல்லி வருகிறார்கள். பிராமணர்களே சில சமயங்களில்
      இதை தங்கள் ஜாதிக்கு இயற்கையில் அமைந்ததொரு குறை போல பேசிக்கொள்ளுகிறார்கள். சில
      சமயங்களில் தம்மை தாம் வியந்து கொள்ளும் நோக்கத்துடன் ஒரு பெருமையாக அவ்வசனத்தை
      கையாடுகிறார்கள். வேறு சில சமயங்களில் மற்ற ஜாதியாரிடமிருந்து பணங் கேட்பதற்கு
      முகாந்தரமாக இந்த வாக்கியத்தை தவிர்க்கொணாத விதியை புலப்படுத்துவது போல்
      எடுத்துரைக்கிறார்கள். ஆனால் இந்த வாக்கியம் வெறும் பிசகென்று நான் நினைக்கிறேன்.
      ஸர்வோ ஜநா போஜனப்பிரியா எல்லா ஜனங்களும் போஜனத்தில் பிரியமுடையவர்கள்
      என்பது என்னுடைய அபிப்பிராயம். உணவின் அளவை எடுத்து நோக்கின் சாதாரண
      பிராமணனொருவனை காட்டிலும் சாதாரண சூத்திரன் - மறவன் அல்லது இடையன்
      உழவன் எந தொழிலாளியும்-நாளன்றுக்கு குறைந்த பட்சம் மூன்று மடங்கு அதிகமாக
      தின்னுகிறான். ஆங்கிலேயன் ஒன்பது மடங்கு அதிகமாக உண்கிறான். ஜெர்மானியன்
      இருபத்தேழு பங்கு அதிகமாக தின்கிறான். இனி அளவை விட்டுவிட்டு ஆகாரத்தின்
      பக்குவ பேதங்களை எண்ணுமிடத்தே அதில் பிராமணர் அல்லாதார் என்ற
      பாகுபாட்டுக்கிடமில்லை. செல்வர்கள் உணவை பலவகையாக பக்குவங்கள் செய்து
      புசிக்கிறார்கள். ஏழைகள் சிலவகை பக்குவங்களே செய்கிறார்கள். பரம ஏழைகளாய் ஒரு
      வேளை சோற்றுக்கும் வழியில்லாத ஜனங்களே இந்நாட்டில் லட்சகணக்காக மலிந்து
      கிடக்கிறார்கள். இவர்கள் கூழும் கஞ்சியும் ஒருகால் மிளகாயும் தவிர வேறுவிதமான
      பக்குவங்களை உண்ணுதல் அருமையிலும் அருமை. இத்தனை கொடிய
      நிலையில் பெரும்பாலும் பள்ளர் பறையர்களும் சூத்திரர்களில் தாழ்ந்த வகுப்பினருமே
      இருக்கிறார்கள். ஆனால் மற்ற வகுப்பாரிலும் பலர் அந்த ஸ்திதிக்கு மிக சமீபத்தில்
      தத்தளித்து கொண்டிருக்கிறார்கள். பிராமணர்களிலும் அங்ஙனமே பலர் அந்த பரிதாபகரமான
      நிலையில் அகப்பட்டு தவிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்த தேசத்தில் மற்ற ஜாதி
      ஏழைகளை காட்டிலும் பிராமண ஏழைகளுக்கு முக்கியமாக வைதிக பிராமணர்களுக்கு
      இனாம் சாப்பாடு அதிகமா கிடைக்கும் வழியேற்பட்டிருக்கிறது. எனினும் இவ்விஷயத்தில்
      பிராமணரென்றும் அல்லாதரென்றும் பிரிவு செய்தல் பொருந்தாது. பொதுப்படையாக ஏழைகளின்
      வீட்டில் செய்வதை காட்டிலும் செல்வர் கறி குழம்பு முதலிய
      அதிக வகுப்புக்கள் சமைக்கிறார்களென்று சொல்லாம். இந்த விதிக்கு பல
      விளக்குகளுமல்லதால் பொதுப்படையாக என்றேன். ஏனென்றால் செல்வமிருந்த போதிலும் லோப
      குணமுடையோரின் வீடுகளில் போஜன வகைகள் மி குறைவாகத்தான் இருக்கும். தவிரவும்
      தொழில் செய்யாமல் சோம்பேறிகளாக வாழும் செல்வர்களுக்கும் பொருள் தேடுவதிலும் அதை
      காப்பதிலும் மிதமிஞ்சிய கவலை செலுத்தும் செல்வர்களுக்கும் ஜீர்ண சக்தி எப்போதும் பரம
      மோசமாகவே இருக்குமாதலால் அவர்கள் வீட்டில் எத்தனை வகையான பக்குவங்கள் செய்தபோதிலும்
      ஒன்றிலும் ருசியேற்படாது. ஏற்கெனவே இத்தையோர் போஜனப்பிரியர் என்று சொல்லத்தகார்.
      அன்ன துவேஷமுடையோரை போஜனப்பிரியர் என்று கூறுவதெப்படி இந்த விஷயத்தை
      குறித்து இன்னும் அதிக விஸ்தாரமாக எழுதலாம். எனினும் போஜனம் பண்ணுவதில் எல்லோரும்
      விருப்புடையோரெயெனிலும் போஜன விஷயத்தை குறித்து நீண்ட பிரஸ்தாபம் நடத்துவதில்
      தற்காலத்து படிப்பு படித்தவர்களுக்கு அதிக சுவையேற்படாதாகையாலும் இந்நூல்
      படிப்போரில் எவ்வித ருசியுடையோருக்கும் அதிக அருசியேற்படாமல் கதையெழுத
      வேண்டுமென்பது என்னுடைய நோக்கமாதலாலும் எனது கருத்தை இங்கு சுருக்கமாக சொல்லி
      முடித்துவிடுகிறேன். எவ்வகையாக நோக்குமிடத்தும் பிராமணர் போஜனப்பிரியர் என்று
      கூறி அவ்வகுப்பினர் இவ்விஷயத்தில் பொது மனித ஜாதியின்றும் வேறுபட்ட
      குணமுடையோரென்று குறிப்பிடும் பழமொழி யுக்தமில்லையென்பதே என் அபிப்ராயம். இது நிற்க.
      கோபாலய்யங்காருக்கு ஜீர்ண சக்தி அதிகம். வீமஸேனனுக்கு விருகோதரன் ஓநாய்
      வயிறுடையோன்-என்ற பெயரொன்று உண்டு. ஓநாய்க்கு பசி அதிகமாம். தின்ன
      தின்ன-எவ்வளவு தின்றபோதிலும்-சாதாரணமாக அதன் பசி அடங்குவதில்லையாம்.
      உழைக்கும்போது மிகவும் தீவிரத்துடனும் நிதானத்துடனும் சோம்பரென்பது
      சிறிதேனுமில்லாமலும் உழைத்தால் மனிதர் இப்படிப்பட்ட பசி பெறலாம். தொழில் செய்வதில்
      வலிமை செலுத்த வேண்டும். ஒருவனது முழு வலிமையையும் செலுத்தி செய்யப்படும்
      தொழிலே தொழிலாம். ஆனால் எவ்வளவு தொழில் செய்த போதிலும் அதனால் உடம்புக்கு
      சிரமமுண்டாகாத வண்ணமாக செய்யவேண்டும். வேர்க்க கஸ்ர எடுப்பவன்
      எத்தனை கஸ்ர எடுத்தாலும் வேர்வை தோன்றாதபடி தந்திரமாக எடுப்பவனே சமர்த்தன். இதை
      ஒரு வேளை சாதாரண மல்லர் அங்கீகாரம் செ திகைக்கக்கூடும். ஆனால் நூறு கஸ்ர
      பண்ணின மாத்திரத்திலேயே உடம்பெல்லாம் வெயர்த்து கொட்டி போகும் மனிதனை
      காட்டிலும் ஆயிரம் கஸ்ர செய்தபின் வெயர்க்கும் மனிதன் அதிக சமர்த்தன்
      என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். இந்த கணக்கைத்தான் நான் இன்னும் சிறிது தூரம்
      எட்டி போடுகிறேன். கஸ்ர செய்யும் தொழிலாயினும் கதையெழுதும்
      தொழிலாயினும்-எல்லாவிதமான தொழிலுக்கும் தத்துவம் ஒன்றேயாம். அதாவது மனதில் சிர
      தோன்றிய பிறகு தான் உடம்பில் சிர தோன்றுகிறது. அசைக்க முடியாத பொறுமையுடன்
      தொழில் செய்தால் மேன்மேலும் புதிய ரத்தம் பெருகி உடம்பில்
      வலியும் விருத்தியடைந்து கொண்டு வரும். இந்த வழியில் வீமசேனனுக்கு ஆயிரம் பொன்
      கொடுக்கலாமென்னில் கோபாலய்யங்காருக்கு பத்து பொன் கொடுக்கலாம். அவ்வளவு பண்டிதர்.
      எனவே மதுமாமிச பழக்கங்களால் வீரேசலிங்கம் பந்துலு எதிர்பார்த்தபடி கோபாலய்யங்கார்
      அத்தனை விரைவாக இறந்து போவாரென்று எதிர்பார்க்க இடமில்லை. இது நிற்க.
      கோபாலய்யங்கார் போஜன பிரியர்களிலே சிரேஷ்டர். இந்த விஷயம் பந்துலுவின் மனைவிக்கு
      மிகவும் நன்றாக தெரியும். எனவே விசாலாட்சியின் விழிகளென்னும் வலைக்குள்
      கோபாலய்யங்காரின் இருதயமென்ற மானை வீழ்த்துவதற்கு இரை போடும் அம்சத்தில்
      கோபாலய்யங்காருடைய வயிற்றுக்கு ஸ்தூலமாகிய விருந்து போடுவதே தக்க இரையென்று
      தீர்மானித்து கொண்டு வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி மிகவும் கோலாகலமாக சமையல்
      பண்ணினாள். முப்பது வகை கறி வகை
      பொரியல்-எல்லாம் பசு நெய்யில். இலை போட்டு ஜல தெளித்து பரிமாறுதல்
      தொடங்கிவிட்டது. நாலிலை குழந்தைக்கொன்றுவிசாலாட்சிக்கொன்று பந்துலுவுக்கொன்று
      கோபா-லய்யங்காருக்கொன்று. பந்துலுவின் மனைவி பரிமாறுகிறாள்.
      பந்துலுவும் கோபாலய்யங்காரும் வந்து முதலாவதாக உட்கார்ந்தார்கள். சிறிது
      நேரத்துக்கெல்லாம் விசாலாட்சியும் குழந்தையும் வந்து உட்கார்ந்தனர். போஜனம் தொடங்கி
      நடைபெற்று வருகிறது. சிறிது நேரம் கழிந்தவுடனே கோபாலய்யங்கார் விசாலாட்சியை
      நோக்கி- விசாலாட்சி எங்கே என்று கேட்டார். இவள்தான் விசாலாட்சியென்பது
      அவருக்கு தெரியாது. பணிப்பெண்ணையும் குழந்தையையும் ஒன்றாக நோக்கியது முதலாக
      அப்பணி பெண்ணே விசாலாட்சி என்ற பிராந்தியில் அவர் மயங்கியிருந்தார்.
      நான்தான் விசாலாட்சி என்றாள் விசாலாட்சி.
      நீயா விசாலாட்சி என்றார் கோபாலய்யங்கார்.
      ஆம் என்றாள் விசாலாட்சி.
      காலையில் இக்குழந்தையுடன் சோலையில் விளையாடி கொண்டிருந்த பெண் யார் என்று
      கோபாலய்யங்கார் கேட்டார்.
      அவள் இக்குழந்தையுடன் விளையாடி கொண்டிருக்கவில்லை. இந்த குழந்தைக்கு காவல்
      காத்து கொண்டிருந்தாள். அவள் பந்துலு வீட்டு வேலைக்காரி என்று விசாலாட்சி சொன்னாள்.
      கோபாலய்யங்காருக்கு நெஞ்சுக்குள் ஒரு பேரிடி விழுந்தது போலாயிற்று. காலையில்
      பூஞ்சோலையில் வேலைக்காரி சந்திரிகையை முத்தமிட்டபோது அச்செய்கையை இருவர்
      பார்த்ததாகவும் அவ்விருவருள் ஒருவர் அந்த வேலைக்காரியின் மீது காதல் கொண்டனரென்றும்
      சென்ற அத்தியாயத்தின் இறுதியில் சொல்லியிருக்கிறேன். அங்ஙனம் நோக்கிய இருவர்
      கோபாலய்யங்காரும் பந்துலுவும் காதல் கொண்டவர் கோபாலய்யங்கார். அந்த வேலைக்காரிக்கு
      இருபது வயதிருக்கும். மிகவும் அழகுடைய பெண். விசாலாட்சியின் அழகு அறிவும்
      பயிற்சியும் கலந்த அழகு. பணிப்பெண்ணுடைய அழகு கிராமியமானது.
      எனிலும் இப்போது விசாலாட்சியை நோக்குமிடத்தே கோபாலய்யங்காருக்கு இவள் அதிக
      அழகா அவள் அதிக என்ற சமுசயமேற்பட்டது. கண்களை மூடிக்கொண்டு
      பணிப்பெண்ணுடைய வடிவத்தை நோக்குவார். பிறகு கண்ணை விழித்து எதிரே நிற்கும்
      விசாலாட்சியின் முகத்தை பார்ப்பார். இப்படி இரண்டு மூன்று தரம் கண்ணை மூடி
      விழித்து சோதனை செய்து பார்த்ததில் அவருடைய புத்திக்கு இன்னார்தான் அதிக
      அழகென்பது நிச்சயப்படவில்லை. எனிலும் விசாலாட்சியை மணம் புரிந்து கொள்வதே
      பொருந்துமென்ற யோசனை ஒரு கணம் அவருக்குண்டாயிற்று. ஆயினும் காதல் வலியதன்றோ
      காதலுக்கெதிரே எந்த சக்தி யோசனை நிற்கவல்லது காதல் இறுதியிலே
      பெற்று திரும். கோபாலய்யங்காரே உம்முடைய விதி உறுதியாய் விட்டது. உமக்கு
      விசாலாட்சியை மணம்புரிந்து கொள்ளும் பாக்கியம் இனி கிடையாது. காதலை எதிர்த்து
      யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதன் போக்கு காட்டு தீயின் போக்கையத்தது. அது
      தானாகவே எரிந்து தணியவேண்டும். அல்லது தெய்வீக செயலாக பெருமழை பெய்து அதை
      தணிக்கவேண்டும். மற்றபடி மனிதர் தண்ணீர்விட்டு அவிப்பது என்பது சாத்தியமில்லை.
      நெடுநேரம் போஜனத்தில் செலவிட்டார்கள். பல விஷயங்களை குறித்து சம்பாஷணை
      நடைபெற்றது. ஆனால் கோபாலய்யங்கார் நாவிலிருந்த ரசம் போய்விட்டது. அவர் அந்த
      அற்புதமான பக்குவங்களை ருசியின்றி உண்டார். பந்துலுவின் மனைவியும் பந்துலுவும்
      எதிர்பார்த்த வண்ணம் அவர் நிறைய உண்ணவுமில்லை. ஒவ்வொரு வகையிலும் சிறிது
      சிறிதுண்டார். பேச்சிலும் அவருக்கு அதிக ரசமேற்படவில்லை. ஆகாரம் முடிவு பெற்றது.
      படுக்கைக்கு போகுமுன்னர் கோபாலய்யங்காரும் பந்துலுவும் படிப்பறையில் தனியே இருந்து
      வெற்றிலை போட்டு கொண்டார்கள். அப்போது பந்துலுவை நோக்கி
      கோபாலய்யங்கார்-பந்துலுகாரு நான் விசாலாட்சியை விவாகம் செய்து கொள்ள
      போவதில்லை என்றார். ஏன் அவளிடம் என்ன குறை கண்டீர் என்று பந்துலு கேட்டார்.
      அதற்கு கேபாலய்யங்கார் -அவளிடம் நான் என்ன குற்றம் கற்பிக்க முடியும் விசாலாட்சி
      சர்வ சுப லட்சணங்களும் பொருந்தியவளாகவே இருக்கிறாள். எனிலும் மற்றொருத்திக்கு
      எனது நெஞ்சை நான் காணிக்கை செலுத்திவிட்டேன். மற்றொருத்தியின் மீது காதலுடையேன்
      என்றார்.
      அதை நீங்கள் என்னிடம் காலையில் சொல்லவில்லையே விசாலாட்சியை
      புரிந்து கொள்ள மிகவும் ஆவலுடனிருப்பது போல் வார்த்தை சொன்னீர்களே இப்போது
      திடீரென்று தங்களுடைய மனம் மாறியிருப்பதன் காணரம் யாது என்று பந்துலு வினவினார்.
      எனக்கு காலையில் தெரியாத எனது நெஞ்சை மற்றொருத்திக்கு பறிகொடுத்துவிட்டேன்
      என்ற செய்தி எனக்கிப்போதுதான் தெரிந்தது என்றார் அய்யங்கார்.
      அ·தெங்ஙனம் என்ற பந்துலு கேட்டார். அப்போது கோபாலய்யங்கார் காலையிலே
      பூஞ்சோலையில் பணிப்பெண்ணும் குழந்தை சந்திரிகையுமிருப்பது கண்டு தாம் பணிப்பெண் மீது
      காமுற்ற செய்தியையும் அப்பால் அந்த குழந்தையின் அத்தை என்ற பேச்சு வரும்போதெல்லாம்
      தாம் அந்த பணிப்பெண்ணே அக்குழந்தையின் அத்தையென்று தவறா கருதி வந்த
      செய்தியையும் அப்பால் இராத்திரி போஜன சமயத்தில் தமது தவறு தமக்கு விளங்கிய
      செய்தியையும் பந்துலுவிடம் விரிவா கூறினார். அதை கேட்டவுடனே பந்துலு
      நகைத்தார். காதலாவது உருளைக்கிழங்காவது அய்யங்கார் ஸ்வாமிகளே பணிப்பெண்ணை
      எங்ஙனம் மணம் புரிந்து கொள்ள போகிறீர்கள் என்று பந்துலு கேட்டார்.
      இது கேட்டு கோபாலய்யங்கார்-அந்த காரியம் அவ்வளவு தூரம் சிரமமென்று என்
      புத்திக்கு தோன்றவில்லை. நாளைக்கு காலையில் பொழுது விடிந்தவுடனே அவளையழைத்து
      அவளுடைய சம்மதத்தை அறிந்து கொள்வோம். அவள் சம்மதப்படுவாளாயின் அப்பால்
      பந்துக்களை கண்டு பேசி வேண்டிய ஏற்பாடுகள் செய்து முடித்துவிட்டு இன்னும் ஒரு
      வாரத்துக்குள் விவாகத்தை நடத்திவிடலாம். இதில் சிரமமெங்கேயிருக்கிறது என்றார்.
      அப்போது பந்துலு-தங்களை போன்ற ஸ்தானமும் மதிப்புடைய மனிதரை அந்த பெண் மணம்
      செய்துகொள்ள மிக விரைவில் சம்மதப்படுவாள். அவளுடைய பந்துக்களும் கேட்டமாத்திரத்தில்
      இணங்கிவிடுவார்கள். இதிலெல்லாம் அதி கஷ்டமில்லை. ஆனால் நீங்கள் அந்த பணிப்பெண்ணை
      மணம் புரிந்து கொண்டால் அதை உலகத்தார் கண்டு திகைப்படைந்து தங்களை புத்தி
      சுவாதீனமற்றவரென்று நினைப்பார் தங்களுக்கு மதிப்பு மிகவும் குறைந்துபோய்விடும்
      என்றார்.
      சர்க்கார் வேலை போகாதே அதற்கு யாதொரு ஹானியும் வராது. இங்கிலீஷ் ராஜ்யம்
      தஞ்சாவூர் சரபோஜி மஹாராஜாவின் ஆட்சியில்லை எந்த ஜாதியார் ஜாதி பெண்ணை
      புரிந்து கொண்ட போதிலும் இங்கிலீஷ் ராஜ்யத்தில் தண்டனை கிடையாது என்று
      கோபாலய்யங்கார் சொன்னார்.
      அதற்கு பந்துலு-அவ்விஷயம் எனக்கு தெரியாததன்று. தாங்கள் வேலைக்காரியை மணம்
      புரிந்து கொள்வதால் உங்கள்மீது ராஜாங்க அதிருப்தி ஏற்படாது. உங்கள் உத்தியோகத்துக்கு
      யாதொரு தீங்கும் நேராது. ஆனால் உங்களுடைய சிநேகிதர்களும் உங்களுடன் சமபதவியுடைய
      பிறரும் உங்களை இகழ்ச்சியாக பேசுவார்கள். மதிப்புடன் வாழ்ந்தவனுக்கு நேரும்
      அபகீர்த்தி மரணத்தை காட்டிலும் கொடியது என்று கண்ணன் பகவ கீதையில் சொல்லுகிறார்.
      அந்த அபகீர்த்தியை குறித்தே நான் அஞ்சுகிறேன் என்றார்.
      இதுகேட்டு கோபாலய்யங்கார்-வெறுமே விதவா விவாகம் செய்து கொண்டாலும் பந்துக்களும்
      சிநேகிதர்களும் அபகீர்த்தி சாற்றத்தான் செய்வார்கள். அதற்கு துணிந்த நான் இதற்கு
      துணிதல் பெரிதன்று. பந்துக்களும் சிநேகிதர்களும் சிறிது காலம் வரை வாய் ஓயாமல்
      பழி தூற்றி கொண்டிருப்பார்கள். பிறகு அவர்களுக்கே சலிப்புண்டாய்விடும். ஒரே
      சங்கதியை பற்றி எத்தனை நாள் பேசுவது ஒரே மனிதனை காலம்
      கொண்டிருப்பது நாளடைவில் எல்லாம் சரியாய்விடும். ஜாதிப்பிரஷ்டம் இருக்கத்தான்
      செய்யும். சாகும்வரை பந்தக்களுடன் பந்தி போஜனமும் சம்பந்தமும் செய்ய முடியாமல்
      போகும். ஆனால் இந்த சிரமம் விசாலாட்சியை மணம்புரிந்து கொண்டாலும் ஏற்படத்தான்
      செய்யும். ஜாதி பிரஷ்டம் எப்போதுமுண்டு. ஆனால் அதை நான் பொருட்டாக்கவில்லை. உலகம்
      விசாலமானது. பிராமணர்கள் நம்மை கைவிட்ட போதிலும் சூத்திரர்கள் கைவிட மாட்டார்கள்.
      பிராமணரின் தொகை குறைவு. சூத்திரர்களின் ஜனத்தொகை இந்த நாட்டில் அதிகம். ஆதலால்
      ஒருவனுக்கு ஜாதி பிரஷ்டத்திலிருந்து நேரும் கஷ்டம் அதிகமிராது. சிநேகிதர்களும்
      இந்த விஷயத்தின் புதுமை மாறி இது பழங் செய்தியாய் விட்ட மாத்திரத்தில் முன்போலவே
      என்னுடன் பழக தொடங்கிவிடுவார்கள். ஊர்வாயை மூட ஒரு உலை மூடியுண்டு. அதன் பெயர்
      காலம். பழைய சிநேகிதர்கள் கைவிட்ட போதிலும் புதிய சிநேகிதர் ஏற்படுவார்கள். பணம்
      உள்ளவரை ஒருவனுக்கு சிநேகிதரில்லையென்ற குறைவு நேரிடாது. சர்க்கார் உத்தியோக
      முள்ளவரை சிநேகிதரில்லையென்ற குறைவு நேராது என்றார்.
      இருந்தாலும் தாங்கள் அந்த வேலைக்காரியை மணம்புரிந்து கொள்வதில் எனக்கு சம்மதில்லை.
      உலகத்தாரின் அபவாதத்தை பொருட்படுத்தாமல் நமது மனச்சாட்சியின்படி நடப்பதே தகும்
      என்பதே நான் அங்கீகாரம் செய்து கொள்ளுகிறேன். உலகத்தின் அபவாதம் பெரிதில்லை. ஆனால்
      நீங்கள் விரும்புகிறபடி விவாகம் செய்துகொள்ள கூடாதென்பதற்கு வேறு
      காரணங்களுமிருக்கின்றன என்று வீரேசலிங்க பந்துலு சொன்னார்.
      அந்த காரணங்களையெடுத்து விளக்குங்கள் என்றார் கோபாலய்யங்கார்.
      முதலாவது அந்த பணிப்பெண் சிறிதேனும் கல்விப்பயிற்சியில்லாதவள். கல்வி
      பயிற்சியில்லாவிடினும் மேற்குலத்து பெண்களிடம் பரம்பரையாக ஏற்படக்கூடிய நாகரிக
      ஒழுக்கங்களும் நடைகளும் தர்ம ஞானமும் கீழ்க்குலத்து பெண்களிடம் இரா. இதையெல்லாம்
      உத்தேசிக்குமிடத்தே நீங்கள் அந்த பணிப்பெண்ணை மணம் புரிந்து கொள்ளுதல் மிகவும் தகாத
      காரியம் என்று பந்துலு சொன்னார்.
      அதற்கு கோபாலய்யங்கார்-நல்ல படிப்பு நல்ல பயிற்சி சிறந்த ஒழுக்கம்
      ஞானம் - இன்னும் எத்தனையோ லட்சணங்களுடைய பெண்ணைத்தான் மணம்புரிந்து கொள்ளவேண்டுமென்று
      நானும் நினைத்திருந்தேன். ஆனால் அதுவெல்லாம் என் மனதில் உண்மையான காதல் தோன்று
      முன்னர் நினைத்த நினைப்பு. இப்போது மன்மதன் என் நெஞ்சில் சிங்காதனமிட்டு வீற்றிருந்து
      வேறொரு பாடஞ் சொல்லுகிறான். படிப்பு பெரிதில்லை. பயிற்சி
      பெரிதில்லை. காதல் தன்னிலேயேதான் இனிது. மற்றதெல்லாம் பதர். காதலொன்றே பொருள்.
      மேலும் கீழ்க்குலத்து பெண்கள் தக்க தர்ம ஞானமில்லாமலிருப்பார்களென்று நினைப்பது
      தவறு. எல்லா ஜாதியாருக்குள்ளும் தர்மவுணர்ச்சியுடைய ஆண்களும் பெண்களும் இருப்பார்கள்.
      அ·தற்றவரும் எல்லா ஜாதிகளிலும் இருப்பார்கள். மேற்குலத்துக்குரிய நாகரிக நடைகளை
      கீழ்க்குலத்து பெண்கள் மிக விரைவிலே கற்று கொள்ள முடியும். அந்த நாகரிக
      நடைகளென்பன செல்வத்தாலும் ஸ்தானத்தாலும் ஏற்படுவன. அவை பரம்பரையாலே தான் விளைய
      வேண்டுமென்ற அவசியமில்லை. பழக்கத்தால் உண்டாய்விடும். என்னுடன் ஒரு வருஷம்
      குடியிருந்தால் போதும். அந்த பணிப்பெண்ணுக்கு நாகரிக நடைகளெல்லாம் வெகு
      சாதாரணமாக ஏற்பட்டுவிடும். படிப்பு முதலியனவும் நான் விரைவிலே அவளுக்கு கற்று
      கொடுப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்துவிடுவேன் என்று அய்யங்கார் சொன்னார்.
      உலக அனுபவமில்லாத பதினாலு வயது பச்சை பிள்ளைகள் சொல்லக்கூடிய வார்த்தை இது.
      முப்பது வயதாய் உயர்ந்த சர்க்கார் வேலையிலிருந்து சகலவித லௌகிக அனுபவங்களுமுடைய
      தாங்கள் இந்த வார்த்தை சொல்வது கேட்டு எனக்கு மிக வியப்புண்டாகிறது. காதல் மூன்று
      நாள் நிற்கும் பொருள். வெறுமே புதுமையை ஆதாரமா கொண்டது. புதுமை மாறி
      போனவுடன் காதல் பறந்து போய்விடும். அப்பால் கனமான அறிவு பயிற்சியாலும்
      ஒழுக்கத்தாலும் தம்பதிகளுக்குள் ஏற்படும் பற்றுதலே நிலையுடையது என்று வீரேசலிங்கம்
      பந்துலு சொன்னார்.
      மூன்று நாட்களில் மாறக்கூடிய புதுமையுணர்ச்சிக்கு காதலென்று பெயரில்லை. அதன்
      பெயர் பிராந்தி. அந்த பிராந்தி என் உள்ளத்தில் எழக்கூடியதன்று. அவ்வித மயக்கங்கள்
      தோன்றாதபடி என் உள்ளத்தை நான் நன்றாக திருத்தி பண்படுத்தி வைத்திருக்கிறேன்.
      காதலென்பது தேவலோகத்து வஸ்து. இவ்வுலகத்துக்கு வாழ்க்கை மாறியபோதிலும் அது
      மாறாது. சாவித்திரியும் சத்யவானும் லைலாவும் மஜ்னூவும் ரோமியோவும் ஜூலியெத்தும்
      கொண்டிருந்தார்களே அந்த வஸ்துக்கு காதலென்று பெயர். அது அழியாத நித்ய வஸ்து.
      இமயமலை கடலில் மிதந்தபோதிலும் காதல் பொய்த்து போகாது. அத்தகைய நான்
      பணிப்பெண் மீது கொண்டிருக்கிறேன் என்று அய்யங்கார் சொன்னார்.
      செவிடன் காதில் சங்கூதுவது போல் வீரேசலிங்கம் பந்துலு பலபல நியாயங்கள் கூறி அந்த
      பணிப்பெண் மீது கோபாலய்யங்கார் கொண்டிருக்கும் மையலை அகற்றிவிட முயற்சி செய்தார்.
      இவர் பாதி பேசி கொண்டிருக்கும்போதே கோபாலய்யங்கார் கொட்டாவி விட தொடங்கி
      விட்டடார். அவருக்கு பந்துலுவின் வார்த்தைகளில் ருசியில்லை. இதையுணர்ந்த
      பந்துலு- சரி இந்த விஷயத்தை குறித்து விஸ்தாரமாக நாளைக்கு காலையில்
      பேசிக்கொள்ளலாம். இப்போது நித்திரை செ போவோம் என்றார்.
      அப்போது கோபாலய்யங்கார்-அங்ஙனமே செய்வோம். ஆனால் தூங்க போகுமுன் தாங்கள் தயவு
      செய்து எனக்கொரு விஷ தெரிவிக்க வேண்டும். அந்த பணிப்பெண் யார் அவளுடைய பெயர்
      யாது அவளென்ன ஜாதி அவளுடைய பேற்றோர் அல்லது சுற்றத்தார் எங்கிருக்கிறார்கள்
      என்று கேட்டார்.
      அதற்கு வீரேசலிங்கம் பந்துலு-அப்பணிப்பெண்ணுக்கு பெயர் மீனாட்சி. அவள் ஜாதியில்
      இடைச்சி. அவளுடைய சுற்றத்தார் எங்கிருக்கிறார்களென்பது தெரியாது. ஓஹோஹோ இதில்
      ஒரு முக்கியமான விஷயத்தை யோசிக்க மறந்து விட்டீர்களே ஒருவேளை ஏற்கெனவே அவளுக்கு
      விவாகம் ஆய்விட்டதோ என்னவோ என்றார்.
      அதை குறித்து தங்களுக்கு சம்சயம் வேண்டியதில்லை. நான் காலையிலேயே அவளுடைய
      கழுத்தை நன்றாக கவனித்தேன். அவளுடைய கழுத்தில் தாலியில்லை என்று கோபாலய்யங்கார்
      சொன்னார்.
      தாலி ஒரு வேளை ரவிக்கைக்குள்ளே மறைந்து கிடந்திருக்கக்கூடும். தங்கள் கண்ணுக்கு
      அகப்படாமலிருந்திருக்கலாம் என்றார் பந்துலு.
      அதை குறித்தும் சம்சயம் வேண்டியதில்லை. காதலுக்கு கண் கிடையாதென்று சிலர்
      தப்பான பழமொழி சொல்லுகிறார்கள். காதலுக்கு மிகவும் கூர்மையான கண்களுண்டு. நான்
      மிகவும் ஜாக்கிரதையாக பார்த்தேன். தாலியில்லையென்பது எனக்கு பரம நிச்சயம்.
      அவளுக்கு விவாகமாகவில்லை. அவள் முகத்தை பார்த்ததிலேயே
      எனக்கு தெளிவாக விளங்கிவிட்டது. எனக்கு இவ்விஷயத்தில் அனுபவம் அதிகம். ஒரு
      ஸ்த்ரீயின் முகத்தை பார்த்த மாத்திரத்திலேயே இவள் விவாகமானவள் அல்லது ஆகாதவள் என்பது
      எனக்கு ஸ்பஷ்டமாக தெரிந்துவிடும். இது நிற்க. அவளுடைய சுற்றத்தார்
      எங்கிருக்கிறார்களென்பது தெரியாவிடினும் வேறு அவளுடைய விருத்தாந்தங்கள் அவளை
      பற்றி தங்களுக்கு தெரிந்திரு கூடியனவற்றை எனக்கு சொல்லுங்கள் என்று
      கோபாலய்யங்கார் வேண்டினர்.
      எனக்கு அவளுடைய பூர்வோத்தரங்களை பற்றி ஒன்றுமே தெரியாது. அவள் என்னுடைய சொந்த
      வேலைக்காரியுமன்று. இங்கு எழும்பூரில் இதே தெருவில் நாலைந்து வீடுகளுக்கப்பால் என்
      நண்பர் வேங்கடாசலநாயுடு என்றொருவர் இருக்கிறார். அவர் பிரமஸமாஜத்தை சேர்ந்தவர்.
      இந்த வீடும் அவருக்கு சொந்தமானதே. வேலைக்காரி அவருடைய குடும்பத்தில்
      செய்பவள். இங்கு நான் தாமதிக்கும் சில தினங்களுக்கு என் மனைவிக்கு துணையாக வீடு
      பெருக்கி மாடு கறந்து விளக்கேற்றி இன்னும் வேறு சிறு தொழில்கள் செய்யுமாறு
      இவளை வேங்கடாசல நாயுடு எங்களிடம் அனுப்பியிருக்கிறார். நாங்கள் ராஜ
      மஹேந்திரபுரத்துக்கு போகும்போது அப்பெண் மறுபடி நாயுடு வீட்டில் வேலைக்கு
      போய்விடுவாள் என்று பந்துலு சொன்னார்.
      நாளைக்கு காலையில் நான் வேங்கடாசல நாயுடுவை பார்க்கவேண்டும். அவர் இங்கு
      வருவாரா நாம் அவருடைய வீட்டுக்கு போகவேண்டுமா என்று கோபாலய்யங்கார் கேட்டார்.
      அவரையே இங்கு வர சொல்லலாம். நாம் போகவேண்டாம். எனிலும் இந்த பணிப்பெண்ணை மணம்
      புரிந்து கொள்ளும் விஷயத்தை தாங்கள் மறந்து விடுவதே யுக்தமாக தோன்றுகிறது
      என்று வீரேசலிங்கம் பந்துலு கூறினார்.
      இதுகேட்டு கோபாலய்யங்கார்- எதற்கும் நாளைக்கு காலையில் நாயுடுவை இங்கு
      தருவியுங்கள். மற்ற சங்கதி பிறகு பேசிக்கொள்வோம் என்றார்.
      அப்பால் இருவரும் நித்திரை செ போய்விட்டனர். இரவிலேயே வீரேசலிங்கம் பந்துலு
      தமக்கும் அய்யங்காருக்கும் நடந்த சம்பாஷணையை தமது மனைவியிடம் தெரிவித்தார். அவள்
      மறுநா பொழுது விடிந்தவுடனே அச்செய்தியையெல்லாம் விசாலாட்சியிடம் கூறினாள். அது
      கேட்டு விசாலாட்சி பந்துலுவின் மனைவியுடைய பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து
      இது போனால் போகட்டும். வேறு தக்க வரன் பார்த்து நீங்களே எனக்கு விவாகம் செய்து
      வைக்க வேண்டும். உங்களை விட்டால் எனக்கு வேறு புகல் கிடையாது என்றாள்.
      அப்போது பந்துலுவின் மனைவி- பயப்படாதே அம்மா. உனக்கு நல்ல புருஷன்
      கிடைப்பான். உன்னுடைய குணத்துக்கும் அழகுக்கும் ராஜாவை போன்ற புருஷன் அகப்படுவான்.
      நான் உனக்கு மணஞ்செய்து வைக்கிறேன் என்றாள்.
      ---
      ஐந்தாம் அத்தியாயம்
      கோபாலய்யங்காருக்கு விவாகம்
      மறுநா காலையில் வீரேசலிங்கம் பந்துலு ஒரு ஆளுனுப்பி வேங்கடாசல நாயுடுவை தமது
      வீட்டுக்கு வரவழைத்தார். நாயுடு பந்துலு அய்யங்கார் மூவருமிருந்து பரியாலோசனை
      செ தொடங்கினார்கள். நாயுடுவும் பந்துலுவும் பணிப்பெண்ணாகிய மீனாட்சியை
      அய்யங்கார் விவாகம் செய்ய நினைப்பது தகாதென்றும் விசாலாட்சியை மணம் புரிவதே
      தகுமென்றும் பல காரணங்களுடன் எடுத்துரைத்தனர். அய்யங்காரின் மனதில் அக்காரணங்கள்
      தைக்கவேயில்லை. சுயநலத்துக்- கனுகூலமாக இருக்கும் காரணங்களை அங்கீகரிப்பதும்
      பிறர்க்குரைப்பதும் மனித இயற்கை. சுயநலத்துக்கு விரோதமாக நிற்கும் நியாயங்களை
      சாதாரணமாக புறக்கணித்து விடுதலும் அல்லது அவற்றுக்கு எதிர் நியாயங்கள் கண்டு
      பிடிக்க முயல்வதும் மனித இயல்பாம். நியாய சாஸ்திரமோ வாதி பிரதிவாதி என்ற இரண்டு
      வகையினரின் கொள்கைகளுக்கும் இடங் கொடுக்கத்தக்கது. திருவாங்கூரில் சிறிது
      காலத்துக்கு முன்பு தர்மசங்கடம் சங்கரய்யர் என்றொரு நியாயாதிபதி இருந்தாராம். அவர்
      தம்முன் விசாரணைக்கு வரும் வழக்குகளில் அனேகமாக ஒவ்வொன்றிலும் எந்த கட்சி சொல்வது
      நியாயமென்று தெரியாமல் மிகவும் சங்கடப்படுவாராம். நியாயம் எப்படி வேண்டுமானாலும்
      போகுக என்றெண்ணி சௌகர்யப்படிக்கும் மனம் போனபடிக்கும் தீர்ப்பு செய்யுங் குணம்
      அவரிடம் கிடையாது. எப்படியேனும் உண்மையை கண்டுபிடித்து நீதி செலுத்த
      வேண்டுமென்பது அவருடைய கொள்கை. ஆனால் அங்ஙனம் செ புகுமிடத்தே வாதி
      சொல்வதை கேட்டால் வாதி கட்சி உண்மையென்று தோன்றுகிறது. பிரதிவாதி
      கேட்டால் பிரதிவாதி கட்சி மெய்யென்று தோன்றுகிறது. நான் எந கட்சிக்கு தீர்ப்பு
      சொல்வேன் என்று அவர் தம்முடைய நண்பரிடங் கூறி வருத்தப்படுவாராம். இது பற்றி
      அவருடைய நண்பர்கள் அந்த நியாயாதிபதிக்கு தர்மஸங்கடம் சங்கரய்யர் என்று பட்ட பெயர்
      சூட்டினார்கள்.
      இவ்வுலகத்தில் வெறுமே நீதி ஸ்தலத்து வழக்குக்களின் விஷயத்தில் மாத்திரமேயன்றி ஜன
      சமூக சம்பந்தமாகவும் மத பிற விஷயங்களை பற்றியும் தோன்றும்
      வழக்குகளிலும் இங்ஙனமே நடு உண்மை கண்டு பிடித்தல் சாலவும் சிரமமென்று நான்
      நினைக்கிறேன். அளவற்ற தவமும் அதனால் விளையும் ஞானத்தெளிவுமுடையோரை எதிலும்
      பட்சபாதமற்ற மயக்கமற்ற நடு உண்மை கண்டு தேரவல்லார். மற்றப்படி உலகத்து வழக்குக்கள்
      பெரும்பான்மையிலும் வலிமையுடைய மனிதருக்கும் வகுப்புக்களுக்கும் சார்பாகவே
      நியா தீர்க்கப்படுகின்றது.
      பொய்யுடை யருவன் சொல்வன்மையினால்
      மெய்போலும்மே
      மெய்யுடை யருவன் சொல்லமாட்டாமையால்
      பொய்போலும்மே பொய்போலும்மே.
      இங்ஙனம் சொல்வலிமை மட்டுமேயன்று ஆள் வலிமை தோள் பொருள்
      வலிமைகளும் நியாயத்தராசை தமது சார்பாக இழுத்து கொள்ளவல்லன.
      எனவே அய்யங்கார் தம்முடைய உயர்ந்த கல்வியாலும் உத்தியோகத்தின்
      தம்முள்ளத்திலமைந்த பேராவலின் வலியாலும் நாயுடுவையும் பந்துலுவையும் எளிதாக
      தமது சார்பில் திருப்பி கொண்டார். அப்பால் நாயுடுவிடம் பனிப்பெண்ணின்
      பூர்வோத்தரங்களை குறித்து விசாரிததார். அவள் இடையர் வீட்டு பெண்ணென்றும் அவளுடைய
      தந்தை பல மாடுகள் வைத்து கொண்டு ஊராருக்கு பால் விற்று ஜீவனம் செய்வாரா
      பக்கத்து தெருவில் வசிக்கிறாரென்றும் அந்த பெண்ணுக்கு இரண்டு மூத்த சகோதரர்
      இருக்கிறார்களென்றும் அவர்கள் ஆலையில் வேலை செய்கிறார்களென்றும் தலைக்கு
      பதினைந்து ரூபாய் சம்பளமென்றும் அவளுக்கு தாய் இறந்து போய்விட்டாளென்றும்
      தமையன்மாரின் மனைவிகளே அவர்களுடைய வீட்டில் சமையல் செய்கிறார்களென்றும் ஆதலால்
      மீனாட்சிக்கு தன் வீட்டில் எவ்விதமான வேலையுங் கிடையாதென்றும் நாயுடுவின்
      வீட்டிலும் அவளுக்கு குழந்தைகளை மேற்பார்த்தல் சாமான்கள் வாங்கி கொண்டு வருதல்
      முதலிய கௌரவமான காரியங்களே கொடுபட்டிருக்கின்றனவென்றும் வீடு வாயில்
      பெருலுக்குதல் பாத்திரங் கழுவுதல் துனி தோய்த்தல் முதலிய கீழ்க்காரியங்கள் அவள்
      செய்வது கிடையாதென்றும் அவள் கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் படித்து நன்றாக தமிழ்
      எழுத வாசி கற்று கொண்டு இருக்கிறாள் என்றும் அமைதி பொறுமை இன்சொல் பணிவு
      முதலிய நல்ல குணங்களுடையவளென்னும் அவளுக்கு மாதம் நாயுடு வீட்டில் பன்னிரண்டு
      ரூபாய் சம்பளமென்றும் அதை அவள் வீட்டில் கொடுக்கவில்லையென்றும் நாட்டுக்கோட்டை ம.சி.
      மாணிக்கஞ் செட்டியார் கடையில் தன் பெயருக்கு வட்டிக்கு கொடுத்து விடுகிறாளென்றும்
      அந தொகை இதுவரை வட்டியுடன் ஐந்நூறு ரூபாய் இருக்குமென்றும் அவளுக்கு வயது
      இருபதென்றும் இன்னும் விவாகம் ஆகவில்லையென்றும் விவாகத்துக்கு அவள் ஆவலுடன்
      எதிர்பார்த்திருக்கிறாளென்றும் நாயுடு விஸ்தாரமாக தெரிவித்தார்.
      அவளுடைய தந்தையின் பெயரென்ன அவர் இப்போது வீட்டிலிருப்பாரா என்று
      கோபாலய்யங்கார் கேட்டார்.
      அவளுடைய தந்தையின் பெயர் சுப்புசாமி கோனார். அவர் இப்போது வீட்டிலிருப்பார்
      என்று நாயுடு சொன்னார். உடனே கோபாலய்யங்காரின் வேண்டுகோளுக்கிணங்கி அவருடன்
      நாயுடு பந்துலு இருவரும் சேர்ந்து மூவருமாக பக்கத்து தெருவிலிருந்த
      சுப்புசாமி கோனாருடைய வீட்டுக்கு போனார்கள். அங்கு
      காலையிலெழுந்து பழையது சாப்பிட்டுவிட்டு வெற்றிலை பாக்கு புகையிலை போட்டு
      கொண்டிருந்தார். நாயுடுவையும் அவருடைய நண்பரிருவரையும் கண்டவுடன் அவர் எழுந்து
      நின்று உள்ளேயிருந்து ஒரு நீளப்பலகை கொண்டு போட்டார். வந்தவர் மூவரும் அதன்மீது
      உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு நாயுடு தாங்கள் வந்த நோக்கத்தை சாங்கோபாங்கமா
      கோனாரிடம் எடுத்துரைத்தார். செக்கச்செவேலென்ற முகமும் கன்னங்கரேலென்ற சுருள்
      சுருளான கத்தரித்த முடிமயிரும் அகன்ற தெளிந்த அறிவுசுடர்கின்ற விழிகளும்
      துருக்கமீசையும் விரித்த மார்பும் திரண்ட தோளும் வயிர பொத்தான் போட்ட பட்டு
      சட்டையும் தங்க கடிகாரமுமாக தமக்கு டிப்டி கலெக்டர் கோபாலய்யங்கார் மாப்பிள்ளையாக
      வருவதை கண்டு சுப்புசாமி கோனார் பரவசமாய் விட்டார். அவருள்ளத்தில் ஆனந்தக்களி
      ததும்பலாயிற்று. ஆயினும் பிராமணருக்கு பெண் கொடுத்தால் பாவம் நேருமென்ற ஒரு
      விஷயம் மாத்திரம் அவர்மனதை மிக சஞ்சலப்படுத்திற்று.
      நான் என்ன செய்வேன். சாமி வயதானவன். எனக்கு இனிமேல் இவ்வுலகத்தாசை
      ஒன்றுமேயில்லை. எனக்கினி பரலோக்ததை பற்றிய ஆசைகளே மிஞ்சியிருக்கின்றன. அதனால்
      சிறீ நாராயணனையும் ஆழ்வார்களையும் எம்பெருமானாரையும் சிறீ வைஷ்ணவர்களையும்
      சரணாகதியடைந்திருக்கிறேன். எப்போதும் இவர்களையே ஸ்மரித்து கொண்டும் இவர்களுக்கு
      என்னாலியன்ற கைங்கர்யங்கள் செய்து கொண்டும் என் வாழ்நாளை செலவிடுகிறேன். நான்
      சாஸ்திரங்களில் நம்பிக்கையுடையவன். பிராமணருக்கு நான் சூத்திர பெண்ணை கலியாணம்
      செய்து கொடுப்பதனால் எனக்கு பாவம் நேரும். ஆதலால் நான் இந்த விஷயத்துக்கு
      சம்மதப்பட வழியில்லை என்று சுப்புசாமி கோனார் சொன்னார்.
      இதை கேட்டு கோபாலய்யங்கார்-கோனாரே முதலாவது நான் பிராமணனில்லை.
      பிராமண தர்மத்துக்குரிய ஆசாரங்களை துறந்து சூத்திரனாகிவிட்டேன். ஆதலால் தாங்கள்
      என்னை தங்கள் ஜாதியானாகவே பாவித்து எனக்கு மகளை மணம்
      வேண்டுகிறேன். மேலும் நிஷமான பிராமணனே பிராமண குலத்தில் மாத்திரமின்றி மற்ற
      நான்கு வர்ணங்களிலும் பெண்ணெடுக்கலாமென்று சாஸ்திரம் சொல்லுகிறது. இந்த விஷயத்தில்
      உங்களுக்கு சந்தேகமிருந்தால் என்னிடம் தமிழில் மனு ஸ்ம்ருதி இருக்கிறது உங்களிடம்
      அந்த நூலை காட்டுகிறேன். அதை நீங்களே வாசித்து பாருங்கள். உங்களுக்கு தமிழ்
      வாசிக்க தெரியுமோ தெரியாதோ தெரியுமா அப்படியானால் நீங்கள் நான் சொல்வது
      மெய்யென்பதை கண்கூடாக பார்த்தறிந்து கொள்ளலாம். இதில் எவ்விதமான பாவத்துக்கும்
      இடமில்லை என்றார்.
      அங்ஙனம் சாஸ்திரமிருப்பது மெய்தான் என்று வேங்கடாசல நாயுடு சொன்னார்.
      ஆமாம் அதுவே மனு ஸ்ம்ருதியின் கொள்கை என்று வீரேசலிங்கம் பந்துலு கூறினார்.
      எனினும் உலக ஆசாரத்தில் அவ்விதம் வழங்குவதை காணோமே என்று சுப்புசாமி
      கோனார் ஆட்சேபித்தார்.
      நமது தேசத்தில் பூர்வ சாஸ்திரங்களுக்கும் நடைகளுக்கும் விரோதமான ஆசாரங்கள் பல
      பிற்காலத்தில் வழக்கமாய்விட்டன. அவற்றுள் இந்த விஷயமும் ஒன்றாம். இவ்ஷியத்தில் நமக்கு
      தற்கால ஆசாரம் அதிக பிரமாணமன்று. முற்காலத்து சாஸ்திரமே
      என்று கோபாலய்யங்கார் சொன்னார்.
      அப்போது வேங்கடாசல நாயுடு சொல்லுகிறார்- கேளும் சுப்புசாமி கோனாரே பாவம்
      என்பதெல்லாம் வீண் பேச்சு. இது சாஸ்த்ரோக்தமான விஷயம். இதில் யாதொரு பாவமும்
      கிடையாது. அப்படியே பாவமிருந்த போதிலும் அது மாப்பிள்ளையையும் பெண்ணையும்
      சாருமேயன்றி உம்மை சாராது. அது தவறி உமக்கும் சிறிது பாவம் வந்து
      நேரக்கூடுமென்றாலும் அதற்கு தகுந்த பிராயச்சித்தங்கள் பண்ணிவிடலாம். பெருமாள்
      கோயிலுக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தினால் போதும். அதில் எவ்வளவு கொடிய பாவமும்
      வெந்து சாம்பலா போய்விடும். உமக்கு எத்தனை பணம் வேண்டுமானாலும் அய்யங்காரவர்கள்
      கொடுப்பார் என்றார்.
      பணம் என்ற மாத்திரத்திலே பிணமும் வாயை திறக்கும் என்பது பழமொழி. சுப்புசாமி
      கோனார் ஏறக்குறை கொட்டாவியளவுக்கு வாயை பிளந்தார்.
      எனக்கு கொஞ்சம் கடன் பந்தங்களும் இருக்கின்றன. அவற்றையு தீர்த்துவைக்க ஏற்பாடு
      செய்தால் நல்லது என்று சுப்புசாமி கோனார் சொன்னார்.
      தங்களுக்கு எத்தனை ரூபாய்க்கு கடன் இருக்கிறது என்று கோபாலய்யங்கார் கேட்டார்.
      ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது என்றார் கோனார்.
      மூவாயிரம் ரூபாய் கொடுக்கிறேன் போதுமா என்று கோபாலய்யங்கார் கேட்டார்.
      ஓ யதேஷ்டம் இந்த வாரத்துக்குள்ளே விவாகத்தை முடித்துவிடலாம் என்று
      சுப்புசாமி கோனார் சொன்னார். அப்பால் மீனாட்சியை அழைத்து அவளுடைய சம்மதத்தையும்
      தெரிந்து கொண்டால் நல்லதென்று கோபாலய்யங்கார் கூறினார்.
      அவள் இப்போது வீட்டிலில்லை. நானே அவளிடம் சொல்லி விடுகிறேன்
      குழந்தை. அவள் பிறந்ததுமுதல் இதுவரை என் வார்த்தையை ஒருமுறை கூட தட்டி
      பேசியது கிடையாது. இப்போது இத்தனை உயர்ந்த மேன்மையான
      கிடைக்குமிடத்தில் அவள் என் சொல்லை சிறிதேனும் தட்டி பேசமாட்டாள் என்றார் கோனார்.
      எதற்கும் அவளை அழைத்து ஒருமுறை அவளிடமும் கேட்டால் தான் என் மனம்
      சமாதானமடையும். நாங்கள் இங்கேயே காத்து கொண்டிருக்கிறோம். அவளை அழைப்பியுங்கள்
      என்று கோபாலய்யங்கார் சொன்னார். அங்ஙனமே கோனார் ஒரு ஆளைவிட்டு மீனாட்சியை அழைத்து
      வரும்படி செய்தார். மீனாட்சி வந்தாள். அவளை தனியாக அழைத்து போய் சுப்புசாமி
      கோனார் விஷயங்களை தெரிவித்தார். மாப்பிள்ளையின் படிப்பையும் செல்வத்தையும்
      பதவியையும் மிகவும் உயர்வாக்கி வர்ணித்தார். மாப்பிள்ளையின் அழகை அவள் பார்க்கும்படி
      அவரையும் காண்பித்தார். அவள் அவருக்கு வாழ்க்கைப்பட சம்மதமுற்றாள். சிறிது
      நேரத்துக்குள் மகளையும் அழைத்துக்கொண்டு சுப்புசாமி கோனர் புறத்து திண்ணைக்கு வந்து
      சேர்ந்தார். அவளுடைய விழிகளை கோபாலய்யங்கார் நோக்கினார். அவள் எதிர் நோக்களித்தாள்.
      கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனுமில என்றார் திருவள்ளுவ
      நாயனார். அவளை பார்த்த மாத்திரத்திலே தம்மை மணம் புரிய சம்மதப்பட்டு விட்டாளென்று
      கோபாலய்யங்காருக்கு தெளிவாக புலப்பட்டு விட்டுது. எனினும்
      பரிபூர்ணநிச்சயமேற்படுத்தி கொள்ளுமாறு அவர் சுப்புசாமி கோனாரை நோக்கி
      மீனாட்சி என்ன சொல்லுகிறாள் என்று கேட்டார்.
      அவளிடத்திலே நேரா கேட்டு தெரிந்து கொள்ளலாமே என்றார் கோனார்.
      என்ன மீனாட்சி சொல்லுகிறாய் என்னை மணம் புரிந்து கொள்ள
      என்று கோபாலய்யங்கார் கேட்டார்.
      மீனாட்சி சம்மதம் என்று மெதுவா கூறி தலைக்கவிழ்ந்தாள். கோபலயங்காருக்கு ஜீவன்
      மறுபடி உண்டானது போல் ஆயிற்று. அவர் முகத்தில் புன்னகை தோன்றிற்று.
      அந்த வாரத்திலேயே கோபாலய்யங்காரும் மீனாட்சியும் பிரமஸமாஜத்தில் சேர்ந்து கொண்டார்கள்.
      அவ்விருவருக்கும் பிரம ஸமாஜ விதிகளின்படி சென்னப்பட்டணத்தில் ஸமாஜ கோயிலிலே
      விவாகம் நடைபெற்றது. முடிந்தவுடனே கோபாலய்யங்கார் தமது
      அழைத்து கொண்டு தஞ்சாவூருக்கு போய் அங்கு தம் உத்தியோகத்தில் சேர்ந்து கொண்டார்.
      ---
      ஆறாம் அத்தியாயம்
      விசாலாட்சிக்கு நேர்ந்த சங்கடங்கள்
      கோபாலய்யங்காருக்கு தன்னை மணம் புரிந்து கொள்ள சம்மதமில்லையென்று தெரிந்த
      மாத்திரத்தில் விசாலாட்சி வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவியிடம் தனக்கு வேறெங்கேனும்
      நல்ல வரன் தேடி வாழ்க்கைப்படுத்த வேண்டுமென்று மேன்மேலும் மன்றாடி பிரார்த்தனை
      புரிந்தாள். அதற்கு பந்துலுவின் மனைவி நீ எங்களுடன் இங்கேயே இன்னும் பத்து
      பதினைந்து நாள் இரு. இன்னும் சில தினங்கள் வரை பந்துலு கோபாலய்யங்காரின்
      விவாகத்துக்கு வேண்டிய காரியங்களிலேயே கருத்து செலுத்த நேரும். உன் விஷயத்தை
      கவனிக்க அவருக்கு அவகாசம் இராது. பத்து நாள் ஆன பின்பு நாங்கள்
      ராஜமஹேந்திரபுரத்துக்கு போவோம். நீயும் எங்களுடன் வா. எப்படியாவது உனக்கு நான்
      வரன் தேடி கொடுக்கிறேன். ஆனால் அவசரப்படுவதில் யாதொரு காரியமும் நடக்காது.
      சிறிது காலம் பொறுத்துத்தான் பார்க்கவேண்டும் என்றாள்.
      இதுகேட்டு விசாலாட்சி- மயிலாப்பூரில் என்னுடைய அம்மங்கார் மாமன் மகள்
      இருக்கிறாள். அவளுடைய புருஷன் ஹைகோர வக்கீல் உத்தியோகம் பார்க்கிறார். பந்துலுகாரு
      கோபாலய்யங்கரின் விஷயத்தை கவனித்து கொண்டிருக்கையில் நான் இங்கு சும்மா ஏன் இருக்க
      வேண்டும் இந்த பத்து நாளும் நான் போய் மயிலாப்பூரிலே தாமஸிக்கிறேன்.
      கழிந்தவுடன் இங்கு வருகிறேன் என்றாள்.
      பிறகு அவர்கள் இவ்விஷயத்தைக்குறித்து வீரேசலிங்கம் பந்துலுவிடம் ஆலோசனை செய்தார்கள்.
      அவர் விசாலாட்சி தன் இஷ்டப்படி செய்வதை தடுக்க தமக்கு சம்மதமில்லையென்றும் அவள்
      மயிலாப்பூரில் பத்து நாள் இருந்துவிட்டு வரலாமென்றும் இதற்கிடையில் அவசரம்
      நேர்ந்தால் தாம் மயிலாப்பூருக்கு கடிதமனுப்பி விசாலாட்சியை தருவித்து கொள்ள
      கூடுமென்றும் தெரிவித்தார்.
      மயிலாப்பூரில் உன் பந்துவின் விலாசமெப்படி என்று பந்துலு கேட்டார்.
      அதற்கு விசாலாட்சி- என் அம்மங்காருடைய மாமன் மகளுக்கு அம்மங்கார் என்றும் அத்தை
      மகளுக்கு அத்தங்கார் என்றும் பிராமணர்களக்குள்ளே பெயர்கள் வழங்கி வருகின்றன.
      சிலருக்கு ஒரு வேளை இ சொற்கள் தெரியாமலிருக்கக்கூடுமாதலால் அவற்றை இங்கு
      விளக்கி கூறினேன். புருஷன் மயிலாப்பூரில் லஸ் சர ரஸ்தாவிலிருக்கிறார்.
      அவருடைய பெயர் சோமநாதய்யர். ஆனால் அவரும் என் அம்மங்காரும் அவர் வீட்டிலிருக்கும்
      அவருடைய தாயாரும் மிகவும் வைதிக நம்பிக்கைகளுடையவர்கள். நான் மறுபடி விவாகம்
      செய்துகொள்வதில் அவர்களுக்கு சம்மதம் இராது. விவாகம் நடந்து முடியும்வரை. நான்
      விவாகம் செய்துகொள்ள போகிறேனென்ற விஷயத்தை என் பந்துக்களுக்கு அநாவசியமகா
      தெரிவிப்பிதில் எனக்கு சம்மதமில்லை. ஆதலால் தாங்கள் நான் இருக்குமிடத்துக்கு
      ஆளேனும் கடிதமேனும் அனுப்ப வேண்டியதில்லை. இன்ன தேதியன்று நான் இங்கு
      வரவேண்டுமென்று இப்பொழுதே சொல்லிவிடுங்கள். அந தேதியில் நான் இங்கு வருகிறேன்.
      அதற்கிடையே என்னை மறந்து போய்விடாமல் என் காரியத்தில் கவனம் செலுத்தி
      கொண்டிருங்கள் என்றாள்.
      அப்போது பந்துலு நான் உன்னை மறக்கவே மாட்டேன். உன் விவாகம் நடப்பதற்குரிய யோசனை
      என் புத்தியில் அகலாதே நிற்கும். நீ அதை குறித்து கவலைப்பட வேண்டா. ஜனவரி மாதம்
      இருபதா தேதி நான் இங்கிருந்து ராஜமஹேந்திரபுரத்துக்கு புறப்பட போகிறேன். நீ
      ஜனவரி மாதம் பதினெட்டாந்தேதி இங்கு வா என்றார்.
      இது கேட்டு விசாலாட்சி- தாங்கள் இந்த ஊரிலிருக்கும்போதே எனக்கொரு வரன் தேடி
      கொடுக்க முயற்சி பண்ணுவதே உசிதமென்று நினைக்கிறேன். இது ராஜதானி பட்டணம். இங்கு
      கிடைக்காத வரன் ஒதுக்கமான கோதாவரி கரையில் எங்ஙனம் கிடைக்க போகிறான் என்றாள்.
      அதற்கு பந்துலு- அப்படியில்லையம்மா. இங்கிருந்தாலும்
      ராஜமஹேந்திரபுரத்திலிருந்தாலும் ஒன்று போலேதான். இவ்விஷயத்தில்
      சிரத்தையெடுக்கக்கூடிய நண்பர்கள் எனக்கு பல ஊர்களிலே இருக்கிறார்கள். அவர்களுக்கு
      கடிதமெழுதுவேன். அவர்கள் அவ்வவ்விடங்களில் விசாரித்து விடையெழுதுவார்கள்.
      பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்வேன் என்றார்.
      பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கும்போது என் பெயர் போடக்கூடாது என்றாள்
      விசாலாட்சி.
      சரி. பெயர் போடாமல் பொதுப்படையாக எழுதுகிறேன். இந்த கோபாலய்யங்காரின் விவாகம்
      இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிந்து போய் விடும். பிறகு உன் காரியத்தை முடிக்கு
      முன்பு நான் வேறெந்த வேலையையும் கவனிக்க மாட்டேன். எத்தனை சிரமப்பட்டேனும் உன்
      நோக்கத்தை நான் நிறைவேற்றி கொடுக்கிறேன். பயப்படாதே என்று பந்துலு சொன்னார்.
      அப்படியானால் என்னை ஜனவரி பதினெட்டா தேதியா இங்கு வர சொல்லுகிறீர்கள்
      என்று விசாலாட்சி கேட்டாள்.
      இன்னும் ஏழெட்டு நாளில் கோபாலய்யங்கார் விஷயம் முடிந்து போய்விடும். எனவே ஜனவரி
      பத்தா தேதி இங்கு வந்துவிடு என்றார் பந்துலு.
      அப்பால் பந்துலுவிடமும் அவர் மனைவியிடமும் விடைபெற்று கொண்டு விசாலாட்சி
      சந்திரிகை சகிதமாக மயிலாப்பூர் லஸ் சர ரஸ்தாவில் ஹைகோர வக்கீல் சோமநாதய்யர்
      வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
      வக்கீல் சோமநாதய்யரின் மனைவிக்கு பெயர் முத்தம்மா. நமது விசாலாட்சியை கண்டவுடன்
      இவள் மிகுந்த ஆவலுடன் நல்வரவு கூறி உபசாரம் பண்ணினாள். இவ்விருவரும் அத்தங்கார்
      அம்மங்கார் என்ற உறவு மாத்திரமேயன்றி பால்ய முதலாகவே மிகவும் நெருங்கிய நட்புடன்
      பழகி வந்தவர்கள்.
      முத்தம்மா திருநெல்வேலியில் தெப்ப குளத்தெருவில் பிறந்து வளர்ந்து வந்தவள்.
      திருநெல்வேலியிலிருந்து வேளாண்குடி மிகவும் சமீபமாதலால் இவ்விருவரும் அடிக்கடி
      சந்திக்க நேர்ந்தது. சுற்று பக்கங்களிலுள்ள கிராமங்களில் எங்கு எந்த பந்துக்கள் வீட்டில்
      என்ன விசேஷம் நடந்த போதிலும் அங்கு விசாலாட்சியும் வருவாள் முத்தம்மாளும்
      வந்துவிடுவாள். வந்தால் இவ்விருவர் மாத்திரம் எப்போதும் இணைபிரிவதே கிடையாது.
      சாப்பாட்டுக்கு உட்கார்வதென்றால் இருவருமே கூடவே தொடை மேல்
      உட்கார்வார்கள். விளையாட்டிலும் பிரிய மாட்டார்கள். விளையாட்டு முடிந்தால் இருவரும்
      கைகோத்த வண்ணமாகவே சுற்றி திரிவார்கள். இராத்திரி இருவரும் ஒரே பாயில் கட்டி
      கொண்டு படுத்திருப்பார்கள். மேலும் ஒரு சமயத்தில் முத்தம்மாளை அவளுடைய தந்தை
      வேளாண்குடியில் தன் தமக்கை வீட்டிலேயே அதாவது விசாலாட்சியின் தாய்
      ஆறேழு மாதம் இருக்கும்படி விட்டிருந்தார். அது எப்போதென்றால் பத்தாம் வயதில்
      விசாலாட்சி தாலியறுத்த சமயத்தில் அப்போது முத்தம்மா வந்து வேளாண்குடியில் சில
      மாதங்களிருந்தால்தான் தன் மகளுக்கு ஒருவாறு ஆறுதலேற்படுமென்று கருதி
      விசாலாட்சியின் தாய் தன் தம்பிக்கு அவசரமாக சொல்லியனுப்பினான்.
      தமக்கையின் வார்த்தையை தட்ட மனமில்லாமல் அவர் அங்ஙனமே முத்தம்மாளை வேளாண்குடியில்
      கொண்டு விட்டிருந்தார். ஒரே வீட்டில் ஒன்றா குடியிருந்தபோது அவ்விருவரின்
      உளங்களும் ஒட்டியே போய்விட்டன. வேளாண்குடியிலிருந்து திரும்பி திருநெல்வேலிக்கு
      சென்ற பிறகுங்கூட நெடுங்காலம் வரை இரா வேளைகளில் கனவிலெல்லாம் முத்தம்மா
      விசாலாட்சியுடன் சம்பாஷணை நடத்துவது போலவே பேசி கொண்டிருப்பாள்.
      விசாலாட்சியோவெனில் அப்பிரிவு நிகழ்ந்து நெடுங்காலம் வரை பகலிலேயே தன்னுடைய
      மற்ற தோழி பெண்களை கூப்பிடும்போது முத்தம்மா என்று
      இப்படி அளவு கடந்த பால்ய சிநேகமுடைய இவ்விருவரும் முத்தம்மா புக்கத்துக்கு வந்த
      பிறகு ஒருவரையருவர் சந்திக்கவேயில்லை. சோமநாதய்யர் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்து
      கும்பகோணம் காலேஜிலேயே பீ.ஏ. பரீட்சை தேறினார். முத்தம்மாளுடைய தந்தை அவளுடைய
      ஜாதகத்தை எடுத்துக்கொண்டு மதுரை திருச்சினாப்பள்ளி காலேஜ்களை பரிசோதனை செய்து
      முடித்து கடைசியா கும்பகோணம் காலேஜுக்கு வந்து சோமநாதய்யரை கண்டு தக்க
      மாப்பிள்ளையென்று நிச்சயித்தார். அந்த காலத்தில் வரசுல்கம்-அதாவது மாப்பிள்ளையை
      பெண் வீட்டார் பணங் கொடுத்து கிரயத்துக்கு வாங்குதல்-என்ற வழக்கம் கிடையாது. கன்யா
      சுல்கம்-அதாவது பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் கிரயங் கொடுத்து வாங்குதல்-என்ற
      வழக்கமே நடைபெற்று வந்தது. எனவே சோமநாதய்யர் ஏழைகளுடைய பிள்ளையாதலால்
      கன்யாசுல்கம் கொடுத்து விவாகம் செய்து கொள்ள வழி தெரியாமல் என்னடா செய்வோம்
      என்று தத்தளித்து கொண்டிருந்தார். அவருடைய உருவ லட்சணங்களையும் படிப்பு
      திறமையையும் உத்தேசித்து அவருக்கே தமது மகளை கன்யா சுல்கம் வாங்காமல் அதாவது
      இனாமாக மணம்புரிந்து கொடுத்து விடலாமென்று முத்தம்மாளின் தந்தை தீர்மானித்தார்.
      சோமநாதய்யர் திருநெல்வேலிக்கு வந்து பெண்ணுடைய அழகையும் புத்தி கூர்மையையும்
      கண்டு வியந்து அவளை மணம்புரிந்து கொள்ள உடம்பட்டார். தனக்கு விவாகம் முடிந்த பின்னர்
      முத்தம்மா விசாலாட்சியை ஓரிரண்டு முறைதான் சந்திக்க நேர்ந்தது.
      அவளுக்கு ருது சாந்தியாய் அவள் புக்ககத்துக்கு சென்ற பின்னர் அவளும் விசாலாட்சியும்
      ஒருமுறைகூட சந்திக்க நேரமில்லை. அவள் கும்பகோணத்துக்கு வந்துவிட்டாள். பி.ஏ.
      பி.எல். பரீட்சை தேறி சோமநாதய்யர் ஹைகோர வக்கீலாய் கும்பகோணத்தில் சில வருஷங்கள்
      உத்தியோகம் பண்ணிவிட்டு அப்பால் பணம் ஏறிப்போய் அதினின்றும் அதிக பணத்தாசை கொண்டு
      மயிலாப்பூரில் வந்து ஒரு பெரிய பங்களா வாடகைக்கு வாங்கி அதில் குடியிருந்து
      சென்னை ஹைகோர்ட்டிலேயே வக்கீல் உத்தியோகம் பண்ணிக்கொண்டு வருகிறார்.
      ஆதலால் இப்போது பல வருஷங்களுக்கு பின் புதிதாக சந்தித்ததில் முத்தம்மாளும்
      விசாலாட்சியும் சிநேக பரவசமாய் ஆனந்த சாகரத்தில் அழுந்தி போயினர்.
      முத்தம்மாளுக்கு இருபத்தைந்து வயது தானிருக்கும். அவளுக்கு மூன்று ஆண்
      குழந்தைகளிருந்தன. மூத்தவனுக்கு ஒன்பது வயதிருக்கும். அவன் பெயர் ராமநாதன். அடுத்த
      பிள்ளைக்கு ஆறு வயதிருக்கும். அவன் பெயர் ராமகிருஷ்ணன். அடுத்த குழந்தைக்கு மூன்று
      வயது. அதன் பெயர் அனந்தகிருஷ்ணன்.
      முத்தம்மாளுடைய மாமியார் ஒருத்தி அந்த வீட்டிலேயே இருந்தாள். அவளுக்கு அறுபது
      வயதிருக்கும். அவள் விதவை. பெயர் ராமுப்பாட்டி. அவளுக்கு ‡யரோகம்
      காசரோகம் அதாவது சீக்கிரத்தில் கொல்லுகிற கொடூரமான ‡யமில்லை. நோயாளியை
      நெடுங்காலம் உயிருடன் வதைத்து வதைத்து கடைசியில் கொல்லும் மாதிரி. இராத்திரி
      ஏழு மணியாய் விட்டால் அவள் இரு தொடங்கிவிடுவாள். பாதி ராத்திரி. ஒரு மணி
      காலை இரண்டு மணி வரை மகா பயங்கரமாக இருமி கொண்டேயிருப்பாள். அந்த இருமலை
      கேட்டால் கேட்பவருடைய பிராணன் இரண்டு நிமிஷத்துக்குள்ளே போய்விடும் போலிருக்கும்.
      ஆனால் ராமுப்பாட்டி சென்ற முப்பது வருஷங்களாக அப்படித்தான் இருமிக்கொண்டு
      வருகிறாள். அவளுடைய பிராணன் அணுவளவுகூட அசையவில்லை.
      இப்படியிருக்கையில் விசாலாட்சி சோமநாதய்யர் வீட்டுக்கு வந்து சேர்ந்து சில தினங்கள்
      கழிந்தவுடனே ஒரு நாள் ஏகாதசி இரவு. ராமுப்பாட்டிக்கு அன்று முழுவதும் போஜனம்
      கிடையாது. ஆதலால் அவள் அன்று வழக்கப்படி இரவில் இரும முடியவில்லை. அயர்ந்து
      தூங்கி போய்விட்டாள். அவள் கீழ்த்தளத்தில் வெளியோர தலையில் ஒரு கட்டில் மெத்தை
      போட்டு படுத்து கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் ஒரு புயற்காற்று விளக்கும்
      தீச்சட்டியும் கட்டிலுக்கருகில் இருபுறங்களிலும் பாரிசத்துக்கொன்றாக இரண்டு
      நாற்காலிகளின்மீது அதாவது சாய்விடமில்‘த நாற்காற் பலகைகளின்மீது வைக்கப்ப்டடிருந்தன.
      அதற்கு மேற்கே மூன்றரை கழித்து நான்காமறையில் விசாலாட்சி ஒரு கட்டில் மெத்தை
      போட்டு படுத்திருக்கிறாள். அவளுடைய கட்டிலின் அருகே கட்டிலை காட்டிலும்
      சிறிதளவு உயரமான ஒரு நாற்காற் பலகையின்மீது புயற்காற்று
      எரிந்துகொண்டிருந்தது. அவள் கையில் வைத்து வாசித்து கொண்டிருந்த ஒரு நாவல் தானே
      நழுவி வெள்ளை வெளேரென்ற உரையின் மீது விழுந்து கிடந்தது. அவளுடைய கரிய நீண்ட
      கூந்தல் அத்தகைய வெள்ளை தலையணையின்மீது கன்னங்கரேலென்று விழுந்து கிடந்ததை
      நோக்குககையில் பனிக்குன்றின் மீது கரிய மேகம் கிடப்பது போலிருந்தது. விசாலாட்சி
      விதவையாயினும் அவள் தலையை மொட்டையடிக்கவில்லை. சாகும்பொழுது தம் தமையன் மனைவி
      அடீ விசாலாட்சி நீ எப்படியேனும் மறு விவாகம் செய்துகொள் என்று சொல்லிவிட்டு
      போன வார்த்தையில் அவளுக்கிருந்த நம்பிக்கையாலும் திடீரென்று பூகம்பமும் புயற்காற்றும்
      விளைவித்த எதிர்பார்க்கப்படாத கோர மரண பெருங்கோலத்தை கண்டும் பின் ஆவி
      பிழைத்ததனால் அவளுக்கேற்பட்ட பெரிய தைரியத்தாலும் அவள் தலை மயிர் வளர்க்க
      தொடங்கிவிட்டாள்.
      தலைமயிர் வளர்த்து கொண்டே ஓரிரண்டு வருஷம் நாங்கனேரி அவளுடைய தாயுடன் பிறந்த
      மற்றொரு மாமன் வீட்டில் சந்திரிகையுடன் வந்து குடியிருந்தாள். அந்த ஊரில் அந்தணர்கள்
      அவள் மீது அபாரமான பழிதூற்ற தொடங்கிவிட்டார்கள். அந தூற்றுதல் பொறுக்க
      மாட்டாதபடியாலேதான் அவள் அவ்வூரை விட்டு புறப்பட்டு வழி நெடுக தீர்த்த யாத்திரை
      செய்து கொண்டு சென்ன பட்டணம் வந்து சேர்ந்திருக்கிறாள். இந்த ஊரில் எனக்கு பழி
      பொறுக்க முடியவில்லை. மாமா நான் காசிக்கு புறப்பட்டு போய் கங்கை கரையில் தவம்
      பண்ணி கொண்டிருந்து நாளடைவில் என் பிராணனை விட்டு விடுகிறேன். எனக்கு
      வழிச்செலவுக்கு ஏதேனும் பணம் கொடும் நான் அங்கே சென்று பிச்சையெடுத்து இந்த
      குழந்தை சந்திரிகையையும் காப்பாற்றி நானும் பிழைத்து கொள்கிறேன் என்று அவள்
      நாங்கனேரியை விட்டு புறப்படுமுன் தன் மாமனிடம் பிரார்த்தனை செய்து கொண்டாள்.
      இந்த குழந்தைக்கு விவாகம் பண்ணவேண்டிய பருவம் நேர்ந்தால் அப்போதென் செய்வாய்
      என்று மாமா கேட்டார்.
      அங்கே நம்முடைய தமிழ தேசத்து பிராமணர் அனேகர் குடியேறியிருக்கிறார்கள். இனி
      மேன்மேலும் அதிகமா குடியேறி வருவார்கள். யாத்திரைக்காக வேறு வருஷந்தோறும்
      நம்மவர் அனேகர் வந்து போ கொண்டிருப்பார்கள். அத்தனை ஜனங்களில் என் சந்திரிகைக்கொரு
      மாப்பிள்ளை கிடைக்காமலா போகிறான் என்று விசாலாட்சி கேட்டாள்.
      உடனே அவர் விசாலாட்சியின் கையில் ஐந்நூறு ரூபாய் வெள்ளி நாணயங்களாக ஒரு பையில்
      கட்டிக்கொடுத்து இதை கொண்டுபோய் ரயில் செலவு போக மிஞ்சியதை அங்கு யாரேனும்
      ஸாஹ¥கார் கையில் வட்டிக்கு கொடுத்து வட்டி வாங்கி ஜீவனம் செய்து கொண்டிரு.
      அடிக்கடி இங்கு வந்து போ கொண்டிரு. உனக்கு அப்போதப்போது என்னாலான உதவிகளை
      செய்துகொண்டு வருகிறேன். பயப்படாதே என்று சொல்லி மாமா இவளையனுப்பி விட்டார்.
      ஊராருடைய தூற்றல் பொறுக்க மாட்டாமையால் அவருக்கும் இவளை எப்படியேனும் அந்த ஊரை
      விட்டனுப்பி விடுவதில் சம்மதமாகவேயிருந்தது. அவளுடைய இஷ்டத்துக்கு விரோதமாக
      அவளை மொட்டையடித்து கொள்ளும்படி கட்டாயப்படுத்த அவருக்கு மனம் இல்லை. அவர்
      அப்படியே கட்டாயப்படுத்தியிருந்தாலும் அவள் அதற்கு கட்டுப்பட்டிருக்க மாட்டாள்.
      கட்டுப்பட்டு மொட்டையிட்டு கொண்டாலும் அதை பார்க்க அவருக்கு மனமிருந்திராது.
      அவருக்கு விசாலாட்சியின் மீது அத்தனை தூரம் பிரியம். அவளை தன் சொந்த மகள் போலவே
      கருதினார்.
      எனவே அவரிடம் பணத்தை வாங்கி கொண்டு விசாலாட்சி புறப்பட்டு வழி நெடுக ஸ்தல
      யாத்திரை செய்த சமயத்தில் அவளுடைய கற்பையழிக்கவும் அவள் கையிலிருந்த பணத்தை
      அபகரித்து கொள்ளவும். அல்லது அவ்விரண்டு வகை பாதக செயல்களையும் கலந்து
      செய்யவும் பல ஆண்மக்கள் முயன்றனர். ஆனால் அவளை சாஸ்த்ரோக்தமாக விவாகம் செய்துகொண்டு
      அவளுடன் சதிபதியாக வாழக்கூடியவனாக அவளுக்கு எவனும் தென்படவில்லை. எனவே
      முழுதும் ஆசாபங்கமுற்றவளாய் அதனால் ஒருவித முரட்டு தைரியம் அதிகப்பட்டுத்தான்
      இவள் ஜீ. சுப்பிரமணிய அய்யரிடத்திலும் அப்பால் வீரேசலிங்கம் பந்துலுவிடத்திலும்
      இத்தனை பெரு துணிவுடன் தனக்கு வரன் தேடி கொடுக்கும்படி வற்புறுத்த
      கூடியவளாயினாள். அப்பால் மேலே கதையை நடத்துவோம்.
      இப்போது அதாவது 1905-ம் வருஷ ஆரம்பத்தில் கார்காலத்தில் ஏகாதசி இரவில்
      மயிலாப்பூர் வக்கீல் சோமநாதய்யர் வீட்டில் தரைப்பகுதியில் ஓரறையில் விசாலாட்சி
      சந்திரிகையுடன் படுத்திருந்த கதையை மேலே சொல்லுவோம்.
      அவளுடைய கரிய கூந்தல் அந்த நேர்த்தியான விளக்கொளியில் மிக அழகாக
      பரந்துகிடந்தது. அவளுடைய முகம் பூர்ணசந்திரனை போலே ஒளி வீசிற்று.
      மார்பு மெல்லிய பச்சைப்பட்டு ரவிக்கையின் மீது வனப்புற பூரித்து நின்றது. அவளுடைய
      மார்புத்துணி தூக்கத்திலே கழன்று போய்விட்டது. தேவ ஸ்திரீயோ கந்தர்வ
      தேவ கந்தர்வர் கண்டாலும் மயங்கத்தக்கவாறு அத்தனை எழிலுடன் படுத்திருந்தாள்.
      அவள் அறைக்கதவை தாழ போடவில்லை. கிழவி ராமுப்பாட்டியின் இருமல் சத்தம் காதில்
      விழாதபடி சோமநாதய்யர் தம் பத்தினியுடன் மாடிமேல் கொல்லை புறத்திலிருந்த
      அறையில்-அதாவது கிழவியினுடைய அறையிலிருந்து எத்தனை தூரம் தள்ளியிருக்க
      சாத்தியப்படுமோ அத்தனை தூரத்தில்-இராத்திரிகளிலே படுத்துக்கொள்வது வழக்கம். ஆனால்
      அன்று அந்த ஏகாதசி இரவில் சோமநாதய்யரின் மனைவி முத்தம்மா அவருடன் படுத்து
      கொள்ளவில்லை. ஏனென்றால் அவள் அன்று மாதவிடயாதலால் வீட்டுக்கு விலக்குற்றவளாய்
      வெளி திண்ணையில் ஒரு மூங்கிலறை கட்டி அதற்குள் நேர்த்தியான திரைகள்
      கட்டில் மெத்தை போட்டு அதன்மீது படுத்திருந்தாள். அவளுடைய மூன்றாங் குழந்தையாகிய
      அனந்தகிருஷ்ணன் மாத்திரம் அவளுடன் படுத்திருந்தான். ராமநாதனும் ராமகிருஷ்ணனும் மேலே
      சோமநாதய்யரின் கட்டிலுக்கும் அவருடைய மனைவியின்
      குழந்தைகளுக்கென்று போட்டிருந்த மூன்றாங் கட்டிலின்மீது படுத்திருந்தனர்.
      நள்ளிரவு சோவென்று மழை கொட்டுகிறது. அந்த மழையாகிய தாயின் பாட்டின் குரலில்
      மயங்கி போன குழந்தைகளை போல் ராமுப்பாட்டியும் தோட்டத்தில் வெளி குச்சிலில்
      படுத்திருந்த தோட்ட காவலனும் திண்ணையில் முத்தம்மாளும்
      அனந்த கிருஷ்ணனும் உள்ளே விசாலாட்சியும் சந்திரிகையும் மேலே ராமநாதனும்
      ராமகிருஷ்ணனும் எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கி விட்டனர். அப்போது ஒரு ஆள்
      மாத்திரம் நித்திரை செய்யவில்லை. அது நம்முடைய சோமநாதய்யர். சோமநாதய்யருக்கு வயது
      அப்போது சுமார் முப்பதிருக்கும். ஆள் நல்ல அழகன். ஸாண்டோ இரும்பு குண்டு போட்டு
      அவருடைய இரண்டு புஜங்களும் அழகாக பருத்திருந்தன. தோட்சதைகள் நன்கு
      திரண்டிருந்தன. முன்னங்ககைகள் செவ்வனே உருட்சி பெற்றிருந்தன. விரல்கள் உறுதி
      பெற்றிருந்தன. மார்பு நேர்த்தியாக படுத்திருந்தது. வயிறு நன்கு படிந்திருந்தது.
      மேலும் பலவித அப்யாஸங்களையும் அவருடைய தொடைகளும் கால்களும் வலிமையும் உறுதியும்
      அழகுற சமைந்திருந்தன. ஆனால் அவருக்கு தலைமயிர் மாத்திரம் கொஞ்சம் நரைக்க
      தொடங்கிவிட்டது. கொஞ்சம் வழுக்கையுமுண்டு. கண் பார்வை சொற்பம்.
      ஐரோப்பி கண் சோதனை வைத்தியரிடமிருந்து உயர்ந்த விலையில் மூக்கு கண்ணாடி வாங்கி
      அதற்கு தங கம்பி போட்டு மாட்டி கொண்டிருந்தார். முகம் நன்றாக சவரம் பண்ணி
      மிகவும் தளதளப்பாகவும் அழகாகவுமிருந்தது. அவர் மாத்திரம் அன்றிரவு நித்திரை
      புரியவில்லையென்றேன். ஏன் என்ன செய்து கொண்டிருந்தார் மெல்ல மாடியை விட்டு கீழே
      இறங்கினார். விசாலாட்சி படுத்திருந்த அறைக்கு புறம்பே வந்து நின்றார். கதவை மெல்ல
      அசைத்து பார்த்தார். கதவு விசாலாட்சியின் சூதற்ற தன்மையால் திறந்து கிடந்தது.
      உள்ளே நுழைந்தார். விசாலாட்சி படுத்திருந்த கட்டிலின் பக்கத்தே போய் நின்று கொண்டு
      அந்த திவ்யமான ஒளியில் அவளுடைய திவ்ய விக்ரஹத்தை கண்டார். தன்னை மறந்து போய் அவள்
      மேலே கையை போட்டார். அவள் திடுக்கிட்டு விழித்து இவரை பார்த்தவுடன் அஞ்சி
      மார்பு துணியை நேரே போர்த்து கொண்டாள். அப்பால் இவரை நோக்கி மிகவும்
      கோபத்துடன்- இங்கு எதன் பொருட்டாக இந்த நேரத்தில் வந்தீர் என்று கேட்டாள். இவர்
      ஏதோ வழவழவென்று மறுமொழி சொன்னார். இவருடைய சொற்களின் ஒலியாலும் மு
      குறிகளாலும் இவருடைய இருதயம் சுத்தமில்லையென்பதை அவள் உணர்ந்துகொண்டு தன் இடுப்பில்
      சொருகியிருந்த கூரிய கத்தியன்றை எடுத்து இவருடைய மார்புக்கு நேரே நீட்டினாள்.
      இவர் பயந்து போய் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார்.
      நிற்பதை கண்டு விசாலாட்சி இடிபோன்ற உரத்த குரலில் இங்கிருந்து
      வெளியேறிப்போம் என்றலறினாள்.
      குழந்தையை எழுப்பிவிடாதே என்று சோமநாதய்யர் மெல்ல ஜாடைகள் பேசுவது போலே
      கிளுகிளுத்து சொன்னார். முன்னை காட்டிலும் உரப்பாக விசாலாட்சி முப்பத்து மூன்று
      இடிகள் சேர்ந்து இடிக்கும் குரலில் போம் இங்கிருந்து வெளியேறி என்று மற்றொரு
      முறை கர்ஜித்தாள். சோமநாதய்யர் வெலவெலத்து போய் வெளியேறி மாடிக்கு சென்று தன்
      அறைக்குள்ளே போய் அறை கதவை சார்த்தி தாழிட்டு விளக்கையணைத்துவிட்டு உள்ளே
      கட்டில் மீது படுத்து கொண்டு மேலெல்லாம் போர்வை போட்டு மூடி கண்களை இறுக
      மூடிக்கொண்டு தூங்க முயன்றார். ஆனால் அவருக்கு தூக்கம் வரவில்லை. உடம்பெல்லாம்
      வியர்த்தது. போர்வையை கழற்றியெறிந்தார். குளிரெடுத்தது. மறுபடி போர்வையை
      எடுத்து மூடிக்கொண்டார். கைகால் உளைச்சல் சகிக்க முடியவில்லை. நரம்புகளை துண்டு
      துண்டாக வெட்டுவது போன்ற வேதனையுண்டாயிற்று. அவருடைய இருதயத்தில் ஆயிரம்
      பிசாசுகள் சேர்ந்து நர்த்தனம் செய்வது போன்ற பலவகைப்பட்ட வேதனை ஏற்பட்டது. அவருக்கு
      தூக்கமெப்படி வரும்
      கீழே விசாலாட்சி இவர் வெளியேறியவுடன் அறைக்கதவை தாழிட்டு கொண்டு மறுபடி
      கட்டிலின்மேல் வந்து படுத்து சில கணங்களுக்கெல்லாம் ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்து
      விட்டாள். மழை சரசரவென்று பொழிந்து கொண்டிருக்கிறது.
      ---
      ஏழாம் அத்தியாயம்
      விடுதலை
      ஒருகால் விடுதலை யுற்றான்
      எப்போதும் விடுதலை யுற்றான்
      மறுநா பொழுது விடிந்தது. சோமநாதய்யர் வீட்டில் சிரார்த்தம் அவடைய பிதாவுக்கு.
      முத்தம்மா தூரங்குளித்து வீட்டுவேலைக்கு மீண்டு விட்டாள். முத்துஸ¥ப்பா தீட்சிதரும்
      குப்புசாமி தீட்சிதரும் பிராமணார்த்த பிராமணராக அழைக்கப்பட்டிருந்தனர்.
      அவ்விருவருள்ளே முத்துஸ¥ப்பா தீட்சிதரே புரோகிதர். இவ்விருவரும் காலையில் பத்து
      மணிக்கே வந்துவிட்டார்கள். ஆனால் பகல் இரண்டு மணி வரை சோமநாதய்யர் மெத்தையைவிட்டு
      கீழே இறங்க முடியவில்லை. அவருக்கு பலமான தலை நோவு.
      இதனிடையே தீட்சிதரிருவரும் சும்மா பதுமைகள் போல் உட்காரந்திருக்க மனமில்லாமல்
      வேதாந்த விசாரணையில் புகுந்தனர்.
      முத்துஸ¤ப்பா தீட்சிதர் சொன்னார்- ஜீவன் முக்தி இகலோகத்தில் அதாவது இந்த சரீரத்தில்
      சாத்தியம் என்றார்.
      ஆனால் இந்த சரீரத்தில் ஏற்படும் முக்தி எப்போதைக்கும் சாசுவதமாக நிற்பது
      நிச்சயமில்லை என்று குப்புசாமி தீட்சிதர் சொன்னார்.
      உமக்கு விடுதலை என்றால் இன்னதென்று விஷயமே புலப்படவில்லையென்று தெளிவுபட
      விளங்குகிறது. விடுதலையென்பது ஒருகாற் பெறப்படுமானால் மறுபடி தளையென்பதே
      கிடையாது. முக்திக்கு பிறகு பந்தமில்லை. ஸர்வபந்த நிவாரணமே முக்தி. அந்த
      ஸர்வபந்த நிவாரணமாவது ஸர்வ துக்க நிவாரணம் துக்கங்களையும்
      தொலைத்து விடுதலை. அந்த நிலைமை பெற்ற பிறகும் ஒருவன் மறுபடி பந்தத்துக்கு
      கட்டுப்பட இடமுண்டாகுமென்று சொல்லுதல் பொருந்தாது என்று முத்து ஸ¤ப்பா தீட்சிதர்
      சொன்னார்.
      சுவர்க்க லோகத்திற்கு போன பிறகும் அங்கிருந்து வீழ்ச்சியேற்படுவதாக நம்முடைய
      சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே அதன் தாத்பர்யமென்ன என்று குப்புசாமி தீட்சிதர் கேட்டார்.
      அந்த விஷயமெல்லாம் எனக்கு தெரியாது. ஜீவன்முக்திக்கு நான் சொன்னதுதான் சரியான
      அர்த்தம். அதை எந்த சாஸ்திரத்திலும் பார்த்து கொள்ளலாம் என்று முத்துஸ¤ப்பா தீட்சிதர்
      சொன்னார்.
      இவர்கள் இந்த விஷயத்தை குறித்து நெடுநேரம் வார்த்தைபாடி கொண்டிருந்தார்கள்.
      கடைசியாக சோமநாதய்யர் மாடியை விட்டு கீழேயிறங்கி வந்தார். அவர் இந்த
      தர்க்கத்தின் விஷயமென்ன என்று கேட்டார்.
      ஒருமுறை ஜீவன் முக்தி பெற்றால் அது எப்போதைக்கும் சாசுவதம்தானா மீட்டும் பந்த
      ப்ராப்தி ஏற்படுமா என்ற விஷயத்தை குறித்து விசாரணை செய்கிறோம் என்று
      குப்புசாமி தீட்சிதர் சொன்னார்.
      இந்த விஷயத்தில் தங்களுடைய அபிப்ராயமெப்படி என்று சோமநாதய்யரை நோக்கி
      முத்துஸ¤ப்பா தீட்சிதர் கேட்டார்.
      எனக்கு வேதாந்த விவகாரங்களில் பழக்கம் போதாது என்று சோமநாதய்யர் சொன்னார்.
      திடீரென்று விசாலாட்சி அவர்களுக்கு முன்னே தோன்றி ஜீவன்முக்தி இவ்வுலகில்
      சாத்தியமென்பதே பொய். நீங்கள் அதையடைந்திருக்கிறீர்களோ அடைந்தோர் யாரையேனும்
      பார்த்திருக்கிறீர்களோ என்று கேட்டாள்.
      சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இருந்தார் அவர் பெரிய ஜீவன்முக்தர் என்று
      சோமநாதய்யர் சொன்னார்.
      அன்று சாயங்காலம் முத்தம்மாளிடம் அனுமதிபெற்று கொண்டு விசாலாட்சி சந்திரிகையுடன்
      மயிலாப்பூரிலிருந்து புறப்பட்டு பட்டணம் தங்கசாலை தெருவிலிருந்த மற்றொரு
      பந்துவின் வீட்டில் போய் இறங்கினாள். இந்த பந்து யாரெனில் விசாலாட்சியின் பெரிய
      தாயார் மகள். அந்த அம்மாள் பெயர் பிச்சு. அவளுடைய புருஷனாகிய சங்கரய்யர் தங்கசாலை
      தெருவில் மிகவும் கீர்த்தியுடன் மிட்டா கடை வைத்து கொண்டிருந்தார். அதில்
      அவருக்கு கன லாபம். அவர் கையில் தங காப்பு வயிர மோதிரங்கள் கழுத்தில்
      பொற்சரளி. அவருக்கு வயது முப்பதுக்கு மேலிராது மிகவும் அழகான புருஷன்.
      அவருக்கு குழந்தைகள் இல்லை. அவர் வீட்டுக்கு நம்முடைய விசாலாட்சி போ சேர்ந்தாள்.
      அங்கு இவள் போன தினத்துக்கு மறுநாள் காசியிலிருந்து ஒரு பால சந்நியாசி
      வந்திருந்தார். இவர் ஜாதியில் தென்தேசத்து பிராமணர். ஆனால் பார்வைக்கு வட
      தேசத்தார்களை போலவே சிவப்பாகவும் புஷ்டியாகவும் உயரமாகவும் ஆஜானுபாகுவாகவும்
      இருப்பார். மிகவும் அழகிய வடிவமுடையவர்.
      இவருக்கு நாலைந்து பாஷைகள் நன்றாக தெரியும். இவர் சங்கீதத்தில் அபார வித்வான்.
      தம்மை ஜீவன் முக்தி அடைந்துவிட்டதாக சொல்லி கொண்டார். எனினும் சதா இவருடைய
      முகத்தில் கவலை குறிகள் இருந்து கொண்டேயிருந்தன. மகா மேதாவி. உலகத்து சாதாரண
      மூடபக்திகளையெல்லாம் போக்கிவிட்டார். ஆனால் தீய விதியின் வசத்தால் தமக்கு தாமே
      மானசீகமான பல புதிய மூட பக்திகளும் பொ பிசாசுகளும் உற்பத்தி செய்து கொண்டு
      ஓயாமல் அவற்றுடன் போராடி கொண்டிருந்தார். அதாவது அவர் இன்னும் ஜீவன் முக்தி
      அடைந்துவிடவில்லை. அடைய வேண்டிய மார்க்கத்திலிருந்தார். தாம் முக்தி
      அடைந்துவிட்டதாகவே அவர் பிறரிடம் சொல்லியது மட்டுமன்றி தம்முடைய மனத்துக்குள்ளும்
      அவ்வாறே நிச்சயப்படுத்தி கொண்டுவிட்டார்.
      விசாலாட்சி தம் வீட்டுக்கு வந்த தினத்திற்கு மூன்று நாட்களின் பின்பு ஒரு மாலையில்
      நிலவு தோன்றும் பருவத்தில் மிட்டாய்கடை சங்கரய்யர் தமது வீட்டு மேடையில் அழகிய நிலா
      முற்றத்தில் நான்கு நாற்காலிகள் போட்டு நடுவே மேஜையின் மீது பட்சணங்கள் தேநீர்
      வெற்றிலை பாக்கு பூங்கொத்துக்கள் முதலியன தயார் செய்து வைத்தார். சங்கரய்யரும்
      காசியிலிருந்து வந்திருக்கும் பால சந்நியாசியும் சங்கரய்யருடைய மனைவி
      பிச்சுவும் விசாலாட்சியும் நால்வரும் அந்த நான்கு நாற்காலிகள் மீதிருந்து கொண்டு
      சிற்றுண்டியுண்ண தொடங்கினர். குழந்தை சந்திரிகை கீழே படுத்து உறங்கிவிட்டாள்.
      அவளுக்கு காவலா கிழ இடைச்சி ஒரு வேலைக்காரி படுத்திருந்தாள்.
      நேர்த்தியான நிலவிலே மிட்டாய்க்கடை சங்கரய்யர் வீட்டு மேடையில் அந்நால்வரும் பல
      வகையான இனிய பண்டங்களை மெல்ல எடுத்துண்டு கொண்டிருக்கையிலே
      காசியிலிருந்து வந்த பால சந்நியாசிக்கும் வேதாந்த விஷயமான சம்பாஷணை தொடங்கிற்று.
      சங்கரய்யர் வேதாந்த கிறுக்குடையவர். அதனாலேதான் அவர் இந்த சந்நியாசியை கண்டு
      பிடித்தவுடனே பரம குருவாக பாவித்து தம் வீட்டுக்கழைத்து வந்து தம்முடனேயே சில
      தினங்கள் தங்கியிருக்கும்படி கேட்டு கொண்டார். சந்நியாசியின் பெயர் நித்யானந்தர்.
      அவருக்கு வயது இருபத்தெட்டுக்கு மேலிராது. மகா சுந்தரரூபி. வடிவெடுத்த
      மன்மதனை போன்றவர். அவரை கண்ட மாத்திரத்திலேயே நமது விசாலாட்சி அவர்மீது அடங்காத
      மையல் கொண்டுவிட்டாள். சந்நியாசியும் அங்ஙனமே விசாலாட்சியின் மீது பெருமையல்
      பூண்டார். சந்நியாசி மையல் கொள்ளுதல் பொருந்துமோ என்று நீங்கள் கேட்பீர்களாயின் அது
      சரியான கேள்வியன்று. மன்மதனுடைய பாணங்கள் யாரை தான் வெல்லமாட்டா
      காற்றையும் நீரையும் இலையையும் புசித்து வந்த விசுவாமித்திரன் முதலிய மகரிஷிகள்
      கூட மன்மதனுடைய அம்புகளை எதிர்த்து நிற்க வலிமையற்றோராயினர் என்று பர்த்ருஹரி
      சொல்லுகிறார். எட்டயாபுரம் கடிகை முத்து புலவர் தம்முடைய நூல்களுளன்றில் மன்மதனை
      எல்லா கடவுளரிலும் வலிமை கொண்ட பெரிய கடவுளா கூறுகிறார். பார்வதியை மறந்து
      தவம் செய்து கொண்டிருந்த சிவபிரான் மீது மன்மதன் அம்புகள் போட்டபோது அவர் கோபங்
      கொண்டு மன்மதனை எரித்தாரேயன்றி அவன் அம்புகளின் திறமையை விழலாக்கி மறுபடி யோகம்
      பண்ண தொடங்கினாரோ அன்று அவர் காமனம்புகளுக்கு தோற்று ஜகன்மாதாவை மணம்
      புரிந்துகொள்ள திருவுளங் கொண்டருளினார். மேலும் மன்மதன் மகாவிஷ்ணுவின் குமாரன்
      பிரம்மாவுக்கு சகோதரன். அவனே பிரம்மா. அவனாலே படைப்பு தொழில் தோன்றுதல்
      ப்ரத்ய‡மன்றோ
      நித்யானந்த பால சந்நியாசி ரிக்வேத முழுதையும் ஸாயன பாஷ்யத்துடன் படித்தவர்.
      உபநிஷத்துக்களில் முக்கியமான தசோபநிஷத்துக்களை சங்கர பாஷ்யத்துடன் கற்றுணர்ந்தவர்.
      மற்றும் எண்ணற்ற அத்வைத நூல்களிலும் விசிஷ்டாத்வைத தர்க்கம் மீமாம்ஸை
      ஸாங்க்யம் முதலிய சாஸ்திரங்களிலும் புராண இதிகாசங்களிலும் காவியங்களிலும்
      நாடகங்களிலும் அபாரமான பயிற்சியுடைமையால் இந்து மதத்துக்கும்
      நாகரீகத்துக்கும் தக்க பிரதிநிதியா கருதத்தக்கவர்.
      தவிரவும் இந்தி வங்காளி மஹாராஷ்ட்ரம் தெலுங்கு தமிழ் இங்கிலீஷ் இந்த ஆறு
      பாஷைகளிலும் மிக உயர்ந்த தேர்ச்சி கொண்டவராய் இவற்றில் எழுதப்பட்ட மிக சிறந்த
      சாஸ்திரங்களையும் காவியங்களையும் நன்கு பயின்று சிறந்த அறிவு தெளிவு படைத்தவர்.
      எனவே இவர் சொல்லும் வேதாந்தம் வெறுமை வா பேச்சு மாத்திரமன்று. உள்ளத்தில் பலவித
      ஆராய்ச்சிகளாலும் உயர்ந்த கேள்விகளாலும் தெளிந்த வாதங்களாலும் நன்றாக அழுந்தி
      கிடந்த கொள்கை. இவருக்கு ஜீவன்முக்தி பதம் ஏற்படுவதற்கு ஸ்திரீயில்லாத குறைதான் ஒரு
      பெரு தடையாக நின்றது. ஏனெனில் பொருளில்லாவிடினும் கல்வியில்லாவிடினும் ஒருவன்
      ஜீவன் முக்தி பதமெய்தலாம். ஆனால் காதல் விஷயத்தில் வெற்றி பெறாதவன் முக்தியடைந்து
      இவ்வுலகில் வாழ்வது மிகவும் சிரமம் என்று தோன்றுகிறது.
      பௌத்த மதத்தின் மேம்பாட்டினாலே தான் ஆரம்பத்தில் பெண்ணுடன் கூடிவாழும் வாழ்க்கையை
      விட்டு முக்தி தேட புகும் வழக்கம் இந்நாட்டிலும் உலகத்திலும் ஊர்ஜிதப்பட்டதென்று
      நினைக்க ஹேது இருக்கிறது பூர்வீக வேதரிஷிகள் எல்லோரும் பத்தினிகளுடன் வாழ்ந்ததாகவே
      முன்னூல்கள் சொல்லுகின்றன. பௌத்த மதத்திலிருந்து தான் இந்து மதமும் பிற மதங்களும்
      ஒரேயடியாக உலகத்தை துறந்து விடுவதாகிய நித்ய சந்நியாச முறையை
      கைக்கொண்டனவென்று கருதுகிறேன். வேதரிஷிகள் மோட்சத்துக்கு சாதனமாக செய்த
      வேள்வியிலெல்லாம் அவர்களுடன் மனைவியிருமிருத்தல் அவசியமா கருதப்பட்டது. பூர்வ
      விஷயங்கள் எங்ஙனமாயினும் இல்லறமல்லது நல்லறமன்று என்னும் ஔவை வாக்கியத்தையே நான்
      பிரமாணமா கொண்டிருக்கிறேன். காதல் தவறான வழிகளில் செல்லும்போதும்
      உண்மையினின்றும் நழுவும் போதும் மாத்திரமே அது இவ்வுலகத்தில் பெருந்துன்பங்களுக்கு
      ஹேதுவாகிறது. உண்மையான காதல் ஜீவன்முக்திக்கு பெரிய சாதனமாகும்.
      காதலின் பாதை மிகவும் கரடுமுரடானது என்று ஷேக்ஸ்பியர் என்ற ஆங்கில கவியரசர்
      சொல்லுகிறார். அந்த கரடுமுரடான பாதையிலே ஒருவன் சிறிது தூரம் மன
      தளர்ச்சியில்லாமலும் பாவ நெறியில் நழுவி செல்லாமலும் உண்மையுடன் செல்வானாயின்
      இன்பத்தை சுத்த நிலையில் காணலாம். இவ்வுலக இன்பங்கள் சாசுவதமில்லையென்றும் கணத்திலே
      தோன்றி மறைவன என்றும் சொல்வோர் சித்தத்தில் உறுதியில்லாதவர்கள். இவ்வுலக இன்பங்கள்
      எண்ண தொலையாதன. இவ்வுலகத்தின் காட்சியே முதலாவது பெரும் பேரின்பம். சூரியனும்
      வெயிலும் பட்சிகளும் இனிய தோற்றமுடைய மிருகங்களும் சோலைகளும் மலைகளும்
      நதிகளும் காடுகளும் அருவிகளும் ஊற்றுக்களும் வானவெளியும் வானமூடியும்
      சந்திரனும் நிலவும் நட்சத்திரங்களும் பார்க்க பார்க்க தெரிவிட்டாத ஆனந்த தருவன.
      ஏழை மானிடரே இவையெல்லாம் சாசுவதமல்லவா கணந்தோறும் தோன்றி மறையும் இயல்பு
      கொண்டனவா தனித்தனி மரங்கள் மறையும். ஆனால் உலகத்தில் காடுகளில்லாமல் போகாது.
      தனிப்பட்சிகளும் மிருகங்களும் மறையும். ஆனால் மிரு கூட்டமும் பட்சி ஜாதியும்
      எப்போதும் மறையாது. இவற்றின் நிலைமை இங்ஙனமாக மலை கடல் வானம் இடைவெளி
      சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் இவை எப்போதும் மாறுவனவல்ல. எப்போதோ
      யுகாந்தரங்களில் இவையும் மாற கூடுமென்று சாஸ்திரிகள் ஊகத்தாலே சொல்லுகிறார்கள்.
      ஆனால் அந்த ஊகவாதத்தை பற்றி நாம் இப்போது கவனிக்கவேண்டிய அவசியமில்லை. இன்னும்
      எத்தனையோ கோடி வருஷங்களுக்கு பிறகு இவை ஒரு வேளை அழியக்கூடுமென்று அந்த
      சாஸ்திரிகள் சொல்லுமிடத்தே நாம் அவற்றை நித்ய வஸ்துக்களாக போற்றுதல் தவறாகாது.
      இது நிற்க.
      இன்னும் உலகத்தில் மனிதனுக்கு நெடுங்கால இன்பங்கள் வெறெத்தனையோ இருக்கின்றன. நேராக
      உண்டு வந்தால் அதாவது பசியறிந்து உண்பதென்று விரதங் கொண்டால் மனிதருக்கு
      உணவின்பம் எப்போதும் தெவிட்டாது. நோயின்றி இருந்தால் ஸ்நானத்தின் இன்பம் என்றும்
      தெவிட்டாது. இன்னும் நட்பு கல்வி சங்கீதம் முதலிய கலைகள்
      தெவிட்டாத இன்பங்கள் இவ்வுலகத்தில் மனிதருக்கு எண்ணின்றி நிறைந்து கிடக்கின்றன.
      இப்படியிருக்க இவ்வுலக இன்பங்கள் கணத்தில் தோன்றி மறையும் இயல்புடையன என்றும்
      நீர்மேற் குமிழிகளத்தன என்றும் சொல்வோர் அறிவில்லாதோர் சோம்பேறிகள்
      நெஞ்சுறுதியில்லாதோர்.
      இன்பமயமான இவ்வுலகத்தில் காணப்படும் எல்லா இன்பங்களை காட்டிலும் காதலின்பமே சாலவுஞ்
      சிறந்தது. அதில் உண்மையும் உறுதியுங் கொண்டு நின்றால் அது எப்போதும் தவறாததோர்
      இன்ப உற்றாகி மனித வாழ்வை அமர வாழ்வுக்கு நிகராக புரிந்துவிடும். மாறுதலின்றி
      காதல் செய்து வருதலாகிய வழக்கம் மனிதருக்குள் ஏற்படுமாயின் அவர்கள் காதலின்பம்
      எத்துணை சிறந்ததென்பதையும் எத்தகைய பயன்கள் தருவதென்பதையும் தாமே எளிதில்
      உணர்ந்துகொள்ள வல்லோராவர்.
      இங்ஙனம் ஆலோசனை புரிந்து நித்யானந்தர் என்ற பால சந்நியாசி தாம் விசாலாட்சி மீது
      காதல் கொண்டது தவறில்லையென்று தீர்மானித்து கொண்டார். ஒரு நாள் மாலையில்
      நித்யானந்தரும் விசாலாட்சியும் மிட்டாய் கடை சங்கரய்யர் வீட்டு மேடையில் தனியே
      சந்தித்தார்கள். அவ்விருவருள் நெடுநேரம் சம்பாஷணை நடந்தது. தாம் சந்நியாசத்தை விட்டு
      நீங்கி லௌகிக வாழ்க்கையில் புகுந்த விசாலாட்சியை மணம் புரிந்து கொள்ள
      நிச்சயித்ததற்குள்ள காரணங்களையெல்லாம் அவர் விசாலாட்சியிடம் விரிவாக
      எடுத்துரைத்தார். அவளும் அக்காரணங்கள் நியாயமானவையேயென்று மிகவும் சுலபமாக
      அங்கீகாரம் செய்துகொண்டாள். கதையை வளர்த்து பிரயோஜனமென்ன அவ்விருவரும் சந்திரிகை
      சகிதமாக உடனே புறப்பட்டு எழும்பூரில் வீரேசலிங்கம் பந்துலு இருந்த வீட்டுக்கு
      சென்றார்கள். அங்கு போகுமுன்னாகவே நித்யானந்தர் தம்முடைய காவியுடையை கழற்றி
      எறிந்துவிட்டு வெள்ளை வேஷ்டியும் நேர்த்தியான சட்டையும் பஞ்சாபி தலைப்பாகையும்
      அணிந்து கொண்டார். இந்த லௌகிக ரூபத்தில் சுவாமிகளை பார்த்தால் நேபாளத்து ராஜா
      மகனை போலிருக்கிறது என்று சங்கரய்யர் சொன்னார். இன்னும் என்னை சுவாமிகளென்று
      சொல்லாதேயுங்கள். சந்நியாச கோலத்தையும் தொலைத்தேன் பழைய நித்தியானந்தனென்ற
      பெயரைக்கூட தொலைத்து விட்டேன். இனிமேல் எனது பிரிய காந்தையாகிய விசாலாட்சியின்
      பெயருக்கேற்ப விசுவநாத சர்மா என்று பெயர் வைத்துக்கொள்வேன் என்றார். எனவே நானும்
      இக்கதையில் இவருக்கு நித்யானந்தர் என்ற பெயரை நீக்கி விசுவநாத சர்மா
      வழங்கி வருதல் அவசியமாகிறது.
      விசுவநாத சர்மாவை இந்த லௌகிக வேஷத்தில் பார்த்த மாத்திரத்திலே விசாலாட்சிக்கு
      ஏற்கெனவே அவர் மீதேற்பட்டிருந்த கண் தலை தெரியாத காதல் முன்னிலும் ஆயிர மடங்கு
      அதிகமாய் அவளை வெறிகொண்டவள் போலாக்கிவிட்டது.
      இவ்விருவரும் வீரேசலிங்கம் பந்துலுவிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தவுடனே
      விசாலாட்சி பந்துலுவிடத்திலும் அவர் மனைவியிடத்திலும் தன்னை விசுவநாத சர்மா மணம்
      செய்துகொள்ள இணங்கிய செய்தியையும் அவ்வாறு இணங்கும்படி நேர்ந்த பூர்வ
      விருத்தாந்தங்களையும் எடுத்து விஸ்தாரமாக சொன்னாள். வீரேசலிங்கம் பந்துலுவுக்கு
      அளவிறந்த மகிழ்ச்சியுண்டாய்விட்டது. ஏற்கெனவே இவ்விஷயத்தில் அவர் பல இடங்கில்
      முயற்சிசெய்து பார்த்து வெற்றிபெற வழியில்லாமல் திகைத்து கொண்டிருந்தார். இப்போது
      அவருடைய முயற்சியில்லாமலே தமது விருப்பம் நிறைவேறி விட்டமை கண்டு அவருக்கு
      அத்தனை பூரிப்புண்டாயிற்று.
      எல்லாம் தெய்வ செயல். நாமொன்று நினைக்க தெய்வமொன்று செய்கிறது என்று சொல்லி
      அவர் மனமார கடவுளை போற்றி தொழுதார். பிறகு விசுவநாத சர்மாவையும்
      விசாலாட்சியையும் பிரம சமாஜத்தில் சேர்த்தார். கோபாலய்யங்காருடைய விவாகம் நடந்து
      இரண்டு வாரத்துக்குள் மறுபடி சென்னை பிரம சமாஜ ஆலயத்திலேயே அந்த
      விதிகளின்படி விசாலாட்சிக்கும் விசுவநாத சர்மாவுக்கும் விவாகம் நடந்தேறிற்று.
      விவாகம் நடந்த ஒரு வாரத்துக்குள் மிட்டாய்க்கடை சங்கரய்யரின் முயற்சியாலும் வேறு சில
      நண்பர்கள் முயற்சியாலும் நமது விசுவநாத சர்மாவுக்கு ஒரு உத்தியோகம் ஏற்பட்டது.
      தங்கசாலை தெருவிலே மூன்று நான்கு குஜராத்தி ல‡ பிரபுக்களின் பிள்ளைகளுக்கு
      இந்தி சமஸ்கிருதம் இங்கிலீஷ் மூன்று இராப்பாடம் சொல்லி வைக்க வேண்டியது. இதற்காக
      அவருக்கு அறுபது ரூபாய் மாதந்தோறும் சம்பளம் கிடைத்தது. சங்கரய்யர் வீட்டுக்கு
      சமீபத்தில் இரண்டு மனைகளுக்கப்பால் ஒரு வீடு காலியாக இருந்தது. சிறிய
      இரண்டு மூன்று அறைகள். உயர்ந்த மாடி. அந்த வீட்டுக்கு பின் அழகான தோட்டமிருந்தது.
      அதில் ஒரு சிறிய கூரை பங்களா புதிதாக தயார் பண்ணி நாற்காலி
      புத்தகங்கள் பிள்ளைகள் வந்தால் உட்காருவதற்கு நாற்காற் பலகைகள் முதலியன வாங்கி
      வைப்பதற்குரிய செலவெல்லாம் சங்கரய்யர் செய்தார். அந்த வீட்டில் புதிதாக விவாகமான
      தம்பதிகளை சங்கரய்யர் குடியேற்றினார். இவருக்கு விசுவநாத சர்மாவிடம் முன்னை
      காட்டிலும் நூறு பங்கு அதிக பக்தி ஏற்பட்டது. சில மாதங்கள் கழிந்த பிறகு
      மேற்கூறிய குஜராத்தி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் வரும்படி கிடைக்க
      தொடங்கிற்று. ஆரம்பத்தில் அவர் சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலீஷ் தமிழ
      பத்திரிகைகளுக்கு வியாஸங்களும் தலையங்கங்களும் எழுதி சாஸ்திர விஷயங்களை போலவே
      லௌகிக விஷயங்களிலும் பயிற்சியால் உயர்ந்த ஞானமேற்படுத்தி கொண்டார். எழுதும்
      திறமையிலோ இங்கிலீஷிலும் தமிழிலும் அவருக்கு சமமான தொழிலாளி இந்த
      தேசத்திலேயே குறைவென்று கூறலாம். அதனால் பத்திராதிபர்கள் அவரெழுதும் வியாஸங்களை
      மிகவும் ஆவலுடன் ஏற்று கொண்டு தக்க சம்பளம் கொடுக்க தொடங்கினார்கள். இங்கு கொஞ்சம்
      கை தேறியவுடனே அவர் தக்க மனிதர்களுடைய சிபார்சால் பம்பாய் கல்கத்தா முதலிய வெளி
      நகரங்களில் பிரசுரமாகும் உள்நாட்டு பத்தரிகைகளுக்கும் இங்கிலாந்து
      அமெரிக்காவிலுள்ள பத்திரிகைகளுக்கும் விஷயதானம் செய்யும் பதவி பெற்றார்.
      இதிலெல்லாம் அவருக்கு மாதந்தோறும் ஐந்நூறு ரூபாய்க்கு குறையாத வரும்படி வர
      தொடங்கிற்று. அவர் தீராத உழைப்பாளியாய்விட்டார்.
      அவருடைய முகத்தில் முன்னிருந்த கவலை குறிகளெல்லாம் நீங்கி போய்விட்டன. எப்போதும்
      அவர் முகத்தில் சந்தோஷமும் திருப்தியும் நிலவலாயின. விசாலாட்சியோ முன்னிருந்த
      அழகை காட்டிலும் முந்நூறு பங்கு அதிக அழகு படைத்து விட்டாள். அவர்கள் வீட்டிற்கு
      ஒரு பசு வாங்கினார்கள். அந்த பசுவை கறக்கவும் குழந்தைக்கு பொழுது போகவும்
      மற்றபடி வீடு வாயில் பெருக்குதல் பாத்திர தேய்த்தல் முதலிய தொழில்கள் செய்யவும்
      விசாலாட்சி மிகவும் புத்தியும் அனுபவமும் உண்மையும் உழைப்புமுடைய வேளாள
      கிழவியருத்தியை நியமனம் செய்து அவளுக்கு வீட்டிலேயே போஜனமும் மாதம் எட்டு ரூபாய்
      சம்பளமும் ஏற்படுத்தினாள். இவர்களுடைய வீட்டு செலவெல்லாம் நூறு ரூபாய்க்கு
      மேலாகாது. எனவே மாதந்தோறும் நானூறு ரூபாய்க்கு குறையாமல் விசுவநாத சர்மா
      ஒரு பெரிய நாணயமுடைய குஜராத்தி வியாபாரியிடம் வட்டிக்கு கொடுத்துவர
      தொடங்கினார். சிறிதுகாலத்துக்குப்பின் விசுவநாத சர்மா தமக்கு பத்திரிகை
      தொழிலிலேயே ஏராளமான திரவியம் கிடைப்பதினின்றும் பிள்ளைகளுக்கு பாடங் கற்று
      கொடுப்பதாகிய சிரமமான தொழிலை விட்டுவிட்டார். காலையில் எழுந்து கைகால் சுத்தி
      செய்து கொண்டவுடனே தினந்தோறும் அவர் தங்கசாலை தெருவினின்றும் புறப்பட்டு சென்னை
      ஹைகோர்ட்டுக்கு எதிரே கடற்கரையில் வந்து நெடுநேரம் உலாவிவிட்டு சுமார் ஒன்பது
      மணிக்கு வீட்டுக்கு திரும்புவார். வந்தவுடனே ஸ்நானம் பண்ணிவிட்டு போஜனம் செய்வார்.
      பதினோரு மணி முதல் மாலை மூன்று வரை தமது எழுத்துவேலை நடத்துவார்.
      இடைப்பகல் சிற்றுண்டியுண்டு தேயிலை நீர் குடிப்பார். அப்பால் ஒரு மணி நேரம்
      படிப்பிலும் மறுநாள் எழுதுவதற்கு வேண்டிய ஆலோசனைகளிலும் செலவிடுவார். அப்பால்
      தம்முடைய சிறு குதிரை வண்டியில் விசாலாட்சியையும் சந்திரிகையையும் ஏற்றிக்கொண்டு
      கடலோரத்தில் சவாரி விடுவார். இரவு ஏழுமணிக்கு நேரத்துக்கு வீட்டுக்கு
      திரும்புவார்கள். எட்டு மணி நேரமாகும்போது இராத்திரி போஜனம் தொடங்கும். அப்பால்
      விசாலாட்சியும் சர்மாவும் பேச்சிலும் விளையாட்டிலும் மன்மத கேளிகளிலும் பொழுது
      கழிப்பார்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு முன்பு அவர்கள் நித்திரை செ போவதே
      கிடையாது. என்னதான் பேசுவார்களோ ஏதுதான் கடவுளுக்கு
      தெரியும். ஒவ்வோரிரவும் இவ்விருவரும் பேசுவதும் சிரிப்பதும் பக்கத்து
      வீடுகளிலிருப்போருக்கெல்லாம் பெரும்பாலும் தூக்கம் வராதபடி செய்யும். ஒருவர் பேச்சு
      மற்றொருவருக்கு தேனா திரட்டு பாகா கேட கேட்க தெவிட்டாமலிருக்கும்.
      சில இரவுகளில் விசாலாட்சி ஹார்மோனியம் சுருதி போட்டுக்கொண்டு பாடுவாள். இவர்
      பாட்டின் அற்புதத்தில் மயங்கி வெறிகொண்டு விசுவநாத சர்மா தன்னை மறந்து எழுந்து
      குதிக்க தொடங்கிவிடுவார். சில சமயங்களில் இருவரும் கைகோர்த்து கொண்டு நாட்டியம்
      புரிவார்கள். வேலைக்கார கிழவியும் குழந்தையும் ஓரறைக்குள் படுத்து கொண்டு
      தூங்கி போய் விடுவார்கள். தோட்டத்திலிருந்த சிங்கார பரணில் இந்த தம்பதிகளின்
      களிகள் நடைபெறும்.
      இவ்விருவரும் ஒருவர்க்கொருவர் படைத்த காதல் மானஷிகமன்று தெய்விகம். அது
      கலியுகத்து காதலன்று கிருதயுகத்து காதல் ஒரே பெண்ணிடம் மாறாத
      செலுத்துவதாகிய ஏகபத்தினி விரதத்தில் சிறீராமபிரான் புகழ்பெற்றவன். ஆனால் அவனும்
      பத்தினியிடம் சம்சயங்கொண்டு இலங்கையிலே அவளை தீ புக செய்தான். பின்பு உலக
      பழிக்கு அஞ்சி அவளை காட்டுக்கு துரத்தினான். இவ்விதமான களங்கங்கள் கூட
      இல்லாதபடி நமது விசுவநாத சர்மா சாட்சா வைகுண்ட நாராயணனே தேவியிடம்
      செலுத்துவது போன்ற பரம பிரேமை செலுத்தினார். சிவன் பார்வதி தேவியிடம் செலுத்தும்
      பக்தி நமது விசுவநாத சர்மாவால் விசாலாட்சியிடம் செலுத்தப்பட்டது. அவளும் இப்படி
      பரம ஞானியாகிய கணவன் தன்னிடம் தேவதா விசுவாசம் செலுத்துவது கண்டு
      பூரிப்படைந்து தான் அவரை சாட்சா பகவானாகவே கருதி மகத்தான பக்தி செலுத்தி
      வந்தாள். இப்படியிருக்கையிலே விவாகம் நடந்து ஒன்றரை வருஷமாவதற்குள் விசுவநாத
      சர்மாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அவர் மிக சிறந்த ஞானியாயினும்
      யோகாப்யாஸத்தால் முக்தியடைவது சுலபமென்று கருதி மனதை பலவகைகளில் இடையறாமல்
      அடக்கி பலாத்காரஞ் செய்துகொண்டு வந்ததினின்றும் புத்தி
      எழுத்து வேலை சரியாக நடத்த முடியவில்லை. வீட்டிலேயே ஒரு நாட்டு வைத்தியர் வந்து
      பார்த்து சிகிச்சை செய்து கொண்டிருந்தார். மந்திரவாதிகளை அழைத்து பார்க்கலாம்
      என்று சங்கரய்யர் சொன்னதற்கு விசாலாட்சி அது அவசியமில்லையென்று சொல்லிவிட்டாள்.
      விசாலாட்சியின் கதி மிகவும் பரிதாபகரமாயிற்று. திடீரென்று சுவர்க்கலோகத்தில்
      இந்திர பதவியினின்று தள்ளுண்டு மண்மீது பாம்பாகி விழுந்த நஹ¤ஷன் நிலைமையை இவள்
      ஸ்திதி ஒத்ததாயிற்று.
      காதலால் மோட்சமே பெறலாமென்று விசுவநாத சர்மா சொல்லியதை இவள் மனம் பூர்த்தியாக
      நம்பி தனது அற்புத ஸௌந்தர்யமும் ஞான தெளிவுமுடைய அக்கணவனை ஒருங்கே
      மன்மதனாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் கருதி போற்றிவந்து அவனன்பினால்
      ஆனந்தபரவசமெய்தியிருந்தாள். அவனுக்கு இந்த கொடிய நோய் நேர்ந்ததை கண்டு துன்ப
      கடலில் அமிழ்ந்தி போய்விட்டாள். இடையிடையே விசுவநாத சர்மாவுக்கு புத்தி தெளியும்
      நேரங்களும் வருவதுண்டு. அப்போது அவர் விசாலாட்சியை அழைத்து தன் அருகில்
      இருத்தி கொண்டு- கண்ணே நீ எதற்கும்
      கவலைப்படாதிருத்தலே முக்தி. கவலைப்படாதிருந்தால் இவ்வுலகத்தில் எந்த நோயும்
      வாராது. எவ்வித ஆபத்தும் நேராது. தவறி நோய் அல்லது
      நேர்ந்த போதிலும் ஒருவன் அவற்றுக்கு கவலையுறுவதை விட்டு விடுவானாயின் அவை
      தாமே விலகி போய்விடும். கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம். பயமும் துயரமும்
      கவலையும் இல்லாதிருந்தால் இவ்வுலகத்தில் எக்காலமும் சாகாமல் வாழலாம். நான் என்னை
      மீறி சில பயங்களில் ஆழ்ந்து விட்டேன். அதனாலேதான் எனக்கு இந்த நோய் வந்திருக்கிறது.
      இது இன்னும் சிறிது காலத்துக்குள் நீங்கி போய்விடும். நமக்கோ பணத்தை பற்றிய
      விசாரமில்லை. நான் மூன்று வருஷம் எழுதாமலும் ஒரு காசுகூட சம்பாதிக்காமலும்
      இருந்த போதிலும் குஜராத்தியாளிடம் போட்டிருக்கும் பணத்தை வாங்கி சம்பிரமமாக
      சாப்பிடலாம். என்னை பற்றிய விசாரங்களுக்கும் உன் மனத்தில் இடங்கொடாதே.
      இடுக்கண் வந்துற்றகாலை எரிகின்ற விளக்குப்போல நடுக்க மொன்றானுமின்றி நகுக தாம்
      நக்க போதவ் விடுக்கணையரியு மெ·காம் இருந்தழு தியாவ ருய்ந்தார்
      என்று சீவகசிந்தாமணியில் திருத்தக்க தேவர் பாடியிருக்கிறார். அதாவது துன்பம்
      நேரும்போது நாம் சிறிதேனும் கலங்காமல் அதை நோக்கி நகைக்க வேண்டும். அங்ஙனம்
      நகைப்போமாயின் நமது நகைப்பே அத்துன்பத்தை வெட்டுதற்குரிய வாளாய்விடும். அவ்வாறின்றி
      வீணே உட்கார்ந்து துயரப்படுவதனால் மனிதருக்கு உய்வு நேராது நாசமே எய்தும். இந்த
      உபதேசத்தை நீ ஒரு போதும் மறக்காதே.என் கண்ணே என் உயிரே விசாலாட்சி
      நேர்ந்தாலும் மனத்தை தளரவிடாதே. நீ எக்காலமும் எவ்வித நோயுங் கவலையுமின்றி
      வாழவேண்டுமென்பதே என் முக்கிய விருப்பம். உன் மனம் நோக நான் பார்த்து சகிக்க
      மாட்டேன் என்று பலபல சொல்லி மனைவியை சமாதானப்படுத்த முயல்வார். ஆனால் இவர்
      இங்ஙனம் பேசி கொண்டிருக்கையிலேயே விசாலாட்சியின் கண்களில் ஜலம் தாரை தாரையா
      கொட்ட தொடங்கிவிடும். அவள் கோவென்றழுது விம்முவாள். இதை கேட்ட விசுவநாத
      சர்மாவும் ஓலமிட்டழ தொடங்குவார். இப்படி இவர்களிருவரும் கூடி
      பெருங்குரலிட்டழுது கொண்டிருக்கையில் ஒரு சமயம் வைத்தியர் வந்துவிட்டார். இந்த
      கோலத்தை பார்த்து வைத்தியர் விசாலாட்சியை காண்பதினின்று நேரும் துக்கத்தால்
      சர்மாவின் நோய் மிகுதிப்படுமென்றும் ஆதலால் இனிமேல் விசாலாட்சி தன் கணவனை
      அடிக்கடி தனியாக சந்திக்கக்கூடாதென்றும் அப்படியே சந்தித்த போதிலும் சில
      நிமிஷங்களுக்கு மேலே அவருடன் தங்கியிரு கூடாதென்றும் எப்போதுமே அவர் தன்னிடம்
      அதிகமாக பேச இடங்கொடு கூடாதென்றும் அவளிடம் தெரிவித்தார். அவளும்
      எவ்விதத்தாலும் தன்னால் தன் கணவனுக்கு அதி கஷ்டம் நேரலாகாதென்ற நோக்கத்துடன்
      ஆகாரம் போடும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் சர்மாவை அடிக்கடி பார்க்காமலும்
      அவருடன் அதிகமாக பேசாமலும் ஒதுங்கியே காலங் கழித்து வந்தாள். ஆனால் இதனின்று
      விசுவநாத சர்மாவின் துயரமும் மனக்கலக்கமும் அதிகப்பட்டனவேயன்றி குறைவு படவில்லை.
      தம்மை விசாலாட்சி புறக்கணிக்கிறாளென்று சர்மா எண்ணவில்லை. அவர் அப்படி
      எண்ணக்கூடியவருமல்லர். ஆனால் தனது தேக நிலையை கருதி அவள் மிகவும்
      மனத்தளர்ச்சியும் துக்கமுமெய்தி அதுபற்றியே தோட்டத்து பங்களாவுக்கு அவள் அடிக்கடி
      வந்து தன்னை பார்க்காமலும் அதிகமாக தன்னிடம் வார்த்தையாடாமலுமிருக்கிறாள் என்று
      அவர் நினைத்து கொண்டார்.
      இங்கு வியாதிகளின் சம்பந்தமாக ஒரு சிறு கதை சொல்லுகிறேன். வாந்தி பேதி
      பிசாசு முன்னொரு காலத்தில் இந்தியாவிலிருந்து புறப்பட்டு அரேபியாவிலுள்ள மக்க
      நகரத்துக்கு போ கொண்டிருந்ததாம். போகும் வழியில் பாரஸீகத்தில் பெரிய தபஸ்வியும்
      ஞானியுமாகிய ஒரு மஹமதி பக்கிரி அந்த பேயை கண்டு எங்கே போகிறாய் என்று
      கேட்டார். அது கேட்டு வாந்தி பேதி சொல்லுகிறது- மக்க நகரத்தில் இப்போது வருஷ
      திருவிழா தொடங்கியிருக்கிறது. நானா திசைகளினின்றும் எண்ணற்ற ஜனங்கள்
      திருவிழாவுக்காக அங்கு வந்து கூடியிருப்பார்கள். அவர்களை வேட்டையாடும் பொருட்டு
      மக்கட்த்துக்கு போகிறேன் என்றது.
      அது கேட்டு அந்த சந்நியாசி- சிச்சீ மூர்க்க பிசாசே மக்கத்தில் அல்லாவை
      தொழும் பொருட்டு நல்ல பக்தர்கள் வந்து திரண்டிருப்பார்கள். அவர்களை நீ போ
      நான் இடங் கொடுக்கமாட்டேன் என்றார்.
      அதற்கு வாந்திபேதி பேய் சொல்லுகிறது- சுவாமியாரே என்னையும் அல்லா தான்
      படைத்து மனித உயிர்களை வாரிக்கொண்டு போகும் தொழிலுக்கு நியமனம் செய்திருக்கிறார்.
      உலகத்தில் நடக்கும் எல்லா காரியங்களும் அல்லாவின் செயல்களேயன்றி மற்றில்லை.
      அவனின்றியோர் அணுவுமசையாது. ஆதலால் எனது போக்கை தடுக்க உம்மால் முடியாது.
      முடியுமெனிலும் நீர் அதனை செய்தல் நியாயமன்று. மேலும் மக்கத்துக்கு வந்திருப்போர்
      அத்தனை பேருமே புண்யாத்மாக்களென்றும் தர்மிஷ்டர்களென்றும் உண்மையான பக்தர்களென்றும்
      நினைத்து விடக்கூடாது. எத்தனையோ பாவிகளும் அதர்மிஷ்டரும் கொரான் விதிகளை மீறி
      நடப்போரும் அங்கு வந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. தவிரவும் புண்யாத்மாக்களுக்கு
      இவ்வுலகில் சாவு கிடையாதென்று அல்லா விதிக்கவில்லை. பாவிகள் மாத்திரமேயன்றி
      புண்யவான்களும் சாகத்தான் செய்கிறார்கள். வேறு நோய்களால் நெடுங்காலம் வருந்தி
      வருந்தி துடித்து துடித்து சாவதை காட்டிலும் என்னால் துரிதமான மரணமெய்துதல்
      மனிதருக்கு நன்றேயன்றி தீங்காகாது. ஆதலால் எப்படி யோசித்த போதிலும் நான் சொல்வதை
      நீர் தடுக்க முயலுதல் பொருந்தாது. எனிலும் மகானாகிய உம்முடைய மனதுக்கு சற்றே
      திருப்தி விளைவிக்க தக்கதாகிய வார்த்தையன்று சொல்லுகிறேன். அதாவது நீர் அங்கு
      இத்தனை பேரைத்தான் கொல்லலாமென்று தொகை குறிப்பிட்டு கட்டளையிடும். அந தொகைக்கு
      மேலே நான் ஒற்றை உயிரைக்கூட கொல்வதில்லையென்று பிரதிக்கினை செய்து
      கொடுக்கிறேன் என்றது.
      இங்ஙனம் வாந்தி பேதி பேய் சொல்லியதை கேட்ட முனிவர்-சரி போ. அங்கு அநேக
      லட்சகணக்கான ஜனங்கள் திரண்டிருப்பார்கள். அவர்களில் நீ ஒரே ஓராயிரம் பேரை தான்
      கொல்லலாம். அதற்கு மேல் ஓருயிரைக்கூட தீண்டலாகாது. ஜாக்கிரதை போய் வா என்றார்.
      நல்லதென்று சொல்லி பேய் பக்கிரியிடம் விடைபெற்று கொண்டு மக்கத்துக்கு போயிற்று.
      அப்பால் சில தினங்கள் கழிந்தபின் அந திருவிழாவுக்கு வந்தவர்களில் லட்சம் பேர்
      வாந்தி பேதியால் இறந்து போயினரென்ற செய்தி பக்கரியின் செவிக்கெட்டிற்று. அவர் தம்மை
      வாந்தி பேதி பேய் வஞ்சித்து விட்டதா கருதி மிகவும் கோபத்துடனும்
      மனவருத்தத்துடனுமிருந்தார். மறுநாள் வாந்தி பேதி பேய் அந்த வழியாகவே
      மக்கத்தினின்றும் இந்தியாவுக்கு மீள யாத்திரை செய்து கொண்டிருக்கையில் அந்த
      பக்கிரியை கண்டு வணங்கிற்று. பக்கிரி பெருஞ் சினத்துடன் அப்பேயை நோக்கி-
      துஷ்ட பேயே பொய் சொல்லிய நாயே என்னிடம் ஆயிரம் பேருக்கு மேலே
      கொல்வதில்லையென்று வாக்குறுதி செய்து கொடுத்துவிட்டு அங்கு மக்கத்திலே போய் லட்சம்
      ஜனங்களை அழித்து விட்டனையாமே உனக்கு என்ன தண்டனை விதிக்கலாம் என்றார்.
      இதை கேட்டு வாந்தி பேதி பேய் கலகலவென்று சிரித்தது. அது சொல்லுகிறது-
      கேளீர் முனிசிரேஷ்டரே நான் உமக்கு கொடுத்த வாக்குறுதி தவறாதபடியே ஆயிரம்
      பேருக்குமேல் ஓருயிரைகூட தீண்டவில்லை. ஆயிரம் பேரே என்னால் மாண்டவர். மற்றவர்கள்
      தமக்கு தாமே பயத்தால் வாந்தியும் கழிச்சலும் வருவித்து கொண்டு மாய்ந்தனர். அதற்கு
      நான் என்ன செய்வேன் என் மீது பிழை சொல்லுதல் தகுமோ என்றது.
      அப்போது முனிவர் பெருமூச்சு விட்டு- ஆகா ஏழை மனித ஜாதியே பயத்தாலும்
      சம்சயத்தாலும் உன்னை நீயே ஓயாமல் கொலை செய்துகொண்டிருக்கிறாயே உன்னுடைய இந்த மகா
      மூடத்தன்மை கொண்ட மதியையும் இம் மதியை உன்னிடத்தே தூண்டிவிடும் மகா பயங்கரமான
      விதியையும் நினைக்கும்போதே என் நெஞ்சம் கலங்குகிறதே நான்
      செய்வேன் நான் என் செய்வேன்சு நம்மால் என்ன செய்ய முடியும் அல்லா ஹோ அக்பர்.
      அல்லா மஹான். அவருடைய திருவுளப்படி எல்லாம் நடைபெறுகிறது. அவர் திருவடிகள்
      வெல்லுக என்று சொல்லி முழங்கால் படியிட்டு வானத்தை நோக்கியவராய் அல்லாவை
      கருதி தியானம் செ தொடங்கினார். பேயும் அவரிடம் விடை பெற்று கொண்டு போய்
      விட்டது.
      இந்த மாதிரியாக நான் ஒரு கதை வாசித்திருக்கிறேன். நோய்க்கு முக்கியமான காரணம்
      ஜீவர்களின் மனதில் தோன்றும் பயம் கவலை கோபம் சம்சயம் பொறாமை வெறுப்பு
      அதிருப்தி முதலிய விஷகுணங்களேயாமென்பது இந்த கதையின் பொருள். இதை நான்
      அங்கீகரிக்கிறேன். உள்ளத்திலே தோன்றும் அச்சம் முதலியனவே நோய்களை பிறப்பிக்கின்றன
      என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அங்ஙனம் பிறக்கும் நோய்களை நன்கு போஷணை செய்து
      வளர்ப்பதும் அதினின்றும் மரணத்தின் வரவை மிகவும் எளிதாக்கி தருவதுமாகிய
      தொழில்கள் பெரும்பாலும் வைத்தியர்களாலேயே செய்யப்படுகின்றன என்று தோன்றுகிறது.
      ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழி முற்றிலும் உண்மையெனவே நான்
      நினைக்கிறேன்.
      இதினின்றும் வைத்திய சாஸ்திரம் பொய்யென்றாவது வைத்தியர்களெல்லாருமே தமது
      சாஸ்த்திரத்தை நன்று கற்றுணராத போலி வேஷதாரிகளென்றாவது மனமறிந்த
      அயோக்யர்-களென்றாவது வேண்டுமென்று மனிதனை கொல்லுகிறார்களென்றாவது நான் சொல்ல
      விரும்புவதாக யாரும் நினைத்து விடலாகாது.
      வைத்திய சாஸ்திரத்தில் எத்தனையோ கண்கண்ட பயன்களிருப்பதை நான் அறிவேன்.
      வைத்தியர்களிலே பலர் தமது சாஸ்திரத்தில் உண்மையான உயர்ந்த தேர்ச்சியுடையோராகவும்
      ஜீவகாருண்யத்தில் சிறந்த மகான்களாகவும் இருப்பதை நான் அறிவேன். ஆனாலும் வியாதிகள்
      பல்குவதற்கும் மரணம் இங்ஙனம் மனிதரை பூச்சிகளிலுங் கடையாக வாரிக்கொண்டு
      போவதற்கும் உலகத்து வைத்தியர்கள் பெரும்பாலும் ஹேதுவாகிறார்களென்ற என் கொள்கை
      தவறானதன்று. ஒன்றுக்கொன்று விரோதமாக தோன்றும் இவ்விரண்டு கொள்கைகளும் எங்ஙனம்
      ஏககாலத்தில் உண்மையாகுமென்பதை தெரிவிக்கிறேன்.
      ஆனால் ஏற்கெனவே இந்த அத்தியாயம் மிக நீண்டு போய்விட்டது. நம்முடைய கதையின் போக்கோ
      சிறிது நேரம் விசாலாட்சியையும் விசுவநாத சர்மாவையும் விட்டு பிரிந்து வேறு
      சிலருடைய விருத்தாந்தங்களை கூறும்படி வற்புறுத்துகின்றது. ஆதலால் வைத்தியர்
      சம்பந்தமான விவகாரத்தை பின் ஓரத்யாயத்தில் விளக்கி காட்டுகிறேன்.
      ---
      எட்டாம் அத்தியாயம்
      சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு விடுதலை
      1907-ம் வருஷம்- அதாவது விசாலாட்சியின் விவாகம் நடந்த இரண்டு
      வருஷங்களுக்கப்பால்-மே மாதத்தில் ஒரு நாள் மாலை நல்ல நிலவடித்து கொண்டிருக்கையில்
      மயிலாப்பூர் லஸ் சர வீதியில் ஹைகோர வக்கீல் சோமநாதய்யர் தம் வீட்டு மேடையில் நிலா
      முற்றத்திலே இரண்டு நாற்காலிகள் போட்டு தாமும் தம்முடைய மனைவி முத்தம்மாளும்
      உட்கார்ந்து கொண்டு அவளுடன் சம்பாஷணை செய்து கொண்டிருந்தார்.
      காபி போட்டு கொண்டு வரலாமா என்று முத்தம்மா கேட்டாள்.
      எனக்கு வேண்டியதில்லை. பகலிலே உண்ட ஆகாரம் இன்னும் என் வயிற்றில் ஜீரணமாகாமல்
      அப்படியே கிடக்கிறது. இன்றிரவு சாப்பிடலாமா உபவாசம் போட்டு விடலாமா என்று
      யோசித்து கொண்டிருக்கிறேன். இப்படியிருக்கையில் காபி குடிப்பது உடம்புக்கு
      மிகவும் கெடுதியென்று நினைக்கிறேன். உனக்கு வேண்டுமானால் காபி போட்டு கொண்டு
      வந்து குடித்து கொள் என்றார் சோமநாதய்யர்.
      எப்போது பார்த்தாலும் ஏதாவது நோய் சொல்லி கொண்டேயிருக்கிறீர்கள். அதுவும் என்னை
      கண்டால் போதும் உடனே நீங்கள் நோயழுகை அழுவதற்கு ராஜா. இன்றைக்கு என் உடம்பு
      ஸௌக்யமாக இருக்கிறது. ஒரு வியாதியுமில்லை என்று உங்கள் வாயினாலே சொல்ல
      தரங்கூட கேட்டதில்லை. என் உயிர் உள்ளவரை அந்த நல்ல வார்த்தையை நான் ஒரு தரமேனும்
      காது குளிர கேட்க போகிறேனோ அல்லது கேட்காமலே பிராணனை விட
      தெரியாது. கை உளைச்சல் கால் அங்கு வீக்கம் இங்கு குடைச்சல்
      தலைவலி அஜீர்ணம் அஜீர்ணம்-எப்போதும் இதே அழுகை கேட்டு கேட்டு
      காது புளித்து போய்விட்டது. இனிமேல் ஒரு வார்த்தை சொல்லுகிறேன். அதை
      ஜாக்கிரதையாக ஒரு பக்கத்தில் வைத்து கொண்டிருங்கள். அதாவது உங்கள் உடம்பு
      சுகமாகவும் ஆராக்கியமாகவும் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். வியாதியிருந்தால்
      எனக்கு சொல்ல வேண்டா. இந்த ஒரு தயவு எனக்கு நீங்கள் அவசியமாக செய்யவேண்டும்
      என்றாள்.
      சோமநாதய்யருக்கு கோபம் பளிச்சென்று வந்துவிட்டது. அவருக்கு முற்கோபம் அதிகம்.
      மனைவியை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்ட தொடங்கிவிட்டார். நன்றி கெட்ட நாய்
      முண்டாய் உன் பொருட்டாக நான் படும் பாடு பஞ்சு தான் படுமோ சொல்லத்தான்
      எண்ணத்தான் படுமோ நாய் போலே உழைக்கிறேன். கும்பகோணத்தில் நல்ல வரும்படி வந்து
      கொண்டிருந்தது. இங்கு வந்தது முதல் வரவு நாளுக்கு நாள் குறைவு
      பட்டுக்கொண்டேயிருக்கிறது. எனவே உனக்கும் உன் குழந்தைக்கும் சோறு துணி
      மருந்துகள் சம்பாதித்து கொடுப்பதில் எனக்கு நேரும் கஷ்டங்களும் மன வருத்தங்களும்
      கணக்கில் அடங்க மாட்டா. நான் முன்பு சேர்த்து வைத்த சொத்தையெல்லாம் விழுங்கி அதற்கு
      மேல் பதினாயிரம் ரூபாய் வரை கடன் ஏறி போயிருக்கிறது. எத்தனையோ பொய்கள் சொல்ல
      வேண்டியிருக்கிறது. ஏமாற்ற நீதி ஸ்தலத்திலே போய்
      பொய்களை சொல்வதே நமக்கு பிழைப்பாய்விட்டது. இந்த வக்கீல் தொழிலும் சரி வேசை
      தொழிலும் சரி. தர்மத்தை கெடுத்து இகத்தையும் பரத்தையும் நாசம் பண்ணிக்கொண்டு உன்
      பொருட்டாக பாடுபடுகிறேன். மேலும் ஒரு வழக்கு ஜயித்தால் பத்து வழக்குகள் தோற்று
      போகின்றன. அதில் என் மனதுக்கேற்படும் துக்கத்துக்கும் அவமானத்துக்கும் கணக்கில்லை.
      தவிரவும் இத்தொழிலோ கோர்ட்டிலேனும் கட்சிக்காரரிடமேலும் ஓயாமல் தொண்டை தண்ணீரை
      வற்றடிக்கு தொழில். அதனால் உடம்பில் அடிக்கடி சூடு மிகுதிப்பட்டு மலச்சிக்கல்
      உண்டாக்குகிறது. மலச்சிக்கலே சர்வ ரோகங்களுக்கும் ஆதாரமென்று நவீன வைத்திய சாஸ்திர
      பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். ஆதலால் உடம்பில் எப்போதும் ஓய்வின்றி ஏதேனும் வியாதி
      இருந்து கொண்டேயிருக்கிறது. இதனாலும் குழந்தைகளுக்கு உடம்புக்கேதேனும் வந்தால்
      அப்போது என் மனத்திலுண்டாகும் பெரு துயரத்தாலும் அவர்களுடம்பு நேரே இருக்க
      வேண்டும் கடவுளே என்றெண்ணி நான் எப்போதும் ஏக்கப்படுவதனாலும் தலை மயிர் நரைத்து
      போய்விட்டது. மண்டையில் வழுக்கை விழுந்துவிட்டது. உனக்காக பாடுபட்டே நான்
      கிழவனாய் விட்டேன். உன் தொல்லையாலேயே என் பிராணன் போக போகிறது. அடா தீராத
      நோயிருந்தால் எப்படி சகிப்து ஒரு நாளா இரண்டு
      வாரமா ஒரு மாதமா இரண்டு வருஷமா
      வாழ தொடங்கிய கால முதலாக இன்றுவரை எப்போதும் ஒரு கண தவறாமல் என் உடம்பு
      ஏதேனம் ஒரு நோயினால் கஷ்டப்பட்டு கொண்டு தானிருக்கிறது. இத்தனை நோயையும்
      கஷ்டத்தையும் பொறுத்துக்கொண்டு என் உயிர் இதுவரை சாகாமலிருக்கிறதே அதுதான் பெரிய
      ஆச்சரியம். இவ்வளவுக்கும் நான் உன்னிடமிருந்து பெறும் கைம்மாறு யாது பேதை
      சொற்கள் மடச்சொற்கள் பயனற்ற மனதை சுடும் பழி
      அறுக்கும் குரூர சொற்கள் இவையே நான் பெறும் கைம்மாறு. ஓயாமல் புடவை வேண்டும்
      ரவிக்கை வேண்டும் குழந்தைகளுக்கு நகைகள் - வீண்
      வீண் செலவு என்ன துன்பம் துன்பமடா
      சமைத்து விட்டாய் இந்த கஷ்டத்தையெல்லாம் இன்னும் எத்தனை காலம் பொறுத்து கொண்டிருக்க
      வேண்டுமோ என் பிராணன் என்றுதான் நீங்க போகிறதோ என்று சொல்லி சோமநாதய்யர் அழ
      தொடங்கிவிட்டார்.
      அப்போது முத்தம்மா- அழுகையெல்லாம் என்னிடம் கொண்டு வருகிறீர்கள். புன்னகை
      சந்தோஷம் சிருங்கார ரஸம் இதற்கெல்லாம் வேறு பெண் ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.
      இல்லாவிட்டால் என்னை தள்ளிவிட்டு வேறு ஸ்திரீயை பகிரங்கமாக விவாகம்
      செய்துகொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.
      இன்னொரு புதுப்பெண்-சிறு பெண்ணை மணம் புரிந்துகொண்டு அவளுடன் இன்புற்று வாழ
      தொடங்குவீர்களாயின் உங்களுக்குள்ள மனக்கவலையெல்லாம் நீங்கி போய்விடும். பிறகு
      புத்தியில் தெளிவும் சுறுசுறுப்பும் ஏற்படும். அப்பால் கோர்ட்டில் சாமர்த்தியமாக
      பேசும் திறமை மிகுதிப்பட்டு உங்களுக்கு வக்கீல் வேலையில் நல்ல லாபம் வர தொடங்கும்.
      உடம்பிலுள்ள வியாதிகளெல்லாம் நீங்கி போய்விடும். நீங்கள் சந்தோஷத்துடனும்
      ஆரோக்கியத்துடனும் வாழ்வீர்கள். மலச்சிக்கலால் எல்லா வியாதிகளும் தோன்றுவதாகவன்றோ
      நீங்கள் சொல்லுகிறீர்கள். எங்கள் அத்தங்கார் விசாலாட்சி அப்படி சொல்லமாட்டாள். அவளும்
      உங்கள் போலே பெரிய வேதாந்தியும் ஞானியுமாதலால் அவளுடைய கருத்தை உங்களுக்கு
      சொல்லுகிறேன். பணக்கவலைகளாலேயும் மனக்குறைவுகளாலேயுந்தான் வியாதிகள் தோன்றுகின்றன
      என்பது விசாலாட்சியின் கொள்கை. நீங்கள் வேறு விவாகம் செய்து கொள்ளுங்கள். நானோ
      மூன்று பிள்ளைகளை பெற்று கிழவியாய் விட்டேன். புதிதாக ஒரு சிறு பெண்ணை மணம்
      புரிந்து கொண்டால் உங்களுக்கு மனக்குறைவுகளெல்லாம் நீங்கி போய்விடும். அப்பால்
      யாதொரு வியாதியும் வராது என்றாள்.
      இது கேட்டு சோமநாதய்யர்- உன்னையும் உன் குழந்தைகளையும் வைத்து
      காப்பாற்றுவதிலேயே எனக்கு சுமை தலை வெடித்து போகும் போலிருக்கிறது. இன்னும்
      ஒருத்தியை புதிதாக மணஞ் செய்து கொண்டு அவளையும் அவளுக்கு பிறக்கக்கூடிய
      குழந்தைகளையும் இந்த ஜாப்தாவுடன் சேர்த்து சம்ர‡ணை பண்ணுவதென்றால் என் தலை நிச்சயமாக
      வெடித்தே போய்விடும். உன்னை தள்ளி வைக்கும்படி அடிக்கடி சிபார்சு செய்கிறாய்.
      உன்மீது என்ன குற்றஞ் சுமத்தி தள்ளி வைப்பேன் பிள்ளையில்லாத மலடியென்று சொல்லி
      நீக்குவேனா பொய்யாகவும் எனக்கு மகத்தான அவமானம் நேரும்படியாகவும் உன்மீது விபசார
      தோஷத்தை ஆரோபித்து விலக்கி வைப்பேனா அப்படியே ஏதேனுமொரு முகாந்தரம் சொல்லி
      விலக்கி வைத்தாலும் உன்னையும் குழந்தைகளையும் காப்பாற்றும் கடமை என்னை விட்டு
      நீங்காது. மேலும் கிழவனாய்விட்ட நான் இப்போது ஒரு சிறு பெண்ணை மணம் புரிந்து
      கொண்டால் அவளை போலீஸ் பண்ணி காவல் காக்கு தொழில் எனக்கு பெருங் கஷ்டமாகிவிடும்.
      ஆதலால் உன்னை தள்ளிவைத்துவிட்டு வேறு விவகாம் செய்து கொள்ளும்படி நீ தயவுடன்
      சிபார்சு செய்யும் வழக்கத்தை இன்றுடன் நிறுத்தி கொள்ளும்படி அதாவது என் காது
      நரம்புகளையும் இருதய அறுப்பதற்கு நீ
      இடையின்றியும் மறவாமலும் மீட்டும் உபயோகித்து வரும் அஸ்திரங்களில் இந்த
      அஸ்திரத்தின் பிரயோகத்தையேனும் இனி நிறுத்தி விடும்படி நான் உன்னை மிகவும்
      தாழ்மையுடன் பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.
      சரி எனக்கு தலைநோகிறது. நான் கீழே போ காபி போட்டு சாப்பிட போகிறேன்
      என்று சொல்லி முத்தம்மா எழுந்தாள்.
      காப்பி குடித்துவிட்டு இங்கு திரும்பி வருவாயா என்று சோமநாதய்யர் கேட்டார்.
      எதற்கு இன்னும் ஏதேனும் அழுகைகளேனும் வசைகளேனும் மிச்சமிருக்கின்றனவோ நான்
      குரூர வார்த்தைகள் சொல்வதாக வருத்தப்படுகிறீர்களே நீங்கள் என்னை பற்றி என்னிடம்
      சொல்லும் வார்த்தைகளெல்லாம் அமிர்தமயமாக இருக்கின்றன என்று தான்
      நினைத்திருக்கிறீர்களோ சற்று நேரத்துக்கு முன் என்னுடன் கூடி வாழ்வதில் நீங்கள்
      அடையும் இன்பத்தை விஸ்தாரமாக வர்ணித்தீர்களே அச்சொற்கள் என் செவிக்கு
      தேவாமிர்தமாகத்தான் இருந்தன. கேட கேட்க தெவிட்டவில்லை. சரி. அது வீண் பேச்சு.
      பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சி பயனில்லை. எத்தனை காலம் உங்களுடன் வாழும்படி
      பகவான் தலையில் எழுதியிருக்கிறானோ அது வரை இப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள் தங்களுடைய
      திருவாயினின்று பிறந்து கொண்டேதானிருக்கும். அவற்றை நான் சகித்துத்தான் தீரவேண்டும்.
      எனக்கு நிவர்த்தியேது நீங்களாவது என்னை விலக்கி வைத்து விட்டு மற்றொருத்தியை
      விவாகம் செய்து கொண்டு சௌக்கியமாக வாழ்வீர்கள். நான் அப்படி செய்ய முடியுமா
      எனக்கு வேறு புகலேது என்று முத்தம்மா சொன்னாள்.
      அடியே நாயே நான் மறுவிவாகம் செய்துகொள்ளலாமென்ற வார்த்தையை என் காது கேட்க
      உச்சரி கூடாதென்று நான் சொன்னேனோ இல்லையோ இப்போதுதான் சொல்லி வாய் மூடினேன்.
      மறுபடி அந்த புராணத்தை எடுத்து விட்டாயே உனக்கு மானமில்லையா வெட்கமில்லையா
      சூடு சுரணையில்லையா இதென்னடா கஷ்டமாக வந்து சேர்ந்திருக்கிறது இவள் வாயை
      அடக்குவதற்கு ஒரு வழி தெரியவில்லையே பகவானே நான் என்ன செய்வேன் ஏதேனும்
      வியாதி வந்து இவள் வாயடைத்து ஊமையாய் விடும்படி கிருபை செய்யமாட்டாயா ஈசா
      என்று கூறி சோமநாதய்யர் பிரலாபித்தார்.
      சரி போதும் காது குளிர்ந்து போய் விட்டது. என்னை
      குடித்துவிட்ட மறுபடி இங்கு வரும்படி சொன்னீர்களே எதற்காக என்று முத்தம்மா
      மீண்டுமொருமுறை வினவினாள்.
      காபி குடித்துவிட்டுவா. பிறகு விஷயத்தை சொல்லுகிறேன். முதலிலேயே இன்ன
      காரணங்களுக்காகத்தான் அழைக்கிறேன் என்று உனக்கு முச்சலிக்கா எழுதி கையெழுத்து
      போட்டு கொடுத்தால்தான் வருவாயோ என்று சோமநாதய்யர் கர்ஜித்தார்.
      சரி வருகிறேன். இதற்காக தொண்டையை கிழித்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
      இது ஹைகோர்ட்டில்லை வீடு என்று சொல்லி முத்தம்மா அந்த ஏழை பிராமணன் மீது ஒரு
      கடைசி அஸ்திரத்தை பிரயோகம் செய்துவிட்டு கீழே இறங்கி சென்றாள்.
      அவள் போனவுடன் சோமநாதய்யர்- ஹைகோர்ட்டில் எனக்கு யாதொரு லாபமும்
      கிடைக்கவில்லையாம். அதற்கா கேலி பண்ணிவிட்டு போகிறாள். இந்த நாயின் வாயை அடக்க
      ஒரு வழி தெரியவில்லையே என்று நினைத்து வருந்தினார்.
      வில்லம்பு சொல்லம்பு மேதினியிலே யிரண்டாம்
      வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்.
      என்று பழைய பாட்டொன்று சொல்லுகிறது. இந்த சொல்லம்பை பிரயோகிப்பதில் ஆண் மக்களை
      காட்டிலும் பெண்கள் அதிக திறமையுடையவர்களென்று தோன்றுகிறது. இதற்கு முக்கியமான
      காரணம் ஆண் மக்கள் பெண்மக்களுக்கு செய்யும் சரீர துன்பங்களும் அநீதிகளும்
      பலாத்காரங்களுமே போலும். வலிமையுடையோர் தம் வலிமையால் எளியாரை
      துன்பப்படுத்தும்-போது எளியோர் வாயால் திரும்ப தாக்கும் திறமை பெறுகிறார்கள். கை
      வலிமை குறைந்தவர்களுக்கு அநியாயம் செய்யப்படுமிடத்தே அவர்களுக்கு வாய்வலிமை
      மிகுதிப்படுகின்றது. மேலும் மாதர்கள் தாய்மாராகவும் சகோதரிகளாகவும்
      மனைவியராகவும் மற்ற சுற்றத்தாராகவும் இருந்து ஆண் மக்களுக்கு சக்தியும் வலிமையும்
      மிகுதிப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் வேலை செய்கிறார்கள். அவ்வலிமையும் சக்தியும்
      தமக்கு விரோதமாகவே செலுத்தப்படுமென்று நன்கு தெரிந்த இடத்திலும் மாதர்கள் தம்மை
      சேர்ந்த ஆண் மக்களிடம் தமக்குள்ள அன்பு மிகுதியாலும் தாம் ஆடவர்களின் வலிமையை
      சார்ந்து வாழும்படி நேர்ந்திருக்கும் அவசியத்தை கருதியும் அவர்களிடத்தே மேற்கூறிய
      குணங்களேற்படுத்தி வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இடையின்றி முயற்சி
      பண்ணுகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால் அவன்
      சம்பாதித்து கொள்ளவேண்டிய குணங்களெல்லாவற்றிலும் மிக மிகமிக உயர்ந்த குணமாவது
      பொறுமை. மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்கு திறனும் பாயு
      கொண்டிருப்பது மட்டுமேயன்றி ஒட்டகத்தை போலே பொறுக்கு திறனும் எய்தவே டும்.
      அவ்விதமான பொறுமை பலமில்லாதவர்களுக்கு வராது. மனத்திட்டமில்லாதோரின் நாடிகள்
      மிகவும் எளிதாக சிறகடி கூடியன. ஒரு இலேசான எதிர்ச்சொல் கேட்கும்போதும்
      இலோசன சங்கடம் நேரும்போதும் அவர்களுடைய நாடிகள் பெருங் காற்றிடைப்பட்ட கொடியை
      போல் துடித்து நடுங்க தொடங்குகின்றன. மனத்திட்பமில்லாதோருக்கு நாடி
      திட்பமிராது. அவர்களுக்கு உலகத்தில் புதிய எது நேர்ந்தபோதிலும் அதை அவர்களுடைய
      இந்திரியங்கள் சகிக்கு திறமையற்றவனவாகின்றன. மனவுறுதியில்லாத ஒருவன் ஏதேனும்
      கணக்கெழுதி கொண்டிருக்கும் போது கக்கத்திலே ஏதேனும் குழந்தை குரல் கேட்டால்
      போதும் உடனே இவனுடைய கணக்கு வேலை நின்றுபோய்விடும். அல்லது தவறுதல்களுடன்
      இயல்பெறும். அடுத்த வீட்டில் யாரேனும் புதிதாக ஹார்மோனியம் அல்லது மிருதங்கம்
      பழகுகிற சத்தம் கேட்டால் போதும். இவனுடைய கணக்கு மாத்திரமேயன்றி சுவாசமோ
      ஏறக்குறைய நின்று போ கூடிய நிலைமை எய்திவிடுவான். புதிதாக யாரை கண்டாலும்
      இவன் கூச்சப்படுவான் அல்லது பயப்படுவான் வெறுப்பெய்துவான். மழை
      கஷ்டப்படுவான். காற்றடித்தால் தனக்கு சமானமாகியவர்களும்
      கீழ்ப்பட்டவர்களும் தான் சொல்லும் கொள்கையை எதிர்த்து ஏதேனும் வார்த்தை சொன்னால் இவன்
      செவிக்குள்ளே நாராச பாணம் புகுந்தது போலே பேரிடர்ப்படுவான்.
      பொறுமையில்லாதவனுக்கு இவ்வுலகத்தில் எப்போதும் துன்பமேயன்றி அவன் ஒரு நாளும்
      இன்பத்தை காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக்கெத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ
      அத்தனைக்கத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றியுண்டாகிறது. இது பற்றியேயன்றோ
      நம் முன்னோர் பொறுத்தார் பூமியாள்வார் பொங்கினார் காடாள்வார் என்று அருமையான
      பழமொழியேற்படுத்தினார்.
      இத்தகைய பொறுமையை ஒருவனுக்கு சமைத்து கொடுக்கும் பொருட்டாகவே அவனுடைய
      சுற்றத்து மாதர்களும் விசேஷமாக அவன் மனைவியும் அவனுக்கு எதிர் மொழிகள் சொல்லி
      கொண்டேயிருக்கிறார்கள். கோபம் பிறக்க தக்க வார்த்தைகள் சொல்லுகிறார்கள். வீட்டு
      பழக்கந்தான் ஒருவனுக்கு நாட்டிலும் ஏற்படும். வீட்டிலே பொறுமை பழகினாலன்றி
      ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமையேற்படாது. பொறுமை எவ்வளவுக்கெவ்வளவு
      குறைகிறதோ ஒருவனுக்கு அத்தனைக்கத்தனை வியாபாரம் தொழில் முதலியவற்றில்
      வெற்றியுங் குறையும். அவனுடைய லாபங்களெல்லாம் குறைந்து கொண்டேபோம். பொறுமையை
      ஒருவனிடம் ஏற்படுத்தி பழக்க வேண்டுமானால் அதற்கு உபாயம் யாது சரீரத்தில் சகிப்பு
      திறமையேற்படுத்தும் பொருட்டாக ஜப்பான் தேசத்தில் ஒரு குழந்தையாக இருக்கும்போதே
      ஒருவனுடைய தாய் தந்தையார் அவனை நெடு நேரம் மிக மி குளிர்ந்த பனிக்கட்டிக்குள்
      தன் விரலை அல்லது கையை புதைத்து வைத்து கொண்டிருக்கும்படி செய்து
      பழக்குகிறார்கள். மிக மிக சூடான வெந்நீரில் நெடும்பொழுது கையை வைத்து
      கொண்டிருக்கும்படி ஏவுகிறார்கள். இவை போன்றன உடம்பினால் சூடு குளிரை தாங்கும்படி
      பயிற்றுவதற்குரிய உபாயங்களாம். இது போலவே சுக துக்கங்களை சகித்து கொள்வதாகிய
      மனப்பொறுமை ஏற்படுத்துவதற்கும் சூடான சொற்களும் சகிக்க முடியாத பேதைமை
      சொற்களும் சொல்லி சொல்லித்தான் ஒருவனை பழக்க வேண்டும். அவற்றை கேட்டு கேட்டு
      மனிதனுக்கு காதும் மனமும் நன்கு திட்பமெய்தும் இங்ஙனம் பொறுமை உண்டாக்கி
      கொடுக்கும் பொருட்டாகவும் மனிதனுடைய மனத்தில் அவனாலேயே அடிக்கடி படைத்து
      கொள்ளப்படும் வீண் கவலைகளினின்றும் பயங்களினின்றும் அவன் மனத்தை வலிய
      வழியில் திருப்பிவிடும் பொருட்டாகவும் ஒருவனுடைய மாதா அல்லது மனைவி அவனிடம்
      எதிர்பார்க்கப்படாத பேதைமை மிஞ்சிய கோபம் விளைக்கக்கூடிய சொற்கள் உரைக்கிறார்கள்.
      அவனுடைய அன்பு எத்தனை ஆழமானதென்று சோதிக்கும் பொருட்டாகவும் அங்ஙனம்
      பேசுகிறார்கள். அன்பு பொறுக்கும். அன்பிருந்தால் கோபம் வராது. அன்றி ஒருவேளை தன்னை
      மீறி கோபம் வந்தபோதிலும் மிகவும் எளிதாக அடங்கி போய்விடும். இத்தகைய அன்பை
      கணவன் தன் மீதுடையவனா என்பதை தெரிந்து கொள்ளும் பொருட்டு மாதர் பல சமயங்களில்
      கோபம் விளைக்க தக்க வார்த்தைகளை மனமறி பேசுகிறார்கள். நம்முடன் பிறந்து வளர்ந்து
      நம்மை தாயாகவும் மனைவியாகவும் சகோதரியாகவும் எப்போதும் காப்பாற்றி கொண்டும்
      கவனித்து கொண்டும் நம்மிடம் தீராத அன்பு செலுத்திக்கொண்டும் வருகிற மாதர்கள் சில
      சமயங்களில்-அனேக சமயங்களில்-நமக்கு பயனற்றனவாகவும் கழி பெரும்
      பேதைமையுடையனவாகவும் தோன்ற கூடிய மொழிகளை பேசுவதினின்றும் ஆடவர்களாகிய
      நம்முடை பலர் அம்மாதர்களை மகா மடைமை பொருந்தியவர்களென்று நினைப்பது தவறு. அங்ஙனம்
      நினைத்தல் நமது மடைமையையே விளக்குவதாம். ஆண்மக்கள் பிரத்யேகமா கற்கும்
      வித்தைகளிலும் விசேஷமாக பயிலும் தொழில்களிலும் பொதுவாக சரீர பலத்திலும்
      மாதரை காட்டிலும் ஆண்மக்கள் உயர்ந்திரு கூடுமேயெனிலும் சாதாரண ஞானத்திலும்
      யுக்தி தந்திரங்களிலும் உலக பொது அனுபவத்தால் விளையும் புத்தி கூர்மையிலும்
      ஆண்களை காட்டிலும் பெண்கள் குறைவாக இருப்பார்களென்று எதிர்பார்ப்பதே மடமை.
      ஆதலால் குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்விக குணத்தையும் ஆதனால்
      விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர் தாய் மனைவி முதலிய ஸ்திரீகள்
      தமக்கு வெறுப்புண்டாக தகுந்த வார்த்தை பேசும்போது வாயை மூடிக்கொண்டு
      பொறுமையுடன் கேட்டு கேட்டு பழக வேண்டும். அங்ஙனமின்றி ஒரு ஸ்திரீ வாயை திறந்த
      மாத்திரத்திலேயே அவள் தாயாயனினும் உடம்பிலும் உயிரிலும் பாதியென்று
      அக்கினியின் முன் ஆணையிட்டு கொடுத்த மன¨வியாயினும் அவள் மீது புலி பாய்ச்சல்
      பாய்ந்து பெருஞ் சமர் தொடங்கும் ஆண்மக்கள் நாளுக்கு நாள் உலக விவகாரங்களில் தோல்வி
      எய்துவோரா பொங்கி பொங்கி துயர்ப்பட்டு துயர்ப்பட்டு மடிவார்.
      இந்த சங்கதிகளெல்லாம் சோமநாதய்யருக்கு மிகவும் இலேசாக தென்படலாயின. சில
      மாதங்களுக்கு முன்பு அவருடைய கிழ தாயாகிய ராமு பாட்டி இறந்து போய்விட்டாள்.
      அவள் சாகுமுன்பு இவரை தனியாக அழைப்பித்து இவருடன் சிறிது நேரம் சம்பாஷணை
      செய்து கொண்டிருந்தாள். அவள் சொன்னாள் அட அய்யா சோமூ உன் பொண்டாட்டி
      முத்தம்மாளை நீ சாமான்யமாக நினைத்து விடாதே. அவள் மகா பதிவிரதை. உன்னை சாட்சா
      பகவானுக்கு சமமா கருதி போற்றி வருகிறாள். உன்னுடைய ஹிதத்தை கருதியும்
      உனக்கு பொறுமை விளைவிக்கும் பொருட்டாகவும் அவள் சில சமயங்களில் ஏறுமாறாக
      வார்த்தை சொன்னால் அதை கொண்டு நீ அவளிடம் அதிக அருவருப்பும் கோபமும் எய்தலாகாது.
      நானோ சாக போகிறேன். இன்னும் இரண்டு தினங்களுக்கு மேல் என் உயிர் தறுகி
      நிற்குமென்று தோன்றுவில்லை. நான் போனபின் உனக்கு அவளை தவிர வேறு கதியேது
      தாய்க்கு பின் தாரம். தாய் இருக்கும் போதே ஒருவன் அவளிடம் செலுத்தும் உண்மைக்கும்
      பக்திக்கும் நிகரான உண்மையையும் பக்தியையும் தன் மனைவியிடத்திலும் செலுத்த வேண்டும்.
      இதுவரை நீ முத்தம்மாளை எத்தனையோ விதங்களில் கஷ்டப்படுத்தி வதைத்து
      பார்த்தாய்விட்டது. கொண்ட பெண்டாட்டியின் மனம் கொதிக்கும் படியாக நடப்பவன் வீட்டில்
      லட்சுமிதேவி கால் வைக்க மாட்டாள். அந்த வீட்டில் மூதேவி தான் பரிவாரங்களுடன் வந்து
      குடியேறுவாள். இந்த வார்த்தையை எப்போதும் மறக்காதே. இதை ஆணி மந்திரமாக
      முடிச்சுப்போட்டு வைத்து கொள். குழந்தாய் சோமு. அந்த பராசக்தி லலிதாம்பிகை தான்
      உனக்கும் உன் பெண்டு பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுளும் மாறாத ஆரோக்கியமும் கொடுத்து
      உங்களை என்றும் சந்தோஷ பதவியிலிருத்தி காப்பாற்றி கொண்டு வரவேண்டும் என்றாள்.
      அந்த வார்த்தை அவருக்கு அடிக்கடி நினைப்புக்கு வரலாயிற்று. அத்தையருமை செத்தால்
      தெரியும் என்பது பழமொழி. ராமுப்பாட்டியின் முதுமை காலத்தில் சோமநாதய்யர்
      அவளை யாதொரு பயனுமில்லாமல் தன்னுடைய இம்சையின் பொருட்டாகவும் நஷ்டத்தின்
      பொருட்டாகவும் நிகழ்ச்சி பெற்று வரும் ஒரு கிழ இருமல் யந்திரமாக பாவித்து நடத்தி
      வந்தார். அவள் ஒரேயடியாக செத்து தீர்ந்த பிறகுதான் அவருடைய மனதில்
      மகிமை பொருந்திய தெய்வமாகிய மாதா என்ற விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. அன்னையும்
      பிதாவும் முன்னறி தெய்வம் என்ற வசனம் அவருக்கு உண்மை பொருளுடன் விளங்கலாயிற்று.
      தாயிற் சிறந்த கோயிலில்லை. உலகத்தையெல்லாம் படைத்து காப்பவளாகிய சாட்சா
      ஜகன்மாதாவே தனக்கு தாய் வடிவமாக மண்மீது தோன்றி காப்பாற்றுகிறாள். புருஷ
      ஏவேதம்ஸர்வம் என்று வேதம் சொல்லுகிறது. இவ்வுலகத்திலுள்ள பொருளெல்லாம்
      கடவுளேயென்பது அந்த வாக்கியத்தின் அர்த்தம். ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்-உலக முழுதும்
      கடவுள் மயம். நம் வீட்டை நாயாக நின்று காப்பதும் தான் செய்கிறார்.
      பகைவனாகவும் ஆசானாகவும் சீடனாவும் தாய் தந்தையாராகவும் பெண்டு பிள்ளைகளாவும்
      நம்மை கடவுளே சூழ்ந்து நிற்கிறார். எனிலும் பிற வடிவங்களால் அவர் நமக்கு செய்யும்
      உபகாரங்களை காட்டிலும் தாய் தந்தையராக நின்று அவர் செலுத்தும் கருணைகள் சால மிக
      பெரியன. தாய் தந்தையரிருவருமே கடவுளின் உயர்ந்த விக்ரகங்களாக வணங்குதற்குரியர்.
      அவ்விருவருள் தாயே நம்மிடத்து அதிக தெய்வீகமான அன்பு செலுத்துவது கொண்டும் நாம்
      கைம்மாறிழைக்க முடியாத பேரரு செயல்கள் தந்தையிடமிருந்து நமக்கு கிடைப்பதை
      காட்டிலும் தாயினிடமிருந்து அதிகமா கிடைப்பது கருதியும் அவள் ஒருவனாலே
      தந்தையை காட்டிலுங்கூட உயர்வாக போற்றப்பட தக்கவள். இதனை கருதியே அன்னையும்
      பிதாவும் முன்னறிதெய்வம் என்ற வசனத்தில் தந்தையின் பெயருக்கு முன்னே தாயின் பெயர்
      சூட்டப்பட்டிருக்கிறது.
      சோமநாதய்யர் காமம் குரோதம் முதலிய சேஷ்டைகள் உடனே அடக்கி கொள்ளக்கூடிய சக்தி
      பெறாவிடினும் கல்வி கேள்விகளால் அவருக்கு ஏற்பட்டிருந்த புத்தி தெளிவு
      இடைக்கிடையே அந்த காம முதலிய தீயகுணங்களை கண்டித்து நன்கு சுடர் வீசும்
      சமயங்களும் இருந்தன. அந்த நேரங்களில் அவருடைய புத்திக்கு பெரிய
      புலப்படுவதுண்டு. மேலும் தாம் சுமார் இரண்டு வருஷங்களின் முன்னே விசாலட்சியிடம்
      அவமானப்பட்ட கால முதலாக அவர் பர ஸ்த்ரீகளின் விஷயத்தில் புத்தியை செலுத்தும்
      வழக்கத்தை நாளுக்கு நாள் குறைத்து கொண்டே வந்தார். பாவத்தின் கூலியே மரணம்
      என்று கிறிஸ்தவ வேதம் சொல்லுகிறது. துக்கத்தையும் பயத்தையும் இவற்றால் விளையும்
      மரணத்தையும் ஒருவன் வெல்ல விரும்புவானாயின் இங்கு பயங்களுக்கும் துக்கங்களுக்கும்
      முக்கிய ஹேதுவாக இருக்கும் பாவங்களை விட்டு விட வேண்டும். யாதேனுமொரு பாவத்தை
      வெல்லும் முயற்சியில் ஒரு மனிதன் மிகவும் கஷ்டப்பட்டு கைதேறி விடுவானாயின்
      பிறகு மற்ற பாவங்களை வெல்வதில் அவனுக்கு அத்தனை கஷ்டமிராது.
      யுத்தத்தில் தேர்ச்சியுண்டாய்விடும். அசுரர்களென்பன பாவங்கள். தேவர்கள் ஹிதம் பண்ணும்
      சக்திகள்.
      எப்போதுமே சோமநாதய்யர் பாவ செய்கைகளுக்கு அதிகமாக ஈடுபட்டவரல்லர். முக்கியமாக
      வியபிசார தோஷத்துக்கு அவர் அதிக வசப்பட்டவரல்லர். பெரும்பாலும் இப்பாவத்தை
      மானசீகமாக செய்து வந்தவரேயல்லாமல் கார்யாம்சத்தில் அதிகமாக அனுசரித்தது
      கிடையாது. ஆனால் யேசு கிறிஸ்து நாதர் சொல்லுகிறார்- அன்ய ஸ்திரீகளுடன்
      சம்பந்தப்படுவோர் மாத்திரமே வியபிசாரமாகிய பாதகத்துக்கு ஆட்பட்டோர் என்று கருதுதல்
      வேண்டா. வெறுமே மனத்தால் ஒருவன் தன் மனைவியழிய மற்றொரு ஸ்த்ரீயை விரும்புவானாயின்
      அவனும் வியபிசார பாவத்துக்குட்பட்டவனேயாவான் என்கிறார். இந்த விஷயத்தை உலகத்தார்
      சாதாரணமாக கவனிப்பது கிடையாது. பிறனுடைய சொத்தை திருடி ஊர்க்காவலாளிகளின்
      விசாரணைகளில் அகப்பட்டு தண்டனையடைந்து சிறை புகுந்து வாழ்வோன் மாத்திரமே
      கள்வனென்று பாமரர்கள் நினைக்கிறார்கள். பிறனுடைய சொத்தை அபகரிக்க வேண்டுமென்று
      மனதில் எண்ணினால் போதும். அங்ஙனம் எண்ணிய மாத்திரத்தாலேயே ஒருவன் கள்வனாகி
      விடுகிறான். கள்வனுக்குரிய தண்டனை அவனுக்கு மனிதர்களால் விதிக்கப்படாவிடினும்
      கடவுளால் அவசியம் விதிக்கப்படுகிறது.
      ஆனால் இள மூங்கிலை வளைத்து விடுதல் சுலபம் முற்றி போன
      முடியாது. அதை வளைக்க போகுமிடத்தே அது முறிந்து போய்விடும். மனித இருதயத்தை
      இளமை பிராயத்தில் சீர்திருத்துதல் சுலபம். பின்னிட்டு முதிர்ந்த வயதில் மனித
      இருதயத்தை வளைத்தல் மூங்கிலை வளைப்பது போல் ஒரேயடியாக அசாத்தியமன்று. ஆனால்
      மிகவும் சிரமமான வேலை. இது பற்றியே முன்னோரும் இளமையிற் கல் என்று உபதேசம்
      புரிந்தனர்.
      எனிலும் வருந்தினால் வாராததொன்றுமில்லை. மனித இருதயம் எப்போதுமே முற்றிப்போன
      மூங்கிலாகும் வழக்கமில்லை. இளமை யிலிருப்பதை காட்டிலும் வயதேறிய பிறகு தவம்
      முதலியவற்றை பயிலுதல் மிகவும் சிரமமென்பது கருதி எவனும் நெஞ்ச தளர்தல் வேண்டா.
      கல்வியும் தவமும் எந்த பிராயத்திலும் தொடங்கலாம். இதை பற்றியே சோமநாதய்யர்
      அடிக்கடி யோசித்து கடைசியாக தவம் பயிலுதல் அவசியமென்று நிச்சயித்து கொண்டார்.
      தவமென்றால் காட்டிலே போய் மரவுரியுடுத்து கந்த மூலங்களை புசித்துக்கொண்டு செய்யும்
      தவத்தை இங்க பேசவில்லை. ஆளுதலாகிய உண்மை தவத்தையே இங்கு குறிப்பிடுகிறோம். ஆத்ம
      ஞானத்தை-அதாவது எல்லாம் ஒன்று கடவுள்எல்லாம் இன்பம் என்ற
      தனது நித்திய அனுபவத்தில் பயன்படுத்தி நன்மையெய்த வேண்டுமாயின் அதற்காக அவன் கை
      கொண்டொழுக வேண்டிய சாதனங்களில் மிக உயர்ந்தது தவம்.
      அதாவது இந்திரியங்களை அதர்ம நெறிகளில் இன்புற வேண்டுமென்ற விருப்பத்தினின்றும்
      தடுத்தல். இந்தி‘ரியங்களை தடுத்தலாவது மனதை மனமே ஐந்து
      வாயில்களாலும் தொழில் புரியும் கருவி. சஞ்சலம் பயம் முதலிய படுகுழிகளில் வீழ்ந்து
      தவிக்காதபடி மனத்தை காத்தலும் வலியது. மற்றெல்லா பாவங்களுக்கும் காரணமாவது
      பயம் எனவே பயத்தை வென்றால் மற்ற பாவங்களை வெல்லுதல் எளிதாய் விடும்.
      பாவங்களை வென்றால் தா பாவமாகிய பயத்தை வெல்லுதல் பின் எளிதாம். இவ்விரண்டு
      நெறியாலும் தவத்தை ஏக காலத்தில் முயன்று பழகுதல் வேண்டும்.
      இவ்வக¨ தவத்தையே சோமநாதய்யர் விரும்புவராயினர். மேலும் தவங்களில் உயர்ந்தது பூஜை.
      மனத்தை தீய நெறியில் செல்ல விடாமல் தடுப்பதற்கு மிகவும் சுருக்கமான உபாயம் அதனை
      நன்னெறியிலே செலுத்துதல். மனதை செலுத்துதற்குரிய நன்னெறிகள் அனைத்திலும்
      உயர்ந்தது பூஜை. அன்பால் செய்யப்படும் உபசாரங்களே பூஜைகள் எனப்படும். எல்லாமாகிய
      கடவுளிடத்திலும் கடவுளாகிய எல்லா பொருள்கள் விசேஷமாக எல்லா
      உயிர்களிடத்திலும் இடையாறத நல்லன்பு செலுத்துவதும் அந்த அன்பின் கரியைகளாகிய
      வழிபாடுகள் புரிவதுமே மிக சிறந்த தவம் அதுவே அறங்களனைத்திலும் பேரறம். அ·தே
      மோட்ச வீட்டின் கதவு. அன்பே மோட்சம். சிவம். இதனையே பகவான்
      நிர்வாணமாகிய மகா முக்திக்கு கருவியா கூறினார். கடவுளிடத்தும் மற்றெல்லா
      உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதே மோட்சத்துக்கு வழி யென்று யேசு கிறிஸ்துவும்
      சொல்லியிருக்கிறார். மேலும் மற்ற மனிதர்களை தொழுதலும்
      வழிபடுதலும்-அவர்களிடத்து தீராத அன்பு செலுத்தி அவர்களுக்கு தொண்டு
      புரிதலும்-இல்லாதோன் கடவுளுக்கு செய்யும் ஜபம் முதலிய கிரியைகளால் கடவுளிடத்தே
      அன்புடையவன் என்று தன்னை கூறி கொள்ளுதல் வெறும் வேஷமாத்திரமேயன்றி உண்மையான
      தெய்வ பக்தியை காட்டுவதாகாது என்று கிறிஸ்து நாதர் உபதேசித்தருளினார்.
      கண்ணுக்கு தெரியும் கடவுளராகிய மனிதரிடத்தே அன்பு செய்யாதவன்
      தெரியாத ஜகத்தின் மூல ஒளியாகிய ஆதி கடவுளிடத்தே அன்பு செய்ய வல்லன் ஆகமாட்டான்
      என்று கிறிஸ்துநாதர் சொல்லுகிறார்.
      இதனையெல்லாம் சோமநாதய்யர் நன்றாக அறிந்தவராதலால் மற்ற ஜீவர்களிடத்தில் அன்பு
      செலுத்தி பழகுவதை முக்கிய விரதமாக எடுத்து கொண்டார். மற்ற உயிர்களிடத்திலும்
      விசேஷமாக மற்ற மனிதரிடத்திலும் உண்மையான அன்பு செலுத்தி பழகுதல் சாமான்யமான
      காரியமன்று. சமஸ்காரங்களாலும் கணக்கில்லாத அனந்த கோடி சிருஷ்டிகளில்
      கோடிகளாக தோன்றி மறையும் ஜீவ குலத்துக்கு பொதுவாக ஏற்பட்டிருக்கும் பூர்வ
      ஸம்ஸ்காரங்களாலும் மனிதருக்கு இயல்பாகவே மற்ற உயிர்களிடமும்
      பெரும்பாலும் பயம் வெறுப்பு பகைமை முதலிய த்வேஷ குணங்கள்
      பல உயிர்களிடம் அன்பும் நட்பும் ஜனிப்பதுமுண்டு. ஆனால் பொதுவாக ஜீவர்கள்
      இயற்கையிலேயே ஒருவருக்கொருவர் சகிப்பில்லாமை அசுயை முதலிய
      குணங்களுடையோராகின்றனர்.
      இந்த அநாதியான ஜீவ விரோதம் என்ற குணத்தை நீக்கி சர்வ காருண்யமும்
      பக்தியும் ஏற்படுத்தி கொள்ள வேண்டுமென்ற இச்சை சோமநாதய்யருக்கு உண்டாயிற்று. எனவே
      அவர் ஆடு மாடுகளை கண்டால் முன்போல் இகழ்ச்சி கொள்கை கொள்வதில்லை. ஏழைகளை
      கண்டால் கொடிய நோயாளிகளை குரூபிகளையும் மிகுந்த முதுமையால்
      சிதைந்து விகார ரூபமடைந்திருப்போரையுங் கண்டால் அருவருப்பு எய்தி முகஞ்
      சுளிப்பதை நிறுத்தி அவர்களை மானசீகமாக வந்தனை செய்யவும் ஆசீர்வாதம் பண்ணவும்
      இயன்றவரை புற கிரியைகளாலும் அவர்களுக்கு இனியன செய்யவும் முயன்றார்.
      இதுவரை தமக்கு கோபமும் அருவருப்பும விளைவித்து தம்மால் இகழ்ச்சியுடனும்
      எரிச்சலுடனும் புறக்கணிப்படும் மனிதர்களை காணும் போது முகமலர்ச்சி கொள்ளவும்
      அவர்களிடம் தாழ்மையுரையும் இன்சொற்களும் பேசவும் பழக்க படுத்திக்கொள்ள தொடங்கினார்.
      இ·தெல்லாம் ஆரம்பத்தில் அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இ·தனைத்திலும் சிரமம்
      யாதென்றால் அவருக்கு முத்தம்மாளிடம் சுமுகமாக இருந்து அவளிடம் அன்பு காட்டுதல்.
      அவளை கண்டவுடனே முகத்தை சுளிக்காமலிருக்க அவருக்கு சாத்தியப்படவில்லை.
      பரஸ்திரீகளிடம் காமமுறாமலிருப்பது அவருக்கு நாளடைவில் ஒருவாறு எளிதாயிற்று.
      ஆனால் முத்தம்மாளிடம் பிரேமை செலுத்துவதெப்படி விவாகம் செய்து ருதுசாந்தி
      முடிந்து சில மாதங்கள் வரை அவருக்கு முத்தம்மாளுடைய உறவும் ஊடாடுதலும் இன்பம்
      பயந்து கொண்டிருந்தன. அப்பால் அவை அவருக்கு ஸ¤கஹேதுக்களாகாமல் மாறி போய்விட்டன.
      பதினைந்தாம் வயதில் அந்த பாக்கியவதி அவருடைய சயன வீட்டுக்கு ஒரு ஆண் குழந்தையையும்
      கொண்டு வர தொடங்கினாள். அவர் அவளை முத்தமிட போகும் சமயத்தில் அந்த குழந்தை
      வீறிட்டழ தொடங்கிற்று. அல்லது மல மூத்ர விஸர்ஜனம் செய்து அவளுடைய மடியையும்
      இவருடைய வேஷ்டியையும் அசுத்தப்படுத்தலாயிற்று. அன்றைக்கு தொடங்கிற்று பெருங்
      கஷ்டம். பிறகு புதிய குழந்தைகள் இரண்டு பிறந்தன. தமக்கும் தம்முடைய மனைவிக்கும்
      இளமைப்பிராயம் தவறிவிட்டன என்ற எண்ணம் அக்குழந்தைகளை பார்க்குநதோறும் அவருள்ளத்தில்
      எழலாயின. இதினின்றும் அவர் குழந்தைகளிடம் அருவருப்படைதல் என்ற பரம
      மூடத்தனத்துக்கு தம்மை ஆளாக்கி கொள்ளாமல் தப்பினார். ஆனால் அதை காட்டிலும் ஆயிரம்
      பங்கு அதிக மூடத்தனமாக தமது பத்தினியை நோக்கும் பொழுதெல்லாம் அவளிடத்தில்
      வெறுப்பெய்துவதும் முகத்தை சுளிப்பதுமாகிய தீயவழக்கத்தில் தம்மையறியாது விழுந்து
      நாளுக்குநாள் அந்த படுகுழியில் தமது சித்தத்தை அதிக ஆழமாக அமிழ்ந்துபோக இடங்
      கொடுத்தார். இத்தனை காலத்துக்கு அப்பால் இவருக்குண்டாகிய புதிய தெளிவின் பயனாக
      இப்போது அந்த மனைவியிடம் அன்பு செலுத்த முயற்சி பண்ணினார்.
      ஆரம்பத்தில் வேப்பெண்ணெய் குடிப்பதுபோல் மிகவும் கசப்பாக இருந்தது. அவளோ
      இவரிடத்திலே தோன்றிய மாறுதலை கண்டு உள்ளத்தில் மகிழ்ச்சி கொண்டாளாயினும்
      இவருடைய புதிய அன்பை உறுதிப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்துடன் இவரை பல கடினமான
      சோதனைகளுக்கு உட்படு தொடங்கினாள். எனவே இவர் நம்பிக்கையையும் ஞானத்தையு
      துணை கொண்டு வேப்பெண்ணெய் குடிக்கப்போன இடத்தில் இவருடைய முதுகில் சவுக்கடிகள்
      வேறு விழலாயின. மகா பதிவிரதையாகிய முத்தம்மா தன்னுடைய கணவன் இங்ஙனம்
      வேப்பெண்ணெய் குடிக்க வந்த சமயங்களில் அவருக்கு சர்க்கரை முதலியன கொடுத்து
      அவருடைய கஷ்டத்துக்கு பரிகாரங்கள் செய்யாதபடி இங்ஙனம் சவுக்கடிகள் கொடுத்து
      அவருடைய முதுகை காயப்படுத்தியது அவளுடைய விரத மகிமைக்கு பொருந்துமோ என்று
      சிலர் ஐயுறலாம். ஆனால் அவள் உயர்ந்த பதிவிரதையாகிய காரணம் பற்றியே எத்தனைக்கு
      எத்தனை விரைவாக நடத்துதல் சாத்தியமோ அத்தனைக்கத்தனை அவரை
      விஷயத்திலிருந்து பரிபூர்ணமாக விடுவித்து அவருக்கு ஞானாமிர்தத்தை
      புகட்டவேண்டுமென்ற கருத்துடையவளாயினாள்.
      ஜீவாமிர்தமாகிய தர்ம பத்தினியின் காதலை ஒரு பரம மூடன் வேப்பெண்ணெய்க்கு ஒப்பா
      கருதி வருமிடத்தே கூடிய அளவு விரைவில் அவனுக்கு என்ன கஷ்டம் விளைவித்தேனும்
      அவனை அந்த மகா நரகமாகிய அஞ்ஞானத்தினின்றும் வெளியேற்ற முயலுவதே தனது முக்கி
      கடமையென்று அவள் நியாயமாக நிச்சயித்தாள். அவனுக்கு சாசுவதமான ஞானமும் நித்ய
      இன்பமும் ஏற்படுத்தி கொடுத்து அவனை காப்பாற்ற வேண்டுமென்று கருதி அதனால்
      அவனுக்கு சிறிது காலம் வரை அதிக சிரமங்கள் ஏற்பட்ட போதிலும் தீங்கில்லையென்று
      தீர்மானம் செய்தாள். ஒருவன் காலில் ஆழமாக விஷமுள் பதிந்திருக்கையில் அதை ஊசி
      கொண்டெடுக்கும்போது அவன் அந்த ஊசி குத்தும் வேதனையை பொறுக்கமாட்‘மல் முள்ளையெடுக்க
      முயலாதபடி மிட்டாய் தின்று தன் மனதை அந்த நோயினின்றும் புறத்தே செலுத்த
      வேண்டுமென்று விரும்புவானாயின் அவனுக்கு இதத்தை நாடுவோர் அப்போது செய்யத்தக்கது
      யாது அவனுக்கு ஊசி குத்துவதனால் வேதனையை பொருட்டா கூடாதென்று அவனிடம்
      நிஷ்கருணையாக தெரிவித்து விட்டு ஊசியை ஆழமாக பதித்து விஷமுள்ளை எடுத்து
      களைதல் நன்றா அல்லது ஊசியை புறத்தே போட்டு விட்டு அவனுக்கு ஜிலேபி காபியால்
      விஷமுள்ளின் செயலை நிறுத்திவிடலாம் என்று அவன் நினைப்பது மடமையன்றோ அதற்கு நாம்
      இடங்கொடுக்கலாமோ அவன் அழ ஊசியை அழுத்தி விஷமுள்ள
      அவனுக்கு விஷமுள்ளின் செய்கையால் மரணமேற்படுமென்பதை வற்புறுத்தி
      எங்ஙனமேனும் ஊசியை உபயோகித்தலன்றோ உண்மையான அன்புக்கும் கருணைக்கும் அடையாளமானது
      இங்ஙனம் ஆலோசனை புரிந்தே முத்தம்மா நமது சோமநாதய்யருக்கு அடிக்கடி விளாற்று
      பூஜைகள் நடத்தி வந்தாள். இங்ஙனம் நல்லெண்ணங் கொண்டே அவள் தம்மிடம் கடுஞ் சொற்களும்
      கடுநடைகளும் வழங்குகிறாளென்ற விஷயம் நாட்பட சோமநாதய்யருக்கும் சிறிது
      அமர்த்தமாக தொடங்கிவிட்டது. இருந்தபோதிலும் அவரால் சகிக்கமுடியவில்லை.
      காதற்கோயில் மிக தூய்மைகொண்ட கோயில் . ஒரு முறை அங்கு போ பாவஞ் செய்து
      வெளியே துரத்துண்டவன் மீளவும் அதனுள்ளே புகுமுன்னர் அவன் படவேண்டிய துன்பங்கள்
      எண்ணிறந்தன.
      கண்ணை குத்தி பார்வையை அழித்து கொள்ளுதல் சுலபம். ஆனால் இழந்த
      ஏற்படுத்தி கொள்ளுதல் எளிதில் இயல்வதொரு காரியமா சோமநாதய்யருக்கு குருட்டு
      கண்ணை மாற்றி மறுபடி நல்ல கண் கொடுக்கவேண்டுமென்ற விருப்பத்துடன் முத்தம்மா வேலை
      செய்தாள். அதில் அவள் செய்த சிகிச்சைகள் அவருக்கு சகிக்க முடியாதனவாகவேயிருந்தன.
      ஆனால் எப்படியேனும் தாம் இழந்த பார்வையை மீட்டும் பெறவேண்டுமென்ற பேராவல் அவருக்கும்
      இருந்தபடியால் சிகிச்சையிலுண்டாகிய சிரமங்கள் பொறுக்க முடியாதனவாக தோன்றினும்
      பல்லை கடித்து கொண்டு தம்முடைய முழு சக்தியையும் செலுத்தி ஒருவாறு சகித்து
      பழகினார்.
      எனவே முத்தம்மாளை ஓயாமல் தம்முடன் இருக்கும்படிக்கும் பேசும்படிக்கும் வற்புறு
      தொடங்கினார். இவர் எத்தனைக்கெத்தனை அவளுறவையும் ஊடாட்டத்தையும் விரும்ப
      தொடங்கினாரோ அத்தனைக்கு அத்தனை அவள் இவரிடமிருந்து ஒதுங்கவும் மறையவும்
      தொடங்கினாள். இவளை நாம் காதலுக்கு யோக்யதையில்லாத மனையடிமை
      புழுக்கச்சியாகவும் குழந்தை வளர்க்கும் செவிலியாகவும் நடத்தி வந்தோம். அப்போதெல்லாம்
      இவள் நமக்கு மிகவும் பணிவுடன் அடிமையிலும் அடிமையாய் நடந்து வந்தாள். இப்போது நாம்
      பரமார்த்தமாக இவளுடைய அன்பை கருதி அதனை வேண்டி சருவ புகுந்தபோது இவள்
      பண்ணுகிற மோடியும் இவள் செய்யும் புறக்கணிப்புகளும் பொறுக்க முடியவில்லையே
      இதென்னடா கேலி சொந்த பெண்டாட்டியை காதலிராணியா கொண்டாட போனவிடத்தே அவள்
      நம்மை உதாசீனம் பண்ணினாள். என்ன செய்வது பதிவிரதையாவது வெங்காயமாவது நாம்
      இளமை தவறிவிட்டோமென்பது கருதி இவள் நமது காதலை உண்மையாகவே அருவருக்கிறாளோ
      என்னவோ எவன் கண்டான் ஸ்திரீகளுடைய இருதயத்துக்கு ஆழங் கண்டோன் யார் கடலாழங்
      காணுதல் எளிது மாதர் மனத்தை ஆழங் அரிது. ஆண்மக்களை
      பெண்களுக்கு எட்டு மடங்கு அதிகம் காமமென்று நீதி சாஸ்திரம் சொல்லுகிறது. எனவே
      தலை வழுக்கையாய் நரை தொடங்கி கிழப்பருவத்திலே புகத்தொடங்கிய என்னிடம் இவள்
      உண்மையாகவே அவமதிப்பு கொண்டாளெனின் அ·தோர் வியப்பாகமாட்டாது. என்னே உலக
      விசித்திரம் என் குடும்பத்தில் மாத்திரமா உலக முழுமையிலும் மனிதரெல்லாரும்
      வீட்டுப்பெண்டாட்டியென்றால் அவள் தன் விருப்பத்துக்கு கடமைப்பட்ட அடிமைச்சியாகவே
      கருதுகிறார்கள். புதியதொரு சித்திர தெய்வத்தின்மீது காதல் கொள்வதுபோல் நான் சொந்த
      பெண்டாட்டியிடம் காதல் செ புகுமிடத்தே அவள் என்னை இப்படி கேலி பண்ணுகிறாள்.
      எனிலும் இவள் பதிவிரதையல்லளென்று கருதவும் நியாயமில்லை. எனது பெற்ற தாய் இறக்க
      போகு தருணத்தில் இவள் மகா சுத்தமான பதிவிரதையென்று சொல்லிவிட்டு மடிந்தாளே.
      அவள் தீர ஆராய்ச்சி செய்து நிச்சயப்படுத்தாத வார்த்தையை மரண காலத்தில் சொந்த மகனிடம்
      சொல்ல கூடுமென்று நினைக்க இடமில்லையே. தாய் நம்மிடம் பொய் சொல்லிவிட்டா போவாள்
      மேலும் அவள் இந்த வார்த்தை என்னிடம் சொல்லிய காலத்தில் அவளுடைய முகத்தை நான்
      நன்றாக உற்று கவனித்தேனன்றோ அவள் அச்சொல்லை பரிசுத்தமான இருதயத்துடனம் உண்மையான
      நம்பிக்கையுடனும் கூறினாளென்து அவள் முகத்தில் மிக தெளிவாக விளங்கிற்றன்றோ
      மேலும் அவள் தீர ஆழ்ந்து பாராமல் வஞ்சிக்கப்பட்டவளாய் அங்ஙனம் தவறாது நம்பிக்கை
      கொண்டிரு கூடுமென்று நினைக்க புகுவோமாயின் அது பெரு மடைமைக்கு
      லட்சணமாகும். பாம்பின் கால் பாம்புக்கு தெரியும். எத்துணை மறைந்த போதிலும் பெண்
      மர்மம் பெண்ணுக்கு தெரிந்து விடுமன்றோ ஒரு வருஷமா இரண்டு
      நடையை என் மாதா பத்து வருஷகாலமாக இரவு பகல் கூடவேயிருந்தது மிகவும்
      ஜாக்கிரதையுடன் கவனித்து வந்தவளன்றோ மேலும் என் மாதா புத்திக்கூர்மையில்லாத
      மந்தமா இருபது கம்பிளியை போட்டு ஒரு ரகசியத்தை மூடி வைத்தாலும் அது அவளுடைய
      கண்களுக்கு தெரிந்து விடுமன்றோ தாய் சொல்லியதை மறுப்பதில் பயனில்லை. அதில்
      ஐயப்படுவது மூடத்தனம். ஐயமுற்றான் அழிவுறுவான் என்று பகவ கீதையில் கண்ணபிரான்
      அருளி செய்திருக்கிறானன்றோ நிச்சயமாக நம்முடைய புத்திக்கு புலப்படும்
      உண்மையன்றை பற்றி வீண் சம்ச படும் அதிகாரம் மனத்துக்கு கொடுப்போமாயின் அது
      நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும். நம்முடைய முத்தம்மா பதிவிரதைதான்.
      உண்மையை சோதி த்-தறியும் பொருட்டாகவே நம்மை இந்த வலிய சோதனைகளுக்கு
      உட்படுத்துகிறாள். இதனால் நாம் அவளிடம் கொண்டிருக்கும் பிரேமை தழல் அவிந்து போக
      இடங் கொடுக்கக்கூடாது. இதனால் நாம் அவளிடம் விரசப்படலாகாது. அவள் தான் நமக்கு
      தாரகம். வேறு புகல் நமக்கில்லை. எக்கலாத்திலும் நம்முடைய வழிகளை இருள் மூடாத
      வண்ணம் நம் மாதா கருணையுடன் நிறுத்தி விட்டுப்போன நித்ய விளக்கன்றோ இந்த கண்மணி
      முத்தம்மா மேலும் மூட நெஞ்சமே பாவியாகிய புழு
      சோதனைகள் செய்கிறாள் ஊடல் தானே பண்ணுகிறாள் ஊடலன்றோ காதலின் மிக இனிய
      பகுதியாவது
      உணவினும் உண்டதறலினிது காமம்
      புணர்தலின் ஊட லினிது
      என்றன்றோ சாட்சா பிரமதேவனுடைய அம்சபூதரும் மகாகவியுமாகிய திருவள்ளுவ தேவர்
      அருளியிருக்கின்றார். நாய் மனமே உனக்கு என் காதற் கிளியிடமிருந்த இகழ்ச்சியெண்ணம்
      இன்னும் உன்னை முற்றிலும் விட்டு விலகவில்லை. இவளாவது நம்மிடத்தில் ஊடல்
      காட்டுவதாவது என்ற கர்வ சிந்தனையால் இந்த விஷயத்தில் மனதுக்கு
      கஷ்டமேற்படுகிறதேயன்றி வேறில்லை. இவள் என்ன காரணத்தால் உனக்கு இத்தனை துச்சமாய்
      விட்டாள் துச்ச மனமே இவளை காதலிராணியென்று கொண்ட இடத்தில் உணர்வு உயிர்
      உடம்பு என்ற மூன்றும் அவளுக்கே சமர்ப்பணமாகி விட்டனவன்றோ அவள் ஊடினால் அதுவும்
      ஓரின்பம். அவள் கூடினால் அதுவும் மேலும் காதலி சொல்லும்
      மொழிகளெல்லாம் நம்முடைய செவிகளில் அமிர்தம் போல் விழுவதன்றோ ஆண்மைக்கு லட்சணமாம்
      காதலி பெண் உண்மையாகவே சினங் கொண்டோ அல்லது பொழுது போக்கின் பொருட்டாகவோ
      நம்மை திட்டினால் நாம் அந திட்டுக்களையெல்லாம் மிட்டாயென்று நினைப்பதன்றோ
      புருஷலட்சணம் அங்ஙனமின்றி அவளிடம் எதிர்த்து சினங் கொள்ளுதல் பேடித்தன்மையன்றோ
      அவள் எது செய்தாலும் அவளே நமக்கு தெய்வம் நமக்கு இன்பம்.
      நம்மை முத்தமிட்டபோதிலும் அவளருளே கதி. அவள் நமது தசையை வாளை கொண்டு
      அறுத்தபோதிலும் அதுவே நமக்கு சுவர்க்க போகம்.
      என்று இங்ஙனம் நிலாமுற்றத்தில் நாற்காலியின் மீதுட்கார்ந்து நிலவை நோக்கி ஆலோசனை
      செய்து கொண்டிருந்த சோமநாதய்யர் அப்படியே நித்திரையில் ஆழ்ந்து விட்டார். பிறகு அவர்
      கண்ணை விழித்து பார்க்கையிலே சந்திரன் உதித்த இடத்தினின்றும் நெடுந்தூரம்
      விலகிவந்திருப்பது கண்டார். மாலையில் சுமார் ஏழுமணிக்கு முத்தம்மா காபி போட்டு
      குடித்துவிட்டு வருவதாக சொல்லி விட்டு கீழே போனாள். இப்போது மணி
      எத்தனையிருக்குமென்று அவர் தம்முடைய சட்டை பையிலிருந்த கைக்கடிகாரத்தை எடுத்து
      நோக்கினார். நடுநிசி பன்னிரண்டு மணியாய் விட்டது. படுக்கையறைக்குள்ளே போ
      பார்த்தார். அங்கு திமிதிமியென்று மண் எண்ணெய் மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
      இன்னும் ஒரு கணம் இவர் தாமதப்பட்டு வந்திருப்பாரானால் கண்ணாடி குழாய் வெடித்து
      போயிருக்கும். அதனிலும் பெரிய ஆபத்துக்கள் விளைந்தாலும் விளைந்திருக்கும். இவர்
      விளக்கின் ஸ்திதியை பார்த்தவுடனே பளிச்சென்று பாயந்து திரியை குறைத்தார்.
      விளக்கு நேரே எரிந்தது. அவர்களுடைய படுக்கைய¨யில் மூன்று கட்டில்களுண்டென்று
      முன்னமேயே சொல்லியிருக்கிறேன். அவற்றுள் ஒரு கட்டிலின் மீது அனந்த கிருஷ்ணனை
      தழுவி கொண்டு முத்தம்மா படுத்திருந்தாள். மற்றொரு கட்டிலில் மூத்த குழந்தைகள்
      இரண்டும் படுத்திருந்தன. சோமநாதய்யருடைய கட்டில் சும்மா கிடந்தது. முத்தம்மாளை
      எழுப்பி கீழே அழைத்து போய் போஜனத்துக்கு ஏற்பாடு பண்ணலாமா என்று ஒரு கணம்
      சோமநாதய்யர் யோசனை பண்ணினார். அப்பால் அறிவுடனே கண்ணை விழித்து நன்றாக
      பார்த்து கொண்டே படுகழியிற் போய் விழ்வதொ பசியில்லாமல் உண்பதிலிருந்தே
      நோய்களும் சாவும் ஏற்படுதல் ப்ரத்ய‡மாக தெரிந்திருந்தும் நாம் தினந்தோறும்
      பசியின்றி உண்டு மரணத்துக்கு வழிதேடுதல் பேதமையினும் பெரிய பெரும்
      பேதைமையாகுமன்றோ என்றொரு நினைப்பு அவருக்குண்டாயிற்று. இன்றைக்கு நல்ல நாள்.
      பசியில்லாத சமயங்களில் உபவாசம் போடுவதாகிய நல்ல வழக்கத்தை இன்றிரவே தொடங்கி
      விடுவோம். பிரிய ரத்தினமாகிய முத்தம்மாளும் ஆழ்ந்து நித்திரை செய்கிறாள். இவளை
      இப்போ எழுப்பி சோறுபோட சொல்லி தொல்லைப்படுத்துதல் பாவமாகும். ஆதலால் உபவாசமே
      கிடப்போம் என்று தீர்மானம் பண்ணி சோமநாதய்யர் விளக்கு திரியை மிகவும்
      சிறிதாக்கி குறைத்து மேஜையினின்றும் விளக்கையெடுத்து படுக்கையறையின்
      மூலையன்றில் தரைமீது வைத்தார். மெல்ல வந்து முத்தம்மா துயிலெழாதபடி மெதுவாக
      அவளை தழுவி அவளுடைய கன்னத்தில் ஒரு முத்தமிட்டார். பிறகு தம்முடைய கட்டிலின்
      மீதேறி படுத்து கொண்டார். விரைவில் நித்திரை போய்விட்டார். அன்றிரவு முழுதும்
      சோமநாதய்யர் மிகவும் ஆச்சரியமான இன்ப கனவுகள் கண்டார்.
      ---
      ஒன்பதாம் அத்தியாயம்
      பெண்டாட்டிக்கு ஜயம்
      மறுநா காலை முதல் முத்தம்மா பாடு கொண்டாட்டந்தான். வீட்டில் அவளிட்டது சட்டம். அவள்
      சொன்னது வேதம். சோமநாதய்யர் ஏதேனுமொரு காரியம் நடத்த வேண்டுமென்று சொல்லி அவள்
      கூடாதென்றால் அந்த காரியம் நிறுத்தி விடப்படும். அவர் ஏதேனும் செ கூடாதென்று
      சொல்லி அவள் அதை செய்துதான் தீரவேண்டுமென்பளாயின் அது நடந்தே தீரும். இங்ஙனம்
      முத்தம்மா தன் மீது கொடுங்கோன்மை செலுத்துவது பற்றி அவருக்கு அடிக்கடி
      மனவருத்தமேற்படுவதுண்டு. ஆனால் அந்த வருத்தத்தை அப்போதப்போதே அடக்கி விடுவார்.
      தெய்வத்தினிடம் ஒருவன் உண்மையான பக்தி செலுத்த போனால் அது அவனை எத்தனையோ
      சோதனைகளுக்குட்படுத்தும் என்கிறார்கள். அதினின்றும் ஒருவன் தனது பக்தியை
      சோரவிடுவானாயின் அவன் உண்மையான பக்தனாவனோ பக்தியால்
      எய்தப்படும் பயன்கள் அவனுக்கு கிடைக்குமோ நாம் இவளை ப்ரத்ய‡ தெய்வமாகவன்றோ
      பாவித்து நடத்துகிறோம். எனவே இவள் ஏது செய்தாலும் பொறுத்து கொண்டுதான் இருக்க
      வேண்டும். நாம் மனவருத்தப்படலாகாது என்று தீர்மானித்து தம்மை தாமே தேற்றி
      கொள்வார். இப்படியிருக்கையில் ஒரு நாள் முத்தம்மா தன் கணவனை நோக்கி- நாளை
      ஞாயிற்றுக்கிழமை தானே உங்களுக்கோ கோர்ட்டு வேலை கிடையாது. ஆதலால் நாமிருவரும்
      குழந்தைகளையும் வேலைக்காரனையும்....
      குறிப்பு- பாரதியார் இக்கதையை பூர்த்தி செய்வதற்குள் காலஞ் சென்றுவிட்டதால்
      சந்திரிகையின் கதை முற்றுப்பெற இயலாமல் இப்படியே நிறுத்த வேண்டியதாயிற்று.
      ---
      ------------------------------------------------------------------------
      11 2001


      .95-